வெளிநாட்டு கொடைகளை கண்காணிக்க சிறப்புக் குழு நியமனம்
டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளால் கொடையாக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை, திறம்பட நிர்வகிப்பதை மேற்பார்வையிடுவதற்கானசிறப்புக் குழுவை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழுவில்,தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின் கூடுதல் செயலர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள்,
புதுச்சேரியில் இன்று தவெக கூட்டம்.. விஜயின் பயணம் to கடும்நிபந்தனைகள் வரை!
புதுச்சேரியில் இன்று தவெக கூட்டம் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இதனால் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
250 மில்லியன் நன்கொடை வழங்கிய சந்திரிகா
நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதே இந்த நிதியின் முக்கிய நோக்கமாகும். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையின் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா?
Doctor Vikatan: என்னுடைய தோழி தினமும் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறாள். வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் அவள், காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக எடையைக் குறைக்க முடியும் என்றும் சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் காலை உணவைத் தவிர்ப்பது எடை குறைக்க உதவும் என்பது தவறான கருத்து. கண்டிப்பாக அனைவரும் காலை உணவு சாப்பிட வேண்டும். இரவு உணவை முடித்துவிட்டு, தூங்கும் நேரம், மறுநாள் காலை விழித்த பிறகு இயல்பான வேலைகளைச் செய்வது என நாம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பட்டினியாக இருக்கிறோம். அன்றைய நாள், மற்ற வேலைகளுக்குத் தேவையான சக்தியைப் பெற, காலையில் கட்டாயமாகச் சாப்பிட வேண்டும். காலை உணவைத் தவிர்த்து, நீண்ட நேரம் கழித்து மதிய உணவு (Lunch) சாப்பிடும்போது, 'இத்தனை மணி நேரத்துக்குப் பிறகு உணவு கிடைத்திருக்கிறது. அடுத்த உணவு எப்போது கிடைக்குமோ' என்ற எண்ணத்தில் கிடைக்கும் உணவில் உள்ள சக்தியை எல்லாம் உடல் உடனே உறிஞ்சிக் கொள்ளும். அது கொழுப்பாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்? எனவே, காலையில் பட்டினி இருப்பதால் எடை குறைய வாய்ப்பில்லை. ஆனால், இப்போது பலரும் 'இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) என்ற டயட் முறையைப் பின்பற்றுகிறார்கள். அதாவது, இரவு 7 மணிக்கு டின்னர் சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் காலையில் 9 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது போல, 12 மணி நேரம்,14 மணிநேரம், 16 மணி நேரம் என விருப்பப்படி அந்த இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய உணவுமுறை எடைக்குறைப்புக்கும் ஓரளவுக்கு உதவுகிறது. மருத்துவ ஆலோசனையுடன் அதைப் பின்பற்றலாம். மற்றபடி, காலையில் வெறும் வயிற்றுடன் இருந்துவிட்டு, ஒரேயடியாக மதிய உணவைச் சாப்பிடுவதும், அதனால் வெயிட்லாஸ் ஆகும் என நம்புவதும் மிகவும் தவறு. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியது இஸ்ரேல்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. மடிப்பு படுக்கைகள், முதலுதவி பெட்டிகள், அறுவை சிகிச்சை கையுறைகள், சுகாதாரப் பெட்டிகள், நுளம்பு வலைகள், மின் சேமிப்பகங்கள், மழைக்கவசங்கள், மெத்தைகள், தண்ணீர் தொட்டிகள், குழந்தை பாத்திரப் பொதிகள், சமையலறைப் பெட்டிகள், நீரில் மூழ்கக்கூடிய நீரிறைக்கும் இயந்திரங்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் நேற்று கட்டுநாயக்க
மும்பை: காவல் நிலைய வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்; காவலர் கைது!
மும்பை அருகில் போலீஸில் வாக்குமூலம் கொடுக்க வந்த பெண்ணை வாக்குமூலம் வாங்கிய கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் என்ற இடத்தில் இருக்கும் காசா காவல் நிலையத்தில் 21 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்பெண்ணுக்குத் திருமணமான ஒருவருடன் தகாத உறவு இருந்தது. இது அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியதால் அந்த நபர் மீது 21 வயது பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். இது குறித்து விசாரிப்பதற்காக இரண்டு பேரையும் போலீஸார் வரவழைத்து இருந்தனர். அப்பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர் தனது மனைவியையும் அழைத்து வந்திருந்தார். காவல் நிலையத்தில் மூன்று பேரும் சந்தித்துக்கொண்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கான்ஸ்டபிள் ரஞ்சித் (41) தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அடுத்த நாள் வாக்குமூலம் கொடுக்க வரும்படி 21 வயது பெண்ணிடம் ரஞ்சித் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பெண் காவல் நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் நயமாக பேசி அவரைக் காவல் நிலையத்திற்கு பின்புறம் இருந்த கான்ஸ்டபிள்கள் அறைக்கு, ரஞ்சித் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அப்பெண்ணை ரஞ்சித் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் கொடுக்க வந்தாரா அல்லது விசாரணை குறித்து தெரிந்துகொள்ள வந்தாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக தேஷ்முக் தெரிவித்தார். சம்பவம் நவம்பர் 26-ம் தேதி நடந்துள்ளது. ஆனால் வழக்கு டிசம்பர் 8-ம் தேதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணை பாரபட்சம் இன்றி நடைபெற வழக்கு வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு காசா காவல் நிலைய பொறுப்பாளரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போர் நிறுத்தம் ; உக்ரைன் மீது குற்றம் சுமத்தும் டிரம்ப்!
போர் நிறுத்தம் மற்றும் அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2022 இல் தொடங்கிய உக்ரேன், ரஷ்யா முடிவுக்கு வராத நிலையில் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரேன் – ரஷ்யா போர் குறித்து கேள்வி இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் […]
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி, இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியின் மூலம் இந்திய அணியில் 2 வரலாற்று சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
QS to Host Master’s Fair in Chennai as Demand for Global Degrees Strengthens
QS, a global leader in higher-education services and university performance analytics, is hosting the QS Discover Master’s Fair in Chennai
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தற்காலிக விரிவாக்கப் பணிகள்!
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தற்காலிக விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகளை கையாளும் திறன் அதிகரிக்கும், மேலும் பாதுகாப்பும் அதிகரிக்கும் .
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி-தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி இல்லை!
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுமித் குணசேகர என்ற அமெரிக்காவின் ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர், அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்கச் செயலாக்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 12 ஆம் திகதியன்று டெட்ரோய்டில் அவர் கைது செய்யப்பட்டார். மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குற்ற வரலாறு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற சுமித் குணசேகர,தாம் சிறுவர் […]
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விகாரை நிலத்தை நன்கொடையாக வழங்கிய விகாராதிபதி
மத்தேகெட்டிய கோகரெல்ல சங்கமு ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அளுத்கம மங்கள தேரர், அண்மைய இயற்கை பாதிப்புகளால் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களின் மீள்குடியேற்றத் திட்டத்திற்காக 20 ஏக்கர் பரப்பளவிலான விஹாரை நிலத்தை பெருந்தன்மையுடன் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிலம் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் அமைக்கவும், நீடித்த குடியிருப்பு வசதிகளை உருவாக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. விகாராதிபதி வழங்கிய நில நன்கொடைக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் முறையாக […]
அனர்த்தத்திற்கு பின் எழுந்த சர்ச்சை ; யாழ் பல்கலைக்கழக நிபுணர் விளக்கம்
இலங்கையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தை தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டு வரும் தகவல்கள் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து விளக்கமளித்து அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில், “நான் இலங்கையின் புவி நடுக்கம் தொடர்பான சாத்தியத் தன்மை பற்றி மக்களுக்கு விழிப்பூட்டும் பதிவு ஒன்றினை இட்டிருந்தேன். அது […]
தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்!
பெரியோர்கள் ஆசி வழங்குகையில், 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று சொல்வதுண்டு. ஒருமனிதன் பெற வேண்டிய பதினாறு செல்வங்களில் முக்கியமான ஒன்று மழலைச் செல்வம். அப்படிப்பட்ட மழலைச் செல்வம் கிடைக்கவில்லை என்றால் மனம் சோர்ந்துபோகும். சந்ததிகள் தொடராமல் போகும். ஒரு குலம் தொடர்ந்து செய்ய வேண்டிய தர்மங்கள் விட்டுப்போகும். எனவேதான் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று அனைவரும் துடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அருளும் அன்னையாகத் திகழ்கிறாள் திருக்கருக்காவூர் கருக்காத்த நாயகி அம்மன். ஒரு பெண்ணுக்கு வயிற்றில் கருவை அருளி, அதை அவள் சுகமாகப் பிரசவிக்கும்வரை காத்து நிற்கிறாள், இந்த அன்னை. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்துக்குத் தெற்கே 6 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்கருகாவூர். தஞ்சையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், சாலியமங்கலத்திலிருந்து வடக்கே சுமார் 10 கி.மீ தூரத்திலும் எல்லா வாகன வசதிகளோடும் திருக்களாவூர் எனும் திருக்கருகாவூர் அமைந்துள்ளது. திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி (கர்ப்பரட்சாம்பிகை) தலபுராணம் இதற்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது ஒரு புராண சம்பவம். நித்ருவர் என்ற முனிவர், தன் மனைவி வேதிகையுடன் இங்கே வசித்துவந்தார். ஒருமுறை வேதிகை கருவுற்று இருந்தபோது, அவசரமாக வருணனைக் காண வேண்டியிருததால் மனைவியை விட்டுவிட்டுச் சென்றார் முனிவர். அப்போது, ஊர்த்துவபாதர் என்ற முனிவர் இவர்களுடைய ஆசிரமம் வந்து, பிக்ஷை கேட்டார். கருவுற்றிருந்த வேதிகை தளர்ச்சி கொண்டு அயர்ந்து படுத்திருந்தபடியால் இவருடைய குரல் கேட்டும் எழுந்து வரமுடியவில்லை. இதை அறியாத ஊர்த்துவபாதர், ‘ராச யட்சு’ என்ற நோயால் பாதிக்குமாறு சாபமிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இதனால் வேதிகையின் கரு கலைந்தது. வேதனை தாளாமல் அவள் திருக்கருகாவூர் ஈசனையும் அம்பிகையையும் வேண்டித் துதித்தாள். அம்பிகை கருணையே உருவானவள் அல்லவா, ஒரு தாய் தவிப்பதைப் பார்த்திருப்பாளா... கலைந்த கருவை ஒரு குடத்துக்குள் வைத்து, குழந்தை ஜனிக்கும் நாள் வரை காப்பாற்றி வேதிகையிடம் சேர்த்தாள் அம்பிகை. அம்பாள் காமதேனுவை அனுப்பிக் குழந்தைப் பால் கொடுக்கச் சொன்னாள். அப்போது காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதும் உண்டான குளமே பால் குளம் என்று அழைக்கப்பட்டு இன்று உள்ளது என்கிறார்கள். அதுமுதல் இத்தல அம்பிகை கருக்காத்த நாயகி என்றே அழைக்கப்படுகிறாள். இந்த ஆலயத்து வந்து மழலைப் பேறுவேண்டிக் கேட்பவர்களுக்கு வரம் அருளி தானே துணை நின்று நல்லமுறையில் பிரசவமாகவும் அருள்கிறாள் இந்த அம்பிகை. திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்! முல்லைவனநாதர் இத்தலம் முல்லைவனமாக இருந்தது. அதில் சுயம்புவாக எழுந்தருளிய ஈசனே முல்லைவனநாதர் எனப்பட்டார். ‘கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர் அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே!’ என்று இந்த ஈசனைப் பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். வெட்டாற்றின் கரையில் முல்லைவனமாக இருந்த ஊர் வடமொழியில் மாதவி வனம் என்றும் அழைக்கப்பட்டது. அதனால் ஈசன் மாதவி வனேஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார். புற்றுமண்ணால் ஆன இந்த ஈசனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகங்கள் கிடையாது. புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறது. பஞ்சாரண்யத் தலங்களில் உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டிய தலம் திருக்கருகாவூர் இது. திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில் சேக்கிழார், நால்வர் சந்நிதிகள், தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, ஆறுமுகர், பிரம்மன், துர்கை, சண்டிகேஸ்வரர் என்று இங்கு எண்ணற்ற சந்நிதிகள் உள்ளன. தல விருட்சமான முல்லைக்கொடி சண்டிகேஸ்வரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையே உள்ளது. திருக்கருகாவூர் திருத்தலத்தில் இருக்கும் நான்கு தீர்த்தங்களும் விசேஷமானவை. கோயிலுக்கு எதிரே உள்ள பால் குளம், அடுத்து சத்தியகூபம் என்னும் தீர்த்தம், சுவாமி மற்றும் அம்பிகைக்கு இடையே உள்ளது. ஊருக்குத் தென்மேற்கே அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்தம் பிரம்மனால் உருவானது. விருத்த காவிரி எனும் காவிரியின் கிளை நதியாகிய வெட்டாறுதான் நான்காவது தீர்த்தம். இதை ‘முள்ளிவாய்’ என்று கூறுகிறார்கள். சோமாஸ்கந்தர் வடிவில் அமைந்திருக்கும் ஈசன், அம்பாள், மற்றும் அந்த சந்நிதிகளுக்கு இடையே அமைந்திருக்கும் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை ஒருசேர வலம்வருவது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். வளர்பிறை பிரதோஷ நாளில், இங்குள்ள ஈசனுக்குப் புனுகு சார்த்தி வணங்கினால், தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. வெளியிலிருந்து வாங்கி வரப்படும் புனுகைச் சார்த்த அனுமதி கிடையாது. அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி, ரசீது பெற்றுக்கொண்டால் வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சார்த்தப்படும். மழலை வரம்தரும் வழிபாடு குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், அன்னை கருக்காத்த நாயகியை பக்தியோடு வேண்டி, நெய்யினால் படி மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யை 45 நாள்கள் தொடர்ந்து உண்டு வந்தால், குழந்தைப் பேறு கிட்டும் என்பது இன்று வரை நடந்துவரும் அதிசயம். இங்கே நடைபெறும் தொட்டில் வழிபாடு விசேஷமானது. அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், இங்குள்ள தங்கத் தொட்டிலில் தங்கள் பிள்ளையைப் படுக்கவைத்து, அம்பாள் சந்நிதியை வலம் வருகின்றனர். குழந்தை வரம் வேண்டி வருபவர்களும் இந்தப் பிரார்த்தனையைச் செய்யலாம். அவர்கள், குழந்தைக்குப் பதிலாகக் கோயிலில் தரப்படும் ஸ்கந்தர் விக்கிரகத்தைத் தொட்டிலில் இட்டு, வலம்வந்தால், குழந்தைப்பேறு நிச்சயம் வாய்க்கும் என்கிறார்கள். திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி (கர்ப்பரட்சாம்பிகை) பிரார்த்தனை ஸ்லோகம் ‘ஸ்ரீமாதவி கானனஸ்தே - கர்ப்பரக்ஷாம்பிகே பாஹிபக்தம் ஸ்துவந்தம்...’ என்று தொடங்கும் ஸ்லோகத்தைத் தொடர்ந்து ஓதி வந்தால், சுகப் பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!
`தீபம் ஏற்றுவது ஆன்மிகப் பிரச்னை அல்ல; பாஜக-வின் சூழ்ச்சி' - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கடந்த நவம்பர் 21-ஆம் தேதி முதல், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டதுடன், பிரதமர் மோடி இந்த நான்கு சட்டத்தொகுப்புகளைப் புகழ்ந்தார். மோடி ஒரு விஷயத்தைப் புகழ்ந்தால் அதை நாம் எதிர்மறையாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நான்கு சட்டத்தொகுப்புகளும் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்களை கொத்தடிமைகளாக மாற்றக்கூடியது. 150 ஆண்டுக்காலப் போராட்டத்தில் பெற்ற பல உரிமைகளை இந்த சட்டத்தொகுப்புகள் பறிக்கின்றன. குறிப்பாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைத்தன்மை குறித்த 13 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரு சட்டத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.ராமகிருஷ்ணன் இந்த சட்டத்தொகுப்பில் 300 பேருக்கு கீழ் இருக்கக்கூடிய நிறுவனங்களில் நிலை ஆணை தேவையில்லை என்று உள்ளது. இந்தியாவில் 74 சதவிகித தொழிற்சாலைகள் 300 பேருக்கு கீழே இயங்கக்கூடியவை ஆகும். இந்த ஆலைகளை மூடுவது என்றால் அரசு அனுமதி தேவையில்லை. குறிப்பாக அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 38,000 கோடி ரூபாய் உள்ளது. இந்த புதிய நான்கு சட்டத்தொகுப்புகளில் நல வாரியத்திற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. தொழிலாளர் நீதிமன்றங்களில் 12,00,000 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. புதிய சட்டத்தொகுப்பில் தொழிலாளர் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் என்ன ஆகும் என்று தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தடுப்புச் சட்டம் பற்றி இந்த நான்கு தொகுப்புகளிலும் எதுவும் இல்லை. எதற்காக இந்த நான்கு சட்டத்தொகுப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன? மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள அரசு. கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த அரசு இந்த நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பைக் கொண்டு வந்துள்ளது. ஜி.ராமகிருஷ்ணன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்னையில் 1996-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு 2014, 2017 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது. அமர்வு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தனி நீதிபதி நிராகரிக்க முடியாது. இது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது ஆன்மிகப் பிரச்னை அல்ல. பாஜக-வின் அரசியல் சூழ்ச்சி. மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள் உரிமைப் பிரச்னை, விவசாயிகளின் பிரச்னை ஆகியவற்றிற்காகப் போராடி வருகிறோம். ஆனால், பாஜக எங்கே கலவரம் ஏற்படுத்தலாம்; மோதலை தூண்டலாம் என்று செயல்படுகின்றது என்றார்.
கொளத்தூர்: 50 வருஷமா வாழும் வீட்டை இடிக்கப்போறோம்னு சொல்றாங்கபாரத் ராஜீவ்காந்தி நகர் மக்கள்
கொளத்தூரில் அமைந்திருக்கும் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்களின் வீடுகளை இடித்து, பொதுமக்களை அப்புறப்படுத்த தமிழக அரசு ஆயத்தமாகவுள்ளதாக குமுறுகிறார்கள் குடியிருப்புவாசிகள்! தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது பாரத் ராஜீவ் காந்தி நகர் . இப்பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பாரத் ராஜீவ் காந்தி நகரின் பல தெருக்கள் தனிநபர் ஒருவரின் பெயரில் இருப்பதாகவும், நீதிமன்றம் அப்புறப்படுத்த ஆணையிட்டிருப்பதாகவும் கூறி வீடுகளை இடித்து பொதுமக்களை அப்புறப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. பாரத் ராஜீவ் காந்தி நகர் நம்மிடம் பேசிய குடியிருப்புவாசி கோபிநாத் கூறியதாவது: பாரத் ராஜீவ் காந்தி நகரைச் சுற்றி எந்த நீர்வழித்தடங்களும் இப்போதில்லை. மூன்றாவது தலைமுறையாக வசித்துவருவதால் எங்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும் என கோரினோம். அதன்படி சென்னை மாவட்ட கலெக்டரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தபோது, எங்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டு நாங்கள் மனு அளித்தபோது இந்தப் பகுதி ஏரி உள்வாயில் அரசு புறம்போக்கு நிலம் என்று தவிர்த்தார்கள். இதனால் நாங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் கேட்டதில் அரசு ‘ஏரி உள்வாயில் புறம்போக்கு’ என்று எங்களுக்கு எழுத்துமூலமாக தெரிவித்தனர். நாங்கள் கோரிக்கை விடுத்தபோது ‘நீர்வழித்தடம்’ என மறுத்த மாவட்ட நிர்வாகம், தற்போது ‘தனிநபரின் நிலத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள், உடனடியாக காலிசெய்ய வேண்டும்’ என்கிறார்கள். மேலும் டிசம்பர் 8ம் தேதி இரவு எங்கள் ஏரியா முழுக்க போலீசாரையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘50 ஆண்டுகளாக வசிக்கும் வீட்டை இடிக்க போறோம்னு சொல்றாங்க’. இதில் எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் அப்புறப்படுத்தும் பணிகளை தொடங்கக்கூடாது என்றார் கண்ணீருடன். பாரத் ராஜீவ் காந்தி நகர் மக்கள் தொடர்ந்து பேசிய குடியிருப்புவாசிகள் சிலர் கூறியது: 2021 சட்டமன்றத் தேர்தலில், வாக்கு கேட்க வந்த முதல்வர் தரப்பு எங்களுக்கு பட்டா தரப்படும், எந்த இடையூறும் இன்றி நீங்கள் வசிக்க நாங்கள் உதவியாக இருப்போம் என வாக்குறுதி கொடுத்தனர். அதை நம்பி பல முறை பட்டா கேட்டு அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளை ஏறினோம். ‘ஏரி உள்வாயில் புறம்போக்கு பகுதியில் பட்டா தர முடியாது’ எனச் சொன்ன அரசு, இப்போது நாங்கள் வசிக்கும் நிலம் தனிநபரின் பெயரில் இருப்பதாகச் சொல்கிறது. இந்த இடைப்பட்ட 6 மாதத்தில் புறம்போக்கு நிலம் எப்படி தனிநபருக்கு மாறியது எனத் தெரியவில்லை. சிறுகச் சிறுக சேர்த்து நாங்கள் கட்டிய வீடுகளை விட்டு போகச் சொன்னால் எங்கே செல்வது? அரசு எங்களை அப்புறப்படுத்தும் பணியை தொடங்கக்கூடாது என அவர்கள் குமுறினர்.
`விஜய் நல்ல கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் தாக்கம் உண்டாகும்' - சொல்கிறார் டி.டி.வி.தினகரன்
அமமுக திருப்பூர் தெற்குத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர வேலையாக்குவோம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம், அரசு மருத்துவர்களுக்கும், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவசாயிகள் என அனைத்துதரப்பு மக்களுக்கு தி.மு.க. சொல்லிய வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் இன்னும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி பலத்தில் இருப்பதால் எதிர்ப்பவர்கள் சரிசெய்துகொள்ள வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அசுர பலத்துடன் உள்ளனர். அவர்களை வீழ்த்த எதிர்ப்பவர்கள் சரியாகத் திட்டமிட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பிளவுபட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி வந்துள்ளது. திமுக-வை விரட்ட வேண்டும் என்ற கட்சிகள், தங்களை சரி செய்துகொண்டு தேர்தலை எதிர்கொண்டால் திமுக-வை வீழ்த்தலாம். டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் 4 முனை போட்டிதான். செங்கோட்டையன் போன்றவர்கள் கூட்டணிக்காக இன்றைக்கு பலமுயற்சிகளை செய்வதாக தகவல்கள் வருகின்றன. நகராட்சித்துறை உட்பட பலதுறைகளில் ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. வெற்று, விளம்பர ஆட்சி. ஒருசிலர் சுயநலத்தால் விழுதுகள் போன்றவர்களே வெளியேற்றப்படுகிறார்கள். எங்களையெல்லாம் சுயநலத்துக்காக நீக்கிவிட்டு சர்வாதிகாரமாக சுயநலம் என்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த அதிமுக இயக்கத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மன வருத்தத்திலும், அதிருப்தியிலும் இருக்கிறார்கள். தேர்தல் தரும் பாடம்தான், கட்சிக்கு மறுமலர்ச்சி தரும் பாடமாக இருக்கும். செங்கோட்டையன் எங்களுடன் வரவேண்டும் என எப்படிச் சொல்ல முடியும்? அவர் ஒருவழியில் செல்கிறார். இழைக்கப்பட்ட துரோகத்துக்கு நியாயம் தேடுவது மனித இயற்கை. நாட்டு நடப்பை, யதார்த்தத்தைச் சொல்கிறேன். எவ்வித பொறாமையும், அச்சமும் இன்றி தவெக குறித்து சொல்கிறேன். வளர்ந்து வருகிற கட்சியாகத் தெரிகிறது. மறைந்த விஜயகாந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் இந்த தேர்தலில் விஜய்யும் ஏற்படுத்துவார். விஜய் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று சொல்லவில்லை. திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக அன்றைக்கு விஜயகாந்த் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். டிடிவி தினகரன் பல தோல்விகளில் வெற்றி, தோல்விக்கும் காரணமாக இருந்தார். நல்ல கூட்டணியை விஜய் அமைத்தால், அது தாக்கத்தை உண்டாக்கும். என்னுடைய அரசியல் அனுபவத்தில் பேசுகிறேன். ஆனால், அமமுக இடம்பெறும் கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக இருக்கும். அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்போம். 2024-ம் ஆண்டு மோடி பிரதமராக வேண்டும் என நிபந்தனையற்ற ஆதரவை அளித்தோம். 3-ஆம் முறையாக மோடி பிரதமராக வரும்போதுதான், நாடு வல்லரசாகும் என்று நினைத்தோம். மோடிக்கும், பாஜக-வுக்கும் எங்களுக்கும் எவ்வித கசப்பும் இல்லை” என்றார் தினகரன்.
TN vs SAUR: ‘காட்டடி அடித்த சாய் சுதர்ஷன்’.. தமிழ்நாடு அணி முரட்டு கம்பேக்! ஜடேஜா அதிரடி வீண்!
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூதல் தமிழ்நாடு அணி அதிரடி கம்பேக் கொடுத்துள்ளது.
சென்னை ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா-விரைவில் திறக்க ஏற்பாடு!
சென்னை ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பூங்காவை பொது மக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிள்ளைகளை நம்பி எதுக்கு வாழணும்? மதுரைக்காரர்கள் பயன்படுத்தும் '2-வது வருமான'ரகசியம்
எனக்கென்னப்பா... பையன் இருக்கான், பார்த்துப்பான்! மதுரை, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி பக்கம் பேசினாலே, 50 வயதைக் கடந்த பல பெரியவங்க சொல்ற பதில் இதுதான். பாசம் தப்பில்லைங்க. ஆனா, நிதர்சனம் வேற! இன்னைக்கு நம்ம ஊர்ல, ஒரு கல்யாணத்துக்குப் போனா மொய் எழுதுறதுல ஆரம்பிச்சு, பேரப் பசங்களுக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுக்குறது வரைக்கும்... ஒவ்வொரு சின்னச் செலவுக்கும் பிள்ளைகள் கையை எதிர்பார்த்து நிக்கிறது எவ்ளோ பெரிய கஷ்டம்னு அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். வாழ்க்கையோட மிக முக்கியமான கட்டத்துல நிக்கறீங்க. இதுக்கு மேல உடம்பப் போட்டு வருத்திக்கிட்டு ஓட முடியாது. ஆனா, செலவுகள்? அது பாட்டுக்கு ஏறிக்கிட்டேபோகுது! No Savings ஏன் இப்போ இதைப் பத்திப் பேசணும்? விஷயம் சீரியஸ்! 2025-ல வாழ்றோம். ஒரு பக்கம், அத்தியாவசியப் பொருட்களோட விலைவாசி (Inflation) ராக்கெட் வேகத்துல போகுது. இன்னொரு பக்கம், மருத்துவச் செலவு அதைவிட டபுள் வேகத்துல ஏறுது. ஒரு சின்ன கணக்குச் சொல்றேன் கேளுங்க... இன்னைக்கு உங்க கையில 10 லட்சம் இருக்குன்னு வைங்க. அதைச் சும்மா பீரோலையோ, இல்ல குறைவான வட்டி தர்ற சாதாரண சேமிப்பு கணக்குலையோ போட்டீங்கன்னா... அடுத்த 10 வருஷத்துல அதோட மதிப்பு பாதியா குறைஞ்சிடும். ஏன்னா, விலைவாசி உயர்வு அந்தப் பணத்தோட மதிப்பைத் தின்னுடும்! அப்போ என்னதான் பண்றது? ஷேர் மார்க்கெட்ல போடலாமா?னு கேட்டா... வேண்டாம்! 50 வயசுங்கிறது புதுசா ரிஸ்க் எடுத்து விளையாடுற வயசு இல்ல. சரி, விஷயம் தெரிஞ்ச மதுரைக்காரங்க என்ன பண்றாங்க தெரியுமா? (புள்ளிவிவரம் சொல்லும் உண்மை!) நம்ம ஊர் மதுரை ஒண்ணும் சும்மா இல்லைங்க. AMFI (Association of Mutual Funds in India) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, மதுரையில் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமா உயர்ந்திருக்கு. அதுவும் குறிப்பா, 40-60 வயதுடையவர்கள், தங்களின் ஓய்வுகாலத் தேவைக்காக Systematic Withdrawal Plan (SWP) முறையைத் தேர்ந்தெடுப்பது 20% அதிகரிச்சிருக்கு . ஏன் தெரியுமா? பழைய பென்ஷன் திட்டங்கள் குறைஞ்சிட்ட நிலையில், இந்திய மூத்த குடிமக்களில் பலர், இப்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம், பாதுகாப்பான முறையிலேயே மாதம்தோறும் ஒரு நிரந்தர வருமானத்தை (Monthly Income) உருவாக்கமுடியும் என்பதைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க! மொத்த மதுரையும் மாறும்போது, நீங்களும் மாற வேண்டாமா? அப்போ, பாதுகாப்பும் வேணும்... வருமானமும் வேணும்ல? நடுவுல ஒரு வழி இருக்கு! அதுதான் ‘சமச்சீர் முதலீடு’ (Balanced Strategy). உங்க பணத்தை முழுசா முடக்காம, அதே சமயம் பாதுகாப்பா வளர்க்கக்கூடிய வழி. மேலே சொன்ன SWP மற்றும் ஹைபிரிட் ஃபண்ட் திட்டங்கள் மூலம், உங்க வாழ்நாள் சேமிப்பை ஒரு ‘இரண்டாவது சம்பளமா’ (Second Income) மாத்த முடியும். மாசம் பிறந்தா, மணி அடிச்ச மாதிரி உங்க அக்கவுண்ட்டுக்கு பணம் வர வைக்கலாம். பிள்ளைகள் அனுப்புறாங்களோ இல்லையோ... உங்க பணம் உங்களுக்குச் சோறு போடும்! old couple investing மதுரைக்காரங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு! இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வருமா? யாராவது நம்ம பாஷையில, நமக்கு ஏத்த மாதிரிச் சொன்னா நல்லாருக்குமே!னு நினைக்கிறீங்களா? உங்களுக்காகவே ஒரு சூப்பர் வாய்ப்பு காத்துட்டு இருக்கு. நம்ம ஊர் மக்களுக்காக, ‘லாபம்’ (Labham) மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனம் ஒரு முக்கியமான ஆன்லைன் வகுப்பை நடத்துறாங்க. தலைப்பு: 50+ வயதினருக்கான ஓய்வுக்கால திட்டமிடல் (மதுரை மண்டல சிறப்பு அமர்வு) இந்த 90 நிமிஷ வகுப்புல, நீங்க என்ன தெரிஞ்சுக்கலாம்? மதுரையில் பலரும் பயன்படுத்தும் அந்த SWP முறை மூலம் மாதாந்திர வருமானம் பெறுவது எப்படி? மருத்துவச் செலவுக்கும், அவசரத்துக்கும் பணத்தை எப்படிப் பிரிக்கிறது? பண விஷயத்தில், யாரையும் நம்பாம, சுயமரியாதையா வாழ்றது எப்படி? லாபம் வெபினார் யார் பேசப் போறாங்க? வேற யாருமில்லை... ஏ ஆர். குமார். இவரை உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. ‘நாணயம் விகடன்’ முன்னாள் ஆசிரியர். நிதி விஷயங்களை சாமானிய மக்களுக்கும் புரியுற மாதிரிச் சொல்றதுல கில்லாடி. இப்ப ‘லாபம்’ நிறுவனத்தோட Chief of Content-ஆ இருக்கார். கூடவே, செல்வ வினோத் (AVP, Labham). இவரும் நிதித்துறையில அனுபவம் வாய்ந்தவர். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து, எந்தக் குழப்பமும் இல்லாம, எளிய தமிழ்ல உங்களுக்கு வழிகாட்டப் போறாங்க. இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்னாலும் நேரடியா கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். எப்போ நடக்குது? நாள்: டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை) நேரம்: சாயங்காலம் 7:00 மணி (வீட்ல இருந்தபடியே Zoom-ல பார்க்கலாம்!) ஒரு சின்ன வேண்டுகோள்... இன்னும் டைம் இருக்கு... அப்புறம் பார்த்துக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க. 50 வயசுல நீங்க எடுக்குற ஒவ்வொரு முடிவும், உங்க அடுத்த 30 வருஷ வாழ்க்கையைத் தீர்மானிக்கும். இதுல கலந்துகக்க கட்டணம் எதுவும் இல்ல. ஆனா, இடங்கள் குறைவுதான். வெறும் 50 பேருக்கு மட்டும்தான் அனுமதி. ஏன்னா, அப்போதான் ஒவ்வொருத்தருக்கும் சரியா வழிகாட்ட முடியும். சுயமரியாதையா, கெத்தா வாழணும்னு நினைக்கிறவங்க மட்டும் உடனே புக் பண்ணுங்க. இப்போதே முன்பதிவு செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க... (மிஸ் பண்ணிடாதீங்க... இது சும்மா ஒரு மீட்டிங் இல்ல; உங்க வாழ்க்கையை மாத்தப்போற ஒரு மணி நேரம்!) - லாபம் டீம்
Pragathi: அதுல நீதான் நடிக்கணும்'னு பாலா சார் சொன்னாரு! - பின்னணி பாடகி பிரகதி ஷேரிங்ஸ்
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நினைவிருக்கிறதா!? அந்த சீசனை அத்தனை எளிதாக மறக்க முடியாது. ஆஜித், பிரகதி எனத் திறமையாள பாடகர்கள் பலரும் பங்கேற்ற சீசன் அது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு வெகு சீக்கிரமாகவே பிரகதி பின்னணி பாடகியாக உருவெடுத்து விட்டார். Pragathi Interview 'பரதேசி', 'வணக்கம் சென்னை' என அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் பிரகதியை சில ஹாலிவுட் சீரிஸ்களிலும் பார்க்க முடிகிறது. சுயாதீன பாடகர் ஸ்டீபன் செக்கரியாவுடன் இணைந்து தற்போது சுயாதீன பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். அதற்காக வாழ்த்துகள் தெரிவித்து அவரிடம் பேசினோம். நீங்களும் ஸ்டீபன் செக்கரியாவும் இணைந்து பாடியிருக்கும் 'கனா கண்டேன்' சுயாதீன பாடல் வந்திருக்கு. அவர்கூட இரண்டாவது முறையாக இணைஞ்சு வேலை செய்வது பற்றி... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி செய்த பாடல் இது. இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இதுக்கு முன்னாடி 2016-ல வேறொரு சுயாதீன பாடலுக்காக இணைஞ்சிருந்தோம். அந்தப் பாடல் எங்களுடைய கரியருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அந்தப் பாடலோட ரிலீஸுக்குப் பிறகு நாங்க அந்தப் பாடலை இதுவரை ஒரேயொரு மேடையிலதான் அதை பாடியிருக்கேன். இந்தப் பாடலுக்கு வழக்கமான ஸ்வீட் டோன் இல்லாமல் வேறொரு விஷயத்தை எதிர்பார்த்திருக்கார். அப்போதான் இந்தப் பாடலுக்குள்ள நான் வந்தேன். Pragathi Interview கொரோனாவுக்குப் பிறகு சுயாதீன இசைக்கான வரவேற்பு அதிகமாகியிருக்குனு சொல்லலாம். இப்போ, ஒரு சுயாதீன பாடலை செய்து, அதை மக்களுக்குப் பிடிக்க வைக்கிறது எவ்வளவு சவாலான காரியம்? சொல்லப்போனால், புதுசாக எதாவது நம்ம செய்யணும். அதுதான் இருக்கிற ஒரே சவால். இன்னைக்கு தமிழ்ல சுயாதீன கலைஞராக வளர்றதுக்கு ப்ளாட்ஃபார்ம் பெருசாகிடுச்சு. முன்னாடியெல்லாம் நம்முடைய குரல் மட்டும்தான் நம்முடைய அடையாளமாக இருக்கும். ஆனால், இன்னைக்கு அப்படியான சூழல் கிடையாது. இப்போ வைரல்னு சொல்லப்படுகிற விஷயத்துக்குப் பின்னாடி போகாமல் நல்ல ஒரு பாடல் செய்யணும். அதுதான் சவாலான விஷயமாகப் பார்க்கிறேன். இன்றைய தேதியில, அந்த வைரல் விஷயத்தை பின்தொடர்ந்து பாடல் செய்து அதை மக்களுக்கு பிடிக்க வைக்கணும்னு உங்களுக்கு கட்டாயமான சூழல் ஏற்படுதா? இல்லை, எனக்கு அப்படி கிடையாது. சில மாதங்களுக்கு முன்னாடி என்னுடைய சுயாதீன பாடல் வந்தபோது பலரும் 'இப்போ டான்ஸ் நம்பர்தான் ஹிட் ஆகும். ஹூக் ஸ்டெப் வைங்க'னு சொன்னாங்க. ஆனா, நம்முடைய கதைகளை அதன் வழியில இல்லாமல் நேர்த்தியாகச் சொன்னாலே மக்களுக்கு நிச்சயமாக அது பிடிக்கும். மக்களுக்கு வைரல் வடிவத்துல பண்ற பாடல்கள் பிடிச்சிருக்குனு அதை செய்தால் மூணு மாசத்துக்குப் பிறகு அந்தப் பாட்டை யாரும் கேட்க மாட்டாங்க. எனக்கு இப்படியான வைரல் வழியை தேர்வு செய்யலாம்னு தோணுச்சுனா நான் தவறான வழியில போவதாக அர்த்தம். Pragathi - Director Bala இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நீங்க கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வந்ததே! பாடகராக நீங்கள் எங்களுக்கு பரிச்சயம். உங்களுக்குள் நடிகரை அவர் எப்படி கண்டுபிடித்தார்? நிறைய நல்ல திறமையாளர்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்காரு. 'பரதேசி' திரைப்படத்துல நான் மூணு பாடல்கள் பாடியிருந்தேன். அப்போ அவர்கூட க்ளோஸ் ஆகிட்டேன். அவர் எனக்கு காட்ஃபாதர் மாதிரி. ஒரு நாள் அவர் கதை எழுதிட்டு இருக்கும்போது, 'நான் இந்தக் கதையைப் படமாக எடுத்தா, அதுல நீதான் நடிக்கணும்'னு சொன்னாரு. பாலா சார் மாதிரியான இயக்குநர் என்மேல நம்பிக்கை வச்சு இப்படியான வார்த்தைகள் சொல்வது ரொம்ப பெரிய விஷயம். அவர் எனக்குள்ள இருக்கும் நடிகரை எப்படி கண்டுபிடிச்சார்னு தெரியல. அவர் சொன்னதுக்குப் பிறகுதான் நானும் ஆக்டிங் ஸ்கூல் சேர்ந்தேன்.
வந்தே மாதரம் பிரச்னை என்ன? மக்களவையில் மோடி - பிரியங்கா இடையே சூடான விவாதம்; பின்னணி என்ன? | Depth
இந்தியாவின் தேசிய பாடலான `வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிசம்பர் 8) சிறப்பு விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, மக்களவையில் தனது உரை மூலம் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். மோடி தனது உரையில், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாடாளுமன்றம் அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் பதிலையுரையாற்றி விவாதம் செய்தனர். வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது பா.ஜ.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன, மக்களவையில் மோடியின் உரை என்ன, அதற்கு காங்கிரஸ் முன்வைத்த எதிர்வாதங்கள் என்ன என்பனவற்றை விரிவாகப் பார்க்கலாம். வந்தே மாதரம்! பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1858-ல் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரான பங்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) என்பவர் 1975-ல் வங்க மொழி மற்றும் சமஸ்கிருதத்தில் வந்தே மாதரம் பாடலை எழுதினார். பாடலில், வங்க நிலம், அதன் மக்கள், சின்னங்கள் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பார். பின்னர் இப்பாடலை, தான் எழுதிய `ஆனந்த மடம்' எனும் நாவலில் சேர்த்தார். இப்பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்திருந்தார். பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1905-ல் பிரிட்டிஷ் அரசின் வங்கப் பிரிவினையின்போது இப்பாடல் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு ஆயுதமாக மாறியது. அதுவே 1900-களில் பிரிட்டிஷாருக்கு எதிராக தேசிய அளவில் உருவெடுத்தது. பின்னர் 1937-ல் காங்கிரஸ் இயக்கமானது காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் கொண்ட குழுவை அமைத்து, பிரிவினையைத் தவிர்க்கும் நோக்கில் வந்தே மாதரம் பாடலுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுத்தது. ஜவஹர்லால் நேரு அப்போது, வந்தே மாதரம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பார்வையில் இருப்பதாக முக்கிய ஆட்சேபனை வந்தது. இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாது சீக்கிய, சமண, பௌத்த அமைப்புகள் என பல தரப்பிலிருந்து இந்த ஆட்சேபனை பிரதானமாக வந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற வலதுசாரி அமைப்புகள் முழு பாடலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. மறுமுனையில் முழு பாடலையும் முஸ்லிம் லீக் எதிர்த்தது. இறுதியில் இதற்கு ஒரு தீர்வாக, வந்தே மாதரத்தில் எந்தவொரு மதம் சார்ந்த பார்வையும் இல்லாத முதல் இரண்டு சரணம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வந்தே மாதரம் மீது பா.ஜ.க-வின் திடீர் அக்கறை! மோடி கடந்த நவம்பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா தொடர்பான நிகழ்ச்சியொன்றைத் தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் மோடி, ``1937-ல் வந்தே மாதரம் பாடலின் சில பகுதிகள், குறிப்பாக அதன் ஆன்மாவின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. வந்தே மாதரம் பிளக்கப்பட்டது. ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது? பிரிவினைக்கான விதைகளை விதைத்தது இதுதான் என்று காங்கிரஸைக் குற்றம்சாட்டினார். யோகி ஆதித்யநாத், மோடி அவரைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நவம்பர் 10-ம் தேதி, இதை இன்னும் பெரிதாக்கும் விதமாகப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார். அதோடு, ``வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் பாரத மாதாவை எதிர்க்கின்றனர். இன்றும் இந்தியாவில் வாழும், உண்ணும் சிலர், வந்தே மாதரம் பாடலை பாடாமல் இருக்கின்றனர் என்று காட்டமாக பேசினார். இதற்கு அப்போதே, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, 10 மணி நேரம் ஒதுக்கி சிறப்பு விவாதத்தைக் கூட்டியிருக்கிறது மோடி 3.0 அரசு. RSS 100: ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் டி.என்.ஏ! - சாதிக்கு எதிராக என்றைக்குப் போராடியது? மோடி ஜின்னாவுடன் கருத்தில் உடன்பட்ட நேரு; முஸ்லிம் லீக்கிடம் அடிபணிந்த காங்கிரஸ்! மக்களவையில் உரையாற்றிய மோடி, ``வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நாடு எமர்ஜென்சியில் இருந்தது. தேசபக்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா ஒரு இருண்ட காலத்தைக் கண்டது. இன்று வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதன் பெருமையை நிலைநிறுத்த ஒரு வாய்ப்பு இது. இந்தப் பாடல்தான் 1947-ல் நம்மைச் சுதந்திரம் பெறத் தூண்டியது. வந்தே மாதரம் வெறுமனே அரசியல் சுதந்திரத்திற்கான ஒரு மந்திரம் மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. வேதங்களில், `இந்நிலம் என் தாய், நான் இம்மண்ணின் மகன்' என்று கூறப்பட்டிருக்கிறது. ராமர் இலங்கையை விட்டுக்கொடுக்கும்போது இதே விஷயத்தைச் சொன்னார். பிரதமர் மோடி வந்தே மாதரம் நமது சிறந்த கலாச்சார மரபின் நவீன அவதாரம். வங்காளத்தின் திறன்கள் நாட்டின் மையப் புள்ளி என்பதை அறிந்த பிரிட்டிஷார், வங்கத்தைப் பிரித்தால் நாடு பிளவுபடும் என்று எண்ணினார்கள். அப்போது 1905-ல் வங்கத்தை அவர்கள் பிரித்தபோது, வந்தே மாதரம் ஒரு பாறை போல் நின்றது என்று பெருமிதத்தோடு பேசிக்கொண்டே வழக்கம்போல நேருவை விமர்சிக்கத் தொடங்கினார். நேரு, இந்திராவுக்கு இணையானவரா அத்வானி? இது என்ன வாதம் சசி தரூர் அவர்களே?! | பேரா. அருணன் ``வந்தே மாதரத்தை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது. முகமது அலி ஜின்னா 1937 அக்டோபர் 15-தேதி லக்னோவில் இருந்து வந்தே மாதரத்திற்கு எதிராக ஒரு கோஷத்தை எழுப்பினார். முஸ்லிம் லீக்கின் ஆதாரமற்ற அறிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுத்த போதிலும், வந்தே மாதரத்தை நேரு விசாரிக்கத் தொடங்கினார். அடுத்த ஐந்து நாளில், `ஜின்னாவின் உணர்வுடன் உடன்படுகிறேன். ஆனந்த மடத்திலுள்ள வந்தே மாதரத்தின் பின்னணி முஸ்லிம்களை எரிச்சலடையச் செய்யும் என்று சுபாஷ் சந்திர போஸுக்கு நேரு கடிதம் எழுதினார். பிரதமர் மோடி அதைத்தொடர்ந்து, அக்டோபர் 26 முதல் வங்கத்தில் வந்தே மாதரம் பகுப்பாய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் அன்றே வந்தே மாதரத்துடன் காங்கிரஸ் சமரசம் செய்துகொண்டது. சமூக நல்லிணக்கம் என்று பாடலைப் பிரித்தனர். ஆனால் வரலாறு என்னவென்றால், முஸ்லிம் லீக்கிடம் காங்கிரஸ் அடிபணிந்தது. சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த இதுதான் அவர்களின் வழி. பிறகு, காங்கிரஸ் மண்டியிட்டு இந்தியப் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டது. காங்கிரஸின் கொள்கைகள் இன்றும் அப்படியே இருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் காங்கிரஸாக மாறிவிட்டது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வந்தே மாதரத்தை இன்றும் எதிர்க்கின்றன. அதைச் சுற்றி சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கின்றன என்று மோடி கடுமையாக சாடினார். ``இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன! - மோடி மோடி உரையில் மறைந்திருக்கும் 2 நோக்கங்கள்! காங்கிரஸைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய் தனது உரையில், ``பிரதமரின் ஒரு மணிநேர உரையை உற்றுக் கவனித்தேன். அதில் அவர்களின் (பாஜக) இரண்டு நோக்கங்கள் தெளிவாகத் தெரிந்தது. முதல் நோக்கம், தங்களின் அரசியல் மூதாதையர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதாகக் கூறுவதன் மூலம், வரலாற்றை திரித்து எழுதுவது. இரண்டாவது நோக்கம், இந்த விவாதத்திற்கு அரசியல் சாயம் பூசுவது. மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய் நான் கேட்கிறேன்... உங்களின் அரசியல் மூதாதையர்கள் 'வந்தே மாதரம்' பாடலின் நோக்கத்தை எப்போது நிறைவேற்றினார்கள்? எப்போது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்தார்கள்? 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எங்கே இருந்தார்கள்? பா.ஜ.க-வின் அரசியல் மூதாதையர்கள் ஒருவர் கூட, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்கவில்லை என்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. டெல்லி: காற்று மாசினால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது - தலைமை நீதிபதி வருத்தம்! முழு நாடும் 'ஜன கண மன' பாடலை தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டபோது, உங்கள் அரசியல் மூதாதையர்கள் 52 ஆண்டுகளாக மூவர்ணக் கொடியை ஏற்றவோ அல்லது தேசிய கீதத்தைப் பாடவோ இல்லை. இவ்வாறிருக்க, இந்த நாட்டைப் பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்... இன்று நாட்டு மக்கள் காற்று மாசு, எல்லைப் பாதுகாப்பு எனப் பல பிரச்னைகளை எழுப்புகிறார்கள். ஆனால் அந்த விஷயங்கள் எதுவும் பிரதமரின் உரையில் இல்லை. மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய் UPI, ஆதார் பற்றி பேசும் இந்த மோடி அரசு, இயந்திரம் படிக்கக்கூடிய (machine-readable) வாக்காளர் பட்டியலை வழங்க விரும்பவில்லை. மக்களின் வாக்குகள் பாதுகாப்பாக இல்லை, சுகாதாரம் பாதுகாப்பாக இல்லை, எல்லைகள் பாதுகாப்பாக இல்லை, எந்தவொரு வர்த்தகமும் பாதுகாப்பாக இல்லை என்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடுக்கினார். நாடாளுமன்றம்: ``SIR குறித்து பேசலாம், ஆனால் ஒரு நிபந்தனை!'' - விவாதத்தைப் பின்னுக்குத் தள்ளிய பாஜக வந்தே மாதரம் சிறப்பு விவாதத்துக்குப் பின்னால் இருக்கும் பா.ஜ.க-வின் பிளான்கள்! மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி, ``இன்று இந்த அவையில் வந்தே மாதரம் சிறப்பு விவாதம் நடத்தப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று மேற்கு வங்கத்தில் தேர்தல் வரவிருப்பதால் பிரதமர் தனது பங்கை நிலைநாட்ட விரும்புகிறார். இன்னொன்று, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் ஆகியோர் மீது இந்த அரசு புதிய குற்றச்சாட்டுகளைச் சுமத்த விரும்புகிறது. இதைச் செய்வதன் மூலம் அத்தியாவசியப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை நினைக்கிறது மோடி அரசு. காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பிரதமர் நன்றாக உரையாற்றுகிறார். ஆனால், அவற்றில் உண்மை இல்லை. மோடி உண்மைகளை மக்களிடம் முன்வைக்கும் விதமே ஒரு கலைதான். ஆனால் நான் மக்களின் பிரதிநிதி, கலைஞன் அல்ல. 1896-ல் ரவீந்திரநாத் தாகூர் முதன்முதலில் வந்தே மாதரம் பாடலை ஓர் அமர்வில் பாடினார் என்று மோடி கூறினார். ஆனால், அது காங்கிரஸ் மாநாடு என்று அவருக்குத் தெரியவில்லை. தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா? நீங்கள் தேர்தலுக்காக இருக்கிறீர்கள். நாங்கள் நாட்டு மக்களுக்காக இருக்கிறோம். நாங்கள் தோற்றாலும், இந்த மண்ணுக்காக உங்களுக்கெதிராகவும், உங்கள் சித்தாந்தத்திற்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காங்கிரஸின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், வந்தே மாதரம் கூட்டாகப் பாடப்படுகிறது. ஆனால், பா.ஜ.க -.ஆர்.எஸ்.எஸ் அமர்வுகளில் வந்தே மாதரம் பாடப்படுகிறதா? அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வந்தே மாதரத்தை கேள்விக்குட்படுத்துவது அரசியலமைப்புக்கு எதிரான அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வந்தே மாதரம் பாடலைப் பிரித்ததாகக் குற்றம்சாட்டுவதன் மூலம், முழு அரசியலமைப்பு சபையையும் பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது. அதன் ஒவ்வொரு தலைவரையும் குற்றவாளிகள் என்கிறது. இன்று, நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது. இந்த நேரத்தில், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், வினாத்தாள் கசிவு, பெண்களின் நிலை குறித்து அவையில் ஏன் விவாதம் இல்லை? உண்மையில், நிகழ்காலத்தின் யதார்த்தத்தை மோடி அரசு மறைக்க விரும்புகிறது. நம் பிரதமருக்கு நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டது. அவரது கொள்கைகள் நாட்டைப் பலவீனப்படுத்துகின்றன. எனவே கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர அவரால் வேறு என்ன செய்ய முடியும்... என்று விமர்சித்தார். ‘‘இனி, விதைகளை ‘கார்ப்பரேட்’கள்தான் விற்க முடியும்!’’ - விவசாயிகளை அடிமையாக்கத் துடிக்கும் மோடி நேரு மீது எவ்வளவு புகார் இருக்கிறதோ அனைத்தையும் பட்டியலிடுங்கள்! நேருவை மோடி குற்றம்சாட்டியதற்கு எதிர்வினையாற்றிய பிரியங்கா காந்தி, ``மோடி பிரதமராக இருந்த வருடங்களின் எண்ணிக்கையானது, இந்த நாட்டுக்காக நேரு சிறையில் இருந்த ஆண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமம். அதன் பிறகு நேரு 17 ஆண்டுகள் பிரதமராக இந்த நாட்டுக்கு உழைத்தார். நேரு இஸ்ரோவை நிறுவியிருக்காவிட்டால் மங்கள்யான் நிகழ்ந்திருக்காது... டிஆர்டிஓ (DRDO)-வை நிறுவியிருக்காவிட்டால் இன்று தேஜஸ் போர் விமானங்கள் இல்லை... ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகியவற்றை நிறுவியிருக்காவிட்டால் இன்று ஐ.டி துறையில் முன்னேறியிருக்க மாட்டோம்... காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி எய்ம்ஸ் (AIIMS) நிறுவியிருக்காவிட்டால் எவ்வாறு கொரோனாவை நாம் எதிர்கொண்டிருப்போம்... BHEL - SAIL போன்ற பொதுத்துறை நிறுவனங்களை நிறுவியிருக்காவிட்டால் வளர்ந்த இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்படும்... தனது கடைசி மூச்சு வரை இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர் நேரு. சில மாதங்களுக்கு முன்பு மோடி, எதிர்க்கட்சிகள் தன்னை எவ்வளவு அவமதித்தார்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். ஒரு 90, 99 அவமானங்களை அவர் பட்டியலிட்டிருக்கலாம். மோடிக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். நேரு மீது உங்களுக்கு என்னென்ன புகார்கள் இருந்தாலும், என்னென்ன அவமானப்படுத்த வேண்டும் என்றிருந்தாலும் அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள். காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி அது 999 அவமானங்களாக இருந்தாலும் 9,999 அவமானங்களாக இருந்தாலும் சரி ஒரு பட்டியலை போடுங்கள். 10 மணிநேரமோ, 20 மணிநேரமோ எவ்வளவு மணி நேரமானாலும் நாம் தனியாக விவாதிப்போம். ஆனால், இந்த சபையின் நேரம் விலைமதிப்பற்றது. பொதுமக்கள் எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்க இந்த சபையில் நாம் விவாதிக்க வேண்டும் என்று கூறினார். Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும்
சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையம் (T3) எப்போது திறக்கப்படும்? வெளியாக முக்கிய தகவல்!
சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பானை அதிர வைத்த 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஹொக்கைடோ ,அமோரி மற்றும் இவாட் ஆகிய மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலும், 50 கிலோமீற்றர் ஆழத்திலும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மூன்று மீற்றர் உயரத்திற்கு சுனாமி அலைகள் […]
இந்த வார ராசிபலன் டிசம்பர் 9 முதல் 14 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
2035 டீசல் மற்றும் பெட்ரோல் கார் தடையை மறுபரிசீலனை செய்ய ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐரோப்பிய ஆணையத்தை வலியுறுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் வாகனத் துறையினரின் அழுத்தம், 2035 ஆம் ஆண்டுக்குள் டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் மீதான தடையை திருத்துவதை தாமதப்படுத்த ஐரோப்பிய ஆணையத்தைத் தள்ளக்கூடும். 2035 ஆம் ஆண்டுக்குள் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை விற்பனை செய்வதற்கான தடையை நீக்குமாறு குறைந்தது ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஐரோப்பிய ஆணையத்தை கோருகின்றன, இல்லையெனில் அந்தத் தொகுதியின் வாகனத் துறை தடைக்கு அடிபணியும் என்று வாதிடுவதாக யூரோநியூஸ் பார்த்த இரண்டு கடிதங்கள் தெரிவிக்கின்றன. பல்கேரியா, செக் குடியரசு, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகியால் அறிவிக்கப்படும் வரவிருக்கும் சட்டமன்ற மதிப்பாய்வின் ஒரு பகுதியாக 2035 க்குப் பின்னர் கலப்பின வாகனங்களின் (hybrid vehicles) விற்பனையை ஐரோப்பிய ஆணையம் பரிசீலிப்பது கட்டாயமானது என்று வாதிட்டன. CO2 உமிழ்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதாக ஏழு நாடுகளும் கூறினாலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சட்டம் தொழில்நுட்ப நடுநிலைமையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இது அடிப்படையில் தேசிய அரசாங்கங்களுக்கு உமிழ்வைக் குறைக்கும் போது போட்டித்தன்மையைப் பராமரிக்க சிறந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது. கையொப்பமிட்டவர்களால் அழைக்கப்பட்ட மாற்றுகளில் கலப்பின மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் கார்கள் ஆகியவை அடங்கும். ஏழு உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் கூடுதல் சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் தேவையையும் , அவற்றின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த ஆணையத்தையும் சுட்டிக்காட்டின. ஆணையத்தின் முன்மொழிவு முதன்மையாக நல்ல நடைமுறைகள், வரி சலுகைகள் மற்றும் ஆதரவு திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் குறைந்த மற்றும் பூஜ்ஜிய-உமிழ்வு வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிப்பதில் தொழில்நுட்ப ரீதியாக நடுநிலை அணுகுமுறையை பிரதிபலிக்க வேண்டும் என்று யேர்மனியைத் தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கையெழுத்திட்ட கடிதங்களில் ஒன்று கூறியது. ஐரோப்பிய ஒன்றிய மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு நாடுகள், 2035 ஆம் ஆண்டுக்குள் உள் எரி பொறிகள் (ICEs) மீதான தடையை நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றன. அதிக எரிசக்தி விலைகள், பேட்டரிகள் உள்ளிட்ட கார் கூறுகளின் பற்றாக்குறை மற்றும் மின்சார வாகனங்களுக்கு (EVs) போதுமான நுகர்வோர் தேவை இல்லாததால் தங்கள் வாகன உற்பத்தியாளர்கள் போராடி வருவதாக அவர்கள் கூறுகின்றனர் . ஐரோப்பிய வாகனத் துறையின் மூலோபாய சுதந்திரத்தைப் பராமரிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று யேர்மனி மற்றும் இத்தாலி கையெழுத்திட்ட இரண்டாவது கடிதம் கூறுகிறது. சீனா ஒரு முன்னணி உலகளாவிய ஏற்றுமதியாளராக உருவெடுத்ததைத் தொடர்ந்து, பேட்டரி மின்சார வாகனங்களுக்கான ஐரோப்பாவின் சந்தை BYD போன்ற பிராண்டுகளால் நிரம்பி வழிகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பேட்டரி மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் மெதுவாக உள்ளனர். எலோன் மஸ்க்கின் டெஸ்லா கூட ஐரோப்பாவில் சீனப் போட்டியை எதிர்கொள்கிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனில் பதிவுகள் 50% க்கும் அதிகமாகவும், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகலில் 40% க்கும் அதிகமாகவும் குறைந்துள்ளன. நீண்டகால வாகன அதிகார மையமான ஜெர்மனி, மார்ச் 2023 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு ஏற்ப ஏற்கனவே வெப்பத்தை உணர்ந்து வருகிறது, இது டீசல் மற்றும் பெட்ரோல் கார்களின் புதிய விற்பனையை நிறுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. சுத்தமான வாகனங்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதும், கார் பாகங்கள் மற்றும் பொருட்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதும் நாட்டை உலகளாவிய போட்டியிலிருந்து விலக்கி வருவதாக பேர்லின் வாதிடுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்துறை குழுக்களில் அமர்ந்திருக்கும் ஜெர்மன் MEP ஜென்ஸ் கீசெக் (EPP), ஆணையம் முன்மொழிந்த ICE-கள் மீதான முழுமையான தடைக்கு தனது குழுவின் எதிர்ப்பை ஆதரித்தார். CO2-நடுநிலை எரிபொருட்களின் பங்கை அங்கீகரிப்பதன் மூலம் சட்டத்தைத் திறக்க நாங்கள் முன்மொழிந்தோம், எதிர்கால தொழில்நுட்ப கலவையின் ஒரு பகுதியாக கார்பனேற்றம் செய்யப்பட்ட ICE களுக்கு ஒரு பாதையைத் திறக்கிறோம் என்று கீசெக் யூரோநியூஸிடம் கூறினார். அந்த வகையில், வெவ்வேறு உந்துவிசை தொழில்நுட்பங்களுக்கு இடையே ஒரு நியாயமான, திறந்த மற்றும் சந்தை அடிப்படையிலான போட்டி சாத்தியமாக இருந்திருக்கும். போதுமான அளவு உள்கட்டமைப்பு மற்றும் கட்ட மேம்பாடுகள் இல்லாததால், 2035 இலக்கு இனி யதார்த்தமானது அல்ல என்று ஆட்டோமொடிவ் லாபி குழுவான ஐரோப்பிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACEA) இயக்குநர் ஜெனரல் சிக்ரிட் டி வ்ரீஸ் கூறினார் . இன்றைய CO2 ஒழுங்குமுறை, உள்கட்டமைப்பு, மொத்த உரிமைச் செலவு அல்லது ஊக்கத்தொகைகள் மூலம் உண்மையான தேவையைத் தூண்டுவதற்குப் போதுமானதைச் செய்யாமல், போட்டித்தன்மை மற்றும் மீள்தன்மையுடன் அதை இணைக்காமல், புதிய வாகன விநியோகத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று டி வ்ரீஸ் கூறினார். நாளை மறுநாள் புதன்கிழமை, கார்கள் மற்றும் வேன்களுக்கான CO2 தரநிலைகளில் திருத்தங்களை EU நிர்வாகி அறிவிக்க உள்ளார். இருப்பினும், ஆணைய செய்தித் தொடர்பாளர்களின் முந்தைய அறிக்கைகள் EU நிர்வாகி தனது திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்று பரிந்துரைத்துள்ளன.
ஐரோப்பிய சிறைகளில் இருந்து நான்காவது முறையாக தப்பிச் சென்ற கைதி
மிலனின் ஓபரா சிறைச்சாலையின் அதிகபட்ச பாதுகாப்புப் பிரிவில் இருந்து வார இறுதியில் ஒரு பிரபலமற்ற கைதி தப்பினார். இது இத்தாலிய மற்றும் ஐரோப்பிய தடுப்பு மையங்களிலிருந்து அவர் வெற்றிகரமாக தப்பிச் சென்ற நான்காவது முறையாகும். சிறையிலிருந்து தப்பிக்க 41 வயதான டௌலண்ட் டோமா, கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவில் தனது அறை ஜன்னல் இரும்புக் கம்பிகளை அறுத்து, முடிச்சுப் போட்ட படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தினார். இருளையும் சிறை அதிகாரிகளின் பணிநேர மாற்றத்தையும் பயன்படுத்திக் கொண்டார் என இத்தாலிய அதிகாரிகளின் கூறினர். அல்பேனியாவின் குடிமகனான டோமா, கொள்ளை மற்றும் பிற குற்றங்களுக்காக அக்டோபர் 2048 வரை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் ஆறு மீட்டர் சுவரில் ஏறி மறைந்துவிட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இத்தாலிய காவல்துறையினர் நாடு தழுவிய தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். வீதி ரோந்து, சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளுடன் தேடத் தொடங்கியுள்ளனர். டோமா நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். டோமா முதன்முதலில் 2009 இல் டெர்னி சிறையிலிருந்து தப்பினார். அவரது மிகவும் விவாதிக்கப்பட்ட திருட்டு பிப்ரவரி 2013 இல் நடந்தது. அவரும் சக கைதி வாமென்டின் ஃப்ரோகாஜும் பர்மா சிறைச்சாலையின் அதிகபட்ச பாதுகாப்புப் பிரிவில் இருந்து தப்பிச் சென்றனர். ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஃப்ரோகாஜ், பின்னர் 2015 ஆம் ஆண்டு வீட்டிற்குள் புகுந்து நகைக்கடைக்காரரால் கொல்லப்பட்டார். 2013 ஆம் ஆண்டு தப்பித்தலுக்குப் பின்னர் இத்தாலிய போலீசார் டோமாவை 40 நாட்கள் தேடினர். பின்னர் அவர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் சில மாதங்களுக்குப் பின்னர் அவர் பெல்ஜியக் காவலில் இருந்தும் தப்பினார். டோமாவுக்கு வெளிப்புற உதவி கிடைத்ததா என்பதைக் கண்டறிய, ஓபரா சிறைச்சாலையிலிருந்து சிசிடிவி காட்சிகளை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இத்தாலிய சிறைச்சாலை அமைப்பில் உள்ள முறையான சிக்கல்களை இந்த தப்பித்தல் எடுத்துக்காட்டுகிறது, அங்கு கூட்ட நெரிசல் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை பாதுகாப்பைப் பராமரிப்பது பெருகிய முறையில் சவாலானதாக ஆக்கியுள்ளன. ஆன்டிகோன் சங்கத்தின் கூற்றுப்படி, இத்தாலிய சிறைச்சாலைகள் 2025 ஆம் ஆண்டில் 133 சதவீத திறனுடன் செயல்பட்டன. 51,000 பேருக்கு வடிவமைக்கப்பட்ட வசதிகளில் 62,000 க்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்துள்ளன. இத்தாலியில் 46,000க்கும் குறைவான சிறை அதிகாரிகள் உள்ளனர். இதனால் சுமார் 20,000 ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக சிறைச்சாலை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. தப்பிக்கும் போது ஓபரா சிறைச்சாலை 918 இடங்களில் 1,338 கைதிகளை வைத்திருந்தது.153% அதிக நெரிசல் - குறைந்தது 811 அதிகாரிகள் தேவைப்படும்போது வெறும் 533 அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டது என்று UILPA சிறைச்சாலை காவல் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெனரினோ டி ஃபாசியோ தெரிவித்தார்.
ரஷ்ய நிறுவனம் மீதான தடைகளை நிறுத்திய அமெரிக்கா
ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லூகாயில் மீதான சில தடைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. தடைகள் அமெரிக்க கருவூலத்துறையானது ரஷ்யாவிற்கு வெளியே உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான அங்கீகாரத்தை நீட்டித்துள்ளது. மேலும், லூகாயில் மீதான சில தடைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய அனுமதிக்கிறது. சில்லறை சேவை நிலையங்களுடன் சாதாரண பரிவர்த்தனைகளில் ஈடுபட விரும்பும் நுகர்வோர் மற்றும் […]
ஒஸ்லோவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மிகப்பெரிய ஷாப்பிங் சென்டரில் (ஸ்டோரோ ஸ்டோர்சென்டர்) துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த தகவலை அடுத்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்ததாக நோர்வே போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர். தாக்குதலாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் எவரும் காயமடையவில்லை என்பதனால் அந்த வணிக வளாகத்தை திறப்பது பாதுகாப்பானது என்றும் காவல்துறையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். சந்தேக நபர் 19 வயது இளைஞன் என்றும் அவர் மேல் நோக்கி கூரையில் ஒரு துப்பாக்கியால் சுட்டதாகவும், சந்தேக நபர் ஒரு பேஸ்பால் மட்டை மற்றும் கத்தியையும் வைத்திருந்ததாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் டாம் பெர்கர் செய்தியாளர்களிடம் கூறினார். ஒஸ்லோவில் அமைந்துள்ள ஸ்டோரோ ஸ்டோர்சென்டர் என்ற வணிக வளாகத்தில் 140 வர்த்தக நிலையங்களும் கபேக்களும் உள்ளே அமைந்துள்ளன.
சீனாவிற்கு வரி விதிக்கப்படும் –மேக்ரான் எச்சரிக்கை
சீனப் பொருட்கள் மீது சுங்கவரிகள் விதிக்கப்படலாம் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், சீனாவுடன் உள்ள வர்த்தக பற்றாக்குறை (trade deficit) அதிகரித்து வருவதால், சீனப் பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்று எச்சரித்துள்ளார். மேக்ரான், சமீபத்தில் சீனாவிற்கு மேற்கொண்ட மூன்று நாள் அரசு பயணத்தின் போது, “சீனாவின் வர்த்தக அதிகப்படியான நிலை (trade surplus) நிலைத்திருக்க முடியாது. இது ஐரோப்பிய தொழில்துறையை பாதிக்கிறது” என்று தெரிவித்தார். அவர், உலகளாவிய வர்த்தக […]
உக்ரைன் மீது அமெரிக்காவின் அழுத்தம்: சந்தித்த தலைவர்கள்!
ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு வாஷிங்டனிடமிருந்து கெய்வ் மீது அழுத்தம் அதிகரித்து வருவதால், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு இன்னும் அதிக வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த வாரம் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் சமீபத்திய பதிப்பைப் பற்றி விவாதிக்க திங்களன்று லண்டனில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனியின் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரைச் சந்தித்தார். சந்திப்பைத் தொடர்ந்து கியேவிற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கூறினார். டவுனிங் தெருவில் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, உக்ரைனுக்கான அமைதி ஒப்பந்தத்தில் கடினமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர் கூறினார். அமெரிக்கத் தரப்பிலிருந்து வரும் சாத்தியமான சமாதானத் திட்டத்தின் சில விவரங்கள் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக மெர்ஸ் கூறினார். அதனால்தான் நாங்கள் இங்கே பேசுவதற்தற்காக இருக்கிறோம் என்று கூறினார். அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். பேச்சுவார்த்தைகளின் மெதுவான முன்னேற்றத்தால் விரக்தியடைந்து, உக்ரைனுக்கான ஆதரவை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என்ற பதட்டம் கியேவிலும் ஐரோப்பா முழுவதும் நிலவுகிறது. அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது. அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். கடந்த வாரம், உக்ரேனிய அதிகாரிகள் புளோரிடாவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் மூன்று நாட்கள் செலவிட்டு, ரஷ்யாவிற்கு சாதகமாக பரவலாகக் கருதப்படும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைக் கோரினர். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ரஷ்யா மற்றொரு படையெடுப்பு அல்லது தாக்குதலை நடத்துவதிலிருந்து தடுக்கப்படுவதை உறுதிசெய்ய உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தேடுகிறது.
உக்ரைன் மீது அமெரிக்காவின் அழுத்தம்: சந்தித்த தலைவர்கள்!
ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு வாஷிங்டனிடமிருந்து கெய்வ் மீது அழுத்தம் அதிகரித்து வருவதால், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு இன்னும் அதிக வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த வாரம் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் சமீபத்திய பதிப்பைப் பற்றி விவாதிக்க திங்களன்று லண்டனில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனியின் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரைச் சந்தித்தார். சந்திப்பைத் தொடர்ந்து கியேவிற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கூறினார். டவுனிங் தெருவில் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, உக்ரைனுக்கான அமைதி ஒப்பந்தத்தில் கடினமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர் கூறினார். அமெரிக்கத் தரப்பிலிருந்து வரும் சாத்தியமான சமாதானத் திட்டத்தின் சில விவரங்கள் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக மெர்ஸ் கூறினார். அதனால்தான் நாங்கள் இங்கே பேசுவதற்தற்காக இருக்கிறோம் என்று கூறினார். அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். பேச்சுவார்த்தைகளின் மெதுவான முன்னேற்றத்தால் விரக்தியடைந்து, உக்ரைனுக்கான ஆதரவை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என்ற பதட்டம் கியேவிலும் ஐரோப்பா முழுவதும் நிலவுகிறது. அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது. அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். கடந்த வாரம், உக்ரேனிய அதிகாரிகள் புளோரிடாவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் மூன்று நாட்கள் செலவிட்டு, ரஷ்யாவிற்கு சாதகமாக பரவலாகக் கருதப்படும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைக் கோரினர். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ரஷ்யா மற்றொரு படையெடுப்பு அல்லது தாக்குதலை நடத்துவதிலிருந்து தடுக்கப்படுவதை உறுதிசெய்ய உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தேடுகிறது.
மண்சரிவில் சிக்கிய குடும்பம்: அறுவர் மரணம்: மீண்டவர்களின் சோகக்கதை
“நவம்பர் 26 ஆம் திகதி இரவு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம். நானும், என் பேரனும் பேத்தியும் ஒரு அறையில் இருந்தோம். என் மகனும் என் மகனின் கர்ப்பிணி மனைவியும் மற்றொரு அறையில் தூங்கினார்கள், மற்றவர்கள் விறைந்தையில் தூங்கினார்கள் திடீரென்று இடி சத்தம் கேட்டு விழித்தேன். அதே நேரத்தில், நாங்கள் ஒரு மண்ணுக்குள் புதையுண்டிருந்தோம்” என்று மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிய திருமதி எம். சந்திர காந்தி […]
ஹீத்ரோ 'பெப்பர் ஸ்ப்ரே'தாக்குதல்: இருவரைக் கைது செய்தது காவல்துறை
ஹீத்ரோ விமான நிலையத்தில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தில், மிளகுத் தூள் என்று கருதப்படும் ஒரு பொருளைப் பயன்படுத்தி 21 பேர் காயமடைந்ததாக, மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மெட்ரோ காவல் துறை தெரிவித்துள்ளது. லம்பேத்தில் கொள்ளை மற்றும் தாக்குதல் தொடர்பாக 24 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார், மேலும் கொள்ளைச் சதித்திட்டம் தீட்டியதாக 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று படை தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை டெர்மினல் 3 இல் உள்ள பல மாடி கார் பார்க்கிங்கில் நடந்த தாக்குதல் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து இந்த கைதுகள் நடந்தன. தாக்குதலுக்கு முன்னர் கார் பார்க்கிங் லிஃப்டில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களின் சூட்கேஸ்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் போது காயமடைந்தவர்களில் மூன்று வயது சிறுமியும் அடங்குவார். ஐந்து பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகில் கொள்ளை மற்றும் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 31 வயது நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைகள் தொடரும் அதே வேளையில், அவர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டார். மிளகு தெளிப்பு என்று நம்பப்படும் ஒரு நச்சுப் பொருளால் பலர் காயமடைந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி காலை 08:10 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பயங்கரவாதமாகக் கருதப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார்னர் பிரதர்ஸ் - நெடஃபிளிக்ஸ் ஒப்பந்தம்: எதிர்த்துப் போராடப்போவதாக பாரமவுண்ட் அறிவித்து
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை நெட்ஃபிளிக்ஸ் கையகப்படுத்தியதை எதிர்த்துப் போராடப் போவதாக அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் இன்று திங்களன்று தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் நெட்ஃபிக்ஸ் $72 பில்லியன் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை எட்டியது. ஆனால் பாரமவுண்ட் பங்குதாரர்களை சுமார் $74.4 பில்லியன் அல்லது ஒரு பங்கிற்கு $30 ரொக்கமாக ஏலத்தில் அணுகப்போவதாகக் கூறியது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் போலல்லாமல், பாரமவுண்ட் வார்னர் பிரதர்ஸின் கேபிள் சொத்துக்களை வாங்கவும் முன்வருவதாகக் கூறுகிறது. மேலும் பங்குதாரர்கள் நெட்ஃபிளிக்ஸ் ஏலத்தை நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. இது அந்த சொத்துக்களின் மாயையான வருங்கால மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது என்று அது கூறுகிறது. பாரமவுண்ட் நெட்ஃபிக்ஸ் சலுகையை விமர்சித்து, இது WBD பங்குதாரர்களை நீடித்த பல அதிகார வரம்பு ஒழுங்குமுறை அனுமதி செயல்முறைக்கு உட்படுத்துகிறது. நிச்சயமற்ற விளைவு மற்றும் சிக்கலான மற்றும் நிலையற்ற பங்கு மற்றும் பண கலவையுடன் வெளிப்படுத்துகிறது என்று கூறினார். 12 வார காலப்பகுதியில் WBD-க்கு ஆறு திட்டங்களை சமர்ப்பித்ததாக பாரமவுண்ட் தெரிவித்துள்ளது. எங்கள் சலுகை வலுவான ஹாலிவுட்டை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது படைப்பாற்றல் சமூகம், நுகர்வோர் மற்றும் திரைப்பட நாடகத் துறையின் நலன்களுக்காக உள்ளது என்று பாரமவுண்ட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் எலிசன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். எங்கள் முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையின் விளைவாக, அதிகரித்த போட்டி, அதிக உள்ளடக்க செலவு மற்றும் திரையரங்க வெளியீட்டு வெளியீடு மற்றும் திரையரங்குகளில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் ஆகியவற்றிலிருந்து அவர்கள் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார். இந்த ஒப்பந்தம் சிக்கலானது என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த சந்தைப் பங்கின் அளவு காரணமாக நெட்ஃபிக்ஸ் ஒப்பந்தம் ஒரு சிக்கலாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூறினார். இந்த ஏலத்தை அங்கீகரிப்பதா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவில் தான் தனிப்பட்ட முறையில் ஈடுபடுவேன் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார். பாரமவுண்டுடனான டிரம்பின் தனிப்பட்ட உறவுகளைக் கருத்தில் கொண்டு, தலைமை நிர்வாக அதிகாரி எலிசன் நீண்டகால டிரம்ப் ஆதரவாளரான லாரி எலிசனின் மகன், உலகின் இரண்டாவது பணக்காரர் நெட்ஃபிக்ஸ் குறித்த டிரம்ப் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
9 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின், ஊவா பரணகம, மீகாகியுல,பதுளை, கந்தெகெட்டிய, பண்டாரவளை, சொரணாத்தொட்ட, ஹாலி – எல, எல்ல, லுணுகலை, வெலிமடை, ஹப்புத்தளை, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை […]
மதுரை ஏ.வி. மேம்பாலம்.. நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை.. யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்!
மதுரையில் அழகான ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், இன்று 139வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அதனை பகிர்ந்து கொண்டு, பழமையான கட்டுமானத் திறன்களை வெளிக்கொணர்ந்த இந்த பாலம், யுனெஸ்கோ அங்கீகாரத்துக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்து பல்கலை மாணவர்கள் கடிதம்
டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று (08) கடிதமொன்றைக் கையளித்தனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய ஜனாதிபதி தொடர்ந்து, பேரிடரின்போது தாம் […]
பாகிஸ்தானில், 2025ஆம் ஆண்டில் கூகுளில் தேடப்பட்ட இந்திய வீரர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் இல்லை. இளம் வீரரைதான், பாகிஸ்தானியர்கள் அதிகமாக தேடியுள்ளனர்.
51வது பெங்களூரு கேக் ஷோ டிசம்பர் 11ல் தொடக்கம்! 50 கலைஞர்கள்-25 வகை பிரமாண்ட கேக்... அடேங்கப்பா!
பெங்களூரு கேக் ஷோ வருகிற 11ந் தேதி திரிபுரவாசிணி அரண்மனை மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த கேக் ஷோவின் ஏற்பாடுகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
தாய்லாந்து - கம்போடியா எல்லை மோதல் மீண்டும் வெடித்தது
தாய்லாந்து - கம்போடியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் இன்று திங்கள்கிழமை காலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மோதலை மீண்டும் தொடங்கியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன. நாட்டைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் தேவையான அளவு இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார். தாய்லாந்து ஒருபோதும் வன்முறையை விரும்பியதில்லை. தாய்லாந்து ஒருபோதும் சண்டையையோ அல்லது படையெடுப்பையோ தொடங்கவில்லை, ஆனால் அதன் இறையாண்மையை மீறுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார். டிசம்பர் 7 ஆம் திகதி சிசாகெட் மாகாணத்தில் தாய் துருப்புக்கள் மீது கம்போடியப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், இரண்டு வீரர்கள் காயமடைந்ததாகவும் ராயல் தாய் ராணுவம் குற்றம் சாட்டியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை மேலும் தாக்குதல்கள் நடந்ததாக அது தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் என்று கூறியது. இதில் ஒரு தாய்லாந்துச் சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் அது கூறியது. ஒரு பொதுமக்கள் சமூகம் குறிவைக்கப்பட்டதாகவும் அது கூறியது. திங்கட்கிழமை காலை உபோன் ரட்சதானி மாகாணத்தில் மற்றொரு மோதல் ஏற்பட்டதாகவும், இது வான்வழித் தாக்குதல்களைத் தூண்டியதாகவும் இராணுவம் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. கம்போடிய ஆதரவு துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை அடக்குவதற்கு பல பகுதிகளில் இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு விமானங்கள் பதிலடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக தாய் இராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி தெரிவித்தார். அப்பகுதியில் இருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற துருப்புக்களும் நிறுத்தப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து தரப்பு கூறுவதை கம்போடியா நிராகரித்தது. பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சியாட்டா, திங்கள்கிழமை அதிகாலை பிரீயா விஹார் மற்றும் ஒட்டார் மீன்ச்சே ஆகிய எல்லை மாகாணங்களில் கம்போடிய துருப்புக்கள் மீது தாய்லாந்து படைகள் தாக்குதலை நடத்தியதாகவும், கம்போடியா பதிலடி கொடுக்கவில்லை என்றும் கூறினார். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து விரோத நடவடிக்கைகளையும் தாய்லாந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கம்போடியா வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார். இதற்கிடையில், திங்கட்கிழமை நடந்த மோதலில் குறைந்தது நான்கு பொதுமக்கள் இறந்ததாக கம்போடியாவின் தகவல் அமைச்சர் பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏஎவ்பியிடம் தெரிவித்தார். எல்லை மாகாணங்களான ஒட்டார் மீன்ச்சே மற்றும் பிரியா விஹார் ஆகிய இடங்களில் தாய்லாந்து தாக்குதல்களில் குறைந்தது நான்கு கம்போடிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று நெத் பீக்ட்ரா கூறினார். மேலும் 10 பொதுமக்கள் காயமடைந்தனர். ஜூலை மாதம் ஐந்து நாள் போரை அடுத்து, அக்டோபரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினர். இந்த போரில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர். பதட்டங்கள் தொடர்ந்து கொதித்தெழுந்தன இதன் விளைவாக நவம்பர் நடுப்பகுதியில் தாய்லாந்து வீரர்கள் கண்ணிவெடிகளால் காயமடைந்ததை அடுத்து ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக தாய்லாந்து கூறியது. இது கம்போடியாவால் போடப்பட்டதாக அவர்கள் கூறினர். மேலும் பதட்டங்களைத் தவிர்க்க தலையிடுவதாக டிரம்ப் கூறிய போதிலும், போர் நிறுத்தத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. இன்று திங்களன்று, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அக்டோபரில் தாய் மற்றும் கம்போடியத் தலைவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட படத்தைப் பகிர்ந்து கொண்டு, நிதானத்தைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார்.
அம்பிட்டியே சுமனரத்ன தேரரை காணோம்!
சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் மற்றும் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகியோர் மட்டக்களப்பு பௌத்த பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை 2023 ஆம் ஆண்டு சமர்பித்திருந்தனர் . தமிழர்களை வெட்டி கொல்ல வேண்டும் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பேசியதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 25 ஆம் திகதி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் தர்ஷினி அண்ணாதுரை உத்தரவிட்டிருந்தார் ஆனால் இரு வாரங்கள் (14 நாட்கள்) கடந்து விட்ட பின்னரும் கூட அம்பிட்டியே சுமனரத்ன தேரரை பொலிஸ் கைது செய்யவில்லை. நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு அழைக்கப்பட்ட போது அம்பிட்டியே சுமனரத்ன தேரரை காணவில்லை என பொலிஸ் பதிவு செய்திருக்கின்றது இது தொடர்பாக நீதிவான் நீதிமன்றத்தில் அடுத்த தவணையின் போது தோன்றி விளக்கமளிக்குமாறு பொலிஸ்அத்தியட்சகருக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது
இலங்கையின் வடபுலத்திற்கு சுமார் 35வருட கால இடைவெளியின் பின்னராக இந்திய படை உத்தியோகபூர்வமாக களமிறங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான சாலையில் வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்த பாலம் இந்திய இராணுவ பொறியியல் அணியினரால் புனரமைக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவ பொறியியல் அணியைச்சேர்ந்த 37 இந்திய இராணுவத்தினர் இன்றைய தினம் கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த நிலையில் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்திருந்தனர். அவர்களுக்கு உதவியாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களும் இணைந்து பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே மண்சரிவு அனர்த்ததால் சிக்கியவர்ளை மீட்பு பணி மற்றும் நிவாரண விநியோக பணியிலும் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் குழுவினர் இன்று (08) இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி.. தீர்க்க முடியாத நீண்ட கால மக்கள் பிரச்சினை இதுதான்!
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர், மக்கள் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. 2026 தேர்தலில் இது எதிரொலிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! –சுனாமி எச்சரிக்கை
வடக்கு ஜப்பானின் கடலோரப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ள நிலையில், சுமார் 3 மீட்டர் (10… The post ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! – சுனாமி எச்சரிக்கை appeared first on Global Tamil News .
ஜெர்மனியில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை –நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
பெர்லின், உக்ரைன்-ரஷியா போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷிய டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ரஷியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ராணுவ பலத்தை பெருக்க அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை ராணுவ சேவையில் இணைக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு தன்னார்வ அடிப்படையிலும் இருக்கும். போர் ஏற்படும் காலங்களில் இவர்கள் ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் […]
இந்திய படை உத்தியோகபூர்வமாக வடக்கில்!
நிவாரண பணிகளுக்கு நேற்றைய தினம் கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் விமானம் இன்றைய தினம் காலை நிவாரண பொருட்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது. நாடு முழுவதும் நிவாரண பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கும் முகமாக , கொழும்பில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. இதனிடையே வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் அனர்த்த நிவாரண நிதி உதவியை நிர்வகிக்க இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் தேசிய உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை குழு உறுதி செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமில்நகர் மக்களுக்கு தென்பகுதி வர்த்தகர்கள் உதவி
அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் கடும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் எமில்நகர் கிராம மக்கள் பாரிய அளவில்… The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமில்நகர் மக்களுக்கு தென்பகுதி வர்த்தகர்கள் உதவி appeared first on Global Tamil News .
யாழ். மாணவன் இழப்புக்கு மத்தியிலும்…கடற்படையினரின் அர்ப்பணிப்புக்குக் கெளரவம் தாருங்கள்!
புத்தளம் ஏ–12 வீதியில் கலா வாவி வெள்ளத்தில் சிக்குண்டு மீட்கப்பட்ட மொறட்டுவப் பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்கு… The post யாழ். மாணவன் இழப்புக்கு மத்தியிலும்… கடற்படையினரின் அர்ப்பணிப்புக்குக் கெளரவம் தாருங்கள்! appeared first on Global Tamil News .
இண்டிகோவுக்கு மேலும் நெருக்கடி.. ஏர் இந்தியாவின் புதிய நடவடிக்கை.. கலக்கத்தில் இண்டிகோ!
நாடு முழுவதும் ஏற்பட்ட இண்டிகோ விமான சேவை பாதிப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமானிகளை உடனடியாக பணியமர்த்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது
CSK : ‘கிரீன் வேணாம்’.. இந்த வெளிநாட்டு ஆல்ரவுண்டர வாங்கணும்? கடைசி நேரத்தில் மாறும் சிஎஸ்கே பிளான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, கெமிரான் கிரீனை வாங்காமல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஒருவரை வாங்க முடிவு செய்துள்ளனர். இந்த வீரரை 5 கோடிக்குள் வாங்க முடியும் என்பதால்தான், இந்த முடிவாம்.
சீரற்ற வானிலையால் முட்டைவிலை அதிகரிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் முட்டைகள் அழிவடைந்துள்ளன. இதனால் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி சந்தையில் முட்டை ஒன்றின் விலை 40 முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை இதற்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 25 முதல் 30 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில […]
லண்டன் விமான நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் ; தாமதமான விமானம்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், நடந்த கொள்ளைச் சம்பவத்தினால் பல மணி நேரம் பயண இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 3 வயது சிறுமி உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது. லண்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள டெர்மினல் 3 கேரேஜில், நான்கு ஆண்கள் கொண்ட குழு, ஒரு லிஃப்டில் இருந்த […]
பனிப்போரில் நாதக நிர்வாகிகள்; சீமானின் `டார்கெட்'தொகுதியில் தொய்வடைகிறதா தேர்தல் பணிகள்?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில், காரைக்குடி தொகுதி முதன்மையானது என்கிறார்கள் அக்கட்சியினர். ஆனால் காரைக்குடி நா.த.க-வை பனிப்போர் சூழ்ந்திருப்பதால் தேர்தல் பணிகள் சுணக்கமடைவதாகச் சொல்கிறார்கள் சிவகங்கை நா.த.க நிர்வாகிகள்! 2026 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ கணக்கை தொடங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் சீமான். அதேசமயம் 'சீமானை எம்.எல்.ஏ-வாக்கி விட வேண்டும்' என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். சீமானின் சொந்த மாவட்டத்தில் முகம் தெரியாத வேட்பாளர்கள் நிற்கும்போதே 17% வாக்குகள் கிடைத்துவரும் நிலையில், இந்த முறை காரைக்குடி தொகுதியில் சீமானைப் போட்டியிடவைக்கலாம் என்ற பேச்சு கட்சிக்குள் நிலவுகிறது. அதேசமயம் காரைக்குடி தொகுதிக்குள் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சீமான் காரைக்குடி தொகுதி நிலவரம் குறித்து நம்மிடம் பேசிய நா.த.க புள்ளிகள் சிலர், நாம் தமிழர் இயக்கமாக இருந்தபோதே காரைக்குடியில் நா.த.க-வின் முகமாக இருந்தவர் மாறன். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த மறைந்த சுபா.முத்துகுமாரின் ஆதரவாளரான இவர், தேர்தல் அரசியலிலும் நா.த.க-வுக்குப் பக்கபலமாக இருந்துவருகிறார். 2016–19 காலகட்டத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் முன்னாள் மாநில நிர்வாகி வெற்றிக்குமரன். இருவருமே சீமானுக்கு நெருக்கம் என்றாலும் வெற்றிக்குமரன் கை ஓங்கியிருந்தது. ஒருகட்டத்தில் மாறனுக்கும் வெற்றிக்குமரனுக்கும் இடையே நடந்த ஈகோ யுத்தத்தில் மாறனுக்கு கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் தரப்படாமல் கார்னர் செய்யப்பட்டார். நாதக முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் மாறனுக்கு பதில், மாறனின் ஆதரவாளராக இருந்த சாயல்ராமுக்கு காரைக்குடி நா.த.க-வை கவனிக்கும் பொறுப்பை பெற்றுக் கொடுத்தார் வெற்றிக்குமரன். ஜூனியர் சாயல்ராமுக்கு கீழ் சீனியர் மாறனைப் பணியாற்ற வைத்ததால் கட்சி நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது வெற்றிக்குமரனை கடந்த 2021-ல் சீமான் கட்சியிலிருந்து நீக்கிய பிறகு, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மாறனும், சாயல்ராமும் தற்போது மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கிறார்கள். இருவருமே காரைக்குடி தொகுதியில் தனித்த செல்வாக்குடன் இருப்பதால் பனிப்போர் இன்னமும் நீடிக்கிறது என்றனர். காரைக்குடி மாறன் தொடர்ந்து பேசியவர்கள், வழக்கமாக நவம்பர் மாதம் நடக்கும் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை மாவட்ட நிர்வாகிகள் இணைந்துதான் நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு காரைக்குடியில் நடந்தாலும் சென்னையிலுள்ள முன்னணி நிர்வாகிகளே முன்னின்று நடத்தினார்கள். சாயல்ராமும், மாறனும் எதிரும் புதிருமாக இருந்ததே இதற்கு பின்னணி எனவும் சொல்லப்படுகிறது என்றனர். ``சீமான் போட்டியிட திட்டமிடும் தொகுதியில் மாநில நிர்வாகிகள் இருவர் மோதிக்கொள்வது கட்சிக்கு நல்லதல்ல என வருந்துகிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள். நா.த.க சாயல்ராம் இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர்கள், காரைக்குடியில் நிலவும் இந்த பனிப்போரை தீர்க்காமல் எவ்வளவு பெரிய வியூகத்தை வகுத்தாலும் அது பலனளிக்கப் போவதில்லை. ஆனால் அண்ணன் சீமான் 'இணைந்து பணியாற்றச் சொல்லுங்கள்' என உத்தரவோடு நிறுத்திக் கொள்கிறார். இருவரையும் அழைத்துப் பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும் அல்லது தொகுதியை இரண்டாகப் பிரித்து இருவருக்கும் தனித்தனி பொறுப்புகளை வழங்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என்றனர். சோஷியல் இன்ஜினீயரிங்... ‘ஆபரேஷன் சவுத்’..! - கைகொடுக்குமா சீமானின் 2026 கணக்கு?
ரகசிய ரேடார் தாக்குதல்? சீனா குற்றச்சாட்டு.. ஜப்பானின் பதில் என்ன?
விமானங்கள் மீது ஃபயர்-கண்ட்ரோல் ரேடார்களைப் பயன்படுத்தியதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. ஆனால், ஜப்பான் இதை மறுத்து, தங்கள் விமானங்கள் பாதுகாப்பான தூரத்தைப் பராமரித்ததாகக் கூறி உள்ளது.
விமானத்தின் கழிப்பறை தண்ணீரே இல்லாமல் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?!
வீட்டில் நாம் பயன்படுத்தும் டாய்லெட்டில் தண்ணீர் தான் கழிவுகளை அடித்துச் செல்லும். விமானத்தில் தண்ணீர் இல்லை மாறாக காற்று தான் அந்த கழிவுகளை எடுத்துச் செல்கிறது. காற்று எப்படி கழிவுகளை எடுத்துச் செல்லும் என்று தானே யோசிக்கிறீர்கள், இது எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்தும் விமானக் கழிவுகள் வானத்திலேயே வெளியேற்றப்படுகின்றனவா? என்பது குறித்தும் இங்கே விரிவாகப் பார்க்கலாம். பலரும் விமானக் கழிவுகள் வானத்தில் பறக்கும்போதே வெளியேற்றப்படுவதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அங்கே நடப்பதே வேறு! விமானத்தில் அதிக அளவு தண்ணீரை எடுத்துச் செல்வது விமானத்தின் எடையை அதிகரித்துவிடும். எனவே விமானங்களில் 'வெற்றிடக் கழிவறை' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குப்பைகளை உறிஞ்சும் 'வாக்குவம் கிளீனர்' செயல்படும் அதே டெக்னிக் தான் இங்கேயும் உள்ளது. Flight அதாவது விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறக்கும்போது, விமானத்திற்கு வெளியே உள்ள காற்றழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் பயணிகளின் வசதிக்காக விமானத்திற்கு உள்ளே காற்றழுத்தம் அதிகமாகப் பராமரிக்கப்படும். பர்டூ பல்கலைக்கழகத்தின் வானூர்தி மற்றும் வானியல் பள்ளியின் தலைவரான விண்வெளி பொறியாளர் பில் கிராஸ்லி கூற்றுப்படி, பயணிகள் கழிவறையில் 'Flush' பட்டனை அழுத்தும் போது, கழிவுத் தொட்டிக்கும் வெளிப்பக்கத்திற்கும் இடையே ஒரு சிறிய வால்வு திறக்கப்படுகிறது. அப்போது, விமானத்திற்கு உள்ளே இருக்கும் அதிக அழுத்தக் காற்று வேகமாக கழிவுகளை உறிஞ்சிக்கொண்டு, விமானத்தின் அடியில் உள்ள தொட்டிக்கு தள்ளிவிடுகிறது. கழிவுகளை உறிஞ்சுவதற்காகவே மோட்டார்கள் (Vacuum Pumps) விமானத்தின் கழிவறையில் பொருத்தப்பட்டிருக்கும். விமானம் குறிப்பிட்ட உயரத்திற்குச் சென்ற பிறகு, இந்த மோட்டார் நின்றுவிடும். அதன்பின் இயற்கையான காற்றழுத்தமே வேலையைத் தொடரும். அனைத்து கழிவுகளும் விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பெரிய சேகரிப்புத் தொட்டியில் சேமிக்கப்படுகின்றன. விமானம் தரையிறங்கிய பிறகே, சிறப்பு வாகனங்கள் மூலம் அந்தத் தொட்டி சுத்தம் செய்யப்படும் என்று பில் கிராஸ்லி கூறியிருக்கிறார். விமான பயணத்தின்போது leggings அணிவது ஏன் ஆபத்தானது தெரியுமா? - பாதுகாப்பு நிபுணர்கள் சொல்வது என்ன?
சென்னை: கூவத்துக்குப் படையெடுத்த கூழைக்கடா பறவைகள்! | Photo Album
ஜஸ்டின் ட்ருடோவுடனான உறவை உறுதிப்படுத்திய பாப் பாடகி
கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோயரை கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரியுடன் ஜஸ்டின் ட்ரூடோ டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அதுபற்றி இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்தநிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை இன்ஸ்டகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு கேத்தி பெர்ரி உறுதிப்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் […]
ராமநாதபுரத்தில் 54 காலிப்பணியிடங்கள்; சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டும்தான்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பு. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை அறிந்துகொள்ளலாம்.
மனதைக் கொள்ளை கொண்ட பாட்ஷா - படம் இமயம் ஏறியது எப்படி?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் எழுபத்தைந்து வயதை நெருங்கி விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,170 படங்களுக்கு மேல் நடித்து,பல இளைஞர்களின் மனதில், பாலாபிஷேகம் செய்கின்ற அளவுக்குப் பசுமையாய்த் தங்கி விட்டவர்! தன் ஐம்பது ஆண்டு காலத் திரைப்பட வாழ்வில்,பல சாதனைகளைப் புரிந்து,பல விருதுகளைப் பெற்றவர்!அவரின் பல கதாபாத்திரங்கள் மனதை நிறைத்தாலும்,மேஜிக் காட்டி மனதைக் கொள்ளை கொண்ட பாத்திரம் பாட்ஷாதான்! “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!”என்ற பஞ்ச் வசனம் சிறப்புப் பெறக் காரணமே அதன் பாசிடிவ் அப்ரோச்தான்! நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் போராட ஆரம்பிக்கும் இரண்டு இளைஞர்களில் ஒருவர் அநியாயமாகக் கொல்லப்பட, உயிர் நண்பர் கொலைக்குப் பழி வாங்கி விட்டு, சமுதாயத்தைச் சீரழிக்கும் வில்லன் கூட்டத்திற்கு வில்லனாக மாறும் பாத்திரந்தான் நாயகன் ரஜினியுடையது. “உனக்கும் எனக்குந்தான் சண்டை! ஒண்ணு நீ சாகணும்!இல்ல நான் சாகணும்! உன்னோட ஆட்கள் சாகணும்! இல்ல என்னோட ஆட்கள் சாகணும்! அப்பாவிப் பொது மக்கள் இல்லை ஹெ..ஹெ..ஹெ!”என்ற அந்த வசனமே மேஜிக்காகி, மனதில் நிற்கிறது. எந்தச் சந்தர்ப்பத்திலும், சம்பந்தமேயில்லாத எந்த ஒருவரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணமே, படத்தின் அச்சாணி! இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அதைப் படம் முழுவதும் மெயிண்டைன் செய்ததாலேயே படம் இமயம் ஏறியது! பாட்ஷா நூறு பேர் எதிர்த்து வந்தாலும்,கதாநாயகன் ஒருவனே தனித்து நின்று அடித்து வெல்வதாக, ரசிகர்கள் காதுகளில் பூ சுற்றி வந்ததற்கு மாறாக, எப்பொழுதும் நான்கைந்து உதவியாளர்களுடன், எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கையில் அவர்களும் இறங்கிச் சண்டை போடுவதாகக் காட்டியது, எதார்த்தத்தை உணர்த்துவதாக இருந்தது. அந்த இயல்பு நிலை, படத்தைச் சற்றே ஆழமாகப் பார்ப்போருக்கு ஆறுதல் தருவதாக அமைந்தது! ‘ஷோலே’ படக் கொள்ளையர்கள் போலல்லாமல், மும்பையின் இயற்கைக்கேற்றவாறு ரகுவரன் க்ரூப் பைக் காட்டுவது படத்தின் மற்றொரு சிறப்பு! அதனாலேயே அது அனைவரின் மனத்திலும் தங்கி விட்டது. பாட்ஷா வில்லனின் கையில் சிக்கிக் கொண்ட தன் தந்தையின் இறுதி நேர வேண்டுகோளை ஆணையாக ஏற்று, அவ்வாறே சித்தியின் மூலம் பிறந்த தம்பி,தங்கைகளின் வாழ்க்கை சிறப்புறுவதற்காகத் தன் குழுவைக் கழற்றி விட்டு விட்டு, ஆட்டோ ஓட்டியாக எளிமைக்குத் திரும்பும் நாயகன், அந்த எளிமை காரணமாகவே நம் இதயங்களில் ஊடுருவுகிறார். ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியேற்றி, அதனை உணர்த்தும் விதமாக வீட்டிலும் விளக்கேற்றும் விதம்,இதயத்தில் நிற்கிறது!மூத்த தங்கையின் வாழ்க்கை சிறக்க வேண்டி, அவள் காதலனின் தந்தை காலிலும் விழத் தயாராகும் அண்ணனாக, தங்கைகளின் வாழ்க்கையே லட்சியம் என்பதையும், அதற்காக எவ்வளவு இறங்கிப் போகவும் தயாராக இருப்பதையும் செயலில் காட்டுகையில்,நம் நெஞ்சங்களை நெகிழ்த்தி, அவர் உயரே போய்விடுகிறார்! தன்னையே நினைந்து உருகும் காதலியைக் கூடத் தள்ளி வைத்தே பார்ப்பதிலிருந்தே, தன் வாழ்க்கை தனக்கானதைக் காட்டிலும், மற்றவர்களுக்கானதே என்று நிரூபிக்கிறார். அதை மேலும் மெய்யாக்கும் வண்ணம், தன் தம்பிக்காக லோகல் ரௌடி எலக்ட்ரிக் போஸ்டில் கட்டி அடித்த போதும், சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளும் அவர், தங்கையின் உதட்டோரம் அரும்பிய இரத்தத்தைக்கண்டு எரிமலையாக வெடிப்பது,பாசத்தின் உச்சம்!” உள்ள போ” என்று தன் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்து விட்டு,அதன் பிறகு அந்த ஆனந்த ராஜையும் அவர் ஆட்களையும் பிரித்து மேய்வது,நேர்மை தவறுவோர்க்குக் கொடுக்கும் தண்டனை!அதுதான் சூப்பர்! பாட்ஷா தங்கையின் மருத்துவ சீட்டுக்காக,அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவரிடம் தன் கடந்த காலத்தைச் சொல்ல,அவர் வேர்த்து வியர்த்து அடி பணிய, “எப்படீண்ணா சீட் கெடச்சுது?” என்ற தங்கையிடம்,”உண்மையைச் சொன்னேம்மா!” என்பது நல்ல தருணம்! மழையில் நக்மா நனைந்தபடியே காத்துக் கிடப்பது, காதலின் ஆழம்! என்றால், தன்னைக் கொல்வதற்காக நக்மா அப்பா விரிக்கும் வலையிலிருந்து தப்பிப்பது தந்திரத்தின் உச்சம்! இறுதியாக, தனது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் மூலம் வில்லனைச் சிக்க வைத்தாலும், தன் குடும்பத்தாரைப் போராடிக் காப்பாற்றி விடுகிறார் ரஜினி. படம் இனிதே முடிந்தாலும்,கடந்த கால நிகழ்வுகள் கசப்பானவை!ஆனாலும் வீரத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் விவேகமுடன் அதனைக் காட்டியும்,அடக்கி வாசிக்க வேண்டிய இடங்களில் அமைதி காத்தும்,ஒரு கதாநாயகனாக தன் ரசிகர்களுக்குப் பலவற்றையும் போதித்து விடுகிறார் சூப்பர் ஸ்டார். எனவேதான் எல்லா வயதினரும் பாட்ஷாவின் அதி தீவிர ரசிகர்களாகி விட்டனர். என்னைப் பொறுத்தவரை,ஒரு படம் நம் மனதுக்குப் பிடித்துப் போக, மேலும் சில காரணங்களும் உண்டென்றே தோன்றுகிறது.1995 ல் வெளியான இது,ரஜினியின் 94 வது படம் என்றாலும்,அவர் முற்றிய இளமையான 45 வயதில் நடித்த படம் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.பாட்ஷா எனக்கு மேலும் பிடித்துப் போக,அப்பொழுது எனது அகவையும் 42. அத்தோடு,ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டப்பணிகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்த எனக்குக் களப்பணி உதவியாளர்களாக, பட்ட தொழிற்படிப்பு படித்த இளைஞர்கள் அறுவர் உடனிருந்தனர். ‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்! நாங்கள் அனைவரும் ஒன்றாகத் திட்டப்பணி நடைபெறும் இடங்களுக்குச் செல்கையில், அந்த அறுவரும் பின் தொடர, என்னை ரஜினியாக உருவகப் படுத்திக் கொண்டதும் உண்டு. அத்தோடு மனதில்,பாட்ஷாவைப் போலவே நாமும் நம் மக்கள் நலம் பெற உழைக்க வேண்டுமென்ற உத்வேகமும் இருந்தது. இவையெல்லாங்கூட பாட்ஷா மனதைக் கவரக் காரணங்களாக அமைந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு! இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பாட்ஷா ஒளிபரப்பப் படுகையில், முன்னதான ஒரு மணி நேரத்தை விட்டு விட்டாலுங்கூட, ”உள்ள போ!”வசனத்திலிருந்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.’நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தையும், பாட்ஷாவையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளேன்! முன்னது - உண்மைக் காதலுக்காக! பின்னது- உயர்ந்த சமுதாய நோக்கத்திற்காக! -ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி தேர்தல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமெரிக்க விமானம் இன்று காலை தரையிறங்கியது. குறித்த நிவாரண பொதிகள் அமெரிக்கா இராணுவத்தினரால் இலங்கை விமானப்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இதனொரு கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நிவாரணப் பொதிகள் இன்று மதியம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் விமானப் படை அதிகாரிகளால் கையளிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்துக்கென 192 பிறீமா நூடில்ஸ் பெட்டிகளும் 150 கோதுமை மா மூடைகளும் கையளிக்கப்பட்டது.
ஜான்சி டிவிசனில் லூப் லைனில் ரயிலின் வேகத்தை அதிகரித்து உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் பயண நேரம் குறைந்து ரயில்வே துறை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MUMBAI: Big Boy Toyz (BBT), a pre-owned luxury and supercar brand, has announced a major milestone in its journey. The launch of its brand-new logo after 16 years. The refreshed identity marks an evolution for the brand.The new logo introduces a sleek, signature-style visual language that symbolizes modern luxury, dynamism and timelessness. Designed to resonate with Gen Z and emerging generations of automotive enthusiasts, the emblem reflects BBT’s commitment to staying young, future-ready and culturally relevant. Jatin Ahuja, founder, MD Big Boy Toyz, said, “Over a decade, our business has grown; with times we have evolved. Back in the 2000s we were the first movers to bring supercar culture. Today we are nurturing the new-age generation who are different and this move to change the logo has come from the fact that times have changed. Our new logo is a signature-style logo that is more modern, something that Gen Z and generations after will love seeing. Big Boy Toyz is a young brand that always grows with time. This is our ode to a timeless brand and as supercars are timeless, so are we.” BBT’s rebrand also aligns with global design trends. Industry leaders like Starbucks, Mastercard, and Uber have undergone major logo evolutions over the past decade to embrace minimalism and digital-first branding signaling progress, clarity and longevity. Big Boy Toyz joins this league of brands choosing bold modernization to stay relevant in an ever-evolving market.The new identity will roll out across all digital platforms, showrooms, merchandise and upcoming brand experiences.
ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க- இயக்குநர் ஜீத்து ஜோசப்
'த்ரிஷ்யம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், பாலிவுட் மட்டுமின்றி மற்ற சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள ஹீரோக்களும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள். 'த்ரிஷ்யம்' அப்படி நடித்தால் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களை அவர்கள் இழக்க நேரிடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு இயக்குநராக நான் வித்தியாசமான படங்களை எடுக்க விரும்புகிறேன். ஹீரோக்கள் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டு நடித்தால் நன்றாக இருக்கும். அதேபோல நடிகர்கள் தற்போது பான் இந்தியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரே விதமான கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சலிப்படைந்து விடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!
இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு உறவு நீடிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா். இஸ்ரேலில் இந்திய பத்திரிகையாளா்களுடன் கலந்துரையாடிய அவா்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனா். அவா்கள் கூறியதாவது: ராணுவம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இது மேலும் வலுப்பெற்று வருகிறது. இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மிகச்சிறந்த முன்னெடுப்பு. இதில் இந்தியா, சவூதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் […]
HDFC Life’s ‘Life Ki Script’ campaign highlights financial readiness for life’s surprises
Mumbai: HDFC Life, a life insurance companies, has rolled out ‘Life Ki Script’, a digital-first campaign featuring actor Cyrus Broacha. This campaign aims to emphasise the importance of being financially prepared to deal with life's unexpected plot twists.The campaign follows from the key insight that Indians are not financially well-prepared to handle life’s uncertainties and there’s a significant gap of 26 points in terms of their actual readiness v/s how ready they think they are, largely due to lack of action towards financial planning.The campaign showcases three films, promoting life insurance product categories viz. Term, Savings and Retirement, and how they enable individuals plan for various long-term goals based on their life stage and financial needs. The campaign films creatively use relatable and humorous narratives to drive home the point. The campaign is being promoted on various digital and social media platforms for 5 weeks, with select impact properties and innovative elements.[caption id=attachment_2483767 align=alignleft width=300] Pritika Shah [/caption] Pritika Shah – Head of Marketing, HDFC Life said, “Just like a well-written film script gives characters the strength to face any plot twist; a solid financial plan enables you to face the uncertainties of life. With ‘Life Ki Script,’ we have created fun, cinematic ads to encourage individuals to take charge of their financial journey with life insurance products depending on their life stage and financial needs. Whether you are saving for the future, protecting your family’s financial future, or just planning for a comfortable retirement, HDFC Life has solutions to keep you ready for whatever comes next.” HDFC Life added that it has always maintained an awareness-led approach to connect with the audiences. In addition to the ‘Life ki Script’ campaign, the Company has recently launched insurance awareness series for Term and Retirement product categories. ‘Term FAQ series’ with actor Anup Soni and ‘Retirement FAQ series’ with actor Shishir Sharma are two such initiatives aimed at creating greater understanding about the product categories.https://www.youtube.com/playlist?list=PLPV2NFEDCbD0-2AYvqUNc8I271lzamgFv&si=7EJF3ManUiKQKI2Z
பலாலியில் நிவாரணப் பொருட்களுடன் தரையிறங்கியது அமெரிக்க விமானம்
அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று உதவிப் பொருட்களுடன் இன்று காலை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. சிறிலங்காவில் அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இந்த விமானம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தின் இரண்டு விமானங்கள், சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக நேற்று கட்டுநாயக்க விமான
Maars Communicates appointed strategic communications partner for BabyOrgano
Mumbai: Maars Communicates, a PR and communications agency, has been appointed as the official strategic communications partner for BabyOrgano, a leading Ayurvedic wellness brand for children. The announcement comes on the heels of BabyOrgano raising ₹20 crore ($2.4 million) in a pre-Series A funding round led by RPSG Capital Ventures with participation from Sauce.vc.The fresh capital will fuel BabyOrgano’s expansion plans across product development, marketing, and operations, with the brand targeting ₹100 crore in revenue by FY27. With a community of over one million parents and an impressive 40% repeat purchase rate, BabyOrgano continues to solidify its position as one of India’s most trusted names in holistic child wellness. Mausam Shah, Founder & Director – PR, Maars Communicates, said, “BabyOrgano stands at the intersection of trust, tradition, and innovation. Their mission aligns perfectly with the purpose-driven brands we champion at Maars Communicates. We are excited to shape their narrative, amplify their vision, and elevate Ayurveda-led child wellness into mainstream conversations.” Aayush Shah, Co-Founder & Director – Digital & Business Development, Maars Communicates, added, “At Maars, we prioritise brands that create meaningful impact. BabyOrgano’s growth reflects strong values and deep consumer trust. We look forward to strengthening their reputation and leading high-impact storytelling as they expand across India.” Ripul Sharma, COO of Natureovedic Consumers Pvt Ltd, said, “As BabyOrgano makes strides in the kids’ care space, the strategic expertise of Maars Communicates will be an immense asset. BabyOrgano is a leading kids’ D2C health, wellness and personal care brand built on innovative, science-backed Ayurvedic products. Partnering with Maars Communicates enables us to leverage their deep experience and strong industry relationships, creating a powerful synergy that aligns with our vision for accelerated and impactful growth.” Maars Communicates, founded by Mausam and Aayush Shah, manages communications for over 50 retainer clients across real estate, corporate, lifestyle, entertainment, AI studios, and the creator economy. The agency has led PR for marquee brands including MX Player, EPIC Channel, Lux Golden Rose Awards, Event Capital’s IPs like WindMill Festival and PetFed, and kids’ brands like R for Rabbit.
யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!
நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டித்வா புயலால் பேரழிவுக்கு இலங்கை மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் , பலவேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு நிவாரண […]
redBus debuts user-generated travel discounts to deepen engagement and expand new-user growth
MUMBAI: redBus, an online bus ticketing platform, has launched ‘Coupon Creator’, a first-of-its-kind personalised digital feature that allows users to create and share their own personalised redBus coupons, turning travel into a new way to celebrate special occasions. For example, brides, grooms or their friends can create coupons for guests, matching their wedding hashtags helping them travel easily; or students can invite friends to travel for college fests.● Available exclusively on the redBus Android app, the feature lets any user create a custom coupon code and share it with multiple recipients. Each coupon is created at no cost to the sender and offers attractive discounts for recipients - 15% off (up to ₹400) for new users and 2% off (up to Rs. 400) for repeat users. With Coupon Creator, redBus introduces a simple yet thoughtful way to share life’s celebrations through travelUsers can easily create a personalized coupon in just a few steps by selecting a theme based on the occasion for travel - from birthdays and weddings to college fests or general celebrations - creating a unique coupon code, and sharing it instantly with friends or family to help them save on their bus journeys. Each user can create only one coupon per month, ensuring exclusivity and meaningful use, while the created coupon remains valid for 30 days from the date of creation.How to Create a Coupon on redBusOpen the redBus Android app.Go to the “Coupon Creator” feature on the home pageChoose an occasion theme, customising offer cards— select from options like Birthday, Wedding, College Fest, and Celebrations.Create a unique offer code (for example, TRAVELHOME) and give your contact number.Share the coupon instantly with multiple friends or family members so they can save on their bus journeys through WhatsApp.When a user creates a coupon code on redBus, it is securely processed through the platform’s backend system, which tracks creator and recipient details to ensure seamless redemption. The technology automatically distinguishes between new and existing users, applying the relevant discount accordingly.[caption id=attachment_2483756 align=alignleft width=200] Pallavi Chopra [/caption] Pallavi Chopra, CMO redBus said, “At redBus, we’re reimagining what it means to share experiences, not just tickets. With Coupon Creator, we’re launching an industry first feature which provides the most personalised coupon creating and sharing experience. This offering is novel because users can create unique codes, which are meaningful to them at an individual, family, or friend group level, providing the ultimate in hyper-personalised customisation. redBus has always been at the forefront of using technology to launch pioneering, and never before seen features. The innovation opens a fresh avenue for customer engagement, strengthening how people connect with the brand while deepening redBus’ role in shaping India’s evolving digital travel ecosystem.” With this launch, redBus continues to lead innovation in the travel space, introducing technology-driven features that connect people in more personal and memorable ways.
சிஎஸ்கே கண்டிப்பா அந்த ஸ்பின்னரை தான் குறிவைக்கும்! அடிச்சு சொல்லும் சுப்பிரமணியம் பத்ரிநாத்!
டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளருமான சுப்ரமணியம் பத்ரிநாத், வரும் IPL 2026 மெகா ஏலத்தில் சிஎஸ்கே எப்படி அணியை வலுப்படுத்த வேண்டும் என்று தனது கருத்தை விரிவாகத் தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா ஓய்வு, அஸ்வின் இல்லாத நிலையில் ஸ்பின் பிரிவு பெரும் பலவீனமாக உள்ளது என்று கூறிய பத்ரிநாத், “ரவி பிஷ்னாயை சிஎஸ்கே கண்டிப்பாக குறி வைக்கும். அவர் 4 ஓவர்களையும் முழுமையாக வீசக்கூடியவர். செப்பாக் மைதானத்தில் ரிஸ்ட் […]
ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பசுமையான இயற்கை அழகு, வனப்பகுதிகள், தெளிவான கடற்கரைகள் மற்றும் மலைகள் என இயற்கையின் அருளால் ஆசிர்வதிக்கப்பட்ட கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு விடுமுறை நாட்களில் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம். பசுமைக் காடுகளும், சலசலத்து ஓடும் அருவிகளும், நெடிதுயர்ந்த மலைச் சிகரங்களும், வண்ண மலர் கூட்டங்களும் நிறைந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இருக்கத் தோன்றும் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கேரளாவின் நீண்ட அழகிய கடற்கரைகள் நிறைந்த வர்கலாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சோழன் டிராவலைச் சேர்ந்த விஜய் மற்றும் ரவி செய்த உதவிகள் மறக்க முடியாதவை. வர்கலா, கேரள தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 51 கிமீ தொலைவில் அமைந்த அழகிய கடற்கரை நகரம். வட இந்தியாவுக்கு கோவா போல தென் இந்தியாவுக்கு வர்கலா என்று இங்குள்ள மக்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். கீச் கீச் என்று சப்தமிட்டபடி பறவைகள் பறந்து செல்ல. நம்மை சுற்றி பச்சை பசேல் என இருக்கும் இடத்தின் வழியே மலைக் குன்றுகள் சூழ காட்சியளிக்கும் அரபிக்கடல் கடற்கரையில் காலார நடந்து செல்லும் இனிமையான அனுபவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது ஒவ்வொருவரையும் நோயிலிருந்து ஆரோக்கியமாக மாற்றி, சுத்தமான மாசுபடாத காற்றைச் சுவாசிக்கச் செய்யும் ஒரு இடமாகும். நாரதர் தனது வல்கலமை (மரப் பட்டையால் செய்யப்பட்ட ஆடை) இந்த இடத்தில் எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. வல்கலம் எறியப்பட்ட இந்தக் கிராமத்திற்குச் சென்று வந்தால், பிரஜாபதிகளின் பாவம் நீங்கும் என்று நாரதர் கூறியபடியே, பிரஜாபதிகள் தங்கள் பாவத்தை நீக்கிக் கொண்டு, இந்தக் கிராமத்திற்கு வர்கலா என்று பெயரிட்டனராம். எனவே, இந்த இடம் ஆன்மீக நடைமுறைகள் மற்றும் இயற்கையான மூலிகைகளால் நிறைந்து, அனைவரையும் அமைதி நிலையில் வைத்திருக்க உதவுகிறது. வர்கலாவில் சிவகிரி மடம், ஜனார்த்தன ஸ்வாமி கோயில், வர்கலா பீச், பாபநாசம் பீச், கபில் ஏரி, வர்கலா சுரங்கப்பாதை, மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. வர்கலா பீச் அமைதியான அரபிக் கடலிலிருந்து வெண்நுரைகளுடன் கரையைத் தழுவிச் செல்லும் அலைகள், கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் சிறிய குன்றுகள், நீலநிற வானம் என்று இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பீச் சுற்றுலா .பயணிகளை ஈர்க்கிறது. வர்கலா கடற்கரையில் பாராசூட், படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம். ஜனார்தனன் கோயில் இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது. மிகவும் அமைதியான சூழவில் திருவிளக்குகளின் ஒளியிவ் பகவான் விஷ்ணுவை வணங்கியது பரவசமாக இருந்தது கபில் பீச் அமைதியான மற்றும் அழகான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். கூட்டம் அதிகம் இல்லாத கடற்கரையைத் தேடுபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். கடற்கரையும், அதன் அருகில் ஓடும் பேக்வாட்டர்ஸையும் ஒருங்கே கொண்டுள்ளது.. அழகான சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காணலாம்.. ஜடாயு பார்க் ராமாயணத்தில், ஜடாயு (ராட்சத அளவிலான பறவை) பெரும் அசுரனான ராவணனுடன் சண்டையிட்டு இந்த இடத்தில் விழுந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இயற்கை பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும். இங்கு பிரம்மாண்டமான ஜடாயு பறவையின் சிலை முக்கியமான ஈர்ப்பு., கேபிள் காரில் மேலே ஏறும் வசதியும் உள்ளது.. நாங்கள் ஜடாயு மலை உச்சிக்கும் பயணம் செய்தோம். கேபிள் கார் மூலம் மலையின் மீது ஏறுவது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஜடாயுவின் அற்புதமான அமைப்பு உண்மையிலேயே மனதைக் கவரக்கூடியது. இந்த இடம் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. இங்கு இயற்கையின் அழகை உண்மையிலேயே அனுபவிக்க முடியும். அடிக்கடி மழை பெய்யும் மற்றும் மலையைச் சுற்றி குளிர்ந்த காற்று வீசும். மலை உச்சியிலிருந்து பசுமையான விரிந்து பரந்த காடுகளைக் காணலாம். நாங்கள் இங்கு சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும்போது பெருமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. கேபிள் காருக்காக ஒரு இடத்தில் காத்திருந்தோம். எங்களுக்கு முன் சென்றவர்களின் கேபிள் கார் பழுதடைந்துவிடவே பாதியிலேயே நின்று விட்டது.. மேலும் மழையும் வலுக்கவே மற்ற கேபிள் கார்களையும் நிறுத்தி விட்டாகள். வெகு நேரம் மலையின் மேல் காத்திருந்தோம். வெகு நேரம் கழித்து ஒரு மினி வேனில் அந்த குறுகிய மலைப் பாதை வழியாக கீழே அழைத்துச் செல்லப்பட்டோம். கொட்டும் மழையில் மலைச் சரிவுகளின் குறுகிய பாதையில் வண்டி ஒரு பக்கமாக சாய்ந்தவாறு மெதுவாகக் கீழே இறங்கியது. எங்களுக்கு வண்டியிலிருந்து இறங்கும் வரை திகிலாக இருந்தது. அழகான கடற்கரைகள், அமைதியான வனப்பகுதி, எங்கும் பசுமையான இடங்கள், உயர்ந்த மலைகள் ,குன்றுகள், கோயில்கள் மற்றும் கேரள உணவுடன் உபசரிக்கும் மலையாள சேட்டன்கள் என சற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது வர்கலா.. -வி. ரத்தினா ஹைதராபாத் தேர்தல்
விஜய் ஹசாரே விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா நிர்பந்திக்கப்பட்டனரா? - BCCI பதில்!
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் முதன்மையான ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் (Vijay Hazare Trophy), நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு ரோஹித் ஷர்மா இந்த ஒருநாள் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்ட நிலையில், விராட் கோலியும் தனது சம்மதத்தைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், இவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் தற்போது ஒருநாள் போட்டி வடிவத்தை மட்டுமே விளையாடுவதால், தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான பயிற்சியாக இது இருக்கும். Rohit Sharma with Virat Kohli முன்னதாக, தங்கள் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர வேண்டுமெனில், இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நிர்பந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இந்த நிபந்தனையை விதிக்கவில்லை என்று மறுத்துள்ளது BCCI. 'ரெவ்ஸ்போர்ட்ஸ்' (RevSportz) தளம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும்படி கோலி மற்றும் ரோஹித்துக்கு பி.சி.சி.ஐ நேரடியாக உத்தரவிடவில்லை. இது முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட முடிவுதான் என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார். பி.சி.சி.ஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அல்லது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என யாராக இருந்தாலும், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வீரர்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். Gautam Gambhir இந்த நேரடி அல்லது மறைமுகமான அழுத்தம் காரணமாகத்தான், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தோல்வியைச் சந்தித்த பிறகு, கோலியும் ரோஹித்தும் ரஞ்சி டிராபியில் விளையாடினர். விராட் கோலிதான் சிறந்த Clutch Player - பாராட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் எனினும், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், பேட்டிங் பிரிவில் ரோஹித்தும் கோலியும்தான் அணிக்கு முழுமையான நட்சத்திரங்களாகத் தொடர்ந்து பிரகாசிக்கின்றனர். பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட, இந்தக் கோலியும் ரோஹித்தும் ஒருநாள் போட்டியில் அதே ஆட்டத்தைத் தொடர வேண்டும் என்று பாராட்டு தெரிவித்தார். ஆனால், 2027 ஒருநாள் உலகக் கோப்பை அணியின் அமைப்பு குறித்து எந்தக் குறிப்பையும் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்ற பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீர், அவர்கள் (ரோஹித் மற்றும் கோலி) உலகத் தரம் வாய்ந்த வீரர்கள், அவர்களின் அனுபவம் ஆடை மாற்றும் அறையில் (Dressing Room) மிகவும் முக்கியம். அவர்கள் நீண்ட காலமாக இதைச் செய்து வருகிறார்கள். 50 ஓவர் வடிவத்தில் அவர்கள் தொடர்ந்து அதேபோல் ஆடுவார்கள் என்று நம்புகிறேன், அது முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். ``விராட், ரோஹித், அஸ்வின் ஓய்வுபெற'' - கம்பீர் மீது முன்னாள் வீரரின் பகீர் குற்றச்சாட்டு!
புதுச்சேரியில் விஜய் வருகையால் தனியார் பள்ளிக்கு விடுமுறை! ஏன் தெரியுமா?
புதுச்சேரிக்கு விஜய் வருகை தர உள்ளதால் நிலையில் நாளை 9ந் தேதி தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் நண்பருடன் நிச்சயதார்த்தம்; பிக் பாஸ் ஜூலி கரம் பிடிக்கப்போவது இவரைத்தான்!
சென்னையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த நர்ஸ் மரியானா ஜூலியை, தமிழக அளவில் பிரபலமாக்கியது, கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். தன்னெழுச்சியாக சென்னை மெரினாவில் திரண்ட அந்தக் கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்ட மரியானாவை வீரத் தமிழச்சியாக, அன்பு சகோதரியாக கொண்டாடியது சோஷியல் மீடியா சமூகம். ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த பிரபல்யத்தால் அடுத்த வருடமே விஜய் டிவியின் பிக் பாஸ் வீட்டுக் கதவும் திறந்தது. இன்னும் பிரபலமானார். ஜூலி விளம்பரம், சீரியல், சினிமா, ஒரு ரவுண்டு வரத் தொடங்கியவரைப் பற்றி சமீப காலமாக எந்தவொரு பேச்சும் இல்லாதிருந்த சூழலில், திடீரென தன் திருமணம் குறித்து அறிவித்திருக்கிறார். தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களைப் பகிர்திருக்கும் ஜூலி மாப்பிள்ளை முகத்தை மட்டும் காட்டவில்லை. இந்நிலையில், ஜூலியின் வருங்காலக் கணவரைத் தேடி விசாரணையில் இறங்கினோம். ''அவரு பேர் முகமது. ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வர்றார். விளம்பரப்படங்களும் எடுப்பார். சமீப சில வருடங்களாக ஜூலிக்கும் அவருக்குமிடையில் நட்பு இருந்தது. அது எப்ப காதலாச்சுன்னு தெரியலை, இப்ப முறைப்படி உலகத்துக்கு அறிவிசிருக்காங்க'' என்கின்றனர் ஜூலி மற்றும் அவரின் வருங்காலக் கணவர் முகமது இருவரையும் தெரிந்த சிலர். ஜூலியின் வருங்காலக் கணவரான முகமதுவையே தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னோம். ''ரொம்ப நன்றிங்க என்றவர், கல்யாணம் குறித்து எல்லாருக்கும் சீக்கிரமே ரெண்டு பேரும் சொல்றோம். இப்ப ஷுட்டிங்ல இருக்கேன். முடிஞ்சதும் டீடெய்லா பேசறேன் என்றபடி திருமணத் தகவலை உறுதி செய்தார்.
85 மெ.தொன் நிவாரணப் பொருட்களுடன் வந்தது சீன விமானம்
டிட்வா புயலினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக, சீனா 85 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது. உயிர்காப்பு கவசங்கள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் விரிப்புகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஏற்றிய சரக்கு விமானம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கு நடந்த நிகழ்வில், நிவாரணப் பொருட்களை, சீனத் தூதுவர் கீ சென்ஹொங்,
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மீண்டும் போர் பதற்றம்.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது. தாய்லாந்தின் ராணுவம் கம்போடியாவில் உள்ள இராணுவ இலக்குகளை நோக்கி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
Aayush Vyas joins Snabbit as Head of Brand Marketing
Mumbai: Snabbit has named Aayush Vyas as its Head of Brand Marketing.Vyas joins the company with over 12 years of experience in marketing and advertising, bringing strategic thinking, creative innovation, and high-impact execution to the role.Prior to Snabbit, he was Senior EVP – Brand Solutions & Head of Business – South & Emerging Markets at Schbang, where he was associated since 2022. Over his career, he has worked with leading companies including White Owl, DViO Digital, and Xebec Communications, contributing to the success of more than 75 brands across sectors such as FMCG, pharma, entertainment, CPG, retail, fashion, and gaming.Sharing his excitement about the new role on LinkedIn, Vyas said, “A new chapter begins as Head of Brand Marketing at Snabbit! Every once in a while, you come across a problem that feels too obvious, too universal, and too close to everyday life to ignore. Snabbit sits right there; at the intersection of convenience, dignity, speed, and the way modern India actually lives. This move is not just about a role. It’s about energy. About momentum. About building & shaping a category that’s only now finding its language.” At Snabbit, Vyas will focus on shaping the brand’s communication, driving category leadership, and developing integrated marketing strategies to deepen engagement with India’s evolving consumer base.
Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
அடுத்தடுத்த அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறார் சூர்யா. 'ஆவேசம்' ஜித்து மாதவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'சூர்யா47' படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்திருக்கிறது. அன்றே படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது. 'கருப்பு' ரிலீஸை நோக்கிக் காத்திருக்கிறது. 'சூர்யா 46' போஸ்ட் புரொடக்ஷனை தொடுகிறது. 'சூர்யா 47' அமர்களமாக ஆரம்பமாகியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? Surya 47 சூர்யா இப்போது 'கருப்பு' படத்தை அடுத்து வெங்கி அட்லூரியின் படத்திலும், ஜித்து மாதவன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'கருப்பு' படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவின் ஜோடியாக த்ரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவதா, அனகா, யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு, சாய் அபயங்கர் இசை என பலருடன் முதல் முறையாக கைகோத்திருக்கிறார் சூர்யா. இந்த படத்தின் பேட்ச் ஒர்க் வேலைகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. வரும் ஜனவரி 23ம் தேதி திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்னரே சூர்யாவின் காஸ்ட்யூமான கறுப்பு நிற வேட்டி, சட்டை 'கருப்பு' லோகோவுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. வெங்கி அட்லூரி படத்தில் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஊட்டி, ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ரவீணா டாண்டன், ராதிகா, பாவனி ஶ்ரீ எனப் பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டைலிஷான சூர்யாவை இதில் பார்க்கலாம் என்கிறார்கள். சில இயக்குநர்கள் பிரமாண்டத்தை நம்பி எமோஷனலான விஷயங்களைக் கோட்டை விட்டுவிடுவார்கள். ஆனால், வெங்கி அட்லூரியை பொறுத்தவரை 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' என அவரது படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மேலோங்கி நிற்கும். வெங்கி அட்லூரியுடன்.. இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். 'ஜப்பான்' படத்தின் தோல்விக்குப் பின் கார்த்தி, முன்பைவிட வீறு கொண்டு எழுந்து அடுத்தடுத்து விதவிதமான ஜானர்களை தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதைப்போல, சூர்யாவும் இப்போது ஒரே ஆண்டில் இரண்டு, மூன்று படங்கள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது 'கருப்பு' கடந்த தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் அடுத்த வருடம் தொடக்கத்திற்கு சென்றுவிட்டது. இந்நிலையில் அவர் 'கருப்பு' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கும்போது, 'சூர்யா 46' ஆரம்பித்தார். இப்போது அந்த படமும் முடிந்துள்ளதால் 'சூர்யா 47'க்கு வந்திருக்கிறார். சூர்யா 46 நேற்று பாலவாக்கத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் எளிமையான முறையில் 'சூர்யா 47'க்கான பூஜை நடந்திருக்கிறது. இந்த படத்தில் சூர்யா போலீஸாக வரவிருக்கிறார் என்ற தகவல் ஓடுகிறது. 'காக்க காக்க', 'சிங்கம்', 'சிங்கம் 2' என சூர்யாவுக்கு போலீஸ் கேரக்டர்கள் பலமாக அமைந்துள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நஸ்ரியா இந்தப் படத்தின் மூலம் நேரடி தமிழுக்கு கம்பேக் ஆகியிருக்கிறார். 'பிரேமலு' நஸ்லன், ஆனந்தராஜ் எனப் பலரும் நடிக்கின்றனர். 'மஞ்சும்மல் பாய்ஸ்' இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். 'மின்னல் முரளி' உன்னி பலோடே ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யா, ஜோதிகாவின் புது பேனரான 'ழகரம் ஸ்டூடியோஸ்' படத்தைத் தயாரிக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு கொச்சியில் நடைபெறும் என்கிறார்கள். Surya 47 - சூர்யா சூர்யாவின் ரசிகர்கள் அவரிடம் நீங்க வருஷத்துக்கு இரண்டு படங்களில் நடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுத்தி வந்தனர். சூர்யாவும் அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க முடிவு செய்தார். ரசிகர்களின் சந்திப்பில் கூட இனி வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிப்பேன் என்பதை உறுதி படுத்தினார். 2026லிருந்து இனி ஆண்டுக்கு மினிமம் இரண்டு படங்கள் என தீர்மானித்தார். இப்போது அசூர வேகத்தில் அதனை நிறைவேற்றியும் வருகிறார். அடுத்தாண்டு அவரது நடிப்பில் மூன்று படங்கள் திரைக்கு வருகிறது என்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.
ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடைகள்
ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி வாழ்க்கைகளை செழிக்கச் செய்வதே உண்மையான வெற்றியாக கருதுகிறது. பல தசாப்தங்களாக, சமூகப் பொறுப்பை ஒரு வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, ஜி.ஆர்.டி தனது வளர்ச்சியை சமுதாயத்தை மேம்படுத்தும் மற்றும் அக்கறை, கருணையின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் பல்வேறு முயற்சிகளுக்கு மொத்தம் ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான தனது நன்கொடையை வழங்கியுள்ளது. இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (தி சைல்ட்ஸ் டிரஸ்ட்) குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.12,00,000 பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது; சேலம் ஆர்ய வைஷ்யா சாரிட்டபிள் & எஜுகேஷன் ஃபவுண்டேஷனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது; சென்னை மேற்குத் மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டங்களுக்காக ரூ.10,00,000 நன்கொடை செய்யப்பட்டுள்ளது; மேலும், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருட்பெருஞ் ஜோதி ஆனந்தன மிஷனுக்கு, அன்னதான உணவுகளுக்கான- சமையலறை உபகரணங்களை வாங்க ரூ.4,50,000 பங்களிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரும்புப் பாலம் கட்டுவதற்காக, தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஸ்வாமிநாத சுவாமி கோவிலுக்கு ரூ.17,20,873 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பங்களிப்புகள் குறித்து பேசும்போது, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறினார், “ஜி.ஆர்.டியில், உண்மையான பாரம்பரியம் நகைகளில் மட்டுமல்ல, நாம் தொடும் வாழ்க்கைகளிலும் கட்டப்படுகிறது என்பதையே நாங்கள் நம்புகிறோம். அது குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதாரமாக இருந்தாலும், இளைஞர்களுக்கான கல்வியாக இருந்தாலும், அல்லது மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்கும் சமூக முயற்சிகளாக இருந்தாலும், எங்கள் அர்ப்பணிப்பு ஒரே மனதாகும் மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறது. சமூக நோக்கங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையை மதிப்பதற்கான எங்கள் வழியாகும். சுகாதாரம், கல்வி, நலன் மற்றும் நம் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு பங்களிப்பதன் மூலம், வணிகங்கள் தாங்கள் சேவை செய்கிற சமூகங்களுடன் வளரும்போது தான் உண்மையில் செழிக்கின்றன என்ற எங்கள் நம்பிக்கையை மேலும் வலியுறுத்துகிறோம்.” 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நம்பிக்கை, கலைநயம் மற்றும் புதுமை ஆகியவற்றின் அடையாளமான பெயராக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான கலெக்ஷன்கள் மூலம், இந்த நிறுவனம் தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் நேர்த்தியான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. தற்போது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன், ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தனது படைப்பாற்றலை உண்மைத்தன்மையுடன் இணைக்கும் வாக்குறுதியை நிலைநிறுத்தி, தாங்கள் சேவை செய்கிற சமூகங்களின் நலனில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
தொண்டையில் பேரிச்சம் பழம் சிக்கி தெலுங்குதேசம் கட்சி தொண்டர் பலி
நகரி, ஊட்டசத்துகள் அதிகம் நிறைந்த பழம் பேரிச்சம் பழம். எனவே பலரும் இதனை விரும்பி உண்பது வழக்கம். ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டு ஒருவர் இறந்ததாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆந்திராவின் சத்யசாயி மாவட்டம் பெனுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர் (வயது 42). தெலுங்குதேசம் கட்சி தொண்டர். இவர் பேரிச்சம் பழம் சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்று அவர் பேரிச்சம் பழத்தை அவசரமாக சாப்பிட்டதாக […]
யாழில். அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு
யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் , தூபியை உடைத்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் நடைபெற்ற வேளை […]
காவிரி நீர் பங்கீடு: கர்நாடகத்துக்கு பறந்த உத்தரவு! டெல்டா விவசாயிகள் ஹேப்பி...
தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி காவிரி நீரை விடுவிக்க கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.
CavinKare’s Indica Easy celebrates self-reliance with humorous new digital campaign
Chennai: CavinKare’s Indica Easy has unveiled its latest digital campaign, “So Easy, Anyone Can Do It!”, aimed at celebrating self-reliance and the simplicity of DIY hair coloring through humour and relatable everyday scenarios. The campaign features ten short, character-driven digital films that showcase individuals who typically depend on others for routine tasks, yet manage to […] The post CavinKare’s Indica Easy celebrates self-reliance with humorous new digital campaign appeared first on MediaNews4U .
அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது - எம்.எல்.ஏ அருள்
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய்யான தகவல்களை தயாரித்து வந்துள்ளனர். பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை. பாமகவிற்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராமதாஸின் மகன் என்பதை தவிர அன்புமணிக்கும் பாமகவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. விரைவில் மாம்பழம் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ராமதாஸ் தான் பாமக, வேறு யாருடனும் கூட்டணி குறித்து பேசி யாரும் ஏமாறவேண்டாம். பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் கை காட்டுபவர்களுக்கு 10 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும். அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஏன் துணை போகிறது என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் நீதி கிடைத்த பிறகு தேர்தல் ஆணையம் திணறுகிறது. அன்புமணி தேர்தல் ஆணையத்தை சரிகட்டி விட்டார். தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றம் செல்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நீதிமன்ற தீர்ப்பின்படி அன்புமணிக்கும், பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியாகிவிட்டது. பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் ராமதாஸ் இடமே வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.
Leading news channels reject MIB’s plan to alter landing page viewership rules
Mumbai: Several leading national news broadcasters — including NDTV, News18 and Times Now — have strongly opposed the Ministry of Information & Broadcasting’s (MIB) Proposed Landing Page Amendment, stating that the move is legally untenable, technically flawed and commercially unfair to the broadcasting industry.In a joint representation, the broadcasters said the amendment must be withdrawn in its entirety as it attempts to regulate a subject currently sub-judice before the Hon’ble Supreme Court of India, violating principles of administrative propriety. They also noted that the proposal seeks to revive a technical methodology for stripping landing page impressions — an approach earlier examined and rejected by the Telecom Regulatory Authority of India (TRAI) as “unsuitable” due to inherent technical flaws.The broadcasters argued that the assumption underlying the amendment — that viewership gained from a landing page is illegitimate — is fundamentally incorrect. They clarified that a landing page functions as a legitimate marketing and discovery tool, similar to premium placements used across other industries. When a viewer turns on their set-top box and chooses either to watch the channel or navigate away, this constitutes genuine consumer choice and engagement.They further highlighted that excluding initial impressions would effectively delete authentic viewing behaviour. TRAI, in its 2018 assessment, had explicitly rejected the same methodology on the grounds that it would remove genuine impressions and distort viewership measurement.Drawing parallels to other sectors, the broadcasters said landing page placement is equivalent to a newspaper jacket or an eye-level shelf in a supermarket — both widely accepted premium placements whose sales and consumption data are never excluded from market metrics. Similarly, they argued, landing page viewership must remain part of official ratings to preserve the integrity of the industry’s measurement ecosystem.Industry bodies have also raised objections. The All India Digital Cable Federation (AIDCF) has written to the Ministry opposing any changes to the usage of landing pages. Several small broadcasters have separately submitted their concerns, signalling widespread industry resistance to the amendment.Broadcasters have urged the MIB to withdraw the proposed amendment and maintain the current rating framework to ensure fair competition, transparency and a realistic reflection of consumer behaviour within India’s television ecosystem.
இந்திய டி20 அணியில், சஞ்சு சாம்சனைவிட, ஷுப்மன் கில்தான் ஓபனருக்கு தகுதியானர் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியா வருகையால், அணி பலம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
JioHotstar sets the stage for next-gen reality TV with the launch of The 50
Mumbai: JioHotstar has announced The 50, a groundbreaking reality entertainment format produced by Banijay Asia, signalling the platform’s next major leap in disruptive, high-intensity content.The big reveal took place during the Bigg Boss 19 Grand Finale, where a symbolic moment — the Tiger passing the baton to the Lion — marked the rise of a new ruler, a new world, and the beginning of a new era in Indian reality television.The 50 brings together 50 players inside a massive, unpredictable Mahal, where the rules are simple: there are no rules. In this high-stakes universe, strategy, alliances, mind games, chaos and betrayals collide — with every twist landing 50 times harder.Billed as a reality experience “jaisa na kabhi kisi ne socha, na kabhi kisi ne dekha, ” the show is designed to redefine how India watches and engages with reality entertainment. From gameplay to viewer involvement, “khelne walo ke liye bhi aur dekhne walo ke liye bhi, poori baazi palatne wali hai.”
நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்த C-130J விமானம்!
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க விமானப் படையின் C-130J Super Hercules ரக சரக்கு விமானம்… The post நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்த C-130J விமானம்! appeared first on Global Tamil News .

26 C