SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை!

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரின் பூதவுடல் தீயுடன் சங்கமாகியது.… The post வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 4:21 pm

பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் கைப்பற்றப்பட்ட பழைய பொருட்கள் அழிப்பு

பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு இன்று (6) நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரபலமான ஒரு உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட பழுதடைந்த 144 சம்சா, 4 kg பிசைந்த மாவு, 8 kg சோறு உட்பட பல பழைய பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன. குறித்த உணவகத்தில் உணவைப் பெற்றுக் கொண்ட தாய் மற்றும் மகள் […]

அதிரடி 7 Dec 2025 4:03 pm

சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. பாதுகாப்பு இல்லாத ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி வேதனை!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்திய குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

சமயம் 7 Dec 2025 4:03 pm

தமிழகத்தில் அடுத்த மழை எப்போது ?டிசம்பரில் மீண்டும் புயல் உருவாகிறதா? – ஹேமச்சந்தர் முக்கிய தகவல்

தமிழகத்தில் அடுத்ததாக எப்போது மழை பொழியும்? எந்த எந்த மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும்? அடுத்த வாரம் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதா? — இவை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

சமயம் 7 Dec 2025 3:59 pm

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பியது மின்சாரம்

video link- https://fromsmash.com/0spo3OdntH-dt அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மின் விநியோகம் 10 நாட்களின் பின்னர் வழமைக்குத் திரும்பியது . மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தினால் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பத்தை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பின் மீள் நிர்மாணத்தை தொடர்ந்து இன்று (06)பிற்பகல் அப்பகுதிகளுக்கான மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது. மின்சார […]

அதிரடி 7 Dec 2025 3:57 pm

‘அ’– அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி!

‘அ’ – அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி! மலையக அரங்க வரலாற்றில் ஒரு… The post ‘அ’ – அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 3:57 pm

கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்! அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் மாணவர்ளுக்கு வழங்கிய இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் தரமற்றும் இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

சமயம் 7 Dec 2025 3:47 pm

மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! -டிசம்பர் 9 முதல் மிகக் கனமழை வாய்ப்பு! வானிலை ஆய்வு: கிருபா இராஜரெட்ணம்,… The post மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 3:40 pm

FJ என்ன அமுக்கப் பார்க்கிறார் என்ற பாரு: கேமுக்காக ஒரு பெண்ணை யூஸ் பண்றார்னு பொங்கிய ஆதிரை

பிக் பாஸ் 9 போட்டியாளரான எஃப்.ஜே. மீது சக போட்டியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் ஆதிரை புகார் சொன்னதை பார்த்தவர்களோ அந்த தகுதி உங்களுக்கு இல்லை என்கிறார்கள்.

சமயம் 7 Dec 2025 3:35 pm

உக்ரைனில் ரஷியா ட்ரோன் மழை! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தாக்குதல்!

உக்ரைனில் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் சனிக்கிழமை(டிச. 6) தாக்குதல்களைத் தொடுத்தது. வெள்ளிக்கிழமை (டிச. 5) நள்ளிரவில் தொடங்கிய ரஷியாவின் தீவிர வான் வழி தாக்குதல்கள் சனிக்கிழமை(டிச. 6) அதிகாலை வரை நீடித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தலைநகர் கீவ் உள்பட முக்கிய நகரங்களில் மக்களுக்கு ஏர் சைரன் மூலம் அபாய ஒலி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷியாவிலிருந்து அனுப்பப்பட்ட 653 ட்ரோன்கள் மற்றும் 51 ஏவுகணைகளில் 585 ட்ரோன்களையும் 30 ஏவுகணைகளையும் இடைமறித்து செயலிழக்கச் செய்திருப்பதாகவும் […]

அதிரடி 7 Dec 2025 3:30 pm

சென்யார் புயலால் இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 900 ஆக உயர்வு

மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான சென்யார் புயல் தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் கரையை கடந்து கனமழை கொடுத்தது. இந்தோனேசியாவில் ‘சென்யார்’ புயலால்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:19 pm

அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும் –டிடிவி தினகரன்

அ.ம.மு.க., பொது ச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் உள்ளவர்கள் த.வெ.க.வில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:18 pm

மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே எனது ஆசை –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் ‘தமிழ்நாடு வளர்ச்சி’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- * ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் பொருளாதாரத்தை

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:16 pm

மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை சென்றிருந்தார். இன்று காலையில் மதுரையில் மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:14 pm

திமுக கூட்டணியில் அடிமை சாசனம்..உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் -ஆர்.பி.உதயகுமார்!

மத்தியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் திமுக கூட்டணியில் இருந்தபோது அடிமை சாசனம் செய்த வரலாற்றை உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்து உள்ளார்.

சமயம் 7 Dec 2025 3:12 pm

அமெரிக்காவின் அலாஸ்காவில் நிலநடுக்கம் –ரிகடர் அளவில் 7 ஆக பதிவு

அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்காவின் ஜூனாவ் வில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:11 pm

வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில்,

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:10 pm

சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாரவிடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:04 pm

`தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்தார். உலகமே வியக்கும் வகையில் கிரிக்கெட்டில் சாதித்த மகேந்திர சிங் தோனி சென்னை ஐ.பி.எல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சென்னை ஐ.பி.எல். அணிக்காக தோனி விளையாடி வருகிறார். ஆனால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே சத்தமே இல்லாமல் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு படிப்படியாக தொழிலிலும் சாதித்து இருக்கிறார். கால்பந்து விளையாட்டுக்காக இந்தியன் சூப்பர் லீக் ஆரம்பித்த போது அதில் சென்னை அணியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். மகேந்திர சிங் தோனி அவர் சென்னையை தனது சொந்த ஊராக நினைக்க தொடங்கியதால் அவரால் மும்பை அல்லது கொல்கத்தா அணியை வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தோனி தெரிவித்து இருந்தார். இது குறித்து கால்பந்து வீரர் அனிருத் தபா கூறுகையில், ''மதிய உணவின் போது எப்போதும் தோனி விளையாட்டு வீரர்களுடன் தான் இருப்பார். அவர் ஸ்பான்சர்களுடன் அல்லது அதிகாரிகளுடன் இருக்கமாட்டார். வி.ஐ.பி.க்களுடன் வந்து இருக்கும்படி சொன்னாலும் சிரித்துக்கொண்டே வீரர்களுடன் இருப்பதாக சொல்லிவிடுவார். அவர் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். பிறகு பணம் சம்பாதிக்கிறார்'' என்றார். மேரி வாலி பிரியாணி ஒரு முறை ஒரு சிறிய பிரியாணி கடை உரிமையாளர் மகேந்திர சிங் தோனியிடம் 'மேரி வாலி பிரியாணி' என்ற ஒரு திட்டம் குறித்து தெரிவித்தார். இத்திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் பிரியாணியின் எந்த மாதிரியான மசாலா சேர்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். அந்த ஐடியா தோனிக்கு பிடித்துப்போனது. உடனே அத்தொழிலில் ரூ.32 கோடியை முதலீடு செய்வதாக கூறி காசோலையை எடுத்துக் கொடுத்துவிட்டார். அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவரது கணக்கு வீண் போகவில்லை. வாடிக்கையாளர்கள் எந்த வித டிஸ்கவுண்டும் இல்லாமல் பிரியாணியை ஆர்டர் செய்தனர். இதுவே பிரியாணி தொழிலில் 70% வருவாயை கொடுத்து வருகிறது. Dhoni - தோனி இப்போது இந்த பிரியாணிக்கு இந்தியா முழுவதும் 22 இடங்களில் சமையல் அறைகள் திறக்கப்பட்டுள்ளது. துபாய், இங்கிலாந்து, ஜப்பானிலும் கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ஸ்வக்கி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் 83 மில்லியன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணிக்கு எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பிரியாணியில் தோனி பணத்தை முதலீடு செய்தார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். Dhoni: ``தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும்'' - மாணவர்களிடையே பேசிய தோனி கருடா ஏரோஸ்பேஸ் - ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம் ஒரு முறை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம், தோனியை தங்களது நிறுவனத்திற்கு வந்து தங்களது பணியை பார்வையிடும்படி கேட்டுக்கொண்டது. தோனியும் அங்கு சென்றார். ட்ரோன்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை பார்த்தார். அவர் பெரிதாக எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர்களது தொழிலை கவனித்தார். உடனே அடுத்த ஒரு வருடத்தில் அந்த நிறுவனத்தில் தோனி ரூ.5 கோடியை முதலீடு செய்தார். இப்போது அதே கம்பெனி தொழிலை விரிவுபடுத்த ரூ.100 கோடி முதலீடு திரட்டி இருக்கிறது. தோனி எங்களுடன் இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அக்கம்பெனி நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். தோனி இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான CARS24 என்ற நிறுவனத்திலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான emotorad என்ற நிறுவனத்திலும், உடற்பயிற்சிக்கான tagda raho என்ற நிறுவனத்திலும், ராஞ்சி ஹோட்டல், ராஞ்சி ரேய்ஸ் ஹாக்கி அணி போன்ற நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். தோனி முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. Dhoni - தோனி தோனி முதலீடு செய்த சில நிறுவனங்கள் சறுக்கி இருந்தாலும், பெரும்பாலான முதலீடுகள் அவருக்கு வருவாயை ஈட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதுவரை அவரது முதலீடு கம்பெனிகளில் 1000 கோடியாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் தோனி முதலீடு செய்வதற்கு அவசரப்பட மாட்டார். அவர் அனைத்து தகவல்களையும் பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்ட பிறகுதான் இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. தோனிக்கு பல கம்பெனிகளில் முதலீடு இருப்பதால், எப்போது எந்த கம்பெனி கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு, அவர் எப்போதும் தொழிலில் பிஸியாக இருக்கிறார். MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

விகடன் 7 Dec 2025 3:04 pm

தொடர் கதையான இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு –இன்றும் 100 விமானங்கள் ரத்தானது

உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:03 pm

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த தென்

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:01 pm

பா.ஜ.கவினர் நினைத்த செயல் தமிழ்நாட்டில் நடக்காது –நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாறினால் என்ன தவறு என்ற தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர்சேகர்பாபு கருத்து கூறுகையில், வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.க.வினர் நினைத்த

சென்னைஓன்லைனி 7 Dec 2025 3:00 pm

புதிய அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியன, ஆனால் தமிழர் பிரச்சினைகளில் முன்னேற்றமில்லை!

மன்னார் மறைமாவட்ட ஆயரின் திருவருகைக்காலத் திருமடல்: புதிய அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியன, ஆனால் தமிழர் பிரச்சினைகளில் முன்னேற்றமில்லை!… The post புதிய அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியன, ஆனால் தமிழர் பிரச்சினைகளில் முன்னேற்றமில்லை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:38 pm

2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை…தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மேலும் மஞ்சுநாத் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடிபோதைக்கு மஞ்சுநாத் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையே பள்ளிக்கூடத்திற்கு […]

அதிரடி 7 Dec 2025 2:30 pm

நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

ஊழலுக்கு இடமில்லை! வெள்ள நிவாரணப் பணியில் பாரபட்சம் காட்டினால் கடுமையான நடவடிக்கை – வடக்கு மாகாண ஆளுநர்… The post நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:30 pm

வெள்ள நிவாரணக் கொடுப்பனவு –பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

️ வெள்ள நிவாரணக் கொடுப்பனவு: யாழ்ப்பாணத்தில் புதிய உத்தரவு! – 25,000 ரூபா உதவித்தொகை விநியோகத்தில் அதிகாரிகள் பொறுப்புக்கூற… The post வெள்ள நிவாரணக் கொடுப்பனவு – பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:22 pm

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பூங்காவின் (Old Park Jaffna) நிலம், அதிகாரிகளின் குறுகிய சிந்தனையாலும்,… The post பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:15 pm

மாவீரர் நாள்- புயல் – கொலை! நிலாந்தன்!

டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது.அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை… The post மாவீரர் நாள்- புயல் – கொலை! நிலாந்தன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:13 pm

சட்டப் பேராசிரியர் கார்லோஸ் போர்ச்சுகல் கோவியா அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்

ஹார்வர்ட் பேராசிரியரின் விசா விவகாரம்: சட்டப் பேராசிரியர் கார்லோஸ் போர்ச்சுகல் கோவியா அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்! ✈️ முக்கியத் தகவல்:… The post சட்டப் பேராசிரியர் கார்லோஸ் போர்ச்சுகல் கோவியா அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 2:07 pm

ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்திய ஏர் இந்தியா விமானம் -காரணம் என்ன?

பராமரிப்புப் பணிக்காக கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 737-200 ரக விமானம், கவனக்குறைவால் அங்கேயே 13 ஆண்டுகள் கைவிடப்பட்டதால் தற்போது அதற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக இந்த விமானம் தரையிறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பராமரிப்புப் பணிகள் முடிந்ததா அல்லது கைவிடப்பட்டதா என்ற தகவல் இல்லாமல், விமான நிலையத்தின் ஒரு ஓரத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்த விமானம் குறித்த தகவல்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்தும் விடுபட்டதாக கூறப்படுகிறது. Air India சமீபத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்ததைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத விமானங்களை அப்புறப்படுத்த விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போதுதான், ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம் குறித்து தெரியவந்துள்ளது. தற்போது இந்த விமானத்திற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இனி பறப்பதற்குப் பயன்படாத இந்த விமானம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில், விமான பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கான பயிற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி: `போலி மருந்து வழக்கு' சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள்

விகடன் 7 Dec 2025 1:44 pm

தென்னாப்பிரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு! 11 பேர் பலி!

தென்னாப்பிரிக்கா நாட்டில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில், தலைநகர் பிரிட்டோரியாவின் அட்டெரிட்ஜ்வில்லே பகுதியில், 3 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று (டிச. 6) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், 25 பேர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில், 2 சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவரும் பலியானதாகத் […]

அதிரடி 7 Dec 2025 1:30 pm

தூத்துக்குடி: போலி 500 ரூபாய் நோட்டை திருடி சில்லரை மாற்றியவர் கைது - விசாரணையில் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று இரவு எட்டயபுரம், கான்சாபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரியும் கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ரூ.500 கொடுத்து சில்லரை மாற்றிக்கொண்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில், அவர் கொடுத்த ரூ.500 நோட்டு போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட இருவர் அப்போது, அவர் அந்த 500 ரூபாய் நோட்டை தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு சமையல் மாஸ்டரான அசாம் மாநிலம் தேஸ்பூரைச் சேர்ந்த குமார் சர்மாவின் பர்சில் இருந்து திருடியதாக கூறியுள்ளார். இதையடுத்து, குமார் சர்மாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர், “5 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ‘ரூ.1 லட்சம் நல்ல நோட்டுகளை கொடுத்தால், இரட்டிப்பாக ரூ.2 லட்சம் வழங்குகிறோம்’ என்ற விளம்பரத்தைப் பார்த்து, அந்த விளம்பரத்தை கொடுத்த நபர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மும்பை சென்று, அவர்களிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்து, ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகளை பெற்றுக்கொண்டு எட்டயபுரம் வந்ததாகவும் கூறியுள்ளார். இங்கு வந்து பார்த்தபோது, அதில் ரூ.2 ஆயிரத்திற்கு மட்டும் நான்கு 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததையும், மற்றவை குழந்தைகள் விளையாடும் போலி 500 ரூபாய் நோட்டுகளாகவும், வெள்ளை பேப்பர்களை கட்டுகளாக வைத்து ஏமாற்றியுள்ளனர். எட்டயபுரம் காவல் நிலையம் இதனால் அந்த போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாமல் பையில் வைத்திருந்தேன். ஆனால், சரவணன் எனக்குத் தெரியாமல் அதை திருடி, கடையில் கொடுத்து சில்லரை மாற்றியுள்ளார் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரிடமிருந்த 67 போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், மும்பையை சேர்ந்த மோசடி கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ஜன்னல் வழியே ரூபாய் நோட்டு கட்டுகளை வீசிய அதிகாரி - என்ன நடந்தது?

விகடன் 7 Dec 2025 12:53 pm

புதுச்சேரியில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா… 2026 தேர்தலில் தவெக மாஸ்டர் பிளான்!

விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதில் தவெக கவனம் செலுத்தி வரும் நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

சமயம் 7 Dec 2025 12:50 pm

பஞ்சப்பூரில் காய்கறி சந்தை அருகில் பூங்கா எப்போது கட்டப்படும்?

பஞ்சப்பூரில் காய்கறி சந்தைக்கு அருகிலேயே பூங்கா எப்போது அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சமயம் 7 Dec 2025 12:38 pm

கந்தன் மலை: ``34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம்!'' - ஹெச்.ராஜா

ஹெச். ராஜா இப்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். 'கந்தன் மலை' என்ற படத்தின் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் வீர முருகன் இயக்கயிருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. சில சர்ச்சையான விஷயங்களையும் இந்த டிரெய்லர் உள்ளடக்கி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹெச். ராஜா, திருப்பரங்குன்றம் விஷயம் திருத்தி கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், 2 ஆம் தேதி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி அங்கு சென்று, பலியிடுவது காலம் காலமாக அங்கு நடக்கிறது என்ற பொய் செய்தியை மக்கள் மத்தியில் பரப்பினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹெச். ராஜா வரலாற்று ரீதியாக பார்த்தால் 1310 ஆம் ஆண்டு தொடங்கி 8 ஆப்கானிய சுல்தான்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்தார்கள், அதில் இறுதி சுல்தான் தான் சிக்கந்தர். திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான் இவர்கள் ஆட்சிக் காலத்தில் பல இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன, பல இந்து பெண்களுக்கு கொடுமைகள் நடந்துள்ளன. இதை அனைத்தையும் மறைத்து திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருப்பதாக சொல்கிறார்கள். இது சம்பந்தமான வழக்கு 1930-ல் லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் உண்மை வெளிப்பட்டது, அதில் 34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம் என இருக்கிறது. அதனால் கந்தன் மலையைத் திரித்து சிக்கந்தர் மலையாக மக்களை ஏமாற்றும் வேலையை முறிக்கும் ஒரு சமூகப் படமாகத்தான் இப்படம் இருக்கும். என்றார். திருப்பரங்குன்றம்: இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம் - ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

விகடன் 7 Dec 2025 12:38 pm

பிக் பாஸால் உங்கள கிழி கிழினு கிழிக்கிறாங்களே, வன்மத்த கொட்டுறாங்களே: விஜய் சேதுபதி என்ன இப்படி சொல்லிடாரு!

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் போட்டியாளர்களை விட விஜய் சேதுபதியை அதிகம் விளாசுகிறார்கள். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு யாருமே எதிர்பார்க்காத பதிலை அளித்திருக்கிறார் மக்கள் செல்வன்.

சமயம் 7 Dec 2025 12:38 pm

அமெரிக்காவில் தீ விபத்தில் படுகாயமடைந்த இந்தியப் பெண் பலி!

அமெரிக்காவில், தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த 24 வயதான பெண் பொறியாளர் சஹாஜா ரெட்டி உடுமாலா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயில அமெரிக்கா சென்ற அவர் மேற்படிப்பை முடித்துவிட்டு, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த டிச.4 ஆம் தேதி காலை பணிமுடிந்து நியூயார்க்கின் அல்பானி பகுதியில் உள்ள வீட்டிற்குத் திரும்பிய சஹாஜா அவரது அறையில் உறங்கிக் […]

அதிரடி 7 Dec 2025 12:30 pm

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விசேட ‘ஒப்பரேசன்’–அமைச்சர் சந்திரசேகர்

“வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல் வளங்களை அள்ளிச் செல்கிறார்கள். இது நியாயமற்றதொன்றாகும். எனவே இந்திய மீனவர் அத்துமீறலைக் கட்டுப்படுத்த எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்து விசேட ‘ஒப்பரேசன்’ ஒன்று முன்னெடுக்கப்படும்’ என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் […]

அதிரடி 7 Dec 2025 12:11 pm

யாழில். 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 25 000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலரால் , பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் […]

அதிரடி 7 Dec 2025 12:06 pm

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்நகரப்பழைய பூங்கா(Old park Jaffna) அதில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது விடயத்தில் மிகப்பலமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு சாரார் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலராக சிறிதுகாலம் (14 மாதங்கள்) பணியாற்றியவன் என்றவகையில் இந்த பழைய பூங்கா பற்றிய எனது கரிசனையையும் […]

அதிரடி 7 Dec 2025 12:03 pm

மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை

மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஹிமாயூன் கபீர் முர்ஜிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டுவோம் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். திட்டமிட்டபடி அயோத்தியில் பாபர் மசூதி இடப்பட்ட நாளில் பாபர் மசூதி கட்ட பூமி பூஜை செய்யப்படும் என்று கபீர் தெரிவித்து இருந்தார். மம்தா பானர்ஜி சொன்னபடி நேற்று முர்ஜிதாபாத்தில் உள்ள ராஜீவ் நகரில் அயோத்தியில் இருந்தது போன்ற பாபர் மசூதியை கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவும், பாபர் மசூதி கட்ட நன்கொடை கொடுக்கவும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள் “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டனர். விழாவிற்கு வந்த மத போதகர்களின் முன்னிலையில் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீஸாரோ அல்லது ரிசர்வ் போலீஸ் படையோ பூமி பூஜையை தடுக்க முன்வரவில்லை. பாபர் மசூதி கட்ட பூமி பூஜை பாபர் மசூதிக்கு பூமி பூஜை செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ. ஹிமாயூன் கபீர் மூலம் முஸ்லிம்களை மம்தா பானர்ஜி திருப்தி படுத்த முயற்சி செய்துள்ளார். ஹிமாயூன் கபீர் ஆதரவாளர்கள் பாபர் மசூதி கட்ட செங்கல் எடுத்துச் செல்கிறார்கள். அதோடு மேற்கு வங்க போலீஸார் தனக்கு துணையாக இருப்பதாக ஹிமாயூன் கபீர் தெரிவித்துள்ளார். இப்போது ஹிமாயூன் கபீரை சஸ்பெண்ட் செய்துள்ள மம்தா பானர்ஜி, இந்துக்களை ஹிமாயூன் கபீர் மிரட்டியபோது ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளது. போட்டியாக ராமர் கோயில் பாபர் மசூதிக்கு போட்டியாக முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டப்போவதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மத்திய அமைச்சர் சுகந்தா அளித்த பேட்டியில், “எங்களது கட்சி முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டுவோம்” என்றார். முர்ஜிதாபாத் பா.ஜ.க நிர்வாகி சர்கார், தனது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ராமர் கோயில் கட்ட பூமி பூஜை செய்துள்ளார். இதில் மத்திய அமைச்சர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. மேற்கு வங்க மக்கள் தங்களது இல்லங்களில் செங்கலை வைத்து பூஜை செய்து கொடுப்பார்கள் என்றும், அந்த செங்கலை கொண்டு ராமர் கோயில் கட்டப்படும் என்றும் சர்கார் தெரிவித்துள்ளார். அதோடு, மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் இருக்கும் ஆதினா மசூதியை மீட்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் ஆதித்நாத் கோயில் இருந்ததாக மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். 1867ம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதற்கு ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராமர் கோயிலுக்கு பூமி பூஜை அரசியல் நோக்கம் கொண்டது மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட திட்டமிட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் செயலாளர் ஆதார் ஹுசேன் அளித்த பேட்டியில், “அரசியல் நோக்கத்தோடும், பிரிவினை நோக்கத்தோடும் பாபர் மசூதி கட்டப்படுகிறது. எம்.எல்.ஏ. கபீர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். அயோத்தி பாபர் மசூதி சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே இனி பாபர் பெயரில் செய்யும் எதுவும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார். `மே., வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன்; டிச.6-ல் அடிக்கல்' - தி.காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு

விகடன் 7 Dec 2025 11:42 am

வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் அதிகம் வாங்கக் கூடாது.. புதிதாக வந்த ரூல்ஸ்!

வாடகை வீட்டில் வசிக்கும் மக்களிடம் அட்வான்ஸ் தொகையாக இந்த அளவுக்கு மேல் வாங்கக் கூடாது என்று புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

சமயம் 7 Dec 2025 11:30 am

கோவா தீ விபத்தில் 23 பேர் பலி

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் பலியாயினர். பலியானவர்கள் அனைவரும் விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது. சிலிண்டர் வெடிப்பு காரணமாக தீ […]

அதிரடி 7 Dec 2025 11:30 am

அமித் ஷாவுக்கு பயப்படும் எடப்பாடி பழனிசாமி.. துணை முதல்வர் உதயநிதி கடும் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

சமயம் 7 Dec 2025 11:18 am

பிரபல பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலி சான்றிதழ் அச்சடித்து விநியோகம் - சிவகாசியில் 3 பேர் கைது

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகத்தின் சான்றிதழை வழங்கி, அம்மாநில இளைஞர் ஒருவர் அரசுப் பணிக்குச் சேர்ந்துள்ளார். அந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தபோது அது போலியானது என தெரியவந்தது. உடனடியாக இது குறித்து சான்றிதழ் அளித்த நபர் மீது மலப்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் (40), வெங்கடேஷ் (24), அரவிந்த்குமார் (24) ஆகியோர் அதிகத் தொகையைப் பெற்றுக்கொண்டு போலியாகப் பல்வேறு பிரபலமான பல்கலைக்கழகங்களின் பெயர்களில் கல்விச் சான்றிதழ்களை போலியாக அச்சடித்து விநியோகம் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போலிச் சான்றிதழ் தயாரிப்பில் ஈடுபட்ட மூன்று பேரையும் கேரள போலீசார் கைது செய்தனர். போலிச் சான்றிதழ் விற்பனை! மேலும், போலி சான்றிதழ் தயாரிப்பிற்குப் பயன்படுத்திய கணினி, பல்வேறு முக்கிய ஆவணங்கள், போலி முத்திரைகள், பல்கலைக்கழக லோகோக்கள், பிரிண்டர்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்துச் சிவகாசி டவுன் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், ஜெயினுலாபுதீன் ஒரு போலி சான்றிதழ் தயாரிப்பு அமைப்பின் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்று தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டாக சிவகாசியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கிராபிக் டிசைனிங் என்ற பெயரில் போலியாகப் பல்கலைக்கழகச் சான்றிதழ்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு உதவியாக வெங்கடேஷ், அரவிந்த்குமார் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். அச்சு இயந்திரம் ஒரு சான்றிதழிற்கு ₹25,000 முதல் ₹1 லட்சம் வரை வாங்கிக் கொண்டு போலி சான்றிதழ்களை வழங்கி வந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தரப்பில் தெரிவித்த தகவல்களின்படி, இதுவரை கணினியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தயாரித்த போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் துறைகளில் எத்தனை பேர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் வேறு மாநில பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களையும் போலியாகத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். `நீட் தேர்வு போலி சான்றிதழ் தயாரித்த மாணவி, சிக்கியது எப்படி?' - அதிர்ச்சி தகவல்கள்!

விகடன் 7 Dec 2025 10:59 am

Karnataka:‌ 16 குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்த கர்நாடக வனத்துறை; என்ன நடக்கிறது?

கண்மூடித்தனமான தொடர் வேட்டையின் காரணமாக கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட வங்கப் புலிகளின் எண்ணிக்கை தென்னிந்திய காடுகளில் தற்போது மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. உலகில் வங்கப் புலிகள் அதிகம் வாழும் பகுதிகளாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இந்த மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய வனப்பரப்பு விளங்கி வந்தாலும், அவற்றுக்கான வாழிடப்போதாமை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது‌. கர்நாடக வனத்துறையால் பிடிக்கப்பட்ட புலி குட்டிகள். கர்நாடகாவின் பந்திப்பூர் , நாஹரோலே புலிகள் காப்பக சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலி- மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளால் ஏற்படும் கால்நடைகளின் இழப்பைத் தாண்டி கடந்த இரண்டு மாதங்களில் மூன்று விவசாயிகள் புலி தாக்குதல்களால் உயிரிழந்திருக்கிறார்கள்‌. இதனைத் தொடர்ந்து புலிகளைப் பிடிக்கும் பணியில் இறங்கிய கர்நாடக வனத்துறையினர் ஒரே மாதத்தில் 20 புலிகளுக்கு மேல் பிடித்திருக்கிறார்கள். இதில் 16 குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தெரிவித்த கர்நாடக வனத்துறை அதிகாரிகள், புலிகள் காப்பக எல்லை பகுதிகளில் நடமாடி வரும் புலிகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளைநிலங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடலில் 16 புலிக்குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்திருக்கிறோம். மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் படிப்படியாக வனப்பகுதிக்குள் விடுவித்து வருகிறோம். கர்நாடக வனத்துறையால் பிடிக்கப்பட்ட புலி குட்டிகள். குட்டிகளை அதன் தாயுடன் இணைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் பிடித்த 3 புலிக் குட்டிகளையும் தாயுடன் இணைத்தோம். கடைசியாக பிடிக்கப்பட்ட 3 மாத குட்டியின் தாய் புலியை தேடும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன. எங்களின் இந்த நடவடிக்கையால் எதிர்கொள்ளல்கள் குறையும் என்றனர். அதேவேளையில் , புலிக்குட்டிகளை வனத்துறையினர் முறையாகக் கையாள்வதில்லை என சுற்றுச்சூழல் அமைப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

விகடன் 7 Dec 2025 10:34 am

பாக். –ஆப்கன் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! 4 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லையில் இருநாட்டுப் படைகளுக்கு இடையே திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சாமன் நகரில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் உடனான எல்லையில், நேற்று முன்தினம் (டிச. 5) இரவு 10.30 மணியளவில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதையடுத்து, இருநாட்டுப் படைகளுக்கு இடையில் சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 4-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் […]

அதிரடி 7 Dec 2025 10:30 am

தொடருந்து பயணிகளுக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு

தொடருந்து சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே தொடருந்து பருவச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தொடருந்து சேவைகள் வழக்கமாக இயங்கும் பகுதிகளில், தொடருந்து பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க முயற்சிப்பதாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இந்தப் பிரச்சினையை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தொடருந்து பாலத்தை இரட்டைப் பாதைப் பாலமாக […]

அதிரடி 7 Dec 2025 10:09 am

நாட்டை புரட்டிப்போட்ட பேரழிவு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரிப்பு

அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, காணாமல் போனோரின் எண்ணிக்கை 209 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, ஹட்டன் – வட்டவல, மாணிக்க தோட்டம் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி 7 Dec 2025 10:05 am

பிக் பாஸில் இருந்து பார்வதி அல்ல பிரஜின் வெளியேற்றம்: கனி அக்கா சேஃப்

பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த வாரம் வி.ஜே. பார்வதி வெளியேற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று மக்கள் செல்வனின் நண்பர் பிரஜினை வெளியேற்றிவிட்டார்கள்.

சமயம் 7 Dec 2025 9:39 am

சிறுவயதில் கொலை மிரட்டல் – 20 ஆண்டுகளாக வீட்டுக்குள் இருந்த சிறுமி பார்வைக் குறைவுடன் மீட்பு

பஸ்தார்: சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் மாவட்​டம் பகாவந்த் கிராமத்​தைச் சேர்ந்​தவர் லிசா. இவர் கடந்த 2000-ம் ஆண்​டில் தனது 6 வயதில் அங்​குள்ள பள்​ளி​யில் 2-ம் வகுப்பு படித்​துள்​ளார். அப்​போது அவரது கிராமத்​தைச் சேர்ந்த ஒரு​வர் லிசாவை கொன்​று​விடு​வேன் என மிரட்​டி​யுள்​ளார். அவரது பேச்சை கேட்டு மிக​வும் பயந்​து​போன சிறுமி வீட்​டை​விட்டு வெளி​யேற​வில்​லை. இந்நிலையில் அவரது தாயும் இறந்​து​விட்​டார். அந்த சிறுமியை பார்த்​துக் கொள்ள யாரும் முன்​வர​வில்​லை. இதனால் அவரது தந்தை லிசாவை அவர்​களது மண் குடிசை […]

அதிரடி 7 Dec 2025 9:30 am

நாய்கள் பேய்களைப் பார்க்கிறதா? நள்ளிரவில் அவை குறைப்பதன் மர்மம் என்ன?

வீட்டில் வளர்க்கும் நாய்கள் சில நேரங்களில் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து தொடர்ந்து குறைப்பதைப் பார்த்திருப்போம். நாய்களுக்குப் பேய்கள் தெரியும், அவை அதனை உணரும் என்று காலம் காலமாக வீட்டில் இருப்பவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் நாய்களால் ஆவிகளைப் பார்க்க முடியுமா? இதுகுறித்து ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். லண்டன் ரிப்பன் கல்லூரியின் பேராசிரியர் மார்க் ஈடன் இதுகுறித்து கூறுகையில், சமீபத்தில் தந்தையை இழந்த ஒருவர், தன் நாய் தொடர்ந்து படிக்கட்டுகளைப் பார்த்துக் குறைப்பதாகக் கூறினார். அவர் ஏற்கெனவே பேய்களின்மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால், தன் நாய் தன் தந்தையின் ஆவியை உணர்வதாக அவர் நம்புகிறார் என்று கூறியிருக்கிறார். Dog அறிவியல் சொல்வதென்ன? விஞ்ஞானிகள் நாய்கள் பேயைப் பார்க்கவில்லை, மனிதர்களால் உணர முடியாத சத்தங்களையும், வாசனைகளையும் அவை உணர்கின்றன என்று கூறுகின்றனர். லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் பிரெஞ்ச் கூறுகையில் நாய்களுக்கு மனிதர்களைவிட சிறந்த நுகரும் திறனும், கேட்கும் திறனும் உண்டு. எனவே மனிதர்களால் கண்டறிய முடியாத இயற்கையான அசைவுகளைக் கண்டு அவை எதிர்வினையாற்றுகின்றனவே தவிர, இது அமானுஷ்யம் அல்ல என்று கூறியிருக்கிறார். மனிதர்களுக்கு மூக்கில் சுமார் 5 மில்லியன் நுகர்வு செல்கள் மட்டுமே உள்ளன. ஆனால், நாய்களுக்கு சுமார் 220 மில்லியன் நுகர்வு செல்கள் உள்ளன. இது மனிதனை விடப் பல மடங்கு அதிகமாம். 1950-களில் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மிகக் குறைந்த அளவு பூண்டு எண்ணெயைக்கூட நாய்களால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபத்திய ஆய்வுகளில், புற்றுநோய் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை வாசனை மூலமே நாய்கள் கண்டுபிடிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏன், மனிதர்களின் மன அழுத்தத்தைக்கூட நாய்களால் முகர்ந்து உணர முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது, நாய்கள் ஒரு வெற்று இடத்தைப் பார்த்து குரைத்தால், அங்கே பேய் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாத ஏதோ ஒரு வாசனையோ அல்லது சத்தமோ அங்கே இருக்கிறது என்பதே அறிவியலில் பதிலாக உள்ளது.

விகடன் 7 Dec 2025 9:08 am

`அரசுப்பள்ளி மாணவர்கள் மோதல்'- தலையில் தாக்கப்பட்ட 12-ம் வகுப்பு மாணவன் மூளைச்சாவு அடைந்த சோகம்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கும்பகோணம், பட்டீஸ்வரம், உடையாளூர், பம்பப்படையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளயில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். கும்பகோணம் இதில் 11-ம் வகுப்பு மாணவனின் மூக்கில் காயம் அடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இது தொடர்பாக 11-ம் வகுப்பு மாணவனின் பெற்றோர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் மாணவர்களின் நலன் கருதி இருதரப்பினரின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை செய்தும், எச்சிரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர். பள்ளி நிர்வாகமும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி அந்த 12-ம் வகுப்பு மாணவன் தன் நண்பர்களுடன் மதிய உணவு இடைவெளியின்போது 11-ம் வகுப்பு மாணவன் தரப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் மீது இடித்துவிட தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக முன்விரோதமும் ஏற்பட்டு மாணவர்களுக்கிடையே மோதல் நீடித்தது. இந்த நிலையில் 4ம் தேதி மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியிலிருந்து 12ம் வகுப்பு மாணவன் தன் நண்பர்களுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார். பட்டீஸ்வரம் கோயில் அருகே சென்றபோது 11ம் வகுப்பு மாணவர்கள் 12ம் வகுப்பு மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இவர்களும் திருப்பி அடித்துள்ளனர். இதில் 12ம் மாணவனை 11ம் வகுப்பு மாணவர்கள் மரக்கட்டையால் தலையில் பலமாக அடித்துள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் மாணவன் கீழே சரிந்து விழுந்தார். சாலையில் நடந்த இந்த மோதல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Students fight அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கட்டையால் அடித்ததில் மாணவனுக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் அனுமதிக்கப்பட்டார் மாணவன். இந்த சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் சிங் விசாரணை நடத்தினார். மேலும் 12ம் வகுப்பு மாணவரைத் தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்நிலையில், அந்த மாணவன் மூளைச்சாவு அடைந்ததால், அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக, தனியார் மருத்துவமனையிலிருந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர், மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். இதில் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனால் வேறு எதுவும் பிரச்னை ஏற்படாதவாறு இருக்க மாணவனின் வீடு, பள்ளி மற்றும் பட்டீஸ்வரம் பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விகடன் 7 Dec 2025 8:55 am

வடக்கில் நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளுநர் எச்சரிக்கை

வடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஆளுநர், இது குறித்து விசேட தெளிவுபடுத்தலை வெளியிட்டார். ஆளுநரின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனநாயகக் கட்டமைப்பில் அரச செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதையும், விழிப்புடன் இருப்பதையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்கள் மத்தியில், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது சமூகப் பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும். உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடினேன். அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமையவே பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராமமட்ட ஏனைய அலுவலர்கள் ஊடாகத் தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித இரகசியத் தன்மையும் இல்லை. உதவித்தொகை பெறத் தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் அந்தந்தப் பகுதிகளில் பகிரங்கமாகத் காட்சிப்படுத்தப்படும். இதனை மாவட்டச் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, தகுதியான எவரும் விடுபடவோ, தகுதியற்ற எவரும் உள்நுழைவதற்கோ இதில் வாய்ப்புகள் இல்லை. மிக முக்கியமாக, மக்களுக்கான உதவித்தொகை இன்னமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை. அவ்வாறு பணம் வைப்பிலிடப்படும் முன்னரே, 'முறைகேடுகள் நடந்துவிட்டதாக'அரைகுறைத் தகவல்களைக் கொண்டு பரப்பப்படும் செய்திகள் அடிப்படையற்றவை. தெரிவுப் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னரே கொடுப்பனவுகள் இடம்பெறும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சமடையத் தேவையில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்கு, அரச இயந்திரத்தில் புரையோடிப்போயிருந்த ஊழலை ஒழிப்பதேயாகும். எனவே, மக்களின் கண்ணீரில் இலாபம் தேடும் ஈனச் செயலுக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இனி இடமில்லை. நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது - அவர் எந்த நிலையிலிருந்தாலும் - தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கடந்து, முறைகேடுகள் தொடர்பில் யாரிடமேனும் தகுந்த ஆதாரங்கள் இருப்பின், அதனை எனது கவனத்துக்கு நேரடியாகக் கொண்டு வரலாம். ஆதாரபூர்வமான முறைப்பாடுகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அரச இயந்திரம் மக்களுக்காகவே இயங்குகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், காழ்ப்புணர்ச்சிகளைத் தவிர்த்து, நேர்மையுடனும் மனிதாபிமானத்துடனும் ஒன்றிணைந்து எமது மக்களை மீட்டெடுப்போம், என வடக்கு மாகாண ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு 7 Dec 2025 8:48 am

SIR: 5.6 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்; கோவை மாவட்ட நிலவரம்

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய பணிகள் டிசம்பர் 11-ம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கோவை இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வாக்காளர்களிடம் பூர்த்தி செய்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் உடனடியாக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சனிக்கிழமை (6.12.2025) வரை 5,06,394 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இறப்பு தொடர்பாக 1,13, 861 பேரும், கண்டறிய முடியாதவை, இடமாற்றம், இரட்டைப் பதிவு தொடர்பாக 3,92,533 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். SIR - சிறப்பு தீவிர திருத்தம் அதிகபட்சமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் 70,439 பெயர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவை வடக்கு தொகுதியில் 66,525 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இதேபோல கவுண்டம்பாளையம் தொகுதியில் 64,072 பெயர்கள், கிணத்துக்கடவு தொகுதியில் 58,545 பெயர்கள், சிங்காநல்லூர் தொகுதியில் 54,354 பெயர்கள், கோவை தெற்கு தொகுதியில் 46,894 பெயர்கள், சூலூர் தொகுதியில் 43,465 பெயர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் 41,079 பெயர்கள், பொள்ளாச்சி தொகுதியில் 31,720 வாக்காளர்கள், வால்பாறை தொகுதியில் 29,691 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.“ என்று கூறியுள்ளனர். கோவை படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 11-ம் தேதிக்குள் கோவையில் மேலும் 1 லட்சம் பெயர்கள் நீக்கப்படவுள்ளன. இதன் மூலம் கோவையில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

விகடன் 7 Dec 2025 7:59 am

‘ருதுராஜுக்காக’.. 2 ஸ்டார் வீரர்களை ODI அணியில் இருந்து வெளியேற்றும் பிசிசிஐ: இனி 4ஆவது இடம் இவருக்கே!

ருதுராஜ் கெய்க்வாட்டிற்காக 2 ஸ்டார் வீரர்களை ஒருநாள் அணியில் இருந்து வெளியேற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2ஆவது போட்டியில் ருதுராஜ் சதம் அடித்ததுமே இந்த முடிவை பிசிசிஐ எடுத்துவிட்டதாம்.

சமயம் 7 Dec 2025 7:57 am

Vijay: தயாரிப்பாளர் மகள் திருமண வரவேற்பு; கலந்துகொண்டு வாழ்த்திய விஜய்

நேற்று சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் T.சிவாவின், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. T.சிவா `பூந்தோட்டக் காவல்காரன்', `அரவான்', `சரோஜா', `கடவுள் இருக்கான் குமாரு' போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவர் திரைப்பட விநியோகஸ்தரும் கூட. விஜய் வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to T.சிவாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட தமிழ்நாடு திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். T.சிவா GOAT திரைப்படத்தில் இந்திய தூதரக அதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to

விகடன் 7 Dec 2025 7:55 am

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்நகரப்பழைய பூங்கா(Old park Jaffna) அதில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது விடயத்தில் மிகப்பலமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு சாரார் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலராக சிறிதுகாலம் (14 மாதங்கள்) பணியாற்றியவன் என்றவகையில் இந்த பழைய பூங்கா பற்றிய எனது கரிசனையையும் எமது அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் குறுகிய சிந்தனைகளையும் பற்றிப்பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகிறேன். யாழ்ப்பாணப் பழையபூங்கா கொண்டிருந்த சிறப்பையும் அதன் தொன்மையையும் பெறுமதியையும் அறிந்து கொள்ளாது, அபிவிருத்தி என்ற போர்வையில் எமது இளைய சமுதாயம் மட்டுமன்றி கற்றறிந்தோர் சமுகம் எனக்கூறிக்கொள்ளும் ஒரு சாரார், பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் போன்றோர் இத்தகைய பதிலீடற்ற பெரும் சம்பத்துக்கள் பறிபோவதைப்பற்றி எந்தவித கவலையுமின்றி வாழ்ந்துகொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது. ஆட்சிக்கு வரும் அரசுகளும் அவர்களால் நியமிக்கப்படும் ஆளுனர்களும் தமக்குரிய அதிகாரங்களை மக்கள் நலனுக்காகவன்றி அம்மக்களின் எதிரகாலத்தைக் கருத்தில் கொள்ளாது அவரவர் தனிப்பட்ட அபிலாசைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் தான்தோன்றித்தனமாகப் பிரயோகிப்பதும் அதனை எதுவித ஆட்சேபனையுமின்றி அதிகாரிகள் சிரமேற்கொண்டு செயற்படுத்துவதும் நாம் எமது நிருவாக வரலாற்றில் தரிசித்த உண்மைகள். 2023 ஆம் ஆண்டு தை 18 இல் மாவட்ட செயலராக பொறுப்பேற்று சில நாட்களில் அப்போது ஆளுனராக இருந்தவர் பழைய பூங்காவின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் ஏற்கனவே உள்ள ஆளுனர் அலுவலகத்தோடு சில கட்டுமானங்களையும் உருவாக்கியிருந்தார். மேலும் காணியைப்பிரித்து குறுக்காக வேலியிட்டு அது ஆளுனர் அலுவலகத்திற்குரியது என அத்துமீறலும் செய்திருந்தார். இந்நிலையில் எனது விடுதியிலிருந்து பார்த்தபோது அதிகாலை கனரக இயந்திரங்கள் அந்தக்காணியில் ஏதோ வேலைக்காக வந்திருப்பதைக் கேள்வியுற்றேன். அவை மாநகர சபைக்குரியவை என்பதையும் அறிந்துகொண்டேன். உடனடியாக மாநகர ஆணையாளருடன் தொடர்புகொண்டு இந்தக்காணி அரசாங்க அதிபருக்குரியது என்பது உங்களுக்குத் தெரியும்தானே! ஆயின் எனக்குத்தெரியாமல் எனது அனுமதி பெறாமல் என்ன செய்யப்போகிறீர்கள் என வினவியபோது ஆணையாளர் அது எங்களுடைய வேலைத்திட்டம் இல்லை. ஆளுனரின் உத்தரவுக்கமைய இயந்திரங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன எனக்கூறினார். உடனே இது அரசாங்க அதிபரின் காணிக்குள் எனது அனுமதியில்லாமல் எவரும் எந்த வேலையும் செய்ய அனுமதியில்லை. என்றுகூறி இயந்திரங்களை வெளியேறப்பணித்தேன். ஆணையாளர் இதுபற்றி ஆளுனருக்குத் தெரிவித்ததும் ஆளுனர் என்னுடன் தொடர்புகொண்டு தான் ஒரு நடைபயிலும் சாலை அமைக்க இருப்பதாகவும் அதைச் செய்யப்போவதாகவும் அதைத்தடுக்கவேண்டாம் எனவும் கூறினார். ஆனாலும் பழையபூங்கா அபிவிருத்தி பற்றி தீர்மானிக்கவேண்டியது மாவட்ட செயலரே என்றும் அதன் அபிவிருத்தி பற்றிய முன்மொழிவுகள் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆராய்விலுள்ளது பற்றியும் ஆளுனரோடு விவாதித்தேன். அவர் உடனடியாக நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களை காலை எட்டு மணிக்கே என்னிடத்தில் அனுப்பி எனது ஒப்புதலைப்பெற முயன்றார். ஆனாலும் இறுதிவரை நான் அதற்கான ஒப்புதலை வழங்கவுமில்லை குறித்த வேலை நடை பெறவுமில்லை. 27 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெறுமதியான அமைவிடத்தில் வரலாற்றுப்பதிவுகள் பலதையும் கொண்ட இந்தக்காணியை எந்தவித தூரநோக்குமின்றி நினைத்தபடி துண்டாடி வெறும் ஒழுங்கற்ற கட்டிடக்காடாக்கி இன்று அழகிழந்து கிடக்கிறது பழைய பூங்கா! அரியாலை, செம்மணி, மண்டைதீவு, கோப்பாய் போன்ற நகரைச்சுற்றிய இடங்களுக்கு கொண்டு போயிருக்கக்கூடிய அரச கட்டிடங்கள் கைதடி, மாங்குளம், வ்வுனியா போன்ற பகுதிகளில் அமைக்கப்பட வேண்டிய ஆளுனர் மாளிகை மற்றும் ஆளுனர் அலுவலகங்கள் போன்றவற்றை யாழ். நகரப் பழைய பூங்காவில் காலத்துக்குக் காலம் அமைத்து தங்கள் தான்தோன்றித்தனமான அதிகாரப்பிரயோகத்தின்மூலம் அலங்கோலப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கண்டி, கொழும்பு, அனுராதபுரம், காலி போன்ற நெருக்கடியான நகரங்களில்கூட நகரப்பூங்காக்கள் தீண்டப்படாமல் அவற்றின் தொன்மையும் சிறப்பும் பேணப்பட்டுக்கொண்டிருக்க யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு பூங்காவான பழைய பூங்கா இவ்வாறு குதறப்படுவதைத் தடுத்தேயாகவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பதிவு 7 Dec 2025 7:48 am

லண்டனில் கீறீடப் பெட்டி மீது கஸ்டர்ட் ஊத்தியமை: நால்வர் கைது!

லண்டன் கோபுரத்தில் (Tower of London) உள்ள கிரீட நகைகளின் ஒரு பகுதி அடங்கிய காட்சிப் பெட்டியில் கஸ்டர்ட் ஊத்தப்பட்டு மற்றும் ஆப்பிள் கிறப்புள் பூசப்பட்டதை அடுத்து நான்கு போராட்டக்காரர்களை லண்டன் காவல்துறையினர் கைது செய்தனர். இச்வம்பவம் நேற்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் நடந்தது. அரசர் வழக்கமாக விழாக்களில் அணியும் இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் வைத்த பகுதியாகும். சிவில் எதிர்ப்புக் குழு என்று தன்னை விவரிக்கும் டேக் பேக் பவர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குற்றச் சேதம் விளைவித்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், டவரின் நகை மாளிகை தற்காலிகமாக பொதுமக்களுக்கு மூடப்பட்டது. ஜஸ்ட் ஸ்டாப் ஆயிலின் ஒரு கிளையாகத் தோன்றும் டேக் பேக் பவர் தன்னை ஒரு புதிய வன்முறையற்ற சிவில் எதிர்ப்புக் குழுவாக விவரிக்கிறது. இந்த சம்பவத்திற்குப் பின்னால் தாங்கள் இருப்பதாகக் உரிமை கோரியுள்ளது. இந்த சம்பவத்தின் காட்சிகளை அந்தக் குழு சமூக ஊடகங்களில் வெளியிட்டது. ஜனநாயகம் நொறுங்கிப் போய்விட்டது!என்று ஒரு இளம் பெண் கத்த, ஒரு ஆண், பிரிட்டன் உடைந்து விட்டதுஎன்று கூறினார். வரலாற்று சிறப்புமிக்க அரச அரண்மனைகள், இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் சேதமடையவில்லை என்பதை உறுதிப்படுத்தின. ஜுவல் ஹவுஸ் பிற்பகலில் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் முடியாட்சியின் பிரபலமான சின்னமாகும், மேலும் 2023 ஆம் ஆண்டு தனது முடிசூட்டு நாளில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயை விட்டு வெளியேறியபோது மன்னர் மூன்றாம் சார்லஸ் அதை அணிந்திருந்தார். முடிசூட்டு விழாக்களுக்கு அப்பால், விலைமதிப்பற்ற வேலை செய்யும் கிரீடம், பாராளுமன்றத்தின் அரசு திறப்பு விழா போன்ற முறையான நிகழ்வுகளின் போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது பயன்பாட்டில் இல்லாதபோது, ​​லண்டன் கோபுரத்தில் உள்ள நகை மாளிகையில் வைக்கப்படுகிறது. இது முதலில் 1937 ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜ் முடிசூட்டு விழாவிற்காக தயாரிக்கப்பட்டது. இதில் 2,868 வைரங்கள், 17 சபையர்கள், 11 மரகதங்கள், நான்கு மாணிக்கங்கள் மற்றும் 269 முத்துக்கள் உள்ளன. ஒரு கிலோகிராமுக்கு மேல் எடை கொண்டது.

பதிவு 7 Dec 2025 7:22 am

கோவா பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து-23 பேர் பலி!

கோவா பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்தில் பரிதாபமாக 23 பேர் பலியாகினர்.

சமயம் 7 Dec 2025 7:21 am

அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட தொலைபேசி இலக்கம்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும் அவசர இலக்கத்தின் ஊடாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 7 Dec 2025 7:14 am

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; பலத்த மின்னல், மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது. இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

அதிரடி 7 Dec 2025 7:11 am

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்

வெள்ளத்தால் சிதைந்த முக்கிய சாலைகளை ஆய்வு செய்யும் பணிகள் இந்திய இராணுவத்தின் பொறியியல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேதமடைந்த பாலங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்மட்ட உயர்வை நேரடியாக மதிப்பீடு செய்து பெய்லி பாலங்களை விரைவாக நிறுவும் திட்டத்தை வடிவமைத்து வருகின்றனர். அடுத்த சில நாட்களில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பல முக்கிய சாலைப் பாதைகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள பாலத்தினை புனரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய இராணுவ பொறியியல் குழு புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளன.

பதிவு 7 Dec 2025 6:59 am

திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான்

கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் ஆண்டுதோறும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இந்தாண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளானது. இதில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கெதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க-வை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான் , ``பல கோடி மக்களின் வீடு இருளிலே கிடக்கும்போது மலை மேல விளக்கேத்தணும் என்கிறாங்க. இத்தனை ஆண்டுகள் எங்கே இருந்தாங்க? இன்னைக்குத்தான் முருகன் கண்ணுக்கு தெரியுதா? ஏன் போன ஆண்டு இந்த விளக்கு ஏத்த வரல? அதுக்கு முந்தின ஆண்டு ஏன் வரல? ஏன்னா ரெண்டு மாசத்துல தேர்தல் வருது. திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்... சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ - க.கனகராஜ் | களம் 1 அரசுக்குத் தெரியாமையா இவ்வளவு நடக்குது. அவங்க நினைச்சிருந்தா இதையெல்லாம் எப்போவோ தடுத்திருக்கலாம். இது ஒற்றுமையா இருக்கிற தமிழ்ச் சமூகத்துக்குள்ள ஒரு பிளவை ஏற்படுத்துவதா நான் பார்க்கிறேன். எல்லாத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிற என் மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். சீமான் திடீர்னு ஒருத்தர் வந்து நான் போராடுவேன், அதுக்கு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்து போய் ஏற்றுங்கனு சொல்றது வருத்தமா இருக்கு. நாட்டை நிர்வகிக்கிறது நீதிமன்றமா, சட்டமன்றமா? ஒரு அசம்பாவிதமான ஒரு சூழ்நிலை வந்துருச்சு, ஒரு பெரிய கலவரம் வந்துருச்சு, பொறுப்பு அரசு ஏற்குமா, நீதிமன்றம் ஏற்குமா? நீதிபதிகளை நியமிக்கிறது யாரு? நியமிக்கிற ஆட்சியாளர்களுக்காகப் பேசுவீங்களா, கீழே இருக்கிற மக்களுக்காகப் பேசுவீங்களா? திடீர்னு எங்க முருகன் மேல உங்களுக்கு என்ன பற்று வருது? ஏன்னா உங்க ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சு. அங்கே வந்து புரி ஜெகந்நாதரை எடுத்தீங்க, ஐயப்பனை எடுத்துப் பார்த்தீங்க. இப்ப இங்க முருகனைத் தொட்டுப் பாக்றீங்க. உங்களுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? ராமர் கோயிலைக் கட்டிட்டீங்க, அந்த பிரச்னை முற்றுப் பெற்றுருச்சு. அங்கே அகிலேஷ் அயோத்தியிலேயே ஒரு தாழ்த்தப்பட்டவனை பொதுத் தொகுதியில நிறுத்தி உங்களைத் தோற்கடிச்சுட்டாரு. அங்க முடிஞ்சுச்சு. அதுக்கப்றம் மாநிலத்துக்கு இருக்கிற ஒவ்வொருத்தனும் எவன் பெரிய மதிப்பு வச்சிருக்க இறை இருக்கோ, அந்த நம்பிக்கையைத் தூக்குறீங்க என்று கூறினார். திருப்பரங்குன்றம்: ``தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான்'' - ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பேட்டி

விகடன் 7 Dec 2025 6:56 am

கிரீஸ் கிரீட் தீவு அருகே படகு கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழப்பு

நேற்று சனிக்கிழமை கிறீஸ் கிரீட் தீவின் தெற்கே மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் இறந்து கிடந்ததாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான நிலையில் உயிர் பிழைத்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். கடுமையான புயலின் போது கப்பலின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதில் இருந்தவர்கள் தண்ணீர், உணவு அல்லது சரியான தங்குமிடம் இல்லாமல் திறந்த கடலில் சிக்கித் தவித்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்தனர். உள்ளூர் அறிக்கைகளின்படி, படகு கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் புலம்பெயர்ந்தோர் இறந்து ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

பதிவு 7 Dec 2025 6:52 am

Relationship: கேஸ்லைட்டிங் செய்யும் வாழ்க்கைத்துணை; தீர்வு சொல்லும் நிபுணர்

தன் குற்றத்தை மற்றொருவர்மீது சுமத்தி, 'நம்ம மேலதான் தப்போ?' என்று அவரையே நம்ப வைத்துவிடுவார்கள் சிலர். இப்படிப்பட்டவர்கள் வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என எல்லா இடத்திலும் இருப்பார்கள்.   வீட்டை எடுத்துக்கொண்டால், 'நீ எனக்கு கோபமூட்டியதால்தான் நான் உன்னை திட்டிவிட்டேன் என்றோ, அடித்துவிட்டேன் என்றோ சொல்லிவிடுவார்கள். பெரும்பாலும், இது கணவரிடமிருந்தே வரும். தன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாத மாதிரியும் ஆச்சு; அதை தூக்கி மனைவியின் மீது போட்ட மாதிரியும் ஆச்சு.  Relationship அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், 'நீங்கள் ரிமைண்டர் மெசேஜ் போடாததால்தான் நான் அந்த வேலையை செய்யவில்லை' என்பார்கள். தன் மறதியை மறைத்ததுபோலவும் ஆச்சு; அந்தப்பழியைத் தூக்கி அடுத்தவர் மீது போட்ட மாதிரியும் ஆச்சு. நட்பு வட்டத்திலும் கிட்டத்தட்ட மேலே சொன்ன மாதிரிதான் நிகழும். இவர்கள் செய்வதை உளவியல் உலகம் 'கேஸ்லைட்டிங்' (Gaslighting) என்கிறது. இந்தச் சிக்கலால் வரும் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னையிடம் பேசினோம். யாரெல்லாம் கேஸ்லைட்டிங்கை அதிகம் பயன்படுத்துவார்கள்? சந்தேக குணம் அதிகம் உடையவர்கள், தாழ்வுமனப்பான்மை உடையவர்கள், தான்தான் உயர்ந்தவன் என்ற மனப்பான்மையுடன் இருப்பவர்கள், தனக்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், யாராக இருந்தாலும் தன் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், அடிக்கடி கோபமடைபவர்கள், கோபத்தில் தன்நிலை மறப்பவர்கள், அடிக்கடி வன்முறையில் ஈடுபடுபவர்கள், சிறுவயதில் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு சரியாகக் கிடைக்காமல் போனவர்கள், தம்பதியில் ஒருவர்மீது அதிகம் சந்தேகம் கொள்ளும் மற்றொருவர், சிறுவயதில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். Relationship விவாகரத்துக்கு முக்கிய காரணம் இதுதான்! பல உறவுமுறைக்குள் இந்தப் பிரச்னை இருந்தாலும், கணவன் - மனைவிக்குள் உருவாகும் 'கேஸ்லைட்டிங்' பிரச்னை மட்டும்தான் அதிக அளவில் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. காரணம், விவாகரத்துச் சிக்கலுக்கு `கேஸ்லைட்டிங்'கும் முக்கிய காரணமாக இருப்பதாலும், அதுகுறித்த செய்திகள் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், சமரசத் தீர்வு மையம், உளவியல் ஆலோசனை மையம், குடும்பம் மற்றும் நட்பு வட்டாரம் எனப் பல இடங்களிலும் இந்தச் சிக்கல் குறித்து அதிகம் பேசப்படுகிறது. பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சிக்கல் குறித்து கருத்துகளைப் பதிவிடுவதும், இதுகுறித்து இணையத்தில் தீர்வு தேடுவதாலும் 'கேஸ்லைட்டிங்' கவனம் பெறுகிறது. தீர்வு என்ன? கேஸ்லைட்டிங் பிரச்னைக்கு காரணமானவர்கள் பலரும், தங்களின் தவற்றை உணர எந்த முயற்சியும் எடுக்கவே மாட்டார்கள்.'தான் செய்ததுதான் சரி' என்று தன் தவற்றுக்கு நியாயம் மட்டுமே கற்பித்துக்கொண்டிருப்பார்கள். தன் கோபத்துக்கு காரணமான நபர்தான் தன் தவற்றை உணர்ந்து, தனக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணம் வேரூன்றிய நபரை, தொடர்ந்து கவுன்சலிங் கொடுப்பதால் மட்டுமே சகஜநிலைக்குக் கொண்டுவர முடியும். ஆனால், குற்றம் செய்பவர் அந்தத் தீர்வை அவ்வளவு எளிதில் நாட ஆர்வம் காட்ட மாட்டார்; தன் தவற்றையும் உணர மாட்டார். Relationship Relationship: இந்த 5 தீர்வையும் ஃபாலோ பண்ணா குடும்பத்துல பிரச்னையே வராது! 'நான் சொல்றதைக் கேட்டு நீ நடந்துக்கிட்டா, உனக்கு கவுன்சலிங் தேவைப்படாதே...' என்று பாதிக்கப்பட்டவர் மருத்துவரீதியாகத் தெளிவு பெறுவதற்கும் குற்றம் செய்யும் அந்த நபர் முட்டுக்கட்டை போடலாம். பாதிக்கப்பட்டவர் மட்டும் கவுன்சலிங் வரும்பட்சத்தில், 'நீங்கள் சரியாக இருக்கும்வரை, நீங்கள் எதற்காகவும் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டாம்' என்று, சொல்வோம். இது ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்குமே தவிர, பாதிக்கப்படும் அந்த நபருக்கான நிரந்தர தீர்வாக அமையாது. இந்தச் சிக்கலில் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே கவுன்சலிங் வருவதுடன், தவறு செய்தவர் தன் நிலையையும் தவற்றையும் முழுமையாக உணரும்போதுதான் தீர்வு கிடைக்கும். கேஸ்லைட்டிங் இயல்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது? பெற்றோர் வளர்ப்பு முறையும், வளர்ந்த சூழலும் சரியாக இல்லாதபட்சத்தில்தான் 'கேஸ்லைட்டிங்' செய்வதற்கான குணாதிசயம் ஒருவருக்குள் தலைதூக்கும். படிப்பில் இரண்டாம் இடம் பிடித்த குழந்தையிடம், 'நீ ஏன் முதல் மார்க் வாங்கல' என்று சிறுவயதிலேயே தாழ்வுமனப்பான்மையை விதைக்கும் பெற்றோர் ஒருரகம். தன் பிள்ளையின் நடத்தையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, பிள்ளை செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது போன்று அதீத சுதந்திரம் கொடுத்து பிள்ளை பொறுப்பற்றுச் செயல்பட காரணமாக இருக்கும் பெற்றோர் இன்னொரு ரகம். இது இரண்டுமே தவறுதான்! தவறு, சரி... இதைப் பகுத்தறிந்து செயல்படுவதற்கான நல்ல வழிகாட்டுதல்களை வழங்கி, நடுநிலையுடன் குழந்தையை வளர்ப்பதுதான் பெற்றோருக்கான தலையாய கடமை. Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதரப்பழசான இந்த இயல்பு! பாராட்டு, சுதந்திரம், கண்டிப்பு... இவையெல்லாம் குழந்தைக்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு இருக்க வேண்டும். பிறரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது; யாராக இருந்தாலும் மற்றவர்களையும் சமமாக நடத்த வேண்டும்; மற்றவர்கள் மதிக்கும் நிலைக்கு நம் நடத்தை இருக்க வேண்டும் என்ற தெளிவுடன் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும் பண்பு இருந்தால், 'கேஸ்லைட்டிங்' பிரச்னைக்கு நம் வாழ்வில் இடமே இருக்காது என்று முடித்தார் உளவியல் நிபுணர் நப்பின்னை.

விகடன் 7 Dec 2025 6:50 am

கோவா இரவு விடுதியில் தீ விபத்து: 23 பேர் பலி!

சனிக்கிழமை (டிசம்பர் 6, 2025) இரவு சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து வடக்கு கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 6, 2025) இரவு சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து வடக்கு கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் கிளப்பின் சமையலறை ஊழியர்கள் என்றும், அவர்களில் மூன்று பெண்கள் அடங்குவதாகவும் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறினார் 23 பேரில் மூன்று பேர் தீக்காயங்களால் உயிரிழந்தனர், மற்றவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக இறந்தனர். 23 உடல்களும் வளாகத்திலிருந்து மீட்கப்பட்டு பம்போலிமில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர் மற்றும் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பதிவு 7 Dec 2025 6:41 am

மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம்

பேரிடரைத் தொடர்ந்து நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகள் குறித்து கவலை தெரிவித்து, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பேரிடர் மற்றும் மீட்பு சவால்களின் அளவை ஒப்புக்கொண்டாலும், அவசரகாலச்சட்டத்தின் பல விதிகள், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளுக்கு முரணானவை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது சொத்துக்களைக்

புதினப்பலகை 7 Dec 2025 6:32 am

பேரிடர் நிலை குறித்து மகாநாயக்கர்களுக்கு விளக்கமளித்தார் அனுர

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நேற்று மல்வத்த மகா விஹாரைக்குச் சென்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதன்போது, ​​தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான திட்டங்கள் குறித்து மகாநாயக்க தேரருக்கு அவர் விளக்கிக் கூறியுள்ளார். நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர்கள் இந்தச் சந்திப்பின்

புதினப்பலகை 7 Dec 2025 6:25 am

சீனக் குழுவினரை வரவேற்க வராத ரில்வின் சில்வா

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக பிரிவின் குழுவொன்று சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்துக்கு இந்தக் குழுவினர் சென்ற போது, அவர்களை வரவேற்றவர்களில் கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இருக்கவில்லை அவருக்குப் பதிலாக, பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சீனப் பிரதிநிதிகளை வரவேற்றிருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக பிரிவின் தகவல் மையத்தின் துணை

புதினப்பலகை 7 Dec 2025 6:15 am

நோபல் பரிசு கேட்ட..! அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான ஃபிஃபா பரிசு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அமைதி பரிசை ஃபிஃபா நிர்வாகம் வழங்கியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்தாண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிஃபா நிர்வாகம் நேற்று (டிச. 5) வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைமையில் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, வாஷிங்டனில் நடைபெற்ற விழாவில் உலக அமைதியை வலியுறுத்தும் நபர்களுக்கு வழங்க புதியதாக அமைதி பரிசை அறிமுகப்படுத்துவதாக ஃபிஃபா நிர்வாகம் […]

அதிரடி 7 Dec 2025 6:00 am

விமானப்பயணம் ரத்தா? கைக்கொடுக்கும் தெற்கு ரயில்வே-இன்று பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது . இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை தேடி வருகின்றனர் .

சமயம் 7 Dec 2025 5:51 am

ரயில்வே விரிவாக்க திட்டங்கள் தாமதம் ஆவதற்கு மத்திய அரசு தான் காரணம்-தமிழக அரசு சார்பில் பதிலடி!

ரயில்வே விரிவாக்கம் திட்ட்டம் தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் தமிழகம் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு தான் காரணம் என்று அரசு சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

சமயம் 7 Dec 2025 5:07 am

உலகின் மிகச் சிறிய நீர் எருமை கின்னஸ் சாதனை

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மலாவாடியைச் சேர்ந்த மூன்று வயது நீர் எருமை, உலகின் மிகச் சிறிய நீர் எருமை என்ற கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது. இந்த நீர் எருமை திரிம்பக் போரேட்டின் பண்ணையில் பிறந்தது. ராதா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நீர் எருமை 2 அடி 8 அங்குலம் (83.8 செ.மீ) உயரம் கொண்டது. உலகின் மிகவும் குட்டையான பெண்ணாக அறியப்படும் 2 அடி 0.7 அங்குலம் உயரமுடைய ஜோதி அம்கேவை (இந்தியா) விட ராதா உயரமானது. […]

அதிரடி 7 Dec 2025 3:30 am

கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது!

கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது! #போதைப்பொருள்… The post கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 1:52 am

முன்னாள் மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள்

பிரித்தானியாவின் முன்னாள் மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் (Dr. Nathaniel Spencer) என்பவா் பல நோயாளிகளிடம், குறிப்பாகக் குழந்தைகளிடம், பாலியல்… The post முன்னாள் மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 1:47 am

முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி

ரோம், கடலில் வாழும் டால்பின்கள் மனிதனின் சிறந்த நண்பனாக அறியப்படுகிறது. ஆனால் கடல் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கடல் பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. இதனால் டால்பின்களின் வாழிடங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டால்பின்களுக்கான சரணாலயத்தை அமைக்க இத்தாலி அரசாங்கம் முடிவு செய்தது. இதற்காக சான் பாலோ தீவு அருகே டரோன்டோ வளைகுடாவில் கடந்த 2023-ம் ஆண்டு அரசாங்கம் […]

அதிரடி 7 Dec 2025 1:30 am

சூடானில்  மழலையர் பள்ளி மீது ட்ரோன் தாக்குதல் – 33 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி

சூடானில் இ ஒரு துணை ராணுவப்படை அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள மழலையர் பள்ளி (கிண்டர்கார்டன்) மீது… The post சூடானில் மழலையர் பள்ளி மீது ட்ரோன் தாக்குதல் – 33 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 12:23 am

  வீட்டு வாசலில் நின்ற 5 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை

கோயம்புத்தூர் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயதுச் சிறுவனைச் சிறுத்தை… The post வீட்டு வாசலில் நின்ற 5 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 12:12 am

கோமா நிலையில் உள்ள கைதியின் சகோதரிக்கு எதிராகச் சிறைச்சாலை நிர்வாகம் முறைப்பாடு

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் விளக்கமறியல் கைதியின் சகோதரிக்கு எதிராக, யாழ்ப்பாணச் சிறைச்சாலை நிர்வாகத்தினர்… The post கோமா நிலையில் உள்ள கைதியின் சகோதரிக்கு எதிராகச் சிறைச்சாலை நிர்வாகம் முறைப்பாடு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 11:59 pm

நாட்டில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய […]

அதிரடி 6 Dec 2025 11:13 pm

டெல்லி ஸ்டார் ஓட்டல்களில் ஒரு இரவுக்கு ரூ.85 ஆயிரம் வாடகை! புதின் வருகை+ இண்டிகோ ரத்து காரணம்...

ரஷ்ய அதிபர் புதின் வருகையால் டெல்லியில் நட்சத்திர ஓட்டல்களில் ஒரு நாள் கட்டணம் ரூ.85 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் அளவுக்கு உயர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 6 Dec 2025 10:55 pm

தெஹிவளையில் இளைஞர் சுட்டுக்கொலை    

தெஹிவளைப் பகுதியில் இன்று (06) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.… The post தெஹிவளையில் இளைஞர் சுட்டுக்கொலை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 10:48 pm

அமெரிக்காவால் புதிய பிரச்சினை ; அதிகரிக்கும் போர் அபாயம்

கிழக்கு பசிபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலாவில் இருந்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் சம்பவத்திற்கு எதிராக, ‘ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர்’ என்ற பெயரில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிர்வாகம் கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு பசிபிக் கடல் வழியாக கப்பலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக அமெரிக்க ராணுவத்திற்கு உளவுத்துறை […]

அதிரடி 6 Dec 2025 10:30 pm

IND v SA: தெ.ஆ-வை சுருட்டிய குல்தீப், பிரசித்; `சுட்டிப் பையன்'ஜெஸ்வால் 116* ; தொடரை வென்ற இந்தியா!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா போட்டி வென்றதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கின. அதிலும், டெஸ்ட் தொடரை இழந்ததற்கு ஒருநாள் தொடரை வென்று சரிக்கட்ட வேண்டுமென்ற தீவிரத்தோடு இந்தியா களமிறங்கியது. இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் அதற்கேற்றாற்போலவே, 20 போட்டிகளுக்குப் பிறகு இந்தியா டாஸ் வென்றது. இந்திய கேப்டன் கே.எல். ராகுல் அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மாவை சேர்த்து பவுலிங்கைத் தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்கா அணியில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பின்னர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர். ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் பந்தில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால், கடந்த இரு போட்டிகளாக 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்து வந்த குயின்டன் டி காக், இப்போட்டியில் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கேப்டன் டெம்பா பவுமா அவருக்கு உறுதுணையாக ஆட டி காக் அரைசதமும் அடித்தார், கூடவே இவ்விருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. இந்த நேரத்தில் ஜடேஜா குறுக்கே வந்து பவுமாவின் விக்கெட்டை எடுத்து பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அடுத்த சில ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் பிரீட்ஸ்கே, மார்க்ரமை அவுட்டாக்கினார். Dewald Brevis - Quinton de Kock விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் தனது அதிரடியை நிறுத்தாத டி காக், 80 பந்துகளில் சிக்ஸருடன் சதமடித்தார். ஆனால் சதமடித்த சற்று சில ஓவர்களிலேயே அவரையும் அவுட்டாக்கினார் பிரசித் கிருஷ்ணா. அடுத்து கைகோர்த்த டெவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென் நிதானமாக ஆடத் தொடங்கிய வேகத்தில் அவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் விக்கெட் எடுத்து இன்னிங்ஸை முழுமையாக இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார் குல்தீப் யாதவ். இறுதியாக 48-வது ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா. பிரசித் கிருஷ்ணாவும், குல்தீப் யாதவும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக வெடிக்கும் டி காக்! அதைத்தொடர்ந்து 271 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ரோஹித்தும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்கினர். மிக மிக நிதானமாக ஆடிய இந்தக் கூட்டணி பவர்பிளேவில் விக்கெட் எதுவும் விடாமல் 48 ரன்கள் அடித்தது. பின்னர், ரன் அடிப்பதில் கொஞ்சம் வேகம் கூட்டிய ரோஹித் 54 பந்துகளில் அரைசதமடித்தார். அடுத்த ஓவரிலேயே இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களையும் கடந்த அதே வேளையில், அடிக்கத் தொடங்கிய ஜெய்ஸ்வால் 75 பந்துகளில் அரைசதமடித்தார். Yashasvi Jaiswal - யஷஸ்வி ஜெய்ஸ்வால் 25 ஓவர்களாக இந்த ஜோடி விக்கெட்டும் விடாமல் 150 ரன்களைக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில், கேஷவ் மகாராஜ் ரோஹித்தை அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்தார். ஒன்டவுனில் விராட் கோலி களமிறங்கினார். மறுமுனையில் பவுண்டரி சிக்ஸருமாக விளாசத் தொடங்கிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் சதமடித்தார். தனது முதல் 60 பந்துகளில் வெறும் 36 ரன்கள் மட்டுமே அடித்த ஜெய்ஸ்வால் அடுத்த 50 பந்துகளில் 60+ ரன்கள் அடித்து சதமடித்தார். W.O.W Virat Kohli at his fluent best That's smashed into the stands with some conviction Updates ▶️ https://t.co/HM6zm9o7bm #TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @imVkohli pic.twitter.com/1EdwUbQj66 — BCCI (@BCCI) December 6, 2025 அவரைத்தொடர்ந்து கோலியும் வேகமாக ஆடி 40 பந்துகளில் அரைசதமடித்தார். இறுதியில் 39-வது ஓவரில் கோலியின் பேக் டு பேக் பவுண்டரி மூலம் இந்தியா 271 ரன்களைத் தொட்டு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2 - 1 எனத் தொடரை வென்றது. 116 ரன்கள் அடித்து நாட் அபிட் பேட்ஸ்மேனாகக் கடைசிவரைக் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது வென்றார். இத்தொடரில் இரண்டு சதம், ஒரு அரைசதம் என 302 ரன்கள் குவித்த கோலி தொடர் நாயகன் வென்றார். IND vs SA: நேற்றைய ஆட்டத்தில் 2016-18 ஆம் ஆண்டுகளின் கோலி வெர்ஷனைப் பார்த்தோம் - குல்தீப் யாதவ்

விகடன் 6 Dec 2025 9:49 pm

காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு.. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் முடிவு!

தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசாணை வெளியிடக் கோரி டிசம்பர் 8ஆம் தேதி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுகிறது.

சமயம் 6 Dec 2025 9:48 pm

பணி நிரந்தரம் செய்தால்தான் திமுகவை நம்புவோம்.. பகுதி நேர ஆசிரியர்கள் அதிரடி!

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பகுதி நேர ஆசிரியர்களை இன்னும் ஏன் முதல்வர் பணி நிரந்தரம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமயம் 6 Dec 2025 9:35 pm

எலான் மஸ்கிற்கு விழுந்த பேரிடி ; பல்லாயிரம் கோடி அபராதம்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், ‘டெஸ்லா’ நிறுவனருமான எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ சமூக ஊடக நிறுவனத்தை 2022ல் வாங்கி, பின், ‘எக்ஸ்’ என பெயர் மாற்றினார். பாதுகாப்பு குறைபாடுகள் இந்த ஊடகத்தில், பயனர் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டி.எஸ்.ஏ., எனப்படும் டிஜிட்டல் […]

அதிரடி 6 Dec 2025 9:30 pm