SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

அட்டைப் படம்

விகடன் 31 Mar 2025 2:16 am

பெண் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப்

பெண் என்றால் என்ன என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார். மூன்றாம் பாலின தடை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதில், அமெரிக்காவில் ஆண், பெண் என இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என அறிவித்தார். அதை தொடர்ந்து, அமெரிக்கா ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது, பெண்களுக்கான விளையாட்டுகளில் திருநங்கைகள் பங்கேற்க முடியாது, தனி சிறைகளில் உள்ள மூன்றாம் பாலின கைதிகளை ஆண்கள் சிறைக்கு […]

அதிரடி 31 Mar 2025 12:30 am

Ruturaj Gaikwad : 'பவர்ப்ளே... மிஸ் ஃபீல்ட்... நம்பர் 3' -தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருத்துராஜ்

'சென்னை தோல்வி!' அசாமின் கவுஹாத்தியில் நடந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியிருக்கிறது. கடைசி ஓவர் வரை திரில்லாக சென்ற இந்தப் போட்டியில் சென்னை அணி ஏன் தோல்வியை தழுவியது என்பதைப் பற்றி அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் பேசியிருக்கிறார். RR vs CSK : கடைசி வரை போராடிய CSK; RR வென்றது எப்படி? 'காரணம் சொல்லும் ருத்துராஜ்' ருத்துராஜ் கெய்க்வாட் பேசுகையில், 'பௌலிங்கில் பவர்ப்ளேயில்தான் நாங்கள் போட்டியை விட்டு விட்டோம் என நினைக்கிறேன். பவர்ப்ளேயில் நாங்கள் இன்னும் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும். நிதிஷ் ராணா ஸ்கொயருக்கு பின்னால்தான் அடிக்கிறார் என்பதை அறிந்து அவரை முன் பக்கம் நோக்கி ஷாட்களை ஆட வைத்திருக்க வேண்டும். Ruturaj Gaikwad அப்படி செய்யத் தவறிவிட்டோம். மேலும், மிஸ் பீல்டுகள் மூலமும் நாங்கள் 8-10 ரன்களை அதிகம் கொடுத்துவிட்டோம். இந்த மைதானத்தில் 180 என்பது எட்டக்கூடிய ஸ்கோர்தான். இன்னிங்ஸ் ப்ரேக்கில் அவர்களை 180 யை சுற்றி மடக்கியதில் மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஏனெனில், தொடக்கத்தில் அவர்கள் 210 ரன்களை நோக்கி செல்வதைப்போல இருந்தது. அஜிங்கியா ரஹானே நம்பர் 3 இல் இறங்கி எங்களுக்காக சிறப்பாக ஆடியிருக்கிறார். அம்பத்தி ராயுடுவும் எங்களுக்காக மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அந்தப் பொறுப்பை இப்போது நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நம்பர் 3 இல் இறங்குகிறேன். இதன் மூலம் அதிரடியாக ஆடக்கூடிய திரிபாதிக்கும் ஓப்பனிங்கில் வாய்ப்பு கிடைக்கும். Ruturaj Gaikwad இது ஏலத்தின் போதே முடிவு செய்யப்பட்டதுதான். எனக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. என்னால் ரிஸ்க் எடுத்தும் ஆட முடியும். ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்ய முடியும். ஆனால், கடந்த சில போட்டிகளாக எப்படி பார்த்தாலும் முதல் 2 ஓவர்களுக்குள்ளாகவே வந்துவிடுகிறேனே. எங்களுக்கு ஓப்பனிங்கில் ஒரு மொமண்டம் கிடைத்துவிடும்பட்சத்தில், நாங்கள் சிறந்த அணியாக மாறிவிடுவோம். நூர் நன்றாக வீசியிருக்கிறார். கலீல் அஹமது நன்றாக வீசியிருக்கிறார். இதையெல்லாம் இங்கிருந்து பாசிட்டிவ்வாக எடுத்துச் செல்கிறோம்.' என்றார்.

விகடன் 31 Mar 2025 12:12 am

RR vs CSK : ‘என்னால ஓபனிங் ஆட முடியாது’.. காரணம் இதுதான்: விளக்கமாக பேசிய ருதுராஜ்.. பெரிய திட்டம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி, இறுதியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டியில் தோற்றப் பிறகு, ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிகொடுத்தார்.

சமயம் 31 Mar 2025 12:02 am

RR vs CSK : கடைசி வரை போராடிய CSK; RR வென்றது எப்படி?

'திரில் போட்டி!' அசாமின் கவுஹாத்தியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட சென்னை அணி கடைசி ஓவர் வரை திரில்லாக போட்டியை எடுத்துச் சென்று தோற்றிருக்கிறது. சுவாரஸ்யமாக சென்ற இந்தப் போட்டியில் என்ன நடந்தது? CSK 'ராஜஸ்தான் பேட்டிங்!' சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்தான் டாஸை வென்றிருந்தார். நல்ல பிட்ச்சாக இருக்கிறது. அதனால் சேஸ் செய்யவே விரும்புகிறேன் என்றார். ருத்துராஜின் இந்த டாஸ் முடிவில் கொஞ்சம் மாற்றுக் கருத்துகள் இருக்கவே செய்கிறது. ஏனெனில், இந்த பிட்ச் ஆரம்பத்தில் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்குமளவுக்கு ஆட்டம் செல்ல செல்ல இருக்கவில்லை. பவர்ப்ளேயை தாண்டிய உடனே பௌலர்களுக்கு சாதகமான பிட்ச்சாகவே இருந்தது. பேட்டர்கள் திணறவே செய்தனர். 'நிதிஷ் ராணா அதிரடி!' ராஜஸ்தான் இன்னிங்ஸிலும் அதுதான் நடந்திருந்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தானின் இன்னிங்ஸை மூன்றாகப் பிரிக்கலாம். பவர்ப்ளேயில் அந்த அணி 79 ரன்களை எடுத்திருந்தது ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே யாஷஸ்வி ஜெய்ஸ்வால் காலியாகியிருந்தார். நம்பர் 3 இல் நிதிஷ் ராணா வந்திருந்தார். பவர்ப்ளே முழுவதையும் தனதாக்கிக் கொண்டார். Nithish Rana கலீல் அஹமது, ஜேமி ஓவர்டன், அஷ்வின் என பவர்ப்ளேயில் வீசிய அத்தனை பௌலர்களையும் சிதறடித்தார். கலீலும் ஜேமி ஓவர்டனும் ஷார்ட் பாலாக வீச அதை மடக்கி மடக்கி ஸ்கொயரிலும் பைன் லெக்கிலும் பவுண்டரிக்களாகவும் சிக்சராகவும் மாற்றினார். வேகப்பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என அஷ்வினை அழைத்து வந்தார் ருத்துராஜ். அஷ்வின் முதல் ஓவரில் மட்டும் 19 ரன்கள். அவரையும் விட்டு வைக்கவில்லை. சிரமமே இல்லாமல் முட்டி போட்டு மடக்கி ஆடி பவுண்டரிக்களை அடித்துக்கொண்டே இருந்தார். 21 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். நடப்பு சீசனில் பவர்ப்ளேக்குள்ளாக அரைசதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையையும் பெற்றார். நிதிஷின் அதிரடியால் பவர்ப்ளேயில் 79 ரன்கள். ஆனால், பவர்ப்ளே முடிந்த பிறகு போட்டி மாற தொடங்கியது. 7-15 மிடில் ஓவர்களில் 65 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் எடுத்தது. 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. பவர்ப்ளேயில் நிதிஷூக்கே ஸ்ட்ரைக் கொடுத்துக் கொண்டிருந்த சாம்சன், பவர்ப்ளே முடிந்தவுடன் நூர் அஹமதுவின் பந்தில் அடிக்க முயன்று அவுட் ஆனார். Nithish Rana நிதிஷ் ராணாவின் வேகம் கொஞ்சம் குறைந்திருந்தாலும் அடித்துக்கொண்டுதான் இருந்தார். சதத்தை நோக்கி முன்னேறுவார் என எதிர்பார்க்கையில் அஷ்வின் ஓவரில் பவுண்டரி சிக்சர் அடித்தவுடன் அமைதியாகாமல், இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று ஸ்டம்பிங் ஆனார். 81 ரன்களில் நிதிஷ் ராணா அவுட். ரியான் பராக் கொஞ்சம் நின்று அவ்வபோது பெரிய ஷாட்களை ஆடிக்கொண்டிருந்தார். ஆனாலும், பிற்பாதியில் போட்டி சென்னை பௌலர்களின் கைக்கு வந்தது. CSK ஜடேஜா விக்கெட் எடுத்தார். பதிரனா விக்கெட் எடுத்தார். கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி 37 ரன்களை மட்டுமே கொடுத்தது. ஹெட்மயர், ரியான் பராஜ், துருவ் ஜூரெல் என அதிரடியாக ஆட வாய்ப்பிருந்த பேட்டர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்திருந்தது. 'சென்னையின் சேஸ்!' சென்னைக்கு டார்கெட் 183. கொஞ்சம் கடினமான டார்கெட்தான். மேலும், கடந்த 6 சீசன்களில் சென்னை அணி 180+ டார்கெட்டை சேஸ் செய்ததே இல்லை என்கிற ரெக்கார்டும் சென்னைக்கு எதிராகத்தான் இருந்தது. அதற்கேற்ற வகையில்தான் சென்னை அணியின் பவர்ப்ளேயும் இருந்தது. வெறும் 42 ரன்களை மட்டும்தான் சேர்த்திருந்தனர். முதல் ஓவரிலேயே பார்மிலிருந்த ரச்சின் ஆர்ச்சர் வீசிய ஒரு குட் லெந்த் டெலிவரியில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார். ரச்சின் டக் அவுட் ஆன நிலையில் ருத்துராஜ் வந்தார். அடுத்த 3 ஓவர்களையுன் திரிபாதியும் ருத்துவும் பார்த்தே ஆடினர். ரன்னே வரவில்லை. ஆர்ச்சரும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களாக வீசி திணறடித்தார். பவர்ப்ளேயின் கடைசி 2 ஓவர்களில்தான் ரன்கள் அடிக்க ஆரம்பித்தனர். Ruturaj ஆர்ச்சரை திரிபாதி பவுண்டரியும் சிக்சரும் அடிக்க, ருத்துராஜ் சந்தீப் சர்மாவின் ஓவரில் மூன்று பவுண்டரிக்களை அடித்தார். ஓரளவுக்கு டீசண்ட்டாக இந்த பார்ட்னர்ஷிப் முன்னேறியது. ஆனால், மிடில் ஓவர்களில் ஹசரங்கா, தீக்சனா, குமார் கார்த்திகேயா என மூன்று ஸ்பின்னர்களை வைத்து ராஜஸ்தான் சவாலளித்தது. ராகுல் திரிபாதி 23 ரன்களில் ஹசரங்காவின் பந்தில் கேட்ச் ஆனார். இதன்பிறகு ருத்துராஜூடன் இணைந்த துபே, விஜய் சங்கர் ஆகியோரும் தங்கள் பங்குக்கு சிக்சர் அடித்துவிட்டு விக்கெட்டை கொடுத்து வெளியேறினர். ஹசரங்கா விக்கெட் வேட்டை நடத்தினார். சிக்சர் அடித்த அடுத்த பந்திலேயே ஒரு கூக்ளியில் விஜய் சங்கரை வீழ்த்தினார். அரைசதத்தை கடந்திருந்த ருத்துராஜையும் சிக்சர் அடித்த அடுத்த பந்திலேயே அவுட் ஆக்கினார். கடைசி 4 ஓவர்களில் சென்னையின் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. தோனியும் ஜடேஜாவும் க்ரீஸில் நின்றனர். சந்தீப் சர்மா வீசிய 17 வது ஓவரில் 9 ரன்கள். ஜடேஜா மட்டும் ஒரு பவுண்டரி அடித்தார். தீக்சனா வீசிய 18 வது ஓவரில் பவுண்டரியே இல்லை. வெறும் 6 ரன்கள் மட்டுமே. Dhoni 'டெத் ஓவர் திரில்!' இப்போது கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 19 ஓவரில் 19 ரன்கள். தோனி ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் தனது ஸ்டைலில் அடிக்க, ஜடேஜா ஒயிடாக சென்ற ஒரு பந்தை அற்புதமாக மடக்கி அடித்து சிக்சராக்கினார். சந்தீப் சர்மா வீச கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்திலேயே ஒயிடு. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் தோனி பெரிய ஷாட்டுக்கு முயல பவுண்டரில் லைனில் ஹெட்மயர் பாய்ந்து விழுந்து அற்புதமாக கேட்ச் பிடித்தார். ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைய ஜேமி ஓவர்டன் உள்ளே வந்தார். இரண்டாவது பந்தில் சிங்கிள். மூன்றாவது பந்தில் ஜடேஜா ஸ்ட்ரைக்கில் இருந்தார். அந்த பந்திலும் சிங்கிள். கடைசி 3 பந்துகளில் 17 ரன்கள் தேவை. மூன்று பந்துகளில் மூன்று சிக்சர்கள் தேவை எனும் நிலையில், ஃபுல்லாக வந்த நான்காவது பந்தை ஓவர்டன் சிக்சராக்கினார். பரபரப்பு கூடியது. ஆனால், ஓவர்டன்னால் அடுத்த 2 பந்துகளையும் சிக்சராக மாற்ற முடியவில்லை. சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. Jadeja சென்னை அணி தோற்றிருக்கிறது. ஆனால், பெங்களூருவுக்கு எதிராக போராடாமல் வீழ்ந்ததை போல இங்கே நடக்கவில்லை. சென்னை அணி போராடியிருக்கிறது. அதுவே கொஞ்சம் பாசிட்டிவ்வான விஷயம்தான். இன்றைய ஆட்டத்தை மாற்றிய தருணம் என நீங்கள் நினைப்பது எது என்பதைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்.

விகடன் 30 Mar 2025 11:54 pm

RR vs CSK : ‘மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே’.. இந்த மாற்றத்த செய்யலைனா காலிதான்: ரசிகர்கள் கடும் அதிருப்தி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி, இறுதியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அணியில் போதிய பேட்டர்கள் இல்லை என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.வருகிறார்கள்.

சமயம் 30 Mar 2025 11:45 pm

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை…முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். சென்னை அணியில் கலீல் அகமது 3 விக்கெட்டும், நூர் அகமது, பத்திரனா தலா 2 விக்கெட்டும், […]

டினேசுவடு 30 Mar 2025 11:33 pm

பெண்களை அச்சுறுத்தும் “மாதவிடாய் வறுமை”

டீனுஜான்சி அன்னராசா 21 வயதுடைய சோபிகா, யாழ் பல்கலைக்கழகத்தின் 3 ஆம் வருட மாணவி, மாதவிடாய்த் துவாய்களின் விலையேற்றத்தால் , பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். ” நாங்கள் மாதவிடாய் நாட்களிலும் தொடர்ந்து 5 மணித்தியாலங்கள் வகுப்பில் இருக்க நேரிடும், இதனால் தரமான மாதவிடாய்த் துவாய்களைப் பாவிக்க வேண்டும். அதன் விலை 600 ரூபா. வெறும் 8 துவாய்கள் மட்டுமே ஒரு பெட்டியில் இருக்கிறது. மாதாந்தம் இதனைக் கொள்வனவு செய்வதற்கு 1400 ரூபா தேவைப்படுகிறது. இன்றைய காலப்பகுதியில் இது பெரிய […]

அதிரடி 30 Mar 2025 11:30 pm

100 நாள் வேலைத்திட்டம் : சிபிஐ விசாரணைக்கு தயார்.. அண்ணாமலைக்கு தயாநிதி மாறன் பதிலடி!

100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான திமுகவின் போராட்டம் வெற்றி பெற்றதால் அண்ணாமலை பொய்யை பரப்பி வருவதாக தயாநிதி மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

சமயம் 30 Mar 2025 11:23 pm

திமுகவை எதிர்க்கட்சி கட்சிகள் எங்க கூட்டணிக்கு வாங்க.. அழைக்கும் டிடிவி தினகரன்

திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சமயம் 30 Mar 2025 10:48 pm

பயணிகளின் கவனத்திற்கு.... ஏப்ரல் மாதம் முழுவதும் தென்காசி செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!

தென்காசி செங்கோட்டை இடையே ரயில் சேவை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

சமயம் 30 Mar 2025 10:44 pm

திமுகவை எதிர்க்க பாஜக பல எதிரிகளை உருவாக்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திமுகவை எதிர்க்க பாஜக பல கோணங்களில் எதிரிகளை உருவாக்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். மேலும், சட்டமன்றத் தேர்தலின் போது விழிப்போடு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமயம் 30 Mar 2025 10:02 pm

நாளை ரமலான் பெருநாள்– தமிழகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ரமலான் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு முக்கியமான பண்டிகையாகும், இது ரமலான் மாதத்தின் நோன்பு முடிவடைந்த பிறகு கொண்டாடப்படுகிறது. இதை

ஆந்தைரேபோர்ட்டர் 30 Mar 2025 9:57 pm

தாய்லாந்து நிலநடுக்கம் –சாலையின் நடுவே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்

தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மருத்துவமனை பாதிக்கப்பட்டதையடுத்து பெண் ஒருவர் சாலையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். மியான்மர் தாய்லாந்து நடுக்கம் ஆசிய நாடான மியான்மரில் நேற்று 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் பல கட்டிட்டங்கள் சரிந்து விழுந்து, மியான்மர் இதுவரையில் இல்லாத கடும் சேதத்தை சந்தித்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 2000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தாக்கம் நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் […]

அதிரடி 30 Mar 2025 9:30 pm

அனலைதீவு மக்கள் ஒற்றுமையாக – ஓரணியாக இருக்கவேண்டும்

வடமராட்சியில் கடமையாற்றும் அரசாங்க அலுவலர் ஒருவரை புத்தூருக்கு இடமாற்றம் செய்தாலே, அந்த இடமாற்றத்தை ஏற்க மறுக்கின்ற நிலையில், கண்டியிலிருந்து அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்து சேவையாற்றி இந்தவூர் மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள மருத்துவ அதிகாரி நுவனி உண்மையில் பாராட்டுக்குரியவர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மருத்துவ அதிகாரி நுவனியை பாராட்டினார். அனலைதீவு பிரதேச மருத்துவமனையில், மத்திய சுகாதார அமைச்சின் 6.3 மில்லியன் ரூபா நிதியில், கடற்படையின் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழாவும், விரிவுபடுத்தப்பட்ட சுகாதார […]

அதிரடி 30 Mar 2025 9:19 pm

பலாலி விமான நிலையத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம்

பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று(30) யாழ்ப்பாணம்(Jaffna) பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விமான நிலையமாக.. விமான நிலையத்தை முதல் தடவையாக பார்வையிட்ட அமைச்சர் விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும் அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார். இதன் […]

அதிரடி 30 Mar 2025 9:15 pm

’சாரி’ படத்தின் முன்னோட்ட நிகழ்வுத் துளிகள்!

ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி

ஆந்தைரேபோர்ட்டர் 30 Mar 2025 9:13 pm

இன்று முதல் தூத்துக்குடி டு சென்னை கூடுதல் விமான சேவை....பயணிகள் உற்சாகம்!

கொரோனா காலகட்டத்தில் தூத்துக்குடி சென்னைக்கு இடையே இயக்கப்படும் விமான சேவை குறைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும் கூடுதல் விமான சேவை இயக்கப்படுகின்றது

சமயம் 30 Mar 2025 9:05 pm

ரம்ஜான் பண்டிகை தொடர் விடுமுறை; ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதல்!

ரம்ஜான் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

சமயம் 30 Mar 2025 9:02 pm

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை : தலைமை ஹாஜி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சமயம் 30 Mar 2025 8:58 pm

`அதிமுக-வை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி!' - ஆ.ராசா சொல்வதென்ன?

தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று நடைபெற்றது. மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் திமுக மாணவர் அணி கூட்டம் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தி.மு.க மாணவர் அணி பொறுப்பாளரும் துணை செயலாளருமான எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளனர். கூட்டத்தில் பேசிய எம்.பி ஆ.ராசா, நவீன தொழில்நுட்பங்கள் வளராத காலகட்டத்தில் உலகில் உள்ள வரலாறுகளை எல்லாம் கொண்டு வந்து தம்பிகளுக்கு கடிதங்களாக தந்தவர் பேரறிஞர் அண்ணா. மனித சமுதாயம் பகுத்தறிவை நோக்கித்தான் நகர வேண்டும் என போராடியவர் பொியார். சாதி ஒழிய வேண்டும், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்ற பெரியாரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்றால், அரசியல் அதிகாரம் தேவை என அண்ணா உணர்ந்தார். அதற்காகத்தான் தி.மு.க - வை தொடங்கினார். ஓர் அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். அதிகாரத்திற்கு வரவில்லை என்றால், அதன் கொள்கைகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அடிக்கடி கூறுவார். திமுக மாணவர் அணி கூட்டம் கொள்கை இல்லாத அரசியல் கட்சி அழிந்து விடும். அ.தி.மு.க தலைமை என்கிற பெயரில் கொள்கையற்ற செயல்பாடுகளால் அந்தக் கட்சியை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி. கொள்கைதான் ஒரு கட்சிக்கான அடிப்படை. நாட்டில் பலரும் மோடியை அரசியல் ரீதியாக எதிர்கிறார்கள். ஆனால் சித்தாந்த ரீதியில் பா.ஜ.க - வையும், பிரதமர் மோடியையும் எதிர்ப்பதற்கு வேறு எந்த கட்சிக்கும் கொள்கை கிடையாது. இந்துத்துவா, மோடி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான தத்துவத்தை கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திராவிடர் கழகமும், தி.மு.க -வும் தான் என்றார்.

விகடன் 30 Mar 2025 8:54 pm

`அதிமுக-வை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி!' - ஆ.ராசா சொல்வதென்ன?

தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று நடைபெற்றது. மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் திமுக மாணவர் அணி கூட்டம் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தி.மு.க மாணவர் அணி பொறுப்பாளரும் துணை செயலாளருமான எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளனர். கூட்டத்தில் பேசிய எம்.பி ஆ.ராசா, நவீன தொழில்நுட்பங்கள் வளராத காலகட்டத்தில் உலகில் உள்ள வரலாறுகளை எல்லாம் கொண்டு வந்து தம்பிகளுக்கு கடிதங்களாக தந்தவர் பேரறிஞர் அண்ணா. மனித சமுதாயம் பகுத்தறிவை நோக்கித்தான் நகர வேண்டும் என போராடியவர் பொியார். சாதி ஒழிய வேண்டும், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்ற பெரியாரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்றால், அரசியல் அதிகாரம் தேவை என அண்ணா உணர்ந்தார். அதற்காகத்தான் தி.மு.க - வை தொடங்கினார். ஓர் அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். அதிகாரத்திற்கு வரவில்லை என்றால், அதன் கொள்கைகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அடிக்கடி கூறுவார். திமுக மாணவர் அணி கூட்டம் கொள்கை இல்லாத அரசியல் கட்சி அழிந்து விடும். அ.தி.மு.க தலைமை என்கிற பெயரில் கொள்கையற்ற செயல்பாடுகளால் அந்தக் கட்சியை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி. கொள்கைதான் ஒரு கட்சிக்கான அடிப்படை. நாட்டில் பலரும் மோடியை அரசியல் ரீதியாக எதிர்கிறார்கள். ஆனால் சித்தாந்த ரீதியில் பா.ஜ.க - வையும், பிரதமர் மோடியையும் எதிர்ப்பதற்கு வேறு எந்த கட்சிக்கும் கொள்கை கிடையாது. இந்துத்துவா, மோடி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான தத்துவத்தை கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திராவிடர் கழகமும், தி.மு.க -வும் தான் என்றார்.

விகடன் 30 Mar 2025 8:54 pm

Jyothika: `Time flies!' - த்ரிஷாவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் 'டப்பா கார்டெல்' வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. சூர்யாவும் ஜோதிகாவும் தங்களின் நட்பு வட்டத்திற்கு உணவு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த விருந்தில் நடிகை த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், நடன இயக்குநர் பிருந்தா, தொகுப்பாளர்கள் டிடி மற்றும் ரம்யா ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள். Suriya - Jyothika Lunch Party இங்கு இவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கு ஜோதிகா தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து அவர்களைப் பற்றியும், அவர்களை சந்திப்பதைக் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் த்ரிஷாவுடன் முன்பு எடுத்த புகைப்படத்தையும் இப்போது எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்,''நேரம் பறந்து கொண்டிருக்கிறது. அது உங்களை உயரத்திற்குக் கூட்டிச்செல்கிறது. என குறிப்பிட்டிருக்கிறார். Suriya - Jyothika Lunch Party நடன இயக்குநர் பிருந்தாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து , '' இந்தப் பெண் அவரின் விரல்களால் எங்களை நடனமாட வைத்தவர். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இறுதியாக தன் நண்பர்கள் அனைவருடனும் எடுத்துக்கொண்ட குழுப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ''இதைதான் நான் தெரபி என்று அழைப்பேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விகடன் 30 Mar 2025 8:47 pm

Jyothika: `Time flies!' - த்ரிஷாவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் 'டப்பா கார்டெல்' வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. சூர்யாவும் ஜோதிகாவும் தங்களின் நட்பு வட்டத்திற்கு உணவு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த விருந்தில் நடிகை த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், நடன இயக்குநர் பிருந்தா, தொகுப்பாளர்கள் டிடி மற்றும் ரம்யா ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள். Suriya - Jyothika Lunch Party இங்கு இவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கு ஜோதிகா தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து அவர்களைப் பற்றியும், அவர்களை சந்திப்பதைக் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் த்ரிஷாவுடன் முன்பு எடுத்த புகைப்படத்தையும் இப்போது எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்,''நேரம் பறந்து கொண்டிருக்கிறது. அது உங்களை உயரத்திற்குக் கூட்டிச்செல்கிறது. என குறிப்பிட்டிருக்கிறார். Suriya - Jyothika Lunch Party நடன இயக்குநர் பிருந்தாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து , '' இந்தப் பெண் அவரின் விரல்களால் எங்களை நடனமாட வைத்தவர். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இறுதியாக தன் நண்பர்கள் அனைவருடனும் எடுத்துக்கொண்ட குழுப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ''இதைதான் நான் தெரபி என்று அழைப்பேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விகடன் 30 Mar 2025 8:47 pm

‘செருப்புகள் ஜாக்கிரதை’- வெப் சீரிஸ் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் டாப் லிஸ்டில் இருக்கும் ஜீ5 தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

ஆந்தைரேபோர்ட்டர் 30 Mar 2025 8:45 pm

தாய்ப்பால் சுவையில் ஐஸ் கிரீமை அறிமுகப்படுத்தும் அமெரிக்க நிறுவனம் - நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

தாய்ப்பாலுக்கு நிகரான உணவு ஏதும் இல்லை என்று கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கர்ப்ப காலத்தைப் போலவே இந்த தாய்ப்பால் ஐஸ்கிரீமை சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அறிவிப்பு தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிறுவனம் உண்மையான தாய்ப்பாலில் இருந்துதான் இந்த ஐஸ்கிரீமை வழங்குகிறதா என்று கேட்டால் இல்லை, தாய்ப்பாலுக்கு நிகரான சுவையில் தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துகளை இந்த ஐஸ்கிரீமில் கொண்டுவரப் போகிறது. இந்த ஐஸ்கிரீம் இனிப்பு, உவர்ப்பு சுவையுடன் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்களை உள்ளடக்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்ததையடுத்து, நெட்டிசன்கள் இதற்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு வைரலானதை எடுத்து, பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி, அதாவது முட்டாள்கள் தினத்தன்று அறிவிக்க வேண்டும் என்று ஒரு பயனர் கூறுகிறார். மற்றொருவரோ பசும் பாலில் இருந்து ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. பின்பு ஏன் தாய்ப்பால் சுவையில் தயாரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பு உள்ளார். இதற்கிடையில், “பொதுமக்களிடம் இதன் தேவை இருக்கிறது” என்று அந்த நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. Zomato: Notification மூலம் வாடிக்கையாளரை கவரும் சோமேட்டோ- பின்னாலிருக்கும் தொழில் ரகசியம் தெரியுமா?

விகடன் 30 Mar 2025 8:43 pm

தாய்ப்பால் சுவையில் ஐஸ் கிரீமை அறிமுகப்படுத்தும் அமெரிக்க நிறுவனம் - நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

தாய்ப்பாலுக்கு நிகரான உணவு ஏதும் இல்லை என்று கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கர்ப்ப காலத்தைப் போலவே இந்த தாய்ப்பால் ஐஸ்கிரீமை சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அறிவிப்பு தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிறுவனம் உண்மையான தாய்ப்பாலில் இருந்துதான் இந்த ஐஸ்கிரீமை வழங்குகிறதா என்று கேட்டால் இல்லை, தாய்ப்பாலுக்கு நிகரான சுவையில் தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துகளை இந்த ஐஸ்கிரீமில் கொண்டுவரப் போகிறது. இந்த ஐஸ்கிரீம் இனிப்பு, உவர்ப்பு சுவையுடன் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்களை உள்ளடக்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்ததையடுத்து, நெட்டிசன்கள் இதற்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு வைரலானதை எடுத்து, பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி, அதாவது முட்டாள்கள் தினத்தன்று அறிவிக்க வேண்டும் என்று ஒரு பயனர் கூறுகிறார். மற்றொருவரோ பசும் பாலில் இருந்து ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. பின்பு ஏன் தாய்ப்பால் சுவையில் தயாரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பு உள்ளார். இதற்கிடையில், “பொதுமக்களிடம் இதன் தேவை இருக்கிறது” என்று அந்த நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. Zomato: Notification மூலம் வாடிக்கையாளரை கவரும் சோமேட்டோ- பின்னாலிருக்கும் தொழில் ரகசியம் தெரியுமா?

விகடன் 30 Mar 2025 8:43 pm

நிர்மலா சீதாராமனுக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை : எஸ்.எஸ்.சிவசங்கர் காட்டம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார். மேலும், உள் துறை அமைச்சர் அமித்ஷா பொய் கூறியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

சமயம் 30 Mar 2025 8:31 pm

தெற்கு ரயில்வேயில் சிவில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு!

இந்திய ரயில்வேயின் கீழ் தெற்கு ரயில்வேயில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே இருந்து ஓய்வுபெற்றவர்கள்

ஆந்தைரேபோர்ட்டர் 30 Mar 2025 8:30 pm

விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் தீப்பற்றியது!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதால் அவரது பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுப்பியுள்ளதாக… The post விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் தீப்பற்றியது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Mar 2025 8:19 pm

DC vs SRH : ‘அபிஷேக் சர்மாவுக்கு மாற்றா’.. இனி இவர்? பாட் கம்மின்ஸ் கொடுத்த அப்டேட்.. முழு விபரம் இதோ!

அபிஷேக் சர்மா தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், பேட்டிங் ஆர்டரில் மாற்றம் கொண்டுவர வாய்ப்புள்ளது என பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார். சன் ரைசர்ஸ், 3 போட்டிகளில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளது.

சமயம் 30 Mar 2025 8:12 pm

`சிதையும் மக்களாட்சி; உள்ளாட்சியில் அடிபட்டுக் கிடக்கும் 70% நீதி' - திமுக அரசுக்கெதிராக போராட்டம்!

28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தையும், மாநில அரசையும் கண்டித்து தன்னாட்சி, அறப்போர் இயக்கம், மக்களின் குரல், IGG, தோழன் ஆகிய இயக்கங்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, ராஜரத்தினம் அரங்கத்திற்கு அருகில் உண்ணாவிரதம் மற்றும் தொடர் கண்டன உரைப் போராட்டத்தை நடத்தின. `ஊராட்சி தேர்தல் எங்கள் உரிமை, உடனே நடத்துவது உங்கள் கடமை' என்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தை தொடங்கினர். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த பேராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமனிடம் பேசினோம். தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்றால் முழுக்க முழுக்க அரசியல் காரணம் மட்டும் தான். அரசியல் சாசனப்படி ஜனவரி 2025-க்குள் 28 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கு எந்த காரணமும் சொல்லிவிட முடியாது. உதாரணமாக, 2026ல் சட்டசபை தேர்தல் நடத்த தேவையில்லை ஒரு வருடம் தள்ளிப் போடலாம் என்று மத்திய அரசாங்கம் சொல்கிறதென்றால், மாநில அரசு என்ன சொய்யும்? திமுக அரசு என்ன மாதிரியான போராட்டங்களை நீங்கள் முன்னெடுப்பீர்கள்? அப்போது, அதை எந்தளவுக்கு அநியாயம் என்று நீங்கள் பேசுகிறீர்களோ இன்றைக்கு அதே அநியாயத்தை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். உள்ளாட்சி தலைவர்கள் இல்லாமல் மக்கள் படும் பிரச்னைகளை தினம் தினம் பார்க்க முடிகிறது. குடிநீர் வரவில்லை என்றாலும் பல கி.மீ பயணம் செய்து பி.டி.ஓ அலவலகம் சென்று தான் முறையிட வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில் அதிகாரிகள் மட்டும் தான் ஆட்சி செய்வார்கள் என்றால், மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் நம்முடைய பிரதிநிதகள் தேவையே இல்லையே. இன்று நம் அடிப்படையே மக்களாட்சி தான். அந்த மக்களாட்சியையே சிதைக்கும் அளவுக்கு இன்று திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு ஒரே காரணம், ஊராட்சிகளில் யாராவது ஒருவருக்கு பஞ்சாயத்து தலைவர் பதவி ஒதுக்கினால் அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுக-வுக்கு மற்றவர்தள் வேலை செய்ய மாட்டார்கள் என்றுதான். அதனால் எல்லோரையும் வேலை செய்ய வைத்துவிட்டு அதற்கு பிறகு பஞ்சாயத்து தேர்தலை பார்த்துக் கொள்ளலாம் என்று வெறும் கட்சிரீதியாக, அவர்கள் கட்சிக்கு எது பயனுள்ளதாக இருக்கும் என்று தான் பார்க்கிறார்களே ஒழிய, மக்களுடைய உரிமைகளை பார்ப்பதில்லை‌ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஊராட்சி தேர்தல் நடத்தப்படாததால், ஒரு பஞ்சாயத்து என்றால் குடி தண்ணீர் பராமரிப்பதில் இருந்து குப்பைகளை அகற்றுவது வரை அதுதான் செய்ய வேண்டும். இன்றைக்கு பல இடங்களில் குப்பைகள் குவிந்து வருகிறது. எந்த பிரச்னை என்றாலும் மக்களால் எளிதில் பஞ்சாயத்து தலைவர்களை அணுக முடியும். மக்களால் பொதுப்பணிதுறையிடம் சென்று கொண்டிருக்க முடியாது. பஞ்சாயத்து தலைவர் என்பவர்தான் எளிய மக்களுக்கு முக்கியமானவர் என்றார். முதலில் கண்டன உரையாற்றிய கல்பனா, ``முன்பு கலைஞர் கருணாநிதி 1996ல் உள்ளாட்சி தேர்தலை நடத்தினார். பின்பு 2001ல் சரியாக அடுத்த உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்பட்டது. அடுத்ததாக அமைந்த ஜெயலலிதா தலைமயிலான அரசிடம் நாங்கள் உரிமையாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டோம் அவரும் அதை சட்டமாக்கினார். மேலும் கலைஞர், உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என்று கூறி தனியே ஓர் ஆணையத்தையும் அமைத்தார். ஆனால் அதற்கு அடுத்தடுத்து வந்த கட்சிகள் அந்த கான்செப்டையே புரிந்துகொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அதிகாரம் அவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம். ஊராட்சி தேர்தல்கள் படிப்படியாக நடத்தப்படும், அதன் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும், இது தெடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தலையிட மாட்டோம் என்று உங்கள் தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா? என்று கூறி தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்தார் அடுத்ததாக பேசிய பேராசிரியர் பழனிதுரை, ``இந்த சமூகம் ஜனநாயகத்துக்கான உளவியலை உருவாக்கிக் கொள்ளவில்லை. இந்த நாட்டின்‌ கடைக்கோடி பிரஜைக்கும் அவனுடைய தேவையை உணர்ந்து கொள்ளும் போது தான் இது காந்தி தேசமாக இருக்கும். அரசியல் கட்சிகள் முதலில் குடிமக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால் இங்கு ஜனநாயகம் என்பது அவர்கள் வாக்குகளை வாங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். மக்கள் வாக்குகளை விற்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைப்பாடு பெரிய துரோகம். இதற்கான பொறுப்பு நமக்கும் உண்டு என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எப்படி அன்று சுதந்திரத்திற்காக போராடினார்களோ அதே போல தான் நாம் இன்று ஜனநாயகத்துக்காக போராடுகிறோம். கடைகோடி மனிதனின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான இடம் உள்ளாட்சியில் தான் இருக்கிறது. என்றார். தெடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதால் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தலித்துகளுக்கு அவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் சுமார் 70 சதவிகிதம். அப்படி என்றால் நாட்டில் 70 சதவிகிதம் நீதி அடிபட்டு கிடக்கிறது என்று கூறினார். இந்த உண்ணாவிரம் மற்றும் தெடர் கண்டன உரை போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி; வெளியேறிய அமைச்சர்

விகடன் 30 Mar 2025 8:06 pm

`சிதையும் மக்களாட்சி; உள்ளாட்சியில் அடிபட்டுக் கிடக்கும் 70% நீதி' - திமுக அரசுக்கெதிராக போராட்டம்!

28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தையும், மாநில அரசையும் கண்டித்து தன்னாட்சி, அறப்போர் இயக்கம், மக்களின் குரல், IGG, தோழன் ஆகிய இயக்கங்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, ராஜரத்தினம் அரங்கத்திற்கு அருகில் உண்ணாவிரதம் மற்றும் தொடர் கண்டன உரைப் போராட்டத்தை நடத்தின. `ஊராட்சி தேர்தல் எங்கள் உரிமை, உடனே நடத்துவது உங்கள் கடமை' என்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தை தொடங்கினர். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த பேராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமனிடம் பேசினோம். தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்றால் முழுக்க முழுக்க அரசியல் காரணம் மட்டும் தான். அரசியல் சாசனப்படி ஜனவரி 2025-க்குள் 28 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கு எந்த காரணமும் சொல்லிவிட முடியாது. உதாரணமாக, 2026ல் சட்டசபை தேர்தல் நடத்த தேவையில்லை ஒரு வருடம் தள்ளிப் போடலாம் என்று மத்திய அரசாங்கம் சொல்கிறதென்றால், மாநில அரசு என்ன சொய்யும்? திமுக அரசு என்ன மாதிரியான போராட்டங்களை நீங்கள் முன்னெடுப்பீர்கள்? அப்போது, அதை எந்தளவுக்கு அநியாயம் என்று நீங்கள் பேசுகிறீர்களோ இன்றைக்கு அதே அநியாயத்தை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். உள்ளாட்சி தலைவர்கள் இல்லாமல் மக்கள் படும் பிரச்னைகளை தினம் தினம் பார்க்க முடிகிறது. குடிநீர் வரவில்லை என்றாலும் பல கி.மீ பயணம் செய்து பி.டி.ஓ அலவலகம் சென்று தான் முறையிட வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில் அதிகாரிகள் மட்டும் தான் ஆட்சி செய்வார்கள் என்றால், மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் நம்முடைய பிரதிநிதகள் தேவையே இல்லையே. இன்று நம் அடிப்படையே மக்களாட்சி தான். அந்த மக்களாட்சியையே சிதைக்கும் அளவுக்கு இன்று திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு ஒரே காரணம், ஊராட்சிகளில் யாராவது ஒருவருக்கு பஞ்சாயத்து தலைவர் பதவி ஒதுக்கினால் அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுக-வுக்கு மற்றவர்தள் வேலை செய்ய மாட்டார்கள் என்றுதான். அதனால் எல்லோரையும் வேலை செய்ய வைத்துவிட்டு அதற்கு பிறகு பஞ்சாயத்து தேர்தலை பார்த்துக் கொள்ளலாம் என்று வெறும் கட்சிரீதியாக, அவர்கள் கட்சிக்கு எது பயனுள்ளதாக இருக்கும் என்று தான் பார்க்கிறார்களே ஒழிய, மக்களுடைய உரிமைகளை பார்ப்பதில்லை‌ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஊராட்சி தேர்தல் நடத்தப்படாததால், ஒரு பஞ்சாயத்து என்றால் குடி தண்ணீர் பராமரிப்பதில் இருந்து குப்பைகளை அகற்றுவது வரை அதுதான் செய்ய வேண்டும். இன்றைக்கு பல இடங்களில் குப்பைகள் குவிந்து வருகிறது. எந்த பிரச்னை என்றாலும் மக்களால் எளிதில் பஞ்சாயத்து தலைவர்களை அணுக முடியும். மக்களால் பொதுப்பணிதுறையிடம் சென்று கொண்டிருக்க முடியாது. பஞ்சாயத்து தலைவர் என்பவர்தான் எளிய மக்களுக்கு முக்கியமானவர் என்றார். முதலில் கண்டன உரையாற்றிய கல்பனா, ``முன்பு கலைஞர் கருணாநிதி 1996ல் உள்ளாட்சி தேர்தலை நடத்தினார். பின்பு 2001ல் சரியாக அடுத்த உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்பட்டது. அடுத்ததாக அமைந்த ஜெயலலிதா தலைமயிலான அரசிடம் நாங்கள் உரிமையாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டோம் அவரும் அதை சட்டமாக்கினார். மேலும் கலைஞர், உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என்று கூறி தனியே ஓர் ஆணையத்தையும் அமைத்தார். ஆனால் அதற்கு அடுத்தடுத்து வந்த கட்சிகள் அந்த கான்செப்டையே புரிந்துகொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அதிகாரம் அவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம். ஊராட்சி தேர்தல்கள் படிப்படியாக நடத்தப்படும், அதன் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும், இது தெடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தலையிட மாட்டோம் என்று உங்கள் தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா? என்று கூறி தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்தார் அடுத்ததாக பேசிய பேராசிரியர் பழனிதுரை, ``இந்த சமூகம் ஜனநாயகத்துக்கான உளவியலை உருவாக்கிக் கொள்ளவில்லை. இந்த நாட்டின்‌ கடைக்கோடி பிரஜைக்கும் அவனுடைய தேவையை உணர்ந்து கொள்ளும் போது தான் இது காந்தி தேசமாக இருக்கும். அரசியல் கட்சிகள் முதலில் குடிமக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால் இங்கு ஜனநாயகம் என்பது அவர்கள் வாக்குகளை வாங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். மக்கள் வாக்குகளை விற்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைப்பாடு பெரிய துரோகம். இதற்கான பொறுப்பு நமக்கும் உண்டு என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எப்படி அன்று சுதந்திரத்திற்காக போராடினார்களோ அதே போல தான் நாம் இன்று ஜனநாயகத்துக்காக போராடுகிறோம். கடைகோடி மனிதனின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான இடம் உள்ளாட்சியில் தான் இருக்கிறது. என்றார். தெடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதால் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தலித்துகளுக்கு அவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் சுமார் 70 சதவிகிதம். அப்படி என்றால் நாட்டில் 70 சதவிகிதம் நீதி அடிபட்டு கிடக்கிறது என்று கூறினார். இந்த உண்ணாவிரம் மற்றும் தெடர் கண்டன உரை போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி; வெளியேறிய அமைச்சர்

விகடன் 30 Mar 2025 8:06 pm

கொழும்பில் ஒன்று : வடக்கில் ஒன்று

பிரித்தானியாவின் போர்க்குற்றவாளிகளிற்கான தடை தொடர்பில் அனுர அரசு கடும் கண்டனத்தை எழுப்பிவருகின்றது. இந்நிலையில் அனுர அரசின் பங்காளியாகவும் வரவு செலவுத்திட்டத்தை வரவேற்றவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரித்தனியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஒரு பேச்சும் வடக்கில் இன்னொரு பேச்சும் பேசுகின்ற டெலோ தலைமையென அண்மையில் அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 30 Mar 2025 8:05 pm

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் குழாம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பிமல் ரத்னாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர் விமான நிலையத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும், அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் விமான நிலைய அதிகாரிகள், தொழினுட்பவியலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினர் குறித்த அமைச்சர் குழாமில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா உள்ளிட்டோர் உள்ளடங்கி இருந்தனர்.

பதிவு 30 Mar 2025 8:05 pm

கோடையில் தினம் ஒரு கொய்யா: கிடைக்கும் அற்புதமான 3 நன்மைகள் என்ன?

தனித்துவமான சுவையும் வாசனையும் கொண்ட கொய்யா பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொய்யாப் பழமானது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாக காணப்படுகின்றது. இதில் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் தோலிற்கு நன்மை பயக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிக அளவில் கொண்டுள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பயன்படும் மெக்னீசியமும் கொய்யாவில் நிறைந்துள்ளது. கொய்யாப் பழம் கருவுறுதலை மேம்படுத்தும் ஃபோலேட் எனப்படும் கனிமச்சத்தினையும் கொண்டுள்ளது. இதிலிருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்த அளவினை சீராக வைக்க […]

அதிரடி 30 Mar 2025 8:00 pm

தேர்தல் குண்டு!:ஈஸ்டர் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்படுவர்!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படும் குழுவை அம்பலப்படுத்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதிவு 30 Mar 2025 7:43 pm

எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்!

எக்ஸ் தளத்தை 45 பில்லியன் டொலருக்கு எலோன் மஸ்க் விற்பனை செய்துள்ளார். எலோன் மஸ்க் தனது எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துக்கே எக்ஸ் தள நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆண்டு ஈலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கச் செலுத்திய தொகையுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். எக்ஸ் ஏ.ஐ நிறுவனமும் எலான் மஸ்க்குக்கு சொந்தமான நிறுவனமாகும். ஆனால் புதிய ஒப்பந்தத்தில் 12 பில்லியன் டொலர் கடன் உள்ளடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி எக்ஸ் தளத்திற்காக […]

அதிரடி 30 Mar 2025 7:30 pm

தேசிய மக்கள் சக்தியின், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தியின், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், உள்ளிட்ட […]

அதிரடி 30 Mar 2025 7:30 pm

SRH vs DC: `5 விக்கெட் மாமே!' - தடுமாறி சுருண்ட ஹைதராபாத்; மிரட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்

இன்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் களமிறங்கின. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியது. இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். SRH vs DC ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் ஒரு பௌண்டரியுடன் தனது ஆட்டத்தை தொடங்கினார் டிராவிஸ் ஹெட். முதல் ஓவரில் பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க், அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை எடுத்தார். அதன் பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் ஐந்து பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய நித்திஷ் ரெட்டி ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இவ்வாறு அடுத்தடுத்த விக்கெட் இழப்பினால் மூன்று ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழந்து 29 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது ஹைதராபாத் அணி. தொடக்கத்திலிருந்து ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுக்க முயற்சி செய்து வந்தது டெல்லி கேப்பிட்டல். ஐந்தாவது ஓவரில் முதல் பந்தில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் டிராவிஸ் ஹெட். RR vs CSK : 'அந்த ரெண்டு பேரும் டீம்ல இல்ல!' - ருத்துராஜ் கொடுத்த அப்டேட் SRH vs DC அவர் 12 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய க்ளாசென் நின்று விளையாடத் தொடங்கினார். அனிகேட் வெர்மா உடன் க்ளாசென் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹைதராபாத் அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார். ஏழாவது ஓவரில் ஒரு போர், ஒரு சிக்ஸ், எட்டாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் என அனிகேட் வெர்மா சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 11வது ஓவரில் மோகித் ஷர்மா வீசிய பந்தில் க்ளாசென் கேட்ச் அவுட் ஆனார். அவர் இரண்டு சிக்ஸ், இரண்டு பௌண்டரி என 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பிறகு பேட்டிங்கில் களம் இறங்கிய அபினவ் மனோகர், ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஹைதராபாத் அணி இம்பேக்ட் பிளேயாராக வியான் முல்டரை 15வது ஓவரில் களம் இறக்கியது. 16வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் அனிகேட் வெர்மா கேட்ச் அவுட் ஆனார். SRH vs DC அனிகேட் வெர்மா அடித்த பந்தை பௌண்டரி லைனில் இருந்து தாவி பிடித்து அவுட் செய்தார் ஜேக் பிரேசர். அனிகேட் வெர்மா ஐந்து பௌண்டரி, ஆறு சிக்ஸர்கள் என 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு விளையாடிய முல்டர், அர்ஷல் படேல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத் அணி. மிட்ஷல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசி ஹைதராபாத் பிளேயர்களின் விக்கட்டுகளை எடுத்துள்ளார். இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தி உள்ளார். 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களம் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ மேன்களாக பிரேசர்-மெக்கர்க் மற்றும் பாப் டூபிளெஸ்ஸி ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்த பாப் டூ பிளெஸ்ஸி, பிரேசர்-மெக்கர்க், அடுத்தடுத்த ஓவர்களில் சிறப்பாக விளையாட தொடங்கினர். மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பௌண்டரிகள் என சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பாப் டூபிளெஸ்ஸி. SRH vs DC ஐந்தாவது ஓவரில் பிரேசர்-மெக்கர்க் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கத் தவறவிட்டார் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். பவர் பிளேவின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 52 ரன்கள் எடுத்திருந்தது. ஏழாவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என அடுத்தடுத்து விலாசினார் பாப் டூபிளெஸ்ஸி. பத்தாவது ஓவரில் ஜீசன் அன்சாரி வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் பாப் டூபிளெஸ்ஸி. அவர் மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். பத்தாவது ஓவரில் ஜீசன் அன்சாரி வீசிய பந்தை இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என விலாசி கொண்டிருந்தார் பிரேசர்-மெக்கர்க். அடுத்த பந்தில் பவுலிங் செய்த ஜீசன் அன்சாரி பிரேசர்-மெக்கர்க் அடித்த பந்தை பிடித்து அவுட் ஆக்கினார். அதன்பிறகு பேட்டிங்கில் களம் இறங்கிய கே எல் ராகுல் முதல் பந்திலேயே பௌண்டரி, சிக்ஸ், பௌண்டரி என விளாசினார். 12 வது ஓவரில் ஜீசன் அன்சாரி வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் கே எல் ராகுல். அதன் பிறகு பேட்டிங்கில் களம் இறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். SRH vs DC 16வது ஓவரில் ஸ்டெப்ஸ் இரண்டு போர் அடிக்க, அபிஷேக் பொரெல் சிக்ஸ் அடித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். 16 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் பேட்டிங்கிலும், பில்டிங்கிலும் வழக்கமாக இருந்ததைவிட சற்று தடுமாறியது.

விகடன் 30 Mar 2025 7:26 pm

யாழ்ப்பாணம் –திருச்சி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள் , விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு , […]

அதிரடி 30 Mar 2025 7:25 pm

விஜய்யை டார்கெட் செய்யும் சரத்குமார்.. பிரதமரை விமர்சித்ததற்கு காட்டமாக பதிலடி!

பிரதமர் மோடியை தவெக தலைவர் விஜய் கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் நாகரீக அரசியல் செய்ய வேண்டும் எனவும் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சமயம் 30 Mar 2025 7:24 pm

RR vs CSK : 'அந்த ரெண்டு பேரும் டீம்ல இல்ல!' - ருத்துராஜ் கொடுத்த அப்டேட்

'டாஸ் முடிவு' சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அசாமின் கவுஹாத்தி மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டிக்கான டாஸை சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். CSK vs RCB: `என்ன ஆச்சு CSK?' தோல்விக்கான அந்த 3 காரணங்கள் 'அந்த 2 வீரர்கள்!' டாஸை வென்றுவிட்டு ருத்துராஜ் பேசுகையில், 'இது ஒரு நல்ல பிட்சாகத் தெரிகிறது. அதனால் சேஸ் செய்கிறோம். கடந்த போட்டிக்கும் இந்தப் போட்டிக்கும் குறுகிய இடைவெளிதான் இருந்தது. ஆனால், ஐ.பி.எல் அப்படித்தான் இருக்கும். ஒரு போட்டியிலிருந்து அடுத்த போட்டிக்கு சீக்கிரமே மீண்டு வர வேண்டும். நாங்கள் முதல் முதலாக இந்த மைதானத்துக்கு ஆட வந்திருக்கிறோம். ருத்துராஜ் கெய்க்வாட் ஹோட்டலிலிருந்து மைதானம் வரைக்கும் இந்த ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கிறது. சாம் கரணுக்கு பதில் ஜேமி ஓவர்ட்டனும் தீபக் ஹூடாவுக்கு பதில் விஜய் சங்கரும் லெவனுக்குள் வந்திருக்கிறார்கள்.' என்றார். சென்னை அணி கடந்த போட்டியில் சேப்பாக்கத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 30 Mar 2025 7:22 pm

RR vs CSK : 'அந்த ரெண்டு பேரும் டீம்ல இல்ல!' - ருத்துராஜ் கொடுத்த அப்டேட்

'டாஸ் முடிவு' சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அசாமின் கவுஹாத்தி மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டிக்கான டாஸை சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். CSK vs RCB: `என்ன ஆச்சு CSK?' தோல்விக்கான அந்த 3 காரணங்கள் 'அந்த 2 வீரர்கள்!' டாஸை வென்றுவிட்டு ருத்துராஜ் பேசுகையில், 'இது ஒரு நல்ல பிட்சாகத் தெரிகிறது. அதனால் சேஸ் செய்கிறோம். கடந்த போட்டிக்கும் இந்தப் போட்டிக்கும் குறுகிய இடைவெளிதான் இருந்தது. ஆனால், ஐ.பி.எல் அப்படித்தான் இருக்கும். ஒரு போட்டியிலிருந்து அடுத்த போட்டிக்கு சீக்கிரமே மீண்டு வர வேண்டும். நாங்கள் முதல் முதலாக இந்த மைதானத்துக்கு ஆட வந்திருக்கிறோம். ருத்துராஜ் கெய்க்வாட் ஹோட்டலிலிருந்து மைதானம் வரைக்கும் இந்த ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கிறது. சாம் கரணுக்கு பதில் ஜேமி ஓவர்ட்டனும் தீபக் ஹூடாவுக்கு பதில் விஜய் சங்கரும் லெவனுக்குள் வந்திருக்கிறார்கள்.' என்றார். சென்னை அணி கடந்த போட்டியில் சேப்பாக்கத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 30 Mar 2025 7:22 pm

Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?

ஒடிஷாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெறுகிறார். கடந்த மார்ச் 13ம் தேதி மத்திய அரசு அவரது விருப்ப ஓய்வுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. ஒடிஷா அரசு தேவையான அறிவிப்பை வெளியிட அறிவுறுத்தியுள்ளது. கட்டாய 3 மாத நோட்டீஸ் பீரியடையும் தள்ளுபடி செய்துள்ளனர். சுஜாதா கார்த்திகேயன் ஒடிஷா அரசின் சக்திவாய்ந்த அதிகாரியாக இருந்தவர். பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய ஆலோசகரான வி.கே. பாண்டியனின் மனைவியும் கூட. Sujatha Karthikeyan Sujatha Karthikeyan சுஜாதா 2000ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் Political Science படித்துள்ளார். பின்னர் ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுநிலை பட்டம் பெற்றார். ஒடிஷாவில் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட சுந்தர்கர் மாவட்டத்தில் அவரது பணி தொடங்கியது. அங்கு பல சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். 2005ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். 2006ம் ஆண்டில் சுந்தர்கர் மாவட்டத்தில் இவர் தொடங்கிய மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம் பின்னாட்களில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. சுந்தர்கரின் மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்குமிக்க பகுதிகளில், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விளையாட்டுக்கான ஆர்வத்தை உருவாக்கினார். கால் பந்தையும் ஹாக்கியையும் பிரபலப்படுத்தியதால் இவருக்கு `ஃபுட்பால் கலெக்டர்' என்ற பெயர் உண்டு. Voluntary Retirement ஒடிஷாவில் பெண்களுக்கு வலிமையூட்டும் விதமாகத் தொடங்கப்பட்ட 'மிஷன் சக்தி' திட்டத்துக்குத் தலைமை தாங்கியது இவரது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவரது வழிகாட்டுதலில், இந்தத் திட்டத்தின் கீழ் 70 லட்சம் பெண்கள் பயன்பெற்றனர். பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கான (SHGs) கடன் இணைப்புகள் ஏழு ஆண்டுகளில், ரூ.500 கோடியிலிருந்து ரூ.15,000 கோடியாக அதிகரித்தது. கட்டக் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியாளராக பதவியேற்றார் சுஜாதா. அங்கு கர்ப்பமான பெண்களுக்குக்காக மம்தா என்ற பணபரிமாற்றத் திட்டத்தைத் தொடங்கினார். கலாச்சார செயலாளராக பணியாற்றிய சிறிய காலகட்டத்தில், புவனேஸ்வரில் முதல் உலக ஒடியா மொழி மாநாட்டை நடத்தியதில் முக்கிய பங்காற்றினார். 2023ம் ஆண்டு இவரது கணவர் வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தேர்தலில் நவீன் பட்நாயக் மீது வி.கே.பாண்டியன் செல்வாக்கு செலுத்துவதாகப் பிரச்னையைக் கிளப்பியது பாஜக. v.k.pandian, Naveen patnaik கடந்த ஆண்டு தேர்தலை ஒட்டி, சுஜாதா கார்த்திகேயன் அலுவலகப் பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவர் bjd கட்சியின் ஏஜென்ட் என விமர்சிக்கப்பட்டார். இதனால் தேர்தல் ஆணையம் அவரை அதிகாரமில்லாத பதவிக்கு மாற்ற வலியுறுத்தியது. மிஷன் சக்தியின் ஆணையர் மற்றும் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார் சுஜாதா. தேர்தலில் bjd கட்சி தோல்வியைத் தழுவியதால் கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அழுத்தங்களை எதிர்கொண்டார் வி.கே.பாண்டியன். பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டில் 6 மாதம் குழந்தை பராமரிப்பு விடுப்பு எடுத்த சுஜாதா கார்த்திக்கேயன், தனது விடுப்பை நீட்டிக்ககோரி அளித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது. நவம்பர் மாதம் மீண்டும் அலுவலகத்தில் இணைந்தார். ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒடிஷாவின் நிதித்துறையில் சிறப்பு செயலாளராகப் பதவி வகித்துள்ளார். `தெற்கின் மேல் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு...' - உகாதி வாழ்த்துச் செய்தியில் முதல்வர்!

விகடன் 30 Mar 2025 7:20 pm

Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?

ஒடிஷாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெறுகிறார். கடந்த மார்ச் 13ம் தேதி மத்திய அரசு அவரது விருப்ப ஓய்வுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. ஒடிஷா அரசு தேவையான அறிவிப்பை வெளியிட அறிவுறுத்தியுள்ளது. கட்டாய 3 மாத நோட்டீஸ் பீரியடையும் தள்ளுபடி செய்துள்ளனர். சுஜாதா கார்த்திகேயன் ஒடிஷா அரசின் சக்திவாய்ந்த அதிகாரியாக இருந்தவர். பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய ஆலோசகரான வி.கே. பாண்டியனின் மனைவியும் கூட. Sujatha Karthikeyan Sujatha Karthikeyan சுஜாதா 2000ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் Political Science படித்துள்ளார். பின்னர் ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுநிலை பட்டம் பெற்றார். ஒடிஷாவில் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட சுந்தர்கர் மாவட்டத்தில் அவரது பணி தொடங்கியது. அங்கு பல சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். 2005ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். 2006ம் ஆண்டில் சுந்தர்கர் மாவட்டத்தில் இவர் தொடங்கிய மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம் பின்னாட்களில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. சுந்தர்கரின் மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்குமிக்க பகுதிகளில், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விளையாட்டுக்கான ஆர்வத்தை உருவாக்கினார். கால் பந்தையும் ஹாக்கியையும் பிரபலப்படுத்தியதால் இவருக்கு `ஃபுட்பால் கலெக்டர்' என்ற பெயர் உண்டு. Voluntary Retirement ஒடிஷாவில் பெண்களுக்கு வலிமையூட்டும் விதமாகத் தொடங்கப்பட்ட 'மிஷன் சக்தி' திட்டத்துக்குத் தலைமை தாங்கியது இவரது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவரது வழிகாட்டுதலில், இந்தத் திட்டத்தின் கீழ் 70 லட்சம் பெண்கள் பயன்பெற்றனர். பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கான (SHGs) கடன் இணைப்புகள் ஏழு ஆண்டுகளில், ரூ.500 கோடியிலிருந்து ரூ.15,000 கோடியாக அதிகரித்தது. கட்டக் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியாளராக பதவியேற்றார் சுஜாதா. அங்கு கர்ப்பமான பெண்களுக்குக்காக மம்தா என்ற பணபரிமாற்றத் திட்டத்தைத் தொடங்கினார். கலாச்சார செயலாளராக பணியாற்றிய சிறிய காலகட்டத்தில், புவனேஸ்வரில் முதல் உலக ஒடியா மொழி மாநாட்டை நடத்தியதில் முக்கிய பங்காற்றினார். 2023ம் ஆண்டு இவரது கணவர் வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தேர்தலில் நவீன் பட்நாயக் மீது வி.கே.பாண்டியன் செல்வாக்கு செலுத்துவதாகப் பிரச்னையைக் கிளப்பியது பாஜக. v.k.pandian, Naveen patnaik கடந்த ஆண்டு தேர்தலை ஒட்டி, சுஜாதா கார்த்திகேயன் அலுவலகப் பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவர் bjd கட்சியின் ஏஜென்ட் என விமர்சிக்கப்பட்டார். இதனால் தேர்தல் ஆணையம் அவரை அதிகாரமில்லாத பதவிக்கு மாற்ற வலியுறுத்தியது. மிஷன் சக்தியின் ஆணையர் மற்றும் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார் சுஜாதா. தேர்தலில் bjd கட்சி தோல்வியைத் தழுவியதால் கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அழுத்தங்களை எதிர்கொண்டார் வி.கே.பாண்டியன். பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டில் 6 மாதம் குழந்தை பராமரிப்பு விடுப்பு எடுத்த சுஜாதா கார்த்திக்கேயன், தனது விடுப்பை நீட்டிக்ககோரி அளித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது. நவம்பர் மாதம் மீண்டும் அலுவலகத்தில் இணைந்தார். ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒடிஷாவின் நிதித்துறையில் சிறப்பு செயலாளராகப் பதவி வகித்துள்ளார். `தெற்கின் மேல் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு...' - உகாதி வாழ்த்துச் செய்தியில் முதல்வர்!

விகடன் 30 Mar 2025 7:20 pm

ஆனையிறவு உப்புக்கு வந்த சோதனை!

இலங்கை அரச உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பளத்தின் மேசை உப்பானது இனி “ரஜ சோல்ட்” எனும் வியாபார குறியீட்டின் கீழ் இலங்கை எங்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிங்கள பெயர் சூட்டப்பட்ட பின்னராக அதனை ஆனையிறவு உப்பு எனும் பெயரிலேயே எதிர்காலத்தில் சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே ஆனையிறவு உப்பு என தமிழிலும் அலிமங்கட லுணு என சிங்களத்திலும் எலிபன்ட்பாஸ் சால்ட் என ஆங்கிலத்திலும் விநியோகிக்கப்படுமென கூறப்படுகின்றது.

அதிரடி 30 Mar 2025 6:58 pm

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் –ஈஸ்டர் பண்டிகைக்கு முன் நீதி நிலைநாட்டப்படும்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருகின்றன, இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் பல… The post ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் – ஈஸ்டர் பண்டிகைக்கு முன் நீதி நிலைநாட்டப்படும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Mar 2025 6:53 pm

Vijay Sethupathi: `போக்கிரி'பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி - அசத்தும் லைன் அப்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மெரி கிறிஸ்துமஸ்', 'மஹாராஜா', 'விடுதலை பாகம் -2' போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிப்பைத் தாண்டி கடந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் களமிறங்கி தூள் கிளப்பியிருந்தார். கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி பிரபல டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பேசப்பட்டு வந்தது. தற்போது படக்குழு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. Vijay Sethupathi in Puri Jaganadh Direction இப்படத்தை பூரி ஜெகன்நாத் தன்னுடைய பூரி கனெக்ட்டில் நிறுவனத்தில் மூலம் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் இப்படத்தை தயாரிக்கிறார். இது குறித்து சமூக வலைதளப் பக்கங்களில் ,''யுகாதி பண்டிகையன்று சென்சேஷனல் கூட்டணியின் புதிய சாப்டர் தொடங்கியிருக்கிறது. எனப் படக்குழு பதிவிட்டிருக்கிறது. இத்திரைப்படம் பான் இந்தியன் திரைப்படமாக அத்தனை மொழிகளிலும் உருவாகி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என அறிவித்திருக்கிறார்கள். இதுதவிர 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் இயக்குநர் ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ̀ஏஸ்' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ̀TRAIN' படத்தின் இறுதிகட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ‘ஏஸ்' படத்தில்... இதில் ஷ்ருதி ஹாசன், நாசர் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்திருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த லைப் அப்பை தாண்டி 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடித்துவருகிறார்.

விகடன் 30 Mar 2025 6:50 pm

Vijay Sethupathi: `போக்கிரி'பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி - அசத்தும் லைன் அப்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மெரி கிறிஸ்துமஸ்', 'மஹாராஜா', 'விடுதலை பாகம் -2' போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிப்பைத் தாண்டி கடந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் களமிறங்கி தூள் கிளப்பியிருந்தார். கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி பிரபல டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பேசப்பட்டு வந்தது. தற்போது படக்குழு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. Vijay Sethupathi in Puri Jaganadh Direction இப்படத்தை பூரி ஜெகன்நாத் தன்னுடைய பூரி கனெக்ட்டில் நிறுவனத்தில் மூலம் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் இப்படத்தை தயாரிக்கிறார். இது குறித்து சமூக வலைதளப் பக்கங்களில் ,''யுகாதி பண்டிகையன்று சென்சேஷனல் கூட்டணியின் புதிய சாப்டர் தொடங்கியிருக்கிறது. எனப் படக்குழு பதிவிட்டிருக்கிறது. இத்திரைப்படம் பான் இந்தியன் திரைப்படமாக அத்தனை மொழிகளிலும் உருவாகி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என அறிவித்திருக்கிறார்கள். இதுதவிர 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் இயக்குநர் ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ̀ஏஸ்' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ̀TRAIN' படத்தின் இறுதிகட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ‘ஏஸ்' படத்தில்... இதில் ஷ்ருதி ஹாசன், நாசர் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்திருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த லைப் அப்பை தாண்டி 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடித்துவருகிறார்.

விகடன் 30 Mar 2025 6:50 pm

கோவை டு ராமேஸ்வரம் விரைவில் ரயில் சேவை.... விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் நிலையில் தென் தமிழகத்தை கொங்கு மண்டலத்துடன் இணைக்கும் வகையாக விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும்

சமயம் 30 Mar 2025 6:49 pm

முடிச்சிவிட்டீங்க போங்க! ஹைதராபாத்தை ஓட விட்ட டெல்லி..7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விசாகப்பட்டினம்: இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பமே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தொடர்ச்சியாக விக்கெட்கள் விட்டது. அதிரடி அணி ஹைதராபாத்தையும் எங்களால் தடுக்க முடியும் என்கிற வகையில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் கலக்கினார்கள் என்று […]

டினேசுவடு 30 Mar 2025 6:47 pm

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில்!

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும்… The post இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Mar 2025 6:36 pm

தமிழகத்தில் அதிகரிக்கும் என்கவுண்டர் : இதுதான் காரணம்.. அமைச்சர் ரகுபதி விளக்கம்!

தமிழகத்தில் என்கவுண்டர் அதிகரித்து வரும் நிலையில், அதுதொடர்பாக சட்ட அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

சமயம் 30 Mar 2025 6:36 pm

ஆளுநருடன் கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய… The post ஆளுநருடன் கலந்துரையாடல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Mar 2025 6:30 pm

சர்வதேச மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் அமெரிக்கா! காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, அமெரிக்காவில் கல்வி விசாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள் அங்குள்ள பல்கலைக்கழங்களில் பயின்று வருகின்றனர். அதில், இந்தியாவில் இருந்து 3.31 லட்சம் மாணவர்களும். சீனாவில் இருந்து 2.77 லட்சம் மாணவர்களும் படிக்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், […]

அதிரடி 30 Mar 2025 6:30 pm

தேடி சென்ற பிரித்வி ஷா! பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்ற டெல்லி உரிமையாளர்கள்!

டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு அதிரடியாக ஒரு காலத்தில் ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால், வாழ்க்கையில் யார் யாருக்கு எப்போது சறுகல் ஏற்படும் என்பதை கணிக்கவே முடியாது. யோசித்து பார்க்க முடியாத சூழ்நிலையில் திடீரென சிலருக்கு சறுகல் ஏற்பட்டுவிடும். அப்படி தான் பிரித்வி ஷாவுக்கும் கூட திடீரென கிரிக்கெட் உலகில் சறுகல் ஏற்பட்டது. ஏனென்றால் அவர் தனது உடல் எடை […]

டினேசுவடு 30 Mar 2025 6:19 pm

விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்; படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம்!

கன்னியாகுமரியில் கடல் தாழ்வு காரணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

சமயம் 30 Mar 2025 5:54 pm

யாழில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30.03.25)… The post யாழில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Mar 2025 5:48 pm

கோவை விமான நிலையத்தின் புதிய டெர்மினல் கட்ட இவ்வளவு ஆண்டுகள் ஆகுமா?

கோவை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டம் மந்த கதியில் நடைபெறுவதால் பயணிகள் நிம்மதியின்றி இருக்கின்றனர். மார் 470 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டும் பணிகள் தீவிரமில்லாமல் நடைபெறுகின்றன.

சமயம் 30 Mar 2025 5:40 pm

தமிழகத்தில் வெயில் குறையக்கூடும்.. மழைக்கும் வாய்ப்பு உண்டு - வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமயம் 30 Mar 2025 5:35 pm

நேபாளத்தில் மன்னராட்சி புதுப்பிப்பு போராட்டம்: இருவர் உயிரிழப்பு!

நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவரக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 28, 2025) தலைநகர் காத்மாண்டுவில் பெரும்

ஆந்தைரேபோர்ட்டர் 30 Mar 2025 5:32 pm

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘சுக்மா மாவட்டம் கோ்லாபால் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் டிஆா்ஜி மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் வெள்ளிக்கிழமை இரவு தேடுதல் […]

அதிரடி 30 Mar 2025 5:30 pm

Empuraan: எம்புரானுக்கு எழுந்த சர்ச்சை; 17 கட்களை மேற்கொள்ள படக்குழு திட்டம்

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ̀எல் 2: எம்புரான்'. இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ̀லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடதக்கது. திரையரங்குகளில் அதிரடியான வசூலை அள்ளிக் கொண்டிருக்கும் எம்புரான் திரைப்படத்திற்கு தற்போது சில சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. Empuraan படத்தில் இடம்பெற்றிருக்கும் கலவரம் தொடர்பான காட்சிகள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜாராத் கலவர சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்துத்துவ கொள்கைகளையும் தலைவர்களுக்கும் இழிவுப்படுத்தும் கருத்துகள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. படத்திற்கு எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து நடிகர் மோகன்லால் மன்னிப்பு கோரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ``ஒரு கலைஞனாக என்னுடைய எந்த ஒரு திரைப்படமும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதக் குழுவிற்கும் விரோதமானதாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது என் கடமை. ஆகையால், நானும் எம்புரான் குழுவினரும் என் அன்பிற்குரியவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்துக்கு மனம் வருந்துகிறோம். மேலும் அதற்கான பொறுப்பு படத்தின் பின்னணியில் பணியாற்றிய அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து, சர்ச்சைக்குரிய கருப்பொருட்களை படத்திலிருந்து நீக்குவது என எல்லோரும் இணைந்து முடிவு செய்துள்ளோம். எனப் பதிவிட்டிருந்தார். படத்திற்கு எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து மொத்தமாக 17 கட்களை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டிருக்கிறது. Empuraan Poster கலவரக் காட்சிகளில்தான் இந்தக் கட்களைக் மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படத்தின் காட்சிகள் எவரையும் காயப்படுத்தியிருந்தால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் என நேற்றைய தினம் இப்படத்தின் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலன் கூறியிருந்தார். படத்தின் கன்டென்ட் பாதிக்கப்படாத வண்ணம் மறு தணிக்கை செய்யப்பட்ட பதிப்பு அடுத்த வாரம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமையிலிருந்து திரையரங்குகளில் ஒளிபரப்படும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் படத்தில் முல்லைப் பெரியாறு தொடர்பான காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் அதை நீக்காவிட்டால் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்திருக்கிறது.

விகடன் 30 Mar 2025 5:21 pm

SRHvsDC : அந்நியனாக மாறிய அனிகேத்..அதிரடி ஹைதராபாத்தை திணற வைத்த டெல்லி! டார்கெட் இது தான்!

விசாகப்பட்டினம்: இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்போதும் அதிரடியாக தொடக்கத்தை ஆரம்பிக்கும் ஹைதராபாத் இந்த முறை அதிரடி காட்ட தவறியது என்று தான் சொல்லவேண்டும். விசாகப்பட்டினம் மைதானம் என்பதால் கண்டிப்பாக சிக்ஸர் மழை பொழிய போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நடந்ததே வேற தொடர்ச்சியாக அணிக்கு விக்கெட் தான் விழுந்தது. அதிரடி அணி ஹைதராபாத்தையும் எங்களால் தடுக்க முடியும் என்கிற […]

டினேசுவடு 30 Mar 2025 5:17 pm

Sikandar: 4000 பேரில் 5 பேர் தேர்வு; படத்தில் நடித்த குழந்தைகளை ஆச்சரியப்படுத்திய சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த சிகந்தர் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தில் 5 குழந்தைகள் நடித்திருந்தனர். அவர்களைத் தேர்வு செய்ய 4 ஆயிரம் குழந்தைகளை ஒத்திகைக்காக அழைத்திருந்தனர். பல நாட்கள் நடந்த ஒத்திகையில் 5 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அக்குழந்தைகளுடன் சிகந்தர் படத்தின் படப்பிடிப்பு மும்பை கோரேகாவ் திரைப்பட நகரில் 30 நாட்கள் நடந்தது. இப்படப்பிடிப்பின் போது 5 குழந்தைகளில் நிர்பயா பாட்டீல் என்ற சிறுமியின் நடிப்பு நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் பிடித்துவிட்டது. படப்பிடிப்பின் போதும் எப்போதும் சல்மான் கானுடன் நிர்பயா இருந்தார். 10 வயதாகும் நிர்பயா மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். Viral Song: அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா? நிர்பயாவுடன் சல்மான் கான் அவரின் தந்தை லீலாதர் பாட்டீல் மும்பையில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். கிரைம் சீரியல்களில் நடித்திருக்கிறார். நிர்பயாவிற்கும் படங்களில் நடிக்க ஆசை வந்தது. உடனே சிகந்தர் படத்திற்காக குழந்தைகள் தேர்வுக்காக ஒத்திகை நடப்பது குறித்து கேள்விப்பட்டு தனது மகளை அங்கு அழைத்துச்சென்றார். இதில் 4000 பேரில் ஒருவராக நிர்பயா தேர்வு செய்யப்பட்டார். சிகந்தர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நாளில் நிர்பயா உட்பட படத்தில் நடித்த 5 குழந்தைகளை அழைத்துக்கொண்டு சல்மான் கான் அங்குள்ள பிரபலமான மால் ஒன்றுக்கு சென்றார். அந்த சூப்பர் மார்க்கெட்டில் குழந்தைகளுக்குப் பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி சல்மான்கான் கிப்டாக கொடுத்தார். இதனால் குழந்தைகள் ஆச்சரியமும் உற்சாகமும் அடைந்தனர். இதுகுறித்து நிர்பயா கூறுகையில்,''படப்பிடிப்பு முழுவதிலும் அவர் எங்களிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டார். அந்த அனுபவத்தை எங்களால் மறக்க முடியாது. அவர் எனக்கு வாங்கிக்கொடுத்த கிப்ட்களை பத்திரப்படுத்திக்கொள்வேன்''என்று தெரிவித்தார்.

விகடன் 30 Mar 2025 5:12 pm

'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்கள், போராட்டங்களில் ஈடுபட்டால் அமெரிக்க மாணவர்களின் படிப்பு நிறுத்தப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள். வெளிநாட்டு மாணவர்கள் அவர்கள் நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள். எந்தக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இந்த செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அந்தக் கல்வி நிறுவனத்திற்கு அரசின் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். படிப்பு நிறுத்தம்...வெளியேற்றம்...நிதி உதவி ரத்து - ட்ரம்ப் மீறினால் என்ன? பாலஸ்தீனம் ஆதரவு போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தற்போது அமெரிக்க அரசு அவர்களாகவே சொந்த நாட்டிற்கு திரும்புமாறு மெயில் அனுப்பியுள்ளது. இந்த எச்சரிக்கையை மீறினால் அமெரிக்க அரசு வெளியேற்றம், விசா ரத்து போன்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படியான மெயில் அமெரிக்காவில் படிக்கும் பல இந்திய மாணவர்களுக்கும் சென்றுள்ளது. நாடு திரும்புவதற்கான வசதிகள் அறிமுகம்! இந்த செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் தங்களது நாட்டிற்கு அவர்களாகவே கிளம்ப உதவ CBP ஹோம் ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் தங்களது பாஸ்போர்ட்டுகளை கொடுத்து விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களது விசாவை ரத்து செய்ய அமெரிக்க அரசு 'Catch and Revoke' என்ற ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. Trump: 'அமெரிக்க கல்வித்துறையை கலைக்க கையெழுத்திட்ட ட்ரம்ப்...' - காரணம் என்ன?!

விகடன் 30 Mar 2025 5:04 pm

'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்கள், போராட்டங்களில் ஈடுபட்டால் அமெரிக்க மாணவர்களின் படிப்பு நிறுத்தப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள். வெளிநாட்டு மாணவர்கள் அவர்கள் நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள். எந்தக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இந்த செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அந்தக் கல்வி நிறுவனத்திற்கு அரசின் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். படிப்பு நிறுத்தம்...வெளியேற்றம்...நிதி உதவி ரத்து - ட்ரம்ப் மீறினால் என்ன? பாலஸ்தீனம் ஆதரவு போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தற்போது அமெரிக்க அரசு அவர்களாகவே சொந்த நாட்டிற்கு திரும்புமாறு மெயில் அனுப்பியுள்ளது. இந்த எச்சரிக்கையை மீறினால் அமெரிக்க அரசு வெளியேற்றம், விசா ரத்து போன்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படியான மெயில் அமெரிக்காவில் படிக்கும் பல இந்திய மாணவர்களுக்கும் சென்றுள்ளது. நாடு திரும்புவதற்கான வசதிகள் அறிமுகம்! இந்த செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் தங்களது நாட்டிற்கு அவர்களாகவே கிளம்ப உதவ CBP ஹோம் ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் தங்களது பாஸ்போர்ட்டுகளை கொடுத்து விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களது விசாவை ரத்து செய்ய அமெரிக்க அரசு 'Catch and Revoke' என்ற ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. Trump: 'அமெரிக்க கல்வித்துறையை கலைக்க கையெழுத்திட்ட ட்ரம்ப்...' - காரணம் என்ன?!

விகடன் 30 Mar 2025 5:04 pm

மியான்மர் உயிரிழப்பு 10 ஆயிரத்தை எட்டக்கூடும்: நிபுணர்கள் தெரிவிப்பு!

மியான்மரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய இறப்பு எண்ணிக்கை 1,700 ஆக உள்ளது, 3,400 பேர் காயமடைந்தனர் மற்றும் 300 பேர் காணாமல் போயுள்ளனர் என்று இராணுவ ஆட்சியாளர்களை மேற்கோள் காட்டி இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவான டெலிகிராம் சேனல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்க புவியியல் சேவையின் முன்கணிப்பு மாதிரியின்படி, இறப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து 10,000 ஐ எட்டக்கூடும். நிதி இழப்புகள் நாட்டின் வருடாந்திர பொருளாதார உற்பத்தியை விட அதிகமாக இருக்கலாம் என்றும் அது அறிவுறுத்துகிறது. கடந்த நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசிய நாட்டை உலுக்கிய மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றான வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பொருளாதாரத்தை சீரழித்து மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர்ந்த உள்நாட்டுப் போருக்கு மத்தியில் விமான நிலையங்கள், பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளை முடக்கியது. மியான்மரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளதாக இராணுவ அரசாங்கம் சனிக்கிழமை தெரிவித்தது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில், கனரக இயந்திரங்கள் இல்லாததாலும், அதிகாரிகள் இல்லாததாலும், இன்னும் சிக்கித் தவிப்பவர்களைக் காப்பாற்றும் தீவிர முயற்சிகளில், வெள்ளிக்கிழமை தங்கள் வெறும் கைகளால் தோண்டினர். அண்டை நாடான தாய்லாந்தில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின, தலைநகர் பாங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த ஒரு வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்தது, குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

பதிவு 30 Mar 2025 5:00 pm

ஒடிஸா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் ரயில்.. மீட்புப் பணிகள் துரிதம் - என்ன நடந்தது?

இன்று பெங்களூருவில் இருந்து சென்ற ரயில் ஒன்று ஒடிசா மாநிலம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது பெங்களூருவில் இருந்து குவாஹாத்தி செல்லும் காமக்யா விரைவு ரயில் ஆகும். விபத்திற்கு காரணம் என்ன? காரணம் என்ன? ஒடிசா மாநிலத்தின் கட்டாக் அருகில் உள்ள மாங்குலொ என்ற இடத்தில் இந்த ரயில் தடம் புரண்டு, அதன் 2 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. சமீபமாக, இந்தியாவில் ரயில் விபத்துகள் அதிகம் நடந்துவருகின்றன. இதனால், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 'இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல்!' ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.23 வரை கட்டணம்- RBI; ஸ்டாலின் கண்டனம்

விகடன் 30 Mar 2025 4:53 pm

ஒடிஸா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் ரயில்.. மீட்புப் பணிகள் துரிதம் - என்ன நடந்தது?

இன்று பெங்களூருவில் இருந்து சென்ற ரயில் ஒன்று ஒடிசா மாநிலம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது பெங்களூருவில் இருந்து குவாஹாத்தி செல்லும் காமக்யா விரைவு ரயில் ஆகும். விபத்திற்கு காரணம் என்ன? காரணம் என்ன? ஒடிசா மாநிலத்தின் கட்டாக் அருகில் உள்ள மாங்குலொ என்ற இடத்தில் இந்த ரயில் தடம் புரண்டு, அதன் 2 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. சமீபமாக, இந்தியாவில் ரயில் விபத்துகள் அதிகம் நடந்துவருகின்றன. இதனால், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 'இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல்!' ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.23 வரை கட்டணம்- RBI; ஸ்டாலின் கண்டனம்

விகடன் 30 Mar 2025 4:53 pm

ரஷ்யா ஜனாதிபதி புடினின் கார் வெடித்து எரிந்தது: கொலைச்சதியா?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான கார் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார் மொஸ்கோ வீதியில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் ரஸ்ய உளவுத்துறையான (FSB)எப்.எஸ்.பி. தலைமையகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், திடீரென அந்த கார் வெடித்துத் தீப்பிடித்தது. முதலில் கார் எஞ்சனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியதாகத் கூறப்படுகிறது. இந்த கார் ரஸ்ய ஜனாதிபதி மாளிகையின் ஜனாதிபதி சொத்து முகாமைத்துவ துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும், திடீரென பாதுகாப்பு கார் வெடித்துச் சிதற என்ன காரணம் கார் வெடித்துச் சிதறிய போது உள்ளே யாராவது இருந்தார்களா என்பது போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கார் வெடித்த சம்பவம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கொல்ல சதியாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதேநேரம் இது சம்பவம் தொடர்பாக ரஷ்ய அரசு இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கொலை செய்யச் சதித்திட்டங்கள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு 30 Mar 2025 4:52 pm

தேசபந்துவுக்கு நேர்ந்த நிலை! காரணத்தை கூறும் ஜனாதிபதி அநுர

நாட்டில் சர்ச்சைக்குரிய பல வழக்குகள் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொலிஸ் மா அதிபருக்குரிய கடமைகளை நிறைவேற்றாமல் அரசியல்வாதிகளுக்காக பணி புரிந்தமையினாலேயே தேசபந்து தென்னகோனுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் வழக்குத் தாக்கல்… தொடர்ந்தும் தெரிவிக்கையில், மோசடி செய்பவர்கள் […]

அதிரடி 30 Mar 2025 4:50 pm

இரண்டாவது இடத்திற்கு தான் விஜய்க்கு இபிஎஸ்க்கும் சண்டை! திருமாவளவன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கூட்டத்தில் பேசியிருந்த விஜய் ” TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி . திமுகவை 2026-ஆம் ஆண்டு தேர்தலில் வீழ்த்துவோம்” எனவும் பேசியிருந்தார். இந்த சூழலில், விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் […]

டினேசுவடு 30 Mar 2025 4:49 pm

L2 Empuraan: தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள்; நீக்கக்கோரி விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகம். இந்தத் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தைத் தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி இப்படத்திற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு குஜராஜ் கலவர வழக்கில் தொடர்புடையவரின் பெயரையும் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய 17 இடங்களை வெட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. எம்புரான் படக்குழு இந்நிலையில் எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரிாயறு அணை குறித்தும் தவறாக சித்தரித்திருப்பதாகவும், பிருத்விராஜ் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. படத்தின் இயக்குனர் நடிகர் பிருதிவிராஜ், படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல்,முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியுள்ளார். நெடும்பள்ளி டேம் என்று மாற்றுப்பெயரிட்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இப்படத்தில் கதாநாயகி மஞ்சு வாரியார், முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பேசும் காட்சி கண்டிக்கத்தக்கது. எல்2: எம்புரான் (L2: Emburan) முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா,999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்காரன் போய்விட்டானாம், மன்னராட்சியும் போய் விட்டதாம், ஆனாலும் அந்த ஆபத்து மக்களைக் காவு வாங்க காத்து நிற்கிறது என வசனம் பேசியுள்ளார். இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன. இதுபோன்ற திரைப்படம் தமிழக-கேரள மாநில உறவை கெடுப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை பிரித்துவிராஜ் கவனத்தில் கொள்ள வேண்டும். நடிகர் பிருதிவிராஜ் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியது போல முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தைத் திரையிடாவிட்டால், படத்தின் தயாரிப்பாளர் தமிழகத்தில் நடத்தும் நிறுவனங்கள் முன் போராட்டம் நடத்துவோம். முதலில் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் முன்பாக போராட்டத்தைத் தொடங்க உள்ளோம் என அறிவித்துள்ளனர்.

விகடன் 30 Mar 2025 4:48 pm

L2 Empuraan: தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள்; நீக்கக்கோரி விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகம். இந்தத் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தைத் தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி இப்படத்திற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு குஜராஜ் கலவர வழக்கில் தொடர்புடையவரின் பெயரையும் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய 17 இடங்களை வெட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. எம்புரான் படக்குழு இந்நிலையில் எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரிாயறு அணை குறித்தும் தவறாக சித்தரித்திருப்பதாகவும், பிருத்விராஜ் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. படத்தின் இயக்குனர் நடிகர் பிருதிவிராஜ், படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல்,முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியுள்ளார். நெடும்பள்ளி டேம் என்று மாற்றுப்பெயரிட்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இப்படத்தில் கதாநாயகி மஞ்சு வாரியார், முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பேசும் காட்சி கண்டிக்கத்தக்கது. எல்2: எம்புரான் (L2: Emburan) முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா,999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்காரன் போய்விட்டானாம், மன்னராட்சியும் போய் விட்டதாம், ஆனாலும் அந்த ஆபத்து மக்களைக் காவு வாங்க காத்து நிற்கிறது என வசனம் பேசியுள்ளார். இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன. இதுபோன்ற திரைப்படம் தமிழக-கேரள மாநில உறவை கெடுப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை பிரித்துவிராஜ் கவனத்தில் கொள்ள வேண்டும். நடிகர் பிருதிவிராஜ் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியது போல முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தைத் திரையிடாவிட்டால், படத்தின் தயாரிப்பாளர் தமிழகத்தில் நடத்தும் நிறுவனங்கள் முன் போராட்டம் நடத்துவோம். முதலில் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் முன்பாக போராட்டத்தைத் தொடங்க உள்ளோம் என அறிவித்துள்ளனர்.

விகடன் 30 Mar 2025 4:48 pm

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல்

• சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உரியமுறையில் அறிவியுங்கள். கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுவோரை அடையாளப்படுத்துங்கள். நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் ஆளுநரின் கூட்டத்தில் தெரிவிப்பு. • விடுமுறை நாள்களில் நெரிசலான இடங்களில் பொலிஸாரின் கண்காணிப்பு இருக்கும். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை (29.03.2025) இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின் […]

அதிரடி 30 Mar 2025 4:44 pm

தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன் - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள  இளம்புவனம் கிராமத்தைச்  சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாழ்ந்து வருகிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்  என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்னை குறித்து பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி இரு தரப்பிடமும் எழுதி வாங்கி பிரச்னையை முடித்து வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட முத்தையா- காதலன் சந்தோஷ் தொடர்ந்து சந்தோஷினால் பிரச்னை வந்ததால் காளியம்மாள் தனது 17 வயது மகளை எட்டயபுரம் அருகேயுள்ள  கீழநம்பிபுரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கீழநம்பிபுரம் வீட்டில் கடந்த 23-ம் தேதி மதியம் திடீரென அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது தீக்காயங்களுடன் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.  உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ”சந்தோஷ், அவரது நண்பர் முத்தையாவுடன் வீட்டிற்கு வந்து  வழக்கம்போல் தன்னிடம் பேச வேண்டும் என மிரட்டி தொந்தரவு கொடுத்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் என் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்” என தெரிவித்ததாக போலீஸார்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எட்டயபுரம் காவல் நிலையம் தொடர்ந்து அச்சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார், சந்தோஷ்  மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பேரூரணியில் உள்ள மாவட்டச்  சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விகடன் 30 Mar 2025 4:42 pm

தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன் - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள  இளம்புவனம் கிராமத்தைச்  சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாழ்ந்து வருகிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்  என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்னை குறித்து பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி இரு தரப்பிடமும் எழுதி வாங்கி பிரச்னையை முடித்து வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட முத்தையா- காதலன் சந்தோஷ் தொடர்ந்து சந்தோஷினால் பிரச்னை வந்ததால் காளியம்மாள் தனது 17 வயது மகளை எட்டயபுரம் அருகேயுள்ள  கீழநம்பிபுரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கீழநம்பிபுரம் வீட்டில் கடந்த 23-ம் தேதி மதியம் திடீரென அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது தீக்காயங்களுடன் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.  உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ”சந்தோஷ், அவரது நண்பர் முத்தையாவுடன் வீட்டிற்கு வந்து  வழக்கம்போல் தன்னிடம் பேச வேண்டும் என மிரட்டி தொந்தரவு கொடுத்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் என் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்” என தெரிவித்ததாக போலீஸார்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எட்டயபுரம் காவல் நிலையம் தொடர்ந்து அச்சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார், சந்தோஷ்  மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பேரூரணியில் உள்ள மாவட்டச்  சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விகடன் 30 Mar 2025 4:42 pm

விருதுநகரில் ஜவுளி பூங்கா பணிகள் விரைவில் தொடக்கம்!

தமிழகத்தின் விருதுநகரில் அமைக்கப்பட உள்ள பி.எம். மித்ரா மாபெரும் ஜவுளி பூங்காவிற்கு சிப்காட் 1052 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து 2000 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள உள்ளன.

சமயம் 30 Mar 2025 4:42 pm