SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

ஈரானில் ஒரே நாளில் 640 தாக்குதல்கள் ; 68 பேர் உயிரிழப்பு

ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களைக் கொண்ட செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் சிறுவர்களா, பொதுமக்கள் அல்லது இராணுவத்தினரா என்பது குறித்த வகைப்படுத்தல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் ஆரம்பமாகி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், […]

அதிரடி 23 Mar 2026 12:30 am

பிரித்தானியாவில் பெரும் சேவையாற்றி உயிரிழந்த இலங்கை வைத்தியர் ; குடும்பத்திற்கு நேர்ந்துள்ள அவல நிலை

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மனைவி பிரபோத்யா விஜேதுங்க மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த வைத்தியர் வாசீஹரன், அங்குள்ள பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். வதிவிட உரிமை எனினும், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அண்மையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். […]

அதிரடி 23 Mar 2026 12:30 am

ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது தாக்குதல்: பேரழிவு உறுதி –ரஷியா கண்டனம்!

ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது. தலைநகர் தெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம், சனிக்கிழமை(மார்ச் 21) வான் வழி தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலால் கதிவீச்சு அபாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடான்ஸ் அணுசக்தி மையம் மீதான தாக்குதல்களைச் ‘சர்வதேச சட்ட மீறல்’ என்று குறிப்பிட்டு ரஷிய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் மரியா ஸகாரோவா கண்டனத்தைப் […]

அதிரடி 22 Mar 2026 11:30 pm

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாளை (23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களை கருத்திற்கொண்டு இத் தீர்மானம் குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக் கலந்துரையாடலின் பின்பு பாண், பனிஸ் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 22 Mar 2026 11:30 pm

தொடங்கியது கைது வேட்டை!

யாழ்ப்பாணத்திலுள்ள பகுதி நேர பத்தி எழுத்தர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளாhர்.முறைகேடானவகையில் புலம்பெயர் தேசத்திலிருந்து நடைபெற்ற நிதி கைமாற்றத்தின் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக ஊடகநிறுவனங்களின் பேரினை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பாரிய நிதி மோசடிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் போலி முகவர்கள் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் பாரிய நிதி கைமாற்றம் தொடர்பில் கைது அரங்கேறியுள்ள நிலையில் சிவில் அமைப்புக்கள் பேரில் செயற்படும் சிலரும் ஊடகவியலாளர்கள் போர்வையில் நிதி கைமாற்றத்தில் ஈடுபட்ட சிலரும் அடுத்து கைது செய்யப்படலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது.

பதிவு 22 Mar 2026 10:50 pm

ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா எங்கிருக்கிறார்? சிஐஏ தீவிர தேடல்….

ஈரானின் புதிய உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி பொதுவெளிக்கு வராதது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

சமயம் 22 Mar 2026 10:49 pm

தென் கொரிய கார் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து; 10 பேர் பலி ;25 பேர் கவலைக்கிடம்

தென் கொரிய கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் மாயமாகியுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ பற்றியுள்ளது. குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு தீ பற்றியபோது, ​​தொழிற்சாலையில் பணியில் தொழிலாளர்கள் 170 பேர் இருந்தனர் என தென் கொரிய […]

அதிரடி 22 Mar 2026 10:30 pm

தியாகம் செய்ய வேண்டும்!

மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. மார்ச் 24 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D ராஜகருண, இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது ஒரு பாரிய பிரச்சினை. ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கிறோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D ராஜகருண, இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பதிவு 22 Mar 2026 10:20 pm

உள்ளே செல்லும் வலை பதிஞர்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் முகநூலில் பதிவிட்ட சமூக வலை பதிஞர் ஒருவர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் மகள் தொடர்பிலான வலைப்பதிவிற்கே சட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. பேசுபொருளாகியுள்ள விரிவுரையாளர் படுகொலையில் கைதாகியுள்ள அவரது மகளின் சார்பில் நீதிமன்றில் எம்.ஏ.சுமந்திரன் வாதாடவுள்ளதாக செய்திகளை ப்பிய வகையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பதிவு 22 Mar 2026 9:50 pm

48 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும்; ஈரானுக்கு டிரம்ப் கெடு

வாஷிங்டன், வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் பயங்கர போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து, அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து அந்த நாட்டை தாக்கி வருகின்றன. இதனால் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இந்த பயங்கர போரில் தங்கள் உச்சபட்ச தலைவரை முதல் நாளிலேயே இழந்ததுடன், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல தலைவர்களையும் […]

அதிரடி 22 Mar 2026 9:30 pm

“மட்டக்களப்பு நெல்லிக்காடு கிணற்றில் உருக்குலைந்த சடலம்: இளம் தாயைக் கடத்தி வீசிய கொள்ளைக் கும்பல் கைது!”

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம்… The post “மட்டக்களப்பு நெல்லிக்காடு கிணற்றில் உருக்குலைந்த சடலம்: இளம் தாயைக் கடத்தி வீசிய கொள்ளைக் கும்பல் கைது!” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 9:28 pm

சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் படுகொலை – மகள், மருமகன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் தயாளினி திலீபனின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது… The post சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் படுகொலை – மகள், மருமகன் விளக்கமறியலில் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 9:06 pm

படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் இறுதி நிகழ்வை படமாக்க சுமந்திரன் தடை விதிப்பு

விரிவுரையாளரின் பூதவுடல் , எம்.ஏ சுமந்திரன் ,தடை,மகள் யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் நல்லடக்கம்… The post படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் இறுதி நிகழ்வை படமாக்க சுமந்திரன் தடை விதிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 8:45 pm

டெல்லி சென்றால் ஸ்டாலினுக்கு பயமா?அமெரிக்காவே மிரட்டினாலும்..- டிடிவி.தினகரனுக்கு ஓபிஎஸ் நச் பதிலடி!

அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தலைவர்கள் டெல்லி சென்றாலே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிடுகிறது என்று டிடிவி தினகரன் விமர்சித்து இருந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் பதிலடிக் கொடுத்துள்ளார்.

சமயம் 22 Mar 2026 8:39 pm

விரிவுரையாளர் கொலை –மகள் கூறிய வாக்குமூலம் –காவல்துறை விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள்

எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ்… The post விரிவுரையாளர் கொலை – மகள் கூறிய வாக்குமூலம் – காவல்துறை விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 8:29 pm

புகையிரத கடவைக்காக நீண்ட காலமாக தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட புகையிரத கடவையை மீள திறக்க கோரி அப்பகுதியில் வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார்… The post புகையிரத கடவைக்காக நீண்ட காலமாக தொடரும் போராட்டம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 8:16 pm

பவர் ஸ்டாரின் அண்ணா வளர்ச்சி கழகம் - 2026-ல் விஜய்க்குப் போட்டியாகப் புதிய கட்சி

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அண்ணா வளர்ச்சி கழகம் (AVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கி, விஜய் TVK என்றால் நான் AVK என அவருக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.

சமயம் 22 Mar 2026 8:06 pm

8ஆவது ஊதியக் குழுவில் புதிய சூத்திரம்.. சம்பளக் கணக்கீடு மாறினால் நல்லதா?

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கணக்கிடும் ஃபார்முலாவை மாற்றி புதிய ஃபார்முலாவைக் கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி நடக்குமா? சம்பளம் எவ்வளவு உயரும்?

சமயம் 22 Mar 2026 7:56 pm

அம்பாறையில்  162  ஆவது வருட பொலிஸ் வீரர் தினம் அனுஸ்டிப்பு

162 ஆவது வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றதுடன் இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பொலிஸ் கொடி ஏற்றப்பட்டதுடன் பொலிஸ் நினைவுத் தூபிக்கு விசேட பொலிஸ் மரியாதை நிகழ்வுகளுடன் நினைவுத் தூபிக்கு மலர் வளையம் மற்றும் மலர் கொத்துக்கள் வைத்து அஞ்சலி சனிக்கிழமை(21) செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல கலந்து கொண்டு […]

அதிரடி 22 Mar 2026 7:48 pm

அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம்

அமெரிக்க ராணுவத்தில் மாவென் என்ற செயற்கை நுண்ணறிவு அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. மாவென் செயற்கை நுண்ணறிவு அமெரிக்க ராணுவம் தங்கள் இராணுவ நடவடிக்கையில் புதிய இணைப்பாக மாவென்(MAVEN) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு(AI) அமைப்பை அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அமைப்பாக அங்கீகரிப்பதாக பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான Palantir, எதிரிகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் Project Maven என்ற திட்டத்தின் கீழ் புதிய AI அமைப்பை உருவாக்கியுள்ளது. இவை இனி அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய […]

அதிரடி 22 Mar 2026 7:30 pm

புதுச்சேரி திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு? ஸ்டாலினுடன் பா. சிதம்பரம் அவசர சந்திப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியிலேயே தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்துவரும் சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி உள்ளார் இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 22 Mar 2026 7:08 pm

யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளின் தபால் விநியோகத்தில் அதிரடி மாற்றம் ; எரிபொருள் நெருக்கடியால் சிக்கல்

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, அஞ்சல் விநியோக நடவடிக்கைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முன்னெடுப்பதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார். அஞ்சல் விநியோகங்கள் புதிய தீர்மானத்திற்கு அமைய, கொழும்பிலிருந்து நீண்ட தூரப் பகுதிகளுக்கான அஞ்சல் விநியோகங்கள் ஞாயிற்றுக்கிழமை,புதன்கிழமை,வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மாத்திரம் நடைபெறும். இந்த நடைமுறை கொழும்பிலிருந்து பின்வரும் நகரங்களை நோக்கிய விநியோகங்களுக்குப் பொருந்தும். அதன்படி, […]

அதிரடி 22 Mar 2026 6:47 pm

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம் வழக்கு- தீர்ப்பு எப்போது தெரியுமா?

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் (ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்) மரண வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

சமயம் 22 Mar 2026 6:37 pm

ஈரான் மீதான தாக்குதல்களை அதிகரிப்போம்: இஸ்ரேல் அச்சுறுத்தல்!

ஈரான் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவோம் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுப்புவதாகக் கூறியிருந்த நிலையில் உலகளாவிய சுற்றுலா தளங்களை தாக்கவிருப்பதாக ஈரான் மிரட்டியது. இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்குப் பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவர பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார். எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்த பின்னர், எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் […]

அதிரடி 22 Mar 2026 6:30 pm

சொந்தமாக ஒரு வீடு.. கடன் வாங்கினால் ஈசியா கிடைக்குமா? மாத சம்பளம் ஒரு லட்ச ரூபாய் போதுமா?

உங்களுடைய மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாயாக இருந்தால் உங்களுக்கு வங்கிகளில் வீட்டுக் கடன் எளிதாகக் கிடைக்குமா? மாத EMI எவ்வளவு செலுத்த வேண்டும்?

சமயம் 22 Mar 2026 6:14 pm

10 வருஷம் ஜெயில் உறுதி- ரயில்கள் மீதான கல் வீச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரயில்வே மாஸ்டர் பிளான்.

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்கள் மீது கல் வீசும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ளது.

சமயம் 22 Mar 2026 6:06 pm

30 நாட்களுக்கு ஈரான் மீதான தடை நீக்கம்; பின்வாங்கும் அமெரிக்கா ;அதிரடி முடிவு

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், ஈரான் மீதான எண்ணெய் விற்பனைத் தடையை அமெரிக்கா 30 நாட்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது. அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இது குறித்த அறிவிப்பை நேற்று (20) வெளியிட்டார். எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க அதிரடி முடிவு அமெரிக்க – இஸ்ரேலிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் […]

அதிரடி 22 Mar 2026 5:30 pm

பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியான முக்கிய தகவல்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டபடி முதலாம் பாடசாலை தவணை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதுவரை புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சாதாரண தரம் மற்றும் […]

அதிரடி 22 Mar 2026 5:27 pm

பனையூரில் தயாராகும் 115 தளபதிகள்- வேட்பாளர் பட்டியலில் வேகம் காட்டும் விஜய்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தேர்வு செய்யப்பட்ட 115 வேட்பாளர்களை நாளை (மார்ச் 23) பனையூர் அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்

சமயம் 22 Mar 2026 5:14 pm

60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி –வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்

பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக பயிற்சியை நிறைவு செய்ய முடிகின்றது. அத்துடன் பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது எனவே வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி […]

அதிரடி 22 Mar 2026 5:10 pm

பஹ்ரைனில் மக்கள் குடியிருப்பின் மீது வீழ்ந்து வெடித்த அமெரிக்க ஏவுகணை:

கடந்த 2026 மார்ச் 09 அன்று பஹ்ரைனின் சித்ரா தீவில் (Sitra Island) உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது… The post பஹ்ரைனில் மக்கள் குடியிருப்பின் மீது வீழ்ந்து வெடித்த அமெரிக்க ஏவுகணை: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 4:34 pm

ஈரானின் அணுசக்தி மையம் மீது தாக்குதல்

தெக்ரான், அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ம் தேதி ஈரான் மீது தொடங்கிய போர் இன்று 22-வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இதில் ஈரான் மீது வான் வழித்தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், எண்னை சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்குகிறது. இந்தநிலையில் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையமான நட்டான்ஸ் (Natanz) மீது அமெரிக்க, இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு […]

அதிரடி 22 Mar 2026 4:30 pm

அரசியல் புரிதலற்ற இளைஞர்கள்- விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை கடுமையாகச் சாடிய வேல்முருகன்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன், அரசியல் புரிதலற்ற இளைஞர்களைக் கொண்ட விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

சமயம் 22 Mar 2026 4:29 pm

யாழில். விரிவுரையாளர் கொலை - மகள் கூறிய வாக்குமூலம் ; பொலிஸ் விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள்

எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருவதாவது, மூன்று மாதங்களில் முறிந்த திருமண வாழ்க்கை. கொலையின் பிரதான சந்தேகநபரான அரியாலை பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 20) எனும் இளைஞன் விரிவுரையாளரின் மகளான சுவித்தியா (வயது 19) என்பவரை காதலித்து வந்த நிலையில் , கடந்த வருடம் (18 வயது திருமண வயதை எட்டியதும்) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்துள்ளனர். பதிவு திருமணம் செய்து சுமார் 3 மாத காலம் வாழ்ந்த நிலையில் , சுவித்தியா , கணவருடன் வாழ முடியாது. கொடுமைகளுக்கு தான் உள்ளாவதாக கூறி தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதனை அடுத்து ஓரிரு மாதங்களில் தனக்கு விவாகரத்து கோரி யாழ். மாவட்ட நீதிமன்றில் தாயரின் அறிவுறுத்தலில் பிரபல மூத்த சட்டத்தரணி ஊடாக வழக்கு தொடர்ந்துள்ளார். குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை பெண்ணின் கணவன் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது இருந்துள்ளார். இரு தவணைகளுக்கு மேல் சமூகமளிக்காத நிலையில் , வழக்கினை ஒரு முக விளக்கத்திற்கு எடுக்குமாறு சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்த நிலையில் வழக்கு அடுத்த தவணைக்கு திகதியிடப்பட்டது. நள்ளிரவு ஓடு பிரித்து வீட்டிற்குள் இறங்கிய கணவன். வழக்கு தவணைக்கு தான் செல்லாததும் , வழக்கு ஒரு முக விளக்கத்திற்கு சென்று தமக்கு விவாகரத்து கிடைத்து விடும் என அறிந்த கணவனான திவாகர் கடந்த 17ஆம் திகதி பாண்டியன் தாழ்வு பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திய பின்னர் , வீட்டின் ஓட்டை கழட்டி கயிறு மூலம் மனைவியின் அறைக்குள் இறங்கியுள்ளார். அங்கு நித்திரையாக இருந்த மனைவியை எழுப்பி , தனது செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோரி , சமாதானமாகி மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என கோரியுள்ளார். தாயை கொலை செய்த கணவனுடன் கைகோர்த்த மனைவி அதற்கு மனைவி தாம் இருவரும் சேர்ந்து வாழ அம்மா அனுமதிக்க மாட்டார் என கூறியதை அடுத்து , அவர் உயிருடன் இருந்தால் தானே அனுமதிக்க மாட்டார். அவரை கொலை செய்வோம் என கூறி , தாயாரின் அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு தூக்கத்தில் இருந்த தாயின் கால்களை மகள் அழுத்தி பிடிக்க , மகளின் கணவன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார் உயிரிழந்த தாயின் சடலத்தை படுக்கை விரிப்பினால் (பெட் சீட்) சுற்றி கட்டி , தாயின் காரின் பின் பகுதியில் சடலத்தை மறைத்து வைத்த பின்னர் , கணவன் மனைவியான இருவரும் வீட்டை விட்டு வெளியேறி , கணவனின் மோட்டார் சைக்கிளில் கணவனின் வீட்டிற்கு சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , வாடகை வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி மீண்டும் தனது வீட்டிற்கு கணவனுடன் வந்துள்ளார். காரில் சடலத்துடன் தப்பியோட்டம் பின்னர் விரிவுரையாளரான தனது தாயின் வங்கி அட்டையையும் நகைகள் சிலவற்றையும் எடுத்து கொண்டு தாயின் காரில் தாயின் சடலத்துடன் பயணித்து , தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றை காட்டில் சடலத்தை வீசி விட்டு காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர். பரந்தன் பகுதியில் தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தினை பெற்று காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர். பின்னர் திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் காருக்கு QR பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து தாயின் ஒரு ஜோடி காப்பை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் திருகோணமலையில் வாடகைக்கு வீடொன்றினை பெற்று வாழ்ந்துள்ளார். தாயை காணவில்லை என மகன் முறைப்பாடு அதேவேளை கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் , சகோதரியின் கணவன் மீது சந்தேகம் நிலவுவதாகவும் குறிப்பிட்டு இருந்துள்ளார். ஆனாலும் பொலிஸார் ஆரம்பத்தில் இதனை ஒரு குடும்ப பிரச்சனையாக கருத்தி விசாரணைகளில் தீவிரம் காட்டாத நிலைமை காணப்பட்டதாகவும் , அதனை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் வடமாகாண மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை தீவிர படுத்தினர் மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்கள் அதேவேளை , தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பரந்தனில் பணம் பெறப்பட்டமை , தாயின் காருக்கு QR மூலம் திருகோணமலையில் எரிபொருள் நிரப்பியமை உள்ளிட்ட தகவல்களை மகன் பொலிஸாருக்கு வழங்கி இருந்தார். அவற்றின் அடிப்படையில் திருகோணமலைக்கு சென்ற விசேட பொலிஸ் குழு , காருக்கு எரிபொருள் நிரப்பிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுத்து , கணவன் - மனைவி இருவரும் திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததனை அறிந்து , அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் மீட்டு ,யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். திருகோணமலையில் மீட்கப்பட்ட கணவன் - மனைவி வெள்ளிக்கிழமை இருவரையும் மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வரும் போது இருவரிடமும் விரிவுரையாளர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இருவரும் அது தொடர்பில் முன்னுக்கு பின் முரணான தகவல்களையே வழங்கி வந்துள்ளனர். யாழ்ப்பாணம் அழைத்து வந்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , நேற்றைய தினம் சனிக்கிழமையும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளையே விரிவுரையாளரை கொலை செய்த சம்பவத்தை கூறி தனது வாக்கு மூலத்தை பொலிஸாருக்கு மருமகன் கூறியுள்ளார். தாயின் கொலைக்கு நான் உடந்தை இல்லை - மகள் வாக்குமூலம் அதேவேளை , தான் கொலைக்கு எந்தவகையிலும் உடந்தையாக இருக்கவில்லை எனவும் , கணவன் மீதான பயத்தின் காரணமாக அவரது செயற்பாடு குறித்து வெளியில் கூறவில்லை என விரிவுரையாளரின் மகள் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு. மருமகனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூன்று நாட்களின் பின் சடலத்தை மீட்டமையால் , சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். கழுத்து நெரித்தே கொலை. போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் உடலில் காயங்கள் எதுவும் இன்றிய நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. இறுதி கிரியைகள் அதனை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பதிவு 22 Mar 2026 3:54 pm

சசிகலா ஆதரவாளர்களுக்கு ஒரு நற்செய்தி- நாளை மாலை 7 மணி வரை வேட்பாளர் விருப்பமனு நீட்டிப்பு

சசிகலா ஆதரவு APTMK கட்சியின் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய, நாளை மாலை 7 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

சமயம் 22 Mar 2026 3:53 pm

படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக …

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் […]

அதிரடி 22 Mar 2026 3:52 pm

உலகிலேயே பெரிய நடிகரான சிவாஜி அரசியலுக்கு வந்து தோத்துட்டார்: சிவகுமார்

நடிகன் நாடாளுவது குறித்து சீனியர் நடிகரான சிவகுமார் தெரிவித்த கருத்துக்கு ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை விளாசுகிறார்கள். மற்றவர்களோ சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

சமயம் 22 Mar 2026 3:49 pm

திமுகவிற்கு தவெகஒரு அச்சுறுத்தல்..த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது - கடம்பூர் ராஜீ!

திமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகம் ஒரு அச்சுறுத்தலாக நினைக்கின்றார்கள். அதன் விளைவு தான் த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ விமர்சித்துள்ளார்.

சமயம் 22 Mar 2026 3:44 pm

4 ஆயிரம் கி.மீ. தொலைவை தாக்கும் ஏவுகணை: அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை மிரள விட்ட ஈரான்

தெஹ்ரான் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவ தளம் மீது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை ஈரான் இன்று ஏவியது. அவற்றில் ஒரு முயற்சி தோல்வியடைந்தது. மற்றொரு ஏவுகணை இடைமறிக்கப்பட்டது. ஈரானில் இருந்து 4 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இந்த இலக்கை குறிவைத்து ஈரான் தாக்க முயன்றது அமெரிக்கா மற்றும் […]

அதிரடி 22 Mar 2026 3:30 pm

தவெக விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார்? தமமுக ஜான் பாண்டியன் 2026 சொல்லும் தேர்தல் கணக்கு!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், வாக்குகள் பெரிதும் பிரியும் என்கின்றனர். இந்நிலையில் 2026 தேர்தல் களம் தொடர்பாக தமமுக ஜான் பாண்டியன் பேசியவற்றை விரிவாக பார்க்கலாம்.

சமயம் 22 Mar 2026 3:06 pm

சிலிண்டர் பிரச்சினை எப்போது சரியாகும்? ஹேப்பி நியூஸ்.. மத்திய அரசின் முக்கிய நடவடிக்கை!

சமையல் எரிவாயு விநியோகத்தை மேம்படுத்த மத்திய அரசு மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.

சமயம் 22 Mar 2026 2:55 pm

உலகத்தின் தேநீர் பிரியர்கள் அனைவருக்கும், மலையகப் பெண்களின் நலவாழ்வுக்கான பிரபஞ்சப் பிரார்த்தனை!

நீங்கள் மிகவும் விரும்பும் தேயிலை வகைகளில் ஒன்றான சிலோன் தேயிலையை உற்பத்தி செய்யும் இலங்கையிலிருந்து, பெண்கள் உரிமைச்செயற்பாட்டாளர்களான… The post உலகத்தின் தேநீர் பிரியர்கள் அனைவருக்கும், மலையகப் பெண்களின் நலவாழ்வுக்கான பிரபஞ்சப் பிரார்த்தனை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 2:47 pm

தேனிலவுக்கு தாய்லாந்து சென்ற விஜய், ரஷ்மிகா: குட்டி ரசிகைக்கு ஸ்பெஷல் ட்ரீட்

விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தன்னாவும் தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. மேலும் அவர்கள் தங்களின் ரசிகைக்கு கொடுத்த விருந்து வீடியோ வைரலாகியிருக்கிறது.

சமயம் 22 Mar 2026 2:44 pm

உங்க கிட்ட எத்தனை வங்கிக் கணக்கு இருக்கு? நிறைய இருந்தால் ஆபத்து.. உடனே குளோஸ் பண்ணுங்க!

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் நீங்கள் உடனே செய்ய வேண்டியது இதுதான். செயல்படாமல் இருக்கும் கணக்குகள் உங்களுக்கே ஆபத்தாக முடியும்.

சமயம் 22 Mar 2026 2:37 pm

ஹோர்முஸ் நீரிணை: ஜப்பானிய கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை (Strait… The post ஹோர்முஸ் நீரிணை: ஜப்பானிய கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 2:37 pm

பாஜக கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை..- தேர்தல் நெருங்கும் நேரத்தில் சரத்குமார் ஆவேசப் பேச்சு!

எனக்கு பொறுப்பு வழங்கவில்லை என ஆதரவாளர்கள் ஆதங்கம்படுவதாக பாஜக நிர்வாகி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 22 Mar 2026 2:32 pm

மட்டக்களப்பு மறக்கவியலாத பேராசான் : பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை து.கௌரீஸ்வரன்

ஈழத்துத் தமிழர்தம் வரலாற்றில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செழுமையான தமிழ்ப் ‘பண்டிதர்’ மரபு தழைத்தோங்கி வந்துள்ளமை பற்றி… The post மட்டக்களப்பு மறக்கவியலாத பேராசான் : பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை து.கௌரீஸ்வரன் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 2:26 pm

நீண்டதவம் கலைந்த வெறியில் எழுந்தாள்-கலாவதி கலைமகள்.

நீண்டதவம் கலைந்த வெறியில் எழுந்தாள் காற்றில் சிக்குண்ட கிழிசலை இடையில் கட்டிக்கொண்டாள் குனிந்தபடியே கிடந்து விடாய் தணித்தாள் ஆடுமேய்க… The post நீண்டதவம் கலைந்த வெறியில் எழுந்தாள்-கலாவதி கலைமகள். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 2:22 pm

60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி –வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்

பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள்… The post 60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி – வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 2:17 pm

ஈரானா இஸ்ரேலா? தமிழ் மக்கள் யாரோடு? –நிலாந்தன்!

1991ஆம் ஆண்டு,”ஓபரேஷன் டிசேர்ட் ஸ்ட்ரோம்”- “பாலைவனப் புயல்” என்ற பெயரில் ஒரு படை நடவடிக்கையை, அமெரிக்கா தலைமையிலான… The post ஈரானா இஸ்ரேலா? தமிழ் மக்கள் யாரோடு? – நிலாந்தன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 2:07 pm

படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளா் தயாளினி திலீபனின் இறுதி கிரியைகள் இன்றைய தினம்… The post படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 2:07 pm

மன்னாரில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான வெளிநாட்டுப் பறவைகள்.

மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் மூன்று(3)… The post மன்னாரில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான வெளிநாட்டுப் பறவைகள். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 1:57 pm

ஈரானுக்கு 48 மணி நேர உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் ட்ரம்ப், ஈ ரானுக்கு 48 மணி நேர அவகாசம் வழங்கி புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஹோர்முஸ்… The post ஈரானுக்கு 48 மணி நேர உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 1:48 pm

ஈரான் போர்: சவூதி அரேபியாவின் முக்கிய இராணுவ நகர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்கப் படைகள் தாயிஃப் (Taif) நகரில் உள்ள மன்னர் ஃபஹத் விமானப் படையதளத்தை… The post ஈரான் போர்: சவூதி அரேபியாவின் முக்கிய இராணுவ நகர்வு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Mar 2026 1:42 pm

பொதுமக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும், அது குறித்த இறுதி முடிவை ஏப்ரல் முதலாம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவிக்கையில்: எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எதிர்வரும் ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும். பொதுமக்கள் இதில் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளதுஎன அவர் தெரிவித்தார்.

பதிவு 22 Mar 2026 1:10 pm

விஜய் சாரே கேட்டாலும் கூட தவெகவுக்காக பாட்டு பாட மாட்டேன்: கானா வினோத்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கானா வினோத் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக பாட்டு பாட முடியாது என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் ஒரு முக்கிய காரணமும் கூறியிருக்கிறார்.

சமயம் 22 Mar 2026 1:00 pm

தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, பொன்மாரி தலைமையிலான தேர்தல் பறக்கும்

சென்னைஓன்லைனி 22 Mar 2026 12:44 pm

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய்’மியூசிக் வீடியோ ஆல்பம்

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.‌ இந்த ஆல்பத்தில்

சென்னைஓன்லைனி 22 Mar 2026 12:43 pm

ஈரானுக்கு மிக அருகில் நீர்மூழ்கி போர் கப்பலை நிலைநிறுத்திய பிரிட்டன்!

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக

சென்னைஓன்லைனி 22 Mar 2026 12:42 pm

அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி ஏற்றி வந்த இந்திய கப்பல் மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்தது!

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி வர்த்தகனத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ்

சென்னைஓன்லைனி 22 Mar 2026 12:41 pm

எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் நிலையங்கள் மீது தாக்குதல் –அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் இன்றுடன் 23 வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக உலகின்

சென்னைஓன்லைனி 22 Mar 2026 12:40 pm

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி!

திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக கூட்டணியில் 10

சென்னைஓன்லைனி 22 Mar 2026 12:39 pm

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் –ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 22 நாடுகளின் தலைவர்கள்

ஈரான் மற்றும் இஸ்ரே, அமெரிக்கா இடையிலான போரினால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு

சென்னைஓன்லைனி 22 Mar 2026 12:37 pm

நெருங்கும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - யார் அந்த 10 பேர்?

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: என்.டி.ஏ கூட்டணியின் பாஜக வேட்பாளர் பட்டியல் விவரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 22 Mar 2026 12:37 pm

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேல் நகரங்கள் பாதிப்பு!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள

சென்னைஓன்லைனி 22 Mar 2026 12:36 pm

1வது முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 1வது முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2025-2026 கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் மற்றும் சட்டமன்றத்

சென்னைஓன்லைனி 22 Mar 2026 12:35 pm

Mari Selvaraj Release: “இதயத்திலிருந்து உங்களுக்காக..”–யோகி பாபுவின் கேணத்த காணோம் வீடியோ சாங் அவுட்! மாரி செல்வராஜ் கொடுத்த சர்ப்ரைஸ்!

இயக்குனர் சுரேஷ் சங்கையா மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் உருவாகியுள்ள 'கேணத்த காணோம்' படத்தின் வைரல் ராப் பாடல் வீடியோவை இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிட்டார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 22 Mar 2026 12:30 pm

Mari Selvaraj Release: “இதயத்திலிருந்து உங்களுக்காக..”–யோகி பாபுவின் கேணத்த காணோம் வீடியோ சாங் அவுட்! மாரி செல்வராஜ் கொடுத்த சர்ப்ரைஸ்!

இயக்குனர் சுரேஷ் சங்கையா மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் உருவாகியுள்ள 'கேணத்த காணோம்' படத்தின் வைரல் ராப் பாடல் வீடியோவை இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிட்டார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 22 Mar 2026 12:30 pm

படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக ...

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த மூத்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் இணைந்து அவரை கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்து சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் வீசிய நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 22 Mar 2026 12:26 pm

அக்கவுண்டில் ஒரு ரூபாய் கூட இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம்.. அது எப்படி?

உங்களுடைய வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாவிட்டாலும் அவசர காலத்தில் அதிலிருந்து நீங்கள் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

சமயம் 22 Mar 2026 12:17 pm

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கக் கோரிக்கை ; அடுத்தடுத்து உயரப்போகும் விலைகள்

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இன்று (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்தார். எரிபொருள் விலை “இன்று முதல் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு எமது சேவைக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. எமது சேவையை முன்னெடுக்க எரிபொருள் […]

அதிரடி 22 Mar 2026 12:11 pm

யாழில் பொதுமக்கள் வீதி மறியல்: அன்னசந்திர வீதி புகையிரதக் கடவை மூடப்பட்டதற்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம், அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, பொதுமக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் குறித்த புகையிரதக் கடவையின் குறித்த போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து சிரமங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, உடனடி தீர்வு கோரியே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

அதிரடி 22 Mar 2026 12:09 pm

90 சதவீத தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து அதிரடியாக விலகியது

நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் சடுதியாக பெரும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இதன் காரணமாகவே இன்றைய தினம் பேருந்துகளை இயக்காதிருக்க பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார். புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பேருந்து சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு 22 Mar 2026 12:01 pm

ஹார்முஸ் நீரிணையை முழுவதும் திறக்க வேண்டும் ..- ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த ட்ரம்ப் !

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமயம் 22 Mar 2026 11:50 am

திருச்சி வாழை சாகுபடி பாதிப்பு: கோடை மழையால் விலை வீழ்ச்சி!

திருச்சி வாழை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. கோடை மழையால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சமயம் 22 Mar 2026 11:46 am

Ken Karunas vs Blue Sattai: “அரசியலுக்கு வர மாட்டேன்!”–கென் கருணாஸின் ஒற்றை வரி.. வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரசிகர்கள் பதிலடி!

நடிகர் மற்றும் இயக்குனர் கென் கருணாஸ் தனது 'யூத்' பட விளம்பரத்தின் போது அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறிய கருத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் கலாய்த்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 22 Mar 2026 11:40 am

மின்சாரம், எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

மின்சாரத்தையும் எரிபொருளையும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு போரினால் உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக சிறிலங்கா நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நேற்றிரவு எரிபொருள் விலைகளைக் கடுமையாக உயர்த்தியது. இதையடுத்து, இன்று காலை ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பொதுமக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். “மின்சாரத்தையும் எரிபொருளையும் கவனமாக பயன்படுத்துமாறும்,

புதினப்பலகை 22 Mar 2026 11:39 am

திமுக கூட்டணியில் இருந்து விலகினார் வேல்முருகன்… தவாக இனி யாருடன் கைகோர்க்கும்?

கூட்டணி தொடர்பான இழுபறி நீடித்து வந்த நிலையில், சற்றுமுன் திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறியுள்ளார். அடுத்ததாக தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகள் உடன் கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சமயம் 22 Mar 2026 11:33 am

மத்திய கிழக்கு போர் பதற்றம் ; மத்தள வானூர்தி நிலையம் மீண்டும் உயிர்பெறுகிறதா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வான்பரப்பு முடக்கம் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, நட்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச வானுர்தி நிலையத்தை (MRIA) ஒரு தற்காலிக மையமாகப் பயன்படுத்துவது குறித்து ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விரிவான பேச்சுவார்த்தை நாளை (23) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் ஓமான் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கைக்குக் கூடுதல் வானூர்திகளை இயக்கக் கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச […]

அதிரடி 22 Mar 2026 10:59 am

தமிழர் பகுதியில் சடலத்துடன் மீட்கப்பட்ட இளம் தாய் ; மற்றொரு பெண் அரங்கேற்றிய சினிமாவை மிஞ்சும் கொடூரம் அம்பலம்

மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞன் என மூவர் நேற்று (21) இரவு வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். அதிர்ச்சி தரும் பின்னணி கடந்த வியாழக்கிழமை வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு […]

அதிரடி 22 Mar 2026 10:57 am

RJ Balaji Interview: முதலில் விஜய்யிடம் சென்ற கதை.. சூர்யாவின் ‘கருப்பு’உருவானது இப்படித்தான்! மூக்குத்தி அம்மன் 2-க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையா?

நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'கருப்பு' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அந்த ஸ்கிரிப்ட் முதலில் விஜய்யிடம் சென்றது குறித்த பின்னணியும் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 22 Mar 2026 10:56 am

பெருமளவு உயரபோகும் பேருந்து கட்டணம் ; திடீர் எரிபொருள் விலை அதிகரிப்பால் சிக்கல்

இன்றைய தினம் (22) பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான கணக்கீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் பல தடவைகள் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. இதேவேளை, பேருந்து கட்டணங்களை குறைந்தபட்சம் 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (21) நள்ளிரவு […]

அதிரடி 22 Mar 2026 10:52 am

தலைக்கு மேல தேர்தல் வேலை இருக்கும்போது விஜய் ஏன் வளைகாப்புக்கு மும்பை போனார் தெரியுமா?: ரசிகர்கள்

தேர்தல் நேரத்தில் அட்லி மனைவியின் வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ள விஜய் ஏன் மும்பை வரை சென்றார் என்று அவரின் ரசிகர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். மும்பையில் விஜய் தங்கியிருந்த தாஜ் ஹோட்டலுக்கு முன்பு ரசிகர்கள் கூடிவிட்டார்கள்.

சமயம் 22 Mar 2026 10:49 am

புதுச்சேரியில் ரூ. 1,250 கோடியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம்: மத்திய அரசு ஒப்புதல்!

புதுச்சேரியில் ரூ. 1,250 கோடியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சமயம் 22 Mar 2026 10:36 am

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தியைக் மற்ற நாடுகளும் கண்காணிக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை ட்ரூத் சமூக வலைத்தளத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில், ஈரான் போரின் முக்கிய கட்டத்தை அமெரிக்கா நெருங்கிவிட்டது. எனவே, எப்போது வேண்டுமானாலும் ஈரான் போர் முடிவுக்கு வரலாம் என்று தெரிவித்திருந்தார். அதாவது, ஈரானுடனான போரின் முக்கிய இலக்கை அடைந்துவிட்டோம், எனவே, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது […]

அதிரடி 22 Mar 2026 10:30 am

விசிக கேட்கும் பொதுத் தொகுதிகள்… 12 இல்ல, 8 தான்- திருமாவிற்கு இறங்கி வருமா திமுக?

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதிகப்படியான கட்சிகள் கூட்டணியில் இருப்பதை சுட்டிக் காட்டி திமுக தலைமை கறார் காட்டி வருகிறது.

சமயம் 22 Mar 2026 10:01 am

கூட்டாட்சி, சுயநிர்ணய உரிமை கருத்துக்களால் தமிழ்க் கட்சிகள் தோல்வி- சுமந்திரன் சர்ச்சை கருத்து

சிறிலங்காவை ஆளும் மார்க்சியக் கட்சி, நாட்டை ஒருகட்சி அரசை நோக்கி வழிநடத்தும் அபாயம் உள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார். இந்திய சட்டவாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தின் குழுவில் இடம்பெற்றிருந்த எம்.ஏ.சுமந்திரன், இந்தப் பயணத்தின் போது இந்திய ஊடகவியலாளர் எம்.ஆர்.நாராயணசாமிக்கு அளித்துள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதினப்பலகை 22 Mar 2026 10:00 am

விஜய் பெரம்பூரில் போட்டியிடுவதை எப்படி பார்க்கிறீங்கனு கேட்ட செய்தியாளர்: நான் ஏன் அதை பார்க்கணும் என்ற கமல்

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல் ஹாசன் அளித்த பதில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் விஜய் ரசிகர்களோ கமலை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமயம் 22 Mar 2026 9:53 am

சென்னையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களின் நிலை என்ன?

சென்னையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களின் நிலை என்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சமயம் 22 Mar 2026 9:36 am

Bhavana Studios Casting: பகத் பாசில் படத்தில் நடிக்கும் பொன்னான வாய்ப்பு! 70 வயது பாட்டி முதல் 17 வயது இளைஞன் வரை.. உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய சினிமாவின் தரமான தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ், தனது அடுத்த படைப்பிற்காகப் புதிய திறமைகளை வரவேற்கிறது. இதற்கான தகுதிகள் மற்றும் கடைசித் தேதி குறித்த விவரங்கள் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 22 Mar 2026 9:30 am