SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் வாஸ்குலர் பரிசோதனைக்கு (vascular test) உட்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பரிசோதனைகளுக்கு பின்னர் ட்ரம்புக்கு பொதுவான நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை ஆராய சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். நரம்பு நோய் அதன்படி, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை […]

அதிரடி 19 Jul 2025 2:30 am

செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள அதன் முந்தைய காலனி நாடுகளில், பிரான்ஸ் தனது ராணுவப் படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்தியிருந்தது. இத்தகையச் சூழலில், கடந்த சில காலமாக அதற்கு ஆப்பிரிக்க நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், செனகல் நாட்டில், பிரான்ஸ் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மிகப் பெரிய ராணுவ தளமான, கேம்ப் கெயிலியை அந்நாட்டு […]

அதிரடி 19 Jul 2025 12:30 am

இலங்கையில் கைதான 21 இந்திய பிரஜைகள் ; பெரும் மோசடி செயல் அம்பலம்

இணையவழி மோசடியில் ஈடுபட்ட 21 இந்தியப் பிரஜைகள், இன்று குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின், புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சுற்றுலா விசாவின் மூலம் நாட்டிற்கு வந்து இந்த குழுவினர், விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மோசடி நடவடிக்கை கிருலப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் புலனாய்வு பிரிவின் கீழ் உள்ள, இடர் மதிப்பீட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தரவு பகுப்பாய்வின் பின்னர் […]

அதிரடி 18 Jul 2025 11:30 pm

மூவரின் DNA; பரம்பரைக்கே நோய் வராது

இங்கிலாந்தில் மூவரின் டி.என்.ஏவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குழந்தைகள், பரம்பரை நோயின்றி பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தமுறையில் இங்கிலாந்தில் 8 குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவை, தானம் பெற்ற பெண்ணின் இரண்டாவது கருமுட்டையுடன் இணைக்கும் முறையாக இது அமைகிறது. அதேவேளை இந்த முறை ஒரு தசாப்த காலமாக இங்கிலாந்தில் சட்டபூர்வமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 18 Jul 2025 11:30 pm

போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி

சட்டவிரோதக் காவலில் கைதியை சித்திரவதை செய்வதைப்போல வரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்காரரின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை சாதாரண குடும்பம் முதல் வசதியான குடும்பப் பெண்கள் வரை வரதட்சணை கொடுமையால் வன்முறைக்கு உள்ளாவதும், தற்கொலை செய்வதும், கொலை செயப்படுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள காவல்துறையினரை பெண்கள் நம்பியிருக்கும் நிலையில், போலீஸ்காரரான கணவரும், இன்ஸ்பெக்டரான மாமனாரும் அவர்களின் குடும்பத்தினரும் சேர்ந்து மருமகளை சித்திரவதை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, தான் செய்த கொடூரத்தை போலீஸ் கணவன், தன் தங்கையிடம் சொல்லி மகிழ்ச்சியைடைந்த ஆடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வரதட்சணை: 'என் புள்ளைக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது' - கண்ணீர் விட்டு கதறும் தந்தை மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான தங்கபிரியாவுக்கும், அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பூபாலன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பூபாலனின் தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். பூபாலன் இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, கணவரின் தங்கை அனிதா ஆகியோர் தங்கபிரியாவை சித்திரவதை செய்து வந்துள்ளனர். 60 பவுன் நகை, வெள்ளி பொருள்கள், சீர்வரிசையுடன், இரு சக்கர வாகனம் என பொருள்கள் திருமணத்தின்போது கொடுத்தும் திருபதியடையாமல் வீடு கட்டுவதற்கு பல லட்சம் பணமும், நகையும் கூடுதலாக வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி துன்புறுத்தி வந்துள்ளனர். கொடுமை தாங்காமால் இடையில் பெற்றோர் வீட்டுக்கு சென்ற தங்கபிரியாவை சமாதானம் பேசி பூபாலன் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், தங்கபிரியாவை தினமும் கடுமையாக சித்திரவதை செய்து வந்த பூபாலன், இரண்டு நாள்களுக்கு முன் போலீஸ் கஸ்டடியில் கைதிகளை சித்திரவதை செய்வதைப்போல் தங்கபிரியாவின் முகத்தை நகத்தால் பிராண்டி, கால், கை மூட்டுகளை உடைத்து, குரல்வளையை நெறித்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் தங்கபிரியா மிக மோசமான நிலையை அடைந்தார். குடும்ப வன்முறை இந்த தகவல் தங்கபிரியாவின் பெற்றோருக்கு தெரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருதவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததனர். தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். 'நாங்கள் போலீஸ் குடும்பம், எங்களை ஒன்றும் செய்ய முடியாது' என்று எல்லோரிடமும் ஆணவமாகப் பேசி வந்தது மட்டுமின்றி, மனைவியை எப்படியெல்லாம் அடித்து சித்திரவதை செய்தேன், அடித்ததில் தனக்கே உடம்பு வலிக்கிறது என்று சிறிதும் குற்ற உணர்வில்லாமல் தன் தங்கையிடம் போனில் உற்சாகமாக தெரிவித்துள்ளார் பூபாலன். இந்த போன் ஆடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கபிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமுறைவான நான்கு பேரையும் 3 தனிப்படை போலீசார் மூலம் தேடி வருகின்றனர். இதற்கிடையே பூபாலனை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். `பாக்கி 200 பவுன்?’ - ஏப்ரலில் திருமணம்; ஜூனில் இளம்பெண் தற்கொலை - திருப்பூரில் வரதட்சணை கொடூரம்

விகடன் 18 Jul 2025 10:57 pm

Exclusive: 2026ல் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி தான்! உடைத்து பேசிய அமர்பிரசாத் ரெட்டி...

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தான் அமையும் என பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி உடைத்து பேசி உள்ளார். அவரது சமயம் தமிழ் பத்திரிக்கைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு விஷயங்களுக்கு குறித்து உடைத்து பேசி உள்ளார். இதனை விரிவாக காண்போம்.

சமயம் 18 Jul 2025 10:53 pm

பெண்ணுடன் ரகசிய தொடர்பு: சர்ச்சைக்கு பெயர் பெற்ற மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் தில்லாலங்கடி வேலைகள் அம்பலம்!

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மீது ஏற்கனவே பல்வேறு புகார் எழுந்திருக்கிறது. அவர் சட்டவிரோதமாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

சமயம் 18 Jul 2025 10:36 pm

தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 45 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். தில்லியில் கடந்த சில நாள்களாக கல்வி நிலையங்கள் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், இன்று (ஜூலை 18) ஒரே நாளில் தில்லி முழுவதுமுள்ள சுமார் 45 பள்ளிக்கூடங்களுக்கும், 3 கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர்கள் அனுப்பிய […]

அதிரடி 18 Jul 2025 10:30 pm

ஜன்னல்களை திறந்துவைத்து தூங்குவது காமராஜர் வழக்கம்... தமிழருவி மணியன் விளக்கம்!

பெருந்தலைவர் காமராஜர் தனது வீட்டில் ஜன்னல்களை திறந்துவைத்து தூங்குவது தான் வழக்கம் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் விளக்கம் அளித்தார். காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழருவி மணியன் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

சமயம் 18 Jul 2025 10:04 pm

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க ஆதரவு வழங்குவேன் –தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்

இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள் , பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஸ்ரீனிவாஸ் , இன்றைய தினம் மருத்துவ பீடத்தில் தனது மகள் சரண்ஜா வுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட […]

அதிரடி 18 Jul 2025 9:30 pm

பெண் Anime அவதார்களை உருவாக்கினால் ரூ.3.7 கோடி வரை சம்பளம்! எலான் மஸ்க்கின் XAI நிறுவனம்!

எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, பெண் அனிமே(Anime) கதாபாத்திரங்களைப் பிரதிபலிக்கும் AI அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி வரை பிரமாண்ட சம்பளம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு அறிவிப்பு, xAI நிறுவனத்தின் வலைத்தளத்தில் ‘Careers’ பிரிவில், “Fullstack Engineer – Waifus” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. “Waifu” என்ற சொல் அனிமே ரசிகர்கள் மத்தியில் பெண் கதாபாத்திரங்களை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல். வணிகச் […]

அதிரடி 18 Jul 2025 9:30 pm

மன்னார்குடி - சென்னை அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் டெல்டா மக்கள் அதிக அளவில் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமயம் 18 Jul 2025 9:14 pm

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்கள்; இறுதி திகதி 2025 ஜூலை 31!

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாடு முழுவதும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இது தொடர்பான ஒரு பத்திரிகை விளம்பரம் இன்று (18)வெளியிடப்பட்டது. விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி 2025 ஜூலை 31 அதன்படி, சாரதி பணிக்கு 450 காலியிடங்கள் (ஆண்களுக்கு 425 மற்றும் பெண்களுக்கு […]

அதிரடி 18 Jul 2025 9:13 pm

ஜியோ நிறுவனத்தின் லாபம் அதிரடி உயர்வு.. மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி!

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 25 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது. வருமானமும் அதிரடியாக உயர்ந்துள்ளது. காலாண்டு முடிவுகளின் முழு விவரம் இதோ..!

சமயம் 18 Jul 2025 9:09 pm

CPS ஒழிப்பு நிச்சயம் நடக்கும்.. மன உறுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்.. 72 மணி நேர உண்ணாவிரதம்!

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான போராட்டத்தில் 72 மணி நேர உண்ணாவிரதத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் தயாராகியுள்ளனர்.

சமயம் 18 Jul 2025 8:48 pm

``தோல்வி பயத்தில், காய்கறி விற்பதுபோல் கூவிக்கூவி உறுப்பினர் சேர்க்கிறது திமுக'' - அண்ணாமலை சாடல்

திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து தொடக்க காலத்தில் திமுக-வின் முரசொலி நாளிதழில் அசிங்கப்படுத்தி கார்ட்டூன் மற்றும் செய்தி வெளியிட்டுள்ளனர். தற்போது, காமராஜர் குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியது குறித்து எதிர்ப்புகள் எழும்பி உள்ளது. பாஜக அண்ணாமலை ஆனால், அதை பெரிதுபடுத்த வேண்டாமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகிறார். இதுகுறித்து கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வாய் கூட திறக்கவில்லை. அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செயலிழந்துள்ளது. எப்படியாவது திமுக கூட்டணியில் நீடித்தால்போதும் என்ற நிலைக்கு காங்கிரஸ் கட்சி சென்றுவிட்டது. திமுக ஆட்சியில் மக்கள் காவல் துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். அதற்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கங்கள் அதிகரித்துள்ளதே சாட்சியாக இருக்கிறது. திமுக-வில் உறுப்பினராக சேர்ந்தால் மட்டும்தான் அரசு கொடுக்கும் 1000 ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும் என்று மக்களுக்குப் பயத்தை ஏற்படுத்தி சேர்க்கின்றனர். 5 முறை ஆட்சியில் இருந்த கட்சி காய்கறி வியாபாரம் செய்வதுபோல கூவிக்கூவி உறுப்பினர்களை சேர்த்து வருகிறது. இதிலிருந்தே அவர்களின் தோல்வி பயம் தெரிகிறது. என்றார். நயினார் நாகேந்திரன் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் நிலைமைதான் தமிழகத்தில் உள்ள காவலர்களின் நிலைமையாக உள்ளது. அவரின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர குற்றஞ்சொல்லியதற்காக டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. காமராஜர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா? இல்லையா என்றுகூட தெரியவில்லை. அப்படியொரு கட்சி தமிழ்நாட்டில் இருப்பதாக தெரியவில்லை என்றார்.

விகடன் 18 Jul 2025 8:47 pm

வரதட்சணை கொடுமை வழக்கு –காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்.!

மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அவரை உடல் ரீதியாக தாக்கியதாகவும் புகார் எழுந்தது.இந்த புகாரின் அடிப்படையில், பூபாலன், அவரது தந்தை காவல் ஆய்வாளர் செந்தில்குமார், தாய் மற்றும் சகோதரி ஆகிய நான்கு பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், பூபாலன் தொடர்புடைய ஒரு ஆடியோ பதிவு வெளியாகி, இந்த […]

டினேசுவடு 18 Jul 2025 8:40 pm

இம்ரான் கான் உயிருக்கு சிறையில் ஆபத்து... ராணுவ தலைமை தளபதி மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் தான் காரணம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

சமயம் 18 Jul 2025 8:37 pm

`ஹான்ஸ் ஸிம்மருடன் நான் பணியாற்றுவேன் என யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?' -நெகிழும் ரஹ்மான்

உலக அளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே இந்திய திரைப்படமான `தங்கல்' திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், இதுவரை எந்த இந்திய படமும் காணாத அதிக செலவில் `ராமாயணா' திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், ராமர் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், சீதை கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கான கிராபிக்ஸ் பணிகளை, 8 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் 'DNEG' என்ற கிராபிக்ஸ் நிறுவனம் செய்கிறது. Ramayana Movie மேலும், இப்படத்துக்கு இந்திய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானும், ஹாலிவுட் ஆஸ்கர் நாயகன் ஹான்ஸ் ஸிம்மரும் இணைந்து இசையமைக்கின்றனர். இவ்வாறு மிகப்பெரிய பட்ஜெட்டில் நட்சத்திர பட்டாளத்துடன் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தை 2026 தீபாவளியன்றும், இரண்டாவது பாகத்தை 2027 தீபாவளியன்றும் வெளியிடவிருக்கிறார்கள். இந்த நிலையில், ஹான்ஸ் ஸிம்மருடன் முதல்முறையாக இணைந்து பணியாற்றும் அனுபவம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் மனம் திறந்திருக்கிறார். Connect Cine நேர்காணலில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான் , ராமாயணா போன்ற மிகப்பெரிய படத்தில் ஹான்ஸ் ஸிம்மருடன் நான் பணியாற்றுவேன் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா... இருவருக்குமான முதல் சில அமர்வுகள் சிறப்பாக இருந்தன. முதல் அமர்வு லண்டனிலும், இரண்டாவது அமர்வு லாஸ் ஏஞ்சல்ஸிலும், மூன்றாவது அமர்வு துபாயிலும் நடந்தது. AR Rahman & Hans Zimmer இந்திய கலாச்சாரத்தைப் பற்றி ஆர்வமாகவும், விமர்சனத்துக்கு திறந்த மனதுடனும் அவர் இருக்கிறார். கதை உரையாடலின்போது, 'இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, நான் ஒரு மேற்கத்திய கண்ணோட்டத்தைக் கொண்டு வர முடியுமா?' என்று வெளிப்படையாகப் பேசினார். இப்படத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது நம் இந்திய கலாச்சாரம். எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார். AR Rahman: ரஹ்மான் ஒரு வெளிச்சம்; பள்ளி சிறுவன் போல இருக்கிறார் - இசைப் புயலை வியந்த இந்தி பாடகி!

விகடன் 18 Jul 2025 8:33 pm

வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: இங்கிலாந்து தேர்தல் முறையில் மாற்றம்.!

லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று (17) தெரிவித்துள்ளது. அதன்படி, வாக்களிக்கும் உரிமை இருந்தாலும், தேர்தலில் போட்டியிட உரிமையில்லை. லாட்டரி வாங்கவும், மது அருந்தவும், திருமணம் செய்யவும், போருக்கு செல்லவும் அனுமதி இல்லை என அமைச்சர் பால் ஹால்மெஸ் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக, அதாவது 2029 […]

டினேசுவடு 18 Jul 2025 8:31 pm

துபாய் மெட்ரோ புளூ லைன்: பணிகள் தொடங்குவது எப்போது? புதிய அப்டேட் இதோ...

துபாயின் புதிய ப்ளூ லைன் மெட்ரோ திட்டம் உலகத்தரம் வாய்ந்த நகரத்தின் போக்குவரத்திற்கு எடுத்துக்காட்டாகி உள்ளது. அந்த பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பது குறித்து விரிவாக காண்போம்.

சமயம் 18 Jul 2025 8:20 pm

ஓரணியில் தமிழ்நாடு - திமுகவுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு! ஆதார் எண்ணை கொடுக்கலாமா?

திமுகவினர் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விவரங்களைச் சேகரிப்பது சட்டவிரோதமானது என திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திமுகவினர் வீடுகளுக்கு வந்து ஆதார், அடையாள அட்டை நகல்களைக் கேட்டு மிரட்டுவதாகவும், அரசு உதவித்தொகை நிறுத்தப்படும் என பயமுறுத்துவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தனி உரிமை மீறல் என்றும், சேகரிக்கப்பட்ட விவரங்களை அழிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

சமயம் 18 Jul 2025 7:57 pm

சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது, எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் 5 கிமீ சுற்றளவில் 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் அல்லது எந்தவொரு வான்வழிப் பொருளையும் […]

அதிரடி 18 Jul 2025 7:50 pm

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

நுவரெலியா – ஹட்டன் பகுதியிலுள்ள ஒரு கடையில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடையில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியுள்ளது. மேலும் ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீ பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லையெனவும் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி, வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிரடி 18 Jul 2025 7:48 pm

இலங்கையில் 80 வயதான பெண்ணின் மரணதண்டனை இரத்து

இலங்கையில் 1993 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலைக்காக 80 வயதுடைய ஒரு பெண்ணுக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி அம்பலாந்தோட்டையில் உள்ள மோதரபிலிவெலவில் மீகஹலந்ததுரகே ஜெயசேனவின் மரணத்திற்கு காரணமானதாக சிறிமா எதிரிசூரிய மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். இது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 296 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். 2023 […]

அதிரடி 18 Jul 2025 7:43 pm

தமிழக சட்டமன்ற தேர்தல்: 210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்... எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என அவர் விமர்சித்தார்.

சமயம் 18 Jul 2025 7:39 pm

2026 தமிழ்நாடு தேர்தல்: தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக ஹேட்ரிக் வெற்றி? களநிலவரம் இதுதான்...

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதி களநிவரம் பற்றி விரிவாக இந்த செய்தியில் நாம் காண்போம்.

சமயம் 18 Jul 2025 7:35 pm

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க திட்டம்

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயது 16 ஆக குறைக்கப்பட உள்ளது. வாக்களிக்கும் வயது பிரித்தானியாவில் 1969 ஆம் ஆண்டு வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது. தற்போது 16 மற்றும் 17 வயதுடையவர்களும் வாக்களிக்கும் திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. ஜனநாயக ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில், புதிய தேர்தல் மசோதாவை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 16 மற்றும் 17 வயதுடையவர்களும் அனைத்து தேர்தலிலும் வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் […]

அதிரடி 18 Jul 2025 7:30 pm

பிரகீத் படுகொலை -அடுத்து கோத்தா?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக அனுர அரசு குற்றஞ்சுமத்தியுள்ளது. அதேபோன்று அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தனர். விளக்கமறியில் வைத்தனர். சாட்சியங்களை திரட்டும் திறமையான அதிகாரிகளுக்கு பதிலாக திறமையற்ற அதிகாரிகளை பதவிகளுக்கு அமர்த்தினார்கள். ரணில் -ராஜபக்ச தரப்பு ஊழல் மோசடியில் ஈடுபட்டது ஒருபுறம் இருக்க காவல்துறை திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகிவற்றை குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தினார்கள். பிரகீத் எக்னெலிகொட காணமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது சி.ஐ.டியின் பணிப்பாளர் ஷானி அபேசேகர முக்கிய சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே கொலை குற்றச்சாட்டுக்களிற்குள்ளான இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அரசு தரப்பு சாட்சியிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், சாட்சியங்கள் தொடர்பான விசாரணை ஒகஸ்ட் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் சானி அபேசேகரவும் ஒரு சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார். தென்னிலங்கையில் இணையத்தள ஊடகவியலாளராக செயற்பட்ட பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டு மட்டக்களப்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது.

பதிவு 18 Jul 2025 7:22 pm

திருவள்ளூர் மாவட்டத்தில் 22 காலிப்பணியிடங்கள்; மருத்துவத்துறையில் வேலை பார்க்க வாய்ப்பு

மருத்துவத்துறை வேலை தேடுபவரா நீங்கள்? திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள். தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

சமயம் 18 Jul 2025 7:17 pm

காசநோயாளிகள் உதவித்தொகை திட்டம் (NPY)!

காசநோயாளிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் நோக்கில் மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டு உள்ள நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம் (Nikshay Poshan Yojana Scheme) குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 18 Jul 2025 7:15 pm

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் கீரன்குடி பகுதியில் விவசாயிகளை சந்தித்தார். அப்பொழுது, வயலில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி நெற்பயிர்களை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த சந்திப்புகளில், விவசாயிகளின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், குறிப்பாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார். மேலும், விவசாயிகளின் […]

டினேசுவடு 18 Jul 2025 7:15 pm

What To Watch On Theatre: பன் பட்டர் ஜாம், டிரெண்டிங், - இந்த வாரம் வெளியாகியுள்ள படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படங்களின் லிஸ்ட்! பன் பட்டர் ஜாம் (தமிழ்) : பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன், ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'பன் பட்டர் ஜாம்' இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கி உள்ளார். சார்லி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். கல்லூரி செல்லும் இளைஞனாகவும், அம்மாவின் பிள்ளையாகவும் இருக்கிறார் ராஜு. இந்த தலைமுறையில் நடக்கின்ற காதல் மற்றும் திருமணம் எப்படி இருக்கிறது என்பதனை காமெடியுடன் கலந்து சொல்லும் திரைப்படமாக இருக்கிறது இந்த 'பன் பட்டர் ஜாம்’. Bun Butter Jam கெவி (தமிழ்) : தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத் ஆகியோரின் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'கெவி'. கொடைக்கானல் அருகே இருக்கும் மலைவாழ் கிராமம் வெள்ள கெவி. மலை வாழ் மக்கள் படும் சிரமங்களையும், அவர்கள் வாழ்வில் நடக்கும் வெளியில் தெரியாத கொடுமைகளையும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாக இருக்கிறது கெவி. சாலை, மருத்துவ வசதி சரிவர கிடைக்காத மலை கிராம மக்களின் குரலாக ஒலிக்கும் திரைப்படமாக கெவி வெளியாகி உள்ளது. ஜென்ம நட்சத்திரம் (தமிழ்): பி. மணிவர்மன் இயக்கத்தில் தமன் ஆக்ஷன், மாளவி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது 'ஜென்ம நட்சத்திரம்' திரைப்படம். ஹாரரும் த்ரில்லரும் கலந்த திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய கட்டடத்தின் உள்ளே ஹீரோ தன்னுடைய மனைவி, நண்பர்களுடன் உள்ளே நுழைகிறார். அங்கு நுழைந்து அந்தப் பணத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கும் வேளையில், ஒவ்வொருவராக மர்மமான சக்தியால் இறக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டனர் என்பதே மீதிக்கதையாக உள்ளது. Jenma Natchathiram யாதும் அறியான் (தமிழ்): அறிமுக ஹீரோவாக தினேஷ், அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற 'யாதும் அறியான்' திரைப்படம் ஜூலை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எம். கோபி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, அதிலிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. விஜய் 2026-ல் முதலமைச்சராகி இருப்பது போல போஸ்டர் ட்ரெய்லரில் இடம்பெற்று ட்ரெண்ட் ஆனது. ரிசார்ட்டில் தங்கும் ஜோடிகளை ஒரு சைக்கோ கொலை செய்வதாக சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ட்ரெண்டிங் (தமிழ்): அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி ஆகியோர் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ட்ரெண்டிங்'. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தம்பதிகள் செய்து வரும் ரீல்ஸ் வீடியோவினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சந்திக்கும் பிரச்சினைகளைச் சொல்லும் திரைப்படமாக இத்திரைப்படம் உள்ளது. Trending நிகிதா ராய் (இந்தி): குஷ் சின்ஹா இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, பரேஷ் ராவல், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடிப்பில் இந்தி மொழியில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'நிகிதா ராய்'. ஒரு இளம் பெண் தனது குடும்பத்தின் கடந்தகாலத்துடன் தொடர்புடைய ஒரு மர்மத்தை விசாரிக்கிறாள், அதே நேரத்தில் அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர்கொள்கிறாள். இதனை மையப்படுத்தி இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது... - நடிகை கீர்த்தி சுரேஷ் தன்வி: தி கிரேட் (இந்தி): சுபாங்கி கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் 'தன்வி தி கிரேட்'. இத்திரைப்படத்தை அனுபம் கெர் இயக்கியுள்ளார். இந்திய ராணுவத்தில் சியாச்சின் பனிப்பாறையில் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்ற தனது மறைந்த தந்தையின் கனவை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தன்வி ரெய்னா அறிந்து கொள்கிறார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் அதனை எதிர்கொண்டு எப்படி இதனைச் சாதிக்கிறார் என்பதை மையப்படுத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. Junior Movie ஜூனியர் (தெலுங்கு): ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் கிரீதி ரெட்டி, ஸ்ரீலீலா, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஜூனியர்'. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். JSK - ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா (மலையாளம்): பிரவீன் நாராயணன் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ் கோபி, அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடிப்பில் ஜூலை 17-ம் தேதி மலையாள மொழியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது 'ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா'. பெங்களூரில் ஐடி ஊழியராக இருக்கும் ஜானகி விடுமுறையைக் கழிப்பதற்காக கேரளாவில் உள்ள தனது சொந்தக் கிராமத்திற்கு வருகிறார். அங்கு சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறாள் ஜானகி. பின்பு நீதிக்காக எவ்வாறு நீதிமன்றத்தை அணுகுகிறார். நீதிக்காகப் போராடும் பெண்ணின் கதையைத் திரைப்படமாக எடுத்துள்ளனர். JSK : Janaki vs State of Kerala ஸ்மர்ப்ஸ் (ஆங்கிலம்) - அனிமேஷன்: ஏற்கெனவே வெளியாகியுள்ள ஸ்மர்ப்ஸ் திரைப்படங்களின் வரிசையில் தற்போது க்ரிஷ் மில்லர் இயக்கத்தில் 'ஸ்மர்ப்ஸ் 2025' அனிமேஷன் திரைப்படம் வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளில் நேற்றே வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவில் இன்று (ஜூலை 18) வெளியாகியுள்ளது. Monica Belluci : 'தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!' - யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie

விகடன் 18 Jul 2025 7:07 pm

திமுக வெளியிடும் பொய் வாக்குறுதிகள்: குற்றம் சாட்டிய ஆர்.பி.உதயகுமார்

திமுக அரசு பொய் வாக்குறுதிகளை அளித்ததாகவும், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து அமைச்சர்களே கொச்சையாக பேசுகின்றனர் என்றும், எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி அடையும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

சமயம் 18 Jul 2025 7:01 pm

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, டிஎஸ்பி சுந்தரேசனுக்கு அரசு வழங்கிய பொலிரோ வாகனம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திரும்பப் பெறப்பட்டதாகவும், இதனால் அவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த […]

டினேசுவடு 18 Jul 2025 7:00 pm

டிரம்புக்கு கால்களில் ரத்த நாளப் பிரச்சனை –விரிவான தகவல் அறிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது கால்களில் வீக்கம் ஏற்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு ‘நாள்பட்ட சிரை

ஆந்தைரேபோர்ட்டர் 18 Jul 2025 6:59 pm

பெண்களும் முதலீடு செய்து சம்பாதிக்கலாம்.. சூப்பரான சேமிப்புத் திட்டங்கள் இதோ..!

பெண்கள் முதலீடு செய்து அதிகளவு லாபம் பார்க்க இந்த தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் உதவியாக இருக்கும். முழு விவரம் இதோ..!

சமயம் 18 Jul 2025 6:39 pm

மும்பை மெட்ரோ 7ஏ திட்டம்: அந்தேரி-சத்திரபதி சிவாஜி விமான நிலைய பயண நேரம் குறையுமா?

மும்பை நகரின் போக்குவரத்து சிக்கல்களை சமாளிக்க புதிய மெட்ரோ திட்டம் உருவாகி வருகிறது. அதன்படி அந்தேரி கிழக்கில் இருந்து ஏர்போர்ட்டுக்கான ரயில் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான சுரங்கப்பாதை வேலைகள் முடிந்து விட்டன. இதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 18 Jul 2025 6:36 pm

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்... தஞ்சை மண்டல டிஐஜி பரிந்துரை

காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்ய தஞ்சை மண்டல டிஐஜி பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 18 Jul 2025 6:36 pm

சஸ்பென்ஸ் வைக்கும் எடப்பாடி... TVK - ADMK இடையே என்ன நடக்கிறது?

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறதா.. த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா.. போன்ற கேள்விகளுக்கு உரிய பதிலைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி்சாமி. த.வெ.க-வை வைத்து புது வியூகத்துக்கு ப்ளான் போடுகிறதா அ.தி.மு.க என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து களமிறங்கி விசாரித்தோம். அமித் ஷா Vs எடப்பாடி பழனிசாமி 'கூட்டணி ஆட்சி' விவகாரத்தால் புகையத் தொடங்கியிருக்கிறது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி, 'கூட்டணி ஆட்சி' அமைப்போம் என அமித் ஷா பற்றவைக்க, `எங்கள் கூட்டணி ஆட்சியமைக்கும் ஆனால், அ.தி.மு.க தனித்த ஆட்சி அமைக்கும்' என திட்டவட்டமாக மறுத்தார் எடப்பாடி பழனிசாமி. 'மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சி' என பா.ஜ.க சீண்டவே, ஒருகட்டத்தில் கொத்தித்துப்போன அவர் `நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை. கூட்டணி ஆட்சி இல்லையென சொல்லிவிட்டோமே' என ஒரே போடாக போட்டப் பிறகும் பா.ஜ.க 'கூட்டணி ஆட்சி' முழக்கத்தை நிறுத்தியபாடில்லை. இந்தப் பரபரப்பான சூழலில் த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா..? என்ற கேள்விக்கு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் எடப்பாடி! நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர் ``த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா..? என்ற கேள்விக்கு குறைந்தபட்சம், கூட்டணி வலுவாக இருக்கிறது.. தி.மு.க-வை வீழ்த்தும் நோக்கில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றிருக்க வேண்டும். ஆனால் வெறுமனே 'உங்கள் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.. ' என மேலோட்டமாக பதில் சொல்லியிருப்பதில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்திருக்கலாம். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க நெருக்குவதால், கூட்டணியை மறுசீரமைக்கும் பிளான் 'பி' பற்றி அ.தி.மு.க யோசிக்கலாம். 11 ஆண்டுகால மத்திய ஆட்சி மீதான அதிருப்திகளை சுமப்பதற்கு பதில், பா.ஜ.க-வை வெறுக்கும் த.வெ.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க வலை வீசவும் எடப்பாடி பழனிசாமியிடம் திட்டம் இருக்கலாம் என்றனர் எடப்பாடி பழனிசாமி நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி பா.ஜ.க-வுடனான கூட்டணியை உறுதி செய்தது அ.தி.மு.க. அதற்கு முன்பு நாங்கள் த.வெ.க-வுடன் தீவிர கூட்டணிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது உண்மைதான். 'கூட்டணி ஆட்சி' விவகாரங்களை தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், ஏறக்குறைய 35-40 தொகுதிகள்வரை த.வெ.க-வுக்கு தர எங்கள் பொதுச் செயலாளர் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், த.வெ.க-வின் கோரிக்கைகளில் அரசியல் அறியாமையே தென்பட்டன. எடுத்த எடுப்பிலேயே ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. பாதிக்கு பாதி தொகுதி.. முதலமைச்சராக சிறிது காலம் விஜய் இருக்கலாமா.. என்றெல்லாம் கோரிக்கைகளை வீசினார்கள். இதனால் டென்ஷனான எடப்பாடி பேச்சுவார்த்தைகளை அத்துடன் முடித்துக் கொள்ளச் சொன்னார். பின்னர் பா.ஜ.க-வுடன் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்ட இச்சூழலில் பா.ஜ.க இல்லையென்றால் எங்களுடன் இணைய விருப்பம் தெரிவிக்கின்னர். ஆனால், முடிவை காலமும், எடப்பாடியாரும்தான் எடுக்க வேண்டும் என்றார். த.வெ.க செய்தி தொடர்பாளர்களோ ``விவாதங்களிலும், பேட்டிகளிலும் அ.தி.மு.க-வை விமர்சிக்கவே கூடாது என கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் லாக் அப் மரணங்களைக் கண்டித்து த.வெ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில்கூட, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் லாக்-அப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்றுவிட்டனர். அதிலும் குறிப்பாக, 'தி.மு.க-வுடனும் பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை எனலாம் ஆனால `அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை' எனச் சொல்லவும் அனுமதியில்லை. த.வெ.க தலைவர் விஜய்யும் அ.தி.மு.க-வை ஓரிடத்தில்கூட விமர்சிக்கவில்லை. இவையெல்லாம் பா.ஜ.க அல்லாத அ.தி.மு.க கூட்டணியை எங்கள் தலைமை விரும்புவதற்காக அறிகுறிகள்தான். த.வெ.க-வின் சுற்றுப்பயணத்துக்குக் கிடைக்கும் எழுச்சியை கண்டு அ.தி.மு.க நம்மை அணுகும் என நம்புகிறது கட்சித் தலைமை என்றனர். விஜய் 'பா.ஜ.க-வை கடைசி நிமிடத்தில் கழற்றிவிட்டு த.வெ.க கூட்டணிக்கு எடப்பாடி கொண்டு வருவார் என்பது நடக்கும் காரியமல்ல' என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்தாலும் `அரசியலில் எதுவும் நடக்கலாமே!' என எதிர்ப்பார்க்கிறது த.வெ.க! பார்ப்போம்! TVK Vijay: மீண்டும் துளிர்க்கிறதா தவெக, நாதக நட்பு? - பரவும் தகவலும் பின்னணியும்!

விகடன் 18 Jul 2025 6:34 pm

ஜூலை 19-ம் தேதி ஓசூர், தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களுக்கு அரசு வழங்கும் வாய்ப்பு

கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூலை 19-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாத இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.

சமயம் 18 Jul 2025 6:30 pm

உக்ரைனில் உளவுபார்த்த அமெரிக்கருக்கு குடியுரிமை வழங்கிய ரஷ்யா

உக்ரைனில் ரஷ்யாவிற்காக உளவுத் தகவல்கள் வழங்கிய அமெரிக்கர் ரஷ்யப் பாஸ்போர்ட் பெற்றார். டேனியல் மார்டின்டேல் என்ற அமெரிக்கப் பிரஜை, உக்ரைனில் ரஷ்யா பக்கமாக செயல்பட்டு ரஷ்ய இராணுவத்திற்கு உளவுத் தகவல்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவர் தற்போது மாஸ்கோவில், ரஷ்யப் குடியுரிமை பெற்றுள்ளார். அவருக்கு ரஷ்ய பாஸ்போர்ட் பாஸ்போர்ட் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மார்டின்டேல், 2018-ஆம் ஆண்டு வ்லாடிவோஸ்டோகில் இருந்தபோது ரஷ்ய மொழியைக் கற்றதுடன், அப்போது உருவான நெருக்கம் தான் இன்று “இந்த நாடு என் குடும்பம்” என்ற உணர்வை […]

அதிரடி 18 Jul 2025 6:30 pm

When Private Missteps Go Public: A Coldplay Concert, a CEO, and the Cost of Virality

The intersection of personal vulnerability and public scrutiny played out in real time this week, not in a boardroom or on a quarterly earnings call, but under the stage lights at a Coldplay concert. What should have been a fleeting, light-hearted kiss cam moment became a full-blown social media spectacle—placing Andy Byron, CEO of data orchestration firm Astronomer, and his Chief People Officer Kristin Cabot in an unwelcome spotlight. At the center of it all is Byron’s own candid and measured public statement, released less than 24 hours after the clip began dominating TikTok and Instagram feeds. The tone was not defensive. It was human. What was supposed to be a night of music and joy turned into a deeply personal mistake playing out on a very public stage, Byron wrote. I want to sincerely apologize to my wife, my family, and the team at Astronomer. You deserve better from me as a partner, as a father, and as a leader.” The Coldplay concert in Boston had drawn tens of thousands, but it was the stadium’s jumbotron that arguably attracted the most attention that night. A brief embrace between Byron, who is married, and Cabot, who is recently divorced, was broadcast to the crowd during a kiss cam segment. What followed was an awkward parting, an offhand remark by Chris Martin (“Either they’re having an affair or they’re very shy”), and a viral moment that digital culture seized with familiar ferocity. It wasn’t long before online observers had identified the pair as executives at Astronomer. Within hours, the video had not only gone viral but also triggered a deluge of speculation, memes, and criticism—none of it confined to the music fandom. In the era of relentless visibility, the boundaries between private missteps and professional consequences are increasingly porous. Byron’s acknowledgment reflects this uncomfortable truth. “This is not who I want to be or how I want to represent the company I helped build. I’m taking time to reflect, to take accountability, and to figure out the next steps, personally and professionally,” he said. But perhaps the most poignant part of his message was a pointed observation on the culture that magnified his mistake: “I hope we can all think more deeply about the impact of turning someone else’s life into a spectacle.” It's a plea for perspective in an attention economy that doesn’t distinguish between accountability and entertainment. When a private misjudgment—however brief—can trend worldwide before a single phone call is made, leaders today are not just navigating reputational risk; they’re grappling with the ethics of exposure. What makes this incident particularly complex is not just the nature of the moment, but the roles involved. As CEO and Chief People Officer, Byron and Cabot stand at the top of Astronomer’s organizational pyramid. Their conduct, even in informal settings, inevitably invites questions about professionalism and judgement—fairly or not. To date, Cabot has not released a public statement. Internally, Astronomer has not commented on whether the incident will have formal ramifications. But the incident has already reignited broader conversations in corporate America about executive behavior, company culture, and the increasingly blurred line between the personal and the professional. Byron closed his statement with a lyric from Coldplay's Fix You —a rare move for a tech CEO, but one that perhaps signals the emotional toll this episode has taken: “Lights will guide you home, and ignite your bones, and I will try to fix you.” It’s hard to say where the dust will settle—whether this moment will mark a turning point in Astronomer’s leadership narrative or become a fleeting chapter in the company’s story. But for now, it stands as a reminder: in today’s business world, crisis doesn’t always come from a failed strategy or market downturn. Sometimes, it comes from a stadium screen, a viral clip, and the unforgiving mirror of the internet.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Jul 2025 6:19 pm

TVS Apache RTR 310: ஏகப்பட்ட டெக்னாலஜிகளுடன் அசரவைக்கும் புதிய பைக்...! | Exclusive Photos

TVS Apache RTR 310 at Launch Event TVS Apache RTR 310 at Launch Event TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 Bike Taxi to Bike Parcel: தடைக்குப் பிறகும் தொடரும் ola, Rapido பைக் டாக்ஸி சேவை.. எப்படி? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 18 Jul 2025 6:15 pm

டிஸ்னியின் ‘ட்ரான்: ஏரஸ்’பட நியூ ட்ரெய்லர் வெளியீடு!

டிஸ்னியின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ட்ரான் (TRON) பட வரிசையின் மூன்றாவது பாகமான ‘ட்ரான்: ஏரஸ்‘ (TRON: Ares) திரைப்படத்தின் புதிய

ஆந்தைரேபோர்ட்டர் 18 Jul 2025 5:58 pm

National Geographic to Premiere JAWS @ 50: The Definitive Inside Story on July 20

Mumbai: Celebrating the golden jubilee of one of the most iconic films in cinema history, Jaws, National Geographic is set to premiere JAWS @ 50: The Definitive Inside Story on July 20 at 10 PM. This 90-minute documentary is the only authorized film commemorating Steven Spielberg’s cult classic and dives deep into the chaos, creativity, and cultural impact of the movie that forever changed our perception of the ocean’s top predator.Directed by acclaimed filmmaker Laurent Bouzereau (Faye, Music by John Williams), JAWS @ 50 is produced by Amblin Documentaries and Nedland Films, in collaboration with Wendy Benchley and Laura Bowling. It features never-before-seen home videos, rare outtakes from Spielberg’s and Peter Benchley’s personal archives, and brand-new interviews with the cast, crew, filmmakers, and marine advocates. Steven Spielberg , reflecting on the milestone, said, “If someone had told me 50 years ago that we would be celebrating this anniversary, I would have thought they were as crazy as the making of Jaws was making me, but here we are, half a century later.” He added, “I was so lucky that so many of the roles in the film were played by locals, who gave Jaws an authenticity that remains one of my favorite things about the entire film... Jaws and the Vineyard are forever linked in the best possible way.” The documentary candidly explores the many challenges of the original production—malfunctioning mechanical sharks, unpredictable Atlantic weather, budget overruns—and how Spielberg feared Jaws might be his last directorial effort. Spielberg also said, “ This documentary, directed by Laurent Bouzereau, is the most honest telling of the making of ‘Jaws,’ starting with how excited I was to be chosen in the first place to get to direct a film based on Peter Benchley’s blockbuster book, but it also details how young and unprepared all of us were for the challenges of shooting in the Atlantic Ocean with a mechanical shark that was more temperamental than any movie star I have ever worked with since, and how in the wake of running over schedule and budget, I truly believed that ‘Jaws’ would be the last movie I would ever be given to direct.” JAWS @ 50 also dives into the legacy of the film beyond cinema—its role in shaping shark conservation and inspiring a wave of marine science and environmental awareness. It features insights from leading marine experts and advocates like Philippe Cousteau, Candace Fields, and Dr. Greg Skomal, exploring how Jaws transitioned from instilling fear to sparking fascination and real-world conservation efforts.[caption id=attachment_2455944 align=alignleft width=156] Alok Jain[/caption] Alok Jain, President – Entertainment, JioStar, added, Jaws isn’t just a film—it’s a global phenomenon that has captivated audiences for 50 years. As National Geographic premieres this special commemorative documentary, we celebrate not just the legacy of the film but the powerful connection it continues to foster across generations and cultures. In India especially, Jaws has inspired a passionate fan base, and this documentary offers a unique opportunity for longtime admirers to revisit its impact—and for new audiences to discover why it remains one of the most iconic films of all time.” https://youtu.be/YfyVFO6xDm8

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Jul 2025 5:50 pm

திருவாரூர் அரசு பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்.. 3 பேர் கைது செய்த போலீஸ்!

திருவாரூர் அருகேஎ காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 18 Jul 2025 5:47 pm

திருச்சி சிவாவின் ‘காமராஜரும் , ஏசியும்’பேச்சை திரிக்கும் காங்கிரஸ்!

பெருந்தலைவர் காமராஜர். அவர் தமது முதுமைக் காலத்தில், ‘அலர்ஜி’ காரணமாக ஏசி அறையில் இருந்தாரா, அதற்கு கலைஞர் கருணாநிதி உதவினாரா?

ஆந்தைரேபோர்ட்டர் 18 Jul 2025 5:44 pm

eXchange1 names Deepankar Kapoor as Chief Growth Officer for Global Markets

Mumbai: Crypto derivatives platform eXchange1 has appointed Deepankar Kapoor as its Chief Growth Officer, tasked with leading customer acquisition, retention, and brand marketing across global markets. Kapoor will play a pivotal role in expanding the company’s footprint, with a key focus on driving growth in India—the world’s largest derivatives market. Kapoor brings over 17 years of deep expertise in digital advertising and performance marketing, having held leadership roles at prominent firms such as Yahoo!, Digitas, Ogilvy, GroupM, and most recently, Monks, where he led digital transformation initiatives for top-tier global brands including Amazon, Facebook, Safaricom, Coca-Cola, Star TV, and Mondelez. He also previously served as Head of Growth at Dennnblta Exchange. Kapoor holds a Master’s in Digital Currency from the University of Nicosia and is a certified trader from the London Academy of Trading.Registered as a UAB in Lithuania, eXchange1 is a next-generation Web3 utility platform operating under the vision of “1 World, 1 Exchange.” The platform is designed to ensure transparency, compliance, and business excellence, offering a secure, regulated environment for both retail and institutional participants in the digital asset ecosystem.With comprehensive authorization for multiple digital asset services (VASP) and FIU registration, eXchange1 is uniquely positioned to serve global markets with a focus on legal, secure, and fully compliant operations. Kapoor’s appointment marks a strategic step in the company’s mission to accelerate growth and deliver value across the digital asset trading landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Jul 2025 5:40 pm

டிரம்பின் கால் வீக்கம்: டிரம்பிற்கு நரம்பு பிரச்சினை இருப்பது அறிவித்தது அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நாள்பட்ட நரம்பு பற்றாக்குறைஇருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. டிரம்பின் காயமடைந்த கை மற்றும் வீங்கிய கால்களின் படங்கள் 79 வயதான ஜனாதிபதியின் உடல்நிலை குறித்த வதந்திகளைத் தூண்டின. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பொதுவான, தீங்கற்ற நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வியாழக்கிழமை தெரிவித்தார். சமீபத்திய வாரங்களில், ஜனாதிபதி டிரம்ப் தனது கீழ் கால்களில் லேசான வீக்கத்தைக் கவனித்தார் என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் லீவிட் பத்திரிகையாளர்களிடம் கூறினார். இது ஒரு தீங்கற்ற மற்றும் பொதுவான நிலை, குறிப்பாக டிரம்பிற்கு 79 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு என்று அவர் கூறினார். டிரம்பின் கை காயமடைந்து, கால்கள் வீங்கியிருப்பதைக் காட்டும் படங்கள் குறித்த ஊகங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பதிவு 18 Jul 2025 5:35 pm

Candy Crush: விரைவாக செயல்பட `AI'-ஐ உருவாக்கியவர்கள் வேலை இழந்து தவிப்பு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்

கிங் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஒரு கேமிங் ஸ்டூடியோ. உலகப் புகழ்பெற்ற கேண்டி க்ரஷ் (Candy Crush) விளையாட்டுகள் இவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் அவர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவே அவர்களது வேலையைச் செய்கிறது என்பதால்! தற்போது லெவல் டிசைனிங் மற்றும் கதை உருவாக்குதல் ஆகிய துறைகளில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். king studio MobileGamer.biz தளம் குறிப்பிடுவதன்படி தற்போது ஃபார்ம் ஹீரோஸ் சாகா (Farm Heros Saga) என்ற ப்ராஜக்டில் பணியாற்றிவந்த 50 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். லெவல் டிசனிங்கில் இருந்த பெரும்பாலானோர் நீக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் விரைவாக லெவல் டிசைனிங் செய்யும் கருவியைக் கண்டுபிடித்தனர். AI கருவிகள் மனித அணிகளுக்குப் பதில் அமர்த்தப்படுகின்றன. நகல் எழுதும் குழுவினரின் வேலையை அவர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவே செய்வதனால் அவர்களும் நீக்கப்படுகின்றனர். என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஊழியர் அந்த தளத்தில் தெரிவித்துள்ளார். Microsoft office k லண்டன், ஸ்டாக்ஹோம், பெர்லின் மற்றும் பார்சிலோனா ஆகிய இடங்களில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. Veo 3: சினிமாவின் எதிர்காலம் இதுதானா? - டெக் உலகை அதிரவைத்த கூகுளின் புதிய AI! சில கேம்களில் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு கார்டனிங் விடுமுறை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கார்டனிங் விடுமுறை என்பது உடனடியாக போட்டி நிறுவனத்தில் சேருவதையும், முக்கிய தகவல்கள் கசிவதையும் தடுப்பதற்காக அலுவலகத்துக்கு வராமலே சில மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முறை. வேலையிழப்பு செயற்கை நுண்ணறிவால் அதனை உருவாக்கியவர்களே வேலை இழப்பதைப் பார்க்க அருவருப்பாக இருக்கிறது என மற்றொரு ஊழியர் ஆதங்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கிங் ஸ்டூடியோ, செயற்கை நுண்ணறிவை சாதாரண வேலைகளுக்கு அமர்த்தி அதன் ஊழியர்கள் கிரியேட்டிவ்வாக பணியாற்ற அதிக நேரம் கொடுப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் ஒரு ஆண்டிலேயே அதன் நிலைப்பாட்டிலிருந்து விலகி வேலை நீக்கம் செய்துள்ளது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. Grok AI: ``அரசியல் விமர்சனங்களுக்கு தணிக்கை..'' - செயற்கை நுண்ணறிவை நெருக்கும் மத்திய அரசு!

விகடன் 18 Jul 2025 5:34 pm

தையிட்டி விகாரை பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டுமானத்துக்கு முயற்சி

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைப் பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டுமானப் பணிக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நேற்று மாலை முடிவுற்ற பின்னர், தவிசாளர் சுகிர்தன் தலைமையிலான சபை உறுப்பினர்கள் சட்டவிரோத திஸ்ஸ விகாரைப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். இதன்போதே, அங்கு அடாத்தாக அபகரிக்கப்பட்டுள்ள தனியார் காணியில் புதிதாக கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்றிருப்பது

புதினப்பலகை 18 Jul 2025 5:32 pm

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அரிய நோய்! பாதிப்புக்கு இதுதான் காரணம்...

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குரோனிக் வெனஸ் இன்சபிசியன்சி எனப்படும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. இந்த நோய் பாதிப்புக்கு என்ன காரணம், அவர் இனி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியுமா? என்பது குறித்து காண்போம்.

சமயம் 18 Jul 2025 5:32 pm

அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு வெடி குண்டு மிரட்டல்: மென்பொறியாளர் கைது!

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் கோயிலுக்கு மின்னஞ்சலில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மாநில போலீசார் மென் பொறியாளர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமயம் 18 Jul 2025 5:31 pm

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. கணவர் விவாகரத்துக் கோரிய நிலையில், மனைவி தர மறுத்து, கடந்த 16 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தம்பதி, திருமணமான முதல் ஆண்டு வரைதான் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். […]

அதிரடி 18 Jul 2025 5:30 pm

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. கணவர் விவாகரத்துக் கோரிய நிலையில், மனைவி தர மறுத்து, கடந்த 16 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தம்பதி, திருமணமான முதல் ஆண்டு வரைதான் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். […]

அதிரடி 18 Jul 2025 5:30 pm

ரஷ்யா மீதான 18வது பொருளாதாரத் தடைப் பொதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

உக்ரைனை ஆக்கிரமித்ததற்காக ரஷ்யாவை இலக்காகக் கொண்டு 18வது சுற்று தடைகளை விதிக்க 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் மாஸ்கோவின் வருமானத்தை மேலும் குறைக்கும் நோக்கம் கொண்டவை. உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு எதிராக ரஷ்யா மீது 18வது சுற்று தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன . ஸ்லோவாக்கியா தனது எரிவாயு இறக்குமதி குறித்த கவலைகளைக் காரணம் காட்டி இந்த முடிவை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ , நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியதாகக் கூறி, அதை ஏற்றுக்கொண்டார். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக ஸ்லோவாக்கியாவின் நலன்களுக்கு தொடர்ந்து இது எதிர் விளைவை ஏற்படுத்தும் என்று ஃபிகோ கூறினார். இதேநேரம் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சாய் எண்ணெய் மற்றும் எரிவாயுவை மூன்றாம் தரப்பு நாடுகள் ஊடாக கள்ள உறவில் இன்றுவரை தாங்கள் போட்ட தடையை மீறி ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கிக்கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 18 Jul 2025 5:29 pm

திருவள்ளூர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை.!

திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை அன்று, சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் […]

டினேசுவடு 18 Jul 2025 5:26 pm

பெஹல்காம் தாக்குதல் நடத்திய ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’டை பயங்கரவாத அமைப்பு- அறிவித்தது அமெரிக்கா

புதுதில்லி / வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப்

ஆந்தைரேபோர்ட்டர் 18 Jul 2025 5:10 pm

கோவை மாணவி கூட்டு வன்கொடுமை – 7 பேருக்கு வாழ்நாள் சிறை.!

கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மணிகண்டன் (30) கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), பிரகாஷ் (22), நாராயண மூர்த்தி (30), கார்த்திகேயன் (28), ராகுல் (21) ஆகிய 7 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையம் […]

டினேசுவடு 18 Jul 2025 5:06 pm

மும்பை: சட்டமன்ற வளாகத்தில் அடிதடி.. பாஜக, சரத்பவார் கட்சி எம்எல்ஏ-க்கள் மோதலுக்கு காரணம் என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும், எதிர்க்கட்சிக்கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சட்டமன்ற வளாகத்தின் வாசலில் எம்எல்ஏ-க்கள் நின்று கொண்டிருந்தனர். அந்நேரம் பா.ஜ.க எம்எல்ஏ கோபிசந்த் படல்கர் காரில் வந்து இறங்கினார். அவர் தனது காரை திறந்த போது கார் கதவு அங்கு நின்று கொண்டிருந்த தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்எல்ஏ ஜிதேந்திர அவாத் காலில் பட்டது. ஜிதேந்திர அவாத் இதனால் இரண்டு எம்எல்ஏ-க்களும் சம்பவ இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு நின்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தையடுத்து மறுநாள் இரண்டு பேரும் சட்டமன்றத்திற்கு வரும்போது தங்களது ஆதரவாளர்களை அழைத்து வந்தனர். சட்டமன்ற வளாகத்தில் கோபிசந்த் ஆதரவாளர் ரிஷிகேஷுக்கும் ஜிதேந்திர அவாட் ஆதரவாளர் நிதின் தேஷ்முக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் இவரது ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா: பனியன், துண்டுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம்; பின்னணி என்ன? அப்போது பா.ஜ.க எம்எல்ஏ கோபிசந்த் அருகில் தான் நின்று கொண்டிருந்தார். சட்டமன்ற காவலர்கள் விரைந்து செயல்பட்டு அவர்களை பிரித்துவிட்டனர். சட்டமன்ற வளாகத்தில் நடந்த இச்சம்பவம் சட்டமன்றத்திலேயே எம்எல்ஏ-க்களுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது குறித்து ஜிதேந்திர அவாட் கூறுகையில், ''என்னை கொலை செய்யும் நோக்கத்தில் குண்டர்களை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு அதிகார ஆணவம் அதிகம். சட்டமன்ற வளாகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், நாங்கள் ஏன் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும். எனது தாயார் மற்றும் சகோதரியை திட்டினார்கள். என்னையும் தேவையில்லாத வார்த்தைகளை பேசவைத்தார்கள். நாய்களைப்பற்றியும், பன்றிகளைப்பற்றியும் எழுதி என்ன ஆகப்போகிறது. சிறிது காற்று வாங்கலாம் என்று சட்டமன்ற வளாகத்திற்கு வெளியில் வந்து நின்றேன். என்னை கொலை செய்ய வருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்''என்று கோபத்தில் பேசினார். தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். சம்பவம் நடந்த வளாகம் சபாநாயகர் மற்றும் சட்டமேலவை தலைவரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. நடந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நான் அவர்களை வலியுறுத்தியுள்ளேன். இதுபோன்ற நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ளமுடியாது என்றார். இது குறித்து பேசிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ''குண்டர்கள் சட்டமன்ற வளாகத்திற்குள் வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்கு பாஸ் கொடுத்தது யார்?. மாநிலத்தின் நிலைமை இதுதான் என்றால், சட்டமன்றம் இருப்பதன் பயன் என்ன?” என்று கேட்டார். `கூட்டணி வைக்க அவசரப்பட மாட்டோம்' - ராஜ் தாக்கரே கருத்தால் உத்தவ் தாக்கரே அதிர்ச்சி இது குறித்து பேசிய சரத்பவார் கட்சி எம்எல்ஏ ரோஹித் பவார், ''ஆளும் கட்சி எம்எல்ஏ. எங்களது கட்சி எம்எல்ஏ ஜிதேந்திர அவாத்தை சட்டமன்ற வளாகத்தில் மிரட்டுகிறார். ஆனால் ஜிதேந்திர அவாத் தனது ஆதரவாளர்களை பொறுமை காக்கும்படி கூறினார். இப்போது ஜிதேந்திர அவாத்தை அடிக்கும் நோக்கில் வெளியில் இருந்து குண்டர்களை பா.ஜ.க எம்.எல்.ஏ சட்டமன்றத்திற்குள் அழைத்து வந்துள்ளார்''என்றார். இச்சம்பவத்தை தொடர்ந்து சட்டமன்றத்தில் ஜிதேந்திர அவாட் மிகவும் கோபமாக பேசினார். உடனே இது குறித்து தகவல் கொடுக்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனால் கோபிசந்த் சட்டமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். கோபிசந்த் இது குறித்து ஜிதேந்திரா அவாத் நேரடியாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறினார். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து எம்.எல்.ஏ.கோபிசந்த்திற்கு அமைச்சர் சந்திரகாந்த் பவன்குலே அழைப்பு விடுத்தார். அவரிடம் கோபிசந்த் நடந்த சம்பவங்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து வெளியில் வந்த கோபிசந்த் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சட்டமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும், அதற்காக வருத்தப்படுவதாகவும் கூறிவிட்டு உடனே சம்பவ இடத்தில் இருந்து சென்றுவிட்டார். மோதலில் ஈடுபட்ட இரு கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவாளர்களையும் சட்டமன்ற காவலர்கள் பிடித்துச்சென்று வாக்குமூலம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். ``நீதிக்காக வன்முறையில் ஈடுபடுவோம்'' - 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்கள் மேடையில் பேச்சு

விகடன் 18 Jul 2025 5:01 pm

Amisha Jain appointed as Managing Director & CEO of Arvind Fashions, effective August 13

Mumbai: Arvind Fashions has announced the appointment of Amisha Jain as its new Managing Director and Chief Executive Officer, effective August 13, 2025. She will succeed Shailesh Chaturvedi, who will work closely with her to ensure a smooth leadership transition.Amisha Jain brings with her over 25 years of rich experience spanning the technology, consumer, and retail sectors. Most recently, she held the role of Managing Director and Senior Vice President at Levi Strauss & Co. for South Asia, Middle East, Africa, and Non-EU regions.Announcing her new role on LinkedIn, Amisha expressed deep appreciation for her journey with Levi’s: “As I look back, I am filled with nothing but immense gratitude, for each one of my LS&Co colleagues, my friends, and for my beloved Team SAMEA. My time at LS&Co. has been an incredible journey of belief, passion and transformation of this beautiful brand and business in our region. Together we navigated the complex business landscape and built Levi’s into a formidable brand second to none. I know that our region has its best days ahead and I am confident that if there is ONE Team that can achieve great heights, it’s you, Team SAMEA! I am proud of you!” she wrote.Amisha’s career began at Motorola Inc., where she progressed to Senior Manager. She later joined Nike India as an independent consultant, shaping strategies across distribution, retail, merchandising, pricing, and operations. Her subsequent stint at McKinsey & Company as Engagement Manager saw her advising senior leaders in retail, consumer goods, and high-tech sectors.She returned to Nike India as National Head of Sales and Distribution, where she oversaw the retail marketplace across all channels and product categories. Her earlier association with Arvind Fashions includes leadership roles as COO and EVP at Arvind Sports Lifestyle. She later served as CEO of Zivame, leading the brand through significant digital and retail transformation.Amisha’s return to Arvind Fashions comes at a time of strategic opportunity and growth. Her appointment reinforces the company’s focus on strengthening its brand portfolio and expanding its presence in India’s dynamic fashion landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Jul 2025 4:58 pm

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது பதவி நீக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

சமயம் 18 Jul 2025 4:56 pm

ஏமனில் சிக்கிய நிமிஷா பிரியா வழக்கு: உச்ச நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு!

கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. மரண தண்டனைக்கு ஏமன் நாடு தயாராகி வரும் நிலையில் இந்த உத்தரவு சற்று நிம்மதி கொடுப்பதாக கூறப்படுகிறது.

சமயம் 18 Jul 2025 4:55 pm

துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் இரண்டாம் பாகம் வெளியீடு: என்னென்ன சம்பவங்கள் இடம்பெறும்?

துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் புத்தகத்தின் இரண்டாம் பாகம் நாளை ஜூலை 19ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்படுகிறது.

சமயம் 18 Jul 2025 4:55 pm

“தோனியிடம் இருந்து கில் கற்றுக்கொள்ள வேண்டும்”–முன்னாள் பயிற்சியாளர் அறிவுரை.!

டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்களை அடித்துள்ளார். இருப்பினும், கேப்டன் பதவி இன்னும் ஒரு கட்டத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவின் முன்னாள் உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், கில் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் தொடக்க வீரரும், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன், கில் தோனியைப் போல […]

டினேசுவடு 18 Jul 2025 4:44 pm

பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக நலந்தாவில் 5 பேர் உயிரிழந்த நிலையில், வைஷாலியில் 4 பேரும், பங்கா மற்றும் பாட்னாவில் தலா 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஷேக்புரா, நவாடா, ஜெகானாபாத், அவுரங்காபாத், ஜமுய் மற்றும் சமாஸ்திபூர் மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிதிஷ் […]

அதிரடி 18 Jul 2025 4:30 pm

43 ஏக்கர் அரசாங்க காணியை முறைகேடாக பெற்ற பெண் எம்பி!

ஹந்தானவத்த பகுதியில் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலம், நில சீர்திருத்த சட்டத்தை மீறி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு விடுவிக்கப்பட்டதாக பொது நிறுவனங்கள் குழு (கோப்) விசாரணையில் தெரியவந்துள்ளது. நில சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே, கோப் குழு முன் ஆஜரானபோது, குழுவின் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீரவின் கேள்விக்கு பதிலளிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நில சீர்திருத்த ஆணைக்குழு சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு நிலம் வழங்க வேண்டிய கட்டாயம் […]

அதிரடி 18 Jul 2025 4:26 pm

கட்டாய ஓய்வு வயது தொடர்பில் உயர்நீதிமன்றின் அதிரடி உத்தரவு

அரச சேவையில் உள்ள நான்கு தரங்களைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் வகையில் முந்தைய அரசாங்கத்தின் போது அமைச்சரவை எடுத்த முடிவை செயற்படுத்துவதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை செல்லுபடியற்றதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மறுபரிசீலனை செய்யவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் மற்றொரு உத்தரவைப் பிறப்பித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு […]

அதிரடி 18 Jul 2025 4:18 pm

Monica Belluci : 'தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!' - யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'கூலி'. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திலிருந்து, அனிருத் இசையில் 'மோனிகா' பாடல் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் ஹார்டின்களைப் பெற்றிருக்கின்றன. ‘மோனிகா’ பாடல் பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள இப்பாடலில், பிரபல இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சியைக் குறிப்பிடும் வரிகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நானும் அனிருத்தும் மோனிகா பெல்லுச்சியின் தீவிர ரசிகர்கள்' என்பதையும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்தார். யார் இந்த மோனிகா பெல்லுச்சி? அவரது வாழ்க்கைக் கதை குறித்து இப்போது பார்ப்போமா... இத்தாலியைச் சேர்ந்த மோனிகா பெல்லுச்சிக்கு, உலக சினிமாவின் சிறந்த நடிகைகளின் பட்டியலில் எப்போதும் நீக்கமற இடமொன்று இருக்கும். அந்தளவிற்கு அழுத்தமான நடிப்பை பல பன்முக கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். 1964-ம் ஆண்டு இத்தாலியின் சிட்டா டி காஸ்டெல்லோ என்ற ஊரில் பிறந்த அவர், ஆரம்பத்தில் மாடலாக தனது பயணத்தைத் தொடங்கினார். பாரிஸில் பணியாற்றியபோது, அவரது அழகும் ஆளுமையும் பலரையும் ஈர்த்தன. Coolie: டி. ராஜேந்தரின் டியூன் பாடலானது இப்படித்தான்... - சுவாரஸ்யம் பகிரும் அனிருத் Monica Belluci 1990-களில் மோனிகாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பிறகு, வாய்ப்புகளை நோக்கி நகரத் தொடங்கிய அவர், இத்தாலிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் நடிகையாக அறிமுகமானார். Malèna (2000), Irreversible (2002), The Passion of the Christ (2004), Spectre (2015) போன்ற பல முக்கியமான உலக சினிமாக்களில் அபரிமிதமான பங்காற்றியிருக்கிறார் மோனிகா. Malèna (2000) என்ற இத்தாலிய திரைப்படம் மிக முக்கியமான உலக சினிமாவாகும். இத்திரைப்படம் இவருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் இவர் பிரபலமடையத் தொடங்கினார். தனது திறமையான நடிப்பாலும், வசீகரமான அழகாலும் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் மோனிகா பெல்லுச்சி. மோனிகா பெல்லுச்சி பல மொழிகளில் பயிற்சி பெற்றவர். Monica Belluci இத்தாலிய, பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி, அந்த மொழிப் படங்களில் நடித்து வந்தார். தற்போது 60 வயதை எட்டிய பின்னரும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த 'மோனிகா' பாடலை, மோனிகா பெல்லுச்சிக்கு ட்ரிபியூட் செலுத்தும் விதமாக அமைத்திருக்கிறது அனிருத் - லோகேஷ் கூட்டணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 18 Jul 2025 4:15 pm

யாழில். நாளை பிரமாண்ட இசை நிகழ்வு –யாழை வந்தடைந்த பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழுவினர்

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் , ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் , இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அதன் போது, யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான […]

அதிரடி 18 Jul 2025 4:13 pm

ராஜிதவின் முன்பிணை  மனு நிராகாிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் முன்பிணை கோாி விண்ணப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய… The post ராஜிதவின் முன்பிணை மனு நிராகாிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Jul 2025 4:07 pm

அந்த மனசுதான் சார்கடவுள்! 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவிய நடிகர் அக்‌ஷய் குமார்.!

சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு காப்பீடு வழங்கி உதவியுள்ளார். இது, தமிழ் திரைப்படமான வேட்டுவம் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் எஸ்எம் ராஜு உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த துயர சம்பவம், திரைப்படத் துறையில் ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியது. அக்ஷய் குமார், இந்தியாவில் உள்ள சுமார் 650-700 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு […]

டினேசுவடு 18 Jul 2025 4:06 pm

யாழில் பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழுவினர்

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம்… The post யாழில் பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழுவினர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Jul 2025 3:59 pm

மதுரவாயல் மியாவாக்கி காடுகளை அழிக்கும் தனியார் பேருந்துகள்: குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பது எப்போது?

சென்னை மதுரவாயலில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்த மியாவாக்கி காடு, தனியார் பேருந்துகளின் ஆக்கிரமிப்பால் அழிந்து வருகிறது. பெங்களூரு உட்பட பல ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு நிறுத்தப்படுவதால் மரங்கள் சேதமடைந்து, காடு வெறும் இடமாக மாறிவிட்டது. பேருந்து நிலையம் தயாரானதும் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 18 Jul 2025 3:51 pm

நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!

சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் பங்கு மற்றும் பாஜக தலைமையிலான NDA அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். மேலும், வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால […]

டினேசுவடு 18 Jul 2025 3:46 pm

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நிர்வாகத்திடம் கேட்டப்போது, என்னை மிரட்டி, அடித்தனர். அதனால், நான் கோமாவிற்கு சென்றேன். இந்தப் பயத்தில் தான், இவ்வளவு காலம் இது குறித்து வெளியே சொல்லவில்லை'. இப்படி கடந்த 15-ம் தேதி, தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார். கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் என்ன நடந்தது? கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் வந்து செல்லும் கோயில் இது. கடந்த ஜூலை 11-ம் தேதி, இந்தக் கோயிலின் முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர், 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்ய சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள். இதை நான் செய்யவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும் என்று பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இவர் ஜூன் மாதமே இது குறித்து புகார் அளித்துள்ளார். கோரிக்கை அந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். மேலும், இவர் எலும்புகூடுகளின் புகைப்படங்களையும் சமர்பித்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் போதும் கூட, சில எலும்புகளை கொண்டு வந்திருக்கிறார். பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் ) ஆரம்பத்தில் இவர், அந்த உடல்கள் தற்கொலை செய்துகொண்டவர்களுடையது என்று நினைத்துள்ளார். அதன் பின் தான், தர்மஸ்தலாவை சுற்றி நடக்கும் குற்றங்களை மறைக்க கொலை செய்யப்பட்ட உடல்கள் என்று அறிந்திருக்கிறார். இதே நிலை, அவர் சொந்தகாரர்களுக்கே நடந்த நிலையில், 2014-ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து நின்றிருக்கிறார். இவர் இந்த வாக்குமூலத்தைக் கொடுக்கவே, மேலே கூறிய பெண்மணி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். சிறப்பு புலனாய்வு குழு இதனையடுத்து, கர்நாடகா பெண்கள் அமைப்பு, கர்நாடக அமைச்சர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சர், 'இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தும்' என்று கூறியுள்ளார். முதல்வர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து தட்சின கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண், புகார் அளித்த மஞ்சுநாதர் கோயிலின் முன்னாள் ஊழியர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் சொல்லும் இடத்தில் குழி தோண்டி உடல்களை எடுப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு சில சட்ட நடைமுறைகள் தேவை. அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 18 Jul 2025 3:44 pm

Eveready introduces India’s First Hybrid Torch with Sonakshi Sinha’s ‘Nikita Roy’

New Delhi: Eveready Industries, India’s trusted name in batteries and flashlights, has launched a groundbreaking innovation — the #NeverOutOfLight Hyb rid Torch — a dual-powered flashlight that seamlessly toggles between rechargeable and battery-operated modes. This patent-applied torch marks Eveready’s second major product innovation in two years and is built to ensure uninterrupted lighting in every scenario.Speaking on the launch, Anirban Banerjee, CEO, Eveready Industries India Limited, said, “Innovation is at the helm of all undertakings at Eveready. Over the years, this ideology has paved the way for us to consistently introduce unique and pioneering products that empower consumers. The latest offering from the house of Eveready reflects the brand’s legacy of innovation and trust, giving consumers uninterrupted lighting with modern convenience. Our Hybrid Torch, a new-age innovative solution, promises quality, convenience, and reliability to users while ensuring that they never run out of power. Going forward, Eveready will remain committed to delivering smarter, practical, and dependable solutions for consumers across Indian households.” The new hybrid torch is built with a durable ABS plastic body, powerful 1W LED front and side lights, and an in-built rechargeable battery that charges via USB Type-C in just 2.5 hours. Simultaneously, it can operate on 3xAA batteries — offering flexibility during power outages or on-the-go use. It also comes with safety features like overcharge and deep discharge protection, a dual-mode switch, and an intuitive charging indicator.To amplify the launch, Eveready has partnered with the supernatural thriller ‘Nikita Roy’, starring Bollywood actor Sonakshi Sinha. The campaign video showcases the torch’s dual-power capabilities through scenes from the film, where Sonakshi’s character navigates through literal and emotional darkness — symbolizing resilience and the importance of light in the most trying times. “Our association with Sonakshi Sinha’s film Nikita Roy is more than just a product integration. It symbolizes resilience and the will to keep going, even in the darkest of times,” added Banerjee. Available in red and green, the Hybrid Torch is priced at ₹399 and will be sold via leading retail stores and major e-commerce platforms nationwide. This follows Eveready’s 2024 innovation — the Siren Torch, a rechargeable torch with a 100-decibel alarm designed for women’s safety — further underscoring the brand’s commitment to creating purposeful products that meet real-world needs.https://www.youtube.com/watch?v=LGYQybtUqW4

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Jul 2025 3:37 pm

பழைய ஓய்வூதியத் திட்டம் முதல் அரசாணை 243 ரத்து வரை... ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி, அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பழைய ஓய்வூதியம் டூ அரசாரணை 243 ரத்து வரை என்னென்னவற்றை குறித்து அவர் பேசினார் என்று பார்ப்போம்.

சமயம் 18 Jul 2025 3:35 pm

ரஜினிகாந்த்: ``நடித்தது மட்டுமல்ல, நீங்கள் பாஷாவாகவே மாறினீர்கள்'' - சுரேஷ் கிருஷ்ணா நெகிழ்ச்சி!

ரஜினிகாந்த் நடிப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும்வெற்றி பெற்ற திரைப்படம் பாஷா. இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவிருப்பதை முன்னிட்டு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக எக்ஸ்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் சார் பாஷாவாக நடிக்கவில்லை, பாஷாவாக மாறினார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார். சுரேஷ் கிருஷ்ணா பதிவில், ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது. சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி அன்பான பார்வையாளர்களே, ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. பெரிய திரையில் மாயாஜாலத்தை தவறவிடாதீர்கள். எனக் கூறியுள்ளார். மற்றொரு பதிவில் ரஜினிகாந்த் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, அன்புள்ள ரஜினி சார். ‘பாட்ஷா’வுக்கு காரணம் நீங்கள் தான். உங்கள் அற்புதமான நடிப்பு, உங்களது திரை ஆளுமை. நீங்கள் பாட்ஷாவாக நடித்தது மட்டுமல்ல, பாட்ஷாவாகவே மாறினீர்கள். இப்போதும் திரையுலக வரலாற்றில் படத்தின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு காரணம் நீங்கள் தான். எனக் கூறியுள்ளார். பாஷா மீண்டும் ஒரு பதிவில், புகழ்பெற்ற பாட்ஷா குழுவான ஆர்.எம்.வி சார், ரஜினி சார், நக்மா, ரகுவரன், தேவா, வைரமுத்து, பி.எஸ்.பிரகாஷ், மேகி, கணேஷ் – குமார், பாலகுமாரன், ராஜு மாஸ்டர் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு நன்றி. ஒரே ஒரு பாட்ஷா மட்டுமே. அது நமது ‘பாட்ஷா’ மட்டுமே! எனப் பெருமிதம் கொண்டுள்ளார். பாஷா தமிழ் சினிமாவில் மாஸ் திரைப்படத்துக்கான நடையை உருவாக்கிய திரைப்படங்களுள் ஒன்று. இன்றும் இந்த இதன் உலகப் புகழ்பெற்ற வசனங்கள் பரவலாக புழக்கத்தில் உள்ளன. பாஷாவின் மறு வெளியீடு ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது! #BaashaTurns30 It's time to celebrate 30 glorious years of an iconic film! Thank you, dear audience, for making Baasha a legend Now experience it like never before — in stunning 4K Dolby Atmos. Re-releasing in theatres today! Don’t miss the magic on the big screen! … — sureshkrissna (@Suresh_Krissna) July 18, 2025 Mani Ratnam: அடுத்தது ரஜினிகாந்த் படமா? - மணி ரத்னம் சொன்ன `நச்' பதில்!

விகடன் 18 Jul 2025 3:34 pm

சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைப் பார்த்த காவலர் மாரியப்பன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினார். அப்போது இளைஞர்கள் இருவரும் காவலர் மாரியப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரை கீழே தள்ளியிருக்கிறார்கள். அதில் சுதாரித்த காவலர் மாரியப்பன், இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்றார். அப்போது மீண்டும் காவலர் மாரியப்பனை கீழே தள்ளிவிட்ட இளைஞர்கள், தங்களுடைய பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். அபிலாஷ் இந்தச் சம்பவம் குறித்து காவலர் மாரியப்பன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவியில் பதிவான பைக்கின் பதிவு நம்பரை அடிப்படையில் சென்னை ஐசிஎஃப் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த அபிலாஷ், (19), சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார் (21) ஆகியோரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது காவலர் என்று தெரியாமல் தப்பு செய்துவிட்டோம். மன்னித்துவிட்டுவிடுங்கள் என போலீஸாரிடம் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் பைக், ஐபோனை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 18 Jul 2025 3:34 pm

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!

சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் […]

டினேசுவடு 18 Jul 2025 3:32 pm

பராக் ஒபாமா – மிச்சல் தம்பதி விவாகரத்து விவகாரம் ; உறுதி செய்த தம்பதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா – அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, என்று இருவரும் ஒன்றாகத் தோன்றி உறுதி செய்துள்ளனர். சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்காத நிலையில், இந்த விவாகரத்து தொடர்பான வதந்தி பரவியுள்ளது. விவாகரத்து தொடர்பான வதந்தி இந்த நிலையில்தான், மிச்சல் ஒபாமா தன்னுடைய சகோதரருடன் இணைந்து நடத்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின்போது, ஒபாமாவும் தோன்றி பேசினார். அப்போது, இருவரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை […]

அதிரடி 18 Jul 2025 3:30 pm

``தீவிரவாத எதிர்ப்பில் ஆழமான ஒத்துழைப்பு''- அமெரிக்காவைப் பாராட்டிய வெளியுறவுத்துறை - ஏன்?

கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த எதிர்ப்பு முன்னணி (The Resistance Front (TRF)) என்ற அமைப்பை அமெரிக்க அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இந்த நடவடிக்கை தீவிரவாத எதிர்ப்பில் இந்தியா - அமெரிக்காவின் ஒருங்கிணைவை வலுவாக உறுதிப்படுத்தியிருப்பதாகப் பார்க்கப்படுகிறது. Marco Rubio பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான TRF-ஐ வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக (Foreign Terrorist Organization (FTO)) அறிவித்தமைக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அவரது துறையைப் பாராட்டியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும், பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதிலும் இந்தியா உலகநாடுகளின் ஒத்துழைப்பின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவின் முடிவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இந்தியா-அமெரிக்காவின் ஆழமான ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கிறது... பஹல்காம் 'பயங்கரவாதத்துக்கு எதிராக ஜீரோ சகிப்புத்தன்மை' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பயங்கரவாத அமைப்புகளும் அதன் தலைவர்களும் கேள்விகேட்கப்படுவதை உறுதி செய்ய இந்தியா அதன் சர்வதேச கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படும். எனக் கூறப்பட்டுள்ளது. சிந்து நதி நீர்: பாகிஸ்தானின் கடிதங்கள் இந்தியாவின் மனதை மாற்றாது - அமைச்சர் திட்டவட்டம்! புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மீது தீவிரவாதிகள் நடத்திய மிக மோசமான தாக்குதலாக பஹல்கான் தாக்குதல் அமைந்தது. அப்போது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவிற்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவை வலியுறுத்தினார். காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு எதிர்வினையாக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற தூதுக்குழு வாஷிங்டனில் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸிடம் எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது. Modi in US: `இந்திய குடியேறிகள்; தீவிரவாதம், அணுசக்தி' - மோடி, ட்ரம்ப் பேசியது என்ன?!

விகடன் 18 Jul 2025 3:24 pm