விசா கட்டணங்களை திடீரென உயர்த்திய பிரித்தானியா !
பிரித்தானியாவிற்குச் செல்லும் பயணிகள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டணங்களைக் கணிசமாக உயர்த்துவதாக பிரித்தானியா உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 8, 2026 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி விண்ணப்பதாரர்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் செலவைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் ஆர்வம் பயண விசா (Visitor Visa): சாதாரண 6 மாத கால பயண விசா கட்டணம் 127 பவுண்டிலிருந்து 135 பவுண்டுகளாக உயர்கிறது. நீண்டகால விசா: […]
ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லையென்றால் தாக்குதல் தொடரும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவதாக கூறியிருந்தார். அதன்படி வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது: ஈரான் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்: ஈரானில் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளோம்.ஈரான் கடற்படை, வான்படை அழிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆயுதப்படைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் அவர்களிடம் எரிசக்தி நிலையங்களை ஒவ்வொன்றாக தாக்க உள்ளோம். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்காக்கு எண்ணெய் […]
4 விண்வெளி வீரர்களுடன் நிலவை நோக்கி புறப்பட்ட அமெரிக்க விண்கலம்
வாஷிங்டன், அமெரிக்காவும், ரஷியாவும் கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்த ஆய்வில் தீவிரம் காட்டின. மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வுகளையும் மேற்கொண்டன. அதன்பின், இரு நாடுகளும் நிலவு குறித்த ஆய்வுகளை கைவிட்டன. இந்நிலையில், 53 ஆண்டுகளுக்குப்பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மீண்டும் கையில் எடுத்துள்ளது. நிலவில் உள்ள கனிம வளங்களை பயன்படுத்துதல், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி மையமாக நிலவை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆர்டெமிஸ் – […]
ஒன்றிணைந்து சவால்களைக் கடக்கத் தயாரா?
எவருமே முன்கணிக்க முடியாத திருப்பங்களையும், ஒழுங்கு மாற்றங்களையும் உலகம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு யுத்தமானது உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் சிறியதும் பெரியதுமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இலங்கை என்ற நாடு அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட முடியாது. இந்தச் சவால்களைச் சாதுர்யமான முறையில் கடந்து செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உலகில் இனி இதுவே ‘புதிய இயல்பு நிலை’ என்ற அடிப்படையில், அரசாங்கமும் […]
புற்றுநோய் சிகிச்சையில் ரஷ்யா உருவாக்கிய புதிய தடுப்பூசி
உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனிப்பட்ட நோயாளியின் உடலமைப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட (Personalized) முதலாவது புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா வெற்றிகரமாக ஒரு நோயாளிக்கு செலுத்தியுள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சினால் நேற்று ( 01) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, நாட்டின் சோதனை ரீதியிலான புற்றுநோய் சிகிச்சை திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவான ஒரு மருந்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நோயாளிக்கும் உள்ள தனித்துவமான புற்றுநோய் உயிரணுக்களின் (Tumor) பண்புகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு இந்தத் தடுப்பூசி […]
காட்டுக்கு தீ வைத்த சந்தேக நபருக்கு ரூ. 91,100 அபராதம்
ஹட்டன் ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்குத் தீ வைத்த சந்தேக நபர், ஹட்டன் வனத்துறை அலுவலக அதிகாரிகளால் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, (02) இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது ரூ. 91,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தால் ரூ. 91, 100 அபராதத்தையும், தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கான தொகையையும் செலுத்த வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுமார் 5 ஏக்கர் பகுதி தீயில் அழிந்துள்ளது குற்றம் சாட்டப்பட்டவர் […]
கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் SMS தொடர்பில் எச்சரிக்கை!
நாட்டில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணைய இணைப்புகள் (Links) குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப்பிரிவு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டல் இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளில் உள்ள இணைய இணைப்புகளை (Links) கிளிக் செய்வதற்கு முன்னர், அதன் இறுதிப் […]
தெஹ்ரான் மீது இஸ்ரேலின் பாரிய வான்வழித் தாக்குதல் ; 400-க்கும் அதிகமான இலக்குகள் தகர்ப்பு
கடந்த இரண்டு நாட்களில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலுள்ள உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து 400-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரானிய ஆட்சியின் உட்கட்டமைப்புகளுக்கு எதிராக 650 வெடிமருந்துகளைப் பயன்படுத்தி 400-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேலிய வான்படை மேற்கொண்டுள்ளது. ஈரானிய தலைநகரின் மையப்பகுதியிலுள்ள பல இடங்களை இலக்கு வைத்து நேற்றிரவு பாரிய அளவிலான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் சுமார் 15 ஆயுத உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் உரிமை […]
யாழில் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம்
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் பயணி ஒருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் உடனடியாக முறைப்பாடு குறித்த தனியார் பஸ்ஸில் பயணித்த பயணியிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் […]
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு
தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார்எனகுற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக மன்றில்முன்னிலையாகி இருந்தார். நாடாளுமன்றஉறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனை அடுத்து […]
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபனின் கொலை வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களான படுகொலையானவரின் மகளையும் மருமகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மூத்த விரிவுரையாளர் கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் 21ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது , சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டு, […]
ரஷியா–உக்ரைன் போரில் புதிய அத்தியாவசியம் ; டொனெட்ஸ்க் இலக்கை நோக்கி ரஷியா புதிய அழுத்தம்
கிழக்கு உக்ரைனின் முக்கியத் தொழில் மண்டலமான லுகான்ஸ்க் பிராந்தியத்தைத் தங்கள் படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷியா புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. கடந்த 2022-இல், உக்ரைன் மீது போா் தொடங்கிய காலத்திலிருந்தே இப்பிராந்தியத்தின் பெரும்பான்மை நிலப்பரப்பு ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், எஞ்சியிருந்த சிறு பகுதிகளையும் தற்போது தங்கள் ராணுவம் மீட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவதை ரஷியா தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. லுகான்ஸ்க் […]
ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் உறுதி ; ட்ரம்ப் விளக்கங்கள் பொய்யானது
ஈரான் அரசு போர்நிறுத்தம் கோரியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியது பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு, பதிலடியாக இஸ்ரேல் மற்றும் நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்துடன், சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை […]
Macron: France Won’t Use Military Force for Hormuz
French President Emmanuel Macron has stated that using military force to reopen the Strait of Hormuz is not practical. He explained that such an opera...
துபாய் அழியும் –அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை
ஈரான் போரில் அமெரிக்கா-இஸ்ரேல் பக்கம் நிற்கும் அமீரகத்திற்கு அமெரிக்க பொருளாதார நிபுணர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் முடிவால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது: “துபாய், அபுதாபி போன்ற நகரங்கள் சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக வடிவமைக்கப்பட்டவை. இவை பாதுகாப்பு தளங்களாக இல்லை. அமீரகம் போரில் ஈடுபட்டால், இந்த […]
England Women Name Tom Smith Spin-Bowling Coach for T20 World Cup
London [UK], April 2: England Women have appointed former Gloucestershire left-arm spinner Tom Smith as their spin-bowling coach ahead of the ICC Wome...
India’s First Right Shoulder-Artery Heart Valve Replacement Performed at SRM Prime Hospital
In a first in India, SRM Prime Hospital performed an Alternate Access Transcatheter Aortic Valve Replacement/Implantation (TAVR/TAVI), a minimally invasive
இந்தியாவில் முதல் முறையாக, காலில் உள்ள தமனிக்குப் பதிலாக வலது தோள்பட்டைக்குக் கீழே உள்ள தமனி வழியாக ‘TAVR/TAVI’ எனப்படும் குறைந்தபட்ச துளை கொண்ட இதய வால்வு
கொழும்பு வாழ் மக்களுக்கு…. 24 மணிநேர நீர் வெட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு!
கொழும்பு – பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் பொது முகாமையாளர் (மேற்கு மத்திய) திஸ்னா பன்னில தெரிவித்தார். லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி இதற்கமைய, பாதுக்கை பகுதியில் இன்று (02) இரவு 8.00 மணி […]
பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றம் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இன்று (02) பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் பலத்த மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்களுக்கு எமனான பேருந்து; 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் இன்று காலை (02) நிகழ்ந்த ஒரு துயரமான சாலை விபத்தில் உயிரிழந்ததுடன் மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார். திகன திசையிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பேருந்து, பல்லேகலை இராணுவ முகாமிற்கு எதிரே உள்ள கண்டி–திகன சாலையில், அவ்விரு மாணவர்களையும் ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியபோது இவ்விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளுடன் மோதிய பேருந்து மோதிய வேகத்தில் மாணவர்கள் இருவரும் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டதனால் ஒரு மாணவர் […]
சமையல் எரிவாயு விலை திருத்தம் ; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் , லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிதி அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன், புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் எனவும் அதுவரையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது எனவும் […]
Stalin Targets EPS, Amit Shah in Campaign
In Chennai, Chief Minister M. K. Stalin stepped up his political attack during a campaign event in Tiruchirappalli (Trichy) on
30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்: இந்தியர்கள் மட்டும் இத்தனை பேரா..?
வாஷிங்டன், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஏஐ முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளதது. ஓபன் ஏஐ உள்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏஐ மையங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் […]
தெற்கின் மூத்த அரசியல்வாதி காலமானார்
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83-வது வயதில் காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான விஜேசேகர, 1989 முதல் 2010 வரையிலான காலத்தில் மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2009- தற்கொலைத் தாக்குதலில் படுகாயம் தனது அரசியல் பயணத்தின்போது அவர் பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தார். 2009-ஆம் ஆண்டில், அக்குரஸ்ஸையில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்வை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் விஜேசேகர […]
யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம்
சுகாதார அமைச்சின் வருடாந்த இடமாற்ற நியமத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றக் கடிதங்களை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேற்படி சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து கடந்த 20 ஆம் திகதி வழங்கியிருந்தார். யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி க.மகேந்திரன் நல்லூர் சுகாதார […]
US Embassy Warns of Possible Militia Attacks in Baghdad
The U.S. Embassy in Baghdad has issued a security warning, stating that Iranian-aligned Iraqi militias may attack central Baghdad in the next 24 to 48...
KKR’s Long-Term Investment in Cameron Green
Kolkata Knight Riders (KKR) head coach Abhishek Nayar has stated that all-rounder Cameron Green was chosen as a long-term player for the franchise. Th...
அனுமதியின்றி இயங்கும் கடலட்டை பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது
இலங்கையின் கடலட்டைகளுக்கு சர்வதேச சந்தையில் உள்ள மிகச் சிறப்பான வர்த்தக நாமத்தைப் பாதுகாப்பதற்கு, அனுமதியின்றி இயங்கும் பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது என கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் கடலட்டைப் பண்ணைகளுக்குச் […]
யாழில்.1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள்
யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது எனகரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை […]
தென்பகுதியை விட வடக்கில் அனுமதிகளைப் பெறுவதில் அதிக தாமதங்கள்
கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில் மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, நீர்வாழ் உயிரினச் செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் […]
Ryan Williams’ Journey to India Debut
Ryan Williams has had a unique and challenging journey in football. Born in Perth, he once represented Australia in an
அமெரிக்க தளத்தை அதிரவைத்த தாக்குதல்; ஈராக்கில் பெரும் பதற்றம்
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. குர்திஸ்தான் பிராந்தியத்தின் தஹுக் மாகாணத்தில் அமைந்துள்ள சர்சாங் எண்ணெய் வயல் மீது ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி தெரிவிக்கின்றது. ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘HKN Energy’ நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அங்கு எண்ணெய் உற்பத்தி […]
India’s Defense Exports Break Record with ₹38,424 Crore in FY 25-26
India achieved a historic milestone in its defense exports during the financial year 2025-26, reaching a record high of ₹38,424 crore. This represents...
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலால் எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று புதன்கிழமை(1) அதிகாலை தெரிவித்தது. குவைத் சர்வதேச விமான நிலையம், ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களால் ஏவப்பட்ட ட்ரோன்களின் அப்பட்டமான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ராஜி கூறியதாக, அரசுக்குச் சொந்தமான குவைத் செய்தி […]
நடிகை ஜனனியுடனான சந்திப்பு –கடற்தொழில் அமைச்சர் புளகாங்கிதம்
எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிர வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிக்பொஸ் ஜனனி என அழைக்கப்படும் நடிகை ஜனனியை அமைச்சர் நேற்றைய தினம் காலை தனது அலுவலகத்தில் சந்தித்ததுடன் , இரவு , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியிலும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். குறித்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் தனது […]
ஏப்ரலில் வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு: ஐரோப்பிய நாடுகளுக்கு IEA எச்சரிக்கை
உலகளவில் ஏப்ரலில் வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் என IEA எச்சரிக்கை விடுத்துள்ளது. வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலக அளவில் ஏப்ரலில் எரிசக்தி விநியோகத்தில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று சர்வதேச எரிசக்தி முகமையின்(IEA) தலைவர் பாத்தி பிரோல் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருப்பதால் மார்ச் மாதத்தை விட ஏப்ரலில் எண்ணெய் விநியோக தட்டுப்பாடு இரண்டு மடங்கு அதிகரிக்கும் என நோர்வே வங்கி […]
வாரிவனம் முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம்!
யாழ்.சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிசேகப் பெருவிழா இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. சிவஸ்ரீ சி.சோதிரத்தினக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிசேக பெருவிழாவில்,50 மேற்பட்ட அந்தணக் குருமார்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும், தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிசேகம் இடம்பெறவுள்ளது. முன்னர் சோழர் காலத்து கட்டடக்கலை அம்சங்களோடு சிறப்புற்று விளங்கிய சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவனாலயத்தின் எல்லையில்,கிராமிய தெய்வமாக வீற்றிருந்து முத்துமாரி அம்மன் அருள் பாலித்து வந்தார். பிற்காலத்தில் போர்த்துக்கேயரால் சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவனாலயம் […]
திருச்சியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய்!
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை, பெரம்பூர் தொகு தியில்
வயல்வெளியில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
வயல்வெளியில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (1) மரணமடைந்தவர் சம்மாந்துறை-10 சாலி வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆதம்பாவா றியால் ஆவார். கடந்த செவ்வாய்க்கிழமை(31) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிக்கு சென்ற நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தர் காணாமல் சென்றிருந்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அல் அமீர் பாடசாலைக்கு பின்புறமாக உள்ள வயல்வெளி பகுதியில் அடையாளம் காணப்படாத […]
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக உள் மாவட்டங்களில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை 900 மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்
கிறிஸ்த்தவத் தொண்டு நிறுவனங்களையும் தேவாலயங்களையும் குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் –எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் திருவாரூர், திருச்சியில் திமுக கூட்டணி
அடுத்த மூன்று வாரங்களுக்கு ஈரான் மீது மிக கடுமையான தாக்குதல்கள் தொடரும் –அமெரிக்க அதிபர் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையில் அந்த நாட்டுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ஆபரேஷன்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் –கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் இன்று (ஏப்ரல் 2, 2026) காலை உள்ளூர் நேரப்படி 06:48 மணியளவில் ரிக்டர் அளவில் 7.4 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் இயக்கப்பட இருக்கும் மினி பஸ்கள்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) சார்பில் 220 சிற்றுந்துகள் (Mini Buses) விரைவில் இயக்கப்பட உள்ளன. பணமில்லாப் பரிமாற்றம் மற்றும் நடத்துனர் இல்லாத நவீன வசதிகளுடன்
தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla). தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி
பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடு: 35 நாடுகளிடையே ஒருமித்த முடிவு!
லண்டன் : பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையிலான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் மொத்தம் 500 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன. அவற்றுள் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுடன் (எல்பிஜி) இந்தியாவுக்கு வர வேண்டிய 19 சரக்கு […]
விரைவில் வெளியேறுவோம்; ஈரான் போருக்கு 2, 3 வாரங்களில் தீர்வு! –டிரம்ப்
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என்றும், அமெரிக்க ராணுவத்தினர் ஈரானை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விரைவில் வெளியேறுவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை […]
எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய நடவடிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியில், உள்நாட்டில் எரிபொருள் விலையை நிலையாகப் பேணுவதற்கு அரசாங்கம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. 2026 மார்ச் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பின்வரும் நிபந்தனைகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது: இதன் இறக்குமதி விலை, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விற்பனை விலையை விட அதிகரிக்கும் பட்சத்தில், எரிபொருள் இறக்குமதி வழங்கும் நிறுவனங்கள் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாய் செலுத்த வேண்டும். மக்களுக்கு […]
யாழ். அல்லைப்பிட்டியில் சிறுவன் கொலை ; குடும்பத்தினருக்கு தொடரும் அச்சறுத்தல்
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி பொலிசார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவன் அல்ஃபினோ அருள்பாய்ஸ் என்பவரின் குடும்பத்தினர், தங்களிடம் அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், அந்நிலையில் மறைமுகமாக பின் தொடரப்பட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் போது, குடும்பத்தினர் மோட்டார் சைக்கிள்களில் அச்சுறுத்திய நபர்கள் பற்றிய ஒளிப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழு யாழ். பிராந்திய அலுவகத்திற்கான அறிக்கையின் பின்னர், த. கனகராஜ், யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விசாரணையை […]
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற தமிழ் மாணவி
வெளியாகியுள்ள 2025 (2026) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மன்னார் முருங்கன் மத்திய கல்லூரி மாணவி திரெஸ்டன் அருங்குமார் ஜதுர்சிகா கலைப்பிரிவில் சிறப்பான சாதனையைப் பதிவுசெய்துள்ளார். அவர் கலைத்துறையில் 3 ‘A’ பெறுபேறுகளைப் பெற்று, மன்னார் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையைப் பிடித்துள்ளார். அவரது இந்த சாதனை, பாடசாலைக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் முயற்சி, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் பெற்றோரின் ஆதரவு ஆகியவை இச்சிறப்பான வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஜதுர்சிகாவின் இந்த […]
எரிபொருள் கையிருப்பு குறித்து வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இன்று ( 02) 32,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருள் (Jet-A1) அடங்கிய கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6-7 மற்றும் 7-8 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளன. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரங்களுக்குத் […]
திபெத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய […]
50 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக மனிதர்கள் நிலவுக்குச் செல்கின்றனர்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக முதன்முறையாக, மனிதர்கள் நிலவுக்குப் பயணிக்கின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நான்கு விண்வெளி வீரர்கள் உள்ளூர் நேரப்படி 18:35 மணிக்கு (மத்திய ஐரோப்பிய நேரப்படி 00:35) விண்ணில் ஏவப்பட்டனர். ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் ராக்கெட் அமைப்புடன் கூடிய ஓரியன் விண்கலத்தில் அந்த நால்வரும் உள்ளனர். நெருக்கடி நிறைந்த ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் ஏவுதல், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக முன்னதாகப் பலமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஏவுதலுக்கு முன்பு ஜெர்மன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கெர்ஸ்ட் ஜெர்மன் செய்தி நிறுவனத்திடம், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார். அதே நேரத்தில், அவரது சக விண்வெளி வீரரான மத்தியாஸ் மாரர், இது விண்வெளிப் பயணத்தின் ஒரு முற்றிலும் புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்டார். விண்வெளியிலும், பூமியிலும், அவற்றுக்கு இடையில் உள்ள எல்லா இடங்களிலும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், இப்போது விண்மீன்களுக்கு அப்பாலும் நாம் வெற்றி பெற்று வருகிறோம் என்று ஏவுதலுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் என்ற இணையதளத்தில் கருத்து தெரிவித்தார். 2022-ல் நடைபெற்ற ஆளில்லா 'ஆர்டெமிஸ் 1'பயணத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 'ஆர்டெமிஸ் 2'உருவாக்கப்பட்டுள்ளது. 'ஓரியன்'விண்கலத்தில், அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், அவரது சக அமெரிக்க வீரர்களான விக்டர் குளோவர் மற்றும் ரீட் வைஸ்மேன், மற்றும் கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் அடங்கிய குழுவினர், அந்த விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்புவதற்கு முன்னர் சுமார் பத்து நாட்கள் நிலவைச் சுற்றிப் பறப்பார்கள். இந்தப் பயணம், பூமி மற்றும் சந்திரனைச் சுற்றி ஒரு எட்டு வடிவப் பயணத்தைப் போன்றது. நான்கு விண்வெளி வீரர்களும் மொத்தமாக 23 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தின் மிகத் தொலைவான புள்ளியில், அவர்கள் பூமியிலிருந்து சுமார் 3,70,000 கிலோமீட்டர் தொலைவிலும், சந்திரனின் மறுபக்கத்திற்குப் பின்னால் சுமார் 7,500 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பார்கள். அங்கிருந்து, அவர்களால் ஒரே நேரத்தில் பூமியையும் சந்திரனையும் பார்க்க முடியும் மேலும், மனிதர்கள் இதுவரை பயணித்ததை விட பூமியிலிருந்து மிகத் தொலைவிற்கு அவர்களால் பயணிக்கவும் முடியும். க்ளோவர், கோச் மற்றும் வைஸ்மேனுக்கு இது இரண்டாவது விண்வெளிப் பயணமாகும், ஹேன்சனுக்கு இது முதலாவது. நாசாவின் நிலவுப் பயணத்தில் பங்கேற்ற முதல் பெண் கோச், முதல் வெள்ளையரல்லாத நபர் க்ளோவர் மற்றும் முதல் கனடியர் ஹேன்சன் ஆவர். இதுவரை பன்னிரண்டு அமெரிக்கர்கள் நிலவில் கால் பதித்துள்ளனர். நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார், அவர் ஜூலை 20, 1969 அன்று நிலவில் கால் பதித்தார். நிலவில் நடந்த கடைசி நபர் நாசா விண்வெளி வீரர் யூஜின் செர்னன் ஆவார், அவர் டிசம்பர் 1972-ல் அப்பல்லோ 17 பயணத்தின்போது நிலவில் நடந்தார்; இவர் 2017-ல் காலமானார். 1969 மற்றும் 1972-க்கு இடையில், அப்பல்லோ பயணங்கள் மூலம் மொத்தம் பன்னிரண்டு விண்வெளி வீரர்களை நிலவில் இறக்கிய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. ஓரியன்விண்கலம் பெரும்பாலும் முழுமையாகத் தானியங்கி முறையில் பறக்கிறது. இருப்பினும், சோதனை நோக்கங்களுக்காக, விண்வெளி வீரர்கள் அவ்வப்போது கைமுறையாகவும் அதனை இயக்க வேண்டியுள்ளது. மேலும், அறிவியல் ஆராய்ச்சி உட்பட, எண்ணற்ற சோதனைகள், உணர்விகள் மற்றும் அளவீடுகளின் உதவியுடன் அனைத்து அமைப்புகளையும் தங்கள் உடல்நிலையையும் அவர்கள் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். புகைப்படங்கள் எடுப்பது மற்றும் பூமி, சந்திரன் ஆகியவற்றை ஆய்வு செய்வதும் அவர்களின் பணிகளில் அடங்கும். கிரேக்கப் புராணங்களில் வரும் சந்திர தேவதையும், அப்பல்லோ கடவுளின் இரட்டைச் சகோதரியுமான ஆர்டெமிஸின் பெயரால் அழைக்கப்படும், ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டெமிஸ்திட்டத்தை நாசா 2017-ல் அறிவித்தது. இது முதலில் 2024-க்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்குவதை (ஆர்டெமிஸ் 3) நோக்கமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், அதன் பிறகு பலமுறை இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாசாவின் புதிய தலைவரான ஜாரெட் ஐசக்மேன், சமீபத்தில் 'ஆர்டெமிஸ்'திட்டங்களை முற்றிலுமாக மாற்றியமைத்தார். ஆரம்பத்தில் 2028-ஆம் ஆண்டில் நிலவில் ஒரு குழுவைத் தரையிறக்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்த 'ஆர்டெமிஸ் 3'திட்டம், இப்போது அடுத்த ஆண்டு ஏவப்படவுள்ளது ஆனால் நிலவில் தரையிறங்காது. மாறாக, இந்த விண்வெளிப் பயணத்தின் போது 'ஓரியன்'விண்கலம் ஒன்று அல்லது இரண்டு நிலவுத் தரையிறங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. மேலும், 2028-ல் 'ஆர்டெமிஸ் 4'மற்றும் 'ஆர்டெமிஸ் 5'என இரண்டு நிலவுத் தரையிறங்கும் முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படலாம். நிலவில் மனிதர்கள் நிரந்தரமாகத் தங்குவதும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ஈசா (Esa) உட்பட பல தனியார் விண்வெளி நிறுவனங்களும் சர்வதேச கூட்டாளிகளும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தும் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. ஈசாவின் சேவைத் தொகுதிக்கான பாகங்களை சுவிஸ் நிறுவனங்கள் வழங்கியுள்ளன: சூரியத் தகடுகளை சீரமைப்பதற்கான கட்டுப்பாட்டு அமைப்புகள் சூரிச்சில் உள்ள பியாண்ட் கிராவிட்டி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளன. மேலும், ஏகிள் விடி-யில் உள்ள ஆப்கோ டெக்னாலஜிஸ் நிறுவனம், கட்டுமானம் மற்றும் போக்குவரத்தின் போது சேவைத் தொகுதிக்கு ஆதரவளிப்பதற்காக இயந்திரவியல் தரை உபகரணங்களையும், அத்தொகுதியைப் பொருத்துவதற்கான சுழலும் தளத்தையும் வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக, விண்வெளிப் பயண நாடுகளிடையே நிலவை நோக்கிய ஒரு புதிய போட்டி உருவாகி வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய போட்டியாளர் சீனா ஆகும்; அது 2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்க இலக்கு வைத்துள்ளது. ரஷ்யாவும் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறது, ஆனால் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக ஏற்படும் தாமதங்களால் தவிக்கிறது.
கிரிமியாவில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 29 பேர் பலி!
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதியில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் , அதில் பயணித்த 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தன. சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி, விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களும் 23 பயணிகளும் உயிரிழந்தனர் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி டாஸ் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவும் இந்த விபத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை வழங்கவில்லை. 2026 மார்ச் 31 அன்று, கிரிமியா குடியரசின் பக்சிசரே மாவட்டத்தில் உள்ள குய்பிஷேவோ கிராமத்திற்கு அருகே, பறந்துகொண்டிருந்த ஏஎன்-26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் 7 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் இருந்தனர் என்று அக்குழு தெரிவித்துள்ளது. விமானப் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தளங்கள் மீது 41 தாக்குதல்கள் நடத்தியதாக ஈராக்கிய ஆயுதக் குழு பொறுப்பேற்றது!
அமெரிக்க தளங்கள் மீது 41 தாக்குதல்கள் நடத்தியதாக ஈராக்கிய ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது. ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம், தங்கள் போராளிகள் ஈராக்கிற்குள்ளும் மற்றும் பரந்த பிராந்தியம் முழுவதிலும் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து 41 தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. டெலிகிராம் வழியாக வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், இன்றைய தாக்குதல்களை நடத்துவதற்காக டஜன் கணக்கான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை அக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
4 லட்சம் கிட்கேட் சாக்லேட்டுகளை கொள்ளையடித்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னர், இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட 12 டன் எடையுள்ள 4 லட்சம் அளவிலான கிட்கேட் சாக்லேட்டுகளை லாரியுடன் மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்காக சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான புதிய ‘F1’ வகை சாக்லேட் பார்களை நெஸ்லே நிறுவனம் தயார் செய்துள்ளது. இந்த சாக்லேட்டுகள் ஃபார்முலா ஒன் (F1) கார் பந்தயத்தால் ஈர்க்கப்பட்டு, பந்தயக் கார்களின் வடிவத்தில் வடிவமைத்து, புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு […]
அமெரிக்கா இனி உதவாது: – நட்பு நாடுகளை அதிரவைத்த டிரம்பின் பேச்சு
டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோர்முஸ் ஜலசந்தியால் ஜெட் எரிபொருள் பெற முடியாத இங்கிலாந்து போன்ற, ஈரானின் தலையை துண்டிக்கும் செயலில் தலையிட மறுத்த அனைத்து நாடுகளுக்கும், என்னிடம் ஒரு யோசனை உள்ளது. முதலாவதாக, அமெரிக்காவிடமிருந்து எரிபொருள் வாங்குங்கள், எங்களிடம் ஏராளமாக உள்ளது. இரண்டாவதாக, தாமதமான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஈரானில் உள்ள ஜலசந்திக்கு சென்று, அதை அப்படியே கைப்பற்றுங்கள். உங்களுக்காக நீங்களே போராடக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு உதவி செய்யவில்லை அதைப் போல, […]
ஈராக்கில் அமெரிக்க பத்திரிகையாளர் கடத்தல் –அதிர்ச்சி சம்பவம்
பாக்தாத், அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஜெல்லி கிட்டில்சன். இவர் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை களத்திற்கே நேரில் சென்று செய்தி சேகரித்து பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு வந்தார். இந்நிலையில், ஜெல்லி கிட்டில்சன் ஈராக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, மத்திய கிழக்கு போர் குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்தார். அவர் நேற்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல் சடோன் பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த […]
ட்ரம்ப் பெயரில் விமான நிலையம் ; எரிக் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் என்ற சர்வதேச விமான நிலையம், இனி ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் மற்றும் தொழிலதிபரான எரிக் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான சட்டமூலம் ஒன்றிற்கு புளோரிடா ஆளுநர் ரான் டிசேன்டிஸ் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக புளோரிடா மாகாண பிரதிநிதி மேக் வெயின்பெர்கர், ஆளுநர் ரான் டிசேன்டிஸ், புளோரிடா அட்டார்னி […]
அமெரிக்கக் கல்வி நிலையங்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!
அமெரிக்கா தனது தாக்குதலுக்கு பகிரங்க மன்னிப்பு கோரவில்லை என்றால், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் லெபனானில் உள்ள அமெரிக்கக் கல்வி நிலையங்கள் ‘முறையான இலக்குகளாக’ (Legitimate Targets) மாற்றப்படும்” என ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. மினாப் பள்ளி மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை (Pentagon) நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது ஒரு ‘தவறான இலக்கு’ (Targeting Error) என்பது தெரியவந்துள்ளது. மாணவர்கள் மீது ஒரு துளி ரத்தம் பட்டாலும் விளைவுகள் […]
துபாய் கடற்கரையில் குவைத் எண்ணை கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல்
துபாய் , வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இந்தநிலையில் துபாய் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த குவைத்தின் அல்-சல்மி என்ற்ற எண்ணை கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடட்தியது. அந்த கப்பலில் கச்சா எண்ணய் ஏற்றப்பட்டிருந்தது. டிரோன் தாக்குதலால் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் மேல்தளம் கடும் சேதம் அடைந்தது. தீயை அணைக்க கடல்சார் தீய்ணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினார்கள். இந்த தாக்குதலில் […]
தெற்கு லெபனானில் தாக்குதல்; இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலி
டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4 வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. தெற்கு லெபனானில் உள்ள பகுதிகளை இஸ்ரேல் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் படையினரை கொண்டு தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், […]
தமிழர் பகுதியொன்றில் 18 வயது இளைஞனின் விபரீத முடிவால் பெரும் துயரில் குடும்பம்
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது வீட்டிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது. ஏதேனும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பெரிய […]
இலங்கைப் பெண்களின் தலைமுடியில் பாதரசமா; வெளியான பகீர் தகவல்
இலங்கைப் பெண்களின் தலைமுடியில் குறிப்பாக புத்தளம் பகுதியில் வாழ்வோருக்கு பாதரசம் உலோகம் அபாயகரமான அளவில் காணப்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவரும், சிரேஷ்ட ஆலோசகருமான ஹேமந்த விதானகே தெரிவிக்கையில், சூழலிலும் கடல்வாழ் உயிரினங்களிலும் தேங்குவதாகவும் இறுதியில் உணவுச் சங்கிலி ஊடாக மனித உடலுக்குள் நுழைவதற்கும் வாய்ப்பு இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. இது மிகவும் பாரதூரமான நிலையாகும். நுரைச்சோலை, பனியடிய, நாரக்கல்லிய மற்றும் […]
Delhi Capitals Opt to Bowl Against Lucknow
In an exciting IPL match, Axar Patel, the captain of Delhi Capitals, won the toss and decided to bowl first
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு ; கிளிநொச்சி மாணவர்களை நேரில் சென்று பாராட்டிய ஆளுநர்!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு இன்றைய தினம் நேரில் சென்ற ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர். கணிதப் பிரிவில் தேசிய நிலையில் சாதனை கிளிநொச்சி மகா வித்தியாலய […]
டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் திடீர் திருப்பம்! வெளியான பரபரப்பு தகவல்!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு செப். 11 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது கழுத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். […]
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி படைத்த வரலாற்று சாதனை
2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் விபரமும் தற்போது வெளியாகியுள்ளன. கல்லூரியின் உத்தியோகபூர்வ பக்கத்தில் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேற்று விபரம் இதன்படி 64 மாணவர்கள் 3A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் 31 மாணவர்கள் 2A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், 21மாணவர்கள் A2B பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். வெளியான பெறுபேறுகளின் படி உயிரியல் விஞ்ஞானப் […]
தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்
இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் விவகாரம் அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா என ஆரம்ப விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் கல்முனை […]
U.K. Ready to Lead Hormuz Opening
U.K. Prime Minister Keir Starmer announced the country’s willingness to take a leading role in reopening the Strait of Hormuz. He also revealed plans ...
Arjun Tendulkar Shares His Struggles; ‘I Had Two Stress Fractures
Growing up as Sachin Tendulkar’s son comes with its own challenges. While外界 often compares Arjun’s achievements to his father’s legendary career, the ...
ஃப்ரிட்ஜுக்குள் இளம்பெண்ணின் உடல்: திடுக் பின்னணி
காதலியைக் கொலை செய்து அவரது உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் அடைத்த நபர் ஒருவர், பொலிசில் சரணடைந்துள்ளார். ஃப்ரிட்ஜுக்குள் இளம்பெண்ணின் உடல் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மௌனிகா (29). ராஜம் என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் Ch ரவீந்த்ரா (35) என்னும் நபருக்கும் மௌனிகாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்திய கடற்படையில் டெக்னீஷியனாக பணி புரிந்துவரும் ரவீந்த்ரா, தன் மனைவி அவரது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில், மௌனிகாவை தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், […]
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிர்ந்த குண்டுவெடிப்பு வீடியோவால் பரபரப்பு
வாஷிங்டன் டி.சி. ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் […]
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை பலனாக ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்களுக்கு அனுமதி: வெள்ளை மாளிகை
வாஷிங்டன் டி.சி. ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் […]
பா. ஸ்ரீகுமார் பூமியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது நிலவு. இந்த நிலவைச் சுற்றிவர அமெரிக்க விண்வெளி வீரர்களைத் தயாராக்கி வருகிறது ‘நாசா’. நிலவை ஆய்வுசெய்யும் தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதன்கிழமை (ஏப்.1) (அமெரிக்க நேரம் மாலை 6.24 மணி- இந்திய நேரம் ஏப்ரல் 2, அதிகாலை 3.54 மணி) விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது. 1972-ஆம் […]
சம்மாந்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் தீவிர விசாரணை
வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01) மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா ரியால் என்பவராவார். இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் காணப்பட்ட போதிலும் […]
இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம்
இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு யூதா்களைக் கொலை செய்யும் பாலஸ்தீனா்களுக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டம், சா்வதேச அளவில் கண்டனங்களையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், இச்சட்டத்துக்கு ஆதரவாக 62 வாக்குகள் கிடைத்தன. இப்புதிய சட்டத்தின்படி, மேற்கு கரை பகுதியில் உள்ள ராணுவ நீதிமன்றங்களில் தண்டனை பெற்ற பாலஸ்தீனா்களுக்கு மரண தண்டனை மட்டுமே முதன்மைத் […]
அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)###################### புங்கையூர் செல்வியே,புன்சிரிப்பு நாயகியேஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய்ஒளி வீசும் அற்புதமே.. மேல்மருவட்டத்தூர் அம்மன் மீது,பேரன்பு கொண்டு வாழும்சுதாகரன் செலவியரே.. இன்றைய பிறந்தநாளில்இங்கிதமான நல் வாழ்த்துக்கள்.. இன்றைய நாளில் சுவிஸ் நாட்டில் பிறந்தநாள் காணும் செல்வி என அன்பாக எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி. சுதாகரன் கிருபாதேவி அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” மழலைகளுக்கு கற்றல் உதவி […]
அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்காவைச் சார்ந்த பெரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களைக் குறிவைத்து ஏப். 1 முதல் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்கி வருகிறது. அதேபோல், ஈரானிலுள்ள உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்கி […]
ஈரானிலிருந்து இந்தியா வரவிருந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரானின் மஷ்ஹாத் விமான நிலையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், இந்தியாவுக்கு வரவிருந்த விமானம் சேதமடைந்தது. இந்த தாக்குதல் ஈரானுக்கான மனிதாபிமான உதவி பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த விமானம், ஈரானிய மக்களுக்கான அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் இதர உதவிகளைப் பெற்று செல்வதற்காக ஏப்ரல் 1-ஆம் திகதி புதுடெல்லிக்கு வரவிருந்தது. முன்னதாக, மார்ச் 18 அன்று இந்தியா தனது முதல் தவணை மருத்துவ உதவிகளை ஈரான் செஞ்சிலுவை […]
இன்று முதல் மின்சாரக் கட்டணம் அதிரடி உயர்வு ; வெளியான முழுமையான விபரங்கள்
நாட்டில் இன்று முதல் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான கட்டணங்களும் வெவ்வேறு விகிதங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர் முதல் அதிகப்படியான பாவனையாளர்கள் வரை அனைவருக்குமே இந்தக் கட்டண உயர்வு சுமையை ஏற்படுத்தியுள்ளது: 30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 – 60 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, […]
நகரி, தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம், மேடுபள்ளி சாயி ஐஸ்வர்யா காலனியைச் சேர்ந்தவர் பெல்லம்கொண்ட சைலஜா. இவரது மகள் மது ஹசிதா (வயது 19). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த மது ஹசிதா, நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீ ரென மாயமானார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் சைலஜா, மகளை காணாமல் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். இதற்கிடையே, வீட்டில் மது ஹசிதா எழுதி […]
முல்லைத்தீவில் இருந்து மருத்துவ துறைக்கு தெரிவான இஸ்லாமிய மாணவி; பலரும் வாழ்த்து
முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியதாக வைத்திய துறைக்கு பல்கலைகழகம் தெரிவான முதலாவது இஸ்லாமிய தமிழ் மாணவி NIDHA FATHIMA இற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. அந்தவகையில் நேற்று நள்ளிரவு வெளியான 2025 ஆண்டிற்கான கா.பொ.த உயர்தர பரீட்சை பேருபேறுகளில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி M.NIDHA FATHIMA முல்லைத்தீவு மாவட்ட நிலை – 01 ஆம் இடத்தையும் , தேசிய நிலை – 207 ஆம் இடத்தையும் பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார். இந்நிலையில் நீண்டகாலத்திற்கு பின்பு முல்லைத்தீவு மகா […]
A/L பெறுபேறுகள் : உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற கொழும்பு மாணவன்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (31) இரவு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியதுடன், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை, […]
இன்று முதல் தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!
சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் பாட்டில்கள் வீசிய இருவர் கைது!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில

28 C