ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
கராச்சி ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினர் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். […]
சிஐடிக்குள் இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ; பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிரடி
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் […]
பெண்களின் சமூக வலைத்தளப் புகைப்படங்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (30) அன்று உத்தரவிட்டது. பெண்களின் வாட்ஸ்அப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக புகைப்படங்களை மாற்றி, தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. விசாரணைகள் ஏற்கனவே […]
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலுக்கு
வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக அமையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை ஈட்டும் செயற்றிட்டங்களுக்கான வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்திலேயே பணியாளர்களின் […]
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் நாள் ‘கொழும்பு டெலிகிராப்’ பத்திரிகையில் கட்டுரையொன்றை எழுதியிருந்த ரட்ணஜீவன் கூல், போலியான உறுதிப்பத்திரங்களைத் தயாரிக்கும் சட்டத்தரணிகளை காப்பாற்றும் நோக்கில் கலாநிதி கு. குருபரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்து, குறித்த சட்டத்தரணிகளை காப்பாற்றி விடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் எனக் […]
Trump Suggests Seizing Iran’s Oil Terminal
US President Donald Trump has openly hinted at the possibility of taking control of Iran’s Kharg Island oil terminal in the Persian Gulf. This came de...
Kobe Bryant’s Quote: Turning Negatives into Opportunities
Everything negative – pressure, challenges – is all an opportunity for me to rise. These are some of the most famous words from NBA legend Kobe Brya...
Lok Sabha Passes Insolvency Law Changes
The Lok Sabha recently passed a bill to update India’s insolvency laws. The new amendments aim to set strict deadlines, allow out-of-court settlements...
ஈரான் துறைமுக நகரம் மீது தாக்குதல்: 5 பேர் பலி
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஈரான் அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் துறைமுக நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே மத்திய கிழக்கு போரை நிறுத்த பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பாகிஸ்தானுக்கு சென்றனர். இந்தநிலையில் அமெரிக்கா – […]
மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி-பலத்த பாதுகாப்புடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்
video link- https://fromsmash.com/~zVlOvrbHS-dt மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று (30 ) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1990ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடியை நோக்கி வந்துகொண்டிருந்த போது குருக்கள்மடத்தில் வைத்து விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்து புதைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள […]
IPL 2026: Ashwin on Dhoni’s Decision to Stay Back
Chennai Super Kings (CSK) legend MS Dhoni has decided not to travel with the team for their match against Rajasthan Royals (RR) in Guwahati. Dhoni is ...
TVK Vijay Launches Election Campaign Against Stalin
CHENNAI: TVK President TVK Vijay kicked off his election campaign from Perambur in Chennai on Monday after submitting his nomination. He criticized Ch...
India Strengthens Development Partnership with Sri Lanka in March
India expanded its development partnership with Sri Lanka this month through training programs and exchanges. These initiatives highlight India’s grow...
மேற்காசியாவில் உள்ள அமெரிக்க-இஸ்ரேல் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உள்பட ஈரானிய பல்கலைக்கழகங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சமீபத்திய […]
Arab League Condemns Iran’s Attacks on Gulf States
The Arab League strongly condemned Iran's attacks on several Gulf countries, calling them deliberate and unprovoked. The organization warned that thes...
காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதன்படி, வேட்பாளர்கள்
ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்: மத்திய அரசு உத்தரவு
நாட்டின் எரிசக்தித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், ஒரு அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு அதிரடி
’வந்தே பாரத் கார்கோ’ ரயிலின் முன்மாதிரி தயார்!
சென்னை ஐசிஎப் (ICF) தொழிற்சாலையில் அதிவேக சரக்கு போக்குவரத்தை இலக்காகக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘வந்தே பாரத் கார்கோ’ ரயிலின் முதல் முன்மாதிரி (Prototype) தற்போது தயார்
மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு –தேர்தல் ஆணையத்திடம் தமிழக பா.ஜ.க மனு
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்களது பட்டியலின (SC) அந்தஸ்தை இழப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று வழங்கிய தீர்ப்பை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்
5 ஆண்டுகால சாதனை புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு கொளத்தூர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
சென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த
பணமோசடி வழக்கு: நேபாள முன்னாள் அமைச்சா் கைது
பணமோசடி வழக்கில் நேபாள முன்னாள் அமைச்சா் தீபக் காத்காவை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற ஜென் இசட் இயக்கத்தினரின் போராட்டத்தின்போது மூண்ட வன்முறையில் 76 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். இந்தப் போராட்டத்தை தொடா்ந்து, நேபாளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாடாளுமன்றத் தோ்தலில் பாலேந்திர ஷா வெற்றி பெற்று அண்மையில் புதிய பிரதமராக பதவியேற்றாா். இந்நிலையில், ஜென் இசட் போராட்டத்தை ஒடுக்க முயன்ற குற்றச்சாட்டின்கீழ் […]
இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்: அமெரிக்கா அறிக்கை!
இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவை குறிப்பாக ஜம்மு-காஷ்மீரைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக ’பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள்’ என்ற பெயரில் அமெரிக்க காங்கிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், அமெரிக்க சட்டத்தின்படி வகைப்படுத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்களில் 12 குழுக்கள் இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தின் கீழ் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
இலங்கையை உலுக்கிய மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; கொழும்பில் சிக்கிய முக்கிய நபர்
மட்டக்களப்பு நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற பாழடைந்த கிணறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர், நேற்று (29) கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணப் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி இதனை உறுதிப்படுத்தினார். தீவிரமடையும் விசாரணை மட்டக்களப்பு – நெல்லிக்காடு பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு உதவியதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20-ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த […]
Sri Lankan President Thanks India for Fuel Aid
President Anura Kumara Dissanayake of Sri Lanka has thanked India for helping the country by sending much-needed fuel during a time of crisis in West ...
Australia Cuts Fuel Tax by Half Until June
The Australian government has announced plans to reduce its fuel excise tax by half until the end of June. This move aims to help households cope with...
Rohit Sharma Returns as ‘2.0’ in IPL Showdown
Mumbai (Maharashtra) [India], March 30 (ANI): Anil Kumble, a former Indian cricketer, has praised Rohit Sharma's impressive half-century against Kolka...
Government Releases 33 FAQs for First Census Phase
A new online tool is now available for people who choose to complete their census information themselves. This tool will be used during both phases of...
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக 17 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் மோசமான வானிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், 26 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ளத்தின் காரணமாக ஆப்கனில் உள்ள […]
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகன் வெளிநாட்டில்மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் […]
விபத்தில் சிக்கிய தமிழர் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ; இரவில் நேர்ந்த சம்பவம்
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே காரில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் கார் மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிலாபம் […]
சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் நாவற்குழி பிக்கு கைது
நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்றையதினம் சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்குஉள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த […]
அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை…வெற்றிகரமாகச் சோதனை நடத்திய வட கொரியா!
அமெரிக்க நிலப்பரப்பைத் தாக்கும் அதிக உந்துவிசை கொண்ட ஏவுகணைச் சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ராணுவ பலத்தை அதிகரிக்கும் விதமாக ஆயுதங்களுக்கான அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைச் சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்தச் சோதனையின் மூலம் அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் ஏவுகணைகளை நவீனப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நடக்கும் போரைக் குறிப்பிடும் விதமாக […]
போர் நிறுத்தம் பற்றி பேசிக்கொண்டே தாக்குதலுக்குத் திட்டமிடும் அமெரிக்கா: ஈரான்
அமெரிக்க அரசு போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையிலும் ஈரானில் தரைவழித் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஒரு மாதத்தை கடந்த நிலையில் கலிபாஃப் அமெரிக்காவின் தந்திரமான நடவடிக்கை பற்றி பேசியுள்ளார். உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குரவத்துக்கான கடல்வழியான கோர்முஸ் நீரிணை போரின் காரணமாக வெகு சில நாடுகள் தவிர்த்து பெரும்பாலான நாடுகளுக்கு மூடப்பட்டுள்ளது […]
டிரம்ப்புக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்! அமெரிக்காவில் மாபெரும் போராட்டம்!
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. ஈரான் போர், அதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் வெளிப்பாடாக ‘அரசர்கள் வேண்டாம்’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் திரண்டு டிரம்ப் மீதான கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அமெரிக்கா எங்கிலும் சனிக்கிழமை (மார்ச் 28) வெவ்வேறு பகுதிகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “ஜனநாயகம் […]
மத்திய கிழக்கு போர்க்களத்தில் தமிழரின் தியாகம் ; உலகம் முழுவதும் அஞ்சலி
மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ வீரர் விசாகன் சத்தியமூர்த்தி மார்ச் 21ஆம் திகதி போர்க்களத்தில் உயிரிழந்துள்ளார். அமெரிக்க இராணுவத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த இவர், பல ஆண்டுகளாக சேவையாற்றிய அனுபவமுள்ள வீரராகக் கருதப்படுகிறார். மத்திய கிழக்கு போரில் உயிரிழந்த முதல் தமிழ் வம்சாவளி […]
மத்திய கிழக்கு போரின் தாக்கம் ; மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அதிரடித் திட்டம்
நாட்டில் நிலவும் எரிசக்தி சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்களை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் “இலங்கையைக் காப்போம்” எனும் தேசியத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எரிசக்தி வளங்களை மிகவும் அவதானமாகப் பேணிப் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் எல்-நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு இந்த […]
யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம் ; சிறுமியை விகாரை வளாகத்தில் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய பிக்கு கைது
யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு ஒருவர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்றைய தினம் (28)சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில், தாயாரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் […]
500 வீரர்களை பலியெடுத்த ஈரான் ? தகர்க்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் ரகசிய மறைவிடங்கள்
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படையின் ‘ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா’ மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் ஜோல்பகாரி இதை அறிவித்துள்ளார். அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் அவர் கூற்றுப்படி, “பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தினர் துபாயில் உள்ள இரண்டு ரகசிய […]
த.வெ.க வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டுவோம் –விஜய்க்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் கடிதம்
பட்டுக்கோட்டை தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிப்போம், என்று வெள்ளார் முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து த.வெ.க தலைவர் விஜய்க்கு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்கு அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் ‘ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி’ தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. பதிலுக்கு இஸ்ரேல், மத்திய கிழக்கு அமெரிக்க ஆதரவு நாடுகளின் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. உலகின் எண்ணெய் தேவைக்கான கழுத்து நரம்பராக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி அணுக்களை துண்டித்து ஈரான் உலக நாடுகளை எண்ணெய் நெருக்கடியில் தள்ளியுள்ளது. அமெரிக்க படைத்தளங்கள் மத்திய கிழக்கில் […]
மத்திய கிழக்கில் இருந்து..ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் ட்ரம்பின் இரகசிய திட்டம்
ஈரான் மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கினால், ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் இரகசிய திட்டத்தை ட்ரம்ப் தீட்டி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இரகசியத் திட்டம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கினால், மத்திய கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் இரகசியத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக, மூத்த இராணுவ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. கமாண்டோ தாக்குதல் படகுகள், கடற்கரைகள் மற்றும் துறைமுகங்களில் இருந்து பிரித்தானியர்களை மீட்டும் தயார் நிலையில், கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு […]
பிரித்தானியாவில் நகர மையத்தில் பலர் பாதிப்பு: ஒருவர் கைது..என்ன நடந்தது?
இங்கிலாந்தில் கார் மோதிய விபத்தில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். பலர் பாதிப்பு டெர்பி நகரின் Friar Gate பகுதியில், சனிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் கார் ஒன்று பலர் மீது மோதியுள்ளது. நகர மையத்தில் நடந்த இச்சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். உடனே மருத்துவக்குழு அங்கு விரைய, சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவியாளர்கள் பலருக்கு சிகிச்சை அளித்தனர். டெர்பிஷிரே பொலிஸார் விசாரணை முதலுதவிக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய […]
சொன்னபடியே இஸ்ரேலை தாக்கிய ஹவுதிக் குழு: செங்கடலில் போர்முனை அபாயம்
ஏமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதிக் குழு இஸ்ரேலை தாக்கியுள்ளதால், செங்கடலில் போர்முனை அபாயம் ஏற்பட்டுள்ளது. போரில் நுழைவோம் வெள்ளைக்கிழமையன்று, அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரானுக்கு எதிரான கூட்டணிகளை விரிவுபடுத்தினாலோ, செங்கடலை விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினாலோ அல்லது ஈரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கு எதிரான பதற்றத்தைத் தொடர்ந்தாலோ, தாங்கள் போரில் நுழைவோம் என்று ஹவுதிக் குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர். இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணை ஏவப்பட்டதை உறுதி செய்தது. […]
லண்டனில் ஈரானிய தலைவரின் நினைவேந்தலில் மோதிக்கொண்ட குழுக்கள்..அதிகரித்த பதற்றம்
பிரித்தானியாவின் லண்டன் நகரில், ஈரானிய தலைவர் அலி காமெனியின் நினைவேந்தலின்போது எதிரெதிர் குழுக்கள் மோதிக் கொண்டதால் பதற்றம் அதிகரித்தது. லண்டனில் நினைவேந்தல் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். அவரது நினைவேந்தல் பிரித்தானியாவின் லண்டனில் உள்ள இஸ்லாமிய மையத்தில் சனிக்கிழமை நடந்தது. மையத்திற்கு வெளியே, ஆர்ப்பாட்டக்காரர்கள் காமெனியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, ஈரானியக் கொடியை அசைத்தனர். அப்போது சாலையின் மறுபுறத்தில் இருந்து, […]
சவுதியின் அதிரடி நகர்வு ; ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து பாரிய எண்ணெய் விநியோகம்
பாரசீக வளைகுடாவில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து செயற்படும் சவுதி அராபியாவின் கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடம் தற்போது அதன் முழு கொள்ளளவான ஒரு நாளைக்கு 70 இலட்சம் பீப்பாய்கள் எண்ணெயை விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புளூம்பெர்க் செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடையை தவிர்க்கும் நோக்கில் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சவுதியின் யான்பு துறைமுகம் ஊடாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்போது ஒரு நாளைக்கு […]
‘என்னை அமைதித் தூதுவராகவே உலகம் நினைவில் கொள்ள வேண்டும்’–டிரம்ப்
வாஷிங்டன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குரத்து தடைபட்டது. இதன் விளைவாக […]
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக புதிய சட்டம்
உள்நாட்டு உற்பத்திகளைப் பாதுகாக்கும் நோக்கில், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனைத் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை மாத்தளை மாவட்டத்திலுள்ள நாலந்தா மற்றும் களுதேவல தொழிற்பேட்டைகளுக்கு மேற்கொண்ட விசேட கள விஜயத்தின் போதே அமைச்சர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலையை விட, இறக்குமதி செய்யப்படும் அதே பொருட்களின் விலை குறைவாக […]
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘டித்வா’ புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொது அவசரகால நிலைமையின் அடிப்படையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் நாட்டின் வழமை நிலையைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து பேணுவதற்குமாக இந்த அவசரகால நிலையை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இதேவேளை, எந்தவொரு […]
அதிகரிக்கும் வெப்பமான காலநிலை ; இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு
நாளை (30) மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பமான வானிலை நாளை நிலவக்கூடிய வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு […]
இஸ்ரேல் மீது ஏவுகணை வீச்சு; முதன்முறையாக தாக்குதலை தொடங்கிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
சனா ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. இடையில் ஹமாஸ் அமைப்பும் தாக்குதலை தொடுத்தது. இந்த சூழலுக்கு இடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து அதிகரிக்கும் என்றால், நாங்கள் நேரடியாக ராணுவ மோதலில் ஈடுபட தயாராக […]
தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்; பல உயிரிழப்புகள்
இஸ்ரேல் , தெற்கு லெபனான் முழுவதும் நடத்திய தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனான் டெய்ர் சஹ்ரானிமற்றும் அல்-ஹன்னியே ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேற்படி உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. காயமடைந்த அனைவரும் சிரிய நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் டயர் நகரில் உள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெய்ட் அல்-சய்யாத் மற்றும் அல்-மன்சூரி ஆகிய இடங்களிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், […]
யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்
யாழ்ப்பாண நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மலசல கூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கும் மாநகரச சபைக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மத்திய பேருந்து வளாகத்தினுள் பொது மலசல கூடம் அமைப்பதற்கு கடந்த காலங்களில் தீர்மானிக்கப்பட்டு , அதற்கு அமைவாக அவை தற்போது நிர்மாணிக்கப்பட்டு , பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. பணிகளுக்கு இடையூறு இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மலசல கூட்டத்திற்கான நீர் குழாய்களை பொருத்தும் பணிகளுக்காக மாநகர சபை ஊழியர்கள் […]
யாழில் 26 வயது இளைஞன் நீண்டகாலம் அரங்கேற்றிய தகாத செயல் ; பொலிஸார் வலைவீச்சு
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் அப்பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து ஒரு தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பளை பகுதியில் உள்ள போதை வியாபாரி ஒருவரிடம் போதைப்பொருளை […]
வுவனியாவில் சிகையலங்கார நிலையத்திற்கு சென்ற பாடசாலை மாணவன் மாயம்
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா – கணேசபுரம் 07ம் ஒழுங்கையை சேர்ந்த 14 வயதுடைய தி.லதுர்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு நேற்று மதியம் 02.30 மணியளவில் தாயிடம் இருந்து சிகையலங்கார நிலையத்திற்கு செல்வதற்காக பணம் பெற்று சென்ற சிறுவன் மாலை ஆகியும் வீடு வந்து சேரவில்லை. இதன் காரணமாக உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களின் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் […]
பற்ற வைத்த ஈரான்…‘நன்றி இந்தியா’ என்ற வாசகத்துடன் இஸ்ரேலை தாக்க புறப்பட்ட ஏவுகணை
தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தி முதல் நடத்தி வரும் தாக்குதலால், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் […]
165 ஆண்டுகால மரபு மாற்றம்: அமெரிக்க ரூபாய் நோட்டுகளில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்து
வாஷிங்டன், அமெரிக்க டாலர் நோட்டுகளில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரின் கையொப்பங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அமெரிக்காவின் ரூபாய் நோட்டுகளில் கடந்த 165 ஆண்டுகளாக மாறாத இந்த வழக்கத்தையே பின்பற்றி வந்தன.இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் புதிய கருவூல திட்டத்தின் கீழ், புழக்கத்தில் உள்ள அனைத்து புதிய அமெரிக்க ரூபாய் நோட்டுகளிலும் டிரம்பின் கையொப்பம் சேர்க்கப்பட உள்ளது. ஜூலை 4-ம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ள அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தினை […]
ஈரான் போர்! மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?
இஸ்ரேல் – ஈரான் போர் குறித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. போரின் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமின்மை நிலவி வருகிறது. இதனிடையே, போர் தொடங்கி சுமார் ஒரு மாதம் கழித்து, டிரம்ப்புடன் பிரதமர் மோடி […]
பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதங்களுக்கு தடை விதிக்க ரஷ்யா முடிவு
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பாதையாக உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. அந்த ஜலசந்தியை கடக்க முயன்ற சில கப்பல்களுக்கு மீது தாக்குதல் நடத்தியது. ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்று ஈரான் […]
வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருள் சேமித்த பெண்ணுக்கு இறுதியில் காத்திருந்த ஷாக்
தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சமகிபுர, ஊவா குடாஓய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இரகசியத் தகவல் குறித்த பெண்ணின் வீட்டில் எரிபொருள் சேகரித்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊவா குடாஓய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த எரிபொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது 95 லீற்றர் […]
இலங்கை பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; மீறுவோருக்கு காத்திருக்கும் சிக்கல்
திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் பயணிகள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணப் பட்டியல் பேருந்துகளினுள் கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது. […]
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! 5 இந்தியர்கள் படுகாயம்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரத்தில் உள்ள முக்கிய தொழிற்சாலைப் பகுதியில் சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை […]
அருச்சுனா எம்.பி க்கு எதிராக நீதிமன்றில் 2 மணி நேரம் சான்றுரைத்த வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்
வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தனக்கு எதிராக பரப்பிய அவதூறு தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் பருத்தித்துறை நீதிமன்றில் சுமார் 2 மணி நேரம் சான்றுரைத்துள்ளார். யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போதே வைத்தியர் கேதீஸ்வரன் மன்றில் சான்றுரைத்தார். கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி […]
மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு!
மேற்குவங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவ மறைவிடங்கள் மீது தாக்குதல்! –பலர் உயிரிழந்ததாக ஈரான் அறிவிப்பு
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரானின் புரட்சிகர காவல் படையின் ’ஹஸ்ரத் காதம்
சென்னை, திரு.வி.க நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆம்ஸ்ட்ராங் மனைவி!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது மனைவி பொற்கொடி தமிழக பகுஜன் சமாஜ்
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சி.எஸ்.கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது
19 வது இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், ஐதராபாத் – பெங்களூர் அணிகள் மோதின. இதில், பெங்களூர் அணி
திருச்சி அருகே ஓடும் காரில் திடீர் தீ –அதிஷ்ட்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
திருச்சி அருகே சாலையில் நேற்று சனிக்கிழமை சென்ற காரில் திடீா் தீ ஏற்பட்ட நிலையில் காரில் சென்ற 6 போ் உயிர் தப்பினா். திருச்சி மாவட்டம், தொட்டியம்
த.வெ.க தலைவர் விஜய் அனுமதி அளிக்கப்பட்டது –நாளை சென்னையில் பரப்புரை செய்கிறார்
சென்னை, பெரம்பூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்த த.வெ.க தலைவர் விஜய்க்கு சென்னை நகர காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, நேற்று தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக சென்ற
நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று(29 )காலை 6 மணி முதல் நாளை மறுதினம் ( 30 ) மாலை 6 மணிவரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPS ஊடாக கண்காணிக்க நடவடிக்கை
வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி (GPS) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கில்சட்டரீதியற்ற […]
வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னல் சில அரசியல்வாதிகள் , சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டும். அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற […]
ஹார்மூஸ் ஜலசந்தி அல்ல…இனி டிரம்ப் ஜலசந்தி; இது தவறுதலான செய்தி அல்ல என டிரம்ப் பேச்சு
புளோரிடா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ஈரானை குறிப்பிட்டு அவர்கள், டிரம்ப் ஜலசந்தியை திறக்க வேண்டும். நான் ஹார்மூஸ்சை கூறினேன் என பேசியதும் கூட்டத்தில் இருந்து சிரிப்பலை எழுந்தது. அவர் தொடர்ந்து, மன்னிக்கவும். அது ஒரு பயங்கர தவறு. நான் தவறுதலாக கூறி விட்டேன் என பொய்யான செய்தி வெளிவரும். தற்போது தவறுதலாக நான் எதுவும் கூறவில்லை. அதிக […]
சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி, அவற்றை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்று அந்த மணலை ஏலத்தில் விடுவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் […]
சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு இலங்கை உதவி ; கப்பலுக்கு அனுமதி மறுப்பு
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi Yan 6) இன் ஊழியர் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை கடற்படை முன்வந்துள்ளது. இருப்பினும், குறித்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் இருந்த இக்கப்பலில், சிறுநீரக நோயால் […]
எரிபொருள் கொள்முதலில் புதிய சிக்கல் குறித்து அவசர நடவடிக்கை
இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட திறந்த கோரிக்கைக்கு, சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவை ’24/7′ அடிப்படையில் (நேரம் பாராது) இயங்கி வருவதாகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். உலக சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நம்பகமான விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்வது பெரும் […]
யாழ்ப்பாண ‘நெடுந்தாரகை’படகுச் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள ‘நெடுந்தாரகை’ படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, நேற்றைய தினம் ‘நெடுந்தாரகை’ படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் குறித்த படகு இன்று (29) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது. மேலும், ‘நெடுந்தாரகை’ படகினை […]
யாழ்ப்பாண ‘நெடுந்தாரகை’படகுச் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள ‘நெடுந்தாரகை’ படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, நேற்றைய தினம் ‘நெடுந்தாரகை’ படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் குறித்த படகு இன்று (29) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது. மேலும், ‘நெடுந்தாரகை’ படகினை […]
எரிபொருள் கொள்முதலில் புதிய சிக்கல் குறித்து அவசர நடவடிக்கை
இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட திறந்த கோரிக்கைக்கு, சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவை ’24/7′ அடிப்படையில் (நேரம் பாராது) இயங்கி வருவதாகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். உலக சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நம்பகமான விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்வது பெரும் […]
சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு இலங்கை உதவி ; கப்பலுக்கு அனுமதி மறுப்பு
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi Yan 6) இன் ஊழியர் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை கடற்படை முன்வந்துள்ளது. இருப்பினும், குறித்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் இருந்த இக்கப்பலில், சிறுநீரக நோயால் […]
சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி, அவற்றை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்று அந்த மணலை ஏலத்தில் விடுவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் […]
அமெரிக்காவை அதிர வைத்த மர்ம ட்ரோன்கள்; விமானப்படைதள வான்பரப்பில் 4 மணி நேரம் பறந்ததால் பரபரப்பு!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்தின் வான்பரப்பில் மர்மமான முறையில் ட்ரோன்கள் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 9 முதல் 20 வரையிலான காலகட்டத்தில், அலை அலையாக வந்த 12 முதல் 15 ட்ரோன்கள் சுமார் நான்கு மணிநேரம் அந்தப் பகுதியை சுற்றி வந்துள்ளன. இரண்டாம் உலக போருக்கு பிறகு முடங்கிய அமெரிக்க விமானப்படை தளம் இந்த ஊடுருவலால் ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் எபிக் […]
ஈரானின் அணுமின் நிலையம் 3வது முறை தாக்குதல்; அணுப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை
ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டதாக ஈரான் அணுசக்தி அமைப்பு (AEOI) தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதலில் இதுவரை அந்த நிலையத்தில் எந்த பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. மின் உற்பத்தி நிலையத்தின் நிலை இயல்பாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bushehr அணுமின் நிலையம் பெருமளவு அணுப் பொருட்களுடன் இயங்கி வருகிறது, மேலும் ஈரானின் Bushehr அணுமின் நிலையத்திற்கு ஏற்படும் சேதம் அணுப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என […]
போர் சூழல்: 2 ரூபாய் மாணியம்-தமிழக மின்வாரியத்தின் பில்லிங் மென்பொருளில் மாற்றம்!
போர் சூழல் காரணமாக 2 ரூபாய் மாணியம் வழங்கப்படுவதால் தமிழக மின்வாரியத்தின் பில்லிங் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
ஆஸ்திரியாவில் 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடங்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் மாத இறுதிக்குள் இதற்கான சட்ட வரைவு உருவாக்கப்படும் என்றும்; அதே வேளையில், சிறார்களின் வயதைச் சரிபார்க்க தொழில்நுட்ப ரீதியாக நவீன முறைகள் கையாளப்படும் என்றும் அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலியாவில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் அதிகப்படியான செல்போன் பயன்படுத்தும் நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை […]
அழகி போட்டியில் திடீரென கழண்டு விழுந்த பல்செட்; அழகி செய்த செயல்..!வைரலாகும் காணொளி
மிஸ் கிராண்ட் தாய்லாந்து போட்டியில் ரேம்ப் வாக்கின் போது எதிர்பாராத ஒரு சங்கடமான நிகழ்வு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தாய்லாந்தில் அண்மையில் இடம்பெற்ற மிஸ் கிராண்ட் தாய்லாந்து அழகிப் போட்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதறாது பல் செட்டை சரிசெய்த அழகிபதும் தானி மாகாணத்தை சேர்ந்த அழகி காமோல்வான் சனாகோ என்பவர் மேடையில் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள ரேம்ப் வாக் வந்தபோது, அவரது செயற்கை பற்கள் திடீரென கழன்று விழுந்தன. இந்த இக்கட்டான சூழலில் […]
டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை: தங்கை கைது
தென்னாப்பிரிக்காவில், தன் அக்காவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை டப்பர்வேர் கண்டெய்னர்களுக்குள் மறைத்துவைத்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை தென்னாப்பிரிக்காவிலுள்ள Bellville South என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கான்ஸ்டன்ஸ் (Constance Scholtz, 79) என்னும் பெண்ணை சில நாட்களாக காணாததால் அப்பகுதி மக்கள் அவரது தங்கையான அலெட்டா (Aletta Rose, 63) என்னும் பெண்ணிடம் விசாரித்துள்ளார்கள். அவர்களிடம், தன் அக்கா வெளியூர் சென்றுள்ளதாக கூறியுள்ளார் அலெட்டா. அப்போது, கான்ஸ்டன்சின் மகன் வீட்டுக்கு வர, […]
மனிதக் கைபோல விளைந்த சேனைக்கிழங்கு… ரூ.13 லட்சம் கொடுத்தும் விற்க மறுத்த விவசாயி
குவாங்டாங், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் மனிதக் கை போன்ற வடிவில் சேனைக்கிழங்கு விளைந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் காய்கறிகளை அறுவடை செய்ய நிலத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது, மனிதக் கை போன்ற வடிவில் ஏதோ ஒன்று கிடைத்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது மனித உடல் பகுதி என எண்ணி அருகிலிருந்தவர்களை அழைத்துள்ளார். பின்னர் முழுமையாக தோண்டியபோது அது மனிதக் கை அல்ல, சேனைக்கிழங்கு என்பது […]
டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவை
இந்தியாவின் IndiGo விமான சேவை டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது வான்வழித் தொடர்புகளை மேலும் பலப்படுத்துகிறது. இந்த விமான சேவை எதிர்வரும் மார்ச் மாதம் 29 திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. வாரத்திற்கு ஆறு நேரடி விமானங்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். வாரத்திற்கு 55-க்கும் மேற்பட்ட விமான சேவை இச்சேவைக்காக A320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும், இது பயணிகளுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்கும். இந்தியா […]

30 C