தவளை விஷத்தால் கொல்லப்பட்ட நவால்னி- ரஷ்யாவிற்கு எதிராக 5 ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கடுமையாக போராடிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, 2024-ஆம் ஆண்டு ஆர்க்டிக் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்போது, அவரது மரணம், ஈட்டி தவளையில் இருந்து (Dart Frog) தயாரிக்கப்படும் “எபிபாட்டிடின்” (Epibatidine) என்ற கொடிய நஞ்சால் ஏற்பட்டுள்ளது என்பது அறிவியல் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து […]
காதலர் தினம்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட போஸ்டர்களால் பரபரப்பு
வாஷிங்டன், உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக காதல் வாழ்க்கை மற்றும் உறவுகள் பற்றிய எண்ணற்ற பதிவுகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முற்றிலும் மாறுபட்ட ஒன்றை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, கிரீன்லாந்து, குடியேற்றம் மற்றும் பல போன்ற உருவங்கள் மற்றும் முக்கியத்துவங்களைக் கொண்ட அரசியல் காதலர் அட்டைகளின் தொகுப்பாக இடம்பெற்றுள்ளது. படங்களில் உள்ள செய்தி, “உங்களுக்காகவே […]
பங்களாதேஷ் தேர்தல்: ‘டார்க் பிரின்ஸ்’ முதல் பிரதமர் வரை – தாரிக் ரஹ்மானின் அரசியல் பயணம் –யார் இவர்?
பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பி.என்.பி.) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து பி.என்.பி. மீண்டும் ஆட்சிக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர் போராட்டத்துக்குப் பிந்தைய அரசியல் மாற்றம் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் பின்னர் அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது […]
யாத்திரைக்காக சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம் ; 10 வயது சிறுவன் படுகாயம்
இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியின் கொடகவெல, மல்வத்த பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து வயது சிறுவன் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர். ஸ்ரீ பாத யாத்திரைக்காக பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், கதிர்காமம் கோயிலில் வழிபாடு நடத்தச் சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாரதி கைது விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக கொடகவெல […]
Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்பு மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. Ind vs pak ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என நினைத்தால், ஒன் சைடு ஆட்டமாக இந்தியாவுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது இந்தப் போட்டி. இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்க்கு பதிலாக குல்தீப் யாதவ்வும் களமிறங்கினர். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்ததால், தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அபிஷேக் பின்னர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, போட்டியின் போக்கை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சில விக்கெட்களை இழந்தாலும், இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு டார்கெட் 176. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய பாகிஸ்தான் அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே சரவெடியாக தாக்கினர். முதல் 6 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய அணி, போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தியது. பொறுப்புடன் விளையாடி வந்த பாகிஸ்தான் வீரர் உஸ்மானும் 44 ரன்களில் ஆட்டமிழக்க அந்த தருணத்திலேயே, பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. இந்தியா அடுத்தடுத்து இந்தியாவின் வேகத்திலும் சுழலிலும் சிக்கி, பாகிஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர், வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 77 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தேமுதிகவுக்கு க்ரீன் சிக்னலா? அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகி விட்டதா? பரபரப்பை கிளப்பிய சந்திப்பு!
கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 15 ஆம் தேதி) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒன்றாக பங்கேற்றனர்.
திருகோணமலையில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் தீக்கிரை ; சந்தேகத்தில் பொலிஸார்
கந்தளாய், ரஜஎல யூனிட் 05 பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமடைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 5.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் வீட்டின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரே இவ்வாறு தீப்பற்றியுள்ளது. கார் எரிவதைக் கவனித்த வீட்டார் மற்றும் அயலவர்கள் உடனடியாக ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், தீ […]
வேறொரு திட்ட நிதியில் இருந்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதி மாற்றி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தென்னிலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பலரும் அண்மைக்காலமாக இந்துக்கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டு வழிபாட்டில் இணைந்துகொள்வது வழமையாகியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரான ஊடகவியலாளர் பிரகீத் எக்னியகொடவிற்கு நீதி கோரி அவரது மனைவி சந்தியா காளியை தொடர்ந்து வழிபட்டுவருகிறார்.தனது வழிபாட்டினாலேயே கோத்தபாய அடித்து விரட்டப்பட்டதாகவும் தெரிவித்துவருகின்றார். இந்நிலையில் உட்கட்சி மோதலால் பாதிக்கப்பட்ட பிரதமர் ஹரிணி கேதீஸ்வரத்தின் சிவராத்திரிக்கு இன்று வருகை தந்துள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் இந்துக்கள் போன்றோ வழிபாட்டில் இணைந்து கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் உணர்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.
விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் அட்டை.. புதிய மாற்றத்தில் ரிசர்வ் வங்கி!
விவசாயிகள் பயிர் கடன் மற்றும் வேளாண்மைக்கான நிதியுதவியைப் பெறும் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஜெயிலுக்கு மாற்றம்
இஸ்லாமாபாத்- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் உள்ளார். இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ரத்த உறைவு காரணமாக வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே உள்ளது என்றும், சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது 85 சதவீத பார்வை பறிபோய்விட்டது என்றும் அவரது வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இம்ரான் கானின் உடல்நிலையை […]
மீண்டும் நாட்டிற்கு பாரிய மின்சார நெருக்கடி ; வெளியான எச்சரிக்கை
நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை நாடு பாரிய மின்சார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். நிலக்கரி கையிருப்பு அத்துடன் இந்த ஆண்டில் 212 நாட்களுக்கு மட்டுமே போதுமான நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளது. அந்த 212வது நாள் ஜூலை 31 ஆம் […]
டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி, 175 ரன்களை எடுத்துள்ளது. இந்த ஸ்கோர் வெற்றியைப் பெற போதுமானதா என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இஷான் கிஷன் அரை சதம் அடித்தார்.
மத்திய, மாநில அரசுகளிடம் கலந்து பேசி தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் முதலமைச்சரும், சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டைமான் பேட்டி அளித்து உள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வசித்துவரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் குறித்து மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்!
ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை நிராகரிப்பது தொடர்பிலும் தமிழ்த்தேசம், இறைமை, சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கும் தீர்வை கோருவது தொடர்பிலும் , இவற்றை மக்கள் மயப்படுத்துவது தொடர்பிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பினாமி அமைப்பென அடையாளப்படுத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் சட்டநாதர் கோவில் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் அரசியல் கட்சி தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் என பிரதிநிதிகள் பங்குபற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்ததாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உள்ளுர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்களின் பின்னராக செயற்பட்டுவரும் தரப்புக்களே இம்முயற்சியை மேற்கொண்டுள்ளன.
திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவித்த பாஜக.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
தேர்தல் காலம் என்பதால், போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், நலத்திட்டங்களும் தமிழ்நாட்டில் மழை போல பொழிந்து வருகின்றன. இந்த சூழலில் பாஜகவின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், தொடர் போராட்டங்களை அறிவித்து இருக்கிறார்.
பின்னொரு காலத்தில் ஏற்படவிருக்கும் விசாரணைகளில் ஆளுநரும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு துணைசென்றார் என்பதையும் அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளும் அவரையே சாரக்கூடும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடக்கு மாகாண ஆளுநருக்கு எடுத்துரைத்துள்ளது. “கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநர் யாழ்ப்பாணம் வன்னி மாவட்டங்களைச் சேர்ந்த ஜேவிபி என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாகாணசபை பொறுப்புகளை கையளித்துள்ளதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. கல்வி, விவசாயம், சுகாதாரம், உள்ளுராட்சி சபைகள் போன்ற பல்வேறுபட்ட பிரிவுகளுக்கு ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளதாக அறிய முடிகின்றது. மாகாணசபை அதிகாரங்களை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களே கையாளலாம் என்பதுடன் மாகாணசபை இயங்காத காலத்தில் அந்த அதிகாரங்களை ஆளுநர் முன்னெடுத்துச் செல்வார் என்பதைத்தான் மாகாணசபை சட்டம் கூறுகின்றது. மாகாணசபைகள் சட்டத்தின் எந்த இடத்திலும் ஆளுநர் தனது அதிகாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கையளிக்கலாம் என்றோ அல்லது மாகாணசபை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம் என்றோ கூறப்படவில்லை. சட்டம் அவ்வாறிருக்க, ஆளுநரானவர் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களை மேற்குறிப்பிட்ட விடயதானங்களுக்குப் பொறுப்பாக நியமிப்பதென்பது சட்டவிரோதமானதும் தவறானதுமான நடவடிக்கையாகும். வடக்கு மாகாணத்தில் வேறு தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஓரம்கட்டி ஆளும் கட்சி உறுப்பினர்களை இதற்குள் கொண்டுவந்து நுழைப்பதென்பது ஜேவிபி தனது கட்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல மாகாண நிர்வாகத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது. மேற்கண்ட இந்த விடயமானது வடக்கு மாகாணத்தில் மாத்திரம்தான் நடைபெறுவதாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது. நீண்டகால நிர்வாக அனுபவங்களைக் கொண்ட ஆளுநர் ஜேவிபியின் இந்த தவறான நடவடிக்கைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, அதனை ஏற்றுக்கொண்டு செயற்படுத்துவதென்பது பின்னொரு காலத்தில் ஏற்படவிருக்கும் விசாரணைகளில் ஆளுநரும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு துணைசென்றார் என்பதையும் அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளும் அவரையே சாரக்கூடும். மாகாணசபை தேர்தல்களை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் நிர்வாகத்தைக் கையளிக்க வேண்டும் என்பதை அரசுக்கு எடுத்துச் சொல்வதை விடுத்து, அரசு செய்யும் பிழையான காரியங்களுக்கு முண்டுகொடுப்பதோ, செயற்படுத்துவதோ அறிவுபூர்வமான விடயமல்ல. தமிழ்த் தேசிய உரிமை அரசியலில் ஈடுபாடு கொண்டவராக கடந்த காலங்களில் தன்னைக் காட்டிக்கொண்ட ஆளுநர் அண்மைக்காலத்தில் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமாக முன்னெடுக்கப்படும் விடயங்கள் எதனையும் கண்டுகொள்ளாமல் தவறான முடிவுகளின்பால் செல்ல வேண்டாம் என்பதை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்துக்கொள்கின்றது.”
திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி வழங்கினார்.
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக அரசையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார்.
‘உக்ரைன் மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டுமா?’ –அதிபா் ஸெலென்ஸ்கி
‘ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது’ என உக்ரைன் அதிபா் வொலோதிமிா் ஸெலென்ஸ்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளாா். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அவா் இது குறித்து பேசியதாவது: ஜெனீவாவில் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெறவுள்ள அடுத்தகட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அமைதிக்கான வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியுள்ளாா். இந்தப் பேச்சுவாா்த்தைகள் ஆக்கபூா்வமாக […]
உலக நாடுகளை வியக்க வைக்கும் இந்தியாவின் “AI டேட்டா சிட்டி”திட்டம்! $175 பில்லியன் முதலீடு!
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு சவால் விடும் வகையில், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் (Vizag)… The post உலக நாடுகளை வியக்க வைக்கும் இந்தியாவின் “AI டேட்டா சிட்டி” திட்டம்! $175 பில்லியன் முதலீடு! appeared first on Global Tamil News .
IND vs PAK: 'டாஸ் வென்றது பாகிஸ்தான்'.. பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11: கேப்டன்கள் பேட்டி இதோ!
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் துவங்கவுள்ளது. இப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11 குறித்து தற்போது பார்க்கலாம்.
திமுக தோற்ற இடங்களை கேட்கும் காங்கிரஸ்.. உடைகிறதா திமுக கூட்டணி?
தமிழக சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு, அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இந்த பூசல் கூட்டணி உடையும் நிலைக்கு இட்டுச்செல்வதாக சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
25 வயதாகும் தன் அண்ணனை இடுப்பில் சுமக்கும் தங்கை; நெகிழவைத்த சகோதர பாசம்
சீனாவில், 25 வயதாகும் தன் அண்ணனை இடுப்பில் சுமக்கும் ஒரு தங்கை, தன் பெற்றோருக்கு வயதாவதால், தான் இனி அவரை முழுமையாக கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார். சீனாவின் Hunan மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரை, அவர் குழந்தையாக இருக்கும்போது அரியவகை ஹார்மோன் பிரச்சினை ஒன்றும், இதயப் பிரச்சினை ஒன்றும் தாக்கியதால், அவரது உடல் 60 சென்றிமீற்றருக்கு மேல் உயரமாகவில்லை. அரியவகை ஹார்மோன் பிரச்சினை அத்துடன், அவரது மூளையும் பாதிக்கப்பட்டுள்ளதால், மன ரீதியிலும் ஒரு குழந்தையாகவே […]
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ. 30 கோடியில் ஹெலிகாப்டர்; சுகேஷ் வழங்கிய காதலர் தினப் பரிசு!
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான அவரது கணவரை வெளியில் கொண்டு வர உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிடமிருந்து வாங்கித்தருவதாகக் கூறி தினகரனிடம் பணமோசடி செய்தது எனப் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் சுகேஷ் சந்திரசேகர். சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் இருந்தபோது மாடல் அழகிகள், நடிகைகளை சிறைக்கே வரவைத்து அவர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் கொடுத்தார். அப்படி சிறைக்கு வராதவர்களுக்கு கூரியர் மூலம் விலையுயர்ந்த பொருள்களை அவர்களது வீட்டிற்கே அனுப்பி வைத்தார். அப்படி வீட்டிற்கே பரிசுப் பொருள்களை அனுப்பியதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷிடமிருந்து பல கோடி ரூபாய் பரிசுப் பொருள்களைப் பெற்றுள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர் இருவரும் தம்பதி போன்று வாழ்ந்தனர். ஆனால் சுகேஷ் கொடுத்த பரிசுப் பொருள்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துவிட்டது. சுகேஷ் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது அவரைத் தனி விமானத்தில் சென்னைக்குச் சென்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் பார்த்து வந்தார். இதனால் சுகேஷ் மீதான மோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், தான் நிரபராதி என்றும், சுகேஷ் தொடர்பான விசாரணையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். விசாரணையில் உள்ளதாகக் கூறப்படும் நிதிக்குற்றங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரது சட்டப் பிரதிநிதிகள் முன்பு கூறியுள்ளனர். சுகேஷ் சிறையில் இருந்தாலும், கிறிஸ்துமஸ், காதலர் தினம், புத்தாண்டு என முக்கிய பண்டிகைகளுக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது காதலர் தினத்திற்கு சுகேஷ் காதல் பரிசாக ஹெலிகாப்டர் ஒன்றை ஜாக்குலினுக்கு வழங்கி இருக்கிறார். Jacqueline ஜாக்குலின் பிறந்தநாள்; சொகுசு படகு பரிசு `டு' ரசிகர்களுக்கு 100 ஐபோன்கள்- சுகேஷ் தாராளம்! இது தொடர்பாக சுகேஷ் தனது கைப்பட ஜாக்குலினுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ''பேபி, ராணி போன்ற உனக்கு சிறப்புப் பரிசு ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறேன். காதலர் தினத்தின் மென்மையான ஒளியில் உலகம் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில், நீ என் அருகில் இல்லாமல் அது முழுமையடையாததாக உணர்கிறேன். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு என் இதயம் வலிக்கிறது. என்னுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பும், குறிப்பாக காதலர் தினத்தில் நமக்கு இடையேயான தூரத்தை நினைவூட்டுகிறது, ஒவ்வொரு சுவாசமும் உன் பெயரைச் சுமந்து செல்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Jacqueline சுகேஷ் ஏர்பஸ் எச் ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஜாக்குலினுக்கு காதலர் தின பரிசாகக் கொடுப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஹெலிகாப்டர் ரூ. 30 கோடியாகும். இதற்கு முன்பு சொகுசு படகு, ஜெட் விமானம் போன்றவற்றை ஜாக்குலினுக்குப் பரிசாக வழங்குவதாக அறிவித்தார். தற்போது ஹெலிகாப்டர் பரிசாகக் கொடுத்து இருப்பது குறித்து ஜாக்குலின் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் சுகேஷ் கடிதம் எழுதத் தடை விதிக்க வேண்டும் என்று ஜாக்குலின் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இப்போது எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார். Jacqueline: அமிதாப், சல்மான் கானிடம்கூட இல்லை; சொந்தமாக தீவு வாங்கிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
இருமுடி ஃபர்ஸ்ட் லுக்: ரவி தேஜாவின் இல்லத்தரசியாக உருமாறிய பிரியா பவானி சங்கர்!
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ‘இருமுடி’ படத்தில் பிரியா பவானி சங்கர் ‘காவேரி’ கதாபாத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ரவி தேஜாவுடன் அவர் பகிர்ந்துள்ள எதார்த்தமான கிராமத்து லுக் போஸ்டர் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் பாறுக் ஷிஹான் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (15) விசேட பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தனது கண்டன அறிக்கையை வெளியிட்டது. அத்துடன், சாய்ந்தமருது பகுதியில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டபோது, சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு […]
திமுகவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொழில்நுட்ப அணி கருத்து தெரிவித்து உள்ளது.
மனைவிக்கு கருச்சிதைவு ; கடவுள் பெயரில் வயதான பெண்களுக்கு இளைஞன் நிகழ்த்திய பெரும் கொடூரம்
மத்தியப் பிரதேசத்தில், மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால், பக்கத்து வீட்டுப் பெண்கள் இரண்டு பேரைப் பூஜைக்கு என அழைத்து தலையை வெட்டி கடவுளுக்குப் பலி கொடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில், அதர்வா என்ற கிராமத்தில் வசிப்பவர் 21 வயதான இளைஞன் ஒருவர் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட இவரது மனைவி சமீபத்தில்தான் கர்ப்பமாகியுள்ளார். மனைவிக்கு கருச்சிதைவு திடீரென மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் நொந்துபோன இளைஞன் மிகுந்த மன […]
கடும் மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்றிரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும். அதேநேரம், களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும். மின்னல் […]
18 வருட விசாரணையின் பின் இலங்கையில் மூவருக்கு கிடைத்த அதிரடி தண்டனை
வஸ்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள மரணவீட்டில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மூன்று பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குடாவஸ்கடுவ, லிட்டில்டன்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்களான சுரேஷ் குமார, ‘ராலஹாமி’ என்ற புனைப்பெயரால் அறியப்படும் சுகத் குமார மற்றும் ‘பெட்டா’ என அழைக்கப்படும் சமித சிசிர குமார ஆகிய மூவராவர். மரண தண்டனை 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் […]
கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று(15) இடம்பெற்றது.
திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை - பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன?
தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கூட்டணி குறித்து பரபரப்பான கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாதது எனவும் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூட்டணி தொடர்பாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகவும் பேசியிருந்தார். திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, இனி யாரும் கூட்டணி ஆட்சி குறித்து பேசமாட்டார்கள். உரிமைத் தொகை ரூ.5000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியும். அதனால், இனி யாரும் அது பற்றி பேசமாட்டார்கள். எங்களுடைய தலைவர் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். காங்கிரஸில் இருந்து ராகுல் காந்தி, கார்கே, செல்வப் பெருந்தகை கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம் எனப் பேட்டியளித்திருந்தார். மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது ஆனால், அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி… https://t.co/Ag5F49gE4z pic.twitter.com/e8wYKzEoDL — Praveen Chakravarty (@pravchak) February 15, 2026 இந்தப் பேட்டியை ரீட்வீட் செய்து காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் பிரவீன் சக்ரவர்த்தி, மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூட நம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வியடைந்தன எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருகிறார். தொகுதி பங்கீடு: மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் - கொதிக்கும் மாணிக்கம் தாகூர்
அதிமுகவுக்கு 3 ஆவது இடம்.. திமுகவுக்க 12 ஆவது இடம்.. அதிமுக மருத்துவ அணி கூறிய ரகசியம்!
தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக இருப்பதற்கு திராவிட ஆட்சிதான் காரணம். அதில் அதிக காலம் ஆட்சி செய்தது அதிமுக தான் என்று அதிமுக மருத்துவ அணி கருத்து தெரிவித்து உள்ளது.
கொழும்பு ஜிந்துப்பிட்டி யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-முசலி பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு. கொழும்பு… The post கொழும்பு ஜிந்துப்பிட்டி யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-முசலி பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு. appeared first on Global Tamil News .
எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானத்தில் பெண்ணுடன் ஆண்ட்ரூ; விசாரணையை தொடங்கிய பிரிட்டன் பொலிஸார்
அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானத்தில் லண்டன் வந்த இளம் பெண் ஒருவரை பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பில் பொலிசார் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எப்ஸ்டீனின் Lolita விமானத்தில் லண்டன் வந்த குறித்த இளம் பெண்ணை Mrs Windsor என்ற புனைப்பெயரில் ஆண்ட்ரூ பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவில் 90 முறை தரையிறங்கிய எப்ஸ்டீனின் விமானம் அதேவேளை பிரித்தானியாவில் மட்டும் எப்ஸ்டீனின் Lolita விமானம் […]
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தீவிரம்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டால், ஈரான் மீது பல வாரங்கள் நீடிக்கக்கூடிய தொடர் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள… The post ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தீவிரம்? appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர்… The post வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதியை சித்திரை புத்தாண்டுக்கு முன் விடுவிக்க நடவடிக்கை! appeared first on Global Tamil News .
கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்: ஜனநாயகன் விஜய்யை முந்திய ரஜினி
கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஆகியிருக்கிறார் ரஜினிகாந்த். இருப்பினும் புது சம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி.செழியன், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு உதயநிதியை வரவேற்கும் விதமாக சாலையின் ஒரு பகுதியை இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாழை மரங்கள் மற்றும் கரும்பால் அலங்காரம் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தும் முடியாமலும் வாழைத்தார் மற்றும் கரும்பை பலர் எடுத்துச் சென்றனர். இதில் உதயநிதி பேசியதாவது, ''பட்டுக்கோட்டை மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட ஊர். மிக வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாகத் திகழ்கிறது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவில் உதயநிதி ஆனால், இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் ஒரு பேருந்து நிலையம் இல்லை. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இந்நகரின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம்தான் இந்தப் பேருந்து நிலையம். இந்நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி, இந்தப் பேருந்து நிலையம் தாராளமான இட வசதியோடு, அதிநவீனமான கட்டமைப்பு வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வரைப் பொறுத்தவரைக்கும், எல்லா ஊருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் அனைத்து ஊர்களிலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000 தஞ்சாவூர் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக 30 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். 60 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது. 32,000 மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். 35,000 கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்லாத் திட்டங்களையும் விட முக்கியமான ஒரு திட்டம் உள்ளது, அதுதான் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் இன்றைக்கு இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப் பலர் திட்டமிட்டனர், இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் முதல்வர் தகர்த்தெறிந்து, இன்றைக்கு ரூ.5,000 மகளிருக்குக் கொடுத்துள்ளார். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் ரூ.2,000 மாதந்தோறும் வழங்கப்படும் என முதல் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் அறிவித்துள்ளார். இப்படி மக்கள் நலத் திட்டங்களாக இருந்தாலும் சரி, பேருந்து நிலையம் போன்ற உட்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும் சரி, தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. Budget 2025-26: மகளிர் உரிமைத் தொகை டு பெண்கள் விடுதி வரை! - மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்? இந்த மாதிரியான வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும், தமிழ்நாடு மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர வேண்டும்'' என்றார். முன்னதாக திமுக பிரமுகர் பழஞ்சூர் செல்வம் இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியது, ''தமிழ்நாடு இந்தியாவிலேயே 11.19% வளர்ச்சியோடு இன்றைக்கு முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அரசு எவ்வளவோ சதித் திட்டங்களைத் தீட்டுகிறது. நிதி உரிமையைப் பறிக்கின்றார்கள். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம்கூட கிடையாது. ஆனால் இந்தப் பட்ஜெட்டை அதிமுகவினர் வரவேற்கின்றனர். உதயநிதி எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு இந்தியாவிலேயே பாஜகவுடைய 'முரட்டு அடிமை'. ஜாடிக்கு ஏத்த மூடின்னு சொல்லுவாங்க, இன்றைக்கு மோடிக்கு ஏத்த மூடியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். இனிமேல் 10 தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் என்னதான் பாடுபட்டாலும் தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நம்பிக்கையைப் பெற முடியாது. எனவே, மீண்டும் அமையப் போறது திமுக அரசுதான்'' என்றார். மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000: ஆன்லைன் மோசடி; போனில் விவரங்களைப் பகிர வேண்டாம்! பெண்களே உஷார்..!
காங்கிரஸ் கட்சியின் லட்சியம்.. மதுரை வடக்கு தொகுதி.. மாணிக்கம் தாகூர் எம்.பி. திட்டவட்டம்!
காங்கிரஸ் கட்சியின் லட்சியமே, மதுரை வடக்கு தொகுதி தான். கார்கே அவர்களிடம் சொல்லி இருக்கிறேன் என்று திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்து உள்ளார்.
தொகுதி பங்கீடு: மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் - கொதிக்கும் மாணிக்கம் தாகூர்
மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணியில் கூடுதல் தொகுதி ஒதுக்கீடு, கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மாணிக்கம் தாகூர் மேலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்தும் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கின்றன. மோடி அரசு ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். பாராளுமன்றத்தில் யார் பலமாகச் சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிக்கொண்டுப் போய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்குக் கிடையவே கிடையாது. மாணிக்கம் தாகூர் காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம். காங்கிரஸைச் சாதாரணமாக நினைத்துப் பேசுகின்றனர். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம். எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனக் கூறியிருக்கிறார். நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகள் மீது அமெரிக்க படைகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன!
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் இலக்குகள் மீது அமெரிக்க படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் அமெரிக்காவின் U.S. Central Command (CENTCOM) படைகள்,… The post சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகள் மீது அமெரிக்க படைகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன! appeared first on Global Tamil News .
பிரித்தானியாவில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் ; வரவுள்ள புதிய தடை
பிரித்தானியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் செய்யும் புகைப் பழக்கத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாக்க நடவடிக்கை புதிய கட்டுப்பாடுகளின் படி, குழந்தைகளுடன் காருக்குள் பயணிக்கும் போது புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் கருவிகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் […]
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி!
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை… The post நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி! appeared first on Global Tamil News .
அபிரிக்காவை சுற்றி வளைக்கிறது சீனா? ஆப்ரிக்க நாடுகளுக்கான வரிகளை முழுமையாக நீக்கும் சீனா!
China தனது வர்த்தகக் கொள்கையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. தன்னுடன் தூதரக உறவு கொண்டுள்ள 53 ஆப்ரிக்க நாடுகளிலிருந்து… The post அபிரிக்காவை சுற்றி வளைக்கிறது சீனா? ஆப்ரிக்க நாடுகளுக்கான வரிகளை முழுமையாக நீக்கும் சீனா! appeared first on Global Tamil News .
பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்ரியனுக்கு கல்யாணமாகிடுச்சு: மாப்பிள்ளை பெயர் சுந்தரமூர்த்தி
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்ரியனுக்கும், சுந்தர மூர்த்தி என்பவருக்கும் இன்று நல்லபடியாக திருமணம் நடந்திருக்கிறது. என்ன திடீர் என்று கல்யாணம், ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்று பலரும் கேட்கிறார்கள்.
இறுதி வாக்காளர் பட்டியல் 23 -ஆம் தேதி வெளியாகும்... தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 17 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று முதல் வானிலை எப்படி இருக்கும்? வெளியான தகவல்!
தமிழகத்தில் இன்று முதல் வானிலை எப்படி இருக்கும்? என்பது தொடர்பாக ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் காதல்; பெண்ணை கொன்று உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து வீசிய கொடூரம்
சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஊடாக அறிமுகமான பெண்ணைக் கொலை செய்து, அவரது உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து கழிவுநீர் தொட்டியில் வீசிய சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சியா என்பவருக்கும், போபாலைச் சேர்ந்த சமீர் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமானதை மறைத்த காதலன் திருமணமானவரான சமீர், தனது திருமண விபரங்களை மறைத்து சியாவுடன் பழகி வந்துள்ளார். இதனை […]
புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்!
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும்… The post புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்! appeared first on Global Tamil News .
புங்குடுதீவு ஆலடியில் சிரமதான நிகழ்வு
புங்குடுதீவு ஆலடியில் சிரமதான நிகழ்வு 13-02 -2026 அன்று புங்குடுதீவு ஆலடி சந்தி மற்றும் புங்குடுதீவு வரசித்தி விநாயகர் ஆலயத்தின் முன்றல் , குழந்தை கடைச் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் புங்குடுதீவு உலக மையம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் 17 பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் நிரந்தர தர்மகர்த்தாவாக விளங்கிய உயர்திரு.சபாரெத்தினம் இராசரெத்தினம் அவர்களின் நினைவாகவும் அவரது துணைவியார் அமரர். இராசரெத்தினம் […]
மென்டல் மனதில்: செல்வராகவனுடன் மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷின் நெகிழ்ச்சியான பதிவு!
செல்வராகவன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு 'மென்டல் மனதில்' (Mental Manadhil) மூலம் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதியின்றி ‘ஏஐ’ அமைச்சராக சித்தரிப்பு! அல்பேனியா அரசு மீது நடிகை வழக்கு!!
அல்பேனியா நாட்டின் அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மெய்நிகா் அமைச்சருக்குத் தனது முகத் தோற்றத்தையும், குரலையும் அனுமதியின்றி பயன்படுத்தியதாக அந்நாட்டு அரசு மீது பிரபல நடிகை அனிலா பிஷா வழக்குத் தொடா்ந்துள்ளாா். கடந்த செப்டம்பா் மாதம், பிரதமா் ஏதி ராமா தனது 4-ஆவது பதவிக்காலத்தைத் தொடங்கியபோது, அரசு ஒப்பந்தங்களில் நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்காக, சூரியன் என பொருள்படும் ‘டியெல்லா’ என்ற பெயரில் ஒரு மெய்நிகா் அமைச்சரை அறிமுகம் செய்தாா். இந்த ‘டியெல்லா’ அமைச்சரின் […]
வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இடையிடையே மழை மீண்டும் பெய்து வருவதனால் நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. இச்செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் ,சம்மாந்துறை, கல்முனை ,நாவிதன்வெளி , நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் இச்செயற்பாடு தொடர்கதையாகவே உள்ளது. அம்பாரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற […]
இப்போ நான் ரிலேஷன்ஷிப்ல இல்ல, நிச்சயம் கல்யாணம் செஞ்சுக்குவேன்: மிருணாள் தாகூர்
நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அப்படி நடக்கும் போது சமூக வலைதளங்களில் நானே அறிவிப்பு வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர். தனுஷுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்படும் நிலையில் இப்படி பேசியிருக்கிறார்.
கடலரிப்பு குறித்து ஆராய்ந்தார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து கண்டறியும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (14) நேரில் சென்றிருந்தார். அட்டப்பள்ளம் பிரதேசத்தின் கடலோர பகுதி மிக வேகமாக கடலினால் காவுகொள்ளப்பட்டு வருவதனால் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தீவிரிப்படுத்தப்பட்டு வருவதாகவும், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியாளரின் வழிகாட்டுதலின் கீழ், அவசரமாக கடலரிப்பை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.
சுனிலின் அதிரடி ஆட்டத்துடன் வெளியான ‘மஜக்கோ மல்லிகா’: காட்டாளன் படத்தின் மாஸ் ஓப்பனிங்!
அந்தோணி வர்கீஸ் நடிப்பில் உருவாகும் 'காட்டாளன்' படத்தின் முதல் பாடல் வெளியானது. நடிகர் சுனிலின் ஸ்டைலான நடனம் மற்றும் அஜனீஷ் லோக்நாத்தின் இசை கோலிவுட் விநியோகஸ்தர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
WI vs NEP: ‘46/5 என இருந்த நேபாள்’.. அடுத்து அதிரடி கம்பேக் கொடுத்து அசத்தல்: ஐரி வரலாற்று சாதனை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான லீக் போட்டியில், நேபாள் அணி துவக்கத்தில் சொதப்பி, பிறகு அதிரடி கம்பேக்கை கொடுத்து அசத்தியது. குறிப்பாக, திபேந்திர சிங் ஐரி அபாரமாக செயல்பட்டு அரை சதம் அடித்தார்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் நீண்ட கால முரண் இருந்துவருவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும் இரண்டு தரப்பின் மேலிட தலைவர்களும் கூட்டணி முரண்களை பேசி வருகின்றனர். இந்த சூழலில் வருகிற 22 -ஆம் தேதி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
Jana Nayagan: படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வெளியாகாதா?! என்ன சொல்கிறார் கனடா விநியோகஸ்தர்?
விஜய் நடித்திருக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தார்கள். படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. பிறகு சென்சார் சான்றிதழ் பிரச்னைக்காக நீதிமன்றத்தை நாடியது 'ஜன நாயகன்' படக்குழு. பிறகு, அந்த வழக்கையும் வாபஸ் பெற்றது. ஜனநாயகன் இப்போது படத்தை மீண்டும் மறுதணிக்கைக்கு படக்குழுவினர் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் கனடா நாட்டின் விநியோகஸ்தரான 'யோர்க் சினிமாஸ்', 'ஜனநாயகன்' திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பாக வெளியாகாது எனக் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை பதிவு இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த அறிக்கையில், 'ஜனநாயகன்' ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களிடம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் பணி இன்னும் முடியவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் திரையரங்குகளைத் தொடர்புகொண்டு விரைவில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் முன்னுரிமை பதிவு வசதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். York Cinemas Notice படக்குழுவிலிருந்து விநியோகஸ்தர்களுக்கு இப்படியான தகவல் சொல்லப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்த பிறகு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Jana Nayagan: மறு ஆய்வுக்கு அனுப்ப திட்டம்; வழக்கை வாபஸ் பெற 'ஜனநாயகன்' படக்குழு கடிதம்!
நைஜீரியாவில் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கிய மீன்பிடித் திருவிழா!!
நைஜீரியாவின் அர்குங்கு மீன்பிடித் திருவிழா அதன் 61வது மறு செய்கைக்காக சனிக்கிழமை வடமேற்கு கெப்பி மாநிலத்தின் அர்குங்கு நகரில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியது. பிராந்திய பாதுகாப்பின்மை மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட விழா நடைபெறவில்லை. கெப்பி மாநிலத்தின் சில பகுதிகள் சமீபத்திய ஆண்டுகளில் ஜிஹாதி தாக்குதல்களை சந்தித்துள்ளன. ஆய்வாளர்கள் லகுராவா பயங்கரவாதக் குழுவை கொடிய வன்முறைக்குக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் நிகழ்வில் கலந்து கொள்ள அந்தப் பகுதிக்கு வந்ததால், திருவிழா மீண்டும் மாறியது. 1934 ஆம் ஆண்டு முதன்முதலில் நடத்தப்பட்ட இந்த விழாவில் பங்கேற்க சுமார் 40,000 பங்கேற்பாளர்கள் 39 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை (102 பாரன்ஹீட்) பொருட்படுத்தாமல் கலந்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்போதிருந்து, இது நைஜீரியாவின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களைக் கொண்டுவருகிறது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஜனாதிபதி வந்தார். அதன் பின்னர் போட்டி மீண்டும் தொடங்கியது. முழக்கங்கள் மற்றும் மேள தாளங்களின் சத்தங்களுக்கு மத்தியில், மீனவர்கள் மிகப்பெரிய மீனை வேட்டையாடத் தொடங்கினர். பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி, கையால் நெய்யப்பட்ட வலைகள் மற்றும் பெரிய கலாபாஷ் பூசணிக்காய்களின் உதவியுடன், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் ஆரவாரத்தால் அவர்கள் உற்சாகமடைந்தனர். அபுபக்கர் உஸ்மான் அன்றைய மிகப்பெரிய மீனை - 59 கிலோகிராம் எடையுள்ள ஒரு அசுரனை - இழுத்துச் சென்றார், இது அவருக்கு சோகோட்டோ மாநில அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு புதிய சலூன் கார்கள், பல பைகள் அரிசி மற்றும் 1 மில்லியன் நைரா ரொக்கப் பரிசை (சுமார் $739 அல்லது €622) பெற்றுத் தந்தது. அன்று பிடிபட்ட நூற்றுக்கணக்கான சிறிய மீன்கள் அருகிலுள்ள தற்காலிக சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டன. என் குடும்பத்தினர் சாப்பிட வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஏதாவது கிடைத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். நான் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் மீனவர்கள் கூறினர்.
சாதாரண தரப் பரீட்சை ; புவியியலாளர் விடுத்த மிக முக்கிய அறிவித்தல்
சாதாரண தரப் பரீட்சை காலத்தில் மழை பெய்யலாம் என்பதால், அபாய நிலையிலுள்ள பாடசாலைகள் குறித்த தகவல்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை காலத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாடசாலைகள் செயல்பட வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். அதன்படி, பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்து வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த […]
மலையாள படம் மூலம் நடிகையாகும் குஷ்பு மகள்: சொந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி
குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் தமிழ் திரையுலகில் அல்ல மாறாக மலையாக திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். படத்திற்கு ஆரம்பம் என பெயர் வைத்திருக்கிறார்கள்.
Ajith Kumar: அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது? - இயக்குநர் 'சிறுத்தை'சிவா கொடுத்த அப்டேட்
`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவில், 'பறக்கவைக்கும் ராஜாளி' விருதை வென்ற பைக் ரேசர் மாயாவைப் பாராட்டி இயக்குநர் சிவா பேசினார். Ananda Vikatan Nambikkai Awards மாயா ஒருமுறை சொன்னார்கள், 'எனக்கு என்ன நேர்ந்ததோ அது நான் அல்ல; நான் என்னவாக மாற விரும்புகிறேனோ அதுதான் நான்' (I am not what happened to me. I am what I choose to become). அந்த வைராக்கியம்தான் அவரை இன்று இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட அந்தத் தழும்பு இன்று ஒரு வீரத் தழும்பாக மாறியிருக்கிறது. இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்யும் மாயா இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்’’ என்றார் சிவா. அஜித் சார் மற்றும் டிரோன் குழுவினரோடு பணியாற்றுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. டோட்டலாக அது வேறோர் உலகமாக இருக்கிறது. அங்கே நிறைய சவால்கள் இருக்கின்றன, ஆனால் அதைவிட ஒரு மிகப்பெரிய பேஷன் (Passion) அந்த வேலையின் பின்னால் இருக்கிறது. அஜித் சார் அதை மிகச்சிறப்பாகக் கையாண்டு வருகிறார். Ananda Vikatan Nambikkai Awards `அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது?’ என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அனைத்தும் சரியாக அமையும்போது அதற்கான அறிவிப்பு வரும். அந்தப் படம் எத்தகைய ஜானராக (Genre) இருக்கும் என்பதைத் தற்போதைக்கு ரகசியமாகவே வைத்திருக்கிறோம். அஜித் சார் தனது பேஷனை (ரேஸிங் மற்றும் சினிமா) மிகவும் அழகாக பேலன்ஸ் செய்கிறார். அதேபோல் விஜய் சாரும் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இருவருமே மிகவும் இன்ஸ்பிரேஷனலான மனிதர்கள்’’ என்றார். நம்பிக்கை விருதுகள் 2025: நெகட்டிவா ஒரு பயங்கர வில்லனா... - மனம் திறந்த காளி வெங்கட்
“அறுவெறுக்கத்தக்க மனநிலையின் உச்சம்” விஜய் குறித்த நயினார் கருத்துக்கு ஜோதிமணி கண்டனம்!
தமிழகத்தில் வெகு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றன. தேர்தல் களம் சூடு பிடித்துவரக்கூடிய இந்த சூழலில் கட்சிகள் ஒவ்வொன்றும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றன.
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையைஅறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் […]
யேர்மனியில் வங்கிக் கொள்ளை: பெட்டகப் பெட்டிகளை கொள்ளையர்கள் சூறையாடினர்!
யேர்மனி லோயர் சாக்சனியில் உள்ள ஸ்டுர் நகரில் ஒரு வங்கியில் பல பாதுகாப்புப் பெட்டிகளை கொள்ளையர்கள் சூறையாடியதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். குற்றவாளிகளை இதுவரை அடையாளம் காணவில்லை. சம்பவம் குறித்து நாங்கள் எதுவும் கூறமுடியாது. வங்கி வாடிக்கையாளர்கள் அங்கு என்ன சேமித்து வைத்திருந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்று காவல்துறை அதிகாரி கூறினார். வங்கியில் மொத்தம் 728 பாதுகாப்புப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் 14 உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஏனைய பெட்டிகள் அப்படியே உள்ளன என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறித்த கொள்ளை உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை நடந்ததாக காவல்துறை கூறியது. கொள்ளையர்கள் நீல நிற சீருடை அணிந்த மூன்று ஆண்கள் நண்பகலில் வங்கிக்கு முன்னால் ஒரு காரை நோக்கி நடந்து செல்வதைக் காண முடிந்தது என முதலாவது சாட்சி தெரிவித்துள்ளது. மேற்கு யேர்மனியின் கெல்சென்கிர்ச்சனில் உள்ள ஒரு வங்கியின் பெட்டகத்தைத் துளையிட்டு, கொள்ளையர்கள் சுமார் €30 மில்லியன் பணத்தைத் திருடிச் சென்ற ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது .
கனடாவில் தீயில் கருகி பலியான தமிழ் பெண்: அம்மாவிடம் கூறிய கடைசி வார்த்தைகளால் கலங்கும் குடும்பம்
கனடா, ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் லக்ஷா எனும் இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, விசாரணை தீ விபத்தில் உயிரிழந்த பெண் தனது அம்மாவுக்கு அழைத்து, “அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, கதவையும் தீ சூழ்ந்துள்ளதால், வெளியே வர முடியவில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்” என கதறி உள்ளார். மகளின் பயங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் வீட்டிற்கு சென்ற போது மகள் உயிரழந்துள்ளமை […]
கேரளா: பொன்னு மோளே நீ சாக மாட்டாய் - 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவரது மனைவி ஷெரின் ஆன் ஜான். ஷெரின் ஆன் ஜான் ஆசிரியையாக உள்ளார். இவர்களது ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். ஆலின் ஷெரின் ஆபிரகாம் பிறந்து 10 மாதமே ஆகிறது. ஷெரின் ஆன் ஜான் பட்டம் பெறும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் கோட்டயத்துக்குச் சென்றுவிட்டு கடந்த 5-ம் தேதி காரில் வீடு திரும்பினர். அப்போது இவர்கள் பயணித்த கார் திடீரென மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் படுகாயம் அடைந்தது. குழந்தையின் தாய் ஷெரின் ஆன் ஜான் மற்றும் குழந்தையின் தாய்வழி தாத்தா ராஜன் ஜான், பாட்டி ஜெசி ஜான் ஆகியோரும் காயம் அடைந்தனர். அனைவரும் திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டது. குழந்தையின் தாய் உள்ளிட்டோர் திருவல்லா தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு இடையே கடந்த 13-ம் தேதி குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இதைத்தொடர்ந்து 10 மாதமே ஆன குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடல் உறுப்புகளைத் தானம்செய்ய அவரது பெற்றோர் சம்மதித்தனர். இதற்கான நடவடிக்கைகளை குழந்தையின் தந்தை அருண் ஆபிரகாம் செய்தார். குழந்தையின் உடல் உறுப்பு தானம் குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 மாத குழந்தைக்கு கல்லீரல் தானம் செய்யப்பட்டது. இரண்டு சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைக்கு வழங்கப்பட்டன. 10 மாத குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 குழந்தைகள் வாழ்வுபெறும் எனக் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் உறுப்பு தானம் செய்த மிகவும் வயது குறைந்த குழந்தை இதுவாகும். உறுப்பு தானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'பொன்னு மோளே நீ மரணமடையமாட்டாய், வேறு குழந்தைகளின் உடலில் வாழ்வாய்' எனக் கேரள மக்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். உறுப்புதானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பத்து மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. தனது அன்புக்குரிய குழந்தையை இழந்த வேதனை இருந்தபோதிலும், ஆலினின் பெற்றோர் அவரது உறுப்புகளைத் தானம் செய்ய முடிவு செய்தனர். ஆலின் ஷெரின் ஆபிரகாம் மூலம் 5 பேருக்குப் புதிய வாழ்க்கை கிடைக்கும். குழந்தையிடம் பெறப்பட்ட உறுப்புகள் முதற்கட்டமாக 2 குழந்தைகளுக்குத் தானம் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் உடல்நிலை மேம்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மகத்தான முயற்சியை வெற்றிபெறச் செய்த சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். இந்த விஷயத்தில் அரசாங்கத்திற்கும் தனியார் துறைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது. உடல் உறுப்பு தானத்தில் ஆலின் ஷெரினின் பெற்றோர் கேரள சமூகத்திற்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். அவர்களின் துயரத்திலும், இந்த ஊர் மக்களின் துயரத்திலும் நாங்களும் பங்கு கொள்கிறோம். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Doctor Vikatan: அதென்ன மேஜர் ஹார்ட் அட்டாக், மைனர் ஹார்ட் அட்டாக் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
மம்தா மோகன்தாஸ் பகிர்ந்த ‘ஷாக்’செய்தி: நிச்சயதார்த்தத்தை மறைத்து டேட்டிங் கேட்ட நடிகர்!
நிச்சயதார்த்தத்தை மறைத்து டேட்டிங் கேட்ட நடிகர் குறித்து மம்தா மோகன்தாஸ் அதிரடித் தகவல். திரைத்துறையின் நிழல் பக்கங்கள் மற்றும் நடிகைகளின் பாதுகாப்பு குறித்த ஒரு விரிவான அலசல்.
சிறீதரன் விவகாரம் - எதிர்காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவோம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். சிறீதரன் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சித் தலைமையகத்தில் சுமந்திரனைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சுமந்திரன் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சிறீதரன் விவகாரம் என்பது ஓராண்டு காலமாக நீடித்து வரும் ஒரு விடயமாகும். கட்சி அவருக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனைகளை வழங்கியிருந்தது. இறுதியாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் அவர் பின்பற்றாத காரணத்தினாலேயே, அவரை நியமித்த அரசியல் குழு தற்போது அவரை அந்தப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக ஏற்பாட்டின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அந்தப் பதவியைப் பொறுப்பேற்பார். உண்மையில் அந்தப் பதவிக்குரிய பணிகளை இதுவரையில் அவரே முன்னெடுத்து வந்தார். இது ஏற்கனவே அரசியல் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளேன். இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க வெளியில் சொல்வதற்கு இது தருணமல்ல. தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார். இதேவேளை, சுமந்திரனுடனான சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியப் பிரதிநிதிகள், கட்சிக்குள் நிலவும் குழப்பங்கள் ஆரோக்கியமானவை அல்ல. சிறீதரன் எம்.பி. திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகின்றார். அவருக்கு எதிராகச் சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, கட்சி ஒருமித்த பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை சுமந்திரனிடம் வலியுறுத்தியுள்ளோம். - என்றனர்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக குறிப்பாக வட மாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டு ள்ளோம். வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது. அதேவேளை வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கூடியகவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும், நிலையில் வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு இறங்கு துறைகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் என்ற வகையில் மக்களின் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக பல்வேறு சவால்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.
இளைஞர்கள் ஓட்டு திமுகவிற்கு இல்லையா? அன்புமணி விட்ட சாபம்- 1.3 கோடி பேருக்கு வேலை இல்ல!
தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாக அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆளும் திமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக மாறப் போகிறது எனவும் சுட்டிக் காட்டியிருகிறார்.
PF பணத்தை இனி ஈசியாகவும், அதிகமாகவும் எடுக்கலாம்.. ரெடியாகும் புதிய ஆப்!
பிஎஃப் பணத்தை வேகமாகவும், மிக எளிதாகவும் எடுக்கும் வகையில் புதிய செயலி அறிமுகம் ஆகிறது. இதன் மூலம் UPI வசதியைப் பயன்படுத்தி எளிதாக அனுப்பலாம்.
சட்டத்தரணி கொலை சந்தேகநபர்கள் தப்பி சென்ற கார் கருகிய நிலையில் மீட்பு
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியையும், அவரின் மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் பயணித்தாக சந்தேகிக்கப்படும் கார் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. காலி - அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் காரொன்று தீ பற்றி எரிவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் கார் காணப்பட்டுள்ளது. குறித்த கார் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , கார் சட்டத்தரணியையும் அவர் மனைவியையும் சுட்டுக்கொன்ற சந்தேகநபர்கள் தப்பி சென்ற கார் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் –ஐ.நா நிபுணர்கள் கவலை
சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து ஐ.நாவின் சிறப்பு நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த சட்ட வரைவு அனைத்துலக சட்டத்துடன் இணங்குவதில் கணிசமான குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக அவர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர், தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான பணிக்குழு, கட்டாயமாக அல்லது தன்னிச்சையற்ற காணாமல் போதல்கள்
தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் உயிரிழந்த நபர் –துயரத்தில் மனைவி
சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் அதிக வெயில் காரணமாக ஒரு நபர் உயிர் இழந்துள்ளார். சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜி என்பவர் கடும் வெயிலால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 25 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வெள்ளி வேலை செய்து வந்த சுராஜி இந்த கூட்டத்திற்கு வருவதற்காக ண்பரிடம் பாஸ் பெற்று வந்ததாக கூறப்படுகின்றது. கூட்டத்தின் […]
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் […]
பிஎம் கிசான் திட்டத்தில் அடுத்த 2000 ரூபாய் எப்போது கிடைக்கும்? முதலில் இதை முடிங்க!
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 22ஆவது தவணைத் தொகை உங்களுக்கு கிடைக்குமா இல்லையா என்பதை இப்படி நீங்கள் சரிபார்க்கலாம்.
உக்ரைன் - ரஷ்யா: 20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் வரும் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. Munich Security Conference 2026 இந்த நிலையில், ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference 2026) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``உக்ரைனின் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டப்பூர்வமாக வலுவான ஒப்பந்தங்கள் அவசியம். அமெரிக்கா தற்போது 15 ஆண்டுகாலப் பாதுகாப்பு ஏற்பாட்டை முன்மொழிந்துள்ள நிலையில், அதனை 20 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும். 2027-ம் ஆண்டிற்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உறுதியான தேதியை ஐரோப்பிய நாடுகள் அறிவிக்க வேண்டும். எங்கள் மக்கள் அங்கே வாழ்கிறார்கள். அதேநேரம், அமைதிக்காக டான்பாஸ் (Donbas) பிராந்தியத்திலிருந்து உக்ரைன் பின்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்க முடியாது. அமைதிக்கான சமரசங்கள் பெரும்பாலும் உக்ரைன் தரப்பிலிருந்தே எதிர்பார்க்கப்படுவது அதிருப்தியளிக்கிறது. ஜெலன்ஸ்கி மேலும், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களும் கவலையளிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த அழுத்தம் கொடுத்து வருகிறார். எப்போது போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே உக்ரைன் தேர்தல்களை நடத்த முடியும். எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார். ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம்
புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை(14.02.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குராற்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் […]
மகாசிவராத்திரிக்காக ரஜினி போட்டோவுக்கு பாலாபிஷேகம் செய்து வடை மாலை சாத்திய ரசிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனான கார்த்திக் என்பவர் மகாசிவராத்திரியை முன்னிட்டு தன் தலைவரின் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. பாலாபிஷேக வீடியோவுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
வாரிசு நடிகையின் மலையாள என்ட்ரி: அஜித்தின் படத்தலைப்பில் அவந்திகா சுந்தர் அறிமுகம்
சுந்தர் சி - குஷ்பு மகள் அவந்திகா (Avantika Sundar) அஜித்தின் 'ஆரம்பம்' தலைப்பில் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இந்தத் திடீர் முடிவு கோலிவுட் விநியோக சந்தையில் (Distribution Market) ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அலசல்.
கொழும்பு வரும் பிரித்தானிய துணைப் பிரதமர் –சிறிதரனையும் சந்திக்கிறார்
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி சிறிலங்காவுக்கு அவசர பயணம் மேற்கொள்ளவுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வரும் டேவிட் லாமி சிறிலங்கா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அவர் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் தங்கியிருக்கும் போது பிரித்தானிய துணைப் பிரதமர் தமிழ் அரசியல் தலைவர்களையும்
பரபரப்பாகும் கொழும்பு! முன்னெப்போதும் இல்லாத மிகப் பலத்த பாதுகாப்பு
கொழும்பில் இன்று நடைபெறவுள்ள இந்திய – பாகிஸ்தான் இடையிலான டி20உலகக்கிண்ணப் போட்டிக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தயார் நிலையில் படையினர் இதன்படி, கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2,800 பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) மற்றும் […]
புதுடெல்லி மாநாட்டில் பிரெஞ்சு, பிரேசில் அதிபர்களையும் சந்திக்கிறார் அனுர
புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகும் இந்தியா – செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026 இல் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொள்வார். அதேவேளை, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த அதிபரின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்ற நபர் , சில நாட்கள் காரினை செலுத்திய பின்னர் , அதன் தடம் அறி (GPS) கருவியை செயலிழக்க வைத்துள்ளார். அதனை அடுத்து , வாகனம் வாடகைக்கு கொடுத்தவர் நீர்கொழும்பு பொலிசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் பிரகாரம் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். அதே நேரம் , காரினை வாடகைக்கு பெற்றவர், யாழ்ப்பாணத்தில் ஒரு நபரிடம் காரினை அடமானமாக வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார். இந்நிலையில், அடமானம் வைத்த கார் , நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் எனவும் , கார் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதனையும் அறிந்த , காரினை அடமானமாக வைத்து பணம் கொடுத்த நபர் , பொலிஸ் விசாரணைகளுக்கு பயந்து காரினை வீதியில் அநாதரவாக விட்டு தப்பி சென்றுள்ளார். காரினை அடமானம் வைத்து பணத்தினை பெற்று சென்ற நபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மிலான் குளிர்கால ஒலிம்பிக்: 3 நாள்களில் 10,000 ஆணுறைகள் காலி; ஒலிம்பிக் கமிட்டி சொன்ன பதில் என்ன?
இத்தாலியின் மிலான்-கோர்டினா (Milan-Cortina) பகுதியில் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்காகப் பிரமாண்ட உடற்பயிற்சிக் கூடம், டேபிள் ஃபுட்பால், ஏர் ஹாக்கி, பியானோ மற்றும் இலவச குளிர்பான இயந்திரங்கள் எனப் பல வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளும் வழங்கப்படும். எனவே, விளையாட்டு வீரர்களுக்காக 10,000 இலவச ஆணுறைகள் வழங்கப்பட்டிருந்தன. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாள்களே ஆன நிலையில், வீரர்களுக்காக வழங்கப்பட்டிருந்த 10,000 இலவச ஆணுறைகள் மூன்றே நாள்களில் தீர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணுறை (Representational Image) இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் செய்தியாளர்களிடம் நகைச்சுவையாகப் பேசினார். அப்போது, ``ஒலிம்பிக் கிராமத்தில் காதலர் வாரக் கொண்டாட்டம் உச்சத்தில் உள்ளது என்பதை இது காட்டுகிறது. 2,800 வீரர்கள் உள்ளனர். 10,000 ஆணுறைகள் தீர்ந்துவிட்டன. கணக்கைப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒலிம்பிக் சாசனத்தின் விதி 62-ன் படி, கண்டிப்பாக ஆணுறை வழங்கப்பட வேண்டும். எதிர்பார்த்ததை விடத் தேவை அதிகமாக இருந்ததால், கூடுதல் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். திங்கள்கிழமைக்குள் அனைத்து கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படும். ஒலிம்பிக் முடியும் வரை தட்டுப்பாடு வராமல் தொடர்ந்து இருப்பு வைக்கப்படும் என்றார். ஆணுறைகள் தீர்ந்தன குறித்து மெக்சிகோவைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் டோனோவன் கரில்லோ, ``எல்லோரும் அதிர்ச்சியடைந்தது போல நானும் அதிர்ச்சியடைந்தேன் என்றார். ஒலிம்பிக் கமிட்டி (IOC) செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சுமார் 3 லட்சம் ஆணுறைகள் (ஒரு வீரருக்கு ஒரு நாளைக்கு இரண்டு என்ற கணக்கில்) வழங்கப்பட்டன. ஆனால், இந்த முறை 3,000-க்கும் குறைவான வீரர்களே பங்கேற்பதால், 10,000 உறைகளே போதுமானதாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் கணித்திருந்தனர். ஆனால், அவர்களின் கணிப்பை மீறி இவை தீர்ந்துபோனது அதிகாரிகளைத் திக்குமுக்காட வைத்துள்ளது. `ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?

25 C