Mumbai: AWL Agri Business Ltd. (formerly Adani Wilmar Limited), under its premium Kohinoor Basmati Rice portfolio, has announced the launch of a new brand song in collaboration with celebrated Gujarati folk singer Aditya Gadhvi. As part of the association, Aditya Gadhvi has been onboarded as the brand ambassador for Kohinoor Basmati Rice, further deepening the brand’s cultural connect with consumers in Gujarat and other key western markets.The newly launched song reflects the warmth, togetherness and cultural richness that Kohinoor Basmati Rice has represented for generations. Rooted in Gujarati musical idioms and contemporary folk expression, the track brings alive the emotional pride associated with home-cooked meals and family traditions.[caption id=attachment_2485492 align=alignleft width=200] Jignesh Shah [/caption]Commenting on the launch, Jignesh Shah, Head – Media & Digital, AWL Agri Business, said, “Kohinoor is a legacy brand that has been trusted by generations of Indian households. Our endeavour has always been to create brands that resonate deeply with the cultural and emotional fabric of our consumers. The launch of the new song ‘Kohinoor by Aditya Gadhvi’ is a meaningful step in strengthening Kohinoor’s bond with Gujarati households. Through our collaboration with Aditya Gadhvi, we aim to celebrate the pride, warmth, and authenticity that define Gujarati homes. We are confident that this music-led campaign will further strengthen our connection with consumers and enhance the brand’s presence across key markets.” The launch is anchored by a new television commercial that brings the song to life through musical storytelling. Staying true to Kohinoor’s philosophy of trust and consumer relevance, the film blends everyday Gujarati family moments, cultural nuances and Gadhvi’s signature musical style.Sharing his experience, Aditya Gadhvi said, “Rice has always been my comfort food whether it’s simple khichdi, dal rice, pulao or biryani, even while travelling overseas. When I heard the brief for the Kohinoor song, it gave me a chance to express my love for rice through music, and that feeling was full of joy. Being a Gujarati song, we brought in our melody, lyrics and a rap inspired by Gujarati rhythm, which truly reflects the soul of Gujarat. The rap section, in particular, felt special to me because it has a youthful flow and very rooted words. Working with Kohinoor, from shaping the idea to bringing it alive, was a creative and fun journey. I hope people enjoy the music and connect with the song as much as we enjoyed creating it.” With the launch of ‘Kohinoor by Aditya Gadhvi’, the brand invites consumers to experience a heartfelt celebration of Gujarati culture, family bonds and culinary pride, reinforcing Kohinoor’s timeless values of warmth, authenticity, aroma and the joy of cooking for loved ones.https://www.youtube.com/watch?v=rkO7wV5xT1c
Nagaland CM Neiphiu Rio and A. R. Rahman announce Naga International Studio in Kohima
Mumbai: The Hon’ble Chief Minister of Nagaland, Dr. Neiphiu Rio, along with Oscar and Grammy Award–winning composer Dr. A. R. Rahman, has announced the establishment of the Naga International Studio by A. R. Rahman, a world-class music production and creative facility to be set up in Kohima.Conceptualised by Dr. A. R. Rahman, the Naga International Studio will feature state-of-the-art recording facilities, a performance auditorium, and supporting creative infrastructure, aimed at nurturing talent and enabling world-class music creation from the Northeast.Welcoming Dr. Rahman to his native village of Touphema in Kohima district, Chief Minister Dr. Rio expressed appreciation for bringing a landmark creative initiative to the state. He noted that the project reflects Rahman’s deep affection for the Naga people and his commitment to supporting artistic talent from India’s far-flung regions. Assuring full support from the State Government, Dr. Rio said, “This is a meaningful step that reflects our shared commitment to nurturing creativity, innovation, and supporting creative talent. I wish this initiative growth, excellence, and impact.” Expressing gratitude for the warm support extended by the Government and people of Nagaland, Dr. Rahman said, “Nagaland has a rare musical soul which is honest, original, and deeply rooted in its culture. The Naga International Studio is envisioned as a space where this heritage can meet world class creativity, allowing young artists from the region to collaborate, experiment, and create music that resonates not just nationally, but globally. I am grateful to Chief Minister Dr. Neiphiu Rio, the Government of Nagaland and TAFMA for their vision and support in making this dream possible.” Earlier, Dr. Rahman also launched the trailer of the documentary ‘Headhunting to Beatboxing’, directed by Rohit Gupta and produced by Rahman himself. The documentary chronicles Nagaland’s musical renaissance and its evolving creative identity.The Naga International Studio has been designed by Bluecube Architects and Riyasdeen Riyan, and facilitated by the Task Force for Music & Arts (TAFMA) along with the Investment & Development Authority of Nagaland (IDAN). Once operational, the studio is expected to position Nagaland as a significant creative hub in the Northeast and on the global cultural map.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு!
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 27, 2025) அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.13,000-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உச்ச விலை நகைப் பிரியர்கள், திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தினந்தோறும் உயர்ந்து வரும் தங்கம் […]
அம்ரித் பாரத் திட்டம்: சென்னையில் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்!
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சென்னையில் இருக்கும் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மண்டல பூஜை: சபரிமலை ஐயப்ப சுவாமிக்குச் சாத்தும் தங்க அங்கி ஒப்படைக்கப்பட்ட காட்சி! | Photo Album
சபரிமலை: `தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?' - அமலாக்கத்துறை விசாரணை
BARC Week 50’25: Zee News emerges as No.2 Hindi news channel
Mumbai: Zee News has climbed to the No. 2 position in the BARC ratings for Week 50’25, marking its strongest performance in nearly six years and reaffirming its growing connect with audiences across India.As per BARC India data (HSM | All 15+ | 06:00–24:00 hrs), Zee News emerged as the second most-watched Hindi news channel, delivering robust viewership, strong reach of 50.8 million viewers, and healthy engagement metrics. The performance underscores a decisive comeback driven by consistency, credibility, and a viewer-first editorial approach.The channel’s performance is particularly noteworthy in rural and free-to-air markets, where Zee News continues to demonstrate category leadership. In HSM Rural markets, Zee News ranked No. 1 among NCCS All 15+ audiences, commanding a 12.2% market share in Week 50’25 (share calculated on 14 channels, AMA ’000). The channel also delivered the highest reach in HSM Rural, touching 17.6 million viewers during the week.On the Free Platform, Zee News sustained its leadership position, ranking No. 1 among NCCS All 15+ audiences in HSM markets with a 12.7% market share in Week 50’25, while also leading in reach with 15 million viewers. Regionally, Zee News emerged as the No. 1 news channel in Uttar Pradesh & Uttarakhand, registering a 13.5% market share (share calculated on 14 channels, AMA ’000), further strengthening its footprint in key Hindi-speaking markets.The Week 50’25 performance also reinforces Zee Media Corporation Limited’s leadership in reach and viewership across news genres. With strong cumulative reach and sustained time spent across its news portfolio, the network continues to strengthen its position in an increasingly competitive broadcast landscape.Zee News’ rise to the position is not a one-week spike but the outcome of a sustained editorial transformation anchored in sharper storytelling, strong on-ground reporting, national relevance, and a continued focus on viewer trust. The channel’s consistent performance across key metrics such as GRAT, share, cumulative reach, and ATSV reflects its growing resonance among audiences across urban and emerging markets.With this performance, Zee News strengthens its position among the leading players in the Hindi news genre and continues its forward momentum, backed by consistency, credibility, and a clear editorial direction.-Based on Press Release
Pulse Candy taps global K-Pop icon Aoora to strengthen Gen-Z co
New Delhi: Pulse Candy, a flagship brand from the Dharampal Satyapal Group (DS Group), has launched a high-decibel digital campaign featuring global K-Pop icon Aoora (Park Min-jun), marking a new milestone in the brand’s digital-first marketing journey. The festive campaign blends the worldwide appeal of K-Pop with Pulse Candy’s signature Indian tanginess to strengthen its connect with Gen Z consumers.Live from December 24, 2025 to January 3, 2026, the campaign aims to cut through festive clutter by tapping into Aoora’s strong popularity among Indian youth. Designed as a social-native initiative, the campaign features Aoora in a fun, high-energy musical performance, complete with a catchy hook step that fuses Christmas cheer with Pulse’s quirky, tangy brand persona.Speaking about the campaign, Arvind Kumar, Senior General Manager – Marketing, Confectionery, DS Group, said, “By partnering with Aoora for Christmas, Pulse Candy is continuing its tradition by staying ahead of the cultural curve by tapping into global pop movements. Our collaboration with Aoora is a step in that direction. By combining the worldwide phenomenon that is K-Pop with the fun that characterizes Christmas in India, we are not only launching a digital campaign but are instead creating a lyrical twist that will allow all our fans to co-create with us. This campaign mirrors Pulse’s own identity of being quirky, vibrant and universally loved.” At the core of the initiative is a strong participative element, encouraging users to create reels and short-form videos using the campaign’s hook step. To further drive engagement, Pulse Candy has introduced a reward mechanic, offering Amazon vouchers worth Rs 2,000 to consumers who create the most innovative reels during the festive window.Pulse Candy has been leading the hard-boiled candy segment and has maintained its market leadership for the past nine years. Since its launch in 2015, the brand has consistently redefined the category through distinctive marketing initiatives and by adopting emerging technologies such as Artificial Intelligence, delivering memorable and culturally relevant experiences to consumers. View this post on Instagram A post shared by Pulse (@passpass_pulse)
தூக்கத்தில் 10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர் –உயிர் பிழைத்த அதிசயம்
தூக்கத்தில் 10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர், உயிர் பிழைத்துள்ளார். 10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர் குஜராத் மாநிலம் சூரத்தின் ஜஹாங்கிர்புராவில் ‘டைம்ஸ் கேலக்சி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 57 வயதான நிதின்பாய் ஆதியா(Nitinbhai Adiya) என்பவர் 10வது தளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று காலையில் தனது வீட்டில் உள்ள ஜன்னல் அருகே தூங்கிக்கொண்டிருந்த அவர், தூக்கத்தில் நிலை தவறி 10வது மாடியில் இருந்து விழுந்துள்ளார். ஆனால், அவர் 8 […]
GRT: இரண்டு விருதுகள்; நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ஐ வென்ற ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்
இவ்வாண்டின் சிறந்த காதணி (நிறக்கல்) மற்றும் சிறந்த காதணி (வைரம்) நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ல் 'இரட்டை விருது' பெற்ற ஒரே நிறுவனம் என்ற பெருமையை அடைந்துள்ளது ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ். 1964 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜி ஆர் டி ஜுவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ஆபரண நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வந்துள்ளது. காலத்தால் அழியாத வடிவமைப்புகள் நேர்த்தியான கைவினை நுட்பம் மற்றும் பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்காகப் பாராட்டப்படும் இந்த நிறுவனம், 60 வருடங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களைக் கொண்டாடும் ஆபரணங்களை உருவாக்கும் தனது மரபை நிலைநாட்டி வருகிறது. இன்று ஜி ஆர்டி 65 ஷோரூம்களுடன் செயல்பட்டு வருகிறது. GRT அதில் 65 தென்னிந்தியாவிலும் மற்றும் ஒன்று சிங்கப்பூரிலும் உள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள ரத்தினங்களைக் கொண்ட பரந்த கலெக்ஷன்களை வழங்கி வருகிறது. இந்தப் பாரம்பர்ய சிறப்பினைத் தொடர்ந்து ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ் அக்டோபர் 25, 2025 அன்று மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற 14வது நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் (NJA) நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய விருதுகளை வென்றது. ஆண்டின் சிறந்த காதணி 'நிறக்கல்)' மற்றும் ஆண்டின் சிறந்த காதணி (வைரம்) என்ற இரு பிரிவுகளிலும் பெற்ற இந்த இரட்டை விருது ஜிஆர்டி-யின் சிறப்பான பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக அமைந்தது. இந்தியன் அசோசியேஷன் ஆஃப் கோல்ட் எக்சலன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ். (IAGES) மற்றும் வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (WGC) ஆகியவற்றால் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் (ANJA), ஆபரணத் துறையில் படைப்பாற்றல் கைவினை நயம் மற்றும் பதுமைக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பாராட்டுகளில் ஒன்றாக திகழ்கிறது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் விருது பெற்ற வடிவமைப்புகள் அவற்றின் நேர்த்தியான கைவினை நயம் மற்றும் நிறம், அமைப்பு வடிவம் ஆகியவற்றின் அழகிய ஒத்திசைவுக்காக பாராட்டப்பட்டன. GRT GRT வடிவமைப்பின் மூலம் உணர்வுகளைப் பதிவு செய்யும் திறனில் ஜிஆர்டி-யின் சிறப்பை வெளிப்படுத்தின இந்த விருதுகள் மிளிரும் ஆபரணங்களைத் தாண்டி கதைகளைச் சொல்லும் ஆபரணங்களை உருவாக்கும் ஜி ஆர்டி-யின் முயற்சியைக் கொண்டாடுகின்றன. இந்தப் பெருமைமிகு சாதனை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள் கூறுகையில், 'இந்த இரட்டை அங்கீகாரம். எங்கள் ஒட்டுமொத்த ஜிஆர்டி குடும்பத்திற்கும் பெருமைமிகு தருணமாகும். நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஆபரணமும் எங்கள் கலைநுணுக்கத்தின் அரப்பணிப்பையும் வாடிக்கையாளர்களின் கனவுகளையும் பிரதிபலிக்கின்றன. இந்த விருதுக்காக எங்கள் திறமையான கைவினைகலைஞர்களுக்கும் எங்களை எப்போதும் நம்பும் வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். GRT மேலும் இதை போல தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு ஜிஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது இவ்வாறான விருதுகள் எங்களைப் புதுமையைத் தொடர்ந்து மேற்கொள்ளவும். அதே நேரத்தில் ரம்பரியத்தில் வேரூன்றியிருக்கவும் நினைவூட்டுகின்றன இவ்விருதுகளை வழங்கி எங்களுக்கு தொடர்ந்து அங்கீகாரம் மற்றும் நம்பிக்கை அளிக்கும் NJA குழுவிற்கும் எங்கள் அன்பான வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
DMK vs TVK: ’திமுக தவெக இடையேதான் போட்டி!’ –விஜய்யின் தப்புக் கணக்கா திமுகவின் பயமா?
'2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியானது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான்' - ஆரம்பத்தில் அவ்வளவு உரக்கச் சொல்லாத இந்த வார்த்தைகளை தற்போது சத்தமாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறார், தவெக தலைவர் விஜய். ஒருபுறம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து எந்த எதிர்மறை விமர்சனங்களையும் வைப்பதில்லை, மறுபுறம் அதே இருவரால் வலுவான ஓட்டு வங்கியுடைய கட்சியாக வளர்த்தெடுக்கப்பட்ட, இன்றும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அந்தக் கட்சியைப் பொருட்படுத்தாதது போல் காட்டிக்கொள்கிறார். விஜய்யின் இந்தக் கணிப்பு தேர்தலில் சாதகாமன ரிசல்ட் தருமா? கணிப்பின் பின்னணி என்ன? அரசியல் அரங்கில் பலதரப்பினரிடமும் பேசினோம். தவெகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகனிடம் முதலில் பேசினோம். Raj Mohan - TVK திமுகவின் பயம் ! ''எதிரிகள் யார்ங்கிறது முக்கியமல்ல, அவர்கள் எதைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதே முக்கியம். இன்னைக்கு திமுகவின் ஒவ்வொரு மேடையிலும் தவெகவின் தாக்கம் தான் அதிகம் எதிரொலிக்குது. காரணம் அந்தக் கட்சி எங்களைக் கண்டு தான் அதிகம் பயப்படுது. எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டிங்கிறதுக்கு இந்த சாட்சி போதாதா? திமுகதான் அப்படிச் சொல்ல வச்சது. திமுக நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் 'திராவிட மாடல் 2.0’ என்பது மாற்றத்தை அல்ல ஏமாற்றத்தை தான் தந்தது. இன்றைய இளைஞர்களுக்குத் தேவைப்படுவது உண்மையான அரசியல் மாற்றம். தளபதியின் வரவு அந்த மாற்றத்தை நிகழ்த்தும்னு அவங்க நம்புறாங்க. அதனால்தான் நாங்க மாற்று சக்தி அல்ல முதன்மை சக்தியாக வளர்ந்து நிற்கிறோம்னு சொல்றோம்'' என்கிறார் இவர். எடப்பாடி பழனிசாமி பழனிசாமியால் முடியாது! அந்தக் கட்சியைச் சேர்ந்த சம்பத் சில கருத்துகளைப் பகிர்ந்தார்.. ''திமுக கூடத்தான் போட்டினு ஏன் சொல்றோம்னா, எடப்பாடி பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாதுன்னு அண்ணா திமுக காரங்களே நம்புறாங்க. அந்தக் கட்சியின் தொடர்ச்சியான தோல்விகள் மூலம் இந்த உண்மையைப் புரிஞ்சுக்கலாம். அதேபோல வாக்கு வங்கிங்கிறது அடுத்தடுத்த தேர்தல்ல ஒரே மாதிரிதான் இருக்கும்கிறதுக்கும் உத்தரவாதம் கிடையாது. 91 தேர்தல்ல அபரிமிதமான வெற்றி பெற்ற அதிமுக 2001 தேர்தல்ல படு தோல்வி அடைஞ்ச வரலாறு இருக்கு'' என்கிறார். நாஞ்சில் அன்பழகன், அதிமுக காலங்காலமாக நடக்கும் முயற்சி! அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் அன்பழகன் என்ன சொல்கிறார்? ''எடப்பாடி பழனிசாமி இத்தனை தேர்தல்ல தோத்தார் அத்தனை தேர்தல்ல தோத்தார்னு எடுத்து விடறதெல்லாம் பயத்துல திமுக செய்கிற வேலை. ஒரேயொரு தேர்தல்ல அதாவது 2021ல் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கோம். இடைத்தேர்தல், பஞ்சாயத்து தேர்தல்களையெல்லாம் கணக்குல எடுத்துக்க கூடாது. ஏன்னா ஆளுங்கட்சியா எது இருக்கொ, அதுதான் இந்த தேர்தல்களில் ஜெயிக்கும். 2021 தேர்தலிலேயே அறுபதுக்கும் மேலான இடங்களை பிடிச்சிட்டாரேனு எடப்பாடியார் மேல ஒரு காண்டு இன்னைக்கும் திமுக தலைமைக்கு இருக்கு. விஜய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கார். இதுவரை ஒரு தேர்தலைக் கூட சந்திக்கலை. இந்த நிலையில ஆளுங்கட்சியை எதிர்த்தா நாலு பேரு பார்ப்பாங்க. நம்ம கட்சின்னு ஒண்ணு இருக்குனு தன்னைப் பார்க்க வர்ற கூட்டத்துக்கும் சொல்லணும். அந்தக் கூட்டத்தை ஓட்டா மாத்த முடியும்னு நினைச்சுப் பேசறார். இதனாலெல்லாம் அதிமுக ஓட்டு அவருக்குப் போயிடாது. இரட்டை இலை வாக்குகளை எம்.ஜி.ஆர் இருந்த போதும் சரி, அவர் இறந்த போதும்சரி,, வாங்கிடலாம்னு கருணாநிதி என்னென்னவோ பேசிப் பார்த்தார். ஒண்ணும் நடக்கலை. அம்மா மறைந்த போதும் எத்தனையோ பேர் முயற்சி செய்தாங்க.. தேறலை. அந்த வரிசையில் புதுசா வந்திருக்கிற விஜய்யும் முயற்சி செய்கிறார். ரிசல்ட் முன்னாடி கிடைச்சதுதான்ங்கிறதை தேர்தல் ரிசல்ட் வர்ற நாள்ல தெரிஞ்சுக்கலாம்' என்கிறார் அன்பழகன். பழ.கருப்பையா தெளிவில்லாத கூட்டம்! அதிமுக சார்பில் முன்பு ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த ரபி பெர்னார்டிடம் கேட்ட போது, 'அதிமுக ஓட்டுகளை தனக்கு மாத்தற ஒரு டெக்னிக்கா இதைப் பார்க்கலாம். அது நடக்கும்னு அவர் நம்பறதால செய்றார். அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரையும் மறந்துடாம நினைவுல வச்சிருந்தா மட்டுமே அந்த அபாயம் நிகழ்ந்திடாமத் தடுக்க முடியும்' என்றார். மூத்த அரசியல்வாதியான பழ கருப்பையாவிடமும் இது குறித்துக் கேட்டோம். ''அவரு ஆட்சியில பங்கு தர்றேனு கூடச் சொல்லிக் கூப்பிட்டுப் பார்க்குறார். ஒருத்தரும் போக மாட்டேங்குறாங்களே. பேச்சும் திட்டமும் தெளிவானதா இல்லை. அப்படியே தெளிவாப் பேசிட்டாலுமே, அதைக் கேட்கறதுக்கான கூட்டம் கிடையாது அவருக்குக் கூடுகிற கூட்டம். இந்த நிலையில எனக்கும் இன்னாருக்குதான் போட்டினு எந்த தைரியத்துல சொல்றார்னு அவர்கிட்டதான் கேக்கணும்' என்றபடி முடித்துக் கொண்டார் இவர். வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் யாருக்கும் போட்டி என வாசகர்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கீழே கமெண்டில் குறிப்பிடவும் !
திமுக படுதோல்வி அடையும்.. விரைவில் கூட்டணி அறிவிப்பு - அன்புமணி பரபர பேச்சு!
வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் எங்களது கூட்டணி வரும் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும் பலம் பொருந்திய மெகா கூட்டணியாக இருக்கும் என மதுரை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
கடலூர் வளையன்மாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோயில்: காதல், திருமணமாக முடிய அருளும் தலம்!
பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களோடு தொடர்புடைய தலங்கள் நம் தேசத்தில் அநேகம் உள்ளன. அவற்றில் சில முக்கியமான தலங்களை நாம் வழிபட்டு வருகிறோம். அப்படி ஓர் ஆலயம்தான் வளையமாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோயில். பகவான் வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைச் சம்ஹாரம் செய்தார். இரண்யாட்சனின் மகள்களான மணிமாலையும், முத்துமாலையும் பகவான் விஷ்ணுவின் மகிமையை அறிந்து அவரை நோக்கித் தவம் செய்தனர். அதன் பலனாக விஷ்ணுவின் அருள்பெற்ற இருவரும் புண்ணிய நதிகளாக மாறி ஸ்ரீ முஷ்ணம் சேத்திரத்தை ஒட்டி மணிமுக்தா நதி, சுவேதா நதி என்கிற பெயர்களோடு பாய்ந்து பக்தர்களுக்கும் அருள் செய்துவருகின்றனர். அவற்றில் மணிமுத்தா நதிக்கரை அருகே அமைந்ததுள்ளது வளையன்மாதேவி திருத்தலம். வேதநாராயண பெருமாள் தலபுராணம் காத்யாயனர் என்னும் மகரிஷி குருபகவானைத் தன் ஆணவத்தால் அவமதித்தார். அதனால் அவருக்குச் சாபம் உண்டானது. அந்தச் சாபம் நீங்க காத்யாயனர் வராக வனம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்தார். அவரின் கடுமையான தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த பூவராக சுவாமி திருக்காட்சி அருளி சாபவிமோசனம் தந்ததோடு, 'வேண்டும் வரம் என்ன' என்றும் கேட்டார். அதற்கு காத்யாயனர், திருமகளே இந்த உலகில் சகல உயிர்களின் மீதும் பெரும் கருணை கொண்டவள். அந்தக் கருணையை நான் மகளாகப் பெற்றுத் தூக்கிச் சுமக்க வேண்டும். அவளை வளர்த்ததன் பயனாக உலகத்தைக் காக்கும் நீங்களே எனக்கு மருமகனாகவும் வந்து அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். காத்யாயனரின் வேண்டுதலால் உலகம் நன்மையடையப் போவதை அறிந்திருந்த பகவான் விஷ்ணு அதற்கு இசைந்தார். 'புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் திருமகளை மகளாகப் பெறலாம்' என்று சொல்லி அருளினார். அதன்படி, காத்யாயன ரிஷி, பாவண தீர்த்தத்தில் நீராடி, அங்கேயே பர்ணசாலை அமைத்துக் கொண்டு, நியமப்படி ஆவணி மாத பௌர்ணமி அன்று வேதங்கள் முழங்க, புத்திர காமேஷ்டி யாகத்தைத் தொடங்கினார். யாகத்தின் நிறைவில் தங்கப்பதுமை போல திருமகள் அழகிய குழந்தையாக அவதரித்தாள். `அம்புஜவல்லி' என்ற திருநாமத்தோடு (காத்யாயினி, கமலவல்லி என்ற திருநாமங்களும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள்) சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்த தாயார், இடையறாது திருமாலின் மீது பக்தி கொண்டிருந்தாள். மேலும் இறைப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தியும்கொண்டாள். அம்புஜவல்லியின் பக்தியும் ஒழுங்கும் கண்டு அவரைச் சேரவேண்டிய தகுந்த வேளை வந்ததை அறிந்த பூவராக பெருமாள் திருமணம் செய்துகொள்ள விரும்பி, பெண் கேட்டு பிரம்மனை காத்யாயன ரிஷியிடம் அனுப்பினார். ? செவ்வாய் தோஷத்துக்கு வாழைத் திருமணம் பரிகாரம் ஆகுமா? அம்புஜவல்லி தாயார் பெருமாளுக்குக் கொடுத்த வாக்கை முனிவர் மறக்கவில்லை. எனினும் தன் மகளைப் பிரிய நேரிடுமே என்று பெருமானுக்குத் திருமணம் செய்து வைப்பதைத் தவிர்த்தார். ஆனால், `பூவராகப் பெருமாளைத் தவிர வேறு ஒருவரை மனத்தாலும் நினையேன்' என்று உறுதியாக இருந்தாள் அம்புஜவல்லி. காலம் பல கடந்த பிறகும் அவள் உறுதி குலையவே இல்லை. பெற்றவரைத் தவிக்கவிட்டு, பெருமாளை காந்தர்வ மணம் புரியவும் அம்புஜவல்லி ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் தாயாரின் வைராக்கியம் வென்றது. அவளை பூவராகருக்குத் திருமணம் செய்து வைத்தார் காத்யாயன ரிஷி. தேவர்கள் எல்லோரும் கூடி திருமால்-தாயாரை வணங்கியதால் அந்தத் தலம் திருமண வேண்டுதல் தலமாகவும் மாறியது என்கிறது இந்தத் தலத்தின் புராணம். பூவராகரும் தனது திருமணத்தின் பொருட்டு வேதநாராயணப் பெருமாளாக அழகிய வடிவுடன் காட்சி தந்தார். திருமணத்தின்போது நவரத்தின வளையல்களைச் சீராகக் கொடுத்தார் பூவராகர். அந்த வளையலை அம்புஜவல்லித் தாயார் அணிந்ததால், இந்த ஊருக்கே வளையன்மாதேவி என்ற திருப்பெயர் உண்டானதாம். பழைமையான இந்த ஆலயத்தின் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வேதநாராயணப் பெருமாள் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். மேலும் இங்கே எழுந்தருளி இருக்கும் தெய்வத் திருமேனிகள்; உற்சவர் வேதநாராயணப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம், நித்ய உற்சவர் வேதநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலம், காளீயமர்த்தனர் - உற்சவர், ஆதி நாராயணப் பெருமாள் - வீற்றிருந்த திருக்கோலம், ஸ்ரீபூவராகப் பெருமாள் மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், பிராட்டியுடன் சக்கரவர்த்தித் திருமகன், இளையபெருமாள், அனுமார் - நின்ற திருக்கோலம், ஸ்ரீஆண்டாள் - மூலவர் உற்சவர் நின்ற திருக்கோலம், ஸ்ரீநம்மாழ்வார் திருமங்கையாழ்வார் - மூலவர் உற்சவர், ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள் - மூலவர், ஸ்ரீஉடையவர், ஸ்ரீமணவாள மாமுனிகள் - மூலவர் உற்சவர், ஸ்ரீகமலவல்லித் தாயார் - மூலவர் உற்சவர், காத்யாயன ரிஷி - மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், ஸ்ரீகருடர், ஸ்ரீஅனுமன் - மூலவர் நின்ற திருக்கோலம், விஷ்வக்சேனர் - வீற்றிருந்த திருக்கோலம். வளையன்மாதேவி காத்யாயனர் தேவி தீர்த்தம் பாவண தீர்த்தம். விமானம் பாவண விமானம். தல விருட்சம் புன்னை. சித்திரை பிரம்மோற்சவமும், வைகாசி திருக்கல்யாண உற்சவமும் இங்கு வெகு விசேஷம் என்கிறார்கள் இந்த ஊர் பக்தர்கள். மாதம்தோறும் வரும் ரோகிணி, அஸ்தம், திருவோணம், உத்திரம், ரேவதி ஆகிய நட்சத்திர தினங்கள் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இங்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறும். இங்குள்ள பாவண தீர்த்தத்தில் நீராடி, பூவராகப் பெருமாளை, அம்புஜவல்லித் தாயாரை வேண்டி நைவேத்தியம் விநியோகித்தால் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். விரும்பிய வரன் அமையும் என்பது நம்பிக்கை. பெருமாள் தான் விரும்பியபடி தாயாரை மணந்துகொண்ட தலம் என்பதால் இங்கு வந்து வேண்டிக்கொள்ள, வேண்டியவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரத்தைத் தன் பக்தர்களுக்கும் அருள்கிறார் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள். வாழ்வில் நல்ல துணை அமையவும் மனதின் விருப்பங்கள் நிறைவேறவும் ஒருமுறை வளையன்மாதேவி சென்று வேதநாராயண பெருமாளை வழிபட்டு வருவோம். எப்படிச் செல்லாம்: கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வளையமாதேவி. சேத்தியாத்தோப்பில் இருந்து பஸ் வசதி உள்ளது. ஆட்டோ வசதியும் உள்ளது. இந்த கோயிலில் பிரார்த்தனை காசு வாங்கி வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும்! படிக்காசுநாதர் பரிகாரம்!
Vibe With MKS நிகழ்ச்சி.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விக்கெட் எடுத்த வீடியோ - இணையத்தில் வைரல்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடும் போது விக்கெட்டுகளை கைப்பற்றும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வைரலாகி வருகிறது.
புதிய ஆண்டை அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம்
பிறக்கவுள்ள புதிய ஆண்டை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த பாதிப்புகள் குறித்தும், அதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு மற்றும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பான கௌரவ மத்திய அமைச்சரின் கோரிக்கை ஆளுநரால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதோடு, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையுடன் இயங்கிவரும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மாத்திரம் தனி அலகாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது தொடர்பான கருத்தும் முன்வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவது தொடர்பான முன்மொழிவுக்கு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து, மத்திய சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை மேற்கொள்ளும் பொறிமுறைக்கும் இக்கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.சிறிபவானந்தராஜா, சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், மற்றும் மாகாண, மத்திய அமைச்சின் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பல அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
SIPCOT தொழிற்பேட்டைக்கான சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்: நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடியும்!
SIPCOT தொழிற்பேட்டைக்கான சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் விரைவில் முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .
பாகிஸ்தான் ஏர்லைனை வாங்கிய ஆரிஃப் ஹபீப்! இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?
பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை தொழிலதிபர் ஆரிஃப் ஹபீப் வாங்கியிருக்கிறார். பாகிஸ்தான் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்வசம் ஆக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு ரூபாயில் 13.5 பில்லியன்கள் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஆரிஃப் ஹபீப். ஒருகாலத்தில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் பெரும்பங்காற்றி வந்த நிலையில் அந்நாட்டு அரசின் தவறான நிர்வாகம், அலட்சியம் […]
யாழில். குடை பிடித்தவாறு தேசிய கொடியேற்றிய அமைச்சர்
கொட்டும் மழைக்கு மத்தியில் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் , தேசிய கொடியை ஏற்றிய சம்பவம் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழைக்குள் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் தேசிய கொடியினை ஏற்றியுள்ளார். அதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர். அமைச்சர் குடை பிடித்தவாறு தேசிய கொடி ஏற்றும் போது , மாவட்ட செயலரும் , அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் குடை பிடித்தவாறு உடனிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
SA20: ‘மும்பை இந்தியன்ஸ் வீரர் அதிரடி சதம் வீண்’.. கடைசி நேரத்தில் சொதப்பிய MI அணி.. ஸ்கோர் விபரம்!
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், எம்ஐ கேப்டவுன் அணி, கடைசிவரை போராடி இறுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி, முதலில் களமிறங்கி 232 ரன்களை எடுத்து, இறுதியில் வெற்றியைப் பெற்றது.
கேரளா: பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா? - முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?
கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற 100 வார்டுகளில் பா.ஜ.க 50 வார்டுகளை வென்றது. இந்த நிலையில் நேற்று நடந்த மேயர் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆஷா நாத் தேர்வானார். இந்த நிலையில் மேயராகப் பதவியேற்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷை கேரள முதல்வர் பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், பா.ஜ.க மேயருக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து அரசியல் ரீதியான எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தன. இதையடுத்து முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. திருவனந்தபுரம் மேயராக பதவியேற்ற பா.ஜ.க-வைச்சேர்ந்த வி.வி.ராஜேஷ் இது குறித்து கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பா.ஜ.க தலைவர் வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவியேற்றுக்கொண்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்ததாக வெளியான செய்தி தவறானது. கேரளா: உலகின் முதல் உளவியல் பூங்கா என அழைக்கப்படும் `சைக்கோ பார்க்'| ஸ்பாட் விசிட் போட்டோஸ்.! வெள்ளிக்கிழமை காலையில் முதல்வர் பினராயி விஜயனின் தனி உதவியாளரை வி.வி.ராஜேஷ் போனில் அழைத்திருந்தார். அப்போது முதல்வர் அருகில் இல்லாத காரணத்தால் பிறகு இணைப்பு வழங்குவதாக உதவியாளர் தெரிவித்தார். மேயர் வி.வி.ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத் முதல்வர் வந்த பிறகு வி.வி.ராஜேஷுக்கு போன் கணெக்ட் செய்தார் உதவியாளர். அப்போது பேசிய வி.வி.ராஜேஷ், தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், பதவி ஏற்ற பிறகு நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார். 'ஆகட்டும், வாழ்த்துகள்' என முதல்வர் பதிலளித்தார். ஆனால், முதல்வர் போனில் அழைத்து வி.வி.ராஜேஷுக்கு வாழ்த்து தெரிவித்ததாக அதன் பின்னர் செய்திகள் வெளியிடப்பட்டன. அது உண்மைக்குப் புறம்பானதும், தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, மீரியாக்கள் செய்தியைத் திருத்தும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ``கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும் - பினராயி விஜயன்
காட்டு யானையொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை
காட்டு யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆஸ்பத்திரி சேனை – கண்டம் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றின் சடலம் உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட நிலையில் புதன்கிழமை (24)யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக குறித்த இடத்திற்கு வருகைதந்த அதிகாரிகள் யானையின் உடலை மீட்டுள்ளதுடன் யானை […]
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் இம்முறை குறைந்தளவான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்
video link- https://fromsmash.com/A21Hw3QNLT-dt கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு குறைந்தளவான கிறிஸ்மஸ் மரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தை அம்பாறை மாவட்டத்தில் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வர்ணங்களால் ஆன இவ்வாறான மரங்கள் காணப்பட்டதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மின் குமிழ்கள் நத்தார் மரங்கள் என்பன மக்களால் கொள்வனவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிரந்ததை காண முடிந்தது. நத்தார் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் இப்பகுதியில் கடந்த காலங்களில் மும்முரமாக விற்பனையாகிய போதிலும் இம்முறை கடந்த ஆண்டினை […]
நீரில் மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் ஓடும் நீரில் தவறி விழுந்து மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளாற்றுக்கட்டு பகுதியில் விவசாய நடவடிக்கைக்காக சென்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயியான குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் சடலமாக வியாழக்கிழமை(25) மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில் பசளை ஏற்றிக் கொண்டு வயலுக்குச் செல்லும் வழியில் பாலத்தின் ஊடாக பயணித்த போது தவறுதலாக […]
கோயம்புத்தூர் குமாரசாமி ஏரி கரையில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தொடக்கம்!
கோயம்புத்தூர் குமாரசாமி ஏரி கரையில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது 30 சதவீதம் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது .
Cinema Roundup 2025: பொன்மேன் டு அவதார்! 2025–ல் கவனம் ஈர்த்த பிறமொழி படங்கள்! | எங்கு பார்க்கலாம்?
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என இந்த ஆண்டு பிற மொழிப் படங்கள் பலவும் பக்கா ட்ரீட் தந்திருக்கின்றன. அப்படி தமிழ் ரசிகர்களிடையே இந்த ஆண்டு கவனம் பெற்ற மற்ற மொழிப் படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். ரேகசித்திரம்: கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ரேகசித்திரம்'. காவல்துறை அதிகாரியாக ஆசிப் அலி மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் தங்களது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், மெகா ஸ்டார் மம்முட்டியின் ஏ.ஐ கேமியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்ததோடு, ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தையும் கொடுத்தது. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், அதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மார்ச் 7-ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது. Ponman Movie பொன்மேன்: இந்த ஆண்டில் வெளியான 'பொன்மேன்' திரைப்படத்தில் பேசில் ஜோசப் கதையின் நாயகனாகத் தனது இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தார். அவருக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ் தனது நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்திற்குப் ஆழம் சேர்த்தார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், மார்ச் 14 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோர்ட் vs நோபடி: அறிமுக இயக்குனர் ராம் ஜெகதீசன் இயக்கத்தில், கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் இத்திரைப்படம் வெளியானது. நடிகர் நானி தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஏப்ரல் 11-ஆம் தேதி இப்படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. Court - State vs A Nobody ஆலப்புழா ஜிம்கானா: இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'ஆலப்புழா ஜிம்கானா' என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. விளையாட்டாகத் தொடங்கும் ஒரு பாக்ஸிங் போட்டி, எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து அரங்கேறும் சுவாரசியமான சம்பவங்களால் எப்படி திசைமாறுகிறது என்பதே இப்படத்தின் மையக்கரு ஆக அமைந்திருந்தது. படம் முழுவதும் நகைச்சுவை கலந்து கலகலப்பாகச் சொல்லப்பட்ட விதம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஜூன் 13 ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது. சின்னர்ஸ்: 'பிளாக் பாந்தர்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ரயான் கூக்ளர் மற்றும் நடிகர் மைக்கேல் பி. ஜோர்டான் மீண்டும் இணைந்துள்ள 'சின்னர்ஸ்' திரைப்படம் மார்ச் 18-ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஹாரர் த்ரில்லர் பாணியில் வந்த இப்படம், வெறும் பயத்தை மட்டும் தராமல் நுட்பமான அரசியலையும், வரலாற்றையும் பேசி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தியேட்டர்களில் பார்த்த ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான திரையனுபவத்தை வழங்கியுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இப்படம், தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நானி: HIT 3 ஹிட் 3: இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில், நானி நடிப்பில் உருவான 'ஹிட்: தி தேர்ட் கேஸ்' திரைப்படம் மே 1-ம் தேதி தமிழ் டப்பிங்குடன் திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், இந்த மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே மிக அதிகமாக இருந்தது. இது ஆக்ஷன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. சித்தாரே ஜமீன் பர்: கடந்த ஜூன் 20-ஆம் தேதி இந்தி மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம், அதே நாளில் தமிழ் டப்பிங்கிலும் வெளியானது. ஆமிர் கான் மற்றும் ஜெனிலியா நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை, இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியிருந்தார். ஒரு பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் ஆமிர் கான் தனது முதிர்ச்சியான நடிப்பை இதில் வெளிப்படுத்தியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெனிலியா இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்திருந்தார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகள் தமிழ் மக்களையும் வெகுவாகக் கவர்ந்தன. நேரடியாக யூட்யூப் தளத்தில் வெளியானப் பிறகு படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. F1 F1: இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், தமிழ் டப்பிங்கிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இத்திரைப்படத்தின் திரைக்கதை ஒரு தமிழ் 'மாஸ்' ஹீரோ படத்திற்குரிய வேகத்துடனும் விறுவிறுப்புடனும் அமைக்கப்பட்டிருந்தது. இங்கும் வணிக ரீதியாகப் பெரும் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. குறிப்பாக படம் ஆப்பிள் டிவி ஓடிடி-யில் வெளியான பின்பு இணையதளத்தில் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை ட்ரெண்ட் செய்து கொண்டாடினர். சூப்பர்மேன்: உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான 'சூப்பர்மேன்' திரைப்படம், கடந்த 2025 ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. டிசி சினிமா பிரபஞ்சத்தின் புதிய தொடக்கமாகக் கருதப்பட்ட இத்திரைப்படம், வெளியாவதற்கு முன்பே உலகளாவிய ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவலைத் தூண்டியிருந்தது. புதிய சூப்பர்மேனாகத் திரையில் தோன்றிய டேவிட் கோரன்ஸ்வெட்டின் சிறப்பான நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இயக்குநர் ஜேம்ஸ் கன் இந்தப் படத்தை ஒரு புதிய கோணத்தில் அணுகியிருந்தார். சு ஃப்ரம் சோ சு ஃப்ரம் சோ: 2025-ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று எவ்வித எதிர்பார்ப்புமின்றி வெளியாகி, கன்னடத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் சு ஃப்ரம் சோ. அறிமுக இயக்குநர் ஜே.பி. துமினாடு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், கன்னடத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. தமிழ் மக்களிடையேயும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லோகா சாப்டர் ஒன் - சந்திரா: துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் வெளியான 'லோகா சாப்டர் 1 சந்திரா' திரைப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ் டப்பிங்கிலும் தியேட்டர்களில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் முழுக்கவே இறுக்கமான முகத்துடன் வரும் கல்யாணி பிரியதர்ஷினியின் நடிப்பைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். Lokah Chapter 1 டிமான் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காஸ்டில்: உலகளாவிய அனிமே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 'டிமான் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காஸ்டில்' திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. ஹருவோ சோட்டோசாகி தான் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி ஜப்பானில் வெளியான இப்படம், அங்கு வசூல் ரீதியாகப் புதிய மைல்கற்களை எட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியானது. தமிழ்நாட்டு அனிமே ரசிகர்கள் திரையரங்குகளில் இப்படத்தைக் கோலாகலமாகக் கொண்டாடினர். காந்தாரா சாப்டர் 1: 2022-ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' திரைப்படத்தின் முன்கதையாக உருவான 'காந்தாரா: சாப்டர் 1', அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. ரிஷப் ஷெட்டியின் மிரட்டலான இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்த இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் ரசிகர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை வழங்கியது. Kantara Chapter 1 கேர்ள் ஃப்ரெண்ட்: கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான தெலுங்குப் படம் தான் 'கேர்ள் ஃப்ரெண்ட்'. காதல் என்ற பெயரில் ஒரு ஆண், பெண் மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றி இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந்தப் படத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். துரந்தர்: இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள திரைப்படம் 'துரந்தர்'. இந்தி ஆடியன்ஸ் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் இப்படம் பெரிய வசூலைச் செய்து சாதனை படைத்து வருகிறது. Avatar Fire and Ash அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் உலக அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தன. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தத் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தத் தொடரின் அடுத்த படைப்பான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்', டிசம்பர் 19-ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைத்த பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விஷுவல் விருந்தாக அமைந்தன. முதல் இரண்டு பாகங்கள் போலவே இத்திரைப்படமும் உலக அளவில் வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் எந்தப் படம் உங்களுடைய ஃபேவரிட் என்பதை கமென்டில் பதிவிடுங்கள்
பாகிஸ்தானில் மதரஸா பள்ளி மீது ட்ரோன் தாக்குதல்! 9 குழந்தைகள் படுகாயம்!
பாகிஸ்தானில், மதரஸா பள்ளிக்கூடத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 சிறுமிகள் உள்பட 9 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், டேங்க் மாவட்டத்தில் உள்ள ஷாதிகேல் கிராமத்தின் மதரஸா பள்ளிக்கூடத்தில் ஏராளமான சிறுவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை (டிச. 25) வழக்கமான வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, வகுப்புகள் நடைபெற்ற வேளையில் அந்தப் பள்ளியின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 6 சிறுவர்கள் மற்றும் 3 […]
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்க முடிவு!
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா நகரில் கவனிக்கப்படாமல் இருக்கும் நடைமேம்பாலம் எப்போது சீரமைக்கப்படும்?
அண்ணா நகரில் கவனிக்கப்படாமல் இருக்கும் நடைமேம்பாலம் எப்போது சீரமைக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
பாரிஸ் மெட்ரோவில் கத்திக் குத்து: மூன்று பெண்கள் காயம்: சந்தேக நபர் கைது!
இன்று வெள்ளிக்கிழமை பாரிஸ் மெட்ரோவில் மூன்று பெண்கள் கத்தியால் குத்தப்பட்டனர், மேலும் சந்தேகத்திற்குரிய தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் மூன்று மெட்ரோ நிலையங்களில் நடந்தன, மேலும் பாரிஸ் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இன்று மாலை 4 மணியளவில், ஒரு நபர் மெட்ரோ பாதை 3 இல், ரிபப்ளிக், ஆர்ட்ஸ் எட் மெட்டியர்ஸ் மற்றும் ஓபரா நிலையங்களில் அடுத்தடுத்து மூன்று பெண்களை கத்தியால் குத்தினார் என்று ஒரு வழக்கறிஞர் பிரெஞ்சு ஊடகங்களுக்கு தெரிவித்தார். சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது மொபைல் போனில் இருந்து பெறப்பட்ட புவிஇருப்பிடத் தரவைப் பயன்படுத்தி அவர் அடையாளம் காணப்பட்டார். தே மூலமே அவர் அடையாளம் காணப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டார்.
சோமாலிலாந்தை முதலாவது நாடாக அங்கீகரித்து இஸ்ரேல்
சோமாலியாவிலிருந்து பிரிந்த சோமாலிலாந்தை சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வெளியுறவு அமைச்சர் சார் மற்றும் சோமாலிலாந்து குடியரசின் ஜனாதிபதியுடன் சேர்ந்து, நாங்கள் ஒரு கூட்டு மற்றும் பரஸ்பர பிரகடனத்தில் கையெழுத்திட்டோம் என்று நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்த அறிவிப்பு ஜனாதிபதி டிரம்பின் முன்முயற்சியில் கையெழுத்திடப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தங்களின் உணர்வில் உள்ளது என்று அவர் கூறினார். இதன் மூலம், பிரிந்து சென்ற பகுதியை அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் ஆனது. ஆப்பிரிக்கப் பகுதி சோமாலியாவிலிருந்து பிரிந்து மூன்று தசாப்தங்களாகியுள்ளது. அத்துடன் ஆப்பிரிக்காவின் கொம்பில் ஒரு முக்கிய மூலோபாய பிராந்தியத்தில் இந்தநாடு அமைந்துள்ளது. வேறு எந்த நாடுகளும் இதை முறையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், இங்கிலாந்து, எத்தியோப்பியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், டென்மார்க், கென்யா மற்றும் தைவான் உள்ளிட்ட பல நாடுகள் தொடர்பு அலுவலகங்களைப் பராமரித்தன. மேலும் டிரம்ப் நிர்வாகம் சமீபத்திய மாதங்களில் பிரிந்து செல்லும் பிராந்தியத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளலாம் என்று சமிக்ஞை செய்துள்ளது. இருப்பினும், வெள்ளிக்கிழமை அறிவிப்பு இஸ்ரேல் சோமாலியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டிய பல பிராந்திய சக்திகளிடையே கோபத்தைத் தூண்டியது. இப்பகுதியில் அமெரிக்கா ஒரு பொிய கடற்படைத் தளத்தை அமைக்கும் மூலோபாயப் பகுதியாக இதைப் பயன்படுத்ததிட்டமிட்டுள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஏமனில் உள்ள ஹவுதிக்கள் மீது தாக்குதல் நடத்தவும் ஈரானிலிருந்து ஹவுதிகளுக்குச் செல்லும் ஆயுத தளபாடங்களை தடுத்து நிறுத்தவும் சோமாலிலாந்து மிகப்பொிய மூலோபாய நிலப்பகுதியாக உள்ளது.
தென்கொரியாவில் செய்தி நிறுவனங்கள்,சேனல்களுக்கு கடும் தண்டனை
தென்கொரியாவில் பொய் தகவல்களைப் பரப்பும் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் சட்டமூலம் நேற்று முன்தினம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. செய்தி நிறுவனங்களும், பெரிய யூடியூப் சேனல்களும், சட்டவிரோதமான, பொய்யான தகவல்களைத் தீங்கு விளைவிக்கும் அல்லது இலாப நோக்கத்துடன் பரப்பினால், நீதிமன்றங்கள் ஐந்து மடங்குவரை அபராதம் விதிக்கலாம் என்ற சட்டமூலமே நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முதல்முறையாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 இலட்சம் (இந்திய மதிப்பில்) ரூபாய் வரையிலும், இரண்டு முறைக்கு மேல் அதே […]
பூஸா சிறை அதிர்ந்தது: 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு!
கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல்… The post பூஸா சிறை அதிர்ந்தது: 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு! appeared first on Global Tamil News .
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பிரித்தானிய ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் ரஷ்யா மீதான தனது நீண்ட தூரத் தாக்குதல் நடவடிக்கையை உக்ரைன் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் ரோஸ்டோவ்(Rostov) பகுதியில் அமைந்துள்ள நோவோஷாக்டின்ஸ்க்(Novoshakhtinsk) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் தனது நீண்ட தூரத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைனிய ராணுவம் பிரித்தானியாவின் ஸ்டார்ம் ஷேடோ(Storm Shadow) ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளது. […]
வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொலை
டாக்கா, அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. போலீஸ்காரர்கள் களம் இறக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 1,581 பேர் உயிரிழந்தனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், நாட்டின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். ஷேக் ஹசீனா மீது அந்த நாட்டின் குற்றவியல் தீர்ப்பாயம் […]
டிசம்பர் 29க்கு பின் நாட்டில் மழை தீவிரம் அதிகரிக்கும்
டிசம்பர் 29ஆம் திகதி முதல் நாட்டின் மீது கிழக்கு திசையிலிருந்து வீசும் அலைவடிவக் காற்றோட்டம் வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் நிலைமை அதிகரிக்கும் என வெளியிடப்பட்டுள்ள விசேட வானிலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழைத் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வானிலைத் திணைக்களம் வெளியிடும் மேலதிக முன்னறிவிப்புகள் […]
புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுப் பெட்டகம்; விக்டோரியா ஹாலை வியந்து பார்க்கும் சென்னை மக்கள் -Photo Album
40 கிலோ வெடிபொருட்கள் பயன்பாடு.. ஜீரோ டெரர் கொள்கை.. அமித் ஷா கொடுத்த அதிர்ச்சித் தகவல்!
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பில் 40 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி : 1974-ல் கலைஞர் ஏற்றிய 'மாநில உரிமை'சுடர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்தியா... வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு பெருங்கடல். மொழி, பண்பாடு, கலாச்சாரம் எனப் பல அடையாளங்களைச் சுமந்து நிற்கும் மாநிலங்களை இணைக்கும் இழைதான் ‘கூட்டாட்சி’ (Federalism). ஆனால், நடைமுறையில் டெல்லி சுல்தான்கள் போல மத்திய அரசிடம் அதிகாரம் குவியத் தொடங்கியபோது, அதைத் தட்டிக் கேட்டு மாநிலங்களுக்கான உரிமைக் குரலை முதன்முதலில் ஓங்கி ஒலித்தது தமிழகம். அதன் வரலாற்றுச் சான்றுதான் 1974-ல் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ‘மாநில சுயாட்சித் தீர்மானம்’. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஏன் இந்தச் சுயாட்சித் தாகம்? 1967-ல் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மலர்ந்தது. அவரைத் தொடர்ந்து முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் மு. கருணாநிதி, மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். மக்களுக்கு மிக அருகாமையில் இருப்பது மாநில அரசுதான்; அவர்களின் அடிப்படைத் தேவைகளைச் சிறப்பாக நிறைவேற்ற மாநிலங்களுக்கே அதிக அதிகாரம் தேவை என்பது கலைஞரின் ஆழமான நம்பிக்கை. ஆனால், எதற்கெடுத்தாலும் டெல்லியிடம் கையேந்தும் நிலைதான் அப்போது நீடித்தது. வரி வசூல், நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்திலும் மத்திய அரசின் பிடி இறுகியிருந்தது. மத்திய அரசு என்பது தபால் நிலையம் போல இருக்கக் கூடாது; மாநிலங்கள் சுயமாகச் செயல்படும் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. கருணாநிதி ராஜமன்னார் குழு: ஒரு வரலாற்றுத் திருப்பம்! இதற்காக வெறும் அரசியல் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், 1969-லேயே ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது தமிழக அரசு. அதுதான் புகழ்பெற்ற ‘இராஜமன்னார் குழு’. முன்னாள் தலைமை நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையில், டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் மற்றும் நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய இந்தக் குழு, மத்திய-மாநில அதிகாரப் பங்கீட்டை ஆழமாக ஆய்வு செய்தது. சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் எனப் பலரிடம் கருத்துகளைத் திரட்டிய இந்தக் குழு, மத்திய அரசிடம் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, நாணயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய நான்கு துறைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட இதர அனைத்துத் துறைகளும் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் அதிரடியாகப் பரிந்துரைத்தது. கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் ஒரு சரித்திர நிகழ்வு! இந்த அறிக்கையின் அடிப்படையில், 1974 ஏப்ரல் 16 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதுதான் ‘மாநில சுயாட்சித் தீர்மானம்’. சுமார் ஐந்து நாட்கள் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 20-ல் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிரிவினை அல்ல... ஒருமைப்பாடு! அப்போதே மாநில சுயாட்சி பேசினால் நாடு பிளவுபட்டுவிடும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு கலைஞர் அளித்த பதில் இன்றும் காலத்தால் அழியாதது: “மாநில சுயாட்சி என்பது நாட்டைப் பிரிப்பதற்கல்ல; நாட்டை வலுப்படுத்துவதற்கே!” மத்தியில் அதிகாரம் குவிந்து கிடப்பதைவிட, அதிகாரப் பங்கீடு முறையாக இருந்தால் மட்டுமே உண்மையான ஜனநாயகம் மலரும் என்பதைத் தமிழகம் அன்றே உரக்கச் சொன்னது. கருணாநிதி - அண்ணா இன்றும் ஒலிக்கும் எதிரொலி! 1974-ல் ஏற்றப்பட்ட அந்தச் சுயாட்சிச் சுடர், இன்று நாடு முழுவதும் உள்ள மாநில உரிமை இயக்கங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. சர்க்காரியா கமிஷன் முதல் இன்று வரை மத்திய-மாநில உறவுகள் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம், கலைஞரின் அந்தத் தீர்மானமே முதன்மையான சான்றாக நிற்கிறது. நிர்வாக வேகம், மக்கள் நலன், மாநிலங்களின் சுயமரியாதை எனப் பல கோணங்களில் இந்தத் தீர்மானம் இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல். மத்திய ஆட்சியின் ஆதிக்கம் அல்ல... அதிகாரப் பங்கீடும், சமநிலையுமே இந்திய ஒன்றியத்தை உண்மையாக வலுப்படுத்தும் என்பதை இந்த வரலாறு நமக்கு இன்றும் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறது! தேர்தல்
2026 தேர்தல்: ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி யாருக்கு? திமுகVS அதிமுக- களநிலவரம் என்ன?
2026 தேர்தல் நெருங்கும் நிலையில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி யாருக்கு என்ற களநிலவரத்தை விரிவாக பார்ப்போம்.
அணுசக்தி நீா்மூழ்கி: வட கொரியா முன்னேற்றம்
அணுசக்தியில் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதில் வட கொரியா முன்னேற்றம் கண்டுள்ளதாகஅந்நாட்டு அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்து, அது தொடா்பான படங்களையும் வெளியிட்டன. இது குறித்து கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘8,700 டன் எடை கொண்ட அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளை அதிபா் கிம் ஜோங்-உன் ஆய்வு செய்தாா். கப்பலின் பெரிய அளவிலான உருளை வடிவ உடல் பகுதி ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் உள்ளது. அதில் அரிப்புத் தடுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது’ என்று […]
நீதி கோரும் காவற்துறை உத்தியோகத்தர்: NPPயின் பதில் என்ன?
சூரியகந்த காவல் நிலையத்தில் பணியாற்றி, தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர், தனக்கு நீதி வேண்டியும்… The post நீதி கோரும் காவற்துறை உத்தியோகத்தர்: NPPயின் பதில் என்ன? appeared first on Global Tamil News .
புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “50 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ################################ ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு ஆலாலகண்டணவன் பாதமதில் வாழ விதியின் விதிப்படி விண்ணுலகம் போனீரோ! நல்லொழுக்க நாயகர்களாய் பிள்ளைகளை வளர்த்தெடுத்து அயல் வீட்டுப்பிள்ளைகளையும் பாசத்தோடு அரவணைத்து உறவுகள் அனைவருக்கும் பாசம் காட்டி பாரினிலே பாசத்திற்கு உதாரணமாய் வாழ்ந்த பெற்றோரே உம் பிரிவினை எம்முள்ளம் எப்படித்தான் ஏற்கும். ஆண்டுகள் பல போனாலும் […]
தமிழ்நாடு அடுத்த 10 ஆண்டுகளில் தனியார் மற்றும் அரசு இணைந்த முயற்சிகளில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்புகள் இந்த துறைகளை முன்னேற்றும்.
ரயில் நிலையங்களில் இத கவனிச்சீங்களா? ஜங்சன், சென்ட்ரல் பெயர் வைக்க காரணம் இதுதான்...
ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல் என குறிப்பிடுவதற்கான காரணம் என்ன என்று விரிவாக இந்த செய்தியில் காண்போம்.
ஆரம்ப பாடசாலை ஒன்றில் 10 இலட்சம் செலவில் நிகழ்வு; ஆடிப்போன கல்வி அதிகாரிகள்
தங்காலை பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவ தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வ பேட்ஜ் அணிவிக்கும் விழாவிற்கு ரூபாய் 10 இலட்சத்துக்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்காக பெற்றோர்களிடமிருந்து எந்தவித கட்டணங்களும் அறவிடக் கூடாது என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முறையான அனுமதியின்றி விழா எனினும் இவ்விழாவிற்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டமை குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு வெளியேயுள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்ட இந்த […]
நைஜீரியா மசூதியில் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி
நைஜீரியா நாட்டில், மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் மைடுகிரி நகரத்தில் உள்ள மசூதியில், இரவு தொழுகையின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, அங்கு தற்கொலைப் படை தாக்குதலுக்கான […]
கடன் பிரச்னையில் மூழ்கக் கூடாதா? - '25%'ஃபார்முலாவை கையிலெடுங்க; உடனே விழித்திடங்க மக்களே!
இன்றைய டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா காலக்கட்டத்தில், பெரும்பாலும் கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது பெரிய சிரமம். அதனால், பலரும் கடன் வாங்குகிறோம். ஆனால், அதில்தான் சிக்கிக் கொள்கிறோம். தேவையைத் தாண்டி, ஆடம்பரத்திற்கும் கடன் வாங்குவதில் தான் இந்தச் சிக்கல் தொடங்குகிறது. இதை தடுக்க, இனி இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள் மக்களே... எப்போதுமே உங்கள் வருமானத்தில் இருந்து 25 சதவிகிதத்திற்கு மேல் வட்டிக்குச் செல்லக் கூடாது. இது ஒரு கடன் வைத்திருந்தாலும் சரி... ஐந்து கடன் வைத்திருந்தாலும் சரி... அனைத்துக் கடன்களுக்குமே இந்த ரூல் பொருந்தும். கடன் முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்! ஓஹோ... ஒவ்வொரு கடனுக்கான வட்டியும் 25 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது அவ்வளவு தானே என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எத்தனை கடன் வைத்திருந்தாலும் மொத்த வட்டித்தொகை 25 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது. வருமானம் வந்ததும் 30 - 35 சதவிகிதத்தை 30 - 35 வீட்டுச் செலவுகளுக்கு ஒதுக்கிவிடுங்கள். அடுத்த 25 - 30 சதவிகிதம் முதலீடுகளுக்கு, 10 சதவிகிதத்தை அவசரத் தேவைக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதி இருக்கும் 25 - 30 சதவிகிதம் கடனுக்கு செல்லட்டும். இதை டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்தாலே, கடன் பிரச்னையில் மூழ்காமல் தப்பித்துக் கொள்ளலாம். அப்புறம் என்ன மக்களே, உடனே இந்த விஷயத்தைத் தொடங்குங்கள்! Gold Rate: ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்னும் உயருமா? எப்போது முதலீடு செய்யலாம்? | Q&A
பாமகவில் மாம்பழம் யாருக்கு? மோதிக்கொள்ளும் இரு தரப்பினர்.. அன்புமணியா? ராமதாஸா?
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் முட்டி வரும் நிலையில் தற்போது பாமகவின் மாம்பழச் சின்னம் இருவரில் யாருக்கு என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பான கௌரவ மத்திய அமைச்சரின் கோரிக்கை ஆளுநரால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதோடு, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையுடன் இயங்கிவரும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மாத்திரம் தனி அலகாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது தொடர்பான கருத்தும் முன்வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவது தொடர்பான முன்மொழிவுக்கு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து, மத்திய சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை மேற்கொள்ளும் பொறிமுறைக்கும் இக்கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இவ்வுயர்மட்டக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.சிறிபவானந்தராஜா, சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், மற்றும் மாகாண, மத்திய அமைச்சின் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பல அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தனக்கு பாதுகாப்பில்லையென்கிறார் அருச்சுனா!
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இன்றைய தினமும் குழப்பங்களை விளைவித்திருந்த நிலையில் சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கையடக்கத் தொலைபேசி வழியே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் அருச்சுனாவால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி வசமுள்ள யாழ்ப்பாண பிரதேச சபையொன்றின் உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மல்லாகம் முகவரியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கட்சி அலுவலகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அடையாளம் தெரியாத இரண்டு நபர்களிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களையும் காவல்துறையிடம் கையளித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட நபர்!
இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவார் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பொது செயலாளர் சுமந்திரன், சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைத்தானே “பொதுச் செயலாளர்” என?
தன்னைத்தானே “பொதுச் செயலாளர்” எனக் கூறிக் கொண்டு செயல்படும் நபர்களுக்கு, கட்சி உறுப்பினர்களை உறுப்பினர் நிலைமையிலிருந்து நீக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் முழுமையாக கட்சி அரசியலமைப்புக்கும்,சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமானவையாகுமென தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன்; கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவாரென இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரையே கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. அது தொடர்பான கடிதமானது, கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டிற்கு இலங்கை தமிழரசுக் கட்சியினர் எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில், லோகேஸ்வரன் ஆதரவாக வாக்களித்ததையடுத்து நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை தமிழரசுக்கட்சி வசமிருந்த கரைதுறைப்பற்று பிரதேசசபை தேசிய மக்கள் சக்தியின் வசம் தற்போது வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரிமையாளருக்கு பாரிய நஷ்டம் ; எல்லோரையும் அதிரவைத்த லபுபு
உலகையே ஒரு காலத்தில் தன் பக்கம் ஈர்த்த ‘லபுபு’ (Labubu) பொம்மைகளைத் தயாரிக்கும் பொப் மார்ட் (Pop Mart) நிறுவனத்தின் உரிமையாளர் வாங் நிங்கின் (Wang Ning), சொத்து மதிப்பு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 38 வயதான வாங் நிங், முன்னதாக அலிபாபா நிறுவனர் ஜாக்-மாவை விட அதிக செல்வந்தராகத் திகழ்ந்தார். ஆனால் தற்போது லபுபு மோகம் குறைந்து வருவதால், அவரது சொத்து மதிப்பு 27.5 பில்லியன் டொலரிலிருந்து 16.2 பில்லியன் டொலராகக் […]
New Year 2026: பெங்களூருவில் பார், பப்கள் நள்ளிரவில் இயங்குமா? சிட்டி கமிஷனர் முக்கிய அறிவிப்பு
2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தயாராகி வரும் பெங்களூரு வாசிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மாநகர கமிஷனர் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன தெரியுமா?
2025-ல் தெலுங்கானாவில் நடந்த கோர விபத்துகள்.. உடலை உலுக்கிய சம்பவங்கள்.. அதிர்ச்சியில் மக்கள்!
2025 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தில் சிகாச்சி தொழிற்சாலை வெடிப்பு, குல்சார் ஹவுஸ் தீ விபத்து, மிர்ஜகுடா சாலை விபத்து என பல கோர சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மலேசியாவில் சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை தமிழ் மாணவர்கள்
இலங்கைத் தமிழ் விவாதக் கழகத்தின் (Tamil Debaters’ Council) தேசிய மேம்பாட்டுக் குழுவினர், மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். மலேசியா உத்தாரா பல்கலைக்கழகத்தினால் (UUM) ஏற்பாடு செய்யப்பட்ட “சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0” சர்வதேசப் போட்டியில், மலேசியாவுக்கு வெளியே இருந்து கலந்துகொண்டு கிண்ணத்தை வென்ற முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. வரலாற்றுச் சாதனை இதன் மூலம் இலங்கையின் சர்வதேச தமிழ் விவாத வரலாற்றுப் […]
கண்டி வெடிகுண்டு மிரட்டல் ; பொலிஸார் அறிக்கை
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, செயலகத்தின் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இது குறித்து கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், கண்டி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, பொலிஸ் விசேட […]
Victoria Public Hall Heritage Building Opens To Public
The historic Victoria Public Hall, a heritage building, has been fully restored without changing its original architecture. The restoration work
டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது
துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் […]
முக்கிய செய்தி: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா… The post முக்கிய செய்தி: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! appeared first on Global Tamil News .
Organic Molecules Found on Saturn’s Moon Enceladus
Scientists already believe that Enceladus, one of Saturn’s icy moons, could be a good place to look for alien life.
NASA Struggles to Reestablish Contact with MAVEN
NASA is having serious problems trying to contact its MAVEN spacecraft, which has not communicated for several weeks. MAVEN, a
ஹிந்துக்களுக்கும் சொந்தமானது வங்கதேசம்: 17 ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பிய கலீதா ஜியா மகன்
‘முஸ்லிம்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்கள், ஹிந்துக்கள் என அனைவருக்கும் சொந்தமானது வங்கதேசம்’ என்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடான வங்கதேசம் திரும்பிய முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (60) தெரிவித்தாா். வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக மத அடிப்படைவாத அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டுவரும் நிலையில், அடுத்து ஆட்சியமைக்கும் என கருதப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) இடைக்காலத் தலைவா் தாரிக் ரஹ்மான் இவ்வாறு தெரிவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது […]
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2000 ஆம் ஆண்டளவில் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளில் ஒன்று கம்ஹாவில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கைப்பற்ற விடயம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த கைத்துப்பாக்கியின் தொடர் இலக்கத்தை குறிப்பிட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட இத் துப்பாக்கிக்கு என்ன நடந்தது என கேட்டு அமைச்சருக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கம்ஹாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் உறுப்பினருக்கு தான் வைத்திருந்த துப்பாக்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முன்னர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரிந்திருக்கவில்லை. குறித்த துப்பாக்கியின் தொடர் இலக்கத்தின் மூலமே அது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Google Notebook Adds New Lecture Mode Feature
Over the summer, Google’s Notebook LM got a lot of attention for its ability to turn uploaded files into podcast-style
கோவா நைட் கிளப் தீ விபத்து.. நீதிமன்றம் கொடுத்த உத்தரவு என்ன தெரியுமா? லுத்ரா பிரதர்ஸின் நிலை!
கோவா அர்போரா நைட் கிளப் தீ விபத்து வழக்கில் லுத்ரா பிரதர்ஸ்க்கு டிசம்பர் 29 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மாபுசா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
Navin’s Launches Mayura Gardens in Valasaravakkam
Navin’s, Chennai’s most trusted real estate developer, has announced the launch of Navin’s Mayura Gardens, a premium residential Apartments located
Akhil Gupta joins NDTV as Chief Financial Officer
Mumbai: NDTV has named Akhil Gupta as its new Chief Financial Officer (CFO). Gupta announced his new role through a post on LinkedIn, marking a significant leadership addition to the Adani Group-owned media network.Announcing the development on his LinkedIn handle, Akhil shared, “I am happy to share that I am starting a new position as Chief Financial Officer at NDTV! Dreams do not just inspire they demand action. Today, I am honoured to share that I have been appointed Chief Financial Officer of NDTV, part of the Adani Group. This role represents one of the most significant milestones of my career not just for the responsibility it carries, but for the trust the Adani leadership has placed in me to lead the finance function of an institution that shapes public discourse and national conversation.” With over 19 years of experience across organisations such as PVR, Airtel, Infratel, Zydus and Adani, Gupta highlighted the core principles that have guided his professional journey.He noted, “Five principles have anchored my journey and continue to guide me: 1. Resilience is not optional - it is foundational Best leaders are not those who avoid adversity, but those who emerge from it with clarity and conviction. 2. Integrity is non negotiable Credibility is the most valuable currency a finance leader must build and never compromise. 3. Ownership transforms responsibility into impact moment you lead as if the business were your own, your decisions carry a different weight and so do your results. 4. Business Perspective leads numbers to judgment Financial acumen matters, but the ability to interpret data within strategic context must be the top priority of finance leader. 5. Continuous Learning keeps you relevant Complacency is the enemy of growth. Continuous learning is not a luxury, it is a mandate.” He further added, “Last but not least, I extend my sincere gratitude to Mr. Rahul Kanwal, CEO and Editor-in-Chief of NDTV, for granting me the invaluable opportunity to work alongside him.” Prior to joining NDTV, Gupta was associated with Adani Enterprises Limited as Business Unit Finance Controller for over three years. His career also includes stints at Zydus Cadila Healthcare Limited, Bharti Airtel Limited and PVR Limited, where he held key finance and leadership roles across complex business environments.
Winter Skin Glow with Honey and Malai
Winter can be tough on our skin. One day it feels soft and smooth, and the next it can become
நாய் கடித்த சில மணி நேரங்களில் இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு –உ.பி.யில் அதிர்ச்சி
லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள உத்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 23). கடந்த 20-ந்தேதி மாலை 6.30 மணியளவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று ராம்குமாரை கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் மருத்துவமனைக்கு செல்லாமல், ராம்குமார் வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினரிடம் நாய் கடித்தது பற்றி கூறியுள்ளார். நாய் கடித்த இடத்தில் மிக சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டிருந்ததால், அவரது குடும்பத்தினரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாய் கடித்த இடத்தை […]
ஊடக சுதந்திரமும் பொறுப்புக் கூறலும் – அரசாங்கம் VS எதிர்கட்சிகள்!
இலங்கையில் தற்போது ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பு குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும்… The post ஊடக சுதந்திரமும் பொறுப்புக் கூறலும் – அரசாங்கம் VS எதிர்கட்சிகள்! appeared first on Global Tamil News .
Mumbai: Limelight Lab Grown Diamonds, India’s no.1 lab-grown diamond jewellery brand, has announced a major expansion into in-house diamond growing and manufacturing capabilities, alongside a INR 250 crore fundraise to accelerate its next phase of growth. The move establishes Limelight as India’s first fully integrated lab-grown diamond (LGD) brand and reinforces its leadership in responsible luxury, with a target of 200 stores by 2027.The vertical integration marks a significant milestone in Limelight’s journey, enabling end-to-end control across the value chain. By bringing diamond growing and manufacturing in-house, the brand aims to reduce dependency on third-party suppliers, strengthen cost efficiencies, ensure consistent quality, and accelerate product innovation, exclusive collaborations, and faster market launches.The fresh capital will be deployed towards scaling Limelight’s retail footprint, enhancing design capabilities, and cementing its leadership position as the lab-grown diamond category witnesses rapid growth and increasing consumer adoption.Founded with the vision of fulfilling India’s diamond aspirations without compromising on design, quality, or values, Limelight has played a pioneering role in shaping the country’s LGD jewellery market. Today, it stands as the largest and most trusted brand in the segment, supported by a rapidly expanding exclusive retail network and growing consumer advocacy.As competition intensifies within the lab-grown diamond space, Limelight’s early investments in supply-chain integration and brand-building initiatives position it among the few well-capitalised players capable of scaling responsibly and sustainably.[caption id=attachment_2486159 align=alignleft width=200] Pooja Madhavan [/caption] “This capital raise and vertical integration mark a defining moment in Limelight’s growth journey,” said Pooja Madhavan, Founder and MD, Limelight Lab Grown Diamonds. “It enables an end-to-end control across the value chain offering enhanced transparency, traceability and technological innovations. This will strengthen our business, and equip us to scale responsibly while continuing to deliver superior quality and value to our customers. By providing a ‘rocks to retail’ offering to consumers, we are not just growing the brand; we are building the foundation for the future of fine jewellery in India and globally.” Limelight’s growth strategy continues to be anchored in responsible luxury, combining science, design innovation, and ethical practices to appeal to a new generation of consumers seeking transparency, sustainability, and design-led fine jewellery.
GV Prakash Kumar Falls Victim to Social Media Scam
Social media scams are becoming increasingly common and can target anyone, including celebrities. The latest person to fall victim is
UP Warriorz welcomes L’Oréal Professionnel as Title Sponsor for WPL Season 4
Mumbai: Capri Sports-owned UP Warriorz has announced L’Oral Professionnel as its Title Sponsor for the upcoming Women’s Premier League (WPL) Season 4, marking a strategic partnership rooted in confidence, expertise and women-first excellence.The association brings together UP Warriorz’s strong focus on empowering women in sport with L’Oral Professionnel’s legacy of professional beauty, innovation and performance. More than a logo-led sponsorship, the partnership will unfold through curated initiatives, content-driven storytelling and season-long integrations aimed at reinforcing the role of confidence and self-belief in helping women perform at their best, both on and off the field.[caption id=attachment_2486155 align=alignleft width=200] Jinisha Sharma [/caption] Jinisha Sharma, Director, Capri Sports, said, “This partnership represents much more than a sponsorship, it is a coming together of two brands that believe in the power of women and in the power of transformation. At UP Warriorz, we are focused on building an ecosystem where women are supported, celebrated and given the confidence to lead. L’Oral Professionnel Paris shares that vision, and together, we hope to create narratives that inspire young girls to dream fearlessly and pursue excellence, on the field and beyond.” Kshemal Waingankar, COO, UP Warriorz, added, “We are delighted to welcome L’Oral Professionnel as the Title Sponsor of UP Warriorz for WPL Season 4. Their commitment to empowering women resonates deeply with our values as a women-first franchise. This partnership goes beyond visibility, it reflects a shared belief in enabling women to perform at their best, in sport and in life. We look forward to building an impactful journey together.” Echoing this sentiment, Mathilde Barthlemy-Vigier, General Manager, L’Oral Professionnel India, said, “At L’Oral Professionnel, we believe in the power of transformation and building confidence to unlock one’s true potential. Partnering with UP Warriorz, a team that represents courage, professionalism and progress in women’s sport, is a natural extension of our values. Together, we celebrate women who challenge boundaries and inspire change, reinforcing our commitment to empowerment through excellence. It is a world where the Pros meet the Pros!”
HistoryTV18 and Rocky take #RoadTrippinWithRocky across NCR in a new season
Mumbai: HistoryTV18 is back with a brand-new season of its popular digital-first food and travel series, #RoadTrippinWithRocky, as celebrity chef Rocky Singh hits the roads of the National Capital Region (NCR). Airing across HistoryTV18’s and Rocky’s social media platforms from December 27 to December 30, the new season captures Rocky’s winter road trip through Noida, Faridabad, Gurugram and Delhi, uncovering iconic eateries and local favourites along the way.The journey begins in Noida with stops at the legendary Jain Tikki Wala in Sector 27 and the lively Social, before moving to Faridabad to explore neighbourhood spots loved by locals. In Gurugram, Rocky samples a mix of standout vegetarian fare, bold carnivore dishes at The Pit, and authentic Thai flavours at Banng. The season concludes in Delhi with a curated trail ranging from humble roadside falahar joints to refined fine-dining destinations that define the capital’s diverse food culture.Over the years, #RoadTrippinWithRocky has evolved into one of HistoryTV18’s most successful digital properties, designed for audiences who consume content on the move. Known for its relatable humour, spontaneity and conversational storytelling, the format has built a loyal fan base and consistently strong engagement across platforms. The franchise has clocked over 2 billion impressions and more than 550 million video views, underlining its scale and lasting digital impact.Viewers can follow Rocky’s NCR adventures from December 27 onwards on HistoryTV18’s and Rocky’s YouTube, Instagram, Facebook and X (Twitter) handles.
முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்'ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்'தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் 'வாரன் பஃபெட்'. இவர் 2001-ம் ஆண்டு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில், '20 ஸ்லாட் பன்ச் கார்டு' பற்றி பேசியது தற்போது செம்ம வைரல். அது என்ன '20 ஸ்லாட் பன்ச் கார்டு'? இதை வாரன் பஃபெட்டின் தியரி என்றே கூறலாம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் 500 வாய்ப்புகள் கிடைக்காது. குறைந்த வாய்ப்புகளே கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் '20 ஸ்லாட் பன்ச் கார்டு'. Warren Buffett - வாரன் பஃபெட் 'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'! அதாவது, ஒருவருக்கு வாழ்க்கையில் 20 வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போது, வாய்ப்புகள் குறைந்துகொண்டே வரும். ஒருமுறை ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி விட்டால், அதை மீண்டும் மாற்ற முடியாது. அதனால், ஒவ்வொரு முடிவையும் பார்த்து யோசித்து எடுக்க வேண்டும். ஏன் 20 முறை மட்டுமே? ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொண்டால் பல தவறான முடிவுகள் எடுக்கக்கூடும்... அவசர முடிவுகளும் எடுக்கக்கூடும். 20 வாய்ப்புகள் மட்டும் இருக்கும்போது, ஒவ்வொரு முடிவுகளையும் பார்த்து, நிதானமாக, யோசித்து எடுப்போம். இதனால், அந்த முடிவுகள் பெரும்பாலும் தவறாக வாய்ப்பில்லை. மேலும், அந்த முடிவுகள் நீண்ட கால அடிப்படையில் பலன் தர வேண்டும் என்பதனால் சரியாக முடிவு செய்து எடுப்போம். இந்த தியரி முதலீடுகளுக்கு மட்டுமல்ல... பிசினஸ் தொடங்கி அனைத்திற்குமே பொருந்தும். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இன்னும் ஐந்து நாள்களில் புத்தாண்டு. இனி உங்களது '20 ஸ்லாட் பன்ச்'சைத் தொடங்கி அடுத்தடுத்த முடிவுகளை சூப்பராக எடுங்க மக்களே. அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்:) வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க
குடும்பத் தகராறு ; பிரதேச செயலகத்திற்கு முன் தனக்கு தானே தீ மூட்டிய நபர்
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது உடலில் தீ வைத்துக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரித்துள்ளதாகக் கடிதம் குடும்ப உறவினர்கள் தான் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என சித்தரித்து, தனது பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரித்துள்ளதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் […]
இவர்கள் தான் 2025 சிறந்த டெஸ்ட் வீரர்கள்! ரிஷப் பண்டை தேர்வு செய்யாத அபினவ் முகுந்த்!
டெல்லி :2025 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் XI அணியை முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், உலகின் முன்னணி வீரர்களைத் தேர்ந்தெடுத்து அணியை அறிவித்தார். இந்த அணியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, இந்தியா ஆகிய நான்கு முன்னணி அணிகளின் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.அபினவ் முகுந்தின் அணியில் ஓப்பனர்களாக இந்தியாவின் கே.எல். ராகுலும் இங்கிலாந்தின் […]
Thalapathy Vijay’s Jana Nayagan Audio Launch Celebration
Thalapathy Vijay, the famous Tamil cinema star, is getting ready for the release of his latest film Jana Nayagan on
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கொடுத்த 8 முக்கிய அறிவிப்பு! என்னென்ன தெரியுமா?
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஊராட்சி முதல் நீதிமன்ற வளாகம் வரை என முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன என்று காண்போம்.
ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கு.. வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை.. ஈபிஎஸ் கண்டனம்!
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களை திமுக அரசு கைது செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
யூபிஐ வசதியில் வரும் பெரிய மாற்றம்.. இனி பாதுகாப்பாக இருக்கும்.. ஜனவரி 1 முதல் ரெடி!
ஜனவரி 1ஆம் தேதி முதல் யூபிஐ ஆட்டோ பே வசதியில் பெரிய மாற்றம் வருகிறது. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..!
Taylor Swift Cheers for Fiance Travis Kelce Christmas
Taylor Swift spent Christmas night at Arrowhead Stadium, showing her support for her football star fianc, Travis Kelce. The pop
Amitabh Bachchan Shares Joyful Christmas Cookie Moments
Bollywood superstar Amitabh Bachchan is celebrating Christmas with joy and festive cheer this year. The actor shared on his blog
Preity Zinta Shares Heartwarming Christmas Family Moments
Actress Preity Zinta added some festive joy to the holiday season by sharing glimpses of her Christmas celebrations on social
Hindustan Copper Shares Surge to 52-Week High
Shares of Hindustan Copper are seeing a strong rise on Dalal Street, driven by a wider surge in the commodity
ஆதார் கார்டில் அப்டேட் செய்ய இந்த நான்கும் முக்கியம்.. என்னனு பாருங்க!
ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதில் அப்டேட் செய்ய இந்த நான்கு வகையான ஆவணங்களும் அவசியம்.
India’s LPG Access and Usage Rise in 2025
India’s petroleum and natural gas sector made progress in 2025, improving fuel access, gas infrastructure, and alternative fuels, according to
காந்திநகர், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா(வயது 57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் இடத்தில் படுத்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தூங்கிக் கொண்டிருந்த நிதின், அப்படியே உருண்டு கீழே விழுந்துள்ளார். 10-வது மாடியில் இருந்து விழுந்த அவர், 8-வது மாடியில் வெளிப்புறமாக பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். […]
Rajat Verma joins Khimji Jewellers as Chief Marketing Officer
Mumbai: Khimji Jewellers has appointed Rajat Verma as its new Chief Marketing Officer (CMO), strengthening the brand’s leadership team as it accelerates growth and retail expansion across India. In his new role, Verma will lead the company’s marketing function, overseeing brand strategy, marketing execution, and consumer-focused initiatives across Khimji Jewellers’ portfolio.As part of the senior leadership team, Verma will play a key role in aligning marketing efforts with overall business objectives, particularly during the launch of new outlets. His responsibilities will span brand building, marketing strategy, and execution, while also supporting the company’s expansion plans in the Indian retail jewellery market.Verma joins Khimji Jewellers from V2 Retail Ltd., where he was instrumental in devising and executing marketing initiatives that drove growth across multiple areas of the business. With over two decades of experience in the retail and consumer sectors, he brings deep expertise in brand development, marketing-led expansion strategies, and consumer engagement.In his new assignment, Verma is expected to serve as a central pillar of Khimji Jewellers’ marketing operations, while also acting as a key driver of the company’s retail expansion ambitions in India.
திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா பராசக்தி? கடைசி நேரத்தில் வந்த திடீர் பிரச்சினை!
சென்னை :நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி இணை இயக்குநர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது ‘செம்மொழி’ என்ற தலைப்பிலான கதையை திருடி இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு படத்தின் ஜனவரி 10-ஆம் தேதி வெளியீட்டுக்கு சவாலாக அமைந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, கதை திருட்டு புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஜனவரி 2-ஆம் தேதி அறிக்கை […]

27 C