SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

சீனாவை தடுக்க அமெரிக்க திட்டம் –தைவானுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்கும் ட்ரம்ப்

சீனாவிற்கு எதிராக தைவானுக்கு ஆயுத விற்பனையை ட்ரம்ப் அதிகரிக்கவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது முந்தைய பதவிக்காலத்தில் வழங்கப்பட்டதை விட அதிக அளவில் ஆயுதங்களை தைவானுக்கு விற்க திட்டமிட்டுள்ளார். இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததின்படி, சீனாவின் இராணுவ அழுத்தத்துக்கு எதிராக தைவானை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த விற்பனைகள் நடைபெறவிருக்கின்றன. முந்தைய ட்ரம்ப் நிர்வாகம் $18.3 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை தைவானுக்கு விற்றது. இதுவே பைடன் நிர்வாகத்தில் $8.4 பில்லியனாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து, புதிய ட்ரம்ப் நிர்வாகம் […]

அதிரடி 1 Jun 2025 2:30 am

75% பனிப்பாறைகளை இழக்கும் அபாயத்தில் இந்துகுஷ் இமயமலை!

சுமார் இரண்டு பில்லியன் மக்களுக்கு முக்கியமான நீர் ஆதாரமான இந்து குஷ் இமயமலை, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அதன் பனிப்பாறை பனியில் 75% வரை இழக்க நேரிடும் என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த அப்பட்டமான கணிப்பு, பிராந்தியத்தின் பாதிப்பு மற்றும் ஆசியா முழுவதும் நீர் பாதுகாப்பிற்கான நீண்டகால விளைவுகளை எடுத்துக் காட்டுகிறது. முன்னணி இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, வலுவான காலநிலை நடவடிக்கைக்கான அவசரத் தேவையை […]

அதிரடி 1 Jun 2025 12:30 am

Miss World 2025: யார் இந்த ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ? தெலங்கானாவில் மகுடன் சூடிய தாய்லாந்து பெண்!

நடப்பு ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி இந்தியாவில் நடைபெற்றது. குறிப்பாக தெலங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ மிஸ் வேர்ல்டாக தேர்வாகி உள்ளார்.

சமயம் 31 May 2025 11:45 pm

பிரித்தானியாவில் வறட்சி அறிவிப்பு…ஆறுகள், நீர்த்தேக்கங்களில் குறைந்து வரும் நீர் மட்டம்

நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் குறைவாக காணப்படுவதால் இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதி தற்போது வறட்சியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் குறைவாகவே உள்ளது கிரேட்டர் மான்செஸ்டர், மெர்சிசைட் மற்றும் செஷயர், மற்றும் கும்ப்ரியா மற்றும் லங்காஷயர் ஆகிய பகுதிகள் நீண்ட வறண்ட வானிலையிலிருந்து வறட்சி நிலைக்கு மாறிவிட்டதாக சுற்றுச்சூழல் முகமை (EA) தெரிவித்துள்ளது. சமீபத்தில் மழை பெய்த போதிலும், இப்பகுதியில் நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. ஆனால் நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் வறட்சி அறிவிக்கப்படல்லை […]

அதிரடி 31 May 2025 11:30 pm

வங்கி வைப்புக்களுக்கான வட்டி குறைவடையுமா?

ரொபட் அன்டனி மத்திய வங்கி நாட்டின் வங்கி கட்டமைப்பு பயன்படுத்தும் கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ளது. அண்மையில் கூடிய மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 0.25 வீதத்தினால் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது. அதாவது, இதுவரை காலமும் 8ஆகக் காணப்பட்ட ஓர் இரவு கொள்கை வட்டியானது தற்போது 7.75 வீதமாககக் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் விரிவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தக் கொள்கை வட்டி வீதக் குறைப்பு முக்கியமானதாக அமைந்திருக்கிறது. பணவீக்கம் குறைவடைந்து செல்லும் நிலையில் இந்தத் […]

அதிரடி 31 May 2025 11:30 pm

சென்னைக்கு சிறப்பான மே மாதம்: கருணை காட்டிய வெயில் - வானிலை ஆய்வாளர்கள் உற்சாகம்!

தமிழ்நாட்டுக்கு இந்த மே மாதம் வெயிலால் எந்த பாதிப்பும் ஏற்படாத அளவு குறைவான அளவிலே வெப்பநிலை பதிவானது. குறிப்பாக சென்னையில் 40 டிகிரி செல்சியஸை தொடாதது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 31 May 2025 10:54 pm

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.. மெனுவில் மாற்றம் -உற்சாகத்தில் மாணவர்கள்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,பள்ளிகள் திறப்பான (ஜூன் 2) அன்று பொங்கல் , காய்கறி சாம்பார் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 31 May 2025 10:46 pm

காத்தான்குடியில் தீ விபத்து; பல இலட்சம் ரூபாய் நஷ்டம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் […]

அதிரடி 31 May 2025 10:30 pm

இந்தியாவில் வேகமெடுக்கும் கோவிட் 19 ; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் என வழக்கமான நடைமுறைகளை தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக […]

அதிரடி 31 May 2025 10:30 pm

நீட் தேர்வு பற்றி விஜய் சரியாகவே பேசியுள்ளார் : கிருஷ்ணசாமி ஆதரவு

நீட் தேர்வு தொடர்பாக தவெக தலைவர் விஜய் தெரிவித்த கருத்து சரியானது என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமயம் 31 May 2025 10:13 pm

‘காடுவெட்டி’குரு வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா!- வ.கௌதமன் அறிவிப்பு!

நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி

ஆந்தைரேபோர்ட்டர் 31 May 2025 9:51 pm

இரத்த நாள அழற்சி: நவீன சிகிச்சை முறையைப் பயன்படுத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரெட்ரோகிரேட் இண்ட்ரா-ரீனல் சர்ஜரி (RIRS) எனப்படும் சிகிச்சை மூலம் 62 வயது பெண் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன. அவர், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான இரு வெவ்வேறு வகையான மருந்துகளை உட்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் என்பது, 2 செ.மீ வரையிலான அளவுள்ள சிறுநீரகக் கற்களை அகற்றப் பயன்படுத்தப்படும் குறைவான ஊடுருவல் சிகிச்சையாகும். பெரிய அளவிலான கற்களை நீக்க இம்முறை பயன்படுத்தப்பட்டாலும் இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்துகளை உட்கொண்டுவரும் நோயாளிகள் விஷயத்தில் அதிநவீன வசதிகளும் நிபுணத்துவமும் இருந்தால் மட்டுமே இம்முறையைப் பயன்படுத்த இயலும்.  இந்நோயாளிக்கு இதயநோய்க்கான சிகிச்சையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருந்தது. அவரது வலது சிறுநீரகத்தில் 3.5 x 2.5 செ.மீ அளவுள்ள கல்லும், இடது சிறுநீரகத்தில் 2x1.5 செ.மீ கல்லும் இருந்தன. தற்போது அவையிரண்டுமே அகற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலத்துடன் இருக்கிறார்.  இன்றைய நிலையில் இரத்தக் கட்டிக்கான மருந்துகள், இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் உட்கொள்வோர், கல்லீரல் நோயாளிகள், இயற்கையிலேயே பெரிய அளவிலான  அசாதாரணமான சிறுநீரகங்கள் கொண்டோர் (அதிக இடர் கொண்ட அல்லது எவ்விதமான சிகிச்சையும் செய்ய முடியாது என்று கருதப்பட்டவர்கள்) ஆகியோருக்குக்கூட பெரிய அளவிலான சிறுநீரகக் கற்களை அகற்றுவதில் ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் சிகிச்சை தருவதில் மதுரை மாநகரிலேயே ஒரே மருத்துவமனையாக மீனாட்சி மிஷன் திகழ்கிறது. நாட்டில் RIRS செயல்முறைகளில் 90%-க்கும் அதிகமான வெற்றிகரமான சிகிச்சை விகிதங்களைக் கொண்டிருக்கும் பெருமைமிக்க மருத்துவமனைகளுள் மீனாட்சி மிஷனும் ஒன்று.  மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் யூராலஜி, ஆண்கள் நோயியல் பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர்  மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் டி.பால் வின்சென்ட் தலைமையில் இந்த சமீபத்திய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் இதுகுறித்துப் பேசுகையில், ”ஆர்.ஐ.ஆர்.எஸ் சிகிச்சையில் பல படிநிலைகள் உண்டு. அதன்படி, நோயாளியின் சிறுநீரகத்தை நோக்கி யூரிட்டராச்கோப் எனும் நுண்ணிய-நெகிழ்தன்மையுடைய கருவி செலுத்தப்படும்.  இது சிறிய கேமரா, சிறு விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய மெலிதான சாதனம். இது, சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரகத்துக்குச் செலுத்தப்படுகிறது. Health: டீ, காபி குடிப்பதுதான் இளநரைக்குக் காரணமா? அடுத்தபடியாக, ஒரு லேசர் மூலம்  சிறுநீரகக் கல், சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஒரு சிறிய பை போன்ற அமைப்பின்மூலம் கவரப்பட்டு பின்னோக்கி இழுக்கப்பட்டு அகற்றப்படும். அல்லது துகள்கள் அனைத்தும் சிறுநீரின் வழியாகவே வெளியேறுமாறு செய்யலாம். வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் 2 செ.மீ வரை அளவுள்ள சிறுநீரகக் கற்களே அகற்றப்படும். ஆனால், சரியான நிபுணத்துவம் கொண்ட மருத்துவரால் பெரிய கற்களைக்கூட படிப்படியாக இம்முறையைப் பயன்படுத்தி அகற்ற முடியும். பொதுவாக இதய நோய், பக்கவாத நோயாளிகள் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக மருந்துகளை உட்கொள்வர். இவர்களுக்கும் கல்லீரல் செயல் இழந்த நிலையில் இருப்போர், மேலும் அசாதாரண நிலை சிறுநீரகங்களுடன் இருப்போர், இரத்த உறைதல் பிரச்சனையால் இரத்தக் கசிவு தொந்தரவைச் சந்திப்போர் ஆகியோருக்கு இந்தச் சிகிச்சை அளிக்கும்போது உயர்தர நிபுணத்துவம் தேவைப்படும்” என்றார்.  மேலும் அவர் பேசும்போது, ”ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையின் சிறப்பு என்னவென்றால், இதில் உடலைக்கீறி சிகிச்சை செய்யப்படுவதில்லை என்பதுதான். மேலும் இரத்தக் கசிவு, சிறிய தொந்தரவுகளுக்கான வாய்ப்பு இதில் மிகவும் குறைவு. இச்சிகிச்சை பெற்றவர், சிகிச்சை முடிந்த மறுநாளே பணிக்கு சென்றுவிடலாம். எனவே, இது வசதியான அதே நேரத்தில் உடலில் மிகக்குறைவான ஊடுருவலைச் செய்யக்கூடிய சிகிச்சை முறையாக இருக்கிறது” என்றார். சிறுநீரகக் கற்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்துப் பேசிய மருத்துவர் பால் வின்சென்ட் , ”சிறுநீரில் உள்ள சில அம்சங்கள் அடர்த்தியாக ஆகி, சிறு சில்லுகளாக மாறிவிடும். அவை, நாளடைவில் சிறுநீரகக் கற்களாக ஆகிவிடுகின்றன. இதனைத் தடுக்க வேண்டுமென்றால் தினசரி 2 லிட்டர் சிறுநீர் வெளியேற்றப்பட வேண்டும். அந்த அளவிற்குச் சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் குறைந்தது 3 லிட்டர் நீர் பருக வேண்டும். அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.  இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் சிறுநீரகவியல் துறையின் தலைவரும் முதுநிலை மருத்துவர் ஆர்.ரவிச்சந்திரன், முதுநிலை நிபுணர், யூராலஜி துறை, ஆண்ட்ரோலாஜிஸ்ட் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். D. பால் வின்சென்ட், சிறுநீரகவியல் துறையின் முதுநிலை மருத்துவர் வேணுகோபால் கொனங்கி, மற்றும் மார்க்கெட்டிங் துறையின் பொது மேலாளர் திரு.சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.  Health: வைட்டமின் பி12 மாத்திரையால் பக்க விளைவுகள் வருமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 9:45 pm

யார் இந்த மேயர் முத்து? மதுரை திமுகவின் மூத்த முன்னோடியாம்.. முழு வரலாறு இதோ

மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயர் முத்துவின் சிலையை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திமுகவுக்கும், மதுரை முத்துவுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து பார்ப்போம்.

சமயம் 31 May 2025 9:39 pm

50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடும் பிரித்தானிய அரசு

பிரித்தானியாவில், கெய்ர் ஸ்டார்மர் அரசு, சுமார் 50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணி இழக்க இருக்கும் 50,000 அரசு ஊழியர்கள் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும், சேன்சலரான ரேச்சல் ரீவ்ஸும், 2030ஆம் ஆண்டுவாக்கில், 50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுவருகிறார்கள். அதாவது, அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில், 2030 வாக்கில் 10 சதவிகித அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சேன்ஸலர் ரேச்சல் திட்டமிட்டுள்ளார். அப்படி அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் […]

அதிரடி 31 May 2025 9:30 pm

தமிழ்நாட்டில் கொரோனா, டெங்கு பாதிப்பு எந்த அளவு உள்ளது? மா.சுப்பிரமணியன் கொடுத்த அப்டேட்!

தமிழ்நாட்டில் ஆண், பெண் குழந்தைகள் சம அளவில் இருக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கினார். கொரோனா, டெங்கு பாதிப்புகள் குறித்தும் பட்டியலிட்டார்.

சமயம் 31 May 2025 9:10 pm

திருக்கேதீஸ்வர ஆலய கொடியேற்றம்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று(31) ஆரம்பமானது. திருக்கோணேச்சரம் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறையில் எடுத்து… The post திருக்கேதீஸ்வர ஆலய கொடியேற்றம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 May 2025 9:07 pm

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் –கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த ஒரு விஷயம் தான் நேற்றிலிருந்து ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக மாறியுள்ளது. நேற்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் போடும்போது ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் இருவரும் கைகூட குலுக்கிக்கொள்ளவில்லை. கில் […]

டினேசுவடு 31 May 2025 8:49 pm

திருச்செந்தூர்: கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் கவனமாக நீராட அறிவுறுத்தல்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில் ஆயிரக் கணக்கான பக்தர்களும் இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு முருகப் பெருமானைத் தரிசனம் செய்வது வழக்கம். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கியும், கடல் அலையில் விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர். கரை ஒதுங்கிய ஜெல்லி மீன் பொதுவாகக் கடற்கரையிலிருந்து சில மைல் தூரத்தைக் கடந்துதான் மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழும். எப்போதாவதுதான் அலை அதிகம் வீசியோ, காலநிலை மாற்றத்தால் திசைமாறியோ அவை கரைக்கு வரும். அவை உயிரோடு இருந்தால் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். சுறா போன்ற பெரிய மீன்கள் படகுகளில் மோதி இறந்தால் கரை ஒதுங்கும். இந்த நிலையில், காலநிலை மாற்றத்தினால் தற்போது தமிழ் மாதங்களில் பௌர்ணமி, அமாவாசை போன்ற நாள்களில் கடல் நீர் மட்டத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. சூரை, திருக்கை `டு' மயில் கோலா, வஞ்சிரம்.. வலையில் சிக்கிய வகைவகையான மீன்கள்; காசிமேடு ஸ்பாட் விசிட் அந்நாள்களிலோ அல்லது அதன் பின்வரும் நாள்களிலோ, கடல் நீர் மட்டம் குறைந்து சில மீட்டர் தூரம் உள்வாங்கிக் காணப்பட்டும் வருகிறது. அப்போது பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்படும். அடுத்த சில நாள்களில் கடல் மீண்டும் இயல்புநிலைக்கு வந்துவிடும். இதே காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள், தற்போது கோயில் கடலின் கரையோரம் ஒதுங்கி வருகின்றன. பார்ப்பதற்கு நுங்கு வடிவிலோ, கண்ணாடி நூலிழையைப் போலவோ, பாலித்தின் தாளைப் போலவோ இருப்பதால் பக்தர்கள் அதனைப் பஞ்சு எனவும், ஒருவகை பாசி எனவும் நினைத்தும் அதனைத் தொட்டு விடுகின்றனர். ஜெல்லி மீன்கள் குழந்தைகள் அதனைக் கையில் எடுத்தும் விளையாடுகின்றனர். அதில் ஒரு சில வகை ஜெல்லி மீன்கள் மக்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி வருகிறது. அந்த மீன்கள் கடித்த உடன் கை, கால்களில் தடிப்பு மற்றும் ஊறல் ஏற்பட்டுச் சிவப்பு நிறமாகி விடுகிறது. இதனால் பக்தர்கள் கடலில் குளிக்கும் போதும், கால் நனைக்கும் போதும் ஜெல்லி வகை மீன்களைக் கண்டால் அவற்றைக் கையால் தொட வேண்டாம் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. Fish: நன்னீர் மீன்கள், கடல் மீன்கள்... எது உடல்நலனுக்கு சிறந்தது?! “கோடைக் காலமான பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் ஜெல்லி வகை மீன்கள் ஆழ்கடலிலிருந்து கரைக்கு ஒதுங்கும். தற்போது காலநிலை மாற்றத்தினால், அவ்வப்போது கடல் நீர் மட்டத்திலும் மாற்றம் ஏற்படுவதால் ஜெல்லி மீன்கள் அடிக்கடி கரையை ஒட்டிய பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. கடலில் நீராடும் பக்தர்கள் ஜெல்லி மீன் பட்டு உடலில் எரிச்சலோ தடிப்போ ஏற்பட்டால் உடனடியாக உமிழ்நீரை ஜெல்லி மீன் கடித்த இடத்தில் தடவினாலோ அல்லது தேங்காய் எண்ணெய் தடவினாலோ சீராகி விடும். பாலித்தின் தாளைப் போலவே இருக்கும் ஜெல்லி மீன் ஆனால், சில விஷ ஜெல்லி மீன்கள் கடிப்பதால் கட்டாயம் மருத்துவச் சிகிச்சை எடுக்க வேண்டும்” என்கின்றனர் மீன்வளத்துறை அதிகாரிகள். அத்துடன் ஜெல்லி மீன்களால் ஊறல், அலர்ஜி போன்றவை ஏற்பட்டால் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவ உதவி மையத்தை அணுகி சிகிச்சை பெறலாம் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே மாதங்களில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. Doomsday Fish: மேற்பரப்புக்கு வரும் ஆழ்கடல் மீன்கள் - மக்கள் அஞ்சுவது ஏன்? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 8:41 pm

பாஜகவின் அழைப்பை நிராகரித்த தவெக : ஓரணியில் திரள வேண்டும் - நயினார் நாகேந்திரன் கருத்து!

பாஜக கூட்டணி அழைப்பை தவெக ஏற்க மறுத்த நிலையில், அதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

சமயம் 31 May 2025 8:38 pm

கண்ணிமைக்கும் நொடியில்… 8000 உக்ரைன் மக்களை கொத்தாக பலிவாங்கிய ரஷ்ய தளபதி படுகொலை

8,000 உக்ரேனிய மக்களைக் கொன்ற தாக்குதல்களுக்குப் பின்னால் செயல்பட்ட ஓய்வுபெற்ற ரஷ்ய தளபதி, ஒரு தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார். உக்ரைன் ஈடுபட்டிருக்கலாம் உக்ரைன் துறைமுக நகரமான மரியுபோல் மீதான ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல்களில் பங்கேற்றதற்காக பல பதக்கங்களைப் பெற்றவர் 34 வயதான தளபதி Zaur Gurtsiev. வியாழக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபருடன் சேர்ந்து கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர் குண்டுவெடிப்புக்கு சற்று முன்பு குர்ட்சியேவை அணுகியதாகக் […]

அதிரடி 31 May 2025 8:30 pm

தங்க நகைகள் விற்பனை செய்யும் போர்வையில் மோசடி; மக்களே அவதானம்

தங்க நகைகளை விற்பனை செய்யும் போர்வையில் கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வீட்டின் உரிமையாளரை தாக்கி 210 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் சட்டத்தரணிகள் […]

அதிரடி 31 May 2025 8:30 pm

மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்!

ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களின் உயர்க் கல்விக்காகவும், திருமணத்திற்காகவும் நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் (Moovalur Ramamirtham Ammaiyar Ninaivu Marriage Assistance Scheme)குறித்த முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 31 May 2025 8:12 pm

கனரக வாகனம் மோதி வயோதிபர் பலி

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி 72 வயதுடைய முதியோர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்றையதினம் (30) துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் கனரக வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதிரடி 31 May 2025 7:49 pm

கஜேந்திரன் தும்புத்தடியா?

வடமாகாணசபை தேர்தலில் தும்புத்தடியொன்றை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்தே வருகின்றது. நேற்றைய தினம் தமிழரசு –முன்னணி தலைவர்கள் சந்திப்பு முடிந்து புறப்படும் போது தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் ஒரு கேள்வி கேட்டார். “உங்கள் கட்சித் தலைவர் வரும் மாகாண சபை தேர்தலில் ஒரு தும்புத் தடியை முதலமைச்சராக நிறுத்தப் போவதாக கூறியிருந்தார். அந்த தும்புத்தடி நீங்கள்தானா?’’ - என்று அவரிடம் கேட்டார் எம்.ஏ.சுமந்திரன். இதற்கு பதிலளித்த கஜேந்திரன் அவரிடம் (தலைவரிடம்) கேட்டுச் சொல் கிறேன் என்று முறைப்புடன் பதில் அளித்து விட்டு புறப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தரவு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பதிவு 31 May 2025 7:41 pm

ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக திரளும் விசிகவினர் : சீமான் வைத்த கோரிக்கை

விசிக - புரட்சித் தமிழகம் நிர்வாகிகள் இடையிலான மோதலை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சமயம் 31 May 2025 7:35 pm

சொன்னதைச் செய்வாரா? எம்.ஏ.சுமந்திரன்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் இன்று உறுதியுரையினை செய்தார். யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு இன்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் தங்கள் உறுதியுரையினை மேற்கொண்டார்கள். இதில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட(விகிதாசார பட்டியல் வேட்பாளர்) சுந்தரமூர்த்தி கபிலனும் யாழ் மாநகர சபை உறுப்பினராக உறுதியுரையினை மேற்கொண்டார். உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் அடங்கிய வர்த்தமானியும் இன்றைய தினம் வெளிவந்துள்ளது. யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர மேயர் வேட்பாளர் கபிலன் மேயராக அல்ல யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது. உறுப்பினராக நியமித்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த அடுத்த நாளே அதனை தடுப்பதற்கு வழக்கு தாக்கல் செய்வோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 31 May 2025 7:32 pm

பற்றி எரியும் காட்டுத் தீ ; கனடாவில் அவசர காலநிலை பிரகடனம்

கனடாவில் சஸ்காட்சிவான் மற்றும் மனிடோபா மாநிலங்களில் பற்றியெரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் சஸ்காட்சிவான் (Saskatchewan) மற்றும் மனிடோபா (Manitoba) மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் காட்டுத் தீயானது தற்போது தீவிரமடைந்து வருகின்றது. குறிப்பாக 160க்கும் மேற்பட்ட இடங்களில் இக் காட்டுத்தீ பரவிவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, அப் பகுதிகளில் நேற்று அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் வசித்து வரும் சுமார் 17,000 […]

அதிரடி 31 May 2025 7:30 pm

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி :பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இரண்டு நாடுகளும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்து போரை நிறுத்தியது. அப்படி இருந்தும் கூட இன்னும் பரபரப்பு குறையவில்லை என்று சொல்லலாம். ஏனென்றால், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு […]

டினேசுவடு 31 May 2025 7:20 pm

உயிரை துச்சமாக மதிக்கிறாராம் அனுர!

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார். தான் ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை என்றும், மக்களின் துயரங்களை உண்மையாகவே கண்ட மற்றும் அனுபவித்த தலைவர் என்ற வகையில் அனைத்து மக்களுக்காகவும் சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பதிவு 31 May 2025 7:20 pm

உலக அழகிப் போட்டி ; அனுதிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து

உலக அளவில் நடத்தப்படும் 72ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று (31) இந்தியாவின் தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நமது நாட்டையும் மக்களையும் சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் அவர் ஏற்கனவே நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இன்று […]

அதிரடி 31 May 2025 7:10 pm

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர் ரவி முரளிதர் (27) என்பவரைக் கைது செய்துள்ளனர். இவர் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியாளராக வேலை செய்து வந்தார். அவரிடம் தீவிரவாத தடுப்புப் படையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து தீவிரவாத தடுப்புப் படை அதிகாரி கூறுகையில், ''பாகிஸ்தான் உளவுத்துறையுடன் சமூக வலைத்தளம் மூலம் ரவி இந்தியக் கடற்படை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். `இந்தியாவின் முக்கிய எதிரி பாகிஸ்தான் அல்ல..!’ - அமெரிக்கா பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு சொல்வதென்ன? 14 போர்க்கப்பல்கள் குறித்த விபரங்களைப் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேருடன் வாட்ஸ் ஆப் மூலம் இந்தியப் போர்க்கப்பல்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியப் போர்க்கப்பல்கள் நிற்கும் இடம் போன்ற தகவல்களை டிஜிட்டல் முறையில் அனுப்பி இருக்கிறார். அவரிடமிருந்து வீடியோ, ஆடியோ, படங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.  பாகிஸ்தானைச் சேர்ந்த பிரீத்தி ஜெய்ஸ்வால் என்பவருடன் ரவி தொடர்பிலிருந்துள்ளார். பிரீத்தி ஜெய்ஸ்வால் பெயரை ரவி தனது மொபைல் போனில் அங்கிதா கல்லூரி தோழி என்று பதிவு செய்து வைத்துள்ளார். ரவி பாகிஸ்தான் ஏஜெண்டுடன் சாட்டிங் செய்த விபரங்களை டெலிட் செய்துள்ளார். ஆனால் அத்தகவல்களைத் திரும்ப எடுத்துவிட்டோம். ரவி ஒரு நோட்டு புத்தகத்தில் 14 போர்க்கப்பல்களின் பெயர்கள், அவை எங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது என்ற விபரங்களை விரிவாக எழுதி வைத்திருந்தார். அதனைப் பாகிஸ்தான் ஏஜெண்ட்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதோடு கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் ஏஜெண்டுடன் பேசிய ஆடியோ விபரம் ரவியின் சமூக வலைத்தளப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போர்க்கப்பல்களையும் நேரில் ஆய்வு செய்து முழு விபரங்களை எழுதி வைத்து இருக்கிறார். அவற்றைப் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரீத்தி ஜெய்ஸ்வால் மற்றும் சர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கைதான ரவி 2024ம் ஆண்டு முதல் பிரீத்தியுடன் தொடர்பு ஏற்பட்டதாக ரவி தெரிவித்துள்ளார். பின்னர் வாட்ஸ் ஆப் மூலம் உறவை ஏற்படுத்திக்கொண்டனர். ரவியுடன் காதல் தொடர்பு வைத்துக்கொள்வது போல் பிரீத்தி நடித்துள்ளார். அதோடு இந்தியக் கடற்படை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி இருக்கிறார். காதலுடன் பேசி போர்க்கப்பல்களின் நடமாட்டம், இருக்கும் இடங்கள், கப்பல்களின் பழுது விபரங்களைத் தனக்குத் தெரிவிக்கும் கூறி முக்கியமான விபரங்களைக் கேட்டுப் பெற்றுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்... - இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 6:53 pm

கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது.

ஆந்தைரேபோர்ட்டர் 31 May 2025 6:53 pm

‘கண்ணப்பா’ படத்தின் பிரேத்யக காட்சிகள் திரையிடல் செய்தி!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய

ஆந்தைரேபோர்ட்டர் 31 May 2025 6:45 pm

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ... அன்று பிரதமர், இன்று முதல்வர்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் மேற்கொண்ட பிரம்மாண்ட ரோடு ஷோ சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.

சமயம் 31 May 2025 6:33 pm

இந்தோனேசியாவில் பயங்கர கல்குவாரி விபத்து: 10 பேர் பலி, 6 பேர் மாயம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர கல்குவாரி விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். கல்குவாரி விபத்து இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிரெபோன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட பயங்கர கல்குவாரி விபத்தில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறு பேர் இன்னும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், இயற்கை கல் குவாரியில் பணிபுரிந்த இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். உள்ளூர் காவல்துறை தலைவர் சுமர்ணி தெரிவித்த தகவலின்படி, மீட்பு படையினர் […]

அதிரடி 31 May 2025 6:30 pm

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை :தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் திமுக தெற்கில் இருந்து தொடங்கும் வகையில் நாளை மதுரை மாவட்டத்தில் பிரமாண்டமாக பொதுக்குழு ஒன்றை நடத்துகிறது. எனவே, நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு முன்பு இன்று மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார் எனவும், மதுரை பெருங்குடி […]

டினேசுவடு 31 May 2025 6:27 pm

தடை செய்யப்பட்ட அமைப்புகள்: தனிநபர்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், கனேடிய தமிழர் தேசிய அவை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்துபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ளஸ் ஆகியனவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பதிவு 31 May 2025 6:04 pm

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி :இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகி விளையாடி அசத்தியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய A அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று கேன்டர்பரி செயிண்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி […]

டினேசுவடு 31 May 2025 6:02 pm

இரும்பு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரியை 50% உயர்த்தினார் டிரம்ப்

எதிர்வரும் புதன்கிழமை முதல் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீதான தற்போதைய வரி விகிதத்தை 25% லிருந்து 50% ஆக இரட்டிப்பாக்குவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் நடந்த ஒரு பேரணியில் பேசிய டிரம்ப், இந்த நடவடிக்கை உள்ளூர் இரும்பு தொழில் மற்றும் தேசிய விநியோகத்தை அதிகரிக்க உதவும் என்றும், அதே நேரத்தில் சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்கும் என்றும் கூறினார். அமெரிக்க எஃகு மற்றும் ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் இடையேயான கூட்டாண்மை மூலம் இந்தப் பகுதியின் எஃகு உற்பத்தியில் 14 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்றும் டிரம்ப் கூறினார். எந்தவொரு பணிநீக்கமும் இருக்காது, அவுட்சோர்சிங் எதுவும் இருக்காது, மேலும் ஒவ்வொரு அமெரிக்க எஃகு தொழிலாளியும் விரைவில் தகுதியான $5,000 போனஸைப் பெறுவார்கள்என்று எஃகுத் தொழிலாளர்கள் நிறைந்த கூட்டத்தில் டிரம்ப் கூறினார். அமெரிக்க எஃகு நிறுவனத்தின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு வழியாக 50% ஆக அதிகரிப்பதை அவர் ஊக்குவித்தார். 50% இல், அவர்களால் இனி வேலியைத் தாண்ட முடியாது என்று அவர் கூறினார். நாங்கள் மீண்டும் பென்சில்வேனியா இரும்பு நிறுவனத்தை அமெரிக்காவின் முதுகெலும்பாக மாற்றப் போகிறோம் என்றார்.

பதிவு 31 May 2025 6:00 pm

பேருந்துக் கட்டணம் உயர்வா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு!

தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சமயம் 31 May 2025 5:58 pm

தமிழ்நாட்டில் கனமழை இனி அவ்வளவு தானா? ஒரு வார வானிலை நிலவரம் வெளியீடு!

தென்மேற்கு பருவமழை தொடங்கி நாளுக்கு நாள் தீவிரமாகி வந்தாலும் அடுத்த ஒரு வார காலத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை. லேசானது முதல் மிதமான அளவிலே மழைப் பொழிவு இருக்கும்.

சமயம் 31 May 2025 5:54 pm

'பணமதிப்பிழப்பு முதல் பில்கிஸ் பானு தீர்ப்பு வரை' - முதல் பெண் தலைமை நீதிபதியாகும் பி.வி. நாகரத்னா

உ ச்ச நீதிமன்றத்தின் ஐந்தாவது மூத்த நீதிபதியான நீதிபதி நாகரத்னா, அக்டோபர் 29, 2027 அன்று பணி ஓய்வு பெறும் வரை, நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களைப் பரிந்துரைத்தவாறு கொலீஜியத்தில் உறுப்பினராக நீடிப்பதோடு, செப்டம்பர் 23, 2027 அன்று, இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார். தற்போது, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில், தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய், நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி ஜே.கே மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய ஐவர் உறுப்பினர்களாக உள்ளனர். நீதிபதி நாகரத்னா உச்ச நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காகவும், பல உயர் நீதிமன்றங்கள் சார்ந்த முக்கியமான நியமனங்களை மேற்கொள்வதற்காகவும், தலைமை நீதிபதி கவாய் திங்களன்று தனது முதல் கொலீஜியம் கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொலீஜியம் முறைப்படி, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்தல், இடமாற்றம் செய்தல் மற்றும் நீதிபதிகளின் பதவி உயர்வு ஆகியவை குறித்துப் பரிந்துரை செய்வர். 1993-ம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, கொலீஜியம் அமைப்பு நடைமுறையில் உள்ளது. International Day for Violence against Women: `இனி மன்னிப்பதற்கில்லை' - ஐ.நா. சொல்வதென்ன? நீதிபதி நாகரத்னாவை பற்றி...! அக்டோபர் 30, 1962-ல் பிறந்த நீதிபதி பி.வி. நாகரத்னா, முன்னாள் தலைமை நீதிபதி வெங்கட்ராமையாவின் புதல்வியாவார். 1987-ல் நாகரத்னா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். அக்டோபர் 28, 1987-ல், பெங்களூருவில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். சேவைச் சட்டம், வணிகம், காப்பீடு சார்ந்த வழக்குகள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த வழக்குகளில் கவனம் செலுத்தினார். 2008, பிப்ரவரி 18 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நாகரத்னா. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 17, 2017 அன்று நிரந்தர நீதிபதியானார். 2021-ல் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். தற்போது, பெங்களூரு சமரச மையம் மற்றும் கர்நாடக நீதித்துறை அகாடமியின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். 2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தவர்! Chandrachud ``என் குழந்தைகளுக்கான பரிசோதனை வலி மிகுந்தவை'' - இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் துணிச்சலான தீர்ப்புகளுக்குச் சொந்தக்காரரான நீதிபதி நாகரத்னா, பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்தவர். 2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தவர் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என அவர் வாதிட்டதும் குறிப்பிடத்தக்கது. `ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 5:51 pm

நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்... - இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன?

இந்த மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான தாக்குதலில் 'எண்ணிக்கைக் குறிப்பிடாமல்' போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கியம் அல்ல, அவை ஏன் வீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம் என சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் (chief of defence staff of the Indian Armed Forces) அனில் சவுகான் ப்ளூம்பெர்க் தளத்துடனான நேர்காணலில் கூறியுள்ளார். MASSIVE BREAKING . Rahul Gandhi statement once again stands vindicated Indian Military has confirmed for the first time that it lost an unspecified number of fighter jets in the war with Pakistan in May . Anil Chauhan Chief Of The Defence Staff of the Indian Armed Forces… pic.twitter.com/f15EqzGWE9 — Ravinder Kapur. (@RavinderKapur2) May 31, 2025 பாகிஸ்தான் சொல்வதில் உண்மையில்லை! பாகிஸ்தான் இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறுவது முற்றிலும் தவறு எனக் கூறிய அவர், குறிப்பிட்டு எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பதைக் கூற மறுத்துள்ளார். நல்ல விஷயம் என்னவென்றால் நாம் திட்டமிடலில் என்ன தவறு செய்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டோம். அதை சரி செய்து அடுத்த இரண்டு நாட்களில் நமது அனைத்து ஜெட்களும் வானில் பறந்தன, தூரத்து இலக்குகளை வெற்றிகரமானத் தாக்கியிருக்கின்றன எனப் பேசியுள்ளார் ஜெனரல் அனில் சவுகான். indian air force மே7ம் தேதி மோதல் தொடங்கியதில் இருந்து, இந்திய போர் விமானங்கள் பற்றி ஒரு அரசு அல்லது ராணுவ அதிகாரி வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆணு ஆயுத போரை நெருங்கவில்லை! இந்திய ராணுவம் மோதலில் போர் விமானங்களை இழந்ததா என்பது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துவந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், 6 விமானங்களை தங்கள் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் தெரிவித்திருந்தார். எனினும் அந்த தகவலில் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவில்லை. மேலும் சவுகான், சீனா பாகிஸ்தானுக்கு வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து தங்களால் துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடிந்ததாகத் தெரிவித்துள்ளார். நடைபெற்ற சண்டையானது அணு ஆயுத போராக மாறுவதற்கான கட்டத்தை நெருங்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். `கடும் மோதல்' வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 போர் விமானம்!

விகடன் 31 May 2025 5:49 pm

அதிமுக கூட்டணியில் தனக்கு துணை முதல்வர் பதவி.. ஆதவ் அர்ஜூனா ரகசியம் - போட்டுடைத்த சீமான்!

அதிமுக கட்சியில் கூட்டணி அமைத்து கொண்டால் தன்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 31 May 2025 5:44 pm

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (31), சனிக்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரனின் மதிப்பீடு […]

அதிரடி 31 May 2025 5:30 pm

எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீ உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி சிறுமி

எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி, துணை முதலமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை தமிழக மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு. இவர் தனது தந்தையுடன் இணைந்து மலையேற்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர், 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் பல்வேறு உயரமான இடங்களுக்கு ஏறி சென்றுள்ளார். அந்தவகையில் எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 […]

அதிரடி 31 May 2025 5:30 pm

மகாராஷ்டிரா: நாங்கள்தான் காட்டின் மன்னர்கள் - பழங்குடிகளின் வாழ்க்கையைப் பாப் பாடலாக்கும் பெண்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, கட்சிரோலி, கோண்டியா போன்ற மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியின மக்களுக்காக மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. அவர்களுக்கு இன்னும் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல்தான் இருக்கின்றன. இதனால் பழங்குடியின மக்களிலிருந்து உயர் பதவிக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. பாடகர் மகி மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மகி என்ற 24 வயது பெண் இசைக் கலைஞர், தனது மக்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திப் பாடி இருக்கும் ஒரு பாப் பாடல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகப் பரவி இருக்கிறது. Nilgiris: ``பலா மரங்களை தேடி வரும் யானைகளுக்கு என்ன பதில் சொல்வோம்..'' -வேதனையில் பழங்குடிகள் பழங்குடியின சமூக ஆர்வலரான இசைக்கலைஞர் மகி தனது பாடலில் தனது மக்கள் எந்த அளவுக்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக இருக்கின்றனர் என்பது குறித்து 'Jungle Cha Raja' என்ற பெயரில் ஒரு பாப் பாடலை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அப்பாடல் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அவர் தனது பாப் பாடலில், ''நீங்கள் உங்களது கொடியை வளர்ச்சிக்காக உயர்த்துகிறீர்கள். நான் எனது கொடியை இயற்கைக்காகத் தூக்குகிறேன். வனப்பகுதியை நாங்கள்தான் ஆள்கிறோம். நாங்கள் வனப்பகுதியின் உண்மையான பாதுகாவலர்கள். புலிகளின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் நாங்கள்தான் வனத்தின் உண்மையான மன்னர்கள். நீர், நிலம், காடுதான் பழங்குடியினரின் அடையாளம். பழங்குடியின மக்கள் புயலைப்போல் எழும்போது, காட்டில் உள்ள காற்று கூட வழிவிடும்'' என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு தனது பாடலில் தன் சமுதாய மக்கள் காட்டிற்குச் சென்று விறகு, தேன் எடுப்பது, அவர்கள் காட்டில் எந்த அளவுக்குக் கஷ்டப்படுகிறார்கள் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மகி பாப் பாடலில் கவனம் செலுத்துவது குறித்து மகி கூறுகையில், ''ஆரம்பத்தில் நான் கவிதைதான் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் விவசாயிகள் போராட்டத்திற்காக பாப் பாடலில் கவனம் செலுத்தினேன். பாப் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் என்பதால் அவை பெரிய அளவில் சென்றடையும் என்பதால் அதில் கவனம் செலுத்தினேன். இந்தியாவில் 50 சதவீத மக்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். எனவே கணிசமான மக்களைச் சென்றடைய பாப் பாடல் ஒரு கருவியாக இருக்கும் என்று கருதுகிறேன்'' என்றார்.  Travel Contest: 'கம்பீரமான ஜார்வா பழங்குடிகள்; அதிசயமான மண் எரிமலைகள்' - அந்தமான் சுற்றுலா பாகம் 2 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 5:25 pm

உகந்தை முருகன் ஆலய புனித பூமியில் கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை-தொடரும் சர்ச்சைகள்

தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம் கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறிய வருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவு தென் எல்லையில் அமைந்துள்ள தமிழர்களுடைய தொன்மையும் புராதனமும் வரலாறும் கொண்ட உகந்தை முருகன் ஆலய புனித பிரதேச பகுதியில் காணப்படும் ஒரு மலையில் திடீரென அப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரால் ஸ்தாபிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான விவகாரம் தொடர்பில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் தகவல்கள் ஊடகங்கள் […]

அதிரடி 31 May 2025 5:09 pm

தமிழக ரயில்வே திட்டங்கள் முடக்கம்! பின்னணியில் பாஜக அரசு- சு.வெங்கடேசன் பதிவு...

தமிழ்நாட்டில் முக்கிய ரயில் திட்டங்களை மத்திய அரசு முடக்கியதாகவும், அதனை மறைக்க ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் பிங்க் புத்தகத்தை வெளியிடாமல் இருந்ததாகவும் சு.வெங்டேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சமயம் 31 May 2025 5:09 pm

What to watch on OTT: 'ரெட்ரோ', 'துடரும்' - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வார ஓடிடி வெளியீடுகளின் பட்டியல்   INTERROGATION (HINDI) கொலை செய்யப்படும் நீதிபதியும், கொலையின் காரணத்திற்கான விசாரணையும் என விரைகிறது இந்த 'இன்டரோகேஷன்'.  INTERROGATION (HINDI) நடிகர்கள் தர்ஷன் ஜரிவாலா , அபிமன்யூ சிங் , யஷ்பால் ஷர்மா ,ராஜ்பல் யாதவ் நடித்துள்ள இத்திரைப்படம் மே 30-ம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது . தியேட்டர் டூ ஓடிடி   ரெட்ரோ - நெட் ஃப்ளிக்ஸ்   நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ரெட்ரோ. வெளியான முதல் நாள் முதலே கலவையான விமர்சனங்கள் பெற்ற இத்திரைப்படம் 30 நாட்களுக்கு பிறகு மே 31-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. ரெட்ரோ நிழற்குடை - ஆஹா  நடிகை தேவயானி நடிப்பில் கடந்த மே 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மே 30-ம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது.  SIKANDAR (HINDI)-NETFLIX இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூட்டணியில் மார்ச் 30-ம் தேதி வெளியான திரைப்படம் சிக்கந்தர் . மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்ற இத்திரைப்படம் பல நாட்களுக்கு பிறகு கடந்த மே 25-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.  AGNYATHAVASI (KANNADA)- ZEE 5 கடந்த ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த சஸ்பென்ஸ் திரைப்படம் தற்போது ஜீ5 தளத்தில் மே 28-ம் தேதி வெளியாகியுள்ளது. HIT 3 (TELUGU)- NETFLIX   போலீஸ் விசாரணை கதைகளில் வெற்றி கண்ட ஹிட் வரிசைப் படங்களின் மூன்றாவது பாகமான இத்திரைப்படத்தில் தெலுங்கின் நேச்சுரல் ஸ்டாரான நானி நடித்துள்ளார். மே 1-ம் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது, கடந்த மே 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.  THUDARUM THUDARUM (MALAYALAM)- JIO HOTSTAR   மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு பெற்று நல்ல வசூலும் பார்த்த இத்திரைப்படம் , மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தற்போது மே 30-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார்ட் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங்கிலும் வெளியாகியுள்ளது. CAPTAIN AMERICA: BRAVE NEW WORLD (ENGLISH)-JIO HOTSTAR   மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு மே 28-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. CAPTAIN AMERICA: BRAVE NEW WORLD ஓடிடி தொடர்கள்   வானில் தேடினேன் AHA - மே 30 Katha Sudha : Naathi Charaamani (Telugu) etv WIN - மே 25 Criminal Justice: A Family Matter (Hindi ) Jio Hotstar - மே 29 Kankhajura (Hindi) SonyLIV - மே 30 சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 31 May 2025 5:03 pm

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்கிறது தி.மு.க. அந்த இடங்களுக்கு வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் ஆகியோரைக் களமிறக்கிய தி.மு.க, மீதமுள்ள ஒரு இடத்தை ம.நீ.ம தலைவர் கமல் ஹாசனுக்குக் கொடுத்திருக்கிறது. அதேபோல, பிரதிநிதித்துவ அடிப்படையில் அ.தி.மு.க-வுக்கு இரண்டு எம்.பி-கள் சீட் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் பெற, அ.தி.மு.க-வுக்குள் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசும்போது, பிரதிநிதித்துவம் அடிப்படையில் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கும் இரண்டு இடங்களை வெல்ல, 68 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அ.தி.மு.க வசம் தற்போது 62 பேர் இருக்கின்றனர். இதில் ஒரு சீட்டுக்கு வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை உறுதி செய்யப்பட்டிருக்கிறார். Seeman: அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு - ரகசியம் சொல்லும் சீமான்! மீதமுள்ள ஒரு இடத்திற்குத்தான் கடுமையான போட்டி நடக்கிறது. அதன்படி, அந்த இடத்தைப் பிடிக்க, பா.ஜ.க. (நான்கு எம்.எல்.ஏ.க்கள்), பா.ம.க (ஐந்து எம்.எல்.ஏ.க்கள்), ஓ.பி.எஸ் தரப்பு (நான்கு எம்.எல்.ஏ.க்கள்) ஆகியோரில் இரண்டு பேரின் ஆதரவு கட்டாயம் வேண்டும். அதிமுக | எம்.ஜி.ஆர் மாளிகை கூட்டணி தர்ம அடிப்படையில், பா.ஜ.க ரூட் மூலமாக அவர்களிடமிருக்கும் நான்கு எம்.எல்.ஏ-களின் ஆதரவையும், அவர்கள் மூலமாக ஓ.பி.எஸ்ஸிடம் பேசி, அந்த அணியின் ஆதரவைப் பெறலாம் என்பதுதான் எடப்பாடியின் எண்ணம். இதை நாங்கள் செய்து கொள்கிறோம் என்று தே.மு.தி.க எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இன்பதுரை இதனால்தான் இழுபறி நீடிக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க-வுக்கே அந்த இடம் கிடைக்கும்பட்சத்தில், அதைப் பட்டியலின நபருக்குக் கொடுக்கத்தான் தலைமை முடிவெடுத்திருக்கிறது. அதன்படி, அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளர் சதன் பிரபாகர், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் எனப் பலரும் ரேஸில் இருக்கிறார்கள். ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர் அதேநேரத்தில், மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் எம்.பி-யாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். திமுக கூட்டணியில் ஒரே ஒரு ராஜ்ய சபா சீட் - ம.நீ.ம ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன?! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 5:00 pm

முதல்வர் வருகை; திரைச்சீலையால் மறைக்கப்பட்ட ’அசுத்த’ கால்வாய் - புதுப்பிக்கப்பட்ட சாலைகள்

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திமுகவினர் செய்து வரும் பிரமாண்ட ஏற்பாடுகளால் மதுரை மாநகரம் அமளிதுமளியாகி வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. புதுப்பிக்கப்படும் சாலைகள் நீண்ட காலத்துக்குப்பின் ஜூன் 1 ஆம் தேதி திமுகவின் மாநில பொதுக்குழு மதுரையில் நடைபெறுகிறது. அதற்காக உத்தங்குடி அருகே பிரமாண்ட பொதுக்குழு அரங்கம், விழாப்பந்தல், உணவுக்கூடம் என ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகிறார். அமைச்சர் பி.மூர்த்தி. ஒருபக்கம் கட்சியினருடன் மாவட்ட நிர்வாகமும் கடந்த ஒரு வாரமாக களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர். பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். இன்று விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 கிலோ மீட்டர் தூரம் ‘ரோடு ஷோ' நடத்தி பொதுமக்களை சந்திக்கிறார். இதற்காக அவர் வருகின்ற பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் பளிச்சென்று மாற்றி வருகிறார்கள். திரைச்சீலையால் மறைக்கப்பட்ட கால்வாய் மதியம் தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்துவிட்டு மாலை 4 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் பெருங்குடி, அவனியாபுரம், வெள்ளக்கல், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்.நகர் சுரங்க பாதை வழியாக பழங்காநத்தம், வ.உ.சி.பாலம், எல்லீஸ்நகர் 70 அடி ரோடு, பை-பாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குருதியேட்டர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டனா வழியாக சென்று மறைந்த மேயர் முத்து சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார். செல்லும் வழியில் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை முதல்வர் திறந்து வைக்கிறார். நாளை 1-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் இந்த நிலையில் மதுரையில் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ள நிலையில் முதல்வர் வருகைக்காக அவர் வருகின்ற பாதையிலும், மு.க.அழகிரி வீட்டுக்கு செல்வார் என்ற உறுதிப்படுத்தாத தகவலால் அழகிரி வீடு அமைந்துள்ள டி.வி.எஸ் நகர்ப் பகுதியிலும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டது. பொதுக்குழு அரங்கம் ரோடு ஷோ வருகின்ற வழியில் கழிவு நீர் கலந்து அசுத்தமாகிவிட்ட பந்தல்குடி கால்வாயின் ஒட்டி முதலமைச்சர் வருவதால் முதலமைச்சர் பார்வையில் கழிவுநீர் கால்வாய் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக வண்ணத் துணிகளை வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாயை சுற்றி அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பந்தல்குடி கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் பல ஆண்டுகளாக கடும் நோய்க்கு ஆளாகி வரும் பொதுமக்கள் முதலமைச்சரிடம் தங்களது பிரச்சனை குறித்து கூறலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது பந்தல்குடி கால்வாய் பகுதியில் முழுவதுமாக வண்ண வண்ண திரைச் சீலைகளால் அடைக்கப்பட்டத அதிர்ச்சி அடைந்தார்கள். கோரிப்பாளையம் பகுதியிலிருந்து நரிமேடு பகுதி வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் கால்வாய் ஓரம் திரைச்சீலைகளால் மூடப்பட்டுள்ளன. கால்வாயை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களோடு சேர்த்து திரைசீலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களை கூட எடுக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிபட்டனர். இது சர்ச்சையானதைத் தொடர்ந்து மூடப்பட்ட வண்ணத்திரைகளை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார். இப்படி முதலமைச்சரின் வருகையால் அமளி துமுளியால் மதுரை மாநகரமே பரபரப்பாக காணப்படுகிறது.

விகடன் 31 May 2025 4:58 pm

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை :தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா உலகில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ராஜேஷ் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவருடைய உடல் அவர் உயிரோடு இருந்த சமயத்தில் தனக்கு தானே கட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ராஜேஷ் தனது 40ஆவது வயதில் சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே கல்லறை கட்டியது, அவரது வாழ்க்கையில் […]

டினேசுவடு 31 May 2025 4:58 pm

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவு விற்பனை- ஆறு கடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்குச் சிறந்த மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு சம்மாந்துறை சுகாதாரப் பிரிவினர் உணவு நிலையங்களில் அதிரடிப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆறு கடை உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இனிப்புக் கடைகள் பலசரக்குக் கடைகள் மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் என்பன இவ்வாறு கடந்த புதன்கிழமை(28) பரிசோதிக்கப்பட்டன. இதன் போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனைக்கு […]

அதிரடி 31 May 2025 4:50 pm

இந்திய எல்லைக்கு போகாதீங்க, கைது செய்வாங்க... சீன மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

சீன மக்கள் இந்திய எல்லைக்கு செல்ல வேண்டாம் என நேபாளத்தில் உள்ள அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமயம் 31 May 2025 4:49 pm

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சறுக்கல்.. ஆனாலும் ஒரு நிம்மதி!

சென்ற நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சற்று பின்தங்கியுள்ளது. இருந்தபோதிலும் வேகமாக வளரும் நாடாக உள்ளது.

சமயம் 31 May 2025 4:47 pm

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம்

16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுகேகொடை பொலிஸ் நிலையத்திற்கும்,தங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வத்தளை பொலிஸ் நிலையத்திற்கும்,பொலிஸ் சட்ட பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் மனித உரிமைகள் பிரிவுக்கும்,எல்பிட்டிய பொலிஸ் பிரவின் பொறுப்பதிகாரி கொஸ்கொடை பொலிஸ் நிலையத்திற்கும், வாதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கும், மத்திய குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி வாதுவை பொலிஸ் […]

அதிரடி 31 May 2025 4:46 pm

DMK: 'புதிய பதவி... புதிய அணிகள்... புதிய துணை பொதுச்செயலாளர்...' - திமுக பொதுக்குழு பரபர!

ஜனவரி மாதம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட திமுக பொதுக்குழு, ஒருவழியாக ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி.மூர்த்தி கவனித்து வருகிறார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக மதுரையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் புக் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு முதல்நாளே மதுரைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து மதுரை அரசு விருந்தினர் மளிகை வரை ரோடு ஷோவும் செய்ய உள்ளார். பொதுக்குழு அரங்கம் இந்நிலையில், கட்சிக்குள் சில அதிரடி மாற்றங்களைப் பொதுக்குழுவில் செய்ய உள்ளதாக நமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்சி சீனியர்களிடம் விசாரித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு நடக்கும் இந்தப் பொதுக்குழு, திமுகவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன்படி, மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்யும் தீர்மானங்கள் உட்பட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகின்றன. அதேபோல், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி ஆகிய இரண்டு புது அணிகள் உருவாக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தற்போது தி.மு.க-வில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகிய ஐந்து துணை பொதுச் செயலாளர்கள் இருக்கின்றனர். அவர்களோடு ஒன்று அல்லது இரண்டு பேர் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளனர். மேலும், தலைமைக்கழகத்தின் அமைப்பில் மாற்றம் கொண்டு வரவும் இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடக்கின்றன. அதன்படி, பொதுக்குழுவிலோ அல்லது பொதுக்குழு முடிந்தபிறகோ தலைமைக்கழகத்தில் சீனியர்களின் பதவி பறிக்கப்படவும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் விரிவாக. ’இது திமுக தலைமையின் தனி கணக்கு’ - மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் பின்னணியும்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 4:34 pm

தமிழீழ வைப்பகத்தில் மீட்ட நகைகளை தாருங்கள்

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், நகைகளை அடகு வைத்தவர்களில் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் என்பவரே அவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார் உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி தங்க நகைகள் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டது. இறுதிக் காலகட்டத்தில் அப்போதைய சந்தைப் பெறுமதிப்படி சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் இருந்ததாக சொல்லப்படுகின்ற போதிலும், அந்தளவு நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை. அதேபோன்று, நகைகளை அடைவு வைத்தவர்கள் அனைவரும் தற்போது இருக்கின்றார்கள் என்பதற்கோ, இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதோ எதிர்பார்க்க முடியாதது. எனவே, யாதார்தத்தினை புரிந்து கொண்டு நகைகளை அடைவு வைத்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, அவர்கள் அடைவு வைத்த தங்க நகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அடைவு நகை விவகாரத்தினை வெறுமனவே தேர்தல் வாக்குறுதியாக கடந்து செல்லாமல் விரைவான நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார்.

பதிவு 31 May 2025 4:33 pm

தேம்ஸ் நதியில் காணாமல் போன குழந்தை: தேடும் பணி தீவிரம்!

தேம்ஸ் நதியில் காணாமல் போன குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காணாமல் போன குழந்தை தேம்ஸ் நதியில் குழந்தை ஒன்று காணாமல் போனதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவசரகாலச் சேவைகள் விரிவான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நேற்று பிற்பகல் கிரேவ்சென்ட் ராயல் டெரஸ் பியர் அருகே இரண்டு குழந்தைகள் நீரில் தத்தளித்ததாகத் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், இரண்டாவது […]

அதிரடி 31 May 2025 4:30 pm

மட்டக்களப்பு காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. அங்கிருந்த பொருட்கள் பொலிஸார் மற்றும் பொது மக்களால் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு 31 May 2025 4:26 pm

திருகோணமலையின் வாகனம் மோதி முதியவர் உயிரிப்பு

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி 72 வயதுடைய முதியோர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் கனரக வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (30) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 31 May 2025 4:24 pm

கொரோனா பரவலுக்கு நடுவே பள்ளிகள் திறப்பு: சுகாதார துறை வெளியிட்ட வழிகாட்டுதல்கள் என்னென்ன?

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

சமயம் 31 May 2025 4:17 pm

மட்டன் சுக்கா முதல் பீடா வரை.. திமுக பொதுக்குழு உணவுப் பட்டியல் - மதுரையில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மதுரை திமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு 20க்கும் மேற்ப்பட்ட உணவு வகைகள் பறிமாறப்பட உள்ளது.

சமயம் 31 May 2025 4:07 pm

Gaza: அச்சுறுத்தி நெருக்கும் இஸ்ரேல் ராணுவம்... வடக்கு காசாவின் கடைசி மருத்துவமனையும் மூடல்!

aவடக்கு காசா மாகாணத்தில் சுகாதார சேவைகள் வழங்கிவந்த கடைசி மருத்துவமனையான அல்-அவ்தா மருத்துவமனையை உடனடியாக மூடவேண்டும் என இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சேவைகளை நிறுத்தியுள்ளதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டாக்டர் முகமது சல்ஹா, வியாழனன்று மாலையில், ஜபாலியாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இரண்டு வார முற்றுகைக்குப் பிறகும் இந்த கட்டாய வெளியேற்றம் நடைபெற்றுள்ளது என்பது மிக வருத்தமாக இருக்கிறது. தற்போது, வடக்கு காசாவில் எந்த மருத்துவமனையும் செயல்படவில்லை. நாங்கள் மருத்துவமனையை காலி செய்து வெளியேறாமல் இருந்தால், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மருத்துவமனையின் உள்ளே நுழைந்து, உள்ளே இருப்பவர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினர் மற்றும் மருத்துவமனையின் மீது குண்டு வீசுவதாகவும் அச்சுறுத்தினர். நாங்கள் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் உயிரை பாதுகாப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். வியாழனன்று காலை 9:00 மணி முதல், மருத்துவமனை மீது ஏராளமான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் நண்பகல் 1:00 மணியளவில், தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட இஸ்ரேலியப் படைகள், மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு என்னை வற்புறுத்தினர். சுகாதார பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகள் இருந்ததால், மருத்துவமனையிலிருந்து வெளியேற நான் ஆரம்பத்தில் மறுத்துவிட்டேன். மேலும், எங்கள் ஊழியர்களில் 10 பேருடன் நான் தங்கிக்கொண்டு மற்றவர்களை வெளியேற்ற முன்வந்தேன். ஆனால், அதற்கு இஸ்ரேல் இராணுவம் மறுத்துவிட்டது. ஏழு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின், சுமார் இரவு 8:30 மணிக்கு மருத்துவமனை வெளியேற்றம் நடந்தது. சாலைகள் முற்றிலுமாக சீரற்ற நிலையில் இருப்பதால், மருத்துவமனையிலிருந்து வெகு தொலைவில் (300 மீட்டருக்கும் மேல்) நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்களுக்கு ஊழியர்கள் நோயாளிகளை தூக்கிச் சென்றனர் மற்றும் நோயாளிகள் காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என நிலவரத்தை பகிர்ந்தார். மருத்துவமனை வெளியேற்றம் குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அல்-அவ்தா மருத்துவமனை மூடப்பட்டதால், வடக்கு காசாவில் மருத்துவமனை எதுவும் செயல்படவில்லை. இது அங்குள்ள மக்களின் முக்கியமான உயிர்நாடியைத் துண்டித்துவிட்டது. பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மருத்துவமனைகள் ஒருபோதும் தாக்கப்படவோ அல்லது இராணுவமயமாக்கப்படவோ கூடாது என கூறினார். போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த மருத்துவமனை வெளியேற்றம் நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் கையொப்பமிட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ள 'அமெரிக்க திட்டத்தை' முழுமையாக மதிப்பாய்வு செய்து வருவதாக ஹமாஸ் கூறுகிறது. வெள்ளியன்று இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த ஒப்பந்தம் மிக நெருக்கமானது என நம்புவதாகக் கூறினார். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் உறுதிப்பாடு உள்ளிட்ட அதன் முக்கிய கோரிக்கைகளை இத்திட்டம் பூர்த்தி செய்யவில்லை என்று ஹமாஸ் கூறியுள்ளது. இதுகுறித்து கருத்து பகிர்ந்த காஸாவின் ஹமாஸ் சுகாதார அமைச்சகம், சண்டையில் 60 நாள் இடைநிறுத்தம் இருக்கும். முதல் வாரத்தில், 28 பணயக்கைதிகளை உயிரோடும், இறந்த நிலையிலும் ஹமாஸ் விடுவிக்கும். நிரந்தர போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபின், எஞ்சியுள்ள 30 பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நிறுவனங்கள் வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தது. எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே காசா மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்தது இஸ்ரேல். பணயக்கைதிகளில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரோடு இருப்பதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் உதவிகளைத் திருடியதாக இஸ்ரேல் குற்றம் சா ட்டியுள்ள நிலையில், ஹமாஸ் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

விகடன் 31 May 2025 4:04 pm

Rajinikanth: நீங்க நீண்ட நாள் வாழணும்னு சொல்லுவார் - நடிகர் ராஜேஷ் குறித்து ரஜினிகாந்த் உருக்கம்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் மே 29 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இவருக்கு இரங்கலைத் தெரிவித்திருந்தனர். நடிகர் ராஜேஷ் அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ராஜேஷ் எளிமையான மனிதர். அவருக்கு நண்பர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். `ஒரு நடிகரோட வாழ்க்கையில் இந்த 5 பேர் சரியா இருந்தா சக்சஸ் தான்’ - நடிகர் ராஜேஷ் பேட்டியிலிருந்து..! முதல்வர் ஸ்டாலின் முதல் இளையராஜா வரை பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இதுவே அவர் எப்படி வாழ்ந்திருக்கிறார் என்பதற்குச் சான்று. அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது. நல்ல மனிதராக வாழ்ந்திருக்கிறார். ரஜினிகாந்த் என்னை அடிக்கடி சந்தித்து, நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கூறி அதற்கு, என்னென்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று கூறுவார். நல்ல மனிதர். அவரை இழந்தது ஒரு பேரிழப்பு” என்று தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 31 May 2025 4:00 pm

ஒரே நாளில் 8,144 ஊழியர்கள் ஓய்வு... தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் சரமாரி கேள்வி

தமிழக அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 ஊழியர்கள் ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமயம் 31 May 2025 3:58 pm

Karan Johar’s shopping habits spark a stylish showdown in Myntra’s latest EORS campaign

Bangalore: Myntra, a platform for fashion, beauty, and lifestyle, has unveiled its latest campaign for the upcoming edition of the End of Reason Sale (EORS), this time with a comedic twist and a glamorous cast to match. Led by Karan Johar at his witty best, and joined by the B-town favourites - Neelam Kothari Soni, Masaba Gupta, Ratna Pathak Shah and Rohan Joshi, the film delivers a stylish intervention packed with humour, drama, and perfectly timed reactions. At the heart of the chaos is Myntra’s unbeatable ‘Lowest Price Guaranteed’ across top brands, along with assured cashback on every order during EORS. The campaign, now live, offers a glimpse into what promises to be the most expansive and exciting edition of EORS yet, kicking off on 31st of May.Set in Karan Johar’s ultra-chic living room, Myntra’s latest campaign transforms a simple intervention into a full-blown fashion frenzy. What starts as a dramatic call-out by his celebrity friends for shopping “using coupons” quickly unravels into a hilarious descent into collective indulgence. One by one, the skeptics cave, lured in by the unbeatable EORS deals. With couture clashing delightfully with comedy, the film captures how Myntra’s End of Reason Sale turns judgment into shared shopping sprees, reminding us that when prices drop, even the most fashionable can’t help but give in to the drama.Speaking about the campaign, Kejal Parekh, Associate Director, Marketing, Myntra, said, “With each edition of EORS, our goal is not just to deliver unmatched value but to redefine how India experiences fashion. For the 22nd edition, we aimed to do something truly fresh by bringing together familiar faces in a fun, unexpected setting that mirrors how our customers engage with fashion today. The campaign’s witty and candid storytelling captures the excitement of EORS while showcasing Myntra’s dedication to unbeatable value and a seamless shopping experience. It’s all about authentic connection, making fashion accessible, relatable, and enjoyable for everyone.” Karan Johar takes centre stage in Myntra’s latest EORS campaign, showcasing his trademark flair, sharp wit, and unabashed passion for fashion. Alongside him, icons Neelam Kothari Soni, Masaba Gupta, Ratna Pathak Shah, Rohan Joshi inject humour and wit. Together, their dynamic energy embodies the bold, irreverent, and stylish spirit of EORS, underscoring Myntra’s belief that fashion is all about fun, personality, and fearless self-expression.The ad film unfolds as a sharp, satirical take on the high-glamour world of fashion insiders, using the familiar language of drama, exaggeration, and cinematic flair to spotlight Myntra’s EORS. Instead of a traditional ad, the film leans into character-driven comedy, where each cast member plays an amplified version of themselves, blending real-life personas with humour.What truly sets the film apart is the crackling chemistry among the cast. From eye-rolls and one-liners to dramatic gasps and slow-mo reactions, their dynamic transforms the ad into a stylised piece of entertainment. Karan remains unbothered at the centre of the storm, as his friends spiral from disbelief to envy.As the group succumbs to the irresistible charm of Myntra’s EORS, the intervention quickly becomes a collective shopping spree. With the ‘Lowest Price Guaranteed’ offering and jaw-dropping deals across millions of styles, the film cheekily reminds viewers that when the prices drop, the drama rises.Speaking on the campaign, Karan Johar, said, “This campaign is high on style, packed with drama, and delivered with just the right touch of humour, everything I personally enjoy. It was a joy to collaborate with Myntra on something that’s not only visually striking but also incredibly fun. EORS has become a cultural phenomenon, and I’m thrilled to be part of a film that brings that energy alive in such an entertaining way.” The End of Reason Sale (EORS), Myntra’s marquee fashion extravaganza, brings together an expansive selection of over 4 million styles from more than 10 thousand leading brands. Shoppers can dive into an extensive lineup of global fashion favourites, including Levis, Loreal, Nike, H&M, DECATHLON, New Balance, Wrogn, Rare Rabbit, Lakme, Puma and many more.Thoughtfully designed to cater to the evolving style preferences of India’s fashion-conscious consumers, the EORS spans key categories such as ethnic wear, casual wear, occasion wear, activewear, beauty, home, and accessories. Enhancing the overall experience are features like early wishlisting, Myntra’s trusted M-Express delivery, with orders shipping within 48 hours, and M-Now, offering delivery in as little as 30 minutes in Bengaluru, ensuring fashion arrives faster than ever.https://www.youtube.com/watch?v=-eHTOWMKSNY

மெடியானேவ்ஸ்௪க்கு 31 May 2025 3:42 pm

கர்நாடகா பாஜகவில் அதிகரிக்கும் எடியூரப்பா குடும்ப ஆதிக்கம்... டெல்லி கொடுத்த கிரீன் சிக்னல்!

எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டதை அடுத்து பாஜக சறுக்கலை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் எழுச்சி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் டெல்லி பாஜக தலைமை கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமயம் 31 May 2025 3:41 pm

“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!

மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த இடங்கள் பாகிஸ்தான் ராணுவம் கூட எதிர்பார்க்காத பகுதிகள் என்று கூட சொல்லலாம். இந்திய வீரர்கள் துணிச்சலாகச் சென்று, துல்லியமாகத் தாக்கி, பயங்கரவாதிகளை ஒழித்தனர். இந்த வெற்றி, இந்திய ராணுவத்தின் பயிற்சியையும், வலிமையையும் உலகிற்கு காட்டியது மட்டுமின்றி நமது நாடு பாதுகாப்பில் உறுதியாக இருப்பதை […]

டினேசுவடு 31 May 2025 3:41 pm

குழந்தைகள் உடலில் சாத்தான் - மகன்களை ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்த பாஸ்டர் தந்தை கைது; நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி(42). இவர் அந்தப் பகுதியில் உள்ள ரசல்ராஜ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி சஜினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். கிறிஸ்தவ பாஸ்டரான கிங்ஸ்லி மனைவி சஜினியுடன் யோகோவா ஊழியத்திற்குச் செல்லும் போது 6-வயது மற்றும் 3-வயதுடைய இரு மகன்களை வீட்டில் அடைத்து விட்டு, 8-மாத பெண் கைக்குழந்தையுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வழக்கம்போல் வியாழக்கிழமை இரு மகன்களையும் வீட்டில் பூட்டி வைத்து விட்டு வெளியே சென்றார். மனைவியுடன் மாலை வீடு திரும்புகையில் இரு மகன்களும் வெளியே வந்து அடுக்குமாடிக்குடியிருப்பு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பாதிரியார் கிங்ஸ்லி குழந்தைகளை வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.  கைதுசெய்யப்பட்ட பாஸ்டர் கிங்ஸ்லி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுரேன் என்பவர் அங்குச் சென்று, என்ன பிரச்னை எனக் கேட்டுள்ளார். அவரை பாஸ்டர் கிங்ஸ்லி ஒருமையில் திட்டி அனுப்பியுள்ளார்.  இதனால் சந்தேகமடைந்த சுரேன் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் மற்றும் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பெண் உடல், உணர்வு, உணவு - 4: பெண் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டிய 6 முதல் 12 வயது! போலீசார் வருவதற்குள் கிங்ஸ்லி வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். சுரேன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது கிங்ஸ்லியின் 8-மாத கைக்குழந்தை, 6-வயது மற்றும் 3-வயதான இரு மகன்கள் என மூன்று பேரும் உடல் முழுக்க இரத்த காயங்களுடன் அலறி துடித்தபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் மூன்று குழந்தைகளையும் கருங்கல் போலீசார் மீட்டனர். கருங்கல் போலீசார் நடத்திய விசாரணையில், தனது குழந்தைகள் அடுக்குமாடிக்குடியிருப்பில் உள்ள பிற குழந்தைகளுடன் விளையாடியதால் பாஸ்டர் கிங்சிலிக்குக் கோபம் ஏற்பட்டது. பாஸ்டர் தாக்கியதாம் காயம் அடைந்த குழந்தை சாத்தான்களுடன் ஏன் விளையாடுகிறீர்கள் எனக் கேட்டதுடன், பிற குழந்தைகளுடன் விளையாடியதால் தனது குழந்தைகளின் உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாகக் கூறி, அவர்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்துள்ளார். இனி சாத்தான்களுடன் விளையாடச் சென்றால் கொன்று விடுவேன் எனவும் பாஸ்டர் கிங்சிலி மிரட்டியதாகத் தெரிய வந்தது. மூன்று குழந்தைகளையும் தாயுடன் சேர்த்து சிகிச்சைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாஸ்டர் கிங்ஸ்லி மீது சிறார் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி: வற்றிய சுங்கான்கடை குளத்தில் இரைதேடும் பறவைகள் கூட்டம் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 3:34 pm

18.4 கோடி கூகுள், ஆப்பிள், முகநூல் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் முதல் வங்கிக் கணக்குகளின் கடவுச்சொற்கள் வரை கசிந்திருப்பதாகவும், மிகப்பெரிய சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க உடனடியாக அனைவரும் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக எந்த நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. 18.4 கோடி தரவுகள் திருட்டு ஆப்பிள், கூகுள், முகநூல், மைக்ரோசாஃப்ட், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற முக்கிய […]

அதிரடி 31 May 2025 3:30 pm

‘இந்திய அணிக்குள் விரிசல்’.. ஹர்திக், கில் இடையே விரோதம்: காரணம் இந்த முன்பகை தான்: அதிர்ச்சியில் பிசிசிஐ!

இந்திய அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில் இடையே முன் விரோதம் இருந்ததாகவும், அது தற்போது வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமயம் 31 May 2025 3:22 pm

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 31-05-2025 முதல் 06-06-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல சென்னையை பொறுத்தவரையில் இன்று (31-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

டினேசுவடு 31 May 2025 3:11 pm

Bhumi Pednekar takes off with Nykd by Nykaa’s ‘Comfiest Bras Ever’ Campaign

Mumbai: Nykd by Nykaa, the intimate wear brand from Nykaa Fashion, is taking comfort to brand-new heights—literally. Launching its latest campaign titled ‘Comfiest Bras Ever’, the brand brings aboard actor and long-time brand ambassador Bhumi Pednekar in a refreshingly cheeky, cinematic ad that turns in-flight turbulence into a surprising metaphor for real support.Set in a blush-toned airplane cabin, the campaign video features Bhumi as a confident and charming flight attendant navigating a cabin full of women in the midst of mid-air chaos. But while the turbulence shakes everything around, one thing stays comfortably in place—Nykd by Nykaa’s thoughtfully engineered bras. Designed to be worn and forgotten, the bras offer such effortless support, they make even the rockiest rides feel smooth. “Comfort, to me, is feeling supported without even thinking about it — and that’s exactly what Nykd by Nykaa bras offer. They move with you, not against you, and make sure you feel at ease no matter what your day looks like,” said Bhumi Pednekar, sharing her experience with the brand and the campaign. The campaign not only underlines the product’s functional benefits but also serves as a powerful symbol of emotional and cultural support — encouraging women to expect more from their lingerie. Bhumi’s warm, relatable presence reinforces Nykd’s mission to center real women, real bodies, and real routines in a category long dominated by unrealistic expectations. Adwaita Nayar, Executive Director, CEO Nykaa Fashion and Head of Owned Brands, said adds, “At Nykd by Nykaa, we’ve always believed that innovation in intimate wear begins with listening — to women, to their needs, and to what’s long been missing in the category. This campaign is a bold step in that direction — blending thoughtful design with everyday ease. It’s not just about creating products that look good; it’s about reengineering comfort for real bodies and real routines. With Bhumi as our voice, we’re continuing to redefine what support means — not just physically, but emotionally and culturally too. Since its launch in 2020, Nykd by Nykaa has emerged as a go-to brand for size-inclusive, style-forward, and comfort-first innerwear. The ‘Comfiest Bras Ever’ campaign amplifies this promise with a joyful tone, a touch of humour, and a whole lot of heart — reminding women that whether it’s turbulence in the sky or in life, comfort should never be compromised. View this post on Instagram A post shared by Nykd by Nykaa (@nykdbynykaa)

மெடியானேவ்ஸ்௪க்கு 31 May 2025 3:01 pm

மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின்.. தூர்வாரப்படாத கால்வாய் துணியால் மறைப்பு - வைரல் வீடியோ!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில் மதுரை பந்தல்குடி சாலையில் சாக்கடை கழிவுகள் கலக்கும் பகுதி துணியால் மூடப்பட்டுள்ளது . தூர்வாரப்படாத நிலையில் சுமார் 2 கி.மீ.க்கு சாக்கடை கால்வாயை அதிகாரிகள் துணியால் மூடியுள்ளதாக புகார்; முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ நடக்கும் வழியில் அவரது கண்ணில் படாமல் இருக்க நடவடிக்கை என மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சமயம் 31 May 2025 2:49 pm

Quint Digital signs franchise agreement with Time Out Group to launch Time Out India

Delhi: Quint Digital Limited (QDL), a media-tech company, has officially signed a franchise agreement with Time Out Group, the globally renowned brand synonymous with curating the best of city life. The collaboration marks the highly anticipated launch of Time Out India, a multi-platform lifestyle and cultural initiative designed to transform how Indian consumers and travelers discover and engage with the country’s urban experiences.This strategic alliance will bring Time Out Media to India through a digital-first content platform and paves the way for potential Time Out Market venues — immersive, food and culture-focused spaces that celebrate the best of India’s cities under one roof.The partnership’s immediate milestone will be the launch of timeout.com/india, along with supporting social media, video, and other digital channels. This platform will serve as the definitive guide to India’s cities, featuring curated editorial content by local expert journalists across categories like food, drink, culture, entertainment, and events. It is designed to inspire locals and visitors alike with trusted, curated recommendations and will offer powerful opportunities for brands through customized multi-channel campaigns.Importantly, this franchise agreement gives QDL the exclusive rights to explore and operate Time Out Markets in India, bringing a world-renowned food and cultural destination model to Indian cities. These experiential venues — already successful in cities such as New York, Dubai, and Chicago — will showcase the best local chefs, restaurants, mixologists, and cultural talent, blending editorial curation with real-life discovery and engagement. Ritu Kapur, Managing Director and CEO, QDL, said, “Urban India, especially its younger, always-curious crowd, is craving something fresh, bold, and out of the box when it comes to lifestyle and food. With Time Out, we’re excited to bring a game-changing experience to the country. This partnership blends QDL’s pulse on India’s digital-first youth — and also visitors to our country — with Time Out’s global knack for spotlighting the best in culture, food, and city life.” Raghav Bahl, Director and Promoter, QDL, added, “Together, we’ll inspire discovery, spotlight the best of our cities, and offer brands powerful new ways to engage with a discerning, experience-hungry audience.” Chris Ohlund, CEO of Time Out Group plc, shared, “We are pleased to partner with Quint Digital to launch Time Out in India across key cities and beyond – one of the world’s most vibrant travel destinations with a rapidly evolving food scene, it presents an incredible opportunity for Time Out’s unique blend of curated content and experiences. With The Quint’s expert team, Time Out India will become the definitive go-to place for the very best of urban culture across key cities. “In addition, this is the first time that a franchise partner in one country will not only operate Time Out Media but will also explore Time Out Market opportunities. This partnership comes at a time when we increasingly operate Media and Market – an unmatched digital and real-life model – as one brand to cement Time Out as a unique proposition, both for consumers and commercial partners to connect with this valuable audience. We look forward to celebrating the best of India along with its vibrant cities with our curated content and experiences.” This collaboration represents a significant step in QDL’s expansion beyond news and digital media into lifestyle and culture, leveraging its expertise in publishing tech, video production, and AI-powered audience engagement.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 May 2025 2:48 pm

“பொறுப்புகள் கொடுக்குறது நீக்குறதுலாம் செல்லாது நான் இருக்கேன்” -அன்புமணி ராமதாஸ் அதிரடி!

சென்னை :பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ஒரு பக்கம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார். மற்றொரு பக்கம் கட்சியின் தலைவர் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? எனவே நான் […]

டினேசுவடு 31 May 2025 2:44 pm

Pride of Cows launches a new campaign, “What’s the Source of Your Milk?” to spark dairy transparency conversation

Mumbai: Pride of Cows, the single-origin, farm-owned milk brand, has launched a provocative new campaign that cuts through traditional dairy narratives by asking a powerful question: “What’s the source of your milk?” With this bold initiative, the brand seeks to bring greater transparency into the dairy industry and inspire consumers to demand clarity about what they’re consuming.In a world where consumers are becoming increasingly conscious about the origins of their food, Pride of Cows is challenging both the industry and households to rethink their everyday choices. Through this campaign, the brand highlights its key differentiator: 100% single-origin milk sourced exclusively from its own farm near Pune, where over 5,000 cows are cared for under world-class conditions.[caption id=attachment_2461024 align=alignright width=133] Akshali Shah[/caption] Akshali Shah, Executive Director of Parag Milk Foods Ltd., said, “Through this initiative, we’re inviting consumers to pause and think about something they often take for granted—the source of their milk. It's a simple yet powerful question that aligns with Pride of Cows’ long-standing promise of quality and transparency. As a brand, we’ve always believed that trust is built not just on taste, but on knowing where your food comes from. This campaign is our way of turning that belief into a wider conversation.” The campaign is designed as a 360-degree movement encompassing premium print placements, digital storytelling, video content, and influencer-led engagement across platforms such as Instagram, Facebook, YouTube, and other programmatic avenues. The messaging cuts through the clutter by emphasizing traceability, farm-to-home purity, and a closed-loop production system that ensures hygiene, consistency, and quality with no third-party sourcing or human intervention.Unlike brands that depend on milk collection from fragmented and unregulated sources, Pride of Cows guarantees full control over every stage—from feeding cows a scientifically formulated diet to automated, contactless milking and direct-to-doorstep delivery through a robust cold-chain.The campaign’s central question—“What’s the Source of Your Milk?”—not only reinforces the brand’s unique promise but also positions it as a leader in responsible, transparent dairy consumption. With its high-impact messaging and holistic rollout, Pride of Cows is turning this into a national conversation about quality, trust, and mindful choices in dairy.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 May 2025 2:35 pm

ரயில் டிக்கெட்டுக்கு அதிகம் செலவு.. சலுகை மீண்டும் கிடைக்குமா? எதிர்பார்ப்பில் சீனியர் சிட்டிசன்கள்!

மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் நிறைய சலுகைகள் கிடைத்தாலும், ரயில் டிக்கெட் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சமயம் 31 May 2025 2:32 pm

மங்கோலியாவில் 4,000-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!

மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 4,000-ஐ கடந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. பெரும்பாலும் இந்நோய் குழந்தைகளை பாதிப்பதால் உடனடியாக தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்துமாறு அந்நாட்டின் சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 335 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,274 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் […]

அதிரடி 31 May 2025 2:30 pm

மங்கோலியாவில் 4,000-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!

மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 4,000-ஐ கடந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. பெரும்பாலும் இந்நோய் குழந்தைகளை பாதிப்பதால் உடனடியாக தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்துமாறு அந்நாட்டின் சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 335 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,274 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் […]

அதிரடி 31 May 2025 2:30 pm

Prashanth Hospitals rolls out Stroke Awareness & Action Campaign for Brain Awareness Month in the city

Mumbai: Prashanth Hospitals, a multi-speciality hospital, responds to increasing stroke cases in the city by launching its inaugural awareness campaign on stroke titled, #StopTheBlock. With an aim to reach over 2 million Chennai citizens, this innovative campaign features a mobile unit with a life-size model brain coupled with engaging activities such as flash mobs, mime performances, skits, interactive games with prizes, etc.With both summer and winter seasons witnessing rise in Stroke cases across the city and the country, Prashanth Hospitals has launched #StopTheBlock initiative this summer to help people take timely and appropriate preventive measures starting from now and continuing through the winter months. This initiative was flagged off by Kanakaraj, Assistant Commissioner of Police earlier today in the presence of the Management team at Prashanth Hospitals, Doctors, support staff and the common public. Dr. Prashanth Krishna, the Managing Director of Prashanth Hospitals, expressed his enthusiasm for this campaign, stating the gravity of stroke as a significant public health challenge both nationally and globally, stated, “After Save Young Hearts campaign, I see this #StopTheBlock is yet another meaningful and relevant initiative for the health of our citizens. Our goal is to raise awareness about the vital ‘golden hour’ in stroke treatment, reaching an estimated 1 to 2 million residents across Chennai. Educating the community on recognizing symptoms and acting swiftly can significantly reduce risks and save lives.” Adding to this, Dr Pari Muthukumar - Medical Director of Prashanth Hospitals Kolathur, said “Chennai has witnessed a concerning rise in stroke cases in recent years, mirroring national and global trends. India experienced a 51% increase in stroke incidence over the past three decades, with over 1.25 million new cases reported in 2021 alone. Several factors contribute to this surge, including sedentary lifestyles, hypertension, diabetes, obesity, and stress. The COVID-19 pandemic further exacerbated these issues, leading to increased stroke cases among younger populations. Despite advancements, early recognition and timely medical intervention remain critical. To ensure this, we have launched our #StopThe Block Campaign and we are confident that through this initiative we will continue to work with the citizens of Chennai to mitigate stroke in the right and timely manner.” #StopTheBlock initiative aims to take life-saving stroke education directly to communities through interactive outreach at schools, public spaces, and high-footfall areas across the city. This mobile unit will be equipped with audio-visual content, informative brochures, and on-site educators who will engage with the public in high-footfall areas, including marketplaces, transport hubs, and residential neighborhoods. The goal is to reach underserved sections of the population and ensure that stroke awareness becomes accessible, inclusive, and city-wide. Community members and organizations are encouraged to participate and can reach out at 99417 66850 to collaborate or host awareness activities in their respective areas, including schools, colleges, and public hotspots.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 May 2025 2:28 pm

Air India unveils ‘There is an Air About India’ Campaign to celebrate the spirit of a Rising Nation

Gurugram: Air India has unveiled its latest campaign, ‘There is an Air About India’, a powerful celebration of the confident, bold, and vibrant spirit of a new India. The campaign serves as a tribute to a nation on the rise — and Air India’s pride in carrying that spirit across the globe.Conceptualised by McCann, the campaign is a multi-platform initiative spanning OOH, print, and digital, anchored by a visually rich and rhythmically compelling film. The centerpiece of the film features a rap-style track composed by renowned music director Sneha Khanwalkar, with vocals by emerging rap artist Aarya Jadhao.Blending poetic rhythm with sweeping transitions and striking visuals, the film brings alive the diverse and energetic soul of India — from its remote heartlands and bustling metros to its timeless traditions and modern aspirations. The campaign culminates in the refrain: “There is an Air About India” — and Air India is proud to carry it around the world.Following its return to the Tata Group in 2022, Air India has embarked on a five-year transformation journey under the Vihaan.AI program. With the aim of becoming a world-class global airline that mirrors the energy of the new India, the airline has: Ordered 570 new aircraft Launched a $400 million retrofit program for its legacy fleet Established South Asia’s largest aviation training academy Initiated plans for a state-of-the-art MRO facility and flying school India, now one of the world’s fastest-growing aviation markets, saw over 350 million air travelers last year and has doubled its number of airports in the past decade. Air India’s ongoing transformation represents its commitment to not just keep pace, but lead this change — both in the skies and on the ground.With ‘There is an Air About India’, Air India encapsulates this journey — combining tradition and modernity, legacy and aspiration — in a campaign that’s as ambitious as the nation it represents.https://youtu.be/dXMsB_bY2Os?si=UdXFeP8UXJcqjiGS

மெடியானேவ்ஸ்௪க்கு 31 May 2025 2:21 pm

Britannia’s Chunkies get a quirky makeover with the relatable #EatHappens campaign

Mumbai: Britannia Industries has rolled out a delightful new campaign for its latest offering — Good Day Chunkies, a range of indulgent cookies that prove one thing loud and clear: when the cookies are this good, #EatHappens.Available in two delectable variants — Divine Chocochip and Tropical Coconut — Good Day Chunkies are thick, chunky, and impossible to resist. The cookies are so addictive that once the pack is opened, they’re practically gone before you know it.Conceptualised by McCann Worldgroup, the #EatHappens campaign brings the cookies to life — literally. In a series of animated bite-sized films, the Chunkies are personified as lively, quirky characters with dreams and personalities. From making Goa plans to compiling bucket lists, their plans are hilariously cut short when someone gives in to temptation and devours them. Archana Balaraman, General Manager – Marketing, Britannia Industries, shared, “Good Day Chunkies has always been about offering an indulgent, feel-good cookie experience. With #EatHappens, we wanted to bring alive the playful, irresistible nature of the product in a way that feels fun and rooted in edgy humor. The campaign turns our Chunkies into characters you can connect with, cookies that feel alive with plans, dreams, and quirky personalities. Through these films, we’re celebrating that universal moment when you just can’t help but take another bite. It’s a lighthearted reminder that when the cookies are this good, there’s really no stopping yourself from taking a bite.” Sambit Mohanty, Creative Head (North & South), McCann Worldgroup, added, “Good Day Chunkies in their all-new avatar are the crunchiest, munchiest, most delicious cookies ever. Our campaign wittily depicts their lives getting a bit roughly interrupted—because they get devoured after all.” http://youtube.com/watch?v=82RPa3ngavghttps://www.youtube.com/watch?v=MNs3HSuVq_4http://youtube.com/watch?v=WrzDADfDdpQ

மெடியானேவ்ஸ்௪க்கு 31 May 2025 2:08 pm

“ஐயா தான் நமக்கு குலசாமி, குல தெய்வம்”–ராமதாஸை புகழ்ந்து பேசிய அன்புமணி.!

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய ராமதாஸ், கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார். அதே சமயம் சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய அன்புமணி, நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? என கூறி வருகிறார். இந்த நிலையில், சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் உடனான 2ம் நாள் ஆலோசனை […]

டினேசுவடு 31 May 2025 2:08 pm

DIG மற்றும் ASPயின் அதிகாரங்களில் திருத்தம் –வர்த்தமானி வெளியானது!

பிரதி காவற்துறை மா அதிபர்கள் மற்றும் உதவிப் காவற்துறை அத்தியட்சகர்களின் தற்போதைய அதிகாரங்களை திருத்தம் செய்யும் வகையில் தேசிய… The post DIG மற்றும் ASPயின் அதிகாரங்களில் திருத்தம் – வர்த்தமானி வெளியானது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 May 2025 2:02 pm

சண்டை போடும் போது கதவை மூடி கொள்ளுங்கள்... பிரான்ஸ் அதிபருக்கு டிரம்ப் ஆலோசனை

சண்டை போடும்போது கதவை மூடிக்கொள்ளுமாறு பிரான்ஸ் அதிபருக்கு டொனால்ட் டிரம்ப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

சமயம் 31 May 2025 2:00 pm

இனி இந்த ரூபாய் நோட்டுகள் வரவே வராது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்த மூன்று வகையான ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சமயம் 31 May 2025 1:58 pm

Flipkart Minutes rolls Out ₹9/- veggie campaign with a cinematic nod to ‘3 Idiots’

Bengaluru: Flipkart, a homegrown e-commerce giant, has launched a new campaign for Flipkart Minutes, delivering a powerful message: quality fresh vegetables at just ₹9/-, delivered in minutes. The campaign blends humor, nostalgia, and daily reality in a creative film inspired by the iconic Bollywood movie 3 Idiots.Conceptualised by Leo Burnett, the film puts a quirky twist on the memorable Raju Rastogi household, highlighting a relatable frustration over soaring grocery prices. With lines like “Bhindi 100 rupaye kilo ho gayi!”, the ad captures the rising tension—until a gust of wind brings in the solution: Flipkart Minutes’ fresh veggies at just ₹9. A swift app order later, happiness is restored with a doorstep delivery of farm-fresh produce and an endearing family moment. Kabeer Biswas, Vice President, Flipkart Minutes, said, “With Flipkart Minutes, we are making daily essentials convenient. This campaign brings to life the most essential needs of our customers — Value, Quality and Convenience at affordable prices. Fresh vegetables at ₹9/- delivered in minutes is a reflection of our promise to reimagine everyday convenience. Backed by a robust tech-enabled supply chain and collaboration with Farmer Producer Organisations, we’re able to create a seamless farm-to-consumer experience. Through a familiar story and relatable moments, we aim to connect with our customers in a way that’s both meaningful and reassuring.” The campaign will run across key TV channels and digital platforms, starting May 28, in English, Hindi, Kannada, Bengali, and Gujarati to ensure maximum reach across urban and metro audiences.With this campaign, Flipkart Minutes delivers more than just groceries—it offers reassurance, speed, and unbeatable value. By bringing cinematic storytelling into everyday moments, the campaign reinforces Flipkart Minutes’ role as a trusted, quick solution for daily essentials.https://www.youtube.com/watch?v=09VFlMPZWmY

மெடியானேவ்ஸ்௪க்கு 31 May 2025 1:56 pm