SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிரடி 7 Dec 2025 6:12 pm

AUS vs ENG 2nd Test: ‘5ஆவது வெற்றியைப் பெற்ற ஆஸி’.. ஆனா WTC பைனலுக்கு முன்னேறுவது கஷ்டம்? காரணம் இதுதான்!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான பைனல் வாய்ப்பு மிகவும் கடினமாக இருக்கும்.

சமயம் 7 Dec 2025 6:04 pm

‘டித்வா’புயல் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்காவின் உடனடி உதவி: C-130J விமானங்கள் வருகை! !

‘டித்வா’ புயல் அனர்த்தத்தின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக, அமெரிக்காவின் வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J… The post ‘டித்வா’ புயல் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்காவின் உடனடி உதவி: C-130J விமானங்கள் வருகை! ! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 6:02 pm

``அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' - தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது கம்பீர் தாக்கு

இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அதிலும், நியூசிலாந்திடம் 3-0 எனவும், தென்னாப்பிரிக்காவிடம் 2-0 எனவும் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. அணித் தேர்வில் கம்பீர் அதிகமாக தலையிடுவதாலும், ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஐ.பி.எல் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்வதாலும், பேட்டிங்கோ பவுலிங்கோ அந்தந்தப் பிரிவின் நிபுணர்களைக் (ஸ்பெஷலிஸ்ட் ப்ளேயர்களை) தேர்வு செய்யாமல் ஆல்-ரௌண்டர்களைத் தேர்வு செய்வதாலும்தான் சொந்த மண்ணில் இவ்வாறு மோசமாக டெஸ்ட் தொடர்களை இழக்க நேர்கிறது என கம்பீருக்கு மீது விமர்சனங்கள் குவிந்தன. கவுதம் கம்பீர் - அஜித் அகர்கார் இத்தகைய விமர்சனங்களுக்கிடையிலும் டெஸ்ட் தோல்விகளுக்கு, “சாம்பியன்ஸ் டிரோபியும், ஆசியக் கோப்பையும் வென்றதும் இதே கம்பீர்தான்” என சம்பந்தமே இல்லாமல் வைட் பால் தொடர்களை ஒப்பிட்டார் கம்பீர். அவர் சொன்னதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அந்த இரண்டு தொடர்களும் துபாயில் நடந்தவை. இவ்வாறான சூழலில்தான் ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், “சொந்த மண்ணில் நமது டெஸ்ட் அணி இவ்வளவு பலவீனமாக இருப்பதை நான் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ரெட் பால் (Red Ball) ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்படாவிட்டால் இதுதான் நடக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா ஒரு ரெட் பால் ஃபார்மட் ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய நேரம் இது” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பார்த் ஜிண்டால் இந்த நிலையில், நேற்று தென்னாப்பிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்ற கையோடு, டெல்லி அணியின் இணை உரிமையாளரைப் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருக்கிறார் கம்பீர். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், “முடிவுகள் (டெஸ்ட் தொடரில்) எங்களுக்கு சாதகமாக வராததால் நிறைய பேச்சுகள் வந்தன. ஆனால் இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் இல்லை (கில்); இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் பேட்டிங் செய்யவில்லை. இதைப் பற்றி யாரும் பேசவில்லை.” `என்னை டார்கெட் பண்ணுங்க, ஆனா அந்த 23 வயது குழந்தையை விட்ருங்க’- ஹர்ஷித் ராணாவுக்காக கொதித்த கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் எந்த சாக்குபோக்கும் கூறாததால், உண்மையை யாரும் பேசக்கூடாது என்று அர்த்தமல்ல. அணி ஒரு மாற்றத்தில் (Transition) இருக்கும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஃபார்ம் பேட்ஸ்மேனான, 7 போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தவரான கேப்டனை இழந்தால் முடிவுகள் கடினமாத்தான் இருக்கும். India Cricket Team Captain Shubman Gill ஏனெனில் ரெட் பால் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லை. யாரும் அதைப் பற்றி பேசவில்லை. பிட்ச் பற்றி என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், கிரிக்கெட்டுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களெல்லாம் சில விஷயங்களைச் சொன்னார்கள். IND vs SA: கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல - ஏபிடி சொல்லும் காரணம் என்ன? ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் (பார்த் ஜிண்டால்) பயிற்சியாளர் பொறுப்பை பிரித்துக் கொடுப்பது பற்றிக் கூறினார். இது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரவர் தங்கள் வரம்புக்குள் இருப்பது நல்லது. நாம் ஒருவரின் வரம்புக்குள் செல்லாதபோது, அவர்களும் நம் வரம்புக்குள் வர எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கம்பீர் - Gautam Gambhir கம்பீரின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, `தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்டில் வெறும் 124 ரன்கள் டார்கெட்டை அடிக்கக் கூட 7 போட்டிகளில் 1,000 ரன்கள் அடித்த கேப்டன்தான் வேண்டுமா? அவர் மட்டும் இந்திய அணியில் வீரரா மற்றவர்கள் எல்லாம் வெறுமனே அணியில் இருக்கிறார்களா?' என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. முன்னதாக, 2018-ல் கொல்கத்தா அணி கம்பீரை ஏலத்தில் விட்டபோது பார்த் ஜிண்டாலின் டெல்லி அணி ரூ. 2.80 கோடிக்கு எடுத்து அணியின் கேப்டனாக்கியது. ஆனால், கம்பீர் தலைமையில் டெல்லி அணி மோசமாக ஆடியதால் பாதியிலேயே தொடரிலிருந்து விலகியதோடு தனது சம்பளத்தையும் கம்பீர் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியா இவ்வாறு மோசமாகத் தோல்வியடையும்போது கேள்வியே எழுப்பக்கூடாது என்பது என்று கம்பீர் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்?

விகடன் 7 Dec 2025 5:53 pm

இலங்கை தமிழ் அரசுக் கட்சி –ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் […]

அதிரடி 7 Dec 2025 5:52 pm

லோக்சபா கேள்வி: தமிழகத்தில் இருந்து வெளிநாடு சென்றோர் விவரம்! மத்திய அரசு விளக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றவர்கள் விபரம் குறித்து தமிழக எம்.பி. மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

சமயம் 7 Dec 2025 5:50 pm

திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் பயன்படுத்திக் கொள்கிறார்.. நயினார் குற்றச்சாட்டு!

வடபழனியில் தமிழக பாஜக சார்பில் சம்பந்தி போஜனம் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சு குறித்தும், தீபம் ஏற்றும் விவகாரம் குறித்தும் விமர்சித்தார்.

சமயம் 7 Dec 2025 5:42 pm

வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதிவு 7 Dec 2025 5:41 pm

இயற்கையின் இடர் தடகளத்தில் நல்லது கெடுவதும், நன்மையாவதும்! பனங்காட்டான

2004ம் ஆண்டு சுனாமி நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகளையும் இணைத்து செயற்பட சந்திரிகா அரசு முனைந்தபோது அதனை ஆட்சேபித்து அமைச்சர் பதவிகளையும் துறந்து ஆட்சியிலிருந்து வெளியேறியது ஜே.வி.பி. இருபது ஆண்டுகளின் பின்னர் பேரிடர்ப் பணிபுரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களிடம் (தமிழர்களே அதிகம்) உதவியை நாடுகிறது அதே ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி. இதுவும் இயற்கையின் நியதி போலும். இயற்கையின் பெருஞ்சீற்றம் இரத்தினதுவீபம் என அழைக்கப்பட்டு வந்த இலங்கை எனும் குட்டித்தீவை முற்றுமுழுதாக சீரழித்துள்ளது. 75 வருட அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக ஓர் அணி - புரட்சிகர சிந்தனையாளர்களின் ஆட்சி ஆரம்பமாகி ஒரு வருட முடிவு காலத்தில் இவ்வாறான ஒரு பேரழிவை கையாளக்கூடியதாக திட்டமிடவில்லையென்பதை உள்நாட்டில் பலரும் கூறுமளவுக்கு நிலைமை உள்ளது. அரச நிர்வாகத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஒன்று உள்ளது. இது நேரடியாக ஜனாதிபதி அநுர குமரவின் தலைமையில் இயங்குகிறது. இந்த அமைச்சின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளது. இதற்கான சட்டம் 2005ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் பிரகாரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பூகம்பம், சுனாமி உட்பட்ட பதினேழு வகையான அனர்த்த வேளைகளில் உடனடிப் பணிகளை நிறைவேற்றுவதே இந்த நிலையத்தின் பிரதான பணி. 1913, 1940, 1947, 1950ம் ஆண்டுகளில் களனி, கல, ஜின், மகாவலி கங்கைகள் பெருக்கெடுத்து பாரிய அழிவை ஏற்படுத்தின. பின் நவீனத்துவ காலத்தில் 2003ம் ஆண்டில் தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 260 பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், ஆயிரமாயிரம் பேர் இடம்பெயர்ந்ததையும் அரசாங்கத் தகவல் பதிவு செய்துள்ளது. 1978ம் ஆண்டு சூறாவளி இலங்கை மக்களை வேறுபாடின்றி எதிர்பாராத அழிவுக்குள்ளாக்கியது. இதன் பின்னரான பேரழிவை ஏற்படுத்தியது நேற்றுப்போல் இடம்பெற்ற சுனாமி. 2004 டிசம்பர் 26ம் திகதியான கிறிஸ்மஸ் நாளன்று இது இடம்பெற்றது. மின்னாமல் முழங்காமல் என்று கூறுவதுபோன்று இலங்கை வரலாற்றில் எதிர்பார்த்திராத அனர்த்தத்தை இது ஏற்படுத்தியது. வடக்கின் கரையோரத்திலிருந்து இலங்கை வரைபடத்தின் கீழ்மூலையிலுள்ள அம்பாந்தோட்டை வரையான கரையோர பிரதேசங்களில் ஆறு மணித்தியாலத்தில் பல்லாயிரம் பேரை கொன்றொழித்த பேரலை இது. மக்களின் இருப்பிடங்கள், தொழிலகங்கள், வணக்கத் தலங்கள், வாழ்வாதார மூலங்கள், பாடசாலைகள், விவசாயப் பண்ணைகள் என்று எதனையுமே இது விட்டுவைக்கவில்லை. இலங்கை அரசியலில் இதே சுனாமி சிலரை அடையாளம் காட்டவும் வைத்தது. அப்போது சந்திரிகா குமாரதுங்க தலைமையில் மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தது. ஜே.வி.பி. இதில் பங்காளராக அமைச்சுப் பதவிகளிலும் அமர்ந்திருந்தது. அநுர குமர, விஜித ஹேரத் போன்றவர்கள் அமைச்சர்களாக இருந்தனர். சுனாமி நிவாரணத்துக்காக பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நிதி வழங்கிய நாடுகள் சந்திரிகாவுக்கு ஏற்படுத்தின. அவரும் அதனை ஏற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளுடன் இணைந்து கட்டமைப்பை உருவாக்க முனைந்த வேளை அதனை ஆட்சேபித்த ஜே.வி.பி. தங்கள் அமைச்சுப் பதவிகளையும் துறந்து ஆட்சிக் கூட்டிலிருந்து வெளியேறியது. பொதுக்கட்டமைப்பில் விடுதலைப் புலிகளையும் இணைப்பதால் அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பதே ஜே.வி.பி.யின் எதிர்ப்புக்கு காரணமாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக இலங்கையிலிருக்கும் அமெரிக்க தூதரகம் தனது அரசுக்கு அனுப்பி வைத்த தகவல் விக்கி லீக்சில் இடம்பெற்றுள்ளது. அப்போது சந்திரிகா அரசில் கலாசார மற்றும் மரபுரிமை அமைச்சராகவிருந்த விஜித ஹேரத் (தற்போதைய வெளிவிவகார அமைச்சர்) இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், ஆட்சியின் பங்காளர்களான தங்களின் ஆட்சேபணையை பொருட்படுத்தாது சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளை பொதுக்கட்டமைப்பில் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தார் என்று குறிப்பிட்டதாக விக்கி லீக்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. விதிப்பயனோ அல்லது இயற்கையின் நியதியோ சுனாமியிலும் பார்க்க மிகமிக மோசமான பேரழிவை ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி புரியும் காலத்தில் ஏற்பட்டுள்ளது. தமது வல்லமைக்கு உட்பட்ட வகையிலும் கிடைக்கும் சர்வதேச உதவிகளைப் பயன்படுத்தியும் நாட்டை மீளெழுப்ப அரசு செயற்களத்தில் இறங்கியுள்ளது. அதேசமயம். புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் உதவியை இது பகிரங்கமாகக் கோரியுள்ளது. புலம்பெயர் இலங்கையர்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே. தமிழ் மக்களினுடைய உரிமைப் போராட்டத்தை நசுக்க போர் வெறி கொண்ட மகிந்த அரசுக்கு பக்கபலமாக அப்போது நின்றது ஜே.வி.பி. சுனாமிக் கட்டமைப்பில் விடுதலைப் புலிகளை சந்திரிகா இணைத்துக் கொள்ள முயன்றபோது அதனை எதிர்த்து முறித்தழித்ததும் இதே ஜே.வி.பி. இப்போது, போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகப் புறப்பட்ட தமிழர்களின் உதவியை இது நாடி நிற்கிறது. இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் உள்நாட்டில் அநுர அரசு மேற்கொள்ளும் பணிகள் வெளிநாடுகளில் இதன் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த நம்பிக்கையின் பயனாகவே உலகநாடுகள் அனைத்தும் கிள்ளிக்கொடு;க்காமல் இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் வேறொரு கட்சியின் ஆட்சி இலங்கையில் இருந்திருக்குமாயின் இந்தளவுக்கு சர்வதேச ஆதரவு கிடைத்திருக்காது என்று சொல்லலாம். இதற்குக் காரணம் ஊழல் ஒழிப்பில் முழுமையாக இறங்கி ஊழலற்ற அரசாட்சி ஒன்றை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசு பயணிப்பதே என்று துணிந்து சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஒரு வருட ஆட்சிக்குள் அநுர குமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன, மத பேதமற்ற நிர்வாகமாக முழுமையாக மாறவில்லை. பொதுமக்கள் நம்பக்கூடிய வகையில் தனது பாதையை இவ்வழியில் அது அமைத்து வருவது மட்டும் தெரிகிறது. இந்த நம்பிக்கையே சர்வதேசத்தின் பங்களிப்புக்கு அடிப்படைக் காரணம். அனைத்து மக்களையும் இணைத்தவாறு நாட்டை இழுத்துச் செல்ல முயற்சித்த வேளையில் புயலும், வெள்ளமும், நிலச்சரிவும் ஒன்றுசேர்ந்து அனைத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. மரணித்தோர் தொகை அடுத்த சில நாட்களில் ஆயிரத்தைத் தாண்டலாம் என எதிர்வு கூறப்படுகிறது. காணாமல் போனோர் தொகை பற்றி இப்போது எதுவும் கூறமுடியாத நிலை காணப்படுகிறது. மலையகமே கூடுதலான பாதிப்பைக் கண்டுள்ளது. சில கிராமங்கள் அடியோது காணாமல் போயுள்ளன. துயில் கொண்டிருந்த பல குடும்பங்கள் புதையுண்டு போயுள்ளன. உடனடியாக தங்கள் தொகுதிகளுக்குச் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற வரவு செலவு விவாதத்தை முக்கியப்படுத்தி கொழும்பில் தங்கி விட்டனர். அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளை குறை கூறி ஊடகங்கள் ஊடாக தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முற்பட்டனர். தமிழ் அரசியல்வாதிகளும் இதில் வேறுபடவில்லை. இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் தாராளமாக உதவி வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இருபத்தையாயிரம் முதல் ஐம்பதினாயிரம் ரூபா வரையான நிவாரணம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிவாரணம் உடனடித் தேவைகளுக்கு மட்டுமே. பிரதேச வேறுபாடின்றி சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படுவதை காணமுடிகிறது. எனினும், எதிர்க்கட்சிகள் தாங்கள் நல்லவற்றுக்கும் எதிரானவர்களே என்பதைக் காட்டும் பாணியில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆக்கபூர்வமான பணிகள் எதனையும் இவர்கள் செய்வதாகத் தெரியவில்லை. பேரிடரைப் பயன்படுத்தி தங்கள் வாக்கு வங்கியை நிரப்பலாமென எண்ணிச் செயற்படும் இவர்களை சர்வதேசம் கேள்விக்குறியாக்கியுள்ளது. நித்தம் நித்தம் கிடைத்துவரும் நிவாரண உதவிகள் எதிரணிகளை நிலைகுலைய வைக்கிறது. அதனால் ஏதாவது குற்றங்களை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடிகளுடன் இவர்கள் திரிகிறார்கள். நிவாரண திட்டமிடலின்மை, தாமதமான நிவாரணப்பணி என்பவைகளை முன்னிறுத்தி ஆட்சித் தரப்பை மக்கள் செல்வாக்கிலிருந்து இறக்கி விடலாமென இவர்கள் எண்ணியது தலைகரணமாக்கியுள்ளது, சர்வதேச நிவாரணமும் அரசாங்கத்தின் வீச்சான செயற்பாடும். மறுபுறத்தில், ஆட்சி புரியும் தேசிய மக்கள் சக்தி அனைத்து மக்களையும் ஒரே நோக்கில் இருத்தி தனது பணிகளை மேற்கொள்கிறது. அரசியல் ஆதாயம் தேடப்படுவதாக இதனை எவரும் பார்க்கவில்லை. பேரிடரிலிருந்து நாட்டை மீட்டு அதனை நவீன இலங்கையாக கட்டியெழுப்ப காலம் தேவையென்று கூறி பொதுத்தேர்தலை குறைந்தது பத்தாண்டுகளுக்காவது பின்போட (ரில்வின் சில்வாவின் ஆசையும் இதுதான்) தேசிய மக்கள் சக்திக்கு இதன் நிவாரணப்பணி வரப்பிரசாதமாக அமையலாம். மாகாண சபைத் தேர்தல் பற்றி இப்போதைக்கு எவரும் வாய் திறக்க முடியாத நிலைமை வந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி பேரிடர் காலத்தில் மேற்கொள்ளும் சாதகமான செயற்பாடுகளும், எதிர்க்கட்சிகளின் இயக்கமற்ற குற்றக் கூச்சல்களும் நாட்டின் எதிர்காலம் எதுவாகும் என்பதை தீர்மானிக்கப்போகும் சக்திகள். இதில் சர்வதேசத்தின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கும் - புலம்பெயர்ந்தவர்களின் பங்கும்கூட.

பதிவு 7 Dec 2025 5:32 pm

பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை ஊக்குவிக்கும் அரசு! –எதிர்க்கட்சித் தலைவர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை அரசு ஊக்குவிப்பதாக பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அப்துல் சமாத் யாகூப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் பாதுகாப்பு முப்படைகளின் தலைவர் (சிடிஎஃப்) பதவி வகிக்கும் ஜெனரல் சையத் ஆசிம் முனீரின் பதவிக் காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளது அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ). பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் நிறுவனத் தலைவருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் […]

அதிரடி 7 Dec 2025 5:30 pm

அன்புமணி ராமதாஸ் எடுத்த முடிவு! மாவட்ட பொறுப்புகளுக்கு 12 முக்கிய நிர்வாகிகள் நியமனம்

அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமகவில் மாவட்ட பொறுப்பாளர்களாக 12 முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன் பின்னணி குறித்து விரிவாக காண்போம்.

சமயம் 7 Dec 2025 5:08 pm

வீடு முற்றுகை!

வீடு முற்றுகை யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்றைய… The post வீடு முற்றுகை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 5:02 pm

இண்டிகோ நிறுவன அதிகாரிக்கு Show Cause Notice.. விமான சேவை பாதிப்பால் நடவடிக்கை!

இண்டிகோ விமான சேவை தொடர்ந்து ரத்தாகி வருகிறது. இதனால் DGCA, இண்டிகோ அதிகாரிக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி, 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டு உள்ளது.

சமயம் 7 Dec 2025 4:55 pm

தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்!

TWEES Scheme: பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கும் தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 7 Dec 2025 4:53 pm

புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி

video link- https://fromsmash.com/Gm1ujAO_G~-dt நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் அணுசரனையுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக முதற்கட்டமாக அத்தியவசிய உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த உலருணவுப் பொருட்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை மருதமுனை சவளக்கடை சாய்ந்தமருது சம்மாந்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்குபற்றலுடன் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கல்முனை மாநகர சபையின் […]

அதிரடி 7 Dec 2025 4:48 pm

வெள்ளை நுரை கரையொதுங்கியதால் வடமராட்சியில் பரபரப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய… The post வெள்ளை நுரை கரையொதுங்கியதால் வடமராட்சியில் பரபரப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 4:36 pm

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் குமுறல்! இண்டிகோ நிறுவனத்திடம் சிக்கிய லக்கேஜ்- எப்போது கிடைக்கும்?

இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் உடைமைகளை பெற முடியாமல் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

சமயம் 7 Dec 2025 4:32 pm

உயிரைப் பறித்த உடற்பயிற்சி ; அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

பிரேசில் நாட்டின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் 55 வயதான நபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்ற நபர் கடந்த மாதம் 1 ஆம் திகதி பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்து கொண்டிருந்தார். […]

அதிரடி 7 Dec 2025 4:30 pm

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை!

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரின் பூதவுடல் தீயுடன் சங்கமாகியது.… The post வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 4:21 pm

பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் கைப்பற்றப்பட்ட பழைய பொருட்கள் அழிப்பு

பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு இன்று (6) நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரபலமான ஒரு உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட பழுதடைந்த 144 சம்சா, 4 kg பிசைந்த மாவு, 8 kg சோறு உட்பட பல பழைய பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன. குறித்த உணவகத்தில் உணவைப் பெற்றுக் கொண்ட தாய் மற்றும் மகள் […]

அதிரடி 7 Dec 2025 4:03 pm

சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. பாதுகாப்பு இல்லாத ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி வேதனை!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்திய குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

சமயம் 7 Dec 2025 4:03 pm

தமிழகத்தில் அடுத்த மழை எப்போது ?டிசம்பரில் மீண்டும் புயல் உருவாகிறதா? – ஹேமச்சந்தர் முக்கிய தகவல்

தமிழகத்தில் அடுத்ததாக எப்போது மழை பொழியும்? எந்த எந்த மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும்? அடுத்த வாரம் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதா? — இவை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

சமயம் 7 Dec 2025 3:59 pm

‘அ’– அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி!

‘அ’ – அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி! மலையக அரங்க வரலாற்றில் ஒரு… The post ‘அ’ – அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 3:57 pm

`பால் பவுடருக்கு பதில் க்யூப்' - ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' - என்ன சிறப்பு?

வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன ஜப்பான், புதிய 'கியூப்' வடிவ பாலை அறிமுகப்படுத்தியுள்ளது.​ இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக 'ஃபார்முலா மில்க்' பவுடர் வடிவத்தில் கொடுக்கப்படும். இதைப் பயன்படுத்துவது சில நேரங்களில் சவாலான விஷயமாக இருக்கும். குறிப்பாக நள்ளிரவு 2 மணி அல்லது 3 மணிக்குக் குழந்தை பசியால் அழும்போது, தூக்க கலக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் சரியான அளவில் பவுடரை அளந்து, வெதுவெதுப்பான நீரில் கலக்குவது சிரமமாக இருக்கும். பல நேரங்களில் பவுடர் கீழே சிந்திவிடும் அல்லது அளவுகள் மாறிவிடும்.​ இதனால் ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான 'மெய்தி' (Meiji), பவுடருக்குப் பதிலாகத் திட வடிவிலான 'கியூப்'களை உருவாக்கியுள்ளது. பார்ப்பதற்குச் சர்க்கரைத் துண்டுகள் போலவே இருக்கும் இவை, தண்ணீரில் போட்டவுடன் உடனடியாகக் கரைந்துவிடும் தன்மையுடையவையாக உள்ளது. milk representative image இது எப்படி வேலை செய்கிறது? சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின்படி, ஒருவர் இந்த கியூப்களை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்குகிறார்.  ஒரு கியூப் என்பது 40 மி.லி பாலுக்குச் சமம். அதாவது ஒரு கியூபை பாட்டிலில் போட்டு, தேவையான அளவு வெதுவெதுப்பான நீரை ஊற்றி ஆட்டினால் போதும், பால் தயாராகிவிடும். ஸ்பூன் கணக்கு, சிந்தும் கவலை, அளவு போன்ற எந்தப் பிரச்னையும் இதில் இல்லை என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. View this post on Instagram

விகடன் 7 Dec 2025 3:54 pm

கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்! அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் மாணவர்ளுக்கு வழங்கிய இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் தரமற்றும் இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

சமயம் 7 Dec 2025 3:47 pm

மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! -டிசம்பர் 9 முதல் மிகக் கனமழை வாய்ப்பு! வானிலை ஆய்வு: கிருபா இராஜரெட்ணம்,… The post மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 3:40 pm

FJ என்ன அமுக்கப் பார்க்கிறார் என்ற பாரு: கேமுக்காக ஒரு பெண்ணை யூஸ் பண்றார்னு பொங்கிய ஆதிரை

பிக் பாஸ் 9 போட்டியாளரான எஃப்.ஜே. மீது சக போட்டியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் ஆதிரை புகார் சொன்னதை பார்த்தவர்களோ அந்த தகுதி உங்களுக்கு இல்லை என்கிறார்கள்.

சமயம் 7 Dec 2025 3:35 pm

உக்ரைனில் ரஷியா ட்ரோன் மழை! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தாக்குதல்!

உக்ரைனில் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் சனிக்கிழமை(டிச. 6) தாக்குதல்களைத் தொடுத்தது. வெள்ளிக்கிழமை (டிச. 5) நள்ளிரவில் தொடங்கிய ரஷியாவின் தீவிர வான் வழி தாக்குதல்கள் சனிக்கிழமை(டிச. 6) அதிகாலை வரை நீடித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தலைநகர் கீவ் உள்பட முக்கிய நகரங்களில் மக்களுக்கு ஏர் சைரன் மூலம் அபாய ஒலி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷியாவிலிருந்து அனுப்பப்பட்ட 653 ட்ரோன்கள் மற்றும் 51 ஏவுகணைகளில் 585 ட்ரோன்களையும் 30 ஏவுகணைகளையும் இடைமறித்து செயலிழக்கச் செய்திருப்பதாகவும் […]

அதிரடி 7 Dec 2025 3:30 pm

சென்யார் புயலால் இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 900 ஆக உயர்வு

மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான சென்யார் புயல் தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் கரையை கடந்து கனமழை கொடுத்தது. இந்தோனேசியாவில் ‘சென்யார்’ புயலால்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:19 pm

அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும் –டிடிவி தினகரன்

அ.ம.மு.க., பொது ச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் உள்ளவர்கள் த.வெ.க.வில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:18 pm

மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை சென்றிருந்தார். இன்று காலையில் மதுரையில் மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:14 pm

``திருமணம்‌ ரத்தாகிவிட்டது'' - முதன்முதலாக‌ மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர்‌ கிரிக்கெட்‌ அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர்‌ பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. ஆனால், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அன்று திருமணம் நடக்கவில்லை. அதே அன்று பலாஷ் முச்சாலுக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இன்ஸ்டா ஸ்டோரி முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின் இதன் பின், இவர்களது திருமணம் நின்றுவிட்டது. இருவரும் பிரிந்துவிட்டனர் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி இருந்தன. ஸ்டோரி இந்த நிலையில், திருமணம்‌ நின்றது குறித்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி மந்தனா. அதில், சில வாரங்களாக, என்னை குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்போது நான் பேச வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். நான் ஒரு பிரைவெட் நபர். என்னுடைய விஷயங்களையும் அப்படி வைக்கவே நினைக்கிறேன். ஆனால், எனது திருமணம் ரத்தாகி விட்டது என்பதை தெளிவாக்க விரும்புகிறேன். ஸ்மிருதி மந்தனா இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள‌ நினைக்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் பிரைவசியையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரையும் ஒரு விஷயம் இயக்குகிறது என்று நான் நம்புகிறேன். அப்படி எனக்கு என்னுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது‌ மிக முக்கியம். எவ்வளவு காலம்‌ முடியுமோ அவ்வளவு காலம் இந்தியாவிற்காக நிறைய விளையாடுவேன். கோப்பைகளை வெல்லுவேன்.‌ இது தான்‌ என்னுடைய லட்சியம் என்று‌ குறிப்பிட்டுள்ளார். 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

விகடன் 7 Dec 2025 3:13 pm

திமுக கூட்டணியில் அடிமை சாசனம்..உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் -ஆர்.பி.உதயகுமார்!

மத்தியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் திமுக கூட்டணியில் இருந்தபோது அடிமை சாசனம் செய்த வரலாற்றை உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்து உள்ளார்.

சமயம் 7 Dec 2025 3:12 pm

அமெரிக்காவின் அலாஸ்காவில் நிலநடுக்கம் –ரிகடர் அளவில் 7 ஆக பதிவு

அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்காவின் ஜூனாவ் வில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:11 pm

வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில்,

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:10 pm

சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாரவிடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:04 pm

`தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்தார். உலகமே வியக்கும் வகையில் கிரிக்கெட்டில் சாதித்த மகேந்திர சிங் தோனி சென்னை ஐ.பி.எல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சென்னை ஐ.பி.எல். அணிக்காக தோனி விளையாடி வருகிறார். ஆனால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே சத்தமே இல்லாமல் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு படிப்படியாக தொழிலிலும் சாதித்து இருக்கிறார். கால்பந்து விளையாட்டுக்காக இந்தியன் சூப்பர் லீக் ஆரம்பித்த போது அதில் சென்னை அணியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். மகேந்திர சிங் தோனி அவர் சென்னையை தனது சொந்த ஊராக நினைக்க தொடங்கியதால் அவரால் மும்பை அல்லது கொல்கத்தா அணியை வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தோனி தெரிவித்து இருந்தார். இது குறித்து கால்பந்து வீரர் அனிருத் தபா கூறுகையில், ''மதிய உணவின் போது எப்போதும் தோனி விளையாட்டு வீரர்களுடன் தான் இருப்பார். அவர் ஸ்பான்சர்களுடன் அல்லது அதிகாரிகளுடன் இருக்கமாட்டார். வி.ஐ.பி.க்களுடன் வந்து இருக்கும்படி சொன்னாலும் சிரித்துக்கொண்டே வீரர்களுடன் இருப்பதாக சொல்லிவிடுவார். அவர் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். பிறகு பணம் சம்பாதிக்கிறார்'' என்றார். மேரி வாலி பிரியாணி ஒரு முறை ஒரு சிறிய பிரியாணி கடை உரிமையாளர் மகேந்திர சிங் தோனியிடம் 'மேரி வாலி பிரியாணி' என்ற ஒரு திட்டம் குறித்து தெரிவித்தார். இத்திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் பிரியாணியின் எந்த மாதிரியான மசாலா சேர்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். அந்த ஐடியா தோனிக்கு பிடித்துப்போனது. உடனே அத்தொழிலில் ரூ.32 கோடியை முதலீடு செய்வதாக கூறி காசோலையை எடுத்துக் கொடுத்துவிட்டார். அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவரது கணக்கு வீண் போகவில்லை. வாடிக்கையாளர்கள் எந்த வித டிஸ்கவுண்டும் இல்லாமல் பிரியாணியை ஆர்டர் செய்தனர். இதுவே பிரியாணி தொழிலில் 70% வருவாயை கொடுத்து வருகிறது. Dhoni - தோனி இப்போது இந்த பிரியாணிக்கு இந்தியா முழுவதும் 22 இடங்களில் சமையல் அறைகள் திறக்கப்பட்டுள்ளது. துபாய், இங்கிலாந்து, ஜப்பானிலும் கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ஸ்வக்கி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் 83 மில்லியன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணிக்கு எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பிரியாணியில் தோனி பணத்தை முதலீடு செய்தார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். Dhoni: ``தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும்'' - மாணவர்களிடையே பேசிய தோனி கருடா ஏரோஸ்பேஸ் - ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம் ஒரு முறை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம், தோனியை தங்களது நிறுவனத்திற்கு வந்து தங்களது பணியை பார்வையிடும்படி கேட்டுக்கொண்டது. தோனியும் அங்கு சென்றார். ட்ரோன்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை பார்த்தார். அவர் பெரிதாக எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர்களது தொழிலை கவனித்தார். உடனே அடுத்த ஒரு வருடத்தில் அந்த நிறுவனத்தில் தோனி ரூ.5 கோடியை முதலீடு செய்தார். இப்போது அதே கம்பெனி தொழிலை விரிவுபடுத்த ரூ.100 கோடி முதலீடு திரட்டி இருக்கிறது. தோனி எங்களுடன் இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அக்கம்பெனி நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். தோனி இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான CARS24 என்ற நிறுவனத்திலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான emotorad என்ற நிறுவனத்திலும், உடற்பயிற்சிக்கான tagda raho என்ற நிறுவனத்திலும், ராஞ்சி ஹோட்டல், ராஞ்சி ரேய்ஸ் ஹாக்கி அணி போன்ற நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். தோனி முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. Dhoni - தோனி தோனி முதலீடு செய்த சில நிறுவனங்கள் சறுக்கி இருந்தாலும், பெரும்பாலான முதலீடுகள் அவருக்கு வருவாயை ஈட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதுவரை அவரது முதலீடு கம்பெனிகளில் 1000 கோடியாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் தோனி முதலீடு செய்வதற்கு அவசரப்பட மாட்டார். அவர் அனைத்து தகவல்களையும் பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்ட பிறகுதான் இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. தோனிக்கு பல கம்பெனிகளில் முதலீடு இருப்பதால், எப்போது எந்த கம்பெனி கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு, அவர் எப்போதும் தொழிலில் பிஸியாக இருக்கிறார். MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

விகடன் 7 Dec 2025 3:04 pm

தொடர் கதையான இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு –இன்றும் 100 விமானங்கள் ரத்தானது

உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:03 pm

பா.ஜ.கவினர் நினைத்த செயல் தமிழ்நாட்டில் நடக்காது –நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாறினால் என்ன தவறு என்ற தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர்சேகர்பாபு கருத்து கூறுகையில், வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.க.வினர் நினைத்த

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:00 pm

புதிய அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியன, ஆனால் தமிழர் பிரச்சினைகளில் முன்னேற்றமில்லை!

மன்னார் மறைமாவட்ட ஆயரின் திருவருகைக்காலத் திருமடல்: புதிய அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியன, ஆனால் தமிழர் பிரச்சினைகளில் முன்னேற்றமில்லை!… The post புதிய அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியன, ஆனால் தமிழர் பிரச்சினைகளில் முன்னேற்றமில்லை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:38 pm

2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை…தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மேலும் மஞ்சுநாத் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடிபோதைக்கு மஞ்சுநாத் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையே பள்ளிக்கூடத்திற்கு […]

அதிரடி 7 Dec 2025 2:30 pm

நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

ஊழலுக்கு இடமில்லை! வெள்ள நிவாரணப் பணியில் பாரபட்சம் காட்டினால் கடுமையான நடவடிக்கை – வடக்கு மாகாண ஆளுநர்… The post நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:30 pm

வெள்ள நிவாரணக் கொடுப்பனவு –பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

️ வெள்ள நிவாரணக் கொடுப்பனவு: யாழ்ப்பாணத்தில் புதிய உத்தரவு! – 25,000 ரூபா உதவித்தொகை விநியோகத்தில் அதிகாரிகள் பொறுப்புக்கூற… The post வெள்ள நிவாரணக் கொடுப்பனவு – பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:22 pm

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பூங்காவின் (Old Park Jaffna) நிலம், அதிகாரிகளின் குறுகிய சிந்தனையாலும்,… The post பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:15 pm

மாவீரர் நாள்- புயல் – கொலை! நிலாந்தன்!

டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது.அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை… The post மாவீரர் நாள்- புயல் – கொலை! நிலாந்தன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:13 pm

ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்திய ஏர் இந்தியா விமானம் -காரணம் என்ன?

பராமரிப்புப் பணிக்காக கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 737-200 ரக விமானம், கவனக்குறைவால் அங்கேயே 13 ஆண்டுகள் கைவிடப்பட்டதால் தற்போது அதற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக இந்த விமானம் தரையிறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பராமரிப்புப் பணிகள் முடிந்ததா அல்லது கைவிடப்பட்டதா என்ற தகவல் இல்லாமல், விமான நிலையத்தின் ஒரு ஓரத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்த விமானம் குறித்த தகவல்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்தும் விடுபட்டதாக கூறப்படுகிறது. Air India சமீபத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்ததைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத விமானங்களை அப்புறப்படுத்த விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போதுதான், ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம் குறித்து தெரியவந்துள்ளது. தற்போது இந்த விமானத்திற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இனி பறப்பதற்குப் பயன்படாத இந்த விமானம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில், விமான பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கான பயிற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி: `போலி மருந்து வழக்கு' சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள்

விகடன் 7 Dec 2025 1:44 pm

BB Tamil 9 Day 62: பாரு பெஸ்ட் பிளேயரா?; மாட்டிக் கொண்ட ரம்யா, வியானா, விக்ரம்!

ஒரு பக்கெட் துணியை இரண்டு மணி நேரமாக அலசி எபிசோடை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி.  ‘பிரம்பு வாத்தியார் அவதாரம் எடுக்காமல், சுவாரசியமான டாஸ்க்குகளை வைத்து நடந்த  வீக்கெண்ட் ஷோ நன்றாக இருந்தது. இது தொடர்ந்தால் நன்றாக இருக்கும்’ என்று கடந்த வாரத்தில் எழுதியிருந்தேன்.  ஆனால் இந்த வாரம் மீண்டும் பிரம்பை கையில் தூக்கிவிட்டார் விசே.   பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 62 விசாரிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கும்போது, இந்தப் பக்கெட் துணி சமாச்சாரத்தை இத்தனை நேரத்திற்கு இழுக்க  என்ன காரணம்? பிக் பாஸின் செல்லப் பிள்ளையான விக்ரம் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதை நிரூபிப்பதற்கா?  அல்லது பாரு மாதிரி தந்திரமாக விளையாட, ரம்யாவிற்கும் வியானாவிற்கும் தெரியவில்லை என்பதைக் காட்டுவதற்கா? Vijay Sethupathi இத்தனைக்கும் வெள்ளிக்கிழமை நிகழ்விலேயே அனைத்து சண்டையும் முடிந்து மன்னிப்பு கேட்கப்பட்டு அந்த டிராமா முடிந்து விட்டது. மீண்டும் அதைத் தோண்டி ‘ரம்யா நீங்க சொல்லுங்க. வியானா நீங்க சொல்லுங்க’ என்று இழுத்தது, வெளிப்படையான நேர விரயம்.  இந்த நாடகத்தின் சூத்ரதாரியான பாருவிற்கு ‘நல்லா விளையாடினீங்க’ என்று பாராட்டு கிடைத்தது வேறு கொடுமை.  நெக்லஸ் பக்கத்தில் குத்துக்கல் மாதிரி அமர்ந்திருந்த விக்ரமை எழுப்புவதற்காக பாரு செய்த ஸ்ட்ராட்டஜி நன்று. அதில் மறுப்பே இல்லை. ஆனால் இந்த பிளானை ரம்யாவிற்கும் வியானாவிற்கும் அதில் தெளிவாகச் சொல்லி விட்டுச் செய்தாரா என்பதில்தான் குழப்பமே. இதில்தான் பாரு தெளிவாக கேம் ஆடியிருக்கிறார்.  வியானாவாவது விசே சற்று அதட்டிக்கேட்டால் ‘தெரியும்’ என்று ஒரு மாதிரி குன்சாக சொல்கிறார். ஆனால் ரம்யாவோ ‘இது எனக்குத் தெரியவே தெரியாது’ என்று வீட்டிலும் சொல்லி விட்டு அழுகிறார். விசாரணையின் போதும் அழுகிறார்.  Ramya எனில் இவர்களுக்கான சந்தேகத்தின் பலனை அளித்து ஒரு குறும்படத்தை விசே வெளியிட்டிருக்கலாம். பாருவின் சமையல் காமெடிக்கெல்லாம் குறும்படம் போட்டு மகிழும் பிக் பாஸ் டீம், இத்தனை அதி தீவிர பிரச்சினைக்கும் ஒரு குறும்படம் போட்டிருந்தால் பாரு சொன்னது உண்மையா, அல்லது வியானாவும் ரம்யாவும் சொன்னது பொய்யா என்று தெரிந்திருக்கும்.  Paaru பாரு போட்ட மாஸ்டர் பிளான் - மாட்டிக் கொண்ட ரம்யா, வியானா, விக்ரம் ‘எனக்கு இது பிளானுன்னு தெரியாது. தலன்றதால என்கிட்ட பாரு புகார் சொல்றாங்க போலன்னுதான் நெனச்சேன். என்னை ஏன் டார்கெட் பண்றீங்க. இந்த விஷயத்துல என்னை ஏன் கெட்டவளா காட்ட முயற்சிக்கறீங்க..?” என்று வீட்டிற்குள்ளேயே வெடித்து அழுகிறார் ரம்யா.  இதைத் திரையில் பார்த்துக் கொண்டிருந்த விசே, ரம்யாவை விசாரிக்கும்போது தனது வழக்கமான கடுமையைக் காட்டியது முறையானதல்ல. ஒருவேளை இப்படி நடந்திருக்கலாம். ‘விக்ரமை எப்படியாவது எழுப்ப வேண்டும்’ என்கிற பிளானை பாரு, தன் அணியிடம் முதலில் சொல்லியிருக்கலாம். பிறகு பக்கெட் துணி பிரச்சினையை சொல்லியிருக்கலாம். இதை இரண்டையும் சரியாக கனெக்ட் செய்து யோசிக்கும் அளவிற்கு ரம்யாவிற்கும் வியானாவிற்கும் தெரியாமல் போயிருக்கலாம்.  குறிப்பாக ரம்யாவிற்கு இரண்டையும் கனெக்ட் செய்து யோசிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால்தான் அதையே தொடர்ந்து சொல்லி அழுகிறார்.  “அது எப்படிம்மா உங்களுக்கு தெரியாம போகும்…? என்று ரம்யாவை மீண்டும் மீண்டும் விசே கேள்வி கேட்டு வதைத்தது ஒரு வகையான டார்ச்சர் போலவே தெரிந்தது. ‘கெட்ட வார்த்தைல்லாம் பேசத் தெரியுது. இதை யோசிக்க முடியலையா?” என்று சம்பந்தமில்லாமல் கோர்த்து பேசினார் விசே.  Vikram வியானாவிற்கும் இதுபோல், பக்கெட் துணி சமாச்சாரத்தை பாருவின் பிளானுடன் இணைத்து யோசிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். இல்லையென்றால் இத்தனை ஆக்ரோஷமாக விக்ரமுடன் சண்டை போட்டிருக்க மாட்டார். ஏனெனில் இந்த விவகாரத்தில் அவருடைய உடைதான் சர்ச்சைக்குள்ளானது. தெரிந்தே பாருவின் பிளானிற்கு ஒப்புதல் சொல்லியிருக்கமாட்டார்.  ‘பாரு.. நீங்க பெஸ்ட் வில்லன்’ - சர்காஸமாக பாராட்டிய விக்ரம் இதையெல்லாம் கூடுதலாக ஒன்றுண்டு. விக்ரமை அப்புறப்படுத்த பாரு பிளான் போட்டது சிறப்புதான். ஆனால் அதற்குப் பின்னால் வியானா மற்றும் ரம்யாவின் அழுகை, விக்ரமின் கோபம் போன்றவை நடந்தததற்குப் பின்னாலாவது விக்ரமிடம் அதைச் சொல்லியிருக்கலாம்.  ஆனால் பாரு சொல்லாமல் கமுக்கமாக இருந்து விட்டார். பிரச்சினை பொிதாக வெடிக்கும் போதுதான் வாயைத் திறந்தார். “பாரு. நீங்க பெஸ்ட் வில்லன். இதுல வியானா ஹர்ட் ஆகியிருக்கா.. நான் அழுதிருக்கேன். அப்பவே சொல்லி இதை முடிச்சு வெச்சிருக்கலாம்’ என்று விக்ரம் பாருவிடம் குறிப்பிட்டது இதைத்தான்.  ஒவ்வொரு போட்டியாளரும் ஐக்யூவில் ஒவ்வொரு மாதிரியாகத்தான் இருப்பார்கள். அந்தந்த மீட்டரில் அவர்களை வைத்து நிதானமாக விசாரிப்பதுதான் ஒரு ஹோஸ்டின் முறையான செயல். ஆனால் விசேவோ, அனைவருமே தன்னுடைய மீட்டரில் யோசித்து சட்டென்று புரிந்து பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அப்படி இயலாதவர்களை ‘உக்காருங்க.. உங்களுக்கு ஒண்ணும் புரியலை’ என்று அவமானப்படுத்துகிறார். Vikram ரம்யாவிற்கு இந்த பிளான் தெரியாது என்பதால்தான் வீட்டிற்குள்ளும் மறுத்து அழுகிறார். அதையே விசே வலியுறுத்தும் போதும் ‘எனக்குத் தெரியாது சார். வேணுமின்னா கேம் விட்டு போயிடறேன்’ என்கிறார். அவர் மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. எனில் விசே இதை நிதானமாக ஹாண்டில் செய்கிறார்கள். ‘எப்படி இருக்கீங்க பேபிஸ்?’ என்று அவர் செல்லம் கொஞ்ச வேண்டியதில்லை. காட்ட வேண்டிய இடங்களில் கடுமை காட்டுவது அவசியம். ஆனால் அதையே எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டியதில்லை.  ரம்யாவிற்கும் வியானாவிற்கும் உண்மையிலேயே பாருவின் பிளான் தெரியாதா? விக்ரம் மீது  வியானாவிற்கு ஒரு சாப்ட் கார்னர் உண்டு. என்றாலும் இந்த விவகாரத்தில் அவர் ஆரம்பத்தில் முரண்டு பிடித்ததற்கான காரணத்தை இறுதியில் அவரே சொல்லி விட்டார். “நான் ரம்யாவையும் பாருவையும்தான் முதல்ல கேட்டிருக்கணும்.. உங்களைக் கேட்டது தப்பு. நீங்க முன்னாடி சொன்ன விஷயங்கள் என்னைப் பாதிச்சது. அதை வெச்சு இதுல உங்களை குற்றம் சுமத்திட்டேன்” என்று மன்னிப்பு கேட்டது சிறந்த காட்சி. இதைப் போலவே ‘என் கிட்ட மன்னிப்பு கேளு. ஏன்னா உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். நீ அந்த மாதிரி ஆளுன்னு கிடையாது. வேற யாராவது இருந்தா இப்படி கேட்க மாட்டேன். நீ மன்னிப்பு கேட்க மாட்டேன்னு சொல்றது ஒரு hierarchy (அதிகார படிநிலை) தெரியுது. அதை நான் உன் கிட்ட எதிர்பார்க்கலை. ஸோ.. மன்னிப்பு கேட்ரு” என்று வியானாவிடம் விக்ரம் உரிமையுடன் கேட்டது சிறந்த காட்சி. நுண்ணுணர்வுள்ளவர்களால்தான் இப்படி யோசிக்க முடியும். இதன் மூலம் இருவரின் மனவருத்தமும் உடனே அகன்று சமநிலையுள்ள நண்பர்களாக மீண்டும் மாறி விடுவார்கள்.  ‘வெள்ளை பக்கெட் கதையை பாரு ஆரம்பியுங்க’ என்ற விசே ‘ரொம்ப சுத்தாம சொல்லுங்க.. மத்தவங்க யாரும் நடுவுல சொதப்பாதீங்க.. ‘சாவு’ன்னு சொன்னா மட்டும் கோபம் வருது. பிக் பாஸ் சொல்றத கேட்காம சண்டை போடறீங்க.. அப்ப எங்களுக்கு சுயமரியாதை இல்லையா?’ என்று விசே பொங்கியது சரியாது. “ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு வாங்க. இல்லைன்னா சாவுங்க’ என்று எரிச்சலின் உச்சத்தில் விக்ரம் சொன்னது பிழைதான் என்றாலும் இயல்பானது. இவர்களின் ராவடி அந்த அளவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. Bigg boss housemates ‘என்னால முடியல.. நான் வெளில போறேன்’ என்று ரம்யா உணர்ச்சிவசப்பட்டு சொன்னதும் “அப்படில்லாம் யாரும் உங்களை கட்டாயப்படுத்தல. வெளியே வந்துடுங்க’ என்று விசே பதிலடி தந்ததும் பிரமோவில் காட்டிய போதே தெரிந்துவிட்டது. அப்படி நிகழப் போவதில்லை என்று. சக போட்டியாளர்கள் ‘இது நல்ல சான்ஸ். வார்த்தையை விட்றாத’ என்று உபதேசம் தந்ததும் மனம் மாறிவிட்டார் ரம்யா.  ‘கைய விட்டுப் பார்த்தாரா?’ என்று பக்கெட் விவகாரத்தில் யாரோ கமெண்ட் அடித்தார்கள் என்று அதற்கும் விக்ரம் மீது பாய்ந்தார் வியானா. கடைசியில்தான் தெரி்ந்தது அந்தக் கமெண்டை அடித்தவர் அரோரா. அதிலும் விக்ரமிற்கு ஆதரவாகத்தான் அந்தக் கமெண்ட்டை அடித்திருக்கிறார். இப்படியாக ரம்யா, பாரு, அரோரா மீது காட்ட வேண்டிய கோபத்தை ஒட்டுமொத்தமாக விக்ரம் மீது வியானா காட்டியதால்தான் இத்தனை பெரிய ‘பக்கெட்’ பஞ்சாயத்து.  ‘உங்க மீது வன்மத்தைக் கொட்றாங்களே?’ - விசேவிடம் கேட்ட பார்வையாளர் இது முடிந்ததும் பிரேக் விட்டு திரும்பிய விசே விடம் “சார்.. நீங்க இந்த ஷோவிற்கு ஹோஸ்ட் மட்டும்தான். ஆனா உங்க மேல வன்மத்தைக் கொட்றாங்களே..அதை எப்படிப் பார்க்கறீங்க?” என்று ஒரு பெண்மணி கேட்டார். (செட்டப் கேள்வியா?!) “நல்லாவே கொட்டட்டும். அதை நாங்க வரவேற்கிறோம். வீக்கெண்ட்ல முக்கியமான விஷயத்தை அட்ரஸ் பண்றோம். அதன் மூலம் போட்டியாளர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி, சில புரிதல்களை ஏற்படுத்த முயல்கிறோம். இதுக்குப் பின்னாடி பெரிய டீம் இருக்கு. விமர்சனங்களை நாங்க வரவேற்கிறோம்” என்றார் விசே. “கத்துக்கறதுக்கு சிலபஸ் இருக்கு. ஆனா புரிஞ்சுக்கறதுக்கு சிலபஸ் இல்ல. அதை கத்துக்கறவங்கதான் செய்யணும்”என்று விசே சொன்னது சிறப்பு.  “விமர்சனங்களை வரவேற்கிறோம். நல்லா கொட்டுங்க” என்று சர்காஸமாக விசே சொன்னாலும், அந்த விமர்சனங்களை வைத்து விசேவோ அல்லது பிக் பாஸ் டீமோ ஏதாவது மாற்றங்கள் செய்திருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. வீக்கெண்ட் விசாரணைகள் முதல் எவிக்ஷன் வரை பார்வையாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பிற்கு மாறாகத்தான் பல விஷயங்கள் தொடர்ந்து நடக்கின்றன. எனில் அந்த விமர்சனங்களுக்கு என்ன மதிப்பு? அரோரா “நான் சொன்னாலும் கேக்க மாட்டீங்க. பிக் பாஸ் பேச்சையும் கேக்க மாட்டீங்க. அடுத்த வாரமும் இதையேதான் பண்ணப் போறீங்க?” என்று போட்டியாளர்கள் குறித்து சலித்துக் கொள்கிறார் விசே. ஆனால் பார்வையாளர்களின் ஃபீட்பேக்கை மதிக்காமல் பிக் பாஸ் டீமும் அதைத்தானே செய்கிறது?! பக்கெட் பஞ்சாயத்து முடிந்ததும், நடிப்பு டாஸ்க்கிற்கு வந்தார் விசே. முதலில் கிருமி சுபிக்ஷாவை எழுப்பி ‘நீங்க என்னதான் பண்ணீங்க?’ என்று கேட்க அவரிடம் பதில் இல்லை. போலவே எஃப்ஜே, அமித், சபரி, ஆதிரை போன்றோரும் பதில் இல்லாமல் திகைத்து நின்றார்கள்.  முந்தைய சீசன்களில் இந்த நடிப்பு டாஸ்க்களில் போட்டியாளர்கள் இயன்றவரை சுவாரசியம் காட்டினார்கள். ஆனால் இந்த சீசனில் உக்கிரமாக சண்டை போட்டதைத் தவிர காரெக்டர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  ‘பாரு பெஸ்ட் பிளேயர்’  - விசேவின் பாராட்டு நியாயமானதா? ‘மோசத்தில் குறைந்த மோசம்’ என்று பார்த்தால் விக்ரம், பாரு, வினோத், கனி ஆகிய நால்வரும் தங்கள் காரெக்டரில் ஓரளிவற்காவது நீடிக்க முயன்றார்கள். டிஆர் மாதிரி ஆரம்பத்தில் அசத்திய வினோத், பிறகு சண்டை போடுவதில் மூழ்கி விட்டார். மற்றவர்களும் இதை அப்படியே கை விட்டு விட்டார்கள் ஆனால் ‘விக்ரமும் பாருவும் செஞ்சது எனக்குப் பிடிச்சிருந்தது’ என்றார் விசே. எம்.ஆர்.ராதா மாதிரி எதையோ முயன்றார் விக்ரம். போலவே முறுக்கை கடித்து கர்ரக் முர்ரக் என்று மெல்லுவது போல பல்லைக் கடித்து ‘என்ற.. ஒன்ற..’ என்று கோவைத் தமிழ் மாதிரி எதையோ மென்று துப்பினார் பாரு. என்னவொன்று சண்டை போடும் போதுகூட அந்த ஸ்லாங்கில் பேசியது மட்டுமே சிறப்பு.  Vijay Sethupathi ஆனால் இதற்காக  ‘நடிகர் டாஸ்க்கில்’ பாருவை சிறந்தவர் என்று சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. கோள்மூட்டி விடுவது, அரோராவை வெறுப்பேற்றுவது, விக்ரமை சீண்டுவது, வீட்டு தல, பிக் பாஸ் ஆகிய இருவரையும் மதிக்காமல் தனியார்வர்த்தனமாக சபையில் கத்திக் கொண்டே இருப்பது. கம்முவுடன் ஜாலியாக ரொமான்ஸ் செய்வது என்பதில்தான் பிஸியாக இருந்தார் பாரு.  மைக்கை மறைத்துவிட்டு பேசுவது முதல் பாருவின் அட்ராசிட்டிகள் எதையும் அட்ரஸ் செய்யாமல் அவரைப் பாராட்டுவதின் மூலம், இந்த ஷோவை பாரு இருந்தால்தான் ஓட்ட முடியும் என்று பிக் பாஸ் டீம் நினைக்கிறதா? அதனால்தான் அவரது பிழைகள் விசாரிக்கப்படவில்லையா என்கிற சந்தேகம் எழுகிறது.  “என்னைப் பேச வெக்காதீங்க. எப்படியாவது போங்க’ என்று சட்டென்று டாட்டா காட்டி ஷோவை முடித்துவிட்டார் விசே.  பக்கெட் விவகாரத்தில் பாருவின் சூழ்ச்சி காரணமாகவே இத்தனையும் நடந்தது என்பதை ஒருவழியாக புரிந்து கொண்ட வியானா, கடைசியில் விக்ரமிடம் கட்டியணைத்து மன்னிப்பு கேட்டு ‘இந்த வலையில் தெரியாமல் மாட்டிக்கொண்டேன்’ என்றது சிறப்பான காட்சி.  இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் நடந்ததா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  ‘பக்கெட் துணி’ விவகாரத்தில் பிரதான குற்றவாளி யாரென்று நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். 

விகடன் 7 Dec 2025 1:41 pm

தென்னாப்பிரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு! 11 பேர் பலி!

தென்னாப்பிரிக்கா நாட்டில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில், தலைநகர் பிரிட்டோரியாவின் அட்டெரிட்ஜ்வில்லே பகுதியில், 3 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று (டிச. 6) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், 25 பேர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில், 2 சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவரும் பலியானதாகத் […]

அதிரடி 7 Dec 2025 1:30 pm

தூத்துக்குடி: போலி 500 ரூபாய் நோட்டை திருடி சில்லரை மாற்றியவர் கைது - விசாரணையில் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று இரவு எட்டயபுரம், கான்சாபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரியும் கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ரூ.500 கொடுத்து சில்லரை மாற்றிக்கொண்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில், அவர் கொடுத்த ரூ.500 நோட்டு போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட இருவர் அப்போது, அவர் அந்த 500 ரூபாய் நோட்டை தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு சமையல் மாஸ்டரான அசாம் மாநிலம் தேஸ்பூரைச் சேர்ந்த குமார் சர்மாவின் பர்சில் இருந்து திருடியதாக கூறியுள்ளார். இதையடுத்து, குமார் சர்மாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர், “5 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ‘ரூ.1 லட்சம் நல்ல நோட்டுகளை கொடுத்தால், இரட்டிப்பாக ரூ.2 லட்சம் வழங்குகிறோம்’ என்ற விளம்பரத்தைப் பார்த்து, அந்த விளம்பரத்தை கொடுத்த நபர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மும்பை சென்று, அவர்களிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்து, ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகளை பெற்றுக்கொண்டு எட்டயபுரம் வந்ததாகவும் கூறியுள்ளார். இங்கு வந்து பார்த்தபோது, அதில் ரூ.2 ஆயிரத்திற்கு மட்டும் நான்கு 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததையும், மற்றவை குழந்தைகள் விளையாடும் போலி 500 ரூபாய் நோட்டுகளாகவும், வெள்ளை பேப்பர்களை கட்டுகளாக வைத்து ஏமாற்றியுள்ளனர். எட்டயபுரம் காவல் நிலையம் இதனால் அந்த போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாமல் பையில் வைத்திருந்தேன். ஆனால், சரவணன் எனக்குத் தெரியாமல் அதை திருடி, கடையில் கொடுத்து சில்லரை மாற்றியுள்ளார் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரிடமிருந்த 67 போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், மும்பையை சேர்ந்த மோசடி கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ஜன்னல் வழியே ரூபாய் நோட்டு கட்டுகளை வீசிய அதிகாரி - என்ன நடந்தது?

விகடன் 7 Dec 2025 12:53 pm

புதுச்சேரியில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா… 2026 தேர்தலில் தவெக மாஸ்டர் பிளான்!

விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதில் தவெக கவனம் செலுத்தி வரும் நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

சமயம் 7 Dec 2025 12:50 pm

பஞ்சப்பூரில் காய்கறி சந்தை அருகில் பூங்கா எப்போது கட்டப்படும்?

பஞ்சப்பூரில் காய்கறி சந்தைக்கு அருகிலேயே பூங்கா எப்போது அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சமயம் 7 Dec 2025 12:38 pm

கந்தன் மலை: ``34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம்!'' - ஹெச்.ராஜா

ஹெச். ராஜா இப்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். 'கந்தன் மலை' என்ற படத்தின் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் வீர முருகன் இயக்கயிருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. சில சர்ச்சையான விஷயங்களையும் இந்த டிரெய்லர் உள்ளடக்கி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹெச். ராஜா, திருப்பரங்குன்றம் விஷயம் திருத்தி கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், 2 ஆம் தேதி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி அங்கு சென்று, பலியிடுவது காலம் காலமாக அங்கு நடக்கிறது என்ற பொய் செய்தியை மக்கள் மத்தியில் பரப்பினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹெச். ராஜா வரலாற்று ரீதியாக பார்த்தால் 1310 ஆம் ஆண்டு தொடங்கி 8 ஆப்கானிய சுல்தான்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்தார்கள், அதில் இறுதி சுல்தான் தான் சிக்கந்தர். திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான் இவர்கள் ஆட்சிக் காலத்தில் பல இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன, பல இந்து பெண்களுக்கு கொடுமைகள் நடந்துள்ளன. இதை அனைத்தையும் மறைத்து திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருப்பதாக சொல்கிறார்கள். இது சம்பந்தமான வழக்கு 1930-ல் லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் உண்மை வெளிப்பட்டது, அதில் 34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம் என இருக்கிறது. அதனால் கந்தன் மலையைத் திரித்து சிக்கந்தர் மலையாக மக்களை ஏமாற்றும் வேலையை முறிக்கும் ஒரு சமூகப் படமாகத்தான் இப்படம் இருக்கும். என்றார். திருப்பரங்குன்றம்: இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம் - ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

விகடன் 7 Dec 2025 12:38 pm

பிக் பாஸால் உங்கள கிழி கிழினு கிழிக்கிறாங்களே, வன்மத்த கொட்டுறாங்களே: விஜய் சேதுபதி என்ன இப்படி சொல்லிடாரு!

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் போட்டியாளர்களை விட விஜய் சேதுபதியை அதிகம் விளாசுகிறார்கள். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு யாருமே எதிர்பார்க்காத பதிலை அளித்திருக்கிறார் மக்கள் செல்வன்.

சமயம் 7 Dec 2025 12:38 pm

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விசேட ‘ஒப்பரேசன்’–அமைச்சர் சந்திரசேகர்

“வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல் வளங்களை அள்ளிச் செல்கிறார்கள். இது நியாயமற்றதொன்றாகும். எனவே இந்திய மீனவர் அத்துமீறலைக் கட்டுப்படுத்த எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்து விசேட ‘ஒப்பரேசன்’ ஒன்று முன்னெடுக்கப்படும்’ என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் […]

அதிரடி 7 Dec 2025 12:11 pm

வடக்கில் நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் –ஆளுநர் எச்சரிக்கை

வடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஆளுநர், இது குறித்து விசேட தெளிவுபடுத்தலை […]

அதிரடி 7 Dec 2025 12:09 pm

யாழில். 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 25 000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலரால் , பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் […]

அதிரடி 7 Dec 2025 12:06 pm

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்நகரப்பழைய பூங்கா(Old park Jaffna) அதில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது விடயத்தில் மிகப்பலமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு சாரார் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலராக சிறிதுகாலம் (14 மாதங்கள்) பணியாற்றியவன் என்றவகையில் இந்த பழைய பூங்கா பற்றிய எனது கரிசனையையும் […]

அதிரடி 7 Dec 2025 12:03 pm

மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை

மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஹிமாயூன் கபீர் முர்ஜிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டுவோம் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். திட்டமிட்டபடி அயோத்தியில் பாபர் மசூதி இடப்பட்ட நாளில் பாபர் மசூதி கட்ட பூமி பூஜை செய்யப்படும் என்று கபீர் தெரிவித்து இருந்தார். மம்தா பானர்ஜி சொன்னபடி நேற்று முர்ஜிதாபாத்தில் உள்ள ராஜீவ் நகரில் அயோத்தியில் இருந்தது போன்ற பாபர் மசூதியை கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவும், பாபர் மசூதி கட்ட நன்கொடை கொடுக்கவும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள் “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டனர். விழாவிற்கு வந்த மத போதகர்களின் முன்னிலையில் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீஸாரோ அல்லது ரிசர்வ் போலீஸ் படையோ பூமி பூஜையை தடுக்க முன்வரவில்லை. பாபர் மசூதி கட்ட பூமி பூஜை பாபர் மசூதிக்கு பூமி பூஜை செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ. ஹிமாயூன் கபீர் மூலம் முஸ்லிம்களை மம்தா பானர்ஜி திருப்தி படுத்த முயற்சி செய்துள்ளார். ஹிமாயூன் கபீர் ஆதரவாளர்கள் பாபர் மசூதி கட்ட செங்கல் எடுத்துச் செல்கிறார்கள். அதோடு மேற்கு வங்க போலீஸார் தனக்கு துணையாக இருப்பதாக ஹிமாயூன் கபீர் தெரிவித்துள்ளார். இப்போது ஹிமாயூன் கபீரை சஸ்பெண்ட் செய்துள்ள மம்தா பானர்ஜி, இந்துக்களை ஹிமாயூன் கபீர் மிரட்டியபோது ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளது. போட்டியாக ராமர் கோயில் பாபர் மசூதிக்கு போட்டியாக முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டப்போவதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மத்திய அமைச்சர் சுகந்தா அளித்த பேட்டியில், “எங்களது கட்சி முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டுவோம்” என்றார். முர்ஜிதாபாத் பா.ஜ.க நிர்வாகி சர்கார், தனது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ராமர் கோயில் கட்ட பூமி பூஜை செய்துள்ளார். இதில் மத்திய அமைச்சர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. மேற்கு வங்க மக்கள் தங்களது இல்லங்களில் செங்கலை வைத்து பூஜை செய்து கொடுப்பார்கள் என்றும், அந்த செங்கலை கொண்டு ராமர் கோயில் கட்டப்படும் என்றும் சர்கார் தெரிவித்துள்ளார். அதோடு, மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் இருக்கும் ஆதினா மசூதியை மீட்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் ஆதித்நாத் கோயில் இருந்ததாக மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். 1867ம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதற்கு ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராமர் கோயிலுக்கு பூமி பூஜை அரசியல் நோக்கம் கொண்டது மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட திட்டமிட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் செயலாளர் ஆதார் ஹுசேன் அளித்த பேட்டியில், “அரசியல் நோக்கத்தோடும், பிரிவினை நோக்கத்தோடும் பாபர் மசூதி கட்டப்படுகிறது. எம்.எல்.ஏ. கபீர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். அயோத்தி பாபர் மசூதி சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே இனி பாபர் பெயரில் செய்யும் எதுவும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார். `மே., வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன்; டிச.6-ல் அடிக்கல்' - தி.காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு

விகடன் 7 Dec 2025 11:42 am

வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் அதிகம் வாங்கக் கூடாது.. புதிதாக வந்த ரூல்ஸ்!

வாடகை வீட்டில் வசிக்கும் மக்களிடம் அட்வான்ஸ் தொகையாக இந்த அளவுக்கு மேல் வாங்கக் கூடாது என்று புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

சமயம் 7 Dec 2025 11:30 am

கோவா தீ விபத்தில் 23 பேர் பலி

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் பலியாயினர். பலியானவர்கள் அனைவரும் விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது. சிலிண்டர் வெடிப்பு காரணமாக தீ […]

அதிரடி 7 Dec 2025 11:30 am

அமித் ஷாவுக்கு பயப்படும் எடப்பாடி பழனிசாமி.. துணை முதல்வர் உதயநிதி கடும் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

சமயம் 7 Dec 2025 11:18 am

Karnataka:‌ 16 குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்த கர்நாடக வனத்துறை; என்ன நடக்கிறது?

கண்மூடித்தனமான தொடர் வேட்டையின் காரணமாக கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட வங்கப் புலிகளின் எண்ணிக்கை தென்னிந்திய காடுகளில் தற்போது மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. உலகில் வங்கப் புலிகள் அதிகம் வாழும் பகுதிகளாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இந்த மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய வனப்பரப்பு விளங்கி வந்தாலும், அவற்றுக்கான வாழிடப்போதாமை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது‌. கர்நாடக வனத்துறையால் பிடிக்கப்பட்ட புலி குட்டிகள். கர்நாடகாவின் பந்திப்பூர் , நாஹரோலே புலிகள் காப்பக சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலி- மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளால் ஏற்படும் கால்நடைகளின் இழப்பைத் தாண்டி கடந்த இரண்டு மாதங்களில் மூன்று விவசாயிகள் புலி தாக்குதல்களால் உயிரிழந்திருக்கிறார்கள்‌. இதனைத் தொடர்ந்து புலிகளைப் பிடிக்கும் பணியில் இறங்கிய கர்நாடக வனத்துறையினர் ஒரே மாதத்தில் 20 புலிகளுக்கு மேல் பிடித்திருக்கிறார்கள். இதில் 16 குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தெரிவித்த கர்நாடக வனத்துறை அதிகாரிகள், புலிகள் காப்பக எல்லை பகுதிகளில் நடமாடி வரும் புலிகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளைநிலங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடலில் 16 புலிக்குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்திருக்கிறோம். மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் படிப்படியாக வனப்பகுதிக்குள் விடுவித்து வருகிறோம். கர்நாடக வனத்துறையால் பிடிக்கப்பட்ட புலி குட்டிகள். குட்டிகளை அதன் தாயுடன் இணைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் பிடித்த 3 புலிக் குட்டிகளையும் தாயுடன் இணைத்தோம். கடைசியாக பிடிக்கப்பட்ட 3 மாத குட்டியின் தாய் புலியை தேடும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன. எங்களின் இந்த நடவடிக்கையால் எதிர்கொள்ளல்கள் குறையும் என்றனர். அதேவேளையில் , புலிக்குட்டிகளை வனத்துறையினர் முறையாகக் கையாள்வதில்லை என சுற்றுச்சூழல் அமைப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

விகடன் 7 Dec 2025 10:34 am

பாக். –ஆப்கன் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! 4 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லையில் இருநாட்டுப் படைகளுக்கு இடையே திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சாமன் நகரில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் உடனான எல்லையில், நேற்று முன்தினம் (டிச. 5) இரவு 10.30 மணியளவில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதையடுத்து, இருநாட்டுப் படைகளுக்கு இடையில் சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 4-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் […]

அதிரடி 7 Dec 2025 10:30 am

தொடருந்து பயணிகளுக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு

தொடருந்து சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே தொடருந்து பருவச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தொடருந்து சேவைகள் வழக்கமாக இயங்கும் பகுதிகளில், தொடருந்து பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க முயற்சிப்பதாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இந்தப் பிரச்சினையை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தொடருந்து பாலத்தை இரட்டைப் பாதைப் பாலமாக […]

அதிரடி 7 Dec 2025 10:09 am

நாட்டை புரட்டிப்போட்ட பேரழிவு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரிப்பு

அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, காணாமல் போனோரின் எண்ணிக்கை 209 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, ஹட்டன் – வட்டவல, மாணிக்க தோட்டம் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி 7 Dec 2025 10:05 am

பிக் பாஸில் இருந்து பார்வதி அல்ல பிரஜின் வெளியேற்றம்: கனி அக்கா சேஃப்

பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த வாரம் வி.ஜே. பார்வதி வெளியேற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று மக்கள் செல்வனின் நண்பர் பிரஜினை வெளியேற்றிவிட்டார்கள்.

சமயம் 7 Dec 2025 9:39 am

நாய்கள் பேய்களைப் பார்க்கிறதா? நள்ளிரவில் அவை குறைப்பதன் மர்மம் என்ன?

வீட்டில் வளர்க்கும் நாய்கள் சில நேரங்களில் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து தொடர்ந்து குறைப்பதைப் பார்த்திருப்போம். நாய்களுக்குப் பேய்கள் தெரியும், அவை அதனை உணரும் என்று காலம் காலமாக வீட்டில் இருப்பவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் நாய்களால் ஆவிகளைப் பார்க்க முடியுமா? இதுகுறித்து ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். லண்டன் ரிப்பன் கல்லூரியின் பேராசிரியர் மார்க் ஈடன் இதுகுறித்து கூறுகையில், சமீபத்தில் தந்தையை இழந்த ஒருவர், தன் நாய் தொடர்ந்து படிக்கட்டுகளைப் பார்த்துக் குறைப்பதாகக் கூறினார். அவர் ஏற்கெனவே பேய்களின்மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால், தன் நாய் தன் தந்தையின் ஆவியை உணர்வதாக அவர் நம்புகிறார் என்று கூறியிருக்கிறார். Dog அறிவியல் சொல்வதென்ன? விஞ்ஞானிகள் நாய்கள் பேயைப் பார்க்கவில்லை, மனிதர்களால் உணர முடியாத சத்தங்களையும், வாசனைகளையும் அவை உணர்கின்றன என்று கூறுகின்றனர். லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் பிரெஞ்ச் கூறுகையில் நாய்களுக்கு மனிதர்களைவிட சிறந்த நுகரும் திறனும், கேட்கும் திறனும் உண்டு. எனவே மனிதர்களால் கண்டறிய முடியாத இயற்கையான அசைவுகளைக் கண்டு அவை எதிர்வினையாற்றுகின்றனவே தவிர, இது அமானுஷ்யம் அல்ல என்று கூறியிருக்கிறார். மனிதர்களுக்கு மூக்கில் சுமார் 5 மில்லியன் நுகர்வு செல்கள் மட்டுமே உள்ளன. ஆனால், நாய்களுக்கு சுமார் 220 மில்லியன் நுகர்வு செல்கள் உள்ளன. இது மனிதனை விடப் பல மடங்கு அதிகமாம். 1950-களில் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மிகக் குறைந்த அளவு பூண்டு எண்ணெயைக்கூட நாய்களால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபத்திய ஆய்வுகளில், புற்றுநோய் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை வாசனை மூலமே நாய்கள் கண்டுபிடிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏன், மனிதர்களின் மன அழுத்தத்தைக்கூட நாய்களால் முகர்ந்து உணர முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது, நாய்கள் ஒரு வெற்று இடத்தைப் பார்த்து குரைத்தால், அங்கே பேய் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாத ஏதோ ஒரு வாசனையோ அல்லது சத்தமோ அங்கே இருக்கிறது என்பதே அறிவியலில் பதிலாக உள்ளது.

விகடன் 7 Dec 2025 9:08 am

Doctor Vikatan: சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

Doctor Vikatan: கொரோனா காலத்தில் வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி அதிகம் வலியுறுத்தப்பட்டது. பொதுவாகவே, வைட்டமின் சி மாத்திரைகளை தினமும் எடுத்துக்கொண்டால், சளி, காய்ச்சல் பாதிக்காது என்று சொல்லப்டுவது எந்த அளவுக்கு உண்மை?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி சளி, காய்ச்சல் பிரச்னை எதனால் வருகிறது என்பது மிகவும் முக்கியம். சளி, காய்ச்சல் என்பது வைட்டமின் சி குறைபாடுகாரணமாக வருவது கிடையாது. சளி, காய்ச்சல் வருவதற்கான பல காரணங்களில் மிக முக்கியமான காரணம், தொற்று (Infection). தொற்று பாதிக்கிறது என்றால், நம் உடலின்நோய் எதிர்ப்புச் சக்தி (Immune Level) சற்று குறைவாக இருப்பதாக அர்த்தம். நம் உடல் 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' (Oxidative Stress) நிலையில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்போது ஏற்படும் சமநிலையற்ற நிலை.  இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை சமன் செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ உபயோகப்படுத்துவதுதான் வைட்டமின் சி. அதனால்தான், காயம் ஆறும் காலத்தில் உள்ளவர்களுக்கோ (Healing Time), புகை பிடிப்பவர்களுக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை முடித்தவர்களுக்கு, அதேபோல நீரிழிவு நோயாளிகளுக்குப்  புண்கள் ஏதாவது வந்தாலோ வைட்டமின் சி சப்ளிமென்ட்டை (Supplement) மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறோம். இதன் நோக்கம், அவர்களுடைய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து, அவர்களுடைய நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம். நாம் ஒருநாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கு மேல் வைட்டமின் சி எடுத்தால், அதுவே நமக்கு பிரச்னைகளை உண்டாக்கும். ஒரு நாளைக்கு ஒருவர்2,000 மில்லிகிராமுக்குள்தான் வைட்டமின் சி எடுக்க வேண்டும். அதற்கும் மேல் போனால், அந்த வைட்டமின் சி-யே அவர்களுக்குப் பிரச்னைகளை உண்டுபண்ணும். அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம். அது அவர்களுக்கு வைட்டமின் சியின் பலனை அளிக்கும். வைட்டமின் சி மட்டுமல்ல, எந்த சப்ளிமென்ட்டையும் மருத்துவரின் பரிந்துரையின்றி, எடுக்காமல் இருப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கோபம், அழுகை, தனிமை, பயம்... மாறும் மனநிலையை சரிசெய்யுமா பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்?

விகடன் 7 Dec 2025 9:00 am

`அரசுப்பள்ளி மாணவர்கள் மோதல்'- தலையில் தாக்கப்பட்ட 12-ம் வகுப்பு மாணவன் மூளைச்சாவு அடைந்த சோகம்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கும்பகோணம், பட்டீஸ்வரம், உடையாளூர், பம்பப்படையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளயில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். கும்பகோணம் இதில் 11-ம் வகுப்பு மாணவனின் மூக்கில் காயம் அடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இது தொடர்பாக 11-ம் வகுப்பு மாணவனின் பெற்றோர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் மாணவர்களின் நலன் கருதி இருதரப்பினரின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை செய்தும், எச்சிரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர். பள்ளி நிர்வாகமும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி அந்த 12-ம் வகுப்பு மாணவன் தன் நண்பர்களுடன் மதிய உணவு இடைவெளியின்போது 11-ம் வகுப்பு மாணவன் தரப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் மீது இடித்துவிட தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக முன்விரோதமும் ஏற்பட்டு மாணவர்களுக்கிடையே மோதல் நீடித்தது. இந்த நிலையில் 4ம் தேதி மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியிலிருந்து 12ம் வகுப்பு மாணவன் தன் நண்பர்களுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார். பட்டீஸ்வரம் கோயில் அருகே சென்றபோது 11ம் வகுப்பு மாணவர்கள் 12ம் வகுப்பு மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இவர்களும் திருப்பி அடித்துள்ளனர். இதில் 12ம் மாணவனை 11ம் வகுப்பு மாணவர்கள் மரக்கட்டையால் தலையில் பலமாக அடித்துள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் மாணவன் கீழே சரிந்து விழுந்தார். சாலையில் நடந்த இந்த மோதல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Students fight அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கட்டையால் அடித்ததில் மாணவனுக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் அனுமதிக்கப்பட்டார் மாணவன். இந்த சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் சிங் விசாரணை நடத்தினார். மேலும் 12ம் வகுப்பு மாணவரைத் தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்நிலையில், அந்த மாணவன் மூளைச்சாவு அடைந்ததால், அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக, தனியார் மருத்துவமனையிலிருந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர், மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். இதில் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனால் வேறு எதுவும் பிரச்னை ஏற்படாதவாறு இருக்க மாணவனின் வீடு, பள்ளி மற்றும் பட்டீஸ்வரம் பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விகடன் 7 Dec 2025 8:55 am

வடக்கில் நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளுநர் எச்சரிக்கை

வடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஆளுநர், இது குறித்து விசேட தெளிவுபடுத்தலை வெளியிட்டார். ஆளுநரின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனநாயகக் கட்டமைப்பில் அரச செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதையும், விழிப்புடன் இருப்பதையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்கள் மத்தியில், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது சமூகப் பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும். உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடினேன். அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமையவே பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராமமட்ட ஏனைய அலுவலர்கள் ஊடாகத் தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித இரகசியத் தன்மையும் இல்லை. உதவித்தொகை பெறத் தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் அந்தந்தப் பகுதிகளில் பகிரங்கமாகத் காட்சிப்படுத்தப்படும். இதனை மாவட்டச் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, தகுதியான எவரும் விடுபடவோ, தகுதியற்ற எவரும் உள்நுழைவதற்கோ இதில் வாய்ப்புகள் இல்லை. மிக முக்கியமாக, மக்களுக்கான உதவித்தொகை இன்னமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை. அவ்வாறு பணம் வைப்பிலிடப்படும் முன்னரே, 'முறைகேடுகள் நடந்துவிட்டதாக'அரைகுறைத் தகவல்களைக் கொண்டு பரப்பப்படும் செய்திகள் அடிப்படையற்றவை. தெரிவுப் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னரே கொடுப்பனவுகள் இடம்பெறும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சமடையத் தேவையில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்கு, அரச இயந்திரத்தில் புரையோடிப்போயிருந்த ஊழலை ஒழிப்பதேயாகும். எனவே, மக்களின் கண்ணீரில் இலாபம் தேடும் ஈனச் செயலுக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இனி இடமில்லை. நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது - அவர் எந்த நிலையிலிருந்தாலும் - தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கடந்து, முறைகேடுகள் தொடர்பில் யாரிடமேனும் தகுந்த ஆதாரங்கள் இருப்பின், அதனை எனது கவனத்துக்கு நேரடியாகக் கொண்டு வரலாம். ஆதாரபூர்வமான முறைப்பாடுகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அரச இயந்திரம் மக்களுக்காகவே இயங்குகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், காழ்ப்புணர்ச்சிகளைத் தவிர்த்து, நேர்மையுடனும் மனிதாபிமானத்துடனும் ஒன்றிணைந்து எமது மக்களை மீட்டெடுப்போம், என வடக்கு மாகாண ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு 7 Dec 2025 8:48 am

SIR: 5.6 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்; கோவை மாவட்ட நிலவரம்

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய பணிகள் டிசம்பர் 11-ம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கோவை இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வாக்காளர்களிடம் பூர்த்தி செய்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் உடனடியாக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சனிக்கிழமை (6.12.2025) வரை 5,06,394 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இறப்பு தொடர்பாக 1,13, 861 பேரும், கண்டறிய முடியாதவை, இடமாற்றம், இரட்டைப் பதிவு தொடர்பாக 3,92,533 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். SIR - சிறப்பு தீவிர திருத்தம் அதிகபட்சமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் 70,439 பெயர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவை வடக்கு தொகுதியில் 66,525 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இதேபோல கவுண்டம்பாளையம் தொகுதியில் 64,072 பெயர்கள், கிணத்துக்கடவு தொகுதியில் 58,545 பெயர்கள், சிங்காநல்லூர் தொகுதியில் 54,354 பெயர்கள், கோவை தெற்கு தொகுதியில் 46,894 பெயர்கள், சூலூர் தொகுதியில் 43,465 பெயர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் 41,079 பெயர்கள், பொள்ளாச்சி தொகுதியில் 31,720 வாக்காளர்கள், வால்பாறை தொகுதியில் 29,691 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.“ என்று கூறியுள்ளனர். கோவை படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 11-ம் தேதிக்குள் கோவையில் மேலும் 1 லட்சம் பெயர்கள் நீக்கப்படவுள்ளன. இதன் மூலம் கோவையில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

விகடன் 7 Dec 2025 7:59 am

‘ருதுராஜுக்காக’.. 2 ஸ்டார் வீரர்களை ODI அணியில் இருந்து வெளியேற்றும் பிசிசிஐ: இனி 4ஆவது இடம் இவருக்கே!

ருதுராஜ் கெய்க்வாட்டிற்காக 2 ஸ்டார் வீரர்களை ஒருநாள் அணியில் இருந்து வெளியேற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2ஆவது போட்டியில் ருதுராஜ் சதம் அடித்ததுமே இந்த முடிவை பிசிசிஐ எடுத்துவிட்டதாம்.

சமயம் 7 Dec 2025 7:57 am

Vijay: தயாரிப்பாளர் மகள் திருமண வரவேற்பு; கலந்துகொண்டு வாழ்த்திய விஜய்

நேற்று சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் T.சிவாவின், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. T.சிவா `பூந்தோட்டக் காவல்காரன்', `அரவான்', `சரோஜா', `கடவுள் இருக்கான் குமாரு' போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவர் திரைப்பட விநியோகஸ்தரும் கூட. விஜய் வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to T.சிவாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட தமிழ்நாடு திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். T.சிவா GOAT திரைப்படத்தில் இந்திய தூதரக அதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to

விகடன் 7 Dec 2025 7:55 am

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்நகரப்பழைய பூங்கா(Old park Jaffna) அதில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது விடயத்தில் மிகப்பலமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு சாரார் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலராக சிறிதுகாலம் (14 மாதங்கள்) பணியாற்றியவன் என்றவகையில் இந்த பழைய பூங்கா பற்றிய எனது கரிசனையையும் எமது அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் குறுகிய சிந்தனைகளையும் பற்றிப்பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகிறேன். யாழ்ப்பாணப் பழையபூங்கா கொண்டிருந்த சிறப்பையும் அதன் தொன்மையையும் பெறுமதியையும் அறிந்து கொள்ளாது, அபிவிருத்தி என்ற போர்வையில் எமது இளைய சமுதாயம் மட்டுமன்றி கற்றறிந்தோர் சமுகம் எனக்கூறிக்கொள்ளும் ஒரு சாரார், பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் போன்றோர் இத்தகைய பதிலீடற்ற பெரும் சம்பத்துக்கள் பறிபோவதைப்பற்றி எந்தவித கவலையுமின்றி வாழ்ந்துகொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது. ஆட்சிக்கு வரும் அரசுகளும் அவர்களால் நியமிக்கப்படும் ஆளுனர்களும் தமக்குரிய அதிகாரங்களை மக்கள் நலனுக்காகவன்றி அம்மக்களின் எதிரகாலத்தைக் கருத்தில் கொள்ளாது அவரவர் தனிப்பட்ட அபிலாசைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் தான்தோன்றித்தனமாகப் பிரயோகிப்பதும் அதனை எதுவித ஆட்சேபனையுமின்றி அதிகாரிகள் சிரமேற்கொண்டு செயற்படுத்துவதும் நாம் எமது நிருவாக வரலாற்றில் தரிசித்த உண்மைகள். 2023 ஆம் ஆண்டு தை 18 இல் மாவட்ட செயலராக பொறுப்பேற்று சில நாட்களில் அப்போது ஆளுனராக இருந்தவர் பழைய பூங்காவின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் ஏற்கனவே உள்ள ஆளுனர் அலுவலகத்தோடு சில கட்டுமானங்களையும் உருவாக்கியிருந்தார். மேலும் காணியைப்பிரித்து குறுக்காக வேலியிட்டு அது ஆளுனர் அலுவலகத்திற்குரியது என அத்துமீறலும் செய்திருந்தார். இந்நிலையில் எனது விடுதியிலிருந்து பார்த்தபோது அதிகாலை கனரக இயந்திரங்கள் அந்தக்காணியில் ஏதோ வேலைக்காக வந்திருப்பதைக் கேள்வியுற்றேன். அவை மாநகர சபைக்குரியவை என்பதையும் அறிந்துகொண்டேன். உடனடியாக மாநகர ஆணையாளருடன் தொடர்புகொண்டு இந்தக்காணி அரசாங்க அதிபருக்குரியது என்பது உங்களுக்குத் தெரியும்தானே! ஆயின் எனக்குத்தெரியாமல் எனது அனுமதி பெறாமல் என்ன செய்யப்போகிறீர்கள் என வினவியபோது ஆணையாளர் அது எங்களுடைய வேலைத்திட்டம் இல்லை. ஆளுனரின் உத்தரவுக்கமைய இயந்திரங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன எனக்கூறினார். உடனே இது அரசாங்க அதிபரின் காணிக்குள் எனது அனுமதியில்லாமல் எவரும் எந்த வேலையும் செய்ய அனுமதியில்லை. என்றுகூறி இயந்திரங்களை வெளியேறப்பணித்தேன். ஆணையாளர் இதுபற்றி ஆளுனருக்குத் தெரிவித்ததும் ஆளுனர் என்னுடன் தொடர்புகொண்டு தான் ஒரு நடைபயிலும் சாலை அமைக்க இருப்பதாகவும் அதைச் செய்யப்போவதாகவும் அதைத்தடுக்கவேண்டாம் எனவும் கூறினார். ஆனாலும் பழையபூங்கா அபிவிருத்தி பற்றி தீர்மானிக்கவேண்டியது மாவட்ட செயலரே என்றும் அதன் அபிவிருத்தி பற்றிய முன்மொழிவுகள் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆராய்விலுள்ளது பற்றியும் ஆளுனரோடு விவாதித்தேன். அவர் உடனடியாக நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களை காலை எட்டு மணிக்கே என்னிடத்தில் அனுப்பி எனது ஒப்புதலைப்பெற முயன்றார். ஆனாலும் இறுதிவரை நான் அதற்கான ஒப்புதலை வழங்கவுமில்லை குறித்த வேலை நடை பெறவுமில்லை. 27 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெறுமதியான அமைவிடத்தில் வரலாற்றுப்பதிவுகள் பலதையும் கொண்ட இந்தக்காணியை எந்தவித தூரநோக்குமின்றி நினைத்தபடி துண்டாடி வெறும் ஒழுங்கற்ற கட்டிடக்காடாக்கி இன்று அழகிழந்து கிடக்கிறது பழைய பூங்கா! அரியாலை, செம்மணி, மண்டைதீவு, கோப்பாய் போன்ற நகரைச்சுற்றிய இடங்களுக்கு கொண்டு போயிருக்கக்கூடிய அரச கட்டிடங்கள் கைதடி, மாங்குளம், வ்வுனியா போன்ற பகுதிகளில் அமைக்கப்பட வேண்டிய ஆளுனர் மாளிகை மற்றும் ஆளுனர் அலுவலகங்கள் போன்றவற்றை யாழ். நகரப் பழைய பூங்காவில் காலத்துக்குக் காலம் அமைத்து தங்கள் தான்தோன்றித்தனமான அதிகாரப்பிரயோகத்தின்மூலம் அலங்கோலப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கண்டி, கொழும்பு, அனுராதபுரம், காலி போன்ற நெருக்கடியான நகரங்களில்கூட நகரப்பூங்காக்கள் தீண்டப்படாமல் அவற்றின் தொன்மையும் சிறப்பும் பேணப்பட்டுக்கொண்டிருக்க யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு பூங்காவான பழைய பூங்கா இவ்வாறு குதறப்படுவதைத் தடுத்தேயாகவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பதிவு 7 Dec 2025 7:48 am

கோவா பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து-23 பேர் பலி!

கோவா பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்தில் பரிதாபமாக 23 பேர் பலியாகினர்.

சமயம் 7 Dec 2025 7:21 am

மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை –ஜனாதிபதி

அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் […]

அதிரடி 7 Dec 2025 7:16 am

அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட தொலைபேசி இலக்கம்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும் அவசர இலக்கத்தின் ஊடாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 7 Dec 2025 7:14 am

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; பலத்த மின்னல், மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது. இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

அதிரடி 7 Dec 2025 7:11 am

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்

வெள்ளத்தால் சிதைந்த முக்கிய சாலைகளை ஆய்வு செய்யும் பணிகள் இந்திய இராணுவத்தின் பொறியியல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேதமடைந்த பாலங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்மட்ட உயர்வை நேரடியாக மதிப்பீடு செய்து பெய்லி பாலங்களை விரைவாக நிறுவும் திட்டத்தை வடிவமைத்து வருகின்றனர். அடுத்த சில நாட்களில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பல முக்கிய சாலைப் பாதைகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள பாலத்தினை புனரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய இராணுவ பொறியியல் குழு புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளன.

பதிவு 7 Dec 2025 6:59 am

திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான்

கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் ஆண்டுதோறும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இந்தாண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளானது. இதில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கெதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க-வை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான் , ``பல கோடி மக்களின் வீடு இருளிலே கிடக்கும்போது மலை மேல விளக்கேத்தணும் என்கிறாங்க. இத்தனை ஆண்டுகள் எங்கே இருந்தாங்க? இன்னைக்குத்தான் முருகன் கண்ணுக்கு தெரியுதா? ஏன் போன ஆண்டு இந்த விளக்கு ஏத்த வரல? அதுக்கு முந்தின ஆண்டு ஏன் வரல? ஏன்னா ரெண்டு மாசத்துல தேர்தல் வருது. திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்... சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ - க.கனகராஜ் | களம் 1 அரசுக்குத் தெரியாமையா இவ்வளவு நடக்குது. அவங்க நினைச்சிருந்தா இதையெல்லாம் எப்போவோ தடுத்திருக்கலாம். இது ஒற்றுமையா இருக்கிற தமிழ்ச் சமூகத்துக்குள்ள ஒரு பிளவை ஏற்படுத்துவதா நான் பார்க்கிறேன். எல்லாத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிற என் மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். சீமான் திடீர்னு ஒருத்தர் வந்து நான் போராடுவேன், அதுக்கு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்து போய் ஏற்றுங்கனு சொல்றது வருத்தமா இருக்கு. நாட்டை நிர்வகிக்கிறது நீதிமன்றமா, சட்டமன்றமா? ஒரு அசம்பாவிதமான ஒரு சூழ்நிலை வந்துருச்சு, ஒரு பெரிய கலவரம் வந்துருச்சு, பொறுப்பு அரசு ஏற்குமா, நீதிமன்றம் ஏற்குமா? நீதிபதிகளை நியமிக்கிறது யாரு? நியமிக்கிற ஆட்சியாளர்களுக்காகப் பேசுவீங்களா, கீழே இருக்கிற மக்களுக்காகப் பேசுவீங்களா? திடீர்னு எங்க முருகன் மேல உங்களுக்கு என்ன பற்று வருது? ஏன்னா உங்க ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சு. அங்கே வந்து புரி ஜெகந்நாதரை எடுத்தீங்க, ஐயப்பனை எடுத்துப் பார்த்தீங்க. இப்ப இங்க முருகனைத் தொட்டுப் பாக்றீங்க. உங்களுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? ராமர் கோயிலைக் கட்டிட்டீங்க, அந்த பிரச்னை முற்றுப் பெற்றுருச்சு. அங்கே அகிலேஷ் அயோத்தியிலேயே ஒரு தாழ்த்தப்பட்டவனை பொதுத் தொகுதியில நிறுத்தி உங்களைத் தோற்கடிச்சுட்டாரு. அங்க முடிஞ்சுச்சு. அதுக்கப்றம் மாநிலத்துக்கு இருக்கிற ஒவ்வொருத்தனும் எவன் பெரிய மதிப்பு வச்சிருக்க இறை இருக்கோ, அந்த நம்பிக்கையைத் தூக்குறீங்க என்று கூறினார். திருப்பரங்குன்றம்: ``தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான்'' - ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பேட்டி

விகடன் 7 Dec 2025 6:56 am

கிரீஸ் கிரீட் தீவு அருகே படகு கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழப்பு

நேற்று சனிக்கிழமை கிறீஸ் கிரீட் தீவின் தெற்கே மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் இறந்து கிடந்ததாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான நிலையில் உயிர் பிழைத்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். கடுமையான புயலின் போது கப்பலின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதில் இருந்தவர்கள் தண்ணீர், உணவு அல்லது சரியான தங்குமிடம் இல்லாமல் திறந்த கடலில் சிக்கித் தவித்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்தனர். உள்ளூர் அறிக்கைகளின்படி, படகு கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் புலம்பெயர்ந்தோர் இறந்து ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

பதிவு 7 Dec 2025 6:52 am

Relationship: கேஸ்லைட்டிங் செய்யும் வாழ்க்கைத்துணை; தீர்வு சொல்லும் நிபுணர்

தன் குற்றத்தை மற்றொருவர்மீது சுமத்தி, 'நம்ம மேலதான் தப்போ?' என்று அவரையே நம்ப வைத்துவிடுவார்கள் சிலர். இப்படிப்பட்டவர்கள் வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என எல்லா இடத்திலும் இருப்பார்கள்.   வீட்டை எடுத்துக்கொண்டால், 'நீ எனக்கு கோபமூட்டியதால்தான் நான் உன்னை திட்டிவிட்டேன் என்றோ, அடித்துவிட்டேன் என்றோ சொல்லிவிடுவார்கள். பெரும்பாலும், இது கணவரிடமிருந்தே வரும். தன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாத மாதிரியும் ஆச்சு; அதை தூக்கி மனைவியின் மீது போட்ட மாதிரியும் ஆச்சு.  Relationship அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், 'நீங்கள் ரிமைண்டர் மெசேஜ் போடாததால்தான் நான் அந்த வேலையை செய்யவில்லை' என்பார்கள். தன் மறதியை மறைத்ததுபோலவும் ஆச்சு; அந்தப்பழியைத் தூக்கி அடுத்தவர் மீது போட்ட மாதிரியும் ஆச்சு. நட்பு வட்டத்திலும் கிட்டத்தட்ட மேலே சொன்ன மாதிரிதான் நிகழும். இவர்கள் செய்வதை உளவியல் உலகம் 'கேஸ்லைட்டிங்' (Gaslighting) என்கிறது. இந்தச் சிக்கலால் வரும் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னையிடம் பேசினோம். யாரெல்லாம் கேஸ்லைட்டிங்கை அதிகம் பயன்படுத்துவார்கள்? சந்தேக குணம் அதிகம் உடையவர்கள், தாழ்வுமனப்பான்மை உடையவர்கள், தான்தான் உயர்ந்தவன் என்ற மனப்பான்மையுடன் இருப்பவர்கள், தனக்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், யாராக இருந்தாலும் தன் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், அடிக்கடி கோபமடைபவர்கள், கோபத்தில் தன்நிலை மறப்பவர்கள், அடிக்கடி வன்முறையில் ஈடுபடுபவர்கள், சிறுவயதில் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு சரியாகக் கிடைக்காமல் போனவர்கள், தம்பதியில் ஒருவர்மீது அதிகம் சந்தேகம் கொள்ளும் மற்றொருவர், சிறுவயதில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். Relationship விவாகரத்துக்கு முக்கிய காரணம் இதுதான்! பல உறவுமுறைக்குள் இந்தப் பிரச்னை இருந்தாலும், கணவன் - மனைவிக்குள் உருவாகும் 'கேஸ்லைட்டிங்' பிரச்னை மட்டும்தான் அதிக அளவில் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. காரணம், விவாகரத்துச் சிக்கலுக்கு `கேஸ்லைட்டிங்'கும் முக்கிய காரணமாக இருப்பதாலும், அதுகுறித்த செய்திகள் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், சமரசத் தீர்வு மையம், உளவியல் ஆலோசனை மையம், குடும்பம் மற்றும் நட்பு வட்டாரம் எனப் பல இடங்களிலும் இந்தச் சிக்கல் குறித்து அதிகம் பேசப்படுகிறது. பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சிக்கல் குறித்து கருத்துகளைப் பதிவிடுவதும், இதுகுறித்து இணையத்தில் தீர்வு தேடுவதாலும் 'கேஸ்லைட்டிங்' கவனம் பெறுகிறது. தீர்வு என்ன? கேஸ்லைட்டிங் பிரச்னைக்கு காரணமானவர்கள் பலரும், தங்களின் தவற்றை உணர எந்த முயற்சியும் எடுக்கவே மாட்டார்கள்.'தான் செய்ததுதான் சரி' என்று தன் தவற்றுக்கு நியாயம் மட்டுமே கற்பித்துக்கொண்டிருப்பார்கள். தன் கோபத்துக்கு காரணமான நபர்தான் தன் தவற்றை உணர்ந்து, தனக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணம் வேரூன்றிய நபரை, தொடர்ந்து கவுன்சலிங் கொடுப்பதால் மட்டுமே சகஜநிலைக்குக் கொண்டுவர முடியும். ஆனால், குற்றம் செய்பவர் அந்தத் தீர்வை அவ்வளவு எளிதில் நாட ஆர்வம் காட்ட மாட்டார்; தன் தவற்றையும் உணர மாட்டார். Relationship Relationship: இந்த 5 தீர்வையும் ஃபாலோ பண்ணா குடும்பத்துல பிரச்னையே வராது! 'நான் சொல்றதைக் கேட்டு நீ நடந்துக்கிட்டா, உனக்கு கவுன்சலிங் தேவைப்படாதே...' என்று பாதிக்கப்பட்டவர் மருத்துவரீதியாகத் தெளிவு பெறுவதற்கும் குற்றம் செய்யும் அந்த நபர் முட்டுக்கட்டை போடலாம். பாதிக்கப்பட்டவர் மட்டும் கவுன்சலிங் வரும்பட்சத்தில், 'நீங்கள் சரியாக இருக்கும்வரை, நீங்கள் எதற்காகவும் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டாம்' என்று, சொல்வோம். இது ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்குமே தவிர, பாதிக்கப்படும் அந்த நபருக்கான நிரந்தர தீர்வாக அமையாது. இந்தச் சிக்கலில் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே கவுன்சலிங் வருவதுடன், தவறு செய்தவர் தன் நிலையையும் தவற்றையும் முழுமையாக உணரும்போதுதான் தீர்வு கிடைக்கும். கேஸ்லைட்டிங் இயல்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது? பெற்றோர் வளர்ப்பு முறையும், வளர்ந்த சூழலும் சரியாக இல்லாதபட்சத்தில்தான் 'கேஸ்லைட்டிங்' செய்வதற்கான குணாதிசயம் ஒருவருக்குள் தலைதூக்கும். படிப்பில் இரண்டாம் இடம் பிடித்த குழந்தையிடம், 'நீ ஏன் முதல் மார்க் வாங்கல' என்று சிறுவயதிலேயே தாழ்வுமனப்பான்மையை விதைக்கும் பெற்றோர் ஒருரகம். தன் பிள்ளையின் நடத்தையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, பிள்ளை செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது போன்று அதீத சுதந்திரம் கொடுத்து பிள்ளை பொறுப்பற்றுச் செயல்பட காரணமாக இருக்கும் பெற்றோர் இன்னொரு ரகம். இது இரண்டுமே தவறுதான்! தவறு, சரி... இதைப் பகுத்தறிந்து செயல்படுவதற்கான நல்ல வழிகாட்டுதல்களை வழங்கி, நடுநிலையுடன் குழந்தையை வளர்ப்பதுதான் பெற்றோருக்கான தலையாய கடமை. Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதரப்பழசான இந்த இயல்பு! பாராட்டு, சுதந்திரம், கண்டிப்பு... இவையெல்லாம் குழந்தைக்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு இருக்க வேண்டும். பிறரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது; யாராக இருந்தாலும் மற்றவர்களையும் சமமாக நடத்த வேண்டும்; மற்றவர்கள் மதிக்கும் நிலைக்கு நம் நடத்தை இருக்க வேண்டும் என்ற தெளிவுடன் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும் பண்பு இருந்தால், 'கேஸ்லைட்டிங்' பிரச்னைக்கு நம் வாழ்வில் இடமே இருக்காது என்று முடித்தார் உளவியல் நிபுணர் நப்பின்னை.

விகடன் 7 Dec 2025 6:50 am

கோவா இரவு விடுதியில் தீ விபத்து: 23 பேர் பலி!

சனிக்கிழமை (டிசம்பர் 6, 2025) இரவு சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து வடக்கு கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 6, 2025) இரவு சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து வடக்கு கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் கிளப்பின் சமையலறை ஊழியர்கள் என்றும், அவர்களில் மூன்று பெண்கள் அடங்குவதாகவும் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறினார் 23 பேரில் மூன்று பேர் தீக்காயங்களால் உயிரிழந்தனர், மற்றவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக இறந்தனர். 23 உடல்களும் வளாகத்திலிருந்து மீட்கப்பட்டு பம்போலிமில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர் மற்றும் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பதிவு 7 Dec 2025 6:41 am

மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம்

பேரிடரைத் தொடர்ந்து நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகள் குறித்து கவலை தெரிவித்து, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பேரிடர் மற்றும் மீட்பு சவால்களின் அளவை ஒப்புக்கொண்டாலும், அவசரகாலச்சட்டத்தின் பல விதிகள், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளுக்கு முரணானவை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது சொத்துக்களைக்

புதினப்பலகை 7 Dec 2025 6:32 am

ஆன்மிக வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் புகைப்படத் | தொகுப்பு-1

ஏகாம்பரநாதர் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் நடவாவி கிணறு நடவாவி கிணறு நடவாவி கிணறு சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவில் சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவில் சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் ஏகாம்பரநாதர் கோவில்

விகடன் 7 Dec 2025 6:31 am

பேரிடர் நிலை குறித்து மகாநாயக்கர்களுக்கு விளக்கமளித்தார் அனுர

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நேற்று மல்வத்த மகா விஹாரைக்குச் சென்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதன்போது, ​​தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான திட்டங்கள் குறித்து மகாநாயக்க தேரருக்கு அவர் விளக்கிக் கூறியுள்ளார். நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர்கள் இந்தச் சந்திப்பின்

புதினப்பலகை 7 Dec 2025 6:25 am