SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

ஒருபுறம் பாதுகாப்பு பேச்சுவார்த்தை; மறுபுறம் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கேட்கும் உக்ரைன்

நியூயார்க், உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் மியாமி நகரில், உக்ரைன்-அமெரிக்க குழுவினரின் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் இன்று மீண்டும் தொடங்க உள்ளன. கடைசியாக உக்ரைன்-அமெரிக்க குழுவினருக்கு இடையே கடந்த மாதத்தில் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக நடைபெற உள்ள இந்த புதிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை மேம்படுத்தும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, எங்கள் நாட்டை […]

அதிரடி 18 Jan 2026 12:30 pm

PF பணத்தை இனி ஈசியா எடுக்கலாம்.. ஒரே கிளிக் போதும்.. சூப்பர் வசதி அறிமுகம்!

யூபிஐ மூலம் பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்கும் வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த வசதி அமலுக்கு வருகிறது.

சமயம் 18 Jan 2026 12:15 pm

நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டுஎன மனைவியை தீக்குளிக்க தூண்டிய கணவன் கைது

நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டுஎனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியே மனைவியை தீ மூட்ட தூண்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கணவன் - மனைவிக்கு இடையே பண விவகாரம் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று, நீ குற்றமற்றவள் என்பதை நிரூபித்துக் காட்டுஎன வற்புறுத்தியுள்ளார். அதன்பின்னர் மனைவியின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து மனைவியை தீ வைக்கத் தூண்டியுள்ளார். இதனால் தீப்பற்றி எரிந்த மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியைத் தீக்குளிக்க வைத்த பின்னர், கணவன் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்ய முயன்றமை குற்றச்சாட்டில் கணவன் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதிவு 18 Jan 2026 12:15 pm

தங்கத்தில் முதலீடு செய்யப் போறீங்களா? எது சிறந்தது? எந்த தங்கத்தில் வரிச் சலுகை கிடைக்கும்?

தங்கத்தில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் கவனத்துக்கு.. தங்கத்தை எந்த வடிவத்தில் வாங்கினால் நல்லது? எதில் அதிக நன்மை கிடைக்கும்?

சமயம் 18 Jan 2026 12:00 pm

பெங்களூரு 6 வழி சாலை அண்டர்பாஸ்… சதாஹள்ளி சிக்னலுக்கு குட்பை- ஏர்போர்ட் ரூட்டில் குட் நியூஸ்!

கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் பல்லாரி ரோடு முதல் விமான நிலையம் வரை செல்வதில் இருக்கும் சிக்கலுக்கு தீர்வு காண புதிய முயற்சி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கடைசி சிக்னலில் நிற்காமல் விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமயம் 18 Jan 2026 11:57 am

கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

'கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார். காய்ச்சல்... வலி... தலைவலி என எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் பாராசிட்டமால் வாங்கி சாப்பிடுவது வழக்கம். ட்ரம்பின் இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது ட்ரம்பின் பேச்சு பொய்யானது... அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று 'The Lancet' இதழில் வெளியாகி உள்ள ஆய்வு தற்போது நிரூபித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained அந்த இதழில் வெளியாகி உள்ள தகவல்... பாராசிட்டமாலை முறையான மதிப்பாய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வு செய்ததில் கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம், மனநலக் கோளாறு ஏற்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை கடந்த ஆண்டு, ட்ரம்ப் இந்தக் கூற்றை கூறியதில் உலகம் முழுவதும்‌ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ட்ரம்பின் கூற்றிற்கு அப்போதே மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்புகளைக் கிளப்பியது. இப்போது மக்களுக்கு இந்த ஆய்வின் மூலம் உண்மை தெளிவாகி உள்ளது. வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

விகடன் 18 Jan 2026 11:57 am

ஈரோடு: `மகளிர் மட்டும்' - வ.உ.சி பூங்காவில் காணும் பொங்கல் கொண்டாட்டம்! - Album

ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடி பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள்

விகடன் 18 Jan 2026 11:49 am

``எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது - ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரும் அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். இம்மானுவேல் மக்ரோன் தனது எக்ஸ் பக்கத்தில், ``வரி அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மையை உறுதிசெய்யும் வகையில், ஐரோப்பியர்கள் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள். இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு உறுதியுடன் இருக்கிறோம். இந்த அடிப்படையில்தான், கிரீன்லாந்தில் டென்மார்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவப் பயிற்சியில் பங்கேற்க நாங்கள் முடிவு செய்தோம். உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகின் வேறு எந்தவொரு நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது. எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், ``நேட்டோ கூட்டாளிகளின் கூட்டுப் பாதுகாப்பைப் உறுதி செய்யும், நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறு. நிச்சயமாக, இது குறித்து நாங்கள் அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம். பிரான்ஸ் பார்வையில், கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க்கும் கிரீன்லாந்தும்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். என உறுதியான பதிலை கொடுத்திருக்கிறார். வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!

விகடன் 18 Jan 2026 11:44 am

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எங்கே போகிறது ?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம், ஒரு குறிப்பிட்ட கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா அல்லது அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து கையூட்டல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நாடாளுமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விளக்கம் கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது ஊழல் என்றும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியிருந்தார். கம்மன்பில கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி இந்த முறைப்பாட்டைச் செய்திருந்தார். தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆணைக்குழுவிடம் பதில் கோருவதாக கம்மன்பில தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய கையூட்டல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நாடாளுமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளது.

பதிவு 18 Jan 2026 11:42 am

‘சாதனைத் தமிழன்’விருது

டான் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிவரும் ‘சாதனைத் தமிழன்’ விருது வழங்கும் நிகழ்வின் 2025 ஆம் ஆண்டுக்கான விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று (17.01.2025) இரவு டான் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா சிறப்பு நிகழ்வின் போது இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாணஅவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், யாழ். மாநகர சபையின் மேயர் வி.மதிவதனி […]

அதிரடி 18 Jan 2026 11:40 am

கைத்துப்பாக்கி , தோட்டாக்களுடன் இருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மருதானை, பட்டியாவத்தை பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 2 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்'போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மற்றுமொரு நபரிடம் தோட்டாக்களை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 9mm ரகத்தைச் சேர்ந்த 75 தோட்டாக்களும், T56 ரகத்தைச் சேர்ந்த 45 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 32 வயதுடைய இந்தச் சந்தேகநபரும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பதிவு 18 Jan 2026 11:33 am

யாழில். எம்.ஜி.இராமசந்திரனின் 109 ஆவது பிறந்ததினம் நிகழ்வுகள்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 109 ஆவது பிறந்ததினம் நேற்று(17) கொண்டாடப்பட்டது. யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தின் ஏற்பாட்டில் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி இராமசந்திரனின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினரால் எம்.ஜி.இராமசந்திரன் மற்றும் யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்துக்கு நெய் விளக்குகள் ஏற்ப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிரடி 18 Jan 2026 11:31 am

தையிட்டி சட்டவிரோத விகாரை விகாரதிபதியை முன் வரிசையில் அமர்த்தி அழகு பார்த்த ஜனாதிபதி

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாதது ஏன்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தமிழர் திருநாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சிங்கள பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்தின் பிக்குவை தான் கலந்து கொண்ட கூட்டத்தின் முன் வரிசை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர். இனவாத சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு எதிராகவும், இராணுவத்தினரின் தனியார் நிலங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடுபவர்களை இனவாதிகள் என அடையாளப்படுத்தி தமிழர் தாயக மக்களை அவமானப்படுத்தி உள்ளார். இதுதான் தமிழர் திருநாளில் தமிழர்கள் கொடுத்த பரிசா? என கேட்பதோடு இதற்கான எதிர்ப்பினை தமிழ் தேசப்பற்றாளர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம். தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது சட்டவிரோத விகாரை கட்டிடத்தை அகற்றி மக்களின் காணிகளை மக்களின் கைகளில் கொடுப்பதாகும். அதுவே தமிழர்களுக்கான நீதியாகவும் அமையும். சட்டம் அனைவருக்கும் சமம். தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன்? சட்ட விரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தயங்குவதாகவும், இனவாத சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பயந்து நிற்பதாகவும், நாக விகாரை பிக்கு, ஜனாதிபதி அவரை சந்தித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். இனவாதம் மதவாதத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் ஒருவர் சொந்த காணிகளை கேட்டு நடக்கும் போராட்டத்தினை இனவாதம் என குறிப்பிடுவதில் என்ன நியாயம் உள்ளது? தமிழர்களோடு விழா கொண்டாட வந்த ஜனாதிபதி தமிழர்களின் அரசியல் பண்பாட்டு விழாவினை தமது அரசியல் களியாட்ட விழாவாக்கி மகிழ்ந்துள்ளார். தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதியும் அவர்களின் சுதந்திர தினத்திலே தமிழர் தாயகத்தில் அவர்களின் களியாட்ட விழாவாக்க திட்டமிட்டிருப்பார்கள். தமிழ்மக்களின் மண் பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய் கொண்டு இருப்பது போல எமது தேசிய அரசியலும் தேசிய மக்கள் சக்தியின் போலி அரசியல் களியாட்டங்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது. இதற்கும் ஜனாதிபதி எமது மண்ணிலிருந்து எம்மை அவமானப்படுத்தியமைக்கும் முழு எதிர்ப்பினை காட்டவும் எதிர்வரும் சுதந்திர தினத்தினை தமிழர் தேசம் தழுவிய கரி நாளாக்க அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் மக்களை திரட்டுவதற்கான செயல் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். விடுதலையை மையப்படுத்தியது சமயங்கள். எனவே அனைத்து சமய தலைமைகளும், அவர்கள் சமய மையங்களும் அதற்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதிவு 18 Jan 2026 11:24 am

இண்டிகோவுக்கு ரூ.22.20 கோடி அபராதம்: டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை!

புதிய விதிகளை முறையாகப் பின்பற்றாததால் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு டிஜிசிஏ ரூ . 22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. 3 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டதன் பின்னணி என்ன ?

சமயம் 18 Jan 2026 11:17 am

யாழில். குப்பைக்கு வைத்த தீ வீட்டிற்கு பரவியது

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால் , வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் நேற்று(17) சனிக்கிழமை வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு , வெளியே சென்றுள்ளனர். குப்பையில் பற்றிய தீ அருகில் வீட்டின் கூரையில் பற்றி வீடு தீப்பற்றியுள்ளது. இதனைஅவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டுதீயினைஅணைத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்துள்ளது .

அதிரடி 18 Jan 2026 11:15 am

யாழில் இரு இளைஞர்களால் பொலிஸாரின் கிடுக்குப்பிடிக்குள் பலர் ; இரகசிய தகவல் அம்பலப்படுத்திய விடயம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள போதை வியாபரிகளிடமிருந்து போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தடுத்து வைத்து விசாரணை இருவரது உடைமையில் இருந்தும் 2கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , 12 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. இருவரையும் […]

அதிரடி 18 Jan 2026 11:05 am

மகா., உள்ளாட்சி தேர்தல்: சரத் பவாரை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிசெய்த அஜித் பவார்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளது. புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்படி இருந்தும் இரண்டு மாநகராட்சிகளிலும் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று இரண்டு மாநகராட்சிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இரு தேசியாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து இரு கட்சி தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 5ம் தேதி ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சரத் பவாருடன் அஜித் பவார் ஆலோசனை நடத்தி இருக்கிறார். பாராமதியில் உள்ள சரத் பவார் இல்லத்திற்கு அஜித் பவார் இதற்காக சென்றார். அங்கு சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் ரோஹித் பவார் ஆகியோருடன் அஜித் பவார் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து விவாதித்தார். இறுதியில் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இச்சந்திப்பு குறித்து சுப்ரியா சுலேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பூட்டிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையை எப்படி வெளியில் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அஜித் பவார் மற்றும் சரத் பவார் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து பாராமதியில் நடந்த வேளாண் கண்காட்சிக்கு புறப்பட்டு சென்றனர். இது குறித்து அஜித் பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு,'' வேளாண் கண்காட்சிக்கு சரத் பவார் செல்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்து ஒன்றாக வேளாண் கண்காட்சிக்கு சென்றோம்'' என்றார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். சரத் பவார் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில்,''12 ஜில்லா பரிஷத் மற்றும் 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல்களில் கூட்டணி அமைப்பது குறித்து இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஆலோசித்தனர். சில இடங்களில் நட்புரீதியாக ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் நாங்கள் விவாதித்தோம்'' என்றார்.

விகடன் 18 Jan 2026 11:05 am

தலைவர் தம்பி தலைமையில்: ``கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி படம் பாருங்க- ரசிகர்களின் அன்பால் நெகிழும் ஜீவா!

ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் 'தலைவர் தம்பி தலைமையில்'. முதலில் ஜனவரி 31-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், ஜனநாயகன் தள்ளிப்போனதால் பொங்கல் ரேஸில் இறக்கிவிடப்பட்டது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இப்படத்துடன் வா வாத்தியார் மற்றும் பராசக்தி என இரு பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகியிருக்கின்றன. மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான FALIMY என்ற திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் சஹாதேவ் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தலைவர் தம்பி தலைமையில்; ஜீவா இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் ஜீவா நெகிழ்ந்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,``தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு நீங்கள் வாரி வழங்கியிருக்கும் அளவற்ற அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது. நிச்சயமாக, என்னைப் பற்றி வரும் அந்த மீம்ஸ்கள் (Memes) உட்பட! அந்த 'எடிட்ஸ்' (Edits) அனைத்திற்கும் எனது கூடுதல் அன்பு. அவை அனைத்தும் மிகுந்த அன்புடனும் ஆதரவுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகின்றன. படம் பார்த்த, பார்க்கப் போகும் அனைத்துக் கண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி தியேட்டரில் மட்டுமே திரைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்! தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்!

விகடன் 18 Jan 2026 10:54 am

துபாயில் அஜித்தை சந்தித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்: இந்த இரண்டுல எது காரணமா இருக்கும்?

துபாய் ரேஸ் சர்க்யூட்டில் அஜித் குமாரை நயன்தாராவும், அவரின் கணவரான விக்னேஷ் சிவனும் சந்தித்து பேசியதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. அது என்ன சந்தேகம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சமயம் 18 Jan 2026 10:40 am

SIR: இன்றே கடைசி நாள்... வாக்காளர் பெயர் சேர்க்க உடனே விண்ணப்பியுங்க!

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் இறந்​தவர்​கள் 26.94 லட்​சம் பேர், முகவரி​யில்இல்​லாதவர்​கள் 66.44 லட்​சம்பேர், ஒன்​றுக்கு மேற்​பட்ட இடங்​களில் வாக்​குரிமை உள்​ளவர்​கள் 3.98 லட்​சம் பேர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நீக்கப்பட்டவர்களில் இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க அல்லது புதிய பதிவுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் ஆணையம் உயிரிழந்த வாக்காளர்களைத் தவிர்த்துப் பார்த்தால், இன்னும் சுமார் 53.65 லட்சம் பேர் தங்கள் பெயர்களை மீண்டும் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்காவிட்டால், வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜனவரி 18) முடிவடைகிறது. திருத்தப்பணி மேற்கொள்ள வேண்டியவர்கள் இன்று தவறவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால், வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை காப்பாற்றிக் கொள்ள இன்றே தங்களின் வாக்கு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அடுத்த மாதம் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Mumbai-யை கைப்பற்றிய பாஜக - உதவியதா தேர்தல் ஆணையம்? | Imperfect show | Vikatan TV

விகடன் 18 Jan 2026 10:31 am

ட்ரம்பின் கைக்கு சென்ற நோபல் பரிசு ; விடாபிடியாய் நிற்கும் நோபல் குழு

நோபல் பரிசு வெற்றியாளரிடமிருந்து பிரிக்க முடியாதது. ஆனால் பதக்கத்தை வேறு எவருக்கும் கொடுக்கலாம் என விருது வழங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. வெனிசுலா எதிர்க்​கட்சி தலை​வர் மரியா கொரினா மச்​சாடோ, தனக்கு வழங்​கப்​பட்ட அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்து நோபல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பதக்கம் அல்லது பரிசுத் தொகையை என்ன செய்தாலும், பரிசைப் பெறுபவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவரே, நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியலில் […]

அதிரடி 18 Jan 2026 10:30 am

அரசியலமைப்பு பேரவைக்கு 3 உறுப்பினர்களை நியமிப்பதில் இழுபறி

அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களின் பெயர்களை தெரிவு செய்வதில், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் உடன்பாடு ஏற்படவில்லை. சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களான அனுலா விஜேசுந்தர, பிரதாப் ராமானுஜன்

புதினப்பலகை 18 Jan 2026 10:21 am

Weekly Horoscope: வார ராசி பலன் 18.1.26 முதல் 24.1.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of January 18th - January 24th 2026, whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological influences that will shape the upcoming week. Tune in to find out what the stars have in store for you and how to navigate the energies surrounding you during this time. With precise readings based on Vedic astrology, Bharathi Sridhar will help you prepare for a successful and harmonious week ahead. Keywords: Astrology Prediction, Weekly Horoscope, Bharathi Sridhar, Vedic Astrology, Horoscope, Weekly Forecast, Astrological Insights, Love, Career, Health, Finances, Predictions, Future Outlook.

விகடன் 18 Jan 2026 9:40 am

பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் திவ்யா: அரோரா பற்றிய உங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அரோரா விஷயத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ்.

சமயம் 18 Jan 2026 9:31 am

வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

விகடன் 18 Jan 2026 9:30 am

ட்ரம்ப் ஒரு குற்றவாளி ; கமேனியின் கருத்துக்களால் வலுக்கும் போர் பதற்றம்

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது ஈரான் வன்முறை ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போராட்டக்காரர்கள் […]

அதிரடி 18 Jan 2026 9:30 am

ஓசூர் ஏர்போர்ட் திட்டம்… மீண்டும் ’நோ’ சொன்ன மத்திய அரசு… காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதனை மத்திய அரசு மீண்டும் நிராகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

சமயம் 18 Jan 2026 9:06 am

‘232 வருடத்தில் முதல் முறை’.. 40 ரன்னை சேஸ் செய்ய முடியாமல் அவுட் ஆன.. பாகிஸ்தான் கேப்டன் அணி!

பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் வழிநடத்தும் பாகிஸ்தான் உள்ளூர் அணி, 40 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம். இந்த நிகழ்வு, உலக அளவில் வைரலாகி வருகிறது.

சமயம் 18 Jan 2026 9:00 am

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு

வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடிக்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையின்போது 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெனிசியூலா பாதுகாப்பு அமைச்சரால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி இராணுவ நடவடிக்கையில் 51 வெனிசியூலா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 32 பேர் கியூபா படையினர் பலியாகியுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மதுரோவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளனர். இதற்கமைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது வெனிசியூலாவில் மொத்தம் 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலின்போது […]

அதிரடி 18 Jan 2026 8:30 am

40 ஆண்டுகள் கடந்து மேலும் 5 ஆண்டுகள் ஆட்சியைத் தொடரப்போகும் யோவேரி முசேவேனி

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசேவேனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் அவரது நான்கு தசாப்த கால ஆட்சியை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்துள்ளார். அவர் 72% வாக்குகளைப் பெற்றதாகவும், அவருக்கு நெருக்கமான போட்டியாளரான போபி வைன் 25% வாக்குகளைப் பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவர் போலி முடிவுகள் மற்றும் வாக்குச்சீட்டு நிரப்புதல் என்று விவரித்ததைக் கண்டித்துள்ளார். வைன் எந்த விவரங்களையும் வழங்கவில்லை, மேலும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை, ஆனால் ஆப்பிரிக்க ஒன்றிய தேர்தல் பார்வையாளர்கள் வாக்குச்சீட்டுத் திணிப்புக்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை என்று கூறினர். வைன் வன்முறையற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 81 வயதான முசேவேனி, 1986 ஆம் ஆண்டு முதன்முதலில் கிளர்ச்சித் தலைவராக ஆட்சிக்கு வந்தார். ஆனால் அதன் பின்னர் ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் செயல்முறை வன்முறையால் பாதிக்கப்பட்டது, மேலும் 43 வயதான முன்னாள் பாப் நட்சத்திரமான வைன், சமீபத்திய நாட்களில் நாடு முழுவதும் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார். அதிகாரிகள் இதுவரை ஏழு இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர். முடிவுகளை அறிவித்த தேர்தல் ஆணையத் தலைவர் சைமன் பியாபகாமா, இரு பிரிவுகளின் ஆதரவாளர்களையும் ஒற்றுமையைத் தழுவி முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தேசிய வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அப்பால், மிகக் குறைந்த கொண்டாட்டங்களே நடந்துள்ளன, தலைநகர் கம்பாலாவில் பெரும்பாலான சாலைகள் காலியாகவும், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், பல சுற்றுப்புறங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை முதல் நாட்டில் இணைய அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளது, இதனால் தகவல்களைச் சரிபார்ப்பது கடினமாக உள்ளது. தவறான தகவல்கள், மோசடி மற்றும் வன்முறையைத் தூண்டுவதைத் தடுக்க இந்த மின்தடை அவசியம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் ஆழ்ந்த கவலைக்குரியது என்று கண்டித்துள்ளது. இணையத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று மது கோரியுள்ளார்.

பதிவு 18 Jan 2026 8:10 am

''புறநானூறு டு பராசக்தி; எஸ்.கே வந்த பிறகு மாற்றியவை!? - 'பராசக்தி'திரைக்கதையாசிரியர் அர்ஜூன்

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. புரட்சித் தீயாய் வெடிக்கும் வசனங்கள், தியேட்டர் மெட்டீரியலாக அமைந்திருக்கும் இண்டர்வெல் காட்சி, மனதை இறுக்கமாக்கும் ப்ரீ-க்ளைமேக்ஸ் காட்சி என அனைத்தையும் பெரும் எழுத்துக் கூட்டணி கொண்ட குழுவால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. பராசக்தி படத்தில்... 'பராசக்தி'யில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் அர்ஜுன் நடேசன். இவர் சுதா கொங்கராவின் சீடர். 'சூரரைப் போற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கி, இப்போது திரைக்கதையாசிரியர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். 'பராசக்தி'க்கு வாழ்த்துகள் சொல்லி அவரைச் சந்தித்து உரையாடினோம். மென்மையாக நம் கேள்விகளுக்கு பதிலளித்தவர்... சுதா கொங்கராவிடம் 'சூரரைப் போற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணியை மேற்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து திரைக்கதையும் எழுதியிருக்கிறீர்கள்! உதவி இயக்குநர் டு ரைட்டர் ப்ரோமோஷன் கிடைத்தது எப்படி? நான் இப்படியான ஒரு பரிமாணத்தை எதிர்பார்க்கவே இல்லை. சுதா மேமுடைய டிஸ்கஷன் எப்போதும் ஜனநாயகமாக இருக்கும். நாம் சொல்லும் விஷயங்கள், அவங்களுக்கு பிடித்துப் போச்சுனா நிச்சயமாக அதை ஏற்றுப்பாங்க. ஒருவேளை அது அவங்களுக்கு வொர்க் ஆகலைனாலும் 'நோ'னு சொல்லிடுவாங்க. ஜூனியர், சீனியர்னு யார் எந்த விஷயம் சொன்னாலும், சுதா மேம் அதுக்கு இடம் கொடுப்பாங்க. 'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, கொரோனா டைம்லதான் இந்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கினோம். அப்போது, நெருக்கடியான சூழல்கள் காரணமாகக் குறைவான ஆட்களே கலந்துரையாடல்களில் இருப்போம். அப்படியான சமயத்தில் எங்களுக்குள்ள நல்ல கம்ஃபர்ட் அமைந்திடுச்சு. அது இந்த ப்ரோமோஷனுக்கு முக்கியமானதாகவும் அமைந்திருக்கலாம். Arjun Nadesan - Parasakthi Writer படத்தின் முக்கியக் களம் பரபரப்பான ஒன்றாக இருந்தாலும் அதைக் கமர்ஷியல் ட்ரீட்மென்டில் சொல்லியிருக்கிறீர்கள். கமர்ஷியலாகவே இந்தப் படத்தைக் கொண்டுபோக நினைத்ததற்குக் காரணம் என்ன? படத்தைத் தொடங்கும்போதே, இதை மெயின்ஸ்ட்ரீமில் கொண்டுபோகணும்னு முடிவு செய்திட்டோம். அதே சமயத்தில், கமர்ஷியல் விஷயங்கள் கதையிலிருந்து வெளியேறிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். இந்தக் கதைக்கான ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கும்போது, இதில் அடங்கியிருக்கும் பல இருள் பக்கங்கள் எங்களுக்குத் தெரிய வந்துச்சு. அதை மெயின்ஸ்ட்ரீம் வழியில் பயணித்துச் சொல்லவும் முடிவு பண்ணினோம். இப்போ எடுத்துக்காட்டாக, 'டைட்டானிக்' படத்தை எடுத்துக்கொள்ளலாம். அது உண்மையான சம்பவம். அதை மெயின்ஸ்ட்ரீமில் சொல்லியிருக்கிறார்கள். அதுபோல 'பேட்டில் ஆஃப் அல்ஜீரியா' படத்தின் டோனை 'பராசக்தி'க்குக் கொண்டுவந்து மெயின்ஸ்ட்ரீம் வடிவத்தில் சொல்லத் திட்டமிட்டோம். மக்கள் அனைவரும் படம் பார்க்க வேண்டுமென்பதிலும் கவனமாக இருந்தோம். 'சின்னதுரை' கேரக்டருக்கு அதர்வா சரியாக இருப்பாரா'னு உங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்ததாக சுதா கொங்கரா சொல்லியிருந்தாரே! எதனால் அந்த சந்தேகங்கள்? (மென்மையாகச் சிரித்துக் கொண்டே...) இதற்கு முன்னாடி இந்தக் கதையை வேறு சில நடிகர்களுக்காக எழுதி வச்சிருந்தோம். அதிலிருந்து மனம் மாறுவதற்கு டைம் தேவைப்பட்டிருக்கலாம். அது அந்த சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கலாம். சொல்லப்போனால், சின்னதுரை கேரக்டரை 'மௌன ராகம்' படக் கார்த்தியின் கதாபாத்திரத்தை எண்ணத்தில் வச்சுதான் டிசைன் பண்ணினோம். புரட்சிகரமான இளைஞர், அதே சமயம் ஸ்டைலாகவும் வசீகரமான தோற்றமும் இருக்கணும். அதர்வா ப்ரதர், லுக் டெஸ்ட்லேயே எங்களுடைய நம்பிக்கைகளைச் சம்பாதிச்சுட்டார்னு சொல்லலாம். படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களின் லுக் டெஸ்ட் பார்க்கும்போதே, எங்களுக்குள்ள பெருமளவு நம்பிக்கை பிறந்துடுச்சுனு சொல்லலாம். பராசக்தி |Parasakthi படத்தின் இண்டர்வெல் காட்சி, 'பாட்ஷா' மொமென்டாக இருக்குமென தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சொல்லியிருந்தாரே, அந்த இண்டர்வெல் காட்சிக்குப் பின்னுள்ள கதையை விவரிக்க முடியுமா? படத்தில் நீங்க பார்க்கும் முதல் ரயில் காட்சி, தொடக்கத்துல அந்த இடத்துல அமைக்கிறதாக இல்லை. முதல் பாதி முழுவதும் செழியனின் கதாபாத்திரம், மொழிப் போரிலிருந்து விலகி இருக்கிற மாதிரிதான் டிசைன் பண்ணியிருந்தோம். இரண்டாம் பாதியில்தான் செழியனின் உண்மையான அடையாளத்தை ரிவீல் செய்வது போன்ற காட்சிகள் எழுதியிருந்தோம். ஆனா, அந்த விஷயத்தை மாற்றணும்னு முடிவு செய்து முதல்ல ரயிலை எரிக்கிற காட்சியை இணைத்தோம். காட்சிகளை மாற்றினாலும், அதே தாக்கத்தை க்ளைமேக்ஸ் கொடுத்தது. இண்டர்வெல் சீனில் எஸ்.கே சார் பேட்மேன் மாதிரி மேலே நிற்பார். அந்த ஷாட்டுக்கு ஐடியா தந்தது ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் சார்தான். வேறொரு ஷாட் முன்பே எடுத்திட்டோம். பிறகுதான் இப்படியொண்ணு எடுத்தா செழியனை இன்னும் பவர்ஃபுல்லாகக் காட்டலாம்னு அவர் ஐடியா கொடுக்க, அதை சாத்தியப்படுத்திட்டோம். இந்தக் கதைக்கு பேராசிரியர் அ. இராமசாமியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கிறது? முதலிலேயே அவருடைய புத்தகங்களைப் படிச்சிட்டோம். பிறகு அதை வச்சு முதல் கதை டிராஃப்ட் முடிச்சிட்டோம். அந்தக் கதையை எடுத்துட்டு வாங்க, நான் படிக்கிறேன்னு அவர் சொன்னதும் அதை உடனடியாக நான் மதுரைக்குக் கொண்டு போனேன். அவரொரு பேராசிரியர், அது போலவே ரெட் பேனாவில் மாணவனுக்குத் திருத்துவது போல திருத்தி, சில விஷயங்களை எங்களிடம் சொன்னார். அவருடன் பணியாற்றியதை பெருமையாக உணர்றேன். Arjun Nadesan - Parasakthi Writer சூர்யாவுக்காக செய்து வைத்த திரைக்கதை, பிறகு எஸ்.கே வந்ததும் எந்தெந்த விஷயங்கள் மாற்ற வேண்டியதாக இருந்தன? சொல்லப்போனால், பெரிதாக எதுவும் மாற்றலைங்கிறதுதான் உண்மை. எஸ்.கே சாருக்கு எப்போதும் ஒரு ஃபன்னான பக்கம் இருக்கும். அதை வெளிக்கொண்டு வர்ற மாதிரியான விஷயங்களைத் திரைக்கதையில் சேர்த்தோம். காதல் காட்சிகளிலும் அவருடைய வலுவான பக்கத்தையே கொண்டுவர நினைத்தோம். SK Parasakthi அறிஞர் அண்ணாவின் குரலைக் கொண்டு கச்சிதமாகக் கொண்டு வருவதற்கு ஏ.ஐ. பயன்படுத்தினீர்களா? இல்லைங்க! அதை சேத்தன் சாரே முயற்சி செய்து கொண்டு வந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அப்படியான குரல்ல பேசுறதுக்கு பெருமளவு முயற்சி பண்ணினாரு. பிறகு டப்பிங்ல முழுமையாக அதை கொண்டுவந்திட்டாரு. முதல்ல அந்தக் கேரக்டர்ல எஸ்.எஸ். ஸ்டான்லி சார்தான் நடிக்க வேண்டியதாக இருந்துச்சு. துரதிர்ஷ்டவசமாக, அவர் இப்போ நம்ம கூட இல்லை. பிறகு சேத்தன் சார் வந்து, அந்தக் கேரக்டருக்கு மிகக் கச்சிதாகப் பொருந்திட்டாரு. முழுப் பேட்டியைப் காண கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

விகடன் 18 Jan 2026 7:52 am

யார் இந்த சந்தனா சின்ஹா? 1,500 குழந்தைகளை மீட்ட RPF பெண் சிங்கம்- மெகா ரயில் சம்பவம்!

இந்திய ரயில்வேயின் கீழ் குழந்தைகளை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் சந்தனா சின்ஹாவின் செயல்பாடுகள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. இதற்காக மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

சமயம் 18 Jan 2026 7:51 am

BB Tamil 9: சீசன் 9-ல் அதிக சம்பளம் வாங்கியவர்களும், சம்பளம் இன்றி போனவர்களும்! யார் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 2017 ல் தொடங்கிய முதல் சீசன் தொட்டு ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும்போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாங்கும் சம்பளம் குறித்த செய்தியை வெளியிட்டு வந்துள்ளோம். இந்த சீசனிலும் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த சீசனின் அதிக தொகை வாங்கிய போட்டியாளர் யார் எனப் பார்க்கலாமா? சந்தேகமே வேண்டாம், ஒவ்வொரு சீசனிலும் டைட்டில் வின்னர்தான் அந்த நிகழ்ச்சியை வைத்து அதிக பரிசுத் தொகை பெறுபவராக இருப்பார். ஏனெனில் டைட்டிலுக்கான பரிசுத் தொகையுடன், அவர் நூறு நாள், சரியாக சொல்வதென்றால் 105 நாள்கள், அந்த வீட்டில் இருந்நதற்கான சம்பளமும் கிடைக்கும். இதில் வெற்றியாளருக்கான பரிசுத் தொகைக்கு 30 % வரி பிடித்தம் இருக்குமென்கிறார்கள். டைட்டில் வின்னரை அடுத்து பணப் பெட்டியை எடுத்துச் செல்பவருக்கும் அதிக தொகை கிடைக்குமென தெரிகிறது. ஏனெனில் பெட்டியில் எடுத்துச் செல்லும் பணம் தவிர்த்து அவர் அந்த வீட்டில் தங்கியிருந்த நாட்களூக்கான சம்பளமும் அவருக்குக் கிடைக்கிறது. divya ganesh அந்த வகையில் இந்த சீசனில் அதிக தொகை பெற்றவர் என்றால் திவ்யா கணேஷ் தான். அவருக்கு சம்பளமாக நாள் ஓன்றுக்கு முப்பதாயிரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. வைல்டுகார்டு போட்டியாளர் என்பதால்,. அவர் வீட்டில் இருந்த 80 நாள்களுக்கு அந்த தொகையே சுமார் 25 லட்சம் வரை கிடைக்கிறது. டைட்டில் வின்னருக்கான தொகை 50 லட்சம். இந்த தொகையில் சுமார் ரூ,15 லட்சம் வரியாகச் சென்றால், ரூ.35 லட்சம் கிடைக்கலாம். ஆக மொத்தத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமாகவே இவருக்குக் கிடைக்கும் என்கிறார்கள். அடுத்து கானா வினோத். இவர் பணப் பெட்டியில் எடுத்துச் சென்ற தொகை பதினெட்டு லட்சம். இதில் ஐந்தரை லட்சம் வரை வரியாகப் போய் விடும். தவிர இவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு எட்டாயிரம் வரை பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் நிகழ்ச்சியில் இருந்த 100 நாட்களைக் கணக்கிட்டால் எட்டு லட்சம் கிடைக்கும். மொத்தத்தில் சுமார் இருபது லட்சம் வரை இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கியவர்கள் எனக் குறிப்பிட்டால் முதல் இடத்தில் திவ்யாவும் இரண்டாவது இடத்தில் கானா வினோத்தும் இருக்கின்றனர். Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?! பணப்பெட்டியுடன் வினோத் அதேநேரம் இறுதிச் சுற்று வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கு, அவர்களுக்கான தினசரி ஊதியம் மட்டுமே வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சீசனில், நாள் ஒன்றுக்கு கலையரசனுக்கு ரூபாய் எட்டாயிரமும், கனி, எஃப் ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு பத்தாயிரமும் பேசப்பட்டாதாகக் கூறப்படுகிறது. அரோரா, வியானா இருவருக்கும் 12,000 ரூபாய் என்கிறார்கள். பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா, சபரி, திவாகர் ஆகியோருக்கு 15 முதல் இருபதாயிரத்துக்கு இடைப்பட்ட தொகை பேசப்பட்டதாம். வைல்டு கார்டு மூலம் சென்ற நான்கு பேருக்குமே முப்பதாயிரம் என்றார்கள். நிறைவாக இந்த சீசனில் சம்பளமே இல்லையென்றால் கமருதீன், பார்வதி, நந்தினி மூன்று பேரைச் சொல்லலாம் நந்தினி நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளே வெளியேறி விட்டார். பார்வதி, கமருதீன் இருவருக்கும் ரெட் கார்டு தரப்பட்டதால் அவர்களுக்கும் ஊதியம் இருக்காது எனக் கூறப்படுகிறது.

விகடன் 18 Jan 2026 7:46 am

கிரீன்லாந்து சர்ச்சை: 8 ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதித்தார் டிரம்ப்

டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகியவை பிப்ரவரி 1 முதல் அனைத்து பொருட்களுக்கும் 10% வரியை எதிர்கொள்ள உள்ளன. கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எட்டு ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி 1 முதல் 10% இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை சமூக ஊடகப் பதிவில், டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் வரியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் முழுமையாகவும் வாங்குவதற்குஒரு ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஜூன் 1 ஆம் திகதி அது 25% ஆக உயரும் என்றும் டிரம்ப் கூறினார். வரி அச்சுறுத்தல் என்பது டிரம்ப் மற்றும் நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையிலான மோதலின் கடுமையான மற்றும் ஆபத்தான விரிவாக்கமாகும். இது 1949 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு கூட்டு அளவிலான பாதுகாப்பை வழங்கும் கூட்டணியை மேலும் இறுக்குகிறது. குடியரசுக் கட்சித் தலைவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப நட்பு நாடுகளையும் போட்டியாளர்களையும் வளைக்க வர்த்தக அபராதங்களைப் பயன்படுத்த பலமுறை முயன்றுள்ளார். இது சில நாடுகளிடமிருந்து முதலீட்டு உறுதிமொழிகளையும் சீனா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற பிற நாடுகளிடமிருந்து பின்னடைவையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்க சட்டத்தின் கீழ் டிரம்ப் எவ்வாறு வரிகளை விதிக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்ற சவாலுக்கு உட்பட்ட பொருளாதார அவசரகால அதிகாரங்களை அவர் மேற்கோள் காட்ட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

பதிவு 18 Jan 2026 7:45 am

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்

முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க (Nandana Gunathilake) இன்று (18) காலமானார். ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 64 ஆவது வயதில் இன்று (18) காலமாகியுள்ளார். அரசியல் வாழ்க்கை ஜே.வி.பி.யின் ஆரம்பகால உறுப்பினரான இவர், ஜே.வி.பி.யைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். இதன்பின்னர், ஜே.வி.பி.யிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து, பாணந்துறை மாநகர […]

அதிரடி 18 Jan 2026 7:35 am

மாறுவேடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

கொழும்பு – ஜிந்துபிட்டியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, இரண்டு சிறுவர்கள் காயமடைந்த சம்பவம், வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் குற்றவாளியான ‘பழனி ரிமோஷன்’ என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று இரவு முச்சக்கரவண்டியொன்றில் பிரவேசித்த சந்தேகநபர்கள் இந்தத் […]

அதிரடி 18 Jan 2026 7:32 am

யாழில் வீடொன்றில் தீப்பரவல் ; குப்பைக்கு வைத்த தீயால் அனர்த்தம்

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால் , வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது. அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு , வெளியே சென்றுள்ளனர். குப்பையில் பற்றிய தீ அருகில் வீட்டின் கூரையில் பற்றி வீடு தீப்பற்றியுள்ளது. இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்துள்ளது

அதிரடி 18 Jan 2026 7:30 am

உறவுகளை அஞ்சலிப்பதற்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தைஇராணுவத்திடமிருந்து விடுவிக்க தீர்மானம் வேண்டும்- தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும். உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் அக் காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தினார். இராணுவத்தினரால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் விடயத்தில், 19.42 ஏக்கர் நிலம் உரிமையாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு – […]

அதிரடி 18 Jan 2026 7:27 am

IND vs BAN U19: ‘கம்பேக்னா இப்படி இருக்கணும்’.. தோல்விக்கு அருகில் வரை சென்று.. த்ரில் வெற்றியைப் பெற்ற இந்தியா!

வங்கதேச யு19 அணிக்கு எதிரான போட்டியில், இந்திய யு19 அணி கடைசிவரை போராடி வென்றது. குறிப்பாக, தோல்விக்கு அருகில் வரை சென்று இறுதியில் இந்திய யு19 அணி வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளனர்.

சமயம் 18 Jan 2026 7:23 am

கோவையில் களைகட்டிய 'பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு': நீர்நிலைகள் மீது தனி கவனம்!

கோவையில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (PBC) மற்றும் ஆசிய நீர் பறவைகள் கணக்கெடுப்பு (AWC) சிறப்பாக நடைபெற்றது. பேரூர் - சுண்டகாமுத்தூர் குளத்தில் ஆர்வலர்கள் திரட்டிய அரிய தகவல்கள் இதோ.

சமயம் 18 Jan 2026 7:05 am

போகி முதல் பொங்கல் வரை: சென்னையில் மளமளவென நடந்த குப்பை அகற்றும் பணிகள்!

பொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து 160 டன்னுக்கு அதிகமான குப்பைகளை மாநகராட்சி அகற்றியுள்ளது . இது தொடர்பான விரிவான விவரம் உள்ளே.

சமயம் 18 Jan 2026 6:40 am

ஈரான்: 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; டிரம்ப் வரவேற்பு

தெஹ்ரான், ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, கடந்த டிசம்பர் 28-ந்தேதி தொடங்கிய போராட்டம் ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களுக்கு பரவியது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி […]

அதிரடி 18 Jan 2026 6:09 am

இனி டோல்கேட்டில் நிற்கவே வேண்டாம்! சென்னையில் 3 இடங்களில் வருகிறது புதிய தொழில்நுட்பம்!

சென்னையில் பரனூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 சுங்கச்சாவடிகளில் MLFF (Multi-Lane Free Flow) தொழில்நுட்பம் சோதனைக்கு வருகிறது. இனி வாகனங்கள் நிற்காமல் செல்லலாம். முழு விவரம் உள்ளே.

சமயம் 18 Jan 2026 5:43 am

சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026: 102 நாடுகள் பங்கேற்பு!

102 நாடுகள், 2000+ ஒப்பந்தங்களுடன் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி 2026 தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் நூல்களை உலகறியச் செய்யும் அரசின் புதிய முயற்சிகள் பற்றி அறியவும்.

சமயம் 18 Jan 2026 5:35 am

ஈரான் வான்வெளி… விமான நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் திடீர் அறிவுறுத்தல்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நடுவே, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு முகமை, விமான நிறுவனங்களை ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தவறாக அடையாளம் தற்போதைய சூழ்நிலை மற்றும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது தவறாக அடையாளம் காணப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றே ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு வகையான ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பு […]

அதிரடி 18 Jan 2026 3:30 am

யாழ்ப்பாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை: இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை ஊர்காவற்துறை காவற்தறையினர் அதிரடியாக கைது… The post யாழ்ப்பாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை: இரு இளைஞர்கள் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Jan 2026 2:08 am

அவுஸ்திரேலியாவில் 47 லட்சம் சமூகவலைதள கணக்குகள் நீக்கம்

ஆஸ்திரேலியாவில் சமூகவலைதள கணக்குகளை குழந்தைகள் பயன் படுத்த கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை அடுத்து, 16 வயதுக்கு உட்பட்டோரின், 47 லட்சம் சமூக வலைதள கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்த கடந்த டிசம்பர் 10ல் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்த சட்டத்தின் படி 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கிக், ரெட்டிட், ஸ்னாப்சாட், த்ரெட்ஸ், எக்ஸ், யுடியூப், டிவிட்ச்’ போன்ற 10 சமூகவலைதளங்களில் கணக்கு வைத்திருக்க கூடாது. […]

அதிரடி 18 Jan 2026 12:30 am

ஆசிரியரின் வெளித்தோற்ற விழுமியங்கள்

ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அறிவுக்கண் திறப்பவர் மட்டுமல்ல. அவர் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியும் ஆவார். “ஆள் பாதி ஆடை பாதி” என்ற பழமொழிக்கேற்ப ஒரு ஆசிரியரின் தோற்றம் அவரது ஆளுமையும் அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தின் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது. ஆசிரியர்களின் ஆடை மற்றும் வெளித்தோற்ற விழுமியங்கள் என்பது வெறும் தனிநபர் விருப்பம் சார்ந்ததல்ல. அது ஒரு தொழில் முறை தகுதி சார்ந்த விடயமாகும். ஆசிரியர்களின் ஒழுக்க விழுமிய முறைமை தொடர்பாக சுற்றறிக்கை இலக்கம் […]

அதிரடி 18 Jan 2026 12:30 am

நுவரெலியாவில் அதி குறைந்த வெப்பநிலை பதிவு

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று(17.1.2026) நுவரெலிய வானிலை ஆய்வு நிலையத்தில் பதிவாகியுள்ளது. இதன்படி, அங்கு வெப்பநிலை 8.0 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை திணைக்கள தகவல்படி, பண்டாரவளையில் அதிகாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 டிகிரி செல்சியஸாகவும், பதுளையில் 14.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. வடமத்திய மாகாணத்தின், பொலன்னறுவையில் குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

அதிரடி 18 Jan 2026 12:30 am

லண்டனில் ஈரான் தூதரகம் முன்பாக பெரும் பதற்றம்: போராட்டக்காரர்கள் –காவற்துறை மோதல்!

லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்பாக நேற்று இரவு நடைபெற்ற பாரிய போராட்டம் வன்முறையாக மாறியதில், தூதரகக் கட்டிடம்… The post லண்டனில் ஈரான் தூதரகம் முன்பாக பெரும் பதற்றம்: போராட்டக்காரர்கள் – காவற்துறை மோதல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Jan 2026 12:23 am

தங்க மோசடி வழக்கு ; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

பாரிய அளவிலான தங்க மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தேகநபர் குருணாகலைச் சேர்ந்த லொகுபதுருகே மகே விந்தக டி சில்வா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்,சுமார் மூன்றரைக் கிலோ தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் 50 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட இரும்புத் துண்டுகளைக் கொடுத்து அவர் ஏமாற்றியுள்ளார். தங்க மோசடி வழக்கு ; […]

அதிரடி 17 Jan 2026 11:30 pm

காங்கிரஸ் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன? கூட்டணி குறித்த முடிவு இதுதானா!

தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணியைப் பற்றிய விவாதத்தை பொதுவெளியில் பேசக் கூடாது. சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட கூடாது. தலைமை எடுக்கும் முடிவுகளை மாநில காங்கிரஸ் கமிட்டி கட்டுப்பட வேண்டும்.

சமயம் 17 Jan 2026 11:22 pm

Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?!

அக்டோபர் முதல் வாரத்தில் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 9 வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது. சில நிமிடங்களூக்கு முன் நிறைவடைந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்ற திவ்யா கணேஷ் பிக்பாஸ் சீசன் 9 ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குத் தேர்வாகியிருந்த இருபது பேரில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே பிரபலமாவர்களாக இருந்தனர். எனவே வைல்டு கார்டு மூலம் அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் சில தினங்களுக்கு பிறகு நிகழ்ச்சிக்குள் சென்றனர். Bigg Boss Tamil 9 அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறினர். இன்னொரு புறம் யாரும் எதிர்பாராத அதிரடியாக சிறப்பாக விளையாடி வந்த கமருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு தந்து அனுப்பப்பட்டதும் நிகழ்ந்தது. மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார், டைட்டில் வெல்வார் என மக்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் இந்நிலையல் சீசனின் கிரான்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்த சபரி, விக்ரம், திவ்யா கணேஷ், அரோரோ ஆகிய நால்வருடனும விஜய் சேதுபதி கடந்த நூறு நாள் அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நான்கு பேரில் 4வது மற்றும் 3வது இடம் பிடித்தவர்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி விக்ரம் நான்காவது இடத்தையும் அரோரா 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. divya ganesh கடைசியாக மிச்சமிருந்த திவ்யா கணேஷ் மற்றும் சபரி இருவரில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இரண்டாவது இடம் பிடித்தார் சபரி. விஜய் சேதுபதி திவ்யா கணேஷ் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்த எபிசோடை நாளை, ஞாயிறு அன்று காணலாம். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வென்றிருக்கிறார். இதற்கு முன் முன் சீசன் 7 ல் வைல்டு கார்டு மூலம் சென்ற அரச்சனா டைட்டில் வென்றது நினைவிருக்கலாம்.

விகடன் 17 Jan 2026 11:15 pm

சற்றுமுன்: துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். செய்தி அறிந்த உடனேயே நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சமயம் 17 Jan 2026 10:52 pm

மயானம் விடுவிப்புக்கும் கொண்டாட்டம்!

படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் பூனையன் காடு மயானக் கிணறு 35 ஆண்டுகளுக்கு பிறகு பிரதேச செயலகத்தால் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பும் பொங்கல் நிகழ்வும் இன்று நடைபெற்றது.

பதிவு 17 Jan 2026 10:29 pm

தையிட்டி மக்களின் காணிகளை மீள ஒப்படையுங்கள்: ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி நேரில் வலியுறுத்து!

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவித்து, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ்.… The post தையிட்டி மக்களின் காணிகளை மீள ஒப்படையுங்கள்: ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி நேரில் வலியுறுத்து! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 10:22 pm

ஆமியிடம் எவ்வளவு உள்ளது

வடக்கில்.இராணுவம் வசமுள்ள காணிகள் பற்றி அனுரவுக்கு தெரியாதா என தமிழ் அரசியல் தரப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பலாலியில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள் காணிகளை பார்வையிட அனுர கால்நடையாக பயணிப்பது பேசுபொருளாகியுள்ளது. வட்டக்கச்சி விவசாய அரச பண்ணையில் 415 ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது . வெள்ளாங்குளத்தில் 500 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது . தேராவிலில் 1,200 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது . முட்கொம்பனில் 100 ஏக்கர் தென்னம் தோட்டம் இராணுவம் வசம் இருக்கிறது . முழங்காவிலில் 1,800 ஏக்கர் மரமுந்திரிகை தோட்டத்தில் பெரும்பகுதி இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது . சாந்தபுரத்தில் 680 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது . ஜெயபுரத்தில் 120 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது . மலையாளபுரத்தில் 798 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது. தேறாங்கண்டல் பல நூறு ஏக்கர் விவசாய பண்ணையும் இன்னமும் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது இது போதாதென்று யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட வளமான விவசாய நிலமும் இராணுவம் வசம் இருக்கின்றது .

பதிவு 17 Jan 2026 10:21 pm

யாழில். குப்பைக்கு வைத்த தீ வீட்டை காவுகொண்டது!

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால் , வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது அரியாலை பகுதியில் உள்ள… The post யாழில். குப்பைக்கு வைத்த தீ வீட்டை காவுகொண்டது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 10:14 pm

சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் இது இருக்காது.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிகளில் இந்த வசதி இருக்காது.. வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. கடுமையாகும் விதிமுறைகள்.

சமயம் 17 Jan 2026 9:37 pm

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்: மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக அச்சம்!

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்: மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக அச்சம்! இந்தோனேசியா: ஜாவா தீவின்… The post இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்: மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக அச்சம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 9:35 pm

ஈரானுக்கு ஆதரவாக நிற்போம் ; ரஷ்ய ஜனாதிபதி புடின்

மத்திய கிழக்கு மற்றும் ஈரான் நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விவாதித்தார். மேற்காசிய நாடான ஈரானில் அடக்குமுறை மத ஆட்சிக்கு எதிராக, கடந்த இரு வாரங்களாக போராட்டங்கள் வெடித்துள்ளன. பதற்றமான சூழல் பொருளாதார சீரழிவு, பணவீக்கம் ஆகியவை காரணமாக துவங்கிய இந்த போராட்டம், தற்போது அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற அளவுக்கு தீவிரமடைந்துள்ளது. இதனால், ஈரான் […]

அதிரடி 17 Jan 2026 9:30 pm

ரயில் பயணிகளுக்கு முக்கியமான விதிமுறை.. இப்படி செஞ்சா அபராதம் கட்டணும்!

ரயில் பயணிகள் இந்த விதிமுறையை மீறி பயணம் செய்தால் அதிகளவு அபராதம் செலுத்த வேண்டும். மற்ற தண்டனைகளும் கிடைக்கலாம்.

சமயம் 17 Jan 2026 9:02 pm

இந்தியாவில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் மாநிலம் எது தெரியுமா? நீங்க நினைக்குற மாநிலம் இல்ல!

பூரி போன்ற பாரம்பரியமும் ஆன்மிக முக்கியத்துவமும் கொண்ட நகரம், நவீன குடிநீர் வசதியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி இருப்பது, இந்தியாவின் பிற பாரம்பரிய நகரங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

சமயம் 17 Jan 2026 8:50 pm

அலங்காநல்லூரில் சீறி பாய்ந்த காளைகள்... துணிந்து நின்ற வீரர்கள்! | ஜல்லிக்கட்டு கிளிக்ஸ்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

விகடன் 17 Jan 2026 8:46 pm

இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரை.. மீண்டும் சாதனையை முறியடிப்பாரா நிர்மலா சீதாராமன்?

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிக நீண்ட உரையை வாசித்து தனது சாதனையை தானே முறியடிப்பாரா?

சமயம் 17 Jan 2026 8:42 pm

அலை தணிகின்றதா?

தையிட்டி பேச மாட்டார், அரசியல் தீர்வு பேச மாட்டார்!பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் பேச மாட்டார்! ஆனால் நீ நடந்தால் நடை அழகு என பொதுவெளியில் அனுரவின் யாழ்ப்பாண பயணத்தை முன்வைத்து சமூக ஊடக பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்போது யாழில் அனுரவிற்கு பின்னால் இருக்கும் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் யார் என பார்த்தால் கடந்தகாலங்களில் ஆளும் அரசாங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த டக்ளஸ், அங்கஜன் போன்றோரின் பின்னால் நின்ற படித்தவர்கள் என்று அறியப்படும் ஒரு கூட்டம் தான் என்கிறன சுயாதீன தரப்புக்கள்.. அவர்கள் எப்பொழுதும் நாட்டை ஆளும் ஜனாதிபதியின் கட்சியை ஆதரிக்கும் கொள்கை கொண்ட கூட்டம் என்பது தெரியாத ஒன்றல்ல. ஜனாதிபதி தேர்தலில் திசைகாட்டிக்கு யாழில் கிடைத்த வாக்குகள் வெறும் 25000 க்கும் குறைவு, ஆனால் அனுர சிங்கள மக்களின் வாக்குகளால் நாட்டின் ஜனாதிபதியாகி இரண்டு மாதத்தினுள் நடந்த பொது தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் திசைகாட்டிக்கு அளித்த வாக்குகள் 81ஆயிரமாகும். ஒருவேளை 2024ல் ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தால் டக்ளஸ்,அங்கஜன், விஜயகலா போன்றவர்கள் இன்று அமைச்சர்களாகவும், முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்திருப்பார்கள். ஆனால்; கடந்த காலங்களில் அனுராவின் கூட்டத்திற்கு யாழ் மக்களை பெரூந்து மூலம் கட்டாயப்படுத்தி யாரும் ஏற்றியதில்லை, ஆனால் இந்த முறை நடந்ததை பார்க்கும் போது அனுர அலை யாழில் அடங்கிவருவது தெளிவாக தெரிகிறதெனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவு 17 Jan 2026 8:42 pm

மன்னார் –புத்தளம் வீதி திறப்பு: அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் மக்கள் அவதி! ️

மன்னார் – புத்தளம் வீதி திறப்பு: அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் மக்கள் அவதி! ️ மன்னாரில் இருந்து… The post மன்னார் – புத்தளம் வீதி திறப்பு: அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் மக்கள் அவதி! ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 8:39 pm

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம்: குட்டெரெஸ் வலியுறுத்தல்

ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் தேவை என 2026-ஆம் ஆண்டுக்கான தனது முன்னுரிமைகள் குறித்த உரையியில் அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தினாா். மேலும், தெற்கில் உள்ள சக்திவாய்ந்த நாடுகள் ஐ.நா. அமைப்புகளுக்கு தலைமை தாங்க வேண்டும். இல்லையெனில், இன்று பதவிகளைப் பற்றிக்கொண்டிருப்பவா்கள் நாளை அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் என அவா் எச்சரித்தாா். 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை உரையாற்றிய அதன் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது: […]

அதிரடி 17 Jan 2026 8:30 pm

துபாயில் மறைந்திருந்த நபர்கள்; இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட பெண் உள்ளிட்ட மூவர்

துபாயில் மறைந்திருந்த இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் ஒரு பெண்ணும் சிறப்பு பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பறித்தல், கொள்ளை மற்றும் கொலைசந்தேக நபர்கள் நேற்று காலை 05.20 மணிக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மூன்று சந்தேக நபர்களில் எல்பிட்டியவின் உரகாஹவைச் சேர்ந்த 52 வயதான ரவின் […]

அதிரடி 17 Jan 2026 8:30 pm

அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சங் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ததையடுத்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாக கருதப்படும் எரிக் மேயர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கிய தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்தில், அமெரிக்க அரசின் தூதரக நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பதிவு 17 Jan 2026 8:22 pm

ஆப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம்; 100 பேர் பலி

ஜோகன்ஸ்பெர்க், ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில் உள்ள இந்த 3 நாடுகளிலும் மொத்தம் 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும், ஜிம்பாப்வேயில் 70 பேரும், மொசாம்பிக்யூவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கனமழை […]

அதிரடி 17 Jan 2026 7:30 pm

தவெகவா.. பாஜகவா.. யாருடன் கூட்டணி? டிடிவி, ஓபிஎஸ் பளீச் பதில்!

அமமுக – பாஜக கூட்டணி குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. என்டிஏ அல்லது தவெக என்ற இரண்டு வாய்ப்புகள் முன் டிடிவி தினகரன், ஓபிஎஸ் நிற்கும் நிலையில், கூட்டணி அரசியல் சூடு பிடித்துள்ளது.

சமயம் 17 Jan 2026 7:09 pm

IND vs BAN U19: ‘படுமோசமாக சொதப்பிய இந்திய பேட்டர்கள்’.. சூர்யவன்ஷி, குண்டு அதிரடி பேட்டிங்! ஸ்கோர் விபரம்!

வங்கதேச யு19 அணிக்கு எதிராக இந்திய யு19 அணி பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிக்யன் குண்டு ஆகியோர் மட்டுமே பெரிய ரன்களை எடுத்ததால், இந்திய அணி 238 ரன்களை எடுத்தது.

சமயம் 17 Jan 2026 7:06 pm

போராட்டங்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு டிரம்ப் தான் பொறுப்பு - கமேனி

ஈரானில் நடந்த போராட்டங்களின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் பொறுப்பு என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி குற்றம் சாட்டினார் . மனித உரிமை குழுக்களின் கூற்றுப்படி, 3,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானிய தேசத்திற்கு எதிராக அவர் சுமத்தியுள்ள உயிரிழப்புகள், சேதங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதியை நாங்கள் குற்றவாளி என்று கருதுகிறோம் என்று அவர் சனிக்கிழமை ஒரு மத விடுமுறையைக் குறிக்கும் உரையின் போது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கூறினார். இது ஒரு அமெரிக்க சதி என்று கூறிய காமெனி, அமெரிக்காவின் இலக்கு ஈரானை விழுங்குவது. இலக்கு ஈரானை மீண்டும் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது என்று மேலும் கூறினார். போராட்டங்களின் போது, ​​ஈரான் அரசாங்கம் பரவலான கொலைகளைத் தூண்டினால், அமெரிக்கா ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று டிரம்ப் பலமுறை கூறினார் . அந்த போராட்டங்கள் அன்றிலிருந்து தணிந்துவிட்டன. ஈரானில் நடந்த போராட்டங்களில் 3,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பதிவு 17 Jan 2026 7:02 pm

கிரீன்லாந்து தொடர்பான சர்ச்சை தீவிரமடைகிறது

கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இந்த மாதம் கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள பதட்டங்கள் அதிகரித்துள்ளன. வெள்ளிக்கிழமை, டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சுயராஜ்ய ஆர்க்டிக் தீவைக் கைப்பற்றும் தனது திட்டங்களை எதிர்க்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்தார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கு ஆதரவைக் காட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் இரு கட்சிக் குழு இரண்டு நாள் பயணமாக கோபன்ஹேகனுக்கு வருகை தரும் வேளையில் இந்த போராட்டங்கள் நடைபெற உள்ளன. அமெரிக்க மக்கள் அமெரிக்க ஜனாதிபதியின் பிராந்திய அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தூதுக்குழு கூறுகிறது. ஜெர்மனி உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு இராணுவ உளவுப் பணியில் ஐரோப்பியர்கள் கிரீன்லாந்திற்கு ஆதரவைக் காட்டியுள்ளனர்.

பதிவு 17 Jan 2026 7:02 pm

அதிமுக வாக்குறுதிகள்.. காபி பேஸ்ட் அரசியல்.. துரோகி பழனிசாமி.. வெளுத்து வாங்கிய ரகுபதி!

கடந்த தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேறாத நிலையில், இப்போது புதிய யோசனைகள் எதுவுமின்றி திமுக திட்டங்களையே காப்பியடிக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்து உள்ளார்

சமயம் 17 Jan 2026 6:57 pm

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல: நாடு தழுவிய போராட்டம் முன்னெடுப்பு

டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கையகப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் டென்மார்க் தலைநகரில் வீதிகளில் இறங்கினர். கோபன்ஹேகன் நகர மண்டபத்திற்கு வெளியே சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கடலாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் கொடிகளை அசைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு, கலாலித் நுனாத்! - கிரீன்லாந்தில் பரந்த ஆர்க்டிக் தீவின் பெயர் என்று கோஷமிட்டனர். கோபன்ஹேகனிலும், ஆர்ஹஸ், ஆல்போர்க், ஓடென்ஸ் மற்றும் கிரீன்லாந்து தலைநகர் நூக்கிலும் கிரீன்லாந்து சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்புகள் மற்றும் பேரணிகளில் பங்கேற்பதாக ஆயிரக்கணக்கான மக்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தனர். கிரீன்லாந்தின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த செய்தியை அனுப்புவதே இதன் நோக்கம்என்று டென்மார்க்கில் உள்ள கிரீன்லாந்தர்களின் சங்கமான உகுட் அதன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. கிரீன்லாந்தை கட்டுப்பாட்டில் எடுக்கும் அமெரிக்காவின் சட்டவிரோத திட்டங்களைஎதிர்த்து, இன்று பிற்பகல் கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் ஒரு சகோதரி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கிரீன்லாந்து கொடிகளை ஏந்தியபடி அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி செல்வார்கள். கோபன்ஹேகனில் நடைபெறும் பேரணி டென்மார்க் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு போராட்டம் நடைபெறவுள்ளது. கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் , மாலை 4:00 மணிக்கு (1500 GMT) தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர், இது கிரீன்லாந்தை கட்டுப்பாட்டில் எடுக்கும் அமெரிக்காவின் சட்டவிரோத திட்டங்களுக்கு எதிரானது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கிரீன்லாந்து கொடிகளை ஏந்தி அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். கிரீன்லாந்தில் குறைந்தது 900 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தனர். கிரீன்லாந்தில் 57,000 பேர் வரையில் வாழுகின்றனர்.

பதிவு 17 Jan 2026 6:44 pm

‘பிபிஎல் தொடரில் பாபர், ரிஸ்வான்’.. வங்கதேச தொடரில் பர்கான்: வரிசையாக அசிங்கப்படும் பாக்கி வீரர்கள்!

வங்கதேச பிரிமியர் லீக் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் டி20 அணி ஓபனர் பர்கான், அசிங்கப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. பர்கான் சமீப காலமாகவே தொடர்ச்சியாக சர்ச்சையில் மாட்டி வருகிறார்.

சமயம் 17 Jan 2026 6:43 pm

ஹட்டனில் லொறி –வேன் மோதி விபத்து ; இருவரின் நிலை கவலைக்கிடம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் இன்று (17) பிற்பகல் லொறியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர். மேலதிக விசாரணை காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற லொறி, பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாகத் திரும்பி குறுக்கு வீதியொன்றுக்குள் நுழைய முற்பட்டபோதே, டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற […]

அதிரடி 17 Jan 2026 6:31 pm

வள்ளியூர் அருகே பொங்கல் விளையாட்டுகள் கோலாகலம்: இளவட்டக்கல் தூக்கி அசத்திய பெண்கள்

திருநெல்வேலி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் நேற்று பொங்கல் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடத்தப்பட்டன. இதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. 45 கிலோ, 60 கிலோ, 95 கிலோ, 129 கிலோ எடை கொண்ட இளவட்டக் கற்களை தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். உரலை தலைக்கு மேலே […]

அதிரடி 17 Jan 2026 6:30 pm

எலான் மஸ்க் – ரயன்ஏர் மோதல்.. உலக விமானத் துறையில் பேசுபொருளான மஸ்க் சர்ச்சை!

ரயன்ஏர் விமானப் படையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட விமானங்களில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை நிறுவ முடியாது என ஓ’லீரி அறிவித்தார். ஆன்டென்னா பொருத்துவதால் விமானத்தின் எடை அதிகரித்து, காற்று இழுப்பு ஏற்பட்டு, எரிபொருள் செலவு உயர்வதாக அவர் விளக்கினார்.

சமயம் 17 Jan 2026 6:28 pm

டி20 உலகக்கோப்பை தொடரில் அபிஷேக் ஆக்ரோஷமாக விளையாடுவார்! சஞ்சய் பங்கர் ஓபன் டாக்!

டெல்லி : இந்திய அணியின் இடது கை தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் அணி விரும்பும் பயமற்ற, ஆக்ரோஷமான கிரிக்கெட் பாணியை பிரதிபலிக்கும் வீரர் என்று முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்த அபிஷேக் சர்மா, 859 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி பயமற்ற, ஆக்ரோஷமான டி20 கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறது என்றும், இதற்கு […]

டினேசுவடு 17 Jan 2026 6:08 pm

இணைப்பாடவிதான செயற்பாட்டால் யாழ் இந்துகல்லூரி மாணவன் படைத்த சாதனை!

யாழ்ப்பாணம் இந்துக்காலூரி மாணவரான செல்வன் கருணாகரன் திவாசவன் பிறக்கிருத்திய செயற்பாடுகளில் சாதித்தனூடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார் . இயன் மருத்துவ துறை (Physiotherapy ,University of Colombo பாடத்திற்கு தெரிவாகியிருந்த க.திவாசவன் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய மட்ட சாதனையாளர்கள் நேர்முகத்தேர்வின் பின்னர் ஊவா வெல்லச பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலதிக வாய்ப்பை பெற்றுக்கொடுத்தஇணைப்பாடவிதான செயற்பாடு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களிலும் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கான Z புள்ளியின் அடிப்படையில்தான் […]

அதிரடி 17 Jan 2026 6:04 pm

உடல், உள ரீதியில் நலிவுற்ற முதியோருக்கு – வசிப்பிடங்களுக்கு சென்று சுகாதார சேவைகள்

சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சுகாதாரத்துறை சமுதாய அமைப்புகளின் பங்கேற்புடன் பொருளாதார, உடல் மற்றும் உளவியல் ரீதியில் நலிவுற்ற முதியோருக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று உயர் தரத்திலான சுகாதார சேவைகள் வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார். முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி பிரதேசத்தில் முதியோருக்கான மருத்துவ முகாம் பெப்ரவரி மாதம் 6 ஆம்,7 ஆம் திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இது […]

அதிரடி 17 Jan 2026 6:01 pm

ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் உறவு: ஜனாதிபதி புபுட்டின் அதிரடி அறிவிப்பு!

ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் உறவு: ஜனாதிபதி புபுட்டின் அதிரடி அறிவிப்பு! ஐரோப்பிய நாடுகளுடன் தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க… The post ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் உறவு: ஜனாதிபதி புபுட்டின் அதிரடி அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 5:41 pm

தாயகம் திரும்பும் இந்தியர்கள்.. கவலைக்கிடத்தில் ஈரான் பாதுகாப்பு.. அரசின் தீவிர நடவடிக்கை!

ஈரானில் நடைபெறும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

சமயம் 17 Jan 2026 5:41 pm

புதுச்சேரி: ஆரோவில்லில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி

ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

விகடன் 17 Jan 2026 4:54 pm

அதிர்ச்சிச் சம்பவம்: ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு –ஒருவர் பலி, இரு சிறுவர்கள் படுகாயம்!

கொழும்பு 13, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு (16.01.2026) அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பத்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,… The post அதிர்ச்சிச் சம்பவம்: ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, இரு சிறுவர்கள் படுகாயம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 4:51 pm

விஜய் - காங்கிரஸ் கூட்டணியா? டெல்லியில் முக்கிய ஆலோசனை... வெயிட்டிங்கில் தவெக தொண்டர்கள்!

திமுக–காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு மற்றும் ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியங்களும் காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் திமுகவுடன் தொடருமா அல்லது புதிய அரசியல் பாதையை தேர்வு செய்யுமா என்ற கேள்வி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 17 Jan 2026 4:48 pm

தமிழகத்தில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் –வானிலை மையம் தகவல்!

சென்னை :வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 17-01-2026 முதல் 21-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23-01-2026: கடலோர […]

டினேசுவடு 17 Jan 2026 4:47 pm