பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள போண்டி கடற்கரை பகுதியில் கடந்த 13-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, பொதுமக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்கும் புதிய திட்டத்தை அந்த நாட்டு அரசு அரசு தொடங்கவுள்ளது. இது குறித்து பிரதமா் அந்தோனி ஆல்பனீஸி வெள்ளிக்கிழமை கூறியதாவது: போண்டி கடற்கரை தாக்குதலைத் தொடா்ந்து, துப்பாக்கிகளை திரும்ப வாங்கும் பெரிய திட்டத்தைத் தொடங்குகிறோம். இது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் போா்ட் ஆா்தா் படுகொலையின்போது நடத்தப்பட்டதைவிட பெரிய அளவிலான துப்பாக்கி சேகரிப்பு திட்டமாக […]
ரஷிய சொத்துகளைப் பயன்படுத்தாமல் உக்ரைனுக்கு கடனுதவி: ஐரோப்பிய யூனியன் முடிவு
ரஷியாவின் முடக்கப்பட்ட சொத்துகளைப் பயன்படுத்தாமலேயே, உக்ரைனுக்கு 9,000 கோடி யூரோ (சுமாா் ரூ.9.5 லட்சம் கோடி) வட்டியில்லா கடனுதவி அளிக்க ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் முடிவு செய்துள்ளனா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உக்ரைனுக்கு 2026-2027-ஆம் நிதியாண்டுக்கான செலவுகளுக்காக 9,000 கோடி யூரோ கடனுதவி அளிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் என்ன உறுதியளித்தோமோ, அதை நிறைவேற்றியுள்ளோம் என்றாா் அவா். இருந்தாலும், இந்தக் கடன் தொகை ஏற்கெனவே […]
மொஹமட் பாதுஷா 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பிறகு கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரங்களை மீளக் கட்டியெழுப்புவதுடன், அந்த மக்களை ஆசுவாசப்படுத்தி, பொருளாதார ரீதியாகவும் ஸ்திரப்படுத்த வேண்டிய ஒரு தேவையை இயற்கை ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்றதொரு நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கின்றது. அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சுனாமி பேரலையால் பறிபோன உயிர்களை விட எண்ணிக்கையில் குறைவு என்றாலும், நாட்டின் பல பாகங்களிலும் பரவலாக ஏற்பட்ட அனர்த்தம் என்பதாலும், பௌதீக அழிவுகள் பரதூரமானவை […]
காஸாவில் உணவுப் பற்றாக்குறை ; 1 லட்சம் பேருக்கு ‘பேரழிவு’
காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் மற்றும் ஊட்டச்சத்து நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இன்னும் 1 லட்சம் போ் ‘பேரழிவு’ உணவுப் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளதாக ஐ.நா. அங்கீகாரம் பெற்ற நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காஸாவில் போா் நிறுத்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், அண்மை மதிப்பீட்டில் 5 லட்சம் போ் ‘அவசர நிலை’ உணவுப் பற்றாக்குறையையும், […]
‘டித்வா’புயல் நிவாரணம்: 69% பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு!
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றவும், வீடுகளைச் சீரமைக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிவாரணப் பணிகள் குறித்த முக்கிய தகவல்களை… The post ‘டித்வா’ புயல் நிவாரணம்: 69% பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு! appeared first on Global Tamil News .
‘மீண்டெழும் இலங்கை’: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் ‘மீண்டெழும் இலங்கை’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ், மாவட்ட மட்டத்திலான முன்னேற்றங்கள்… The post ‘மீண்டெழும் இலங்கை’: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்! appeared first on Global Tamil News .
Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft |Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி? IPS
Vijay-ன் அடுத்த திட்டம், சுதாரிக்கும் எடப்பாடி! | Elangovan Explains | ADMK | DMK | TVK | Vikatan
ஸ்ரீநிவாசன் மறைவு: `தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது'- கேரள முதல்வர் பினராயி விஜயன்
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநிவாசன் (69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். எர்ணாகுளம் மாவட்டம், உதயம்பேரூரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த அவர் உடல் உபாதைகளுக்காக சிகிச்சை பெற்றுவந்தார். டயாலிசிஸ்-க்காக அழைத்துச் சென்ற சமயத்தில் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, திருப்பூணித்துறை அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் மரணமடைந்தார். அவரின் உடல் கொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு நாளை (டிச.21) காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் எர்ணாகுளத்தில் நடைபெற உள்ளது. நடிகர் ஸ்ரீநிவாசன் மறைவுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநிவாசன் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பினராயி விஜயன் மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்: நடிகர் ஸ்ரீநிவாசனின் மரணம் மலையாள சினிமாவால் மீள முடியாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை வெள்ளித்திரையில் கொண்டு சேர்த்ததிலும், சிரிப்பின் மூலமும், சிந்தனையின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுசேர்ப்பதில் இவரைப் போன்று நடிகர்கள் அதிகமாக இல்லை. நடிகர் ஸ்ரீநிவாசன் சினிமாவின் பல வழக்கங்களையும் தகர்த்துக்கொண்டு சினிமாவில் முன்னேறினார். கதை, திரைக்கதை, இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் தனித்துவம் படைத்தவர். அவருடைய பல சினிமாக்கள் மலையாளிகளின் மனதில் அனைத்து காலங்களிலும் நிலைநிற்கும். என்னைப் பொறுத்தவரை நடிகர் ஸ்ரீநிவாசனின் மறைவு தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நேர்காணலுக்காக நாங்கள் இணைந்தது இன்றும் மனதில் இனிமையான நினைவாக உள்ளது. அன்புக்கும், அரவணைப்புக்குமான பிரதிபலிப்புதான் ஸ்ரீநிவாசன் என முதல்வர் பினராயி விஜயனின் இரங்கல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Bangladesh Riots: இளைஞர்களின் தலைவர் Osman Hadi கொலையும் அரசியல் சதியும் | Decode
யுக்ரைனுக்கு நிபந்தனை இடும் ரஷ்யா ; போரில் புதிய திருப்பமா?
யுக்ரைன் உடனான மோதலை, அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர தாம் தயாராக உள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். இதற்கு யுக்ரைன் நேட்டோவில் உறுப்பினராகும் முயற்சியை கைவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ரஷ்யா கைப்பற்றி தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடும் நான்கு பிரதேசங்களிலிருந்தும் யுக்ரைன் படைகள் விலக வேண்டும் எனவும் புட்டின் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யா புதிய வெற்றிகளைக் காணும் என தான் உறுதியாக நம்புவதாகவு புட்டின் […]
தேனி புத்தக திருவிழா நாளை தொடக்கம்: எங்கு? எத்தனை நாட்கள் தெரியுமா? முழு தகவல் இதோ
தேனி மாவட்டத்தில் நாளை 4வது புத்தக திருவிழா தொடங்குகிறது. வருகிற 28ந் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட உள்ளன.
அதிரடி செய்தி: இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கணினி அமைப்பில் ஊடுருவல்!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு வளையத்திற்குள் கடத்தல்காரர்கள் ஊடுருவியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.… The post அதிரடி செய்தி: இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கணினி அமைப்பில் ஊடுருவல்! appeared first on Global Tamil News .
ரூ.56.36 கோடி மதிப்பீட்டில் நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இனவெறி குற்றச்சாட்டில் மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து (Miss Finland) பட்டம் வென்ற சாரா ஜாஃப்சே , ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் தனது கண்களை இழுத்துப் பிடித்துக் காட்டிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. அவர் பகிர்ந்த படத்திற்கு கீழே “சீனருடன் உணவு உண்ணுதல்”என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இது ஆசியர்களை இழிவுபடுத்தும் இனவெறிச் செயல் எனப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இது […]
இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்: ஒரு புதிய மீட்புத் திட்டத்திற்கான எதிர்பார்ப்பு!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 22, 2025) இலங்கைக்கு அரசுமுறைப்… The post இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்: ஒரு புதிய மீட்புத் திட்டத்திற்கான எதிர்பார்ப்பு! appeared first on Global Tamil News .
தமிழ்நாட்டில் புதிய விமான நிலையங்கள் அமைகிறதா? மத்திய அமைச்சர் விளக்கம் இதுதான்...
தமிழ்நாட்டில் புதிய விமான நிலையங்கள் ஏதும் அமைய உள்ளதா? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கொடுத்த பதிலை விரிவாக காண்போம்.
நெல்லை மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
நெல்லை டக்கரம்மாள்புரத்தில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
மது போதையில் மிதந்த சாரதியால் நேர்ந்த அனர்த்தம் ; நால்வர் படுகாயம்
மெய்யன் பன்விலை நகரில் இன்று (20) இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பன்விலை பொலிஸார் தெரிவித்தனர். பன்விலை மணிக்கூட்டு சந்தியில் பிட்டகந்தை நோக்கி திருப்ப முனைந்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதசாரிகள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவருமாக மொத்தம் நால்வர் காயமடைந்ததாகவும். மேலதிக விசாரணை மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயமடைந்த வர்கள் நால்வரும் மக்கானிகமை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி மாவட்ட ஆதார […]
சிட்னி தாக்குதலை தடுத்தவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து நிதியும்…பாராட்டும்
அவுஸ்திரேலியாவின் பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டின் போது, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் துப்பாக்கிதாரியை எதிர்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றிய அஹ்மட் அல் அஹ்மடிற்கு (Ahmed al Ahmed) உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்களும் நிதி உதவியும் குவிந்து வருகின்றதாக கூறப்படுகின்றது. சிட்னி பொன்டாய் கடற்கரையின் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்களின் ஹனுக்கா (Hanukkah) பண்டிகை கொண்டாட்டத்தின் போது 2 துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர். ‘GoFundMe’ நிதி சேகரிப்பு இதன்போது அஹ்மட்,ஒரு துப்பாக்கிதாரியைத் தாக்கி அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறித்தார். இந்த மோதலின் […]
மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக பெருமளவான மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். மத வழிபாட்டுத் தலங்கள் இதற்கமைய, பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பல்வேறு மத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக சிவில் உடையில் […]
கதிரையினை விட்டு வெளியேறினார் பிரதி முதல்வர்!
வவுனியா மாநகரசபையின் பிரதிமேயர், உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் இராஜினாமா செய்துள்ளார்.. வவுனியா மாநகரசபையின் நீதிமன்ற தடையுத்தரவுள்ள பிரதிமேயர், பரமேஸ்வரன் கார்த்தீபன் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு தன்மீதான வழக்கின் நீண்ட இழுபறி இடையூறாக இருக்கக்கூடாதென்பதற்காகவும், மாநகரசபையின் செயற்பாடுகளை உடன்ஆரம்பிப்பதற்கு ஏதுவாகவும்; அடிபணிய வேண்டிய தேவையில்லாதவிடத்தும் வவுனியா மாநகரின் நலனுக்காக மாத்திரம் தனது பதவியில் இருந்து தானாகவே இராஜினாமா செய்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் அரசியல்… The post ஈழத்தமிழர் அரசியல் அபிலாஷைகளை முன்வைத்து தமிழகத் தலைவர்களுடன் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய சந்திப்புகள்! appeared first on Global Tamil News .
கொழுமபிலுள்ள இந்திய தூதரை தமிழ் கட்சிகள் சந்தித்து பேச முற்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு தொகுப்பை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், தமிழக அரசுக்கும் இதன்போது பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். மலையக மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இதன்போது பிரதி அமைச்சரிடம் பாராட்டுகளையும் தெரிவித்தார்
SIRக்கு பின் தமிழக வாக்காளர்கள் நீக்கத்தில் சந்தேகம்! வைகோ எழுப்பும் முக்கிய கேள்விகள்
தமிழ்நாட்டில் எஸ்ஐஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் சந்தேகங்கள் இருப்பதாக வைகோ பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போா் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா். இது குறித்து அமெரிக்க தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறியதாவது: வெனிசுலாவுடன் போா் நடத்துவது குறித்து தற்போதைக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. இருந்தாலும் அதற்கான வாய்ப்பை மறுக்க மாட்டேன். வெனிசுலா மீது போா் தொடுப்பதும், தொடுக்காததும் அந்த நாட்டு அரசின் கைகளில்தான் உள்ளது. அவா்கள் முட்டாள்தனமாக செயல்பட்டு எண்ணெய்க் கப்பல்களை இயக்கினால், அந்தக் கப்பல்களை அமெரிக்காவின் ஏதாவது ஒரு துறைமுகத்துக்கு […]
யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வடமராட்சி பகுதியில் வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டினை சுற்றிவளைத்த பொலிஸார், வீட்டினுள் இருந்து பெருந்தொகை கஞ்சா பொதிகளை கைப்பறியுள்ளனர். அதனை அடுத்து, 200 கிலோ கஞ்சாவுடன் வீட்டில் இருந்த பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரிப்பு
நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் பட்டியலின் நேற்று நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 600 முதல் 800 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ. 500 முதல் 600 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ. 600 முதல் 700 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1100 முதல் 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளது.7 ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100 முதல் ரூ. 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 550 முதல் 800 வரையிலும், ஒரு கிலோ கரட் மற்றும் கோவா ரூ.300 முதல் 500 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை! உஸ்மான் ஹாதி இறுதிச்சடங்கில் பரபரப்பு- ஹை அலர்ட்டில் இந்தியா
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வங்கதேச மாணவர் சங்க தலைவர் உஸ்மான் இறுதிச்சடங்கில் வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து வங்கதேச நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளியில் நடந்த செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு யானையை அழைத்து வந்த மாணவி
திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அவை அலங்கரிக்கப்பட்டு நெற்றி பட்டம் அணிவிக்கப்பட்டு எழுந்தருளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழாவில் கோவில் முன்பு இருபுறமும் தலா 15 யானைகள் அணிவகுத்து நடைபெறும் குடை மாற்றும் நிகழ்வை காண பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் நடந்த செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு மாணவி ஒருவர் யானையை அழைத்து வந்தார். இதை பார்த்த பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி […]
யாழில். ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்ப பெண் விபத்தில் உயிரிழப்பு
தனது மகளுடன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற தாயார் விபத்தில் சிக்கி மகளின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த தாயும் மகளும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூஜையில் கலந்து கொள்ள அர்ச்சனை பொருட்களுடன் வந்துள்ளனர். எதிர் திசையில் , வந்த கழிவகற்றும் வாகனத்தை (கலி பவுசர்) முந்திக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளால் தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிளில் […]
சரியா ஆடாம இருந்திருக்கலாம்…சுப்மன் கில் நீக்கம் ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!
டெல்லி :அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று (டிசம்பர் 20, 2025) அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்ஷர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் இருந்து தற்போதைய துணை கேப்டனான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்மன் கில் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இது அவரது ஃபார்ம் காரணமாக […]
வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!
உலகின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரவி, நிலத்தடி நீர் சேமிப்பு, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தல், பாலைவனமாக்கலைத் தடுத்தல் மற்றும் பல உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த மலைத் தொடர் வட இந்தியாவின் “பச்சைக் கவசம்” என அழைக்கப்படுவதற்குக் காரணம், அதன் இயற்கை பாதுகாப்பு பண்புகளே ஆகும். ஆரவல்லி 2025 நவம்பரில் உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முன்வைத்த புதிய வரையறையை ஏற்றுக்கொண்டது. இதன்படி, 100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட மலைகள் மட்டுமே சட்டரீதியாக ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனால், இதுவரை ஆரவல்லி பகுதியாக கருதப்பட்ட சிறிய மலைகள், அடிவார நிலங்கள் மற்றும் இணை நிலப்பரப்புகள் பெரும்பாலும் பாதுகாப்பு பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர்கள் இந்த தீர்ப்பால் ஆரவல்லி நிலப்பரப்பின் சுமார் 80 முதல் 90 சதவிகிதம் வரை பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். இந்த தீர்ப்புக்கு எதிராக பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “#SaveAravalli” என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு, டெல்லி–என்.சி.ஆர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் நேரடி போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இந்த தீர்ப்பு ஆரவல்லி பகுதிகளில் சட்டவிரோத சுரங்கப்பணிகள், கட்டுமான வளர்ச்சி மற்றும் வன அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கவலை தெரிவிக்கின்றனர். ஆரவல்லி ஆரவல்லி மலைத் தொடரின் அழிவு, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறைதல், வட இந்தியாவில் வெப்பநிலை அதிகரிப்பு, காற்று மாசுபாடு தீவிரமாதல் மற்றும் பாலைவனமாக்கல் வேகமடைவது போன்ற அபாயங்கள் அதிகரிக்கும். குறிப்பாக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தரம் மேலும் மோசமடையும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களும் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலோட் உள்ளிட்ட பலர், இந்த தீர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது என்றும், வருங்கால தலைமுறைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் விமர்சித்துள்ளனர். சிலர் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆரவல்லி மொத்தத்தில், ஆரவல்லி மலைத் தொடர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள் குறித்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் ஒரு சட்ட வரையறை மாற்றம் அல்ல; நீர், காற்று, உயிரியல் பல்வகைமை மற்றும் மனித வாழ்வாதாரம் ஆகிய அனைத்தையும் பாதிக்கும் ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியுள்ளது. அதனால், ஆரவல்லியின் பாதுகாப்பு குறித்த போராட்டம் இன்று வட இந்தியா முழுவதும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான பனி மூட்டமும், மோசமான காற்று மாசுபாடும் மக்களை வதைத்து வருகிறது. இதனால், விமானங்கள் ரத்தாகியும் ரயில்களும் தாமதமாகியும் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
பருத்தித்துறையில் சுகாதார சீர்கேடுகளுடன் உணவகங்கள் –ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் தண்டம்
பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர்ப்புறத்தில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்கள் பருத்தித்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இணைந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டனர். அதன் போது, சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய 06 உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் உணவு கையாளுபவர்களிற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் […]
தையிட்டி விகாரைக்கு முன்பாக நாளை எதிர்ப்பு போராட்டம் –தேசிய மக்கள் சக்தியினரும் இணைகின்றனர்
தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர […]
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: பொதுமக்களின் கருத்துக்களைக் கோருகிறது நீதியமைச்சு!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார… The post புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: பொதுமக்களின் கருத்துக்களைக் கோருகிறது நீதியமைச்சு! appeared first on Global Tamil News .
BB 9 : இது உங்க வீடு இல்ல; நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம்?- சாண்ட்ராவிடம் காட்டமாக பேசிய விஜய்சேதுபதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார். நாமினேஷனில் சான்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வெற்றி பெற்ற கம்ருதீன் அடுத்த வாரத்திற்கான வீட்டு தலையாக தேர்வாகியிருக்கிறார். BB Tamil 9: இதுக்கு இவ்வளவாமா? ஓவர் ரியாக்ஷனா இருக்கே- சான்ட்ராவை சாடுகிறாரா விஜய் சேதுபதி? BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் விஜய் சேதுபதி சாண்ட்ராவிடம் கேள்வி கேட்கிறார். ``வாரம் முழுசும் அழுதிட்டு இருந்தா எப்படி வேடிக்கை பார்க்கிறது. எத்தனை மணிக்கு அவங்க பேக் பண்ணனும், எத்தனை மணிக்கு அவங்க சமைக்கணும், சாப்பிடணும்'னு நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம் என்று விஜய் சேதுபதி கேட்க ``இதை பிரச்னையாக்கணும்'னு நான் நினைக்கல சார் என்று சாண்ட்ரா சொல்கிறார். அதற்கு, ``அப்பறம் ஏன் இவ்வளவு கேள்வி எழுப்புறீங்க. இது உங்க வீடு இல்ல. ஹவுஸ் மேட்ஸ் வழக்கமா செய்கிற வேலைய பத்தி நீங்க ஏன் மா சொல்றீங்க? என்று காட்டமாகப் பேசுகிறார் விஜய் சேதுபதி.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பால் நாமக்கல் முட்டை விலை ரூ.6.50 ஆக உயர்ந்துள்ளது.
`அன்று பொன்னாடை போர்த்திய ஜனாதிபதி; இன்று சி.எம் கையிலிருந்து விருது'- நாகசுர கலைஞர் கிருஷ்ணமூர்த்தி
திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகசுரக் கலைஞர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 16-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை இசை விழாவில் தமிழ்நாடு முதல்வர் கையினால் `ராஜரத்தினா' விருதினைப் பெற்றார். கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினோம். ``நான் பாரம்பர்ய இசைக் குடும்பத்திலிருந்து வந்தவன். என்னுடைய தாத்தா நாகசுர வித்துவான் ஆவூர் ராஜமாணிக்கம், `தங்க நாகசுரம்' வாசித்தவர். அப்படிப்பட்ட இசைக் குடும்பத்தில் நான் நான்காவது தலைமுறை. என் தந்தை ராமையா பிள்ளை சிறந்த நாகசுர கலைஞர் ஆவார். அவர் நாதசுவரம் வாசிப்பதை சிறு வயதிலிருந்து பார்த்துப் பார்த்து எனக்கும் அதன் மீது ஆர்வம் வந்தது. நான் 7ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு படிப்பதைத் தாண்டி நாதஸ்வரம் கலையின் மீது மிகவும் ஈர்ப்பு வந்துவிட்டது. எனது 5 வயதிலிருந்தே இக்கலையினைக் கற்கத் தொடங்கிவிட்டேன். நாகசுர கலைஞர் வடுவூர் கிருஷ்ணமூர்த்தி என் தந்தையும் என் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, திருவெண்காடு ஜெயராமன் மற்றும் கோட்டூர் சுவாமிநாத பிள்ளை ஆகியோரிடம் நாகசுரம் பயில அனுப்பி வைத்தார். அவர்களிடம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் குருகுலக் கல்வியாக நாதஸ்வரம் கலையினை கற்றேன். இப்படியே படிப்படியாக நாகசுர கலையினை கற்று முடித்தேன். ஏறத்தாழ 10,000-க்கும் மேற்பட்ட கோயில் கச்சேரிகள், திருமண நிகழ்ச்சிகள் எனப் பல இடங்களில் நாதஸ்வரம் வாசித்தேன். 1997-ம் ஆண்டு அமெரிக்க வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகசுரத் தமிழ் கருத்தரங்கத்தில் இசை ஆய்வாளர் பி.எம் சுந்தரத்துடன் இணைந்து நாகசுரம் மரபைப் பற்றிய செயல்முறை விளக்க உரையினை வழங்கி நான் பெற்ற கலைக்கு மென்மேலும் பெருமையைச் சேர்த்தேன். வாழ்வில் மறக்க முடியாத ஒன்று: நான் ஏராளமான கச்சேரிகளை நடத்தியிருந்தாலும் இன்றைய நாள் வரை என்னால் மறக்க முடியாத ஒன்று என்றால், அது டெல்லியில் நடைபெற்ற சம்பவம் தான். டெல்லியில், `கந்த சஷ்டி விழா'வில் நான் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டு இருந்தபோது, மேனாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் எனது இசையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தினார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் அது! நாகசுர கலைஞர் வடுவூர் கிருஷ்ணமூர்த்தி வடுவூர் கிருஷ்ணமூர்த்தி தான் என் அடையாளம்: நான் என்னதான் இசை கலைஞர், ராஜரத்னா விருது பெற்றிருந்தாலும்... என் பெயருக்கு முன் கண்டிப்பாக என் ஊர் இருக்கும். என் ஊர்தான் என்னுடைய அடையாளம். நான் எங்கு சென்றாலும், எவ்வளவு பெரிய சபைக்குச் சென்றாலும்... என் பெயருக்கு முன் வடுவூர் என்ற என் ஊரைக் கூறித்தான், அறிமுகம் செய்வேன். கடந்த 40 ஆண்டுகளாக வடுவூர் கிருஷ்ணமூர்த்தியாக இசைத்துறையில் இருக்கிறேன். அந்த ஒரு தருணம்: நான் எவ்வளவோ பாராட்டுகள், விருதுகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால் தமிழ்நாடு முதல்வர் தனது கையால் `ராஜரத்னா' விருதினை தந்தபோது அந்த ஒரு நிமிடம்... என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. நாகசுர கவிஞர்களுக்கெல்லாம் மகா சக்கரவர்த்தியாக விளங்கக்கூடியவர் திருவாடுதுறை `ராஜரத்தினம் பிள்ளை.' அவருடைய பெயரில் எனக்கு விருது கிடைத்தது பெரும் பாக்கியமாகத்தான் நினைக்கிறேன் என்று மனம் நெகிழ்ந்து கூறினார்.
பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ரூ. 1.5 லட்சம் அபராதம்!
பருத்தித்துறை நகர்ப்புறத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்ட உணவகங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. … The post பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ரூ. 1.5 லட்சம் அபராதம்! appeared first on Global Tamil News .
காதல் வலையில் வீழ்த்தி கல்லூரி மாணவி பலாத்காரம்: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
ராமநகர், கர்நாடக மாநில பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் மாகடி டவுனை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் மாகடியை சேர்ந்த விகாஸ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விகாஸ், இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். முதலில் தயங்கிய மாணவி, விகாசின் ஆசை வார்த்தைகளை நம்பி காதலில் விழுந்துள்ளார். இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவியின் […]
யாழில் பெரும் சோகம்: மகளின் கண் முன்னே விபத்தில் சிக்கி தாய் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்பப் பெண் ஒருவர், தனது மகளின் கண் முன்னாலேயே விபத்தில்… The post யாழில் பெரும் சோகம்: மகளின் கண் முன்னே விபத்தில் சிக்கி தாய் பரிதாபமாக உயிரிழப்பு! appeared first on Global Tamil News .
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்….பாராசூட் சோதனை வெற்றி- இஸ்ரோ அறிவிப்பு!
டெல்லி :இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முக்கிய திட்டமான ககன்யான் (Gaganyaan) திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக பாராசூட் சோதனை வெற்றி பெற்றுள்ளது. விண்கலம் பூமிக்கு திரும்பும்போது அதன் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக தரையிறங்க உதவும் பாராசூட் அமைப்பின் சோதனை சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (TBRL) ரயில் பாதையில் ராக்கெட் ஸ்லெட் வசதியில் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளது. ககன்யான் திட்டம் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமாகும். இதன் மூலம் மூன்று […]
பொருநை அருங்காட்சிகம்.. Gen Z தலைமுறைக்கும் தமிழர் தொன்மை.. முதல்வர் ஸ்டாலின் வீடியோ!
நெல்லை பொருநை அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளிட்டு இருக்கிறார்.
ககன்யான் மிஷன் 2025.. ட்ரோக் பாராசூட் சோதனை வெற்றி.. இஸ்ரோ அறிவிப்பு!
ககன்யான் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது, அதன் வேகத்தை பாதுகாப்பாகக் குறைக்க உதவும் ட்ரோக் பாராசூட்களின் தகுதி மற்றும் நம்பகத்தன்மை சோதனையில் இஸ்ரோ வெற்றி கண்டு இருக்கிறது.
பங்களாதேஷில் பற்றி எரியும் ஊடக நிறுவனங்கள்!
பங்களாதேஷில் மீண்டும் தலைதூக்கிய வன்முறையால் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதாக அநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் , போராட்டக்காரர்கள் ‘ டெய்லி ஸ்டார்’ மற்றும் ‘ புரோத்தோம் அலி’ உள்ளிட்ட பங்களாதேஷின் பத்திரிகை அலுவலகங்களைத் சேதப்படுத்தியுள்ளனர். கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்ட பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் இந்நிலையில் அங்கிருந்த 25 பத்திரிகையாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . […]
மகாத்மா காந்தி பெயர் நீக்கம்.. MNREGA மீது புல்டோசர் தாக்குதல்.. சோனியா காந்தி குற்றச்சாட்டு!
சமீப காலமாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடும் வருத்தத்தையும், கண்டனத்தையும் வீடியோ மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய் பேச்சு சிரிச்சிட்டு போயிறனும்- சீமான் பதிலடி!
சென்னை :தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி நடந்த மக்கள் கூட்டத்தில் பேசுகையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சனங்களை முன் வைத்திருந்தார். குறிப்பாக, “களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம். எதிரிகள் யார் என்று சொல்லிக்கொண்டுதான் களத்திற்கு வந்துள்ளோம்” என்று தெளிவுபடுத்தினார். இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் […]
Year Ender 2025 : இந்த ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ
தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகளில் புதுப்புது திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மூலம் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்னென்ன? அவரின் நோக்கம் என்ன என்பதை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
சிரித்துப் பேசிக்கொண்ட பிரியங்கா காந்தி - மோடி - தேநீர் விருந்தில் கலகல!
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட பெயர் மாற்றம், அணு சக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, டெல்லி காற்று மாசு, எஸ்.ஐ.ஆர் திருத்தம் போன்ற பல்வேறு விவாதங்கள் நாடாளுமன்றத்தில் அனல் பறந்தன. இதற்கிடையில், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முடிவிலும் வழக்கமான தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். பிரியங்கா காந்தி - மோடி இந்த விருந்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, எம்.பி சுப்ரியா சுலே, தி.மு.க எம்.பி ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகுர், மத்திய அமைச்சர்களான ராம் மோகன் நாயுடு (டிடிபி) மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் (ஜேடியு) மற்றும் சிராக் பஸ்வான் (எல்ஜேபி-ஆர்விபி) உள்ளிட்ட எம்.பி-கள் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியும் பிரியங்கா காந்தியும் நட்புடன் உரையாடியனர். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்கா காந்தி, தனது தொகுதி மக்களுடன் உரையாடுவதற்கு வசதியாக மலையாளம் கற்று வருவதாக பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறார். மேலும், பிரியங்கா காந்தி பிரதமரிடம் அவரது சமீபத்திய ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மூன்று நாள் பயணம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி - மோடி அதற்கு பிரதமர் மோடி, ``இந்தியாவில் உள்ள மக்கள் நினைப்பதை விட எத்தியோப்பியா மிகவும் வித்தியாசமானது. அது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. என்றார். இதற்கிடையில் தலைவர்களுக்கு மத்தியிலான உரையாடலில் சிரிப்பலைகள் எழுந்ததாகவும் பி.டி.ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மிகக் குறுகிய கால கூட்டத்தொடர்களில் ஒன்று எனக் கூறியதற்கு கவுன்ட்டர் கொடுத்த பிரதமர் மோடி, ``பல நாள்கள் நான் கத்த வேண்டியதில்லை என்பதால் இந்த தேநீர் விருந்தும், இந்த குறுகிய காலக் கூட்டத் தொடரும் என் தொண்டைக்கு நல்லது என்று வேடிக்கையாகப் பதிலளித்தார். அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்! - அமைச்சர் ரகுபதி
கனடா (Richmond Hill): கனடா, ஒன்ராறியோ மாகாணத்தின் ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியில் கடந்த வியாழக்கிழமை (18.12.25)… The post ரிச்மண்ட் ஹில்லில் இடம்பெற்ற கோர விபத்தில் கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா (சந்திரன்) அகால மரணம் என உறவினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். appeared first on Global Tamil News .
இந்தியாவிலேயே முதன்முறை.. மனித விலங்கு மோதலை தடுக்க AI கட்டுப்பாட்டு மையம்.. எங்கு தெரியுமா?
இந்தியாவிலேயே முதன்முறையாக மனித விலங்கு மோதலை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு உள்ளது.
இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை!
பாகிஸ்தானில் தோஷாகானா (Toshakhana) ஊழல் வழக்கின் இரண்டாவது கட்டத்தில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோருக்கு இஸ்லாமாபாத் கோர்ட் இன்று (டிசம்பர் 20, 2025) தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்தத் தீர்ப்பில், இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பிபி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தோஷாகானா என்பது அரசு கருவூலமாகும், இதில் வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து பிரதமருக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் வைக்கப்படும். […]
T20 WC: மகிழ்ச்சியாக இருக்கிறது; அணியை சரியாக தேர்வு செய்திருக்கிறோம்- கேப்டன் சூர்யகுமார் யாதவ்
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூர்யகுமார் யாதவ் ( கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல்( துணை கேப்டன்), ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, ஹர்ஷிப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் ஆகியோர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த அணியில் சுப்மன் கில், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடம் பெறவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யகுமார் யாதவ், இந்த முறை டி20 உலகக்கோப்பையை சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது ஒரு நல்ல ஊக்கமாக இருக்கும். 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் நாங்கள் இதனை அனுபவித்தோம். இந்திய அணியின் தேர்வு குழு அந்த சமயத்தில் நாங்கள் அனுபவித்த உணர்வை மறக்க முடியாது. சொந்த மண்ணில் விளையாடுவது சவாலாக இருக்கும். அணியை சரியாக தேர்வு செய்திருக்கிறோம். அனைத்து இடங்களுக்கும் சரியான வீரர்களைத் தேர்வு செய்திருக்கிறோம். இந்த அணியை அறிவித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று பேசியிருக்கிறார். T20 WC: `அவரின் தரம் குறித்து எல்லோருக்கும் தெரியும்; ஆனால்..!'- கில் இடம்பெறாதது குறித்து அகர்கர்
நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு பயணமாகிறார் ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் திங்கட்கிழமை அவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்களையும், எதிர்க்கட்சி பிரமுகர்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன்,பேரிடருக்குப் பின்னரான மீளமைப்புக்கான இந்தியாவின் உதவிப் பொதியை
76 ஆண்டு இல்லாத கனமழை: துபாயை புரட்டி எடுத்த மோசமான வானிலை- விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதி
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பெய்து வரும் கனமழையால் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் விமான சேவை முற்றிலும் முடங்கி உள்ளன.
யாழில். ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்ப பெண் விபத்தில் உயிரிழப்பு
தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை தையிட்டி விகாரைக்கு முன்பாக இதொரு சட்டவிரோதமான விகாரைஎன மும்மொழிகளில் அறிவித்தல் பலகை நாட்டுவது எனவும் , விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுப்பது என்றும் ,கடந்த வியாழக்கிழமை வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவை சந்திப்பு
தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியப் பேரவையின் அரசியல் குழுவினர் இன்று சென்னை, தியாகராஜ நகரில் அமைந்துள்ள பா.ஜ.கவின் மாநில தலைமையகமான கமலாலயத்திற்குச் சென்றனர். அங்கு கட்சியின் மாநிலத் தலைவர்நயினார் நாகேந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
சிட்னி போண்டி கடற்கரை தாக்குதல்; கோமாவில் இருந்து மீண்ட சந்தேக நபர்
அஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தபோது தாக்குதல் நடத்தியவர் கோமாவில் இருந்து மீண்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஹனுக்கா பண்டிகையை கொண்டாட கூடியிருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 16 பேர் பலியானார்கள். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியாவை சேர்ந்த தந்தை, மகன் என்பதும், அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும் உறுதியானது. சம்பவம் இடம்பெற்றபோது பொலிஸார் நடத்திய பதிலடி தாக்குதலில் […]
Club Fm becomes “The OG Content Creator of Kerala”
Kochi: For years, Club FM was branded as Kerala’s No 1 FM station, But the world changed, content moved online, suddenly everyone became a ‘Content Creator’. But the truth is simple, radio has been doing this since day one. Storytelling, comedy characters, pranks, interviews, music, curation, infotainment everything that today’s digital business creators do, radio mastered it long before the internet.The insight to a bold repositioning: From Kerala’s No 1 FM “The OG Content Creator of Kerala”.1. Reclaims Radio’s legacy – radio has always been the origin authentic content engine before YouTube, before reels, before podcasts- radio was the OG creator2. Positions Club FM beyond FM – Club FM is no longer just a radio – it’s a multi-platform content powerhouse creating both on air and digital contents.3. Creating a space no competitor can copy, - Instead of fighting for the “No 1 FM tag”, club fm moves beyond radio to become a true content creatorClub FM moved to a territory no other player can touch. ‘The original content creator’, because truthfully, how do you out do the original? You can copy trends – but you can’t out the original OG.[caption id=attachment_2484822 align=alignleft width=200] Mayura Shreyams Kumar,[/caption]Speaking about this Mayura Shreyams Kumar, Director, Digital Solutions, Mathrubhumi Group said “With the OG Campaign, we chose not to compete in the ‘No. “1 FM’ noise. We chose to own a space that no one else can replicate—original content creation.” [caption id=attachment_2484821 align=alignright width=113] Jayakrishnan N[/caption] Jayakrishnan N, General Manager, Club FM said “This campaign is our way of saying we were never just an FM station. We were content creators long before the term existed.” [caption id=attachment_2484820 align=alignleft width=200] RJ Rafi[/caption] RJ Rafi, Creative Head, Club FM , said “This repositioning is not just about Club FM, It's a Representation to the entire radio fraternity. Club The OG Content Creator of Kerala View this post on Instagram A post shared by Club FM On Air (@clubfmonair) View this post on Instagram A post shared by Club FM On Air (@clubfmonair) -Based on Press Release
2026 T20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு…2 தமிழக வீரர்கள் இடம்பிடிப்பு!
டெல்லி :ஐ.சி.சி. 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026 பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும் அடங்கும்.இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி அமெரிக்காவை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. […]
யாழில். ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்ப பெண் விபத்தில் உயிரிழப்பு
தனது மகளுடன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற தாயார் விபத்தில் சிக்கி மகளின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த தாயும் மகளும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூஜையில் கலந்து கொள்ள அர்ச்சனை பொருட்களுடன் வந்துள்ளனர். எதிர் திசையில் , வந்த கழிவகற்றும் வாகனத்தை (கலி பவுசர்) முந்திக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளால் தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிளில் நிலைகுலைந்தது , வீதியில் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் விழுந்துள்ளனர். அதன் போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த தாயார் வீதியின் நடுப்பகுதியில் விழுந்ததுடன் , மோட்டார் சைக்கிளின் ஓட்டியான மகள் வீதியின் மறுபக்கம் விழுந்துள்ளனர். அதன் போது , வீதியின் எதிர் திசையில் வந்த கழிவகற்றும் வாகனம் தாயார் மீது மோதியதில் தாயார் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மகளை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் கழிவகற்றும் வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
T20 World Cup 2026: ‘வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு ஆபத்து’.. அணி அறிவிப்பில் ட்விஸ்ட் வைத்த பிசிசிஐ!
டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய அணி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. துணைக் கேப்டன் பதவி அறிவிப்பால்தான், சுந்தர் இடத்திற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
``சினிமா வசனமெல்லாம் பேசுகிறார்; விஜய் தான் பாஜகவின் `சி'டீம்! - அமைச்சர் ரகுபதி சாடல்!
புதுக்கோட்டை மாவட்டம், வடவாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எஸ்.ஐ.ஆர் பணியில் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பத்து நாள்களுக்குள் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து உண்மையிலே வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்களா, வேண்டுமென்றே விட்டிருக்கிறார்களா என்பதை நிச்சயமாக கண்டுபிடித்துச் சொல்கின்றோம். நகர பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் இறந்தவர்களைத் தவிர மற்ற நீக்கப்பட்ட வாக்காளர்களை சரிபார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. எங்களுடைய பி.எல்.ஏ, பி.எல்.ஏடு, பி.எல்.சி இணைந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் சென்று அங்குள்ள வாக்காளர் பட்டியலை பத்து நாள்களுக்குள் சரிபார்த்து விடுவார்கள். அதற்குப் பிறகு, இது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கின்றோம். பா.ஜ.க, அ.தி.மு.க ஆகியோர் எதுவாக இருந்தாலும் சரி என்றுதான் கூறுவார்கள். நாங்கள் தீய சக்தியும் இல்லை. விஜய் தூய சக்தி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படமாட்டோம். எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனமாக தீய சக்தி, தூய சக்தி என்று கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது. ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும். பெரியாரைக் கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது, திராவிடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம். பா.ஜ.க-வின் சி டீமாக இருக்கக்கூடிய விஜய் அதை மறைக்கலாம். ஒன்று மட்டும் உண்மை. அவரை பொறுத்தவரை எந்தக் காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது. எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சி ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி பெற்ற உடன்தான் அவர் கட்சி உறுதியானது. அதேபோல், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தலில் விஜய் நின்று அவர் பலத்தைக் காட்டி இருந்தால் இன்று பேசுவதற்கு யோக்கிதை இருக்கும். ஆனால், விஜய் அந்த தேர்தலில் புறமுதுகிட்டு ஓடிவிட்டார். தேர்தலை கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர்-யையும், விஜய்யையும் ஒப்பிட முடியாது. விஜய் எந்தக் காலத்திலும் எம்.ஜி.ஆராக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். விஜய் நூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான், தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப் போல் நாங்கள் இல்லை. அமைச்சர் ரகுபதி பா.ஜ.க-வின் சி டீம் தான் விஜய். கூட்டணியை மட்டும்தான் நம்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படி இருக்கையில், அவருக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்ல தகுதி கிடையாது. கொள்கையை விட்டுவிட்டு தான் பா.ஜ.க-வின் அடிமையாக அவர் இருக்கிறார். அ.தி.மு.க கட்சிக்காரர்கள் பாவம் அவர்கள் துடிக்கிறார்கள். தி.மு.க-வை மறைமுகமாக ஆதரித்தால்தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும்...தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இன்னும் பலம் கிடைக்கும் என்ற எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.
நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அசாம் மாநிலம் அருகே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 8 யானைகள் உயிரிழப்பு
மிசோரம் மாநிலம் சாய்ரங்கில் இருந்து புதுடெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சுமார் 126 கி.மீ
சத்தீஸ்கரின் 39 மாவோயிஸ்டுகள் தெலங்கானாவில் சரண்!
சத்தீஸ்கரில், செயல்பட்டு வந்த 39 மாவோயிஸ்டுகள் உள்பட 41 பேர் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் 39 பேர் உள்பட 41 மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறை உயர் அதிகாரி பி. ஷிவதார் ரெட்டி முன்னிலையில் நேற்று (டிச. 19) சரணடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகள் நவீன ரக துப்பாக்கிகள் உள்பட 24 ஆயுதங்களை, பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் பதவிகளுக்கு […]
மது வாங்க ரூ.10 கொடுக்காததால் 49 வயது நபரை குத்திக் கொலை செய்த 17 வயது சிறுவன்!
ஆந்திராவில் மது வாங்க 10 ரூபாய் தராத ஆத்திரத்தில், 49 வயது நபரை 17 வயது சிறுவன் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர
களத்தில் இல்லாத கட்சி த.வெ.க என்ற கருத்து பதிலடி கொடுத்த செங்கோட்டையன்
தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். எஸ்ஐஆர் குறித்து ஏற்கனவே த.வெ.க தலைவர்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அவர் கூறியதாவது:- * வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன்
விஜய் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் –அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கு
திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட மாடல அரசு உருவாக்கப்பட்டு குறிப்பாக ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளியாவது இந்த அரசில்
மேற்கு வங்கம் மற்றும் அசாமுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணிகள் (எஸ்ஐஆர்) நடந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு
அமெரிக்காவில் விமான கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரெக் பிபிள் (55). இவர் முன்னாள் கார் பந்தய சாம்பியன் ஆவார். இவர் தனது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா
சிறிலங்காவில் அதிகம் செலவிடும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள்
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளே சிறிலங்காவில் அதிகம் செலவிடுபவர்கள் என, ஆய்வில் வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு சராசரியாக 209 அமெரிக்க டொலர்கள் செலவிடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. அவர்கள், ஒரு நாளைக்கு 154.82 முதல் 263.28 டொலர்கள் வரை செலவிட்டுகின்றனர். ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள்
பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? கேள்விகளை எழுப்பும் ஞாயிற்றுக் கிழமை!
அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிறு விடுமுறை நாளில் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு….நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை!
சென்னை :குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.20-12-2025 மற்றும் 21-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 22-12-2025 முதல் 24-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 25-12-2025 மற்றும் 26-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை […]
: தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் –காணி வழங்க நன்கொடையாளர்கள் முன்வருகை!
யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகத்திற்கான பணிகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காணியை நன்கொடையாக… The post : தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் – காணி வழங்க நன்கொடையாளர்கள் முன்வருகை! appeared first on Global Tamil News .
Manesh Swamy joins First AI as Co-Founder & Chief Creative Officer
Mumbai: Manesh Swamy has joined First AI as Co-Founder & Chief Creative Officer, marking a new entrepreneurial chapter after over two decades in the creative and digital marketing industry. Prior to this, Swamy served as Managing Director & Chief Creative Officer at LS Digital Group, where he was associated since 2019.Announcing his new role on LinkedIn, Swamy wrote, I’m happy to share that I’m starting a new position as Co-Founder & Chief Creative Officer at First AI! Reflecting on his transition, he added, After 20+ years in the creative space, I was contemplating should I keep refreshing the system (read: change jobs)… or you hit Ctrl Alt Create (read: do your own thing). Six months ago, I chose the latter and jumped into the entrepreneurial journey with equal parts excitement and mild, healthy fear. Swamy shared that First AI has been co-built with a close group of collaborators and is positioned as a consultancy, product studio, and creative partner. At First AI, AI doesn’t just mean Artificial Intelligence. For us, it stands for: Artistic Imagination. Analytical Implementation. Audience Interaction. And an always-on Innovation mindset, he noted.Backed by over 100 years of collective leadership experience, First AI blends creative craft with AI-powered execution. Swamy added, What’s been truly validating is seeing multiple brands already come on board. Deep gratitude for the trust placed in us. It’s fuel for the journey ahead. Outlining the company’s ambition, he said, Our mission is simple (and slightly ambitious): Help brands think smarter, create faster, and grow bigger through intelligent ideas that actually move the needle. Before his stint at LS Digital, Swamy worked with organisations such as Hungama Digital Services and Hungama Digital Media Entertainment, where he began his career as Associate Creative Director. With over 20 years of experience, his expertise spans communication strategy, brand building, influencer marketing, branded content, creative strategy, social media marketing, design, and AI consulting.Swamy concluded his announcement by hinting at what lies ahead, stating that the journey has just begun and that the best stories are yet to come.
மன்னார் நகர சபையின் வருமானம் 4 கோடியைத் தாண்டியது!
மன்னார் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நத்தார் மற்றும் புத்தாண்டு கால வியாபார நடவடிக்கைகளுக்காக நடத்தப்பட்ட பகிரங்க… The post மன்னார் நகர சபையின் வருமானம் 4 கோடியைத் தாண்டியது! appeared first on Global Tamil News .
அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு
அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில், புறப்பட்ட சிறிது நேரத்தில் திரும்பி தரையிறங்க முயன்ற தனியாா் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 7 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஸ்டேட்ஸ்வில் ரீஜியனல் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா சி550 ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்பி தரையிறங்க முயன்றது. அப்போது தரையில் மோதிய விமானம் வெடித்து தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் ஓய்வுபெற்ற நாஸ்காா் ஓட்டுநா் கிரெக் பிஃபிள் (55), அவரது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடா் […]
Madhuri Dixit: `சினிமா வேண்டாம்!’ - ஆப்பிள் நிறுவனத்தில் மாதுரி தீட்சித்தின் மகன்!
இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி' என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இன்றும் அதே வசீகரத்துடன் ஜொலிக்கிறார். நடனம் என்பது வெறும் அசைவு அல்ல, அது ஒரு மொழி என்பதை நிரூபித்தவர். தற்போதுகூட மாதுரி தீட்சித் நடிப்பில் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் `மிஸஸ் தேஷ்பாண்டே' வெளியாகியுள்ளது. அப்படிப்பட்டவரின் மூத்த மகன், தனது தாயின் வழியில் சினிமாவில் நடிக்க வராமல், தொழில்நுட்பத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் என்பதுதான் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி. மாதுரி தீட்சித் மாதுரி தீட்சித் மற்றும் டாக்டர் ஸ்ரீராம் நேனேவின் மூத்த மகனான அரின் நேனே (Arin Nene), உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் `மெஷின் லேர்னிங் இன்ஜினியராக' பணியாற்றி வருகிறார். குறிப்பாக, `நாய்ஸ் கேன்சலேஷன்' (Noise Cancellation) தொடர்பான திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக மாதுரி தீட்சித் தெரிவித்துள்ளார். ரியான், ஸ்ரீராம், மாதுரி, அரின் அரின் நேனே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (USC) கணினி அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளார். தொழில்நுட்பத்தில் மட்டுமன்றி, அரினுக்கு இசையிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரியில் படிக்கும்போதே இசையை ஒரு துணைப் பாடமாக எடுத்துப் படித்துள்ளார். அவர் சொந்தமாக இசையமைக்கவும் செய்கிறார். முன்னதாக, கரண் ஜோஹரின் Rocky Aur Rani Kii Prem Kahaani என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் சிறிது காலம் பணியாற்றி சினிமா அனுபவம் பெற்றுள்ளார். இருப்பினும், தனது முழுநேர பணியாக தொழில்நுட்பத் துறையையே தேர்ந்தெடுத்துள்ளார். ஸ்ரீராம், மாதுரி, அரின் மாதுரியின் இளைய மகன் ரியானும் (Ryan) சினிமாவில் ஆர்வம் காட்டாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா வாரிசுகள் பெரும்பாலும் சினிமா துறையையே தேர்ந்தெடுக்கும் சூழலில், மாதுரி தீட்சித்தின் மகன்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் தங்களின் தனித்துவமான பாதையை அமைத்துக்கொண்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
: யாழில் பெரு வெள்ளத்தில் பூதவுடல் சுமந்து சென்ற அவலம் –மயானத்தை புனரமைக்க கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, இறுதிச் சடங்குகளை நடத்துவதிலும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி… The post : யாழில் பெரு வெள்ளத்தில் பூதவுடல் சுமந்து சென்ற அவலம் – மயானத்தை புனரமைக்க கோரிக்கை! appeared first on Global Tamil News .
விஜய் இன்னும் ‘அப்டேட்’ இல்லாமல் இருக்கிறார் –அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!
சென்னை :திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிருபர்களிடம் தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் (School Dropout) விகிதம் குறித்து விஜய் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற த.வெ.க. தலைவர் விஜய், தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டு தி.மு.க. அரசை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ், அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் காலத்தில் (2017-18) […]
New Delhi: As India steps into the new year amid rising concerns around stress, anxiety, and burnout, AiR — Atman in Ravi — has launched a nationwide behavioural-change initiative titled “Pause for Happpiness”, aimed at helping Indians slow down, reconnect, and cultivate inner peace. Timed with the onset of 2026, the campaign encourages people across age groups to incorporate intentional pauses into daily life, reframing happpiness as a conscious, accessible practice rather than a distant goal.The initiative draws from AiR’s distinctive philosophy of happpiness, spelled with three Ps—pleasure (achievement), peace (fulfilment), and purpose (enlightenment)—which he believes together form the foundation of true and lasting happpiness. The campaign arrives at a critical moment, as India continues to rank low on global well-being indicators, standing at 118th out of 147 countries in the World Happiness Report 2025, despite marginal improvement over the previous year.India’s mental health challenges remain stark. Reports indicate that 74% of Indians experience chronic stress, 88% suffer from anxiety-related disorders, and over 70% of urban professionals face burnout, with many considering quitting their jobs. Among students in major cities, anxiety levels are equally alarming, while untreated mental health conditions persist due to stigma and lack of access.Rooted in AiR’s concept of “Creating Your Inner Atmosphere,” the campaign advocates stepping off mental autopilot to reconnect with one’s true self. Backed by research, the initiative highlights how short mindful pauses—such as deep breathing—can significantly reduce cortisol levels, improve focus, and build emotional resilience, offering a practical antidote to everyday stress.Running from December 17, 2025, to January 31, 2026, the “Pause for Happpiness” movement will roll out across digital platforms, college campuses, podcasts, and community spaces, sparking conversations around mental renewal and offering accessible tools for inner well-being.At the heart of the campaign is a cinematic launch film narrated by AiR, capturing everyday moments—from traffic snarls to boardroom entrances—where a simple pause can become a gateway to calm, clarity, and sustained happiness.Sharing his vision, Atman in Ravi, Happpiness Ambassador, said, “We often chase happpiness in milestones – a promotion, a holiday, a relationship. But happpiness is a state of being — being peaceful and blissful, cheerful and playful, grateful and joyful. It resides in the pauses we rarely permit ourselves. When you pause, when you are still, in silence, you experience peace, the foundation of peace; you encounter your true self. A mere five-second pause can shift the entire rhythm of your day, lowering stress, amplifying gratitude, and forging unbreakable mental strength. Let us collectively choose to breathe, to pause, and to thrive.” The campaign’s urgency is underscored by troubling trends, including higher anxiety prevalence in urban India and youth suicide emerging as the leading cause of death among those aged 15–29. Through evidence-based mindfulness practices, “Pause for Happpiness” aims to empower millions to reclaim emotional balance—one breath at a time.Looking ahead, AiR plans to amplify the movement through interactive workshops, digital challenges, and collaborations with wellness influencers, positioning happpiness as a daily discipline rather than a luxury. By fostering greater awareness, connection, and generosity, the initiative aspires to contribute meaningfully to India’s long-term well-being and happiness outcomes.
: பருத்தித்துறையில் டெங்கு நுளம்பு பெருகும் சூழல் – 22 பேருக்கு தண்டம்!
பருத்தித்துறை யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த 22 உரிமையாளர்களுக்கு தலா 5,000… The post : பருத்தித்துறையில் டெங்கு நுளம்பு பெருகும் சூழல் – 22 பேருக்கு தண்டம்! appeared first on Global Tamil News .
ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சிட்டு வெளியிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அளவுக்கு அதிகமாக அச்சிட்டு வெளியிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
யாழில் மகளின் கண் முன்னே துடிதுடித்து பலியான தாய் ; நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம்
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்திசையில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. மகளும் காயம் இதனை அடுத்து தாயும், மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதன்போது எதிர்திசையில் பயணித்த பவுசர் ஒன்று மோதுண்டதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் […]
தமிழர் பகுதி இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; சட்டவிரோத செயலால் துயரம்
அம்பாறையில் தெஹியத்தகண்டிய – உத்தலபுர பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (19) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை உயிரிழந்தவர் கலேன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது. இவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி, உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

24 C