குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!
இந்தோனேசியாவில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை காலால் மிதித்து விடியோ பதிவுசெய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தோனேசியாவின் பாண்டென் நகரிலுள்ள லெபாக் பகுதியில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வரும் பெண்மணி, தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர் அங்குள்ளப் பொருளைத் திருடியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வாடிக்கையாளராக வந்த பெண் அதனை மறுக்கவே அவரை இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் மீது ஏறி நின்று சத்தியம் செய்ய வற்புறுத்திய கடை உரிமையாளர் அதனை விடியோ எடுத்துள்ளார். […]
ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஏப். 12) எச்சரித்துள்ளார். இதனால், வணிக ரீதியான கப்பல்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் – அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற […]
புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமத்தில் இரு நேர பூசைகள் ரத்து; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலப்பகுதியைக் கருத்திற் கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் இரண்டு பிரதான பூசைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பஸ்நாயக்க நிலமே அலுவலகம் அறிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 13): மாலை 6:30 மணிப் பூசையைத் தொடர்ந்து, இரவு 9:00 மணியளவில் பாற்சோறு பொங்கி படைக்கப்பட்ட பின்னர் மகா தேவாலயம் மூடப்படும். மூடப்பட்ட தேவாலயம் மீண்டும் நாளை (ஏப்ரல் 14) பிற்பகல் 2:00 மணிக்கே திறக்கப்படும். இரண்டு நேரப் […]
மின்னல் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
மேல், சபரகமுவ, மத்திய,வடமத்திய,வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி,மாத்தறை,மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (13) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணிவரை அமுலில் இருக்கும். அதன்படி, இன்று பிற்பகல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் […]
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த ‘நீளிரா‘ படத்தின் இயக்குநர் சோமீதரன், தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சனந்த் ஆகியோர் பல்வேறு இடங்களை சென்று பார்வையிட்டனர். நல்லூர் ஆலயம் , யாழ் . பொது நூலகம் , தியாக தீபத்தின் நினைவிடம் , வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நீளிரா திரைப்படத்தை , ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்ததுடன் , திரைப்படத்தின் முடிவில் ரசிகர்களுடன் கலந்துரையிடாலிலும் ஈடுபட்டனர்.
Congress Supports Pawan Khera, Won’t Back Down: Rahul
Congress leader Rahul Gandhi stated on Monday (April 13, 2026) that his party fully supports Pawan Khera and will not be intimidated. The Assam govern...
பெயரளவில் ஈஸ்டர் போர்நிறுத்தம்? ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் –ரஷியா பரஸ்பர தாக்குதல்!
மாஸ்கோ : ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ரஷியா குற்றஞ்சாட்டியது. ரஷியா, உக்ரைனில் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ முறைப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சனிக்கிழமை (ஏப். 11) மாலை 4 மணி முதல் 32 மணி நேர தற்காலிக போா்நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது. ரஷியாவின் இம்முடிவை உக்ரைன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில், ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷிய படைகளைக் […]
ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!
ஈரானில் கடந்த 44 நாள்களாக இணைய வசதி முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே போர்நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தை பற்றி பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஈரானில் இணைய முடக்கம் இன்றுடன் 44 நாள்களை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்ட இணைய முடக்கங்களில் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டில் இவ்வளவு நாள்கள் இணையம் முடக்கப்படுவது இதுவே முதல்முறை என இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தரவுகளை வழங்கியுள்ளது. அமெரிக்கா, […]
ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வி: கடற்படை தாக்குதலுக்கு டிரம்ப் திட்டம்?
வாஷிங்டன், பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ஈரானுக்கு அமெரிக்கா எதிராக மேற்கொள்ளக்கூடிய ஒரு கடற்படை முற்றுகை உத்தியை விளக்கும் ஒரு கட்டுரையை பகிர்ந்து உள்ளார். இதன் மூலம் ஈரான் மீது கடற்படை தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைதான் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மத்திய கிழக்கு போருக்கு மத்தியில் ஈரானுக்கு சீனா ஆயுத உதவியை செய்ய […]
விஜயின் தொடர் பின்வாங்கல் –த.வெ.க தொண்டர்கள் அதிருப்தி
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 13) கும்மிடிப்பூண்டியில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை
கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகளில் டிடிவி தினகரன் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , இன்று (ஏப்ரல் 13, 2026 – திங்கட்கிழமை) கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு ஆகிய சட்டமன்றத்
‘ஹாலோகிராபிக் புரோஜெக்ஷன்’தொழில்நுட்பம் மூலம் பிரசாரம் செய்த த.வெ.க தலைவர்!
கும்பகோணம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வராமலேயே, அவரது ‘ஹாலோகிராபிக் புரோஜெக்ஷன்’ (Holographic Projection) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்தது பெரும் கவனத்தை
பா.ஜ.கவின் உண்மையான நோக்கம் அரசியலமைப்பை அழிப்பதே –ராகுல் காந்தி
டெல்லி, மண்டி ஹவுஸ் பகுதியில் “Run for Ambedkar, Run for Constitution” என்ற தலைப்பில் மாரத்தான் போட்டியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று
கொள்கை பிடிப்புக்காக நின்ற ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் –தொல்.திருமாவளவன் பேச்சு
செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சிந்தனை செல்வனை ஆதரித்து தொல்.திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
த.வெ.க-வில் இருந்து விலகிய தூத்துக்குடி அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்தார்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக தீவிரமாக செயல்பட்டவர் அஜிதா ஆக்னல். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக தவெக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட அஜிதா, தனக்கு
இந்தியாவிலேயே எந்த மாநிலமும் செய்யாத சாதனைகளை திமுக அரசு செய்துள்ளது –வைகோ பேச்சு
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்
எல்கேஜி சேர்க்கை விண்ணப்பம் பெற விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதை அறிந்ததும் விண்ணப்பங்களை பெற முதல் நாள்
தபால் வாக்குகளைச் சேகரிக்க 86 குழுக்கள் –தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது இல்லங்களிலிருந்தே தபால்
நீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நாளைய தினம் வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது. மக்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் நீர் வழங்கல் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலை திறப்பு
வாஷிங்டன், அமெரிக்கா – சியாட்டில் மாநகரின் மையப் பகுதியான புகழ்பெற்ற வெஸ்ட்லேக் சதுக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் பரிசாக வழங்கிய இச்சிலையை சியாட்டில் மேயர் கேட்டி வில்சன் திறந்து வைத்தார். அமெரிக்காவில் ஒரு மாநகர அரசால் விவேகானந்தர் சிலை நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தச் சிலை அமைந்துள்ள வெஸ்ட்லேக் சதுக்கம் மிகவும் புகழ்பெற்ற இடமாகும். இது நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாகும். அமேசான் […]
ரூ.10 இலட்சம் லொத்தர் பரிசைப் பெற்றவர் விபத்தில் மரணம்; கணநேரத்தில் பறிக்கப்பட்ட மகிழ்ச்சி
அதிர்ஷ்ட லாபச் சீட்டில் பரிசில் வென்ற பணத்தைப் பெற்றுக்கொண்டு உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர், ஹொரணை – பொகுணுவிட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். பத்து இலட்சம் ரூபாய் பணப் பரிசை வென்றதையடுத்து, அதற்கான காசோலையைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் தனது நண்பருடன் கொழும்புக்குச் சென்றுள்ளார். கணநேரத்தில் பறிக்கப்பட்ட மகிழ்ச்சி பணத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஹொரண நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, பொகுணுவிட்ட பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. உந்துருளியை செலுத்திய நண்பருக்கு நித்திரை […]
யாழில்.ரிவால்வர் வகை துப்பாக்கி மீட்பு
யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி மேலதிக ஆய்வுக்காகப் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்காகிஉயிரிழந்துள்ளார். தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் ஒரு இளைஞன் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை , மற்றைய இளைஞன்மேலும் இரண்டு […]
அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்! மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மக்களின் நலன்களையும் அவர்களது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, அதேநேரம் அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் ஆற்றல. ஆளுமை அக்கறை அல்லது அவர்களது உணர்வுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்ற எண்ணங்களோடு தொடர்புடையதாகவும் […]
உயிர்பிழைக்க போராடுகிறது ஈரான்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தாக்கு
பாகிஸ்தானில் அமெரிக்காவும் ஈரானும் அமைதிபேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. பேச்சுவர்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது; ஈரானுக்கு எதிரான நடவடிக்கை மூலம், அவர்களின் அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை நசுக்குவதில் வெற்றி அடைந்துள்ளோம். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஈராக்கில் உள்ள போராளிக் குழுக்கள், ஏமனில் ஹவுதிகள் என ஈரான் நம் கழுத்தை நெரித்துச் சுற்றி வளைக்க […]
அமெரிக்க –ஈரான் பேச்சுவார்த்தை ; ஜேடி வேன்ஸ் திடீர் வெளியேற்றம்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முற்றுப்பெற்றுள்ளன. பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித ஒப்பந்தமும் எட்டப்படவில்லை எனச் செய்தியறிக்கை வெளியிட்டுவிட்டு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார் லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா எவ்வித உறுதிமொழியையும் வழங்க முன்வராதது. ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்தது. பெய்ரூட் […]
சகோதரியை கத்தியால் குத்தி விட்டு உயிர் மாய்த்துக் கொண்ட சகோதரன்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில், சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது. மேலதிக விசாரணை இதன்போது, சகோதரன் தனது கிராம சேவையாளரான சகோதரியை கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த சகோதரி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்னர், தாக்குதலை மேற்கொண்ட சகோதரர் பயத்தின் காரணமாக யாரும் […]
இலங்கைக்கு வரவுள்ள பெருந்தொகை எரிபொருள் ; வெளியான அறிவிப்பு
இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சரக்குகள் இலங்கைக்கு வந்து சேரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார். சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு எவ்வித பற்றாக்குறையுமின்றி பராமரிக்கப்படுவதாகவும், கோரப்பட்ட சரக்குகள் திட்டமிட்டபடி வந்து சேரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, 30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் சரக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், நேற்று […]
யாழில் வாய்த்தர்க்கம் கொலையாக மாறியது ; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸார் விசாரணை நேற்று (13) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்ப தகறாரு காரணமான ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் […]
திருகோணமலை கடற்பரப்பில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி
திருகோணமலை, சம்பூர் வெளிச்சவீடு (Foul Point) கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.எம். அப்லல் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 3:40 மணியளவில், குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் இணைந்து சம்பூர் வெளிச்சவீட்டுப் பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்தார். இதன்போது எதிர்பாராத விதமாக பலத்த அலையினால் அவர் […]
மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் நீதவான் வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார். புதையல் கடந்த மார்ச் மாதம் 31 […]
செங்கற்களுடன் பாலத்திலிருந்து கவிழ்ந்த லொறி ; இருவருக்கு நேர்ந்த துயரம்
வாரியப் பொல, நாரம்மல வீதியின், பொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறியொன்று கவிழ்ந்ததில் அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். குறித்த லொறியானது செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஆனமடுவ பகுதியிலிருந்து மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணை லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சடலங்கள் கட்டுப்பொத்த பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழர் பகுதியொன்றில் பெண்ணுடன் பயணித்த ஒருவருக்கு நடந்தேறிய சம்பவம்
மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாமபிவத்த சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரவெவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மேலதிக விசாரணை இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்த பெண்ணும் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மொரவெவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதி […]
ரஷியா –உக்ரைன் இடையே 175 போா்க் கைதிகள் பரிமாற்றம்
ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு ரஷியா-உக்ரைன் போரில் தற்காலிக போா் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இரு நாடுகளும் தலா 175 போா்க் கைதிகளை சனிக்கிழமை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. உக்ரைனின் 175 ராணுவ வீரா்களுடன் 7 பொதுமக்களும் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தினாா். இவா்களில் பெரும்பாலானோா் கடந்த 2022 முதல் ரஷியாவின் பிடியில் இருந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இக்கைதிகள் பரிமாற்றத்தின்போது, ரஷியாவும் தனது 175 வீரா்களையும், குா்ஸ்க் பகுதியைச் சோ்ந்த […]
ஒரே நாளில் மியான்மர், ஆப்கானிஸ்தான், இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
நைபிடா மியான்மர் நாட்டின் வடக்கே 137 கி.மீ. தொலைவில் நேற்று அதிகாலை 4.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானிலும் நேற்று அதிகாலை 5.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. அது 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த தகவல்களை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. மியான்மர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து […]
சுரங்க விபத்து.. 14 நாட்களுக்குப் பின் உயிருடன் தொழிலாளி மீட்பு..
மெக்சிகோ, மெக்சிகோ நாட்டின் சினலோவா மாகாணத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கத்தில் கடந்த மாதம் திடீரென வெள்ளம் புகுந்தது. இதில் சுரங்கத்தின் 300 அடி ஆழத்தில் 2 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என கருதப்பட்ட நிலையில் மீட்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 14 நாட்களுக்குப் பிறகு இருண்ட சுரங்கத்திற்குள் டார்ச் லைட் வெளிச்சம் தெரிவதைக்கண்டு வீரர்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அங்கு பிரான்சிஸ்கோ ஜபாடா (42) என்ற தொழிலாளி […]
ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: தளபதி மற்றும் வீரர்கள் உயிரிழப்பு
அபுஜா, நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான பெனிஷேக் பகுதியில் ஒரு ராணுவ முகாம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் இந்த முகாமில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர் சுதாரித்துக்கொண்டு ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரமான இந்த மோதலில் ஒரு ராணுவ தளபதி மரணம் அடைந்தார். அதேபோல பல ராணுவ வீரர்களும் இறந்தனர். ராணுவ செய்தி தொடர்பாளர் கூறும்போது ’நமது நாட்டை காப்பதற்கான போரில் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ஓசேனி பிரைமா இறந்தார். உயிரிழந்த […]
அமெரிக்காவை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள் ; ட்ரம்பின் முக்கிய தகவல்
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறுகின்றது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Truth Social தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, உலகின் மிகப்பெரிய எண்ணெய் கப்பல்கள் உள்பட மிகப்பெரிய எண்ணிக்கையில் முழுமையாக காலியாக உள்ள கப்பல்கள் அதிக அளவில் தற்போதே அமெரிக்காவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. உலகின் மிகச் சிறந்த மற்றும் இனிமையான எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக் கொள்வதற்காகவே வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டு மிகப்பெரிய எண்ணெய் […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 மேற்பட்ட மோதல்கள்: தீவிரமடையும் உக்ரைன் –ரஷ்யா போர்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட மோதல்களை தடுத்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் தாக்குதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனிய ஆயுதப் படைகளின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 148 க்கும் அதிகமான சண்டைகளை ரஷ்ய படைகள் முன்னெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள உக்ரைனிய இராணுவ அதிகாரி, சமீபத்திய காலங்களில் ரஷ்யா […]
சட்டவிரோத பேருந்து போக்குவரத்து ; கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு
கொழும்பிலிருந்து முறையான அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (11) இரவு அதிரடிச் சோதனைகளை முன்னெடுத்தனர். கொழும்பு மக்கள் பூங்காவிலிருந்து (People’s Park) ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் தியாகம ஆகிய பகுதிகளுக்குச் சட்டவிரோதமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் ஆய்வுக் குழுவினரும், பாஸ்டியன் மாவத்தை பேருந்து முனைய அதிகாரிகளும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர். வழங்கப்பட்ட இரகசியத் தகவலின் […]
முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்த 2 அமெரிக்க போர் கப்பல்கள்
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, முதல்முறையாக அமெரிக்காவின் இரண்டு போர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்துள்ளன. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக விளங்கும் இந்த நீரிணையில், அமெரிக்க கடற்படை வழிநடத்தும் ஏவுகணை கப்பல்கள் எந்த சிக்கலும் இல்லாமல் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “ஹார்முஸ் நீரிணையை சுத்தப்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது சீனா, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கான உதவியாகும். அவர்கள் தாமாக இதை செய்யத் துணிவோ, விருப்பமோ இல்லை” என்று […]
தெற்கு அதிவேக வீதியில் கொடூர விபத்து ; இருவர் உயிரிழப்பு
தெற்கு அதிவேக வீதியின் 54.9 கிலோமீட்டர் மைல்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை கொட்டாவ நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று அதே திசையில் சிமெந்து ஏற்றிச் சென்ற மற்றுமொரு பாரவூர்தியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தின் போது பின்புறமாக வருகை தந்த பாரவூர்தியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் திஸ்ஸமஹாராம […]
பேச்சுவார்த்தையில் ஈரானுக்கு முதல் வெற்றி…முடக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் புதிய முடிவு
கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டிருந்த ஈரானிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக, ஈரானிய மூத்த வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. நேரடியாகத் தொடர்பு இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஓர் உடன்பாட்டை எட்டுவதில் அந்த நாடு காட்டும் தீவிரத்தின் அறிகுறியாகவே, கூறப்படும் இந்த நடவடிக்கையை மூத்த ஈரானிய வட்டாரம் வரவேற்றுள்ளது. அமெரிக்கத் தரப்பிற்குத் தெரிவிக்கப்பட்ட தகவலில் ஈரான் விடுத்த கோரிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும், சொத்துக்களை விடுவிப்பதற்கு அமெரிக்காவின் ஒப்புதலை ஈரான் பெற்றுவிட்டது என்றும் அந்த […]
போர்நிறுத்தத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்..மாறி மாறி தாக்கிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்
தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் ட்ரோன் தாக்குதல் நடத்தின. தற்காலிக போர்நிறுத்தம் நான்கு ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பில் இருந்தும் லட்சக்கணக்கில் மரணங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையே, தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது. ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதாவது வெள்ளிக்கிழமை இரவு மற்றும் […]
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், 16 வயது சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையதாக மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் […]
தெற்கு அதிவேக வீதியில் கொடூர விபத்து ; இருவர் உயிரிழப்பு
தெற்கு அதிவேக வீதியின் 54.9 கிலோமீட்டர் மைல்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை கொட்டாவ நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று அதே திசையில் சிமெந்து ஏற்றிச் சென்ற மற்றுமொரு பாரவூர்தியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தின் போது பின்புறமாக வருகை தந்த பாரவூர்தியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் திஸ்ஸமஹாராம […]
தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சோகமான சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது பயிர்ச்செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின் பிறப்பாக்கியை பொருத்த முயற்சித்துள்ளார். இதன்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது மின் கசிவு காரணமாக அவர் பாரியளவில் […]
அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி ஏன்? வான்ஸ் பேட்டி
வாஷிங்டன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில் ஈரானின் வெளியுறவு மந்திரி சையது […]
அமெரிக்கா-ஈரான் இடையே 15 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை தோல்வி
லாகூர் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்திற்கு […]
முகம் சிதைந்து, ஒரு காலை இழந்த மொஜ்தபா காமெனி: அமெரிக்க உளவுத்துறை தகவல்
ஈரானின் புதிய உச்ச தலைவராக உள்ள மொஜ்தபா காமேனி அமெரிக்காவின் தாக்குதலில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படையினரின் பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவரது மகனும், ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொஜ்தபா காமெனி படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த தாக்குதலில் […]
சட்டவிரோத பேருந்து போக்குவரத்து ; கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு
கொழும்பிலிருந்து முறையான அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (11) இரவு அதிரடிச் சோதனைகளை முன்னெடுத்தனர். கொழும்பு மக்கள் பூங்காவிலிருந்து (People’s Park) ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் தியாகம ஆகிய பகுதிகளுக்குச் சட்டவிரோதமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் ஆய்வுக் குழுவினரும், பாஸ்டியன் மாவத்தை பேருந்து முனைய அதிகாரிகளும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர். வழங்கப்பட்ட இரகசியத் தகவலின் […]
எரிபொருள் விலையில் புதிய விதி ; அரசின் அதிரடி திட்டம்
தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த மறுஆய்வு முறைக்குப் பதிலாக, உலக எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள் பலமுறை எரிபொருள் விலைத் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு புதிய எரிபொருள் விலை நிர்ணய முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இது மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, வாராந்த […]
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!
லெபனானில் இஸ்ரேலியப்படைகளின் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,953 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இந்தப் போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா இடையே […]
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க துணை அதிபர் சந்திப்பு
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடங்கின. 6 வாரங்களாக நீடித்த இப்போரில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக 2 வார போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல்–ஈரான் சம்மதித்தன. இதையடுத்து முடக்கப்பட்ட ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் தெரிவித்தது. மேலும் நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா–ஈரான் இடையே பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. தற்காலிக போர் […]
யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று(12.04.2026 ) பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ. சிவசாந்தன்
காரைக்காலில் இருந்து காரைநகருக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் கைது
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியிலிருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழிலுக்கு புறப்பட்ட கடற்தொழிலாளர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், 12 கடற்தொழிலாளர்களையும் கைது செய்ததுடன் , அவர்களின் படகினையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களும் , அவர்களது படகுகளையும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர், கடற்தொழிலாளர்களை […]
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு அழைப்பு
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு , காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் , கடற்தொழில்அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவைதிணைக்களஅதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது குறித்த கலந்துரையாடலின்பின்னர்,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். […]
பாகிஸ்தானில் துவங்கியது அமைதி பேச்சு: ஈரான் தோல்வியடைந்த நாடு என டிரம்ப் விமர்சனம்
வாஷிங்டன்: மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இதனிடையே, ஈரானை “தோல்வியடைந்த நாடு” என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதற்காக இரு தரப்பு குழுவினரும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள நூர் கான் விமான நிலையத்திற்கு தனித்தனியாக வந்தடைந்தனர். […]
எமது காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம். நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக் தினத்திற்கு முன்னர் எமது காணிகளை கையளிப்பார்கள் என நம்புகிறோம் என காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் , கடற்தொழில்அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவைதிணைக்களஅதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று(11) சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது […]
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள்!
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று (12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, அதிகாலை 4:32 மணி
’அன்பு அக்காவின் மக்கள் பயணம்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை செய்யும் தமிழிசை செளந்தரராஜன்
மயிலாப்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். “அன்பு அக்காவின் மக்கள் பயணம்”
பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.04.2026) பரமக்குடியில் தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அங்கு அவர் மேற்கொண்ட
ஐபிஎல் கிரிக்கெட் 2026 –டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அபார வெற்றி
ஐபிஎல். 2026ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன்
தூத்துக்குடியில் குடிபோதையில் மினிபஸ் இயக்கிய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை!
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், நகர போக்குவரத்து போலீசார் நேற்று மாலை புதிய பேருந்து
இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026
‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும். தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப்
திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு பூஜை காலங்களில் மாற்றம்!
திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு
’மக்கள் தலைவா’ பட தலைப்பு போஸ்டர் வெளியீடு!
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு
அமெரிக்காவை இனி நம்பக்கூடாது; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோபம்
ஈரான் போர் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் தங்களுக்கு உதவவில்லை என்று காட்டமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருகிறார். இதனால் நேட்டா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து அமெரிக்க வெளியேறினாலும் வியப்பதற்கு இல்லை என்பதே சர்வதேச நோக்கர்கள் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவை நம்பாமல் ஐரோப்பா தனி ராணுவத்தை உருவாக்கவேண்டும் என்று பேசியுள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியதாவது: அமெரிக்கா நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கையில் மட்டும் ஐரோப்பா இருக்க முடியாது. அமெரிக்கா […]
பெரம்பூர் தொகுதி தேர்தல் களத்தில் தக்ஷன் விஜய்!
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தற்போதைய தேர்தலில் பெரும்
தலைமன்னார் –இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குக! நாடாளுமன்றத்தில் ரஜீவன் எம்.பி. பிரேரணை
தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் இதனைச் சமர்ப்பித்தார். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொப்புள்கொடி உறவையும், வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்கும் நோக்கில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இவ்விடயம் குறித்து பிரேரணையில், இந்திய மற்றும் இலங்கைக்கிடையிலான இந்தப் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதன் […]
தென்னிலங்கையில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன்
கம்பஹா சீதுவை – கொட்டுகொட வீதியின் 3 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை கொட்டுகொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிரே வந்த லொறி ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக […]
வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் மாயம்; ஈரான் மீது சந்தேகம்!
அமெரிக்கக் கடற்படையால் கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் அதிநவீன ‘MQ-4C டிரைட்டன்’ ட்ரோன் விமானம் ஒன்று, வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 50,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானம், வளைகுடா அல்லது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியப் பகுதியில் மறைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஈரான் மீது சந்தேகம் இந்த ட்ரோன் மாயமானதை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதனைத் […]
அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை 15 மணிநேரம் நீடிப்பு; 2-வது நாளாக இன்றும் தொடரும்
லாகூர் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்திற்கு […]
அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் நிலக்கரி பரிசோதனை செய்யப்படவில்லை: கோப் குழுவில் அம்பலம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி ஆரம்பம் தொடக்கம் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்யவில்லை என தெரியவந்துள்ளது. இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய ஆரம்பித்த காலம் தொடக்கம் டிரைடென்ட் நிறுவனம் உத்தியோகபூர்வ அங்கீகாரம் அற்ற ஏற்றுமதித் துறைமுக ஆய்வகத்தில் சம்பந்தப்பட்ட நிலக்கரி இருப்புகளைப் பரிசோதித்து வருவதாக கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப் குழு விசாரணைகள் கோப் குழு முன் நடைபெற்ற விசாரணைகள் போது லங்கா நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் இதை ஒப்புக்கொண்டார். லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் […]
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் போர்ச்சூழல் தணிந்து, உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்தால், நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் அறிவித்துள்ளார். எரிவாயு விநியோகப்பணிகள் நாடளாவிய ரீதியில் தடையின்றி தினசரி எரிவாயு விநியோகப்பணிகள் தற்போது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலுக்கு மத்தியில், உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் […]
அச்சம் கொள்ள வேண்டாம் ; விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டின் தற்போதைய உர விநியோக நிலைவரம் குறித்து விவசாயிகள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மொரகொல்லாகம விவசாய சேவை மத்திய நிலையத்தில் உர விநியோக நடவடிக்கைகளை நேரில் ஆராய்ந்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நெற்செய்கை அவர் இது குறித்து மேலும் கூறுகையில், பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான TSP மற்றும் MOP உர வகைகள் என்பன போதுமான அளவை விட மேலதிகமாகவே நாட்டில் உள்ளன. […]
11.02 லட்சம் கி.மீ. பயணம் நிறைவு; வெற்றியடைந்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம்
வாஷிங்டன் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (நாசா), நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் கடந்த 2-ந்தேதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவை சுற்றி ஆய்வு செய்தனர். மேலும் நிலவின் மறுபக்கத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற சாதனையையும் படைத்தனர். ஆய்வுகளை முடித்து கொண்டு ஒரியன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களும் பூமியை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் பயணிக்கும் ஒரியன் […]
அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் –ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன் டி.சி. அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதனை ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து, ஈரான் நாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் […]
கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்)
கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) ################################## கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு தாயகத்தில் எளிமையாக அதேநேரம் சந்தோசமாக தாயக உறவுகளினால் கிராமங்களில் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்தவரும், கனடா “நம் தாயகம்” குழுமத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான திரு.பிரின்ஸ் குணரட்ணம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முழுமையான நிதிப்பங்களிப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரின்ஸ் ஆகியோரின் பிறந்தநாளை தாயக சிறுவர் சிறுமியர் பெரியோர்களுடன் பிறந்த நாள் கேக் […]
அமெரிக்காவில் காணாமல்போய் 32 ஆண்டுகளின் பின் மீட்கப்பட்ட சிறுமி! அவிழ்ந்த மர்ம முடிச்சு
அமெரிக்காவில் 1994-ஆம் ஆண்டு மாயமான 13 வயதுச் சிறுமி, சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது . அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தின் ‘ஸ்டார் வேலி’ (Star Valley) பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டினா மரியா பிளான்டே (Christina Maria Plante), கடந்த 1994-ஆம் ஆண்டு மே 15-ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகிலுள்ள குதிரை லாயத்திற்கு நடந்து சென்றபோது மாயமானார். தற்போது 45 வயதாகும் கிறிஸ்டினா மரியா பிளான்டே சிறுமி எவ்வித […]
அரபிக் கடலில் தத்தளித்த கப்பல் ; 18 கடற்றொழிலாளர்களுக்கு நடந்தது என்ன
வடக்கு அரபிக்கடலில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 18 கடற்றொழிலாளர்களைப் பாகிஸ்தான் கடற்படையினர் அதிரடியாகப் போராடி மீட்டுள்ளனர். வடக்கு அரபிக்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ‘கோல்ட் ஆட்டம்’ (Gold Atom) என்ற வர்த்தகக் கப்பல், திடீரென தொழில்நுட்பக் கோளாறு அல்லது விபத்து காரணமாக நடுக்கடலில் தத்தளித்துள்ளது. அங்கிருந்து விடுக்கப்பட்ட அவசர ‘ஆபத்து அழைப்பை’ (Distress Call) அடுத்து பாகிஸ்தான் கடற்படை மீட்புப் பணியில் இறங்கியது. இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட 18 கடற்றொழிலாளர்களும் ஆசியாவின் சீனா , பங்களாதேஷ், […]
தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது; இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது; இதனை இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் தொடர்பான பணிகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. முறையான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கான முனைப்பைக் கூர்மைப்படுத்துவதுடன், முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கான கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆளும்தரப்புக்குச் சாதகமாகச் செயல்படுவதைத் தடுக்கும் நோக்கில், அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் […]
சம்பள உயர்வு கிடைக்காததால் நிறுவனத்தை தீ வைத்து எரித்த ஊழியர் ; அமெரிக்காவில் சம்பவம்
சம்பள உயர்வு கிடைக்காததால், தான் பணிபுரியும் நிறுவனத்தின் கிடங்குக்கு ஊழியர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. உலக புகழ்பெற்ற, சானிடரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த 29 வயது இளைஞர் சம்பள உயர்வு கிடைக்காதது, மோசமான பணிச்சூழல் காரணமாக சேமிப்பு கிடங்குக்கு தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மளமளவென பற்றிய தீ சேமிப்பு கிடங்கு முழுதும் பரவியது. 140க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் […]
கராபிட்டிய பற் சிகிச்சை பிரிவுக்கு போதைப்பொருட்களுடன் வந்த பாதணி
காலி, கராபிட்டிய போதனா மருத்துவமனையின் பற் சிகிச்சை பிரிவுக்குள் போதைப்பொருட்கள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உரிமையாளர் அற்ற இறப்பர் பாதணிகள் சோடியொன்றை வைத்தியசாலைக் காவல்துறையினர் நேற்று (10) மீட்டுள்ளனர். குறித்த சிகிச்சை பிரிவில் அநாதரவாகக் காணப்பட்ட பாதணிகள் குறித்து மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சோதனை முன்னெடுக்கப்பட்டது. பாதணிகளின் அடிப்பகுதியை வெட்டி ஹெரோயின் இதன் போது, பாதணிகளின் அடிப்பகுதியை வெட்டி அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1700 மில்லி கிராம் ஐஸ், 1620 மில்லி கிராம் […]
பிள்ளையார் ஆலயத்தில் 50 லட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!
கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவத்தின் 5ம் நாளாகிய நேற்றிரவு மாம்பழ ஏலம் இடம்பெற்றிருந்தது. இதன்போது விநாயகர் பெருமானுக்கு சாத்திய மாம்பழமே ஏலம் விடப்பட்டிருந்த நிலையில் இருவர் இணைந்து குறித்த தொகையினை ஏலத்தில் பெற்றதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயம், அப்பகுதியின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்போது மாம்பழம் ஏலம் விடப்படுவது சிறப்பம்சமாகும், இது பெரும் தொகையாக […]
சூடான்: திருமண நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல் – 30 பேர் பலி
கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு […]
எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலனியா ட்ரம்ப் அதிரடி விளக்கம்
மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் (Melania Trump) திட்டவட்டமாக மறுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் (09) உரையாற்றிய அவர், எப்ஸ்டீன் அல்லது அவரது உதவியாளர் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுடன் (Ghislaine Maxwell) தனக்கு ஒருபோதும் நட்பு இருந்ததில்லை என்றும், இது தொடர்பான பொய்கள் இன்றுடன் முடிவுக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார். நியூயார்க் நகரின் சமூகச் சூழலில் […]
Jubilant MotorWorks Strengthens Chennai Presence with Second Jawa Yezdi Showroom in Ambattur
Jubilant MotorWorksPvt. Ltd., one of India’s leading automotive retail groups with over 17 years of legacy, today announced the inauguration
ஈரான் போரினால் லெபனான் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி
ஈரான் போர் காரணமாக நாட்டுக்குள் பொருட்களின் விநியோகம் தடைபடுவதால், லெபனான் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. நாம் காண்பது வெறும் இடப்பெயர்வு நெருக்கடி மட்டுமல்ல. அது மிக வேகமாக உணவுப் பாதுகாப்பு நெருக்கடியாக மாறி வருவதாக பெய்ரூட்டிலிருந்து காணொளி மூலம் கூறிய உலக உணவுத் திட்ட பணிப்பாளர் கூறியுள்ளார். உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களிடையே அதிகரித்து வரும் தேவை காரணமாக உணவைப் பெற்றுக்கொள்வது பெரும் […]
625 அடி உயரத்திற்கு பீறிட்டு நெருப்பு குழம்பை கக்கும் கிலாவியா எரிமலை
அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள கிலாவியா எரிமலையானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நெருப்பு குழம்பை பீறிட்டு கக்கி வருகிறது. கிலாவியா எரிமலையில் இருந்து 44ஆவது முறையாக சுமார் 625 அடி உயரத்திற்கு நெருப்பு குழம்பு வெளியேறியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் நச்சு வாயுக்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பு இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

30 C