Grok-ல் ஆபாச படங்கள் சித்தரிப்பு; எளிய பிராம்ப்டுகளில் அத்துமீறல் - மத்திய அரசு எடுத்த நடவடிக்கை!
எக்ஸ் தளத்தின் 'கிரோக்' ஏ.ஐ சாட்பாட்டிற்கு இந்தியாவில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. என்ன பிரச்னை? ஏ.ஐ சாட்பாட்களில் குறிப்பாக கிரோக்கில் (Grok) பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை ஆபாசமாக உருவாக்குவது சர்வ சாதாரணமாகி விட்டது. அப்படி உருவாக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள் மூலம் பதிவிடப்படுகின்றன. இது இன்னும் ஒரு படி மேலே சென்று, ஏ.ஐ உருவாக்கிய பெண்களின் புகைப்படங்களைத் தாண்டி, நிஜப் பெண்களையும் இப்படி சித்தரிக்கிறார்கள். மிக எளிய பிராம்ப்டுகளில், பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக எளிமையாகச் சித்தரிக்கப்படுகிறது. இதில் பெண்களில் ஆடைகளைக் கூட மாற்ற முடிகிறது என்பது கூடுதல் சிக்கல். பிரியங்கா சதுர்வேதி Railway: ஆதார் இணைக்கவில்லையா? - 60 நாள்களுக்கு முன் 'நோ' டிக்கெட் புக்கிங்! இணைப்பது எப்படி?|How to இது பெண்களின் ஆன்லைன் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதோடு, அவர்களது தனிப்பட்ட உரிமையையும் பாதிக்கிறது. இந்த ஆபாச சித்தரிப்பு கிரோக் தளத்தில் மிக அதிகமாகவும், எளிமையாக நடக்கிறது. இந்தப் பிரச்னையை மகாராஷ்டிராவின் மாநிலங்களவை எம்.பி பிரியங்கா சதுர்வேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நேற்று எடுத்துச் சென்றிருந்தார். மத்திய அமைச்சகத்தின் நடவடிக்கை இதையடுத்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி... கிரோக்கின் ஆபாச படங்கள் உருவாக்கம் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021, பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023 ஆகியவைகளுக்குக் கீழ் சட்டத்திற்கு புறம்பானது. இந்த உருவாக்கம் ஆபாசப் படங்களை ஊக்குவிக்கிறது... குழந்தைகளின் பாதுகாப்பைப் பாதிக்கிறது... பெண்களைக் கண்ணியமின்றி சித்தரிக்கிறது... இது ஒரு சைபர் குற்றம். அதனால், கிரோக் நிறுவனம் உடனடியாக ஆபாசப் படங்களை உருவாக்குவது மற்றும் மாற்றுவதை நிறுத்த வேண்டும். எலான் மஸ்க் அனைத்து ஆபாச கன்டென்டுகளையும் உடனடியாக நீக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கான அறிக்கையை அடுத்த 72 மணிநேரத்திற்குள் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். எப்போதும் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 79-ன் கீழ், எக்ஸ் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்கலாம். அடுத்ததாக, எக்ஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தக் குற்றங்களைச் செய்த பயனாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. 2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா? I would take this opportunity to thank Hon IT Minister for promptly taking note of my letter and for issuing a letter to X platform in the regard of AI led grok generating problematic content of women based on prompts that disrespect woman’s dignity and violates their consent,… https://t.co/pTGXWaBm0K — Priyanka Chaturvedi (@priyankac19) January 2, 2026
பாடசாலை நேர அட்டவணை திருத்தம் தொடர்பில் வெளியான அறிக்கை
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விசார் ஆளணியினரைப் பயன்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல் கோவை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாகச் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, 2026 ஆம் ஆண்டிலும் தரம் 5 முதல் தரம் 13 வரை பாடசாலை நடைபெறும் நேரம் மு.ப. 7.30 […]
தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்பு
தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு தமிழ் தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், கடந்த 30ஆம் திகதி தையிட்டி விகாராதிபதி , தமது விகாரைக்குள் எவ்வித புதிய கட்டுமானங்களையும் தான் செய்ய மாட்டேன் என்றும் , விசேட பூஜைகளுக்கோ பெரஹரா போன்ற எதற்கும் தான் அனுமதி கொடுக்க வில்லை எனவும் ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் புத்தர் சிலையுடன் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழு ஒன்று , காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் காத்திருக்கின்றனர் என காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிற்றுண்டி சாலைக்கு விரைந்த பொலிஸார் . புத்தர் சிலையை மீட்டதுடன் , புத்தர் சிலையை எடுத்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
14 வயது சிறுவனுக்கு நள்ளிரவில் நடத்தப்பட்ட பயங்கரம் ; இறுதியில் கிடைத்த தகவலால் சிக்கிய தந்தை
நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று (02) இரவு நூரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை நூரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை கைது அதற்கமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, வீடொன்றுக்கு அருகில் […]
டக்ளஸ் மீது புதிய வழக்குகள் ; வட மாகாண அதிகாரிகள் பலர் கைது
கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதற்காக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலகக் கும்பலுக்கு விற்பனை செய்ததாக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 9ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட வேண்டுமென அரசு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் கைவிரிக்கப்பட்டது என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தொடர்பான […]
வாக்காளர் பெயர் சேர்க்க வேண்டுமா? தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம் !
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
SA20: ‘கடைசிவரை திக் திக்’.. எம்ஐ கேப்டவுன் கடைசி பந்தில் தோல்வி: ரஷித் கான் அதிரடி வீண்!
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், எம்ஐ கேப்டவுன் அணி கடைசி வரை போராடி, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கடைசி நேரத்தில், ரஷித் கான் அதிரடியாக விளையாடியும் தோல்வியை சந்தித்தனர்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்: ஆரோக்கியத்தோடு ஆனந்தமும் அருளும் ஈசன்!
ஈசன் கோயில்கொண்ட தலங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில் அவர் மருந்தீஸ்வரராக வைத்தியநாதராக நோய் நொடிகள் நீக்கும் வரம் அருள்பவராகக் கோயில்கொண்ட தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அப்படிப்பட்ட தலங்களில் முக்கியமானது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூரில் அமைந்திருக்கும் இந்தக் கோயில் புராணகால சிறப்பு பெற்றது. `வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்’ என்றானது என்கிறார்கள். வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர மார்க்கண்டேய மகிரிஷியின் வாக்குப்படி சிவத்தலங்களை தரிசனம் செய்துவந்தார். அப்போது இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும் தலவரலாறு கூறுகிறது. மேலும் திருவான்மியூரிலேயே வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தொண்டை மண்டலத்தின் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்பானது என்று போற்றுகிறார்கள் அடியவர்கள். இங்குதான் 7 - ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பாவநாசினி, ஜன்மநாசினி என இரு திருக்குளங்களைக் கொண்டு கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் கணபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை... எனப் பரிவார தெய்வங்களோடு ஆலயம் சிறப்புற பிரமாண்டமாக இருந்து வருகிறது. சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றன எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சந்நிதி கிடையாது என்றும் கூறப்படுகிறது. அருள் வழங்கும் அன்னை உமையவள் இங்கு `சொக்கநாயகி’ எனும் திரிபுரசுந்தரியாக நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள். மனமுருகி தன்னைத் தொழுவோருக்கு அருள்பாலிக்கும் இந்த அன்னை பாசம், அங்குசம் தாங்கி, அபய வரத ஹஸ்தம் காட்டும் திருக்கரங்களோடு அடைக்கலம் தந்துவருபவள் அன்னை திரிபுரசுந்தரி. அன்னையின் ஆலயத்தின் வெளிப்புறம் தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர். புராண காலத்தில் வசிஷ்ட மாமுனியின் யாகத்தில் பால் சொரிய தாமதித்த காரணத்தால் காமதேனு சாபம் பெற்றது. இதன் காரணமாக சாதாரணப் பசுவாக மாறி, பூலோகம் வந்தது. தன் சாபம் நீங்கப் பூவுலகின் புண்ணிய க்ஷேத்திரமான திருவான்மியூர் வந்தடைந்தது அந்தத் தெய்வப் பசு. ஓங்கி, உயர்ந்து நின்ற புற்றுகளிடையே இருந்த சுயம்புலிங்கத்தை கண்டு அதன் மீது பால் சொரிந்து தன் சாபம் தீருமாறு வேண்டிக்கொண்டது. அப்போது அதன் கால்குழம்பு தெரியாமல் லிங்கத் திருமேனியில் பட அது அப்படியே தடமாகப் பதிந்தது. இன்றும் பால்வண்ணநாதர் அந்தக் குழம்புத் தழும்போடு இத்தலத்தில் காட்சி அருள்கிறார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் அகத்தியருக்கு ஈசன் இத்தலத்திலும் திருமணக் கோலம் காட்டி அருளினார். மேலும் இந்த உலகம் உய்ய சித்த வைத்திய முறைகளை இங்குள்ள வன்னி மரத்தின் அடியில்தான் உபதேசம் செய்தார். எனவே இந்தத் தலம் அகத்தியரையும் வழிபட உகந்த தலம். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவத்தின் போது ஈசன் அகத்தியருக்கு திருக்காட்சி அருளிய நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. மேலும் வால்மீகி முனிவருக்கும் நடனக் காட்சி அருளிய சம்பவமும் நிகழ்த்தப்படும். இந்த ஆலயத்தின் பழைமையை உணர்த்தும் வகையில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்கால கல்வெட்டுகள் பல இங்கு காணப்படுகின்றன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவராலும் பாடல்பெற்றது இத்தலம். இத்தல ஈசனின் திருமேனி மேற்கு நோக்கி அருள்கிறது. ஆதியில் ஈசன் கிழக்கு நோக்கியே கோயில் கொண்டிருந்தார் என்றும் அவர் மேற்கு நோக்கித் திரும்பியதன் பின்னணியில் ஒரு சம்பவம் உண்டு என்றும் சொல்கிறார்கள். அந்த சம்பவம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்பையதீக்ஷிதர் என்னும் மகான் ஈசன் மீது பெரும் பக்தி கொண்டவர். ஈசனை தரிசனம் செய்யும் ஆவலில் அவர் வந்தபோது ஆலயத்துக்குச் செல்லும் வழி வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. அதைக் கண்டு கலங்கிய அவர், ஈசனின் தரிசனம் வேண்டுமே என்று மனமுருகவேண்டினார். அப்போது அவரின் குறையைத் தீர்க்கும் வண்ணம் ஈசன் மேற்கு நோக்கித் திரும்பி தீக்ஷிதருக்குக் காட்சி கொடுத்தாராம். மருந்தீசுவரர் கோயில் இங்கே மூலவருக்கு வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர், திரிபுராந்தகர், சித்தநாதர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். உற்சவருக்கு `தியாகராஜ பெருமான்’ என்பது திருநாமம். இங்கு அதிகாலையில் நடைபெறும் கோபூஜை விசேஷமானது. அதேபோன்று அர்த்தஜாம பால் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். இங்கு வழங்கப்படும் அபிஷேகப் பாலே சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நோய் தீர்க்கும் மருத்துவனாக விளங்கி வாழும்போது ஆரோக்கிய வாழ்வையும் வாழ்வுக்குப் பின் பிறவிப் பிணி தீர்க்கும் மருத்துவனாகவும் விளங்கி அருள் செய்யும் இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்து வாருங்கள். வாழ்வில் ஆரோக்கிய வாழ்வோடு ஆனந்தமும் கிடைக்கும்.
கோயம்புத்தூர் உக்கடம் பேருந்து நிலைய மறுசீரமைப்பு பணிகள் 50 சதவீதம் நிறைவு!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உக்கடம் பேருந்து நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
அது அராஜகம்; பி.வி.ஆர் இதை கெளரவ குறைச்சலாக நினைக்கிறாங்களாம்! - சுரேஷ் காமாட்சி பேட்டி
இயக்குநர் கிட்டு இயக்கத்தில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படம் இந்த வருடத்தின் முதல் தமிழ் ரிலீஸ்களில் ஒன்றாக திரைக்கு வரவிருந்தது. கருணாஸ் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், கடைசி நேரத்தில் படத்திற்கு வெறும் 27 திரைகளே ஒதுக்கப்பட்டதால் திரையரங்க வெளியீட்டை தவிர்த்துவிட்டு, படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டிருக்கிறார்கள். சல்லியர்கள் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது குறித்து காட்டமாக செய்தியாளர்களிடம் பேசியிருந்தார் சுரேஷ் காமாட்சி. இதற்கு பின்னாலுள்ள பிரச்னையென்ன என்பதை கேட்டறிவதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியைத் தொடர்பு கொண்டோம். சுரேஷ் காமாட்சி நம்மிடையே பேசுகையில், இன்னைக்கு சின்ன படங்களுக்கு தியேட்டர் வாங்குவது சவால்ங்கிறதைதாண்டி, தியேட்டர் கொடுக்கவே மாட்டேங்கிறாங்க என்பதுதான் உண்மை. திரையரங்கு உரிமையாளர்கள் 'படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி-யில் ரிலீஸ் பண்ணுங்கனு சொல்றாங்க. ஆனா, அவங்க எங்களுக்கு தியேட்டரே கொடுக்கமாட்டேங்குறாங்க. அப்புறம் நான் எங்கதான் என்னுடைய படத்தை வியாபாரம் செய்வது. Suresh Kamatchi ஒரு படம் ஓடும், ஓடலைங்கிறதை வாய்ப்புக் கொடுத்த பிறகுதான் முடிவு பண்ணனும். அப்படி அந்தப் படத்தை எடுத்து ஓட்டுறதுக்கு உங்களுக்கு உடன்பாடு இல்லையா, தியேட்டர்களை வாடகைக்குக் கொடுங்க. அதுவும் கொடுக்கமாட்டேங்குறாங்க. என்றவரிடம், ஏன், 'சல்லியர்கள்' படத்திற்கு இத்தனை குறைவான திரைகள்? இதற்கு பின்னால் வேறெதும் நோக்கங்கள் இருக்கிறதா? எனக் கேட்டதற்கு பதில் தந்தவர், அப்படி ஆதாரம் இல்லாம சொல்லிட முடியாது. ஆனா, 27 தியேட்டர்கள் மட்டுமே கொடுத்தது அராஜகம்! பி.வி.ஆர் சின்ன படங்களுக்கு இதைதான் தொடர்ந்து செய்றாங்க போல. அவங்க சின்ன திரைப்படங்களை திரையிடுவதை கௌரவக் குறைச்சலாக நினைக்கிறாங்களாம். இப்படியான பிரச்னைகள்ல தயாரிப்பாளர் சங்கம் எப்படியான ஈடுபாடும் காட்டவில்லை என்பதுதான் உண்மை. நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துல தனஞ்செயன் கணக்கு புள்ள வேலை பார்த்துட்டிருக்கார். உறுப்பினர் சேர்க்கையில்தான் அவர் கவனமாக இருக்காரு. சுரேஷ் காமாட்சி நானும் அந்த சங்கத்துல பொறுப்புல இருந்தேன். மாற்றம் ஏதும் வரலைனுதான் அங்கிருந்து வெளில வந்துட்டேன். ரெண்டு தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையில இருக்கிற ஈகோனால சில விஷயங்கள் நடப்பதாக வெளில பேசுவதும் உண்மைதான். சின்ன சின்ன அமைப்புகள்கூட, அவங்க நினைச்சதை வெற்றிகரமாக செய்துவிட்டு போயிடுறாங்க. அதை நம்மால செய்ய முடியலேயே! இந்தப் பிரச்னைக்குப் பிறகு எனக்கு சிலர் ஆதரவாக அறிக்கைகள் அனுப்புறாங்க. இது சம்பந்தமாக புகார் கொடுக்கவும் சொல்லியிருக்காங்க. என்றார். தொடர்ந்து பேசியவர், 'வணங்கான்' திரைப்பட வெளியீட்டின் சமயத்திலும் இதே பஞ்சாயத்துதான் நடந்தது. விநியோகஸ்தர் அமைப்பு கட்டப்பஞ்சாயத்து வேலைதான் பார்த்துட்டிருக்காங்க. படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னாடி சொல்லலாம். லாஸ்ட் மினிட்ல இது மாதிரிதான் பிரச்னை பண்றாங்க. எனச் சொன்னவரிடம்,'வணங்கான்', 'சல்லியர்கள்' என சுரேஷ் காமாட்சிக்கும் மட்டும் இப்படியான பிரச்னைகள் தொடர்ந்து நடப்பதேன்? எனக் கேட்டோம். பதில் கொடுத்தவர், இதுக்கு என்ன சொல்றதுனு தெரில! நீங்க எதுனாலும் செய்து பாருங்க, நான் வென்று வருவேன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான். Suresh Kamatchi - Vanangaan தயாரிப்பாளர் சங்கம் எனக்கு மட்டுமில்ல, யாருக்கும் எதுவும் செய்யமாட்டாங்க. தயாரிப்பாளர் சங்கம், தேர்தல் நேரத்துல மட்டும் பணம் எடுத்துட்டு வருவாங்க. தேர்தல் முடிஞ்சதுக்குப் பிறகு அவர்களை இங்கு பார்க்கவே முடியாது. நான் இருக்கிற களத்துல, தமிழ் தேசியத்துக்கு என்ன செய்ய முடியுமோ, அதை செய்யணும்னு விரும்பினேன். அதுக்காகதான் இந்தப் படத்தை நான் வெளியிடணும்னு திட்டமிட்டேன். எனப் பேசி முடித்தார்.
திருநெல்வேலி: நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.!
திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.!
திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா.!
திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா.!
சுசீந்திரம்: ’சாவர்க்கருக்கும் தாணுமாலய சுவாமிக்கும் என்ன சம்பந்தம்?'– அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்
கன்னியாகுமரி மாவட்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற மார்கழி தேர்த்திருவிழாவில் வடம்பிடிக்க வந்திருந்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் பாரத் மாதாகீ ஜெய் எனவும், வீர சிவாஜி, வீர சாவர்க்கருக்கு ஜெய் எனவும் சிலர் கோஷம் எழுப்பிய சம்பவம் நடைபெற்றது. இதைத்தொடந்து அமைச்சர் சேகர் பாபு டென்சனில் சில வார்த்தைகள் பேசினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் கலந்துகொண்டார். இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுடன் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்தது பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் குடி கொண்டிருக்கும் கோயில். அங்கு மார்கழி தேர்திருவிழா நடைபெற்றது. பா.ஜ.க-வும் ஒருசில மதவெறி அமைப்புகளும் சேர்ந்து, தேர் வடம் பிடிக்கும் சமயத்தில் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாவர்க்கர் வாழ்க என்று முழக்கம் போடுகிறார்கள். இது உண்மையிலேயே அங்கு வந்திருக்கக்கூடிய தாணுமாலய சுவாமி பக்தர்களை புண்படுத்தக்கூடிய செயல் ஆகும். இந்த தேசத்தின் ஒற்றுமைக்காகவும், மத ஒற்றுமைக்காகவும், சாதி ஏற்ற தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்றும் குரல் கொடுத்ததற்காக மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சாவர்க்கர். சாவர்க்கருக்கும் தாணுமாலய சுவாமிக்கும் என்ன சம்பந்தம். பா.ஜ.க-வும் மதவெறி கும்பல்களும் திருக்கோயில்களில் நுழைந்து அங்கு இருக்கக்கூடிய மக்களிடம் தவறான கருத்துக்களை கொண்டு செல்லக்கூடிய முயற்சியை இது தெளிவாக காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கக்கூடியது. மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒன்றும் ஆகும். சுசீந்திரம் தேரோட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு இது சம்பந்தமான நடவடிக்கை குறித்து காவல் துறை பார்த்துக்கொள்ளும். அதே சமயம் பொதுமக்கள் பார்க்க வேண்டும். பன்மைத்தன்மையில் ஒற்றுமை என்பதுதான் இந்த மண்ணின் பெருமை. அப்படிப்பட்ட தேசத்தில் சுதந்திரத்துக்காக போராடி மகாத்மா காந்தியை கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர் பெயரைச் சொல்லி வாழ்க என்று பா.ஜ.க-வும் மதவெறிக் கும்பலும் முழக்கமிடுகிறார்கள் என்றால், மதத்தை வைத்து அரசியல் செய்வதைவிட வேறு என்ன நோக்கம் இருக்கிறது. இவர்களிடம் தமிழ்நாட்டு மக்களும், இந்திய மக்களும் மிகக்கவனமாக இருக்க வேண்டும். கோயிலுக்குச் சென்று தாணுமாலய சுவாமி வாழ்க என்றுச் சொன்னால், சிவன் வாழ்க என்றுச்சொன்னால், பிரம்மா வாழ்க என்றுச்சொன்னால், விஷ்ணு வாழ்க என்றுச் சொல்லியிருந்தால் எல்லோரும் சேர்ந்து வாழ்க என்று சொல்லியிருப்பார்கள். எவ்வளவு பெரிய அவமானச் செயலை செய்கிறார்கள். அவர்களின் செயல் கடவுள் பக்திக்கு எதிரானது. ஒற்றுமையை விரும்பும் இந்து மக்கள் சார்பில் இதை நான் கண்டிக்கிறேன். சுசீந்திரம் கோயில் தேரோட்டத்தில் கோஷமிட்டவர்கள் ஆன்மீகத்தின் அடிப்படை என்பது மனிதநேயம். அது எந்தச்சூழ்நிலையிலும் வெறுப்பாகவோ, பிரிவினையாகவோ இருக்க முடியாது. இவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. மதவெறியை கையில் எடுத்துக்கொண்டு மக்களிடம் தவறான செய்திகளை பரப்பி, மக்களை ஒன்றுபடுத்தி அதன்மூலமாக அரசியல் லாபம்பெற முயற்சிக்கக்கூடியவர்கள். தேர்தலை மையமாக வைத்துதான் இப்படிப்பட்ட பல பிரச்னைகளை உருவாக்குவதற்கு இவர்கள் முயற்சி மேற்கொள்கிறார்கள். இதை மக்கள்தான் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இந்த அரசு செய்ததுபோன்று இந்துசமய அறநிலையத்துறைக்கு வேறு அரசு செய்திருந்தால் சொல்லுங்கள், நாங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு போகிறோம் என்றார்.
அத்திபட்டு - கும்மிடிப்பூண்டி இடையே ரயில் பாதை இரட்டிப்புப் பணி விரைவில் தொடக்கம்!
தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது . அத்திபட்டு - கும்மிடிப்பூண்டி இடையே ரயில் பாதை இரட்டிப்புப் பணி விரைவில் தொடங்க இருக்கிறது .
கன்னிமாரா நூலகம் 4 கோடி ரூபாய் செலவில் புதுப்பொழிவுடன் விரைவில் திறப்பு!
கன்னிமாரா நூலகம் 4 கோடி ரூபாய் செலவில் புதுப்பொழிவுடன் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இதில் மாணவர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இது மக்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் X (ட்விட்டர்) தளத்திற்கு அரசு எச்சரிக்கை: ஆபாச, பாலியல் உள்ளடக்கங்களுக்கு தடை!
இந்தியாவில் X தளத்திற்கு அரசு எச்சரிக்கை அனுப்பி உள்ளது. அதில் ஆபாச, பாலியல் உள்ளடக்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. இதனை செய்யத்தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் குடிநீர் கலப்படம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை, உயிரிழப்பு அதிகரிப்பு!
மத்தியப் பிரதேசத்தில் குடிநீர் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போது உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் .
சுவிட்சர்லாந்தில் குண்டு வெடிப்பு ; புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்,40 பேர் பலி
சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 40 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் பிரபலமான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடி மகிழ, ஏராளமானோர் கூடியிருந்தனர். வெடிவிபத்து அதிகாலை 1.30 மணிக்கு திடீரென பயங்கர […]
❄️ ஐரோப்பாவில் கடும் குளிர் -யாழ்ப்பாணத்தை சோ்ந்தவா் உயிாிழப்பு
ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக, அங்கு வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர்… The post ❄️ ஐரோப்பாவில் கடும் குளிர் -யாழ்ப்பாணத்தை சோ்ந்தவா் உயிாிழப்பு appeared first on Global Tamil News .
ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயார்: டிரம்ப் கடும் எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. ஈரான் அரசு தனது நாட்டு மக்கள் மீது வன்முறையைப்… The post ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயார்: டிரம்ப் கடும் எச்சரிக்கை! appeared first on Global Tamil News .
வடக்கு கரோலினாவில் ISIS இன் புத்தாண்டு பயங்கரவாத சதி முறியடிப்பு!
அமெரிக்காவின் வடக்கு கரோலினா (North Carolina) மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று (2026) ஒரு பல்பொருள் அங்காடிக் கடை (Grocery… The post வடக்கு கரோலினாவில் ISIS இன் புத்தாண்டு பயங்கரவாத சதி முறியடிப்பு! appeared first on Global Tamil News .
மத்திய கிழக்கில் அதிரடி திருப்பம்: மோதல் பாதையில் சவுதி –அமீரகம்! ⚔️
மத்திய கிழக்கின் நெருங்கிய நட்பு நாடுகளாகக் கருதப்பட்ட சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே இப்போது… The post மத்திய கிழக்கில் அதிரடி திருப்பம்: மோதல் பாதையில் சவுதி – அமீரகம்! ⚔️ appeared first on Global Tamil News .
அரசாங்கம் தொலைக்காட்சி நிறுவனங்களை தடை செய்யுமா?
எம்.எஸ்.எம். ஐயூப் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அழித்துவிட முயல்வதாக எதிர்க் கட்சிகளும் சில ஊடக அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. அண்மையில் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு எதிராக பொலிசார் இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாடொன்றை அடுத்தே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஊடகங்களின் உள்ளடக்கத்தின் தகுதியை பற்றி தீர்மானிக்கும் அதிகாரம் பொலிசாருக்கு இல்லை என்றும் பொலிசாருக்கு அந்த அதிகாரத்தை வழங்குவதானது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றும் விமர்சகர்கள் கூறுகின்னர். ஆயினும் அந்தத் தொலைக்காட்சி சேவைக்கு எதிராக அரசாங்கம் […]
ரஷியாவுடன் அமைதி ஒப்பந்தம் 90% தயாா்
ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் தனது புத்தாண்டு உரையில் கூறியதாவது: ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம்தான் உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் விதியைத் தீா்மானிக்கும். உக்ரைனில் அமைதியை கொண்டு வருவதற்காக எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் போரின் முடிவை விரும்புகிறோம் – உக்ரைனின் முடிவை […]
இலங்கை மருந்துவத் துறையில் எழுச்சி ; அரச நிறுவனம் படைத்த வரலாற்று சாதனை
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தனது வரலாற்றில் அதிகூடிய மருந்து உற்பத்தியை 2025 ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டில் 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகளை உற்பத்தி செய்ய இக்கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஒரு மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய உற்பத்தியும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே பதிவாகியுள்ளது. அந்த மாதத்தில் மாத்திரம் 385 மில்லியன் மாத்திரைகள் மற்றும் […]
பசிபிக்கில் மேலும் இரு படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஐந்து போ் உயிரிழப்பு
பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்திவருவதாக குற்றஞ்சாட்டி, இரு படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 5 போ் உயிரிழந்தனா். இது குறித்து அமெரிக்க ராணுவ தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 போ் கொல்லப்பட்டனா். கடந்த மூன்று மாதங்களாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் படகுகளை அமெரிக்கப் படைகள் இலக்காகக் கொண்டு வருகின்றன என்று அறிக்கையில் […]
வவுனியா –கூமாங்குளம் கிராம அலுவலர் அலுவலகம் பிரதி அமைச்சரால் திறந்து வைப்பு
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வவுனியா, கூமாங்குளம் கிராம அலுவலர் அலுவலகம் இன்று கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, கூமாங்குளம் கிராம அலுவலர் அலுவலகமானது 15 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. புனர் நிர்மாண வேலைகள் நிறைவடைந்த நிலையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. கிராமசேவையாளர் என்.ஶ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கிராம மக்கள், முன்பள்ளி […]
மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமை கோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படை அற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. புதுவருட தினமான நேற்று (01.01) வவுனியாவில் அவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்களாகிய நாங்கள், வவுனியாவில் 3,237வது நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறோம். இந்தத் தியாகம் மற்றும் மனவுறுதி நிறைந்த இடத்திலிருந்து, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளைப் பற்றிய உண்மையை வெளிக்கொணர உதவுமாறும், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் இனப்படுகொலையை நிறுத்தி இறைமையை மீட்டெடுக்க ஆதரவளிக்குமாறு அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் அரசியல்வாதிகளாக அல்ல. மாறாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தாய்மார்களாகவே இந்த தார்மீக அடிப்படையில் பேசுகிறோம். தமிழ் வரலாறு காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசியலமைப்புகளுடனோ அல்லது திணிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்புக்களுடனோ தொடங்கவில்லை. நவீன எல்லைகளுக்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பே, இந்தத் தீவு தமிழ் பேசும் மக்களால் வசித்து ஆளப்பட்ட தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த பண்டைய காலங்கள் வரை அது நீண்டு செல்கிறது. இந்தத் தீவில் தமிழர்களின் இருப்பு, பிற்கால அனைத்து அரசியல் மற்றும் இனக் கட்டுமானங்களுக்கும் முந்தையது. ஆயினும் கூட, சமகால தமிழ் தலைவர்கள் பலர் இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, அதற்குப் பதிலாக தனிப்பட்ட வசதி, வெளி அழுத்தங்கள் அல்லது மேட்டுக்குடி நலன்களில் வேரூன்றிய அரசியல் சூத்திரங்களை ஊக்குவிக்கின்றனர். கடந்த மாதம், அமெரிக்கா யாழ்ப்பாண விமான நிலையத்தில் இரண்டு முறை பெரிய இராணுவ விமானங்களைத் தரையிறக்கி மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் மூலம் தமிழ் பொதுமக்களின் மீது உறுதியான அக்கறையை வெளிப்படுத்தியது. இருப்பினும், எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ அல்லது 'சிவில் சமூக அமைப்பு'என்று சொல்லிக்கொள்ளும் அமைப்போ இந்த ஆதரவை பகிரங்கமாக அங்கீகரிக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் ஆகிய நாங்கள் மட்டுமே நன்றியைத் தெரிவித்தோம். இது தமிழர் மத்தியில் உள்ள தார்மீக மற்றும் தலைமைத்துவத் தோல்வியை அம்பலப்படுத்தியது. தென்னிந்தியா மற்றும் தமிழ் தீவான இலங்கையை உள்ளடக்கிய தமிழகத்தில் ஒரு பழங்கால சிங்கள இனம் இருந்ததற்கான வரலாற்று அல்லது தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை. தமிழ் இனம் சைவ சமயத்தைப் பின்பற்றியது. அதைத் தொடர்ந்து தமிழ் பௌத்தத்தைப் பின்பற்றியது. பின்னர் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பியது. இந்த மாற்றங்கள் மணிமேகலை உட்பட தமிழ் இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமை கோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படை அற்றவை. சிங்கள மக்கள் தெற்கில் சுதந்திரமாக வாழலாம். ஆனால் வடக்கு-கிழக்கு வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அது தமிழ் தேசத்திற்கு சொந்தமானது எனத் தெரிவித்தனர். இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் அமரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தி இருந்ததுடன், காணாமல் ஆக்கபட்ட தமது உறவுகளின் புகைப்படங்களையும் தாங்கி இருந்தனர் .
Vaiko நடைபயணத்தை புறக்கணித்த Congress... கூட்டணிக்குள் சர்ச்சை ஏன்? | Stalin | IPS | Vikatan
Sandraவோட real face அப்பவே தெரிஞ்சிருக்கும்.! -`Biggboss' Amit Bhargav| BB Tamil | Paru | kamarudin
2025-ல் சௌதி அரேபியாவில் 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
சௌதி அரேபியா நாட்டில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 356 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில், பெரும்பாலானோர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர்கள் எனக் கூறப்படுகிறது. சௌதி அரேபியாவில், போதைப் பொருள் கடத்தல்களைத் தடுக்கும் விதமாக அந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் முறையை, கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டு […]
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க ஏதுவாக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய முற்பட்டுள்ளது. முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலக கும்பலிற்கு விற்பனை செய்த விடயத்தில் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை முன்னதாக பிணையில் விடுவிக்க அரசு உயர்மட்டத்துடன் நடாத்தப்பட்ட பேச்சுகளில் கைவிரிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் உள்ளே வைத்திருக்கும் வகையில் கடந்த கால மோசடிகள் தொடர்பில் வழக்குகளை தாக்கல் செய்ய அரச தரப்பு முற்பட்டுள்ளது. அவ்வகையில் யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளிலும் கிளிநொச்சியின் பூநகரியிலும் கடலட்டை பண்ணைகளிற்கு நிலங்களை ஓதுக்கியதில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி மோசடிகள் தொடர்பிலான கோவைகள் தூசு தட்டப்பட்டுவருகின்றது. அரசிற்கு சேர வேண்டிய நில வாடகைகள் ஏதும் செலுத்தப்படாது சுமார் நாலாயிரம் ஏக்கர் வரையிலான நிலம் அமைச்சரின் பணிப்பில் அவரது ஆதரவாளர்களிற்கு வடமாகாண காணித்திணைக்கள அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் வழங்கப்பட்டுள்ளது. முறையற்ற அரச காணிகள் ஆக்கிரமிப்பு தொடர்பில் கண்டுகொள்ளாதிருந்ததுடன் மாதாந்தம் சுமார் நூறு மில்லியன் வரையிலான நிதி துஸ்பிரயோகத்திற்கு வழிகோலியதாக காணித்திணைக்கள அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே தென்னிலங்கையில் கைதான முன்னாள் அரசியல்வாதிகள் மீது அத்தகைய குற்றச்சாட்டுக்களை வைத்திருந்த அரசு தற்போது அதே பாணியில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது விசுவாச அதிகாரிகளை வேட்டையாடத்தொடங்கியுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார். நயினாதீவில் உள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள் தையிட்டி விகாரை பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை (02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி இராணுவத்தினரால் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாராதிபதி அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். அதன் ஒரு கட்டமாக தையிட்டிக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாராதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பற்றை வளர்ந்திருந்த காணியை பார்வையிட்டு சென்றுள்ளார். இதனிடையே தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலர் கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைவாக, திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பது தொடர்பாக - விகாராதிபதியுடன் சந்தித்து தொடர் நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்தீர்மானத்திற்கமைய, இன்றைய தினம் (02.01.2025) மாவட்ட செயலர் விகாராதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
அமித் ஷா - ஈபிஎஸ் சந்திப்பு? சுவாரஸ்ய ஆலோசனை.. யாருடன் கூட்டணி தெரியுமா?
ஜனவரி 4 ஆம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
RBI-ல் வேலை; இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? ரூ.3 லட்சம் வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா இன்ஜினீயர், ஐ.டி. செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட் உள்ளிட்ட பல பணிகள். இது ஒப்பந்தப் பணி ஆகும். மொத்த காலிப்பணியிடங்கள்: 93 வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) கல்வித் தகுதி: B.E/B.Tech, BBA, Ca/ICWA, PG இந்திய ரிசர்வ் வங்கி | RBI Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா? BEL நிறுவனத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்? சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.3.10 லட்சம்; அதிகபட்சம் ரூ.4.8 லட்சம். எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? பிரிலிமினரி ஸ்கிரீனிங், ஆவண சரிபார்ப்பு, நேர்காணல். விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 6, 2026 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! Career: டிகிரி படித்திருந்தால் வங்கி வேலை; ரூ. 1.20 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிக்கலாம்?
தைவானை சீனாவுடன் இணைப்பது தடுத்து நிறுத்த முடியாதது: ஷி ஜின்பிங்
தைவானை சீனாவுடன் இணைப்பது ‘தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை‘ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது புத்தாண்டு உரையில் அவா் கூறியதாவது: சீனாவின் மறுமலா்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தாய்நாட்டுடன் தைவானை மீண்டும் இணைப்பது தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை. அமைதியான வழியில் இணைப்பையே விரும்புகிறோம். ஆனால் தைவானின் சுதந்திரவாதப் பிரிவினைவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். இந்த விவாகரத்தில் அந்நிய சக்திகளின் தலையீட்டை கடுமையாக எதிா்த்து நிற்போம் […]
மத்துகம பிரதேச சபையின் தவிசாளருக்கு விளக்கமறியல்
மத்துகம பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் குறித்த பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தவிசாளர் இன்று (02) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். தமது கடமைகளுக்குத் தவிசாளர் இடையூறு விளைவிப்பதாகப் பிரதேச சபையின் செயலாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அதற்கமைய, சந்தேகநபரான தவிசாளரை இன்று பிற்பகல் கைது செய்த பொலிஸார், […]
சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – 2 தொழிலாளர்கள் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த இந்த வெடிவிபத்து, சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் அபாயத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு… The post சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – 2 தொழிலாளர்கள் பலி appeared first on Global Tamil News .
சற்றுமுன்: தவெகவில் இணைந்த அதிமுக முக்கிய பிரமுகர்.. யார் இந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.?
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர், விஜய்யின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் சற்றுமுன் இணைந்து உள்ளார். இவர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார்.
`காங்கிரஸில் தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது!' - ஜோதிமணி
சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார். கரூர் காங்கிரஸ் கட்சி எம்.பி-யான ஜோதிமணி இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் செய்துள்ள பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்னைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது. தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத ஒரு பேராபத்தை, பிரிவினைவாத, மதவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது. தமிழ்நாடு காங்கிரஸில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. jothimani இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது. தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின் அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சொந்த கட்சியினர் செயல்பாட்டையே வெளிப்படையாக ஜோதிமணி விமரிசித்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை, கரூர் மாவட்ட காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் இருப்பது உண்மைதான். அதுபற்றி ஜோதிமணி குற்றம்சாட்டியபோது என்னாலான நடவடிக்கையை எடுத்தேன். ஆனால், ஜோதிமணி பொதுவெளியில் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. எனக்கு உட்பட்ட அதிகாரத்தின்படியே செயல்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
பிலிப்பின்ஸ்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் கையெறி குண்டு வீசிய மர்ம நபர்கள்! 22 பேர் படுகாயம்!
பிலிப்பின்ஸ் நாட்டில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் வீசிய கையெறி குண்டு வெடித்து 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு பிலிப்பின்ஸின் கோட்டாபாட்டோ மாகாணத்தின் மாத்தளம் நகரத்தில் உள்ள நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை (ஜன. 1) அதிகாலை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தினுள் கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சில நொடிகளில் அந்த வெடிகுண்டு […]
Jasjeet Kaur appointed CEO at Groupe SEB India
Mumbai: Groupe SEB India has announced the appointment of Jasjeet Kaur as its Chief Executive Officer, effective December 1, 2025, marking a significant milestone in both her leadership journey and the company’s growth trajectory in the Indian market.In her new role, Jasjeet will be responsible for driving Groupe SEB India’s overall business performance, strengthening market leadership across categories, and accelerating profitable and sustainable growth in the country.Jasjeet joined Groupe SEB India in 2020 as Marketing Director, where she played a pivotal role in enhancing the Group’s presence and competitiveness in India. A key highlight of her tenure has been the successful launch and expansion of Groupe SEB’s premium international brand, Tefal, which has strengthened the company’s position in the evolving Indian consumer market.Earlier in 2025, she expanded her mandate as Vice President – Sales (E-commerce, Modern Trade & Other Channels), focusing on creating stronger alignment between marketing and sales functions. In this role, she worked on improving execution at scale, sharpening commercial capabilities, and supporting Groupe SEB India’s omnichannel growth ambitions.With over two decades of experience across FMCD, automotive, and consumer businesses, Jasjeet brings deep expertise in business strategy, brand building, category development, and marketing transformation. Prior to Groupe SEB, she held leadership roles at reputed organisations such as Kohler, Volvo Eicher, and Assa Abloy.Her appointment comes at a time when Groupe SEB is accelerating its growth plans in India, leveraging its strong global scale and innovation capabilities. Globally, Groupe SEB operates in over 150 countries, with more than €8.26 billion in annual sales, a portfolio of 470+ patents worldwide, and 47+ industrial sites.
V.P. Nandakumar honoured at FICCI Kerala Policy Conclave
Kochi: V.P. Nandakumar, Chairman of FICCI Kerala and Chairman and Managing Director of Manappuram Finance, was honoured at the FICCI Kerala Policy Conclave, recognising his leadership and contributions to industry and academia. Nandakumar was recently elected as the Acting Chairman of the Indian Institute of Management Kozhikode (IIM Kozhikode).The conclave, held under the theme ‘Industry-Friendly Policy: Reforms and Achievements’, brought together key stakeholders from government, industry, and academia to discuss policy initiatives aimed at fostering economic growth in the state. Kerala Industries Minister P. Rajeev delivered the keynote address at the event.In addition to the felicitation, the conclave featured addresses by M.P.M. Muhammed Haneesh, Principal Secretary (Industries), Thomas John, Co-Chairman, FICCI Kerala, Cherian M. George, and Savio Mathew, Head of the FICCI Kerala State Council, who shared insights on policy reforms and the evolving industrial landscape in Kerala.The event underscored FICCI Kerala’s ongoing efforts to promote industry-friendly policies and strengthen collaboration between the government and the private sector, while acknowledging leadership that has played a pivotal role in advancing these objectives.
பாஜகவுடன் விஜய் இணைந்தால் நல்லது.. அறிவாலயத்தை நோக்கி தான் வைகோ செல்ல வேண்டும்.. தமிழிசை கருத்து!
பாஜகவுடன் விஜய் இணைந்தால் நல்லது என்றும் வைகோ அறிவாலயத்தை நோக்கித்தான் பாதயாத்திரை செல்ல வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்து உள்ளார்.
Ormax Media unveils OMA to map affluence in India’s entertainment economy
Mumbai: Addressing a long-standing gap in how affluence is measured for the media and entertainment (M&E) sector in India, Ormax Media has introduced OMA (Ormax Media Affluence), a new audience classification system designed specifically to reflect how individuals discover, consume, and pay for content.Traditional socio-economic frameworks such as SEC and NCCS rely largely on household-level indicators and ownership of basic assets, many of which have limited relevance to modern media consumption. These models also treat affluence as a household attribute, whereas content consumption is increasingly shaped by individual behaviour, digital habits, and lifestyle choices. OMA aims to correct this misalignment by anchoring affluence directly in observed media behaviour and spending.OMA is a scoring system built on 21 parameters spanning three consumption domains: family consumption at home, individual digital consumption, and out-of-home entertainment. The framework goes beyond access and frequency to account for the monetary value of consumption, including smartphone price points, number and type of paid OTT subscriptions, OTT rental spends, movie ticket prices, and spending on concerts, sports, and live performances. The resulting affluence score reflects an individual’s propensity to invest both time and money in M&E products and services.Based on cumulative scores across these parameters, audiences are classified into four segments—OMA A, B, C, and D—creating a media-relevant hierarchy of affluence. This enables the industry to move beyond generic socio-economic labels and adopt a framework that is directly linked to content consumption and monetisation potential.For media companies, platforms, and marketers, OMA enables sharper audience-led decision-making. Streaming platforms can more accurately size and prioritise user cohorts, content owners can assess the revenue potential of formats and genres, and advertisers can align media planning with actual spending propensity rather than broad income proxies. By grounding affluence in real media behaviour, OMA improves the reliability of audience segmentation across content strategy, distribution, and monetisation.OMA was introduced in The Ormax OTT Audience Report: 2025. Ormax Media has announced that the classification system will be integrated across its research and analytics products going forward, embedding media-led affluence as a core lens for audience understanding in India’s rapidly evolving entertainment ecosystem.
`ஆன்மிகத்தை வம்பு செய்ய பயன்படுத்துகிறார்கள்; மதவாத அரசியல் போதையைத் தடுக்க வேண்டும்!' - ஸ்டாலின்
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணத்தின் துவக்க விழா திருச்சி தென்னூர் புலவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.க பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகர், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஸ், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, வாழ்த்துரை வழங்கிய தொல்.திருமாவளவன், thirumavalavan வைகோ ஏற்றுக்கொண்ட கொள்கையில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் விதைத்த சமத்துவக் கொள்கையில் இன்னும் உறுதிப்பாட்டோடு விளங்குகிறார் என்பதற்கு சான்றாக இந்த சமத்துவ நடைபயணம் விளங்குகிறது. அவருடைய கொள்கை உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக இது அமைந்திருக்கிறது. அனைவரும் ஆதரிக்க வேண்டிய ஒரு நடைபயணமாக அமைந்திருப்பது போற்றுதலுக்குரியது, மகிழ்ச்சி அளிக்கிறது. சொல்லப்போனால் சமத்துவத்திற்காக போராடக்கூடிய நாம் அனைவரும் அவரோடு இந்த நடைபயணத்தில் இணைந்து நடக்க வேண்டும். அத்தனை சிறப்புக்குரிய ஒரு நடைபயணம் இது. பெரியார் இயக்கம் கண்டதும் சமத்துவத்திற்காகத்தான். பேரறிஞர் அண்ணா அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்ததும் சமத்துவத்திற்காகத்தான். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அரசியல் செய்ததும் சமத்துவத்திற்காகத்தான் . அவருடைய கருத்தியல் வாரிசாக நின்று களத்தில் இருக்கிற திராவிட மாடல் என்கிற சமத்துவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற ஸ்டாலினும் இங்கே போராடிக் கொண்டிருப்பது சமத்துவத்திற்காகத்தான். மேடையில் அமர்ந்திருக்கிற அத்தனை தலைவர்களின் நோக்கமும், கூடியிருக்கிற நம்முடைய அனைவரின் நோக்கமும் சமத்துவத்திற்காகத்தான். அம்பேத்கரும், தந்தை பெரியாரும் இந்த மண்ணில் தம் இறுதி மூச்சு வரையில் ஓடி ஆடி பணியாற்றியதும் தமது வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டதும் சமத்துவத்திற்காகக்தான். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு கூட்டணி அரசியலை ஸ்டாலின் இன்றைக்கு முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்கான தகுதியும், ஆற்றலும், வலிமையும் ஸ்டாலினுக்கு உண்டு. அந்த வகையிலே வைகோ தொடங்குகிற இந்த சமத்துவ நடைபயணத்தை அவர் தொடங்கியுள்ளது சால பொருத்தமானது. 2026 - ம் வருட தேர்தல் சராசரியான தேர்தல் இல்லை. தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் சனாதன சக்திகள் ஒரு புறம். அப்படி விட்டு விடமாட்டோம் நாங்கள் பெரியாரின் பிள்ளைகள் அண்ணாவின் தம்பிகள். அம்பேத்கரின் அரசியல் வாரிசுகளாகிய நாம் ஒருபோதும் விடமாட்டோம் என்கிற உறுதிபாட்டோடு ஸ்டாலின் தலைமையில் அணிதிரண்டு நிற்கிறோம். ஒரு சிலர் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பேசக்கூடியவர்களாகவும் இன்றைக்கு முகமூடிகளை அணிந்து கொண்டு நமக்கு எதிரான திரிபுவாத அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்பது தமிழ் தேசியத்திற்கு எதிரானது அல்ல. தமிழுக்கு எதிரானது அல்ல. தமிழனுக்கு எதிரானது அல்ல. தமிழ் மண்ணுக்கு எதிரானது அல்ல. அண்ணாவும், கலைஞரும் இந்தியை எதிர்க்காமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் இந்தி வாலாக்களாக மாறியிருப்போம். திராவிடத்தால் தான் தமிழ் உயிர்ப்போடு இருக்கிறது. திராவிடம் என்பது தமிழ் தேசியம், சமூகநீதி, சமத்துவம் தான். இந்த நடைபயணம் சமத்துவ நடைபயணம் என கூறினாலும் பொருந்தும் திராவிட நடைபயணம் எனக் கூறினாலும் பொருந்தும் என்றார். அடுத்து பேசிய காதர் மொய்தீன், இந்திய மாநிலங்களுக்கே முன்னுதாரணமான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதனால், மற்ற மாநில மக்கள் ஸ்டாலின் போல் ஒரு முதல்வர் நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்குகிறார்கள். மாசே துங்கின் பயணம் வரலாற்றில் முக்கியமாக உள்ளது. அது போல வைகோவின் பயணம் அமையும். 2026- ல் நடைபெறும் தேர்தல் புரட்சியாக இருக்கும். அதற்கு, வைகோ மேற்கொள்ளும் நடைபயணம் உதவும் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் என் இந்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டில் தன் காலடி படாத இடங்களே இல்லை என மக்கள் பிரச்னைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ. நெஞ்சுரத்தையும், ஸ்டாமினாவையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என ஆச்சர்யப்பட தோன்றுகிறது. இளைஞர்களுடைய வேகத்தையும், உத்வேகத்தையும் வைகோவிடம் காண முடிகிறது. இளைய தலைமுறையின் நலனுக்காகவும், எதிர்கால நன்மைக்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் செயலாற்றும் இயக்கம் தான் திராவிட இயக்கம். தன் தள்ளாத 95 வயதிலும் தவறாமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். தமிழர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும், அதற்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என தன் இறுதி மூச்சு வரை உழைத்தவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த கலைஞர் 80 ஆண்டு பொது வாழ்விற்கு சொந்தக்காரர். சக்கர நாற்காலியில் அமர்ந்தும் மக்களுக்காக உழைத்தவர். தன் முதுமை காலத்திலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களோடு அரசியல் செய்தவர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட திராவிட யூனிவர்சிட்டியில் படித்தவர் தான் வைகோ. நானும் அந்த யுனிவர்சிட்டி மாணவன் தான். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்குத் தேவையானவற்றை முன்னிறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம் நிச்சயம் வெற்றி பெறும். காந்தியின் நடைபயணமும், மாவோவின் நடைபயணமும் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியது. திராவிட இயக்க மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக கர்ஜித்த வைகோ முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்து விட்டு நடைபயணம் மேற்கொள்கிறார். இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பொருளை நிச்சயம் ஒழிக்க வேண்டும். போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதை ஒழிக்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனால், ஓரளவிற்கு பலனும் கிடைத்துள்ளது. போதைப்பொருள் மிகப்பெரிய நெட்வொர்க், அதை ஒழிக்க மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவிற்குள் போதைப்பொருள் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர் , ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்டவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்கள் தான். அந்த நெட்வொர்க் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதை பொருளை ஒழிக்க தமிழ்நாட்டின் துறைகள் ஒன்றிய அரசின் துறைகளோடும் பிற மாநில அரசு துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பது சமூகத்தின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத்துறையை சார்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்லும் போது வேடிக்கை பார்க்கக் கூடாது. mk stalin அவர்களை தீவிரமாக கண்காணித்து பொறுப்போடு வளர்க்க வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான். ஒன்றிய அமைச்சர் பதவியில் இருப்பவர்களே வெறுப்பு பேச்சுக்களை பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும் சீர்குலைக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் என எல்லோரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்த காலம் போய் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கக்கூடிய வேலையை பிளவுவாத சக்திகள் செய்து வருகிறார்கள் அன்பு செய்ய சொல்லி தர வேண்டிய ஆன்மிகத்தை சிலர் வம்பு செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். மது போதையும் அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க நாம் ஒன்று சேர வேண்டும். வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும் அதைவிட அவரின் உடல்நலம் பெரிது. எனவே, அவர் கவனத்துடன் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள வேண்டும். இனி, இதுபோல் கடுமையான நடைபயணங்களை மேற்கொள்ளக் கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இந்திய தொலைபேசி தொழில்கள் நிறுவனத்தில் (ITI Limited) உள்ள இளம் நிபுணர்கள் பதவிக்கான 215 காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்படும் இப்பதவிக்கு டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 12 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
VeCura ReSculpt Launched by Actress Alya Manasa & Praba Reddy, in Chennai
VeCura ReSculpt, a next-generation aesthetic and body sculpting clinic under the aegis of VeCura, officially marked its entry into India
AR Rahman to Make Acting Debut in ‘Moonwalk’
Composer AR Rahman, widely loved for his musical talent, has created some of the most beautiful and soulful music that
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்
சென்னை தலைமைச் செயலகத்தில் போட்டா ஜியோ, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினர். போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 6-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த
முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின் தாய் மொழியையே மறந்த சிறுவன்! என்ன நடந்தது?
நெதர்லாந்தில் 17 வயது சிறுவன் ஒருவன் வழக்கமான முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நடந்துக்கொண்ட விதம் மருத்துவ உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த சிறுவன் என்ன செய்தார் என்று சிந்திக்கிக்கின்றீர்ளா? கால்பந்து விளையாடும்போது கால் மூட்டுப்பகுதியில் அடிபட்டு, கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குறித்த சிறுவன் சிகிச்சைக்கு பின்னர் மயக்கநிலையிலிருந்து எழுந்ததும் தனக்கு கொஞ்சம் மட்டுமே தெரிந்த ஆங்கில மொழியில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவுக்கு மிகவும் சரளமாக பேசியுள்ளார். மாணவரின் இந்த நடத்தையால் […]
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 300 வீடுகள் மற்றும் அவற்றுக்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஒப்படைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி
Nick Jonas Drops ‘Gut Punch,’ Priyanka Cheers
Nick Jonas welcomed the New Year by releasing a brand new song titled ‘Gut Punch’. This is his latest solo
கே.எஸ்.ஆரை தூக்கிலிட்டாலும் அது தவறில்லை –முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தாக்கு
தெலுங்கானா ஆந்திர மாநிலத்துடன் ஒன்றாக இருந்தபோதிலும் விட, கே. சந்திரசேகர ராவ் ஆட்சிச் காலத்தில் நீர்ப்பாசன திட்டத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இதற்காக பி.ஆர்.எஸ். ஆட்சியில் நீர்ப்பாசன
பொற்கால ஆட்சி தொடர் தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன் –வைகோ
சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:- பொங்கிவரும் பொன்னி ஆற்றங்கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி
இந்தூர் விவகாரத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும்
சிறுவன் உயிரிழப்புக்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும் –எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாநகராட்சியின் 4-வது வார்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, தண்ணீர் தேங்கிய 5 அடிக் குழியில் தவறி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 02, 2026) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 34.19 மில்லியன்… The post கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் appeared first on Global Tamil News .
ஜனவரி 19 ஆம் தேதி தஞ்சையில் திமுக மகளிரணி மாநாடு
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகிற 19-ந்தேதி தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் தஞ்சையில்
தமிழக காங்கிரஸ் அழிவை நோக்கி பயணிக்கிறது –காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி
'நான் இறந்து போனதும் இதை மட்டும் பண்ணாதீங்க'? - Actress Mumtaj Breaking| நடிகை மும்தாஜ்-ஆ இவங்க??
மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல்
Trisha: 2026-லும் பிஸி; சிரஞ்சீவி, சூர்யா படங்கள், மீண்டும் போலீஸ் கதை - த்ரிஷாவின் அசத்தல் லைன்அப்
சினிமாவில் வெள்ளிவிழா ஆண்டை நெருங்குகிறார் த்ரிஷா. கடந்த 2025ல் 'விடா முயற்சி', 'குட்பேட் அக்லி', 'தக் லைஃப்', 'ஐடென்டிட்டி' என பல படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில் இப்போதும் பிஸியாக இருக்கிறார். சிரஞ்சீவியுடன் ஒரு படம், சூர்யாவுடன் 'கருப்பு' தவிர ஹீரோயின் சென்ட்ரிக் வெப்சிரீஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். த்ரிஷாவின் லைன் அப் குறித்து விசாரித்ததில் கிடைத்தவை. கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியின் 'விண்ணைத் தாண்டி வருவாயா' நிஜமாகவே ஒரு மேஜிக். 1000 நாள்களைக் கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. மறு வெளியீட்டிலும் சாதனை படைத்த படமாகி விட்டதால், த்ரிஷாவும் இந்தப் படத்தை உருவாக்கியது சிறப்பானது. நான் இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு படத்தை உருவாக்கும்போது நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அந்த திரைப்படம் எப்படியோ சிறந்ததாக உருவாகிவிடும். அதனால்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என் இதயத்துக்கு நெருக்கமான படம். இன்றளவும் ஜெஸ்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரசிகர்களுக்கும், சுற்றத்தவருக்கும் சிறப்பு நன்றிகள். இப்போதும் எனக்கு ஜெஸ்ஸி குறித்து மீம்களை அனுப்புகின்றனர். தனிப்பட்ட மெஸ்ஸேஜ்களை அனுப்புகின்றனர் என நெகிழ்ந்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியீட்டு பேசியிருந்தார். த்ரிஷா த்ரிஷா, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'ஸ்டாலின்' படத்திற்குப் பின் இப்போது 'விஸ்வம்பரா'வில் மீண்டும் இணைந்துள்ளார். ஃபேன்டஸி ஆக்ஷன் படமான இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டாலும், கிராபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. வரும் கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். இதில் த்ரிஷாவின் தோற்றம் பேசப்படும் என்கிறார்கள். தமிழில் சூர்யாவுடன் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார். 'மௌனம் பேசியதே', 'ஆயுத எழுத்து, 'ஆறு' படங்களுக்குப் பின் த்ரிஷா, சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். 'கருப்பு' படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. RJ பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷாவின் ரோல் பேசப்படும் என்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி ஏற்கெனவே த்ரிஷா நடிப்பில் 'மாசாணி அம்மன்' படத்தைத் தொடங்குவற்கான பேச்சு எழுந்த சூழலில், இந்த படத்திற்குள் த்ரிஷா வந்திருப்பதால் அவரது ரோலை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'கருப்பு' ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. இதனை அடுத்து 'பிருந்தா 2' வெப்சிரீஸில் நடிக்க உள்ளார். சோனி லிவ் தளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான வெப்சிரீஸ் 'பிருந்தா'. இதில் ஹைதராபாத் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக (எஸ்.ஐ) ஆகப் பணிபுரிகிறார் பிருந்தா. அங்கே அவரது திறமையை அனைவரும் நிராகரிக்கிறார்கள். அதன் பின் அவரது திறமையை எப்படி நிரூபிக்கிறார் என்பதை 8 எபிசோடுகளில் திக்...திக் அனுபவத்தோடு சொல்லியிருந்தார்கள். அந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பில் இப்போது 'பிருந்தா 2' உருவாகிறது. ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. பிருந்தா படப்பிடிப்பில் தமிழில் இரண்டு கதைகள் கேட்டு வைத்திருக்கிறார். 'கருப்பு' வெளியான பிறகு அடுத்த அதிரடி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள். தவிர, மோகன்லாலுடன் 'ராம்' என்ற படமும் கைவசம் வைத்துள்ளார். கடந்த 2020 லாக்டவுனுக்கு முன்னரே இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது. பல்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இன்னும் சில ஷெட்யூல்கள் படப்பிடிப்பு மீதமிருக்கின்றன என்பதால், 'ராம்' மீண்டும் எப்போது துவங்கினாலும் கால்ஷீட் கொடுப்பார் என்கிறார்கள்.
குடும்பஸ்தரின் உயிரை பறித்த கால்வாய் ; தமிழர் பகுதியில் சம்பவம்
புல்மோட்டை பொலிஸ் பிரிவின் மகாசேனபுர பகுதியில் கால்வாயில் விழுந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலொங்கொல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீதிபதியின் விசாரணைக்குப் பிறகு, சடலம் பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து புல்மோட்டை பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.
பாடப் புத்தக சர்ச்சை; பணிப்பாளர் நாயகம் விலகல்
தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட தரம் 6 ஆங்கிலக் கற்றல் தொகுதியில் இடம்பெற்ற சர்ச்சை விசாரணை முடியும் வரை, அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட மேலதிக கற்பித்தல் உள்ளடக்கங்களில், பொருத்தமற்ற இணையதளக் குறிப்பு சேர்க்கப்பட்டமை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக, சுயாதீன விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்பாலீர்ப்பாளர்களுக்கான இணையதளம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அடுத்தகட்ட விசாரணைகளின் […]
கல்முனையில் நாய் இறைச்சி விற்பனையா: அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்
கல்முனை – பெரியநீலாவணை நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் இந்நிலையில் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள […]
⛵ காம்பியா கடற்கரையில் படகு விபத்து – 7 பேர் பலி – பலரைக் காணவில்லை
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா (Gambia) கடற்கரையில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் அபாயகரமான… The post ⛵ காம்பியா கடற்கரையில் படகு விபத்து – 7 பேர் பலி – பலரைக் காணவில்லை appeared first on Global Tamil News .
தமிழ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து எம்ஜிஆர் பெயரும் புகைப்படமும் நீக்கப்பட்டதற்கு அவருடைய புகழுக்கும் பெருமைக்கும் இழுக்கு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து உள்ளார்.
தையிட்டி விகாராதிபதி யாழ் . மாவட்ட செயலர் சந்திப்பு!
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன்… The post தையிட்டி விகாராதிபதி யாழ் . மாவட்ட செயலர் சந்திப்பு! appeared first on Global Tamil News .
நீ தினமும் எங்க போயிட்டு வர்றேன்னு - Emotional-ஆக பேசிய Actor Sivakarthikeyan Shock-ஆன அரங்கம்?
Lufthansa marks 100 years of aviation legacy in 2026
Mumbai: In 2026, Lufthansa reaches a historic milestone, celebrating 100 years since the founding of the first “Luft Hansa” on January 6, 1926. As one of the world’s most iconic aviation brands and Europe’s largest airline group, Lufthansa is commemorating a century defined by pioneering spirit, innovation, resilience, and global connectivity, while firmly setting its sights on the future.The airline’s journey began with the merger of Junkers Luftverkehr and Deutsche Aero Lloyd, culminating in the maiden flight of the first Lufthansa on April 6, 1926. Over the decades, Lufthansa’s story has been shaped by progress as well as profound challenges, including interruptions during the Second World War and its complex involvement during the Nazi era. As part of its centenary, Lufthansa is undertaking a critical reflection of this period, grounded in historical research, acknowledging all chapters of its past as an integral part of its identity.The legal foundation of today’s Deutsche Lufthansa AG was laid with the establishment of the “second Lufthansa” in 1953, followed by the resumption of flight operations in 1955. This post-war rebirth marked the beginning of a new era of growth, innovation, and international expansion that continues to this day.The 100th anniversary is being celebrated under the motto “We are the Journey,” symbolising the shared path of employees, passengers, and brand loyalists who have shaped Lufthansa’s evolution. The centenary is both a tribute to the trust of its customers and a recognition of the dedication of its people. Today, around 40,000 employees from 122 nations work under the Lufthansa brand, while the broader Lufthansa Group employs approximately 100,000 people from over 160 countries.Throughout 2026, Lufthansa will host a wide range of commemorative activities, including a permanent exhibition at Lufthansa Group Hangar One, special customer and employee events, a dedicated history book, film and video productions, and targeted marketing and product campaigns. The anniversary will also be visible across the customer journey, with a special “100 Years of Lufthansa” emblem featured on boarding passes, at airports, onboard aircraft, and through city-wide poster campaigns showcasing iconic moments from the airline’s history.A key highlight of the celebrations is the launch of the Lufthansa anniversary fleet. Six aircraft across major sub-fleets will feature special 100-year liveries, including an Airbus A380, Airbus A350-1000, Airbus A350-900, Airbus A320, and a Boeing 747-8. Leading the fleet is the Boeing 787-9 “Berlin,” recently delivered to Frankfurt and set to enter scheduled service as the first aircraft bearing the centenary livery. In addition, two retro liveries blending heritage and modernity will serve as flying ambassadors of the Lufthansa brand, proudly carrying the iconic crane symbol designed by Otto Firle in 1918.As Lufthansa celebrates its centenary, the milestone stands as both a moment of reflection and a bold declaration of intent—honouring a century of aviation leadership while embarking on the next chapter of innovation, sustainability, and global connection in its second hundred years.
“தனியார் காணிகளை அபகரித்தது மகா தவறு”–நயினாதீவு விகாராதிபதி
தனியார் காணிகளை அபகரித்தது , மகா தவறு, நயினாதீவு விகாராதிபதி ,தையிட்டி திஸ்ஸ விகாரை யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ… The post “தனியார் காணிகளை அபகரித்தது மகா தவறு” – நயினாதீவு விகாராதிபதி appeared first on Global Tamil News .
21 வயதில் ரூ.2.5 கோடி சம்பளம்; IIT ஹைதராபாத் மாணவனின் வரலாற்று சாதனை - சாத்தியமானது எப்படி?
கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்கள் வேலையை தேடி பயணத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வேலைக்கு சேரும்போதே அதிக சம்பளத்தில் பணியில் சேர வேண்டும் என விரும்புகிறார்கள். அப்படியானவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார் IIT ஹைதராபாத் மாணவர் எட்வர்ட் நாதன் வர்கீஸ். இறுதி ஆண்டு படிப்பை முடிப்பதற்கு முன்பே ரூ.2.5 கோடி சம்பளத்தில் வேலையை பெற்று அசத்தியுள்ளார்.
இன்னும் 10 சதவீதம் தான் மீதமுள்ளது; பெரும் நம்பிக்கையில் உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உக்ரைன் 10 சதவீத தொலைவில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அமைதி ஒப்பந்தம் இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை ட்ரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா-உக்ரைனுடன் அமெரிக்க […]
மன்னார் துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை, 90… The post மன்னார் துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! appeared first on Global Tamil News .
New Delhi: OPPO India has unveiled its new brand campaign, ‘Live it your way’, ahead of the much-anticipated launch of the OPPO Reno15 Series in India on January 8, 2026. The campaign brings back the popular trio of Pooja Hegde, Siddhant Chaturvedi and Ishaan Khatter, capturing the spirit of spontaneity, exploration and living in the moment.The campaign film follows the three actors on an unplanned journey across Kerala after a cancelled flight disrupts their original travel plans. What begins as a setback turns into an impulsive road trip, unfolding through forest trails, waterfalls, local art forms and backwater boat races. Through this unscripted adventure, OPPO positions the Reno15 Series as a creative travel companion that seamlessly captures life’s fleeting, authentic moments.[caption id=attachment_2486641 align=alignleft width=200] Sushant Vashistha [/caption]Commenting on the campaign, Sushant Vashistha, Head of Product and Digital Marketing, OPPO India, said, “Reno has always stood for embracing the present, moving fast, staying curious, and expressing yourself without overthinking. ‘Live it your way’ presents that mindset perfectly. It reflects how today’s youth navigate life—pursuing their passions, adapting on the go and enjoying the experience as it comes. The Reno15 Series is built for this rhythm, and this campaign gives a glimpse of how OPPO continues to design technology that fits naturally into the way people live today.” As the next evolution of the Reno portfolio, the Reno15 Series is designed for explorers and creators. It integrates OPPO’s advanced imaging system, immersive video capabilities, AI-led creative photo editing features, and a sturdy yet stylish design. Features such as the 3.5x Telephoto Portrait Camera, 200MP Main Camera, 4K 60fps HDR video, ultra-wide selfie camera, and AI Pop-Out functionality enable users to capture, edit and share dynamic visuals effortlessly.Sharing her experience, Pooja Hegde said, “Every Reno shoot feels different from a conventional shoot. There is a lot more room to be natural and responsive, which makes the process genuinely enjoyable. This time especially, the situations kept changing, and the Reno15 Series made it easy to capture details, expressions and emotions.” Reflecting on the collaboration, Siddhant Chaturvedi added, “This is my third campaign with OPPO, and what I have always enjoyed about the Reno films is that there is a lot of freedom built into the process, you are reacting to what is around you instead of following rigid setups. With the Reno15 Series, the shoot was highly dynamic and the smartphone handled everything with ease without slowing us down.” Ishaan Khatter shared, “Every collaboration with Reno has been an adventure and this third one was akin to the same feeling. We had a blast exploring Kerala in this new campaign and the Reno15 series captured its vibrant beauty coupled with our energy perfectly.” To maximise reach, OPPO India has rolled out the campaign film across its digital platforms, cinemas and OTT platforms nationwide. Introduced in 2019, the OPPO Reno Series has built a global community of over 130 million users by making advanced camera innovation intuitive and accessible. With the Reno15 Series, OPPO continues its focus on technology that evolves with modern lifestyles—supporting creativity, mobility and self-expression on the go. View this post on Instagram A post shared by Pooja Hegde (@hegdepooja)
Gold and Silver Prices Surge in Early 2026
Gold and silver prices started 2026 on a strong note, rising sharply in India’s domestic futures market. Strong local demand
நள்ளிரவு 12 மணி; 12 வினாடிகள்... 12 திராட்சைகள் - இந்தியாவில் கவனம் ஈர்த்த ஸ்பெயின் கலாசாரம்!
புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களைச் சாப்பிட்டு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் இந்த வினோதமான சடங்கு, தற்போது இளைஞர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் Las doce uvas de la suerte என்று அழைக்கப்படும் இந்தச் சடங்கு, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. நள்ளிரவு 12 மணி அடிக்கும்போது, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு திராட்சை வீதம் 12 திராட்சைகளைச் சாப்பிட வேண்டும் என்பது இதன் விதி. இவ்வாறு சரியாகச் சாப்பிட்டு முடித்தால், அந்த ஆண்டின் 12 மாதங்களும் அதிர்ஷ்டமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்பது மக்களின் ஆழமான நம்பிக்கை. இதனால், கடந்த புத்தாண்டு இரவில் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மேஜைக்கு அடியில் அமர்ந்து திராட்சை சாப்பிடும் வீடியோக்களைப் பகிர்ந்து, இந்தச் சடங்கை ஒரு சர்வதேச 'டிரெண்ட்' ஆக மாற்றினர். இந்த வினோதமான கலாசாரம் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில், புத்தாண்டு இரவில் திராட்சை பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நள்ளிரவு நெருங்கும் வேளையில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் திராட்சை வாங்கக் கடைகளில் குவிந்தனர். ஒரு குறிப்பிட்ட பழக்கடையில் மட்டும் சுமார் 200 முதல் 300 வாடிக்கையாளர்கள் திராட்சை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாகக் கடைக்காரர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் டெலிவரி தளங்களிலும் சில நிமிடங்களிலேயே திராட்சை இருப்பு தீர்ந்துபோனது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்தச் சடங்கின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவலும் உண்டு. 1900-களின் தொடக்கத்தில் ஸ்பெயினில் திராட்சை விளைச்சல் மிக அதிகமாக இருந்தபோது, தேங்கிப்போன பழங்களை விற்பனை செய்வதற்காகப் புத்திசாலி விவசாயிகள் உருவாக்கிய ஒரு 'மார்க்கெட்டிங் தந்திரம்' தான் இது என்றும் சொல்லப்படுகிறது. View this post on Instagram A post shared by anamika~ (@anam.lmao) அன்று லாபத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம், இன்று பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாகவும், ஒரு ஜாலியான சடங்காகவும் மாறியிருப்பது வியப்பிற்குரியது. இருப்பினும், இந்தச் சடங்கைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மிகக்குறுகிய நேரத்தில், அதாவது 12 வினாடிகளில் 12 திராட்சைகளை அவசரமாக விழுங்க முயற்சிக்கும்போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எம்.ஜி.ஆர். பெயர் நீக்கமா? மமதையின் உச்சத்தில் ஸ்டாலின்.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். பெயரை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
Karthikeyan Manickam named Chairman at ESAF Small Finance Bank
Thrissur: ESAF Small Finance Bank has announced the appointment of Karthikeyan Manickam as the Chairman of the Bank, marking a significant addition to its leadership at a time of continued focus on inclusive growth and governance excellence. A former Executive Director of Bank of India, Shri Manickam brings with him over 36 years of extensive experience in public sector banking.Karthikeyan is widely recognised for his deep domain expertise across banking operations, risk management, regulatory compliance, human resources, credit monitoring and recovery, financial inclusion, and customer-centric banking. His appointment is expected to further strengthen ESAF Bank’s corporate governance framework, enhance strategic oversight, and reinforce long-term institutional resilience, while supporting the Bank’s commitment to delivering superior customer service.In his role as Chairman, Karthikeyan will provide independent oversight and strategic guidance to the Board, supporting the Bank’s priorities around inclusive banking, asset quality improvement, regulatory adherence, sustainable growth, and high standards of service delivery. His leadership is expected to bolster stakeholder confidence in an increasingly dynamic and competitive financial environment.During his tenure as Executive Director at Bank of India, Karthikeyan was part of the top management team and played a key role in shaping policies and strategies across multiple portfolios, including risk management, inspection and audit, stressed asset resolution, retail banking, agriculture and MSME financing, government business, CSR, marketing, and financial inclusion.Earlier in his career, he held several senior leadership roles at Indian Bank. He has also served on the boards of Tamil Nadu Grama Bank and BOI STAR Investment Managers Pvt. Ltd., and was Chairman of Star Union Dai-ichi Life Insurance Company Limited (SUD Life).
Maruti Suzuki Achieves Record Production, Highest Sales
Maruti Suzuki India Limited achieved its highest-ever annual production in 2025, producing over 22.55 lakh vehicles. This is the second
தொழில் தொடங்க பணம் இல்லையா? அரசே கொடுக்கும் ஒரு கோடி.. உங்களுக்கும் வேண்டுமா?
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கலாம்.
Venus Williams Receives Wild Card for Australian Open
Seven-time Grand Slam singles champion Venus Williams has been given a wild card entry for the 2026 Australian Open, which
சித்தப்பாவுடன் தொடர்பு... கணவனைக் கொலைசெய்த மனைவி கைது - கோவையில் `பகீர்!'
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவா என்கிற ரதீஷ் (27). ரதீஷ் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் இந்திராணி (26) என்கிற பெண்ணுக்கும் சமூகவலைதளத்தில் பழக்கமாகி, காதல் திருமணம் செய்து கொண்டனர். ரதீஷ் இந்த தம்பதிக்கு 3 வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே கடந்த சில வாரங்களாக ரதீஷைக் காணவில்லை என்ற அவரின் தாயார் சுசீலா கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் ரதீஷின் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வந்து சென்றது கண்டறியப்பட்டது. இதனிடையே இந்திராணி காவல்துறையில் சரணடைந்து காவல்துறையிடம் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினோத் ``எனக்கும், கரூரில் பணியாற்றி வரும் என் சித்தப்பா வினோத்துக்கும் (35) பழக்கம் ஏற்பட்டது. இதற்கு ரதீஷ் தொந்தரவாக இருந்தார். எங்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. ரதீஷை தீர்த்துகட்ட முடிவு செய்தோம். இதற்காக வினோத் தன் நண்பர்கள் சுரேஷ் மற்றும் பாபு ஆகியோரை அழைத்து வந்தார். எங்கள் வீட்டில் வைத்து ரதீஷை கொலைசெய்து, பாபுவின் ஆம்புலன்ஸ் மூலம் உடலை கரூர் ரயில்வே தண்டவாளம் அருகே போட்டுவிட்டோம். ரதீஷ் ரயில் மோதி உயிரிழந்தது போல காட்ட திட்டமிட்டோம். அதற்குள் காவல்துறையினர் கண்டறிந்துவிட்டனர் என்றார். காவல்துறையினர் இந்திராணி, வினோத், சுரேஷ், பாபு ஆகிய 4 பேரைக் கைதுசெய்தனர்.
Innocean India’s B Sridhar Exits Media Industry After Three-Decade Career
Mumbai: B Sridhar, Executive Vice President – Media at Innocean India, has stepped away from his professional media career, marking the end of a journey spanning over 30 years in India’s advertising and communications industry.Sridhar’s career has been defined by long stints with leading agency networks and sustained client relationships across some of the country’s largest media mandates. Over the years, he held senior roles at agencies including Mudra, GroupM and Initiative, before spending a combined 17 years at Innocean India across two separate tenures.During his first stint at Innocean, Sridhar led the media mandate for Hyundai, playing a key role in shaping the brand’s media strategy in India. In his subsequent tenure, he oversaw media responsibilities for Kia, supporting the automaker’s market entry and growth phase. His work at Innocean came to be closely associated with managing complex, high-scale automotive accounts.Beyond automotive, Sridhar’s portfolio includes work on marquee brands such as Samsung, Nestl, Pepsi Foods and Microsoft, reflecting his breadth of experience across categories. Industry colleagues credit his career for its emphasis on stability, trust-led client partnerships and hands-on involvement in large-scale media planning and buying operations.With his exit from corporate life, Sridhar is now turning his attention toward personal pursuits. A long-time Business Quiz Master at multiple forums, he plans to dedicate more time to quizzing engagements. He is also preparing to explore motivational speaking, drawing inspiration from his experience as a long-distance runner to address themes of discipline, endurance and management.His departure marks the close of a significant chapter in India’s media agency ecosystem, particularly in an era shaped by long-standing client-agency relationships and legacy media leadership.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது . தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார். நாக தீப விகாராதிபதி தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று , தையிட்டி விகாரைக்காக […]
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பழைய பென்சன் திட்டத்தில் முதல்வர் முக்கிய முடிவு!
பழைய பென்சன் திட்டம் குறித்த மிக முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு நாளை வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்.. வீட்டின் பூட்டை உடைக்காமலேயே கொள்ளை - சிக்கிய கோவை திருடன்!
கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஐயப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபா மார்டின். இவர் கடந்த வாரம் ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. திருடப்பட்ட நகை இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில் கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 பவுன் நகை, கொத்து சாவிகள், ரம்பம், குரடு, ராடு போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “வீட்டின் பூட்டு உடைக்கப்படாததால் முதலில் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தினோம். அதில் அவர்கள் ஈடுபடவில்லை என்று தெரியவந்தது. இதே பாணியில் குனியமுத்தூரில் கடந்த 2024-ம் ஆண்டு இரண்டு வழக்குகள் பதிவாகி கண்டறிய முடியவில்லை. கிருஷ்ணமூர்த்தி பழைய வழக்குகள், மற்றும் இந்த வழக்கின் சிசிடிவி அடிப்படையில் தான் கிருஷ்ணமுர்த்தியை கைது செய்தோம். அவர் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் கடந்த 1993-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர். கடந்த 2023-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் நகை கொள்ளையடித்து கைது செய்யப்பட்டுள்ளார். பொருள்கள் இவர் கையில் கொத்தாக பல்வேறு சாவிகளை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளில் ஒவ்வொரு சாவியாக திறந்து பார்த்து, ஆயுதங்களை வைத்து உடைக்காமல் திறந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.
Prasar Bharati Allocates MPEG-4 DD Free Dish Slots to Regional Channels in 93rd Allotment Round
New Delhi: Public broadcaster Prasar Bharati has announced the list of television channels selected under its 93rd allotment cycle for MPEG-4 slots on DD Free Dish, extending carriage to a range of regional language broadcasters on a pilot basis until March 31, 2026.The move follows Prasar Bharati’s decision to open up free MPEG-4 capacity on the free-to-air platform to address gaps in regional representation and improve visibility for channels operating in under-served linguistic markets. The pilot programme prioritises regional news and public-interest content, with eligibility linked to operational track record and programming credentials.According to the published allotment list, Kannada channels TV9 Kannada and Public TV have secured slots, alongside Malayalam broadcaster Mazhavil Manorama. Bengali language channels feature prominently, with ABP Ananda, R Bangla, TV9 Bangla, R Plus Gold, Kolkata TV, R Plus, Enterr 10 Bangla and Khushboo Bangla included in the successful bidders.The allotment also covers Odia channel Kanak News, Marathi broadcasters ABP Majha and 9X Jhakaas, Gujarati news channels ABP Asmita and Gujarat First, and News State Punjab-Haryana-Himachal representing the Punjabi language segment.Prasar Bharati had earlier clarified that the pilot-phase allotment is designed to strengthen linguistic diversity on DD Free Dish, particularly by enabling greater access for regional news channels that meet defined content and compliance norms. The current allocation will remain valid through the end of the financial year 2025-26, after which the initiative is expected to be reviewed.The latest round underscores DD Free Dish’s role as a key distribution platform for regional broadcasters seeking nationwide reach without carriage fees, even as Prasar Bharati continues to recalibrate the platform’s channel mix to reflect India’s evolving media consumption landscape.
தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி
நயினாதீவு விகாரை விகாராதிபதி தலைமையிலான பிக்குகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடினர். இதனொரு கட்டமாக தையிட்டிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாரதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரை ஏற்கனவே இருந்த காணியையும் பார்வையிட்டுச் சென்றனர்.

27 C