Ashes: டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதம்!; 104 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளில் முடிந்தப் போட்டி!
104 வருடங்களுக்குப் பிறகு ஆஷஸ் போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவடைந்திருக்கிறது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றிப் பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 74-வது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் பெர்த் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்காமல் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். Australia vs England - Ashes அதிகபட்சமாக, ஆலி போப் 46 ரன்களும், ஹாரி ப்ரூக் 52 ரன்களும் எடுத்திருந்தார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி. 13 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் மொத்தமாக 7 விக்கெட்களை வீழ்த்தினார். பிறகு பேட்டிங்கிற்கு வந்த ஆஸ்திரேலியா அணியின் பேட்டர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 123 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது. முதல் நாளில் மொத்தமாக 19 விக்கெட்டுகள் விழுந்தன. இத்தனை வருட ஆஷஸ் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் நாளில் 19 விக்கெட்கள் விழுவது இது முதல் முறை. இரண்டாவது நாளில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா அணி. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்கள் அடித்திருந்தார். அதிரடியாக பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸிற்கு பேட்டிங் வந்த இங்கிலாந்து அணியின் பேட்டர்களுக்கு சறுக்கலே தொடர்ந்தது. அடுத்தடுத்து பேட்டர்கள் ஆட்டமிழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். Australia vs England - Ashes பிறகு 205 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் பேட்டர்கள் 28 ஓவரிலேயே டார்கெட்டை எட்டி வெற்றியைத் தொட்டனர். ஓப்பனிங் வந்த டிராவிஸ் ஹெட் 123 ரன்களும், லபுஷேன் 51 ரன்களும் அடித்து இரண்டாவது நாளிலேயே போட்டியை முடித்து வைத்தனர். 69 பந்துகளில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆஷஸ் வரலாற்றில் அதிவேக சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.பாஸ்ட் பவுலர்களுக்கு இந்த பிட்ச் சாதகமாக அமைய இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி அதை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது. இந்தப் போட்டியில், ஸ்டார்க் மட்டும் மொத்தமாக 10 விக்கெட்களை எடுத்திருக்கிறார்.
Priyanka Chopra Sees Parallels in Born Hungry
Priyanka Chopra said that working as a producer on Born Hungry reminded her of her own life living between different
Ray Dalio Warns of AI Stock Market Bubble
Nvidia’s huge earnings have sparked a big rally in AI stocks. But billionaire investor Ray Dalio says the excitement is
தாராவியில் தீ விபத்து.. ரயில் நிலையம் அருகே ஏற்பட்டதால் நீடிக்கும் பதற்றம்!
மும்பை தாராவியில் மஹிம் ரயில் நிலையம் அருகே இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ரயில் பாதைகளுக்கு அருகில் தீ பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களைத் தொடர்ந்து வெளியேற்றும் அமேசான்.. 1,800 பொறியாளர்கள் பாதிப்பு!
அமேசான் நிறுவனத்தில் பணி நீக்கங்கள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது 1,800 பொறியாளர்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர்.
GST Can Temporarily Freeze Accounts in Serious Cases
The GST department has strong powers to enforce tax laws, including the ability to temporarily freeze the bank accounts of
பணி நிரந்தரம் என்னாச்சு முதல்வரே? திமுக வாக்குறுதி நிறைவேறுமா? பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி!
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பகுதி நேர ஆசிரியர்களை எப்பாடு பட்டாவது பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது. சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளங்களோடு மலர்தூவி விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.இதன்போது மாவீரர் பெற்றோர்களுக்கு தென்னை மரக்கன்றுகள், அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ் பெற்றோர் கௌரவிப்பில் மாவீரர்களின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில்
இந்தியாவின், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட ரணில், தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் அவர் சென்னை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
19 வயது இளைஞனின் உயிரை பறித்த கார்
சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – ஹபரண வீதியில் திகம்பதஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபரண நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை அதேநேரம், பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு எதிர் திசையில் வந்த கார் குறித்த நபர் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் மற்றும் மோட்டார் […]
வீட்டின் மேல் சரிந்து விழுந்த மண்மேடு ; உடமைகள் சேதம்
திம்புலபத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடொன்று சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக குறித்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. படுக்கையறை சேதம் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு படுக்கையறை முற்றாக சேதம் அடைந்துள்ளது. மேலும் வீட்டின் மற்ற சுவர்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதால், வீட்டில் வசிக்கும் 05 பேரை உறவினர் […]
தமிழகத்தில் 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்!
சென்னை : தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடங்கிய நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், இதுவரை 95.78% விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 22, 2025) பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மொத்தம் 6,41,14,582 வாக்காளர்களில் 6,14,07,805 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இது 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்டவை) […]
மாவீரர் நாளையொட்டி எழுச்சிக் கோலத்தில் கோம்பாவில் பிரதேசம்!
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் உள்ளது. தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது. அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம் என்றுமில்லாதவாறு கோம்பாவில் புலம்பெயர் தேசத்து உறவுகளும், கோம்பாவில் மக்கள், இளைஞர்கள் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் ஏற்பாடாகியுள்ளது.
கடுகண்ணாவ மண்சரிவு ; பெண் ஒருவர் உயிருடன் மீட்பு
கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் பலி ஏலவே இந்த விபத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் பல வியாபார ஸ்தலங்கள் பாதிப்படைந்தன. இந்த நிலையில், மேலும் நால்வர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ […]
Aval Vikatan Awards: பெண்ணென்று கொட்டு முரசே! சாதனை மங்கைகளுக்கான விகடன் மேடை!
தொடங்கியது அவள் விருதுகள் க வருகை தந்த விருதாளர்கள் சாதனை மங்கைகளுக்கான மகுடம்! சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கி வருகிறது அவள் விகடன். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அவள் விருதுகள் நிகழ்ச்சி இன்று (நவம்பர் 22) மாலை சென்னையில் நடைபெறவுள்ளது. Aval Vikatan Awards - அவள் விகடனை விருதுகள்
டெல்லியின் காற்று மாசுபாடு: GRAP திட்டத்தின் நிலையில் திடீர் மாற்றம் ஏன்?
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் GRAP திட்டத்தின் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பெரும்பான்மையுடன் ஆபீஸில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வீட்டில் வேலை செய்யப் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி: பெண் B.L.O தற்கொலை; வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிச்சுமை காரணமென கணவர் புகார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜாகிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப்பணியில் இருந்தார். அதில் வாக்காளர்களுக்கு படிவம் வழங்குதல், பூர்த்தி செய்யப்பட படிவங்களை திரும்பப் பெறுதல் போன்ற பணிகளை செய்து வந்தார். கடந்த நவம்பர் 20-ம் தேதி வழக்கம்போல வேலைக்குச் சென்ற ஜாகிதா பேகம், மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது கணவர் முபாரக் சாப்பாடு வாங்கி வருவதற்காக ஹோட்டலுக்குச் சென்றார். அதையடுத்து ஜாகிதா பேகம் வீட்டுக்குச் சென்ற அவரது உறவினர் ஒருவர், ஜாகிதா பேகம் ஊஞ்சல் சங்கிலியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து கூச்சலிட்டார். தற்கொலை செய்து கொண்ட ஜாகிதா பேகம் அதைக்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ஜாகிதா பேகத்தை மீட்டு திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அதையடுத்து ஜாகிதா பேகத்தின் உடல், உடற்கூராய்வு சோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தப்பணியால் ஏற்பட்ட அழுத்தம்தான் தன்னுடைய மனைவியின் தற்கொலைக்கு காரணம் என காவல் நிலையத்தில் புகார் எழுப்பியிருக்கிறார் முபாரக். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருக்கும் திருக்கோவிலூர் போலீஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். புதுச்சேரி: திருமணம் மீறிய உறவு; மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை செய்த பின்னணி!
சாகித்ய அகாடமி விருது பெற்றக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமாகியிருக்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92. கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி எனப் பன்முகம் கொண்டவர் ஈரோடு தமிழன்பன். மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து விளங்கியவர் இவர். ஈரோடு தமிழன்பன் ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் 1933-ம் ஆண்டு பிறந்த இவர் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 1975 முதல் 1993 வரை அங்கு செய்தி வாசிப்பாளராக இவர் பணியாற்றினார். கடந்த 2004-ம் ஆண்டு 'வணக்கம் வள்ளுவ' என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். வானம்பாடி கவிதை இயக்கத்தில் முக்கியப் பங்களிப்புகளை இவர் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, 'அரிமா நோக்கு' என்ற ஆய்விதழில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ஈரோடு தமிழன்பன் மேலும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலும், அறிவியல் தமிழ் மன்றத்திலும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இவர் செயலாற்றியிருக்கிறார். இவருடைய மறைவுக்கு இலக்கியத் துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Travis Head Stars as Australia Wins First Ashes
Makeshift opener Travis Head played an incredible innings, scoring a 69-ball century, to help Australia win the first Ashes Test
FIFA Bans Panama Football President for Misconduct
A few days after Panama proudly secured a spot in the 2026 World Cup, the country’s football federation president, Manuel
சபரிமலை அய்யப்பன் சீசன்! கடும் கட்டுப்பாடுக்கு இடையே 5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்...
சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் இதுவரை மட்டும் 5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Maanbumigu Parai Movie Audio Launch Stills
ஜப்பானை தாக்குவோம்…ஐநாவுக்கு சீனா பரபரப்புக் கடிதம்!
தைவான் விவகாரத்தில் ஜப்பானின் தலையிடும் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து, சீனா ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது. நவம்பர் 21 அன்று சீனாவின் ஐ.நா. தூதர் ஃபூ கோங் அனுப்பிய இந்தக் கடிதத்தில், ஜப்பான் பிரதமர் சானே தகைச்சியின் (Sanae Takaichi) கருத்துகள் “தவறானவை மற்றும் ஆபத்தானவை” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தகைச்சி, இந்த மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் “தைவான் அரசியல் பிரச்சினை ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் […]
Varanasi Movie Title Launch Event Stills
Friends Movie Re Release Press Meet Stills
மெட்ரோ திட்டத்தில் தாமதம்.. அதிகாரிகள் கூறும் காரணம் என்ன தெரியுமா?
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், பூந்தமல்லி - போரூர் வழித்தடம் பாதுகாப்பு சான்றிதழ் தாமதத்தால் தடைபட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத ரயில்களுக்கான சோதனை ஓட்டங்கள் முடிந்தும், RDSO காரணத்தை தெரிவிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: சீரமைக்கப்படாத மலைச்சாலை; கண்டுகொள்ளாத அரசு; 40 ஆண்டுகளாக அவதிப்படும் மக்கள்; பின்னணி என்ன?
மதுரை - தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் - மயிலாடும்பாறை சாலையைச் சீரமைத்து, பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க இரண்டு மாவட்ட கிராம மக்கள் முடிவெடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சப் கலெக்டரிடம் மனு அளித்த மக்கள் மதுரை மாவட்டம் எழுமலை அருகே மல்லப்புரத்திலிருந்து தேனி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறையை இணைக்கும் 8 கிலோ மீட்டர் தூர மலைப்பாதை மூலம் 30 கிலோ மீட்டர் தூரமும், பயண நேரமும் மிச்சமாகும் என்பதால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலையைச் சீரமைத்து அகலப்படுத்தி தர வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியிலுள்ள இரண்டு மாவட்ட கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். ”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அப்பாவு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இந்த வனப்பகுதி சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக இருப்பதால் மல்லப்புரம் - மயிலாடும்பாறை சாலையை அகலப்படுத்தி, போக்குவரத்து வசதி ஏற்படுத்த வனத்துறை அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி இப்பகுதி புலிகள் சரணாலயமாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதனால் ஏற்கனவே இருக்கின்ற சாலையைச் சீரமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வனத்துறையினர், சிறிய ரக வாகனங்கள் செல்லவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மோசமான சாலை சமீபகாலமாகப் பெய்து வரும் மழை காரணமாகவும் இந்தச் சாலை குண்டும் குழியுமாக மாறி சிறிய ரக வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அவதியை ஏற்படுத்தி வருகிறது. தேனி மாவட்டத்திலிருந்து விவசாயப் பொருட்களை சந்தைபடுத்த வரும் விவசாயிகளும், பள்ளி கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகளும் பெரும் சிரமத்தைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தச் சாலையைச் சீரமைத்து, பொது போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க கோரி இரு மாவட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்களின் முக்கிய பிரதிநிதிகள் உசிலம்பட்டி சப் கலெக்டர் உட்கர்ஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள், சரியான சாலை வசதி இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டாகாலமாகச் சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு பகுதியில் விளையும் விவசாயப் பொருட்கள் சேடப்பட்டி, பேரையூர் வழியாக விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லவும், இப்பகுதியிலுள்ளவர்கள் அங்கு செல்லவும் இந்தச் சாலை உபயோகமாக இருக்கும். முதலில் இந்தச் சாலையைச் சீரமைத்து தரவேண்டும், அடுத்ததாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவில்லையென்றால் இரு மாவட்டப் பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர். மதுரை: ``மெட்ரோவைத் தொடர்ந்து ஆசியான் ஒப்பந்தத்தில் விமான நிலையமும் புறக்கணிப்பா?'' - சு.வெங்கடேசன்
ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்ற உக்ரைன்
ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்றதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கும் இடையிலான சமீபத்திய பரிமாற்றமாகும். இந்நிலையில், புலனாய்வாளர்களும் நிபுணர்களும் விரைவில் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு உடல்களை அடையாளம் காண்பார்கள்” என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. 30 ரஷ்ய வீரர்களுக்கு ஈடாக 1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக ரஷ்ய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Lando Norris Takes Pole at Las Vegas GP
Lando Norris had a perfect start in his attempt to change his past results at the Las Vegas Grand Prix.
Mumbai Indians Show Interest in Pacer Auqib Nabi
Auqib Nabi is expected to attract a lot of attention at the upcoming IPL 2026 auction next month. The fast
Starc Takes Stunning One-Handed Catch in Ashes
Mitchell Starc showed amazing skill and fitness at age 35 by taking a brilliant one-handed catch to dismiss England’s Zak
Amazon Layoffs Hit Engineering Teams the Hardest
Amazon’s latest restructuring has led to one of the biggest job cuts in the company’s history, with engineering teams being
”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அப்பாவு
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. அப்போது பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க முடியுமோ ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்து வந்துள்ளார். கிடப்பில் போடப்படும் மசோதாவை நிறைவேற்ற காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், ஆளுநர் விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்பாவு தமிழக அரசு தொடர்ந்த இவ்வழக்கில் காலக்கெடு கொடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதைத்தான் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வழக்கிற்கான தீர்ப்பு இன்னும் கொடுக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய அமைச்சர் அதனை நிராகரித்ததாகச் சொல்கிறார். ஆனால், தமிழக பா.ஜ.கவினர் அதனை நிராகரிக்கவில்லை, திருப்பித்தான் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறி வருகின்றனர். யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை. தமிழக அரசால் கொடுக்கப்பட்டுள்ள மெட்ரோ திட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி பல இடங்கள் பாதிக்கப்படும் எனவும், அளவீடுகள் குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டித்தான் திருப்பி அனுப்பியுள்ளதாக பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். மெட்ரோ திட்டத்திற்கு என்று இலவசமாக நிதி கேட்கவில்லை. 50 சதவீத பங்குத்தொகையை மட்டுமே கேட்கிறோம். அப்பாவு சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 6 ஆண்டுகள் எதனையும் செய்யாமல் இருந்த சூழலில்தான் தமிழக அரசு ஆறில் ஐந்து பங்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தற்போது நடைபெற்று பெறுகிறது. மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த வங்கியில் கடன்தான் வாங்கியுள்ளோம். அதனையும் மத்திய அரசு சொல்லித்தான் வாங்கியுள்ளோம் எனச் சொன்னால் அதில் என்ன நியாயம் உள்ளது. ஒரு பங்குத்தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அனைத்தையும் தாங்கள்கொடுத்ததாக சொல்லி வருகிறார்கள். அதற்கு வட்டித்தொகைகட்ட மத்திய அரசு முன் வருமா?” என்றார்.
US Report: China Used Conflict to Showcase Weapons
China “took advantage” of the India-Pakistan conflict in May to test and show its defence technology, a new report by
தாமிரபரணி ஆறு: ”தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலா?” - ஐகோர்ட் கேள்வி
தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து தற்போது வரை ஒரு லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்பட்டு வருகிறதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான காமராஜ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட பதிலில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பல நிறுவனங்கள், நீர் வரி பாக்கியைத் தராமல் சுமார் ரூ.2.50 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளன. தனியார் சிமெண்ட் ஆலை மற்றும் சில நிறுவனங்கள் நீர் வரி பாக்கியைச் செலுத்தாமல் தொடர்ந்து நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றன. தாமிரபரணி ஆறு இதனால், அரசுக்கு தொடர் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கிறது. தாமிரபரணி ஆற்றிலிருந்து நீர் எடுத்துவரும் அனைத்து நிறுவனங்களிடமும் நீர் வரி பாக்கியை வசூலித்து அந்த நிதியை மாசுபட்டு வரும் தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பிற்குப் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார். தாமிரபரணி நதி நீர் ததும்ப... நூற்றாண்டுகள் கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை! இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். பொதுப்பணித்துறை தரப்பில், “அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு லிட்டர் ஒரு பைசா வீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களிடம் லிட்டர் ஒன்றுக்கு ஒரு பைசாதான் இன்று வரை வசூலித்து வருகிறீர்களா? எத்தனை நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கின்றன. தாமிரபரணி ஆறு நாள் ஒன்றுக்கு எத்தனை அளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது? இதுவரை எடுக்கப்பட்ட லிட்டர் அளவு என்ன? இதற்காக நிர்ணயித்த தொகை எவ்வளவு என மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி உத்தரவிட்டுள்ளனர். கூவமாக மாறிவரும் தாமிரபரணி… சாட்டையைச் சுழற்றும் நீதிபதிகள்… தடதடக்கும் தண்ணீர் அரசியல்!
பெங்களூரு லால்பாக் பூங்கா போறீங்களா? இந்த தப்ப செய்யாதீங்க... மீறினால் அபராதம் தான்!
பெங்களூரு லால்பாக் பூங்காவில் பார்வையிட செல்லும் மக்கள் இந்த 33 விஷயங்களை செய்தால் உடனடியாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Trump Jr. Dances at Udaipur Wedding Sangeet
Donald Trump Jr. and his girlfriend, Bettina Anderson, danced to a Bollywood song at a big wedding in Udaipur. The
Tejas Jet Crash Kills Pilot at Air Show
A Tejas fighter jet crashed on Friday afternoon during a high-speed show at the Dubai Air Show. The accident happened
Sanitary Workers : கொளத்தூரில் முதல்வரை எதிர்த்து தூய்மைப் பணியாளரை போட்டியிட செய்வோம்! - கு.பாரதி
பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தனர். தூய்மைப் பணியாளர்கள் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி பேசுகையில், 'காவல்துறையினுடைய அடக்குமுறையை கடந்து 116 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். 4 பெண்கள் 6 நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால், இன்றைக்கு 4, 8 மண்டலங்களை 4000 கோடிக்கு தனியாருக்கு விட ஒப்பந்தம் கோரியிருக்கிறார்கள். அதுவும் கடைசி தேதி முடிந்த பிறகும், ஒரு நாள் தேதியை தள்ளிவைத்து ஒப்பந்தம் கோரியிருக்கிறார்கள். ஆட்சி முடிவதற்குள் மொத்தமாக கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தனியார் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டுகிறார். அவருடைய துணைவியாருக்கு பல ஒப்பந்தங்களை ஒதுக்கியிருக்கிறார். கு.பாரதி 200 வார்டுகளுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறை, ஓய்வறை கட்டித் தருவதாக முதல்வர் கூறுகிறார். நான்கரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இப்போதுதான் கழிவறை இல்லை என்பது தெரிகிறதா? முதல்வர் கார்த்திகேயன், முருகானந்தம், குமரகுருபரன் போன்ற ஐ.ஏ.எஸ்ஸின் பேச்சுகளை ஏன் கேட்க வேண்டும்? மாநகராட்சியில் ககன்தீப் சிங்கும் ராதாகிருஷ்ணனும் இருந்தவரை தனியார்மயம் வரவில்லையே. குமரகுருபரன் இருக்கும் போது மட்டும் எப்படி? உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் ராம்கி நிறுவனத்துக்கும் தொடர்பு இருக்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது. 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருக்கிறார்கள். அவர்களின் உயிருக்கு சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும்தான் பொறப்பு. கு.பாரதி குமரகுருபரன் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தோடு இயங்குகிறார். அவருக்கு எப்படி ஸ்பெசல் பவர் கிடைக்கிறது. அவருடைய மனைவிக்கு ஒப்பந்தம் கொடுக்கும் அதிகாரம் எப்படி வந்தது? எளிய மக்கள் தங்களின் உரிமைகளை கேட்டால் தூக்கி எறிந்து விட்டு செல்லலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் வாக்கு கேட்டு வரும் போது நாங்களும் தெருவில் இறங்குவோம். சேப்பாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் உங்களுக்கு எதிராக தூய்மைப் பணியாளர்களை போட்டியிட செய்வோம். அடுத்தக்கட்டமாக வருகிற திங்கட் கிழமை அரசிடம் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கவிருக்கிறோம்.' என்றார். சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: முதல்வர் செய்வது டிராமா - கு.பாரதி பேட்டி
Stalin Urges Centre to Reconsider Metro Projects
Tamil Nadu Chief Minister M.K. Stalin wrote a detailed letter to Prime Minister Narendra Modi on Saturday (November 22, 2025).
தமிழக அரசின் இலவச சானிட்டரி நாப்கின் திட்டம்!
Tamil Nadu Free Napkin Scheme: தமிழகத்தில் வளர் இளம் பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய இலவச சானிட்டரி நாப்கின் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
மாணவியை கொலை செய்ததற்கான காரணம் இதுதான் –இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!
12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கொலை ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்திய நிலையில், அப்போது மாணவி விலகி செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்நிலையில், மாணவியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “கடந்த சில மாதங்களாக மாணவி ஷாலினியை பள்ளிக்குச் செல்லும்போதும், […]
Where to watch on OTT/Theater: 'Mask, பைசன், Sisu, Eko, டீசல்' - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
இந்த வாரம் தியேட்டர், ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் படங்கள், சீரிஸ் லிஸ்ட் இங்கே... தமிழ்த் திரைப்படங்கள் மாஸ்க் நடிகர்கள் கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா ஆகியோரின் நடிப்பில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்க் . ஹெய்ஸ்ட் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிடில் க்ளாஸ் நடிகர்கள் முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில், நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் மிடில் க்ளாஸ் . இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மாஸ்க் - மிடில் க்ளாஸ் - தீயவர் குலை நடுங்க - எல்லோ தீயவர் குலை நடுங்க ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எல்லோ நடிகை பூர்ணிமா ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள அட்வென்சர் திரைப்படமான இது நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்? தெலுங்கு திரைப்படங்கள் 12A Railway Colony ஹாரர் த்ரில்லர் திரைப்படமான இதில் நடிகர் அல்லரி நரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Paanch Minar நடிகர்கள் ராஜ் தருண் மற்றும் ராஷி சிங் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படமான இது, நேற்று நவம்பர் 21 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Premante காமெடி திரைப்படமான இத்திரைப்படத்தில் நடிகர்கள் பிரியதர்ஷி மற்றும் கயல் ஆனந்தி நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12A Railway Colony - eko மலையாளத் திரைப்படங்கள் Eko மலையாள நடிகர் சந்தீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் எக்கோ. இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Vilayath Budha GR இன்டுகொப்பன் என்பவர் எழுதிய Vilayath Budha என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ஆக்ஷன் திரைப்படம் இது. நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாறன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம், நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்? கன்னட திரைப்படங்கள் Bank of Bhagyalakshmi ஆக்ஷன் த்ரில்லர் கதை கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் தீக்ஷித் ஷெட்டி மற்றும் பிருந்தா ஆச்சாரியா நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Radheyaa நடிகர்கள் அஜய் ராவ், சோனல், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Full Meals லிக்கித் ஷெட்டி , குஷி ரவி, தேஜஸ்வினி ஷர்மா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படம், இது நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Maarutha துனியா விஜய், ஷ்ரேயாஸ் மஞ்சு, ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Bank of Bhagyalakshmi - 120 Bahadur இந்தி திரைப்படங்கள் 120 Bahadur நடிகர்கள் ஃபாரான் அக்தர், ராஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 120 பகதூர். மிலிட்டரி பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Haunted-Ghosts of the Past 3D காமெடி ஹாரர் திரைப்படமான இதில் நடிகர்கள் கௌரவ் பாஜ்பாய், மஹாக்ஷய் சக்ரபோர்ட்டி, ஷ்ருதி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Mastiii 4 மஸ்தி திரைப்படங்கள் வரிசையில் உருவாகியுள்ள மற்றுமொரு திரைப்படமான இதில் ரித்தேஷ் தேஷ்முக், விவேக் ஓபராய், அஃப்தப் ஷிவ்தாஸ்னி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! ஆங்கில திரைப்படங்கள் Wicked For Good 2024-ம் ஆண்டு வெளிவந்த விக்கட் திரைப்படத்தின் அடுத்த பாகமான இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Sisu : Road to Revenge 2022-ம் ஆண்டு வெளிவந்த சிசு திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இதில் நடிகர்கள் ஜோர்மா டொம்மிலா மற்றும் ஸ்டீஃபன் லாங் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Wicked For Good - Sisu : Road to Revenge ஓடிடி படங்கள்: * பைசன் - Netflix-November 21 * டீசல் - Prime Video -November 21 * Usiru(கன்னடம்) - Sun Nxt-November 21 * Homebound (இந்தி) - Netflix -November 21 * The Bengal Files(இந்தி)-Zee5- November 21 பைசன் காளமாடன் * Champagne Problems (ஆங்கிலம்) - Netflix-November 19 * The Son Of Thousand Men(ஆங்கிலம்) - Netflix-November 19 * Night Swim (ஆங்கிலம்) - JioHotstar - November 20 * Train Dreams (ஆங்கிலம்) - Netflix - November 21 * After the Hunt (ஆங்கிலம்) - Prime Video - November 20 * The Roses (ஆங்கிலம்) - JioHotstar - November 20 Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! ஓடிடி தொடர்கள்: * நடு சென்டர் - Jio Hotstar- November 20 * Shades of Life (மலையாளம்)-Manorama Max-November 21 * The Family Man Season 3(இந்தி)-Prime Video- November 21 * Ziddi Ishq(இந்தி)-Jio Hotstar-November 21 * Dining With Kapoors (இந்தி)-Netflix-November 21 OTT * The Death Of Bunny Munro(ஆங்கிலம்)-Jio Hotstar-November 21 * A Man on the Inside Season 2 (ஆங்கிலம்)-Netflix-November 20 * One Shot With Ed Sheeran(ஆங்கிலம்) Documentary -Netflix-November 21 * Envious (ஸ்பானிஷ்)-Netflix-November 19 * Jurassic World:Chaos Theory (ஆங்கிலம்)-Netflix-November 20 Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் - இதுல டைனோசரே டயர்டாகிடும் பாஸ்!
Village Mourns Brave Pilot Naman Syal
The death of Wing Commander Naman Syal has brought great sadness to his home village. He died in a Tejas
“Supreme Court Seeks Response on POSH Applicability”
On Friday (November 21, 2025), the Supreme Court asked the Central government and the Bar Council of India (BCI) to
“Centre Raises MGNREGA Workdays to 150”
The Central government has approved an increase in the number of MGNREGA workdays in Jammu and Kashmir, raising it from
McDonald's: '40 ஆண்டுகளாக எங்களுடன்' - இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ. 35 லட்சம் பரிசளித்த நிர்வாகம்
அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald's) உணவகத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவருக்கு, சுமார் 35 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து கௌரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கன் சிங் என்ற இந்திய வம்சாவளி நபர், கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து மெக்டொனால்ட்ஸில் பணியாற்றி வருகிறார். இவருடைய இந்த நீண்ட கால சேவையைப் பாராட்டி அந்த உணவக நிர்வாகம் அவருக்கு ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரின் 40 ஆண்டு கால உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் 40,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 35.5 லட்சம் ரூபாய்) வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது. McDonalds பர்கன் சிங் தனது தந்தையுடன் இணைந்து மெக்டொனால்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் மேஜைகளைச் சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது மற்றும் சமையலறையில் உதவிகள் செய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்திருக்கிறார். அதன்பின்னர் வேலையின் மீது அதிக கவனம் செலுத்தி, கடையின் அனைத்து செயல்பாடுகளையும் கற்றுக்கொண்டிருக்கிறார். சில மாதங்களிலேயே அவரது திறமையைப் பார்த்து நிர்வாகம் அவருக்கு 'ஸ்விங் மேனேஜர்' (Swing Manager) என்ற பதவி உயர்வை வழங்கியிருக்கிறது. இந்த உணவகத்தின் உரிமையாளரான லின்சே வாலன் இது குறித்து கூறுகையில், பர்கன் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டார். அவர் தனது தந்தையுடன் இங்கே வேலைக்குச் சேர்ந்தார். இன்று நான் நான்கு மெக்டொனால்ட்ஸ் கிளைகளை நிர்வகித்து வருகிறேன். அதில் பர்கன் ஒரு முக்கிய தூணாக இருக்கிறார் என்று பெருமிதமாகக் கூறியிருக்கிறார். வெடிச் சத்தமும் வீங்கிய முதுகும் - அமெரிக்க வாழ் தமிழரின் தீபாவளி நினைவுகள் | My Vikatan
“Biren Singh Warns of Distraction from Core Issue”
Former Manipur Chief Minister N. Biren Singh said that some powerful groups are purposely trying to distract people from the
`திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!
2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே வார்த்தை மோதல் தீவிரமானது. குறிப்பாகத் தி.மு.க மாணவரணி ராஜீவ் காந்தி, கல்விக்கண் திறந்த காமராஜர் சொந்த காசில் பள்ளிக்கூடங்களைத் திறக்கவில்லை என்றார். காமராஜர் இதேபோல் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, முன்னாள் முதல்வர் காமராஜருக்கு ஏசி இல்லாமல் தூக்கம் வராது. அதனால், அவர் தங்கும் அனைத்துப் பயணியர் விடுதிகளிலும் ஏசி வசதி செய்யச் சொல்லி அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி உத்தரவிட்டார் என்றார். இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க சர்ச்சையானது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இருவர் விலகிய நிலையில் அவர்கள் தி.மு.க-வில் இணைக்கப்பட்டனர். பதிலுக்கு 'வரும் தேர்தலில் தி.மு.க கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும்' என ராஜேஷ்குமார், கே.எஸ்.அழகிரி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் சிலர் தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறித் த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாமெனக் காங்கிரஸின் டெல்லி தலைமையிடம் கோரிக்கை வைத்ததாகத் தகவல் வெளியானது. இப்படியான சூழலில்தான் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில்தான் வெற்றிபெற்றது. இதனால் அகில இந்திய தலைமை தி.மு.க-வுடனேயே தொடர்ந்து பயணிக்கலாமென முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. ராகுல் காந்தி இதற்கிடையில், 'திராவிடம் 2.0 ஏன்? எதற்கு?' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியில் அழைப்பிதலில் என் பெயர், அமைச்சர் அன்பில் மகேஷ் பெயர், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைப் பெயர் எல்லாம் குறிப்பிட்டிருந்தார்கள். அண்ணன் செல்வப் பெருந்தகை நிகழ்ச்சிக்கு முன்னமே வந்துவிட்டார். நான் தாமதமாக வந்தேன். அவருக்கு அவசர அழைப்பு வந்ததால் அவர் நான் வருவதற்கு முன்பே 'வருகிறேன்' எனச் சென்றுவிட்டார். ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கிவிட்டோம். அப்போதும் அவர் வரவில்லை என்றதும் அவர் வருவாரா? மாட்டாரா? எனச் சந்தேகத்திலேயே இருந்தார்கள். பத்திரிக்கையாளர்களும் 'உதயநிதி அப்சட்; செல்வப் பெருந்தகை ஆப்செண்ட்' எனத் தலைப்பெல்லாம் வைத்துவிட்டார்கள். ஆனால், அண்ணன் செல்வப் பெருந்தகையும், அவரின் இயக்கமும் சரியான நேரத்துக்கு, சரியான இடத்துக்கு வந்துவிட்டார். சென்றால்தானே வர முடியும்... ஒரு கொள்கை 100 வருடங்களுக்குப் பிறகும் நிலைத்து நிற்கிறது என்றால் அந்தக் கொள்கை உறுதியை நினைத்து நாம் பெருமைப் பட வேண்டும். எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்படியான ஆற்றல் மிக்க இந்த இரும்புக்கோட்டையில் விரிசல் வந்துவிடாதா எனச் சங்கிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் வந்திருப்பதுதான் செந்தில்வேலின் இந்தப் புத்தகம். சங்கிகளை மேலும் மேலும் பதறவைக்கும் விதமாகதான் இந்தப் புத்தகம் எழுதியிருக்கிறார். என உரையாற்றினார். Udhayanidhi பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த இரண்டு மாதங்களாகச் சில சலசலப்புகள் நிலவின. கூட்டணியின் எதிர்காலம் என்ன, அது எந்தத் திசையில் செல்லும்? இந்த ஊகத்தைப் பயன்படுத்தி பலரும் ஆதாயம் தேட முயன்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருதி தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்து பல மணிநேரம் கடந்தபிறகும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருத்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் தொண்டர்கள் குழப்பமடைந்தனர். ஒரு வழியாக வெளியான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்திக்குறிப்பில், '2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைத்திருக்கிறார்கள். அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ப. சிதம்பரம் இதன் பின்னணி குறித்து பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனச் செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு குழுவும், த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாமென மாணிக்கம் தாகூர் தலைமையில் ஒரு பிரிவும் வேலை செய்து வருகிறது. இதில் பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு செல்வப்பெருந்தகை தரப்பின் கை ஓங்கியிருக்கிறது. எனவேதான் அவர்கள் கடந்த சில நாட்களாகத் தி.மு.க-வுடன்தான் கூட்டணியெனப் பேசி வருகிறார்கள். ஆனால் தி.மு.க, த.வெ.க என யாருடன் கூட்டணிக்குச் செல்வது என எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் டெல்லி தலைமை எடுக்கவில்லை. தற்போதைக்கு தேவையில்லாத சலசலப்புகளை தவிர்க்கும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணிகுறித்த இறுதி முடிவை டெல்லி எடுக்கும். இந்தமுறை தொகுதிகளின் எண்ணிக்கையையும் டெல்லி தலைமைதான் இறுதி செய்யும் என்றனர். மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேசுகையில், த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கப்போகிறது காங்கிரஸ் எனச் சில நாட்களாகப் பேசி வருகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் ராகுல்காந்தி என்றும் செய்திகளை வெளியிடுகிறார்கள். ஆனால் த.வெ.க-வுடன் கூட்டணிக்குச் செல்லலாமெனக் கே.சி வேணுகோபால், மாணிக்கம் தாகூர், சசிகாந்த் செந்தில், ஜோதிமணி போன்றவர்கள் முயற்சி எடுத்தனர். கட்சியை வளர்ப்பதற்காக அவர்கள் இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை. கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க-வை எதிர்க்க வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்குக் குரல் எழுப்ப வேண்டும். இதையெல்லாம் த.வெ.க-வுடன் செல்லலாமென சொல்லும் தலைவர்கள் செய்திருக்கிறார்களா? குபேந்திரன் கேரளா, பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கலாம். தமிழகத்தில் கணிசமான எம்எல்ஏ-க்களை பெறலாம் என மனக்கோட்டை கட்டினார்கள். ஆனால் பீகாரில் காங்கிரஸுக்கு மரண அடி விழுந்தது. பார்ட்டைம் அரசியல் செய்யும் ராகுல் காந்திக்கும், கட்சியை வளர்க்கலாம் பதவியை மட்டும் அனுபவிக்கும் மூத்த தலைவர்களுக்கு மக்கள் நல்ல பாடத்தை கற்பித்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் விரைவில் அறிவிப்பு வரும் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். மேலும் தி.மு.க கூட்டணியுடன் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக குழு அமைக்கப்பட்டிருப்பதாக சிதம்பரம் தெரிவித்திருந்தார். அதன்பிறகுதான் குழு அறிவிக்கப்ப அறிக்கை வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் த.வெ.க-வுடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருக்கிறது என்றுதான் தெரிகிறது என்றார்.
Mumbai: India’s first Global Multicast News Hub, Live Times, has achieved a major milestone as per BARC Week 45 data, recording an Average Time Spent (ATS) of 1 hour and 23 minutes in the Mumbai market.This historic feat makes Live Times the most engaging news channel in Mumbai, with the highest viewer stickiness in its category, placing it ahead of long-standing national peers signalling a clear shift in viewer preferences, particularly among younger, urban audiences.In broadcast media, Average Time Spent (ATS) is one of the most critical indicators of performance, going beyond simple reach to capture the depth and quality of viewer engagement. Live Times’ exceptional ATS of 1 hour and 23 minutes reflects the strength of its fact-driven reporting and the channel’s growing ability to build trust, loyalty, and sustained viewing in an increasingly competitive media environment. Dilip Kumar Singh, Founder of Live Times, said, “This historic and Unparallel ATS gives us strengthen to continue with the truth-based journalism and we thank the viewers for the continued support and encouragement”Live Times is available across all major platforms: DD Free Dish – Channel 100, Tata Play – 539, Airtel Digital TV – 385, Dish TV – 665, Sikka Cable – 519, and Jio TV – 359. It is also accessible on Tata Play Mobile, Airtel Xstream, Dish TV Watcho, and DD Waves.-Based on Press Release
புதுசா கார் வாங்கப் போறீங்களா? 5 லட்சம் ரூபாய் பட்ஜெட்.. டாப் 15 லிஸ்ட் இதோ..!
வீட்டுக்கு சொந்தமாக ஒரு கார் வாங்க நினைப்பவர்கள் இந்த 15 கார்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.
BB TAMIL 9: DAY 47: சாண்ட்ராவின் வில்லங்க சமிக்ஞை; செக்மேட் வைத்த பிக் பாஸ்; கவின் செய்த PRANK!
“வெளில இருந்து பார்க்கறத விடவும் கொடூரமா இருக்கா” - வந்த முதல் நாளில் பாரு குறித்து சாண்ட்ரா சொன்னது இது. ஆனால் இப்போது பார்த்தால் பாருவை விடவும் சாண்ட்ரா கொடூரமாக தென்படுகிறார். பாருவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்து விடுவார் போலிருக்கிறது. அத்தனை வன்மம். விக்ரமை பிரஜின் வெளிப்படையாக மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்களை விஜய்சேதுபதி இந்த வாரம் கறாராக விசாரிக்க வேண்டும். செய்வாரா? நாள் 47 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? “நான் யாரு.. எங்க இருக்கேன்.. ஒண்ணும் புரியலையே” என்று விக்ரமிடம் அனத்திக் கொண்டிருந்தார் அமித். “நான் இந்த ஆட்டத்திற்கு பொருத்தமானவன் இல்லன்னு தோணுது. என்ன பண்றேன். நான் செய்யறது தெரியுதா.. ஒண்ணும் வௌங்கலை” என்றெல்லாம் புலம்பிய அமித்திடம் “நீங்க உங்க ஸ்டைல்ல ஆடுங்க ப்ரோ” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம். வீக்லி டாஸ்க்கில் மோசமாக பங்கேற்ற இருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பல சமயங்களில் நியாயமாக நடந்து கொண்டாலும் வியானாவிற்குள்ளும் ஒரு சிறிய விஷ பாட்டில் இருக்கிறது. தன்னை அழ வைத்த விக்ரமை அவர் தேர்வு செய்ய, சொல்லி முடிக்கும் வரை காத்திருந்த பிக் பாஸ் ‘விக்ரம் பெயரை சொல்ல முடியாது. அவர் தல போட்டியில் இருக்கிறார்’ என்று நிராகரித்தார். எனவே சாண்ட்ராவின் பெயரை வியானா சொன்னது சிறப்பான தோ்வு. BB TAMIL 9: DAY 47 பிறகு வந்த பலருமே சாண்ட்ரா மற்றும் திவ்யாவின் பெயரை சொன்னார்கள். பாருவை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. மாப் மாயாவிஸ் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டு அந்த அணியில் உள்ள அனைவருமே தல போட்டியில் இருப்பதால் அவர்களின் பெயரைச் சொல்ல முடியாது. இல்லையென்றால் சாம்பார் அணியில் இருந்தவர்கள் விக்ரமை டார்கெட் செய்திருப்பார்கள். பிரஜின் கூட சாண்ட்ராவின் பெயரைச் சொல்லி நியாயவான் போல காட்டிக் கொண்டார். இறுதியில் 'worst performer'-களாக சாண்ட்ராவும் திவ்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் சிறைக்கு செல்லும் தண்டனையோடு கூடுதலாக ஒன்றையும் தந்தார் பிக் பாஸ். ‘அடுத்த சீசன்ல கண்ணை மூடிக்கங்க’ என்று பிக் பாஸிற்கே அட்வைஸ் செய்த சாண்ட்ராவிற்கு செக்மேட். சாண்ட்ராவிற்கு செக்மேட் வைத்த பிக் பாஸ் ‘நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்’ இதைத் தவிர திவ்யாவும் ஏதோ வாயை விட்டிருப்பார் போலிருக்கிறது. “இவர்களின் ஆசைக்கு இணங்க சிறைத்தண்டனை. என் ஆசைக்கு இணங்க இந்த நாள் முழுவதும் அனைத்து வேலைகளையும் இந்த இருவர் மட்டுமே செய்ய வேண்டும். இதை விக்ரம் வழிநடத்தி மேற்பார்வையிட வேண்டும்’ என்று சொன்னது சுவாரசியமான டிவிஸ்ட். ஒருவகையில் poetic justice. மேற்பார்வை என்னும் சொல்லும் போதே ‘விக்ரம்’ என்று திவ்யா முனக, “ஹௌ பிரில்லியண்ட் திவ்யா?” என்று சர்காஸமாக பாராட்டினார் பிக் பாஸ். “நான் நல்லா செய்வேன்” என்று திவ்யா சொன்னதும் “என்னையா?” என்று கேட்டது நல்ல நகைச்சுவை. கார்டன் ஏரியாவில் விக்ரம் அழுது கொண்டிருந்தார். ஆனந்தக் கண்ணீர். “எவ்ளோலாம் பேசினாங்க தெரியுமா.. என்ன நடக்குதுன்னே தெரியல. இதெல்லாம் வெளியல எப்படி தெரியும்ன்னு புரியல. ஒரு மாதிரி பயம் வரும்தானே.. ஆனா ‘நான் இருக்கண்டா.. எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன்’ன்னு சொல்ற மாதிரி பிக் பாஸ் சப்போர்ட் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ஃபீலிங்க்ஸ் ஆன விக்ரமை சுபிக்ஷாவும் எஃப்ஜேவும் தேற்றினார்கள். கண்ணீரை துடைத்துக் கொண்டு ‘எங்கே அந்த ரெண்டு பேரு?’ என்று ஜாலியாக கிளம்பினார் விக்ரம். தண்டனை என்னமோ சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்கு என்றாலும் உண்மையில் விக்ரமிற்குத்தான் தண்டனை கிடைத்தது எனலாம். சண்டி மாடுகளை வைத்துக் கொண்டு வேலை வாங்குவது மிகவும் கடினம். விக்ரமை மிரட்டிய பிரஜின் ‘காலி பண்ணிடுவேன்’ ஆரம்பத்திலேயே சாண்ட்ராவைக் காணவில்லை. கிராஸ் ஆன திவ்யாவிடம் “குளிச்சுட்டு வேலையை ஆரம்பிப்பீங்களா?” என்று விக்ரம் கேட்க “குளிச்சுட்டும் வருவேன். குளிக்காமயும் வருவேன். என் இஷ்டம்’ என்கிற மாதிரி அலட்டினார். ‘ரைட்டு.. இன்னிக்கும் சோத்துக்கு அலைய விடுவாங்க போல’ என்று மனதிற்குள் அலறிய விக்ரம் “இந்தப் பப்பாளியையாவது பங்கு போட்டுக் கொடுங்க.. மக்களுக்கு பசிக்கும்” என்று சொல்ல அதையும் ஸ்லோமோஷனில் எதிர்கொண்டார் திவ்யா. திவ்யா செய்யும் அலப்பறையை வெளியில் வந்து சொன்ன விக்ரம் “நான் இங்க யாரையும் ஹர்ட் பண்ண வரலை. என் திறமையைக் காட்டத்தான் வந்தேன்” என்று பிரஜினிடம் உருக்கமாகச் சொன்னார். “கரெக்ட்டுதான். நீங்க உங்க வேலையைத்தான் பண்றீங்க. பி்க் பாஸிற்கு பதில் சொல்லணும்ல” என்று அப்போது நியாயமாகத்தான் பேசினார் பிரஜின். ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை. “விக்ரமிற்கு நான் வார்னிங் தரேன். சாண்ட்ராவும் நானும் தம்பதிகள். ஆனா தனித்தனியாகத்தான் ஆடறோம். ஆனா இவரு என்னை நோண்டிட்டே இருக்காரு. வேணுமின்னா பிக் பாஸ் கிட்ட சொல்லி 2 நிமிஷம் கதவை திறக்கச் சொல்றேன். போய் உங்க வொய்ஃபையும் கூட்டிட்டு வாங்க” என்று அதிகாரமான குரலில் பிரஜின் சொன்னது முழுக்க அபத்தம். அநியாயமும் கூட. சாண்ட்ராவும் பிரஜினும் டாஸ்க் சமயத்தில் கூட தம்பதிகளாக செயல்படுவது ஊர் அறிந்த ரகசியம். இதை விக்ரம் மட்டும் சொல்லவில்லை. நாமினேஷன் சமயத்தில் பலரும் சொன்னார்கள். கனியும் அழுத்தமாகச் சொன்னார். பெஸ்ட் ஃபர்பார்மராக, ஒன்றுமே செய்யாத கணவரை தேர்ந்தெடுத்தார் சாண்ட்ரா. தனது கணவர் இருக்கும் அணிக்கு பாயிண்ட்டுகளை அள்ளித் தந்தார். இப்படி அவர்கள் தம்பதியராக ஆடுவதற்கு பல நிரூபணங்கள் இருக்கின்றன. ‘பிக் பாஸ் கிட்ட சொல்லி கதவை திறக்கச் சொல்றேன். சேது கிட்ட பேசறேன்’ என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு பிரஜின் அதிகாரம் படைத்தவரா? ‘என் கிட்ட வெச்சிக்கிட்டா காலி பண்ணிடுவேன்’ என்றெல்லாம் பிரஜின் மிரட்டியது கண்டிக்கப்பட வேண்டியது. வில்லங்கமாக சமிக்ஞை செய்த சாண்ட்ரா “நாங்க கப்புள்ளா எந்த கேம்ல ஆடினோம்?” என்று சாண்ட்ரா விசாரிக்க “எல்லாம்தான்” என்றார் விக்ரம். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் இவரிடம் விவாதிக்க முடியாது என்றோ, என்னமோ “எனக்கு வாய் சரியில்ல” என்று விக்ரம் சொல்ல “வாய் மட்டுமா சரியில்ல’ என்று சாண்ட்ரா ஆடிக் காட்டியது விரசம். “எனக்கு பயமா இருந்தது. அப்படியே பயந்துட்டேன்” என்று வந்த புதிதில் பாவனை செய்த சாண்டரா, உண்மையில் சைலண்ட்டாக வயலன்ட் செய்யும் நபர் மாதிரி இருக்கிறார். ஒருவழியாக சமையல் செய்ய இறங்கிய சாண்ட்ராவை நோக்கி “சிங்கம் களம் இறங்கிடுச்சு” என்று பாராட்டினார் பாரு. (ஒரு காலத்தில் புகழ்பெற்ற ரவுடியாக இருந்தவன், அவனை விடவும் பெரிய ரவுடி வந்தவுடன் பம்மி ஒட்டிக் கொள்வது போல மாறி விட்டார் பாரு) பாடல் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் கவின். ‘மாஸ்க்’ திரைப்படத்திற்கான பிரமோஷன். அனைவரும் நலம் விசாரித்து கை கொடுக்க “விக்ரம்.. இவர்ட்ட பேசலாமா?” என்பது மாதிரி அனுமதி கேட்டார் திவ்யா. அதாவது விக்ரமின் மேற்பார்வையில் எல்லாவற்றையும் அனுமதி கேட்டுத்தான் செய்கிறாராம். கவினுக்கு அது உடனே புரிந்திருக்க வேண்டும். பூர்ணிமா மாதிரி அப்பாவியாக சீன் போடவில்லை. அவரும் முன்னாள் போட்டியாளர்தானே? கிச்சன் ஏரியா டேஞ்சர் என்று தெரியாதா? எனவே “தப்பான நேரத்துல உள்ளே வந்துட்டனா?” என்று சிரித்தார். படத்தின் டிரைய்லர் முடிந்ததும் “இந்தப் படத்துல வர்ற யாரும் நல்லவங்க கிடையாது. கெட்டவங்கள்லேயே நல்லவன் யாருன்னுதான் தேடணும்” என்று கவின் சொன்ன விளக்கம், பிக் பாஸ் சீசனுக்கும் பொருந்தும். பயந்து அலறிய பாரு கவின் செய்த PRANK “ஓகே.. நான் கௌம்பறேன். ஆனா அதுக்கு முன்னாடி இதைப் பண்ணித்தான் ஆகணும். தல உத்தரவு. ஒரு கவர் வெச்சிட்டு போறேன். நான் போனப்புறம் பாருங்க” என்று எவிக்ஷன் கவரை வைத்து விட்டுச் சென்றார் கவின். அவரை வழியனுப்பி வைத்து விட்டு மக்கள் ஆவலாக வந்து பார்க்க, நாம் யூகித்தபடியே ‘Prank’ என்று இருந்தது. “P -ன்ற லெட்டரை பார்த்தவுடனே நான்தான்னு பயந்துட்டேன்” என்று திகைப்பு மகிழ்ச்சியான டோனில் கூவினார் பாரு. (நாங்களும்தான் எதிர்பார்க்கறோம்!) “என் ஹார்ட்டே வெளியே வந்துடுச்சு.. என்னதிது பிக் பாஸ்?” என்று பாரு சிணுங்க “நீங்க பண்றதெல்லாம் பார்த்தா எனக்கு கூடத்தான் வெளிய வருது. நான் சொல்லிக்கிட்டா இருக்கேன்” என்று ஊமைக்குத்தாக குத்தினார் பிக் பாஸ். “திவ்யா.. யூனிபார்ம்” என்று பிக் பாஸ் நினைவுப்படுத்த “விக்ரம் போடச் சொல்லலை’ என்று அழும்பு செய்தார் திவ்யா. அடுத்து ‘மைக் பாட்டரியை மாத்துங்க’ என்று சொல்ல “யாராவது மாத்துங்களேம்பா.. எனக்கு ரெண்டு கைதான் இருக்கு” என்று எரிச்சலானார் திவ்யா. அந்த டென்ஷனிலேயே நெய் ஸ்பூனை மற்றவர்களின் தட்டில் லொட்டென்று போட, வியானா அதற்கு புண்பட்டு கண்கலங்க அதுவும் ஒரு பஞ்சாயத்தாக போனது. “ஸ்பூனை சிங்க்லதானே தூக்கிப் போட்டேன். இவங்க மண்டைலயா போட்டேன்” என்று எரிச்சலானார் திவ்யா. சாண்டராவுடன் பழகிப் பழகி இவரும் ஒரு மினி சாண்ட்ராவாக மாறி வருகிறார் போல. சாண்ட்ராவும் திவ்யாவும் வேலை செய்யாமல் டபாய்ப்பதால் ‘சூப்பர்வைசரான’ விக்ரம் அருகிலேயே அமர்ந்து பாடிக் கொண்டிருக்க ‘தள்ளிப் போய் பாடுங்க.. தலை வலிக்குது’ என்று எரிச்சலானார் திவ்யா. அதற்கு பின்பாட்டு பாடினார் பாரு. வீக்கெண்ட் பஞ்சாயத்தில் ரகளை செய்வாரா விசே? வென்ற அணிக்கு ஐஸ்கிரீம் பரிசாக வந்தது. அதை நேரில் சென்று வாங்க வெட்கப்பட்டு “பிரஜின் அண்ணா.. உங்க பங்கை வாங்கித் தாங்க” என்று கேட்டு சாப்பிட்டார் திவ்யா “நீயும் சாப்பிடு. நான் ஜெயிச்சு வாங்கினது” என்று பெருமிதமாக சாண்ட்ராவிடம் பிரஜின் சொல்ல “நீ மட்டும்தான் வாங்கினது இல்ல. கப்புள்ளா ஆடி வாங்கினது” என்று சர்காஸம் செய்தார் சாண்ட்ரா. “யாருக்கெல்லாம் பர்கர் வேணும்?” என்று பாசமுள்ள அப்பா மாதிரி கேட்டார் பிக் பாஸ். அது வேண்டுமென்றால் அவர் மனது குளிரும்படி செய்ய வேண்டுமாம். அனைவரும் ‘ப்ளீஸ்.. சார். ப்ளீஸ் சார்’ என்று பாய்ஸ் படத்தின் பாடலை கோரஸாக பாடினார்கள். (இந்த SIR என்பது வெளியில் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. படிவத்தை நிரப்புவதற்குள் முந்தைய ஜென்மத்து தலையெழுத்தையெல்லாம் மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது!) “எங்களை எல்லாம் மறந்துட்டாங்க. நாங்க வர மாட்டோம்” என்று கார்டன் ஏரியாவில் பிடிவாதம் பிடித்தனர், சாண்ட்ராவும் திவ்யாவும். “அவங்க வரலைன்னா.. நானும் வர மாட்டேன். சாப்பிட மாட்டேன்” என்று மிகையான பாசத்தைக் கொட்டினார் பாரு. (பார்றா! கூட்டணியை!).. பிக் பாஸ் கூப்பிட்டவுடன் இவர்கள் உள்ளே வந்தவுடன் அனைவருக்கும் பர்கர் வழங்கப்பட சாப்பிட்டு்க் கொண்டிருந்தார். “விக்ரம்.. திவ்யாவும் சாண்ட்ராவும் எல்லா வேலையும் செஞ்சு முடிச்ச பின்னாடி.. தல கிட்ட சொல்லி ஜெயில்ல போடுங்க” என்றார் பிக் பாஸ். “ஓகே. பாஸ். ஆனா.. இவங்க ரொம்ப நல்லா வேலை செய்யறாங்க” என்று நொந்தபடி சொன்னார் விக்ரம். பிறகு கிச்சனுக்கு சென்ற விக்ரம் “நல்ல வேளை சோத்துக்கு அலைய வெச்சிடுவாங்கன்னு நெனச்சேன். அது நல்ல படியா போச்சு. இன்னிக்கு இவங்களை வேலை செய்ய வைக்காம தூங்கப் போறதில்லை” என்று சபதம் ஏற்றார் விக்ரம். (விக்கி.. அவங்க உங்க கிட்ட மாட்டலை. நீங்கதான் அவங்க கிட்ட மாட்டிக்கிட்டிருக்கீங்க..!) இந்த வாரம் விசாரிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. சாம்பார் அணியின் அலப்பறைகள், சாண்ட்ராவின் வன்மங்கள், பிரஜினின் மிரட்டல் போன்று பல அயிட்டங்கள். விசே இவற்றையெல்லாம் முறையாக விசாரிப்பாரா என்று பொறுத்திருத்து பார்ப்போம்.!
அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது! தமிழகத்துக்கு கனமழை அலர்ட்!
சென்னை : தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று (நவம்பர் 22) ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், மேலும் 48 மணி நேரத்தில் தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression) வலுப்பெற வாய்ப்புள்ளது. தற்போதைய பாதைப்படி, இந்த அமைப்பு அந்தமான்-நிகோபார் தீவுகளை […]
கொழும்பு –கண்டி வீதி –தற்காலிகமாக மூடப்பட்டது –மண்சரிவால் ஒருவர் பலி!
கொழும்பு – கண்டி பிரதான வீதியானது, கனேதென்ன பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று (22) காலை கனேதென்ன பகுதியில்… The post கொழும்பு – கண்டி வீதி – தற்காலிகமாக மூடப்பட்டது – மண்சரிவால் ஒருவர் பலி! appeared first on Global Tamil News .
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு.. குட் நியூஸ் சொன்ன மோடி அரசு!
பயிர் காப்பீடு விஷயத்தில் மேலும் இரண்டு விஷயங்களை மத்திய அரசு சேர்த்துள்ளது. இனி இந்த பாதிப்புகளுக்கும் விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கும்.
Anupam Luthra returns to Mathrubhumi Group as Manager – Public Relations & Corporate Communications
New Delhi: Mathrubhumi Group has announced the return of Anupam Luthra as Manager – Public Relations & Corporate Communications, marking a significant addition to its leadership team across media platforms. Based out of the New Delhi office, she will report to Mayura Shreyams Kumar, Director – Digital Business.In her new role, Anupam will oversee PR and communication functions across the Group’s diverse portfolio—Print, Radio, Television, and Digital—with a mandate to strengthen brand visibility, deepen stakeholder engagement, and ensure cohesive messaging across national markets.This appointment marks Anupam’s second tenure with Mathrubhumi, following a successful seven-year stint between 2015 and 2022 in Kochi. During that period, she worked closely with the heads of all key verticals—Editorial, Advertisement, Circulation, Club FM, Mathrubhumi News, Kappa TV, RedMic Events, and Digital Media.Prior to rejoining Mathrubhumi, Anupam served as Assistant Director at JDS Public School, Varanasi from August 2022, where she was part of the management committee. She was actively involved in improving educational standards, advising on academic strategy, and leading initiatives in instructional design, team building, and institutional communication.Earlier in her career, she was associated with The Muthoot Group as Assistant Manager – Corporate Communications, further strengthening her foundation in brand messaging, stakeholder relations, and corporate outreach.Anupam’s return comes at a time when the Mathrubhumi Group continues to drive integrated growth across its multi-media platforms. Her extensive experience across media, corporate environments, and education brings a unique blend of strategic communication expertise and on-ground operational understanding.
பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி
பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 15 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பாய்லர் வெடித்தது. இந்த சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து துணை ஆணையர் ராஜா ஜஹாங்கிர் அன்வர் கூறுகையில், பாய்லர் வெடித்ததில் அருகிலிருந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதுவரை, மீட்புக் குழுக்கள் இடிபாடுகளில் இருந்து 15 உடல்களை மீட்டுள்ளனர். காயமடைந்த ஏழு […]
பாகிஸ்தான் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 16 பேர் பலி!
பாகிஸ்தானில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் பைசலாபாத் நகரில் அமைந்த மாலிக்பூர்… The post பாகிஸ்தான் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 16 பேர் பலி! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணம் – குருநகர் கடலில் சிறுவன் ஒருவன் இன்றைய தினம் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ்… The post சடலம் மீட்பு! appeared first on Global Tamil News .
யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு!
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்துஉள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு நோயாளர்கள்… The post யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு! appeared first on Global Tamil News .
“PM Highlights Natural Farming Progress in Coimbatore”
“The welcome in Coimbatore was very special. The love and support from the people of this lively city will always
கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்!
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை யோகசுவாமிகள் சமாதி திருக்கோயிலுக்கு கண்டியில் இருந்து வருகை தந்த 120 பெளத்த துறவிகள் மற்றும் அடியவர்கள்… The post கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்! appeared first on Global Tamil News .
Jaypore’s ‘The Nizam’ campaign celebrates Deccan grandeur with contemporary craftsmanship
Mumbai: Jaypore, an artisanal lifestyle brand under Aditya Birla Fashion and Retail Ltd., has unveiled ‘The Nizam’, a new celebratory campaign that reinterprets the imperial splendour of Hyderabad’s Nizams through a contemporary, fashion-forward lens. Blending royal opulence with Deccan artistry and modern sophistication, the campaign offers a fresh portrait of the city’s cultural and architectural legacy.At its core, ‘The Nizam’ celebrates the quiet, restrained luxury that defined Nizami refinement. The film unfolds like a living miniature painting — capturing the swirl of dhuna, the fragrance of ittar in soft morning light, footsteps echoing beneath Charminar’s arches, and moments of intimate stillness within centuries-old corridors. Each frame revives the poetic grandeur and artistic depth that shaped the aesthetic of the Nizams.Speaking about the campaign, Manu Gupta, Brand Head, Jaypore , said, “With The Nizam campaign, we wanted to reinterpret the grandeur of Hyderabad’s royal past, not in its extravagance but in its refined quietude. This campaign is a tribute to India’s extraordinary craftspeople and to women who embody strength through elegance and softness.” Crafted in luxurious cotton-silk and rich silks, the ‘The Nizam’ collection features intricate hand embroidery and heritage craft techniques including Rogan art, lampi gota work, handwoven tissue detailing, and antique-hued sequin work. The colour palette draws from Deccan twilight — deep wine, antique gold, jade, ivory, red, and black — echoing the textiles and artistry of historic Hyderabad. With contemporary silhouettes paired with traditional craftsmanship, the ensembles offer richness without excess, bridging heritage charm with modern refinement.Beyond apparel, the collection expands into artisanal jewellery and curated home accents, creating a cohesive world of celebration inspired by India’s cultural lineage yet designed for today’s lifestyle.More than a campaign, ‘The Nizam’ stands as an invitation to rediscover timeless elegance — a reminder that the legacy of Hyderabad’s Nizams continues to inspire, evolve, and enchant. View this post on Instagram A post shared by Jaypore (@jaypore)
சேலம் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை: அன்புமணி ஆவேசம்- கள்ளத்துப்பாக்கி மீது குற்றச்சாட்டு
சேலம் மாவட்ட திமுக நிர்வாக ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Mumbai: Fortune Refined Soybean Oil, India’s No. 1 refined soybean oil brand from AWL Agri Business Ltd. (formerly Adani Wilmar Ltd.), has unveiled a heartwarming new video campaign featuring Bollywood superstar Akshay Kumar. Rooted in a quintessential Indian tradition, the film spotlights how health sits at the centre of everyday interactions — from courtyard conversations to casual neighbourhood greetings.The campaign opens with Akshay Kumar engaging in warm, familiar exchanges, greeting people with genuine concern: “Kaise ho? Sab theek?” Fortune uses this relatable cultural insight to reinforce a simple truth — in India, checking on someone’s health is not just courtesy, it is an expression of care.[caption id=attachment_2481836 align=alignleft width=200] Mukesh Mishra[/caption]Speaking about the campaign, Mukesh Mishra, Joint President, Sales & Marketing, AWL Agri Business Ltd., said, “In India, asking about someone’s health is not a formality, it’s a language of love. With this film, and with Akshay Kumar bringing this sentiment to life, we wanted to recognise that gesture and position Fortune Refined Soybean Oil as more than just an ingredient — it is a silent caretaker in every home. When families choose Fortune, they choose care, trust, and health for their loved ones.” The film subtly introduces Fortune Refined Soybean Oil as the everyday choice that upholds this shared commitment to well-being. Without being preachy, it reinforces the belief that “Jab Sehat Badhiya, Toh Sab Badhiya.” The narrative captures how good health fuels energy, togetherness, and peace of mind — all beginning with mindful choices in the kitchen.[caption id=attachment_2481835 align=alignright width=200] Puneet Kapoor[/caption]Sharing the creative approach, Puneet Kapoor, Chief Creative Officer – Ogilvy South, added, “With this film, we wanted to reflect a truth every Indian instinctively knows: that checking in on someone’s health is how we greet each other, and it remains one of the purest forms of care. We aimed to shape a narrative that feels real and personal, inspired by the everyday greeting rituals across states that define our culture.” Fortune Refined Soybean Oil is fortified with Nutri 5, offering five key health benefits — improving eyesight, boosting bone health, maintaining healthy blood cholesterol levels, providing natural antioxidants, and enhancing immune function. Its light, clean, and nutritious formulation has made it a trusted favourite across Indian households.The new campaign reinforces Fortune’s position not just as an essential cooking ingredient, but as a brand deeply connected with nurturing the health and happiness of Indian families.https://youtu.be/22t-R4OOXCs
IPL 2026: ‘புது விதிமுறை காரணமாக’.. 3 ஸ்டார் வீரர்களுக்கு தடை: ஹேரி ப்ரூக் உட்பட.. லிஸ்ட் இதோ!
ஐபிஎல் தொடரின் புது விதிமுறை காரணமாக இங்கிலாந்தை சேர்ந்த 3 நட்சத்திர வீரர்கள், ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, சிஎஸ்கே உட்பட சில அணிகளுக்கு பெரிய பின்னைடைவாக அமையும்.
AI + Creativity: The New Power Couple Redefining the Advertising Playbook
Artificial intelligence has become a defining force across global industries, with a UN Trade and Development (UNCTAD) report projecting the global AI market to grow from $189 billion in 2023 to $4.8 trillion by 2033.Brands everywhere are responding to shifting consumer behaviour, new media formats, and a more fragmented attention economy. As this environment becomes more complex, the combination of human imagination and intelligent systems is reshaping how stories are conceived and how campaigns are brought to life. This partnership is now a foundational change that is influencing strategy, production, measurement, and cultural relevance. The Evolution of Creative Intelligence In the past, creative teams relied heavily on instinct, experience, and manual research cycles to shape campaign ideas. While these foundations remain, the role of data-informed intelligence has grown significantly. Global industry reports have observed steady adoption of predictive tools that analyse patterns in consumer behaviour across platforms. These systems help identify themes, emotional triggers, and content formats that carry higher potential for engagement. Rather than narrowing creative freedom, these insights expand it by revealing new directions that may not surface through traditional processes.The shift can be observed in the growing use of intelligent creative systems within agencies and brand teams. These systems analyse imagery, audio, copy, pacing, and design structures that perform well across different audience segments. By studying these signals, creative teams gain clearer visibility into what drives attention and what sustains it. This clarity supports more adventurous thinking, as creators can test ideas virtually, refine narratives more quickly, and build campaigns with greater confidence. The result is not formula-driven communication. It is a more confident approach to experimentation.The production cycle has undergone its own transformation. AI-assisted tools now help designers, editors, writers, and producers execute tasks that once consumed large amounts of time. Automated layout generation, voice and sound enhancement, intelligent editing systems, and content-matching tools have become standard parts of the workflow in many major advertising ecosystems. These tools do not replace expertise. They create space for teams to focus on higher-order thinking while repetitive tasks are handled with speed and consistency.The impact can be seen in the rise of rapid content studios across markets. These studios cater to brands that require consistent storytelling across dozens of touchpoints. AI-enabled asset libraries help maintain visual and tonal coherence while allowing content teams to adapt quickly to cultural shifts, market triggers, and real-time consumer conversations. This agility has become essential for brands that operate in highly competitive categories. Precision Storytelling for a Fragmented Audience Consumer expectations have changed dramatically over the past decade. People respond to communication that speaks directly to their lifestyles, values, and cultural identities. Mass messages are no longer sufficient to build trust or sustained engagement. Industry studies across multiple regions have reported higher performance for personalised creative , particularly when it respects user context and is executed with sensitivity. In this setting, the partnership between AI and creativity has opened the door to a new form of precision storytelling.AI tools help decode complex audience behaviour by identifying micro preferences, sentiment patterns, and cultural shifts within communities. This intelligence allows creative teams to build multi-layered narratives that feel more relevant to different cohorts. Instead of relying on a single overarching storyline, brands can craft multiple expressions of the same idea, each designed for a specific audience. The intention is not to overwhelm consumers with variations but to create meaningful encounters that feel aligned with their lived experiences.Media planning has also become more dynamic. AI-enabled optimisation systems read performance signals and continuously adjust placements and creative variations. This reduces wastage and strengthens brand presence across the consumer journey. Campaigns now evolve in real time rather than being locked into a static framework. When content performs well, the system strengthens it. When it underperforms, new creative versions are surfaced. The result is a flexible model where learning and refinement happen simultaneously.This approach does not diminish the role of creativity. It elevates it. Creative teams can build broader narrative universes and allow the system to decide which version resonates most strongly with different groups. The collaboration between insight, imagination, and intelligent optimisation creates campaigns that feel more timely and culturally aware. A Collaborative Future for an Industry in Transition Industry forums across the world have reflected a shared sentiment about the future of advertising. The next phase of growth will come from teams that embrace AI as a collaborative partner while safeguarding the human dimensions that define great storytelling. Machines excel at scale, pattern recognition, and speed. Humans excel at nuance, empathy, and cultural understanding. When combined, these strengths pave the way for a more ambitious creative ecosystem. For instance, a study from MIT found that in a task involving categorising images of birds, humans alone achieved 81% accuracy, AI alone achieved 73% accuracy, but the combination hit 90% accuracy.Responsibility sits at the core of this evolution. As AI involvement increases, advertisers are placing stronger emphasis on governance, transparency, and ethical data practices. Global advertising bodies have encouraged teams to validate outputs through rigorous review processes to avoid inaccuracies or bias. The intention is to create a future where intelligent technology supports creativity without compromising trust.The industry is also investing in talent development. New roles are emerging in areas such as creative analytics, intelligent production management, and model supervision. Creative professionals are being trained to work more fluently alongside AI tools, while strategists are learning to translate complex data signals into meaningful creative opportunities. This reskilling movement reflects a recognition that the advertising workforce must evolve along with the tools it now depends on.The broader implication of this shift is significant. Advertising is moving toward a world where ideas can be tested at unprecedented speed and refined with real-time intelligence. Production constraints are becoming lighter. Insights are becoming deeper. Cultural moments are being captured with greater relevance. The partnership of AI and creativity is not replacing the fundamentals of the craft. It is strengthening them by giving teams more room to dream, more clarity to execute, and more precision to measure impact.As the landscape continues to change, brands that combine technological intelligence with human storytelling will be best positioned to create meaningful connections with audiences. Creativity has always been the soul of advertising. With intelligent systems as its partner, that soul now has the power to move faster, think wider, and shape stories that resonate across a rapidly shifting world.(Views are personal)
கோவை செம்மொழி பூங்கா - திறப்பு விழாவுக்கு வரும் முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு!
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் சூடுபிடித்துள்ளன! அமைச்சர் நேரு ஆய்வு செய்து, முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 25ஆம் தேதி திறந்து வைக்கிறார் என அறிவித்துள்ளார். 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் பூங்கா, மூலிகை தோட்டங்கள், விளையாட்டுப் பகுதிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன் தயாராகி வருகிறது. திறப்பு விழாவுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.
Japan: வேலையை முடிக்காமல் வீட்டுக்குப் போக முடியாது - ஜப்பானிலுள்ள இந்த வினோத கஃபே பற்றி தெரியுமா?
நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். எதுவாக இருந்தாலும், நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று வேலையைத் தள்ளிப்போடுவது. இப்படி உள்ளவர்களுக்கென்றே ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒரு பிரத்யேக காபி ஷாப் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைக்கு பெயர் 'மானுஸ்கிரிப்ட் ரைட்டிங் கஃபே' (Manuscript Writing Cafe). இந்த கஃபேயின் சிறப்பம்சமே, நீங்கள் எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும் வரை உங்களை வீட்டுக்கு அனுப்ப மாட்டார்களாம். 'மானுஸ்கிரிப்ட் ரைட்டிங் கஃபே' (Manuscript Writing Cafe) டோக்கியோவின் கோயன்ஜிகிடா பகுதியில் அமைந்துள்ளது இந்த கஃபே. இங்கு மொத்தம் 10 இருக்கைகள் மட்டுமே உள்ளன. உள்ளே நுழையும்போதே வாடிக்கையாளர்கள் ஒரு உறுதிமொழி படிவத்தை நிரப்ப வேண்டும். அதில் தங்கள் பெயர், இன்று முடிக்க வேண்டிய வேலை என்ன, அதை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அந்த இலக்கை முடித்ததற்கான ஆதாரத்தைக் காட்டினால் மட்டுமே கஃபேவிலிருந்து வெளியேற அனுமதி கிடைக்கும். வேலை செய்யும் சூழலை இதமாக வைத்திருக்க, இங்கு அதிவேக வைஃபை மற்றும் சார்ஜிங் வசதிகள் உள்ளன. களைப்பு தெரியாமல் இருக்க காபி மற்றும் தேநீர் வரம்பில்லாமல் வழங்கப்படுகின்றன. ஜப்பான்: 2 வருடமாக பணம் கொடுக்காமல் சாப்பிட்ட இளைஞர்; உணவு டெலிவரி நிறுவனத்திடம் சிக்கியது எப்படி? இவை அனைத்தும் சுய சேவை முறையில் கிடைக்கும். ஆனால், இந்த வசதிகளை அனுபவித்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. இங்கு நேரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் 30 நிமிடங்களுக்கு 150 யென் (சுமார் ரூ.85) மற்றும் அதன் பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 300 யென் (சுமார் ரூ.170) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் எவ்வளவு சீக்கிரம் வேலையை முடிக்கிறீர்களோ, அவ்வளவு குறைவான கட்டணத்துடன் வெளியேறலாம். இந்த கஃபே பற்றிய வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். View this post on Instagram
“Shivakumar Visits Jailed Congress MLAs in Bengaluru”
Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar visited Parappana Agrahara Jail on Saturday, where he met Congress MLAs Vinay Kulkarni and
`வேட்புமனு வாபஸ் அச்சம்’ - கூட்டணியில் இருந்தும் வேட்பாளர்களை ஹோட்டலில் தங்கவைத்த பாஜக, சிவசேனா
மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, மனுவை வாபஸ் பெறும் நாள் நேற்றோடு முடிந்தது. வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளில் அரசியல் கட்சிகள் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டன. ஒரு கட்சி வேட்பாளரை மற்றொரு கட்சி விலைக்கு வாங்கிவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தன. அதுவும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் தங்களது வேட்பாளர்களை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வந்தன. ஆட்சியில் கூட்டணியில் இருக்கும் இக்கட்சிகள் மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதையடுத்து வேட்புமனுவை வாபஸ் பெறும் கடைசி நாளில் பா.ஜ.க தங்களது வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிடக்கூடாது என்பதற்காக ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி வேட்பாளர்களை தனது சொந்த ஊரான தானேவிற்கு கொண்டு சென்று ஹோட்டல்களில் தங்க வைத்திருந்தார். ஏக்நாத் ஷிண்டே இதே போன்று பா.ஜ.கவும் கடைசி நேரத்தில் சிவசேனா(ஷிண்டே)வுக்கு ஆதரவாக வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக தங்களது வேட்பாளர்களை மும்பை மற்றும் டோம்பிவலிக்கு கொண்டு வந்து ஹோட்டல்களில் தங்க வைத்திருந்தனர். வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகுதான் வேட்பாளர்கள் அவரவர் வார்டுக்கு செல்ல சிவசேனாவும், பா.ஜ.கவும் அனுமதித்தன. அம்பர்நாத் நகராட்சி வரலாற்றில் முதல் முறையாக வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அம்பர்நாத்தில் ஏற்கனவே பா.ஜ.கவை சேர்ந்த 5 வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதோடு சிவசேனாவும், பா.ஜ.கவும் மாறி மாறி கட்சியில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் ஈடுபட்டன. இது குறித்து ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவிடமும் புகார் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டில் 151 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது. அந்த காலப்பகுதியில், இலங்கை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாக, இது கருதப்பட்டது. மரண தண்டனை இந்த குற்றத்துக்கான மரண தண்டனை, 2023, செப்டம்பர் 27, அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகையில் உள்ள மூன்று குற்றச்சாட்டுகளிலும் ஐந்து குற்றவாளிகளும் குற்றவாளிகள் என்று மேல் நீதிமன்றம் […]
சேலம்: திமுக பிரமுகர் சுட்டுக்கொலை; மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை; பின்னணி என்ன?
சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்துள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். திமுக கிளை செயலாளராக உள்ளார். ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு ராஜேந்திரன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் உடலில் குண்டு பாய்ந்த நிலையில் ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு இது குறித்து தகவலறிந்த கரியக்கோயில் மற்றும் கருமந்துறை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ராஜேந்திரன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இது குறித்து சந்தேகப்படும்படி உள்ள இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு; திமுக செய்த தவறு... - எடப்பாடி பழனிசாமி
“Double Deckers to Return to Chennai Soon”
Chennai will soon see the return of its famous double decker buses, almost 20 years after they were stopped in
யாழில் சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கடலட்டைப் பண்ணையில் சம்பவம்
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணை குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று காலை சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் […]
சிறகடிக்க ஆசை நாடகத்தில் வீட்டிலே இருந்தால் ஏதேனும் ஒருக்கட்டத்தில் முத்துவிடம் உண்மையை சொல்லி விடுவோம் என்று பயப்படுகிறாள் மீனா. இதனையடுத்து கொஞ்ச நாளைக்கு அம்மா வீட்டுக்கு போய் இருக்கலாம் என்று முடிவு எடுக்கிறாள். இதற்காக திட்டம் போட்டு வீட்டில் வேண்டுமென்றே ஒரு பிரச்சனையை பண்ணுகிறாள் மீனா.
`ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?
மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி சேருவதில் உறுதியாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் தற்போது சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்), காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கூட்டணி கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அதோடு காங்கிரஸ் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. சரத்பவார் இதையடுத்து மும்பை மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரேயையும் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணியில் ராஜ் தாக்கரேயை சேர்க்க ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தது. இது உத்தவ் தாக்கரேவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. எனவே தாராளமாக காங்கிரஸ் தனித்து போட்டியிடலாம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ராஜ் தாக்கரே கட்சி ஆரம்பத்தில், மாநிலத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு மராத்தி பேசாதவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதோடு மசூதிகளில் ஒலிபெருக்கி வைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தது. இது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இனம், மொழி அடிப்படையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ஆனால் மும்பையை எப்படியும் மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருப்பதால்தான் தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ``காங்கிரஸ் இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நாங்கள் காங்கிரஸ் அல்லது மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் இடம் பெறவில்லை” என்று நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,''காங்கிரஸ் அல்லது மகாவிகாஷ் அகாடியுடன் கூட்டணி சேருவதற்கான எந்த திட்டமும் இதுவரை வரவில்லை. எங்களது கட்சி சுதந்திரமான ஒன்று. மகாவிகாஷ் அகாடியில் எங்களது கட்சி ஒருபோதும் இடம் பெற்றதில்லை. எங்கள் தரப்பிலிருந்து கூட்டணியில் சேர விருப்பமோ ஆர்வமோ தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது வர்ஷா கெய்க்வாட் அல்லது சரத் பவார் இது குறித்து பகிரங்கமாக விவாதித்து, கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தங்கள் கருத்துக்களை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மகாவிகாஷ் அகாடியில் சேர நாங்கள் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை. ராஜ் தாக்கரே இது தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பார். மற்ற கட்சிகள் மற்றும் அவர்களின் தலைவர்களின் அனைத்து விவாதங்களும் எதிர்வினைகளும் கற்பனையானவை'' என்று கூறினார். உத்தவ் தாக்கரே- ராஜ் தாக்கரே எனவே சரத் பவார் கட்சியை தங்களுடன் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டு காய் நகர்த்தியது. ஆனால் சரத் பவார் வாக்குகள் பிரிவதை தடுக்க ராஜ் தாக்கரேயை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சியிடம் பேசி வருகிறார். ராஜ் தாக்கரே கட்சியும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் மும்பை, புனே, தானே, நாசிக் ஆகிய மாநகராட்சிகளில் மட்டும் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது. மற்ற மாநகராட்சிகளில் எதிர்க்கட்சிகளின் நிலை என்ன என்பது கேள்விகுறியாகி இருக்கிறது. மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணி இழுபறியில் இருப்பதால் மற்ற மாநகராட்சிகளிலும் முடிவு எடுக்க முடியாமல் எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் மாநகராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் இவ்விவகாரத்தில் கட்சியின் அடுத்த கட்ட முடிவுக்காக காத்திருக்கின்றனர். டிசம்பர் முதல் வாரத்தில் மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது.
தோனிகூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆவலா இருக்கேன்! சஞ்சு சாம்சன் உற்சாகம்!
டெல்லி : ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், சென்னை அணியில் இணைவதைப் பற்றி உருக்கமாகவும், உற்சாகமாகவும் பேசியுள்ளார். “எனக்கு சென்னை அணியில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கே எம்.எஸ். தோனி என்றொரு ஆள் இருக்கிறார்” என்று தொடங்கிய சஞ்சு, தோனியுடனான தனது முதல் சந்திப்பையும், அவரைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையும் நிறைவேறப்போவதாக […]
Equitas Small Finance Bank spotlights its job fair initiative in new film ‘New Beginning’
Mumbai: Equitas Small Finance Bank (Equitas SFB), known for its commitment to driving social impact beyond traditional banking, has unveiled its latest film, “NEW BEGINNINGS”, under its Beyond Banking Initiative.The film captures heartfelt moments of transformation—depicting the journey from uncertainty and nervous anticipation to the joy and dignity of employment. Centered on real-life stories of perseverance and second chances, the narrative underscores Equitas SFB’s community-first philosophy and its efforts to create long-term socio-economic impact beyond core banking services.Through its EDIT job fair platform, Equitas SFB organizes employment fairs across various regions, connecting unemployed youth from underprivileged backgrounds with recruiters across multiple industries. The bank has partnered with over 50 reputed recruiters to ensure fairness, transparency, and maximum credibility in the hiring process. Over the years, the initiative has helped generate livelihood opportunities and empowered thousands of individuals.Commenting on the launch, Vignesh Murali, Chief Marketing Officer & Head BOW – Equitas SFB, said, “At Equitas Small Finance Bank, we believe our responsibility extends far beyond banking and making a tangible difference in people’s lives. ‘New Beginnings’ is a reflection of what we truly believe in that real empowerment happens when opportunity meets intent. We continue to invest in people, nurture potential, and through the job fair initiative, provide opportunities for individuals to achieve better livelihoods and a chance at a better future.” The New Beginning film reiterates Equitas SFB’s vision that banking is not just about transactions—it is about enabling transformation. Through its sustained social initiatives, the bank has touched the lives of over 3 lakh individuals, providing renewed hope, purpose, and pathways to progress.Aligned with its Beyond Banking philosophy, Equitas SFB contributes up to 5% of its annual net profit toward social development programmes focused on education, employment, skill training, rehabilitation, and healthcare.https://youtu.be/t0F4SigLNL4
எஸ்.ஐ.ஆர் பணிகள் - அதிமுக, பாஜக களத்திலேயே இல்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
அதிமுக, பாஜக களத்தில் இல்லை என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தகுதியால் துணை முதலமைச்சர் ஆனார், தமிழிசை போல தந்தையார் மூலம் அல்ல என பதிலடி கொடுத்துள்ளார்.
Bisleri’s new #DrinkItUp 2.0 campaign with Deepika Padukone captures the spirit of today’s youth
Mumbai: Bisleri International, one of India’s leading packaged drinking water brands, has unveiled its latest high-energy campaign, #DrinkItUp 2.0, featuring global brand ambassador and megastar Deepika Padukone. The vibrant new film positions hydration as an essential yet celebratory lifestyle choice, aligning Bisleri with a generation that embraces bold living with freshness and flair.Set against a carnival-inspired visual universe, the ad film spotlights Bisleri’s signature blend of purity, style, and exuberance. The standout Bisleri truck—reimagined as a DJ console—becomes the epicentre of the celebration, transforming hydration into an expression of culture and cool. Every frame pulsates with fashion-forward styling, music, and unstoppable energy, reinforcing Bisleri’s status as a cultural icon for today’s youth. Jayanti Khan Chauhan, Vice-Chairperson, Bisleri International Pvt. Ltd., said, Bisleri has always been synonymous with pure and trusted hydration. With our new campaign, we’re reimagining hydration as a vibrant, youthful, and lifestyle statement. We’re delighted to collaborate again with Ms. Deepika Padukone, whose energy, authenticity, and global appeal perfectly reflects Bisleri’s evolving spirit. Through this campaign, we aim to connect with a new generation that celebrates life with confidence, style, and an unmissable zest for freshness.” Deepika Padukone added, “To be part of Bisleri’s ever-evolving journey is an honour. The new #DrinkItUp 2.0 campaign perfectly captures the spirit of today’s generation, which is energetic, confident, and always ready for an adventure. Bisleri has always seamlessly blended hydration with style and celebration, giving the consumers more reason to consume water, a functional and fundamental necessity.” Tushar Malhotra, Director of Sales & Marketing, Bisleri International Pvt. Ltd., said, “The new #DrinkItup 2.0 campaign resonates with Bisleri’s ongoing strategy of redefining and maintaining leadership of the water category. The campaign also roots Bisleri strongly in today’s pop culture and enhances our connect with the Gen Z audience. The campaign will be extensively amplified digitally, impact properties on television, billboards, cinemas and our vast network of almost 4,00,000 trade partners.” The campaign was developed through a collaborative effort between Zero Fifty Media Works, the Bisleri in-house creative team, and Ace Director Uzer Khan, with celebrity and music partnerships managed by GroupM.The digital film will be promoted across major platforms including Meta, YouTube, OTT platforms, and Out-of-Home media, ensuring expansive reach across consumer touchpoints.https://www.youtube.com/watch?v=l91SQ47IJFg
Bengaluru: Razorpay, a full-stack payments and banking platform for businesses, has unveiled its latest cross-border payments campaign, “Get Paid, Not Played,” aimed at spotlighting the hidden fees, opaque processes, and operational friction faced by global ecommerce exporters, SaaS firms, agencies, and freelancers when receiving international payments.As India moves closer to its US$1 trillion export ambition, the gap between global opportunity and payment infrastructure has become increasingly evident. While India exported over US$825 billion in goods and services last year and is on track to cross the US$1T mark by FY26, exporters—from freelancers in Ahmedabad to design studios in Pune—continue to grapple with outdated and cumbersome international payment systems.Hidden fees eat into margins, delayed settlements disrupt cash flows, and complex documentation such as FIRC, shipping bills, and IEC place unnecessary burdens on lean teams. Razorpay’s new campaign shines a light on these challenges and reinforces the need for a transparent, predictable payments experience, especially for global-first Indian businesses.Conceptualised and crafted by Razorpay’s in-house team using AI, “Get Paid, Not Played” directly addresses these industry-wide pain points while highlighting Razorpay’s expanded international payments suite. The platform enables Indian sellers and freelancers to get paid like locals across global markets through global cards, Apple Pay, or bank transfers in 130+ currencies including USD, GBP, and EUR.Key features include: Transparent pricing for international cards and global bank transfers (1% for bank transfers, up to 3% for cards) Timely INR settlements within 24 hours to eliminate cash-flow uncertainty Over 90% success rates powered by Razorpay’s in-house card switch and intelligent routing Automated compliance to simplify FIRC, IEC, and shipping-bill workflows while ensuring adherence to RBI and FEMA norms [caption id=attachment_2481819 align=alignleft width=200] Apuarv Sethi [/caption]Commenting on the campaign launch, Apuarv Sethi, Senior VP of Marketing at Razorpay, said, “Behind India’s surge on the global stage lies a simple truth: receiving an international payment is still far harder than it should be. What struck us is how much emotional and financial fatigue sits behind something this fundamental. ‘Get Paid, Not Played’ was born from that reality, the late nights, the lost income, the helplessness of not knowing where your money went. This campaign is a promise that we’re here to fix that, so their ambition doesn’t get undercut by systems that aren’t built for them.” Razorpay believes India’s next growth chapter will be written by businesses serving global customers from every corner of the country. With transparent pricing, faster settlements, intelligent routing, and automated compliance, Razorpay aims to ensure that cross-border payments become a catalyst—not a constraint—in India’s global expansion story.https://www.linkedin.com/posts/razorpay_razorpay-internationalpayments-getpaidnotplayed-activity-7396106719069732864-31Pa/?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAACv4tE4BKuyWTsw6VFPhW-x1FBNeyXUF56o
AUS vs ENG: ‘வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க்’.. ஆஷஸ் தொடரில் அரிதான சாதனை: அதிரடி கம்பேக்!
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் மூலம், மிட்செல் ஸ்டார்க் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸ், இரண்டாவது இன்னிங்ஸ் என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டு, விக்கெட் மழை பொழிந்து வருகிறார்.
பென்சன் வாங்கும் மக்களுக்கு வீட்டுக்கே வரும் சேவை.. இனி எல்லாமே ஈசிதான்!
பென்சன் வாங்குவோருக்கு தபால் நிலையம் மூலமாக வீடு தேடி வரும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவை. நவம்பர் 30ஆம் தேதிக்குள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
“BJP Accuses DMK of Misusing SIR Process”
While the process of updating the voter list, called the Special Identity Revision (SIR), is ongoing, the BJP (Bharatiya Janata
Jindal Foundation celebrates empowering 2.7 million women through multi-sector initiatives
Mumbai: Jindal Foundation has launched HerKadam, a nationwide campaign by the women, for the women, bringing all of the Foundation’s women-focused initiatives under one ambit. The campaign celebrates the empowerment of over 2.7 million women across India through programmes in health, education, digital literacy, skill development, livelihoods and entrepreneurship.As part of the launch, the Foundation unveiled the HerKadam brand film- an evocative portrayal of women leading change at the community level. Featuring powerful real-life visuals from the field, the film captures stories of resilience, skill-building, ambition, and transformation. It celebrates the idea that nothing is beyond a woman’s reach — from threading a needle to building an airplane.Each woman’s progress becomes a legacy that uplifts her family, strengthens her community, and propels future generations. Every step she takes, ‘Her Kadam’ is a step forward not just for herself, but for many around her. Through initiatives like Kishori Express, Vatsalya, Yashasvi, Anjor Digital Literacy, Swawlamban, and Aakriti, the Foundation continues to build pathways of opportunity for women to thrive.https://www.youtube.com/watch?v=wZB5PwmPw90
Mumbai: LT Foods, a global FMCG company of Indian origin in the consumer food space, has launched ‘Rice Your Awareness’, a four-week nationwide initiative under its flagship brand DAAWAT. The program aims to spark conscious conversations around rice consumption and reframe the role of rice—especially Basmati—as a nutritious and essential part of balanced everyday eating.At the core of the initiative is #OnlyRiceNovember, a nationwide challenge encouraging people to pledge toward mindful Basmati consumption. Through a dedicated online portal, participants gain access to exclusive, expert-curated meal plans created by leading nutritionists. These plans demonstrate how rice can support gut health, sustain energy levels, and contribute to overall well-being.The challenge is gaining momentum with strong participation from popular fitness experts and more than 500+ nutrition-focused influencers across social media. Actor Neha Dhupia was among the first to take up the challenge, inspiring her followers to join the movement. Ritesh Arora, CEO, India Business & Far East, LT Foods Ltd., said, “We at LT Foods, one of India’s most trusted food brands, believe it’s time to celebrate the truth about Rice specially Basmati, a staple that has nourished generations and remains central to balanced, healthy living. Rice has always been a source of nourishment, comfort, and togetherness. Thus, ‘Rice Your Awareness’ is more than an initiative; it’s a movement to spotlight the goodness and versatility of Basmati in today’s world. With this, DAAWAT is leading broader conversation around Basmati as a wholesome, nutritious, and modern-day staple while de-bunking myths around it.” Adding to this, K. Ganapathy Subramaniam, Chief Marketing Officer, LT Foods, said, “DAAWAT has always been at the forefront of driving meaningful category conversations, from pioneering World Biryani Day to creating product innovations that celebrate how Basmati is consumed. With this initiative, LT Foods is taking the next step in thought leadership by bringing together experts, influencers, and consumers to talk about Basmati’s nutritional benefits and relevance in everyday well-being. It’s time we give Rice its due place in conscious consumption, Being fully aware of its nutritious benefits along with its flavorful taste. The initiative witnessed strong traction from day one, with more than 10,000 participants joining the challenge at launch. As the movement continues to grow, participants can earn achievement badges and share their progress online, turning a personal lifestyle shift into a collaborative, community-led experience.With rising interest and participation, the ‘Rice Your Awareness’ initiative is well-positioned to drive meaningful awareness, inspire healthier choices, and strengthen consumer engagement at scale.Participation Link: https://www.daawat.com/rya/
யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற டெங்கு கட்டுப்படுத்தல் விசேட முன்னாயத்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் டெங்கு தாக்கம் […]
Vanilla Films and Kalavarni Jewels shine a light on inner beauty with ‘Kasturi’
Mumbai: Mumbai-based production house Vanilla Films has released an evocative new brand film titled ‘Kasturi’ for Kalavarni Jewels, urging viewers to reconnect with the light that resides within. Shot entirely on 16 mm film, the piece stands out for its rich visual texture and artistic restraint—an intentional departure from the high-gloss aesthetics that dominate fashion and luxury campaigns today.Directed by Vanilla Films’ co-founder Chintan Pandav , Kasturi brings to life the brand’s message of “Tumhari Chamak Tum Ho” , anchoring it in a narrative that is both contemporary and deeply spiritual.Kalavarni Jewels, known for their heirloom polki craftsmanship, timeless detailing, and modern sensibility, sought a creative approach that would resonate emotionally with women. The brand’s identity—where heritage meets modernity—became the foundation of the film’s concept. Inspired by Saint Kabir Das’s classic metaphor of the musk deer searching the forest for a fragrance that originates within, Kasturi reflects the brand’s belief that true brilliance is self-derived.Set against the backdrop of a heritage palace in Jaipur, the film follows a woman caught in a moment of introspection. Her attention is drawn to a fleeting glimmer of light. As she pursues it, her inner voice grows louder—Who am I? Ultimately, she discovers what she was chasing was her own light, a symbolic reveal that mirrors the film’s philosophical core.Emotion takes precedence over spectacle in Kasturi, a choice amplified by the decision to shoot on 16mm film. “The grain, warmth and depth of celluloid lend the narrative a timeless charm. It bridges the past and present beautifully, contemporary in tone yet rooted in nostalgia. This choice not only set the film apart but also mirrored the brand’s own balance of modernity and tradition,” said Pandav. With Kasturi, Vanilla Films and Kalavarni Jewels mark the beginning of a refined storytelling direction—one that blends authenticity, emotion, and artistry to capture the essence of a new generation while honoring its roots.https://www.youtube.com/watch?v=Z9f_Jh5MoqM
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங். குழு; அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு -ப.சிதம்பரம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மெல்ல பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கிராமங்கள் தோறும் பரப்புரை நிகழ்த்தி வருகின்றன. அதே நேரம், இந்தத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்களும் வரத் தொடங்கிவிட்டன. த.வெ.க தலைவர் விஜய், இந்தத் தேர்தல் தி.மு.க - த.வெ.க என்ற இருமுனைப் போட்டியாகவே இருக்கும் என்றார். அதிமுக - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என வானதி சீனிவாசன் பேட்டியளித்து தேர்தல் களத்தைச் சூடாக்கியிருக்கிறார். செல்வப்பெருந்தகை காங்கிரஸ் வழக்கம் போல தி.மு.க-வுடன்தான் கூட்டணி எனப் பேசப்பட்ட நிலையில், த.வெ.க-வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸின் மத்தியத் தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது என்ற செய்தி வெளியாகி பரபரப்பானது. இந்தக் கூற்றை மறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் - தி.மு.க-வுடன் கூட்டணி என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தார். தவெக: பிரசாரத்தை தொடங்கும் விஜய், அனுமதி மறுத்த காவல்துறை - காரணம் என்ன? இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, திரு. நிவேதித் ஆல்வா, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, திரு. செ. ராஜேஷ்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். 'இந்தியா கூட்டணி'யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்

29 C