விண்வெளி வீரர்களை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி இஸ்ரோ தெரிவிப்பு
ஆளில்லா விமானத்தை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பாரசூட் சோதனை வெற்றிபெற்றுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ வெளியிட்ட காணொளியில் கடந்த இரண்டு நாட்களாக குறித்த பரிசோதனை சண்டிகரில் நிறைவடைந்துள்ளதுடன் வெற்றியையும் பெற்றுள்ளது பாரசூட்டிலிருந்து விண்வெளி வீரர்களை பத்திரமாக தரையிறக்கும் சோதனையாகவே இது இடம்பெற்றுள்ளது என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
ஐந்து மீனவர்களுடன் மாயமான பலநாள் மீன்பிடிப் படகு
மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளது. ‘இதுரங்கி 1’ எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. அந்த படகில் 5 மீனவர்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகு கடந்த நவம்பர் 21 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அந்த படகிலிருந்த ஐந்து மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 6 ஆம் திகதி இறுதியாக அவர்களிடமிருந்து அழைப்பு ஒன்று வந்ததாகவும், அன்று முதல் […]
மீண்டும் ஒரு எண்ணெய் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா…இறுகும் போர் பதற்றம்
சர்வதேச கடல் பகுதியில் வெனிசுலாவின் கடற்பகுதிக்கு அருகே மற்றொரு எண்ணெய் கப்பலைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பாக வெனிசுலாவிற்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடை செய்யப்பட்ட மற்றொரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. தற்போது இன்னொரு கப்பலையும் அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக இன்று காலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. […]
ரயில்களில் சிக்னல் கோளாறு, தொழில்நுட்பப் பிரச்சினை, அவசர நிலை, புறப்பாடு என எல்லாவற்றையும் ஹாரன் ஒலிகள் மூலம் தெரிவிக்க முடிகிறது. அது லோகோபைலட் மற்றும் கார்டு ஆகியோருக்கிடையிலான முக்கியமான தொடர்பு மொழி.
யாழ்ப்பாணம் புத்தூரில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!
யாழ்ப்பாணம் புத்தூரில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி – இருவர் கவலைக்கிடம்! யாழ்ப்பாணம் – புத்தூர்… The post யாழ்ப்பாணம் புத்தூரில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்! appeared first on Global Tamil News .
பரபரப்பு –கான்ஸ்டபிளை தாக்கியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மீதுபுகார்!
NPP முக்கியஸ்த்தர்கள் நெறி தவறுகிறார்களா? தீவிரமடையும் விசாரணை. இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்… The post பரபரப்பு – கான்ஸ்டபிளை தாக்கியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மீதுபுகார்! appeared first on Global Tamil News .
சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு!
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிரியாவின் மத்திய பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் தலைமை இடங்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்‘ என்ற பெயரில் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பி-52 குண்டுவீச்சு விமானங்கள், எஃப்-15, எஃப்-16 போா் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றன. துல்லியமாக […]
தமிழ்நாடு ரூட்டில் பெங்களூரு-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள்! மலையாளிகளுக்கு பறந்த குட் நியூஸ்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- கொல்லம் இடையே தமிழ்நாடு வழியாக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (டிசம்பர் 21, 2025) கிளிநொச்சி மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இரணைமடு… The post கிளிநொச்சியில் பிரதமர் ஹரினி அமரசூரிய: இரணைமடு குளம் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை நேரில் ஆய்வு! appeared first on Global Tamil News .
இப்படியெல்லாம் ரூல்ஸ் இருக்கா? இந்த மாதிரியான பாஸ்போர்ட் விதிமுறைகள் நிறைய இருக்கு!
எங்கேயாவது பயணம் தொடங்குவதற்கு முன் பாஸ்போர்ட்டை ஒருமுறை கவனமாகச் சரிபார்ப்பது உங்கள் விடுமுறையை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும் வல்லமை கொண்டது.
பரிசளிப்பு விழா மேடையில் அதிபருக்கு மாணவி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ; வைரலாகும் காணொளி
கம்பஹாவின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பேசியமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த மாணவி பரிசளிப்பு விழா மேடையில் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விமர்சனம் குறித்த மாணவி பாடசாலை சார்பில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகளாக தாம் வெற்றிகளை குவித்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளிலும் குறித்த மாணவி தனது திறமையை வெளிப்படுத்தி இருந்ததாகவும் இதன்போது குறிப்பிட்டார். பரிசளிப்பு […]
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்ப UNICEF ஆதரவு!
சமீபத்திய சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட கல்வித்துறையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பாக, யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகள் குழுவிற்கும்… The post இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்ப UNICEF ஆதரவு! appeared first on Global Tamil News .
அனுரவிடம் முறைப்பாடு செய்வோம்!
மதகுருமார்கள் யாராகிலும் அவர்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் நடாத்தப்பட வேண்டும். பொலிஸார் மக்களின் மனநிலை அறிந்து செயற்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் வேலன் சுவாமிகள் நடாத்தப்பட்ட விதம் முறையற்றது. நடந்த சம்பவம் தொடர்பாக வீடியோவை பார்த்தேன். அது பிழை என்பது தெளிவாகிறது. ஜனாதிபதிக்கு தெரிவிப்பேன்என அனுர அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார். அநுர அரசில் இவ்வாறான சம்பவங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அனுர அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் இல்லை –ஜப்பான் திட்டவட்டம்
டோக்கியோ, ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி அணு ஆயுதங்களை வாங்க ஜப்பான் அரசு முன்வர வேண்டும் என மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க ஜப்பான் பிரதமர் சனா தகைச்சி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டோம் என கடந்த பல தசாப்தங்களாக ஜப்பான் அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானை பொறுத்தவரை சீனா, […]
ரஷ்ய ஜனாதிபதி முன்னிலையில் திருமண ஆசையை வெளிப்படுத்திய நிருபர் ; கைதட்டி மகிழ்ந்த புதின்
ரஷ்ய ஜனாதிபதி புதின், வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார். இதில் அவரிடம் உக்ரைன் – போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கைதட்டி மகிழ்ந்த புதின் அப்போது இளம் நிருபர் கிரில் பஜானோவ் என்பவர் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று எழுதப்பட்ட சுவரொட்டியை காண்பித்தப்படி தனது காதலியிடம் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று தனது […]
மதுபான விற்பனை நிலையங்களை ஊக்குவித்து கள்ளுத் தவறணைகளையும் போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலைகளையும் தற்போதைய அரசு மூடுவிழாச் செய்கிறதென அனுர அரசின் மீது வடக்கிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர் ஒருவரது முறைப்பாடு இது. தென்பகுதியில் கித்துள் மரத்திலிருந்து கள் இறக்கிக் அதனைக் காய்ச்சி கித்துள் கட்டி செய்வோருக்கு வரி இல்லை. நிதி அமைச்சு அண்மையில் தவறணை ஒன்றுக்கான வரியை 5 இலட்ச ரூபாவாக அதிகரித்துள்ளது. போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலை ஒவ்வொன்றும் தலா 25 இலட்ச ரூபா வரி கட்ட வேண்டுமென அறிவித்துள்ளது. இதன் மூலமாக கள் இறக்கும் தொழில்துறை அழிவைச் சந்திக்கப் போகிறது. பனை,தென்னை ஆகியவற்றிலிருந்து கள் இறக்கும் தொழிலை நம்பிப் பல ஆயிரம் குடும்பங்கள் இன்றும் உள்ளன. அரசாங்கம் வரி வருவாயைக் கூட்டுவதற்காக நியாயமற்று இத்தகைய வரியை அதிகரிக்கின்றது. கள்ளுக் குடித்தால் எங்களுடைய காசு எங்களிடம் நிற்கும். சாராயம் குடித்தால் எங்களுடைய காசு வெளியேறும் எனச் சொல்வார்கள். ஆகவே சுதேசிய பொருளாதார விருத்திக்குக் கள் இறக்கும் தொழில் பெரிதும் கைகொடுக்கின்றது. 1972 ஆம் ஆண்டில் பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்க அமைப்பு உருவாகியது. வீடுகளில் கள் விற்கக் கூடாது. தவறணைகளில் மட்டும் தான் விற்க வேண்டுமென்ற நடைமுறை உருவாகியது. இதன் மூலமாகக் கூட்டுறவுத்துறை வடக்கு மாகாணத்தில் வலுப் பெற்றது. அப்போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சீவல் தொழிலாளர்கள் தமக்கும் இது போன்ற கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தப்படல் வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்கள். எந்தவொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக அரச நிர்வாக முறையை மாற்றியமைக்கவில்லை. அங்கு கள்ளுத் தவறணைகள் ஏலம் போட்டுப் பணம் கொழுத்த முதலாளிகள் ஏலம் போட்டுத் தவறணைகளைப் பெற்றார்கள். பணம் ஈட்டினார்கள். இன்று 53 வருடங்களைக் கடந்தும் கிழக்கில் இக் கோரிக்கை கவனிக்கப்படாமலே உள்ளது. வரி வருமானம் மூலமாக அரச நிதிக் கருவூலத்தை நிரப்ப முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு ஏழைத் தொழிலாளர்களது வயிற்றில் அடிக்காமல் இருக்க வேண்டும்என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்விச் சாதனையாளர்களுக்கு கௌரவம்: வட மாகாண மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு விழா!
வட மாகாணத்தில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் விசேட பாராட்டு… The post கல்விச் சாதனையாளர்களுக்கு கௌரவம்: வட மாகாண மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு விழா! appeared first on Global Tamil News .
நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் |Photo Album
நெல்லை: முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் |பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா|அரசு விழா|ரோடு ஷோ.!
கோலப் போட்டி... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு... நீங்க ரெடியா?
கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி
கோவை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன எஸ்பி வேலுமணி! அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மெட்ரோ...
2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவைக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஐந்து நபர்களும் சரீர பிணையில்!
தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஜனநாயக வழியில் போராடிய போது மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டோம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - தையிட்டியில் தமிழ்மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளில் பௌத்த சிங்கள பேரினவாத சிங்கள நிகழ்ச்சி நிரலுடன் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிராக, வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்திலே நாங்கள் பங்கெடுத்திருந்த போது எங்களில் ஐவரை தேடித் தேடி கைது செய்தனர். அனுர அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கைதாக பொலிசாரின் இந்தக் கைது அமைந்துள்ளது. குறித்த பௌத்த பன்சலையை நிர்வகிப்பவர்கள் பொதுமக்களுடைய காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி சட்டவிரோத கட்டிடங்கள் அமைத்து அடாத்தாக இராணுவப்பலத்துடன் தாங்கள் அதனை ஆட்சியுரிமை செய்து முகாமை செய்கின்ற நிலமையிலே நாங்கள் எங்கள் மக்களின் காணிக்காக நீதியுரிமை வேண்டிப் போராடிய நிலையில் கைது செய்யப்பட்டிருகின்றோம். கௌரவ நீதிமன்றம் ஏற்கனவே ஒரு தீர்ப்பை வழங்கியதாகவும் சொல்லி இருந்தார்கள். நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு பாதகமில்லாமல் ஜனநாயக அகிம்சை வழியிலே நாங்கள் போராடி இருந்தோம். இலங்கையிலே பௌத்த சிங்கள பேரினவாதம் தொடர்பில் கடந்தகாலங்களிலே கௌரவ நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளைக் கூட பொலிசார் நடைமுறைப்படுத்தவில்லை. அது அப்பட்டமாகவே எல்லோருக்கும் தெரிந்த விடயம். குருந்தூர்மலையிலே பொலிசாரை அமுல்படுத்துமாறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோன்று வெவ்வேறுபட்ட விடயங்களின் அடிப்படையிலே பௌத்த சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதற்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களை குறைந்தபட்சமேனும் நடைமுறைப்படுத்தாத நிலையில் இந்த இடத்தில் அமைதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து ஜனநாயக ரீதியில் போராடிய நாங்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டிருக்கிறோம். இந்தக் கைதுகளின் போதான நடவடிக்கைகள் என்பது எங்களின் பாதுகாப்பை, அடிப்படை உரிமைகளை மீறுவதாகவே உள்ளது. எமது மண்ணிலே பௌத்த சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்த வேண்டும். பௌத்த சிங்கள தேசமாக இதனை மாற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு பொலிசார் செயல்வடிவம் அளிப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
Parasakthi: 'பராசக்தி'ரிலீஸ் எப்போது? - அப்டேட் தந்த இயக்குநர்
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் அவர் இசையமைக்கும் 100-வது படம். பராசக்தி படத்தில்... சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பயணிக்கும் களத்தை மையமாக வைத்துக் கண்காட்சி ஒன்றை மக்கள் பார்வைக்காகத் தயார் செய்திருக்கிறார்கள். அது மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்று இங்கு வருகை தந்திருந்த இயக்குநர் சுதா கொங்கரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே பிடிச்சிருக்கு. இன்னைக்கு இருப்பவர்களுக்கு 1960 காலகட்டத்தைத் தெரியாது. படத்துல இருக்கிற விஷயங்களை இங்கக் கொண்டு வந்து வச்சிருக்கோம். நாங்க ரொம்பவே ரசிச்சு செய்த உலகத்தை மக்களுக்குக் காட்டணும்னுதான் இந்தக் கண்காட்சியை அமைச்சிருக்கோம். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது. ரிலீஸ் தேதியைத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அறிவிப்பாங்க.” என்றவர், “ஆண், பெண் என்பதெல்லாம் போயிடுச்சு. இயக்குநர், அவ்வளவுதான் Sudha Kongara நான் பெரிய படங்கள் செய்றேன். எனக்கு முன்பே 200 கோடி படமெல்லாம் எடுத்திருக்காங்க. எங்களை இயக்குநர்கள் என்றே அழைப்பது வந்துடுச்சு. வரலைன்னா, அதை நோக்கி நாம போகணும். 25 வருஷங்களுக்கு முன்னாடி நான் ஒரு பெரிய ஹீரோவுக்கு கதை சொல்லணும்னு முயற்சி செய்யும்போது, இவங்க சிக் ஃப்ளிக்ஸ்தான் செய்வாங்கனு சொன்னாங்க. ஆனா, இன்னைக்கு அனைத்து சினிமாக்களின் பெரிய ஹீரோகளிடமிருந்தும் எனக்கு வாய்ப்பு வருது. அப்போதிருந்த விஷயங்கள் இப்போது உடைஞ்சிருச்சு. அதுதான் சாதனை!” எனக் கூறினார்.
Christmas: அகில இந்திய கிறிஸ்தவ திருச்சபை கவுன்சில் உறுப்பினர்கள் நடத்திய சாண்டா பேரணி
வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது
வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, சந்தேகத்தின்பேரில் 7 போ் கைது செய்யப்பட்டனா். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா் போராட்டத்தைத் தொடா்ந்து பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா் அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அப்போதுமுதல் அந்நாட்டில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிவந்த தீபு சந்திர தாஸ் (25) என்பவா் மதநிந்தனையில் […]
வெனிசுலாவிலிருந்து மற்றொரு எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றியது
பென்டகனின் ஆதரவுடன் அமெரிக்க கடலோர காவல்படை, வெனிசுலா கடற்கரையில் மற்றொரு எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோயம் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். வெனிசுலாவிலிருந்து ஒரு எண்ணெய் டேங்கரை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது இது இரண்டாவது முறையாகும் . அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவிற்குள் நுழையும் அல்லது வெளியேறும் எந்தவொரு தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்களையும் அமெரிக்க கப்பல்கள் கைப்பற்றும் ஒரு முற்றுகைக்கு உத்தரவிட்டுள்ளார். எண்ணெய் டேங்கர் பறிமுதல் தொடர்பாக நிக்கோலஸ் மதுரோவின் கீழ் உள்ள வெனிசுலா அரசாங்கம் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. வெனிசுலா கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் ஒரு தனியார் கப்பலை அமெரிக்கா திருடி கடத்தியதாக வெனிசுலா கூறியது. இந்தச் செயல்கள் தண்டிக்கப்படாமல் போகாது என்று வெனிசுலா அரசாங்கம் கூறியதுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளிப்பது உட்பட கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தது. இந்த பறிமுதல் சர்வதேச கடற்கொள்ளையரின் கடுமையான செயல் என்று வெனிசுலா விவரித்தது. மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக வெனிசுலாவுடன் ஒரு சாத்தியமான போரை டிரம்ப் நிராகரிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மீது அமெரிக்க இராணுவம் நிலத் தாக்குதல்களை நடத்தும் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார். பிரேசிலின் இடதுசாரி ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா சனிக்கிழமை மெர்கோசூர் உச்சிமாநாட்டில், வெனிசுலாவில் ஒரு அமெரிக்க இராணுவ நடவடிக்கை அரைக்கோளத்திற்கு ஒரு மனிதாபிமான பேரழிவைத் தூண்டக்கூடும், மேலும் உலகிற்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக மாறக்கூடும் என்று எச்சரித்தார். லத்தீன் அமெரிக்காவில் ஒரு சாத்தியமான அமெரிக்க இராணுவத் தலையீடு அப்பகுதியில் பழைய காயங்களைத் திறக்கும், ஏனெனில் வாஷிங்டன் முன்பு பிரேசில் உட்பட பனிப்போரின் போது இப்பகுதியில் ஏராளமான ஆட்சிக் கவிழ்ப்புகளை ஆதரித்திருந்தது. மேலும், வெனிசுலாவுடனான அமெரிக்க மோதல் பிரேசில் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற அண்டை நாடுகளுக்கு வெனிசுலா அகதிகளின் ஓட்டத்தை அதிகரிக்கக்கூடும். In a pre-dawn action early this morning on Dec. 20, the US Coast Guard with the support of the Department of War apprehended an oil tanker that was last docked in Venezuela. The United States will continue to pursue the illicit movement of sanctioned oil that is used to fund… pic.twitter.com/nSZ4mi6axc — Secretary Kristi Noem (@Sec_Noem) December 20, 2025
வடமாகாண ஆளுநர் தன்னை சுற்றி ஒரு ஆமாம் சாமி கும்பலை தயார்படுத்திக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வலுக்க தொடங்கியுள்ளது இந்நிலையில் ஆமாம் சாமி கும்பலை தவிர்த்து ஏனையோரை திட்டுவது தற்போது பிரசித்தமாகிவிட்டது. அவ்வகையில் தனது புதிய பேச்சில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். சப்பைக்கட்டு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார். 'கடந்த ஓராண்டாக நான் பல விடயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம். ஒரு தடவை சொன்னால் அதனைச் செய்து முடிக்க வேண்டும். உங்களது செயற்பாடுகளால் நான் விரக்தியடைந்திருக்கின்றேன். நான் எனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கு எதையும் கூறவில்லை. இந்த மாகாணத்தின் கல்வியை மேம்படுத்தவே பணிப்புரைகளை வழங்குகிறேன். ஒரு சாதாரண இடமாற்றத்தைக் கூடச் செய்ய முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் நீங்கள் ஏன் அந்தப் பதவிகளில் இருக்கிறீர்கள்?'என ஆளுநர் கேள்வி எழுப்பினார். மேலும், 'எல்லாவற்றுக்கும் மேலதிகாரிகளிடமே கேட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இல்லாவிடின் பதவிகளை விட்டுச் செல்லுங்கள்'எனவும் அவர் வலியுறுத்தினார்.
காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ; வடக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது காற்றின் மாசடைவு மட்டம் 150 முதல் 200 வரை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆரோக்கியமற்ற நிலை மேலும் இது ஆரோக்கியமற்ற நிலையை குறிப்பதாகவும் அவர் கூறினார். எல்லை தாண்டிய வளிமாசு நகர்வு மற்றும் தற்போது தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவக்காற்று ஆகியவற்றின் தாக்கமே […]
மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து! இருவர் பலி: மேலும் சிலர் வைத்தியசாலையில்
அனுராதபுரம் – பாதெனியா பிரதான வீதியில், கல்கமுவவின் குருந்தன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை ( 21) விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்றுமொரு விபத்தில் சிக்கிய ஒருவரை கல்கமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் இதன்போது கல்கமுவ வைத்தியசாலை நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டி, அனுராதபுரம் நோக்கிச்சென்ற டிமோ பட்டா லொரியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது லொறியின் பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியும் லொறியுடன் […]
இன்றைய தையிட்டி விவகாரம்: கண்டிக்கும் சுகாஸ்
இந்து மதத்தலைவர் தாக்கப்பட்டமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத இனவாத - மதவாத வெறிச்செயல். தையிட்டியில் அரங்கேறிய சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தாக்குதல்களும் கைதுகளும் அநுரகுமார தலைமையிலான ஜேவிபி - என்பிபி அரசாங்கத்தின் இனவாதக் கோர முகத்தையே காட்டுகின்றது. எங்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களே ஒருகணம் சிந்தியுங்கள்! இன்று இந்து மதத்தலைவருக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறவாதீர்கள். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்! இனத்துக்கான போராட்டம் தொடரும். இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாகி சூடு:இரகசியமாக வைத்தியசாலையில்
திருக்கோவில் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது பொலீசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் 19 ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் நடந்திருந்த போதும் இதுதொடர்பில் பொதுவெளியில் எந்த செய்திகளும் வெளிவந்திருக்காத நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள்,நண்பர்களூடாக மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் இச்சம்பவம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதானது, குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனை உடையவர் எனவும், சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர் எனவும் தமக்கு தகவல் கிடைத்துச் சென்று அவரைக் கைது செய்ய முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டதாகவும் அந்த இடத்தில் தங்களுடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் போலீசார் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றனர். இந்நிலையில் காயமடைந்த இளைஞன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பிலே எது விது கருத்துக்களும் வெளிப்படுத்தப்படாமல் ரகசியமாக காணப்பட்ட நிலையில் இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 26 வயது நிரம்பிய திருமணமான முச்சக்கர வண்டி ஓட்டுனரான குறித்த இளைஞன் போலீசார் கூறுவது போன்று எவ்விதமான பாவனையும், கெட்ட பழக்கங்களும் அற்றவர் என அவருடைய நண்பர்களும், உறவினர்களும் தெரிவித்திருக்கின்ற நிலையிலே பல கேள்வி வலுத்திருக்கிறது. குறித்த இளைஞரை எந்த அடிப்படையில், எந்த சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்ய போலீசார் சென்றார்கள்? ஏன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது? அதுவும் உடலில் இரண்டு இடங்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது போன்ற பல்வேறு கேள்விகளும் எழும் நிலையில் இந்த விடையம் இப்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் மனிதர் உரிமை பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் கருத்து தெரிவிக்கையில் நீதிமன்ற அனுமதியோ அல்லது கட்டளையோ இல்லாமல் ஒரு நபரை எந்த அடிப்படையில் கைது செய்யச் சென்றார்கள்? அவ்வாறு செல்லுகிற போது இயங்கு நிலையில் துப்பாக்கியை ஏன் வைத்திருந்தார்கள்? இவ்வாறு இரண்டு துப்பாக்கி குண்டுகள் அவரின் உடலை பாய்ந்தது? ஏன் இந்த விடயம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை? என்ற பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் இதன் பின்னணியில் இருப்பதாகக் கருதி நாளைய தினம் மனித உரிமை ஆணையகத்திலே முறைப்பாடு ஒன்றை கையளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பான நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதிலே தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்
கிளிநொச்சியில் சந்திரகுமார், சிவஞானம் ஆகியோருக்கிடையில் சந்திப்பு
தமிழரசு கட்சியின் தலைவர் சி.விகே. சிவஞானம் மற்றும் ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமாரும் கிளிநொச்சி சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 1.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துளள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், புதிதாக உருவாக்கப்படவுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தமிழ் மக்களின் தரப்பாக எவ்வாறு செயற்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்கள். இச் சந்திப்பில் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன், கட்சியின் செயற்பாட்டாளர் முன்னாள் போராளி பாலன் மாஸ்ரர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வெருகில் பகுதியில் வெள்ளநீர் 3 வீடுகளுக்கு புகுந்தது
திருகோணமலை - வெருகல் பகுதியில் இன்று (21) அதிகாலை வெள்ளநீர் உட்புகுந்ததில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று வீடுகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளன. அண்மையில் மலைநாட்டில் பதிவாகிய அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக கடந்த வியாழக்கிழமை (18) மாலை உயர்வடையத் தொடங்கிய மன்னப்பிட்டியின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 4.99 மீற்றர் வரை உயர்வடைந்து பின்னர் குறைவடையத் தொடங்கியது இதன்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்ட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்ட குறித்த நீரானது இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் (21) வெருகல், கங்குவேலி படுகாட்டுப் பகுதியில் பரவி வருகின்றது. இதனால் வெருகல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை கிராமத்தில் 3 வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன் பலருடைய வளவுகளுக்குள்ளும் வெள்ளநீர் பரவியுள்ளது. இதன் காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கங்குவேலி படுகாடு மற்றும் கருக்குவயல்பகுதியில் வரம்புகளை மூடி வெள்ளநீர் பரவி வருகின்றது. எனினும் ஊருக்குள் வெள்ளநீர் உட்புகுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மன்னம்பிட்டியில் நீர்மட்டம் உயர்வரைந்து பின்னர் தொடர்ச்சியாக குறைவடைந்து வந்ததன் காரணமாக பாரிய வெள்ள ஆபத்து இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இளம் மருத்துவ ஆராய்ச்சியில் பாசல் பல்கலை சாதனை
சுவிட்சர்லாந்தின் பாசல் பல்கலை மருத்துவமனை, இளம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கான தேசிய அளவிலான மானியங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சுவிஸ் மருத்துவ அறிவியல் அகாடமி (SAMW) மற்றும் Bangerter-Rhyner அறக்கட்டளை இணைந்து வழங்கும் Young Talents in Clinical Research மானியங்களில், இந்த ஆண்டு வழங்கப்பட்ட 15 மானியங்களில் 8 மானியங்களை பாசல் பல்கலை மருத்துவமனை பெற்றுள்ளது. இளம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தவும், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் இந்த மானியங்கள் வழங்கப்படுகின்றன. […]
தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதி அருகே துப்பாக்கிச் சூடு – 9 பேர் உயிரிழப்பு!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் அருகே நிகழ்ந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடந்தது என்ன? ஞாயிற்றுக்கிழமை… The post தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதி அருகே துப்பாக்கிச் சூடு – 9 பேர் உயிரிழப்பு! appeared first on Global Tamil News .
Messi: `அதை மெஸ்ஸி விரும்பவில்லை'- இந்தியா வருகைக்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி ஊதியம்; வெளியான தகவல்கள்
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவரைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் பலரும் அவர் வருகை தந்திருந்த ஸ்டேடியத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து டிக்கெட் குளறுபடி உள்ளிட்ட பல குழப்பங்கள் அங்கு எழுந்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான சதாத்ரு தத்தாவை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்தனர். Lionel Messi கைதுக்குப் பிறகான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இந்த நிகழ்வின் பல விவரங்களும் வெளிவந்திருக்கின்றன. இந்திய வருகைக்காக மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது எனவும் சதாத்ரு தத்தா கூறியிருக்கிறார். இதில் 11 கோடி ரூபாயை வரியாக இந்திய அரசுக்குச் செலுத்தியிருக்கிறார்கள். இதற்கான 30 சதவிகிதப் பணத்தை ஸ்பான்சர்களிடமிருந்து அவர்கள் பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள பணத்தை டிக்கெட் விற்பனை மூலமாகப் பெற்றிருக்கிறார்கள். மெஸ்ஸியைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் மைதானத்தில் மெஸ்ஸியைச் சுற்றி அதிகமானோர் கூடிவிட்டதால், கேலரியிலிருந்து அவரைப் பார்க்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து ஸ்டேடியத்தின் சில பகுதிகளை சேதப்படுத்தியிருக்கிறார்கள். ஆனந்த் அம்பானி - மெஸ்ஸி விசாரணை அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பாளர் சதாத்ரு தத்தா கூறுகையில், முதலில், மெஸ்ஸி பங்கேற்கும் நிகழ்வுக்கு வெறும் 150 டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. ஆனால் செல்வாக்கு மிகுந்த ஒருவர் ஸ்டேடியத்திற்கு வந்து ஆதிக்கம் செலுத்தியப் பிறகு மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்தது. அந்த செல்வாக்கு மிகுந்த நபரையும் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே சமயம் ரசிகர்கள் தன்னை தொடுவதையும் மெஸ்ஸி விரும்பவில்லை.” எனக் கூறியிருக்கிறார்.
அதிர்ச்சிச் செய்தி: திருக்கோவிலில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு! காவல்துறையின் அத்துமீறலா?
அம்பாறை, திருக்கோவில் – விநாயகபுரம் பகுதியில் 26 வயதுடைய ஜெயசுதாசன் தனுஷன் என்ற இளைஞர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப்… The post அதிர்ச்சிச் செய்தி: திருக்கோவிலில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு! காவல்துறையின் அத்துமீறலா? appeared first on Global Tamil News .
MGNREGA திட்டத்தில் மாற்றம்.. ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
MGNREGA ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட VBGRAMG மசோதாவுக்கு குடியுரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். இதனால் தற்போது அந்த மசோதா சட்டமாகிறது.
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் அறிவியல்/தொழில்நுப்ட பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 61 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
2 வருஷமா ரூமை விட்டு வராத இளைஞர் –சுத்தம் செய்ய சென்ற பெண் ஷாக்!
சீனாவில் சில ஹோட்டல்கள் ஆன்லைன் கேம் விளையாடுவோருக்காகவே பிரத்யேகமான சேவைகளை வழங்கி வருகின்றன. இ-ஸ்போர்ட்ஸ் ஹோட்டல் ஹோட்டல் அறைகளை எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்து வீடியோ கேம்களை விளையாடலாம். அதன்படி அறையை வாடிக்கையாளர் ஒருவர் வாடகைக்கு எடுத்து வீடியோ கேம் விளையாடி உள்ளார். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகே ஹோட்டல் அறையை காலி செய்துள்ளார். கழிவறை, கேமிங் அறை, ஹால் என அனைத்து இடங்களிலும் சுமார் ஒரு மீட்டர் உயரத்துக்கு சாப்பிட்டு போட்ட உணவு பொட்டலங்கள், […]
திருப்பூர் குப்பை கழிவு பிரச்சினைக்கு திமுக தான் காரணம்! தவெக அருண்ராஜ் குற்றச்சாட்டு
திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குப்பை கழிவு பிரச்சினைக்கு திமுக தான் காரணம் என தவெக அருண்ராஜ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசன குளமான இரணைமடுவிற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நிலமைகளை பார்வையிட்டதோடு அனர்த்த நிலமையில் கையாளப்பட்ட நீர் முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகளுடன் […]
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் –கைதான வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவருக்கும் பிணை.
தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் […]
தைவானில் கத்திக்குத்து தாக்குதல்: 3 போ் உயிரிழப்பு
தைவான் தலைநகா் தைபேயில் இளைஞா் நடத்திய கத்திக்குத்து மற்றும் புகை குண்டு தாக்குதல்களில் 3 போ் உயிரிழந்தனா்; 11 போ் காயமடைந்தனா். இது குறித்து தைவான் தேசிய காவல்துறை இயக்குநா் ஜாங் ஜங்-சின் கூறியதாவது: சாங் வென் (27) என்ற இளைஞா் கத்திக்குத்து உள்ளிட்ட தாக்குதல்களில் ஈடுபட்டாா். முதலில் சாலைகளில் நின்றிருந்த காா்கள், மோட்டாா்சைக்கிள்களை தீவைத்துக் கொளுத்திய அவா், பின்னா் தைபேவின் முக்கிய மெட்ரோ நிலையத்தின் வெளியேறும் வாயில்களில் புகை குண்டுகளை வீசி, அங்கிருந்த ஒருவரை கத்தியால் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் இருப்பதை பார்த்தவர்களோ இது அநியாயம் என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அந்த நாலு வார்த்தையை சொல்லாமல் இருக்க முடியவில்லை என்கிறார்கள்.
Zero Tolerance.. லெப்டினன்ட் கர்னல் லஞ்ச வழக்கு.. பாதுகாப்பு அமைச்சகம் எடுத்த நடவடிக்கை!
லஞ்சம் வாங்கிய வழக்கில் லெப்டினன்ட் கர்னல் கைது செய்யப்பட்டது தொடர்பாக யாராக இருந்தாலும் ஊழலுக்கு எதிராக Zero Tolerance கடைபிடிப்பதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
வந்தே பாரத் ரயில் டிரைவர்கள் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான சுவாரசிய தகவல்
இந்தியாவில் இயங்கும் வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்களின் மாத சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது சம்பளம் எவ்வளவு என்று விரிவாக காண்போம்.
⚖️ தையிட்டி போராட்டம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 5 பேருக்கும் நீதிமன்றம் பிணை!
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட… The post ⚖️ தையிட்டி போராட்டம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 5 பேருக்கும் நீதிமன்றம் பிணை! appeared first on Global Tamil News .
வங்கதேசத்தில் நாடாளுமன்றம் முற்றுகை: பதற்றம் அதிகரிப்பு
டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) மீது கடந்த 12-ந்தேதி மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்தது.ஷெரீப் உஸ்மானின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் […]
️ காங்கேசன்துறை கடற்கரையில் பாரிய சிரமதானப் பணி!
️ காங்கேசன்துறை கடற்கரையில் பாரிய சிரமதானப் பணி! “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம்… The post ️ காங்கேசன்துறை கடற்கரையில் பாரிய சிரமதானப் பணி! appeared first on Global Tamil News .
பர்த்டே பேபி தமன்னாவின் சொத்துமதிப்பு ரூ. 120 கோடிப்பு: அவரிடம் என்னென்ன கார் இருக்கு தெரியுமா?
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமன்னாவின் சொத்துமதிப்பை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் நல்ல நாளில் தமன்னாவுக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் - கைதான வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவருக்கும் பிணை
தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்றிருந்தனர். இந்நிலையில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் , வேலன் சுவாமிகள் , வலிக்காமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர், மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களுமாக ஐந்து பேரை கைது செய்திருந்தனர் கைது செய்யப்பட்ட ஐவரையும் விசாரணைகளின் பின் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி, அபாரமாக பேட்டிங் செய்தது. குறிப்பாக, ஓபனர் சமீர் மின்காஸ் தொடர்ச்சியாக காட்டடி அடித்து, 172 ரன்களை குவித்தார்.
யானைகள் கூட்டத்தின் மீது மோதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்: தடம் புரண்ட 5 பெட்டிகள்: பெரும் பரபரப்பு
அசாமில் யானை கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. யானைகள் கூட்டத்தின் மீது மோதிய ரயில் சனிக்கிழமை அதிகாலை அசாம் மாநிலத்தின் ஹோஜாய் மாவட்டத்தில் யானைகள் கூட்டத்தின் மீது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது கோர விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. இதில் 8 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன, அத்தோடு இந்த மோதலின் தாக்கத்தில் ரயிலின் என்ஜின் உட்பட 5 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் இந்த விபத்தில் குட்டி யானை ஒன்று […]
மகளுக்கு செக்ஸ் பொம்மையை பிறந்தநாள் பரிசாக அளிப்பது பற்றி பேசிய தன்னை சமூக வலைதளங்களில் படுமோசமாக விளாசியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் பிரபல டிவி சீரியல் நடிகையான கௌதமி கபூர்.
Rashmika: அப்போது அவர் உடைந்து போய் அழுதுகொண்டிருந்தார் - ராஷ்மிகா குறித்து ராகுல் ரவீந்திரன்
இயக்குநர் மற்றும் நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்'. ஆணாதிக்க சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் போராட்டங்களை அப்படம் பேசுகிறது. பார்வையாளர்களிடம் அப்படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. The Girlfriend சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பு இயக்குநர்களின் ரவுண்ட்டேபிள் நேர்காணலை நடத்தியிருந்தது. அதில் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்' படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான காட்சியைப் படம்பிடித்த விதம் குறித்து எடுத்துரைத்திருக்கிறார். The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' - எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'? அந்த நிகழ்ச்சியில் அவர், இந்தப் படத்தில் மிகக் கடினமான காட்சி என்றால் கதவு காட்சிதான். ராஷ்மிகாவுக்கும் எனக்கும் அந்தக் காட்சி மிகவும் உருக்கமானதாக இருந்தது. அக்காட்சிதான் படத்தின் விதை. என் சொந்த வாழ்க்கையிலும் நான் பார்த்த ஒன்று அது. இந்த ஒரு காட்சிக்காக நான் ராஷ்மிகாவிடம், ‘நீங்கள் பூமாவைப் போல யோசிக்க வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. இக்காட்சியில் ராஷ்மிகாவைப் போல யோசிக்கச் சொல்கிறேன்’ என்று சொன்னேன். Rahul Ravindran உங்களைப் பலர் துன்புறுத்திய ஒவ்வொரு முறையையும் நினைத்துப் பார்க்கச் சொன்னேன். அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அதை உள்ளிருந்து நடிக்கச் சொன்னேன். அந்தக் காட்சி முடிந்ததும் மிகவும் உடைந்து போய் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 20 நிமிடங்கள் அழுதுகொண்டிருந்தார். நான் அப்படி நடிக்கச் சொன்னதால் அவருக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று வெளியே வந்தது. அது அவர் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த ஒன்று” எனக் கூறியிருக்கிறார். The Girlfriend Exclusive: “ராஷ்மிகாவுக்கு எந்தப் படம் ஹிட் அடிக்கும்னு கணிக்கத் தெரியும்!”
BB Tamil 9 Day 76: அடித்து துவைக்கப்பட்ட வினோத்; சான்ட்ரா அனுதாபத்துக்குரியவரா? - ஹைலைட்ஸ்
விஜய் சேதுபதியிடமிருந்து இன்னொரு ‘சவசவ’ எபிசோட். சான்ட்ராவிடம் மல்லுக்கட்டி சோர்வாகி விட்டார் விசே. இந்த எபிசோடை பார்க்கும் போது நமக்கும் அதை விட இரண்டு மடங்கு சோர்வாகி விட்டது. ‘ஒரு கிலோ எமோஷனைக் கொடுத்துடுவாங்க’ என்று வீட்டிற்குள் செல்வதற்கு முன்னால் சொன்னார் விசே. ஆனால் விசாரணையின் போது விசேவின் தலையைச் சுற்ற வைத்து இரண்டு கிலோ அல்வாவைத் தந்து விட்டார் சான்ட்ரா. விசே அவரை விசாரித்த முறையும் வலிக்காத மாதிரியே இருந்தது. BB Tamil 9 Day 76 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 76 சான்ட்ராவின் பிரச்சினை என்னவாக இருக்கக்கூடும்? பலருக்கு வீடே உலகம். சிலருக்கு உலகமே வீடு. நீங்கள் கவனித்துப் பார்த்தால், அதிகமாக பிரயாணம் செய்கிறவர்கள், சக மனிதர்களுடன் உடனே ஒத்துப் போகும் தன்மையை வளர்த்திருப்பார்கள். பயணங்களில் நிகழும் நல்ல, கெட்ட அனுபவங்கள், சக மனிதர்களுடன் பழகக்கூடிய அனுபவங்களைத் தந்திருக்கும். அதனால்தான் ‘ஆன்மீகம்’ என்கிற போர்வையில் நிறைய பயணங்களைச் செய்ய வேண்டிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். பொதுவாக இன்ட்ரோவொ்ட் குணாதிசயம் உள்ளவர்கள், பயணத்தில் எதிர் இருக்கையில் உள்ளவர்களை சின்னச் சின்ன காரணங்களுக்கு கூட உடனே வெறுப்பார்கள். இவர்கள் எழுந்து போய்த் தொலைக்கக் கூடாதா என்று மனமார எண்ணுவார்கள். ஒருவகையில் சான்ட்ரா அப்படிப்பட்டவரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பிக் பாஸ் வீட்டிற்காக தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று எண்ணாமல், தனக்காக ஒட்டுமொத்த வீடும் அனுசரித்துப் போக வேண்டும் என்று சான்ட்ரா எண்ணுவது அபத்தமானது. அதிலும் ஒரு ரியாலிட்டி ஷோவில், சான்ட்ராவின் தூக்கத்தை கெடுக்காமல் அனைவரும் அமைதியாக உண்டு, உறங்கி எழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கைத்தனமானது. BB Tamil 9 Day 76 ‘ சான்ட்ரா மாதிரியே அனைவரும் இருந்தால் பிக் பாஸ் ஷோ எப்படியிருக்கும்?’ ஒரு வாதத்திற்காக இப்படி யோசித்துப் பார்ப்போம். சான்ட்ராவைப் போலவே மற்ற போட்டியாளர்களும் சரியான நேரத்தில் தூங்கி மற்ற நேரங்களில் மோட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்து, அழுக்கு சட்டையுடன் அடிக்கடி மூக்கைச் சிந்தி அழுது கொண்டேயிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் காட்சிகளையே தினம் பார்க்க நேர்ந்தால், பார்வையாளர்கள் மட்டும் அல்ல, பிக் பாஸ் டீமின் ஆட்களே தெறித்து ஓடி விடுவார்கள். இந்த எளிமையான உண்மை சான்ட்ராவிற்கு ஏன் புரியவில்லை? பிரஜின் கூட இருந்த போதும் வீட்டில் இதே மாதிரியான சத்தங்கள்தான் வந்திருக்கும். அப்போதெல்லாம் சான்ட்ரா இம்மாதிரியான புகார்களை சொன்னதாக தெரியவில்லை. “பிரஜின் போன பிறகு எனக்கு மென்ட்டலி ரொம்ப டிஸ்டர்ப்பிங்கா இருக்கு” என்று சான்ட்ராவே சொல்கிறார். எனில் பிரச்சினை அவரிடம்தானே இருக்கிறது?! தன்னிடம்தான் பிரச்சினை இருக்கிறது என்பதை உண்மையிலேயே மனமார சான்ட்ரா உணர்ந்திருந்தால் என்ன செய்திருக்கலாம்? மற்றவர்களிடம் அணுக்கமாக பேசிப் பழகி “பிரஜின் போனதுல இருந்து நான் டல்லா இருக்கேன். எனக்கே நல்லா தெரியுது. நீங்க பேசுங்க. தப்பில்லை. ஆனா என்னால தூங்க முடியலைப்பா.. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ண முடியுமா?” என்று தன்மையாக வேண்டிக் கொண்டிருந்தால் நிச்சயம் சக போட்டியாளர்கள் ஒத்துழைத்திருப்பார்கள். BB Tamil 9 Day 76 சான்ட்ரா வில்லங்கமானவரா? அனுதாபத்துக்குரியவரா? ஆனால் சான்ட்ரா வீட்டில் உள்ள பலரையும் கற்பனை எதிரியாக கருதிக் கொள்கிறார். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் சட்டென்று முகத்தை சுளித்துக் கொண்டு வெளியேறுகிறார். ‘என்ன ஆச்சு?’ என்று விசாரிக்க வருபவர்களின் மீதே கொலைவெறியுடன் பாய்கிறார். ஒரு கேள்வியில் ஆரம்பித்து சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழம்ப வைக்கிறார். மீறி பேசினால் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். ‘இது என்னடா வம்பு?’ என்று மற்றவர்கள் திகைத்து நிற்கிறார்கள். மற்றவர்கள் உழைத்துக் கொண்டிருக்கும் போது ‘உடல்நலத்தை’ காரணம் காட்டி பகல் பூராவும் நன்றாகத் தூங்குகிறார் சான்ட்ரா. உணவு முதற்கொண்டு மற்றவர்கள் உழைப்பின் மூலம் கிடைக்கிற விஷயங்களை குற்றவுணர்ச்சியின்றி அனுபவிக்கிறார் சான்ட்ரா. ஆனால் இரவிலும் தான் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக “இந்த நேரத்துலயா வேலை செய்வாங்க?” என்று ஆட்சேபிப்பதெல்லாம் வேலையாட்களை முதலாளி அதட்டுவது போலவே இருக்கிறது. “நான் யார் பிரச்சினைக்காவது போறேனா.. நான் பாட்டுக்குத்தானே இருக்கேன” என்பது சான்ட்ரா அடிக்கடி சொல்லும் வசனம். ஆனால் அவர் உண்மையிலேயே மனமார அப்படி நினைக்கவில்லை. மற்றவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தான் நெருப்பில் விழுந்த புழு போல தத்தளிப்பதாகவும் கற்பனை செய்து கொள்கிறார். தன் மீது அனைவரும் அனுதாபம் செலுத்த வேண்டும், மகாராணி போல கையில் ஏந்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பிக் பாஸ் போன்ற ரத்தபூமியில் இதெல்லாம் நடக்குமா? அவரவர்கள் அவர்களின் கேமை ஆடுவார்களா, சான்ட்ராவை செல்லம் கொஞ்சிக் கொண்டு அமர்ந்திருப்பார்களா? BB Tamil 9 Day 76 ‘ யோவ் பிக் பாஸ்.. பாட்டு போடாத.. நான் தூங்கணும்’ - சொல்வாரா சான்ட்ரா? இத்தனைக்கும் சான்ட்ராவின் அழுகைக்கு பயந்து பெரும்பாலோனோர் அடங்கித்தான் போகிறார்கள். அப்படி இருந்தும் சான்ட்ராவிற்கு குறையும் புகார்களும் அழுகையும் தீரவில்லை. இத்தனை சோகத்தில் இருக்கிற சான்ட்ரா, வேக்அப் பாடலுக்கு மட்டும் முழுதான ஒப்பனையுடன் உற்சாகமாக ஆடுகிறார்.. “யோவ் பிக் பாஸ்.. எனக்கு தலை வலிக்குது. தூங்கணும்.. பாட்டை நிறுத்தி தொலை” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவாரா? மாட்டார். அதிகாரத்தின் முன்பாக பம்மி நிற்கும் சான்ட்ராவிற்கு எங்கே தன் கோபம் செல்லுபடியாகும் என்கிற தந்திரம் நன்றாக தெரிந்திருக்கிறது. ‘சத்தமாக இருக்கிறது. இரவில் தூங்க முடியவில்லை’ என்று சொல்லும் சான்ட்ரா, அதே இரவு நேரத்தில் ‘கடந்த வந்த பாதையை’ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மற்றவர்களிடம் சொல்லி படுத்தியிருக்கிறார். டான்ஸ் டாஸ்க் முடிந்து அனைவரும் சோர்வாக இருப்பார்களே.. பகலில் சொல்வோம்’ என்று நினைக்கவில்லை. அதாவது தன் சௌகரியத்திற்கு ஏற்றபடி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று சான்ட்ரா எதிர்பார்ப்பது அநியாயமானது. அது மட்டுமல்லாமல் ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழப்பும் தந்திரமும் தன்னிச்சையாக படிந்திருக்கிறது. “இரண்டு மணி நேரமா நிக்கறேன்.. பதில் சொல்லுங்க. முடிச்சுக்கலாம்” என்று விசே கதறியும் கூட கல்லுளிமங்கன் போல நின்று கொண்டிருந்தார் சான்ட்ரா. BB Tamil 9 Day 76 சான்ட்ரா விக்டிம் கார்ட் கேம் ஆடுகிறாரா? ‘திவ்யாவின் தலைவலி’ டிராமா பற்றிய பிரச்சினையில் ‘எனக்கு தலைவலில்லாம் ஒண்ணும் கிடையாது. கனி ஜெயிலுக்குப் போகலை. அதனால எனக்கும் போக விருப்பமில்லை. அதனால்தான் பண்றேன்’ என்று திவ்யா தன்னிடம் சொன்னதாக சான்ட்ரா தெளிவாகவே வாக்குமூலம் தந்தார். ஆனால் விசாரணையின் போது ‘நான் அப்படிச் சொல்லலை. திவ்யா மாத்திரை போடாததால அப்படி நெனச்சிட்டேன்” என்று பல்டியத்து விட்டார். கனி ஜெயிலுக்குப் போகாத எரிச்சலில் திவ்யா செய்த டிராமா பற்றியோ, விசாரணையின் போது ‘சொல்லாத.. சொல்லாத’ என்று திவ்யா கையைப்பிடித்து சொன்னதைக் கேட்டு சான்ட்ரா அதை மறைத்தது பற்றியோ, இந்த எபிசோடில் விசே விசாரிக்கவேயில்லை. திவ்யாவின் தலைவலி உண்மையா பொய்யா என்பதை மட்டுமே கேட்டு விட்டு விட்டார். அடிப்படையிலேயே மனச்சிக்கல் கொண்டிருக்கும் சான்ட்ரா ஒருவகையில் அனுதாபத்திற்கு உரியவர். பிக் பாஸ் போன்ற வீட்டிற்கு பொருந்தாதவர். ‘இந்த கேம் தனக்கு செட் ஆகாது’ என்பதை முன்பே அவர் உணர்ந்திருக்க வேண்டும். மாறாக ‘பார்த்துக்கலாம்’ என்று கேமிற்கு வீம்பாக வந்து விட்டு ‘நான் வெளியே போறேன்’ என்று மற்றவர்களின் மீது பழி சுமத்தி விக்டிக் கார்டு எடுத்து நாள் பூராவும் அழுது தொலைப்பதெல்லாம் பார்வையாளர்களுக்கு எரிச்சலையே தரும். BB Tamil 9 Day 76 விசேவின் விசாரணையில் பாரபட்சம் இருக்கிறதா? போட்டியாளர்கள் மட்டுமல்ல, இந்த எபிசோடின் விசாரணை நாளிலேயே சான்ட்ராவை எதிர்கொள்வதற்கு விசே நொந்து போனார். ‘ஒண்ணுமே புரியலை. ஒரு சிறிய இடைவேளை’ என்று ஜாலியாக சலித்துக் கொண்டே போகும் அளவிற்கு மண்டையைக் குழப்பி விட்டார் சான்ட்ரா. எஃப்ஜே, வினோத், பாரு போன்றவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் அடித்து நொறுக்கக்கூடியவர் விசே. ஏன், பிள்ளைப் பூச்சியான அமித்தைக் கூட அடிப்பவர். ஆனால் இந்த எபிசோடில் சான்ட்ராவிடம் அவர் சரியான கேள்விகளைக் கேட்டு பதில் வாங்க முயன்றார். அதில் மறுப்பில்லை. ஆனால் அவரது வழக்கமான கறார்த்தனமோ, கடுமையோ சான்ட்ராவின் விசாணையின் போது வெளிப்படவில்லை. எனில் போட்டியாளர்களைப் போலவே ‘எங்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாரோ?’ என்று விசேவும் உள்ளுக்குள் அஞ்சுகிறாரா?! சான்ட்ராவின் இந்த அழுகை டிராமா நீடித்துக் கொண்டே போவது பார்வையாளர்களுக்கு எரிச்சலைத் தருவதில் ஆச்சரியமில்லை. ‘அய்யோ.. இவங்களை வெளியே அனுப்பித் தொலைங்களேன்” என்று சமூகவலைத்தளமே அலறுகிறது. மக்களின் வாக்குகள்படிதான் தீர்ப்பு அமையும் என்று சொல்லிக் கொள்கிற பிக் பாஸ் டீம், சான்ட்ராவை அத்தனை எளிதில் வெளியே அனுப்பாது. அவரின் மூலம் கிடைக்கக்கூடிய அழுகை, பாச சென்ட்டிமென்ட் இந்த நிகழச்சிக்குத் தேவை. சான்ட்ராவால் ஒட்டுமொத்த வீடும் டென்ஷன் ஆவது அவர்களுக்கு ஒரு கன்டென்ட்தான். அதிலும் ஃபேமிலி டாஸ்க் நடக்கும் போது சான்ட்ரா செய்யப் போகிற ‘பாச மலர்’ டிராமாவிற்காக ஒட்டுமொத்த பிக் பாஸ் டீமே ஆவலாக காத்துக் கொண்டிருக்கும். அவர்களுக்கு மக்களின் மனவோட்டம் முக்கியமில்லை. பாரு செய்யும் அலப்பறைகளைப் போல சான்ட்ரா செய்யும் அலப்பறைகளும் இந்த நிகழ்ச்சியின் அவசியமான கச்சாப்பொருள். BB Tamil 9 Day 76 சின்ன விஷயத்திற்கு வினோத்தை அடித்து துவைத்த விசே இந்த எபிசோடில் மூன்றே தலைப்புகள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. ஒன்று சான்ட்ரா பற்றியது. அதில் விசேவே பின்பாங்கி சோர்ந்து ஓடி விட்டார். பல விஷயங்கள் ஆழமாக விசாரிக்கப்படவில்லை. அடுத்தது, ஆதிரையின் ஒப்பனை தொடர்பான விஷயம். இதில் வினோத்தின் பக்கம் தவறு இருந்தது. டிரிம்மருக்கும் எபிலேட்டருக்குமான வித்தியாசம் வினோத்திற்கு தெரியவில்லை. “ஆம்பளங்க செய்யறத மட்டும் குத்தம் சொன்னியே.. இப்ப நீ பண்றதுக்கு பெயர் என்ன?” என்று பாய்ந்து விட்டார் வினோத். ‘பாப்பா பாட்டு’ தொடர்பாக சான்ட்ரா சொன்ன அபாண்டமான புகார், நள்ளிரவில் நாய் குலைத்த சமாச்சாரம் என்று விசாரிப்பதற்கு எத்தனையோ முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது இந்த விஷயத்தை வைத்து வினோத்தை அடித்து துவைத்து மிச்ச நேரத்தை ஓட்டி விட்டார் விசே. ‘யார் யாரை பயன்படுத்தி முந்திச் செல்கிறார்?’ என்கிற டாஸ்க். அவ்வளவுதான் எபிசோட் முடிந்து விட்டது. பாருவும் சான்ட்ராவும் வேலை செய்யாமல் டபாய்த்தார்கள் என்பதற்கு அதிகம் மெனக்கெடவே தேவையில்லை. ஒரு குறும்படமே போதும். முதலில் இதை மறுத்த பாரு, சாட்சியங்கள் அதிகமான பிறகு “இனிமே கவனமா இருக்கேன்” என்று சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார். BB Tamil 9 Day 76 இந்த சீரியஸாக விஷயங்களின் இடையில் “கம்மு.. நைட்டு நீங்க எங்க இருந்தீங்க?” என்று காமெடியாக கேட்பதின் மூலம் அந்த விஷயத்தையும் ஜாலியாக கடந்து விட்டார் விசே. (வில்லங்கம் கருதி அவ்வளவுதான் விசாரிக்க முடியும் போல!) விட்டுப் போன விஷயங்களை அடுத்த எபிசோடிலாவது விசே விசாரிப்பாரா? “என் மீது அபாண்டமா பழி சுமத்திய சான்ட்ராவை, கேக்க வேண்டிய இடத்துல மன்னிப்பு கேக்க வைப்பேன்” என்று சபதம் போட்ட கனி, ஏன் சும்மா இருந்தார்? அந்த விஷயங்களையெல்லாம் பிக் பாஸ் டீம் எடிட்டிங்கில் தூக்கி வி்ட்டதா, இந்த வாரமாவது எவிக்ஷன் நியாயமாக நடக்குமா என்பதற்கான விடைகளுக்கு காத்திருப்போம்.
மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு
மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு எண்ணப்பட்டன. இத்தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட்டன. சில நகராட்சிகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. வாக்குகள் எண்ணத்தொடங்கியதில் இருந்தே ஆளும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருந்தன. மொத்தமுள்ள 288 நகராட்சிகளில் 134 நகராட்சிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 50 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 42 நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மோசமான தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் வெறும் 11 நகராட்சித் தலைவர் பதவிகளை மட்டும் பிடித்திருக்கிறது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 14 நகராட்சிகளிலும், காங்கிரஸ் 28 நகராட்சிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. சுயேச்சைகள் 27 நகராட்சித் தலைவர் பதவியைப் பிடித்துள்ளனர். ``விழிப்புடன் இருங்கள்; இல்லாவிட்டால் அனகொண்டா வந்துவிடும் - எச்சரித்த உத்தவ் தாக்கரே மூன்று நகராட்சிகளில் தலைவர் பதவியை பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜல்காவ் மாவட்டத்தில் அமைச்சர் கிரீஷ் மகாஜன் மனைவி சாதனாமகாஜன் ஜாம்னேர் நகராட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சிவசேனா அமைச்சர் குலாப்ராவின் சொந்த ஊரான தரன்காவ் நகராட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி பிடித்துள்ளது. சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வர்பூர் நகராட்சியில் சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்த நகராட்சியை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. கொங்கன் பகுதியில் சிவசேனா(ஷிண்டே) மூத்த தலைவர் தீபக் கேசர்கரின் சொந்த ஊரான வென்குர்லா நகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது. உத்தவ் தாக்ரே பாராமதியில் துணை முதல்வர் அஜித்பவார் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டார். கொங்கன் பகுதியில் பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானேயின் சொந்த ஊரான கன்காவ்லியில் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இது நிதேஷ் ரானேவுக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதே சமயம் அருகில் உள்ள மால்வான் நகராட்சியில் நிதேஷ் ரானேயின் சகோதரர் நிலேஷ் ரானே தான் சார்ந்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை வெற்றி பெற வைத்து இருக்கிறார். மகாராஷ்டிரா: அஜித் பவார் கட்சி அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; உறுதிசெய்த நீதிமன்றம்; பதவியை இழப்பாரா?
சென்னையில் ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் புத்தக கண்காட்சியில் சிறப்பு வசதி!
சென்னையில் ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் புத்தக கண்காட்சியில் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை!
அரசு கருவூலப் (Toshakhana) பொருட்களை முறைகேடு செய்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது… The post பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை! appeared first on Global Tamil News .
Aadhar Card: ஆன்லைன் ஆதார் கார்டில் செய்யக்கூடாத 5 தவறுகள்; முழு விவரம்
அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எங்கே, எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டைப் பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம். ஆனால், ஆன்லைன் ஆப்களில் ஆதார் சேமித்து வைக்கும்போது, ஆன்லைன் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்க்க செய்ய வேண்டிய 5 டிப்ஸ்கள் இதோ... 1. நீங்கள் பதிவு செய்வது, விண்ணப்பம் பூர்த்தி செய்வது தவிர்த்து, உங்களது ஆதார் சம்பந்தமான OTP-ஐ யாரிடமும் பகிராதீர்கள். ஆதார் அட்டை Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to 2. ஆதார் கார்டை ஷேர் செய்யும் சூழல் வந்தால், பெரும்பாலும் மாஸ்க்ட் ஆதார் கார்டைப் பயன்படுத்துங்கள். 3. ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டை லாக் செய்து வையுங்கள். ஆன்லைன் மோசடி பேர்வழிகள் உங்களது ஆப்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால், உஷார். 4. ஆன்லைன் ஆப்களில் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்துவிடுங்கள். மேலே சொன்ன காரணம்தான் இதற்கும். 5. ஆன்லைனில் ஆதார் தகவலைத் தெரியாமல் கூட ஷேர் செய்துவிடக் கூடாது. Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail
கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!
வங்கதேசத்தில், கொல்லப்பட்ட மாணவர் இயக்கத் தலைவரின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். வங்கதேசத்தில், ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்தப் போராட்டத்தை, மாணவர்கள் இயக்கத்தின் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி என்பவர் முன்னெடுத்து நடத்தினார். இதனைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள வங்கதேச பொதுத் தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டிருந்த […]
திருச்சி கோட்டை ரயில் நிலையம் மேம்பாலம் கட்டுமானப்பணிகள் எப்போது நிறைவடையும்?
திருச்சி கோட்டை ரயில் நிலையம் மேம்பாலம் எப்போது நிறைவடையும்? என்றும், அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் தனியாரின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையில், எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய புத்தர்… The post தையிட்டி விகாரையில் புதிய புத்தர் சிலை: பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்! முறுக்கிக்கொள்ளும் எதிர்ப்புப் போராட்டங்கள். appeared first on Global Tamil News .
நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம்: கோவையில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிப்பு!
நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் கோவையில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் 370 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்கு கட்டுமானப் பணிகளுக்கான இடைக்காலத் தடையுத்தரவை… The post ️ யாழ்ப்பாணம் பழைய பூங்கா விவகாரம்: விளையாட்டரங்கு பணிகள் துரிதமடைய வாய்ப்பு – தடையுத்தரவை நீடிக்க நீதிமன்றம் மறுப்பு! appeared first on Global Tamil News .
டிசம்பர் 26 முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு… இந்திய ரயில்வே அறிவிப்பு!
இந்திய ரயில்வே இன்னும் 5 நாட்களில் ரயில் டிக்கெட் விலையை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சற்றுமுன் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் அப்போ இன்று முழுவதும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ஓட்டப் போகிறீர்கள். நல்லா இருக்கு பிக் பாஸ் உங்கள் நியாயம் என்கிறார்கள்.
உரப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொத்து ரொட்டி! மன்னாரில் உணவகத்துக்கு எதிராக நடவடிக்கை.
மன்னார் மூர்வீதியில் உள்ள உணவகம் ஒன்றில், கொத்து தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரொட்டிகள் யூரியா (Urea) உரம் பொதியிடும் பைகளில்… The post உரப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொத்து ரொட்டி! மன்னாரில் உணவகத்துக்கு எதிராக நடவடிக்கை. appeared first on Global Tamil News .
கர்நாடகா: நானே முதல்வராகத் தொடர்வேன் - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?
மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பின்னர் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில், இருவரும் மாறி மாறி மற்றவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினர். சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாகப் பேசும்போது, இருவரும் காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்கப்போவதாகவும் கூறினார்கள். இந்த நிலையில், சித்தராமையாவின் வார்த்தைகளால், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. சித்தராமையா - டி.கே.சிவக்குமார் `டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன? சித்தராமையா பேச்சு கடந்த வாரம், கர்நாடகா சட்டமன்றத்தில் பேசிய சித்தராமையா, நானே கர்நாடகா முதலமைச்சராகத் தொடருவேன். காங்கிரஸ் மேலிடம் எனக்கு சாதகமாகவே உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குத்தான் எனக்கு முதலமைச்சர் பதவி என்று எந்த ஒப்பந்தமும் முன்பு போடப்படவில்லை என்று பேசியுள்ளார். மேலும், சித்தராமையா டெல்லி செல்ல உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தன. இந்த இரண்டும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. டி.கே.சிவகுமார் என்ன சொல்கிறார்? இதையடுத்து டி.கே. சிவகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இருவரையும் டெல்லிக்குத் தகுந்த நேரத்தில் அழைப்பதாக காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது. இருவரையும் ஒன்றாகத்தான் அழைப்பார்கள். அந்த அழைப்பிற்காகக் காத்திருப்போம் என்று கூறியுள்ளார். இதுவரை 'காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்பேன்' என்றிருந்த சித்தராமையா இப்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். டி.கே.சிவகுமாரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் - முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து?
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு உக்ரைனின் ஒடெசா நகரத்தில், அமைந்துள்ள துறைமுகக் கட்டமைப்பின் மீது நேற்று முன்தினம் (டிச. 19) இரவு ரஷிய ராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக, ஒடெசா நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ரஷிய ராணுவம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், உக்ரைன் ராணுவத்தின் போக்குவரத்து […]
காங்கேசன்துறை கடற்கரையில் சிரமதானம்
தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை கடற்கரை பகுதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் செய்யப்பட்டது. காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் , வலி. வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் , சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தையிட்டியில் பதற்றம் –போராட்டம் நடத்திய வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் பேர் கைது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்திய வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்களால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வலி.வடக்கு
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது புதிதாக ஒரு ஸ்டேஷனில் நின்று செல்ல அனுமதி கிடைத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பகிர்ந்துள்ள தகவல்களை காணலாம்.
காதல் கணவனால் புதுபெண்ணுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; வரதட்சணையால் கசந்த காதல்
பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்னை காதலித்து கரம் பிடித்த மனைவியை சாகும் வகையில் அடித்தே கொலை செய்த கொடூர கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விகாரபாத் சாயாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தன்னுடைய காதலனை 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். வரதட்சணை கணவனின் வீட்டிற்கு வந்தது முதல் வரதட்சணை கேட்டு பெண்ணின் மாமியார் குடும்பத்தினர் தொல்லை கொடுக்க துவங்கினர். அவர்களுடன் சேர்ந்து கணவனும் வரதட்சணை கேட்டு […]
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் –மத தலைவர்கள் , அரசியல்வாதிகள் கைது ; தொடரும் அராஜகம்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது செய்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட […]
கடைசி நேரத்தில் கிடைக்கும் ரயில் டிக்கெட்.. இப்படியொரு ஆப்ஷன் இருக்கு தெரியுமா?
ரயில் பயணிகள் கடைசி நேரத்தில் கூட குறைந்த செலவில் டிக்கெட் புக்கிங் செய்யலாம். சூப்பரான வசதி இருக்கு.
மறைந்த மலையாள நடிகர் சீனிவாசன் தன் திருமணம் நடந்த விதம் பற்றி தெரிவித்தது குறித்து தற்போது பேசப்படுகிறது. சீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று நடந்தது.
விருதுநகர்: அறுவடை காலத்தில் தொடரும் அவதி; அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. சுமார் 6,500 ஏக்கரில் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், சில பகுதிகளில் கோடை நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஆனால், இன்னும் வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அறுவடைக்குத் தயாரான நெல் நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்காததால், தனியாருக்குக் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகக் குறைவான விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை அறுவடை காலத்திலும் தாங்கள் இதுபோன்ற இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், முன்கூட்டியே அதிகாரிகள் அரசு கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுவடைக்குத் தயாரான நெல் மேலும், வத்திராயிருப்பு பகுதியில் நிரந்தரமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு அறுவடை காலத்திலும் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடுவதால், நிரந்தரத் தீர்வாக கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அரசு விரைவில் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. விருதுநகர்: 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்; பட்டியலில் பெயரைச் சரிபார்க்க ஆட்சியர் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழிச்சாலை! எங்கனு தெரியுமா?
தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழிச்சாலை. எங்கனு தெரியுமா? இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023-ல் கைது செய்யப்பட்டு, அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. […]
தந்தையோடு முகம் கழுவச் சென்ற இரண்டு வயது சிறுவன் பரிதாப மரணம்
அரலங்கவில – கண்டேகம பகுதியில் தந்தையோடு முகம் கழுவச் சென்ற இரண்டு வயது சிறுவன் நீர் நிரம்பிய குழியொன்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(20.12.2025) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகில கிருஷன் கவிந்த என்ற இரண்டு வயது சிறுவனே இவ்வாறு நீர் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பொலிஸார் விசாரணை l நேற்றையதினம் காலை வீட்டிற்கு வெளியே இருந்த தந்தையுடன் முகம் கழுவச் செல்வதாக இந்த சிறுவன் சொல்லிச் சென்றுள்ளார். இதனையடுத்து, […]
தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மற்றுமொருபுத்தர் சிலையை நிறுவப்போவதாகவும், அதற்காகமுப்படைகள் மற்றும் பொலிசார்பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டு, அதன் பிரதிகள் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கும்அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி துருத்து போயாதினத்தன்று தையிட்டி விகாரையில், தெற்கில் இருந்துபுகையிரதத்தில் எடுத்து வரப்படும் புத்தர் சிலையை , புகையிரத நிலையத்தில் இருந்து சமய அனுஷ்டனங்களுடன் , விகாரைக்கு எடுத்து சென்று , அங்கு நிறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் புகையிரத நிலையத்தில் இருந்து , விகாரைக்கு புத்தர் சிலையை எடுத்து செல்லும் போது முப்படையினர் மற்றும் பொலிஸார் சமய ஊர்வலத்திற்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரை , தனியாரின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரைக்காககையகப்படுத்திய காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறுகோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்குவிகாரைக்கு முன்பாகபோராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் ஜனவரி 03ஆம் திகதி புத்தர் சிலை நிறுவப்படவுள்ளபௌர்ணமி தினத்தன்றும்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை , தையிட்டி சட்ட விரோதமானது என்றும், விகாரை அமைந்துள்ள காணிகளில் எதிர்காலத்தில் எவ்வித கட்டுமான பணிகளையும்முன்னெடுக்க வேண்டாம் என வலி. வடக்கு பிரதேச சபையினால் விகாரதிபதிக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தையிட்டி விகாரை சட்டவிரோத கட்டுமானம்என மும்மொழிகளில் விகாரைக்கு முன்பாகஅறிவித்தல் பலகை நாட்டுவது என வலி. வடக்கு பிரதேச சபையில் கடந்த 18ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையும்குறிப்பிடத்தக்கது
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதியை பணிநீக்கம் செய்யச் சொல்வது சரியல்ல-ஸ்ரீதர் வேம்பு கருத்து!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியை பணிநீக்கம் செய்யச் சொல்வது சரியல்ல என்றும் ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்து உள்ளார்.
இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்: FJ, ஆதிரையை வெளியேத்திட்டாராம் பிக் பாஸ், அந்த ஒற்றுமையை கவனிச்சீங்களா?
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து கம்ருதீன், பார்வதியை ஜோடியாக வெளியேற்றுமாறு பார்வையாளர்கள் கூறி வந்த நிலையில் வேறு இரண்டு பேரை வெளியேற்றிவிட்டார்கள். ஆனால் அதில் ஒருவராக சாண்ட்ரா இருந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.
தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்! காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம்
இலங்கைக்கு ரூ.1850 கோடி நிவாரண நிதி வழங்குவதாக சர்வதேச நாணயம் அறிவிப்பு
இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் ‘டிட்வா’ புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது. இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர்
பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும் சர்ச்சை
இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இது பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது. 'நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்' என்று காங்கிரஸ் கண்டனக் குரல் எழுப்பியது. 'நிதிஷ் குமார் மனநிலை நல்ல நிலையில் இருக்கிறதா?' என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது. பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று 'நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது' - பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வலுக்கும் கண்டனம் சமீபத்திய சர்ச்சை இந்த நிலையில், நிதிஷ் குமார் ஹிஜாப் பிடித்து இழுத்த பெண் பணியில் இன்னும் சேரவில்லை. அந்தப் பெண் சபல்பூர் சமூக சுகாதார மையத்தில் சேர நேற்றுதான் கடைசி தேதி. அவர் நேற்று மாலை 6 மணிக்குள் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர் பணியில் சேரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சுகாதாரத் துறை இந்தக் கடைசி தேதியை நீட்டிக்கலாம். அப்படி செய்தால், அதற்கான வழிகாட்டுதல் பின்னர் அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளது. 'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்
சென்னையில் இன்று 2 வது நாளாக சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெறுகிறது
தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தின் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே
ஏஐ துறையில் மிகப்பெரிய சரிவு ஏற்படப் போவதாக பில்கேட்ஸ் தகவல்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ். அபுதாபியில் நடந்த தொழில்மாநாட்டில் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஏ.ஐ. துறையில்
த.வெ.க சார்பில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பங்கேற்கிறார்
தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ‘ப்போர் பாயிண்ட்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில்

24 C