புத்தாண்டில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் புத்தாண்டு தினமான இன்றைய தினம் கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மருதங்கேணி வீரபத்திரர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மருதங்கேணியில் உள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரின் வீட்டிற்கு முன்பாக நின்று போதையில் ஒருவர் கூச்சலிட்டு , வீட்டில் இருப்போரை வெளியே வருமாறு அட்டகாசம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து சென்ற பின்னர் , பிரதேச சபை உறுப்பினரின் கணவர் , வீட்டில் இருந்து வெளியேறி மருதங்கேணியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , வீரபத்திரர் ஆலயத்திற்கு அருகில் போதையில் வீட்டின் முன் நின்று கத்திய நபர் வழிமறித்து சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். கத்திக்குத்தில் காயமடைந்தவரை மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினர்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு விமான நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டியிருந்த நிலையில் , மைதானத்தில் நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பமாகி , எதிர்வரும் 14ஆம் திகதி(14.01.2026) சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பணிகள் கால தாமதமாகிய […]
கேரள இலக்கிய விழா 2026.. விண்வெளியில் தடம் பதித்த சுனிதா வில்லியம்ஸ் கேரளா வருகை!
2026 ஆம் ஆண்டிற்கான கேரள இலக்கிய விழாவானது ஜனவரி 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்கிறார்.
”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” - அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு!
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்ட சாலை பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவர் அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு தஞ்சாவூர் பால்பண்ணை, சீராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துகள் இருந்தன. இதன் இன்றைய அரசு மதிப்பு சுமார் ரூ.800 கோடி என்கிறார்கள். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்து விட்டார். பிறகு, இவரது மனைவி முகமதா பேகம்(76) வசம் சொத்துகள் இருந்தன. இவரிடம், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்பவர், தங்களின் சொத்துகளை பராமரித்து, பாதுகாத்து தருவதாக, நம்பிக்கை ஏற்படுத்தி மோசடியாக பழகியுள்ளார். இதை நம்பி அவரிடம் முகமதா பேகம் சொத்தை கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அபகரிக்கபட்ட இடம் பிறகு, ஸ்ரீவித்யா சுமதி தனக்கு அறிமுகமான, தஞ்சாவூரை சேர்ந்த அ.தி.மு.க-வின் மத்திய மாவட்ட அம்மா பேரவை மாவட்ட தலைவர் கேபிள் செந்தில் (எ) செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மூலம், முகமதா பேகத்திடம், கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை, போலியான பவர் ஆஃப் அட்டார்னி, விற்பனை பத்திரங்கள், உள்ளிட்ட ஆவணங்கள் தயார் செய்து, முகமதா பேகத்திடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும், செங்கிப்பட்டி, சிராஜ்பூர் பகுதியில் பெட்ரோல் பங்க் இடத்தினை, செந்தில்குமார் தனது உறவினரான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்யதுள்ளார். அத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதியில், சிராஜூதீனுக்கு சொந்தமான இடத்தினையும், அவர் அன்பளிப்பாக வழங்கி விட்டதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அபகரித்துள்ளனர். மேலும், மூன்று வங்கிகளில் முகமதா பேகம் பெயரில், கணக்கு துவங்கி பணம் பரிவர்த்தனை செய்துள்ளார். கடந்த மாதம் பால்பண்ணையில் உள்ள சிராஜூதீனின் பெரிய வீட்டை இடித்து அங்கிருந்த ஆவணங்கள், நான்கு டூ வீலர்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள், பணம், நகை உள்ளிட்டவையும் திருடி சென்றனர். போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பு இது குறித்து தகவலறிந்த முகமதா பேகம், செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் கேட்டுள்ளார். ஆனால், முறையான பதில் சொல்லவில்லை, மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக சொல்கிறார்கள். வயது மூப்பு காரணமாக இதில் பயந்த முகமதா பேகம் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அளித்த தைரியத்தின் பேரில், போலி ஆவணங்கள் மூலம் சுமார் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தாக செந்தில்குமார், பிரகாஷ், ரேவதி, பாஸ்கரன், நாகராஜன், பெட்ரிஷியா ஜோனி, ஸ்ரீவித்யா சுமதி, செல்லப்பன், மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோர் மீது, தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் ஒன்பது பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு வழக்கில், அதிமுக பிரமுகர் கேபிள் செந்தில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாக்யரபுரா என்ற இடத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மற்றவர்கள் அங்குள்ள 27 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்ததுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. உயிரிழப்புகள் 14 இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதனை மறுத்துள்ள இந்தூர் மேயர் புஷ்யமித்ரா, 7 பேர் தான் இறந்துள்ளனர் என்று தெரிவித்தார். அதேசமயம் முதல்வர் மோகன் யாதவ், நான்குபேர் தான் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் கைலாஷ் மேற்கொண்டு முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ``பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கிடைத்த பிறகு தான் இறப்பு குறித்த தகவல் தெரியும் என்றார். இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்று 8வது முறையாக விருது பெற்றுள்ள இந்தூரில் அசுத்தமான தண்ணீரை குடித்து பொதுமக்கள் உயிரிழந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு உண்மையிலேயே இந்தூர் சுத்தமான நகரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்துள்ளது. மேலும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க தவறிய பொறியாளர்கள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இப்பிரச்னை குறித்து பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேட்டியளித்த போது, ஒரு நிருபர் `சம்பவத்திற்கு ஏன் ஜூனியர் அதிகாரிகளை மட்டும் குறை சொல்கிறீர்கள், மேல் மட்டத் தலைவர்களை பற்றி இதில் விவாதிப்பதில்லை' என்று கேட்டார். உடனே அமைச்சர் கைலாஷ், ''அதை விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்விகளை கேட்க வேண்டாம்'' என்று எரிச்சலுடன் தெரிவித்தார். இது தவிர மேலும் சில வார்த்தைகள் பேசினார். அவரது பேச்சு வைலரானது. இதையடுத்து அமைச்சர் கைலாஷ் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார். தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை கொடுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சம்பவ பகுதியில் டேங்கர் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
️யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகள் தீவிரம்: ️
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணிப்பு பணிகளை, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள்… The post ️யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகள் தீவிரம்: ️ appeared first on Global Tamil News .
கவலைப்படாதீங்க இது முழுக்க தளபதி படம்…ஜனநாயகன் குறித்து பேசிய ஹெச்.வினோத்!
சென்னை : தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது. அரசியல் அவதாரம் எடுத்துள்ள விஜய்யை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மூழ்கியிருக்கும் இயக்குநர் ஹெச். வினோத், படம் குறித்தும் விஜய்யுடனான அனுபவம் குறித்தும் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார்.“முதன்முதலாக விஜய் சாரை இயக்கியது சந்தோஷமான அனுபவம். ‘ஜன நாயகன்’ அவரது கடைசிப் படம் என்று அறிவித்த பிறகுதான் படப்பிடிப்பு […]
புத்தாண்டில் மக்களுடன் ஜனாதிபதி!
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள மக்களை ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க (ADK) அவர்கள்… The post புத்தாண்டில் மக்களுடன் ஜனாதிபதி! appeared first on Global Tamil News .
சுவிட்சர்லாந்தில் பெரும் சோகம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து – 40 பேர் பலி!
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.… The post சுவிட்சர்லாந்தில் பெரும் சோகம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து – 40 பேர் பலி! appeared first on Global Tamil News .
புதுச்சேரி: களைகட்டிய புத்தாண்டு... கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! - Photo Album
புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு போக்குவரத்து சீரமைப்பு செய்யும் காவலர்கள் சோதனைக்கு பின் கடற்கரை சாலைக்கு அனுமதிக்கும் போலிசார் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்
உலகம் அழியும் என கூறிய ‘எபோ நோவா’…அதிரடியாக கைது செய்த காவல்துறை!
கானா : சேர்ந்த இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதி கிளப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். கானா போலீசின் சைபர் கிரைம் பிரிவு டிசம்பர் 31 அன்று அவரை கைது செய்தது. இவர் தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியதே கைதுக்கு காரணம் என்று தெரிகிறது.எபோ நோவா கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய மரப் பேழையை (ஆர்க்) […]
ஏர் இந்தியா சேவையில் பிரச்சினையா? ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பிய டிஜிசிஏ!
ஏர் இந்தியா விமானங்களான AI-358 மற்றும் AI-357 தொடர்பான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து, சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) கடும் கவலை தெரிவித்து உள்ளது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம் இன்று முதலாம் திகதி, வியாழக்கிழமை காலை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள கொடிக் கம்பத்துக்கு அருகில் இடம்பெற்ற அரச சேவையின் முதல் நாள் உறுதியுரையேற்பு நிகழ்வைத் தொடர்ந்து பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 2025 ஆம் ஆண்டு 25 வருடகால சேவையைப் பூர்த்தி செய்த விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களும், கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற […]
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2027 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பொதுச் சேவையைத் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்து உள்ளார்.
சுவிட்சர்லாந்து புத்தாண்டு கொண்டாட்டம்: பலர் உயிரிழப்பு: பலர் காயம்!
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நெரிசலான கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிகாலை 01:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டபோது, 100க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த லீ கான்ஸ்டெல்லேஷன் பாரில் அதிகாலை 01:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது என்று வாலைஸ் கன்டோனல் போலீசார் தெரிவித்தனர். இந்த அரங்கம் 400 பேர் அமரக்கூடியது. பலர் உயிரிழந்தனர், மற்றவர்கள் காயமடைந்தனர் என்று காவல்துறை முதலில் கூறியது. இது ஒரு தீவிரமான சம்பவம் என்று அவர்கள் விவரித்தனர். பின்னர் எண்ணிக்கை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை. சுவிஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி, சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காவல்துறை செய்தித் தொடர்பாளர் கெய்டன் லாதியோன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிகாரிகள் பலர் உயிரிழப்புகளைக் காண்கிறார்கள். கட்டிடத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர், மேலும் பலர் காயமடைந்ததையும் பலர் இறந்ததையும் நாங்கள் காண்கிறோம் என்று அவர் கூறினார். முந்தைய அறிக்கைகள் ஒரு வெடிப்பு என்று விவரித்தன, ஆனால் பின்னர் போலீசார் இந்த நிகழ்வை தீர்மானிக்கப்படாத தீ விபத்து என்று வகைப்படுத்தினர். கிரான்ஸ்-மொன்டானா என்பது சுவிட்சர்லாந்தின் வாலிஸ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஆல்பைன் ரிசார்ட் ஆகும், இது ஒரு உயர்மட்ட விடுமுறை இடமாகக் கருதப்படுகிறது. இது நீண்ட காலமாக சர்வதேச பார்வையாளர்களையும், மறைந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் உட்பட பொது நபர்களையும் ஈர்த்துள்ளது. இந்த ரிசார்ட் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் (சுமார் 5,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் ஒரு பெரிய ஸ்கை பகுதியை வழங்குகிறது. ஜனவரி மாத இறுதியில் நடைபெறும் ஸ்கை உலகக் கோப்பை பந்தயங்கள் உட்பட முக்கிய விளையாட்டு நிகழ்வுகளையும் இது தொடர்ந்து நடத்துகிறது. விடுமுறை நாட்களில், கிரான்ஸ்-மொன்டானா பொதுவாக முழுமையாக முன்பதிவு செய்யப்படும். நகராட்சியில் சுமார் 10,000 குடியிருப்பாளர்களும், எட்டு சொகுசு ஹோட்டல்கள் உட்பட சுமார் 2,600 ஹோட்டல் படுக்கைகளும், நூற்றுக்கணக்கான விடுமுறை அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. உள்ளூர் பொருளாதாரத்தின் மையமாக சுற்றுலா உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் இரவு தங்கல்கள் இங்கு வருகின்றன. உள்ளூர் சுற்றுலா ஆணையத்தின் கூற்றுப்படி, சுமார் 20% பார்வையாளர்கள் சுவிட்சர்லாந்திற்கு வெளியில் இருந்து வருகிறார்கள்.
Vedan: இரா.முத்தரசன் நடிக்கும் படம்; இளையராஜா இசையில் பாடும் ராப் பாடகர் வேடன்! - வெளியான அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிக்கும் 'அரிசி' படத்தின் அறிவிப்பு முன்பே வெளியாகி இருந்தது. இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Vedan in Ilaiyaraja Music இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இப்படத்தை இயக்கியுள்ள இப்படம் உணவுக்குப் பின்னுள்ள அரசியல் குறித்தும், விவசாயிகள் சந்திக்கும் போராட்டங்களை இத்திரைப்படம் மையப்படுத்துகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில்தான் வேடன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். சமீப நாட்களாக மலையாள சுயாதீன இசைத்துறையின் சென்ஷேஷனாக இருந்து வருகிறார் வேடன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பைசன்' படத்தின் மூலம் தமிழில் அவரின் முதல் பாடலைப் பாடினார். Vedan in Ilaiyaraja Music தற்போது இளையராஜா இசையிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் வேடன். பாடலாசிரியர் மற்றும் ராப் பாடகர் அறிவுடன் இணைந்து இப்பாடலை அவர் பாடவிருப்பதாகவும் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்துதான் 'பைசன்' படத்தின் 'ரெக்க ரெக்க' பாடலைப் பாடியிருந்தனர்.
புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர் நிகழ்வினை தொடர்ந்து வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் சத்திய பிரமாணம் எடுத்து தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
பணவீக்க நெருக்கடி ; ஈரான் முழுவதும் தீவிரமடைந்த போராட்டங்கள்
பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, ஈரானில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானிய ரியால் (Rial) மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளமையினால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளன. இதனால், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. முன்னதாக, வர்த்தகர்கள் இடையே ஆரம்பமான குறித்தப் போராட்டம், தற்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் பரவியுள்ளது. இந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி […]
ரோஹித் –கோலியை தொடர்ந்து விளையாட வைக்கணும் –இர்ஃபான் பதான் ஸ்பீச்!
டெல்லி : விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தற்போது T20I மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் (ODI) கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதனால் அவர்கள் விளையாடும் ஒவ்வொரு ODI போட்டியும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்வாக மாறியுள்ளது. அவர்களை நேரில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய ODI தொடர்கள், 2023 உலகக் கோப்பை காலத்தில் இருந்த அதே உற்சாகத்தை […]
ரங்கநாதன் தெருவில் நடந்து செல்வதற்கு கூட இடமின்றி, மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண மாநகராட்சி, மாநகர போலீசார் பலகட்ட நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் உள்ளனர்.
கூட்டணி விவகாரம்.. லக்ஷ்மண ரேகையை மீற மாட்டோம்.. வைகோ கருத்து!
திமுக காங்கிரஸ் கூட்டணி உட்கட்சி பூசல் விவகாரத்தில் லக்ஷ்மண ரேகையை மீற மாட்டோம் என்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்து உள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்…சுவிட்சர்லாந்து தீ விபத்தில் 40 பேர் பலி!
சுவிட்சர்லாந்து :கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள Le Constellation என்ற பாரில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. வெடிப்பு ஒன்றுக்குமேல் ஏற்பட்டதாக தகவல்கள் கூறும் நிலையில், அதன் பின் தீ வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் (GMT 00:30) நிகழ்ந்ததாக RTS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்க சுமார் 100 பேர் பாரில் கூடியிருந்த […]
மக்களுடன் மக்களாக, தலாதா மாளிகையில் ஜனாதிபதி AKD!
வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையில் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் வழிபாடுகளில்… The post மக்களுடன் மக்களாக, தலாதா மாளிகையில் ஜனாதிபதி AKD! appeared first on Global Tamil News .
த.வெ.க கூட்டணிக்கு வருகிறதா வி.சி.க? செங்கோட்டையைன் ஓபன் டாக்.!
சென்னை :திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் முக்கியமாக, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) வருகிறதா என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார். வி.சி.க கூட்டணிக்கு வருமா, இல்லையா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் வி.சி.க தொண்டர்கள் பலர் த.வெ.கவில் இணைந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், எல்லோருடைய எண்ணங்களும் ஒரே திசையில் தான் இருப்பதாக […]
யாழ். சுற்றுலாத்துறையின் மையமாக மாறும் வலி வடக்கு: தவிசாளர் சுகிர்தன் பெருமிதம்
வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் 2026ம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள வலி வடக்கு தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. வலி வடக்கு பிரதேசசபை செயலாளர் சிவகுமார் சிவானந்தனால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், இப்புதிய வருடத்தில் வலி வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேலும் துரிதகதியில் மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக யாழ் நகரத்தை […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஜப்பானின் நில அதிர்வு
ஜப்பானின் கிழக்கு நோடா (Noda) பகுதிக்கு அருகில் நேற்று 6.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஜப்பானின் கிழக்கு நோடா கடற்பரப்புக்கு அப்பால் சற்று முன்னர் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது நிலப்பரப்பில் இருந்து சுமார் 19.3 கிலோமீட்டர் (சுமார் 12 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் இந்த நில […]
புதுக்கோட்டையில் பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஜன.4ல் அமித் ஷா வருகை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ள நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்திற்கு தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி: அதிமுக கோட்டையில் திமுக போடும் கணக்கு- வெற்றி வாய்ப்பு யாருக்கு?
ஆத்தூர் தனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், வரவிருக்கும் 2026 தேர்தலில் களம் மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணி பற்றி விரிவாக பார்க்கலாம்.
புதிய விடியல் – 2026! பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான பணிகள் ஆரம்பம்!
2026 புத்தாண்டுக்கான பணிகளைப் பிரதமர் அலுவலகத்தில் (Prime Minister’s Office) இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்… The post புதிய விடியல் – 2026! பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான பணிகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
பர்னி தெலோங் எரிமலை சீற்றம் : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்!
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் அமைந்துள்ள பர்னி தெலோங் (Bur Ni Telong) எரிமலை தற்போது அதிகப்படியான சீற்றத்துடன் காணப்படுவதால்,… The post பர்னி தெலோங் எரிமலை சீற்றம் : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்! appeared first on Global Tamil News .
சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி!
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கிராஸ்-மொன்டானா (Crans-Montana) பனிச்சறுக்கு விடுதியில் (Ski Resort) இன்று (ஜனவரி 1, 2026) அதிகாலை நடந்த… The post சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி! appeared first on Global Tamil News .
விஜய்யை அரசியல் களத்தில் இறக்கிவிட்டது யார்?: மன்சூர் அலி கானால் ஆராய்ச்சி செய்யும் ரசிகர்கள்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பற்றி மன்சூர் அலி கான் தெரிவித்த ஒரு விஷயம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். மேலும் மன்சூர் அலி கானிடமே பதில் கேட்கிறார்கள்.
நீருக்கு அடியில் சதுரங்கப் போட்டி ; உலக செம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது நெதர்லாந்து
நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டி வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி, இது நீச்சல் தடாகத்தின் அடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடப்படும் ஒரு வினோதமான மற்றும் சவாலான விளையாட்டாகும். இம்முறை நடைபெற்ற உலக செம்பியன்ஷிப் போட்டியில் 40 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தப் போட்டியில் சதுரங்கப் பலகைகள் காந்தத் தன்மையுடனும் (Magnetic boards), காய்கள் […]
தூத்துக்குடி ,நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை :வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்பு […]
2026: ட்ரம்ப் டு கிம் வரை; ரஷ்யா டு சுவிட்சர்லாந்து.. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் - Album
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று இடம்பெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
மொசாட் பெண் உளவாளி கூறும் புதிய தகவல்
நாளொன்றிற்கு சராசரியாக 9 மில்லியன் தகவல்கள் இஸ்ரேலிய அமைப்புகளால் திரட்டப்படுவதாக இஸ்ரேலிய மொசாட் உளவாளி பெண் டனா ரசண்டல் தெரிவித்தார். இந்த தகவல்கள் தான் இஸ்ரேலின் தற்போதை அளப்பரிய சாதனைகளுக்கு உதவியுள்ளது. இஸ்ரேல் என்றதும் மொசாட் உளவுத்துறை பெரிதாக பேசப்பட்டாலும், அங்கு 3 உளவுத்துறைகள் செயற்பட்டு வருகின்றன. 15ற்கும் மேற்பட்ட உப பிரிவுகள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு பிரிவில் செயற்பட்டு வருகின்றன. மொசாட்டின் சாதனை என்று பல புலனாய்வு பெறுபேறுகளை செய்தது இஸ்ரேலின் ஷின்பெத் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டவை.
இறையருளுடன் இனிதே தொடங்கிய 2026: பாஷையூர் அந்தோனியார் ஆலய நள்ளிரவு நற்செய்தி திருப்பலி
யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று(01) நள்ளிரவு புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீரும் வழங்கப்பட்டது.
✨ புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2026 புத்தாண்டை முன்னிட்டு, கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (வியாழக்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற்றது.… The post ✨ புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்! appeared first on Global Tamil News .
பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு புதுவருட திருப்பலி!
யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில்… The post பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு புதுவருட திருப்பலி! appeared first on Global Tamil News .
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பரிசு அறிவித்த அரசு!
சென்னை :தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் மிகை ஊதியம் அறிவித்துள்ளது. சி, டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.183.86 கோடி […]
2025-ம் ஆண்டில் ஆசிய அளவில் மிகவும் வீழ்ந்த இந்திய ரூபாய்; 2026-ல் மீளுமா? - RBI அறிக்கை
2025-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.91 வரை கூட சென்றது. இது ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி தான். ஆனால், இது இறக்குமதியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைத் தந்தது. விலைவாசி உயர்வு அச்சம் இந்தியாவின் பக்கம் எட்டிப்பார்த்தது. ஆனால், சில நாள்களிலேயே, இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்தது. 2026-ம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, 2025-ம் ஆண்டில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 5 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. 2022-ம் ஆண்டில் இருந்து இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சியைக் கண்டது கடந்த ஆண்டு தான். கடந்த ஆண்டு, ஆசியாவிலேயே மிக வீழ்ச்சியைக் கண்ட நாணயம் இந்திய ரூபாய். இந்திய ரூபாய் கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன? ஏன் இந்த வீழ்ச்சி? அமெரிக்கா இந்திய பொருள்களின் மீது 50 சதவிகித வரி விதித்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும். அடுத்ததாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பெருமளவு தங்களது முதலீடுகளை வெளியேற்றினர். இன்னொன்று, உலக அளவிலான நிலையற்ற தன்மை, நாணய சந்தையைப் பாதித்தது. 2026-ம் ஆண்டு எப்படி இருக்கும்? இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதனால், இந்திய ரூபாயின் மதிப்பு நிலையற்று இருக்கும். இப்போது சந்தையைக் கணிக்கும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு கரடியின் பிடியில் இருக்கலாம். ஆனால்... இந்த இறங்குமுகத்தைத் தாண்டி, இந்திய பொருளாதாரம் வலுவாக இருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி நன்கு இருக்கிறது. பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருக்கும். மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!
வலி. வடக்கு பிரதேச சபையின் 2026 புத்தாண்டு சத்தியப்பிரமாண நிகழ்வு!
வலி. வடக்கு பிரதேச சபையின் 2026-ஆம் ஆண்டிற்கான பணிகள் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. முக்கிய நிகழ்வுகள்:… The post வலி. வடக்கு பிரதேச சபையின் 2026 புத்தாண்டு சத்தியப்பிரமாண நிகழ்வு! appeared first on Global Tamil News .
பார்வதியும், கம்ருதீனும் சண்டை போட்டுக் கொண்ட விதத்தை பார்த்தால் கண்டிப்பாக பிரேக்கப் தான் என்று பலரும் முடிவே செய்த நிலையில் உல்ட்டாவாக ஆகிவிட்டது. இதை சத்தியமாக எதிர்பார்க்கல பாரு என்கிறார்கள் பார்வையாளர்கள்.
விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் –சென்னை மாநகர காவல் அறிவிப்பு
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ‘ஹாட் ஸ்பாட்’டான மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகி விட்டது –உக்ரைன் அதிபர் தகவல்
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக 20 அம்சங்கள் கொண்ட
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25-ம் ஆண்டிற்கான C,D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,
போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் பணம் போடப் போறீங்களா? புத்தாண்டில் புதிய வட்டி அறிவிப்பு!
2026 ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் இதுதான்..!
போர் பயிற்சியில் சீன இராணுவம் ; ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்
தாய்வானைச் சுற்றி சீனாவின் இராணுவப்படைகள் முன்னெடுக்கும் போர் பயிற்சிகள் குறித்து தான் கவலைப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா, தாய்வானுக்கு இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்த சில நாட்களில் சீனா போர் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளது. இன்றைய போர் பயிற்சியின்போது சீனா, தாய்வானை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இராணுவப் பயிற்சிகள் குறித்து தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை, ஆனால் சீனா வழக்கமாக கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதால் […]
✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை கடமைகளை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு சிறப்பாக… The post ✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்! appeared first on Global Tamil News .
யாழில். அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய குற்றத்தில் பெண் கைது
அயல் வீட்டுக்காரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அயல் வீடான இரு வீட்டார் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தில் பெண்ணொருவர் அயல் வீட்டார் மீது கத்தி குத்து தாக்குதல் நடாத்தியுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை கடமைகளை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு சிறப்பாக… The post ✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அயலவரை கத்தியால் குத்திய பெண் கைது!
யாழ்ப்பாணம், சுன்னாகம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட தகராறில், அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் நேற்றைய… The post யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அயலவரை கத்தியால் குத்திய பெண் கைது! appeared first on Global Tamil News .
Rishabam 2026 New Year Rasi Palan | ரிஷபம் ஆங்கிலப் புத்தாண்டு பலன் | திருமணம்,தொழில்,கல்வி எப்படி?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் ரிஷபம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு் ரிஷபம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் விளக்குகின்றனர்.
இந்தியாவின் பணக்கார மாநகராட்சி; மும்பையை ஆளப்போவது யார்? - 2516 வேட்பாளர்களுடன் பலமுனை போட்டி!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மற்றொரு சிவசேனா(உத்தவ்) மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சி உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறது. துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி மாநிலம் முழுவதும் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி என்ற கட்சியுடன் கூட்டணி வைத்து 62 வார்டுகளை அக்கட்சிக்கு ஒதுக்கி இருந்தது. ஆனால் வஞ்சித் பகுஜன் அகாடி 16 வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 2516 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பா.ஜ.க கூட்டணியில் கடைசிவரை நீடித்ததால் வேட்பாளர் யார் என்பது கடைசி வரை சஸ்பெண்ஸ்சாக இருந்தது. மனுத்தாக்கலுக்கு கடைசி நாளில் மட்டும் 84 சதவீதம் பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது மனைவிகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதில் தீவிர கவனம் செலுத்தினர். இட ஒதுக்கீடு முறையில் சில வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வார்டுகளில் அரசியல் தலைவர்கள் தங்களது மனைவிகளை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்றனர். பா.ஜ.கவில் தனது மனைவிக்காக சீட் பெற்றுள்ள முன்னாள் கவுன்சிலர் அபிஜித் சாவந்த் இது குறித்து கூறுகையில்,'' எனது மனைவி ஆரம்பத்தில் இருந்தே எனது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். நான் வேறு எங்காவது புதிதாக ஒரு இடத்தில் போட்டியிடுவதை விட, எனது மனைவி எனது வார்டில் போட்டியிடுவதுதான் மிகவும் பொருத்தமானது என்று நான் உணர்ந்தேன்,” என்றும் அவர் தெரிவித்தார். மும்பையில் மட்டும் 43 அரசியல் தலைவர்கள் தங்களது மனைவி, மகன், மருமகள், வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி இருக்கின்றனர். பாஜக எம்.எல்.ஏ ராகுல் நர்வேகர், காங்கிரஸ் எம்.எல்.ஏ அஸ்லாம் ஷேக் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ நவாப் மாலிக் ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா மூன்று டிக்கெட்டுகளைப் பெற்ற நிலையில், மற்றவர்கள் தங்கள் உறவினர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றனர். இது தவிர எம்.எல்.ஏ.க்கள் தங்களது பகுதியை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களது தூரத்து உறவினர்களுக்கு சீட் வாங்கிக்கொடுத்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பணக்கார மாநகராட்சியை கைப்பற்றுவது என்பது பா.ஜ.கவின் நீண்ட கால கனவாகும். கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனாவை விட சில வார்டுகள் குறைவாக பெற்றதால் அப்போது பதவியை பிடிக்க முடியவில்லை. எனவே இந்த முறை எப்படியும் மும்பையை பிடித்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் ஏறத்தாழ ரூ.75 ஆயிரம் கோடியாகும். 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த மாநகராட்சியை சிவசேனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் இம்முறை சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 90 வார்டுகளில் தான் போட்டியிடுகிறது. மும்பையை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். உண்மையான போட்டியென்றால் அது உத்தவ் தாக்கரேயிக்கும், ஏக்நாத் ஷிண்டேயிக்கும் தான் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி, மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத்… The post ⛪️மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி! ✨ appeared first on Global Tamil News .
பலவீனமாக இருந்தாலும் அதிமுகதான் எங்கள் எதிர்க்கட்சி –உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்!
சென்னை :துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த புத்தாண்டு நேர்காணலில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாகப் பேசினார். “தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான பலமான கட்சியே இல்லை. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அதிமுகவைத்தான் முதன்மை எதிர்க்கட்சியாகப் பார்க்கிறோம். அதிமுக இப்போது பலவீனமாக இருந்தாலும், திமுகவின் எதிர்க்கட்சியாக அதிமுகவை மட்டுமே கருதுகிறோம்” என்று தெளிவாகத் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் “2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி” […]
பிரஜின், மீனு குட்டி அவ்ளோ சொல்லியும் புத்தாண்டும் அதுவுமா வேலையை காட்டிய சாண்ட்ரா: என்ன தாயி இது?
குடும்ப வாரத்தின்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிரஜின் மற்றும் மகள் மீனு குட்டி சொன்னதை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் சாண்ட்ரா. புத்தாண்டு அன்றே ஆரம்பித்துவிட்டாரே சேச்சி என்கிறார்கள் பார்வையாளர்கள்.
சென்னை கடற்கரை–எழும்பூர் இடையே கூடுதல் ரயில் பாதை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை நகரின் ரயில் போக்குவரத்தில் முக்கியமான மாற்றமாக, கடற்கரை (Beach) நோக்கி கூடுதல் ரயில் வழித்தடம் பயன்பாட்டிற்கு தயாராகியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2026 அறிவிப்பு… எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. புத்தாண்டு அதுவுமாக மக்களுக்கு வந்த ஷாக் நியூஸ்!
2026ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சிலிண்டர் விலை பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் சிலிண்டர் விலை இதுதான்.
மேஷம் - புத்தாண்டு பலன்கள் 2026 | Mesham Rasi New Year Rasi Palan | நினைத்தது நடப்பது எப்போது?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் மேஷம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு மேஷம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றனர்.
நெல்லை, குமரி, விருதுநகரில் மினி டைடல் பூங்கா… தமிழக அரசு வெளியிட்ட டெண்டர்!
தமிழகத்தில் புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் மினி டைடல் பூங்கா அமைக்கும் பணிகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் மூன்று மாவட்டங்களில் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
கனிமொழியைத் தவிர்த்த பாலாஜி டு அப்செட்டில் நயினார்! | கழுகார் அப்டேட்ஸ்
குஷியில் தென்மாவட்ட சீனியர்கள்! பொடிவைத்த ஆர்.பி.உதயகுமார்... அ.தி.மு.க- விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தையும் டி.டி.வி தினகரனையும், ‘கூட்டணியில்கூட இணைத்துக்கொள்ள மாட்டேன்’ என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சொல்லிவந்தார். பியூஷ் கோயல் உடனான சந்திப்புக்குப் பிறகு, அவருடைய நிலைப்பாட்டில் மாற்றம் தென்பட்டிருக்கிறது. ஆனால், ‘எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலுள்ள அ.தி.மு.க-வில் சேரவே மாட்டோம்’ என்று தினகரனும் பன்னீரும் கூறிவருகிறார்கள். இப்படியான சூழலில், ‘இணைப்பு சாத்தியமில்லை என்றால், வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குப் பெரும் சவாலாக தென்மாவட்டங்கள் அமைந்துவிடும்’ என்று அச்சப்படுகிறார்கள் தென்மாவட்ட இலைக்கட்சி சீனியர்கள். ஆர்.பி. உதயகுமார் இந்தநிலையில்தான், ‘தி.மு.க-வை வீழ்த்த நினைக்கும் அனைவரும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று வரவேண்டும். இந்த அழைப்பு தேவையானவர்களுக்குப் புரியும்...’ என்று கூறியிருக்கிறார் எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். அவர் இப்படி பொடிவைத்துப் பேசியதன் பின்னணியில், ‘விரைவிலேயே இணைப்போ அல்லது கூட்டணியோ நிகழப்போகிறது...’ என்று குஷியாகியிருக்கிறார்கள் தென்மாவட்ட சீனியர்கள். ஆனாலும், ‘எடப்பாடிக்கு தெரிந்துதான் உதயகுமார் இப்படி சொன்னாரா... இல்லை, தெரியாமல் சொன்னாரா...’ என்ற விவாதமும் கட்சிக்குள் சூடாகியிருக்கிறது! பாராட்டிய தி.மு.க தலைமை! கனிமொழியைத் தவிர்த்த பாலாஜி... திருப்பூரில் நடந்த தி.மு.க மகளிர் மாநாடு, எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடந்து முடிந்திருப்பதால், தலைமை ரொம்பவே ஹேப்பியாக இருக்கிறதாம். குறிப்பாக, பாலாஜி செய்த மற்றொரு சம்பவம்தான் தலைமையின் மகிழ்ச்சிக்குக் காரணமாம். அதாவது, “மாநாட்டு மேடையிலும், முகப்பிலும் மட்டும் கனிமொழியின் படத்தை வைத்துவிட்டு, மாநாடு திடல் முழுக்க முதல்வர் ஸ்டாலினின் படத்தையும் உதயநிதியின் படத்தையுமே இடம்பெற வைத்திருக்கிறார் பாலாஜி. கனிமொழி அவர்களுக்கு இணையாக கனிமொழியின் படத்தையும் போட்டால், கனிமொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததுபோல் ஆகிவிடும். அதனால், தலைமையின் சங்கடத்துக்கு ஆளாக வேண்டாம் என்று யோசித்து, கனிமொழியின் படத்தை தவிர்த்து ஸ்கோர் செய்திருக்கிறார். ‘நாம் சொல்லாமலேயே நமது எண்ணத்தை பாலாஜி புரிந்துகொண்டுவிட்டாரே...’ என்று, தலைமையும் உற்சாகமாகி அவரை ஏகத்துக்கும் பாராட்டிவிட்டுச் சென்றிருக்கிறது” என்கிறார்கள் கரூர் விவரப் புள்ளிகள்! விலகும் எண்ணத்தில் மா.செ! நெருங்க முடியாத தலைமை... சமீபத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்வு ஒன்றுக்காக, கடைகோடி மாவட்டத்துக்கு விசிட் அடித்தார் சிறுத்தை கட்சித் தலைவர். அவர் வரும் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அந்தப் பகுதியிலுள்ள மூன்று மாவட்டச் செயலாளர்களில் ஒருவர், தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகள், தங்குமிடம், உணவு உபசரிப்பு என்று அட்வான்ஸாக சில லட்டுகளைச் செலவழித்திருக்கிறார். ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், சக மாவட்டப் புள்ளிகளும், சிறுத்தை தலைவரின் அருகிலேயே அந்த மாவட்டச் செயலாளரை நெருங்கவிடவில்லையாம். தலைவரும்கூட அது குறித்து கவலைப்படவில்லையாம். “பட்டியல் சமூகத்தினர் அல்லாதோருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கிவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள். மிஸ்டர் கழுகு: அதிர்ச்சி ஆடியோ... கொதித்த குடும்பம்... ‘டபுள் கேம்’ டெல்லி காங்.! ஆனால், பட்டியல் சமூகத்தினர் அல்லாத நிர்வாகிகளால், தலைவரைச் சந்திக்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு சக மாவட்டப் புள்ளிகள் அராஜகம் செய்கிறார்கள். கடைக்கோடி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த விவகாரத்தில், அப்செட்டாகியிருக்கும் அந்த மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்து விலகும் மனநிலைக்கு வந்துவிட்டார்” என்கின்றன சிறுத்தை கட்சி வட்டாரங்கள்! அப்செட்டில் நயினார்! காலை வாரிய நிர்வாகிகள்... பா.ஜ.க மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன், ‘தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், நீலகிரி மாவட்டத்துக்குச் சென்ற அவர், குன்னூரில் கிடைத்த வரவேற்பில் பூரித்துப்போயிருக்கிறார். ஆனால், அதை முடித்துவிட்டு ஊட்டிக்கு சென்ற அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஊட்டியில் கான்வாயை மறித்து கருப்புக்கொடி காட்டிய அண்ணாமலை ஆதரவாளரின் செயல், பேசத் தொடங்கியதும் மைக் சொதப்பல், பிரசார வாகனத்தில் நின்று ஓயாமல் எடப்பாடி புகழ்பாடிய அ.தி.மு.க நிர்வாகிகள் என்று, அடுத்தடுத்து நிகழ்ச்சி சொதப்பவும், கடுப்பாகிவிட்டாராம் நயினார். அதேசமயம், சொல்லிக்கொள்ளும் அளவுக்குகூட கூட்டத்தைக் கூட்டாமல் ஊட்டி பா.ஜ.க நிர்வாகிகளும் சொதப்பிவிட்டார்களாம். “லேட்டாக என்ட்ரி கொடுத்த அண்ணாமலை, கூடியிருந்த சொச்சக் கூட்டத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டார். நன்றியுரை போல கடைசியாக நாலு வார்த்தைகளை நயினார் பேச தொடங்கியதுமே, கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது. அப்செட்டான நயினார், ஊட்டி நிர்வாகிகளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்! கிடுக்கிப்பிடி சி.பி.ஐ! சிக்கிக்கொண்ட காக்கிகள்... கரூர் துயரச் சம்பவத்தை விசாரித்து வரும் சி.பி.ஐ., கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளையும்... த.வெ.க நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மதியழகன் ஆகியோரையும் டெல்லிக்கு அழைத்து விசாரித்து வருகிறது. கடந்த டிச.29-ம் தேதி நடந்த விசாரணையில், ‘விஜய் எப்போது சம்பவ இடத்துக்கு வந்தார். அதற்கு முன்னதாக என்ன மாதிரியான சூழல் சம்பவ இடத்தில் நிலவியது..?’ என்று சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். கரூர் விஜய் கூட்டம் அதற்கு, ‘இரவு ஏழு மணியளவில் வேலுசாமிபுரத்திற்கு விஜய் வந்துசேர்ந்தார். அதற்கு முன்னதாகவே கூட்டம் கூடிவிட்டது. மாலை 6 மணிக்கெல்லாம் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது...’ என்று பதிலளித்தார்களாம் காவல்துறை அதிகாரிகள். உடனே, ‘ஆறு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காத அளவுக்குக் கூட்டம் கூடிவிட்டது என்றால், பிறகு எதற்காக விஜய்யைக் கூட்டம் நடத்தும் இடத்திற்கு வர அனுமதித்தீர்கள்... நடுவழியிலேயே தடுத்துத் திரும்பிபோகச் சொல்லியிருக்கலாமே...’ என்று கிடுக்கிப்பிடி கேள்வியைக் கேட்டதாம் சி.பி.ஐ. தமிழகக் காவல்துறையினரிடமிருந்து ஏழு மணிக்கு முன்னதாக த.வெ.க நிர்வாகிகளுக்கு அழைப்பு ஏதும் சென்றதா என்று விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறதாம் சி.பி.ஐ.!
1 மணி வரை இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!
சென்னை :உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று (ஜனவரி 1, 2026) பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த மழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் […]
ஆண்டவன் மேல பாரத்த போட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான்: ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தலைவர் சோஷியல் மீடியாவில் நடப்பதை கவனிக்கிறாரே என்கிறார்கள்.
வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்…புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை :சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு முன்பு 2026 ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி அதிகாலை முதலே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்த ரசிகர்களின் உற்சாகத்தை அறிந்த ரஜினிகாந்த் வெளியே வந்து அவர்களைச் சந்தித்தார். கையசைத்து வாழ்த்து பெற்றுக்கொண்ட அவர், ரசிகர்களுக்கு உருக்கமான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரசிகர்கள் முன்பு கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த், 2026 புத்தாண்டு தின வாழ்த்துகளை மனமுருகத் தெரிவித்தார். ரசிகர்களின் ஆரவாரமும் உற்சாக கோஷங்களும் இல்லத்தைச் […]
உலகப் புகழ் பெற்ற நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து ; வெளியான காரணம்
தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உலகப் புகழ் பெற்ற முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட சதித்திட்டத்தை எப்.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் முறியடித்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், உலக நாடுகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல்கள் கடந்த காலங்களில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தற்போது எழுந்துள்ள தீவிரவாத அச்சுறுத்தல் […]
ஆண்டின் முதல் நாளிலேயே ஷாக்! சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு!
சென்னை : வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (ஜனவரி 1, 2026) ரூ.110 உயர்ந்துள்ளது. 2026 ஆண்டின் முதல் நாளிலேயே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போதைய உயர்வு வணிகர்களுக்கு திடீர் அதிர்ச்சியை […]
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சமாக 10,000 ரூபாயைக் கோரி, அதனை வேறொருவர் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயன்ற போதே குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பொலிஸ் நிலையத்தினுள் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
திருகோணமலையில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெஹிவத்தை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களும் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானர்கள் . அதன் போது அப்பகுதியை சேர்ந்த எம், ஏ. சாமிக்க அசான் (வயது 21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இரு இளைஞர்களுடன் படுகாயமடைந்த நிலையில் , மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12 மாதங்களில் 114 துப்பாக்கி சூடு ; 60 பேர் படுகொலை
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில் பெரும்பாலானவை பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு அன்று சூப்பர் நியூஸ்! மீண்டும் குறைந்த தங்கம் விலை!
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 1, 2026) குறைந்து நகை வாங்குபவர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.12,440-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு தொடக்கத்தில் இந்த குறைவு பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்றைய குறைவு சர்வதேச சந்தை போக்கு மாற்றங்களால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரூ.1 லட்சத்தை நெருங்கியிருந்த சவரன் […]
கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன?
இன்று - 2026-ம் ஆண்டின் முதல் நாளில் இருந்து சில நடைமுறைகள் மாறுகின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். 1. பான் - ஆதார் இணைப்பு நேற்று பான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி. இன்னமும், இந்த இரண்டையும் இணைக்கவில்லை என்றால், பான் கார்டு செல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதனால், வங்கி பரிவர்த்தனை தொடங்கி வருமான வரிக் கணக்குத் தாக்கல், வருமான வரி ரீஃபண்ட் அனைத்திலும் சிக்கல் ஏற்படலாம். ஆதார் - பான் கார்டு இணைப்பு மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026! 2. 8வது ஊதியக் குழு இன்றிலிருந்து 8வது ஊதியக் குழு அமலுக்கு வருகிறது. இதனால் மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு சம்பளம், பென்சன் தொகை மாறும். 3. கிரெடிட் ஸ்கோர் இதுவரை கிரெடிட் ஸ்கோர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இனி ஒவ்வொரு வாரமும் அப்டேட் செய்யப்பட உள்ளது. இதனால், இ.எம்.ஐ-யை மிஸ் செய்தாலோ, கடன் திரும்ப கட்டாவிட்டாலோ, உங்களது கிரெடிட் ஸ்கோரில் சீக்கிரம் பிரதிபலிக்கும். 4. கேஸ் சிலிண்டர் இன்று முதல் வீட்டுப் பயன்பாடு மற்றும் கமர்ஷியல் பயன்பாடு LPG சிலிண்டர்களின் விலை மாற உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். 5. புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவம் இந்த மாதம் முதல் புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த வருமான வரி படிவத்தில் ஏற்கெனவே வங்கி பரிவர்த்தனைகள், செலவுகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால், அதை நிரப்புவது மிகவும் எளிதாகும். உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!
2026இல் விமானப்படையை வலுப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம்
சிறிலங்கா விமானப்படை 2026 ஆம் ஆண்டில் விமானங்களில் பாரிய மேம்படுத்தல்கள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவிமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் நளின் வெவகும்புர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில்அமெரிக்கா பத்து TH-57 சீ ரேஞ்சர் (பெல் 206) உலங்குவானூர்திகளைஅமெரிக்கா கொடையாக வழங்கவுள்ளது. மேலதிகமாக, அமெரிக்கா இந்த ஆண்டிலும்,அவுஸ்ரேலியா 2027 ஆம் ஆண்டிலும், சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு C-130 போக்குவரத்து விமானங்களை வழங்கவுள்ளன. இவற்றைப் பொறுப்பேற்பதற்கான
இந்தியா –பாகிஸ்தான் சண்டையில் மத்தியஸ்தம்! அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா அறிவிப்பு!
சீனா மத்தியஸ்தம்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையை, வர்த்தகத்தை முன்வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை […]
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தீபங்கள் ஏற்றி ஆங்கிலப் புத்தாண்டு வரவேற்பு
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமனம்?
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எட்டுப்பேர் அடங்கிய தேசிய காவல்துறை ஆணைக்குழுவில், இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வெற்றிடங்களில் ஒன்றுக்கு, முன்னாள், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும், முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளருமான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியை நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க,
அவசரகாலச் சட்ட நீடிப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கரிசனை புறக்கணிப்பு
அவசரகாலச் சட்ட பிரகடனத்தில் திருத்தம் செய்யுமாறு தாங்கள் முன்மொழிந்த விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில், முன்னர் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டவிதிகளில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், உறுப்பினருமான, சட்டவாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவ, தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டத்தில் முறையற்ற குறிப்பு -பிரதமர் ஹரிணி பதவி விலக கோரிக்கை
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாகவே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற குறிப்புகள் பள்ளி மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும். பொருத்தமற்ற விடயங்களைப்
Doctor Vikatan: நரக வேதனையைத் தரும் வறட்டு இருமல்,தொண்டைப்புண்... இருமலை நிறுத்த வழி உண்டா?
Doctor Vikatan: என் வயது 55. எனக்கு கடந்த ஒரு மாதமாக கடுமையான வறட்டு இருமல் இருக்கிறது. பாட்டில், பாட்டிலாக இருமல் மருந்து குடித்தும் இருமல் நிற்கவில்லை. இருமி இருமி, தொண்டை புண்ணானதுதான் மிச்சம். இருமல் அடங்கும்வரை நரக வேதனையை அனுபவிக்கிறேன். இதற்கு என்னதான் காரணம்... இந்த இருமலை நிறுத்த என்னதான் வழி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் இருமல் எதனால் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதற்கான சிகிச்சையை முடிவு செய்ய முடியும். வைரஸ் தொற்றால் ஏற்பட்டதா, பாக்டீரியா தொற்றால் ஏற்பட்டதா, பிற காரணங்களால் ஏற்பட்டதா என்று பார்க்க வேண்டியது அவசியம். வறட்டு இருமலுக்கு மிக முக்கியமான காரணம் வைரஸ் தொற்றுதான். இந்தத் தொற்றால் ஏற்படும் இருமலானது, பொதுவாக இரண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம். ஒருவேளை தொற்று மிகவும் தீவிரமாக இருந்தால், வறட்டு இருமலானது நான்கு வாரங்கள் வரைகூட நீடிக்கலாம். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் வரும் இருமலுக்கு, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் 'Cough Suppressants' மருந்துகள் எடுத்தால் போதும். தொடர்ந்து இருமுவதால் தொண்டையில் எரிச்சலும், அசௌகர்யமும் ஏற்படலாம். இதைத் தவிர்க்கவே இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இருமல், பெரும்பாலும் வறட்டு இருமலை ஏற்படுத்தாது. இதற்கு மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் வரும் இருமலுக்கு, 'Cough Suppressants' மருந்துகள் எடுத்தால் போதும். Doctor Vikatan: சில வகை இருமல் மருந்துகளைக் குடித்தால் கை, கால் நடுக்கம் ஏற்படுவது ஏன்? சில நேரங்களில் பாக்டீரியா தொற்று குணமானாலும், அதன் பிறகு ஒருவித வறட்டு இருமல் சில நாள்கள் இருக்கலாம். அதைக் குறைக்க Cough Suppressants மற்றும் ஆன்டி-ஹிஸ்டமைன் (Anti-histamines) மருந்துகள் பரிந்துரைக்கப்படும். தொண்டை எரிச்சலையும் அதனால் ஏற்படும் அவதியையும் குறைக்கவே, வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். வறட்டு இருமல் ஏற்பட வேறு காரணங்களும் இருக்கலாம். உதாரணத்துக்கு, ஒவ்வாமை (Allergies), மூக்கடைப்பு (Post-nasal drip), நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி (Gastritis), மற்றும் ஆஸ்துமா போன்றவையும் வறட்டு இருமலை உண்டாக்கலாம். இருமல் மருந்துகள் தற்காலிக நிவாரணமாக மட்டுமே செயல்படும். இருமல் எதனால் ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணத்தைக் (Underlying cause) கண்டறிந்து அதற்குச் சிகிச்சை அளிப்பது மிக அவசியம். எனவே, காரணம் அறியாமல் மருந்துகள் எடுத்தால் இருமல் கட்டுப்படாது. நீங்களாக மருந்து வாங்கிப் பயன்படுத்துவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம், கவனம்! உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
புத்தாண்டில் தமிழினம் தாண்ட வேண்டிய சவால்கள்
2009 ஆம் ஆண்டு மே மாதம் பேரூழியில் சிக்கிய ஈழத் தமிழினம், இப்போது மிகப்பெரிய, அபாயத்தில் சிக்கியிருக்கிறது. போருக்குப் பின்னரான காலகட்டத்தில், தமிழ் இனத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றவர்கள், அதனை சரியாக கையாளாமல் போனதால், அரசியல் போராட்டத்திற்காக இடப்பட்ட அத்திவாரம், ஆட்டம் கண்டது. அதன் மீது, கட்டி எழுப்பப்பட்ட கோட்டை இப்போது தகர்ந்து போய் கிடக்கிறது. தூர நோக்கற்ற அரசியல்
சென்னையில் குப்பை மேடாக காட்சி அளிக்கும் கோவளம் கடற்கரை!
சென்னையில் கோவளம் கடற்கரை குப்பை மேடாக காட்சி அளித்து வருகிறது. இதனால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். விரைவில் இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் எப்போது முடிக்கப்படும்?
திருச்சி மாநகராட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் எப்போது முடிக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்தை ஓரங்கட்டிவிட்டு, மாற்றாக இளம் பேட்டரை சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். அதற்கான காரணம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பந்த்தான் இதற்கு காரணம்!
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் : 5 ம் படை வீடு... ஆங்கிலப் புத்தாண்டு அன்று களைகட்டும் படிபூஜை!
முருகப்பெருமான் வள்ளலாகத் தன்னை நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வாரிவாரி வழங்கும் ஆறு தலங்களே அறுபடைவீடுகள் என்று போற்றப்ப்டுகின்றன. அவற்றுள் திருத்தணி 5 - ம் படை வீடு. சூரபத்மனை போரில் வென்றபின் இங்கு வந்து அமர சினம் தணிந்தது என்பதால் இதனைத் திருத்தணி என்று அழைக்கின்றன ஞான நூல்கள். சினம் தணிந்து வள்ளியோடு இங்கு வந்து அமர்ந்ததால் திருத்தணிகையில் சூரசம்ஹார விழா நடப்பதில்லை என்பது கூடுதல் தகவல். அன்றைய தினம் இத்தல முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மட்டுமே நடைபெறுகிறது. இங்கு மூலவராகத் திகழும் சுப்ரமணிய சுவாமியின் திருமார்பில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. இது சூரபத்மனோடு போர் செய்தபோது ஏற்பட்டது என்கிறார்கள். ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் உள்ளது. முருகப்பெருமானின் வாகனம் மயில் என்பதை அறிவோம். அதேவேளை சுவாமிமலையிலும் திருத்தணியிலும் யானைதான் முருகப்பெருமானின் வாகனமாக உள்ளது. இந்த யானை வாகனம் சந்நிதியின் வெளிப்புறத்தைப் பார்த்தவாறு உள்ளது. திருத்தணி முருகன் இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் முடித்து தந்தபோது, ஐராவதத்தை சீதனமாக கொடுத்தார். இந்திரலோக ஐஸ்வர்யங்களில் ஒன்று ஐராவதம். இதனால், தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்தது. ஆகவே, ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது. மேலும் திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். மாறாக சக்தி ஹஸ்தம் 9 (இதை வஜ்ரவேல் என்றும் சொல்வார்கள்) எனப்படும் இடி போன்ற ஓர் ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். நோய் தீர்க்கும் சந்தன பிரசாதம் இந்தத் தலத்தில்தான் சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இருந்து சக்கராயுதத்தை மகாவிஷ்ணு முருகப்பெருமானின் துணையோடுமீட்டார் என்கிறது தலபுராணம். இங்குள்ள தீர்த்தம் ஒன்றுக்கு விஷ்ணு தீர்த்தம் என்றே பெயர். பகவான் விஷ்ணுவே இதை உருவாக்கினார் என்பது ஐதிகம். இந்தப் புனித தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானி வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருத்தணியில் முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. எல்லா நாள்களும் இந்த சந்தனப் பிரசாதம் கிடைப்பதில்லை. மாறாக விழாக்காலங்களில் மட்டுமே கிடைக்கும். வள்ளிமலை சுவாமிகள் மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் ஆதி பாலசுப்பிரமணியர் அருள்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளிய மூர்த்தி என்கிறார்கள். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், குழந்தையான குமரனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள். இந்தத் தலத்தில் ஆங்கிலப்புத்தாண்டை மிகவும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருக்கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதற்கு விடையாக அமைகிறது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆண்டின் முதல் நாளில் படிபூஜை வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி முருகனின் தீவிர பக்தர். திருப்புகழை பரப்புவதையே தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்ட அவர் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தபோது அங்கே பக்தர் யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அங்குள்ளவர்களிடம் வள்ளிமலை சுவாமிகள் காரணம் கேட்டார். அதற்கு, 'இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். எனவே மக்கள் எல்லோரும் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் இங்கு வருவது இல்லை' என்று கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்ட வள்ளிமலை சுவாமிகள் வருத்தமடைந்தார். 'துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான முருகன் இருக்கும் இடத்துக்கு வராமல் யாரோ ஒரு மனிதரைத் துதித்து வழிபடுவதா' என்று வருந்தினார். மக்களை முருகனிடம் வரவேற்க ஒரு திருவிழா நடத்தலாம் என்று முடிவு செய்தார். அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதை நிகழ்த்த முடிவு செய்தார். படிபூஜை சுவாமி மலையில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பன்று படிபூஜை நடைபெறுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களாக இந்தப் படிகள் விளங்குவதாய் ஐதிகம். எனவே, அவற்றுக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் பூஜைகள் நடைபெறுகின்றன. அதைப்போலவே 365 படிகளைக் கொண்டிருக்கிற திருத்தணிகை முருகன் கோயில் படிபூஜை செய்தால் என்ன என்று யோசித்து அதையே விழாவாகக் கொண்டாட முடிவு செய்தார். மக்களிடம் முருகனே துரைகளுக்கெல்லாம் துரை. எனவே துரை முருகனைக் கொண்டாடுவோம் என்று அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற மக்கள் திருத்தணியில் குவிந்தனர். முதல் படிபூஜை 1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அன்று ஆரம்பமானது. அன்று முதல் இன்றுவரை இந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு படிக்கும் வெற்றிலை, பழம், சூடம் வைத்து இரண்டு நாள்களும் பூஜை செய்யப்படும். டிசம்பர் 31-ம் தேதி காலையில் தொடங்கி மறுநாள் விடிய விடிய நடைபெறுகின்ற இந்தப் படிபூஜை புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியன்று இரவு 10 மணிவரையிலும் நடைபெறும். பக்தர்களும் இதில் திரளாகக் கலந்துகொள்வார்கள். இந்த நாளில் திருத்தணியில் அன்னதானங்களும் பக்தர்களின் கூட்டமும் களைகட்டும். திருத்தணி தலத்தின் மகிமையும் பழைமையும் பெரியது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று சினம் தணிந்த அந்த சுப்ரமணிய சுவாமியை தரிசித்து வாருங்கள். வாழ்வில் சுகங்கள் அனைத்தும் தேடிவரும்.
பதிவு வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
புதிய நம்பிக்கைகள், புதிய கனவுகள், புதிய தொடக்கங்களுடன் 2026 ஆம் ஆண்டு நம் அனைவரையும் வரவேற்கிறது. கடந்த ஆண்டின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்தை நோக்கி உறுதியான அடிகளுடன் முன்னேற வேண்டிய தருணம் இது. உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செய்தி ஊடகங்கள், ஜனநாயகத்தின் தூண்களாக இருந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றன. நேர்மை, வெளிப்படைத் தன்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றுடன் செய்திகளை வாசிக்கும் வாசகர்களே ஊடகங்களின் உண்மையான பலம். 2026 ஆம் ஆண்டு அனைவருக்கும் ஆரோக்கியம், அமைதி, சமத்துவம், வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை கொண்டு வரட்டும். அறிவுச் சிந்தனையையும் வளர்க்கும் ஆண்டாக இது அமையட்டும். பதிவு வாசகர்களுக்கும், செய்தியாளர்களுக்கும், ஊடகப் பணியாளர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

26 C