SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

அவசரகால சட்டத்தால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் முறையிடுங்கள்

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக நம்பும் எவரும் தமது பிராந்திய அல்லது தலைமை பணியகத்தில் முறைப்பாடு செய்யலாம் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ள, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் ஆணையாளருமான, நிமால் புஞ்சிஹேவ, அவசரகால விதிமுறைகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று உச்சநீதிமன்றம்

புதினப்பலகை 11 Dec 2025 9:17 am

Doctor Vikatan: இதய நோயாளிகள் மாடிப்படிகளில் ஏறி, இறங்கலாமா, எப்போது அலெர்ட் ஆக வேண்டும்?

Doctor Vikatan: என் உறவினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.  ஆறு மாதங்கள்கூட முடியாத நிலையிலும் அவர் வேகமாக மாடிப் படிகளில் ஏறி, இறங்குகிறார். நடைப்பயிற்சி செய்கிறார். இதய நோயாளிகள் இப்படி மாடிப் படிகளில் ஏறி, இறங்குவது சரியானதா, உடல் ஏதேனும் அலெர்ட் சிக்னல் காட்டுமா... அப்போது எச்சரிக்கையாக வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல். இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் மாரடைப்பு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் உட்பட பெரும்பாலான இதய நோயாளிகள் மாடிப்படிகள் ஏறி இறங்கலாம். அறுவை சிகிச்சை முடிந்த ஐந்தாவது அல்லது ஏழாவது நாளில் டிஸ்சார்ஜ் செய்யும்போது, ஒரு மாடி ஏறி இறங்கிப் பார்த்த பின்னரே மருத்துவர்கள் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வோம். Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா? சம்பந்தப்பட்ட நோயாளி, நிலையாக (Stable) இருப்பதாக மருத்துவர்   சொல்லி, நடக்க அனுமதி அளித்திருந்தால், முதலில் 5 அல்லது 10 நிமிடங்கள் நடந்துவிட்டு, அதன் பின்னர் மருத்துவ மேற்பார்வையில் (Doctor Supervision) மற்றும் பிசியோதெரபி உதவியுடன் ஒரு மாடி ஏறி இறங்கிப் பழகலாம். Climb on Steps மருத்துவமனையில் இதைப் பயிற்சி செய்த பிறகு, சம்பந்தப்பட்ட நபர்,  வீட்டிற்குச் செல்லும்போது ஒரு மாடி ஏறலாம். அதற்கு மேல் ஏறுவதற்கு மருத்துவ அனுமதி தேவை. சிலர், நன்றாக இருந்தால் இரண்டு மாடிகள் கூட ஏறலாம்.  இரண்டு மாடிகள் ஏறும்போது, இடைஇடையே தேவைப்பட்டால் ஓய்வெடுத்து ஏற வேண்டும். தொடர்ந்து ஒரே மூச்சில் ஏறக்கூடாது. ஒரு படி ஏறிவிட்டு சில நொடிகள் இடைவெளி விட்டு அடுத்த படி ஏறவும் அறிவுறுத்தப்படும். உங்கள் உறவினர், நடைப்பயிற்சி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.  அவர் அதை மருத்துவ ஆலோசனையோடு செய்கிறாரா என்று கேளுங்கள். நடைப்பயிற்சி செய்யும்போது அசாதாரண  அறிகுறிகள் ஏற்பட்டால், அவர் உடனடியாக நடைப்பயிற்சியை நிறுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்.  Heart attack (Representational Image) மார்வலி (Chest Pain), மூச்சுத் திணறல் அல்லது மூச்சிறைப்பு, படபடப்பு (Palpitation), தலைச்சுற்றல் (Dizziness), அதிக வியர்வை (Excessive Sweating) போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக நிறுத்திவிட்டு, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சரிசெய்த பின்னரே மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். நடக்கும்போது மார்புவலி, மூச்சிறைப்பு அல்லது படபடப்பு வந்தாலோ, ரத்த அழுத்தம் (Blood Pressure) அல்லது இதயத் துடிப்பு சீராக இல்லாமல், கட்டுப்பாடின்றி இருந்தாலோ, சமீபத்தில் பக்கவாதம் (Stroke), இதயச் செயலிழப்பு (Heart Failure) அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தால், மருத்துவ அனுமதியின்றி நடக்கக் கூடாது. இவற்றையும் உங்கள் உறவினருக்குப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அடிக்கடி கொட்டாவி வருவது ஏன்?

விகடன் 11 Dec 2025 9:00 am

US: `H-1B visa'மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி

ஹெச்-1பி விசாவிற்கு இதோ அடுத்த நெருக்கடி... வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல், ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அனைவரின் 'சமூக வலைதளங்களும்' செக் செய்யப்படும் நடைமுறை தொடங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி முதலே, ஹெச்-1பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை சமூக வலைதள பக்கங்களை சரிபார்ப்பது எஃப்-1 மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறை இப்போது ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாதாரர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரம்ப் இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான் ஏன் இந்த நடைமுறை? சமூக வலைதளங்களை சரிபார்ப்பது குறித்து அமெரிக்கா, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு. அவர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்களா, உண்மையில் விண்ணப்பதாரர் தகுதியானவர் தானா என்பதை சரிபார்க்கவே இந்த சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை என்று கூறுகிறது. 'இவர்களுக்கும்' பிரச்னை தான் இந்த நடைமுறை ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல. ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் பிரச்னை தான். ஹெச்-1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கானது. அடுத்த மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு வேண்டுமென்றால், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி, அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் அனுமதி பெற வேண்டும். இனி இவர்களுக்கும் சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை பின்பற்றப்படும். இதனால், இந்த நடைமுறையில் இவர்களது விசாவிற்கும் பாதிப்பு உண்டு. இவர்களது குடும்பத்தினர் விசாவிற்கு பாதிப்பு உண்டு. ஹெச்-1பி விசா அது எப்படி? ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, 21 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் ஹெச்-4 விசா வழங்கப்படும். ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டால், தானாக ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுடையதும் சரிபார்க்கப்படும். அப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள் தானே? அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா

விகடன் 11 Dec 2025 8:57 am

‘ஐபிஎலில் ரஷித் கான், பூரனுக்கு தடை?’.. சூதாட்ட புகாரில் சிக்கினர்: ஸ்டெம்பிங் செய்தபோது கண்டுபிடிப்பு?

மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கிய நிகோலஸ் பூரனை, ஐபிஎலிலும் தடை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ஆரம்கட்ட விசாரணை மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 11 Dec 2025 8:35 am

தாய்லாந்து –கம்போடியா எல்லையில் மீண்டும் மோதல்! லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையில் மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளதால், இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருகின்றது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் கடந்த ஜூலை மாதம் 5 நாள்கள் நடைபெற்ற போரில் 48 பேர் கொல்லப்பட்டனர். பின்னர், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் முயற்சியால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. இதனைத் தொடர்ந்து, […]

அதிரடி 11 Dec 2025 8:30 am

``நானே பெரிய ரவுடி என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புறியா?” - ரவுடி தாக்கியதில் உயிரிழந்த கொரியர் ஊழியர்

கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி (31) திருமணமாகாத இவர், கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார். மருதாநல்லுார், கரிகுளத்தெருவைச் சேர்ந்தவர் சிபி சக்கரவர்த்தி. ரவுடியான இவரின் பெயர் போலீஸார் ரவுடி பட்டியலில் உள்ளது. கண்காணிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்கிறார்கள். கைது செய்யப்பட்ட ரவுடி சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் இந்நிலையில், சிபி சக்கரவர்த்தியின் மனைவிக்கு புகழேந்தி கொரியர் டெலிவரி செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது முதல் அவர் செல் நம்பரை சேவ் செய்து வைத்து கொண்டு வாட்ஸ்அப்-பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், `நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், ஐ லவ் யூ' என்று அனுப்பியுள்ளார். இதை தனது கணவர் சிபி சக்கரவர்த்தியிடம் சொல்லியுள்ளார். உடனே, ஆத்திரமடைந்த சிபிசக்கரவர்த்தி (33) தனது நண்பர்கள் சிலருடன் சென்று, கடந்த 8ம் தேதி, சிவபுரம் புறவழிச் சாலையில் புகழேந்தியிடம் பேசியுள்ளார். அப்போது நானே பெரிய ரவுடி என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புகிறாயா என்று கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் புகழேந்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தன் வீட்டில் கேட்டதற்கு நாய் குறுக்கே வந்து கீழே விழுந்துட்டேன் என கூறி தாக்கியதை மறைத்து விட்டார். இதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகழேந்தியை பரிசோதனை செய்த டாக்டர், இவர் விழவில்லை, யாரோ அடித்திருக்கிறார்கள் என அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் புகழேந்தியை விசாரித்த போது, நடந்தவற்றை சொல்லியுள்ளார். உயிரிழந்த புகழேந்தி இதற்கிடையில் உடல்நிலை மோசமான நிலையில், புகழேந்தியை, கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, புகழேந்தி உயிரிழந்தார். இது குறித்து, அவரது உறவினர்கள், நாச்சியார்கோவில் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சிபிசக்கரவர்த்தி, இதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன்(26), கும்பகோணம், மேல கொட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணா(33), கும்பகோணம், முல்லை நகரைச் சேர்ந்த விக்னேஷ்(26), திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்த குபேரன்(27) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிபிசக்கரவர்த்தி ரவுடி பட்டியலில், இருப்பதால் இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

விகடன் 11 Dec 2025 8:09 am

தமிழர் பகுதியை துயரில் ஆழ்த்திய பாடசாலை மாணவனின் மரணம்

மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட வீதியினால் சென்ற போது தவறுதலாக சேற்றில் புதையுண்டு தரம் 13ல் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்துள்ளார். நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் பல வீதிகள் வெள்ளத்தில் முழ்கியிருந்த நிலையில் அவற்றின் கட்டமைப்பு சீர்குழைந்தால் […]

அதிரடி 11 Dec 2025 8:03 am

கோட்டாபாயவிற்கு யாழ். நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 இல் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் மின்னணு முறையில் சாட்சியமளிக்க அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருவதில் என்ன பாதுகாப்பு பிரச்சினை உள்ளது என்பதை சத்தியக் கடதாசி மூலம் தெரியப்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு தாக்கல் […]

அதிரடி 11 Dec 2025 8:01 am

வடபிராந்திய கடற்படைத் தளபதியுடன் விசேட கலந்துரையாடல்

வடபிராந்திய கடற்படைத் தளபதியுடன் விசேட கலந்துரையாடல் வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் B. லியனஹமகே தலைமையில் இன்றைய தினம் (10.12.2025) காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் குரூஸ், பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். […]

அதிரடி 11 Dec 2025 7:59 am

கோவையில் இன்டிகோ விமான போக்குவரத்து எப்போது சீராகும்?

கோவையில் இன்டிகோ விமான போக்குவரத்து எப்போது சீராகும்? என்று கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் தெரிவித்து உள்ளார். அட்டவணையை மாற்றும் செயல்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

சமயம் 11 Dec 2025 7:51 am

திருச்சி, ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் கோயில்: சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் வெட்டிவேர் தீர்த்தம்!

இறைவனைச் சரணடைந்தால் அருளும் முக்தியும் கிடைக்கும் என்பது எவ்வளவு சத்தியமோ அந்த அளவுக்கு இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆரோக்கியம் அருளும் சில தலங்களை நம் முன்னோர் கண்டு அவற்றில் சில குறிப்பிட்ட வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆலயங்களில் மிகவும் முக்கியமானது ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் திருக்கோயில். தரிசனம் செய்தால் ரத்தினம் போல் ஜொலிக்கும் திருமேனியுடைய ஈசன் என்பதால் இவருக்கு இந்தத் திருநாமம். மேலும் சிந்தாமணீஸ்வரர், ரத்தினமுடையார், தூய மாமணி, மாசிலாமணி, துகுமாமணி போன்ற வேறு பல நாமங்களும் இவருக்கு உண்டு. தாயார், அகிலாண்டேஸ்வரி. இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று சிறுநீரகப் பிரச்னைகளைப் போக்கும் தலம் இது என்பதுதான். ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள்கூட இந்த ஆலயத்துக்கு வந்து பிரார்த்தனை செய்து பலன்பெற்றிருக்கிறார்கள் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் அந்த அற்புத ஆலயம் குறித்துத் தெரிந்துகொள்வோம். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு 40 கி.மீ முன்பாக உள்ளது பாடாலூர். இந்த ஊரிலிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 5 கி.மீ தொலைவில் ஊட்டத்தூரை அடையலாம். தண்ணீர் ஊற்றுகள் நிறைந்திருந்த ஊர் இது என்பதால் ஊற்றத்தூர் என்றாகி அதுவே ஊட்டத்தூர் என்று வழங்கப்பட்டது என்கிறார்கள். மேலும் இங்கு வந்தாலே உடல் ஊட்டம் பெறும் என்பதாலும் இந்தப் பெயர் என்பது ஊர்க்காரர்களின் கருத்து. இங்கே அருளும் அம்பிகை அகிலாண்டேஸ்வரி அழகே வடிவானவள். நான்கு திருக்கரங்கள், இரண்டு திருச்செவிகளிலும் தாடங்கம் அணிந்து நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறாள். இவளை வணங்கினால் திருமண வரம், பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை. ஈசனின் சந்நிதிக்கு நேர் எதிரிலேயே கோயில் தீர்த்தம் அமைந்திருப்பது சிறப்பம்சம். ராஜராஜ சோழன் நோய் உற்றபோது இங்கு வந்து சுத்தரத்னேஸ்வரரை வழிபட்டு தன் நோய்நீங்கப்பெற்றாந் என்கிறார்கள். எனவே வரலாற்றில் ஆரோக்கியம் அருளும் தலமாக இந்தத் தலம் விளங்குகிறது. ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர் இங்கே கோயில் கொண்டிருகும் நடராஜப் பெருமான் திருவடிவே மிகவும் பிரசித்தம். இந்தத் திருமேனி அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனது என்கிறார்கள். இந்தக் கல் சூரியக்கதிர்களின் ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். எனவே இந்தத் தலத்துக்கு வந்து வழிபாடு செய்தாலே அனைவரும் தாங்கள் வேண்டியவற்றை அடையலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அருகிலேயே சிவகாமி அம்மையும் காட்சி தருகிறார். தன் திருமுகத்தைச் சாய்த்து, தனக்கு வலப்புறம் இருக்கும் ஈசனைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற அழகிய ஒயிலான தோற்றத்தில் சிவகாமி அம்மையின் அழகே அழகு. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்! சிறுநீரகக் கோளாறுகளை நீங்க அருளும் பிரார்த்தனை ஆடல் அரசனான பஞ்சநதன நடராஜர்தான் சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்யும் மருத்துவன் எனப் போற்றப்படுகிறார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, ஒரு கிலோ வெட்டிவேர் வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாகத் தொடுத்து நடராஜருக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பிறகு அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, ஈசனுக்கு எதிரே அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை ஒரு கேனில் (சுமாராக 5 லிட்டர்) எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டுக்குச் சென்றதும், தினமும் இரவில் பிரம்ம தீர்த்த நீரை ஒரு குவளையில் நிரப்பி (100 மி.லி), அதில் ஒரு வெட்டிவேர் துண்டைப் போட்டு ஊற விடவேண்டும். மறுநாள் காலையில் வெட்டிவேரை எடுத்துவிட்டு, அந்தத் தீர்த்தத்தைப் பருகவேண்டும். இப்படி 48 நாள்கள் பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம் என்பது ஐதிகம். 48 நாள்களும் இந்தத் தீர்த்தம் கெடாது என்பதும் அதிசயம். 48 நாள்கள் முடிந்ததும், வெட்டிவேர்த் துண்டுகளை நீர் நிலைகளில் சேர்த்துவிட வேண்டும். இப்படிச் செய்து பலன் பெற்றவர்கள் அநேகம் என்கிறார்கள் ஊரார். ஊட்டத்தூர் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் கோயில் ஊட்டத்தூர் ஸ்ரீபஞ்சநதன நடராஜருக்கு சம்மேளன அர்ச்சனை எனும் சிறப்பு அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கும். ஈசனுக்கும் அம்பாளுக்கும் சேர்த்துச் செய்யப்படுவதே சம்மேளன அர்ச்சனை என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள். 2000 ஆண்டுகளைக் கடந்த தலம் இது. கால வெள்ளத்தில் சிதிலமாகிப்போன இந்தக் கோயிலை ராஜராஜ சோழன் மீட்டெடுத்துக் கட்டியுள்ளார். அவருக்குப் பின் அவர் மகன் ராஜேந்திர சோழன் மற்றும் பேரன் ராஜாதிராஜன் ஆகியோர் பராமரித்திருக்கிறார்கள். அவர்கள் மூவரின் திருப்பணிகள் பற்றிய கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன. இங்குள்ள ஈசனை ஆண்டுதோறும் மாசி மாதம் 12, 13, 14 தேதிகளில் சூரிய பகவானின் கதிர்கள், கருவறை தாண்டி மூலவர் சுத்தரத்னேஸ்வரர்மீது விழுந்து பூஜிக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. இந்த அற்புதமான தலத்தில் ஈசனை வழிபட்டு நாம் அனைவரும் ஆரோக்கியமும் அருளும் ஒருங்கே பெறலாம். திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!

விகடன் 11 Dec 2025 7:51 am

‘சாம்சன் இடத்தை பறித்த’.. 2 பேர்: கடும் அதிருப்தியில் பிசிசிஐ.. கடைசி நேரத்தில் இப்படியா? குளறுபடி!

சுஞ்சு சாம்சன் இடத்தை இரண்டு பேர் பறித்த நிலையில், இதற்கு பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் இப்படி, பெரிய குளறுபடி நடைபெற்றிருப்பது, அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சமயம் 11 Dec 2025 7:45 am

``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி

கோவை திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியை அந்தக் கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும். செந்தில் பாலாஜி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் வாக்குகளை பெற வேண்டும். அந்தந்த பூத்களில் உள்ள இளைஞரணி, மகளிரணி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார்.  பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. பாஜக எத்தனை முயற்சி எடுத்தாலும் அவர்கள் நினைப்பது ஒரு போதும் நிறைவேறாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் மண். கோவை எதுவாகினும் இங்கு மக்கள் தான் முடிவு செய்வார்கள். 2026 ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். போலி வாக்காளர்கள் என்று சொல்வதே தவறு. எந்த அடிப்படையில் ஒருவரை போலி வாக்காளர் என்று சொல்கிறார்கள். தகுதியானவர்கள் விடுபடக் கூடாது, தகுதி இல்லாதவர்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். வரலாற்றில் ஒவ்வொரு முறையும் மற்ற அரசியல் கட்சிகள் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்வார்கள். திமுக தலைமையகம் கோவையில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கடந்த அதிமுக ஆட்சியில் கோவையில் பாதாள சாக்கடை பணிகள் செய்யவில்லை. பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்ததும் தார் சாலைகள் போடப்படும்.” என்றார். '10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி

விகடன் 11 Dec 2025 7:42 am

'பார்க்க விமானம்போல இருக்கும்; ஆனால், ஒரு காருக்குத்தான்' - இது ஊர்க்குருவிகளின் கதை!

மழை பெய்து முடித்த நாள்களில், வானம் வெறித்துவிட்டதா என அண்ணாந்துப் பார்க்கையில், உயரத்தில், சிறு புள்ளிகள்போல தெரிகிற பறவைக்கூட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா..? கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடுகிற அளவுக்கு படு வேகமாக பறந்துவிடும் அந்தப் பறவைக்கூட்டம். அவை நாட்டு உழவாரன். எல்லோருக்கும் தெரிந்த பெயர் ஊர்க்குருவி. இவை கிட்டத்தட்ட 200 முதல் 300 அடி உயரம் வரைக்கும்கூட பறக்கும். இதன் காரணமாகவே, 'உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா' என்கிற மனித கேலிக்கு ஆளாகிக்கொண்டிருக்கிற நாட்டு உழவாரன், அதாவது ஊர்க்குருவியின் அருமை பெருமைகளைத்தான் இன்றைக்கு நம்மோடு பகிரவிருக்கிறார், காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான கோவை சதாசிவம். ஊர்க்குருவியின் பெயரை காருக்கு வைத்திருக்கிறார்கள்!  ஊர்க்குருவி ''இன்றைக்கும் பசுமை மிகுதியாக மிஞ்சியிருக்கும் கிராமங்களில், மழைவிட்ட பொழுதுகளில் விர்ரென கீழே இறங்கி வருகிற ஊர்க்குருவிகளைப் பார்க்கையில், 'எங்கேயாவது மோதி விழுந்து விடுமோ; அல்லது நம் மீது தான் மோதி விடுமோ என்று ஒரு நொடி அஞ்சி விடுவோம். மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது ஊர்க்குருவி. ஆனால், எதன் மீதும் மோதாது... எங்கும் அடிபடாது... அப்படியே யூ டர்ன் அடித்து மேலெழும்பி பறந்து விடும். உழவாரன் போலவே, எங்கள் தயாரிப்பு காரும் வேகமாக சென்றாலும், எங்கும் மோதாது, விபத்தில் சிக்காது என்று, கார் தயாரிப்பு நிறுவனமொன்று தங்கள் காருக்கு Swift என்று பெயர் வைத்துள்ளது. ஆம், ஊர்க்குருவியை ஆங்கிலத்தில் Swift என்றே குறிப்பிடுவோம். தன் சிறகுகளை விரித்து ஊர்க்குருவிகள் பறக்கையில், சின்னஞ்சிறு விமானம்போல இருக்கும். ஆனால், அதன் பெயரை ஒரு காருக்கு வைத்திருக்கிறார்கள். ஊர்க்குருவிகளால் மரக்கிளைப்பற்றிக்கொண்டு உட்கார முடியாது! ஊர்க்குருவி ஊர்க்குருவிகள் பெரும்பாலும் வானத்தில் பறந்தபடியேதான் இருக்கும். அப்படியென்றால், ஊர்க்குருவி கீழே வரவே வரதா என்கிற கேள்வி எழலாம். ஒருநாளின் பெரும்பொழுதை அவை வானில்தான் கழிக்கும். காரணம், அவை கீழே வந்தால், அவற்றால் மரக்கிளைப்பற்றிக்கொண்டு உட்கார முடியாது. அந்தளவுக்கு அவற்றின் கால்கள் மிகச்சிறியதாக, மெல்லியதாக இருக்கும். ஆனால், மெல்லிய மின்சாரக்கம்பிகளைப் பற்ற முடியும். மின்சாரக்கம்பிகளின் மீது ஊர்க்குருவிகள் வரிசையாக உட்கார்ந்துக்கொண்டிருக்கும் அழகை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்க முடியும். அப்படி அவை உட்கார்ந்திருப்பது, யாரோ நேர்த்தியாகக் கட்டிய மாவிலைத்தோரணம் போலவே இருக்கும். ஊர்க்குருவிகளுக்கு கூடு கட்டத்தெரியுமா..?  ஊர்க்குருவி ஒரே துணை; ஒரேயொரு முட்டை; சடலங்களே உணவு... கொத்துக் கொத்தாக இறந்துபோன பாறு கழுகுகளின் கதை! அப்படியென்றால், ஊர்க்குருவிகள் இரவுகளில் ஓய்வெடுக்காதா..? அப்படி ஓய்வெடுக்க வேண்டுமென்றால், கூடு வேண்டுமே... ஊர்க்குருவிகளுக்கு கூடாவது கட்டத்தெரியுமா என்று எக்கச்சக்க கேள்விகள் எழுகின்றனவா... ஊருக்குருவிகளும் கூடு கட்டும். இரவுகளில் ஓய்வெடுக்கும். ஏனென்றால், அவை இரவாடிப்பறவை கிடையாது. பெரும்பாலும் வானத்திலேயே பறந்துகொண்டிருக்கிற இந்தக் குருவிகள், இனப்பெருக்க காலத்தில் கீழே வரும். கோயில் மண்டபங்கள், பாலங்களுக்கு அடியில் காய்ந்த சுள்ளிகள், பறவை இறகுகள், காகிதம் ஆகியவற்றை தன்னுடைய உமிழ்நீரால் ஒட்டி, ஒரு கிண்ணம் போன்ற கூட்டினைக் கட்டும். கூடு கட்டுவதற்காக, இனப்பெருக்க காலத்தில் மட்டும் ஊர்க்குருவிக்கு பேஸ்ட் போன்று உமிழ்நீர் சுரக்கும். இயற்கைதான் எத்துனை கருணையானது... பனை உழவாரன் என்றொரு குருவியும் இருக்கிறது! கோவை சதாசிவம் Lion: நாடோடி, பேச்சுலர், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை செக்ஸ்... இது சிங்கங்களின் வாழ்க்கை! பூச்சிகளால் நிறைந்ததுதான் நம் பூவுலகம். ஊர்க்குருவிகளுக்கும் பெரும்பான்மை உணவு பூச்சிகள்தான். வானில் பறந்துகொண்டிருக்கிற பூச்சிகளையெல்லாம் உண்டு கட்டுப்படுத்துவதில், ஊர்க்குருவியின் பங்கு அதிகம். நம் ஊரில் பனை உழவாரன் என்றொரு குருவியும் இருக்கிறது. இவை பனை ஓலைகளை தன் எச்சிலால் ஒட்டி கூடு கட்டி அதற்குள் வசிக்கும். இவை பனை மரங்களைச் சுற்றியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பதால், இவற்றுக்கு பனை உழவாரன் என்று பெயர். முன்புபோல ஊர்க்குருவிகளைப் பார்க்க முடிவதில்லையே... Elephants: மகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்; மருமகளை ஏற்றுக்கொள்ளாது; தாய்மாமனுக்குப் பெண் கொடுக்காது வெளிநாடுகளிலும் உழவாரன்கள் இருக்கின்றன. அவை அல்பைன் உழவாரன்கள். அம்புபோல பறக்கும் அவற்றை புகைப்படம் எடுப்பது மிக மிகக்கடினம். தொடர்ந்து 200 நாள்கள்கூட அல்பைன் உழவாரன்கள் வானில் பறந்துகொண்டே இருக்கும். பறந்தபடியே பூச்சிகளை உண்ணும்; பறந்தபடியே உறங்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நம் ஊரில், தெரு என்பது மக்கள் நடமாடுவதற்கு என்றிருந்த காலகட்டத்தில் மழைக்காலங்களில் ஊர்க்குருவிகளை அதிகமாகப் பார்க்க முடிந்தது. இப்போது தெருக்கள் வாகனங்களுக்கானது என்று மாறிய பிறகு, முன்புபோல ஊர்க்குருவிகளைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், வெட்டவெளிகளில் பறந்துகொண்டிருக்கின்றன அவை...'' என்று முடித்தார் கோவை சதாசிவம்.

விகடன் 11 Dec 2025 7:15 am

BP வராமல் தடுக்குமா முருங்கை விதை? - சித்த மருத்துவர் கு.சிவராமன் விளக்கம்!

முருங்கையின் மகத்துவத்தை, கீரை, காய், விதை என முருங்கையின் எல்லாமும் நமக்கு என்னென்ன ஆரோக்கிய பலன்களை வாரி வாரிக்கொடுக்கின்றன என சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கு.சிவராமன்.   ஓர் உண்மை சம்பவம்! முருங்கையின் பலன்கள் ''ஒருமுறை மலேஷியாவுக்குச் சென்றிருந்தபோது அது நடந்தது. கோலாலம்பூரில் 'பூச்சோங்' பகுதியில், பக்கத்து வீட்டு மரத்தில் காய்ந்து, உலர்ந்திருந்த முருங்கைக்காய் ஒன்றை, சீனர் ஒருவர் பறித்துக் கொண்டிருந்தார். காய்ஞ்சுபோனதை எதுக்கு சார் பறிக்கிறீங்க?’’ என்று கேட்டேன். உயர் ரத்த அழுத்தம் வராமல் இருக்க, முருங்கைக்காய் உள்ளே இருக்கும் உலர்ந்த விதைக்குள் இருக்கும் பருப்பை நாங்கள் சாப்பிடுகிறோம் என்றார் அவர். இப்படி பாரம்பர்யமான உணவுகளை, கீரைகளை பல நாடுகளில் உள்ளவர்கள் மருந்தாகவே நினைக்கிறார்கள். குட்டியூண்டு தேசமான குவாந்தமாலா மாதிரியான நாடுகளில் இருந்து, ஜெர்மனி முதலான ஐரோப்பிய நாடுகள் வரை, தம் பாரம்பர்ய அறிவுகளையும் உணவு கலாசாரத்தையும் உற்றுப் பார்த்து, அதன் மாண்பை மீட்டெடுக்க முழு வீச்சில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்களோடு ஒப்புநோக்குகையில், பாரம்பர்ய அறிவை எக்குத்தப்பாக ஸ்டாக் வைத்திருக்கும் நம் பயணத்தின் வேகம் மிக மிகக் குறைவு. கண் நோயைப் போக்க முருங்கை அவசியம்! முருங்கையின் பலன்கள் 'காப்புரிமைச் சிக்கல் வருமோ?’ என்ற கார்ப்பரேட் சிந்தனையாலும், 'பழசு காசு தராது’ எனும் அறிவியல் குருமார்களின் தீர்க்கதரிசனங்களினாலும், இந்தியப் பாரம்பர்ய உணவும் மருந்தும் மெள்ள மெள்ள மறதியில் மூழ்கிவருகின்றன. 'செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய் வெரிமூர்ச்சை கண்ணோய் விலகும்’ - என முருங்கைப் பற்றி, சித்த மருத்துவம் பாடியபோது, சித்தர்களுக்கு முருங்கை இலையில் உள்ள கண் காக்கும் பீட்டா கரோட்டின்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கண் நோயைப் போக்க முருங்கை அவசியம் என்பதை உணர்ந்திருந்தனர். இன்றைய உணவறிவியல், 'கண்ணுக்கு மிக அத்தியாவசியமான அந்த கரோட்டின்களின் அளவு, கேரட்டுகளைவிட முருங்கை இலையில் அதிகம்’ என்று சான்றளிக்கிறது. முருங்கையால் கிடைக்கும் நன்மைகள்... முருங்கையின் பலன்கள் * பீட்டா கரோட்டின் நிறைந்த தினையரிசி சாதத்துக்கு, முருங்கைக்காய் சாம்பார் வைத்து, அதற்குத் தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரையைப் பாசிப் பருப்புடன் சமைத்து, சாப்பாட்டுக்குப் பின்னர் பப்பாளிப் பழத்துண்டுகள் கொடுத்தால், நம் நாட்டில் வைட்டமின் ஏ சத்துக் குறைபாட்டினால் வரும் பார்வைக் குறைவை நிச்சயம் சரிசெய்யலாம். செலவும் மிகக் குறைவு. * முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருக்கிற மாபெரும் வைட்டமின் டானிக். அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துக்கள் கிடைக்கும்! மருத்துவர் சிவராமன் Greens & Health: எந்தப் பிரச்னைக்கு என்ன கீரை சாப்பிடணும்? * சர்க்கரை நோயாளிகள், வாரத்துக்கு இரண்டு நாள் கம்பு, சிறிய வெங்காயம், முருங்கை இலை போட்ட அடை, ரொட்டி அல்லது கேழ்வரகு தோசையில் முருங்கை இலை போட்டுச் சாப்பிட்டாலே, அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துக்கள் கிடைக்கும்; சர்க்கரைநோய் உண்டாக்கும் சோர்வும் தீரும். * சித்த மருத்துவப் பரிந்துரைப்படி, முருங்கை, உயர் ரத்த அழுத்த நோய்க்கும் மருந்து. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், சோர்வு, நரம்புத் தளர்ச்சி போன்ற 'காம்போ’ வியாதிகள் பலரது வாழ்விலும் கூட்டமாக வந்து கும்மியடிக்கும். அந்த மொத்தக் கூட்டத்தையும் தனியாளாக விரட்டும் இந்த ஒற்றை முருங்கை. முருங்கை பல நோய்கள் வராமல் தடுக்கும்! உணவு 360 டிகிரி - 7 - உடலை உறுதியாக்கும் உருக்கிய நெய்! * நம் குழந்தைகளிடம் முருங்கைக்கீரை பொரியல், தினையரிசி சாதம் பற்றிச் சொல்ல நினைப்பதும், அவற்றை மெல்ல வைப்பதும் சிரமம்தான். ஆனால், எப்படியாவது முருங்கைக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்திவிடுவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது'' என்கிறார் டாக்டர் கு. சிவராமன்.  மொத்தத்தில் முருங்கை பல நோய்கள் வராமல் தடுக்கும்... காக்கும்!

விகடன் 11 Dec 2025 6:51 am

2025-ல் 2 ஆவது முறை…! மொராக்கோவில் கட்டடங்கள் இடிந்து விழுந்து 19 பேர் பலி!

மொராக்கோ நாட்டின் 3 ஆவது மிகப் பெரிய நகரத்தில், நள்ளிரவில் திடீரென 2 வெவ்வேறு அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர். மொராக்கோவின் ஃபெஸ் நகரத்தில், நேற்று முன்தினம் (டிச. 9) இரவு இரண்டு வெவ்வேறு 4 அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், அந்தக் கட்டடங்களில் வசித்து வந்த 8 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியானதுடன், 16 பேர் […]

அதிரடி 11 Dec 2025 6:37 am

ஆவடி பேருந்து நிலையம் சீரமைப்பு-மக்கள் கடும் அவதி!

ஆவடி பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பேருந்து நிலையத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சமயம் 11 Dec 2025 6:20 am

சென்னை ஐயப்பந்தாங்கல் மற்றும் போரூர் இடையே பேருந்துகளில் டிக்கெட் கட்டண வேறுபாடு!

சென்னை ஐயப்பந்தாங்கல் மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் கட்டண வேறுபாடு இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

சமயம் 11 Dec 2025 6:05 am

ஜோக்ஸ்..!

ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..!

விகடன் 11 Dec 2025 5:54 am

கடத்தல்கார பலூன்கள்; லித்துவேனிய அரசாங்கம் அவசரகால நிலை அறிவிப்பு!

பெலாரஸில் இருந்து வரும் கடத்தல்கார பலூன்கள் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக , லித்துவேனிய அரசாங்கம் இன்று (9) அவசரகால நிலையை அறிவித்துள்ளது. அதோடு, காவல்துறை மற்றும் எல்லைக் காவல்படையினருடன் இணைந்து இராணுவம் செயல்பட அனுமதிக்குமாறு நாடாளுமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிகரெட்டுகளைக் கடத்துவதற்காக பலூன்கள் காலநிலை பலூன்கள் காரணமாக வில்னியஸ் விமான நிலையம் மீண்டும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. பலூன்கள் சிகரெட்டுகளைக் கடத்துவதற்காக அனுப்பப்படுகின்றன என்றும், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸால் […]

அதிரடி 11 Dec 2025 3:30 am

பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த மாணவன்

பண்டாரவளையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில், பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளையில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் எத்தலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாயும் தந்தையும் வெளிநாட்டில் குறித்த மாணவன் பாடசாலையில் நாடகம் மற்றும் நடன கலைகளை துறையில் கல்வி பயின்று வருவதுடன் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு பரத நடனங்களிலும் கலந்துக்கொண்டுள்ளதாகவும் , […]

அதிரடி 11 Dec 2025 12:30 am

இம்ரான் கான், பிடிஐ கட்சிக்கு தடை: பாகிஸ்தான் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது பிடிஐ(பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப்) கட்சிக்கும் அரசியலில் தடை விதித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தபோது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முதன்மைக் குற்ரச்சாட்டு சுமத்தப்பட்டு ஊழல் வழக்குகளில் அவர் சிறையிலடைகப்பட்டுள்ளார். இந்த நிலையில், ‘எதிரி நாட்டின் கருவி’ என்று இம்ரான் கானையும் அவரது கட்சியையும் விமர்சித்து இந்தத் தீர்மானம் ஒருமனதாக பஞ்சாப் பேரவையில் செவ்வாய்க்கிழமை(டிச. 9) நிறைவேற்றப்பட்டது. […]

அதிரடி 11 Dec 2025 12:30 am

லலித் குகன் வழக்கு –கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடரிலும் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணம் வருவதற்கு என்ன அச்சுறுத்தல் இருக்கிறது என்பதனை நியாமான காரணங்களுடன் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் […]

அதிரடி 10 Dec 2025 11:30 pm

யார் இந்த இஷா சிங்? தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கர்ஜித்த பெண் அதிகாரி!

புதுச்சேரியில் நடைபெற்ற விஜய்யின் தவெக கூட்டத்தில், அனுமதி மீறி கூடிய கூட்டத்தை பார்த்து, புஸ்ஸி ஆனந்தை காவல் கண்காணிப்பாளர் இஷா சிங் காட்டமாக எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 10 Dec 2025 11:02 pm

Hockey Men's Junior WC: ஸ்பெயினை வீழ்த்தி 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்; இந்தியாவுக்கு வெண்கலம்!

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய 14-வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில், லீக் சுற்று போட்டிகள் முடிவில், ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. அடுத்ததாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின. அதைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ஸ்பெயின் vs அர்ஜென்டினா, இந்தியா vs ஜெர்மனி அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின் இதில், ஸ்பெயினும், ஜெர்மனியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில், சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஸ்பெயின் vs ஜெர்மனி இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணியளவில் தொடங்கியது. ஆட்டத்தின் முதற்பாதியில் ஜெர்மனியும், இரண்டாம் பாதியில் ஸ்பெயினும் ஒவ்வொரு கோல் அடிக்க ஆட்டநேர முடிவில் 1 - 1 எனப் போட்டி சமனில் முடிந்தது. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்-அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இதில், முதல் வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறின. இரண்டாவது வாய்ப்பிலும் ஜெர்மனி கோல் அடிக்காமல் மிஸ் பண்ண, ஸ்பெயின் கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின் மூன்றாவது வாய்ப்பில் இது அப்படியே தலைகீழாக மாறியது, ஸ்பெயின் கோல் அடிக்காமல் மிஸ் பண்ண மறுபக்கம் ஜெர்மனி கோல் அடித்து சமநிலைக்கு வந்தது. அடுத்து நான்காவது வாய்ப்பில் இரு அணிகளுமே கோல் அடிக்க 2 - 2 சமநிலை தொடர்ந்தது. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின் இறுதியில் சாம்பியனைத் தீர்மானிக்கும் கடைசி வாய்ப்பில் ஸ்பெயின் கோட்டைவிட ஜெர்மனி கோல் அடித்து 3 - 2 என வெற்றி வாகை சூடியது. இது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில் ஜெர்மனி வெல்லும் 8-வது சாம்பியன் பட்டம். இப்போட்டிக்கு முன்பாக நடைபெற்ற 3-ம் இடத்துக்கான போட்டியில் இந்திய அணி 4 - 2 என அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025; வெண்கலம் வென்ற இந்திய அணி!

விகடன் 10 Dec 2025 10:58 pm

பரந்தூர், ஓசூர விடுங்க... கன்னியாகுமரிக்கு விமான நிலையம் வருகிறதா? மத்திய அரசு பதில்

தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.

சமயம் 10 Dec 2025 10:48 pm

ஆஸ்திரேலியா: அமலுக்கு வந்தது சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை

சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளது. அந்தச் சட்டத்தின் கீழ், 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவா்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூ-டியூப், ஸ்னாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் போன்ற 10 சமூக ஊடகத் தளங்களில் கணக்கு உருவாக்கவோ, வைத்திருக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால், தொடா்புடைய தள நிறுவனங்களுக்கு 4.95 கோடி ஆஸ்திரேலிய டாலா் (சுமாா் ரூ. 296 கோடி) அபராதம் விதிக்கப்படும் என்று […]

அதிரடி 10 Dec 2025 10:30 pm

29-வது வயசுல எனக்கு நடந்த ஸ்பெஷலான விஷயம் அது..! - கார்த்திக் சுப்புராஜ்

'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. youtube.com/watch?v=R8Jbk2doeaQ&feature=youtu.be இவ்விழாவில் பேசியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் ரத்னகுமார் இயக்கிய 'மேயாத மான்' திரைப்படம் எங்களுடைய 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் என்பதில் ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு வரைக்கும் ரொம்ப ஸ்பெஷலான படம் அது. அதுக்கு அப்புறம் இப்போ ரத்னகுமாரோட '29' படத்தை லோகாஷ் கனகராஜோட இணைந்து தயாரிக்கிறதுல ரொம்ப சந்தோஷம். இந்தப் படத்த தனுஷ் சார் கிட்ட சொன்னோம். அவர் கொஞ்சம் பிஸியாக இருந்ததால அது நடக்கல. தனுஷ் பண்ன வேண்டிய படத்த வேற யார வச்சு எடுக்குறதுனு யோசிச்சு இந்தப் படம் தள்ளி போய்கிட்டே இருந்துச்சு. 'ஜிகர்தண்டா 2' படத்துல விது செட்டானியாக பிரமாதமாக நடிச்சிருப்பார். அதபார்த்து விது மேல ஒரு நம்பிக்கை வந்துச்சு. அதனால இந்தப் படத்துல அவரையே நடிக்க வச்சோம். ரொம்ப நல்ல நடிச்சிருக்கார் படமும் ரொம்ப நல்ல வந்திருக்கு. 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்‌ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி! இந்தப் படத்துல 29 வயசுல ஒருவர் படுகிற கஷ்டத்த, நடந்த நல்ல விஷயத்தப் பத்தி சொல்லுவாங்க. எனக்கு 29வது வயசு ரொம்ப ஸ்பெஷலானது. அப்போதான் 'பீட்சா' எடுத்தேன். முதல் படமே நல்ல வெற்றி. அதை என்னைக்கும் மறக்க முடியாது என்று பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்

விகடன் 10 Dec 2025 9:46 pm

சற்றுமுன் தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விடுப்பு! அவருக்கு பதில் நியமிக்கப்பட்டவா் யார் தெரியுமா?

தமிழக பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமயம் 10 Dec 2025 9:42 pm

என்னைப் பார்த்து 'மதன் கௌரியா?'என்று கேட்கிறார்கள் - இயக்குநர் ரத்ன குமார் கலகல பேச்சு!

'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. youtube.com/watch?v=R8Jbk2doeaQ&feature=youtu.be இதில் பேசியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், இப்போ நான் ரொம்ப பாசிட்டிவாக இருக்கிறேன் என எல்லாரும் சொல்றாங்க. அதுக்கு காரணம் வாழ்க்கையில நிறைய அடிவாங்குனதுதான். சினிமாவில் இயக்குநராக வேண்டுமென தனியார் ஐடி நிறுவன வேலையை விட்டு வந்தேன். என்னை இயக்குநராக பார்க்க 12 வருடம் ஆனது. எனக்கு 29 வயது இருக்கும் போதுதான் வீட்டிலும் கல்யாணம் செய்ய சொல்லி அழுத்தம் இருந்தது. முப்பது வயதை தொட்டுவிட்டால் ஜாதகத்தில் நிராகரித்து விடுவார்கள், வேலையிலும் நிராகரித்து விடுவார்கள், படங்களிலும் நிராகரித்துவிடுவார்கள். ஆனால் என்னுடைய 29 வது வயதில் நான் 'மது' என்னும் தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். பின்பு வேறொரு கதை எழுதி, 45 தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். அவர்கள் கட்டிப்பிடித்து பாராட்டுவார்கள். ஆனால் 'முதல் படமாக ஏன் இதை செய்ய வேண்டும். நீங்கள் இயக்கிய மது குறும்படத்தையே பண்ணலாமே' என சொல்வார்கள். 46வது நபராக கார்த்திக் சுப்புராஜும் அதைத்தான் சொன்னார். அவர்தான் என்னுடைய 'மது' குறும்படத்தை இன்னும் ஆறு குறும்படத்தோடு தியேட்டரில் ஸ்கிரீன் செய்தார்.  இயக்குநர் ரத்ன குமார் 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்‌ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி! நிறைய பேர் என்னை பார்ப்பார்கள் கைகுலுக்கி 'நீங்கள் விஜய் அண்ணா ரசிகரா? நீங்கள் லோகேஷ் கனகராஜ் நண்பரா? இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் போட்டாக் கூட யோவ் மதன் கௌரியா?' என்று கேட்பார்கள். அப்போ எனக்காக யார் வந்து என்னை பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பேன். அதை மனதில் வைத்து இந்த '29' படத்தை எடுத்திருக்கிறேன். எனக்கான அடையாளத்தை இப்படத்தின் மூலம் பெறுவேன் என்று பேசியிருக்கிறார் ரத்னகுமார்.

விகடன் 10 Dec 2025 9:37 pm

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை –ஐ.நா. கவலை!

மனித உரிமைகளுக்காகப் போராடும் பெண் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், சமூக ஊடகவியலாளர்கள் இணையதள வன்முறை, அதாவது ஆன்லைனில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவதாக ஐ.நா. தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான ஆன்லைன் வன்முறை கடந்த ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாகியிருப்பதாக இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட தலைமை ஆராய்ச்சியாளரான ஜூலி போசெட்டி குறிப்பிடும்போது தெரிவித்தார். இது தொடர்பாக, ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில், பெண் பத்திரிகையாளர்களைக் குறிவைத்து, நவீன தொழில்நுட்பமான ‘டீப் ஃபேக்’ உள்ளிட்ட மென்பொருள்களின் உதவியுடன் அவர்களது படங்களை […]

அதிரடி 10 Dec 2025 9:30 pm

திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி.. கொங்கு மண்டலத்தின் மனநிலை.. அரசியல் அலசல்கள்!

திருச்செங்கோடு தொகுதி, கொங்கு மண்டலத்தின் முக்கிய பகுதியாக இருந்தாலும், அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால், 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் ஈ.ஆர். ஈஸ்வரன் வெற்றி பெற்று, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சமயம் 10 Dec 2025 9:15 pm

கோவை: நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் செம்மொழிப் பூங்கா!

செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா மின்சார வாகனங்கள் செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா

விகடன் 10 Dec 2025 8:46 pm

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

ரஷியாவிடம் நிலத்தை விட்டுக்கொடுத்து அதன்பேரில் சமரசத்துக்கு இடமில்லை என்று உக்ரைனின் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி மீண்டுமொருமுறை வலியுறுத்திப் பேசினார். ரஷியாவும் உக்ரைனும் அமைதிப்பாதைக்குத் திரும்ப அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதில் முனைப்பு காட்டுகிறது. இந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட முக்கிய நிபந்தனையாக உக்ரைனின் நிலப்பரப்பில் சில பகுதிகளை ரஷியா வசமாக்கிக்கொள்ள வலியுறுத்துகிறது. உக்ரைனிடம் இதே கருத்தை அமெரிக்காவும் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி திட்டம் குறித்து, அந்த நாட்டு […]

அதிரடி 10 Dec 2025 8:30 pm

மன்னார் மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு… The post மன்னார் மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Dec 2025 8:18 pm

ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்!

இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும்,… The post ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Dec 2025 8:04 pm

மலையக உறவுகளிற்கு தொடர்ந்து அழைப்பு!

மலையக தமிழ் மக்களை வடக்கில் குடியேறுவதற்கான அழைப்பு தொடர்ச்சியாக வடக்கிலிருந்து விடுக்கப்பட்டுவருகின்றது. மலையக தமிழ் உறவுகளை இனியும் ஆபத்தான மலை விளிம்புகளில் இருக்காமல் வடக்கிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்; சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் ஆறு.திருமுருகன் . மலையக தமிழ் மக்களிடம் நாங்கள் நிலம் தருகிறோம். நீங்கள் வடக்கில் வந்து குடியேறுங்கள், வடக்கில் எவ்வளோ பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வடக்கில் எவ்வளவோ நிலம் இருக்கின்றது என்று அவர்களை நாம் கூப்பிட வேண்டும் அதுவே மனித நேயம், அதுவே தர்மமாகும். மலையகத்திலிருந்து தமிழ் மக்கள் யாராவது வடக்கில் குடியேற வந்தால், எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் அவர்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதற்கு எங்களை நாம் தயாராக்க வேண்டும். அதற்கு எம்மை போன்றவர்கள் பூரண ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கின்றோம். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பு வரும் என்றும் ஆறுதிருமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு 10 Dec 2025 7:46 pm

உதய கம்மன்பில : நெடுந்தீவு பக்கம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தற்போதுள்ள 893 வீடுகளுக்குப் பதிலாக 1,216 வீடுகளை சுத்தம் செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியின் தாக்கம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் அந்த மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,312 குடும்பங்களைச் சேர்ந்த 51,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர. இரண்டு வீடுகள் முழுமையாகவும் 322 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய சூழலில், அரசாங்கம் சமீபத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்காக 25,000 ரூபா ஒதுக்கியுள்ளது.அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 36கோடியாகும். இதில், 1216 வீடுகளுக்கு நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்கு 3கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர அறிக்கையின்படி, நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 893 ஆகுமென உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு 10 Dec 2025 7:42 pm

உதவிப் பொருட்களுடன் வந்திறங்கியது ரஷ்ய விமானம்

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, 35 மெட்ரிக் தொன் எடையுள்ள மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் ரஷ்ய விமானம் ஒன்று சிறிலங்கா வந்துள்ளது. உதவிப் பொருட்களை ஏற்றிய ரஷ்யாவின் IL-76 சரக்கு விமானம் இன்று மதியம் 1.10 மணியளவில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தில், நடமாடும் மின் நிலையம், கூடாரங்கள் மற்றும் அரிசி, சீனி மற்றும் தாவர

புதினப்பலகை 10 Dec 2025 7:39 pm

ஜேவிபி கைவிட்ட லலித்:கோத்தாவிற்கு பிரச்சினை!

ஜேவிபியினால் கைவிடப்பட்ட அதன் முன்னாள் செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அவர்களை காணாமல் ஆக்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டுள்ளார். மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இருவரும் ஜேவிபியிலிருந்து விலகி முன்னணி சோசலிசக் கட்சியில் இணைந்த நிலையில் 2011 டிசம்பர் 10 ஆம் திகதி கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்னணி சோசலிசக் கட்சியின் கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்திருந்தார்.

பதிவு 10 Dec 2025 7:37 pm

தாய்லாந்தை எதிா்த்து கடும் போா்: கம்போடியா சூளுரை

தங்கள் நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய தாய்லாந்துக்கு எதிராக கடுமையாகப் போரிடத் தயாா் என்று கம்போடிய அதிபா் ஹன் மானெட் சூளுரைத்துள்ளாா். புதிய எல்லை மோதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதிபா் மானெட் இவ்வாறு கூறியுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை தாய்லாந்து தன்னிச்சையாக மீறயுள்ளது. இது அந்த நாட்டின் போா் சூழ்ச்சியாகும். அதை எதிா்த்து கடுமையாகப் […]

அதிரடி 10 Dec 2025 7:30 pm

கோட்டாவுக்கு என்ன உயிர் அச்சுறுத்தல்?- சத்தியக்கடதாசி சமர்ப்பிக்க உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருவதில் என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை சத்தியக் கடதாசி மூலம் தெரியப்படுத்துமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 இல் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது பாதுகாப்பு அமைச்சின்

புதினப்பலகை 10 Dec 2025 7:14 pm

காணாமல் போன 203 பேருக்கும் இறப்புச் சான்றிதழ்

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக காணாமல் போனதாகக் கூறப்படும் 203 நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகம் துறை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு அரசாங்க வர்த்தமானியின்படி, திடீர் பேரிடர் நிலையில் காணாமல் போன ஒருவரைப் பற்றி இரண்டு வாரங்களுக்குப் பின்னர் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க முடியும் என்று பதிவாளர் ஜெனரல் சஷி தேவி ஜலதீபன் தெரிவித்தார். தற்போது காணாமல் போன 203 பேரின் குடும்பங்களுக்கு அரசாங்க இழப்பீட்டை விரைவாகப் பெற உதவும் வகையில் திணைக்களம் இந்த முடிவை எடுத்துள்ளது. தேவையான சட்ட விதிகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான அதிகாரம் அந்தந்த மாவட்டத்தின் துணைப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவின் காரணமாக ஒரு நபர் உறவினர் அல்லது நண்பர் காணாமல் போயுள்ளார் என்பதை சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் உறுதிப்படுத்தினால். பேரிடரால் பாதிக்கப்பட்ட காணாமல் போன நபர் குறித்து எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படாவிட்டால், பிரதேச செயலாளர் விண்ணப்பத்தை அங்கீகரிக்கலாம். பின்னர் அது பதிவாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய துணை அல்லது உதவி பதிவாளர் நாயகத்தால் முறையாக அங்கீகரிக்கப்படும். பேரிடரில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 611 நபர்களில் 126 பேருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் ஜெனரல் சஷி தேவி ஜலதீபன் மேலும் குறிப்பிட்டார்.

பதிவு 10 Dec 2025 7:08 pm

அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்

video link- https://fromsmash.com/-avPZzfe5O-dt அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப-தலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா தேவி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டவர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர். […]

அதிரடி 10 Dec 2025 7:04 pm

அதிமுகவை அடமானம் வைத்த பழனிசாமி.. 10 தேர்தல்களில் தோற்ற தோல்விசாமி.. அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து போய் அதிமுகவை அமித் ஷாவிடம் பத்திரமாக அடமானம் வைத்த எடப்பாடி பழனிசாமி என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி விமர்சித்து உள்ளார்.

சமயம் 10 Dec 2025 6:58 pm

தம்பலகாமத்திால் கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள்

சீரற்ற காலநிலை காரணமாக மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது. அந்த வகையில் தம்பலகாமம் பிரதேச கோயிலடியை அண்டிய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓரிரு நாட்கள் பெய்த தொடர்ச்சியான கனமழை காரணமாக நெற்செய்கை வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏற்கனவே விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி சில வயல்களில் மீண்டும் நெற்செய்கைக்காக விதைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். டித்வா புயலின் விளைவால் ஏற்பட்ட மழை, வெள்ளப்பெருக்கு அதிகரிப்பினாலும் பல வயல் நிலங்கள் அழிவுற்றிருந்த நிலையில், அவை இயல்பு நிலைக்கு திரும்பி, பின், மீண்டும் தற்போது வெள்ள நீரில் மூழ்கியதால் பாரிய நட்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர். இதனால் தம்பலகாமம் சம்மாந்துறைவெளி, பிச்சைவெளி கோயிலடி பகுதி நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தர ஆவன செய்யுமாறு உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

பதிவு 10 Dec 2025 6:48 pm

வவுனியாவிலும் வலிந்து காணாமல் போன உறவுகள் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (10) இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். இந்த மனித உரிமைகள் தினத்திலும் எமது உறவுகள் எங்கே? எமது உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என அவர்கள் வலியுறுத்தினார்கள். அத்துடன் அரசியல் கைதிகளுக்கான விடுதலை, பௌத்தமயமாக்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததுடன் சர்வதேச நாடுகள் மனித உரிமை தினத்திலாவது தங்களுடைய துன்பங்களை புரிந்துகொண்டு தமக்கான தீர்வினை பெற்றுத் தருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் பலரும் கலந்துகொண்டு கண்ணீர் மல்க இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 10 Dec 2025 6:43 pm

Seethalakshmi V Iyer elevated as Senior Vice President – Entertainment Ad Sales (Tamil & Malayalam Cluster) at JioStar

Mumbai: JioStar has announced the elevation of Seethalakshmi V Iyer as Senior Vice President – Entertainment Ad Sales for the Tamil & Malayalam Cluster. She was previously positioned as Director Sales at the company.Seethalakshmi brings extensive experience in media, advertising, and sales, having worked with leading companies including The Walt Disney Company, Star TV Network, and Zee Entertainment Enterprises Limited.Announcing her new role on LinkedIn, Seethalakshmi said, I’m happy to share that I’m starting a new position as Senior Vice President - Entertainment Ad Sales (Tamil & Malayalam Cluster) at JioStar! Starting her career as Senior Manager – Sales at ZEEL in 2005, Seethalakshmi has developed deep expertise in Business Development, Media Planning, Advertising Sales, Market Research, Key Account Management, and more.Her appointment underscores JioStar’s commitment to strengthening its advertising sales leadership and expanding its reach across the Tamil and Malayalam entertainment markets.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Dec 2025 6:42 pm

அம்பாறையில வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டம்

அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில், தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று புதன்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப-தலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா தேவி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டவர்களும் பல பொதுமக்களும் கலந்துகொண்டனர். இங்கு கருத்து வெளியிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டோர் தமது உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவதாகவும், மாறி மாறி வருகின்ற ஒவ்வோர் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை மறுப்பதாகவும், மனித உரிமைகளை மதிக்கவுமில்லை எனவும், தொடர்ந்தும் வீதி வீதியாகத் தாம் தமக்கான நீதிக்காகப் போராடுவதாகவும் கூறினர். ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அண்மையில் ஊடகவியலாளர்கள் குமணன் மற்றும் கஜகிரீவன் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டனர் எனவும் தம்மைப் போன்ற செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும், வடக்கு, கிழக்கின் பல இடங்களிலும் தொல்லியல் எனும் போர்வையில் காணி அபகரிப்புகள், புத்தர் சிலை நிறுவுதல் எனும் போர்வையில் அபகரிப்புகள் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாகவும் கூறினர். தமிழர்களுடைய உரிமை, இனப்படுகொலை விவகாரங்களிலும் மற்றும் விசேடமாக செம்மணி போன்ற வடக்கு, கிழக்கிலே காணப்படும் மனிதப் புதைகுழிகள் விவகாரம் போன்றவற்றிலும் சர்வதேச தலையீட்டுடனான விசாரணை பொறிமுறைகள் உருவாக்கப்படவேண்டும் எனவும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திலும் மனித உரிமை விடயங்களிலும் சர்வதேசத்தினுடைய மேற்பார்வையும் தலையீடும் வேண்டும் எனவும் இந்த மனித உரிமைகள் தினத்திலும் சர்வதேசத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

பதிவு 10 Dec 2025 6:42 pm

அண்ணனுக்காகப் பேசிய சகோதரியிடம் 2.5 மணி நேரம் விசாரணை

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தலையில் காயமடைந்து கடந்த ஒரு மாத காலமாக கோமா நிலையில் சிகிச்சை… The post அண்ணனுக்காகப் பேசிய சகோதரியிடம் 2.5 மணி நேரம் விசாரணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Dec 2025 6:41 pm

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு பயிற்சியில் 20 சதவீதம் வழங்க வேண்டும் - மருத்துவர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் 20 சதவீத பயிற்சி இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

சமயம் 10 Dec 2025 6:34 pm

: நிதி உதவி மறுத்த கிராம சேவையாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பேரிடரின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமது வீட்டிற்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் ரூபாய் 25,000 நிதி உதவியை வழங்க… The post : நிதி உதவி மறுத்த கிராம சேவையாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Dec 2025 6:33 pm

யாழில். 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெறுவோரின் பெயர் பட்டியல் இன்று முதல் காட்சிக்கு …

பேரிடரில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்று இருந்தால் அது தொடர்பில் உடனடியாக யாழ் . மாவட்ட செயலகத்தில் 30ஆம் இலக்க அறையில் இயங்கும் ,மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் நிதி உதவி பெற தகுதியானவர்கள் என தெரிவானோரின் பெயர்கள் அடங்கிய விபரம் இன்றைய தினம் புதன்கிழமை முதல் பிரதேச செயலக ரீதியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினை எவரும் பார்வையிட முடியும். அவ்வாறு […]

அதிரடி 10 Dec 2025 6:30 pm

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் –காரணத்தை பாருங்க..

இளம்பெண் ஒருவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்டார். சிலையுடன் திருமணம் உத்தரப் பிரதேசம், பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி ஷர்மா(28) என்ற இளம்பெண், தனது ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு பாரம்பரிய இந்து சடங்கின்படி கிருஷ்ணர் சிலையைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்க, ஒரு பிரமாண்டமான விழாவாக நடைபெற்றது. இவர் பிருந்தாவனில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலுக்குச் சென்றபோது, அங்கு அவருக்குப் பிரசாதமாக ஒரு தங்க மோதிரம் கிடைத்தது. என்ன […]

அதிரடி 10 Dec 2025 6:30 pm

⚖️ லலித் –குகன் வழக்கு: யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? – கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி! ️

கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின்… The post ⚖️ லலித் – குகன் வழக்கு: யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? – கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி! ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Dec 2025 6:26 pm

கடமையில் உயிர் நீத்த விமானி மற்றும் 5 கடற்படையினருக்கு மரியாதை!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில், துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த விமானி ஒருவருக்கும்,… The post கடமையில் உயிர் நீத்த விமானி மற்றும் 5 கடற்படையினருக்கு மரியாதை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Dec 2025 6:22 pm

RSPL Welfare Foundation Partners with Wheelchair Basketball Federation of India for Unity Cup 2025 – Celebrating Inclusive Sports and Cultural Exchange

Noida: RSPL Welfare Foundation joined hands with the Wheelchair Basketball Federation of India (WBFI), to support the Unity Cup 2025 – the India-Nepal Wheelchair Basketball Championship & Cultural Exchange at the Noida Indoor Stadium, Uttar Pradesh.In collaboration with the South Asian Para Sports Federation (SAPSF), Yuva Kranti Sena (YKS), and the Sport Works 360 Foundation, the Unity Cup 2025 successfully brought together wheelchair basketball athletes from both India and Nepal for friendly basketball competitions and valuable cross-cultural exchange.The event was organized on the occasion of International Day of Persons with Disabilities 2025, aligned with the United Nations' theme for the year, “Fostering Disability Inclusive Societies for Advancing Social Progress.” It also saw senior dignitaries from the Paralympic Committee of India, Sports Authority of India, representatives from Nepal and Bhutan, along with organisations supporting disability inclusion. Their presence offered crucial support to the athletes, celebrating the spirit of inclusion in sports.Speaking about RSPL’s vision to create inclusive society, Sushil Bajpai, Director, RSPL said, “At RSPL, we are committed to contributing towards a more inclusive society — one that provides equal opportunities and celebrates ability in all its forms. Supporting para-sports is not just an act of responsibility, but a reflection of our belief in empowerment, resilience, and human potential.” Speaking about RSPL’s commitment towards social inclusion, Mamta Malik – Head CSR & Corporate Communications said, “Unity Cup 2025 stands as a harbinger of the growing impact of inclusive sports. Watching these incredible athletes display passion, resilience, and teamwork is deeply inspiring. At RSPL Welfare Foundation, we believe in the power of sports to unite communities, challenge perceptions, and create platforms where talent can shine without limitations. Our commitment remains focused on fostering opportunities that enable individuals to realise their potential and participate with dignity on national and international stages.” Earlier this year, in April 2025, RSPL Welfare Foundation (RSPLWF), in collaboration with Wheelchair Basketball Federation of India (WBFI), also supported the ‘Advanced Wheelchair Basketball Camp’ for India’s U25 team. The contribution played a crucial role in enhancing the team’s skills and preparing them for national and international competition. RSPLWF continues to reinforce its commitment to empowering para-athletes across various sports, including javelin, wrestling, and table tennis, by helping them achieve their aspirations and represent India on the world stage.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Dec 2025 6:16 pm

யாழில். விமான படை , கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி

நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை ஹெலி விபத்தில் மரணமான விமானிக்கும் , சுண்டிக்குளம் பகுதியில் முகத்துவாரம் வெட்ட சென்ற நிலையில் உயிரிழந்த 05 கடற்படையினருக்கு அஞ்சலி செலுத்தி யாழ்ப்பாணத்தில் பதாகை கட்டப்பட்டுள்ளன. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த போது கடந்த 30ஆம் திகதி ஹெலி ஒன்று கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது. அதன் போது, விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய (வயது 41) என்பவர் உயிரிழந்தார். அதேவேளை சுண்டிக்குளம் […]

அதிரடி 10 Dec 2025 6:10 pm

யாழ்.போதனா வில் கோமா நிலையில் சிகிசிச்சை பெறும் விளக்கமறியல் கைது - சகோதரியிடம் இரண்டரை மணி நேரம் தீவிர விசாரணை

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவரது சகோதரியை , யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் புதன்கிழமை சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்லாத குற்றத்திற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்க மறியலில் தடுத்த வைக்கப்பட்டிருந்த நிலையில் ,தலையில் காயம் ஏற்பட்டு தற்போது கடந்த 11ஆம் திகதி முதல் கோமா நிலையில் சிகிசிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் குறித்த இளைஞனின் சகோதரி ஊடக சந்திப்பில், அண்ணாவை கடந்த 08ஆம் திகதி வைத்திய சாலையில் சென்று பார்த்த போது அடித்து போட்டாங்கள் என தன்னிடம் சொன்னார் என கூறி இருந்தார். அந்நிலையில் , தாம் அடிக்கவில்லை. சிறையில் தடுக்கி விழுந்தார் என தெரிவித்த யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகம் . இளைஞனின் சகோதரி உண்மைக்கு புறமான தகவலை தெரிவித்தார் என பெண்ணிற்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சுமார் இரண்டரை மணி நேரமாக விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர். அதேவேளை , குறித்த இளைஞன் ஊரில் நடைபெற்ற கைக்கலப்பு தொடர்பான வழக்கு விசாரணையையே எதிர்கொண்டு வரும் நிலையில் , சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்ததாக சில ஊடகங்களில் இளைஞனுக்கு கசிப்பு வழக்கு உண்டு என்றும் , இளைஞனுக்கு கசிப்பு சிக்என சிறைச்சாலை நிர்வாகம் கண்டு பிடித்த புதுவகையான நோய் தொடர்பில் வெளியான செய்திகளால் இளைஞனின் குடும்பம் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

பதிவு 10 Dec 2025 6:10 pm

யாழில். பேரிடரில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு நிதியுதவி தரவில்லை என கிராம சேவையாளருக்கு எதிராக முறைப்பாடு

பேரிடரின் போது யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க மறுத்த கிராம சேவையாளருக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் உள்ள புதிய வீட்டு திட்டத்தில் வசிக்கும் 16 வயதான மாணவனே முறைப்பாடு செய்துள்ளார். தந்தை இல்லாத நிலையில் , தாயுடன் கல்லுண்டாய் புதிய வீட்டு திட்ட வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அம்மா வேலை நிமர்த்தமாக கொழும்பில் தங்கியுள்ளார். நான் தனியே அந்த வீட்டில் இரவு நேரங்களில் தங்க முடியாததால் , குருநகர் பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்குவேன். இந்த நிலையில் மழை ஆரம்பித்தால் எமது வீடு வெள்ளத்தில் மூழ்குவது வழமையானது. அதனால் மழை ஆரம்பித்ததால் , நான் தொடர்ச்சியாக பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தேன். எமது வீட்டினுள் வெள்ளம் சென்று இருந்தது. இந்த நிலையில் , பேரிடரால் எமது வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் , அரசாங்கத்தால் வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்காக எமது பகுதி கிராம சேவையாளரிடம் பதிவுகளை மேற்கொள்ள சென்ற வேளை , அவர் எமது பதிவுகளை ஏற்கவில்லை. வெள்ளம் ஏற்படும் போது , வீட்டில் எவரும் வசிக்கவில்லை. என கூறி எமது பதிவை பதிய மறுத்துள்ளார். ஆனால் எமது அயலவர்கள் சிலரும் வெள்ளம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அங்கிருந்து வெளியேறி உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. எமது குடும்பத்தை மாத்திரமே கிராம சேவையாளர் திட்டமிட்டு புறக்கணித்துள்ளார் இது தொடர்பில் அம்மா மேலதிகாரிகளுடன் கதைத்த போதிலும் , வீட்டில் வசிக்க வில்லை என கூறி நிதியுதவி தரவில்லை. எமக்கு அந்த நிதியுதவியை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன் என மாணவன் மேலும் தெரிவித்தான்

பதிவு 10 Dec 2025 6:04 pm

ஏர் இந்தியாவின் ‘Fog Care’ திட்டம்.. விமான சேவை பாதிப்பை குறைக்க பலே ஐடியா!

அடர்ந்த மூடுபனி காரணமாக விமான சேவையில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க ஏர் இந்தியா 'Fog Care' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமயம் 10 Dec 2025 5:57 pm

இந்தியாவில் ஊடுருவலை தடுக்க SIR! நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம்- அனல் பறக்க பேசிய ராகுல் காந்தி

இந்தியாவில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் ஏன் தேவை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம் அளித்தார். அப்போது ராகுல் காந்தி அனல் பறக்க பேசி வாக்குவாதம் செய்தார்.

சமயம் 10 Dec 2025 5:57 pm

News18 Gujarati’s Rising Gujarat 2025 Showcases Gujarat’s Progressive Vision in an Exclusive Series

Gujarat: News18 Gujarati recently presented Rising Gujarat 2025, an exclusive interview series featuring prominent leaders and ministers of Gujarat. The series spotlighted the state’s significant developmental strides and its strategic vision for the future.The series commenced with an insightful interview with Education Minister Dr. Pradyuman Vaja, who highlighted the expanding opportunities in the education sector. He emphasized the government’s resolute focus on enhancing government schools to ensure equitable and quality education across the state.In a detailed conversation, Agriculture Minister Jitu Vaghani discussed the government’s timely and proactive interventions in mitigating the adverse effects of unprecedented and unseasonal rainfall on farmers, thereby fostering agricultural resilience and sustained prosperity.Energy and Petrochemicals Minister Rushikesh Patel elaborated on the pivotal role of renewable and solar energy in driving Gujarat’s sustainable development. He also shed light on the state’s pioneering efforts in green energy adoption.A notable highlight of the series was the interview with Deputy Chief Minister Harsh Sanghavi, who outlined Gujarat’s extensive preparations for its 2036 Olympics bid. He also spoke about the creation of world-class sports infrastructure that contributed significantly to Gujarat securing the 2030 Commonwealth Games, strengthening the state’s rising stature in global sports.He also shared insights on the exemplary performance of the Gujarat Police, particularly their success in curbing drug trafficking and intercepting large consignments before they could reach end consumers.Concluding the series, Chief Minister Bhupendra Patel delivered a compelling address, articulating Gujarat’s strategic contributions toward the vision of a developed India by 2047. He highlighted key sectors of Gujarat’s robust economic growth and reaffirmed the state’s role as a driving force in national development.Rising Gujarat 2025, presented by News18 Gujarati, offers a comprehensive and inspiring portrayal of the state’s transformative journey and its forward-looking aspirations. Tune in to watch the telecast on 13th and 14th December at 2:30 PM on News18 Gujarati. Rising Gujarat 2025 is powered by Reliance Industries Ltd., with special partner Tirupati Edible Oils Ltd.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Dec 2025 5:57 pm

நடக்குமா நிவேதா பெத்துராஜ் திருமணம்? திடீரென நடந்த பரபரப்பு சம்பவம்!

சென்னை : தமிழ்-தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், துபாய் தொழிலதிபர் ரஜித் இப்ரானுடன் 5 ஆண்டுகள் காதல் கொண்டு வந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அப்போது அவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் உறவைப் பகிர்ந்து, விரைவில் திருமணம் நடக்கும் என்று ரசிகர்களை மகிழ வைத்தனர். ஆனால் தற்போது இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அந்ஃபாலோ செய்ததும், சேர்ந்து இருந்த அனைத்து போட்டோக்களையும் நீக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் இது உறவு […]

டினேசுவடு 10 Dec 2025 5:52 pm

Trehan Iris appoints Milind Soman as Wellness Advisor

Gurugram: Trehan Iris, one of India’s most trusted real estate pioneers with a legacy of over seven decades, has unveiled a major wellness-led strategy aimed at reimagining the future of living and working spaces. Guided by its philosophy, “Nourish Your Being,” the company is bringing holistic well-being to the forefront by integrating biophilic design, nature-driven environments, and mindful community experiences across all upcoming developments.In a significant move to strengthen this vision, Trehan Iris has appointed actor, model, film producer, fitness and wellness icon Milind Soman as its Wellness Advisor. Known for championing endurance, mindful living, and sustainable wellness practices, Milind will play a key role in shaping the wellness blueprint for Trehan Iris’ forthcoming projects in Gurugram and Noida. His expertise will help create built environments that inspire residents and professionals to embrace healthier, more conscious lifestyles.Speaking about the collaboration, Abhishek Trehan, Executive Director, Trehan Iris, said, “At Trehan Iris, we believe that wellness is the ultimate luxury. Our partnership with Milind Soman marks a significant step in translating this belief into built environments where every design element, amenity, and experience fosters holistic well-being. His philosophy of balanced, mindful living aligns seamlessly with our vision for the future of real estate.” Echoing this sentiment, Aman Trehan, Executive Director, Trehan Iris , added, “Real estate must evolve to meet the changing needs of people, and wellness is central to that evolution. With Milind Soman onboard, we’re bringing sharper insight into designing spaces that encourage healthier lifestyles, from the architecture to the everyday experiences. This partnership reinforces our mission to build the next generation of wellness-led developments.”Sharing his excitement about the association, Milind Soman said, “Wellness is not about doing something extra, it's about integrating healthy habits and mindful choices into everyday life. I’m glad to associate with Trehan Iris as their Wellness Advisor to shape communities that make well-being an intrinsic part of how people live, move, and connect.” Through this collaboration, Trehan Iris deepens its commitment to redefining luxury real estate by placing holistic wellness at the heart of its community planning, architecture, and amenities. The company continues to build future-ready spaces that inspire harmony, balance, vitality, and a deeper, more meaningful connection with nature.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Dec 2025 5:49 pm

CLAT 2026 ஆன்சர் கீ வெளியீடு; பதிவிறக்கம் செய்வது எப்படி? நேரடி லிங்க் இதோ

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை சட்டப்படிப்புகளில் சேருவதற்கான நடத்தப்படும் கிளாட் நுழைவு தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு (CLAT Answery Key 2026) இன்று வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://consortiumofnlus.ac.in/clat-2026/ என்ற இணையதளத்தில் விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சமயம் 10 Dec 2025 5:41 pm

India’s AI-native future requires a careful balance between hyper-personalisation ambition and regulatory responsibility: LS Digital’s report

MUMBAI: LS Digital, a leading independent Digital Business Transformation (DBT) company, has released an analysis on the state of AI adoption in India. Titled, The Rise of AI-Native Advertising in India: Hyper-Personalisation Meets Vernacular Scale, this report leverages LS Digital’s proprietary ‘Quilt’ methodology, an AI-led framework that applies machine learning to search, social and public web data to uncover themes, trends and consumer insights.One of the key highlights of the report is India’s AI paradox, a powerful gap between consumer literacy and industry capability. Consumers are still learning the basics of digital advertising, yet the industry is already building advanced, AI-driven programmatic models at scale. This environment is driving innovation, leading to Hyper-personalisation becoming the single biggest theme, accounting for 47% of all industry discourse.Key Insights from the Report1. India has unusually high trust in AI, despite a foundational knowledge gap Consumer Learning: 99% of consumer search queries are about basic definitions of native advertising. Only 1% mention specific platforms like Google or YouTube. AI Comfort: 82% of consumers are open to AI-led recommendations. Content Trust: 48% trust AI-generated content, which is far higher than global levels. This creates a rare opportunity where high AI confidence and low foundational knowledge pave the way for the development of AI-native ad models in India.2. Hyper-personalisation is the biggest talking pointA staggering 47% of all industry conversations are about hyper-personalised ad experiences. This is driven by a consumer base that expects tailored content and is open to AI-enabled targeting.3. Vernacular AI is emerging as a strategic priority Engagement Lift: Vernacular content drives 30-40% higher engagement than English-only messaging. Discourse Share: 11% of the industry’s conversation is now focused on Vernacular AI. Focus Breakdown: 70% is about multilingual content and cultural adaptation. 10% focuses on regional voice interfaces. 10% focuses on dialect-level targeting. This signals a critical shift towards reaching the next billion users by leveraging linguistic diversity.4. AI is democratising the ‘Bharat’ marketSocial commerce in India is projected to hit USD 70 billion by 2030. A significant “Democratising Bharat” conversation is on the rise that represents: 50% of the focus is on empowering SMEs with self-serve AI tools that offer big-brand targeting precision. 13% highlights Tier 2/3 city growth. 13% addresses rural digital inclusion through voice-led, low-cost tools. This showcases that AI is becoming the equalizer that gives smaller businesses metro-level sophistication.5. Human-AI creativity is the preferred model73% of Marketers believe the AI should support, not replace, human creativity. The “Creative Balance” theme (14% of conversation) shows: 77% focuses on AI enhancing creative work through rapid, high-volume asset generation. 23% stresses the need for human oversight, cultural understanding, and ethical judgment. The winning formula is thus the amalgamation of AI for scale and speed and humans for nuance and emotion.[caption id=attachment_2484104 align=alignleft width=228] Prasad Shejale [/caption]Speaking about the findings, Prasad Shejale, Founder & CEO, LS Digital, said “India is uniquely positioned. We are managing a paradox where the consumer is learning the basics yet is incredibly trusting of AI-driven personalisation. Our findings confirm that success lies in mastering the 'vernacular imperative.' Brands that prioritise scaling multilingual creative, which delivers 30-40% more engagement, while building responsible, privacy-preserving AI models, will be the ones to dominate the $70 billion social commerce wave by 2030.” Along with technological acceleration, the report highlights the growing need for responsible advertising. The rising regulatory landscape, including the Digital Personal Data Protection Act (DPDPA), necessitates a shift towards consent-based, first-party data strategies and privacy-preserving AI models.The report highlights that India’s AI-native future requires a careful balance between hyper-personalisation ambition and regulatory responsibility, driving a fundamental shift from event-based advertising to continuous, real-time, micro-moment contextual marketing.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Dec 2025 5:37 pm

விஜய் பொதுக்கூட்டத்தில் அதிரடி காட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி.. யார் இந்த இஷா சிங்?

புதுச்சேரி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் தொடங்கவில்லை. கடந்த மாதம் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாக உள்அரங்கத்தில் விஜய் மக்கள் சந்திப்பில் பங்கேற்று பேசினார். கரூர் சம்பவத்தை அடுத்து 72 நாட்களுக்குப் பின் பொதுவெளியில் புதுச்சேரி உப்பளம் […]

அதிரடி 10 Dec 2025 5:30 pm

Consumers spend an average of 2.17 hours per day on mobile screens, while 78% of viewers skip ads during playback: Hansa Research

MUMBAI: Hansa Research today announced the launch of an independent, subscription-based advertising impact measurement service for ads on digital video platforms. The study will enable brands to measure the impact of their advertising across digital video platforms like YouTube, Instagram, Facebook, OTT and other video channels viewed on the mobile screen. Praveen Nijhara, CEO, Hansa Research, said, “The objective is to equip brands with meaningful insights that can enable clearer decision-making on media planning and campaign optimisation for digital video platforms. Insights on the Creative will be a bonus. There is a lot of investment going into these platforms and an independent measure will help.” The study will measure advertising impact while campaigns are live and against the brand’s specific target audience. With a sample of 2,500 respondents per month, aggregating 30,000 in a year, the study will be the largest of its kind. The sample will be across ten cities, comprising users aged 18 and above, and will be done through face-to-face interviews with physical verification of Apps on the mobile. Advertisers can subscribe for a one-month study for only Rs 9 lakh per brand. Only three brands will be studied during any one month. Subscription will be on first-come-first-served basis.The study will assess mind measures such as ad recall, message comprehension, relevance, likeability and purchase intent, along with detailed visibility into consumer viewing behaviour such as muting, skipping, fatigue, whether ads are noticed or ignored, and sharing and forwarding patterns. Developed in consultation with media planners, the study will provide information on the viewing environment, platform consumption and exposure frequency.A key feature of the independent study is the Category Deep Dive, which places brand performance within a competitive context. This includes insights into category-level advertising recall, along with benchmarks versus others in the category.Findings from an independent pilot study conducted among 3,000 respondents through face-to-face interviews reveal that consumers spend an average of 2.17 hours per day on mobile screens, while 78% of viewers skip ads during playback. Much of this viewing occurs in public or shared spaces, often on mute. Despite high exposure, brand recall remains limited, with respondents recalling an average of around 1.5 brands.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Dec 2025 5:25 pm

தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை - மக்களவையில் திருமா

நாடாளுமன்ற லோக் சபாவில் SIR குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய மக்களவையில் SIR குறித்துப் பேசியிருக்கும் எம்.பி திருமாவளவன், எதிர்கட்சிகள் எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் தேர்தலை ஒட்டி அவசர அவசரமாக நடத்தப்படும் SIR-யை நிறுத்தாமல் நடத்தி வருவது அதிர்ச்சியளிக்கிறது. SIR-யை தேர்தயொட்டி அவசர அவசரமாக நடத்தாமல் தேர்தல் அல்லாத பிற காலங்களில் நடத்தவேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது வழக்கமாக நடைபெறுவதைப்போல இல்லாமல், மக்களின் குடியுரிமையை பரிசோதனை செய்யும் செயல்முறையாக இருக்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது. SIR - சிறப்பு தீவிர திருத்தம் ``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள் குடியுரிமையை சோதனை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா? அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அது அரசியல் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது. வாக்குரிமையை மட்டுமல்லாமல் மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சியாக இருக்கிறது. வாக்குரிமை இந்திய மக்களின் அடிப்படை உரிமை, அதை பறிக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் முக்கியாமான தூண். ஆனால், தேர்தல் ஆணையம் இன்று சுதந்திரமாகச் செயல்படமுடியவில்லை. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஏதுவாக செயல்பட்டு வருதை நாடே இன்று உணர்ந்திருக்கிறது. மக்களவையில் திருமா CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா தேர்தல் ஆணையம் மக்களின் குடியுரிமையைப் பரிசோதிக்கும் உரிமையை பெற்றிருக்கவில்லை. அதனால் குடியுரிமையைப் பரிசோதிக்கும், இந்த அரசியல் சட்டத்தை மீறிய SIR-யை உடனே நிறுத்தவேண்டும். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒருகோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது. இந்த EVM தேர்தல் முறையை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 10 Dec 2025 5:24 pm

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு? அரசு திட்டம்.. விரைவில் சட்டத்திருத்தம்!

மாதவிடாய் விடுப்பு குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து கர்நாடக அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

சமயம் 10 Dec 2025 5:23 pm

Apollo Hospitals Chennai launches unified stroke awareness corridor to educate public on rapid response

Chennai: Apollo Hospitals Chennai has unveiled a unique Stroke Awareness Corridor in Chetpet, unifying five major hoardings from different outdoor agencies into a single, cohesive narrative aimed at promoting rapid stroke care and public preparedness.Strategically placed along a high-traffic stretch, the corridor guides commuters through a clear sequential message highlighting Apollo Hospitals’ advanced stroke care capabilities. The hospital has performed over 5,000 stroke treatments—the highest in Chennai—supported by nine neuro cath labs, zero-wait pathways, and a dedicated 24x7 stroke-ready team, making it Tamil Nadu’s largest advanced stroke network.The campaign emphasizes the urgency of immediate response during a stroke, noting that nearly 1,90,000 brain cells are lost every minute. Through this integrated corridor, Apollo Hospitals ensures that patients across its Chennai facilities receive uniform, high-quality, time-sensitive care for both ischemic and hemorrhagic strokes.OPN Advertising conceptualized the corridor, bringing multiple hoardings together to create one compelling visual that builds awareness at scale. “Every minute counts during a stroke, and people need to know where expert care is accessible without delay,” the hospital stated. “This corridor strengthens our ongoing efforts to drive early recognition and faster response across all age groups.” The initiative complements Apollo Hospitals’ broader outreach, including social media campaigns, press interactions, patient recovery stories, stroke conclaves, and digital out-of-home media across Chennai.With nearly 13 million stroke cases globally each year, and around 10,000 reported annually in Chennai alone, the campaign underscores the growing importance of awareness, preparedness, and timely medical intervention—especially as stroke cases increasingly affect younger populations.Through the Stroke Awareness Corridor, Apollo Hospitals aims to save lives by promoting early detection, rapid treatment, and increased public confidence in expert stroke care.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Dec 2025 5:19 pm

யாழில். மிதிபலகையில் நின்று முகம் கழுவியவர் வீதியில் தூக்கி வீசப்பட்டதில் உயிரிழப்பு

பேருந்தின் பின் பகுதி மிதிப்பலகையில் நின்று முகம் கழுவியவர் , தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் குறித்த நபர் அனுராதபுரத்தில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்ததும் , பேருந்தில் இருந்து எழுந்து , ஓடும் பேருந்தின் பின் பக்க கதவுடன் உள்ள மிதிபலகையில் நின்று போத்தல் தண்ணீரில் முகம் கழுவியுள்ளார். அதன் போது , பேருந்து சடுதியாக வளைவொன்றில் திரும்பும் போது , மிதிபலகையில் நின்று முகம் கழுவிக்கொண்டு இருந்தவர் வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளார். வீதியில் விழுந்து படுகாயமடைந்தவரை உடனடியாக மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 10 Dec 2025 5:18 pm

29: தனுஷ் சாருக்குத்தான் இந்தக் கதையைச் சொல்லியிருந்தோம், ஆனா அவரு.!- கார்த்திக் சுப்புராஜ்

'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார். விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். '29' இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (டிச.10) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்திக் சுப்புராஜ், 'மேயாத மான்' எங்களுடைய முதல் தயாரிப்பு படம். ஸ்டோன் பெஞ்சில் 17 படம் எடுத்துவிட்டோம். ஆனாலும் 'மேயாத மான்' எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். 'மேயாத மான்', 'ஆடை' படம் எடுத்த பிறகு '29' படத்தின் கதையை எங்களிடம் ரத்னகுமார் சொன்னார். தனுஷ் சாருக்கு இந்த கதையை நாங்கள் சொல்லியிருந்தோம். ஆனால் அவர் நான் இப்போது ஆக்ஷன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். கரியரின் ஆரம்பத்தில் நான் நடிக்கின்ற மாதிரியான கதையாக இது இருக்கிறது. அதனால் இளம் நடிகர்களை வைத்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அதன் பிறகு ரத்னகுமாரும் வேறு படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார். கதைக்கு சரியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக சில வருடங்களை எடுத்துகொண்டோம். கார்த்திக் சுப்புராஜ் பிறகு விதுவை நடிக்க வைக்கலாம் என்று ரத்னகுமார் சொன்னார். 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'ரெட்ரோ' படங்களுக்கு முன்னால் விதுவை நடிக்க வைக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நான் ஓகே சொல்லியிருக்க மாட்டேன். அந்தப் படங்களில் விதுவின் நடிப்பைப் பார்த்ததால் ஓகே சொல்லிவிட்டேன். அதேபோல அயோத்தி படத்தில் ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பைப் பார்த்து ஓகே சொல்லிவிட்டேன். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜூடன் இணைந்து தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 10 Dec 2025 5:16 pm

Feroze Sheriff joins Ramraj Cotton as CMO

Mumbai: Feroze Sheriff has joined Ramraj Cotton as Chief Marketing Officer.Sheriff joins Ramraj Cotton after a successful tenure at Zee Entertainment Enterprises Limited (ZEEL), where he served as Senior Vice President – Marketing, Strategy & Insights since 2020.Prior to ZEEL, Feroze Sheriff held key roles at Wipro Consumer Care and Lighting, ITC Limited, and Manhattan Associates, where he began his career in 2006. Bringing over 17 years of experience, he has developed expertise in brand marketing, P&L management, sales, and retail planning across FMCG and media sectors.Feroze holds a Post Graduate Diploma in Management from the Indian Institute of Management, Bangalore, and will lead Ramraj Cotton’s marketing, brand strategy, and consumer engagement initiatives across India and international markets.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Dec 2025 5:11 pm

குறிகாட்டுவான் துரித கெதியில் புனரமைப்பு

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் பாதை துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது. குறிகாட்டுவான் இறங்கு துறை பகுதி புனரமைப்பு பணிகள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் ஏற்பட்ட பேரிடரில் , குறிகாட்டுவான் இறங்குதுறை மற்றும் அதற்கு செல்லும் பாதை மிக மோசமாக பாதிப்படைந்து […]

அதிரடி 10 Dec 2025 5:10 pm

‘ஐசிசி தரவரிசை’.. முதலிடத்திற்கு 4 பேருக்கு இடையில் போட்டி: குறைந்த புள்ளிகள் வித்தியாசம்தான்!

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் முடிந்தப் பிறகு, ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், ஒருநாள் பேட்டிங் தவரிசையில், ரோஹித் சர்மா, விராட் கோலி உட்பட 4 பேருக்கு இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது.

சமயம் 10 Dec 2025 5:00 pm

நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி , கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை காலை குறிகாட்டுவான் நோக்கி புறப்பட இருந்த படகில் ஏற சென்ற வேளை , இறங்குதுறையில் படகுகள் கட்டி இருந்த கயிற்றில் தடக்கியதில் தடுமாறி கடலினுள் விழுந்து நீரில் மூழ்கி காணாமல் போனார். உடனடியாக கடற்படை சுழியோடி வீரர்கள் […]

அதிரடி 10 Dec 2025 4:58 pm

கொழும்பில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இடமில்லை –பிரதமர் திட்டவட்டம்! ️

கொழும்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான கட்டுமானங்களுக்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என்றும், அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் சட்டவிரோத… The post கொழும்பில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இடமில்லை – பிரதமர் திட்டவட்டம்! ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Dec 2025 4:50 pm

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தூண் ஆனால், மலை உச்சியில் இருக்கும் தூணில் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என மறுத்தது தமிழ்நாடு காவல்துறை. இதை மீறி மலை உச்சிக்குச் செல்ல முயற்சி செய்த இந்து அமைப்பினர் தடுக்கப்பட்டதால் காவல்துறை - இந்து அமைப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் மீது சிலர் தாக்குதலும் நடத்தினர். இந்தப் பதற்றமான சூழலில் மதுரை மாவட்ட ஆட்சியரால் 144 உத்தரவு போடப்பட்டு இப்பிரச்னை அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், தீபத்தூணா அல்லது சர்வே நில அளவைக் கல் தூணா என்பது விவாதப்பொருளாகியிருக்கிறது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், நில அளவைக் கல் என்பதற்கான அனைத்து ஆதரங்களையும் நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். அது தீபத்தூண்தான், அதில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது என்பதற்கான எந்த ஆதரமும் இல்லை. திருப்பரங்குன்றம் தீபத்தூண் திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருக்கும் தீப மண்டபத்தில் இருப்பதுதான் தீபத்தூண். அதற்கான ஆதரங்களும் தெளிவாக இருக்கின்றன. அங்குதான் பல ஆண்டுகளாக கார்த்திக்கை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த வழக்கை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முறையாக கையாளவில்லை. விதிமீறல், சட்டமீறல் நடந்திருக்கிறது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் அவரது எல்லையை மீறி செயல்படுகிறார், அதுதான் பிரச்னை. ஜி ஆர் சுவாமிநாதன் பாஜகவில் இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மரியாதைக்குரிய நீதிபதியாக இருந்துகொண்டு அரசியல் சட்டத்தை மீறி செயல்படக் கூடாது, மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படக் கூடாது. இதுபோன்ற செயல்பாடுகளால் பாஜக எப்படி அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பயன்படுத்துகிறதோ, அதுபோல நீதிபதிகளையும் பயன்படுத்துகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரத்தான் செய்கிறது. வாஞ்சிநாதன் திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் மதுரையில் மதம், சாதியைக் கடந்து மெட்ரோ, ஐடி பார்க்குகள் கொண்டுவரும் மக்களுக்குத் தேவையான வேலைகள் நடந்து வருகிறது. முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மதுரையில் இப்படியான பிரிவினைகளை ஏற்படுத்தும் பிரச்னைகளை கொண்டுவரவேண்டாம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 10 Dec 2025 4:46 pm

Zee Telugu presents the World Television Premiere of The Great Pre-Wedding Show on December 14, Sunday at 6:30 PM!

Hyderabad: After entertaining its viewers with various fiction, non-fiction shows, and blockbuster movie premieres, Zee Telugu is now all set to bring its viewers an exciting cinematic treat with the world television premiere of The Great Pre-Wedding Show on Sunday, December 14th, at 6:30 PM. Known for its compelling storyline, gripping performances, and captivating visuals, The Great Pre-Wedding Show promises to be an unforgettable experience for Telugu cinema lovers.The story of The Great Pre-Wedding Show revolves around Ramesh (Played by Thiruveer), and his friend Ram Charan (Played by Master Rohan Roy), who run a photo studio and xerox shop. Ramesh develops feelings for Hema (Played by Teena Sravya), who works at the Panchayat office located right opposite his shop. One fine day, a politically affiliated person, approaches Ramesh to film his pre-wedding photoshoot. The shoot goes smoothly, with a significant investment, but the memory card containing the footage is lost due to Ram Charan’s negligence. The rest of the film showcases Ramesh’s efforts to recover the lost chip and the crazy events that unfold thereafter.While Thiruveer and Teena Sravya will be seen as the main leads, Master Rohan Roy and Narendra Ravi will appear in supporting roles. Directed by Rahul Srinivas, The Great Pre-Wedding Show movie is celebrated for its organic humour derived from its simple, innocent characters and the relatable small-town setting. This movie provides families with a perfect opportunity to enjoy a harmless, feel-good cinema experience!Don't miss the world television premiere of this simple yet captivating comedy-drama, The Great Pre-Wedding Show on this Sunday, only on Zee Telugu!-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Dec 2025 4:41 pm

மொராக்கோவில் இடிந்து விழுந்த கட்டிடங்கள்! 19 பேர் உயிரிழப்பு- உயரும் பலி எண்ணிக்கையால் அச்சம்

மொராக்கோவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாகி உள்ளனா். மீட்பு பணிகள் துரிதமாக நடக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சமயம் 10 Dec 2025 4:40 pm

உலகளவில் தீபாவளிக்கு கிடைத்த அங்கீகாரம்.. இந்தியர்களை பெருமைப்பட வைத்த விசயம்.. என்ன தெரியுமா?

தீபாவளி என்பது இந்தியாவில் வருகின்ற ஒளி திருவிழாவாக மட்டும் இல்லாமல், உலகளவில் மனிதர்கள் இணைந்து கொண்டாடும் பண்டிகையாகவும் விளங்குகிறது. இந்த பண்டிகையானது யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சமயம் 10 Dec 2025 4:38 pm

NZ vs WI 2nd Test: ‘29 ரன்னுக்கு 6 விக்கெட்’.. கடைசி நேரத்தில் சொதப்பிய மே.இ.தீவுகள்: நியூசி செம்ம கம்பேக்!

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசி நேரத்தில் படுமோசமாக சொதப்பியது. ஷாய் ஹோப், ஜான் கம்பெல் ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர்.

சமயம் 10 Dec 2025 4:36 pm

பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெள்ளகோவில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்தப் பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும் என தெரியவந்தது. பெண்ணின் கை, கால்களில் கல்லால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. முகமும் கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் எரிக்கப்பட்டு கருகிய நிலையில் இருந்தது. இதையடுத்து, இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்தப் பெண் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா? அல்லது நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து வெள்ளகோவில் போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். வடிவுக்கரசி கொலையான இடத்தில் கிடைத்த மது பாட்டிலில் இருந்த பார்கோடுகள் வைத்து, அந்த மது எங்கு விற்பனை செய்யப்பட்டது என்றும், வட்டமலை அணையைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றியும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், கொலை நிகழ்ந்த 5-ஆம் தேதியன்று அணைக்கு ஒரு ஆணும், பெண்ணும் இருசக்கர வாகனத்தில் வருவதும், திரும்பி ஆண் மட்டும் செல்வது தெரியவந்தது. அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கரின் (60) என்பதும், இவர் காவல்துறையில் காவலராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் பதுங்கி இருந்த சங்கரைப் பிடித்து விசாரித்ததில், காவல்துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றி சங்கர் கடந்த 1998-இல் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 4 மனைவிகள் 7 குழந்தைகள் உள்ளனர். நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த வடிவுக்கரசி என்பவருக்கும் சங்கருக்கும் திருமணத்தைத் தாண்டிய முறையற்ற உறவு இருந்துள்ளது. சங்கர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், வடிவுக்கரசியின் உறவினர்களிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். ஆனால், அரசு வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பித் தருமாறு சங்கரிடம் வடிவுக்கரசி வற்புறுத்தி வந்துள்ளார். பணத்தை தரவில்லையென்றால் போலீஸில் புகார் அளிக்கவுள்ளதாகவும் வடிவுக்கரசி சங்கரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சங்கர் கடந்த 5-ஆம் தேதி வெள்ளகோவிலில் எனக்கு பணம் வரவேண்டி உள்ளது. நீயும் உடன் வந்தால் பணத்தை வாங்கிக் கொடுத்துவிடுகிறேன் என்று வடிவுக்கரசியிடம் கூறியுள்ளார். இதை நம்பி வடிவுக்கரசியும் சங்கருடன் பழனியில் இருந்து 5-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில் வந்துள்ளார். சங்கர் வெள்ளக்கோவில் வந்தபிறகு பணம் தருபவர்கள் வர சிறிது நேரம் ஆகும். அதுவரை அருகில் உள்ள அணையை சுற்றி பார்க்கலாம் எனக் கூறி, வட்டமலைக்கரை அணைக்கு வடிவுக்கரசியை அழைத்துச் சென்றுள்ளார். வட்டமலைகரை அணை ஓடையின் மேல் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் மது அருந்தி உள்ளனர். மது மயக்கத்தில் இருந்த வடிவுக்கரசியின் தலை,கை,கால் ஆகிய பகுதிகளில் கல்லைக் கொண்டு சங்கர் தாக்கியுள்ளார். இதில், மயக்கமடைந்த வடிவுக்கரசியின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு ஏற்கெனவே கொண்டு வந்திருந்த பெட்ரோலை வடிவுக்கரசியின் உடல் மீது ஊற்றி எரித்துள்ளார். வடிவுக்கரசி உயிரிழந்ததை உறுதிப்படுத்திய பின் அங்கிருந்து சங்கர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சங்கரை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முறையற்ற உறவால் முன்னாள் காவலரே பெண்ணை எரித்துக் கொலை செய்தது திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 10 Dec 2025 4:32 pm