SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
...

இதுதான் ஏ.ஐ…பிரான்ஸ் ஜனாதிபதி-பிரதமர் மோடி ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக ஊடகத்தில் பதிவு

புதுடெல்லி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி […]

அதிரடி 19 Feb 2026 9:30 am

சத்ரபதி சிவாஜி மகாராஜின் 396-வது பிறந்ததினம்: மகாராஷ்டிரா மற்றும் வரலாற்று கோட்டைகளில் உற்சாக கொண்டாட்டம்

மராட்டியப் பேரரசின் நிறுவனர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் 396-வது பிறந்ததினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மூலம் அவரது வீரமும் நிர்வாகத் திறனும் நினைவு கூரப்படுகின்றன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 19 Feb 2026 9:00 am

ஏஐ மாநாட்டில் சீன நாய் ரோபோ; வைரலான பேராசிரியர்; மன்னிப்புக் கேட்ட பல்கலைக்கழகம்; என்ன நடந்தது?

டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கடைகளை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. இதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு கடையைத் திறந்து அதில் தங்களது தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது. இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், '''ஓரியன்' என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மிகவும் குறும்புத்தனம் (naughty) மிக்கது. கண்காணிப்புப் பணிகளைத் திறம்படச் செய்யும்'' என்று விவரித்தார். மேலும், ''செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) 350 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யும் முதல் தனியார் பல்கலைக்கழகம் நாங்கள்தான் என்று அவர் குறிப்பிட்டார். தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் ஆனால் அந்த ரோபோ நாயைப் பார்த்த பலரும் இது சீன தயாரிப்பு என்பதைக் கண்டுபிடித்தனர். சமூக வலைத்தளப் பயனர்கள் அந்த ரோபோ நாய், சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்பதைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளப் பயனர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர். சீனாவின் தயாரிப்பான அந்த ரோபோ நாய் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து மாநாட்டு அமைப்பாளர்கள் உடனே சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஸ்டாலை அகற்றும்படி உத்தரவிட்டனர். அதோடு அக்கடைக்கான மின்சார இணைப்பையும் துண்டித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்ட முறையான மன்னிப்பு கடிதத்தில், கண்காட்சி அரங்கில் (pavilion) இருந்த பிரதிநிதிகளில் ஒருவரான பேராசிரியர் நேஹா சிங், அந்தப் பொருளின் தொழில்நுட்பப் பின்னணி குறித்து சரியான தகவல் தெரியாதவர் என்றும், ஊடகங்களிடம் பேச அவருக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. நேஹா சிங் மேலும் கேமரா முன் பேசுவதில் அவருக்கு இருந்த மிகுந்த உற்சாகம் காரணமாகவே அவர் தவறான தகவல்களைத் தந்துவிட்டதாக பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த நேஹா சிங், தன் தரப்பில் தகவல் தொடர்பில் சிறு குறைபாடு இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார். இருப்பினும், தனது கருத்தில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று விளக்கமளித்துள்ளார். கண்காட்சியில் இடம் பெற்ற சீன நாய் ரூ.2-3 லட்சத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது. இச்சம்பவத்தால் நொய்டா பல்கலைக்கழகத்திற்குத் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. India AI Summit 2026: ஏ.ஐ வந்தால் அரசியல்வாதிகளின் வேலை பறிபோகுமா? - ஒரு ஜாலி ரிப்போர்ட்!

விகடன் 19 Feb 2026 8:38 am

தமிழ்நாடு வரும் தலைமைத் தேர்தல் ஆணையர்.. சட்டமன்றத் தேர்தல் எப்போது? முக்கிய ஆலோசனை!

சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு பிப்ரவரி 25 ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளது.

சமயம் 19 Feb 2026 8:37 am

அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம் ; மத்திய கிழக்கில் போர் விமானங்கள் குவிப்பு

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கைவிட வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார். இந்த ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்திட வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப், அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் பிடிகொடுக்காமல் இருந்த ஈரான், ஒரு கட்டத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. இருநாடுகளிடையே […]

அதிரடி 19 Feb 2026 8:30 am

குழந்தையுடன் சென்ற தாய்க்கு நேர்ந்த அவலம் ; பறிபோன உயிர்

மஹியங்கனை – தியத்தலாவை வீதியில் 48ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குழந்தை ஒன்று காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தியத்தலாவையில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவர்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த இருவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹியங்கனையைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அதிரடி 19 Feb 2026 7:41 am

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்ட பிணையால் வெடிக்கும் புதிய சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார் என்ற முடிவுக்கு வருவதற்குப் போதுமான காரணங்கள் இல்லாத போதே அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவான் நேற்று (18) தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமெனக் கூறி, தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு 16.6 மில்லியன் ரூபா அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிணை உத்தரவு இவ்வழக்கின் […]

அதிரடி 19 Feb 2026 7:34 am

கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர்: வளம் பல தரும் மாசிச் சதுர்த்தி கரும்புச்சாறு அபிஷேகம்!

பகவான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அசுரனை சம்ஹாரம் செய்தபின்பு கும்பகோணத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் நீராடி அதன்பின் அந்தத் தீர்த்தக் கரையில் ஒரு விநாயகர் திருமேனியை பிரதிஷ்டை செய்துவழிபட்டார் என்கிறது திருக்குடந்தை புராணம். அப்படி வராக சுவாமி வழிபட்ட விநாயகரை, 'வராக விநாயகர்' என்றே மக்கள் அழைத்துவந்தனர். கும்பகோணத்தின் ஆதிக்கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கோயில் விநாயகரின் திருநாமம் காலப்போக்கில், 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று மாறிவிட்டது. இதன் காரணம் என்ன... அந்தத் தல சிறப்பு என்ன என்பன குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வடக்கே திருமஞ்சன வீதி செல்லும் வழியில், வராகர் கோயிலுக்கு மேற்கில் கரும்பாயிரம் கொண்ட கணபதி கோயில் அமைந்துள்ளது. மிகவும் அழகிய திருமேனியோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இனிப்பான வாழ்வை அருள்கிறார் இந்தக் கணபதி. இந்த விநாயகரின் சந்நிதியில் வைக்கும் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு அறுகம்புல் சாத்தி வேண்டிக்கொண்டாலே அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்கிறார்கள். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்! ஒரு மகாமகத் திருவிழாவின்போது இந்த விநாயகர் நிகழ்த்திய திருவிளையாடலே இவரது திருநாமம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்று மாறக் காரணமானது. வாருங்கள், அந்தச் சுவையான வரலாற்றை அறிந்துகொள்வோம். ஒருமுறை, மாசி மகம் அன்று முனிவர்கள் பலர் கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராட வந்தனர். அப்போது, அங்குள்ள கோயில்களில் உத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கரும்பு வியாபாரி ஒருவர் பெரிய வண்டியில் ஆயிரம் கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்து வராக தீர்த்தக்கரையில் தங்கி கரும்பு வியாபாரம் செய்ய முற்பட்டார். அதை, அங்கே இருந்த வராகப் பிள்ளையாரும் கவனித்துவிட்டார். உடனே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தத் திருவுளம் கொண்டார் விநாயகர். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் ஒரு சிறுவனைப் போன்று உருமாறி கரும்பு வியாபாரி அருகில் வந்தார். கரும்பு வியாபாரியிடம் பேச்சுக் கொடுத்தார். வியாபாரம் ஏதும் நடக்காததால் சலிப்போடு இருந்த வியாபாரி, ''காலையில் இருந்து இதுவரை ஒரு கரும்புகூட வியாபாரம் ஆகவில்லை. முடிந்தால், கரும்பை விலைக்கு வாங்கு. காரியம் இல்லாமல் உன்னிடம் என்னால் பேச இயலாது'' என்றார் வியாபாரி. விநாயகரும் வியாபாரியை விடுவதாக இல்லை. ''ஐயா! நானோ சிறு பிள்ளை; என்னிடம் காசு எதுவும் இல்லை; கரும்பைக் கண்டவுடன் வாய் ஊறுகிறது. ஒன்று கொடுத்தால் போதும். உமக்கும் வியாபாரம் நன்றாக நடக்கும்'' என்றார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! ''கரும்பை விற்று நாலு காசு பார்க்கத்தான் இங்கே வந்தேன். உன்னைப் போன்ற சிறு பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு அல்ல. முதலில் இங்கிருந்து ஓடிவிடு!'' என்று விரட்டினார் கரும்பு வியாபாரி. விநாயகரும், 'கரும்பு வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்' என்று சொல்லி சிரித்தார். அதைக் கண்டு கோபமுற்ற வியாபாரி விநாயகரைக் கடிந்துகொண்டான். அப்போது விநாயகர் ஒரு கரும்பைத் தொட்டார். வியாபாரி கோபம் அதிகரித்து, விநாயகரைப் பிடிப்பதற்காக விரட்ட... அங்கே இங்கே என்று ஓடி, கடைசியில் தனது கோயிலுக்குள் புகுந்துவிட்டார் விநாயகர். சிறுவன் போன இடம் தெரியாமல் தவித்த வியாபாரி களைத்துப்போய் தன் கரும்புக் கடை இருந்த இடத்துக்கு வந்து பார்த்து அதிர்ந்துபோனான். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் வியாபாரி விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரம் கரும்புகளின் சாரத்தையும் விநாயகர் அதற்குள் உறிஞ்சியிருந்தார். கரும்புகள் சக்கையாகக் கிடந்தன. கலங்கிப் போனார் வியாபாரி. நேராக விநாயகர் கோயிலுக்குச் சென்றவர், 'ஒரேயொரு கரும்பு தா என்று கேட்ட சிறுவனை விரட்டினேனே! இப்போது ஆயிரம் கரும்பும் வாங்குவார் இல்லாமல் சக்கையாகிவிட்டதே!’ என்று விநாயகர் சந்நிதி முன்பு வீழ்ந்து அழுது புரண்டார். பக்தன் கதறினால் சும்மா இருப்பாரா விநாயகர்? அக்கணமே வியாபாரி விற்பனைக்காகக் கொண்டு வந்த அத்தனை கரும்புகளின் சாரத்தையும் மீண்டும் அளித்தார். இந்த முறை கரும்புகள் முன்னைவிட சத்தாகவும் சுவையாகவும் மாறின. விநாயகரிடம் முறையிடப்போய்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்த வியாபாரி, கணபதிக்குப் பிடித்த பலவகை பணியாரங்களைக் கொண்டு போய் நிவேதனம் செய்து மகிழ்ந்தார். அன்று முதல் அந்த விநாயகருக்குக் 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்’ என்ற பெயர் உண்டாயிற்று. இந்த விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் வெகுவிமர்சையாக நடைபெறுகின்றன. மக்கள் கூட்டம் அந்த நாளில் மிகுந்திருக்கும். மேலும் வராக சுவாமிக்கு உகந்த மாசி மாதத்தில் வரும் சதுர்த்தி நாளில் கரும்புச்சாற்றினால் இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து வழிபடுகிறார்கள் அதைக் கண்டாலே வாழ்க்கை வளமாகும், பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். குடந்தை செல்பவர்கள் தவறாமல் கரும்பாயிரம் கொண்ட விநாயகரைத் தரிசித்து வாருங்கள். சத்தில்லாமல் சக்கையான கரும்புகள் முன்னைவிட சுவையாகச் சத்தாக மாறியதுபோல் சுவாரஸ்யமில்லாமல் கழியும் வாழ்க்கையும் இனிப்பாக மாறும் என்பது நம்பிக்கை. திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில்: சப்த கன்னியருக்கு விரலிமஞ்சள் வழிபாடு!

விகடன் 19 Feb 2026 7:33 am

சபரிமலை வழக்கில் இனியும் சிக்க வேண்டியவர்கள் இருந்தால் சிக்கட்டும் - நடிகர் ஜெயராமிடம் ED விசாரணை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கேரள ஹைகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் மற்றும் மத்திய அரசின் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. துவார பாலகர்கள் சிற்பங்களின் மீது பொருத்தப்பட்ட தங்கக் கவசங்கள் நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், கருவறை தங்கத் திருநடை சென்னையில் வைத்து பூஜை செய்தபோது அதில் நடிகர் ஜெயராம் கலந்துகொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து நடிகர் ஜெயராமை இந்த வழக்கில் சாட்சியாக மாற்ற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் அல்லாது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் நடிகர் ஜெயராமுக்கும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஜெயராம் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது. சபரிமலை சென்றபோது அங்குவைத்து உன்னிகிருஷ்ணன் போற்றியின் அறிமுகம் கிடைத்ததாகவும், அவர் தனது வீட்டில் பூஜை செய்ததற்குச் சிறு தொகை தட்சிணை மட்டுமே கொடுத்ததாகவும் அவருக்கும் தனக்கும் நிதி பரிவர்த்தனை எதுவும் நடந்தது இல்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஜெயராம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் நடிகர் ஜெயராம் கூறுகையில், சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: சிறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி சபரிமலை கோயில் மீது கேரள மக்களுக்கு தனிப்பட்ட உணர்வு உண்டு. எத்தனை கோயில்கள் இருந்தாலும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் ஒவ்வொரு இந்தியருக்கும் புனிதமான இடம். அப்படிப்பட்ட இடத்தில் கொள்ளை நடந்திருந்தால் அதில் உள்ள நூறு சதவிகிதம் உண்மையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். கொள்ளையில் ஈடுபட்டவர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது கேரளாவைச் சேர்ந்த ஒவ்வொருவரின் பொறுப்பாகும். நான் 50 ஆண்டுகளாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர் என்ற முறையில் இது எனது கடமை. நடிகர் ஜெயராம் கேரள மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் கடந்த 38 ஆண்டுகளாக மக்கள் என்னை அழைக்கிறார்கள். அந்த அழைப்பை ஏற்று நானும் கோயில்களுக்குச் செல்வது வழக்கம். அப்படித்தான் சபரிமலை திருநடை பூஜை செய்யும் நிகழ்ச்சிக்கும் நான் போனேன். என் மூலம் ஏதாவது நல்ல காரியங்கள் நடந்தால் அது நல்லதுதானே என்பதால் அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். சபரிமலை வழக்கில் இனியும் சிக்கவேண்டியவர்கள் யாராவது இருந்தால் சிக்கட்டும். ஐயப்ப சுவாமி அவர்களைச் சும்மா விடமாட்டார் என்றார். ‘சபரிமலை தங்கத்தில் நிக்கல்...’ - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்... மூன்று கட்சிகளுக்கும் சிக்கல்!

விகடன் 19 Feb 2026 7:23 am

Doctor Vikatan: ஒல்லியான குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் கொடுத்தால் வெயிட் ஏறுமா?

Doctor Vikatan: என் உறவினரின் 4 வயது பெண் குழந்தை மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். அவளது வெயிட்டை அதிகரிக்க என் உறவினர், அவளுக்கு நிறைய சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் எல்லாம் கொடுக்கிறார். 'குழந்தைதானே... ஒண்ணும் ஆகாது....' என்கிறார். இந்த அணுகுமுறை சரியா... உடல் எடை குறைவான குழந்தையை எப்படித் தேற்றுவது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். குழந்தையின் எடை குறித்துக் கவலைப்படுவதற்கு முன், முக்கியமான ஒன்றைச் செய்ய வேண்டும். குழந்தைகள் கண்ட இடங்களில் விளையாடுவார்கள். கை கழுவாமல் சாப்பிடுவார்கள். அதனால் ஏராளமான கிருமிகள் அவர்களது உடலுக்குள் போகும். எனவே, டீவேர்மிங் (Deworming) எனப்படும் புழு நீக்கம் மிக முக்கியம். வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் என்றால் இந்த டீவேர்மிங் விஷயத்தை நிச்சயம் பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் அதில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் என எல்லாம் இருக்கும்படி, ஊட்டச்சத்து மிக்கதாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, குழந்தைகளுக்கு வெறும் இட்லி, தோசை மட்டும் கொடுக்காமல், வேகவைத்த நேந்திரம் பழம், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு வறுவல் போன்றவற்றைக் கொடுக்கலாம். முதலில் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்கிவிட்டு, போகப் போக அளவை அதிகரிக்கலாம். உணவு இடைவேளைகளுக்கு இடையில் வெற்று கலோரிகள் கொண்ட சிப்ஸ் போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது. சிலர் குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் வயிறு நிறைந்துவிடும். ஆனால், மறுபடி கொஞ்ச நேரத்திலேயே பசிக்கிறது என்பார்கள். எனவே, மூன்று வேளை உணவை நல்ல ஊட்டச்சத்து மிக்கதாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, சப்பாத்தி கொடுக்கிறீர்கள் என்றால், அதனுள் முட்டை வைத்து 'எக் ரோல்' ஆகக் கொடுக்கலாம். அல்லது சப்பாத்திக்குள் கேரட், பீட்ரூட் எனக் காய்கறிக் கலவையை ஸ்டஃப் செய்து கொடுக்கலாம். பனீர் ஸ்டஃப் செய்தும் கொடுக்கலாம். சாதம் கொடுக்கும்போதும், அதை பனீர் புலாவ், காய்கறி புலாவ் என சத்தானதாகச் செய்து கொடுக்கலாம். அவள் பதில்கள் 63: ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு பிஸ்கட் தரலாமா? சாதம் கொடுக்கும்போதும், அதை பனீர் புலாவ், காய்கறி புலாவ் எனச் சத்தானதாகச் செய்து கொடுக்கலாம். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்குடன், காய்கறிகள், பனீர் சேர்த்து கட்லட்டாகச் செய்து கொடுக்கலாம். குழிப்பணியாரத்தில் கொத்துக்கறி சேர்த்துச் செய்து கொடுக்கலாம். முட்டை தோசை குழந்தைகளுக்கான மிகச் சிறந்த உணவு. காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அவற்றை மஃபின்ஸ் வடிவில் செய்து கொடுக்கலாம். மஃபின், கப் கேக் எல்லாம் இனிப்பாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. காரமாகவும் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் இருக்கும்படி பார்த்துக்கொடுக்க வேண்டும். இவற்றின் மூலம் ஆரோக்கியமான வழிகளில் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம். மிக முக்கியமாக, குழந்தைகளை இரவு 7.30 - 8 மணிக்குள் தூங்கப் பழக்க வேண்டும். தாமதமான தூக்கம் அவர்களது வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 19 Feb 2026 7:00 am

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து.. கூடுதல் பேருந்துகள் இயக்கம்.. பயணிகளின சிரமங்களை குறைக்க எம்.டி.சி. திட்டம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதை தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று எம்.டி.சி. சென்னை அறிவித்து உள்ளது.

சமயம் 19 Feb 2026 6:46 am

ரஷ்ய தாக்குதல் பதற்றம் ; மூடப்பட்ட போலந்து விமான நிலையங்கள்

ராணுவ நடவடிக்கைகள் காரணமாக போலந்தில் உள்ள செஷோவ் மற்றும் லூப்லின் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, போலந்தில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. ரஷ்யாவின் விமானபடை உக்ரைன் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலந்து வான்வெளியில் ராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன் காரணமாக செஷோவ் மற்றும் லூப்லின் விமானநிலையங்கள் சிறிது நேரம் முடக்கப்பட்டன. பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு […]

அதிரடி 19 Feb 2026 6:38 am

கூட்டணி ஸ்பாம்..!

கார்ட்டூன்

விகடன் 19 Feb 2026 6:04 am

ஜோக்ஸ்!

விகடன் 19 Feb 2026 6:04 am

ஐந்தாண்டுகளில் இல்லாதளவு இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் உயர்வு!

இங்கிலாந்தில் வேலையின்மை சுமார் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் 5.2% ஆக உயர்ந்துள்ளது. 2025 நவம்பர் வரையிலான மூன்று மாதங்களில் இது 5.1% ஆக இருந்ததாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. வருடாந்திர ஊதிய வளர்ச்சி குறைந்து, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த மட்டத்திற்குச் சென்றதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2024 ஒக்டோபரில் இங்கிலாந்து அரசாங்கம் […]

அதிரடி 19 Feb 2026 3:30 am

❄️ கலிபோர்னியாவில்  பனிச்சரிவு: 8  வீரர்கள் உயிாிழப்பு – ஒருவரைக் காணவில்லை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடா (Sierra Nevada) மலைத்தொடரில் இடம்பெற்ற பாரிய பனிச்சரிவில் (Avalanche) சிக்கி… The post ❄️ கலிபோர்னியாவில் பனிச்சரிவு: 8 வீரர்கள் உயிாிழப்பு –ஒருவரைக் காணவில்லை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Feb 2026 2:04 am

அமெரிக்க போர் கப்பல்களால் குறி வைக்கப்படும் ஈரான் ; மறைமுகமாக மிரட்டும் கமேனி

உலகிலேயே அமெரிக்க ராணுவம் வலிமையானது என ட்ரம்ப் கூறி வருகிறார். ஆனால், பலமான ராணுவம் மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறும் உண்டு,” என ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி கூறியுள்ளார். இது தொடர்பாக ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகிலேயே வலிமையான ராணுவத்தை வைத்துள்ளதாக அமெரிக்க தொடர்ந்து ஜனாதிபதி கூறி வருகிறார். உலகின் வலிமையான ராணுவம் மீண்டும் எழ முடியாதபடி பல முறை தாக்கப்பட்டு உள்ளது. ஈரானை நோக்கி போர்க்கப்பல்களை அனுப்பி […]

அதிரடி 19 Feb 2026 1:30 am

கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சம்: 20 லிட்டருக்கு மாதக்கணக்கில் காத்திருப்பு

ஹவானா : அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக, கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் பல கிலோமீட்டா் தூரத்துக்கு அணிவகுத்தும் நிறுத்தும் வாகன நெரிசலைத் தவிா்க்க, கியூபா அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இச்செயலி மூலம் முன்பதிவு செய்யும் வாகன ஓட்டிகளும், எரிபொருள் நிரப்ப இன்னும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது. தற்போது பெட்ரோல் நிலையங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 90 நபா்களுக்கு […]

அதிரடி 19 Feb 2026 12:30 am

வட இலங்கையின் தொழில்துறை மறுஉயிர்ப்பு

(ராஜ் சிவநாதன்) 1. பரந்தன் இரசாயன ஆலை மறுஉயிர்ப்பு வரலாற்றுப் பின்னணி கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பரந்தன் இரசாயன ஆலை, இலங்கையின் முக்கியமான தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. 1950களின் நடுப்பகுதியில் நிறுவப்பட்ட இவ்வாலை, காஸ்டிக் சோடா, குளோரின், ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்ற அத்தியாவசிய தொழில்துறை இரசாயனங்களை உற்பத்தி செய்தது. இந்த ஆலை, நீர் சுத்திகரிப்பு, துணிநூல் தொழில், காகித உற்பத்தி, சலவைத் தூள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு தேவையான இரசாயனங்களை வழங்குவதில் முக்கிய பங்கு […]

அதிரடி 19 Feb 2026 12:30 am

லங்கா சீனி நிறுவனத்தின் தலைவர் திடீர் இராஜினாமா

லங்கா சீனி கம்பனியின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அரசியல் அழுத்தங்கள் குறிப்பிட்ட சில மாகாண அரசியல்வாதிகளுடனான முரண்பாடுகள் அதிகரித்தமையே தனது பதவி விலகலுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிறுவனம் இயங்கும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை வரம்புகளைத் தெளிவுபடுத்திய போதிலும், சட்டம், விதிமுறைகள் மற்றும் அரச சுற்றறிக்கைகளுக்கு […]

அதிரடி 18 Feb 2026 11:30 pm

இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் –உத்தவ் சிவசேனா கருத்து

இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியிருந்த நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியும் இதே

சென்னைஓன்லைனி 18 Feb 2026 11:23 pm

இந்து சமூகத்தினர் குறைந்தது மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திய மோகன் பகவத்

இந்து சமூகத்தினர் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த சமூக

சென்னைஓன்லைனி 18 Feb 2026 11:21 pm

இந்தியா கூட்டணியின் வலுவான தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் –சீமான் கருத்து

இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுத்தமான தலைவர் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்திருந்தார். மேலும் நேருவுக்கு பின்

சென்னைஓன்லைனி 18 Feb 2026 11:18 pm

பஞ்சாப்பில் மேலும் ஒரு ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை!

பஞ்சாப் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் அமிர்தசரஸில் உள்ள வால்டோஹா கிராமத்தில், திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்ற ஆம் ஆத்மி தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஜார்மால் சிங்

சென்னைஓன்லைனி 18 Feb 2026 11:16 pm

தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் –பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யும் திமுக

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்

சென்னைஓன்லைனி 18 Feb 2026 11:14 pm

தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது

தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், நாளை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது. இன்று மாலை

சென்னைஓன்லைனி 18 Feb 2026 11:13 pm

போதைப்பழக்கத்தால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்பட முடியாது –உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மது அருந்துதல், புகையிலை அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தனிப்பட்ட,

சென்னைஓன்லைனி 18 Feb 2026 11:11 pm

உலகிலேயே முதல் முறையாக வழங்கப்பட்ட நவீன கண் அறுவை சிகிச்சை! –மும்பை மருத்துவருக்கு பார்வைத்திறனை மீட்டுத்தந்த டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை

இந்தியாவில் கண் மருத்துவத்தில் முதன்மை இடத்தை வகிக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, மும்பையைச் சேர்ந்த 44 வயதான பெண்கள் நல மருத்துவருக்கு வெற்றிகரமாகப் பார்வையை மீட்டுள்ளது.

சென்னைஓன்லைனி 18 Feb 2026 10:44 pm

World’s First-of-Its-Kind Surgical Procedure at Dr Agarwals Eye Hospital Restores Vision to Mumbai Gynaecologist

Dr Agarwals Eye Hospital restored vision to a 44-year-old gynaecologist from Mumbai who had become completely blind in both eyes

சென்னைஓன்லைனி 18 Feb 2026 10:43 pm

நிகழ மறுத்த அற்புதம்! : மிகவும் வருத்தத்தை ஏற்படுத்திய `காந்தா’ திரைப்படம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் நிகழ மறுத்த அற்புதம் என்று சொற்றொடர் நிறைய இலக்கிய புத்தகங்களில் வரும். காந்தா படம் பார்த்தபோது எனக்கு அதுதான் தோன்றியது. ஒரு கதையாக அந்த படம் மிகவும் அற்புதமாக யோசிக்கப்பட்டிருந்தது. தன்னை விட பெரிதாக வளரும்  சிஷ்யனின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத குரு. அதை சுய முயற்சியால் அவன் கற்றுக் கொண்டு கலையை வெளிப்படுத்துவதை அவமதிப்பதன் மூலம் காட்டிக்கொள்கிறார். “நான் பார்த்து வளர்ந்தவன் நீ… உனக்கென்ன புதுசா தெரியும்… என் நிழலிலேயே நீ இருக்க வேண்டும்…” என்ற ஆணின் அகங்காரம் தொனிக்கும் பாத்திரம். 'காந்தா' பட காட்சி சிஷ்யனோ கைதட்டுகளுக்காக ஏங்குபவன். கலை என்பது சாமானியனின் அங்கீகாரத்தில் உள்ளது என்று நினைப்பவன். மரபிற்கும் புதிய முயற்சிகளுக்கும் உள்ள போராட்டமாகவே இவர்கள் இருவரின் சண்டையும் விரிவடைகிறது. இருவருக்கும் நடுவே “எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துவிடலாம்!” என்று அப்பாவியாக நம்பும் கதாநாயகி. நம் இலக்கிய உலகில் இன்றளவும் நடக்கும் சர்ச்சைகளின் ஒரு கதை வடிவமாக இதை பார்க்கலாம். ஆனால் பிரச்சனை அதை திரைக்கதையாகவும் படமாகவும் மாற்றும்போது தான் தொடங்குகிறது. இது ஒரு வகையில் இலக்கிய கண்ணோட்டத்தில் விரியும் ஆர்ட் சினிமாவா அல்லது பொதுமக்கள் விரும்பும் பொது ஜன சினிமாவா என்று முடிவெடுக்காமல் இரண்டிலும் பயணிப்பது தான் அதன் அழுத்தத்தை குறைக்கிறது. இதை ஆர்ட் சினிமா என்று முடிவெடுத்திருந்தால் இரண்டாம் பகுதியே தேவையில்லை. வேறு வகையில் இதற்கு முடிவு கொடுத்து இருக்கலாம். இல்லை இது அனைவரும் விரும்ப வேண்டிய பொதுஜன சினிமா என்று முடிவெடுத்திருந்தால் அதை சொன்ன விதத்தில் மாற்றி இருக்க வேண்டும். ஒரு துப்பாக்கி சுடப்படுவதில் ஆரம்பிக்கும் கதை விரியும்போது நேர்கோட்டில் செல்வது அதற்கு அனாவசியம்.  விசாரணையினை முன்னிறுத்தி முன்பின்பாக அதை விவரிக்கும் போது ஒரு  சுவாரஸ்யம் உருவாக்க முடியும். அந்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்கள்.  'காந்தா' நடிகை பாக்யஶ்ரீ அடுத்த பிரச்சனை நடிகர்கள் தேர்வு. தனிப்பட்ட முறையில் இவர்கள் அனைவருமே சிறந்த நடிகர்கள் என்றாலும் இந்த பீரியட் கதைக்கு பொருத்தமானவர்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முக்கியமாக கதாநாயகி பாக்யஸ்ரீ போர்ஸ் அழகாக இருக்கிறார். ஒப்பனை செய்தபின் 1960 களின் கதாநாயகியை போல் தோற்றமளிக்கிறார். ஆனால் தமிழ் தெரியாது ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக பீட்  செய்வதை கேட்டு அவர் பேசுவது அந்தக் கதாபாத்திரத்திற்கான எந்த ஒரு அழுத்தத்தையும் உருவாக்காமல் குறைத்து விடுகிறது. ஒன்று தமிழ் தெரிந்த நாயகிகளை தேர்வு செய்திருக்கலாம். அல்லது இன்னும் தமிழில் பேச பயிற்சி அளித்திருக்கலாம். கதாநாயகன் துல்கர் சல்மானிடமும் இதே பிரச்சனை. பேச்சு மொழி தமிழில் பேசும்போது அவரால் அவரின் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடிகிறது ஆனால் தூய தமிழ் அவருக்கு வரவில்லை. யோசித்துப் பார்த்தால் இந்த படத்திற்கு ஏன் தூய தமிழில் டயலாக் வேண்டும்? 1950ல் பராசக்திக்கு பிறகே பேச்சுத் தமிழ் படங்களில் அதிகமாக இருந்தது. இன்றைய தேதியில் அந்த காலம் போல் தூய தமிழில் பேசி பயிற்சி எடுத்தவர்கள் நடிகர்களிலும் இல்லை, பின்னணி பேசுபவர்களும் இல்லை. அவர்கள் பேசும்போது ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது. அதுவே மிகவும் எரிச்சலூட்டுகிறது.  காந்தா விமர்சனம் | Kaantha Review அடுத்ததாக குரு கதாபாத்திரம் சமுத்திரக்கனி அவரின் ஸ்டாக் எக்ஸ்பிரஷன் மூலமே அதன் அழுத்தத்தை நமக்கு கடத்தலாம் என்று நினைத்திருக்கிறார். இது போன்றது ஒரு பாதித்திரம் தான் ஆடுகளம் படத்தில் வரும் வேட்டைக்காரன் கதாபாத்திரம் ஆனால் அதில் நடித்திருக்கும் ஜெயபாலன் மீது வரும் கோபம், பரிதாபம் இவரின் பாத்திரத்தின் மீது வர மறுக்கிறது. காரணம் பாதி படத்திற்கு மேல் வெறும் முகச்சுழிப்பும், வெறித்த பார்வையும் மட்டுமே நமக்கு அளிக்கிறார்.  உண்மையில் இந்த படம் முடிந்த போது மிகவும் வருத்தமாக இருந்தது. படத்தின் கதாபாத்திரங்களையும் அவற்றின் முடிவையோ நினைத்தில்லை. எவ்வளவு அழகான கதை, எவ்வளவு அடுக்குகள் கொண்ட கதாபாத்திரங்கள், எத்தனை வகையில் விரியக்கூடிய முரண்கள் -  அனைத்தும் ஒரு குழப்பமான திரைக்கதையினால் வேண்டிய வரவேற்பை பெறாமல் போய்விட்டதே என்றுதான். தேர்தல்

விகடன் 18 Feb 2026 10:41 pm

இத்தாலி –ஹங்கெரியை தொடர்ந்து செயற்கை இறைச்சிக்கு ரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதிக்குமா?

ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) குறைந்தது 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை மற்றும் ‘லாப்-க்ரோன்’ (lab-grown)… The post இத்தாலி – ஹங்கெரியை தொடர்ந்து செயற்கை இறைச்சிக்கு ரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதிக்குமா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Feb 2026 10:34 pm

முட்டாள் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - முரண்பாடும் விளக்கமும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அறிவு கெட்டவனே... முட்டாள் என்று பெற்றோரிடம் அர்ச்சனை வாங்காமல் வளர்ந்திருப்பவர்கள் மிகவும் அரிதாகவே இருப்பர். ஏனெனில் அறிவு இருப்பர்கள் தான் நன்றாக படித்த அறிவாளிகளாகவும் மற்றும் புத்திசாலிகளாகவும் வலம் வர முடிகிறது என்று இன்றளவும் ஆணித்தரமாக கூறப்படுகிறது. அறிவாளி மற்றும் புத்திசாலி என ஒருவரை கூறுவதில் சிறிய முரண்பாடுகள் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மனிதன் என்பவன் இயற்கையாக படைக்கப்பட்டவன். இந்த இயற்கை மனிதனுக்கு ஏற்றத்தாழ்வின்றி உடல் உறுப்புகளைக் கொடுத்துள்ளது. அதில் அறிவுக்கு ஆதாரமாக விளங்கக் கூடியது மூளை மிக முக்கியமான ஒன்று. இதனைக் கருத்தில் கொள்ளும் போது அறிவு என்பது அனைவருக்கும் ஒன்றே! பொதுவானதே! இதன் அடிப்படையில் யாரையும் முட்டாள், அறிவு கெட்டவன் என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. எதன் அடிப்படையில் இத்தகைய பிரிவினை வருகிறது என்று வாழ்வில் சாதனை புரிந்த மனிதர்களின் செயல்பாடுகளை உள்வாங்கும் போது கிடைத்த விடைதான் “நினைவாற்றல்”. நினைவாற்றல் என்பது மூளைக்கும் ஐம்புலன்களுக்கும் இடையேயான தகவல்கள் பரிமாற்றம் ஆகும். இவ்வாறு தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது ஆறாவது அறிவு (மனதின்) உதவியுடன் ஏன்? எதற்கு? எப்படி? என பல்வேறு வினாக்களுடன் சிந்தனை தூண்டப்படுகிறது. அதன் காரணமாக மாதா, பிதா, குரு, புத்தகம் மூலமாக கிடைக்கப்பெறும் விடைகள்  மூளையில் சேமித்து “முதிர்ச்சி” அடைய வைக்கிறது. இத்தகைய முதிர்ச்சியே “அனுபவம்” என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு எவன் ஒருவன் சிறு வயது முதல் மாதா, பிதா, குரு, புத்தகம் மூலமாக தன் சிந்தனையினை அதிகம் தூண்டும் செயலில் நேரம் தவறாது ஈடுபடுகிறானோ அவனுடைய நினைவாற்றல் படிப்படியாக உயர்ந்த நிலையினை அடைகிறது.  இதன் மூலம் அறிவு கெட்டவன், அறிவு இல்லாதவன், முட்டாள் எனக் கூறுவதனை தவிர்த்து “நினைவாற்றல் இல்லாதவன்” எனக் கூற வலியுறுத்தப்படுகிறது.  போட்டித் தோ்வுகளில் 90 சதவீதம் “நினைவாற்றல்” கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெருகிறார்கள் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நேரம் தவறாது புத்தகத்தினை வாசித்து படிக்கும் போது சிந்தனை தூண்டப்பட்டு மூளை முதிர்ச்சி அடைவதாகும். “சிந்தனையால் முதிர்ச்சி அடைந்து அனுபவம் பெற்ற மனிதனாக மாறுகிறான்” ஒரு தாவரம் தன் வேரினைக் ஆழமாகச் செலுத்தி எவ்வாறு தனக்கு தேவையான தாது பொருட்களை ஊறிஞ்சி தன்னுடைய மற்ற பாகங்களுக்கு உயிர்ப்பு கொடுக்கிறது. இது போல சிந்தனை என்னும் வேரினை ஆழமாகச் செலுத்தி பல்வேறு தகவல்களை ஊறிஞ்சி சிந்தனையின் பயனாக தன்னுடைய மூளையினை பலப்படுத்தினால் “நினைவாற்றல்” உயிர்ப்படைகிறது. சாதிக்கலாம்... படித்தவன் – அறிவாளி கற்றவன் – புத்திசாலி அறிவாளி + புத்திசாலி = அனுபவசாலி (திறமைசாலி) விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 18 Feb 2026 10:30 pm

யாழ்ப்பாணம் காணித் தகராறு கொலை: 3-வது சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் காணிப் பிரச்சினை காரணமாக முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது… The post யாழ்ப்பாணம் காணித் தகராறு கொலை: 3-வது சந்தேகநபர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Feb 2026 10:12 pm

அன்னதானத்தில் ஒற்றுமை!

தமிழர் அரசியல் தீர்வு தொடர்பில் மீண்டும் சர்வதேச கவனத்தில் கொண்டு செல்வதாக சுமந்திரனின் செல்லப்பிள்ளை இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் துணை பிரதமரின் சமீபத்திய இலங்கை விஜயம், தமிழர் அரசியல் பிரச்சினை மீண்டும் சர்வதேச அளவில் அழுத்தத்துடன் பேசப்படும் நிலையை உருவாக்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுத் தலைமையினருடனும், தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களுடனும் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இந்த சந்திப்பில் தமிழ்த் தலைவர்கள் தமிழர் இனப் பிரச்சினைக்கு நிலையான மற்றும் அரசியல் அடிப்படையிலான தீர்வு எமது மக்களுக்கு உடனடித் தேவை என வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது. கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வரும் அரசியல் மற்றும் நிர்வாக சிக்கல்கள், தற்காலிக நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டோம். அதற்காக அதிகாரப் பகிர்வு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் அரசியல் அமைப்பு மாற்றங்கள் போன்றவை அவசியம் எனவும் தெரிவித்தோம். மேலும், தமிழர் பிரச்சினை தொடர்ந்து தாமதப்படுத்தப்படுவது சமூகத்தில் விரக்தி நிலையை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது. குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை குறைவு உருவாகும் முன், அரசியல் தீர்வை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திதினோம். இந்த சந்திப்பு, இலங்கையின் இனச்சமரச முயற்சிகள் இன்னும் நிறைவேறாத நிலையிலுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டும் ஒரு நிகழ்வாக அமைந்தது. அதேவேளை, தமிழர் அரசியல் உரிமைகள் தொடர்பான விவாதம் இன்னும் முடிவுக்கு வராத ஒன்றாக இருப்பதையும் இவ் சந்திப்பானது வெளிப்படுத்துகிறது. எனவே, இந்த விஜயம் ஒரு சாதாரண அரசியல் மரியாதைச் சந்திப்பாக இல்லாமல், தமிழர் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி சர்வதேச மட்டத்தில் கவனம் திருப்பிய ஒரு முக்கியமான தூதரக நிகழ்வாக இருந்ததாக சாணக்கியன் தெரிவித்துள்ளார். சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

பதிவு 18 Feb 2026 10:02 pm

புற்றுநோய் இருளில் தவிக்கும் ஏழைப் பெண்களுக்கு புதுவிடியல்: வாழ்நாள் சேமிப்பை அர்ப்பணித்த மருத்துவர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் புகழ்பெற்ற இந்திய மகப்பேறு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர்.கே.லட்சுமிபாய், மகளிர் நலவியல் மருத்துவத்துறையில்  புற்றுநோய் சிகிச்சை சேவை வழங்குவதற்காக புவனேஷ்வர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) தனது வாழ்நாள் சேமிப்பான 3.4 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.  5/12/2025  அன்று தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடவிருந்த சில நாட்களுக்கு முன் இந்த போற்றுதலுக்குரிய பெருஞ்செயலை அவர் செய்துள்ளார். தான் வழங்கும் இந்த பணம் மகளிர் நல புற்றுநோயியல் திட்டத்தை நிறுவவும், எதிர்காலத்தில் மகளிர் நல புற்றுநோயியல் துறைக்கென சிறப்பு மருத்துவர்களை உருவாக்கவும், எண்ணற்ற பெண்களின் வாழ்க்கைக்கான நம்பிக்கையை வழங்கவும் உதவ வேண்டும் என்பதே தனது தாழ்மையான விருப்பம் என்று இந்தக் கொடையை வழங்கும்போது மருத்துவர்.கே.லட்சுமிபாய் கூறினார். 1945 ஆம் ஆண்டு கட்டாக்கில் ஆரம்பிக்கப்பட்ட எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மருத்துவம் பயின்ற லட்சுமி பாய் 1950 ஆம் ஆண்டு மருத்துவரானார். பின்னர் மகளிர் நல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற 1958 ஆம் ஆண்டு சென்னை வந்த மருத்துவர்.லட்சுமிபாய் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறையில் பட்டயச் சான்றிதழ் பெற்றார். அதே மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ முனைவர் பட்டமும் பெற்றார்.  மகளிர், மகப்பேறு மருத்துவத்துறையில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் அவரை அமெரிக்காவிற்கும் அழைத்துச் சென்றது. பால்டிமோரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பட்டம் பெற்றார். இதற்கென அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.. குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான உதரத்துட்காட்டி (லேப்ராஸ்கோபிக்) அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற மருத்துவர் லட்சுமிபாய் பிரிட்டனில் பயிற்சி பெற்றார். இந்தியாவில் இந்த பயிற்சி பெற்ற முதல் மருத்துவர் இவர்தான், இதற்காக அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் மருத்துவர்.லட்சுமிபாய் கௌரவிக்கப்பட்டார். இந்த விரிவான கல்வி அவருக்கு உலகளாவிய நிபுணத்துவத்தை வழங்கியது, உலகளாவிய கல்வியும் பயிற்சியும் பெற்ற மருத்துவர்.லட்சுமிபாய் தன்னுடைய மருத்துவ நிபுணத்துவத்தை ஒடிசா மாநிலத்தின் கிராமப்புற மருத்துவத்திலும் பயன்படுத்தினார். 1950 ஆம் ஆண்டு ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்ட மருத்துவமனையில் மருத்துவப் பணியைத் தொடங்கிய அவர், 1986 ஆம் ஆண்டு இங்குள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து ஓய்வு பெற்றார். பல ஆயிரம் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்.லட்சுமிபாய் தான் பணிபுரிந்த காலத்தில் எண்ணற்ற தாய்மார்கள் பாதுகாப்பாக பிரசவிக்க உதவினார். ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் இலவச மருத்துவ பராமரிப்பை வழங்கிய இந்த மருத்துவர் தனது நூறாவது வயதில் பெர்ஹாம்பூர் பாபா நகரில் ஒரு சாதாரண வீட்டில் வசித்து வருகிறார்.  பிரசவம் பார்க்கும் மருத்துவராக மட்டுமல்லாமல் நம்பிக்கை அளிக்கும் தாயாக பலரின் அச்சத்தையும் உயிர் பயத்தையும் போக்கியுள்ளார். வறுமை, பயம், மூடநம்பிக்கை, மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கிடையே வாழ்ந்த ஒடிசா மாநிலத்தின் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த சீதா என்ற மீனவ குடும்பப் பெண் 1962 ஆம் ஆண்டு ஒரு புயல் சூழ்ந்த மாலையில் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.  குழந்தை பிறப்பு தாமதமான நிலையில் அச்சமும் பதற்றமும் கலந்து “கடவுள்கள் எங்களை சபித்துவிட்டார்கள்” என்று மூச்சிரைக்க கூறினாள்.  அந்த நெருக்கடியான நேரத்தில், மருத்துவர்.லட்சுமிபாய் “சீதா, நீ புயலை விட வலிமையானவள்; என்னுடன் சேர்ந்து சுவாசி போன்ற மென்மையான தைரியம் அளிக்கும் வார்த்தைகளுடன் கூடிய அணுகுமுறையால் சீதாவின் பயத்தை போக்கி தன்னம்பிக்கையை உருவாக்கினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆண் குழந்தை ஆரோக்கியமாக பிறந்தபோது, சீதா அம்மா நீங்கள் எங்களை காப்பாற்றுவது மட்டுமல்ல என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்ப வைத்தீர்கள் என உணர்வுபூர்வமாக நன்றி கூறினாள்.   ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தங்களை குணப்படுத்திக் கொள்ளும் உள்ளார்ந்த சக்தி இருப்பதாகவும் அதனை வெளிக்கொணர்வதும் மகப்பேறு மருத்துவத்தின் ஒரு அங்கம் என்றும் பல்வேறு இடங்களில் கூறியுள்ள மருத்துவர்.லட்சுமிபாயின் வார்த்தைகளுக்கு இந்த ஒரு சம்பவமே சிறந்த உதாரணம். இது நன்கொடை அல்ல, என் மரணத்திற்கு பின்பும் என் மருத்துவப் பணி தொடர்கிறது என்பதன் அடையாளம் என்று கூறியுள்ள மருத்துவர்.லட்சுமிபாய் இந்த நிதி பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த உலகு போற்றும் கொடையுடன் கூடுதலாக  இளம் பெண்களிடையே புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி திட்டங்களுக்காக பெர்ஹாம்பூர் மகப்பேறியல், மகளிர் மருத்துவ சங்கத்திற்கு மருத்துவர்.லட்சுமி பாய் 3 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். உங்கள் சேமிப்பு முழுவதையும் ஏன் மருத்துவ துறைக்கு கொடுத்து விட்டீர்கள் என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, நான் சம்பாதித்த அனைத்தும் மக்களிடமிருந்து வந்தது. அது அவர்களிடம், குறிப்பாக வெளியில் சொல்ல இயலாமல் அமைதியாக துன்பப்படும் பெண்களுக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று கூறினார். திருமணம் செய்துகொள்ளாமல், அரசுப் பணியில் தன்னை அர்ப்பணித்து, 35 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை ஆற்றியுள்ள மருத்துவர்.லட்சுமிபாய், தான் சிகிச்சையளித்த ஆயிரக்கணக்கான நோயாளிகளையும், தான் வழிகாட்டிய மருத்துவ மாணவமாணவிகளையும் தனது உண்மையான, உயிருள்ள சொத்துக்களாகவும், தனது குடும்பமாகவும் கருதுகிறார். ஆண்டுதோறும் புற்றுநோயால்   5000க்கும் மேற்பட்ட பெண்கள்  பாதிக்கப்படும் ஒடிசா மாநிலத்தில் மருத்துவ வசதி கள் குறைவாக இருப்பதால் இந்த நோயாளிகளின் உயிர் பிழைப்பு விகிதம் 50%-க்கும் குறைவாகவே உள்ளது. தாமதமான நோயறிதல், போதிய மருத்துவ வளங்கள் இல்லாதிருத்தல் ஆகிய காரணங்களால் கர்ப்பப்பை வாய்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒடிசா மாநிலத்தில் அதிகரித்து வரும் நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை இதுபோன்ற நோய்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தக் கொடையினை மருத்துவர்.லட்சுமிபாய் வழங்கினார்.  இந்த கொடைக்கான நிதியை காசோலையாக உறையில் வைத்து மருத்துவர்.லட்சுமிபாய் வழங்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் இது தொண்டு அல்ல உறையில் அடைக்கப்பட்ட புரட்சி என்று கூறினார். இதற்கு பதில் அளித்த மருத்துவர் லட்சுமிபாய் “உறைக்குள் இருக்கும் இந்தப் புரட்சியின் பலன் இருளில் வலியை பொறுத்துக் கொண்டு வெளியில் சொல்லாத பெண்களை சென்றடைய உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். தேர்தல்

விகடன் 18 Feb 2026 10:00 pm

பிரஜா சக்தி : வெறும் பம்மாத்து!

தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துக்காக கட்டப்பட்டுள்ள பிரஜா சக்திஎன்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என வடகிழக்கிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்ப்பு வெளியிட்டுவருகின்ற. தமிழ் கட்சிகள் வசமுள்ள சபையின் உறுப்பினர்கள் அத்திட்டத்துக்கு சபையும் ஒத்துழைக்காது எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பிரஜா சக்தி திட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், ஜே.வி.பி என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரச ஊழியர்களின் அதிகாரங்கள், சட்டவாக்கங்களை திட்டத்தின் ஊடாக கேள்விக்குறியதாக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது. மேலும் பிரஜா சக்திதிட்டம் கட்சியின் இருப்பை தக்கவைப்பதற்கான அரசின் ஏற்பாடாக இருக்கின்றதே தவிர மக்களின் வறுமையை ஒழிப்பதற்கான ஏற்பாடாக இருக்கவில்லை. ஊழல் மற்றும் அரசியல் தலையீடுகள், அதிகார மோசடிகள், இடம்பெறாது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று முழுமையாக அத்தனை மோசடிகளையும் ஊழல்களையும் மேற்கொள்கின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளது.

பதிவு 18 Feb 2026 9:47 pm

ரணிலின் பாரியாருக்கும் விசாரணையாம்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜராக அவரது மனைவிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இதனிடையே ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது. தலா இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார். சமன் ஏக்கநாயக்கவின் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். விசாரணையை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிணைக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்திருந்தார்.

பதிவு 18 Feb 2026 9:45 pm

இந்திய இராணுவ பாலம் ஆடுகின்றதாம்?

இந்திய அரசு டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கென கிளிநொச்சியில் பெரும்பரப்புiரைகளுடன் அமைத்து வழங்கிய பாலம் பொதுமக்கள் பயணிக்க அபாயகரமானதென அறிவிக்கப்பட்டுள்ளது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் இந்திய படைககளினால் அமைத்து வழங்கப்பட்ட பாலம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலமானது அண்மையில் ஏற்பட்ட டித்வாபுயலின் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் தற்காலிக பாலமாக அமைக்கப்பட்டு பொதுப்பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தது. அப்பாலத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக போக்குவரத்திற்கு உகந்த முறையில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்தது. இந்நிலையில், அண்மைக்காலமாக பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட பாதிப்புக்களைத் தொடர்ந்து கனரக வாகனங்களுக்கான போக்குவரத்துக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பேருந்து தவிர்ந்த அனைத்து விதமான கனரக வாகனங்களும் பாலத்தினூடாக பயணிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து சேவையானது பயணிகளை இறக்கி விடப்பட்டு பின்னர் பாலத்தினூடாக பயணிக்க முடியும்.ஏனைய அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட வேகக்கட்டுப்பாட்டுடன் பயணிக்க முடியுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

பதிவு 18 Feb 2026 9:39 pm

திருமணமாகி ஒருமாதம்; தந்தை கால்நடைகளை விற்றதால் உயிரை மாய்த்த இளைஞன்

மொனராகல, புத்தல பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், தனது தந்தை தனது கால்நடைகளை விற்றதால் மனமுடைந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் புஹுல்கொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதான லஹிரு உதயங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மனைவியும் விஷம் குடித்து மருத்துவமனையில் அவரது தந்தை கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார், மேலும் அவரது மகன் கால்நடைகளை பராமரித்து […]

அதிரடி 18 Feb 2026 9:35 pm

பாகிஸ்தானில் ஒரே நாளில் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள்! 11 வீரர்கள் உள்பட 14 பேர் கொலை!

பாகிஸ்தானில், ஒரே நாளில் நடைபெற்ற வெவ்வேறு குண்டுவெடிப்பு மற்றும் ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பஜாவூர் மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமை (பிப். 16) மாலை வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை ஓட்டிவந்த பயங்கரவாதி ஒருவர் அதனை அங்குள்ள மதக்கல்லூரியில் வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில், அங்கிருந்த 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பன்னு நகரத்தின் மிர்யான் […]

அதிரடி 18 Feb 2026 9:30 pm

தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்- அரசு தலைமை காஜி அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்க இருப்பதாக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

சமயம் 18 Feb 2026 8:40 pm

பிரித்தானியாவின் புதிய குடியுரிமை விதிமுறைகள்; பெண்களுக்கு பெரும் நெருக்கடி

பிரித்தானியாவின் இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள், பிரித்தானியாவிற்குள் நுழையும்போது இனி கண்டிப்பாக பிரித்தானிய கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை எதிர்வரும் பெப்ரவரி 25 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில் பிரித்தானியாவின் இந்த புதிய குடியுரிமை விதிமுறைகள் இரட்டை குடியுரிமை கொண்ட பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதாவது குறிப்பாகப் பெண்களுக்குப் பாரபட்சமாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்களுக்கு இந்தப் புதிய விதி பெரும் நெருக்கடிபிரித்தானிய கடவுச்சீட்டு இல்லாதவர்கள், “Certificate of Entitlement” எனும் […]

அதிரடி 18 Feb 2026 8:30 pm

Google நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார்!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Sundar Pichai அவர்கள், இந்திய பிரதமர்… The post Google நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Feb 2026 8:18 pm

தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு –வாய் திறந்தார் பிரித்தானிய தூதுவர்

தமிழ் அரசியல் தலைவர்களுடனான பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் சந்திப்பு தொடர்பாக, சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர்அன்ட்ரூ பட்றிக், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தச் சந்திப்பில் பங்கேற்றதை உறுதிப்படுத்தியுள்ள அவர்,நல்லிணக்கம், நிலைமாறுகால நீதி மற்றும் நீதி ஆகியவற்றை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும், நீதி மற்றும் சமத்துவம் குறித்த அவர்களின் முன்னுரிமைகளைக் கேட்பதிலும் பிரித்தானியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நேற்றுப்

புதினப்பலகை 18 Feb 2026 8:17 pm

Tamil Nadu CM Pushes for Greater State Autonomy

On Wednesday, Chief Minister M. K. Stalin presented a report in the Tamil Nadu Assembly calling for more powers and

சென்னைஓன்லைனி 18 Feb 2026 8:03 pm

திருமண சீசன் முடிவடையாதா? மாளவிகா மோகனனின் கலகலப்பான ஃபேஷன் பதிவு

நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் திருமண கால உடைகள் குறித்த அவரது கலகலப்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 8:00 pm

South Korea Captures Stunning “Ring of Fire” Eclipse

South Korea’s GEO-KOMPSAT-2A satellite has shared breathtaking footage of the annular solar eclipse, popularly called the “ring of fire”, which

சென்னைஓன்லைனி 18 Feb 2026 7:46 pm

AI Impact Summit 2026: Day 3 Highlights

It’s Day 3 of the AI Impact Summit 2026 at Bharat Mandapam, New Delhi, and the focus is on real-world

சென்னைஓன்லைனி 18 Feb 2026 7:39 pm

Nvidia Partners with Indian Firms to Expand AI

During the ongoing AI Impact Summit 2026 in New Delhi, Nvidia, the US-based chip company, announced several partnerships with Indian

சென்னைஓன்லைனி 18 Feb 2026 7:35 pm

Instant Paneer Tikka: Quick and Tasty Snack

Instant Paneer Tikka is a quick, tasty snack that can satisfy your evening hunger in no time. Ingredients: 120 gm

சென்னைஓன்லைனி 18 Feb 2026 7:31 pm

கிறிஸ்துவ மக்கள் மீது அபாண்ட பழி.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்பாரா அண்ணாமலை.. வெளுத்து வாங்கிய ஆளூர் ஷாநவாஸ்

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா தற்கொலை சம்பவத்தில் கட்டாய மதமாற்ற முயற்சி எதுவும் நடக்கவில்லை என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் மதமாற்றம் நடந்ததாக கூறிய பாஜகவை சார்ந்த அண்ணாமலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ், பாஜக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

சமயம் 18 Feb 2026 7:31 pm

தி வைவ்ஸ் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுர் பண்டார்கரின் நிதானம்: ரெஜினா கசாண்ட்ரா நெகிழ்ச்சி

'தி வைவ்ஸ்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுர் பண்டார்கரின் தொழில்முறை அணுகுமுறை மற்றும் அமைதியான செயல்பாடுகள் குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 7:30 pm

தி வைவ்ஸ் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுர் பண்டார்கரின் நிதானம்: ரெஜினா கசாண்ட்ரா நெகிழ்ச்சி

'தி வைவ்ஸ்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுர் பண்டார்கரின் தொழில்முறை அணுகுமுறை மற்றும் அமைதியான செயல்பாடுகள் குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 7:30 pm

அணுசக்தி விவகாரம்: அமெரிக்கா-ஈரான் இடையே முதல்கட்ட உடன்பாடு –ஜெனீவா பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 2-ஆம் கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தையில், அணுசக்தி விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது குறித்த அடிப்படை வழிகாட்டு நெறிமுறைகளில் இரு நாடுகளும் ஒரு பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இருப்பினும், இப்போதைக்கு முழுமையான ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பில்லை என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா். ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில், ஜெனீவாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் சுமாா் 4 மணி நேரம் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் அமெரிக்க […]

அதிரடி 18 Feb 2026 7:30 pm

Star Fruit: Natural Boost for Skin and Hair

We’ve all seen it—the bright, waxy, five-pointed fruit often used to decorate cocktails or sliced into stars for a tropical

சென்னைஓன்லைனி 18 Feb 2026 7:16 pm

Edible Beauty: Do Supplements Really Improve Skin?

Scroll through your Instagram feed, and you’ll likely spot it: an influencer holding a pastel-colored bottle, claiming that just a

சென்னைஓன்லைனி 18 Feb 2026 7:11 pm

Prenatal Infections: Risks for Mother and Baby

Prenatal infections are illnesses a woman can get during pregnancy or childbirth. They are usually caused by bacteria or viruses

சென்னைஓன்லைனி 18 Feb 2026 7:04 pm

Physical Inactivity Linked to Heart Risks in Diabetics

A global study has found that more than 13% of heart failure cases in people with diabetes in India may

சென்னைஓன்லைனி 18 Feb 2026 6:56 pm

ஏகே 64: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்தின் அடுத்த அதிரடி –நட்சத்திரக் கூட்டணி குறித்தத் தகவல்கள்

'குட் பேட் அக்லி' வெற்றிக்குப் பிறகு அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் 'AK64' திரைப்படத்தின் முதற்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தின் நட்சத்திரக் கூட்டணி குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 6:55 pm

சீனாவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் பலி

சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதன்கிழமை பட்டாசு விற்பனை செய்யும் ஒரு கடை வெடித்து தீப்பிடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர், இதனால் வளாகத்தின் 50 சதுர மீட்டர் பகுதி எரிந்ததாக மாநில ஒளிபரப்பாளர் சிசிடிவி தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மத்திய சீன நகரமான சியாங்யாங்கில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத சில்லறை விற்பனையாளரில் நடந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று சிசிடிவி தெரிவித்துள்ளது. சீனாவில் வாணவேடிக்கை தொடர்பான வெடிப்புகள் அசாதாரணமானது அல்ல, அங்கு பட்டாசுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் செவ்வாய்க்கிழமை தொடங்கிய சந்திர புத்தாண்டு விடுமுறை போன்ற கொண்டாட்ட சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுகின்றன. ஜூன் மாதத்தில், அண்டை நாடான ஹுனானில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு மற்றும் காற்று மாசுபாடு குறித்த கவலைகள் காரணமாக சீனாவின் சில நகரங்கள் பட்டாசுகளை தடை செய்துள்ளன, ஆனால் இந்த நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியவை, ஏனெனில் பாரம்பரியமாக தீய சக்திகளை பயமுறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களின் மையமாக உள்ளன.

பதிவு 18 Feb 2026 6:55 pm

சந்தேகிக்கப்படும் ரஷ்ய டேங்கர் கப்பலை விடுவித்தது பிரான்ஸ்

ரஷ்யாவின் தடைகளை உடைக்கும் நிழல் கடற்படையின் ஒரு பகுதியாக சந்தேகிக்கப்படும் எண்ணெய் டேங்கரை அதன் உரிமையாளர் அபராதம் செலுத்திய பின்னர் விடுவித்ததாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், கிரிஞ்ச் கப்பல் செவ்வாயன்று பல மில்லியன் யூரோக்கள்அபராதம் செலுத்தி பிரெஞ்சு கடல் பகுதியை விட்டு வெளியேறுகிறதுஎன்று கூறினார். ஜனவரி மாதம் மத்தியதரைக் கடலில் பிரெஞ்சுப் படைகளால் டேங்கர் கைப்பற்றப்பட்டு, பின்னர் துறைமுக நகரமான மார்சேய்க்கு திருப்பி விடப்பட்டது. அது வடக்கு ரஷ்யாவின் மர்மன்ஸ்கில் இருந்து புறப்பட்டு கொமொரோஸ் கொடியின் கீழ் பறந்து கொண்டிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாஸ்கோவின் நிழல் கடற்படை என்று அழைக்கப்படுவது, தெளிவற்ற உரிமை அல்லது காப்பீடு கொண்ட பழைய டேங்கர்களைப் பயன்படுத்தி ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் மேற்கத்திய தடைகளைத் தவிர்க்கப் பயன்படுத்தப்படும் டேங்கர் கப்பல்களின் இரகசிய வலையமைப்பாகும். 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், பல மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் மீது தடைகளை விதித்தன.

பதிவு 18 Feb 2026 6:45 pm

Mamitha Baiju Talks About Her Upcoming Films

Actor Mamitha Baiju, known for her role in ‘Jana Nayagan’, recently shared happy memories from the sets of three big

சென்னைஓன்லைனி 18 Feb 2026 6:43 pm

பஞ்சாப் திருமணத்தில் கொட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்? வைரல் வீடியோவின் பின்னணியில் உள்ள அதிரடி உண்மைகள்

பஞ்சாப் திருமண விழாவில் பல கோடி ரூபாய் இறைக்கப்பட்டதாகப் பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து மணமகன் குடும்பத்தினர் தற்போது விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 6:30 pm

உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கிய யூடியூப்

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று (18) திடீரென முடங்கிய நிலையில் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டவுன்டெக்டர் (Downdetector) தளத்தின் தரவுப்படி, சுமார் 2.4 இலட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப் பயன்படுத்துவதிலும், வீடியோக்களை பார்வையிடுவதிலும் சிக்கல்களைச் சந்திப்பதாகப் முறைப்பாடு அளித்துள்ளனர். குறிப்பாக வட்ஸ்அப் போன்ற தளங்களில் வீடியோ லிங்குகள் சரியாக தொழிற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தத் திடீர் முடக்கத்தால் […]

அதிரடி 18 Feb 2026 6:30 pm

Crompton Launches ‘Every Space Bright & Right’ Campaign to Redefine Home Lighting

Mumbai: Crompton Greaves Consumer Electricals Ltd. has unveiled a new integrated lighting campaign titled ‘Every Space Bright & Right with Crompton Lights’, aimed at encouraging consumers to move beyond brightness as the sole criteria for lighting decisions and instead adopt purpose-driven illumination tailored to different areas of the home.The campaign addresses a key consumer insight — that modern homes serve multiple functions, from workspaces and entertainment zones to areas of relaxation — yet lighting choices often follow a one-size-fits-all approach. By spotlighting the need for context-specific lighting, Crompton seeks to reposition illumination as a thoughtful lifestyle choice rather than a purely functional one.Rooted in the idea that every space requires a different lighting solution, the campaign underscores how glare, uneven visibility and overly harsh lighting can impact comfort and experience. Through its ‘Bright & Right’ proposition, the company encourages consumers to select lighting solutions aligned with the purpose and mood of each room.To amplify the message at scale, Crompton is deploying a multi-platform rollout spanning digital, out-of-home (OOH), print, cinema and influencer partnerships. The campaign will also feature large-format branding across key airports in South India, strengthening visibility among urban and transit audiences. The initiative highlights the company’s comprehensive lighting portfolio, covering both indoor and outdoor solutions designed to cater to evolving lifestyle needs.[caption id=attachment_2478207 align=alignleft width=200] Tanmay Prusty [/caption]Speaking about the campaign, Tanmay Prusty, Chief Marketing Officer – Crompton Greaves Consumer Electricals Ltd. , said, “At Crompton, we start with a clear understanding of how consumers live today. Homes are no longer static spaces — they have become workplaces, entertainment hubs, and places to unwind. Yet, lighting is still often chosen only on the basis of brightness. Through this campaign, we are encouraging consumers to think beyond brightness and choose lighting that is aligned to the purpose of every space. Our lighting portfolio reflects this focus, bringing together thoughtful design, advanced features, and intuitive functionality to enhance everyday comfort and experiences in modern Indian homes.” As part of the campaign, Crompton has also premiered a short film created using generative AI, marking a step forward in creative storytelling within the lighting category. Set across familiar home environments, the film captures everyday moments — from family dinners and kitchen routines to relaxation and entertainment — where lighting often falls short of the space’s intended purpose.The narrative then transitions to an outdoor setting with a dimly lit faade and entrance, before revisiting each space transformed with balanced, purpose-driven illumination. From warm decorative lighting in the living room to focused architectural track lights and softer ambient lighting in the bedroom, the film visually reinforces the brand’s core message. It concludes with outdoor illumination and product end frames, reiterating the campaign thought: ‘Every Space Bright & Right with Crompton Lights.’With this initiative, Crompton strengthens its positioning in the lighting segment, aligning product innovation with changing consumer lifestyles and reinforcing its presence in the modern Indian home.https://www.youtube.com/watch?v=A7T_2SAbZTc

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 6:26 pm

Jaffer Sadiq Excited to Join Rajinikanth’s ‘Jailer 2’

Actor Jaffer Sadiq has officially confirmed his role in the much-awaited movie ‘Jailer 2’, sharing his excitement about working with

சென்னைஓன்லைனி 18 Feb 2026 6:19 pm

ரணில் மனைவிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க , இம்மாதம் 20ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த , 2023ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட […]

அதிரடி 18 Feb 2026 6:12 pm

Allu Arjun, Lokesh Kanagaraj Collaborate on New Film

Popular actor Allu Arjun is teaming up with filmmaker Lokesh Kanagaraj, known for hits like Coolie and Leo, for an

சென்னைஓன்லைனி 18 Feb 2026 6:10 pm

யாழில். குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை போதையில் மது போத்தலால் குத்திய கணவன்

குடும்ப தகராறு காரணமாக தன்னை பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து , மனைவியை மதுபான போத்தலால் தாக்கி , பின்னர் உடைந்த போத்தால் உடலில் குத்தி காயங்களை ஏற்படுத்தி விட்டு கணவன் தப்பி சென்றுள்ளார். நாகர்கோவில் பகுதியில் நேற்றையதினம் இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குடும்ப தகராறு காரணமாக கணவனை விட்டு பிரிந்து பிள்ளைகளுடன் தாக்குதலுக்கு இலக்கான பெண் வாழ்ந்து வந்துள்ளார். ஆசிரியரான குறித்த பெண் , மேலதிக வருவாயை […]

அதிரடி 18 Feb 2026 6:10 pm

James and Kimberly Van Der Beek Renew Vows

Just a few days before James Van Der Beek passed away, he and his wife Kimberly Van Der Beek experienced

சென்னைஓன்லைனி 18 Feb 2026 6:00 pm

ஹர்திக் இருந்திருந்தால் 2023 இறுதியில் ஆஸ்திரேலியா தோற்றிருக்கும்? – கைஃப் கருத்து!

டெல்லி : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆரம்பகட்ட வெளியேற்றத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியா மூன்று போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்பே தகுதி இழந்தது. இதை கைஃப் “கடுமையான சரிவு” என்று குறிப்பிட்டார்.கைஃப் கூறுகையில், 2023 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற பிறகு ஆஸ்திரேலியா “மைத்தி ஆஸ்ஸீஸ்” (Mighty Aussies) என்று அழைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு […]

டினேசுவடு 18 Feb 2026 5:56 pm

“சூர்யா சார் –ஜோதிகா மேடம் கொடுத்த சர்ப்ரைஸ்.. குஷியில் மிதக்கும் ‘சர்வம் மாயா’ரியா ஷிபு! என்ன மேட்டர் தெரியுமா?”

'சர்வம் மாயா' படத்தின் நடிப்பைப் பாராட்டி நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா அனுப்பிய அன்புப் பரிசிற்கு நடிகை ரியா ஷிபு நன்றி தெரிவித்துள்ளார். திரையுலகினரிடையே நிலவும் இந்த ஆரோக்கியமான பாராட்டு தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 5:55 pm

மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் (18.02.2026) காலை 10.00 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் , சர்வதேச தரத்திலான கிரிக்கெட் […]

அதிரடி 18 Feb 2026 5:53 pm

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்கள் அரசு ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படாததால் மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 1994–95 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 138 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. பின்னர் இந்த நில உரிமை தொடர்பாக சையத் ரஹமத்துல்லா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், திருவண்ணாமலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அரசால் வழங்கப்பட்ட பட்டா செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இரு நீதிமன்றங்களும் நிலம் அருந்ததியர் மக்களுக்கே என்பதைக் உறுதிப்படுத்தியிருந்தன. இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் அரசு ஆவணங்களில் பட்டாக்கள் பதிவேற்றம் செய்யப்படாததால், மின்சார இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. மின்சாரம் இல்லாத இரவுகள் இங்கு வழக்கமானவை. குழந்தைகள் விளக்கின் வெளிச்சமின்றி படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர். நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும் அவசர நேரங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இரவுகள் நரகம் ஆகிறது. குடிநீர் மற்றும் சாலை வசதிகளும் போதுமான அளவில் இல்லை. இந்த நிலையை மாற்றக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த 70 நபர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் 17/02/2026 அன்று மாநில துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம் அவர்களிடம் மனு வழங்கினார்கள். இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம் கூறுகையில், ''1995-ல் 138 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் அரசு அதிகாரிகள், குறிப்பாக ஆதிதிராவிடர் அலுவலர்கள், வருவாய் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசு ஆவணங்களில் இதுநாள் வரை பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாத காரணத்தினால் அவர்கள் வீடு கட்டவும், மின்சார வசதி பெறவும் முடியவில்லை. 2026 காலத்தில் கௌதம புத்தர் நகரில் மின்சாரம் இல்லாமல் இருப்பது என்பது ஏற்புடையது அல்ல. இந்த மனு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிச் செயலர் சண்முகம் ஐஏஎஸ் அவர்களிடம் இது குறித்து தொலைபேசி மூலம் பேசப்பட்டுள்ளது,” என்றார். விரைவில் அவர்கள் வாழ்வில் ஒளி வீசும் என நம்புவோம்.!

விகடன் 18 Feb 2026 5:47 pm

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. சி.பி.எம் கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் மாநிலம் முழுவதும் பரவலாக செல்வாக்கு உள்ளது. சி.பி.எம் தற்போது ஆட்சியில் உள்ளது, காங்கிரஸ் ஏற்கனவே ஆண்ட கட்சியாக உள்ளது. அதே சமயம் பா.ஜ.க இப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பா.ஜ.க அமைப்பு ரீதியாக பலம்பெற்று வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேமம் சட்டசபை தொகுதியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ-வாக இருந்தார். கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க அதிக வார்டுகளில் வென்றது. பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராக உள்ளார். பா.ஜ.க-வுக்கு அடித்தளம் உள்ளதால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விரும்பி அக்கட்சி தலைவர்கள் காய் நகர்த்துகின்றனர். மேயர் வி.வி.ராஜேஷ் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருவனந்தபுரம், வர்க்கலா, ஆற்றிங்கல், சிறையின்கீழ், நெடுமங்காடு, வாமனபுரம், களக்கூட்டம், வட்டியூர்காவு, நேமம், அருவிக்கரை, காட்டாக்கடை, கோவளம், நெய்யாற்றின்கரை, பாறசாலை ஆகிய 14 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் திருவனந்தபுரம், நேமம், களக்கூட்டம் சட்டசபை தொகுதிகள் முழுவதும் திருவனந்தபுரம் மாநகராட்சி வார்டுகளை மட்டுமே உள்ளடக்கியதாகும். வட்டியூர்காவு உள்ளிட்ட சில தொகுதிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் சில வார்டுகள் வருகின்றன. எனவே, மாநகராட்சியை உள்ளடக்கிய தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க தலைவர்கள் முட்டிமோதுகின்றனர். திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட நடிகர் கிருஷ்ணகுமார் முயல்கிறார். திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவி வழங்காத கோபத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஐ.பி.எஸ் வெளியே கூறிவருகிறார். ஆனாலும், அவர் மறைமுகமாக வட்டியூர்காவு தொகுதியில் போட்டியிட்டால் தனக்கு சாதகமாக களம் இருக்குமா என தனது ஆதரவாளர்கள் மூலம் பல்ஸ் பார்த்து வருகிறாராம். கேரளாவில் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கொடுத்த நேமம் தொகுதி தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப்போட்டு அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கிவிட்டாராம் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர். முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஆற்றிங்கல் தொகுதியை மாநில நிர்வாகிகள் சுதீர் மற்றும் ஷோபா சுரேந்திரன் ஆகியோர் கேட்கிறார்கள். காட்டாக்கடை தொகுதியில் போட்டியிட பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கே.கிருஷ்ணதாஸ் விரும்புகிறார். பாறசாலை தொகுதியில் கரமன ஜெயன், களக்கூட்டம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் நெய்யாற்றின்கரை தொகுதியில் செங்கால் ராஜசேகர் ஆகியோர் போட்டியிட விரும்பி டெல்லி தலைவர்களை சுற்றி வருகிறார்களாம். அதே சமயம் பா.ஜ.க கூட்டணியில் உள்ள ட்வெண்டி ட்வெண்டி கட்சியும், பி.டி.ஜே.எஸ் கட்சியும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க-வுக்கு சாதகமான சில தொகுதிகளை கேட்கின்றன. இதனால், என்.டி.ஏ கூட்டணிக்குள் தொகுதி பங்கு வைப்பதில் இழுபறி நீடிக்கிறது.!

விகடன் 18 Feb 2026 5:37 pm

Shikhar Dhawan and Anil Kapoor unite for Subedaar campaign ahead of T20 World Cup Super 8s

Mumbai: In a high-energy crossover between sport and cinema, Indian cricket icon Shikhar Dhawan has teamed up with Bollywood veteran Anil Kapoor for a special promotional campaign for the upcoming film Subedaar, set to release worldwide on Prime Video on March 5.The collaboration comes as India advances to the Super 8 stage of the ICC Men's T20 World Cup, leveraging the heightened national fervour around cricket to build buzz for the film’s launch.Fondly known as ‘Mr. ICC’ for his standout performances in major international tournaments, Dhawan appears alongside Kapoor in his on-screen role as retired soldier Arjun Maurya. The campaign blends the intensity of elite sport with cinematic action, portraying both personalities as fearless competitors ready to face challenges—whether on the cricket field or in battle on screen. Shikhar Dhawan said, It was a great experience shooting for the Subedaar movie campaign with Mr. Anil Kapoor. The way he brings alive every character rubs off on you. With this campaign, you can feel that fighting spirit throughout, the mindset of standing strong and giving everything you’ve got. That’s something I connect with deeply and have applied on the cricket field. I believe people will also feel that emotion and energy when they watch it.” Anil Kapoor s aid, “The story of movie Subedaar is rooted in courage, resilience and the spirit of never giving up. Those are qualities that define great sportspersons as well. Shikhar carries that fighter’s instinct naturally, and you can feel that strength and positivity when you work with him. It was a pleasure sharing the screen with someone who represents that spirit so authentically.” The association reinforces Dhawan’s stature as a cultural icon whose influence extends beyond the cricket field, while also enhancing the scale and mass appeal of Subedaar through a strategic sporting connection timed with a marquee international tournament.By bringing together one of India’s most recognisable sporting figures and a celebrated film star, the campaign creates a larger-than-life promotional moment—building anticipation not only for the film’s March 5 release but also for India’s campaign in the World Cup Super 8 stage. View this post on Instagram A post shared by prime video IN (@primevideoin)

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 5:30 pm

Shikhar Dhawan and Anil Kapoor unite for Subedaar campaign ahead of T20 World Cup Super 8s

Mumbai: In a high-energy crossover between sport and cinema, Indian cricket icon Shikhar Dhawan has teamed up with Bollywood veteran Anil Kapoor for a special promotional campaign for the upcoming film Subedaar, set to release worldwide on Prime Video on March 5.The collaboration comes as India advances to the Super 8 stage of the ICC Men's T20 World Cup, leveraging the heightened national fervour around cricket to build buzz for the film’s launch.Fondly known as ‘Mr. ICC’ for his standout performances in major international tournaments, Dhawan appears alongside Kapoor in his on-screen role as retired soldier Arjun Maurya. The campaign blends the intensity of elite sport with cinematic action, portraying both personalities as fearless competitors ready to face challenges—whether on the cricket field or in battle on screen. Shikhar Dhawan said, It was a great experience shooting for the Subedaar movie campaign with Mr. Anil Kapoor. The way he brings alive every character rubs off on you. With this campaign, you can feel that fighting spirit throughout, the mindset of standing strong and giving everything you’ve got. That’s something I connect with deeply and have applied on the cricket field. I believe people will also feel that emotion and energy when they watch it.” Anil Kapoor s aid, “The story of movie Subedaar is rooted in courage, resilience and the spirit of never giving up. Those are qualities that define great sportspersons as well. Shikhar carries that fighter’s instinct naturally, and you can feel that strength and positivity when you work with him. It was a pleasure sharing the screen with someone who represents that spirit so authentically.” The association reinforces Dhawan’s stature as a cultural icon whose influence extends beyond the cricket field, while also enhancing the scale and mass appeal of Subedaar through a strategic sporting connection timed with a marquee international tournament.By bringing together one of India’s most recognisable sporting figures and a celebrated film star, the campaign creates a larger-than-life promotional moment—building anticipation not only for the film’s March 5 release but also for India’s campaign in the World Cup Super 8 stage. View this post on Instagram A post shared by prime video IN (@primevideoin)

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 5:30 pm

இந்தியா –பிரான்ஸ் 21 ஒப்பந்தங்கள்: பிரதமா் மோடி, அதிபா் மேக்ரான் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா, பிரான்ஸ் இடையே பாதுகாப்பு, உயா் தொழில்நுட்பம், முக்கியக் கனிமங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 21 ஒப்பந்தங்கள் மற்றும் பூா்வாங்க ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையொப்பமாகின. மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் இடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. தில்லியில் நடைபெற்றுவரும் சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக […]

அதிரடி 18 Feb 2026 5:30 pm

முதியவர் கடத்தல்: தவறான நபரைக் கடத்தியிருக்கலாம்: காவல்துறை

சிட்னியில் உள்ள அவரது வீட்டிலிருந்து 85 வயது முதியவர் கடத்தப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, தாத்தா தவறான அடையாள வழக்கால் பாதிக்கப்பட்டிருக்கலாம் குற்றவாளிகள் தவறான நபரை கடத்திச் சென்றிருக்கலாம். சிட்னியில் 85 வயது தாத்தா கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் ஆஸ்திரேலியாவை பல நாட்களாக பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த நபர் தவறான அடையாளத்தின் துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவரது குடும்பத்தினர் ஒரு கொடுங்கனவு என்றும் அவரது உடல்நிலை குறித்து அச்சம் கொள்வதாகவும் பேசுகின்றனர். வெள்ளிக்கிழமை அதிகாலை (உள்ளூர் நேரப்படி) சிட்னியின் வடமேற்கில் உள்ள நார்த் ரைட் புறநகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து கிறிஸ் பாக்சாரியன் கடத்தப்பட்டார். காவல்துறையினரின் கூற்றுப்படி, முகமூடி அணிந்த குறைந்தது இரண்டு குற்றவாளிகள் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், மற்றொரு கூட்டாளி தப்பிச் செல்ல காரை ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கார் அண்டை புறநகர்ப் பகுதியில் எரிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவாளிகளின் உண்மையான இலக்கு பாக்சரியன் அல்ல என்று புலனாய்வாளர்கள் தற்போது கருதுகின்றனர். காவல்துறையினர் இதை நூறு சதவீதம் உறுதியாக நம்புகிறார்கள் என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். அதற்கு பதிலாக யார் கடத்தப்படுவார்கள் என்பது குறித்து அதிகாரிகள் எந்த உறுதியான அறிகுறிகளையும் வழங்கவில்லை. இருப்பினும், கடத்தல்காரர்கள் ஒரு முக்கிய குற்றவியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிகிறது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தே நேரத்தில், பணயக்கைதியின் உடல்நிலை குறித்து பெரும் கவலை நிலவுகிறது. 85 வயதான அவர் கைகள் கட்டப்பட்டு முகம் மூடப்பட்டிருப்பதைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அவர் தினசரி மருந்துகளையும் சார்ந்து இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். உறவினர்கள் கூறுகையில், குடும்பம் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு நிகழ்வில் இழுத்துச் செல்லப்பட்டதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாக்சாரியன் ஒரு அர்ப்பணிப்புள்ள தந்தை, சகோதரர், மாமா மற்றும் தாத்தா, மென்மையான மற்றும் கனிவான மனிதர்.

பதிவு 18 Feb 2026 5:20 pm

Salim Khan Stable, Receiving Care at Mumbai Hospital

Veteran screenwriter Salim Khan is currently under medical care at Lilavati Hospital in Mumbai after being admitted on Tuesday. Doctors

சென்னைஓன்லைனி 18 Feb 2026 5:18 pm

Chola MS launches health insurance film series highlighting life-stage solutions

Chennai: Cholamandalam MS General Insurance Company Limited (Chola MS), a joint venture between the Murugappa Group and Mitsui Sumitomo Insurance Company Limited, has launched a first-of-its-kind health insurance film series aimed at highlighting how health concerns evolve across life stages—and how insurance solutions must evolve alongside them.The campaign brings to life Chola MS’s wide bouquet of health insurance offerings, positioning them as flexible and customer-centric solutions tailored to address diverse and changing health needs. Instead of addressing health insurance in generic terms, the films focus on practical nuances that resonate with consumers, including adaptability, relevance and comprehensive protection.One of the films underscores how Chola MS offers solutions for every health worry, irrespective of life stage. Another showcases the unique features and built-in flexibility of its products, reinforcing the message that health insurance should adapt to the customer—not the other way around.At the core of the campaign is the Chola MS policyholder. Recognising that each individual’s health journey is distinct, the company offers plans that can be customised to specific requirements—whether for first-time policy buyers, growing families or individuals seeking enhanced coverage. The initiative highlights the insurer’s continued focus on clarity, choice and long-term confidence, ensuring customers feel supported throughout their insurance lifecycle.Conceptualised in line with the brand’s #SimpleHai philosophy, the films aim to demystify complex insurance concepts through relatable storytelling, enabling customers to make informed decisions with greater ease.Through this latest campaign, Chola MS reinforces its commitment to a customer-first approach—offering not just health insurance policies, but thoughtfully designed solutions that are simple, relevant and dependable across every stage of life.https://www.youtube.com/watch?v=qZNmwfTwNMkhttps://www.youtube.com/watch?v=Ch2kT8qOrzQ

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 5:18 pm

Shiva Rajkumar, Upendra and Raj B. Shetty unite as 45 premieres on Zee Kannada

Bengaluru: Zee Kannada continues to strengthen its weekend programming slate with the World Television Premiere of 45, set to air on 22 February at 4:30 PM. Known for its mix of compelling fiction, reality shows and blockbuster premieres, the channel is adding another high-profile title to its entertainment line-up.45 is a fantasy action drama that blends philosophy with high-octane sequences and emotional storytelling. The film marks the directorial debut of acclaimed music composer Arjun Janya and is produced by M. Ramesh Reddy under the Suraj Productions banner. With a narrative that combines supernatural elements, intense confrontations and reflective life lessons, the film positions itself as a family entertainer with depth.The film features a stellar ensemble cast including Shiva Rajkumar, Upendra and Raj B. Shetty, whose performances are expected to anchor the film’s dramatic and emotional arcs.The story follows Vinay (Raj B. Shetty), a carefree software engineer living a simple life with his mother and girlfriend Meghana. A sudden accident — in which he runs over a black dog named Rosie, beloved by local don Rayappa (Upendra) — sets off an unexpected chain of events. Instead of immediate retribution, Rayappa gives Vinay 45 days to reflect on his actions, invoking the Garuda Purana’s concept of life after death.As the countdown begins, Vinay is plagued by disturbing dreams that appear to predict real events, including his own fate. Amid mounting fear and uncertainty, he encounters Shivanna (Shiva Rajkumar), a compassionate and strong-willed figure who becomes his guide and protector. The narrative unfolds as Vinay grapples with guilt, destiny and forces seemingly beyond his control.Speaking about the premiere, Deepak Sriramulu, Chief Channel Officer-Zee Kannada & Business Head - Kannada Zee5, said, “The coming together of Hattrick Hero Shiva Rajkumar, Real Star Upendra and Raj B Shetty makes 45 a truly special film. Watching these three stalwarts share screen space is an electrifying experience, as each of them brings immense intensity, charisma and emotional depth to the story. This premiere is not just about a film; it is a celebration of three iconic performers uniting for our viewers on Zee Kannada.” With a blend of star power, action and philosophical undertones, 45 is positioned as a marquee weekend offering for Kannada audiences. Viewers can tune in to watch the gripping journey unfold exclusively on Zee Kannada on 22 February at 4:30 PM.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 5:11 pm

India’s Stock Market Likely to Rebound Soon

India’s stock market has been performing below global markets for three years in a row, with 2026 marking the third

சென்னைஓன்லைனி 18 Feb 2026 5:08 pm

SportVot bags exclusive digital rights for 72nd Senior Men’s Kabaddi Nationals

Mumbai: SportVot has secured exclusive live streaming rights for the 72nd National Senior Men’s Kabaddi Championship 2026, marking a significant step in expanding digital access to grassroots and domestic Indian sports.The tournament, organised by the Gujarat State Kabaddi Association and Vadodara Kabaddi Association under the aegis of the Amateur Kabaddi Federation of India (AKFI), will be held from 24 to 27 February 2026 at the Indoor Sports Complex in Vadodara.For the first time, the National Senior Men’s Kabaddi Championship will be streamed live nationwide, enabling fans across India to watch one of the country’s most prestigious domestic kabaddi tournaments through SportVot’s tech-enabled platform.The championship is expected to feature participation from 35 states, along with Indian Railways and Services teams, making it one of the largest kabaddi tournaments in the country. A key fixture in the domestic kabaddi calendar, the event serves as a critical platform for elite state-level players and a pathway to professional leagues such as the Pro Kabaddi League.Defending champions Haryana will return to protect their title following a commanding performance in the previous edition.All matches will be streamed live on the SportVot App, allowing fans, players, coaches and stakeholders to track the action in real time regardless of their location.[caption id=attachment_2492331 align=alignleft width=275] Siddhant Agarwal [/caption]Speaking on the occasion, Siddhant Agarwal, Founder & CEO, SportVot, said “Kabaddi is deeply rooted in India’s sporting culture, and national championships like this are where the future of the sport is shaped. By digitising and live-streaming the National Senior Men’s Kabaddi Championship, we aim to give athletes the visibility they deserve and fans an experience that matches the intensity of the game. This is a big stage, and we believe consistent coverage plays a key role in building the next kabaddi legacy. Tushar Arothe, Org. Secretary, Gujarat Kabaddi Association, added “As hosts of this year’s National Senior Men’s Kabaddi Championship, the Gujarat Kabaddi Association is honoured to welcome the best teams from across the country to Vadodara. We are delighted that SportVot will be live streaming the tournament, giving supporters everywhere an opportunity to experience the passion and skill of our players in real time. This collaboration not only celebrates the spirit of kabaddi but also brings our grassroots heroes closer to a national audience.” With a mix of seasoned professionals, emerging state-level talent and high-stakes fixtures, the four-day championship is expected to deliver intense competition while showcasing the depth of India’s kabaddi ecosystem. Through SportVot’s exclusive coverage, the tournament will now be accessible nationwide at the tap of a button, reinforcing the growing role of digital platforms in democratising sports viewership.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 5:08 pm

ஜெனீவா மருத்துவமனை வார்டில் இனவெறியால் 120 பேர் பாதிப்பு

ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையில் மறுவாழ்வு மற்றும் முதியோர் மருத்துவத் துறையில் 120க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இனவெறியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுவாழ்வு மற்றும் முதியோர் மருத்துவத் துறையின் (DHG) ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் - அதாவது 487 பேர் இந்த கணக்கெடுப்புக்கு பதிலளித்தனர். இவர்களில், 26.5 சதவீதம் பேர் தங்கள் தொழில்முறை சூழலில் இனவெறியை அனுபவித்ததாகக் கூறினர். இடம்பெயர்வு பின்னணி கொண்ட மக்களிடையே இந்த விகிதம் 45 சதவீதமாக அதிகமாகவும், இடம்பெயர்வு பின்னணி இல்லாதவர்களிடையே 20 சதவீதத்திற்கும் குறைவாகவும் உள்ளது. இந்த ஆண்டு, இந்த ஆய்வு முழு நிறுவனத்திற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஆரம்ப அறிக்கைகளைத் தொடர்ந்து, அந்த வசதி கடந்த ஆண்டு இரண்டு குற்றவியல் குற்றச்சாட்டுகளை அறிவித்தது. இரண்டு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் விதிக்கப்பட்டன. 680 ஊழியர்களுக்கு பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு DRG செவிலியரின் புகாரைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அவருக்கு வேறொரு துறையில் பணி வழங்கப்பட்டது.

பதிவு 18 Feb 2026 5:08 pm

Z accelerates syndication growth with 350+ channel MCN Network and global alliances

Mumbai: Zee Entertainment Enterprises Ltd. (‘Z’) has significantly expanded its syndication vertical, strengthening its ability to unlock incremental value from its extensive content library across digital platforms and international markets.As part of the expansion, the Company has secured a Multi-Channel Network (MCN) licence and onboarded over 350 channels into its syndication ecosystem. The move enables ‘Z’ to manage, distribute and monetise content at scale across leading digital platforms, reinforcing its presence in the rapidly growing creator and short-form content economy.In line with evolving consumption patterns, particularly mobile-first viewing, ‘Z’ has also entered into strategic partnerships to repackage its content into new-age formats. This includes a collaboration with Story TV, under which select titles from its content library are being adapted into vertical-format, short-duration episodes tailored for mobile audiences.The syndication business is simultaneously expanding the Company’s global footprint through foreign-language dubbing and regional partnerships across Europe, Africa and Latin America. The initiative is aimed at monetising Indian content among diverse international audiences and strengthening its overseas distribution strategy.Further diversifying revenue streams, ‘Z’ has begun monetising its intellectual property across audio platforms. Audio remake rights have been initiated for legacy titles such as Zee Horror Show, with several additional shows in the pipeline for audio-first adaptations. The move reflects growing demand for reimagining established television IP into podcast-style and audio streaming formats.The Company has also made progress in monetising non-exclusive digital rights for its film library, while converting select shows and movies from traditional horizontal viewing into vertical formats to improve discoverability and engagement on short-form and syndication-driven platforms.[caption id=attachment_2492326 align=alignleft width=188] Vinod Johri [/caption]Speaking about the growth of the syndication vertical, Vinod Johri, Business Head – Syndication, Zee Entertainment Enterprises Ltd. , said, “Syndication has become a powerful growth lever for us by allowing our content to travel further, adapt faster and monetize smarter. With our MCN network, global partnerships and focus on new formats such as vertical video and audio adaptations, we are building a future-ready syndication engine that unlocks sustained value from our content library.” The developments underline the Company’s broader push toward platform-agnostic content monetisation, as it continues to repurpose, localise and distribute its IP across geographies, formats and screens in a bid to maximise long-tail value.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 5:04 pm

கலிபோர்னியா பனிச்சரிவில் ஒன்பது பனிச்சறுக்கு வீரர்களைக் காணவில்லை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கேஸில் பீக் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒன்பது ஸ்கை வீரர்கள் காணாமல் போயுள்ளனர். தஹோ தேசிய வனப்பகுதியில் உள்ள டிரக்கி கிராமத்திற்கு அருகே இறக்கத்தில் இருந்து மேலும் ஆறு பேர் தப்பிப்பிழைத்ததாகவும், பின்னர் பல்வேறு காயங்களுடன் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் நெவாடா கவுண்டி ஷெரிப் அலுவலகம் பேஸ்புக்கில் அதன் சமீபத்திய பதிவில் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில், பத்து பேர் காணாமல் போயுள்ளதாக ஷெரிப் அலுவலகம் கருதியது. ஆனால் பின்னர் இந்த எண்ணிக்கையை கீழ்நோக்கி திருத்தியுள்ளது. தீவிர வானிலை காரணமாக உயிர் பிழைத்தவர்களை அவசரகால பணியாளர்கள் சென்றடைய பல மணிநேரம் ஆனது என்று ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மாநிலமான நெவாடாவின் எல்லையில் கலிபோர்னியாவில் உள்ள தஹோ தேசிய வனப்பகுதி அமைந்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான தஹோ ஏரியும் இங்கு அமைந்துள்ளது. தஹோ ஏரியின் வடமேற்கே பனிச்சரிவு ஏற்பட்டது. மீட்கப்பட்ட ஆறு பேரில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. 50க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டதாக அது தெரிவித்துள்ளது. 15 பேர் கொண்ட குழுவில் ஸ்கை வழிகாட்டிகளும் அடங்குவர். இந்த நேரத்தில் கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று ஷெரிப் அலுவலகம் செவ்வாய்க்கிழமை இரவு (உள்ளூர் நேரம்) அதன் சமீபத்திய பதிவில் தெரிவித்துள்ளது. தப்பிப்பிழைத்த ஆறு பேரும் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதியில் தஞ்சம் புகுந்ததாக அமெரிக்க ஒளிபரப்பாளர் NBC கூறியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 80 சென்டிமீட்டர் பனி பெய்துள்ளது.

பதிவு 18 Feb 2026 5:03 pm

சர்வதேச மைதானம் அமைவதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வடக்கு மாகாண சபை… The post சர்வதேச மைதானம் அமைவதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Feb 2026 5:02 pm

Glucovita unveils India’s first glucose lollipop with ‘Energy Ka Power Bank’ Campaign

Mumbai: Glucovita, the glucose brand from Wipro Consumer Care & Lighting, has announced the launch of India’s first glucose-based lollipop, priced at ₹5. Positioned as a quick energy booster for children, the Glucovita Lollipop is fortified with Glucose and Vitamin C and is marketed as a “Power Bank of Energy” for active kids managing school, sports, outdoor play and everyday activities.The company said the new format aims to combine taste and functionality, offering a convenient energy replenishment option in a confectionery format familiar to children.The launch is supported by a television campaign titled ‘Energy Ka Power Bank’, featuring “Robin”, a young protagonist who navigates a tricky birthday party moment with confidence and a timely boost from the lollipop. The film highlights the energy and curiosity of today’s children, positioning the product as a companion to their daily adventures.Speaking on the launch, S. Prasanna Rai, Senior Vice President – Marketing, Wipro Consumer Care & Lighting, said, Glucovita has always stood for energy. With the new Glucovita Lollipop, we wanted to bring that trusted energy to a format children already enjoy. The TVC brings this idea to life, highlighting how a small boost of energy can make everyday moments fun and full of possibility. We are excited to introduce India’s first glucose lollipop, a candy that’s as joyful as it is energizing. Available in Orange, Strawberry and Watermelon flavours, each lollipop is priced at ₹5. Retail packs contain 48 units and are currently being distributed across retail stores in Tamil Nadu, Andhra Pradesh and Telangana.With this launch, Glucovita expands its product portfolio into the confectionery segment, leveraging its energy-focused positioning to tap into impulse purchase categories and strengthen its presence in regional markets.http://youtube.com/watch?v=4rETVhsZdXA

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 4:56 pm

ஹே ராம் 25 ஆண்டுகள்: இந்தியச் சினிமாவின் வரலாற்றுப் போக்கை மாற்றிய கமல்ஹாசனின் காவியம்

கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்த 'ஹே ராம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் புதிய கோணத்தில் அணுகிய இப்படம் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 4:55 pm