SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

இளங்குமரன் கைது!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம அலுவரை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொது மக்கள் முன் தாக்கியமை தொடர்பிலேயே கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் சமைத்த உணவு பொதிகளுடன் வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவற்றை மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் பிரதேச செயலாளர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பணிப்புக்கமைய வெளியிலிருந்து சமைத்த உணவுகள் கொண்டு வந்து வழங்குவதனை தவிர்க்குமாறும் அவ்வாறு வழங்குவதாக இருப்பினும் உரிய சுகாதார முறைப்படி இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் கிராம சேவையாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து கிளிநொச்சி காவல்; நிலையத்தில் கிராம அலுவலர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டிருந்த காவல்துறையால் இளங்குமரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதிவு 17 Dec 2025 8:27 pm

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மில்லியன் டொலர்களை வழங்கியது கனடா

சிறிலங்காவில் அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசரகால நிவாரண முயற்சிகளை ஆதரிப்பதற்காக, கனடா 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதாக அறிவித்துள்ளது. கனடாவின் அனைத்துலக அபிவிருத்திக்கானவெளியுறவுச் செயலர் ரன்தீப் சராய் இன்றுஇந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கனடிய மனிதாபிமான

புதினப்பலகை 17 Dec 2025 8:26 pm

SMAT Final 2025: ‘246 அடித்து’.. பைனலுக்கு முன்னேறிய அணி: கடைசி நேரத்தில், அடுத்தடுத்து 12 சிக்ஸர்கள்!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்பது இறுதியாகிவிட்டது. குறிப்பாக, ஒரு அணி, 246 ரன்களை குவித்து, மெகா வெற்றியைப் பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

சமயம் 17 Dec 2025 8:16 pm

இலங்கையின் மீண்டெழும் பயணத்திற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு உறுதி!

“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை இந்தச் சவால்களை வென்று மிக விரைவில் மீண்டெழும்” என சீன மக்கள்… The post இலங்கையின் மீண்டெழும் பயணத்திற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு உறுதி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 8:06 pm

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! 15 ஆண்டு பழைய வாகனங்களை பறிமுதல் செய்ய அரசு உத்தரவு

15 ஆண்டுகள் முடிந்த பழைய வாகனங்களை பறிமுதல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனா்.

சமயம் 17 Dec 2025 8:00 pm

TVK கூட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை – அருண் ராஜ் விளக்கம்!

தவெக கூட்டங்களை தடுக்க முயற்சி செய்வதாக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் தெரிவித்து உள்ளார்.

சமயம் 17 Dec 2025 7:32 pm

30 ஆண்டு அமெரிக்க வதிவு: கிரீன் கார்ட் நேர்காணலில் இந்தியப் பெண் அதிரடி கைது!

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 60 வயதான இந்தியப் பெண்மணி, தனது கிரீன் கார்ட் நேர்காணலின்… The post 30 ஆண்டு அமெரிக்க வதிவு: கிரீன் கார்ட் நேர்காணலில் இந்தியப் பெண் அதிரடி கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 7:28 pm

தமிழகத்தில் இருந்து இண்டிகோ வெளியேறுகிறதா? சேவை குறைப்பு பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் இண்டிகோ விமான சேவை நிறுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 17 Dec 2025 7:00 pm

இலங்கை பேரிடரின் கோர முகம்; இறம்பொடை மண்சரிவில் மனித கால் மீட்பு ; இன்னும் 21 பேர் எங்கே?

டித்வா புயலால் ந்நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் உடல் பாகம் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார். காணாமல் போயுள்ள 21 பேர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணுக்குள் கால் ஒன்று புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் வழங்கிய […]

அதிரடி 17 Dec 2025 6:51 pm

இந்தியத் துணைத் தூதுவருக்கும் சாவகச்சேரி நகரசபையினருக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காலை யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது. இதன்போது நகராட்சி மன்றின் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நகராட்சி மன்றிற்கு இந்திய உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தினால் இந்திய கலைஞர்களைக் கொண்டு யாழில் கலை […]

அதிரடி 17 Dec 2025 6:46 pm

துருக்கிய விமானக் கோளாறு குறித்து பயணிகளுக்குத் தெரியாது

202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவசரமாக தரையிறக்கப்பட்டது. இஸ்தான்புல்லுக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர்பஸ் A330 விமானம் தொழில்நுட்பக் கோளாறை சந்தித்தது. இதனால் விமானி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எரிபொருளை எரித்து தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. TK-733 விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணிக்கு கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தரையிறங்கும் கியர் அமைப்பு சரியாக பின்வாங்கத் தவறியதை விமானி கண்டுபிடித்தார். சுற்றுச்சூழல் நெறிமுறைகளைப் பின்பற்றி, கடலில் எரிபொருளைக் கொட்ட வேண்டாம் என்று விமானி முடிவு செய்தார். அதற்கு பதிலாக, அதிகப்படியான எரிபொருளை உட்கொள்ள விமானம் சிலாபம் கடற்கரைப் பகுதியை சுமார் 30 முறை சுற்றி 4,000 அடி உயரத்தில் சுற்றி வந்தது. இன்று அதிகாலை 12:28 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. தரையிறங்கியதும், முன் சக்கர அமைப்பில் உள்ள ஒரு ஹைட்ராலிக் பம்ப் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓடுபாதையில் குறிப்பிடத்தக்க எண்ணெய் கசிவு ஏற்பட்டது. பீதியைத் தவிர்க்க, விமானத்தின் போது 202 பயணிகளுக்கு அவசரநிலை குறித்து தெரியாமல் வைத்திருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. சில பயணிகள் பாகிஸ்தானில் தரையிறங்கினீர்களா என்று கேட்டதாகவும், அவர்கள் பாதுகாப்பாக தரையில் விழுந்த பின்னர்தான் தொழில்நுட்பக் கோளாறு குறித்து அறிந்ததாகவும் கூறப்படுகிறது. எண்ணெய் கசிவு காரணமாக உயர் அழுத்த சுத்தம் மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்காக பிரதான ஓடுபாதையை உடனடியாக ஒரு மணி நேரம் மூட வேண்டியிருந்தது. சுத்தம் செய்யும் பணியின் போது, ​​பல உள்வரும் விமானங்கள் மாத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. அதன் பின்னர் ஓடுபாதை அகற்றப்பட்டு, BIA இல் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக கட்டுநாயக்கவில் உள்ள கடமை மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். விமானம் பழுதுபார்க்கப்பட்டபோது அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். நீர்கொழும்பு களப்பில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் கடற்படை மீட்புப் பிரிவுகள் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவம் நடந்த காலம் முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டிருந்தன.

பதிவு 17 Dec 2025 6:46 pm

போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

கிராம சேவகர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில் ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் துரித இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது. அனர்த்த நிவாரண கொடுப்பனவில் கிராமசேவையாளர்கள் பக்க சார்பாக செயல் படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 17 Dec 2025 6:41 pm

காணாமல் போன மஞ்சள் அனகொண்டா கண்டுபிடிக்கப்பட்டது

கடந்த சனிக்கிழமை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போன மஞ்சள் அனகொண்டா இன்று புதன்கிழமை (17) காலை அதன் அடைப்பிலிருந்து சில மீட்டர் தொலைவில் ஒரு அலுமாரி (drawer) கீழ் கண்டெடுக்கப்பட்டது. மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் தேடுதலுக்குப் பின்னர் அதிகாரிகள் அனகொண்டாவைக் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 05 பாம்புகளுடன், குஞ்சு பொரித்த குஞ்சு கண்டுபிடிக்கப்பட்டதால், சுங்கத்துறையினரால் மிருகக்காட்சிசாலையிடம் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. பாம்பு பராமரிப்பாளர் துறை இயக்குநரால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் மிருகக்காட்சிசாலையின் துணை இயக்குநர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். Dehiwala Zoo

பதிவு 17 Dec 2025 6:39 pm

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் உலகின் 3-வது நாடாக இந்தியா

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியா தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகின் மூன்றாவது மிகப் போட்டித்திறன் கொண்ட நாடாக உயர்ந்துள்ளது. தரவரிசை அமெரிக்கா – 78.6 புள்ளிகள் சீனா – 36.95 புள்ளிகள் இந்தியா – 21.59 புள்ளிகள் இந்த தரவரிசை, இந்தியாவின் AI துறையில் வேகமான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிடும்போது இன்னும் […]

அதிரடி 17 Dec 2025 6:30 pm

திருகோணமலை குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் வருகை: உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பு தொடர்பில் உப தவிசாளரால் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பபப்பட்ட நிலையில் இன்றைய தினம் சபை ஒன்று கூடியுள்ளது. இதன் போது முன்னர் தவிசாளராக செயற்பட்ட ஏ.முபாரக் இலஞ்ச ஊழல் ஆணைக்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நேற்று (16)பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சபைக்கு வருகை தந்தமையால் வரவு செலவு திட்டத்தை புறக்கணிக்கபட்டது. தேசிய மக்கள் சக்தி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளரால் குறித்த தவிசாளரின் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 17 Dec 2025 6:16 pm

முல்லைத்தீவில் 3 கோடி கஞ்சா மீட்பு

முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்த தயாராக இருந்த நிலையில் முல்லைத்தீவு கடற்படையினர், விஷேட அதிரடிபடையினரால் 3 கோடி பொறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்தப்பட இருப்பதாக முல்லைத்தீவு கடற்படைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு விஷேட அதிரடிபடையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சாலை கடற்கரை பகுதியில் மகேந்திரா கப் ரக வாகனத்தில் வைத்து 140 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் தப்பியோடியுள்ளார் இந்நிலையில், குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சா பொதி மற்றும் கப் ரக வாகனத்தையும் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

பதிவு 17 Dec 2025 6:05 pm

கிரீனை எடுத்திருக்கனும்…சிஎஸ்கே தவறு செஞ்சிட்டு! ஆதங்கப்பட்ட அஸ்வின்!

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ரூ.25.20 கோடிக்கு வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் (‘Ash Ki Baat’) பேசியது கவனம் பெற்றுள்ளது. “கிரீன் ஒரு ஜெனரேஷன் டாலண்ட் (தலைமுறைக்கு ஒருமுறை வரும் திறமை). கொல்கத்தாவுக்கு அவர் அற்புதமான கைப்பற்றல்” என்று அஸ்வின் பாராட்டினார். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் கிரீனுக்கு […]

டினேசுவடு 17 Dec 2025 6:02 pm

கட்டாகாலி மாடுகளால் வவுனியாவில் விபத்து

வவுனியாவில் உந்துருளியும் பாண் விற்பனையில் ஈடுபட்டுவந்த முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா நகரில் இருந்து நெளுக்குளம் நோக்கி சென்ற உந்துருளியும், நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்தின் பின் முச்சக்கரவண்டியில் இருந்த பாண்கள் வீதியில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவத்தில் உந்துருளி ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெளுக்குளம் காவல்துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. vavuniya vavuniya nedungulam

பதிவு 17 Dec 2025 5:51 pm

வாக்களித்த செய்தி வாசிப்பாளர்கள்; 'தேர்தல் செல்லாது'என சொல்லும் தலைவர் - என்ன பிரச்னை?

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வென்றவர்கள், `சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாங்கள்தான்' என்கின்றனர். அதேநேரம் 'இந்த தேர்தல் சட்டப்படி செல்லாது' எனத் தெரிவித்துள்ளார், சங்கத்தின் நிறுவனத் தலைவர் பிரபுதாசன். ஆக மொத்தத்தில் சங்கம் இரண்டாக உடைந்துள்ளது. என்ன பிரச்னை? - உறுப்பினர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு ''2015ம் ஆண்டு சங்கம் தொடங்கினாங்க. சங்கத்தை உருவாக்கினதுல பிரபுதாசனுக்கு முக்கியமான பங்கு இருந்தது. ஆரம்ப சில வருடங்கள் எந்தப் பிரச்னையுமில்லாம போயிட்டிருந்தது. மீட்டிங்குகள், நிகழ்ச்சிகள், செய்தி வாசிப்பு பயிற்சி என நிறைய விஷயங்களைச் செய்தாங்க.. ஆனா திடீர்னு என்ன காரணம்னு தெரியல, நிர்வாகத்திலிருந்தவங்களுக்கும் உறுப்பினர் சிலருக்கும் பிரச்னை உருவாகி... அப்ப இருந்தே சங்கத்துல களேபரம்தான். தனித் தனி கோஷ்டியா செயல்படத் தொடங்கிட்டாங்க. பிரபுதாசன் அணியில் சுஜாதா பாபு பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டார். பதவிக்காலம் முடிஞ்ச பிறகும் தேர்தல் நடத்தாம தலைவர் பொறுப்பில் தொடர்கிறார்னு பிரபுதாசன் மிது ஒரு சாரார் குற்றம் சுமத்தினாங்க. அவரோ தேர்தலை நடத்துங்கனு முதல்ல சொன்னர். ஆனா பிறகு ஒருகட்டத்துல இந்த தேர்தல் முறைப்படி நடக்கலைனு சொல்லி அதைப் புறக்கணிக்கச் சொன்னார். ஆனாலும் தேர்தல் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. உறுப்பினர்கள் வந்து ஓட்டுப் போட்டாங்க. தலைவராக சண்முகவேலுவும், பொதுச்செயலாளராக கிறிஸ்டோபர் தேவநேசனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிச்சிருக்காங்க' என்றார்கள் அவர்கள்.

விகடன் 17 Dec 2025 5:44 pm

``ஆப்ரேஷன் சிந்தூர்: முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம்? - காங்கிரஸ் தலைவரின் கருத்தும் பாஜக பதிலும்!

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக மே 7 அன்று இந்தியா 'ஆபரேஷன் சிந்துர்' என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்த நடவடிக்கை மூலம் நிர்மூலமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. பிருத்விராஜ் சவான் அதற்கு பதிலளித்த அவர், ``ஆபரேஷன் சிந்துரின் முதல் நாளில், நாம் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டோம். 7-ம் தேதி நடந்த அரை மணி நேர வான்வழி மோதலில், மக்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம். இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. விமானப்படை முற்றிலும் முடக்கப்பட்டிருந்தது. ஒரு விமானம் கூட பறக்கவில்லை. குவாலியர், பதிண்டா, சிர்சாவிலிருந்து ஏதேனும் விமானம் புறப்பட்டிருந்தால் அது பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருந்தது. அதனால்தான் விமானப்படை முழுமையாக முடக்கப்பட்டிருந்தது. மேலும் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையில் வான்வழி மற்றும் ஏவுகணைப் போர் மட்டுமே இடம்பெற்றது. ஆயுதப் படைகளின் தரைவழி நகர்வுகள் ஒரு கிலோமீட்டர்கூட இல்லை என்பதை நாம் கண்டோம்... இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடந்தவை அனைத்தும் வான்வழிப் போர் மற்றும் ஏவுகணைப் போர் மட்டுமே. எதிர்காலத்திலும் போர்கள் இதே வழியில்தான் நடத்தப்படும். இத்தகைய சூழ்நிலையில், 12 லட்சம் வீரர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை நாம் பராமரிக்க வேண்டுமா? அல்லது அவர்களை வேறு சில வேலைகளைச் செய்ய வைக்கலாமா? எனக் கேட்டார். ஷேசாத் பூனாவாலா காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, ``ராணுவத்தை அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் அடையாளமாகிவிட்டது... இது பிரித்விராஜ் சவானின் அறிக்கை மட்டுமல்ல. ராகுல் காந்தியும் இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கைகள் அனைத்தும் ராகுல் காந்தியின் மனநிலையை பிரதிபலிக்கின்றன, அதனால்தான் ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ இதுபோன்ற அறிக்கைவிடும் தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை... இந்த அறிக்கைகள் அவர்களின் ராணுவ எதிர்ப்பு மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன. ராணுவத்தை அவமதித்த அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிருத்விராஜ் சவான்,``ஆபரேஷன் சிந்துர்' குறித்த எனது கருத்துக்களுக்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? கேள்விகள் கேட்கும் உரிமையை எனக்கு அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. என் கேள்வியில் தவறு இருந்தால்தானே மன்னிப்பு கேட்க வேண்டும். என்றார். ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்

விகடன் 17 Dec 2025 5:38 pm

வைத்தியசாலையில் மருத்துவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்!

பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில், பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் காருக்கு பின்னார் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. முச்சக்கரவண்டியை எடுக்குமாறு கூறியதனால் கோபம் இதன்போது வைத்தியர், முச்சக்கரவண்டியை எடுக்குமாறு சாரதியிடம் கூறியதனால் கோபமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, வைத்தியரை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் பதுளை போதனா வைத்தியசாலையில் […]

அதிரடி 17 Dec 2025 5:19 pm

சரணடைந்த அம்பிட்டிய தேரர் பிணையில் விடுவிப்பு!

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார். அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு, ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் […]

அதிரடி 17 Dec 2025 5:08 pm

கிளிநொச்சியில் பரபரப்பு: அதிபரின் ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகம் வீதியில்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மாசார் அ.த.க பாடசாலை அதிபரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாடசாலை சமூகத்தினால் இன்று புதன்கிழமை… The post கிளிநொச்சியில் பரபரப்பு: அதிபரின் ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகம் வீதியில்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:51 pm

எச்சரிக்கை: சமூக வலைதளங்களில் பரவும் “கிராம சேவகர்”தொடர்பான செய்தி போலியானது!   

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கிராம சேவகர்கள் தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் ஒரு தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என… The post எச்சரிக்கை: சமூக வலைதளங்களில் பரவும் “கிராம சேவகர்” தொடர்பான செய்தி போலியானது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:44 pm

ரெட்டதல குறித்து அஜித் எதுவும் சொன்னாரா? அருண் விஜய் சொன்ன பதில்!

சென்னை : அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படம் வரும் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பட வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அருண் விஜய் அளித்த பேட்டியில் ரசிகர்களை கவரும் வகையில் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். படத்தின் தலைப்பு ‘ரெட்ட தல’ என்றதும் ரசிகர்கள் அஜித் குமாரை நினைவுகூர்ந்தனர். “தமிழ்நாட்டில் ‘தல’ என்றால் அஜித் சார்தான். […]

டினேசுவடு 17 Dec 2025 4:43 pm

காபி தோட்டத்தில் சுருக்கு வலை,‌ துடிதுடித்து உயிரிழந்த புலி; 6 மாதத்தில் 14 புலிகள் உயிரிழப்பு

வங்கப் புலிகளின் எண்ணிக்கை அழிவின் விளிம்பில் இருந்து மெல்ல மீண்டெழத் தொடங்கியிருக்கும் நிலையில் , கர்நாடகாவில் புலிகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிகழ்வு அனைவரையும் கவலையடையச் செய்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவின் மலை, மாதேஸ்வரா பகுதியில் தாய்ப் புலி மற்றும் அதன் குட்டிகள் என 5 புலிகளுக்கு ஒரே சமயத்தில் விஷம் வைத்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த புலி கடந்த மூன்று மாதங்களில் மூன்று விவசாயிகள் புலி தாக்குதலால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவில் புலி- மனித எதிர்கொள்ளல்கள்களைக் குறைக்கிறோம் என்ற பெயரில் பந்திப்பூர், நாஹரோலே உள்ளிட்ட புலிகள் காப்பக எல்லைப் பகுதிகளில் கண்ணில் தென்பட்ட புலிகளையெல்லாம் பிடித்திருக்கிறது கர்நாடக வனத்துறை. கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே 20 -க்கும் மேற்பட்ட புலிகளைப் பிடித்தனர். கர்நாடக வனத்துறையின் இந்த அணுகுமுறையால் அண்மையில் சில புலிக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. கடந்த 6 மாதங்களில் மட்டும் 13 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழந்த நிலையில், குடகு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்கலா பகுதி தனியார் காபித் தோட்டத்தில் நேற்று புலி ஒன்று சுருக்கு வைத்து கொல்லப்பட்ட நிகழ்வு கவலையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வந்த புலி குட்டி காட்டுப்பன்றியை வேட்டையாட சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த சுருக்கு வலை கம்பியில் புலி சிக்கித் துடிதுடித்து உயிரிழந்திருப்பதை உறுதி செயத வனத்துறையினர், புலியின் உடலைக் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புலிகள் காப்பக எல்லையோரப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி சுருக்கு வலைக் கம்பிகளை அகற்ற வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தொடரும் சோகம் குறித்து தெரிவித்த புலிகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள், கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை மொத்தம் 14 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்துள்ளன. சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த புலி இதில் வேதனை என்னவென்றால் தாயிடமிருந்து கர்நாடக வனத்துறையால் பிரிக்கப்பட்ட 7 புலிக்குட்டிகள் பசிக்கொடுமை, வைரஸ் தொற்று, தாயைப் பிரிந்ததால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு போன்ற காரணங்களால் இறந்திருப்பதுதான். புலிகள் பாதுகாப்பில் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன முறைகளை பின்பற்ற வேண்டும். வாழிடப் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றனர்.

விகடன் 17 Dec 2025 4:39 pm

இன்று 3 ப்ரொமோவிலும் சாண்ட்ரா தான், ஒரே அழுகை தான்: ஓட்டு போடுறோம்மானு சொல்லும் பார்வையாளர்கள்

பிக் பாஸ் வீட்டில் படுக்கை அறையில் இல்லாமல் வெளியே தூங்கிக் கொண்டிருக்கிறார் சாண்ட்ரா. இந்நிலையில் அது குறித்து ஹவுஸ்மேட்ஸ் பேச வந்ததும் அழ ஆரம்பித்துவிட்டார் அவர்.

சமயம் 17 Dec 2025 4:37 pm

சினிமா பாணியில் தப்பியோட முயற்சி: வானத்தை நோக்கி சுட்ட அதிகாரிகள் –இரு கைதிகள் காயம் !

காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள், சிறையிலிருந்து தப்பியோட முயன்றபோது நடந்த அதிரடிச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… The post சினிமா பாணியில் தப்பியோட முயற்சி: வானத்தை நோக்கி சுட்ட அதிகாரிகள் – இரு கைதிகள் காயம் ! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:35 pm

Sony Pictures Networks India Extends Exclusive Broadcast Partnership for Australian Open Across the Indian Subcontinent

Mumbai: Sony Pictures Networks India (SPNI), the premier broadcaster of the Australian Open in India since 2015, has strengthened its long-standing association with Tennis Australia by extending its exclusive broadcast partnership for another three seasons. Under the renewed agreement, SPNI retains exclusive television rights as well as complete digital rights across India and the Indian subcontinent, including Afghanistan, Bangladesh, Bhutan, Maldives, Nepal, Pakistan and Sri Lanka. The extension ensures that tennis fans across the region will continue to enjoy world-class action from Melbourne Park in multiple languages, reaffirming SPNI’s commitment to delivering premium live sports experiences.The Australian Open, which marks the start of the global tennis calendar, has long been celebrated for its high-intensity contests, iconic rivalries and career-defining victories. Over the years, legends such as Roger Federer, Serena Williams, Novak Djokovic and Rafael Nadal have lifted the coveted trophy, creating some of the sport’s most memorable moments. Through this renewed partnership, SPNI will continue to bring viewers every ace, rally and triumph from tennis’ biggest stars through its sports network and digital streaming platform, Sony LIV.Rajesh Kaul, Chief Revenue Officer for Distribution & International Business and Head of Sports Business at SPNI, said the Australian Open has become a marquee event for tennis fans across India and the subcontinent. He noted that extending the decade-long partnership reflects SPNI’s commitment to delivering the world’s most prestigious sporting events to its audiences, backed by a deep understanding of viewer preferences across platforms. With comprehensive coverage on television and digital, a live studio show featuring expert panelists, multi-language commentary and engaging highlights, he said the network aims to bring the energy and excitement of Melbourne Park closer to fans than ever before.Craig Tiley, CEO of Tennis Australia, expressed delight at extending the collaboration with SPNI, which he credited for playing a major role in bringing the excitement of the Australian Open to millions of passionate fans in the region. He said India and the subcontinent share a deep connection with tennis, and the renewed agreement ensures viewers will continue to enjoy the best of the tournament across every screen. Tiley added that Tennis Australia and SPNI remain committed to delivering world-class coverage, compelling stories and a viewing experience that captures everything that makes the Australian Open one of the world’s great sporting events.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 4:34 pm

Pratik Gandhi Named Brand Ambassador for Legal-Tech Platform Lawyered

Mumbai: Legal-tech startup Lawyered has announced that acclaimed actor Pratik Gandhi, best known for his breakout performance in Scam 1992, has been appointed as its brand ambassador. The association marks a significant step in the company’s mission to make legal help simple, accessible and fear-free for millions of Indians navigating everyday legal challenges.Lawyered is building a citizen-first legal ecosystem with a strong focus on mobility, compliance and preventive protection. Through technology-driven services such as ChallanPay and LOTS247, the platform aims to empower vehicle owners, gig workers, families and small businesses with the tools to address legal issues confidently and proactively. The collaboration with Pratik Gandhi strengthens this vision by adding credibility, relatability and mass appeal to the brand’s efforts to raise legal awareness.The partnership evolved following Lawyered’s appearance on IdeaBaaz, where Gandhi connected deeply with the real-life legal hurdles faced by ordinary citizens. The association will be rolled out through a series of digital campaigns, short films and on-ground initiatives designed to normalise conversations around legal rights, compliance and everyday preparedness.Himanshu Gupta, Founder and CEO of Lawyered, said Pratik Gandhi embodies the values at the core of the company’s mission—honesty, resilience and the voice of the everyday Indian navigating complex systems. He noted that Gandhi’s widespread appeal will help Lawyered engage a broader citizen base and shift public perception from legal fear to legal awareness.Sharing his perspective on the collaboration, Pratik Gandhi said legal issues often feel intimidating and confusing for most Indians, but Lawyered is working to change that by making legal support accessible, understandable and proactive. He expressed pride in joining a platform committed to empowering people to know their rights and seek protection before problems escalate.As part of the association, Gandhi will feature in a 360-degree communication campaign across digital platforms, content-led storytelling and nationwide awareness drives focused on simplifying mobility laws and everyday legal compliance. With this partnership, Lawyered reinforces its positioning as an emerging legal-tech backbone for mobility and compliance in India, advancing its vision of building a future where legal protection is preventive, accessible and designed for every Indian.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 4:32 pm

`சாலையில் உயிருக்குப் போராடிய கணவன்' - உதவிகேட்டு மன்றாடிய மனைவி; முன்வராத வாகன ஓட்டிகள்

பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடரமணன். இவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரின் மனைவி ரூபா அவரை இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அங்கு டாக்டர் இல்லை. இதையடுத்து வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கிருந்த மருத்துவர், வெங்கடரமணனுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி வேறு ஒரு மருத்துவமனைக்குச் செல்லும்படி தெரிவித்தார். இதையடுத்து ஆம்புலன்ஸில் செல்லமாம் என்று நினைத்தபோது ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். ஆனால் வழியில் வெங்கடரமணனுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களது வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் வெங்கடரமணன் மற்றும் அவரது மனைவி காயமடைந்தனர். வெங்கடரமணன் வெங்கடரமணன் மனைவி சாலையில் ரத்தக்காயத்துடன் நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் மருத்துவமனைக்குச் செல்ல உதவி கேட்டார். ஆனால் ஒரு வாகன ஓட்டியும் நிறுத்தவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு டாக்சி டிரைவர் வண்டியை நிறுத்தி வெங்கடரமணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மாரடைப்பு மற்றும் விபத்து போன்ற காரணத்தால் வெங்கடரமணன் இறந்து போனார். இதுகுறித்து வெங்கடரமணனின் மனைவி கூறுகையில்,''என் கணவனைக் காப்பாற்ற மனிதாபிமானம் தவறிவிட்டது. நான் சாலையில் ரத்தத்துடன் நின்று கொண்டு வாகானங்களை நிறுத்தும்படி கெஞ்சினேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. என் கணவர் சாலையில் பல நிமிடங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்'' என்று கண்ணீர்விட்டார். இந்த சோகமான சூழ்நிலையிலும் இறந்துபோன வெங்கடரமணன் கண்களை அவரின் குடும்பத்தினர் தானம் செய்தனர். பெங்களூருவில் ஏற்கெனவே மோசமான சாலை காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

விகடன் 17 Dec 2025 4:31 pm

பிரேசிலில் பலத்த காற்றில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை

பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பேரழிவை ஏற்படுத்திய புயல் பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர் வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள ‘ஹவன்’ சில்லறை விற்பனைக் கடையின் முன் […]

அதிரடி 17 Dec 2025 4:30 pm

பிரேசிலில் பலத்த காற்றில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை

பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பேரழிவை ஏற்படுத்திய புயல் பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர் வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள ‘ஹவன்’ சில்லறை விற்பனைக் கடையின் முன் […]

அதிரடி 17 Dec 2025 4:30 pm

Vadilal Industries names Ravi Makwana as Chief Marketing Officer

Mumbai: Ravi Makwana has joined Vadilal Industries as Chief Marketing Officer, a move he announced through a post on LinkedIn. Describing the appointment as a personal milestone, Makwana said he was “stoked” to take on the role at what he called a “very beloved brand” that he grew up with. He noted that working on a brand that shaped many of his childhood memories felt “surreal,” adding an emotional depth to the transition.Commenting on the broader market landscape, Makwana observed that India’s ice cream category is experiencing heightened competition. Established players are becoming increasingly aggressive, while emerging entrants are introducing innovative formats and sub-categories. He described the evolving industry environment as a particularly interesting and dynamic phase, offering opportunities for brands to differentiate and innovate.Makwana also expressed appreciation for the leadership at Vadilal Industries, saying he felt “privileged” to work alongside Managing Director Himanshu Kanwar and the company’s board members. He thanked the Vadilal leadership team for their trust and support and acknowledged the role of executive search firm Hunt Partners in guiding him through the transition process.Before joining Vadilal Industries, Makwana held senior roles across a range of consumer-facing organisations in the food, beverages, wellness, quick-service restaurant and home and personal care sectors. His experience spans brand portfolio management, category strategy and integrated marketing leadership across major national brands—expertise he now brings to one of India’s most iconic and enduring ice cream companies.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 4:29 pm

KKS கடற்கரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா! உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு! ️✨

யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஒரு சிறப்பான ஏற்பாட்டை… The post KKS கடற்கரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா! உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு! ️✨ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:23 pm

சென்னை: ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கும் நாணயம் விகடனின் `பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்'வகுப்பு!

‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்துகிறது நாணயம் விகடன். பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார். 2025 டிசம்பர் 20, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்டணம் ஒருவருக்கு ரூ.6,500 ஆகும். நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் சொந்தமாக லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும்.   காலை, மாலை தேநீர் –ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும், கற்றுத் தரப்படுபவை: இந்த நிகழ்ச்சியில் பங்கு முதலீடு, வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிமுகம்! டெக்னிக்கல் அனாலிசிஸ் ஏன் அவசியம்? சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் நிலைகளை தெரிந்து முதலீடு மற்றும் வர்த்தகம் எப்படி செய்வது? டெக்னிக்கல் அனாலிசிஸ் - ஷார்ட் - தேவை, வகைகள் மற்றும் விளக்கம், டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தும் லைன், கேண்டில் பேட்டர்ன்கள், எப்படி லாபகரமாக பங்கு வர்த்தகம் செய்வது பற்றி சொல்லிக் கொடுக்கப்படும். மேலும்., ஒரு நிறுவனப் பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது உதாரணங்களுடன் விளக்கப்படும்.  டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் பற்றி..! ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.  டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார். டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750 க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார்.  பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார்.   தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார். முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U

விகடன் 17 Dec 2025 4:13 pm

யாழ்ப்பாணத்தில் அதிர்வலைகள்: தையிட்டி விகாராதிபதிக்கு உயரிய பதவி!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர், அமரபுர… The post யாழ்ப்பாணத்தில் அதிர்வலைகள்: தையிட்டி விகாராதிபதிக்கு உயரிய பதவி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:13 pm

வேலணை பிரதேச சபை 2026 பாதீடு நிறைவேறியது! சைக்கிள் கட்சி ஆதரவு, ஆசனப்பங்காளர் எதிர்ப்பு!

வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு, தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அவர்களால் இன்று (புதன்கிழமை)… The post வேலணை பிரதேச சபை 2026 பாதீடு நிறைவேறியது! சைக்கிள் கட்சி ஆதரவு, ஆசனப்பங்காளர் எதிர்ப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:03 pm

யாழில் வெடித்தது போராட்டம்: “பிரஜா சக்தி”திட்டத்திற்கு தவிசாளர்கள் கடும் எதிர்ப்பு! ⚖️

யாழ் குடாநாட்டில் யின் “பிரஜா சக்தி” திட்டத்திற்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு… The post யாழில் வெடித்தது போராட்டம்: “பிரஜா சக்தி” திட்டத்திற்கு தவிசாளர்கள் கடும் எதிர்ப்பு! ⚖️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:01 pm

`நிறைவேறிய கனவு; ராணுவத்திலிருந்து வந்த மின்னஞ்சல்...'- `அக்னி வீரராக'தேர்வான கரந்தை கல்லூரி மாணவர்

தஞ்சாவூர் மாவட்டம், கரந்தைத் தமிழ் சங்கம் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் ர.அபிஷேக் ராணுவத்தின் அக்னி வீரராக தேர்வாகியுள்ளார். அபிஷேக்கிற்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினோம். ``நான் லால்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு வரை படித்தேன். 11, 12ம் வகுப்பு அரியலூர் மாவட்டம், கருப்பூர் பொய்யூர்ல படிச்சு முடிச்சேன். கல்லூரி படிப்பை தஞ்சாவூர் கரந்தைத் தமிழ் சங்கத்தில் படிச்சுக்கிட்டு இருக்கேன். எல்லோருடைய வாழ்விலும் திருப்புமுனை ஒன்று இருக்கும். என் வாழ்க்கையில ஒரு திருப்புமுனை என்றால், அது என் காலேஜ் தான். ஸ்கூல் படிக்கிற வரைக்கும் என்ன ஆகப் போறேன்... எந்த வேலைக்குப் போகப் போறேன்னு தெரியாமத்தான் இருந்தேன். ஆனா கல்லூரி சேர்ந்ததும் NCC-ல சேர்ந்தேன். NCC மாஸ்டராக கரந்தைத் தமிழ் சங்கத்தின் பேராசிரியர் எம். வசந்த் சார் இருந்தாங்க. என்.சி.சி மாஸ்டர் அவருடைய வாழ்க்கை அனுபவத்தை கேட்டுக் கேட்டு எனக்கு ராணுவ வீரராக வேண்டும் என்று ஆசை வந்தது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். எங்க அப்பா ரமேஷ் கூலி வேலைதான் பார்க்குறாங்க. எங்க அப்பாவோட வருமானம் பத்தாம எங்க அம்மா காஞ்சனா தேவியும் கூலி வேலைக்குப் போய்தான் வீட்டைப் பார்த்துக்கிட்டாங்க. நான்தான் எங்க வீட்டுல மூத்த பிள்ளை. எனக்கு அப்புறம் ஒரு தம்பி இருக்காங்க. நான் யாருக்கும் கஷ்டத்தை தரக் கூடாதுன்னு நெனச்சு படித்துக் கொண்டே வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். என் படிப்புக்குத் தேவையான செலவை நானே பார்த்துக்கிட்டேன். பல கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு என்.சி.சி ல என்னுடைய முழு கவனத்தையும் வைத்தேன். ரொம்ப கஷ்டத்துக்கு அப்புறம் NCC சான்றிதழ் வாங்கினேன். இதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக இருந்தது. அப்புறம் அடுத்த படியை நோக்கி ஓட ஆரம்பித்தேன். `இந்திய ராணுவ அக்னி வீரர்' தேர்வுக்குப் படித்தேன். 3 மாசம் எதைப் பற்றியும் நினைக்காம தேர்வுக்குப் படித்து கடந்த ஜூலை மாதம் திருச்சியில் தேர்வு எழுதி முடித்தேன். தேர்வு எழுதி இரண்டே மாதங்களில் ரிசல்ட் வந்துவிட்டது. அதில் நான் தேர்வாகி விட்டேன். அப்போதிருந்து இருந்து தினமும் ஓட ஆரம்பித்தேன். ஓடி ஓடி வந்து வீட்டில் உட்கார்ந்து அழுதுகிட்டே இருப்பேன். கால் வலி, கஷ்டம், மழை... வெயில் பார்க்காமல் தினமும் 14 ரவுண்டு ஓடுவேன். உடல் சோதனை (physical test) வரைக்கும் தினமும் ஓடிக்கிட்டே இருப்பேன். பிறகு கடந்த செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் நடந்த உடல் சோதனை தேர்வில் செலக்ட் ஆனேன். அடுத்த நாளே பெங்களூர்ல மருத்துவ சோதனைக்குப் போனேன். சரியா சாப்பிடாம... தூங்காம.. தெரியாத ஊர்ல 4 நாள்கள் இருந்தேன். நான்கு நாள்களுக்குப் பிறகு மருத்துவ சோதனையில் செலக்ட் ஆனேன். அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. ரொம்ப நாள் மெரிட் ரிசல்ட்க்காக காத்திருந்தேன். எனக்குள் இருந்த நம்பிக்கை எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. உறவினர்கள் பலரும் ஒரு மாதிரி பேசினார்கள். ஆனால் நான் மனம் தளராமல் என்னுடைய இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டேயிருந்தேன். கடந்த 15ம் தேதி எனக்கு இந்திய இராணுவப் பணிக்குச் சேர சொல்லி மின்னஞ்சல் வந்தது. அந்த ஒரு செய்தி நான் பட்ட அனைத்து கஷ்டத்தையும் நொறுக்கி விட்டது. வருகின்ற டிசம்பர் 28-தேதி நான் இராணுவ வீரராகப் பணியில் சேர போறேன். என் பல நாள் கனவு இன்று நினைவாகி விட்டது. சாதாரண அபிஷேக்காக இந்தக் கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கு இராணுவ வீரர் என்று அடையாளத்தை கொடுத்த என் கல்லூரிக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விகடன் 17 Dec 2025 4:00 pm

மண்டைதீவு புதைகுழி வழக்கு - மார்ச் 31ஆம் திகதி

மண்டைதீவு புதைகுழி கிணறுகளை அகழ கோரிய வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட நிலையில் , கொல்லப்பட்டவர்களின் உடல்களை அங்குள்ள கிணறுகளில் போட்டு மூடியதாகவும் , குறித்த கிணறுகளை அகழ்ந்து சடலங்களை எடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி மகனை பறிகொடுத்த தாயொருவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு , விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், கடற்படையினர் , இராணுவத்தினர் , மற்றும் உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பிலான விசாரணை உள்ளடங்கலான விசாரணை அறிக்கையினை கையெழுத்து பிரதியாக மன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமைபொலிஸார் சமர்ப்பித்தனர். அதனை அடுத்து , விசாரணை அறிக்கையை தட்டச்சு பிரதியாக இன்றைய தினம் புதன்கிழமை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்ட நிலையில் பொலிஸார் அறிக்கையை தட்டச்சு பிரதியாக சமர்ப்பித்தனர். அதனை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

பதிவு 17 Dec 2025 3:59 pm

பேரிடர் நிதி:``நாம் கேட்டதில் 17 சதவிகிதம்தான் ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ``காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் வந்த டிட்வா புயலின் கோரத் தாண்டவத்தால், இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டதென பார்த்தோம். நம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படாமல் தமிழ்நாட்டைக் காப்பாற்றி இருக்கிறோம். எப்போதாவது ஒருமுறை புயல், வெள்ளத்தை எதிர்கொண்ட காலத்தை எல்லாம் நாம கடந்துவிட்டோம். அதை உணர்ந்துதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேரிடருக்கு ஏற்றத் தடுப்பு மற்றும் தகவமைப்பு உட்கட்டமைப்புகளை தொடங்கினோம். முதல்வர் ஸ்டாலின் காலநிலை மாற்ற ஆட்சிமன்றக் குழு, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநிலை இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என நிறைய முன்னெடுப்புகளையும் முயன்றுவருகிறோம். இதனால் இந்தியாவிற்கே வழிகாட்டுகிற நிலையில தமிழ்நாடு இருக்கிறது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ரூ.24 கோடி மதிப்பீட்டில 'காலநிலைக் கல்வி அறிவு' முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திறமைமிகு 4000 பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிக விரைவில காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு இரண்டு முறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மூலம் நடத்தப்படும் ஒரு நாள் கோடைக்கால மற்றும் குளிர்கால சிறப்பு முகாமங்களை இரண்டு நாள் முகாமங்களாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிச்சாவரம் மேலும் கூல் ரூபிங் திட்டத்தை தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025 26 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டத்தில சேர்த்திருக்கிறோம். இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் இருக்கும் 297 பசுமை பள்ளிகளிலும் செயல்படுத்தவிருக்கிறோம். கார்பன் சமநிலை மையங்கள், காலநிலை மீழ்த்திறன் மிகு கிராமங்கள், கடலோர பகுதிகளில் உயிர் கடையங்கள் அமைத்தல் போன்ற முக்கியமான காலநிலை மாற்று தடுப்பு மற்றும் தகவமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அருகே கிள்ளையில் காலநிலை மேல்திறன் அலுவலகம், சூரிய ஒளி மின்னாற்றல் உற்பத்தி, மக்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்கான பயிற்சிகள், வெள்ள அபாயகங்கள் ஏற்படாமல் இருக்க பக்கிங்காம் கால்வாய் துருவரப்பட்டு சீரமைத்தல், பிச்சாவரம் படகு குழாமுக்கு மின்னாற்றலில் இயங்கக்கூடிய படகு வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடலோர வாழ்விடங்களை இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மறுசீரமைப்புக்கும் திட்டத்தின் கீழ், அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன் பலனாக தமிழ்நாட்டில 4500 ஹக்டர் பரப்பளவுக்கு இருந்த அலையாத்தி காடுகள் 9000 ஹெக்டராக அதிகரித்திருக்கிறது. நீர்நிலைகளை பாதுகாக்க அர்ப்பணிப்போடு செயல்பட்டும் தனி நபர்களையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் பாராட்டுகிறோம். முதல்வர் ஸ்டாலின் கிளைமேட் வாரியர்ஸ் என்ற திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் நெகிழி ஒழிப்பு பரப்புறையும் மேற்கொள்ள 100 இ ஆட்டோக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 120 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறோம். மேலும் 600 மின்சாரப் பேருந்துகள் விரைவில பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். இதனால் டிராபிக்கும், பொல்யூஷனும் குறையும். எல்லாருடைய நேரமும் மிச்சமாகும். ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுருக்கும் எஸ்டிஜி ரேங்க்ல கிளைமேட் ஆக்ஷன் மற்றும் கிளீன் எனர்ஜி ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. நம் அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுசூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண். நம் அரசு வருவதற்கு முன்புவரை, இதரநிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகதான் இருந்தது. ஆனால் திராவிட மாடல் அரசு ரூ.500 கோடி வரை ஒதுக்கி இருக்கிறது. மோடி, அமித் ஷா, பா.ஜ.க Amit Shah, modi கடந்த நான்கு ஆண்டுகளில் நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்களுக்கான நிவரண நிதியாக ரூ 4136 கோடி மட்டும்தான் கேட்டோம். அதில் வெறும் 17 விழுக்காடுதான் ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது. எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாடு போராடி வென்றிருக்கிறது. நாட்டுக்கே வழிகாட்டியாக இருக்கிறது. அதுபோல இந்த காலிநிலை மாற்றம் சவால்களையும் எதிர்த்துத் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்றார். அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்! - அமைச்சர் ரகுபதி

விகடன் 17 Dec 2025 3:56 pm

ஜல்லிக்கட்டு போட்டிகள் : இதெல்லாம் கடைப்பிடிக்கனும்…தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாகவும், விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு முழுமையாக இணங்கி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று […]

டினேசுவடு 17 Dec 2025 3:50 pm

மாதம் ரூ.80,000 சம்பளம், அமலாக்க இயக்குநரகத்தில் 75 காலிப்பணியிடங்கள்; சட்டம் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

வருவாய் துறையின் கீழ் இயங்கும் அமலாக்க இயக்குநரகத்தில் சட்ட ஆலோசகர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 75 காலிப்பணியிடங்களுக்கு சட்டப் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

சமயம் 17 Dec 2025 3:43 pm

Naturals: நடிகை ஸ்ரீலீலாவை `பிராண்ட் தூதராக'அறிவித்த நேச்சுரல்ஸ் சலூன்ஸ்

தொழில்முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய சலூன் பிராண்டுகளில் ஒன்றான நேச்சுரல்ஸ் சலூன்ஸ், நடிகை ஸ்ரீலீலாவை தனது புதிய பிராண்டு தூதராக அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,000 தொழில்முனைவோரை உருவாக்கி, 15,000-க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் என்ற இலக்கை நோக்கி இந்த பிராண்டு துடிப்புடன் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேச்சுரல்ஸ் சலூன்ஸ் பிராண்டு தூதராக ஸ்ரீலீலா ஒற்றைப் பிராண்ட், ஃப்ரான்சைஸ் (தனியுரிமை) அடிப்படையிலான வணிக மாதிரியில் கட்டமைக்கப்பட்ட நேச்சுரல்ஸ், இந்திய சலூன் துறையில் ஒரு முன்னோடி பிராண்டாகத் திகழ்கிறது. பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்படாத நிலையிலிருந்த இத்துறையை, முறையான மற்றும் தொழில்முறை வணிகச் சூழலாக மாற்றுவதில் நேச்சுரல்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளது.  பிரபல திரைப்பட நட்சத்திரம் ஸ்ரீலீலாவின் நியமனம், தனது  சேவை வினியோக வலையமைப்பில் நான்கு இலக்க மைல்கல்லை (1000 கிளைகள்) நேச்சுரல்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில் நிகழ்ந்துள்ளது. பிராந்திய அளவில் வலுவான நிறுவனமாக தன்னை நிலைநாட்டிய பிறகு, தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட அழகு சேவைகளை வணிக உரிமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் வெற்றிகரமாக இணைத்து, தேசிய அளவில் பிரபலமான சலூன் பிராண்டாக நேச்சுரல்ஸ் வளர்ச்சியடைந்துள்ளதை இது உறுதிசெய்கிறது. பல ஆண்டுகளாக, நேச்சுரல்ஸ் வெறும் விற்பனை நிலைய விரிவாக்கத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், மையப்படுத்தப்பட்ட பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பிராண்டின் கீழ், சுதந்திரமான தொழில்முனைவோர்கள் நிர்வகிக்கும் சலூன்களின் மிகப்பெரிய வலையமைப்பை உருவாக்கி, தனது தனித்துவத்தை நேச்சுரல்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறது.  திருமதி. கே. வீணாவால் நிறுவப்பட்ட நேச்சுரல்ஸ், இந்தியாவின் பரந்த மற்றும் பன்முக நுகர்வோர் தளத்தைப் பயன்படுத்தி சீராக வளர்ந்து வருகிறது. பெருநகரங்கள் முதல் கிராமப்புற சந்தைகள் வரை ஒழுங்கமைக்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது இதற்கு சான்றாகும். பிராண்டின் ஃப்ரான்சைஸ் அடிப்படையிலான அணுகுமுறை, உள்ளூர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறது; அத்துடன், சிகை அலங்கார, ஒப்பனைக் கலைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சிறந்த பணி வாய்ப்புகளை சாத்தியமாக்குகிறது.  இதுவே நேச்சுரல்ஸ் – ன் வளர்ச்சிக் கொள்கையின் முக்கிய அம்சமாகும். பிராண்டு தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ரீலீலாவுடனான இந்த கூட்டணி, அழகுச் சேவைகள் பிரிவில் நுகர்வுக் கலாச்சாரத்தை வடிவமைத்து வரும் இளம் தலைமுறை மற்றும் மில்லினியல் நுகர்வோருடன் தனது பிணைப்பை வலுப்படுத்த நேச்சுரல்ஸ் விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. தனது இளமைத் துடிப்பான நடிப்பு மற்றும் நாடு முழுவதும் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகை ஸ்ரீலீலா, இந்த பிராண்டின் நோக்கத்துடன் மிகச்சரியாகப் பொருந்துகிறார். இந்தியாவின் சலூன் சந்தை மிகப்பெரியதாக இருப்பினும், பெருமளவு முறைப்படுத்தப்படாததாக இருப்பதனால், பொறுப்புடன் சமகாலத்திற்கு ஏற்றதாக வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே, நேச்சுரல்ஸ் – ன் குறிக்கோளாகும்.  ஸ்ரீலீலாவை பிராண்டு தூதராக அறிவித்ததுடன் இணைந்து, நேச்சுரல்ஸ் தனது முக்கியமான நம்பிக்கை திட்டமான “Customer First Card” -ஐயும் அறிமுகப்படுத்தியது. தொழில்முறை அழகு சேவைகளை மேலும் எளிதாகவும், பயனளிக்கும் வகையிலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், வாடிக்கையாளர்களை முதன்மைப்படுத்தும் நேச்சுரல்ஸின் நீண்டகால தத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், உறுப்பினர்கள் ஒரே ஆண்டில் ₹30,000 மதிப்புள்ள சலூன் சேவைகளை ₹20,000 மட்டும் செலுத்தி பயன்படுத்தலாம். மேலும், வசதியான EMI விருப்பங்களுடன், நாடு முழுவதும் உள்ள 900-க்கும் மேற்பட்ட நேச்சுரல்ஸ் சலூன்களில், குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த சேவைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவை உருவாக்கும் நேச்சுரல்ஸின் உறுதியை இந்த முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது; தொடர்ந்து சுய பராமரிப்பை ஊக்குவிப்பதோடு, கண்கூடிய மதிப்பையும் வழங்குகிறது. இந்தக் கூட்டணி குறித்து நேச்சுரல்ஸ் சலூன்ஸின் நிறுவனர் கே. வீணா கருத்து தெரிவிக்கையில், “எங்கள் முந்தைய பிராண்ட் முகங்களான – ஜெனிலியா டி சௌசா, கரீனா கபூர் மற்றும் தீபிகா பல்லிகல் – ஆகியோர் எங்கள் குறிக்கோள் சார்ந்த பயணத்தின் முக்கியமான கட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். நாங்கள் எதிர்நோக்கும் நிலையில், இளம் தலைமுறையினரான Gen Z மற்றும் மில்லினியல்களின் மனம் கவர்ந்த இளமையான, துடிப்பும், இலட்சியமும் நிறைந்த  ஒருவரை பிராண்டு தூதராக நியமனம் செய்ய நாங்கள் விரும்பினோம். நடிகை ஸ்ரீலீலா இதற்கு முற்றிலும் பொருத்தமானவராக திகழ்கிறார். அகில இந்திய  திரைப்படங்களில் மட்டுமல்லாமல், இந்தி திரைப்பட உலகமான பாலிவுட்டிலும், அவர் நுழைந்திருப்பதால், நாங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பரந்த பார்வையாளர்களுடன் பிணைப்பை உருவாக்க இந்த நியமனம் எங்களுக்கு உதவும்.” என்று கூறினார்.  நேச்சுரல்ஸின் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்பு, இந்தியாவின் புவியியல் மற்றும் மக்கள்தொகை கட்டமைப்பில் உள்ளது என்றும், இது ஒழுங்கமைக்கப்பட்ட சலூன் சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குகிறது என்று குறிப்பிட்ட திருமதி. வீணா, “நாங்கள் இந்தியாவுக்குள் ஆழமான விரிவாக்கத்தையும் வேகமான வளர்ச்சியையும் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். 1,000 தொழில்முனைவோரையும் ஆயிரக்கணக்கான திறன்மிக்க வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டுமென்ற எமது இலட்சிய இலக்கானது,  கட்டமைக்கப்பட்ட, உயர்தர சேவை பிராண்டுகளுக்கு இந்த நாட்டில் மிகப்பெரிய சாத்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கையை சார்ந்திருக்கிறது” என்றும் கூறினார். இந்தக் கூட்டணி குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நேச்சுரல்ஸ் சலூன்ஸின் பிராண்ட் தூதர் ஸ்ரீலீலா கூறியதாவது, “நேச்சுரல்ஸ், அழகு என்பதற்கும் அப்பாற்பட்ட ஒரு நோக்கத்தைக் கொண்ட பிராண்டாகும். இது வாய்ப்பு, லட்சியம் மற்றும் வாழ்வாதாரத்தை உருவாக்கும் சிறப்பான குறிக்கோளைக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை வழங்கி, ஆயிரக்கணக்கான ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வரும் ஒரு பிரபல பிராண்டின் அங்கமாக இணைந்திருப்பது, உண்மையிலேயே அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.”  1,000 தொழில்முனைவோரை உருவாக்கும் மைல்கல்லைக் கடக்க நேச்சுரல்ஸ் தயாராகி வரும் நிலையில், அதன் விரிவடைந்து வரும் வலையமைப்பை வலுப்படுத்த  பயிற்சி நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயல்பாட்டுச் சிறப்பில் இந்த பிராண்டு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் அணுகல்தன்மை ஆகியவற்றில் நேச்சுரல்ஸ் உறுதியான கவனம் செலுத்துகிறது.  நேச்சுரல்ஸ், இந்தியாவின் வளர்ந்து வரும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புச் சூழலுடன் இணைந்து, ஒழுங்கமைக்கப்பட்ட அழகு மற்றும் நலவாழ்வு சேவைகள் துறையில் ஒரு முன்னணி பங்களிப்பாளராக தனது நிலையை நேச்சுரல்ஸ் வலுப்படுத்தி வருகிறது. 

விகடன் 17 Dec 2025 3:43 pm

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: மதுரை ஆட்சியர், அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரி கேள்வி

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிமன் உத்தரவை அவமதிப்பு செய்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநான் சரமாரி கேள்வி எழுப்பினார்.

சமயம் 17 Dec 2025 3:34 pm

தையிட்டி விகாராதிபதிக்கு உயரிய பதவி - பதவி வழங்கும் நிகழ்வு புத்த சாசன அமைச்சரின் தலைமையில்

யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயகராக தெரிவாகியுள்ளார். சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொள்ளவுள்ளார். தையிட்டி விகாரையானது சட்ட விரோதமானது எனவும், தனியார் காணிகளை குறித்த விகாராதிபதி அடாத்தாக கையகப்படுத்தி, விகாரையை அமைத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,விகாரதிபதிக்கு வழங்கப்படும் கௌரவ நிகழ்வில் . அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை யாழ்ப்பாணத்தில் பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு 17 Dec 2025 3:34 pm

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு: கனிமொழி தலைமையில் 12 பேர் அறிவிப்பு!

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.

சமயம் 17 Dec 2025 3:31 pm

BB Tamil 9: Gameக்குத்தான் இப்படி பண்றேன்னு என்ன பத்தி - சபரி, சாண்ட்ரா வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 பிரஜின் வெளியே சென்றதிலிருந்து சாண்ட்ரா ஏதோ ஒரு காரணங்களைச் சொல்லி அழுதுகொண்டே இருக்கிறார். இன்று வெளியான முதல் இரண்டு புரொமோவிலும் அழுதுகொண்டுதான் இருந்தார். BB Tamil 9: என் குழந்தைங்க மேல சத்யமா சொல்றேன், அவர் அப்போ.! - அழும் சாண்ட்ரா தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் சபரிக்கும், சாண்ட்ராவுக்கும் வாங்குவாதம் நடக்கிறது. BB Tamil 9 நான் பயப்படுறேன், சிடு மூஞ்சி, கேம்முக்குத்தான் இப்படி பண்றேன்னு என்ன பத்தி எதுவேணாலும் சொல்லிக்கோங்க. உங்களுக்கு எதாச்சும் சொல்லணும்னு இருந்தா கேமரா கிட்ட சொல்லிக்கோங்க, இல்லனா குரூப்பா டிஸ்கஸ் பண்ணிக்கோங்க என சபரியிடம் சொல்லி அழுகிறார்.

விகடன் 17 Dec 2025 3:30 pm

சிட்னி துப்பாக்கிச்சூடு ; தாக்குதல்தாரியை தடுத்த நபருக்கு குவியும் நன்கொடை

சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த நபருக்காக அவுஸ்திரேலியா முழுவதிலும் இருந்து நன்கொடைகள் குவிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மொத்தத் தொகை தற்போது 1.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (744,000 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது. துப்பாக்கிக் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் அவர் குணமடைந்து வரும் நிலையில், இந்த நன்கொடை அதிகரித்துள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான 43 வயதான அஹ்மத் அல் அஹ்மத், […]

அதிரடி 17 Dec 2025 3:30 pm

`தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16% வளர்ச்சி; சிறப்பான ஒரு உச்சம்’ - தங்கம் தென்னரசு பேட்டி

தமிழ்நாட்டின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (17.12.2025) சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``வரக்கூடிய 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதாரத்தை நாம் எட்டுவோம் என்கின்ற மாபெரும் இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய நமது முன்னெடுப்புகளால், தமிழ்நாட்டில் பொருளாதா வளர்ச்சி இன்றைக்கு ஒரு மிகக் குறிப்பிடத்தக்க சிறப்பான ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு GSTP 2023-2024-ஆம் ஆண்டுகளில் 26.88 இலட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 31.19 இலட்சம் கோடிகளாக உயர்ந்து 16 சதவிகித வளர்ச்சியை நாம் இன்றைக்கு தொட்டிருக்கிறோம். தங்கம் தென்னரசு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் தரவுகளின் வாயிலாக கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய வளர்ச்சி விகிதம் முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாக மேம்பாட்டு குழு, தமிழ்நாடு அரசின் சிறப்பான கொள்கைகளுக்கும், எடுத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றியாக நாம் இதைச் சொல்லலாம். இத்தகைய உயர் வளர்ச்சி விகிதம் என்பது கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து இருக்கிறது. 2021-22-ஆம் ஆண்டுகளில் நாம் குறிப்பிட்ட காலத்தில் 15.91 சதவிகிதமாகவும், 2022-23-ஆம் ஆண்டுகளில் 14.47 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டுகளில் 13.34 சதவீதமாக தொடர்ச்சியாக, முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த வளர்ச்சி விகிதம் ஏற்பட்டு இன்றைக்கு அது 16 சதவீதத்தை தொட்டிருப்பது மிகப்பெரிய ஒரு வளர்ச்சியும், திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறது. குறிப்பாக, இந்த வளர்ச்சியில் உற்பத்தித்துறை மிகப்பெரிய பங்களிப்பினை செய்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டின் இந்த பொருளாதாரம் GSTP-யின் வளர்ச்சி என்பது இந்த உற்பத்தித் துறையின் பொறுத்தமட்டில், 1.46 இலட்சம் கோடியாக இருந்தது, இரண்டு மடங்காக இன்றைக்கு பெருகி இருக்கிறது. அதேபோல மகராஷ்டிராவில் ஒப்பிட்டு நோக்கினால், ஒரு வளர்ச்சி அடைந்த உற்பத்தித்துறை மாநிலமாக இருக்கக் கூடியதில், 0.71 இலட்சம் கோடியாக இருக்கக்கூடிய மகராஷ்டிராவை விட, தமிழ்நாடு உற்பத்தித் துறையில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை இன்றைக்கு கண்டிருக்கிறது. வளர்ச்சி அதற்குக் காரணம் தமிழ்நாட்டில், இன்றைக்கு, ஏறத்தாழ 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டிருக்கக்கூடிய தொழிற்சாலைகள் இருக்கிறது. அவற்றில் ஏறத்தாழ 27.7 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலைமை வந்திருக்கிறது. இந்த பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக கட்டுமானம் (Construction sectors) என்பது, இந்த வளர்ச்சிக்கு மிகுந்த அளவில் உதவி செய்யக்கூடிய வகையில், 2023-24-ஆம் ஆண்டுகளில் 15.93 சதவிகிதமும், அதேபோன்று 2024-25-ஆம் ஆண்டுகளில் 11 சதவிகிதம் என்று அதற்கான பங்களிப்பைத் தந்திருக்கிறது. அதுபோல, சேவைத் துறையை (Service Sector) எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியில் தலா 53% தன்னுடைய பங்களிப்பை செலுத்தி, real growth என்கின்ற வகையில் 2024-25-ஆம் ஆண்டுகளில் நம்முடைய சேவைத் துறை 11.3 சதவீத அளவிற்கு தன்னுடைய பங்களிப்பை தந்திருக்கிறது. குறிப்பாக, ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை நாம் நாம் எட்டவேண்டும் என்று சொன்னால், ஏற்றுமதியில் மிகப் பெரிய முன்னேற்றத்தை நாம் காண வேண்டும். முதலமைச்சரின் தொடர் முன்னெடுப்புகளால் பல்வேறு உலக நாடுகளில் அவர் பயணம் செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அதன் வாயிலாக முதலீட்டாளர்களின் சந்திப்பின் மூலமாக, 11 இலட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி முதலீடுகள் பெறப்பட்டு, 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 34 இலட்சத்து 8 ஆயிரத்து 522 இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நாம் வேலை வாய்ப்புகளை கொண்டு வந்திருக்கிறோம். ஏற்றுமதியை பொறுத்தவரையில், நாம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை பெறுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்ற தமிழ்நாட்டின் ஏற்றுமதியின் சாதனை ஒன்றிய அரசின் தரவுகளின்படி 2021-22-ஆம் நிதியாண்டில், 1.86 பில்லியன் டாலராக இருந்தது. 2022-23-ஆம் நிதியாண்டில் 5.37 பில்லியன் டாலராகவும், 2023-24-ஆம் நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலராகவும், 2024-25-ஆம் நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலராக மின்னணு பொருள்களின் ஏற்றுமதி மூன்று ஆண்டுகளில், ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 700 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்பதை நம்முடைய அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த மின்னணு பொருள்களின் ஏற்றுமதியில் நம்முடைய தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் தங்கம் தென்னரசு Welfare measures என்ற வகையில், தமிழ்நாடு வளர்ச்சி விகித குறியீடுகளில் அவர் கொண்டு வந்திருக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், காக்கும் கரங்கள் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டின் நலத் திட்டங்களிலும் தமிழ்நாடு அரசு ஒரு மாபெரும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறது. அதேபோல, GR (Gross Environment Ratio) இன்றைக்கு உயர் கல்வியில் 47 சதவிகிதம் அகில இந்திய சராசரி 28.4 சதவிகிதமாக இருக்கும்போது தமிழ்நாடு இன்றைக்கு 47 சதவிகிதம் வந்திருக்கிறது. அதேபோல உயர்கல்வி அதிகமாக பெற்றிருக்கக்கூடிய மாநிலமாக நாம் இன்றைக்கு வந்திருக்கிறோம். நான் சட்டமன்றத்தில் கூட சொன்னேன், நிதிப் பற்றாக்குறையை (fiscal deficit) நாம் எப்போதும் நிதி மேலாண்மைக்கு உட்பட்டுதான் கையாண்டிருக்கிறோம் என்பதையும், அது மாநில ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும், நம்முடைய நிதிப் பற்றாக்குறை என்பது 3 சதவிகிதத்திற்குள்ளாகவே வரக்கூடிய 2025-26-ஆம் நிதியாண்டில் அது கட்டுப்படுத்தப்படும் என்பதை நான் தெரிவித்திருக்கிறேன். அதேபோல, கடனுக்கும் (debt), மாநிலத்தின் உற்பத்தி மதிப்பீட்டிலான அந்த ratio-வில், அது கடந்த 2021-22-ஆம் ஆண்டில் 27 சதவிகிதமாக இருந்தது; 2024-25-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 26 சதவிகிதமாக குறைவாக வந்திருக்கிறது என்பதையும் நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழ்நாட்டின், நீடித்த, நிலையான வளர்ச்சி என்பது low inflation ஆக இருந்தாலும் சரி, அல்லது வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருவதாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கட்டத்திலும் நான் எடுத்துக் காட்டியிருக்கக்கூடிய தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதாக இருந்தாலும் சரி இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக நம்முடைய 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நாம் அடைவதற்கு முதலமைச்சர் அவர்களுடைய முன்னெடுப்பால், அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டிருக்கக்கூடிய பல்வேறு பணிகளால் இது சாத்தியமாகி இருக்கிறது. இன்றைக்கு ஒட்டுமொத்த குறியீடாக 16 சதவிகித வளர்ச்சியை நம்முடைய ரிசர்வ் பேங்க ஃஆப் இந்தியா வழங்கி இருப்பதும், நம்முடைய தமிழ்நாட்டின் நிதி மேலாண்மைக்கு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, தொழில் வளர்ச்சிக்கு, நம்முடைய சமூக வளர்ச்சிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு மாபெரும் நற்சான்று இந்த 16 சதவிகிதம் வளர்ச்சி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

விகடன் 17 Dec 2025 3:30 pm

தமிழகத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-12-2025: தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.19-12-2025 […]

டினேசுவடு 17 Dec 2025 3:27 pm

வேலணை பாதீடு - சைக்கிள் கட்சி ஒருவர் ஆதரவு ; இன்னுமொருவர் எதிர்ப்பு

வேலணை பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை சபையின் விவாதத்திற்கு விட்ட வேளை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர். அதனை தொடர்ந்து பாதீட்டின் மீதான வாக்கெடுப்பில் , சபையின் 22 உறுப்பினர்களில் , தமிழரசு கட்சியின் 08 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இரு உறுப்பினர்களில் ஒருவரும் , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினரும் , சுயேட்ச்சை குழுக்களின் 3 உறுப்பினர்களுமாக 17 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்களும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இரு உறுப்பினர்களில் ஒருவருமாக 05 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் 22 உறுப்பினர்களை கொண்ட சபையில் 17 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததன் அடிப்படையில் 12 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.

பதிவு 17 Dec 2025 3:23 pm

CSK : `அவர்கள் சொன்ன முதல் பெயரே பிரசாந்த் வீர் தான்; கேமரூன் கிரீன்.!' - CEO காசி விஸ்வநாதன் ஓப்பன்

19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது. எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் தேர்வு குறித்து பேசிய சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன், கேமரூன் கிரீனை எடுக்கலாம் என்றுதான் பார்த்தோம். பிரசாந்த் வீர் Talent Scout team ஆனால், எங்களிடம் இருந்த தொகையில் 50% செலவு செய்துவிட்டால், இளம் வீரர்களை எடுக்க முடியாமல் போய்விடுமோ என்று பயம் வந்துவிட்டது. ஏலத்தில் எடுக்க அதிக இளம் வீரர்களை அடையாளப்படுத்தி வைத்திருந்தோம். இளம் வீரர்களில் யாரெல்லாம் நன்றாக விளையாடுகிறார்கள் என்பதை எங்கள் Talent Scout team தெரிவித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் தெரிவித்த முதல் வீரர் பிரசாந்த் வீர் தான். ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு டிரேடிங் செய்துவிட்டோம். அதனால் அணியில் நம்பர் 7 க்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். அந்த வீரர் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் திறமை கொண்டவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். காசி விஸ்வநாதன்- தோனி அந்தவகையில் தான் பிரசாந்த் வீரை அணிக்கு தேர்வு செய்தோம். நாங்கள் நல்ல அணியை உருவாக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை செய்வார்கள். ரசிகர்களே, இந்த ஆண்டு சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கேவை பார்த்து சந்தோஷப்படுவீர்கள். நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன்” என்று பேசியிருக்கிறார். IPL: என்னுடைய அந்த கனவு நிஜமாகவில்லை; தோனி பாய்.! - சிஎஸ்கே குறித்து பதிரனா உருக்கம்

விகடன் 17 Dec 2025 3:15 pm

பிரஜா சக்திக்கு யாழில் வலுக்கும் எதிர்ப்பு - தவிசாளர்கள் போர்க்கொடி

அரசியல் நியமனங்களை அரச அதிகாரிகளை மேற்கொள்ளச் செய்யும் அடக்கு முறையான ஆட்சியின் கீழ் அரச அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர் இது தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றை நாடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பிரஜா சக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு , அதனூடாக கிராம மட்டத்தில் சமூக அபிவிருத்தி குழு என உருவாக்கி அதன் தலைவராக கட்சியின் உறுப்பினர் ஒருவரை பிரதேச செயலர் நியமித்து , அவருக்கான நியமன கடிதங்களையும் வழங்கி வருகின்றனர். அதனை தொடர்ந்து குறித்த குழுவின் தலைவராக செயற்படுபவர்கள் கிராம மட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் , பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் , மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை பின் தள்ளி , முன் வரிசைகளில் அமர்ந்திருந்து அரசாங்கத்தின் திட்டங்களை ஆமோதித்து நடைமுறைப்படுத்தும் போக்கினை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் குறித்த நியமனம் குறித்து பிரதேச சபை தவிசாளர்கள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்ற நாடுவோம் இது தொடர்பில் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற சட்டங்களின் பிரகாரம் தேர்தல் மூலம் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக அதிகாரம் வழங்கப்பட்ட கட்சி சார்பு கிராம மட்ட தலைவர் ஒருவரை நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் உள்ளூராட்சி மன்றங்களை மலினப்படுத்தி சர்வாதிகார ஆட்சியை கொண்டு பலப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியினர் போட்ட திட்டமே கிராம அபிவிருத்தி குழு. இதனூடாக தேசிய மக்கள் சக்தியினர் கிராமங்களில் தமது அரசியலை மேற்கொள்வதற்காக உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்த முயல்கின்றனர். குறித்த நியமனம் தொடர்பில் நாம் விரிவாக ஆராய்ந்து நீதிமன்றத்தை நாடுவதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றார். அரசியல் நியமனங்களை அதிகாரிகளை மேற்கொள்ளச் செய்யும் அடக்கு முறையான ஆட்சி வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரச அதிகாரிகளை தவறாக வழி நடத்தும் செயற்பாடு தான் இந்த கிராம அபிவிருத்திக் குழு தலைவர் நியமனம். ஒரு பிரதேச செயலாளர் ஊடாக அந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி குழு தலைவரை அமைப்பதற்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் குறித்த நியமானத்தை வழங்கும் அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது சவாலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயம். அரசியல் நியமனங்களை அதிகாரிகளை மேற்கொள்ளச் செய்யும் அடக்கு முறையான ஆட்சி காணப்படுகிறது ஆகவே குறித்த விடயம் தொடர்பில் ஏனைய தவிசாளர்களுடன் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எடுப்போம் என்றார். கடந்த கால ஆட்சிகளை விட மோசமான முறையில் பறிக்கப்படும் அதிகாரம் ஊர் காவற்துறை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா கடந்த கால ஆட்சிகளை விட மோசமான முறையில் மக்களை ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாடு கிராம மட்ட அபிவிருத்தி குழு தலைவர். இந்த நியமனம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் சிபாரிசின் பெயரில் நியமிக்கப்படுகிறார் அவரின் கீழ் கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி குழு உத்தியோத்தர் கடமையாற்ற வேண்டிய இக்கட்டான நிலையை பிரதேச செயலாளரின் கடிதம் பிரதிபலிக்கிறது. அது மட்டும் அல்லாது உள்ளூராட்சி மன்றங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் பங்கு பெற்றுவதற்கான மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சியின் சிபாரிசினால் பிரதேச செயலாளரால் நியமிக்கப்படுகின்ற கிராம அபிவிருத்தி குழு தலைவர் அபிவிருத்திக் குழு கூட்டங்களில் பங்குபடுத்துவதற்கான சந்தர்ப்பம் பிரதேச செயலாளரினால் வழங்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை புறம் தள்ளி ஒரு கட்சி சார்ந்த பிரதிநிதிக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் கிராம அபிவிருத்தி குழு தலைவரின் நியமன கடிதத்தில் நியமிக்கப்படுபவர் அரச உத்தியோகத்தராக கருதப்பட மாட்டார் என கூறிவிட்டு அடுத்த பந்தியில் சமூக அபிவிருத்திக் குழுக்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கிராம மட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட கிராம உத்தியோகத்தரை புறந்தள்ளி அரசியல் அதிகாரங்களை கிராம மட்டங்களில் பலப்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டமே இந்த கிராம அபிவிருத்தி குழு திட்டம் என தெரிவித்தார்.

பதிவு 17 Dec 2025 3:00 pm

பிரஜாசக்தியால் கரவெட்டியில் குழப்பம் - வெளிநடப்பு செய்த தவிசாளர்

கரவெட்டி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆசன ஒதுக்கீட்டில், தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டமையை அடுத்து இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாது வெளிநடப்பு செய்தனர். வடமராட்சி தெற்கு , மேற்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை செயலக கேட்போர் கூடத்தில் நாடளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதன் போது , தவிசாளர்களுக்கு பின் வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் , எவ்வித அங்கீகாரமும் அற்ற , மக்கள் பிரதிநிதிகளாக கூட தெரிவு செய்யப்படாத தேசிய மக்கள் சக்தி அரசியல் கட்சியை சேர்ந்த சிலருக்கு எவ்வாறு கூட்டத்தில் முன் வரிசையில் ஆசன ஒதுக்கீடு செய்யப்படும் என கேள்வி எழுப்பிய தவிசாளர் சுரேந்திரன், தானும் உப தவிசாளரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக வெளியேறினர் கூட்டத்தில் முன் வரிசையில் இருந்தவர்கள் பிரஜா சக்தி குழு உறுப்பினர்கள் என அறிய முடிகிறது. அதேவேளை தவிசாளர் வெளியேறி சென்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில். கூட்டத்திற்கு நான் செல்லும் முன்னரே தவிசாளர் பிரதேச செயலாளருடன் தன்னுடைய கதிரை ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக தர்க்கப்பட்டு வெளியேறி விட்டார். நான் வந்து கூட்டத்தை தொடங்கிய போது அவர் இல்லை. எனக்கும் கதிரை ஒழுங்கமைப்புக்கும் சம்மந்தம் இல்லை. அதேபோன்று தேசிய மக்கள் சக்திக்கும் தொடர்பில்லை. தவிசாளர் வெளியேறிமை தொடர்பில் அவருடன் அன்போடு பேசி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன். கூட்டத்தை புறக்கணித்து செல்வது தலைமத்துவத்துக்கு அழகில்லை என எடுத்துக் கூறினேன். அவர்கள் கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பதிவு 17 Dec 2025 2:56 pm

Tata Group Felicitates ICC Women’s World Cup 2025 Winning Team, Announces Tata Sierra for All Players

Mumbai: The Tata Group formally felicitated the Indian Women’s Cricket Team following their landmark triumph at the ICC Women’s World Cup 2025, marking one of the most significant celebrations of women’s sport in the country. At a ceremony held at Bombay House on 16 December 2025, Tata Motors announced a special gesture of appreciation under which every member of the World Cup–winning squad will be awarded a Tata Sierra, the company’s newly unveiled model positioned as an icon reimagined for a new era.The event was attended by senior leaders from the Tata Group, including N. Chandrasekaran, Chairman of Tata Sons and Tata Motors Passenger Vehicles Ltd., and Shailesh Chandra, Managing Director and Chief Executive Officer of Tata Motors Passenger Vehicles Ltd. Their presence underscored the Group’s commitment to celebrating excellence, championing Indian athletes and supporting the growth of sport across the country.Reflecting on the significance of the team’s achievement, N. Chandrasekaran said the victory marks a generational milestone comparable to India’s historic 1983 World Cup win. He noted that while the earlier triumph had inspired countless dreams, the women’s team’s win on 2 November 2025 has created a new moment of national pride for a new generation. He praised the team for playing with joy, resilience and unwavering spirit, ensuring that every run and wicket was earned and never taken for granted. Their ability to make even towering opposition totals feel chaseable, he said, reflected a culture of excellence built over years of perseverance, experimentation, setbacks and success.Chandrasekaran added that the impact of this victory extends far beyond the trophy. The team’s example, he said, will shape the aspirations of India’s youth by teaching them persistence, teamwork and the importance of dreaming big. Each player’s individual contribution to the campaign—often stepping up at different moments—demonstrated the collective strength behind the win. He emphasised that the women's team has given the nation not only a moment of joy but a lasting memory and a standard of ambition for the next generation.Announcing the gesture of appreciation, Chandrasekaran said he was delighted that Tata Motors will gift a Tata Sierra to the champion cricketers and their support staff in recognition of their efforts. Tata Motors also confirmed that each player will be free to choose the Sierra variant that best suits their preferences, making the recognition both meaningful and personalised.The initiative reinforces Tata Motors’ longstanding association with national pride, achievement and aspiration. By honouring the team’s historic accomplishment, the company celebrates not just a sporting victory, but a cultural moment that will inspire generations to come.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 2:52 pm

பொன்முடியை பதறி ஓட வைத்தவர், மயிலம் பக்கம் ஒதுங்குவது ஏன்? - தொகுதி மாறும் சி.வி.சண்முகம்!

பொன்முடி ராஜ்ஜியம் விழுப்புரம் மாவட்டத்தை சுமார் கால் நூற்றாண்டு காலம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அங்கு முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. 1989 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்முடி, அதற்கடுத்து வந்த 1991 தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதேசமயம் 1996, 2001, 2006 என அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். இந்த வெற்றிகள் அவரை கட்சித் தலைமைக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றதால், ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டமும் அவரது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை, விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி கை காட்டுபவருக்கே சீட்டை ஒதுக்கியது அறிவாலயம். பொன்முடி ஷாக் கொடுத்த சண்முகம் கண்ணுக்கு எட்டிய தூரம் எங்களுக்கு எதிரிகளே இல்லை என்று வலம் வந்தது பொன்முடி தரப்பு. இந்த நிலையில் 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடுத்தடுத்து வெற்றிபெற்ற திண்டிவனம் தொகுதி, 2011 தேர்தலில் தனித் தொகுதியாக மாறியது. அதனால் அவரை பொன்முடியின் தொகுதிக்குள் களமிறக்கினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் 12,097 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்முடியை வீழ்த்தினார் சி.வி.சண்முகம். அதில் பொன்முடி அதிர்ந்துபோனது ஒருபுறமிருக்க, ஆலமரம் என்று நினைத்திருந்த பொன்முடி அட்டைப்பெட்டியாய் சரிந்ததால் வாயடைத்துப் போய் நின்றது அறிவாலயம். சரி… தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்து அதிக அனுபவம் பெற்றவர் பொன்முடி. பதறிப் போன பொன்முடி அதனால் 2016 தேர்தலில் சி.வி.சண்முகத்தை கண்டிப்பாக தோற்கடிப்பார் என்று நினைத்து அமைதியானது அறிவாலயம். ஆனால் தொகுதிக்குள் சி.வி.சண்முகம் சுழன்ற வேகத்தைப் பார்த்து பதறிப் போன பொன்முடி, 2016 தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதிக்கு ஓட்டமெடுத்தார். கால் நூற்றாண்டு காலம் மாவட்டத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், தொகுதி மாறியதால் கட்சிக்குள் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் அதற்கடுத்து வந்த 2016 தேர்தலிலும் இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்றார் சி.வி.சண்முகம். இதற்கிடையில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும், ராஜ்யசபா எம்.பி-யாகவும் இருந்த டாக்டர் லட்சுமணனுக்கும், சி.வி.சண்முகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், 2021 தேர்தலுக்கு முன்பு தி.மு.க-வில் இணைந்தார் டாக்டர் லட்சுமணன். எம்.எல்.ஏ லட்சுமணன் அந்தத் தேர்தலில் 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தார் லட்சுமணன். அதற்கடுத்து ராஜ்யசபா எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்ட சி.வி.சண்முகம், தி.மு.க-வுக்கு எதிராக அவ்வப்போது காரசாரமாக பேட்டிகள் கொடுத்து வந்தார். மயிலம் தொகுதியில் மையம் இந்த நிலையில்தான் யாருமே எதிர்பாராத சூழலில், வரும் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் சி.வி.சண்முகம். அதற்குக் காரணம் அவரது சொந்த ஊரான அவ்வையார்குப்பம் அந்தத் தொகுதிக்குள் வருவதாலும், வன்னியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்பதாலும் அந்தத் தொகுதியை குறி வைத்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினரான லட்சுமணன், சசிகலா ஆதரவுடன் அ.தி.மு.க-வுக்கு சென்றார். அப்போது சி.வி.சண்முகத்தை ஓரம் கட்டிய சசிகலா, அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து லட்சுமணனுக்கு கொடுத்தார். அரசியல் பரமபதம் அதே வேகத்தில் ராஜ்யசபா எம்.பி பதவியும் வழங்கப்பட்டதால், கட்சியில் அவரின் கை ஓங்க ஆரம்பித்தது. அதனால் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களிடம் இருந்த பதவிகள் பறிக்கப்பட்டு, லட்சுமணனின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்சுக்கு முதல் ஆரவுக்கரம் நீட்டிய மாவட்டச் செயலாளர் லட்சுமணன்தான். அதன்பிறகு ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைப்பு நிகழ்ந்தவுடன், லட்சுமணனிடம் இருந்து அனைத்துப் பதவிகளையும் பறித்து மீண்டும் சி.வி.சண்முகத்திடம் கொடுத்தார் இ.பி.எஸ். அதன்பிறகு அரசியல் பரமபதத்தில் சடாரென கீழே இறங்கினார் லட்சுமணன். அதையடுத்து அவர் மேலே வருவதற்கான சிறு வாய்ப்பைக் கூட சி.வி.சண்முகம் தரப்பு தரவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினுடன் எம்.எல்.ஏ லட்சுமணன் இனி அ.தி.மு.க-வில் தொடர்ந்தால் நம் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்று புரிந்து கொண்ட லட்சுமணன், 2021 தேர்தலுக்கு முன்பு தி.மு.க-வுக்குத் தாவினார். அந்தத் தேர்தலில் சி.வி.சண்முகத்தை வீழ்த்தினார் லட்சுமணன். பொன்முடியாலேயே வீழ்த்த முடியாத சி.வி.சண்முகத்தை வீழ்த்தியதால், அறிவாலயத்தின் குட்புக்கில் இடம்பிடித்தார் லட்சுமணன். அதன் பயனாக விழுப்புரம் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பதவியை வழங்கியது அறிவாலயம். தி.மு.க-வில் லட்சுமணனின் கை ஓங்கியதையடுத்து, அ.தி.மு.க-வில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் அவரிடம் ஐக்கியமாகி விட்டார்கள். இப்படியான சூழலில் இங்கு போட்டியிட்டால் அது கௌரவமான தோல்வியாகக் கூட இருக்காது என்பதால்தான், மயிலம் தொகுதிக்கு ரூட்டை திருப்பியிருக்கிறார் சி.வி.சண்முகம்.! PMK ராமதாஸ் மீதான கொலை வழக்கு முதல், தீர்ப்பு வரை! - சி.வி.சண்முகம் வழக்கு கடந்து வந்த பாதை

விகடன் 17 Dec 2025 2:51 pm

Longines announces Sara Ali Khan as Its New Friend of the Brand in India

Mumbai: Longines, the iconic Swiss watchmaker, has announced acclaimed Indian actress Sara Ali Khan as its new Friend of the Brand. Known for her radiant personality, effortless charm and refined sense of style, Sara embodies the spirit of timeless elegance that has long defined Longines’ global identity.Since her debut in 2018 with the widely praised film Kedarnath, Sara Ali Khan has emerged as one of the most admired young talents in Indian cinema. Her performances in films such as Simmba, Atrangi Re and Zara Hatke Zara Bachke have highlighted her versatility, screen presence and ability to connect with diverse audiences. A graduate of Columbia University with a degree in history and political science, she is equally known for her intellect, candour and authenticity—qualities that deepen her resonance with the Longines ethos.Celebrating the association, Sara said she is delighted to join a brand she has long admired. “I’m delighted to begin an association with Longines, a brand I’ve long admired because we echo similar values. Their timeless elegance, and their respect for legacy truly resonates with me. Longines values authenticity, celebrates grace and precision, and inspires confidence. I couldn’t be happier to join them as Brand Friend,” she said.Elegance, legacy and lineage are deeply personal themes for Sara. Raised in a family steeped in cultural tradition and artistic excellence, she carries forward a heritage shaped by generations. Her grandmother, the legendary Sharmila Tagore, remains an enduring symbol of grace and poise—attributes that Sara continues to honour in her own journey. Her family’s long-standing contribution to Indian arts and cinema has instilled in her a profound respect for heritage and continuity, making her association with Longines both fitting and meaningful.India has always played a significant role in the Longines story. The brand first entered the Indian market in 1878 and has since been cherished by generations of watch connoisseurs. Sara’s appointment strengthens this historic relationship, bridging Swiss watchmaking tradition with the elegance, energy and modernity of contemporary India.With this collaboration, Longines reaffirms its commitment to celebrating individuals who embody elegance not merely through style, but through purpose, authenticity and grace—qualities that Sara Ali Khan represents effortlessly.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 2:44 pm

கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்: பின்னணியில் ஒரு அதிர்ச்சி செய்தி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் திருமணமான தனது மகளைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்தார் ஒரு பெண்ணின் தந்தை. பின்னர், கிணறு ஒன்றில் அந்தப் பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் குஜராத்திலுள்ள Nana Varmora என்னும் கிராமத்தில் வாழ்ந்துவரும் ரம்ஜு மாமன் என்பவர், தனது மகளான குல்சம் மாமனை (19) தனது உறவினரான மோஸின் மாமனுக்கு திருமணம் செய்துகொடுத்திருந்தார். ஆனால், மோஸினுக்கு ஐந்து ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துவந்துள்ளது. அவர் அந்தப் […]

அதிரடி 17 Dec 2025 2:30 pm

கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை.. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நல்ல வாய்ப்பு!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விற்பனைக் கண்காட்சி நாளை தொடங்குகிறது.

சமயம் 17 Dec 2025 2:26 pm

Year Ender: வீடு வாங்குவோருக்கு 2025ஆம் ஆண்டு எப்படி இருந்தது? 2026ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?

வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 2025ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தற்போது இறுதி வரை எந்த மாதிரியான மாற்றங்களைச் சந்தித்தது என்றும், அடுத்து 2026ஆம் ஆண்டில் எப்படி இருக்கும் என்ற ஒரு கண்ணோட்டம்.

சமயம் 17 Dec 2025 2:15 pm

அச்சச்சோ சாண்ட்ரா அழுதுட்டாரே: பிரஜின் மனைவி பற்றி சூப்பர் கேள்வி கேட்ட FJ, பாருவுக்கு வேற அடி

கானா வினோத், FJ, கம்ருதீன் சேர்ந்து சாண்ட்ரா பற்றி பேசியிருக்கிறார்கள். அதில் வினோத் சொன்ன ஒரு விஷயமும், எஃப்.ஜே. கேட்ட கேள்வியும் தான் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

சமயம் 17 Dec 2025 2:12 pm

Zaggle allots 1.06 Mn Convertible Warrants to Promoter Group and BCCL

Mumbai, India: Zaggle Prepaid Ocean Services Limited (“Zaggle”), one of India’s leading spend management and SaaS-led FinTech companies, has announced that its Board of Directors has approved the allotment of 1,058,201 convertible warrants on a preferential basis. The approval follows the shareholder nod received at the Extraordinary General Meeting held on October 31, 2025, along with in-principle clearances from the stock exchanges. The preferential issue is part of a capital infusion earlier announced by the Promoter Group and Bennett Coleman and Company Limited (BCCL), and aligns with Zaggle’s long-term strategic growth plans.The warrants have been issued at an issue price of ₹567 per warrant in accordance with SEBI’s Issue of Capital and Disclosure Requirements (ICDR) Regulations, 2018. Of the total warrants allotted, 352,734 have been issued to RAN Ventures Private Limited, which is part of the promoter group, while 705,467 warrants have been allotted to BCCL, a non-promoter investor. The company said this dual infusion, comprising internal capital commitment from promoters and brand-led investment from a marquee media conglomerate, enhances both financial resilience and strategic positioning. The promoter group reiterated its belief that Zaggle remains significantly undervalued even at the current valuation and expressed intent to further increase its stake, underscoring confidence in the company’s long-term prospects and reinforcing shareholder alignment.BCCL, known for partnering with some of India’s fastest-growing enterprises, brings a media-first investment approach aimed at accelerating brand equity, customer trust and category leadership. Its participation is expected to support Zaggle’s visibility and market expansion as the company continues to strengthen its presence in the enterprise spend management ecosystem.Commenting on the development, Dr. Raj P. Narayanam, Founder and Executive Chairman of Zaggle, said the allotment of warrants reflects the continued confidence of stakeholders in the company’s long-term strategy, governance standards and growth trajectory. He noted that the proceeds from the preferential issue will bolster the company’s capital base and enable the execution of its strategic growth initiatives, while remaining firmly aligned with regulatory requirements and shareholder interests. According to him, the combined support of the promoters and BCCL provides a strong foundation of stability and credibility, while accelerating Zaggle’s momentum as it prepares for its next phase of expansion.Zaggle said that its current position is strengthened by a combination of promoter-led conviction and external brand validation. This dual reinforcement enhances governance, alignment and market reach, supporting the company’s mission of delivering intelligent, AI-driven spend management solutions to enterprises across India.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 2:00 pm

என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

சென்னை : ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனா ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பத்திரனாவை மீண்டும் வாங்க முயற்சி செய்தாலும், அதிக தொகை செலவழித்த கொல்கத்தா அணி அவரை கைப்பற்றியது. இது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், KKR ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் […]

டினேசுவடு 17 Dec 2025 1:57 pm

பென்சன் திட்டத்தில் வந்த பெரிய மாற்றம்.. இனி ஓய்வூதியதாரர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும்!

ஓய்வூதியதாரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையில் தேசிய பென்சன் திட்டத்தில் மிக முக்கியமான மாற்றத்தை மத்திய அரசு செய்துள்ளது.

சமயம் 17 Dec 2025 1:57 pm

முட்டைகளில் Nitrofuran இருக்கிறதா? FSSAI மேற்கொள்ளும் ஆய்வு

Eggoz நிறுவனத்தின் முட்டைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய Nitrofuran இருப்பதாக சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோவிற்குப் பிறகு, முட்டை வாங்குவதிலும், சாப்பிடுவதிலும் பயம் எழுகிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் உள்ள முட்டைகளை ஆய்வு செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்னெடுப்பு ஒன்றைக் கையிலெடுத்துள்ளது. அதன் படி, இந்தியாவில் உள்ள பிராண்டட் மற்றும் பிராண்ட் அல்லாத முட்டைகளின் சாம்பிள்களை பெறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி பெறப்பட்ட முட்டைகள் இந்தியா முழுவதும் உள்ள 10 ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட உள்ளது. முட்டை தங்கம் விலையை நிலைப்படுத்த இந்திய அரசு என்ன செய்துள்ளது? - நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் பதில்! ஏன் பிரச்னை? நைட்ரோஃபுரான் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியதாகும். கடந்த மார்ச் மாதம், இந்திய அரசு நைட்ரோஃபுரான் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை, விநியோகம் போன்றவற்றிற்கு முழுவதும் தடை விதித்தது. இந்த நிலையில் தான், முட்டைகளில் நைட்ரோஃபுரான் இருப்பதாக வீடியோ ஷேர் ஆனது. Eggoz நிறுவனத்தின் அறிக்கை Eggoz நிறுவனம் தங்களது முட்டைகளை ஆய்வு செய்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்களது முட்டையில் இந்த மாதிரியான எந்த கலப்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to

விகடன் 17 Dec 2025 1:56 pm

மத்திய அரசின் நிறுவனத்தில் இளம் பொறியாளர் வேலைவாய்ப்பு; 44 காலிப்பணியிடங்கள் - நல்ல சம்பளத்தில் அரசு வேலை

உலோகவியல் மற்றும் பொறியியல் கண்சல்டண்சி நிறுவனம் (MECON). இந்நிறுவனம் மூலம் அனுபவமுள்ள பொறியாளர், அதிகாரிகள் மத்திய அரசு திட்டங்களில் பணியாற்ற எடுக்கப்பட உள்ளனர். அதன்படி, 44 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

சமயம் 17 Dec 2025 1:45 pm

White Rivers Media wins digital transformation mandate for SMFG India Credit

Mumbai: White Rivers Media (WRM), one of India’s leading independent digital agencies, has been appointed to lead the digital transformation for SMFG India Credit, a rapidly growing non-banking financial company (NBFC) and a wholly owned subsidiary of Sumitomo Mitsui Financial Group (SMFG).Under the mandate, WRM will design and execute a comprehensive digital strategy aimed at strengthening SMFG India Credit’s online presence and enhancing customer engagement across India.The scope of work includes social media strategy, integrated digital campaigns, and content creation, with a strong focus on engagement-led storytelling.WRM will also work towards expanding SMFG India Credit’s digital footprint by participating in cultural and topical conversations and delivering content that resonates with diverse audience segments, particularly underserved communities.[caption id=attachment_2485111 align=alignleft width=200] Shrenik Gandhi [/caption]Commenting on the appointment, Shrenik Gandhi, Co-founder and Chief Executive Officer, White Rivers Media , said, “Our understanding of digital trends and audience behaviour will help amplify SMFG India Credit’s voice and build meaningful connections with customers across platforms.” SMFG India Credit Co. Ltd. is registered with the Reserve Bank of India as an NBFC–Investment and Credit Company (NBFC-ICC) and has been operating in India since 2007.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 1:33 pm

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலி, அவருக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக, ஜோர்டான் நாட்டுக்கு திங்கள்கிழமை(டிச. 15) சென்றடைந்தார். ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் எத்தியோப்பியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது, அவரை […]

அதிரடி 17 Dec 2025 1:30 pm

அமெரிக்காவிற்குள் நுழைய மேலும் 6 நாடுகளுக்குத் தடை:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், பயணத் தடை… The post அமெரிக்காவிற்குள் நுழைய மேலும் 6 நாடுகளுக்குத் தடை: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 1:27 pm

பெங்களூருவில் துயரம்…மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!

பெங்களூரு : நகரின் பிஸ்யான சாலையில் நடந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரூபா என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த கணவர் வெங்கட்ரமணாவை காப்பாற்றும் படி சாலையோரம் நின்று கண்ணீர் மல்க கதறினார். வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டு கெஞ்சியபோதும், பல வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர். இதனால் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போனதால் வெங்கட்ரமணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நடந்தது பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு […]

டினேசுவடு 17 Dec 2025 1:21 pm

  கால்பந்து மைதானத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் –  3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி! ✈️

மெக்சிகோவில் அவசரமாகத் தரையிறங்க முயன்ற தனியார் ஜெட் விமானம் ஒன்று, கால்பந்து மைதானத்திற்கு அருகே உள்ள கிடங்கு (Warehouse)… The post கால்பந்து மைதானத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் – 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி! ✈️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 1:15 pm

தங்கம் விலையை நிலைப்படுத்த இந்திய அரசு என்ன செய்துள்ளது? - நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் பதில்!

எப்போதுமே இந்தியர்களுக்குத் தங்கத்தின் மீது தனி சென்டிமென்ட் உண்டு. ஆனால், நேற்று முன்தினம் அதன் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி, இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி இருக்கிறது. ஆம்... தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருண் நேரு மற்றும் சுதா எழுப்பிய கேள்விகள்... அதற்கு மத்திய நிதி அமைச்சக இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்கள்... நிதி அமைச்சகத்தை சேர்ந்த இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தங்கம், வெள்ளி அல்ல; இனி 'இந்த' உலோகத்திற்கு அதிக மவுசு - அலர்ட் ஆகுங்கள் முதலீட்டாளர்களே 1. கடந்த ஓராண்டில், இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்களை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளதா? ``உலகளவிலான தங்கம் மற்றும் வெள்ளி விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, வரிகள் போன்றவை இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையை நிர்ணயிக்கின்றன. உலக அளவில் தற்போது பல பிரச்னைகள் நிலவி வருகிறது மற்றும் உலகத்தின் வளர்ச்சியில் நிலையற்றத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், மத்திய வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் தங்கத்தை பாதுகாப்பான ஒன்றாக கருதி தொடர்ந்து வாங்கி வருகின்றனர். இது தான் தற்போதைய தங்கம் விலை உயர்விற்கு மிக முக்கிய காரணம்.” 2. தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வினால், பண்டிகை மற்றும் திருமண சீசன்களில் இந்திய குடும்பங்கள் சந்திக்கும் நிதி நெருக்கடியை மத்திய அரசு கவனித்திருக்கிறதா? ``கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் அடிப்படையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்துள்ளது. மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியை ஒருவித முதலீடாகவும் பார்க்கின்றனர். அதனால், ஏற்கெனவே தங்கம் மற்றும் வெள்ளி வாங்கி வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வால், அவர்கள் வைத்திருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்திருக்கும். புதிதாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்கள் பணத்தை தங்கம் மற்றும் வெள்ளியாக மாற்றுகிறார்கள். நீண்ட காலத்தில், அவர்கள் வாங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயரலாம்.” வெள்ளி விலை ஏற்றம் 2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள் 3. தங்கம் மற்றும் வெள்ளி விலையை நிலைப்படுத்த இந்திய அரசு ஏதாவது செய்திருக்கிறதா? ரீடெயில் சந்தையில் விற்பனையாகும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வை நடைமுறைப்படுத்த இந்திய அரசு ஏதாவது செய்துள்ளதா? ``ஏற்கெனவே கூறியதுபோல, தங்கத்தின் விலை சர்வதேச சந்தையைப் பொறுத்தே அமைகிறது. தங்கம் மற்றும் வெள்ளி நுகர்வோருக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இந்திய அரசு, 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், தங்கம் இறக்குமதியின் சுங்க வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைத்துள்ளது. மேலும், பிசிக்கல் தங்கத்தின் தேவையைக் குறைக்க தங்கம் பணமாக்குதல் திட்டம், தங்க இ.டி.எஃப்கள், தங்கப் பத்திரங்கள் போன்றவற்றை இந்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதியையும், அதன் மீது உள்ள அழுத்தத்தையும் குறைக்கலாம். இதன் மூலம், இந்தியாவில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியையே பயன்படுத்தலாம். சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் தங்க இறக்குமதி, தங்க வர்த்தகத்தை தடுக்க... கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ” இந்திய ரிசர்வ் வங்கி இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A 4.இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கம் கையிருப்பு இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்துமா? ”இந்திய ரிசர்வ் வங்கி, 1934 சட்டப்படி, இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் அனைத்து சொத்துகளும் இந்திய ரூபாய்க்கு மிகவும் உதவும். இங்கு சொத்துகள் என்று கூறப்படுவது தங்கம் மற்றும் வெளிநாட்டு பத்திரங்கள் ஆகும். 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான தரவுகளின் படி, இந்திய ரிசர்வ் வங்கி 879.58 மெட்ரிக் டன் தங்கத்தைக் கையிருப்பாக வைத்துள்ளது. இந்தக் கையிருப்பு உலகளவில் இந்திய ரூபாய் மற்றும் ஒட்டுமொத்த இந்திய பொருளாதார வெளிப்புற நிலைத்தன்மை மீது நம்பிக்கை அளிக்கும். ” 'இந்த' சூழலில் தங்க நகை அடமானக் கடனை எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிவிடாதீர்கள்

விகடன் 17 Dec 2025 1:08 pm

காப்பீட்டுத் துறையில் வந்த பெரிய மாற்றம்.. அந்நிய நேரடி முதலீட்டால் கிடைக்கும் நன்மைகள்!

இந்திய காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் அதனால மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

சமயம் 17 Dec 2025 1:06 pm

Pidge names Arpit Bansal as Head of Marketing

New Delhi: Pidge, a technology-driven logistics and fulfilment solutions provider, has announced the appointment of Arpit Bansal as Head of Marketing. The appointment comes as Pidge accelerates its brand transformation journey, expands into new categories and strengthens its position in India’s rapidly evolving logistics and last-mile delivery ecosystem.In his new role, Bansal will lead full-funnel marketing initiatives, oversee product communication and sharpen category positioning, supporting Pidge’s focus on scaling a technology-first logistics platform while building trust with new and existing customers.Bansal brings over 12 years of cross-industry marketing experience, with leadership roles across Escorts, Sterlite Power, Evalueserve and Paytm. His expertise spans brand building, digital-first growth, integrated communication and driving adoption at scale across sectors including fintech, mobility, digital payments and enterprise solutions.[caption id=attachment_2485104 align=alignleft width=200] Ratnesh Verma [/caption]Commenting on the appointment, Ratnesh Verma, Founder & CEO of Pidge, said, “Marketing at Pidge has always been about more than visibility - it is about building trust in a category where reliability is everything. As we scale our technology, expand our fulfillment network, and work closely with enterprise customers, the role of longitudinal full-funnel marketing becomes even more critical. Arpit’s strategic vision, data-driven mindset, and deep understanding of consumer behavior make him the right leader to amplify our brand and accelerate our next phase of growth. His deep experience across high-growth sectors and his record of building strong, trusted brands aligns closely with Pidge’s mission.” Sharing his excitement, Arpit Bansal said, “Pidge has already made significant strides in addressing the hardest logistics problems - it is reshaping the category with a strong commitment to trust, reliability, and transparency. I am thrilled to join at such a pivotal phase of growth. My focus will be on creating a differentiated brand experience, building integrated marketing engines, and crafting narratives that highlight Pidge’s disruption. I want to evolve Pidge into one of the most trusted and influential brands in India’s logistics ecosystem.” Bansal’s appointment underscores Pidge’s continued emphasis on brand credibility, scale and customer-centricity, as the company expands its fulfilment network, enhances its technology stack and deepens partnerships with enterprise customers across India.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 1:04 pm

Scribbld appoints Mustanseer Jawadwala as Chief Growth Officer – India and UAE

Mumbai: Scribbld, the bootstrapped creative and digital agency founded by Kajol Bheda, announced the appointment of Mustanseer Jawadwala as its Chief Growth Officer (CGO), reinforcing its focus on strategic expansion across India and the UAE.In his new role, Jawadwala will spearhead Scribbld’s growth charter across revenue systems, partnerships, leadership development, and service expansion. His mandate includes building robust inbound and outbound pipelines, strengthening client and partner relationships, introducing integrated marketing service lines, and creating independent teams capable of managing end-to-end mandates.Commenting on his appointment, Mustanseer Jawadwala said, “Scribbld is at a very exciting inflection point. What drew me in was the opportunity to build repeatable growth frameworks while preserving the culture and creative depth the team has built. My focus will be on creating strong systems that make teams more efficient, building meaningful partnerships, and strengthening India operations in a way that supports our UAE and future global expansion. The goal is sustainable growth, not growth for the sake of it.” [caption id=attachment_2485099 align=alignleft width=206] Kajol Bheda [/caption] Founder Kajol Bheda added, “As Scribbld expands across markets, we’re investing in leadership that can scale both our ambition and our standards. Mustan brings a structured, forward-looking approach to growth, and I’m confident he will add meaningful depth to the organisation we are building for the long term.” She further said, “It’s not about filling a gap; it’s about elevating the foundation we’ve already built.” Prior to joining Scribbld, Jawadwala served as Assistant Manager at Paisabazaar, where he played a key role in building ad-sales offerings, go-to-market strategies, and partnership frameworks. Over his career, he has worked with brands including HDFC Bank, ICICI Bank, IDFC Bank, Vidhu Vinod Chopra Films, and Benaras Media Works. He has also been a Chemistry educator for over nine years, reflecting his passion for teaching and team development.In the near term, Jawadwala will focus on strengthening Scribbld’s India leadership team, expanding its service offerings, building predictable business pipelines, and enhancing operational discipline to support scalable UAE growth.With this appointment, Scribbld continues to position itself as a future-ready agency that balances creativity with structure, ambition with sustainability, and scale with culture.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 1:01 pm

Mayfair Housing appoints Nitin Nagpal as Chief Sales & Marketing Officer

Mumbai: Mayfair Housing, a real estate brand, has appointed Nitin Nagpal as its Chief Sales & Marketing Officer (CSMO), marking a strategic move to strengthen growth, brand stewardship, and market responsiveness as the group enters its next phase of expansion.In his new role, Nagpal will oversee Mayfair Housing’s integrated sales and marketing mandate, focusing on revenue optimisation, market-led product positioning, pricing strategies, stakeholder engagement, and the development of resilient sales ecosystems across the group’s portfolio. Aditya N Shah, Joint Managing Director of Mayfair Housing, said, “The Chief Sales & Marketing Officer role is pivotal to our growth journey. Nitin Nagpal brings with him the ability to translate strategy into performance while building brands anchored in credibility and customer confidence. Mayfair Housing will gain from his experience and leadership as it deepens its market presence and delivers sustainable, long-term growth.” Nitin Nagpal, who has over two decades of experience across residential, commercial, retail, hospitality, and pre-lease segments, commented, “The CSMO role at Mayfair Housing is an opportunity to integrate growth, brand and customer value into a single strategic vision. Mayfair’s philosophy aligns closely with my own approach to real estate. I look forward to working with the leadership team to strengthen our market relevance, create differentiated offerings and deliver value that is enduring to all stakeholders.” Prior to joining Mayfair Housing, Nagpal held leadership roles at Dosti Realty Ltd., where he served as Director – Sales, Marketing and Presales Sourcing, and played a key role in shaping HDFC Realty Ltd.’s residential and commercial verticals. He has been recognised with the CREDAI MCHI Golden Pillar Award for Marketing Specialist of the Year 2025.Guided by its SARA philosophy – Safe, Appreciating, and Reliable Assets – Mayfair Housing has built a reputation anchored in trust and transparency. With Nagpal’s appointment as CSMO, the company aims to sharpen its growth strategy while continuing its customer-first approach and fostering an empowered, future-ready workforce.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 12:54 pm

விஜய் கூட்டம் : `சிறுவர், கர்பிணிகளுக்கு அனுமதி இல்லை; பின் தொடர கூடாது’ - தவெக போடும் கண்டிஷன்

ஈரோடு அருகே விஜயமங்கலத்தை அடுத்த சாரளையில் தவெக சார்பில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசவுள்ளார். கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு மேற்கு மண்டலத்தில் நடைபெறும் கூட்டம் என்பதால், போலீஸ் தரப்பில் இருந்து கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த செங்கோட்டையனின் சொந்த மாவட்டத்தில் கூட்டம் நடைபெறுவதால், தனது பலத்தை நிரூபிக்கும் கட்டாயமும் அவருக்கு உள்ளது. இதற்காக அவரே முன்னின்று கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கூட்டத்தைச் சேர்ப்பதிலும் செங்கோட்டையன் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அவரது சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையம், பவானி, மற்றும் பவானிசாகர் தொகுதிகளில் இருந்து அதிகப்படியாக கூட்டத்தை கொண்டு வர செங்கோட்டையனின் ஆதவராளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க தவெக தலைமையில் இருந்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிறுவர்,சிறுமியருக்கு அனுமதி இல்லை இதுதொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெட்டிகளிலும் காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வருவேர், முதியவர்கள். உடல்நலம் குன்றியவர்கள், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. விஜய் நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போது அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்துக்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், மேலும் அங்கே செல்லும் வழிகளில் மற்றும் திரும்பி வரும் வழிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வகையில் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். விஜய் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்” என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் விஜய் : 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள்; 60 ஏக்கரில் பார்க்கிங் - என்னென்ன ஏற்பாடுகள்?

விகடன் 17 Dec 2025 12:54 pm

அன்புமணி மீது ஊழல் வழக்கு? CBI விரைந்து விசாரிக்க வேண்டும் - ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

அன்புமணி மீதான ஊழல் வழக்கை CBI விரைந்து விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 17 Dec 2025 12:46 pm

ராமநாதபுரம்: சாலையில் குவிந்த மணல்; சறுக்கி விழுந்த டூவீலர் - கணவருக்கு உணவு எடுத்து சென்ற பெண் பலி

ராமநாதபுரம் களத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (33). இவரது கணவர் பூவலிங்கம். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். வளர்மதி, நேற்று கொத்தனார் வேலைக்கு சென்ற தனது கணவர் பூவலிங்கத்திற்கு மதிய உணவு கொடுப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார். பாரதி நகரில் இருந்து ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த வளர்மதியின் டூவீலர் சாலையில் குவிந்து கிடந்த மணலில் சிக்கி நிலை தடுமாறியது. சாலையோர மணலில் சிக்கிய டூவீலர் இதனால் சாலையில் சாய்ந்த டூவீலரில் இருந்து வளர்மதியியும் சாலையில் விழுந்துள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து சாலையில் விழுந்து கிடந்த வளர்மதியின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் வளர்மதி அந்த இடத்திலேயே முகம் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கேணிக்கரை காவல் நிலைய போலீஸார் வளர்மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய பேருந்து ராமநாதபுரம் பிரதான சாலையின் இரு புறங்களிலும் குவிந்து கிடக்கும் மணலை அப்புறபடுத்த தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே போல் பேருந்து சக்கரங்களில் சிக்கி விபத்து நேராமல் இருக்க பேருந்தின் இரு சக்கரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தடுப்பு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடுப்பு பல பேருந்துகளில் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தலைக் கவசம் அணிந்திருந்த நிலையிலும் சாலையில் விழுந்த பெண் மீது பேருந்து சக்கரம் ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 17 Dec 2025 12:44 pm

நள்ளிரவில் மண்டைதீவில் பயங்கரம்: வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்! ⚔️

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் நள்ளிரவில் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று, தனிமையில் இருந்த இளம் தாயையும் குழந்தையையும் அச்சுறுத்தியதுடன்,… The post நள்ளிரவில் மண்டைதீவில் பயங்கரம்: வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்! ⚔️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 12:38 pm

வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்த வேன் ; மயிரிழையில் உயிர்தப்பிய யுவதிகள்!

திருகோணமலை கந்தளாய் – சேருநுவர பிரதான வீதியில், அணைக்கட்டுக்கு முன்னால், ஆடைத் தொழிற்சாலை யுவதிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்துள்ளது. மேலதிக விசாரணை இன்று காலை 8.00 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. கந்தளாயில் இருந்து ஆடைத் தொழிற்சாலை யுவதிகளை வான் எல பகுதிக்கு ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, கந்தளாய் அணைக்கட்டுக்கு முன்னால் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்திலிருந்த இரண்டு மின்சாரக் கம்பங்களை பலமாக மோதி உடைத்துக்கொண்டு அருகில் இருந்த […]

அதிரடி 17 Dec 2025 12:38 pm

நாட்டில் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சி ; கொட்டி தீர்க்க போகும் கனமழை

வளிமண்டலத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் […]

அதிரடி 17 Dec 2025 12:35 pm

நாற்காலி போன பிறகு மரியாதை இருக்குமா? - அரசு ஊழியர்கள் அவசியம் படிக்க வேண்டிய உண்மை!

அலுவலகத்தில் நாள் முடிந்து பையை மூடும்போது, எப்போதாவது மனசுக்குள்ள கேட்டுருக்கீங்களா? “நாளை இந்த மேசை மட்டும் இல்லைனா, என் வாழ்க்கை எப்படி இருக்கும்?” அரசு ஊழியரா இருக்குறது சாதாரண வேலையில்லை; அது ஒரு பொறுப்பு. காலை அலுவலகம் வந்த உடனே கோப்புகள், மீட்டிங்ஸ், பொதுமக்களின் குறைகள், ஆய்வுகள், மேலதிகாரியின் உத்தரவு – நாள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும். ஊர்ல ரோடு கேட்டா நம்மையே திட்டுவாங்க, அரசுத் திட்டம் வந்து சேருதா இல்லையா என்ற கேள்வியும் நம்ம மேலத்தான். உங்களுடைய ஒவ்வொரு கையொப்பமும், யாரோ ஒருத்தருடைய வாழ்க்கையைத் திசை மாற்றும் முடிவு. அந்த அளவுக்கு மற்றவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் நீங்க, உங்களோட எதிர்காலத்துக்கு இவ்வளவு கவனம் கொடுக்கிறீங்களா? பென்ஷன் வருமே... அப்புறம் என்ன கவலை? – இந்தக் கணக்கு சரியா? பொது ஊழியர்களுக்குக் கிடைக்கிற பெரிய பாதுகாப்பு என்ன? மாதந்தோறும் நிச்சய சம்பளம், பிஎஃப், கிராட்டுவிட்டி, மருத்துவ வசதிகள்... இதெல்லாம் உண்மைதான். ஆனா... 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த பலருக்கும் பழைய ‘டிஃபைன்டு பென்ஷன்’ (Defined Pension) கிடையாது; அதற்குப் பதிலாக NPS (National Pension System) தான். ரிட்டயர்மென்ட்ல மாசம் எவ்வளவு கைக்கு வரும்னு ஒரு உத்திரவாதமும் இல்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்துதான் அது அமையும். சமீபத்திய ஆய்வுகள் ஓர் அதிர்ச்சியான உண்மையைக் காட்டுது: தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும் பகுதியினர், தங்களின் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி வாழ்க்கையை ஓட்ட முடியாமல், சின்ன சின்ன செலவுகளுக்குக் கூட பிள்ளைகளையோ, உறவினர்களையோ எதிர்பார்த்து நிற்கும் நிலைமையில் இருக்காங்க. அரசு உத்தியோகம் பார்த்தவரு... ரிட்டயர்டு ஆகி இப்போ கஷ்டப்படுறாருனு நாலு பேர் சொல்லும்போது, அந்த வலி எவ்ளோ பெருசுன்னு அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். சுயமரியாதைக்குப் பேர் போன நம்ம ஆளுங்களுக்கு, இதை விடப் பெரிய வலி இருக்க முடியுமா? Old age நீங்க மாட்டிக்கிட்டிருக்கிற ஒரு பெரிய சிக்கல்! அலுவலக வாழ்க்கைக்குப் பிறகு, எனக்கு யார் மாசாமாசம் சம்பளம் தருவா? உங்களுக்குள்ள இந்தக் கேள்வி இருக்கா? ஓய்வுக்கு இன்னும் 10-15 வருஷம் இருக்கும் 45-55 வயசுக்காரங்க, இன்னும் நிறைய டைம் இருக்கே... அப்போ பார்த்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காங்க. சிலர், கடன் எல்லாம் முடியட்டும், அப்புறம் சேமிக்கலாம்னு தள்ளிப்போடுறாங்க. இன்னும் சிலர், மிச்சப் பணத்தை FD-ல போட்டுருக்கேன், அது போதும்னு நினைக்கிறாங்க. இங்கதான் நிதி சார்ந்த ஆபத்து (Financial Risk) ஆரம்பிக்குது. FD வட்டி விகிதம் சுமார் 6-7% இருக்கும். ஆனா, விலைவாசி உயர்வு (Inflation) கிட்டத்தட்ட அதே 6% அளவுக்கு இருக்கு. அதுவும் மருத்துவச் செலவுகள் வருஷத்துக்கு 10-12% ஏறுது. அப்படின்னா, நீங்க கஷ்டப்பட்டு சேமிச்ச பணத்தோட மதிப்பு, காலப்போக்குல கூடி இருக்கா? இல்ல, தேஞ்சு போயிருக்கா? யோசிச்சுப் பாருங்க. இதைவிடப் பெரிய ஆபத்து, இந்த வருஷம் ஒரு போனஸ் வந்துச்சு... கார் மாத்திடலாம், ஒரு டூர் போயிட்டு வந்திடலாம்னு நினைக்கிறதுதான் நம்ம மனசு. இதனால ஓய்வுக்காலம், பிள்ளைகளின் உயர்கல்வி போன்ற நீண்ட காலக் கனவுகள் காற்றில் பறந்துவிடுகின்றன. Personal Loan: பண்டிகை கால பரிசுகளுக்காக லோனா? தனிநபர் கடன் பின்னால் உள்ள அதிர்ச்சி தரும் நிஜங்கள்! ஒரு சின்ன கணக்கு... பெரிய பாடம்! இப்போ உங்களுக்கு 45 வயசுன்னு வைங்க. ரிட்டயர் ஆக இன்னும் 15 வருஷம் இருக்கு. மாசம் ₹10,000 மட்டும் ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துல SIP பண்றீங்க. வருஷத்துக்கு சராசரியா 12% வருமானம் கிடைச்சா கூட: 60 வயசுல உங்க கையில சுமார் ₹50 லட்சம் இருக்கும்! (இது திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடும்). இதுவே, இப்போ செலவு அதிகம்... அப்புறம் பார்த்துக்கலாம்னு வெறும் 5 வருஷம் தள்ளிப்போட்டு, 50 வயசுல ஆரம்பிச்சா? அதே 60 வயசுல, உங்க கையில ₹23 முதல் 24 லட்சம்தான் இருக்கும். வித்தியாசம்: ₹26 லட்சம்! ஆள் ஒருத்தர்தான், கட்டின தொகை ஒண்ணுதான். ஆனா, வெறும் 5 வருஷத் தாமதத்தால் வந்த நஷ்டம் எவ்வளவு பாருங்க! இதுதான் கூட்டு வட்டியோட (Power of Compounding) மாயம். இன்று செயல்படாம விட்டா, நாளை நீங்க கண்டிப்பா சிரமப்பட்டுதான் ஆகணும்.  தீர்வு என்ன? SIP-ஐ SWP-ஆக மாற்றும் கலை! SIP to SWP மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் நமக்கு செட் ஆகுமா?னு தயங்குறீங்களா? கவலைப்படாதீங்க. அரசு ஊழியர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது 100% சட்டப்படி சரியானது. இதில் எந்தத் தடையும் இல்லை. சரியான திட்டமிடலுடன், SIP மூலம் நீங்க சேர்க்கும் பணத்தை, ரிட்டயர்மென்டுக்கு அப்புறம் SWP (Systematic Withdrawal Plan) மூலமா, ஒரு இரண்டாவது பென்ஷனாக மாற்ற முடியும்.  பணம் உங்க பெயரிலேயே இருக்கும். எப்போ வேணும்னாலும் பணத்தை எடுக்கலாம். உங்க மாதாந்திரச் செலவுக்கும், பணவீக்கத்துக்கும் ஏற்ப, பணத்தை எடுத்துக்கலாம். உங்க அரசு பென்ஷனுடன், இந்த முதலீட்டு பென்ஷனும் சேரும்போது, நீங்கதான் ராஜா, நீங்கதான் ராணி! யாரையும் நம்பி இருக்கத் தேவையில்லை. கையில ₹50 லட்சம் இருக்கு... இதை எப்படிப் பெருக்குவது? – 50+ வயதினரின் கேள்வி! பல 50+ வயது அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பெரிய குழப்பம் இதுதான்: சேமித்த மொத்த பணத்தை வங்கியில் போட்டால் வட்டி குறைவு; பங்குச்சந்தையில் போட்டால் பயம். இதற்குத் தீர்வுதான் SWP (Systematic Withdrawal Plan). உதாரணத்திற்கு, உங்களிடம் ₹50 லட்சம் இருந்தால், அதைச் சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து, மாதம் ₹30,000 முதல் ₹35,000 வரை பாதுகாப்பான வருமானமாகப் பெறலாம். விசேஷம் என்னவென்றால், நீங்கள் மாதம் பணம் எடுத்தாலும், மூலதனம் (Capital) பணவீக்கத்தைத் தாண்டி வளர்ந்துகொண்டே இருக்கும். அதாவது, பழத்தையும் சாப்பிடலாம்; மரமும் வளரும்! SIP to SWP: இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு! இதெல்லாம் சரிதான்... ஆனா, எனக்கு யார் சொல்லித்தருவா? புத்தகத்தைப் படிச்சா புரியலையே... என்ற உங்க மனக்குரல் கேட்குது. கவலைப்படாதீங்க! உங்களுக்காகவே, அரசு ஊழியர்களுக்கென ஒரு பிரத்யேக ஆன்லைன் வகுப்புக்கு ஏற்பாடு செஞ்சிருக்கோம். SIP to SWP தலைப்பு: SIP to SWP: அமைதியான வாழ்க்கைக்கான அஸ்திவாரம் தேதி: டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 7:00 – 8:30 மணி மொழி: எளிய தமிழில், ஆன்லைனில் (Zoom) பேச்சாளர்: திரு. ஏ.ஆர். குமார் – முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன் (தற்போது Chief of Content, Labham) இந்த 90 நிமிஷத்துல, உங்க சம்பளம், பென்ஷன், NPS, மியூச்சுவல் ஃபண்ட் எல்லாத்தையும் சேர்த்து, உங்களுக்கான ஒரு முழுமையான ஓய்வுக்காலத் திட்டத்தை எப்படி உருவாக்குறதுனு கத்துக்கப் போறீங்க. பதிவு முற்றிலும் இலவசம். ஆனா, முதல் 75 பேருக்கு மட்டும்தான் இடம். கூட்டம் அதிகமாகாமல், ஒவ்வொருத்தருக்கும் தெளிவா புரியவைக்க இந்த ஏற்பாடு. அலுவலகத்துக்காக தினமும் நூறு முடிவுகள் எடுத்திருப்பீங்க. இந்த ஒரு முடிவு உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக! இப்போதே உங்கள் இடத்தை புக் செய்ய, கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க: https://forms.gle/5q5YhLL7ifUsWnVN9 (இந்த ஒரு மணி நேரம், உங்க அடுத்த 30 வருஷ நிம்மதிக்கு உத்தரவாதம்! மிஸ் பண்ணிடாதீங்க!) குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சந்தை அபாயங்களை உட்ப்பட்டவை. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைச் சரியாகப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மாதம் ரூ.2,00,000 வருமானம் வேண்டுமா? Retirement Life-ஐ நிம்மதியாகக் கழிக்க இதுதான் ஒரே வழி!

விகடன் 17 Dec 2025 12:31 pm

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானின் பெரிய நகரமான கராச்சியில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் பலுசிஸ்தானின் சோன்மியானியில் 12 கி.மீ ஆழத்திலும், கராச்சியிலிருந்து சுமார் 87 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. சோன்மியானி ஒரு […]

அதிரடி 17 Dec 2025 12:30 pm

கரவெட்டியில் பரபரப்பு: ஆசன ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு –கூட்டத்தில் இருந்து தவிசாளர் வெளிநடப்பு! ‍♂️

கரவெட்டியில் பரபரப்பு: ஆசன ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு – கூட்டத்தில் இருந்து தவிசாளர் வெளிநடப்பு! ‍♂️ வடமராட்சி தெற்கு,… The post கரவெட்டியில் பரபரப்பு: ஆசன ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு – கூட்டத்தில் இருந்து தவிசாளர் வெளிநடப்பு! ‍♂️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 12:29 pm

வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறி? வீதிக்கு இறங்கிய மருத்துவர்கள், ஊழியர்கள்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இணைந்து இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு கோரி மருத்துவர்கள், ஊழியர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறி அண்மையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து பொலிஸாரால் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு வைத்தியர்கள், பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

அதிரடி 17 Dec 2025 12:27 pm

Kotak Life names Sourabh Chatterjee as Chief Technology & Digital Transformation Officer

Mumbai: Kotak Mahindra Life Insurance Company Limited (Kotak Life) has announced the appointment of Sourabh Chatterjee as its Chief Technology and Digital Transformation Officer. Bringing over 26 years of experience across life, general, and health insurance in India, Southeast Asia, and the United States, Chatterjee will lead Kotak Life’s technology strategy and digital transformation initiatives.Sourabh joins Kotak Life from Oona Insurance, where he served as Group Chief Technology Officer and spearheaded the rollout of the multi-country, multi-tenant “Insurance as a Service” platform, establishing a scalable digital ecosystem across multiple markets. His appointment follows the superannuation of Kirti Patil, who served as Chief Technology Officer for over two decades at Kotak Life.[caption id=attachment_2485089 align=alignleft width=200] Mahesh Balasubramanian [/caption] Mahesh Balasubramanian, Managing Director, Kotak Life, said, “We are delighted to welcome Sourabh to Kotak Life. His proven ability to leverage technology for business growth and operational efficiency will be pivotal as we strengthen our capabilities. Our focus is on harnessing AI, automation and advanced analytics to deliver superior customer experiences, improve underwriting precision and optimise operations. His leadership will help us accelerate innovation and deliver superior value to our customers and stakeholders.” Sourabh Chatterjee added, “Joining Kotak Life at this pivotal moment is an incredible opportunity. AI and automation are redefining how insurers operate and my focus will be on building scalable platforms that unlock growth, improve risk management and deliver superior customer journeys. Our goal is to use technology not just as an enabler but as a driver of profitability and long-term value creation. Kotak Life is well-positioned to lead this transformation and I look forward to contributing to that vision.” Earlier in his career, Sourabh held leadership roles at Bajaj Allianz General Insurance, ICICI Lombard, and Infosys, overseeing technology strategy, application modernisation, innovation programs, digital sales, and large-scale transformation projects. He holds a bachelor’s degree in electrical engineering and an Executive MBA from INSEAD.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 12:25 pm