SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

32    C
...

16 வயதில் திருமணமா; கும்பமேளா மோனாலிசாவுக்கு வந்த சோதனை; கணவருக்கு கிடுக்கிப்பிடி!

சமூக வலைத்தளங்களில் வைரலான கும்பமேளா அழகி மோனாலிசா, தனது காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணமாகும் போது அவருக்கு வயது 16 என்ற தகவல் வெளியாகியுள்ளது. மோனாலிசாவின் கணவர் ஒரு முஸ்லீம் என்பதால், இது லவ் ஜிகாத் என பலரும் விமர்சித்திருந்தனர். அதற்கு இது லவ் ஜிகாத் இல்லை, எனது விருப்பப்படியே திருமணம் நடைபெற்றது என மோனாலிசா விளக்கம் அளித்திருந்தார். போக்சோ வழக்கு பதிவு இந்நிலையில் அவரது கணவர் ஃபர்மான் மீது , 16 வயது […]

அதிரடி 12 Apr 2026 1:30 pm

யாழ்ப்பாணம் –மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று(12.04.2026 ) பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ. சிவசாந்தன்

அதிரடி 12 Apr 2026 1:00 pm

காரைக்காலில் இருந்து காரைநகருக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் கைது

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியிலிருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழிலுக்கு புறப்பட்ட கடற்தொழிலாளர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், 12 கடற்தொழிலாளர்களையும் கைது செய்ததுடன் , அவர்களின் படகினையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களும் , அவர்களது படகுகளையும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர், கடற்தொழிலாளர்களை […]

அதிரடி 12 Apr 2026 12:57 pm

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு அழைப்பு

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு , காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் , கடற்தொழில்அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவைதிணைக்களஅதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது குறித்த கலந்துரையாடலின்பின்னர்,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். […]

அதிரடி 12 Apr 2026 12:52 pm

பாகிஸ்தானில் துவங்கியது அமைதி பேச்சு: ஈரான் தோல்வியடைந்த நாடு என டிரம்ப் விமர்சனம்

வாஷிங்டன்: மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இதனிடையே, ஈரானை “தோல்வியடைந்த நாடு” என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதற்காக இரு தரப்பு குழுவினரும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள நூர் கான் விமான நிலையத்திற்கு தனித்தனியாக வந்தடைந்தனர். […]

அதிரடி 12 Apr 2026 12:30 pm

நம்பி காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்கிறோம் ; நம்பிக்கை துரோகம் செய்யாது காணிகளை தாருங்கள் –தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உருக்கம்

எமது காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம். நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக் தினத்திற்கு முன்னர் எமது காணிகளை கையளிப்பார்கள் என நம்புகிறோம் என காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் , கடற்தொழில்அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவைதிணைக்களஅதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று(11) சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது […]

அதிரடி 12 Apr 2026 12:10 pm

’அன்பு அக்காவின் மக்கள் பயணம்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை செய்யும் தமிழிசை செளந்தரராஜன்

மயிலாப்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். “அன்பு அக்காவின் மக்கள் பயணம்”

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:56 am

பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.04.2026) பரமக்குடியில் தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அங்கு அவர் மேற்கொண்ட

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:55 am

அம்பத்தூரில் 2வது ஜாவா யெஸ்டி ஷோரூமை ஜூபிலன்ட் மோட்டார்வொர்க்ஸ் அறிமுகப்படுத்தியது!

17 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட, இந்தியாவின் முன்னணி வாகன சில்லறை விற்பனைக் குழுமங்களில் ஒன்றான ஜூபிலன்ட் மோட்டார் வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் மிகவும் ஆர்வமுள்ள

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:54 am

ஐபிஎல் கிரிக்கெட் 2026 –டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அபார வெற்றி

ஐபிஎல். 2026ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன்

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:53 am

தூத்துக்குடியில் குடிபோதையில் மினிபஸ் இயக்கிய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், நகர போக்குவரத்து போலீசார் நேற்று மாலை புதிய பேருந்து

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:52 am

இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026

‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும். தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப்

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:51 am

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு பூஜை காலங்களில் மாற்றம்!

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:50 am

’மக்கள் தலைவா’ பட தலைப்பு போஸ்டர் வெளியீடு!

தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:49 am

பெரம்பூர் தொகுதி தேர்தல் களத்தில் தக்‌ஷன் விஜய்!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தற்போதைய தேர்தலில் பெரும்

சென்னைஓன்லைனி 12 Apr 2026 11:02 am

தலைமன்னார் –இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குக! நாடாளுமன்றத்தில் ரஜீவன் எம்.பி. பிரேரணை

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் இதனைச் சமர்ப்பித்தார். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொப்புள்கொடி உறவையும், வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்கும் நோக்கில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இவ்விடயம் குறித்து பிரேரணையில், இந்திய மற்றும் இலங்கைக்கிடையிலான இந்தப் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதன் […]

அதிரடி 12 Apr 2026 10:54 am

சிங்கப்பூரில் சிக்கிய இலங்கை இளைஞர் ; விதி மீறினால் விடுபட முடியாது

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் குடிவரவு குற்றவாளிகளைக் கண்டறியும் நோக்கில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டது. அதிரடி நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை ( 08) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின் போது, உரிய விசா இன்றி தங்கியிருந்த 27 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின்படி, குறித்த நபர் கடந்த 2025 ஜூன் 28 ஆம் திகதியுடன் காலாவதியான தனது சமூக விஜயக் கடவுச்சீட்டின் (Social […]

அதிரடி 12 Apr 2026 10:52 am

தென்னிலங்கையில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன்

கம்பஹா சீதுவை – கொட்டுகொட வீதியின் 3 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை கொட்டுகொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிரே வந்த லொறி ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக […]

அதிரடி 12 Apr 2026 10:50 am

வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் மாயம்; ஈரான் மீது சந்தேகம்!

அமெரிக்கக் கடற்படையால் கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் அதிநவீன ‘MQ-4C டிரைட்டன்’ ட்ரோன் விமானம் ஒன்று, வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 50,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானம், வளைகுடா அல்லது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியப் பகுதியில் மறைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஈரான் மீது சந்தேகம் இந்த ட்ரோன் மாயமானதை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதனைத் […]

அதிரடி 12 Apr 2026 10:30 am

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை 15 மணிநேரம் நீடிப்பு; 2-வது நாளாக இன்றும் தொடரும்

லாகூர் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்திற்கு […]

அதிரடி 12 Apr 2026 9:30 am

அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் நிலக்கரி பரிசோதனை செய்யப்படவில்லை: கோப் குழுவில் அம்பலம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி ஆரம்பம் தொடக்கம் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்யவில்லை என தெரியவந்துள்ளது. இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய ஆரம்பித்த காலம் தொடக்கம் டிரைடென்ட் நிறுவனம் உத்தியோகபூர்வ அங்கீகாரம் அற்ற ஏற்றுமதித் துறைமுக ஆய்வகத்தில் சம்பந்தப்பட்ட நிலக்கரி இருப்புகளைப் பரிசோதித்து வருவதாக கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப் குழு விசாரணைகள் கோப் குழு முன் நடைபெற்ற விசாரணைகள் போது லங்கா நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் இதை ஒப்புக்கொண்டார். லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் […]

அதிரடி 12 Apr 2026 8:51 am

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் போர்ச்சூழல் தணிந்து, உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்தால், நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் அறிவித்துள்ளார். எரிவாயு விநியோகப்பணிகள் நாடளாவிய ரீதியில் தடையின்றி தினசரி எரிவாயு விநியோகப்பணிகள் தற்போது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலுக்கு மத்தியில், உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் […]

அதிரடி 12 Apr 2026 8:49 am

11.02 லட்சம் கி.மீ. பயணம் நிறைவு; வெற்றியடைந்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம்

வாஷிங்டன் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (நாசா), நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் கடந்த 2-ந்தேதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவை சுற்றி ஆய்வு செய்தனர். மேலும் நிலவின் மறுபக்கத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற சாதனையையும் படைத்தனர். ஆய்வுகளை முடித்து கொண்டு ஒரியன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களும் பூமியை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் பயணிக்கும் ஒரியன் […]

அதிரடி 12 Apr 2026 7:30 am

அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் –ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் டி.சி. அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதனை ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து, ஈரான் நாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் […]

அதிரடி 12 Apr 2026 6:55 am

மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயை கண்டறிந்த ChatGPT; சவால் விடுக்கும் தொழில்நுட்பம்!

பல ஆண்டுகளாக மருத்துவர்களால் தவறாகக் கணிக்கப்பட்ட தனது அரிய வகை நோயை, ‘ChatGPT’ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இளம்பெண் ஒருவர் கண்டறிந்துள்ள சம்பவம் இங்கிலாந்தி வேல்ஸ் கார்டிஃப் (Cardiff) பகுதியில் நிகழ்ந்துள்ளது. கார்டிஃப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஃபோப் டெசோரியர் (Phoebe Tesoriere), தனது சிறுவயது முதலே உடல் சமநிலை இழப்பு மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளார். பல ஆண்டுகளாக மருத்துவர்களால் தவறாகக் கணிக்கப்பட்ட அரிய வகை நோய் 19 […]

அதிரடி 12 Apr 2026 2:30 am

கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்)

கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) ################################## கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு தாயகத்தில் எளிமையாக அதேநேரம் சந்தோசமாக தாயக உறவுகளினால் கிராமங்களில் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்தவரும், கனடா “நம் தாயகம்” குழுமத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான திரு.பிரின்ஸ் குணரட்ணம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முழுமையான நிதிப்பங்களிப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரின்ஸ் ஆகியோரின் பிறந்தநாளை தாயக சிறுவர் சிறுமியர் பெரியோர்களுடன் பிறந்த நாள் கேக் […]

அதிரடி 12 Apr 2026 12:58 am

அமெரிக்காவில் காணாமல்போய் 32 ஆண்டுகளின் பின் மீட்கப்பட்ட சிறுமி! அவிழ்ந்த மர்ம முடிச்சு

அமெரிக்காவில் 1994-ஆம் ஆண்டு மாயமான 13 வயதுச் சிறுமி, சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது . அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தின் ‘ஸ்டார் வேலி’ (Star Valley) பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டினா மரியா பிளான்டே (Christina Maria Plante), கடந்த 1994-ஆம் ஆண்டு மே 15-ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகிலுள்ள குதிரை லாயத்திற்கு நடந்து சென்றபோது மாயமானார். தற்போது 45 வயதாகும் கிறிஸ்டினா மரியா பிளான்டே சிறுமி எவ்வித […]

அதிரடி 12 Apr 2026 12:30 am

அரபிக் கடலில் தத்தளித்த கப்பல் ; 18 கடற்றொழிலாளர்களுக்கு நடந்தது என்ன

வடக்கு அரபிக்கடலில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 18 கடற்றொழிலாளர்களைப் பாகிஸ்தான் கடற்படையினர் அதிரடியாகப் போராடி மீட்டுள்ளனர். வடக்கு அரபிக்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ‘கோல்ட் ஆட்டம்’ (Gold Atom) என்ற வர்த்தகக் கப்பல், திடீரென தொழில்நுட்பக் கோளாறு அல்லது விபத்து காரணமாக நடுக்கடலில் தத்தளித்துள்ளது. அங்கிருந்து விடுக்கப்பட்ட அவசர ‘ஆபத்து அழைப்பை’ (Distress Call) அடுத்து பாகிஸ்தான் கடற்படை மீட்புப் பணியில் இறங்கியது. இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட 18 கடற்றொழிலாளர்களும் ஆசியாவின் சீனா , பங்களாதேஷ், […]

அதிரடி 11 Apr 2026 11:30 pm

தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது; இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது; இதனை இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் தொடர்பான பணிகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. முறையான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கான முனைப்பைக் கூர்மைப்படுத்துவதுடன், முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கான கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆளும்தரப்புக்குச் சாதகமாகச் செயல்படுவதைத் தடுக்கும் நோக்கில், அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் […]

அதிரடி 11 Apr 2026 11:30 pm

சம்பள உயர்வு கிடைக்காததால் நிறுவனத்தை தீ வைத்து எரித்த ஊழியர் ; அமெரிக்காவில் சம்பவம்

சம்பள உயர்வு கிடைக்காததால், தான் பணிபுரியும் நிறுவனத்தின் கிடங்குக்கு ஊழியர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. உலக புகழ்பெற்ற, சானிடரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த 29 வயது இளைஞர் சம்பள உயர்வு கிடைக்காதது, மோசமான பணிச்சூழல் காரணமாக சேமிப்பு கிடங்குக்கு தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மளமளவென பற்றிய தீ சேமிப்பு கிடங்கு முழுதும் பரவியது. 140க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் […]

அதிரடி 11 Apr 2026 10:30 pm

பிள்ளையார் ஆலயத்தில் 50 லட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!

கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவத்தின் 5ம் நாளாகிய நேற்றிரவு மாம்பழ ஏலம் இடம்பெற்றிருந்தது. இதன்போது விநாயகர் பெருமானுக்கு சாத்திய மாம்பழமே ஏலம் விடப்பட்டிருந்த நிலையில் இருவர் இணைந்து குறித்த தொகையினை ஏலத்தில் பெற்றதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயம், அப்பகுதியின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்போது மாம்பழம் ஏலம் விடப்படுவது சிறப்பம்சமாகும், இது பெரும் தொகையாக […]

அதிரடி 11 Apr 2026 9:44 pm

சூடான்: திருமண நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல் – 30 பேர் பலி

கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு […]

அதிரடி 11 Apr 2026 9:30 pm

எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலனியா ட்ரம்ப் அதிரடி விளக்கம்

மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் (Melania Trump) திட்டவட்டமாக மறுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் (09) உரையாற்றிய அவர், எப்ஸ்டீன் அல்லது அவரது உதவியாளர் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுடன் (Ghislaine Maxwell) தனக்கு ஒருபோதும் நட்பு இருந்ததில்லை என்றும், இது தொடர்பான பொய்கள் இன்றுடன் முடிவுக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார். நியூயார்க் நகரின் சமூகச் சூழலில் […]

அதிரடி 11 Apr 2026 8:30 pm

Jubilant MotorWorks Strengthens Chennai Presence with Second Jawa Yezdi Showroom in Ambattur

Jubilant MotorWorksPvt. Ltd., one of India’s leading automotive retail groups with over 17 years of legacy, today announced the inauguration

சென்னைஓன்லைனி 11 Apr 2026 7:58 pm

ஈரான் போரினால் லெபனான் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

ஈரான் போர் காரணமாக நாட்டுக்குள் பொருட்களின் விநியோகம் தடைபடுவதால், லெபனான் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. நாம் காண்பது வெறும் இடப்பெயர்வு நெருக்கடி மட்டுமல்ல. அது மிக வேகமாக உணவுப் பாதுகாப்பு நெருக்கடியாக மாறி வருவதாக பெய்ரூட்டிலிருந்து காணொளி மூலம் கூறிய உலக உணவுத் திட்ட பணிப்பாளர் கூறியுள்ளார். உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களிடையே அதிகரித்து வரும் தேவை காரணமாக உணவைப் பெற்றுக்கொள்வது பெரும் […]

அதிரடி 11 Apr 2026 7:30 pm

625 அடி உயரத்திற்கு பீறிட்டு நெருப்பு குழம்பை கக்கும் கிலாவியா எரிமலை

அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள கிலாவியா எரிமலையானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நெருப்பு குழம்பை பீறிட்டு கக்கி வருகிறது. கிலாவியா எரிமலையில் இருந்து 44ஆவது முறையாக சுமார் 625 அடி உயரத்திற்கு நெருப்பு குழம்பு வெளியேறியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் நச்சு வாயுக்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பு இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி 11 Apr 2026 6:30 pm

உணவுப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயரக்கூடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த காலங்களில் 5% ஆக இருந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது 4% ஆகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணவீக்கம் இது குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான சிரேஷ்ட பொருளாதார […]

அதிரடி 11 Apr 2026 6:20 pm

ஹோமகம பல்கலைக்கழக மாணவரின் மரணம்; திடுக்கிடும் தகவல்

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலால் ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் உடலில் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டதை அடுத்து , மேலதிக விசாரணைக்காக உடலம் பிரேத பரிசோதனைக்காக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். உடலம் பிரேத பரிசோதனைக்காக… புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு […]

அதிரடி 11 Apr 2026 6:10 pm

’கஹோகான் (CAHOCON) 2026’ மாநாடு! –முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்

அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு (CAHO) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி சுகாதாரத் தர மாநாடான ‘கஹோகான் (CAHOCON) 2026’-இன் 10-வது பதிப்பை, இந்தியாவின் முன்னாள்

சென்னைஓன்லைனி 11 Apr 2026 5:39 pm

Former Vice President Venkaiah Naidu Inaugurates 10th Edition of CAHOCON 2026 in Chennai

Shri M. Venkaiah Naidu, former Vice President of India, inaugurated the 10th edition of CAHOCON 2026, India’s premier healthcare quality

சென்னைஓன்லைனி 11 Apr 2026 5:38 pm

மஹேந்திராவுடன் இணைந்து சென்னை, வேளச்சேரியில் முதல் ஷோருமை திறந்த ஜுபிலன்ட் மோட்டார்வொர்க்ஸ்!

17 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட, இந்தியாவின் முன்னணி வாகன விற்பனைக் குழுக்களில் ஒன்றான Jubilant MotorWorksPvt. Ltd., வேளச்சேரியில் தனது முதன்மை Mahindra ஷோரூமின் பிரம்மாண்டமான

சென்னைஓன்லைனி 11 Apr 2026 5:33 pm

திருமணத்திற்கு புறம்பான உறவு; கணவனை கொன்று நாடகமாடிய இளம்பெண்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப் படையை ஏவி கொலை செய்த இளம்பெண் ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் உள்ள கோண்டிகேடா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ்கிருஷ்ணா. இவரின் மனைவி 27 வயதான பிரியங்கா புரோஹித். பிரியங்காவுக்கு 15 வயதிலேயே தேவ் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது.! கணவனை தீர்த்துக்கட்டி விட்டு ரகசிய காதலனை கரம் பிடிக்க திட்டம் இந்த நிலையில் இரவில் […]

அதிரடி 11 Apr 2026 5:30 pm

ஏப்ரல் 15 அரச அலுவலகங்கள் இயங்கும்; அமைச்சு அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த திகதிகளில் அரச ஊழியர்களுக்கு இணையவழியில் (Online) பணியாற்றுவதற்கு முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறனாகவும் தடையின்றியும் வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில், முந்தைய தீர்மானத்தை மாற்றி அனைத்து அலுவலகங்களையும் வழமை போல் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 11 Apr 2026 5:24 pm

Jubilant MotorWorks Announces Grand Entry into Chennai with Mahindra, Inaugurates Flagship Showroom in Velachery

Jubilant MotorWorks Pvt. Ltd., one of India’s leading automotive retail groups with over 17 years of legacy, today marked its

சென்னைஓன்லைனி 11 Apr 2026 5:21 pm

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாஷிம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம், 2026 ஆம் ஆண்டிற்கான கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற தகுதியில் மேற்கொண்டார். அமைப்பு ரீதியான கட்டமைப்பு கபீர் ஹாஷிம் ஐக்கிய மக்கள் சக்தியி மூத்த உறுப்பினர் ஆவார். இவர் இதற்கு முன்னர் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். வரவிருக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு முன்னதாக, […]

அதிரடி 11 Apr 2026 5:04 pm

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (11) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தினால் இன்று (11) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் […]

அதிரடி 11 Apr 2026 5:01 pm

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் ; ட்ரம்ப் எச்சரிக்கை

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஆயுதங்களால் நிரப்பப்பட்டு வருவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். நியூயோர்க் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரான் உடனான உறவுகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கப் போர்க்கப்பல்களில் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். கடந்த முறை பயன்படுத்தியதை விடவும் சிறந்த மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்களை தற்போது […]

அதிரடி 11 Apr 2026 3:30 pm

In New Delhi, Prime Minister Narendra Modi on Saturday intensified the BJP’s campaign in West Bengal, where elections are approaching.

சென்னைஓன்லைனி 11 Apr 2026 3:17 pm

PBKS vs SRH IPL Match Update

Punjab Kings (PBKS) and Sunrisers Hyderabad (SRH) are set to clash in an exciting match of the Indian Premier League (IPL) 2026. The teams have comple...

சென்னைஓன்லைனி 11 Apr 2026 3:05 pm

ஈரானை தாக்கியவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம்: மொஜ்தபா கமெனி திட்டவட்டம்

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட எனது தந்தை அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற தியாகிகளின் மரணங்களுக்கு பழி வாங்குவோம். ஈரானை தாக்கியவர்களை நிச்சயம் தண்டிப்போம். குற்றமிழைத்த ஆக்கிரமிப்பாளர்கள் தப்பிச் செல்ல ஈரான் அனுமதிக்காது. இப்போரில் ஏற்பட்ட ஒவ்வொரு காயத்திற்கும் இழப்பீடும், தியாகிகளுக்கு ரத்தப்பணமும், மாற்றுத் திறனாளிகளான முன்னாள் படைவீரர்களுக்கு மறுவாழ்வு நஷ்டஈட்டையும் நாங்கள் நிச்சயமாகக் கோருவோம். ஹோர்முஸ் ஜலசந்தியின் நிர்வாகத்தை ஒரு புதிய கட்டத்திற்கு நாங்கள் […]

அதிரடி 11 Apr 2026 2:30 pm

வாகனங்களுக்கான QR முறைமை குறித்து வெளியான தகவல்

பண்டிகைக் காலம் காரணமாக, இன்று (11) முதல் 18ஆம் திகதி வரை வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் இருப்பினும், ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதிரடி 11 Apr 2026 2:18 pm

நிலக்கரி விவகாரம்; சி.ஐ.டியில் முறைப்பாடு

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. அது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும், பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 11 Apr 2026 2:07 pm

இனி செயலி (App) மூலம் மணல் விநியோகம்! வடக்கு மாகாணத்தில் அறிமுகமாகும் நவீன கண்காணிப்பு முறை

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களிலிருந்து மணலைக் கழுவி எடுத்து, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்யும் புதிய பொறிமுறையை விரைவில் உருவாக்கவும், வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு செயலியை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இக்கூட்டம் நேற்று […]

அதிரடி 11 Apr 2026 1:59 pm

CSK vs DC Match Preview: Chennai Aims to Turn Things Around

Chennai Super Kings (CSK) will host Delhi Capitals (DC) at MA Chidambaram Stadium on Saturday, April 12, at 7:30 PM IST. This match marks a crucial po...

சென்னைஓன்லைனி 11 Apr 2026 1:59 pm

11.02 லட்சம் கி.மீ. பயணம் நிறைவு; வெற்றியடைந்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம்

வாஷிங்டன் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (நாசா), நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் கடந்த 2-ந்தேதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவை சுற்றி ஆய்வு செய்தனர். மேலும் நிலவின் மறுபக்கத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற சாதனையையும் படைத்தனர். ஆய்வுகளை முடித்து கொண்டு ஓரியன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களும் பூமியை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் பயணிக்கும் ஒரியன் […]

அதிரடி 11 Apr 2026 1:30 pm

லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம்: ஈரான் உறுதி

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்கள் நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதித்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறும்போது, ஈரான், இஸ்ரேல், வளைகுடா நாடுகள், லெபனான் என அனைத்து பகுதிகளிலும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை […]

அதிரடி 11 Apr 2026 12:30 pm

AMMK Alleges Neglect in NDA Campaign Activities

In Chennai, the Amma Makkal Munnetra Kazhagam (AMMK) said on Friday that it has been supporting candidates of the National

சென்னைஓன்லைனி 11 Apr 2026 11:59 am

Fruit Prices Rise in Chennai Markets

In Chennai, the prices of fruits like oranges and apples have increased a lot in recent weeks. Traders say this

சென்னைஓன்லைனி 11 Apr 2026 11:46 am

Leaders Campaign in Heat Ahead of Elections

Despite the very high temperatures in the city, political leaders and candidates continued their election campaigns on Friday. With the

சென்னைஓன்லைனி 11 Apr 2026 11:40 am

அமெரிக்க தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பலி

தெஹ்ரான், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்களுக்கு நீடித்த நிலையில் கடந்த 7-ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 28-ம் தேதி தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின. இரு தரப்புக்கும் நடைபெற்ற சண்டையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளால் ஈரானின் முக்கிய உயர் அதிகாரிகள், ராணுவ தளபதிகள் […]

அதிரடி 11 Apr 2026 11:30 am

தமிழர் பகுதியில் பயங்கரம்; வாடகை தகராறில் இடம்பெற்ற கொலை

வவுனியாவில் வீட்டு வாடகை முரண்பாட்டினால் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 72 வயதான முதியவர் தனது வீட்டு மலசல கூடத்திற்கு அருகில் சடலாமாக மீட்கப்பட்டிருந்தார். சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்த நிலையில் , அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , முதியவர் படுகொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. வாடகை பணம் தொடர்பிலான பிரச்சனை அதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் முதியவருக்கு பிறிதொருவருக்கும் இடையில் வாடகை பணம் தொடர்பிலான […]

அதிரடி 11 Apr 2026 11:18 am

மட்டக்குளியில் பேருந்து மோதி பாடசாலை மாணவி பலி

மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி ஒருவர், அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவி மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார். சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி […]

அதிரடி 11 Apr 2026 11:16 am

கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரின் மோசமான செயல்

மஹரகம பகுதியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர், சிறுவர்களை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோரண, பெல்லபிட்டிய பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்த 50 வயதுடைய தொழிலதிபர் இவ்வாறான செயலை செய்துள்ளார். நீண்டகாலமாக இந்த செயலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். ஹோரண நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் கே.பி.ஆர். லக்மினி விதானகமகே விளக்கமறியலில் வைக்க உத்தரவைப் பிறப்பித்தார். பாலியல் சீண்டல் […]

அதிரடி 11 Apr 2026 10:50 am

Political Leaders Face Heat in City as Election Heats Up

Despite the extreme heat in the city, political leaders and candidates went out into neighborhoods on Friday to gather support and vote for Assembly e...

சென்னைஓன்லைனி 11 Apr 2026 10:49 am

NDB வங்கி மோசடி; வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் பாதுகாப்பாக உள்ளதா!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) 13.2 பில்லியன் ரூபா இடம்பெற்ற உள்ளக நிதி மோசடி தொடர்பில் தாம் மிக நெருக்கமாக அவதானித்து வருவதாகவும், வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி தேசிய அபிவிருத்தி வங்கி போதிய மூலதனம் மற்றும் பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளதாகவும், அவை குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் கணக்குகளுக்கோ வைப்புக்களுக்கோ […]

அதிரடி 11 Apr 2026 10:40 am

மதச் சடங்கு பெயரில் குழந்தைகளுக்கு வன்முறை ; இணையத்தில் வைரலாகும் நெஞ்சைப் பதறவைக்கும் காணொளி

இந்தியாவில் கடவுள் நம்பிக்கை மற்றும் மதச்சடங்குகள் என்ற பெயரில் பச்சிளம் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூரமான செயல்கள் இன்றும் தொடர்கின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளி ஒன்று காண்போரின் மனதை உலுக்கியுள்ளது. அந்த காணொளியில், பூசாரி போன்ற ஒருவர் கொதிக்கும் பாலை இரண்டு பச்சிளம் குழந்தைகள் மீது ஊற்றும் காட்சி பதிவாகியுள்ளது. பாலூட்டும் பருவத்தில் இருக்கும் அந்தப் பிஞ்சு குழந்தைகள், கொதிக்கும் பாலின் சூடு தாங்க முடியாமல் கதறி அழுகின்றன. இருப்பினும், கொஞ்சமும் இரக்கமின்றி […]

அதிரடி 11 Apr 2026 10:30 am

Assam Polling Booth Repoll Ordered Amid Clashes

The Election Commission of India (ECI) has ordered a repoll in booth number 239 at Babyland High English School in Karimganj (North) constituency, Ass...

சென்னைஓன்லைனி 11 Apr 2026 10:05 am

West Indies Championship: Hurricanes vs Red Force

The Leeward Islands Hurricanes will face the Trinidad and Tobago Red Force in an upcoming cricket series starting in Antigua. The 2026 West Indies Cha...

சென்னைஓன்லைனி 11 Apr 2026 10:03 am

ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள்…?

ஈரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் சுமார் 40 நாட்களாக போரிட்ட நிலையில், கடந்த 7-ந்தேதி இரவு திடீரென இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஈரான் மீதான போரை 2 வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதனால் ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்து கப்பல் போக்குவரத்து சீராக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த போர் நிறுத்தத்தை ஈரானும் ஒப்புக்கொண்டதுடன், தங்கள் தரப்பில் வழங்கப்பட்ட 10 அம்ச நிபந்தனைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும் […]

அதிரடி 11 Apr 2026 9:30 am

எல் நினோ உருவானால் செப்டெம்பர் வரை வறட்சி: வளிமண்டவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழைக் காலத்தில் எல் நினோ ((El Nio) நிலைமை உருவானால் செப்டெம்பர் மாதம் வரை நாடு நீண்டகால வறட்சியை எதிர்நோக்கக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு வெப்பநிலை தீவிரமடையும் என எதிர்பார்ப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் நீண்ட வெப்பம் மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வளிமண்டவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார். விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள எச்சரிக்கை இவரது கருத்துக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் […]

அதிரடி 11 Apr 2026 9:07 am

இலங்கை சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இலங்கையில் ஆண்களை விடவும் பெண்களே அதிகம் தங்களுடைய துணைகளை இழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகைப் போக்கை அவதானிக்கும்போது, ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் கணவனை இழந்தவர்களாக உள்ளனர். தேசிய ரீதியாகப் பார்க்கையில், பெண்களில் சராசரியாக 9.4 சதவீதம் பேர் இவ்வாறு தங்களின் துணைகளை இழந்து உள்ளனர். ஆனால், மனைவியை இழந்த ஆண்களின் விகிதம் வெறும் 1.7 சதவீதமாக மட்டுமே உள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2024 சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையில் துணையை இழந்தவர்கள் […]

அதிரடி 11 Apr 2026 8:57 am

Superstar Rajinikanth on Jana Nayagan : விஜய் படத்திற்கு நேர்ந்த கொடுமை –கொதித்தெழுந்த ரஜினிகாந்த்!

தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த சம்பவத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Apr 2026 8:28 am

Doctor Vikatan: அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை... கேட்கும் திறன் பாதிக்குமா?

Doctor Vikatan:  எனக்கு எப்போதும் காதுக்குள் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில், நான் என் காதுகளைச் சுத்தம் செய்வேன் அல்லது குடைவேன், சிறிது நேரத்திற்குப் பிறகு அரிப்பு நின்றுவிடும். சமீபத்தில், நான் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது, ஒரு ஹேர்பின் (Hairpin) தவறுதலாக உள்ளே குத்தி ரத்தம் வந்துவிட்டது. அதோடு எனக்குக் காது கேட்பதிலும் சிரமம் ஏற்பட்டது. நான் மருத்துவரை அணுகியபோது, எனது செவிப்பறையில் ஓட்டை (Perforated eardrum) விழுந்துவிட்டதாகக் கூறி சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். இந்தப் பிரச்னையைக் குணப்படுத்த முடியுமா அல்லது இது நிரந்தர செவித்திறன் இழப்பிற்கு வழிவகுக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காதுகளில் அரிப்பு ஏற்படும்போது, காதுகளைக் குடையவே கூடாது. காதுகளைக் குடையக்குடைய, அரிப்பும் இன்னும் அதிகமாகும். அதனால் நீங்கள் காது குடைவதும் அதிகமாகும். அதனால்தான் காதுகளைக் குடையவோ, நீங்களாகவே சுத்தம் செய்யவோ கூடாது என மருத்துவர்கள் காலங்காலமாக அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம். காதுகளைக் குடைவதால், உள்ளே உள்ள சருமம் பாதிக்கப்படலாம். அப்படித்தான் உங்களுக்கு செவிப்பறையில் ஓட்டை விழுந்துள்ளது. இதை  'ட்ரமாட்டிக் பெர்ஃபோரேஷன்' (Traumatic Perforation) என்று சொல்வோம். அதாவது  செவிப்பறையில் ஏற்பட்ட கிழிசல்.  இந்தப் பிரச்னையானது 99 சதவிகிதம், தானாகவே சரியாகிவிடக்கூடியது. செவிப்பறையில் கிழிசல் ஏற்படும்போது, அங்கே ஒரு கட்டி போன்று உருவாகும்.  அந்தக் கட்டிதான், செவிப்பறையில் ஏற்பட்ட பாதிப்பு மெள்ள மெள்ள ஆறுவதற்கு உதவும்.  எனவே, இதில் தண்ணீர் படக்கூடாது. நீங்களாக சுய மருத்துவம் என்ற பெயரில் காதுகளுக்கான டிராப்ஸ் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. முதல் வேலையாக நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, காயம் ஆறுவதற்கான மருந்துகளைக் கொடுப்பார்.  ஆன்டிபயாட்டிக் மருந்துகள், சளி பிடிக்காமலிருப்பதற்கான மருந்துகள், சில வைட்டமின்கள் போன்றவற்றைப் பரிந்துரைப்பார்.  'ஆட்டோஎண்டோஸ்கோப்பி' (Otoendoscopy) பரிசோதனையை மேற்கொள்வார். ஐந்துநாள்களில் ஒருமுறை, பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வார். கேட்கல... சத்தமா... திடீர் காது கேளாமை... கேட்கும் திறன் திரும்புமா? #SuddenHearingLoss  'ஆட்டோஎண்டோஸ்கோப்பி' (Otoendoscopy) பரிசோதனையை மேற்கொள்வார். ஐந்து நாள்களில், பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வார். செவிப்பறையானது முற்றிலுமாக ஆறிவிட்டதா என்பதை உறுதிசெய்யும்வரை இந்தச் சோதனை தேவைப்படும்.  ஏற்கெனவே சொன்னது போல, 99 சதவிகிதம் இது சரியாகிவிடும். ஒருவேளை அப்படிச் சரியாகாத பட்சத்தில், செவிப்பறையைப் பழுதுபார்க்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  காதின் பகுதியை வெட்ட வேண்டிய அவசியமின்றி, எண்டோஸ்கோப்பி முறையிலேயே இந்தச் சிகிச்சையைச் செய்துவிட முடியும். அரிதாக சிலருக்கு காதின் பின்பக்கத்தில் வெட்டி, இந்தப் பழுதுபார்க்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.  பொதுவாக, இதுபோன்ற பிரச்னைகளில் கேட்கும் திறன் பாதிக்கப்படாது. ஒருவேளை அதில் சிரமங்களை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஆடியோகிராம் பரிசோதனையும் செய்து, கேட்கும் திறனில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று மருத்துவர் செக் செய்வார். அதற்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 11 Apr 2026 7:48 am

CSK vs DC: ‘சிஎஸ்கேவால் வெற்றியைப் பெற முடியுமா?’.. நேருக்கு நேர் வரலாறு! செம்ம பேட்டிங் லைன் அப்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கேவின் வெற்றி வாய்ப்பு எப்படி? இரு அணிகளின் நேருக்கு நேர் வரலாறு என்ன என்பது குறித்து பார்க்கலாம். சிஎஸ்கேவின் பேட்டிங் லைன் அப் சிறப்பாக இருக்கிறது.

சமயம் 11 Apr 2026 7:44 am

கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் : தென்னக அயோத்தி... ராமாயண ஓவியங்கள்... வேண்டிய வரம் தரும் சந்நிதி!

அயோத்தி ராமபிரான் அவதரித்த தலம். வாழ்வில் ஒருமுறையேனும் அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம். அந்தத் தலத்துக்கு இணையான புண்ணியத்தைத் தரும் தலம் கும்பகோணத்தில் உள்ளது. இங்கு சென்று ஸ்ரீராமபிரானை தரிசனம் செய்தால் அயோத்தி சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். அதனாலேயே அதற்குத் தென்னக அயோத்தி என்றே பெயர். வாருங்கள் அந்த அற்புதத் தலம் குறித்து அறிந்துகொள்வோம். கும்பகோணத்தின் மத்தியில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். கும்பகோணம் மாநகரின் மத்தியில் பெரிய கடைவீதியின் தென்கோடியில் ஐந்து நிலை கோபுரமும் பரந்து விரிந்த பிராகாரமும் கொண்ட கோயிலாக இது விளங்கிவருகிறது. இங்கே ராமபிரான் பூலோகச் சக்கரவர்த்தியாக பட்டாபிஷேக கோலத்திலேயே அருள்கிறார். எனவே இவரை வழிபட்டால் பதவி யோகம், சொல்வாக்கு, அரசபோக வாழ்வு என அனைத்தும் கிடைக்கும் என்கிறார்கள். கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் பூலோக வைகுந்தம் என்றும் இந்தத் தலம் போற்றப்படுவதால் இந்த ஆலயத்தின் பிராகாரத்தில் மூன்று முறை வலம் வந்தாலே சம்பூர்ணமாக ராமாயணத்தை முழுமையாகப் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை நியாயமான செல்வங்களும் நீதியும் கிடைத்துவிடும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை வலம் வந்து வேலை, பதவி, சாதகமான தீர்ப்பு, மங்கல காரியங்கள் எனப் பலவும் அடைகிறார்கள் பக்தர்கள். கி.பி 1614-ம் ஆண்டு இந்த ஆலயம் தஞ்சை ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. ராமபக்தரான இவர் தினமும் ராம சரிதத்தைக் கேட்டும் படித்தும் இன்புற்று வாழ்ந்தார். பண்டிதர்கள் ராம கதையைப் படிக்கும்போதும் சொல்லும்போதும் மெய்சிலிர்த்து, அந்தப் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே தாம்பூலம் மடித்துக்கொடுத்து மகிழ்வாராம். இதனால் `அனுவிரத ராம கதாம்ருத சேவகன்' என்ற சிறப்புப் பெயரே உண்டானதாம். இந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாக கருவறையில், ஸ்ரீராமரும் சீதா பிராட்டியும் ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி தர, பரதன் குடைபிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, லக்குவணன் ஸ்ரீராமரின் வில்லைத் தாங்கி நிற்கும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர். அனுமனோ வேறெங்கும் காண இயலாதவகையில் ஆனந்த நிலையில் அருளுகிறார். ஸ்ரீராமரையும் சீதாவையும் தரிசித்தபடி கருவறை வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார் அனுமன். இவரின் திருக்கரத்தை வீணை அலங்கரிக்கிறது. சதா சர்வ காலமும் ராமநாமத்தை அவரது சந்நிதியில் அமர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்யும் சிரஞ்சீவியாக அனுமன் அருள் பாலிக்கிறார். இங்கே நின்று உள்ளம் உருக ராம நாமத்தை உச்சரிப்பவர்கள், இகபர சுகங்களை அடைவதோடு அனுமனின் பாதுகாப்பிலும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் இங்குள்ள அர்த்த மண்டபத்தில் சிற்ப வடிவில் கரம் கூப்பி வழிபடும் கோலத்தில் காட்சி தருகிறார் கோவிந்த தீட்சிதர். இவர்தான் இந்த ஆலயத் திருப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட மகான். காசிக்கு நிகரான புனிதமும் அயோத்திக்கு நிகரான பெருமையும் கொண்ட இந்தக் கோயில் சிற்ப அழகிலும் தன்னிகரற்று விளங்கிவருகிறது. அதில் மிகவும் சிறப்பானவை மகாமண்டபச் சிற்பங்கள் மற்றும் பிராகார ஓவியங்கள். முக்கியமாகப் பிராகாரத்தில் உள்ள ராமாயணக் காட்சிகளைச் சித்திர வடிவில் தரிசித்தபடி ஒருமுறை வலம் வந்தால் முழுமையாக ராமாயணத்தைப் பாராயணம் செய்த திருப்தியும் பலனும் கிடைத்துவிடும். முன் மண்டபத்தில் உள்ள 62 தூண்களும் சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. அதில் பெருமாளின் பல்வேறு அவதார வடிவங்களும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அட்சய திருதியை நாளில் கும்பகோணத்தில் நடைபெறும் 14 கருடசேவை விழாவில் இந்த ராமசாமியும் கருடன் மீதேறி அருளுவார். அவருடன் கும்பகோணம் சார்ங்கபாணி, சக்கரபாணி, ராஜ கோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரஹாரம் ஸ்ரீபட்டாபிராமர், மல்லுக தெரு ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், புளியஞ்சேரி ஸ்ரீவேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மேலக்காவேரி வரதராஜப் பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி உள்ளிட்ட 11 பெருமாள்களும் எழுந்தருளி சேவை சாதிப்பார்கள். இங்கு ராம நவமி உற்சவம் வெகு பிரசித்தம். கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் இங்கே கோயில்கொண்டுள்ள பட்டாபிஷேக ராமரை தரிசித்தால் நியாயமான அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது உறுதி. எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை கும்பகோணம் சென்று ராமசாமி கோயிலை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

விகடன் 11 Apr 2026 7:42 am

Career Guidance: +2-க்கு பிறகு என்ன படிப்பது? குழப்பத்துக்கு தீர்வு தரும் வழிகாட்டல் நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8 +2 தேர்வுகள் முடிந்துவிட்டன. அடுத்து என்ன படிப்பது? எங்கே படிப்பது? என்ற பதற்றமும் பரிதவிப்பும் மாணவர்களையும் பெற்றோரையும் துரத்துகிறது. தமிழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. தவிர, மத்திய அரசு நடத்தும் IIT, NIT, IIITs போன்ற உயராய்வு மையங்களில் ஏராளமான இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எந்தத்துறையில் எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது?, எந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம்? என்பது மிகப்பெரிய கேள்வி. இந்தக் காலக்கட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரரெல்லாம், இந்த காலேஜ் போ, அந்தப்படிப்பைப் படி என்று அட்வைஸ் செய்வார்கள். வெளியூரிலிருக்கிற உறவுக்காரர், அவரது அனுபவத்திலிருந்து ஒரு அறிவுரையை வழங்குவார். உடன் படித்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என எல்லோரும் ஆளுக்கொரு விஷயத்தைச் சொல்லிக் குழப்புவார்கள். போதாக்குறைக்கு பிளஸ்டூ மாணவர்களின் பெற்றோருக்கு தினமும் 10 அழைப்பாவது அலைபேசியில் வந்துவிடுகிறது, எங்கள் கல்லூரிக்கு வாருங்கள் என்று. இன்னும் இரண்டாம் நிலை நகரங்களில் போலி கல்வியாளர்கள் தலையெடுத்து அட்வைஸ் செய்து ஒன்றுக்கும் ஆகாத கல்லூரிகளில் மாணவர்களைக் கொண்டு போய் சிக்க வைத்து விடுகிறார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த க்யூஆர் கோடை கிளிக் செய்யவும் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில்தான் பெற்றோரும் மாணவர்களும் அடுத்த கட்டத்துக்கான படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்யவேண்டும். இந்தச்சூழலில் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் உங்களுக்குப் பொருத்தமான படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்ய உதவும் வகையில், கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து வரும் 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்' என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன. கல்வி விகடன் ஈவெண்ட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8 சென்னை, ராயப்பேட்டை திரு.வி.க நெடுஞ்சாலையில், அஜந்தா ஹோட்டல் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கவுள்ள இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பெற்றோரும் மாணவர்களும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம், முன்பதிவு முக்கியம்! இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதன்மையான கல்வியாளர்கள் நான்கு பேர் கலந்து கொண்டு உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியுள்ள அனுபமிக்க கல்வியாளர் தா.நெடுஞ்செழியன், 'உலகளாவிய கல்வி வாய்ப்புகள்' குறித்து உரையாட உள்ளார். தா.நெடுஞ்செழியன், கல்வி தொடர்பாக ஏராளமான தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதள நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளில் பங்கேற்றவர். அரசின் பல்வேறு கல்விக் குழுக்களில் உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார். ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை சார்ந்து 5 நூல்களை எழுதியுள்ளார். தமிழகத்தின் எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களை ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற மத்திய அரசின் பல உயராய்வு மையங்களுக்கு அனுப்பியவர். நிகழ்வில் மாணவர்கள், பெற்றோரின் கேள்விகளுக்கும் இவர் பதில் அளிக்க உள்ளார். கல்வியாளர் நெடுஞ்செழியன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பல ஆயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கிவரும் கல்வியாளர் ரமேஷ் பிரபா, 'பொருத்தமான படிப்பைத் தேர்வு செய்வது எப்படி?' என்ற தலைப்பில் வழிகாட்டுதல் வழங்கவிருக்கிறார். ஊடகத் துறையில் மூத்த ஆளுமையான ரமேஷ் பிரபா, சமூக ஊடகங்களில் தொடர்ந்து மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பிரபல இதழ்களில் பல தொடர்களையும், ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். கலை, அறிவியல், பொறியியல், வணிகவியல், மருத்துவம் உள்பட அனைத்துத் துறைகள் குறித்தும் நிபுணத்துவம் கொண்ட ரமேஷ் பிரபாவிடம் மாணவர்கள் இந்த நிகழ்வில் தெளிவு பெறலாம். கல்வியாளர் ரமேஷ் பிரபா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8 கவனமே பெறாத, சிறப்பான எதிர்காலம்மிக்க பல படிப்புகளையும் கல்வி நிறுவனங்களையும் தமிழக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து பெற்றுத்தந்து வரும் இளம் கல்வியாளர் கலைமணி, இந்த நிகழ்வில் 'பொறியியலில் எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?' என்ற தலைப்பில் கருத்துப் பகிர்வு செய்யவிருக்கிறார். மரைன் இன்ஜினியரிங் முடித்து Merchant Navy Officer-ஆகப் பணியாற்றிய கலைமணி, கடந்த 6 ஆண்டுகளாக முழுநேர கல்வி வழிகாட்டுநராக பணியாற்றுகிறார். அதிகப் பொருள்செலவின்றி படிக்க வாய்ப்புள்ள சிறந்த எதிர்காலமுள்ள கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வருபவர். பல ஆயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டிய கலைமணியோடு இந்த நிகழ்வில் மாணவர்களும் பெற்றோரும் உரையாடலாம். கல்வியாளர் கலைமணி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8 எப்போதும் எளிய குடும்பத்து மாணவர்களுக்கு IIT, NIT போன்ற கல்வி நிறுவனங்கள் மீது ஏக்கப்பார்வை உண்டு. ஆனால் சற்று மெனக்கிட்டால் அந்தக் கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவது எளிது. பொறியியலிலும் தொழில்நுட்பத்திலும் இளநிலை, முதுநிலை படிப்புகள் மட்டுமின்றி, ஆசிரியர் படிப்புகளைக்கூட இந்த நிறுவனங்களில் படிக்க முடியும். இந்த நிகழ்வில் பங்கேற்று அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வருகிறார், பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன். ஐ.ஐ.டி மெட்ராஸ் வெளித்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் இணைத் தலைவராக உள்ள விக்னேஷ் முத்து விஜயன், ஏராளமான மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி IIT, NIT, IIIT போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் சேர வழிகாட்டியவர். இந்த நிகழ்விலும் அதுகுறித்து விரிவாக உரையாற்ற இருக்கிறார். கல்வி விகடன் ஈவெண்ட் இந்த நிகழ்வில் மாணவர்களும் பெற்றோரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். ஆனால் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/mkX53JaTLuszofAt8 என்ற லிங்கை கிளிக் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். அல்லது, 044 66802980 / 044 66802907 ஆகிய எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு மிஸ்டு கால் செய்யலாம். அல்லது கீழேயிருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைத் தரலாம். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த க்யூஆர் கோடை கிளிக் செய்யவும் தமிழகத்தின் முக்கியக் கல்வியாளர்கள் உங்களை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை வழங்கவுள்ளார்கள். இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள்..!

விகடன் 11 Apr 2026 7:35 am

உலகமே உற்று நோக்கும் அமெரிக்கா –ஈரான் பேச்சுவார்த்தை; கடும் பாதுகாப்பில் இஸ்லாமாபாத்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பலத்த பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை அதன்படி நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ‘ரெட் ஜோன்’ பகுதிக்குள் பொதுமக்கள் […]

அதிரடி 11 Apr 2026 7:30 am

“பாலஸ்தீன மண்ணில் உருவான புற்றுநோய்தான் இஸ்ரேல்..” என பாகிஸ்தான் விமர்சனம் –நெதன்யாகு பதிலடி

டெல் அவிவ், லெபனானிலும் தனது இனப்படுகொலையை அரங்கேற்றும் தீய சக்தியான இஸ்ரேல், மனித குலத்திற்கே ஒரு சாபக்கேடு என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கண்டித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இஸ்ரேல் தீயது மற்றும் மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு. இஸ்லாமாபாத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது, ​​லெபனானில் இனப்படுகொலை செய்யப்படுகிறது. அப்பாவி குடிமக்கள் இஸ்ரேலால் கொல்லப்படுகிறார்கள், முதலில் காசாவிலும், பின்னர் ஈரானிலும், இப்போது லெபனானிலும், ரத்தக் கொதிப்பு தடையின்றி தொடர்கிறது. ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக […]

அதிரடி 11 Apr 2026 6:49 am

குழந்தையின் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த பயங்கரம்: திடுக்கிடவைத்துள்ள ஒரு செய்தி

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், தன்னைப் பிரிந்து சென்ற மனைவியைத் தேடிச் சென்ற நிலையில், தன் குழந்தையின் கண் முன்னாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மனைவியைத் தேடிச் சென்ற கணவர் தமிழ்நாட்டிலுள்ள குடியாத்தம் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் காந்தி. காந்தியின் மனைவி ராசாத்தி. தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் ராசாத்தி தன் கணவனையும் குழந்தையையும் விட்டு விட்டு நரசிம்முலு என்னும் நபருடன் வாழ ஆந்திராவுக்குச் சென்றுவிட்டாராம். இந்த […]

அதிரடி 11 Apr 2026 1:30 am

வங்கதேசம்: மாணவா் கொலையில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் கடந்த 2024-இல் நடைபெற்ற இடஒதுக்கீடு எதிா்ப்புப் போராட்டத்தின்போது, ரங்பூா் பல்கலைக்கழக மாணவா் அபு சயீத் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் (ஐசிடி) தீா்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற 3 முன்னாள் போலீஸாருக்கு ஆயுள் தண்டனையும், பல்கலைக்கழக துணைவேந்தா் உள்பட 25 பேருக்கு சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. தண்டனை விதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் தற்போது தலைமறைவாகவுள்ள நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் ஏற்கெனவே […]

அதிரடி 11 Apr 2026 12:30 am

நேபாளத்தின் முன்னாள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஜாமீனில் விடுவிப்பு!

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி மற்றும் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகக் ஆகியோர் ஜாமீனில் வியாழக்கிழமை (ஏப். 9) விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்தாண்டு (2025) செப்.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழல் மற்றும் வாரிசு அரசியலை எதிர்த்தும் ஜென் ஸி இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டத்தில் நடந்த ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 76 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், அப்போதைய […]

அதிரடி 10 Apr 2026 11:30 pm

பொலிஸ் வேலைக்கு புதிய ஆட்சேர்ப்பு; குவிந்துள்ள விண்ணப்பங்கள்!

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றில் நிலவும் ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடர்பான முதற்கட்ட நேர்முகத் தேர்வுகள் கடந்த 07-ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன. இந்த நேர்முகத் தேர்வுகள் அடுத்த மாதம் 18-ஆம் திகதி வரை, பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தின் டொபிகின் விளையாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுமார் 7,500 புதிய […]

அதிரடி 10 Apr 2026 11:30 pm

பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு அச்சம் ; ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் கண்டறிவு

பிரித்தானியாவின் வடக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய இணைய கேபிள்கள் (Internet Cables) மற்றும் எரிவாயு குழாய்களை (Pipelines) இலக்கு வைத்து ரஷ்யாவின் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இந்த “தீய” நடவடிக்கையை முறியடிக்கப் பிரித்தானியாவின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக நிலைநிறுத்தப்பட்டன. ரஷ்யாவின் இந்த உளவு முயற்சியை நேரடியாகச் சாடிய ஹீலி, “நாங்கள் […]

அதிரடி 10 Apr 2026 10:30 pm

ஊர் திருவிழாவை நடத்துங்க: உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி

மதுரையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம் தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்தவர் அருண், இவருக்கும் செல்லூர் பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, காதலித்த இருவரும் பெற்றோர் சம்மதப்படி திருமணம் செய்து கொண்டனர். அருண் ஆட்டோ டிரைவராக இருக்கிறார், பிரியா சிம்மக்கல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார், கடந்த சில மாதங்களுக்கு முன் அருண் விபத்தொன்றில் சிக்க கால் எலும்பு […]

அதிரடி 10 Apr 2026 10:30 pm

10 மில்லியன் ரூபா அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

தகவல்கள் அற்ற பெரும் அளவிலான அழகுசாதனப் பொருட்கள், புறக்கோட்டையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட பணியகத்தினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் நேற்று (09) கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள களஞ்சியம் ஒன்றை மையப்படுத்தி சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. சந்தை பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா இதன்போது, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, சந்தை பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்ட உடலுக்குப் பூசும் கிறீம்கள் (Creams) மற்றும் […]

அதிரடி 10 Apr 2026 10:30 pm

‘கிளஸ்டர் பாம்’பொருத்தப்பட்ட நவீன ஏவுகணை சோதனை –அதிரடி காட்டும் வடகொரியா

பியாங்யாங், அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும் நவீன போர்முறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய ஆயுதங்களை வரிசையாக சோதனை […]

அதிரடி 10 Apr 2026 9:30 pm

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் கடமைகளைப் புறக்கணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 10 Apr 2026 9:30 pm

வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் மரணம்

வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால், ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், தற்போதைய வெளியுறவு உறவுகளுக்கான மூலோபாயக் குழுவின் தலைவருமான கமால் கராசி (Kamal Kharrazi), காலமானார் ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். அந்தத் தாக்குதலில் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான (1997-2005) அவர் ஈரானின் […]

அதிரடி 10 Apr 2026 8:30 pm

லெபனான் முழுவதும் 100 இடங்களில் தாக்குதல் ; டிரம்ப் விளக்கம்; ஆத்திரத்தில் ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 14 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பு இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இல்லை; அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதல் ஈரானுடன் அமைதி நிலவினாலும், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதலை ஒரு “தனிச் சண்டை” (Separate Skirmish) என்றும் டிரம்ப் வர்ணித்துள்ளார். இதனால், லெபனான் மீது இஸ்ரேல் […]

அதிரடி 10 Apr 2026 7:30 pm

நான் கையூட்டுப் பெற்றேனா; சபையில் சாணக்கியனை விளாசிய அமைச்சர் சந்திரசேகர்!

தம்மீது நாடாளுமன்றில் பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கையூட்டு பெறுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சுமத்திரனுக்கு வக்காலத்து…. இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில், முக்கியமாக நான் இந்த சாணக்கியன் எம்பிக்கு (MP) சொல்ல வேண்டும். இன்று வடக்கை எடுத்துக்கொண்டால், சாணக்கியன் […]

அதிரடி 10 Apr 2026 7:11 pm