உகாண்டா: பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி –அதிர்ச்சி சம்பவம்
கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவின் மஹிட்னி பகுதி ஆரம்பப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று குழந்தைகள் வழக்கம்போல் கல்வி பயின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த பள்ளிக்குள் கத்தியுடன் நுழைந்த 34 வயது இளைஞர் பள்ளியில் இருந்த குழந்தைகளை சரமாரியாக தாக்கினான். இளைஞர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஷாரா செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்; அதிகாரிக்கு நேர்ந்த கதி
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரினது பிறந்தநாள கொண்டாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சிறையில் உள்ள சந்தேக நபருக்கு கேக் வெட்டிக் கொண்டாடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் காவல்துறை தலைமையகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உடனடியாக இடமாற்றம் கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினுள் குறித்த சந்தேகநபரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குத் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. […]
12 டன் சாக்லேட் திருட்டு – கிட்கேட் நிறுவனம் அதிரடி அறிக்கை!
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாக்லேட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 12 டன் எடையுள்ள 4 லட்சம் கிட்கேட் (KitKat) சாக்லேட்டுகள், மர்ம கும்பலால் லாரியுடன் சேர்த்து திருடப்பட்டது. இந்த சாக்லேட்டுகள், பார்முலா ஒன் (F1) கார் பந்தயத்தை மையமாகக் கொண்டு, கார் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய தயாரிப்பாகும். ஈஸ்டர் பண்டிகைக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட இந்த சாக்லேட் வரிசையை நெஸ்லே நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. […]
இலங்கையில் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு; மீண்டுமொரு இக்கட்டான நிலைக்கு சேல்லுமா நாடு!
இலங்கையில் டீசல் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் முடிவுக்கு வராவிட்டால், இலங்கைப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை அட்வொகாட்டா (Advocata) நிறுவனத்தின் தலைவர் முர்டசா ஜெபர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதாரச் சுருக்கத்தை ஏற்படுத்தும்போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்து, பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் இந்த செயற்பாடு, மக்களின் நுகர்வுத் திறனைக் […]
காங்கோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 43 பேர் பலி
கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கோவில் காங்கோ ஜனநாயக குடியரசு என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஐஎஸ் பயங்கரவாத […]
யாழில் திடீர் பரிசோதனையில் இறங்கிய அதிகாரிகள்
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். தவிசாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் நேற்று இரவு மற்றும் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றாத பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் நான்கு வாகனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை இனிவரும் காலங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை தொடரும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வண்டிகள்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று (3) அதிகாலை 3.00 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீடொன்றில் அதிர்ச்சி சம்பவம்; ஆணும் பெண்ணும் சடலமாக மீட்பு
காலி – தெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், வெட்டுக்காயங்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
‘அமெரிக்கா, ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளோம்’ –பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்தியஸ்தம் […]
பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல்! சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!
லெபனான் மீதான போரில், அந்நாட்டைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில், அல் மனார் எனும் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அலி ஷோயப் கடந்த மார்ச் 28 அன்று கொல்லப்பட்டார். அலி ஷோயபின் கொலைக்குப் பொறுப்பேற்ற இஸ்ரேல் ராணுவம் அவர் ஹிஸ்புல்லாவின் ராத்வான் பிரிவில் செயல்பட்டு வந்ததாகக் குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு […]
‘In IPL, every home team is a challenge’: MI head coach Jayawardene ahead of clash against DC
In IPL, Every Home Team is a Challenge: MI Head Coach Jayawardene Ahead of Clash Against DC Mumbai Indians (MI) head coach Mahela Jayawardene has sta...
CSK vs PBKS IPL Match Spotlight
The upcoming Indian Premier League (IPL) clash between Chennai Super Kings (CSK) and Punjab Kings (PBKS) is generating a lot of excitement. With both ...
கோவிலுக்கு சென்று வரும் போது அடித்த அதிர்ஷ்டம் –லொட்டரியில் கிடைத்த ரூ.10 கோடி பரிசு
கோவிலில் சாமி தரிசனம் முடித்து செல்லும் வழியில் லொட்டரி வாங்கியவருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது. கோயம்புத்தூரில் சாமி தரிசனம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர்ந்தவர் 51 வயதான நதுவெட்டில் பத்மநாபன். இவருக்கு ஸ்மிதா என்பவருடன் திருமணமாகி, 10வது படிக்கும் ஸ்ரீஹரி என்ற மகனும், 7வது படிக்கும் பர்வானா என்ற மகளும் உள்ளனர். இவர், கடந்த 8 ஆண்டுகளாக கோழிச்சேனாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வருகிறார். பத்மநாபன், கோயம்புத்தூரில் உள்ள கோவில் […]
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.04.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைச் செலுத்துவதில் தாங்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் பண்ணையாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தக் குத்தகைக் கட்டணத்தைக் கணிப்பிட்டபோது, கடலட்டையின் சர்வதேச சந்தை விலை வீழ்ச்சி கருத்தில் கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய […]
Microsoft Launches MAI Transcribe AI Model
Microsoft has introduced a new AI model called MAI-Transcribe-1. This is the company’s third in-house developed AI model, and it
Iran Missile Strikes Escalate Middle East Tensions
Iran fired missiles at Israel and some Gulf countries, increasing tensions in the region. One of the attacks caused a
Fishing Tensions Rise Along Nellore Coast
For fishermen living along the coasts of Nellore and Tirupati, the sea is no longer just a source of income.
INS Taragiri Boosts India’s Naval Strength
The Indian Navy has officially added a new stealth warship, INS Taragiri, during a ceremony at the Naval Dockyard in
India, Bangladesh Face Off in U-20 Final
The final of the SAFF U-20 Championship will take place today between defending champions India U-20 Football Team and Bangladesh
கணவர் எடுத்த தவறான முடிவு: 17 வது மாடியிலிருந்து குதித்த மனைவி: பெங்களூரில் சோகம்
பெங்களூருவில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த இளம் தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை தெலுங்கானாவின் சித்திபேட்டை பகுதியைச் சேர்ந்த பானு சந்தர் ரெட்டி குந்தா என்ற 32 வயது நபர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மென் பொறியாளரான பானு சந்தர் நீண்ட நேரமாக கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி பிபி ஷாஜியா சிராஜ், அக்கம் பக்கத்தினர் மற்றும் […]
Murmu Praises Tribal Youth Sports Talent
President Droupadi Murmu has said that the sports talent of India’s youth, especially from tribal communities, is a valuable asset
Flight Fares Triple Ahead of Long Weekend
In Chennai, air ticket prices have risen sharply ahead of the long weekend due to Good Friday and Easter. The
Nepal: Rastriya Swatantra Party Nominates Dol Prasad Aryal for HoR Speaker
The Rastriya Swatantra Party (RSP) has decided to propose its Vice President, Dol Prasad Aryal, as the candidate for Speaker of the House of Represent...
BJP Candidate List Sparks Internal Discontent
In Chennai, the Bharatiya Janata Party (BJP) released its list of candidates for the 2026 Tamil Nadu Assembly elections on
Stalin Challenges Modi Over Tamil Nadu Remarks
M. K. Stalin, president of the Dravida Munnetra Kazhagam (DMK), on Thursday strongly responded to remarks made by Narendra Modi.
Congress Criticizes Special Session Timing
The Congress party claimed that the government called a special session of parliament to pass bills related to amending women’s quota laws and redra...
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வடமேற்கு பாகிஸ்தானில், பாதுகாப்புப் படையினர் 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஐஎஸ்பிஆரின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் எட்டு தீவிரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கொன்றதாக, அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. புதன்கிழமையன்று அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் பற்றி கிடைத்த தகவல்களையடுத்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகள் தீவிரவாதிகளுடன் திறம்பட […]
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடற்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தினால் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தாா். பிலிப்பின்ஸ் கடற்கரையிலிருந்து 580 கி.மீ. தொலைவிலும், மலேசியாவின் சபா பகுதியிலிருந்து 1,000 கி.மீ. தொலைவிலும் நடுகடலில் 35 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. இதைத் தொடா்ந்து, கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னா் நிலைமை சீரானதைத் தொடா்ந்து அது விலக்கிக் […]
புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம். (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம். (படங்கள், வீடியோ)######################## லண்டனில் வசிக்கும் செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு மருதானை பிரபல வர்த்தகருமான சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஸ்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரான லண்டனில் வசிக்கும் பாபு அல்லது யோகி என அழைக்கப்படும் திரு.திருமதி.யோகலிங்கம் மீரா அவர்களது செல்வப்புதல்வி செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களின் பிறந்தநாள் பாடசாலை மாணவர்களுக்கு […]
உலகை மிரள வைக்கும் ஈரானின் சூளுரை ; அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதில் ஈரான் ராணுவ கட்டமைப்புகள், ஏவுகணை தளம் உள்ளிட்டவைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. […]
நுவரெலியாவில் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை; மக்கள் மகிழ்ச்சி
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. நீண்டகால வறண்ட வானிலை மற்றும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இது பெரும் நிம்மதியை அளித்தது. அதேவேளை லபுகெலே பகுதியில், ஒரு யூகலிப்டஸ் மரத்திற்கு அருகே நடந்து சென்றுகொண்டிருந்த மூன்று நபர்கள் மீது மின்னல் தாக்கியதில், அவர்கள் லேசான காயங்களுக்கு உள்ளாயினர். இந்த வறண்ட வானிலை, காய்கறி மற்றும் தேயிலைப் பயிர்ச்செய்கைகளைப் பாதித்ததுடன், குடிநீர்ப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திடீரென கொட்டித்தீர்த்த […]
நேபாள முன்னாள் பிரதமரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!
நேபாளத்தில், முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக, கடந்த 2025 செப்டம்பரில் இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அப்போதைய பிரதமர் சர்மா ஓலி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், வெடித்த வன்முறையால் 76 பேர் பலியாகினர். இதுகுறித்து அந்நாட்டின் உயா்நிலை ஆணையம் நடத்திய விசாரணையில், அப்போதைய பிரதமா் கே.பி. சா்மா ஓலி மற்றும் உள்துறை அமைச்சா் ரமேஷ் லெகக் ஆகியோா் […]
அமெரிக்கா அவமானப்பட்டு சரணடையும் வரை போர் தொடரும் –ஈரான் சூளுரை
தெஹ்ரான், ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதில் ஈரான் ராணுவ கட்டமைப்புகள், ஏவுகணை தளம் உள்ளிட்டவைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி […]
மட்டக்களப்பு கிணறு கொள்ளையர்கள் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி
மட்டக்களப்பு – நெல்லிக்காடு பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய அவரது சகோதரர் மற்றும் பிரதான சந்தேக நபராக கருதப்படும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி […]
சுற்றுலா செல்வோர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்
பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி சுற்றுலாச் செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். விடுமுறையில் இருப்பது தொடர்பான பதிவுகள் மூலம் தங்களது வீடுகளில் ஆள் நடமாட்டமின்றி இருப்பதை திருடர்களுக்கு தெரியப்படுத்துவதாக அமையும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். திருடர்களை அழைக்காதீர்கள் அத்துடன் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் வைத்திருப்போர் பண்டிகை காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் […]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ”Team Bison” அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride – Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. ‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது. துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஊடாக மக்களின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் […]
பாகிஸ்தானில் அதிரடியாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை
இஸ்லாமாபாத், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், அரபிக்கடலில் உள்ள ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால், […]
திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் –சபரீசன் உறுதி
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், தொகுதிக்குட்பட்ட நல்வாழ்வு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பதிவிட்ட மாணவர் மீதான வழக்கு ரத்து!
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள ஈ.வெ.ரா. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட சட்டக் கல்லூரி மாணவர் மீதான வழக்கை உயர்நீதிமன்ற
மதுரை கோட்ட பராமரிப்பு பணியால் சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் –தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக, குருவாயூர் -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள
ஐபிஎல் 2026 –சி.எஸ்.கே, பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்
19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்
புதுச்சேரியில் இன்று ரோடு ஷோவில் நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதியும், புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதியும் சட்டமன்றத் தேத்ரதல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து
பா.ஜ.கவுக்கு வளைந்து கொடுத்து செல்லும் எடப்பாடி பழனிசாமி –முன்னாள் சபாநாயகர் தனபால் குற்றச்சாட்டு
பா.ஜ.க சொல்லும் அனைத்திற்கும் எடப்பாடி வளைந்து கொடுத்து செல்கிறார், என்று அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான தனபால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில்
தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சந்திப் ராய் ரத்தோர் பதவி ஏற்பு!
தமிழக தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, இதுவரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு
பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்!
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். மதியம் சென்னை விமான நிலையம் வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி
கிறிஸ்த்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தளங்களில் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர்
திருமணமாகி இரு வாரங்களில் பெண் பலி ; துயரத்தில் உறவுகள்
களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் மதுஷானி பத்திரண என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நில்லையில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் செய்யப்பட்டுள்ளன. பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் கடந்த 21ஆம் திகதி, மதுஷானியின் தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக கணவனுடன் பத்தேகமவிற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். அன்றிரவே மீண்டும் […]
இடி மின்னல் தாக்கி 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் இடி மின்னல் தாக்கி 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின் மீது இடி மின்னல் தாக்கியதன் காரணமாக குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது. முறிந்து விழுந்த மரத்தின் கிளை இருவர் மீது சாய்ந்ததன் காரணமாக படுக்காயம் அடைந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேங்காய் எண்ணெயில் கலப்படம்-05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை
தேங்காய் எண்ணெயில் கலப்படம் மேற்கொண்ட கல்முனை சாய்ந்தமருது பகுதி 05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் கலப்படத்தில் ஈடுபட்ட வியாபார நிலையங்கள் மீது வியாழக்கிழமை(2) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் போது ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டு தண்டணை மற்றும் அபராதம் குறித்து அறிவிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 1 […]
நாவற்குழி பிக்குவின் விளக்கமறியல் ஏப்ரல் 9 வரை நீடிப்பு: சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாணம் – நாவற்குழி விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அண்மையில் வீட்டுப் பாவனைக்காக விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். இதன்போது, அங்கு நின்ற பௌத்த பிக்கு ஒருவர் அச்சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை புரியும் நோக்கில் அநாகரிகமாக நடந்துகொண்டார் […]
போருக்கு மத்தியில் அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் உருக்கமான கடிதம்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போரால் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போர் ஓய்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு கடுமையாக தாக்க போவதாக தெரிவித்தார். ஈரான் ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ள முன்வராவிட்டால் அந்த நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்வோம் என்று எச்சரித்தார். […]
ஈரானுக்கு எதிரான போரில் மிகப்பெரிய வெற்றி; டிரம்ப் தெரிவிப்பு!
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அறிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் கடற்படை மற்றும் விமானப்படை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் அடுத்த 2 முதல் 3 வாரங்களில் இந்த ராணுவ நடவடிக்கைகள் முழுமையாக முடிக்கப்பட்டு, போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இந்த யுத்தத்தினால் இஸ்ரேல் மற்றும் […]
ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார் ; ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கையால் அதிரும் அமெரிக்கா
ஈரான் மீது படையெடுத்தால் அமெரிக்காவின் ராணுவப் படைகளில் உள்ள ஒருவரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமிர் ஹடாமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அவர்களின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்துடன், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால், தாக்குதல்களை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க […]
விசா கட்டணங்களை திடீரென உயர்த்திய பிரித்தானியா !
பிரித்தானியாவிற்குச் செல்லும் பயணிகள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டணங்களைக் கணிசமாக உயர்த்துவதாக பிரித்தானியா உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 8, 2026 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி விண்ணப்பதாரர்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் செலவைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் ஆர்வம் பயண விசா (Visitor Visa): சாதாரண 6 மாத கால பயண விசா கட்டணம் 127 பவுண்டிலிருந்து 135 பவுண்டுகளாக உயர்கிறது. நீண்டகால விசா: […]
4 விண்வெளி வீரர்களுடன் நிலவை நோக்கி புறப்பட்ட அமெரிக்க விண்கலம்
வாஷிங்டன், அமெரிக்காவும், ரஷியாவும் கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்த ஆய்வில் தீவிரம் காட்டின. மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வுகளையும் மேற்கொண்டன. அதன்பின், இரு நாடுகளும் நிலவு குறித்த ஆய்வுகளை கைவிட்டன. இந்நிலையில், 53 ஆண்டுகளுக்குப்பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மீண்டும் கையில் எடுத்துள்ளது. நிலவில் உள்ள கனிம வளங்களை பயன்படுத்துதல், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி மையமாக நிலவை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆர்டெமிஸ் – […]
ஒன்றிணைந்து சவால்களைக் கடக்கத் தயாரா?
எவருமே முன்கணிக்க முடியாத திருப்பங்களையும், ஒழுங்கு மாற்றங்களையும் உலகம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு யுத்தமானது உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் சிறியதும் பெரியதுமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இலங்கை என்ற நாடு அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட முடியாது. இந்தச் சவால்களைச் சாதுர்யமான முறையில் கடந்து செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உலகில் இனி இதுவே ‘புதிய இயல்பு நிலை’ என்ற அடிப்படையில், அரசாங்கமும் […]
புற்றுநோய் சிகிச்சையில் ரஷ்யா உருவாக்கிய புதிய தடுப்பூசி
உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனிப்பட்ட நோயாளியின் உடலமைப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட (Personalized) முதலாவது புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா வெற்றிகரமாக ஒரு நோயாளிக்கு செலுத்தியுள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சினால் நேற்று ( 01) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, நாட்டின் சோதனை ரீதியிலான புற்றுநோய் சிகிச்சை திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவான ஒரு மருந்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நோயாளிக்கும் உள்ள தனித்துவமான புற்றுநோய் உயிரணுக்களின் (Tumor) பண்புகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு இந்தத் தடுப்பூசி […]
காட்டுக்கு தீ வைத்த சந்தேக நபருக்கு ரூ. 91,100 அபராதம்
ஹட்டன் ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்குத் தீ வைத்த சந்தேக நபர், ஹட்டன் வனத்துறை அலுவலக அதிகாரிகளால் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, (02) இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது ரூ. 91,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தால் ரூ. 91, 100 அபராதத்தையும், தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கான தொகையையும் செலுத்த வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுமார் 5 ஏக்கர் பகுதி தீயில் அழிந்துள்ளது குற்றம் சாட்டப்பட்டவர் […]
துருக்கி கடல்பகுதியில் ஆப்கன் அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து! 19 பேர் பலி!
துருக்கி கடல்பகுதியில், ஆப்கன் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 19 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேறும் நோக்கில் சுமார் 40 அகதிகள் பயணித்த படகு ஒன்று துருக்கியின் ஏகன் கடல்பகுதியில் புதன்கிழமை (ஏப். 1) அன்று சென்றுக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக கடல்பகுதிக்குள் நுழைந்த படகை துருக்கியின் கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் மிகவும் வேகமாக இயக்கப்பட்ட அந்தப் படகு […]
கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் SMS தொடர்பில் எச்சரிக்கை!
நாட்டில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணைய இணைப்புகள் (Links) குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப்பிரிவு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டல் இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளில் உள்ள இணைய இணைப்புகளை (Links) கிளிக் செய்வதற்கு முன்னர், அதன் இறுதிப் […]
தெஹ்ரான் மீது இஸ்ரேலின் பாரிய வான்வழித் தாக்குதல் ; 400-க்கும் அதிகமான இலக்குகள் தகர்ப்பு
கடந்த இரண்டு நாட்களில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலுள்ள உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து 400-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரானிய ஆட்சியின் உட்கட்டமைப்புகளுக்கு எதிராக 650 வெடிமருந்துகளைப் பயன்படுத்தி 400-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேலிய வான்படை மேற்கொண்டுள்ளது. ஈரானிய தலைநகரின் மையப்பகுதியிலுள்ள பல இடங்களை இலக்கு வைத்து நேற்றிரவு பாரிய அளவிலான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் சுமார் 15 ஆயுத உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் உரிமை […]
யாழில் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம்
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் பயணி ஒருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் உடனடியாக முறைப்பாடு குறித்த தனியார் பஸ்ஸில் பயணித்த பயணியிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் […]
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபனின் கொலை வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களான படுகொலையானவரின் மகளையும் மருமகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மூத்த விரிவுரையாளர் கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் 21ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது , சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டு, […]
ரஷியா–உக்ரைன் போரில் புதிய அத்தியாவசியம் ; டொனெட்ஸ்க் இலக்கை நோக்கி ரஷியா புதிய அழுத்தம்
கிழக்கு உக்ரைனின் முக்கியத் தொழில் மண்டலமான லுகான்ஸ்க் பிராந்தியத்தைத் தங்கள் படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷியா புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. கடந்த 2022-இல், உக்ரைன் மீது போா் தொடங்கிய காலத்திலிருந்தே இப்பிராந்தியத்தின் பெரும்பான்மை நிலப்பரப்பு ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், எஞ்சியிருந்த சிறு பகுதிகளையும் தற்போது தங்கள் ராணுவம் மீட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவதை ரஷியா தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. லுகான்ஸ்க் […]
ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் உறுதி ; ட்ரம்ப் விளக்கங்கள் பொய்யானது
ஈரான் அரசு போர்நிறுத்தம் கோரியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியது பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு, பதிலடியாக இஸ்ரேல் மற்றும் நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்துடன், சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை […]
Macron: France Won’t Use Military Force for Hormuz
French President Emmanuel Macron has stated that using military force to reopen the Strait of Hormuz is not practical. He explained that such an opera...
Varun Chakravarthy’s 2026 Performance
Indian spinner Varun Chakravarthy has had a mixed year in 2026, playing in various tournaments and formats. While he showed promise at the T20 World C...
துபாய் அழியும் –அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை
ஈரான் போரில் அமெரிக்கா-இஸ்ரேல் பக்கம் நிற்கும் அமீரகத்திற்கு அமெரிக்க பொருளாதார நிபுணர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் முடிவால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது: “துபாய், அபுதாபி போன்ற நகரங்கள் சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக வடிவமைக்கப்பட்டவை. இவை பாதுகாப்பு தளங்களாக இல்லை. அமீரகம் போரில் ஈடுபட்டால், இந்த […]
England Women Name Tom Smith Spin-Bowling Coach for T20 World Cup
London [UK], April 2: England Women have appointed former Gloucestershire left-arm spinner Tom Smith as their spin-bowling coach ahead of the ICC Wome...
India’s First Right Shoulder-Artery Heart Valve Replacement Performed at SRM Prime Hospital
In a first in India, SRM Prime Hospital performed an Alternate Access Transcatheter Aortic Valve Replacement/Implantation (TAVR/TAVI), a minimally invasive
கொழும்பு வாழ் மக்களுக்கு…. 24 மணிநேர நீர் வெட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு!
கொழும்பு – பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் பொது முகாமையாளர் (மேற்கு மத்திய) திஸ்னா பன்னில தெரிவித்தார். லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி இதற்கமைய, பாதுக்கை பகுதியில் இன்று (02) இரவு 8.00 மணி […]
பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றம் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இன்று (02) பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் பலத்த மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்களுக்கு எமனான பேருந்து; 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் இன்று காலை (02) நிகழ்ந்த ஒரு துயரமான சாலை விபத்தில் உயிரிழந்ததுடன் மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார். திகன திசையிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பேருந்து, பல்லேகலை இராணுவ முகாமிற்கு எதிரே உள்ள கண்டி–திகன சாலையில், அவ்விரு மாணவர்களையும் ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியபோது இவ்விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளுடன் மோதிய பேருந்து மோதிய வேகத்தில் மாணவர்கள் இருவரும் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டதனால் ஒரு மாணவர் […]
சமையல் எரிவாயு விலை திருத்தம் ; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் , லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிதி அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன், புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் எனவும் அதுவரையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது எனவும் […]
அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இனி கட்டணம்.. புதிய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஈரான்
டெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் கடந்த 28-ந்தேதி கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தியது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மட்டுமின்றி 180 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பழி தீர்க்கும் வித மாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. […]
Stalin Targets EPS, Amit Shah in Campaign
In Chennai, Chief Minister M. K. Stalin stepped up his political attack during a campaign event in Tiruchirappalli (Trichy) on
30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்: இந்தியர்கள் மட்டும் இத்தனை பேரா..?
வாஷிங்டன், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஏஐ முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளதது. ஓபன் ஏஐ உள்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏஐ மையங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் […]
தெற்கின் மூத்த அரசியல்வாதி காலமானார்
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83-வது வயதில் காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான விஜேசேகர, 1989 முதல் 2010 வரையிலான காலத்தில் மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2009- தற்கொலைத் தாக்குதலில் படுகாயம் தனது அரசியல் பயணத்தின்போது அவர் பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தார். 2009-ஆம் ஆண்டில், அக்குரஸ்ஸையில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்வை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் விஜேசேகர […]
US Embassy Warns of Possible Militia Attacks in Baghdad
The U.S. Embassy in Baghdad has issued a security warning, stating that Iranian-aligned Iraqi militias may attack central Baghdad in the next 24 to 48...
KKR’s Long-Term Investment in Cameron Green
Kolkata Knight Riders (KKR) head coach Abhishek Nayar has stated that all-rounder Cameron Green was chosen as a long-term player for the franchise. Th...
அனுமதியின்றி இயங்கும் கடலட்டை பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது
இலங்கையின் கடலட்டைகளுக்கு சர்வதேச சந்தையில் உள்ள மிகச் சிறப்பான வர்த்தக நாமத்தைப் பாதுகாப்பதற்கு, அனுமதியின்றி இயங்கும் பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது என கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் கடலட்டைப் பண்ணைகளுக்குச் […]
யாழில்.1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள்
யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது எனகரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை […]
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு
கிழக்கு இந்தோனேசியாவின் தெர்னேட் நகரத்திற்கு அருகே, வடக்கு மொலுக்கா கடலில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதனை 7.8 ரிக்டர் என பதிவு செய்தது. நிலநடுக்கம் கடலுக்குள் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நடந்தது, மற்றும் மையப்புள்ளி தெர்னேட் நகரத்திலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் பின்னர் அருகிலுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தீவுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் […]
தென்பகுதியை விட வடக்கில் அனுமதிகளைப் பெறுவதில் அதிக தாமதங்கள்
கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில் மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, நீர்வாழ் உயிரினச் செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் […]
Ryan Williams’ Journey to India Debut
Ryan Williams has had a unique and challenging journey in football. Born in Perth, he once represented Australia in an
அமெரிக்க தளத்தை அதிரவைத்த தாக்குதல்; ஈராக்கில் பெரும் பதற்றம்
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. குர்திஸ்தான் பிராந்தியத்தின் தஹுக் மாகாணத்தில் அமைந்துள்ள சர்சாங் எண்ணெய் வயல் மீது ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி தெரிவிக்கின்றது. ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘HKN Energy’ நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அங்கு எண்ணெய் உற்பத்தி […]
India’s Defense Exports Break Record with ₹38,424 Crore in FY 25-26
India achieved a historic milestone in its defense exports during the financial year 2025-26, reaching a record high of ₹38,424 crore. This represents...
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலால் எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று புதன்கிழமை(1) அதிகாலை தெரிவித்தது. குவைத் சர்வதேச விமான நிலையம், ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களால் ஏவப்பட்ட ட்ரோன்களின் அப்பட்டமான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ராஜி கூறியதாக, அரசுக்குச் சொந்தமான குவைத் செய்தி […]
நடிகை ஜனனியுடனான சந்திப்பு –கடற்தொழில் அமைச்சர் புளகாங்கிதம்
எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிர வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிக்பொஸ் ஜனனி என அழைக்கப்படும் நடிகை ஜனனியை அமைச்சர் நேற்றைய தினம் காலை தனது அலுவலகத்தில் சந்தித்ததுடன் , இரவு , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியிலும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். குறித்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் தனது […]
ஏப்ரலில் வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு: ஐரோப்பிய நாடுகளுக்கு IEA எச்சரிக்கை
உலகளவில் ஏப்ரலில் வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் என IEA எச்சரிக்கை விடுத்துள்ளது. வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலக அளவில் ஏப்ரலில் எரிசக்தி விநியோகத்தில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று சர்வதேச எரிசக்தி முகமையின்(IEA) தலைவர் பாத்தி பிரோல் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருப்பதால் மார்ச் மாதத்தை விட ஏப்ரலில் எண்ணெய் விநியோக தட்டுப்பாடு இரண்டு மடங்கு அதிகரிக்கும் என நோர்வே வங்கி […]

29 C