SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ; குவியல் குவியலாக பிணங்கள் ; 4 ஆண்டுகள் வாழ்ந்த கொடூரம்!

அமெரிக்காவில் அழுகிப்போன உடல்களுடன் நான்கு ஆண்டுகள் நபர் ஒருவர் வாழ்ந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் சுமார் 200 உடல்களை முறைகேடாகக் கையாண்ட இறுதிச் சடங்கு இல்லத்தின் உரிமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான உடல்கள் குவியல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், பென்ரோஸ் பகுதியில் ‘ரிட்டர்ன் டு நேச்சர்’ (Return to Nature) என்ற பெயரில் இறுதிச் சடங்கு இல்லத்தை ஜோன் ஹால்போர்ட் மற்றும் அவரது முன்னாள் மனைவி கேரி […]

அதிரடி 8 Feb 2026 4:30 pm

தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு ; இரண்டு சந்தேகநபர்கள் கைது

புத்தர் சிலைகளிலிருந்து, தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள்திருடிய இரண்டு சந்தேகநபர்கள் இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கக் கட்டிகள் நாவலப்பிட்டிய – கெட்டபுலவ விகாரையிலுள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்து கலசங்களை முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு பேர் திருடிச் சென்றதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸார், விகாரையில் பொருத்தப்பட்ட […]

அதிரடி 8 Feb 2026 3:51 pm

பெரும் துயரை ஏற்படுத்திய மருத்துவ பீட மாணவனின் மரணம்

தங்காலை, மாவெல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த, களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மிரிஸ்ஸ, பொலத்து மோதர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் மாவெல்லைப் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் சென்றிருந்த நிலையில், கடலில் நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தங்காலை தலைமையக பொலிஸார் மேலதிக […]

அதிரடி 8 Feb 2026 3:40 pm

பிரான்ஸில் அழகு நிலையம் மீது குண்டு வீச்சு; 6 பேர் காயம்

பிரான்ஸில் அழகு நிலையம் ஒன்றின் மீது கிரைனைட் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தென் கிழக்கு நகரமான Grenoble இல் இச்சம்பவம் இன்று பெப்ரவரி 6, வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அங்குள்ள அழகு நிலையம் ஒன்றுக்குள் திடீரென மர்ம நபர்கள் சிலரால் கிரைனைட் குண்டு வீசப்பட்டது. கடைக்குள் விழுந்த குண்டு வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தில் கடையில் இருந்த 5 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். கட்டிடம் ஒன்றின் தரை […]

அதிரடி 8 Feb 2026 3:30 pm

குறுகிய கால இடைவெளிக்குள்  நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்கள் –நிலாந்தன்!

கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில்.அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல்… The post குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்கள் – நிலாந்தன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 3:23 pm

அரசின் நிர்வாகத் தோல்வி.. உங்கள் அரசு மீண்டும் அமையப் போவதில்லை.. தவெக அருண்ராஜ் கருத்து!

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை (பிப்ரவரி 8 ஆம் தேதி) நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள், ஹால் டிக்கெட் குளறுபடிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன.

சமயம் 8 Feb 2026 3:18 pm

சேலம் விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி..- காவல்துறை போட்ட 40 நிபந்தனைகள் என்ன?

சேலத்தில் தவெக விஜய் 13 ஆம் தேதி பரப்புரை நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இது விரிவாக பார்க்கலாம்.

சமயம் 8 Feb 2026 3:00 pm

அதிமுகவை தாங்கள் கண்டுகொள்ளவில்லை, தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி-நாஞ்சில் சம்பத்!

அதிமுகவை தாங்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டியே இருக்கிறது என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சமயம் 8 Feb 2026 2:53 pm

இளைஞரணியினருக்கு சீட் கேட்டு கோரிக்கை வைத்த உதயநிதி; முதலமைச்சர் கொடுத்த பதில் என்ன?

விருதுநகரில் திமுக-வின் இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, தென் மண்டல அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய முதலைமச்சர் மு.க.ஸ்டாலின், “ விருதுநகர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கல்விக் கண் திறந்த காமராசர்தான். காமராசர் என்று சொன்னால் மதிய உணவு திட்டம்போல் திராவிட மாடல் ஆட்சி என்றால் காலை உணவு திட்டம். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழித்தால் நமது அடையாளத்தை அழித்து விடலாம் என்று பாஜக நினைக்கிறது. நீட்டை கொண்டுவந்து நம்மை படிக்கவிடாமல் பழைய நிலைக்கு கொண்டு செல்ல பாஜக நினைக்கிறது. தமிழ் மொழிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் அதை போராடி தடுத்துள்ளோம். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லாத நிலைதான் முதலில் இருந்தது. வாய்ப்புகளை மறுத்த அநீதியை சமூக நீதியால் வென்றோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்பதை இந்தியாவில் முதலில் நிகழ்த்திக் காட்டியது திமுகதான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரத்தை பெற்று தந்துள்ளோம். மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என்று பாஜக செயல்பட்டு வருகிறது; பாஜகவினால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு.  இன்னும் பல நூற்றாண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. உதயநிதி ஸ்டாலின் பேசும் போது சொன்னார் இளைஞரணிக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று. அவர் ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைக்கிறார். ஒன்றை சொல்கிறேன் என்னுடன் இளைஞரணியில் இருந்தவர்களில் தற்போது 10 பேர் அமைச்சர்கள், 24 எம்.எல்.ஏ-க்கள், 4 எம்.பி-க்கள் என எல்லோரும் பதவியில் இருக்கின்றனர். இப்படி இருக்கும் போது இளைஞரணியை பற்றி நான் மறப்பேனா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி தற்போது என்டிஏ பழனிசாமியாக மாறி நிற்கிறார். நானும் ரெளடி தான் என்பது போல நான் தான் கூட்டணிக்கு தலைமை என்று புலம்பிக் கொண்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பட்ஜெட்டில் மத்திய அரசு நமக்கு கொடுத்தது ஜீரோ. நாமும் அதை சட்டமன்ற தேர்தலில் திருப்பி கொடுப்போம் ”என்றார்

விகடன் 8 Feb 2026 2:37 pm

⚖️ கம்பஹா பிரதேச சபை  NPP   உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு

கம்பஹா பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் மற்றும் தவிசாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரிய ஊழல்… The post ⚖️ கம்பஹா பிரதேச சபை NPP உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 2:34 pm

மனைவிக்காக ஆக்சிஜன் சிலிண்டர் சுமந்தபடியே கோவிலுக்கு சென்ற கணவர்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராய்பாக் தாலுகாவின் சிஞ்சோலி கிராமத்தில் மாயக்கா தேவி கோவில் உள்ளது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 15 ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு வந்தனர். இந்த வருடம் அந்த பெண்ணுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது. அதனால் வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். அவருக்கு மாயக்கா தேவி அம்மனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், மருத்துவர்களின் ஆலோசனையுடன் அவரது […]

அதிரடி 8 Feb 2026 2:30 pm

சீனாவில் பயோடெக் தொழிற்சாலை வெடிப்பு –  உயிாிழப்பு 8 ஆக அதிகாிப்பு

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷான்சி (Shanxi) மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை, பிப்ரவரி 7, 2026) நிகழ்ந்த பயங்கர… The post சீனாவில் பயோடெக் தொழிற்சாலை வெடிப்பு – உயிாிழப்பு 8 ஆக அதிகாிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 2:22 pm

புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா

புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா தரம் – 01 புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் அதிபர் . சி. சிவநேந்திரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் திரு. எஸ்.கே சண்முகலிங்கம், சூழகம் அமைப்பின் செயலாளர் திரு.கருணாகரன் நாவலன் மற்றும் ஆலய குருக்கள், ஓய்வுநிலை கல்விசார் அதிகாரிகள், இலங்கை வங்கி ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் […]

அதிரடி 8 Feb 2026 2:20 pm

⛈️ பசறையில் மண்சரிவு அபாயம்:  

பசறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, மண்சரிவு அபாயம் குறித்து… The post ⛈️ பசறையில் மண்சரிவு அபாயம்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:57 pm

திருச்சியில் சாலை மேம்பாடு கட்டுமானத்திற்காக கையகப்படுத்த கட்டிடம் இடிப்பது ஒத்திவைப்பு!

திருச்சியில் சாலை மேம்பாடு கட்டுமானத்திற்காக கையகப்படுத்த கட்டிடம் இடிப்பது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

சமயம் 8 Feb 2026 1:42 pm

 ஆகப்பெரிய பறவை இனமான கழுகுகளின் மீள்வருகை குறித்து மீனவர்கள் கவலை

பிரித்தானியாவின் ஆகப்பெரிய பறவை இனமான வெள்ளை வால் கழுகு (White-tailed Eagle) மீண்டும் கடலோரப் பகுதிகளுக்குத் திரும்புவது குறித்து… The post ஆகப்பெரிய பறவை இனமான கழுகுகளின் மீள்வருகை குறித்து மீனவர்கள் கவலை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:39 pm

NEET UG 2026 விண்ணப்பப் பதிவு தொடக்கம்; மே 3-ம் தேதி தேர்வு - நேரடியாக விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

இளநிலை நீட் 2026 தேர்விற்கான விண்ணப்பப் பதிவு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கியது. மே 3-ம் தேதி தேசிய அளவில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 8 Feb 2026 1:39 pm

ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதித் திட்டம் (SISFS)!

Start-up India Seed Fund Scheme (SISFS): ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் வரை மானியமும், ரூ.50 லட்சம் வரை கடனுதவியும் வழங்கும் இந்திய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 8 Feb 2026 1:35 pm

கனடாவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் உருவாகியுள்ள கவலை

கனடாவில், பொது நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், வைரஸ் தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்டவர்களும் அங்கிருந்தது தெரியவந்துள்ளதால் கவலை உருவாகியுள்ளது. ஜனவரி மாதம் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை, கனடாவின் மனித்தோபா மாகாணத்திலுள்ள பிராண்டன் நகரில் விவசாயம் தொடர்பிலான கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், இந்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 13ஆம் திகதிவரை, தங்களுக்கு மண்ணன் அல்லது மணல்வாரி அல்லது தட்டம்மை என்னும் […]

அதிரடி 8 Feb 2026 1:30 pm

யாழில்.  ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகள் உள்ள இருவா் போதைப்பொருட்களுடன்  கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் நடமாட்டத்தை தடுக்கும் நோக்கில் காவல்துறையினா் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது இருவர் கைது… The post யாழில். ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகள் உள்ள இருவா் போதைப்பொருட்களுடன் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:24 pm

அஜித் குமார் கார் பந்தயம்: அபுதாபியில் உணர்வுபூர்வ சந்திப்பு

அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் குமாரை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 1:10 pm

❄️  வடகிழக்கு அமெரிக்கா   கடும் குளிர்காற்றினால் உறைந்து போயுள்ளது

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்கள் (Northeast US) தற்போது ஆர்க்டிக் துருவப் பகுதியில் இருந்து வீசும் கடும் குளிர்காற்றினால் (Arctic… The post ❄️ வடகிழக்கு அமெரிக்கா கடும் குளிர்காற்றினால் உறைந்து போயுள்ளது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:08 pm

Bharat Taxi: ஓலா, ஊபருக்கு போட்டியாக களமிறங்கும் மத்திய அரசின் ஆப்; இதில் நமக்கு என்ன பயன்?

ஓலா, ஊபர், ரேப்பிடோவிற்கு மாற்று 'பாரத் டாக்ஸி'. இது மத்திய அரசின் ஆப். இதில் ஓலா, ஊபர், ரேப்பிடோ மாதிரி கால் டாக்ஸி, ஆட்டோ, பைக் போன்றவற்றைப் புக் செய்யலாம். இந்த ஆப் கடந்த 5-ம் தேதியில் இருந்து டெல்லி, குஜராத் போன்ற பகுதிகளில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 2029-ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் இந்த ஆப் செயல்பாட்டிற்கு வர‌வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக உள்ளது. Bharat Taxi 2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா? மற்ற ஆப்களைக்‌ காட்டிலும் இதில் என்ன ஸ்பெஷல்? பிற ஆப்களில் டிரைவர்கள் ஒவ்வொரு ரைடிற்கும் 20 - 30 சதவிகிதம் கமிஷன்‌ கட்ட வேண்டும். ஆனால், இந்த ஆப்பில் அப்படி எந்தக் கமிஷனும் கட்ட வேண்டியதில்லை. இதனால், டிரைவர்களுக்கும் லாபம்... கமிஷன் குறைவதால் பயணிகளுக்குக் கட்டணம் குறையும். இது பயணிகளுக்கும் லாபம். பிற ஆப்களில், பீக் நேரங்கள், மழையின் போது கட்டணங்கள் அதிகரிக்கும். ஆனால், பாரத் டாக்ஸியில் இந்தப் பிரச்னைகள் இல்லை. இந்த ஆப்பில் கட்டணங்கள் நடைமுறைகளுக்கு உட்பட்டே நிர்ணயிக்கப்படும். பாரத் டாக்ஸியைப் பொறுத்தவரை, டிரைவர்கள் பார்ட்னர்கள். இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு

விகடன் 8 Feb 2026 1:02 pm

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது. பந்துல பிரசன்ன என்பவரை குறி வைத்தே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறி தவறியதால் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வேட்பாளரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு 8 Feb 2026 1:01 pm

'பரியேறும் பெருமாள்'பார்த்துட்டு நானும் H.வினோத்தும் வெட்கப்பட்டோம், ஏன்னா.!- ராஜு முருகன்

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மை லார்ட்' . இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 'மை லார்ட்' மேடையில் மாரி செல்வராஜ் குறித்து பேசிய ராஜு முருகன், 'பரியேறும் பெருமாள்' படம் வெளியானப்போது நானும் H.வினோத்தும் சேர்ந்துதான் பார்த்தோம். 'எப்படி படம் எடுத்திருக்காங்க'ன்னு பாருங்க சார். எனக்கு வெட்கமா இருக்குன்னு' சொன்னாரு. எனக்கு அதைவிட பல மடங்கு வெட்கமா இருந்துச்சு. அந்த மாதிரியானப் படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வை உருவாக்கினாரு. இன்றைக்கு வரைக்கும் அந்த அதிர்வு குறையவே இல்ல. அடுத்தடுத்து உச்சத்திற்கு செல்லக்கூடிய மாரி எனக்கும் ஒரு வழிகாட்டி தான். மாரி செல்வராஜ் எளிய மனிதர்களின் கதையை பேசும் படத்தை வெற்றியாக்குவது ரொம்ப கஷ்டம் ஆனால் மாரியின் வெற்றி ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுக்குது. மாரி மேடையில் 'மை லார்ட்' பற்றி பேசிய விஷயங்கள் எனக்கே ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை தருது என பேசியிருக்கிறார்.

விகடன் 8 Feb 2026 12:58 pm

AFG vs NZ: ‘இதுலதான் நாங்க ஸ்பெஷலிஸ்டே’.. நியூசிலாந்தை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்: அதிரடி கம்பேக்!

நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு அசத்தியது. துவக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும், அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி அதிரடி கம்பேக்கை கொடுத்து ரன்களை குவித்தது.

சமயம் 8 Feb 2026 12:55 pm

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் சுதந்திரத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார ஊடகங்களிடம் கூறியதாவது:- சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது. ஆனால், இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் சுதந்திரத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் அபிமானம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. படையினரின் வீரதீரச் செயல்கள் பற்றி பேசப்படவில்லை. நாட்டில் இன்று அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏற்றப்படுகின்றது. இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சில இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் அகற்றினால் பொலிஸையும் அகற்றுமாறு கோருவார்கள். - என்றார்.

பதிவு 8 Feb 2026 12:50 pm

கோவை வடவள்ளி - மருதமலை சாலை விரிவாக்கப் பணிகள் -உயர்நீதிமன்ற உத்தரவால் மேலும் தாமதமாக வாய்ப்பு!

கோவை வடவள்ளி - மருதமலை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவால் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

சமயம் 8 Feb 2026 12:42 pm

மேரி கோம் பட நடிகர் மாரடைப்பால் மரணம்: என் அப்பா இறந்தப்போ நீங்க தான் ஆறுதல்னு ப்ரியங்கா சோப்ரா உருக்கம்

தனக்கு குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்த சுனில் தாபா இறந்த செய்தி அறிந்த ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார். மேலும் சிக்கிம் மாநில முதல்வரும் சுனில் தாபா பற்றி போஸ்ட் போட்டுள்ளார்.

சமயம் 8 Feb 2026 12:41 pm

சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்: 8 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!

கெய்ரோ : சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மத்திய சூடானின் வடக்கு கோர்டோஃபேன் மாகாணத்தில் ரஹாத் நகரையொட்டி, துணை ராணுவப்படையின் கிளர்ச்சியாளர் பிரிவால் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூடானில் நீடிக்கும் உள்நாட்டுச் சண்டை காரணமாக, இடம்பெயர்ந்து சென்ற மக்களைக் குறிவைத்து சனிக்கிழமை(பிப். 7) தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், வாகனங்கள் மீதான தாக்குதல்களில் 2 கைக்குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 8 குழந்தைகள் உள்பட 24 […]

அதிரடி 8 Feb 2026 12:30 pm

சஜித் தரப்பு அரசியல்வாதி மீது நள்ளிரவில் கொலை முயற்சி

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது. இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர் களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் பந்துல பிரசன்ன என்பவராவார். இவரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் […]

அதிரடி 8 Feb 2026 12:15 pm

விஜய் டிவி ராமர் காமெடி: “அவருக்கு தமிழ் தெரியாது!”மேடையில் நடந்த கலாட்டா!

விஜய் டிவி ராமர் காமெடி என்றாலே அதற்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாகத் தனது ‘தங்கிலீஷ்’ (Thanglish) பேச்சால் பலரையும் சிரிக்க வைக்கும் ராமர், சமீப

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 12:02 pm

NZ vs AFG: ‘ஒரே ஆள், அப்படியே சிங்கம் மாதிரி’.. பெர்குஷன் செஞ்ச மேஜிங்: பவர் பிளேவிலேயே ஆப்கானிஸ்தானுக்கு ஆப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக லாக்கி பெர்குஷனின் மேஜிக் தொடர்கிறது. கடந்த ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணிக்கு, லாக்கி பெர்குஷன் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

சமயம் 8 Feb 2026 11:59 am

My Lord: 'தனிமையில இருக்காதீங்க, நிறைய பேர்கிட்ட பேசுங்கன்னு.!'- மாரிசெல்வராஜ் அட்வைஸ் குறித்து பாலா

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மை லார்ட்' . இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 'மை லார்ட்' மேடையில் பேசிய இயக்குநர் பாலா, மணிரத்னம் சாரை பிடித்திருந்தால் அவர் படத்தில் என்ன செய்தாலும் நமக்கு பிடித்துவிடும். அப்படித்தான் எனக்கு சசிகுமாரும்... அவர் என்ன செய்தாலும் எனக்கு பிடிக்கிறது. இதுதான் ஒரு குருவாக, ஒரு அண்ணனாக அவர் மீது எனக்கு இருக்கும் பாசம். ராஜுமுருகன் என்ன படம் எடுத்தாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவரது முதல் படத்திற்கு 'குக்கூ', என்று பெயர் வைத்திருந்தார். இரண்டாவது படத்திற்கு 'ஜோக்கர்' என வைத்திருந்தார். தற்போது 'மை லார்ட்' என்று வைத்திருந்திக்கிறார். 'மை லார்ட்' என்று பெயர் வைத்து கிண்டல் செய்வதற்கெல்லாம் தனி தைரியம் வேண்டும். இயக்குநர் பாலா நான் மேடையேறும்போது, இங்கேயாவது இரண்டு நிமிடங்கள் கூடுதலாக பேசுங்கள் என மாரி செல்வராஜ் சொன்னார். தனிமையில் இருக்காதீர்கள், நிறைய பேருடன் கலந்துரையாடி பேசுங்கள் என அவர் எனக்கு சொல்லியிருக்கிறார். அவர்தான் இப்போது எனக்கு வழிநடத்தி. இந்த நட்பு இப்படியே தொடரும் என்று நம்புகிறேன். அவர் ஒரு படத்தை பாராட்டினார் என்றால் அது தரமாக இருக்கும். அப்படித்தான் மை லார்டும் இருக்கும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 8 Feb 2026 11:54 am

பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக 5000 ஏக்கர் பெருங்காடுகளை அழித்து செய்யும் பிழையான திட்டம் கிபுல் ஓயா திட்டம்: றிசாட் எம்.பி ஆதங்கம்

பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக 5000 ஏக்கர் பெருங்காடுகளை அழித்து செய்யும் பிழையான திட்டம் கிபுல் ஓயா திட்டம்: றிசாட் எம்.பி ஆதங்கம் பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக 500 ஏக்கர் பெருங் காடுகளை அழித்து செய்யும் பிழையான திட்டமே கிபுல் ஓயா திட்டம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சாளம்பைக்குளத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மதராசாவினை இன்று ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே […]

அதிரடி 8 Feb 2026 11:51 am

2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?

ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது. அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. அப்படி என்ன பேசினார்? 2022-ம்‌ ஆண்டு இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே (ஜூன் 22), சீனா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது என்கிற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைத் பற்றி தெரிவித்துள்ளார் டினானோ. இந்தச் சோதனை இந்தியாவிற்கு அருகே உள்ள லாப் நூரில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார். அணு ஆயுத சோதனை அமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained இந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா 'Decoupling' முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, இந்தச்‌‌ சோதனையால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை அடக்க பெரிய நிலத்தடி குழிகளுக்குள் வெடிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக கூறுகிறது. இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. 'இந்த' விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன? சீனாவின் மறுப்பு அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது. இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது. அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான்‌ முக்கிய குற்றவாளி என்று அணு ஆயுதக் குறைப்பின் சீனாவின்‌ தூதரான ஷென் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்!

விகடன் 8 Feb 2026 11:49 am

ஏக்கிய ராச்சிய வேணாம் பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

ஏக்கிய ராச்சிய வேணாம் பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களினால் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாள் எனத் தெரிவித்தும் ஐக்கிய ராச்சிய வேணாம் எனத் தெரிவித்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த பல்வேறுபட்ட ஈழத்தமிழ் அமைப்புகளும் இணைந்து இந்த போராட்டத்தை ஒருங்கிணைந்திருந்தனர். இதில் பல நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கையின் சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் போது பேரணியும் […]

அதிரடி 8 Feb 2026 11:49 am

‘அந்நியனாக இருந்த இந்திய அணியை’.. அம்பியாக மாற்றிய அமெரிக்க அணி: பெரிய அபாய எச்சரிக்கை!

டி20 பார்மெட்டில், தொடர்ச்சியாக மிரட்டலாக செயல்பட்டு வந்த இந்திய அணியை, அமெரிக்க அணி அசைத்து பார்த்துவிட்டது. ஒரு கட்டத்தில், 98/6 என இருந்தபோது, இந்திய அணி மீது நம்பிக்கை இழக்கும் நிலைமை இருந்தது.

சமயம் 8 Feb 2026 11:35 am

IND vs USA: எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்- அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்

ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்திய அணி இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். இந்த ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. முக்கியமான சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் இந்திய அணியை 13 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் 160 என ஒரு நல்ல இலக்கை தொட்டுவிட்டார்கள். ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். அதையும் நாங்கள் சிறப்பாக கையாண்டோம் என்று நினைக்கிறேன். அமெரிக்க அணி இந்தப் போட்டியில் சில, சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதனை எல்லாம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் பலமான அணியாக திரும்பி வருவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 8 Feb 2026 11:32 am

திருமாவளவன் மீதான எமது மக்களின் மதிப்பு சுக்குநூறாகியுள்ளது –மூத்த போராளி காக்கா

தமிழீழ தேசியத் தலைவரின்திருமணம், தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துக்கள், இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என மூத்த போராளி காக்கா (மனோகர்) தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசியத் தலைவர் தனது திருமணம் தொடர்பான விடயத்தில், 14 பேரை தான் சுட்டுக் கொன்றதாக

புதினப்பலகை 8 Feb 2026 11:12 am

பூஜை செய்யும் திசை: வீட்டில் செல்வம் பெருக எங்கு அமர வேண்டும்? –முக்கிய வாஸ்து குறிப்புகள்!

பூஜை செய்யும் திசை (Direction to sit for Pooja) என்பது இந்து மத மரபுகள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 11:00 am

அமுல் செல்லும் ரில்வின் சில்வா –ரத்து செய்த உடன்பாட்டை புதுப்பிக்க திட்டமா?

இந்தியாவின் அமுல் நிறுவனத்துடனான உடன்பாட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் ஏற்பாட்டில் ஒரு வாரகாலப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர், இந்தியாவின் அமுல் பால் கூட்டுறவு நிறுவனத்திற்கும் பயணம் செய்யவுள்ளனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கும் சிறிலஙகாவின் தேசிய

புதினப்பலகை 8 Feb 2026 10:58 am

அபுதாபியில் அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன்: தோளில் கொடுத்த அந்த முத்தம் இருக்கே...

அபுதாபிக்கு சென்று ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித் குமாரை சந்தித்து பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதை பார்த்த விஜய் ரசிகர்களோ, கார் ஸ்டியரிங்கை புடிங்க சிவானு அஜித் கொடுக்க மாட்டார் என்கிறார்கள்.

சமயம் 8 Feb 2026 10:54 am

முக்கிய வழக்குகள் குறித்து ஆலோசனை வழங்க உயர்மட்டக் குழு

முக்கியமான மற்றும் கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து, ஆலோசனை வழங்குவதற்காக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தலைமையிலான ஒரு குழுவொன்றை சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க நியமித்துள்ளார். காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பிரியந்த பண்டார, மூத்த அரசு சட்டவாளர் ஜெயந்தி வேகொடபொல மற்றும்

புதினப்பலகை 8 Feb 2026 10:54 am

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது - இருவருக்கும் எதிராக ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளான மயிலணி பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும் , மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக நீதிமன்றங்களில் போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதிவு 8 Feb 2026 10:54 am

அமெரிக்க தடைக்கு மத்தியில் ஈரான் –சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார். இந்தவார தொடக்கத்தில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் பேசியதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார். அமெரிக்கா மேலும் வரிகளை விதிக்கும் என்ற அச்சத்தில் ஈரானுக்கான ஏற்றுமதியை சிறிலங்கா நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில்

புதினப்பலகை 8 Feb 2026 10:51 am

உலக வங்கி, அனைத்துலக நாணய நிதிய உயர் மட்டக்குழுக்கள் சிறிலங்கா வருகின்றன

2022-23 பொருளாதார நெருக்கடியால் தடைப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்து, உலக வங்கி பிரதிநிதிகள் குழு ஆராயவுள்ளது. அடுத்த மாதம் உலக வங்கி பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதே இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. தடைபட்டுள்ள கல்வி, நெடுஞ்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவற்றை முடிப்பது குறித்தும் உலக

புதினப்பலகை 8 Feb 2026 10:45 am

'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' - கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!

உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சிராஜ் இல்லை. பும்ரா ஆட முடியாத காரணத்தால் கடைசி நிமிடத்தில்தான் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார். போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி சிராஜ் பேசியிருந்தார். சிராஜ் சிராஜ் பேசியதாவது, 'இந்த T20 உலகக்கோப்பையில் நான் விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக T20 போட்டிகளில் எனக்கு வாய்ப்பே கிடைக்கலை. அதனாலேயே, ‘இந்த வருஷம் நான் இல்ல’ன்னு மனசுக்குள்ளேயே ஏற்றுக்கிட்டேன், 15-ஆம் தேதி ரியல் மாட்ரிட் போட்டி இருந்தது. அதை நேரில் பார்க்க பிளான் போட்டிருந்தேன். அதுக்கப்புறம் ரமலான் வருது… அதுக்கும் சில விஷயங்களை திட்டமிட்டிருந்தேன். ஆனால், கடவுள் எழுதியதை யாரால் மாற்ற முடியும்? “நான் வீட்டில குடும்பத்தோடு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்போ பிட்னெஸ் கோச் அட்ரியன் மெசேஜ் அனுப்பினார். அடுத்த சில நாட்களுக்கான உங்களின் பிளான் என்னவென கேட்டார். நானும் ‘இப்போ ரெஸ்ட் தான்’ன்னு சொன்னேன். அடுத்த நிமிஷமே சூர்யா பாய் கால் பண்ணினார். ‘மியான்… ரெடி ஆகு… பேக்கை எடுத்துக்கிட்டு உடனே வா’ன்னு சொன்னார். முதல்ல ஜோக் தான்னு நினைச்சேன். ஆனா உடனே தேர்வாளர் ஓஜா பாயிடமிருந்தும் கால் வந்தது. அப்போதான் உண்மை புரிஞ்சது. Siraj உலகக்கோப்பை அணியுடன் இணைய விமானத்தில் உட்கார்ந்திருந்தபோதுகூட அது கனவு மாதிரி தான் இருந்தது. ‘நான் உண்மையிலேயே உலகக்கோப்பை விளையாடப் போறேனா?’ன்னு தோணிச்சு. கடந்த ஒரு வருடமாக நடந்ததை நினைச்சா, இது நடக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஆனால், கடவுள் என் விதியை மாற்றிவிட்டார்' என்றார்.

விகடன் 8 Feb 2026 10:40 am

சபாநாயகருக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க முடிவு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான, முறைப்பாடு குறித்த விசாரணையைத் தொடங்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, சபாநாயகருக்கு எதிராக இந்த முறைப்பாட்டைச் செய்திருந்தார். அதேவேளை சமிந்த குலரத்ன நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நடைமுறை தவறானது என்றும், அவர் ஊழல் குற்றத்தைச் செய்ததாக

புதினப்பலகை 8 Feb 2026 10:39 am

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தம்பதியினரை அவமதித்து காணொளி; ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோரை அவமதிக்கும் வகையிலான காணொளி ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், ஒபாமா தம்பதியினரின் முகங்கள் குரங்குகளின் உருவங்களுடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு இந்தக் காணொளி பகிரப்பட்ட சில மணிநேரங்களில் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு […]

அதிரடி 8 Feb 2026 10:30 am

சுதந்திர தினத்தில் சர்ச்சை ; சமூக ஊடகங்களில் வைரலான பௌத்தக் கொடி விவகாரம்

கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 78ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, அங்கு நிறுவப்பட்டிருந்த பௌத்தக் கொடி அகற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. 2600ஆவது புத்த ஜெயந்தியை நினைவுகூரும் வகையில் ஏற்றப்பட்டிருந்த பௌத்தக் கொடி, சுதந்திர தின கொண்டாட்டங்களை காரணமாகக் கொண்டு அகற்றப்பட்டதாகவும், அதை மூன்று நாட்களுக்குள் மீண்டும் ஏற்ற வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, குறித்த விடயம் சமூக ஊடகங்களில் […]

அதிரடி 8 Feb 2026 10:20 am

'இந்த'விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன?

இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருள்களுக்கு சலுகைகள்... வரிக் குறைப்பு... வரி விலக்கு எதுவும் இல்லை. இது விவசாயிகளின் நலனைக் காக்க‌‌ என்றும், இதனால், இந்தியாவின் சிறு, குறு விவசாயிகளின்‌ வாழ்வாதாரம் காப்பாற்றப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படிக் காக்கப்பட்ட உற்பத்திகளின் பட்டியல் இதோ... > அரிசி > கோதுமை > மக்காச்சோளம் > சோயா > பால் பொருள்கள் அரிசி இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்! இந்த உற்பத்திகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால், இவைகளுக்கு எந்த வரியும் இல்லை... > மாம்பழம் > வாழைப்பழம் > கொய்யா > அவகேடோ > கிவி > பப்பாளி > அன்னாசிப் பழம் > காளான் > மசாலாப் பொருள்கள் > டீ > காபி > தேங்காய் > முந்திரி > கசகசா > எள் இதுவும் விவசாயிகளின்‌ நலன் சார்ந்து எடுக்கப்பட்ட‌‌ முடிவு என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained ஒப்பந்தத்தில் அமெரிக்க விவசாயிகளுக்கு என்ன லாபம்? பாதாம், வால்நட், காலநடைகளுக்கு தீவனமாக வழங்கும் சிவுப்பு சோளம்‌ போன்று அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கு இந்தியாவில் வரி குறைக்கப்படும். காரணம், இவை இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்த மரபணு மாற்று உற்பத்திகளுக்கும் எந்த வரிச் சலுகையும் இல்லை. Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?

விகடன் 8 Feb 2026 10:03 am

பெர்பெக்ட் டேஸ் திரைவிமர்சனம்: கழிப்பறை சுத்தம் செய்யும் மனிதனிடம் ஒளிந்திருக்கும் ரகசியம்!

பெர்பெக்ட் டேஸ் திரைவிமர்சனம் என்பது ஒரு சாதாரண மனிதனின் தினசரி அட்டவணையைப் பற்றியது மட்டுமல்ல; அது ஒரு மனிதன் தன்னுள் கண்டடைந்த பேரமைதியைப் பற்றிய ரகசியம். இன்றைய

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 10:00 am

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொருட்கள் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி –அரசாங்கத்தின் புதிய திட்டம்

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். அநுராதபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆயுள் காப்புறுதி அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை […]

அதிரடி 8 Feb 2026 9:48 am

மட்டக்களப்பில் 11 வெதுப்பக உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 11 வெதுப்பக முச்சக்கர வண்டிகள் தனிநபர் சுகாதாரம், மருத்துவ சான்றிதழ் இன்றிப் பயணித்ததால் பொதுச் சுகாதாரர்களால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெதுப்பக உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் பிரதேச சபையில் இடம்பெற்று, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில் அதனை மீறியதன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 8 Feb 2026 9:42 am

அண்ணாமலை ஓரங்கப்பட்டது ஏன்? டெல்லி பாஜக தலைமை வியூகம் இதுதான்!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியிருக்கும் நிலையில், என்.டி.ஏவிற்கு பின்னடைவு ஏற்படும் எனப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் டெல்லியின் அரசியல் கணக்கு என்னவென்று விரிவாக அலசலாம்.

சமயம் 8 Feb 2026 9:40 am

ஜப்பான், தாய்லாந்தில் இன்று தோ்தல்

ஆசியாவின் முக்கிய நாடுகளான ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் புதிய அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான பொதுத்தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) நடைபெறுகிறது. ஜப்பானின் முதல் பெண் பிரதமா் சனே தகாய்ச்சியின் செல்வாக்கைத் தீா்மானிக்கும் தோ்தலாகவும், தாய்லாந்தில் புதிய அரசமைப்புச் சட்டத்துக்கான பொது வாக்கெடுப்புடன் கூடிய தோ்தலாகவும் இவை அமைந்திருப்பதால், உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முந்தைய 2024 தோ்தலில் சனே தகாய்ச்சியின் ஆளும் விடுதலை […]

அதிரடி 8 Feb 2026 9:30 am

IND vs USA: ‘கம்பீர் கொடுத்த அந்த ஒரு ஐடியாதான்’.. வெற்றிக்கு முக்கிய காரணமே: சூர்யகுமார் யாதவ் பேட்டி!

அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி துவக்கத்தில் தடுமாறி பிறகு அதிரடி காட்டி வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிகொடுத்தார்.

சமயம் 8 Feb 2026 9:04 am

பிப்ரவரி 8 ப்ரோபோஸ் டே: காதலை வெளிப்படுத்த இதுவே ஒரு முக்கிய தருணம்!

பிப்ரவரி 8 ப்ரோபோஸ் டே என்பது காதலர் வாரத்தின் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான நாளாகக் கருதப்படுகிறது. பிப்ரவரி 7-ஆம் தேதி ரோஜா தினத்துடன் (Rose Day)

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 9:00 am

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடும் பனிமூட்டம்-சாலை தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது. சாலை தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சமயம் 8 Feb 2026 8:57 am

T20: 'இது'தான் என்னை மீண்டும் சூர்யாவாக்கியது! - IND Vs USA வெற்றிக்குப் பின்‌ சூர்யகுமார்‌ யாதவ்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், சூழ்நிலையை கணித்து பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். சூர்யகுமார்‌ யாதவ் இலக்கு நிர்ணயித்த இந்தியா பவர் பிளே முடிவில் இந்திய அணி கடுமையான அழுத்தத்தில் சிக்க, ஸ்கோர் 77/6 என்ற நிலைக்கு சரிந்தது. அந்த நெருக்கடியான தருணத்தில் பொறுப்புடன் விளையாடினார் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ். சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 49 பந்துகளில் 84 ரன்கள் என அபாரமாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். அவரது இன்னிங்ஸின் துணையுடன் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 161/9 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அமெரிக்க அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 'ஆட்டநாயகன்' - சூர்ய குமார் யாதவ் அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்க அணி வீரர்கள், இந்திய அணியின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுக்கடுக்காக விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் மோனாங்க் படேல் உட்பட டாப் ஆர்டர் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பங்களிக்கத் தவறினர். 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 132/8 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். சூர்யகுமார்‌ யாதவ் வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “கடந்த ஆண்டு முழுவதும் அணிக்காக இன்னிங்ஸை பிடித்து விளையாட முயன்றேன். ஆனால் அது என் வழியில் நடக்கவே இல்லை. ரன்கள் வரவில்லை, நம்பிக்கை சறுக்கிக் கொண்டே இருந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி தொடருக்குப் பிறகு, ‘சரி… இதை விட்டுவிடலாம்’ என்று நினைத்தேன். கிட்டை மூடி வைத்துவிட்டு, குடும்பத்துடன் இரண்டு வாரங்கள் முழுக்க நேரம் கழித்தேன். அந்த ஓய்வே என்னை மீண்டும் சூர்யாவாக்கியது. என்னை மீண்டும் சூர்யாவாக்கியது! புது வருடம் தொடங்கியது. நாக்பூருக்கு வந்ததும் மனநிலை முற்றிலும் மாறியது. ‘இது 180–190 ரன் அடிக்க வேண்டிய மைதானம் இல்லை; 140 போதுமானது’ என்ற எண்ணம் முதல் ஓவரிலிருந்தே மனதில் இருந்தது. 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் விழுந்தபோதும், பதட்டம் வரவில்லை. அந்த தருணத்தில் கௌதி பாய்(கவுதம் கம்பீர்) வந்து சொன்ன ஒரே வார்த்தை தான் எனக்கு தெளிவை கொடுத்தது – ‘கடைசி வரை நின்று விளையாடு. ரன்களை நீ எப்பவும் எடுத்துக்கலாம்.’ சூர்யகுமார்‌ யாதவ் அந்த ஆலோசனையே என் விளையாட்டின் திசையை மாற்றியது. ஒவ்வொரு ஓவராகவும் யார் பந்து வீசப் போகிறார், எத்தனை பந்துகள் மீதம் இருக்கிறது என்பதை கணக்கிட்டு, தேவையற்ற ஆட்டங்களை தவிர்த்தேன். ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்றாலே இந்தப் போட்டி நம்முடையது என்பதில் உறுதியாக இருந்தேன். முக்கியமாக, மும்பை கிரிக்கெட்டில் நான் வளர்ந்தவன். இந்த மாதிரியான விக்கெட்டுகளிலும், மைதானங்களிலும் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அதனால் பிச்சுக்கு எப்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். பொறுமையும் சரியான ஷாட் தேர்வுமே அந்த இன்னிங்ஸின் உயிர். அந்த நம்பிக்கையும், அந்த அமைதியும் தான் இந்த வெற்றிக்கு காரணம்.”

விகடன் 8 Feb 2026 8:37 am

தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம் ; 9 வயது சிறுமியைக் கொன்ற நபர் குற்றவாளி என அறிவிப்பு

இங்கிலாந்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில் சந்தேக நபர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி லிங்கன்ஷையரின் பாஸ்டன் (Boston) பகுதியில் உள்ள தனது தாயார் வேலை செய்த கடைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த லிலியா வலுடைட் (Lilia Valutyte) என்ற சிறுமியை, டேவிடாஸ் ஸ்கேபாஸ் (Deividas Skebas) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தாயின் கண்முன்னே நடந்த […]

அதிரடி 8 Feb 2026 8:30 am

இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்!

கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் (பிப்ரவரி 2), இந்திய பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் முடிவாகி உள்ளதை அறிவித்தனர். இந்த ஒப்பந்தம் குறித்த முழு தகவல்களும் நேற்று வெளியாகின. அதன்படி, இந்த ஒப்பந்தம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 7 அம்சங்கள். ஏற்றுமதி - இறக்குமதி Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்? > இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறது அமெரிக்கா. ஆனால், இந்தியா எத்தனை சதவிகித வரியைக் குறைக்க உள்ளது என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இந்தியா அமெரிக்கப் பொருள்கள் மீதான வரியைக்‌ குறைக்கும் அல்லது ரத்து செய்யும் என்று தான் கூறப்பட்டுள்ளது. > ஆசிய நாடுகளிலேயே ஜப்பானுக்கு அடுத்து இந்தியாவிற்கு‌த் தான் மிகக்‌ குறைந்த வரி. இது நமது போட்டி நாடுகளான சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட மிகப்பெரிய ப்ளஸ். அமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained > இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குகிறதா என்பதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணிக்கும். ஒருவேளை, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் மீண்டும் 25 சதவிகித வரி விதிக்கப்படும். > எரிசக்தி, விமான பாகங்கள், உலோகங்கள்... என இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதியைச் செய்யும். > இரு நாடுகளும் பரஸ்பர தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவிக்கொள்ளும். > இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின்‌ பிரதான உணவுகளான அரிசி, கோதுமை, மக்காச்சோளம் ஆகிய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவிற்கு எந்தச்‌ சலுகையும் இல்லை. > இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ரத்தினக் கற்கள், மருந்துகள் போன்றவைகளுக்கு வரிவிலக்கு. டெல்லி: இந்தாண்டின் முதல் 15 நாள்களில் 800 பேர் மாயம்; 'இது சராசரிதான்' - போலீஸ் `அதிர்ச்சி' பதில்!

விகடன் 8 Feb 2026 8:06 am

கையடக்க தொலைபேசியால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ; உயிர் தப்பிய உயர்தரப் பரீட்சை மாணவன்

மாத்தளை சீகிரியா, கலகொட்டுவ பகுதியில் வீடொன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டு, வீட்டின் ஒரு அறை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. சார்ஜருடன் கையடக்க தொலைபேசி இணைக்கப்பட்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர் பயன்படுத்திய அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மாணவர் அறையில் இல்லை என […]

அதிரடி 8 Feb 2026 8:00 am

பன்னீர் செல்வம், பழனிசாமி வழியில் தினகரனுமா? - என்ன முடிவெடுக்கப் போகிறார் வி.கே.சசிகலா?

வி.கே சசிகலாவைச் சந்தித்ததையடுத்து தன் கட்சியில் பொறுப்பு வகித்த ஜீவிதா நாச்சியாரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் சசிகலாவின் அக்கா மகனும் அ.ம.மு.க தலைவருமான டி.டி.வி தினகரன். ஜெ. மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு இறங்கு முகம்தான். முதலில் அவர் முதலைமைச்சராக பரிந்துரைத்த ஒ.பன்னீர்செல்வம் அவருக்கெதிராகவே தர்ம யுத்தம் தொடங்கினார். அடுத்து முதல்வராக அவர் கை காட்டிய எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்தே ஒதுக்கினார். இப்போது தங்கை மகனும் எதிர்க்கத் தொடங்கி விட்டாரோ எனத் தோன்றுகிறது. ஆனால் இத்தனை களேபரத்துக்கு நடுவிலும் இன்னும், 'அதிமுகவின் பொதுச் செயலாளர் நானே' எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரது கட்டுப்பாட்டிலுள்ள ஜெயா டிவியைப் பொறுத்தவரை அதிமுகவின் பொதுச் செயலாளர் சின்னம்மாதான். பவர் சென்டர்! கட்சிக்குள் திரும்பி வர வழி இருக்கிறதா, அவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும்? - அ இ அதிமுக வின் சீனியர் ஒருவ‌ரிடம் பேசினோம். ''கட்சி அம்மாவின் தலைமையின் கீழ் வந்த புதுசுல கட்சிக்குள் வந்தாங்க. அம்மாவின் உதவியாளரா போயஸ் தோட்டத்தில் நுழைந்தவரை உயிர் தோழி ஆக்கியது காலம். விளைவு நாங்க சின்னம்மான்னு கூப்பிட்டோம். கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி அவங்க வச்சதுதான் சட்டம்ன்னு இருந்திச்சு. 'எம்.எல்.ஏ., எம்.பி. சீட் அமைச்சரவையில் யார் இருக்கணும், யார் இருக்க கூடாது' தொடங்கி, அரசு நிர்வாகத்தில் ஒப்பந்தப் பணிகள் வரை எல்லாத்தையும் தீர்மானிக்கிற‌ பவர் சென்டரா உருவெடுத்தாங்க. அம்மா சிறைக்குச் சென்ற சமயங்களில் முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றது தொடங்கி, பின்னாளில் தான் சிறைக்குச் சென்ற போது எடப்பாடி பழனிசாமி அந்தப் பொறுப்பை ஏற்றது வரை கட்சியில் இவங்க கை தான் ஓங்கியிருந்தது. ஆனால் எல்லாமே அம்மா இருந்த வரைக்கும்தான். அவங்க மறைந்த அடுத்த சில தினங்களில் கிடைத்த சிறைத் தண்டனை எல்லாத்தையும் ஒரே இரவில் காலி செய்துடுச்சு. சிறைவாசத்தை முடிச்சுட்டுத் திரும்பிய போது, எடப்பாடி பழனிசாமி பதவியை அவர்கிட்டத் தரத் தயாராக இல்லை. கட்சியின் முக்கால்வாசி நிர்வாகிகளும் தொண்டர்களும் இவங்களை மறந்தே போயிட்டாங்க‌. Edapadi palanisamy அம்மா மேல பாசம் இருந்தா... ஆனா அவங்களும் கொஞ்சமும் சலிப்படையாம, `கண்ணுக்கெட்டிய வரை எதிரி இல்லை என்கிறார் ஸ்டாலின், நான் ஒருத்தி இருக்கறதையே மறந்துட்டு'ன்னு பேசிட்டிருக்கிறார். தினகரனைப் பொறூத்தவரை தனிக்கட்சி தொடங்கிட்டதால தனக்குப் போட்டியா வர மாட்டார்ன்னு அவரை தே ஜ கூட்டணியில சேர்த்துக்க சம்மதிச்சிட்டார் எடப்பாடியார். சசிகலாவும் பன்னீரும் அதிமுகவையே குறி வைப்பதால்தான் அவங்க ரெண்டு பேர் விஷயத்துல கறாரா இருக்கிறார்னு தோணுது. 'கட்சியில் பிளவு, ஒன்றிணைக்கும் முயற்சி'ங்கிற பேச்சுகளையெல்லாம் பழனிசாமி விரும்பலை. அதேநேரம் பழனிசாமி தலைமையை ஏத்து அதிமுகவுல அந்தம்மா சேருவாங்களான்னும் சொல்ல முடியலை. தேர்தல் தேதி அறிவிக்கறதுக்குள் ஏதாவதொரு முடிவை எடுத்தாக வேண்டிய சூழல்ல இருக்கிற அவங்க என்ன செய்யப் போறாங்கனு யாருக்கும் தெரியலை. எங்களைக் கேட்டால், எந்த முடிவானாலும் அம்மா மீது உண்மையான அன்பு வச்சிருந்தவங்களா இருந்தா, அம்மா கட்டிக் காத்த கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கணும்னு எதிர்பார்க்கிறோம்' என்கிறார் அவர். தினகரன் - சசிகலா விடாது கட்சி! மன்னார்குடி குடும்பத்தினருக்கு நெருக்கமான முன்னாள் பத்திரிகையாளர் ஒருவரிட‌ம் பேசிய போது, 'பன்னீர் செல்வம் மாதிரில்லாம் அந்தம்மா எந்தக் காலத்துலயும் கட்சிக்கு எதிரா எந்தவொரு பேச்சையும் பேச மாட்டாங்க. விடாது கருப்புனு சொல்வாங்களே, அதேபோல அவங்களை விடாது கட்சி. காரணம், அவங்களால அந்தக் கட்சிக்கு எதிரா சிந்திக்க கூட முடியாது. அதேபோல அரசியலை விட்டு விலகற முடிவையும் எடுக்க மாட்டாங்க. அதனால திமுக பக்கமோ விஜய் கட்சி பக்கமோ போக வாய்ப்பே இல்லை. தே.ஜ கூட்டணியில இடம் பிடிக்க முயற்சி செய்வாங்க, அல்லது எதுவும் நடக்கலைன்னா கொஞ்சம் பொறுமை காக்கலாம்னு தற்காலிகமா வருகிற தேர்தல்ல எந்தவித பங்களிப்பும் செய்யாம ஒதுங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கு' என்கிறார் அவர்.

விகடன் 8 Feb 2026 7:47 am

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் […]

அதிரடி 8 Feb 2026 7:19 am

கொழும்பு–மட்டக்களப்பு வீதியில் விபத்து ; வயோதிபர் உயிரிழப்பு

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் முச்சக்கரவண்டியில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த வயோதிபர் மீதே முச்சக்கரவண்டி மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதேநேரம், விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபரைக் கைது செய்ய அவிசாவளை பொலிஸார் […]

அதிரடி 8 Feb 2026 7:16 am

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: செம்பியன்பற்று பற்றைக்காட்டில் மோட்டார் குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆடுகளை. மேய்க்க சென்ற வேளை பற்றைக்காட்டினுள் மோட்டார் குண்டை அடையாளம் கண்ட நிலையில் அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், மோட்டார் குண்டை அகற்ற கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியை பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிரடி 8 Feb 2026 7:14 am

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

Doctor Vikatan: காலை உணவு சாப்பிட வேண்டியது மிகமிக அவசியம் என்று முன்பெல்லாம் வலியுறுத்தப்பட்டது. இப்போது சிலர், அப்படியெல்லாம் இல்லை, காலை உணவைத் தவிர்த்தாலும் பிரச்னையில்லை என்று சொல்கிறார்கள். பசித்தாலும் பசிக்காவிட்டாலும் காலை உணவைச் சாப்பிட்டே ஆக வேண்டுமா.... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்.   சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். தூங்கி எழுந்த பிறகு சிறிது நேரத்தில் நீங்கள் எதையும் சாப்பிடவில்லை என்றால் உங்கள் வளர்சிதை மாற்றச் செயல்பாடு தாமதமாகும். நீங்கள் சாப்பிடும்வரை, உங்கள் உடலிலுள்ள கொழுப்பு மற்றும் ஆற்றலைப் பாதுகாக்கும்படி மூளைக்கு உடல் தகவல் அனுப்பும்.  ஒருநாளைக்கான மொத்த கலோரி தேவை என்பது நபருக்கு நபர் வேறுபடும். நாள் முழுவதும் கண்ட கண்ட நேரத்துக்குச் சாப்பிடுவது என்ற பழக்கம் தொடரும் பட்சத்தில் அது வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவில் பாதிக்கலாம். காலை உணவு அவசியம் சாப்பிட வேண்டுமா, தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா என்பது சம்பந்தப்பட்ட நபரின் வயதையும் தேவையையும் பொறுத்தது. பள்ளிக்குச் செல்லும் குழந்தையாகவோ, கல்லூரி செல்லும் டீன் ஏஜராகவோ அல்லது கர்ப்பிணியாகவோ இருந்தால் காலை உணவைத் தவிர்ப்பது சரியானதல்ல. வளரும் பருவத்தில் உள்ள இவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான தேவைகளுக்கு ஊட்டச்சத்துகள் அவசியம்.  மட்டுமன்றி எடை குறைவான குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், உடலளவில் மிகவும் ஆக்டிவ்வாக வேலை செய்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உணவுக்குப் பிறகு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளோர், ரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் போன்றோர் கட்டாயம் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.  காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற 'லைட்'டான உணவுகளை சாப்பிடலாம். Doctor Vikatan: வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் வெயிட்லாஸ் ஆகுமா? எனவே. காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற 'லைட்'டான உணவுகளைச் சாப்பிடலாம்.  அதுவே ஒரு நபர், எடைக்குறைப்பு முயற்சிக்காக காலை உணவைத் தவிர்க்க நினைக்கிறார் என்றால், அவர் தன்னிச்சையாக அந்த முடிவை எடுப்பது சரியாக இருக்காது. ஊட்டச்சத்து ஆலோசகரிடம் பேசி, அவருக்கேற்ற உணவுமுறையைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். சிலர் காலையில் நேரமில்லை என்றோ, பசியில்லை என்றோ சாப்பிடுவதைத் தவிர்த்திருப்பார்கள். ஆனால், மதிய உணவுக்கு முன்பே, பசி எடுத்து, நொறுக்குத்தீனிகளைத் தேடிச் சாப்பிடுவார்கள். இது ஆரோக்கியமற்றது.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 8 Feb 2026 7:00 am

பராக் ஒபாமா, மிச்செல் ஒபாமா தொடர்பில் வீடியோ ; எல்லைமீறி வாங்கிக்கட்டிய ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மிச்செல் ஒபாமாவை அவமதிப்பது போல், குரங்குகளை போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு அந்நாட்டில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்ததை விமர்சனம் செய்திருந்தார். ஜோ பைடனையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில், தனது ‘ட்ரூத் ‘ சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை ட்ரம்ப் வெளியிட்டு […]

அதிரடி 8 Feb 2026 6:35 am

யூன் மாதத்திற்கு போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா காலக்கெடு!

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் யூன் மாத காலக்கெடுவை வழங்கியுள்ளது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்தார். எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஒரே இரவில் ரஷ்ய தாக்குதல்களைத் தொடர்ந்து அணு மின் நிலையங்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பின்னர் அவரது கருத்துக்கள் வந்துள்ளன. யூன் மாத காலக்கெடு பூர்த்தி செய்யப்படாவிட்டால், டிரம்ப் நிர்வாகம் அதை நிறைவேற்ற இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கும் என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார். இந்த கோடையின் தொடக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா முன்மொழிகிறது. மேலும் இந்த அட்டவணையின்படி அழுத்தம் கொடுப்பார்கள் என்று அவர் கூறினார். அடுத்த சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் தங்கள் நாட்டில் முதல் முறையாக நடத்த அமெரிக்கா முன்மொழிந்ததாகவும், அநேகமாக மியாமியில் நடத்தப்படும் என்றும், உக்ரைனின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

பதிவு 8 Feb 2026 6:25 am

சென்னை சென்ட்ரல் டவர் எப்போது திறக்கப்படும்? மெட்ரோ அதிகாரிகள் சொன்ன தகவல்!

சென்னை சென்ட்ரல் டவர் எப்போது திறக்கப்படும்? என்று மெட்ரோ அதிகாரிகள் சொன்ன தகவலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சமயம் 8 Feb 2026 6:17 am

இத்தாலி ஒலிம்பிக் கிராமம் அருகே மோதல்களில் முடிந்தது போராட்டம்

இத்தாலியில் உள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில், மிலனில் நேற்று சனிக்கிழமை அமைதியான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10,000 க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் ஒலிம்பிக் கிராமத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அமைதியான நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னர் பெருமளவு போராட்டக்காரர்கள் வெளியேறினர். அங்கிருந்து ஒரு சிறிய குழு காவல்துறையினருடன் வன்முறை மோதல்களில் ஈடுபட்டது. அமைதியான பேரணியைத் தொடர்ந்து, போலீசார் தடியடி, தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொடங்கிய மிலன் கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்கின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர். கோர்டினாவில் புதிய பாப்ஸ்லெட் ஓட்டத்தை உருவாக்க வெட்டப்பட்ட மரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பதாதைகைளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துச் சென்றனர். நகரங்களைத் திரும்பப் பெறுவோம், மலைகளை விடுவிப்போம் என்று கொட்டொலிகளை போராட்டக்காரர்கள் எழுப்பினர். விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) நிறுவன அதிகாரிகள் இருந்ததைக் கருத்தில் கொண்டும் இந்த எதிர்ப்பு ஓரளவுக்கு இயக்கப்பட்டது. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட அதிகாரிகளைப் பாதுகாக்கும் பணி ICE அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் இத்தாலி சுமார் 6,000 பாதுகாப்புப் பணியாளர்களை நிறுத்தியுள்ளது.

பதிவு 8 Feb 2026 6:10 am

பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 9 முதல் 15 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 8 Feb 2026 6:00 am

வங்காளதேசத்தில் சில நாட்களில் பொது தேர்தல்…திடீரென பரவிய வன்முறை; 23 பேர் காயம்

டாக்கா, வங்காளதேசத்தில் 2024-ம் ஆண்டு மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின்னர், இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். அந்நாட்டில், வருகிற 12-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தலைநகர் டாக்காவில் இன்குலாப் மஞ்ச் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 2025-ம் ஆண்டு டிசம்பர் மத்தியில் பல்தன் பகுதியில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த அமைப்பின் தலைவரான […]

அதிரடி 8 Feb 2026 3:30 am

ஈரானின் கடல்பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பல்கள்

ஈரானின் கடல்பகுதியில் எண்ணெய் கடத்தியதாகக் கூறி 2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை அந்நாட்டுப் படைகள் சிறைப்பிடித்துள்ளன. ஈரானின் ஃபார்சி தீவின் அருகில் டீசல் உள்பட சுமார் 10 லட்சம் லிட்டர் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற 2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, எண்ணெய் கப்பல்கள் புஷேர் நகரத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும், அந்தக் கப்பல்களில் இருந்த 15 பணியாளர்கள் சட்டத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளதாகவும், ஈரானின் புரட்சிகர காவல்படையின் அதிகாரி ஜெனரல். ஹெய்தார் ஹோன்ரியன் மொஜாராட் தெரிவித்துள்ளார். இருப்பினும், […]

அதிரடி 8 Feb 2026 1:30 am

'கெத்து'சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! - முதல் போட்டியை எப்படி வென்றது இந்தியா?

டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டமென்றாலும் போட்டி இந்தியா vs இந்தியா என்பதைப் போன்றே இருந்தது. அமெரிக்க அணியில் அத்தனை இந்தியர்கள். பலருக்கும் மும்பைதான் சொந்த ஊர். வான்கடேவில்தான் கிரிக்கெட்டே பயின்றிருக்கிறார்கள். அதனால்தானா என்னவோ இந்திய அணியை அத்தனை எளிதாக வெல்ல விடவில்லை. இயன்றளவுக்கு சவால் அளித்தார்கள். Ind vs USA இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமாரின் அட்டகாசமான இன்னிங்ஸ் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது. டாஸை அமெரிக்க கேப்டன் மோனாங் படேல்தான் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பிட்ச் கொஞ்சம் மெதுவானதாக தெரிந்ததாலும், போகப் போக காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கும் என்பதாலும் இந்த முடிவை எடுத்திருந்தார். இது மிகச்சரியான திட்டமாகவே இருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 15 ஓவர்களுக்கு திணறவே செய்தது. 'இது 180 ரன்களை எடுப்பதற்கான பிட்ச் இல்லை. இது 140 ரன்களுக்கான பிட்ச். அதை உணர்ந்துதான் கடைசி வரை நின்று ஆடினேன்' என்றார். சூர்யாவின் இந்த புரிதல் இந்திய அணியின் பல பேட்டர்களுக்கும் இல்லை. Ishan Kishan இரண்டாவது ஓவரிலயே அபிஷேக் சர்மா அலிகானின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆனார். கிட்டத்தட்ட பவர்ப்ளே முடியும் வரை இந்திய அணி இந்த பிட்ச் குறித்து சரியாக புரிந்துகொண்டதை போல தெரியவில்லை. எல்லா பேட்டர்களிடமும் ஒருவித வேகமும் அவசரமும் தெரிந்தது. குறிப்பாக, 6 வது ஓவரில் சாக்விக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷான் கிஷான், திலக் வர்மா, சிவம் துபே என எல்லாமே முக்கியமான விக்கெட்டுகள். நல்ல லைன் & லெந்தில் வேகத்தை முழுமையாக குறைத்தும் க்ராஸ் சீமாகவும் சாக்விக் வீசிய பந்துகளை இவர்களால் சரியாக கனெக்ட்டே செய்ய முடியவில்லை. அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். இந்த ஒரு ஓவர் அடுத்த 45 நிமிடங்களுக்கு போட்டி அமெரிக்காவின் கையில் இருக்க காரணமாக அமைந்தது 6 வது ஓவரில்தான் சூர்யகுமார் உள்ளே வந்தார். பவர்ப்ளே முடிகையில் இந்திய அணியின் ஸ்கோர் 46-4. ரிங்கு சிங் நம்பர் 6 இல் வந்தார். ஹர்மீத் சிங், மோசின் என ஸ்பின்னர்கள் கைக்கு பந்து சென்றது. பிட்ச் மெதுவாக இருந்ததால் இருவராலுமே பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. சூர்யாவால் அவரின் வழக்கமான 360* ஷாட்களையும் ஆட முடியவில்லை. ஒரு கட்டத்தில் 22 பந்துகளில் 21 ரன்கள் எனும் நிலையில் சூர்யா இருந்தார். ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஸ்பின்னர்கள் மோசின் மற்றும் ஹர்மித்தின் ஸ்பின்னில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆகினர். ஒரு கட்டத்தில் இந்திய 77-6 என்ற நிலையில் இருந்தது. SKY . 'டி20 உலகக்கோப்பையின் மிகக் குறைந்த ஸ்கோரை இந்திய அணி கடந்துவிட்டது' என்று ஹர்ஷாவும், 'இந்தியாவின் டெயில் எண்டர்களிடம் கிரிக்கெட் பேட் இருக்கிறதா என்றே தெரியவில்லை. வருண் சக்கரவர்த்தியெல்லாம் 33 போட்டிகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்' என்று கவாஸ்கரும் கமெண்ட்ரியில் கிலி ஏற்றிக் கொண்டிருந்தனர். மேட்ச் அப்செட்டை நோக்கி செல்லும் தோற்றம் உண்டானது. ஆனால், அதுவரை கட்டுக்கோப்பாக செய்த அத்தனையையும் கடைசி 5 ஓவர்களில் அமெரிக்க அணி கோட்டைவிட்டது. நீண்ட நேரம் க்ரீஸில் இருந்தது சூர்யாவுக்கு தெம்பை கொடுத்திருந்தது. நிதானமாக பந்தை கடைசி வரை பார்த்து டைம் செய்தார். சிக்சர்கள் பறக்க தொடங்கின. நேத்ராவால்கரை குறிவைத்து அடித்தார். அவர் வீசிய 16 மற்றும் 20 வது ஓவர்களில் தலா 21 ரன்களை அடித்தார். சூர்யாவின் ருத்ரதாண்டவம் 140 யை கடக்கவே சிரமப்படும் என நினைத்த இந்திய அணியை 160+ க்கு எடுத்துச் சென்றது. சூர்யா 49 பந்துகளில் 84 ரன்களை எடுத்திருந்தார். India அமெரிக்காவுக்கு 162 ரன்கள் டார்கெட். நிதானமாக ஆடினால் எட்டக்கூடிய டார்கெட்தான் என்பதால் இந்திய அணியின் மீதே பிரஷர் இருந்தது. ஆனால், பவர்ப்ளேயிலேயே இந்திய அணி ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. சிராஜூம் அர்ஷ்தீப் சிங்கும் டைட்டான லைன் & லெந்தில் வீசி முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். கேப்டன் மோனாங் படேல், கோஸ், முக்காமலா என முக்கிய பேட்டர்கள் காலி. இதன்பிறகு கூட்டணி சேர்ந்த மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி இருவரும்தான் இந்திய அணிக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்தனர். பார்ட்னர்ஷிப்தான் முக்கியம் என்று முடிவு செய்து நின்று ஆடினர். வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் விரித்த வலைகளில் சிக்காமல் திறம்பட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தனர். இருவரும் இணைந்து 58 ரன்களை சேர்த்தனர். இந்த கூட்டணி இன்னும் சில ஓவர்களுக்கு நின்றிருந்தால் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக போயிருக்கும். 12வது ஓவரில் வருணின் பந்தில் மிலிந்த் மிக அஜாக்கிரதையாக ஸ்டம்பிங் ஆனார். இந்த ஸ்டம்பிங் அமெரிக்க அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்கு வித்திட்டது. அக்சர் படேலும் 16 வது ஓவரில் கிருஷ்ணமூர்த்தியையும் ஹர்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். சுபம் என்கிற பேட்டர் மட்டும் கடைசி வரை நின்று சில சிக்சர்களை பறக்கவிட்டு தோல்வியின் தூரத்தை குறைத்துக் கொடுத்தார். Axar இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சூர்யா 'ஆட்டநாயகன்'. 'என்னோட சொந்த ஊரு சொந்த மைதானம். எப்படி ஆடணும்னு எனக்கு தெரியும்' என கெத்தாகவும் பேசியிருந்தார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியை எந்த சிக்கலும் இல்லாமல் வெல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்திருக்கும். இந்தியாவின் எண்ணத்திற்கு மாறாக செயல்பட்டு போட்டியில் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது அமெரிக்கா. இந்தத் தொடரில் எதிர்பாரா ட்விஸ்ட்டுகளை சிறிய அணிகள் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

விகடன் 8 Feb 2026 12:42 am

ரஷ்ய இராணுவ உளவுத்துறை துணைத்தலைவர் மீது துப்பாக்கி சூடு

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 443வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க இரு தரப்பும் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. […]

அதிரடி 8 Feb 2026 12:30 am

பசிபிக் பெருங்கடலில் படகில் 2 பேரை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, போதை பொருள் கடத்தலை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ராணுவம் வெளியிட்ட செய்தியில், போதை பொருள் கடத்தல் வழிகளை நன்கு அறிந்து, அதன் வழியே படகில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 2 போதை பொருள் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி உள்ளோம். இதனை அமெரிக்க பாதுகாப்பு படையின் ஜெனரல் பிரான்சிஸ் எல். டோனோவான் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த […]

அதிரடி 8 Feb 2026 12:30 am

நிபா வைரஸ் ; வரும்முன் காப்பதே சிறந்தது; ஆசிய விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

(சரண்யா பிரதாப்) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவின் சில நாடுகளில் விமான நிலையங்களில் கடுமையான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, தாய்லாந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூர், நேபாளம், ஹொங்கொங் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள், வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் விமான நிலையங்களில் சுகாதார கண்காணிப்பை அதிகரித்துள்ளன. மேற்கு வங்காள மாநிலத்தின் புறநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணியாற்றி வந்த இரண்டு தாதியர்களுக்கு, கடந்த டிசம்பர் மாத இறுதியில் […]

அதிரடி 8 Feb 2026 12:30 am

பாண் தயாரிப்புகளில்  களைநாசினியின் (Weed Killer) தாக்கம் அதிகம்

பிரபலமான பாண் (Bread) மற்றும் மாவுப் பொருட்களில் களைநாசினியின் (Weed Killer) தாக்கம் அதிகளவில் காணப்படுவதாக வெளிவந்துள்ள புதிய… The post பாண் தயாரிப்புகளில் களைநாசினியின் (Weed Killer) தாக்கம் அதிகம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 12:00 am

ஒரே நாளில் 777 சந்தேகநபர்கள் அதிரடியாக கைது

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல் மற்றும் அதற்கான தேவையைக் குறைக்கும் நோக்கில் இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “முழு நாடும் ஒன்றாக” தேசிய விசேட நடவடிக்கையின் கீழ், நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 777 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது பொலிஸாரால் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹெரோயின் 434 கிராம் ஐஸ் (Ice), 477 கிராம் கொக்கெய்ன் 2 கிராம் 536 மில்லி கிராம், கஞ்சா 5 கிலோ கிராம் 658 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளன. […]

அதிரடி 7 Feb 2026 11:30 pm

️ அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு விதிகளை வலுப்படுத்த  புதிய உத்தரவு

அமெரிக்காவின் குடிவரவுத் திரையிடல் (Immigration Screening), சரிபார்ப்பு (Vetting) மற்றும் எல்லைப் பாதுகாப்பை (Border Enforcement) மேலும் பலப்படுத்துவதற்காக… The post ️ அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு விதிகளை வலுப்படுத்த புதிய உத்தரவு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 11:20 pm

நேபாளத்தில் பேருந்து விபத்து 13 போ் உயிரிழப்பு

மேற்கு நேபாளத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 போ் உயிரிழந்தனா். சுதூா்பாச்சிம் மாகாணத்தின் பைதாடி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்தது. பூா்ச்சௌடி எனும் இடத்திலிருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து, மலைப்பாதையில் பயணித்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமாா் 200 மீட்டா் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவலறிந்த நேபாள ஆயுதப் படையினா், காவல் துறையினா் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். சம்பவ […]

அதிரடி 7 Feb 2026 10:30 pm

வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கை மின்சார சபை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிறிய நீர் மின் நிலையங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதற்கான கொள்முதல் விலையை குறைத்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படாத நிலையில், இது மின் நிலையங்களை உருவாக்க வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. 150,000 பேருக்கு கடன் சூரிய மின்சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை சமீபத்தில் ரூ. […]

அதிரடி 7 Feb 2026 10:30 pm

அரேபியக் கடலில் அமெரிக்க கடற்படையின் பிரமாண்டமான அட்டகாச அணிவகுப்பு!

அரேபியக் கடலில் இன்று The Abraham Lincoln Carrier Strike Group ஒருங்கிணைந்த கடற்படை நடவடிக்கையில் பங்கேற்றது. இந்தப்… The post அரேபியக் கடலில் அமெரிக்க கடற்படையின் பிரமாண்டமான அட்டகாச அணிவகுப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 10:27 pm

வரலாற்றுச் சாதனை: ரஷ்யாவின் தங்க கையிருப்பு $400 பில்லியனை கடந்தது!

உலக வரலாற்றில் முதன்முறையாக, ரஷ்யாவின் தங்க கையிருப்பு மதிப்பு $400,000,000,000 (400 பில்லியன் அமெரிக்க டொலர்) ஐ கடந்துள்ளது.… The post வரலாற்றுச் சாதனை: ரஷ்யாவின் தங்க கையிருப்பு $400 பில்லியனை கடந்தது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 10:11 pm

தவெக கொண்டு வந்த புது ஐடியா.. இனி QR Code மூலமாகவும் பெறலாம்.. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், க்யூ ஆர் கோடு-ஐ பயன்படுத்தி, விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

சமயம் 7 Feb 2026 9:56 pm