யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் ; நீதிமன்ற உத்தரவால் CID விசாரணைக்கு செல்லும் வழக்கு
யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் நேற்று (17) முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். மர்மமான மரணம் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கொடிகாமம் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது கடமையில் இருக்க வேண்டிய பொலிஸ் […]
பிரதமர் வருகை: கோவை விமான நிலையத்தில் தற்காலிக வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள்!
பிரதமர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் தற்காலிக வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் இந்த தகவலை தெரிந்து கொண்டு பயண திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
IPL 2026: ‘அதிக தொகைக்கு ஏலம் போகும்’.. டாப் 5 வீரர்கள்: 2 சர்பரைஸ் தேர்வும் இருக்கு: விபரம் இதோ!
ஐபிஎல் 2026 ஏலத்தில் பெரிய தொகைக்கு போகக்கூடிய 5 வீரர்கள்: ஆண்ட்ரே ரஸ்ஸல் முதல் மதிஷ பத்திரன வரை. இந்த 5 வீரர்களையும் வாங்க, கிட்டதட்ட அனைத்து அணிகளும் முயற்சிக்கும் எனக் கருதப்படுகிறது.
தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' - முதல்வர் ஸ்டாலின் பதிவு
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர். அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், அந்த 4 குழந்தைகளும் வாழ்வாதாரத்திற்காக அரசின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். ஸ்டாலின் வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது, இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களின் எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை, மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்! SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! ️ இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். ☀️ நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி,… https://t.co/y3Oor4mTLA — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 17, 2025
வாஷிங்டன் சுந்தருக்கு புது ரோலை கொடுக்க கௌதம் கம்பீர் முடிவு செய்துள்ளார். இனி, மூன்றாவது இடத்தில் ஆடுவது மட்டும் முக்கியமில்லை. இந்த விஷயத்தையும் கூடுதலாக செய்ய வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளாராம்.
கிளாம்பாக்கம் ஸ்கைவாக் பணிகள் எப்போது முடிவடையும்?
கிளாம்பாக்கம் ஸ்கைவாக் பணிகள் எப்போது முடிவடையும்? என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது . இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளயிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த வார ராசிபலன் நவம்பர் 18 முதல் 23 வரை #VikatanPhotoCards
தொடர் மழை, குளிர்; வெறிச்சோடிய புதுச்சேரி நகர்ப்பகுதி | Photo Album
வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்
தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? - மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்
மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்திருக்கிறார். அதுவும், முதுகில் மாட்டியிருந்த புத்தக சுமையைக் கூட கீழே வைக்க விடாமல் அதோடு சிட் அப் செய்யும்படி சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாத அந்தக் குழந்தையும் 100 சிட் அப் எடுத்திருக்கிறாள். மாலை வீட்டுக்குத் திரும்பியதும் கடுமையான முதுகுவலி இருப்பதாக அம்மாவிடம் அழவே, பள்ளிக்கூடத்தில் நடந்ததை தெரிந்துகொண்ட மாணவியின் அம்மா, மகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மாணவி உயிரிழந்துவிட்டாள். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தரிடம் பேசினோம். புத்தக மூட்டை புத்தக மூட்டை ‘’முதலில் இந்தக் கால பள்ளிக்கூட புத்தக பைகளின் எடையை குறைக்க வேண்டும். சில பள்ளிக்கூடங்கள் இதில் கவனமாக இருந்து, மாணவர்களின் புத்தக சுமையைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா பள்ளிக்கூடங்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபுல் பாடி செக்கப் இரண்டாவது விஷயம். பள்ளி படிக்கும் மாணவர்களில் எங்கோ ஒருவருக்கு, சிறு வயதில் இருந்தே இதயம் அல்லது நுரையீரலில் சின்னதாக பிரச்னை இருக்கலாம். அது சிறிய அளவிலான துளையாகவும் இருக்கலாம். அது தெரியாமலே இருந்திருக்கலாம். ஏதோ ஒருகட்டத்தில், பிரச்னை பெரிதாகும்போது, குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் வரும். இதை வருடத்துக்கு முறை பள்ளிக்கூடங்களில் ஃபுல் பாடி செக்கப் செய்வதன் மூலம் கண்டறியலாம். பல பள்ளிக்கூடங்களில் இந்த நடைமுறை இல்லை. இதை செய்திருந்தால், எந்த மாணவருக்கு என்னப் பிரச்னை, அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்காக, ஹெல்தியான குழந்தைகளை இப்படி புத்தக மூட்டையுடன் 100 சிட்-அப் எடுக்க வைக்கலாம் என்று அர்த்தமில்லை. காற்று மாசுபாடு காற்று மாசுபாடு மூன்றாவது விஷயம். காற்று மாசுபாட்டின் இடையே தான் நாமும் நம் குழந்தைகளும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதுவும் பெரு நகரங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. இன்றைய குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொந்தரவு காற்று மாசுபாட்டினால் அதிகரித்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு எதுவும் இல்லாமல், 12 வயது குழந்தையை 100 முறை உட்கார்ந்து எழ வைத்தது மிகப் பெரிய தவறு. மாணவியை திருத்த நினைத்திருந்தால், 10 முறை சிட் அப் செய்ய வைத்திருக்கலாம். ஸ்கேலால் கையில் ஓர் அடி கூட வைத்திருக்கலாம். ஆனால், அந்த ஆசிரியர் செய்திருப்பது மகா பாவம். எங்கேயோ இருந்த கோபத்தை, அந்தக் குழந்தையின் மீது காட்டியிருக்கிறார். Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்! அந்த மாணவிக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்றால்... அந்த மாணவிக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்றால், முதல் 20 சிட்-அப் போடும்போதே மூச்சு வாங்க ஆரம்பித்திருக்கும். 100 சிட்-அப் எடுத்தவுடனே மாணவிக்கு நெஞ்சு வலியும், கூடவே மூச்சுத்திணறலும் சேர்ந்து வந்திருக்கும். அதன் காரணமாகத்தான், அந்த மாணவி இறந்திருப்பார். அவசர சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர் வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..? ஆசிரியர்கள் கொடுக்கும் தவறான மற்றும் தாங்க முடியாத தண்டனைகளால் மாணவர்கள் இறக்கும்போது, சமூகத்தில் இரண்டு தவறுகள் நடப்பதற்கு வழிவகுக்கின்றன: ஒன்று அதன்பிறகு நல்ல ஆசிரியர் பெருமக்களால்கூட, தங்கள் மாணவர்களின் தவறுகளைத் திருத்துவதற்காக சிறுசிறு தண்டனைகளும் கொடுக்க முடியாமல் போகும். இரண்டாவது, அப்படி திருத்தப்படாத மாணவர்கள் வளரும்போது, அது சமூகத்துக்கு கெடுதலாக அமையவும் வாய்ப்பிருக்கிறது’’ என்றவர், சிட் அப் தொடர்பான சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். 5 சிட் அப் அல்லது 10 சிட் அப் வரை எடுக்கலாம். ‘’காது நுனியை பிடித்தபடி சிட்-அப் எடுத்தால், கவனத்திறன் கூர்மையாகும்; நினைவுத்திறன் அதிகரிக்கும், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதனால், குழந்தைகள் 5 சிட்-அப் அல்லது 10 சிட்-அப் வரை எடுக்கலாம். வளர்ந்த குழந்தைகள் என்றால், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20 சிட்-அப் எடுக்கலாம். அதுவும், ஆரோக்கியமாக இருந்தால்... சிட்-அப் எடுப்பதற்கான ஸ்டாமினா எனப்படும் தாங்கும் திறன் நபருக்கு நபர், குழந்தைக்கு குழந்தை மாறுபடும். இதுபற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் ஓர் ஆசிரியர் அந்த 12 வயது குழந்தையின் உயிரைப் பறித்திருக்கிறார்’’ என்கிறார் வருத்தமுடன், அவசர சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்: காரசார விவாதம், தீர்மானங்கள் தோல்வி!
சென்னை பத்திரிகையாளர் மன்றம் (Chennai Press Club) என்பது தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரின்
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு
வங்காளதேச முன்னாள் பிரதமர் 78 வயதான ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து நேற்று (17) அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. வங்க தேசத்தில் 2024ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது, 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் தஞ்சம் அப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை […]
சென்னை எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையங்களில் பராமரிப்பு குறைபாடு: பயணிகள் வேதனை!
சென்னையில் எம் ஆர் டி எஸ் ரயில் நிலையங்களில் பராமரிப்பு குறைபாடு இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைனுக்கு 100 ஃபேல் போர் விமானங்கள்:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டில் ஊழலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார் . பாரிஸில் ஜெலென்ஸ்கியுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மக்ரோன், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர தகுதி பெற சட்டத்தின் ஆட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார், இதற்கு கியேவ் நீண்ட காலமாக ஆசைப்பட்டு வருகிறது. அரசு நடத்தும் எரிசக்தி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட 100 மில்லியன் டாலர் (€86 மில்லியன்) ஊழல் திட்டத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த நிலையில், உக்ரைன் தலைவர் கடந்த வாரம் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார் . செய்தியாளர் சந்திப்பில், பிரெஞ்சு உற்பத்தியாளர் டசால்ட் ஏவியேஷன் தயாரித்த 100 ரஃபேல் போர் விமானங்களை கீவ் நகருக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தையும் மேக்ரான் உறுதிப்படுத்தினார். பிரெஞ்சு ரயில் தயாரிப்பாளரான ஆல்ஸ்டோம், உக்ரேனிய ரயில்வே ஆபரேட்டருக்கு என்ஜின்களை வழங்குவதற்காக சுமார் 475 மில்லியன் யூரோக்கள் (551.05 மில்லியன் டாலர்) மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார். இது உலகின் மிகப்பெரிய வான் பாதுகாப்பாகவும், மிகப்பெரிய ஒன்றாகவும் இருக்கும் என்று ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில், ஜெலென்ஸ்கி, கியேவ் மிகவும் வலுவான பிரெஞ்சு ரேடார்கள் மற்றும் எட்டு RI-பாதுகாப்பு அமைப்புகள் SAMP/T, ஒவ்வொன்றும் ஆறு ஏவுதள அமைப்புகளுடன்பெறும் என்றும் கூறினார். இது அடுத்த ஆண்டு தொடங்கி 10 ஆண்டுகளுக்கு செயல்படும் ஒரு மூலோபாய ஒப்பந்தம் என்று அவர் மேலும் கூறினார். பிரான்ஸ் மிராஜ் போர் விமானங்களை கியேவுக்கு வழங்கியுள்ளது, ஆனால் ரஃபேல் விமானங்கள் வாக்குறுதியளிக்கப்படுவது இதுவே முதல் முறை.
நைஜீரியாவில் 25 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டனர்!
நைஜீரியாவின் வடமேற்கே அமைந்துள்ள கெப்பி மாநிலத்தில் நேற்றுத் திங்கட்கிழமை துப்பாக்கிதாரிகள் 25 பெண் மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். அத்துடன் ஒரு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வரையும் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் சமீப ஆண்டுகளில் ஆயுதமேந்திய குழுக்கள் பணத்தைக் கோரி பள்ளிகளில் இருந்து மாணவர்களைக் கடத்தும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. தாக்குதல் நடத்தியவர்கள் அதிநவீன ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், சோதனையின் போது அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் அவர்கள் அரசு பெண்கள் விரிவான மேல்நிலைப் பள்ளியைத் தாக்கினர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் 25 பெண் மாணவர்களை கடத்திச் சென்றனர். தாக்குதலை எதிர்த்தபோது பள்ளியின் துணை முதல்வர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஒரு பாதுகாப்பு காவலர் காயமடைந்ததாகவும் ஒரு அறிக்கை கூறுகிறது. கூடுதல் தந்திரோபாயப் பிரிவுகள் உட்பட அதிகாரிகள், இராணுவம் மற்றும் உள்ளூர் கண்காணிப்பாளர்களின் உதவியுடன் பள்ளிக்கு அருகிலுள்ள தப்பிக்கும் வழிகளிலும் காடுகளிலும் துப்பாக்கி ஏந்தியவர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Madan Gowri, Vijay கிட்ட 100% அரசியல் மட்டும்தான் பேசுவேன்! | Vikatan Digital Awards 2025 UNCUT
Edappadi Palaniswami போடும் கூட்டணி கணக்கு | Vijay சாடும் Udhayanidhi Stalin | Imperfect Show
️ ஏர் ஃப்யூரிஃபையர் (வ்யரபிள் டெக்னாலஜி) –சுவாசத்தை மேம்படுத்தும் புதிய புரட்சி
சமீப காலமாக, நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் காற்றின் தரக் குறைபாடு (Air Quality Index – AQI) மற்றும் காற்று
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பதவி விலக வேண்டும்
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவரது முகநூல் பக்கத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால்
திருமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்டபுத்தர்சிலை நேற்றுபிற்பகல் 1.35 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு அவசர அவசரமாக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டடம் ஒன்றில், புத்தர்சிலையை வைக்க முற்பட்ட பதற்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், புத்தர் சிலையை காவல்துறையினர் பலவந்தமாக அகற்றியிருந்தனர். இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நிலையில், பாதுகாப்பிற்காக
சென்னையில் வேகமெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பணிகள்... குடிநீர் வாரியம் தகவல்!
சென்னையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி கண்காணிக்கும் பணிகள் அனைத்தும் வேகம் எடுத்தூள்ளது. இதன் மூலம் மக்களின் தண்ணீர் பயன்பாட்டை அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உலகின் புகழ்பெற்ற சிக்கன் உணவு பட்டியல்-இந்தியாவின் உணவும் லிஸ்ட்ல இருக்கு!
உலகின் புகழ்பெற்ற சிக்கன் உணவு பட்டியலானது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவில் இந்தியாவில் உள்ள பட்டர் சிக்கன் 5-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளது .
சென்னை மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் அம்பத்தூர் பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் கூறிய தகவலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஊதுபத்தியால் நேர்ந்த விபரீதம் – 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசம்
ஊதுபத்தியை தவறாக கையாண்டதால் 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசமாகியுள்ளது. 1,500 ஆண்டு பழமையான கோவில் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் 1500 ஆண்டு கால பழமையான கோவில் ஒன்று உள்ளது. 536 ஆம் ஆண்டில் தெற்கு லியாங் (Liang) வம்சத்தில் உள்ள ஃபெங்குவாங் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகை தருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்னர், கோவிலுக்கு வந்த பெண் […]
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை கடற்படையினர் கைது செய்து , நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை […]
ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல்: UNIFIL வெளியிட்ட கண்டன அறிக்கை
ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக UNIFIL அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அமைதிப் படையினர் மீது தாக்குதல் லெபனானின் தெற்கு பகுதியில் செயல்பட்டு வந்த ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்துவதாக ஐக்கிய நாடுகளின் இடைக்கால படை(UNIFIL) வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நாவின் தூதுக்குழு X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், லெபனான் நாட்டின் எல்லைக்குள் இஸ்ரேலிய படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள மெர்காவா(merkava tank) டாங்கியில் […]
துபாய் விமான கண்காட்சி 2025: டிரோன் ஷோ முதல் ஏர் டாக்சி வரை... அடேங்கப்பா...
துபாயில் விமான கண்காட்சி 2025 நடைபெறுகிறது. டிரோன் ஷோ முதல் விமான சாகசம் வரை கண்கவர் விஷயங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
யாழில் சீரற்ற காலநிலையால் 10 பேர் பாதிப்பு
யாழில் கடந்த சில தினங்களாக நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/28 கிராம சேவகர் பிரிவில் உள்ள புங்குடுதீவில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது. கடுமையான காற்றுடன் கூடிய கனமழை காரணமாக அங்கு மூன்று வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி பலி –நடுங்கவைக்கும் சம்பவம்!
ஹஜ் யாத்திரை சென்ற 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஹஜ் யாத்திரை தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள், சவுதி அரேபியா மெக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு மதீனா நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மதீனா அருகே உள்ள முப்ரிஹாத் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த எண்ணெய் டேங்கர் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. 42 பேர் பலி இதில், பேருந்தில் […]
ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் - யார் அவர்?
நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் நடிப்பு கற்றுக் கொடுத்த ஆசிரியர் கே.எஸ். நாராயணசாமி உயிரிழந்துள்ளார். வயது மூப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் ரஜினி. கே.எஸ். நாராயணசாமி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் அவருக்கு நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்துள்ளார் கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி. 92 வயதான அவர் சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்துவந்த நிலையில் இன்று (நவ. 17) காலை உயிரிழந்துள்ளார். கோபாலி ரஜினிகாந்த் மட்டுமின்றி அமிதாப்பச்சன், நாசர், சிரஞ்சீவி, ராதாரவி ஆகிய நடிகருக்கும் ஆக்டிங் மாஸ்டராக இருந்ததாகக் கூறப்படுகிறது. சில இயக்குநர்களையும் உருவாக்கியிருக்கிறார். ரஜினிகாந்த் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அங்கு வந்த இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினிகாந்த்தை தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தியவர் கோபாலி என்றும் கூறப்படுகிறது. KS Narayanasamy நாராயணசாமி புனேயிலுள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் முதல் மாணவராக திகழ்ந்தவர். மேலும் இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் சினிமா விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். தூர்தர்ஷன் இயக்குநராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு நேரில் சென்றதுடன், ஒரு மணிநேரம் அங்கே இருந்து அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார் ரஜினிகாந்த். Bison: உங்கள் உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது மாரி - வாழ்த்திய ரஜினிகாந்த்
அனுமதியில்லா கட்டிடத்தை அகற்ற போய் திட்டமிட்டு உள்புகுத்தப்பட்ட இனவாதமும் மதவாதமும்எனும் தலைப்பில்; சமூக செயற்பாட்டாளர் ஒருவர் எழுதிய கட்டுரை இது: மக்கள் விளிப்படையவிட்டால் வேதனையில் துடிக்க போவது வீர வசனம் பேசும் அரசியல் வாதிகளோ இனத்திற்காக பேசுகின்றோம் என்ற ஒரு சில முகம் காட்டா முகநூல் போராளிகளோ அல்ல என்ற புரிதலை வரலாற்றில் இருந்து தேடுங்கள்! திருகோணமலை பிரச்சினையைப் பற்றி நீங்கள் அறியாத கதை இப்போது பலர் அறிந்திருக்கும் கதை என்னவென்றால், // திருகோணமலை மாவட்டத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட முதல் தர்ம போதனை பாடசாலையான மிஹிந்துபுர மகிந்தவங்ச குணானுஸ்மரண (ஞாபகார்த்த) பாடசாலை கட்டிடத்தின் அடிக்கல் 2025.11.16 ஞாயிற்றுக்கிழமை காலை 09.09 மணிக்கு திருகோணமலைப் பகுதியின் பௌத்த தேரர் மற்றும் மக்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. பின்னர் அதே நாள் (16) இரவில் அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு முயன்ற போது, பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இடையே பதற்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் பொலிஸார் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை துறைமுகப் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றிருந்தனர். நேற்றிரவு ஏற்பட்ட கலகத்தின் போது, இந்த சிலை வைப்பின் முன்னோடிகளில் ஒருவரான பலங்கொடை கஸ்ஸப்ப என்ற பிக்கு, மற்றும் திருகோணமலையின்கல்யாணவங்கசத்திஸ்ஸ ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் இன்று (17) மதியம் 1 மணியளவில் அச் சிலை மீண்டும் அதே இடத்தில் வைத்துள்ளனர்… அடுத்து, பலர் கூறாத சில உண்மைகள் (Facts) உள்ளன: 1. 1951 ஆம் ஆண்டிலிருந்து இந்த இடத்தில் விஹாரை இருந்ததற்கான சான்றுகள்சான்றுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன.(படத்தில் இணைத்துள்ளேன்) 2. பாதுகாப்பு காரணங்களால், அங்கு இருந்த விஹாரை இராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தது.(இணைக்கப்பட்டுள்ளது) 3.இங்கு இருந்த பழைய தர்ம பாடசாலையில் படித்த பலர் இன்று வரை திருகோணமலையில் வாழ்கின்றனர் , என கூறப்படுகின்றது. 4. சுனாமி பேரழிவுக்குப் பிறகு அந்தக் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அந்தப் பகுதி கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள மேலாண்மை திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டு வந்தது( படத்தை காணலாம்) 5.பின்னர் 2014 ஆம் ஆண்டு, அதற்கான நிலம் 40 பேர்ச் Mahinda Rajapaksa அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது புனித பூமி (பூஜா பூமி ஒப்பந்தம்” )மூலம் ஶ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரைக்கு வழங்கப்பட்டது.(உறுதி பத்திரம் இணைக்கப்பட்டுள்ளது) 6 நிலத்தின் உரிமை விஹாரைக்கு இருந்தாலும், பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் கடற்கரை பாதுகாப்புதிணைக்களத்தவர்களாலே நிர்வகிக்கப்கட்டு வந்தது.ஆனால் விஹாரை நிர்வாகத்தினராலே அந்த நிலம் சுற்றுபுற வேலியிட்டு பராமரித்து வந்தனர். 7.இன்றைய புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்திலிருந்து ஐந்து அடிக்கு இடதுபுறமாக பெரிய அரச மரம் ஒன்றும், அதனடியில் மேலுமொரு புத்தர் சிலையும் உள்ளது. “அங்கு புத்தர் சிலைகள் இல்லை” என்பது பொய்யான குற்றச்சாட்டு. அதேசமயம் அருகில் இரண்டு விஹாரைகளும் உள்ளன; அவற்றை திருகோணமலையி கல்யாணவங்கசத்திஸ்ஸ என்ற பிக்குவினாலே நிர்வகிக்க படுகின்றது.அவர்கள் காப்பாற்றுகின்றனது இங்கே உள்ள உண்மையான பிரச்சினை தர்ம பாடசாலை பற்றியது அல்ல. இந்த விஹாரைக்கு சொந்தமான 40 பர்சஸ் நிலத்தில் உள்ள கடை (Photo 03, 04 - The Land) பற்றியது. இந்த கடையை UNP-இன் திருகோணமலை அமைப்பாளர் தீபானி லியனகே என்பவரின் மகள் மற்றும் மருமகன் நடத்தி வந்துள்ளதாகவும் , ‘அனுமதியில்லா நில ஆக்கிரமிப்பு’ குற்றச்சாட்டு அடிப்படையில் புகார் செய்யப்பட்டதாகவும், பின்னர் அ அந்த குற்றச்சாட்டு திரும்ப பெறப்பட்டதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். தீபானி லியனகே இன் மகளிற்கு இருந்த குற்றச்சாட்டு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராக இருந்த செந்தில் தொண்டமனுடன் இணைந்து நிலத்தை ஆக்கிரமித்ததேயாகும். “இந்த நிலத்தினை குத்தகை அடிப்படையில் சிற்றுண்டிசாலை நடத்துவதற்காக L. திலக் பெறேரா( Thilak perera) என்பவரிற்கு பன்சலை நிருவாகத்தினர் வழங்கியிருந்தனர். விஹரையை நடாத்தி செல்வதற்கு எந்த வருமானமும் இல்லாததால் தான் இது குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரே ஒரு ஆவணம் 2014வது வருடம் மஹிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்ட புனித பூமி என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆவணம் மட்டுமே! இதை ஆதாரமாக கொண்டே இவர்கள் வியாபாரத்தை நடாத்தி சென்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையிலே CCD (கடற்கரை பாதுகாப்பு திணைக்களம்) மற்றும் நகரசபை இணைந்து அனுமதி பெறப்படாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறி வியாபாரத்தை நடாத்த தடை விதித்தவுடன் மேலும் இந்த வியாபாரத்தை தொடர விரும்பின் அனுமதி பெற வேண்டிய இடங்களை பட்டியலிட்டு கொடுத்து அனுமதிகள் பெறப்பட்ட வியாபாரத்தை நடாத்தி செல்லலாம் எனவும் கூறியிருந்தனர். அனுமதி பெற்று கொள்ள வேண்டிய திணைக்களங்களாக பரிந்துரைக்க பட்டவை 1)கட்டட நிர்மாண திணைக்களம் 2)பௌத்தசாசன அமைச்சு 3)கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் 4)கடல்வள பாதுகாப்பு திணைக்களம் 5) சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகாரசபை 6) நகரசபை 7) வீதி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி திணைக்களம் கடற்கரை பாதுகாப்பு/கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தால் (CCD)CCCRN/ADC/6578’ அனுமதி வழங்கப்பட்டது ஆனால. 2024 ம் ஆண்டு அனுமதியில்லா கட்டிடம் என்று உணவகம் நடத்தியவர்கள. மேல் வழக்கு தாக்கல் செய்தது. ஆனால் அந்த நீதிமன்ற வழக்கினை பொருட்படுத்தாமல் உணவகம் நடத்தி சென்றதே இந்த பிரச்சனை தோன்ற முதல் காரணம். ( இந்த வழக்கு இன்னும் நிலைவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025.07.18 அன்று கரையோர பாதுகாப்பு அதிகாரசபையால் (CCD) 2023 இல் வழங்கிய அனுமதியை ரத்து செய்ததுடன் அனுமதியுன்றி கட்டப்பட்ட கட்டிடத அதை உடனடியாக அகற்றும் படி கட்டளை இட்டனர்.அத்துடன் CCD திறைவேற்று பணிப்பாளர் இந்தக் கட்டடத்தை உடன் அகற்ற பொலிசாருக்கு உத்தரவு வழங்கினார். 4/11/2025 ஆம் தேதி பொலிஸார் CCD உடன் இணைந்துசட்டவிரோத கட்டடத்தை அகற்ற வந்தனர். அப்போது விஹாரை நிருவாகம் 7 நாட்களிற்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனாலும. அவர்கள் பொலிஸில் முறைப்பாட்டை செய்திருந்தனர் நகரசபையால் “2024 இல் திலக்கிற்கு எதிராக போடப்பட்ட வழக்கில் இந்தக் கட்டுடம் சான்றாக தேவைப்படுகின்றது; இதை அகற்ற முடியாது என்று முரண்டு பிடித்தனர்.ஆனால் அதற்கு பொலிசார் இடங்கொடுக்கவில்லை. இருப்பினும் இதை நாங்கள் நீதிமன்றில் பார்த்து கொள்ளுகின்றோம் அதற்குமேலும் 7 நாட்கள் அனுமதி கேட்டிருந்தனர் அனுமதியும். வழங்கப்பட்டது. அந்த 7 நாட்களும் முடிந்தது கடந்த வெள்ளிக்கிழமை. அடுத்த வேலை நாள் இன்று. (திங்கட்கிழமை) ஆனால் புத்தர் சிலை வந்தது நேற்று – 16 ஆம் தேதி ஞாயிறு. “கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெவ்வேறு எல்லைகள் உள்ளன. அதன் அடிப்படையில் வணிகத்திற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் ‘இந்தக் காலத்திற்குள் மட்டுமே பயன்படுத்தலாம்’ என்ற காலவரையும் உள்ளது. அது முடிந்ததும் புதுப்பிக்க வேண்டும். இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் அவர்களுக்கு வழங்கிய அளவை மீறி சிறு சிறு குடிசைகள் அனுமதியை மீறி அமைத்ததனால் CCD யினர் அதை நிறுத்தினர்.அத்துடன் அனைத்து குடிசைகளையும் 7 நாட்களில் அகற்ற உத்தரவு பிறப்பித்தனர். அந்த 7 நாட்கள் முடிந்ததும் இந்த கட்டுமானத்தை செய்துள்ளனர். CCD வந்து மீண்டும் புகார் கொடுத்தது — ‘அனுமதியில்லா கட்டிடம்’. கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த வழிபாட்டு தளமோ அல்லது கட்டிடமோ அமைக்க அனுமதி அவசியம். ஆனால் இங்கே எந்த அனுமதியும் பெறப்படவில்லை. அதனால் அவர்கள் ‘இதை அகற்றுங்கள்’ என்றனர்.” நிலம் என்பது மக்களுக்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட விஷயம். திருகோணமலை மாவட்டம் அத்தகைய சூழ்நிலைகளுக்குப் பிரபலமான பகுதி. ஆயிரக்கணக்கான நிலங்கள் தொல்பொருள் துறை மற்றும் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். ஊடகங்களும்/ஊடகவியலாளர்களும் தாங்கள் பிரதிநிதித்துவ படுத்தும் இனத்தை /மத்த்தை/ மொழியை முன்னிறுத்தியே கருத்துக்களை திணிக்கின்றனர் உண்மைகள் ஆய்வுகள் மூலம் ஆராய்ந்து வெளிப்படுத்த படுவதில்லை.அவர்கள் ஒருபக்கத்தையே பேசுவர்/ இந்த பிரச்சினை இங்கேயே முடியும் விஷயம் அல்ல. இது பெரிய பிரச்சினையின் தொடக்கம் கூட ஆகலாம்!!
முடிவு எடுத்துவிட்டேன்…தென் அமெரிக்க நாடு மீது போருக்குத் தயாரான ட்ரம்ப்
பல உயர் மட்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அபாயங்கள் மற்றும் நன்மை வெனிசுலா மீது இந்த வாரத்தில் இரணுவ நடவடிக்கை உறுதி என ட்ரம்ப் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி நீக்கம் செய்வதனால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் நன்மைகளையும் ட்ரம்ப் ஆராய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபரேஷன் Southern Spear என குறிப்பிடப்பட்டுள்ள இந்த வடவடிக்கைக்கு […]
சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் மீது கத்திக்குத்து
களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (16) மாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பயாகலை பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் தனது மருமகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது உணவகம் ஒன்றுக்கு அருகில் வீதியின் குறுக்கே முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். வீதியின் […]
தென்னிலங்கையின்மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உணவகம் ஒன்றுக்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் ஒருவரின் மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட மஹதுர நளீன் என்பவரின் சகோதரி ஆவார். இந்த துப்பாக்கிச்சூடானது கடந்த 5 ஆம் திகதி பாதாள உலக குழு குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் மச்சான் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிகின்றனர்.
முன்கதவா? பின்கதவா? பேச்சுக்கள்?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் வியாழக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சு நடைபெறவுள்ளது. பேச்சுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கோரிக்கைக் கடிதத்தின் அடிப்படையில் சந்திப்புக்கு ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர், பொதுச்செயலாளரோடு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளைமறுதினம் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர். இனப் பிரச்சினைக்குத் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த வணக்கஸ்தலம் மற்றும் அங்கு அடாத்தாக நிறுவப்பட்ட புத்தர் சிலை ஆகியவை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியினர் சந்திப்பில் பேசவுள்ளதாக தமிழரசுகட்சி அறிவித்துள்ளது.
நம்பிக்கை துரோகமாம்:கஜேந்திரகுமார்!
உங்களை நம்பி,.நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள என குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். திருமலைக்கான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள். நீங்கள் நேற்றிரவு எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே!! அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது, அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது. உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம், நீங்கள் இனவாதிகள் இல்லை என சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். முன்னதாக அனுர அரசிற்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் வரவு செலவுத்திட்ட வாசிப்பில் இலங்கை தமிழரசுகட்சி வாக்களிப்பில் பங்கெடுத்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
திருமலை:அந்தரத்தில் தொங்கும் அனுர அரசு!
திருகோணமலை கடற்கரையில் நேற்று அகற்றப்பட்ட புத்தர் சிலை மீள நிறுவப்பட்டமை கடுமையான அதிர்வலைகளை தமிழ் அரசியல் அரங்கில் தோற்றுவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை,அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து காவல்துறையினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. அங்கு நிறுவப்பட்ட புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. எனினும் அந்த புத்தர் சிலை, இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல்; அதே இடத்தில் மீண்டும் பிக்குகள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று புத்தர் சிலை பிரதிஸ்டை செய்ய முற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குற் சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்வதற்கு பௌத்த பிக்குகள் முயற்சித்த நிலையில்; கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை காவல்துறையினரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டிருந்தது. அத்தோடு, அப்பகுதியில் விசேட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் பௌத்த பிக்குகள் மத்தியில் காவல்துறை பாதுகாப்புடன் புத்தர் சிலை மீள எடுத்துவரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.
நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்கள்: 20 வயதுடைய 5 இளைஞர்கள் உயிரிழப்பு
அயர்லாந்தில் ஏற்பட்ட மோசமான இரண்டு கார் விபத்தில் 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்து அயர்லாந்தின் கோ லூத்(Co.Louth) கவுண்டியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோசமான சாலை விபத்தில் 5 இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டன்டால்க்(Dundalk) அருகில் உள்ள கிப்ஸ்டவுனின்(Gibstown) L3168 சாலையில் இரவு 9.00 மணிக்கு இரண்டு கார்கள் மோதிக்கொண்ட இந்த பயங்கரமான விபத்தில் 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 5 பேரில், 20 வயதுடைய 3 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவர் […]
புங்குடுதீவு டயானின் ‘ஆழ் மனதின் மீள் நினைவுகள்’நூல் வெளியீட்டு விழா
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட ஊடகக் கற்கை மாணவன் புங்குடுதீவு டயான் எழுதிய இரண்டாவது கவிதை நூலான ‘ஆழ் மனதின் மீள் நினைவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம்(15) யாழ் பல்கலை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ர.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் பிரதம விருந்தினராகவும் , சிறப்பு விருந்தினராக யாழ் […]
மெக்கா புனிதப் பயணம் சென்ற 42 பேர் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் - தவெக விஜய்
இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று காலை டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தப் பேருந்தில் பயணித்த 42 புனித யாத்திரை மேற்கொண்ட பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்கள் இந்தியர்கள் என்றும், தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலிருந்து புனித பயணம் மேற்கொண்டவர்கள் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சவூதி அரேபியா பேருந்து விபத்து, 42 பேர் பலி சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர் உயிரிழந்த அனைவரும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்றவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. தெலங்கானா அரசு சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தெலங்கானாவில் இருந்து சென்றவர்கள் குறித்து கேட்டு விசாரித்து வருகிறது. மேலும் இறந்தவர்கள் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்யும்படியும் கேட்டுக்கொண்டது. தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா… — TVK Vijay (@TVKVijayHQ) November 17, 2025 இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தவெக தலைவர் விஜய், தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். என்று தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.
Rain Alert: இன்று இரவு 10 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிமை ஆய்வு மையம் தகவல்!
தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது. தற்போது இன்று இலங்கை நிலப்பரப்புக்கு மேல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது என்றும், மன்னர் வளைகுடா நோக்கி லேசாக நகரத் தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. மழை ஆணவம் வேண்டாம் உதயநிதி; நீங்களே வாரிசை வைத்து வந்தவர் - தமிழிசை செளந்தரராஜன் காட்டம்! சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/9itcA5Mhow — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 17, 2025 அதிக அளவு மழை பெய்தும் நீர் எங்கேயும் தேங்கவில்லை - அமைச்சர் மா சுப்பிரமணியன் சொல்லும் விளக்கம்! மேலும், வரும் 22 ஆம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வரும் 21, 22 ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
சவூதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தில் 18 பேர் உயிரிழப்பு; நெஞ்சை உலுக்கும் சோகம்!
இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மெக்காவில் இருந்து மதீனாவுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முப்ரிஹட் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த டீசல் டேங்கர் லாரியுடன் மோதிக்கொண்டது. இந்தச் சம்பவம் அதிகாலை 1 மணி அளவில் நடந்ததால் அதிகமான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். எனவே விபத்து நடந்தவுடன் அவர்களால் தப்பிக்க முடியவில்லை. அதற்குள் பஸ் முற்றிலும் தீப்பிடித்துக்கொண்டது. டீசல் டேங்கருடன் மோதியதால் டீசல் வெளியேறி தீப்பித்துக்கொண்டது. இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 11 பெண்கள் மற்றும் 10 குழந்தைகளும் அடங்கும். பஸ் முற்றிலும் எரிந்துவிட்டது. சவூதி அரேபியா பேருந்து விபத்து, 42 பேர் பலி சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர் உயிரிழந்த அனைவரும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்றவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. தெலங்கானா அரசு சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தெலங்கானாவில் இருந்து சென்றவர்கள் குறித்து கேட்டு விசாரித்து வருகிறது. மேலும் இறந்தவர்கள் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்யும்படியும் கேட்டுக்கொண்டது. இந்த பெரும் விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்திருப்பதாகக் கிடைத்திருக்கும் தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சவுதி பேருந்து விபத்து மேலும், இளம் வயதினர், முதியவர்கள் என 9 பேரும், அவர்களின் 9 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நசீருதீன் (70), அவரது மனைவி அக்தர் பேகம் (62), மகன் சலாவுதீன் (42), மகள்கள் அமினா (44), ரிஸ்வானா (38), ஷபானா (40), மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினரான அசிப் என்பவர், என் சகோதரனின் மொத்த குடும்பமும் ஒரே அடியாகப் போய்விட்டது. குழந்தைகள், பெரியவர்கள், இளம் வயதினர் என 3 தலைமுறையும் போய்விட்டது என்று கதறி அழுதிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வயலில் வேலை செய்யும்போது 350 ஆண்டுகள் பழமையான வெள்ளி நாணயங்களை கண்டுபிடித்த தம்பதி
போலந்தில் 350 ஆண்டுகள் பழமையான வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு போலந்தின் Bukowiec Wielki என்ற சிறிய கிராமத்தில், ஒரு விவசாய தம்பதியினர் தங்கள் பண்ணை நிலத்தில் கற்கள் என்று நினைத்து அகற்றிய பொருட்கள், உண்மையில் 350 ஆண்டுகள் பழமையான வெள்ளி நாணயங்கள் என தெரியவந்துள்ளது. பீட்டா (Beata) மற்றும் ரோமுவால்ட் யோஸ்வியாக் (Romuald Jozwiak) என்ற தம்பதியினர், தங்கள் வயலில் வேலை செய்யும் போது இந்த நாணயங்களை கண்டுபிடித்தனர். பின்னர் அதிகாரிகள், மொத்தம் 162 வெள்ளி […]
விஜய் உடன் கூட்டணியா? செங்கோட்டையன் சொன்ன பதில்!
அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
31 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
இலங்கை கடற்பரப்பினுள்அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை… The post 31 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை appeared first on Global Tamil News .
தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க வேண்டும்
திருகோணமலையில் , சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையை கண்டித்து , தேசிய மக்கள் சக்தியின் அனைத்து தமிழ்… The post தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க வேண்டும் appeared first on Global Tamil News .
சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களே உஷார்! மூளையை திண்ணும் அமீபா வைரஸ்... சுகாதார துறை கொடுத்த அட்வைஸ்
கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா வைரஸ் பாதிப்புக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு தமிழ்நாடு சுகாதார துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
JNVST 2026 Class 6 Admit Cards Released
The Navodaya Vidyalaya Samiti (NVS) has released the admit cards for the Jawahar Navodaya Vidyalaya Selection Test (JNVST) 2026 for
'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்!
தூய்மைப் பணியாளர் ஜெனோவானின் கையில் இரத்த அழுத்ததை அளப்பதற்கான பட்டையை மாட்டுகிறார் மருத்துவர். அவருக்கு ஜெனோவா கொஞ்சம் பதட்டமாக இருப்பதைப் போல தோன்றுகிறது. 'டென்ஷன் ஆகாதீங்கம்மா. ஒன்னும் இல்லை..' என்கிறார் மருத்துவர். ஜெனோவா 'நாலு மாசமா பொழைப்பு இல்லாம ரோட்டுல நிக்குறோம். குடும்பமே பட்டினில கிடக்கு. அதைவிட இதெல்லாம் ஒரு டென்ஷனா மேடம்...' என்கிறார் ஜெனோவா. அவரின் குரலில் அத்தனை வேதனை. எவ்வளவு போராடியும் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி மடுக்கப்படவில்லையே என்கிற விரக்தி. அம்பத்தூரில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அந்த நான்கு பெண்களுமே இதே மனநிலையில்தான் இருந்தனர். இவர்களெல்லாம் சில வாரங்களுக்கு முன்பு சென்னை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே தனியார்மயமாக்கலை எதிர்த்து போராடிய தூய்மைப் பணியாளர்கள். அங்கு நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட பிறகும், சென்னையை சுற்றி பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி கைதாகியிருந்தனர். தனியார் நிறுவனத்துக்கு கீழ் வேலைக்கு செல்லமாடோம் என்கிற அவர்களின் போராட்டம் 100 நாட்களை கடந்திருக்கிறது. இப்போது காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்துக்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் கீதா, பாரதி, வசந்தி, ஜெனோவா என நான்கு பெண்கள் போராட்டத்தையும் தொடங்கிவிட்டனர். தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இங்கிருந்து நகரமாட்டோம், என உறுதியாகக் கூறும் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன். 'மழை, புயலு வெள்ளம்னு எல்லாத்தப்புவும் வேலை பார்த்திருக்கோம். புயல் அப்போலாம் வேலைக்கு போக பஸ்ஸூ கூட இருக்காது. நடந்தே போவோம். கொரோனா அப்போ எந்த கஷ்டமும் பார்க்காம ஒவ்வொரு வீட்டு குப்பையையும் அள்ளிருக்கோம். இப்போ எங்களையே குப்பையா தூக்கி வீசிட்டாங்க' எனப் பேசத்தொடங்கினார் கீதா. கீதா 'பன்னிரெண்டு வருசமா வேலை செய்யுறேன் தம்பி. வேலைக்கு சேர்ந்தப்போ எனக்கு 27 வயசு. குடும்ப சூழ்நிலையினாலதான் இந்த வேலைக்கு வந்தேன். என் வீட்டுக்காரரு வண்டி ஓட்டிட்டு இருந்தாரு. திடீர்னு அவருக்கு மூளையில கேன்சர் கட்டி. அடிக்கடி வலிப்பு வரும். கவர்மெண்ட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்துதான் வைத்தியம் பார்த்தேன். குணமில்லாத மனுசனால எப்படி வேலைக்கு போக முடியும்? ஆனா, எனக்கு ரெண்டு பொம்பளை புள்ளைங்க. அண்ணன் தம்பினு எல்லாருமே அன்றாடங்காச்சிங்க. நமக்கு கைகொடுத்து உதவுறதுக்கு ஆளுங்க கிடையாது. அப்படி ஒரு நிலைமையிலதான் 9000 ரூபா சம்பளத்துக்கு வேலைக்கு வந்தேன். அதை வச்சுதான் வீட்டுக்காரருக்கு மருந்து மாத்திரை வாங்கில் கொடுப்பேன். புள்ளைங்களையும் படிக்க வச்சேன். 7 வருசத்துக்கு முன்னாடி வீட்டுக்காரரும் இறந்துட்டாரு. ரெண்டு புள்ளைங்களையும் படிக்க வைக்க வழியில்ல. அதனால மூத்த பொண்ண 9 ஆம் க்ளாஸோட நிறுத்திட்டேன். ரெண்டாவது பொண்ண மட்டும் படிக்க வச்சேன். அந்த புள்ள இப்போ ஒரு டிகிரி முடிச்சிட்டா. இன்னொரு டிகிரி படிக்கணும்னு அவளுக்கு ஆசை. வேலை இருந்திருந்தா கடன உடன வாங்கியாச்சு படிக்க வச்சிருப்பேன். இப்போ அதுவும் முடியல. கீதா படிச்ச படிப்புக்கு அந்த புள்ளையால நல்ல வேலைக்கும் போக முடியல. வேலை கிடைக்க மாட்டக்குது. என் ஒருத்தியோட சம்பளத்தை வச்சுதான் குடும்பமே ஓடிட்டு இருந்துச்சு. இப்போ அதுவும் இல்ல. . திடீர்னு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போங்கன்னு சொல்றாங்க. இத்தனை வருசம் வேலை பார்த்துட்டு இப்போ வாங்குறத விட குறைவான சம்பளத்துக்கு அந்த கம்பெனிக்கு வேலைக்கு போக சொன்னா நியாயமா? அதுக்கு நியாயம் கேட்டு போராடுனா எங்களை விரட்டி விரட்டி கைது பண்றாங்க. நாலு மாசமா ஒரு வேளை மட்டும் ரேஷன் அரசியை கஞ்சியா காய்ச்சி குடிச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். செத்தாலும் பரவால்ல. எங்களை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேத்தாம நாங்க இங்க இருந்து நகரமாட்டோம்.' என்கிறார். ஜெனோவா ஜெனோவாவுக்கு வயது 52. அவரது கணவர் ஒரு பெயிண்டர். ஒரு முறை உயரமான கட்டடத்தில் ஏறி பெயிண்ட் அடிக்கையில் தவறி விழுந்து கை, கால் முறிந்திருக்கிறது. அதன்பிறகு அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. 13 ஆண்டுகளாக தூய்மைப் பணி பார்க்கும் ஜெனோவாவின் வருமானத்தில்தான் அவரின் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது அதுவும் இல்லை. 'ஜூலை கடைசி வாரத்துல புதுசா யூனிபார்ம்லாம் கொடுத்தாங்கப்பா. ரெண்டு ரெண்டு செட்டா கொடுத்தாங்க. நாங்களும் சந்தோஷமா வாங்கிட்டு வந்தோம். ஆனா, ஆகஸ்ட்டு ஒன்னாம் தேதில இருந்து உங்களுக்கு இங்க வேலை கிடையாது. ராம்கி கம்பெனிக்கு போங்கன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு என்ன நடக்குதுன்னே புரியல. அந்த குழப்பத்தோட எங்க வேலைய தக்க வச்சுக்கத்தான் ரிப்பன் பில்டிங் வெளிய உட்காந்தோம். ரெண்டு நாள் கத்திட்டு எந்திரிச்சு போயிருவோம்னு சொன்னாங்க. ஆனா, நாங்க 13 நாள் இராத்திரி பகலா உட்காந்தோம். ஜெனோவா நடுராத்திரில கைது பண்ணாங்க. நாங்க அவ்ளோ பேரும் பொம்பளைங்க. எங்களை வேளச்சேரில நடுராத்திரில நடுரோட்ல இறக்கி விட்டாங்க. அப்புறம்தான் ஒரு மண்டபத்துல அடைச்சாங்க. அன்னையில இருந்து தொடர்ச்சியா போராடுறோம். எங்க மனு கொடுக்க போனாலும் கைது பண்றாங்க. கடைசியா மெரினா கடல்ல இறங்குனோம். இடுப்பளவு தண்ணி, பயமா இருந்துச்சு. ஆனாலும் இறங்கி போராடுனோம். அப்பவும் கைது பண்ணாங்க. நாலு மாசமா கஞ்சியையோ கூழையோ குடிச்சிட்டு கிடக்கோம். கந்து வட்டிக்கு வாங்கிதான் வாழ்க்கையை ஓட்டுறோம். கந்துவட்டிக்காரங்க என்னென்னமோ பேசுறாங்க. ஹவுஸ் ஓனருங்க திட்டுறாங்க. எவ்வளவோ பிரச்சனை. எங்க மாமனாருக்கு 85 வயசு ஆவது. அவர் முழுக்க முழுக்க திமுகக்காரர். நாங்க வேற எதாச்சு கட்சிக்கு ஓட்டு போட்டா கூட திட்டுவாரு. 'நம்பிக்கையோட போய் உட்காருங்க. ஸ்டாலின் நல்லா பண்ணி கொடுப்பாரு'ன்னு அவர் ஆறுதல் சொல்லி அனுப்பிருக்காரு. நாங்க எதாச்சு ஆதங்கத்துல தப்பா பேசியிருந்தா மன்னிச்சிருங்க முதல்வர் ஐயா. உங்களுக்கு எங்க நியாயமெல்லாம் தெரியும். உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எதாச்சு பண்ணுங்கய்யா...' என்றார் கண்கள் குளமாக ஆற்றாமையோடு. வசந்தி முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 64 வது வார்டில் தூய்மைப் பணி செய்திருக்கிறார் 39 வயதான வசந்தி. இளம் வயதிலேயே திருமணம் ஆன அவருக்கு இப்போது கல்யாண வயதில் இரண்டு பெண்கள். நான்கு மாதமாக வேலையில்லாமல் எதிர்கொண்ட இன்னல்களை கண்ணீர் மல்க விவரித்தார். 'என் வீட்டுக்காரரு குடிகாரு. குடிச்சிட்டு படுத்துருவாரு. அவருக்கா விருப்பப்பட்டு வேலைக்கு போனா உண்டு. அதனாலதான் நான் இந்த வேலைக்கு வர வேண்டிய சூழல் வந்துச்சு. முதல் பொண்ணு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அந்த பையன் சரியில்ல. இப்போ அவளும் ரெண்டு புள்ளைங்களோட எங்க கூடதான் இருக்கா. ரெண்டாவது பொண்ணு பேரு அகல்யா. செயிண்ட் பீட்டர்ஸ் காலேஜ்ல பி.ஏ.எக்கனாமிக்ஸ் படிச்சிட்டு இருந்தா. இப்போ ரெண்டாவது வருசம். அவளுக்கு 36000 ரூபாய் பீஸ். வேலையிருந்தா கடன் வாங்கிக் கூட கட்டியிருப்பேன். இப்போ பீஸ் கட்ட முடியாம அவ காலேஜ் போறதையே நிறுத்திட்டா. நாள் முழுக்க உட்காந்து அழுதிட்டு இருக்கா. நான் தான் குப்பை வாரி என் வாழ்க்கை இப்டியே தெருலயே போயிருச்சு. அவளாச்சு படிச்சு நல்ல நிலைமைக்கு வருவான்னு நினைச்சேன். இப்போ அதையும் பண்ண முடியல.' பேச முடியாமல் அழத் தொடங்கியவர் ஒன்றிரண்டு நிமிட இடைவெளிக்குப் பிறகு அழுகையை விழுங்கிக் கொண்டு பேசத் தொடங்கினார். வசந்தி 'மாசம் 7500 ரூபாய் வீட்டு வாடகை. அதை கொடுக்க முடியல. ஹவுஸ் ஓனர் சண்டை போடுறாங்க. சரி வேற வேலைக்கு போலாம்னா அதுவும் கிடைக்க மாட்டக்குது. குப்பை பொறக்குனவங்களுக்கு வேலை கொடுக்க மாட்டோம்னு வெளிப்படையா சொல்றாங்க. அரசும் எங்களை ஒதுக்குது. இந்த சமூகமும் எங்களை ஒதுக்குது. நாங்க எங்கதான் போவோம். எங்களுக்கு தெரிஞ்ச வழியில போராடுறோம். இந்த தடவ கோரிக்கை நிறைவேறாம போராட்டத்தை கைவிடமாட்டோம். செத்தா கூட பரவால்ல...'. என்றார் உறுதியாக. 15 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மைப் பணி செய்ய வந்ததாக சொல்கிறார் திரு.வி.க நகரில் வேலை பார்க்கும் பாரதி. அப்போது 9000 ரூபாய் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். இடையில் அதை குறைத்து 6000 ரூபாய் ஆக்கியிருக்கிறார்கள். இப்போதுதான் ஒரு வருடமாக அடிப்படை ஊதிய உரிமையின்படி 23000 வாங்குகிறோம். அதையும் இப்போது இல்லாமல் ஆக்கிவிட்டார்கள் என வேதனைப்படுகிறார். 'நாங்க எங்க கூடி நின்னாலும் கைது பண்றாங்க. எவ்வளவோ போராடி பார்த்துட்டோம் முடியல. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. வீட்டுக்காரர் ஆட்டோ ஓட்டுறார். அவரு சரி கிடையாது. ஒரு வேளைதான் கஞ்சிய குடிச்சிட்டு இருந்தோம். அதனாலதான் இந்த வேலைக்கு வந்தோம். பாரதி இந்த வேலையினாலதான் என் பொண்ணுங்களை ஸ்கூல் படிக்க வச்சேன். இப்போ ரெண்டும் ஜெயின் காலேஜ்ல படிக்குதுங்க. நீங்க நம்புவீங்களான்னு தெரியல. அந்த பொண்ணுங்களுக்கு தனிப்பட்ட பெர்சனல் விஷயங்களை கூட வாங்கிக் கொடுக்க முடியல. காலேஜ் பீஸ் கட்ட முடியல. யம்மா...தாயிங்களா பொறுத்துக்கோங்க வேலை கிடைச்சிரும். சம்பளம் வந்துரும்னு சொல்லி வச்சிருக்கேன். இன்னைக்கு கூட, 'அம்மா போராட்டத்துக்கு போறேன். உயிரோட வந்தா அம்மாவை பார்த்துக்கோங்க. இல்லைன்னா இந்த வேலையயாச்சும் முதலமைச்சர் உங்களுக்கு போட்டு கொடுப்பாரு. அதை வச்சு பிழைச்சு மேல வந்துருங்க'ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். முதல்வர் ஐயா...நாங்க எதாச்சு தப்பு பண்ணிருந்தா மன்னிச்சிருங்க. எங்க வேலையை மட்டும் கொடுத்துருங்க. எங்க குடும்பமெல்லாம் நாதியத்து நிக்குது...' என்றார் வேதனையுடன். போராடும் தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களின் பிரதிநிதிகள்தான் இவர்கள். அத்தனை பேருக்குமே தங்களின் பிள்ளைகளுக்கு கல்வி கொடுத்து ஆளாக்கி பார்த்துவிட வேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவாக இருக்கிறது. அவர்கள் பார்த்து வந்த வேலைதான் அதற்கான ஆதாரமாக இருந்திருக்கிறது. இப்போது நான்கு மாதங்களாக வேலை இல்லை. பல பிள்ளைகளின் கல்வி இடைநிற்றலை நோக்கி சென்றிருக்கிறது. போராடும் இந்தப் பெண்களின் கனவு மட்டுமல்ல, அவர்களது பிள்ளைகளின் வருங்காலமும் சிதைந்து கொண்டிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் காவலனாக தன்னை சித்தரித்து பெருமிதப்பட்டுக் கொள்ளும் முதல்வரே, இப்போதாவது கொஞ்சம் செவி சாயுங்கள்! சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: முதல்வர் செய்வது டிராமா - கு.பாரதி பேட்டி
திகில் நிறைந்த அனுபவம்: நவம்பர் 21 இல் வெளியாகும் ‘இரவின் விழிகள்’!
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள ‘இரவின் விழிகள்’ திரைப்படம், வரும் நவம்பர் 21ஆம் தேதி
மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைது
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு… The post மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைது appeared first on Global Tamil News .
Seven New Frog-Like Insect Species Found in Uganda
A team of insect experts led by Dr. Alvin Helden from Anglia Ruskin University (ARU) in Cambridge has discovered seven
அக்கவுண்டில் வந்து விழும் 2000 ரூபாய்.. பிஎம் கிசான் பணம் ரெடி.. தேதி இதுதான்!
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 21ஆவது தவணைத் தொகை 2000 ரூபாய் ஒன்னும் ஓரிரு நாட்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவிருக்கிறது.
Gravity Theory Behind Ageing Sparks Debate
A recent comment by Eternal CEO Deepinder Goyal has sparked a lot of discussion online. Goyal said that gravity might
அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ எச்சரிக்கை: தீவிர தீ ஆபத்து அறிவிப்பு
அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் தெற்கு கடற்கரைக்கு காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரியும் காட்டுத்தீ நியூ சௌத் வேல்ஸின் தெற்கு கடற்கரையில் ஒரு ஆபத்தான காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாஞ்சுரி பாயிண்டிற்கு வடக்கே, தி வூல் சாலையின் தெற்கிலும், லார்மர் அவென்யூவின் மேற்கு மற்றும் கிழக்கிலும் கட்டுப்பாட்டை மீறி எரியும் காட்டுத்தீ மற்றும் வெப்பம், காற்று வீசும் சூழ்நிலையால் மோசமடைந்ததைத் தொடர்ந்து இது வெளிவந்தது. மேலும், Shoalhavenக்கு கிழக்கே 16 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள Worrowing […]
High-Power Data Centre Set for 2026 Launch
The data centre is expected to start working by March 2026 and will use Nvidia’s latest Blackwell GB300 chips. The
Easy Spicy Tomato Pasta for Weeknights
A spicy pasta all’arrabbiata is basically pasta with a hot tomato sauce. It’s an easy dish you can make with
“Discovering India’s Rich Winter Greens Variety”
Winter has arrived, and so has the season of fresh green leafy vegetables. Whether you visit busy markets or grow
ஆதார் கார்டில் இருக்கும் உங்கள் பெயர்.. எத்தனை முறை மாற்றலாம்? மாற்றுவது எப்படி?
ஆதார் கார்டில் பெயரை அப்டேட் செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?
How to Stop Annoying Winter Hair Static
If winter had a villain, it wouldn’t be the cold, the wind, or even the sudden desire to buy every
Best Ways to Use Chia Seeds in Winter
If you scroll through beauty or wellness posts, you’ve probably seen chia seeds floating in water or sprinkled on breakfast
நிபுணர்களைக் கண்டறியப் புதிய புரட்சி: LinkedIn-இல் நியூ AI வசதி!
தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமான LinkedIn, தனது தேடல் செயல்பாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI)
தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது - சொல்கிறார் வைகோ
சமத்துவ நடைபயணத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களை நேர்காணல் செய்வதற்காக மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் 7,000 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளேன். தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருளை பயன்படுத்துவதால் இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல் செய்கிறார்கள். நடை பயணத்துக்கு நேர்காணல் சில இடங்களில் பெண்களும் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. அரிவாள், பட்டா கத்தியுடன் மாணவர்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள். இவற்றிலிருந்து மாணவர்களை இளைஞர்களை மீட்க, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்கிறேன். மது, புகை பழக்கமுள்ளவர்களை தொண்டரணியில் சேர்க்க மாட்டேன். தப்பித்தவறி மதுவோ புகையோ எனது நடைபயணத்தில் உடன் வரும் இளைஞர்கள் பிடித்தால் அவர்களை அப்படியே அனுப்பி விடுவேன். வைகோ எங்களுடைய நடை பயணங்களில் ஒருபோதும் கூட்ட நெரிசலால் எந்த அசம்பாவிதமும் நடந்தது இல்லை. டிராபிக் போலீஸ் செய்வதை விட எங்கள் கட்சியில் உள்ள பாதுகாப்பு பிரிவினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி எங்கள் நடைபயணத்தை மேற்கொள்ள பணியாற்றுவார்கள். பொதுமக்கள் எங்கள் பயணங்களை பார்த்து எவ்வளவு கட்டுப்பாடாக செல்கின்றனர் என ஆச்சரியப்படுவார்கள். தமிழ்நாட்டின் பொது வாழ்வும், அரசியலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறேன் என்றார்.
ஆணவம் வேண்டாம் உதயநிதி; நீங்களே வாரிசை வைத்து வந்தவர் - தமிழிசை செளந்தரராஜன் காட்டம்!
திமுக தொடங்கப்பட்டு 75 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் 'தி.மு.க 75 அறிவுத்திருவிழா' என்னும் நிகழ்ச்சி நவம்பர் 8-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 16- ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் நேற்றைய முற்போக்குப் புத்தகக் காட்சி நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் அறிவுத்திருவிழா நடத்தியதே 4 நாட்களுக்குப் பின்னால் தான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 'அறிவுத் திருவிழா ஏன் நடத்துகிறீர்கள்' என்று கேட்கிறார்கள். அறிவிருப்பவன் அதற்கு அறிவுத் திருவிழா நடத்துகிறான். அறிவுத் திருவிழாவில் அவர்களை விமர்சித்துப் பேசுகிறோம் என அவர்களுக்குக் கோபம் வேறு. சுகாதாரம் பற்றி பேசுகையில் கிருமிகளைப் பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும். எப்படி போலீஸ பார்த்த திருடனுக்குப் பயம் வருமோ, அப்படி அறிவுங்கிற வார்த்தைய கேட்டாலே அவங்களுக்கு அலர்ஜி வருகிறது என்று பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களுக்கான தேவையை திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு மேலும், நாட்டில் எதிர்க்கட்சிகளை முடக்க இன்றைக்கு தேர்தல் ஆணையமே SIR வேலையில் ஈடுபட்டிருக்கிறது. தேர்தலையே திருட்டுத்தனமாக நடத்துவதற்கு முனைந்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. இதனை நாம் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார் உதயநிதி. இந்நிலையில் உதயநிதியின் பேச்சை விமர்சித்திருக்கும் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், அறிவாளிகள்தான் அறிவுத் திருவிழா நடத்துவாங்க. அறிவில்லாதவர்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்' என உதயநிதி பேசியிருக்கிறார். உதயநிதி அவர்களே நீங்கள் அறிவை வைத்துதான் துணை முதல்வர் ஆனீர்களா? வாரிசு அடிப்படையில் துணை முதல்வர் பதவியைப் பெற்றவர் நீங்கள். ஆணவம் வேண்டாம் உதயநிதி, ஆணவம் வேண்டாம். 'திருடனுக்குத்தான் போலீஸ்காரர்களைப் பார்த்து பயம்' என்கிறார் உதயநிதி. அப்போ நீங்கள் ஓட்டைத் திருடுவதால் S.I.R பார்த்து பயபடுகிறீர்களா? 'பிற மாநிலங்களில S.I.R எங்கெல்லாம் பண்ணிருக்காங்களோ அங்கெல்லாம் எதிர்க்கட்சி ஜெயித்த இடத்தில் பாஜக ஜெயித்திருப்பதாக' உதயநிதி கூறுகிறார். தமிழிசை சௌந்தராராஜன் ``தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும்?'' - SIR குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி அப்போ அங்கெல்லாம் போலி வாங்காளர்களை வைத்து ஜெயித்தவர்கள், S.I.Rக்குப் பிறகு உண்மையான வாக்குகளைப் பெற்று அவர்களது கூட்டணியான காங்கிரஸால் ஜெயிக்க முடியவில்லை. S.I.Rக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் திமுக காங்கிரஸ் கூட்டணியால் ஜெயிக்க முடியாது என்று பேசியிருக்கிறார் தமிழிசை செளந்தரராஜன்.
சமையல் எரிவாயு இறக்குமதி.. அமெரிக்காவுடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்!
வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து சமையல் எரிவாயுவை நீண்ட கால அளவில் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
சவுதியில் பேருந்து விபத்து: 45 இந்தியர்கள் உயிரிழப்பு!
சவூதி அரேபியாவின் மதீனா அருகே ஏற்பட்ட விபத்தில், இந்திய புனிதப் பயணம் மேற்கொண்ட பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 45 பேர் பேர் உயிரிழந்ததாக இந்தியாவின் ஹைதராபாத் நகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புனித யாத்திரையில் ஈடுபட்ட இந்தியர்கள் அனைவரும் மக்கா நகருக்கு சென்று, உம்ரா கடமைகளை நிறைவு செய்துகொண்டு, மெதீனாவுக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோதே டீசல் ஏற்றிச் சென்ற எரிபொருள் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த பஸ்ஸில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பஸ்ஸில் பயணித்த 46 பேரில் 42 பேர் உயிரிழக்க, 24 வயதுடைய இளைஞர் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளதாகவும் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேலதிக தகவல் கிடைத்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பதற்காக சவூதி அரேபியா அரசு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து செயற்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து தொடர்பாகவும் விபத்தில் சிக்கியவர்கள் பற்றிய விபரங்களையும் அறிந்துகொள்ள 79979-59754 அல்லது 99129-19545 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். #bus accident in Saudi Arabia
நெல்லை இளைஞர் பாலியல் வழக்கு ரத்து: விசாரணையில் நீதிபதி சொன்னது என்ன?
திருமணத்திற்கு முன் நெருக்கம் சகஜம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. 9 வருடங்களுக்கு மேல் உறவில் இருந்த இளைஞர் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த இளம்பெண்ணின் புகாரை ரத்து செய்து, தனிப்பட்ட உறவு முறிவை சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இது போன்ற வழக்குகளை நீதிமன்றம் அதிகமாக சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
TATA SIERRA: 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் திரும்ப வரும் TATA SIERRA | Photo Album
TATA: அமித் ஷா வரை சென்ற பஞ்சாயத்து - நோயல் டாடாவிடமிருந்து அதிகாரங்களை பறிக்க முயற்சியா?
மத்திய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. ரயில்வே துறையின் கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பட்டதாரி, டிப்ளமோ மற்றும் தொழிற்பிரிவு இடங்களுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.
பிரதம மந்திரி உதவித்தொகை திட்டம் (PMSS)!
PM Scholarship Scheme: மத்திய ஆயுதக் காவல் படைகள், அசாம் ரைபிள்ஸ் மற்றும் மாநில/யூனியன் பிரதேச காவல்துறை பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் விதவைகளின் உயர் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30,000 முதல் ரூ.36,000 உதவித்தொகை வழங்கும் இந்திய அரசின் பிரதம மந்திரி உதவித்தொகை திட்டம் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
Mumbai: Studio Blo, India’s pioneering AI film studio, has announced its first U.S. co-production with Hollywood’s Disruptor Studios for the upcoming AI-powered non-fiction series, Alyssa Carson: Ready for Liftoff. With this collaboration, Studio Blo becomes the first Indian AI studio to co-produce an international TV series with a Hollywood partner.The series chronicles the extraordinary journey of renowned space enthusiast and astrobiologist Alyssa Carson, using advanced AI to transport viewers to Mars and visualize human life on the Red Planet over the next 10, 50, and 100 years. At just 24, Carson has spent over two decades preparing for the possibility of becoming the first human to set foot on Mars — a mission that has inspired millions of young explorers around the world.Created in close collaboration with Carson and supported by leading planetary scientists and AI experts globally, Alyssa Carson: Ready for Liftoff blends cinematic storytelling, scientific authenticity, and cutting-edge AI-driven visualization to reimagine the future of human space exploration.[caption id=attachment_2481030 align=alignleft width=200] Dipankar Mukherjee [/caption] Dipankar Mukherjee, Co-Founder & CEO, Studio Blo , said, “Alyssa Carson: Ready for Liftoff is a testament to what’s possible when technology and imagination unite. This marks India’s first AI-driven collaboration for an international TV series between an Indian studio and a Hollywood producer, a milestone we’re incredibly proud of. At Studio Blo, our vision has always been to tell stories that inspire and transcend borders, and this project does exactly that. We’re honoured to collaborate with Chad and the team at Disruptor Studios to bring Alyssa’s mission and the dream of Mars closer to every viewer on Earth.” Chad Greulach, Executive Producer and Founder, Disruptor Studios, added, “Bringing Alyssa Carson’s mission to the screen would be virtually impossible without Dipankar and the team at Studio Blo. Whereas studios, platforms, and artists in the US have struggled with AI, how to use it, and how to protect ourselves from it, this project is not only ground-breaking in concept, it will prove to the creative community at large that AI is less of a threat and more of a tool in creating stories and scenes that would have previously been prohibitively expensive to produce.” Building on its successful collaborations with acclaimed creators, Studio Blo continues to strengthen its global presence. With Ready for Liftoff, the studio takes another major step in bridging Indian technological innovation with international storytelling, showcasing the potential of AI-driven entertainment on the world stage.
திருகோணமலையில் அகற்றப்பட்ட அதே இடத்தில் பெரும் ஆரவாரத்துடன் மீண்டும் வந்தமர்ந்த புத்தர்!
திருகோணமலை கடற்கரையில் நேற்றைய தினம் மக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்ட புத்தர் சிலை இன்று பிற்பகல் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து பௌத்த தேரர்கள் இணைந்து பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கு கூடியிருந்த மக்கள் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை கடற்கரையில் நேற்று (16) காலை,அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு […]
Lenskart introduces Meller to India and teams up with Popmart for design-led eyewear
Mumbai: Lenskart has announced the India launch of Barcelona-born eyewear brand Meller, alongside a new creative partnership with global pop-culture giant Popmart. The dual announcement marks a significant step in Lenskart’s ambition to build a modern House of Eyewear Brands and position itself as a hub for contemporary, design-led eyewear.The Pop Mart x Lenskart eyewear collection will debut in Singapore—online and across select Lenskart stores—from the first week of December. The limited-edition range features collectible, character-driven designs tailored for consumers who gravitate toward expressive, playful, and culturally resonant fashion accessories.Lenskart’s collaboration with Popmart adds to its expanding cultural partnership roster, which includes Harry Potter, Hello Kitty, Pokmon, Dragon Ball Z, Superman, and Batman. These collaborations help Lenskart infuse its eyewear with storytelling, creativity, and nostalgia—elements that resonate strongly with fan communities and emerging youth subcultures.Founded in Barcelona, Meller has quickly risen to become one of Europe’s most influential D2C youth eyewear brands. Known for its bold silhouettes, street-style color palettes, and expressive visual identity, Meller has cultivated a strong global community, drawing over 700k followers across Europe and the U.S. The brand appeals to young consumers seeking modern, design-first eyewear that reflects individuality.In India, Meller will be made available across Lenskart’s nationwide retail footprint and online via the Lenskart app and website. The rollout will begin with approximately 500 curated stores chosen using GeoIQ intelligence to identify high fashion-affinity customer catchments.Through brands like Meller, John Jacobs, Owndays, and cultural collaborations including Popmart, Dragon Ball Z, and Harry Potter, Lenskart is expanding a premium portfolio built around the preferences of new-generation customers. The eyewear industry continues to demonstrate how strong platforms help brands scale globally, and Lenskart aims to play a meaningful role in developing the next wave of expressive, design-led eyewear labels. On the lens technology front, global innovators Tokai and Rodenstock have also joined hands with Lenskart. “Our customers inspire every decision we make. They're seeking global design, individuality, and brands that feel authentic, said Peyush Bansal, Co-founder & CEO, Lenskart. “Meller's bold aesthetic and strong community make it a wonderful addition to our House of Brands. And through creative partnerships like Pop Mart, we hope to bring moments of play, imagination and collectability into eyewear in ways that delight our customers. He added, “By bringing together brands like John Jacobs, Owndays and now Meller, alongside collaborations such as Pop Mart, our goal is to offer customers more choice and better experiences. We see ourselves as an enabler for the next generation of eyewear brands — providing the platform and capabilities for them to reach more people and unlock their potential. Backed by Lenskart’s distribution scale, vertically integrated supply chain, design ecosystem, and advanced technology capabilities, partner brands can accelerate their growth and reach audiences across multiple markets more effectively.As global eyewear rapidly evolves, multi-brand platforms are playing an increasingly influential role in shaping the category. With its House of Brands strategy, Lenskart aims to empower the next generation of expressive, design-forward eyewear brands and ambitious cultural collaborations worldwide.
பிரகாசமான நகரத்தின் இருண்ட பக்கம்: நியூயார்க்கின் 50,000 ‘கோஸ்ட் அபார்ட்மெண்ட்கள்’ஏன் காலியாக உள்ளன?
அமெரிக்காவின் நிதி மற்றும் கலாசார தலைநகரான நியூயார்க் சிட்டி, உலகிலேயே மிக அதிகமான வீட்டு வாடகை மற்றும் குடியிருப்புப் பற்றாக்குறையை
கடலூர்: அக்கா மகளை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; தாய்மாமன் சிக்கியது எப்படி?
கடலூர் மாவட்டம், வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் வைலாமூர் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் புதுப்பெண்ணுக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அவரது கணவர். அப்போது புதுப்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர், அவர் 8 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தக் கணவர், அது குறித்து பெண்ணின் பெற்றோர் வீட்டிற்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து வைலாமூருக்கு வந்த பெண்ணின் பெற்றோர், கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டிருக்கின்றனர். அப்போது தன் அம்மாவின் உடன்பிறந்த தம்பி லிங்கமுத்து, அடிக்கடி தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து புதுப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாய்மாமன் லிங்கமுத்து மீது அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். விசாரணை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ``பெண்ணின் தாய்மாமனான லிங்கமுத்துவுக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது. அதனால் தன்னுடைய அக்காவின் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். அப்போது சகோதரியின் மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வலிப்பினால் ஏற்பட்ட விபத்து என்று சொல்லி அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்திய அவர், அதையே காரணம் காட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். கர்ப்பம் இந்த நிலையில்தான் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்திருக்கின்றனர். தாய்மாமன் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக, அந்தப் பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகுதான் அந்தப் பெண் கர்ப்பமாக இருந்த விவகாரம் தெரிய வந்திருக்கிறது. அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் லிங்கமுத்து மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில், லிங்கமுத்துவுக்கு முதுகுத்தண்டில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் மருத்துவமனையில் இருப்பதால் கைது செய்யப்படவில்லை” என்றனர். கடலூர்: பள்ளி `ஷூ'வில் தஞ்சமடைந்த பாம்பு… கவனிக்காமல் அணிந்த 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்!
Understanding Epilepsy and Its Challenges
The human brain is very important and complicated. But for people with epilepsy, it can have a dangerous problem. One
Pandian Stores: அந்த சீரியல் நடிகருடைய ஃபேமிலி என்கிட்ட - Shalini Interview | Serial | Dance
Saudi Arabia Bus Accident: Mecca சென்ற 45 இந்தியர்கள் உயிரழப்பு - நடந்தது என்ன? | Decode
டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்து விட்டார்கள்! ஹர்பஜன் சிங் காட்டம்!
டெல்லி :இந்தியா-தென்னாபிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்தே பிட்ச் அசாதாரணமாக நடந்து கொண்டது. பந்து ஒரு பக்கம் தாழ்வாகவும், மறு பக்கம் உயரமாகவும் பவுன்ஸ் அடித்தது; சுழற்பந்துக்கு அதீத டர்னும் இருந்தது. எனவே, மூன்றே நாட்களில் (வெறும் 185.5 ஓவர்களில்) போட்டி முடிவுக்கு வந்தது. தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 202, இந்தியா 223, தென்னாபிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு ஆல்-அவுட். […]
யாழில். கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை
யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரையொதிங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில் , அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரையொதிங்கி இருக்கின்றன. […]
யாழில் – முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. யாழில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் மின்கம்பமும் முறிந்ததால் மின் தடையும் ஏற்பட்டது. அத்துடன் அராலி பகுதியில் 5 வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்துள்ளது.
Telangana Tightens Rules After Cough Syrup Deaths
A month after reports of children dying from contaminated cough syrups in Madhya Pradesh and Rajasthan, the Telangana Drugs Control
UPSC தேர்விற்கு இலவச பயிற்சியுடன் ரூ.4,000 மாத உதவித்தொகை; நவம்பர் 25-ம் தேதியே கடைசி நாள்
யுபிஎஸ்சி தேர்வை எழுத ஆர்வமாக உள்ளவரா நீங்கள்? மாத உதவித்தொகையுடன் இலவசமாக பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் யுபிஎஸ்சி தேர்விற்கு இலவசமாக பயிற்சி அளிப்பதுடன் மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்த் - ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு: கூட்டணி பேச்சுவார்த்தையா?
மதுரையில் தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சந்தித்தார். இருவரின் குடும்பங்களில் சமீபத்தில் நடந்த துயர நிகழ்வுகளைப் பகிர்ந்து ஆறுதல் கூறவே இந்த சந்திப்பு நடந்ததாக உதயகுமார் தெரிவித்தார்.
BC Web Wise relaunches Gatsby with #GottaGroove Campaign
Mumbai: Gatsby has unveiled its most ambitious global relaunch with the #GottaGroove campaign, a fresh brand positioning designed to elevate the grooming experience for young men. Conceptualised by BC Web Wise, the campaign transforms Gatsby into the ultimate “hair hack,” appealing to a generation that values speed, simplicity, and effectiveness in every aspect of life.Rooted in the insight that young men increasingly rely on smart hacks to navigate busy routines, the campaign reframes grooming as an effortless, confidence-boosting ritual powered by Gatsby’s styling solutions. “We wanted to turn the idea of ‘hacks’ into something that goes beyond shortcuts for grooming,” explains Sonali Banerji, Creative Director at BC Web Wise. “#GottaGroove is about making GATSBY a vital part of young men’s daily life, a tool that fits seamlessly into their routine. It's not just about styling hair; it's about a product that helps them tackle their day with ease, without overthinking it.” The campaign narrative flows through three stages: Struggle – hurried mornings, unruly hair, and the overwhelming rush to get ready Hack – Gatsby as the quick, reliable solution that fixes the chaos instantly Groove – the transformation into confidence, ease, and a ready-to-roll attitude Designed to resonate strongly across urban and semi-urban audiences, the relaunch positions Gatsby as a must-have grooming essential that simplifies daily routines without compromising style.[caption id=attachment_2480985 align=alignleft width=200] Fionna Arez [/caption] “We understand that for young men today, it’s all about finding the hack that makes life simpler,” adds Fionna Arez, AVP – Digital, Client Partner at BC Web Wise . “GATSBY isn’t just about fixing hair; it’s about syncing with their pace of life, giving them a product that delivers great style in seconds and lets them move on to what’s next.” The #GottaGroove hero film captures slice-of-life moments—from college corridors to office prep—showing how Gatsby’s styling products help young men transition from messy to confident in seconds. This is supported by a robust multi-platform digital strategy featuring Instagram Reels, YouTube Shorts, UGC content, and influencer-led challenges that spotlight quick hair transformation hacks.Interactive Instagram Stories and community-driven content will further position Gatsby as the “go-to hack” for everyday grooming.Commenting on the relaunch, Puneet Motiani, Designated Partner at Gardenia Cosmotrade LLP, said, “#GottaGroove isn’t just a campaign, it’s a new way for young men to interact with GATSBY. This relaunch takes the brand beyond just a product to a solution, something that fits naturally into their fast-paced, ever-changing lives.” With this global repositioning, Gatsby transitions from a traditional styling brand to a functional grooming ally—a trusted essential that powers young men through their daily challenges. By highlighting simplicity, speed, and style, the #GottaGroove campaign reinforces that looking sharp doesn’t have to be complicated—just cleverly hacked.
Global Sports Pickleball announces broadcast partnership with Zee5 for League & Grand Slam 2025
Mumbai: Global Sports Pickleball (GSPB), the driving force behind India’s fastest-growing sport, has announced a landmark broadcast partnership with Zee5, one of India’s largest OTT platforms. Under this collaboration, the upcoming Global Sports Pickleball League & Grand Slam 2025, scheduled from 16th to 23rd December 2025 at the Andheri Sports Complex, Mumbai, will be streamed live to Zee5’s nationwide audience and broadcast on Zee Caf and &flix.The partnership represents a major leap in expanding pickleball’s visibility and bringing the sport’s most prestigious events—including the Grand Slam, Pro League, and Challenger League—to millions of fans across digital and television platforms.Key Highlights of the Partnership Zee5 will be the exclusive live-streaming partner for the Global Sports Pickleball League & Grand Slam 2025. Fans will have seamless access to all matches—across categories, courts, and formats—via dedicated Zee5 streams. Zee Caf and &flix will broadcast marquee league matches on television, significantly widening the tournament’s reach. Separate thumbnails for the Pro League and Challenger League will ensure a smooth, premium, and user-friendly viewing experience. Tournament & Broadcast OverviewThe Global Sports Pickleball League & Grand Slam 2025 will unfold across 10 high-performance courts, featuring top-ranked players from India and abroad.Broadcast PartnersOfficial Streaming Partner: Zee5 Official Broadcast Partners: Zee Caf Zee Caf HD &flix &flix HD Grand Slam India’s largest and most inclusive pickleball tournament, spanning categories from U-12 to 50+ Live-streamed exclusively on Zee5 from 9:00 AM to 12:00 PM A massive ₹5 Crore prize pool across age groups and divisions Pro League & Challenger League Live broadcast every day from 3:00 PM to 10:00 PM on Zee5 (OTT), Zee Caf, and &flix (TV) Pro League: 10 teams with 5 players each, including international picklers and women athletes Challenger League: 10 teams featuring predominantly Indian talent, showcasing emerging players Both leagues will be broadcast from centre courts to deliver an immersive, high-quality viewing experience Hemal Jain, Chief of Pickleball Growth at Global Sports Pickleball, said, “This partnership with ‘Z’ is a significant moment for pickleball in India. With Zee 5 streaming our events live and Zee Caf and &flix broadcasting the leagues on television, we are making pickleball accessible to millions of households. This broad visibility is a major step forward for the sport, and we believe it will make pickleball one of India’s most-watched new sports.” Laxmi Shetty, Head - Advertisement Revenue, Broadcast & Digital, Zee Entertainment Enterprises Ltd., added, “At 'Z', we’re always looking to back high-potential sports that resonate with today’s audiences. Pickleball is witnessing phenomenal growth, and our partnership with Global Sports Pickleball (GSPB) allows us to bring this dynamic, high-energy sport into Indian living rooms like never before. We believe this collaboration will not only elevate the sport’s visibility but also inspire a new generation of sports enthusiasts across the country. With multi-platform access via Zee 5, Zee Caf and &flix, viewers will enjoy a front-row experience to India’s most exciting pickleball season yet.”
Global Sports Pickleball announces broadcast partnership with Zee5 for League & Grand Slam 2025
Mumbai: Global Sports Pickleball (GSPB), the driving force behind India’s fastest-growing sport, has announced a landmark broadcast partnership with Zee5, one of India’s largest OTT platforms. Under this collaboration, the upcoming Global Sports Pickleball League & Grand Slam 2025, scheduled from 16th to 23rd December 2025 at the Andheri Sports Complex, Mumbai, will be streamed live to Zee5’s nationwide audience and broadcast on Zee Caf and &flix.The partnership represents a major leap in expanding pickleball’s visibility and bringing the sport’s most prestigious events—including the Grand Slam, Pro League, and Challenger League—to millions of fans across digital and television platforms.Key Highlights of the Partnership Zee5 will be the exclusive live-streaming partner for the Global Sports Pickleball League & Grand Slam 2025. Fans will have seamless access to all matches—across categories, courts, and formats—via dedicated Zee5 streams. Zee Caf and &flix will broadcast marquee league matches on television, significantly widening the tournament’s reach. Separate thumbnails for the Pro League and Challenger League will ensure a smooth, premium, and user-friendly viewing experience. Tournament & Broadcast OverviewThe Global Sports Pickleball League & Grand Slam 2025 will unfold across 10 high-performance courts, featuring top-ranked players from India and abroad.Broadcast PartnersOfficial Streaming Partner: Zee5 Official Broadcast Partners: Zee Caf Zee Caf HD &flix &flix HD Grand Slam India’s largest and most inclusive pickleball tournament, spanning categories from U-12 to 50+ Live-streamed exclusively on Zee5 from 9:00 AM to 12:00 PM A massive ₹5 Crore prize pool across age groups and divisions Pro League & Challenger League Live broadcast every day from 3:00 PM to 10:00 PM on Zee5 (OTT), Zee Caf, and &flix (TV) Pro League: 10 teams with 5 players each, including international picklers and women athletes Challenger League: 10 teams featuring predominantly Indian talent, showcasing emerging players Both leagues will be broadcast from centre courts to deliver an immersive, high-quality viewing experience Hemal Jain, Chief of Pickleball Growth at Global Sports Pickleball, said, “This partnership with ‘Z’ is a significant moment for pickleball in India. With Zee 5 streaming our events live and Zee Caf and &flix broadcasting the leagues on television, we are making pickleball accessible to millions of households. This broad visibility is a major step forward for the sport, and we believe it will make pickleball one of India’s most-watched new sports.” Laxmi Shetty, Head - Advertisement Revenue, Broadcast & Digital, Zee Entertainment Enterprises Ltd., added, “At 'Z', we’re always looking to back high-potential sports that resonate with today’s audiences. Pickleball is witnessing phenomenal growth, and our partnership with Global Sports Pickleball (GSPB) allows us to bring this dynamic, high-energy sport into Indian living rooms like never before. We believe this collaboration will not only elevate the sport’s visibility but also inspire a new generation of sports enthusiasts across the country. With multi-platform access via Zee 5, Zee Caf and &flix, viewers will enjoy a front-row experience to India’s most exciting pickleball season yet.”
டெல்லி கார் வெடிப்பு; தற்கொலைப்படை தாக்குதல் –என்.ஐ.ஏ. அறிவிப்பு; முக்கிய புள்ளி கைது
புதுடெல்லி, டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது. உமர் […]
பாண்டியன் ஸ்டோர்ஸ்: அந்த இரண்டு திறமையும் இருக்க நிரோஷா ஸ்பெஷலான பொண்ணு - பூர்ணிமா பாக்யராஜ்
சிறந்த சின்னத்திரை கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா கடந்த அக்டோபர் 12ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், 2024-ம் ஆண்டின் `ஃபேவரைட் மாமியார் மருமகள்’ விருதுகள் நிரோஷா, சரண்யா துராடி, ஹேமா, ஹாலினி உள்ளிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ் -2' நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டன. நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவ்விருதினை வழங்கி சிறப்பித்தார். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சரண்யா துராடி, ஹேமா, ஹாலினி, நிரோஷா பூர்ணிமா பாக்யராஜ் பேசுகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவ்வளவு நாள்களாக வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதோட தரம் எப்படியிருக்கும் என்று நினைச்சுப் பார்க்கிறேன். நிரோஷா சிறந்த மாமியருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். அவரை நான் சின்ன வயசுல விளையாட்டுப் பொண்ணாகப் பார்த்திருக்கேன். இப்போ பெரிய பொண்ணாகிச் சாதித்துக் கொண்டிருப்பது ரொம்ப மகிழ்ச்சி. நல்ல திறமையான நடிப்பு மட்டுமல்ல ஜாலியான நகைச்சுவையையும் சேர்த்துப் பெர்ஃபாமன்ஸ் பண்ணுவார். அந்த இரண்டு திறமையும் ஒன்றாக எல்லாருக்கும் இருக்காது. அந்த வகையில் நிரோஷா ஸ்பெஷலான பொண்ணுதான் என்று பேசினார். Vikatan Tele Awards 2024: 'சிறகடிக்க ஆசை'-ல் அடுத்து இந்த கேரக்டரோட ரிவீல்தான் - இயக்குநர் குமரன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நிரோஷா, பூர்ணிமா பாக்யராஜ் நிரோஷா பேசுகையில், 'சின்ன பாப்பா பெரிய பாப்பா'வில் நடித்து ஒரு அடையாளம் எனக்கு இருந்தது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலமாக எனக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைச்சிருக்கு. இந்த சீரியலில் என்னோடு மருமகளாக நடித்த சரண்யா துராடி, ஹேமா, ஹாலினி எல்லோருக்கும் என்னோட நன்றிகள் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். நிரோஷாவின் அம்மா, அவரது கையால் விகடன் விருதைத் தருவதுபோன்ற புகைப்படத்தைப் பரிசாகப் பெற்று கண் கலங்கினார் நிரோஷா. இந்த முழுக் காணொலியை 'Tele Vikatan' சேனலில் காணவும்.
பிரேமலதாவுடன் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு; கூட்டணி குறித்துப் பேசப்பட்டதா?
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்.பி.உதயகுமார்-பிரேமலதா அதிமுக கூட்டணியில் தேமுதிக-வை இணைப்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாகச் சொல்லப்படும் நிலையில், அதுகுறித்து சமாளிக்கும் விதமாக ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் பிரதான கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. திமுக கூட்டணி பலமாக உள்ள நிலையில், பாஜக-அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகள் இணையாமல் உள்ளது. தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருவதால் தற்போது அதிமுக மற்ற கட்சிகளை அணுகி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை வந்துள்ள நிலையில், தேமுதிக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வருகை தந்தார். அங்கிருந்த விஜயகாந்த்தின் படத்திற்கு பிரேமலதாவுடன் சேர்ந்து ஆர்.பி உதயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். பிறகு இருவரும் தனியாக பேசிக்கொண்டனர். ஆர்.பி.உதயகுமார்-பிரேமலதா இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், பிரேமலதா குடும்பத்தில் ஏற்பட்ட துக்க நிகழ்வு தொடர்பாக விசாரித்து ஆறுதல் கூறினேன், கூட்டணி தொடர்பாக நான் எதையும் சொல்ல முடியாது, அதனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் அறிவிப்பார், அரசியல் தொடர்பாக இந்த சந்திப்பில் பேசவில்லை, நான் மனிதாபிமான அடிப்படையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன் என்று விளக்கம் அளித்தார்
Gangai Amaran: வெங்கட் பிரபுவை பிசினஸ் மேன் ஆக்கணும்னு நெனைச்சேன்! - கங்கை அமரன் பேட்டி
பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என பல்வேறு அவதாரங்களில் வெற்றிகளைக் குவித்தவர் கங்கை அமரன். இப்போது, டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் 'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவர் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்காக அவரைப் பேட்டிக் கண்டோம். தனது நடிப்பு அனுபவம், சினிமா பயணம், AI பற்றிய கருத்துகள் என பல்வேறு விஷயங்களை இந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்டார். Lenin Pandiyan நம்மிடையே பேசியவர், பாலச்சந்திரன் கதை சொல்லும்போதுகூட, நான் அந்தப் படத்தில் நடிக்கப் போவதாக உணரவில்லை. கதையின் நுணுக்கங்களை சரிபார்க்கத்தான் இருப்பேன் என்று நினைத்தேன். கதை முடிந்ததும், அது எனக்கு மிகவும் பிடித்துப் போனது. குடும்பம் சார்ந்த மிகவும் இறுக்கமான கதையாக இருந்தது. பின்னர், தயாரிப்பாளர் தியாகராஜன் என்னிடம் இதில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார். நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 168 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பின்னர் இயக்குநராக 18 படங்கள் செய்தேன். இப்போது நடிப்பு வாய்ப்பு கிடைத்தது, அதையும் தவிர்க்காமல் ஏற்றுக்கொண்டேன். எடிட்டிங் பணிகள் முடிந்து படத்தைப் பார்க்கும்போது, எனக்கும் தியாகராஜனுக்கும் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. அவ்வளவு அருமையாக இருந்தது. படத்தில் என்னைப் பார்க்கும்போது, விவசாய நிலத்தில் நிற்கும் என் பெரியப்பா, தாத்தா ஞாபகம் வந்தது. அனைவரின் குடும்பத்துடன் மிகவும் கனெக்ட் ஆகும் வகையில் இருக்கும். என்று பெருமையுடன் சொன்னார். Lenin Pandiyan - Gangai Amaran 12 வருட இடைவெளிக்குப் பிறகு நடிப்பின் பக்கம் வந்திருக்கும் ரோஜாவைப் பாராட்டிய அவர், ரோஜா மிகவும் சிறப்பாகவும், சின்சியராகவும் நடித்துள்ளார். தாய்மொழி வேறாக இருந்தாலும், தமிழில் டயலாக்குகளை கலக்கியுள்ளார். பெரிய டயலாக் ஆக இருந்தாலும், அதை எளிதாகப் பேசிவியிருக்கிறார். ஷூட்டிங் இடைவெளியில் நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம். நான் பாட்டு பாடுவேன், அவர் தனது அரசியல் பயணத்தைப் பகிர்வார். தற்போதைய அரசியல் பற்றியும் விவாதிப்போம். என்றவர், என் பன்னிரண்டாவது வயதிலேயே பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டேன். வைகைக்கரையில் பாட்டு எழுதியபோது என் வயது 18. அண்ணன் இளையராஜா டியூன் செய்வதற்காக நான் நிறைய பாடல்கள் எழுதிக் கொடுப்பதுண்டு. அதைப் பிற்காலத்தில் சினிமாவிலும் பயன்படுத்தினோம். அவருக்கு புதிய டியூன் வரவைப்பதற்கு என் பாடல் வரிகள் மிகவும் உதவியுள்ளன. இப்போது ஒரு இரண்டு படங்கள் இயக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். என் மகன் வெங்கட்பிரபு கூட, 'உங்களுக்கு கேரவனில் டிவி வைத்துத் தருகிறோம், நீங்கள் அங்கிருந்து டைரக்ட் செய்யுங்கள்' என்கிறான். என்று சிரித்தார். மிகப்பெரிய வெற்றிப்படமான 'கரகாட்டக்காரன்' டிஜிட்டல் செய்யும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அது விரைவில் ரீ ரிலீஸ் ஆகும். என் இரு மகன்களின் வெற்றியும் எனக்கு மிக மகிழ்ச்சியைத் தருகிறது. என் மகன் வெங்கட் பிரபுவை பிசினஸ் மேனாக ஆக்க வேண்டும் என்பதே என் கனவு. ஆனால் அவனுக்கு படம் இயக்குவதில்தான் ஆர்வம். என்றார். Lenin Pandiyan - Gangai Amaran ஏ.ஐ பற்றி அவரிடம் கேட்டதற்கு, AI பயன்படுத்துவதால் கிரியேட்டிவிட்டி குறைந்துவிடுகிறது. மூளை பெருசாக யோசிப்பதில்லை. கிரியேட்டிவிட்டி இல்லை என்றால், அதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது? நான் பாட்டு எழுத அதிகபட்சம் கால் மணி நேரமே எடுத்துக்கொள்வேன். நான் எழுத அதிக நேரம் எடுத்துக்கொண்ட பாடல் 'அந்தி வரும் நேரம்'. இப்பாடல் எழுதி முடிக்க எனக்கு அரை நாள் தேவைப்பட்டது, எனக் கூறி முடித்துக்கொண்டார்.

25 C