Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?
Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன... அது அதிகம் இருந்தால்தான் நல்ல சன் ஸ்கிரீனா... சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோருக்கு வைட்டமின் டி குறைபாடு வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா சன் புரொடக்ஷன் ஃபேக்டர் என்பதன் சுருக்கமே எஸ்பிஎஃப் (SPF). அல்ட்ராவயலட் எனப்படும் யுவி கதிர்கள் எந்த அளவுக்கு நம் சருமத்தைப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து இது தேர்வு செய்யப்பட வேண்டும். உதாரணத்துக்கு, 30 நிமிடங்களுக்குள்ளேயே உங்கள் சருமம் யுவி கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் என நினைத்தால் எஸ்பிஎஃப் 30 உள்ளது போல தேர்ந்தெடுக்கலாம். அதைப்போல மும்மடங்கு அதாவது 90 நிமிடங்களுக்கு அந்த சன் ஸ்கிரீன் உங்களுக்குப் பாதுகாப்பு தரும். நம்முடைய வெப்பநிலைக்கு, எல்லோருமே 30-க்கு மேல் எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீன்தான் உபயோகிக்க வேண்டும். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதுவே எஸ்பிஎஃப் 100 இருந்தால், அது 98 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. 'பிராட் ஸ்பெக்ட்ரம்' என்று சொல்வோம். அதாவது யுவிஏ, யுவிபி கதிர்களிடமிருந்து பாதுகாப்பளிப்பதாக இருக்க வேண்டும். தண்ணீரோ, வியர்வையோ பட்டால் சன் ஸ்கிரீன் வழிந்து ஓடும்படி இருக்கக்கூடாது. எனவே, அது வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக, ஸ்வெட் ரெசிஸ்டன்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா? சருமத்தில் தடவும்போது வெள்ளைப் படலமாகவோ, கறுப்பாகவோ தெரியக்கூடாது. சருமத்தின் துவாரங்களை அடைக்காதபடி (non-comedogenic ) இருக்க வேண்டும். பருக்களை ஏற்படுத்தக்கூடாது. வைட்டமின் டி குறைபாடு என்பது இன்று பரவலாகக் காணப்படுகிற பிரச்னையாக இருக்கிறது. இதற்கு மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதுதான் தீர்வு. சன் ஸ்கிரீனை யாரும் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிக்கொள்ளப் போவதில்லை. வைட்டமின் டி ஊடுருவ வாய்ப்பில்லாத அளவுக்கு சன் ஸ்கிரீன் தடையாக இருக்கப்போவதும் இல்லை. அந்த வகையில் சன் ஸ்கிரீன் பயன்பாட்டால் வைட்டமின் டி குறைபாடு வர வாய்ப்பே இல்லை. எனவே, பயமின்றி சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைப்பு | Photo Album
புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி Modi: மோசடி செய்வதில் திமுக அமைச்சர்களுக்கு இடையே போட்டி இருக்கிறது - மதுரையில் மோடி பேச்சு
காற்றை வசப்படுத்திய சிறுவன்; Zero-வில் தொடங்கி Hero-வான ஒரு குட்டி ஜீனியஸின் கதை!
ஒவ்வொரு நாள் விடியும்போதும், வாழ்வில் உள்ள தடைகளை எண்ணி மலைக்காமல், அந்தத் தடைகளையே படிக்கட்டுகளாக மாற்றிய ஒருவரின் கதை நம் நெஞ்சில் அளப்பரிய ஆற்றலை விதைக்கும். வறுமை, பஞ்சம், கல்வியின்மை எனத் தன்னைச் சூழ்ந்திருந்த இருட்டை, தன் சுயமுயற்சியால் விரட்டியடித்த ஆப்பிரிக்க இளைஞரான வில்லியம் கம்குவாம்பாவின் (William Kamkwamba) வாழ்க்கை அத்தகையது. kamkwamba_william வில்லியம் கம்குவாம்பா ஆகஸ்ட் 5, 1987 அன்று ஆப்பிரிக்க நாடான மலாவி நாட்டின் காசுங்கு (Kasungu) பகுதியில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். 2001 ஆம் ஆண்டில், மலாவியில் வரலாறு காணாத கடும் பஞ்சம் ஏற்பட்டது. பயிர்கள் கருகின; மக்கள் உணவின்றித் தவித்தனர். கம்குவாம்பாவின் குடும்பமும் வறுமையின் பிடியில் சிக்கியது. அந்தச் சூழலில், பள்ளிக் கட்டணமான வெறும் 80 டாலர்களைக் கூடச் செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவரது கல்வி பாதியிலேயே நின்றது. அவருக்கு அப்போது வயது 14. Motivation Story: நடுக்கடல்... 16 மணி நேரம் உயிருக்குப் போராட்டம்; 62 வயது முதியவர் மீண்ட கதை! பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டாலும், கம்குவாம்பாவின் கற்கும் ஆர்வம் ஒருபோதும் குறையவில்லை. அறிவைத் தேடி உள்ளூரில் இருந்த ஒரு சிறிய நூலகத்திற்குச் செல்லத் தொடங்கினார். அங்கு Using Energy (ஆற்றலைப் பயன்படுத்துதல்) என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தார். அவருக்கு ஆங்கிலம் முழுமையாகத் தெரியாவிட்டாலும், அதில் இருந்த காற்றாலைகளின் படங்கள் அவருக்கு ஒரு புதிய திறப்பைக் கொடுத்தன. காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கலாம், அந்த மின்சாரத்தைக் கொண்டு நீரேற்றி (Water pump) விவசாயம் செய்யலாம் என்பதை அவர் உணர்ந்தார். தனது கனவை நனவாக்கக் களமிறங்கிய வில்லியமிடம் எந்தவொரு தொழில்நுட்ப உபகரணங்களும் இல்லை. அவர் குப்பை மேடுகளை நோக்கிச் சென்றார். உடைந்த சைக்கிள் பாகங்கள், பழுதடைந்த டிராக்டர் ஃபேன்கள், பிளாஸ்டிக் பைப்புகள், மரத்துண்டுகள் ஆகியவற்றைச் சேகரித்தார். kamkwamba_william இவன் ஒரு பைத்தியம் என்று ஊர் மக்களும் நண்பர்களும் அவரைக் கேலி செய்தனர். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. விடாமுயற்சியுடன் சுமார் 5 மீட்டர் உயரமுள்ள ஒரு காற்றாலையை உருவாக்கினார். அந்தக் காற்றாலை சுழன்று, அதில் இணைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பல்பை எரிய வைத்தபோது, அவரைப் பார்த்துச் சிரித்த கிராமமே வியப்பில் ஆழ்ந்தது. பின்னர் அதை மேம்படுத்தி, தனது வீட்டின் 4 பல்புகள் மற்றும் ஒரு ரேடியோவை இயக்கும் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கினார். வறுமையில் இருண்டு கிடந்த அவரது வீட்டிற்கு அது ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தது. Motivation Story: `சுரங்கத் தொழிலாளி டு சூப்பர் ஸ்டார்!' - சார்லஸ் பிரான்சன் சாதித்தது எப்படி? 2002 ஆம் ஆண்டு, தனது 14 வயதில், எவ்வித முறையான வழிகாட்டுதலும் இன்றி முதல் காற்றாலையை வெற்றிகரமாக உருவாக்கினார். பின்னர் தனது கிராமத்திற்குத் தேவையான நீரேற்றும் இயந்திரத்தையும் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் உருவாக்கினார். 2007ல் இவருடைய வியக்கத்தக்க சாதனை பத்திரிகைகள் மூலம் வெளியே தெரியவந்தது. ஆப்பிரிக்காவில் நடந்த TED Global மாநாட்டில் பேசும் வாய்ப்பைப் பெற்றார். மேடையில் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் அவர் தன் கதையைச் சொல்லியபோது, அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. 2009ல் தனது வாழ்க்கைப் பயணத்தை The Boy Who Harnessed the Wind (காற்றை வசப்படுத்திய சிறுவன்) என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக வெளியிட்டார். இது உலகளவில் மிகப்பிரமாண்டமான வரவேற்பைப் பெற்றது. 2014ல் பலரது உதவியால் தனது கல்வியைத் தொடர்ந்த கம்குவாம்பா, அமெரிக்காவின் புகழ்பெற்ற டார்ட்மவுத் கல்லூரியில் (Dartmouth College) சுற்றுச்சூழல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். காற்றாலை 2019ல் இவரது வாழ்க்கை நெட்ஃபிளிக்ஸ் (Netflix) திரைப்படமாக வெளியாகி, உலகெங்கும் பல மில்லியன் மக்களை ஊக்கப்படுத்தியது. தற்போது அவர் Moving Windmills Project என்ற அமைப்பைத் தொடங்கி, ஆப்பிரிக்காவின் ஊரகப் பகுதிகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தும், கல்வி மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தியும் வருகிறார். வசதிகள் இல்லை, எனக்குக் கற்பிக்க யாருமில்லை, என் சூழ்நிலை மோசமாக உள்ளது என்று குறை கூறுபவர்களுக்கு மத்தியில், குப்பைகளை மூலதனமாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் வில்லியம் கம்குவாம்பா. நாம் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என முழுமையாக நம்பினால், அதைச் செய்து முடிக்கத் தேவையான அனைத்தும் நம்மைச் சுற்றியே இருக்கின்றன என்பதுதான் அவரது வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம். இந்த நேர்மறை எண்ணத்தோடு இன்றைய தினத்தை நாம் தொடங்குவோம்! Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்!
ஈரான் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டார்! ராணுவ தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சரும் உயிரிழப்பு!!
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா். அவரது கொலைக்குப் பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது. மத்திய கிழக்கில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போா் தொடா்ந்ததால், அந்தப் பிராந்தியத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் […]
பாஜக சீட் கணக்கு… நம்பரை விடுங்க, வெற்றி வாய்ப்பு எப்படி? அதிமுக வகுத்த 2026 தேர்தல் வியூகம்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறும் திட்டத்தில் பாஜக இருக்கிறது. இந்த சூழலில் வெற்றி வாய்ப்பு நிறைந்த தொகுதிகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னணியை விரிவாக பார்க்கலாம்.
ஈரானின் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய அரசியலமைப்பின் 111 ஆவது பிரிவின்படி, உச்சத் தலைவர் ஒருவர் பதவியில் இல்லாதபோது அல்லது அவர் காலமானால், புதிய தலைவர் ஒருவரை நிபுணர்கள் பேரவை தேர்ந்தெடுக்கும் வரை ஒரு தற்காலிகத் தலைமைப் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், உயர்மட்ட மதகுருமார்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் பின்னர் […]
சற்றுமுன்னர் ஓமான் துறைமுகத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்! வெடித்து சிதறிய எண்ணெய் டேங்கர்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஓமான் முசாண்டம் கடற்கரையில் ஸ்கைலைட் என்ற எண்ணெய் டேங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. ஓமான் கடல்சார் பாதுகாப்பு மையத்தின்படி, ஓமானின் முசந்தம் கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான பலாவு (Palau) தேசியக் கொடியை பறக்கவிட்டது என்றும் அறிக்கை கூறுகிறது. பலாவ் மாநிலத்தின் […]
பொலிவிய விமான விபத்தில் 15 பேர் பலி
பொலிவிய விமானப்படை சரக்கு விமானம் ஒன்று நாட்டின் மேற்கு நகரமான எல் ஆல்டோவில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை (27) உள்ளூர் நேரப்படி மாலை 6:20 மணிக்கு (22:20 GMT) சாண்டா குரூஸ் நகரத்திலிருந்து புறப்பட்டு எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகிலுள்ள மோட்டார் […]
இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய தகவல் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, வீடுகளில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தி வைப்பது சட்டவிரோதமான செயற்பாடு எனவும் அவர் எச்சரித்துள்ளார். எரிபொருள் விநியோகப் பணிகள் எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் நாளைய தினமும் (02) வழமை போன்று விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (01) விடுமுறை தினமாக இருந்தபோதிலும், ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, இன்று மாலை 5.00 […]
'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' - உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் ஆகியிருக்கிறார் சாம்சன். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி உலகக்கோப்பையின் அரையிறுதிக்குள்ளும் நுழைந்திருக்கிறது. போட்டிக்குப் பிறகு அவர் பேசியவை Samson சாம்சன் பேசியதாவது, 'கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான். என்னுடைய பயணம் எப்போதும் தனிச்சிறப்பு கொண்டது. நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தது. ‘என்னால முடியுமா? நான் இந்த இடத்துக்கு வர முடியுமா?’ன்னு என்னையே நான் சந்தேகப்பட்ட தருணங்களும் நிறைய இருந்திருக்கு. ஆனா நம்பிக்கையை விடல. இன்று எனக்கு ஆசீர்வாதம் தந்த கடவுளுக்கு நன்றி. இந்த ஃபார்மாட்டை நான் நீண்ட காலமா விளையாடி வரேன். IPL இல் 10–12 வருஷமா விளையாடி இருக்கேன். இந்திய அணியில கடந்த 10 வருஷமா இருக்கேன். பல போட்டிகளில் விளையாடல, ஆனா டக்அவுட்-ல இருந்து பார்த்து நிறைய கத்துக்கிட்டேன். விராட் கோலி, ரோஹித் சர்மா மாதிரி பெரிய வீரர்கள் எப்படி விளையாடுறாங்க? எப்படி ஆட்டத்தை முடிக்கிறாங்க, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தங்கள் ஆட்டத்தை எப்படி மாற்றுறாங்கன்னு கவனிச்சு கத்துக்கிட்டேன். Samson அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. நான் நேரடியாக 50–60 போட்டிகள் தான் விளையாடி இருப்பேன். ஆனா 100க்கும் மேலான போட்டிகளை பார்த்திருக்கேன். இது என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த நாட்களில் ஒன்று. பந்தை மட்டும் பார்த்தேன்,என்னோட திறமையை நம்பினேன். அவ்வளவுதான்' என்றார்.
இந்தியாவின் ‘கருப்பு நதி’ என அழைக்கப்படும் நதி எது தெரியுமா? மறைக்கப்பட்ட இயற்கை பொக்கிஷம் இதுதான்!
காடுகள், விலங்குகள், விவசாயம் மற்றும் மின்சார உற்பத்தி என பல துறைகளுக்கு ஆதாரமாக இருக்கும் இந்த நதி, இயற்கையின் முக்கிய வளமாக திகழ்கிறது. இருளின் பெயரை கொண்டிருந்தாலும், நதி வாழ்க்கை, இயற்கை வளம் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கும் ஒளிமயமான நதியாகவே பார்க்கப்படுகிறது.
IND vs WI: ‘2016 சம்பவத்திற்கு பதிலடி கொடுத்த இந்தியா’.. அரையிறுதியில் யாருடன் மோதும்: அட்டவணை இதோ!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், இந்திய அணி அபார வெற்றியைப் பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்து அசத்தியுள்ளது.
சட்டையில் இருந்த ஜெயலலிதா புகைப்படம்.. விஜய் சொன்ன வார்த்தை.. -மிரண்டு போன செங்கோட்டையன்!
ஜெயலலிதா புகைப்படம் படத்தை தயுவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் சொன்னார் விஜய் என தவெக நிர்வாகிகள் மத்தியில் செங்கோட்டையன் உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டும் கொல்லப்பட்டதாக தகவல்
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் (Mahmoud Ahmadinejad) அவர்கள், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய… The post ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டும் கொல்லப்பட்டதாக தகவல் appeared first on Global Tamil News .
மத்திய கிழக்கில் தாக்குதல்கள் ; எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிப்பு
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 20% இற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுமாறு ஈரான் விடுத்த அறிவிப்பால், நேற்றையதினம் (28) முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மோதல் தீவிரமடைந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை மசகு எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 73 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது (இது ஜூலை மாதத்திற்குப் […]
ஈரானின் இடைக்காலத் தலைவராக ஆயதுல்லா அலிரேசா அராஃபி
ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, நாட்டின் இடைக்காலத் தலைமைப் பொறுப்புகளைக் கவனிக்கும் இடைக்காலத்… The post ஈரானின் இடைக்காலத் தலைவராக ஆயதுல்லா அலிரேசா அராஃபி appeared first on Global Tamil News .
திருப்பரங்குன்ற விவகாரம்.. பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல்!
திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி உயிரை மாய்த்துக் கொண்ட பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.
வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றித் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற தொழிலாளி படகின் இயந்திரத்தில் தூண்டிக் கயிறு சிக்கியுள்ளது. அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளி தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடாத்தி, அவர் தொழிலில் ஈடுபட்ட இடத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் (நடுக்கடலில்) சடலத்தை கண்டுபிடித்து இன்று காலை 10 மணியளவில் கரை சேர்ந்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (23) என்ற ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் –அமெரிக்கா தாக்குதல்…ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், Hormuz நீரிணை ஊடாக இனி கப்பல்களை அனுமதிப்பதில்லை என ஈரான் அறிவித்துள்ளது. ஏற்றுமதி நிறுத்தம் ஈரானின் இந்த அதிரடி முடிவால் தற்போது பல எண்ணெய் கப்பல் உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் விமானப் படை வரலாற்றிலேயே மிகப்பெரிய தாக்குதல் என குறிப்பிடும் இராணுவ […]
யாழ்ப்பாண கடலில் காணாமல் போன 23 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் விசாரணை சம்பவப்படி, குறித்த மீனவரின் படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியது. அதனை சீர்செய்ய முயன்ற போது, அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போனார். பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளியின் தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை கொட்டடிப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடத்தினர். […]
பிரிக்கப்படவுள்ள வவுனியாவின் பிரிவுகள்!
வவுனியா மாவட்டத்தில் கிராமஅலுவலர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்ப்படுத்த எல்லை நிர்ணயகுழு பரிந்துரை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அந்தவகையில் பிரதேசசெயலக வாரியாக பிரிக்க ப்படவுள்ள கிராமஅலுவலர் பிரிவுகளின் விபரம். வவுனியா பிரதேசசெயலகம்.. தோணிக்கல் கிராமஅலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (தோணிக்கல் வடக்கு/தெற்கு) பண்டாரிக்குளம் மற்றும் கூமாங்குளம் ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகளை ஒன்றிணைத்து மூன்று கிராம அலுவலர் பிரிவுகள் உருவாக்குதல் (பண்டாரிக்குளம்,கூமாங்குளம்,உக்கிளாங்குளம்) ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல்(ஆசிகுளம் கிழக்கு, ஆசிகுளம் மேற்கு) மகாறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (மகாறம்பைக்குளம்கிழக்கு, மகாறம்பைக்குளம் மேற்கு) பட்டாணிச்சூர் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (வேப்பங்குளம், பட்டாணிச்சூர் புளியங்குளம். செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவு. சூடுவெந்தபிலவு கிராம அலுவலர் பிரிவில் பாவற்குளம் யுனிட்-1 கிராமத்தை பாவற்குளம் யுனிட்-2 கிராம அலுவலர் பிரிவுடன் இணைத்தல் கிறிஸ்தவகுளம் கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள அருவித்தோட்டம்,முசல்குத்தி ஆகிய கிராமங்களினை முகத்தான்குளம் கிராம அலுவலர் பிரிவுடன் இணைத்தல் ஆண்டியா புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் ( ஆண்டியாபுளியங்குளம், மாணிக்கம்பண்ணை) தெற்கு சிங்கள பிரதேச செயலகம் பூமடுவ மற்றும் ஆவாரந்துலாவ கிராம அலுவலர் பிரிவுகளை ஒண்றிணைத்தல். றெக்7 மற்றும் ஏக்கர்400 கிராம அலுவலர் பிரிவுகளை ஒன்றிணைத்தல் ஏக்கர் 20,40,60 மற்றும் பெரிய உலுக்குளம் கிராம அலுவலர் பிரிவுகளை ஒண்றிணைத்தல்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கு மட்டுமே மேலதிகசெயலாளர் மற்றும் மாவட்டசெயலாளர் போன்ற 381 உயர்மட்ட முகாமைத்துவ பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென்ற நடைமுறைக்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஆப்படித்துள்ளது. இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த பதவிகளிற்கே இனிமேல் அகில இலங்கை சேவைகளில் பணிபுரியும் எந்த தகுதியுள்ள அதிகாரிகளும் இப்பதவிகள் வகிக்க முடியும் என 2026 பெப்ரவரி 25 ம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுவரை காலமும் தமக்கு தாமே மாவட்ட செயலர் என மாலைகளை அணிவித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட அதிகாரிகளிற்கு ஆப்பாக இச்செய்தி மாறியுள்ளது.
சாவகச்சேரி நகரசபைக்கு பாராட்டு!
அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக சாவகச்சேரி நகர சபையினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்திற்கு யாழ்.ஊடக அமையத்தை முன்னுரிமையாக கொண்ட இலங்கை ஊடக அமைப்புக்கள் பாராட்டுத்தெரிவித்துள்ளன. ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காகவும் அடக்குமுறை சட்டங்களை எதிர்ப்பதற்காகவும் சாவகச்சேரி நகர சபை எடுத்த தைரியமான நடவடிக்கையானது இலங்கையின் ஜனநாயக பெறுமதிகள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான மைல்கல்லை சுட்டிக் காட்டுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை மீளப் பெறவும் வலியுறுத்தி சாவகச்சேரி நகர சபை நிறைவேற்றிய தீர்மானத்தை 'சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு'ஆகிய நாங்கள் மிகுந்த மரியாதையுடன் பாராட்டுகிறோம். கடுமையான அரசியல் அழுத்தங்கள் மற்றும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்க நகர சபை எடுத்த இந்த தீர்மானம் நவீன அரசியல் கலாசாரத்திற்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க முன்மாதிரியாகும். இந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு சில கருத்துக்களை வலியுறுத்த விரும்புகிறது. அடக்குமுறைக்கு எதிரான நிலைப்பாடு: பல தசாப்தங்களாக இலங்கை மக்களை கடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்திய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (Pவுயு) எதிராக சட்டரீதியான மற்றும் நெறிமுறையான நிலைப்பாட்டை எடுப்பது நீதியான சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். ஜனநாயக பொறுப்புணர்வு: மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பவர்களே தவிர, அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்குபவர்கள் அல்ல என்பதை வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தேசிய ஒற்றுமைக்கான செய்தி: வடக்கின் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எடுத்த இந்த நடவடிக்கையானது இலங்கையின் சகல மக்களதும் சுதந்திரம் மற்றும் நீதிக்காக மேற்கொள்ளப்படும் ஒரு வலுவான குரலாகவே நாங்கள் காண்கிறோம். சாவகச்சேரி நகர சபையின் கௌரவ தவிசாளர் உள்ளிட்ட அனைத்து பிரதிநிதிகளும் வெளிப்படுத்திய இந்த துணிச்சலான செயற்பாடு நாட்டின் எதிர்கால ஜனநாயக பயணத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது. அநீதியான, அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக இத்தகைய குரல்கள் எழுப்பப்படுவது, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் சமூகத்திற்கு இன்றியமையாத காரணியென்பதனை நாங்கள் நம்புகிறோம். இந்த பெருமைமிக்க தீர்மானத்திற்கு எமது முழுமையான ஆதரவையும் கௌரவத்தையும்; தெரிவித்துக் கொள்கிறோமென சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கமேனி படுகொலை...அமெரிக்கா–இஸ்ரேலை மறைமுகமாக சாடிய ரஷ்ய அதிபர் புதின்
ஈரான் தலைவர் கமேனி கொலைக்கு புதின் கடும் கண்டனம் தெரிவித்து, உலக அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் ; கொல்லப்பட்ட வீரர்கள், ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதலால் […]
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ;அபுதாபியில் விழுந்த ஏவுகணை சிதறல்கள்; ஒருவர் பலி
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அபுதாபியில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றின் மீது ஏவுகணைச் சிதறல்கள் விழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை ஒரு “கோழைத்தனமான செயல்” எனக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு, இதற்குப் பதிலடி கொடுப்பதற்கான முழு உரிமையும் தமக்கு இருப்பதாக எச்சரித்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய வான்படைகள் இணைந்து இயங்கும் ‘அல் […]
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் நேற்று(28) யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ் நகரில் மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையடித்த ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடு உடைத்து நான்கரை இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கொள்ளைச் சம்பவம் […]
Modi: திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது! - மதுரையில் மோடி!
மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்கு வருகைத் தந்துள்ளார். மதுரைக்கு வந்தவர் திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்தார். கோவிலில் வழிபாடு செய்தப் பிறகு பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தார். Modi At Madurai பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரர் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் பங்களிப்பை இன்று நினைவுகூர்கிறேன். நீதிக்காக போராடிய இமானுவேல் சேகரனாரையும் இன்று நினைவுகூர்கிறேன். இங்கே வருவதற்கு முன்பாக நான் திருப்பரங்குன்றம் சென்றிருந்தேன். முருகனை தரிசனம் செய்வது தெய்வீகமான அனுபவமாக இருந்தது. தமிழ்நாட்டின் நல் வளர்த்திற்காக இறைவனிடம் வேண்டினேன். பூரண சந்திரன் என்கிற இளம் பக்தன் உயிர் தியாகம் செய்தார் என்பதை அறிந்து என் இதயம் கனத்தது. அவருடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் நான் சந்தித்து வந்தேன். அவர்களுடைய துக்கத்தை என்னால் உணர முடிந்தது. பூரண சந்திரனின் ஆத்மா சாந்தியடைய முருகனை பிரார்த்திக்கிறேன். ஆனால், திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது என்பது வலியை ஏற்படுத்துகிறது. திமுக என்ன வேணும்னாலும் செய்துவிட்டு போகட்டும். இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள். நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் மணக்கும் மல்லிகைக்கும் பெயர் போனது மதுரை. Modi At Madurai நீங்கள் எனக்கு பொழியும் அன்பு கடந்த மாதம் நான் மலேசியா சென்றிருந்ததை நினைவுப்படுத்துகிறது. தமிழ் கலாச்சாரத்தை அங்கு ஆதரிக்க வேண்டி மலாயா பல்கலைக்கழகத்தில், திருவள்ளுவர் இருக்கை ஒன்றை அமைத்திருக்கிறோம். அங்கு திருவள்ளுவர் மையம் ஒன்றையும் அங்கு அமைத்து வருகிறோம். தமிழ்நாட்டில் சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனக் கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தைப் பார்த்தப் பிறகு அவர்களுடைய கனவுகள் கானல் நீராய் ஆகிப் போய்விடும். இந்த தேர்தல் மாநிலத்திற்கு ஒரு திருப்புமுனை என்பதை மக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். தமிழ் நாட்டு மக்கள் அவர்களுடைய மனதில் தீர்மானம் செய்துவிட்டார்கள் என்பதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. திமுக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை மக்கள் தெளிவாக அறிவார்கள். Modi At Madurai தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தேஜகூ-வின் அரசாங்கம்தான் என்பதை உங்களின் கண்களில் நான் காண்கிறேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு முழு பெரும்பான்மையை வழங்கினார்கள். ஆனால், நல்லாட்சியை அவர்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் மாநிலத்தைக் கொள்ளையடித்தார்கள். பரம்பரை அரசியலை முன்னெடுத்தார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை மண்ணோடு மண்ணாக்கினார்கள். எம்.ஜி.ஆருக்கு மதுரை மாநகரம் உற்ற துணையாக நின்றது. அதனால்தான் திமுக-விற்கு மதுரை வேப்பங்காயாக இருந்து வந்திருக்கிறது. மதுரைக்கு திமுகதான் கொள்ளை ரக அரசியலை அறிமுகப்படுத்தியது. சுத்தம், சுகாதார அளவில் மதுரையை தரைமட்ட அளவிற்கு அவர்கள் கொண்டு சென்றார்கள். ஊழல் காரணமாக மதுரை மேயரே பதவியை துறக்க நேர்ந்தது. இதுதான் அவர்களுடைய மாடல். தமிழ்நாடு ஒரு கரைப்பகுதி மாநிலம். இங்கு அளவற்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், திமுகவும், காங்கிரஸும் 2014-ம் ஆண்டிற்கு முன்பு கூட்டாட்சி நடத்தியபோது ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தார்கள். கடந்த 12 ஆண்டுகளில் 12,000 கோடி மதிப்பிலான 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பிரதமர் மோடி அதனால் பல வேலை வாய்ப்புகளும், பொருளாதார சந்தர்பங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்கும் மேலாக பாம்பன் பாலம் நிலையாக இருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அது மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரஸும் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் வேலையில் வேகத்தைக் காட்டினோம். அதனால் இப்போது ரயில்கள் வேகமாக பயணிக்க முடிகிறது. என்றார்.
தாக்குதல்களில் கொல்லப்பட்ட அலி கமெனியின் குடும்ப உறுப்பினர்கள்! வெளியான தகவலால் பதற்றம்..
ஈரான் உச்ச தலைவர் அலி கமெனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை தாக்குதல்களில் உயிரிழந்ததாக, இஸ்லாமிய புரட்சிகர காப்பாளர் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் (Fars News Agency) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உச்ச தலைவரின் அலுவலகத்தில் உள்ள “தகவலறிந்த வட்டாரங்கள்” மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஈரான் உச்ச தலைவர் கமெனி மேலும், கமெனியின் மருமகள்களில் ஒருவரும் தாக்குதல்களில் உயிரிழந்ததாகவும் ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கமெனியின் மருமகள் மற்றும் மருமகன் உயிரிழந்ததாக சில […]
‘குக்கூ’படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியதா? –காஸ்டிங் ரகசியம் பகிர்ந்த ராஜூ முருகன்
குக்கூ' (Cuckoo) திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது சிவகார்த்திகேயனை நாயகனாகத் தேர்வு செய்ய இயக்குநர் ராஜூ முருகன் முதலில் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அட்டகத்தி தினேஷ் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் பின்னணியை அவர் விளக்கியுள்ளார்.
கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்
ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஈரான் ராணுவம் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் தலைநகர் டெக்ரான் மீது இன்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருவான கமேனி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிகத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமையில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். கப்பல் மீது தாக்குதல் இத்தலைமைக்கு மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி தலைவராகச் செயல்படுவார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் தலைவராக இருப்பார். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நாட்டை வழிநடத்துவார். 1959 இல் பிறந்த 67 வயதான அயதுல்லா அலிரேசா அராபி ஈரானின் மதகுருக்களில் மூத்த நபராவார். இவர் இடைக்கால தலைமை ஏற்பதற்கு முன்பு, ஒரே நேரத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அவர் ஈரானின் தேசிய இஸ்லாமிய செமினரிகளின் நெட்வொர்க்கிற்குத் தலைமை தாங்குகிறார். கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார் மற்றும் நிபுணர்களின் சபையில் அமர்ந்துள்ளார். இது தவிர ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRGC) தளபதி ஜெனரல் முகமது பக்பூர் சனிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தளபதி ஜெனரலாக அஹ்மத் வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி?
தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-இருவர் கைது
நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக தனியார் அனல் மின் நிலையத்தில் இடம்பெற்று வந்ததாக கூறப்படும் இத்திருட்டு தொடர்பில் உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை அண்மையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி இருந்தார். இதற்கமைய செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை(28) அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸாரை மேலதிக விசாரணைக்கு அழைத்திருந்தனர்.அத்துடன் இச்சம்பவத்துடன் […]
மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் டெட்டனேட்டர், துப்பாக்கி பவுடர் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு நாக்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வெடிவிபத்து டெட்டனேட்டர் தயாரிப்பு பிரிவில் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட சத்தம் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்து இருந்தது. விபத்து நடந்தபோது 25 முதல் 30 தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கிக்கொண்டனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் பல மணிநேரமாக மீட்டனர். இது குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ''நாக்பூர் அருகில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் துரதிஷ்டவசமானது. சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரும் நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் இன்று (மார்ச் 1 ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்தக் கூட்டணியில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இடம்பெற்றனர்.
தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.! -கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல். பாறுக் ஷிஹான் இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கல்முனையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. […]
Ali Khamenei: பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன - ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. IRAN SUPREME LEADER KHAMENI இதனைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றது முஸ்லிம்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார். ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் அவர் கூறியதாவது, “இஸ்லாமியக் குடியரசின் உயர்ந்த அரசியல் அதிகாரி மற்றும் உலக அளவில் ஷியா இஸ்லாமின் முக்கிய தலைவரின் கொலை, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது. Iran President Masoud Pezeshkian கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவது கடமை ஆகும். இந்த வரலாற்றுக் குற்றத்தின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டவர்களைப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். US-Israel Attacks Iran: ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது - என்ன சொல்கிறது அமெரிக்கா?
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் மீது நேற்று ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தனர். இதில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் குறிவைத்து அழிக்கப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அறிவித்தனர். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் ஈரான் வெளியிடாத […]
Bala: அவர்தான் என்னை தாயும் தகப்பனுமாய் பார்த்துக் கொள்கிறார் - இயக்குநர் பாலா நெகிழ்ச்சி
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kadhal Reset Repeat ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “விஜய் என்னை குரு என்று சொன்னார். விஜய்தான் எனக்கு குரு. எவ்வளவு கடுமையாக உழைக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்த குரு ஏ.எல். விஜய்தான். அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது, கெட்டதுக்கு பங்கெடுத்து தாயும் தகப்பனுமாய் என்னை அவர் பார்த்துக்கிறார். Director Bala தூங்காமலேயே ஏ.எல். விஜய் வேலை பார்த்துட்டு இருக்கார்” என்றவர், “‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தில் விஜி சந்திரசேகர் அவ்வளவு அற்புதமாக நடிச்சிருப்பாரு. அந்தப் படத்தோட கடைசிக் காட்சியில் இவர் ரத்தத்தைத் துடைச்சிட்டு இருப்பாரு. அந்தக் காட்சியில் கண்களால் அற்புதமாக நடிச்சிருப்பாங்க. எனக்குப் பிடித்த நடிகை ராதிகா மேடம்தான். அவங்களுக்குப் பிறகு எனக்குப் பிடிச்ச நடிகை விஜி சந்திரசேகர்” என்றார்.
வீட்டில் நகை இருந்தாலே போதும்.. அடகு வைத்து பணம் வாங்கிடுவார்கள்.. ஏன் இந்த போக்கு?
நாடு முழுவதும் தங்க நகைகள் அதிகமான அளவில் அடமானம் வைக்கப்படுகின்றன. ஒரே மாதத்தில் ரூ. 24,061 கோடி மதிப்புக்கு தங்க நகைக் கடன்கள் எடுக்கப்பட்டுள்ளன.
SA vs ZIM: ‘வரலாறு படைத்தார் லுங்கு நெகிடி’.. அதிக விக்கெட்களை கைப்பற்றி அசத்தல்: ஜிம்பாப்வே திணறல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 154/7 ரன்களை எடுத்தது. லுங்கி நெகிடி, இப்போட்டியில் ஒரு விக்கெட்டை எடுத்ததன் மூலம், அதிக விக்கெட்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு பயணம் மேற்கொண்டு, இன்று (மார்ச் 1 ஆம் தேதி) ரூ. 4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.
அலி கமேனியின் இறப்பை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் ஈரானிய மக்கள்
நேற்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, இன்றிரவு ஈரானின் தெஹ்ரான் நகரங்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. பெரும் கொண்டாட்டம்நகருக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் கார் ஹாரன்களை ஒலித்தும், தெருவில் குடியிருப்பாளர்கள் நடனமாடி ஆரவாரம் செய்யும் காட்சிகளும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளன. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் […]
சர்வதேசச் சந்தையில் அதிரடி ; மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 67.02 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.87 அமெரிக்க டொலராக நிலவுகிறது. மசகு எண்ணெயைத் தொடர்ந்து, இயற்கை எரிவாயுவின் (Natural […]
யுத்தங்கள் தீர்வைத் தருவதில்லை.. யாதும் ஊரே யாவரும் கேளிர்.. மத்திய அரசுக்கு தவெக வேண்டுகோள்!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை மனதில் ஏந்துவோம். மனிதநேயம் காக்கப்படவும், வளைகுடா நாடுகளில் மீண்டும் அமைதிப் பூக்கள் மலரவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம் என்று தவெக தெரிவித்து உள்ளது
பரமக்குடி டூ ராமநாதபுரம் 4 வழிச் சாலை: மதுரை ரூட்டில் வெறும் 1.5 மணி நேரம்- NH 87ல் பெரிய கனெக்ஷன்!
தென் தமிழகத்தில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 4 வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் பயன்கள் என்னென்ன, எதிர்காலத்தில் எவ்வாறு விரிவாக்கம் செய்யப்படும் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்- NDA திட்டம் என்ன?
தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமரின் மதுரை வருகை தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த பின்னணி குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
‘சூர்யகுமாருக்கு அடுத்து’..இந்திய டி20 அணி புது கேப்டன் யார்? 4ஆவது இடம் யாருக்கு? பிசிசிஐ முடிவு!
சூர்யகுமார் யாதவுக்கு அடுத்து, இந்திய டி20 அணிக்கு புதுக் கேப்டன் யார், 4ஆவது இடம் யாருக்கு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சூர்யகுமாரின் 4ஆவது இடத்தை அனுபவ வீரருக்கு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல்
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக பதபெந்தி அவர்களின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலாளர் […]
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து... நாளை தொடங்குகிறது பொதுத்தேர்வு
தமிழகத்தில் நாளை பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்
மத்திய கிழக்கில் பாதுகாப்பு பதற்றம்; வான்வெளியை மூடிய இஸ்ரேல் மற்றும் ஈரான்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை (28) அதிகாலை ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது வான்வெளியை பொதுமக்கள் விமானப் போக்குவரத்துக்காக மூடியுள்ளது. மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதேவேளை, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், ஈரானும் தனது வான்வெளியை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. வான்வெளி […]
Harris Jeyaraj: நான் அறிமுகப்படுத்திய 64 பேரும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள் - ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kadhal Reset Repeat ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத் தேடி வந்தார். 2000-ல் ‘மின்னலே’ திரைப்படம் வெளிவந்தது. சமீபத்தில்கூட படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். ‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று அந்தப் படத்தில் நாயகன் புதியவர். நாயகி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அனைவரும் புதியவர்கள். Harris Jeyaraj இன்று இந்தப் படத்திற்கும் அப்படித்தான். நல்ல கதை மட்டும் இருந்தால், அது அனைவரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கிவிடும். விளம்பரங்கள், பப்ளிசிட்டி என எதுவும் தேவைப்படாது” என்றவர், “இதுவரை நான் 64 பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இன்று அத்தனை பாடகர்களும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். Harris Jayaraj: ``இரு தரப்பு பாடகர்களுக்கு அவமதிப்பு நடக்குது'' - ஹாரிஸ் ஜெயராஜ்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து
வளைகுடா பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் துபாய், ரியாத், தம்மாம் மற்றும் குவைத் உள்ளிட்ட நகரங்களுக்கான 12… The post ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து appeared first on Global Tamil News .
மூச்சு விட முடியவில்லை; உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் - 'காதல்'பட நடிகை
‘காதல்’, ‘வாத்தியார்’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை காதல் மல்லேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். ‘காதல்’ திரைப்படத்தில் சந்தியாவின் தாயாராக இவர் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துவந்த இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. Kadhal Movie கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கென யாரும் இல்லாததால், திரைத்துறையினரிடம் சிகிச்சைக்கு உதவி கோரி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் மல்லேஸ்வரி. அந்தக் காணொளியில் ‘காதல்’ மல்லேஸ்வரி பேசியதாவது: “என்னை ‘காதல்’ மல்லேஸ்வரி எனச் சினிமாவில் அழைப்பார்கள். 'காதல்' படத்தில் சந்தியா கதாபாத்திரத்தின் தாயாராக நான் நடித்திருந்தேன். இதுவரை நான் தமிழ், தெலுங்கு என 40 படங்களில் நடித்திருக்கிறேன். Kadhal Malleshwari கவுண்டமணி, செந்தில் சாருடனும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு இப்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாப்பாட்டிற்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறேன். அதனால் உங்களால் முடிந்த உதவியை எனக்காகச் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை.. ரூ.2700 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் - முழு விவரம் இதோ!
புதுச்சேரிக்கு சென்றபிரதமர் நரேந்திர மோடி சுமார் ₹1,571 கோடி மதிப்பிலான 74 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; பள்ளி குழந்தைகள் 51 பேர் பலி
தெஹ்ரான் தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஈரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் ஈரானை தாக்கியது. இதுபற்றி மாகாண கவர்னர் முதலில் கூறும்போது, பள்ளி குழந்தைகளின் பலி எண்ணிக்கை 24 என கூறினார். இந்த எண்ணிக்கை 51 ஆக உயர்ந்து உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று […]
பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகங்கள் – தூதரகப் பணிமனைகள் முற்றுகை – 8போ் உயிாிழப்பு
ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் தூதரகப்… The post பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகங்கள் – தூதரகப் பணிமனைகள் முற்றுகை –8போ் உயிாிழப்பு appeared first on Global Tamil News .
கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்..
கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் அறநெறி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் மற்றும் நாகேஸ் என அன்புடன் அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரான கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் வவுனியாவில் உள்ள அறநெறி மண்டபத்தில் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.. வவுனியாவில் வசிக்கும் அறநெறி வகுப்பு […]
அயதுல்லா அலி காமேனி உயிரிழப்பை உறுதி செய்த ஈரான் – 40 நாட்கள் துக்கம் அணுசரிப்பு
ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA, கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான 86 வயதான அலி… The post ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடுகிறது. appeared first on Global Tamil News .
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்லவதற்கான உகந்த நேரத்தை அறிவித்த கோவில் நிர்வாகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை மாதம் தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள்
ஐபிஎல் கிரிக்கெட் 2026 –சி.எஸ்.கேவின் புதிய ஜெர்சி அறிமுகம்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த உடன், மார்ச் 28-ந்தேதி ஐ.பி.எல். 2026 சீசன் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகள்
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார்
பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் உச்ச தலைவரான ஆயத்துல்லா அலி கமேனி , சனிக்கிழமை காலை தனது அலுவலகத்தில் கொல்லப்பட்டார். ஈரானிய தொலைக்காட்சி நாட்டின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. புரட்சிகர காவல்படையின் தளபதி ஜெனரல் முகமது பாக்பூரின் மரணத்தையும் தெஹ்ரான் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 40 ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஒரு உளவுத்துறை வட்டாரமும் இராணுவ வட்டாரமும் சிபிஎஸ் செய்திக்குத் தெரிவித்துள்ளன. ஈரானிய புரட்சிகர காவல்படை பழிவாங்குவதாக உறுதியளித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புக்களை வைத்திருக்கும் 27 தளங்கள் மற்றும் டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய இராணுவ வசதிகள் மீது தாக்குதல்களை நடத்தியதாகக் கூறுகிறது. கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெடிச்சத்தங்கள் தொடர்ந்து கேட்கின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார்
73 வது பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் –அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள
நெல்லை சாம்பார்... ஒவ்வொரு வீட்டிலும் தனிச்சுவை - சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் செஃப் தீனா
சமையல் திறனை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான களத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது அவள் விகடன். சக்தி மசாலா வழங்கும் 'சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3' தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார் விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோவை மற்றும் மதுரையைத் தொடர்ந்து திருநெல்வேலியில் இன்று நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்புக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஆர்யாஸில் போட்டி தொடங்கி, நடைபெற்று வருகிறது. போட்டியின் நடுவரான செஃப் தீனா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய தீனா, திருநெல்வேலி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இன்னைக்கு இந்த நிகழ்ச்சிக்குப் புதுசு புதுசா மக்கள் வந்திருக்கீங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கைப்பக்குவம் உண்டு. ஒவ்வொருத்தர் வீட்டிலும் சாம்பார் ஒவ்வொரு கைப்பக்குவத்துல இருக்கும் என்று சிலாகித்துப் பேசினார். திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார் தூத்துக்குடி, கடலூர், சாந்தி நகர், குலவணிகர்புரம், பாளையங்கோட்டை, வி.எம். சத்திரம், செய்துங்கநல்லூர், நரசிங்கநல்லூர், உடையார்பட்டி, சுத்தமல்லி, ரெட்டியார்பட்டி, ஆழ்வார்குளம், ராமையன்பட்டி, குறிச்சி போன்ற திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்ற ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர். பீட்ரூட் பச்சடி, மாங்காய் மோர், சங்குப்பூ சாதம், அன்னாசிப் பழ பச்சடி, கேரட் புட்டிங், கேரட் அமலா பாத், மட்டன் தக்கடி, சுக்கு களி, மூங்கில் அரிசிக் கஞ்சி போன்ற பல்வேறு வகையான உணவுகளை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார் உணவுகளை ருசி பார்த்து செஃப் தீனா மதிப்பெண் வழங்கி வருகிறார். முதல் சுற்றில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள், நேரடி குக்கிங்கில் பங்கேற்பார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!
அலி காமேனி கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்கா, சீனா ரஸ்யா மற்றும் இந்தியாவின் நிலைப்பாடுகள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி காமேனி கொல்லப்பட்டமை குறித்து… The post அலி காமேனி கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்கா, சீனா ரஸ்யா மற்றும் இந்தியாவின் நிலைப்பாடுகள் appeared first on Global Tamil News .
முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று காஷ்மீர் அணி சாதனை!
ரஞ்சி கோப்பை பைனல் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நேற்று நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.
துபாய் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் –ஒருவர் உயிரிழப்பு
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்
⚖️ அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் நாட்டுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது –பழிவாங்கும் படலம் ஆரம்பம்
நேற்று சனிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 86… The post ⚖️ அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் நாட்டுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது – பழிவாங்கும் படலம் ஆரம்பம் appeared first on Global Tamil News .
யாழில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட கரு தொடர்பில் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக நேற்று (1) பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணை அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6 – 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]
உக்கடம் பேருந்து நிலையத்தின் டெர்மினல் 1 ரெடி...கோவை மக்கள் ஹேப்பி!
உக்கடம் பேருந்து நிலையத்தின் டெர்மினல் 1 ரெடியாகி உள்ளது. இதன் காரணமாககோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மத்திய கிழக்குக்கான கட்டுநாயக்க விமான சேவையில் மாற்றம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கி பயணிக்கவிருந்த வானூர்திகள் இன்று (01) மாலை வரை இடைநிறுத்தம்.
விஜய், சங்கீதா விவாகரத்தால் இன்ஸ்டாகிராமில் அப்பாவை அன்ஃபாலோ செய்தாரா ஜேசன் சஞ்சய்?
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராமில் தன் அப்பாவை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் என்று பேசப்படுகிறது. மேலும் எக்ஸ் தளத்திலும் அப்பாவை ஜேசன் ஃபாலோ செய்யவில்லை என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
ஈரான் - இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குச் சொந்தமான துபாய் சொத்துகள் குறிவைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன. ட்ரம்ப் ஈரானின் ஏவுகணைகள் துபாயின் முக்கிய இடங்களான 'பாம் ஜுமேரா' (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற 'புர்ஜ் அல் அரப்' (Burj Al Arab) ஹோட்டலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், துபாயில் 'ட்ரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கிளப்' மற்றும் 'ட்ரம்ப் எஸ்டேட்ஸ்' போன்ற ஆடம்பரக் குடியிருப்புகள் உள்ளன. தற்போது 'ட்ரம்ப் டவர் துபாய்' கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன. இந்த நிலையில், ''ஈரான் தாக்குதலில் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ட்ரம்ப் குடும்பத்தின் முக்கிய முதலீட்டு மையங்கள் தகர்க்கப்பட்டன என்ற வாசகத்துடன் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் ஆனால் இதுவரை உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட இடங்கள் ட்ரம்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்
டி20 உலகக் கோப்பை –இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு
கொல்லப்பட்டாரா ஈரான் உச்சதலைவர் கமேனி? வெளியான படத்தால் வலுக்கும் சந்தேகம்
அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 57 சிறுமிகள் கொல்லப்பட்டனர். கமேனி இன்னும் உயிருடன் இருக்கிறார்… தெஹ்ரானில் ஈரான் உச்சதலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. […]
ஈரான் போர் பதற்றம்... இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி!
ஈரான் போர் பதற்றத்தால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவுக்கு தள்ளப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோடி மேடையில் கைகோர்க்கும் அன்புமணி ராமதாஸ்… மதுரை மாநாட்டில் பாஜக வியூகம் என்ன?
தமிழக அரசியல் சூழலில் 2026 தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தேர்தலாக மாறவிருக்கிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சொன்னபடி வருகிற தேர்தல் ஒரு வரலாற்று தேர்தல் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
அன்பை லாரியில் அனுப்புகிறோம் - ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பும் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி
நடிகை ராஷ்மிகா மந்தன்னாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் தெலுங்கு மற்றும் கன்னட முறைப்படி நடந்தது. புதுமணத் தம்பதி தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களோடு சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுமணத் தம்பதி நாடு முழுவதும் 22 நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். அவர்கள் லாரிகளில் ஐதராபாத், மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் போன்ற 22 நகரங்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் பிரபலமான 16 கோயில்களில் அன்னதானம் போடவும் ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த நாட்டின் அழகான மக்களாகிய நீங்கள் எப்போதும் எங்கள் பயணங்களிலும், எங்கள் அன்பிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். எங்கள் திருமணத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவது எங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும். இந்தியா எதையுமே இனிப்புகளுடனும் உணவுடனும்தான் கொண்டாடும். எனவே, மார்ச் 1-ஆம் தேதி, எங்கள் வாழ்வின் இந்தப் பெரிய தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக, நாடு முழுவதும் அன்பு மற்றும் இனிப்புகள் நிறைந்த லாரிகளை நாங்கள் அனுப்பி வைக்கிறோம். மேலும், நாடு முழுவதும் உள்ள பல கோயில்களில் அன்னதானம் வழங்க உள்ளோம். உங்கள் அனைவரின் ஆசிகளையும் நாடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். சினிமா துறையைச் சேர்ந்த நண்பர்களுக்காக வரும் 4ம் தேதி ஐதராபாத்தில் இத்தம்பதி பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்து இருக்கின்றனர். இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே.!; விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!
த்ரிஷா ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல: அவர் சம்பளம், சொத்துமதிப்பு என்ன?
சுமார் 24 ஆண்டுகளாக ஹீரோயினாக இருந்து வரும் த்ரிஷா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் பற்றி பலரும் கூகுளில் தேடி வருகிறார்கள். த்ரிஷாவின் சம்பளம் எத்தனை கோடி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதமர் மோடி வருகை.. மதுரையில் போக்குவரத்து மாற்றம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வர உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து...வாழ்த்து மழையில் அறிவாலயம்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தள்ள நிகழ்வு அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. இன்று முதல் அமல்.. பொதுமக்கள் கவலை!
மார்ச் 1ஆம் தேதி, இன்று சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பொதுமக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. விலை குறைக்கப்படவில்லை.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி… வளைகுடா நாடுகளை சிதைக்கும் 4 பிரச்சினைகள்!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடர் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் ஈரானை சுற்றி வளைகுடாவில் என்ன நடக்கிறது என்ற பின்னணி குறித்து பார்க்கலாம்.
காந்தக் கண்ணழகி தர்ஷா குப்தா: கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்
'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா (Dharsha Gupta) கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது சினிமா மார்க்கெட்டில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஓபிஎஸ் வீட்டின் கேட்டில் உள்ள இரட்டை இலை சின்னம்... வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரம்!
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் உடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார். திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் உள்ள கேட்டில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது திமுகவில் சேர்ந்ததையடுத்து கேட்டில் பொறிக்கபட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் கார் மேலும் வீட்டின் சுவர்களில் அதிமுகவின் சின்னம் வண்ணங்களில் உள்ள கருப்பு வெள்ளை சிகப்பு வண்ணத்தில் உள்ள பெயிண்டுகள் அழிக்கப்பட்டு திமுகவின் சின்னத்தில் உள்ள கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களாக மாற்றப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் காரில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Rishab Shetty: உன்னிடமுள்ள இவையே என்னை வியக்க வைக்கின்றன! - மனைவி குறித்து நெகிழும் ரிஷப் ஷெட்டி
கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், 'காந்தாரா' திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் புகழ் பெற்றவருமான ரிஷப் ஷெட்டி, தனது மனைவி பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரகதியின் சிறுவயது புகைப்படங்கள் முதல், ஒரு தாயாக, ஒரு தொழில்முறை கலைஞராக அவர் பரிணமித்த தருணங்கள் வரை உள்ளடக்கிய ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரிஷப் ஷெட்டி - பிரகதி ஷெட்டி அதில் கன்னடத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ``உன்னிடமுள்ள அபூர்வமான மன உறுதி, தாய்மையின் அன்பு, தொழிலில் காட்டும் கவனம் மற்றும் அனைத்தையும் ஒரே நேரத்தில் கையாளும் விதம் என்னை எப்போதும் வியக்க வைக்கின்றன. இந்த வண்ணமயமான வாழ்க்கையில் ஒரு ஒளியாகத் திகழும் நீ, இன்னும் பல வெற்றிகளையும் புகழையும் பெற வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் பிரகதி! எனத் தெரிவித்துள்ளார். ரிஷப் ஷெட்டி மற்றும் பிரகதி ஷெட்டி இருவரும் ஒரு திரைப்பட விழாவில் சந்தித்து காதல் வயப்பட்டனர். இருப்பினும், அந்தச் சமயத்தில் ரிஷப் ஷெட்டியின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்தது. அதனால் பிரகதியின் குடும்பத்தினர் திருமணத்திற்குத் தயங்கினர். ஆனால், தங்களது காதலில் உறுதியாக இருந்த இந்த ஜோடி, 2017-ல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ரன்வித் என்ற மகனும், ராத்யா என்ற மகளும் உள்ளனர். View this post on Instagram A post shared by Rishab Shetty (@rishabshettyofficial) மென்பொருள் பொறியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரகதி, பின்னர் ஆடை வடிவமைப்பாளராக மாறி ரிஷப் ஷெட்டியின் படங்களுக்குப் பணியாற்றத் தொடங்கினார். சமீபத்தில் 2025-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'காந்தாரா சாப்டர் 1' (Kantara Chapter: 1) படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளுக்கு ரிஷப் ஷெட்டியின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். Rishab shetty: ராஷ்மிகா அறிமுகம்; தேசிய விருது வென்ற கிட்ஸ் படம்! - ரிஷப் ஷெட்டி, சில சம்பவங்கள்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மீட்பு
கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயாயவத்தை மயானத்திற்கு அருகிலுள்ள உட்பாதை ஒன்றில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான 4 தோட்டாக்களும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த ஆயுதம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கைத்துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயலை மேற்கொள்ளும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் கட்டானை பொலிஸாரும் நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக […]

24 C