SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

இஸ்ரேல் மீது திருப்பி அடிக்கும் ஈரான்; கதிகலங்கும் உலகம்!

இஸ்ரேல் – ஈரான் மீது அமெரிக்காவுடன் சேர்ந்து பெப்ரவரி 28 ஆம் திகதி , போர் தொடத்ததுடன், ஈரானிய உச்ச தலவர் காமேனி மற்றும் ஈரான் ஜனாதிபதி உள்ளீட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உலக நாடுகளை அச்சத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில் ஈரான் தனது புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கைஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதை […]

அதிரடி 8 Mar 2026 8:30 am

நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்

தற்போது ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது. எரிபொருள் விலை ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இந்தியாவிடம் இருந்து அதிகப்படியான எரிபொருளைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் இந்திய நிறுவனங்களுக்கே முன்னுரிமை […]

அதிரடி 8 Mar 2026 8:24 am

பெண்களுக்கு போக்குவரத்தில் இடையூறு விளைவித்த இ.போ.ச காப்பாளருக்கு தண்டனை

பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும், பயணிகள் தமது விருப்பப்படி தமக்கான போக்குவரத்து சேவையை தெரிவு செய்ய முழு உரிமை உண்டு எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இருந்து தனியார் பேருந்தில் மன்னார் வந்தடைந்த இரு […]

அதிரடி 8 Mar 2026 8:06 am

அவுஸ்திரேலியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்; சம்பவத்தால் அதிர்ச்சி

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் மற்றும் 47 வயதான சமிந்திகா ஜெயவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு அந்த வீட்டிலிருந்து 30 விநாடி இடைவெளியில் இரண்டு துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். கொலை மற்றும் உயிர் மாய்ப்பு முதற்கட்ட விசாரணையில், இது ஒரு கொலை மற்றும் உயிர் மாய்ப்பு சம்பவமாக […]

அதிரடி 8 Mar 2026 8:03 am

“அவை எதற்கும் தகுதியற்றவை”: விவாகரத்து வதந்திகளால் கலங்கிய ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த மாஸ் ரிப்ளை!

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பரவி வரும் வதந்திகள் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடையே உருக்கமாகப் பேசியுள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Mar 2026 8:00 am

அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு; ஈரான் கப்பலில் பலியானவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு அருகே நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானின் போர்க்கப்பலில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனை குறித்த பிரேத பரிசோதனையில், வெடிப்பு காரணமாக ஏற்பட்ட எலும்பு முறிவுகள், உள் காயங்கள், நீரில் மூழ்குதல் போன்ற காரணங்களால் அவர்கள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த […]

அதிரடி 8 Mar 2026 8:00 am

Women’s Day 2026 Special: இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றிய Nayanthara, Parvathy மற்றும் முன்னணி நாயகிகள்!

2026 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வெறும் நடிப்பைத் தாண்டி இந்தியத் திரையுலகின் போக்கை மாற்றியமைத்த முக்கிய நடிகைகள் குறித்த சிறப்புத் தொகுப்பு.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Mar 2026 7:00 am

தாக்குதலுக்கு உள்ளான ஈரான் விமான நிலையம் –பாரிய வெடிப்பு சம்பவம்

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (07.03.2026) அதிகாலை ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஹ்ராபாத் விமான நிலையம் நாட்டின் முக்கிய உள்நாட்டு விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இதேவேளை தாக்குதல் நடந்த விமான நிலையத்தில் பல விமானங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த தாக்குதலைத் தொடர்ந்து ஒரு பெரிய புகை மேகம் வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் பல இடங்கள் எதிரிகளால் […]

அதிரடி 8 Mar 2026 6:58 am

20,000 மெகாவாட்டைத் தாண்டியது தமிழகத்தின் மின் தேவை: மார்ச் தொடக்கத்திலேயே அதிரடி உயர்வு!

20,000 மெகாவாட்டைத் தாண்டியது, தமிழகத்தின் மின் தேவையானது மார்ச் தொடக்கத்திலேயே அதிரடியாக உயர்ந்துள்ளது.

சமயம் 8 Mar 2026 6:43 am

சட்டத்தரணி கொலை - துப்பாக்கிதாரியை ஏற்றி செல்ல 65 இலட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட பேருந்து

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாவது துப்பாக்கிதாரியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலையைச் செய்த பின்னர் தான் கொட்டாவை வரை காரில் வந்து, அங்கிருந்து இறங்கி கொழும்பு கோட்டையை அடைந்ததாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். பின்னர் கோட்டையிலிருந்து தம்புள்ளை சென்றதாகவும், அங்கிருந்து தமக்காகவே 'கரந்தெனிய சுத்தா'என்பவரால் தயார் செய்யப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மூலம் மொனராகலைக்குத் தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் நடத்திய தேடுதலில், மொரட்டுவை - கொழும்பு வீதியில் ஓடும் ஒரு தனியார் பேருந்தே, தம்புள்ளையிலிருந்து துப்பாக்கிதாரியை மொனராகலைக்கு அழைத்துச் சென்றது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த பேருந்துடன் அதன் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை நேற்று பொலிஸார் கைது செய்தனர். இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே, கரந்தெனிய சுத்தா என்பவரால் குறித்த பேருந்து 65 இலட்சம் ரூபாவிற்கு சாரதியின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சாரதி, கரந்தெனிய சுத்தாவின் நெருங்கிய சகா என்பதுடன் அவர் ஒரு கடும் போதைப்பொருள் அடிமை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய சுத்தாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே, தாமும் நடத்துனரும் தம்புள்ளை சென்று துப்பாக்கிதாரியை மொனராகலைக்கு அழைத்துச் சென்றதாகச் சாரதி ஒப்புக்கொண்டுள்ளார். பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'லோகு பெட்டி'என்பவரைப் பழிவாங்குவதற்காகவே, அவரது சட்டத்தரணியைக் கொலை செய்வதற்கு கரந்தெனிய சுத்தா இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பதிவு 8 Mar 2026 6:32 am

மீண்டும் மின் வெட்டு ?

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மீதமுள்ள நிலக்கரி விநியோகத்தை எவ்விதத் தடங்கலுமின்றி வழங்க முடியும் என விநியோகஸ்தர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசரத் தேவை ஏற்படின், நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் இறுதி வரை மின் உற்பத்தியை முன்னெடுக்கத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும், பொதுமக்கள் இவ்வாறான தவறான மற்றும் திசைதிருப்பும் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

பதிவு 8 Mar 2026 6:28 am

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து முன்னரே அறிந்திருந்த இந்தியா ?

ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகின்றதா என்ற அச்சம் வலுவடைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஈரான் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மிலான் 2026 பயிற்சியில் பங்கேற்க வருகை தந்திருந்தனர். திட்டமிட்டபடி அமெரிக்கக் கடற்படையும் இதில் பங்கேற்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர்கள் பின்வாங்கியுள்ளனர். அதே காலகட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் கவனிக்கத்தக்க விடயமாக மாறியுள்ளது. ஈரான் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் இருந்ததாலேயே அமெரிக்கா இந்தப் பயிற்சியிலிருந்து விலகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது தமது நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஈரான் குழுவினர் மீது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது குறித்து இந்திய உளவுத்துறையான ரோவிற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்களை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட இந்தியா, இந்த ஆபத்தை அறிந்திருந்தும் ஈரான் கப்பலை வெளியேற அனுமதித்தது இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈரானின் இரண்டாவது கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியபோது, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இக்கப்பலை அனுமதித்தால் வான்வழியாகத் தாக்குதல் நடத்த நேரிடும்என அவர்கள் அச்சுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் துய்யகொந்தா, இக்கப்பல் விவகாரத்தில் இலங்கை பொறுப்பேற்க முடியாது என ஈரான் தூதருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.இருப்பினும் இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பிரதி சபாநாயகர் உள்ளிட்டோர் ஜனாதிபதியைச் சந்தித்து அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர். நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் எட்டப்பட்ட உடன்பாட்டின் படி கப்பலை திருகோணமலைக்குக் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.கப்பலில் உள்ள நபர்களை மட்டும் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வர முடிவெடுத்துள்ளனர். மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை இழந்து வரும் அமெரிக்கா, இஸ்ரேலைத் தவிர்த்து வேறு பாதுகாப்பான தளங்களைத் தேடி வருகிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை ஒரு இராணுவ மையமாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதான சந்தேகம் எழுந்துள்ளது.முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி குறிப்பிட்டது போல, ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட மையப்புள்ளியாக இலங்கை இருப்பதே இதற்குக் காரணமாகும். ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகிறதா என்ற அச்சம் தற்போது வலுவடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

பதிவு 8 Mar 2026 6:18 am

மாதவரம்: ஏரிகளில் நீர் இருந்தும் தாகத்தில் தவிக்கும் மக்கள்!

மாதவரத்தில் ஏரிகளில் நீர் இருந்தும் தாகத்தில் தவிக்கும் மக்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சமயம் 8 Mar 2026 5:57 am

இஸ்ரேல் ஈரானிய ஆட்சியை ஒழிக்கும் என்று நெதன்யாகு சபதம்

எங்கள் முழு பலத்துடன் ஈரான் மீது போரை இஸ்ரேல் நடத்தும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் செய்தார். ஈரானிய ஆட்சியை ஒழிக்கவும், வேறு பல நோக்கங்களை அடையவும் எங்களிடம் ஒரு முறையான திட்டம் உள்ளது என்று அவர் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார். போரில் பொதுமக்கள் தொழில்துறை உள்கட்டமைப்பு முதன்முதலில் குறிவைக்கப்பட்டதாகத் தோன்றிய, தெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் சேமிப்பு வசதி தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து நெதன்யாகுவின் கருத்துக்கள் வந்தன. மற்றைய இலக்குகளுடன், இஸ்ரேல் தெஹ்ரான் விமான நிலையத்தையும் குண்டுவீசித் தாக்கியது. அந்த விமான நிலையம் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகள் மற்றும் பணத்தை அனுப்பும் மையமாகப் பயன்படுத்தப்படுவதாக அது கூறியது. வரும் நாட்களில் ஈரானுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கும் என்று நெதன்யாகு கூறினார். அவர் ஈரானிய மக்களை நோக்கி உரையாற்றினார். இஸ்ரேல் அவர்களை கொடுங்கோன்மையிலிருந்து விடுவிக்க உதவ விரும்புகிறது என்றும் அவர்களின் சத்தியத்தின் தருணம் நெருங்கிவிட்டது என்றும் கூறினார். அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் சுமார் 3,400 முறை தாக்குதல் நடத்தி சுமார் 7,500 வெடிமருந்துகளை வீசியதாகக் கூறுகிறது.

பதிவு 8 Mar 2026 5:56 am

குர்திஷ் கிளர்ச்சிப் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை விரும்பவில்லை - டிரம்ப்

குர்திஷ் கிளர்ச்சிப் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் ஈரானிய குர்திஷ் போராளிகள் சேர முழுமையாக இருப்பதாக டிரம்ப் வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதைத் தொடர்ந்து, ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜனாதிபதி விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார் . குர்துகள் உள்ளே வருவதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று டிரம்ப் சனிக்கிழமை கூறினார். உங்களுக்குத் தெரியும் நாங்கள் குர்துகளுடன் மிகவும் நட்பாக இருக்கிறோம். ஆனால் போரை ஏற்கனவே இருப்பதை விட சிக்கலானதாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை. பல ஈரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள் வடக்கு ஈராக்கில் உள்ள முகாம்கள் மற்றும் தளங்களில் இருந்து செயல்படுகின்றன. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் தூண்டப்பட்ட மோதல் தொடங்கியதிலிருந்து, ஈராக்கில் உள்ள குர்திஷ் குழுக்களை தெஹ்ரான் குறிவைத்து வருகிறது.

பதிவு 8 Mar 2026 5:42 am

தமிழகத்தில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? என்பது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சமயம் 8 Mar 2026 5:08 am

விரைவில் பதவியை துறக்கும் சார்லஸ்…மன்னராகும் வில்லியம்: அரண்மனை வட்டாரம் தகவல்

இளவரசர் வில்லியம் 6 முதல் 12 மாதங்களுக்குள் மன்னராக வாய்ப்புள்ளது என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். பதவியை துறக்கும் சார்லஸ்… மன்னர் சார்லஸ் தனது பதவியை விரைவில் துறக்கலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். விரைவில் மன்னர் சார்லஸ் தனது பதவியை துறக்க இருப்பதாகவும், இளவரசர் வில்லியம் 6 முதல் 12 மாதங்களுக்குள் மன்னராகலாம் என்றும், கென்ட் இளவரசி மைக்கேலின் செய்தித்தொடர்பாளரான ராப் ஷட்டர் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும், வில்லியம் ஏற்கனவே […]

அதிரடி 8 Mar 2026 3:30 am

அமெரிக்காவின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்தது ஈரான் – இத்தாலி ஊடாக நடந்த இரகசியப் பேச்சுவார்த்தை தோல்வி?

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இத்தாலி வழியாக அமெரிக்க அதிகாரிகள் முன்வைத்த உடனடி போர்நிறுத்தக்… The post அமெரிக்காவின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்தது ஈரான் – இத்தாலி ஊடாக நடந்த இரகசியப் பேச்சுவார்த்தை தோல்வி? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Mar 2026 1:04 am

ஈரான்: அண்டை நாடுகளை தாக்காது – புதிய தீர்மானம்!

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றநிலைக்கிடையில், ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக புதிய முக்கிய… The post ஈரான்: அண்டை நாடுகளை தாக்காது – புதிய தீர்மானம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Mar 2026 12:41 am

பல மாவட்டங்களுக்குக் கடும் வெப்ப எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (08) ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது ‘அவதானம் செலுத்தப்பட வேண்டிய’ […]

அதிரடி 8 Mar 2026 12:38 am

பாக். –ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடரும் மோதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் இடம்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சுமாா் 2,600 கி.மீ. நீளமுள்ள எல்லைக்கோட்டின் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் இரு நாட்டு வீரா்களும் கனரக ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா். புனித ரமலான் மாதத்தில் எல்லையோரக் குடியிருப்புகள் மீது குண்டுமழை பொழிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா். இதுவரை ஆப்கானிஸ்தானில் 1,15,000 பேரும், பாகிஸ்தானில் 3,000 பேரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான […]

அதிரடி 8 Mar 2026 12:30 am

திண்டுக்கல் மக்களுக்கு இன்பச் செய்தி.. அமைச்சரின் அறிவிப்பால் மகிழ்ச்சி.. மினி டைடல் பார்க் உருவாக்கம்!

திண்டுக்கல்லில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட இருப்பதால் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கு செயல்பட வாய்ப்பு இருப்பதால், உள்ளூர் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது.

சமயம் 7 Mar 2026 10:58 pm

வெடித்து சிதறும் ஈரானிய விமான நிலையம்! அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது சனிக்கிழமை அதிகாலை வான்வழி தாக்குதல்கள் நடந்ததாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தீப்பற்றியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த தீ தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, இஸ்ரேல் இராணுவம் தெஹ்ரான் மீது புதிய தாக்குதல்களின் அலை ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈரான் பதிலடி நடவடிக்கையாக டெல் அவிவ் நகரை நோக்கி […]

அதிரடி 7 Mar 2026 10:30 pm

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியின் எச்சரிக்கை: வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் பாதுகாப்பற்றவை!

வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் அந்த நாடுகளுக்குப் பாதுகாப்பை வழங்காது என்றும், அவை அச்சுறுத்தலாகவே அமையும்… The post முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியின் எச்சரிக்கை: வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் பாதுகாப்பற்றவை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Mar 2026 10:09 pm

நெல்லையில் விசிக - நாதக மோதல்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடந்த பரபரப்பு!

கூட்டணியில் இருந்தபடியே மாஞ்சோலை மக்களை கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஏமாற்றி வருகின்றனர் என்று அங்கிருந்து வெளியேறும் போது நாம் தமிழர் கட்சியினர் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

சமயம் 7 Mar 2026 10:05 pm

மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர்..பெண்ணுரிமை பேசுகிறாரா? விஜயை விமர்சித்த ஹெச்.ராஜா!

மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே நபர், தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வதா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ரா. ராஜா விமர்சித்துள்ளார்.

சமயம் 7 Mar 2026 9:49 pm

பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 6 பேர் கைது!

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் முயற்சி ஒன்றை… The post பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 6 பேர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Mar 2026 9:40 pm

ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடும் ரஷ்யா: மத்திய கிழக்கில் காத்திருக்கும் ஆபத்தான நாட்கள்

அமெரிக்க துருப்புக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் இருப்பிடங்கள் மற்றும் நகர்வுகள் குறித்து ரஷ்யா ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் அதிநவீன இது, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் முன்னெடுத்துவரும் நிலையில், ரஷ்யாவும் போரில் ஈடுபட்டு வருவதற்கான முதல் அறிகுறி என கூறப்படுகிறது. ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்து கொண்ட முதன்மையானத் தகவல்களில் பெரும்பாலானவை ரஷ்யாவின் அதிநவீன மேல்நிலை செயற்கைக்கோள்களின் படங்கள் என்றே கூறப்படுகிறது. ஈரானியத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்று […]

அதிரடி 7 Mar 2026 9:30 pm

119-ஆவது ‘வடக்கின் போர்’: சென் ஜோன்ஸை வீழ்த்தி யாழ். மத்திய கல்லூரி அபார வெற்றி!

யாழ் மத்திய கல்லூரியும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் இடையில் 119வது ஆண்டாக நடைபெற்ற வடக்கின் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. யாழ்.மத்திய கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான போட்டி மூன்றாவது நாளாக இன்றைய தினம் சனிக்கிழமையும் இடம்பெற்றது. அதில் மூன்று இலக்குகளால் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. சென்ஜோன்ஸ்கல்லூரி முதல் இனிங்ஸில் 119 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடியமத்திய கல்லூரி அணி 95 ஆட்டங்களுடன் சகல […]

அதிரடி 7 Mar 2026 9:30 pm

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்.. எடப்பாடி பழனிசாமி அளித்த வாக்குறுதிகள்!

அந்தியூரில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் திமுக அரசை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

சமயம் 7 Mar 2026 9:08 pm

அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கிற்கு!

அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக அமெரிக்க… The post அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கிற்கு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Mar 2026 8:30 pm

அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கிற்கு!

அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக அமெரிக்க… The post அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கிற்கு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Mar 2026 8:30 pm

இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல்கள்?

ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா். ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக அந்த வழி மூடப்பட்டது. இதனால், அந்த வழியாகப் பயணிக்க வேண்டிய 37 இந்திய கொடி கொண்ட கப்பல்கள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளன. அந்தக் கப்பல்களில் 1,109 மாலுமிகள் உள்ளனா். அவற்றில் சில கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்தன. பிற கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலியம் பொருள்களை ஏற்றிவரச் சென்றன. கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் (டிஜிஎஸ்) சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சரக்குப் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுடன் அந்த இயக்குநரகம் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது என்று தெரிவித்தன. வளைகுடா, ஹோா்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா மற்றும் அதையொட்டியுள்ள கடல் பகுதிகளில் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு கருதி டிஜிஎஸ் மூலம் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய மாலுமிகள் மற்றும் அவா்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 7 Mar 2026 8:24 pm

இராணுவதளத்தை மூட திட்டமில்லை!

யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. குறுகிய அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடே இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கப்படும் போது சகல காரணிகளும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி தான் காணிகள் விடுவிக்கப்படுகின்றன. காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்கவே ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டமைப்பு குறித்து எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் 5 ஆண்டுகால கொள்கைத் திட்டத்தை உள்ளடக்கி மூன்று தடவைக்கு செயற்படுத்தியிருந்தால் நாடு முன்னேற்றமடைந்திருக்கும், பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கும்“ என தெரிவித்தார்.

பதிவு 7 Mar 2026 8:06 pm

திமுகவின் பிரச்சார பீரங்கி ஆளுநர் ஆர்.என். ரவியை திடீரென மாற்றி விட்டார்கள்.. அவரும் விரக்தியில் கிளம்பி விட்டார்.. ஒரே போடாக போட்ட முதல்வர்

சமீபத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவியை மேற்கு வங்கத்துக்கு மாற்றி அறிவிப்பு வெளியானது. இது சம்பந்தமாக மதுரையில் நடந்து வரும் திமுகவின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவியை நம்முடைய பிரச்சார பீரங்கி என அவர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமயம் 7 Mar 2026 8:03 pm

விஸ்வாசம் என்றால் ஓ.பி.எஸ்.. துரோகம் என்றால் ஈ.பி.எஸ்.. மதுரையில் எம்.கே.எஸ். விமரசனம்!

விஸ்வாசத்துக்கு அடையாளம் ஓ. பன்னீர்செல்வம் என்றும் துரோகத்துக்கு அடையாளம் எடப்பாடி பழனிசாமி என்றும் மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சமயம் 7 Mar 2026 8:01 pm

ஈரானிய கப்பலிற்கு இந்தியா அடைக்கலம்!

ஈரானிய கப்பல் லவனிலிருந்த மாலுமிகளுக்கு, கப்பல் அபாயத்திலுள்ளதாக சனிக்கிழமை (28) சமிக்ஞைஅனுப்பியதைத் தொடர்ந்து தாம் அடைக்கலமளித்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கியால் டொர்பிடோ ஏவப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் கப்பல் டெனாவுடன் கடற்பயிற்சிகளில் கலந்து கொண்ட இக்கப்பலுக்கு உதவியதாக இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. கப்பல் தொழில்நுட்பப் பிரச்சினைகளை எதிர்கொண்டமையையடுத்து கொச்சிக்கு அவசரமாக வர கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அரசாங்க அதிகாரியொருவர் கூறியுள்ளார். கொச்சிக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை (01) அனுமதிக்கப்பட்டதாகவும், புதன்கிழமை (04) முதலில் கொச்சியில் கப்பல் நிற்கிறது. கப்பலின் 183 மாலுமிகளுக்கு கொச்சியில் தங்குமிடங்களை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பதிவு 7 Mar 2026 7:55 pm

திராவிட மாடல் அரசா? மக்கள் அரசா? விஜய் அறிவித்த ரூ.2,500 மகளிர் தொகை.. திமுக திட்டத்தின் காபி பேஸ்ட்டா?

தவெக தலைவர் விஜய் அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்தால், அதே போல திமுகவின் நலத்திட்டங்களை காபி பேஸ்ட் செய்து சற்று மாற்றம் செய்துள்ளனர் என்று விமர்சிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

சமயம் 7 Mar 2026 7:37 pm

ஸ்டாலின் சார் டாக்ஸ்.. பட்ஜெட் நிதியில் 30% கொள்ளை - முதல்வரை அட்டாக் செய்த தவெக தலைவர் விஜய்!

அரசாங்கத்திம் பணம் இல்லை என்று கூறும் முதல்வர் எப்படி அதிகாலையில், எப்படி வங்கி கணக்குகளில் 5 ஆயிரத்தை செலுத்த முடியும் என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமயம் 7 Mar 2026 7:02 pm

நிதிஷ்குமார் நிலைமைதான் பழனிசாமிக்கும்.. அதிமுகவுக்கு வேறொரு பொதுச் செயலாளரா? ஸ்டாலின் கூறிய ஷாக் நியூஸ்!

பழனிசாமிக்கு பதிலாக அதிமுக பொதுச்செயலாளராக வேறொருவரை பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் மாற்றி விடுவார்கள். அதிமுக பாஜக கன்ட்ரோலுக்கு போய் விட்டது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

சமயம் 7 Mar 2026 6:49 pm

புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு

தாறுஸ்ஸபா அமையத்தின் வருடாந்த புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வும் வருடாந்த இப்தார் வைபவமும் தாறுஸ்ஸபா அமைய பிரதானி மௌலவி உஸ்தாத் ஏ.ஆர். சபா முஹம்மத் தலைமையில் தாறுஸ்ஸபா அமைய தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது ஹிஜ்ரி 1447 றமழான் 17 – 2026 மார்ச் 07 சனிக்கிழமை மாலை இடம்பெற்ற […]

அதிரடி 7 Mar 2026 6:47 pm

யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் தினேஷ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தூய தேன் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேன் போத்தல்களுக்குள்சீனிப்பாணியேகாணப்பட்டதை கண்டறிந்து 19. 3/4 போத்தல் சீனிப்பாணி கரைசல்களை கைப்பற்றியுள்ளார். அதேவேளை தூய நெய் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8, 1/4 […]

அதிரடி 7 Mar 2026 6:32 pm

#Pavazhamalli: சாய் அபியங்கரின் இணையத்தைக் கலக்கும் ‘பவழமல்லி’ வீடியோ பாடல்!

'ஆசா கூட' பாடலின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் சாய் அபியங்கர் தனது 5-வது சுயாதீன ஆல்பமான 'பவழமல்லி' பாடலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Mar 2026 6:30 pm

உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள் பறப்பது; துபாயிலிருந்து திரும்பிய பிரித்தானியர்கள்

துபாயில் சிக்கியிருந்த பிரித்தானியர்கள் சிலர் எகிப்து வழியாக தாயகம் வந்தடைந்தனர். கெய்ரோ வழியாக ஓமானின் மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட டைட்டன ஏர்வேஸ் விமானத்தில் துபாயில் சிக்கிய பிரித்தானியர்கள் பயணித்தனர். அரசாங்கத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த விமானம் எகிப்தின் கெய்ரோ வழியாக பயணித்து, வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 12.53 மணிக்கு எசெக்ஸின் Standsted-யில் தரையிறங்கியது. அதில் பயணித்தவர்களில் சிலர் வீட்டிற்கு நீண்ட பயணம் ‘அதிர்ச்சிகரமானது’ என்று கூறினர். உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள் ‘நீங்கள் விடுமுறைக்கு செல்லும்போது, உங்கள் […]

அதிரடி 7 Mar 2026 6:30 pm

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் நடன அரங்கேற்றம்

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(07) பி.ப. 1.45 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகளவானோர் பங்கேற்றனர். அக் ஷரா நிருத்திய ஷேத்ரா நாட்டியப் பள்ளி அதிபர் மாதுமையாள் வரதராஜனின் மாணவி என்பதுடன் மதுசூதனன் தம்பதியரின் புதல்வியுமாவார். மேலும் கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் பால சுகுமார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 7 Mar 2026 6:28 pm

விஜய்-திரிஷா கிசுகிசுக்களுக்கு பதிலடி? என் விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் - மாமல்லபுரத்தில் விஜய் அதிரடி!

விஜய் - திரிஷா விவகாரத்தில் விஜய் தெரிவித்த கருத்து தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.

சமயம் 7 Mar 2026 6:12 pm

ஈரானுக்கு சீனா இராணுவ மற்றும் நிதி உதவி? அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது!

ஈரானுக்கு நிதி உதவி, உதிரிப் பாகங்கள் மற்றும் ஏவுகணை கூறுகளை (missile components) வழங்க சீனா தயாராகி வருவதாக… The post ஈரானுக்கு சீனா இராணுவ மற்றும் நிதி உதவி? அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Mar 2026 5:56 pm

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்!

பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும்… The post காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Mar 2026 5:43 pm

ProNutramax Unveils Two Distinct Brands! –‘Pro Nutra Kidz: For Active Mind and Body’ and ‘ANI – Authentic • Natural • Indian – Preserving the Soul of Traditional Indian Cooking’

Chennai-based ProNutramax launched its two distinct brands — ‘Pro Nutra Kidz: For Active Mind and Body’, a nutraceutical range focused

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:41 pm

திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு மாற்று கூட்டணி உருவாகவில்லை –தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக ஒவ்வொரு கட்சியாக

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:37 pm

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில் மத்திய

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:36 pm

பத்திரிகையாளர் கொலை வழக்கில் பாலியல் சாமியார் விடுதலை

அரியானா, ராஜஸ்தான், உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரபல சாமியாராக திகழ்ந்து வருபவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். ‘தேரா சச்சா சவுதா’ என்ற பெயரில் பல

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:34 pm

துபாயில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் தங்கம்!

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கி

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:33 pm

ஈரானில் பதற்றம்: மெஹ்ராபாத் வானூர்தி நிலையம் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்! ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்துள்ள மெஹ்ராபாத் சர்வதேச… The post appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Mar 2026 5:33 pm

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார். இதையடுத்து கேரள ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த எஸ். ஏ.தர்மாதிகாரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:31 pm

“நடிகைகளை விட நடிகர்களுக்கே அதிக முக்கியத்துவம்”: சினிமாவின் கசப்பான உண்மையை உடைத்த லைலா!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை லைலா, தற்போது சினிமாவில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் நல்ல கதாபாத்திரங்களுக்கான தட்டுப்பாடு குறித்து மனம் திறந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Mar 2026 5:30 pm

அனைத்து மக்களுக்குமான ஆல் ரவுண்டர் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது –துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இன்று தூத்துக்குயில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டிலான

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:30 pm

உக்ரைன் வங்கி ஊழியர்களை வெளியேற்றும் ஹங்கேரி: இரு நாடுகளிடையே முற்றிய மோதல்

சுமார் 80 மில்லியன் டொலர் பணம் மற்றும் 9 கிலோ தங்கத்தை வாகனங்களில் கொண்டு சென்ற உக்ரைன் வங்கி ஊழியர்கள் ஏழு பேரை ஹங்கேரி அரசு அதிரடியாகக் கைது செய்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. பணமோசடி சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹங்கேரி வரி ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில், இது முறையான வங்கிப் பரிமாற்றம் என்றும், ஹங்கேரி அரசு, “அரசு ரீதியிலான வழிப்பறியில்” (State Banditry) ஈடுபடுவதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி […]

அதிரடி 7 Mar 2026 5:30 pm

விஜய் இமேஜை திமுக கெடுக்க பார்க்கிறது –முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:28 pm

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும்வரை சிறை தண்டனை

கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, தனது ஆண்

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:27 pm

அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்

ஈரான் மீதான இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் ஒரு வாரத்தை எட்டியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:25 pm

சங்கீதா புதிய மனு.. விஜய் இமேஜை கெடுக்க திமுக சதி திட்டம் - செல்லூர் ராஜூ ஆதரவு குரல்!

விஜய் இமேஜை குறைக்க திமுக சதி செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

சமயம் 7 Mar 2026 5:25 pm

99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் –துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:22 pm

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்.. மார்ச் 27 முதல் எப்போது வரை தெரியுமா?

கோடைகால சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையம் - குன்னூர், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்து உள்ளது.

சமயம் 7 Mar 2026 5:22 pm

ஈரானின் மற்றொரு போர் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா

இந்தியாவின் கடற்படை அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த ‘மிலன்-2026’ சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பலான ‘ஐரிஸ் டெனா’ வந்திருந்தது. பயிற்சி முடிந்து மார்ச்

சென்னைஓன்லைனி 7 Mar 2026 5:21 pm

திருச்சி என்றால் திருப்புமுனையாம்.. திருச்சியை மையப்படுத்தி அடுத்தடுத்த மாநாடுகள்.. மார்ச் 9-ல் திமுக மாநாடு!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருச்சியை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் சார்பில் மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வரும் 9 ஆம் தேதி திமுக மாநாடு நடைபெற இருக்கிறது.

சமயம் 7 Mar 2026 4:56 pm

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அம்பாறை மாவட்டம் நவகம்புர உதயபுர பகுதியை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க கோரகே தொன் சானக சதுரங்க குமார அடையாளம் என காணப்பட்டுள்ளார்.

அதிரடி 7 Mar 2026 4:55 pm

“தாக்கமாட்டோம் அண்டை நாடுகள் இலக்கு இல்லை” – ஈரான் அரசு அறிவிப்பு

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் 7-ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் (Masoud Pezeshkian) அண்டை நாடுகள் மீது தனது நாடு நடத்திய தாக்குதல்களுக்காக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஈரான் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், அண்டை நாடுகளை தாக்கவோ ஆக்கிரமிக்கவோ எந்த எண்ணமும் இல்லை என்றும், இனிமேல் அத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படாது என்றும் உறுதி அளித்துள்ளார். அதிபர் பெஷேஷ்கியான் தனது உரையில், “அண்டை நாடுகளை தாக்கியதற்காக மன்னிப்பு […]

டினேசுவடு 7 Mar 2026 4:48 pm

தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையம் மீது இஸ்ரேல் கடும் தாக்குல்

இஸ்ரேலியஇராணுவம் புதிய சுற்றுத் தாக்குதல்களை அறிவித்ததைத் தொடர்ந்து மெஹ்ராபாத் விமான நிலையம் தீப்பிடிதத எரிவதை சமூக ஊடகக் காட்சிகள் மற்றும் நிறுவனங்கள் வழங்கிய புகைப்படங்கள் காட்டுகின்றன. மெஹ்ராபாத் விமான நிலையம் தெஹ்ரானிரர எல்லைக்குள் அமைந்துள்ளது. ஈரானிய அரசாங்கத்திற்குச் சொந்தமாநந விமான நிலையம். நாட்டிலேயே மிகவும் பரபரப்பானதாகக் கருதப்படுகிறது. நகரத்திற்கு வெளியே அமைந்துள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தைப் போலல்லாமல், இது உள்நாட்டு விமானங்கள மட்டுமே கொண்டுள்ளது.

பதிவு 7 Mar 2026 4:44 pm

ஈரான் ஒருபோதும் சரணடையாது - ஈரான் அதிபர்

மத்திய கிழக்குப் போர் இரண்டாவது வாரத்தினுள் நுழைந்துள்ள நிலையில், தெஹ்ரான் இஸ்ரேலுக்கோ அல்லது அமெரிக்காவுக்க ஒருபோதும் சரணடையாது என்றுஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார். சனிக்கிழமை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முன் பதிவு செய்யப்பட்ட காணொளியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கான அழைப்புகள் அவர்கள் கல்லறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது என்று கூறினார். பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல்களை நடத்தி ஈரானின் உச்ச அயதுல்லா அலி கமேனியைக் கொன்ற பின்னர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நலன்களுக்கு எதிராக பிராந்தியம் முழுவதும், முக்கிய வளைகுடா நாடுகளில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரான நிர்வகிக்கும் இடைக்கால தலைமைத்துவவ குழுவின் மூன்று உறுப்பினர்களில் பெஷேஷ்கியன் ஒருவர். தனது உரையில், பிராந்தியத்தில் ஈரான் தாக்குதல்களுக்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார் ஈரான் ஜனாதிபதி. தாக்குதல்கள் தங்கள் பிரதேசத்திலிருந்து தொடங்கப்படாவிட்டால் அவை குறிவைக்கப்படாது என்று கூறினார். ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் என் சார்பாகவும், ஈரான் சார்பாகவும் நாய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரு கூறினார். சனிக்கிழமை அதிகாலை பஹ்ரைன், சவுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ஸட வளைகுடா நாடுகளை ஈரானின் தாக்குதல்க குறிவைத்த நிலையில், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஈரன மீது தொடர்ந்த நிலையில் இந்த கருத்து வந்தன

பதிவு 7 Mar 2026 4:38 pm

படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலையையடுத்து, பிரித்தானியா தனது இராணுவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. சைப்ரஸ் தீவில் உள்ள இராணுவத்திளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட யுத்த உலுங்குவானூர்திகளை அங்கு அனுப்பியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Wildcat உலுங்குவானூர்தி பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக HMS Dragon போர் கப்பலும் Wildcat உலுங்குவானூர்திகளும் அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், கூடுதலாக நான்கு Eurofighter Typhoon […]

அதிரடி 7 Mar 2026 4:30 pm

விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய் குறுக்கே புதிய பாலம்.. ரூ. 12.31 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை தாமஸ் ஐயாதுரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது

சமயம் 7 Mar 2026 3:55 pm

கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருமே குற்றவாளி வாழ்நாள் சிறை!

கோவை : சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி தனது 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பெண்களின் […]

டினேசுவடு 7 Mar 2026 3:53 pm

உரிமையை விட்டுக் கொடுத்து கூட்டணியா? திணறிக் கொண்டிருக்கும் திமுக அரசு.. டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டு இருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்றுவதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் எல்லைக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

சமயம் 7 Mar 2026 3:31 pm

இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை (Ben Gurion Airport) மற்றும் அங்கு இல்லாத ஒரு இஸ்ரேலிய வான் படை தளத்தை (27வது ஸ்குவாட்ரன் பேஸ்) குறிவைத்து, 1 தொன் போர்முனை கொண்ட கோர்ராம்ஷஹர்-4 (Khorramshahr-4) பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அறிவித்துள்ளது. இது “ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4” (Operation True Promise […]

அதிரடி 7 Mar 2026 3:30 pm

இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை :07-03-2026: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 08-03-2026: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 09-03-2026: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் […]

டினேசுவடு 7 Mar 2026 3:25 pm

சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடல் அங்குரார்ப்பண நிகழ்வு

சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடல் அங்குரார்ப்பண நிகழ்வு பாறுக் ஷிஹான் 1.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட சாய்ந்தமருது கல்யாண வீதி 36.7 மில்லியன் நிதி செலவில் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா இன்றைய தினம் (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் , வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய பிரதம பொறியியாளர் […]

அதிரடி 7 Mar 2026 3:00 pm

அம்பாறையில் ஹெரோயினுடன் இருவர் கைது

அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாடியவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய நிலைய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். அம்பாறை நகரத்தின் திஸ்ஸ புரவில் இன்று நடமாடிய குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தங்கள் முகவரைப் பயன்படுத்தி 72 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை ரூபா 2000க்கு […]

அதிரடி 7 Mar 2026 3:00 pm

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு...3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

கோவை மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

சமயம் 7 Mar 2026 2:55 pm

NHK செய்தி நிறுவனத்தின் தெஹ்ரான் பணியகத் தலைவர் ஈரானில் சிறைபிடிப்பு!

இரண்டு ஜப்பானிய பிரஜைகள் தற்போது ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை ஜப்பான் உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார். ஜப்பானிய பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். ஈரானிய அதிகாரிகள் மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய நிலவரப்படி அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ஜப்பான் அரசாங்கம் அவர்களுடன் […]

அதிரடி 7 Mar 2026 2:30 pm

சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடல் அங்குரார்ப்பண நிகழ்வு

1.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட சாய்ந்தமருது கல்யாண வீதி 36.7 மில்லியன் நிதி செலவில் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா இன்றைய தினம் (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் , வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய பிரதம பொறியியாளர் ஏ.எம். உவைஸ், கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இசட் ஏ.எம். அஸ்மி , […]

அதிரடி 7 Mar 2026 2:26 pm

“உங்களை நீங்களே இழக்காதீர்கள்”: கிருத்திகா உதயநிதியின் வைரல் பதிவு –யாரைக் குறிப்பிடுகிறார்?

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, ஒரு பிரபலம் என்பதன் உண்மையான அர்த்தம் மற்றும் அடையாளச் சிக்கல் குறித்துப் பகிர்ந்துள்ள எக்ஸ் (X) பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Mar 2026 2:26 pm

41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது பாறுக் ஷிஹான்- சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லனோய மற்றும் கெத்சிறிகம கிராமங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனைகளின் போது 41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று […]

அதிரடி 7 Mar 2026 2:23 pm

எச்சரிக்கை: முகநூல் காஸ் அடுப்பு (Gas Cooker) விற்பனை ஏமாந்த இளைஞன் –பாரிய மோசடி!

சமூக வலைத்தளங்கள் வாயிலாக நவீன ரக காஸ் அடுப்புகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி, தம்பதி என… The post எச்சரிக்கை: முகநூல் காஸ் அடுப்பு (Gas Cooker) விற்பனை ஏமாந்த இளைஞன் – பாரிய மோசடி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Mar 2026 2:04 pm

விஜய்-திரிஷா விவகாரம்... தேர்தலில் எமனாக மாறுமா பெண்கள் ஓட்டு? அதிர்ச்சியூட்டும் அரசியல் கணிப்பு

விஜய்-திரிஷா சர்ச்சையால் 2026-ல் பெண்கள் வாக்குகள் குறையுமா? தளபதியின் அரசியல் பிம்பத்திற்கு இது பின்னடைவா? விமர்சகர்களின் அதிரடி கணிப்புகள் மற்றும் முழுமையான அரசியல் அலசலை பார்க்கலாம்.

சமயம் 7 Mar 2026 2:02 pm

ஹார்முஸ் மூடல் தாக்கம்… உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்!

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தற்போது 7-ஆம் நாளை எட்டியுள்ளது. இந்தப் போர் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஈரான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியதால், உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (சுமார் 20 சதவீதம்) தடைபட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தப் போர் பதற்றத்தால் பல நாடுகளில் […]

டினேசுவடு 7 Mar 2026 2:01 pm

சனி பெயர்ச்சி போல.. திமுகவும் தேர்தலில் பெயர்ச்சி அடைய வேண்டும் - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

சனி பெயர்ச்சி நடைபெற்றது போல தமிழகத்தில் திமுகவும் பெயர்ச்சி அடைய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

சமயம் 7 Mar 2026 1:46 pm

மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியா.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ட்விஸ்ட்

திமுக தற்போது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தொகுதி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சமயம் 7 Mar 2026 1:43 pm

தேனி மாவட்டத்திற்கு ரயில் போக்குவரத்து வசதி அதிகரிப்பு: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

தேனி மாவட்டத்திற்கு ரயில் போக்குவரத்து வசதி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

சமயம் 7 Mar 2026 1:38 pm

அமெரிக்க ஜனாதிபதிக்கு அடிபணிய ஸ்பெயின் பிரதமர் மறுப்பு!

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் ஸ்பெயின் பிரதமர் Pedro Snchez ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு கொள்கை தொடர்பான… The post அமெரிக்க ஜனாதிபதிக்கு அடிபணிய ஸ்பெயின் பிரதமர் மறுப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Mar 2026 1:34 pm