SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
...

மன்னாரில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகை ஆபத்தான பொருள்!

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 50 கிலோவுக்கும் அதிகமான ‘ஹஷிஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த டிங்கி படகு ஒன்றை சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

அதிரடி 14 Feb 2026 11:30 pm

கடலரிப்பு குறித்து ஆராய்ந்தார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து கண்டறியும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (14) நேரில் சென்றிருந்தார். அட்டப்பள்ளம் பிரதேசத்தின் கடலோர பகுதி மிக வேகமாக கடலினால் காவுகொள்ளப்பட்டு வருவதனால் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தீவிரிப்படுத்தப்பட்டு வருவதாகவும், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியாளரின் வழிகாட்டுதலின் கீழ், அவசரமாக கடலரிப்பை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.

அதிரடி 14 Feb 2026 11:23 pm

சென்னை மெரினாவில் இதை கவனித்தீர்களா? நீலக்கொடி திட்டத்தின் கீழ் இறுதிக்கட்டத்தை நெருங்கிய பணிகள்!

நீலக்கொடி திட்டத்தின் கீழ் சென்னை மெரினா கடற்கரையில் 2 ஆம் கட்ட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.

சமயம் 14 Feb 2026 11:10 pm

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து போராட்டம் திருமலையில் ஆரம்பம்!

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குராற்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் நிகழ்வில் பங்கேற்றவர்களும் கையொப்பம் இட்டு வலுச்சேர்த்திருந்தனர். உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்..! என்ற தொனிப்பொருளில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை கைவிடக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் இலக்குடன் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புகளின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கையெழுத்துப் போராட்டமானது வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதன் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 14 Feb 2026 10:31 pm

திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது பாலியல் புகார்.. வழக்குப்பதிவு செய்யாமல் விசாரிக்கும் காவல்துறை!

தாராபுரத்தில் 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Feb 2026 10:30 pm

ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க போர்க்கப்பல் ; அதிகரிக்கும் ஈரானுடனான பதற்றம்

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததில் வன்முறை வெடித்தது. போராட்டம்-வன்முறையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அணுசக்தி ஒப்பந்தம் மேலும், ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டது. அதன்படி ஈரான் அருகே யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட […]

அதிரடி 14 Feb 2026 10:30 pm

`தேர்தல் களம் சூடா இருக்கு; இந்த முறை மாற்றத்தை பார்ப்பீங்க!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விழா மேடையில் கலகலப்பாகப் பேசிய சீமானிடம், சின்னச் சின்னதாக சில கேள்விகளை முன்வைத்தோம். `புதிய புதிய கூட்டணிகள் உருவாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் களம் எப்படி இருக்கப் போகுதுண்ணே?’ என்று கேட்டபோது, ``நான் வேட்பாளர்களைத் தேர்வு செய்யலை. ராணுவ வீரர்களைத் தேர்வு செஞ்சு வெச்சிருக்கேன். சீமான் எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கிய திருமா, ராம் | நம்பிக்கை விருதுகள் 2025 - Live களம் சூடாத்தான் இருக்கும். நிச்சயமா ஒரு மாற்றத்தை இந்தத் தேர்தல்ல நீங்க பார்ப்பீங்க’’ என்றார். `அரசியல் பரபரப்புகளுக்கிடையே சினிமா பார்க்க எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று கேட்டபோது... நமக்குன்னு இருக்குற ஒரு நேரம், உறங்குற நேரம். அந்த நேரத்தைப் பறிச்சுத்தான்... அந்த நேரத்துல படிக்கிறது, மற்ற விஷயங்களைச் செய்யிறது... நேரு நாடாளுமன்றத்துல பேச வர்றாருன்னா, எல்லா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் காத்திருப்பாங்களாம். ஏன்னா அவ்வளவு சிறப்பா அவர் உரை இருக்கும். அவர் எப்படித் தயாராகிறார்னு உங்களுக்குத் தெரியும்... அவர் சிறையில இருக்கும்போது, `இன்னும் எத்தனை ஆண்டுகள் வேணாலும் என்னைச் சிறையில வை, புத்தகங்களை மட்டும் அனுப்பிவை’ன்னு சொன்னார். அந்த அளவுக்கு அவர் படிக்கிறார். அந்த அளவுக்குத் தயாராகி வந்து நாடாளுமன்றத்துல பேசுவார். `இதுக்கான நேரத்தை எப்படி ஒதுக்குறீங்க?’ன்னு கேட்டதுக்கு, `என்னுடைய வேலையாட்கள், பணியாட்கள்... அவன் நேரத்தை நான் எடுத்துக்குவேன். அவன் நேரத்தை நீங்க எப்படி எடுப்பீங்க..’ என்னைச் சரியா 10 மணிக்குத் தூங்க அனுப்பிடுவான். 10 மணிக்கு நான் தூங்கிடணும். ஆனா நான் 12 மணிக்குத்தான் தூங்குவேன். அவனுடைய நேரம் 10-லிருந்து 12-ஐ நான் இழுத்து, அந்த ரெண்டு மணி நேரம் படிச்சுக்குவேன் அப்படிம்பார். சீமான் ``'இதற்காக' சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை' அரசே எடுத்து செய்ய வேண்டும் - ஆதவ் அர்ஜுனா பேச்சு அந்த நேரத்தை ஒதுக்கித்தான் நான் இந்தச் சினிமாக்களை, படங்களைப் பார்த்துக்கிறேன்’’ என்றவரிடம், `சினிமாவை மிஸ் பண்றீங்களா?’ என்று கேட்டபோது, ``தவறவிடாம எப்படி இருக்க முடியும் சொல்லுங்க... அதுல இருந்துதானே வந்தோம்... அதுதான் உயிர்மூச்சு’’ என்றார். ``அப்போ படம் எடுப்பீங்களா?’’ என்று கேட்டதற்கு, ``இப்ப படம் எடுக்க நிறைய ஆளுங்க இருக்காங்க. இந்த நாட்டு மக்களுக்காகப் படையெடுக்கத்தான் ஆள் இல்லை. அதுக்காகத்தான் நான் நிக்கிறேன்’’ என்று கலகலப்பாக அரங்கை ரசிக்கவைத்தார். சிறைப் படத்தில் வரும் 2 நீதிபதிகள் போல தான் உண்மையிலும்; இதை மாற்ற..! - அருணா ஜெகதீசன் நம்பிக்கை விருதுகள் 2025

விகடன் 14 Feb 2026 10:09 pm

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், ``இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டுடைய நிரந்தர டிரெண்ட் கருப்பு - சிவப்பு தான். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான். ஏழாவது முறையும் தி.மு.க ஆட்சிதான். திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை; ரொம்ப அடக்கத்தோடு, மிகுந்த பணிவோடு நம் அரசு செய்திருக்கின்ற சாதனைகள்மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையில் சொல்கிறேன். எல்லாவற்றுக்கும்மேலாக உடன் பிறப்புகளாகிய உங்கள் மீதான நம்பிக்கையிலும் சொல்கிறேன். வெற்றியைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிக்கத் தேவையில்லை. உங்களை வழிநடத்தி உங்களுக்கான டாஸ்க்கை ஒப்படைத்தாலே போதும். மீண்டும் உதயச்சூரியன் ஆட்சி உறுதி. இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தொகுதியும் தி.மு.க கோட்டை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும். 2026-ல் தி.மு.க-வின் வெற்றி என்பது, இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி உறுப்பினர்களை நாம் நியமித்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் பூத்கள் இருக்கிறது. இப்படி, ஒவ்வொரு பூத்திலும் நாம் செட் செய்திருக்கக்கூடிய மினிமம் டார்கெட் 350 வாக்குகள். இந்த டார்கெட்டை நாம் அச்சிவ் செய்தாலே 2.60 கோடி வாக்குகளுக்குமேல் நாம் வாங்கிவிடுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தலில், 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் நாம் வாங்கியே ஆக வேண்டும். இதை நடத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு. உங்களுக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் செய்துகொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. 2 கோடியே 50 லட்சமா? என்று யாரும் மலைக்க வேண்டாம்; யோசிக்கவும் வேண்டாம். இங்கு வந்திருக்கின்ற ஒவ்வொருத்தவரும் தலா 40 அல்லது 50 வாக்குகள் பொறுப்பேற்றுக்கொண்டால் அவ்வளவுதான். சிம்பிள். ஒவ்வொருத்தவரும் அவர்களுக்கு அசைன் செய்திருக்கின்ற 50 வாக்குகளைப் பெற்று தந்தாலே போதும். 200 தொகுதிகள் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கிறது தான் நம்முடைய லட்சியம். அதற்காக, 2 மாதங்கள் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்குள் நீங்கள் ஒவ்வொருத்தரும் 100 வாக்காளர்களை குறைந்தது 5 முறையாவது சந்திக்க வேண்டும். என்னதான் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று புதுபுது ஊடகங்கள் வந்தாலும், மக்களை நேரில் சந்தித்து பணிவாக வாக்கு கேட்கின்ற பிரசாரத்துக்கு ஈடாகாது. அதனால்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். பரம்பரைப் பரம்பரையாக தி.மு.க-வுக்கு வாக்களிக்கின்ற குடும்பங்களாக இருந்தாலும் சரி. இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பங்களாக இருந்தாலும் சரி. பிரசாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்க வேண்டும். இதை நீங்கள் ரிப்பீட்மோடில் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ரிப்பீட் ஆகும். 2021-ல் இருந்ததைவிட நமக்கான வரவேற்பும், ஆதரவும் இப்போது கூடியிருக்கிறது. 2021 தேர்தலின்போது, இதையெல்லாம் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம். இப்போது, சொன்னதையும் தாண்டி செய்துகொண்டிருக்கிறோம். அதனால், கெத்தாக மக்கள் முன்னாடி வந்து நிற்கிறோம். எனவே, மெத்தனமாக இருக்காமல், களத்தில் தொடர்ந்து உழைத்தால் சென்ற முறையைவிட பெரிய வெற்றி 100 சதவிகிதம் சாத்தியம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாம் வாங்கிய வாக்குகளைச் சட்டமன்றத் தொகுதி வாரியாக பார்த்தாலே, மிகத்தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 200 தொகுதிகளுக்குமேல் நாம்தான் வெல்லப் போகிறோம். நேற்று காலை விடிந்ததும், 1.31 கோடி பெண்கள் முகத்திலும் புன்னகையைக் கொண்டுவந்திருக்கிறோம். அவர்கள் காலையில் கேட்ட முதல் ரிங்டோன், `5 ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அக்கௌண்ட்டில் வந்திருக்கிறதா?’ என்கிற மெசேஜ் டோன் தான். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, `தேர்தல் நெருக்கத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும்’ என்று திட்டம் போட்டார்கள். ஒன்றிய பா.ஜ.க-வைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள். நல்லது செய்பவர்களையும் செய்யவிடமாட்டார்கள். தமிழ்நாட்டு மகளிருக்காக நான் கொடுத்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. அதற்கு தடைப்போட நான் விட்டு விடுவேனா? அதனால்தான் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல். மாநாடு ஓரவஞ்சனைக்கும், வஞ்சகத்துக்கும் உருவகம் இருந்தால், அதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு. இதுவரை தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டம் ஏதாவது அறிவித்திருக்கிறார்களா? நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். முறையாக பதில் சொல்ல, இதுவரையில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வரவில்லை. அதற்குப் பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை. பா.ஜ.க-வின் தலைமையில் இருந்தும் பதில் வரவில்லை. பா.ஜ.க-வின் கிளைச் செயலாளராக இருக்கிற பழனிசாமியிடம் இருந்தும் பதில் வரவில்லை. ஆமாம், பா.ஜ.க-வின் கிளைக் கழகமாக மாறிவிட்டது அ.தி.மு.க. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் பேசுவதற்குத் துணிவில்லாமல், முதுகெலும்பு இல்லாமல், கொத்தடிமை சேவகம் செய்துகொண்டிருக்கிற பழனிசாமி எனக்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார். இன்றைக்கும் ஒரு அரசியல்வாதி எப்படி எல்லாம் இருக்கக்கூடாது? என்பதற்கு அடையாளமாக சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. மாண்புமிகு பழனிசாமி அவர்களே, தவழ்ந்து தவழ்ந்து ஊழல் குற்றவாளியான அம்மையார் சசிகலா காலில் விழுந்து பதவியைப் பெற்றுவிட்டு, காலை வாரிவிட்டுவிட்டு, `நீ எனக்குப் பதவி கொடுத்தியா?’ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்டீர்களே, மறுக்க முடியுமா? சட்டம் - ஒழுங்குப் பிரச்னைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்குத் தார்மீக உரிமையாவது இருக்கிறதா? உங்கள் கட்சியின் உண்மையான பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள்... இதையெல்லாம் மறக்கடித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? பொல்லாத ஆட்சி பழனிசாமியின் ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளே சாட்சியாக, ஆறாத வடுவாக இருக்கிறதே. ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அமைதியாக ஊர்வலம் சென்ற அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லிவிட்டு, `டி.வி-யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று நாடகம்போட்டது மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவும், மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்டபோது, `அவர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்ததாக’ கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் சொன்னீர்களே, உங்களின் கல் மனதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்தீர்களா? பா.ஜ.க-வின் டப்பா என்ஜின் முன்னாடி நம்முடைய திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது. அண்மையில், ஒன்றிய அரசின் பட்ஜெட் வெளியிட்டார்களே. அதில் தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் அறிவித்தார்களா? இதை தட்டிக்கேட்கிற துணிச்சலோ, தைரியமோ பழனிசாமிக்கு இருக்கிறதா? அவரைப் பொறுத்தவரைக்கும் `தோப்புக்கரணம் போடு’ என்று சொன்னால், `ஸ்டாப்’ சொல்கிற வரைக்கும் `நான் ஸ்டாப்’பாக பல்டி அடிப்பார். எல்லா துரோகத்தையும் செய்துவிட்டு, `கூட்டணி தர்மத்துக்காகத்தான் தமிழ்நாடு உரிமைகளை அடகு வைத்தேன்’ என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்வார். இதையெல்லாம் நன்றாக உணர்ந்துதான் அவரின் தலைமையை, அவரின் கூட்டணியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லோரும் ஒரிஜினல் ஓனரான பா.ஜ.க-விடம் நேரடியாக சரண்டராகிறார்கள். தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்று துடிக்கிறவர்கள், தமிழ்நாட்டுக்குள் வந்தால் அவர்களின் சதி திட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று மக்களிடம் நீங்கள் புரிய வைக்க வேண்டும்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

விகடன் 14 Feb 2026 9:59 pm

தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் எச்சரிக்கை.. மீறினால் சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும்!

உரிய அங்கீகாரம் இல்லாமல் தலைமுடி சிகிச்சைகளை மருத்துவர்களோ அல்லது நிறுவனங்களோ செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமயம் 14 Feb 2026 9:55 pm

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் நாங்கள் அதைத் தடுத்தோமா. வானதி சீனிவாசன் திமுகவினர் மக்களின் காதில் பூ சுற்ற முயற்சி செய்கிறார்கள். முதலமைச்சர் மகளிரின் பாதுகாவலர் போன்று ஒரு டிராமா செய்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக கோடை காலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கூட தராதவர்கள், தற்போது கோடைகால சிறப்பு நிதியாக ரூ. 2,000 கொடுக்கிறார்கள். பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் உரிமைத் தொகை வெளியில் சென்ற பெண்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று குடும்ப உறவுகள் பதற்றமாக இருக்கிறார்கள். ரூ.5,000 கொடுத்தால் அனைத்தையும் மறப்பார்கள் என்று நினைக்கிறார்கள். மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். நயினார் நாகேந்திரன் பொதுவாக மிகவும் அமைதியானர். பண்பாக பேசக்கூடியவர். சட்டசபையில் கூட மிகவும் நாகரிகமாக பேசுவார். எதற்காக த்ரிஷா பற்றி அப்படி பேசினார் என தெரியவில்லை. அவர் பேசியது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னுடைய கருத்தை அவரிடம் கூறுவேன்.  நயினார் நாகேந்திரன் அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு, இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள்” என்றார்.

விகடன் 14 Feb 2026 9:51 pm

``'இதற்காக'சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை'அரசே எடுத்து செய்ய வேண்டும் - ஆதவ் அர்ஜுனா பேச்சு

2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் 'சாதனைத் தொழில்நுட்பன்' விருதை வழங்கிச் சிறப்பித்தார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது... ``கடந்த சில வருடங்களாக, கனிம வளக் கொள்ளை போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சிஸ்டத்தை மாற்றினால் மட்டுமே இந்த மாதிரியான விஷயங்கள் நிறுத்தப்படும். அருண் ராஜீவ் சங்கரன் - ஆதவ் அர்ஜுனா எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கிய திருமா, ராம் | நம்பிக்கை விருதுகள் 2025 - Live கனிம வளம் எடுக்கும் பணியை அரசே தனியாரிடமிருந்து எடுத்து நடத்த வேண்டும். அப்போதுதான் அதில் வெளிப்படைத்தன்மை இருக்கும். மேடையில் ஜகபர் அலியின் குடும்பத்தைப் பார்த்தபோது, நான் என் 5 வயதில் அம்மாவை இழந்து நின்றது ஞாபகத்துக்கு வருகிறது. மறைந்த ஜகபர் அலியின் குடும்பத்துக்கு எங்களுடைய 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' (Voice of Commons) சார்பாக 15 லட்சம் ரூபாய் வழங்குகிறோம். விளையாட்டும் படிப்பும் சமமானது. ஒரு மாணவர் எட்டு மணி நேரம் படிப்பதுபோல, விளையாட்டு வீரரும் ஒன்பது மணி நேரம் மைதானத்தில் உழைக்கிறார்கள் என்றார். சிறைப் படத்தில் வரும் 2 நீதிபதிகள் போல தான் உண்மையிலும்; இதை மாற்ற..! - அருணா ஜெகதீசன்

விகடன் 14 Feb 2026 9:35 pm

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு; சிக்கலில் நோர்வேயின் முன்னாள் பிரதமர்

நோர்வேயின் முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் (Thorbjorn Jagland) மீது “கடுமையான ஊழல்” (Gross corruption) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக, அவர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஆவணங்கள் அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி 14 Feb 2026 9:30 pm

இலங்கை மக்களை சூழ்ந்துள்ள ஆபத்து; சுகாதாரத் துறை தகவல்!

இலங்கை மக்களில் 10 சதவீதமான சிறுநீரக நோயாளர்கள் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாத நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தேசிய சிறுநீரகவியல், ரத்த சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் விசேட நிபுணர் வைத்தியர் அர்ஜுன மாரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயைச் சரியாகக் கையாளத் தவறுபவர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். […]

அதிரடி 14 Feb 2026 9:30 pm

NZ vs SA: ‘4 விக்கெட்களை எடுத்தும்’.. மோசமான சாதனை பட்டியலில் இணைந்த மார்கோ யான்சன்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், மார்கோன், 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அப்படியிருந்தும், மோசமான வீரர்கள் பட்டியலில் யான்சன் இணைந்தார். இறுதியில், நியூசிலாந்து அணி 175 ரன்களை எடுத்தது.

சமயம் 14 Feb 2026 9:08 pm

உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு!

உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல்… The post உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Feb 2026 8:57 pm

“CAAவினால் நடத்த முடியாததை SIR மூலம் நிறைவேற்றிவிட்டார்கள்” தேர்தலில் இஸ்லாமியர்கள் பங்கு என்ன? EXCLUSIVE

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் தான், திராவிட கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தது.

சமயம் 14 Feb 2026 8:45 pm

'துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்று 3 முறை மிரட்டல்; ஆனாலும், காவல்துறை..!' - சகாயம் IAS

மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி, மணல் மாஃபியாக்களால் கொல்லப்பட்டவர் ஜகபர் அலி. இவருக்கு இந்த ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் 'உயிர் கொடுத்து மலை காத்தவர்' விருதை வழங்கி சிறப்பித்தது ஆனந்த விகடன். இந்த விருதை அவரது குடும்பத்திற்கு வழங்கிய சகாயம் ஐ.ஏ.எஸ்., கலெக்டர்களாகிய நாங்கள் செய்யவேண்டிய கடமையைத் தனிமனிதனாக ஜகபர் அலி செய்திருக்கிறார். குடியால் உயிரிழந்தவர்களுக்குக்கூட ஆதரவு காட்டும் இந்த அரசு, 1,000 கோடி ரூபாய் இயற்கை வளங்களைக் காக்கத் துணிந்த ஒரு மனிதனைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பது வேதனைக்குரியது. சகாயம் ஐ.ஏ.எஸ் ‘ட்ரெண்டிங் மாஸ்டர்’ சாண்டிக்கு விருது வழங்கிய சீமான் | நம்பிக்கை விருதுகள் 2025 - Live ஒரு பொறுப்பற்ற சமூகத்தில் தனிமனிதனாகப் போராடி உயிர்நீத்த இவரை நான் 'மாமனிதர்' என்பேன். என் சொந்த ஊரான திருமயத்துக்கு அருகே நடந்த இந்த இழப்பு என் மனதைப் பிழிகிறது. இந்த வீரக் குடும்பத்துக்கு எங்களது இளைஞர் படை என்றும் துணையாக இருக்கும். எனக்கும், என் குடும்பத்திற்கும் 'துண்டு துண்டாக வெட்டி விடுவோம்' என்று மூன்று முறை மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. இதுவரை அனுப்பியவர்கள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதே காவல்துறைதான் இன்று ஜகபர் அலியின் கொலைக்கும் காரணம் என்று சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்றார். 'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ் நம்பிக்கை விருதுகள் 2025

விகடன் 14 Feb 2026 8:34 pm

ஊட்டி மக்களுக்கு நற்செய்தி.. பைகாரா ஏரியில் விரைவில் மின்சார படகுகள் சேவை.. சுற்றுலாத் துறை உறுதி!

ஊட்டி பைகாரா ஏரியில் விரைவில் மின்சார படகுகள் சேவை தொடங்க உள்ளதாக சுற்றுலாத் துறை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்து உள்ளது.

சமயம் 14 Feb 2026 8:30 pm

Epstein Files ஐ லீக் பண்ணதே டிரம்ப் தான் !

Epstein Files ஐ லீக் பண்ணதே டிரம்ப் தான் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எப்ஸ்டீன் பைல்ஸ் தொடர்பான செய்திகள் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் இரண்டு தனி தீவுகளையே விலைக்கு வாங்கி அங்கே இளம் பெண்களையும், குறிப்பாக சிறுமிகளையும் அங்கு கொண்டு சென்று மிகப்பெரும் பணக்காரர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் விருந்தாக்கினார் என செய்திகள் வெளியாகி வருகிறது. வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒருபக்கம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், […]

அதிரடி 14 Feb 2026 8:30 pm

திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’கலாசார மண்டபம்  திறந்து வைப்பு.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில்… The post திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் திறந்து வைப்பு. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Feb 2026 8:27 pm

`அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும்' - நம்பிக்கை விருதுகள் விழாவில் ஜகபர் அலியின் மனைவி!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த ஜகபர் அலி. தனது பகுதியில் சட்டவிரோதமாக மலைகளைச் சிதைத்த குவாரி மாஃபியாக்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடியவர். இயற்கை வளங்களைக் காக்கப் போராடிய இவரை, 2025, ஜனவரி 17 அன்று மணல் மாஃபியாக்கள் கொடூரமாகக் கொலைசெய்தனர். 15 ஆண்டுக்கால சமூகப் போராட்டத்துக்குப் பிறகு தன் இன்னுயிரையே ஈந்த இந்த வீரத்தியாகியின் நினைவாக, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025-ன் `டாப் 10 மனிதர்’ பிரிவில், `உயிர் கொடுத்து மலை காத்தவர்’ விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட ஜகபர் அலியின் மனைவி கண்ணீர்மல்கப் பேசினார். அப்போது, சின்னச் சின்ன உதவிகளை மக்களுக்குச் செய்துகொண்டு, சாதாரண வருமானத்தில் எங்களை அவர் பார்த்துக்கொண்டார். ஆனால், மலைகளையும் ஆறுகளையும் திருடுபவர்களைப் பார்த்தால் அவரால் சகித்துக்கொள்ள முடியாது. 'நீங்க போனா ஆபத்து' என்று நான் தடுத்தபோதெல்லாம், 'இப்படித் திருட்டு நடந்தால் நாளைக்கு நம் பிள்ளைங்க எங்கே வாழும்?' என்று கேட்டுவிட்டுப் போவார். மிரட்டல் வந்தபோதுகூட அவர் பணியவில்லை. இன்று அவர் இல்லை என்றாலும், அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும் என்று நெகிழ்ந்தார். இந்த விருதை வழங்கிய சகாயம் ஐ.ஏ.எஸ்., கலெக்டர்களாகிய நாங்கள் செய்யவேண்டிய கடமையைத் தனிமனிதனாக ஜகபர் அலி செய்திருக்கிறார். குடியால் உயிரிழந்தவர்களுக்குக்கூட ஆதரவு காட்டும் இந்த அரசு, 1,000 கோடி ரூபாய் இயற்கை வளங்களைக் காக்கத் துணிந்த ஒரு மனிதனைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பது வேதனைக்குரியது. ஒரு பொறுப்பற்ற சமூகத்தில் தனிமனிதனாகப் போராடி உயிர்நீத்த இவரை நான் 'மாமனிதர்' என்பேன். என் சொந்த ஊரான திருமயத்துக்கு அருகே நடந்த இந்த இழப்பு என் மனதைப் பிழிகிறது. இந்த வீரக் குடும்பத்துக்கு எங்களது இளைஞர் படை என்றும் துணையாக இருக்கும் என்றார். நம்பிக்கை விருதுகள் 2025

விகடன் 14 Feb 2026 8:21 pm

முரசறைந்த திருமலைப் பிரகடனம்!

சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என்று முரசறைந்துள்ளது 2026 திருமலைப் பிரகடன முன்வரைவு உள்நாட்டில் வைத்து அரசியலமைப்புத் தயாரிக்கும் பயிற்சிகளில் தமிழர் தரப்பு மீண்டும் மீண்டும் காலத்தை விரயமாக்கக் கூடாது. பதிலாக, சர்வதேச மத்தியஸ்தத்துடனும் உத்தரவாதத்துடன் ஈழத்தமிழரின் வெளியக சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட விட்டுக்கொடுப்புகள் எதுவும் இன்றிய உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, இலங்கைத் தீவிலுள்ள வெ;வேறுபட்ட தேசிய இனங்களுக்கும் மக்கள்களுக்கும் இடையே ஒரு சமூக ஒப்பந்தச் சமன்பாட்டை எட்ட முடியுமா என்பதே முதலில் இடம்பெறவேண்டும். விளைவாக, அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தம் ஏற்படுமானால், அதன்பின்னரே தென்னிலங்கைத் தரப்புகளிடம் அரசியலமைப்புக்கான வரைவை முன்வைக்குமாறு கோரலாம், பயிற்சிகளிலும் ஈடுபடலாம். அதுவே பலனளிக்கும். மாறாக, மீண்டும் மீண்டும் அரசியலமைப்பு மாதிரிகளை எழுத முற்படுவது வெளியக சர்வதேச நீதியை நீர்த்துப் போகச் செய்து உள்ளகப் பொறிமுறை என்று தென்னிலங்கைச் சக்திகள் தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வை இழுத்தடிக்க இடமளிப்பதாகவே போய்முடியும் என்று திருகோணமலை ஆயர், தென்கயிலை ஆதினம், வேலன் சுவாமிகள் உள்ளடங்கலான பேராளர்களின் பங்கேற்போடு உருவாக்கப்பட்டுள்ள புதிய குடிசார் சமூகமான ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று விரிவான 12 பக்கப் பிரகடன வரைவு ஊடாக பெப்ரவரி 14 ஆம் திகதி சனிக்கிழமை முரசறைந்துள்ளது. இராஜதந்திர மொழியிலும் சர்வதேசச்ட்ட மொழியிலும் ஆங்கிலத்தில் பல நிபுணர்களின் ஆலோசனையோடு தயாரிக்கப்பட்டுள்ள 2026 திருகோணமலைப் பிரகடனம் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மைக்கும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மைக்குமாக குறித்த வரைவு பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளதேடு எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி வரை ஈழத்தமிழர் அனைவரும் தமது கருத்துப் பகிர்வோடு அதை மேலும் மெருகூட்டும் வகையில் வெளிப்படைத் தன்மையோடும் உள்ளடக்கும் தன்மையோடும் திருகோணமலைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அது குறித்து விளக்கமளித்த அரசியல் சமூக செயற்பாட்டாளரும் பன்னாட்டு நீதி குறித்த நூலாசிரியருமான சிறீஞானேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். குறித்த வரைவு இணையத் தளத்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தோராயமான தமிழ் மொழி பெயர்ப்பு 20 பக்கங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஈழத்தமிழர்களால் சுயாதீனமாக, எந்தவித வெளிநாட்டுச் சக்திகளது நிதியூட்டமோ, தன்னார்வ நிறுவனங்களின் தாக்கமோ இன்றி முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த வேலைத்திட்டம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சர்வதேச நீதிக்கான வழிவரைபடம் குறித்த நிலைப்பாடு தயாரிக்கப்பட்டதோடு ஆரம்பிக்கப்பட்டதாகவும் சிறீஞானேஸ்வரன் தெரிவித்தார். ஆறாம் சட்டத்திருத்தத்தை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும் ஓகஸ்ட் மாத நிலைப்பாட்டில் வெளியாகியிருந்தது. a

பதிவு 14 Feb 2026 7:54 pm

இந்திய கிட்காட் சாக்லேட்களின் தரம் குறித்த சர்ச்சை: நெஸ்லே நிறுவனம் விளக்கம்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கிட்காட் சாக்லேட்களின் தரம் மற்றும் மூலப்பொருட்கள் ஆஸ்திரேலியா தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் வேறுபடுவதாக எழுந்த புகார்களுக்கு நெஸ்லே நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Feb 2026 7:45 pm

தலங்கம கொலை சம்பவம்; பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற கணவன் மற்றும் மனைவி கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். துப்பாக்கிதாரிகள் ஹோமாகம, பொத்துஅராவ வீதி, அத்துருகிரிய பொலிஸ் பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர ஆகிய பகுதிகள் ஊடாகப் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 10 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை நேற்று (13) மாலை வேளையில் மேற்கூறிய பாதைகளில் பயணித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டேஷ் கேமராக்களில், சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் EP KI-7738 […]

அதிரடி 14 Feb 2026 7:40 pm

அர்ஜெண்டினாவில் சிறார் குற்றவாளிகளின் வயது 14 ஆக குறைப்பு

அர்ஜென்டினாவில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் குற்றச் செயல்க ளைக் கட்டுப்படுத்த, அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் படி, சிறார் குற்றவாளிகளாக கருதப்படும் வயது வரம்பை 16-லிருந்து 14 ஆக குறைக்கும் மசோதாவை அதிபர் ஜேவியர் மிலே தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றியது. போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் சிறுவர்களைப் பயன்படுத்தி படு கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச் சர் […]

அதிரடி 14 Feb 2026 7:30 pm

நாணய நிதிய முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கைக்கு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை (16) இலங்கைக்கு பயணிக்கவுள்ளார் எதிர்வரும் புதன்கிழமை வரை அவர் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ‘டிட்வா’ புயலால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து அவதானிக்கவுள்ளதுடன், இலங்கையை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

பதிவு 14 Feb 2026 7:27 pm

மிரட்டலுக்கு பதில் மிரட்டல்! ஈரான் –அமெரிக்கா அணுசக்தி மோதல்: நிபந்தனைகளை நிராகரித்தது ஈரான்!

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா முன்வைத்த புதிய அணுசக்தி உடன்படிக்கைக்கான நிபந்தனைகளை ஈரான் திட்டவட்டமாக… The post மிரட்டலுக்கு பதில் மிரட்டல்! ஈரான் – அமெரிக்கா அணுசக்தி மோதல்: நிபந்தனைகளை நிராகரித்தது ஈரான்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Feb 2026 7:18 pm

மகளிர் உரிமைத் தொகை.. ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்' என்றவர்கள் புலம்புவது ஏன்? கி.வீரமணி கருத்து!

எத்தனை தடைகள் வந்தாலும் இடையூறுகள் என்றாலும் அவற்றையெல்லாம் தாண்டி நடை போடும் ‘திராவிட மாடல்’ அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் மீண்டும் மீண்டும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் திராவிடர் கழகம் கி.வீரமணி தெரிவித்து உள்ளார்.

சமயம் 14 Feb 2026 7:15 pm

IND vs PAK: ‘அபிஷேக் சர்மா விளையாடுவாரா?’.. சூர்யகுமார் யாதவ் பதில் இதுதான்: பாகிஸ்தான் கேப்டன் பேச்சுக்கும் பதிலடி!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் கேப்டனுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

சமயம் 14 Feb 2026 7:13 pm

'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’-க்கான `பெருந்தகையாளர்’ விருதை SA. அமீர் அம்சாவுக்கு வழங்கினார், நடிகர் கருணாஸ். அவர் பேசும்போது, ``முதலில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கும், விகடன் நிர்வாக இயக்குநர் திரு.சீனிவாசன் சாருக்கும் என் நன்றிகள். விகடனுக்கும் எனக்குமான தொடர்பு 26 ஆண்டுகாலமாகத் தொடர்கிறது. 2000-ம் ஆண்டில் விகடன் அட்டைப்படத்தில் நடிகனாக இல்லாத ஒரு பாடகனாக என் முகம் வந்ததை என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். கருணாஸ் நான் விட்டுக்கொடுத்த படம் தான் 'அசுரன்' - கருணாஸ் | நம்பிக்கை விருதுகள் 2025 | Live என் மகன் கென் கருணாஸைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள். 'அசுரன்' படத்தில் அவன் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தான். அந்தச் சமயத்தில், அரசியலில் நான் இருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார். அதன் பிறகு எனக்கு அதில் ஈடுபாடு இல்லாமல்போனது. மீண்டும் நடிக்கலாம் என்று முடிவெடுத்து இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்தேன். 'இனிமேல் நான் காமெடி பண்ணுவது சரியாக வராது. ஒரு குணச்சித்திர நடிகனாக நடிக்கிறேன்' என்று சொன்னேன். வெற்றிமாறன் என்னிடம் 'வெக்கை' நாவலைப் படிக்கச் சொல்லி, அதில் அப்பாவாக என்னையும், மகனாக கென்னையும் நடிக்க வைக்கலாம் என்றார். ஆனால், நாவலைப் படித்த பிறகு நான் வெற்றியிடம், 'வெற்றி, இந்தக் கதையில் நான் நடிப்பதைவிட ஒரு பெரிய ஹீரோ நடித்தால் படம் மிகப்பெரிய ஹிட்டாகும். அதனால் ஒரு ஹீரோவை வைத்து எடுங்கள்' என்றேன். அவர் 'உங்களை வைத்து எடுக்கத்தான் ஆசைப்படுகிறேன்' என்று சொல்லியும், என் மகனுக்காகவும், படத்தின் வணிக வெற்றிக்காகவும் நான் விட்டுக்கொடுத்த படம்தான் 'அசுரன்.’ வெற்றிமாறன் போன்ற ஒரு தேசிய அளவிலான இயக்குநர் வாய்ப்பு தரும்போது, 'வேண்டாம், என் மகனுக்காகப் பண்ணுங்க' என்று சொல்வதற்கு ஒரு தனி மனசு வேண்டும். அதை ஒரு அப்பாவாக நான் செய்ததில் பெருமைப்படுகிறேன் என்றார்.

விகடன் 14 Feb 2026 7:02 pm

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வேலை; பிப்ரவரி 20 நேரடி நேர்காணல்

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி (Executive Officer) பதவியில் உள்ள 18 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமயம் 14 Feb 2026 6:54 pm

சத்தா பச்சா திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் பிப்ரவரி 19 அன்று வெளியீடு!

சத்தா பச்சா திரைப்படம் பிப்ரவரி 19 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Feb 2026 6:50 pm

'மூன்று முறை பட்ட அவமானம்'.. இறுதியாக ஸ்காட்லாந்தை வீழ்த்தி புது சாதனை படைத்த இங்கிலாந்து அணி!

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணி எளிய வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், டாம் பன்டன் அபாரமாக செயல்பட்டு, 41 பந்தில் 63 ரன்களை எடுத்து மேட்ச் வின்னராக இருந்தார்.

சமயம் 14 Feb 2026 6:48 pm

மன்னாரில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 50 கிலோ ஹஷீஷ் மீட்பு!

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 50 கிலோகிராமுக்கும் அதிகமான ஹஷீஷ் போதைப்பொருட்களுடன்… The post மன்னாரில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 50 கிலோ ஹஷீஷ் மீட்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Feb 2026 6:47 pm

நாகினியாக மாறிய பெண் ; அறையில் கிடந்த பொருட்களால் திகிலில் உறைந்த கிராமம்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், அவுரையா (ஔரையா) மாவட்டம், சிங்கனூர் (சிங்கன்பூர்) கிராமத்தில் நாகினியாக மாறிய பெண் காதலனுடன் ஓட்டமெடுத்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியடைச் செய்தது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்ள் குறிப்பிட்டுள்ளதாவது, உத்தர பிரதேச சிங்கனூரின் ரீனா என்ற இளம்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்றார். ஆடைகள், வளையல்கள், குங்குமம் மறுநாள் காலையில் அவர் அறையிலிருந்து வெளியே வராததால், பெற்றோர் சந்தேகம் அடைந்து அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு ரீனா இல்லை. […]

அதிரடி 14 Feb 2026 6:30 pm

மதுரோவை பிடிக்க களமிறங்கிய AI! அறத்தை இழந்ததா அமெரிக்கா?

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் (Nicolas Maduro) கைது செய்ய அமெரிக்காவின் பென்டகன் (Pentagon) மேற்கொண்ட அதிரடி இராணுவ… The post மதுரோவை பிடிக்க களமிறங்கிய AI! அறத்தை இழந்ததா அமெரிக்கா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Feb 2026 6:11 pm

திரிஷா குறித்து நயினார் பேச்சு சர்ச்சை பேச்சு.. – குஷ்பூ மௌனம் காப்பது ஏன்? வலுக்கும் குரல்கள்!

நடிகை திரிஷா குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது இதற்கு அக்கட்சியை சேர்ந்த குஷ்பூ கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசி பொருளாகியுள்ளது.

சமயம் 14 Feb 2026 5:59 pm

காதலர் தினத்தில் கணவர் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்களின் அழகான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Feb 2026 5:45 pm

‘இந்திய வீரர்களுடன்’.. கைகுலுக்க தயாரா? பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கொடுத்த ‘சஸ்பன்ஸ்’ பதில்!

இந்திய வீரர்களுடன் கை குலுக்குவீர்களா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பதில் அளித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான திட்டங்கள் குறித்தும் சல்மான் அகா பேட்டிகொடுத்தார்.

சமயம் 14 Feb 2026 5:37 pm

கல்யாண ஏக்கத்தில் 90’ஸ் கிட்ஸ்.. வாலிபர்களை கடத்தி, கட்டாய திருமணம் செய்து வைக்கும் கும்பல்.. எங்கே தெரியுமா..?

பாட்னா, பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் “கட்டாய திருமணம்” தொடர்பான ஒரு வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பீகார் போலீசில் சேரத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு, போதைப்பொருள் கொடுத்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு (பிப்ரவரி 7, 2026) நடந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞனின் பெயர் நிதிஷ் குமார் என்று தெரிகிறது. பட்டதாரியான இவர் போலீஸ் […]

அதிரடி 14 Feb 2026 5:30 pm

மருதமுனையில் “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” நூல் வெளியீடு

மருதமுனையில் “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” நூல் வெளியீடு மேஜர் டிலான் ஷஹி மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் ஏ.ஆர். அஹமட் நபாயிஸ் அவர்களின் 7வது நூலான “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” இன்று (14) சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் வெளியிடப்பட்டது. மருதமுனை ஆவணக்காப்பக வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல், உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் மற்றும் அபாயகர மருந்து பயன்பாட்டின் தாக்கங்களை ஆய்வு செய்து, அதிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் […]

அதிரடி 14 Feb 2026 5:25 pm

“விஜய் ஒரு பொருட்டே இல்லை” – ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

சென்னை :திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான சமீபத்திய அறிவிப்பு குறித்து கடுமையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5,000 (மூன்று மாத உரிமைத் தொகை கோடை சிறப்புத் தொகை) வரவு வைக்கப்பட்ட பிறகு, மக்களின் ஆதரவு திமுகவுக்கு மிக அதிக அளவில் உள்ளது என்று அவர் உறுதியாகக் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, “ரூ.5,000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை எப்படி […]

டினேசுவடு 14 Feb 2026 5:20 pm

கல்முனை ஆணையாளரை சந்தித்த உலமாக்கள் : தனியார் வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படுதல், பெருநாள் களியாட்டம் தொடர்பாக இறுக்கம் பேண வலியுறுத்தல்.

மருதமுனை ஜம்மிய்யதுல் உலமாவுக்கும் கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு (12.02.2026) வியாழக்கிழமை கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது புனித ரமழான் மாதம் அண்மித்து வருவதை முன்னிட்டு, மாணவர்கள் இக்காலப்பகுதியை வணக்க வழிபாடுகளில் சிறப்பாக ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் தனியார் வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, ரமழான் காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஆன்மீகச் செயற்பாடுகளுக்கிடையிலான சமநிலையை பேணுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேலும், மருதமுனை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் […]

அதிரடி 14 Feb 2026 5:19 pm

மத்திய முகாமில் சிரமதானப் பணி முன்னெடுப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் டெங்கு உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய முகாம் பகுதியில் அமைந்துள்ள மத்திய முகாம் மஸ்ஜிதுல் முகம்மதிய்யா ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. ஆரோக்கியமான மற்றும் சுத்தமான சூழலை உருவாக்குவதுடன், எதிர்வரும் ரமலான் மாதத்தை வரவேற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சிரமதானப் பணி பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பள்ளிவாசல் வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டதுடன், நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்களும் சுத்தம் செய்யப்பட்டது. இச்சிரமதானப் பணிகள் […]

அதிரடி 14 Feb 2026 5:14 pm

புனித நோன்பை முன்னிட்டு உணவகங்கள் பரிசோதனை –சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

புனித நோன்பை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் இன்றைய தினம் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இச்சோதனை நடவடிக்கையானது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றலுடனும் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் போது உணவகங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டது. அவை உடனடியாகத் திருத்தப்பட்டன. மேலும், வாழைப்பழக் குலைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு களஞ்சிய அறை மிக மோசமான சுகாதார நிலையிலிருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அங்கிருந்த வாழைக்குலைகள் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு […]

அதிரடி 14 Feb 2026 5:05 pm

நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. விஜய் பற்றிய பேச்சு.. வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி சுதா

தவெக தலைவர் விஜய் நேற்றைய தினம் சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில், அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருடைய பேச்சுக்கு பல கட்சியை சார்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்பி சுதா, நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமயம் 14 Feb 2026 4:59 pm

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். கைது இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் அப்பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் கொல்லஹல்லி பகுதியில் வாடகை வீட்டில் தம்பதிபோல் வசித்து வந்தனர். சமீபகாலமாக தாங்கள் மகிழ்ச்சியாக உறவில் ஈடுபடுவதற்கு இடையூறாக இருப்பதாக, குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு வைத்து தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர் அதுமட்டுமன்றி வேலைக்குச் செல்லும்போது குழந்தையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றும் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து சூடு வைத்ததால் உடல் முழுவதும் காயமான குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எழிலரசி சேர்த்துள்ளார். குழந்தையின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் தெரிந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பாட்டி புகார் கொடுத்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அய்யப்பனையும், உடந்தையாக இருந்த தாய் எழிலரசியையும் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் தருமபுரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விகடன் 14 Feb 2026 4:59 pm

அரசுக்கு புதிதாக வரும் நெருக்கடி.. வி.ஏ.ஓ.க்கள் தீர்மானம்.. அவர்களின் கோரிக்கை என்ன?

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் உதகையில் இன்று (பிப்ரவரி 14 ஆம் தேதி) நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமயம் 14 Feb 2026 4:58 pm

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதாக கூறிவிட்டு அந்த குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், இது குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். hospital இந்நிலையில், தீவிரமாக தேடி, 5 மணி நேரத்தில் காவல்துறையினர் குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். குழந்தையை கடத்திய பெண் செவிலியர் சீருடை அணிந்து தடுப்பூசி போடுவதாகக் கூறி குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். பிடிபட்ட பெண்ணின் பெயர் மீனாட்சி என்று தெரியவந்திருக்கிறது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்ததால், குழந்தையை எடுத்துச் சென்றதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விகடன் 14 Feb 2026 4:49 pm

அமித் ஷாவை சந்திக்க ரங்கசாமி – தொகுதிப் பங்கீடு பேசுவார்களா?

புதுச்சேரி :புதுச்சேரி முதலமைச்சரும், அகில இந்திய NR காங்கிரஸ் கட்சித் தலைவருமான என். ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு காரைக்கால் மாவட்டத்தில் அமித் ஷா தங்கியுள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது. புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு.சந்திப்பின் போது, பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் […]

டினேசுவடு 14 Feb 2026 4:49 pm

அலாரமாய் மாறிய ஜெப்டோ ஆப்… 3 மணிக்கு ஸ்கெட்ச், 6 மணிக்கு வெற்றி- மும்பையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

மும்பையில் ஜெப்டோ ஆர்டர் மூலம் தங்கையின் அதிகாலை விமானத்தை காப்பாற்றிய அண்ணன் செயல் வைரல் ஆகியுள்ளது.

சமயம் 14 Feb 2026 4:45 pm

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு மகா சிவராத்திரி பூஜை: இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு மகா சிவராத்திரி பூஜை செய்த ரசிகரின் வீடியோ வைரலாகி வரும் நிலையில், மத நம்பிக்கைகளை சினிமாவுடன் ஒப்பிடுவதற்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Feb 2026 4:45 pm

தவெக கூட்டத்தில் உயிரிழந்த சுராஜ்.. உடலை வாங்க மறுப்பு.. தவெகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற சேலம் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் வடமாநில தொழிலாளி சுராஜ் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

சமயம் 14 Feb 2026 4:32 pm

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!'– காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு  கேட்கிறேன்...” புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் தொன்மையான மற்றும் இனிமையான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை என்பதற்காக முதலில் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இப்போது நான் புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, புதுச்சேரியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் எப்படியான வளர்ச்சித் திட்டங்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்பதைக் கூற வந்திருக்கிறேன். மற்றொன்று, புதுச்சேரியை ஏற்கெனவே ஆட்சி செய்தவர்களின் முகத்திரையைக் கிழித்திட வந்திருக்கிறேன். காரைக்கால் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கும் ஆளுநர் கைலாஷ்நாதன் மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாள்தோறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் அந்த அன்றாடத் தாக்குதல் குறித்து அப்போதைய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ வாய் திறக்க மாட்டார்கள். கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தார்கள். நாட்டுக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அதேசமயம் அந்தத் தாக்குதலுக்காக எதிரிகளின் இடத்திற்கே சென்று வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தோம். இரண்டாவதாக, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினோம். ``புதுச்சேரியில் 60% வாக்குகள்... 24 தொகுதிகள்...” இறுதியாக ஆபரேஷன் சிந்தூர் போன்ற துல்லியமான தாக்குதலால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நம் நாட்டுக்குப் பெருமையை மட்டும் தேடித் தரவில்லை, பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறார். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கைச் சரிசெய்து வளர்ச்சிப் பணியைத் தொடங்கியிருக்கிறோம். நம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடந்த 2021 தேர்தலில் 44% வாக்குகளைப் புதுச்சேரி மக்கள் வழங்கினார்கள். அந்த வகையில் வருகின்ற 2026 தேர்தலில் 60% வாக்குகளைப் பெற்று 24 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். பா.ஜ.க பொதுக்கூட்டம் புதுச்சேரியை இதற்கு முன்பு ஆட்சி செய்த நாராயணசாமி மிக மோசமாக ஆட்சியை நடத்தினார். அந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலால் ஒட்டுமொத்த புதுச்சேரிக்கும் சீர்குலைவு ஏற்பட்டது. புதுச்சேரியைக் காந்தி குடும்பத்துக்கான ஏ.டி.எம். இயந்திரமாக மாற்றி வைத்திருந்தார் நாராயணசாமி. கல்வி நிலையங்களை விற்ற அவர், எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைக் கூட ஏலம் விட்டுவிட்டார். அவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. போக்குவரத்து மாஃபியாக்களுக்குப் புதுச்சேரியை முழுமையாகத் திறந்துவிட்டவர் நாராயணசாமி. ``ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி...” வளர்ச்சித் திட்டங்களுக்காகப் புதுச்சேரிக்குக் கொடுக்கப்பட்ட நிதியில், சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு அவர் ஊழல் செய்திருப்பது சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. ரூ.15,000 கோடி என்பது புதுச்சேரி மாநிலத்தின் மூன்று ஆண்டுகளுக்கான பட்ஜெட் தொகை. அவரது ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் புதிதாக ஒரு தொழிற்சாலைகூடத் தொடங்கப்படவில்லை. நம்முடைய ஐந்து ஆண்டுகால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதுடன், சுயமாகச் செயல்படும் ஓர் அரசை உருவாக்கியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முக்கியத் துறைகளில் நாம் கவனம் செலுத்த இருக்கிறோம். நாராயணசாமி ஒன்று, புதுச்சேரி மீனவர்களின் பொருட்கள் உலக சந்தைகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது. இரண்டாவது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான இடமாகப் புதுச்சேரி மாநிலத்தை மாற்றுவது. அதன்மூலம் புதுச்சேரி இளைஞர்கள் அதிக அளவு வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதுச்சேரியில் ஏற்கெனவே ஜோஹோ அமைப்பு தங்களுடைய சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. அதேபோல் எஸ்.ஆர். நிறுவனம் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் லேப்டாப்கள் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருக்கிறது என்றார். புதுச்சேரி: ``பள்ளி மாணவர்கள் லேப்டாப் கொள்முதலில் ரூ.90 கோடி ஊழல்” – `பகீர்’ கிளப்பும் நாராயணசாமி

விகடன் 14 Feb 2026 4:32 pm

நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனையில் சீனாவின் பாகுபலி ராக்கெட் வெற்றி

பீஜிங், சீனா வரும் 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஹாய்னான் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து “பாகுபலி” ரக ராக்கெட் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ராக்கெட் ஏவப்படும்போது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக பிரித்து அழைத்து செல்லும் ‘அபார்ட் சிஸ்டம்’ வெற்றிகரமாக செயல்பட்டது. இதில் விண்கலம் பாராசூட் மூலம் கடலில் பாதுகாப்பாக இறங்கியது. அதேபோல், ராக்கெட்டின் முதல் அடுக்கு திட்டமிட்டபடி செங்குத்தாக கடலில் […]

அதிரடி 14 Feb 2026 4:30 pm

ஈரானுக்கு ஒரு மாத காலக்கெடு! பயங்கர விளைவு என எச்சரிக்கை –

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசுக்கு மிகக்… The post ஈரானுக்கு ஒரு மாத காலக்கெடு! பயங்கர விளைவு என எச்சரிக்கை – appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Feb 2026 4:25 pm

இலங்கையில் 10% சதவீதமானோருக்கு சிறுநீரக நோய் இருப்பதே தொிவதில்லை

இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10% சதவீதமானோர் தங்களுக்கு அந்த நோய் இருப்பதை அறியாமலேயே இருப்பதாக சுகாதார… The post இலங்கையில் 10% சதவீதமானோருக்கு சிறுநீரக நோய் இருப்பதே தொிவதில்லை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Feb 2026 4:18 pm

“வரலாறு மாறாது… ஆனால் நாளை புதிய நாள்!” – சல்மான் ஆகா நம்பிக்கை!

டெல்லி : T20 உலகக் கோப்பை 2026-இல் நாளை (பிப்ரவரி 15) கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா vs பாகிஸ்தான் மெகா போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா (Salman Ali Agha) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அரசியல் பதற்றங்கள் மேலோங்கியிருக்கும் இந்த போட்டியில், கிரிக்கெட்டின் ஆவியை (spirit of cricket) மதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையேயான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருப்பதால், போட்டி வெறும் விளையாட்டாக மட்டுமே […]

டினேசுவடு 14 Feb 2026 4:15 pm

திருச்சியில் பயங்கரம்.. 3 நாள் பச்சிளம் குழந்தை கடத்தல்- 5 மணி நேரத்தில் போலீஸ் மீட்டது எப்படி?

திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணியை நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்

சமயம் 14 Feb 2026 4:14 pm

யாழில் பொலிஸார் பயத்தில் அரங்கேறிய சம்பவம்; பறிபோன பல உயிர்கள்

யாழ்ப்பாணத்தில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள், நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் வருவதை அறிந்த உரிமையாளர்களால் ஈவிரக்கமின்றி உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் 144 புறாக்கள் நெடுந்தீவுக்குக் கடத்தி வரப்பட்டதாகவும், அவற்றை பகுதிகளாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயில் கருகிய 50 இற்கும் மேற்பட்ட புறாக்கள் முதற்கட்டமாக 44 புறாக்களை குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது கடற்படையினர் அவற்றை வழிமறித்து மூவரைக் […]

அதிரடி 14 Feb 2026 4:13 pm

நாளை திறக்கப்படுகிறது மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்… இனி போக்குவரத்து நெரிசல் குறையும்!

சர்தார் படேல் சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை (OMR) ஆகியவற்றை இணைக்கும் பாதையில் தமிழக அரசு சார்பில் இருவழித்தட நாளை சாலை மேம்பாலம் திறக்கப்படள்ளது.

சமயம் 14 Feb 2026 4:03 pm

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடிப்பார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம். இதனால், NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் சூழ்ச்சி செய்ய பார்க்கிறார்கள். அதையும் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சொல்லக்கூடிய அளவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரவேண்டிய மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால், அதையும் சேர்த்து யாரிடம் சொல்லாமல் உடனடியாக 5,000 ரூபாயை அறிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தர வேண்டும் என முதலமைச்சரும், துணை முதல்வரும் சொல்லியுள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வந்து சென்றதால் தான் நாங்கள் 40 இடங்களை தக்க வைத்தோம். அதேபோல், அவர்கள் அடிக்கடி வந்தால் கடந்த தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 இடங்களை கடந்து வெற்றி பெறுவோம். தி.மு.க-வுக்கு எதிராக என்.டி.ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களின் தேர்தல் ஸ்டன்ட்டைக் காட்டுகிறது என்றார்.

விகடன் 14 Feb 2026 4:01 pm

⚖️ “Nuggy”கொலை வழக்கு: கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் (Liverpool Crown Court) நேற்று உணர்ச்சிகரமான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. 36 வயதான தந்தை… The post ⚖️ “Nuggy” கொலை வழக்கு: கொலையாளிக்கு ஆயுள் தண்டனை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Feb 2026 3:53 pm

“விஜய் உதவி செய்ய வேண்டும்” – உயிரிழந்த நிர்வாகியின் குடும்பம் கோரிக்கை!

சென்னை : சேலம் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 13, 2026) தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் (37) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சேலத்தில் வெள்ளி பட்டறை தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கூட்டத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு (மாரடைப்பு அல்லது வெயில் தாக்கம் உள்ளிட்ட காரணங்கள்) காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயிரிழந்த சூரஜின் உடலை […]

டினேசுவடு 14 Feb 2026 3:45 pm

காணொளி தளத்தில் வரவேற்பு கிடைக்காத விரக்தி: ஸ்டுடியோவை எரித்த இளைஞர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் யூடியூப் வீடியோக்களுக்கு போதிய பார்வைகள் கிடைக்காத விரக்தியில், இளைஞர் ஒருவர் தனது ஸ்டூடியோவிற்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Feb 2026 3:45 pm

மன்னார் கடலில் அதிரடி: போதைப்பொருள் கடத்தல் படகு சுற்றிவளைப்பு; இருவர் கைது!

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை கடற்படையினர் இன்று அதிரடியாக சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளனர். மன்னார்… The post மன்னார் கடலில் அதிரடி: போதைப்பொருள் கடத்தல் படகு சுற்றிவளைப்பு; இருவர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Feb 2026 3:36 pm

தாய்லாந்து: பியூ தாய் கட்சியுடன் கூட்டணி ஆட்சியமைக்கும் பிரதமா்

தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தோ்தலைத் தொடா்ந்து, பிரதமா் அநுதின் சா்ன்விராகுல் தலைமையிலான பூம்ஜெய்தாய் கட்சி மற்றும் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவு பெற்ற பியூ தாய் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாக அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. தோ்தல் முடிவில் பூம்ஜெய்தாய் கட்சி 193 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை (251 இடங்கள்) அக்கட்சியால் தனித்துப் பெற முடியவில்லை. இந்நிலையில், தோ்தலில் 74 இடங்களைப் பெற்று மூன்றாவது […]

அதிரடி 14 Feb 2026 3:30 pm

Talangama – Akkuregodaவில் சட்டத்தணி தம்பதிகள் மீதான துப்பாக்கிச் சூடும் கொலையும் பாதாள உலக மோதலா?

இலங்கையின் Talangama – Akkuregoda பகுதியில் நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில், பல்பொருள் அங்காடி முன்பு நிறுத்தப்பட்டிருந்த… The post Talangama – Akkuregodaவில் சட்டத்தணி தம்பதிகள் மீதான துப்பாக்கிச் சூடும் கொலையும் பாதாள உலக மோதலா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Feb 2026 3:22 pm

விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல அவசியமில்லை - செல்லூர் ராஜூ பேச்சு!

விஜய் குறித்து நான் தனியாக பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

சமயம் 14 Feb 2026 3:17 pm

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு' அரசியல் ஆடுபுலி 05 ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்கியுள்ளனர். கைகூடாத கனவு இதே போன்று 1952, 1980, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டன, ஆனால், கைகூடவில்லை. தமிழ்நாட்டு அரசியலில் இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த முதல் பொதுத்தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைந்திடும் வாய்ப்பு உருவானது. 1952 இல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு மூன்று மாத காலம் ஆட்சி அமைக்காமல் காத்திருந்தார்கள். ஒருவழியாக அரசியலே வேண்டாமென்று ஒதுங்கி இருந்த ராஜாஜி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 62 சட்டமன்ற உறுப்பினர்களோடு, உருவாக்கிய கூட்டணி அமைச்சரவைக் கனவு கைகூடவில்லை. தனிப்பெரும்பான்மை இல்லாமல், பிற கட்சிகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. 152 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது 200 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. அப்போது, ராஜாஜி அமைத்ததும் கூட்டணி அமைச்சரவை போன்றுதான். காமன்வீல் கட்சியைக் கலைத்துவிட்டு எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர் நிலவருவாய் துறையின் அமைச்சரானார். அக்கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களாக மாறினர். சிறிதுகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் 19 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியாக மாறினார்கள், அக்கட்சித் தலைவர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி உள்ளாட்சித் துறை அமைச்சரானார். ராஜாஜி ராஜாஜி அமைச்சரவையிலும், காமராஜர் அமைச்சரவையிலும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக மாறிய பின்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1980 தேர்தல் 1980 சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆடுபுலி ஆட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது. எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவோடு, இந்திய கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், மக்கள் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி, கவாய் குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ருசித்த திமுக – காங்கிரஸ் கூட்டணி அப்படியே தொடர்ந்தது. முஸ்லீம் லீக் கட்சி, தேசிய பார்வர்ட் பிளாக், பசும்பொன் தேவர் கட்சி, உழைப்பாளர் கட்சி, சக்திதாசன் இந்தியக் குடியரசுக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக் முன்னணியின் மற்றொரு பிரிவு உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியை ஆதரித்தனர். திமுக 109 தொகுதிகளிலும், காங்கிரஸ் 109 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஜனதா கட்சி 95 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. சமபலத்தோடு போட்டியிட்ட திமுக கூட்டணியில் யார் முதலமைச்சர் என்று பேச்சு எழுந்தது. திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எம்.பி.சுப்பிரமணியம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். திமுக, காங்கிரஸ் எந்தக் கட்சி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்களோ, அந்தக் கட்சிக்கு முதல்வர் பதவி என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்கினர். `கருணாநிதி தான் முதலமைச்சர்' - அறிவித்த இந்திரா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளர்களான ஆர்.வெங்கட்ராமன், ராம் கோபால் ரெட்டி போன்றவர்களும், ”தேர்தலுக்குப் பின்னர் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்” என்றார்கள். இதற்கிடையே, திமுகவின் வேண்டுகோளை ஏற்ற இந்திரா காந்தி, தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் கருணாநிதி தான் முதலமைச்சர் என்று அறிவித்தார். ஆனால், அமைச்சரவையில் காங்கிரஸ் பங்களிப்பது பற்றி, வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. 1980 மே 28 முதல் மே 31 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 1 அன்று அதிமுகவுக்கு சாதகமான முடிவுகளைத் தந்தது. ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் வென்று, மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். 128 இடங்களில் வென்ற அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. திமுக 38, காங்கிரஸ் 30 இடங்களில் மட்டுமே வென்றனர். தமிழக அரசியலில் இந்த முறையும் கூட்டணி ஆட்சி அமைத்திடும் கனவு கைவிட்டுப் போனது. கருணாநிதி - அண்ணா மைனாரிட்டி திமுக ஆட்சி 2006 ஆம் ஆண்டில், திமுக ஆட்சி அமைத்தாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுகவின் 96 உறுப்பினர்களோடு, காங்கிரஸ், பாமக ஆதரவு கிடைத்ததால் ஐந்தாண்டு காலம் திமுகவால் ஆட்சியை நடத்த முடிந்தது. இந்த காலகட்டத்தில்தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா விமர்சனம் செய்து வந்தார். 2006 – 2011 ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் போது, அவ்வப்போது அமைச்சரவையில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர். 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது, ஆட்சியில் பங்கு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில், “காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் ஆட்சியில் பங்கு பெறுவோம், முதன்மையான இடத்தில் இருப்போம்” என்று வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மத்திய அரசின் அமைச்சரவையில் திமுக எம்பிக்கள் அமைச்சர்களாக இருந்தனர். அதனால், திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில்தான் இருந்தது. திமுகவோடு கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியில், மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், கே.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. திமுகவின் சார்பாக, அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோரைக் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. அதிக தொகுதிகள் கேட்க வேண்டும், ஆட்சியில் பங்குபெற வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, 2011 பிப்ரவரி 20 ஞாயிறு அன்று மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் ஆட்சியில் பங்கு என்பதை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. `கூடுதல் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தையைத் தொடரலாம்' என்றனர். தொகுதிப் பங்கீட்டு குழுவினர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை முடிவுகளை விளக்கிச் சொன்னார்கள். காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு திமுக ஆட்சியில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புவதாகச் சொன்னார். கே.வி.தங்கபாலு காங்கிரஸின் ஆடுபுலி ஆட்டம்! திமுகவோ கடந்த 2006 தேர்தலில் 132 இடங்களில் போட்டியிட்டு, 96 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதனால் பெரும்பான்மை இடங்களான 117 கூட கிடைக்கவில்லை. அப்படியொரு சூழ்நிலை வந்துவிடக் கூடாது. அதனால், 2011 தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிடவேண்டுமென்று விரும்பினார்கள். திமுக கூட்டணியில் முதல் ஆளாக இணைந்திருந்த பாமக 31 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் போட்டிருந்தது. மீதமுள்ள 203 தொகுதிகளில் பிற கட்சிகளுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும். கூட்டணிப் பேச்சுவார்த்தை டெல்லியிலும் மறைமுகமாகத் தொடர்ந்தது, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, டெல்லியில் 2011 மார்ச் 8 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, ஆட்சியில் பங்கு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரவை தொடர்பாக தமிழகத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திமுகவோடு முடிவெடுப்போம் என்றும் கூறினார். சிபிஐ ஆனால், 2011 மார்ச் 11 அன்று திடீர் திருப்பமாக தமிழக அரசியலில் தேசியக் கட்சியான காங்கிரஸ் ஓர் ஆடுபுலி ஆட்டத்தை அரங்கேற்றியது. பிப்ரவரி 18 அன்று கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிப்ரவரி 20 அன்று திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதே போல மார்ச் 11 அன்று திமுக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, சிபிஐ விசாரணை அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நான்காவது நாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளோடு கருணாநிதி நேர்காணல் செய்து கொண்டிருந்தார். 2001: தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர்; `கிங் மேக்கர்' TTV; OPS எனும் நான்.! | அரசியல் ஆடுபுலி 03 மற்றொரு பகுதியில் திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அதே, அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கும் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து கலைஞர் டிவி இயக்குநர்களான அமிர்தம், தயாளு அம்மாள் ஆகியோரும் வந்தடைந்தனர். சிறிது நேரத்தில் 10.45 மணிக்கு டி.எஸ்.பி. , பெண் அதிகாரிகள் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் குழு அண்ணா அறிவாலயம் வந்தனர். மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்தின் பேராசிரியர் ஆய்வு நூலகத்தில் வைத்து தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தினர். திமுக - காங்கிரஸ் தொலைக்காட்சி அலுவலகத்தில் கனிமொழியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மூன்று மணி நேரமாக இந்த விசாரணை தொடர்ந்தது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் ஒரு பகுதியில் வேட்பாளர் நேர்காணல், இன்னொரு பகுதியில் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, மற்றொரு பகுதியில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணை என்று அறிவாலயமே தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் பிரதிநிதியாக ப.சிதம்பரம் இருந்தார். உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் தலைமையின் கீழ் செயல்படும் சிபிஐ அதிகாரிகள் இன்னொரு அறையில் திமுக தலைவரின் மனைவி மற்றும் மகளிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். விசாரணை முடிந்து சிபிஐ அதிகாரிகள் வெளியேறிய பின்னர் அறிவாயலம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவித்தனர். 60 முதல் 80 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் கிடைத்தது என்றனர். ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி அதன்பிறகு பேசவில்லை. சர்க்காரியா போய் ரே வந்தது; அதிமுக காங்கிரஸ் சேர்ந்தது! - திருப்பம் தந்த திருப்பத்தூர் | ஆடுபுலி 04 எடுபடாத வாதம் - ஆட்சியில் பங்கு! ஆனால், 2011 ஏப்ரல் 1 அன்று சேலத்தில் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசும்போது, ``திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஆவதுதான் எங்களது இலக்கு, ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து, தேர்தல் முடிந்தவுடன் பேசுவோம்” என்று கூறினார். ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அதிமுக அணியில் அதிக இடங்களைப் பிடித்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆட்சியில் பங்குபெறும் எண்ணம் இல்லையென்று அறிவித்தார். அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்கட்சியாகவும் செயல்பட்டனர். இந்த முறையும் தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி அமைச்சரவைக் கனவு கைகூடவில்லை.! இம்முறை கைகூடுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்)

விகடன் 14 Feb 2026 3:01 pm

நம்பிக்கை விருதுகள் 2025: சாதனை மனிதர்கள், இளைஞர்களுக்கு மகுடம் சூடும் ஆனந்த விகடன்! | Live

பெருந்தமிழர் விருது நம்பிக்கை விருதுகளின் உச்ச விருது 'பெருந்தமிழர் விருது'. 2025-ம் ஆண்டிற்கான பெருந்தமிழர் விருதைப் பெறுகிறார் எஸ்.வி.ராஜதுரை. இவரைக் குறித்துத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். 2025-ன் டாப் 10 இளைஞர்கள் யார்? 2025-ம் ஆண்டின் டாப் 10 இளைஞர்கள் விருதுகளைப் பெறப் போவது யார் என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். யார் யாருக்கு மகுடம்? 2025-ம் ஆண்டிற்கான டாப் 10 மனிதர்கள் விருதுகள் யார் யாருக்கு செல்கின்றன? இதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்! இன்று 'நம்பிக்கை விருதுகள், 2025' ஒவ்வொரு ஆண்டும், சாதனை மனிதர்களுக்கு மகுடம் சூட்டிக் கொண்டாடி வருகிறது - ஆனந்த விகடனின் 'நம்பிக்கை விருதுகள்' மேடை. இந்த ஆண்டும் இந்தக் கொண்டாட்டம் தொடர்கிறது. ஆம்... 2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகள் இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது.

விகடன் 14 Feb 2026 2:53 pm

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ‘ஆக்கோ’கூட்டணி: பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’பட சிறப்பு ப்ரோமோ வைரல்

காதலர் தினத்தை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் - அனிருத் கூட்டணியின் 'எனக்கென யாரும் இல்லையே' பாடலின் புதிய ப்ரோமோ 11 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Feb 2026 2:50 pm

What To Watch: 'TTT'முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் &ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், சீரிஸ்களின் லிஸ்ட். 'மை லார்ட்' (தமிழ்) சசிகுமார், சைத்ரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்'. ராஜு முருகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரித்திருக்கிறது. இந்தப் படம் இந்த வாரம் திரையரங்குகளில் (பிப்.13) வெளியாகியிருக்கிறது. பூக்கி (தமிழ்) விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி' (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். 'பூக்கி' (Pookie) படம் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. My Lord Movie மைலாஞ்சி (தமிழ்) அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மைலாஞ்சி’. சிங்கம்புலி,முனீஷ் காந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகி ஆக கிரிஷா க்ரூப் நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதைத் தவிர தமிழில் ‘மின்னலே’, ‘மௌனம் பேசியதே’, ‘காதலர் தினம்’, ‘உயிருள்ள வரை உஷா’ போன்ற படங்கள் ரீ- ரிலீஸூம் செய்யப்பட்டிருக்கிறது. Couple Friendly ( தெலுங்கு): அஸ்வின் சந்திரசேகர் கதை ,திரைக்கதை எழுதி இயக்க சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி , யோகி பாபு , லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘Couple Friendly’. இண்ட்டீரியர் டெக்ரேசன் டிசைனர் ஆக சென்னையில் வாழும் நாயகன் நாயகியை சந்தித்ததும் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் கதை. Funky (தெலுங்கு): கயாடு லோஹர் நாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை கே.வி அனுதீப் இயக்கி இருக்கிறார். தெலுங்கு படமான ‘Funky’ தமிழ் டப்பிங்கிலும் வெளியாகிறது. ஓ ரோமியோ (இந்தி): விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், ஷாஹித் கபூர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘ஓ ரோமியோ’ (O’ Romeo). திரிப்தி திம்ரி, தமன்னா, திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. சீதா பயணம்: ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் இது. அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகி ஆக நடிக்க அர்ஜூனும், நடிகர் துருவா சர்ஜாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. Seetha Payanam Movie வூதரிங் ஹைட்ஸ் (ஹாலிவுட்): எமரால்ட் பென்னெல் இயக்கத்தில் மார்கோட் ராபி மற்றும் ஜேக்கப் எலோர்டி நடிப்பில் உருவாகியுள்ள 'வூதரிங் ஹைட்ஸ்' படம் இந்த வாரம் (பிப்.13) வெளியாகி இருக்கிறது. ஓடிடி ரிலீஸ்கள்: 1.⁠ ⁠அநாகாநாகா ஒரு ராஜு - Netflix - February 11, 2026 2.⁠ ⁠மனா ஷங்கர வரபிரசாத் காரு - ZEE5 - February 11, 2026 3.⁠ ⁠தலைவர் தம்பி தலைமையில் - Netflix - February 12, 2026 4.⁠ ⁠பேபி கேர்ள் - Sony LIV - February 12, 2026 5.⁠ ⁠கோஹ்ரா சீசன் 2 - Netflix - February 11, 2026 6.⁠ ⁠தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் - JioHotstar - February 13, 2026 7.⁠ ⁠கிராஸ் சீசன் 2 - Netflix - February 11, 2026

விகடன் 14 Feb 2026 2:47 pm

விஜயை வம்பிழுத்த நயினார் நாகேந்திரன்…கண்டனம் தெரிவித்த சிபிஎம் சண்முகம்

நயினார் நாகேந்திரன் விஜயை விமர்சித்த நிலையில் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சமயம் 14 Feb 2026 2:45 pm

ஒரே நாளில் ரூ.4000 கோடி கடன்? தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகைக்கு நிதி எங்கிருந்து வந்தது?

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தமிழக அரசு மகளிருக்கு ரூபாய் 5000 உரிமை தொகையாக வழங்கியுள்ளது. ஆனால் இந்த தொகைக்காக தமிழக அரசு ஒரே நாளில் 4000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக வெளியாகும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமயம் 14 Feb 2026 2:43 pm

Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி'காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா?

ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக 'பூக்கி' எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இவர்களுக்கிடையில் மோதல் முட்டுகிறது. அந்த மோதல், பிரேக்-அப்பில் வந்து முடிகிறது. பிரேக்-அப்பிற்குப் பிறகு கைலாஷும், தனுஷாவும் காதல் நினைவுகளை மறப்பதற்கும், அதிலிருந்து நகர்ந்து செல்வதற்கும் உடற்பயிற்சி, ஆன்மிகம் என பல்வேறு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். அதே சமயம், இருவரும் வேறொரு காதலையும் தேடிச் செல்கிறார்கள். இறுதியில், கைலாஷுக்கும் தனுஷாவுக்கும் என்ன ஆனது, அவர்கள் பிரேக்-அப் எப்படி பேட்ச் அப் ஆகிறது என்பதுதான் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கும் இக்காதல் படத்தின் கதை. Pookie Review | பூக்கி விமர்சனம் காதல் தோல்வியிலிருந்து வெளிவரத்துடிக்கும் இளைஞனாகத் துள்ளல், பிரிவு, கோபம் எனப் பல்வேறு எமோஷன்கள் கொண்டு இந்தக் காதல் கதையைத் தாங்கியிருக்கிறார் நடிகர் அஜய் திஷன். ஆனால், தேவையின்றி இடையிடையே தலைதூக்கும் மிகை நடிப்பு பக்கங்களைக் கசக்கிப் போட்டிருக்கலாம். நாயகியாக ஆர்.கே. தனுஷா ஏமாற்றம், பிரிவின் வலி, நினைவுகளிலிருந்து மீள முடியாத துயரம் என நடிப்பில் தேவையான டச் தந்து 'பூக்கி'யாக பெயர் வாங்குகிறார். ஆனால், உடல் எடையை உடனுக்குடன் ஏற்றி இறக்கும் லாஜிக் மீறலை (continuity) இவருடைய கதாபாத்திரத்தில் கண்டும் காணாமல் விட்டிருப்பது ஏனோ?! My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்? தந்தையாக பாண்டியராஜன் குறைந்த திரை நேரத்தில் வந்தாலும், எமோஷனலாக ஸ்கோர் செய்கிறார். இவரைத் தாண்டி இந்துமதி மணிகண்டன், ப்ளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் வழக்கமான கதாபாத்திரங்களிலேயே வந்து அட்டெண்டன்ஸ் மட்டும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். Pookie Review | பூக்கி விமர்சனம் வண்ணமயமான ப்ரேம்கள் கொண்டு இந்தக் காதல் கதைக்கு வசீகரிக்கும் திரைமொழியைச் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா. இந்தக் கதைக்குக் கொடுக்க வேண்டிய சுவாரஸ்யப் பின்னல்களைக் கொடுக்காமல் சிக்கல்களுக்குள் சிக்கிச் சுழல வைத்திருக்கிறது விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பு. க்ரீன் மேட் உதவி கொண்டு சாத்தியப்படுத்தியிருக்கும் ஓரிரு கிராபிக்ஸ் காட்சிகளின் தரமும் சுமார் ரகமே! Pookie: ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்- 'பூக்கி' படம் குறித்து விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் பாடல்களில், அவருடைய டிரேட்மார்க் வைப் 'கீ' இடம்பெறாமல் போயிருப்பது கோஸ்டிங் செயல் ப்ரோ! பின்னணி இசையிலும் இந்தக் காதல் கதையை உயிர்ப்புடன் வைக்கத் தவறியிருக்கிறார். ஆங்காங்கே, காட்சிகளை ஸ்டாக்கிங் செய்யும் ஜிங்கிள் வடிவிலான பாடல்களும் செவிகளுக்குத் தொந்தரவையே உருவாக்குகின்றன. Pookie Review | பூக்கி விமர்சனம் மாற்றுப் புரிதல்களால் உண்டாகும் கைலாஷ் மற்றும் ஆழியின் காதல் பிரிவு, என நேரடியாகவே திரைக்கதைக்குள் செல்கிறது படம். அதிலிருந்து காமெடி, காதல் என வலுவிழந்த பரிசலிலேயே பயணிக்கிறது இக்கதை. சமூக வலைதள டிரெண்டிங் மீம் வசனங்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் நகைச்சுவைகளில் சிலது மட்டுமே நம்மைச் சிரிக்க வைக்கின்றன. இடைவெளி இன்றி, இப்படியான வசனங்களைத் திரைக்கதை முழுவதுமாக அடு...க்கி நமக்குச் சலிப்பையே உண்டாக்குகிறார்கள். சமூக வலைதள டிரெண்டிங் வசனங்களையும் முகங்களையும் திரையில் கொண்டு வருவதால் மட்டுமே அது ஜென் ஜி சமூகத்திற்கான படைப்பாகாது இயக்குநரே! காதல் பிரிவிலிருந்து கடந்து செல்ல நாயகன், நாயகி கையிலெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகள் என மீண்டும் மீண்டும் ஒரு இடத்திற்குள்ளாகவே வட்டமிட்டு 'ரெட் ஃப்ளாக்'யே பெறுகிறது இந்த திரைக்கதை. இடையிடையே குடும்ப சென்டிமென்ட், ஆன்மிகம் என்கிற பெயரில் செய்யப்படும் அரசியல் ஏமாற்று ஆட்டம் திரைக்கதையைத் தேவையில்லாத திசைகளுக்கு டேட்டிங் அழைத்துச் சென்றிருக்கிறது. பெண்ணியவாதிகள் குறித்துத் தவறான பிம்பத்தைக் கட்டமைக்கும் வகையில் சித்திரித்திருப்பதும் இந்த 'ஜென் ஜி' காதல் கதை செய்திருக்கும் பூமர் செயல்! காதல் பிரிவில் ஆண்கள், பெண்கள் என இருவரும் பாதிக்கப்படுவதாக முதல் பாதியில் காட்சிப்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் பெண்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் 'ஆண் மைய' பார்வையோடு காட்சிகளை எழுப்பியிருப்பது மோசமான போக்கே! Pookie Review | பூக்கி விமர்சனம் அழுத்தமான திரைக்கதையில்லாமல் சோதனையாட்டம் கண்டிருக்கும் இந்த 'பூக்கி', ஜென் ஜி, ஜென் எக்ஸ், மில்லினியல்கள் என எவருடனும் நெருங்காமல், அந்நியமாகிப் போயிருக்கிறது. மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?

விகடன் 14 Feb 2026 2:34 pm

நீலகிரி: மார்க் டவிடார் என்ற மனிதரும் ரிவால்டோ யானையும்... பாசப் பிணைப்பின் கதை - கலங்கும் மக்கள்!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியின் அடையாளமாக திகழ்ந்து வந்த ரிவால்டோ என பெயரிடப்பட்ட ஆண் யானை, காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்து. மனிதர்களுடனான பிணைப்பு மற்றும் நட்பின் அடையாளமாக அறியப்பட்ட இந்த யானையின் இறப்பு குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரிவால்டோ யானை பழங்குடிகள் மற்றும் சூழலியல் பாதுகாப்பு செயல்பாட்டாளர் ஒடியன் லட்சுமணன், தனது பதிவில், முதுமலை புலிகள் காப்பகத்தில் 1964-ல் சீகூர் ஓடை அருகே டவிடார் என்ற இயற்கை ஆர்வலர் ஒரு வீட்டைக் கட்டினார். அதற்கு 'சீட்டல் வாக்' என்று பெயர் சூட்டினார். மற்ற வீடுகளைப் போல அங்கு வேலிகள் கிடையாது. `யானைகளும் சிறுத்தைகளும் கடந்து போகும் பாதைக்கு நான் ஏன் வேலி போட வேண்டும்?' என்று கேட்டவர் அவர். ​இந்தச் சூழலில்தான் ஒரு குட்டி யானை அந்த வீட்டு வராண்டாவிற்கு அடிக்கடி வரத் தொடங்கியது. மனிதர்கள் தங்களைத் துன்புறுத்த மாட்டார்கள் என்பதை அந்த யானை அங்கேதான் கற்றுக்கொண்டது. டவிடாரின் மகன் மார்க் டவிடார், அந்த இளம் யானைக்கு `ரிவால்டோ' என்று பெயரிட்டார். ​நாளடைவில் அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் ரிவால்டோ ஒரு 'செல்லப்பிள்ளையாக மாறியது.​ 2013-ம் ஆண்டு ரிவால்டோவின் வாழ்வில் ஒரு கருப்பு ஆண்டு. அதன் உற்ற நண்பனான மார்க் டவிடார் காலமானார். மார்க் இல்லாத அந்த வீட்டில், திறக்கப்படாத வாசலில் ரிவால்டோ பல மணி நேரம் திகைத்து நின்ற காட்சிகள் பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியது. மார்க் டவிடார் அதே காலக்கட்டத்தில், ஒரு வேட்டைக்காரனின் கண்ணியிலோ அல்லது காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடியிலோ ரிவால்டோவின் தும்பிக்கையின் நுனி துண்டிக்கப்பட்டது. ஒரு யானைக்கு தும்பிக்கைதான் கை, மூக்கு, வாய் எல்லாம். தண்ணீர் குடிக்கவும், கிளைகளை ஒடிக்கவும் ரிவால்டோ பெரும் போராட்டத்தை சந்தித்தது. ஆனாலும், அது காட்டை விட்டு விலகவில்லை. ​தும்பிக்கை காயத்தால் அவதிப்பட்ட ரிவால்டோவுக்கு மக்கள் வாழைப்பழங்களையும் உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்தனர். 50 வயதைக் கடந்த அந்த முதிய யானை, ஊருக்குள் வந்தாலும் ஒரு குழந்தையைக் கூட மிரட்டியதில்லை. காட்டின் ஆக்ரோஷமான குணம் இல்லை. மாறாக முதிர்ந்த ஒரு மனிதனின் நிதானம் அதனிடம் இருந்தது. வயது முதிர்வு மற்றும் சக யானைகளுடன் ஏற்பட்ட மோதலால் உடல் நலிவுற்ற ரிவால்டோ, கடந்த சில நாள்களாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தது. வாழைத்தோட்டம் கிராமத்தில் படுத்த படுக்கையாக தவித்த ரிவால்டோவுக்கு வனத்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், இன்று அந்த நீலகிரி மலைகளின் காற்று தன் நேசத்திற்குரிய ஜீவனை தழுவிக்கொண்டது. ரிவால்டோவின் மூச்சு நின்றது. மார்க் டவிடார் மற்றும் ரிவால்டோ யானை ரிவால்டோவின் மரணம் ஒரு யானையின் இறப்பு மட்டுமல்ல. மனிதன் நினைத்தால் ஒரு காட்டு விலங்குடன் கூட அன்பால் பிணைக்கப்பட முடியும் என்பதற்கு ரிவால்டோ ஒரு வாழும் சாட்சியாக இருந்தான். மாவனல்லா மற்றும் பொக்காபுரம் காடுகள் இனி ரிவால்டோவின் கம்பீரமான பிளிறலைக் கேட்க முடியாது. ஆனால் ரிவால்டோ விட்டுச் சென்ற அந்த 'அமைதி' என்றும் அந்தப் பாதைகளில் உலவிக்கொண்டிருக்கும். ரிவால்டோவுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி என குறிப்பிட்டுள்ளார்.

விகடன் 14 Feb 2026 2:13 pm

Brands redefine Valentine’s Day 2026 with emotion, experience and everyday meaning

Valentine’s Day 2026 has marked a clear shift in how brands are interpreting love, moving beyond predictable gifts and grand gestures to focus on authenticity, effort and emotional connection. Across categories—from luxury and food to wellness, mobility, fashion and energy—campaigns this season highlight shared experiences, self-care, sustainability and everyday companionship. The narrative centres on modern relationships shaped by intention, individuality and evolving social values, positioning love not as a one-day celebration but as a reflection of meaningful, lived moments. Tanishq Tanishq, the jewellery retail brand from the house of Tata, has introduced the Soulmate Diamond Pair Rings this Valentine’s season, creating a new engagement jewellery category in collaboration with De Beers. The collection features natural diamonds that have been together for over a billion years and are crafted from a single rough diamond that is split into two, symbolising two individuals emerging from one shared origin. Positioned as a reflection of destined togetherness and enduring love, the rings represent relationships built with intention and resilience. The campaign film brings this idea to life by tracing a couple’s journey from their first meeting through moments of joy, conflict and growth, culminating in a beachside proposal with the Soulmate Diamond Pair, later revisited years on as a symbol of lasting commitment. Rooted in Tanishq’s legacy of trust and expertise in natural diamonds, the collection is designed as a meaningful engagement marker that celebrates togetherness while honouring individuality, blending contemporary aesthetics with everyday wearability for modern couples.https://www.youtube.com/watch?v=fxjzbZJFqLs District by Zomato District by Zomato has launched a Valentine’s Day campaign highlighting that real romance is about genuine effort. Featuring Ishaan Khatter , the film takes a light-hearted look at modern dating and encourages partners to go beyond vague “something chill” plans. Through a humorous guide to being a “green flag,” the campaign shows that thoughtful gestures—like planning the day, booking special tables, or adding personal touches—matter more than casual spontaneity. District positions itself as the enabler of such moments, offering reservations at 40,000 restaurants across India, VIP experiences at select venues, and added benefits at over 500 restaurants, making Valentine’s Day planning simple and seamless.https://www.instagram.com/reel/DUpWD2aCImH/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA%3D%3D Tiffany & Co. This Valentine’s Day, Tiffany & Co. celebrated love as more than just a single occasion. Ahead of the day, Saif Ali Khan and Kareena Kapoor Khan visited the Tiffany & Co. boutique in Mumbai, spending time together browsing collections and choosing gifts for each other. Their visit reflected how modern couples mark the season—with comfort, ease and shared meaning rather than grand gestures. Kareena wore pieces from the Tiffany HardWear collection, while Saif styled the Jean Schlumberger by Tiffany & Co. Bird on a Rock brooch, both embodying understated elegance. Founded in 1837, Tiffany & Co. has long been associated with meaningful love stories, and this Valentine’s Day the House reinforced its belief that love is not defined by one moment, but by many shared experiences celebrated over time. Havmor Valentine’s Day proposals often feel predictable, with the same flowers and chocolates repeated every year. This season, Havmor Ice Cream, part of LOTTE India Corporation Ltd, is looking to change that with its #BeMyHeartbeat campaign. Based on the idea that people today value experiences over traditional gifts, the campaign presents ice cream as the heart of the celebration rather than just a dessert. Havmor encourages couples to make their proposals more joyful and memorable with its Heartbeat Red Velvet Ice Cream Cake, now available at Havmor parlours, leading stores, and quick-commerce platforms like Zepto and Blinkit. The campaign is being promoted through a 360-degree media plan across outdoor, print, and digital platforms, highlighted by a striking 3D heart-shaped outdoor installation designed to turn everyday city spaces into share-worthy Valentine’s moments. Go Spiritual As Valentine's Day approaches with its familiar symbols of romance, Go Spiritual, a leading Spiritual & Wellness Organization dedicated to spirituality,mental health, holistic living, and India's profound cultural heritage, today unveils its impactful Go Spiritual Love campaign. This powerful initiative redefines love as an eternal, unconditional, and divine essence that originates from within—while courageously confronting the rising tide of crimes, shattered families, divorces, and deep societal wounds caused by lust masquerading as love.https://www.youtube.com/watch?v=Bygy67HvX14 Tata Power In a category usually focused on savings, subsidies and technical features, Tata Power is highlighting emotion and lifelong trust this Valentine’s season. Through its new campaign for Tata Power Solaroof, built around the line “Yeh On Toh Quality Lifelong,” the brand presents rooftop solar not just as a utility, but as a long-term relationship rooted in permanence and responsibility—values central to Indian homes. Instead of only talking about lower electricity bills, the campaign positions Tata Power Solaroof as a dependable, lifelong partner that protects the home and future generations. Backed by strong credentials including a 25-year module warranty, over 3.5 lakh installations, 4.4 GW+ rooftop capacity and up to 80% bill reduction, the emotional message is reinforced by scale and credibility. As India accelerates rooftop solar adoption under the Government of India’s PM Surya Ghar: Muft Bijli Yojana, which aims to solarize one crore households, the campaign positions Tata Power Solaroof not just as a solar solution, but as a lasting promise of quality and peace of mind.https://www.instagram.com/reel/DUskzXTDpiG/?utm_source=ig_web_copy_link Carysil This Valentine’s Day, Carysil focuses on simple, heartfelt moments instead of grand romantic gestures. Through its new campaign film featuring Chunky Panday and Bhavana Pandey, the brand highlights how genuine intention matters more than perfect planning. In the film, a forgotten plan turns into a thoughtful surprise, with the kitchen becoming a space for warmth and spontaneity rather than stress. Chunky steps confidently into the kitchen, subtly challenging traditional roles, and the story unfolds in a way that feels natural and relatable. The campaign also reflects Carysil’s belief that modern kitchen appliances should be easy and intuitive to use, helping create comfortable spaces where real connections can happen effortlessly.https://www.instagram.com/reel/DUf9WPugR2P/?igsh=MWhnMnBlZWtvZWVmdA== Zappfresh This Valentine’s Day, Zappfresh launched its #FromOurLoveStoryToYours digital campaign to engage consumers in a more personal way. The initiative featured a digital film on the brand’s official Instagram page, showcasing the founders making surprise doorstep deliveries for select Meevaa Foods orders across the city. The activation focused on early buyers of the newly introduced frozen vegetarian snacks range, encouraging product trials through direct interaction rather than traditional promotions. Positioned as an experiential brand-building effort, the campaign aimed to create awareness and stronger consumer connections through meaningful, real-world engagement.https://www.instagram.com/p/DUuZebOE-n4/ Aviva Beauty Aviva Beauty has launched #NoOneToImpress, an Anti-Valentine’s campaign that shifts the focus from showy romance to personal, everyday self-care through skincare. Rolled out across the brand’s social media platforms in early February, the campaign encourages people to see skincare not as a special occasion treat, but as simple, consistent care that supports well-being without the need for validation. As part of the initiative, Aviva invites its community to share their honest, unfiltered skincare routines, with selected participants receiving Aviva Beauty products. The week-long campaign includes a founder-led film, creator collaborations promoting relaxed at-home self-care, a self-gifting edit for Anti-Valentine’s Day, and a giveaway built around the #NoOneToImpress, celebrating skincare as a private and personal ritual rather than a performance. Indriya As Valentine’s Day approaches, love is being celebrated through grand gestures as well as the thoughtful, meaningful moments that make relationships extraordinary. Indriya, Aditya Birla Jewellery, marks this special occasion with its latest campaign featuring Soha Ali Khan and Kunal Khemu, showcasing how jewellery can be the perfect expression of care, thoughtfulness, and enduring affection. Bold Care This Valentine’s season, Bold Care has launched India’s Got Latex, an outdoor campaign that turns regular billboards into an interactive city-wide hunt. In collaboration with Samay Raina, the campaign encourages people in Mumbai to spot any of the four Bold Care billboards, click a photo, and share it on Instagram Stories tagging @bold.care and Samay Raina with the hashtag #IndiasGotLatex. The brand will repost all participating entries, and one lucky couple will win a fully paid international vacation. Through this initiative, Bold Care aims to spark more open conversations around intimacy, boost user-generated content, and position itself as a bold, youth-focused voice in India’s growing sexual wellness space.https://www.instagram.com/p/DUsJSU9ji75/?igsh=MWdsdDVnYWE1cjh0dg== Oben Electric This Valentine’s Day, India’s fastest-growing electric motorcycle manufacturer, Oben Electric, is encouraging riders to make a different kind of commitment, one that reflects the growing need for cleaner urban mobility. Through its #ItsOkayToLeave campaign, the brand draws on the idea of a Valentine’s Day breakup to spark a timely conversation: when something turns toxic, isn’t it okay to move on?https://www.instagram.com/p/DUptReEE_17/?img_index=1https://www.instagram.com/p/DUps08UE8o8/https://www.instagram.com/p/DUptuGdk474/?img_index=1 OYO In a world where deadlines pile up, notifications never stop, and “busy” has become a way of life, staying in love can sometimes feel harder than falling in love. This Valentine’s Day, OYO invites India to slow down and reconnect with what truly matters through its heartfelt new campaign “Stay In Love.” SNITCH This Valentine’s Day, SNITCH has launched its new campaign, Love, Unintended, a short micro-drama series that highlights the simple and natural expressions of love seen in everyday life. Instead of focusing on grand romantic gestures, the campaign showcases quiet, unspoken moments of care and companionship that happen instinctively. Through these stories, SNITCH presents a modern view of masculinity—men who are confident yet emotionally aware, expressing affection through small, thoughtful actions. The visuals are subtle and realistic, with SNITCH apparel blending naturally into the narrative to reflect effortless, everyday style.https://www.youtube.com/watch?v=UMlZKfwoVuw Gozoop & CookieMan India Gozoop Creative, an integrated marketing and creative company, has conceptualised CookieMan India’s Valentine’s Day campaign, ‘Happy Cookiestage’, a cultural idea rooted in the evolving realities of Gen Z dating. The campaign reimagines how young audiences experience intimacy today: fluid, undefined, and intentionally free of labels.https://www.instagram.com/reel/DUNHphqCVMT/ Crossword This Valentine’s season, Crossword Bookstore has introduced a unique in-store experience titled ‘Blind Date with a Book,’ inviting readers to discover their next favourite read through an element of surprise. Live across all Crossword stores until 28th February 2026, the concept features books wrapped without visible covers or titles, accompanied only by playful clue cards hinting at the genre, mood and themes inside. Encouraging customers to trust instinct over familiarity, the initiative transforms book shopping into a fun and thoughtful experience. Complemented by a curated Valentine’s gifting selection, the campaign aims to add a sense of discovery and charm to the festive season while celebrating the joy of reading. Spykar This Valentine’s season, Spykar unveils its latest campaign #LoveAtFirstFit, inviting couples to put both their relationship and style instincts to the test. With an unconventional date idea, Spykar introduces a playful ‘Blindfold Challenge’ across its stores, turning shopping into a special experience. View this post on Instagram A post shared by SPYKAR (@spykarofficial) redBus This Valentine’s Day, redBus is moving beyond couple-centric celebrations to spotlight the reality of breakups with its new campaign, Move On Codes. The initiative turns heartbreak into an opportunity to travel, transforming common breakup reasons into playful coupon codes that friends can use to plan trips together. Inspired by relatable situations, codes such as CalledMeBro, WasBFFWithEx, LeftMeOnSeen, HatedMyDog and CheatedOnMe add humour to post-breakup emotions while positioning travel as a way to cope and move forward. Users can create their own #MoveOnCode, share it with friends, and book journeys together using the same code, with the most creative entry winning a fully sponsored Move On Trip for the creator and everyone who uses it. The campaign is supported by two digital films that use light-hearted metaphors to depict emotional baggage after a breakup, before showing friends setting off on a bus journey together, reinforcing travel as a shared path to moving on. View this post on Instagram A post shared by redBus (@redbusindia) View this post on Instagram A post shared by redBus (@redbusindia) &TV *]:pointer-events-auto scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))] dir=auto tabindex=-1 data-turn-id= equest-6986d9bc-5b64-8320-a225-e26c29a8a338-6 data-testid=conversation-turn-94 data-scroll-anchor= rue data-turn=assistant> &TV has consistently championed stories that reflect the warmth, humour and emotional familiarity of everyday Indian life. This Valentine’s Day, the channel extended that philosophy beyond television with a brand-led initiative titled ‘India ka Love Language,’ celebrating how love is often expressed in Indian households. Built on the insight that affection in India—especially among men—is rarely verbalised but shown through small, meaningful gestures and silent support, the campaign encouraged people to express love in simple, tangible ways. As part of the initiative, &TV conducted an on-ground activation across Delhi where a rose became a subtle symbol of appreciation, prompting individuals to pass it on to someone special without grand declarations. The campaign is closely aligned with Bhabiji Ghar Par Hain! 2.0, a show known for portraying relationships through playful banter and everyday interactions, reinforcing the message, “Aapke pyaar ke liye ek anokha tohfa – Sahi pakde hain!”, as a natural extension of the channel’s core thought.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Feb 2026 2:10 pm

பாரிஸ் ஆர்க் டி ட்ரையம்பில் கத்தி வைத்திருந்த நபரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்

நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் உள்ள ஆர்க் டி ட்ரையம்பில் கத்தியுடன் இருந்த ஒருவர், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்க முயன்ற போது காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுடரை மீண்டும் ஏற்றும் விழாவின் போது இந்தத் தாக்குதல் நடந்தது. பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் பின்னர் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தில் காவல்துறை அதிகாரியும் சிறிய காங்களுக்கு உள்ளார். நெப்போலியன் கால நினைவுச்சின்னம் பாரிஸின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். இது பரபரப்பான சாம்ப்ஸ்-எலிசீஸ் அவென்யூவின் பிரதான சாலைகளை இணைக்கும் சந்தியில் அமைந்துள்ளது.

பதிவு 14 Feb 2026 1:57 pm

“கிறிஸ் கெய்ல் மாதிரி ஆடுறார்!” – அபிஷேக் சர்மாவை ஒப்பிட்ட கபுகெடெரா!

டெல்லி : T20 உலகக் கோப்பை 2026-இல் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நெருங்கி வரும் நிலையில், முன்னாள் இலங்கை வீரர் சமாரா கபுகெடெரா இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு பெரும் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் இந்திய அணியின் T20 வெற்றிகள் பெரும்பாலும் அபிஷேக் சர்மாவை சார்ந்தே இருந்ததாக அவர் கருத்து தெரிவித்தார். அபிஷேக் சர்மாவின் ஆக்ரோஷமான பேட்டிங் ஸ்டைலை, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிரிஸ் கெய்லின் ஆரம்பகால ஆட்டத்துடன் ஒப்பிட்டு […]

டினேசுவடு 14 Feb 2026 1:54 pm

`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?

மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை புகுவிழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசுபவர் கிடையாது. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். திமுக ஐம்பதாயிரம் ரூபாய் அறிவித்தாலும் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்து விடும். விவசாயிகள் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் போராடி கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. தமிழ்நாட்டில் கூலிப்படைகள் உருவாகிற அளவிற்கு போதைப்பொருள்கள் பள்ளிக்கூடங்களின் அருகிலேயே கிடைக்கிறது. அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு விட்டதால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மடை மாற்றி பெண்களின் உரிமை தொகையாக கொடுத்திருக்கிறார்கள். இது தேர்தல் பயத்தையும், தோல்வி பயத்தையும் காட்டுகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாய கூட்டணிக்கு வருவது குறித்து ஓபிஎஸ்-தான் முடிவெடுக்க வேண்டும். அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும் எனச் சொன்னவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்துவிடும். அது யாராக இருந்தாலும் சரி. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் யாரெல்லாம் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்களோ அவர்கள் தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிரிந்து சென்ற அம்மாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இன்னும் ஒரு சிலர் வெளியில் இருக்கிறார்கள். அவர்களும் வர வேண்டும் என்றார்.

விகடன் 14 Feb 2026 1:52 pm

இன்ஸ்டாகிராமில் அனல் பறக்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் வைரல் வீடியோ!

நடிகை பூனம் பாஜ்வா தனது 'poonambajwa555' இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனல் பறக்கும் தனது அன்றாட வாழ்க்கை முறை ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Feb 2026 1:45 pm

என்னை மன்னிச்சிடுங்க.. பாஜக பிரச்சாரத்தில் மேடையில் அமித்ஷா செய்த செயல் - பாஜகவினர் ஷாக்!

காரைக்காலில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பொது மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டு உள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 14 Feb 2026 1:39 pm

ஏழைகளின் இறைச்சி முதல் தீபாவளி பருப்பு வரை! - புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் டாப் 6 பருப்புகள்

உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள், மசாலாக்கள் போன்றவற்றிற்குப் பொதுவாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த புவிசார் குறியீடு இருந்தால் போலியான பொருள்கள் புழகத்திற்கு வர முடியாது. அதேசமயம் உண்மையான மற்றும் தரமான பொருள்கள் பாதுகாக்கப்படும். அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மதிப்பு கிடைப்பதுடன், உற்பத்தியில் லாபமும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அந்த ஊருக்குப் பெயர் கிடைக்கும். இந்த வகையில் இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற டாப் 6 பயறுவகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். புவிசார் குறியீடு நவாப்பூர் தூர் பருப்பு மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள நவாப்பூர் தாலுகாதான் நவாப்பூர் தூர் பருப்புக்குப் பிறப்பிடமாகும். சிறிய வெள்ளை விதைகள் கொண்ட இந்த தூர் பருப்பு, அதிக புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது. தீபாவளி காலத்தில் சந்தைக்கு வருவதால், மக்கள் இதை திவால் தூர் என்று அன்புடன் அழைக்கின்றனர். இது 2016 மார்ச் மாதம் புவிசார் குறியீடு பெற்றது. குல்பர்கா தூர் பருப்பு கர்நாடகாவின் கலபுரகி (குல்பர்கா) மாவட்டத்தின் மண் வளமே இந்த குல்பர்கா தூர் பருப்பு சுவைக்குக் காரணம். மிருதுவான மற்றும் இனிப்பு சுவை கொண்ட இந்த தூர் பருப்பு, 'பட்கா தால்' என்றும் அழைக்கப்படுகிறது. கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், தினசரி உணவுக்கு ஏற்றது. இது 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு பஹாரி தூர் பருப்பு மிருதுவான சுவை மற்றும் நீண்ட காலம் கெட்டுப்போகாத தன்மை உடைய பஹாரி தூர் பருப்பு, உத்தராகாண்ட் மலைப்பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்பு ஆகியவை அதிகம் உள்ளதால், இது ஆரோக்கிய உணவாகப் போற்றப்படுகிறது. பஹாரி மக்கள் இதை 'சௌன்சா' போன்ற பாரம்பரிய முறைகளில் சமைத்து வருகின்றனர். இது 2023 நவம்பரில் புவிசார் குறியீடு பெற்றது. அட்டப்பாடி துவாரா கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பழங்குடி மக்களின் பாரம்பர்ய பயறுதான் அட்டப்பாடி துவரை. பெரிய வெள்ளை விதைகள் மற்றும் கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் நிறைந்த இந்த பயறு, ஊட்டச்சத்து குறைபாடுகளைச் சரிசெய்யும் உணவாகப் பார்க்கப்படுகிறது. இது 2022 ஜூலையில் புவிசார் குறியீடு பெற்றது. கஹத் பருப்பு உத்தராகண்ட் ஹிமாலயப் பகுதியின் இயற்கை மருத்துவ உணவாகக் கருதப்படுவது கஹத் பருப்பு. இதில் இரும்பு மற்றும் புரதம் அதிகம் உள்ளதால், இது ஏழைகளின் இறைச்சி என்று அழைக்கப்படுகிறது. குமாவோனி மக்களின் சமையலில் கஹத் தால், பராத்தா, சூப் போன்ற பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது 2023ஆம் ஆண்டுபுவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் | கோப்புப் படம் தண்டூர் சிவப்புப் பயறு தெலங்கானாவின் தண்டூர் பகுதியில் விளைவிக்கப்படும் இந்த தண்டூர் சிவப்புப் பயறு 22–24% வரை புரதம் கொண்டது. இது மற்ற பயறு வகைகளைவிட மூன்று மடங்கு அதிக மகசூல் தருவதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் விளங்குகிறது. இது 2022ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது. புவிசார் குறியீடு: கடலூர் கோட்டிமுளை கத்திரி உள்ளிட்ட 15 பொருள்களுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

விகடன் 14 Feb 2026 1:37 pm

How Kia Carens Clavis Fits into Today’s Multi-Purpose Vehicle Market

The multi-purpose vehicle (MPV) market has evolved considerably over the last decade. Once defined primarily by space and seating capacity, MPVs today are judged on a broader set of criteria that include comfort, safety, technology, and everyday usability. The Kia Carens Clavis enters this landscape as a model positioned between traditional MPVs and modern SUVs, reflecting how buyer expectations from family vehicles are changing.Rather than focusing only on passenger capacity, the Carens Clavis illustrates how MPVs are adapting to lifestyle-driven use without abandoning their core purpose. The Changing Role of MPVs Historically, MPVs were chosen for their ability to move people efficiently. Sliding doors, flat interiors, and functional cabins were prioritised over design or driving experience. However, as families increasingly use a single vehicle for commuting, travel, and leisure, MPVs are expected to deliver more than just space.The Kia Carens Clavis reflects this shift by combining a three-row layout with design and feature elements more commonly associated with urban SUVs. This repositioning suggests that the MPV category is no longer purely utilitarian but increasingly experience-led. Space and Seating Flexibility Remain Central Despite evolving expectations, space remains the foundation of the MPV segment. The Kia Carens Clavis offers 6-seater and 7-seater configurations, with features such as one-touch electric tumble seats in the second row and 50:50 split, reclining third-row seats that can fold flat when required.This flexibility allows the vehicle to adapt between passenger transport and luggage-heavy journeys, supporting daily school runs as well as longer family trips. Roof-mounted air vents for the second and third rows further underline its focus on occupant comfort across all seating positions. Interior Experience as a Differentiator Modern MPV buyers increasingly evaluate how a vehicle feels inside rather than how many people it can carry. The Carens Clavis places clear emphasis on cabin experience, with features such as a dual panoramic display, ventilated front seats, ambient lighting, and premium upholstery options.These elements indicate how MPVs are moving closer to SUV-like interior standards. For families spending extended periods in the vehicle, interior ambience and ease of use often contribute more to satisfaction than outright performance figures. Technology and Safety Expectations Technology has become a baseline expectation across all vehicle segments, including MPVs. The Kia Carens Clavis integrates digital displays, connected features, and infotainment systems designed to support daily convenience rather than overwhelm users.From a safety perspective, the Carens Clavis gets a comprehensive package including multiple airbags, electronic stability control, all-wheel disc brakes, and ADAS Level 2 with 20 autonomous features on select variants, such as forward collision avoidance, lane keeping assist, and smart cruise control.This level of safety integration reflects how MPVs are now expected to offer the same reassurance as SUVs, particularly for family-oriented buyers. Powertrain Choices for Mixed Usage MPVs today are rarely used only within cities. Long-distance travel, highway driving, and varied load conditions are common. The Carens Clavis addresses this with multiple petrol and diesel engine options, paired with manual and automatic transmissions, allowing buyers to choose configurations based on driving patterns rather than segment stereotypes.This variety aligns with how MPVs are increasingly evaluated—as versatile vehicles capable of handling both routine and occasional demanding use. Positioning Between MPVs and SUVs What distinguishes the Carens Clavis within the MPV market is its crossover positioning. While it retains MPV fundamentals such as three-row seating and flexible interiors, its exterior design, interior finish, and technology place it closer to lifestyle SUVs.This positioning reflects a broader trend where buyers no longer want vehicles that feel purpose-built for a single role. Instead, they prefer multi-role vehicles that blend practicality with comfort and modern design. How Buyers Evaluate MPVs Today Buyers researching MPVs often use digital platforms to compare vehicles beyond basic specifications. On car-buying and comparison platforms such as ACKO Drive, which combine online car purchase with expert reviews and structured comparisons, models like the Carens Clavis are increasingly evaluated for overall usability, safety, and long-term suitability rather than just seating capacity.This indicates that MPV buyers are applying the same scrutiny as SUV buyers, reinforcing how the segment has matured. Implications for the MPV Market The Kia Carens Clavis suggests that the MPV segment is not shrinking but redefining itself. Instead of competing purely on space, modern MPVs are evolving to meet expectations around comfort, safety, and technology while retaining their core advantage of flexibility.This evolution allows MPVs to remain relevant for families who need space but do not want to compromise on driving experience or cabin quality. Conclusion The Kia Carens Clavis fits into today’s multi-purpose vehicle market by bridging the gap between traditional MPVs and modern SUVs. Through flexible seating, enhanced interior experience, advanced safety systems, and diverse powertrain options, it reflects how MPVs are adapting to contemporary buyer needs.As family vehicles continue to evolve, the Carens Clavis demonstrates that the MPV segment remains relevant—not by abandoning its roots, but by expanding its role to suit changing lifestyles.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Feb 2026 1:36 pm

`தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான்'திமுக மாவட்ட செயலாளரின் வாக்குறுதி; குழப்பத்தில் நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி, எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற பல முன்னெடுப்புகளை செய்கிறார்கள். வெற்றியை குறி வைத்து வியூகங்கள் வகுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் எட்டு தொகுதிகளையும் கைபற்ற திமுக தலைமை முனைப்பு காட்டி வருகிறது. மேயர் சண்.இராமநாதன் வீட்டின் சுவற்றில் ஸ்டாலின், உதயநிதி சிற்பம் திமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சீட் கேட்டு காய் நகர்த்துகின்றனர். திமுக தலைமை யாருக்கு சீட் என்பதை இறுதி செய்யும் போது மாவட்ட செயலாளரின் பரிந்துரையும் முக்கியம் என்பதால் எம்.எல்.ஏ-வும், மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரனை வேட்பாளர் ரேஸில் இருப்பவர்கள் மொய்க்கின்றனர். அவரும் உனக்கு தான் சீட்னு ஒவ்வொருவரிடத்திலும் சொல்லி குஷி படுத்தி வருகிறாராம். இதனால் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது தெரியாமல் சஸ்பென்ஸ் நீடிப்பதால் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், `தஞ்சாவூர் தொகுதியில் திமுக-வில் போட்டியிடுவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் பலரும் முட்டி மோதி வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிட்ட டி.கே.ஜி. நீலமேகம் கிட்டதட்ட 45,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை வீழ்த்தினார். இந்த முறை அதிமுக-வில் என்.எஸ்.சரவணன் தான் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டது என்கிறார்கள். சரவணனும் தொகுதிக்குள் வலம் வருவதுடன் சத்தமில்லாமல் பிரச்சாரமும் செய்து வருகிறார். தஞ்சாவூர், திமுக-விற்கு சாதகமான தொகுதி என பேசப்படுவதால் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை செய்தால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர் கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று தொகுதிக்குள் பம்பரமாக சுழல்கிறார். நடிகர் துரை.சுதாகர் தஞ்சாவூர் தொகுதியை திமுக-வின் கோட்டை என்கிறார்கள், அந்த கோட்டையில் 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதையே தனக்கான பாசிட்டிவ் பாயிண்டாக எடுத்து கொண்டு களம் காண காத்திருக்கிறார் அதிமுக சரவணன். திமுக-வை பொறுத்தவரை மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பெரிய பட்டாளமே ரேஸில் உள்ளது. தொடக்கத்தில் இருந்தே மேயர் சண்.இராமநாதன் பெயர் பலமாக அடிப்பட்டது. தன்னுடைய வீட்டின் மாடியில் கட்சிக்கான அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார். அந்த அறையின் சுவற்றில் கருங்கல்லால் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உருவத்தை செதுக்கி பொருத்தியுள்ளார். இதை பாத்து வியந்த பலரும் அவரை பாராட்ட, தலைமுறைகளை கடந்தும் என் வீட்டில் இந்த சுவர் சிற்பம் இருக்கும், ராஜாஸ்தானில் இருந்து ஒரே கருங்கல்லை வாங்கி வந்து சிரத்தை எடுத்து இதை செய்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரும் என் தலைமுறைகளை கடந்தும் எங்களுக்கு தலைவர்கள் என்றாராம். தான் கட்சிக்கான விசுவாசி என்பதை உணர்த்துவதற்காக இராமாநாதன் இதை செய்துள்ளார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி நடிகர் துரை.சுதாகர் பண பலம் படைத்தவர் செலவுக்கு தயங்காதவர். நன்கொடைனு யார் கேட்டாலும் முகழ் சுழிக்காமல் செய்யக்கூடியவர். தனக்கு ஒரு பெயர், கூட்டத்துடன் வலம் வரக்கூடியவர். சினிமா தொடர்பு அதிகம். நடிகர், தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் தொகுதிக்குள் வலம் வரும் தனக்கு நெருக்கமான மேலிட வட்டம் மூலம் சீட்டுக்கு காய் நகர்த்துகிறார். சுதாகருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பேசுகின்றனர். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தஞ்சையில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் கவனம் பெற்றுள்ளார். இம்முறை தன்னை தலைவர் ஸ்டாலின் கைவிட மாட்டார் என்பது மட்டுமே அவரது நம்பிக்கை. பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்! செந்தமிழ்செல்வன் தஞ்சாவூரில் அடையாளமான குடும்பத்தை சேர்ந்தவர். துரை.சந்திரசேகரினின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். துரை.சந்திரசேகரன் பரிந்துரை இவருக்கு இருக்கும் என்கிறார்கள். இப்படியாக பலரும் சீட்டை முன் வைத்தே ஒவ்வொரு வைத்து முன்னெடுப்பை செய்கின்றனர். இதில் சண்.இராமநாதன், துரை.சுதாகர், செந்தமிழ்செல்வன் ஆகியோர் தனி தனியாக சந்திரசேகரனுடன் காரில் அவ்வப்போது ஒன்றாக செல்லும் போது உனக்கு தான் சீட் என்கிறாராம். இப்படி ஒவ்வொருவரிடத்திலும் சொல்ல அவர்கள் தனக்கு தான் சீட் என்கிற நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள். ஆதரவாளர்களுடன் தனியாக இருக்கும் போது ஒவ்வொருவரிடத்திலும் இதை சொல்ல அந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்து விட்டது. இப்பவும் யாருக்கு சீட் கிடைக்கும் என்கிற சஸ்பென்ஸ் நீள்கிறது. இதனால் கட்சியினரும் குழப்பத்தில் உள்ளதாக' தெரிவித்தனர். வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்

விகடன் 14 Feb 2026 1:33 pm

2026 ASCRS Foundation: டாக்டர் அரவிந்த் ஹரிப்ரியா, R.வெங்கடேஷ்க்கு Chang-Crandall மனிதாபிமான விருது!

டாக்டர் அரவிந்த் ஹரிப்ரியா மற்றும் டாக்டர் R. வெங்கடேஷ் அவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான Chang-Crandall மனிதாபிமான விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ASCRS Foundation வாரியம் பெருமையுடன் அறிவிப்பது என்னவெனில், cataract காரணமாக ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்க உதவும் மனிதாபிமான சேவைக்காக இந்த இரு மருத்துவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருது 2017 ஆம் ஆண்டு டேவிட் மற்றும் விக்டோரியா சாங் அவர்களின் நன்கொடையால் நிறுவப்பட்டது. $100,000 பரிசுத் தொகையை அவர்கள் Aravind Eye Care System அமைப்பிற்கு ஒதுக்கியுள்ளனர். அரவிந்த் அமைப்பில் இவர்களின் பயணம் டாக்டர் ஹரிப்ரியா அவர்கள் ஆரம்பத்தில் குழந்தை கண் மருத்துவத்தில் பணியாற்றினார். பின்னர் டாக்டர் ஜி.நச்சியார் அவர்களின் வழிகாட்டுதலால் cataract மற்றும் IOL பிரிவில் சேர்ந்தார். அதிக நோயாளிகள் வருகை தரும் பெரிய அமைப்பில் பணியாற்றுவது, நோயாளிகளுக்காக முறைகளை மேம்படுத்துவது மிகவும் அர்த்தமுள்ள அனுபவமாக இருந்தது என்று அவர் கூறுகிறார். டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் 1997 இல் ரெசிடென்சி முடித்து cataract பிரிவில் சேர்ந்தார். அதிக அளவு அறுவை சிகிச்சைகள் செய்ததுடன், தரத்தை மையமாகக் கொண்டு MSICS தொழில்நுட்பத்தை இளம் மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தார். 2003 இல் புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனை துவங்கியபோது, glaucoma துறையில் சிறப்பு பயிற்சி பெற்று அங்கு பணியில் சேர்ந்தார். கடந்த 23 ஆண்டுகளாக புதுச்சேரியில் சேவை செய்து வருகிறார். சேவை மற்றும் அரவிந்த் முறை அரவிந்த் அமைப்பில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் சுமார் 60% இலவசம் அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது — இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு பார்வை இழப்பைத் தடுக்க உதவுகிறது. மீதமுள்ள 40% நோயாளிகள் கட்டணம் செலுத்துகிறார்கள். அமைப்பின் நிறுவனர் டாக்டர் கோவிந்தப்ப வெங்கடசாமி 1976 இல் அரவிந்தை துவங்கினார். 2026 அதன் பொற்கொடியாண்டு. கிராமப்புற முகாம்கள் மூலம் கண் சிகிச்சையை மக்களுக்கு கொண்டு செல்வதில் அவர் முன்னோடி. பின்னர் நிரந்தர Vision Center முறை அறிமுகமானது. இப்போது 120 க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகின்றன. இம்மாதிரி முறை மூலம் 90% நோயாளிகள் தங்கள் ஊரிலேயே சிகிச்சை பெற்று பார்வை இழப்பைத் தடுக்க உதவப்படும் நிலையில் உள்ளனர். சர்வதேச சேவை LAICO மூலம் உலகின் பல வளர்ந்து வரும் நாடுகளில் மருத்துவமனைகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. கேன்யா, மலாவி, காங்கோ, கானா போன்ற நாடுகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் மருத்துவர்களை பயிற்றுவித்து தன்னிறைவு அடையச் செய்வதே நோக்கம் — இதுவும் உலகளவில் பார்வை இழப்பைத் தடுக்க உதவும் முயற்சி. நிலைத்தன்மை (Sustainability) அரவிந்த் அமைப்பு நோயாளி மையமாக செயல்பட்டாலும், சுற்றுச்சூழலுக்கும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2017 ஆய்வில் அமெரிக்க மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது cataract கழிவு 1/10 முதல் 1/20 வரை குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. டாக்டர் R. வெங்கடேஷ், டாக்டர் அரவிந்த் ஹரிப்ரியா EyeSustain உலகளாவிய முயற்சியில் டாக்டர் வெங்கடேஷ் ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார். தரமான சிகிச்சை, வள சேமிப்பு, மற்றும் நீடித்த மருத்துவ முறை — இவை அனைத்தும் எதிர்கால தலைமுறைகளுக்காக பார்வை இழப்பைத் தடுக்க உதவும் சுகாதார அமைப்பை உருவாக்குகின்றன. அரவிந்த் Cataract Registry மூலம் கோடிக்கணக்கான நோயாளிகளின் தரவு சேகரிக்கப்பட்டு உலகளவில் ஆதாரபூர்வ மருத்துவ அறிவு பகிரப்படுகிறது. நோயாளி தாக்கம் இருவரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். தொலைதூர கிராமங்களில் இலவச அறுவை சிகிச்சை மூலம் பலருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது — இது நேரடியாக பார்வை இழப்பைத் தடுக்க உதவும் மனிதாபிமான பணி. விருது பெறும் மகிழ்ச்சி இந்த விருது தனிப்பட்ட அங்கீகாரம் அல்ல — அரவிந்த் குடும்பத்தின் பணிக்கான உலகளாவிய அங்கீகாரம் என்று இருவரும் கூறுகின்றனர். இந்த நிதி நிலைத்தன்மை, பயிற்சி, தரமான சிகிச்சை ஆகியவற்றை மேம்படுத்த பயன்படுத்தப்படும். ASCRS நியமன குழு தலைவர் டாக்டர் லிசா பார்க் கூறுகையில்: இவர்கள் இருவரும் உலக கண் மருத்துவ துறையில் முன்னோடிகள். ஆயிரக்கணக்கான இலவச அறுவை சிகிச்சைகள் மூலம் தொலைதூர கிராமங்களில் பார்வை இழப்பைத் தடுக்க உதவியுள்ளனர்.

விகடன் 14 Feb 2026 1:31 pm

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 13 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும நிலநடுக்கத்தின் மையப்பகுதி மாகாணத்தின் குஸ்தார் நகரத்திலிருந்து வடகிழக்கே 86 கிமீ தொலைவில் இருந்தது என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக காலை 5.52 மணிக்கு குஸ்தாருக்கு தென்கிழக்கே 75 கிமீ தொலைவில் 33 கிமீ ஆழத்தில் 3.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் […]

அதிரடி 14 Feb 2026 1:30 pm