Ellyse Perry: `வொண்டர் வுமன்' - ஆர்சிபிக்காக கோப்பையை வென்று கொடுத்தவர் - யார் இந்த எல்லிஸ் பெர்ரி?
எல்லிஸ் பெர்ரி பெண்கள் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார். அவர் வெல்லாத கோப்பைகளே இல்லை எனுமளவுக்கு சாதித்தருக்கிறார். இப்போது பெங்களூர் அணிக்காக ஆடி வுமன்ஸ் பிரீமியர் லீக் கோப்பையையும் வென்றிருக்கிறார். RCB ஒரு முழு கேன்வாஸினையே வண்ணமயமாக்கக் கூடிய திறன் படைத்தவரை ஒரு போஸ்ட் கார்டில் `முடிந்ததை செய்' என்று அடக்குவது போன்றதுதான் எலிஸ் பெர்ரிக்கு பெண் கிரிக்கெட்டில் வழங்கப்படும் வாய்ப்பு, பிரபல எழுத்தாளர் ஜெஃப் லெமன், எலிஸ் பெர்ரி பற்றி ஒருமுறை கூறிய வாசகம்தான் இது. பெண் கிரிக்கெட்டிற்கான வசீகரமும், வாணிபமும் இங்கே குறைவு என்ற அவரது மனத்தாங்கலையே அவர் அப்படி வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் உண்மை என்னவெனில், பெருங்காற்றை சிறு குடுவைக்குள் அடைக்க முடியாது. அது இருப்பிடத்தை உடைத்து சுற்றியுள்ள வெளியோடு தன்னை இணைத்து பரந்து விரியும். 33 வயதாகும் எலிஸ் பெர்ரியும் அதைத்தான் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ElLyse Perry தற்சமயம் ஆர்சிபி WPL-ல் (Women's Premier League) வென்றிருக்கும் சாம்பியன் கோப்பை மட்டுமல்ல, அடுக்கி வைக்கவே அலமாரி பத்தாத அளவு கோப்பைகளும் புகழாரங்களும் அவர் வசம் உள்ளன. 6 டி20 உலகக்கோப்பைகள், 2 ஒருநாள் உலகக்கோப்பைகள், காமன்வெல்த்தில் சூடிய தங்கப்பதக்கம் என எங்கெல்லாம் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தியதோ அங்கே ஒலித்த வெற்றிப்பறைகள் அத்தனையிலும் எலிஸ் பெர்ரியின் பெயரும் இணைந்தே ஒலித்து வந்துள்ளது. கேப்டனாக இல்லை என்றாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு இல்லாத தருணங்களை மைக்ரோஸ்கோப் அடியில்கூட கண்டறிந்து விட முடியாது, ஏனெனில் அப்படிப்பட்ட தருணங்களே இல்லை என்பதே நிதர்சனம். பாண்டிங் தலைமையில் வலம்வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆளுமைக்கும் கம்பீரத்திற்கும் பெண்பால் வடிவம் தந்தால் அது எலிஸ் பெர்ரியாகவே உருமாறும். 16 வயதில் சர்வதேச கிரிக்கெட் உலகில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 17 ஆண்டுகள் கடந்தும் தொய்வின்றி தொடர்கிறது. பிரமாண்டங்களாலேயே கட்டமைக்கப்பட்ட கரியர் அவருடையது. பெண்களுக்கான பிக்பேஷ் லீகில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை மிடுக்காக வழிநடத்திக் கொண்டிருப்பார், பந்துகளை வீசி விக்கெட் வாடையும் பார்ப்பார், காட்சிகள் மாறினால் அடுத்த நொடி ஆஷஸ் கிரிக்கெட்டில் அவரது ஆட்சி நடந்து கொண்டிருக்கும், இங்கிலாந்து பௌலர்களைத் துவைத்து எடுத்து 213* ரன்களைக் குவித்தும் ஆட்டமிழக்காமல் அதிரவைப்பார், பின் சற்றும் சளைக்காமல் மிட் விக்கெட்டில் நின்று பந்துகளை சரணடைய வைத்து பவுண்டரி லைன்களில் ரன் வறட்சியை நிலவவிடுவார். 13 டெஸ்ட்களில் 39 விக்கெட்டுகள் கிலோமீட்டர் கணக்கில் ஓடிய அவரது கால்கள் களவாடியவை. Perry டெஸ்ட் பிளேயர் என்ற கோட்டுக்குள்ளோ, டி20 என்ற டெம்ப்ளேட்டுக்குள்ளோ திணிக்க முடியாத வானம் அவருடையது. குத்துச்சண்டையின் முதல் கோல்டன் விதி, `Be Unpredictable, in Offense and Defense' எனச் சொல்லப்படுவது உண்டு. அதாவது கணிக்கமுடியாதவராக இருத்தல் அவசியம், தாக்கும் போதும், தற்காத்துக் கொள்ளும் போதும்! எலிஸ் பெர்ரியின் ஆட்டமுறை அப்படிப்பட்டதுதான். WPL-ல் உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அடித்த சிக்ஸர், ஸ்பான்சர் காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. அதே பேட், டெஸ்ட் களத்தில் பந்துக்குப் பணிந்து போவது போல் பாவனை செய்து அதற்கே தெரியாமல் 61.86 ஆவரேஜிலும் ரன்களையும் குவித்துள்ளது. 4000 ரன்களை நெருங்கும் ஒருநாள் போட்டிக் களமும் 50.57 ஆவரேஜ் எனும் பதாகையை ஏந்திப் பிடித்து அவர் தனக்கு எத்தனை பிரியமானவர் என்பதை பதிவேற்றுகிறது. 2020-ல் `Women Of The Decade' விருதினைத் தந்து கௌரவப்படுத்திய ஐசிசிக்கே தெரியும், இது நூற்றாண்டுக்கு ஆனது என்று. 2000-ன் தொடக்கத்தில் பேட்டிங்கில் கோலோச்சிய சார்லோட் எட்வர்ட்ஸின் சாரங்களையும், இப்போது தனக்கான சாம்ராஜ்யத்தை பௌலிங்கில் நிறுவியுள்ள சோஃபி எக்லெஸ்டோனின் சாயலையும் அவரிடம் ஒருங்கே காணலாம். அனுபவமும் துடிப்பும் ஒன்றாகச் சந்திக்கும் ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர் அவர். ஆரஞ்சுக் கேப் தற்சமயம் அடித்துச் சொல்லி இருப்பதும் அந்த உண்மையைத்தான். வருடக்கணக்காக தூதுவனுக்காகக் காத்திருந்த ஆர்சிபிக்கு WPL-ல் அது எலிஸ் பெர்ரியால் சாத்தியம் ஆகியிருக்கிறது. ஒன்பது போட்டிகளில் 347 ரன்களை அதுவும் 69.4 ஆவரேஜில் குவித்திருந்தார். அதிகமான தனிப்பட்ட ஸ்கோர் எடுத்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் டாப் 12-ல் பெர்ரியின் பெயரில்லை. ஏனெனில் ஒரு போட்டியில் அல்ல, ஒவ்வொரு போட்டியிலும் அவரது இன்னிங்ஸின் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பு இருந்தது. Perry `வாழ்வா, சாவா?' என மலை உச்சியின் விளிம்பில் ஆர்சிபி தொங்கிக் கொண்டிருந்த கடைசி லீக்போட்டியில், நடப்பு சாம்பியனாக இருந்த மும்பைக்கு எதிரான அவரது ஆறு விக்கெட்டுகளும், பேட்டிங்கில் சேர்த்த 40 ரன்களும்தான் அடைக்கப்பட்ட எலிமினேட்டருக்கான வாயிற்கதவை உடைத்துத் திறந்தது. அதிலிருந்து இறுதிப்போட்டிக்குள் எட்டிப்பார்க்க வைத்ததும் அதே மும்பைக்கு எதிராக 50 பந்துகளில் குவிக்கப்பட்ட அவரது 66 ரன்கள்தான். இறுதிப்போட்டியிலும் கடினமான பிட்சில் ரிச்சா கோஸுடனான அவரது பார்ட்னர்ஷிப்தான் வரலாற்றுப் பெருமை மிக்க முதல் கோப்பையை ஆர்சிபிக்கு சாத்தியம் ஆக்கியுள்ளது. வெல்ல வேண்டிய மூன்று சவால்களிலும் வரிசையாக அணிக்கு தோள் கொடுத்து தூக்கிவிட்டு சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறார் எலிஸ் பெர்ரி. அதிக ரன்களை ஒரு WPL சீசனில் அடித்த வீராங்கனை என்ற பெருமையோடு, அதிக விக்கெட்டுகளை (6) ஒரு போட்டியில் எடுத்த சாதனையையும் இந்த சீசனில் எலிஸ் பெர்ரி நிகழ்த்தி இருக்கிறார். `Ace in the hole' என்பது அஜந்தா மெண்டீஸை 2008-ல் இலங்கை பயன்படுத்தியதைப் போல் மறைத்து வைத்து ஒரு பேராயுதத்தை தகுந்த சமயத்தில் உபயோகிப்பது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா கடைசி மூன்று போட்டிகளில் தாங்கள் வென்றதைப் பற்றிக் குறிப்பிடும் போது, We saved our best for the last, என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் அவர்களது பேராயுதம் அப்படி இறுதியில் வெளிப்படவில்லை. எலிஸ் பெர்ரி எனும் பெயரில் லீக் சுற்று முழுவதும் மும்பை, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளிலேயே கோப்பையை நோக்கி அவர்களை மறைமுகமாக எடுத்துச் சென்று கொண்டேதான் இருந்தது என்பதுதான் உண்மை. நாக்அவுட் போட்டிகள் அதனை முழுவதுமாக வெளியே கொண்டு வந்துள்ளன. Ellyse Perry இங்கே பெண் கிரிக்கெட்டர்கள் தங்களுக்குள் மட்டும் மோதிக் கொண்டால் போதாது, கொண்டாடப்படும் ஆண் கிரிக்கெட்டர்கள் நிகழ்த்துவதற்கு பத்து மடங்காக சாதித்தால் மட்டுமே ரசிகர் உலகம் திரும்பியாவது பார்க்கும். எலிஸ் பெர்ரி ரசிகர் கூட்டத்தை நிமிர்ந்து பார்த்து கரவோசை எழுப்பவும் வைத்துள்ளார். `Hail The King' என்று வழக்கமாக உரக்க ஒலிக்கும் ஆர்சிபியின் ரசிகர்களின் மூளை அடுக்குகளுக்குள் தற்போது `Hail The Queen' என எலிஸ் பெர்ரியின் பெயரும் ஓங்கிக் கேட்கிறது.
Ellyse Perry: `வொண்டர் வுமன்' - ஆர்சிபிக்காக கோப்பையை வென்று கொடுத்தவர் - யார் இந்த எல்லிஸ் பெர்ரி?
எல்லிஸ் பெர்ரி பெண்கள் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார். அவர் வெல்லாத கோப்பைகளே இல்லை எனுமளவுக்கு சாதித்தருக்கிறார். இப்போது பெங்களூர் அணிக்காக ஆடி வுமன்ஸ் பிரீமியர் லீக் கோப்பையையும் வென்றிருக்கிறார். RCB ஒரு முழு கேன்வாஸினையே வண்ணமயமாக்கக் கூடிய திறன் படைத்தவரை ஒரு போஸ்ட் கார்டில் `முடிந்ததை செய்' என்று அடக்குவது போன்றதுதான் எலிஸ் பெர்ரிக்கு பெண் கிரிக்கெட்டில் வழங்கப்படும் வாய்ப்பு, பிரபல எழுத்தாளர் ஜெஃப் லெமன், எலிஸ் பெர்ரி பற்றி ஒருமுறை கூறிய வாசகம்தான் இது. பெண் கிரிக்கெட்டிற்கான வசீகரமும், வாணிபமும் இங்கே குறைவு என்ற அவரது மனத்தாங்கலையே அவர் அப்படி வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் உண்மை என்னவெனில், பெருங்காற்றை சிறு குடுவைக்குள் அடைக்க முடியாது. அது இருப்பிடத்தை உடைத்து சுற்றியுள்ள வெளியோடு தன்னை இணைத்து பரந்து விரியும். 33 வயதாகும் எலிஸ் பெர்ரியும் அதைத்தான் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ElLyse Perry தற்சமயம் ஆர்சிபி WPL-ல் (Women's Premier League) வென்றிருக்கும் சாம்பியன் கோப்பை மட்டுமல்ல, அடுக்கி வைக்கவே அலமாரி பத்தாத அளவு கோப்பைகளும் புகழாரங்களும் அவர் வசம் உள்ளன. 6 டி20 உலகக்கோப்பைகள், 2 ஒருநாள் உலகக்கோப்பைகள், காமன்வெல்த்தில் சூடிய தங்கப்பதக்கம் என எங்கெல்லாம் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தியதோ அங்கே ஒலித்த வெற்றிப்பறைகள் அத்தனையிலும் எலிஸ் பெர்ரியின் பெயரும் இணைந்தே ஒலித்து வந்துள்ளது. கேப்டனாக இல்லை என்றாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு இல்லாத தருணங்களை மைக்ரோஸ்கோப் அடியில்கூட கண்டறிந்து விட முடியாது, ஏனெனில் அப்படிப்பட்ட தருணங்களே இல்லை என்பதே நிதர்சனம். பாண்டிங் தலைமையில் வலம்வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆளுமைக்கும் கம்பீரத்திற்கும் பெண்பால் வடிவம் தந்தால் அது எலிஸ் பெர்ரியாகவே உருமாறும். 16 வயதில் சர்வதேச கிரிக்கெட் உலகில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 17 ஆண்டுகள் கடந்தும் தொய்வின்றி தொடர்கிறது. பிரமாண்டங்களாலேயே கட்டமைக்கப்பட்ட கரியர் அவருடையது. பெண்களுக்கான பிக்பேஷ் லீகில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை மிடுக்காக வழிநடத்திக் கொண்டிருப்பார், பந்துகளை வீசி விக்கெட் வாடையும் பார்ப்பார், காட்சிகள் மாறினால் அடுத்த நொடி ஆஷஸ் கிரிக்கெட்டில் அவரது ஆட்சி நடந்து கொண்டிருக்கும், இங்கிலாந்து பௌலர்களைத் துவைத்து எடுத்து 213* ரன்களைக் குவித்தும் ஆட்டமிழக்காமல் அதிரவைப்பார், பின் சற்றும் சளைக்காமல் மிட் விக்கெட்டில் நின்று பந்துகளை சரணடைய வைத்து பவுண்டரி லைன்களில் ரன் வறட்சியை நிலவவிடுவார். 13 டெஸ்ட்களில் 39 விக்கெட்டுகள் கிலோமீட்டர் கணக்கில் ஓடிய அவரது கால்கள் களவாடியவை. Perry டெஸ்ட் பிளேயர் என்ற கோட்டுக்குள்ளோ, டி20 என்ற டெம்ப்ளேட்டுக்குள்ளோ திணிக்க முடியாத வானம் அவருடையது. குத்துச்சண்டையின் முதல் கோல்டன் விதி, `Be Unpredictable, in Offense and Defense' எனச் சொல்லப்படுவது உண்டு. அதாவது கணிக்கமுடியாதவராக இருத்தல் அவசியம், தாக்கும் போதும், தற்காத்துக் கொள்ளும் போதும்! எலிஸ் பெர்ரியின் ஆட்டமுறை அப்படிப்பட்டதுதான். WPL-ல் உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அடித்த சிக்ஸர், ஸ்பான்சர் காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. அதே பேட், டெஸ்ட் களத்தில் பந்துக்குப் பணிந்து போவது போல் பாவனை செய்து அதற்கே தெரியாமல் 61.86 ஆவரேஜிலும் ரன்களையும் குவித்துள்ளது. 4000 ரன்களை நெருங்கும் ஒருநாள் போட்டிக் களமும் 50.57 ஆவரேஜ் எனும் பதாகையை ஏந்திப் பிடித்து அவர் தனக்கு எத்தனை பிரியமானவர் என்பதை பதிவேற்றுகிறது. 2020-ல் `Women Of The Decade' விருதினைத் தந்து கௌரவப்படுத்திய ஐசிசிக்கே தெரியும், இது நூற்றாண்டுக்கு ஆனது என்று. 2000-ன் தொடக்கத்தில் பேட்டிங்கில் கோலோச்சிய சார்லோட் எட்வர்ட்ஸின் சாரங்களையும், இப்போது தனக்கான சாம்ராஜ்யத்தை பௌலிங்கில் நிறுவியுள்ள சோஃபி எக்லெஸ்டோனின் சாயலையும் அவரிடம் ஒருங்கே காணலாம். அனுபவமும் துடிப்பும் ஒன்றாகச் சந்திக்கும் ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர் அவர். ஆரஞ்சுக் கேப் தற்சமயம் அடித்துச் சொல்லி இருப்பதும் அந்த உண்மையைத்தான். வருடக்கணக்காக தூதுவனுக்காகக் காத்திருந்த ஆர்சிபிக்கு WPL-ல் அது எலிஸ் பெர்ரியால் சாத்தியம் ஆகியிருக்கிறது. ஒன்பது போட்டிகளில் 347 ரன்களை அதுவும் 69.4 ஆவரேஜில் குவித்திருந்தார். அதிகமான தனிப்பட்ட ஸ்கோர் எடுத்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் டாப் 12-ல் பெர்ரியின் பெயரில்லை. ஏனெனில் ஒரு போட்டியில் அல்ல, ஒவ்வொரு போட்டியிலும் அவரது இன்னிங்ஸின் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பு இருந்தது. Perry `வாழ்வா, சாவா?' என மலை உச்சியின் விளிம்பில் ஆர்சிபி தொங்கிக் கொண்டிருந்த கடைசி லீக்போட்டியில், நடப்பு சாம்பியனாக இருந்த மும்பைக்கு எதிரான அவரது ஆறு விக்கெட்டுகளும், பேட்டிங்கில் சேர்த்த 40 ரன்களும்தான் அடைக்கப்பட்ட எலிமினேட்டருக்கான வாயிற்கதவை உடைத்துத் திறந்தது. அதிலிருந்து இறுதிப்போட்டிக்குள் எட்டிப்பார்க்க வைத்ததும் அதே மும்பைக்கு எதிராக 50 பந்துகளில் குவிக்கப்பட்ட அவரது 66 ரன்கள்தான். இறுதிப்போட்டியிலும் கடினமான பிட்சில் ரிச்சா கோஸுடனான அவரது பார்ட்னர்ஷிப்தான் வரலாற்றுப் பெருமை மிக்க முதல் கோப்பையை ஆர்சிபிக்கு சாத்தியம் ஆக்கியுள்ளது. வெல்ல வேண்டிய மூன்று சவால்களிலும் வரிசையாக அணிக்கு தோள் கொடுத்து தூக்கிவிட்டு சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறார் எலிஸ் பெர்ரி. அதிக ரன்களை ஒரு WPL சீசனில் அடித்த வீராங்கனை என்ற பெருமையோடு, அதிக விக்கெட்டுகளை (6) ஒரு போட்டியில் எடுத்த சாதனையையும் இந்த சீசனில் எலிஸ் பெர்ரி நிகழ்த்தி இருக்கிறார். `Ace in the hole' என்பது அஜந்தா மெண்டீஸை 2008-ல் இலங்கை பயன்படுத்தியதைப் போல் மறைத்து வைத்து ஒரு பேராயுதத்தை தகுந்த சமயத்தில் உபயோகிப்பது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா கடைசி மூன்று போட்டிகளில் தாங்கள் வென்றதைப் பற்றிக் குறிப்பிடும் போது, We saved our best for the last, என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் அவர்களது பேராயுதம் அப்படி இறுதியில் வெளிப்படவில்லை. எலிஸ் பெர்ரி எனும் பெயரில் லீக் சுற்று முழுவதும் மும்பை, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளிலேயே கோப்பையை நோக்கி அவர்களை மறைமுகமாக எடுத்துச் சென்று கொண்டேதான் இருந்தது என்பதுதான் உண்மை. நாக்அவுட் போட்டிகள் அதனை முழுவதுமாக வெளியே கொண்டு வந்துள்ளன. Ellyse Perry இங்கே பெண் கிரிக்கெட்டர்கள் தங்களுக்குள் மட்டும் மோதிக் கொண்டால் போதாது, கொண்டாடப்படும் ஆண் கிரிக்கெட்டர்கள் நிகழ்த்துவதற்கு பத்து மடங்காக சாதித்தால் மட்டுமே ரசிகர் உலகம் திரும்பியாவது பார்க்கும். எலிஸ் பெர்ரி ரசிகர் கூட்டத்தை நிமிர்ந்து பார்த்து கரவோசை எழுப்பவும் வைத்துள்ளார். `Hail The King' என்று வழக்கமாக உரக்க ஒலிக்கும் ஆர்சிபியின் ரசிகர்களின் மூளை அடுக்குகளுக்குள் தற்போது `Hail The Queen' என எலிஸ் பெர்ரியின் பெயரும் ஓங்கிக் கேட்கிறது.
Parrys Prepares for Political Showdown: Election Fever Grips Streets
As Tamil Nadu gears up for elections on April 19, the bustling lanes of Parrys witness a surge in political
DMK Panchayat President Arrested for Alleged Role in Senior Functionary’s Murder
In a shocking development, DMK Panchayat president Muthamizhselvi, 50, along with her driver Durairaj, 36, was apprehended by Otteri police
Manhunt Underway in Kundrathur Woman’s Murder Case
Authorities in Kundrathur have launched a search for a 37-year-old man suspected of murdering a woman with whom he resided.
Global Environment movement EARTHDAY.ORG to honour IAA India and Ramesh Narayan
In commemoration of Earth Day 2024, EARTHDAY.ORG , the world’s largest environmental movement, has announced the recipients of its prestigious 2024 awards.The International Advertising Association (IAA) India Chapter is to receive the ‘ EARTHDAY.ORG ’s 2024 Best Organization Spearheading Sustainable Development’ Award. This award recognizes IAA’s commitment to recognizing and inspiring marketing and advertising companies to drive positive environmental action as well as recognizing specific categories such as Corporate Social Crusaders, Green NGO’s and Green Crusaders. ‘We are delighted to present this award to IAA in recognition of their outstanding contribution to promoting sustainability within the marcom industry, and that too over 14 years’ said Karuna Singh, Regional Director Asia for EARTHDAY.ORG . ‘IAA’s efforts are crucial in raising awareness and inspiring action towards a more sustainable future.’ Ramesh Narayan will be conferred the EARTHDAY.ORG ’s 2024 ‘Most Sustainable Marcom Personality Award.’ The award acknowledges Mr. Narayan’s dedication to environmental conservation efforts, his authorship of the 14 year-old IAA Olive Crown Awards, his personal commitment to mass tree planting, both urban and rural, and his continuous involvement in solar-driven rural transformation. ‘As we approach Earth Day 2024, it is crucial to recognize and celebrate the efforts of individuals and organizations who are working to create a more sustainable future. The IAA India Chapter and Ramesh Narayan are true leaders in this field, and we are honored to present them with these awards’ says Debapriya Dutt, Director Projects, South and South East Asia for EARTHDAY.ORG Says Avinash Pandey, President International Advertising Association (IAA) India Chapter , We are delighted with this recognition. The IAA was far ahead of the curve in recognizing the critical importance of inspiring the marcom industry to take steps to be guardians of Brand Earth. Ramesh Narayan will be presented the award at the upcoming Olive Crown Awards ceremony on April 5th 2024. EARTHDAY.ORG will hold a grand award ceremony in July where IAA will be presented its award.
கூலி இல்லாமல் வேலைசெய்ய மறுத்த தொழிலாளர்கள்; ஆத்திரத்தில் 15 வீடுகளைக் கொளுத்திய கான்ட்ராக்டர்!
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ரபீக் கும்பார். கான்ட்ராக்டரான இவர், அஞ்சார் நகரத்திலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முகமது ரபீக் கும்பார், அவரிடம் வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள் 15 பேரின் வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதில், தொழிலாளர்கள் யாருக்கும் உயிர்ச் சேதம் இல்லை என்றாலும், 15 பேரின் வீடும் நிர்மூலமானது. எரிந்த வீடுகள் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, திடீரென தீப்பற்றியதற்கான காரணங்களை விசாரித்தது. அப்போதுதான் முகமது ரபீக் கும்பார் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, ``முகமது ரபீக் கும்பார், அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கூலி இல்லாமல் வேலை செய்ய வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு அந்தத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். அதனால், கடந்த சனிக்கிழமை, 'எனக்கு நீங்கள் கூலி இல்லாமல் வேலை செய்யாவிட்டால், உங்களை வீட்டோடு கொளுத்திவிடுவேன்' என மிரட்டியிருக்கிறார். அதன்படி வீட்டைக் கொளுத்தியிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம் எனக் குறிப்பிட்டிருக்கிறது. சிறுமி பாலியல் வன்கொடுமை; அடைத்து வைத்து சித்ரவதை... போக்சோவில் கைதான காவல்துறை அதிகாரி!
கூலி இல்லாமல் வேலைசெய்ய மறுத்த தொழிலாளர்கள்; ஆத்திரத்தில் 15 வீடுகளைக் கொளுத்திய கான்ட்ராக்டர்!
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ரபீக் கும்பார். கான்ட்ராக்டரான இவர், அஞ்சார் நகரத்திலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முகமது ரபீக் கும்பார், அவரிடம் வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள் 15 பேரின் வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதில், தொழிலாளர்கள் யாருக்கும் உயிர்ச் சேதம் இல்லை என்றாலும், 15 பேரின் வீடும் நிர்மூலமானது. எரிந்த வீடுகள் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, திடீரென தீப்பற்றியதற்கான காரணங்களை விசாரித்தது. அப்போதுதான் முகமது ரபீக் கும்பார் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, ``முகமது ரபீக் கும்பார், அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கூலி இல்லாமல் வேலை செய்ய வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு அந்தத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். அதனால், கடந்த சனிக்கிழமை, 'எனக்கு நீங்கள் கூலி இல்லாமல் வேலை செய்யாவிட்டால், உங்களை வீட்டோடு கொளுத்திவிடுவேன்' என மிரட்டியிருக்கிறார். அதன்படி வீட்டைக் கொளுத்தியிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம் எனக் குறிப்பிட்டிருக்கிறது. சிறுமி பாலியல் வன்கொடுமை; அடைத்து வைத்து சித்ரவதை... போக்சோவில் கைதான காவல்துறை அதிகாரி!
தென்காசி மக்களவை தொகுதி: இறுதி கட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு - களமிறங்கப்போவது யார் யார்?
நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பு, உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தொடங்கியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் வேட்பாளர் அறிவிப்பு, சுற்றுப்பயணம், பிரசாரம் ஆகியவற்றை இறுதி செய்து அறிவிக்கும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முத்துச்செல்வி தனித் தொகுதியான தென்காசி மக்களவை தொகுதியில் இரண்டாவது முறையாக தி.மு.க. நேரடியாக களம் இறங்குவது உறுதியாகியுள்ளது. அதன்படி, சிட்டிங் எம்.பி. தனுஷ் குமார் மற்றும் சங்கரன்கோவில் தனித் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி ஆகியோரின் பெயர்கள் இறுதிக்கட்ட நிலையில் வேட்பாளர் பரிசீலனையில் உள்ளன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்விக்கு எம்.பி. சீட் கொடுக்கப்படலாம் எனும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜான்பாண்டியன் அதேபோல, பா.ஜ.க. சார்பில் தொழிலதிபர் ஆனந்தன் அய்யாச்சாமி அல்லது கூட்டணிக் கட்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான்பாண்டியன் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அச்சாரமாக, ராஜபாளையம் பகுதியில் தேர்தல் அலுவலகம் அமைப்பது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆய்வு நடத்திச்சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தன் இந்தநிலையில் அ.தி.மு.க., புதிய தமிழகம் கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிட முடிவாகியிருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். கிருஷ்ணசாமி பெரும்பாலும் கட்சிகள் இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து முழுவீச்சில் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY லாட்டரி மார்ட்டின் கொடுத்த தேர்தல் நிதி; கோடிகளை அள்ளிய தி.மு.க! | Electoral Bond | Detailed Report
தென்காசி மக்களவை தொகுதி: இறுதி கட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு - களமிறங்கப்போவது யார் யார்?
நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பு, உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தொடங்கியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் வேட்பாளர் அறிவிப்பு, சுற்றுப்பயணம், பிரசாரம் ஆகியவற்றை இறுதி செய்து அறிவிக்கும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முத்துச்செல்வி தனித் தொகுதியான தென்காசி மக்களவை தொகுதியில் இரண்டாவது முறையாக தி.மு.க. நேரடியாக களம் இறங்குவது உறுதியாகியுள்ளது. அதன்படி, சிட்டிங் எம்.பி. தனுஷ் குமார் மற்றும் சங்கரன்கோவில் தனித் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி ஆகியோரின் பெயர்கள் இறுதிக்கட்ட நிலையில் வேட்பாளர் பரிசீலனையில் உள்ளன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்விக்கு எம்.பி. சீட் கொடுக்கப்படலாம் எனும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜான்பாண்டியன் அதேபோல, பா.ஜ.க. சார்பில் தொழிலதிபர் ஆனந்தன் அய்யாச்சாமி அல்லது கூட்டணிக் கட்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான்பாண்டியன் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அச்சாரமாக, ராஜபாளையம் பகுதியில் தேர்தல் அலுவலகம் அமைப்பது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆய்வு நடத்திச்சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தன் இந்தநிலையில் அ.தி.மு.க., புதிய தமிழகம் கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிட முடிவாகியிருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். கிருஷ்ணசாமி பெரும்பாலும் கட்சிகள் இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து முழுவீச்சில் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY லாட்டரி மார்ட்டின் கொடுத்த தேர்தல் நிதி; கோடிகளை அள்ளிய தி.மு.க! | Electoral Bond | Detailed Report
திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து…பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக!
PMK – BJP : தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணை வெளியானதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ… ஆனால், […] The post திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக! first appeared on Dinasuvadu .
Ogilvy today announces new global leadership for Ogilvy One and next-generation services for creating more valuable relationships by design. Led by creativity, powered by data, and supercharged by AI, Ogilvy has a distinct approach to designing relationships that create business, brand, and customer value. Ogilvy One will serve as the global brand for Ogilvy’s current and next-generation customer experience and relationship service offerings to clients. Kent Wertime , a seasoned Ogilvy executive, has been appointed as the Global CEO of Ogilvy One. With nearly 25 years at Ogilvy, Kent previously led Ogilvy One in Asia and has since held various leadership positions. He will continue in his most recent role as Co-CEO for Ogilvy APAC. Ogilvy One’s leadership team includes Roberto Fara , who will take on an expanded role as the Global Creative Experience Lead for Ogilvy One and will retain his role as Chief Creative Officer of Ogilvy Spain, along with Rajesh Midha (NoAm), Clare Lawson (EMEA & Chief Client Officer), Ab Gaur (APAC & CEO of Verticurl; Global Chief Data & Tech Officer, Ogilvy), Mauro Caggiano (LATAM), Jason Davey (AUNZ), Ravi Pal (CTO), and Nate McNabb (Global Partnerships). Ogilvy One offers a range of services to design relationships that are truly reflective of brands: Customer Acquisition, Service Design, Continuous Commerce, and CRM & Loyalty. This offering is underpinned by a unified global technology backbone powered byVerticurl, the leading marketing technology services agency Ogilvy acquired in 2013.Ogilvy One hasapproximately 3,800 specialists around the world spanning strategy, creative and design, UX/UI, data, media and performance, platform integration, creative technology, innovation, and AI among other areas.Ogilvy One currently works with a broad range of B2C and B2B clients including some world’s most iconic brands such as IBM, Mondelēz, Nestl, Unilever, The Coca-Cola Company, Verizon, and Enterprise, as well as regional and local clients. Devika Bulchandani, Global CEO of Ogilvy, said : “When David Ogilvy first started talking about direct marketing decades ago, he recognized that some of the most effective marketing isn’t just directed at your target audience, it speaks to them on a personal one-to-one basis. Now we take that to a new level with a fresh leadership team for Ogilvy One and a commitment to designing relationships based on ideas that create enduring value exchanges between consumers and our clients’ brands.” Kent Wertime, Global CEO of Ogilvy One, said “Over the last decade, companies invested heavily in technology, but that alone is not the solution. In today’s hyper-commoditized world,brands need to design relationships that create differentiation and relevancy with their consumers.That’s where the exponential power of creativity plays a vital role. Today's consumers, choose their points of interaction with brands, from discovery to purchase, and dictate more of the relationship. With a deep understanding of brands and full-dimensional view of consumers coupled with award-winning creativity and a strong data and technology backbone, Ogilvy One is uniquely positioned to design valuable relationships for brands that are impactful, relevant, and enduring.”
காங்கிரஸிடம் இருந்து திருச்சியை பெற்ற மதிமுக... வைகோ போடும் கணக்கு என்ன?!
தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியை பெற்றிருக்கிறது ம.தி.மு.க. அக்கட்சியின் முதன்மை செயலாளார் துரை வைகோ போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ம.தி.மு.க திருச்சி தொகுதியை பெற்றது ஏன்? ம.தி.மு.க-வுக்கான களம் திருச்சியில் எப்படி இருக்கிறது என விசாரித்தோம். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இரண்டு தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல் ஆகிய தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு 21 தொகுதிகளில் களமிறங்குகிறது தி.மு.க. ம.தி.மு.க-வை பொறுத்தவரை கடந்தமுறை ஒரு எம்.பி தொகுதியும், இரு ராஜ்ய சபா சீட்டும் பெற்றநிலையில் இம்முறை ஒரு எம்.பி தொகுதி மட்டுமே கிடைத்துள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி வசமிருந்த திருச்சி தொகுதியை ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கியுள்ளது தி.மு.க வைகோ நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``இரண்டு எம்.பி சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டது ம.தி.மு.க, ஆனால் நிர்பந்திக்காமல் ஒரு தொகுதியை பெற்றுக் கொள்ளுங்கள், ராஜ்ய சபா தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறார்கள். ம.தி.மு.க-வின் தனிச்சின்னம் கோரிக்கையை மட்டும் பரிசீலித்தது தி.மு.க” என்றவர்களிடம், தொகுதி கணக்கீடுகள் குறித்து கேட்டோம், அது குறித்து தொடர்ந்து பேசியவர்கள் ``2009 மற்றும் 2014-ல் வைகோ-வே நேரடியாக போட்டியிட்ட தொகுதி விருதுநகர். சமூக ரீதியான வாக்குகளும் அதிகமுள்ளதால் துரை வைகோ-வை அங்கேயே களமிறங்க வைக்கலாம் எனப் பேசப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூரிடமிருந்து தொகுதியை பறிக்க எந்தவொரு திடமான காரணங்களும் இல்லை. ஒன்று விருதுநகர் வேண்டும் அல்லது எளிதில் வெற்றிபெறக் கூடிய தொகுதி வேண்டும் என கோரியிருக்கிறது ம.தி.மு.க. அந்த வகையில் வைகோ போட்ட ஸ்கெட்ச்தான் திருச்சி தொகுதி. வைகோ - முதல்வர் ஸ்டாலின் திருச்சி ம.தி.மு.க-வுக்கு ஆதரவான தொகுதி என்பதைவிட தி.மு.க-வின் கோட்டை எனலாம். திருச்சி சட்டமன்றத்துக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் வென்றது தி.மு.க கூட்டணி. அதில் 5 தொகுதிகள் தி.மு.கவே வென்றிருக்கிறது. மேலும் தி.மு.கவின் அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய இருவருக்கு கீழ்வருகிறது திருச்சியின் தி.மு.க மாவட்டங்கள். எனவே இரு அமைச்சர்களும் எப்படியாவது வெற்றிபெற வைத்துவிடுவார்கள் என நம்பிக்கை ம.தி.மு.க-வுக்கு உண்டு” என்றனர். கே.என் நேரு தி.மு.க தரப்பில் கேட்டபோது, ``கடந்தமுறை ம.தி.மு.க-வுக்கு 1+1 தொகுதிகளை ஒதுக்கியதைபோல் இம்முறை ஒதுக்கமுடியவில்லை. ஒரு தொகுதிக்கு ஒப்புக் கொண்ட ம.தி.மு.க-வுக்கு கேட்ட தொகுதியையாவது கொடுப்போம் எனக் கருதியது தி.மு.க. அவர்கள் கேட்ட விருதுநகர் கொடுக்க முடியவில்லை. ஆனால் திருச்சி சிட்டிங் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால் அந்த தொகுதியை ம.தி.மு.க-விடம் கொடுத்துவிட்டோம். தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறது திருச்சி. உதயசூரியன் சின்னத்தில் இல்லாமல் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதால் வாக்கு வித்தியாசம் வேண்டுமானால் குறையலாம்” என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY திருச்சி: `என்ன செய்தார் எம்.பி., திருநாவுக்கரசர்?’ - உங்கள் கருத்து என்ன?!
காங்கிரஸிடம் இருந்து திருச்சியை பெற்ற மதிமுக... வைகோ போடும் கணக்கு என்ன?!
தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியை பெற்றிருக்கிறது ம.தி.மு.க. அக்கட்சியின் முதன்மை செயலாளார் துரை வைகோ போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ம.தி.மு.க திருச்சி தொகுதியை பெற்றது ஏன்? ம.தி.மு.க-வுக்கான களம் திருச்சியில் எப்படி இருக்கிறது என விசாரித்தோம். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இரண்டு தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல் ஆகிய தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு 21 தொகுதிகளில் களமிறங்குகிறது தி.மு.க. ம.தி.மு.க-வை பொறுத்தவரை கடந்தமுறை ஒரு எம்.பி தொகுதியும், இரு ராஜ்ய சபா சீட்டும் பெற்றநிலையில் இம்முறை ஒரு எம்.பி தொகுதி மட்டுமே கிடைத்துள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி வசமிருந்த திருச்சி தொகுதியை ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கியுள்ளது தி.மு.க வைகோ நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``இரண்டு எம்.பி சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டது ம.தி.மு.க, ஆனால் நிர்பந்திக்காமல் ஒரு தொகுதியை பெற்றுக் கொள்ளுங்கள், ராஜ்ய சபா தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறார்கள். ம.தி.மு.க-வின் தனிச்சின்னம் கோரிக்கையை மட்டும் பரிசீலித்தது தி.மு.க” என்றவர்களிடம், தொகுதி கணக்கீடுகள் குறித்து கேட்டோம், அது குறித்து தொடர்ந்து பேசியவர்கள் ``2009 மற்றும் 2014-ல் வைகோ-வே நேரடியாக போட்டியிட்ட தொகுதி விருதுநகர். சமூக ரீதியான வாக்குகளும் அதிகமுள்ளதால் துரை வைகோ-வை அங்கேயே களமிறங்க வைக்கலாம் எனப் பேசப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூரிடமிருந்து தொகுதியை பறிக்க எந்தவொரு திடமான காரணங்களும் இல்லை. ஒன்று விருதுநகர் வேண்டும் அல்லது எளிதில் வெற்றிபெறக் கூடிய தொகுதி வேண்டும் என கோரியிருக்கிறது ம.தி.மு.க. அந்த வகையில் வைகோ போட்ட ஸ்கெட்ச்தான் திருச்சி தொகுதி. வைகோ - முதல்வர் ஸ்டாலின் திருச்சி ம.தி.மு.க-வுக்கு ஆதரவான தொகுதி என்பதைவிட தி.மு.க-வின் கோட்டை எனலாம். திருச்சி சட்டமன்றத்துக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் வென்றது தி.மு.க கூட்டணி. அதில் 5 தொகுதிகள் தி.மு.கவே வென்றிருக்கிறது. மேலும் தி.மு.கவின் அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய இருவருக்கு கீழ்வருகிறது திருச்சியின் தி.மு.க மாவட்டங்கள். எனவே இரு அமைச்சர்களும் எப்படியாவது வெற்றிபெற வைத்துவிடுவார்கள் என நம்பிக்கை ம.தி.மு.க-வுக்கு உண்டு” என்றனர். கே.என் நேரு தி.மு.க தரப்பில் கேட்டபோது, ``கடந்தமுறை ம.தி.மு.க-வுக்கு 1+1 தொகுதிகளை ஒதுக்கியதைபோல் இம்முறை ஒதுக்கமுடியவில்லை. ஒரு தொகுதிக்கு ஒப்புக் கொண்ட ம.தி.மு.க-வுக்கு கேட்ட தொகுதியையாவது கொடுப்போம் எனக் கருதியது தி.மு.க. அவர்கள் கேட்ட விருதுநகர் கொடுக்க முடியவில்லை. ஆனால் திருச்சி சிட்டிங் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால் அந்த தொகுதியை ம.தி.மு.க-விடம் கொடுத்துவிட்டோம். தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறது திருச்சி. உதயசூரியன் சின்னத்தில் இல்லாமல் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதால் வாக்கு வித்தியாசம் வேண்டுமானால் குறையலாம்” என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY திருச்சி: `என்ன செய்தார் எம்.பி., திருநாவுக்கரசர்?’ - உங்கள் கருத்து என்ன?!
பஸ்வான் சகோதரரை கழற்றிவிட்ட பாஜக; பீகாரில் NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உடன்பாடு!
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வந்து சேர்ந்த நிதிஷ் குமார் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இப்பேச்சுவார்த்தையில் இப்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி பா.ஜ.க 17 தொகுதிகளில் போட்டியிடும். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி உடைந்தபோது, அக்கட்சியை கைப்பற்றிய ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி பராஸ், மத்தியில் பா.ஜ.க அரசில் அமைச்சராகப் பதவியேற்றார். சிராக் பஸ்வான் ஆரம்பத்தில் பா.ஜ.க, பஸ்வான் சகோதரர் பசுபதிக்கு ஆதரவு கொடுத்தாலும், நாளடைவில் தனது முடிவை மாற்றிக்கொண்டு சிராக் பஸ்வான் பக்கம் சாய ஆரம்பித்தது. இதையடுத்தே இப்போது சிராக் பஸ்வான் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்திருக்கிறது. பீகார்: தந்தைக்கு சிறுநீரகம் கொடுத்து உதவிய ரோஹிணி, மக்களவைத் தேர்தலில் போட்டியா? பா.ஜ.க கூட்டணியில் ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாகா ஆகியோரின் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சியோகர் தொகுதியைப் பெற நிதிஷ் குமார் முயன்றார். அத்தொகுதியை சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்த லவ்லி ஆனந்திற்கு கொடுக்க நிதிஷ் குமார் திட்டமிட்டார். ஆனால் பா.ஜ.க விட்டுக்கொடுக்கவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமார் கட்சியும் பா.ஜ.க-வும் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டன. பிரதமர் மோடி - நிதிஷ் குமார் சிராக் பஸ்வான் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது சிராக் பஸ்வான் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியைக் விட்டுக்கொடுத்துள்ளன. பசுபதி கழற்றி விடப்பட்டிருக்கிறார். பீகாரில் ஏற்கெனவே ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. `எதிர்க்கட்சிகள் பேப்பரில் கனவு காண்கின்றன; தலைப்பு செய்திக்காக நான் வேலை செய்வதில்லை!' - மோடி
பஸ்வான் சகோதரரை கழற்றிவிட்ட பாஜக; பீகாரில் NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உடன்பாடு!
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வந்து சேர்ந்த நிதிஷ் குமார் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இப்பேச்சுவார்த்தையில் இப்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி பா.ஜ.க 17 தொகுதிகளில் போட்டியிடும். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி உடைந்தபோது, அக்கட்சியை கைப்பற்றிய ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி பராஸ், மத்தியில் பா.ஜ.க அரசில் அமைச்சராகப் பதவியேற்றார். சிராக் பஸ்வான் ஆரம்பத்தில் பா.ஜ.க, பஸ்வான் சகோதரர் பசுபதிக்கு ஆதரவு கொடுத்தாலும், நாளடைவில் தனது முடிவை மாற்றிக்கொண்டு சிராக் பஸ்வான் பக்கம் சாய ஆரம்பித்தது. இதையடுத்தே இப்போது சிராக் பஸ்வான் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்திருக்கிறது. பீகார்: தந்தைக்கு சிறுநீரகம் கொடுத்து உதவிய ரோஹிணி, மக்களவைத் தேர்தலில் போட்டியா? பா.ஜ.க கூட்டணியில் ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாகா ஆகியோரின் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சியோகர் தொகுதியைப் பெற நிதிஷ் குமார் முயன்றார். அத்தொகுதியை சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்த லவ்லி ஆனந்திற்கு கொடுக்க நிதிஷ் குமார் திட்டமிட்டார். ஆனால் பா.ஜ.க விட்டுக்கொடுக்கவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமார் கட்சியும் பா.ஜ.க-வும் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டன. பிரதமர் மோடி - நிதிஷ் குமார் சிராக் பஸ்வான் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது சிராக் பஸ்வான் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியைக் விட்டுக்கொடுத்துள்ளன. பசுபதி கழற்றி விடப்பட்டிருக்கிறார். பீகாரில் ஏற்கெனவே ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. `எதிர்க்கட்சிகள் பேப்பரில் கனவு காண்கின்றன; தலைப்பு செய்திக்காக நான் வேலை செய்வதில்லை!' - மோடி
பஸ்வான் சகோதரரை கழற்றிவிட்ட பாஜக; பீகாரில் NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உடன்பாடு!
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வந்து சேர்ந்த நிதிஷ் குமார் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இப்பேச்சுவார்த்தையில் இப்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி பா.ஜ.க 17 தொகுதிகளில் போட்டியிடும். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி உடைந்தபோது, அக்கட்சியை கைப்பற்றிய ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி பராஸ், மத்தியில் பா.ஜ.க அரசில் அமைச்சராகப் பதவியேற்றார். சிராக் பஸ்வான் ஆரம்பத்தில் பா.ஜ.க, பஸ்வான் சகோதரர் பசுபதிக்கு ஆதரவு கொடுத்தாலும், நாளடைவில் தனது முடிவை மாற்றிக்கொண்டு சிராக் பஸ்வான் பக்கம் சாய ஆரம்பித்தது. இதையடுத்தே இப்போது சிராக் பஸ்வான் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்திருக்கிறது. பீகார்: தந்தைக்கு சிறுநீரகம் கொடுத்து உதவிய ரோஹிணி, மக்களவைத் தேர்தலில் போட்டியா? பா.ஜ.க கூட்டணியில் ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாகா ஆகியோரின் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சியோகர் தொகுதியைப் பெற நிதிஷ் குமார் முயன்றார். அத்தொகுதியை சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்த லவ்லி ஆனந்திற்கு கொடுக்க நிதிஷ் குமார் திட்டமிட்டார். ஆனால் பா.ஜ.க விட்டுக்கொடுக்கவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமார் கட்சியும் பா.ஜ.க-வும் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டன. பிரதமர் மோடி - நிதிஷ் குமார் சிராக் பஸ்வான் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது சிராக் பஸ்வான் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியைக் விட்டுக்கொடுத்துள்ளன. பசுபதி கழற்றி விடப்பட்டிருக்கிறார். பீகாரில் ஏற்கெனவே ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. `எதிர்க்கட்சிகள் பேப்பரில் கனவு காண்கின்றன; தலைப்பு செய்திக்காக நான் வேலை செய்வதில்லை!' - மோடி
சொந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை –அம்பலமான அதிர்ச்சி காரணம்!
அரசு நிதி பெறுவதற்காக இடைத்தரகர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். விவாஹ யோஜனா உத்தரப்பிரதேசத்தில் விவாஹ யோஜனா (Mukhya mantri Samuhik Vivaah Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு திருமணம் நடத்தி நலத்திட்ட உதவிகளை அம்மாநில அரசு வழங்கி வருகிறது. மேலும், தம்பதிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களும், ரூ.35,000 வழங்கப்படுகிறது. இந்த நிதியைப் பெறுவதற்காக இடைத்தரகர்கள், திருமணமானவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், […]
அன்புமணிக்கு அமைச்சர் பதவி? பாஜக அண்ணாமலை மூலம் வந்த மெகா ஆஃபர்!
மக்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளது.
பாஜக-வுடன் கைகோத்த பாமக: `தேசநலன் கருதி இந்த முடிவு.. மீண்டும் பிரதமர் மோடிதான்!' - அன்புமணி ராமதாஸ்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த தேசமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியலிலும் பல திருப்புமுனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நேற்றுவரை அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி உறுதி எனச் சொல்லப்பட்ட நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், சேலத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியது. அண்ணாமலை - ராமதாஸ் இந்த நிலையில்தான் ‘தேச நலன் கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி உறுதி' என பா.ம.க தெரிவித்திருக்கிறது. இன்று காலை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்குச் சென்றிருந்தனர். அதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் குறித்து சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பா.ஜ.க - பா.ம.க கூட்டணி உறுதியாகியிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், ``10 ஆண்டுக்காலமாக பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கமாக இருந்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் கருதி பிரதமரின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர இந்த முடிவை எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் 60 ஆண்டுக்காலம் ஆட்சி செய்துகொண்டிருக்கும் கட்சிகள்மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அண்ணாமலை - ராமதாஸ் எனவே மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஆழமாக இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கூட்டணி இந்தியளவில் வெற்றி பெறும். மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வருவார். எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ம.க எங்களுடன் களம் இறங்கியிருக்கிறது. வாஜ்பாய் உள்ளிட்ட மூத்த பா.ஜ.க தலைவர்களின் அன்பைப் பெற்றவர் ராமதாஸ். தமிழ்நாட்டில் முக்கிய மற்றும் வலுவான கூட்டணியாக எங்கள் கூட்டணி உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் மாற்றாக இந்தக் கூட்டணி இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது. சேலத்தில் நடக்கும் பிரதமர் மோடியின் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களுடன் கலந்துகொள்ள அன்புமணி ராமதாஸ் இசைவு தெரிவித்திருக்கிறார், அதற்கு நன்றி. பா.ம.க தமிழ்நாட்டின் 10 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். திமுக தவிர அதிமுக, பாஜக நிர்வாகிகள் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் - சரத்குமார்
பாஜக-வுடன் கைகோத்த பாமக: `தேசநலன் கருதி இந்த முடிவு.. மீண்டும் பிரதமர் மோடிதான்!' - அன்புமணி ராமதாஸ்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த தேசமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியலிலும் பல திருப்புமுனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நேற்றுவரை அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி உறுதி எனச் சொல்லப்பட்ட நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், சேலத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியது. அண்ணாமலை - ராமதாஸ் இந்த நிலையில்தான் ‘தேச நலன் கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி உறுதி' என பா.ம.க தெரிவித்திருக்கிறது. இன்று காலை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்குச் சென்றிருந்தனர். அதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் குறித்து சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பா.ஜ.க - பா.ம.க கூட்டணி உறுதியாகியிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், ``10 ஆண்டுக்காலமாக பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கமாக இருந்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் கருதி பிரதமரின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர இந்த முடிவை எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் 60 ஆண்டுக்காலம் ஆட்சி செய்துகொண்டிருக்கும் கட்சிகள்மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அண்ணாமலை - ராமதாஸ் எனவே மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஆழமாக இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கூட்டணி இந்தியளவில் வெற்றி பெறும். மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வருவார். எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ம.க எங்களுடன் களம் இறங்கியிருக்கிறது. வாஜ்பாய் உள்ளிட்ட மூத்த பா.ஜ.க தலைவர்களின் அன்பைப் பெற்றவர் ராமதாஸ். தமிழ்நாட்டில் முக்கிய மற்றும் வலுவான கூட்டணியாக எங்கள் கூட்டணி உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் மாற்றாக இந்தக் கூட்டணி இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது. சேலத்தில் நடக்கும் பிரதமர் மோடியின் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களுடன் கலந்துகொள்ள அன்புமணி ராமதாஸ் இசைவு தெரிவித்திருக்கிறார், அதற்கு நன்றி. பா.ம.க தமிழ்நாட்டின் 10 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். திமுக தவிர அதிமுக, பாஜக நிர்வாகிகள் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் - சரத்குமார்
பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை? முடிவை அறிவித்த அண்ணாமலை!
விழுப்புரம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக-பாமக கூட்டணி உறுதியானது. இதனையடுத்து பாஜக கூட்டணியில் பாமக பத்து தொகுதிகளில் போட்டியிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
The Color Purple: `வாழ்வில் நம் இருத்தல்தான் முக்கியம்!'நம்பிக்கை விதைக்கும் மூன்று தலைமுறையின் கதை
செலி “நான் ஏழை, நான் கறுப்பி, எனக்கு அழகில்லை, சமைக்கவும் தெரியாது, ஆனால் நான் இருக்கிறேன். என் இருப்பு முக்கியம், என் குரல் கேட்கப்பட வேண்டும்.” என்று அழுத்தம் திருத்தமாக செலி பாட ஒட்டுமொத்த திரையரங்கமும் ஆர்ப்பரிக்கிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடைபெறவில்லை. சென்னையின் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அரங்கேறியது. இந்த மார்ச் மாதம் உலகம் முழுக்க ‘பெண்கள் வரலாற்று மாத’மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய மாதமான பிப்ரவரி மாதம் ‘கறுப்பர் வரலாற்று மாத’மாகக் கடைப்பிடிக்கப்பட்டது. The Color Purple இதனையொட்டி பல்வேறு பண்பாட்டு கலாசார நிகழ்வுகள் உலகம் முழுக்க நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் (Consulate General of the United States, Chennai) சத்யம் திரையரங்கில் 2023-ம் ஆண்டு வெளியான ‘தி கலர் பர்ப்பிள்’ படத்தினை சிறப்புத் திரையிடல் செய்ய ஏற்பாடு செய்திருந்தது. அப்போது ஏற்பட்ட ஆரவாரம் இந்தப் படத்தின் விமர்சனத்தைத் தாண்டி வரலாற்றினை நம்மைத் தேட வைத்தது. 2023-ல் வெளியான `தி கலர் பர்ப்பிள்' திரைப்படம், ஆலிஸ் வாக்கர் எழுதி, அதே பெயரில் வெளிவந்த உலகப் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. மேலும் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்றால் 1985-ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இதே பெயரில் இயக்கிய திரைப்படத்தின் `மியூஸிக்கல் ரீமேக்' என்று இந்த 2023 படத்தைச் சொல்லலாம். கடந்த நாற்பது ஆண்டுகளாகக் காவியமாகப் போற்றப்படும் `கல்ட் கிளாசிக்' தன்மையடைந்த இந்த எழுத்துக்குப் பல திசைகளிலிருந்து விமர்சனங்களும் இருக்கின்றன. சிலர் இதைத் தடை செய்ய வேண்டும் என்கிறார்கள், சிலர் இதைப் போற்றிப் புகழ்கிறார்கள், இன்னும் சிலர் இதை இன்றுவரையிலும் கொண்டாடுகிறார்கள். The Color Purple அமெரிக்காவில் இனவெறி, பெண்களுக்கு எதிரான பாகுபாடு உச்சத்திலிருந்த 1900-களின் தொடக்கக் காலகட்டம். அப்போது ஜார்ஜியாவில் தந்தையின் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஆப்ரோ அமெரிக்கப் பெண்மணி செலி, பிறகு ஆணாதிக்க கணவன் ஆல்பர்டிடம் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவரது வாழ்க்கைப் பயணம் எப்படி மாறுகிறது என்பதை உணர்வுபூர்வமாக பேசுவதே ‘The Color Purple (2023)’ படத்தின் கதை. இந்த ரீமேக் 1985-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய நாவலின் தழுவலிலிருந்து பெரிதும் மாறுபடுகிறது. கானிய (Ghana) திரைப்பட இயக்குநர் பிளிட்ஸ் பஜாவூல், பாடல்களின் உதவியுடன் ஒரு புதிய பார்வையிலிருந்து இந்தக் கதையை அணுகியிருக்கிறார். கணவரின் கொடுமைகளை எதிர்கொள்வது, பிரிந்த சகோதரியின் கடிதத்துக்காக ஏங்குவது, செக் (Shug) என்ற பாடகியிடம் காதல் வயப்படுவது, ‘என் இருப்பு முக்கியம், என் குரல் கேட்கப்பட வேண்டும்’ என திமிறி எழுவதென செலியாக வாழ்ந்திருக்கிறார் ஃபாண்டாசியா பாரினோ. ஆணாதிக்க கணவராக ‘மிஸ்டர்’ ஆல்பர்ட் (கோல்மன் டொமிங்கோ) பல இடங்களில் நமக்கே கோபம் வருகிற அளவுக்கு நேர்த்தியான வில்லனாக வலம்வருகிறார். செலிக்கு அப்படியே நேர்மாறான கதாபாத்திரத்தில் சோஃபியாவாக நடித்துள்ள டேனியல் ப்ரூக்ஸ், யாருக்கும் அஞ்சாத உடல்மொழி, தேர்ந்த நடனம், ஆணாதிக்கத்தைக் கேலி செய்வதென அதகளம் செய்கிறார். அதே நேரத்தில் நிறவெறி ஆதிக்கத்தால் ஒடுங்கிப் போகிற காட்சிகளில் கண்களைக் குளமாக்குகிறது அவரது நடிப்பு. டேனியல் ப்ரூக்ஸ் - The Color Purple இந்த ரீமேக் இசைத்திரைப்படம் வெறும் இசையினால் மட்டும் ஸ்பீல்பெர்க்கின் படத்திலிருந்து வேறுபடாமல், உணர்வாகவே பல இடங்களில் வேறுபடுகிறது. ஸ்பீல்பெர்க் தன் படத்தில் வலியை அதிகமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். இந்தத் திரைப்படமும் அப்படிக் கடத்தியிருந்தாலும் வேகமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்து விடுகிறது. அதேபோல ஸ்பீல்பெர்க், செலியின் வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றியையும் மட்டுமே படத்தின் மையக் கருத்தாக வைத்திருப்பார். ஆனால் பஜாவூலின் இந்தத் தழுவல், செலி மற்றும் ஷக் (டாராஜி பி.ஹென்சன்) இடையேயான காதலை உணர்ச்சிகரமாகச் சித்திரித்திருக்கிறது. அன்றைய சூழலில் வாழ்ந்த வயதான ஆப்ரோ அமெரிக்கப் பெண்களுக்கு இடையேயான காதலை இவ்வளவு அழகாகக் காட்டுவது மிகவும் புதுமையானது. A Killer Paradox Review: தற்செயலான கொலை, தொடரும் குற்றங்கள் - ஒரு வேற லெவல் கொரியன் வெப்சீரிஸ்! நடிகர் அனைவரின் நடிப்பும் மிக அற்புதமாக இருந்தாலும் இசைப்பட வடிவம் காரணமாக, கதையை விடப் பாடல்கள் வேகமாகச் செல்கின்றன. இதனால் செலியின் உணர்ச்சிகளை முழுமையாகப் புரிந்துகொள்வதில் சற்று சிரமம் இருக்கிறது. செலியின் கணவன் ஆல்பர்ட், அவரது தந்தை அல்போன்சோ (டியோன் கோல்) ஆகியோரின் கொடுமைகள் மிக அவசர அவசரமாகக் காட்டப்பட்டுள்ளன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்திலிருந்த கதாபாத்திர உணர்வுகளின் ஆழம் இதில் மிஸ்ஸிங். சில இடங்களில் கறுப்பின ஆண்களை அதீதமான வில்லன்களாகக் காட்டுவது போன்ற உணர்வும் தோன்றுகிறது. The Color Purple 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வசனமாக இருந்தாலும் இன்றும் அதன் தாக்கம் இருக்கவே செய்கிறது. “இதுவரைக்கும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன். என் அப்பாக்கூட சண்டை போட வேண்டியிருந்தது. என் தம்பிங்க கூட சண்டை போட வேண்டியிருந்தது. என் மாமாக்களோட சண்டை போட வேண்டியிருந்தது. ஆண்கள் அதிகமா நிறைஞ்சிருக்குற குடும்பத்துல ஒரு பெண் குழந்தைக்குப் பாதுகாப்பு இல்ல. ஆனா, என் சொந்த வீட்டுலயே சண்டை போட வேண்டியிருக்கும்னு நான் நினைச்சதே இல்லை” பெரும் மூச்சுவிட்டு மீண்டும் பேச ஆரம்பிக்கிறாள் சோபியா, “கடவுளின் சாட்சியாக நான் ஹார்போவை (கணவன்) மிகவும் காதலிக்கிறேன். ஆனா, அவன் என்னை அடிச்சா, அவனை நான் கொன்னுடுவேன்” என்று அவர் பேசும் வசனத்துக்கு இன்றும் ஆர்ப்பரிக்கிறது அரங்கம். இது அக்காலம் ஆனாலும் கலை தனக்கான வாழ்நாளை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது என்பதற்கான சாட்சியம் இது! The Color Purple மொத்தத்தில், `தி கலர் பர்ப்பிள்' ஆப்ரோ அமெரிக்கப் பெண்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி ஒரு சக்திவாய்ந்த பார்வையை இன்றும் வழங்குகிறது. தொழில்நுட்பம், பாடல் என அதன் மணம் சற்றே மாறினாலும், வாழ்வின் இருத்தலை அழுத்தமாகப் பேசும் அந்த பர்ப்பிள் பூக்களின் நிறங்கள் மாறவே இல்லை.
Doctor Vikatan: தலைக்குக் குளிக்க எது பெஸ்ட்... சீயக்காயா, ஷாம்பூவா?
Doctor Vikatan: என் வயது 38. பல வருடங்களாக கடைகளில் வாங்கும் சீயக்காய் தூளைத்தான் தலைக்குக் குளிக்கப் பயன்படுத்துகிறேன். சமீப காலமாக என் முடி மிகவும் வறண்டு, உடைந்துபோவதைப் பார்க்கிறேன். சீயக்காய்தான் காரணம் என்றும் ஷாம்பூவுக்கு மாறும்படியும் சொல்கிறாள் என் தோழி. சீயக்காய் உபயோகித்தால் கூந்தல் வறண்டுபோகுமா... நல்ல ஷாம்பூவை எப்படித் தேர்ந்தெடுப்பது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக் கீதா அஷோக் ஷாம்பூவும் சரி, சீயக்காயும் சரி... இரண்டுமே கூந்தலைச் சுத்தப்படுத்தும் கிளென்சர்தான். ஷாம்பூதான் சிறந்தது என்றோ, சீயக்காய்தான் சிறந்தது என்றோ சொல்ல முடியாது. எதை, எப்படித் தேர்ந்தெடுக்கிறோம், எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். சீயக்காயும் தலைமுடியை வறண்டுபோகச் செய்யலாம். காரணம், அதில் சேர்க்கப்படுகிற பொருள்கள். சரியான ஷாம்பூவை தேர்ந்தெடுக்காதபோது, அதுவும் கூந்தலை வறட்சியாக்கி, உடைந்துபோகச் செய்யலாம். குறிப்பாக, அதிக காரத்தன்மை உள்ள ஷாம்பூ அப்படிச் செய்யும். ஷாம்பூவில் சல்ஃபர், எஸ்எல்எஸ், பாரபென் போன்றவை உள்ளனவா, எந்த அளவு உள்ளன என்றெல்லாம் பார்த்து வாங்குவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஷாம்பூவில் கெமிக்கல் கலவை என்பது தவிர்க்க முடியாதது. நன்றாக நுரை வந்தால்தான் நன்றாகச் சுத்தம் செய்யும் என சிலர் நினைத்துக்கொள்வார்கள். ஆனால், அதிகமாக நுரைத்தால் அது நல்ல ஷாம்பூவே இல்லை. நம் மண்டைப்பகுதியில் உள்ள இயற்கையான எண்ணெய்ப்பசையை அகற்றாதபடி, குறைவாக நுரைக்கும் ஷாம்பூவே சரியானது சீயக்காய் Doctor Vikatan: கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது அவசியமா? சிலர் அளவுக்கதிமாக ஷாம்பூ பயன்படுத்துவார்கள். மூன்று, நான்கு முறை ஷாம்பூ தேய்த்து அலசுவார்கள்.இப்படிச் செய்தாலே மண்டைப்பகுதி வறண்டுபோய், முடி உடைந்து உதிரும். சாஷேவாக வாங்கும்போது அதில் இருக்கும் அளவுதான் சரியானது. அதற்கு மேல் பயன்படுத்தினால் அது அதிகம் என்றே அர்த்தம். முடியை அடர்த்தியாக்கும் ஷாம்பூக்களையும் தவிர்க்க வேண்டும். எனவே, உங்கள் விஷயத்தில் நீங்கள் கடையில் வாங்கிப் பயன்படுத்துவதாகச் சொல்லும் சீயக்காயின் தரம் எப்படிப்பட்டது என்று தெரியவில்லை. வீட்டிலேயே தரமான பொருள்களைக் கொண்டு சீயக்காயுடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
The Color Purple: `வாழ்வில் நம் இருத்தல்தான் முக்கியம்!'நம்பிக்கை விதைக்கும் மூன்று தலைமுறையின் கதை
செலி “நான் ஏழை, நான் கறுப்பி, எனக்கு அழகில்லை, சமைக்கவும் தெரியாது, ஆனால் நான் இருக்கிறேன். என் இருப்பு முக்கியம், என் குரல் கேட்கப்பட வேண்டும்.” என்று அழுத்தம் திருத்தமாக செலி பாட ஒட்டுமொத்த திரையரங்கமும் ஆர்ப்பரிக்கிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடைபெறவில்லை. சென்னையின் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அரங்கேறியது. இந்த மார்ச் மாதம் உலகம் முழுக்க ‘பெண்கள் வரலாற்று மாத’மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய மாதமான பிப்ரவரி மாதம் ‘கறுப்பர் வரலாற்று மாத’மாகக் கடைப்பிடிக்கப்பட்டது. The Color Purple இதனையொட்டி பல்வேறு பண்பாட்டு கலாசார நிகழ்வுகள் உலகம் முழுக்க நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் (Consulate General of the United States, Chennai) சத்யம் திரையரங்கில் 2023-ம் ஆண்டு வெளியான ‘தி கலர் பர்ப்பிள்’ படத்தினை சிறப்புத் திரையிடல் செய்ய ஏற்பாடு செய்திருந்தது. அப்போது ஏற்பட்ட ஆரவாரம் இந்தப் படத்தின் விமர்சனத்தைத் தாண்டி வரலாற்றினை நம்மைத் தேட வைத்தது. 2023-ல் வெளியான `தி கலர் பர்ப்பிள்' திரைப்படம், ஆலிஸ் வாக்கர் எழுதி, அதே பெயரில் வெளிவந்த உலகப் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. மேலும் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்றால் 1985-ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இதே பெயரில் இயக்கிய திரைப்படத்தின் `மியூஸிக்கல் ரீமேக்' என்று இந்த 2023 படத்தைச் சொல்லலாம். கடந்த நாற்பது ஆண்டுகளாகக் காவியமாகப் போற்றப்படும் `கல்ட் கிளாசிக்' தன்மையடைந்த இந்த எழுத்துக்குப் பல திசைகளிலிருந்து விமர்சனங்களும் இருக்கின்றன. சிலர் இதைத் தடை செய்ய வேண்டும் என்கிறார்கள், சிலர் இதைப் போற்றிப் புகழ்கிறார்கள், இன்னும் சிலர் இதை இன்றுவரையிலும் கொண்டாடுகிறார்கள். The Color Purple அமெரிக்காவில் இனவெறி, பெண்களுக்கு எதிரான பாகுபாடு உச்சத்திலிருந்த 1900-களின் தொடக்கக் காலகட்டம். அப்போது ஜார்ஜியாவில் தந்தையின் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஆப்ரோ அமெரிக்கப் பெண்மணி செலி, பிறகு ஆணாதிக்க கணவன் ஆல்பர்டிடம் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவரது வாழ்க்கைப் பயணம் எப்படி மாறுகிறது என்பதை உணர்வுபூர்வமாக பேசுவதே ‘The Color Purple (2023)’ படத்தின் கதை. இந்த ரீமேக் 1985-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய நாவலின் தழுவலிலிருந்து பெரிதும் மாறுபடுகிறது. கானிய (Ghana) திரைப்பட இயக்குநர் பிளிட்ஸ் பஜாவூல், பாடல்களின் உதவியுடன் ஒரு புதிய பார்வையிலிருந்து இந்தக் கதையை அணுகியிருக்கிறார். கணவரின் கொடுமைகளை எதிர்கொள்வது, பிரிந்த சகோதரியின் கடிதத்துக்காக ஏங்குவது, செக் (Shug) என்ற பாடகியிடம் காதல் வயப்படுவது, ‘என் இருப்பு முக்கியம், என் குரல் கேட்கப்பட வேண்டும்’ என திமிறி எழுவதென செலியாக வாழ்ந்திருக்கிறார் ஃபாண்டாசியா பாரினோ. ஆணாதிக்க கணவராக ‘மிஸ்டர்’ ஆல்பர்ட் (கோல்மன் டொமிங்கோ) பல இடங்களில் நமக்கே கோபம் வருகிற அளவுக்கு நேர்த்தியான வில்லனாக வலம்வருகிறார். செலிக்கு அப்படியே நேர்மாறான கதாபாத்திரத்தில் சோஃபியாவாக நடித்துள்ள டேனியல் ப்ரூக்ஸ், யாருக்கும் அஞ்சாத உடல்மொழி, தேர்ந்த நடனம், ஆணாதிக்கத்தைக் கேலி செய்வதென அதகளம் செய்கிறார். அதே நேரத்தில் நிறவெறி ஆதிக்கத்தால் ஒடுங்கிப் போகிற காட்சிகளில் கண்களைக் குளமாக்குகிறது அவரது நடிப்பு. டேனியல் ப்ரூக்ஸ் - The Color Purple இந்த ரீமேக் இசைத்திரைப்படம் வெறும் இசையினால் மட்டும் ஸ்பீல்பெர்க்கின் படத்திலிருந்து வேறுபடாமல், உணர்வாகவே பல இடங்களில் வேறுபடுகிறது. ஸ்பீல்பெர்க் தன் படத்தில் வலியை அதிகமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். இந்தத் திரைப்படமும் அப்படிக் கடத்தியிருந்தாலும் வேகமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்து விடுகிறது. அதேபோல ஸ்பீல்பெர்க், செலியின் வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றியையும் மட்டுமே படத்தின் மையக் கருத்தாக வைத்திருப்பார். ஆனால் பஜாவூலின் இந்தத் தழுவல், செலி மற்றும் ஷக் (டாராஜி பி.ஹென்சன்) இடையேயான காதலை உணர்ச்சிகரமாகச் சித்திரித்திருக்கிறது. அன்றைய சூழலில் வாழ்ந்த வயதான ஆப்ரோ அமெரிக்கப் பெண்களுக்கு இடையேயான காதலை இவ்வளவு அழகாகக் காட்டுவது மிகவும் புதுமையானது. A Killer Paradox Review: தற்செயலான கொலை, தொடரும் குற்றங்கள் - ஒரு வேற லெவல் கொரியன் வெப்சீரிஸ்! நடிகர் அனைவரின் நடிப்பும் மிக அற்புதமாக இருந்தாலும் இசைப்பட வடிவம் காரணமாக, கதையை விடப் பாடல்கள் வேகமாகச் செல்கின்றன. இதனால் செலியின் உணர்ச்சிகளை முழுமையாகப் புரிந்துகொள்வதில் சற்று சிரமம் இருக்கிறது. செலியின் கணவன் ஆல்பர்ட், அவரது தந்தை அல்போன்சோ (டியோன் கோல்) ஆகியோரின் கொடுமைகள் மிக அவசர அவசரமாகக் காட்டப்பட்டுள்ளன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்திலிருந்த கதாபாத்திர உணர்வுகளின் ஆழம் இதில் மிஸ்ஸிங். சில இடங்களில் கறுப்பின ஆண்களை அதீதமான வில்லன்களாகக் காட்டுவது போன்ற உணர்வும் தோன்றுகிறது. The Color Purple 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வசனமாக இருந்தாலும் இன்றும் அதன் தாக்கம் இருக்கவே செய்கிறது. “இதுவரைக்கும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன். என் அப்பாக்கூட சண்டை போட வேண்டியிருந்தது. என் தம்பிங்க கூட சண்டை போட வேண்டியிருந்தது. என் மாமாக்களோட சண்டை போட வேண்டியிருந்தது. ஆண்கள் அதிகமா நிறைஞ்சிருக்குற குடும்பத்துல ஒரு பெண் குழந்தைக்குப் பாதுகாப்பு இல்ல. ஆனா, என் சொந்த வீட்டுலயே சண்டை போட வேண்டியிருக்கும்னு நான் நினைச்சதே இல்லை” பெரும் மூச்சுவிட்டு மீண்டும் பேச ஆரம்பிக்கிறாள் சோபியா, “கடவுளின் சாட்சியாக நான் ஹார்போவை (கணவன்) மிகவும் காதலிக்கிறேன். ஆனா, அவன் என்னை அடிச்சா, அவனை நான் கொன்னுடுவேன்” என்று அவர் பேசும் வசனத்துக்கு இன்றும் ஆர்ப்பரிக்கிறது அரங்கம். இது அக்காலம் ஆனாலும் கலை தனக்கான வாழ்நாளை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது என்பதற்கான சாட்சியம் இது! The Color Purple மொத்தத்தில், `தி கலர் பர்ப்பிள்' ஆப்ரோ அமெரிக்கப் பெண்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி ஒரு சக்திவாய்ந்த பார்வையை இன்றும் வழங்குகிறது. தொழில்நுட்பம், பாடல் என அதன் மணம் சற்றே மாறினாலும், வாழ்வின் இருத்தலை அழுத்தமாகப் பேசும் அந்த பர்ப்பிள் பூக்களின் நிறங்கள் மாறவே இல்லை.
பாமக-பாஜக கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி. ராமகிருஷ்ணன் விமர்சனம்!
பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் மோசமான நிலைப்பாடு. பாமக பாஜக அமைந்துள்ள கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி என நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள மாற்றம்
விலை அதிகரிப்பு காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால், பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் இதனால் பாண் விற்பனை 40 சதவீதத்தால் குறைந்துள்ளதுடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விற்பனை 25 சதவீதத்தால் குறைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கு 50 ரூபா விதிக்கப்பட்டுள்ளது, முட்டை […]
ஆஸ்திரேலியப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டது. இலங்கையில் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வள மற்றும் கடலோரப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், ஆஸ்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளங்காணும் […]
Motivation Story: 4-வது திருமணம் செய்துகொண்ட 80 வயது மூதாட்டி; வாழ்க்கைப் படிப்பினை சொல்லும் கதைகள்!
`மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது மிக நீண்ட உரையாடல். ஆனால், பார்ப்பதற்கு அது மிகக் குறுகியதாகத் தெரியும்.’ - பிரெஞ்ச் எழுத்தாளர் ஆண்ட்ரே மாரோய்ஸ் (Andre Maurois). `திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பதைச் சொல்வதற்கு இன்றைக்குப் பெரியவர்கள் இருக்கலாம். ஆனால், கேட்பதற்குத்தான் யாரும் தயாராக இல்லை. உலகில் திருமணத்தை முக்கியமானதாக, புனிதமாகக் கருதுபவர்கள் நாம். அதன் மூலம் ஏற்படுவது ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்குமான புதிய உறவு மட்டுமல்ல. இருதரப்பு உறவினர்களையும் ஒன்றிணைத்து, என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் புதிய பந்தத்தை அவர்களுக்குள் உருவாக்கும் நிகழ்வு. சரியான வாழ்க்கைத்துணை அமைந்துவிட்டால் ஒருவர் தன் வாழ்நாள்களை நிம்மதியாகக் கழிக்கலாம். திருமணம் சிலருக்கு மண வாழ்க்கை நன்றாக அமைவதில்லை; சிலருக்கு வாழ்க்கைத்துணை இறந்துபோயிருக்கலாம்; சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதியர் பிரிந்துபோயிருக்கலாம்... அது போன்ற காரணங்களுக்காக மறுமணம் செய்துகொள்கிறார்கள். இப்போதெல்லாம் மறுமணம் வெகு சகஜமாகிவிட்டது. அதேநேரத்தில், மறுமணம் குறித்த சில செய்திகள் நம்மை அயரவைக்கின்றன. எதற்கு இப்படிச் செய்கிறார்கள் என்று யோசிக்கவைக்கின்றன. அமெரிக்காவில் 80 வயது மூதாட்டி மறுமணம் செய்துகொண்ட கதை இது. அந்த முதிய பெண்மணிக்கு அது நான்காவது திருமணம். ஆனால், அந்தப் பெண்மணி, தான் ஏன் நான்காவதாக ஒருவரை, அதுவும் இந்த வயதில் திருமணம் செய்துகொண்டார் என்பதற்குச் சொன்ன காரணம் அழுத்தமான ஒன்று. அவர் இருந்த ஊரில், உள்ளூர் பத்திரிகை ஒன்று அந்தப் பெண்மணியைப் பேட்டி எடுப்பதற்கு ஒரு நிருபரை அனுப்பிவைத்தது. நிருபர் அந்தப் பெண்மணியிடம் பேச ஆரம்பித்தார். அவருடைய உடல்நலம், வாழ்க்கை, அதில் இனிப்பான பக்கங்கள், அவருடைய பெற்றோர், அவர் பார்த்த வேலை, தோழிகள், அவருடைய பொழுதுபோக்கு என நீண்டது உரையாடல். இறுதியாக நிருபர் அந்தக் கேள்விக்கு வந்தார். ``இப்போ திருமணம் செய்யப்போறீங்களே... அவர் என்ன வேலை பார்க்கிறார்?’’ ``ஃப்யூனரல் டைரக்டர். அதாங்க, இறுதிச்சடங்கு காரியங்களையெல்லாம் தலைமை தாங்கி நடத்துற வேலை.’’ `அன்பு பற்றாக்குறையால் அல்ல, நட்பு பற்றாக்குறைதான் பல மகிழ்ச்சியற்ற திருமணங்களை உருவாக்குகிறது.’ - நீட்ஷே. நம் ஊரில் `சவ அடக்கம் செய்பவர்’ என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், மேலை நாடுகளில் இறுதிச்சடங்குகளை நேர்த்தியாகச் செய்வதற்கென்றே `ஃப்யூனரல் டைரக்டர்’ (Funeral Director) என்பவர் இருப்பார். அவர் தலைமையில், அவர் ஒருங்கிணைப்பில்தான் மரணமடைந்தவரின் இறுதிக் காரியங்கள் நடைபெறும். பண்டைய எகிப்திலும் ரோமிலும் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு. இப்போதும் அமெரிக்காவிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் `ஃப்யூனரல் டைரக்டர்’ என்பவர் இருக்கிறார். சரி, கதைக்கு வருவோம். உறவுகள் சிறிது நேரம் அமைதி நிலவியது. நிருபர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ``மேடம், நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?’’ ``கேளுங்க.’’ ``உங்களோட மற்ற கணவன்மார்கள் என்ன வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க?’’ மூதாட்டி சிறிது நேரம் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அவர் மனதில் பழைய நினைவுகளெல்லாம் கிளர்ந்தெழுந்தன. அவர் முகத்தில் புன்னகை தோன்றியது. அவர் பேச ஆரம்பித்தார். ``முதல்ல நான் பேங்க்ல வேலை பார்க்கிற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அப்போ எனக்கு 20 வயசு. ரெண்டாவதா சர்க்கஸ்ல ரிங் மாஸ்டரா இருக்குற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அப்போ எனக்கு 40 வயசு. மூணாவதா, மதப் பிரசாரம் செய்யற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அப்போ எனக்கு 60 வயசு. இப்போ ஒரு ஃப்யூனரல் டைரக்டரைக் கல்யாணம் பண்ணியிருக்கேன், இப்போ எனக்கு 80 வயசு.’’ நிருபர், அந்த மூதாட்டியைத் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார். ``சரிங்க மேடம், நீங்க ஏன் இப்பிடி வெவ்வேற தொழில்களைச் செய்யறவங்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?’’ மூதாட்டி சிரித்தபடி பதில் சொன்னார்... ``முதல் ஆளை பணத்துக்காகக் கல்யாணம் செஞ்சுகிட்டேன். ரெண்டாவது நபரை அவர் செஞ்ச சாகசத்துக்காகக் கல்யாணம் செஞ்சுகிட்டேன். மூணாவது மனுஷனை அடுத்த என்னோட பயணத்துக்குத் தயாராகுறதுக்காகப் பண்ணிக்கிட்டேன். நான்காவதா இப்போ இவரைக் கல்யாணம் பண்ணியிருக்கறது என் பயணத்துக்கு... அது, சிறப்பா இருக்கணும்கறதுக்கு.’’ வாழ்க்கை கற்றுத்தந்த படிப்பினையும், அனுபமும், அறிவு முதிர்ச்சியும்தான் அந்தப் பெண்மணியை இப்படிச் சிந்திக்கவைத்திருக்கின்றன. மரணத்தை அவ்வளவு லகுவாக எதிர்கொள்ளச் செய்திருக்கின்றன. இந்தப் பக்குவம் எல்லோருக்கும் வர வேண்டும். அது சாத்தியம்தானா? சாத்தியம்தான். அதற்கு ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். எபிக்டேடஸ் `தனக்குத் தானே எஜமானனாக இருக்க முடியாத எந்த மனிதனும் சுதந்திரமாக இருப்பதில்லை.’ - கிரேக்க தத்துவவியலாளர் எபிக்டேடஸ் (Epictetus). பிறக்கும்போதே ஒவ்வோர் உயிருக்கும் மரணம் என்பது எழுதியாகிவிட்டது. மரணத்தை வென்றவர்கள் எவரும் இல்லை. அது கிடக்கட்டும். எல்லோருக்குள்ளும் இருக்கிற கேள்வி ஒன்று உண்டு. `மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்?’ அதாவது, இப்படி வைத்துக்கொள்வோம். திடீரென்று கண்ணை மூடிவிடுகிறோம். இந்த வாழ்க்கையிலிருந்து விடைபெறுகிறோம். மறுபக்கம் என்ன இருக்கிறது, அடுத்து நாம் என்ன ஆவோம் என்கிற கேள்வி ஒவ்வொரு மனிதனையும் உறுத்தும் ஒன்று. அதற்குத் தங்களுக்குத் தெரிந்த வகையில் பலரும் பலவிதமாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒரு டாக்டர், இந்தக் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதைப் பார்ப்போம். மருத்துவமனை. அந்த நோயாளியைப் பரிசோதித்துவிட்டு, சில அறிவுரைகளைச் சொல்லிவிட்டு, புதிதாக ப்ரிஸ்கிரிப்ஷனை எழுதித் தந்துவிட்டு அந்த டாக்டர் கிளம்பினார். படுக்கையிலிருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வாழ்நாளை இழந்துகொண்டிருந்தார். அது அவருக்கே தெரிந்திருந்தது. அவர் கேட்டார்... ``டாக்டர், ஒரு நிமிஷம்... எனக்கு சாகுறதுக்கு பயமாயிருக்கு. செத்ததுக்கு அப்புறம் எனக்கு என்னவாகும்... அந்தப் பக்கம் என்ன இருக்கு?’’ டாக்டர், அந்த மனிதரை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார்... ``எனக்குத் தெரியாது.’’ ``உங்களுக்குத் தெரியாதா... நாள் தவறாம சாமி கும்பிடுறீங்க. பார்க்கறதுக்கே பக்திமயமா இருக்கீங்க... உங்களுக்குத் தெரியாதா?’’ அதற்கு பதில் சொல்லாமல் கதவு வரை போன டாக்டர், கதவின் கைப்பிடியைத் தொட்டார். அவர் தொட்டவுடனேயே கதவின் மறுபக்கம் ஒரு சிணுங்கல் கேட்டது. டாக்டர் கதவைத் திறந்தார். அவ்வளவுதான். கதவின் மறுபக்கம் இருந்த அவருடைய செல்ல நாய் பாய்ந்து உள்ளே வந்தது. அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. தன் இரு முன்னங்கால்களையும் தூக்கி அவர் இடுப்பில் வைத்து, வாலை ஆட்டியபடி, அவரை அள்ளிக்கொள்வதுபோலக் கொஞ்ச முயன்றது. நாய் டாக்டர், அந்த மனிதனைத் திரும்பிப் பார்த்துவிட்டுச் சொன்னார்... ``என்னோட நாயைப் பார்த்தீங்களா... இதுக்கு முன்னாடி இது இந்த ரூமுக்குள்ள வந்தது கிடையாது. இங்கே நான் என்ன பண்றேன்னெல்லாம் அதுக்குத் தெரியாது. அதுக்குத் தெரிஞ்சதெல்லாம் இங்கே அதோட எஜமான் இருக்காரு... கதவு திறந்தா போதும், அது பயமில்லாம என்மேல பாயும். தன்னோட அன்பை எப்பிடியெல்லாம் காட்டணுமோ அப்பிடிக் காட்டும். எனக்கும், மரணத்துக்கு அப்புறம் அந்தப் பக்கம் என்ன இருக்கும்னு ஒரு சின்ன ஐடியா இருக்கு. என்னோட செல்லப்பிராணி மாதிரியேதான் நானும். எனக்கும் ஒரு விஷயம் தெரியும். என்னோட எஜமானர் அங்கே இருக்காரு... அது போதும்.’’
Motivation Story: 4-வது திருமணம் செய்துகொண்ட 80 வயது மூதாட்டி; வாழ்க்கைப் படிப்பினை சொல்லும் கதைகள்!
`மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது மிக நீண்ட உரையாடல். ஆனால், பார்ப்பதற்கு அது மிகக் குறுகியதாகத் தெரியும்.’ - பிரெஞ்ச் எழுத்தாளர் ஆண்ட்ரே மாரோய்ஸ் (Andre Maurois). `திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பதைச் சொல்வதற்கு இன்றைக்குப் பெரியவர்கள் இருக்கலாம். ஆனால், கேட்பதற்குத்தான் யாரும் தயாராக இல்லை. உலகில் திருமணத்தை முக்கியமானதாக, புனிதமாகக் கருதுபவர்கள் நாம். அதன் மூலம் ஏற்படுவது ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்குமான புதிய உறவு மட்டுமல்ல. இருதரப்பு உறவினர்களையும் ஒன்றிணைத்து, என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் புதிய பந்தத்தை அவர்களுக்குள் உருவாக்கும் நிகழ்வு. சரியான வாழ்க்கைத்துணை அமைந்துவிட்டால் ஒருவர் தன் வாழ்நாள்களை நிம்மதியாகக் கழிக்கலாம். திருமணம் சிலருக்கு மண வாழ்க்கை நன்றாக அமைவதில்லை; சிலருக்கு வாழ்க்கைத்துணை இறந்துபோயிருக்கலாம்; சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதியர் பிரிந்துபோயிருக்கலாம்... அது போன்ற காரணங்களுக்காக மறுமணம் செய்துகொள்கிறார்கள். இப்போதெல்லாம் மறுமணம் வெகு சகஜமாகிவிட்டது. அதேநேரத்தில், மறுமணம் குறித்த சில செய்திகள் நம்மை அயரவைக்கின்றன. எதற்கு இப்படிச் செய்கிறார்கள் என்று யோசிக்கவைக்கின்றன. அமெரிக்காவில் 80 வயது மூதாட்டி மறுமணம் செய்துகொண்ட கதை இது. அந்த முதிய பெண்மணிக்கு அது நான்காவது திருமணம். ஆனால், அந்தப் பெண்மணி, தான் ஏன் நான்காவதாக ஒருவரை, அதுவும் இந்த வயதில் திருமணம் செய்துகொண்டார் என்பதற்குச் சொன்ன காரணம் அழுத்தமான ஒன்று. அவர் இருந்த ஊரில், உள்ளூர் பத்திரிகை ஒன்று அந்தப் பெண்மணியைப் பேட்டி எடுப்பதற்கு ஒரு நிருபரை அனுப்பிவைத்தது. நிருபர் அந்தப் பெண்மணியிடம் பேச ஆரம்பித்தார். அவருடைய உடல்நலம், வாழ்க்கை, அதில் இனிப்பான பக்கங்கள், அவருடைய பெற்றோர், அவர் பார்த்த வேலை, தோழிகள், அவருடைய பொழுதுபோக்கு என நீண்டது உரையாடல். இறுதியாக நிருபர் அந்தக் கேள்விக்கு வந்தார். ``இப்போ திருமணம் செய்யப்போறீங்களே... அவர் என்ன வேலை பார்க்கிறார்?’’ ``ஃப்யூனரல் டைரக்டர். அதாங்க, இறுதிச்சடங்கு காரியங்களையெல்லாம் தலைமை தாங்கி நடத்துற வேலை.’’ `அன்பு பற்றாக்குறையால் அல்ல, நட்பு பற்றாக்குறைதான் பல மகிழ்ச்சியற்ற திருமணங்களை உருவாக்குகிறது.’ - நீட்ஷே. நம் ஊரில் `சவ அடக்கம் செய்பவர்’ என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், மேலை நாடுகளில் இறுதிச்சடங்குகளை நேர்த்தியாகச் செய்வதற்கென்றே `ஃப்யூனரல் டைரக்டர்’ (Funeral Director) என்பவர் இருப்பார். அவர் தலைமையில், அவர் ஒருங்கிணைப்பில்தான் மரணமடைந்தவரின் இறுதிக் காரியங்கள் நடைபெறும். பண்டைய எகிப்திலும் ரோமிலும் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு. இப்போதும் அமெரிக்காவிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் `ஃப்யூனரல் டைரக்டர்’ என்பவர் இருக்கிறார். சரி, கதைக்கு வருவோம். உறவுகள் சிறிது நேரம் அமைதி நிலவியது. நிருபர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ``மேடம், நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?’’ ``கேளுங்க.’’ ``உங்களோட மற்ற கணவன்மார்கள் என்ன வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க?’’ மூதாட்டி சிறிது நேரம் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அவர் மனதில் பழைய நினைவுகளெல்லாம் கிளர்ந்தெழுந்தன. அவர் முகத்தில் புன்னகை தோன்றியது. அவர் பேச ஆரம்பித்தார். ``முதல்ல நான் பேங்க்ல வேலை பார்க்கிற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அப்போ எனக்கு 20 வயசு. ரெண்டாவதா சர்க்கஸ்ல ரிங் மாஸ்டரா இருக்குற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அப்போ எனக்கு 40 வயசு. மூணாவதா, மதப் பிரசாரம் செய்யற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அப்போ எனக்கு 60 வயசு. இப்போ ஒரு ஃப்யூனரல் டைரக்டரைக் கல்யாணம் பண்ணியிருக்கேன், இப்போ எனக்கு 80 வயசு.’’ நிருபர், அந்த மூதாட்டியைத் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார். ``சரிங்க மேடம், நீங்க ஏன் இப்பிடி வெவ்வேற தொழில்களைச் செய்யறவங்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?’’ மூதாட்டி சிரித்தபடி பதில் சொன்னார்... ``முதல் ஆளை பணத்துக்காகக் கல்யாணம் செஞ்சுகிட்டேன். ரெண்டாவது நபரை அவர் செஞ்ச சாகசத்துக்காகக் கல்யாணம் செஞ்சுகிட்டேன். மூணாவது மனுஷனை அடுத்த என்னோட பயணத்துக்குத் தயாராகுறதுக்காகப் பண்ணிக்கிட்டேன். நான்காவதா இப்போ இவரைக் கல்யாணம் பண்ணியிருக்கறது என் பயணத்துக்கு... அது, சிறப்பா இருக்கணும்கறதுக்கு.’’ வாழ்க்கை கற்றுத்தந்த படிப்பினையும், அனுபமும், அறிவு முதிர்ச்சியும்தான் அந்தப் பெண்மணியை இப்படிச் சிந்திக்கவைத்திருக்கின்றன. மரணத்தை அவ்வளவு லகுவாக எதிர்கொள்ளச் செய்திருக்கின்றன. இந்தப் பக்குவம் எல்லோருக்கும் வர வேண்டும். அது சாத்தியம்தானா? சாத்தியம்தான். அதற்கு ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். எபிக்டேடஸ் `தனக்குத் தானே எஜமானனாக இருக்க முடியாத எந்த மனிதனும் சுதந்திரமாக இருப்பதில்லை.’ - கிரேக்க தத்துவவியலாளர் எபிக்டேடஸ் (Epictetus). பிறக்கும்போதே ஒவ்வோர் உயிருக்கும் மரணம் என்பது எழுதியாகிவிட்டது. மரணத்தை வென்றவர்கள் எவரும் இல்லை. அது கிடக்கட்டும். எல்லோருக்குள்ளும் இருக்கிற கேள்வி ஒன்று உண்டு. `மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்?’ அதாவது, இப்படி வைத்துக்கொள்வோம். திடீரென்று கண்ணை மூடிவிடுகிறோம். இந்த வாழ்க்கையிலிருந்து விடைபெறுகிறோம். மறுபக்கம் என்ன இருக்கிறது, அடுத்து நாம் என்ன ஆவோம் என்கிற கேள்வி ஒவ்வொரு மனிதனையும் உறுத்தும் ஒன்று. அதற்குத் தங்களுக்குத் தெரிந்த வகையில் பலரும் பலவிதமாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒரு டாக்டர், இந்தக் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதைப் பார்ப்போம். மருத்துவமனை. அந்த நோயாளியைப் பரிசோதித்துவிட்டு, சில அறிவுரைகளைச் சொல்லிவிட்டு, புதிதாக ப்ரிஸ்கிரிப்ஷனை எழுதித் தந்துவிட்டு அந்த டாக்டர் கிளம்பினார். படுக்கையிலிருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வாழ்நாளை இழந்துகொண்டிருந்தார். அது அவருக்கே தெரிந்திருந்தது. அவர் கேட்டார்... ``டாக்டர், ஒரு நிமிஷம்... எனக்கு சாகுறதுக்கு பயமாயிருக்கு. செத்ததுக்கு அப்புறம் எனக்கு என்னவாகும்... அந்தப் பக்கம் என்ன இருக்கு?’’ டாக்டர், அந்த மனிதரை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார்... ``எனக்குத் தெரியாது.’’ ``உங்களுக்குத் தெரியாதா... நாள் தவறாம சாமி கும்பிடுறீங்க. பார்க்கறதுக்கே பக்திமயமா இருக்கீங்க... உங்களுக்குத் தெரியாதா?’’ அதற்கு பதில் சொல்லாமல் கதவு வரை போன டாக்டர், கதவின் கைப்பிடியைத் தொட்டார். அவர் தொட்டவுடனேயே கதவின் மறுபக்கம் ஒரு சிணுங்கல் கேட்டது. டாக்டர் கதவைத் திறந்தார். அவ்வளவுதான். கதவின் மறுபக்கம் இருந்த அவருடைய செல்ல நாய் பாய்ந்து உள்ளே வந்தது. அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. தன் இரு முன்னங்கால்களையும் தூக்கி அவர் இடுப்பில் வைத்து, வாலை ஆட்டியபடி, அவரை அள்ளிக்கொள்வதுபோலக் கொஞ்ச முயன்றது. நாய் டாக்டர், அந்த மனிதனைத் திரும்பிப் பார்த்துவிட்டுச் சொன்னார்... ``என்னோட நாயைப் பார்த்தீங்களா... இதுக்கு முன்னாடி இது இந்த ரூமுக்குள்ள வந்தது கிடையாது. இங்கே நான் என்ன பண்றேன்னெல்லாம் அதுக்குத் தெரியாது. அதுக்குத் தெரிஞ்சதெல்லாம் இங்கே அதோட எஜமான் இருக்காரு... கதவு திறந்தா போதும், அது பயமில்லாம என்மேல பாயும். தன்னோட அன்பை எப்பிடியெல்லாம் காட்டணுமோ அப்பிடிக் காட்டும். எனக்கும், மரணத்துக்கு அப்புறம் அந்தப் பக்கம் என்ன இருக்கும்னு ஒரு சின்ன ஐடியா இருக்கு. என்னோட செல்லப்பிராணி மாதிரியேதான் நானும். எனக்கும் ஒரு விஷயம் தெரியும். என்னோட எஜமானர் அங்கே இருக்காரு... அது போதும்.’’
மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்கள்: இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கை
அப்பாவி மனித உயிர்களை அழித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்களை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெற்கு மற்றும் மேல் மாகாணங்களை மையப்படுத்தி 20 விசேட பொலிஸ் குழுக்கள் இன்று (19) முதல் இந்த சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் விசேட அதிரடிப்படைத்தளபதி ஆகியோரின் பூரண மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் […]
முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ரணில் உத்தரவு
முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை விரைவில் முடித்து ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் உட்பட மூன்று மொழிகள் பேசக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு […]
Electoral Bonds: சிக்கிய திமுக... டார்கெட் செய்யும் அதிமுக... தாக்கத்தை ஏற்படுத்துமா?
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் நாட்டையே உலுக்கிவருகிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலமாக, அதிகளவில் பயனடைந்த கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ போன்ற மத்திய அரசின் அமைப்புகளை வைத்து மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க பணம் பெற்றது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள், தனிநபர்களிடமிருந்து நிதி பெற்றிருக்கின்றன. பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸும், அதற்கடுத்து காங்கிரஸ் கட்சியும் அதிக நன்கொடையைப் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு நிதி பெற்றன என்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட கட்சிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்திய தேர்தல் ஆணையம் - SBI - Electoral Bond இந்த நிலையில்தான், 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை ஒவ்வொரு கட்சியிடமிருந்தும் தேர்தல் ஆணையம் பெற்றது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க., ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தங்களுக்கு நிதி கொடுத்தவர்களின் விவரங்களை தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால், அ.தி.மு.க., தி.மு.க உள்பட பத்து கட்சிகள் யார் யார் பணம் கொடுத்தார்கள் என்ற விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து, தற்போது அது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. இதில், தமிழ்நாட்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகமான நிதியை தி.மு.க பெற்றிருக்கிறது என்ற விவரம் தெரியவந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.656.5 கோடியை தி.மு.க பெற்றிருக்கிறது. தி.மு.க இதில் சர்ச்சை என்னவென்றால், தி.மு.க-வுக்கு அதிகமாக நிதியைக் கொடுத்திருப்பது தொழிதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் . நான்கு தவணைகளில் ரூ.509 கோடியை அந்த நிறுவனம் கொடுத்திருக்கிறது. மார்ட்டினின் இந்த நிறுவனம்தான், 2019 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் மொத்தம் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கியிருக்கிறது. அதில் 37 சதவிகிதம் (ரூ.509 கோடி) தி.மு.க-வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தி.மு.க பெற்ற ரூ.656.5 கோடி நன்கொடையில், மார்ட்டின் நிறுவனம் வழங்கிய நன்கொடையின் அளவு 77 சதவிகிதம். அதேபோல, ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா என்ஜினீயரிங் என்ற நிறுவனம் தி.மு.க-வுக்கு ரூ.105 கோடி நன்கொடை அளித்திருக்கிறது. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ.14 கோடியும், சன் டி.வி நெட்வொர்க் ரூ.10 கோடியும் வழங்கியிருக்கின்றன. லாட்டரி மார்ட்டின் 2019 தேர்தல் காலகட்டத்தில். சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மூலம் அ.தி.மு.க-வுக்கு ரூ.5 கோடி வழங்கிய இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், தி.மு.க-வுக்கு ரூ.10 கோடி கொடுத்திருக்கிறது. அதேபோல, தி.மு.க-வுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்த கோவையைச் சேர்ந்த லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம், அ.தி.மு.க-வுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. Electoral Bonds: தனிநபர்கள், சிறிய நிறுவனங்கள் மூலமாக பெருநிறுவனங்கள் நிதி வழங்கினவா?! இந்த விவகாரத்தை தி.மு.க-வுக்கு எதிராக கையிலெடுத்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ‘லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் ஃபியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் ரூ.509 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்கத்துடன் எம்.ஜி.ஆர் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டும், என் தலைமையிலான ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டன. ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது’ என்று விமர்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மேலும், மக்களின் உழைப்பைச் சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப் பணத்தை பெற்றிருக்கும் தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலினுக்கு வரும் நாடாளுமன்றத்தில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்’ என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். சமூகவலைதளப் பக்கத்தில் தி.மு.க-வை காட்டமாக விமர்சித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் கொண்டுசெல்ல வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க-வை விமர்சிக்கக்கூடிய மற்றொரு கட்சியான பா.ஜ.க., இந்த விவகாரத்தில் கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது. எனவே, தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை வைத்து, தி.மு.க-வை பா.ஜ.க விமர்சிக்காது. அதனால்தான், இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நேரடியாக தி.மு.க-வை விமர்சிக்காமல் அவர் நழுவியிருக்கிறார். மேலும், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை வைத்து தி.மு.க-வை விமர்சிப்பதைத் தவிர்க்கும் என்றே தெரிகிறது. CAA - அண்ணாமலை அ.தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள்தான், இந்த விவகாரத்தை தி.மு.க-வுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்த முயலும். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்போம் சூளுரைத்துவிட்டு, சூதாட்ட நிறுவனத்திடமிருந்து நன்கொடை பெற்றிருப்பது தி.மு.க-வுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம், அதிமுக இந்த விவகாரத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க போகிறது? அதற்கு திமுக எதிர்வினை எந்த மாதிரி இருக்க போகிறது என்பது வைத்தே மக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என தெரிய வரும்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
Electoral Bonds: சிக்கிய திமுக... டார்கெட் செய்யும் அதிமுக... தாக்கத்தை ஏற்படுத்துமா?
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் நாட்டையே உலுக்கிவருகிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலமாக, அதிகளவில் பயனடைந்த கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ போன்ற மத்திய அரசின் அமைப்புகளை வைத்து மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க பணம் பெற்றது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள், தனிநபர்களிடமிருந்து நிதி பெற்றிருக்கின்றன. பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸும், அதற்கடுத்து காங்கிரஸ் கட்சியும் அதிக நன்கொடையைப் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு நிதி பெற்றன என்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட கட்சிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்திய தேர்தல் ஆணையம் - SBI - Electoral Bond இந்த நிலையில்தான், 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை ஒவ்வொரு கட்சியிடமிருந்தும் தேர்தல் ஆணையம் பெற்றது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க., ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தங்களுக்கு நிதி கொடுத்தவர்களின் விவரங்களை தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால், அ.தி.மு.க., தி.மு.க உள்பட பத்து கட்சிகள் யார் யார் பணம் கொடுத்தார்கள் என்ற விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து, தற்போது அது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. இதில், தமிழ்நாட்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகமான நிதியை தி.மு.க பெற்றிருக்கிறது என்ற விவரம் தெரியவந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.656.5 கோடியை தி.மு.க பெற்றிருக்கிறது. தி.மு.க இதில் சர்ச்சை என்னவென்றால், தி.மு.க-வுக்கு அதிகமாக நிதியைக் கொடுத்திருப்பது தொழிதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் . நான்கு தவணைகளில் ரூ.509 கோடியை அந்த நிறுவனம் கொடுத்திருக்கிறது. மார்ட்டினின் இந்த நிறுவனம்தான், 2019 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் மொத்தம் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கியிருக்கிறது. அதில் 37 சதவிகிதம் (ரூ.509 கோடி) தி.மு.க-வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தி.மு.க பெற்ற ரூ.656.5 கோடி நன்கொடையில், மார்ட்டின் நிறுவனம் வழங்கிய நன்கொடையின் அளவு 77 சதவிகிதம். அதேபோல, ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா என்ஜினீயரிங் என்ற நிறுவனம் தி.மு.க-வுக்கு ரூ.105 கோடி நன்கொடை அளித்திருக்கிறது. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ.14 கோடியும், சன் டி.வி நெட்வொர்க் ரூ.10 கோடியும் வழங்கியிருக்கின்றன. லாட்டரி மார்ட்டின் 2019 தேர்தல் காலகட்டத்தில். சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மூலம் அ.தி.மு.க-வுக்கு ரூ.5 கோடி வழங்கிய இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், தி.மு.க-வுக்கு ரூ.10 கோடி கொடுத்திருக்கிறது. அதேபோல, தி.மு.க-வுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்த கோவையைச் சேர்ந்த லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம், அ.தி.மு.க-வுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. Electoral Bonds: தனிநபர்கள், சிறிய நிறுவனங்கள் மூலமாக பெருநிறுவனங்கள் நிதி வழங்கினவா?! இந்த விவகாரத்தை தி.மு.க-வுக்கு எதிராக கையிலெடுத்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ‘லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் ஃபியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் ரூ.509 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்கத்துடன் எம்.ஜி.ஆர் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டும், என் தலைமையிலான ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டன. ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது’ என்று விமர்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மேலும், மக்களின் உழைப்பைச் சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப் பணத்தை பெற்றிருக்கும் தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலினுக்கு வரும் நாடாளுமன்றத்தில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்’ என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். சமூகவலைதளப் பக்கத்தில் தி.மு.க-வை காட்டமாக விமர்சித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் கொண்டுசெல்ல வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க-வை விமர்சிக்கக்கூடிய மற்றொரு கட்சியான பா.ஜ.க., இந்த விவகாரத்தில் கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது. எனவே, தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை வைத்து, தி.மு.க-வை பா.ஜ.க விமர்சிக்காது. அதனால்தான், இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நேரடியாக தி.மு.க-வை விமர்சிக்காமல் அவர் நழுவியிருக்கிறார். மேலும், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை வைத்து தி.மு.க-வை விமர்சிப்பதைத் தவிர்க்கும் என்றே தெரிகிறது. CAA - அண்ணாமலை அ.தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள்தான், இந்த விவகாரத்தை தி.மு.க-வுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்த முயலும். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்போம் சூளுரைத்துவிட்டு, சூதாட்ட நிறுவனத்திடமிருந்து நன்கொடை பெற்றிருப்பது தி.மு.க-வுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம், அதிமுக இந்த விவகாரத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க போகிறது? அதற்கு திமுக எதிர்வினை எந்த மாதிரி இருக்க போகிறது என்பது வைத்தே மக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என தெரிய வரும்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
சங்கரராமன் கொலை வழக்கு: மாவட்ட நீதிபதி மீதான நடவடிக்கை... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மேலாளராக இருந்த சங்கரராமன் 2004-ம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் தேதி கோயிலுக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சங்கரராமன் அப்போது, ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஏ.ராஜசேகரன், குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார், சங்கராச்சாரியாருக்கு வேண்டப்பட்ட கெளரி காமாட்சி, உயர் நீதிமன்ற மதுரை கிளை பிரிவு அதிகாரி ரமேஷ்குமார் ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இது சம்பந்தமாக உயர் நீதிமன்றம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை, காவல்துறை அதிகாரி நடத்திய உண்மை கண்டறியும் விசாரணை அடிப்படையில் ராஜசேகரனுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் நடத்திய இந்த விசாரணையின் அடிப்படையில் ராஜசேகரனை பணிநீக்கம் செய்து 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் நீதிபதி ராஜசேகரன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, `நீதிபதிகள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும். இந்த வழக்கில் முன்னாள் நீதிபதி ராஜசேகரனின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
சங்கரராமன் கொலை வழக்கு: மாவட்ட நீதிபதி மீதான நடவடிக்கை... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மேலாளராக இருந்த சங்கரராமன் 2004-ம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் தேதி கோயிலுக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சங்கரராமன் அப்போது, ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஏ.ராஜசேகரன், குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார், சங்கராச்சாரியாருக்கு வேண்டப்பட்ட கெளரி காமாட்சி, உயர் நீதிமன்ற மதுரை கிளை பிரிவு அதிகாரி ரமேஷ்குமார் ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இது சம்பந்தமாக உயர் நீதிமன்றம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை, காவல்துறை அதிகாரி நடத்திய உண்மை கண்டறியும் விசாரணை அடிப்படையில் ராஜசேகரனுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் நடத்திய இந்த விசாரணையின் அடிப்படையில் ராஜசேகரனை பணிநீக்கம் செய்து 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் நீதிபதி ராஜசேகரன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, `நீதிபதிகள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும். இந்த வழக்கில் முன்னாள் நீதிபதி ராஜசேகரனின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
கனடாவில் மூடப்பட்ட இருந்த மருத்துவமனை கதவு! வலியால் வாசலில் குழந்தையை பெற்றெடுத்த தாய்!
கனடாவில் மருத்துவமனை வாசலில் இளம்பெண் ஒருவர் பிரசவித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வாசலில் பிரசவித்த பெண் கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்த நிலையில், இளம்பெண் ஒருவர் மருத்துவமனை வாசலில் பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது. சத்தம் கேட்டதை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் வெளியே வந்து பார்த்த போது, தாயும், புதிதாக பிறந்த குழந்தையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் […]
அதானி பங்குகள் அனைத்தும் சரிவு.. TCS பங்குகளை விற்கும் டாடா.. அதிரடி உயர்வில் ரயில்டெல் பங்கு!
அதானி பங்குகள் கடும் சரிவு.. அதானி குழுமம் இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா என அமெரிக்கா தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமாக இல்லாவிட்டாலும்கூட, ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்தால், அந்த நிறுவனம் குறித்து விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க சட்டம் அனுமதி அளிக்கிறது. எனவே, மின்சக்தித் திட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதா என அதானி குழுமம் மற்றும் அதன் தலைவர் கவுதம் அதானி குறித்து அமெரிக்கா விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. எனினும், இந்தத் தகவலை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஆனாலும், மார்ச் 18-ம் தேதி அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து பங்குகளும் இறக்கம் கண்டிருக்கின்றன. adani பூனாவாலா ஃபின்கார்ப் பங்கு விலை உயர்வு.. ஹெச்.டி.எஃப்.சி பேங்க் குழுமத்தின் தலைவர் அரவிந்த் கபில், பூனாவாலா ஃபின்கார்ப் (Poonawalla Fincorp) நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் 24-ம் தேதி அவரது ஐந்து ஆண்டு பதவிக்காலம் தொடங்குகிறது. பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனத்தின் தற்போதைய சி.இ.ஓ அபய் புடாடா பணி ஓய்வுபெறுவதால்ம் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன. அரவிந்த் கபில் இதற்குமுன் ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுக் கடன் பிரிவை நிர்வகித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம் சி.இ.ஓ பதவி கொடுத்ததற்கு சந்தை பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதனால் மார்ச் 18-ம் தேதி பூனாவாலா ஃபின்கார்ப் பங்கு விலை 4% மேல் உயர்ந்தது. அதிரடி உயர்வில் ரயில்டெல் பங்கு.. ரயில்வே துறையை சேர்ந்த ரயில்டெல் (RailTel) நிறுவனம் மும்பை மாநகராட்சியிடம் இருந்து 351.95 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றுள்ளது. Railtel இதன்படி, மும்பை மாநகராட்சியின் சுகாதாரத் துறைக்கு தேவையான சுகாதார மேலாண்மை தகவல் அமைப்புகளை ரயில்டெல் நிறுவனம் அமைக்க வேண்டும். 2030-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதிக்குள் இந்த ஆர்டர் நிறைவேற்றப்பட வேண்டும். ஏற்கெனவே மார்ச் 16-ம் தேதி ரயில்டெல் நிறுவனம் பீஹார் கல்வித் திட்ட கவுன்சிலிடம் இருந்து 130.60 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்னொரு ஆர்டரைப் பெற்றிருந்தது. இதனால், மார்ச் 18-ம் தேதி ரயில்டெல் பங்கு விலை சுமார் 8% வரை உயர்ந்தது. HAL - Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் பங்கு ஏற்றம்.. பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் (Hindustan Aeronautics) இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து 2,890 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது. இதன்படி, இந்திய கடற்படைக்கு 25 Dornier விமானங்களையும், அவற்றுக்கு தேவையான உபகரணங்களையும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். இதற்குமுன் மார்ச் 13-ம் தேதி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு 8,073 கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொரு ஆர்டரை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது. இந்திய ராணுவத்துக்கும், கடலோரக் காவல்படைக்கும் 34 ஹெலிகாப்டர்களை ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஆர்டர்கள் குவிந்து வரும் நிலையில், மார்ச் 18-ம் தேதி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் பங்கு சுமார் 2.7% உயர்ந்துவிட்டது. டி.சி.எஸ் பங்குகளை விற்கும் டாடா.. டாடா குழுமத்தின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ் (TCS) இயங்கி வருகிறது. TCS | டாடா கன்சல்டன்சி சர்வீஸ் இந்த நிலையில், டாடா சன்ஸ் குழுமம் சுமார் 2.34 கோடி டி.சி.எஸ் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக Bloomberg நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. டி.சி.எஸ் பங்குகள் விற்பனை மூலம் சுமார் 1.1 பில்லியன் டாலர் திரட்டுவதற்கு டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கு 4001 ரூபாய் என்ற விலைக்கு இந்த வர்த்தகம் நடைபெற இருப்பதாக தெரிகிறது. மேலும், மொத்த விற்பனை (Block Deal) வாயிலாகவே டி.சி.எஸ் பங்குகளை டாடா சன்ஸ் விற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 18-ம் தேதி வர்த்தகம் முடிவில் டி.சி.எஸ் பங்கு விலை 4152.50 ரூபாயாக உள்ளது. Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. General Disclaimer and Terms & Conditions of the research report INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration) முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.
தைலாபுரத்தில் அண்ணாமலை,எல்.முருகன்! அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை தமிழகத்தில் பாமக தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வந்திருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் இரு கட்சிகள் இடையே இப்போது கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது. சேலத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பாமக-வும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ``தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது” - பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கிறார். நேற்று கோவையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள்! இன்று மாலை நடந்த ரோட்ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை. பிரதமர் மோடி தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.” என பதிவிட்டுள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
தைலாபுரத்தில் அண்ணாமலை,எல்.முருகன்! அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை தமிழகத்தில் பாமக தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வந்திருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் இரு கட்சிகள் இடையே இப்போது கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது. சேலத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பாமக-வும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ``தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது” - பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கிறார். நேற்று கோவையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள்! இன்று மாலை நடந்த ரோட்ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை. பிரதமர் மோடி தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.” என பதிவிட்டுள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
சீனாவின் புதிய மின்சாரக் கார்: 800 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம்!!
சீன எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் Xiaomi தனது முதல் மின்சார வாகனத்தை மார்ச் 28 அன்று சீனாவில் வழங்க திட்டமிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பேட்டரியில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் காரை நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்தியது. புதிய வாகனம் SU7 என்று அழைக்கப்படுகிறது. SU வேக அல்ட்ரா என்பதைக் குறிக்கிறது. காருக்கு 0 முதல் 100 கிலோ மீற்றர் (0-60 மைல்) வேகத்தில் செல்ல 2.78 வினாடிகள் தேவை. அதிகபட்ச வேகம் மணிக்கு 265 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக்கூடியது. SU7 இன் அடிப்படை விலை சுமார் €33,000 ($36,000) ஆகும். இது SU7 ஐ டெஸ்லா மாடல் 3 உடன் ஒப்பிடலாம். மேலும் போர்ஷேயின் டெய்கானின் விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அமெரிக்கா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த போட்டியாளர்கள் மீது தனது பார்வையைச் சீனா வைத்துள்ளார். டெஸ்லா மற்றும் போர்ஷே வரை நிற்கும் ஒரு கனவு காரை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம் என Xiaomi நிர்வாக அதிகாரி லீ ஜொன் (Lei Jun) கூறினார். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியுடன் கூடிய அதிகபட்ச வரம்பு 800 கிலோமீட்டர்கள் (500 மைல்கள்) என உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் உள்ள பிரீமியம் கார் உற்பத்தியாளர்கள் தூர கிழக்கிலிருந்து மற்றொரு போட்டியாளரை சமாளிக்க வேண்டியிருக்கும்.
தங்க கட்டிகளுக்கு பதிலாக Gold Beansகளை வாங்கிக் குவிக்கும் சீனத்து இளைஞர்கள்…விரிவான தகவல்
தங்கத்தின் மீது அதிகம் நாட்டம் காட்டத்துவங்கியிருக்கும் சீனத்து இளைஞர்கள், தற்போது பாதுகாப்பான மிதலீடு என Gold Beansகளை வாங்கிக் குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Gold Beans மோகம் குண்டுமணி போன்ற இந்த Gold Beans தோராயமாக ஒரு கிராம் எடையுடன் 400 முதல் 600 RMB வரை (இந்திய மதிப்பில் ரூ 5,209 முதல் 7,814) இருக்கும் என்றே கூறப்படுகிறது. இந்த Gold Beans மோகம் தற்போது சீனத்து இளம் தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளதாகவும் மாதம் ஒரு பீன்ஸ் […]
இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள்.!
Today horoscope- பங்குனி மாதம் ஆறாம் தேதி[ மார்ச் 19, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும் .பணியில் சக பணியாளர்களால் தொல்லை ஏற்படும், அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் துணையுடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். அதிக அளவில் பணம் காணப்படும் .ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்று பதட்டமான சூழ்நிலையில் இருப்பீர்கள் ,இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது சிறந்தது. உங்கள் பணிகளை திட்டமிட்டு […] The post இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள்.! first appeared on Dinasuvadu .
இந்த வார ராசிபலன்: மார்ச் 19 முதல் 24 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
இந்த வார ராசிபலன்: மார்ச் 19 முதல் 24 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
6-வது நாளாக விலை மாறாமல் நீடிக்கும் பெட்ரோல் –டீசல் விலை ! இன்றைய நிலவரம் இதோ ..!
Petrol Diesel Price : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில்பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. Read More :- தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை! தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி […] The post 6-வது நாளாக விலை மாறாமல் நீடிக்கும் பெட்ரோல் – டீசல் விலை ! இன்றைய நிலவரம் இதோ ..! first appeared on Dinasuvadu .
முகேஷ் அம்பானி குடும்ப ரகசியம்: ரிலையன்ஸில் அதிக பங்கு யார் கையில்?
முகேஷ் அம்பானி என்ற பெயர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து விடுகிறது. ஆனால், நிறுவனத்தின் உரிமை அமைப்பு தலைமை தாண்டி பரவலாக உள்ளது. அம்பானி குடும்பத்திற்குள் அதிகபட்ச பங்குகளை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. அம்பானி குடும்பம்(The Ambani Family) முகேஷ் அம்பானியின்(Mukesh Ambani) குடும்பத்தினர் அனைவருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பங்கு உள்ளது. அவரது மனைவி நீதா அம்பானி(Nita Ambani) நிர்வாகமற்ற இயக்குனர்(non-executive director) இருக்கிறார், அவர்களது மூன்று குழந்தைகள் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் […]
10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை!
சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. குறித்த ஆண் குழந்தை 10 சென்டிமீற்றர் அளவுடன் பிறந்துள்ளது.இதற்கு காரணம் Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வாலில் எந்தவித அசைவும் இருக்காது என்றும், நரம்பு மண்டலத்துடன் அது இணைந்து இருப்பதால் அதனை நீக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முள்ளந்தண்டு வடம் முதுகெலும்பைச் சுற்றியுள்ள திசுக்களில் முதுகுத்தண்டு இணைக்கப்படும்போது, பொதுவாக முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்ட முள்ளந்தண்டு […]
கனடாவில் இடம்பெற்ற வினோத சம்பவம்
கனடாவில் நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அவருக்கே கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இறந்து விட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நிக் பெட்ரோயூரஸ் என்ற நபர் கொஸ்டாரிக்காவிற்கு விடுமுறைக்காக சென்றிருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியதாக தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை மறந்து விட்டு தாம் விடுமுறைக்காக சென்றிருந்தாக அவர் தெரிவித்துள்ளார். […]
ஐ.நா சபையில் பாகிஸ்தானை புறக்கணித்த இந்தியா!
முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட வரைவு தீா்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வரைவுத் தீா்மானத்துக்கு ஆதரவாக 115 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில், எந்தவொரு நாடும் தீா்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை, இந்நிலையில் இந்தியா, பிரித்தானியா, பிரேசில், ஜொ்மனி, இத்தாலி, உக்ரைன் உள்பட 44 நாடுகள் தீா்மானம் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன. இதில், இந்த வரைவுத் தீர்மானம் எதிர்காலத்தில் பிற மதத்தவர்களிடையேயும் வேற்றுமையை ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தை இந்தியா முன்மொழிந்து […]
திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ…அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுமார் 11 கிராமங்களின் மக்கள்!
சீனா – சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஒன்றில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்து கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2024) மாலை பைசி என்ற கிராமத்தின் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தீ வேகமாக பரவி வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள சுமார் 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் […]
மன்னர் சார்ளஸ் இறந்துவிட்டார் அறிவித்த ரஷ்ய ஊடகம்- கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்பாஸீ !
பிரித்தானிய மன்னர் சார்ளஸ் இறந்து விட்டதாக, பங்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது என்று, ஒரு போலியான ஆவணத்தைக் காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளது ரஷ்யா ஊடகம். இதனை அடுத்து பரவலாக ரஷ்யாவில் மன்னர் சார்ளஸ் இறந்து விட்டதாக மக்கள் நம்ப ஆரம்பித்து விட்டார்கள். இன்…
மட்டக்களப்பில் 37 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற இவ் வழக்கு விசாரணையானது மேலும் 2 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வருகை கடந்த ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து […]
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் : மகள் அனுப்பியுள்ள உருக்கமான இரங்கல் செய்தி
கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17.03.2024) இடம்பெற்றுள்ளன. மார்ச் 6 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கனடாவின் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த 19 வயதான மாணவர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தந்தையின் இழப்பில் மனம் உடைந்த மகள் இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் உட்பட […]
வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கான பணத்தை இழக்கும் தமிழர்கள்
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டில் 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன. பண மோசடி குறித்த மோசடிகள் தொடர்பில் இதுவரை 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகவர்களின் மோசடி குறித்து மக்கள் விழிப்படையாத வரை இவ்வாறான மோசடிகளை தடுக்க முடியாது […]
தமிழிசை செளந்தரராஜன் ராஜிநாமா கடிதம்!
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜிநாமா செய்தவதாக குடியரசுத் தலைவருக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் […]
லிஃப்ட் கொடுப்பதாக ஏற்றிச் சென்று பாலியல் வன்கொடுமை; தற்கொலைக்கு முயன்ற பெண்... ஒருவர் கைது!
மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி ஏற்றிச் சென்று, பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் வன்கொடுமை போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, போர்டேஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமையன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த இச்சம்பவம் குறித்து பேசிய துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி (SDOP) ஷாலினி பரஸ்தே, ``பாதிக்கப்பட்ட திருமணமான 38 வயது பெண், சனிக்கிழமை மாலை ஒரு விவசாய பண்ணை நிலத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த இருவர் லிஃப்ட் கொடுக்க தாமாக முன்வந்தனர். அந்த இருவரில் ஒருவர் தனக்குத் தெரிந்தவர் என்பதால், அந்தப் பெண்ணும் ஸ்கூட்டரில் ஏறிச்சென்றார் . அதையடுத்து, அந்த இருவரும் ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். கைது இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதால், தற்போது பெதுல் மாவட்ட மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர், போலீஸாரும், தாசில்தாரும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதையடுத்து, ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக இந்த வழக்கு போர்டேஹி காவல் நிலையத்துக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார். புகையிலை தராததால் வாக்குவாதம்... மதுபோதையில் ஆசிரியரைச் சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி - உபி பயங்கரம்
87 கிராம மக்கள் கடத்திய நைஜீரியாவில் ஆயுததாரிகள்!!
நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஆயுதமேந்திய கும்பல் குறைந்தது 87 பேரைக் கடத்திச் சென்றதாக காவல்துறையினர் இன்று திங்கள்கிழமை தெரிவித்தனர். கடத்திச் சென்ற பணயக்கைதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கஜுரு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் அருகிலுள்ள பிற கிராமங்களில் இருந்து சுமார் 75 பேர் கடத்தப்பட்டனர். மார்ச் மாத தொடக்கத்தில், 287 மாணவர்களும் ஊழியர்களும் அண்டை மாவட்டமான கடுனா மாநிலத்தில் உள்ள சிக்குன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து கடத்தப்பட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது. பணயக்கைதிகளை மீட்க பாதுகாப்பு முகவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர், இருப்பினும், அந்த நேரத்தில் பிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. புதர் வழியாக தப்பி ஓடிய ஐந்து பேர் வீடு திரும்பியதை நாங்கள் இதுவரை பதிவு செய்துள்ளோம் என கடுனா காவல்துறை செய்தித் தொடர்பாளர் மன்சூர் ஹாசன் இச் சம்பவம் குறித்து தெரிவித்தார்.
அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு
பொருட்களின் விலை அதிகரிப்பு வீதத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். ஆனால் தற்போதைய நிலைமை சரியாகிவிட்டது என்று அர்த்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், பணவீக்கம் என்பது பொருட்களின் விலைக் குறைவல்ல. அப்படியானால் பணவாட்டம் ஏற்பட வேண்டும். பொருட்களின் விலை அதிகரிப்பு வீதத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். ஆனால் நிலைமை சரியாகிவிட்டது என அர்த்தப்படாது. சீரான நிலைக்கு வருவதற்கு உரிய காலம் எடுக்கும். […]
பிரியாணியால் பிரேமலதாவுக்கு வந்த சிக்கல்.. அதிரடிக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்
தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் பவுசருடன் போருந்து மோதி பயங்கர விபத்து… 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ல ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதி கவிழ்ந்து தீப்பிடித்ததில் விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது, பயணிகள் பேருந்து ஹெராட் (Herat) நகரில் […]
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு : நோயாளர்கள் விசனம்
அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களின் பணிபகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் எந்தவொரு வைத்திய சேவைகளும் இடம்பெறாது இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நோயாளிகள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் திருக்கோவில் பிரதேச நோயாளிகள் மருத்துவ தேவைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சென்று வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் முன்னெடுப்பு இeந்த சம்பவம் தொடர்பாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் வைத்தியசாலையின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தரிடம் வினவியபோது இதனை […]
மக்களுடனா? தூக்கியடிக்கப்பட்ட மதகுரு!
பூநகரியின் கிராஞ்சிப்பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கான சுண்ணக்கல் அகழ்விற்கு எதிராக உள்ளுர் மக்களுடன் திரண்டு போராடிய கத்தோலிக்க மதகுரு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண ஆயர் ஊடாக தன்னை வெளியேற்ற முற்படுவதாக பகிரங்கமாகவே குறித்த மதகுரு ஊடகங்கள் முன்னிலையில் அண்மையில் தெரிவித்திருந்தார். பூநகரியின் வலைப்பாடு பங்கு தந்தையாக இருந்த கத்தோலிக்க மதகுருவே தற்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். எனினும் தீவகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட வணபிதா ஜிம்பிறவுண் அடிகளாரை போன்றதொரு சூழல் ஏற்படுவதை தவிர்க்கவே யாழ்ப்பாணத்திற்கு மதகுரு மாற்றப்பட்டதாக அவரது நெருங்கிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இறுதியாக பாலைதீவு புனித அந்தோனியார் உற்சவத்தில் பங்கெடுத்த நிலையில் தனது பதவியிலிருந்து அவர் வெளியேறியிருந்தார். இதனிடையே பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கிராமமான பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து உற்பத்திக்கு தேவையான சுண்ணக்கல்லை அகழ்வது தொடர்பான ஆய்வுகள் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அயல் கிராமங்களான கிராஞ்சி வலைப்பாடு வேரவில் ஆகிய பகுதிகளில் மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் ஏற்படுமென தெரிவித்தே அப்பகுதியை சேர்ந்த ஜந்து கிராம மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை! கைதான இருவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
Puducherry: இந்தியாவையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கும் மூன்று நாட்கள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த இரண்டு கொடூரர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More – டிஜிபி உட்பட 6 மாநில உள்துறை செயலாளர்களை பதவி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்! குறித்த சிறுமி பாலியல் […] The post நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை! கைதான இருவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் first appeared on Dinasuvadu .
நாடாளுமன்ற தேர்தல்: சிவகாசியில் கட்சிக் கொடிகள், சின்னங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்!
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகாசியில் கட்சிக் கொடிகள், சின்னங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இலங்கையில் தொடர்ந்தும் பௌத்தத்திற்கே முன்னுரிமையென்பதில் தெற்கு தெளிவாகவே இருந்துவருகின்றது. எனினும் இலங்கை ஜனாதிபதியோ மதகுருமார்கள் அனைவரும் சமமானவர்களே. இங்கு ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது. அனைவரையும் சமத்துவமாக நோக்கவேண்டும். அதுவே இன, மத நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும என கூறிவருகின்ற போதும் தொடர்ச்சியாக இவ்வாறான ஏற்றத்தாழ்வு போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை(17.03.2024) கிளிநொச்சியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் கலந்துகொண்ட நிகழ்வில் பௌத்த மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் வெள்ளைத்துணி விரிக்கப்பட்டுள்ளது. ஏனைய மதங்களுடைய குருமார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்கள் வெறுமையாக காணப்பட்டமை கேள்விகளை தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட பக்தர்கள் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டேயுள்ளனர். கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சிவன் ஆலய வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக்கோரியும் அச்சம்பவத்தைக் கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம் பெற்றுள்ளது .
வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்துள்ளார். எனினும் அத்தகைய முயற்சி தமிழக உறவுகளுடனான மோதல்களிற்கே வழிகோலுமென உள்ளுர் மீனவ அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. வடமாகாண கடற்றொழிலாளர்களின் வலைகளை அழிப்பதற்காக இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நாட்டுக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதைத் தடுப்பதற்கான கடற்படையின் தற்போதைய முயற்சியை கண்காணித்து உதவுவதற்காகவே கடல் காவலர்கள் திட்டம் கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள் ஊடாக தன்னார்வப் படையில் ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் தம்மீது இலங்கை கடற்படை தாக்குதல்களை நடாத்திவருவதான இந்திய மீனவர்களது குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவே இத்தகைய குண்டர்படை உருவாக்கப்படுகின்றதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரபூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன் என தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
அதிரும் அரசியல் களம்.. உறுதியானது பாஜக - பாமக கூட்டணி.. மொத்தமா மாறிருடுச்சே
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது.
மொத்தம் 114 மில்லியன் வாக்காளர்கள்! புடினுக்கு எதிரான Noon.. குவிக்கப்பட்ட பாதுகாப்பு, பொலிஸ் படைகள்
ரஷ்யாவின் மாஸ்கோவில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் பலர் குவிக்கப்பட்டுள்ளனர். 114 மில்லியன் வாக்காளர்கள் மறைந்த எதிர்க்கட்சி ஆர்வலர் அலெக்ஸி நவல்னியினால் ”Noon against Putin” எதிர்ப்பு ஆரம்பத்தில் ஊக்குவிக்கப்பட்டது. உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட 4 பிரதேசங்களில் உள்ள வாக்காளர்களுடன் சேர்த்து ரஷ்யாவில் மொத்தம் 114 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். சனிக்கிழமை மாலைக்குள் 63 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க சென்றதாக ரஷ்ய மத்திய தேர்தல் குழு தெரிவித்தது. தற்போது தேர்தல் வாக்குப்பதிவு நடந்து […]
சிறைச்சாலைகளிலும் பொலிஸாரால் நீதிக்கு புறம்பான கொலைகள் : ஜெனீவாவிற்கு அறிக்கை
கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கியுள்ளது. ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் (CPRP) தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா ஜெனீவாவில் இருந்து காணொளி மூலம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் […]
ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்! ரசிகர்கள் மகிழ்ச்சி
Wanindu Hasaranga: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா திரும்ப பெற்றுள்ளார். 26 வயதான வனிந்து ஹசரங்கா இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுகிறார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளிலும் பங்கேற்று பிரகாசித்து வருகிறார். Read More – ஒருவருடன் ஒருவர் மோதல் ..! இளம் வங்கதேச வீரர் மருத்துவமனையில் அனுமதி ! இந்நிலையில் […] The post ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்! ரசிகர்கள் மகிழ்ச்சி first appeared on Dinasuvadu .
முட்டை சமைத்துத்தர மறுத்த காதலியை சுத்தியால் அடித்து கொலை செய்த காதலன் கைது.. தலைநகரில் பயங்கரம்..
பீகாரை சேர்ந்த ஒருவர் கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருகிறார். காதலியுடன் வசித்து வந்த இவர் முட்டை சமைத்துத்தர மறுத்தவரை கொலை செய்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் ! -வெறுப்பு அரசியலின் குழந்தை.!!
அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களில் ஒன்றான கோல்புரா மாவட்டத்தில், பிரம்மபுத்திரா நதிக்கரையில் தேயிலைத் தோட்டங்களைக் கடந்த மரப்பாலம் ஒன்றைத் தாண்டி
தமிழ்நாட்டுல இப்போதான், கேரளால முன்னாடியே..! - Prithviraj | Aadujeevitham | Shankar | Atlee
தமிழ்நாட்டுல இப்போதான், கேரளால முன்னாடியே..! - Prithviraj | Aadujeevitham | Shankar | Atlee
தயாராகும் பறக்கும் படை | வேட்பாளர்களை அறிவித்த MDMK, CPI | கோவையில் மோடி ரோடு ஷோ - Election Clicks
தயாராகும் பறக்கும் படை | வேட்பாளர்களை அறிவித்த MDMK, CPI | கோவையில் மோடி ரோடு ஷோ - Election Clicks
`Shein பிராண்டில் ஆர்டர் செய்தது உடைகளை; டெலிவரி செய்யப்பட்டதோ...' - வீடியோ வெளியிட்ட இளம்பெண்
(Shein) ஷீன் எனப்படும் பிரபல ஃபேஷன் பிராண்டிலிருந்து உடைகள் ஆர்டர் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா எலியட் என்கிற பெண்மணி, தனது ஆர்டரில் எதிர்பாராதவிதமாக ரத்த மாதிரி குப்பி (Blood Sample) டெலிவரி செய்யப்பட்டதையடுத்து, அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த எலியட் என்பவர், பிரபல ஃபேஷன் பிராண்டான ஷீனிடமிருந்து உடைகள் ஆர்டர் செய்திருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், எலியட்டுக்கு நிறுவனம் தரப்பிலிருந்து அவர் ஆர்டர் செய்த தொகுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால், அதில் அவர் ஆர்டர் செய்த உடைகள் இல்லை... மாறாக அதிர்ச்சியூட்டும் வகையில் ரத்த குப்பி (Blood Sample) இருந்திருக்கிறது. எலியட் - ரத்த மாதிரி குப்பி அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த எலியட், அந்த ரத்த மாதிரியில் குறிப்பிடப்பட்டிருந்த `ரத்தப் பரிசோதனை' நிலையத்தை நாடி, இது குறித்துக் கேட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, எலியட் இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். மேலும், தனக்கு நடந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து டிக்டாக் மற்றும் யூடியூபில் வீடியோவும் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், ``உடைகள் ஆர்டர் செய்த எனக்கு, ரத்த மாதிரி குப்பி கிடைத்தது. அது தொடர்பாக அந்தக் குப்பியில் குறிப்பிட்டிருந்த பரிசோதனை மையத்தை நாடி, விளக்கம் கேட்டேன். அவர்கள், `நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறோம். பொதுவாக நாங்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு மட்டும்தான் ரத்த மாதிரியை அனுப்புவோம். தனி நபர்களுக்கு அனுப்ப மாட்டோம். எனவே, இது தவறாகக் கையாளப்பட்டு, உங்களை வந்து சேர்ந்திருக்கலாம் எனக் கருதுகிறோம்.' எனக் கூறினர். YouTube எனக்கு நடந்ததுபோலவே என்னுடைய நண்பர் ஒருவருக்கும் இதே ஷீன் பிராண்டிலிருந்து உடைகளுக்குப் பதிலாக, உபயோகிக்கப்பட்ட ஊசி வந்திருந்தது. இது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
வெயில் சுட்டெரித்து வருவதால் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் நடந்து செல்ல வண்ண தரை விரிக்கப்பட்டுள்ளது.
கோவையில் Road-Show நடத்திய பிரதமர் மோடி! - Photo Album
கோவையில் Road-Show நடத்திய பிரதமர் மோடி! - Photo Album
IPL 2024 Preview & Analysis: தோனிக்காக கோப்பையை வெல்லுமா CSK?
IPL 2024 Preview & Analysis: தோனிக்காக கோப்பையை வெல்லுமா CSK?
உங்கள் மனதை ஆக்கிரமிக்கும் படமாக இருக்கும் இந்த `கா`!
சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க,
ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல்: 8 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் (2230 GMT) பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் உள்ள பொதுமக்களின் வீடுகள் மீதே பாகிஸ்தான் விமானம் மூலம் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் என எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகமும் தாக்குதல்களை உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்குள் இருக்கும் பாகிஸ்தான் தலிபான்கள் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் தலிபான் ஒரு தனி போராளிக் குழுவாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் கூட்டணி வைத்துள்ளது. வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், அத்தகைய ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறுவது அதன் அண்டை நாடுகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மோசமான விளைவுகளை கொண்டு வரும் என்று தலிபான் பேச்சாளர் எச்சரித்தார். வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று திங்கட்கிழமை பிற்பகுதியில் கனரக ஆயுதங்களுடன் எல்லையில் பாகிஸ்தான் துருப்புக்களை குறிவைத்ததாகக் தலிபான்கள் கூறியது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயமடைந்ததாகவும், வடமேற்கு குர்ரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமவாசிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பாஜக கூட்டணியில் ஐக்கியமானதா பாமக? - தைலாபுர தோட்டத்தில் என்ன நடந்தது?
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நிமிடத்துக்கு நிமிடம் காட்சிகள் மாறும். அப்படி இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் எதுவுமே இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், அப்பணியை சிறப்பாகச் செய்யத் தொடங்கியிருக்கிறது பா.ம.க. ராமதாஸ், அன்புமணி ஒரே நாளில் காலையில் அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திய பா.ம.க, மாலையில் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை முடிவு செய்திருக்கிறது. இதை பா.ம.க-வின் மாநிலப் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உறுதிசெய்திருக்கிறார். இருப்பினும், தலைமையிலிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கூட்டணி தொடர்பான இறுதி முடிவை மூத்த நிர்வாகிகளுக்கு அறிவிக்கும் பா.ம.க-வின் கூட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் மார்ச் 18-ம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாக பா.ம.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் விசாரித்தோம். ``இந்தத் தேர்தலுக்கு அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்று ராமதாஸ் ஆர்வமாக இருந்தார். ஆனால், அன்புமணியோ பா.ஜ.க-வுடன்தான் செல்ல வேண்டுமென்று உறுதியாக இருந்தார். தேர்தல் அரசியல்; தமிழிசை களமிறங்கப் போவது கன்னியாகுமரியா, திருநெல்வேலியா? - இறுதிகட்ட பரபரப்பு! தொடர்ந்து, இரு தலைமையும் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். யார் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்களோ அவர்களிடமே செல்லலாம் என்பதுதான் திட்டம். அதன்படி, அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரம் காட்டின. முதலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதியாகும் என்று தலைமையிடமிருந்து தகவல் வந்தது. ஆனால், ஒரு வாரத்துக்குள் காட்சிகள் மாறி, பா.ஜ.க-வுடன் நெருக்கமானது தலைமை. ஆனால், கடைசி 48 மணிநேரத்தில் எல்லாம் தலைகீழாகி, அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படிதான், பா.ம.க எம்.எல்.ஏ அருள் தலைமையில் மூத்த நிர்வாகிகள் எடப்பாடியைச் சந்தித்துப் பேசினர். இதனால், அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதியாகும் என்ற தகவல் மார்ச் 18-ம் தேதி காலையில் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. பா.ம.க ராமதாஸ் - அன்புமணி இந்நிலையில், இன்று (மார்ச் 18) மாலையே மீண்டும் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தையை தலைமை தீவிரப்படுத்தியிருக்கிறது. அதன்படி பா.ஜ.க-வுடன் கூட்டணியை இறுதி செய்திருக்கிறது தலைமை. இது தொடர்பான தைலாபுரத் தோட்டத்தில் நடந்த நிகழ்வில், சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க-வுடன் சென்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமென்று தலைமை விளக்கியது. இருப்பினும், தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், பா.ஜ.க-வுடன் கூட்டணி என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வா... பா.ஜ.க-வா... என்ற முடிவில் அன்புமணியின் கையே ஓங்கி இருப்பது தெளிவாகி இருக்கிறது. இந்த கூட்டணியில் 9 தொகுதிகள் வரை உறுதியாகி இருப்பதாக சொல்கிறார்கள். மேலும், வேறு மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுத்தாக பாஜக ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், அன்புமணி கோரிய மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. இப்படி மாறி மாறி நடந்த பேச்சுவார்த்தையால், கட்சியில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY “ஒத்தையில நிக்குறேன்!” - கோட்டைவிட்ட எடப்பாடி... குமுறும் அ.தி.மு.க!
பாஜக கூட்டணியில் ஐக்கியமானதா பாமக? - தைலாபுர தோட்டத்தில் என்ன நடந்தது?
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நிமிடத்துக்கு நிமிடம் காட்சிகள் மாறும். அப்படி இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் எதுவுமே இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், அப்பணியை சிறப்பாகச் செய்யத் தொடங்கியிருக்கிறது பா.ம.க. ராமதாஸ், அன்புமணி ஒரே நாளில் காலையில் அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திய பா.ம.க, மாலையில் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை முடிவு செய்திருக்கிறது. இதை பா.ம.க-வின் மாநிலப் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உறுதிசெய்திருக்கிறார். இருப்பினும், தலைமையிலிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கூட்டணி தொடர்பான இறுதி முடிவை மூத்த நிர்வாகிகளுக்கு அறிவிக்கும் பா.ம.க-வின் கூட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் மார்ச் 18-ம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாக பா.ம.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் விசாரித்தோம். ``இந்தத் தேர்தலுக்கு அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்று ராமதாஸ் ஆர்வமாக இருந்தார். ஆனால், அன்புமணியோ பா.ஜ.க-வுடன்தான் செல்ல வேண்டுமென்று உறுதியாக இருந்தார். தேர்தல் அரசியல்; தமிழிசை களமிறங்கப் போவது கன்னியாகுமரியா, திருநெல்வேலியா? - இறுதிகட்ட பரபரப்பு! தொடர்ந்து, இரு தலைமையும் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். யார் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்களோ அவர்களிடமே செல்லலாம் என்பதுதான் திட்டம். அதன்படி, அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரம் காட்டின. முதலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதியாகும் என்று தலைமையிடமிருந்து தகவல் வந்தது. ஆனால், ஒரு வாரத்துக்குள் காட்சிகள் மாறி, பா.ஜ.க-வுடன் நெருக்கமானது தலைமை. ஆனால், கடைசி 48 மணிநேரத்தில் எல்லாம் தலைகீழாகி, அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படிதான், பா.ம.க எம்.எல்.ஏ அருள் தலைமையில் மூத்த நிர்வாகிகள் எடப்பாடியைச் சந்தித்துப் பேசினர். இதனால், அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதியாகும் என்ற தகவல் மார்ச் 18-ம் தேதி காலையில் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. பா.ம.க ராமதாஸ் - அன்புமணி இந்நிலையில், இன்று (மார்ச் 18) மாலையே மீண்டும் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தையை தலைமை தீவிரப்படுத்தியிருக்கிறது. அதன்படி பா.ஜ.க-வுடன் கூட்டணியை இறுதி செய்திருக்கிறது தலைமை. இது தொடர்பான தைலாபுரத் தோட்டத்தில் நடந்த நிகழ்வில், சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க-வுடன் சென்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமென்று தலைமை விளக்கியது. இருப்பினும், தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், பா.ஜ.க-வுடன் கூட்டணி என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வா... பா.ஜ.க-வா... என்ற முடிவில் அன்புமணியின் கையே ஓங்கி இருப்பது தெளிவாகி இருக்கிறது. இந்த கூட்டணியில் 9 தொகுதிகள் வரை உறுதியாகி இருப்பதாக சொல்கிறார்கள். மேலும், வேறு மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுத்தாக பாஜக ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், அன்புமணி கோரிய மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. இப்படி மாறி மாறி நடந்த பேச்சுவார்த்தையால், கட்சியில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY “ஒத்தையில நிக்குறேன்!” - கோட்டைவிட்ட எடப்பாடி... குமுறும் அ.தி.மு.க!
பாஜக கூட்டணியில் ஐக்கியமானதா பாமக? - தைலாபுர தோட்டத்தில் என்ன நடந்தது?
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நிமிடத்துக்கு நிமிடம் காட்சிகள் மாறும். அப்படி இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் எதுவுமே இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், அப்பணியை சிறப்பாகச் செய்யத் தொடங்கியிருக்கிறது பா.ம.க. ராமதாஸ், அன்புமணி ஒரே நாளில் காலையில் அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திய பா.ம.க, மாலையில் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை முடிவு செய்திருக்கிறது. இதை பா.ம.க-வின் மாநிலப் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உறுதிசெய்திருக்கிறார். இருப்பினும், தலைமையிலிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கூட்டணி தொடர்பான இறுதி முடிவை மூத்த நிர்வாகிகளுக்கு அறிவிக்கும் பா.ம.க-வின் கூட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் மார்ச் 18-ம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாக பா.ம.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் விசாரித்தோம். ``இந்தத் தேர்தலுக்கு அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்று ராமதாஸ் ஆர்வமாக இருந்தார். ஆனால், அன்புமணியோ பா.ஜ.க-வுடன்தான் செல்ல வேண்டுமென்று உறுதியாக இருந்தார். தேர்தல் அரசியல்; தமிழிசை களமிறங்கப் போவது கன்னியாகுமரியா, திருநெல்வேலியா? - இறுதிகட்ட பரபரப்பு! தொடர்ந்து, இரு தலைமையும் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். யார் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்களோ அவர்களிடமே செல்லலாம் என்பதுதான் திட்டம். அதன்படி, அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரம் காட்டின. முதலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதியாகும் என்று தலைமையிடமிருந்து தகவல் வந்தது. ஆனால், ஒரு வாரத்துக்குள் காட்சிகள் மாறி, பா.ஜ.க-வுடன் நெருக்கமானது தலைமை. ஆனால், கடைசி 48 மணிநேரத்தில் எல்லாம் தலைகீழாகி, அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படிதான், பா.ம.க எம்.எல்.ஏ அருள் தலைமையில் மூத்த நிர்வாகிகள் எடப்பாடியைச் சந்தித்துப் பேசினர். இதனால், அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதியாகும் என்ற தகவல் மார்ச் 18-ம் தேதி காலையில் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. பா.ம.க ராமதாஸ் - அன்புமணி இந்நிலையில், இன்று (மார்ச் 18) மாலையே மீண்டும் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தையை தலைமை தீவிரப்படுத்தியிருக்கிறது. அதன்படி பா.ஜ.க-வுடன் கூட்டணியை இறுதி செய்திருக்கிறது தலைமை. இது தொடர்பான தைலாபுரத் தோட்டத்தில் நடந்த நிகழ்வில், சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க-வுடன் சென்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமென்று தலைமை விளக்கியது. இருப்பினும், தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், பா.ஜ.க-வுடன் கூட்டணி என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வா... பா.ஜ.க-வா... என்ற முடிவில் அன்புமணியின் கையே ஓங்கி இருப்பது தெளிவாகி இருக்கிறது. இந்த கூட்டணியில் 9 தொகுதிகள் வரை உறுதியாகி இருப்பதாக சொல்கிறார்கள். மேலும், வேறு மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுத்தாக பாஜக ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், அன்புமணி கோரிய மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. இப்படி மாறி மாறி நடந்த பேச்சுவார்த்தையால், கட்சியில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY “ஒத்தையில நிக்குறேன்!” - கோட்டைவிட்ட எடப்பாடி... குமுறும் அ.தி.மு.க!
மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் களமிறங்கும் நேரம் இது: பிரான்ஸ் ஜனாதிபதி வெளிப்படை
மேற்கத்திய நாடுகளின் படைகள் உக்ரைனில் களமிறங்கும் தேவை அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் படைகள் ஜேர்மன் மற்றும் போலந்து தலைவர்களை சந்தித்த பின்னரே மேக்ரான் குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார். உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் படைகள் களமிறங்க வேண்டும் என்ற கருத்தை மேக்ரான் கடந்த மாதம் தெரிவித்த நிலையில், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனால் ஜனாதிபதி மேக்ரான் தனது கருத்தில் உறுதியாக இருந்ததுடன், மேற்கத்திய நட்பு […]