புதுக்கோட்டையில் பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஜன.4ல் அமித் ஷா வருகை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ள நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்திற்கு தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி: அதிமுக கோட்டையில் திமுக போடும் கணக்கு- வெற்றி வாய்ப்பு யாருக்கு?
ஆத்தூர் தனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், வரவிருக்கும் 2026 தேர்தலில் களம் மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணி பற்றி விரிவாக பார்க்கலாம்.
புதிய விடியல் – 2026! பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான பணிகள் ஆரம்பம்!
2026 புத்தாண்டுக்கான பணிகளைப் பிரதமர் அலுவலகத்தில் (Prime Minister’s Office) இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்… The post புதிய விடியல் – 2026! பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான பணிகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
Dharmendra: இது கோடிக்கணக்கான மக்களுக்கு தர்மேந்திரா விட்டுச் சென்ற பொக்கிஷம்! - அமிதாப் பச்சன்
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா கடந்தாண்டு இயற்கை எய்தினார். இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்திருந்த 'இக்கிஸ்' திரைப்படம் புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று திரைக்கு வந்திருக்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் இப்படத்தின் ரிலீஸை ஒட்டி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra நடிகர் அமிதாப் பச்சன் 'க்ரோர்பதி' நிகழ்ச்சியில் தர்மேந்திராவை நினைவு கூர்ந்தார். அதைத் தொடர்ந்து அவருடனான நினைவுகள் குறித்தும், 'ஷோலே' படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விஷயங்கள் குறித்தும் அந்த நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்திருக்கிறார். அமிதாப் பச்சன், 'இக்கிஸ்' திரைப்படம் நமக்கு கிடைத்த கடைசி நினைவுச் சின்னம். கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் விட்டுச் சென்ற பொக்கிஷம். ஒரு கலைஞன் தன் உயிரின் கடைசி மூச்சு வரை கலையைத் தொடர விரும்புவான். அதைத்தான் என் நண்பர் தர்மேந்திரா தியோலும் செய்தார். அவர் சாதாரண மனிதர் மட்டுமல்ல. அவர் ஒரு உணர்வு! என்றவர், நாங்கள் பெங்களூரில் 'ஷோலே' படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தோம். அமிதாப்பச்சன் அப்போது அவர் மல்யுத்த வீரரைப் போன்ற ஒரு ஹீரோவாக இருந்தார். அப்படத்தின் என்னுடைய கதாபாத்திரத்தின் இறப்புக் காட்சியில் நீங்கள் என்னிடத்தில் பார்த்த நடிப்பைக் கொண்டு வர அவர் உதவினார். ஏனெனில் அந்தக் காட்சியில் அவர் என்னை அவ்வளவு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். அந்தக் காட்சி கோரும் எமோஷனை இயல்பான நடிப்பின் மூலம் அவர் வெளிப்படுத்தினார். எனக் கூறியிருக்கிறார்.
பர்னி தெலோங் எரிமலை சீற்றம் : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்!
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் அமைந்துள்ள பர்னி தெலோங் (Bur Ni Telong) எரிமலை தற்போது அதிகப்படியான சீற்றத்துடன் காணப்படுவதால்,… The post பர்னி தெலோங் எரிமலை சீற்றம் : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்! appeared first on Global Tamil News .
சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி!
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கிராஸ்-மொன்டானா (Crans-Montana) பனிச்சறுக்கு விடுதியில் (Ski Resort) இன்று (ஜனவரி 1, 2026) அதிகாலை நடந்த… The post சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி! appeared first on Global Tamil News .
நீருக்கு அடியில் சதுரங்கப் போட்டி ; உலக செம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது நெதர்லாந்து
நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டி வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி, இது நீச்சல் தடாகத்தின் அடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடப்படும் ஒரு வினோதமான மற்றும் சவாலான விளையாட்டாகும். இம்முறை நடைபெற்ற உலக செம்பியன்ஷிப் போட்டியில் 40 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தப் போட்டியில் சதுரங்கப் பலகைகள் காந்தத் தன்மையுடனும் (Magnetic boards), காய்கள் […]
தூத்துக்குடி ,நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை :வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்பு […]
2026: ட்ரம்ப் டு கிம் வரை; ரஷ்யா டு சுவிட்சர்லாந்து.. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் - Album
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று இடம்பெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
மொசாட் பெண் உளவாளி கூறும் புதிய தகவல்
நாளொன்றிற்கு சராசரியாக 9 மில்லியன் தகவல்கள் இஸ்ரேலிய அமைப்புகளால் திரட்டப்படுவதாக இஸ்ரேலிய மொசாட் உளவாளி பெண் டனா ரசண்டல் தெரிவித்தார். இந்த தகவல்கள் தான் இஸ்ரேலின் தற்போதை அளப்பரிய சாதனைகளுக்கு உதவியுள்ளது. இஸ்ரேல் என்றதும் மொசாட் உளவுத்துறை பெரிதாக பேசப்பட்டாலும், அங்கு 3 உளவுத்துறைகள் செயற்பட்டு வருகின்றன. 15ற்கும் மேற்பட்ட உப பிரிவுகள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு பிரிவில் செயற்பட்டு வருகின்றன. மொசாட்டின் சாதனை என்று பல புலனாய்வு பெறுபேறுகளை செய்தது இஸ்ரேலின் ஷின்பெத் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டவை.
2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா?
2025-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலையின் வளர்ச்சி வழக்கத்தை விட மிக மிக அதிகமாக இருந்தது. சென்னையில் தங்கம் விலை 2025-ம் ஆண்டு கிட்டத்தட்ட ரூ.47,000-க்கு உயர்ந்திருந்தது. வெள்ளி விலை ரூ.183-க்கு உயர்ந்திருந்தது. இந்த ஆண்டு (2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை எப்படி இருக்கும்? இந்த ஆண்டும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு மவுசு குறையாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால், இந்த ஆண்டும், இந்த உலோகங்களின் மதிப்பு உயரும். தங்கம், வெள்ளி மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026! காரணம் என்ன? உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. உலகளவிலும் அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மைகள் நிலவுகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து வருகின்றனர். 2025-ம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி நல்ல வருமானத்தைத் தந்ததால் ரீடெயில் முதலீட்டாளர்கள் தொடங்கி பெரிய முதலீட்டாளர்கள் வரை தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர். வெள்ளியை எடுத்துக்கொண்டால், தொழிற்சாலைகளில் அதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. இப்போது ஏன் தங்கம், வெள்ளி விலை குறைகிறது? கடந்த நான்கு தினங்களாக தங்கம், வெள்ளி விலை குறைந்து வருகிறது. இதற்கு சந்தையில் நடக்கும் கரெக்ஷன் தான் மிக முக்கிய காரணம். பங்குகள் தொடங்கி உலோகங்கள் வரை சந்தையில் எது தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தாலும், அது ஒருகட்டத்தில் கரெக்ஷனைச் சந்திக்கும். இது இயல்பான ஒன்று தான்... இயற்கை தான். அதனால், தங்கம், வெள்ளி விலை குறைகிறதே... முதலீடு என்ன ஆகும் என்கிற பயம் வேண்டாம். இனி என்ன செய்யலாம்? 2025-ம் ஆண்டின் ஆரம்பத்தில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள், இப்போது அவர்களுக்கு வேண்டுமானால், தாராளமாக பிராஃபிட் டேக்கிங் செய்யலாம். 2025-ம் ஆண்டின் இறுதியில் முதலீடு செய்தவர்கள் சற்று பொறுப்பது நல்லது. தங்கம், வெள்ளி Rewind 2025: ஒரே ஆண்டில் தங்கம் ரூ.47,000, வெள்ளி ரூ.183 உயர்வு - கடந்து வந்த பாதை தங்கம், வெள்ளி முதலீட்டில் ரிஸ்க் உள்ளதா? அமெரிக்காவில் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதத்தைக் குறைத்தது... அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது... முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கம், வெள்ளியில் முதலீடு செய்து வந்தது... போன்றவை தான் 2025-ம் ஆண்டில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததற்கான காரணம். இதற்கெல்லாம் நேர்மாறாக இந்த ஆண்டு நடந்தால், தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்கலாம். அதனால், மொத்தமாக தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. நீண்ட கால முதலீட்டிற்கு எப்போதுமே தங்கம், வெள்ளி நல்ல ஆப்ஷன். லம்சம் முதலீடு என்று வந்துவிட்டால், சற்று யோசிக்க வேண்டும். டிரேடிங் செய்பவர்கள் வேண்டுமானால் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். ஆனால், மிக மிக கவனம் தேவை. தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா... வேண்டாமா? முதலீடு செய்பவர்கள் மிக கவனமாக செய்வது நல்லது. தங்கம், வெள்ளியை விட, இப்போது காப்பரில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று பொருளாதார நிபுணர் ரெஜி தாமஸ் தொடர்ந்து கூறி வருகிறார். அதனால், அதில் கவனம் செலுத்துவது மிக நல்லது. கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன? Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
இறையருளுடன் இனிதே தொடங்கிய 2026: பாஷையூர் அந்தோனியார் ஆலய நள்ளிரவு நற்செய்தி திருப்பலி
யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று(01) நள்ளிரவு புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீரும் வழங்கப்பட்டது.
✨ புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2026 புத்தாண்டை முன்னிட்டு, கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (வியாழக்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற்றது.… The post ✨ புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்! appeared first on Global Tamil News .
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பரிசு அறிவித்த அரசு!
சென்னை :தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் மிகை ஊதியம் அறிவித்துள்ளது. சி, டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.183.86 கோடி […]
2025-ம் ஆண்டில் ஆசிய அளவில் மிகவும் வீழ்ந்த இந்திய ரூபாய்; 2026-ல் மீளுமா? - RBI அறிக்கை
2025-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.91 வரை கூட சென்றது. இது ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி தான். ஆனால், இது இறக்குமதியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைத் தந்தது. விலைவாசி உயர்வு அச்சம் இந்தியாவின் பக்கம் எட்டிப்பார்த்தது. ஆனால், சில நாள்களிலேயே, இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்தது. 2026-ம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, 2025-ம் ஆண்டில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 5 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. 2022-ம் ஆண்டில் இருந்து இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சியைக் கண்டது கடந்த ஆண்டு தான். கடந்த ஆண்டு, ஆசியாவிலேயே மிக வீழ்ச்சியைக் கண்ட நாணயம் இந்திய ரூபாய். இந்திய ரூபாய் கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன? ஏன் இந்த வீழ்ச்சி? அமெரிக்கா இந்திய பொருள்களின் மீது 50 சதவிகித வரி விதித்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும். அடுத்ததாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பெருமளவு தங்களது முதலீடுகளை வெளியேற்றினர். இன்னொன்று, உலக அளவிலான நிலையற்ற தன்மை, நாணய சந்தையைப் பாதித்தது. 2026-ம் ஆண்டு எப்படி இருக்கும்? இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதனால், இந்திய ரூபாயின் மதிப்பு நிலையற்று இருக்கும். இப்போது சந்தையைக் கணிக்கும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு கரடியின் பிடியில் இருக்கலாம். ஆனால்... இந்த இறங்குமுகத்தைத் தாண்டி, இந்திய பொருளாதாரம் வலுவாக இருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி நன்கு இருக்கிறது. பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருக்கும். மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!
வலி. வடக்கு பிரதேச சபையின் 2026 புத்தாண்டு சத்தியப்பிரமாண நிகழ்வு!
வலி. வடக்கு பிரதேச சபையின் 2026-ஆம் ஆண்டிற்கான பணிகள் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. முக்கிய நிகழ்வுகள்:… The post வலி. வடக்கு பிரதேச சபையின் 2026 புத்தாண்டு சத்தியப்பிரமாண நிகழ்வு! appeared first on Global Tamil News .
பார்வதியும், கம்ருதீனும் சண்டை போட்டுக் கொண்ட விதத்தை பார்த்தால் கண்டிப்பாக பிரேக்கப் தான் என்று பலரும் முடிவே செய்த நிலையில் உல்ட்டாவாக ஆகிவிட்டது. இதை சத்தியமாக எதிர்பார்க்கல பாரு என்கிறார்கள் பார்வையாளர்கள்.
விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் –சென்னை மாநகர காவல் அறிவிப்பு
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ‘ஹாட் ஸ்பாட்’டான மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே
`வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி; ரூ.2.2 லட்சம் கோடி மாயமானது எங்கே?'- திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!
`திமுக அரசு வாங்கிய கடனில், ரூ.2.2 லட்சம் கோடி யாருக்கும் பயனில்லாமல் மாயமானது எங்கே?' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025&ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. அதே நேரத்தில் மூலதனச் செலவாக ரூ. 1 லட்சத்து 66,754 கோடியை மட்டுமே செய்திருக்கிறது. இதன் மூலம் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக திமுக அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்தது திமுக அரசு தான். இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தப்பட்ட 1952&ஆம் ஆண்டிலிருந்து திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முந்தைய 2020&21ஆம் நிதியாண்டின் இறுதி வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால், அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் மட்டும் ரூ.4.73 லட்சம் கோடி ஆகும். இதற்கு காரணம் திமுக அரசின் திறனற்ற நிதி நிர்வாகம் தான். இதை கடந்த காலங்களில் பலமுறை புள்ளி விவரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. ஸ்டாலின் ஆனால், திமுக அரசு வீணாக கடன் வாங்கவில்லை என்றும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன்களை வாங்கியதாகவும் விளக்கமளித்த ஆட்சியாளர்கள், வாங்கிய கடன் முழுவதும் முதலீடுகளாக மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறி வந்தனர். அது அப்பட்டமான பொய் என்பது இப்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. 2021&ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற திமுக அரசு 2025&ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.3.86 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. இந்தத் தொகையை மூலதன செலவுகளுக்காக மட்டுமே திமுக அரசு பயன்படுத்தியிருந்தால், ரூ.3.86 லட்சம் கோடி மதிப்புள்ள கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2021&22ஆம் ஆண்டில் ரூ.37,011 கோடி, 2022&23ஆம் ஆண்டில் ரூ.39,530 கோடி, 2023&24ஆம் ஆண்டில் ரூ.42,532 கோடி, 2024&25ஆம் ஆண்டில் ரூ.47,681 கோடி என மொத்தம் ரூ.1.66 லட்சம் கோடி மட்டுமே மூலதன செலவுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த நிதி நிர்வாகத்தின் அடையாளம் என்னவென்றால், அரசின் வருவாய் செலவுகள் அனைத்தையும் வருவாய் வரவுகளுக்குள் கட்டுப்படுத்தி, மூலதன செலவுகளுக்கு மட்டும் கடன் வாங்குவது தான். அப்படியானால் மூலதன செலவுகளுக்கான ரூ.1.66 லட்சம் கோடிக்கும் கூடுதலாக வாங்கப்பட்ட ரூ.2.20 லட்சம் கோடி கடன் என்ன ஆனது? இந்த புள்ளிவிவரங்களையெல்லாம் நான் தயாரிக்கவில்லை. எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு 15.90% வளர்ச்சி அடைந்து விட்டது என்று திமுகவினர் மார்தட்டுகிறார்களோ, அதே ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தான் திமுகவின் இந்த அவலத்தையும் காட்டுகின்றன. தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், வரும் மார்ச் 31&ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள ஐந்தாண்டுகளில் திமுக அரசு ரூ. 4 லட்சத்து 73,299 கோடி கடன் வாங்கியுள்ளது. இதே காலத்தில் திமுக அரசு செய்த மூலதன செலவுகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 23,984 கோடி மட்டுமே. மீதமுள்ள ரூ.2.49 லட்சம் கோடி எங்கே போனது? என்ற வினா இயல்பாகவே எழுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கடனாக வாங்கியத் தொகையில் 43.11% தொகையை மட்டும் தான் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக செலவிட்டிருக்கிறது. மீதமுள்ள ரூ.2.20 லட்சம் கோடி கடன் தொகையை யாருக்கும் பயனளிக்காத வகையில் வீணாக திமுக செலவிட்டுள்ளது. கடன் கடனாக வாங்கியத் தொகை மூலதன செலவுகளுக்காக பயன்படுத்தப்படாததற்கு காரணம் திமுக அரசின் நிதிநிர்வாகத் தோல்வி தான். ஆட்சிக்கு வந்தால் வருவாய்ப் பற்றாக்குறையை முற்றிலுமாக ஒழித்து, வருவாய் உபரி ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதை சாதிப்பதில் படுதோல்வி அடைந்து விட்டது. கடந்த ஆண்டில் கூட ரூ.49,279 கோடி வருவாய்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1.77 லட்சம் கோடி வருவாய்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், இலவசங்களை வழங்குதல் போன்ற வழக்கமான வருவாய் செலவுகளுக்குக் கூட பொருளீட்ட முடியாத திமுக அரசு, அவற்றையெல்லாம் கடன் வாங்கித் தான் செய்திருக்கிறது. அதனால் தான் வாங்கிய கடனை திமுக அரசால் சொத்துகளாக மாற்ற முடியவில்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட வளர்ந்து விட்டோம் என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, நிதி நிர்வாகத்தில் உத்தரப்பிரதேச அரசிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று விமர்சிக்கப்படும் உத்தரப்பிரதேச அரசு, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2.57 லட்சம் கோடி மட்டுமே கடனாக வாங்கியுள்ளது. இதை விட 50% அதிகமாக தமிழகம் கடன் வாங்கியுள்ளது. ஆனால், உத்தரப்பிரதேசம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4.65 லட்சம் கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய கடனை விட ரூ.2.08 லட்சம் கோடி அதிகமாக உத்தரப்பிரதேசம் மூலதன செலவு செய்துள்ளது. அதற்கு காரணம் கடந்த 4 ஆண்டுகளில் வருவாய் வரவுகளுக்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, ரூ.2.15 லட்சம் கோடியை மிச்சப்படுத்தி வருவாய் உபரியை ஏற்படுத்தியது தான். உத்தரப் பிரதேசத்திடம் நிதிநிர்வாகம் குறித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய திமுக அரசு, தமிழகத்தின் வரிப் பணம் உத்தரப்பிரதேசத்திற்கு செல்வது தான் இதற்கு காரணம் என அடிமுட்டாள்தனமான பொய்யை கூறுகிறது. அன்புமணி ராமதாஸ் திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களின் விளைவாக நடப்பாண்டில் வட்டியாக மட்டும் ரூ.70,754 கோடி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை திமுக அரசு வாங்கி வைத்திருக்கிறது. மோசமான நிதி நிர்வாகத்தால் தங்களை அடகு வைத்திருக்கும் திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகி விட்டது –உக்ரைன் அதிபர் தகவல்
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக 20 அம்சங்கள் கொண்ட
போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் பணம் போடப் போறீங்களா? புத்தாண்டில் புதிய வட்டி அறிவிப்பு!
2026 ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் இதுதான்..!
போர் பயிற்சியில் சீன இராணுவம் ; ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்
தாய்வானைச் சுற்றி சீனாவின் இராணுவப்படைகள் முன்னெடுக்கும் போர் பயிற்சிகள் குறித்து தான் கவலைப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா, தாய்வானுக்கு இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்த சில நாட்களில் சீனா போர் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளது. இன்றைய போர் பயிற்சியின்போது சீனா, தாய்வானை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இராணுவப் பயிற்சிகள் குறித்து தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை, ஆனால் சீனா வழக்கமாக கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதால் […]
✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை கடமைகளை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு சிறப்பாக… The post ✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்! appeared first on Global Tamil News .
யாழில். அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய குற்றத்தில் பெண் கைது
அயல் வீட்டுக்காரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அயல் வீடான இரு வீட்டார் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தில் பெண்ணொருவர் அயல் வீட்டார் மீது கத்தி குத்து தாக்குதல் நடாத்தியுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை கடமைகளை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு சிறப்பாக… The post ✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்! appeared first on Global Tamil News .
இன்று முதல் 8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வந்திருச்சா? அரசு ஊழியர்களின் சம்பளம் உயருதா? உண்மை என்ன?
7ஆவது ஊதியக் குழு முடிந்து 8வது ஊதியக் குழு இன்று முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதா? உண்மை என்ன?
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அயலவரை கத்தியால் குத்திய பெண் கைது!
யாழ்ப்பாணம், சுன்னாகம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட தகராறில், அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் நேற்றைய… The post யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அயலவரை கத்தியால் குத்திய பெண் கைது! appeared first on Global Tamil News .
Rishabam 2026 New Year Rasi Palan | ரிஷபம் ஆங்கிலப் புத்தாண்டு பலன் | திருமணம்,தொழில்,கல்வி எப்படி?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் ரிஷபம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு் ரிஷபம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் விளக்குகின்றனர்.
மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி, மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத்… The post ⛪️மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி! ✨ appeared first on Global Tamil News .
பலவீனமாக இருந்தாலும் அதிமுகதான் எங்கள் எதிர்க்கட்சி –உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்!
சென்னை :துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த புத்தாண்டு நேர்காணலில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாகப் பேசினார். “தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான பலமான கட்சியே இல்லை. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அதிமுகவைத்தான் முதன்மை எதிர்க்கட்சியாகப் பார்க்கிறோம். அதிமுக இப்போது பலவீனமாக இருந்தாலும், திமுகவின் எதிர்க்கட்சியாக அதிமுகவை மட்டுமே கருதுகிறோம்” என்று தெளிவாகத் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் “2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி” […]
பிரஜின், மீனு குட்டி அவ்ளோ சொல்லியும் புத்தாண்டும் அதுவுமா வேலையை காட்டிய சாண்ட்ரா: என்ன தாயி இது?
குடும்ப வாரத்தின்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிரஜின் மற்றும் மகள் மீனு குட்டி சொன்னதை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் சாண்ட்ரா. புத்தாண்டு அன்றே ஆரம்பித்துவிட்டாரே சேச்சி என்கிறார்கள் பார்வையாளர்கள்.
சென்னை கடற்கரை–எழும்பூர் இடையே கூடுதல் ரயில் பாதை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை நகரின் ரயில் போக்குவரத்தில் முக்கியமான மாற்றமாக, கடற்கரை (Beach) நோக்கி கூடுதல் ரயில் வழித்தடம் பயன்பாட்டிற்கு தயாராகியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2026 அறிவிப்பு… எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது…விஜய்யை சீண்டிய செல்லூர் ராஜு!
சென்னை :மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக கிண்டலடித்தார். “மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. உண்மையான வெளிச்சத்தை எடப்பாடி பழனிசாமிதான் தருவார். களத்தில் பணியாற்றும் எங்களுக்குதான் தெரியும் யாருக்கு யார் போட்டி என்று” என்று கூறினார். விஜய்யின் ரசிகர் செல்வாக்கை மின்மினி பூச்சியோடு ஒப்பிட்டு அவர் பேசினார்.“அமிதாப்பச்சன் வந்தால்கூட கூட்டம் கூடும். நம்மை ஆளக்கூடியவர் யார் என்பதை […]
சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. புத்தாண்டு அதுவுமாக மக்களுக்கு வந்த ஷாக் நியூஸ்!
2026ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சிலிண்டர் விலை பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் சிலிண்டர் விலை இதுதான்.
மேஷம் - புத்தாண்டு பலன்கள் 2026 | Mesham Rasi New Year Rasi Palan | நினைத்தது நடப்பது எப்போது?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் மேஷம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு மேஷம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றனர்.
கனிமொழியைத் தவிர்த்த பாலாஜி டு அப்செட்டில் நயினார்! | கழுகார் அப்டேட்ஸ்
குஷியில் தென்மாவட்ட சீனியர்கள்! பொடிவைத்த ஆர்.பி.உதயகுமார்... அ.தி.மு.க- விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தையும் டி.டி.வி தினகரனையும், ‘கூட்டணியில்கூட இணைத்துக்கொள்ள மாட்டேன்’ என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சொல்லிவந்தார். பியூஷ் கோயல் உடனான சந்திப்புக்குப் பிறகு, அவருடைய நிலைப்பாட்டில் மாற்றம் தென்பட்டிருக்கிறது. ஆனால், ‘எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலுள்ள அ.தி.மு.க-வில் சேரவே மாட்டோம்’ என்று தினகரனும் பன்னீரும் கூறிவருகிறார்கள். இப்படியான சூழலில், ‘இணைப்பு சாத்தியமில்லை என்றால், வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குப் பெரும் சவாலாக தென்மாவட்டங்கள் அமைந்துவிடும்’ என்று அச்சப்படுகிறார்கள் தென்மாவட்ட இலைக்கட்சி சீனியர்கள். ஆர்.பி. உதயகுமார் இந்தநிலையில்தான், ‘தி.மு.க-வை வீழ்த்த நினைக்கும் அனைவரும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று வரவேண்டும். இந்த அழைப்பு தேவையானவர்களுக்குப் புரியும்...’ என்று கூறியிருக்கிறார் எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். அவர் இப்படி பொடிவைத்துப் பேசியதன் பின்னணியில், ‘விரைவிலேயே இணைப்போ அல்லது கூட்டணியோ நிகழப்போகிறது...’ என்று குஷியாகியிருக்கிறார்கள் தென்மாவட்ட சீனியர்கள். ஆனாலும், ‘எடப்பாடிக்கு தெரிந்துதான் உதயகுமார் இப்படி சொன்னாரா... இல்லை, தெரியாமல் சொன்னாரா...’ என்ற விவாதமும் கட்சிக்குள் சூடாகியிருக்கிறது! பாராட்டிய தி.மு.க தலைமை! கனிமொழியைத் தவிர்த்த பாலாஜி... திருப்பூரில் நடந்த தி.மு.க மகளிர் மாநாடு, எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடந்து முடிந்திருப்பதால், தலைமை ரொம்பவே ஹேப்பியாக இருக்கிறதாம். குறிப்பாக, பாலாஜி செய்த மற்றொரு சம்பவம்தான் தலைமையின் மகிழ்ச்சிக்குக் காரணமாம். அதாவது, “மாநாட்டு மேடையிலும், முகப்பிலும் மட்டும் கனிமொழியின் படத்தை வைத்துவிட்டு, மாநாடு திடல் முழுக்க முதல்வர் ஸ்டாலினின் படத்தையும் உதயநிதியின் படத்தையுமே இடம்பெற வைத்திருக்கிறார் பாலாஜி. கனிமொழி அவர்களுக்கு இணையாக கனிமொழியின் படத்தையும் போட்டால், கனிமொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததுபோல் ஆகிவிடும். அதனால், தலைமையின் சங்கடத்துக்கு ஆளாக வேண்டாம் என்று யோசித்து, கனிமொழியின் படத்தை தவிர்த்து ஸ்கோர் செய்திருக்கிறார். ‘நாம் சொல்லாமலேயே நமது எண்ணத்தை பாலாஜி புரிந்துகொண்டுவிட்டாரே...’ என்று, தலைமையும் உற்சாகமாகி அவரை ஏகத்துக்கும் பாராட்டிவிட்டுச் சென்றிருக்கிறது” என்கிறார்கள் கரூர் விவரப் புள்ளிகள்! விலகும் எண்ணத்தில் மா.செ! நெருங்க முடியாத தலைமை... சமீபத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்வு ஒன்றுக்காக, கடைகோடி மாவட்டத்துக்கு விசிட் அடித்தார் சிறுத்தை கட்சித் தலைவர். அவர் வரும் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அந்தப் பகுதியிலுள்ள மூன்று மாவட்டச் செயலாளர்களில் ஒருவர், தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகள், தங்குமிடம், உணவு உபசரிப்பு என்று அட்வான்ஸாக சில லட்டுகளைச் செலவழித்திருக்கிறார். ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், சக மாவட்டப் புள்ளிகளும், சிறுத்தை தலைவரின் அருகிலேயே அந்த மாவட்டச் செயலாளரை நெருங்கவிடவில்லையாம். தலைவரும்கூட அது குறித்து கவலைப்படவில்லையாம். “பட்டியல் சமூகத்தினர் அல்லாதோருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கிவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள். மிஸ்டர் கழுகு: அதிர்ச்சி ஆடியோ... கொதித்த குடும்பம்... ‘டபுள் கேம்’ டெல்லி காங்.! ஆனால், பட்டியல் சமூகத்தினர் அல்லாத நிர்வாகிகளால், தலைவரைச் சந்திக்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு சக மாவட்டப் புள்ளிகள் அராஜகம் செய்கிறார்கள். கடைக்கோடி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த விவகாரத்தில், அப்செட்டாகியிருக்கும் அந்த மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்து விலகும் மனநிலைக்கு வந்துவிட்டார்” என்கின்றன சிறுத்தை கட்சி வட்டாரங்கள்! அப்செட்டில் நயினார்! காலை வாரிய நிர்வாகிகள்... பா.ஜ.க மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன், ‘தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், நீலகிரி மாவட்டத்துக்குச் சென்ற அவர், குன்னூரில் கிடைத்த வரவேற்பில் பூரித்துப்போயிருக்கிறார். ஆனால், அதை முடித்துவிட்டு ஊட்டிக்கு சென்ற அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஊட்டியில் கான்வாயை மறித்து கருப்புக்கொடி காட்டிய அண்ணாமலை ஆதரவாளரின் செயல், பேசத் தொடங்கியதும் மைக் சொதப்பல், பிரசார வாகனத்தில் நின்று ஓயாமல் எடப்பாடி புகழ்பாடிய அ.தி.மு.க நிர்வாகிகள் என்று, அடுத்தடுத்து நிகழ்ச்சி சொதப்பவும், கடுப்பாகிவிட்டாராம் நயினார். அதேசமயம், சொல்லிக்கொள்ளும் அளவுக்குகூட கூட்டத்தைக் கூட்டாமல் ஊட்டி பா.ஜ.க நிர்வாகிகளும் சொதப்பிவிட்டார்களாம். “லேட்டாக என்ட்ரி கொடுத்த அண்ணாமலை, கூடியிருந்த சொச்சக் கூட்டத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டார். நன்றியுரை போல கடைசியாக நாலு வார்த்தைகளை நயினார் பேச தொடங்கியதுமே, கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது. அப்செட்டான நயினார், ஊட்டி நிர்வாகிகளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்! கிடுக்கிப்பிடி சி.பி.ஐ! சிக்கிக்கொண்ட காக்கிகள்... கரூர் துயரச் சம்பவத்தை விசாரித்து வரும் சி.பி.ஐ., கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளையும்... த.வெ.க நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மதியழகன் ஆகியோரையும் டெல்லிக்கு அழைத்து விசாரித்து வருகிறது. கடந்த டிச.29-ம் தேதி நடந்த விசாரணையில், ‘விஜய் எப்போது சம்பவ இடத்துக்கு வந்தார். அதற்கு முன்னதாக என்ன மாதிரியான சூழல் சம்பவ இடத்தில் நிலவியது..?’ என்று சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். கரூர் விஜய் கூட்டம் அதற்கு, ‘இரவு ஏழு மணியளவில் வேலுசாமிபுரத்திற்கு விஜய் வந்துசேர்ந்தார். அதற்கு முன்னதாகவே கூட்டம் கூடிவிட்டது. மாலை 6 மணிக்கெல்லாம் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது...’ என்று பதிலளித்தார்களாம் காவல்துறை அதிகாரிகள். உடனே, ‘ஆறு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காத அளவுக்குக் கூட்டம் கூடிவிட்டது என்றால், பிறகு எதற்காக விஜய்யைக் கூட்டம் நடத்தும் இடத்திற்கு வர அனுமதித்தீர்கள்... நடுவழியிலேயே தடுத்துத் திரும்பிபோகச் சொல்லியிருக்கலாமே...’ என்று கிடுக்கிப்பிடி கேள்வியைக் கேட்டதாம் சி.பி.ஐ. தமிழகக் காவல்துறையினரிடமிருந்து ஏழு மணிக்கு முன்னதாக த.வெ.க நிர்வாகிகளுக்கு அழைப்பு ஏதும் சென்றதா என்று விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறதாம் சி.பி.ஐ.!
1 மணி வரை இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!
சென்னை :உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று (ஜனவரி 1, 2026) பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த மழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் […]
ஆண்டவன் மேல பாரத்த போட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான்: ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தலைவர் சோஷியல் மீடியாவில் நடப்பதை கவனிக்கிறாரே என்கிறார்கள்.
வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்…புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை :சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு முன்பு 2026 ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி அதிகாலை முதலே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்த ரசிகர்களின் உற்சாகத்தை அறிந்த ரஜினிகாந்த் வெளியே வந்து அவர்களைச் சந்தித்தார். கையசைத்து வாழ்த்து பெற்றுக்கொண்ட அவர், ரசிகர்களுக்கு உருக்கமான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரசிகர்கள் முன்பு கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த், 2026 புத்தாண்டு தின வாழ்த்துகளை மனமுருகத் தெரிவித்தார். ரசிகர்களின் ஆரவாரமும் உற்சாக கோஷங்களும் இல்லத்தைச் […]
உலகப் புகழ் பெற்ற நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து ; வெளியான காரணம்
தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உலகப் புகழ் பெற்ற முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட சதித்திட்டத்தை எப்.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் முறியடித்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், உலக நாடுகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல்கள் கடந்த காலங்களில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தற்போது எழுந்துள்ள தீவிரவாத அச்சுறுத்தல் […]
Gold Rate: ரூ.1 லட்சத்திற்கு கீழிறங்கிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 ஆகவும், பவுனுக்கு ரூ.320 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,440 ஆகும். Rewind 2025: ஒரே ஆண்டில் தங்கம் ரூ.47,000, வெள்ளி ரூ.183 உயர்வு - கடந்து வந்த பாதை தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,520 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.256 -க்கு விற்பனை ஆகி வருகிறது. உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!
ஆண்டின் முதல் நாளிலேயே ஷாக்! சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு!
சென்னை : வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (ஜனவரி 1, 2026) ரூ.110 உயர்ந்துள்ளது. 2026 ஆண்டின் முதல் நாளிலேயே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போதைய உயர்வு வணிகர்களுக்கு திடீர் அதிர்ச்சியை […]
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சமாக 10,000 ரூபாயைக் கோரி, அதனை வேறொருவர் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயன்ற போதே குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பொலிஸ் நிலையத்தினுள் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடந்த 12 மாதங்களில் 114 துப்பாக்கி சூடு ; 60 பேர் படுகொலை
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில் பெரும்பாலானவை பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு அன்று சூப்பர் நியூஸ்! மீண்டும் குறைந்த தங்கம் விலை!
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 1, 2026) குறைந்து நகை வாங்குபவர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.12,440-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு தொடக்கத்தில் இந்த குறைவு பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்றைய குறைவு சர்வதேச சந்தை போக்கு மாற்றங்களால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரூ.1 லட்சத்தை நெருங்கியிருந்த சவரன் […]
கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன?
இன்று - 2026-ம் ஆண்டின் முதல் நாளில் இருந்து சில நடைமுறைகள் மாறுகின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். 1. பான் - ஆதார் இணைப்பு நேற்று பான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி. இன்னமும், இந்த இரண்டையும் இணைக்கவில்லை என்றால், பான் கார்டு செல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதனால், வங்கி பரிவர்த்தனை தொடங்கி வருமான வரிக் கணக்குத் தாக்கல், வருமான வரி ரீஃபண்ட் அனைத்திலும் சிக்கல் ஏற்படலாம். ஆதார் - பான் கார்டு இணைப்பு மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026! 2. 8வது ஊதியக் குழு இன்றிலிருந்து 8வது ஊதியக் குழு அமலுக்கு வருகிறது. இதனால் மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு சம்பளம், பென்சன் தொகை மாறும். 3. கிரெடிட் ஸ்கோர் இதுவரை கிரெடிட் ஸ்கோர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இனி ஒவ்வொரு வாரமும் அப்டேட் செய்யப்பட உள்ளது. இதனால், இ.எம்.ஐ-யை மிஸ் செய்தாலோ, கடன் திரும்ப கட்டாவிட்டாலோ, உங்களது கிரெடிட் ஸ்கோரில் சீக்கிரம் பிரதிபலிக்கும். 4. கேஸ் சிலிண்டர் இன்று முதல் வீட்டுப் பயன்பாடு மற்றும் கமர்ஷியல் பயன்பாடு LPG சிலிண்டர்களின் விலை மாற உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். 5. புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவம் இந்த மாதம் முதல் புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த வருமான வரி படிவத்தில் ஏற்கெனவே வங்கி பரிவர்த்தனைகள், செலவுகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால், அதை நிரப்புவது மிகவும் எளிதாகும். உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!
2026இல் விமானப்படையை வலுப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம்
சிறிலங்கா விமானப்படை 2026 ஆம் ஆண்டில் விமானங்களில் பாரிய மேம்படுத்தல்கள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவிமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் நளின் வெவகும்புர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில்அமெரிக்கா பத்து TH-57 சீ ரேஞ்சர் (பெல் 206) உலங்குவானூர்திகளைஅமெரிக்கா கொடையாக வழங்கவுள்ளது. மேலதிகமாக, அமெரிக்கா இந்த ஆண்டிலும்,அவுஸ்ரேலியா 2027 ஆம் ஆண்டிலும், சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு C-130 போக்குவரத்து விமானங்களை வழங்கவுள்ளன. இவற்றைப் பொறுப்பேற்பதற்கான
இந்தியா –பாகிஸ்தான் சண்டையில் மத்தியஸ்தம்! அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா அறிவிப்பு!
சீனா மத்தியஸ்தம்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையை, வர்த்தகத்தை முன்வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை […]
கடலுக்கு செல்ல வேண்டாம் ; திருகோணமலை கடற்கரையில் சிவப்புக் கொடி எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பால் திருகோணமலை கடற்கரை மூடப்பட்டுள்ளது என்பதை எச்சரிக்கும் விதமாக இன்று சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. கடல் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் இவ்வாறு சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், இவ்வாறான தாக்கங்களை செலுத்தியுள்ளது. இன்று மாலை நேரம் திருகோணமலையில் மப்பும் மந்தாரமான காலநிலை நிலவியமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தீபங்கள் ஏற்றி ஆங்கிலப் புத்தாண்டு வரவேற்பு
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமனம்?
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எட்டுப்பேர் அடங்கிய தேசிய காவல்துறை ஆணைக்குழுவில், இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வெற்றிடங்களில் ஒன்றுக்கு, முன்னாள், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும், முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளருமான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியை நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க,
பாடத்திட்டத்தில் முறையற்ற குறிப்பு -பிரதமர் ஹரிணி பதவி விலக கோரிக்கை
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாகவே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற குறிப்புகள் பள்ளி மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும். பொருத்தமற்ற விடயங்களைப்
Doctor Vikatan: நரக வேதனையைத் தரும் வறட்டு இருமல்,தொண்டைப்புண்... இருமலை நிறுத்த வழி உண்டா?
Doctor Vikatan: என் வயது 55. எனக்கு கடந்த ஒரு மாதமாக கடுமையான வறட்டு இருமல் இருக்கிறது. பாட்டில், பாட்டிலாக இருமல் மருந்து குடித்தும் இருமல் நிற்கவில்லை. இருமி இருமி, தொண்டை புண்ணானதுதான் மிச்சம். இருமல் அடங்கும்வரை நரக வேதனையை அனுபவிக்கிறேன். இதற்கு என்னதான் காரணம்... இந்த இருமலை நிறுத்த என்னதான் வழி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் இருமல் எதனால் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதற்கான சிகிச்சையை முடிவு செய்ய முடியும். வைரஸ் தொற்றால் ஏற்பட்டதா, பாக்டீரியா தொற்றால் ஏற்பட்டதா, பிற காரணங்களால் ஏற்பட்டதா என்று பார்க்க வேண்டியது அவசியம். வறட்டு இருமலுக்கு மிக முக்கியமான காரணம் வைரஸ் தொற்றுதான். இந்தத் தொற்றால் ஏற்படும் இருமலானது, பொதுவாக இரண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம். ஒருவேளை தொற்று மிகவும் தீவிரமாக இருந்தால், வறட்டு இருமலானது நான்கு வாரங்கள் வரைகூட நீடிக்கலாம். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் வரும் இருமலுக்கு, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் 'Cough Suppressants' மருந்துகள் எடுத்தால் போதும். தொடர்ந்து இருமுவதால் தொண்டையில் எரிச்சலும், அசௌகர்யமும் ஏற்படலாம். இதைத் தவிர்க்கவே இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இருமல், பெரும்பாலும் வறட்டு இருமலை ஏற்படுத்தாது. இதற்கு மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் வரும் இருமலுக்கு, 'Cough Suppressants' மருந்துகள் எடுத்தால் போதும். Doctor Vikatan: சில வகை இருமல் மருந்துகளைக் குடித்தால் கை, கால் நடுக்கம் ஏற்படுவது ஏன்? சில நேரங்களில் பாக்டீரியா தொற்று குணமானாலும், அதன் பிறகு ஒருவித வறட்டு இருமல் சில நாள்கள் இருக்கலாம். அதைக் குறைக்க Cough Suppressants மற்றும் ஆன்டி-ஹிஸ்டமைன் (Anti-histamines) மருந்துகள் பரிந்துரைக்கப்படும். தொண்டை எரிச்சலையும் அதனால் ஏற்படும் அவதியையும் குறைக்கவே, வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். வறட்டு இருமல் ஏற்பட வேறு காரணங்களும் இருக்கலாம். உதாரணத்துக்கு, ஒவ்வாமை (Allergies), மூக்கடைப்பு (Post-nasal drip), நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி (Gastritis), மற்றும் ஆஸ்துமா போன்றவையும் வறட்டு இருமலை உண்டாக்கலாம். இருமல் மருந்துகள் தற்காலிக நிவாரணமாக மட்டுமே செயல்படும். இருமல் எதனால் ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணத்தைக் (Underlying cause) கண்டறிந்து அதற்குச் சிகிச்சை அளிப்பது மிக அவசியம். எனவே, காரணம் அறியாமல் மருந்துகள் எடுத்தால் இருமல் கட்டுப்படாது. நீங்களாக மருந்து வாங்கிப் பயன்படுத்துவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம், கவனம்! உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
புத்தாண்டில் தமிழினம் தாண்ட வேண்டிய சவால்கள்
2009 ஆம் ஆண்டு மே மாதம் பேரூழியில் சிக்கிய ஈழத் தமிழினம், இப்போது மிகப்பெரிய, அபாயத்தில் சிக்கியிருக்கிறது. போருக்குப் பின்னரான காலகட்டத்தில், தமிழ் இனத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றவர்கள், அதனை சரியாக கையாளாமல் போனதால், அரசியல் போராட்டத்திற்காக இடப்பட்ட அத்திவாரம், ஆட்டம் கண்டது. அதன் மீது, கட்டி எழுப்பப்பட்ட கோட்டை இப்போது தகர்ந்து போய் கிடக்கிறது. தூர நோக்கற்ற அரசியல்
சென்னையில் குப்பை மேடாக காட்சி அளிக்கும் கோவளம் கடற்கரை!
சென்னையில் கோவளம் கடற்கரை குப்பை மேடாக காட்சி அளித்து வருகிறது. இதனால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். விரைவில் இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் எப்போது முடிக்கப்படும்?
திருச்சி மாநகராட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் எப்போது முடிக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்தை ஓரங்கட்டிவிட்டு, மாற்றாக இளம் பேட்டரை சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். அதற்கான காரணம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பந்த்தான் இதற்கு காரணம்!
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் : 5 ம் படை வீடு... ஆங்கிலப் புத்தாண்டு அன்று களைகட்டும் படிபூஜை!
முருகப்பெருமான் வள்ளலாகத் தன்னை நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வாரிவாரி வழங்கும் ஆறு தலங்களே அறுபடைவீடுகள் என்று போற்றப்ப்டுகின்றன. அவற்றுள் திருத்தணி 5 - ம் படை வீடு. சூரபத்மனை போரில் வென்றபின் இங்கு வந்து அமர சினம் தணிந்தது என்பதால் இதனைத் திருத்தணி என்று அழைக்கின்றன ஞான நூல்கள். சினம் தணிந்து வள்ளியோடு இங்கு வந்து அமர்ந்ததால் திருத்தணிகையில் சூரசம்ஹார விழா நடப்பதில்லை என்பது கூடுதல் தகவல். அன்றைய தினம் இத்தல முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மட்டுமே நடைபெறுகிறது. இங்கு மூலவராகத் திகழும் சுப்ரமணிய சுவாமியின் திருமார்பில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. இது சூரபத்மனோடு போர் செய்தபோது ஏற்பட்டது என்கிறார்கள். ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் உள்ளது. முருகப்பெருமானின் வாகனம் மயில் என்பதை அறிவோம். அதேவேளை சுவாமிமலையிலும் திருத்தணியிலும் யானைதான் முருகப்பெருமானின் வாகனமாக உள்ளது. இந்த யானை வாகனம் சந்நிதியின் வெளிப்புறத்தைப் பார்த்தவாறு உள்ளது. திருத்தணி முருகன் இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் முடித்து தந்தபோது, ஐராவதத்தை சீதனமாக கொடுத்தார். இந்திரலோக ஐஸ்வர்யங்களில் ஒன்று ஐராவதம். இதனால், தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்தது. ஆகவே, ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது. மேலும் திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். மாறாக சக்தி ஹஸ்தம் 9 (இதை வஜ்ரவேல் என்றும் சொல்வார்கள்) எனப்படும் இடி போன்ற ஓர் ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். நோய் தீர்க்கும் சந்தன பிரசாதம் இந்தத் தலத்தில்தான் சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இருந்து சக்கராயுதத்தை மகாவிஷ்ணு முருகப்பெருமானின் துணையோடுமீட்டார் என்கிறது தலபுராணம். இங்குள்ள தீர்த்தம் ஒன்றுக்கு விஷ்ணு தீர்த்தம் என்றே பெயர். பகவான் விஷ்ணுவே இதை உருவாக்கினார் என்பது ஐதிகம். இந்தப் புனித தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானி வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருத்தணியில் முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. எல்லா நாள்களும் இந்த சந்தனப் பிரசாதம் கிடைப்பதில்லை. மாறாக விழாக்காலங்களில் மட்டுமே கிடைக்கும். வள்ளிமலை சுவாமிகள் மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் ஆதி பாலசுப்பிரமணியர் அருள்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளிய மூர்த்தி என்கிறார்கள். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், குழந்தையான குமரனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள். இந்தத் தலத்தில் ஆங்கிலப்புத்தாண்டை மிகவும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருக்கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதற்கு விடையாக அமைகிறது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆண்டின் முதல் நாளில் படிபூஜை வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி முருகனின் தீவிர பக்தர். திருப்புகழை பரப்புவதையே தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்ட அவர் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தபோது அங்கே பக்தர் யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அங்குள்ளவர்களிடம் வள்ளிமலை சுவாமிகள் காரணம் கேட்டார். அதற்கு, 'இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். எனவே மக்கள் எல்லோரும் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் இங்கு வருவது இல்லை' என்று கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்ட வள்ளிமலை சுவாமிகள் வருத்தமடைந்தார். 'துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான முருகன் இருக்கும் இடத்துக்கு வராமல் யாரோ ஒரு மனிதரைத் துதித்து வழிபடுவதா' என்று வருந்தினார். மக்களை முருகனிடம் வரவேற்க ஒரு திருவிழா நடத்தலாம் என்று முடிவு செய்தார். அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதை நிகழ்த்த முடிவு செய்தார். படிபூஜை சுவாமி மலையில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பன்று படிபூஜை நடைபெறுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களாக இந்தப் படிகள் விளங்குவதாய் ஐதிகம். எனவே, அவற்றுக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் பூஜைகள் நடைபெறுகின்றன. அதைப்போலவே 365 படிகளைக் கொண்டிருக்கிற திருத்தணிகை முருகன் கோயில் படிபூஜை செய்தால் என்ன என்று யோசித்து அதையே விழாவாகக் கொண்டாட முடிவு செய்தார். மக்களிடம் முருகனே துரைகளுக்கெல்லாம் துரை. எனவே துரை முருகனைக் கொண்டாடுவோம் என்று அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற மக்கள் திருத்தணியில் குவிந்தனர். முதல் படிபூஜை 1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அன்று ஆரம்பமானது. அன்று முதல் இன்றுவரை இந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு படிக்கும் வெற்றிலை, பழம், சூடம் வைத்து இரண்டு நாள்களும் பூஜை செய்யப்படும். டிசம்பர் 31-ம் தேதி காலையில் தொடங்கி மறுநாள் விடிய விடிய நடைபெறுகின்ற இந்தப் படிபூஜை புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியன்று இரவு 10 மணிவரையிலும் நடைபெறும். பக்தர்களும் இதில் திரளாகக் கலந்துகொள்வார்கள். இந்த நாளில் திருத்தணியில் அன்னதானங்களும் பக்தர்களின் கூட்டமும் களைகட்டும். திருத்தணி தலத்தின் மகிமையும் பழைமையும் பெரியது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று சினம் தணிந்த அந்த சுப்ரமணிய சுவாமியை தரிசித்து வாருங்கள். வாழ்வில் சுகங்கள் அனைத்தும் தேடிவரும்.
பதிவு வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
புதிய நம்பிக்கைகள், புதிய கனவுகள், புதிய தொடக்கங்களுடன் 2026 ஆம் ஆண்டு நம் அனைவரையும் வரவேற்கிறது. கடந்த ஆண்டின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்தை நோக்கி உறுதியான அடிகளுடன் முன்னேற வேண்டிய தருணம் இது. உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செய்தி ஊடகங்கள், ஜனநாயகத்தின் தூண்களாக இருந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றன. நேர்மை, வெளிப்படைத் தன்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றுடன் செய்திகளை வாசிக்கும் வாசகர்களே ஊடகங்களின் உண்மையான பலம். 2026 ஆம் ஆண்டு அனைவருக்கும் ஆரோக்கியம், அமைதி, சமத்துவம், வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை கொண்டு வரட்டும். அறிவுச் சிந்தனையையும் வளர்க்கும் ஆண்டாக இது அமையட்டும். பதிவு வாசகர்களுக்கும், செய்தியாளர்களுக்கும், ஊடகப் பணியாளர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், பிரிடோரியா கேபிடல்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணியில் பேட்டர்கள் தொடர்ச்சியாக காட்டடி அடித்து 220 ரன்களை குவித்தனர். இறுதியில் மெகா வெற்றியையும் பெற்றனர்.
சென்னையின் பல்வேறு இடங்களில் மழை-தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த தகவல்!
சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் தளத்தில் மழை தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
புத்தாண்டு உதயமானது ; உலகின் முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு
உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில்,பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி (Kiribati) குடியரசின் கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால், உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது. 2026 பிறந்தது இலங்கை நேரப்படி நேற்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு […]
2026 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி-எங்கனு தெரியுமா?
2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி-எங்கனு தெரியுமா? இதுதொடர்பாக வெளியான அறிவிப்பும், அரசு அனுமதி தொடர்பாகவும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
ஜோக்குகளை மின்னஞ்சலில் அனுப்ப jokes@vikatan.com ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ்
மறுசீரமைப்பின் சுமையுடன் 2026க்கு கால்பதிக்கும் நாடு ; ஜனாதிபதி புத்தாண்டு செய்தி
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது. 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் […]
அமீரக ஆதரவு படைகள் மீது யேமனில் சவூதி தாக்குதல்
ஐக்கிய அமீர ஆதரவுடன் செயல்பட்டுவரும் யேமன் பிரிவினைவாதப் படையினரைக் குறிவைத்து அந்த நாட்டின் முகல்லா துறைமுக நகரில் சவூதி அரேபிய செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்தில் இருந்து வந்த கப்பல்கள் மூலம் தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) பிரிவினைவாதப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் அனுப்பப்பட்டன. இந்த ஆயுதங்கள் யேமனின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உடனடி […]
கொழும்பு மாநகர சபை: தார்மீக வெற்றியா? அல்லது திட்டமிட்ட சதியா?
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (31) இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்டு,… The post கொழும்பு மாநகர சபை: தார்மீக வெற்றியா? அல்லது திட்டமிட்ட சதியா? appeared first on Global Tamil News .
️புதிய ஆண்டு ஒற்றுமையின் சின்னமாக அமையட்டும்”
“புதிய ஆண்டு ஒற்றுமையின் சின்னமாக அமையட்டும்” – மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை புத்தாண்டு வாழ்த்து!… The post ️புதிய ஆண்டு ஒற்றுமையின் சின்னமாக அமையட்டும்” appeared first on Global Tamil News .
தர்பூசணி சாப்பிடும் போட்டியில் மனைவி கண்முன்னே கணவன் பலி ; துயரத்தில் முடிந்த சுற்றுலா பயணம்
சுற்றுலா சென்ற இடத்தில் தர்பூசணி சாப்பிடும் போட்டி ஒன்றில், போட்டியாளர் தனது மனைவி கண் முன்னே கணவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தில் முடிந்தது. 37 வயதான கார்லோஸ் செரசோமா, பிரேசிலின் சாவோ பெட்ரோவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார். கைகளைப் பயன்படுத்தாமல், ஒரு தாழ்வான மேசையிலிருந்து தர்பூசணித் துண்டை யார் வேகமாகச் சாப்பிடுகிறார்கள் என்பதைச் சோதிப்பதே அந்தப் போட்டியாகும். நான்கு குழந்தைகளின் தந்தை நான்கு குழந்தைகளின் தந்தையான அவர், ஒரு பரிசை வெல்லும் […]
முஸ்லிம்களுக்கு தூரநோக்குடனான அரசியலின் தேவை
மொஹமட் பாதுஷா மக்களை மையமாகக் கொண்ட நீண்டகால திட்டமும் தூரநோக்கும் இல்லாத அரசியலின் விளைவுகளை இலங்கை முஸ்லிம் சமூகம் அனுபவிப்பதாகவே தோன்றுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எப்படி, யார் முன்வைப்பது? அவற்றிற்கு எவ்வாறு தீர்வைப் பெறுவது என்பதெல்லாம் விடைதெரியாத கேள்விகளாகியுள்ளன. முன்னைய காலங்களில் எம்.பி.க்களாக இருந்தவர்கள் தமது பதவிக்காலம் முடிந்தவுடன், அரசியலை விட்டு தமது சொந்த வாழ்க்கைக்குள் ஒதுங்கிக் கொண்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும், பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க […]
புத்தாண்டு அதுவுமா இப்படியா..! ஜப்பானில் இப்படி ஆகிடுச்சே..! கொண்டாட்டத்துக்கு நடுவே சோகம்..!
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஜப்பான் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
வவுனியா விசேட நிருபர் வவுனியா, சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகம் உட்பட மக்கள் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளனர். எனவே எதிர்கால ஆபத்தை மக்கள் உணரவேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா, சமளங்கும் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றிருந்தோம். அங்கு தொல்லியல் […]
மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சுவிஸ் கிராம பகுதியில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை தொடர்ந்தே ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சுவிஸ் கிராம கொடூர தாக்குதல் தாக்குதல் சந்தேக நபர்கள் நேற்று முன் தினம் பொலிஸரால் கைது செய்யப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு 12 .30 மணியளவில் அவரது […]
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை: 15 நாள்களில் 8-ஆவது முறையாக வீடுகளுக்குத் தீவைப்பு
வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பிரோஜ்பூா் மாவட்டத்தில் ஐந்து வீடுகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் இதுபோன்ற 8 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பிரோஜ்பூா் மாவட்டத்தில் அண்மையில் இந்தத் தீவைப்பு சம்பவம் நடந்தது. பலாஷ் காந்தி சாஹா, ஷிப் சாஹா, தீபக் சாஹா, ஷியாமலேந்து சாஹா, அசோக் சாஹா ஆகியோருக்குச் சொந்தமான ஐந்து வீடுகளை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அதிகாலை […]
️ பிரித்தானியாவில் குளிர்காலத்தில் 1.8 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு :
பிரித்தானியாவில் நிலவும் கடும் குளிர்காலத்திற்கு மத்தியில், சுமார் 1.8 மில்லியன் சிறுவர்கள் தத்தமது வீடுகளுக்குள் குடும்ப வன்முறையினால் (Domestic… The post ️ பிரித்தானியாவில் குளிர்காலத்தில் 1.8 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு : appeared first on Global Tamil News .
லிஃப்ட் கொடுப்பதாக காருக்குள் அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இளம்பெண்ணை சாலையில் வீசிய கும்பல்!
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் இரவு நேரத்தில் 28 வயது பெண் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அப்பெண் அருகில் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். அப்பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அப்பெண்ணிடம் நாங்கள் உங்களை பத்திரமாக வீட்டில் விட்டு விடுகிறோம் என்று காரில் இருந்த இரண்டு பேரும் தெரிவித்தனர். அவர்களின் வார்த்தையை நம்பி அப்பெண் காரில் ஏறினார். ஆனால் கார் கிளம்பிய சிறிது நேரத்தில் அப்பெண்ணின் வீட்டை நோக்கி செல்வதற்கு பதில் குர்காவ் நோக்கி சென்றது. இது குறித்து அப்பெண் கேட்டதற்கு அவரை காரில் இருந்தவர்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். இரண்டரை மணி நேரம் ஓடும் காரில் அப்பெண்ணை அக்கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதிகாலை 3 மணிக்கு அக்கும்பல் அப்பெண்ணை ஓடும் காரில் இருந்து வெளியில் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். இதில் அப்பெண்ணிற்கு முகத்தில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் தனது சகோதரிக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். அவர்கள் ஓடி வந்து அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். ' அவரது முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு 12 தையல் போடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயாருடன் வருகிறார். சம்பவத்தன்று இரவு அப்பெண்ணிற்கும், அவரது தாயாருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். இது தொடர்பாக தனது சகோதரிக்கு போன் செய்து 3 மணி நேரத்தில் வீட்டிற்கு சென்றுவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். போலீஸார் விரைந்து செயல்பட்டு இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். அதோடு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் (TIDCO) உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 8ஆம் வகுப்பு தகுதிப் பெற்றிருந்தால் போதுமானது. ஆர்வமுள்ளவர்கள் உரிய விவரங்களுடன் ஜனவரி 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் மக்கள் வீதிக்கு இறங்கினர்
ஈரானில்ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் நாணயத்தின் வியத்தகு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்திய நாட்களில் போராட்டம் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை கடைக்காரர்கள் மற்றும் பஜார் வணிகர்களின் வேலைநிறுத்தமாகத் தொடங்கியது, அரசியல் கோபத்தின் கூச்சலாக மாறியுள்ளது, சிலர் சர்வாதிகாரிக்கு மரணம்!என்று கூட கோஷமிட்டனர். தன்னிச்சையான போராட்டங்கள் ஏற்கனவே தெஹ்ரானில் இருந்து இஸ்ஃபஹான் மற்றும் மஷாத் போன்ற பிற நகரங்களுக்கும் பரவியுள்ளன. ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் நாணயத்தின் வியத்தகு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்திய நாட்களில் போராட்டம் நடத்தினர்
இங்கிலாந்து அரசாங்க ரகசியத் தகவல்கள் தவறுதலாக வெளியீடு
இங்கிலாந்தில் அரசாங்க ஆவணங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட ஒரு நிர்வாகத் தவறு காரணமாக, ஆண்ட்ரூ இளவரசரின் பயணத் திட்டங்கள் குறித்த ரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்குத் தற்செயலாகக் கசிந்துள்ளன. பொதுவாக இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் இத்தகைய அரசு ஆவணங்களில், அரச குடும்பம் தொடர்பான விவரங்கள் மட்டும் ரகசியமாக வைக்கப்படுவதை எதிர்த்துப் பல போராட்டக்காரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஜிம்பாப்வே விவகாரங்கள், டோனி பிளேயரின் புதுப்பிப்புத் திட்டங்கள் இந்நிலையில் இந்தத் தவறுக்குப் பின்னர் குறித்த கோப்புகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு, […]
இலங்கை காவல்துறையில் பதவி வேண்டாம்!
சிவில் பாதுகாப்பு பிரிவில்( CSD) பணியாற்றுகின்றவர்களை பொலீஸ் திணைக்களங்களுடன் இணைதது குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதற்கான எழுத்து மூலமான உத்தரவு சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்துள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவித்து வருகின்றனர்.
புலிகளை திருப்திபடுத்தவே டக்ளஸ் கைது!
டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையானின் கைதுகள் முழுக்க முழுக்க அரசியல் ரீதியானவை என்றும், புலம்பெயர் புலிகளைத் திருப்திபடுத்தும் அரசின் செயல்பாடுகளின் ஒரு அங்கமாகவே இரண்டு கைதுகளும் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினால் இயக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படும்; சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கி, தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் காணாமல் ஆக்கப்படுத்தலுக்கும் வன்புணர்வுகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இலங்கையின் ஆகப் பெருங்குற்றவாளிகளில் முதன்மையானவராவார். அவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒருவரென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். எதிராக சூளைமேடு கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தின் பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையில் உள்ளது. அவரின் கைது வெறும் கண்துடைப்பாக மாத்திரமன்றி, அவர் ஆயுளுக்கும் வெளியே வராதபடி அமைந்தால் மட்டுமே சட்டவாட்சியின் பாற்பட்ட கைதாகக் கருதலாம். மாறாக ஒரு சில வாரங்களிலோ அல்லது ஒரு சில மாதங்களிலோ அவர் வெளியே வருவாரேயானால் பிள்ளையான், வியாழேந்திரன் வரிசையில் தமிழ்ப் புல்லுருவிகளைக் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு, அக்காலத்தினுள் அக்கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் ஜே.வி.பி. – என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பாகமாக மட்டுமே பார்க்க முடியுமெனவும் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை சுவீகரிக்க சதிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள யாழ்.மாவட்ட செயலர் பிரதீபன் காணி உரிமையாளர்களுடன் இன்று காலை தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் – ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்ததாக மாவட்ட செயலர் பின்னராக ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார். கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு மாவட்ட செயலர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே மிகுதிக் காணிகள் 4 கட்டங்களாக விடுவிப்பதற்கு யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விகாராதிபதி வாழிடம் உள்ளிட்ட ஏனைய பல கட்டடங்களை அகற்றி வேறிடத்துக்கு கொண்டு செல்லும் வகையிலான செயற்பாடுகளுக்க்கான அவகாசம் கருதியே இந்த 4 கட்டங்கள் வரையறை வகுக்கப்படுள்ளதென காணி உரிமையாளர்கள் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதேநேரம் விகாரை அமைந்துள்ள காணி மூன்று தரபினருக்குரியதாக இருக்கின்றது. ஆனாலும் அந்த காணிக்கான மாற்றுக் காணி குறித்தோ, நஸ்ட ஈடு தொடர்பிலும் எந்தவிதமான தீர்மானமோ யோசனையோ எடுக்கப்படவில்லை முயற்சி ஒரு யோசனையாகவே இன்று தீர்மானிக்கப்பட்டு துறைசார் தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. அது இறுதி முடிவாக அல்லாது யோசனையாகவே இருப்பதனால் நாம் எதிர்வரும் 3 ஆம் நாளன்று ஏற்கனவே தீர்மானித்திருந்த தையிட்டிப் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த தீர்மானித்துள்ளோமெனவும் அறிவித்துள்ளனர்.
சிறைத் தண்டனையால் தகுதி இழக்கிறாரா திமுக எம்.எல்.ஏ? - மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்வதென்ன?
கட்சி மதிமுக-தான், ஆனா சின்னம் உதயசூரியன்! தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனுக்காக இவர் தந்த காசோலைகள் பவுன்ஸ் ஆகி விட்டதையடுத்து, அவருக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது. அதேநேரம் தண்டனையை மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டிருப்பதால், அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டால் இந்தச் சட்டத்தின் கீழ் பதவி இழந்த மூன்றாவது திமுக எம்.எல்.ஏ-வாக இவர் இருப்பார். ஏனெனில் இவர் மதிமுக-வில் இருந்தாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் சட்டப் பேரவை ஆவணப்படி இவர் திமுக உறுப்பினரே. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8 (3)ன் படி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் இரண்டாண்டோ அல்லது அதற்கு மேலோ சிறைத் தண்டனை பெற்றால் உடனடியாக அவர்களது பதவி காலியாகி விடும். மேல்முறையீட்டுக்குச் சென்றால் தண்டனை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால் மட்டுமே திரும்பவும் அந்தப் பதவி கிடைக்கும். இதே சட்டப் பிரிவு 8 (1) ல் எந்தெந்த வகையான குற்றங்கள் என்பவையும் பட்டியலிடப் பட்டுள்ளன. சதன் திருமலைக்குமார் தண்டனை தந்ததும் இப்ப பதவி தந்ததும் ஒரே ஆள்! தமிழ்நாட்டில் முதன் முதலாக இந்தச் சட்டத்தின் படி பதவியை இழந்தவர் செல்வகணபதி. சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் வழக்கில் இவருக்கு தண்டனை கிடைத்தது. வேடிக்கை என்னவென்றால் இவர் ஊழல் செய்தார் என வழக்கு போட்டது திமுக. ஆனால் இவருக்குத் தண்டனை கிடைத்த போது அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இருந்தார். பிறகு அந்த தண்டனை மேல் முறையீட்டில் ரத்து செய்யப்பட தற்போது அதே திமுக-வின் சார்பாக மக்களவை உறுப்பினராக இருக்கிறார். செல்வகணபதி தொடரலாமா கூடாதா? இந்தச் சட்டத்தின் படி பதவி இழந்த திமுக-வின் இரண்டாவது ஆள் பொன்முடி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் மூன்றாண்டு தண்டனை கிடைக்க, பதவி இழந்தார். ஆனால் மேல்முறையீட்டில் அந்த தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டப்படி தண்டனை ரத்து செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் பதவி கிடைக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் பொன்முடி விவகாரத்தில் தண்டனை ரத்து செய்யப்பட்டதாக தெரியவில்லை. இருந்தாலும் தற்போது திருக்கோவிலுர் எம்.எல்.ஏ.வாகத் தொடர்கிறார். K. Ponmudy தலைவியும் தொண்டனும்! அதிமுகவை எடுத்துக் கொண்டால், அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே இந்தச் சட்டத்தின் கீழ் பதவியை இழந்தார். மேல் முறையீட்டுக்குச் சென்று தீர்ப்பை ரத்து செய்து மீண்டும் பதவி வகித்தார். எதிர் தரப்பில் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், அதன் தீர்ப்பு வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். அதிமுகவில் எல்.எல்.ஏ.வாக இருந்த பாலகிருஷ்ண ரெட்டியும் இதே போல் பதவி இழந்தவர்தான்.. திமுக அரசைக் கண்டிதது அதிமுக நடத்திய ஒரு போராட்டத்தின் போது கல்வீச்சில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு. வழக்கில இவருக்கு மூன்றாண்டு தண்டனை கிடைக்க பதவி இழந்தார். பல வருடம் கழித்து கடந்தாண்டு இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா இதே சட்டத்தின் கீழ் மோடியை அவதூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்தால் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் பதவி இழந்தார். ஆனால் அவர் வழக்கை நடத்தி தண்டனை ரத்தாகி விட்டது. ராகுல் காந்தி வெறும் அவதூறு குற்றச்சாட்டிலேயே பதவி இழந்ததைச் சுட்டிக்காட்டும் சட்ட நிபுணர்கள் சிலர், சதன் திருமலைக்குமார் மோசடி வழக்கு என்பதால் அவரது பதவி உடனடியாகக் காலியாகி விட்டது என்றுதான் அர்த்தம். அறிவித்து தெளிவுபடுத்த வேண்டியது சட்டப் பேரவைச் செயலகம்தான் என்கின்றனர்.
புத்தாண்டு அதுவுமா இப்படியா? யூரோஸ்டார் ரயில் சேவையில் பாதிப்பு.. பயணிகள் அவதி!
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கண்டத்தை இணைக்கும் முக்கிய ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக யூரோஸ்டார் ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
️ மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்: மக்கள் அலைமோதும் கடைத்தெருக்கள்!
️ மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்: மக்கள் அலைமோதும் கடைத்தெருக்கள்! மன்னார் நகர சபை பிரிவில்… The post ️ மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்: மக்கள் அலைமோதும் கடைத்தெருக்கள்! appeared first on Global Tamil News .
நாவலனின் கொடுப்பனவில் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் சிரமதானம்
புங்குடுதீவு -நயினாதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களின் நினைவு தினத்தை (30-12-2025) முன்னிட்டு தமிழ்த்தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சிகளிலொன்றான ஜனநாயக தமிழரசுக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு.கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியிலும் , ஏற்பாட்டிலும் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. கடந்த 2018 ம் ஆண்டு தொடக்கம் வேலணை பிரதேச சபை உறுப்பினராக செயற்படுகின்ற திரு . கருணாகரன் […]

27 C