CUET PG 2026 விண்ணப்பம் தொடக்கம்; மார்ச் மாதம் தேர்வு - நேரடியாக விண்ணப்பிக்க லிங்க் இதோ
முதுகலை பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான முதுகலை க்யூட் 2026 (CUET PG 2026) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் இத்தேர்வு 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் https://exams.nta.nic.in/cuet-pg/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
6 மாசத்துல வரும்னு செல்வராகவன் சொன்னது விவாகரத்தை தானா?: ரசிகர்கள் அதிர்ச்சி
ஆர்யன் பட பேட்டியில் செல்வராகவன் பேசிய வீடியோவை பலரும் ஷேர் செய்து விவாகரத்து குறித்து தான் அக்டோபர் மாதமே பேசியிருக்கிறாரா இயக்குநர் செல்வராகவன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேமுதிக: ``2026 தேர்தலுக்குத் தயார், 234 தொகுதியும் எங்கள் இலக்கு - பிரேமலதா கொடுத்த அப்டேட்
தேமுதிகவின் இளைஞர் அணிச் செயலாளரான விஜய பிரபாகரனின் 34-வது பிறந்தநாள் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதற்கிடையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இன்றைக்கு விஜய பிரபாகருடைய பிறந்த நாள். விமானம் ரத்து போன்ற சிக்கலால் விஜய பிரபாகரன் இன்னும் சென்னை வந்து சேரமுடியவில்லை. விஜய பிரபாகரன் மும்பையில் அதிகாலை 4 மணியிலிருந்து விமான நிலையத்தில் காத்திருக்கிறார். இன்று மாலைக்குள் சென்னை வந்துவிடுவார். தம்பியை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த மாதம் 28-ம் தேதி கேப்டனுடைய குரு பூஜை நிகழ்ச்சி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும், நிர்வாகிகள் தொண்டர்கள் வருகிறார்கள். அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே மூன்று கட்டம் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' மற்றும் 'மக்களைத் தேடி மக்கள் தலைவர்' ரத யாத்திரையை முடித்திருக்கிறோம். ஜனவரி 9 கடலூரில் நடக்கின்ற மாநாடுக்கும் தயாராகி வருகிறோம். அந்த மாநாடுதான் இப்போதைக்கு எங்களுடைய அடுத்த இலக்கு. அந்த மாநாட்டில் ஒரு நல்ல ஒரு அறிவிப்பு நிச்சயமாக வழங்குவோம். கேப்டன் இருந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளும், மத்தியில் இருக்கும் கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். அந்த வகையில எல்லாருமே தோழமையோடு, நட்புணர்வோடு பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நல்ல ஒரு தகவலை அறிவிப்போம். பிரேமலதா விஜயகாந்த் எங்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் களத்தில் இருக்கிறார்கள். ஒருவருடமாக இந்தத் தேர்தலுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 68000 பூத்திலும் பூத் கமிட்டி அமைத்திருக்கிறோம். எனவே, தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் இப்போது உங்களிடம் உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 234 தொகுதிகளும் எங்கள் இலக்குதான். காங்கிரஸ் - தாவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்றால் அது குறித்து அவர்களிடம்தான் பேச வேண்டும். எங்களுக்கு எந்தக் கருத்தும் கிடையாது. எல்லா கட்சியும் எங்களுக்கு நட்புதான் என்பதால், உரிய நேரத்தில் தெளிவாக பதில் சொல்லவோம். என்றார். திமுக கூட்டணி கட்சிகள் இன்று அடிமைகளாக செயல்பட்டு வருகின்றன - சொல்கிறார் செல்லூர் ராஜூ
”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு
தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பள்ளியில் படித்துக்கொண்டு விளையாட்டுப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் புகார் இந்நிலையில், இந்த விடுதியில் தங்கி 14 வயது மாணவன் ஒருவன் 9ம் வகுப்பு படித்து வந்தான். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் என மொத்தம் 4 மாணவர்கள் சேர்ந்து கடந்த சில மாதங்களாக அந்த மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். சிகரெட் புகைக்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து இந்த மாணவர்களின் டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதில் கடும் மன உளைச்சளுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவன், தன் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து மாணவனின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டிடம் புகாரளித்தனர். இதன் பேரில், மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு மாணவர்கள் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன், நான்கு மாணவர்கள்மீது, தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதுடன், நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமையம் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் சிறார் சீர்திருத்த பள்ளியில் நான்கு மாணவர்களும் அடைக்கப்பட்டனர்.
மக்கள் சக்தியால் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் - செங்கோட்டையன் பேச்சு!
தவெகவில் விருப்பமனு வாங்குவது எப்பொழுது?என்பது குறித்த தகவலை அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.
ராஜஸ்தான்: ஆம்புலன்சில் உள்ள சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் பயனா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேற்று முன் தினம் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரே நாள் ஆன பச்சிளம் குழந்தைக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு குழந்தையை மருத்துவமனைக்கு தந்தையும், உறவினரும் கொண்டு சென்றுள்ளனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அந்த ஆம்புலன்சில் உள்ள […]
தாவரவியல் பூங்காவாக மாறவுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் ?
மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தாவரவியல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினர் பொதுமக்களிடமிருந்து கையெழுத்து வேட்டை ஆரம்பித்துள்ளார்கள். என ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தீபன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில் மாவீரர் துயிலும் இல்லங்களின் கண்ணியத்தையும் உணர்வுகளையும் உதாசினம் செய்யும் நோக்கில் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் துயிலும் இல்லங்களை மாற்றம் செய்வதால் விடுதலைப் போராட்டத்தின் வரலாறுகளை முற்றும் முழுதாக அளிக்கும் நோக்கில் செயல்படுகின்றார்கள் அவற்றை கண்டித்து மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் என்ற அமைப்பு கையெழுத்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்
ஹெச்-1பி விசா விவகாரம்! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக 20 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு!
ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகக் கட்டணம் விதித்துள்ளதை எதிர்த்து கலிபோர்னியா உள்பட 20 அமெரிக்க மாகாணங்களின் அரசுகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. அமெரிக்காவில் பணிபுரிய புதியதாக விண்ணப்பிக்கப்படும் ஹெச்-1பி விசாக்களுக்கு ரூ.91 லட்சம் (1 லட்சம் அமெரிக்க டாலர்கள்) கட்டணமாக விதித்து கடந்த செப்.19 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதனால், வெளிநாட்டு தொழிலாளர்களைப் பெரிதும் சார்ந்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிபர் […]
காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை.
காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் 1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அதன் போது, காங்கேசன்துறை இந்து மயானம் அமைந்துள்ள காணியும், அதனை சூழவுள்ள காணிகளும் விடுவிக்கப்படாது , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த நிலையில் , தற்போது அப்பகுதி அனைத்தும் துறைமுக அதிகார சபையின் ஆளுகைக்குள் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இந்து மயானத்தை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக சுமார் 10 வருட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமது முன்னோர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில் , தமது சொந்த மண்ணில் உள்ள இந்து மயானத்திலையே தமது உடல்களும் தகனம் செய்யப்பட்ட வேண்டும் என அங்குள்ள முதியவர்கள் பலரும் தமது இறுதி ஆசையாக கூறி வரும் நிலையில் , மாயனத்தினையும் அதற்கான பாதையையும் மீள பெற்று தருமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்ததை , அடுத்து , அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் வந்து அவ்விடத்தினை பார்வையிட்டார். அதன் போது , மயானத்தினை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி விரைவில் அதனை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.
Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 'G.O.A.T. Tour' (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் ரசிகர்களைச் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டது. அதன் ஒருபகுதியாக மெஸ்ஸி நேற்று (13-ம் தேதி) ஹைதராபாத் வந்தடைந்தார். உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பல புகைப்பட நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அங்கு கால்பந்து விளையாடினார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்களையும் சந்தித்தார். View this post on Instagram இந்த நிகழ்வில் லியோனல் மெஸ்ஸி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தார். அப்போது மெஸ்ஸி, ராகுல் காந்திக்கு 'GOATED 10' என்ற எண் கொண்ட ஜெர்சியை பரிசளித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் உரையாற்றினர் கொல்கத்தாவைப் போல இந்த மைதானத்திலும் மெஸ்ஸியை ரசிகர்களால் அருகில் பார்க்கமுடியாத சூழலே நிலவியது. அதனால், ஆயிரக்கணக்கான ரூபாயை செலவு செய்து மெஸ்ஸியைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா
இலங்கையர்களுடன் சென்ற வௌிநாட்டு கப்பல் ஒன்றை தடுத்து நிறுத்திய ஈரான்
இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட கப்பல் பணிக்குழாமினர் அடங்கிய வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகள் தடுக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன் லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து குறித்த கப்பலை ஈரான் அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கடத்தல்கள் குறித்த கப்பலில் இலங்கையர்களைத் தவிர இந்திய மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிறுத்துவதற்கான உத்தரவுகளை மீறியமை, தப்பிச் செல்ல முயற்சித்தமை […]
`மூச்சுத் திணறல்' - நல்லகண்ணு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில், 22.08.2025 அன்று நல்லகண்ணு வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 24.08.2025 அன்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் நல்லகண்ணு உடல் நலம் தேறியது. இதையடுத்து, அக்டோபர் 10, 2025 அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தோழர் நல்லகண்ணு ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலமில்லாமல் போனது. அப்போதும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இந்த நிலையில், நல்லகண்ணுவிற்கு இப்போது மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். அவர் விரைவில் உடல்நலத்துடன் வீடு திரும்புவார் என அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்வது எப்படி?
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்வது எப்படி? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக 100 ஸ்டார்லிங்க் அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இணையச் சேவைகள் ஸ்டார்லிங்க் (Starlink) என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு செயற்கைக்கோள் இணையச் சேவையாகும். இந்நிலையில், இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் […]
பிக் பாஸ் பேச்சை கேட்காத பாரு, கம்மு இல்லை வியானா, ரம்யா வெளியேற்றம்: பார்வையாளர்கள் அதிருப்தி
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து பார்வதி மற்றும் கம்ருதீனை வெளியேற்றுவார்கள் என்று பார்வையாளர்கள் காத்திருந்த நிலையில் ரம்யா மற்றும் வியானா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Vijay : திருச்செங்கோட்டில் போட்டியிடும் அருண் ராஜ்; முதல் வேட்பாளரை அறிவிக்கும் தவெக! - விவரம் என்ன?
2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னமும் இரண்டரை மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், தவெக தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று முதல் அறிவிக்க திட்டமிட்டிருக்கிறது. அதன்படி ஈரோட்டின் திருச்செங்கோட்டில் இன்று ஒரு நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. TVK Arun Raj நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த கட்சியின் வேட்பாளர்களை வேக வேகமாக அறிவித்து வருகிறார். காங்கிரஸ் 234 தொகுதிக்கும் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. இந்த வரிசையில் தவெகவும் தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பாக பனையூரில் தவெகவின் மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழுவினரின் கூட்டம் நடந்திருந்தது. அதில், வியூக வகுப்பு குழுவினர் லேட்டஸ்ட்டாக எடுத்திருந்த ஒரு சர்வேயும் பவர்பாய்ண்டாக போட்டுக் காட்டப்பட்டிருந்தது. அதன்படி 160 தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தவெக தலைமை நம்புகிறது. இதைத் தொடர்ந்துதான் இன்று முதல் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் போட்டிப் போடப்போகும் தொகுதியை வரிசையாக அறிவிக்கவிருக்கின்றனர். TVK - Arun Raj விஜய்யுடனான நட்பால் ஐ.ஆர்.எஸ் பணியை விட்டுவிட்டு தவெகவில் இணைந்து கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் பொறுப்பை வாங்கிய அருண் ராஜ் திருச்செங்கோட்டில் வேட்பாளராக நிற்கவிருக்கிறார். இதற்காக அவரின் குழு கடந்த சில வாரங்களாக தொகுதியில் இறங்கி பல்ஸ் பார்த்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இன்று திருச்செங்கோட்டில் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுச்செயலாளர் ஆனந்தும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அருண் ராஜை நிர்வாகிகள் மத்தியில் வேட்பாளராக அறிமுகப்படுத்தி, அவரின் வெற்றிக்கு அத்தனை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பேசவிருக்கின்றனர்.
திருச்சியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் உயிரிழப்பு-மேயர் சொன்ன குட்நியூஸ்!
திருச்சியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேயர் சொன்னதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.
மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: மன்னிப்பு கேட்ட மம்தா –நடந்தது என்ன?
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்துக்கு வருகை தந்தார். அவரை காண்பதற்காக ரூ 5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் பெற்று ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். கொல்கத்தாவிலிருந்து மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸியை நேரில் பார்ப்பதற்காக […]
AI வளர்ச்சி: ``நீங்களும் நானும் தான் கடைசி தலைமுறை - வெளிப்படையாக பேசிய புனீத் சந்தோக்
Lமைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனீத் சந்தோக் மற்றும் உலகின் பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் Microsoft AI Tour என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தியா வந்திருக்கின்றனர். அவர்கள் மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய புனீத் சந்தோக், `` பெரும்பாலானவர்கள் AI செயற்கை நுண்ணறிவு வேலைகளைப் பறித்துவிடும் என அஞ்சுகிறார்கள். ஆனால், உண்மையில் AI தானாகவே வேலைகளைப் பறிக்காது. மைக்ரோசாப்ட் இந்தியா தலைவர் புனீத் சந்தோக் இருப்பினும், வேலைவாய்ப்பு இழப்புக்கு உண்மையான அச்சுறுத்தல் 'கற்றுக்கொள்ள மறுப்பது' என்ற வடிவத்தில் வரும். இந்த புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள வேலைகளைப் பகுப்பாய்வு செய்து பணிகளை பிரித்துவிடும். அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு வேகமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அதனால், தொழில்துறை அமைப்பே மாறிவருகிறது. அதாவது ஒருமுறை கற்றுக்கொண்டு, அந்த அறிவை வாழ்நாள் முழுவதும் ஒரு தொழிலுக்குப் பயன்படுத்துவது என்ற கருத்து இப்போது சிதைந்து வருகிறது. நீங்களும் நானும் தான் நிலையான, நீண்ட கால வேலைவாய்ப்புகளைக் கொண்ட கடைசித் தலைமுறை. நம் குழந்தைகள் பலவிதமான பணிகளைச் செய்வார்கள். எனவே இந்த புதிய தொழில்நுட்ப யுகத்தில் கற்றல் என்பது மிகவும் அவசியமானது. அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவில் டெல்லியில் வசிப்பவரை விட ஆக்ஸிஜன் மாஸ்க்கின் முக்கியத்துவத்தை வேறு யாரும் நன்கு புரிந்துகொள்ள முடியாது. அப்படித்தான் இந்த வளர்ந்து வரும் AI உலகம். என்றார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, ``செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எந்தவொரு நிறுவனத்திற்கும் தரவுதான் மிகவும் மதிப்புமிக்க வளம். ஆனால், அந்தத் தரவை நீங்கள் செயற்கை நுண்ணறிவுக்குப் பொருத்தமான சூழலில் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் சத்யா நாதெல்லா மகாராஷ்டிரா மைக்ரோசாஃப்ட்டின் செயற்கை நுண்ணறிவு கருவிகளை இணையப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகிறது. மகாராஷ்டிராவின் 23 காவல் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ள நாக்பூர் திட்டம் மூலம் இணையக் குற்ற விசாரணைகளை 80 சதவீதம் குறைத்திருக்கிறது. மேலும் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 1,100 காவல் நிலையங்களுக்கும் இதை விரிவுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது தவிர, அதானி சிமென்ட், யெஸ் வங்கி, ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் எல்டிஐமைண்ட்ரீ போன்ற பல வாடிக்கையாளர்களுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்றி வருகிறது என்றார். Finfluencer & AI நம்பி மோசம் போய்டாதீங்க மக்களே | SEBI | Indigo Flight | IPS Finance - 378
2026 தேர்தல் தவெக வேட்பாளர்கள் பட்டியல்… திருச்செங்கோட்டில் இன்று முதல்கட்ட அறிவிப்பு!
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. திருச்செங்கோட்டையில் நடைபெறவுள்ள நிலையில் முதல்கட்ட அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.
Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் கண்களில் விளக்கெண்ணெய் விடுவது ஆரோக்கியமானதா?
Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு துளி விளக்கெண்ணெயை (Castor Oil) கண்களில் விடும் பழக்கம் பல காலமாக, பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும், பார்வைத்திறன் மேம்படும், உடலுக்கும் குளிர்ச்சி என்றெல்லாம் சொல்கிறார்களே, உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் முன்பெல்லாம், வீட்டுப் பெரியவர்கள் விளக்கெண்ணெயை (Castor Oil), டிரை ஐஸ் எனப்படும் கண் வறட்சிக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது கண் மருத்துவர்கள், கண்ணுக்குள் விளக்கெண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியே அறிவுறுத்துகிறோம். ஏனென்றால், விளக்கெண்ணெய் போடுவதால் கண்ணில் தொற்று (Infection), எரிச்சல் (Irritation) போன்ற பிரச்னைகள் வரலாம். இருப்பினும், சிலர் இன்னும் கண் வறட்சிக்கு விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. கண்களுக்குக் குளிர்ச்சி, கண்களைப் பிரகாசமாக வைக்கும் என்றெல்லாம் அதற்கு காரணங்களும் சொல்வதைப் பார்க்கிறோம். கண்களுக்கு வெளியே தடவிக்கொண்டால் அந்த அளவுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், கண்ணுக்குள் சொட்டு மருந்து போல, விளக்கெண்ணெய் விட்டுக்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். காலங்காலமாகப் பின்பற்றும் விஷயம்தானே? அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்றும் சிலர் விவாதம் செய்வதைப் பார்க்கிறோம். விளக்கெண்ணெய் கண்களுக்குள் விளக்கெண்ணெய் விடுவதைத் தவிர்க்கச் சொல்வதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. விளக்கெண்ணெய் என்றாலும், அது கண்களில் தொற்று (Infection in the eyes) ஏற்படக் காரணமாகலாம். கண்களில் எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையில் ஒருவர் பயன்படுத்தும் விளக்கெண்ணெயின் தரம் எப்படிப்பட்டது என்பது மிக முக்கியம். அது சுத்திகரிக்கப்படாததாக இருக்கும்பட்சத்தில், இன்னும் ஆபத்தானது. எனவே, கண்கள் தொடர்பான எந்தப் பிரச்னைக்கும் மருத்துவ ஆலோசனையோடு சிகிச்சைகளைப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?
வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் வேலைகள் துரிதப்படுத்த நடவடிக்கை-மாநகராட்சி ஆணையர்!
வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் வேலைகள் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார்.
மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு
நைப்பியிடா: மியான்மரில் சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் சனிக்கிழமை(டிச.13) அதிகாலை நிலப்பரப்பில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் ஆழத்தில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, மியான்மரில் வியாழக்கிழமை 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் […]
தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவு!
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே காலக்கெடுவை நீட்டித்த நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது . விரைவில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி இல்லத் திருமணம்: அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்து | Album
கேரள உள்ளாட்சித் தேர்தல்: ``மதவாத சக்திகளின் தீய திட்டங்களில் சிக்கிவிடக் கூடாது - பினராயி விஜயன்
கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. 14 வருவாய் மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 6 மாநகராட்சி மேயர்கள், 86 நகராட்சி தலைவர்கள், 152 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 941 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுவதற்கான தேர்தல் இது. மொத்தமுள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளில் 23,576 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் கருத்து தெரிவித்த கேரளாவை ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், இந்த உள்ளாட்சி தேர்தலில் சரித்திர முன்னேற்றம் ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த நிலையில் உள்ளாட்சிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சுமார் 30 ஆண்டுகளாக சி.பி.எம் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி உள்ளது. 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 50 வார்டுகளை கைப்பற்றியது பா.ஜ.க கூட்டணி. கேரள மாநில சரித்திரத்தில் முதன் முறையாக பா.ஜ.க ஒரு மாநகராட்சியில் பெரும்பான்மை பெற்றுள்ளது. 2020 உள்ளாட்சி தேர்தலில் 53 சீட்டுகளை பெற்ற சி.பி.எம் கூட்டணி இப்போது 29 சீட்டுகளை பிடித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 19 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த தேர்தல் முடிவு குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திருவனந்தபுரம் மாநகராட்சியில் என்.டி.ஏ கூட்டணியின் வெற்றி, மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயம். கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்பார்த்தபடி தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரிய முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. அதற்கான காரணங்கள் ஆராயப்படும், தேவையான திருத்தங்களைச் செய்த பிறகு இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்னேறிச் செல்லும். மதவாத சக்திகளின் தீய திட்டங்களில் மக்கள் சிக்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக இந்தத் தேர்தல் முடிவு உள்ளது. இது மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எனத் தெரிவித்திருக்கிறார். நன்றி திருவனந்தபுரம்- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
யாழ் சிறைசாலையின் நெகிழ்ச்சி செயல் ; அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட பொதிகள்
டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்று (13) கையளிக்கப்பட்டன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அத்தியட்சகர் பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து […]
அமெரிக்க மூலோபாய நலன்களின் மையப் புள்ளி சிறிலங்கா
சிறிலங்காவில், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடையும் செல்வாக்கை எதிர்கொள்வதில் வொசிங்டன் கவனம் செலுத்தும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, எரிக் மேயர் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் முன்பாக, அவர் விளக்கமளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் பாதையில், சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம், சுதந்திரமான மற்றும் திறந்த
மன்னாரில் ஜனாதிபதி அநுர ; வடக்கு அதிகாரிகளுக்கு வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்று (13) மாலை இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் […]
அவசரமாக கூடும் நாடாளுமன்றில் 1000 பில்லியன் ரூபாவுக்கு குறைநிரப்பு பிரேரணை
வரும் 18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தில், அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது. டிட்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதிக்கு ஒப்புதல் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் கீழ், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டியுள்ளார். இது தொடர்பான அரசிதழ்
புதிய ரயில் பாதை: அரியலூர் - நாமக்கல் இணைப்புக்கு கள ஆய்வு நிறைவு!
புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அரியலூர் - நாமக்கல் இணைப்புக்கு கள ஆய்வு நிறைவடைந்து உள்ளது. விரைவில் இந்த திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடு வீதியில் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை
கண்டி, ஹரகம வீதியில் குருதெனிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தம்பதியினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (13) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் படுகாயமடைந்து கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஹாரகமவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பொருட்களை ஏற்றிச் சென்ற வேன், சாலையில் எதிர் திசையில் திரும்பியபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதியதில் […]
கடும் தண்டனைகளுடன் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றும் வகையில், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் -இலக்கம்-2026’ என்ற புதிய சட்ட வரைவு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவு, “வேண்டுமென்றோ அல்லது
மகேஸ்வரன் படுகொலை வழக்கு –மரணதண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, ஜோன்சன் கொலின் வலண்டினோ அல்லது வசந்தன் என்ற குற்றம்சாட்டப்பட்ட நபர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வசந்தன், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்
உயர்மட்டத் தலைவரை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது சீனா
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு சீனா உயர்மட்ட தலைவர் ஒருவரை அனுப்பி வைக்கவுள்ளது. பேரிடருக்குப் பின்னர், சிறிலங்காவுக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்திய போதும் சீனா பின்தங்கிய நிலையில் உள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹக்கர் கடந்த 11ஆம் திகதி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், சீனாவின் மிக முக்கியமான மூத்த கம்யூனிஸ்ட் கட்சி
‘கில், ஹர்ஷித் ராணாவ விடுங்க’.. சொதப்பம் மற்றொரு ஸ்டார் வீரர்: டி20 அணியில் திடீர் பின்னடைவு!
இந்திய டி20 அணியில், ஷுப்மன் கில், ஹர்ஷித் ராணாவைப் போல மற்றொரு வீரரும் சொதப்புகிறார். ஆனால், அவர் குறித்து யாரும் பேசாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் சொதப்புவதும் அணிக்கு பெரிய பின்னடைவுதான்.
DMK 75 : 'கூத்தாடி கட்சி' - தடைகளைத் தாண்டிவந்த வரலாறு! - R Kannan Interview | திமுக | History
இணையும் இருவர்: TN அரசியலில் அதிரடி! | RSS மேடையில் Seeman | DMK BJP | Imperfect Show
Dollor விலை உயர்வு இருந்தும் IT பங்குகளின் விலை ஏன் ஏறவில்லை? | Mutual Fund
பஞ்சாங்கக் குறிப்புகள் டிசம்பர் 15 முதல் 21 வரை #VikatanPhotoCards
புயல் காரணமாக பிரேசிலில் மின்சாரம் துண்டிப்பு –மக்கள் பாதிப்பு
பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை
இந்தியா –தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும்
ஈரானில் நர்கெஸ் முகமதி கைது –நோபல் பரிசு கமிட்டி கண்டனம்
ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர் நர்கெஸ் முகமதி. குறிப்பாக, ஈரானில் பெண்களின் உரிமைகளை பறிக்கும்
எல்டிஎப் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை –முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் இடதுசாரி முன்னணி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதேவேளையில், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி –இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருது –பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்த விராட் கோலி
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள்
சென்னையில் இருந்து ஒரே நாளில் 54 இண்டிகோ விமான சேவைகள் ரத்து!
சென்னையில் இருந்து ஒரே நாளில் 54 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அதிருப்திக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மடூரோவுக்கு எதிராக டிரம்ப் புதிய பொருளாதாரத் தடைகள்
பதவியில் இருந்து வெளியேற வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில், அவரது உறவினா்கள், ஆறு எண்ணெய்க் கப்பல்கள், தொடா்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளாா். வெனிசுலாவில் இருந்து சென்று கொண்டிருந்த ‘ஸ்கிப்பா்’”என்ற எண்ணய்க் கப்பலை அமெரிக்க படையினா் கைப்பற்றியதைத் தொடா்ந்து இந்த புதிய பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் மனைவி சிலியா ஃப்ளோா்ஸின் […]
72 மணி நேரம் ஒரு மரத்தை கட்டிப்பிடித்து கென்ய காலநிலை ஆர்வலர் சாதனை
கென்ய காலநிலை ஆர்வலர் ட்ருபெனா முத்தோனி தொடர்ச்சியாக 72 மணி நேரம் ஒரு மரத்தை கட்டிப்பிடித்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார் . முத்தோனியின் முன்னைய சாதனை 48 மணிநேரம் ஆகும். இந்த சவாலுக்காக, அவர் நியேரி நகரில் உள்ள அரசு வளாகத்தில் உள்ள ஒரு பூர்வீக மரத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒரு கட்டத்தில், அவள் கிட்டத்தட்ட தூங்கிவிட்டாள். ஆனால் அவளுடைய ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டாள் அவர்களில் சிலர் கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வ பார்வையாளர்களுக்கான கட்டணத்தை செலுத்த முன்வந்தனர். […]
விரக்தியின் உச்சத்தில் ட்ரம்ப் ; அர்த்தமற்று போகும் அமைதி ஒப்பந்தம்
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை அடைந்ததால், ”நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். அதேநேரத்தில் உக்ரைன் அமைதி திட்டத்தை ஏற்றுக் […]
கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைவு
கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தைவிட, 2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, 150,220 குறைந்துள்ளது. கடந்த செப்டம்பரில் கனடாவில் கல்வி கற்க 28,910 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த செப்டம்பரில் […]
அனர்த்தங்களைப் புரிந்து கொண்டு கூட்டாக மீண்டெழ வேண்டிய காலம்
மொஹமட் பாதுஷா நாட்டில் மீண்டுமொரு இயற்கைப் பேரழிவு இடம்பெற்றிருக்கின்றது. ‘டிட்வா’ புயல் என தொடங்கி வடக்கு, கிழக்கில் மழையாகவும் பின்னர் மலையகத்தில் மழையுடன் நிலச்சரிவாகவும், தென்னிலங்கையில் வெள்ளப் பெருக்காகவும் ஒருசில நாட்களுக்குள்ளேயே இந்த அனர்த்தம் கணக்கிட முடியா அழிவுகளையும் சொல்ல முடியா இழப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இதுவரை காலமும் இலங்கை சந்தித்திராத விதத்தில், மலைநாடு, கரையோரம் என நாடு தழுவிய அழிவொன்றை இயற்கை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது. மரணங்களையும், அழிவுகளையும் இன்று வரை சரியாக இற்றைப்படுத்த முடியாதபடி இழப்புக்களின் […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உலர் உணவு வழங்கி, பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (படங்கள் & வீடியோ) யாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கு பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், தேக்கவத்த வீதி கற்குழி வவுனியா பிரதேசத்தை வாழ்விடமாகவும் கொண்டு அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தின் சார்பில் லண்டனில் வதியும், அவரது மகனான தோழர்.நகுலன் வழங்கிய நிதி பங்களிப்பில் நிகழ்வு இன்று நடைபெற்றது. மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் […]
லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்
கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காண முடியாததால் ஆத்திரம் அடைந்த அவரது ரசிகர்கள், வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அதிகாலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையம் வந்தடைந்த மெஸ்ஸிக்கு கால்பந்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து லேக் டவுனில் அமைக்கப்பட்டுள்ள […]
உலகின் அதிகம் மகிழ்ச்சியற்ற நாடு இதுவா? வெளியான சர்வதேச லிஸ்ட்
உலகில் அதிகம் மகிழ்ச்சி அற்ற நாடு என்ன என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது என்று காண்போம்.
2025-ல் அதிகம் வைரலான விசயங்கள் எவை தெரியுமா? எதனால் வைரலானது எனத் தெரியுமா?
2025-ல் சமூக வலைதளங்களில் விமானப் பணிப்பெண்ணுக்கு நடுவானில் கிடைத்த ஓவிய பரிசு, தாயின் கனவை நிறைவேற்றிய மகள், தம்பியின் முதல் விமானப் பயணம் என நெகிழ்ச்சியான தருணங்கள் வைரலாகின.
Messi Tour of India: நிகழ்ச்சி திட்டமிடலில் AIFF ஈடுபடவில்லை - இந்திய கால்பந்து கூட்டமைப்பு
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட கொல்கத்தா நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) இன்று (சனிக்கிழமை) கவலை தெரிவித்துள்ளது. Messi Tour of India மெஸ்ஸியைக் காண நுழைவுச்சீட்டுக்கு ரூ.4,000 முதல் ரூ.12,000 வரை கட்டணம் செலுத்தி, கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் குவிந்த சுமார் 50,000 பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். சிலர் கள்ளச்சந்தையில் ரூ.20,000 வரைக்கூட கொடுத்து வாங்கியிருந்தனர். Kolkata, West Bengal: Angry fans vandalise the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event A fan of star footballer Lionel Messi said, "Absolutely terrible event. He came for just 10 minutes. All the leaders and ministers surrounded him. We couldn't see… pic.twitter.com/a3RsbEFmTi — ANI (@ANI) December 13, 2025 ஆனால் மைதானத்தில் அரசியல்வாதிகள், விவிஐபிக்கள் (VVIPs), பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மெஸ்ஸியைச் சுற்றிக் கூடி நின்று, அவசர அவசரமாக செல்ஃபிகள் எடுத்ததால் அவர் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமார்ந்தனர். AIFF விளக்கம் இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) வெளியிட்ட அறிக்கையில், உலகக் கால்பந்து நட்சத்திரங்களான லியோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட விவேகானந்தா யூபா பாரதி கிரிங்கன் மைதானத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஆழ்ந்த கவலை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. Kolkata Salt Lake Stadium chaos: Fans angry over Messi’s 10-minute appearance, poor event management, and unmet promises, say emotions, time, and money wasted. pic.twitter.com/2V477aKnWn — Ihtisham Ul Haq (@iihtishamm) December 13, 2025 மேலும், இது ஒரு தனியார் பி.ஆர். ஏஜென்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. இந்த நிகழ்வின் அமைப்பு, திட்டமிடல் அல்லது செயலாக்கம் என எந்தவொரு செயலிலும் AIFF ஈடுபடவில்லை. மேலும், நிகழ்வு பற்றிய விவரங்கள் AIFF-க்குத் தெரிவிக்கப்படவில்லை. கூட்டமைப்பிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும் AIFF மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. மைதானத்தை நாசமாக்கிய ரசிகர்கள் மெஸ்ஸியை காண முடியாததால் ஆவேசமடைந்த ரசிகர்கள், விளையாட்டு மைதானங்களுக்குள் பாட்டில்களை வீச ஆரம்பித்தபோதுதான் குழப்பம் தொடங்கியது. மைதானத்துக்குள் உணவுப் பொட்டலங்கள் உட்பட இதுபோன்ற பொருட்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிறிது நேரத்திலேயே, ஆத்திரமடைந்த ரசிகர்கள் நாற்காலிகளைப் பிடுங்கி வீசத் தொடங்கினர். மைதானத்தின் தரைப்பகுதி மற்றும் செயற்கை ஓடுபாதையில் ஃபைபர் கிளாஸ் இருக்கைகள் உடைந்து கிடந்தன. மெஸ்ஸிக்காகவும், முதலமைச்சர் பிரிவுக்காகவும் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பந்தல்களும் கிழித்து எறியப்பட்டன. போலீசார் தலையிடுவதற்கு முன்பு, அவற்றின் சில பகுதிகளில் தீ வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல நுழைவு வாயில்கள் சேதப்படுத்தப்பட்டன. வீரர்கள் சுரங்கப்பாதையின் கூரை தாக்கப்பட்டது. சுவரொட்டிகளும் கிழிக்கப்பட்டன. Ronaldo: `மெஸ்ஸி உங்களை விடச் சிறந்த வீரரா?' - கேள்விக்கு ரொனால்டோவின் அதிரடி பதில்
டிரம்பின் வலது கையில் பேண்டேஜ் ; கரோலின் லீவிட் விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்பின் கையில் பேண்டேஜ் போடப்பட்டிருப்பது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் விளக்கம் அளித்துள்ளார். டிரம்பின் வலது கையின் மேல்பகுதியில் பேண்டேஜ் போடப்பட்டு இருந்தது. காயத்திற்கு போடப்படும் இந்த பேண்டேஜ் பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பின. டிரம்பின் உடல்நல பாதிப்பு பற்றி பல வாரங்களாக யூகங்கள் பரவி வந்த நிலையில், இந்த விசயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிரம்ப், அவருடைய கையில் போடப்பட்ட பேண்டேஜ் வெளியே தெரியாத வகையில், அவருடைய […]
கொழும்பு கொலன்னாவை பகுதியில் 8,000 தொன் குப்பைகள்
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகள் சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியின் தாக்கத்தால் கொலன்னாவை பகுதியில் மாத்திரம் சுமார் 8,000 தொன் குப்பைகள் குவிந்துள்ளதாகவும், சுமார் 2 நாட்களில் அதை அகற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா போன்ற பகுதிகளில் சுமார் 10,000 முதல் 12,000 தொன் குப்பைகள் குவிந்துள்ளன. மேலும், தற்போது, மேல் மாகாண […]
பகிடிவதை புரிந்த யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள வீடொன்றுக்குக் கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் நேற்று மீண்டும் […]
சாண்ட்விச் , இறைச்சி, பால் பொருட்களுடன் பிரிட்டன் செல்லத் தடை
ஐக்கிய இராச்சியம், ஏப்ரல் 12 முதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் பயணிகள் மாடு, ஆடு, பன்றி இறைச்சி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை பிரிட்டன் நாட்டிற்குள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தத் தடை சாண்ட்விச்சுகள், சீஸ், உலர்ந்த இறைச்சி, சமைக்காத இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்கள், பக்கேஜ் செய்யப்பட்டவையாகவோ அல்லது டியூட்டி பிறியில் (duty free) வாங்கப்பட்டவையாக இருந்தாலும் கூட பிரிட்டன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் […]
சட்டவிரோதமான முறையில் 6 மில்லியன் லீற்றர் எரிபொருளைக் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து வெளிநாட்டு… The post அதிர்ச்சி: 6 மில்லியன் லீற்றர் எரிபொருள் கடத்தல்! இலங்கை மாலுமிகள் உட்பட வெளிநாட்டு கப்பலைத் தடுத்தது ஈரான்! appeared first on Global Tamil News .
ரஷிய-உக்ரைன் போர் 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும் ; டிரம்ப் எச்சரிக்கை
தொடர்ந்து இடம்பெறும் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 3-ம் உலக போரை ஏற்படுத்தி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார். இதில் சில […]
கோவை: வனத்திலிருந்து 25 கி.மீ வழித்தவறிய யானைகள்; 70 மணிநேரம் தொடர்ந்து கண்காணித்த வனத்துறை! | Album
காலை 08:20 போல் பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள் காலை 08:45 பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள் காலை 09:00 - மூன்று ஆண் யானைகளையும் காண கூடிய மக்கள் காலை 10:00 - நல்லசாமியப்பன் தடுப்பணையில் மிரட்சியுடன் இருக்கும் யானைகள் மாலை 04:00 - கீரணத்தம் ஐடி பார்க் அருகே இருக்கும் ஒரு நிலத்தில் , ஓய்வில் ஊருக்கும் யானைகள் மாலை 05:00 - அந்த பகுதிலிருந்து வெளியேற முடிவு செய்த யானைகளை அருகில் இருந்து கண்காணிக்கும் வனத்துறையினர் மாலை 06:00 - வனத்துறையின் Elephant Trackers யானைகள் வெளியே வரும் பகுதி அருகே தயாராக இருக்கின்றனர் மாலை 06:30 - வடக்கு நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்த பெரிய ஆண் யானையுடன் செல்லும் மற்ற இரண்டு ஆண் யானைகள் மாலை 06:40 - முன்கூட்டியே ஓவ்வொரு வனத்துறையினர் பகுதி வாரியாக நடந்து செல்லும் யானைகளை கண்காணிப்பு பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தனர் மாலை 07:30 - முன்கூட்டியே ஓவ்வொரு வனத்துறையினர் பகுதி வாரியாக நடந்து செல்லும் யானைகளை கண்காணிப்பு பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தன அதிகாலை 05:00 - சாலையை யானைகள் கடக்கும் பொது, யாருக்கும் எந்த சேதாரமும் ஆகிவிடக்கூடாது என சாலை பல இடங்களில் வனத்துறையினர் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுப்பட்டனர் மறுநாள் காலை 06:30 - அன்னூர் அடுத்து காகபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தைல தோட்டத்திற்கு வந்திருப்பதாக தகவல் மறுநாள் காலை 07:00 - யானைகள் அந்த 100+ பரப்பளவு உள்ள தைல காட்டை நுழைய வேகமாக செல்கின்றன மறுநாள் காலை 07:00 - யானைகள் அந்த 100+ பரப்பளவு உள்ள தைல காட்டை முழுவதும் வளம் வர தொடங்கின மறுநாள் மதியம் 02:00 - அனற தினத்தின் மாலை நேரம் யானைகளை எவ்வாறு வனப்பகுதிக்கு நடத்தி கூட்டிட்டு செல்ல இருக்கிறோம் என அதிகாரிகள் மற்ற அலுவலர்களுடன் பேசுதல் மறுநாளும் மாலை 04:00 வனத்திற்கு செல்ல தைல மாற காட்டைவிட்டு வெளியேற முயற்சி மாலை 06:00 - யானைகளை கண்காணிப்பு வனத்துறையினர் இடம் - தெலுங்குபாளையம் மாலை 06:30 - யானைகளை கண்காணிப்பு வனத்துறையினர் இடம் - காட்டம்பட்டி மாலை 07:00 - தென்னை தோப்புகளிருந்து வெளியேறி அடுத்த பகுதியை நோக்கி செல்லும் யானைகள் இரவு 08:45 - கணேசபுரம் மெயின் சாலை போக்குவரத்தை நிறுத்தி யானைகள் சாலையை கடக்க வைக்க தயாராக இருக்கும் வனத்துறையினர் இரவு 10:30 - யானைகள் எதிர் திசைக்கு மாறாமல் இருக்க , அதை தடுக்க தயாராக இருந்தவர்களின் ஒரு பகுதி. இடம் - ஒன்னிப்பாளையம்
மன்னார் அனர்த்த பாதிப்பு: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைந்து மீட்டெடுக்கவும், நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று… The post மன்னார் அனர்த்த பாதிப்பு: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்! appeared first on Global Tamil News .
பிரான்சில் கால்நடை அம்மை நோய்.. தீவிர தடுப்பூசி நடவடிக்கை.. இல்லையெனில் என்னாகும் தெரியுமா?
பிரான்சில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோயை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட கால்நடைகளை அழிக்கும் பழைய கொள்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதால், இனி தடுப்பூசி மூலம் நோயை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் தடுமாற்றம்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 16 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாக திமுக அரசு மீது அன்புமணி ராமதாஸ் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் இன்றையதினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடந்த 15 அக்டோபர் 5 அன்று வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார். எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக கடந்த மாதம் 28 ஆம் திகதி தெரிவாகியிருந்தார்.
Kamal Haasan: சினிமா தேஞ்சுகிட்டே இருக்கிறதா ஒரு பயம் - ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவில் பேச்சு!
நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், வேல்ஸ் ட்ரேட் கன்வென்ஷன் சென்டர், வேல்ஸ் ஃபிலிம் சிட்டி, வேல்ஸ் தியேட்டர் ஆகிய மூன்று புதிய நிறுவனங்களின் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். அங்கே தனது திரைப் பயணம் குறித்தும் திரைத்துறை முன்னேற்றம் அடைவதற்கான வழிகள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். inauguration of the Vels Trade & Convention Centre, Vels Film City, and Vels Theatres Kamal Haasan பேச்சு நான் சினிமாவின் குழந்தை அவர், கமலஹாசனுக்கும் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நான் நடிச்சதில்ல, ராஜ்கமலும் அவரும் சேர்ந்து ஒரு படமும் பண்ணதில்ல. ஆனால் என்னையும் அவரையும் சேர்த்து பிணைக்கும் பெயர் எம்ஜிஆர். எம்ஜிஆர்தான் எங்களை நண்பர்களாக சகோதரர்களாக மாற்றினார் என்றால் அது மிகையாகாது. நான் சினிமாவின் குழந்தை. எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. அது பண்ணிட்டே இருக்கும்போது கத்துக்கிட்டது தான் எல்லாமும். என் மொழியும், என் கல்வியும் இப்பொழுது நான் பெற்றிருக்கும் பட்டங்களும் எல்லாமே எனக்கு சினிமா கொடுத்ததுதான். அப்படிப்பட்ட சினிமா ஏதோ தேஞ்சுகிட்டே இருக்கிற மாதிரி ஒரு 20-25 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பயம். 17 ஃப்ளோர்களுடன் கூடிய ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டுடியோ என்று இருந்தது. அதைப் பார்த்து நான் எதிர் ஸ்டுடியோல இருந்து பொறாமைப்பட்டுருக்கேன். சின்ன பையனா இருக்கும்போது சரவணன் சார்கிட்ட போய் 'ஏன் சார் நம்ம ஒரு 20 ஃப்ளோர் வச்சோம்னா ஆயாசியாவிலயே பெரிய ஸ்டுடியோ நம்ம ஸ்டுடியோ ஆயிடுமே' அப்படின்னு சொல்லிருக்கேன். 'சரி நீ பார்த்துப்பியா அந்த பத்து ஃப்ளோர'ன்னு கேட்டாரு. நான் பயந்து முடியாதுன்னு சொல்லிட்டேன்... Isari Ganesh - Kamal Haasan - Sushmitha இந்த ஃபிலிம் சிட்டியை பார்த்துக்கொள்ளப்போகும் சுஷ்மிதா அமெரிக்காவில் உள்ள ஸ்டோடியோக்களைப் பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை இங்கு கொண்டுவர வேண்டும். எனப் பேசினார். மேலும், இந்த பான் இந்தியா மூவி என்பதை துவங்கியதே சென்னைதான். பான் இந்தியா ஃபிலிம் மேக்கிங் ஹப் என்றால் அது சென்னைதான். உலகத்திலேயே அதிகமான சினிமாக்களை தயாரிக்கும் இந்த நாட்டில், இப்படி ஒரு இடம் (வேல்ஸ் ஃபிலிம் சிட்டி) இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஒரு அரசு முடிவு செய்யாமல், தனி மனிதர் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது... இங்கே சினிமா பயிலும் ஒரு அரங்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். நாம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய மறந்துவிட்டதாகவே நினைக்கிறேன். கவர்மெண்ட் இல்ல; இண்டஸ்ட்ரி அதை செய்ய வேண்டும்! என்றும் கூறினார். கமல்ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்
யாழ் ஊடக அமையத்தின் ஆரம்பகால உறுப்பினரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான பாலசிங்கம் பார்த்தீபனின் மருத்துவ செலவுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் ஊடக அமையம் மற்றும் யாழ் ஊடக அமையம் ஆகியன இணைந்து ஒரு தொகை நிதியை வழங்கி வைத்தனர். கிளிநொச்சி முரசுமோட்டையில் உள்ள ஊடகவியலாளரின் இல்லத்துக்கு சென்ற யாழ் ஊடக அமைய பிரதிநிதிகள் குறித்த நிதியுதவியை நேரடியாக வழங்கி வைத்தனர். இவர் ஈழநாதம் பத்திரிகையில் 1992ம் ஆண்டு முதல் ஊடகவியலாளராகவும், இறுதி யுத்த காலப்பகுதிகளில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss Tamil 9: பிக் பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்ஷன்? - பரபரக்கும் வீக்எண்டு!
விஜய் டிவியில் அறுபது நாள்களைக் கடந்து விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை பிறகு சர்ப்ரைஸ் என்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். வியானா முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இவர்களில் பிரஜின் சென்ற வாரம் எவிக்ட் ஆகி வெளியில் வந்து விட்டார். சென்ற வாரமே பிரஜினுடன் எஃப் ஜே,வும் வெளியில் வருகிறார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் ஆதிரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததால் எஃப்.ஜே – ஆதிரை – வியானா என முக்கோண ரிலேசன்ஷிப்பில் கன்டென்ட் கிடைக்கும் என எதிர்பார்த்ததால் கடைசி நிமிடத்தில் அந்த முடிவை கை விட்டு விட்டார்கள் எனக் கூறப்பட்டது. எஃப் ஜே இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷனுக்கான ஷூட் இன்று காலை சென்னை பூந்தமல்லியில் இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. நாமினேஷன் பட்டியலில் ரம்யா, சாண்ட்ரா, வியானா, எஃப்.ஜே உள்ளிட்டோர் இருந்த நிலையில் இந்த வாரம் மூன்று பேர் வெளியேறலாம் என்ற ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது. அதன்படி எஃப்.ஜே. ரம்யா, வியானா மூன்று பேருமே இந்த வாரம் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் ஒருவர் இன்றைய எபிசோடிலேயே கூட அனுப்பப் பட அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். மூன்று பேரும் வெளியேறும் பட்சத்தில் பிக்பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்ஷன் எனச் சொல்லலாம்.!
யாழில் கமநல சேவைகள் திணைக்களம் வாழை மற்றும் சிறு பயிர்களுக்கான அழிவுக்கான விண்ணப்ப படிவத்தை இன்று சனிக்கிழமை 13 திகதி கோப்பாய் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர். அனேகமான வாழை விவசாயிகள் தங்கள் தோட்டங்களை துப்பரவு செய்து முடித்துள்ள நிலையில் படிவம் வந்துள்ளது. இதனிடையே புயலின் போது முறிந்த வாழைகளது புகைப்படங்களை கோரும் அதிகாரிகள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்;துள்ளது. வெள்ள அனர்த்தம் நடைபெற்று ஒரு 15நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது முறிந்த மரங்களது புகைப்படங்களை தந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வாக்குறுதி.. பணி நிரந்தரம் எப்போது? எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் கேள்வி!
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி தங்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium
Buddhi Clinic, which has firmly established Chennai as a global hub for neuropsychiatry innovation through its pioneering interventional and integrative
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போது டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளார். மேலும் அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவையும் சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுன் இலகிநகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது குடும்பத்தை சோ்ந்த அனைவரும் அஜ்மீருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். இதனால் முபாரக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை மர்மநபர்கள் அறிந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னா் அவர்கள் முபாரக்கை கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரது கை, கால்களை கட்டி போட்டனர். மேலும் அவர் கத்தாமல் இருக்க வாயில் […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுன் இலகிநகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது குடும்பத்தை சோ்ந்த அனைவரும் அஜ்மீருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். இதனால் முபாரக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை மர்மநபர்கள் அறிந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னா் அவர்கள் முபாரக்கை கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரது கை, கால்களை கட்டி போட்டனர். மேலும் அவர் கத்தாமல் இருக்க வாயில் […]
354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் அரசுடமையாக்க நடவடிக்கை
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடமையாக்குவதற்குமான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். நேற்றையதினம் (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மற்றும் நடப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் 354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு கோடியே ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு சொத்துக்களை […]
சென்னை மாதிரி லக்னோ பதிரனாவை குறிவைக்கும்! சஞ்சய் பங்கர் ஸ்பீச்!
சென்னை :IPL 2026 மினி ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, 4 சீசன்களாக அணியில் இருந்த ஸ்ரீலங்கா வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவை விடுவித்துள்ளது. இதனால் ஏலத்தில் பல அணிகள் அவரை குறிவைக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரரும் RCB பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். குறிப்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி பதிரனாவை இலக்காகக் கொள்ளலாம் என்று அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தெரிவித்தார். […]
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் தயாரிப்பு: எகிறும் நாமக்கல் முட்டை விலை- புதிய உச்சத்தால் அச்சம்
நாமக்கல் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 காசுகளாக புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் உற்பத்தியால் இந்த விலை ஏற்றம் என தெரிகிறது.
சென்னை சென்ட்ரலில் சோலார் பேனல் சிஸ்டம்.. இதன் மூலம் இத்தனை கோடி சேமிப்பா?
தெற்கு ரயில்வே 2030-க்குள் முழு மின்மயமாக்கலை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. டீசல் செலவைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, செயல்திறனை மேம்படுத்தும் இந்த முயற்சி, சோலார் மின் உற்பத்தியிலும் கவனம் செலுத்துகிறது.
மகாருத்ர ஹோமம்: ஆயுளில் ஒருமுறையாவது செய்ய வேண்டியது ஏன்? 8 பரிகாரங்கள் சொல்கிறது சாஸ்திரம்!
மகாருத்ர ஹோமம்: மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் ஈசனின் வேக வடிவங்களில் முதன்மையானது ஸ்ரீருத்ர வடிவம். ருத்ர பகவான் சிவபெருமானின் உக்கிரமான வடிவமாக இருப்பதால் ஸ்ரீருத்ரனை வணங்குபவர்களுக்கு தைரியமும் வீரமும் உண்டாகும் அவர்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும் எனப்படுகிறது. அதிலும் வேதத்தின் சிறப்பான மந்திரமான ஸ்ரீருத்ரத்தை பலமுறைகள் உச்சரித்து செய்யப்படும் மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ரிஷிகளாலும் முழுமையாக விவரிக்க முடியாத இந்த மகாருத்ர ஹோமத்தின் பலன்களையும் சிறப்புகளையும் இங்கே காண்போம். மார்கழி என்றாலே ஈசனைக் கொண்டாடும் புண்ணிய மாதம். அதிலும் ஆடல்வல்லான் நடராஜ பெருமானுக்குரிய 6 அபிஷேக நாள்களில் ஒன்றான ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும் திருவாதிரை திருநாளும் ஆருத்ரா தரிசனமும் கிடைக்கும் மாதம் மார்கழி. மார்கழியில் இந்த புண்ணிய நாள்களைக் கொண்டாடவும் வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் மாற்ற சக்தி விகடன் இதழும் கோவை ஆர்.எஸ்.புரம் அருள்மிகு ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் திருக்கோயிலும் இணைந்து நடத்த விரும்பினோம். அதன்படி வரும் 2026 ஜனவரி 2-ம் தேதி காலை மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் இங்கு நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று சொல்லப்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும் சிவனடியாரான சிவஸ்ரீ செந்தில்குமார், அருளார்கள் காட்டியருளிய வழியில் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே `அண்டவாணர் அருட்துறை’ என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இந்த ஆலயம் எந்தவித பேதமும் இன்றி எல்லா மக்களாலும் வழிபடப்படும் அதிசய ஆலயம். இங்கு இலவசமாகவே எல்லா வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இங்கு அருளும் அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர் களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீசிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என சிவாலய பரிவாரங்களையும் முறையாகப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார் சிவஸ்ரீ செந்தில்குமார். மகாருத்ர ஹோமம் இந்த அண்டவாணப் பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது இவரது பல நாள் கனவு. இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அதிகாலை தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் ஸ்ரீருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம். இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி. மேலும் ஒருவர் தனது ஆயுளில் ஒருமுறையாவது மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது சாஸ்திரங்கள் கூறும் ஆன்மிக அறிவுரை. இந்த ஹோமத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று 8 விதமான பரிகார பலன்களையும் சொல்லியுள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். 1. ருத்ர ஹோமத்தில் சங்கல்பித்தவர் வீட்டில் எந்த தீமைகளும் வராது. அவர் வேண்டுதலும் விருப்பமும் பலிக்கும். இந்த துடியான ருத்ர ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி உண்டாகும். கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். மகாருத்ர ஹோமம் 2. ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம், அதிர்ஷ்டம் யாவும் அளிக்கும் ஹோமம் இது. 3. வீரத்தின் அடையாளமான ருத்ர பகவானை திருப்தியாக்கும் வழிபாடு என்பதால் இந்த ஹோமத்தால் தோஷங்களும் பாவங்களும் நீங்கி உங்கள் வாழ்வே புதிய உற்சாகத்தில் மீண்டு எழும். 4. தீர்க்க முடியாத நோய்களும் தரித்திரமும் விலகும். குறிப்பாக மலையளவு கடனும் நீங்கி செல்வசௌபாக்கியம் பெருகும். 5. மங்கல காரியங்கள் யாவும் மளமளவென நடைபெறும். நீங்கள் தொடங்கும் சகல காரியங்களும் சுபமாக முடியும். வழக்குகள் தீரும். 6. கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை, எதிர்மறை சிந்தனைகள் தீரும். வீட்டில் சுபீட்சம் உண்டாகும். 7. குடும்ப பிரச்னைகள் தீரும். குறிப்பாக தம்பதி ஒற்றுமை உண்டாகும். தீய சகவாசம், பழக்கங்கள் கொண்டவர் மனம் திருந்தி நல்ல வழியில் நடப்பர். 8. ருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தவர் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்று உயர்ந்த பதவியை அடைவர். அவர்களை யாரும் வெல்ல முடியாது என்பது ஆன்மிக நூல்கள் சொல்லும் சத்திய சாட்சி. எனவே இனியும் தாமதிக்காமல் இந்த மகாருத்ர ஹோமத்தில் இன்றே சங்கல்பித்துக் கொள்ளுங்கள். மகாருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நடவடிக்கை!
பிரபல யூடியூபரும், விமர்சகருமான சவுக்கு சங்கர் இன்று (13.12.25) அதிகாலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து… The post பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நடவடிக்கை! appeared first on Global Tamil News .
டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியான வதோதரா-மும்பை சாலையின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மும்பை அருகே உள்ள JNPA துறைமுகத்துடன் நேரடியாக இணைக்க NHAI புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
இன்று வானிலை எப்படி இருக்கும்? முக்கிய தகவலை கொடுத்த டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்!
சென்னை : வட இந்தியாவில் நிலவும் வலுவான உயரழுத்ததின் வறண்ட வாடைக்காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகம் உள்பட தென் இந்தியாவில் குளிர் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், தேனி, தென்காசி மதுரை, விருதுநகர் போன்ற உள் மாவட்டங்களில் இரவுஅதிகாலை நேரத்தில் குறைந்தப்பட்ச வெப்பநிலை 16 முதல் 18 செல்சியஸ் அளவிற்கு காணப்படுகிறது. வால்பாறை, உதகமண்டலம், கொடைக்கானல் பகுதிகளில் வெப்பநிலை 8 கீழ் குறைவதற்கும், உறைப்பனி நிலவுவதற்கும் […]
`சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்' - கார்திக் சிதம்பரம் கருத்து!
யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (டிசம்பர் 13) அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்திக் சிதம்பரம். கார்த்திக் சிதம்பரம் தனது யூடியூப் சேனலில் அவ்வப்போது திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் சவுக்கு சங்கர். இதன் காரணமாக, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா என்பவர் கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகாரளித்திருந்தார். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் காவல்துறையினர் சென்றிருக்கிறார்கள். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரை உடனே கைது செய்ய முடியவில்லை. savukku shankar தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து திறந்தனர். பின்னர், சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து இன்று (டிச., 13) மதியம் கைது செய்யப்பட்டார். கைதாவதற்கு முன் வீட்டுக்குள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீஸார் வந்துள்ளதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பேசுபொருளானது. இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி கார்திக் சிதம்பரம், நான் சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது அப்பட்டமான துன்புறுத்தலாகும். என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ்: ``ராகுல் - பிரியங்கா அணியிடையே மோதல் வெட்ட வெளிச்சமானது'' - பாஜக சாடல்
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: 2026ல் திமுக-காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் தக்க பாடம்
மதுரை திருப்பரங்குன்றம் தீப வழக்கில் 2026ல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனா்.
நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (13) முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தாலியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தின் 2026 வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட தேசிய வேலைநிறுத்தத்திற்காக நேற்று வெள்ளிக்கிழமை இத்தாலி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர். அடுத்த வாரம் பட்ஜெட் விவாதிக்கப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அங்கீகரிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இத்தாலியின் CGIL தொழிற்சங்கம், அனைத்து பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களில் சுமார் 61% பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதாக மதிப்பிட்டுள்ளது.
Suriya: ஸ்டீபன், பேச்சி - இளம் நடிகர்களைப் பாராட்டிய சூர்யா!
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஸ்டீபன் மற்றும் விஜய் சேதுபதி தயாரிப்பில் வந்த பேச்சி திரைப்படங்களைப் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா. Stephen ஸ்டீபன் திரைப்படத்தில் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அறிமுக நடிகர் கோமதி சங்கரை குறிப்பிட்டு பாராட்டினார். நன்கு சிந்தித்து எழுதப்பட்ட ஒரு கதையில் சவாலான பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுவதும் அதன் தன்மை மாறாமல் பதைபதைப்பு குறையாமல் பயணித்துள்ளது என தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ளார் சூர்யா. ஸ்டீபன் படத்தில் ஒன்பது இளம்பெண்களைக் காணவில்லை. அவர்களை ‘நான்தான் கொன்றேன்’ என சரண்டர் ஆகிறான் ஸ்டீபன் ஜெபராஜ் (கோமதி சங்கர்). கொலைகளுக்கான காரணத்தைக் கண்டறிய, ஸ்டீபனை விசாரிப்பது படமாக விரிகிறது. சட்சட்டென மாறும் முகபாவங்கள், கணிக்க முடியாத செயல்கள் என உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பாத்திரத்தை நம்பகமாகத் திரையில் வார்த்திருக்கிறார் அறிமுக நடிகர் கோமதி சங்கர். Pechi ஸ்டீபனுடன் ராஜமுத்து நடித்த 'பேச்சி' என்ற குறும்படத்தையும் மனம் திறந்து பாராட்டியுள்ளார் சூர்யா. ராஜமுத்துவின் நடிப்பை, மனதை நெகிழ வைக்கும் ஒரு அற்புதமான நடிப்பு எனப் பாராட்டியுள்ளார். யூடியூபில் வெளியாகியிருக்கும் பேச்சி குறும்படம், ஒரு மேய்ப்பன், தனது தாயாரின் மறைவுச் செய்தியை அறிந்த பிறகு, மீண்டும் தன் சொந்த ஊருக்குப் பயணிக்கும் கதை. சாதி பாகுப்பாட்டையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் காட்டியிருக்கிறது. Suriya: அவரின் மகன் என்பதே எனக்கான அடையாளம் - தந்தை சிவகுமார் குறித்து சூர்யா நெகிழ்ச்சி

27 C