SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
...

200 சிம்பன்சிகளிடையே வெடித்த உள்நாட்டுப் போர் ; இதுதான் காரணம்

உகாண்டாவின் கிபாலே தேசியப் பூங்காவில் சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட ‘நகோகோ’ என்ற பிரம்மாண்டக் குழுவில் தற்போது பயங்கரமான “உள்நாட்டுப் போர்” நடைபெற்று வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்தச் சமூகம், தற்போது ‘மத்திய குழு’ மற்றும் ‘மேற்கு குழு’ என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளன. வன்முறை சுமார் 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய இத்தகைய அரிதான பிளவு, 2015ஆம் ஆண்டு முதல் சமூக ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் […]

அதிரடி 14 Apr 2026 2:30 am

16 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: ஹங்கேரியில் விக்டர் ஓர்பான் தோல்வி

ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பான், 16 ஆண்டுகள் நீண்ட ஆட்சிக்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். தேசியவாதக் கொள்கைகளை முன்னிறுத்திய ஓர்பான், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அடிக்கடி மோதியவராகவும், “illiberal democracy” எனப்படும் முறையை ஆதரித்தவராகவும் அறியப்பட்டார். இந்த தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் மாக்யார் தலைமையிலான கட்சி, 199 இடங்களில் 137 இடங்களை வென்றுள்ளது. இதனால், இரண்டு-மூன்றாம் பங்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. மாக்யார், அரசியல் துறையில் புதியவராக இருந்தாலும், ஊழலை எதிர்த்து, சிறந்த பொதுச் சேவைகளை […]

அதிரடி 14 Apr 2026 12:30 am

ஹோர்முஸ் நீரிணை நோக்கி வரும் போர்க்கப்பல் ; ஈரானின் மிரளவிடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை நோக்கி ஒரு போர்க்கப்பல் வருவது போர்நிறுத்த மீறலாகக் கருதப்படும் என்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. அதன்படி, போர்நிறுத்தம் மீறப்பட்டால், அதன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்தப் படை வலியுறுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படை ஹோர்முஸ் ஜலசந்தியைத் தடுத்துள்ளது என்ற அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கையின் பின்னணியில், ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சட்டம் போர்க்கப்பல்களுக்கு மட்டுமே […]

அதிரடி 13 Apr 2026 11:30 pm

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள்” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள்” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)################################### புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்களான திரு.திருமதி. சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகளின் செல்வப் புதல்விகளில் ஒருவரான செல்வி.மேகலா அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, அவர் விரும்பிக் கேட்டுக் கொண்ட வகையில் மாணவ மாணவிகளான சிறுவர்களுடன் இணைந்து இனிய பிறந்தநாள் கொண்டாட “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஏற்பாடு செய்தது. செல்வி. மேகலாவின் பிறந்த […]

அதிரடி 13 Apr 2026 10:51 pm

நியூசிலாந்து நாட்டை தாக்கிய புயல்; 90 விமானங்கள் ரத்து – 5 பேர் உயிரிழப்பு

வெல்லிங்டன், நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியது. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, 10 செ.மீ. அளவு பேய் மழை பெய்தது. இதனால் வார்க்வோர்த் நகரில உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வடக்குத் தீவின் வக்காட்டேன் பகுதியில் 270 வீடுகளில் இருந்த 2,500 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 5,000 வீடுகளில் மின்சாரம் […]

அதிரடி 13 Apr 2026 10:30 pm

யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்

புதுவருட கொண்டாட்டத்திற்காக கொழும்பில் இருந்து தனது வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு நக்கிள்ஸால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொல்புரம், சித்தம்பி கோவிலடியை சேர்ந்த 27 வயதுடையவரே உயிரிழந்துள்ளதுடன், 26 வயதுடைய மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில், ஒரே ஊரைச் சேர்ந்த இவ்விரு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021ஆம் […]

அதிரடி 13 Apr 2026 10:30 pm

1 பில்லியன் டாலர், அழகான பெண்: துருக்கியிடம் கேட்கும் உகாண்டா ராணுவத்தளபதி

சோமாலியாவில் இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உகாண்டா ராணுவம் நீண்டகாலமாக மேற்கொண்டு வரும் பாதுகாப்புப் பங்களிப்பிற்கான ஊதியமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று உகாண்டா ராணுவத் தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா துருக்கியிடம் கேட்டுள்ளார். அதோடு நிற்காமல், அந்நாட்டின் மிக அழகான பெண்ணைத் தனக்கு மணம் முடித்துத் தரவேண்டும் என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். ஒரு மாதத்திற்குள் இக்கோரிக்கைகளைத் துருக்கி நிறைவேற்றாவிட்டால், கம்பாலாவில் உள்ள துருக்கியத் தூதரகம் மூடப்படும் என்றும், உகாண்டா வான்வெளியில் துருக்கி […]

அதிரடி 13 Apr 2026 8:30 pm

யாழில் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் வந்த சுவிஸ்வாழ் புலம் பெயர் தமிழர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்ருள்ளது. சுவிஸ்வாழ் புலம் பெயர் தமிழர் திடீரென நோய்வாப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த புலம் பெயர் திடீர் மரணம் அவரது உறவினர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி 13 Apr 2026 8:30 pm

ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் பெரும் பிரச்னையில் சிக்குவீா்கள்: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

போா் நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் மிகப்பெரிய பிரச்னையில் சிக்குவீா்கள் என்று சீனாவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா். அமெரிக்க உளவு அமைப்புகளின் தகவல்களைச் சுட்டிகாட்டி ஈரானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை முக்கியமாக வான் தாக்குதல் பாதுகாப்புக்கான சாதனங்களை வழங்க சீனா தயாராகி வருவதாகவும், இவை கப்பல் மூலம் அனுப்பப்பட இருப்பதாகவும், இது தவிர ராணுவத் தொழில்நுட்பம் சாா்ந்த உதவிகளையும் வழங்க இருப்பதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தத் […]

அதிரடி 13 Apr 2026 7:30 pm

புத்தாண்டால் வெற்றிலை விலை திடீர் அதிகரிப்பு!

நாட்டில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெற்றிலைக்கு அதிக தேவை உள்ள நிலையில், வெற்றிலையின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி, சந்தையில் ஒரு கைப்பிடி வெற்றிலையின் விலை சுமார் ரூ. 400-ஐ எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சிறிய கைப்பிடி வெற்றிலை சுமார் ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வறண்ட காலநிலை காரணமாக வெற்றிலை அறுவடை குறைந்ததும் வெற்றிலை விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. அதேவேளை சித்திரை புத்தாண்டில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 13 Apr 2026 7:30 pm

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (13) மாலை 4:00 மணி முதல் நாளை (14) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டம்: யட்டிநுவர, கேகாலை மாவட்டம்: வரகாபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை, நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் […]

அதிரடி 13 Apr 2026 6:32 pm

2 கோடி ரூபா மதிப்புள்ள அதிவேக மோட்டார் சைக்கிள் உட்பட பல பைக்குகள் பறிமுதல்

இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து அதிவேக மோட்டார் சைக்கிள்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை அங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்று சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த குலசிங்கவுக்கு கிடைத்த தகவலின் பேரில், சமூக பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் நேற்று (12) […]

அதிரடி 13 Apr 2026 6:30 pm

ஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் புதிய மாவட்டம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது. உய்குா் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சின்ஜியாங் மாகாணம் கலவரம் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதியாகும். அங்குள்ள வாகான் பாதை வழியாக ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவும் உய்குா் பிரிவினைவாத பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கையாக சீனா இந்த நிா்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ‘சென்லிங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாவட்டம், காரகோரம் மலைத் தொடா், ஆக்கிரமிப்பு […]

அதிரடி 13 Apr 2026 6:30 pm

தமிழர் பகுதியில் இரு பெண்கள் துஸ்பிரயோகம்; மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது

முல்லைத்தீவு மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திருச்சபை ஒன்றின் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக போதகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வவுனிக்குளம் பகுதிக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யுவதிகளுக்கு குடிப்பதற்கு வைன் வழங்கி துஸ்பிரயோகம் கொண்டாட்டம் முடிந்து அவர்கள் திரும்பும் போது இரு […]

அதிரடி 13 Apr 2026 6:28 pm

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஏப். 12) எச்சரித்துள்ளார். இதனால், வணிக ரீதியான கப்பல்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் – அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற […]

அதிரடி 13 Apr 2026 4:30 pm

புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமத்தில் இரு நேர பூசைகள் ரத்து; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலப்பகுதியைக் கருத்திற் கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் இரண்டு பிரதான பூசைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பஸ்நாயக்க நிலமே அலுவலகம் அறிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 13): மாலை 6:30 மணிப் பூசையைத் தொடர்ந்து, இரவு 9:00 மணியளவில் பாற்சோறு பொங்கி படைக்கப்பட்ட பின்னர் மகா தேவாலயம் மூடப்படும். மூடப்பட்ட தேவாலயம் மீண்டும் நாளை (ஏப்ரல் 14) பிற்பகல் 2:00 மணிக்கே திறக்கப்படும். இரண்டு நேரப் […]

அதிரடி 13 Apr 2026 4:26 pm

மின்னல் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

மேல், சபரகமுவ, மத்திய,வடமத்திய,வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி,மாத்தறை,மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (13) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணிவரை அமுலில் இருக்கும். அதன்படி, இன்று பிற்பகல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் […]

அதிரடி 13 Apr 2026 4:20 pm

நீளிரா படக்குழு யாழ். விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த ‘நீளிரா‘ படத்தின் இயக்குநர் சோமீதரன், தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சனந்த் ஆகியோர் பல்வேறு இடங்களை சென்று பார்வையிட்டனர். நல்லூர் ஆலயம் , யாழ் . பொது நூலகம் , தியாக தீபத்தின் நினைவிடம் , வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நீளிரா திரைப்படத்தை , ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்ததுடன் , திரைப்படத்தின் முடிவில் ரசிகர்களுடன் கலந்துரையிடாலிலும் ஈடுபட்டனர்.

அதிரடி 13 Apr 2026 4:16 pm

Congress Supports Pawan Khera, Won’t Back Down: Rahul

Congress leader Rahul Gandhi stated on Monday (April 13, 2026) that his party fully supports Pawan Khera and will not be intimidated. The Assam govern...

சென்னைஓன்லைனி 13 Apr 2026 4:07 pm

JSW Sports join Commercial, Marketing & Operations Partner for the Bengal Pro T20 League!

JSW Sports, a leading force in India’s sports ecosystem has secured a three-year mandate from the Cricket Association of Bengal

சென்னைஓன்லைனி 13 Apr 2026 3:39 pm

பெயரளவில் ஈஸ்டர் போர்நிறுத்தம்? ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் –ரஷியா பரஸ்பர தாக்குதல்!

மாஸ்கோ : ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ரஷியா குற்றஞ்சாட்டியது. ரஷியா, உக்ரைனில் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ முறைப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சனிக்கிழமை (ஏப். 11) மாலை 4 மணி முதல் 32 மணி நேர தற்காலிக போா்நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது. ரஷியாவின் இம்முடிவை உக்ரைன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில், ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷிய படைகளைக் […]

அதிரடி 13 Apr 2026 3:30 pm

ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!

ஈரானில் கடந்த 44 நாள்களாக இணைய வசதி முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே போர்நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தை பற்றி பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஈரானில் இணைய முடக்கம் இன்றுடன் 44 நாள்களை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்ட இணைய முடக்கங்களில் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டில் இவ்வளவு நாள்கள் இணையம் முடக்கப்படுவது இதுவே முதல்முறை என இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தரவுகளை வழங்கியுள்ளது. அமெரிக்கா, […]

அதிரடி 13 Apr 2026 2:30 pm

விஜயின் தொடர் பின்வாங்கல் –த.வெ.க தொண்டர்கள் அதிருப்தி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 13) கும்மிடிப்பூண்டியில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை

சென்னைஓன்லைனி 13 Apr 2026 12:48 pm

கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகளில் டிடிவி தினகரன் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , இன்று (ஏப்ரல் 13, 2026 – திங்கட்கிழமை) கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு ஆகிய சட்டமன்றத்

சென்னைஓன்லைனி 13 Apr 2026 12:48 pm

‘ஹாலோகிராபிக் புரோஜெக்ஷன்’தொழில்நுட்பம் மூலம் பிரசாரம் செய்த த.வெ.க தலைவர்!

கும்பகோணம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வராமலேயே, அவரது ‘ஹாலோகிராபிக் புரோஜெக்ஷன்’ (Holographic Projection) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்தது பெரும் கவனத்தை

சென்னைஓன்லைனி 13 Apr 2026 12:47 pm

பா.ஜ.கவின் உண்மையான நோக்கம் அரசியலமைப்பை அழிப்பதே –ராகுல் காந்தி

டெல்லி, மண்டி ஹவுஸ் பகுதியில் “Run for Ambedkar, Run for Constitution” என்ற தலைப்பில் மாரத்தான் போட்டியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று

சென்னைஓன்லைனி 13 Apr 2026 12:46 pm

கொள்கை பிடிப்புக்காக நின்ற ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் –தொல்.திருமாவளவன் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சிந்தனை செல்வனை ஆதரித்து தொல்.திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

சென்னைஓன்லைனி 13 Apr 2026 12:45 pm

டாக்டர்.ராமதாஸ் நலமுடன் இருக்கிறார் –மருத்துவர்கள் அறிவிப்பு

சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று (ஏப்ரல் 12)

சென்னைஓன்லைனி 13 Apr 2026 12:44 pm

த.வெ.க-வில் இருந்து விலகிய தூத்துக்குடி அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக தீவிரமாக செயல்பட்டவர் அஜிதா ஆக்னல். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக தவெக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட அஜிதா, தனக்கு

சென்னைஓன்லைனி 13 Apr 2026 12:43 pm

இந்தியாவிலேயே எந்த மாநிலமும் செய்யாத சாதனைகளை திமுக அரசு செய்துள்ளது –வைகோ பேச்சு

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்

சென்னைஓன்லைனி 13 Apr 2026 12:42 pm

தபால் வாக்குகளைச் சேகரிக்க 86 குழுக்கள் –தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது இல்லங்களிலிருந்தே தபால்

சென்னைஓன்லைனி 13 Apr 2026 12:41 pm

நீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நாளைய தினம் வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது. மக்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் நீர் வழங்கல் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி 13 Apr 2026 12:30 pm

அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலை திறப்பு

வாஷிங்டன், அமெரிக்கா – சியாட்டில் மாநகரின் மையப் பகுதியான புகழ்பெற்ற வெஸ்ட்லேக் சதுக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் பரிசாக வழங்கிய இச்சிலையை சியாட்டில் மேயர் கேட்டி வில்சன் திறந்து வைத்தார். அமெரிக்காவில் ஒரு மாநகர அரசால் விவேகானந்தர் சிலை நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தச் சிலை அமைந்துள்ள வெஸ்ட்லேக் சதுக்கம் மிகவும் புகழ்பெற்ற இடமாகும். இது நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாகும். அமேசான் […]

அதிரடி 13 Apr 2026 12:30 pm

ரூ.10 இலட்சம் லொத்தர் பரிசைப் பெற்றவர் விபத்தில் மரணம்; கணநேரத்தில் பறிக்கப்பட்ட மகிழ்ச்சி

அதிர்ஷ்ட லாபச் சீட்டில் பரிசில் வென்ற பணத்தைப் பெற்றுக்கொண்டு உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர், ஹொரணை – பொகுணுவிட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். பத்து இலட்சம் ரூபாய் பணப் பரிசை வென்றதையடுத்து, அதற்கான காசோலையைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் தனது நண்பருடன் கொழும்புக்குச் சென்றுள்ளார். கணநேரத்தில் பறிக்கப்பட்ட மகிழ்ச்சி பணத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஹொரண நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, பொகுணுவிட்ட பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. உந்துருளியை செலுத்திய நண்பருக்கு நித்திரை […]

அதிரடி 13 Apr 2026 12:27 pm

யாழில்.ரிவால்வர் வகை துப்பாக்கி மீட்பு

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி மேலதிக ஆய்வுக்காகப் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதிரடி 13 Apr 2026 12:20 pm

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு –மூன்றாம் கட்ட அகழ்வு மாத இறுதியில் ?

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 239 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் சீரற்ற காலநிலை காரணமாகப் பிற்போடப்பட்ட நிலையில், இந்த மாதத்தின் இறுதியில் அல்லது எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் அந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. எனினும், அகழ்வுப் […]

அதிரடி 13 Apr 2026 12:17 pm

யாழில். நண்பன் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்காகிஉயிரிழந்துள்ளார். தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் ஒரு இளைஞன் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை , மற்றைய இளைஞன்மேலும் இரண்டு […]

அதிரடி 13 Apr 2026 12:14 pm

அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் –முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்! மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மக்களின் நலன்களையும் அவர்களது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, அதேநேரம் அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் ஆற்றல. ஆளுமை அக்கறை அல்லது அவர்களது உணர்வுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்ற எண்ணங்களோடு தொடர்புடையதாகவும் […]

அதிரடி 13 Apr 2026 12:00 pm

அமெரிக்க –ஈரான் பேச்சுவார்த்தை ; ஜேடி வேன்ஸ் திடீர் வெளியேற்றம்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முற்றுப்பெற்றுள்ளன. பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித ஒப்பந்தமும் எட்டப்படவில்லை எனச் செய்தியறிக்கை வெளியிட்டுவிட்டு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார் லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா எவ்வித உறுதிமொழியையும் வழங்க முன்வராதது. ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்தது. பெய்ரூட் […]

அதிரடி 13 Apr 2026 10:30 am

சகோதரியை கத்தியால் குத்தி விட்டு உயிர் மாய்த்துக் கொண்ட சகோதரன்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில், சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது. மேலதிக விசாரணை இதன்போது, சகோதரன் தனது கிராம சேவையாளரான சகோதரியை கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த சகோதரி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்னர், தாக்குதலை மேற்கொண்ட சகோதரர் பயத்தின் காரணமாக யாரும் […]

அதிரடி 13 Apr 2026 10:11 am

இலங்கைக்கு வரவுள்ள பெருந்தொகை எரிபொருள் ; வெளியான அறிவிப்பு

இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சரக்குகள் இலங்கைக்கு வந்து சேரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார். சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு எவ்வித பற்றாக்குறையுமின்றி பராமரிக்கப்படுவதாகவும், கோரப்பட்ட சரக்குகள் திட்டமிட்டபடி வந்து சேரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, 30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் சரக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், நேற்று […]

அதிரடி 13 Apr 2026 10:08 am

யாழில் வாய்த்தர்க்கம் கொலையாக மாறியது ; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸார் விசாரணை நேற்று (13) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்ப தகறாரு காரணமான ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் […]

அதிரடி 13 Apr 2026 10:06 am

திருகோணமலை கடற்பரப்பில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி

திருகோணமலை, சம்பூர் வெளிச்சவீடு (Foul Point) கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.எம். அப்லல் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 3:40 மணியளவில், குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் இணைந்து சம்பூர் வெளிச்சவீட்டுப் பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்தார். இதன்போது எதிர்பாராத விதமாக பலத்த அலையினால் அவர் […]

அதிரடி 13 Apr 2026 10:04 am

ஈரான் –அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்

ஈரான் உடான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஈரான் – அமெரிக்கா இடையேயான மத்தியஸ்தம் தொடரும் என பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) தெரிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கியது. தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.8) அதிகாலையில் அறிவித்தார். இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் […]

அதிரடி 13 Apr 2026 9:30 am

மட்டக்களப்பில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுக்க முயற்சி ; அரச அதிகாரி உள்ளிட்ட குழுவிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் நீதவான் வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார். புதையல் கடந்த மார்ச் மாதம் 31 […]

அதிரடி 13 Apr 2026 8:40 am

செங்கற்களுடன் பாலத்திலிருந்து கவிழ்ந்த லொறி ; இருவருக்கு நேர்ந்த துயரம்

வாரியப் பொல, நாரம்மல வீதியின், பொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறியொன்று கவிழ்ந்ததில் அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். குறித்த லொறியானது செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஆனமடுவ பகுதியிலிருந்து மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணை லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சடலங்கள் கட்டுப்பொத்த பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிரடி 13 Apr 2026 8:37 am

ரஷியா –உக்ரைன் இடையே 175 போா்க் கைதிகள் பரிமாற்றம்

ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு ரஷியா-உக்ரைன் போரில் தற்காலிக போா் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இரு நாடுகளும் தலா 175 போா்க் கைதிகளை சனிக்கிழமை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. உக்ரைனின் 175 ராணுவ வீரா்களுடன் 7 பொதுமக்களும் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தினாா். இவா்களில் பெரும்பாலானோா் கடந்த 2022 முதல் ரஷியாவின் பிடியில் இருந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இக்கைதிகள் பரிமாற்றத்தின்போது, ரஷியாவும் தனது 175 வீரா்களையும், குா்ஸ்க் பகுதியைச் சோ்ந்த […]

அதிரடி 13 Apr 2026 7:30 am

ஒரே நாளில் மியான்மர், ஆப்கானிஸ்தான், இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நைபிடா மியான்மர் நாட்டின் வடக்கே 137 கி.மீ. தொலைவில் நேற்று அதிகாலை 4.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானிலும் நேற்று அதிகாலை 5.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. அது 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த தகவல்களை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. மியான்மர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து […]

அதிரடி 13 Apr 2026 6:49 am

சுரங்க விபத்து.. 14 நாட்களுக்குப் பின் உயிருடன் தொழிலாளி மீட்பு..

மெக்சிகோ, மெக்சிகோ நாட்டின் சினலோவா மாகாணத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கத்தில் கடந்த மாதம் திடீரென வெள்ளம் புகுந்தது. இதில் சுரங்கத்தின் 300 அடி ஆழத்தில் 2 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என கருதப்பட்ட நிலையில் மீட்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 14 நாட்களுக்குப் பிறகு இருண்ட சுரங்கத்திற்குள் டார்ச் லைட் வெளிச்சம் தெரிவதைக்கண்டு வீரர்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அங்கு பிரான்சிஸ்கோ ஜபாடா (42) என்ற தொழிலாளி […]

அதிரடி 13 Apr 2026 2:30 am

ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: தளபதி மற்றும் வீரர்கள் உயிரிழப்பு

அபுஜா, நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான பெனிஷேக் பகுதியில் ஒரு ராணுவ முகாம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் இந்த முகாமில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர் சுதாரித்துக்கொண்டு ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரமான இந்த மோதலில் ஒரு ராணுவ தளபதி மரணம் அடைந்தார். அதேபோல பல ராணுவ வீரர்களும் இறந்தனர். ராணுவ செய்தி தொடர்பாளர் கூறும்போது ’நமது நாட்டை காப்பதற்கான போரில் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ஓசேனி பிரைமா இறந்தார். உயிரிழந்த […]

அதிரடி 13 Apr 2026 12:30 am

அமெரிக்காவை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள் ; ட்ரம்பின் முக்கிய தகவல்

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறுகின்றது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Truth Social தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, உலகின் மிகப்பெரிய எண்ணெய் கப்பல்கள் உள்பட மிகப்பெரிய எண்ணிக்கையில் முழுமையாக காலியாக உள்ள கப்பல்கள் அதிக அளவில் தற்போதே அமெரிக்காவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. உலகின் மிகச் சிறந்த மற்றும் இனிமையான எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக் கொள்வதற்காகவே வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டு மிகப்பெரிய எண்ணெய் […]

அதிரடி 12 Apr 2026 11:30 pm

நாட்டில் கிரீம் பூசுவோருக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாத்தளை – கவுடுபெலல்ல பகுதியில் இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என்ற பெயரில் தரமற்ற கிரீம் வகைகளை வர்த்தக ரீதியில் தயாரித்த நிறுவனமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் நேற்றைய தினம் (11.04.2026) நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாசனைத் திரவிய உற்பத்தித் தோட்டங்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சாலை முற்றுகை தரமற்ற கிரீம் வகைகளை தயாரித்த குறித்த தொழிற்சாலை மாத்தளை கவுடுபெலல்ல பகுதியில் அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த […]

அதிரடி 12 Apr 2026 11:30 pm

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 மேற்பட்ட மோதல்கள்: தீவிரமடையும் உக்ரைன் –ரஷ்யா போர்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட மோதல்களை தடுத்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் தாக்குதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனிய ஆயுதப் படைகளின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 148 க்கும் அதிகமான சண்டைகளை ரஷ்ய படைகள் முன்னெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள உக்ரைனிய இராணுவ அதிகாரி, சமீபத்திய காலங்களில் ரஷ்யா […]

அதிரடி 12 Apr 2026 10:30 pm

சட்டவிரோத பேருந்து போக்குவரத்து ; கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு

கொழும்பிலிருந்து முறையான அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (11) இரவு அதிரடிச் சோதனைகளை முன்னெடுத்தனர். கொழும்பு மக்கள் பூங்காவிலிருந்து (People’s Park) ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் தியாகம ஆகிய பகுதிகளுக்குச் சட்டவிரோதமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் ஆய்வுக் குழுவினரும், பாஸ்டியன் மாவத்தை பேருந்து முனைய அதிகாரிகளும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர். வழங்கப்பட்ட இரகசியத் தகவலின் […]

அதிரடி 12 Apr 2026 10:30 pm

தெற்கு அதிவேக வீதியில் கொடூர விபத்து ; இருவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியின் 54.9 கிலோமீட்டர் மைல்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை கொட்டாவ நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று அதே திசையில் சிமெந்து ஏற்றிச் சென்ற மற்றுமொரு பாரவூர்தியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தின் போது பின்புறமாக வருகை தந்த பாரவூர்தியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் திஸ்ஸமஹாராம […]

அதிரடி 12 Apr 2026 9:30 pm

பேச்சுவார்த்தையில் ஈரானுக்கு முதல் வெற்றி…முடக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் புதிய முடிவு

கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டிருந்த ஈரானிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக, ஈரானிய மூத்த வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. நேரடியாகத் தொடர்பு இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஓர் உடன்பாட்டை எட்டுவதில் அந்த நாடு காட்டும் தீவிரத்தின் அறிகுறியாகவே, கூறப்படும் இந்த நடவடிக்கையை மூத்த ஈரானிய வட்டாரம் வரவேற்றுள்ளது. அமெரிக்கத் தரப்பிற்குத் தெரிவிக்கப்பட்ட தகவலில் ஈரான் விடுத்த கோரிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும், சொத்துக்களை விடுவிப்பதற்கு அமெரிக்காவின் ஒப்புதலை ஈரான் பெற்றுவிட்டது என்றும் அந்த […]

அதிரடி 12 Apr 2026 8:30 pm

போர்நிறுத்தத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்..மாறி மாறி தாக்கிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்

தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் ட்ரோன் தாக்குதல் நடத்தின. தற்காலிக போர்நிறுத்தம் நான்கு ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பில் இருந்தும் லட்சக்கணக்கில் மரணங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையே, தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது. ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதாவது வெள்ளிக்கிழமை இரவு மற்றும் […]

அதிரடி 12 Apr 2026 7:30 pm

மட்டக்களப்பில் சினிமா பாணியில் அதிர்ச்சி சம்பவம் – 16 வயது சிறுவனை பலிகொடுக்க முயன்ற 9 பேர் விளக்கமறியலில்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், 16 வயது சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையதாக மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் […]

அதிரடி 12 Apr 2026 7:19 pm

தெற்கு அதிவேக வீதியில் கொடூர விபத்து ; இருவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியின் 54.9 கிலோமீட்டர் மைல்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை கொட்டாவ நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று அதே திசையில் சிமெந்து ஏற்றிச் சென்ற மற்றுமொரு பாரவூர்தியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தின் போது பின்புறமாக வருகை தந்த பாரவூர்தியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் திஸ்ஸமஹாராம […]

அதிரடி 12 Apr 2026 7:11 pm

புத்தாண்டு காலத்தில் சமூக ஊடக பாவனையில் கவனம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, இந்த விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாங்கள் வீட்டில் இல்லை என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவது திருடர்களுக்குச் சாதகமாக அமையும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். எனவே, சுற்றுப்பயண அனுபவங்களை மீண்டும் வீடு திரும்பிய பின்னரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு […]

அதிரடி 12 Apr 2026 6:57 pm

தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சோகமான சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது பயிர்ச்செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின் பிறப்பாக்கியை பொருத்த முயற்சித்துள்ளார். இதன்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது மின் கசிவு காரணமாக அவர் பாரியளவில் […]

அதிரடி 12 Apr 2026 6:55 pm

அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி ஏன்? வான்ஸ் பேட்டி

வாஷிங்டன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில் ஈரானின் வெளியுறவு மந்திரி சையது […]

அதிரடி 12 Apr 2026 6:30 pm

முகம் சிதைந்து, ஒரு காலை இழந்த மொஜ்தபா காமெனி: அமெரிக்க உளவுத்துறை தகவல்

ஈரானின் புதிய உச்ச தலைவராக உள்ள மொஜ்தபா காமேனி அமெரிக்காவின் தாக்குதலில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படையினரின் பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவரது மகனும், ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொஜ்தபா காமெனி படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த தாக்குதலில் […]

அதிரடி 12 Apr 2026 4:30 pm

சட்டவிரோத பேருந்து போக்குவரத்து ; கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு

கொழும்பிலிருந்து முறையான அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (11) இரவு அதிரடிச் சோதனைகளை முன்னெடுத்தனர். கொழும்பு மக்கள் பூங்காவிலிருந்து (People’s Park) ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் தியாகம ஆகிய பகுதிகளுக்குச் சட்டவிரோதமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் ஆய்வுக் குழுவினரும், பாஸ்டியன் மாவத்தை பேருந்து முனைய அதிகாரிகளும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர். வழங்கப்பட்ட இரகசியத் தகவலின் […]

அதிரடி 12 Apr 2026 4:19 pm

எரிபொருள் விலையில் புதிய விதி ; அரசின் அதிரடி திட்டம்

தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த மறுஆய்வு முறைக்குப் பதிலாக, உலக எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள் பலமுறை எரிபொருள் விலைத் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு புதிய எரிபொருள் விலை நிர்ணய முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இது மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, வாராந்த […]

அதிரடி 12 Apr 2026 4:15 pm

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!

லெபனானில் இஸ்ரேலியப்படைகளின் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,953 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இந்தப் போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா இடையே […]

அதிரடி 12 Apr 2026 3:30 pm

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க துணை அதிபர் சந்திப்பு

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடங்கின. 6 வாரங்களாக நீடித்த இப்போரில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக 2 வார போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல்–ஈரான் சம்மதித்தன. இதையடுத்து முடக்கப்பட்ட ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் தெரிவித்தது. மேலும் நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா–ஈரான் இடையே பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. தற்காலிக போர் […]

அதிரடி 12 Apr 2026 2:30 pm

16 வயதில் திருமணமா; கும்பமேளா மோனாலிசாவுக்கு வந்த சோதனை; கணவருக்கு கிடுக்கிப்பிடி!

சமூக வலைத்தளங்களில் வைரலான கும்பமேளா அழகி மோனாலிசா, தனது காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணமாகும் போது அவருக்கு வயது 16 என்ற தகவல் வெளியாகியுள்ளது. மோனாலிசாவின் கணவர் ஒரு முஸ்லீம் என்பதால், இது லவ் ஜிகாத் என பலரும் விமர்சித்திருந்தனர். அதற்கு இது லவ் ஜிகாத் இல்லை, எனது விருப்பப்படியே திருமணம் நடைபெற்றது என மோனாலிசா விளக்கம் அளித்திருந்தார். போக்சோ வழக்கு பதிவு இந்நிலையில் அவரது கணவர் ஃபர்மான் மீது , 16 வயது […]

அதிரடி 12 Apr 2026 1:30 pm

யாழ்ப்பாணம் –மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று(12.04.2026 ) பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ. சிவசாந்தன்

அதிரடி 12 Apr 2026 1:00 pm

காரைக்காலில் இருந்து காரைநகருக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் கைது

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியிலிருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழிலுக்கு புறப்பட்ட கடற்தொழிலாளர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், 12 கடற்தொழிலாளர்களையும் கைது செய்ததுடன் , அவர்களின் படகினையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களும் , அவர்களது படகுகளையும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர், கடற்தொழிலாளர்களை […]

அதிரடி 12 Apr 2026 12:57 pm

பாகிஸ்தானில் துவங்கியது அமைதி பேச்சு: ஈரான் தோல்வியடைந்த நாடு என டிரம்ப் விமர்சனம்

வாஷிங்டன்: மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இதனிடையே, ஈரானை “தோல்வியடைந்த நாடு” என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதற்காக இரு தரப்பு குழுவினரும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள நூர் கான் விமான நிலையத்திற்கு தனித்தனியாக வந்தடைந்தனர். […]

அதிரடி 12 Apr 2026 12:30 pm

நம்பி காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்கிறோம் ; நம்பிக்கை துரோகம் செய்யாது காணிகளை தாருங்கள் –தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உருக்கம்

எமது காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம். நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக் தினத்திற்கு முன்னர் எமது காணிகளை கையளிப்பார்கள் என நம்புகிறோம் என காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் , கடற்தொழில்அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவைதிணைக்களஅதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று(11) சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது […]

அதிரடி 12 Apr 2026 12:10 pm

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள்!

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று (12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, அதிகாலை 4:32 மணி

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:57 am

’அன்பு அக்காவின் மக்கள் பயணம்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை செய்யும் தமிழிசை செளந்தரராஜன்

மயிலாப்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். “அன்பு அக்காவின் மக்கள் பயணம்”

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:56 am

பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.04.2026) பரமக்குடியில் தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அங்கு அவர் மேற்கொண்ட

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:55 am

அம்பத்தூரில் 2வது ஜாவா யெஸ்டி ஷோரூமை ஜூபிலன்ட் மோட்டார்வொர்க்ஸ் அறிமுகப்படுத்தியது!

17 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட, இந்தியாவின் முன்னணி வாகன சில்லறை விற்பனைக் குழுமங்களில் ஒன்றான ஜூபிலன்ட் மோட்டார் வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் மிகவும் ஆர்வமுள்ள

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:54 am

ஐபிஎல் கிரிக்கெட் 2026 –டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அபார வெற்றி

ஐபிஎல். 2026ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன்

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:53 am

தூத்துக்குடியில் குடிபோதையில் மினிபஸ் இயக்கிய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், நகர போக்குவரத்து போலீசார் நேற்று மாலை புதிய பேருந்து

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:52 am

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு பூஜை காலங்களில் மாற்றம்!

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:50 am

’மக்கள் தலைவா’ பட தலைப்பு போஸ்டர் வெளியீடு!

தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:49 am

அமெரிக்காவை இனி நம்பக்கூடாது; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோபம்

ஈரான் போர் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் தங்களுக்கு உதவவில்லை என்று காட்டமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருகிறார். இதனால் நேட்டா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து அமெரிக்க வெளியேறினாலும் வியப்பதற்கு இல்லை என்பதே சர்வதேச நோக்கர்கள் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவை நம்பாமல் ஐரோப்பா தனி ராணுவத்தை உருவாக்கவேண்டும் என்று பேசியுள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியதாவது: அமெரிக்கா நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கையில் மட்டும் ஐரோப்பா இருக்க முடியாது. அமெரிக்கா […]

அதிரடி 12 Apr 2026 11:30 am

பெரம்பூர் தொகுதி தேர்தல் களத்தில் தக்‌ஷன் விஜய்!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தற்போதைய தேர்தலில் பெரும்

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:02 am

தலைமன்னார் –இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குக! நாடாளுமன்றத்தில் ரஜீவன் எம்.பி. பிரேரணை

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் இதனைச் சமர்ப்பித்தார். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொப்புள்கொடி உறவையும், வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்கும் நோக்கில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இவ்விடயம் குறித்து பிரேரணையில், இந்திய மற்றும் இலங்கைக்கிடையிலான இந்தப் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதன் […]

அதிரடி 12 Apr 2026 10:54 am

சிங்கப்பூரில் சிக்கிய இலங்கை இளைஞர் ; விதி மீறினால் விடுபட முடியாது

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் குடிவரவு குற்றவாளிகளைக் கண்டறியும் நோக்கில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டது. அதிரடி நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை ( 08) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின் போது, உரிய விசா இன்றி தங்கியிருந்த 27 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின்படி, குறித்த நபர் கடந்த 2025 ஜூன் 28 ஆம் திகதியுடன் காலாவதியான தனது சமூக விஜயக் கடவுச்சீட்டின் (Social […]

அதிரடி 12 Apr 2026 10:52 am

தென்னிலங்கையில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன்

கம்பஹா சீதுவை – கொட்டுகொட வீதியின் 3 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை கொட்டுகொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிரே வந்த லொறி ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக […]

அதிரடி 12 Apr 2026 10:50 am

வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் மாயம்; ஈரான் மீது சந்தேகம்!

அமெரிக்கக் கடற்படையால் கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் அதிநவீன ‘MQ-4C டிரைட்டன்’ ட்ரோன் விமானம் ஒன்று, வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 50,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானம், வளைகுடா அல்லது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியப் பகுதியில் மறைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஈரான் மீது சந்தேகம் இந்த ட்ரோன் மாயமானதை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதனைத் […]

அதிரடி 12 Apr 2026 10:30 am

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை 15 மணிநேரம் நீடிப்பு; 2-வது நாளாக இன்றும் தொடரும்

லாகூர் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்திற்கு […]

அதிரடி 12 Apr 2026 9:30 am

அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் நிலக்கரி பரிசோதனை செய்யப்படவில்லை: கோப் குழுவில் அம்பலம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி ஆரம்பம் தொடக்கம் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்யவில்லை என தெரியவந்துள்ளது. இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய ஆரம்பித்த காலம் தொடக்கம் டிரைடென்ட் நிறுவனம் உத்தியோகபூர்வ அங்கீகாரம் அற்ற ஏற்றுமதித் துறைமுக ஆய்வகத்தில் சம்பந்தப்பட்ட நிலக்கரி இருப்புகளைப் பரிசோதித்து வருவதாக கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப் குழு விசாரணைகள் கோப் குழு முன் நடைபெற்ற விசாரணைகள் போது லங்கா நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் இதை ஒப்புக்கொண்டார். லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் […]

அதிரடி 12 Apr 2026 8:51 am

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் போர்ச்சூழல் தணிந்து, உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்தால், நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் அறிவித்துள்ளார். எரிவாயு விநியோகப்பணிகள் நாடளாவிய ரீதியில் தடையின்றி தினசரி எரிவாயு விநியோகப்பணிகள் தற்போது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலுக்கு மத்தியில், உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் […]

அதிரடி 12 Apr 2026 8:49 am

அச்சம் கொள்ள வேண்டாம் ; விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டின் தற்போதைய உர விநியோக நிலைவரம் குறித்து விவசாயிகள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மொரகொல்லாகம விவசாய சேவை மத்திய நிலையத்தில் உர விநியோக நடவடிக்கைகளை நேரில் ஆராய்ந்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நெற்செய்கை அவர் இது குறித்து மேலும் கூறுகையில், பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான TSP மற்றும் MOP உர வகைகள் என்பன போதுமான அளவை விட மேலதிகமாகவே நாட்டில் உள்ளன. […]

அதிரடி 12 Apr 2026 8:42 am