India, Canada Discuss Plans to Boost Trade
Union Commerce and Industry Minister Piyush Goyal spoke with Canada’s Minister of International Trade, Maninder Sidhu, to improve trade and
Siddaramaiah Refuses Delhi Trip Without Invitation
Karnataka Chief Minister Siddaramaiah said on Wednesday that he would not go to New Delhi unless he gets an official
KTR Criticises Congress, Questions Rahul’s Leadership
BRS Working President K.T. Rama Rao (KTR) on Wednesday strongly criticised the Congress party and its leader Rahul Gandhi. He
பாமக: ``இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது - கட்சி விவகாரம் குறித்து நீதிபதிகள்
ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையில், அன்புமணி பா.ம.க தலைவர் அல்ல என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின்படி நான்தான் பா.ம.க தலைவர் என தெரிவித்தார் அன்புமணி. இதனால் இருதரப்பிலும் பெரும் குழப்பம் நீடித்தது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கிறது என நோட்டீஸ் அனுப்பியது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ராமதாஸ், ``நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். அன்புமணி அன்புமணி சதித் திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை. இப்படி 46 ஆண்டு காலம் உழைத்துப் போராடி வளர்த்த கட்சியை என்னிடமிருந்து பறித்துக் கொண்டது சொல்ல முடியாத, உயிர் பறிபோன செயல். நான் கண்ணீர் வடிக்கிறேன், கலங்கி நிற்கிறேன். எனக் குறிப்பிட்டு பாமகவின் உரிமை கோரும் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார். அதன் அடிப்படையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அதில் ராமதாஸ் தரப்பு, ``ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர், ஒரு கோடி உறுப்பினர்கள் அவருக்கு கீழ் உள்ளனர், அன்புமணி தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தவறு செய்திருக்கிறது எனக் குற்றம்சாட்டியது. பாமக ராமதாஸ் அன்புமணி தரப்பில், ``கட்சியின் தலைவராக பா.ம.க அன்புமணியை அங்கீகரித்துள்ளது என வாதத்தை முன்வைத்தது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களின்படி அன்புமணி தலைவர் என்று கூறினோம். அது உறுதி இல்லை என்றால், அன்புமணி தலைவர் பதவியில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், எதிர் தரப்பினர் அணுகலாம். கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த தனிப்பட்ட முடிவையும் எடுப்பதில்லை. அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். இரு தரப்புக்கும் பிரச்னை நீடித்தால் கட்சியின் சின்னம் யாருக்குமின்றி முடக்கப்படும் எனத் தெரிவித்தார். அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி, ``பாமக கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஒரு தரப்பு வாதத்தையும் அவர்களின் கடிதங்களை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. தனிப்பட்ட உரிமை கோருவோர் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி வழக்கை முடித்துவைத்தார். PMK: `அன்புமணி தயாரித்த போலி ஆவணம்; தேர்தல் ஆணையம் செய்த மோசடி' - ஜி.கே.மணி குற்றச்சாட்டு!
Justice Nagarathna Warns Against Language Exclusion
Supreme Court judge B.V. Nagarathna said on Wednesday (December 3, 2025) that people in South India do not want to
SIR: ``குழப்பத்துக்கெல்லாம் முதல்வர்தாங்க காரணம்!'' - சாடும் பாஜக; பதிலடி திமுக!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரிப்பன் பில்டிங்கில் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது. சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன் கூட்டத்தின் முடிவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் வாக்காளர்களின் பெயரும் சென்னையில் தொகுதிக்கு 40000 வாக்காளர்களின் பெயரும் நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 20 வருடமாக இந்த வாக்காளர்களின் பெயரில் வாக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போதுதான் நீக்கியிருக்கிறார்கள். எனக் குற்றம்சாட்டியிருந்தார். திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு கலந்துகொண்டார். அவர் பேசுகையில், 'ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து SIR பெயரில் மோசடி செய்து வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது. நேற்று வரை 99% பேருக்கு விண்ணப்பம் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், 60% பேரின் விவரங்களை மட்டும்தான் இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள். திமுக கொடுத்த நெருக்கடியால்தான் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்திருக்கிறார்கள். ஜெயக்குமார், கராத்தே தியாகராஜன் ஒரு மாதமாகியும் SIR குறித்து அதிகாரிகளுக்கே தெளிவு இல்லை. ஒரு வாரமாக மழை பெய்து மக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த ஒரு வார இழப்பை எப்படி ஈடு செய்யப்போகிறார்கள்? திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை. இடப்பெயர்வு மற்றும் இறந்தவர்களுக்கான விண்ணப்பத்தை கொடுப்பதில் BLO -க்களே குழம்புகிறார்கள்.' என்றார். ``வட நாட்டவரை தமிழ்நாட்டுக்குள் புகுத்த பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து சதி செய்கிறது. திமுக அரசுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறையை செய்திருக்கின்றனர்.'' என காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட நவாஸ் என்பவர் பேசியிருந்தார். S.I.R ஆலோசனைக் கூட்டம் பா.ஜ.க சார்பில் கராத்தே தியாகராஜன் கூட்டத்துக்கு வந்திருந்தார். அவர், SIR குழப்பத்துக்கே மயிலாப்பூரை சேர்ந்த ஒரு வாக்காளர்தான் காரணம். அந்த விண்ணப்பத்தை காண்பித்து குழப்பமாக இருக்கிறது என வீடியோ போட்ட பிறகுதான் மக்களுக்கு குழப்பமே ஏற்பட்டது. அவர்தான் முதலமைச்சர். அவருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என தேர்தல் அலுவலரிடம் முறையிட்டேன் என்றார். SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்
₹12,764 Crore Given to TN Farmers
The Union government said on Tuesday that ₹12,764 crore has been given to farmers in Tamil Nadu under the PM-Kisan
AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன்
முதுபெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இயற்கை எய்தியிருக்கிறார். தந்தை ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை அடுத்தடுத்த உயரங்களுக்குக் எடுத்துச்சென்ற பெருமை ஏ.வி.எம். சரவணனுக்கு உண்டு. தந்தை தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை ஸ்டுடியோவாக அடுத்த கட்டங்களுக்கு வளர்த்தெடுத்த புகழும் சரவணனையே சேரும். எப்போதும் நிற்காமல் சுற்றும் உருண்டை வடிவ ஏ.வி.எம். க்ளோப், பரப்பான சினிமா வேலைகள் நடக்கும் ஷூட்டிங் ஃப்ளோர் என இவருடைய காலத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோ ஆற்காடு சாலையின் அடையாளமாகவும் திகழ்ந்தது. சிறுவயதில் டி.வியில் படம் பார்த்த பலராலும் ஏ.வி.எம். க்ளோப்பை மறக்கமுடியாது. ஏ.வி.எம் சரவணன் சினிமாவில் உருவான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியவர் சரவணன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனத் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் தொடங்கி ஏ.வி.எம். தயாரிப்பில் பணியாற்றிய பலரும் சரவணனின் பண்பு குறித்து அவ்வளவு மெச்சிப் பேசுவார்கள். ஒரு திரைப்படத்தின் உதவி இயக்குநர் தொடங்கிக் கடைக்கோடி ஊழியர் வரைக்கும் சமமான மரியாதையைக் கொடுக்க விரும்புவாராம் சரவணன். மெல்லிய தேகம், வெள்ளை நிற உடை, கட்டிய கைகள்தான் சரவணனின் அடையாளம். புதுமுக இயக்குநரோ, சீனியர் இயக்குநரோ, யார் வந்தாலும் கட்டிய கைகளை அவிழ்க்கவே மாட்டார். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது “நம்மைச் சந்திக்கப் பெரிய ஆட்களும், சிறிய ஆட்களும் வருவார்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சிறியவர்களின் முன்னால் நாம் மமதையாகத் தெரிந்துவிடக் கூடாது” எனக் கூறி வியக்க வைத்திருக்கிறார். ஏ.வி.எம் சரவணன் தந்தை சொன்ன எல்லையைத் தாண்டவே மாட்டார் சரவணன். “அப்புச்சி சொல்றதை நாங்க மீறிச் செய்ய மாட்டோம். அப்புச்சி அதை அப்படிச் செய்யச் சொல்லியிருக்கார்” என ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் இருந்தவரை அவர் பேச்சை இவர் மீறியது கிடையாதாம். தொடர்ந்த சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் சில காலம் தயாரிப்பிலிருந்து விலகி இருக்கலாம் என அறிவுரை சொல்லியிருக்கிறார் மெய்யப்ப செட்டியார். அதனையே சரவணனும் பின்பற்றினார். பிறகு, மீண்டும் தயாரிப்பின் பக்கம் முடிவு செய்த ஏ.வி.எம். நிறுவனம் இரண்டு படங்களை கமிட் செய்தது. அந்த இரண்டு படங்களுக்குமே கமல்தான் கதாநாயகன். ஆனால், அப்போது இயக்குநர்களின் கமிட்மென்ட் காரணங்களால் தாமதமாகிக்கொண்டே சென்றது. அந்த நேரத்தில் சரவணன், பஞ்சு அருணாச்சலம் மூலமாக ரஜினியின் கால்ஷீட் பெற முயற்சித்திருக்கிறார்.தனக்கு முதல் வாய்ப்புக் கொடுத்த நிறுவனம் என்னும் நன்றியுணர்விற்காகத் தன்னிடம் இருந்த ரஜினி கால்ஷீட்டை அவர் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு விட்டுக்கொடுத்தார். அப்படித்தான் ஏ.வி.எம். தயாரிப்பில் ‘முரட்டுக் காளை’ திரைப்படம் நிகழ்ந்தது. ஏ.வி.எம். - ரஜினி ஹிட் வரிசைக்குத் தொடக்கமிட்டதும் இத்திரைப்படம்தான். பஞ்சு அருணாச்சலத்திடம் சரவணன் ரஜினியின் கால்ஷீட் கேட்டதற்குப் பின்னால் பெரிய கதை இருக்கிறது. சரவணன், ஏ.வி.எம். நிறுவனத்தின் புகழை உயரப் பறக்க வைக்கவேண்டும் என விரும்பினார். மீண்டும் தயாரிப்புப் பக்கம் உறுதிப்பாட்டுடன் அடுத்தடுத்துத் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த ஆசைகள் தாமதமாகிக்கொண்டே போனது. அப்படியான வேளையில் சரவணனுக்குள் ஒரு பயமும் எழுந்தது. ஏ.வி.எம் சரவணன் அந்தச் சூழலை ஒருமுறை விளக்கியவர், “ரொம்ப நாளைக்குப் பிறகு இண்டஸ்ட்ரி நல்லா இருக்கு. நாம திரும்பவும் படம் எடுக்கலாம்’ங்கிற எண்ணத்துக்கு அப்புச்சி வந்தாங்க. ஆனா, கமிட் பண்ணின அந்த இரண்டு படங்களும் தள்ளிப்போகுது. இப்ப ரஜினியும் ‘அடுத்த வருஷம் கால்ஷீட் தர்றேன்’னு சொன்ன விஷயத்தை அப்புச்சிகிட்ட சொன்னா, அவர் மூட் அவுட் ஆகி, ‘நமக்கும் படம் எடுக்கிறதுக்கும் ராசி இல்லைபோல. நல்லா வசதியா இருக்கோம். போதும், நீங்க பேசாம ஸ்டுடியோவை மட்டும் கவனிச்சுக்கங்க’னு சொல்லிட்டார்னா எந்தக் காலத்துலயும் இனி நாங்க படம் எடுக்க முடியாது. ஏன்னா, அப்புச்சி பேச்சை நாங்க தட்ட மாட்டோம்னு உங்களுக்கே தெரியும்!” எனச் சொல்லியிருக்கிறார். தந்தை முடிவை மாற்றவிடக்கூடாது என்ற யோசனையில்தான் பஞ்சு அருணாச்சலத்திடம் வெளிப்படையாகவே ரஜினி கால்ஷீட்டை விட்டுத் தரக் கேட்டிருக்கிறார். சரவணனின் தாத்தா அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பல்பொருள் அங்காடியை வைத்திருக்கிறார். தாத்தாவின் ஐடியாவைத்தான் சரவணனும் பிற்காலத்தில் பின்பற்றினார். ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து வகையான உணர்வுகளையும் சரவணன் தயாரித்த படைப்புகள் உள்ளடக்கியது. சரவணனின் சரியான திட்டமிடல்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நிறுவனத்தை மெருகேற்றியது எனக் கோலோச்சத் தொடங்கியது ஏ.வி.எம். நிறுவனம். அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் கால்ஷீட்கள் அனைத்துமே ஏ.வி.எம். நிறுவனத்தின் கைகளில் இருக்கும். Rajini - AVM Saravan காலமாற்றத்திற்கேற்ப வித்தியாசமானப் படங்களையும், மக்களின் ரசனைகளுக்கேற்ப புதிய வகையான படைப்புகளைத் தந்துவிட யோசித்துத்தான் சரவணன் ஷங்கர் - ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்திற்காக இணைந்தார். அப்படத்தை அத்தனை பிரமாண்டமாக எடுக்க முடிந்ததற்கும் காரணம் சரவணன்தான். கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ், ARRI கேமிராக்கள், ‘வாஜி வாஜி’ பாடலுக்கான பிரமாண்ட செட் என 'சிவாஜி'-யில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்க வைத்தவர் சரவணன். - தமிழ் சினிமாவில் அவர் பெயர் ஆழப்பதிந்திருக்கும்!
Chennai Faces Continued Rain and Flooding
Even though Cyclone Ditwah has weakened into a depression, it is still causing damage in Tamil Nadu’s coastal districts. On
கோப்பாய் - நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை
நல்லூர் பிரதேச சபை - கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பில்லையோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லையோ கோப்பாய் பிரதேச சபைக்கு எந்த தகவலும் தெரியாது என கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குள் உள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெள்ளநீர் வாய்க்காலை மண் அணை போட்டு தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , ஆராய்வதற்கு சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை கோப்பாய் தவிசாளர் சென்றிருந்த போது , வெள்ளம் வடிய வாய்க்கால் அமைத்த தரப்பினரும் , அதனை தடுத்த தரப்பினரும் அங்கு கூடியிருந்தனர். வாய்க்கால் தொடர்பில் பிரதேச சபைக்கு தெரியாது. அதன் போது முதலில் இந்த வாய்க்கால் தொடர்பில் கோப்பாய் பிரதேச சபைக்கு எதுவும் தெரியாது. அதாவது வெட்டினதும் தெரியாது , மூடினதும் தெரியாது. இது பிரதேச சபைகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்பதனை தெளிவு படுத்துவதாக தெரிவித்தார். வாய்க்காலை மூடிய தரப்பு அதன் பின்னர் வாய்க்காலை தாம் தான் மூடியதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர். தமது பகுதிக்குள் 4 அடிக்கு மேல் வெள்ளநீர் நிற்கிற நிலையில், புதிதாக ஒரு பகுதி வெள்ள நீரை மேலும் எமது பகுதிக்கு அனுப்புவதனை ஏற்க முடியாது. அதனாலயே மூடினோம். எந்த வெள்ளநீர் எமது பிரதேசத்தால் செல்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி நீரேந்து பிரதேசம் வரையில் ஒழுங்கான வடிகால் அமைப்பை செய்து. அதனூடாக வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும். அதனை விடுத்து தாழ் நிலங்களில் வசிக்கும் எமது காணிகளுக்குள் வெள்ளநீரை மடைமாற்றி விட கூடாது என தெரிவித்தனர். மூன்று வருடங்களாக தான் வெள்ளம் அதேநேரம் , வெள்ள வாய்க்கால் அமைக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் போது , கடந்த மூன்று வருடங்களாக தான் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். யாழ்ப்பாணத்தையே உலுக்கிய நிஷா புயலின் போது கூட எங்கள் வளவுக்குள் வெள்ளம் நிற்கவில்லை. தற்போது வெள்ளம் நிற்க காரணம் பருத்தித்துறை வீதி புனரமைப்பின் போது இந்த பிரதேசத்தில் இருந்த நான்கு மதகுகள் முற்றாக மூடி விட்டார்கள். தற்போது தற்காலிக வாய்க்கால் வெட்டிய இடத்தில் கூட வடிகால் வாய்க்கால் இருந்தது. வீதி அகலிக்கும் போது , மூடி விட்டார்கள். அதுமட்டும் இன்றி , தற்காலிக வாய்க்காலை அமைத்து வெள்ளநீரை விட்ட மதகு புனரமைப்பின் போது மதகுக்கு அருகால் , மண் போட்ட பட்டு தற்காலிக வீதியை அமைத்திருந்தனர். மதகு கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் , அந்த மண் பாதையை அகற்றாமல் சென்று இருந்தனர். அதனை அடுத்து அதற்கு அருகில் உள்ள தனியார் , அப்பகுதியை சுவீகரித்து மதிலையும் கட்டி விட்டார். அதனால் வீதியால் வழிந்தோடி வந்த நீர் தனியாரின் மதிலினாலும் , மதகு கட்டுவதற்காக போடப்பட்ட மண் மேட்டினாலும் நீர் ஓடாது எமது பகுதியில் தேங்கி நிற்கிறது. அதனாலயே இம்முறை மதகு வரையில் சுமார் 30 மீட்டர் தூரம் வாய்க்கால் போன்று , மண்ணை வெட்டி விட்டோம். என தெரிவித்தனர். வீதி புனரமைப்பின் போது மதகுகள் பாலங்களை மூடி விட்டார்கள் அதனை தொடர்ந்து தவிசாளர் தெரிவிக்கையில் , குறித்த வீதியில் காணப்பட்ட மதகுகள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்ப்பில் நாம் RDA யிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் தமக்கு வீதிக்கு மாத்திரமே நிதி கிடைப்பதாகவும் , மதகுகள் பாலத்திற்கு வேறாக ஒதுக்கப்படும். இந்த இடத்தில் ஒரு மதகுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டது என தெரிவிக்கின்றனர். எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக நீரேந்து பிரதேசங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இந்த பகுதியில் இருந்து வெளியேறும் நீர் , செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்களில் தேங்கும். தற்போது அப்பகுதி மத்திய அரசின் அனுமதிகளுடன் மண் போட்டு நிரவப்பட்டு வருகிறது. மத்திய அரசு காலம் காலமாக அபிவிருத்தி எனும் பெயரில் நீரேந்து பிரதேசங்களையே நிரவி கட்டடங்களை கட்டி வருகிறது. அவற்றினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பார்கள் என்பதால் தான் , மாகாண சபை , உள்ளூராட்சி தேர்தலைகளை தாமதப்படுத்தி வருகின்றனர். தற்போது கூட இந்த வெள்ள நீர் எமது பகுதியால் வெளியேறுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி பகுதியில் இருந்து வடிகால் அமைப்பினை செய்து உரிய முறையில் வெளியேற்ற வேண்டும். ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என உடனடியாக எடுக்கப்படும் நடவடிக்கையால் இன்னொரு தரப்பு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள கூடாது. அந்தவகையில் நேற்றைய தினம் இந்த இடத்திற்கு கடற்தொழில் அமைச்சர் வருகை தந்து , பார்த்துள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் தவறாக இருந்தாலும் , அவர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உள்ளதால் , உடனடியாக மத்திய அரசிடம் இருந்து நிதியினை பெற்று இப்பகுதியில் எந்த தரப்பு மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய வடிகால் அமைப்புக்களை மேற்கொண்டு உரிய முறையில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
AVM Saravanan: அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்- கண்ணீரில் சிவகுமார்
ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது. சிவாஜி, கமல்ஹாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நான் உட்பட பல பேரை ஏ.வி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே கிடையாது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். ஏ.வி.எம் சரவணன் 1965-ல் என்னை இந்த நிறுவனம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது. என்னுடைய சொந்தபெயர் பழனிசாமி. இந்தப் பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர் ஏ.வி.எம் சரவணன் சார்தான். அவரின் நியாபக அர்த்தமாகத்தான் சூர்யாவிற்கு சரவணன் என்று பெயர் வைத்தேன். என்னுடைய முதல் படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எடுத்துவிட்டார்கள். அதனால் நான் அழுதேன். அப்போது சரவணன் சார் என்னிடம் மன்னித்து விடுங்கள் சிவகுமார். சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுப்போம் என்று சொன்னார். அதன்பிறகு 'உயர்ந்த மனிதன்' என்ற ஒரு படத்தில் நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. என்னுடைய அடுத்த தலைமுறையில் சூர்யாவிற்கு 'பேரழகன்', 'அயன்' படங்களைக் கொடுத்தார்கள். சிவகுமார் - சூர்யா இரண்டுமே வெற்றி படங்கள். சூர்யா வாழ்வில் மறக்கமுடியாத இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எனது முதல் படத்தின் சம்பளம் 1000 ரூபாய். ஆனால் சூர்யாவிற்கு அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் பல ஹிட்டான படங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். 88 வருட வாழ்க்கையை சரவணன் சார் நிறைவாக வாழ்ந்துவிட்டு இறந்திருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். AVM Saravanan: 66 ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்- இயக்குநர் வசந்த்
Cyclone Ditwah Remnants Bring More Rain
For the third day in a row, the leftover part of Cyclone Ditwah continued to bring heavy rain to parts
Vijay Blames Govt for Chennai Waterlogging
Tamilaga Vettri Kazhagam (TVK) president Vijay said on Wednesday (December 3, 2025) that the State government did not finish the
IDfy names Dr. Tridib Mukherjee as Chief AI Officer
Mumbai: IDfy, Asia’s leading Trust Stack, has announced the appointment of Dr. Tridib Mukherjee as its Chief AI Officer, a strategic role underscoring IDfy’s commitment to building advanced AI at the foundation of digital trust infrastructure.Dr. Mukherjee brings over 15 years of global AI and Data Science leadership across gaming, cloud, transportation, and civic technologies, with experience in large-scale systems for personalization, fraud detection, risk modelling, and decision intelligence. He holds 70+ research publications, 40+ patents, and accolades including the AWS AI100 Leader award, Aegis Graham Bell Award, and Amazon AI Conclave Innovation award, positioning him as one of India’s foremost applied AI experts.[caption id=attachment_2483110 align=alignleft width=225] Ashok Hariharan [/caption] Ashok Hariharan, Founder & CEO, IDfy, said, “I am very excited to see Tridib joining us, not just as a leadership addition, but also marking the next phase of IDfy’s evolution. Identity intelligence must be built on deep science, not surface-level automation. Tridib brings the rare combination of research depth, product intuition, and large-scale AI delivery needed to build the next generation of trust infrastructure, not just for India, but for global markets. His leadership signals our intent to move from using AI to advancing AI, particularly focusing on frontier models that help solve the next generation of Risk challenges.” Dr. Tridib Mukherjee added, “IDfy sits at the intersection of trust, safety, and the digital economy - a place where AI can create real societal impact. The opportunity now is to build frontier-grade models that make identity intelligence more accurate, more transparent, and more accessible. I’m excited to help shape technology that simplifies complexity, scales responsibly, and sets a new benchmark for the industry.” Dr. Mukherjee joins IDfy as the company accelerates the development of frontier AI models to enhance identity verification, fraud prevention, and workflow automation at scale, embedding AI deeply across its platforms to strengthen decision workflows and elevate the overall ecosystem of IDfy products.Prior to IDfy, Dr. Mukherjee led a 45-member AI & Data Science team at Games24x7, delivering large-scale personalization, fraud detection, and responsible AI solutions. He has also led research at Conduent Labs and completed his PhD and Postdoctoral work at Arizona State University.
இந்த மாவட்டங்கள் உஷார்! இன்று நாளை இங்கெல்லாம் கனமழை இருக்கு!
சென்னை :தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (03-12-2025) வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 1730 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (04-12-2025) காலை 0830 மணி அளவில் மேலும் வலுவிழந்தது. 04-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை […]
Mumbai: Digital travel platform Agoda has launched a vibrant multi-film digital campaign, “Amazing Hotel Prices”, featuring Indian entertainment favourites Sunil Grover, Ekta Kapoor, Chunky Panday, and Varun Sharma. The campaign highlights Agoda’s surprisingly low domestic hotel prices, offering discounts of up to 50% on select accommodations, just in time for India’s peak travel season.The films, conceptualized and produced with Collective Artists Network, showcase the stars in humorous, high-energy scenarios where their spontaneous reactions capture the thrill of discovering great hotel deals. The campaign is live across digital platforms and social media channels. Gaurav Malik, Country Director for the Indian Subcontinent and Indian Ocean Islands at Agoda, said, “With travel’s high season upon us in India, we know that great hotel prices play a huge role in trip-planning decisions. The ‘Amazing Hotel Prices’ campaign celebrates the excitement travellers feel when they find an incredible deal, and nobody brings that energy to life better than Sunil Grover, Ekta Kapoor, Chunky Panday and Varun Sharma. They each represent a distinct style and sense of humour, and together, they help us speak to our audience in a language they love.” Sudeep Subash, Co-founder & CRO, Collective Artists Network & CEO, Big Bang Social, added, “We believe a great campaign is more than marketing; it’s about telling real stories that people will remember. We’re happy to play a part in bringing this campaign to life for Agoda. This campaign not only underscores Agoda's dedication to providing exceptional value but also beautifully captures the joy and spontaneity of finding great hotel deals, as showcased by the celebrated artists.” In its first weeks, the campaign has already generated close to 100 million impressions across YouTube, Facebook, Instagram, and the talents’ social handles, reinforcing Agoda’s commitment to unmatched value, choice, and ease for Indian travellers booking domestic stays.Campaigns:Sunil Grover - View this post on Instagram A post shared by Sunil Grover (@whosunilgrover) Ekta Kapoor - View this post on Instagram A post shared by EktaaRkapoor (@ektarkapoor) Chunky Panday - View this post on Instagram A post shared by Chunky Panday (@chunkypanday) Varun Sharma - View this post on Instagram A post shared by Varun Sharma (@fukravarun)
BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்
சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள். அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறகு நச்சு பரவி மீண்டும் ரவுடி அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த வாரத்தில் ரெட் கார்டு கொடுத்து அவரை அனுப்பினாலும் தவறில்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 59 ‘நெக்லஸை எடுத்து தரேன்’ என்று வினோத்தும் பிரஜனும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். மேஜர் சுந்தர்ராஜன் பாத்திரத்தைத்தான் பிரஜன் செய்கிறார் என்பது காலை எக்கி எக்கி பேசுவதில் இருந்து தாமதமாகத்தான் உணர முடிந்தது. அவரது உருவத்திற்கு கெட்டப் பொருந்தவில்லை. நாகேஷ் இன்ஸ்பெக்டர் ரோலில் இருப்பது போல. திருமதி. சக்திவேல் கம்ருதீன் என்கிற பெயரை வைத்துக் கொண்டிருக்கிற பாரு, கேரக்டருடன் மிகவும் ஒன்றி விட்டார் போலிருக்கிறது. கம்முவிற்கு கழுத்து மசாஜ் செய்து ரொமான்ஸ் கொண்டிருந்த பாருவைப் பார்க்க தம்பதிகள் மாதிரியே இருந்தது. இவர்களின் உல்லாச நேரத்தைப் பயன்படுத்தி நெக்லஸ் திருட வந்த சுபிக்ஷா, சபரி முழித்துக் கொண்டவுடன் விலகி விட்டார். போர்வையை முழுக்க போர்த்திக் கொண்டு பாத்ரூம் பக்கம் சென்றிருந்த பெண்களை வினோத் பயமுறுத்திக் கொண்டிருந்தார். அவர் அத்தனை சிரமப்பட தேவையேயில்லை. அந்த விக்கை போட்டுக் கொண்டு அப்படியே சென்றிருந்தால் கூட போதும். ‘வீல்’ என்று அலறிய அரோராவும் சுபிக்ஷாவும் ‘ஏன் இப்படி பயமுறுத்தறீங்க. டாஸ்க்தான்னாலும் இதெல்லாம் நல்லாவேயில்லை’ என்று ஆட்சேபித்தார்கள். மல்லுக்கட்டிய சுபிக்ஷா நாற்காலிக்காக சண்டை போட்ட சான்ட்ரா சான்ட்ரா வருங்காலத்தில் அரசியல்வாதியாக வருவார் போலிருக்கிறது. அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் வந்து அமர்ந்த சுபிக்ஷாவிடம் “இது நான் உக்காந்த சேர். எழுந்திரு” என்று அடம் பிடித்தார். “வேற சோ் எடுத்துக்கங்களேன்’ என்றும் கேட்காமல் சுபிக்ஷாவின் மடியிலேயே அமர்ந்து அழும்பு செய்ய இருவருக்கும் மோதல். “அடிக்கறாங்கப்பா” என்று கதறினார் சுபிக்ஷா. இது தொடர்பாக பிரஜனுக்கும் சான்ட்ராவிற்கும் கூட சிறிய சண்டை. இருவரும் உண்மையாகவே மனவருத்தத்தில் விலகியிருக்கிறார்களா, அல்லது ‘ஒண்ணா ஆடறாங்க’ என்கிற புகாரை உடைத்தெறிவதற்காக இப்படி பிளான் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. சான்ட்ரா செய்த அலப்பறையால் சுபிக்ஷா அழ ‘என் குழந்தையை அடிச்சீங்களாமே?’ என்று சப்போர்ட்டிற்கு வந்தார் கனி. இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து ஆதிரைக்கும் வினோத்திற்குமாக மாறியது. “ஏன் அப்படி பயமுறுத்தினீங்க?” என்று ஆதிரை கேட்க “யாரை ஏய்ன்னு சொல்ற.. ஏய்.. ஏய்..” என்று வினோத் AI மோடில் கத்த “வாட்டர் மெலன் வெளியே போனதுக்கு நீங்கதான் காரணம்” என்று ஆதிரை புகார் சொல்ல “அதுக்கு அவர்தான் காரணம். உன்னால எத்தனை போ் போனாங்க தெரியுமா.. அதனாலதான் உன்னை மக்கள் வெளியே அனுப்பினாங்க” என்று வினோத்தும் மல்லுக்கட்ட, அன்றைய தினம் சண்டையுடன் சுபமாக ஆரம்பித்தது. ஆதிரையை வினோத் ஒருமையிலும் அவமரியாதையாகவும் பேசியதால் ஆதிரைக்கு ஆதரவாக திவ்யா பேசியது நன்று. “இப்படி கத்தினாதான் அவங்க எழுந்து உள்ளே போவாங்க. நாம நெக்லஸ எடுக்கலாம். அதனாலதான் அப்படி பண்ணேன்” என்று சான்ட்ராவிடம் பிறகு சமாளித்துக் கொண்டிருந்தார் வினோத். ‘எங்க கிட்ட வேஸ்ட்டா கிரியேட்டிவிட்டி எதிர்பார்க்கறீங்களே பிக் பாஸ்’ - விக்ரம் சுயபகடி நாள் 59. “கிச்சன் டீம்ல இருக்கறவங்களே பாத்திரம் கழுவும் வேலையையும் செய்யறாங்க.. நீங்க போய் செய்யலாமில்ல” என்று சான்ட்ராவை வம்புக்கு இழுத்தார் விக்ரம். “நான் நேத்தே என் வேலையை முடிச்சிட்டேன், உங்க வேலையைப் பாருங்க” என்று சான்ட்ரா பதில் சொல்ல இருவருக்கும் மோதல். இன்ஸ்பெக்டர் பிரஜன் இதை தட்டிக் கேட்காமல் சும்மா இருந்ததால் “ஏன்யா போலீஸூ.. பார்த்துட்டுதானே இருக்கே. தொட்டிலையும் ஆட்டிட்டு பிள்ளையும் கிள்ளி விடறே. எரியற நெருப்புல எண்ணைய்ய ஊத்தறே” என்று சான்ட்ரா கோபிக்க, “நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது மேடம். என்னை உள்ளே இழுக்காதீங்க” என்று பிரஜன் எஸ்கேப் ஆக, சான்ட்ரா கண்கலங்கினார். இப்படி கச்சா முச்சா என்று சண்டையுடன் டாஸ்க் நகர்வதால் “நாங்க பாட்டுக்கு ஷூட்டிங் போயிட்டு பேட்டா வாங்கிட்டு காலத்தைக் கழி்ச்சிட்டு இருந்தோம். எங்களை கூப்பிட்டு வந்து கிரியேட்டிவ்வா டாஸ்க் பண்ணச் சொல்றீங்க.. நாங்க என்ன வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்.. அதெல்லாம் வராது பிக் பாஸ்.. இப்படி அப்பிராணியா இருக்கீங்களே” என்று தனிமையில் புலம்புவதின் மூலம் சிரிக்க வைத்தார் விக்ரம். டாஸ்க்கை இவர்கள் மொக்கையாக கொண்டு செல்வது பிக் பாஸிற்கும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே சபையைக் கூப்பிட்டு “டாஸ்க்ல இருந்து வெளியே வந்து ஹவுஸ்மேட்ஸா மாறுங்க.. ஸாரி.. ஏற்கெனவே பாதி போ் அப்படித்தான் இருக்கீங்க” என்று ஆரம்பத்திலேயே ஊமைக்குத்தாக குத்தினார். ஹவுஸ்மேட்ஸ்களிடம் உக்கிரத்துடன் பேசிய பிக் பாஸ் பிறகு நேரடியாக கடப்பாறைக் குத்துகள் இறங்கின. ‘ஒரு டாஸ்க் லெட்டரை கொடுத்து படிக்கச் சொல்லி ரெண்டு மணி நேரம் ஆச்சு.. உங்களுக்காக நாங்க நேரம் செலவு செஞ்சு கேரக்டர்கள் தந்து, அதுக்கு டிரஸ் எல்லாம் தைச்சு.. கொடுத்தா.. ஒரு உபயோகமும் இல்லை. வழக்கமா போடற சண்டையைத்தான் போடறீங்க.. சிம்ப்லி வேஸ்ட். .. “... இங்க இருக்கவங்கள்ல சில போ் ஆக்டர்ஸ்.. சில போ் அதற்கு முயற்சி செய்யறவங்க.. உங்களுக்காக ஒரு மேடை அமைச்சுக் கொடுத்தா அதை பயன்படுத்திக்க தெரியல. I don't see any fire. உங்களுக்காக சேது கிட்ட பேசி சப்போர்ட் பண்ணி சத்தியம் பண்ணி நான் அசிங்கப்பட்டதுதான் மிச்சம்… “... இனிமே டாஸ்க் நடுவுல பஸ்ஸர் அடிக்கும். கேரக்டர்ல இருந்து வெளியே வர்றவங்க போட்டில இருந்து வெளியேத்தப்படுவாங்க.. இதையெல்லாம் நான் செய்யக்கூடாது. ஆனா செய்ய வெச்சிட்டீங்க.. வினோத்.. ஆரம்பம்லாம் நல்லாத்தானே இருந்தது.. என்ன ஆச்சு.. இதை நான் எந்த சீசன்லயும் சொன்னது கிடையாது. I disown each and everyone of you. இதை நீங்கதான் இனி சம்பாதிக்கணும். Earn it” என்று கோபமாக சொல்லி விட்டு விலகினார் பிக் பாஸ். சுபிக்ஷா அழ, விக்ரம் கண் கலங்கி நீர் கசிய, மற்றவர்கள் மௌனமாக தலைகுனிந்திருந்தனர். “பேய் மாதிரி பயமுறுத்தியது தப்பா போயிடுச்சு. நைட்டு சரியா தூங்கலை பாஸ். அதான்” என்று மன்னிப்பு கேட்டார் வினோத். “உங்க பேரை காப்பாத்தலை. மன்னிச்சிடுங்க பிக் பாஸ்” என்று இன்னொரு மூலையில் அழுது கொண்டிருந்தார் ரம்யா. டாஸ்க் லெட்டருக்காக கன்ஃபெஷன் ரூமிற்குச் சென்ற கம்ருதீன், சும்மா திரும்பி வராமல் “பாஸ்.. நான் பண்றது ஓகேவா.. ஏதாவது மாத்திக்கணுமா?” என்று ஒழுங்குப் பிள்ளை போல கேட்க “உன்னையே மாத்த வேண்டியதுதான்’ என்று மைண்ட் வாய்ஸிற்குள் அலறினாரோ, என்னமோ “எனக்குத் தெரியாது. உங்களுக்கும் எனக்கும் பர்சனலா ஒண்ணும் கிடையாது” என்று சொல்லி வெளியே துரத்தினார். கலவரம் ஆரம்பம் நெக்லஸை கைப்பற்றிய ரெட்ரோ சினிமா அணி அனைத்தையும் துடைத்துக் கொண்டு வெளியே வந்த கம்மு. டாஸ்க் லெட்டரை உற்சாகமாக வாசிக்க ஆரம்பித்தார். (எப்புட்றா!.. பாரு சகவாசம்!) ‘மாத்தி.. மாத்தி.. மாத்தி’ என்கிற விளையாட்டு டாஸ்க். முட்டையும் பந்தையும் போட்டியாளர் கையில் வைத்திருக்க வேண்டும். பிக் பாஸ் எதைச் சொல்கிறாரோ அந்தப் பொருளை தூக்கிப் போட்டு பிடிக்க வேண்டும். மாற்றிப் போட்டு பிடித்தால் அவுட். இன்னொரு விளையாட்டில் கையில் லாலிபாப்பும் சோப்பும் தரப்படும். பிக் பாஸ் lick என்று சொல்லும் போது லாலிபாப்பை சுவைக்க வேண்டும். ‘Smell என்றால் சோப்பை நுகர வேண்டும். (நல்ல வேளை இதை தமிழில் சொல்லியிருந்தால் கந்தரகோளமாகியிருக்கும்!) இந்த ஆட்டத்தில் ரெட்ரோ அணி வெற்றி பெற்று 5 புள்ளிகள் பெற்றது. ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் நடந்து கொண்டிருந்த இந்த டாஸ்க் முடியும் சமயத்தில் பிரஜனும் சுபிக்ஷாவும் விரைவாக ஓடி லிவ்விங் ரூமிற்கு வந்தார்கள். மற்றவர்கள் வெளியே வராதபடி விக்ரம் கதவைப் பிடித்துக் கொண்டார். இதை முன்பே பிளான் செய்திருப்பார்கள் போல. எதிரணியின் நெக்லஸை திருடிய பிரஜன், போக்கு காட்டி பாத்ரூம் ஏரியாவில் ஒளித்து வைத்தார். பின்னாலேயே ஓடிவந்த சபரியும் வினோத்தும் சோதனை போட்டும் கிடைக்கவில்லை. பதிலுக்கு பழிவாங்க நினைத்த சபரி, சுபிக்ஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெக்லஸை எடுத்து போங்காட்டம் ஆடினார். “என் கண் முன்னாடியே எடுத்தாரு” என்று ஆட்சேபம் செய்தார் சுபிக்ஷா. கதவை அடைத்து நின்றதால் வினோத்திற்கும் விக்ரமிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பஞ்சாயத்து கூடியது. “அவங்க நெக்லஸ் எடுத்த விதம் சரியில்ல. அப்படின்னா நாங்க செஞ்சதும் கரெக்ட்டுதான். பிக் பாஸ் தப்புன்னு சொன்னா நெக்லஸை திருப்பித் தந்துடறோம்” என்று ரம்யா சொன்னார். ரணகளமாக நடந்த பஞ்சாயத்து - முரட்டுத்தனம் காட்டிய கம்ருதீன் வீட்டு தல பேசிக் கொண்டிருக்கும் போது அதை மதிக்காமல் தன் குரலை ஓங்கி உரக்கச் செய்வதுதான் பாருவின் வழக்கமான ஸ்டைல். இந்தச் சமயத்திலும் அவர் அது போல் எதையோ கத்திக் கொண்டிருக்க “சும்மா இருங்க பாரு.. உங்க பாயிண்ட்டைத்தான் பேசிட்டு இருக்கேன்” என்று ரம்யா பதிலுக்கு கத்த, பதிலுக்கு பாருவும் கத்த வீடு வழக்கம் போல் சந்தைக்கடையாக மாறியது. பாருவிற்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அவரது பாதுகாவலரான கம்ருதீனும் எழுந்து கத்த “உக்காரு கம்ருதீன்” என்று ரம்யா சொல்ல, இருவருக்கும் சண்டை மூண்டது. ‘போடா.. போடி’ என்று ஏகவசனத்தில் பேசிக் கொண்டார்கள். பாருவின் அட்ராசிட்டியைத் தாங்க முடியாத ரம்யா, ஒரு கட்டத்தில் ‘எதிர் டீம் முன்னாடியே என்னை அசிங்கப்படுத்தறீங்களா.? கால்ல வேணா விழறேன்’ என்று எரிச்சலோடு பாருவின் காலில் விழுந்து விட்டு பிறகு அழுது கொண்டிருந்தார். வீட்டு தல ரம்யாவை, கம்ருதீன் அவமரியாதையாக பேசியதால், திவ்யா எழுந்து வந்தார். ‘தல பேசும் போது மதிக்க மாட்டீங்களா..?” என்று பொதுவாக கேட்க, அதை தனக்கானதாக எடுத்துக் கொண்ட கம்ருதீன் “அவளை இதுல வர வேணாம்ன்னு சொல்லுங்க..” என்று ஆட்சேபிக்க திவ்யாவிற்கும் கம்ருதீனுக்கும் பயங்கர சண்டை ஆரம்பித்தது. “நீ வெளியே கிளம்பு.. நீ கிளம்பு” என்று இருவரும் மோதிக் கொள்ள, எரிச்சல் தாங்காமல் கையில் இருக்கும் பொருளை தூக்கி எறிந்தார் திவ்யா “என்னை அடிக்க வரா.. பாத்தீங்களா?” என்று உக்கிரமான கம்ருதீன் ஆபாச வார்த்தைகளை இறைத்தார். “வார்த்தைகளை விடாத கம்ருதீன்” என்று பிரஜன் தடுத்தாலும் கம்மு அடங்கவில்லை. கூட இருந்து பாரு, கம்முவை தள்ளிக் கொண்டு செல்ல “பாரு.. நீயும் ஒரு பொண்ணுதானே.. இதைக் கேட்க மாட்டியா?” என்று திவ்யா பொங்க “அது வந்து.. நானும் சொல்லிட்டுதான் இருக்கேன்” என்று பம்மினார் பாரு. “அவங்க ரெண்டு பேரும் பண்ணதுக்கு வீக்கெண்டுல கிடைக்கும். நீங்க அமைதியா இருங்க” என்று திவ்யாவை சமாதானப்படுத்தினார் எஃப்ஜே. கம்ருதீன் செய்யும் அட்ராசிட்டி பற்றி வெளியில் பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த வாரம் வீக்கெண்ட்ல கம்ருதீன் நல்லா வாங்கி கட்டிக்கப் போறான். அந்த அளவுக்கு வார்த்தையை விட்டிருக்கான்” என்றார் பிரஜன். (இவரே முன்னர் அப்படி அடி வாங்கியவர்தானே?!) “கெமியைக் கூட அடிக்கப் போயிருக்கான். என்னையும் அடிக்க வந்திருக்கான்” என்று பொங்கினார் ஆதிரை. ஆக.. பிக் பாஸ் கழுவி கழுவி ஊற்றியும் கூட, ஒரு FUN TASK-ஐ மீண்டும் மீண்டும் சண்டை போட்டு சந்தைக்கடையாக மாற்றிய பெருமை போட்டியாளர்களைச் சாரும். ‘அகங்காரம்’ என்பதைக் கழற்றி வைக்காமல் மனித குலத்தில் சமாதானம் ஒன்று வரவே சாத்தியமில்லை.!
Personal Finance: 'செல்வம் சேர்க்கும் ஃபார்முலா' - சோம வள்ளியப்பன் உரை; இலவச நிகழ்ச்சி; முழு விவரம்
சொத்து ஒதுக்கீடு: நல்ல முதலீட்டு உத்தி..! முதலீட்டுத் தொகையைப் பல்வேறு சொத்து பிரிவுகளில் பிரித்து மேற்கொள்ளும், சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது ஒரு நல்ல முதலீட்டு உத்தியாகும், நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள், கடன் சந்தை ஃபண்டுகள், லிக்விட் ஃபண்டுகள் போன்ற பல்வேறு சொத்து பிரிவுகளைக் கொண்டு முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்குவதே சொத்து ஒதுக்கீடு ஆகும். இது ரிஸ்க் மற்றும் சாத்தியமான வருமானத்தைச் சமநிலைப்படுத்துகிறது. வெவ்வேறு சொத்து வகுப்புகள் வெவ்வேறு சந்தை நிலைமைகளின் கீழ் வித்தியாசமாகச் செயல்படுவதால், முதலீடுகளைப் பல்வகைப்படுத்துவதன் மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதே இதன் குறிக்கோள் ஆகும். சரியான சொத்து ஒதுக்கீடு உங்கள் தனிப்பட்ட நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தது ஆகும். சரியான சொத்து ஒதுக்கீடு நாணயம் விகடன் & இன்டிக்ரேட்டெட் இந்தச் சொத்து ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வு முதலீட்டுக் கூட்டத்தை நாணயம் விகடன் & இன்டிக்ரேட்டெட் இணைந்து ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா… அஸெட் அலோகேஷன்!’ நிகழ்ச்சியாக நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி கல்பாக்கத்தில் டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை. நேரம்: காலை 10.30 AM முதல் 12.30 PM வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் வரலாம். பதிவு செய்ய: https://bit.ly/integratedmf இடம்: ஸ்டார் மஹால் & ரெசிடன்சி A/c ECR ரோடு, புதுப்பட்டினம், (VAO அலுவலகம் எதிரில்), கல்பாக்கம் - 603 102. சிறப்புரை: சோம வள்ளியப்பன் Personal Finance Education Trainer எல்.சுதாகர் Integrated Data Management Services Private Limited ஆர்.குருராஜன் Integrated Insurance Broking Services Private Limited Chennai For registration missed call to: 044 66802980 / 044 66802907 பதிவு செய்ய: https://bit.ly/integratedmf Personal Finance: முதலீட்டின் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்கணுமா? 15:15:15 ஃபார்முலாதான் ஒரே வழி!
மிகப்பெரிய குறைபாட்டுடன் ஒரு மாதமாகப் பறந்த ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு பயணிகள் விமானம், சுமார் ஒரு மாதம் வரை மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டுடன்… The post மிகப்பெரிய குறைபாட்டுடன் ஒரு மாதமாகப் பறந்த ஏர் இந்தியா விமானம் appeared first on Global Tamil News .
கெட்டிமேளம் நாடகத்தில் முருகன் எதற்காக ஆக்ஸிடென்ட் செய்ததாக பழியை ஏற்றுக் கொண்டான் என்பது புரியாமல் குடும்பத்தினர் குழப்பம் அடைகின்றனர். அவனுடம் எவ்வளவு கேட்டும் உண்மையை கூற மறுத்து விடுகிறான். மற்றொரு பக்கம் இந்த விவகாரத்தில் துளசிக்கு ஏதாவது சந்தேகம் வந்து விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார் ஈஸ்வரமூர்த்தி.
சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப் பக்கமுள்ள அரசு நிலத்தில் சேர்த்து போடவும் என்று சரோஜா கூறியுள்ளார். இதை அறிந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன், மூதாட்டி சரோஜாவை கிராம மக்கள் முன்னிலையில் சரமாரியாக அடித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட சரோஜா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டியைத் தாக்கிய முன்னாள் எம்எல்ஏ இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அர்ஜுனன், கொரோனா காலத்தில், ஓமலூர் டோல்கேட் அருகே போலீசாரை தாக்கிய வழக்கும் அவர் மீது உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் அதிமுகவில் எம்.எல்.ஏ, திமுகவில் எம்.பி, தேமுதிகவில் மாவட்ட செயலாளர் என இருந்தவர். தற்போது அரசியலில் இருந்து விலகி, விவசாயம் செய்து வருகிறார். மூதாட்டியைத் தாக்கியது மட்டுமின்றி, தொடர்ந்து ஊர் மக்களை மிரட்டி வரும் அர்ஜுனனைக் கைது செய்ய வேண்டும் என்று சரோஜா, மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சேலம்: மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்ய முயன்ற சிறை காவலர் அதிரடி கைது
Rajinikanth: சினிமாவை உயிரா நேசிச்சாரு | AVM Saravanan | Cinema Vikatan
Mumbai: Prime Video has announced the launch of Moviesphere+ as an add-on subscription, offering viewers a vast library of Hollywood blockbusters, fan favourites, classic hits, award-winning TV shows, and legendary franchises. Customers in India can subscribe to Moviesphere+ at an introductory price of INR 399 per year.The subscription brings titles such as The Hunger Games: The Ballad of Songbirds and Snakes, Borderlands, P.S. I Love You, The Princess Bride, Jackie Brown, Prisoners, and acclaimed TV shows including Mad Men, Weeds, Black Sails, Anger Management, and The Rookie (Season 7).[caption id=attachment_2483102 align=alignleft width=200] Gaurav Bhasin [/caption]Speaking on the launch, Gaurav Bhasin, Head of Marketplace (Add-on Subscriptions and Movie Rentals) and Prime Video Ads, India, said, “We are delighted to launch Moviesphere+ as the newest addition to our add-on subscriptions on Prime Video. Prime Video's add-on subscriptions have become a powerful launchpad for international streaming services and studios to reach audiences across India. With this collaboration, Moviesphere+'s robust repertoire of Hollywood content will enhance our entertainment experience and broaden the range of global stories available to Indian audiences.” Add-on subscriptions on Prime Video allow customers to manage multiple premium subscriptions seamlessly in one destination, with unified login, billing, consolidated watch lists, offline downloads, personalized recommendations, and access to thousands of titles across 30 OTT services.With Moviesphere+, Prime Video strengthens its position as a one-stop entertainment hub, offering Indian viewers convenient access to global content, all within the Prime Video ecosystem.
சினிமாவை உயிருக்குயிராய் நேசித்தவர் ஏவிம் சரவணன் –நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!
சென்னை :ஏவிஎம் ஸ்டுடியோவின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.வி.எம் சரவணன் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலி செலுத்த வந்த ரஜினி, சரவணனின் உடலருகே நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த ஏ.வி.எம் சரவணன் சார் நல்ல மனிதர்… ஜென்டில்மேன் என்ற வார்த்தைக்கே உதாரணம் இவர்தான்” என்று உருக்கமாகத் தொடங்கினார். “சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர் சரவணன் சார். என்மீது ரொம்ப அன்பு வைத்திருந்தார். […]
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை விாிவுபடுத்தும் அமொிக்கா
அமெரிக்காவில் தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணத்… The post 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை விாிவுபடுத்தும் அமொிக்கா appeared first on Global Tamil News .
செங்கோட்டையன், சின்னசாமி, அடுத்தடுத்து கட்சி மாறும் சீனியர்கள்; கொங்கு மண்டலத்தில் திணறும் அதிமுக?
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் என்றாலே அரசியல் புள்ளிகளின் கரைவேட்டிகள் மாறுவது இயல்பு தான். அப்படி அடுத்தடுத்த கட்சி தாவல்களால் கொங்கு அரசியல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையன் அந்த பரபரப்பு ஓய்வதற்குள் கோவை அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்த சின்னசாமி நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் அடுத்தடுத்து இரண்டு கொங்கு மண்டல சீனியர் நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலம் அதிமுக மிகவும் வலுவாக உள்ள பகுதி. 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக அமர்வதற்கு கொங்கு மண்டலத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு தான் காரணம். 2026 சட்டமன்ற தேர்தலில், கொங்கு மண்டலத்தில் முழுவதுமாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருகிறார்கள். திமுகவில் சின்னசாமி ஆனால் தென் மாவட்டங்களை தொடர்ந்து கொங்கு பகுதி அதிமுக சீனியர்கள் திமுக, தவெகவுக்கு தாவுவது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக நிர்வாகிகள் பலர் திமுக, பாஜகவில் இணைந்து வருகிறார்கள். கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, வேலுமணியுடன் நெருக்கமாக இருந்த செந்தில் கார்த்திகேயன் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர். இதில் ராஜ்குமார் தற்போது கோவை எம்பியாக இருக்கிறார். ஆளுங்கட்சி, செல்வாக்கான பதவி, தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதால் திமுகவில் இணைந்து வருகிறார்கள். சின்னசாமி ஏற்கெனவே 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தப் பகுதியில் அதிமுக படு தோல்வியடைந்துள்ளது. அதனால் சீனியர்களின் கட்சி தாவல்கள் அதிமுக தொண்டர்கள், பொது மக்களிடம் அந்தக் கட்சியின் மீதான நம்பிக்கையை குறைக்கும். என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, அதிமுகவில் ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்டு அடையாளத்தை இழந்தவர்கள் தான் மாற்று கட்சிக்கு செல்கிறார்கள். செங்கோட்டையன் தாக்கம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் மட்டும் தான் இருக்கும். சின்னசாமி சின்னசாமி எம்எல்ஏ, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியில் இருந்தது எல்லாம் கடந்த காலம். சின்னசாமி ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைந்து அண்ணா தொழிற்சங்க பதவி போன பிறகு அவர் அமமுக, பாஜக கட்சிகளில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டார். அவர் மீதிருந்த ஒரு மோசடி வழக்கை வாபஸ் வாங்குவதற்காக மீண்டும் அதிமுகவில் இணைந்து சிறிது காலம் இருந்தார். தற்போது அந்த வழக்கு வாபஸ் பெறபட்டுவிட்டதால் சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார். அவர் கடைசியாக எந்தக் கட்சியில் இருந்தார் என்று யாருக்குமே தெரியாதளவுக்கு தான் அவரின் செயல்பாடுகள் இருந்தன. சின்னசாமி திமுக சென்றிருப்பதால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததால் அவரை தங்கள் கட்சியில் இழுக்க திமுக முயற்சி செய்தனர். அது நடைபெறவில்லை என்பதால் திமுக சின்னசாமியை இணைத்து அவர்களின் தலைமையை சமாளித்துள்ளனர்.” என்றனர். 'விஜய் புனித ஆட்சியைக் கொடுப்பார்' - செங்கோட்டையன் நம்பிக்கை
தேதி குறித்த திருமா; 234 மா.செ-க்கள்; மறுசீரமைக்கப்படும் வி.சி.க? - பரபரக்கும் அம்பேத்கர் திடல்!
2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் தமிழகத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருமாவளவன். வி.சி.க-வில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து அம்பேத்கர் திடல் வட்டாரத்தில் விரிவாக விசாரித்தோம். 'மறுசீரமைக்கப்படும் வி.சி.க!' நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகிகள் சிலர், வட மாவட்டங்கள் மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுக்கவே கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறார் திருமா. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 2023 செப்டம்பரில், 88 ஆக இருந்த மாவட்டச் செயலாளர் எண்ணிக்கையை 144 ஆக உயர்த்தினார். அதிலும் வன்னியர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு தலா 10% ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக மீண்டும் கட்சி மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார் எங்கள் தலைவர் என்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் '234 மா.செ-க்கள்..! தொடர்ந்து பேசியவர்கள், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வேலைகள் நடக்கின்றன. ஏற்கனவே 2-3 தொகுதிகளுக்கு ஒரு மா.செ-க்கள் என்றிருந்த நிலையை 144 மா.செ-க்கள் உள்ள நிலையில் கூடுதலாக 90 மா.செ-க்களை நியமித்து டிசம்பர் 6-ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம். இதனால் உட்கட்சிப் பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருந்தாலும் 'Decentralisation of Power' என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறோம். புதிய மாவட்டச் செயலாளர்களின் மூலம் வட மாவட்டங்களை தாண்டி மத்திய, தென் மாவட்டங்களில் பூத் கமிட்டியை வலுப்படுத்தவுள்ளோம். கூடுதலாகத் தொகுதி வாரியாக துணை மா.செ-க்களையும், தொகுதிக்கு ஒரு செய்தித் தொடர்பாளரையும் தேர்ந்தெடுக்கவுள்ளோம். கூடவே மண்டலச் செயலாளர்களை நியமிக்கவும் திட்டமிடுகிறார் திருமா என்றனர். விசிக தலைவர் திருமாவளவன் 'அப்செட் நிர்வாகிகள்' நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் கட்சியை வலுப்படுத்த திருமா இதுபோன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் இது உட்கட்சி மோதலுக்கு வழிவகுக்கும் அபாயங்களும் உள்ளன. இந்த மறுசீரமைப்பின் மூலம், 2-3 தொகுதிகளை தன்வசம் வைத்திருக்கும் மா.செ-க்கள் 2 தொகுதிகளை ஜூனியர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஜூனியர் - சீனியர் வேறுபாடுகளின்றி கட்சிப் பொறுப்புகளை வடிவமைப்பது சரி என்றாலும் அதனை கட்சிக்காரர்கள் ஏற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றனர். VCK: மதுக்கடைகளை மூடாவிட்டால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருமாவளவன் அதிரடி
டிசம்பர் 12 முதல் மகளிர் உரிமைத் தொகை… விடுபட்ட பெண்களுக்கும் கிடைக்கும்- உதயநிதி ஸ்டாலின்!
தமிழகத்தில் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் தேதி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
AVM Saravanan: தாணு மாதிரியானவங்க தான் தாக்குப்பிடிச்சு படம் எடுக்குறாங்கன்னு சொன்னாரு- வைகோ
ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். குடும்பப்பாங்கான படங்களுக்கு ஏவிஎம் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. அப்படி எடுத்த படங்களிலேயே புகழைக் குவித்த படம் 'அன்பே வா'. ஆங்கில படம் ஒன்றின் உட்கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜா தேவி அவர்களும், நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களும் அந்தப்படத்தில் நடித்திருப்பார்கள். ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ இதில் ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 'அன்பே வா' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் 7,8 இடங்களில் சண்டை காட்சிகள் வரும். வாள்வீச்சு, கத்திச் சண்டை என எல்லாம் டூப் போடாமல் அவரே நடித்திருப்பார். ஆனால் இப்போதெல்லாம் சண்டைக் காட்சிகள் அப்படி இருப்பதில்லை. கொடூரமாகக் கொலை செய்கிறார்கள். துண்டு துண்டாக வெட்டி எறிகிறார்கள். எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திலும் ரத்தம் சிந்திய காட்சியே இருக்காது. ஒரே ஒரு படத்தை தவிர அது 'மதுரை வீரன்' படம். அவரது படத்தில் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். அந்தவகையில் ஏவிஎம் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளியான 'அன்பே வா' படத்தில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும். இசை ரசிக்கும்படியாக இருக்கும். ஏ.வி.எம் சரவணன் ஏ.வி.எம் குடும்பத்தில் நான் சரவணனிடம் தான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். கலைப்புலி தாணு மாதிரியான ஆட்கள்தான் தாக்குப்பிடித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் இப்போது அதிகமாகப் படம் எடுப்பதில்லை என்று என்னிடம் சரவணன் சொன்னார். நூறாண்டு வாழ வேண்டும் என்று விரும்பினார். அவரை மரணம் என்ற கழுகு கொத்திக்கொண்டு போய்விட்டது. ஏவிஎம் புகழ் கலைத்துறை இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்று பேசியிருக்கிறார்.
. . தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவரான,ஏவிஎம் ஸ்டூடியோஸின்உரிமையாளரும், மூத்த தயாரிப்பாளருமானஏவிஎம். சரவணன் அவர்கள் இன்று… The post ஏவிஎம் சரவணன் காலமானார் appeared first on Global Tamil News .
சிறிய தலை, விஷம் கூட இல்லை; பெரிய முட்டையை விழுங்கும் பாம்பு வகை பற்றி தெரியுமா?
பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத் தன்மை கொண்டவையாக இருக்கும். வேட்டையாடுதல் பண்பைக் கொண்டிருக்கும் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விஷமே இல்லாமல், பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் ஒரு விசித்திர பாம்பைப் பற்றித் தெரியுமா? ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘டாசிபெல்டிஸ் கான்சி’ (Dasypeltis gansi) எனும் பாம்பு தான் பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் தன்மையை கொண்டவையாக உள்ளது. ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளிலும், புல்வெளிகளிலும் காணப்படும் இந்த பாம்பு மிகவும் மெலிந்த உடலமைப்பையும், சிறிய தலையையும் கொண்டவையாக உள்ளன. இந்த பாம்பு தன்னைவிட பல மடங்கு பெரிய முட்டைகளை எப்படி விழுங்குகிறது என்பதுதான் ஊர்வன ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. snake பொதுவாக வேட்டையாடும் பாம்புகளுக்கு இருக்கும் பெரிய தலை அல்லது தாடை அமைப்பு இதற்கு இல்லை. மாறாக இதன் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்புகள் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக உள்ளதாம். ஆய்வுகளின்படி, இந்த பாம்பின் வாய் பகுதி, அதன் உடல் அளவை ஒப்பிடும்போது சாதாரண பாம்புகளைவிட மூன்று முதல் நான்கு மடங்கு வரை விரிவடையும் தன்மையுடையது. இந்த பாம்பு பறவைகளின் கூடுகளைத் தேடிச் சென்று முட்டையை விழுங்குகிறது. முட்டை தொண்டைக்குள் சென்றவுடன் பாம்பின் முதுகெலும்பில் உள்ள கூர்மையான எலும்பு அந்த முட்டையின் ஓட்டை உடைக்க உதவுகின்றன. பின்னர் முட்டையின் உள்ளே இருப்பதை மட்டும் உறிஞ்சிவிட்டு உடைந்த ஓட்டை அப்படியே வெளியே துப்பிவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக பாம்புகள் தங்களை தற்காத்துக்கொள்ள விஷத்தைப் பயன்படுத்தும் அல்லது இரையை இறுக்கிக் கொல்லும். ஆனால், இந்த ‘டாசிபெல்டிஸ் கான்சி’ பாம்புக்கு விஷமும் கிடையாது, இரையை இறுக்கும் வலிமையும் கிடையாது. எதிரிகளிடமிருந்து தப்பிக்க தனது உடலில் உள்ள செதில்களை ஒன்றுடன் ஒன்று உரசி ஒருவித ஒலியை எழுப்பும். இதன் மூலம் தங்களை தற்காத்துக்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மகுடி ஊதினால் பாம்பு படமெடுத்து ஆடுமா? உண்மை என்ன? - அறிவியல் சொல்வது இதுதான்!
திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி
முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்படுகிறது. திருப்பரங்குன்றம் மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி. அதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதியாக மறுத்துவிட்டது. 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது, இந்த விவகாரங்களெல்லாம் பேசுபொருளான நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும். என்றது. அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. என வாதிடப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.... ``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?
பாமக சின்னம் முடக்கப்படும் ! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தேர்தல் ஆணையம் (ECI) கடும் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. கட்சியில் இரு தரப்பு பிரச்சினை இருந்தால், படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்துகளையும் ஆணையம் ஏற்காது. மாறாக, கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இது பாமகவின் உள் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. […]
தேசிய கல்வி கொள்கை 2020 அடிப்படையில் உயர்கல்வியில் யுஜிசி பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதில் ஒரு முக்கிய முடிவாக, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் ஒரு மொழியை கூடுதலாக கற்றுகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாரதிய பாஷா சமிதி பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது.
புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் 'GST 2.0' நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% ஸ்லாப்களாக குறைக்கப்பட்டது. எலெக்ட்ரானிக் பொருள்கள் முதல் வாகனங்கள் வரை பல பொருள்களின் விலை வெகுவாக குறைந்தது. கூடவே, பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி ஆகியவற்றிற்கு 40 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி இன்னமும் அமலுக்கு வரவில்லை. இது அமலாவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained கலால் வரி இந்த நிலையில், புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ் (Cess) வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக தற்போது 'கலால் வரி (Excise Duty)' கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான மத்திய கலால் வரி திருத்த மசோதா நேற்று (நவம்பர் 3) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கலால் வரி என்பது புதிய வரி நடைமுறை இல்லை. ஏற்கெனவே இருந்த ஒன்று தான். ஆனால், 2017-ம் ஆண்டு, ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்த வரி வசூல் நிறுத்தப்பட்டது, செஸ் வரி வசூலிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலால் வரியைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. நிர்மலா சீதாராமன் பேச்சு இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது புதிய சட்டமோ, கூடுதல் வரியோ அல்ல. மத்திய அரசு எதையும் எடுத்தும் போய்விடவில்லை. இது செஸ் அல்ல... இது கலால் வரி. இது ஜி.எஸ்.டிக்கு முன்பு நடைமுறையில் இருந்து வந்தது. நிர்மலா சீதாராமன் தற்போது மத்திய அரசு செஸ் வரி வசூலிப்பதை நிறுத்தியுள்ளதால், மீண்டும் கலால் வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வசூலிக்கப்படும் வரியில் 41 சதவிகிதம் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று பேசியுள்ளார். இனி 1000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,700 - 11,000 வரையிலும், தயாரிக்கப்படாத புகையிலைகளுக்கு 70 சதவிகிதமும், புகையிலைக் கலைவைகளுக்கு 325 சதவிகிதம் வரையிலும் கலால் வரி வசூலிக்கப்படும். Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா?
பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்! ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
ரஷியாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால் நாங்களும் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷியா – உக்ரைன் இடையேயான போர் தொடங்கி நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், போரை நிறுத்தும் பணியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் நேரடியாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான 28 அம்ச வரைவு அறிக்கையையும் வெளியிட்டார். […]
Mumbai: BBH India Managing Director Himanshu Saxena has taken on an expanded mandate as President – North & East for Saatchi & Saatchi India and Propagate, strengthening unified leadership across the three agencies in the region. Based in Gurugram, Himanshu will continue to lead BBH India nationally while reporting to Paritosh Srivastava, CEO of Saatchi & Saatchi India, BBH India, and Propagate.Supporting Himanshu in the North and East leadership are Hindol Purkayastha, EVP – North & East India, Nisheeth Srivastava, Senior Executive Creative Director, and Ankit Sharma, EVP – Planning. This unified leadership aims to deliver integrated solutions, enhancing Publicis Groupe’s Power of One proposition and providing brands with connected thinking across creative, digital, and media. Paritosh Srivastava, CEO, said, “Given the significance and size of the North and East markets, and the strong client relationships that Publicis Groupe India has fostered here, we’re committed to doubling down on the region. We already have a solid presence and valuable partnerships, and this leadership nucleus will help us further harness the power of the Groupe’s capabilities and become a dominant creative force in the region. With this leadership bench, we’re bringing together the scale, depth and quality needed to unlock the next wave of growth. We’re confident that this unified structure will deliver greater value and more integrated impact for brands navigating today’s rapidly evolving landscape.” Himanshu Saxena added, “With our combined creative and digital strengths, we’re uniquely positioned to deliver connected, end-to-end solutions that drive real business impact for our clients. I look forward to working alongside Paritosh and the teams to strengthen our regional capabilities, drive integrated growth, and deliver powerful solutions that help our clients win.”
முல்லைத்தீவில் மாயமான 5 கடற்படை வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு சாலை பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. காணாமல்போனவரின் சடலம் புதுமாத்தளன் பகுதியில் மீட்கப்பட்டதாகக் கடற்படை அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் மின்பொறியியல் பிரிவில் பணியாற்றிய ஒருவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனைய நான்கு பேரையும் தேடும் பணிகள் மாஞ்சோலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலத்தை உறவினர்கள் அடையாளப்படுத்தி, உறுதி செய்துள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காணாமல் போன ஏனைய நான்கு […]
மூன்று `செக்’குகளும் பவுன்ஸ்; பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்! – அலறியடித்து ஆஜரான புதுச்சேரி அமைச்சர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலை அமுதன். 60 வயதான இவருக்கும், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-வுமான திருமுருகனுக்கும் தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதனடிப்படையில் கலை அமுதனுக்கு அமைச்சர் திருமுருகன் ரூ.41.44 லட்சம் தர வேண்டியிருந்திருக்கிறது. அந்த தொகைக்காக கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் `செக்’கை கலை அமுதனிடம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். அதன்படி வங்கியில் செலுத்தப்பட்ட அந்தக் காசோலை பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது. நீதிமன்றம் பிடிவாரண்ட் அதுகுறித்து கலை அமுதன் தெரிவித்தபோது, ஜூன் 10-ம் தேதியிட்ட வேறொரு செக்கை கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வந்திருக்கிறது. அதன்பிறகு மூன்றாவது முறையாக ஜூன் 27-ம் தேதியிட்ட புதிய `செக்’கை கொடுத்திருக்கிறார் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வர, நவம்பர் மாதம் நீடாமங்கலம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் சென்றார் கலை அமுதன். அதையடுத்து நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் அமைச்சர் திருமுருகன். அதனால் அமைச்சர் திருமுருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி இந்துஜா. அதனால் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜரானதையடுத்து, வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி இந்துஜா.
Chennai: CavinKare’s heritage hair care brand, Karthika, has launched a new digital film for Karthigai Deepam, celebrating inner light, cultural pride, and the timeless elegance of a woman’s braid. The campaign also features a UGC contest encouraging women to showcase their festive braid hairstyle with the Karthika Shampoo bottle and Deepam dcor on Instagram using the hashtag #BraidOfLight.The film narrates the story of a girl from a village without electricity who later brings light home through her own innovation, symbolically switching off every bulb so the Deepam flame can shine in its purity. Rich in visuals of lamps, kolams, and festive rituals, it draws a poetic parallel between external light and the inner radiance of every woman.[caption id=attachment_2483094 align=alignleft width=200] Rajat Nanda [/caption]Speaking about the campaign, Rajat Nanda, Business Head – Personal Care, CavinKare, said, “Karthigai Deepam is a festival of radiance, continuity, and heritage, values that resonate deeply with Karthika. Through this film, we wanted to honour the inner light and cultural pride every woman carries, and invite her to express it through the beauty of her braid. Our UGC initiative brings this sentiment to life by making consumers an integral part of the celebration.” The campaign, rolled out across Tamil Nadu and Andhra Pradesh, invites women to participate in the contest until December 7, 2025, with winners receiving Amazon Gift Vouchers worth ₹10,000 and ₹5,000, further strengthening Karthika’s emotional connection with its audience. View this post on Instagram A post shared by Karthika (@karthika_haircare)
திருப்பரங்குன்றம் விவகாரம் : விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!
திருப்பரங்குன்றம் : சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான சர்ச்சை, இன்று பெரும் கொந்தளிப்பாக மாறியது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டும், மதுரை கலெக்டர் கே.ஜே. பிரவீன் குமார் 144 தடை உத்தரவு (பிஎன்எஸ்எஸ் பிரிவு 163) பிறப்பித்ததால் போலீஸார் அனுமதி மறுத்தனர். இதற்கு மாற்றாக உச்சி பிள்லையார் கோயில் அருகில் தீபம் ஏற்றப்பட்டது. இதை எதிர்த்து ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் […]
மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் பறிபோன உயிர்
போவத்த -வீரபொக்குன பகுதியில் நேற்று (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் 41 வயதான அனுருத்த குமார ஆவார். மின்சாரம் தாக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான அனுருத்த உடனடியாக வீரபோகுன அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர், குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
AVM: ``என் கஷ்ட காலங்களில் - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம் . தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களைத் தயாரித்திருக்கிறது. ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியது. 2014-ம் ஆண்டிற்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது. ஏவிஎம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தும் நடிகர் ரஜினி இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு திரைப் பிரபலங்கள் தொடர்ந்து ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மிகப்பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துகாட்டு சரவணன் சார். எப்போதும் வெள்ளை உடைதான் அணிவார். அவருடைய உள்ளமும் அப்படித்தான் இருக்கும். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தார். 10 நிமிடம் பேசினால்கூட அதில் 10 முறை 'அப்புச்சி... அப்புச்சி...' என தன் அப்பாவை நினைவுப்படுத்துவார். என் மீது அதிக அன்பு வைத்தவர். என் நலன் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக நின்றவர். ஏவிஎம் சரவணன் ஏ.வி.எம் தயாரிப்பில் 9 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் எல்லா படங்களும் மாபெரும் வெற்றிப் படங்கள். அதற்கு முக்கியக் காரணம் சரவணன் சார். 80-களில் தமிழில் மிக பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட படம் முரட்டுக்காளை. 2000-களில் சிவாஜி. 2020-களில் ஒரு படம் எடுக்கலாம் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அது நடக்கவே இல்லை. அவருடைய மறைவு மிகவும் மனதை பாதிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள். 50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்
பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க முடியாது – தேர்தல் ஆணையம்!
பாமகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்மூலம் மாம்பழம் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.
அஜித்துக்காக மலேசியா கார் ரேஸை பார்க்க முந்தியடிக்கும் ரசிகர்கள்: டிக்கெட் வித்துப் போச்சுப்பா
அஜித் குமார் கலந்து கொள்ளவிருப்பதால் மலேசியாவில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தை காண ரசிகர்கள் போட்டா போட்டி போடுகிறார்கள். இதனால் டிக்கெட் விற்பனை படுஜோராக நடந்திருக்கிறது.
AVM Saravanan: 66 ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்- இயக்குநர் வசந்த்
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவருக்குப் பிறகு பொறுப்பெடுத்து நிர்வகித்தவர் ஏ.வி.எம் சரவணன். ஏராளமான வெற்றிப் படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் 86 வயதான ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று (டிச.4) உயிரிழந்திருக்கிறார். ஏ.வி.எம் சரவணன் இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் வசந்த் ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வசந்த், சரவணன் சாரைப் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். 1958-ல் ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனத்தின் பொறுப்பை அவர் எடுத்துக்கொண்டார். கிட்டதட்ட 65, 66 ஆண்டுகளாக மிகச்சிறந்த பண்பாளராக கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார். பண்பு என்றால் என்னவென்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். நான் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் படங்களை எடுத்ததில்லை. ஆனால் என்னுடைய படங்களுக்கு நான் தேசிய விருது வாங்கும்போது ஒரே ஒரு கடிதம் எனக்கு வரும். ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்திய வசந்த் அது ஏ.வி.எம் சரவணன் சாரின் கடிதமாகத்தான் இருக்கும். திரைத்துறையில் ஒருவருடன் நேரடி தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாராட்டுவார். பல முறை என்னுடைய படங்களை டிவியில் பார்த்த பிறகு அழைத்துப் பாராட்டியிருக்கிறார். மறக்கமுடியாத மாமனிதர் அவர். அவரை இழந்துவாடும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பிசிசிஐயிடம் கே.எல்.ராகுல் தெரிவித்தகாவும், அப்போது சீனியர் வீரரை அவர் கை காட்டியதாகவும் கூறப்படுகிறது.
Chandan Das steps down from JioStar after 11 Years
Mumbai: Chandan Das has stepped down from his role as Director – Digital & TV Revenue Generation – South at JioStar, concluding a tenure of over 11 years with the company.During his time at JioStar, Chandan led Digital and TV revenue, driving monetization of marquee assets including Bigg Boss, Star Parivar Awards, Hotstar Originals, and World TV Premieres, alongside the company’s OTT platform and TV channel inventories. His leadership was instrumental in building a skilled team that understood client needs, delivered tailored media solutions, and ensured flawless execution across all markets.Sharing the news on his LinkedIn handle, Chandan Das wrote, Some chapters don’t end… they simply prepare you for the ones you were meant to write next. After 11 years and 4 months, I’m wrapping up a deeply meaningful journey with JioStar / Star — a place that shaped me, challenged me, and truly made me who I am professionally. He added, I’m extremely excited to share that I will be taking up a new role soon — a new beginning that I’m stepping into with gratitude, energy and a lot of optimism. To my leaders at JioStar / Star — thank you for trusting me, pushing me, guiding me and helping me grow in ways I never imagined. To my colleagues, teammates and partners — thank you for the work, the warmth, the laughs, the hustle and the memories that will stay with me forever. I’ve always believed this: it’s not the brand that makes people — it’s the people who make the brand. And the people here have been nothing short of extraordinary. Closing this chapter with a full heart… and stepping into the next with excitement. Onwards and upwards. Prior to his tenure at JioStar, Chandan worked with HT Media Ltd, Info Edge India Ltd, DPSC Ltd, Lakme Lever, and Bharti Axa Life Insurance, where he began his career as a Recruitment Officer in 2008. He brings extensive expertise in Revenue Generation, Digital Media, Strategic Partnerships, Client Relations, Direct Sales, Sales Management, Account Management, and Business Relationship Management.
புடின் இந்தியாவிற்கு வரும்போது மேம்பட்ட BrahMos ஏவுகணை வகைகள் குறித்து ஆலோசனை
ரஷ்ய ஜனாதிபதி புடின் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்போது இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து BrahMos ஏவுகணைகளின் மேம்பட்ட வகைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. BrahMos ஏவுகணைகள், சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆபரேஷன் சிந்தூரில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு game changer என நிரூபித்தன. இந்நிலையில் இந்தியா, BrahMos NG (Next Generation) போன்ற எடை குறைந்த வகைகளை உருவாக்க விரும்புகிறது. இவை, இந்திய விமானப்படையின் அனைத்து வகை போர் […]
Suparna Mitra appointed MD & CEO of TeamLease Services
Bengaluru: TeamLease Services Limited, a staffing company, has announced a significant leadership transition as part of its long-term succession planning and governance strategy.The Board of Directors has appointed Suparna Mitra as the Managing Director & Chief Executive Officer (MD & CEO) of TeamLease Services Limited, effective February 2, 2026. She will succeed Ashok Reddy, who will assume the role of Executive Vice Chairman and work closely with Suparna to ensure a seamless transition and support long-term strategy, horizontal projects, and building adjacencies.Manish Sabharwal will step down from his executive responsibilities but continue as a Non-Executive Non-Independent Director, while Narayan Ramachandran will continue as Chairman.Suparna joins TeamLease from Titan Company Limited, where she served as CEO of the Watches & Wearables Division. An alumna of IIM Calcutta (MBA) and Jadavpur University (B.Tech, Electrical Engineering), Suparna began her career at Hindustan Lever Limited and held leadership roles at Arvind Brands Limited before joining Titan in 2006.Under her leadership, Titan’s Watches & Wearables division achieved 2x revenue growth in three years to reach ₹4,500 crore in FY2024-25, strengthened market leadership in watches through premiumization, and built a category-defining wearables business. She brings over three decades of experience across technology-led transformation, retail, digital commerce, and organisational scale management, having led teams of over 3,000 employees and complex P&Ls.Recognised repeatedly among India’s Most Powerful Women in Business, Suparna also serves as an independent board member of Swiggy and as a member of the Board of Governors of IIM Kozhikode.Speaking on her appointment, Suparna Mitra said, I am honoured to join TeamLease at such a pivotal moment for India and its employment landscape. TeamLease has built a unique foundation across staffing, skilling, and compliance, touching millions of lives every year. I look forward to working with the Board and the leadership team to unlock the next phase of growth, digital innovation, and social impact. Commenting on the leadership change, Ashok Reddy said, This transition is the logical next step for Manish and me. Our executive roles were always distinct from our board member and shareholder roles, which continue. The next orbit for TeamLease – higher margins, faster growth and institutionalisation – will benefit from leadership instincts that are fresh and different from ours. Suparna brings a powerful combination of strategic thinking, consumer insight, and technology orientation that accelerates TeamLease’s mission of putting India to work. Narayan Ramachandran, Chairman, TeamLease commented, “We are delighted to welcome Suparna as the new MD & CEO of TeamLease. She is a proven transformation architect who has scaled large consumer and technology-driven businesses with a rare blend of strategic foresight and operational discipline. Her cross-sector experience and deep understanding of customers, technology, and people make her an ideal leader for the next chapter of TeamLease.” “On behalf of the Board, I would like to express our deep gratitude to Manish and Ashok. Their entrepreneurial leadership has shaped TeamLease into India’s foremost human capital powerhouse, listed, profitable, and purpose-driven. Over the past 25 years, TeamLease has grown to revenues of over ₹11,000 crore, pan-India operations across 800+ locations, and a 4x growth in EBITDA since listing. They steered the company through multiple economic cycles, including the 2008 recession and the 2020–21 pandemic while expanding into new business verticals such as NETAP, Specialised staffing, HRTech, RegTech, and EdTech. Their vision has impacted millions of careers and shaped India’s labour market reforms. We look forward to their continued contributions in their new roles.”
முற்றிலுமாக வலுவிழந்தது ஆட்டம் காட்டி வந்த டிட்வா புயல்…வானிலை மையம் தகவல்!
சென்னை : வங்கக் கடலில் நவம்பர் 25 அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவான டிட்வா புயல், நவம்பர் 27 அன்று புயலாக வலுவடைந்து கரையைக் கடந்தது. இன்று முற்றிலும் வலுவிழந்து, வட தமிழ்நாட்டில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும், சென்னை உள்பட வட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. […]
பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் –துரித கெதியில் சீரமைப்பு பணிகள்!
பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள் பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த… The post பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள்! appeared first on Global Tamil News .
How Can Brands Ensure Relevance and Longevity? Keep Up with the Changing World
At some point, every brand faces two choices: evolve with time or watch the world move on without it. The difference between the two is rarely dramatic. Relevance doesn’t disappear overnight; it fades quietly as consumer expectations shift, habits evolve, and people start speaking a language the brand no longer understands. The most successful brands sense this drift early and act before they are pushed to. Reinvention, in that sense, is not an act of survival but of respect, a way of saying to consumers, we see how you’re changing, and we’re changing with you.Today’s consumers are restless, informed, and impossible to put into a single categorized bucket. They are guided as much by values as by price, seek transparency in every claim, and evaluate experiences in seconds. To them, moisturizer is no longer just about hydration but about ingredient integrity and sustainability. A piece of technology is not judged only for its function but for the philosophy it represents. This constant recalibration of desire and belief makes brand evolution less about design and more about empathy. To stay relevant, brands must mirror the way people live and think in the way they express and act.Rebranding in this context is often misunderstood as a visual exercise, a logo change, or a campaign refresh. In truth, it is a strategic reset, a realignment of promise, product, and purpose. It asks a brand to pause and ask: are we still speaking to the same human need? Are we solving it in a way that reflects today’s culture? And most importantly, do we still evoke trust?Brands that have navigated this journey well remind us that evolution must begin with honesty. In some cases, a company might face direct criticism about quality or relevance. Instead of defending old ways, the most successful brands choose transparency: they acknowledge what is broken, rebuild their product or experience from the ground up, and reintroduce themselves with clarity and purpose. In other cases, reinvention is cultural rather than operational.A heritage brand may redefine its creative lens to reflect the values of a new generation, embracing individuality, inclusivity, or sustainability in ways that resonate with shifting expectations. These shifts succeed because they do not start with a new typeface. They start with new thinking. Each brand finds a fresh way to express its essence, in a tone that matches its time.So, where does real change start for brands? The answer is simple: listening. Listen to what consumers show through actions, not just words. Notice where they spend time, how they express themselves, and what they ignore. If they value simplicity, declutter your design. If they seek sustainability, be transparent. If they crave connection, make your content conversational. Consumer shifts are subtle, but their impact is lasting.A timely redefinition signals vitality. It shows that a brand is awake, aware, and committed to progress. It builds trust because people see in your evolution the same adaptability they live by. Consumers often outgrow brands faster than expected. What once felt premium can soon feel dated. The brands that last are those that refresh the emotion, not just the look.There is also humility in evolution. It requires brands to let go of what worked and make space for what’s next. It asks leaders to trade certainty for curiosity and tradition for experimentation. It invites everyone involved, from designers to founders, to think less about protecting legacy and more about translating it. That act of translation is where the magic lies.Modern rebranding demands coherence. Promise, experience, and proof must move in sync. The promise defines what you stand for, the experience delivers it across every touchpoint, and the proof is what customers feel after engaging with you. When these fall out of alignment, even the most striking rebrand loses power.Evolving with the consumer is not a campaign but a philosophy. It means building flexibility into your core so that change becomes a steady rhythm, not a rare overhaul. The most admired brands don’t reinvent loudly; they evolve quietly, refining how they connect with people. For them, change is not disruption but dialogue.In a world that sees consumer behaviour evolve every few months, relevance is the new equity. To protect it, every brand must learn to listen deeply, act quickly, and communicate honestly. The goal is not to chase trends but to remain truthful in a time of change. Because when a brand evolves with its consumer, it stays loved.(Views are personal)
பகிடிவதை குற்றச்சாட்டு –யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19… The post பகிடிவதை குற்றச்சாட்டு – யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு appeared first on Global Tamil News .
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றிய வழக்கு: தமிழக அரசின் மனு மீது விசாரணை தொடக்கம்!
திருப்பங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றிய வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
பகிடிவதை குற்றச்சாட்டு –யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 10ம் திகதி வரை மன்று நீடித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் 19 பேர் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்றைய தினம் புதன்கிழமை வரை […]
Amrutanjan Healthcare named Official Health & Wellness Partner for Bigg Boss Kannada Season 12
New Delhi: Amrutanjan Healthcare Limited has announced its association with Bigg Boss Kannada Season 12 as the official Health & Wellness Partner.With a legacy spanning over 130 years, Amrutanjan has been an integral part of Indian households—supporting generations with its iconic pain relief and wellness solutions. Through this collaboration, the brand seamlessly blends its time-tested legacy with contemporary pop culture, reaffirming its relevance among both long-time users and today’s younger, fast-paced audiences.Inside the Bigg Boss Kannada house—known for its intense schedules, demanding tasks, and emotionally charged environment—wellness plays a crucial role. Amrutanjan’s Fast Relaxation Roll-on offers instant relief from headaches triggered by stress, fatigue, and harsh lighting, while the capsaicin-powered Backpain Roll-on helps contestants soothe muscle tension and back strain after physically challenging days. These everyday moments of relief reflect how Amrutanjan continues to support consumers through the pressures of modern living.Speaking about the association, Mani Bhagavatheeswaran, Chief Marketing Officer, Amrutanjan Healthcare Limited, said, “Amrutanjan has been a companion to millions through every ache, strain, and long day for more than a century. Partnering with Bigg Boss Kannada allows us to bring that same care into a space that mirrors modern life, fast-paced, emotional, and full of unexpected twists. Whether you’re a Gen Z viewer discovering the brand or someone who has grown up with it, this association is a reminder that Amrutanjan continues to care, comfort, and stay relevant in every generation’s journey.” As the season progresses, viewers will see contestants turn to Amrutanjan’s trusted wellness solutions through their daily highs and lows, reinforcing the brand’s role as a dependable companion in moments of discomfort. The partnership underscores Amrutanjan’s enduring mission: to offer relief, ease, and comfort across generations, no matter how lifestyles and challenges evolve.
திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் –கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் மீட்பு
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை , அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். திருநெல்வேலி சந்தைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கொட்டும் மழைக்குள் மத்தியில் வீதியில் இளைஞன் ஒருவரை ஓட ஓட வன்முறை கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்திருந்தது. குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் மறுநாள் திங்கட்கிழமை […]
திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் –கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் மீட்பு
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில்… The post திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் – கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் மீட்பு appeared first on Global Tamil News .
Pickyourtrail’s first ad campaign flips category conventions, with Early & Talented
Mumbai: Pickyourtrail has launched its first brand campaign with Early.Partners and Talented, and it’s not what you’d expect. Early’s consumer work in the category revealed that a rapidly growing segment of leisure travellers are turning away from typical standard packages and fixed itineraries. They want more control over their holiday experience but simply don’t have the time or the energy to do it themselves.Pickyourtrail says that this is where it excels. Using a tech+touch model, the company creates and executes fully customised holidays at scale - across consumer preferences and budgets. This offering in the travel category in turn inspired an unexpected and thoroughly enjoyable take on holiday planning.Early’s brief recommended that it was important to show the delight of Pickyourtrail’s customisation offering as well as its accessibility to a large audience. And here, Talented spotted an opportunity. The team hit upon the idea of ‘tailoring the holiday’ as a fun creative device to help audiences understand the core benefit. They partnered with Producer Bushra Shariff and DirectorShivang Monga, to bring alive the idea of customisation in the form of a ‘tailoring shop’ set in the visual world of travel with production prowess and attention to detail. Co-founder, CEO Pickyourtrail, Hari Ganpathy said, “This is a milestone moment for Pickyourtrail. India’s international holiday market is exploding, and travellers now want holidays that match their tastes and fit with their budgets. Our first-ever brand campaign celebrates exactly that: how customisation has helped us create sooper hit holidays for thousands of families and couples. After planning 1,50,000+ such holidays across every budget, and earning some of the best NPS scores in the industry, we felt it was the right time to share our story with the world.” Founder of Early and fractional CMO at Pickyourtrail, Meghana Bhat explains, “The very purpose of starting Early was to work with young brands and help them unlock the next stage of growth through marketing. With Pickyourtrail, we realised that the brand was already doing an amazing job of creating customised holidays and the world needed to know. Partnering closely with the brand to shape and bring this story alive through these films has been incredibly rewarding.” Brand Strategy at Talented, Angelina Kurian, and director Shivang Monga said, “We wanted Pickyourtrail’s first campaign to stand out against established players. So, bringing alive the concept of ‘tailor made holidays’ to show customisation, boasts the brand’s expertise. The challenge: turning that idea into small, memorable moments of discovery for the viewer. Props to our props team for the fabrics, measuring tapes, sewn ‘boarding passes’ and even a ‘trial room’ that could mirror the vacation you want! Playful staging and camera movements try to embody the dynamics around holiday planning in families. While legacy brands have big-budget sets & ambassadors, we were going for ‘I see what you did there!’ through art, character choices, and rich metaphorisation of a world unseen in the travel segment.” The ad films showcase ‘tailor made’ holidays for families and couples respectively to highlight the customisation that Pickyourtrail does so well. Both ads arrive in time for those planning winter and summer holidays from December to April, and will be seen across digital touchpoints as well as CTV. This campaign marks the first collaboration between two companies within the Talented Grid.Couple film:https://youtu.be/lXEnTEPPcYM?si=K1cRv3-6LWP75VF_Family film:https://youtu.be/2yLNbe2BMc8?si=3UugyDTZ5tVOgDpK
IND vs SA 2nd ODI: ‘சுயநலமாக விளையாடிய ஸ்டார் வீரரை’.. தடை செய்ய பிசிசிஐ முடிவு? காரணம் இதுதான்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் சுய நலமாக விளையாடியதாக, பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருக்கிறது. தோல்விக்கு இதுவும் முக்கிய காரணம் எனக் கருதப்படுகிறது.
பெரும் சோகம்! உடல்நலக்குறைவால் ஏவிஎம் சரவணன் காலமானார்!
சென்னை :தமிழ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் மிகப் பழமையானதும், மிகப் பிரபலமானதுமான ஏவிஎம் ஸ்டுடியோவின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் (86) இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். நேற்று (டிசம்பர் 3) தனது 85-வது பிறந்த நாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்த செய்தி திரைத்துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1945-ல் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய ஏவிஎம் நிறுவனத்தை, அவரது மகன் எம். சரவணன் 1970-களில் இருந்து […]
வெதர்மேன் கனமழை அப்டேட்… உள் மாவட்டங்கள் டூ சென்னை; U-டர்ன் அடிக்கும் கீழைக்காற்று!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை இன்று சற்றே ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில் டெல்டா வெதர்மேன் பகிர்ந்துள்ள தகவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன.
நாகாலாந்து: 'வெட்டுக்கிளி, பட்டுப்புழு, பூனை' - திகைத்த சுற்றுலாப் பயணி; வைரலான உணவுப் பட்டியல்
நாகாலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் வருடாந்திர ஹார்ன்பில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழா இப்போது தொடங்கி நடந்து வருகிறது. விழாவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்கும். சுற்றுலாப் பயணிகளைக் கவர விழாவில் நாகாலாந்து பாரம்பர்ய உணவு வகைகள் இடம் பெற்று இருந்தன. அதோடு நாகாலாந்து மக்களின் பாரம்பர்ய நடன நிகழ்ச்சிகள் விழாவில் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. இத்திருவிழாவில் இடம் பெற்றுள்ள உணவு வகைகளில் பெரும்பாலானவற்றை வட கிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநில மக்கள் சாப்பிடுவது கிடையாது. உணவுப் பட்டியல் நாகாலாந்து விழாவில் இடம்பெற்றிருந்த உணவு பட்டியலை வெளிநாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உணவகத்தின் உணவுப் பட்டியலை மேலிருந்து பார்த்தபோது பெரிதாக எந்தவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. அப்படியே பட்டியலில் கீழே வந்தபோது அதில் இடம் பெற்று இருந்த பட்டுப்புழு லார்வாக்கள், நத்தைகள், வெட்டுக்கிளிகள், சிலந்திகள், முள்ளம்பன்றியின் தோல் மற்றும் இறுதியாக, பூனை இறைச்சி போன்றவை ஆச்சரியப்பட வைத்தன. அதனைப் பார்த்து எப்போதுமில்லாத அளவுக்குச் சிரித்தேன். என் வாழ்நாளில் நான் இதுவரை கண்டிராத வினோதமான உணவு வகைகள் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பதிவு வெளியானவுடன் நெட்டிசன்களும் ஆச்சரியத்துடன் தங்களது பதிவுகளை வெளியிட்டு இருந்தனர். பட்டுப்புழுக்கள், வெட்டுக்கிளிகள் மற்றும் சிலந்திகள் போன்ற பூச்சிகள் கூட வடகிழக்கு மாநிலங்களில் சுவையான உணவுகளாகக் கருதப்படுகின்றன. வடகிழக்கு மாநில பழங்குடியின மக்கள் பாரம்பர்யமாக இது போன்ற உணவுகளைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். Naga Human Skull: ஏலத்துக்கு வந்த 19ம் நூற்றாண்டு மண்டை ஓடு; பதறிய நாகாலாந்து முதல்வர்; என்ன காரணம்?
MUMBAI: Co-founder Nick Jonas, board member Priyanka Chopra Jonas and Beyond Type 1 today launch #TheBeyondType in India. Nick Jonas, who was diagnosed with type 1 diabetes when he was 13 years old, co-founded the diabetes non-profit Beyond Type 1 10 years ago. #TheBeyondType is their first campaign in India. The campaign lifts up real lived experiences to challenge stigma and show that diabetes does not define those living with type 1 diabetes. It aims to raise awareness, reduce stigma and support grassroots organisations doing critical work on the ground.India has more young people living with type 1 diabetes (T1D) than anywhere in the world, and the second highest number of people living with diabetes overall . Yet awareness remains low and stigma persist.The Beyond Type highlights incredible everyday people who are thriving with type 1 diabetes and following their dreams. They are the unstoppable type, the determined type, the relentless type, the inspiring type - they show that type 1 diabetes does not define you. “India has extraordinary people living with Type 1 diabetes, yet their stories are rarely heard. I came to understand this community more deeply through my husband Nick, and I’ve witnessed firsthand the strength and determination that so many people living with T1D carry every single day. The Beyond Type brings a few of these stories forward, and shows that with proper care and access, diabetes does not define them or limit what they can achieve,” said Priyanka Chopra Jonas “I know for myself how diabetes doesn’t have to limit you, but only when you have access to the right care, tools, and support. That’s why we’re here in India, where awareness is low and stigma remains high, to help make that possible for everyone. Through my own family, I’ve come to love India deeply, and I’m proud of the progress already underway,” said Nick Jonas. #TheBeyondType launched on Instagram in a joint post from Priyanka Chopra Jonas, Nick Jonas and Beyond Type 1 who collectively have a combined reach of 135 million. The campaigncaptures individuals whose stories show that diabetes does not stop them from doing what they want to do: a triathlete Lt Col Kumar Gaurav; 13-year-old karate champion Mehrin Rana; pastry chef Nishant Amin; toy designer and entrepreneur Shreya Jain; dancer and actor Indu Thampy; and vegetable vendor and marathon runner Harichandran Ponnusamy. As Mehrin shares, “ Diabetes is just a part of my life, not a limit. A person with type 1 can do everything in their life without any limits.” Type 1 diabetes is an autoimmune condition, not something caused by lifestyle or age. Yet stigma keeps many families from recognising the early signs — excessive thirst, frequent urination, unusual fatigue and unexpected weight loss. When these signals are missed, diagnosis is delayed. By sharing real-life inspiring stories through #TheBeyondType, the campaign begins to break stigma and open the door to earlier awareness and understanding.A recent study published in PLOS Global Public Health, Invisible Inequities in Type 1 Diabetes Care in India , reinforces the urgency of this work. Conducted in Karnataka with a small group, it found that many young people with T1D hide their diagnosis, some avoid or delay insulin injections in public to escape judgement, and families, especially girls, are pressured to stay silent due to marriage concerns. Healthcare providers reported that young people with T1D are frequently viewed as weak or treated differently in school and at work, showing how stigma shapes daily life and access to care.The same commitment to lived experience that anchors #TheBeyondType also drives Beyond Type 1’s support for grassroots organisations working across high-need regions in India: HRIDAY (Delhi–NCR): A youth-driven public health organisation strengthening school and community awareness about early signs and prevention. Nityaasha Foundation (Pune, Maharashtra): Supporting children from underserved backgrounds living with T1D through education, guidance and medical assistance. Gram Jyoti (Deoghar, Jharkhand): Bringing early health awareness into classrooms to help families better understand chronic conditions. SAMATVAM Trust (Bangalore, Karnataka): Empowering girls with T1D through medical care, financial support and life skills training, helping them stay in school and build independent futures. “At Beyond Type 1 we believe real change begins with the people closest to the work on the ground. By partnering with grassroots organisations, we are helping families recognise early signs, reduce shame and misinformation, and access education, supplies and peer support,” said Seema Srivastava, Beyond Type 1’s Director of Social Impact and Global Advocacy. https://www.youtube.com/watch?v=xvcCZ9IysA0
உங்களுக்கு வலிக்குதுல, அப்ப எனக்கு வலிக்காதா?: பாரு, கம்முவுக்கு செம டோஸ்விட்ட பிக் பாஸ்
கம்ருதீன் மற்றும் அவரின் தோழியான வி.ஜே. பார்வதியை பிக் பாஸ் வெளுத்து வாங்கியதை பார்த்தவர்கள் நீங்கள் ஏன் அந்த இரண்டு பேரையும் சேர்த்தே இந்த வாரம் டபுள் எவிக்ஷன் செய்யக் கூடாது என்று கேட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் 27 மாகாணங்களுக்கு அதி தீவிர பனிப்புயல் எச்சரிக்கை
அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குளிர்காலத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பனிப்புயல்கள் தாக்கின. தற்போது 3-வது பனிப்புயல் உருவாகி இருக்கிறது. ஒரு அடி உயரத்திற்கு பனி இந்த புதிய பனிப்புயல் அதி தீவிர பனிப்புயலாக மாறி உள்ளது. இந்த அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொலராடோ மாகாணத்தின் ராக்கி […]
Haldiram’s Winter Menu takes traditional Indian dishes and creates a special menu to highlight them
MUMBAI: Haldiram's, an Indian food brand, has just introduced a new winter menu celebrating India's traditional winter recipes. They have taken traditional Indian dishes and created a special menu to highlight them. The winter menu features dishes such as Gajar ka halwa, Sarson ka saag, and Patta chaat (also known as Palak patta chaat), among many others, all crafted from authentic recipes and high-quality ingredients that capture the essence of wintertime. Haldiram’ s VP, Retail, Vikas Sisodia, said, Winter is a season for connecting with family, being cozy, and staying warm, and our new winter menu is designed to evoke memories of the good times people had growing up and the great foods they enjoyed during that time. Our new winter menu combines traditional Indian flavours with our customers' continuing trust in our quality and consistency. We hope to create even more memorable moments this winter by serving these beloved seasonal dishes. Haldiram’ s explains that it is committed to keeping families together and sharing the warmth of comfort food through their winter menu, which represents the same foods that have brought people together for ages. It is a combination of India's rich heritage and culinary craftsmanship, making these dishes so enjoyable and comforting. The winter menu is available now at all Haldiram’ s locations in India for dine-in, takeout, and delivery.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
Global Ad Spend to Cross $1 Trillion in 2026 as AI Ushers in an Algorithmic Era: Dentsu Forecast
Mumbai: Global advertising expenditure is set to cross the $1 trillion mark for the first time in 2026, driven by accelerating digital transformation, AI-powered media, and event-led spending, according to the latest Dentsu Global Ad Spend Forecasts. The report signals a defining shift toward what the agency calls the Algorithmic Era, where artificial intelligence and platform-driven automation increasingly determine consumer attention and brand visibility.Despite geopolitical tensions, trade disruptions, and economic uncertainty, global ad spend is projected to grow 5.1% in 2026, outpacing the 3.1% global GDP growth anticipated for the year. Major global events—including the Olympic Winter Games, FIFA World Cup, and US midterm elections—will inject significant momentum into media investment cycles. APAC and Americas Lead Growth as India, Brazil Surge Ahead Regionally, Asia-Pacific (APAC) remains the fastest-growing market with a projected 5.4% increase, fuelled by China’s digital expansion and India’s robust media marketplace. India is forecast to grow a striking 8.6%, led by retail media and short-form video, while China is expected to maintain a healthy 6.1% increase driven by lifestyle platforms and short-form video consumption.The Americas will reach $460.5 billion in spend (+5.2%), anchored by the United States’ sizeable digital ecosystem, strong CTV penetration, and heightened political advertising. Brazil emerges as the fastest-growing major market globally with an impressive 9.1% jump, powered by TV, search, and social media investment uplifted by electoral and sports-led spending.In EMEA, advertising is set to rise 4.2%, with the UK remaining Europe’s standout performer at 5.7% growth amid surging BVOD and digital channels. Italy and France are expected to benefit from global sports events hosted in the region. Digital Ad Spend Nears 70% Share as Retail Media Outpaces All Channels Digital media continues to dominate global advertising strategies, forecast to grow 6.7% in 2026 and capture 68.7% of global spend. The expansion aligns with an industry-wide pivot toward automation, data-led buying, and algorithmic optimization.Retail media is set to be the standout performer—growing 14.1% and on track to overtake paid search by 2028 as the world’s second-largest digital channel. Brands are increasingly drawn to retailers' high-quality shopper data and closed-loop measurement capabilities, a model that has made advertising Amazon’s fastest-growing business line.Online video (+11.5%) and social media (+11.4%) will see accelerated demand amid the global boom in short-form video engagement and influencer-driven commerce. With 49% of CMOs planning to increase influencer marketing spend, creators are becoming central to modern media planning.Paid search growth moderates to 3.1% as generative AI reshapes search behaviours. The report notes that AI-augmented search and LLM assistants may soon become the next major digital ad frontier, pushing brands toward Search Experience Optimization (SXO) as a new competitive discipline. CTV Expands as Broadcast TV Stabilizes Before Renewed Declines Television remains a key driver of collective cultural moments, but its internal dynamics are shifting. CTV is forecast to grow 9.5%, powered by ad-supported streaming tiers and integrated programmatic buying environments, including Amazon DSP’s expanded access to Disney, Netflix, and Roku inventory.Broadcast TV, after a 4.2% decline in 2025, is expected to temporarily stabilise at 0% growth in 2026 due to the Olympics and FIFA World Cup. However, structural pressures are expected to return, with the medium projected to decline again from 2027 onwards. OOH, Audio and Cinema Find Growth Through Digitization and Cultural Fandoms Beyond digital, several traditional channels are quietly reinventing themselves. OOH is forecast to grow 4.1%, led by 7.2% growth in digital OOH, which benefits from programmatic trading and data-driven contextual targeting. Audio advertising will see modest growth of 0.7%, though digital audio—which includes podcasts and streaming—will rise 5.5% as dynamic ad insertion becomes more sophisticated. Cinema, buoyed by the post-pandemic resurgence in moviegoing and the rise of video game–based franchises, is projected to grow 2.2% in 2026. Meanwhile, print continues its long-term decline (-3.0%), even as digital print formats gain incremental traction. AI and Agentic Workflows Become Central to Marketing Strategy A central theme of the Dentsu report is the industry’s accelerating adoption of agentic AI—autonomous, multi-step AI systems designed to streamline workflows, optimize performance, and personalize content at scale.With 71.6% of all ad spend expected to be algorithm-driven in 2026, CMOs are prioritizing: Understanding generative AI use cases Deploying AI agents for media and operational tasks Using AI for analytics and measurement Ensuring strong governance and human oversight Dentsu warns that unchecked proliferation of siloed AI agents could lead to operational inefficiencies, urging brands to adopt structured frameworks for AI deployment. Messaging Platforms: The Next Frontier for Media, Commerce and Service A major emerging opportunity highlighted is business messaging, especially in Western markets where platforms like WhatsApp are introducing new ad formats. As messaging apps evolve toward “super app” functionality, brands are expected to unify media, commerce, and customer service through conversational journeys that are more integrated and frictionless.From in-store QR-to-chat experiences to AI-enabled product finders, messaging is poised to become a central interface for consumer engagement in 2026 and beyond.Dentsu’s December 2025 forecast ultimately positions 2026 as a pivotal year where technology, data, and cultural attention collide to reshape the advertising economy. With total ad spend heading toward $1.15 trillion by 2028, the industry’s growth trajectory is increasingly tied to its ability to adopt AI, navigate platform ecosystems, and deliver relevance in an algorithmically mediated world.
Mumbai: Gaurav Gandhi, Vice President, APAC at Prime Video, was honoured as a “Visionary Shaping India’s Media & Entertainment Future” at the 2025 CII Big Picture Summit. The recognition was presented during the valedictory session by Rajan Navani, Co-Chair of the CII National Council on M&E and Managing Director & CEO of JetSynthesys, who also moderated a specially curated conversation with Gandhi.The honour acknowledges Gandhi’s influential leadership in expanding streaming access across the Asia Pacific region, pioneering consumer-first content strategies, and strengthening India’s position in the global entertainment landscape.During the session, Gandhi reflected on the principles that shaped his strategic approach to the industry. Highlighting the power of imagination in long-term decision-making, he said, “Every experience you go through, successful or not, shapes what you are going to do in the future. And if you learn from it, you get a sense of what the world could be. And I think oftentimes, to really change the world, you have to imagine what it could be and not just take it as it is.” He noted that this forward-looking mindset guided many of his foundational decisions when streaming was still emerging in India. Gandhi also emphasized the significance of cultural authenticity in content creation. “Stories have to connect locally first before they can travel globally. If something doesn’t move its local audience, it rarely becomes world-renowned. We don’t think about designing a story to be global; at Prime Video, we think about telling a truly great story - and when that connection is authentic, the world follows.” He added that this principle is already reflected in audience behaviour, with over 25% of viewership for Indian content on Prime Video now coming from outside India, demonstrating the global appeal of deeply local stories.Discussing the balance between intention and execution in building a differentiated content ecosystem, Gandhi said, “There are so many things that you can be intentional about, but it’s not just about the intention, it’s about carrying it through in the execution. You can actually think and imagine a world, but if you can’t execute it, then there’s a challenge as well.” He explained how this thinking shaped Prime Video’s early content strategy—developing variety across languages while ensuring stories could travel both within India and globally. “In the early years of Prime Video, we knew if we had to create a variety of content across each language to build a sustainable business model. So, the thesis was, how can you make that content travel, not just globally, but also within the country.” He pointed to intentional casting choices as game-changing decisions that helped build wider resonance. Collaborations such as Shahid Kapoor and Vijay Sethupathi in Farzi and Manoj Bajpayee and Samantha Ruth Prabhu in The Family Man Season 2 were deliberate moves to create truly pan-Indian appeal.On leadership, Gandhi underscored curiosity as the most important quality in today’s rapidly evolving media landscape. “Curiosity is the starting point of everything. It’s the number one trait I look for - because it means being humble enough to acknowledge what you don’t know, and driven enough to seek answers and ask ‘why?’ or ‘why not?’ The biggest leaders are the most curious - that’s how they imagine the world differently.” He further elaborated on his team-building philosophy: “I hire the best team and let them do their job. The best thing one can do as a leader, is to create more leaders. An important quality in leadership is knowing when to step in and support your team, and when to give them the space to experiment and do their own thing.” Gandhi closed the session with insights on personal growth and inspiration, noting, “I play this mental game with my leaders and my teams - I imagine taking the best qualities of each person and building them into myself. That’s how I grow. Inspiration doesn’t come from one leader; it comes from everyone.” The recognition at the Big Picture Summit reflects Gandhi’s role in shaping the future of India’s streaming ecosystem—bringing global best practices to local audiences while empowering local stories to reach global platforms.
BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் பார்வதி, கம்ருதீன்,fJ மூவருக்கும் சண்டை நடக்கிறது. மூணு நாள் தான் தூங்குனேன்'னு சொல்றீங்க, கேம்-ல அப்படி என்ன பண்ணிடீங்க. உன்னை மாதிரி நான் ஒண்ணும் பார்வதிக்கு சப்போர்ட் பண்ணிட்டு இல்ல என FJ கம்ருதீனிடம் சண்டைப் போடுகிறார். என்னை வச்சு சண்டைப் போடுறதுக்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது. நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு. நான் என்ன பண்ணனும்'னு எனக்கு தெரியும் என்று பார்வதி FJ-விடம் கோபப்பட்டு கத்துகிறார். BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா
ரஷ்ய அதிபர் புதின் வருகையையொட்டி டெல்லி ஹோட்டல்களில் கட்டணம் அதிரடியாக உயர்வு!
ரஷ்ய அதிபர் புதின் வருகையையொட்டி டெல்லியில் இருக்கக்கூடிய ஹோட்டல்களின் கட்டணம் அதிரடியாக உயர்ந்து உள்ளது.
Navneet Kumar Sehgal Steps Down as Prasar Bharati Chairman; Government Begins Succession Search
New Delhi: In a development that marks a significant change at India’s public service broadcaster, senior bureaucrat Navneet Kumar Sehgal has resigned as Chairman of Prasar Bharati, prompting the government to initiate the process of identifying his successor. The Ministry of Information and Broadcasting accepted his resignation on December 2 under Section 7(6) of the Prasar Bharati Act, 1990, relieving him from his responsibilities with immediate effect. A Brief but Pivotal Tenure Sehgal, who assumed the role in March 2024, had been leading several long-term organizational and strategic initiatives at Prasar Bharati. His early exit brings an abrupt close to what was expected to be a tenure focused on restructuring, modernization and strengthening the broadcaster’s governance framework. A Bureaucrat Known for High-Impact Execution A veteran of more than three decades in government service, Sehgal is regarded for his ability to deliver large-scale infrastructure and policy projects. As Chairman and CEO of the UP Expressway Industrial Development Authority, he oversaw the rapid construction of the 302-km Agra–Lucknow Expressway in a record 22 months — one of the state’s most ambitious infrastructure achievements.His administrative experience spans some of Uttar Pradesh’s most critical departments. As Principal Secretary for Tourism, MSME and other portfolios, he played a central role in high-visibility initiatives, including the launch and expansion of the One District One Product (ODOP) scheme. Strong Background in Media and Public Communication Sehgal also brings a long association with public communication and media management. During multiple stints as Information Secretary and Publicity Coordinator for the Uttar Pradesh government, he led campaigns promoting welfare programmes and handled strategic communication during politically sensitive phases. Leadership in Energy, Urban, and International Projects Before retiring from the IAS in July 2023, Sehgal served as Additional Chief Secretary in several key verticals. His tenure in the Energy Department involved steering projects in Ayodhya’s power infrastructure and contributing to new generation capacity, including a 2000 MW expansion.He additionally guided major urban development and mobility initiatives such as the Film City project and metro expansions, and facilitated international collaborations — including a JICA-backed water supply project for Agra and a World Bank-supported Buddhist tourism circuit. Next Steps for Prasar Bharati With Sehgal’s exit, the Centre is expected to soon begin formal consultations to appoint the next Chairperson. The leadership transition will come at a crucial time, as Prasar Bharati continues to navigate digital modernization, audience diversification, and public service broadcasting reforms.
செவ்வந்திக்கு உதவிய யாழ் நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்து தடுத்து வைத்து விசாரிக்கப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கனகராசா ஜீவராசா என்ற “யாழ்ப்பாண சுரேஷ்” மற்றும் அந்தோணிப் பிள்ளை ஆனந்தம் ஆகியோர் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் கைது சந்தேக நபர்கள் இருவரும் அக்டோபரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் மற்றும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் […]
தூத்துக்குடி, நெல்லை மொத்தம் 6 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்! வானிலை மையம் அலர்ட்!
சென்னை :தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 05-12-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06-12-2025 முதல் 09-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை […]
ஹரித்வாரில் தர்மேந்திராவின் அஸ்தி கரைப்பு - தவிர்த்த ஹேமாமாலினி; ஓரங்கட்டினார்களா மகன்கள்?
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக செய்யப்பட்டது. அவரது உடல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவில்லை. இறுதிச்சடங்கு முடிந்த பிறகு தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் குடும்பத்தினர் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தபோது அதில் ஹேமாமாலினி அல்லது அவரது மகள்கள் கலந்து கொள்ளவில்லை. ஹேமாமாலினி தனது வீட்டில் இதற்காக தனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தற்போது தர்மேந்திராவின் அஸ்தி ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தர்மேந்திராவின் மகன்கள் சன்னி தியோல், கரன் தியோல், பாபி தியோல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி மற்றும் அவரது இரண்டு மகள்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அஸ்தி கரைப்பை வீடியோ எடுக்க முயன்ற புகைப்படக்காரர்களுடன் சன்னி தியோல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு புகைப்பட கலைஞரிடம் கேமராவை பிடுங்கிய சன்னி தியோல், எவ்வளவு பணம் வேண்டும் சொல் தருகிறேன் என்று கோபத்தில் பேசினார். இதே போன்று தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்து வந்தபோதும், மும்பை வீட்டிற்கு வெளியில் ஏராளமான புகைப்பட கலைஞர்கள் கூடி நின்றனர். அவர்களிடம் சன்னி தியோல் கறாராக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தர்மேந்திராவின் இறுதிச்சடங்கு, அஸ்தி கரைப்பில் ஹேமாமாலினியும், அவரது மகள்களையும் தர்மேந்திராவின் குடும்பத்தினர் தவிர்த்தது இரு குடும்பத்திற்கிடையே பகை இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஹேமாமாலினியை திருமணம் செய்த பிறகு தனது முதல் மனைவியின் வீட்டிற்கு செல்வதை தர்மேந்திரா தவிர்த்தார். ஆனால் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தர்மேந்திரா தனது முதல் மனைவியின் இல்லத்திற்கு சென்றார். தர்மேந்திராவிற்கு புனே அருகில் 100 ஏக்கரில் பண்ணை வீடு இருக்கிறது. இனி இந்த சொத்துக்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக குடும்பத்தினரிடையே மோதல் ஏற்படலாம் என்கிறார்கள் இரு குடும்பத்துக்கும் நெருக்கமான சிலர்.
``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?
முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைவர்களின் கருத்தை பார்க்கலாம். திருப்பரங்குன்றம் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்: உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோத திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். காலங்காலமாக கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்றப்பட்டு வந்த, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால், கோவில் மரபுகளை காக்க வேண்டிய, திருவிழாக்களை முறைப்படி நடத்த வேண்டிய கோவில் நிர்வாகமே, தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. அதை ஏற்காத உயர்நீதிமன்றம், தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனாலும், தீபம் ஏற்ற கோவில் நிர்வாகமும், மாநில அரசின் இந்து சமய அறநிலைத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வானதி சீனிவாசன் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் உதவியுடன் தீபம் ஏற்ற மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. அப்படி சென்ற மனுதாரர்களையும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரையும் தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு இல்லாமல் காவல்துறை இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எதற்கெடுத்தாலும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று முழங்குகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஆனால் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்திருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் திமுக அரசின் காவல்துறை நடத்திய பேயாட்டத்தின் மூலம், திமுக அரசு இந்து விரோத அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளுக்காக பெரும்பான்மையின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி உள்ளது. இந்துக்கள் மதத்தின் அடிப்படையில் வாக்களிக்க மாட்டார்கள். திருப்பரங்குன்றம் மற்ற மதத்தினர் மதத்தின் அடிப்படையில் வாக்களிப்பார்கள். எனவே, அவர்களின் மனம் நோகக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்துக்களை, இந்து கடவுள்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவமதித்துள்ளார். நடப்பவை எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தகவல் தொழில்நுட்ப யுகம். களத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் நன்கு அறிவார்கள். இந்து விரோத திமுக அரசுக்கு உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை: திருப்பரங்குன்றத்தில் அமைதியாக நடந்திருக்க வேண்டிய.. கார்த்திகை தீப விழா... தன்னுடைய சுயநலத்திற்காக கூட்டணி கட்சி வெங்கடேசன் சொன்னதைப் போலவே கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்துக்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட இவ்வளவு போராட வேண்டி இருக்கிறது. கம்யூனிஸ்டுகளை திருப்தி படுத்த காவலர்களை ஏவி விட்டு பாஜக மற்றும் இந்து முன்னணி சகோதர சகோதரிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாது இந்துக்களின் எழுச்சி திமுகவின் வீழ்ச்சியாக அமையும். நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்கு சாதகமாய் இருந்தால் அது ஒப்புக் கொள்வதும் தங்களுக்கு சாதகம் இல்லை என்றால் நீதித்துறையே கேள்வி கேட்பதும், திமுகவின் கட்டுக்கடங்காத இந்து எதிர்ப்பின் வெளிப்பாடு. தமிழிசை சௌந்தராராஜன் வேறு எந்த மாநிலத்திலும் இந்துக்கள் இந்த அளவிற்கு போராட வேண்டி இல்லை. திமுக இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் 2026 -ல். திருப்பரங்குன்றம் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் திருப்பத்தை ஏற்படுத்தும். இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாத வேற்றுமையை விதைத்துக் கொண்டிருப்பது INDI கூட்டணி தான். இந்துக்களின் உரிமையை பறிப்பதை அரசாங்கம் சரியாக செயலாற்றுகிறது என்று பாராட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளை கூட வைத்திருப்பதற்கு திமுக மிகப்பெரிய விலையை 2026-ல் கொடுக்க வேண்டி இருக்கும். முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை: சனாதன தர்மத்திற்கான DMK அரசின் விரோதம் ஒரு விளக்கத்தின் விஷயம் இல்லை; அது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்து பக்தர்களுக்காக சேவை செய்ய வேண்டிய இந்து மத & தன்னாட்சி அறக்கட்டளை துறை (HR&CE), திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்றத் தடை செய்த நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மேல் முறையீடு செய்துள்ளது. இது நம் மக்களின் விசுவாசத்தின் இதயத்தையே தாக்கும் செயல். அண்ணாமலை இன்று நூற்றுக்கணக்கான போலீசாரை அனுப்பி, பக்தர்கள் மத சார்ந்த வழிபாட்டைச் செய்ய உடல் ரீதியாகத் தடுக்கச் செய்ததன் மூலம், DMK ஆட்சியின் முழுமையான தனியுரிமை அரசியலும், சமாதானப்படுத்தும் (appeasement) போக்கும் வெளிப்படையாகியுள்ளது. சனாதன தர்மத்தை மீண்டும் மீண்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது? இந்த அரசுக்கு நீதிமன்ற உத்தரவுகள் மீது எந்த மதிப்பும் இல்லையா? புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றானது திருப்பரங்குன்றம். அதன் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றிட அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டார். வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உட்பட 10 பேர் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தத் தீர்ப்பு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாதகமான தீர்ப்பு என்றே கருத வேண்டும். எனவே, இதில் கோயிலுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கியவுடன், அரசுக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தபட்சத்தில், உடனடியாக அன்றே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம். டாக்டர் கிருஷ்ணசாமி அதை விடுத்து கோயில் நிர்வாக அதிகாரியை வைத்து முறையீடு செய்ததும், நீதிமன்ற விசாரணையின்போது அவர் பின்வாங்கியதும் புதிராக உள்ளது. மேலும் மேல்முறையீடு செய்வதென்றால் அங்குள்ள தர்கா நிர்வாகம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் எதிர்ப்பைத் தெரிவிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று தீபத்தூணில் தீபம் ஏற்றி இருந்தால் பிரச்னை பெரிதாக எதுவும் எழுந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கம் போல மோட்சத் தூணில் மட்டும் ஏற்றியது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும். தமிழ் கடவுள்களில் முதல் கடவுளாகக் கருதப்படும் பிரசித்தி பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு அணுகி, 144 தடை உத்தரவு விதித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றத் தடை செய்து பிரச்னையைப் பெரிதாக்கியது ஏற்புடையதல்ல! கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்னையில் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பளித்திருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். மேலும், நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பில் பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் தற்போது அவரைச் சிலர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அரசு அதை வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்திற்குரியது. திருப்பரங்குன்றம்: அடுத்தடுத்து வந்த நீதிமன்ற உத்தரவு; தள்ளுமுள்ளு, 144 தடை! - இதுவரை நடந்தது என்ன?
Gold Rate: 'குறைந்த'தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1குறைந்துள்ளது. ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது? தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,020 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.96,160 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.200 ஆக விற்பனை ஆகி வருகிறது. ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்
At Kärcher, customer centricity sits at the helm of everything we do: Ayesha Prasad
Since 1935, Krcher has led the evolution of mechanised cleaning — transforming what was once manual, laborious work into an effortless, high-performance experience. The brand has been doing a range of marketing initiatives this year. For instance on Halloween, the brand took a bold creative detour with its campaign, “When Outdated Tech Comes Back to Haunt,” dramatising the difference between outdated technology and Krcher’s cutting-edge machines.Meanwhile ‘Thank Your Cleaner Day’ is a global initiative of Krcher dedicated to recognising the invaluable contribution of cleaning professionals whos’ work keep our environments clean, safe, and hygienic. The initiative was first launched in 2015 in New Zealand and since then has grown into an international movement encouraging individuals and organisations to express gratitude to their cleaning staff — whether through a note, a small gesture, or a simple “thank you.”In India, Krcher had joined hands with cleaning professionals nationwide to celebrate ‘Thank Your Cleaner Day’. The day served as a reminder of the crucial role cleaners play in maintaining hygiene and dignity in every space — from offices and schools to public areas and institutions. Medianews4u.com caught up with Ayesha Prasad, AGM – Marketing, Krcher India Q. In an intensely competitive market, what is Krcher India’s USP? At Krcher, customer centricity sits at the helm of everything we do. Our differentiation stems from how we marry deep consumer insight with our 90-year legacy of quality and innovation. Across professional and consumer categories, our machines are designed not just to perform, but to solve real cleaning problems with precision and sustainability.With over 700 active patents, Krcher continues to lead the global conversation on mechanised cleaning. From preserving heritage monuments to redefining household cleaning, we are a brand built on trust, agility, and purpose. Our customers are our most vocal advocates — their loyalty and endorsement reinforce that Krcher doesn’t just clean better; it creates measurable value in every clean. Q. Post-COVID, consumers have become far more aware of hygiene and cleanliness. What opportunities does this present for Krcher India’s growth in 2026? What goals have been set in areas such as market share and share of voice in marketing? The post-pandemic era has shifted cleanliness from being a functional need to becoming a symbol of self-care and wellness. For Krcher, this marks a pivotal opportunity to deepen not just market penetration, but share of heart, mind, and wallet.Our focus in 2026 is to continue elevating the conversation — from selling products to building advocacy around intelligent, sustainable cleaning habits. We’re investing in awareness, visibility, and education to ensure Krcher remains top-of-mind as India’s most trusted and aspirational cleaning solutions brand. Q. As we head into 2026, will Krcher India continue to focus on disrupting the conventional cleaning narrative? Kindly elaborate. Yes — our mission has always been to drive a subliminal change in how India perceives cleaning. We believe the true meaning of clean is to mitigate dirt at the point of dirt. Traditional manual cleaning methods, though common, often do the opposite — merely spreading dirt across surfaces rather than eliminating it.As we move forward, robotics will be a game-changer, enabling precision cleaning with minimal human intervention. Our brand narratives will continue to break the stigma of cleaning being a chore and instead, educate the masses on the empowerment, dignity, and value that modern cleaning provides. Q. How does Krcher India leverage data-driven insights to tailor its integrated marketing strategy? Our marketing approach is both data-anchored and insight-led. Every campaign undergoes structured reviews and performance checks to ensure it works in our favour — strategically, creatively, and commercially.We’re also investing in hyperlocalisation, right down to the smallest details — making our content more culturally relevant and vernacular. Whether it’s language, tone, or visual cues, our goal is to speak the consumer’s language, literally and emotionally. This intersection of analytics and empathy is what keeps Krcher’s marketing both intelligent and relatable. Q. In synchronising online and offline marketing efforts in 2025, what was the biggest challenge? The primary challenge was ensuring message consistency across channels with very different consumer behaviours. Online, decisions are data-driven and impulsive; offline, they are experiential and trust-based.We had to create a single brand narrative that works fluidly across both — from a social post to a store floor demo. Through coordinated campaigns, CRM integration, and strong retail storytelling, we’re now achieving that much-desired seamless brand experience. Q. What was the media mix in 2025 between traditional and digital media, and is any change expected in 2026? In 2025, our media mix stood at 60% digital and 40% traditional. Digital has been the growth engine — especially through retail media, influencer ecosystems, and performance campaigns — while traditional media continues to lend credibility and mass awareness.In 2026, we expect this balance to remain, with even tighter integration across channels. The idea is not about digital versus traditional; it’s about ensuring every medium builds one unified Krcher experience. Q. From a marketing perspective, will striking a balance between performance marketing and brand building be the biggest challenge in 2026? We view it as an hourglass model — Inspire, Engage, Transact. The “Inspire” phase builds the brand and fuels aspiration; “Engage” happens at the customer’s moment of truth, where we drive relevance; and “Transact” is where stringent ROI and performance metrics come into play.It’s not about balance — it’s about building flow between the upper and lower funnel. When inspiration leads to engagement and engagement converts into action, marketing achieves both purpose and performance. Q. Could you share insights into the brainstorming process with the creative agency that led to the Halloween campaign’s avant-garde creative expression? Moonlight falls on an abandoned scrapyard. Cheap garden tools come to life and wander through the night like the undead — what sounds like a classic horror film is actually the creative start to our new ‘BUILT FOR LIFE’ campaign. Timed perfectly for Halloween, the so-called Halloween Edit showcases what our global and India marketing teams have been crafting for months.The narrative is simple yet powerful: zombie products represent disposable, inferior items, while Krcher stands as their antithesis — built to last, engineered for life. The teaser introduces our new Comfort Range of high-pressure cleaners and Control Range of wet/dry vacuums through genuine film craftsmanship and practical puppeteering — no CGI shortcuts.It’s an emotionally intelligent campaign that fuses film artistry with brand philosophy, rolled out as a 360 global campaign across POS, social, and television. Through BUILT FOR LIFE, we’ve turned durability into an emotional story — a testament that true quality doesn’t just survive; it endures. Q. What further marketing innovations can we expect from Krcher India in the coming months? You’ll see a sharper focus on localisation across creative, communication, and channel strategy. We’re expanding our footprint through regional influencer programmes, vernacular content, and micro-community activations.At the same time, AI-driven personalisation, immersive experiences, and retail tech integrations will ensure every Krcher interaction — online or offline — feels intuitive and human. Our goal is to make the brand more accessible while staying authentically premium. Q. Is marketing a year-round effort, or are certain periods more significant for Krcher India? Marketing for Krcher has to be a sustained, year-round effort, supported by targeted bursts aligned with seasonality and purchase cycles across different markets.A lot of emphasis is placed on customer cohorts — understanding their triggers, occasions, and motivations — and then communicating the breadth of Krcher’s applications that fit their lifestyle. Whether it’s summer, festive season, or monsoon, we’re not just driving sales; we’re building awareness of how and where Krcher solutions can transform everyday cleaning.
திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் - கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் மீட்பு
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை , அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். திருநெல்வேலி சந்தைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கொட்டும் மழைக்குள் மத்தியில் வீதியில் இளைஞன் ஒருவரை ஓட ஓட வன்முறை கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்திருந்தது. குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் மறுநாள் திங்கட்கிழமை இளைஞனை வெட்டியா நால்வரில் இருவர் உள்ளிட்ட 06 பேரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட 06 பேரையும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் , மேலும் சில சான்று பொருட்களை மீட்கவும் , சந்தேகநபர்களை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு மன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர். பொலிசாரின் விண்ணப்பத்தை அடுத்து , சந்தேகநபர்களை 24 மணி நேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதித்தது. அதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரணையின் போது, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் போது, எவரேனும் பின் தொடர்ந்தால் , அவர்களிடம் இருந்து கொலையாளிகளை காப்பாற்றும் நோக்குடன் , கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தவாறு கொலையாளிகளை பின் தொடர்ந்த கார் தொடர்பில் பொலிஸார் கண்டறிந்து , குறித்த காரினை மீட்டுள்ளனர். இந்நிலையில், பொலிஸாருக்கு நீதிமன்று அனுமதித்த 24 மணிநேரம் நேற்றைய தினம் புதன்கிழமையுடன் நிறைவுற்றதால் , நேற்றைய தினம் சந்தேகநபர்கள் 06 பேரையும் மீண்டும் மன்றில் முற்படுத்திய வேளை 06 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது. அதேவேளை , இளைஞனை கொலை செய்த நால்வரில் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , ஏனைய இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவர்களை கைது செய்வதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , கொலையாளிகள் தப்பி செல்ல பாதுகாப்பு அளித்து சென்ற காரினை மீட்டுள்ள நிலையில் , காரில் பயணித்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் - துரித கெதியில் சீரமைப்பு பணிகள்
பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் அபிராமி வித்யாபரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் பார்வையிட்ட வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாகத் மீட்டெடுக்கும் வகையில் சேதமடைந்த வீதிகளைத் தற்காலிகமாகவேனும் உடனடியாகச் சீரமைக்குமாறு விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இந்தத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய, அரச திணைக்களங்கள், இராணுவம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் பின்வரும் வீதிகள் மிகக் குறுகிய காலத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன: கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பண்ணை வீதி 40 மீற்றர் திருத்தப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை – கேப்பாப்பிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் 25 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பூவரசன்குளம் - செட்டிக்குளம் வீதி 50 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. மாந்தைமேற்கில் மாந்தை பரப்புக்கடந்தான் வீதி 5 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. கட்டாடுவயல் - இராமயன்குளம் வீதி 500 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. மகிழங்குளம் - பள்ளமடு வீதி 40 மீற்றர் திருத்தப்பட்டு வருகின்றது. மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பேரிடரால் நேற்று திடீரென சேதமடைந்த கற்சிலைமடு பேராறுப்பாலம், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் உடனடியாகத் திருத்தியமைக்கப்பட்டுப் பொதுமக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான ஏனைய வீதிகளிலும் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீர்செய்யும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யத் திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் மல்டிபேக்கர் பங்கு.. ஒரே ஆண்டில் 900 சதவீத வளர்ச்சி!
இந்த மல்டிபேக்கர் பங்கு தனது முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. ஒரே ஆண்டில் 900 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ள பங்கு.
பாத்ரூமில் ஐஏஎஸ் அதிகாரி மகள் கிடந்த கொடுமை – 10 மாதத்தில் கசந்த காதல்
ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை செய்துள்ளார். வரதட்சணை கொடுமை ஆந்திரா, ஐஏஎஸ் அதிகாரியின் 25 வயது மகள், மாதூரி சாஹிதிபாய், தனது பெற்றோர் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். மங்களகிரி டி.எஸ்.பி. முரளி கிருஷ்ணா அளித்த தகவலின்படி, வரதட்சணைக் கொடுமை குறித்து புகார் அளித்திருந்த நிலையில், அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சாஹிதிபாய் கடந்த மார்ச் 5ஆம் தேதி நந்தியாலா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் நாயுடு என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். திருமணம் ஆன சில மாதங்களில், அவர் வரதட்சணை […]
பகிடிவதை குற்றச்சாட்டு - யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 10ம் திகதி வரை மன்று நீடித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் 19 பேர் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்றைய தினம் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நேற்றைய மீண்டும் மாணவர்களை மன்றில் முற்படுத்திய வேளை, 19 பேரையும் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
AVM: `குடும்பப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்' - ஏவிஎம் சரவணன் காலமானார்
ஏ.வி.எம் சரவணன் காலமானார் ஏ.வி.எம் சரவணன் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி மெய்யப்ப செட்டியரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஏராளமான படகளை தயாரித்துள்ளது. ஏ.வி மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்தக் கட்ட வளர்ச்சியை எட்டியது. ஏ.வி.எம் நிறுவனத்தின் படங்கள் என்றால் நம்பி திரையரங்கிற்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கியவர் சரவணன். அதேபோல் தமிழ் சினிமாவில் குறைந்து வரும் குடும்ப படங்களுக்கும், அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். 2014-ம் ஆண்டுக்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமாகி விட்டார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3-வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை'காரணமா?
இனி உற்பத்தியாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் 'சஞ்சார் சாத்தி' ஆப்பை ப்ரீ-இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் - இது சமீபத்தில் வெளியான மத்திய அரசின் உத்தரவு. ஏற்கெனவே உற்பத்தியான... விற்கப்பட்ட மொபைல் போன்களில் கூட, இந்த ஆப்பை சாப்ட்வேர் அப்டேட் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. எதிர்ப்பு சஞ்சார் சாத்தி என்பது மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு ஆப் ஆகும். இந்தக் கட்டாய உத்தரவிற்கு, 'தனிநபர் உரிமை மீறல்' என்று எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். சஞ்சார் சாத்தி|Sanchar Saathi Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் உத்தரவை திரும்ப பெற்ற மத்திய அரசு இதனையடுத்து, தற்போது மத்திய அரசு தங்களது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்த அறிக்கையில், இந்திய குடிமக்களுக்கு சைபர் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் சஞ்சார் சாத்தி ஆப்பை அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் ப்ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கட்டாய உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த ஆப் பாதுகாப்பானது மற்றும் இது சைபர் உலகில் மோசடி பேர்வழிகளிடம் இருந்து குடிமக்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உத்தரவு ஆகும். பயனாளர்களை சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பதை தவிர, இந்த ஆப்பில் வேறு ஒன்றும் இல்லை. 'இந்த ஆப் வேண்டாம்' என்கிற போது, மக்களே இந்த ஆப்பை டெலீட் செய்துகொள்ளலாம். இதை அரசாங்கம் தெளிவாக தெரிவித்துவிட்டது. ஸ்மார்ட் போன் Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது? மக்களுக்கு நம்பிக்கை இதுவரை இந்த ஆப்பை 1.4 கோடி பயனாளர்கள் டௌன்லோடு செய்திருக்கிறார்கள். இந்த ஆப்பை மக்கள் இன்ஸ்டால் செய்வது அதிகமாக இருந்தது. இந்த நடைமுறையை இன்னமும் வேகமாக்க தான் மத்திய அரசு இந்த உத்தரவை கொண்டு வந்தது. மேலும், இந்த ஆப் குறித்து தெரியாத மக்களுக்கும் அதை தெரியப்படுத்துவதும் உத்தரவின் நோக்கமாகும். கடந்த ஒரு நாளில், 6 லட்சம் மக்கள் இந்த ஆப்பை டௌன்லோடு செய்திருக்கின்றனர். இது 10X அதிகமாகும். இது மக்களுக்கு அந்த ஆப்பின் மீது இருக்கும் நம்பிக்கையை உறுதி செய்கிறது. சஞ்சார் சாத்தி ஆப் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை முன்னிட்டு, ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ப்ரீ இன்ஸ்டால் உத்தரவு கைவிடப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. Government lifts mandatory pre-installation of Sanchar Saathi App Refer to press release for details: https://t.co/n3iqBdZzXZ #DoT #Telecommunications #CyberSecurity #DoTForDigitalSafety #SancharSaathi @JM_Scindia @PemmasaniOnX @neerajmittalias @USOF_India @pib_comm @PIB_India … pic.twitter.com/KqVmjO1fF5 — DoT India (@DoT_India) December 3, 2025 ``நீ ஒரு தீவிரவாதி'' - சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது?
அவசரகாலத்தில் வதந்தியை பரப்பினால் 5 வருடங்களுக்கு சிறை தண்டனை
அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில், சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பதிவிடப்பட்டமைத் தொடர்பில் அதுவரை 57 முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவசரகால நிலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஜனாதிபதியால் அவசரகால நிலை பிரப்பிகடகப்பட்டுள்ள, இந்த சந்தரப்பத்ததில் சமூக […]
Doctor Vikatan: சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி சாப்பிட்டால், இருமல், சளி சரியாகுமா?
Doctor Vikatan: சளி, இருமல் இருக்கும்போது சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே குணமாகும் என்பது எந்த அளவுக்கு உண்மை. அந்த உணவுகள் மட்டுமே போதுமா? பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ராஜம். அரசு சித்த மருத்துவர் ராஜம் சிக்கன் கறி, சிக்கன் குருமா, சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் என்று இன்று பெரும்பாலோரின் பிடித்தமான, மிகவும் பிரியமான உணவாக விளங்குவது சிக்கன். பலரும் பல விதங்களில், பலவிதமான செய்முறைகளில் தங்களது விருப்ப உணவாக இதைச் சாப்பிடுகிறார்கள். உணவாகப் பயன்படும் சிக்கனை, மருந்தாகவும் பயன்படுத்தலாம். தாது, தாவர, ஜீவப் பொருள்களை மருந்துகளாகவும் தன்னுள் உள்ளடக்கியதுதான் சித்த மருத்துவம். அந்த வகையில் உடும்பு, நத்தை, ஆமை, கோழி, ஓணான் எனப் பல்வேறு உயிரினங்களும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. குக்குடம், குருகு, காலாயுதம், வாரணம், ஆண்டலைப்புள் என்று பல பெயர்களில் வழங்கப்படும் கோழியும் மருத்துவப் பயன்களை உடையது தான். கோழிக்கறி, கோழி முட்டை, முட்டை ஓடு என அனைத்துமே மருத்துவ குணங்களை உடையவை. கருங்கோழி, கானாங்கோழி, வான்கோழி, சம்பங்கோழி என 4 வகைகளாகக் கோழிகள் வகைப்படுத்தப்படுகின்றன. செட்டிநாடு சிக்கன் பிரியாணி எந்த டயட், நல்ல டயட்... பிஸ்கட் முதல் பிரியாணி வரை... சந்தேகங்கள்... நிபுணர்களின் விளக்கங்கள்! கோழிக்கறியினால் சுவாசம் அதாவது கபம் (சளி, இருமல்) நீங்கும். கருங்கோழிக் கறியினால் உடலுக்கு வன்மை கிடைக்கும். கருங்கோழி சூரணத்தினாலும் சளி, இருமல் தீரும். கானாங்கோழிக்கறியும் கப நோய்களைப் போக்கும். இவ்வாறெல்லாம் சித்த மருத்துவத்தில் சளி, இருமலைப் போக்கும் மருந்தாகக் கோழிக்கறி கூறப்பட்டுள்ளது. கோழிக்கறி மட்டுமல்ல, கோழி, அதன் முட்டை இவற்றைக் கொண்டு, அண்டத் தைலம், சிற்றண்ட மெழுகு, அண்ட எருக்கஞ் செய்நீர், கருங்கோழிச் சூரணம் போன்ற மருத்துவப் பலன்களை உடைய பல செய்மருந்துகள் செய்யப்படுகின்றன. எனவே, சிக்கன் சூப்பினால் இருமல் குறையும் என்பதும் உண்மைதான். கோழிக்கறியில் இருக்கும் அமினோ அமிலம், சளியைக் குறைக்கவல்லது என்று தான் நவீன மருத்துவ ஆய்வுகளும் கூறுகின்றன. Jewish Penicillin என்று அழைக்கப்படும் சிக்கன் சூப்பை, பலரும் பல விதங்களில் தயாரிக்கிறார்கள். சிக்கனுடன் தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்று மருத்துவப் பயன்களை உடைய பல பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த மூலிகைகள் அனைத்துமே இருமலைப் போக்கக்கூடியவையாகவும், உடலின் வன்மையைப் பெருக்கக் கூடியவையாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. எனவே, சிக்கன் சூப் குடித்தால் இருமல் தணியும். ஆனால், இருமலைத் தணிக்க சிக்கன் சூப் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சிக்கனுடன் தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்று மருத்துவப் பயன்களை உடைய பல பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா? இப்படி சிக்கன் சூப்பில் சேர்க்கப்படும் மூலிகைகள் இருமலைப் போக்கக்கூடிய தன்மை உடையவையாக இருக்கும்போது, அந்த மூலிகைகளையே நாம் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், கோழிக்கறி உடல் வெப்பத்தை அதிகப்படுத்தும். எனவே, நோயாளிகள் குறிப்பாக, சரும நோயாளிகள் இதைத் தவிர்ப்பது நல்லது. தவிர, பறவைகளின் மூலம் அதிலும் கோழிகளின் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க, உயிரினங்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இருமலுக்கு சிக்கன் சூப் தான் மருந்து என்று இல்லாமல், மகத்தான பயனுள்ள, அருமையான மூலிகைகள் பலவற்றையும் பயன்படுத்தி, பலன் பெறலாம். ‘மூலிகைகளால் முதல் மருத்துவம்’ என்பதுதான் சித்தர்களின் கோட்பாடு. அதை உணர்ந்து பின்பற்றுவோம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
ரேபிடோ பைக் டாக்ஸியில் போகும் பயணிகளுக்கு ஆபத்து.. அரசு கடும் நடவடிக்கை!
ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

26 C