SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

33    C
...

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கி சூடு

அமெரிக்கா–ஈரான் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 2-வது சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி விரைவில் அமைதியை எட்ட பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.இதற்கிடையே, அமைதி உடன்படிக்கைக்கு வராத ஈரானை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் வகையில், ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா போர்க்கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் ஈரானிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அதிரடி 23 Apr 2026 2:30 pm

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில்  பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

video link- https://wetransfer.com/downloads/98701416f983fa69f2c7f9e17e410ed220260422095825/bcf0bb?t_exp=1777111105&t_lsid=ed13a9a2-b0e0-4dfa-8b87-9b4f3d921c4d&t_network=link&t_rid=Z29vZ2xlLW9hdXRoMnwxMTM5NjQ5Mzg5MTE4Mzc3MzQ0NTk=&t_s=download_link&t_ts=1776851905 பாடசாலை மாணவர்களின் பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட பாடசாலை பல் சிகிச்சை நிலையம் நேற்று (22) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் திருமதி எம்.சீ.நஸ்லின் றிப்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிரதம […]

அதிரடி 23 Apr 2026 2:25 pm

பேருந்துகள் இன்றி மக்கள் தவிப்பு! வாக்குப்பதிவை இரவு 8 வரை நீட்டிக்க வேண்டும்! விஜய் கடிதம்

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமல் கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: ”தமிழ்நாட்டில் போக்குவரத்து […]

அதிரடி 23 Apr 2026 1:30 pm

நெடுந்தீவில் மூலிகை கிராமமொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்போம் –கபிலன் உறுதி

நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலன் தெரிவித்தார். குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தனை தீவுகளையும் மையப்படுத்தியதாக போக்குவரத்து அபிவிருத்தி இடம்பெறும். தேசிய மக்கள் சக்தி என்ற மக்கள் அரசாங்கமானது, […]

அதிரடி 23 Apr 2026 1:29 pm

வடக்கிலும், தெற்கிலும் உள்ள சில குழுக்கள் இனவாதம் பேசி அரசியல் நடத்துகின்றன

கடந்த கால ஆட்சியாளர்கள் யாழ்ப்பாணத்தை கைவிட்டிருந்தனர். ஆனால் எமது ஆட்சி அவ்வாறு இல்லை. யாழ்ப்பாணம் மற்றும் தீவக பகுதிகளுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்றைய தினம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவ்வாறு […]

அதிரடி 23 Apr 2026 1:15 pm

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கள விஜயம்

கடந்த 28 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாச்சார மண்டபத்தை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முழுமையாக நிர்மாணித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சியின் பலனாக, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, குறித்த கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக, அம்பாரை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்ரமாராச்சி,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் முனாசிர், கணக்காளர் பாரிஸ், மாகாண கட்டிடங்கள் திணைக்களத்தின் கல்முனை பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் திருமதி. […]

அதிரடி 23 Apr 2026 12:37 pm

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்திக் குழு நியமனம்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழு (Hospital development commitee) நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது. இதன் போது அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரபையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார […]

அதிரடி 23 Apr 2026 12:24 pm

மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் வுழு செய்யும் வசதி

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில்இ மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட வுழு செய்யும் நீர் தொகுதி செவ்வாய்க்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் ரஜாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்காக இந்நீர் வசதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். […]

அதிரடி 23 Apr 2026 11:55 am

சென்னை மாவட்ட தேர்தல் நிலவரம் –காலை 9 மணி வரை 16.5% வாக்குப்பதிவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியத் தேர்தல்

சென்னைஓன்லைனி 23 Apr 2026 11:41 am

ஈரானுடன் பேச்சுவார்த்தை: வெள்ளிக்கிழமைக்குள் நல்ல செய்தி: டிரம்ப்

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடங்கின. இரு தரப்பினரும் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா–ஈரான் இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது தோல்வியடைந்ததால், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு, ஈரான் கப்பல்களை தடுத்து வருகிறது. மேலும், ஈரான் கப்பல் ஒன்றை அமெரிக்கா பறிமுதல் செய்தது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஹோர்முஸ் ஜலசந்தி […]

அதிரடி 23 Apr 2026 11:30 am

8 பெண்களுக்கு மரண தண்டனையா…? டிரம்ப் கூறிய விசயங்களை மறுத்த ஈரான்

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. அதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் போர் நிறுத்தம் மீண்டும் நீட்டிக்கப்படுகிறது என டிரம்ப் அறிவித்து உள்ளார். ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் […]

அதிரடி 23 Apr 2026 11:30 am

கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் நோக்கில், அவர்களுக்குரிய தொற்றா நோய் (NCD) கண்டறியும் மருத்துவ பரிசோதனைகள் பணிமனையில் இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் கீழ், பிராந்திய தொற்றாநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் அவர்களின் வழிகாட்டலில் குறித்த மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றது. தற்கால வாழ்க்கை முறையில் அதிகரித்துவரும் தொற்றா நோய்களை ஆரம்பத்திலேயே […]

அதிரடி 23 Apr 2026 11:00 am

தமிழகத் தேர்தல் 2026 –வாக்குப்பதிவு தொடக்கம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021

சென்னைஓன்லைனி 23 Apr 2026 10:32 am

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தில் (2024/2025) புதிய கல்வியாண்டு மாணவர்களை வரவேற்கும் நோக்கில் சேர்க்கைக்கான துவக்க வழிகாட்டல் நிகழ்வு (Orientation Program) Gபுதன்கிழமை(22) ஒலுவில் வளாகத்தில் அமைந்துள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வின் முக்கிய அம்சமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் அவர்கள் சிறப்பு உரையொன்றை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், உயர்கல்வியின் முக்கியத்துவம், இன்றைய உலகில் திறன்கள் மற்றும் புத்தாக்க சிந்தனையின் அவசியம், மாணவர்கள் எதிர்கொள்ள […]

அதிரடி 23 Apr 2026 10:30 am

தமிழகத் தேர்தல் 2026 –பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு வேண்டுகோள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிதனது எக்ஸ் (X) தளத்தில் தமிழ்நாட்டின் வாக்காளர்களுக்குத் தமிழில் ஒரு முக்கியமான வேண்டுகோளை

சென்னைஓன்லைனி 23 Apr 2026 10:27 am

போர்நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்! 2 கப்பல்களைத் தாக்கிய ஈரான்!

ஈரானுக்கு எதிரான அமைதிப்பேச்சுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.23) அறிவித்தும், ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் 2 கொள்கலன் கப்பல்களைத் தாக்கியுள்ளது. ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், முடிவடையவிருந்த போர்நிறுத்தத்தை நீட்டித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்தே இத்தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. டிரம்பின் இந்தப் போர்நிறுத்த நீட்டிப்பு குறித்து ஈரான் தரப்பிலிருந்து எவ்விதமான அதிகாரப்பூர்வ செய்தியும் இதுவரை அளிக்கப்படவில்லை. முதற்கட்டமாக ஈரான் – […]

அதிரடி 23 Apr 2026 9:30 am

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இன்று வாக்குபதிவு

தமிழகத்தில் ஏப்ரல் 23(இன்று) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் பொலிசார் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 75 ஆயிரத்து 32 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது, இதில் 5938 வாக்குசாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது, 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் மிக அமைதியான முறையில் நடைபெறுவதற்காக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், தமிழ்நாடு […]

அதிரடி 23 Apr 2026 8:30 am

வெசாக் விடுமுறை குறித்து மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மே 30ஆம் திகதியை வெசாக் பூரணை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் இன்று அறிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட வழிபாட்டு முறைகளுக்கு இணங்க, மே 27 முதல் ஜூன் 2ஆம் திகதி வரை ‘வெசாக் வாரம்’ பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை வரும் மே 31ஆம் திகதி, வெசாக் தினத்தை அடுத்த பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிரடி 23 Apr 2026 8:00 am

பிரபல பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்களுக்கு கொலை மிரட்டல் ; மாம்பழத்தால் வந்த வினை

பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையின் சுவரைத் தாண்டி குதித்து சட்டவிரோதமாக நுழைந்த நபர், இரண்டு உயர்தர மாணவர்களின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து மிரட்டியதாக கொட்டாவ கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு உயர்தர தேர்வுக்குத் தயாராகி வரும் ஒரு மாணவர் குழு, பள்ளி மைதானத்தின் ஓரத்தில் இருந்த ஒரு மாமரத்தில் இருந்து மாம்பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தனர். கூர்மையான ஆயுதத்துடன் மிரட்டல் இளைஞனை விரட்டிய மாணவர்குழு இதன்போது அருகிலுள்ள வீட்டிலிருந்து ஒரு இளைஞன் அங்கு […]

அதிரடி 23 Apr 2026 7:56 am

திருகோணமலையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து ; 20 பேர் படுகாயம்

மூதூர் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று கிண்ணியா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 23க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மூதூர் மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிரடி 23 Apr 2026 7:40 am

வட மாகாணம் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் வட மாகாணம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று (23) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ,வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இந்த வெப்பமான நிலை காணப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச் சுட்டெண் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண், நாளை 21 மாவட்டங்களின் சில பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. […]

அதிரடி 23 Apr 2026 7:30 am

இவ்வாண்டிலிருந்து ஐந்து ஆண்டு திட்டத்திற்கமைய யாழ். நகரம் அபிவிருத்தி செய்யப்படும் –அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திற்கு அமைய – வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக பங்குபற்றுனர்களுடன் கருத்துக்களை கேட்கும் கலந்துரையாடல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்றைய தினம் (2026.04.22) பி. ப 03.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வரவேற்புரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து […]

அதிரடி 23 Apr 2026 7:23 am

பிளஸ்-1 மாணவியை தோட்டத்திற்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம்: 8 பேர் கும்பல் வெறிச்செயல்

திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே கல்பட்டு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு தனியாக இருந்த மாணவியிடம் அதேபகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் மாணவியை மிரட்டி அருகில் உள்ள தோட்டத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு மாணவியை 8 […]

அதிரடி 23 Apr 2026 1:30 am

பிரித்தானிய பாடசாலைகளில் மொபைல் போன்களுக்கு தடை

பிரித்தானிய அரசு, பாடசாலைகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு சட்டப்படி தடை விதிக்கும் புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதுவரை பாடசாலைகளுக்கு வழிகாட்டுதலாக மட்டுமே இருந்த போன் கட்டுப்பாடுகள், இனி சட்டமாக அமுல்படுத்தப்படுகின்றன. குழந்தைகளின் நலன் மற்றும் பாடசாலை சட்டத்தில் திருத்தம் செய்து, ஒவ்வொரு பாடசாலையும் மொபைல் போன் பயன்பாட்டைத் தடுக்க தெளிவான விதிகளை உருவாக்கி, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அறிவிக்க வேண்டும். பாடசாலை தலைமை ஆசிரியர்களுக்கு, விதிகளை மீறும் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் சட்ட ஆதரவு கிடைக்கும். பல பாடசாலைகள் முழுநாள் […]

அதிரடி 23 Apr 2026 12:30 am

கனடா: இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

கனடாவில் இந்திய மாணவா் உள்பட இருவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து டொராண்டோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தண்டனை கூடாது என்று குற்றவாளி சாா்பில் முன்வைக்கப்பட்ட வாதம் நிராகரிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சோ்ந்த காா்த்திக் வாசுதேவ் (21) கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் மேல்படிப்புக்காக கனடாவின் டொராண்டோ நகருக்குச் சென்றாா். அங்கு சென்ற சில மாதங்களில் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கனடாவைச் […]

அதிரடி 22 Apr 2026 11:30 pm

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமனம்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இராஜ் சமிந்த, கடந்த 2025.05.19 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பதவிக்காக முழுநேர பதில் கடமையாற்றும் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய, அவரை நிரந்தர அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக நியமிப்பதற்கென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை தமது […]

அதிரடி 22 Apr 2026 11:30 pm

ஈரான் உடனான போர் நிறுத்தத்தை நீட்டித்தார் டிரம்ப்..!

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் 40 நாட்கள் நீடித்த நிலையில் கடந்த 7-ந்தேதி 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் இருநாடுகள் இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து ஈரானுக்கு நெருக்கடி தரும் வகையில் ஹார்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டன. மேலும் ஈரான் நோக்கி பயணித்த சரக்கு கப்பல்களை அமெரிக்கா சிறைபிடித்தது. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருநாடுகளிடையே 2-ம் கட்ட […]

அதிரடி 22 Apr 2026 10:30 pm

பெண்ணை காண்பித்து எரிபொருள் பெற முயற்சி; வழங்க மறுத்த ஊழியரின் கன்னத்தை பதம் பார்த்த நபர்!

நாட்டில் எரிபொருளுக்கு இன்று முதல் QR முறைமை அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கெஸ்பேவ – பண்டாரகம வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த கார் ஒன்றிற்கு எரிபொருள் வழங்க மறுத்தமைக்காக, அதன் ஊழியரை கார் சாரதி தாக்கியுள்ளதாக கெஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊழியரின் கன்னத்தில் விழுந்த அறை இன்று (22) அமுலிலுள்ள வாகன இலக்கத் தகட்டின் இரட்டை எண்களுக்குப் பதிலாக, ஒற்றை எண்ணைக் கொண்ட குறித்த வாகனத்திற்கு எரிபொருள் வழங்க ஊழியர் மறுத்துள்ளார். […]

அதிரடி 22 Apr 2026 10:30 pm

ஈரான் கப்பல் ஊழியர்களை சிறை பிடித்த அமெரிக்கா!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா, ஈரான் கப்பல் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ஈராம் குற்றம் சுமத்தியுள்ளது. ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையாக ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் எச்சரிக்கையை மீறி அக்கப்பல் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு சென்றது. இதையடுத்து ஈரான் கப்பலை அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்த நிலையில் ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் பிராந்திய கடல் […]

அதிரடி 22 Apr 2026 9:30 pm

இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கிய அபாயகரமான நெகிழி மணிகள்

இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான ‘எம்.எஸ்.சி. எலசா III’ (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள் (Plastic Pellets), தற்போது இலங்கையின் வடமேற்கு கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன. புத்தளம், வனாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொங்கனத்த மற்றும் பளுக்காத்துறை கடற்கரைகளில் பெருமளவிலான நெகிழி மணிகள் கரை ஒதுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. விசேட கள ஆய்வுப் பயணம் இதனையடுத்து, இப்பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளை முறையாகத் திட்டமிடுவதற்காகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) விசேட கள ஆய்வுப் […]

அதிரடி 22 Apr 2026 9:30 pm

அமெரிக்க தொழிலாளா் அமைச்சா் ராஜிநாமா

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் தொழிலாளா் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த லோரி சாவேஸ் டெரிமா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, தற்போது இணையமைச்சராக உள்ள கீத் சோண்டா்லிங் தற்காலிக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளாா். லோரி சாவேஸ் டெரிமா் மீது பணி நேரத்தில் மது அருந்தியது மற்றும் அரசுமுறைப் பயணங்களைத் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகத் திட்டமிட்டது என அடுக்கடுக்கான புகாா்கள் எழுந்தன. இவ்விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அமைச்சகத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட 4 உயரதிகாரிகள் பணிநீக்கம் […]

அதிரடி 22 Apr 2026 7:30 pm

நடிகர் சூர்யா திரைப்படத்தில் நடிக்க இருந்தவர் கொழும்பில் உயிரிழப்பு

இந்தியத் திரைப்படமொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக நடிப்பதற்காக தயாராக இருந்த நபர் ஒருவர், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள கழிவறையில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மாத்தளை, களுதாவளை, ரத்தோட்டை வீதியை சேர்ந்த அழகர் கருப்புசாமி (52) எனும் திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தியாவின் முன்னணி நடிகர் சூர்யா (சரவணன் சிவகுமார்) மற்றும் நடிகை திரிஷா பங்கேற்புடன், இந்திய பாராளுமன்றத்தை பிரதிபலிக்கும் வகையிலான படப்பிடிப்பு ஒன்று பண்டாரநாயக்க மாநாட்டு […]

அதிரடி 22 Apr 2026 7:23 pm

அமைச்சர் பிமல் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் கூட்டம் –ஊடகவியலாளர்கள் துரத்தியடிப்பு

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது என ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு அரச நிகழ்வுகளில் பங்கேற்றார். இதனொரு அங்கமாக யாழ்ப்பாண நகர திட்டம் பற்றிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாநகர முதல்வர், துறை சார்ந்த அதிகாரிகள் பலரின் பங்கேற்புடன் யாழ் மாவட்ட செயலகத்தில் […]

அதிரடி 22 Apr 2026 7:13 pm

ஜப்பான் ராணுவப் பயிற்சியில் பீரங்கியில் வெடிப்பு: 3 வீரா்கள் உயிரிழப்பு

ஜப்பானில் ராணுவப் பயிற்சியின்போது, பீரங்கிக்குள்ளேயே குண்டு வெடித்ததில் 3 வீரா்கள் உயிரிழந்தனா். தெற்கு ஜப்பானில் உள்ள ஹிஜூடாய் ராணுவப் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுவந்த வழக்கமான பயிற்சியில், ‘டைப் 10’ ரக போா் பீரங்கியில் (படம்) இருந்து வீரா்கள் இலக்கை நோக்கிச் சுட முயன்றபோது, எதிா்பாராதவிதமாக பீரங்கியின் உள்ளேயே குண்டு வெடித்தது. மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பீரங்கியை ஓட்டிச் சென்ற வீரா் காயங்களுடன் உயிா் தப்பினாா். அவா் தற்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

அதிரடி 22 Apr 2026 6:30 pm

முன்னாள்  நீதிவானுக்கு   விளக்கமறியல் விதிப்பு

முன்னாள் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கு இன்று (22) அழைக்கப்பட்ட போது நகர்த்தல் மனு பத்திரம் ஊடாக மன்றில் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் ஆஜராகி இருந்தார். இதன்போது திறந்த மன்றில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் […]

அதிரடி 22 Apr 2026 6:13 pm

திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 13 பேர் உயிரிழப்பு

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்​சூர் மாவட்​டம் முண்​டத்​தி​கோட் பகு​தி​யில் பட்​டாசுத் தொழிற்​சாலை உள்​ளது. திருச்​சூர் மாவட்​டத்​தில் ஆடிப்​பூரம் திரு​விழா மிக​வும் விமரிசையாக நடை​பெறும். அப்​போது வாண வேடிக்​கைகள் அதிக அளவில் நடை​பெறும். அதற்​காக இந்​தத் தொழிற்சாலையில் பட்​டாசு தயாரிக்​கும் பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வந்​தன. இந்​நிலை​யில் நேற்று தொழிற்​சாலை​யில் 65-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் வேலை பார்த்​துக் கொண்டிருந்​தனர். அப்​போது ஆலை​யில் வெடி​விபத்து ஏற்​பட்டு பட்​டாசுகள் வெடித்​துச் சிதறின. இதையடுத்து அங்​கிருந்த தொழிலா​ளர்​கள் அலறியடித்​துக் கொண்டு ஓடினர். இதில் […]

அதிரடி 22 Apr 2026 5:30 pm

செம்மணி புதைகுழி விவகாரம்: மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் பணித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிநடத்தலில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் மரபணு பரிசோதனை தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அத்துடன் செம்மணி மனித புதைகுழி அகழ்வு […]

அதிரடி 22 Apr 2026 4:48 pm

மத்திய முகாம் வைத்தியசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட மகப்பேற்று விடுதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு

video link- https://wetransfer.com/downloads/0fa0f5edd00bc54d111744b0497b447b20260421101627/9f43f9?t_exp=1777025787&t_lsid=ed13a9a2-b0e0-4dfa-8b87-9b4f3d921c4d&t_network=link&t_rid=Z29vZ2xlLW9hdXRoMnwxMTM5NjQ5Mzg5MTE4Mzc3MzQ0NTk=&t_s=download_link&t_ts=1776766587 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில், CIC விவசாய வர்த்தக நிறுவனத்தின் சமூக நலத் திட்டத்தினூடாக திருத்தி அமைக்கப்பட்ட மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி, செவ்வாய்க்கிழமை (21) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் இசுறு கொடிக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் மற்றும் […]

அதிரடி 22 Apr 2026 4:34 pm

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண வடிவமைப்பு அலுவலகம் திறப்பு

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண வடிவமைப்பு அலுவலகம் இன்றையதினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் அலுவலகத்தில் வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடிவமைப்பு அலுவலகம் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் திறந்துவைக்கப்பட்டது. இதன் போது வடிவமைப்பு அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களும் பிமல் ரத்நாயக்கவினால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், […]

அதிரடி 22 Apr 2026 4:20 pm

பீகாரில் அதிர்ச்சி: நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி; வைரலாகும் நிஜ ‘முன்னாபாய்’வீடியோ!

பாட்னா:பிஹார் மாநிலம், மேற்கு சம்​பரன் மாவட்​டம் பகாகா பகு​தி​யில் அரசு மருத்​து​வ​மனை உள்​ளது. அங்கு வேலை பார்க்​கும் செக்​யூரிட்டி ஒரு​வர், நோயாளி ஒரு​வருக்கு தையல் போட்டு பேண்டேஜ் போடும் புகைப்​படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளி​யாகி வைரலாகி​யுள்​ளது. இந்​தி​யில் வெளி​யான முன்​னா​பாய் எம்​பிபிஎஸ் படத்​தில் நடிகர் சஞ்​சய் தத், தனது தந்​தை​யின் ஆசைக்​காக மருத்​து​வர் போல நடித்​திருந்​தார். அது சினிமா ரசிகர்​களுக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆனால் செக்​யூரிட்டி செய்த வேலை அதிர்ச்சியை ஏற்​படுத்தி உள்ளது. இது குறித்து […]

அதிரடி 22 Apr 2026 3:37 pm

தூக்கு தண்டனையை எதிர்கொண்டுள்ள 8 ஈரானிய பெண்களை விடுவியுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. ஆனால், ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் […]

அதிரடி 22 Apr 2026 3:30 pm

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை எனில்…ராணுவம் ஆவலாக உள்ளது: டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. ஆனால், ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் […]

அதிரடி 22 Apr 2026 2:30 pm

குறிகட்டுவான் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை, அமைச்சர் பிமல் ரத்நாயக்கஇன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்துவைத்தார். குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் […]

அதிரடி 22 Apr 2026 2:26 pm

ஜப்பான் அமைதி கொள்கை மாற்றம்: ஆயுத ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஜப்பான் அமைதி கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆயுத ஏற்றுமதிக்கான தடை நீக்கம் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு எடுத்துக் கொள்ளப்பட்ட அமைதி கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் செய்யும் வகையில், செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக ஜப்பான் தனது நீண்டகால ஆயுத ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளது. சீனா மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியின் அமைச்சரவையால் ஆயுத ஏற்றுமதி தடையை நீக்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த […]

அதிரடி 22 Apr 2026 1:30 pm

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம்..!!!

யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவம் இன்று (22.04.2026) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.எதிர்வரும் 30 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 01ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

அதிரடி 22 Apr 2026 1:02 pm

கோர விபத்தில் இளைஞன் பலி

சியம்பலாண்டுவ – எத்திமலை பிரதான வீதியின் முதலாம் மைல் கல் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ, ஐந்தாம் மைல் கல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் […]

அதிரடி 22 Apr 2026 12:43 pm

போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாது; ஈரானுடன் சிறந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்: டிரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதனை தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறந்து விடுகிறோம் என அறிவித்தது. எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் […]

அதிரடி 22 Apr 2026 12:30 pm

வாக்களிக்க ஆதார் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களை காட்டலாம் –தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், இசிஐநெட் இணையதளத்திற்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை

சென்னைஓன்லைனி 22 Apr 2026 11:51 am

சென்னை எழும்பூர் –நாகர்கோவில் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்!

ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில்

சென்னைஓன்லைனி 22 Apr 2026 11:48 am

வாக்களிப்பதற்காக சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார்!

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. வாக்களிப்பதற்காக பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களும் சென்னை திரும்பிக்

சென்னைஓன்லைனி 22 Apr 2026 11:46 am

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணம் உயர்வு!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னையில் வசிக்கும் பலர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற, சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி

சென்னைஓன்லைனி 22 Apr 2026 11:46 am

மதச்சார்பற்ற சமூக நீதி தான் நமது கொள்கை –த.வெ.க தலைவர் விஜய் பேச்சு

சென்னை, நந்தனம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தவெக பிரச்சார நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: நமது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. அதில்

சென்னைஓன்லைனி 22 Apr 2026 11:44 am

ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க தயார் –அமெரிக்க அதிபர் அறிவிப்பு

இரு மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில், ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை காலவரையறையின்றி நீட்டிக்கத் தயார் என அமெரிக்க

சென்னைஓன்லைனி 22 Apr 2026 11:43 am

டாஸ்மாக்கில் நேற்று முன் தினம் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை!

தமிழக சட்டமன்றத் தேர்தலை வாக்குப்பதிவை முன்னிட்டு, நேற்று (ஏப்ரல் 21) முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டனர். தொடர்ச்சியாக மூன்று

சென்னைஓன்லைனி 22 Apr 2026 11:41 am

கேதார்நாத் திருத்தலத்தின் புனிதக் கதவுகள் இன்று திறப்பு!

மலர்களாலும், மந்திர முழக்கங்களாலும் சூழப்பட்ட தெய்வீகச் சூழலில் கேதார்நாத் திருத்தலத்தின் புனிதக் கதவுகள் இன்று கோலாகலமாகத் திறக்கப்பட்டன. பனிப்பொழிவுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஹர ஹர மகாதேவ்”

சென்னைஓன்லைனி 22 Apr 2026 11:38 am

மும்பையில் பா.ஜ.க நடத்திய போராட்டத்தினால் பொதுமக்கள் பாதிப்பு! –எதிர்த்து கேள்வி கேட்ட பெண்ணின் வீடியோ வைரல்

மும்பையில் நேற்று – செவ்வாய்க்கிழமை மாலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஒரு பிரம்மாண்டப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் பேரணியால் நகரின்

சென்னைஓன்லைனி 22 Apr 2026 11:37 am

இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு சிறை

ஜெருசலேம், லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே, இஸ்ரேலிய வீரர்கள் 2 பேர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்தும், இது சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெளியுறவுத்துறை மந்திரி கிடியான் சார் ஆகியோரும் கடுமையாக கண்டித்தனர். இந்த விவகாரம் குறித்து இராணுவ அதிகாரிகள் […]

அதிரடி 22 Apr 2026 11:30 am

தீவக வலயக் கல்வி அலுவலகம் அசமந்தம் –நான்கு மாதங்களாக இயங்கு நிலை அற்றுக் கிடக்கும் ஹயஸ் வாகனம் !

தீவக பாடசாலைகளை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் செல்லும் ஹயாஸ் வாகனம் நான்கு மாதங்களாக செயற்பாடு இன்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது – தீவக பாடசாலைகளுக்காக வலையக் கல்வி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சென்றுவருவதற்கு குறித்த வாகனம் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால் வாகனத்தின் டயர்கள் சீரின்மை காரணமாக நான்கு மாத காலமாக குறித்த வாகனம் வலையக் கல்வி அலுவலகத்திலே தரித்து நிற்பதாகவும் தீவக பாடசாலைகளை வினைதிறனாக செயல்படுத்துவதற்கு குறித்த வாகனம் பயன்பாட்டில் இல்லை எனவும் […]

அதிரடி 22 Apr 2026 11:28 am

கல்முனை மற்றும் மருதமுனை உணவகங்களில் அதிரடிச் சோதனை- மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு

கல்முனை பிராந்திய உணவகங்களின் ஊடாக, பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சகல உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களும் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி சரப்டீன் அவர்களின் வழிகாட்டலில் கடந்த திங்கட்கிழமை (20) இரவு முதல் தொடர்ச்சியாக கல்முனை மற்றும் மருதமுனை பிரதேசங்களில் இரவு நேர […]

அதிரடி 22 Apr 2026 11:10 am

தென்கிழக்குப் பல்கலையில் “Taste of Eid 1447 H” சிறப்பு நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரப் பீடத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த “Taste of Eid 1447 H” எனும் ஈத் உணவுவிழா நிகழ்வு 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி பீடத்தின் பிரதான கற்றல் அறை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. “Late Eid, Same Joy” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, தாமதமாகக் கொண்டாடப்பட்டாலும் ஈத் பண்டிகையின் ஆனந்தமும் ஒற்றுமையும் ஒருபோதும் குறையாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டது. […]

அதிரடி 22 Apr 2026 10:56 am

இளைஞனின் உயிரை பறித்த சிக்கன் ; ஆளில்லா கட்டிடத்திற்கு சென்றவருக்கு நடந்த விபரீதம்

சிவமொக்கா கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் அவரது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். பிறந்தநாள் விழா முடிந்த பிறகு விருந்தினர்களுக்கு சிக்கன்கறி உணவு பரிமாறப்பட்டது. மதுபோதை அப்போது குறித்த இளைஞன் அங்கிருந்து சிக்கன்கறியை மட்டும் எடுத்துக் கொண்டு மது குடிப்பதற்காக கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்துக்கு சென்றுள்ளார். அங்கு சிக்கன்கறியை வைத்து மது குடித்துள்ளார். மதுபோதை தலைக்கேறியநிலையில், கறியின் எலும்பு இளைஞனின் தொண்டையில் சிக்கிக் கொண்டதாகவும் இதனால் மூச்சுவிட முடியாமல் […]

அதிரடி 22 Apr 2026 10:30 am

காலாவதியாகும் போர் நிறுத்தம்; ஈரான் , அமெரிக்கா அச்சுறுத்தல்!

அமெரிக்கா – ஈரான் இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளை புதன்கிழமையுடன் (22) ஒப்பந்தம் ஏதுமின்றி முடிவடைந்தால், “முன்னெப்போதும் கண்டிராத பிரச்சனைகளை” தெஹ்ரான் சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்திய நிலையில் , “போர்க்களத்தில் புதிய காய்களை நகர்த்த ஈரான் தயாராக உள்ளது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார். கடந்த வார இறுதியில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஈரான் கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியதால், […]

அதிரடி 22 Apr 2026 9:30 am

மூட நம்பிக்கை; சீனாவில் உயிரிழந்தவருடன் புதைக்கப்பட்ட 1.49 கோடி ரூபாய் கார்!

சீனாவில் உயிரிழந்த ஒரு நபர் ஒருவரின் இறுதிச் சடங்கின் போது சுமார் 1.49 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) சொகுசு சிற்றூந்து ஒன்றுடன் சேர்த்துப் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி இணையதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஒரு நபர் தனது மறு உலக வாழ்க்கையில் பயன்படுத்துவார் என்ற வினோதமான நம்பிக்கையில், மெர்சிடிஸ்-பென்ஸ் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சமூக வலைத்தளங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சீன […]

அதிரடி 22 Apr 2026 2:30 am

குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் ’ஹிப்’ என்கிற தனியார் நிறுவனத்தின் உணவு ஜாடிகள் சிலவற்றில் எலி விஷம் கலந்தது உறுதிப்படுத்தப்பட்டதால் அதனைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரியாவில் உள்ள ஸ்பார் எனப்படும் பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்ட 5 மாதக் குழந்தைகளுக்கான கேரட் மற்றும் உருளைக்கிழங்கு கலந்து தயாரிக்கப்படும்190 கிராம் கொண்ட ஹிப் நிறுவன உணவு ஜாடிகளில் எலி விஷம் கலந்திருப்பதாக சனிக்கிழமை (ஏப்ரல் 18) செய்த சோதனையில் தெரிய வந்தது. இதுபற்றி ஹிப் நிறுவனம் […]

அதிரடி 22 Apr 2026 12:30 am

10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் –சிரியா எல்லை: ஹார்முஸ் முடக்கத்திற்கு மாற்றுப் பாதையா..?

பாக்தாத், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக, உலகம் முழுவதும், குறிப்பாக ஆசியாவில், கடுமையான எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போர் காரணமாக 10 […]

அதிரடி 21 Apr 2026 11:30 pm

ஆறாத வடுவும் நீதிக்கான நீண்ட போராட்டமும்

இலங்கையின் சமகால வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, கறைபடிந்த ஒரு நாளாக 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பதிவாகியுள்ளது. அமைதி தவழ்ந்த ஒரு காலைப் பொழுதில், தேவாலயங்களிலும் சொகுசு விடுதிகளிலும் ஒலித்த குண்டுச் சத்தங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. இந்தத் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் (2026 ஏப்ரல் 21) ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்தச் சம்பவத்தின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை; பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான குரல் இன்னும் ஓயவில்லை. அந்தக் […]

அதிரடி 21 Apr 2026 11:30 pm

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை

அமெரிக்காவின் லூசியாணா மாகாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தனது சொந்த குழந்தைகள் உள்பட 8 பேரை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு காரைக் கடத்தித் தப்ப முயன்ற தந்தை ஷமாா் எல்கின்ஸை, போலீஸாா் விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 2 பெண்கள் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தாக்குதல் நடத்திய ஷமாா் எல்கின்ஸ் மற்றும் காயமடைந்த ஒரு பெண் […]

அதிரடி 21 Apr 2026 10:30 pm

தோட்ட உதவி முகாமையாளர் மீது மாட்டு சாணத்தால் தாக்குதல்

கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிலுள்ள மேபீல்ட் (Mayfield) தோட்டத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சுமார் 1000 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் தோட்ட உதவி முகாமையாளர் மாட்டு சாணத்தால் தாக்கப்பட்டுள்ளார். மேபீல்ட் தோட்ட தொழிலாளர்களை அடிமைத்தனமாக நடத்துவதாகவும், தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் செயற்படுவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். காவலாளி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி அத்துடன் திங்கட்கிழமை (20) அன்று குறித்த தோட்டத்தில் பணியாற்றி வரும் காவலாளி தாக்கப்பட்டு […]

அதிரடி 21 Apr 2026 10:30 pm

ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்

ஹோா்முஸ் நீரிணை அருகே ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் நாட்டு சரக்குக் கப்பலைத் தாக்கி, அமெரிக்க கடற்படை சிறைப்பிடித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட 2 வாரகால போா்நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையேயான கடல்வழி முற்றுகை மோதல் தீவிரமடைந்து வருவது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மீண்டும் போா்பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவாா்த்தை, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது. 21 மணி நேரம் […]

அதிரடி 21 Apr 2026 9:30 pm

எரிபொருள் விநியோகம்; அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு !

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இலங்கையில் எரிபொருள் QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை உலக எரிபொருள் போக்குவரத்தில் 20 சதவீத பங்களிப்பை வழங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து இலங்கை பெற்றோலிய […]

அதிரடி 21 Apr 2026 9:30 pm

கொழும்பில் தாக்குதல் நடத்த திட்டமா? தெளிவு படுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்பதை அவர் மேலும் உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், ‘கஞ்சிப்பானை இம்ரான்’ என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக […]

அதிரடி 21 Apr 2026 8:30 pm

அலி காமெனி உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை ; மொஜ்தபா காமெனி எங்கே!

அமெரிக்க – இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி காமெனி உயிரிழந்து ஏழு வாரங்கள் கடந்தும் இன்னும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது ஈரானின் மத, கலாசார, அரசியல் மரபுகளுக்கு மாறான ஒரு செயல் என சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. 86 வயதான அலி காமெனியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை ஈரான் அரசு இன்னும் இறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நல்லடக்கம் செய்வதற்கான இடம் […]

அதிரடி 21 Apr 2026 7:30 pm

யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் சர்ச்சைக்குள்ளான காணொளி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் பாதுகாப்பு ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை, வைத்தியர் ஒருவர் இழுத்து விழுத்தியதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது. குறித்த சம்பவம் சுமார் ஒரு வருடத்தின் முன்னர் நடந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் ஒரு வருடமாக வைத்தியசாலை பணிப்பாளர் நடவடிக்கையெடுக்கவில்லையென கூறப்படுகின்றது. காணொளி வெளியான பின்னணியில் சந்தேகம் இதேவேளை, ஒரு வருடத்தின் பின் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியான பின்னணியில் சந்தேகம் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. […]

அதிரடி 21 Apr 2026 7:30 pm

குழந்தைகள் ஆபாசப்படங்கள் விவகாரம்: எலான் மஸ்க் ஆஜராக பிரான்ஸ் கோர்ட்டு சம்மன்

பாரீஸ், எக்ஸ் வலைத்தளம் மற்றும் அதன் செயற்கை நுண்ணறிவு கருவியான குரோக் மூலம் குழந்தைகள் ஆபாசப் படங்கள் விநியோகிக்கப்பட்டது, பெண்களின் ஆபாச டீப்பேக் படங்கள் உருவாக்கப்பட்டது மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டது குறித்து பிரான்சில் உள்ள பாரீஸ் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருப்பது மற்றும் பரப்புவதில் எக்ஸ் தளம் உடந்தையாக இருந்தது என ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து எக்ஸ் தளத்தின் தலைவர் எலான் மஸ்க் மற்றும் முன்னாள் தலைவர் […]

அதிரடி 21 Apr 2026 6:30 pm

கயிறு இழுத்தல் போட்டியில் இளைஞன் மரணம்; புத்தாண்டு கொண்டாட்டத்தில் துயரம்

புத்தளத்தில் கலாசாரப் நிகழ்வில் கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொண்ட இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். விளையாட்டுப் போட்டிகளில் மனைவியுடன் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்தவர், கொஸ்வத்த, மிகஹாவெலவைச் சேர்ந்த சந்தூன் தாரக (25) என்ற திருமணமான ஆண் ஆவார். மிகஹாவெல இளைஞர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 4வது வருடாந்திர புத்தாண்டு விழா, […]

அதிரடி 21 Apr 2026 6:15 pm

இலங்கையில் ஈவிரக்கமற்ற செயல் ; 10 நாய்கள் விஷம் கொடுத்து கொலை

அனுராதபுரம் கலாவெவ பகுதியில் நேற்று (20) 10 நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்கள் உயிரிழந்தமை தொடர்பில் விலங்கு நலக் கூட்டமைப்பின் (AWC) செயற்குழு உறுப்பினர் மிஹிரி சிறிவர்தன நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். கொடூரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் அப்பாவி விலங்குகளுக்கு எதிரான இந்த கொடூரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்கு” எதிராக அவசர சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் […]

அதிரடி 21 Apr 2026 6:14 pm

அமெரிக்காவை உலுக்கிய சிறுமியின் மரணம்; காருக்குள் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு காணாமல் போய் பின்னர் மரணமான 14 வயது சிறுமி செலஸ்டி ரிவாஸ் ஹெர்னாண்டஸின் தொடர்பாக, பிரபல இண்டீ-பொப் (indie-pop) பாடகர் D4vd மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 செப்டம்பரில், பாடகரின் டெக்சாஸ் முகவரியில் பதிவு செய்யப்பட்ட டெஸ்லா கார் ஒன்றிலிருந்து சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் பாகங்கள் காரின் முன் பகுதியில் ஒரு […]

அதிரடி 21 Apr 2026 5:30 pm

Iran TV Says No Delegation to Pakistan Amid US Talks

Iranian state television recently announced that no delegation from Tehran has visited Islamabad, Pakistan. This follows growing speculation about pot...

சென்னைஓன்லைனி 21 Apr 2026 5:17 pm

Dhivya Sathyaraj Claims Attack During Campaign

In Chennai, Dhivya Sathyaraj, who is the deputy general secretary of the Dravida Munnetra Kazhagam (DMK) IT wing and daughter

சென்னைஓன்லைனி 21 Apr 2026 4:01 pm

Kejriwal Slams BJP-AIADMK Alliance in Tamil Nadu

Arvind Kejriwal, the leader of the Aam Aadmi Party and former Chief Minister of Delhi, made strong remarks during an

சென்னைஓன்லைனி 21 Apr 2026 3:40 pm

NOTA Votes Rise in T Nagar Election

In Chennai, the T Nagar result in the 2021 election was very close. J. Karunanithi, the Dravida Munnetra Kazhagam (DMK)

சென்னைஓன்லைனி 21 Apr 2026 3:32 pm

யாழ். ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் ஈஸ்டர் நினைவேந்தல் நிகழ்வுகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ். மறைமாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தலைமையில் யாழ்ப்பாண ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றப்பட்டு வழிபாடும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளளை டேவிட் அவர்களால் அஞ்சலி உரையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை […]

அதிரடி 21 Apr 2026 3:30 pm

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் அரசு இன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றவாளிகள் முகமது மசூம் ஷாகி மற்றும் ஹமீத் வலீதி ஆகிய இருவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதித் […]

அதிரடி 21 Apr 2026 3:30 pm

Tamil Nadu Polls Turn Into Popularity Contest

On Thursday, April 23, people in Tamil Nadu will vote to choose their new government. This election is different from

சென்னைஓன்லைனி 21 Apr 2026 3:27 pm

ED Raids Bengaluru in Crypto Money Laundering Case

The Enforcement Directorate (ED) carried out searches on Monday at several places in Bengaluru. The raids were linked to a

சென்னைஓன்லைனி 21 Apr 2026 2:45 pm

Japan Lifts Ban on Lethal Weapons Exports

Japan has ended its long-standing ban on exporting lethal weapons, marking a significant shift in its post-World War II pacifist policies. The decisio...

சென்னைஓன்லைனி 21 Apr 2026 2:33 pm

Japan Eases Ban on Weapons Exports

Japan has decided to allow the export of lethal weapons, marking a big change in its long-standing postwar pacifist policy.

சென்னைஓன்லைனி 21 Apr 2026 2:32 pm

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: முதல் முறையாக கருத்து தெரிவித்த சீனா

பீஜிங், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக, உலகம் முழுவதும், குறிப்பாக ஆசியாவில், கடுமையான எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், ஈரானிய எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளரான […]

அதிரடி 21 Apr 2026 2:30 pm

Trump Sends Mixed Signals on Iran Conflict

Donald Trump, the President of the United States, gave mixed signals on Monday (April 20, 2026) about the future of

சென்னைஓன்லைனி 21 Apr 2026 2:23 pm

Air Arabia Flight Lands Safely After Bird Strike

An Air Arabia flight traveling from Abu Dhabi to Thiruvananthapuram International Airport was suspected to have a bird strike during

சென்னைஓன்லைனி 21 Apr 2026 2:02 pm