டார்க் மேட்டர் மர்மத்தை விளக்கும் ஆய்வு.. விண்மீன் பரிணாம வளர்ச்சி.. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
விண்மீன் திரள்களைச் சுற்றியுள்ள டார்க் மேட்டர் ஹாலோக்களின் நிறையை கணக்கிடுவதில் புதிய அணுகுமுறை வந்துள்ளது. இதுவரை ஆக்சிஜனை வைத்து கணக்கிட்டது தவறு என்று ராமன் ஆய்வு மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கட்டுநாயக்காவில் ரூ. 1.5 கோடி பெறுமதியான பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது!
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகள் மற்றும் நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற இரண்டு இந்திய இளைஞர்கள்… The post கட்டுநாயக்காவில் ரூ. 1.5 கோடி பெறுமதியான பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது! appeared first on Global Tamil News .
ஆந்திரா –ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்: அம்பலம்!
ஆந்திரா – ஒடிசா எல்லைப் பகுதியைப் பயன்படுத்தி இலங்கைக்கு முன்னெடுக்கப்படும் பாரிய கஞ்சா கடத்தல் வலைப்பின்னல் ஒன்றை இந்தியப்… The post ஆந்திரா – ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்: அம்பலம்! appeared first on Global Tamil News .
அவசரகால நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது
பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்காக இந்த பொது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 17 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலூசிஸ்தானின் கோலு, கலாட் மற்றும் பஞ்ச்கூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த டிச.24 மற்றும் டிச.26 ஆகிய நாள்களில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையில், அப்பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பஞ்ச்கூர் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளும், கோலுவில் 5 பயங்கரவாதிகளும், கலாட் மாவட்டத்தில் 8 […]
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி.. சூடு பிடிக்கும் கள நிலவரம்.. மக்கள் எதிர்பாரப்பு என்ன?
உத்திரமேரூர் தொகுதியில் திமுக நலத்திட்டங்கள் மூலம் மக்கள் நல்லிணக்கத்தை கண்டு உள்ளனர். ஆனால் அடிப்படை வசதி பற்றிய குறைபாடுகள் அவர்களின் மனதை சங்கடமூட்டுகின்றன. அதிமுக தனது முந்தைய சக்தியை மீட்டுப் பெற முயற்சிக்கிறது.
நிவாரணப் பொருட்கள் திருட்டு ; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவிருந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய 55 பொதிகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் – கற்பிட்டி மண்டலகுடா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விசாரணைகள் ஆரம்பம் இந்த விடயம் தொடர்பில், மண்டலகுடா கிராம உத்தியோகத்தர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அனர்த்தங்களினால் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விநியோகிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய 181 பொதிகள் அந்த பகுதியிலுள்ள […]
`மலையில் தஞ்சம்' - பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது
தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் வைத்து தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக தென்காசிக்கு கொண்டு வரப்பட்ட பாலமுருகனை காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மீது நெல்லை, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. கடையம் காவல் நிலையத்தில் மட்டும் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பாலமுருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து திருச்சூர் சிறையில் இருந்த பாலமுருகனை கடந்த நவம்பர் மாதம் அருப்புக்கோட்டை காவல்துறையினர் அழைத்துச் சென்று, விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் திருச்சூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறை வளாகத்தில் இருந்து பாலமுருகன் தப்பிச் சென்றார். இதையடுத்து பாலமுருகனை பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடையம் ராமநதி அணை அருகே மலைப்பொத்தை பகுதியில் பாலமுருகன் பதுங்கியிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மலையில் ஏறி தேட முயன்றனர். தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அப்போது அவர்கள் மலையின் செங்குத்தான பகுதியில் சிக்கித் தவித்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால் பாலமுருகன் அங்கிருந்து தப்பிச் சென்று சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கடந்த வாரம் பதுங்கியிருந்தார். அங்கும் அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், பாலமுருகனின் மனைவி ஜோஸ்ஃபினா மகள்கள் இருவருடன் விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஜோஸ்ஃபினா உயிரிழந்தார். மகள்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இறந்த ஜோஸ்ஃபினாவின் உடலையும் இதுவரை அவரது உறவினர்கள் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாலமுருகன் மற்றும் அவரது தம்பி மகேஷ் ஆகியோர் திருச்சியில் பதுங்கியிருப்பதாக தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தென்காசி மாவட்ட நீதிமன்றம் உடனடியாக அங்கு விரைந்த நான்கு தனிப்படை காவலர்கள், பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி பாலமுருகன் மற்றும் அவரது தம்பி மகேஷ் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து இரவோடு இரவாக இருவரையும் தென்காசிக்கு அழைத்து வந்த காவல்துறையினர், தென்காசி நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் நீதி விசாரணை வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். பல மாதங்களாக தேடப்பட்டு வந்த இந்த பிரபல ரவுடியின் கைது, தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
2026-இல் ஆசியாவின் சிறந்த 5 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கைத் தெரிவு!
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மற்றுமொரு மகுடம்! புகழ்பெற்ற U.S. News & World Report வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின்… The post 2026-இல் ஆசியாவின் சிறந்த 5 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கைத் தெரிவு! appeared first on Global Tamil News .
Year Ender 2025: இந்திய விமானத் துறையின் கரும்புள்ளி.. அகமதாபாத் விமான விபத்து!
2025 ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துக்கு ஒரு கனமான சோதனை ஆண்டு என்று கூறலாம். குஜராத்தில் நடந்த விமான விபத்து, விமானத் துறையில் கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.
தமிழர் பகுதியின் பல கிராமங்களை அச்சுறுத்தும் காட்டு யானை கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம், போன்ற பல பிரதேசங்களில் நீண்ட நாட்களாக காட்டு யானைகள் தொல்லைகளும் அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியிலுள்ள மக்களின் பயன்தரும் தென்னை, வாழை, உள்ளிட்ட பயிரினங்களையும் காட்டுயானைகள் துவம்சம் செய்து வருவதாகவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மக்களின் கோரிக்கை இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை (27) அப்பகுதியைச் சூழ சுமார் இருபதிற்கு மேற்பட்ட காட்டுயானைகள் உலாவித்திரிந்ததனால் […]
மூடப்படுகின்றது அமெரிக்காவின் நீண்ட கால ஆலை; பெருமளவானோர் வேலை இழப்பு
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில், சுமார் 35 ஆண்டுகாலமாக இயங்கி வந்த டைசன் ஃபுட்ஸ் (Tyson Foods) மாட்டிறைச்சி ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி முடிவினால் சுமார் 3,200 தொழிலாளர்கள் நேரடியாக வேலை இழக்கவுள்ளனர், இது அந்தச் சிறிய நகரத்தின் பொருளாதாரத்தை அடியோடு பாதித்துள்ளது. பெருமளவானோர் வேலை இழப்பு சுமார் 11,000 மக்கள் வசிக்கும் இந்த நகரில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்த ஆலையை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளனர். கால்நடைத் […]
உலகிலேயே குடிநீரை விட பீர் விலை எந்த நாட்டில் குறைவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்த செய்தியில் காண்போம்
நாடொன்றில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து; பலர் கவலைக்கிடம்
ஜப்பானின் கன்மா மாகாணத்தில் உள்ள மினகாமி பகுதியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானில் புத்தாண்டு விடுமுறைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 26 பேரில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடம் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் […]
கண்டி மேயரின் அதிரடி ; புதிய வருடத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
கண்டி பெருநகர எல்லைக்குள் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத தெரு வியாபாரிகளையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பிறகு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டி மேயர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மாநகர சபையில் கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், தெரு வியாபாரிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, அவர்களின் கோரிக்கையின் பேரில் கருணை அடிப்படையில் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அவர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். தெரு வியாபாரிகள நகரத்தில் […]
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கான ஆங்கில ஆய்வு மாநாடு
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவினரால் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள ஆங்கில ஆசிரியர் மாநாடு – 2025 எதிர்வரும் 31ஆம் திகதி, புதன்கிழமை காலை 8.00 மணி முதல் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் சி. கமலராஜன் மற்றும் ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகள் பிரிவின் இயக்குநரும், பிரதிக்கல்விப் பணிப்பாளருமான பி. என். சுதர்சன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் முதன்மை […]
தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி.. விஜயகாந்த் நினைவு நாளில் பிரமேலதா தகவல்!
தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று விஜயகாந்த் நினைவு நாளில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
கட்டுநாயக்க வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி, இன்று (28) தோஹாவிலிருந்து விமான நிலைய முகாமையாளருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முழுமையான சோதனைகளில் விமானத்தில் எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார். கத்தார், தோஹாவிலிருந்து வந்த கத்தார் ஏர்வேஸ் Q.R.-664 விமானம் இன்று காலை 08.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. போயிங் 787 ட்ரீம்லைனர் வகையைச் […]
சிஐடியின் கிடுக்குப் பிடியில் டக்ளஸ் தேவானந்தா ; தீவிரமாகும் விசாரணை
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. தடுப்புக்காவல் உத்தரவு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர […]
தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்! திருப்பரங்குன்றம் வழக்கு பற்றி ஜிஆர் சுவாமிநாதன் சூசக பேச்சு
தீபம் ஏற்றும் நாள் கூடிய விரைவில் வரும் என நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மறைமுகமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொங்கலுக்கு ரூ.5,000 கொடுங்கள்.. திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
டக்ளஸ் தேவானந்தாவிடம் இராணுவம் வழங்கிய 19 துப்பாக்கிகள் குறித்தும் தீவிர விசாரணை!
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய 19 துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு… The post டக்ளஸ் தேவானந்தாவிடம் இராணுவம் வழங்கிய 19 துப்பாக்கிகள் குறித்தும் தீவிர விசாரணை! appeared first on Global Tamil News .
யாழில் கைதான இந்தியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நேற்று (27) இரவு 9:45 மணியளவில் நெடுந்தீவு கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர். சட்ட நடவடிக்கை அதனைத் தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் பாரப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட […]
இந்தியா பெயர் கொண்ட அணியில் ஆடிய கபடி வீரருக்கு பாகிஸ்தான் தடை! - என்ன நடந்தது?
பஹ்ரைனில் தனியார் போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை காலவரையின்றி தடைசெய்து பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தான் வீரர் பஹ்ரைனில் 'ஜிசிசி கோப்பை' (GCC Cup) என்ற பெயரில் தனியார் கபடி தொடர் (டிச.16)நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் பெயரில் தனியார் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஒரு அணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த அணிக்காக பாகிஸ்தான் வீரர் உபைதுல்லா ராஜ்புத் களமிறங்கினார். அவர் இந்திய ஜெர்சி அணிந்து விளையாடிய புகைப்படங்களும், இந்தியக் கொடியை அசைப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு தடை செய்திருக்கிறது. பாகிஸ்தான் வீரர் தான் விளையாடப் போகும் அணி இந்திய அணி என்பது தனக்குத் தெரியாது என்றும், இது ஒரு தவறான புரிதல் என்றும் உபைதுல்லா ராஜ்புத் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியிருக்கும் உபைதுல்லா ராஜ்புத்,கடைசிவரை அவர்கள் அணிக்கு இந்திய அணியின் பெயர் சூட்டியது எனக்குத் தெரியாது, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன். கடந்த காலங்களில் தனியார் போட்டிகளில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு தனியார் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.
புதிய அரசமைப்பு உருவாக்கமும் மாகாண சபைக்கான தேர்தலும்காணாமலாக்கப்படும் தீர்வுகள்! பனங்காட்டான்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி 13ம் திருத்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமையை உருவாக்கிய இந்தியா இது விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்குமாயின், இவர்களுடன் தமி;ழர் தரப்பு பேச்சு நடத்துவதால் என்ன பயன்? பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வரையினானே என்று ஒவ்வோர் ஆண்டு நிறைவிலும், புத்தாண்டு பிறப்பிலும் நாம் கூறுவது வழமை. அரசியல் கருத்தாடல்கள், பத்தி எழுத்தாளர்கள் மறவாது இதனைச் சுட்டி விமர்சிப்பது ஆண்டாண்டுதோறும் இடம்பெறும். இதனை ஒரு முதுமொழியென்றும் கூறுவதுண்டு. பவுணந்தி முனிவர் கூறிய இந்த வாக்கியத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் வாழ்வில் எதனைத் தவிர்ப்பது, எது பொருந்திப் போகாதது, எதனை மேம்படுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற நியாயத்தை தெரிந்து கொள்ளலாம். இதில் முக்கியமானது அரசியல். அரசியலை ஆங்கிலத்தில் பொலிரிக்ஸ் என்பர். இது பொலிறிக்ஸ் என்ற பெயரிலிருந்து பெயர்ந்ததாகக் கூறுவர். பொலி என்றால் பல என்றும் றிக்ஸ் என்றால் தநதிரம், வஞ்சகம் என்றும் அகராதி அர்த்தம் சொல்கிறது. ஆக, ஏமாற்றுத்தனம், தந்திரப் போக்கு என்பவைகள் பொலிறிக்ஸின் ஆதாரங்கள் என்று கொள்ளப்படுகிறது. இதனை தங்கள் வாழ்வாகக் கொள்ளும் அரசியல்வாதிகள் யார் என்பதை இதனூடாக அறிந்து கொள்ளலாம். அரசியலும், அரசியல்வாதிகளும் பொதுவாழ்வில் பிரிக்க முடியாதவர்கள். இவர்களைப் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் மக்கள் வாழப் பழக வேண்டுமென்பதை, நம்ப நட நம்பி நடவாதே எனக் கொள்ளலாம். புதுவருடத்தில் எதிர்பார்ப்பவைகளை எழுத முனையும்போது ஒன்றே ஒன்று முதலில் வரும். அது கடந்தாண்டின் கடைசி வாரத்தில் அல்லது இந்த ஆண்டின் முதல்வாரத்தில் எழுதப்பட்ட விடயமாக இது இருக்கும். கடந்த வருட கடைசியில் இப்பத்தியை எழுதும்போது அநுர குமர திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் நூறு நாட்களின் மீள்பார்வையாக இருந்தது. ஆட்சித் தலைவர் ஒருவரின் ஆளுமையைத் தரிசிப்பதற்கு அவரது பதவிக்கால முதல் நூறு நாட்கள் போதாது. இருப்பினும், அவரது பாதை எதை நோக்கியதாக உள்ளதென்பதை ஓரளவு கண்டுகொள்ள இக்காலம் பயன்பட்டது. இவரது தேர்தல் கால மகுட வாசகமாக ஊழல் ஒழிப்பும், வறுமை ஒழிப்பும் அமைந்திருந்தன. இவரது தேசிய கொள்கையாக, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசியல் அமைப்பு, விரைவான மாகாண சபைத் தேர்தல் என்பவை இடம்பெற்றன. முன்னைய இரண்டும் நாடு முழுவதுக்குமானதாகவும், பின்னைய இரண்டும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகளாகவும் தோற்றம் காட்டின. முன்னைய ஆட்சிக் காலங்களில், முக்கியமாக ராஜபக்ச குடும்ப ஆட்சியின்போது உச்சத்தைத் தொட்ட ஊழலை ஒழிப்பதும், ஊழல்வாதிகளை அடையாளம் காண்பதுமாகக் காட்டி சட்டத்தின் முன் நிறுத்துவதே அநுர குமரவின் தலையாய செயற்பாடாக நம்பிக்கை தரப்பட்டது. ஊழல்வாதிகளால் முடக்கப்பட்ட கோடானுகோடி பணம் நாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் மேடைகளில் கூவிக்கூவி சொல்லப்பட்டது. கடந்த பதினைந்து மாத ஆட்சியில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காட்சி ஏற்படுத்தப்பட்டது. முன்னைய ஆட்சிக் காலங்களில் ஊழல், மோசடி, லஞ்சம் தொடர்பாக பலர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால், எவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட பணத்தில் ஒரு ரூபா கூட இன்னமும் மீட்கப்படவில்லை. இது தொடர்பாக எவர்மீதும் குற்றப்பத்திரிகையும் தாக்கலாகவில்லை. கொழும்பு சொகுசு வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்கு தமது மூட்டை முடிச்சுகளுடன் சென்ற மகிந்த ராஜபக்ச, நோயாளி என்ற பெயரில் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொழும்பு திரும்பி, இ;ப்போது கொழும்பில் குடியேறியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மகன் நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியலுக்கு இது தேவையாக உள்ளது. அதேசமயம், உகண்டாவில் பதுக்கப்பட்டதாக தேர்தல் காலங்களில் கூறிய பணத்தை மீட்டு வாருங்கள் என ஆட்சித் தரப்பைப் பார்த்து நாமல் நையாண்டிச் சவால் விடும் நிலைமை இன்று உருவாகியுள்ளது. அதேசமயம், அரசாங்க தரப்பிலும் பலர் மீது பல்வகையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் ஆதாரங்களோடும், அது இன்றியும் சுமத்தி வருகின்றனர். அநுர குமர அரசின் முதலாவது சபாநாயகரான அசோக ரண்வெல தேர்தல் காலத்தில் தமது கலாநிதி பட்டங்கள் பற்றி கூறியதை நிரூபிக்க முடியாததால் பதவி துறக்க நேர்ந்தது. வருமானத்துக்கு மேலதிகமாக சொத்துச் சேர்த்ததாக வணிகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரதியமைச்சர் அநுர ஜெயசேகர போர்க்காலக் குற்றங்களிலும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலிலும் சம்பந்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. எரிசக்தி அமைச்சர் குமர ஜெயக்கொடி முன்னர் உரக்கூட்டுத்தாபன தலைவராக இருந்தபோது அரசாங்கத்துக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீதும் எதிரணியினர் நாடாளுமன்றத்தில் குற்றங்களை முன்வைத்துள்ளனர். இவைகள் எதற்கும் ஆட்சித் தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை. நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவைகளை ஜனாதிபதி அநுர குமர கண்டுகொள்ளவும் இல்லை. மிக முக்கியமானதாக அறிவிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு பற்ற நம்பகமான பதில் அரச தரப்பில் காணப்படவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளின் பின்னரே புதிய அரசியலமைப்பு பற்றி நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேசிய மக்கள் சக்தியின் தாய்க் கட்சியான ஜே.வி.பி. இந்த வருட முற்பகுதியில் தெரிவித்திருந்தது. அப்படியானால் அந்த அறிவிப்பு வரவே இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கும் விடயத்தில் தமிழரசு கட்சி உட்பட அனேகமான எதிர்கட்சிகளும் குரலளவில் முனைப்புக் காட்டுகின்றன. ஆனால் இவர்களால் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாதுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்க அநுர அரசுக்கு வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இதற்கு ஏற்றதாக உள்ளது என்றும் சர்வதேச சிறுபான்மையினர் குழு வலியுறுத்தியுள்ளதாக இதனை எழுதும்போது ஒரு செய்தி வந்துள்ளது. வரவேற்க வேண்டிய அறிக்கை இது. ஆனால், யார் காதில் விழப்போகிறது? 1972ம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோதபாய ஆகிய அனைவருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தது. அநுர குமர மட்டும்தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றியதாக சொல்ல முடியாது. சிங்களத் தரப்பில் துணிச்சல் இருந்திருந்தால் 1972, 1978 ஆண்டுகளில் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டபோது இதனைச் செய்திருக்க முடியும். ஆனால், எல்லோருமே சிங்களத் தலைமைகளாகவும், சிங்களவர்களே ஆளும் இனமாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் ஆட்சி புரிந்ததால் இனப்பிரச்சனைக்கு தீர்வு இல்லாததாகவே போய்விட்டது. இறுதியாக, மாகாண சபைத் தேர்தலை பார்க்கலாம். இத்தேர்தலுக்கு நிதி ஒதுக்கிவிட்டு பின்னர் நிதி இல்லையென்று காரணம் கூறி தேர்தலை நடத்தாது விட்டவர் ரணில் விக்கிரமசிங்க. இப்போதைய ஆட்சியாளர்களுக்கும் நல்லதொரு வசதியான உதாரணம் கிடைத்துள்ளது. நாட்டை மீழெழுப்புவதற்கு மட்டுமே முக்கியத்துவம் என்று கூறி தேர்தலை காலவரையறையின்ற ஒத்தி வைக்கலாம். தேர்தல் நிச்சயம் நடைபெறுமென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கிளிப்பிள்ளைபோல சொல்லி வருகிறார்கள். 2026ல் இது நிச்சயம் நடைபெறுமென சில மாதங்களுக்கு முன்னர் சொல்லப்பட்டது.. டித்வா புயல் பேரிடரிலிருந்து நாட்டை மீழெழுப்ப வேண்டுமெனும் முக்கியத்துவம் இன்று முதன்மை பெற்றுள்ளது. இப்போதைக்கு மாகாண சபை தேர்தல் நடத்த முடியாதென்று கூறுவதற்கு ஆட்சித் தரப்புக்கு இது ஒரு நல்வாய்ப்பு. மக்கள் வாழ்வை புனரமைக்க சர்வதேசம் வழங்கும் நிதியுதவியை தேர்தல் நடத்துவதற்கு பயன்படுத்த முடியாதென ஒரேயடியாக தள்ளிவிடவும் ஆட்சியினர் முன்வரலாம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை தங்கள் இஷ்டப்படி முடிவு செய்து, அதனடிப்படையில் 13ம் திருத்தத்தை ஏற்படுத்தி, அதனூடாக மாகாண சபை முறைமையை அறிமுகம் செய்த இந்தியா இப்போது அதனை ஓரம் தள்ளிவிட்டதுபோல செயற்படுகிறது. தமி;ழர் தரப்பினரை சந்திக்கும்போது மட்டும் இது விடயத்தில் தாம் அக்கறை உள்ளவர்கள்போல காட்டிக்கொள்ளப்படுகிறது. அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய கூட்டணியும் சந்தித்த போது இவ்விடயத்தில் இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டுமென வாய் மூலமும் எழுத்து மூலமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் ஜெய்சங்கர் சரியான பதில் எதுவுமே கூறாது மழுப்பிவிட்டார். 2024ம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சந்திப்பில் தமி;ழர் பிரதிநிதிகளைப் பார்த்து இல்லாததை கேட்பதைவிட இருப்பவைகளை முழுமையாக பயன்படுத்துங்கள் என்று புரியும்படியான ஆலோசனையைக் கொடுத்தவர் இதே ஜெய்சங்கர். ஜனாதிபதி அநுரவைச் சந்தித்த இவர் இந்தியா இருக்க பயமேன் என்று கூறி 450 மில்லியனையும் இந்திய உதவியாக வழங்கிவிட்டு, தமிழர் பிரதிநிதிகளுக்கு பெப்பே காட்டிச் சென்றுவிட்டார். இவரைச் சநதித்த தமிழர் பிரதிநிதிகள், யாவும் அக்களத்தே விட்டு வெறுங்கையோடு ஷவீடு| திரும்பினர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்துக் களமாடிய ஜே.வி.பி.யின் பிரதிநிதியான அநுர குமர திஸ்ஸநாயக்க ஜனாதிபதியானதும் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியாவுக்கானது என்பதை நினைவில் கொண்டால் - பழையன கழிந்ததும் புதியன புகுந்ததும் புரியும்.
மும்பையில் புறாக்களுக்கு உணவளித்த தொழிலதிபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
மும்பை, மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் இயற்கையாகவே புறாக்கள் அதிகம் வசிக்கின்றன. இதனால் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு அருகே குவியும் நுாற்றுக்கணக்கான புறாக்களுக்கு அப்பகுதி மக்கள் உணவு வழங்குகின்றனர். இதனால், அப்பகுதியை சுற்றி வசிப்போருக்கு நுரையீரலை பாதிக்கும், ‘ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா’ தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதிகள், மும்பையில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்து உத்தரவிட்டனர். தடையை மீறி புறாக்களுக்கு உணவு […]
பிரித்தானியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட நபர்: கிடைத்த ஏமாற்றம்
பிரித்தானியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட ஒருவரை வசமாக ஏமாற்றியுள்ளார் ஒரு நபர். பிரித்தானியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட நபர் இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த பலிந்தர் சிங் (34), பிரித்தானியாவுக்கு பயணிக்க ஆசைப்பட்டுள்ளார். அவரை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்த கௌரவ் என்னும் நபர், அவரிடம் 2.4 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். சொன்னதுபோலவே இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, பிரித்தானியா செல்வதற்கான விமான டிக்கெட்கள் மற்றும் அமெரிக்க டொலர்களையும் சிங்கிடம் கொடுத்துள்ளார் கௌரவ். ஆனால், விமானம் ஏற செல்லும்போதுதான் சிங்குக்கு […]
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனவரி 9 வரை விளக்கமறியலில்!
“குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவால் தமக்கு வழங்கப்பட்டதாக, மறைந்த பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘மாகந்துரே மதுஷின்’ நெருங்கிய… The post முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனவரி 9 வரை விளக்கமறியலில்! appeared first on Global Tamil News .
டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டதுப்பாக்கிகளின் 19 துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணை
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
09ஆம் திகதி வரையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். அதனை அடுத்து டக்ளஸ் தேவானந்தவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார். அதனை அடுத்து அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாலை மீண்டும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழில் நீண்ட காலமாக பெண் அரங்கேற்றிய மோசமான செயல் அம்பலம் ; அதிர வைத்த பொலிஸார்
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் […]
'நிறைவான படம், திரையரங்குகள் நிறையட்டும்!' - 'சிறை'படத்துக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!
விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த 'சிறை' திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சிறை படத்தில்... 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் 'சிறை' படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும். மாரி செல்வராஜ் அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது. தனது முதல் படத்திலேயே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்ஷய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன் . இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும் என்று பாராட்டியிருக்கிறார்.
டிச.31-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. தலைமை அறிவிப்பு.. முடக்கப்படும் தேர்தல் பணிகள்!
வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்து உள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்! –வெனிசுவேலா அதிபர் அறிவிப்பு!
வெனிசுவேலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அமெரிக்காவுடன், பேச்சுவார்த்தைக்குத் தயார் என அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். போதைப் பொருள் பயங்கரவாதத்தைத் தடுப்பதாகக் குறிப்பிட்டு, கடந்த சில மாதங்களாக வெனிசுவேலா நாட்டுக்கு எதிராக கடல் மற்றும் வான்வழி ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகள் மூலம் கரீபியன் மற்றும் பசிபிக் கடல்பகுதியில், போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி இதுவரை 30-க்கும் அதிகமான கப்பல்களின் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளன. இதனால், […]
ஜனவரி 9 வரை டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்
ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் கட்டளையிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு தனிப்பட்ட பாதுகாப்பிற்காக டக்ளஸ் தேவானந்தாவுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் வழங்கிய துப்பாக்கி ஒன்று மாகந்துர மதுஸ் என்ற பாதாள உலக குழு தலைவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, டக்ளஸ் தேவானந்தா கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் […]
விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்!
TN Virasat Craft Person Loan Scheme: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களின் தொழில் மேம்பாட்டுக்காக ரூ.10 லட்சம் குறைந்த வட்டி விகிதத்தில் தொழில் கடன் வழங்கும் தமிழக அரசின் விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
சம்ரித்தி லாட்டரியில் ரூ.1 கோடியை அள்ளிய லக்கி எண் இதுவா? வெளியான முழு பரிசுத்தொகை பட்டியல்
கேரளாவின் சம்ரித்தி லாட்டரி முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் ரூ.1 கோடியை தட்டி தூக்கிய லக்கி எண் என்ன என்று விரிவாக காண்போம்.
அதே பேட்டர்ன், அடுத்த வாரம் சபரி, அரோரா தான் வெளியேற்றம்: அடித்துச் சொல்லும் பார்வையாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி ஒரு கேள்வி கேட்க ஆளாளுக்கு தங்கள் மனதில் இருந்ததை தெரிவித்துள்ளனர். அதை பார்த்தவர்களோ சபரிக்கும், அரோராவுக்கும் ஆப்பு ரெடி என்கிறார்கள்.
சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️
தற்போதைய அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் உட்பட 6 பேருக்கு எதிராக,… The post சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️ appeared first on Global Tamil News .
சேலம் பாமக பொதுக்குழு…ராமதாஸ் நடத்தும் கடைசி யுத்தம்- நாளைக்கு பாருங்க சஸ்பென்ஸ்!
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வரும் சூழலில், நாளைய தினம் முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனை ராமதாஸ் தரப்பு கூட்டியுள்ள நிலையில், என்ன பேசப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
தைவான் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் இரவு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. […]
எஸ்ஐஆர் டூ காந்தி பெயர் மாற்றம் வரை... மதிமுக நிறைவேற்ற அந்த 7 தீர்மானங்கள் என்னென்ன?
மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், திமுக அரசுக்கு ஆதரவாகவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை என்னென்ன என்று விரிவாக காண்போம்.
அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி
சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் நாளை ( டிச. 29) நடைபெறவுள்ளது. ராமதாஸ் இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே. மணி, 'அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியிருக்கிறார். அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் வலிமையான மற்றும் தவிர்க்க முடியாத கட்சியாகவும் இருந்த பாமகவை திட்டமிட்டு, சூழ்ச்சியால், அபகரிப்பதற்கும் பிளவுபடுத்துவதற்கும் அன்புமணி மேற்கொண்ட நடவடிக்கையால், ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் அடைந்தார். அன்புமணியின் தூண்டுதலால், சிலர் ராமதாஸின் மனம் புண்படும்படியாகப் பேசினர். தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரமில்லாத கட்சியாக மாறிவிட்டது. ஜி.கே.மணி (File Photo) இந்த நிலையில்தான், மீண்டும் அங்கீகாரமுள்ள கட்சியாக வளர்த்தெடுப்பேன் என்று புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான், ராமதாஸ் பின்னே வலிமையான கட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அன்புமணி பின்னால் விவரம் அறியாமல் சென்ற நிர்வாகிகள் மீண்டும் திரும்பி வருவார்கள். ராமதாஸ் தலைமையில் பாமக அமைக்கும் கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். பாமகவுக்கு அன்புமணி வர வேண்டுமென அனைவரும் விரும்பினோம். சூழ்ச்சியால் பிரிந்து சென்றனர் என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து பேசிய பாமக எம்.எல். ஏ அருள், ராமதாஸுடன் கூட்டணிக்காக 3 கட்சிகள் அழைப்பு விடுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 3 கூட்டணிகளுமே அன்புமணியை நம்பத் தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
விஜய் பற்றி அப்படி மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ், ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நாயகன் விஜய் பாட்டு பாடியதுடன், டான்ஸ் ஆடிய வீடியோவை ஷேர் செய்யும் ரசிகர்கள் எல்லாம் ஒரே விஷயத்தை சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது.
காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த'வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வைப் புகழ்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி பேசுபொருளாகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு அருகில் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ``பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அடிமட்டத் தொண்டர்களை முதலமைச்சர் மற்றும் பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு வளர அனுமதிக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார். திக்விஜய் சிங் அதற்கு அடுத்தப் பதிவுகளில், ``நான் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின் தீவிர எதிர்ப்பாளன் என விளக்கமளித்த போதிலும், அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டேக் செய்து, ``காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தங்களும் அதிகாரப் பரவலாக்கமும் தேவை என்றப் பதிவும் விவாதத்தை சூடுபடுத்தியது. இதற்கிடையில், திக்விஜய் சிங், ``காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நம்பவில்லை. காந்தியின் கொலையாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ள எங்களுக்கு எதுவும் இல்லை. நான் காங்கிரஸில் இருந்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடியுள்ளேன். நான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க சித்தாந்தத்தை எதிர்க்கிறேன். நான் அவர்களின் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானவன் எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவின் உறுப்பினரான பவன் கேரா, ``கோட்சேயின் ஆதரவாளர்கள் காந்தியின் ஆதரவாளர்களாக இருக்க முடியாது என்றார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,``ஆர்.எஸ்.எஸ் என்பது வெறுப்பால் ஆன ஒரு அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் வெறுப்பைப் பரப்புகிறது. அல்-கொய்தாவும் வெறுப்பால் ஆன ஒரு அமைப்புதான். அல்-கொய்தாவும் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. ஆர்.எஸ்.எஸ்-இடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை. அல்-கொய்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை என்றார். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டணியைப் போல காங்கிரஸ் ஒருபோதும் மத அரசியல் செய்வதில்லை. எங்களுக்கு அதிகாரம் குறைவாக இருக்கலாம், ஆனால் எங்கள் முதுகெலும்பு பலவீனமானதல்ல. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மதத்தின் பெயரால் வாக்குகள் கேட்பதில்லை. நாங்கள் மதத்தை நம்புகிறோம், ஆனால் சிலர் மதத்தை அரசியலாக மாற்றிவிட்டனர். பா.ஜ.க-விடம் அதிகாரம் இருக்கிறது, ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஒரு காலத்தில் மூவர்ணக் கொடியையும் வந்தே மாதரத்தையும் கூட ஏற்க மறுத்தவர்கள், இப்போது மக்களின் உரிமைகளை நசுக்குகிறார்கள். நாம் உறுதியாக நின்று இத்தகைய முயற்சிகளை எதிர்க்க வேண்டும், என்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் பைலட்,`` காங்கிரஸ் கட்சிக்குள் எந்த சிக்கலும் இல்லை. இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சியை வழங்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கிறது. நாட்டிற்கு ஒரு வலுவான எதிர்க்கட்சி தேவை. காங்கிரஸுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். அவர்கள் சொல்ல வேண்டியதைச் சொன்னார்கள். கார்கே மற்றும் ராகுலை வலுப்படுத்துவதே எங்கள் ஒரே குறிக்கோள், எனக் கூறினார். சச்சின் பைலட் மற்றொரு மூத்த தலைவரான சுப்ரியா ஸ்ரீநேட், ```ஆர்.எஸ்.எஸ்-ஸிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள்தான் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தியைக் கொன்ற நாதூராம் கோட்சேயின் அமைப்பிடமிருந்து நாங்கள் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றார். மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்
19-வயதில் 9 பேருக்கு டிமிக்கி…அத்தையுடன் சேர்ந்து மோசடி செய்த கல்யாண ராணி கைது
ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் நகர் கர்ஜி தெருவைச் சேர்ந்த இளம்பெண் முத்திரெட்டி வாணி (19). இவருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாகுளத்தில் உள்ள துர்கா தேவி கோவிலில் திருமணம் நடந்தது.பின்னர் மணமகன் வாணியை தன் சொந்த ஊருக்கு ரெயிலில் அழைத்துச் சென்றார். விசாகப்பட்டினம் ரெயில் நிலையம் வந்ததும், கழிவறைக்கு செல்வதாக கூறி ரெயிலில் இருந்து இறங்கிய வாணி மீண்டும் அந்த ரெயிலில் ஏறவில்லை. இதையடுத்து மனைவியை காணாததால் […]
2025 : மாறியவை? மாறாதவை?நிலாந்தன்.
2025 : மாறியவை? மாறாதவை?நிலாந்தன். இந்த ஆண்டு பிறந்த போது ஒரு புதிய அரசாங்கம், புதிய வாக்குறுதிகளோடும் புதிய… The post 2025 : மாறியவை? மாறாதவை?நிலாந்தன். appeared first on Global Tamil News .
அலையோடு உறவாடு…உணவுத் திருவிழா கோலாகலம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) கடற்கரையில், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த… The post அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம் appeared first on Global Tamil News .
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் –பெண் உட்பட நால்வர் கைது:
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஒரு பெண்ணையும், அவருடன் தொடர்புடைய… The post மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது: appeared first on Global Tamil News .
சொத்துப் பதிவில் வரும் பெரிய மாற்றம்.. தமிழக பதிவுத்துறை நடவடிக்கை!
சொத்து பரிவர்த்தனைகளில் மோசடிகள் நடப்பதைத் தடுக்க தமிழக பதிவுத் துறை முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
✈️ அமெரிக்காவில் 1,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் வீடு திரும்பும் இந்த முக்கியமான நேரத்தில், அமெரிக்காவின் வான்வழிப் போக்குவரத்து பெரும் சவால்களைச்… The post ✈️ அமெரிக்காவில் 1,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! appeared first on Global Tamil News .
100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா? - கனிமொழி கேள்வி!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கனிமொழி தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமை வகிக்க, கனிமொழி எம்.பி, அமைச்சர் பி.மூர்த்தி, தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, இப்பகுதியில் இருக்கும் பெண்கள், சகோதரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும் என அமைச்சர் மூர்த்தி சொன்னார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பெண்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது திமுக, பெண்களுக்கு சொத்துரிமை உள்ளது என்பதை செய்து காட்டியது திராவிட மாடல் அரசு, இன்று அதிகமான பெண்களுக்கு வேலை வாய்பு கிடைக்கிறது. ஒரு காலத்தில் பெண் குழந்தை வேண்டாம் என நினைத்தார்கள், பின்பு பெண்கள் படித்தால் என்ன ஆகப்போகிறது என வீட்டிலேயே வைத்திருந்தார்கள். 10 ஆம் வகுப்பு படித்தால் உதவித்தொகை என கலைஞர் அறிவித்தார். அதன் பின்பு பெண்கள் படித்தார்கள், கூடுதலாக 12 ஆம் வகுப்புக்கும் உதவிகள் அறிவிக்கப்பட்டது. நலத்திட்ட விழாவில் இன்று கல்லூரிக்கு சென்று படிக்கும் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், பேருந்திலும் இலவசப் பயணம் என திட்டங்களை கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி என்பது பெருமை. நாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது அன்றைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது 100 நாள் வேலை திட்டம். பாஜக ஆட்சிக்கு வந்த பின் பெண்களுக்கும் வேலை கொடுப்பதில்லை. இன்று மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் பெயரை எடுத்து விட்டார்கள். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வந்த திட்டத்தை இன்று அழிக்க நினைக்கிறார்கள். நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என கேட்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை அழிக்க கொண்டு வரப்பட்ட மசோதாவைப் பற்றி தெரிவாக பதில் சொல்லத் தெரியுமா? எல்லாவற்றையும் மாற்றிடுவவேன் என்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும் சொல்கிறார்கள். ஆனால், கிராமப்புற சகோதரிகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு திட்டத்தை நிறுத்தும் மசோதாவை பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை. இன்று மதக் கலவரத்தை தூண்டி வருகிறார்கள், 100 நாள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு வேலை இல்லாமல் போவதில் அதிகமாக இந்துக்கள்தான் பாதிக்கப்பட போகிறார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டும், அப்போதுதான் இனத்தின் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். 2026-ல் வெற்றியை நிலை நாட்டுவீர்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.
விமான விபத்து! பலியான லிபியா தலைமைத் தளபதிக்கு துருக்கி ராணுவம் மரியாதை!
துருக்கியில், விமான விபத்தில் பலியான லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 5 அதிகாரிகளுக்கு துருக்கி அரசு ராணுவ மரியாதை அளித்துள்ளது. லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது அலி அஹமது அல்- ஹதாத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் துருக்கி அரசுடன் உயர்மட்ட பேச்சுவாரத்தை மேற்கொள்ள தலைநகர் அங்காராவுக்குச் சென்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, துருக்கி பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருடன் நடைபெற்ற பேச்சுவாரத்தைகளுக்குப் பிறகு அங்காராவில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த டிச.23 அன்று இரவு […]
'தாயுள்ளம் கொண்ட ஆண்மகன் கேப்டன்' - ஆர்.கே.செல்வமணி உருக்கம்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். செல்வமணி அந்தவகையில் விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். திரைப்பட தொழிலாளருக்கு வாழ்க்கை முழுக்க தொண்டாற்றியவர் விஜயகாந்த் சார். படப்பிடிப்பு தளங்களில் எல்லாருக்கும் என்ன உணவோ ...அதுதான் அங்கு வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரோட கிட்டத்தட்ட 30 வருடம் பயணம் செய்திருக்கிறோம். அவரை மாதிரி ஒரு சிறந்த மனிதரைப் பார்த்ததே இல்லை. அவர் தாயுள்ளம் கொண்ட ஒரு ஆண் மகன். ஆர்.கே.செல்வமணி பார்க்க கரடு முரடாகத் தான் தெரிவார். ஆனால் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் பழகக்கூடியவர். இன்று திரைப்படத் துறையில் 50 பேர் இயக்குநராகவும், 75 பேர் தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் சார் தான். 100 ஆண்டுகளைக் கடந்தும் கூட அவர் புகழ் நிலைத்து நிற்கும் என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
TVK: கரூர் விவகாரம், தேர்தலுக்கு முன் அறிக்கை தயாராகும் CBI? | Jana Nayagan | Vijay | Stalin | IPS
கம்போடியா –தாய்லாந்து இடையே புதிய அமைதி ஒப்பந்தம்! மீண்டும் போர்நிறுத்தம் அமல்!
கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளிடையே நடைபெற்று வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையில், நீண்டகாலமான எல்லைப் பிரச்னை நிலவி வருகின்றது. இதையடுத்து, இருநாடுகளின் எல்லையில் கடந்த ஜூலை மாதம் கன்னிவெடித் தாக்குதலில் 5 வீரர்கள் படுகாயமடைந்ததால் கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் 5 நாள்களுக்கு மோதல் வெடித்தது. பின்னர், மலேசியா அரசின் முயற்சியால் கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையில் […]
வெளிநாட்டு தம்பதிக்கு இலங்கையில் நேர்ந்த பெரும் அசம்பாவிதம்
ஹிக்கடுவை – நரிகமவில் நேற்று (27) கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த தம்பதியினரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 20 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று, அஹுங்கல்லவில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட ரரஷ்ய சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்க்கட்டுள்ளார். இந்த விபத்தில் சிக்கியவர் 39 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்
ஆந்திரா – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் அதிவேக எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன் தற்போதைய நிலை, திறப்பு விழா உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
Vijay: சினிமா அவரை மிஸ் பண்ணும்- ராஜபக்சே மகன் வாழ்த்து
விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். Vijay - Jana Nayagan Audio Launch விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'ஜனநாயகன்' படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (டிச. 27) மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். Vijay - Jana Nayagan Audio Launch அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், திரைத்துறையில் விஜயுடைய ஆற்றலை அனைவரும் அறிவோம். சினிமா பயணத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். சினிமா அவரை மிஸ் பண்ணும். எதிர்வரும் பயணத்தில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பதிவிட்டிருக்கிறார்.
விஜயகாந்த்: 2-ம் ஆண்டு நினைவுநாள்; தலைவர்களின் நினைவுக் குறிப்புகள்!
தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தே.மு.தி.க-வினர் குருபூஜையாக இந்த தினத்தை அனுசரித்து வருகின்றனர். தேமுதிக தொண்டர்கள் இருமுடி சுமந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதேபோல் கோடம்பாக்கத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பி-ரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ வேலு உள்ளிட்டோரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் அதைத் தொடர்ந்து, முதலவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து தங்கள் சமுக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். பாமக தலைவர் அன்புமணி,``விஜயகாந்த் நினைவு நாள்: ஆண்டுகள் கடந்தாலும் மனிதநேயத்திற்காக மக்களால் நினைவு கூறப்படுவார்! தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நான் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். தமிழக அரசியலில் மிகவும் வித்தியாசமான மனிதர். குறுகிய காலமே ஆனாலும் அவருடன் பழகிய நாள்கள் மறக்க முடியாதவை. மனித நேயத்தின் சிகரமாக திகழ்ந்தவர். ஆண்டுகள் கடந்தாலும் மனித நேயத்திற்காக என்றென்றும் தமிழ்நாட்டு மக்களால் அவர் நினைவுகூறப்படுவார். எனத் தெரிவித்திருக்கிறார். விஜயகாந்த் - ஸ்டாலின் அதைத் தொடர்ந்து, தவெக கொள்கைப்பரப்புச் செயலாளர் அருண்ராஜ்,``கருப்பு எம்.ஜி.ஆர் என்று மக்களால் கொண்டாடப்பட்டவர்... அரசியல் வியாபாரிகள் மத்தியில் 'அசல்' தங்கமாய் வாழ்ந்தவர்! தவறு கண்டால் பொங்கும் 'கோபம்'... பசி என்று வந்தால் கொடுக்கும் 'குணம்'... அது தான் அவரின் தனித்துவம்! தோழமைக்கு தோழமையாக... துணிச்சலுக்கு துணிச்சலாக... வாழ்ந்து மறைந்த மாமனிதர்!! கள்ளம் கபடமற்ற அந்த வெள்ளை உள்ளத்திற்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். எம்.பி. கனிமொழி, ``எளிமை குன்றாத மனிதராக, திரைத்துறையிலும் அரசியலிலும் துணிவோடு செயல்பட்டவர், தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் அன்பிற்கு பாத்திரமான அவர், எல்லோர் மீதும் அன்புகாட்டும் பண்பாளராக வாழ்ந்தவர். அவரது நினைவுநாளான இன்று, அவரது மக்கள் பணிகளை நினைவு கூர்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார். கனிமொழி எம்.பி பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ``இன்று மரியாதைக்குரிய அண்ணன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாள். அரசியல் நிகழ்வாக இருக்கட்டும் தனிப்பட்ட நிகழ்ச்சியாக இருக்கட்டும் எப்பொழுதும் என்னை வாய் நிறைய தங்கச்சி என்று அழைப்பார்... தன் கட்சி மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாரோ அதேபோல இந்த தங்கச்சி மீதும் பாசம் வைத்திருந்தார். அவர் நினைவு நாளில் அவர் நினைவை போற்றுகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அமமுக தலைவர் டிடிவி தினகரன், ``தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நினைவு தினமான இன்று அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவில் வைத்துப் போற்றுவோம். எனத் தெரிவித்திருக்கிறார். Action sequence-ல Vijayakanth மாதிரி இருந்தாரு! - Ponram | Sarathkumar | Kombuseevi Interview
கொழும்பு மாநகர சபை தொடர்பில் கேலி பல்தசார் முக்கிய தீர்மானம்
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் பாதீட்டுத் திட்டம் தயாரிப்பதற்கான செயல்முறையை கொழும்பு முதல்வர் விராய் கேலி பல்தசார் அறிவித்துள்ளார். கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதி இரண்டாவது வாசிப்புக்கு மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சபையின் செயல்திறன் குறித்த பாதீடு வெறும் புள்ளிவிபரங்களின் தொகுப்பு மட்டுமல்ல, சபையின் செயல்திறனைப் பிரதிபலிக்கும் ஆவணம் மற்றும் வரவிருக்கும் ஆண்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் […]
காங்கேசன்துறை கடற்கரையில் ”அலையோடு உறவாடு …“
வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ” அலையோடு உறவாடு … ” என்ற தொனி பொருளில், உணவு திருவிழா ஆரம்பமாகியுள்ளது. காங்கேசன்துறை கடற்கரையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகி இரவு வரையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் , பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் உற்பத்தி.பொருள் விற்பனை, பண்பாட்டு நிகழ்வுகள், சிறுவர்களுக்கான்மகிழ்வூட்டும் விளையாட்டுக்கள் மற்றும் இன்னிசை இசைக்கச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
Financial New year resolution: இந்த ஆண்டு நீங்கள் எடுக்க வேண்டிய நிதி முடிவுகள்? IPS Finance - 396
டிமார்ட், லுலுவை தொடர்ந்து தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும் பிரபல நிறுவனம்!
டிமார்ட், லுலுவை தொடர்ந்து சென்னையில் காலடி எடுத்து வைக்கும் மிகப்பிரபல நிறுவனம் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
UGC NET 2025 அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வர்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி? நேரடி லிங்க்
யுஜிசி நெட் டிசம்பர் 2025 தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
புதுசா கார் வாங்கப் போறீங்களா? புத்தாண்டில் எகிறும் கார் விலை.. ரினால்ட் அறிவிப்பு!
ஜனவரி மாதம் முதல் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இனி கார் வாங்கும் மக்களுக்கு அதிகம் செலவாகும்.
பாட்டால் அதிரவைத்த பால் டப்பா; பா.ரஞ்சித்தின் ஆட்டம் | மார்கழியில் மக்களிசை 2-ம் நாள் | Album
``ஸ்மார்ட் போன், ஆஃப் பேன்ட் அணியத் தடை; பைஜாமா அணிய வேண்டும் - உ.பி கிராமங்களின் முடிவு!
ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்கள் சிறுமிகளுக்கு ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்கள் தங்கள் தடை முடிவை திரும்பப் பெற்றன. மேலும் கிராமத் தலைவர்கள், தங்களின் இந்த முன்மொழிவு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட 'சீரான சமூக ஒழுக்கத்தை' மையமாகக் கொண்டது என விளக்கமளித்தனர். Smart phone இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பாக்வத் மாவட்டத்தில் உள்ள பல பஞ்சாயத்துகளின் தலைவர்கள், சிறுவர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கும், அரைக்கால் சட்டை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தொடர்பாக அவர்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தில், சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரே மாதிரியான சமூக விதிகள் பொருந்த வேண்டும். சிறுவர்கள் வீட்டிலும் பொது இடங்களிலும் அரைக்கால் சட்டை அணிவதற்குப் பதிலாக, கால்சட்டை அல்லது பாரம்பரிய குர்தா-பைஜாமா போன்ற சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும். அரைக்கால் சட்டை அணிவது உள்ளூர் மரபுகளுக்கு எதிரானது. மேலும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கைபேசிகள் வழங்கப்படக் கூடாது. பெரியவர்கள்கூட ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். கைபேசி சாதனங்களை தேவையற்ற முறையில் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒழுக்கத்தையும் சமூக சமநிலையையும் பராமரிக்க, சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் சமமான கட்டுப்பாடுகளைக் குடும்பங்கள் உறுதி செய்ய வேண்டும். சமூகப் பிணைப்புகளைப் பாதுகாப்பதற்காகத் திருமண விழாக்கள் வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ நடத்தப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் நடத்தப்படும் திருமணங்கள் எளிதில் முறிந்துவிடுகின்றன. பாரம்பரிய சமூகப் பிணைப்புகளையும் பலவீனப்படுத்துகின்றன. இருப்பினும், வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் திருமண அழைப்பிதழ்கள் செல்லுபடியாகும். திருமணம் இந்த முடிவுகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் ஒரு பரந்த சமூகப் பிரசாரமாக முன்னெடுத்துச் செல்லப்படும். மற்ற பஞ்சாயத்துகளையும் இதில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான்: `திருமணமான பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை' - கிராமப் பஞ்சாயத்தில் முடிவு!
உதவியாளரின் தூக்கம் கெட்டுடக் கூடாதுனு சுவர் ஏறிக் குதித்த தங்க மனசுக்காரர் கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் நினைவுநாளான இன்று அவரின் சமாதிக்கு சென்று பலரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். மேலும் விஜயகாந்த் பற்றி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தவெகவை புகழ்ந்து தள்ளும் காங்கிரஸ்...கடும் அதிருப்தியில் திமுக?
தவெகவை புகழ்ந்து தள்ளும் காங்கிரஸ். இதன் காரணமாக கடும் அதிருப்தியில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள்.. அரச அச்சுத் துறை வெளியிட்ட தகவல்
2026ஆம் ஆண்டு ஆரம்பமாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், அந்த ஆண்டிற்கான நாட்காட்டி அரச அச்சுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டில் 26 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகபட்ச விடுமுறை நாட்கள், அதாவது 4 விடுமுறை நாட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முக்கிய விடுமுறைகள்.. அதேவேளை, 2026 ஆம் ஆண்டின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகும். மேலும், வெசாக் பௌர்ணமி […]
தாயிற்காக விமானி ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல்.. அதிகம் பகிரப்படும் காணொளி
விமானப் பயணத்தின் போது தனது தாய்க்கு இளம் விமானி ஒருவர் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான செயல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. விமானப் பயணம் என்பது பலருக்கு ஒரு சிறப்பு அனுபவம், அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளி பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது எனலாம். அஸ்வத் புஷ்பா என்ற விமானி, தனது தாயை விமானத்தில் முதல் முறையாக அழைத்து சென்ற விதமானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. முதல் பயணம் அஸ்வத் புஷ்பா, […]
அரச பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்.. பெற்றோர்கள் அவதானம்!
அரசப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து மதிப்புள்ள சிற்றுண்டிகளையே அதிகம் சாப்பிட விரும்புவதாக தெரியவந்துள்ளது. நிறுவனம் ஒன்று, இலங்கையில் நகர்ப்புற இளம் பருவத்தினரிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்குத் தேவையான உணவு நுகர்வு முறைகள், விருப்பங்கள், தடைகள் மற்றும் செயல்பாடுகள் என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளை சேர்ந்த 463 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் […]
அமித் வெளியேற்றம்: டைட்டில் வின்னர் ஆவார் என நம்பப்பட்ட பெண்ணும் வெளியேற்றம்
பிக் பாஸ் 9 வீட்டில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் வைத்து கனி அக்கா மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்களாம். இதையடுத்து கனியின் ஆதரவாளர்கள் பிக் பாஸை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் கண்முன் கணவன் செய்த கொடூர செயல் –துடிதுடித்த மனைவி
மனைவி மீது கணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்தையில் சந்தேகம் தெலங்கானா, ஹுஜூராபாத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் – திரிவேணி தம்பதி. 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு குழந்தைகளும் உள்ளனர். வெங்கடேஷ், தினமும் மது அருந்தி வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியும் இருக்கிறார். எனவே வறுமையால் மனைவி ஹோட்டல் மற்றும் வீடுகளுக்கு சென்று வேலை […]
டக்ளசை 90 நாள்கள் தடுத்து வைக்க அனுமதி கோரிய சிஐடி –நிராகரித்த அமைச்சர்
ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை 90 நாள்கள் தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்து விட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்90 நாள்கள் தடுப்புக்காவல் உத்தரவைக் கோரியிருந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
யாழில். மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் , மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக இளைஞர்கள் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், குறித்த பெண்ணை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். அதேவேளை , போதை மாத்திரைகளுடன் இருவரும் , மாவா பாக்குடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த் 2ஆம் ஆண்டு குருபூஜை… கேப்டன் இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆனது. இதையொட்டி பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புஷ்பா 2: கூட்ட நெரிசல் பலி: `அல்லு அர்ஜூனும் காரணம்' - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை!
கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா:2 தி ரூல். திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதாவது 2024 டிசம்பர் 4 அன்று, ஹைதராபாத்தில் உள்ள RTC X சாலைகளில் உள்ள சந்தியா திரையரங்கில், சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வருவதாக ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தக் கூட்ட நெரிசலில் 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மைனர் மகனான ஸ்ரீதேஜுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளானார். நடிகர் அல்லு அர்ஜுன் இந்தத் துயரம் பெரும் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாகவே ஏற்பட்டது என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. நடிகர் அல்லு அர்ஜூன் வருவார் என்று தெரிந்திருந்தும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியதற்காக சந்தியா திரையரங்கின் நிர்வாகம் மற்றும் உரிமையாளர்கள் மீதும், அதிக கூட்டம் இருந்தும் நிகழ்ச்சிக்கு வருகை தந்தது, உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாதது, பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக நடிகரின் வருகைக்குக் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டும் நிகழ்ச்சிக்கு வந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் 22 பேர் மீது நாம்பள்ளி நீதிமன்றத்தில் உள்ள 9வது கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் (ACJM) முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 24 நபர்கள் பட்டியலில், அல்லு அர்ஜுனின் தனிப்பட்ட மேலாளர், அவரது ஊழியர்கள் மற்றும் எட்டு தனியார் பவுன்சர்களும் அடங்குவர். இவர்களது செயல்களே சூழலை மேலும் மோசமாக்கியதாகக் கூறப்படுகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கு உரிமையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304-A (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல்) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிற பிரிவுகளின் கீழ், காயம் ஏற்படுத்துதல் மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 டிசம்பரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அல்லு அர்ஜுன், விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகக் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் இந்த வழக்கு விசாரணை அடுத்தக் கட்டத்திற்கு மாறியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், காயமடைந்தவரின் தொடர்ச்சியான மருத்துவத் தேவைகளுக்காகப் அதிக இழப்பீட்டை கோரிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாமே, இதற்கு ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?- நடிகர் சிவராஜ்குமார்
சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாறும் காந்தி சந்தை...என்ஐடிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாறும் காந்தி சந்தை. இதற்காக என்ஐடிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடியும்-அதிகாரிகள் தகவல்!
மதுரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடியும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
பிணக் குவியலிலிருந்து மீட்கப்பட்ட தாய்க்குப் பிறந்தவரா விளாதிமீர் புதின்? வைரலாகும் கதை!
இரண்டாம் உலகப் போரின் போது பிணக் குவியலிலிருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்தவர்தான் தற்போதைய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் என்று ஒரு கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. இது கடந்த ஒரு சில ஆண்டுகளாக அவ்வப்போது வைரலாவதும், பிறகு மறந்து போவதுமாக உள்ளது. இந்தக் கதையின் உண்மை நிலவரம் பற்றி சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் எழுதியிருக்கும் நூலில், புதின் பற்றிய ஒரு […]
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தன்னிச்சையாக முடிவு எடுத்து மூன்று ஸ்டார் வீரர்களை நீக்கியிருப்பது, பிசிசிஐ மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரை நீக்குவது குறித்து பரிசீலித்து வருகிறார்களாம்.
இலங்கையின் மேலைத்தேய இசையை அலங்கரித்த மெக்சி ரொசைரோ காலமானார்
5 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் மேலைத்தேய இசைத்துறையை தனது தனித்துவமான குரலால் அலங்கரித்த மூத்த கலைஞர் மெக்சி ரொசைரோ (Maxi Rozairo), தனது 77ஆவது வயதில் காலமானார். ஐந்து தசாப்தங்களுக்கும் (50 ஆண்டுகள்) மேலாக இசைத்துறையில் ஈடு இணையற்ற பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். அவரது தனித்துவமான பாடும் பாணி மற்றும் மேடை ஆற்றுகை காரணமாக அவர் இலங்கையின் இசை ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார். இலங்கையில் மேலைத்தேய இசைக்கலையை வளர்ப்பதிலும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதிலும் அவர் ஒரு […]
கோவை வடக்கு ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்-வலுக்கும் கோரிக்கை!
கோவை வடக்கு ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக் கொலை ; விசாரணையில் வெளியான புதிய திருப்பம்
அம்பலாங்கொடை வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரியும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீட்டில் தங்கியிருந்து இக்கொலையைத் திட்டமிட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வீடு கண்டி, அன்கும்பர பகுதியில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் குழுவினர் அந்த வீட்டிற்குச் சென்றபோது சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த டிசம்பர் 22ஆம் திகதி அம்பலாங்கொட நகரில் உள்ள விற்பனை நிலையமொன்றின் முகாமையாளர் வர்த்தக நிலையத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் […]
மீண்டும் கொட்டி தீர்க்கப்போகும் கன மழை ; மக்களுக்கு விடுத்துள்ள அவசர முன்னெச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்களின்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட இது குறித்துக் கூறுகையில், முப்படைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டு, அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் […]
விஜய்யின் ஆளுமையைத் தமிழ் சினிமா நிச்சயம் இழக்கும் ; நாமலின் நெகிழ்ச்சிப் பதிவு
நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவரைப் பாராட்டி நெகிழ்ச்சியான வாழ்த்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, விஜய்யை தனது விருப்பத்திற்குரிய கலைஞர்களில் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில்: “தளபதி விஜய் எப்போதும் எனக்குப் பிடித்தமான கலைஞர்களில் ஒருவர். சினிமாவில் அவரது பயணமும், வெள்ளித்திரையில் அவர் வெளிப்படுத்திய அந்தத் துடிப்பான ஆற்றலும் […]

25 C