அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்; 5 அரபு நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்
தெஹ்ரான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து நடந்து வந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், 40 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் சற்று தணிந்தது. இதனையடுத்து, பாகிஸ்தானில் அமெரிக்கா, ஈரான் தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனினும், அமெரிக்கா மற்றும் […]
அருணாச்சல பிரதேசம் எங்களது நாட்டின் ஒரு பகுதி: சீனா திட்டவட்டம்
பெய்ஜிங், இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில இடங்களுக்கு சொந்தம் கொண்டாடும் விதமாக சீனா பல புதிய பெயர்ளை சூட்டி வருகிறது. இவை முற்றிலும் ஏற்க முடியாதவை என்று கூறி வரும் இந்தியா, சீனாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இவ்வகையாக செயல்பாடுகள் இருநாட்டு உறவை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை பாதிக்கக்கூடும் என்றும் இந்தியா எச்சரித்தது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியப் பகுதிகளுக்கு சீனா தரும் […]
மோடியுடன் 40 நிமிடங்கள் உரையாடிய டிரம்ப்! பேசியது என்ன?
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக நேற்று (ஏப்.14) பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) தெரிவித்துள்ளார். இதுகுறித்து தூதர் செர்ஜியோ கோர் பேசுகையில், “வரும் சில நாள்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எரிசக்தி உள்ளிட்ட சில முக்கிய ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 40 […]
பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை
இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த எச்சரிக்கை வலயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 21 மாவட்டங்களில் சில இடங்களில் ‘அவதான மட்டம் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு நாட்டின் 21 மாவட்டங்களில் சில இடங்களில் ‘அவதான மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. […]
இஸ்ரேலுக்கு எதிராக அதிரடி முடிவெடுத்த இத்தாலியின் மெலோனி
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தனது அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். விரிசலை பிரதிபலிப்பதாக மத்திய கிழக்கில் மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், முன்பு நெருங்கிய நட்பு நாடுகளாகத் திகழ்ந்த இரு நாடுகளுக்கு இடையிலான விரிசலை இது பிரதிபலிப்பதாகவே கூறுகின்றனர். மெலோனியின் வலதுசாரி அரசாங்கம் ஐரோப்பாவில் இஸ்ரேலின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது; இருப்பினும், அண்மைய வாரங்களில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை, அத்தாக்குதல்கள் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, […]
இலங்கையில் உயிர்களை காவு வாங்கும் மர்ம தேசம் –இன்றும் இரு சகோதரர்கள் பலி
தென்னிலங்கையில் உயிர்களை காவு வாங்கும் கடற்கரை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலி, ஹபரதுவ கொக்கல கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஜுட் ஷெவந்த பெரேரா மற்றும் 21 வயதுடைய என்டன் ஷெனாவ் பெரேரா ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாகும். சகோதரர்கள் பலி அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்படுவதை கண்ட ஹபராதுவ பொலிஸாரும், அருகிலுள்ள சுற்றுலா […]
யாழ் மாவட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் கட்ட தெளிவூட்டல் நிகழ்வு இன்றைய தினம் (15.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமை உரையாற்றிகையில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம மட்டத்தில் நீண்ட காலமாக அனுபவமிக்க உத்தியோகத்தர்களாக காணப்படுகின்றார்கள் எனவும், காலத்திற்கு காலம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதன் மூலம் தங்களது செயற்பாடுகளை கடந்த காலத்திலும் […]
கூகுள் AI-ஐ மனைவியாக நினைத்த இளைஞர்: டிஜிட்டல் உலகில் வாழ எடுத்த விபரீத முடிவு
கூகுளின் செயற்கை நுண்ணறிவான ஜெமினி மீது காதல் கொண்டு இளைஞர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மீது காதல் கொண்ட இளைஞர் அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஜோனதன் காவலாஸ் என்ற 36 வயதுடைய நபர் தன்னுடைய மனைவியை பிரிந்து மன உளச்சலில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது கூகுள் நிறுவனத்தின் AI Chatbot ஆன Gemini உடன் ஜோனதன் பேச தொடங்கியுள்ளார் அத்துடன் ஜெமினிக்கு Xia என்ற பெயரை சூட்டி அதை தன்னுடைய […]
இலங்கையில் காப்பாற்றப்பட்ட 238 ஈரானியப் பிரஜைகள் நாட்டுக்கு அனுப்பிவைப்பு
அமெரிக்கப் தாக்குதலில் காயமடைந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியப் பிரஜைகள் விசேட விமானம் மூலம் நேற்று (14) இரவு மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்குச் சொந்தமான ‘மெராஜ்’ விமான சேவைக்கு (Meraj Air Line) சொந்தமான IRAN-09 என்ற விசேட விமானம், 13 ஆம் திகதியன்று மாலை 4:00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. அமெரிக்கப் தாக்குதலில் காயமடைந்த […]
மன்னார் கடலில் இரு படகுகள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மன்னார் கடல் பகுதியில் இன்று (15) இரு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனபோது விபத்தில் படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். சம்பவத்தில் கடலில் காணாமல் போயிருந்த மீனவர் நீண்ட நேர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மீனவரின் உடல் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளடன், காயமடைந்த மற்றொரு மீனவர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் […]
புத்தாண்டு மதுபான விருந்தில் பறிபோன உயிர்
பாயகலை, விஹாரகந்த பகுதியில் நடைபெற்ற மதுபான விருந்தொன்றின்போது ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதக பொலிஸாட் கூறியுள்ளனர். பாயகலை பகுதியை சேர்ந்த 49 வயது நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாயகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு பாயகலை, விஹாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (14) இரவு புத்தாண்டு மதுபான விருந்தொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்த நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. […]
போர்க் கப்பல்களில் இருந்து ஏவுகணை சோதனை: வட கொரிய ஜனாதிபதி கின் ஜாங் நேரில் ஆய்வு
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் பணியினை ஆய்வு நேரில் ஆய்வு செய்தார். ஏவுகணை சோதனை ஞாயிற்றுக்கிழமை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அந்நாட்டின் சோய் ஹியோன் போர்க்கப்பலின் செயல்பாட்டு திறன் சோதனைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது போர்க் கப்பல்களில் இருந்து ஏவப்படும் குரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் போர்க் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனைகள் ஆகியவற்றை ஜனாதிபதி கிம் ஜாங் உன் பார்வையிட்டார். […]
மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (15) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் […]
17 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை: காரணம் என்ன?- போலீஸ் விசாரணை
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இம்மாடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுவர்ணா (வயது 40). இவருக்கு திருமணமாகி 17 வயதில் கருண்யா என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சுவர்ணா படுக்கை அறையில் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் சுவர்ணா அதே அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் சுவர்ணாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் கிடந்துள்ளது. இதை […]
புத்தாண்டில் துயரம்; நீரில் அடித்து செல்லப்பட்ட மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு
திருகோணமலை சோமாவதி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில், ஒருவரின் சடலம் இன்று (15) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இந்த மூன்று சகோதரர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் 35 வயதுடையவரே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரையும் தேடும் பணிகள் தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை சோமாவதி பாலத்துக்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் […]
மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை; நோயாளியின் அநாகரிக செயல்
பெண் வைத்தியர் ஒருவரை அநாகரிகமாக தொட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நோயாளி ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஏ முதலில் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நோயாளியின் அநாகரிக செயல் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்த பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் (Blood Pressure) பரிசோதிக்கச் சென்றுள்ளார். இதன்போது, சந்தேக நபர் […]
Goa Chief Minister Supports Women’s Reservation
Goa’s Chief Minister Pramod Sawant recently spoke in favor of reserving seats for women in legislative assemblies. He said he would be okay even if hi...
சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (15.04.2026) காலை 9.05 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினையும் வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
Felt Strong, Enjoyed Return: Brevis on Comeback After Injury
Chennai (Tamil Nadu), April 15 (ANI): Chennai Super Kings batter Dewald Brevis expressed happiness about returning to competitive cricket after overco...
The 131st Amendment Bill: Disenfranchising South India
The Indian government claims that the Constitution (One Hundred and Thirty-First Amendment) Bill, introduced in 2026, aims to empower women. However, ...
வாடகைதாரர்களை வெளியேற்றத் தடை விதித்த நகரமுதல்வரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை
பிரான்ஸ் சென்ட் டெனி (Saint-Denis) நகரமுதல்வரான பாலி பகாயோகோ (Bally Bagayoko), வாடகைதாரர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராகப் பிறப்பித்திருந்த உத்தரவை, நிர்வாக நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களே ஆன நிலையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் வாடகைதாரர்களை வெளியேற்றக் கூடாது என்ற சலுகைக்காலம் (Trve hivernale) உண்டு. புதிய சட்ட உத்தரவு இந்தச் சலுகைக்காலம் ஏப்ரல் 1-ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சென்ட் […]
KKR Struggles in Powerplay Cost IPL Match Against CSK
Chennai (Tamil Nadu), India - April 15: Kolkata Knight Riders' bowling coach Tim Southee admitted his team gave away too many runs early on during the...
Tom Cruise Unrecognizable in DIGGER Trailer Debut
Tom Cruise is set to bring humor to his usual hero role in Digger, directed by Alejandro G. Irritu. The first footage was shown at CinemaCon, where ...
MS Dhoni Advises Noor Ahmads Crucial Bowling Spell Helps CSK Beat KKR
Chennai (Tamil Nadu) [India], April 15 (ANI): Chennai Super Kings' assistant bowling coach Sriram Sridharan shared that MS Dhoni had a lengthy convers...
Karnataka Woman Dies After Being Poisoned by Relatives Over Affair
Satyavva, a woman from Karnataka's Belagavi district, was married to Santosh. However, she had an affair with another man named Krishna. Earlier this ...
Gautam Gambhir Visits Salasar Balaji Temple
Indian cricket team head coach Gautam Gambhir visited the Salasar Balaji temple in Churu, Rajasthan, on Wednesday to offer his prayers. He sought bles...
ஈரானுடன் ரகசிய ஒப்பந்தமா? –கத்தார் அமைச்சகத்தின் அதிரடி விளக்கம்
ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை என கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலம் முழுவதும் கட்டார் மீது ஈரானியத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னரே இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும், மாறாக இரு நாடுகளுக்கும் இடையே எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானுடன் கத்தார் உடன்படிக்கை செய்துகொண்டதாக வெளியான செய்திகளை நிராகரிக்கும் வகையிலேயே இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு […]
Supreme Court Halts Telangana Bail Order for Pawan Khera
The Supreme Court on Wednesday (April 15, 2026) stopped the Telangana High Court’s order that had granted one-week transit anticipatory bail to Congre...
அமெரிக்காவின் எச்சரிக்கையால் 24 மணித்தியாலங்களில் நடந்த சம்பவம்
ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை இலக்கு வைத்து அமெரிக்காவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடல்சார் முற்றுகையின் முதல் 24 மணித்தியாலங்களில், எந்தவொரு கப்பலும் தடையை மீறிச் செல்லவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முற்றுகை நடவடிக்கையில் 10,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைய முயன்ற அல்லது வெளியேற முயன்ற 6 வர்த்தகக் […]
இன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்
புத்தல, வெல்லவாய – மொனராகலை வீதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியானது வேனுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை செலுத்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததோடு, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் புத்தல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் அம்பாறையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, விபத்து இடம்பெற்ற நேரத்தில் அம்பாறையிலிருந்து கொழும்புக்கு பயணம் செய்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் பொலிஸார் அராஜகம்; இளைஞன் மீது பொது வெளியில் தாக்குதல்!
வவுனியா நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவரை பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்கி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இலங்கை பொலிஸார் ஒரு இளைஞரை கால்களால் எட்டி உதைத்தும், பாதுகாப்பு அங்கிகளைப் பயன்படுத்தியும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இலங்கை சுற்றுலா இத்தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட […]
அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்கள் இன்று முதல் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழமைப் போன்று இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சித்திரை புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், பொதுமக்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த […]
கனடா இடைத்தேர்தல்கள்: மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது மார்க் கார்னி கட்சி
நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன. கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. விடயம் என்னெவென்றால், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும். மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் 171 இருக்கைகள்தான் இருந்தன. விடயம் என்னவென்றால், நாடாளுமன்றத்தில், ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் […]
புத்தாண்டில் நாட்டை உலுக்கிய இரு கொலைச் சம்பவங்கள்! கள்ள காதலால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
சித்திரைப்ப் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 32 வயதுடைய வெல்லவாய பகுதியைச் […]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விடயங்களைச் சமர்ப்பித்தனர். பாரிய நிதி மோசடிபாதிக்கப்பட்ட இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, பமுணுகம பகுதியைச் சேர்ந்த […]
பிரதமர் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள்
தமிழ் – சிங்கள புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (14) கம்பஹாவில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புண்ணிய காலத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கம்பஹா மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். கலந்து கொண்டிருந்த அமைச்சர்கள் இம்முறை புத்தாண்டு தேசிய கலாசார விழாவின் சம்பிரதாயங்கள் கம்பஹாவிலுள்ள தர்ஷன வீரசிங்கவின் […]
அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு
அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை, அடுத்த 2 நாள்களில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட 2 வார கால போா் நிறுத்தத்தின் தொடா்ச்சியாக பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை 21 மணி நேர பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படாமல் இப்பேச்சுவாா்த்தையில் தோல்வியுற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இது தொடா்பாக அமெரிக்க ஊடகமொன்றுக்கு […]
நான்கு நாட்களில் மட்டும் பல கோடி ரூபா வருமானம்
கடந்த 4 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் இயக்கம், பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 கோடி 61 லட்சத்து 19,425 ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹதபிட்டிய குறிப்பிட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாரத்தில் தமது சொந்த இடங்களுக்குச் […]
புத்தாண்டு தினத்தில் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; நெருங்கிய உறவினரால் நடத்தப்பட்ட பயங்கரம்
குருநாகல், வாரியப்பொலை பிரதேசத்தில் நேற்று (14.4.2026) குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பிரேத பரிசோதனைவாரியப்பொலை பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு ஒன்று இன்று வன்முறையாக மாறியுள்ளது. கொலை இதன்போது ஏற்பட்ட மோதலில், அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினரான 28 வயதுடைய இளைஞர் ஒருவரைப் […]
இளைஞருக்கு சிறுநீர் குடிக்க வைத்து கொடூரம் ; பெண்ணுடன் பேசியதற்காக கிடைத்த தண்டனை
ராஜஸ்தானில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், இளைஞர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானினின் பார்மேர் மாவட்டத்தில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக சந்தேகப்பட்டதன்பேரில் இளைஞர் தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகராறு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 நபர்களை காவலில் வைத்துள்ளதாகவும் மற்றவர்களைத் தேடிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் ஒரு பெண்ணுடன் வாட்ஸ்அப்பில் உரையாடியதாகவும், அது இரு குழுக்களுக்கு இடையே தகராறுக்கு வழிவகுத்து, பின்னர் […]
தமிழர் பகுதியில் நள்ளிரவில் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து நடத்தப்பட்ட செயல் ; மர்ம நபரால் பரபரப்பு
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா – தாண்டிக்குளம் ஐய்யனார் கோவில் முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் வசித்த சகோதரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். CCTV காட்சிகள் இவர்களது சகோதரி மற்றும் அவரின் கணவர் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது வாழ்வாதாரத்தை […]
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங்ஸ் (Silver Springs) பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. பூமியின் அடியில் சுமார் 9 கிலோமீட்டர் ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நெவாடா மட்டுமின்றி அருகிலுள்ள கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன. முக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல சிறிய பின் அதிர்வுகளும் ஏற்பட்ட நிலையில், இதுவரை எவ்வித பெரும் பொருட்சேதமோ அல்லது […]
மொஸாட் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்
இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் இன் புதிய தலைவராக ரோமன் கோஃப்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் அரசின் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பிரதமர் நெதன்யாகு, க ரோமன் கோஃப்மேன் மொஸாட் இன் தலைவராக நியமித்துள்ளார். இஸ்ரேல் அரசின் முன்னாள் உயர்நீதிமன்றத் தலைவர் தலைமையிலான குழுவால் அங்கிகரிக்கப்பட்ட இந்த முடிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் ஜனாதிபதி நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். கோஃப்மேன் துணிச்சலான, சமயோசித புத்தியுடன் செயல்படும் சிறந்த அதிகாரி என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் […]
125 ஆண்டுகளில் முதல் முறை: ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு பெண் தலைமை
கான்பெர்ரா, ஆஸ்திரேலிய வரலாற்றில் 125 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத்திற்கு தலைமை தாங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் இந்தாண்டு ஜூலை முதல் அந்நாட்டின் ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராணுவத் தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2030ம் ஆண்டுக்குள் ராணுவத்தில் பெண்களில் பங்கு 25 சதவீதம் இருக்கவேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் […]
தீவிரவாதிகள் என நினைத்து தனது நாட்டு மக்கள் 100 பேரை கொன்ற நைஜீரியா
நைஜீரியாவில் தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக அந்நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரியாவில் உள்ள யோபோ மாகாணத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.. யோபோ மகாணத்துக்கு அருகேயுள்ள போர்னோ மாகாணம் கடந்த பல வருடங்களாகவே ஜிகாதி கிளர்ச்சியின் மையமாக செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தில் தாக்குதல் நடத்த நைஜீரியா விமானப்படை முடிவெடுத்தது. ஆனால் யோபோவில் உள்ள ஜிலி கிராமத்தில் வாரச்சந்தை நடைபெற்ற போது ஜிகாதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குகிறோம் […]
ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடங்கிவிட்டதாக லண்டனைச் சேர்ந்த கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் நேற்று (ஏப். 13) மாலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளதாவது: ”ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் அரபிக்கடல் வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே அமைந்துள்ள இடங்கள் பாதிக்கப்படும் வகையில், கடல்சார் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஈரானியத் துறைமுகங்கள், எண்ணெய் முனையங்கள் அல்லது கடலோர வசதிகளுடன் தொடர்புடைய, எந்தவொரு நாட்டுக் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
அனுராதபுரம்- மிகிந்தலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று(13.4.2026) இரவு மேற்படி இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள், மிகிந்தலை பகுதியில் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணை இதன்போது பலத்த காயமடைந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று(14.4.2026)காலை […]
அமெரிக்காவின் அறிவிப்பால் ஹோர்முஸ் நீரிணையில் நடந்த சம்பவம் ; திரும்பிச் சென்ற கப்பல்கள்
அமெரிக்க முற்றுகை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றித் திரும்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மரைன் டிராஃபிக் தரவுகளின்படி, முற்றுகை தொடங்கியதிலிருந்து கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட முதல் நேரடி பாதிப்பு இதுவாகும். கப்பல்களில் ஒன்றான ‘ரிச் ஸ்டாரி’, சீனாவுக்குச் செல்லும் நோக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கடற்கரையிலிருந்து புறப்பட்டது. ஆனால், புதிய சூழ்நிலை காரணமாக, அது ஜலசந்திக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றது. […]
வரலாறு காணாத வருமானம் ; புதிய இலக்கை எட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை
கடந்த 09ஆம் திகதி முதல் நேற்று (13) வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபை 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. சித்திரை புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவையின் கீழ், கடந்த 11ஆம் திகதி மாத்திரம் 213 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். தூர இடங்களில் இருந்து மீண்டும் கொழும்பு நோக்கிய பேருந்து சேவைகள் நாளை (15) பிற்பகல் முதல் […]
ஈரானுக்கு கடல் வழிப் போக்குவரத்து முற்றுகை ; அமெரிக்காவின் கடும் நடவடிக்கை
ஈரானின் அனைத்துத் துறைமுகங்களுக்குமான கடல் வழிப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தும் ‘முற்றுகை’ (Blockade) நடவடிக்கையை இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் (CENTCOM) அறிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் அமெரிக்க மற்றும் ஈரானியப் பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான உடன்பாடின்றி நிறைவடைந்ததையடுத்து, ஈரான் மீதான இந்த கடும் நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்க நேரப்படி இன்று (13) காலை 10 மணி முதல் (இலங்கை நேரப்படி இரவு 7.30 […]
மாபெரும் அரசியல் மாற்றம்: ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் படுதோல்வி
புடாபெஸ்ட், ஹங்கேரியில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் விக்டர் அர்பன் தலைமையிலான பிடெஸ் (Fidesz) கட்சி தோல்வியை தழுவியது. பீட்டர் மக்யார் தலைமையிலான டிஸ்ஸா (Tisza) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் பீட்டர் மக்யாரின் டிஸ்ஸா கட்சி 199 இடங்களில் 138 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது. டிஸ்ஸா கட்சி சுமார் 53.6% […]
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியாவில் மாநகரசபையால் வருடந்தோறும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வார விடுமுறையையொட்டி வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையின் அழகை மெருகூட்டும் இடங்களில் ஒன்றாக நுவரெலியா மாவட்டம் கருதப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் அதுவும் ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு விடுமுறை மற்றும் வசந்த காலம் கொண்டாடப்படுவதால் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இங்கு வரும் […]
அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு –கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர விசாரணை!
வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் இன்று(14)அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர். சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஒருவரது எலும்புக் கூடே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கும் ஊர்காவற்றுறை பொலிசார் குறித்த எலும்புக் கூடுகள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ உடற்கூற்று பின்னரே உறுதியாக கூறமுடியும் என்றும் தெரிவித்தனர். முன்பதாக குறித்த பகுதி ஒன்றின் […]
கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்- சந்தேக நபருக்கு 7 நாட்கள் விளக்கமறியல்(video)
video link- https://fromsmash.com/gAdEl2yP_9-dt கொரியர் சேவை ஊடாக சூட்சுமமாக கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை(8) மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்ட […]
Teen Opens Fire at School in Turkey, Wounding 16
A teenager opened fire at a high school in Turkey’s southeastern province of Sanliurfa on Tuesday (April 14, 2026). The attack left at least 16 people...
Cricket-England Captain Stokes Dismisses Reports of Conflict with McCullum
Ben Stokes, England’s cricket captain, has downplayed reports of disagreements with head coach Brendon McCullum. He acknowledged that they sometimes h...
Congress Leadership Tensions Emerge in Tamil Nadu
A former leader of Tamil Nadu’s Mahila Congress, M Hazeena Syed, has made serious allegations against KC Venugopal, a top official in the Congress par...
Zimbabwe Cricketer Banned from PSL for Two Years
Zimbabwean fast bowler Blessing Muzarabani has been banned from the Pakistan Super League (PSL) for two years after leaving the league to play in the ...
மாபெரும் அரசியல் மாற்றம்: ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் படுதோல்வி
புடாபெஸ்ட், ஹங்கேரியில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் விக்டர் அர்பன் தலைமையிலான பிடெஸ் (Fidesz) கட்சி தோல்வியை தழுவியது. பீட்டர் மக்யார் தலைமையிலான டிஸ்ஸா (Tisza) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் பீட்டர் மக்யாரின் டிஸ்ஸா கட்சி 199 இடங்களில் 138 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது. டிஸ்ஸா கட்சி சுமார் 53.6% […]
Siddaramaiah Losing Control Over CMO?
The office of the Karnataka Chief Minister has seen several people leave over the past 10 months, including political advisors and high-ranking offici...
Bihar Shows Cricket Potential: President Harsh Vardhan
Hyderabad (Telangana), April 14 (ANI): The president of the Bihar Cricket Association (BCA), Harsh Vardhan, expressed his joy over the impressive debu...
Top Beard Oils for the Perfect Beard Like Virat Kohli
Looking for the best beard oils to achieve that sleek, well-groomed look like cricketer Virat Kohli? Here are five must-try options that can help you ...
IPL 2026: Irfan Confirms His Theory After Vaibhav’s Golden Duck Against SRH
Former Indian cricketer Irfan Pathan recently admitted that his theory about Rajasthan Royals opener Vaibhav Sooryavanshi was correct. On April 10, Ir...
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்
டெஹ்ரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது. இந்தப் போரின்போது அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சில வெளிநாடுகளின் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின. மேலும் அவ்வழியாக கப்பல்கள் செல்வதைத் தடுக்க சிறிய படகுகள் மூலம் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கண்ணிவெடிகளை பொருத்தினர். போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென […]
புத்தாண்டு நாளில் வானிலை மாற்றம் ; இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு
இலங்கையில் இன்று(14) தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும். கொழும்பு முதல் மட்டக்களப்பு வரையிலான கடலோரப் பகுதிகளில், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பல இடங்களில் மழை அல்லது […]
கடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையில் கிடைத்த வருமானம்
கடந்த 10ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை 163,291,065 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த 3 நாட்களில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன. இதில் அதிகப்படியான வாகனப் போக்குவரத்தும் வருமானமும் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது. அன்றைய தினம் 161,847 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 59,815,450 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி 1,53,807 வாகனங்களுக்காக ரூ. 5,82,08,695 வருமானமும் 12-ஆம் திகதி 1,18,684 […]
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று(14) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ. சிவசாந்தன்
Local Groups Highlight City Issues Before Election
Across Chennai, local neighborhood groups have pointed out several long-standing problems in the city. These include issues with waste disposal, poor ...
புகழ்பெற்ற சுற்றுலா தலத்தில் கூட்ட நெரிசல்; 30 பேர் பலி
போர்ட் அவ் பிரின்ஸ், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஹைதியும் ஒன்றாகும். இந்நாட்டில் உள்ள மலைகள், கடற்கரைகள், பாரம்பரிய சின்னங்களை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் குறிப்பாக, வடக்கு ஹைதியின் மிலாட் நகரில் மலை மீது சிடடெல் ஹென்றி என்ற லபெரியர் கோட்டை உள்ளது. பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றபிறகு புரட்சியாளர் ஹென்றி கிறிஸ்டோப் தலைமையில் இந்த மலைக்கோட்டை கட்டப்பட்டது. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக […]
அம்பேத்கர் பிறந்தநாளில், சமூகநீதியை நிலைநாட்டுவோம் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
இந்தியா முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஒரு
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுக்குத் தயாா்: ஈரான் தூதா்
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதா் முகமது ஃபதாலி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக புது தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில் அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையின்போது நியாயமற்ற நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்தது. இதனால் அந்தப் பேச்சுவாா்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது. ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றால், மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவது சாத்தியமாகும். ஈரானின் […]
அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த ஈரான்!
ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்தால் அவை தாக்கி அழிக்கப்படும் என
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர், 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் மகாராட்டிர மாநிலத்தின் அம்பவாடே கிராமத்தில் ராம்ஜி சக்பால் –
தீ விபத்துகளால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் மற்றும் காயங்கள் போன்ற பெரும் பாதிப்புகளைத் தவிர்க்கவும், தீயைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ஆம்
நொய்டாவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் வன்முறை!
இந்தியாவின் தொழில்மையமான நொய்டாவில், ஊதிய உயர்வு மற்றும் நிலையான வேலை நேரத்தை வலியுறுத்தி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தின்
பிரதமர் மோடியின் வருகையொட்டி நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள்!
பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) தேர்தல் பிரச்சாரத்திற்காக நாகர்கோவில் வருகை தர உள்ளார். இதையொட்டி, நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த
பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்குத் தனது
Tamil Nadu Emerges Overall Champion at GSIF Grand Prix 2026
Tamil Nadu delivered an outstanding performance at the 13th GSIF Grand Prix & National Kettlebell Lifting Championship 2026, held at
Vaibhav Sooryavanshi Could Soon Debut for India
Rising Rajasthan Royals star Vaibhav Sooryavanshi might soon make his India debut. Reports suggest he is being considered for the T20I tour of Ireland...
Meghalaya Yields New Burrowing Reed Snake
A group of scientists from various institutions has discovered a new type of burrowing reed snake in Meghalaya’s West Garo Hills district. The species...
தமிழர் பகுதியில் இரு இளைஞர்களுக்கு நடந்தேறிய துயர சம்பவத்தால் பரபரப்பு
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விமானப்படை தளத்துக்கு அருகாமையில் உள்ள திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் திங்கட்கிழமை (13) மாலை மோட்டார் சைக்கிள் வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 24,25 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. மேலதிக விசாரனை இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தோர் இருவரும் திரியாய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்த இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை சீனக்குடா […]
தமிழ் –சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அநுர விடுத்துள்ள அழைப்பு
நமது நாட்டின் உன்னதமான கலாசார விழுமியங்களுடன் ஒன்றிணைந்து, சவால்களை வெற்றிகொண்டு வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பௌதீக மற்றும் ஆன்மீக மாற்றத்தை அடையாளப்படுத்தும் இந்தப் புத்தாண்டு, இலங்கையர்களின் பிரதான கலாசார விழாவாகும். ஒரே சுபநேரத்தில் பாரம்பரியச் சடங்குகளையும் சமயக் கிரியைகளையும் முன்னிலைப்படுத்தி நாம் […]

28 C