SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

வாட்டர் லெமன் ஸ்டாருக்கு மூன்று திருமணங்கள் நடந்ததா.. பிக்பாஸ் திவாகர் கொடுத்த எச்சரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று எலிமினேட் செய்யப்பட்டவர் திவாகர். வாட்டர் லெமன் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் வெளியே வந்த பிறகு நேர்காணல்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், சில நாட்களாக தன்னை பற்றி இணையத்தில் வைரலான செய்திகள் குறித்து பேசியுள்ளார்.

சமயம் 26 Nov 2025 9:27 am

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்கம், சினைப்பைகளையும் சேர்த்து நீக்குவது சரியா?

Doctor Vikatan: என் அக்காவுக்கு 45 வயதாகிறது. ப்ளீடிங் பிரச்னைகள் காரணமாக பல வருட சிகிச்சை எடுத்தார். இப்போது கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்கிறார் மருத்துவர். தேவைப்பட்டால் சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டியிருக்கலாம் என்கிறார். இப்படி கர்ப்பப்பையை அகற்றும்போது சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டுமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் வழக்கமாக, 45 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு, சினைப்பையில் பிரச்னைகள் இல்லாத பட்சத்தில் கர்ப்பப்பையை அகற்றும்போது, சினைப்பைகளையும் சேர்த்து அகற்ற மாட்டோம். கர்ப்பப்பையையும், சினைக்குழாய்களையும் மட்டும் நீக்கிவிடுவோம். சினைப்பைகளை பத்திரப்படுத்தவே நினைப்போம். அதையும் தாண்டி, சிலருக்கு குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் சினைப்பை புற்றுநோய் இருந்தால், கர்ப்பப்பையை நீக்கும்போது சினைப்பைகளையும் நீக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 50- 51 என்று இருக்கிறது. அந்த வயது வரை இதயத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு மிக அவசியம். அந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை சுரப்பவை சினைப்பைகள் என்பதால், முடிந்தவரை அவற்றை அகற்றாமல் பத்திரப்படுத்தவே முயல்வோம். குழந்தைப்பேற்றை முடித்துவிட்ட பெண்கள், கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னைகள் வந்தால், அதை அகற்றத் தயங்க வேண்டியதில்லை. அப்போதும் சினைப்பைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். மருத்துவர் ஆலோசனை கர்ப்பப்பையை அகற்றும்போது, கர்ப்பப்பையின் வாயும் அகற்றப்படும். அதன் விளைவாக சில பெண்களுக்கு வெஜைனா வறண்டுபோவதால்  தாம்பத்திய உறவில் சிக்கல்கள் வரலாம். இதைத் தவிர்க்க, 'சப்டோட்டல் ஹிஸ்டரெக்டமி' (subtotal hysterectomy) என்றொரு வழி இருக்கிறது. அதில் கர்ப்பப்பை வாய்ப்பகுதியைத் தக்கவைத்துவிடுவோம். எனவே, வெறும் ப்ளீடிங் தொடர்பான பிரச்னைக்காக மட்டும் கர்ப்பப்பையை நீக்குவோருக்கு, இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  கர்ப்பப்பை பிரச்னைகளுக்கு மருந்தாகும் சப்பாத்திக்கள்ளி கிரேவி!

விகடன் 26 Nov 2025 9:00 am

திருச்சி என்.எஸ்.பி. சாலையை 'நோ வெண்டிங் ஜோன்' ஆக அறிவிக்க முடிவு!

திருச்சி மாநகராட்சி சார்பில் என் எஸ் பி சாலையை விற்பனை செய்ய அனுமதி இல்லாத பகுதியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நெரிசல் இல்லாத பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 26 Nov 2025 8:59 am

சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்

சீனாவின் நடவடிக்கை நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறினார்கள். இதற்கு காரணமாக, அவர்கள் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் பிராந்தியம் என்று கூறுகிறார்கள் - இது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கின் சமீபத்திய பதிவு. ஷாங்காய் விமான நிலையம் Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? இந்தப் பதிவு இந்தியா - சீனா உறவில் சிக்கலை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் மாநிலமாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை, 2006-ம் ஆண்டு முதல் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை இந்தியா சற்றும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் பதில் 'பிரேமா வாங்ஜோம் தோங்டாக் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்' - இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும் காரணம் இது. இந்தியாவின் பதிலடி பிரேமா தடுக்கப்பட்டதற்கும், சீனாவின் பதிலுக்கும் கடுமையான பதிலடியை தந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். அவர், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி ஆகும். இது வெளிப்படையான உண்மை. இதை சீனா எவ்வளவு மறுத்தாலும், அது மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றாது. ரந்தீர் ஜெய்ஸ்வால் அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது? இந்தத் தடுப்பு விவகாரத்தை பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான பயண மரபுகளை மீறும் இந்த செயலுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. சீனாவின் இந்த செயல், அனைத்து தேசத்தினரும் அவர்களது நாட்டில் 24 மணி நேரம் எந்த விசாவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்கிற அவர்களது சொந்த விதிமுறையை மீறியது ஆகும் என்று பதிவிட்டுள்ளார். Our response to media queries on statements made by the Chinese Foreign Ministry⬇️ https://t.co/3JUnXjIBLc pic.twitter.com/DjEdy7TmTK — Randhir Jaiswal (@MEAIndia) November 25, 2025 `இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

விகடன் 26 Nov 2025 8:47 am

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டம்.. தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை - மக்களே அலெர்ட்!

மலாக்கா ஜலசந்தி பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சமயம் 26 Nov 2025 8:44 am

எரிமலை வெடிப்பு: சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்களுடன் நகரும் மேகங்கள்! விமான சேவை பாதிப்பு!

எத்தியோப்பியா எரிமலை வெடித்துச் சிதறிய நிலையில், சாம்பல் மேகங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்கள் கலந்திருப்பதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது. இந்த சாம்பல் மேகக் கூட்டங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு, சிறிய கண்ணாடித் துகள்கள், பாறைகளின் துகள்கள் கலந்துள்ளது. மேலும், மணிக்கு 100 முதல் 120 கி.மீ. […]

அதிரடி 26 Nov 2025 8:30 am

மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

video link- https://fromsmash.com/LZnrytHXgf-dt அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொண்டிருந்தனர். இதன் போது சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி சூட்சுமமாக மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக […]

அதிரடி 26 Nov 2025 7:56 am

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து முனையம் விரைவில் திறப்பு!

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் தயாராகி வரும் ஆம்னி பேருந்து முனையம் கட்டுமானப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிந்து விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 26 Nov 2025 7:53 am

திருச்சி கோட்டை ரயில் நிலைய மேம்பால பணி தாமதம் ஏன்?

திருச்சி மாவட்டத்தில் கோட்டை ரயில் நிலைய மேம்பால பணிகள் 2025-ம் ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து தாமதம் ஆகி வருவது மக்களிடையே ஏமாற்றத்தை அளிக்கிறது.

சமயம் 26 Nov 2025 7:42 am

சூட்சும கடத்தல்: மாசி கருவாடு சம்பல் போத்தலில் போதை மாத்திரை – யாழ்ப்பாணத்தில் 3 பேர் கைது!

கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் இன்று கைது செய்யப்பட்டனர். மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டவரே யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை கடத்தல் மற்றும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைதான மூன்று […]

அதிரடி 26 Nov 2025 7:04 am

துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி 2 மகசீன்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன. கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழு ஒன்று சனிக்கிழமை (22) மாலை குறித்த துப்பாக்கியை மீட்டு எடுத்துச் சென்றிருப்பதாக நேரில் கண்டவர்கள் எமது […]

அதிரடி 26 Nov 2025 6:55 am

சென்னை மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகளுக்கான கடுமையான விதிகளில் தளர்வுகள்!

சென்னை யில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கான தடைகளை தளர்த்தி சென்னை மாநகராட்சி பல்வேறு விதிகளை விதித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 26 Nov 2025 6:54 am

செட்டிகுளத்தில் சிறப்பாக நடைபெற்ற தெய்வீக கிராம நிகழ்வு

நேற்றைய தினம் செட்டிகுளம், முகத்தான்குளம் சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் தெய்வீக கிராம நிகழ்வானது சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் வெங்கலச்செட்டிகுள பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் குறித்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வான ஆன்மீக ஊர்வலமானது கமநல சேவைகள் நிலையத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு ஆலய முன்றலில் முடிவடைந்திருந்தது. குறித்த ஊர்வலத்தை தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு நந்தி கொடியேற்றப்பட்டதுடன், பல்வேறு சமய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், பிரதேச அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. வெங்கல செட்டிகுள் பிரதேச […]

அதிரடி 26 Nov 2025 6:49 am

நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?

’’ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவிர நாம் என்னென்ன சாப்பிடுகிறோம்? இந்தக் கேள்விக்கு டீ, காபி, பிஸ்கட், வடை, பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, குளிர்பானம்... என நீள்கிறது பதில் பட்டியல். இரண்டு வேளை உட்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தனர் நம் முன்னோர். இன்றோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்தாலுமேகூட, ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நொறுக்குத் தீனி இல்லாமல் இருக்க முடிவது இல்லை. இதனால், உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு என ஏராளமான பிரச்னைகள் வரிசைக்கட்டி வருகின்றன’’ என்கிற சர்க்கரை நோய் சிறப்பு நிபுணட் ஜெயஸ்ரீ கோபால், நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது முதல் நொறுக்குத் தீனிகளால் வரக்கூடிய பிரச்னைகள் வரை விரிவாகப் பேசுகிறார். நொறுக்குத்தீனி ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில், உடலுக்குக் கட்டாயம் உணவு தேவைப்படும்போது சத்தான ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், வலுக்கட்டாயமாக பிஸ்கட்டையோ, பஜ்ஜியையோ சாப்பிடுவது தவறு. வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள் நாம் சமைக்கும் ஒவ்வோர் உணவுக்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம்தான் உண்டு. வீட்டில் தயாரித்து ஒரு வாரமோ, ஒரு மாதமோ பத்திரப்படுத்திச் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இந்த வகை நொறுக்குத் தீனிகளே. வீட்டில் செய்த அதிரசம், லட்டு, ஜாங்கிரி, முறுக்கு, காராசேவு முதலானவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றைத் தேவையற்ற நேரங்களில் சாப்பிடும்போது, கார்போஹைட்ரேட் அதிகரிக்கும். இவை கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படும். இதனால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள் இவற்றில், செயற்கை நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டிக்கும். இதனால்தான் ஒரு முறை வாங்கிச் சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் வாங்கிச் சாப்பிடத் தூண்டுகின்றன. இவை நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க, பதப்படுத்திகளைச் சேர்க்கின்றனர். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் ஆபத்துகள் குறித்து, பல ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. பாக்கெட் உணவுகளில் வேதியல் பொருட்கள், உப்புகள், பதப்படுத்திகள், நிறமூட்டிகள் போன்றவை கலக்கப்பட்டிருப்பதால், இவற்றை உண்ணும்போது பல வகையான ஹார்மோன் பிரச்னைகள் வருகின்றன. அதில் மிக முக்கியமானது சர்க்கரை நோய். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலருக்கும் ஹார்மோன் சமச்சீரின்மைப் பிரச்னை சமீபகாலங்களில் அதிகரிக்க, இந்த உணவுகள் முக்கியக் காரணி. `கெட்ட கொழுப்புன்னு ஒண்ணுமே இல்ல’ - US டாக்டர் சொன்னது உண்மையா? ஜங் ஃபுட் பீட்சாவும் பர்கரும் மட்டும் அல்ல, சமோசாவும் பஜ்ஜிகளும் ஜங்க் ஃபுட் தான். பலர் ‘பீட்சா சாப்பிடுவது தவறு’ எனச் சொல்லிக்கொண்டே, டீக்கடையில் சமோசா, பஜ்ஜிகளை வெளுத்துக் கட்டுவார்கள். பேக்கரிகளில் விற்கப்படும் உணவுகள், ஐஸ்க்ரீம், கேக் என கிட்டத்தட்ட அனைத்து நொறுக்குத்தீனிகளும் ‘ஜங் ஃபுட்’ என்ற வரையறைக்குள் அடங்கிவிடுபவை. அதிக சர்க்கரை, அதிக உப்பு, அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள் அனைத்துமே ஜங்க் ஃபுட்தான். இதனால்உடல்பருமன் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கூடவே, சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. நொறுக்குத்தீனி மனதைக் கட்டுப்படுத்த முடியாதது ஏன்? சிலர் ‘நொறுக்குத்தீனி சாப்பிடுவது தவறு எனத்தெரிகிறது. ஆனால், மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்பார்கள். அது உண்மைதான். ஏனெனில், காலம்காலமாக நமது முன்னோர்கள் சிறுதானியங்கள், கம்பு, சோளம் போன்றவற்றையே சாப்பிட்டுவந்தார்கள். அந்தக் காலத்தில் இனிப்புகள், அரிசி உணவுகள் போன்றவை கிடைப்பது அரிது என்பதால், அந்த உணவுகளை சாப்பிட ஏக்கம் இருக்கும். இனிப்பு, கார வகை முதலான நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலே ஏன் நினைத்தாலேகூட எச்சில் ஊற ஆரம்பிக்கும். பரம்பரை பரம்பரையாக ஜீன்கள் வழியாக நமக்கும் அந்தப் பழக்கம் தொடர்கிறது. நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலோ, முகர்ந்தாலோகூட உடனடியாக மூளையில் எண்டார்பின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பித்துவிடும். இந்த ஹார்மோன் சுரக்கும் நேரங்களில் மகிழ்ச்சியான உணர்வு பெருகும். எனவேதான் இனிப்பு போன்ற நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடும்போது, மன நிறைவு கிடைக்கிறது. நொறுக்குத்தீனி மன அழுத்தம் உள்ளவர்கள் ஒரு குலோப்ஜாமூனையோ, ஐஸ்க்ரீமையோ சாப்பிட்டால்கூட நார்மலுக்குத் திரும்பிவிடுவார்கள். அதன் ரகசியம் இதுதான். எனவே, உணவைப் பார்த்தால் உடனே சுவைக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதைத் தவறு எனக் கருத வேண்டாம், ஆனால், அந்த உணர்வைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். கூடுமானவரை, ஸ்நாக்ஸ், பேக்கரி இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். நொறுக்குத்தீனிகளின் விளைவை கருத்தில் கொண்டு அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். யோகா மூலம் மனம் கட்டுப்பாடு அடைகிறது எனக் கருதுபவர்கள், யோகா போன்றவற்றை செய்து, மனதைக் கட்டுக்குள் வைக்கலாம். Gout: மூட்டு வாதம் வரக் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் & தீர்வுகள் நொறுக்குத்தீனிக்கு மாற்று என்ன? ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைக் கட்டாயம் சாப்பிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனிகளின் தேவையைக் குறைக்கும். • வாயில் எதையாவது அரைத்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பொட்டுக்கடலை, பொரி, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம். • ஓர் உணவு வேளைக்கும், இன்னோர் உணவு வேளைக்கும் இடையில் பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதன் மூலம் நொறுக்குத்தீனி சாப்பிடும் உணர்வைக் குறைக்கலாம். • மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம். • தியேட்டர், பள்ளி வளாகங்கள், டீக்கடைகள் போன்றவற்றில் பாப்கார்ன், கோலா பானங்கள், பிரெஞ்ச் ஃபிரைஸ், சிப்ஸ் போன்றவற்றை விற்பதைத் தவிர்த்து, பொரி உருண்டை, வேர்க்கடலை, பொரி போன்றவற்றை விற்பதையும், அவற்றை வாங்கிச் சாப்பிடவும் ஊக்கப்படுத்தலாம். • கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவை நல்லவையே. எனினும், வெல்லம், எண்ணெய், கடலை, எள் போன்றவை ஒன்று சேரும்போது கலோரி அதிமாகிவிடும். எனவே, இவற்றையும் எப்போதாவது சாப்பிடுவதே சிறந்தது. • பேரீச்சம்பழம், திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம். • நொறுக்குத்தீனிக்குப் பதில் ஃபுரூட் சாலட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட்? - இவை உடலில் செய்யும் மாற்றங்கள் என்ன?

விகடன் 26 Nov 2025 6:47 am

நெல்லை: கனமழை, அணைகள் திறப்பு; தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு | Photo Album

நெல்லை:கனமழை|அணைகள் திறப்பு|தாமிரபரணி வெள்ளப்பெருக்கு|இடிந்து விழுந்த வீடுகள்#Rain Alert 2025-26

விகடன் 26 Nov 2025 6:34 am

உக்ரைனை வலுப்படுத்தும் சமரசங்களுக்குத் தயாா்: ஸெலென்ஸ்கி

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் திட்டத்தில் உக்ரைனை வலுப்படுத்தக்கூடிய சமரசங்களை செய்துகொள்ளத் தயாா் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்தாா். ஸ்வீடனில் நடந்த நிகழ்ச்சியொன்றி காணொலி மூலம் பேசிய ஸெலென்ஸ்கி, இது குறித்து கூறியதாவது: அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தைய நடத்திவருகிறோம். அதற்காக சில சமரசங்களை செய்துகொள்ளவும் தயாா். ஆனால் அந்த சமரசங்கள் உக்ரைனை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்; பலவீனப்படுத்தக் கூடாது. ஜெனீவா பேச்சுவாா்த்தைகளுக்குப் […]

அதிரடி 26 Nov 2025 6:09 am

யாழில் பொலிஸ் கெடுபிடிகள் அதிகரிப்பு

மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் புதன்கிழமையும் மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் அதற்கான அலங்கரிப்பு பணியில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்றவும் வல்வெட்டித்துறை பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். குறித்த பதாகையில் உள்ள பாதணி விடுதலைப் புலிகளினை உருவகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி அது தொடர்பிலும் சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு வந்த தெல்லிப்பழை பொலிஸார் குறித்த ஒலிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று அவற்றை சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர். மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளமை , ஆட்சி மாறினாலும் பழையவாறே அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள் தொடர்கின்றன என விசனம் தெரிவிக்கப்படுகிறது.

பதிவு 26 Nov 2025 4:27 am

ஒன்லைன் கேம் விளையாட காதலனின் தாயாரின் நகைகளை திருடிய கிளிநொச்சி பெண் கைது

நிகழ்நிலை விளையாட்டில் ஈடுபட (Online game) காதலனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்த நிலையில் , இளைஞனின் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்தமையால் யுவதி சில நாட்கள் இளைஞனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் , வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த இளைஞனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. அது தொடர்பில் கடந்த 17ஆம் திகதி தாயார் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞனின் காதலியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இளைஞனின் தாயாரின் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதுடன் , திருடிய நகைகளில் தாலிக்கொடி உள்ளிட்ட ஒரு தொகுதியை , சாவகச்சேரி பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்ததாகவும் , மற்றுமொரு தொகுதி நகைகளை யாழ் . நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாகவும் , தெரிவித்துள்ளார் ரிக்ரொக்கில் அறிமுகமான நண்பன் ஒருவருடன் தான் , ஒன்லைன் கேம் விளையாடுவதாகவும் , அதற்கு இதுவரையில் சுமார் 27 இலட்ச ரூபாய் வரையில் செலவழித்து உள்ளதாகவும் , மேலும் பணம் தேவைப்பட்டதால் தான் நகைகளை திருடியதாகவும் அப்பெண் விசாரணைகளில் தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு தொகுதி நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர் அத்துடன் அப்பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை , இவ்வாறான ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட , தனது நகைகளை விற்று பணம் செலுத்திய பெண்ணொருவர் , வீட்டில் பெற்றோர் நகைகள் தொடர்பில் கேட்ட போது அவை களவு போனதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை அடுத்து பெற்றோர் குறித்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் , அப்பெண்ணே , தனது நகைகளை விற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து பெண்ணை கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்தனர் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இணைய விளையாட்டுக்களில் பெரும்பாலான இளையோர் பெருந்தொகை பணத்தினை இழந்து வருவதுடன் , கடந்த மாதம் இரு இளைஞர்கள் இணைய விளையாட்டுக்காகக பணம் செலுத்த பெருந்தொகைகளை கடன் பெற்று , கடன் சுமையினால் தமது உயிரை மாய்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 26 Nov 2025 4:18 am

மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் –ஐரிஷ் வீரரின் பதிவு வைரல்

அயர்லாந்து மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர், மரணத்தில் தருவாயில் சென்றபோது இயேசுவை சந்தித்ததாக கூறியுள்ளது வைரலாகியுள்ளது. கானர் மெக்ரேகோர் பிரபல MMA மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர் (Conor McGregor) அயர்லாந்தில் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் மற்றும் புளோரிடாவில் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடி வருகிறார்.Conor McGregor இந்த நிலையில் கானர் மெக்ரெகோர் தனது சமூக ஊடகப் பதிவில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது. 37 வயதான அவர் தனது பதிவில், “நண்பர்களே, நான் திரும்பி வந்துவிட்டேன். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் […]

அதிரடி 26 Nov 2025 3:30 am

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க போப் லியோ வேண்டுகோள்

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 303 குழந்தைகள் மற்றும் 12 ஆசிரியர்கள் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. முன்னதாக கடந்த 18-ந்தேதி எர்கு நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 40 பேரை ஆயுதக்குழுவினர் […]

அதிரடி 26 Nov 2025 1:30 am

அம்பாறையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

video link- https://fromsmash.com/bMrbxFkcu2-dt அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.மேலும் அம்பாறை கல்முனை பிரதான வீதிகளை இணைக்கும் மாவடிப்பள்ளி-காரைதீவு செல்லும் பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதுடன் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக அம்பாறை கொண்டைவட்டுவான் குளத்தின் நீர் சுமார் ஆறு அங்குலம் நிரம்பி வழிகிறது. இதன் […]

அதிரடி 26 Nov 2025 12:30 am

சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் நீர் பரவல் ஆரம்பம்

சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் நீர் பரவி வடிந்தோட ஆரம்பித்துள்ளது தொடர் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக கிட்டங்கி வீதி இவ்வாறான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி செல்வதை அவதானிக்க முடிகின்றது. கல்முனை, நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் நீர் பரவுவதால் இன்று போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் மிக அவதானத்துடன் செல்வதை காண முடிந்தது. கல்முனை சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை […]

அதிரடி 25 Nov 2025 11:30 pm

SRM Prime Hospital Uses Bovine Pericardial Patch in Novel Endoscopic Procedure to Stop Stool Leakage through Neovagina

In a first for Tamil Nadu, SRM Prime Hospital has successfully used a bovine pericardial patch to close a neovaginal

சென்னைஓன்லைனி 25 Nov 2025 11:28 pm

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி

video link- https://fromsmash.com/b1DlYbvywc-dt அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் கல்முனையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று(24) நடைபெற்ற வேளை இவ்வாறு குறிப்பிடப்பட்டது. இதன்போது எதிர்வரும் நவம்பர் 27 ஆந் திகதி கார்த்திகை […]

அதிரடி 25 Nov 2025 11:22 pm

கெயில் இந்தியா நிறுவனத்தில் 29 காலிப்பணியிடங்கள்; ரூ.2.40 லட்சம் வரை சம்பளம் - விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்

மத்திய அரசின் கீழ் கெயில் இந்தியா நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் பல்வேறு பதவிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமயம் 25 Nov 2025 11:14 pm

நிந்தவூரில் வெள்ள நிலை ஏற்படுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

கடந்த இரு தினங்களாக இது வரும் அடை மழை காரணமாக மழை நீர் வழிதோட முடியாது தடைபட்டுள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நிந்தவூர் பிரதேச சபை முடுக்கி விட்டுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் எம் ஐ இர்பான் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட தியேட்டர் வீதி மற்றும் இமாம் றூமி வீதியின் வடிகாலமைப்பில் உள்ள தடைகளை நீக்கும் நடவடிக்கைகள் இன்று (25) இடம்பெற்றது. இதில் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ இப்திகார் […]

அதிரடி 25 Nov 2025 11:11 pm

தமிழ்நாட்டுக்கு விஜய் போல்... புதுச்சேரிக்கு சார்லஸ் மார்டினா? புதிய கட்சி முடிவும் பாஜகவின் பின்னணியும்...

தமிழ்நாட்டில் விஜய்யை அரசியலுக்கு பாஜக தான் அழைத்து வந்ததாக கூறப்படும் நிலையில், புதுச்சேரியில் சார்லஸ் மார்டினை தூண்டி பாஜக புதிய கட்சி தொடங்க வைக்க முயற்சிக்கிறதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமயம் 25 Nov 2025 10:58 pm

204வது கொடியேற்று விழாவிற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வரும் 204வது கொடியேற்று விழாவிற்கு பிரதியமச்சர் வசந்த பியதிஸ்ஸ , பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா வருகை தந்திருந்தனர். நிகழ்வில் விழா ஏற்பாடுகள் குறித்தும், மக்கள் பங்கேற்பு தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டதோடு விஷேட துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றது. நிகழ்வில் விழாவின் பாரம்பரியமும், நாட்டில் கடற்கரைப் பள்ளிவாசலின் ஆன்மீக முக்கியத்துவம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது. […]

அதிரடி 25 Nov 2025 10:56 pm

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி

பெரூட், இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் கடந்த ஆண்டு அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்பட பலர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே போர் […]

அதிரடி 25 Nov 2025 10:30 pm

2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது போட்டி அட்டவணை!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நடப்பு சாம்பியன் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இலங்கையும் இணைந்து அடுத்தாண்டு (2026) டி20 உலகக் கோப்பைத் தொடரை நடத்துகின்றன. இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட ஐ.சி.சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மேலும், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த ஆண்டு மகளிர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பையின் விளம்பர தூதராக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் ஒருவர் உலகக் கோப்பை தொடரின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. A two-time @t20worldcup champion, a record-setter across T20 World Cups and now the tournament ambassador for ICC Men's #T20WorldCup 2026 The one and only Rohit Sharma pic.twitter.com/iAoBJKoAC0 — ICC (@ICC) November 25, 2025 அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட அட்டவணையின்படி இந்தியாவில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியம், கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியம், மும்பை வான்கடே ஸ்டேடியம், சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆகிய 5 மைதானங்களில் போட்டி நடைபெறும். இலங்கையில் கண்டி பல்லேகலே ஸ்டேடியம், கொழும்புவில் ஆர். பிரேமதாச ஸ்டேடியம் மற்றும் எஸ்.எஸ்.சி ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் நடைபெறும். Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்' - ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குரூப் A-யில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா (USA) ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில், மார்ச்சில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தங்கள் நாட்டுக்கு வராததால் இனி இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு ஐ.சி.சி தொடரிலும் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துவிட்டதால், பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது குரூப் B-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. குரூப் C-யில் வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. குரூப் D-யில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இந்த நான்கு குழுக்களில் இடம்பெற்றிருக்கும் அணிகள் தங்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு லீக் போட்டியில் ஆட வேண்டும். இந்த லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளும் தலா 4 அணிகள் என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். அதில், லீக் சுற்றைப் போலவே ஒவ்வொரு அணியும் தங்களது குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் ஆட வேண்டும். சூப்பர் 8 சுற்று முடிவில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் 4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா - இந்தியாவின் அதிகபட்ச சேசிங் என்ன? அரையிறுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்ற இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், லீக் சுற்று போட்டிகள் பிப்ரவரி 7 முதல் 20 வரையிலும், சூப்பர் 8 சுற்று போட்டிகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரையிலும், அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி மார்ச் 8-ம் தேதியும் நடைபெறும். மார்ச் 4-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அல்லது இலங்கை முன்னேறினால் அப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். அவ்வாறு அந்த இரு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை எனில் அப்போட்டி கொல்கத்தாவில் நடத்தப்படும். மார்ச் 5 அரையிறுதிப் போட்டி மும்பையில் நடத்தப்படும். அதேபோல், இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும்பட்சத்தில் அப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லையெனில் அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறும். 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஆடும் லீக் போட்டிகள் லீக் சுற்றில் இந்தியா பிப்ரவரி 7-ம் தேதி அமெரிக்காவையும் (மும்பை), 12-ம் தேதி நமீபியாவையும் (டெல்லி), 15-ம் தேதி பாகிஸ்தானையும் (கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியம்), 18-ம் தேதி நெதர்லாந்தையும் (அகமதாபாத்) எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் சென்னையில் இந்தியாவுக்கு ஒரு போட்டியும் இல்லை. ஆனால், லீக் சுற்றில் மொத்தமாக 6 போட்டிகள், சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டி என மொத்தம் 7 போட்டிகள் சென்னையில் நடைபெறும். கடைசியாக 2016-ல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறி அரையிறுதியில் வெஸ்ட் இன்டீஸிடம் தோல்வியடைந்ததும், இறுதிப் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. `அன்று கோலி விக்கெட்; இன்று சதம்' - இந்தியாவுக்கெதிராக ஜொலிக்கும் தமிழன்! Senuran Muthusamy யார்?

விகடன் 25 Nov 2025 9:59 pm

மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப‌ மாற்றியமைக்கப்படுகிறதா? - கேள்வியெழுப்பும் மீனவர்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சமீபக் காலமாக மெரினா கடற்கரையில் நடைபெற்ற அழகுப்படுத்தல் முயற்சிகளான- மூங்கில் நிழற்குடை, வசதியான நாற்காலிகள், புகைப்பட இடங்கள், சுத்தமான நடைபாதை என பல மாற்றங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. கடற்கரைக்கு ஒரு புதிய தோற்றம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். ஆனால், இந்தக் கொண்டாட்டத்தின் நடுவே சில முக்கிய குறைகளையும் சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக, மெரினாவை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் மீனவர்கள் சந்திக்கும் பாதிப்புகள் குறித்து கவலைகளை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து மை விகடனுக்கு வந்த கட்டுரை பின்வருமாறு.. மெரினா கடற்கரை சமீபகாலமாக, சென்னை மெரினா கடற்கரையில் மூங்கில் நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், தன்பட இடங்கள் (Selfie spot) போன்றவை அமைக்கப்பட்டு வருவதை சென்னை நகர மக்கள் அறிவர். நீலக் கொடி மண்டலம் (Blue Flag Zone) என்ற திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையை அழகுப்படுத்துவது என்ற பெயரில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மெரினா கடற்கரைக்கு செல்லும் மக்கள் இதுகுறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நொச்சிக்குப்பம்: ``கடல நம்பி வாழுற எங்கள நசுக்காதீங்க - `நீலக்கொடி' திட்டத்தை எதிர்க்கும் மீனவர்கள் ஆனால், பொழுதுபோக்கிற்காக அல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மெரினாவைச் சார்ந்துள்ள மீனவ மக்களோ இத்திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தையும் கடலையும் நாசமாக்கும் என்று போராடி வருகின்றனர். மீனவ மக்களின் இந்த எதிர்ப்பின் காரணமாகவே, தொடக்கத்தில் கலங்கரை விளக்கம் அருகே கொண்டு வரத் திட்டமிடப்பட்டிருந்த நீலக்கொடி கடற்கரை திட்டம், அண்ணா நீச்சல்குளம் அருகே மாற்றப்பட்டு 20 ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெரினா கடற்கரை நீலக்கொடி (Blue Flag) என்பது சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (FEE) எனும் டென்மார்க் நாட்டைச் சார்ந்த அரசு சாரா நிறுவனத்தால் வழங்கப் படும் சுற்றுச்சூழல் அங்கீகாரச் சான்றிதழாகும். இது முறையான கழிவு மேலாண்மை வசதிகள், மருத்துவ உதவி மையங்கள், நீரின் தரம் உள்ளிட்ட சுற்றுச் சூழல்,கல்வி மற்றும் பாதுகாப்பு சார்ந்த 33 அம்சங் களை பூர்த்தி செய்யும் கடற்கரைகள், சிறு படகுத் துறைமுகங்கள், சுற்றுலா படகுகளுக்கு அளிக்கப் படும் சுற்றுச்சூழல் குறியீடாகும். இந்த சர்வதேச அங்கீகாரத்தை பெற்றால் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்; நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்த முடியும் என்று கூறி பல்வேறு நாடுகளும் இத்திட்டத்தை அமல்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றன. இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு `நீலக்கொடி' சான்றிதழ்... எதற்காக வழங்கப்படுகிறது? இதே காரணத்தைக் கூறிதான் இந்தியாவில் மத்திய அரசும் தமிழக அரசும் நீலக்கொடி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் முதன்முதலாக 2021-இல் கோவளம் கடற்கரையில் நீலக்கொடி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய பிறகு அக்கடற்கரையை வாழ்வாதாரமாக நம்பியிருந்த மக்களின் வாழ்நிலை தலைகீழாகிப் போனது. நூற்றுக்கணக்கான கடைகள் இருந்த கோவளம் கடற்கரையில் தற்போது எந்தக் கடைகளையும் நம்மால் காண முடியவில்லை. மீனவர்கள் கடற்கரையில் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கோ வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை வைப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.  இவையில்லாமல், மீன் பிடிப்பதற்கு கொடுக்கப்பட்ட பல்வேறு நெருக்கடிகளால், மீன் பிடித் தொழில் ஒன்றையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 500 குடும்பங்கள் நிர்கதியாகின. இதுமட்டுமின்றி, நீலக் கொடி திட்டத்தின் விளைவாக கோவளம் கடற்கரையின் இயற்கை அமைப்பே சிதைக்கப்பட்டு வருவதாக வேதனைப்படும் இயற்கை ஆர்வலர் குமார், கோவளம் கடற்கரையில் எந்த விதிகளையும் மதிக்காமல் மணல் மேடுகளுக்கு மேலே கட்டுமானக் குப்பைகளை கொட்டுகின்றனர். கடற்கரைக்கு மிக அருகிலேயே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு என்ற அம்சமே இங்கு பின்பற்றப்படுவதில்லை. எந்தவொரு சுத்திகரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல், முகத்துவாரம் அருகில் தெற்கு எல்லையில் கற்கள் கொட்டப் பட்டிருக்கும் இடத்தின் அருகில் கழிவு நீரை அப்படியே கலந்து விடுவார்கள் என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார். கோவளத்தை போலவே மெரினா கடற்கரையிலும் முதலில், கடற் கரையை சுத்தப்படுத்துகிறோம் என்று கூறி உழைக்கும் மக்கள் விரித்துள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்படும். இதனால் இந்த வியாபாரத்தையே நம்பியிருக்கும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். ஏழை, எளிய உழைக்கும் மக்களை துரத்தி விட்டு, அவ்விடங்களில் மேட்டுக் குடியினருக்கான வியாபாரத்தை நடத்த தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். அடுத்ததாக,'அழகுப்படுத்துதல்' என்ற பெயரில் மெரினாவில் மீன்பிடித் தொழிலை மேற்கொள் வதற்குத் தடை விதிக்கப்படலாம். இதனால்,மெரினா கடற்கரையில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்திவரும் திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் மற்றும் அயோத்திக் குப்பம் ஆகிய சுற்றுவட்டார மீனவக் கிராமங்களிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக்கப்படுவர். மேலும், கடற்கரைகளில் வியாபாரம் நடத்துபவர்களில் பெரும்பாலானோர் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பெண்களே என்பதால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாழ்க்கையும் சுக்குநூறாகும். மறுபுறம், மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப‌ மாற்றியமைக்கப்பட்டால் தற்போது இருப்பதைப் போல உழைக்கும் மக்களால் அங்கு சென்று பொழுதுபோக்க முடியாது. விலைவாசி உயர்வு, உழைக்கும் மக்களை அச்சுறுத்தும் கட்டுப்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் என மெரினா கடற்கரை உழைக்கும்வர்க்கத்திடமிருந்து அந்நியமாக்கப்பட்டு, திறந்த வெளி வணிக வளாகத்தை போல மாற்றியமைக்கப்படும் அச்சம் ஏற்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை மெரினாவில் நீலக்கொடி திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காந்தி சிலை முதல் லூப் சாலையில் நொச்சி நகர் வரை 30 ஏக்கர் பரப்பளவில், திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய கடற்கரைகளுக்கான இரண்டாம் கட்டத் திட்டத்தை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை எதிர்த்து கடந்த செப்டம்பர் 26 அன்று 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கடலில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களுக்கு போராடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதுவரை இந்தியாவில் உள்ள 12 கடற்கரைகளுக்கு நீலக் கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில் சென்னையின் கோவளம் கடற்கரையும் அடங்கும். அவ்வகையில் நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் நீலக் கொடி அங்கீகாரம் பெறும் நோக்கில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காவல் நிலை மாற்ற அமைச்சகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.  ஏற்கனவே மெரினா கடற்கரை கடலூரின் சில்வர் கடற்கரை காமேஸ்வரம் கடற்கரை நாகப்பட்டினம், அரியமான் கடற்கரை ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதனை இன்னும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கான அறிவிப்பை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் திருவான்மியூர் பாலவாக்கம் முத்தண்டி மற்றும் தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் அடுத்ததாக கீழ் புதுப்பட்டு (விழுப்புரம்) சாமியார் பேட்டை (கடலூர்) உள்ளிட்ட கடற்கரையில் நீலக்குடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  நகரமயமாக்கல் திட்டங்களின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பூர்வ குடி மக்களிடமிருந்து நகரம் பறிக்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்கள் பறிக்கப்படுகிறது. பழங்குடியின மக்களிடமிருந்து காடு மலைகள் பறிக்கப்படுகிறது அதேபோல் நீலக் கொடி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் 100க்குடி மீனவ மக்களிடம் இருந்து கடல் பறிக்கப்படுகிறது. கடல் காடு நகரம் அனைத்தும் கார்ப்பரேட்களுக்கு தாரைவாக்கப்பட்டு மண்ணின் மைந்தர்களான கூறக்கூடிய மக்கள் அகதியாக்கப்படுகின்றனர். இதற்கு எதிரான அறவழிப்போராட்டத்தை கட்டமைப்பதன் மூலமாகத்தான் நம் வருங்கால சந்ததிகள் அமைதியாக வாழ இயலும். 

விகடன் 25 Nov 2025 9:59 pm

உலகில் குழந்தைகளை வளர்க்க சிறந்த நாடுகள் இதுவா? வெளியான சுவாரசிய தகவல்

உலகில் குழந்தைகள் வளர்க்க ஏற்ற சிறந்த நாடு எது என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுவாரசிய தகவலை காண்போம்.

சமயம் 25 Nov 2025 9:54 pm

தமிழீழ தேசியக்கொடிக்கான கனேடிய அங்கீகாரம்!

தமிழீழ தேசியக்கொடிக்கான கனேடிய அங்கீகாரம் இலங்கை அரசை அச்சமூட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின் உடனான சந்திப்பின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அத்தகைய கோரிக்கையை விடுத்துள்ளார். “இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் ., கனடாவில் வாழும் சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சில நடவடிக்கைகள் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளமையை சுட்டிக்காட்டியதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.; இதனிடையே விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என தூதர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கனடா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.” என்று தூதுர் தெரிவித்தார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பதிவு 25 Nov 2025 9:45 pm

அம்பிபிட்டிய தேரர் உள்ளே!

மட்டக்களப்பில் இனவாதத்தை கக்கிவரும் அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்பவரால் இரண்டு ஆண்டுகளிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சுமனரத்த தேரரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததாக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்கள் வெட்டிக் கொல்ல வேண்டும் என அம்பிட்டிய சுமனரத்த சுமணரத்ன தேரர் கூறியது தொடர்பில் அவர் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கைதிற்கான உத்தரவு பிறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதனிடையே நாமல் ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு அம்பிட்டிய சுமனரத்த தேரர் பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 25 Nov 2025 9:42 pm

புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்கிறார் கனேடிய தூதுவர்!

விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என என… The post புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்கிறார் கனேடிய தூதுவர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 9:36 pm

மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

கோலாலம்பூர், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், மோசடி ஆகியவை அதிகரித்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாக பூதாக்கரமாக வெடித்துள்ள இந்த சீர்கேட்டை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வந்தன. சிறுவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளதாக தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த சிறுவர்களுக்கு […]

அதிரடி 25 Nov 2025 9:30 pm

காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவல் நமக்கு வந்தது. நேரில் சென்று விசாரித்தோம்! அப்படி என்றால் அங்கு படிக்கும் குழந்தைகள் இப்போது எங்கு படிக்கின்றனர் என்று கேட்க தோன்றும். ஆம்! அங்கு படிக்கும் குழந்தைகள் சுமார் 2 ஆண்டுகளாக அருகில் அட்டை போட்ட சிறு வீட்டில் கழிவறை வசதியின்றி, அவசர தேவைக்கு அருகிலுள்ள வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி வரும் நிலை நீடித்துவருகிறது. சுமார் 25 குழந்தைகள் பயின்று‌ வரும் இந்த அங்கன்வாடி பள்ளி பற்றி அங்குள்ள நபர்களிடம் கேட்ட போது, ``பல கிராம சபை கூட்டங்களில் பல மனுக்கள் அளித்தும் இதுவரை புதிய கட்டடம் கட்டித்தர அரசு முன்வரவில்லை. கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் டெண்டருக்கு பிறகு கட்டடம் கட்டப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்‌ கூறியிருக்கிறார். அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றனர். குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, ``சுமார் 2 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றனர். இது குறித்து காமலாபுரம் ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, ``புதிய கட்டடத்திற்கான முன்மொழிவு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பபட்டுள்ளது. அவர் ஒப்புதல் தந்ததும் கட்டடம் கட்டப்படும் என்றார். சுமார் 2 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அரசு விரைந்து இனியும் காலம் தாழ்த்தாமல் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது!

விகடன் 25 Nov 2025 9:11 pm

`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album

செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு

விகடன் 25 Nov 2025 8:59 pm

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! - என்ன ஸ்பெஷல்?

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள்

விகடன் 25 Nov 2025 8:58 pm

தொல்லியல் அடையாளங்களும் தொடரும் சர்ச்சைகளும்! தொடரும் சர்ச்சைகளும்!

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய… The post தொல்லியல் அடையாளங்களும் தொடரும் சர்ச்சைகளும்! தொடரும் சர்ச்சைகளும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 8:40 pm

புனித மண், இயற்கை அழகு… ஆனால் நீடிக்கும் வேதனை: கொடைக்கானலின் பழமை வாய்ந்த கிராமத்தின் மறுபக்கம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் கொடைக்கானல் என்றாலே குளு குளு காலநிலையும், மேப்பல் மரங்களும், நட்சத்திர ஏரியும்தான் நம் நினைவுக்கு வரும். சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான அந்தப் பனிமலைப் பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள், வெளியுலகின் ஆரவாரங்கள் எதுவும் எட்டாத, காலத்தின் உறை நிலையில் ஒரு கிராமம் அமைந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அதுதான் வெள்ளகவி! கொடைக்கானல் வெள்ளகவி நூற்றாண்டுகள் கடந்தும் தொடரும் நடைபயணம் கொடைக்கானல் மலையகத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான, தனித்துவமான கிராமங்களில் ஒன்று வெள்ளகவி. சுமார் 300 முதல் 500 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது இந்தக் குடியிருப்பு. பழங்குடியின மக்களும், பின்னர் குடியேறிய விவசாயக் குடும்பங்களும் இணைந்து உருவாக்கிய ஒரு சிறப்புமிக்க சமூகக் கட்டமைப்பு இது. ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டிலும், டிஜிட்டல் இந்தியாவின் வெளிச்சம் முழுமையாகப் படாத ஒரு பகுதியாகவே இது இருக்கிறது. காரணம்? சாலை வசதி இல்லை! இந்த கிராமம் முழுமையாகக் கொடைக்கானல் வனப் பாதுகாப்பு மண்டலத்தின் உள்ளே அமைந்திருப்பதால், சாலை அமைப்பதற்கான அனுமதி பல ஆண்டுகளாகக் கானல் நீராகவே உள்ளது. ஒற்றையடிப் பாதையும், கரடுமுரடான கால்நடை வழியும்தான் இவர்களின் 'தேசிய நெடுஞ்சாலை'. வெளியுலகை அடைய வேண்டுமென்றால், செங்குத்தான மலைகளில் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரக் கடுமையான நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். அவசர சிகிச்சைக்கு வழியில்லை! சாலை இல்லாத துயரம், வெள்ளகவி மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு அவசர மருத்துவ உதவி என்றால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலை இங்கு தொடர்கிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அந்த செங்குத்தான மலைப்பாதையில் அவர்கள் ஏறி இறங்குவதைக் கற்பனை செய்து பாருங்கள். அது மருத்துவமனைக்கான பயணம் அல்ல; உயிருடன் நடத்தும் போராட்டம். பல நேரங்களில் அடிப்படை சிகிச்சைகூட உரிய நேரத்தில் கிடைக்காமல் போவதுதான் நிதர்சனம். கல்வியும் ஒரு போராட்டமே! கல்விக்காக இங்கிருக்கும் சிறு குழந்தைகள் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தினமும் குன்றுச்சரிவுகளையும், அடர்ந்த காட்டுப் பாதைகளையும் கடந்துதான் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு சாகசப் பயணம்தான். வீட்டிற்குத் தேவையான ஒரு குண்டூசி முதல் அரிசி மூட்டை வரை எதுவாக இருந்தாலும், கொடைக்கானல் நகருக்கு நடைப்பயணமாகச் சென்று, தலைச்சிறையாகச் சுமந்து வர வேண்டிய நிலையே இன்றும் தொடர்கிறது. செருப்பு அணியாத பூமி! இத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும், வெள்ளகவி ஒரு ஆன்மீகப் பூமியாகத் திகழ்கிறது. கிராமத்தின் மையத்தில் பழங்காலம் தொட்டு வழிபாட்டில் இருக்கும் காளிகாம்பாள் மற்றும் தாதையார் கோவில்கள், இவர்களின் ஆதித் தமிழ்க் கலாச்சாரத்தின் சாட்சிகள். ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இந்தச் சின்னஞ்சிறிய மலைக் கிராமத்தில் சுமார் 24 முதல் 25 கோவில்கள் வரை உள்ளன. இந்த கிராமம் முழுவதுமே புனிதப் பகுதியாகக் கருதப்படுவதால், ஊருக்குள் காலணிகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை என்ற பழக்கவழக்கம் இன்றளவும் அங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பசுமை சூழ்ந்த இயற்கை எழில், சத்தமில்லாத அமைதியை விரும்புவோருக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. வைரலான வீடியோவும்... விடியாத வாழ்வும்! வெளியுலகின் கண்களில் படாமல் மறைந்து கிடந்த இந்த மலைக் கிராமத்தின் நிஜ முகத்தை, சமீபத்தில் வெளியான ஒரு யூ டியூப் வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியது. இன்ஃப்ளூயன்சர் தமிழரசன் உருவாக்கிய வெள்ளகவி கிராமம் பற்றிய வீடியோ 97 லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலானது. அந்த வீடியோ மூலம்தான் வெள்ளகவி மக்களின் துயரமும், வாழ்வியலும், தேவைகளும் பொதுமக்கள் மத்தியிலும், அதிகாரிகளிடமும் சென்றடைந்தது. இதன் பின்னர் அரசுத் துறைகளின் கவனம் இந்தப் பக்கம் திரும்பியதாகச் சொல்லப்பட்டாலும், நடைமுறை மாற்றங்கள் என்னவோ மிக மிக மெதுவாகவே நகர்கின்றன என்பதுதான் கிராம மக்களின் ஆதங்கம். காத்திருக்கும் நம்பிக்கை! வெள்ளகவி மக்கள் கேட்பதெல்லாம், அடிப்படை வசதிகள் தான். அவசர மருத்துவ சேவைகளுக்கான துரிதமான அணுகல். தற்போதைய காட்டுப்பாதைகளைப் பாதுகாப்பான படிக்கட்டுகள், கைப்பிடி தடுப்புகளுடன் மாற்றுதல். முறையான கல்வி, மின்சாரம், தூய்மையான குடிநீர் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள். நீண்ட காலமாகச் சாலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலைக் கிராம மக்களின் இந்த அடிப்படைக் கோரிக்கைகள் விரைவில் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கையை அவர்கள் இன்னமும் கைவிடவில்லை. சாலை என்பது இவர்களுக்கு ஒரு சொகுசு வசதி அல்ல; அடிப்படை உரிமை! அந்த உரிமைக்காக நூற்றாண்டுகளாகக் காத்திருக்கும் வெள்ளகவி மக்களின் குரல், உரியவர்களின் செவிகளை எட்டுமா? தேர்தல்

விகடன் 25 Nov 2025 8:40 pm

கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் –என்ன காரணம்?

பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின்(PIA) ஊழியர்கள் கனடாவிற்கு சென்று அங்கு மாயமாகி வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கனடாவில் மாயமாகும் PIA ஊழியர்கள் PIA நிறுவனத்தின் மூத்த விமானப் பணிப்பெண்ணான ஆசிப் நஜாம், கடந்த நவம்பர் 16 ஆம் திகதி லாகூரிலிருந்து PK-789 விமானத்தில் டொராண்டோவிற்கு வந்தார். நவம்பர் 19 அன்று லாகூருக்கு திரும்பும் PK-798 விமானத்தில் அவர் பணிக்கு வரவில்லை. இது குறித்து அவரிடம் நிறுவனம் தரப்பில் இருந்து தொலைபேசியில் கேட்டபோது, […]

அதிரடி 25 Nov 2025 8:30 pm

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை… The post ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 8:19 pm

தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொறியாளர்!

தென்காசி மாவட்டம், வி.கே புதூர் அருகே கீழ வீராணம் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் அவரது தந்தையின் பெயரில் வி.கே புதூரில் உள்ள நிலத்திற்கு மின் கம்பம் வைப்பதற்கு ரூபாய் 24,000 பணம் செலுத்தி, இலவச விவசாய மின் இணைப்பு வாங்கியுள்ளார். இந்த மின் இணைப்பு சம்பந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வி.கே புதூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் வைக்க வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. கைதானவர்கள் அப்போது அதற்கான ஆவணங்கள் மற்றும் ரூபாய் 10,000 பணத்துடன் தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பணத்தை கொடுக்க முடியாததால் குறைத்து கூறுமாறு கூறிய நிலையில், ரூபாய் 7,000 கொடுத்தால் தான் மீட்டர் பொருத்துவேன் என இளநிலை பொறியாளர் திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் இந்நிலையில் லஞ்ச பணத்தை கொடுக்க முடியாததால் செல்வகணேஷ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் பணத்தை இளநிலை பொறியாளர் தனது நண்பர் துரையிடம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் ரசாயனம் பவுடர் தடவிய ரூபாய் 7,000 கொடுக்கும் பொழுது கையும் களவுமாக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இளநிலை பொறியாளர் பிரேம் மற்றும் அவரது நண்பர் துரை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகடன் 25 Nov 2025 8:16 pm

சிவகாசி: நிறுவனத்தின் அருகில் மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் விநாயகர் காலனியில் வசிப்பவர் கென்னடி கண்ணன்( வயது 50 ). இவர் சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் செல்லும் சாலையிலுள்ள காளியம்மன் கோயில் பழைய தெருவின் பின்புறம் லட்சுமி வெடி பட்டாசு போன்ற பட்டாசுகள் தயாரிக்கத் தேவையான காகிதங்களைத் தயாரிக்கும் காகித கட்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் அருகே ஆட்களின் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி என்பதால் காளியம்மன் கோயில் பழைய தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அங்கேயே சில அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை கென்னடி கண்ணன் அடிக்கடிக் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கென்னடி கண்ணன் இதனால் தொடர்ச்சியாகப் பிரச்னையிருந்து வந்த நிலையில் கென்னடி கண்ணன் தனது நிறுவனத்தைச் சுற்றிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கண்காணித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் கென்னடி கண்ணனின் நிறுவனத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் கென்னடி கண்ணனும், அவரது மனைவி மஞ்சுளாவும் தங்களது நிறுவனத்தினுள் அமர்ந்து பேப்பர்களை தரம் பிரிக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டப் பகலில் நிறுவனத்தின் பின் பக்க ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனை இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் கென்னடி கண்ணன் அணிந்திருந்த மேல் சட்டை தீப்பிடித்து எரிந்து அவரது முதுகில் தீக்காயம் ஏற்பட்டதுடன், வைக்கப்பட்டிருந்த பேப்பர் பண்டல்களிலும் தீப்பிடித்து எரிந்து சேதமானது. காயமடைந்த கென்னடி கண்ணன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாசி டிஎஸ்பி அனில் குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சிவகாசி வட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 25 Nov 2025 8:12 pm

தூத்துக்குடியில் டிடிஎப் வாசன்: அஜித் பாணியில் பயணிக்க விருப்பம்!

யூடியூபர் டிடிஎப் வாசன், நடிகர் அஜித்தை போல் கார் ரேஸில் கலக்க ரெடி! வரும் 2029-ல் தேசிய அளவிலான சாம்பியன் போட்டியில் பங்கேற்க பயிற்சி எடுத்து வருகிறார். அவரது 'IPL' திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசிய அவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

சமயம் 25 Nov 2025 8:00 pm

`விஜய்யின் தவெக-வில் இணையப் போகிறீர்களா?' - செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய நிருபர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக-வில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிசாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுக-வை துண்டு துண்டாக்கியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் ``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம் இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுக-வினர் ஒன்று சேரவில்லை என்றால், புதிய கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், 50 ஆண்டுக்காலம் அதிமுக-விற்காக உழைத்திருக்கிறேன். பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறேன். கட்சிக்காக என்னை அர்பணித்திருக்கிறேன். இன்று அதற்குப் பரிசாக அதிமுக-வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறேன். அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராகக்கூட இன்று நான் இல்லை. மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் என்றார். ஓ.பன்னீர்செல்வம் ``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை 'விஜய்யின் தவெக கட்சியில் இணையப் போகிறீர்களா?' என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், மெளனமாகச் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். 'இந்த மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாமா?' என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். திடீரென செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைவதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. இதை அறிந்த செங்கோட்டையன் மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன.

விகடன் 25 Nov 2025 7:56 pm

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET): மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிக்கல்! உச்ச நீதிமன்ற தீர்ப்பால் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து. முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி, சட்ட திருத்தம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். இது ஆசிரியர்களின் உரிமைகளையும், குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கும் என கவலை தெரிவித்துள்ளார்.

சமயம் 25 Nov 2025 7:44 pm

அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கை க்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான அனர்த்த அபாய குறைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (25.11.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், உள்ளூராட்சி மன்ற கெளரவ தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சமூகத்தோடு அண்ணியொன்னியமாக செயற்பட்டு மக்களுக்கு இடர் முகாமைத்துவ சேவைகளை வழங்கியவர்கள் என்ற ரீதியில், வெள்ள அனர்த்த நிலைமைகளில் மட்டுமல்லாமல் […]

அதிரடி 25 Nov 2025 7:41 pm

IIT Madras Open House Scheduled January 2026

The Indian Institute of Technology (IIT) Madras will open its doors to school and college students, teachers, researchers, industry professionals,

சென்னைஓன்லைனி 25 Nov 2025 7:41 pm

Delhi schools closure update amid rising pollution concerns

As air pollution in Delhi worsens, students and parents are asking if all schools in the city will be closed.

சென்னைஓன்லைனி 25 Nov 2025 7:35 pm

பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம்

ஜேர்மனியில் சிரிய அகதிகளுக்கு எதிரான உணர்வு அதிகரித்துவருகிறது. மழலையர் பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைக்கூட உங்கள் நாட்டுக்குப் போங்கள் எனக் கூறுவதால் அகதிகளிடையே கலக்கம் உருவாகியுள்ளது. உங்கள் நாட்டுக்குப் போங்கள் ஒரு காலத்தில் போருக்குத் தப்பி வந்த சிரிய அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்றார் ஜேர்மன் சேன்ஸலராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல். ஆனால், இன்றைய சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸோ, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சிக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துவருவதைத் தடுக்க, தானும் புலம்பெயர்தல் எதிர்ப்பு […]

அதிரடி 25 Nov 2025 7:30 pm

Rare Middle Jurassic Dinosaur Fossil Discovered Isle Skye

Scientists have made an amazing discovery on the Isle of Skye. They found one of the rarest fossils of dinosaurs

சென்னைஓன்லைனி 25 Nov 2025 7:24 pm

Antarctic Ozone Layer Shows Signs of Recovery

The Antarctic ozone layer is slowly healing, scientists say. On September 9, it reached an annual maximum size of 8.83

சென்னைஓன்லைனி 25 Nov 2025 7:19 pm

புதிதாக வந்த தொழிலாளர் சட்டத்தால் பாதிப்பா? முழு நேர வேலைகள் என்ன ஆகும்?

புதிதாக அமலுக்கு வந்துள்ள தொழிலாளர் சட்டங்களால் முழு நேர வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கும்?

சமயம் 25 Nov 2025 7:17 pm

iPhone 16 Now Available Under Rs 40,000

The iPhone 16 is now available for less than Rs 40,000. If you want to upgrade from an older iPhone

சென்னைஓன்லைனி 25 Nov 2025 7:04 pm

Apple iPhone Fold: Most Expensive Phone Yet

Apple is preparing to launch its first foldable phone, called the iPhone Fold. Reports say the company plans to enter

சென்னைஓன்லைனி 25 Nov 2025 6:56 pm

கடும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை.. குடும்பத்துக்கு மாதம் 5000 ரூபாய்!

கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சமயம் 25 Nov 2025 6:55 pm

திருச்சியில் ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்: வெளிமாநில இளைஞர்கள் கைது!

திருச்சியில், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞர்கள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 268 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சமயம் 25 Nov 2025 6:49 pm

கோவை செம்மொழி பூங்கா திறப்பு: தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? திமுக மீது பாஜக தாக்கு

கோவை செம்மொழி பூங்கா திறப்பு விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனா்.

சமயம் 25 Nov 2025 6:45 pm

Simple and Flavorful Thai Chicken Soup Recipe

Here’s a simple version of your fragrant Thai chicken soup recipe: Ingredients 2 litres (3 pints) chicken stock 2 lemongrass

சென்னைஓன்லைனி 25 Nov 2025 6:42 pm

பிஎஃப் ஊழியர்களுக்கு இலவசமாக கிடைக்கும் ரூ. 7 லட்சம்.. இப்படி ஒரு வசதி இருக்கா!!

சம்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கு மூலமாக 7 லட்சம் ரூபாய் வரை இலவச காப்பீடு பெறலாம்.

சமயம் 25 Nov 2025 6:42 pm

இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (copy right) குறித்த சா்ச்சை எப்போதும் சூடான விவாத… The post இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 6:34 pm

பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் –வைரலாகும் வினோத கிராமம்!

பூமிக்கு அடியில் வடிவமைக்கப்படும் சொகுசு பங்களாக்கள் வைரலாகி வருகிறது. யாவோடாங்குகள் சீனாவில் உள்ள லோஸ் பீடபூமியில் மக்கள் பூமிக்கு அடியில் வசித்து வருகிறார்கள். யாவோடாங்குகள் என்று அழைக்கப்படும் இந்த குகை வீடுகள் சுமார் 2000 முதல் 4000 ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கிறது. சுமார் 40 மில்லியன் பேர் இந்த வீடுகளில் தான் வசித்து வருகிறார்களாம். அந்த பகுதியில் மண் மென்மையாகவும் எளிதில் செதுக்கக்கூடிய வகையிலும் இருக்கும். செங்கற்கள் அல்லது கற்களைப் பயன்படுத்தி வளைவான அறைகள் கட்டியும் வீடுகளை […]

அதிரடி 25 Nov 2025 6:30 pm

`அதிமுக - தேமுதிக; வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணியா?' - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார். தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி `` 'நேத்து முளைச்ச காளான்' என விஜய்யை சொல்லவில்லை - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்! இந்நிலையில் இன்று நீலகிரி சென்று படுகர் இன மக்களோடு அவர்கள் கலாசாரம் உடை அணிந்து நடனமாடி மகிழ்ந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூட்டணி குறித்து, அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்தோம். வெறும் ராஜ்ய சபா சீட்டுக்கு ஆசைப்பட்டு கூட்டணி வைக்க மாட்டோம். தேமுதிக தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்று பேட்டியளித்திருக்கிறார்.

விகடன் 25 Nov 2025 6:13 pm

5 Natural Home Remedies for Perioral Dermatitis Relief

Perioral dermatitis, also called Stewardess disease, may sound complicated, but if you’ve noticed small bumps, redness, or a rash around

சென்னைஓன்லைனி 25 Nov 2025 6:10 pm

தூத்துக்குடியில் கனமழை: நீர் வெளியேற்றும் பணி தீவிரம் - கனிமொழி, கீதாஜீவன் ஆய்வு!

தூத்துக்குடியில் 3 நாள் கனமழையால் ரஹ்மத் நகர், ஆதி பராசக்தி நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து, நீர் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினர். மாநகராட்சி மற்றும் திமுக சார்பில் ஏராளமான மோட்டார்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை மீட்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் உடனிருந்தனர்.

சமயம் 25 Nov 2025 6:03 pm

தொடர்ந்து சொதப்பும் இந்தியா…கெளதம் கம்பீரை கடுமையாக கலாய்த்த ஐசுலாந்து!

டெல்லி :தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 தோல்வியை எதிர்கொள்ளும் சூழலில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் எதிர்காலம் சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது. கம்பீர், தற்போது டெஸ்ட், ஒருநாள், டி20 அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆனால், இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்விகள், BCCI-யை டெஸ்ட் வடிவத்திற்கு புதிய பயிற்சியாளரை தேட வைக்கலாம் என்ற ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. கம்பீரின் தலைமையில் இந்தியாவின் வீட்டில் டெஸ்ட் சாதனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; கடைசி 6 வீட்டு […]

டினேசுவடு 25 Nov 2025 6:02 pm

நாகூர் தர்கா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- நாளை முன்பதிவு ! வெளியான முழு தகவல்

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் வேளாங்கண்ணி இடையே நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 25 Nov 2025 6:00 pm

Natural DIY Skincare Remedies Making a Strong Comeback

The beauty world is seeing a shift, with more people returning to natural remedies for skin care. Many are turning

சென்னைஓன்லைனி 25 Nov 2025 5:58 pm

`தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம்

தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் பாஜக அரசு இரயில்வே துறையில் வஞ்சகம் செய்வதாக சு.வெங்கடேஷன் எம்.பி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் இதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. இரயில்வே துறை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. ஆனால் தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கும் சில கோரிக்கைளை முன் வைத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 2020ல் நிறுத்தப்பட்ட இந்த சலுகையினால் மூத்தோர் மருத்துவம் மற்றும் திருத்தலப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக்கட்டண சலுகைகளும், அபராத ரத்து செய்யும் முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன. பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் கிடைக்கவில்லை. இரயில்வே துறை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடைபெறுகிறது. பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டாலும், தெற்கு ரயில்வேக்கு அதில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இரண்டாவது முனையம் அமைப்பது அவசியம். கோயம்புத்தூர் ப்ளாட்ஃபாரங்கள் மிகுந்த நெரிசலுடன் செயல்பட்டு வருவதால் போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும். அதேபோன்று மதுரை கூடல் நகரிலும் இரண்டாவது ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும். ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய இன்டர்லாக் செய்யாத கேட்டுகளை உடனடியாக இன்டர்லாக் கேட்களாக மாற்றுவதற்கு போதிய நிதி வழங்க வேண்டும். செம்மங்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு விபத்து போன்றவை இன்டர்லாக் கேட் இல்லாததாலேயே நடக்கின்றன. அஷ்வினி வைஷ்ணவ் - மத்திய இரயில்வே அமைச்சர் கொல்லம்–நாகூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். இறுதியாக மதுரையிலிருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

விகடன் 25 Nov 2025 5:54 pm

நெல்லியடி கொலை –இருவர் கைது

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தஇளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை… The post நெல்லியடி கொலை – இருவர் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 5:51 pm

நெல்லியடி கொலை –இருவர் கைது

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞன் கடந்த செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்களை அம்பாறை பகுதியில் வைத்து ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட […]

அதிரடி 25 Nov 2025 5:50 pm

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததா?

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் விடயங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று (25) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். பொருளியல் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் ஊகங்களின் அடிப்படையில் வினாக்கள் வழங்கப்பட்டதன் […]

அதிரடி 25 Nov 2025 5:45 pm

Mastercard unveils ‘Tap Your Phone, Pay in Style’ to champion mobile contactless payments

New Delhi: Mastercard has announced the launch of its latest campaign, ‘Tap Your Phone, Pay in Style’, aimed at encouraging consumers across India to embrace the convenience and confidence of mobile contactless payments. Designed to highlight how a simple tap can make everyday transactions seamless, the campaign underscores the blend of speed, security, and style that defines Tap & Go technology.The campaign centers on the lifestyle appeal of hassle-free payments, showcasing how mobile contactless transactions fit naturally into the routines of India’s growing digital-first population.Fronted by rising stars Ishaan Khatter—whose Bollywood film Homebound is India’s official entry for the 98th Academy Awards—and Krithi Shetty from Tollywood, the initiative brings to life five cinematic films. Each film captures the pulse of modern India, turning everyday payment moments into reflections of identity, confidence, and ease.Rolling out across five phases, the campaign starts with teasers on digital and social platforms, followed by the release of the main films and weekly content bursts designed to build sustained engagement. Creators across finance, fashion, lifestyle, and entertainment will share their personal ‘tap moments’ through Instagram Reels, Stories, and YouTube Shorts. Interactive challenges, quizzes, and user-generated content will further drive participation, embedding Tap & Go into the habits of Gen Z and millennial consumers.To support adoption, Mastercard is partnering with issuing banks, merchant ecosystems, and retail partners nationwide. The company emphasized that mobile contactless payments deliver unmatched convenience by merging speed, security, and simplicity—empowering consumers to “tap without a second thought.”As part of on-ground activation, Mastercard will introduce ‘Tap Zones’ at popular restaurants, cafs, and retail hotspots, enabling consumers to experience mobile contactless payments firsthand.[caption id=attachment_2482128 align=alignleft width=200] Lavani Agarwal [/caption] “Indian consumers today don’t just use technology—they expect it to enhance and integrate seamlessly into their daily lives. Mobile contactless payments meet this expectation by being secure, efficient, and in tune with the personal style and lifestyle choices of the digital-first generation,” said Lavani Agarwal, Vice President, Marketing and Communications, South Asia, Mastercard. The creative direction for the campaign is led by McCann Worldgroup India. “Our idea was to transform a simple tap into a moment of self-expression—capturing the mood of modern India where payments are personal, not mundane,” said Prasoon Joshi, CEO & CCO, McCann Worldgroup India. With its fusion of music, movement, and modernity, Mastercard’s ‘Tap Your Phone, Pay in Style’ celebrates a lifestyle where technology elevates everyday experiences—making payments not just effortless, but expressive.https://www.youtube.com/watch?v=hjkknSh010o&feature=youtu.behttps://www.youtube.com/watch?v=Nblk5BEOt-chttps://youtu.be/8FUWPsmjgnI

மெடியானேவ்ஸ்௪க்கு 25 Nov 2025 5:40 pm

Moderate Lung Clots May Protect Against Sepsis

A new preclinical study shows that moderate blood clotting in the lungs may actually help protect against sepsis-related acute respiratory

சென்னைஓன்லைனி 25 Nov 2025 5:39 pm

Fortune completes 25 years as India’s trusted kitchen essentials brand

Mumbai: AWL Agri Business Ltd. (formerly Adani Wilmar Limited) has announced the 25-year milestone of its flagship brand Fortune, celebrating a journey that mirrors the rapid rise and transformation of India’s FMCG and packaged food industry. Launched in 1999 as an edible oils brand, Fortune has evolved into one of India’s most trusted names in food essentials—today present in one in every three Indian households with a wide portfolio of edible oils, atta, rice, besan, pulses, sugar, ready mixes, spreads, and other staples.The milestone comes at a time when India’s FMCG sector has witnessed extraordinary expansion. Over the last two decades, the market has grown nearly fivefold, driven by rising incomes, deeper rural penetration, and stronger distribution networks. The industry grew at a CAGR of approximately 8% between Fiscal 2019 and Fiscal 2024, expanding from ₹8.3 trillion to ₹12.2 trillion. This momentum is expected to continue, with the sector poised to grow at 8–9% CAGR to reach around ₹17 trillion by Fiscal 2028.Within FMCG, Food & Beverages remains the core driver of consumption. The segment grew 8.7% from FY19 to FY24, and is projected to maintain an 8–10% CAGR through FY24–FY28, reinforcing the shift towards packaged, branded, and high-quality food essentials.Fortune’s evolution reflects this consumer shift. From a single-category edible oils brand, it expanded into a comprehensive portfolio meeting the needs of the modern Indian kitchen. As households increasingly prioritised hygiene, consistency, and trusted quality, the brand played a pivotal role in India’s transition from loose staples to branded packaged products— cementing its place in the cultural narrative of ‘Ghar Ka Khana’.This milestone year also marks an important leadership transition at AWL, with Shrikant Kanhere taking over as Managing Director & CEO, while Angshu Mallick assumes the role of Executive Deputy Chairman after leading the company’s high-growth trajectory from inception.[caption id=attachment_2482126 align=alignleft width=200] Shrikant Kanhere[/caption] Shrikant Kanhere, MD & CEO, AWL Agri Business Ltd., said, “The story of AWL is inseparable from the rise of India’s FMCG sector. Over the past 25 years, we’ve grown alongside a nation moving from loose staples to trusted, high-quality packaged foods. What matters most is the relationship we’ve built with our consumers, families who bring Fortune into their kitchens every day. This milestone isn’t about scale; it’s about the value we’ve created across the ecosystem, from farmers and partners to our teams and the communities we serve. As we look ahead, this anniversary becomes a springboard for our next chapter of growth and innovation. Our commitment is simple ‒ to keep strengthening the idea of ‘Ghar Ka Khana’ for every household in the country.’’ AWL’s landmark 2022 IPO was instrumental in unlocking value and accelerating infrastructure expansion. A key investment from the IPO proceeds is the Gohana Food Complex in Sonepat, Haryana—an 85-acre state-of-the-art agri-processing facility built with approximately ₹1,300 crore, making it one of India’s largest integrated food complexes. The facility strengthens AWL’s role in modernising India’s food supply chain, aligning with the country’s fast-growing food processing sector, estimated at US$354 billion in 2024 and projected to reach US$535 billion by the end of FY 2026, according to IBEF.As Fortune marks 25 years, AWL Agri Business Ltd. remains committed to building a stronger, more resilient food ecosystem—delivering trusted, high-quality staples while continuing to nurture the warmth, authenticity, and cultural connection embodied by ‘Ghar Ka Khana’.

மெடியானேவ்ஸ்௪க்கு 25 Nov 2025 5:37 pm

எச்சரிக்கும் ஈஸ்ட் கோஸ்ட் வெதர்மேன்: தமிழ்நாட விடுங்க இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! என்ன தெரியுமா?

நவம்பர் 26 முதல் 29ந் தேதியில் இலங்கையை புரட்டி எடுக்கும் அளவுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் ஈஸ்ட்கோஸ்ட் வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமயம் 25 Nov 2025 5:34 pm

Long Pepper Compound Shows Promise Against Colon Cancer

Researchers at the National Institute of Technology (NIT) Rourkela have found that a natural compound in long pepper may help

சென்னைஓன்லைனி 25 Nov 2025 5:33 pm

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – 4 ஐயப்ப பக்தர்கள் பலி!

கார் விபத்தில் சிக்கி 4 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். கார் விபத்து கர்நாடகா, கோலார் மாவட்டத்தில் சபரிமலைக்கு புறப்பட்ட 4 ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் அதிவேகமாக இயக்கப்பட்டதால், மேம்பால தடுப்பில் மோதி கீழே விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. மாலூர் தாலுகா, அப்பனஹள்ளி கிராமத்தில் இந்த விபத்து நடந்தது. காரில் பயணித்த நண்பர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நால்வர் பலி முதற்கட்ட விசாரணையில், கார் அதிவேகத்தில் சென்றதே விபத்திற்கு காரணம் என்று போலீசார் […]

அதிரடி 25 Nov 2025 5:30 pm

விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் விபத்தில் உயிரிழப்பு

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 5 வயதான சிறுவன் ஒருவர் வேனில் மோதி உயிரிழந்துள்ளார். வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீதியை நோக்கி ஓடியபோது வேன் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிறுவனுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது என்றபோதும் அவர் இரத்த வாந்தி எடுத்தமையால் வேனின் சாரதி அவரை கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிறுவன் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். […]

அதிரடி 25 Nov 2025 5:30 pm

Badrinath Temple Closes for Winter Char Dham Yatra

The Badrinath Temple in Chamoli district, Uttarakhand, will close today at 2:56 PM for the winter, marking the end of

சென்னைஓன்லைனி 25 Nov 2025 5:27 pm

வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக மட்டும் கூட்டணி அமைப்பது தேமுதிக ஐடியா கிடையாது –பிரேமலதா!

நீலகிரி : மாவட்டம் குன்னூரில் உள்ளம் தேடி இல்லம் நாடி தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையை அணிந்து அவர்களுடைய பாரம்பரிய இசைக்கேற்ப உற்சாகமாக நடனமாடினார். மலைவாழ் மக்களுடன் மனமுவந்து கலந்து, அவர்களது வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்து கடுமையாக விமர்சித்தார். “வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் […]

டினேசுவடு 25 Nov 2025 5:24 pm

PM Modi Hoists Saffron Flag on Ram Temple

Ayodhya celebrated a historic event as Prime Minister Narendra Modi hoisted a saffron flag on top of the Ram Temple,

சென்னைஓன்லைனி 25 Nov 2025 5:21 pm

Leh Residents Enjoy Curfew Relaxation, Markets Reopen

Residents of Leh City in Ladakh are enjoying the relaxed curfew on Thursday. Streets are busy with people and vehicles

சென்னைஓன்லைனி 25 Nov 2025 5:13 pm

Anirudh Ravichander Launches His Own Music Label

Top Kollywood music composer Anirudh Ravichander is planning to start his own independent music label, according to sources. Anirudh, who

சென்னைஓன்லைனி 25 Nov 2025 5:05 pm