புத்தாண்டில் நாட்டை உலுக்கிய இரு கொலைச் சம்பவங்கள்! கள்ள காதலால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
சித்திரைப்ப் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 32 வயதுடைய வெல்லவாய பகுதியைச் […]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விடயங்களைச் சமர்ப்பித்தனர். பாரிய நிதி மோசடிபாதிக்கப்பட்ட இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, பமுணுகம பகுதியைச் சேர்ந்த […]
பிரதமர் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள்
தமிழ் – சிங்கள புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (14) கம்பஹாவில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புண்ணிய காலத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கம்பஹா மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். கலந்து கொண்டிருந்த அமைச்சர்கள் இம்முறை புத்தாண்டு தேசிய கலாசார விழாவின் சம்பிரதாயங்கள் கம்பஹாவிலுள்ள தர்ஷன வீரசிங்கவின் […]
அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு
அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை, அடுத்த 2 நாள்களில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட 2 வார கால போா் நிறுத்தத்தின் தொடா்ச்சியாக பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை 21 மணி நேர பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படாமல் இப்பேச்சுவாா்த்தையில் தோல்வியுற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இது தொடா்பாக அமெரிக்க ஊடகமொன்றுக்கு […]
நான்கு நாட்களில் மட்டும் பல கோடி ரூபா வருமானம்
கடந்த 4 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் இயக்கம், பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 கோடி 61 லட்சத்து 19,425 ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹதபிட்டிய குறிப்பிட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாரத்தில் தமது சொந்த இடங்களுக்குச் […]
19 மாவட்டங்களில் கடும் வெப்பம்: ‘அம்பர்’நிற எச்சரிக்கை விடுப்பு
இலங்கையின் 19 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை வெப்பச் சுட்டெண் சாதாரணமாக உணரப்படும் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த வெப்ப எச்சரிக்கைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவானது, காற்றின் ஈரப்பதம் மற்றும் நிலவும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகையில், இன்று […]
இளைஞருக்கு சிறுநீர் குடிக்க வைத்து கொடூரம் ; பெண்ணுடன் பேசியதற்காக கிடைத்த தண்டனை
ராஜஸ்தானில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், இளைஞர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானினின் பார்மேர் மாவட்டத்தில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக சந்தேகப்பட்டதன்பேரில் இளைஞர் தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகராறு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 நபர்களை காவலில் வைத்துள்ளதாகவும் மற்றவர்களைத் தேடிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் ஒரு பெண்ணுடன் வாட்ஸ்அப்பில் உரையாடியதாகவும், அது இரு குழுக்களுக்கு இடையே தகராறுக்கு வழிவகுத்து, பின்னர் […]
தமிழர் பகுதியில் நள்ளிரவில் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து நடத்தப்பட்ட செயல் ; மர்ம நபரால் பரபரப்பு
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா – தாண்டிக்குளம் ஐய்யனார் கோவில் முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் வசித்த சகோதரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். CCTV காட்சிகள் இவர்களது சகோதரி மற்றும் அவரின் கணவர் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது வாழ்வாதாரத்தை […]
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங்ஸ் (Silver Springs) பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. பூமியின் அடியில் சுமார் 9 கிலோமீட்டர் ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நெவாடா மட்டுமின்றி அருகிலுள்ள கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன. முக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல சிறிய பின் அதிர்வுகளும் ஏற்பட்ட நிலையில், இதுவரை எவ்வித பெரும் பொருட்சேதமோ அல்லது […]
மொஸாட் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்
இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் இன் புதிய தலைவராக ரோமன் கோஃப்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் அரசின் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பிரதமர் நெதன்யாகு, க ரோமன் கோஃப்மேன் மொஸாட் இன் தலைவராக நியமித்துள்ளார். இஸ்ரேல் அரசின் முன்னாள் உயர்நீதிமன்றத் தலைவர் தலைமையிலான குழுவால் அங்கிகரிக்கப்பட்ட இந்த முடிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் ஜனாதிபதி நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். கோஃப்மேன் துணிச்சலான, சமயோசித புத்தியுடன் செயல்படும் சிறந்த அதிகாரி என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் […]
125 ஆண்டுகளில் முதல் முறை: ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு பெண் தலைமை
கான்பெர்ரா, ஆஸ்திரேலிய வரலாற்றில் 125 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத்திற்கு தலைமை தாங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் இந்தாண்டு ஜூலை முதல் அந்நாட்டின் ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராணுவத் தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2030ம் ஆண்டுக்குள் ராணுவத்தில் பெண்களில் பங்கு 25 சதவீதம் இருக்கவேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் […]
தீவிரவாதிகள் என நினைத்து தனது நாட்டு மக்கள் 100 பேரை கொன்ற நைஜீரியா
நைஜீரியாவில் தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக அந்நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரியாவில் உள்ள யோபோ மாகாணத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.. யோபோ மகாணத்துக்கு அருகேயுள்ள போர்னோ மாகாணம் கடந்த பல வருடங்களாகவே ஜிகாதி கிளர்ச்சியின் மையமாக செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தில் தாக்குதல் நடத்த நைஜீரியா விமானப்படை முடிவெடுத்தது. ஆனால் யோபோவில் உள்ள ஜிலி கிராமத்தில் வாரச்சந்தை நடைபெற்ற போது ஜிகாதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குகிறோம் […]
ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடங்கிவிட்டதாக லண்டனைச் சேர்ந்த கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் நேற்று (ஏப். 13) மாலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளதாவது: ”ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் அரபிக்கடல் வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே அமைந்துள்ள இடங்கள் பாதிக்கப்படும் வகையில், கடல்சார் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஈரானியத் துறைமுகங்கள், எண்ணெய் முனையங்கள் அல்லது கடலோர வசதிகளுடன் தொடர்புடைய, எந்தவொரு நாட்டுக் […]
பசி கொடுமையின் உச்சம் சூடானில் இலை தழைகளை தின்று உயிர் வாழும் மக்கள்
கார்ட்டும், சூடான் ராணுவத்துக்கும். துணை ராணுவப்படைக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வரும் போர், உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நார்த் டார்பர் மற்றும் தெற்கு கோர்டோபன் பகுதிகளில் நிலைமை படுமோசமாக உள்ளது. அங்குள்ள மக்கள் பசியைத் தாங்க முடியாமல் மரங்களின் இலை தழைகளையும், கால்நடை தீவனங்களையும் தின்று உயிர் பிழைக்கும் அவல நிலையில் உள்ளனர். கிட்டத்தட்ட 2.89 கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ளனர். போர்க்களத்தில் விவசாய நிலங்கள் […]
அமெரிக்காவின் அறிவிப்பால் ஹோர்முஸ் நீரிணையில் நடந்த சம்பவம் ; திரும்பிச் சென்ற கப்பல்கள்
அமெரிக்க முற்றுகை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றித் திரும்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மரைன் டிராஃபிக் தரவுகளின்படி, முற்றுகை தொடங்கியதிலிருந்து கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட முதல் நேரடி பாதிப்பு இதுவாகும். கப்பல்களில் ஒன்றான ‘ரிச் ஸ்டாரி’, சீனாவுக்குச் செல்லும் நோக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கடற்கரையிலிருந்து புறப்பட்டது. ஆனால், புதிய சூழ்நிலை காரணமாக, அது ஜலசந்திக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றது. […]
வரலாறு காணாத வருமானம் ; புதிய இலக்கை எட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை
கடந்த 09ஆம் திகதி முதல் நேற்று (13) வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபை 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. சித்திரை புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவையின் கீழ், கடந்த 11ஆம் திகதி மாத்திரம் 213 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். தூர இடங்களில் இருந்து மீண்டும் கொழும்பு நோக்கிய பேருந்து சேவைகள் நாளை (15) பிற்பகல் முதல் […]
ஈரானுக்கு கடல் வழிப் போக்குவரத்து முற்றுகை ; அமெரிக்காவின் கடும் நடவடிக்கை
ஈரானின் அனைத்துத் துறைமுகங்களுக்குமான கடல் வழிப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தும் ‘முற்றுகை’ (Blockade) நடவடிக்கையை இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் (CENTCOM) அறிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் அமெரிக்க மற்றும் ஈரானியப் பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான உடன்பாடின்றி நிறைவடைந்ததையடுத்து, ஈரான் மீதான இந்த கடும் நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்க நேரப்படி இன்று (13) காலை 10 மணி முதல் (இலங்கை நேரப்படி இரவு 7.30 […]
மாபெரும் அரசியல் மாற்றம்: ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் படுதோல்வி
புடாபெஸ்ட், ஹங்கேரியில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் விக்டர் அர்பன் தலைமையிலான பிடெஸ் (Fidesz) கட்சி தோல்வியை தழுவியது. பீட்டர் மக்யார் தலைமையிலான டிஸ்ஸா (Tisza) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் பீட்டர் மக்யாரின் டிஸ்ஸா கட்சி 199 இடங்களில் 138 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது. டிஸ்ஸா கட்சி சுமார் 53.6% […]
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியாவில் மாநகரசபையால் வருடந்தோறும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வார விடுமுறையையொட்டி வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையின் அழகை மெருகூட்டும் இடங்களில் ஒன்றாக நுவரெலியா மாவட்டம் கருதப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் அதுவும் ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு விடுமுறை மற்றும் வசந்த காலம் கொண்டாடப்படுவதால் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இங்கு வரும் […]
அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு –கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர விசாரணை!
வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் இன்று(14)அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர். சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஒருவரது எலும்புக் கூடே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கும் ஊர்காவற்றுறை பொலிசார் குறித்த எலும்புக் கூடுகள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ உடற்கூற்று பின்னரே உறுதியாக கூறமுடியும் என்றும் தெரிவித்தனர். முன்பதாக குறித்த பகுதி ஒன்றின் […]
கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்- சந்தேக நபருக்கு 7 நாட்கள் விளக்கமறியல்(video)
video link- https://fromsmash.com/gAdEl2yP_9-dt கொரியர் சேவை ஊடாக சூட்சுமமாக கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை(8) மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்ட […]
Israel-Lebanon Talks in Washington Seek Ceasefire
Israel and Lebanon are holding crucial discussions in Washington aimed at achieving a ceasefire agreement. These talks, facilitated by U.S. intermedia...
Cricket-England Captain Stokes Dismisses Reports of Conflict with McCullum
Ben Stokes, England’s cricket captain, has downplayed reports of disagreements with head coach Brendon McCullum. He acknowledged that they sometimes h...
Congress Leadership Tensions Emerge in Tamil Nadu
A former leader of Tamil Nadu’s Mahila Congress, M Hazeena Syed, has made serious allegations against KC Venugopal, a top official in the Congress par...
Zimbabwe Cricketer Banned from PSL for Two Years
Zimbabwean fast bowler Blessing Muzarabani has been banned from the Pakistan Super League (PSL) for two years after leaving the league to play in the ...
மாபெரும் அரசியல் மாற்றம்: ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் படுதோல்வி
புடாபெஸ்ட், ஹங்கேரியில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் விக்டர் அர்பன் தலைமையிலான பிடெஸ் (Fidesz) கட்சி தோல்வியை தழுவியது. பீட்டர் மக்யார் தலைமையிலான டிஸ்ஸா (Tisza) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் பீட்டர் மக்யாரின் டிஸ்ஸா கட்சி 199 இடங்களில் 138 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது. டிஸ்ஸா கட்சி சுமார் 53.6% […]
Siddaramaiah Losing Control Over CMO?
The office of the Karnataka Chief Minister has seen several people leave over the past 10 months, including political advisors and high-ranking offici...
Bihar Shows Cricket Potential: President Harsh Vardhan
Hyderabad (Telangana), April 14 (ANI): The president of the Bihar Cricket Association (BCA), Harsh Vardhan, expressed his joy over the impressive debu...
Top Beard Oils for the Perfect Beard Like Virat Kohli
Looking for the best beard oils to achieve that sleek, well-groomed look like cricketer Virat Kohli? Here are five must-try options that can help you ...
ஹார்மூஸ் பிரச்சனையை தீர்க்க பிரான்ஸ், பிரிட்டன் புதிய முன்னெடுப்பு
ஈரான்-அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 21 மணி நேர ஆலோசனைக்கு பிறகு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடக்கூடாது, ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. இதில் இரு நாடுகளுக்கு இடையேயும் உடன்பாடு ஏற்படவில்லை.இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். […]
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்
டெஹ்ரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது. இந்தப் போரின்போது அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சில வெளிநாடுகளின் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின. மேலும் அவ்வழியாக கப்பல்கள் செல்வதைத் தடுக்க சிறிய படகுகள் மூலம் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கண்ணிவெடிகளை பொருத்தினர். போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென […]
புத்தாண்டு நாளில் வானிலை மாற்றம் ; இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு
இலங்கையில் இன்று(14) தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும். கொழும்பு முதல் மட்டக்களப்பு வரையிலான கடலோரப் பகுதிகளில், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பல இடங்களில் மழை அல்லது […]
கடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையில் கிடைத்த வருமானம்
கடந்த 10ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை 163,291,065 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த 3 நாட்களில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன. இதில் அதிகப்படியான வாகனப் போக்குவரத்தும் வருமானமும் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது. அன்றைய தினம் 161,847 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 59,815,450 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி 1,53,807 வாகனங்களுக்காக ரூ. 5,82,08,695 வருமானமும் 12-ஆம் திகதி 1,18,684 […]
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று(14) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ. சிவசாந்தன்
Local Groups Highlight City Issues Before Election
Across Chennai, local neighborhood groups have pointed out several long-standing problems in the city. These include issues with waste disposal, poor ...
புகழ்பெற்ற சுற்றுலா தலத்தில் கூட்ட நெரிசல்; 30 பேர் பலி
போர்ட் அவ் பிரின்ஸ், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஹைதியும் ஒன்றாகும். இந்நாட்டில் உள்ள மலைகள், கடற்கரைகள், பாரம்பரிய சின்னங்களை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் குறிப்பாக, வடக்கு ஹைதியின் மிலாட் நகரில் மலை மீது சிடடெல் ஹென்றி என்ற லபெரியர் கோட்டை உள்ளது. பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றபிறகு புரட்சியாளர் ஹென்றி கிறிஸ்டோப் தலைமையில் இந்த மலைக்கோட்டை கட்டப்பட்டது. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக […]
அம்பேத்கர் பிறந்தநாளில், சமூகநீதியை நிலைநாட்டுவோம் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
இந்தியா முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஒரு
கோபி நயினாரின் ‘காலனி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் ஆர்.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள ’காலனி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.
அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த ஈரான்!
ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்தால் அவை தாக்கி அழிக்கப்படும் என
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர், 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் மகாராட்டிர மாநிலத்தின் அம்பவாடே கிராமத்தில் ராம்ஜி சக்பால் –
தீ விபத்துகளால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் மற்றும் காயங்கள் போன்ற பெரும் பாதிப்புகளைத் தவிர்க்கவும், தீயைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ஆம்
நொய்டாவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் வன்முறை!
இந்தியாவின் தொழில்மையமான நொய்டாவில், ஊதிய உயர்வு மற்றும் நிலையான வேலை நேரத்தை வலியுறுத்தி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தின்
பிரதமர் மோடியின் வருகையொட்டி நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள்!
பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) தேர்தல் பிரச்சாரத்திற்காக நாகர்கோவில் வருகை தர உள்ளார். இதையொட்டி, நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த
பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்குத் தனது
Tamil Nadu Emerges Overall Champion at GSIF Grand Prix 2026
Tamil Nadu delivered an outstanding performance at the 13th GSIF Grand Prix & National Kettlebell Lifting Championship 2026, held at
யாழில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன் ; ஒரே இரவில் அதிரடி காட்டிய பொலிஸார்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன், மற்றைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். மேலதிக விசாரணை இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பிரதான சந்தேகநபரான வைத்தியசாலையில் […]
Meghalaya Yields New Burrowing Reed Snake
A group of scientists from various institutions has discovered a new type of burrowing reed snake in Meghalaya’s West Garo Hills district. The species...
தமிழர் பகுதியில் இரு இளைஞர்களுக்கு நடந்தேறிய துயர சம்பவத்தால் பரபரப்பு
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விமானப்படை தளத்துக்கு அருகாமையில் உள்ள திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் திங்கட்கிழமை (13) மாலை மோட்டார் சைக்கிள் வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 24,25 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. மேலதிக விசாரனை இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தோர் இருவரும் திரியாய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்த இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை சீனக்குடா […]
தமிழ் –சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அநுர விடுத்துள்ள அழைப்பு
நமது நாட்டின் உன்னதமான கலாசார விழுமியங்களுடன் ஒன்றிணைந்து, சவால்களை வெற்றிகொண்டு வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பௌதீக மற்றும் ஆன்மீக மாற்றத்தை அடையாளப்படுத்தும் இந்தப் புத்தாண்டு, இலங்கையர்களின் பிரதான கலாசார விழாவாகும். ஒரே சுபநேரத்தில் பாரம்பரியச் சடங்குகளையும் சமயக் கிரியைகளையும் முன்னிலைப்படுத்தி நாம் […]
200 சிம்பன்சிகளிடையே வெடித்த உள்நாட்டுப் போர் ; இதுதான் காரணம்
உகாண்டாவின் கிபாலே தேசியப் பூங்காவில் சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட ‘நகோகோ’ என்ற பிரம்மாண்டக் குழுவில் தற்போது பயங்கரமான “உள்நாட்டுப் போர்” நடைபெற்று வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்தச் சமூகம், தற்போது ‘மத்திய குழு’ மற்றும் ‘மேற்கு குழு’ என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளன. வன்முறை சுமார் 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய இத்தகைய அரிதான பிளவு, 2015ஆம் ஆண்டு முதல் சமூக ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் […]
16 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: ஹங்கேரியில் விக்டர் ஓர்பான் தோல்வி
ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பான், 16 ஆண்டுகள் நீண்ட ஆட்சிக்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். தேசியவாதக் கொள்கைகளை முன்னிறுத்திய ஓர்பான், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அடிக்கடி மோதியவராகவும், “illiberal democracy” எனப்படும் முறையை ஆதரித்தவராகவும் அறியப்பட்டார். இந்த தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் மாக்யார் தலைமையிலான கட்சி, 199 இடங்களில் 137 இடங்களை வென்றுள்ளது. இதனால், இரண்டு-மூன்றாம் பங்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. மாக்யார், அரசியல் துறையில் புதியவராக இருந்தாலும், ஊழலை எதிர்த்து, சிறந்த பொதுச் சேவைகளை […]
ஹோர்முஸ் நீரிணை நோக்கி வரும் போர்க்கப்பல் ; ஈரானின் மிரளவிடும் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை நோக்கி ஒரு போர்க்கப்பல் வருவது போர்நிறுத்த மீறலாகக் கருதப்படும் என்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. அதன்படி, போர்நிறுத்தம் மீறப்பட்டால், அதன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்தப் படை வலியுறுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படை ஹோர்முஸ் ஜலசந்தியைத் தடுத்துள்ளது என்ற அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கையின் பின்னணியில், ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சட்டம் போர்க்கப்பல்களுக்கு மட்டுமே […]
பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள்” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)################################### புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்களான திரு.திருமதி. சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகளின் செல்வப் புதல்விகளில் ஒருவரான செல்வி.மேகலா அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, அவர் விரும்பிக் கேட்டுக் கொண்ட வகையில் மாணவ மாணவிகளான சிறுவர்களுடன் இணைந்து இனிய பிறந்தநாள் கொண்டாட “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஏற்பாடு செய்தது. செல்வி. மேகலாவின் பிறந்த […]
நியூசிலாந்து நாட்டை தாக்கிய புயல்; 90 விமானங்கள் ரத்து – 5 பேர் உயிரிழப்பு
வெல்லிங்டன், நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியது. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, 10 செ.மீ. அளவு பேய் மழை பெய்தது. இதனால் வார்க்வோர்த் நகரில உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வடக்குத் தீவின் வக்காட்டேன் பகுதியில் 270 வீடுகளில் இருந்த 2,500 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 5,000 வீடுகளில் மின்சாரம் […]
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
நைஜீரியாவில் உள்ள யோபே மாகாணத்தில் அந்நாட்டு விமானப் படை சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், பொதுமக்களில் சுமாா் 100 போ் உயிரிழந்தனா். யோபேவில் உள்ள ஜிலி கிராமத்தில் வாரச் சந்தை நடைபெற்றபோது ஜிகாதி கிளா்ச்சியாளா்களை குறிவைத்து தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் சுமாா் 100 போ் உயிரிழந்தனா்; ஏராளமானோா் காயமடைந்தனா் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தாக்குதல் தொடா்பாக கூடுதல் தகவல் வெளியாகவில்லை. யோபே மாகாணத்துக்கு அருகில் உள்ள போா்னோ மாகாணம் ஜிகாதி கிளா்ச்சியின் மையமாக […]
1 பில்லியன் டாலர், அழகான பெண்: துருக்கியிடம் கேட்கும் உகாண்டா ராணுவத்தளபதி
சோமாலியாவில் இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உகாண்டா ராணுவம் நீண்டகாலமாக மேற்கொண்டு வரும் பாதுகாப்புப் பங்களிப்பிற்கான ஊதியமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று உகாண்டா ராணுவத் தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா துருக்கியிடம் கேட்டுள்ளார். அதோடு நிற்காமல், அந்நாட்டின் மிக அழகான பெண்ணைத் தனக்கு மணம் முடித்துத் தரவேண்டும் என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். ஒரு மாதத்திற்குள் இக்கோரிக்கைகளைத் துருக்கி நிறைவேற்றாவிட்டால், கம்பாலாவில் உள்ள துருக்கியத் தூதரகம் மூடப்படும் என்றும், உகாண்டா வான்வெளியில் துருக்கி […]
யாழில் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாணம் வந்த சுவிஸ்வாழ் புலம் பெயர் தமிழர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்ருள்ளது. சுவிஸ்வாழ் புலம் பெயர் தமிழர் திடீரென நோய்வாப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த புலம் பெயர் திடீர் மரணம் அவரது உறவினர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் பெரும் பிரச்னையில் சிக்குவீா்கள்: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
போா் நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் மிகப்பெரிய பிரச்னையில் சிக்குவீா்கள் என்று சீனாவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா். அமெரிக்க உளவு அமைப்புகளின் தகவல்களைச் சுட்டிகாட்டி ஈரானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை முக்கியமாக வான் தாக்குதல் பாதுகாப்புக்கான சாதனங்களை வழங்க சீனா தயாராகி வருவதாகவும், இவை கப்பல் மூலம் அனுப்பப்பட இருப்பதாகவும், இது தவிர ராணுவத் தொழில்நுட்பம் சாா்ந்த உதவிகளையும் வழங்க இருப்பதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தத் […]
புத்தாண்டால் வெற்றிலை விலை திடீர் அதிகரிப்பு!
நாட்டில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெற்றிலைக்கு அதிக தேவை உள்ள நிலையில், வெற்றிலையின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி, சந்தையில் ஒரு கைப்பிடி வெற்றிலையின் விலை சுமார் ரூ. 400-ஐ எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சிறிய கைப்பிடி வெற்றிலை சுமார் ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வறண்ட காலநிலை காரணமாக வெற்றிலை அறுவடை குறைந்ததும் வெற்றிலை விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. அதேவேளை சித்திரை புத்தாண்டில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (13) மாலை 4:00 மணி முதல் நாளை (14) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டம்: யட்டிநுவர, கேகாலை மாவட்டம்: வரகாபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை, நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் […]
2 கோடி ரூபா மதிப்புள்ள அதிவேக மோட்டார் சைக்கிள் உட்பட பல பைக்குகள் பறிமுதல்
இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து அதிவேக மோட்டார் சைக்கிள்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை அங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்று சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த குலசிங்கவுக்கு கிடைத்த தகவலின் பேரில், சமூக பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் நேற்று (12) […]
ஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது சீனா!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் புதிய மாவட்டம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது. உய்குா் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சின்ஜியாங் மாகாணம் கலவரம் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதியாகும். அங்குள்ள வாகான் பாதை வழியாக ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவும் உய்குா் பிரிவினைவாத பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கையாக சீனா இந்த நிா்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ‘சென்லிங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாவட்டம், காரகோரம் மலைத் தொடா், ஆக்கிரமிப்பு […]
குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!
இந்தோனேசியாவில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை காலால் மிதித்து விடியோ பதிவுசெய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தோனேசியாவின் பாண்டென் நகரிலுள்ள லெபாக் பகுதியில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வரும் பெண்மணி, தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர் அங்குள்ளப் பொருளைத் திருடியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வாடிக்கையாளராக வந்த பெண் அதனை மறுக்கவே அவரை இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் மீது ஏறி நின்று சத்தியம் செய்ய வற்புறுத்திய கடை உரிமையாளர் அதனை விடியோ எடுத்துள்ளார். […]
ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஏப். 12) எச்சரித்துள்ளார். இதனால், வணிக ரீதியான கப்பல்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் – அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற […]
புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமத்தில் இரு நேர பூசைகள் ரத்து; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலப்பகுதியைக் கருத்திற் கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் இரண்டு பிரதான பூசைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பஸ்நாயக்க நிலமே அலுவலகம் அறிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 13): மாலை 6:30 மணிப் பூசையைத் தொடர்ந்து, இரவு 9:00 மணியளவில் பாற்சோறு பொங்கி படைக்கப்பட்ட பின்னர் மகா தேவாலயம் மூடப்படும். மூடப்பட்ட தேவாலயம் மீண்டும் நாளை (ஏப்ரல் 14) பிற்பகல் 2:00 மணிக்கே திறக்கப்படும். இரண்டு நேரப் […]
மின்னல் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
மேல், சபரகமுவ, மத்திய,வடமத்திய,வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி,மாத்தறை,மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (13) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணிவரை அமுலில் இருக்கும். அதன்படி, இன்று பிற்பகல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் […]
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த ‘நீளிரா‘ படத்தின் இயக்குநர் சோமீதரன், தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சனந்த் ஆகியோர் பல்வேறு இடங்களை சென்று பார்வையிட்டனர். நல்லூர் ஆலயம் , யாழ் . பொது நூலகம் , தியாக தீபத்தின் நினைவிடம் , வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நீளிரா திரைப்படத்தை , ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்ததுடன் , திரைப்படத்தின் முடிவில் ரசிகர்களுடன் கலந்துரையிடாலிலும் ஈடுபட்டனர்.
Congress Supports Pawan Khera, Won’t Back Down: Rahul
Congress leader Rahul Gandhi stated on Monday (April 13, 2026) that his party fully supports Pawan Khera and will not be intimidated. The Assam govern...
JSW Sports join Commercial, Marketing & Operations Partner for the Bengal Pro T20 League!
JSW Sports, a leading force in India’s sports ecosystem has secured a three-year mandate from the Cricket Association of Bengal
பெயரளவில் ஈஸ்டர் போர்நிறுத்தம்? ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் –ரஷியா பரஸ்பர தாக்குதல்!
மாஸ்கோ : ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ரஷியா குற்றஞ்சாட்டியது. ரஷியா, உக்ரைனில் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ முறைப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சனிக்கிழமை (ஏப். 11) மாலை 4 மணி முதல் 32 மணி நேர தற்காலிக போா்நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது. ரஷியாவின் இம்முடிவை உக்ரைன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில், ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷிய படைகளைக் […]
ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வி: கடற்படை தாக்குதலுக்கு டிரம்ப் திட்டம்?
வாஷிங்டன், பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ஈரானுக்கு அமெரிக்கா எதிராக மேற்கொள்ளக்கூடிய ஒரு கடற்படை முற்றுகை உத்தியை விளக்கும் ஒரு கட்டுரையை பகிர்ந்து உள்ளார். இதன் மூலம் ஈரான் மீது கடற்படை தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைதான் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மத்திய கிழக்கு போருக்கு மத்தியில் ஈரானுக்கு சீனா ஆயுத உதவியை செய்ய […]
விஜயின் தொடர் பின்வாங்கல் –த.வெ.க தொண்டர்கள் அதிருப்தி
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 13) கும்மிடிப்பூண்டியில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை
கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகளில் டிடிவி தினகரன் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , இன்று (ஏப்ரல் 13, 2026 – திங்கட்கிழமை) கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு ஆகிய சட்டமன்றத்
‘ஹாலோகிராபிக் புரோஜெக்ஷன்’தொழில்நுட்பம் மூலம் பிரசாரம் செய்த த.வெ.க தலைவர்!
கும்பகோணம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வராமலேயே, அவரது ‘ஹாலோகிராபிக் புரோஜெக்ஷன்’ (Holographic Projection) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்தது பெரும் கவனத்தை
பா.ஜ.கவின் உண்மையான நோக்கம் அரசியலமைப்பை அழிப்பதே –ராகுல் காந்தி
டெல்லி, மண்டி ஹவுஸ் பகுதியில் “Run for Ambedkar, Run for Constitution” என்ற தலைப்பில் மாரத்தான் போட்டியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று
கொள்கை பிடிப்புக்காக நின்ற ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் –தொல்.திருமாவளவன் பேச்சு
செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சிந்தனை செல்வனை ஆதரித்து தொல்.திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
டாக்டர்.ராமதாஸ் நலமுடன் இருக்கிறார் –மருத்துவர்கள் அறிவிப்பு
சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று (ஏப்ரல் 12)
த.வெ.க-வில் இருந்து விலகிய தூத்துக்குடி அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்தார்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக தீவிரமாக செயல்பட்டவர் அஜிதா ஆக்னல். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக தவெக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட அஜிதா, தனக்கு
எல்கேஜி சேர்க்கை விண்ணப்பம் பெற விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதை அறிந்ததும் விண்ணப்பங்களை பெற முதல் நாள்
தபால் வாக்குகளைச் சேகரிக்க 86 குழுக்கள் –தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது இல்லங்களிலிருந்தே தபால்
நீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நாளைய தினம் வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது. மக்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் நீர் வழங்கல் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலை திறப்பு
வாஷிங்டன், அமெரிக்கா – சியாட்டில் மாநகரின் மையப் பகுதியான புகழ்பெற்ற வெஸ்ட்லேக் சதுக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் பரிசாக வழங்கிய இச்சிலையை சியாட்டில் மேயர் கேட்டி வில்சன் திறந்து வைத்தார். அமெரிக்காவில் ஒரு மாநகர அரசால் விவேகானந்தர் சிலை நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தச் சிலை அமைந்துள்ள வெஸ்ட்லேக் சதுக்கம் மிகவும் புகழ்பெற்ற இடமாகும். இது நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாகும். அமேசான் […]
ரூ.10 இலட்சம் லொத்தர் பரிசைப் பெற்றவர் விபத்தில் மரணம்; கணநேரத்தில் பறிக்கப்பட்ட மகிழ்ச்சி
அதிர்ஷ்ட லாபச் சீட்டில் பரிசில் வென்ற பணத்தைப் பெற்றுக்கொண்டு உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர், ஹொரணை – பொகுணுவிட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். பத்து இலட்சம் ரூபாய் பணப் பரிசை வென்றதையடுத்து, அதற்கான காசோலையைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் தனது நண்பருடன் கொழும்புக்குச் சென்றுள்ளார். கணநேரத்தில் பறிக்கப்பட்ட மகிழ்ச்சி பணத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஹொரண நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, பொகுணுவிட்ட பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. உந்துருளியை செலுத்திய நண்பருக்கு நித்திரை […]
யாழில்.ரிவால்வர் வகை துப்பாக்கி மீட்பு
யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி மேலதிக ஆய்வுக்காகப் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு –மூன்றாம் கட்ட அகழ்வு மாத இறுதியில் ?
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 239 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் சீரற்ற காலநிலை காரணமாகப் பிற்போடப்பட்ட நிலையில், இந்த மாதத்தின் இறுதியில் அல்லது எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் அந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. எனினும், அகழ்வுப் […]
யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்காகிஉயிரிழந்துள்ளார். தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் ஒரு இளைஞன் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை , மற்றைய இளைஞன்மேலும் இரண்டு […]
அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்! மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மக்களின் நலன்களையும் அவர்களது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, அதேநேரம் அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் ஆற்றல. ஆளுமை அக்கறை அல்லது அவர்களது உணர்வுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்ற எண்ணங்களோடு தொடர்புடையதாகவும் […]
உயிர்பிழைக்க போராடுகிறது ஈரான்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தாக்கு
பாகிஸ்தானில் அமெரிக்காவும் ஈரானும் அமைதிபேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. பேச்சுவர்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது; ஈரானுக்கு எதிரான நடவடிக்கை மூலம், அவர்களின் அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை நசுக்குவதில் வெற்றி அடைந்துள்ளோம். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஈராக்கில் உள்ள போராளிக் குழுக்கள், ஏமனில் ஹவுதிகள் என ஈரான் நம் கழுத்தை நெரித்துச் சுற்றி வளைக்க […]
அமெரிக்க –ஈரான் பேச்சுவார்த்தை ; ஜேடி வேன்ஸ் திடீர் வெளியேற்றம்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முற்றுப்பெற்றுள்ளன. பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித ஒப்பந்தமும் எட்டப்படவில்லை எனச் செய்தியறிக்கை வெளியிட்டுவிட்டு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார் லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா எவ்வித உறுதிமொழியையும் வழங்க முன்வராதது. ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்தது. பெய்ரூட் […]
சகோதரியை கத்தியால் குத்தி விட்டு உயிர் மாய்த்துக் கொண்ட சகோதரன்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில், சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது. மேலதிக விசாரணை இதன்போது, சகோதரன் தனது கிராம சேவையாளரான சகோதரியை கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த சகோதரி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்னர், தாக்குதலை மேற்கொண்ட சகோதரர் பயத்தின் காரணமாக யாரும் […]

32 C