அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம் ; எல்லை மீறும் அதிகாரிகள்
அமெரிக்காவின் மினசொட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் திணைக்களத்தை சேர்ந்த ஃபெடரல் குடிவரவு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (51) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் ட்ரம்புக்கு எச்சரிக்கை இந்தச் சம்பவத்தையடுத்து, மினசோட்டா மாநில ஆளுநர் டிம் வால்ஸ், வெள்ளை மாளிகையுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மத்திய அதிகாரிகளால் நடத்தப்பட்ட மற்றுமொரு பயங்கரமான துப்பாக்கிச் சூடு இதுவென சாடியுள்ள அவர், வன்முறையில் ஈடுபடும் பயிற்சியற்ற ஆயிரக்கணக்கான […]
ராஜஸ்தான் சிறையில் பூத்த காதல்: பரோலில் வந்து திருமணம் செய்த ஜோடி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சிறையில் காதலித்த ஜோடி, பரோலில் வெளியே வந்து திருமணம் செய்த நிகழ்வு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநில சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் ஹனுமன் பிரசாத். 2017-ல் அல்வார் பகுதியில் பன்வாரிலால் என்பவரை ஹனுமன் கொலை செய்தார். இந்த கொலையை நேரில் பார்த்த 4 குழந்தைகளையும் கொலை செய்தார். இந்த வழக்குகளில் ஹனுமன் பிரசாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ராஜஸ்தானில் பிரியா சேத் என்ற மாடல் அழகி, […]
ஆப்கானிஸ்தானில் மழை, பனிப்பொழிவு: 3 நாள்களில் 61 போ் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த மழை காரணமாக இதுவரை 61 போ் உயிரிழந்துள்ளனா். நாட்டின் 15 மாகாணங்களில் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. சுமாா் 458 வீடுகள் முழுமையாகவும் அல்லது பகுதியளவிலும் இடிந்து சேதமடைந்துள்ளன. பனிப்பொழிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. தொடா்ச்சியான உள்நாட்டுப் போா் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், ஆப்கானிஸ்தான் இத்தகைய இயற்கை பேரிடா்களைச் […]
இலங்கைத் தமிழரசுக்கட்சியில் அதிரடி: சிறீதரனை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானம்! ⚖️
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரனை நீக்குவதற்கு… The post இலங்கைத் தமிழரசுக்கட்சியில் அதிரடி: சிறீதரனை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானம்! ⚖️ appeared first on Global Tamil News .
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 போ் பலி; 82 போ் மாயம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். மேலும், மண்ணுக்குள் புதையுண்ட 82 பேரை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மேற்கு பாண்டுங் மாவட்டத்தின் பாசிா் லங்கு கிராமத்தில் கடந்த சில நாள்களாக இடைவிடாது மழை பெய்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் விளைவாக சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், மலையிலிருந்து பிரம்மாண்டமான பாறைகளும், மரங்களும், மண்ணும் சரிந்து விழுந்தன. இதில் சுமாா் 34 […]
கல்வி சீர்திருத்த சர்ச்சையால் பாதிக்கப்பட்ட மாணவரகள்
அரசாங்கம் முன்வைத்துள்ள கல்வி சீர்திருத்தங்களைப் பற்றிய சர்ச்சையைப் பற்றிய கடந்த புதன்கிழமைக்கான தமிழ் மிரருக்காக நாம் எமது கட்டுரையை எழுதும் போது அந்த சர்ச்சை மேலும் பல மாதங்கள் நீடிக்கலாம் என்றே நினைத்தோம். ஆனால் அந்த கட்டுரை தமிழ் மிரரில் வெளியாவதற்குள் அச்சர்ச்சசை ஓயந்துவிட்டது. அச்சீர்த்திருத்தங்களில் ஆறாம் ஆண்டுக்கான சீரத்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்தி வைப்பதாக கடந்த 13 ஆம் திகதி அமைச்சரவை முடிவு செய்தமையே அதற்குக் காரணமாகும். அரசாங்கத்தின் முடிவு சரியோ பிழையோ அது […]
200 பவுன் கொடுத்தும், அதிக வரதட்சணை…இளம்பெண் தாயுடன் சயனைடு தின்று தற்கொலை
திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் வேளாண்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி சஜிதா (வயது 54), மகள் கிரீமா (30). கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த உன்னி கிருஷ்ணனுக்கும், கிரீமாவுக்கும் திருமணம் நடந்தது. 200 பவுன் நகை மற்றும் வீடு சீர்வரிசையாக பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை வீட்டாருக்கு வழங்கப்பட்டது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார், அதில் திருப்திபடவில்லை. திருமணத்திற்கு பிறகும் […]
வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர்கள் இலங்கையில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக ‘குஷ்’ மற்றும் ‘ஹஷிஷ்’ போதைப்பொருள் தொகுதியினை கடத்தி வர முயன்ற மூன்று பயணிகள் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய வருகை முனையத்தின் ஊடாக வெளியேற முயன்ற போதே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிலதிபர் கைதுநாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கட்டிடத் தொழிலாளி மற்றும் தொழிலதிபர், மேலும் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பிய சஞ்சு சாம்சனுக்கு இனி ரெகுலராக வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிகொடுத்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.
காரைநகரில் வாழ்வாதாரம் குறைந்த மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்
காரைநகரில் வாழ்வாதாரம் குறைந்த மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல் இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தீவக இணைப்பாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்திகளான திரு ,திருமதி் தர்சன் காரின் அவரது தாயார் சக்தி திருமதி மனோரஞ்சிதம் கணேஸ் ஆகியோரின் நிதியுதவியில் யாழ் மாவட்டம் காரைநகர் பாலக்காடு இராயேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் சுவிஸ் நாட்டு […]
போருக்கு எப்போதும் தயாா்: ஈரான்
ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ‘எங்கள் நாட்டுப் படையினா் எப்போதும் துப்பாக்கியின் விசை மீது விரலை வைத்தபடி, போருக்குத் தயாரான நிலையிலேயே இருக்கின்றனா்’ என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பக்பூா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். அமெரிக்க போா்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நோக்கிப் பயணித்து வரும் நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் எந்தவொரு தவறான கணக்கு போட்டு எங்களைத் தாக்க முயல வேண்டாம் என்றும், எங்கள் தலைமைத் […]
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் வென்றதன் மூலம், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், அபிஷேக் சர்மா, அதிவிரைவு அரை சதம் அடித்து அசத்தினார். மேலும், இந்திய அணியும் பவர் பிளேவில் மெகா சாதனையை படைத்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
மெட்டா ஏஐ கதாபாத்திரங்களுடன் உரையாட சிறாா்களுக்குத் தற்காலிக தடை
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் உள்ள உரையாடக்கூடிய செயற்கை நுண்ணறிவு(ஏஐ) கதாபாத்திரங்களைச் சிறாா்கள் பயன்படுத்த மெட்டா நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் தளங்களில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு ஏஐ கதாபாத்திரங்களைச் சிறாா்கள் பயன்படுத்துவது வரும் வாரங்களில் நிறுத்தப்படும். இத்தொழில்நுட்பத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் சோ்க்கப்படும் வரை இத்தடை தொடரும். மெட்டாவின் பொதுவான ‘ஏஐ அசிஸ்டெண்ட்’ சேவையைச் சிறாா்கள் தொடா்ந்து பயன்படுத்தலாம். ஆனால், மனிதா்களைப் போலவே உரையாடக்கூடிய பிரத்யேகமான ஏஐ கதாபாத்திரங்களுடன் […]
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி பௌலர்கள் தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி, கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இதனால், நியூசிலாந்து அணியால் 153 ரன்களைதான் எடுக்க முடிந்தது.
இந்திய விண்வெளி வீரருக்கு அசோக சக்ரா விருது.. சுபான்ஷு சுக்லாவுக்கு குவியும் பாராட்டுகள்!
வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுக்கு, அமைதிக் காலத்தின் மிக உயரிய வீர விருதான அசோக சக்ரா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈ.பி.டிபி யை எழுச்சி கொள்ள வையுங்கள் –டக்ளஸ் தோழர்களுக்கு அறைகூவல்
தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் , எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை எதிர்காலம், நாம் நேசிக்கின்ற மக்களுக்கு வெளிப்படுத்தும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமையகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தன்னுடைய கைது மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கட்சி செயற்பாட்டாளர்களுக்கு தெளிபடுத்தும் போதே அவ்வாறு தெரிவித்தார். […]
துரோகமா? மிரட்டலா? 15 நிமிடங்களில் சரணடையுங்கள், இல்லையென்றால் மரணம்!”
அமெரிக்காவுடன் இரகசிய ஒப்பந்தத்தின் மூலம் டெல்சி ஆட்சியை கைப்பற்றினாரா? வெனிசுலாவில் நிகழ்ந்த அமெரிக்கப் படைகளின் ஊடுருவல் மற்றும் ஜனாதிபதி… The post துரோகமா? மிரட்டலா? 15 நிமிடங்களில் சரணடையுங்கள், இல்லையென்றால் மரணம்!” appeared first on Global Tamil News .
யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி முதல்வர் தலைமையிலான குழு விஜயம்
யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயம் ஒன்றை யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் குழு மேற்கொண்டது. இதுவரை அமைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை இக் குழுவினர் முழுமையாகப் பார்வையிட்டனர். மேற்படி விஜயத்தின் போது முதல்வர் தலைமையில் சென்றிருந்த மாநகர குழுவிற்கு புதிய மாநகர கட்டட ஒப்பந்ததாரர் பிரதிநிதி மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குழு இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள கட்டுமானப் […]
அமேசான் நிறுவனத்தில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்
அமேசான் நிறுவனத்தில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் அமேசான். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் உள்ளது. பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு தாக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆட்குறைப்பு நடவடிக்கை அந்தவகையில் சமீப காலமாக அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு காரணங்களை கூறி […]
சிறிதரனை நீக்கியதாக சுமந்திரன் அறிவிப்பு –மறுக்கிறார் சி.வி.கே.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்குவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்இன்று பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி, சிறிதரனுக்கு தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது. தேர்தல்
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுப் பகுதிக்கு முக்கிய கள… The post நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி: உள்ளூர் உற்பத்திகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து நேரடி ஆய்வு! appeared first on Global Tamil News .
மலையாளத்தில் பறம்பின் குரல்: `வீரயுக நாயகன் வேள்பாரி' - நூலை பெற்றுக்கொண்ட சு.வெங்கடேசன்!
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம் `வீரயுக நாயகன் வேள்பாரி'. மக்களின் மனதைக் கவர்ந்த இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை விற்று சாதனைப் படைத்திருந்தது. ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்றதற்கான வெற்றிப் பெருவிழாவும் கொண்டாடப்பட்டது. மேலும் விகடன் பிரசுரத்தில் வெளியான இந்தப் புத்தகம் அமேசான் தளத்தின் சிறந்த புத்தக விற்பனை வரிசையிலும், குறிப்பாக Action & Adventure பிரிவில் 3 இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்து பெருமை சேர்த்தது. வேள்பாரி இந்த நிலையில், வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை எழுத்தாளர் பாபுராஜ் களம்பூர் மலையாளத்தில் மொழிப்பெயர்த்திருந்தார். அந்த நூலின் வெளியீட்டுவிழா கோலிக்கோட்டில் நடைபெற்றது. இது தொடர்பாக எழுத்தாளர் சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``வீரயுக நாயகன் வேள்பாரியின் மலையாள மொழிபெயர்ப்பு கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் கேரள இலக்கியத் திருவிழாவில் இன்று டிசி புக்ஸ் சார்பாக வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்கள் வெளியிட திரு ஏ.ஜெ.தாமஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார். நாவலை மலையாளத்தில் பாபுராஜ் களம்பூர் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இனி கேரள வாசகர்களிடம் பறம்பின் குரல் ஒலிக்கும். எனப் பதிவிட்டிருக்கிறார். Velpari Su Venkatesan: வேள்பாரி நாயகன் சு. வெங்கடேசன் நேர்காணல் | Talk with Author
இந்தியாவின் உயரிய விருது: தமிழ்நாட்டுக்கு 5 'பத்ம'விருதுகள்; யார் யாருக்கு விருது?
குடியரசு தினம் நாளைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இன்று, 2026-ம் ஆண்டிற்கான உயரிய விருதான பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சமூக சேவை, கலை, கலாச்சாரம், கல்வி, பொது விவகாரங்கள் மற்றும் பிற துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மொத்தம் 45 சாதனையாளர்கள் இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நேரில் கௌரவிக்கப்படுவார்கள். புண்ணியமூர்த்தி நடேசன் - ஓதுவார் சுவாமிநாதன் - ஆர். கிருஷ்ணன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் உலகிலேயே மிகப்பெரிய இலவச நூலகத்தை நிறுவிய முன்னாள் பேருந்து நடத்துநர், ஆசியாவின் முதல் தாய்ப்பால் வங்கியைத் தொடங்கிய குழந்தை நல மருத்துவர், அரிய பாரம்பரிய இசைக்கருவியைப் பாதுகாத்து வரும் 90 வயது பழங்குடியின இசைக்கலைஞர் என 45 பேர் இந்த ஆண்டு 'அறியப்படாத நாயகர்கள்' பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம் இசைத்துறையில், குறிப்பாக மிருதங்கக் கலையில் ஆற்றிய சாதனைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இசை மற்றும் பக்திப் பாடல்களைத் தொடர்ந்து வளர்த்து வரும் திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு ஆன்மீகம் மற்றும் கலைத்துறையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர் - பக்தவச்சலம் சிற்பக் கலையில், குறிப்பாக வெண்கலச் சிற்பங்களை வடித்தெடுத்தலில் சேலம் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டரின் பங்களிப்புக்காகவும், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக் கலையைத் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வரும் நீலகிரி ஆர். கிருஷ்ணனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இது தவிர 20 மொழிகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் அரிய கையெழுத்துப் பிரதிகளுடன் மிகப்பெரும் தனியார் 'புஸ்தக மானே' எனும் நூலகத்தை உருவாக்கிய கர்நாடக மாநில அங்கே கவுடாவுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாய்ப்பால் வங்கித் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்திய மும்பை குழந்தை நல மருத்துவர் அர்மிடா பெர்னாண்டஸ் உள்ளிட்ட 45 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலதாமதக் கலைமாமணி விருது! - ஸ்பான்சர்டு பை அமலாக்கத்துறை
கிவுல் ஓயா :தவறான தகவல்கள் - அமைச்சர் சந்திரசேகரன்
கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்கள் என அரச அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம். “இந்த ஆட்சியின்கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. அனைத்து மக்களையும் சமமாகக் கருதும் கொள்கையுடனேயே அரசாங்கம் செயல்படுகிறது”. தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் படி, கிவுல் ஓயா திட்டம் பாரம்பரிய தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்பையும், மக்கள் தொகை மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் மக்களின் சம்மதமின்றி திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீடுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது. சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என்றும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே மேற்கொள்ளப்படும். மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும். இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் வடக்கில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அந்த காலகட்டங்களில் எல்லாம் அரசாங்கத்துடன் ஒட்டுனியாக இருந்த தமிழ் கட்சிகள் இன்று தமிழ் மக்களுக்கு நன்மை நடக்கும் பொழுது பொங்கி எழுகின்றன. தமது அரசியல் இருப்புக்கு இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியால் தான் ஆபத்து என்பதால் தான் அவர்கள் மக்கள் நலன் திட்டங்களில் கூட அரசியல் சாயம் பூசி ஒரு இழிவான அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். உள்ளுராட்சி சபை தேர்தலின் போது கூட அங்த காணி அளவீட்டில் அரசியல் சாயம் பூசி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தன்னுடைய அரசியல் வாக்கு வேட்டைக்காக ஒரு உரிய வகையில் இடம்பெற இருந்த காணி அளவீட்டை குழப்பினார்கள். அதில் மற்றுமொரு அங்கமாகவே இந்த திட்டத்திற்கும் போர் கொடி தொடுக்கிறார்கள். தமக்கான அரசியல்பாதை எது என்பது தமிழ் மக்கள் இன்று நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் வரலாறு காணாத வகையில் வடகிழக்கில் கூட எங்களுக்கு ஆதரவு கிடைத்திருக்கின்றது. இதை குழப்பவதற்கு தான் காழ்புணர்ச்சி அரசியலாக இப்படியான விசமதனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. நாங்கள் மக்களுக்கு விரோதமான எந்ததிட்டங்களையும் முன்னெடுக்க மாட்டோம் என அரச அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (26) காலை 8 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ஆதரவு பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் வெளி மருந்தகங்களில் இருந்து வாங்க வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பது மற்றும் ஆய்வகங்களில் இருந்து மேற்கொள்ள வேண்டிய சோதனைகளை பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதாககோத்தபாய ஆதரவு பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பிட்ச் ரிப்போர்ட் குறித்தும் பார்க்கலாம்.
ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக… The post ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். appeared first on Global Tamil News .
2026 தேர்தலும் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம்தான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
நாங்கள் பணியமாட்டோம். துணிந்து ஒரு கை பார்ப்போம். 2026 தேர்தலும் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம்தான் என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கால்நடைகளை கடத்த முயன்ற கும்பல் மீது துப்பாக்கி சூடு - ஒருவர் காயம்
சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்ற கும்பலை கைது செய்ய முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நால்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நால்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று உத்தியோகத்தர்கள் முச்சக்கரவண்டி ஒன்றில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தலஹேன கிராமத்திற்குள் நுழையும் வீதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றைப் பரிசோதித்துள்ளனர். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, அந்த லொறியில் மாடுகளை ஏற்றிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, லொறியில் இருந்த நபர் ஒருவர் அவர்களைத் தாக்க முற்பட்டுள்ளார். இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமை நேரத் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். லொறியில் இருந்த ஏனைய நான்கு சந்தேக நபர்களும் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தெலங்கானாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 300 தெருநாய்கள்: விலங்கு நல ஆா்வலா்கள் குற்றச்சாட்டு
தெலங்கானா மாநிலம், ஜகிதியால் மாவட்டத்தில் ஒரே நாளில் 300 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் கொல்லப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை 900-ஆக அதிகரித்துள்ளது என்று அவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக மாநில காவல் துறை சனிக்கிழமை தெரிவித்ததாவது: கடந்த ஜன.22-ஆம் தேதி ஜகிதியால் மாவட்டத்தில் உள்ள பெகடப்பள்ளி கிராமத்தில் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக காவல் துறையிடம் விலங்கு நல ஆா்வலா்கள் புகாா் அளித்தனா். அந்தப் புகாரில் […]
️ யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி: பணிகளைத் துரிதப்படுத்த மதிவதனி குழுவினர் நேரடி பயணம்! ️
யாழ்ப்பாண மாநகர மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான புதிய மாநகர சபைக் கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக,… The post ️ யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி: பணிகளைத் துரிதப்படுத்த மதிவதனி குழுவினர் நேரடி பயணம்! ️ appeared first on Global Tamil News .
கனடாவின் தங்க இருப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை! அன்று இருந்த செல்வம்…இன்று வெறும் பூச்சியம்!
1965-ஆம் ஆண்டு, கனடாவிடம் இருந்த தங்கத்தின் மதிப்பு வெறும் $1.15 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால், 2026-ஆம் ஆண்டின்… The post கனடாவின் தங்க இருப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை! அன்று இருந்த செல்வம்… இன்று வெறும் பூச்சியம்! appeared first on Global Tamil News .
நெடுந்தீவில் கடற்படையின் ஆடை தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார். அவ்விஜயத்தின் போது, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டதுடன், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்கள், தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடினார். மேலும், நெடுந்தீவில் செயல்பட்டு வரும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா துறையினர் ஆகியோரையும் சந்தித்த அமைச்சர், அவர்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தார். உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கும் விஜயம் மேற்கொண்ட தோழர் சுனில் ஹந்துன்நெத்தி, அங்கு நிலவும் வளக் குறைப்பாடுகள் மற்றும் நிர்வாகச் சவால்களை ஆராய்ந்ததுடன், பணியாளர்களுடனும் கலந்துரையாடி, மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தினார்.
அதிமுக கூட்டணி விவகாரத்தில் பூகம்பத்தை கிளப்பிய பொன்னையன்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனித்தே ஆட்சி அமைப்போம் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசி, கூட்டணி விவகாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி முதல்வர் தலைமையிலான குழு விஜயம்
யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயம் ஒன்றை யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் குழு மேற்கொண்டது. இதுவரை அமைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை இக் குழுவினர் முழுமையாகப் பார்வையிட்டனர். மேற்படி விஜயத்தின் போது முதல்வர் தலைமையில் சென்றிருந்த மாநகர குழுவிற்கு புதிய மாநகர கட்டட ஒப்பந்ததாரர் பிரதிநிதி மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குழு இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள கட்டுமானப் பணிகள், செலவிடப்பட்டுள்ள நிதி விடயங்கள் மற்றும் இன்னும் பூர்த்தி செய்வதற்கு தேவையான நிதி மற்றும் முழுமைப்படுத்தப்படாத கட்டட தொகுதிகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர். அதிகாரிகளின் தெளிவுபடுத்தலை தொடர்ந்து முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்ததுடன், நிறைவு செய்யப்பட வேண்டிய தொகுதிகளுக்கான நிதியை கண்டறிவது தொடர்பிலும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன. நகர மண்டபத்தின் மீதமுள்ள கட்டுமான வேலைகள் தொடர்பிலும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும் விரைந்து மேற்கொள்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முதல்வர் மதிவதனி நகர அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் திணைகளங்களுக்கு எழுத்து மூலமான அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவின் சென்னையில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “கெசல்வத்த… The post சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ‘கெசல்வத்த தினுஷா’ கைது: 72 மணிநேர தடுப்புக்காவலில் விசாரணை! appeared first on Global Tamil News .
கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் –சந்தேக நபர் கைது!
கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது! கல்முனை தலைமையக காவற்துறைப்… The post கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது! appeared first on Global Tamil News .
194 பில்லியன் டொலர் ஜேர்மன் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து மீட்க வலியுறுத்தல்!
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தனது பில்லியன் கணக்கிலான தங்க இருப்புகளைத் திரும்பப்… The post 194 பில்லியன் டொலர் ஜேர்மன் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து மீட்க வலியுறுத்தல்! appeared first on Global Tamil News .
Padma Awards 2026: தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்தவர்கள் இவர்கள்தான்.. குவியும் பாராட்டுகள்!
1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பத்ம விருதுகள், எந்த விதமான இனம், மதம், பாலினம், பதவி அல்லது சமூக நிலை பேதமின்றி, தனித்துவமான சேவையை அங்கீகரிக்கும் நோக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன.
நயன்தாரா மிரட்டல்! Patriot போஸ்டரில் ஒளிந்திருக்கும் மகிழ்ச்சியான ரகசியம்!
'Patriot' படத்தில் நயன்தாராவின் புதிய லுக் வெளியாகி வைரலாகிறது. போஸ்டரில் உள்ள மோர்ஸ் கோட் மூலம் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சை: ஒன்றரை லட்சம் மகளிர்... நேரு தலைமையில் பரபரக்கும் மாநாடு ஏற்பாடுகள்!
தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொள்ள இருப்பதாக சொல்கிறார்கள். டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மகளிர் மாநாடு ஏற்பாட்டில் மகளிர் அணி நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். ஒரு வாக்கு சாவடிக்கு 10 முதல் 15 பெண்கள் வரை அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான வாகன வசதி கட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தலா ஒரு கருப்பு சிவப்பு சேலை, ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ.200 கொடுத்ததாக சொல்கிறார்கள். மாநாட்டு திடலில் அமர்ந்ததும் பெண்களுக்கு பை ஒன்று தருகிறார்கள். இதில் ஹாட்பாக்ஸ், ஸ்வீட், காரம் ஸ்நாக்ஸ் , தண்ணீர் பாட்டில் போன்றவை இருக்கும் என்கிறார்கள். குடியரசு தின விழாவை முடித்து விட்டு சென்னையில் இருந்து தஞ்சாவூர் வருகிறார் முதல்வர் ஸ்டாலின் சுமார் 4 மணியளவில் மேடையேறுவார் என்கிறார்கள். டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு ஸ்டாலின் வரும் போது 50 பெண்கள் தாங்களே புல்லட், 200 பெண்கள் ஸ்கூட்டி ஓட்டியபடி அணிவகுத்து முதல்வர் ஸ்டாலினை அழைத்து வருகின்றனர். ஸ்டாலின் மேடை ஏறும் போது பெண்கள் கோலாட்டம் அடித்து ஆடியபடி வரவேற்பு கொடுக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் ஒன்றரை லட்சம் பெண்கள் மற்றும் குடும்பத்தினரை வாக்குகளாக மாற்ற வேண்டும் என திமுக தலைமை திடமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் சொல்கிறார்கள். இதற்காக பல்லடத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டை விட வெற்றிகரமாக அமையும் வகையில் கூடுதல் சிரத்தை எடுத்து அனைத்து நிர்வாகிகளும் வேலை செய்கின்றனர்.
சற்றுமுன்: நாளைக்கே தேர்தல் வைத்தாலும் விஜய்தான்.. தவெகவில் இணைந்த கு.ப. கிருஷ்ணன் நம்பிக்கை!
முன்னாள் அதிமுக அமைச்சரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான கு.ப. கிருஷ்ணன், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கு.ப. கிருஷ்ணன் வேளாண் துறை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடற்படையின் ஆடைத் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார் அமைச்சர்: தொழிலாளர்களுடன் முக்கிய கலந்துரையாடல்
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார். அவ்விஜயத்தின் போது, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையை அவர் நேரில் பார்வையிட்டதுடன், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்கள், தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடினார். மேலும், நெடுந்தீவில் செயல்பட்டு வரும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா துறையினர் ஆகியோரையும் சந்தித்த அமைச்சர், அவர்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தார். உள்ளூர் பொருளாதாரத்தை […]
பசிபிக் பெருங்கடலில் மற்றுமொரு படகை தாக்கி அழித்த அமெரிக்கா ; உறுதிப்படுத்திய ட்ரம்ப்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். போதை பொருள் கடத்தல்இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. […]
நடிகரும், தயாரிப்பாளருமான மாதவன் மற்றும் அவரின் மனைவி சரிகா வெறும் நண்பர்கள் மட்டும் அல்ல என தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. அவரின் அந்த புகைப்படத்தை சினிமா ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்கிறார்கள்.
சிங்கப்பூர் –அமெரிக்கா இடையிலான $2.3 பில்லியன் பாதுகாப்பு ஒப்பந்தம்!
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், சிங்கப்பூர் நான்கு அதிநவீன P-8A போஸைடன் (P-8A Poseidon) கடல்சார் ரோந்து விமானங்கள்… The post சிங்கப்பூர் – அமெரிக்கா இடையிலான $2.3 பில்லியன் பாதுகாப்பு ஒப்பந்தம்! appeared first on Global Tamil News .
எரிபொருள் நிரப்பும் போது நடந்த பயங்கர விபத்து ; ஸ்தளத்தில் உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதி
கண்டி – பேராதனை அகுனாவல, பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முச்சக்கர வண்டியில் எரிபொருள் தீர்ந்ததால், வீதியோரத்தில் நிறுத்திவிட்டு எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த சாரதி மீது டிபென்டர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் முச்சக்கர வண்டியும் பலத்த சேதத்திற்குள்ளானது. […]
திமுக ஆட்சியின் மிகப் பெரிய சாதனை இதுதான்.. வஞ்சப் புகழ்ச்சி பாடிய டி.டி.வி. தினகரன்!
தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச் சம்பவங்களிலும், சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஏதாவது ஒரு வகையில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் பெயர் இடம் பெறுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.
பனி போர்வையில் மூடிய நுவரெலியா ; சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெப்பமான காலநிலையும், மாலை வேளையில் பனிமூட்டமும் நிலவி வருகின்றது. இவ்வாறு நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான குளு குளு காலநிலையை அனுபவிக்க இலங்கையில் மட்டுமில்லாது, வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்த […]
❄️ எச்சரிக்கை: பூமியின் மிகக் குளிர்ந்த இடமாக மாறுகிறது கனடா!
இந்த வார இறுதியில் கனடா வரலாறு காணாத கடும் குளிரின் பிடியில் சிக்கியுள்ளது. ஆர்க்டிக் துருவப் பகுதியில் இருந்து… The post ❄️ எச்சரிக்கை: பூமியின் மிகக் குளிர்ந்த இடமாக மாறுகிறது கனடா! appeared first on Global Tamil News .
இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாண்புமிகு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதில் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். இத்திட்டம் முழுமையடையும்போது முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) காலை 9 மணிக்கு […]
மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை? - கேள்வி எழுப்பும் தமிழிசை
இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து - நடராசன் நினைவிடத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு நிற உடையில் வருகை தந்தார். அங்கு தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 'மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்' என முழக்கமிட்டார். முதல்வர் ஸ்டாலின்: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், ``வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்! 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன். எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன். மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் நீங்கள் அவர்களை சுட்டுக்கொன்ற காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு இந்த வணக்கத்தை செலுத்தினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் ஆன்மாக்கள் தான் ஏற்றுக் கொள்ளுமா? தமிழிசை சௌந்தரராஜன் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை கூப்பிடுவீர்களே இந்த நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களை கூப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளிலேயே ஹிந்தி கற்பிக்கப்படுகிறதே அவை எல்லாம் தமிழ்நாட்டில் இல்லையா? இத்தனை முரண்பாடுகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளுமா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே? இனியும் மொழியை வைத்து நீங்கள் போடும் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்? - எடப்பாடி பழனிசாமி
திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் மட்டுமல்ல.. பிரேமலதா விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா?
கூட்டணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து தற்போது வெளியிட முடியாது என்றும், சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்
இங்கிலாந்தில் பலருக்குத் திட்டமிட்டு HIV பரப்பிய நபர்; குற்றச்சாட்டை மறுப்பு
இங்கிலாந்தில் இளைஞர்கள் பலருக்குத் திட்டமிட்டு எச்.ஐ.வி (HIV) தொற்றைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், அவர்களுடன் உறவு கொள்வதற்கு முன்பே தனது உடல்நிலை குறித்துத் தெளிவுபடுத்தியதாகவும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வொஷிங்டன் பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆடம் ஹால் என்பவர் மீது, இணையத்தளம் மற்றும் மதுபான விடுதிகள் மூலம் அறிமுகமான ஏழு இளைஞர்களுக்குத் திட்டமிட்டு எச்.ஐ.வி தொற்றைப் பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐந்து பேரை வன்புணர்வு அதோடு , ஐந்து […]
சுமார் 48 ஆண்டுகால நெடிய பயணம்… மனிதகுலத்தின் அறிவியலுக்குச் சான்றாக விண்வெளியின் எல்லையில் பயணித்துக் கொண்டிருக்கும் வொயேஜர் 1… The post அதிசயம் ஆனால் உண்மை – விண்வெளியில் ஒரு வரலாற்று சாதனை: பூமியிலிருந்து ‘ஒரு ஒளி நாள்’ தொலைவில் வொயேஜர் 1! appeared first on Global Tamil News .
கென் கருணாஸுக்கே தெரியாமல் அவருக்குள் இருந்த இயக்குநரை வெளியே கொண்டு வந்த தனுஷ்
கருணாஸின் மகன் கென் தான் ஒரு இயக்குநராக காரணமே தனுஷ் தான் என்று தெரிவித்துள்ளார். ரீல் மகனை இயக்குநராக வைத்துவிட்டார் தனுஷ் என்று சினிமா ரசிகர்கள் அவரை பாராட்டுகிறார்கள்.
⚖️ கத்தோலிக்க மதகுரு மீது தாக்குதல் – 6 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம்
கம்பஹா பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த ஆறு காவல்துறை அதிகாரிகள், கத்தோலிக்க மதகுரு ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும்… The post ⚖️ கத்தோலிக்க மதகுரு மீது தாக்குதல் – 6 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் appeared first on Global Tamil News .
ஒரு துளி ஊழல் படியவும் படியாது.. படியவும் விடமாட்டேன்..- மேடையில் அனல் பறந்த விஜய் பேச்சு!
மாமல்லபுரத்தில் தவெக செயல்தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஊழல் செய்ய மாட்டேன் என்றும், மக்களுக்கு மட்டுமே சேவை செய்வேன் என்றும் விஜய் உறுதியளித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 216 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில், சுமார் 216 மில்லியன்… The post கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 216 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்! appeared first on Global Tamil News .
அழுத்தத்திற்கு எல்லாம் பயந்தவனா நான்... விஜய் பேசியதன் பின்னணி என்ன?
தமிழக அரசியல் களத்தினை நான்கு முனை போட்டியாக மாற்றிய அம்சம் விஜய் Factor தான். அவர் கட்சி ஆரம்பித்திலிருந்து இதுவரை எந்த கட்சியும் அவரோடு கூட்டணியில் இணையவில்லை. இருப்பினும் தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் தனியாக சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!
அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நாளை தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடக்கிறது. இதில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைகின்றனர். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. தன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் திமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவினர் வைத்திலிங்கம் மூவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தஞ்சாவூரில் நாளை டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. குடியரசு தினவிழாவை முடித்த பின்னர் தஞ்சாவூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து கிளம்பியதும் நேராக மேடைக்கு வருகிறார் ஸ்டாலின். முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாம். இணைப்பு விழா நடைபெறும் இடம் தனக்கான தனித்துவத்தை காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்தார். தன் விருப்பத்தை செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே ஓகே வாங்கி கொடுத்தாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பத்தாயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கிறார்கள். ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அனுப் ஜலோட்டாவின் அதிரடி கருத்து!
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய நேர்காணல் மற்றும் அதற்குப் பதிலடியாக பாலிவுட் பாடகர் அனுப் ஜலோட்டா (Anup Jalota)… The post ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அனுப் ஜலோட்டாவின் அதிரடி கருத்து! appeared first on Global Tamil News .
சுயசார்பு கனடாவை உருவாக்குவோம் - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதமர்
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகள் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. ட்ரம்ப் அந்தவகையில் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் வேளாண் பொருட்கள், மின்சார வாகனங்கள் தொடர்பாக சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்நிலையில், சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா அமல்படுத்தினால் கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு பிறகு கனடா பிரதமர் மார்க் கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மார்க் கார்னி அதில் பேசியிருக்கும் அவர், வெளிநாட்டு அச்சுறுத்தலைச் சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம். கனடாவைக் கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுபடுத்த முடியாது. எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். சுயசார்பு கனடாவை உருவாக்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்.
திரௌபதி 2: மங்காத்தாவால் வந்த சோகமான சரிவு!
அஜித் நடித்த மங்காத்தா ரீ-ரிலீஸால் 'திரௌபதி 2' படத்திற்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை. மறைக்கப்பட்ட உண்மைகள் மக்களைச் சேரவில்லை என மோகன் ஜி ஆதங்கம்!
கனடா மீது 100% வரி விதித்த ட்ரம்ப் ?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இடையிலான வர்த்தகப் போர்… The post கனடா மீது 100% வரி விதித்த ட்ரம்ப் ? appeared first on Global Tamil News .
மாரத்தானில் ஓடிய ஆமீர் கான் மகளை பாடிஷேமிங் செய்த நெட்டிசன்ஸ்: ஆதரவாக ட்வீட் போட்ட நடிகர்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் மகள் ஐராவின் உடல்வாகு மற்றும் அவரின் உடையை வைத்து சமூக வலைதளங்களில் மோசமாக கிண்டல் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் அபினவ் சுக்லா.
அறிவாலயத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் இல்லாதது ஏன்? முதல்வரை விளாசிய ஆதவ் அர்ஜூனா!
தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!
தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை. விஜய் அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்தின் மிக முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன். எதாவது அழுத்தம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? அழுத்தத்துக்கெல்லாம் அடங்கி போற ஆளா நாம? அழுத்தம் மக்கள் மீதுதான் இருக்கிறது. தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் பாஜகவிடம் நேரடியாக சரண்டர் ஆகிவிட்டார்கள். திமுக மறைமுகமாக சரண்டர் ஆகியிருக்கிறது. அவர்களின் வேடம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக கலர் கலர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார் என்கிற அழுத்தத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்கள் நம் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். விஜய் கூட்டணியைப் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யை நம்பி யார் வருவார் என நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஆனால், மக்கள் நம்மை நம்புகிறார்கள். அதனால்தான் கரியரின் உச்சம் என்கிற இடத்தில் என்னை தூக்கி வைத்திருக்கிறார்கள். என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களாக உழைக்க வேண்டும். ஏற்கனவே ஆண்டவர்களை போலவும் ஆள்பவர்களை போலவும் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். தீய சக்தியும் வேண்டாம். ஊழல் சக்தியும் வேண்டாம். இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் சக்தியும் நமக்குதான் இருக்கிறது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அண்டி பிழைக்கவோ அடிமையாகவோ மாறும் எண்ணமே இங்கில்லை. Vijay யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்யக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள். அண்ணா ஆரம்பித்த கட்சியும் அண்ணா பெயர் கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அந்த இரண்டு கட்சிக்கும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம். நாம் அதை அனுமதிக்கக் கூடாது. நடக்கப்போறது ஜனநாயகப் போர். அதை லீட் செய்யப்போகும் தளபதிகள் நீங்கள்தான். உங்களுக்கு விஜய் பிடிக்கும்னா அதை உங்க உழைப்புல காட்டுங்க. நாம அறிவிக்கப்போற வேட்பாளர்களுக்கு உங்களோட முழு ஆதரவையும் கொடுங்க. நட்பு சக்தி இருந்தாலும் இல்லைன்னாலும் நம்மால ஜெயிக்க முடியும்.' என்றார்.
⚖️ இந்தியாவில் கைது செய்யப்பட்டகெசல்வத்த தினுஷா’விடம் 72 விசாரணை
இந்தியாவின் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Red Notice) அடிப்படையில் இலங்கைக்கு… The post ⚖️ இந்தியாவில் கைது செய்யப்பட்டகெசல்வத்த தினுஷா’விடம் 72 விசாரணை appeared first on Global Tamil News .
150-க்கும் மேற்பட்ட குற்றங்களை புரிந்துள்ள மூதாட்டி மீண்டும் கைது!
பேர்மிங்காம் (Birmingham) மாநகர சபையினால் விதிக்கப்பட்ட தடையை மீறி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட டெப்ரா ஷா (Debra Shaw)… The post 150-க்கும் மேற்பட்ட குற்றங்களை புரிந்துள்ள மூதாட்டி மீண்டும் கைது! appeared first on Global Tamil News .
சிறை OTT விமர்சனம்: விக்ரம் பிரபுவின் மகிழ்ச்சியான வெற்றி!
டாணாக்காரன் படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபுவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகியுள்ள 'சிறை' படத்தின் OTT விமர்சனம் மற்றும் சுவாரசியமான தகவல்கள் உள்ளே!
சிறை OTT விமர்சனம்: விக்ரம் பிரபுவின் மகிழ்ச்சியான வெற்றி!
டாணாக்காரன் படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபுவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகியுள்ள 'சிறை' படத்தின் OTT விமர்சனம் மற்றும் சுவாரசியமான தகவல்கள் உள்ளே!
அமெரிக்காவில் பனிப்புயல்: 8,000 விமானங்கள் ரத்து!
அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமப்பட்டனர். மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்புயல் காரணமாக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் வசிக்கும் சுமார் 14 கோடி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெக்சாஸ், ஓக்லஹோமா, கேன்சாஸ் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை […]
திடீர்ரென பிரித்தானியப் படைகளைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப்
நேட்டோ (Nato) நட்பு நாடுகளின் படைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் பெரும்… The post திடீர்ரென பிரித்தானியப் படைகளைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப் appeared first on Global Tamil News .
கஸ்தூரி அதிரடி! விஜய்க்கு ஐடியா கொடுத்தது நான் தான்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கியது நான் தான் என நடிகை கஸ்தூரி பேட்டியொன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் அதிரடி! பாலிவுட் குறித்து மோசமான விமர்சனம்!
ஹிந்தி சினிமா தனது வேர்களை இழந்துவிட்டது என்றும், அது வெறும் பணத்தால் மட்டுமே இயங்கும் போலியான இடமாக மாறிவிட்டது என்றும் பிரகாஷ் ராஜ் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
New World Order உருவாகிறதா? Canada PM Mark Carney கொடுத்த எச்சரிக்கை! | Davos | Trump | Decode
சிறை: ``பெருமைபடுகிறேன்... அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் - நடிகை குஷ்பு சுந்தர்!
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2025-ம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியான படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் வெற்றிப் படமானது. குறைந்த பட்ஜெட் படங்களால் பெரிய வசூல் சாதனை படைக்க முடியுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலாக அமைந்த இந்தப் படம், பிரமாண்ட விளம்பரங்களும், மாஸ் ஓபனிங் கூட்டங்களும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி நடை போட்டு வருகிறது. சிறை படத்தில்... காதல் கதைக்குப் பின், காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம், ஜனவரி 23 அன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகி, அங்கும் தன் முத்திரையைப் பதித்து வருகிறது. இந்த நிலையில்,நடிகை குஷ்பு சிறைப் படம் பார்த்த தன் அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ``சமீபகாலமாகப் பலராலும் பேசப்பட்டு, அமைதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள சிறை திரைப்படத்தை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன். இது அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். ஒரு சாதாரண கதையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். அனைவருமே அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம் பிரபுவைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். Khushbu | குஷ்பு அந்த கதாபாத்திரத்தைப் புரிந்து கொண்டு, மிகக் கட்டுக்கோப்பான நடிப்பை நீ வழங்கியிருப்பது, புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபிக்கிறது. உன்னைப் பார்த்து மிகவும் பெருமையாக இருக்கிறது. சரியான நடிகர்களைத் தேர்வு செய்ததற்காக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி பாராட்டுக்குரியவர். உண்மையில் படத்தில் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. ஒரு தேவையில்லாத காட்சியோ, வேண்டாத பாடல்களோ எதுவுமே இல்லை. இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். சிறை: ``இப்படி ஒரு படத்தை மிகச் சரியாக உருவாக்க... - முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
❄️ கடுமையான பனிப்புயல் – 12,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
அமெரிக்காவைத் தாக்கியுள்ள மிகக் கடுமையான பனிப்புயல் (Winter Storm) காரணமாக, விமானப் போக்குவரத்து வரலாறு காணாத… The post ❄️ கடுமையான பனிப்புயல் – 12,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! appeared first on Global Tamil News .
ஐபோன் 18 ப்ரோ லீக்ஸ்! புதிய சிப் மற்றும் இந்திய விலை!
ஆப்பிளின் ஐபோன் 18 ப்ரோ 2026-ல் வெளியாகிறது. புதிய டிசைன், 2nm சிப் மற்றும் மிரட்டலான கேமரா அப்டேட்கள் குறித்த முழுமையான அலசல்!
அமெரிக்காவில் மனைவியைச் சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி கணவன் கைது!
அமெரிக்காவில் குடும்பத் தகராறில் மனைவியைச் சுட்டுக் கொன்றதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் குமார் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தமது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறும் அதனால் வீண் வாக்குவாதமும் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை(ஜன. 23) ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டிலிருந்த தமது மனைவியையும் உறவினர்களையும் விஜய் குமார் சுட்டுக் கொன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு […]
TOI சர்வேபடி சட்டசபை தேர்தலில் தவெகவுக்கே வெற்றினு வைரல் போஸ்ட்: அது போலி, நிஜம் இல்லை
நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தான் வெற்றி பெறும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளதாக ஒரு பதிவு வைரலானது. அந்த பதிவு குறித்த உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
திமுகவை வீழ்த்தும் சக்தி விஜய்க்கு மட்டுமே உள்ளது..தவெக செங்கோட்டையன் ஆவேசப் பேச்சு!
தவெக தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது
கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் 2026: பொங்கல் வின்னர் யார்?
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' முதல் கார்த்தியின் 'வா வாத்தியார்' வரை 2026 கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்த அலசல்.
'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்
தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கடைசி டிசம்பர் விழாவில் பேசிய விஜய். அதன்பிறகு கிட்டத்தட்ட 38 நாட்களுக்கு விஜய் மௌனமாக இருந்தார். விஜய் இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கியமான கட்டத்தில் நடக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் NDA கூட்டணியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் பேசியதாவது, 'இங்கே எல்லார் கையிலும் விசில் வைத்திருக்கிறீர்கள். நாளை காவலர்கள், நடத்துனர்கள் கூட விசில் வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள். இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு கூட்டம். தலைக்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டி வந்திருந்தார்கள். அவர்கள் திமுகவை வீழ்த்துவோம் என்றார்கள். ஒருவரும் கைத்தட்டவில்லை. திமுகவை வீழ்த்தும் சக்தி நம் தலைவருக்குதான் உண்டு. 10 கட்சி கூட்டணி 15 கூட்டணியையெல்லாம் முறியடிக்கும் சக்தி தலைவருக்குதான் உண்டு. செங்கோட்டையன் இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத புகழ் நம் தலைவருக்கு இருக்கிறது. 1000 கோடி வருவாயை வேண்டாமென்று கூறிவிட்டு அவர் மக்களுக்காக வந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஓட்டு இருக்கிறது. திமுகக்காரர்களின் வீட்டு ஓட்டு கூட நமக்குதான் இருக்கிறது.அந்த இரு கட்சிகளிலும் இருப்பவர்கள் தலைவர்களே அல்ல. நம்முடைய தலைவரை முதல்வராக்க வேண்டுமென மக்கள் சூளுரைத்திருக்கின்றனர். எந்த சக்தியாலும் நம்மை இனி தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய சின்னம் விசில் சின்னம். தூங்குகிறவர்களின் காதுகளில் விசில் அடித்து விடாதீர்கள். முதியவர்களின் முன்னால் விசில் அடித்துவிடாதீர்கள். வாக்கு கிடைக்காமல் போய்விடும்' என்றார்.
சிறை: ``இப்படி ஒரு படத்தை மிகச் சரியாக உருவாக்க... - முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2025-ம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியான படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் வெற்றிப் படமானது. குறைந்த பட்ஜெட் படங்களால் பெரிய வசூல் சாதனை படைக்க முடியுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலாக அமைந்த இந்தப் படம், பிரமாண்ட விளம்பரங்களும், மாஸ் ஓபனிங் கூட்டங்களும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி நடை போட்டு வருகிறது. சிறை படத்தில்... காதல் கதைக்குப் பின், காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம், ஜனவரி 23 அன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகி, அங்கும் தன் முத்திரையைப் பதித்து வருகிறது. இந்த நிலையில்,புகழ்பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் சிறைப் படம் பார்த்த தன் அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ``நேற்று சிறை படம் பார்த்தேன். மிகவும் அழகான திரைப்படம். காட்சிகள் மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. யதார்த்தமாகவும், நம்மோடு எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையிலும் ஒரு இதமான காதல் கதையை இப்படம் கொண்டுள்ளது. தினேஷ் கார்த்திக் இப்படி ஒரு படத்தை மிகச் சரியாக உருவாக்குவதற்கு, இயக்குநர் நிச்சயமாகப் பலத்த ஆராய்ச்சி செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன். விக்ரம் பிரபு மற்றும் அவருடன் நடித்தவர்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகள். எனக் குறிப்பிட்டிருக்கிறர். சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!
ஆப்கானிஸ்தானில் பனிப்பொழிவு: 61 பேர் உயிரிழப்பு!!
கடந்த சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் பனி மற்றும் மழையால் குறைந்தது 61 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 110 பேர் காயமடைந்துள்ளனர். இதை பேரிடர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவித்தனர். கூடுதலாக, புயல்கள் மூன்று நாட்களுக்குள் சுமார் 450 வீடுகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்துவிட்டன என்று அது மேலும் கூறியது. இவை முதற்கட்ட புள்ளிவிவரங்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர குழுக்கள் விரைந்துள்ளன, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பாதி மாகாணங்கள், குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்பொழிவு காரணமாக, தலைநகர் காபூலை வடக்கு மாகாணங்களுடன் இணைக்கும் ஒரு முக்கியமான போக்குவரத்து அச்சான சலாங் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மூடல் அமுலில் உள்ளது என்று பொறுப்பான அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பனி மற்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐ.நா.வின் அவசர உதவி அலுவலகமான OCHA-வின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி பகுதிகளில் ஒன்றாக உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் உதவியை நம்பியுள்ளனர். இதற்கான காரணங்களில் தீவிர வானிலை நிகழ்வுகள், வறட்சி, உணவு பற்றாக்குறை மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
போயா தினத்தில் சில் அனு~;டிப்பதற்கு யாழ்ப்பாணம் செல்ல வேண்டியதில்லை என்ற அநுர குமரவின் கூற்றை இனவாதிகள் ஆயுதமாக எடுத்துள்ளனர். சிறீதரன் மீது தமிழரசுக் கட்சி எடுத்திருக்கும் நடவடிக்கையை தங்களுக்கான பலமாக எடுத்து கட்சியை அழிக்க முயற்சிக்கின்றனர் இனபாசத்தால் உள்நுழைந்தவர்கள். ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்க யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய ஓர் உரையின் ஒரு சிதறலும், தமிழரசுக் கட்சியின் மூத்த எம்.பியான சிவஞானம் சிறீதரனின் நாடாளுமன்ற செயற்பாடுமே இப்போது பிரதான பேசுபொருட்களாகியுள்ளன. யாழ்ப்பாணத்தின் பொதுநிகழ்;ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமர பொதுநிகழ்வொன்றில் கலந்து கொள்ளும்போது யதார்த்தமான கருத்தொன்றை தெரிவித்தார். இது தமிழர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் சிங்கள தேசத்தின் பௌத்த பக்தர்கள் இதனை இப்போதைக்கான தங்கள் ஆயுதமாக எடுத்துள்ளனர். அநுர குமர சொன்னது இதுதான்: போயா நாட்களில் சிலர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றனர். ஜெயசிறீமகாபோதியை கடந்து இவர்கள் இங்கு செல்வது தங்கள் மதவழிபாட்டுக்காக அல்ல. மாறாக, வெறுப்பை பரப்புவதற்காகவே - என்பதுதான் அநுர குமர சொன்னது. தென்னிலங்கையின் பல பகுதிகளிலும், யாழ்ப்பாணம் செல்லும் பாதையிலும் பல பௌத்த விகாரைகள் உள்ளன. இவைகளுள் சில வரலாற்றுப் பெருமை பெற்றவையாக அறிவிக்கப்பட்டவை. போயா தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு இடம்பெறும். இப்படியிருக்க, எதற்காக தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமென்ற அநுர குமரவின் கேள்வி நியாயமானது. திஸ்ஸ விகாரையில் காணி பிரச்சனை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் போயா தின வழிபாட்டை காரணம் காட்டி தெற்கிலிருந்து செல்வதால் பிரச்சனை பூதாகரமாவதை கருத்தில் கொண்டே அநுர குமர தமது கருத்தை நாட்டின் தலைவர் என்ற வகையில் ஒருதலைப் பட்சமின்றி கூறியிருக்கலாம். இது மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய விரும்புவர்களுக்கு அவலாகக் கிடைத்துள்ளது. (1983 யூலை தமிழின அழிப்பு ஒரு போயா தினத்துக்கு மறுநாள் ஆரம்பிக்கப்பட்டது. தமிழரை கொலை செய்யவென திட்டமிடப்பட்ட நாள் இது. அப்போது அமைச்சராகவிருந்த சௌமிய தொண்டமான் இதுபற்றிக் குறிப்பிடுகையில் - போயா நாளில் சில், அடுத்த நாள் கொல் - என்று சொன்னது இவ்வேளையில் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.) இனப்பிரச்சனையை வளர்க்கும் இடமாக அநுர குமர சிங்கள மக்களைப் பார்த்துச் சொன்னதை இனவாதத்தை வளர்க்கும் தூபமாக சிங்கள அரசியல்வாதிகள் கையில் எடுத்துள்ளனர். சிங்கள - பௌத்த வாக்குகளால் பதவிக்கு வந்துவிட்டு வடக்குக்கு சென்று அந்த சிங்கள பௌத்த மக்களை ஜனாதிபதி காட்டிக்கொடுக்கிறார் என்று குரல் எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர. கடற்படையில் உயர் அதிகாரியாக முன்னர் கடமையாற்றிய இவர், கோதபாய ஜனாதிபதியாக இருந்தபோது அவரைச் சுற்றியிருந்த வியத்மக குழுவின் பிரதானியாகவிருந்து கோதபாயவின் அழிவுக்குக் காரணமாகவிருந்தவர்களில் முக்கியமானவர்;. விகாரை விடயங்களில் தலையிட முனைந்தால் என்ன நடைபெறும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டி வருமென்று எச்சரித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. கண்டியில் மகாநாயக்கர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த இவர் தாம் இப்போது அரசியலில் இல்லையென்று கூறியிருப்பது விநோதமானது. மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் பேபி கூறியுள்ள கருத்து அவரது வரலாற்று அறிவின்மையை காட்டுகிறது. தமிழ் மக்கள் கதிர்காமத்துக்குச் செல்ல உரிமை இருப்பதுபோல சிங்கள் மக்களுக்கு வடக்கிலுள்ள நாகதீப விகாரைக்குச் செல்ல உரிமை உள்ளது என்று எச்சரித்துள்ளார். கதிர்காமத்தின் மூலத்தில் வேல் இருப்பதையும், இது தமிழர்களின் வழிபாட்டுத் தலம் என்பதையும் மறைக்க எத்தனிக்கும் நாமல் இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாக வர கனவு காணும் ஓர் இனவாதி. இவ்வாறான இனவாதம் கக்குபவர்களுக்கு திஸ்ஸ விகாரை ஓர் ஆயுதமாக மாறாது பார்த்துக் கொள்ள வேண்டியது ஆட்சித் தலைவரான அநுர குமரவின் பாரிய பொறுப்பு. அவரின் ஒரு சொல்லே இனவாதத்தை கக்க ஆரம்பித்துள்ளது என்ற காரணத்தைக் கூறி திஸ்ஸ விகாரை விடயத்தில் நியாயமாகவும் நீதியாகவும் நடந்து கொள்வதை அவர் தவற விடக்கூடாது என தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். தெற்கின் இனவாதத்துக்கு நிகரான பதவிமோகப் போராட்டம் ஒன்று இனபாசம் என்ற பெயரில் இப்போது வேகம் கொண்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மூத்த எம்.பியும் நாடாளுமன்ற குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரனை மையப்படுத்தியதாக இந்த நடவடிக்கை பல கோணங்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. நாடாளுமன்ற அரசமைப்புச் சபையில் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதியாக இடம்பெற்றிருக்கும் சிறீதரன் அரச சார்பாளராக செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இதுவரை நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இவரை அப்பதவியிலிருந்து விலகுமாறு தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் கடிதம் மூலம் கேட்டுள்ளார். இவ்விடயம் பற்றி ஏற்கனவே இப்பத்தியில் குறிப்பிடப்பட்டது. தமக்குக் கிடைத்த இக்கடிதத்துக்கு பதில் எழுதும் கடப்பாடு சிறீதரனுக்கு இல்லை. அரசமைப்புச் சபைக்கு இவரை தமிழரசுக் கட்சி நியமிக்கவில்லை. நாடாளுமன்றத்திலுள்ள சிறுபான்மைக் கட்சிகளே இவரைத் தெரிவு செய்தன. எனவே இவர் கட்சியின் கடிதத்துக்கு பதில் அனுப்பாவிட்டால் இவர் மீது நடவடிக்கை எடுக்கும் தார்மிக உரிமை கட்சிக்கு இல்லையென்று கட்சியின் பிரமுகர்களே கூறுகின்றனர். தமிழரசின் பதில் தலைவரின் நிலைப்பாடும் இதுவே என்று நம்பிக்கையானவர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு, கட்சியின் தலைவர் பதவிப் போட்டியில் கட்சி உறுப்பினர்களாலேயே தூக்கி வீசப்பட்டு, வன்னி சத்தியலிங்கத்தின் கருணையால் பதில் செயலாளராகியுள்ள சுமந்திரன் எப்பாடுபட்டாவது சிறீதரனை பழிவாங்க எடுக்கும் முயற்சியில் இப்போது கையில் கிடைத்திருப்பது அரசமைப்புச் சபை விவகாரம் என்று மார்ட்டின் வீதி அலுவலகத்தின் மூத்தவர் ஒருவர் தமது சகபாடிகளிடம் தெரிவித்து வருகிறார். தமிழரசுக் கட்சியோடு மீண்டும் இணைய விரும்பியிருக்கும் ஜனநாயக தமிழர் கூட்டணியின் பேச்சாளரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிறீதரன் மீது குற்றப்பத்திரிகையை வாசித்துள்ளார். தெற்கில் பலவேறு கட்சிகளிலும் இணைந்து வெளியேறியும் - வெளியேற்றப்பட்டும் அலைந்து திரியும் மகிந்தவின் முன்னாள் சகபாடியான தயாசிறி ஜெயசேகரவும் சிறீதரன் மீது ஏறிப்பாய்ந்துள்ளார். சுமந்திரன் சிறீதரன் மீது வைத்த குற்றச்சாட்டையே இருவரும் பகிரங்கமாகக் கூறுகின்றனர். எதிரணியினர் சார்பில் தயாசிறி ஜெயசேகர தமது தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். இங்கு கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் முக்கியமானவை. சிறீதரனை விமர்சிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் பல தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அண்மையில் இடம்பெற்ற உள்ளாட்சிச் சபைத்தேர்தலில் தமிழரசுக் கட்சியை எதிர்த்து இன்னொரு கூட்டில் இணைந்து பரப்புரை மேற்கொண்டவர். கருணைக் கொலையில் அகப்பட்டிருக்கும் மாகாணசபைக்கான தேர்தலை நடத்தினால் அதனூடாக தமது ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு சில ஆசனங்களாவது பெறலாம் என்ற நப்பாசையில் இப்போது தமிழரசுடன் தற்காலிகமாக இணைந்திருப்பவர். தயாசிறி ஜெயசேகர எப்போதுமே சிங்கள கட்சிகளின் பிரதிநிதியாக இருந்தவர். மகிந்த ராஜபக்ச ஆட்சியிலும் மைத்திரிபால சிறிசேன ஆட்சியிலும் முக்கிய பங்காற்றியவர். சிங்கள ஆட்சிகள் தமிழின படுகொலைகளை மேற்கொண்டபோது இராணுவத்தின் பக்கமும் சிங்கள கட்சிகளின் பக்கமும் நின்றவர். இப்போது தமிழினத்தை இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதுபோல வேசம் காட்டி சிறீதரனை அரசமைப்புச் சபையிலிருந்து விலகுமாறு கோரி வருகிறார். இது தொடர்பான இவரது உரைகளை எழுதிக் கொடுப்பவர் யாராக இருக்கலாம் என்ற ஊகம் அண்மையில் தமிழ் ஊடகம் ஒன்றில் நாசூக்காக தெரிவிக்கப்பட்டது. இவ்விடத்தில் முக்கியமாக எழும் கேள்வியொன்று இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சனை பற்றி தமிழர் பகுதியிலுள்ள அநுர குமரவின் முக்கியஸ்தர் ஒருவர் பிரஸ்தாபித்திருந்தார். இது தொடர்பாக கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம் அவர்கள் அவசரமாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து மிகச்சூடான ஒரு கருத்தை நியாயமாக வெளியிட்டிருந்தார். தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட எவருக்கும் உரிமையில்லை. தமி;ழரசு குறித்த அநுர தரப்பு குத்தி முறியவும் தேவையில்லை என்று கட்சியின் நிலைப்பாட்டை எவரும் இலகுவாகப் புரியும் வகையில் தெரிவித்திருந்தார். இவர் இவ்வாறு கூறியதற்காக அநுர தரப்பினர் அமைதியாக இருந்துவிடப் போவதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக்கொண்டேயிருப்பார்கள். இங்கே நான் குறிப்பிட விரும்புவது இதுவல்ல. சிறீதரன் விடயமாக அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரே~; பிரேமச்சந்திரன் அநுர தரப்பினர் கூறிய அதே கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். தெற்கில் சிங்களக் கட்சிகளின் பிரதிநிதியாகவிருக்கும் தயாசிறி ஜெயசேகர தமிழரசுக் கட்சியின் ஆபத்பாந்தவனாகத் தம்மை காட்டி, சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியான சிறீதரன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி பதவி விலகுமாறு கோருவதற்கு யார் உரிமை அளித்தது? தமி;ழரசுக் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை எவருக்கும் கிடையாது என்று அடித்துக்கூறிய அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எந்தவகையில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தயாசிறி ஜெயசேகரவும் சிறீதரன் சம்பந்தமான தமி;ழரசுக் கட்சி விவகாரத்தில் தலையிடவும் பகிரங்கமாக கருத்துக் கூறவும் அனுமதித்தார் என்பதை அறிவதற்கு அக்கறையுள்ளவர்கள் ஆர்வமாகவுள்ளனர்.
அமெரிக்காவின் கிழக்குப் பகுதியின் பெரும்பகுதியில் வழக்கத்திற்கு மாறான பரந்த குளிர்கால புயல் வீசியதால் , நேற்று சனிக்கிழமை முதல் திங்கள் வரை 13,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன . ராக்கி மலைகள் மற்றும் நியூ இங்கிலாந்து இடையேயான பகுதியில் கடுமையான பனிப்பொழிவு, பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழையால் கிட்டத்தட்ட 180 மில்லியன் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய வானிலை சேவை (NWS) சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானது. சனிக்கிழமை நிலவரப்படி புயல் வீசும் பாதையில் 120,000க்கும் மேற்பட்ட மின்வெட்டுக்கள் பதிவாகியுள்ளன.லூசியானா மற்றும் டெக்சாஸில் மட்டும் தலா 50,000 மின்வெட்டுகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பல மாநிலங்களுக்கு மத்திய அவசரநிலை மேலாண்மை நிறுவனத்திடமிருந்து உதவி பெறுவதற்கான அவசரகால அறிவிப்புகளுக்கும் ஒப்புதல் அளித்தார்.

22 C