SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

33    C
... ...View News by News Source

95% of Indian CMOs say human insights fuel great strategies: Dentsu Creative Releases 2025 CMO Report

Mumbai: Dentsu Creative has unveiled its annual global CMO Report, which reveals that artificial intelligence is no longer “emerging” but firmly embedded in everyday marketing practices. At the same time, the report underscores that the value of human creativity, empathy, and cultural intelligence has never been more critical.Titled Agents of Reinvention: Marketing at the Intersection of AI and Human Ingenuity, the 2025 report draws on insights from more than 1,950 senior marketing leaders across 14 markets. It identifies 10 key themes shaping marketing in 2025, ranging from anticipating the algorithm and investing in intimacy to building trust and taste in an era of agentic AI.The study highlights the paradoxes marketers face: while AI enables scale, efficiency, and personalization, CMOs overwhelmingly agree that human imagination, empathy, and cultural connection remain at the heart of effective brand building.Key highlights include: 95% of Indian CMOs say human insights fuel great strategies. 87% of CMOs agree modern strategy requires more creativity, empathy, and humanity. 78% say generative AI will never replace human imagination — up 13 points since 2024. 71% agree, “If I don’t win with the algorithm, I will be invisible,” yet 79% fear optimizing too closely risks sameness. 90% believe social and influencer content generates more engagement than traditional advertising. 91% say brands are built through partnerships with creators, platforms, and culture makers. 89% believe agentic AI will have a profound impact on business, but equally agree that trust and taste will matter more than ever. Abbey Klaassen, Global Brand President, Dentsu Creative, said, “The future of marketing is about augmenting human ingenuity with AI to enable a level of pace and personalization not previously possible. It’s not about doing more with less, it’s about doing things we couldn’t do before: connecting creativity, media, data and production to meet the right customer with the right message in the right moment, leveraging the modern content supply chain to show up in more of those moments than was possible in the past. What we hear from our clients, and the report bears that out, is that they need seamless integration of data, AI enabled production and their existing martech stack to realize the potential of real time creativity to accelerate growth.” Yasu Sasaki, Global Chief Creative Officer, dentsu, added, “What we clearly see in this report is that while clients are embracing AI at pace, they remain committed to the power of human craft and creativity. As we adopt AI at scale, it places an ever-greater premium on originality and innovation: AI is exceptionally good at prediction but creativity by its very nature is unpredictable. What is most exciting is when AI and human creativity come together to unlock new possibilities, spot new patterns and shape new futures. That’s why we see clients committing to invest more than ever in innovation in 2026 and beyond.” Patricia McDonald, Global Chief Strategy Officer, Dentsu Creative, commented, “Today’s marketers face an extraordinary series of paradoxes and contradictions. Automation is vital to keep up, humanity is vital to stand out. They must win with the algorithm or be invisible, but optimize too closely and they become indistinguishable. If every brand chases the same signals with the same tools, we are simply running harder to stand still. The result is that the more we embrace AI, the more human we must become; unearthing the deeply personal truths, grounded in culture, that resonate, differentiate and scale.” Amit Wadhwa, CEO, Dentsu Creative & Media Brands, South Asia, dentsu, emphasized, “Algorithms may shape what we see, but it is imagination, empathy and culture that shape what we remember. In India’s dynamic landscape, true success will come to brands that out-human the algorithm, fusing AI with creativity, data with intimacy, and innovation with cultural trust. Those who dare to co-create authentically and build experiences rooted in trust will not only grow their brands but also shape the future of society.” The report methodology involved a 15-minute online survey designed by Dentsu and conducted by B2B International in April 2025, surveying 1,950 senior marketing decision-makers across 14 global markets and multiple industry sectors.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 11:30 am

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (செப்.17), பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. Thank you, my friend, President Putin, for your phone call and warm wishes on my 75th birthday. We are committed to further strengthening our Special and Privileged […]

அதிரடி 18 Sep 2025 11:30 am

மண்டைதீவு புதைகுழி வழக்கு விசாரணை - யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம்

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அது தொடர்பிலான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில் , குறித்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது, அதன் போது, ஊர்காவற்துறை பொலிஸாரினால் , குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆளணி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து , வழக்கு விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து நவம்பர் 12ஆம் திகதி விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டார். பின்னணி 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

பதிவு 18 Sep 2025 11:27 am

தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் –இடிந்து விழுந்த மந்திரிமனை முன்பாக நின்று சிறிதரன் எம்.பி உறுதி

வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடிந்து விழுந்த நல்லூர் மந்திரி மனையை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரிமனை நேற்றைய தினம் மழை […]

அதிரடி 18 Sep 2025 11:25 am

தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் - இடிந்து விழுந்த மந்திரிமனை முன்பாக நின்று சிறிதரன் எம்.பி உறுதி

வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடிந்து விழுந்த நல்லூர் மந்திரி மனையை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரிமனை நேற்றைய தினம் மழை காரணமாக ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது மிக கவலையான விடயம் இந்த மந்திரிமனை என்பது தமிழர்களின் வரலாற்று தொன்மையான இடம் இதனை பாதுகாத்து புணரமைத்து பாதுகாக்கப்பட வேண்டிய பல முயற்சிகள் எடுத்த போதும் ஒரு சில தனி நபர்களினால், இழுபறி நிலையிலே காணப்படுகிறது. இந்தக் கட்டடத்தை புனரமைத்து, இந்த தொல்பொருள் அடையாளத்தை எங்களுடைய பூர்வீகஅடையாளமாக நிலை நிறுத்துவதற்குரிய மிக முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கின்றது எனவே இந்த மந்திரி மனையை பாதுகாப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

பதிவு 18 Sep 2025 11:24 am

மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை –நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் தவிசாளர் சபையில் தெரிவிக்கையில்., போலிகள் மலிந்து விட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் […]

அதிரடி 18 Sep 2025 11:15 am

நகம் பெயர்ந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்

வி ரல்களுக்கு அழகுசேர்ப்பது நகம். அது பெயர்ந்தாலோ, அடிபட்டாலோ ஏற்படும் வலி இருக்கிறதே... தாங்க முடியாதது; வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. அதோடு, கை கால்களின் அழகும் பாதிக்கப்பட்டுவிடும். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து சின்னதாக ஒரு கல் தடுக்கினால், ஒரு கனமான பொருள் விழுந்தால் நகம் பெயர்ந்துவிடும் அல்லது அதில் அடிபடும். இந்தச் சூழலில் என்னென்ன சிகிச்சைகள் செய்யலாம், எப்படிப் பராமரிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்... நகம் பெயர்வதற்கு எத்தனையோ காரணங்களிருந்தாலும், அடிபடுவதுதான் மிக முக்கியக் காரணம். இது மட்டுமில்லாமல், எந்த வலியும் இல்லாமல் நகம் ஒடிந்து, தானாகவே விழுவதும் (Onycholysis) உண்டு. இதற்கு பூஞ்சைத்தொற்று (Fungal Infection), சொரியாசிஸ் (Psoriasis) போன்ற பிரச்னைகளும் காரணமாகின்றன. அடிபடுதல்! சாலை விபத்துகள், கனமான பொருள் காலின் மேல் விழுதல், விளையாடும்போது அடிபடுவதாலும்கூட நகம் பெயர்ந்துவிடலாம். அடிபட்டதில் நகத்துக்கு அடியில் பாதிப்புகள் இருந்தால், அங்கே ரத்தம் தேங்கி உறைந்து, பின்னர் கறுத்துப்போய்விடும். சாலை விபத்துகளில் அல்லது பெரிய அளவில் அடிபட்டு நகம் பெயர்ந்திருந்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது. நகத்தில் சின்னதாக ஏற்படும் பாதிப்புகளுக்கு வீட்டிலேயே சில சிகிச்சைகளைச் செய்து சரிசெய்துவிடலாம். விமானத்தை இழுத்து வந்த யானைகள் : அந்தக் காலத்து யானைக் கதைகள் - ஆச்சர்ய வரலாறு நகத்தில் அடிபட்டால் செய்யவேண்டியவை என்னென்ன? * அடிபட்ட இடத்தைச் சோப் போட்டு, சுத்தமான நீரில் கழுவவும். * அடிபட்ட கால் அல்லது கைப் பகுதியை உயர்த்தி வைத்துக்கொள்ளவும். * நகத்தில் கட்டுப்போட்டு ரத்தம் வராமல் பார்த்துக்கொள்ளவும்.   * விரலிலிருந்து பெயர்ந்த நகத்தை ட்ரிம் (Trim) செய்யவும் அல்லது வெட்டிவிடவும். * நகம் பெயர்ந்த இடம் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். * அடிபட்ட நகம் மீண்டும் வளர்வதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை அதே இடத்தில் மேலும் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். (Fungal Infection) நகத்தின் அடிப்பகுதியில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டாலும், அது பெயர்ந்துகொள்ளும். அதை குணப்படுத்துவதும் கடினம். முதியவர்கள், சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு அடிபட்டால், நகத்தில் பூஞ்சைத்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. பூஞ்சைத்தொற்றுக் காரணமாக நகம் பெயர்வதற்கான சில அறிகுறிகள்... * நகம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்துக்கு மாறும். * நகத்தின் நுனிப்பகுதி வீக்கமடையும். * சிலருக்கு அந்த இடத்தில் சீழ் வடியவும் வாய்ப்பு உண்டு.   * நகம் மிக எளிதாக உடையும் தன்மையிலிருக்கும்.   இதை குணப்படுத்த பூஞ்சைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் அறுவைசிகிச்சைகூட செய்யவேண்டி வரலாம். பூஞ்சைத்தொற்றிலிருந்து தப்பிக்க சில வழிகள்... * நகத்துக்கு அடியில் மண் அல்லது தூசிகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும். * வளரும் நகங்களை முறையாக அவ்வப்போது வெட்டி விடவும். * கால்களை ஈரமில்லாமல் அவ்வப்போது உலர்வாக வைத்துக்கொள்ளவும். * கை, கால் நகத்தில் அடிபட்டால் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவும். சொரியாசிஸ் சொரியாசிஸ், நீண்ட காலத்துக்கு நோய்தடுப்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாட்டால் உண்டாவது. சிலருக்கு வரும் சொரியாசிஸ் நகங்களையும் பாதிக்கலாம். இந்த நோயில் நகத்துக்கு அடியிலிருக்கும் தோல் செல்கள் இறந்துபோவதால், நகம் தனியாகப் பிரிந்து, சில நாள்களில் விழுந்துவிடும். சொரியாசிஸுக்கு சிகிச்சை செய்துகொள்வதோடு, நகங்களை அவ்வப்போது வெந்நீரில் நனைப்பது அதைக் காப்பாற்ற உதவும். நகத்தை எப்போது நீக்குவது? நகம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருக்கும்போது அதை முழுமையாக நீக்க முயற்சிக்கக் கூடாது. அது வளரும்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் தொடங்கும். அப்போது, விடுபட்ட பகுதியை மட்டும் நீக்கி, பெயர்த்துக்கொண்டுவரும் நகத்தின் முனைப்பகுதியை மென்மையாக்கிவிட வேண்டும். மேலும் அதோடு அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெயர்ந்த நகத்தை முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால் அங்கே நோய்தொற்று ஏற்பட்டு, காயத்தை ஆறவிடாமல் தடுத்துவிடும். நகத்தில் நோய்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள்... * சீழ் வருதல் * காய்ச்சல் * அதிகமாக வலித்தல் * வீக்கம், சிவந்துபோதல். நகத்தில் நோய்தொற்று ஏற்பட்டால், நகத்தை முழுமையாக இழக்கவும் நேரிடலாம். எனவே நகங்களை முறையாக வீட்டில் பராமரிப்பது சிறந்தது. Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?

விகடன் 18 Sep 2025 11:13 am

தமிழ்நாடு வானிலை முன்னறிவிப்பு… செப்டம்பர் 18 நிலவரம்- எங்கெங்கு மழை பெய்யும்?

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெதர்மேன் தரப்பில் பகிரப்பட்டுள்ள தகவல்களை விரிவாக காணலாம்.

சமயம் 18 Sep 2025 11:12 am

வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில்: 10% மூலதனம் போதும், பிணையம் இல்லை; 3% வட்டியில் 2 கோடி வரை கடன்!

இந்தியா ஒரு வேளாண் நாடு. அரிசி, பால், மசாலா ஆகிய பொருள்களின் உற்பத்தியில் டாப் இடங்களைப் பிடித்துள்ளது இந்தியா. ஆனால், உற்பத்திக்குப் பிறகு, இந்தப் பொருளைப் பாதுகாப்பதற்கான போதுமான கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. இதனால், பல்வேறு பொருள்கள் வீணாகின்றன. இந்த வீண்களைக் குறைக்கத் தான் மத்திய அரசு வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் ரூ.2 கோடி வரை சொத்து பிணையம் இல்லாமல் கடன் பெறலாம். தொழில் ஆலோசகர் ராமசாமி தேசாய் இந்தத் திட்டம் குறித்து நமக்கு விளக்கமாக எடுத்துரைக்கிறார் தொழில் ஆலோசகர் ராமசாமி தேசாய். எந்தத் துறைக்கு? வேளாண் உற்பத்தித் துறை சார்ந்த தொழில்களுக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் ரூ.2 கோடி வரை எந்தச் சொத்து பிணையமும் இல்லாமல் கடன் கிடைக்கும். இந்தக் கடனுக்கான வட்டி 6 சதவிகிதம் ஆகும். ஆனால், அதில் 3 சதவிகித வட்டியை அரசாங்கமே தள்ளுபடி செய்துவிடுகிறது. இந்தக் கடனை ஏழு ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும். வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்! மூலதனம் எவ்வளவு இருக்க வேண்டும்? மூலதனமாக நாம் 10 சதவிகிதத்தை முதலீடு செய்தால் போதும். மீதம் வேண்டிய 90 சதவிகிதம் கடனாகவே கிடைத்துவிடும். இதுவே மற்ற கடன்களாக இருந்தால், 20 - 25 சதவீதம் நாம் மூலதனமாக முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். அதனால், இந்தக் கடனை வாடிக்கையாளர் ஃபிரெண்ட்லி என்று கூட எடுத்துக்கொள்ளலாம். மூலதனம் யார் யார் விண்ணப்பிக்கலாம்? விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs) வேளாண் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப்கள் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் (PACS) மற்றும் பிற கூட்டுறவு சங்கங்கள் சுய உதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLGs) சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள் மாநில முகமைகள் மற்றும் மத்திய அல்லது மாநில அரசின் ஆதரவுடன் இயங்கும் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) திட்டங்கள் எந்த மாதிரியான திட்டங்களுக்கு இந்த மானியம் பெற முடியும்? அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை: கிடங்குகள், தானியக் களஞ்சியங்கள், பேக்ஹவுஸ்கள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் குளிர்பதனச் சங்கிலிகள். தளவாடங்கள்: ரீஃபர் வேன்கள் மற்றும் பிற வெப்பத்தடுப்பு செய்யப்பட்ட வாகனங்கள். பதப்படுத்தும் அலகுகள்: முதன்மை பதப்படுத்தும் மையங்கள், தரம் பிரித்தல், தரப்படுத்துதல் மற்றும் மதிப்பாய்வு அலகுகள். ஸ்மார்ட் விவசாயம்: தனிப்பயன் வாடகை மையங்கள், ட்ரோன்கள் மற்றும் சென்சார் அடிப்படையிலான உள்கட்டமைப்பு. சமூக விவசாய சொத்துக்கள்: இயற்கை உள்ளீடு உற்பத்தி, ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் செங்குத்து விவசாயம். மில், உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள். விவசாயம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முதலில், உங்களுக்கு விருப்பமான வங்கியிடம் கடன் குறித்து பேசுங்கள். அவர்கள் ஒப்புதல் அளித்த பின், திட்டத்தின் செலவுகள் மற்றும் வருவாய் மதிப்பீடுகளை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க வேண்டும். அதற்கான மாதிரி விரிவான திட்ட அறிக்கைகள் AIF போர்ட்டலிலேயே கிடைக்கின்றன. அதிகாரப்பூர்வ AIF போர்ட்டலில் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரு பயனாளியாகப் பதிவு செய்துகொள்ளவும். அடுத்து, AIF போர்ட்டலில் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும், தயாரித்து வைத்திருக்கும் விரிவான திட்ட அறிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக்கு அனுப்பப்படும். வங்கி 60 நாள்களுக்குள் அந்தத் திட்டத்தை மதிப்பிடும். பின் வங்கிகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கடன் வழங்கியதும், அரசாங்கம் வட்டித் தள்ளுபடியை நேரடியாக வங்கிக்கு கொடுத்துவிடும். ஆண்டுக்கு ரூ.3,60,000... வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம் மைக்ரோ கிரீன்ஸ்… அசத்தும் மதுரைக்காரர்! Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

விகடன் 18 Sep 2025 11:12 am

மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை - நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் தவிசாளர் சபையில் தெரிவிக்கையில்., போலிகள் மலிந்து விட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் மனித நேயத்தோடும் தமிழ் மண்ணுக்கு மக்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான தன்னலமற்று பணியாற்றியவர். அவரது அறிவியல், பண்பியல், வாழ்வியல் என்பன இந்த மண்ணின் ஒரு வரலாறு அடையாளம். அவ்வாறனவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதனை எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதும் இப்படியானவர்களை எமது இளைய தலைமுறையினர் தங்களது வாழ்வியலுக்கான வழிகாட்டியாக பின்பற்றவேண்டும் என்பதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபை இவ் உயரிய பணியினை மேற்கொள்ளுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காரணத்தினால் யாழ்.பல்கலைக்கழக சூழலில் அவருடைய சிலையினை நிறுவுவதற்கான இடத்தினை ஒதுக்க வேண்மென்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும். அந்த வகையில் திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அல்லது யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு முன்னால் உள்ள நடைபாதைக்கு அருகில் இச் சிலையினை நிறுவுவதற்கான இடமாக தெரிவு செய்யலாம் என தெரிவித்தார். அதன் போது, திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மாமனிதர் துரைராஜா அவர்களின் சிலையினை நிறுவுவதற்கான பொருத்தமான இடமென சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது

பதிவு 18 Sep 2025 11:10 am

Meta Defends Itself at NCLAT, Says CCI Case Built on “Assumptions”

New Delhi: The standoff between Meta and India’s competition watchdog has intensified, with the tech major telling the National Company Law Appellate Tribunal (NCLAT) on Monday that the Competition Commission of India (CCI) has failed to establish any evidence of abuse of dominance or restriction of market access for rivals.According to a PTI report, Meta’s counsel Amit Sibal argued that the CCI’s case was based on assumptions about potential future conduct rather than proven violations. He said the regulator had not demonstrated how limited data sharing from optional business features—such as Click-to-WhatsApp Ads—with Meta entities had adversely impacted competition in the online display advertising market.Sibal further contended that the CCI neither sought advertiser feedback on the substitutability of advertising services nor considered broader categories like online search advertising. As a result, he said, the regulator had defined an “artificially narrow” relevant market restricted only to online display advertising.The CCI has sought more time to respond to Meta’s submissions. Hearings will now continue on September 19 and 22.At the heart of the dispute is the INR 213.14 crore penalty imposed by the CCI on Meta in November 2024 for alleged unfair practices linked to WhatsApp’s 2021 privacy policy update. The regulator had concluded that WhatsApp’s “take-it-or-leave-it” approach to data sharing exploited its dominance in messaging and risked strengthening Meta’s position in digital advertising through cross-platform integration. Along with the penalty, the CCI barred WhatsApp from sharing user data with Meta or affiliates for advertising purposes for five years.Meta and WhatsApp challenged the order before the NCLAT in January 2025. While granting interim relief, the tribunal stayed the five-year ban on data sharing. Meta has maintained that such restrictions would impair its ability to deliver personalised ads on Facebook and Instagram, ultimately impacting Indian businesses.The case marks one of the most significant antitrust battles between a Big Tech company and India’s competition regulator, with implications for digital advertising, user privacy, and platform dominance.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 11:06 am

Prime Video announces franchise expansion with feature film adaptation of The Summer I Turned Pretty

Mumbai: Prime Video has announced that its global hit series The Summer I Turned Pretty will conclude with a feature film written and directed by Jenny Han. The news was revealed at the show’s finale red carpet celebration in Paris, marking the next chapter in the beloved franchise. “The Summer I Turned Pretty has struck a chord with audiences everywhere, creating moments of joy, nostalgia, and connection that have made it a global sensation,” said Courtenay Valenti, Head of Film, Streaming and Theatrical at Amazon MGM Studios, and Vernon Sanders, Global Head of Television at Prime Video and Amazon MGM Studios. “We’re proud of the series’ extraordinary success and couldn’t be more excited to partner again with Jenny Han to bring fans an unforgettable next chapter.” “There is another big milestone left in Belly’s journey, and I thought only a movie could give it its proper due. I’m so grateful to Prime Video for continuing to support my vision for this story and for making it possible to share this final chapter with the fans,” said Jenny Han, writer, director, and executive producer. Adapted from Han’s best-selling trilogy, The Summer I Turned Pretty has become a worldwide phenomenon since debuting in 2022. Season Three, which premiered earlier this year, drew 25 million viewers globally within its first seven days, making it the fifth most-watched returning season on Prime Video. Season One debuted as the #1 show on the platform during its launch weekend, and Season Two more than doubled those numbers within three days.The multigenerational drama follows a love triangle between one girl and two brothers while exploring themes of family, friendship, and coming of age. At its heart, it captures the magic of first love, heartbreak, and the transformative power of summer.Season Three was helmed by Jenny Han and Sarah Kucserka as co-showrunners, with both serving as executive producers alongside Karen Rosenfelt, and Paul Lee, Hope Hartman, and Mads Hansen of wiip. The series is produced by Amazon MGM Studios in partnership with wiip.Jenny Han, the No. 1 New York Times best-selling author of The Summer I Turned Pretty and To All the Boys I’ve Loved Before, continues to be a leading voice in YA storytelling. Her works have been published in over 30 languages, with successful adaptations across television and film, including Netflix’s global hit To All the Boys trilogy and its spinoff series XO, Kitty.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 11:03 am

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செப்டம்பர் 17) அன்று, சென்னையில் நடந்த டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது, அவர் திடீரென உடல்நலக்குறைவால் மயங்கினார். உடனடியாக குழுவினரால் மீட்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதித்துள்ளனர். டெஹைட்ரேஷன் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக […]

டினேசுவடு 18 Sep 2025 11:01 am

விமானத்தை இழுத்து வந்த யானைகள் : அந்தக் காலத்து யானைக் கதைகள் - ஆச்சர்ய வரலாறு

அந்த இரண்டு யானைகளும் இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குக் கிளம்பின (1924). டோக்கியோவின் யுவெனோ (Ueno) மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆணொன்றும் பெண்ணொன்றாகவும் இருந்த அந்த யானைகளுக்கு வைக்கப்பட்ட பெயர், `ஜோன்’ மற்றும் `டோங்கி.’ அந்த யானைகள் ஆரம்ப நாள்களில் ஜப்பான் வாழ்க்கைக்குப் பழகச் சிரமப்பட்டாலும், நாளடைவில் தம்மைச் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக் கொண்டன. யானைகளைப் பார்ப்பதற்கென்றே மிருகக்காட்சி சாலைக்குக் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வந்து போயினர். யானைகளைக் கண்டு குஷியில் குதித்தனர். ஜோனும் டோங்கியும் அந்த மிருகக்காட்சி சாலையின் அடையாளமாகிப் போயின. இரண்டாம் உலகப்போர் காலகட்டம். எதிரிகளின் போர் விமானங்கள் மிருகக்காட்சி சாலையில் தாக்குதல் நடத்தலாம்... அப்போது பெரிய மிருகங்களும், ஆட்கொல்லி மிருகங்களும் கூண்டுகளை உடைத்துக்கொண்டு தப்பித்து ஊருக்குள் புகுந்துவிட்டால்? டோக்கியோ மேயராக இருந்த ஸீஜியொ ஒடாச்சி, மனிதத்தன்மையை வெளியே எடுத்து எறிந்துவிட்டு கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். ‘மிருகங்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விடுங்கள்.’ பல மிருகங்கள் மடிந்துபோயின. யானைகள் அதிபுத்திசாலிகளாயிற்றே... ஜோனும் டோங்கியும் விஷம் கலந்த உணவை உண்ணாமல் தவிர்த்தன. அவர்கள் நினைத்திருந்தால் அந்த இந்திய யானைகளைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். சற்றே இரக்கத்துடன் மெல்லச் சாகட்டும் என்று அவற்றைப் பட்டினி போட்டார்கள். 1943, செப்டம்பரில் மிருகக்காட்சி சாலையில் கொல்லப்பட்ட மற்ற மிருகங்களுக்கான இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் ஜோனும் டோங்கியும் கூண்டுக்குள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தன. பின்பு சில நாள்களில் மரித்துப்போயின. இரண்டாம் உலகப் போர் முடிந்து, உருக்குலைந்து கிடந்த ஜப்பானில் குழந்தைகள், சற்றே இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக யுவெனோ மிருகக்காட்சி சாலைக்கு வந்தனர். அங்கே பறவைகளும் சிறு விலங்குகளும் மட்டுமே இருந்தன. யானைகள் இல்லை. எந்தக் குழந்தையின் கண்களிலும் பரவசம் எழவே இல்லை. உலகின் ஆகச்சிறந்த படைப்புகள் எவை எனப் பட்டியலிட்டால், அதில் நிச்சயம் யானைக்கு இடம் உண்டு. இந்தியாவில் கி.மு.6000 சமயத்திலேயே யானைகள், மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்காக இருந்ததற்கான குகை ஓவியங்கள் சான்றாக இருப்பதை வரலாற்றாளர் லாஹிரி சௌத்ரி குறிப்பிடுகிறார். காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு அவை போர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. சந்திரகுப்த மௌரியர், யானைப்படை வைத்திருந்திருக்கிறார். அர்த்தசாஸ்திரம், யானைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று விவரிக்கிறது. பேரரசர் அசோகர், யானைகளுக்கான மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். `போரஸ்’ என்கிற புருஷோத்தமன், யானைமீது ஏறி வந்த கம்பீரத்தைக் கண்டு மாவீரர் அலெக்ஸாண்டருக்கே வியர்த்திருக்கிறது. இப்படி இந்தியாவின் முற்கால வரலாற்றில் யானை என்பது போர்களுக்கான விலங்காகவே அறியப்படுகிறது. ‘போர்க்களத்தில் இறந்துகிடந்த யானைகள் ஒன்றன்மீது ஒன்றாகக் குவிந்து கிடந்தன. அவை யானைகள் என்று தெரியாத அளவுக்கு அவற்றின்மீது அம்புகள் பாய்ந்திருந்தன. அது பார்ப்பதற்கு மலைகளில் மொய்க்கும் குருவிக் கூட்டம்போல் இருந்தது' என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது, போர்க்காட்சி ஒன்றை விளக்குகிறது. தமிழ்நாட்டின் மூவேந்தர்களிடமும் யானைப் படைகள் இருந்தன. ஒவ்வோர் அரசனும் தனது வலிமையை நிரூபிக்க யானைப் படைகளையே பெரிதும் நம்பியிருந்தான் என்பதைச் சங்க இலக்கியங்கள் மூர்க்கமாகவும் தீர்க்கமாகவும் காட்சிப்படுத்துகின்றன. நம் மண்ணின் அரசர்களெல்லாம் யானைகளைப் போர்க்களத்தில் வீழ்த்தினார்களே தவிர, காடு புகுந்து வேலை மெனக்கிட்டு வேட்டையாடவில்லை. ஆனால், யானைகளோடு அதிகம் பழகாத வெள்ளைக்காரர்களுக்கு, அந்தப் பிரமாண்ட மிருகத்தை வேட்டையாடி வீழ்த்துவதில் அட்ரினலின் அதிகம் சுரந்ததுபோல. யானை வேட்டை, யானை மீதேறி வேட்டையையெல்லாம் வழக்கப்படுத்திக்கொண்டார்கள். ‘ஆஹா, யானைகளைவைத்து இவ்வளவு வேலைகள் வாங்கலாமா!’ என்று தெரிந்துகொண்டு ‘காரியம்’ சாதித்தார்கள். அதற்காகவே அதிக அளவில் காட்டு யானைகளைப் பிடித்துப் பழக்கப்படுத்தினார்கள். `மாவுத்தன்’ என்றழைக்கப்படும் யானைப் பாகன்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ரேபா ரக்சித் காட்டு யானைகளைப் பிடிப்பதற்கென்றே இந்தியாவில் பழக்கத்திலிருந்த பழைமையான முறை, குழிவெட்டிப் பிடிப்பது. இது குறித்து அகநானூற்றின் பதிமூன்றாம் பாடலில் போகிற போக்கில் குழிவெட்டி வைத்திருக்கிறார் பெருந்தலைச் சாத்தனார். குழி முறையைக் கொஞ்சம் விரிவாக நீள, அகலங்களுடன் சொல்ல வேண்டுமென்றால்… ஐந்து மீட்டர் ஆழம், மேலே நான்குக்கு நான்கு மீட்டர் நீள, அகலத்தில் சதுரமான குழி. அடிப்பாகம் மூன்றுக்கு மூன்று மீட்டர் அளவில் இருக்க வேண்டும். சற்றே சாய்வாக இருந்தால்தான், பிடிபட்ட யானையை மேலே கொண்டு வரத் தோதாக இருக்கும். குழியின் பாதியிலிருந்து மேல்மட்டம் வரை மூங்கில்களால், மரக்கிளைகளால் நிரப்பி மூடப்படும். அங்கே குழி இருக்கிறதென்றே தெரியாத அளவுக்கு இலைகளும் சருகுகளும் போடப்படும். ‘ஆனைக்கும் அடி சறுக்கும்' என்ற சொற்கள் இங்கே பொருந்தும். தினசரி ஒருவர் வந்து குழிக்குள் யானை கிடக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போவார். இல்லையென்றால் உள்ளே விழுந்த யானை பிளிறும் ஒலியே பல மைல்கள் தொலைவுக்குக் கேட்கும். லெஃப்டினென்ட் ஆர்தர் என்பவர் எழுதிய, ‘Memoir of Travancore' (1810) புத்தகத்தில் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குழிவெட்டி யானைகள் பிடிக்கப்பட்டது குறித்த செய்திகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் காட்டிலோ, அவர்களுக்குச் சொந்தமான நிலத்திலோ குழிவெட்டி வைத்துக் கொள்ளலாம். அதில் விழுந்த யானை விற்கப்பட்டால், அதற்கேற்ப வரியை அரசாங்கத்துக்குக் கட்டிவிட வேண்டும். 1810-ம் ஆண்டுக்குப் பிறகு, அரசும் யானைக்காகக் குழிகளை வெட்டிவைத்தது. ஆகவே, மக்கள் வெட்டுவது, ‘இனாம் குழி’ என்று அழைக்கப்படலானது. இனாம் குழியில் விழுந்த யானையை மக்கள், அரசுக்கு விற்றால் ரூ.150 வரை வழங்கப்பட்டதாகக் குறிப்பு இருக்கிறது. குழியில் விழுந்த யானைகளில் சில இறந்துபோயின. சில காயங்களுடன் அவதிப்பட்டன. சில தப்பித்துப்போயின. சில தப்பித்துச் சென்றும் காயங்களால் இறந்துபோயின. ஆக, குழி புகுந்தவற்றில் சுமார் பாதி அளவு யானைகளே ஆரோக்கியமாக மீட்கப்பட்டன. 1870-களில் இப்படிக் குழிவெட்டி யானைகளைப் பிடிக்கும் முறை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆகவே இனாம் குழிகள் தடைசெய்யப்பட்டன. யானை வேட்டை, குழிவெட்டிப் பிடிக்கப்படுதல், தந்தத்துக்காகக் கொல்லப்படுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 1873-ம் ஆண்டில் Madras Wild Elephants Preservation Act கொண்டுவரப்பட்டது. அதை அடிப்படையாகக்கொண்டு 1879-ம் ஆண்டில், The Elephants’ Preservation Act கொண்டுவரப்பட்டது. இவற்றின் விளைவாக, காட்டு யானைகளைப் பிடிக்க இன்னொரு பழைமையான முறையான கேதா (Khedda) அதிகம் பயன்படுத்தப்படலானது. அந்த இந்திச் சொல்லுக்கு ‘ஓரிடத்தை நோக்கி ஓட்டுதல்’ என்று பொருள் வரும். அகழி போன்ற அமைப்பு. அதனுள் செல்ல ஒரே ஒரு மரப்பாலம். பழக்கப்பட்ட பெண் யானை ஒன்று ஆபரேஷனில் ஈடுபடுத்தப்படும். அதைக் கண்டு மயங்கி ஆண் யானைகள், ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன், போ போ போ…' என்று பின்தொடரும். அகழிக்குள் யானைகள் வந்த பிறகு மறைந்திருந்து நோட்டமிடும் ஆட்கள் வெளியே வருவார்கள். அந்த மரப்பாலத்தை உடைத்துவிடுவார்கள். அந்த அப்பாவி யானைகள் வெளியேற வழியில்லாமல் உள்ளே சிக்கிக்கொள்ளும். சில நாள்கள் ஆகாரம், நீர் இல்லாமல் தவிக்க விடுவார்கள். பின்பு கும்கி யானைகள் களமிறக்கப்படும். காட்டு யானைகளைப் பழக்கப்படுத்தும் பயிற்சிகள் ஆரம்பமாகும். ரத்தமின்றி, உயிரிழப்பின்றி யானைகளைக் கூட்டமாகப் பிடிக்க இந்த கேதா முறை உதவியது. மைசூர் காடுகளில் கேதா முறையை மிகச்சரியாக உபயோகித்து, காட்டு யானைகளைப் பிடித்த பிரிட்டிஷ் அதிகாரி, ஜார்ஜ் P. சாண்டர்ஸன். மைசூரில் 53 காட்டு யானைகளை ஒரே ஆபரேஷனில் ரத்தமின்றி, உயிர்ச் சேதாரமின்றிப் பிடித்தது இவரது பெரும் சாதனை. 1876-ம் ஆண்டில் சிட்டகாங்கில் ஒரே ஆபரேஷனில் யானைகளும் குட்டிகளுமாக 85 தும்பிக்கையோன்களை உயிருடன் வசப்படுத்தியிருக்கிறார். யானை போலோ காட்டு யானைகளைப் பின்தொடர்ந்து கவனித்து, அவற்றோடு பழகி, அவை குறித்த தகவல்களையெல்லாம் முறையாக, விரிவாகப் பதிவுசெய்த முதல் பிரிட்டிஷ்காரர் இவரே. யானைகளைக் கொல்லக் கூடாது என்பதில் அக்கறை காட்டியவர். பழக்கப் படுத்திய யானைகள் மீதேறி, ஆற்றில் இறங்கி குத்தீட்டிகளை நீரில் பாய்ச்சி மீன் பிடிப்பது இவருக்குப் பிடித்த பொழுதுபோக்காக இருந்தது. ‘யானை ராஜா’ என்ற செல்லப் பெயருடன் விளங்கிய சாண்டர்ஸன், தனது 44-வது வயதில் மெட்ராஸில் இறந்துபோனார். சாண்டர்ஸன் எழுதிய ‘Thirteen Years Among the Wild Beasts of India' என்ற நூலில், அவர் இன்னமும் யானைகளோடு உலவிக்கொண்டுதான் இருக்கிறார். யானைகளைப் பற்றிப் பேசும்போது, பிரிட்டிஷாரின் காலனியாக இருந்த இலங்கையைத் தவிர்க்க முடியாது. அங்கும் யானைகள் அதிகம். யானைகளைவைத்து அவர்கள் வேலை வாங்கியதும், வேட்டையாடியதும் மிக அதிகம். சிலோன் சரித்திரத்தில் வேட்டை மன்னராக முத்திரை பதித்தவர் மேஜர் தாமஸ் வில்லியம் ரோஜர்ஸ். 1824. ரோஜர்ஸ் இலங்கைக்கு வந்தார். புதிய குடியிருப்புகளை, தேயிலைத் தோட்டங்களை, இன்ன பிற தொழிற்சாலைகளை உருவாக்கும் பிரிட்டிஷாரின் முயற்சிகள் தீவிரமடைந்திருந்தன. அதற்கு உள்ளூர் மக்களின் எதிர்ப்பெல்லாம் இல்லை. மண்ணின் மைந்தர்களான யானைகளே வனம் காக்கப் போராடின. ‘என் துப்பாக்கிக்கு முன் எந்தக் கொம்பன் யானையும் பூனையே’ என்று களமிறங்கினார் ரோஜர்ஸ். தோட்டாக்கள் யானைகளின் நெற்றியைத் துளைத்தன. 12 ஆண்டுகளில் சுமார் 1,400 யானைகள் மேஜரால் கொல்லப்பட்டன என்று ஒரு கணக்கு உண்டு. அதற்கு மேலும் இருக்கலாம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். உள்ளூர் மக்கள், மேஜரை வில்லனாகவோ, வேட்டை வெறிபிடித்த குற்றவாளியாகவோ பார்க்கவில்லை. யானைகளிடமிருந்து தங்களைக் காக்க வந்த சாமியாகவே வணங்கினர். வேட்டையின்போது யானைகள் தாக்கிக் காயமடைந்த சம்பவங்களும் மேஜருக்கு உண்டு. அப்போதெல்லாம் தப்பித்தவர், 1845-ம் ஆண்டில் மின்னல் தாக்கி இறந்தார். இலங்கையின் நுவரேலியாவில் மேஜருக்குக் கல்லறை அமைக்கப்பட்டது. அதை யானைகள் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, சுற்றி அகழியும் அமைத்தார்கள். ஆனால், கல்லறையையும் ஒரு முறை மின்னல் தாக்கிச் சேதப்படுத்தியது. மேஜரைத் தாக்கிய மின்னல்கள் மின்னிய போது முழங்கிய இடியொலி, யானைகளின் பிளிறல்போல இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இலங்கையில் யானை வேட்டை வெறிபிடித்த ஆளாக மேஜர் ரோஜர்ஸைச் சொல்லலாமென்றால், காலனி ஆதிக்க ஆப்பிரிக்காவிலும் அதற்கும் மேலான வெறியர்கள் இருந்திருக்கிறார்கள். `ஹாரி மேனர்ஸ்’ என்றழைக்கப்பட்டவர், பிரிட்டிஷ்–ஜெர்மன் பெற்றோர் கூட்டணியில் பிறந்த வேட்டைக்காரர். சென்ற நூற்றாண்டில் தென்னாப்பிரிக்காவிலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் காடுகளிலும் துப்பாக்கியுடன் திரிந்த இவரது ஆப்பிரிக்க யானை வேட்டைக் கணக்கு சுமார் 1,000 வரை இருக்கலாம். ஹாரியைப்போல தந்தத்துக்காகவே ஆப்பிரிக்க யானைகளைக் கொன்றுகுவித்த இன்னொரு ரத்தவெறித் திலகம், ஃபிரெடரிக் டெஃப் பேங்க்ஸ். ஆயிரத்தைத் தாண்டி கொன்றிருக்கிறார் என்று வேழத்தின் குருதியால் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள். ‘The Wanderings of An Elephant Hunter' என்று தனது பெருமைகள், பீற்றல்களை எழுதிவைத்திருக்கும் ஸ்காட்லாந்துக்காரரான வால்டர் கராமோஜோ பெல் என்பவரது ஆப்பிரிக்க யானை வேட்டைக் கணக்கு 1,101. தென்னாப்பிரிக்க வாழ் ஆங்கிலேயரான ஹென்றி ஹார்ட்லேவின் கணக்கு 1,200. ஸ்காட்லாந்துக்காரரான ஜே.ஏ. ஹன்ட்டரின் கணக்கு சுமார் 1,400. ‘அதுகூட + 200 போட்டுக்கோங்க' என்று போட்டிக்கு நிற்கிறார் இன்னொரு ஸ்காட்லாந்துக் காரரான ஜிம் சதர்லேண்ட். ஆஸ்திரேலியாவில் பிறந்த பீட்டர் பியர்ஸன், உகாண்டாவில் யானைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரியாக இருந்தவர். இவரது வேட்டைக் கணக்கு இரண்டாயிரத்துச் சொச்சம் என்கிறார்கள். நியூசிலாந்தில் பிறந்த சாமாகி சால்மன், உகாண்டாவில் அதே பிரிவில் அதிகாரியாக இருந்தவர். யானைகளைக் கட்டுப்படுத்துவதைக் கண்ணும் கருத்துமாகச் செய்துவந்த இவரது துப்பாக்கி, சுமார் 4,000 யானைகள் வரை சுட்டிருக்கலாம். இவரே மனிதகுலத்தின் ஆகப்பெரிய யானை வேட்டைக்காரராக இருக்கலாம் என்பது அதிகாரபூர்வமற்ற தகவல். `ஒரே நாளில் 40 யானைகளைக் கொன்றவர்’, `ஒரேமூச்சில் 14 தோட்டாக்களைக்கொண்டு 12 யானைகளைச் சுட்டவர்’ என்று இவரது சாதனைக் கணக்கு கிலியூட்டுகிறது. இங்கே ஒரு கவித்துவ க்ளைமேக்ஸையும் பதிவுசெய்துவிடலாம். 1,200 யானை வேட்டை புகழ் ஹென்றி ஹார்ட்லே, ஒரு காண்டாமிருகத்தைச் சுடும்போது, அது காயங்களுடன் அவர்மீது பாய்ந்து விழுந்தது. அதில் உண்டான காயங்களால் ஹென்றிக்கு பரலோக ராஜ்ஜியத்துக்கு பாஸ்போர்ட் கிடைத்தது. ரெஸ்ட் இன் பீஸ்! இந்தியாவில் யானை வேட்டை குறித்தும் பார்த்துவிடுவோம். இங்கும் தந்தங்களுக்காக யானைகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. பிரிட்டிஷாரின், மகாராஜாக்களின், வேட்டைப் பிரியர்களின் கௌரவக் கொழுப்புக்காக, துப்பாக்கிகள் யானைகளைக் குறிபார்த்தன. ஆனால், ஆப்பிரிக்காவோடு ஒப்பிட்டால், வேட்டையாடப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறைவே. அஸ்ஸாமிலேயே அதிக அளவு யானை வேட்டை நடந்தது எனலாம். பல மகாராஜாக்கள் யானை மீதேறி வேட்டைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதற்காகவே யானைகளுக்கு முறையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டிருந்தன. கூச் பிகார் சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த நிருபேந்திர நாராயணின் வேட்டைக் கணக்கை மட்டும் பார்ப்போம். சமஸ்தான மகாராஜாக்களில் அதிதீவிர வேட்டை வெறியர். 1871 தொடங்கி 1907 வரை தனது அனுபவங்களை ‘Thirty-seven years of big game shooting in Cooch Behar, the Duars, and Assam' என்ற புத்தகமாகவே செதுக்கியிருக்கிறார். 365 புலிகள், 311 சிறுத்தைகள், 207 காண்டாமிருகங்கள், 133 கரடிகள், 318 சதுப்பு நில மான்கள், 259 கடமான்கள், 48 காட்டெருமைகள் என்று தனது வேட்டைக் கணக்கைத் தெளிவாகக் காட்டியிருக்கும் நிருபேந்திர நாராயண், யானைகளை வேட்டையாடவில்லை. டொனால்டு ஆண்டர்ஸன், ஆங்கிலோ இந்தியர். காடுகளில் இவர் வேட்டையாடிய விலங்குகளுக்குக் கணக்கே கிடையாது. யானைகளின் ரத்தத்தையும் இவரது தோட்டாக்கள் ருசி பார்த்திருக்கின்றன. இந்தியாவில் வாழ்ந்து மறைந்த கடைசி வெள்ளையின வேட்டைக்காரர் இவரே. மற்றபடி ஒரு மேஜரோ, கர்னலோ, வால்டரோ ஆயிரக்கணக்கான யானைகளை வீழ்த்தினார் என்று கணக்கு காட்டும் அவல புள்ளிவிவரம் இங்கே இல்லை. அந்தவிதத்தில் இந்தியாவின் புலிகளும் சிறுத்தைகளும் சிங்கங்களும் பாவப்பட்டவையே. பிரிட்டிஷார், இந்தியாவில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியதில் யானைகள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. தெளிவாகச் சொன்னால், வருத்தப்பட்டு பாரம் சுமந்திருக்கின்றன. அணைகள், பெரிய கட்டடங்கள், ரயில் பாதைகள், சாலைகள், மலைப் பாதைகள், பாலங்கள், துறைமுகங்கள் உருவாக்கத்தில் களிறுகளே பெரும்பங்கு வகித்திருக்கின்றன. தோட்ட வேலைகளில் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ரயில் இன்ஜின்கள் பற்றாக்குறையாக இருந்த கடினமான சூழல்களில், யானைகளைவைத்து ரயில் பெட்டிகளை இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் ரயில்வே பணிகளுக்காக, ஊழியராக இருந்து சம்பளம் வாங்கிய யானைகளும் உண்டு. யானைகளை நம் மண்ணிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்த பெருமை, கிழக்கிந்திய கம்பெனியையே சாரும். மெட்ராஸில் துறைமுகம் ஆரம்பிக்கப் படுவதற்கு முன்பாக, கப்பல்கள் கடலில் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன. அவற்றிலிருந்து சரக்குகளையும் பயணிகளையும் படகுகளில் ஏற்றினார்கள். `யானைகள் கடலில் நீந்திச் சென்று, அந்தப் படகுகளைக் கரையை நோக்கித் தள்ளிக் கொண்டு வந்தன’ என்று வரலாற்றாசிரியர் ஆர்.வெங்கடேஷ் பதிவுசெய்திருக்கிறார். யானைகள் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சிறிய ரக போர் விமானங்களையும் இழுத்திருக்கின்றன. குறிப்பிட்ட இடத்திலிருந்து விமானங்களை ஓடுதளப் பாதைக்குக் கொண்டு செல்ல உதவியிருக் கின்றன. உலகப் போர்கள் உள்ளிட்ட பல்வேறு போர்களில், பிரிட்டிஷாருக்காக இந்திய யானைகள் பங்கு பெற்றிருக்கின்றன. பலியாகியிருக்கின்றன. அபிசீனியா ராஜ்ஜியத்தின் (இன்றைய எத்தியோப்பியா) அரசர் இரண்டாம் டெவோட்ரோஸ் சில மிஷனரி ஊழியர்களையும், பிரிட்டிஷ் அதிகாரிகளையும் சிறைப்பிடித்து வைத்திருந்தார். அவர்களை மீட்க, பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கிளம்பிச் சென்றார்கள் (1868). பம்பாயிலிருந்து கிளம்பிய கப்பல்களில் 44 யானைகளும் ஏற்றப்பட்டன. 16,000 கழுதைகள், 6,000 ஒட்டகங்கள், 3,000 குதிரைகள் என்று மிகப்பெரிய செலவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் இது. பெரிய பீரங்கிகளையும், ஆயுதங்களையும் சுமந்து செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன. போருக்கான முன் தயாரிப்புகளிலும், சாலைகள், பாதுகாப்பு அரண்கள் அமைப்பதிலும் யானைகளே பெரிதும் உதவின. போர்க்களத்தில் ஐந்து யானைகள் தம் இன்னுயிரைத் துறந்து பிரிட்டிஷாருக்கு வெற்றி தேடித் தந்தன. அரசர் டெவோட்ரோஸ் தற்கொலை செய்து கொண்டார். அந்த ராஜ்ஜியத்தில் கொள்ளையடித்த செல்வங்களை, பின்பு பதினைந்து யானைகள் மூலம் பிரிட்டிஷார் லண்டனுக்குச் சுமந்து சென்றார்கள். யானைகள் இழுக்கும் வண்டிகளை வைத்துக்கொள்வதை மகாராஜாக்கள் கௌரவமாக நினைத்தார்கள். ஒற்றை யானை இழுக்கும் சாதா வண்டி முதல் நான்கு யானைகள் இழுக்கும் ரதங்கள் வரை புழக்கத்தில் இருந்தன. விருந்தினர்களோ, துரைமார்களோ வந்தால், ‘யானை வண்டில ஏறிப்போய் ஊர்சுத்திப் பாத்துட்டு வாங்க’ என்று அனுப்பிவைத்தார்கள். வைஸ்ராயை வரவேற்க யானையை அலங்கரித்து, ஜொலி ஜொலிக்கும் ஹௌதாவில் ஏற்றி, பவுசாக ஊர்வலம் அழைத்து வரும் சம்பிரதாயமும் இருந்தது. 1903, 1911 ஆகிய ஆண்டுகளில் நடந்த டெல்லி தர்பார் ஊர்வலங்களில் பல மகாராஜாக்கள் தம் டாம்பீகத்தைப் பறைசாற்ற அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீதும், யானை வண்டிகள்மீதும் ஏறியுமே ஊர்வலம் வந்தனர். ஹென்றி மேரியோன் துராந்த். இவர் வங்க மாகாணத்தின் ராணுவத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றியவர். 1857, சிப்பாய்ப் புரட்சியை அடக்கியதில் பங்கு வகித்தவர். 1871-ம் ஆண்டில் பஞ்சாப் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றார். டாங்க் சமஸ்தானத்தின் (இன்றைய பாகிஸ்தான் பஞ்சாப்பில் இருக்கிறது) நவாப் அழைப்பை ஏற்று அங்கே சென்றார். அலங்கரிக்கப்பட்ட யானை காத்திருந்தது. ஹௌதாவிலிருந்த நவாப் அன்புடன் அழைத்தார். ஹென்றி மேரியோனும் மிடுக்குடன் ஏறி அமர்ந்தார். ஊர்வலம் ஆரம்பமானது. நவாப்புடன் ‘ராஜாங்க விஷயங்களை’ பேசியபடியே சென்றபோது, தாழ்வாக இருந்த ஒரு நுழைவாயிலைக் கவனிக்கவில்லை. யானை அதுபாட்டுக்கு நுழைவாயிலுக்குள் தன்னைப் புகுத்தியது. உயர்ந்த மனிதரான ஹென்றி மேரியோன், நுழைவாயிலில் மோதி, நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். முதுகெலும்பில் பலத்த காயம். அன்றே மரித்துப்போனார். நவாப் தப்பித்திருந்தார். யானை அம்பாரி, ஹென்றி மேரியோனுக்கான ஒப்பாரி நிகழ்வாகிப் போனது. அன்றைக்குப் புழக்கத்திலிருந்த டாம்பீகமான விளையாட்டுகளில் ஒன்று யானை போலோ. டெல்லி சுல்தான்கள் காலத்திலேயே யானைகள் மீதேறி போலோ ஆடியிருக்கிறார்கள். முகலாயர்கள் அதை விரும்பி விளையாடியிருக்கிறார்கள். ராஜஸ்தானத்து சமஸ்தானங்களில் இந்த யானை போலோ செழித்து வளர்ந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் விருப்பத்துக்குரிய விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் இருந்திருக்கிறது. இப்போது இந்தியாவில் விளையாடப்படுவதில்லை. நேபாளத்திலும் தாய்லாந்திலும் யானை போலோ போட்டிகள் நடைபெறுகின்றன. யானை போலோ சாத்வீகமான விளையாட்டு. ஆனால், யானை மல்யுத்தம்? மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் ஒன்றாக, யானைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் இருந்தது. மகாராஜாவுக்குப் பிறந்தநாளா, அரண்மனையில் திருமணமா, ராணிக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, இளவரசருக்குச் சோறு ஊட்ட வேண்டுமா, மன்னர்பிரான் சந்தோஷமாக இருக்கிறாரா, கோபத்தில் இருக்கிறாரா, வெட்டியாக இருக்கிறாரா… ‘யாரங்கே, யானைகளை மைதானத்துக்கு அழைத்து வாருங்கள்!' பல்வேறு சமஸ்தானங்களின் சின்னங்களில் யானைகள் உண்டு. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இரண்டு பக்கமும் யானைகள் சங்கு ஒன்றை நோக்கி துதிக்கையைத் தூக்கியிருக்கின்றன. பரோடா சமஸ்தானத்தில் இரண்டு யானைகள் கதாயுதத்தை ஏந்தி நிற்கின்றன. கூச் பிகார் சமஸ்தானத்தில் யானையோடு சிங்கமும் ஒரு பக்கம் நிற்கிறது. சந்த் சமஸ்தானத்தில் இரு யானைகள் முன்னங்கால்களைத் தூக்கி மிரட்டுகின்றன. இப்படி யானைச் சின்னம் பல சமஸ்தானங்களிலும் எங்கும் வியாபித்திருந்தது. அதேபோல ‘யானைச் சண்டையும்’ வழக்கத்தில் இருந்திருக்கிறது. மிகப்பெரிய சமஸ்தானங்களுள் ஒன்றான பரோடோவில் வழக்கத்துக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது. ‘மகாராஜா, நாளை நம் சமஸ்தானத்துக்கு ரெஸிடெண்ட் வருகிறார்’ என்று தகவல் வந்தால் போதும். ‘அவர் தங்குவதற்கு, விருந்துக்கு, யானைச் சண்டைக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று மகாராஜாவிடமிருந்து அனிச்சையாகவே உத்தரவு வந்துவிடும். ‘எம் சமஸ்தானத்தின் யானைகளின் கம்பீரத்தைப் பார்த்தீர்களா!' என்று காட்சிப்படுத்துவது பிரதான நோக்கம். யானைகள்மீதான பிரிட்டிஷாரின் ஈர்ப்பு அடங்காதது. யானைச் சண்டையை நடத்தி, அதிகாரியைக் குஷிப்படுத்தினால் ஆக வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்பது உள்நோக்கம். இதற்காகவே பழக்கப்படுத்திய யானைகள் எப்போதும் தயாராக இருக்கும். அதற்கான மைதானத்தில் கூட்டம் அலைமோதும். யானைகளைத் தூண்டிவிடும் வஸ்துக்களை யெல்லாம் வாயில் தள்ளிவிட்டுத்தான் களத்தில் இறக்கிவிடுவார்கள். மேலே அமர்ந்திருக்கும் மாவுத்தன்களும் தேவைக்கேற்ப யானைகளைக் கட்டுப்படுத்துவார்கள். உசுப்பேற்றுவார்கள். மைதானத்தினுள் ஆயுதங்களேந்திய வீரர்களும் அநியாயத்துக்கு வெறியைத் தூண்டிவிடுவார்கள். வேழம் இரண்டும் மதம்கொண்டு முட்டும். அண்டம் கிடுகிடுங்க, ஆகாசம் நடுநடுங்க, காத்து சடசடக்க, காணும் நெஞ்சம் படபடக்க, அங்கே இடி முழங்கும்! வாரணங்கள் தந்தங்கள் கொண்டு குத்தும், கிழிக்கும். களிறுகளின் பிளிறலில் பார்ப்போர் உள்ளம் அலறும். இரண்டில் ஒரு வாரணம் மண்ணில் வீழும் வரை அந்த வெறியாட்டம் அடங்காது. வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட், 1875-ம் ஆண்டில் இந்தியச் சுற்றுப்பயணம் செய்தபோது பரோடாவுக்கு வந்து யானைச் சண்டையின் ரத்த வாடையை அனுபவித்திருக்கிறார். பரோடா மகாராஜா திருமண வைபவத்தில் யானைகள் மோதி தம்மை வருத்திக்கொண்டன. மகாராஜாவின் பிறந்தநாள் விழாவில் யானைகள் குருதி சிந்துவதெல்லாம் மரபாகவே இருந்தது. இந்த யானைச் சண்டைகளில் பாகன்களும், சுற்றியிருக்கும் வீரர்களும், தவறி விழும் மக்களும் மிதிபட்டுச் சாவதுண்டு. அப்படி நிகழ்ந்தால் அது துரைமார்களுக்குக் கூடுதலான குதூகல வேடிக்கை, அவ்வளவே! மற்றுமொரு பகீர் குறிப்பு... 1875-ம் ஆண்டில் வேல்ஸ் இளவரசருக்காக பரோடா சமஸ்தானத்தில் காண்டாமிருகங்களையும் மோதவிட்டு வித்தை காட்டியிருக்கிறார்கள். 1918-ம் ஆண்டில் பரோடா மகாராஜா சாயாஜிராவ், ‘லோக்கல் ஒலிம்பிக்ஸ்’ நடத்தியிருக்கிறார். ஆம், சர்வதேச ஒலிம்பிக்ஸைக் கண்டுகளித்த அவர், தனது சமஸ்தானத்திலும் அது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிட்டார். `The Royal Baroda Gaekwad Olympics (RBGO)’ என்ற பெயரில் பரோடா சமஸ்தானத்தில் சுமார் 150 விதமான விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இந்தியர்கள் மட்டுமன்றி, ஆப்பிரிக்கா, ஆஸ்திரியா, ரஷ்யா, அமெரிக்கா, இரான், ஆப்கானிஸ்தான் என்று பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்கள் வந்து பங்கேற்றனர். இந்த பரோடா ஒலிம்பிக்ஸானது மகாராஜா சாயாஜிராவின் மறைவுக்குப் பிறகும் 1951-ம் ஆண்டு வரை கோலாகலமாக நடத்தப்பட்டிருக்கிறது. வீரர்களுக்கான போட்டிகள் தவிர, விலங்குகள், பறவைகளுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு அவற்றுக்கும் மெடல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பரோடா ஒலிம்பிக்ஸிலும் எல்லோரும் மிரட்சியுடன் கண்டுகளித்த பிரமாண்ட போட்டி, யானைச் சண்டைதான். ‘சாத்மாரி' என்று அழைக்கப்பட்ட இந்தப் போட்டியில் சம பலமுள்ள இரண்டு யானைகள் 60 நிமிடங்கள் மோத வேண்டும். போட்டியின் முடிவில் எந்த யானை கெத்தாக, சத்தாக நிற்கிறதோ அதுவே வெற்றியாளர். அந்த யானையை போடியத்தில் ஏற்றி மெடல் அணிவித்தார்களா என்று தெரியவில்லை. யானை வண்டி உலகம் முழுக்கப் பல்வேறு சர்க்கஸ்களை ஓஹோவெனப் புகழ்பெறச் செய்ததில் யானைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்தியாவின் பழைய சர்க்கஸ் செய்தி ஒன்றை மட்டும் பார்ப்போம். ரேபா ரக்சித், கல்கத்தாவைச் சேர்ந்த பெண். யோகாவில் கரைகண்டவர். தன் யோகப் பயிற்சியால் எவ்வளவு எடையை வேண்டுமானாலும் தாங்கும் சக்தியை உருவாக்கிக்கொண்டவர். சர்க்கஸில் முதன்முதலாக ஒரு யானையைத் தன்மீது ஏறவைத்துச் சுமந்த பெண் கலைஞர் இவர்தான். 1950-களில் ரேபாவின் யானை வித்தை இடம்பெற்ற கமலா சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், இன்டர்நேஷனல் சர்க்கஸ் ஆகிய கம்பெனிகள் பெரும் புகழ் பெற்றன. யானைகளால் கொல்லப்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் உண்டு. எந்த சர்க்கஸ் யானையும் ரேபாவை ஒருபோதும் காயப்படுத்தியதே இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யானைகள், மரண தண்டனைகளை நிறைவேற்றப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. மனிதர்களின் தலையை மிதித்துக் கொல்வது. தந்தங்களால் உடலைக் கிழித்துக் கொல்வது. உடல் பாகங்களை பிய்த்தெறிந்து கொல்வது. இப்படி யானைகளால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளில் ரகங்கள் இருந்திருக்கின்றன. இதற்காகப் பயிற்சியளிக்கும் திறமைமிகு பாகன்களும் இருந்திருக்கிறார்கள். கடைசி நொடியில்கூட குற்றவாளிக்கான மரண தண்டனை உத்தரவை மன்னர் மனமிரங்கி ரத்து செய்யலாம். அப்போதும் தூக்கிய காலை, பாகனின் கட்டளைக்கேற்ப பின்னெடுத்து வைக்க யானைகள் தயாராக இருக்க வேண்டும். அந்த நொடியில் பாகனுக்கு யானை கட்டுப்படவில்லையென்றால் தரையில் கிடக்கும் பிரகஸ்பதியின் ‘தலைவிதி’ அவ்வளவுதான். டெல்லி சுல்தான்களும், முகலாய மன்னர்களும் யானைகளைக்கொண்டு மரண தண்டனைகளை நிறைவேற்றிய பதிவுகள் இருக்கின்றன. மராத்திய மன்னர்களும், சமஸ்தானத்து மகாராஜாக்களும் யானைகளைக்கொண்டு கைதிகளைச் சிதைத்திருக்கிறார்கள். 1868-ம் ஆண்டில் லூயிஸ் ரூஸ்லெட் என்ற பிரெஞ்சுப் பயணி, மத்திய இந்தியாவில் யானையால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை குறித்துப் பதிவுசெய்திருக்கிறார். அது குறித்து வரையப்பட்ட ஓவியமும் புகழ் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் இந்தியாவில் நிலைபெற்ற பிறகுதான் யானையைக்கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றும் வழக்கம் நிறுத்தப்பட்டது. யானைக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வரலாறு இருக்கிறது. அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் நடந்தது ஸ்பார்க்ஸ் சர்க்கஸ். 1916, மேரி என்ற ஆசியப் பெண் யானை அந்த சர்க்கஸின் ஸ்டார். புதிதாக வேலைக்குச் சேர்ந்த பாகனான ரெட் எல்ட்ரிட்ஜ், மேரி மீதேறி சர்க்கஸ் அரங்கினுள் நுழைந்தார். என்ன கோபமோ, மேரி அவரைத் தூக்கியடித்து வீசிக் கொன்றது. அப்போதே ‘கொலைகார யானையைக் கொல்லுங்கள்’ என்று மக்கள் முழக்கமிட்ட தாகவும், அதன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல் உண்டு. அப்படியும் பிழைத்த மேரியை, சர்க்கஸ் முதலாளியான சார்லி ஸ்பார்க்ஸ், மக்கள் முன்னிலையில் தூக்கில் ஏற்றிக் கொன்றார். ஆரம்பத்தில் பார்த்த ஜப்பான் யுவனொ மிருகக்காட்சி சாலைக்கு மீண்டும் செல்வோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அங்கே யானைகளே இல்லாமல் போயின அல்லவா... ஜப்பானியக் குழந்தைகள் வருத்தத்துடன் அரசுக்குக் கடிதம் எழுதினர். ‘இந்தியாவிலிருந்து யானைகளை வரவழையுங்கள்’ என்று கோரிக்கைவைத்தனர். ஜப்பானியக் குழந்தைகளின் கோரிக்கையாக அது இந்தியப் பிரதமர் நேருவை வந்தடைந்தது. ‘நாங்கள் கனவில் மட்டுமே கண்ட யானையை நேரிலும் காண உதவி செய்யுங்கள்’ என்று ஒரு குழந்தை கடிதத்தில் எழுதியிருந்தது. நெகிழ்ந்த நேரு, உடனே நடவடிக்கை எடுத்தார். கர்நாடகாவிலிருந்து யானை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. நேரு அந்த யானைக்குத் தன் செல்ல மகள் பெயரையே வைத்தார். இந்திரா, 1949, செப்டம்பர் 25 அன்று யுவனோ மிருகக்காட்சி சாலையில் அடியெடுத்துவைத்தது. இந்திய – ஜப்பான் நல்லுறவின் அடையாளமாகவும் திகழ்ந்தது. இதேபோல பெர்லின் குழந்தைகளிடமிருந்தும் நேருவுக்குக் கோரிக்கை வர, 1952-ம் ஆண்டில் அங்கே `சாந்தி’ என்ற யானைக்குட்டியை அனுப்பிவைத்தார். 1955-ம் ஆண்டில் கனடாவுக்கு, பிரதமர் நேரு அனுப்பிவைத்த யானையின் பெயர் அம்பிகா. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, நம் யானைகள் சர்வதேச அளவில் நல்லுறவை மேம்படுத்த நமக்கு உதவின.

விகடன் 18 Sep 2025 10:59 am

``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிறகு தனிமையில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு, யாருக்கும் தெரியக்கூடாது என முகத்தை மூடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்போ அவர் சாதாரணமாக முகத்தை துடைத்தார் எனக் கூறுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில், நெல்லை டவுன் கோளரி நாதர் ஆதீனத்தில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு தொடர்ந்து அங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் பங்கேற்றத்துடன், விஸ்வகர்ம ஜெயந்தி விழா ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார் . அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தி.மு.க கரூர் மாநாட்டின் போது மழை பெய்து கலைந்து விட்டது. மாநாட்டின் அறிகுறியே சரியில்லை. எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையிலேயே அரசியல் செய்வார்கள். அதன் அடிப்படையிலேயே தமிழக முதலமைச்சரும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனப் பேசிவருகிறார். கள நிலவரம் முதல்வருக்குத் தெரியும். எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைக்கிறார், துண்டை எடுக்கிறார் என அவரின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது உண்மை, துணை குடியரசுத் தலைவரை சந்தித்து வாழ்த்து கூறியதும் உண்மை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததும் உண்மை. தமிழ்நாட்டின் நலன் கருதி சில கோரிக்கைகளை வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். அவரும் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். ஸ்டாலின் அ.தி.மு.க-வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் படைக்கவும், பாட்டு எழுதவும் தெரியும். ஆனால் தி.மு.கவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் குற்றம் கண்டுபிடிக்க மட்டும் தான் தெரியும். அதனால் இவர்கள் பேசுவதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்ற உடனே டெல்லி காவல்துறையை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பிற்காக மத்திய உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்திருக்கிறார். அந்தப் பாதுகாப்புடன்தான் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷாவும், மோடியும், பா.ஜ.க-வும் கொடுக்கும் முன்னுரிமையும், முக்கியத்துவமும் அவருக்குக் கொடுத்த மரியாதையும் இந்த சந்திப்பின் மூலம் உறுதியாகியிருக்கிறது. ஒரு முதல்வருக்கு என்ன பாதுகாப்பு அமைப்பு வேண்டுமோ அந்தப் பாதுகாப்பு அமைப்பை எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா கொடுத்திருக்கிறார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் வருகையை மத்திய அமைச்சர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் கொடுத்த மரியாதையின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். விஜய் தவெக அ.தி.மு.க எந்த ரைடுக்கும் பயப்படாது. எப்படி பழனிசாமி, சென்னையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் யாருக்கும் நாங்கள் அடிமையும் கிடையாது, யாரைப் பார்த்தும் நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. யாரையும் அடிமைப்படுத்தவும் மாட்டோம் எனப் பேசி இருந்தார். அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் பலமான கூட்டணி. இதைக் கண்டு பயந்திருக்கிறார்கள். விஜயின் அரசியல் அ.தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பாதிப்படைய போவதெல்லாம் தி.மு.க-வும் அதன் கூட்டணியும்தான். அதிமுக-வுக்கு ஏற்றம் மட்டுமே இருக்கும்! எனத் தெரிவித்திருக்கிறார். ``ஸ்டாலின் ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட வரவில்லை'' - அதிமுக டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 18 Sep 2025 10:55 am

Kundra & Bansal expands leadership team, rebrands as KBD Partners

New Delhi: Kundra & Bansal, a corporate and commercial law firm, has rebranded itself as KBD Partners and expanded its leadership team with seasoned legal experts, reaffirming its commitment to delivering comprehensive and client-focused services.With offices in New Delhi and Gurugram, and associate offices in Mumbai and Bengaluru, KBD Partners is now positioned as a full-service law firm advising global institutions, government bodies, corporates, family offices, and not-for-profit ventures across industries and geographies.Shivendra Kundra, Partner, continues to lead the firm with over three decades of experience in M&A, cross-border transactions, and corporate governance. He is joined by Subodh Pasad Deo, a veteran in competition law and regulatory compliance with an illustrious career in the Indian Civil Services, and Gurmeet Bindra, who heads the litigation practice with deep expertise in arbitration, insolvency, employment, and high-stakes disputes. “The joining of the Partners marks a pivotal moment for our firm. Together as KBD Partners, we build on the foundation of Kundra & Bansals while embracing a forward-looking vision. With expanded expertise and leadership, we are better positioned to deliver innovative and high-quality legal solutions, strengthening our legacy through growth, collaboration, and excellence,” said the Partners of KBD Partners in a joint statement. Beyond client services, KBD Partners remains committed to pro bono initiatives, actively supporting projects in law, environment, education, and healthcare, while contributing thought leadership through articles and industry forums.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 10:54 am

Rhythm: தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம்- வைரமுத்து நெகிழ்ச்சி

இயக்குநர் வசந்த் இயக்கத்தில், அர்ஜுன், மீனா, ஜோதிகா, நாகேஷ், ரமேஷ் அரவிந்த், லக்ஷ்மி , மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானத் திரைப்படம் 'ரிதம்'. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இயக்குநர் வசந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் முதன் முதலில் இணைந்து பணிபுரிந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் அடித்திருந்தன. 'ரிதம்' படம் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் வைரமுத்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படம் குறித்துப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், கால் நூற்றாண்டு கழிந்தபின்னும் ரிதம் படப் பாடல்கள் கொண்டாடப்படுவதைப் புன்னகையோடு பார்க்கிறேன் இசை மொழிக்கு அழகு தருகிறது மொழியோ இசைக்கு ஆயுள் தருகிறது ஐந்து பாடல்களுக்கும் ஐம்பூதங்களை உள்ளடக்கமாக்கியவர் இயக்குநர் வசந்த்; நல்லிசை நல்கியவர் ஏ.ஆர்.ரகுமான் கவிஞர் வைரமுத்து நதியே நதியே பாடலில் தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம் என்ற வரிகளைத் தமிழன்பர்கள் இன்றும் மந்திரம்போல் ஓதுகிறார்கள் காற்றே என் வாசல் வந்தாய் பாடலில் பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க பூமிக்குமேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க என்ற வரிகளை இன்றைய இருபது வயதுகள் இதழோடு இதழ்சேர்த்து உச்சரிக்கின்றன 'ரிதம்' படம் நல்ல பாடல்கள் தேன்போல... கெட்டுப் போவதில்லை படம் மறந்துபோனாலும் பாடல்கள் மறப்பதில்லை காடழிந்து போனாலும் விதையழிந்து போவதில்லை என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 18 Sep 2025 10:48 am

When Bollywood’s Power Couple Paints in Rival Colours

In the crowded world of celebrity endorsements, it is not unusual to see famous couples fronting big brands. Virat Kohli and Anushka Sharma have lent their star power to clothing labels, while Ranbir Kapoor and Alia Bhatt have been seen together in lifestyle campaigns. What is rare, however, is to see a husband and wife representing two directly competing brands in the same category. That is precisely what has happened with Bollywood’s most glamorous couple, Ranveer Singh and Deepika Padukone. As the festive season sets the stage for heightened consumer activity, the two stars find themselves at the center of campaigns for rival paint brands: Ranveer with Kansai Nerolac and Deepika with Asian Paints. A Rare Marketing Overlap Paint brands in India traditionally invest heavily in visibility during the months leading up to Diwali. This is when families embark on renovations, redecorations, and fresh coats of paint. For marketers, it is a once-a-year window to capture mindshare. Against this backdrop, having the country’s most popular film couple endorsing rival brands makes for a striking coincidence. Celebrity contracts are usually drafted to avoid conflicts of interest, especially in categories as competitive as paints. Yet here, audiences are witnessing an unusual overlap that places the husband and wife on opposite sides of the same market. Two Distinct Personas The overlap is less about conflict and more about complementary positioning. Ranveer Singh’s endorsement of Nerolac leverages his reputation for being exuberant, bold, and experimental. His vibrant personality reflects the brand’s attempt to appeal to younger homeowners looking for a fun, energetic approach to color and design. Deepika Padukone, on the other hand, brings Asian Paints Royale an air of sophistication and elegance. Her association enhances the brand’s premium positioning, aimed at consumers who see paint as an extension of lifestyle and aesthetics rather than just utility.By aligning their ambassadors with such contrasting personas, both brands avoid cannibalizing each other. Instead, they broaden the conversation, each speaking to a different segment of the consumer spectrum. Buzz Beyond Advertising What makes this situation powerful is the conversation it sparks. In many Indian households, decisions around painting and redecorating involve negotiation between spouses. The fact that Ranveer and Deepika represent competing brands mirrors these real-life dynamics, making campaigns more relatable. Viewers naturally imagine playful debates: will the house be painted in Nerolac’s vibrant shades or Asian Paints’ premium finishes? This narrative not only entertains but also strengthens brand recall during the busiest season for paint purchases. Few Precedents in India or Abroad Celebrity couples endorsing directly competitive brands is a rare phenomenon. In India, couples typically appear together, reinforcing unity and shared lifestyle choices. Globally, while fashion and luxury sometimes feature partners with different labels, examples within the same product category are still uncommon. That makes the Ranveer–Deepika case stand out, drawing attention not just because of their star power but also because of the novelty of the situation. A Win-Win Strategy Seen strategically, this may not be a coincidence at all. Asian Paints continues to hold its dominance in the premium segment with Deepika as the face of its Royale range. Nerolac, aiming to energize its image, taps into Ranveer’s youth appeal to carve out a more dynamic identity. Both campaigns feed off the cultural buzz of the couple’s rivalry without ever directly acknowledging it. The result is increased visibility for both brands, with consumers doing the job of linking the narratives in their own minds.In a media landscape crowded with festive advertising, this indirect duel becomes a festival-season masterstroke. Each brand strengthens its own territory, while the couple’s star value doubles the attention. Instead of one outshining the other, both Ranveer and Deepika succeed in painting their respective brands in the brightest light.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 10:46 am

சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் இருந்து கூடுவாஞ்சேரி வரை புதிய ரயில் பாதை திட்டம்!

சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் இருந்து கூடுவாஞ்சேரி வரை புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

சமயம் 18 Sep 2025 10:44 am

வாழ்நாள் சாதனை விருது பெறும் –பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்

எம் என் ராஜம் – தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள எம்.என்.ராஜம் சுத்தமான தமிழ் உச்சரிப்பும், தமிழ் வசனங்களை சரியான தோரணையுடன் பேசுவதில் கைத்தேர்ந்தவர். இவர் ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, அரங்கேற்றம், பாசமலர், நாடோடி மன்னன்… The post வாழ்நாள்சாதனைவிருது பெறும் – பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Sep 2025 10:42 am

தியாக தீபம் திலீபனின் 04ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபனின் 04ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பதிவு 18 Sep 2025 10:35 am

சென்னையில் நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் இடங்களில் ED சோதனை.!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 18, 2025) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது வருகின்றனர். இது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளைத் தொடர்புபடுத்தி நடைபெறுகிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது தொடர்புடைய நபர்களின் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. MARG லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார் […]

டினேசுவடு 18 Sep 2025 10:33 am

Kerala Bar Council Acts Against Lawyer for Alleged Online Advertising

Thiruvananthapuram: The Bar Council of Kerala (BCK) has issued a show cause notice to advocate Happymon Babu after a social media video allegedly promoting his legal services went viral. The BCK said the video violated the Advocates Act, 1961, Bar Council of India (BCI) Rules, and recent BCI directives prohibiting online promotion by lawyers. Babu has been asked to respond within 15 days. The clip featured a woman urging people with matrimonial, property, or criminal cases to contact Babu. Denying involvement, Babu told Bar & Bench , “The video was made by an online PR agency using AI and uploaded without my consent. I immediately asked them to take it down.” He added, “I have never advertised or done any marketing strategy. All my cases come through goodwill, contacts, or references.” Calling the incident “unfortunate,” Babu said, “I respect the dignity of this noble profession and will take extra care to ensure such acts never occur.” The controversy comes amid repeated warnings from bar councils across India against lawyers using social media for self-promotion.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 10:31 am

ஜாய் கிரிசில்டாவின் ஹாஷ்டேகுகளால் 15 நாளில் ரூ. 12.5 கோடி நஷ்டம்: ஹைகோர்ட்டில் தெரிவித்த மாதம்பட்டி ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா போட்ட ஹாஷ்டேகுகளால் தங்களுக்கு 15 நாட்களில் ரூ. 12.5 கோடி பிசினஸ் கைவிட்டுப் போயிருப்பதாக மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

சமயம் 18 Sep 2025 10:31 am

மராட்டியம்: பயணிகள் ரெயிலில் பயங்கர தீ விபத்து

மராட்டிய மாநிலம் மத்திய மும்பையில் இருந்து குஜராத்தின் வால்சாட் நகருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயணிகள் ரெயில் இன்று மாலை 6.30 மணிக்கு மத்திய மும்பையில் இருந்து வால்சாட் நகருக்கு புறப்பட்டது. அந்த ரெயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். மராட்டியத்தின் பால்கர் மாவட்டம் கால்வி ரோடு ரெயில் நிலையத்திற்கு இரவு 9.15 மணியளவில் ரெயில் வந்தபோது அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரெயிலின் எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. […]

அதிரடி 18 Sep 2025 10:30 am

Pepe Jeans London launches Autumn-Winter 2025 Collection with “Very Real. Very Pepe” campaign

Mumbai: Pepe Jeans London, the iconic denim and lifestyle brand, has unveiled its Autumn-Winter 2025 campaign, “Very Real. Very Pepe.” This season, the brand celebrates authenticity and individuality with a collection that reflects real style for real people — effortless, layered, and undeniably Pepe.The Autumn-Winter 2025 collection brings versatile fashion designed to keep wearers warm, stylish, and comfortable throughout the season. From oversized denim shirts and classic blue denim fits to natural-hued corduroy shirts, varsity jackets, and the timeless denim-on-denim look, the collection showcases a wardrobe that is both cool and cozy.Complementing these essentials are versatile shirts and knitwear, each piece seamlessly paired with Pepe Jeans London’s signature denim. With layering at the heart of the collection, fashion enthusiasts are encouraged to mix, match, and create looks that are personal, authentic, and real.The collection will be available at Pepe Jeans London stores nationwide and online. Customers can explore the latest styles across flagship stores in Mumbai, Delhi, Bengaluru, Kolkata, Kerala, Pune, Chandigarh, Jaipur, Hyderabad, Kochi, Ahmedabad, Mohali, and other major cities. Pepe Jeans London is also available in leading departmental stores such as Lifestyle and Shoppers Stop, as well as on e-commerce platforms including Amazon, Flipkart, Myntra, Ajio, and Tata Cliq.With its new campaign, Pepe Jeans London once again reinforces its legacy of blending timeless denim with fresh, contemporary fashion — celebrating individuality, layering, and the spirit of being very real, very Pepe.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 10:26 am

கூடிக் கலையும் கூட்டமல்ல…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று கொட்டும் மழையிலும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழா, திமுகவின் கொள்கைக் கூட்டமாக, கூடிக் கலையும் சாதாரண கூட்டமல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. கரூர் மாவட்டத்தின் நான்கு சட்டமன்றத் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் உடன்பிறப்புகள் மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி உறுதியை வெளிப்படுத்தினர். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என்ற […]

டினேசுவடு 18 Sep 2025 10:25 am

Tata Play Bangla Cinema partners with ANGEL to redefine Bengali Entertainment

Kolkata: Tata Play has unveiled an all-new avatar of its Tata Play Bangla Cinema service through a strategic collaboration with leading Bengali entertainment house, ANGEL Television Pvt. Ltd. Known for its deep cultural connect and storytelling legacy, ANGEL brings a premium, ad-free content catalogue that elevates the service into a go-to entertainment destination for Bengali-speaking households.Launched in the festive season and in commemoration of 100 years of legendary icon Uttam Kumar, the refreshed Tata Play Bangla Cinema offers an expansive and curated library of both contemporary and classic Bengali films. This includes timeless gems like Antony Firingee, Deya Neya, and Hirak Rajar Deshe, alongside modern blockbusters such as Prateek, Kencho Khoondte Keute, Aakrosh, Amar Prem, and Aamaar Bhuvan. The catalogue reflects a thoughtful blend of heritage and modernity, allowing audiences to relive the golden era of stalwarts like Uttam Kumar, Suchitra Sen, Satyajit Ray, and Ritwik Ghatak, while also embracing today’s powerful narratives.Going beyond cinema, the platform is also designed to cater to evolving viewer preferences. It offers snackable short films aimed at young adults, a wide collection of music videos across film, non-film, and devotional genres, and exclusive animated shows featuring Bengali favorites like Handa Bhonda and Batul the Great.What makes the service stand out is its completely ad-free experience, available at just ₹60 per month, with the first three days free. Subscribers can tune in on channel #1305 or stream seamlessly on the Tata Play mobile app, making it accessible both at home and on the go.This partnership leverages Tata Play’s unmatched national reach with ANGEL’s strong cultural expertise, creating a platform that is both wide in scale and authentic in spirit. For Bengali viewers across India, Tata Play Bangla Cinema now represents a richer, more diverse universe of entertainment—rooted in culture, emotion, and storytelling.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 10:23 am

பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசின் புதிய அரசாணை: ஓர் அவசியமான நடவடிக்கை

பனை மரம், தமிழ்நாட்டின் மாநில மரம். இது வெறும் மரம் அல்ல, அது தமிழர் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஒரு

ஆந்தைரேபோர்ட்டர் 18 Sep 2025 10:23 am

பாமக-வன்னியர் சமுதாயத்தின் அடையாளம் அன்புமணி... சி.ஆர்.பாஸ்கரன்!

பாட்டாளி மக்கள் கட்சிக்கும், வன்னியர் சமுதாயத்துக்கும் அன்புமணி அவசியம். அதன் அடிப்படையில் தான் அவரை நாங்கள் முன் நிறுத்துகிறோம் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த சி. ஆர். பாஸ்கரன் தெரிவித்தார்.

சமயம் 18 Sep 2025 10:17 am

Aaj Tak sets its Instagram Dominance in the Hindi News Landscape

Mumbai: Aaj Tak has established its leadership in digital news engagement. According to the latest ComScore Social report for August 2025, Aaj Tak captured an extraordinary 51% market share of Instagram actions (total) among a custom list of Hindi news competitors.With its consistent digital-first strategy, Aaj Tak continues to engage users on Instagram. The channel’s mix of short-form video (Reels), impactful storytelling, and interactive features has resonated strongly with Gen Z and millennial audiences, driving engagement that far surpasses its closest competitors. This performance is a testament to the India Today Group's forward-thinking approach, which prioritizes a mobile-first strategy and a deep understanding of audience consumption habits.Aaj Tak dominance in providing engaging content is reflected in the absolute figures of engagement, garnering an astounding 110 million total actions with the next best managing just 26 million total actions.With a market share that is bigger than that of all the competitors put together, Aaj Tak Instagram delivers reach and Impact to brands like no other News Media brand can.The recognition from ComScore is a powerful validation of the efforts to build trust and engagement with millions of viewers who turn to them for their daily news.With a 51% market share of Instagram actions, (total) Aaj Tak reaffirms its position as India’s most engaging news brand on social media. This dominance highlights the brand’s ability to blend editorial credibility with social-native storytelling, making it a top choice for users and advertisers alike. Source 1: ComScore Social | Among custom list of Hindi News Channels/Pages |Aaj Tak (IN), News24 (IN), ABP News (IN), The Lallantop (IN), NDTV India (IN), (Full Channels/Pages list available upon request) | Instagram | Market Share of Instagram (Total Actions) IG | Numbers are in Mn | August – 2025

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 10:10 am

Jim Beam joins Cadillac Formula 1® Team in Global Partnership to drive new audiences

Mumbai: Jim Beam, the world’s No. 1 bourbon, and the Cadillac Formula 1 Team have announced a multi-year global partnership, bringing together two American icons on the world’s fastest stage — Formula 1.In 2026, the Cadillac Formula 1 Team will make its debut in the FIA Formula 1 World ChampionshipTM as the first new entrant to the grid since 2016, with Jim Beam as its Official Spirits Partner. The partnership is more than a sponsorship—it marks the uniting of two legacies that embody American heritage, innovation, and community.Formed by TWG Motorsports and General Motors, the Cadillac Formula 1 Team represents a bold new chapter in American participation in Formula 1, underpinned by engineering excellence and performance. The story of this partnership also traces back nearly a century, when Jim Beam’s founder safeguarded his proprietary yeast—the heart of his bourbon recipe—by driving it home in his Cadillac every night. Today, that connection continues, as Jim Beam’s seventh-generation master distiller, Fred Noe, still drives a Cadillac. Rashidi Hodari, managing director, James B. Beam Distilling Co. , said, “We are excited to bring the soul of Kentucky to the global stage of Formula 1 with Cadillac, a brand that’s been part of the Beam family’s story through the ages. Both car racing and making Jim Beam bourbon require every individual and moving part to come together to create a positive collective outcome. The pit crew and our distillery workers both rely on the power of their communities to win. It’s this common understanding and the importance of connection with the next generation of Formula 1 fans that inspires us.” The partnership will be activated both on and off the track with immersive fan experiences, retail and trade activations, a strong emphasis on alcohol responsibility, and initiatives designed to connect with new audiences globally. Cadillac Formula 1 Team Chief Executive Officer Dan Towriss added, “This partnership brings together two icons of American heritage to create something truly special. Formula 1 is a global stage, and we want to take our fans on this journey with us every step of the way. Our vision goes beyond racing – we’re building a team that lives where sport, technology, and culture collide. With Jim Beam joining our family of partners, the momentum behind this project grows stronger every day as we gear up for our debut next year.” Jim Beam’s brand heritage has long been rooted in sport, music, and community. From sponsorships with the NFL’s Kansas City Chiefs and Dallas Cowboys, MLB’s L.A. Dodgers, and U.S. Soccer Federation, to racing ventures like the Indianapolis 500, NASCAR, and Dick Johnson Racing in Australia, the brand has consistently created shared experiences for fans. Globally, it has also connected audiences through music festivals and collaborations with acts such as Muse and LeSserafim.Known as the “people’s bourbon,” Jim Beam continues to celebrate community and togetherness. From a mason jar of yeast carried in a Cadillac to the roar of an F1 engine, this new partnership symbolizes a legacy in motion, uniting fans through shared moments of great taste, responsibility, and connection.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 10:08 am

Chetan Sawhney Elevated as Director – Corporate Communications & PR at Nangia Andersen LLP

New Delhi: Nangia Andersen LLP, a member firm of Andersen Global and one of India’s leading tax advisory firms, has announced the elevation of Chetan Sawhney to Director – Corporate Communications and PR.Chetan, who has been spearheading the firm’s PR and communication strategies since 2022, brings over 15 years of rich experience in corporate communications, branding, and strategic initiatives across diverse industries including luxury, lifestyle, IT, finance, and politics.Over the course of his career, he has managed high-impact communication mandates and held leadership positions across reputed organisations. Notably, Chetan previously served as the Public Relations Officer to the former Chief Minister of Andhra Pradesh, Kiran Kumar Reddy, and has worked with prominent brands such as Casio, ITDC, India Homes, Mouthshut.com, Soham Infrastructure, and Papa John’s during his tenure with leading PR agencies.His professional achievements have been widely recognised in the industry. In 2024, Chetan was honoured with the Corporate Communication Leader of the Year Award by Transformance Forum and named among the 40 Under 40 PR & Communications Leaders by Agency Reporter.An alumnus of the University of San Francisco, where he pursued his Executive MBA, Chetan also holds a bachelor’s degree in Journalism and Mass Communication from IP University, Delhi. Beyond his professional life, he is passionate about travel and often shares his experiences on digital platforms.With this move, Nangia Andersen LLP reaffirms its commitment to strengthening corporate communications and enhancing stakeholder engagement as it continues to expand its presence in India and globally.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 10:04 am

Gold Rate: `தங்கம் ஒரு பவுன் விலை ரூ82,000-க்கு கீழே இறங்கியது' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் குறைந்திருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.10,220 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.81,760 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.141 ஆக விற்பனை ஆகி வருகிறது. Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

விகடன் 18 Sep 2025 9:56 am

Being bootstrapped meant we had to be cautious and selective in our investments: Vidur Kapur, O3+ Professional

O3+ is a professional skincare brand—trusted by over 100,000 beauticians and present in 25,000+ salons from Tier One to Tier Three cities.Founded in 2004 by Vidur's father, Vineet Kapur, O3+ disrupted the professional skincare ecosystem by introducing science-backed facial treatments tailored for salon professionals. Over the years, the brand has evolved from a just a salon-exclusive label to a direct-to-consumer (D2C) force, bringing salon-like glow to homes across India through daily skincare products designed for ease, efficacy, and modern routines.O3+ is a trusted name across India’s salon ecosystem—setting the gold standard for professional facials. Whether it’s a routine salon visit or selecting a bridal package for the big day, O3+ is often the first choice for its superior quality and salon legacy. Medianews4u.com caught up with Vidur Kapur Director O3+ Professional Q. O3+ was launched two decades ago, building on O3 which launched in 1967. How have the principles of education, innovation, and business growth given it a competitive advantage? Education has always been central to our growth. From the start, we invested in training beauticians and salon professionals through our academy and workshops. This not only built trust within the professional community but also positioned O3+ as a brand that empowers and uplifts the people who use our products daily.Innovation has been the other key driver, with launches such as the Hydrogel Mask and collaborations like O3 X Mijoo Korean, alongside trusted favorites like the D-Tan Pack and Bridal Facial Kit. These kept us relevant across generations of consumers.On business growth, being consistent and disciplined gave us a strong base. Rather than expanding too quickly, we reinvested profits into R&D, building new facilities, and strengthening our distribution network. This steady approach ensured we stayed profitable and competitive, while creating a brand that balances heritage with continuous evolution. Q. How did the company overcome the challenge of being bootstrapped and growing profitably without external funding? Being bootstrapped meant we had to be cautious and selective in our investments. Every rupee went into quality, R&D, and building distribution, instead of heavy marketing spends. We focussed on creating products that would naturally gain word-of-mouth recognition among beauticians and customers, which allowed us to grow organically without external funding.This independence also gave us the freedom to stay true to our values. Without investor pressure, we could expand at a pace that was sustainable, prioritizing profitability over aggressive scale. Over time, this has given us financial resilience and positioned O3+ as one of the few self-sustained leaders in the skincare space. Q. Could you shed light on the tactics used that helped the company move from being a salon-focused skincare brand to a multi-brand beauty enterprise? The shift started when we entered retail in 2012. We recognized that while salons were our stronghold, consumers wanted to take professional-quality skincare home. We then introduced multiple sub-brands such as Agelock, Sara, and Laamis to cater to different needs, while keeping salon professionals at the centre of our strategy. At the same time, innovations like the Hydrogel Mask and collaborations like O3 X Mijoo Korean gave us new consumer touchpoints, while the D-Tan Pack and Bridal Kit ensured strong recall and trust.We also expanded our channels beyond salons – entering e-commerce, pharmacies, modern trade, and now quick commerce. By balancing professional credibility with consumer accessibility, we managed to transform O3+ into a multi-brand beauty enterprise without losing our salon-first DNA. Q. Other beauty brands use celebrities. Was using beauticians a deliberate effort to counter the program? How effective has that been in spreading the message? Yes, it was a very deliberate choice. We always believed that beauticians are the real experts and their recommendations are far more credible to customers than celebrity endorsements. By putting the spotlight on beauticians, we not only recognized their contribution but also built a strong sense of loyalty within the professional community.This strategy has worked very well. Word-of-mouth from beauticians carries trust and authenticity, and it has helped our brand expand organically across cities and towns. Instead of quick visibility through celebrities, this grassroots approach created long-term credibility and deeper relationships with consumers. Q. What marketing campaigns and innovations can one expect in 2025 and 2026? What will the media mix look like? Our focus will be on driving campaigns around innovation and consumer engagement. For instance, the O3 X Mijoo Korean collaboration will be supported with creative social media, influencer partnerships, and tutorials, while new innovations like the Hydrogel Mask will see dedicated campaigns.At the same time, our hero products like the D-Tan Pack and Bridal Kit will continue to be central to our messaging as they remain consumer favorites.The media mix will be digital-first, with strong focus on social platforms, influencers, and quick commerce-led promotions. However, we will also complement this with offline activations, in-store branding, and selective print or TV campaigns for mass awareness. This balance ensures we reach younger digital-first audiences while still engaging traditional consumers. Q. Could you talk about the importance of growing the company's presence on quick commerce platforms like Blinkit and Zepto? Quick commerce is becoming a major growth channel because skincare is now an impulse and convenience-driven category. Platforms like Blinkit and Zepto already contribute significantly to our online sales, and we see them as vital for reaching younger urban consumers who prefer instant access.We are developing exclusive kits and promotional offers tailored for these platforms, making O3+ a part of everyday shopping. Strengthening our quick commerce presence also allows us to stay competitive and top-of-mind, while ensuring customers can access our products whenever they need them. Q. Has it been a challenge to drive relevance for a heritage brand in the clustered beauty market among Gen Z? Yes, staying relevant with Gen Z in a crowded beauty space is a challenge, but also an opportunity. We have addressed this by creating products that fit their lifestyle – like the O3+ Hydrogel Mask for quick results and our O3XMijoo Korean collaboration, which taps into the popularity of K-beauty. These connect well with younger consumers who seek convenience and global trends.At the same time, our heritage remains an advantage. Gen Z values authenticity, and our professional credibility gives us that trust. By blending legacy products like the D-Tan Pack and Bridal Kit with new innovations, we appeal to both long-time users and younger audiences, ensuring we remain relevant across demographics. Q. In terms of international expansion the company is already in over 100 salons in Dubai. Which are the key countries being looked at and how confident are you of competing with those countries' homegrown brands? We are expanding into markets such as Bangladesh, Sri Lanka, Mauritius, and parts of Africa, in addition to our presence in Dubai. These regions show strong demand for professional-grade skincare and openness to Indian brands with proven quality.We are confident because our professional expertise and salon-first approach make us a strong differentiator. We also adapt our products to local climates and preferences, ensuring relevance in each market. With the positive response in Dubai, we believe we can successfully compete with homegrown brands abroad. Q. What role does data analytics play in TG segmentation and pricing? Data analytics is central to how we understand and serve our customers. By tracking sales, regional demand, and consumer behavior, we segment our audience effectively – whether it is salon professionals, Gen Z buyers, or Tier-2 consumers – and customize campaigns accordingly.It also guides our pricing. We study consumer willingness to pay, competitor benchmarks, and regional purchasing power before fixing prices. Campaigns and promotions are refined based on real-time data, ensuring our products stay competitive, accessible, and profitable.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Sep 2025 9:52 am

PAK vs UAE : வெற்றிபெற்று சூப்பர் 4-க்குள் நுழைந்த பாகிஸ்தான்! இந்தியாவுடன் மீண்டும் மோதல்!

துபாய் : ஆசிய கோப்பை 2025 குரூப் A-இன் 10ஆவது போட்டியில், துபாய் அரங்கத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று நடந்த பாகிஸ்தான் vs UAE போட்டியில், பாகிஸ்தான் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது. UAE 18.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியுடன், பாகிஸ்தான் குரூப் A-இல் இந்தியாவுடன் சேர்ந்து […]

டினேசுவடு 18 Sep 2025 9:52 am

விகடன் தீபாவளி மலர் 2025

விகடன் தீபாவளி மலர் 2025

விகடன் 18 Sep 2025 9:51 am

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றடைந்தார். தனது மனைவி மெலனியாவுடன் சென்ற டிரம்ப்பை, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். பிரிட்டனின் அரசு அலுவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வின்சோர் கோட்டைப் பகுதிக்கு டிரம்ப்பையும் அவரின் மனைவியையும் மன்னர் சார்லஸ் குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அங்கு டிரம்ப்புக்கு அரச குடும்பத்தின் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. பிரிட்டனுக்கு இரண்டாவது முறையாக அழைக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த முதல் அதிபர் […]

அதிரடி 18 Sep 2025 9:30 am

யூடியூப் சேனல்களுக்கு உரிமம்: கர்நாடக அரசின் புதிய யோசனை

கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் போலிச் செய்திகள், வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், யூடியூப் சேனல்களுக்கு உரிமம்

ஆந்தைரேபோர்ட்டர் 18 Sep 2025 9:20 am

ஈரோட்டில் கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் | Photo Album

ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை

விகடன் 18 Sep 2025 9:06 am

Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?

Doctor Vikatan:  நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன். அவர்களது தோற்றமே நீரிழிவு வந்ததைக் காட்டிக் கொடுக்கிறதே, அது ஏன். நீரிழிவு வந்தால் ஆரோக்கியமான தோற்றம் சாத்தியமில்லையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி நீரிழிவு என்பது உடலியக்கம் சார்ந்த (Metabolism)  ஒரு குறைபாடு.  டைப் 1 மற்றும் டைப் 2 என நீரிழிவில் இரண்டு வகை உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி உடல் எடை குறைவது இருக்கும். இவர்களது உடலில் இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் அல்லது அந்தச் சுரப்பு அறவே இருக்காது. உடலிலுள்ள செல்கள், திசுக்கள் சரியாக இயங்க வேண்டும் என்றால், அவை குளுக்கோஸை ஏற்றுக்கொள்ள வேண்டும். குளுக்கோஸானது செல்களுக்குள் நுழைவதற்கான வாயில்தான் இன்சுலின். இது சுரக்கவே இல்லை என்றாலோ, குறைவாகச் சுரந்தாலோ, குளுக்கோஸ் உள்ளே போகாது. அதன் விளைவாக செல்களுக்கு தேவையான எனர்ஜி கிடைக்காது. வெளியில் இருந்து வரும் உணவிலிருந்து எனர்ஜி கிடைக்காதபட்சத்தில், உடலில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு மற்றும் தசை அடர்த்தியையும் எனர்ஜிக்காக உண்ண ஆரம்பிக்கும்.  அதுபோன்ற நிலையில்தான் டைப் 1 நீரிழிவாளர்கள், உடல் மெலிந்து காட்சியளிப்பார்கள். நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன்? டைப் 2 நீரிழிவில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் (insulin resistance) என்ற நிலை வரும். அதாவது இதை இன்சுலின் எதிர்நிலை என சொல்லலாம். முதலில் உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அது இல்லாத நிலையாக மாறும். இந்த வகை நீரிழிவிலும், முதலில் சொன்னதுதான் நடக்கும். அதாவது செல்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் தசைகளை உடல் ஆற்றலாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும்.  நீரிழிவாளர்கள் உடல் மெலிந்து காணப்பட, நீர்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ரத்தச் சர்க்கரை அதிகமாக இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். அதனால் உடலில் நீரிழப்பு ஏற்படும். சருமம் வறண்டு, சுருங்கிப் போவதாலும் மெலிந்து காணப்படுவார்கள். ரத்தச் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருப்பது, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது, நல்ல கொழுப்பு, நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம் போன்றவற்றைப் பின்பற்றும்போது ஆரோக்கியான தோற்றத்துடன் இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     Doctor Vikatan: நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (pre-diabetes) மாத்திரைகள் எடுக்க வேண்டுமா?

விகடன் 18 Sep 2025 9:00 am

நினைவில் கொள்ள வேண்டிய நாள்: நியூயார்க் டைம்ஸின் தொடக்கம் –செப்டம்பர் 18, 1851

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 18, நியூயார்க் டைம்ஸ் (The New York Times) செய்தித்தாளின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு சிறப்பான

ஆந்தைரேபோர்ட்டர் 18 Sep 2025 8:55 am

எதிர்பாரா வெற்றியை தமிழில் பெற்ற ஏழுமலை- அர்ஜூனுக்கு ஆச்சரியம் கொடுத்த படம்

அர்ஜூன் இயக்கும் படங்கள் பல தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. அர்ஜூன் இவ்வளவு படங்களை இயக்கியுள்ளாரா என ஆச்சரியம்தான் நமக்கு ஏற்படும். அவரின் சேவகன், ஜெய்ஹிந்த் படங்களின் வெற்றிக்கு பிறகு அவர் திரும்ப ஒரு வெற்றியை பெற சில காலம்… The post எதிர்பாரா வெற்றியை தமிழில் பெற்ற ஏழுமலை- அர்ஜூனுக்கு ஆச்சரியம் கொடுத்த படம் appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Sep 2025 8:48 am

சட்ட விரோத மருந்தகம் நடத்திய நபருக்கு அபராதம்

சட்டவிரோதமாக மருந்தகம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்குக் கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி .தர்ஷிமா பிரேமரத்ன 25,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல், சட்டவிரோதமாக மருந்தகம் வைத்திருந்த குற்றச்சாட்டில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை குறித்த நபரை கைது செய்து நேற்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது. ராஜகிரிய பகுதியில் உள்ள மொரகஸ்முல்லவில் வசிக்கு ஒருவர் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மருந்தகம் நடத்துவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த […]

அதிரடி 18 Sep 2025 8:37 am

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் சொத்து விபரங்கள்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது. சொத்து விபரங்கள் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தகவல்களை வெளியிட்டதையடுத்து அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்மறையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் இருவரினதும் சொத்துகள் தொடர்பில் அரசியல் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் […]

அதிரடி 18 Sep 2025 8:34 am

யாழில் ரயில் மோதி மாடு உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – புங்கன்குளம் ரயில் நிலையத்தில் ரயில் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. புங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் மாடு சென்று கொண்டிருந்த போது ரயில் ஒன்று பயணித்துள்ளது. அதன்போதே ரயில் மோதியதில் மாடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ரயிலில் மோதி மாடு ரத்த வெள்ளத்தில் ரயில் நிலையத்தில் கிடந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த மாட்டை ரயில் நிலையத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதிரடி 18 Sep 2025 8:23 am

கொழும்பு விற்பனை நிலையத்தில் மோசடி ; உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள பிரபல விற்பனை நிலையமொன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலாவதியான சாக்லெட் பிஸ்கட்டுக்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதிரடி 18 Sep 2025 8:21 am

``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு''நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்குமா? - அலசல்

'டீசலுடன் எத்தனாலைக் கலக்கும் திட்டம் தோல்வியடைந்துள்ளது. அதனால், எத்தனாலுக்கு பதிலாக, டீசலில் ஐசோபியூட்டனால் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' - இது மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சமீபத்திய வார்த்தைகள். 2014-ம் ஆண்டு, பெட்ரோலில் 1.5 சதவிகித எத்தனால் கலந்து, இந்தக் கலப்பு முதன்முதலாக தொடங்கியது. 2022-ம் ஆண்டு, பெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனால் கலக்கப்பட்டது. தற்போது பெட்ரோலுடன் 20 சதவிகித எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது. டீசல் இந்தக் கலப்பால் வாகனத்தின் மைலேஜ் குறைந்து வருகிறது என்கிற பரவலான குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இன்னொரு பக்கம், நிதின் கட்கரியின் மகன்கள் எத்தனால் தொழிற்சாலை வைத்திருப்பதால், இவர் எத்தனால் கலப்பை ஊக்குவிக்கிறார் என்கிற எதிர்ப்பும் எழுந்தன. இந்தப் பேச்சுகளை எதிர்த்து உயிரி எரிசக்தி மாநாட்டில் பேசினார் நிதின் கட்கரி. கூடவே, மேலே குறிப்பிட்டிருப்பதவது போல, டீசலுடன் ஐசோபியூட்டனால் கலக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ``மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கு; நான் நேர்மையாக சம்பாதிக்கிறேன்'' - நிதின் கட்கரி 'டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு கைக்கொடுக்குமா?' என்கிற கேள்வியைச் சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதனிடம் பேசினோம். இந்தியாவில் ஏற்கெனவே எத்தனால்-டீசல் கலவைப் பல தொழில்நுட்ப சிக்கல்களால் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில் தான், ஐசோபியூட்டனால் டீசல் கலவைக்கான சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மத்திய அரசு எத்தனால் பிளெண்டிங் முறையைப் போன்று திட்டமிடாமல் நடவடிக்கைகள் மேற்கொண்டால், ஐசோபியூட்டனால் டீசல் கலவை முயற்சி கூட தோல்வி அடையலாம். சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதன் ஐசோபியூட்டனால் நீரை குறைவாக இழுக்கும், டீசலுடன் எளிதாக கலக்கும். அதிக எரிசக்தி அடர்த்தி மற்றும் உயர்ந்த சீட்டேன் தன்மையைக் கொண்டதால் எத்தனாலை விட வேதியியல் ரீதியாக பொருத்தமானது. மேலும், புகை மற்றும் துகள்களை குறைக்கும் திறனும் ஐசோபியூட்டனாலில் காணப்படுகிறது. இந்தியாவில் வேளாண் அடிப்படையிலான உற்பத்தி தொழில்நுட்பங்கள் வெகுவாக உருவாகி வருவதால், ஐசோபியூட்டனால் எளிதில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தோல்வியைத் தடுக்க அரசு என்னென்ன செய்ய வேண்டும்? முதலில், ARAI போன்ற நிறுவனங்கள் மற்றும் வாகன உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆய்வக சோதனை, நீண்டகால இயந்திர தாங்குதிறன் சோதனை, பல கட்ட சாலைகளில் (on-road) நேரடி சோதனை அடிப்படையிலான முயற்சிகள் மற்றும் பயிற்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அடுத்ததாக, டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் கலவைக்கான BIS/ASTM தரநிலைகள் உருவாக்கி, நீர் அளவு, சீட்டேன் மேம்படுத்திகள் (Cetane Improvers) , சேர்மங்கள் போன்றவற்றிற்கான விதிமுறைகளைத் தெளிவுபடுத்தப்பட வேண்டும். டீசல் பஸ்/டிரக் போன்ற பல்வகை வாகனங்களில் டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் முதன்மையாக பயன்படுத்துவதற்கு வாகன தயாரிப்பாளர்களின் உத்தரவாதம் என்பது திட்டம் செயல்படுத்துவதற்கு முக்கிய காரணி ஆகும். முக்கியமாக, டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் விநியோக சங்கிலி வலுவாக இருக்க வேண்டும். ``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!'' - நிதின் கட்கரி உறுதி செய்ய வேண்டும் ஐசோபியூட்டனால் கரும்பு, சோளம், பையோமாஸ் போன்ற மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பெறுவதற்கு எண்ணெய் நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள், மற்றும் விவசாயிகள் ஆகியோரிடம் மாற்று ஒப்பந்தங்கள் அமைக்க வேண்டும். வணிக சந்தையில் தடையில்லா உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியையும் அதிகரிக்க வேண்டும். சந்தையில் ஐசோபியூட்டனால் விலைப் போட்டியைக் குறைக்க ஊக்கத் திட்டங்கள், கலவைச் சலுகைகள், வரித்தள்ளுபடி போன்ற கொள்கைகள் தேவை. கரும்பு மேலும், டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் எரிபொருள் கலவை தரத்தை கண்காணிக்க ஆய்வக வலையமைப்புகள், புல ஆய்வுகள் மற்றும் கடுமையான தரக்கட்டுப்பாடு அவசியம் ஆகும். பொதுமக்கள், மெக்கானிக்குகள், எரிபொருள் நிலைய ஊழியர்களுக்கு டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் கலவை பற்றிய பாதுகாப்பு, பராமரிப்பு நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்கள் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மதிப்பீடு (Life Cycle Assessment ) மூலம் பசுமைக் காற்று வாயு குறைப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும். தோல்வியைத் தடுக்க டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் கலவைத் திட்டம் வேகமான நாடு முழுவதும் அமல்படுத்துதல், இதற்காக அதிக செலவு செய்தல், தரக் குறைபாடு, OEM உத்தரவாதம் இல்லாமை மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறை ஆகியவை திட்டத்தை தோல்வியடையச் செய்யக்கூடும். டீசல் - சித்தரிப்புப் படம் எனவே, ஆய்வுகள், தரநிலைகள், OEM இணக்கம், உற்பத்தி வழங்கல் திட்டமிடல், கொள்கை ஊக்கங்கள் மற்றும் தரக் கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்தல் மூலம் ஐசோபியூட்டனால் மற்றும் டீசல் கலவை இந்தியாவில் வெற்றிகரமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று விளக்கினார். Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன் சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

விகடன் 18 Sep 2025 8:12 am

Rain Alert: தமிழ்நாட்டில் செப். 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் வருகிற செவ்வாய்கிழமை (செப் 23) வரை, மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின் படி, இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர். இராணிப்பேட்டை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை நாளை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 20, 21, 2025 தேதிகளில் வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 22, 2025 தேதியில் வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 23, 2025 தேதியில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை https://t.co/467dVuULiL pic.twitter.com/ycsxirkpta — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 17, 2025 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 18 Sep 2025 8:00 am

Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கடந்த 12ஆம் தேதி அதிகாலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலியில் இருக்கும் நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் திஷா பதானியின் தந்தையும், முன்னாள் போலீஸ் அதிகாரியுமான ஜெகதீஷ் பதானி இது தொடர்பாக போலீஸில் புகார் செய்திருந்தார். இதையடுத்து குற்றவாளிகளுக்கு எதிராக உடனே நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இத்துப்பாக்கிச்சூட்டிற்கு கோல்டி பிரார் கேங் பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவிப்பு வெளியிட்டது. வீரேந்திர சரண் என்பவர் ஃபேஸ்புக் பக்கத்தில்,''ஆன்மீக தலைவர்களை அவமதித்துவிட்டனர். மதத்திற்கு அவமரியாதை செய்துவிட்டனர். இது ஆரம்பம் தான் என்று குறிப்பிட்டு இருந்தனர். வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சுட்டு இருந்தனர். இத்துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து போலீஸார் தீவிர ஆய்வு செய்தபோது இச்செயலில் ஈடுபட்டது ரவீந்திரா மற்றும் அருண் என்று தெரியவந்தது. உடனே அவர்களைத் தேட ஆரம்பித்தனர். இப்பணியில் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா போலீஸார் இணைந்து செயல்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய இரண்டு பேரும் காஜியாபாத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இரண்டு பேரையும் மூன்று மாநில சிறப்புப் படை போலீஸாரும் சுற்றிவளைத்தனர். ஆனால் இரண்டு பேரும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீஸார் எதிர்த்தாக்குதல் நடத்தியபோது இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். திஷா பதானி, குற்றவாளிகள் அவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அதற்குள் இரண்டு பேரும் இறந்துவிட்டனர். மதகுரு அனிதாச்சாரியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு திஷா பதானியின் மூத்த சகோதரி குஷ்பு பதானி பதிலடி கொடுத்திருந்தார். எனவேதான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கோல்டிபிரர் கேங்க் தெரிவித்திருந்தது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு 238 கிரிமினல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ``மதத்தையும், துறவிகளையும் அவமதித்தால்'' - திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு; பகிரங்க மிரட்டல் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...   https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/46c3KEk

விகடன் 18 Sep 2025 7:56 am

உலக மூங்கில் தினம்!

ஆண்டுதோறும் செப்டம்பர் 18ஆம் தேதி, உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது. இது மூங்கிலின் முக்கியத்துவத்தையும், அதன் பல்துறை பயன்பாடுகளையும் பற்றிய

ஆந்தைரேபோர்ட்டர் 18 Sep 2025 7:45 am

Asia Cup 2025: ‘சூப்பர் 4 அட்டவணை என்ன?’.. எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? இந்தியா ஆடும் போட்டி தேதிகள்!

ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான சூப்பர் 4 சுற்று போட்டிகள் எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? என்பது குறித்து பார்க்கலாம். இந்திய அணி எப்போது விளையாடும் என்பது குறித்து தற்போது அட்டவணை வெளியாகி உள்ளது.

சமயம் 18 Sep 2025 7:43 am

திருச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமான சேவை!

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேற்று முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில் அதன் கட்டண விவரம் மற்றும் நேர விவரம் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 18 Sep 2025 7:35 am

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்: நீரின் அவசியமும், பாதுகாப்பும்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி, உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் (World Water Monitoring Day) உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

ஆந்தைரேபோர்ட்டர் 18 Sep 2025 7:21 am

Men' Health: `ஆண் பாலியல் ஹார்மோன்'சுரப்பை அதிகப்படுத்தும் உணவுகள்

''மலட்டுத்தன்மைக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இன்றைய தலைமுறையினரிடம் அதிகரிக்கும் தவறான உணவுப்பழக்கம்தான் முக்கியக் காரணம். அது, ஆண்களின் பாலியல் ஹார்மோனான `டெஸ்டோஸ்டீரான்’ சுரப்பை பாதித்து, தந்தையாகும் வாய்ப்பு குறையக் காரணமாக இருக்கிறது’’ என்கிறார் டயட்டீஷியன் கற்பகம். டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் முக்கியத்துவம் பற்றியும், அதன் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள் பற்றியும் விளக்குகிறார் அவர். Men' Health “ஆண், பெண் இருவர் உடல்களிலும் டெஸ்டோஸ்டீரான் இருக்கிறது. இது, அட்ரீனலின் சுரப்பி மற்றும் விரைப்பைகளிலிருந்து சுரக்கிறது. பெண்களிடம் மிகவும் குறைவாகவும், ஆண்களிடம் அதிகமாகவும் காணப்படும் இந்த ஹார்மோன்தான் ஆண்களுக்குத் தனித்துவமான குரலைத் தருகிறது; முகத்தில் தாடி, மீசையை வளரச் செய்கிறது; தலைமுடி வளரவும், விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் காரணமாகிறது. அதனால்தான் இந்த ஹார்மோனை 'ஆண் பாலியல் ஹார்மோன்’ என்கிறது மருத்துவம். ஆணின் விந்தணு உற்பத்தி, தசை அடர்த்தி, எலும்புகளின் ஆரோக்கியம், ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி போன்ற பல்வேறு பணிகளிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது. வயது அதிகரிக்கும்போது இந்த ஹார்மோன் சுரப்பது குறையத் தொடங்கிவிடும். சிலருக்கு இளம் வயதில் தவறான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதாலும் டெஸ்டோஸ்டீரான் சுரப்பது குறையத் தொடங்கும். இதனால், ஆண்களுக்கு விரைப்புத்தன்மை அடைவதிலும், விந்தணு உற்பத்தியிலும் குறைபாடு ஏற்பட்டு தாம்பத்ய உறவில் பிரச்னை ஏற்படும். அத்துடன் எலும்பு மற்றும் தசைகள் வலிமை இழப்பது என வேறு பல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். Men' health கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின் டி, மக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகள் உள்ள உணவுகள் டெஸ்டோஸ்டீரான் சுரப்பை ஊக்கப்படுத்தும். அதிகப்படியான உடல் பருமன், அதிக மன அழுத்தம் போன்றவற்றால் இந்த ஹார்மோன் சுரப்பு குறையும். குறிப்பாக, 'கார்டிசால்’ ஹார்மோனின் அளவு உடலில் அதிகரித்தாலும், இதன்் அளவு குறைந்துவிடும். இதன் அளவை அதிகரிக்க உதவும் சில உணவுகளை ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டும். மாதுளை: மாதுளையிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும். மாதுளையை ஜூஸாக்கி அருந்துவதைவிட அப்படியே பழமாகச் சாப்பிடுவது நல்லது. சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை கார்டிசால் அளவைக் குறைத்து, டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கச் செய்யும். Balance diet மீன்: மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் டி நிறைவாக உள்ளன. இவற்றை அடிக்கடிச் சாப்பிட்டு வரலாம். முட்டை: முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருக்கிறது. இது டெஸ்டோஸ்டீரான் சுரப்பைத் தூண்டக்கூடியது. ஆண்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது. நட்ஸ்: பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. அத்துடன் இவற்றிலுள்ள சாச்சுரேட்டடு, மோனோ அன்சாச்சுரேட்டடு கொழுப்புகள் டெஸ்டோஸ்டீரான் உற்பத்திக்கு உதவக்கூடியவை. கீரை வகைகள்: கீரைகளில் டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கும் மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, வாரம் இரண்டு முறையாவது கீரை உணவுகளைச் சாப்பிட வேண்டும். பூசணி குறைந்து வரும் 'Y' குரோமோசோம் ஜீன்கள்... ஆண் இனமே இல்லாமல் போகுமா?! - ஆய்வு முடிவு சொல்வதென்ன?! பால்: பாலில் கால்சியம் மட்டுமன்றி வைட்டமின் டி சத்தும் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலிமையடையும்; ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக் குறைபாடு நீங்கும். பூசணி விதைகள்: பூசணி விதைகளில் துத்தநாகச் சத்து நிறைந்திருக்கிறது. அவ்வப்போது இதை வறுத்து ஸ்நாக்ஸ்போலச் சாப்பிடலாம். Health: பருவமடையும் ஆண் குழந்தைகளின் உடலில் நிகழும் 8 மாற்றங்கள்! தவிர்க்க வேண்டியவை... தினமும் 6 முதல் 8 மணி நேரம்வரை தூக்கம், 30 நிமிட உடற்பயிற்சி, மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துதல், 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். துரித உணவுகள், பிளாஸ்டிக் கன்டெய்னர் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 18 Sep 2025 7:11 am

அடுத்தடுத்து சீனாவுக்குப் பயணமாகும் அமைச்சர்கள்

சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் சீனாவுக்குப் பயணமாகியுள்ளனர். சீனாவில் நடைபெறும் காவல்துறை மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சீனாவுக்குப் பயணமானதை அடுத்து, பதில் அமைச்சராக சுனில் வட்டகல நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, பதில் காவல்துறை மா அதிபராக பிரதி காவல்துறை

புதினப்பலகை 18 Sep 2025 7:10 am

6 அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க கோரி முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பு, இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ஆறு முக்கிய பிரமுகர்களின் சொத்துக்கள் குறித்து 2006 ஆம் ஆண்டு 5

புதினப்பலகை 18 Sep 2025 7:06 am

கேரள சட்டசபையில் புயலை கிளப்பிய மூளை தின்னும் அமீபா நோய் தொற்று!

கேரள சட்டசபையில் இது வரை மூளை தின்னும் அமீபா நோய் தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்த விவகாரம் புயலை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக மாறி மாறி எதிர்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

சமயம் 18 Sep 2025 6:13 am

விண்வெளி நிலையம் சென்ற சரக்கு விண்கலனில் என்ஜின் கோளாறு! சுற்றுப்பாதையில் சிக்கியது!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 5,000 கிலோ சரக்குகளுடன் சென்ற விண்கலனின் பிரதான என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதனால், சிக்னஸ் எக்ஸ்எல் என்ற இந்த சரக்கு விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு உள்பட அத்தியாவசியப் பொருள்கள், அவர்களின் ஆய்வுக்குத் தேவையான தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்டவற்றை சரக்கு விண்கலன் மூலம் அனுப்புவது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.11 […]

அதிரடி 18 Sep 2025 5:38 am

சாதி பெயர்களில் தெரு: திருச்சி மாநகராட்சி எடுத்த முக்கிய நடவடிக்கை!

திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் சாதி பெயர்களை கொண்ட தெரு பெயர்களை நீக்க மாநகராட்சி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்து உள்ளது. விரைவில் இந்த தெருக்களுக்கு புதிய பெயர்கள் வைக்கப்படும்.

சமயம் 18 Sep 2025 5:31 am

இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம்: கூட்டம் கட்டுமீறியதால் குவிக்கப்பட்ட பொலிசார்

பிரான்சில் இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம் ஒன்று அறிவித்தத்தைத் தொடர்ந்து அங்கு அளவுக்கதிகமாக மக்கள் குவிந்ததால், அவர்களைக் கலைக்க கலவரத் தடுப்பு பொலிசாரை அழைக்கும் நிலை உருவானது. இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், Krousty Sabaidi என்னும் ஆசிய உணவகம் புதிதாக கிளை ஒன்று திறக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் கடந்த சனிக்கிழமை, 1,000 பேருக்கு இலவச உணவு வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால், அங்கு சுமார் 3,000 பேர் குவிய, உனவக […]

அதிரடி 18 Sep 2025 2:30 am

PAK vs UAE : ‘வெற்றிக்கு பிறகு’.. இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் கேப்டன்! தயாரா இருக்காங்களாம்!

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றியைப் பெற அமீரக அணிக்கு வாய்ப்பு இருந்தும், கடைசி நேரத்தில் சொதப்பி தோல்வியை சந்தித்தனர். இப்போட்டியில் வென்றப் பிறகு பாகிஸ்தான் அணிக் கேப்டன் கொடுத்த பேட்டி குறித்து பார்க்கலாம்.

சமயம் 18 Sep 2025 1:17 am

PAK vs UAE: ‘பாகிஸ்தான் அணி வெற்றி’.. சூப்பர் 4-ல் இந்தியா, பாகிஸ்தான் போட்டி தேதி இதுதான்: முழு விபரம்!

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் அணி, கடைசிவரை போராடி வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், அமீரக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பி தோற்றனர்.

சமயம் 18 Sep 2025 12:49 am

ஸ்டார்மரின் பிரதமர் பதவிக்கு ஆபத்து –பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

பிரித்தானியாவில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவியை மாற்றும் முயற்சிகள் தீவிரமாகும் நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான திட்டங்கள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. துணை பிரதமர், அமெரிக்க தூதர் மற்றும் மூலோபாய திட்ட தலைவர் ஆகியோர் பதவி விலகியதையடுத்து, ஸ்டார்மர் தனது இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்க முயன்ற நிலையில், கட்சி உள்ளேயே எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தொழிலாளர் கட்சியின் சில உறுப்பினர்கள் ஸ்டார்மர் தனது நிலைப்பாட்டை மரராவிட்டால், அவரை நீக்குவது தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளனர். இருப்பினும் […]

அதிரடி 18 Sep 2025 12:30 am

யாழில். மாவாவுடன் இளைஞன் கைது

நாவாந்துறை பகுதியில் நீண்ட காலமாக மாவா விற்பனையில் ஈடுபட்ட வந்தார் எனும் குற்றச்சாட்டில் 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த நபரை பொலிஸார் கைது செய்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரிடம் இருந்து 470 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 17 Sep 2025 11:38 pm

சிறிமா அரசாங்கத்தின் ஆரம்பச் சவால்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1960களில், பொருளாதாரப் பிரச்சினைகள் அரசாங்கங்களுக்கு பாரிய சவாலைக் கொடுத்த வண்ணமே இருந்தன. ஆனால், ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (1960-64) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (1965-70) அரசாங்கங்கள் இரண்டும், அவற்றை எதிர்கொள்ள முடியாமல், இந்தப் பிரச்சினைகளைப் பின்னணிக்குத் தள்ளிவிட்டு, மொழி மற்றும் மத மேலாதிக்கத்தின் சமூகப் பண்பாட்டு நிவாரணங்களையும், சிங்கள-பௌத்த தேசிய அடையாளத்தை முன்னிறுத்துவதையும் தமது தப்பித்தல் உத்தியாகப் பயன்படுத்தின. அந்த தசாப்தத்தின் இறுதியில் இந்த சூழ்ச்சிகள் தீர்ந்து போயின. பொது […]

அதிரடி 17 Sep 2025 11:30 pm

PAK vs UAE: ‘அப்ரீதி சாதனையை சமன் செய்த’.. சைம் ஆயுப்: கடைசி நேரத்தில்.. பாகிஸ்தான் திடீர் கம்பேக்!

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் அணி தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசியது. இறுதிக் கட்டத்தில், ஷாஹீன் அப்ரீதி அதிரடி காட்டியதால், பாகிஸ்தான் அணி திடீர் கம்பேக்கை கொடுத்தது.

சமயம் 17 Sep 2025 11:08 pm

தமிழ்நாட்டில் கனமழை வெளுக்கும் மாவட்டங்கள் பட்டியல்: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீடு!

தென்னிந்தியாவில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 17 முதல் 19 வரை பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமயம் 17 Sep 2025 11:03 pm

அரியலூர் மக்களுக்கு குட் நியூஸ் : இறுதிக்கட்டத்தை எட்டிய புதிய பேருந்து நிலையப் பணிகள்!

அரியலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 17 Sep 2025 11:00 pm

மனிதர்களை கடித்தால் வாழ்நாள் சிறை; நாய்களுக்கு புதிய தண்டனை

இந்தியாவில் தெருநாய்களால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதர்களை கடித்தால் நாய்களுக்கு வாழ்நாள் சிறை விக்கப்படும் என உத்தர பிரதேச அரசு நூதனமான தண்டனையை அறிவித்துள்ளது . நாடு முழுவதும் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும், ரேபிஸ் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. நாய்களுக்கு வாழ்நாள் சிறை இதனால் நாய்களை காப்பகத்தில் அடைக்க இடப்பட்ட உத்தரவிற்கும் நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல மாநிலங்களில் அந்த நடைமுறை செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நாய்க்கடி சம்பவங்கள் குறித்து […]

அதிரடி 17 Sep 2025 10:30 pm

மந்திரிமனையை நேரில் சென்று பார்த்த அமைச்சர்

இடிந்து விழுந்த மந்திரி மனையை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

அதிரடி 17 Sep 2025 10:28 pm

மந்திரிமனையை பாதுகாக்க 14 வருடங்களாக முயல்கின்றோம் –தனிநபர் தடையாக உள்ளதாக தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. அது தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய உதவிப்பணிப்பாளர் U.A.பந்துல ஜீவ வை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி […]

அதிரடி 17 Sep 2025 9:50 pm

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் 65,000 பேர் இதுவரை உயிரிழப்பு - வெளியான முக்கிய தகவல்!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 65,000 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 17 Sep 2025 9:44 pm

காஸா சிட்டியைக் கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக காஸா சிட்டியில் திங்கள்கிழமை இரவு முழுவதும் கடுமையான குண்டுவீச்சு நடத்திய ராணுவம், அந்த நகரில் ‘ஹமாஸ் அமைப்பினரின் ராணுவக் கட்டமைப்பைத் தகா்க்கும்’ நடவடிக்கை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், நகரில் வசிப்பவா்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி தெற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து […]

அதிரடி 17 Sep 2025 9:30 pm

தென்காசி: வனத்துறை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

தென்காசி மாவட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் லாவண்யா பால் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் தங்களது பிரதான பிரச்சனையான வன விலங்குகள் அட்டகாசத்தைக் கேட்பதற்கு வனத்துறை அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தொடர்பு கொண்ட நிலையில் வனத்துறை சார்பாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற போது, கடந்த சில மாதங்களாகவே வடகரை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகமாகக் காணப்படுகிறது. தென்னை உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. ஆனால் இதுகுறித்து வனத்துறையினர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. முறையான அகழிகள் வெட்டப்படவில்லை, சோலார் மின் வேலிகள் அமைக்கப்படவில்லை. இதனைக் கேட்கும் பட்சத்தில் தங்களுக்கான நிதி வரவில்லை எனக் கூறுகின்றனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர். தங்கள் பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்துகின்ற வகையிலும் முதற்கட்டமாக செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வனச்சரகத்தின் மீது குற்றப்புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கான நிதி இதுவரை வந்துள்ளதா? வந்த நிதியை என்ன செய்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு அளித்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியது. தென்காசி: ரேசன் கார்டில் வனவிலங்குகளைச் சேருங்க -வனத்துறைக்கு எதிராக விவசாயிகள் மனு; பின்னணி என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 17 Sep 2025 9:24 pm

எளியவர்களுக்கு உணவு எட்டாக்கனியாகக் கூடாது - தாயின் பெயரில் அன்னதான விருந்து தொடங்கிய லாரன்ஸ்

நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் எளியவர்களுக்கு அன்னதான விருந்தைத் தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான 'கண்மணி அன்னதான விருந்து' இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ராகவா லாரன்ஸ் அந்தப் பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையைத் தர வேண்டும். இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. A New Beginning: Kanmani Annadhana Virundhu Today, I began a new venture close to my heart - Kanmani Annadhana Virundhu, named after my mother. My goal of this initiative is to make food varieties that are usually enjoyed only by the wealthy accessible to people who never… pic.twitter.com/Wkr7pooi5r — Raghava Lawrence (@offl_Lawrence) September 17, 2025 பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது. உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறைவுடன் தொடர்வேன் என நம்புகிறேன் என்று லாரன்ஸ் பதிவிட்டிருக்கிறார். மேலும், அன்னதான விருந்தின் வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார். திரைப்படங்களுக்கு அப்பால் லாரன்ஸின் இதுபோன்ற சமூக சேவைகள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். ``எனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்; முதல் ஆசிரியர் இவர்தான்'' - ராகவா லாரன்ஸ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 17 Sep 2025 9:05 pm

ரஷிய கடலடி எரிவாயு குழாய் தகா்ப்பு வழக்கு: ஜொ்மனிக்கு நாடுகடத்தப்படும் உக்ரைனியா்

ரஷியாவில் இருந்து ஜொ்மனிக்கு எரிவாயு வழங்கும் நாா்த் ஸ்ட்ரீம் கடலடி குழாய்களை வெடிவைத்து தகா்த்ததாக சந்தேகிக்கப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்ட, உக்ரைன் நாட்டைச் சோ்ந்த சொ்ஹீ குஸ்னியெட்ஸோவை ஜொ்மனிக்கு நாடு கடத்த இத்தாலிய மேல்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. 49 வயதான குஸ்னியெட்ஸோவ், ஐரோப்பிய கைது உத்தரவின் பேரில் இத்தாலியின் ரிமினி கடற்கரையில் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது. நாடுகடத்தல் தொடா்பாக நடைபெற்ற வழக்கில் குஸ்னியெட்ஸோவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞா் நிக்கோலா கனெஸ்ட்ரினி, […]

அதிரடி 17 Sep 2025 8:30 pm

திமுக முப்பெரும் விழா: காலில் விழுந்த பிறகு முகத்தை மறைக்க கர்சிஃப் எதற்கு? - EPS-ஐ சாடிய ஸ்டாலின்

கரூரில் தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது (செப்டம்பர் 17). இந்த விழாவில், பெரியார் விருது கனிமொழிக்கும், அண்ணா விருது சுப. சீத்தாராமனுக்கும், கலைஞர் விருது சோ.மா. ராமச்சந்திரனுக்கும், பாவேந்தர் விருது குளித்தலை சிவராமனுக்கும், பேராசிரியர் விருது மருதூர் ராமலிங்கத்துக்கும், ஸ்டாலின் விருது பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கும் வழங்கப்பட்டன. மேலும், முரசொலி அறக்கட்டளை சார்பில் முதல்முறையாக முரசொலி செல்வம் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. திமுக முப்பெரும் விழாவில் விருது பெற்றவர்களுடன் ஸ்டாலின் அதைத்தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் , கொட்டுகின்ற மழையில் அண்ணாவால் இதே நாளில் தொடங்கிவைக்கப்பட்ட இந்தக் கழகம், 75 ஆண்டுகள் மட்டுமல்ல நூற்றாண்டைக் காணும். இந்த ஆண்டு முப்பெரும் விழாவைக் கரூரில் நடத்த அனுமதி கேட்டு சகோதரர் செந்தில் பாலாஜி என்னிடம் வந்தார். நானும் ஒப்புதல் அளித்தேன். பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டையே இங்கு ஏற்பாடு செய்திருக்கிறார். செந்தில் பாலாஜி நாம் கோடு போடச் சொன்னால் ரோடு போடுவார். மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருப்பவர் செந்தில் பாலாஜி. அதனால்தான் அவர் வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாகத் தூங்க முடியாது என்று அவரை முடக்கப் பார்த்தார்கள். ஆனால், அவரை முடக்க முடியுமா... தொடர்ந்து ஆட்சியமைத்தோம் என்ற வரலாற்றைப் படைக்க வேண்டும்! 2019 முதல் நாம் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் நாம் வெற்றிபெற்று வந்திருக்கிறோம். இந்த வெற்றிப்பயணம் 2026-லும் தொடரும். தி.மு.க ஆட்சி தொடர்ந்து அமைந்தது என்ற புது வரலாற்றை நாம் படைக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது காவிக் கொள்கை. அந்தக் கொள்கையின் அரசியல் முகம் பா.ஜ.க. இரண்டு நாள்களுக்கு முன்புகூட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றியதே பா.ஜ.க-தான் என்று உண்மையைப் பேசியிருக்கிறார். அந்தக் கைப்பாவை அரசை மக்கள் தூக்கியெறிய தி.மு.க-தான் காரணம் என பா.ஜ.க நம் மீது வன்மத்தோடு இருக்கிறது. பயந்துவிடுவோமா நாம... 75 ஆண்டுக்கால வரலாறு நமக்கு இருக்கிறது. ஸ்டாலின் திமுக-வுக்கு மாற்று என்றவர்களெல்லாம் மறைந்து போனார்கள்! தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளுமே தி.மு.க-வை அழிப்போம் என்று கூறின. இப்போதும் சில பேர் தி.மு.க-வுக்கு நாங்கள்தான் மாற்று என்று பேசிக் கொள்கிறார்கள். மாற்று என்று சொன்னவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள். தி.மு.க மட்டும் மாறவில்லை. இதுதான் தமிழ்நாட்டு அரசியல். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது எதுவும் செய்யாமல், தமிழ்நாட்டை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற தெம்பு, திராணி இல்லாமல் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார். பா.ஜ.க தன்னோடு இருக்கிறது என்று இப்போதும் வாய் துடுக்கோடுப் பேசிக் கொண்டிருக்கிறார். உங்களுடன் இல்லை ஸ்டாலின்! அமித் ஷாவே சரணம் என்று சரண்டர் ஆகிவிட்டார்! எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசிக் கொண்டிருக்கிறார். ரெய்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க-வை அடகு வைத்துவிட்டார். திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது எனக் கூறியவர் அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அ.தி.மு.க தொடங்கியபோது தனது கொள்கை அண்ணாயிசம் என்று சொன்னார்கள். அதை பழனிசாமி அடிமையிசம் என்று மாற்றி அமித் ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார். ஸ்டாலின் காலில் விழுந்த பிறகு முகத்தை மறைக்க கர்சிஃப்! நேற்று டெல்லியில் கார் மாறி மாறிப் போன பழனிசாமியைப் பார்த்து, `காலில் விழுந்த பிறகு முகத்தை மறைக்க கர்சிஃப்' எதற்கு என்று எல்லோரும் கேட்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு இங்கு என்றுமே நோ என்ட்ரி. பா.ஜ.க-வைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால் அடுத்து மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கித்தான் அவர்கள் நகர்வார்கள். ஏற்கெனவே காஷ்மீரில் முன்னோட்டம் பார்த்து விட்டார்கள். எப்படி இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்று உருவானபோது, தமிழ்நாடு மொழிப் போர் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றியதோ, அதேபோல இப்போது ஒரு உரிமைப் போர் நடத்தி நாட்டைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று கூறி உரையை முடித்தார். ‘டார்கெட் 40’ - கைப்பற்றுவாரா உதயநிதி? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 17 Sep 2025 8:15 pm

மாவாவுடன் இளைஞன் கைது

நாவாந்துறை பகுதியில் நீண்ட காலமாக மாவா விற்பனையில் ஈடுபட்ட வந்தார் எனும் குற்றச்சாட்டில் 22 வயதான இளைஞன்… The post மாவாவுடன் இளைஞன் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Sep 2025 8:09 pm

மந்திரிமனையை நேரில் சென்று பார்த்த அமைச்சர்

இடிந்து விழுந்த மந்திரி மனையை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர்.யாழ்ப்பாணத்தில்… The post மந்திரிமனையை நேரில் சென்று பார்த்த அமைச்சர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Sep 2025 8:06 pm

மந்திரிமனையை பாதுகாக்க 14 வருடங்களாக முயல்கின்றோம் –தனிநபர் தடையாக உள்ளதாக தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையைகடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும்பயனளிக்கவில்லை என… The post மந்திரிமனையை பாதுகாக்க 14 வருடங்களாக முயல்கின்றோம் – தனிநபர் தடையாக உள்ளதாக தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Sep 2025 8:02 pm

Google Gemini: மச்சத்தைக் கூட எப்படி நோட் பண்ணுச்சு? - Nano Banana AI போட்டோக்களின் அபாயம்|உஷார்

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, போஸ்ட், ஃபேஸ்புக் போஸ்ட், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் எனத் திரும்பிய பக்கம் எல்லாம் இப்போது கூகுள் ஜெமினியின் நேனோ பனானா ஏ.ஐ போட்டோக்கள் குவிந்து கிடக்கின்றன. இளம்பெண்களும், இளைஞர்களும் ஃபாலோ செய்துவரும் இந்த ட்ரெண்டில் ஆபத்து மறைந்திருக்கிறது என இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு அதிர்ச்சி ரகமாகத் தான் உள்ளது. கூகுள் ஜெமினி அவர் பதிவிட்டிருக்கிற வீடியோவில் பேசியிருப்பதாவது... இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ, நமது போட்டோவை சேலை அணிந்த போட்டோவாக மாற்றித் தருகிறது. நானும் இந்த ட்ரெண்டை ஃபாலோ செய்ய போட்டோவை அப்லோடு செய்திருந்தேன். அப்போது நான் அப்லோடு செய்திருந்த போட்டோவில் பச்சை கலர் ஃபுல் ஸ்லீவ் உள்ள ஆடையை அணிந்திருந்தேன். பின், பிராம்ப்ட் கொடுக்க, எனக்கு ஜெமினி ஏ.ஐ என் புகைப்படத்தை மாற்றிக் கொடுத்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்தேன். பின்னர்தான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். ஜெமினி ஏ.ஐ கொடுத்திருந்த கருப்பு சேலை அணிந்திருந்த புகைப்படத்தில், எனது இடது கையில் ஒரு மச்சம் இருந்தது. இந்த மச்சம் எனக்கு உண்மையிலேயே இருக்கிறது. ஆனால், அது நான் கூகுள் ஜெமினியில் அப்லோடு செய்திருந்த ஃபோட்டோவில் தெரியாது. பிறகு எப்படி என்னுடைய மச்சம் கூகுள் ஜெமினிக்குத் தெரிந்தது. இது பயமாக உள்ளது. இது எப்படி நடந்தது என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. அதனால், சமூக வலைத்தளம், ஏ.ஐ வலைத்தளங்களில் எந்தப் போட்டோவை அப்லோடு செய்வதாக இருந்தாலும் கவனமாக இருங்க என்று கூறியிருக்கிறார். உஷார் மக்களே! View this post on Instagram A post shared by झलक भावनानी ✨ (@jhalakbhawnani) AI: உலகின் முதல் AI அமைச்சர்; சாதனை படைத்த அல்பேனியா; வேலை என்ன தெரியுமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 17 Sep 2025 7:57 pm

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சரை வழிமறித்த முன்னணியினர்

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து… The post தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சரை வழிமறித்த முன்னணியினர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Sep 2025 7:54 pm

2026 சட்டமன்ற தேர்தல்: ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி - உசிலம்பட்டி அய்யப்பன் பேச்சு!

பெரியார் பிறந்தநாளில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். 2026 தேர்தலில் ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா இணைந்து வெற்றி பெறுவார்கள் என்று கூறினார்

சமயம் 17 Sep 2025 7:53 pm

Sleep: அலாரம் அடிப்பதற்கு முன்பே கண் விழித்துவிடுகிறீர்களா? அதற்கு அறிவியல் காரணம் இதுதான்!

காலையில் அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே கண் விழித்து அலாரமை ஆஃப் செய்திருப்போம். இந்த அனுபவம், நம் வாழ்வில் பலமுறை நடந்திருக்கும். இது ஏதோ தற்செயலான நிகழ்வு என்றோ, அல்லது நமக்கு ஏதோ சூப்பர் பவர் இருக்கிறது என்றோ நினைத்திருப்போம். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. சர்க்காடியன் ரிதம் (Circadian Rhythm) நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸின் ஒரு பகுதியான 'சூப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸ்' (Suprachiasmatic Nucleus - SCN) தான் இவ்வாறு செயல்படத் தூண்டுகிறது. இது எப்போது தூங்க வேண்டும், எப்போது எழ வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது. alaram நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தால், அதற்கேற்ப உடலின் இயக்கமும் செயல்படுகிறது. இதன் விளைவாக, அலாரம் அடிப்பதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பே, உங்கள் உடல் விழித்தெழுவதற்கான செயல்முறைகளைத் தொடங்கிவிடும். கார்டிசோல் மற்றும் மெலடோனின் என்ற ஹார்மோன்கள் உறக்கத்தையும், விழிப்பையும் தீர்மானிக்கிறது. இந்த இரண்டு முக்கிய ஹார்மோன்கள் காரணமாக அமைகின்றன. மெலடோனின் (Melatonin) இது 'தூக்க ஹார்மோன்' என்று அழைக்கப்படுகிறது. இருள் சூழ்ந்ததும், நமது உடலில் மெலடோனின் அளவு அதிகரித்து, நமக்குத் தூக்கத்தை வரவழைக்கிறது. காலை நெருங்கும்போது, இதன் அளவு படிப்படியாகக் குறையுமாம். Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க! கார்டிசோல் (Cortisol) இது 'விழிப்பு ஹார்மோன்' என்று அழைக்கப்படுகிறது. நாம் வழக்கமாக எழும் நேரத்திற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, கார்டிசோலின் அளவு அதிகரிக்கத் தொடங்குமாம். அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு நாம் கண் விழிப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். தூக்கம் மன அழுத்தமும் ஒரு காரணமா? சில சமயங்களில், மன அழுத்தமும் நாம் முன்கூட்டியே கண் விழிக்க ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு முக்கியமான மீட்டிங்கிற்காகவோ அல்லது ஒரு விமானத்தைப் பிடிப்பதற்காகவோ சீக்கிரம் எழ வேண்டும் என்று நினைத்தால், ஒருவிதமான பதட்டம் ஏற்படும். இந்த மன அழுத்தம், கார்டிசோல் மற்றும் ACTH போன்ற மன அழுத்த ஹார்மோன்களை வெளியிட்டு, உங்களை அலாரம் அடிப்பதற்கு முன்பே எழுப்பிவிடுமாம். நீங்களும் இதுபோன்ற அனுபவங்களைச் சந்திருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்! இந்தக் கனவு அடிக்கடி உங்களுக்கு வருகிறதா? அறிவியல் சொல்லும் அர்த்தம் இதுதான் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 17 Sep 2025 7:36 pm

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

“காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைப் பதவி வகிக்கும் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார். ஜெனீவாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். பாலஸ்தீன மக்களும் அதேபோல, இஸ்ரேல் மக்களும் அமைதிக்காக கூக்குரலிடுகின்றனர். ஒவ்வொருவரும், இதற்கொரு முடிவு எட்ட விரும்புகின்றனர். ஆனால், நம் கண் முன் நாம் காண்பதெல்லாம், சண்டை மேலும் தீவிரமடைவதையே பார்க்கிறோம். இது முற்றிலும் […]

அதிரடி 17 Sep 2025 7:30 pm

வெற்றி. ஜதீஷ்குமாரின் “மீண்டெழல்”

தும்புகளை முறுக்கி கயிறுகள் திரிக்கப்படுகின்றன. இழைக் கயிறுகள் என இவை அழைக்கப்படுகின்றன. இழைக் கயிறுகளை முறுக்கி தேடாக்கயிறுகள்… The post வெற்றி. ஜதீஷ்குமாரின் “மீண்டெழல்” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Sep 2025 7:17 pm

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சரை வழிமறித்த முன்னணியினர்

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது. அந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்று இருந்தனர். அதன் போது, அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டனர். குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் , தியாக தீபத்தின் தியாகத்தை மதித்து , அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை தடுத்து நிறுத்தியமை கண்டிக்கத்தக்கது என பல தரப்பினரும் தமது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பதிவு 17 Sep 2025 7:11 pm