இன்று ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) நாடு முழுவதிலும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகின்றன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 451,463 ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார். சீரற்ற வானிலை தற்போது நிலவும் சீரற்ற வானிலை அல்லது ஏதேனும் அனர்த்தங்கள் காரணமாக மாணவர்கள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அனர்த்த […]
தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நேற்று (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலை சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் கடத்தல் வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்க என்ற “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருள் கடத்தலை இலங்கையில் […]
யாழ்ப்பாணம் மாநகர சபை: பிரஜா சக்தி திட்டத்திற்கு எதிரான பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தி திட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாண மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (16) மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பில் கேட்ஸ்: `சுகாதாரம் முதல் AI தொழில்நுட்பம் வரை' - ஆலோசனை செய்த சந்திரபாபு நாயுடு!
மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான பில் கேட்ஸ் ஆந்திரப் பிரதேசத்திற்கு வருகை தந்தார். கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்த அவரை, ஆந்திர ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, அமராவதியில் உள்ள மாநிலச் செயலகத்திற்கு வருகை தந்த அவருக்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர் மாநிலச் செயலகத்தில், துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சரவை சகாக்களைப் பில் கேட்ஸிற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடு - பில்கேட்ஸ் இந்தச் சந்திப்பின் போது, ஆந்திர அரசின் பல்வேறு நிர்வாக முயற்சிகளில் கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக, சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தற்போது நடைபெற்று வரும் சுகாதாரத் திட்டங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது, விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவது, டிஜிட்டல் கல்வி முறைகளை மேம்படுத்துவது, நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆந்திர அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கும் 'ரியல் டைம் கவர்னன்ஸ் சிஸ்டம்' (RTGS) மையத்தைப் பில் கேட்ஸ் பார்வையிட்டார். அங்கு அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ஸ்வர்ண ஆந்திரா 2047 என்ற தொலைநோக்குப் பார்வை குறித்தும், மருத்துவத் துறையில் டிஜிட்டல் மயமாக்கலைக் கொண்டுவரும் 'சஞ்சீவானி' திட்டம் குறித்தும் முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுத்துரைத்தார். பில்கேட்ஸ் - சந்திரபாபு நாயுடு செயலகக் கூட்டத்திற்குப் பிறகு, அமராவதி அருகே உள்ள உண்டாவல்லி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணைக்குப் பில் கேட்ஸ் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விவசாயத்தில் ட்ரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏற்கனவே ஒருங்கிணைந்த ஆந்திராவிற்கு இரண்டு முறை வந்துள்ள பில் கேட்ஸ், சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று தற்போது மூன்றாவது முறையாக ஆந்திரா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வருந்துகிறேன்; அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன் - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ்
யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா; நான்கு நாள்களில் பன்னிரண்டு அமர்வுகள்
யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா; நான்கு நாள்களில் பன்னிரண்டு அமர்வுகள் 376 பட்டப்பின் தகைமைகள், 2557 உள்வாரி, 252 வெளிவாரி பட்டங்கள், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்கள், 01 சான்றிதழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 19ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு […]
SL vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு அடி மேல் அடி... முதல் சுற்றோடு வெளியேறுகிறதா?
ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளின் உலக கோப்பை போட்டி, இலங்கையின் Pallekele International Cricket Stadium மைதானத்தில் நடந்து முடிந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, இந்தப் போட்டியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று குரூப் B-யில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மாறாக, இந்தத் தோல்வியால் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி, மைதானத்தின் நிலையை கணித்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கமே அமோகமாக அமைந்தது. ஓப்பனர்களாக களமிறங்கிய Travis Head (56) – Mitchell Marsh (54) ஜோடி, அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பில்லாமல் 104/0 என்ற வலுவான நிலையில் அணியை கொண்டு சென்றது. ஆனால் அதன் பிறகு காட்சியே மாறியது. இலங்கை அணியின் அசத்தலான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. முதல் 50 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா, அடுத்த 70 பந்துகளில் 77 ரன்கள் மட்டுமே எடுத்து 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நிசாங்கா சதம்… இலங்கை கொண்டாட்டம் 182 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, 2-வது ஓவரிலேயே பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு களத்தில் நிலைத்த Kusal Mendis மற்றும் Pathum Nissanka ஜோடி, தேவையான நேரங்களில் ரன்களைத் தேடி தேடி அடித்து ஆட்டத்தை இலங்கை பக்கம் திருப்பியது. இருவரும் அரைசதம் கடந்தனர். 105 ரன்கள் இருந்த நிலையில், 13-வது ஓவரில் மெண்டிஸ் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு முழுக் கவனமும் நிசாங்காவின் பேட்டிங்கில்தான். இந்த வருட T20 தொடரின் முதல் சதத்தை பதிவு செய்த நிசாங்கா, 100 (52 பந்துகள்) என அதிரடியாக விளையாடினார். இதன் மூலம் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றி, சூப்பர் 8 சுற்றில் தங்களுக்கான இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் அதிரடி காட்டிய நிசாங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவின் கணக்கு என்ன? இனி ஆஸ்திரேலியா சூப்பர் 8-க்கு தகுதி பெற வேண்டுமெனில், ஜிம்பாப்வே அணியின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே அமையும். ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ள ஜிம்பாப்வே, 4 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலே, குரூப் B-யில் இரண்டாவது அணியாக ஜிம்பாப்வே தகுதி பெறும் சூழல் உருவாகியுள்ளது. ஜாம்பவான் அணியாக, வலுவான அணியான ஆஸ்திரேலியா முதல் சுற்றுடன் வெளியேறுவதற்கான சூழலே தற்பொழுது நிலவுகிறது என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
உக்ரேன் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கைது
உக்ரேனில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் முறைப்பாட்டில் கடந்த ஆண்டு அரசாங்கப் பணியில் இருந்து நீக்கப்பட்ட ஜெர்மன் கலுஷ்செங்கோ, உக்ரேனில் இருந்து புறப்படும் ரயிலில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. நவம்பரில் நடந்ததாகக் கூறப்படும் 100 மில்லியன் டொலர் (75 மில்லியன்) மோசடித் திட்டத்தில் தொடர்புடைய பல அரசாங்க நபர்களில் இவரும் ஒருவர். ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு […]
லால்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு-மக்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது!
லால்குடியில் புதிய பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மக்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்படும் பொது மக்களுக்கான அறிவித்தல்…
எதிர்வரும் ஓரு சில தினங்களில் முஸ்லீம்களுடைய புனித றமழான் மாதம் ஆரம்பிக்கின்றது. அந்த நேரத்தில் எமது மாவட்டத்தில் உள்ள பொது மக்கள்/பாவனையாளார்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தையில் போலியான அல்லது கலப்படம் செய்யப்பட்ட அல்லது தரம் குறைந்த அல்லது காலாவதியான அல்லலது பாவனையாளர் பாவனைக்கு உகந்ததற்ற உணவுப் பொருட்களை வியாபார நிலையங்களில் அல்லது சந்தையில் அவதானிக்குமாறும் அவ்வாறு மேலே குறிப்பிட்ட மேசடிகள் இடம் பெறும் போது அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினை தொடர்பு கொண்டு […]
Tamil Nadu Interim Budget 2026 Live Updates : தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்றும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மரணத்தில் புதிய திருப்பம்
ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவின் ஈக்வடோர் பகுதியில் காணப்படும் ஒரு வகை விஷத் தவளைகளின் நஞ்சை பயன்படுத்தித் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகப் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஈவெட் கூப்பர் தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு சைபீரிய சிறையில் நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த ஐந்து ஐரோப்பிய ஆய்வகங்கள், ‘எபிபாடிடைன்’ என்ற கொடிய நச்சு அவரது உடலில் இருந்ததை உறுதி செய்துள்ளன. […]
புட்டின் அதிரடி முடிவு: ஐரோப்பிய எல்லைக்கு அருகே அணு ஆயுதங்களை நகர்த்தும் ரஷ்யா!
உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.… The post புட்டின் அதிரடி முடிவு: ஐரோப்பிய எல்லைக்கு அருகே அணு ஆயுதங்களை நகர்த்தும் ரஷ்யா! appeared first on Global Tamil News .
யாழில் காணி பிரச்சனையால் அரங்கேறிய கொடூரம் ; மூவர் தலைமறைவு
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சமபவ்ம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 59 வயதான நபரே உயிரிழந்துள்ளார். மூவர் இணைந்து தாக்குதல் கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை […]
O/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு; அவசர இலக்கங்கள்
நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அவசர இலக்கங்கள் அறிவிக்கபப்ட்டுள்ளது. அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல […]
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலர் ரூஹி மொஹசப்!
யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டு வரலாற்று சாதனை புரிந்துள்ளார். தாய்லாந்து தலைநகர்
குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்’
குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. கலர் பென்சில்
என் அப்பாவை பார்க்க இந்த வீட்டுக்கு நடிகர்கள் யாருமே வரலைனு - Actor வினுசக்ரவர்த்தி மகள் Breaking
செஞ்சுரி அடிக்கும் திமுக.. ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை.. திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட பரப்புரை இன்றோடு 97 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது.
AI Summit 2026: Indiaக்கு என்ன லாபம்? | Gold | Share market | IPS Finance - 438
CREDAI Chennai Announces FAIRPRO 2026 Featuring 500+ Projects and 80+ Developers
Confederation of Real Estate Developers’ Associations of India (CREDAI) Chennai proudly announces the 18th Edition of FAIRPRO 2026, South India’s
ஒன்றரை வருஷம் ஓடுன படத்தை Re-release பண்ண விடலை - Keyaar | My Dear Kuttichathan| Vikatan Interview
Winners of National Industry Quiz Announced and Felicitated
India’s first-ever Elevator & Escalator Symposium & Quiz 2026, concluded yesterday in Chennai and dedicated exclusively to vertical transportation professionals,
Avtar Human Capital Trust Hosts the 3rd Edition of the Male Allyship Synergy Summit in Chennai
Avtar Human Capital Trust (AHCT), the non-profit arm of Avtar, India’s leading workplace culture consulting firm, hosted the third edition
ஜோதிமணி எம்.பி. குறித்து ஆபாசமான கருத்துகளை பேசிய பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நைஜீரியா: ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 46 பேர் பலி
அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் நைஜர் மாகாணம் பொர்கு நகரில் உள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. மேலும், கிராமங்களில் உள்ள […]
இலங்கையில் 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் தரையிறக்கம்; எதற்காக தெரியுமா!
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியைக் பார்பதற்காக, 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள பெருமளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இந்த விமானங்கள் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மேலும் பல நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தன. குறித்த விமானங்கள் மூலம் பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், […]
இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசுக்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி, தமிழக… The post இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசுக்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்! appeared first on Global Tamil News .
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்என்ற தொனிப்பொருளில்; கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய போராட்டம், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார், ஏனைய மதகுருக்கள் சட்டங்களை எதிர்த்து கையொப்பமிட்டனர். தொடர்ந்து கருத்து வெளியிட்ட யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமாக தமிழ் மக்கள் செல்லொணா துயரங்களை அனுபவித்தார்கள். எத்தனையோ பேரின் வாழ்க்கையில் கவலைகளும், வலிகளும், இழப்புக்களும் ஏற்பட்டன. ஆகவே அவ்வாறான ஒரு சட்டமூலத்தை நீக்குமாறு நீண்ட காலமாக அரசாங்கங்களை, தமிழ் மக்களாகிய நாங்கள் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குகின்ற பாணியில் புதிய ஒரு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய சட்டத்தின் மூலமாகவும் தமிழ் மக்களுக்கு பிரதானமான பாதிப்புகள் ஏற்படும். அதன்மூலம் அவர்களுடைய வாழ்க்கையானது தொடர்ச்சியாக பயத்தின் மத்தியிலேயே தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது. மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும், அமைதியாகவும், பயமில்லாமலும் வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்துவதற்கு பழைய பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு, புதிதாக எந்த சட்டமூலத்தையும் அறிமுகம் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடமும், நீதி அமைச்சிடமும் தமிழ் மக்களாகிய நாங்கள் முன்வைக்கின்றோம். எமது இந்த கோரிக்கையை அரசாங்கமானது ஏற்று, தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்து தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை இந்த நாட்டில் ஏற்படுத்த வேண்டும் எனவும் குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கிரிக்கெட்:யாழில் கைது!
இந்திய மீனவர்களிற்கு எதிரான இலங்கை கடற்படை நடவடிக்கைகள் மீண்டும் முடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் திங்கட்கிழமை (16) அதிகாலை, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிக்கு அருகில் இலங்கை கடற்பரப்பில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. அதன்போது இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் இரண்டை கைப்பற்றி இந்திய மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்திடம்; ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இலங்கை மைதானத்தில் இந்திய –பாகிஸ்தானிய வீரர்களிற்கிடையே கிரிக்கட் சுற்றுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த சமநேரத்தில் தமிழக மீனவர்கள் கைது வேட்டை நடந்தேறியுள்ளது.
புலம்பெயர் தமிழர்களிற்கு வீச்சு!
புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை இலக்கு வைத்து சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண்மை துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவை பிறப்பித்துள்ளார். 50 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான முதலீடுகளுக்கு மேற்படி வரிச் சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படும். தகுதி பெறும் திட்டங்கள் குறைந்தது 50 உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. தகுதிவாய்ந்த முதலீடுகளுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரையிலான பெருநிறுவன வருமான வரி விலக்குகள் வழங்கப்படும். அதேவேளை, திட்டங்களுக்குத் தேவையான மூலதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வரிச் சலுகைகள் பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) மாலை இலங்கை கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் 18 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர், மத்திய வங்கி ஆளுநர் உட்பட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.
பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைக்க சிறிலங்கா- பாகிஸ்தான் இணக்கம்
பாகிஸ்தானும் சிறிலங்காவும், உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, கொழும்பில் சிறிலங்காவின் உயர்மட்டத் தலைவர்களுடன் இன்று நடத்திய சந்திப்புகளின் போதே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார
கைதான காரைக்கால் மீனவர்கள்.. சிறையில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்.. கலக்கத்தில் புதுச்சேரி!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 25 பேருக்கும் இம்மாதம் 27 ஆம் தேதி வரை சிறை காவல் விதித்து ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Email இயக்கம் நடத்தும் TN Congress - TVK உடன் கூட்டணியா? | NDA -வில் DMDK | DMK BJP | IPS Vikatan
பாக்கெட் நாவல்: மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி!
'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்' (Tyler Durden and Kino Fist) பேனரின் கீழ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிட்டிருக்கிறார். பாக்கெட் நாவல் இந்தப் படத்தில், 'சூப்பர் டீலக்ஸ்' குழுவில் பணியாற்றிய தயாரிப்பாளர் எஸ்.டி. எழில்மதி, எடிட்டர் சத்யராஜ் நடராஜன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, பாக்கெட் நாவல் படத்திலும் இணைந்திருக்கிறார். இவருடன் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். Gandhi Talks: ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!- விஜய் சேதுபதி
வாழ்நாள் துயரத்தில் முடிந்த Maternity Photoshoot; கவனச்சிதறலால் பறிபோன 3 வயது மகனின் உயிர்
பெங்களூருவின் ஜே.பி நகரைச் சேர்ந்தவர்கள், சுவாதி-சரண் ராஜ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் லக்ஷ்மீர் என்ற மகன் இருந்தார். சுவாதி தனது இரண்டாவது பிரசவத்திற்காகக் காத்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரு புறநகரில் உள்ள ஸ்டுடியோவிற்கு தனது மகனுடன் சென்றிருந்தார். அந்த ஸ்டூடியோ வளாகம் புகைப்படங்களுக்காக மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அங்கு 2 அடி ஆழம் கொண்ட ஒரு செயற்கைக் குளம் அமைக்கப்பட்டிருந்தது. மதியம் சுமார் 1:30 மணியளவில், அனைவரும் கேமராக்களுக்கு முன்னால் மும்முரமாக இருந்தபோது, சிறுவன் லக்ஷ்மீர் தனியாக விளையாடிக்கொண்டிருந்தான். சுமார் 20 நிமிடங்கள் கழித்து குழந்தையைக் காணவில்லை என்பதை உணர்ந்த சுவாதி பதற்றமடைந்தார். ஸ்டுடியோ ஊழியர்களுடன் இணைந்து தேடியபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்தச் சிறுவன் குளத்தில் விழுந்து கிடப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட லக்ஷ்மீர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்தத் துயரச் சம்பவம் நடந்தபோது, சிறுவனின் தந்தை சரண் ராஜ் வேலை விஷயமாக இத்தாலியில் இருந்தார். ஒரே மகனை இழந்த செய்தி கேட்டு அவர் உடனடியாக பெங்களூரு திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டுடியோ வளாகத்தில் இதுபோன்ற நீர்நிலைகள் இருக்கும்போது முறையான தடுப்புகளோ அல்லது எச்சரிக்கை பலகைகளோ இல்லாதது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓர் அழகான நினைவைச் சேமிக்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட சிறு கவனச்சிதறல், ஒரு குடும்பத்தின் வாழ்நாள் துயரமாக மாறியுள்ளது.
திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: புது நிர்வாகிகளை ஏகமனதாக தேர்வு செய்தது ஏன்? - சரண் விளக்கம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2016-29க்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் என பல்வேறு முதன்மை பொறுப்புகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில பதவிகளுக்கு மட்டும் தேர்தல் மூலம் தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் சினிமாவின் அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்று, புதிய உறுப்பினர்களை வாழ்த்தினார்கள். புது நிர்வாகிகள் புதிய தலைவராக ஆர்.கே.செல்வமணி, துணைத்தலைவராக பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பொதுச்செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளராக இயக்குநர்கள் எழில், சரண், சுந்தர்.சி, என்.ஏகம்பவாணன், ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு, ஏ.வெங்கடேஷ், எஸ்.ரவிமரியா உட்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது குறித்து இணை செயலாளரான இயக்குநர் சரணிடம் பேசினோம். சரண் ''அனைத்து திரைப்பட சங்கங்கள் ஒரே சமயத்தில் தேர்ந்தலை நடத்திடணும்னு பேசியிருக்கோம். இந்த முறையும் ஜனநாயக முறைப்படி சங்க தேர்தலை நடத்த விரும்பினோம். வழக்கமாக இருந்ததை மாற்றி இப்போது மூணு வருஷமாக கொண்டு வந்துருக்கோம். இனிமே மூணு வருஷத்துக்கு ஒருமுறைதான் தேர்தல் நடைபெறும். போனமுறை பொருளாளராக நான் இருந்தேன். தலைவராக ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளராக பேரரசுவும், கௌரவ தலைவராக செல்வமணியும் இருந்தாங்க. சென்ற முறை உள்ள அத்தனை பேரும் சிறப்பாக பொறுப்பு வகிச்சதால இந்த முறையும் தேர்வாகியுள்ளனர். பலரும் ஏக மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒருசிலர் மட்டும் எதிர்த்து போட்டியிட்டாங்க. ஓட்டு எண்ணிக்கை நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இன்னிக்கு காலையில 10 மணிக்கு கமலா திரையரங்கில் பதவியேற்பு விழா நடந்தது. சென்ற முறை எங்களோட சாதனைகளாக பல விஷயங்களை சொல்லலாம். எல்லாமே கூட்டு முயற்சிதான். இரவு பகல் பாராமல் உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தார் ஆர்.வி.உதயகுமார் சார். நிறைய உயிர்களை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அமைஞ்சது. ஐசரி கணேஷ் சார் உட்பட பலரின் முக்கியமான கல்லூரிகள்ல இலவசமாக சீட் வாங்கி கொடுத்தோம். பண்டிகை காலங்கள்ல வேட்டி- சட்டை, பட்டுப்புடவை வரை கொடுத்தோம். பதவியேற்பு இந்த முறை தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆர்.கே.செல்வமணி முக்கியமான ஓர் அஜென்டாவோடு வந்திருக்கார். உதவி இயக்குநர்களின் ஊதியங்களை சங்கத்தின் வழியாக கொடுப்பதற்கான விஷயங்களை முன்னேடுத்துள்ளார். ஏன்னா, டான்ஸ் யூனியன், ஸ்டண்ட் யூனியன்கள்ல அவங்களோட சம்பளத்தை அவங்கவங்க சங்கங்களுக்கு அனுப்பி வச்சிடுவாங்க. அந்த சங்கங்களும் சின்னதாக ஒரு சர்வீஸ் கட்டணம் வசூல் செய்து, அந்த தொகையை வைத்து பெரியளவுல அந்த உறுப்பினர்களுக்கு நன்மைகளை செய்வாங்க. இந்த முறை உதவி இயக்குநர்களின் சம்பளத்தை சங்கம் வழியாக கொடுக்கும் போது, பெரியளவுல உதவி செய்ய முடியும் என்பதுல புது தலைவர் உறுதியாக இருக்கார். சீக்கிரமே இது நடைமுறைக்கு வந்துடும். ஏன்னா, இப்படி வசதி இல்லாத ஒரே யூனியன் எங்க யூனியன் தான். படப்பிடிப்பில் போதியளவு ஊதியம் பெறாத ஆட்கள், உதவி இயக்குநர்களாகத்தான் இருக்க முடியும். இந்த பக்கம் ஒரு உதவி இயக்குநர் அவனோட கன்வேயன்ஸுக்காக சில நூறு ரூபாய்காக போராட்டிக்கிட்டு இருப்பார். அந்தப் பக்கம் ஒரு நடிகர் நடிகையோட டச்சப் பாய் 10 ஆயிரம், 15 ஆயிரம்னு வாங்கிட்டு இருப்பாங்க. இந்த ஏற்றத்தாழ்வு இனி இருக்கக் கூடாதுனு உதவி இயக்குநர்களின் சம்பளத்தை உயர்த்தியிருக்கோம். சங்கம் வழியாக சம்பளம் போடும் முறையை கொண்டு வரும் போது உதவி இயக்குநர்களுக்கு தங்கு தடையில்லாமல் அவங்களோட வங்கி கணக்குகள்ல ஆர்.வி.உதயகுமார் போய்ச்சேர்ந்துடும். தவிர படப்பிடிப்பில் பயோமெட்ரிக் சிஸ்டமும் கொண்டு வரப்போறோம். பெப்சியில் ஏற்கெனவே இருக்கற நடைமுறைதான். படப்பிடிப்புல வேலை செய்யுறவங்க யூனியன்ல உள்ள ஆட்களாக இருக்கணும் என்பதற்காக இந்த முறையை கொண்டு வர்றோம். சில யூனியன்ல இதை இம்ளீமென்ட்டும் செய்துட்டாங்க. ஆர்.கே.செல்வமணி சார் பெப்சியிலும் பொறுப்பில் இருக்கறதால இதை ஒரு பாதுகாப்பானதாகவும் கருதுறோம்.'' என்கிறார் இயக்குநர் சரண். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்!
வங்காளதேசத்தில் வருகிற 17-ந்தேதி புதிய அமைச்சரவை பதவியேற்பு
டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து வங்காளதேசத்தில், பேராசிரியர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதன்பின்னர், பிப்ரவரி 12-ல் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, வங்காளதேசத்தில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் 12-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி நடந்தது இதில், […]
65 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மிலன் கூட்டுப் பயிற்சி
அனைத்துலககடற்படை மீளாய்வு (International Fleet Review) மற்றும் மிலன் (MILAN) கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, தாய்லாந்து, அவுஸ்ரேலியா, சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் நேற்று விசாகப்பட்டினத்தை சென்றடைந்துள்ளன. தாய் கடற்படையின் கடல்சார் ரோந்து கப்பலான கிராபியை (HTMS Krabi), அவுஸ்ரேலிய கடற்படையின் போர்க்கப்பலான வாரமுங்கா (HMAS Warramunga) , சிறிலங்கா கடற்படையின் நந்திமித்ர மற்றும் சாகர ஆகிய போர்க்கப்பல்களே விசாகப்பட்டினத்தை அடைந்துள்ளன. சுதந்திர இந்தியாவின்
AC: ஏசிக்கு பழகிவிட்ட உடல்... குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா?
எனக்கு வேலையிடத்தில் ஏசியில் இருந்து பழகிவிட்டது. அதன் காரணமாக வீட்டிலும் அதே குளிர்ச்சியான சூழல் தேவைப்படுகிறது. குளிர்காலத்திலும் ஏ.சி அறையில் உறங்குவது நல்லதா... ஏ.சி இல்லாமல் உறக்கம் வருவதில்லை. என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கு பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் ஏ.சி செய்யப்பட்ட சூழல்களால் சில பிரச்னைகள் வரக்கூடும். அதாவது, ஏ.சி-யானது அந்தச் சூழலை வறட்சியாக்கி, ஈரப்பதமின்றி மாற்றிவிடும். அதன் விளைவாக நம் உடலிலும் நீர்வறட்சி ஏற்படும். ஏ.சி-யின் ஃபில்டர்களை குறிப்பிட்ட இடைவெளியில் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் அலர்ஜி பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. ஃபில்டரில் படியும் தூசு மற்றும் கிருமிகள் ஒவ்வாமை பாதிப்புகளுக்கு காரணமாகலாம். ஏ.சி செய்யப்பட்ட அறைகளுக்குள் இருக்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வெளிச்சமோ, காற்றோட்டமோ உள்ளே வர அனுமதிக்க மாட்டோம். வீடோ, பணியிடமோ... மூடப்பட்ட சூழலில், ஏ.சி-யும் இயங்கும்போது பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் பெருக்கமும் பரவலும் அதிகரிக்கும் ஆபத்துகளும் உண்டு. ஜலதோஷம் இந்தக் கிருமிகள் ஏ.சி-யின் ஃபில்டர்களில் போய் உட்கார்வது மட்டுமன்றி, அந்தச் சூழலில் இருப்போருக்கு காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி, அவை மற்றவர்களுக்கும் பரவக் காரணமாகும். வீட்டில் ஒருவர் உடல்நலமின்றி இருக்கும் நிலையில் ஏ.சி அறையில் அவரிடமிருந்து மற்றவர்களுக்கும் அந்த பாதிப்பு பரவும் வாய்ப்புகள் அதிகம். மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் குளிர்காலத்தில் அதிகம் தாக்கக்கூடும். வெளியிலுள்ள சூழலும் குளிர்ச்சியாக இருக்கும் நிலையில், தொண்டை வறட்சி, சரும வறட்சி, இருமல் போன்றவை அதிகமாகலாம். மழை மற்றும் குளிர்காலங்களில் ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவும். அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும். ஏ.சி-யால் சளி பிடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. முன்னரே குறிப்பிட்டபடி, ஏ.சி-யின் ஃபில்டர்களை சரியாகச் சுத்தப்படுத்தாத நிலையில், அவற்றில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக் கிருமிகள் சேர்ந்து, அவற்றின் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இன்ஃபுளுயன்சா - வைரஸ் காய்ச்சல் ஏ.சி உபயோகிக்கும்போதெல்லாம் அதிலிருந்து கிருமிகள் பரவி, அலர்ஜி பாதிப்புக்குள்ளாகும் தன்மை கொண்டவர்களுக்கு சளி பிடிக்கலாம். வெப்பநிலையில் திடீர் மாற்றம் காரணமாக சிலருக்கு சளி பிடிக்கலாம். இது ஏ.சி அறைக்குள் இருப்பதால் மட்டுமன்றி, வானிலை மாற்றத்தாலும் நிகழலாம். அதனால்தான் வானிலை மாறும்போது சிலருக்கு சளி பிடிப்பது, மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் வருவதைப் பார்க்கிறோம். இது சளியாகக் கருதப்பட வேண்டியதல்ல... தற்காலிகமானதுதான். சில நாள்களில் சரியாகிவிடும். ஆனால், மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் அடிக்கடி வரும்பட்சத்தில், அவை சளி பாதிப்பின் அறிகுறிகளா, அலர்ஜியா, தற்காலிக பாதிப்பா என்பதையெல்லாம் மருத்துவ ஆலோசனையில் தெரிந்து கொண்டு சிகிச்சை எடுக்கலாம். கதவுகள் எனவே, குளிர்காலத்திலும் ஏ.சி வேண்டும் என்போர், ஏசி பயன் படுத்தாத நேரத்தில் அறைகளின் கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்து வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளே பரவ அனுமதிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள், வெளிக்காற்றை உள்ளே இழுக்கக்கூடிய வசதிகள் கொண்ட ஏசியை பொருத்தலாம். குறிப்பிட்ட இடைவெளியில் ஏ.சி-யை முறையாக சுத்தம் செய்வது, சர்வீஸ் செய்வது போன்றவற்றைச் செய்யத் தவறாதீர்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சருமம் வறண்டு போகாமலிருக்க மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு குறைவான நேரத்துக்கு மட்டுமே ஏ.சி-யை பயன்படுத்தவும். தண்ணீர் ஏ.சி-யின் குளிர்நிலையைக் குறைவாக வைத்துக் கொள்வதுதான் சரியானது. ரொம்பவும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்போதுதான் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் அதிகமாகும். ஓரளவு குளிர்ச்சியோடு வைத்துக்கொள்ளும்போது, தூக்கத்தில் பிரச்னைகள் இன்றி இருக்கும்.
மடப்புரம் அஜித் குமார் வழக்கில் முக்கிய திருப்பம்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
மடப்புரம் கோவில் காவலாளி கொலை வழக்கில் ஜாமின் கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அக்கரைப்பற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான செயற்குழுக் கூட்டம் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எம். சபீஸின் ஏற்பாட்டில் நேற்று (15) அக்கரைப்பற்றில் நடைபெற்றது. கட்சியின் அமைப்பாற்றலை வலுப்படுத்துவதும், மாவட்ட மட்ட அரசியல் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அஸ்ரப் தாஹீர், உயர்பீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் […]
ஜேஇஇ மெயின் 2026 தேர்வின் முதல் தாள் முடிவுகளை (JEE Main 2026 Paper I Result) தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. 13,04,653 பேர் இத்தேர்வு நாடு முழுவதும் எழுதியுள்ளனர். முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
திமுகவை மிரட்டும் காங்கிரஸ்? தவெக-காங்கிரஸ் கூட்டணி களத்தில் work ஆகுமா?
2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் யார் பக்கம் செல்லப் போகிறது என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திமுக கூட்டணியிலேயே தொடருமா, அல்லது தமிழகம் வெற்றிக் கழகம் (தவெக) பக்கம் நகருமா என்ற கேள்வி தேர்தல் பிரச்சாரங்களிலும் பேசப்படும் முக்கிய அம்சமாகியுள்ளது.
பாக்கெட் நாவல்: தியாகராஜன் குமாரராஜா –விஜய் சேதுபதி கூட்டணியின் புதிய படப்பிடிப்புத் தொடக்கம்
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் 'பாக்கெட் நாவல்' திரைப்படப் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. விஜய் சேதுபதி மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கெட் நாவல்: தியாகராஜன் குமாரராஜா –விஜய் சேதுபதி கூட்டணியின் புதிய படப்பிடிப்புத் தொடக்கம்
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் 'பாக்கெட் நாவல்' திரைப்படப் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. விஜய் சேதுபதி மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையை கிளப்பிய அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பேட்டி
வேற்று கிரகவாசிகள் என சொல்லப்படும் ஏலியன்கள் உலகில் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வி பல வருடங்களாகவே இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது. பூமி எனும் கிரகத்தில் மக்கள் வசிப்பது போல பிரபஞ்சத்தில் மற்ற கிரகங்களில் ஏலியன் வசிக்கலாம் என குறிப்பிட்ட சதவீதம் பேர் நம்புகிறார்கள். ஒருபக்கம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வாகனங்கள் (UFO) மூலம் ஏலியன்கள் அவ்வப்போது பூமிக்கு வருவதாகவும், சிலர் அதை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாவதுண்டு. […]
கணவர் இல்லாத கடைசி காலம்... யார் உங்களைப் பார்த்துப்பாங்க? - `பெண்களுக்காக!' | Personal Finance
நீங்கள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். அல்லது சொந்தமாகத் தொழில் செய்யலாம். அல்லது வீட்டை நிர்வாகம் செய்யும் 'ஹோம் மேக்கராக' இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள்: கடந்த 10 வருஷமா நான் ஓயாம உழைக்கிறேன். ஆனா இன்னைக்கு என் சொந்தப் பெயர்ல, என் இஷ்டத்துக்குச் செலவு பண்ண, எவ்ளோ பணம் இருக்கு? பதில் பெரிதாக ஒன்றுமில்லை என்றால்... நீங்கள் ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள்! பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு: ஆண்கள் சம்பாதித்தால், முதலில் தங்களுக்கு ஒரு இன்சூரன்ஸ் எடுப்பார்கள், பி.எஃப் போடுவார்கள்... ஆனால் பெண்கள் சம்பாதித்தால்? வீட்டு லோன் கட்டிக் கணவருக்கு உதவலாம். பிள்ளைகளோட ஸ்கூல் ஃபீஸ் கட்டலாம். தங்கம் வாங்கலாம் (அதுவும் மகள் கல்யாணத்துக்குத் தான்!). இப்படியே உங்கள் உழைப்பு முழுவதும் குடும்பத்துக்காகக் கரைந்துவிடுகிறது. கடைசியில், 50 வயதில் திரும்பிப் பார்த்தால்... வீடு கணவர் பெயரில் இருக்கும். கல்விச் செல்வம் பிள்ளைகளிடம் இருக்கும். உங்கள் கையில்? வெற்றுத் தனிமை. ஏன் நீங்கள் சொந்தமாக முதலீடு செய்ய வேண்டும்? இது பயமுறுத்தல் அல்ல; விழிப்புணர்வு... ஆயுட்காலம் அதிகம்: இந்தியாவில் பெண்கள் ஆண்களை விடச் சராசரியாக 4-5 ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள். கணவர் இல்லாத அந்தக் கடைசி 5 வருடங்கள்... நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறதா? கையில் பணம் இல்லாவிட்டால், மருந்துக்கும், சாப்பாட்டுக்கும் பிள்ளைகளின் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அது ஒரு சுயமரியாதைப் போராட்டம். வேலை நிரந்தரம் இல்லை: பெண்கள் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் ' கெரியர் பிரேக்' (Career Break) வரலாம். குழந்தைப்பேறு, உடல்நலக் குறைபாடு, பெற்றோர் பராமரிப்பு எனப் பல காரணங்கள். அப்போது உங்கள் சொந்தப் பணம் மட்டுமே உங்களுக்குத் துணை நிற்கும். கணவரின் சம்பளத்தை நம்பி இருப்பது, ஒரு காலில் நிற்பது போன்றது. நிதிச் சுதந்திரம்: ஒரு புடவை வாங்கவோ, அம்மாவுக்கு உதவவோ கணவரிடம் அனுமதி கேட்பது... அது அடிமைத்தனம். உங்கள் பணத்தை நீங்களே நிர்வகிப்பதுதான் உண்மையான கெத்து! Woman starts investing தீர்வைக் கையில் எடுங்கள்: SIP எனும் ஆயுதம்! உங்களுக்குத் தேவை லட்சங்கள் அல்ல. உங்கள் சம்பளத்திலோ, அல்லது வீட்டுச் செலவில் மிச்சம் பிடித்தோ... மாதம் ஒரு சிறிய தொகையை ஒதுக்குங்கள். வெறும் ₹5,000 போதும்... இதை வங்கி சேமிப்புக் கணக்கில் (Savings Account) போட்டால், அது தூங்கும். பணவீக்கத்தால் கரையும். ஆனால், இதைச் சரியான மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் (Systematic Investment Plan) போட்டால்... அது வளரும். ஒரு மேஜிக் கணக்கு: மாதம் ₹5,000. அடுத்த 15-20 வருடத்தில், உங்கள் கையில் இருக்கப்போகும் சொந்தப் பணம்: சுமார் ₹50 லட்சம்! யோசித்துப் பாருங்கள்... 60 வயதில் உங்கள் கையில் சொந்தமாக 50 லட்சம்! பிள்ளைகள் உங்களைக் கொண்டாடுவார்கள். யாருடைய முகத்தையும் பார்க்காமல், தலை நிமிர்ந்து வாழலாம். வேண்டுமென்றால் உலகத்தைச் சுற்றி வரலாம். இது சாத்தியமா? நூறு சதவீதம் சாத்தியம்! ஆனால், எனக்கு இதெல்லாம் தெரியாதே... தப்பா பண்ணிடுவேனோ? என்ற பயம் உங்களைத் தடுக்கிறதா? Labham Webinar for women Start Your First SIP – பெண்களுக்கான பிரத்யேக ஆன்லைன் வகுப்பு உங்களைப் போன்ற வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், முதலீட்டின் அரிச்சுவடியைச் சொல்லித்தர ஒரு சிறப்பு வகுப்பு. இது வெறும் வகுப்பு அல்ல; உங்கள் பயத்தைப் போக்கி, நம்பிக்கையை விதைக்கும் ஒரு சந்திப்பு. நாள்: பிப்ரவரி 18, 2025 (புதன்) நேரம்: மாலை 07:00 PM - 08:30 PM (இந்திய நேரம்) மொழி: தமிழ் (எளிமையான தமிழில்) வழங்குபவர்: ACV சுமன் பாபு, ஏரியா மேனேஜர் - சென்னை, Franklin Templeton Asset Management இலவச போனஸ்: கலந்துகொள்ளும் அனைவருக்கும் Expense Tracker Calculator மற்றும் Retirement Calculator முற்றிலும் இலவசம்! (உங்கள் வீட்டுச் செலவை எப்படிக் குறைப்பது, சேமிப்பை எப்படி அதிகரிப்பது என்று கணக்கிட இது உதவும்). எச்சரிக்கை: இது ஒரு ஆன்லைன் பயிற்சி வகுப்பு. வெறும் 50 இடங்கள் மட்டுமே உள்ளன. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், உங்கள் சுதந்திரத்தைத் தள்ளிப்போடுகிறீர்கள். உங்கள் பெயரில் முதல் முதலீட்டைத் தொடங்க, இன்றே இணையுங்கள். இலவசமாகப் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்: https://labham.money/events/webinar-feb18-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_feb18_2026
அம்பாறையில் பெரும்போக நெல் அறுவடை மும்முரம்-இடையிடையே மழையும் குறுக்கீடு
அம்பாறையில் பெரும்போக நெல் அறுவடை மும்முரம்-இடையிடையே மழையும் குறுக்கீடு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற அறுவடையின் போது இந்த முறை விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விளைச்சல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர். மேலும் கடந்த வருடங்களில் தொடர் நஷ்டத்தை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை கணிசமானளவு விளைச்சல் கிடைத்துள்ளது […]
பயங்கரவாத தடுப்புச் சட்டம் பொதுமக்களுக்கு ஆபத்து – மின்கட்டண உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை – தவிசாளர் எஸ். பாஸ்கரன் பாறுக் ஷிஹான் இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) பொதுமக்களுக்கு ஆபத்தானதாக அமையக்கூடும். இது சம்பந்தமாக பாராளுமன்றத்திலும் பல விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த சட்டம் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த அரசாங்கம் இந்த சட்டத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மின்சார கட்டண அதிகரிப்பு மக்கள் […]
கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் : சட்டத்தரணி படுகொலைக்கு எதிராக நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டம் பாறுக் ஷிஹான் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று (16) காலை கல்முனை நீதிமன்ற வளாகம் முன்பாக அமைதியான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கான விசேட பொதுக்கூட்டம் இன்று காலை 9.00 மணிக்கு கல்முனை நீதிமன்ற கட்டிடத் […]
யாழில். காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை - மூவர் தலைமறைவு
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார், கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன் போது மூவர் இணைந்து தாக்குலை மேற்கொண்டதில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தாக்குதலாளிகள் மூவரையும் அடையாளம் கொண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்கு யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மும்பை புறநகர் இரயிலில் நெகிழ்ச்சி: கர்ப்பிணிக்கு வளைகாப்பு
மும்பை புறநகர் ரயிலில் சக பெண் பயணிகள் இணைந்து கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்திய நெகிழ்ச்சியான நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மும்பை பயணிகளிடையே நிலவும் சமூகப் பிணைப்பை வெளிப்படுத்துகிறது.
டயானா கமகே தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை பெப்ரவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார். டயானா கமகே , குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித் தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. வழக்கின் சாட்சி விசாரணை நடைபெறவிருந்த போதிலும், சட்டத்தரணிகளின் பணிபகிஸ்கரிப்பால் விசாரணை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனவரி […]
ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு; 650 காலிப்பணியிடங்கள் - டிகிரி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரிசர்வ் வங்கியில் பணி செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 2025 குழு ஆண்டின் கீழ் உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சட்டத்தரணி மற்றும் மனைவி கொலை; சகோதரர்கள் கைது
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிதாரிகளிடம் ஒப்படைத்ததாக குற்றம் அதேவேளை தற்போது கைதாகியுள்ள நால்வர் மீதும், இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் கொண்டுச் சென்று துப்பாக்கிதாரிகளிடம் ஒப்படைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், இச்சம்பவத்திற்கு […]
எப்ஸ்டீன் மரணம் தற்கொலை அல்ல? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
உலகளாவிய ரீதியில் எப்ஸ்டீன் கோப்புகள் தற்போது மிக பிரபலமாகியுள்ள நிலையில் எப்ஸ்டீனின் மரணம் தவறான முடிவெடுத்தால் நிகழ்ந்ததாக தெரியவில்லை, அவர் யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனையில் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் […]
நான் வந்ததுக்கு அப்புறம் தான் அந்த வீடு வீடாக மாறுச்சு..! - Salmanul & Megha Salman | Mizhirandilum
Himalaya BabyCare unveils sustainable packaging, aims to cut 500 tons of plastic
Hyderabad: Himalaya BabyCare has unveiled a refreshed packaging design across its Gentle Baby Care Range, marking a significant milestone in its sustainability roadmap. The redesigned packs combine improved usability and modern aesthetics with a strong environmental focus, reinforcing the brand’s commitment to reducing plastic waste.As part of this initiative, the company projects the elimination of 500 tons of plastic over the next five years—approximately 100 tons annually. The move aligns with growing parental awareness around environmental responsibility and the increasing demand for products that contribute to a more sustainable future for children.Supporting the launch is a digital film centred on a shared parental concern—the world children will inherit. Set during a parents’ meet, the narrative highlights conversations around plastic waste and its long-term environmental impact. Through relatable storytelling, the film underscores how everyday choices, including packaging decisions, can collectively shape a cleaner and more sustainable future.Commenting on the thought behind the change, N. V. Chakravarthi, Director – BabyCare, Himalaya Wellness Company, said, “At Himalaya BabyCare, our responsibility goes beyond creating gentle and safe products for babies today. Every decision we make is guided by our belief that while babies deserve the best of Nature’s nourishment, caring for Nature is essential to ensure a healthier world for our children tomorrow. BabyCare’s packaging transformation reflects our commitment to supporting the future of children by reducing plastic waste and staying true to our promise of gentle care that is good for our babies and good for our planet.” The refreshed packaging features a cleaner, contemporary visual language with enhanced labelling for better readability. Designed with parents in mind, the packs offer improved ergonomics, grip, and stability to ensure ease of use without compromising on quality or safety.To maximise reach and resonance, the digital campaign has been developed in Hindi and adapted into ten regional languages, including Punjabi, Tamil, Kannada, Telugu, Bengali, Odia, Assamese, Gujarati, and Marathi.With this initiative, Himalaya BabyCare reiterates its belief that baby care extends beyond skincare—encompassing responsible choices that help shape a healthier, more sustainable world for future generations.https://www.youtube.com/watch?v=JIrOcATg3jQ
2026 பெப்ரவரி தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய ‘தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பில், Verit Research… The post தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் பாரிய அதிகரிப்பு! appeared first on Global Tamil News .
Hair Transplant Scam: முடிக்காக உயிரை பணையம் வைக்காதீர்கள் | எச்சரிக்கும் மருத்துவர்
மதுரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்.. பிப். 21-ல் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பு!
மதுரை நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மேம்பாலத்தை பிப்ரவரி 21 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
Maragadha Naanayam: 'மரகதநாணயம் - 2'படத்தின் பூஜை க்ளிக்ஸ்! |Photo Album
மத்திய அரசின் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பார்மசிஸ்ட், தியேட்டர் அசிஸ்டண்ட், ஆடியோலஜிஸ்ட் மற்றும் சீப்ச் தெரபிஸ்ட் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில் நாதன் மேடை ஆபாசப் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிலடி கொடுத்து உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பிறகு PCB மீது கோபம் – அக்தர் நேரடி தாக்கு!
கொழும்பு : பாகிஸ்தான் அணி 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கொழும்பு ஆர்பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 175 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் இந்தத் தோல்வியை கடுமையாக விமர்சித்துள்ளார். “பாகிஸ்தான் அணி போட்டியில் எந்த நேரமும் […]
இங்கிலாந்து முழுவதும் மற்றொரு ஆர்க்டிக் காற்று வீசுவதால் பனி மற்றும் பனி எச்சரிக்கைகள்
இந்த வாரம் மற்றொரு ஆர்க்டிக் காற்று இங்கிலாந்து முழுவதும் வீச உள்ளது, இது உறைபனி, பனிக்கட்டி மற்றும் பனி எச்சரிக்கைகளைக் கொண்டுவருகிறது. பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்தின் பெரும்பகுதி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்திற்கு திங்கட்கிழமை பிற்பகுதியில் இருந்து இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை மதியம், மாலை மற்றும் இரவு முழுவதும் பனிப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பயண இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை 20:00 மணி முதல் செவ்வாய்க்கிழமை 10:00 மணி வரை வடக்கு அயர்லாந்து முழுவதும் தனி மஞ்சள் பனி எச்சரிக்கை அமலில் உள்ளது. கறுப்பு பனிக்கட்டிகள் மற்றும் வழுக்கும் சூழ்நிலைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. வடக்கு ஸ்காட்லாந்தில் திங்கள் கிழமை 3:00 GMT முதல் செவ்வாய் கிழமை 10:00 மணி வரை பனி மற்றும் பனிபெய்யும். தெற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்தின் பெரும்பகுதிக்கு திங்கள் கிழமை மாலை 6:00 மணி முதல் செவ்வாய் கிழமை காலை 10:00 மணி வரை பனி பெய்யும். திங்கட்கிழமை GMT 20:00 மணி முதல் செவ்வாய்க்கிழமை 10:00 மணி வரை வடக்கு அயர்லாந்து முழுவதும் பனி பெய்யும். நாடு முழுவதும் உறைபனி நிறைந்த ஆர்க்டிக் காற்று பரவியதால், வார இறுதியில் பல பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கைகள் அமலில் இருந்தன. திங்கட்கிழமை இங்கிலாந்தின் பெரும்பகுதியில் பலத்த மழை பெய்யும், மேலும் சில பிரகாசமான வானிலை நிலவும், ஸ்காட்லாந்து முழுவதும் குளிர்கால மழை தொடரும், மேலும் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும். திங்கட்கிழமை இரவுக்குள், குளிர்ந்த ஆர்க்டிக் காற்று தெற்கே பரவி, ஸ்காட்லாந்து முழுவதும் பனி அளவைக் குறைத்து, பனிக்கட்டியின் அபாயத்தை அதிகரிக்கும். வடக்கு யார்க் மூர்ஸ் முழுவதும் சில பனி மழை பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை பெரும்பாலும் வறண்டதாகவும், வெயிலாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெப்பநிலை 3C (37.4F) முதல் 6C (42.8F) வரை மட்டுமே இருக்கும் மற்றும் வடக்கு நோக்கி வீசும் வேகமான காற்றுடன், அது குளிர்ச்சியாக இருக்கும். குறிப்பாக கிழக்குப் பகுதிகளில் காற்று குளிர்ச்சியை உணர வைக்கும். புதன்கிழமை காலை இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை உறைபனிக்கு அருகில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடகிழக்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில், வெப்பநிலை -8C மற்றும் -10C ஆகக் குறையக்கூடும். மேலும் பனி எச்சரிக்கைகள் அமலுக்கு வரக்கூடும். புதன்கிழமை வானிலை நிலைமைகள் மீண்டும் மிகவும் சீரற்றதாக மாறும், தெற்கு மற்றும் மேற்கிலிருந்து மழை பெய்யும். இது மழை, பனிப்பொழிவு மற்றும் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவின் கலவையை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பனி எச்சரிக்கைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்த அமைப்பு உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக முன்னறிவிப்பாளர் தெரிவித்தார். வாரத்தின் பிற்பகுதியில், வானிலை வறண்டதாகவும், லேசானதாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை தெற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸில் மேலும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், நிலம் ஏற்கனவே நிரம்பியிருப்பதாலும், மேலும் வெள்ள எச்சரிக்கைகள் அல்லது எச்சரிக்கைகள் வெளியிடப்படலாம். இயற்கை வளங்கள் வேல்ஸ் மூன்று வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ரூ. 5000 அறிவிப்புக்கு வரவேற்பு.. கூட்டணி பற்றிய முடிவு.. ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் தேமுதிக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த கூட்டணியில் ஓபிஎஸ் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Mumbai: Some days call for taking it up a notch, other days demand total thunder. When it’s an India vs Pakistan cricket match, there’s only one way to show up and that is Toofani. Living its anthem philosophy of Aaj Kuch Toofani Karte Hain, Thums Up turned the India–Pakistan ICC Men’s T20 World Cup match into a storming spectacle. Iconic hip-hop artist Hanumankind took over the stadium transforming match-day energy into a full-blown Taste the Thunder moment.Against the backdrop of a packed stadium, Hanumankind performed Thums Up’s latest anthem - Taste the Thunder along with some of his select tracks. Instinctive and unapologetic, Hanumankind’s performance mirrored the intensity of the match, bringing Thums Up’s thunderous spirit alive in the stands and on screen.Thums Up’s signature static-glitch visuals took over the LED screens, followed by a sharp countdown that set the atmosphere. Hanumankind then took the stage with Taste the Thunder, as coordinated lighting, smoke and aerial choreography amplified the performance, before the spectacle built into a high-energy finale led by Kings United India. The moment brought together the homegrown rap phenomenon, the iconic hip-hop dance crew and ICC Men’s T20 World Cup action in a standout cultural collaboration, closing with a powerful, crowd-led Toofani crescendo. Hanumankind said, “It’s incredible to perform at a match like this one. You can feel the energy in the air. Being able to do this with Thums Up is special, it’s a good time to be a fan of sports.” Taste the Thunder brings together Hanumankind’s street verses and Vishal Dadlani’s commanding hooks. Launched recently in a press showcase in Mumbai, the anthem is already striking a chord for its raw sound and fearless attitude. Sumeli Chatterjee, Category Head, Sparkling Flavours, Coca-Cola India and Southwest Asia said, “A match like this becomes a marker in cricketing history, not just for fans of the two teams, but for the sport as a whole. The atmosphere in the stadium was absolutely electric! Thums Up has been an integral part of such moments of high-intensity and excitement for cricket. With his raw, unfiltered energy, Hanumankind made ‘Aaj Kuch Toofani Karte Hai’ the perfect clarion call for the moment and the match.” With cricket commanding the field and music driving the atmosphere in the stands, Hanumankind’s performance added a powerful new layer to match-day entertainment. As Taste the Thunder journeys from studio to stadium, Thums Up continues to show up at India’s biggest moments, reinforcing its place in youth culture and live experiences where only one thing fits: Toofan.-Based on Press Release
பிரான்ஸ் முழுவதும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு!
பிரான்சின் பெரும்பகுதிகளில் புயல்கள் வீசி வருகின்றன, ஏற்கனவே நிரம்பிய மண்ணில் பெய்த கனமழைக்குப் பிறகு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாரிஸில், சீன் நதி அதன் சாதாரண மட்டத்திலிருந்து நான்கு மீட்டர் உயரத்தில் உள்ளது, இதனால் ஆற்றங்கரை மோட்டார் பாதை மற்றும் சில பயணிகள் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பிரான்ஸ் முழுவதும் பரவலான வெள்ள நிகழ்வு குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . மண்ணின் ஈரப்பதம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, மேலும் நிலம் இனி கூடுதல் தண்ணீரை உறிஞ்ச முடியாது. கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினைக் கிழித்த வன்முறை புயல் நில்ஸ் உட்பட பல தீவிர வானிலை நிகழ்வுகளைத் தொடர்ந்து, தென்மேற்கு பிரான்சின் பல பகுதிகளில் கரோன் நதி கரைகளை உடைத்தது. கனமழை காரணமாக பாரிஸில் உள்ள சீன் நதியின் நீர்மட்டம் அதன் இயல்பை விட நான்கு மீட்டர் அதிகமாக உயர்ந்துள்ளது, மேலும் செவ்வாய்க்கிழமைக்கு முன்பு அது குறையும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையோர மோட்டார் பாதைகள் மற்றும் பல பயணிகள் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அவசர சேவைகள் மட்டுமே ஆற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. ஜிரோண்டே மற்றும் லாட்-எட்-கரோன் துறைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ள அளவு உச்சத்தை எட்டியது, இருப்பினும் வரும் மணிநேரங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடரக்கூடும் என்றும், மோசமான வானிலை காரணமாக இந்த வாரம் மீண்டும் உயரக்கூடும் என்றும் விஜிக்ரூஸ் எச்சரித்தது. பிரான்சின் 96 , 77 பிரதேசங்களில் ஏதோ ஒரு வகையான வானிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வெள்ளத்திற்காக உள்ளன. மேலும் பல துறைகள் தடுப்பு வெளியேற்றங்களை மேற்கொண்டுள்ளன.
சூர்யா –ஆர்.ஜே. பாலாஜி இணையும் ‘கருப்பு’: கோடைக்கால வெளியீடு உறுதி
நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'கருப்பு' திரைப்படம் வரும் கோடை காலத்தில் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சினிமா சந்தையில் வெளியீட்டு திட்டம் மற்றும் திரையரங்க ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம்: தனித்து போட்டியிடும் காங்கிரஸ்; உருவாகும் நான்கு முனைப்போட்டி - பாஜக-வுக்கு சாதகமா?
மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி 19 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்ன? இந்த முடிவு யாருக்கு சாதகமாக அமையும்? காங்கிரஸிற்கு இதனால் ஏற்படும் சிக்கல் என்ன? ஓர் அலசல்! மம்தா பானர்ஜி மம்தாவின் தொடர் வெற்றி! மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரலில் தேர்தல் நடக்க இருக்கிறது. தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று 15 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மம்தா தனது நான்காவது வெற்றிக்காகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். தனித்து களம் காணும் காங்கிரஸ் மறுபக்கம் கடந்த 2021 தேர்தலில் 77 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த பாஜக, இந்த முறை ‘ Asali Poriborton’ (உண்மையான மாற்றம்) என்ற முழக்கத்துடன் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மேற்குவங்க அரசியலில் 34 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாக இருந்த இடதுசாரிகள், கடந்த சில தேர்தல்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்து இருக்கும் இடமே தெரியாமல் இருக்கின்றனர். இந்தச் சூழலில்தான் கடந்த தேர்தல்களில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, 294 தொகுதிகளிலும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து களம் காண முடிவு செய்திருக்கிறது. ராகுல் காந்தி - காங்கிரஸ் வாக்கு வங்கி குறைவு டெல்லியில் மேற்குவங்க காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2001 தேர்தலில் 17 இடங்களில் வென்ற காங்கிரஸ் 2006-ல் 21 இடங்களையும், 2011-ல் 41 இடங்களையும், 2016-ல் 44 இடங்களையும் வென்றிருந்த நிலையில், 2021-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. தவிர கட்சியின் வாக்கு வங்கியும் 3.03 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதிரடி முடிவுக்கு காரணம் என்ன? இடதுசாரிகளின் கூட்டணியால் கட்சியின் சொந்த செல்வாக்கை இழந்து வருவதாக மேற்கு வங்க காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையிடம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், கட்சியை மீட்டெடுக்கும் முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கி இருக்கிறது. அதுமட்டுமன்றி சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீடு செய்வதில் காங்கிரஸுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. அதனாலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் மேலும் பாஜக-வை எதிர்க்க மம்தா பானர்ஜி ஒருவரால் மட்டுமே முடியும் என்ற பிம்பத்தை உடைக்க காங்கிரஸ் விரும்புகிறது. பாஜக-வுக்கும் திரிணாமுல்லுக்கும் மாற்றாக தங்களை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. தவிர மால்டா மற்றும் முர்ஷிதாபாத், உத்தர தினாஜ்பூர் போன்ற மாவட்டங்களில் காங்கிரஸுக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கிறது. தனித்து போட்டியிட்டால் இன்னும் வலுபெற முடியும் என காங்கிரஸ் நினைக்கிறது. பாஜக-விற்கு சாதகமா? காங்கிரஸின் இந்த முடிவால் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. காங்கிரஸின் இந்த முடிவால் எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி சிதறும். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்-இடதுசாரி மோதலில், பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறினால், அது பாஜக-வுக்கு நேரடி லாபமாக அமையும். பாஜக மம்தாவுக்கு பின்னடைவு அதேபோல மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் மம்தா பானர்ஜியின் மிகப்பெரிய பலம். காங்கிரஸ் தனித்து நின்று தீவிரமாகப் பிரசாரம் செய்தால், மால்டா, முர்ஷிதாபாத் போன்ற பகுதிகளில் இந்த வாக்குகள் காங்கிரஸுக்குத் திரும்பும். இது மம்தாவின் வெற்றிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். காங்கிரஸிற்கு என்ன பாதிப்பு? 2021-ல் ஒரு இடத்தில்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இந்தச் சூழலில் தனித்து நிற்கும்போது, பல தொகுதிகளில் டெபாசிட் வாங்குவதே பெரிய சவாலாக இருக்கும். 294 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தும்போது தேர்தல் பிரசாரம், விளம்பரங்கள் மற்றும் பூத் கமிட்டி செலவுகளுக்குப் பெரும் நிதி தேவைப்படும். ராகுல் காந்தி - காங்கிரஸ் கேள்விக்குறியாகும் நம்பிக்கை... கூட்டணி இருந்தால் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால் தனித்துப் போட்டியிடும்போது முழுச்சுமையும் கட்சியின் மேலிடத்திற்கே சேரும். தவிர மத்தியில் 'இந்தியா' கூட்டணியில் மம்தாவுடன் கைகோத்துவிட்டு, மாநிலத்தில் அவருக்கு எதிராகப் போட்டியிடுவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இது காங்கிரஸின் நம்பகத்தன்மையை மக்களிடையே கேள்விக்குறியாக்கலாம்.
`இந்த ஆபாசமான, அருவருக்கத்தக்க வீடியோவை வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான்.!'கொந்தளித்த ஜோதிமணி
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் கரூர் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில் நாதன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் தவறாக பேசினார். அவர் உரையாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பகிரப்பட்டது. இது குறித்து எம்.பி.ஜோதிமணி தன் முகநூல் பக்கத்தில், ``பா.ஜ.கவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் என்னைப் பற்றிப் பேசிய இந்த ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, வீடியோவை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான் இங்கு வெளியிடுகிறேன். அப்பொழுதுதான் சமூகம் இப்படிப்பட்ட அழுகிப்போன மனநிலை உள்ள ஆண்களுக்கு எதிராக காட்டமான எதிர்வினையாற்ற முடியும். கரூர் பாஜக போராட்டம் இவரைப் பொறுத்தவரையில் வீட்டுப் படிதாண்டி, பொதுவெளியில் பொதுவாழ்வில் பங்கேற்கிற பெண்கள் எல்லோருமே வேசிகள் தான். அவர்களுக்கு சொந்த திறமை, உழைப்பு, அனுபவம், கண்ணியம் எதுவுமே இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைக்கிறார். ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனியொரு தாயால் கண்ணியத்தோடும், நேர்மையோடும், துணிச்சலோடும், மதிப்பீடுகளோடும் வளர்க்கப்பட்ட ஒரு பெண் நான். எங்கள் குடும்பத்தில் யாரும் பொதுவாழ்வில் இருந்ததில்லை. அரசியல் என்றாலே அச்சப்படுகின்ற எத்தனையோ குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. நான் எனது 21 வயதில் துணிச்சலோடு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தேன். ஒரு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அநீதிக்கு எதிராக, மக்களுக்காகப் போராடும் போராட்டக்குணத்தால், சமரசமற்ற நேர்மையால், ஒரு பெண் என்பதால், அரசியல் பின்னணியோ, பெரிய அளவிலான பொருளாதார பலமோ இல்லாத காரணத்தால், வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையால் எத்தனையோ இடர்ப்பாடுகளை, தடைகளை, கடினமான காலகட்டங்களை எதிர்கொண்டிருக்கிறேன். இன்னும் எதிர்கொள்கிறேன். ஆனால் எதற்காகவும் தேங்கிவிடாமல் எனக்கு முன்பு இந்த கடினமான பாதையில் பயணித்து, சாதித்த எத்தனையோ கோடி பெண்களைப் போல, நானும் தடைகளை உடைத்துக் கொண்டு எனது பயணத்தை தொடர்கிறேன். கரூர் பாஜக போராட்டம்: செந்தில் நாதன் பத்தாண்டு காலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், அடுத்த பத்தாண்டு காலம் இளைஞர் காங்கிரசின் தேசிய பொது செயலாளர் உடபட பல்வேறு மாநிலங்களில் கட்சிப்பணி, ஐந்து ஆண்டு காலம் அரசியல் வனவாசம், சமூகப் பணி. 20 ஆண்டு கால கடுமையான , நேர்மையான அர்ப்பணிப்பு மிகுந்த அரசியல், சமூகப்பணிக்குப் பின்பே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்புக் கிடைத்தது. எங்கள் கட்சியிலேயே கூட பணம் இல்லை என்பதால் எனக்கு நாடாளுமன்ற தேரதலில் போட்டியிட வாய்ப்பளிக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் எனது தலைவர் சாதாரண கட்சி தொண்டர்களின் உழைப்பை மதிக்கக்கூடியவர். பத்தாண்டு காலம் எனது கடும் உழைப்பை, சமரசமற்ற துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளை நேரில் பார்த்தவர். எனது மக்கள் பணியை, கொள்கை நிலைப்பாட்டை, சமூக அக்கறையைப் புரிந்துகொண்டவர். அதனால் கரூரில் போட்டியிடக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கினார். எமது மக்கள், தேர்தல் களத்தில், பொதுவாழ்வில் உடன் பயணிக்கும் தோழர்கள் என் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்தனர். அதனால் ஏழாண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்தி ஒரு நாளில் குறைந்தது 15 மணி நேரம் பணி புரிய வேண்டும். வருடத்தில் 365 நாட்களில் 50 நாட்கள் கூட விடுப்பு எடுக்க முடிவதில்லை. எனது தாயின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு அனைத்துப் பொறுப்புகளையும், பிரச்சினைகளையும் தனித்தே கையாள வேண்டிய சூழல். ஆனாலும் சோர்வற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். போராடிக் கொண்டிருக்கிறேன். பெண் என்பதால் இந்த தகுதி, திறமை, உழைப்பு, அறிவு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இவரைப் போன்றவர்களைப் பொறுத்தவரை பெண் என்றாலே வெறும் உடல், பாலியல் பொருள் அவ்வளவே. எனக்கு நடந்தது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இந்த நாட்டில் பொது வெளிகளில் நுழையும் பெண்கள் காலம்காலமாக தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரே மாதிரியான, தனிமனித, ஆபாசத் தாக்குதல்களின் தொடர்ச்சியே இது. பெண்கள் பொது இடத்திற்கு வந்தால், நம் குரலை உயர்த்தினால், அதிகாரத்தை கேள்வி கேட்டால், மௌனமாக இருக்க மறுத்தால் அதற்கான எதிர்வினை இப்படித்தான் இருக்கிறது. பெண்களுக்கு பொது வாழ்க்கையில் காலடி வைப்பது எப்போதும் எளிதானது அல்ல. நாம் செய்த செயல்களுக்காக அல்லாமல் நாம் ஒரு பெண் என்பதற்காகவே ஆபாசத் தாக்குதல் அவமதிப்பு, கண்ணியச் சிதைப்பு, பாலியல் அவமானம், மிரட்டல்கள் என அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கரூர் பாஜக தலைவர் செந்தில் நாதன் வாதங்கள் தோல்வியடையும் தருணத்தில், நம் கண்ணியம் தாக்கப்படுகிறது. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதபோது, நம் ஒழுக்கம் திட்டமிட்டு அவமதிக்கப்படுகிறது. பாலியல் இழிவுபடுத்தும் மொழியும், மிரட்டல்களும், பொது மேடைகளில் செய்யப்படும் அவமானங்களும் தவறுதலாக நிகழ்பவை அல்ல. இவை ஆண்டாண்டுகாலமாக பெண்களுக்கு எதிராகத் திட்டமிட்டு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள். பெண்களை மௌனமாக்க, பொது வெளிகளில் இருந்து, அரசியலிலிருந்து, தலைமைத்துவத்திலிருந்து வெளியேற்றவே இந்த ஆபாசத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இப்படித்தான் பொது வெளிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறுகின்றன. இப்படித்தான் பெண்கள் பின்னடைய வைக்கப்படுகிறார்கள். இதை கட்டுப்படுத்தாமல் விட்டால், இது ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாதிக்காது. பல பெண்களின் குரலை மௌனமாக்கும், அச்சுறுத்தும். இந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் பொது வெளிகளைச் சுருக்கும். பெண்களை வெறும் உடலாக, பாலியல் பொருளாக, பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்ப்பது, பெண்களை அவமதிப்பது ஆபாசத் தாக்குதலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது இதுதான் பாஜக, ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம். பா.ஜ.க மாநிலத்தலைவர் துவங்கி, மாவட்ட தலைவர் வரை இதைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அதற்காக அவர்கள் வெட்கப்படுவதில்லை. நம்மை வெட்கித் தலைகுனிய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு பெண்ணாக நாம் வெட்கப்படுவதற்கோ, அச்சப்படுவதற்கோ ஒன்றுமில்லை. அவர்கள் தான் வெட்கப்பட வேண்டும், அதற்காகவே இதை பொதுவெளியில் வெளியிடுகிறேன். பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு சமூகமாக இதுபோன்ற இழிசெயல்களை, அழுகிப்போன மனநிலையை, ஆபாச தாக்குதல்களை, பெண்களுக்கு எதிரான அரசியல் சித்தாந்தங்களை நாம் எதிர்க்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும். அப்பொழுதான் பெண்களுக்கு எதிரான ஆபாசத்தாக்குதலை ஒரு ஆயுதமாகக் கையில் எடுப்பதை நாம் தடுத்து நிறுத்தமுடியும். பொதுவெளியில் நமது உரிமையை,கண்ணியத்தை நிலை நாட்ட முடியும். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் நடிகர் விஜயுடன் பிரபல நடிகையை இணைத்துப் பேசிய விவகார சலசலப்பு அடங்கிய நிலையில், கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவரின் பேச்சு மீண்டும் விவாதகளத்துக்கு வந்திருக்கிறது `திமுக ஆட்சி தேர்தலுக்கான ஆட்சி; தனிநபர் தாக்குதலில்..!' - நயினார் நாகேந்திரன்
உக்ரைனில் உயிரிழந்த படை வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் கிம்
கடந்த சில மாதங்களாக பியோங்யாங்கில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் பல பொது விழாக்கள் நடத்தப்பட்டன, அவற்றில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் துருப்புக்களின் சிற்பங்களைக் கொண்ட நினைவு வளாகம் ஆகியவை அடங்கும். பிப்ரவரி மாத இறுதியில் கூடும் ஆளும் தொழிலாளர் கட்சியின் ஒன்பதாவது மாநாட்டிற்கு முன்னதாக இந்தப் புதிய வீட்டுவசதி குடியிருப்புகள் வருகிறது. இந்த கூட்டம் கிம்மின் சாதனைகளை வெளிப்படுத்தவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கான அவரது இலக்குகளை கோடிட்டுக் காட்டவும் நோக்கமாக உள்ளது.
74% of screenwriters feel they are not paid fairly up from 63% in 2023: Tulsea-Ormax report
MUMBAI: 74% of screenwriters writers feel they are not paid fairly up from 63% in 2023. In theatrical, only 6% feel that producers value scripts over stars. 41% writers use AI tools at least sometimes.Talent agency Tulsea and media insights firm Ormax Mediareleased The Right Draft 2026, the second edition of their industry research report on India’s professional screenwriters. Based on a nationwide survey of 254 writers, the report captures writer perceptions across compensation, credit, feedback systems, creative autonomy, mentorship, workplace environment, and the evolving role of AI in the writing process.First published in 2023 as India’s first report focused exclusively on writers’ perceptions of the entertainment ecosystem, The Right Draft was designed to bring measurement and objectivity to a conversation that is often anecdotal. The 2026 edition expands the lens to reflect the industry’s evolving formats and realities, including micro-dramas and the practical impact of AI on writing workflows.The survey was answered by 254 writers across age groups and experience levels, spanning formats such as OTT fiction series, direct-to-OTT films, theatrical films, TV fiction (GEC), non-fiction, documentaries, advertising, gaming, and micro-dramas.Some key highlights of the report: Pay & payouts: 74% writers feel they are not paid fairly (up from 63% in 2023). 52% say payments are not timely (up from 40%), and 78% say they have to constantly follow up for due payments. Credit & visibility: Over half (54%) disagree that writers are given fair credit. Nearly two-thirds (64%) say there is no defined industry standard for credits that producers/platforms follow. Scripts vs. stars: In theatrical, only 6% feel producers value scripts over stars (vs 83% who feel stars dominate). In OTT, the perceived value of scripts has declined since 2023, with 62% now saying scripts are prioritised/equal (down from 76%). Mentorship & support systems: Only 19% feel they have access to good mentors (down from 30% in 2023). 76% feel the industry does not provide adequate infrastructure for writers to develop their craft, and only 38% feel they have access to effective grievance redressal. AI & changing expectations: 41% writers use AI tools at least sometimes. 47% do not see AI as a threat, yet 68% feel AI reduces the value of human creativity in producers’ eyes, and 50% say producers now expect faster turnarounds assuming AI usage. Speaking about the report, Chaitanya Hegde, Co-founder, Tulsea Media, said: “With the second edition of The Right Draft, we wanted to deepen the industry’s understanding of what writers’ experience on the ground - across pay, credit, feedback, nurturing structures, and now AI. The data points to some shifts and some stubborn constants. Our hope is that the report helps move conversations from perception to process, and toward more consistent, fair, and creator-friendly systems.”. Shailesh Kapoor, Founder-CEO, Ormax Media, added: “Writers sit at the core of the storytelling ecosystem, yet too many friction points remain structural rather than episodic. By measuring writer sentiment across key dimensions, The Right Draft is intended to be a practical input into how the industry can build stronger alignment, accountability, and creative ownership.” The Right Draft: 2026 is organised across seven sections: ght Pay, The Right Credit, The Right Feedback, The Right Value, The Right Nurturing, The Right Tools, and The Right Environment, capturing writer perceptions across the creative and business realities of screenwriting in India.
சுரங்க விபத்து.., இறந்ததாக நினைத்தவர் வீடு திரும்பிய அதிசயம்
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் டைனமைட் வெடித்து 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் Assam மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்த 44 வயது ஷியாம் பாபு சின்ஹா இறந்தார் என்று நினைக்கப்பட்டது. விபத்தில் சிதைந்திருந்த ஒரு உடலை அவரது குடும்பத்தினர் ஷியாம் பாபு என்று தவறாக அடையாளம் கண்டு, இறுதிச்சடங்கு செய்தனர். ஆனால் பின்னர் ஷியாம் பாபு திடீரென வீட்டிற்கு திரும்பி வந்தது அனைவரையும் […]
தமிழகத்தில் வரும் நாட்களில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
சென்னை : பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (16-02-2026) காலை 0830 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகிவுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் 18 ஆம் தேதி வாக்கில் மேலும் […]
நடிகை குறித்த பேச்சு: `அன்றைக்கு தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது'- நயினார் நாகேந்திரன் வருத்தம்!
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக தலைவர் விஜய் பற்றி விமர்சிக்கும்போது, நடிகை பற்றி பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்கள். பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களும்கூட தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட நடிகை தன் வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், ``எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது. பொதுவெளியில் தனிப்பட்ட கருத்துக்களை பேசவோ தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்கவோ வேண்டாம் எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். நயினார் நாகேந்திரன் இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், ``என்னுடைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தவரை எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை... பேசியதுமில்லை. அன்றைக்கு தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது. அது குறித்து வானதி சீனிவாசன் ஏற்கெனவே என்னிடம் பேசி இருந்தார். நேற்றுகூட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டுக்குச் சென்றபோது, அவரும் குறித்து இது குறித்து என்னிடம் பேசினார். எனவே, உண்மையிலேயே யாரேனும் இதில் வருத்தப்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை, மனப்பூர்வமாகத் தெரிவித்து கொள்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். அருவருப்பான கருத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கவில்லை.! - த்ரிஷாவின் வழக்கறிஞரின் அறிக்கை
அணுசக்தி காண்காணிப்பாரைச் சந்திந்த ஈரான் வெளியுறவு அமைச்சர்: நாளை அமெரிக்கா - ஈரான் சதந்திப்பு
சுவிஸ் நகரில் அமெரிக்கா-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றுக்கு ஒரு நாளைக்கு முன்னர் ஜெனீவா வந்தடைந்த ஈரானின் உயர்மட்ட இராஜதந்திரி, ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் இயக்குநரை இன்று திங்களன்று சந்தித்தார். ஜெனீவாவில் நாளை நடைபெறவிருக்கும் முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கான தயாரிப்பில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் ஆழமான தொழில்நுட்ப விவாதங்களை முடித்தேன் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார். நியாயமான மற்றும் சமமான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உண்மையான யோசனைகளுடன் நான் ஜெனீவாவில் இருக்கிறேன். மேசையில் ஒன்றும் இல்லாதது அச்சுறுத்தல்களுக்கு அடிபணிதல் என்பது சாத்திமில்லை என்று அராச்சி தனது எக்ஸ் தளத்தில் கூறினார். கடந்த கோடையில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்கள் அதன் பல அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதிலிருந்து அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடனான ஈரானின் உறவு நம்பமுடியாத அளவிற்கு பதட்டமாக உள்ளது. அப்போதிருந்து, குண்டுவீச்சுக்கு உள்ளான இடங்கள் IAEA ஆய்வாளர்களுக்கு பாதுகாப்பற்றவை என்ற சாக்குப்போக்கின் கீழ், ஈரான் IAEA-வை ஆய்வு செய்ய அனுமதி வழங்கவில்லை. ஈரானின் சுமார் 440 கிலோகிராம் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பின் கதி என்னவென்று தெரியவில்லை. ஜூன் 2025 இல் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியபோது முந்தைய பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கியுள்ளன. 12 நாள் போரைத் தொடங்கிய இஸ்ரேல், மூன்று ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையும் கண்டது. பேச்சுவார்த்தையின் போது ஈரானின் ஏவுகணை இருப்பு குறித்தும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது, ஈரானுடனான எந்தவொரு சாத்தியமான ஒப்பந்தத்திலும் இஸ்ரேல் இதைச் சேர்க்க ஆர்வமாக உள்ளது . இதுவரை, பொருளாதாரத் தடைகள் நிவாரணத்திற்கு ஈடாக தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாக தெஹ்ரான் தெரிவித்துள்ளது. இருப்பினும், இஸ்லாமிய குடியரசு பூஜ்ஜிய யுரேனியம் செறிவூட்டலை நிராகரித்துள்ளது மற்றும் அதன் ஏவுகணை இருப்பு பற்றிய எந்த விவாதத்தையும் நிராகரித்துள்ளது. ஈரான் அணுகுண்டை தயாரிக்க முயல்வதாக மேற்கத்திய நாடுகள் நம்புகின்றன, ஆனால் தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டம் பொதுமக்கள் நோக்கங்களுக்காக மட்டுமே என்று வலியுறுத்துகிறது. அமெரிக்காவும் ஈரானும் ஓமானில் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
விஜய் சாருக்காக நான் வெரி ஃபர்ஸ்ட் எழுதின ஸ்கிரிப்ட் இன்னும் இருக்கு! - ATM இயக்குநர் பரதன் பேட்டி
இயக்குநர் பரதன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அழகிய தமிழ் மகன்'. நம் சினிமா விகடன் ரீவைண்ட் தொடருக்காக இந்த வாரம் 'அழகிய தமிழ் மகன்' படத்தின் சுவாரஸ்யக் கதைகளைக் கேட்டறிவதற்கு இயக்குநர் பரதனை சந்தித்தோம். அழகிய தமிழ் மகன் நம்மிடையே பேசியவர், படத்தின் டைட்டில் கார்டில் 'இனிய தளபதி', 'இதய தளபதி', 'இளைய தளபதி' எனப் போட்டிருப்பேன். தொடக்கத்திலேயே ஆடியன்ஸை இம்ப்ரெஸ் பண்ணனும்ங்கிறதுதான் இதனுடைய ஐடியா ! விஜய் சாருடைய குணாதிசயங்களுக்கேத்த மாதிரி அந்த டைட்டிலை போட்டோம். அதைப் பார்த்து அவரும் ஹாப்பி ஆனார். அவருக்கு 2007-ம் ஆண்டில்தான் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுச்சு. சரியாகச் சொல்லப்போனால், எங்களுடைய படப்பிடிப்பு நடந்திட்டு இருக்கும்போதுதான் டாக்டர் பட்டம் கொடுத்தாங்க. டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு வெளிவருகிற முதல் படம் இது என்பதால, டைட்டில்ல டாக்டர்னு போடலாம்னு ப்ளான் பண்ணினோம். இதை நானே அவர்கிட்ட 'யூஸ் பண்ணிக்கலாம். நல்லா இருக்கும்'னு சொன்னேன். அவரும் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு. என்றவர், 'கில்லி' படம் முடிவு பெறவிருந்த சமயத்துல நான் விஜய் சாருக்கு ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை அவருக்குப் பிடிச்சதும், அதை அப்படியே எஸ்.ஏ.சி சார்கிட்ட சொல்ல சொன்னாங்க. அவருக்குமே என்னுடைய கதை ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, சூழ்நிலைகள் காரணமாக அந்தக் கதை படமாக உருவாகல. பிறகு விஜய் சார் 'மதுர' படத்துல நடிக்கும்போது என்னை வசனம் எழுதுவதற்கும் கூப்பிட்டார். இயக்குநர் எஸ்.கே. ஜீவா, விஜய் சாருக்கு ஒரு கதை சொல்லியிருக்கார். அவர் சொன்ன இந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதை விஜய் சாருக்கு பிடிச்சிடுச்சு. பிறகு என்னை அந்தப் படத்தை இயக்க சொன்னாங்க. படத்தினுடைய இடைவேளை காட்சியில நான் சில மாற்றங்கள் சொன்னேன். Director Bharathan ரைட்டர்களை பொறுத்தவரையில், அவ்வளவு சீக்கிரம் கதையில மாற்றத்தைச் செய்திட மாட்டாங்க. ஆனா, ஜீவா சார் நல்ல விஷயங்களை எடுத்துகிட்டு கதையில மாற்றங்கள் செய்தார். ஆனா, விஜய் சாருக்காக நான் பண்ணின ஃபர்ஸ்ட் கதையை இப்போ வரைக்கும் வச்சிருக்கேன். என்றார். 'அழகிய தமிழ் மகன்' படத்துல வர்ற கவிதை காட்சியை பார்த்திபன் சார்தான் எங்களுக்கு எழுதிக் கொடுத்தாரு. அப்போ, கலைஞர், பார்த்திபன் சார் எல்லாம் ஒரு நிகழ்வுக்குப் போயிருக்காங்க. அங்க திடீரென மின்சாரம் கட் ஆகிடுச்சு. எல்லோரும் 'டார்ச் லைட் எடுங்க'னு சொல்லிட்டு இருக்கும்போது பார்த்திபன் சார் 'சூரியனுக்கே டார்ச்சா'னு ஒரு கமென்ட் போட்டிருக்கார். அப்போ இந்த விஷயம் பெரும் பேசுபொருளானது. இதை விஜய் சாருமே கேள்விப்பட்டிருந்தார். பிறகு, கவிதை சொல்லப்படுகிற அந்தக் காட்சியை அவர் எழுதித் தர்றதுக்கு கேட்டோம். அப்படி அவர்தான் அந்தக் காட்சியை எழுதினார்! என்றவர், இந்தப் படத்துல வர்ற 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' பாடலை வாலி சார் எழுதினார். அந்தப் பாடலை ரஹ்மான் சார் கம்போஸ் செய்ய வாலி சார் எழுதினாரு. இந்தப் பாடலை எழுதும்போது வாலி சார், 'நான் எழுதும் வரிகள் ம, மு வரிசையில் தொடங்கி, அதை ரஹ்மான் பாடினால், நிச்சயமாக வெற்றி பெறும்' என்றார். இவங்க காம்போவுல வந்த 'முக்காலா முக்கபுலா', 'முஸ்தபா முஸ்தபா' போன்ற ம வரிசை பாடல்களெல்லாம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கு. பிறகு 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' பாடல் வரிகளைப் வாலி சார் எழுதினார். அழகிய தமிழ் மகன் அதை எழுதி முடிச்சதும் ரஹ்மான் சார் லண்டன் கிளம்பி போயிட்டாரு. அங்கதான் இந்தப் பாடலின் ரெக்கார்டிங் நடந்தது. ரெக்கார்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி ரஹ்மான் சார் எனக்கு கால் பண்ணி 'வாலி சார் ம வரிசையில பாடல் தொடங்கினால், வெற்றினு சொன்னாரே...அதுனால தொகையறாவாக 'முன்னால் முன்னால் முன்னால் வாடா, உன்னால் முடியும் தோழா'ங்கிற வரியை சேர்த்துக்கலாமா'னு கேட்டு சேர்த்துகிட்டாரு. பாடலுக்காக நடனங்களை கோரியோகிராஃபர்கள் அழகாக அமைத்துக் கொடுத்தாங்க. 'வளையப்பட்டி' பாடலை தினேஷ் மாஸ்டர் கோரியோ பண்ணினாரு. அந்தவொரு பாடலுக்காக, ஒட்டுமொத்த டான்சர்ஸுக்கும் மொட்டை போட்டோம். எனப் பேசினார்.
KreditBee leverages Truecaller to accelerate loan disbursement and collections
New Delhi: KreditBee, an online credit solution provider, has strengthened its customer communication framework through a strategic partnership with Truecaller. By adopting Truecaller’s Customer Experience Solution Suite, the fintech platform aims to enhance trust, transparency, and operational efficiency across its loan disbursement and collection processes.KreditBee’s integration of Truecaller’s Verified Business Caller ID enables the company to display its brand name, logo, category, verification tick, and green badge during outgoing calls. This reduces ambiguity for customers and reinforces authenticity at every interaction.In addition, features such as Call Reason provide contextual information to customers about why they are being contacted—whether related to KYC verification, loan disbursements, EMI reminders, or customer support—thereby improving engagement and reducing friction. KreditBee has also implemented the Call Me Back capability, allowing customers to schedule preferred call-back slots to avoid missing critical loan-related communication. The company reports that these enhancements have contributed to improved loan disbursement timelines and stronger collections performance.Speaking on the collaboration, Ajeet Kumar - Chief Operating Officer, Kreditbee, At KreditBee, trust, transparency and timelines have always been the drivers of our interaction with customers. Our collaboration with Truecaller adds an important layer to our existing communication framework, further strengthening our customer outreach. It reinforces secure, reliable and trustworthy lines of communication with our customers. With this partnership, we continue to raise the bar on security to ensure every interaction from KreditBee remains authentic and protected. Speaking about the strategic partnership, Priyam Bose, Global Head of GTM and Developer Products at Truecaller, emphasized the shared vision of both companies to foster secure and efficient communication. At Truecaller, our mission is to empower businesses by delivering seamless, secure, and contextually rich communication experiences that build trust and customer delight. We are thrilled to partner with KreditBee, India’s leading fintech platform, to enhance customer communication. Together, we are setting new standards for how trust, convenience, and digital innovation converge to shape the future of outcome-driven customer engagement.” Truecaller’s Customer Experience Solution is currently trusted by over 3,000 businesses globally, enabling verified brand communication, improving recognition, and protecting customers from scams and fraudulent calls. Through this collaboration, KreditBee aims to further redefine customer engagement standards in India’s rapidly evolving fintech landscape.
Epsilon launches talent brand film decoding modern marketing
Mumbai: Epsilon has unveiled a new talent brand film that takes a relatable and light-hearted look at a common consumer frustration — advertising that feels random, poorly timed, or irrelevant. The film aims to demystify modern marketing and explain Epsilon’s role in shaping smarter, more meaningful brand interactions without relying on industry jargon.The narrative begins with everyday moments where ads interrupt rather than assist, highlighting how disconnected messaging often misses the mark. It then transitions to show how Epsilon enables brands to move toward marketing that is contextual and useful. By connecting data across channels and understanding consumer behaviour more deeply, the company helps brands deliver messages that resonate instead of becoming background noise.A significant portion of the film focuses on the contribution of Epsilon’s India teams, who play a central role in building and operating the company’s global technology platforms. Working across identity, data, analytics, and real-time personalisation, these teams support AI-driven systems that process billions of consumer interactions daily and power marketing decisions in milliseconds.Beyond technology, the film also highlights Epsilon India’s workplace culture, showcasing an environment where large-scale impact meets agile execution. It portrays engineers, analysts, designers, and marketers collaborating to solve real-world challenges, supported by a culture of continuous learning, innovation, and strong internal communities.The initiative serves a dual purpose — offering the broader market a clearer, human-centric perspective on how Epsilon brings relevance back into advertising, while also presenting prospective talent with an authentic view of the people, purpose, and culture behind its technology-driven marketing solutions.https://www.youtube.com/watch?v=eT73i9q431QCredits:Conceptualised by: Brand Team, Epsilon IndiaProduced by: Talking Tree Media
Times Now Navbharat to Host ‘Viksit Bharat – Samriddh Uttar Pradesh’ in Lucknow on February 17
Mumbai: Times Now Navbharat, Times Network’s leading Hindi news channel, is set to host its flagship on-ground leadership conclave ‘Viksit Bharat – Samriddh Uttar Pradesh’ on February 17, 2026, at Taj, Lucknow. The conclave will bring together Uttar Pradesh’s top political leadership, policymakers, industry stakeholders, and opinion leaders to deliberate on the state’s growth journey and its pivotal role in India’s development roadmap.The Chief Guest Hon’ble Shri Yogi Adityanath, Chief Minister, Uttar Pradesh, will deliver a keynote address on the theme ‘Sankalp se Samriddhi’, outlining the government’s long-term vision, governance priorities, and roadmap towards a developed and prosperous Uttar Pradesh.The conclave will feature focused thematic sessions led by senior ministers of the Uttar Pradesh government, including Shri Brajesh Pathak, Deputy Chief Minister, Uttar Pradesh, Shri Swatantra Dev Singh, Jal Shakti Minister, Uttar Pradesh, Shri Jaiveer Singh, Tourism Minister, Uttar Pradesh, Shri Kapil Dev Aggarwal, Vocational Education and Skill Development Department, Uttar Pradesh amongst others.The conclave is aligned with the vision of Viksit Bharat @2047, aimed to highlight a concrete action plan for the state’s long-term growth and its steady movement towards becoming a strong, self-reliant, and prosperous state, with a focus on good governance, inclusive development, and public welfare, supporting its goal of becoming a USD 1 trillion economy.The conclave will feature a high-impact panel discussion with senior political leaders. This landmark conclave will highlight the governance stability, policy continuity, sectoral growth and people-centric development initiatives that are shaping the state.The conclave is held with the Government of Uttar Pradesh as the State Partner, Co-Powered by Goldiee Group, and Associate Sponsors Rungta Steel and Denver.Live Link:https://www.youtube.com/live/rTijyxIZn-M-Based on Press Release
Serial Update: டபுள் ஹீரோவா? நோ சொன்ன நடிகர் டு சமையல் நிகழ்ச்சி; கறார் காட்டும் சி.இ.ஓ!
டபுள் ஹீரோவா, நோ! தங்கை, தோழி முதலான சின்னச் சின்னக் கேரக்டர்களில் வந்து டிவி ஏரியாவில் பிரபலம் ஆகி ஹீரோயின் வரை உயர்ந்தவர்கள் நிறைய. 'மைனா' நந்தினி, தற்போது 'வீரா' சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி அருள்மொழி எனப் பலரை இதற்கு உதாரணம் சொல்லலாம். இந்த வரிசையில் சித்தி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்த தர்ஷனா ஸ்ரீபாலும் ஹீரோயினாக களம் இறங்குகிறார். விஜய் டிவியில் விரைவில் தொடங்கவிருக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் இவர். 'நீயின்றி நானில்லை' என டைட்டில் வைக்கப் பட்டிருக்கும் இந்த சீரியலில் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். 'தெய்வ மகள்', 'மாரி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் ஷப்னம் உள்ளிட்ட மேலும் சில ஆர்ட்டிஸ்டுகளும் கமிட் ஆகியிருக்கிறார்கள். அடுத்த சில தினங்களில் சீரியலின் புரொமோ ஷுட் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சன் டிவி பக்கம் வந்தால் 'ஆனந்த ராகம்' தொடர் முடிவடைந்து விட்டதால் அதில் நடித்து வந்த அனுஷா ஹெக்டேவுக்கு மீண்டும் ஒரு புதிய தொடரில் நடிக்க வாய்ப்பு அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த தொடரில் ஹீரோவாக நடித்த அழகப்பனுமே மீண்டும் சன் டிவி சீரியலில் தான் கமிட் ஆகாலமெனத் தெரிகிறது. வேறொரு சேனலில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றுக்கு கேட்டிருக்கிறார்கள். மறுப்பு சொல்லி விட்டாராம் அவர். சன் டிவி தரப்பிலிருந்து காத்திருக்கச் சொலியிருப்பதாகத் தெரிகிறது. கறார் காட்டும் சி.இ.ஓ.! டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களுக்கு பரிசுகள், கிஃபட் கூப்பன்கள் வழங்கப்படுவது வழக்கமாக நடப்பதுதான். அந்த மாதிரிதான் சமீபத்தில் முடிவடைந்த பிரபலமான சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டனவாம். கூப்பன் என்றால் ஆயிரம் இரண்டயிரம் மதிப்பு மிக்கதல்ல. அந்தக் கூப்பன் இருந்தால் சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரபலமான அந்த நட்சத்திர ஓட்டலில் இரண்டு நாள் இலவசமாகத் தங்கலாம் உணவுக்கு கட்டணம் கிடையாது. ஓட்டலில் உள்ள இதர வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மதிப்பு மிக்க கூப்பன் என்கிறார்கள். கூடுதலாக ஒருவரையும் கூட்டிச் செல்லலாம். இப்படிப் பட்ட கூப்பனை ஏனோ தெரியவில்லை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் ஹீரோயின் ஒருவரும் பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் பயன்படுத்த விரும்பவில்லையாம். இன்னொரு சக போட்டியாளர் ஒருவரிடம் கூப்பனை தந்து பயன்படுத்தச் சொல்லி விட்டார்களாம். அந்த சக போட்டியாளார் ஹோட்டலுக்குப் பேசி வரலாமா எனக் கேட்டிருக்கிறார். 'எதுக்கும் நீங்க சி.இ.ஒ வை ஒரு வார்த்தை கேட்டுடுங்க' எனச் சொல்லியிருக்கிறார்கள். 'இல்ல, இதை அனுமதிக்க முடியாது, யாருக்கு கொடுத்தாங்களோ அவங்கதான் வரணும்' எனக் கறாராகச் சொல்லி விட்டாராம் சி.இ.ஒ. 'கூப்பன் கையில இருக்கு, வேலிடிட்டி தேதியும் இருக்கு. ஆனாலும் பயன்படுத்த முடியாதுனு சொல்றாங்க. சி.இ.ஒ. நினைச்சா அனுமதிக்கலாம், ஆனா ஏன் மறுக்கிறார் தெரியலை' என நொந்து கொண்டாராம் அந்த போட்டியாளர். இதில் ஹைலைட் என்ன தெரியுமா, 'கூப்பனை அவங்கவங்கதான் கொண்டு வரணும்' என கறார் உத்தரவு போட்ட ஹோட்டலின் அந்த சி.இ ஒ மேற்படி நிகழ்ச்சியில் நடுவராக வந்தவரேதான்.
அமெரிக்காவில் கண்டறியப்பட்ட “வெள்ளை தங்கம்”: 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான லித்தியம் புதையல்!
மின்சார வாகனங்களின் (EV) இதயமாகக் கருதப்படும் லித்தியம் தாது, அமெரிக்காவின் நெவாடா – ஓரிகான் எல்லையில் அமைந்துள்ள மெக்டெர்மிட்… The post அமெரிக்காவில் கண்டறியப்பட்ட “வெள்ளை தங்கம்”: 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான லித்தியம் புதையல்! appeared first on Global Tamil News .
Pantene launches Miracle Rescue Bond Repair Conditioner with Janhvi Kapoor
Hyderabad: Pantene has introduced its new Miracle Rescue Bond Repair Conditioner in India. Designed as a high-performance repair solution, the conditioner claims to help reverse up to three years of visible hair damage and rebuild broken hair bonds.Powered by Pantene’s advanced Melting Pro-V Formula, the product is formulated to simplify haircare routines while addressing visible damage caused by frequent styling. The innovation enables consumers to experiment with different hairstyles without compromising long-term hair health.Actor Janhvi Kapoor fronted the launch, positioning the product as her go-to solution for maintaining healthy hair amid frequent styling changes.Sharing her experience, Janhvi Kapoor said, “I love experimenting with my hair! When I perform different characters on screen, my hair plays a crucial role to bring them to life. The new Pantene Miracle Rescue Bond Repair conditioner gives me the freedom to experiment with my hair all I want, without having to worry about the damage. What I love about Pantene’s Miracle Rescue range is that it focuses on repairing damage from within, giving me smoother, nourished and stronger hair!” Commenting on the launch, Vikram Jeet Singh, Senior Director and Category Leader – Beauty at Procter & Gamble India, said, “ Today’s consumers want to do more with their hair, unrestricted, while wanting to maintain long-term hair health. With Pantene’s Miracle Rescue Bond Repair Conditioner, our focus is to introduce a formula that works at the molecular level** to help address accumulated hair damage. This innovation, rooted in science, reflects Pantene’s continued commitment to take care of your hair’s health so you can style it, cut it, colour it as you want” The Miracle Rescue Bond Repair Conditioner contains antioxidants, patented technology, and 5,000 melting Pro-Vitamin B5 nutrient pearls that dissolve instantly to release millions of nutrient molecules. Backed by over seven years of research and three patents, the formula works to replenish lost lipids in the hair cell membrane complex—helping rebuild broken hair bonds at the molecular level and delivering smoother, nourished, and stronger hair.https://youtu.be/HEGJbbbsto4
Color Pencil unveils India’s first experiential learning store for kids
Chennai: Color Pencil, an integrated early-learning and children’s content company, has launched India’s first kids’ experiential learning store at SKYHUB on GST Road, Kilambakkam, Chennai. The flagship store was inaugurated on February 15 by actress Vani Bhojan in the presence of partners and distinguished guests.Positioned as a first-of-its-kind destination for playful, hands-on learning, the Color Pencil Experiential Store features curated learning zones, interactive play areas, and immersive discovery experiences designed for children and families. The launch also coincides with the unveiling of the company’s new brand identity, reflecting its evolution and future-focused vision.The Chennai outlet marks the first of six experiential stores planned across key Indian cities over the next two years, highlighting the company’s ambition to transform how children engage with learning beyond conventional classrooms and screens.Speaking on the launch, P. Narayanan, Founder, Color Pencil, said, “From day one, Color Pencil has been driven by a simple but powerful idea - to make learning simple, joyful, and truly effective. Our experiential store is an extension of this philosophy into the physical world. It allows children to learn by doing, exploring, and discovering in a space designed just for them. Chennai is where this journey begins, and we are excited to take this model to multiple cities across India over the next two years.” Meena Chhabbria, CEO, Color Pencil , added, “This store represents a new chapter for Color Pencil, not just in retail, but in how early learning is experienced. With our new brand identity, we are reinforcing our commitment to screen-smart, play-led, and research-backed learning. Our growing ecosystem of apps, games, books, and learning tools come together in this experiential format to create a truly holistic learning environment for children and parents alike.” Expressing her association with the launch, Vani Bhojan, Actress said, “I am delighted to be part of Color Pencil’s journey and to inaugurate India’s first kids’ experiential learning store. Today’s children need learning experiences that are engaging, joyful, and meaningful. Color Pencil’s approach of combining play, visual learning, and real-world interaction is a wonderful way to nurture curiosity and build strong foundations in young minds.” Founded in 2022, Color Pencil operates under its philosophy of “How Simple!”, focusing on breaking down complex concepts into playful, easy-to-understand learning experiences through visual tools and curriculum-aligned content. In collaboration with Indian Institute of Technology Madras, the company develops learning solutions that combine established pedagogy with modern technology.Its expanding ecosystem includes Play Pixo, an interactive learning app, Play TVO games, Vedic Maths books, and flash cards, all designed to deliver meaningful, play-led educational outcomes. The SKYHUB experiential store brings these offerings together into a community-centric environment where children, parents, and educators can connect, explore, and experience learning in an immersive format.
காங்கேசன்துறை கடற்பரப்பில் பரபரப்பு: 25 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், அவர்களது இரண்டு படகுகளுடன் இலங்கை… The post காங்கேசன்துறை கடற்பரப்பில் பரபரப்பு: 25 இந்திய மீனவர்கள் கைது! appeared first on Global Tamil News .
NDTV IND.AI Summit: India’s Dialogue with the AI Future on February 18 in New Delhi
Mumbai: On February 18, 2026, New Delhi will host the inaugural NDTV IND.AI Summit - a dialogue that will explore how deeply artificial intelligence is now woven into India’s economic priorities, policy frameworks, and strategic thinking.Curated by NDTV in partnership with the Startup Policy Forum, the Summit puts AI at the centre of the conversation – as a defining force in governance, business, innovation, and public life. As countries across the world grapple with its implications, India is weighing how to harness AI for growth while safeguarding public trust and social equity.The IND.AI Summit is structured around a broader, more consequential question: how should AI be governed, deployed, and embedded in society in a way that is both transformative and responsible?A highlight of the Summit will be a special session on AI in governance, with former UK Prime Minister Rishi Sunak bringing a global perspective on the way AI is reshaping statecraft, administration, and economic decision-making.Equally significant is the Summit’s emphasis on global governance and safety. With voices such as Chris Lehane of OpenAI, Stuart Russell of UC Berkeley and James Manyika of Google, the discussions will situate India within the wider international debate on AI accountability, risk, and cooperation.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption] ‘The IND.ai Summit is about the kind of future we are choosing to build. India has the scale, the talent, and the moral imagination to shape how AI serves society - and this Summit is our way of bringing the most credible voices together to define that direction,’ said Rahul Kanwal, CEO and Editor-in-Chief, NDTV. [caption id=attachment_2492004 align=alignright width=200] Shweta Rajpal Kohli [/caption] At a time when India is leading the global conversation on AI through the India AI Impact Summit, we’re thrilled to partner with NDTV to bring top international and Indian voices to audiences worldwide. In this era of unprecedented technological and geopolitical change, dialogues like these deliver lasting, defining impact, and we are thrilled to have a star cast of speakers who are at the centre of AI innovation come to the NDTV Ind.ai Summit’, said Shweta Rajpal Kohli, President & CEO, Startup Policy Forum .Beyond policy and ethics, the Summit will also examine how AI is being deployed in practice. Some of the most influential investors and innovators of the AI era - including Hemant Taneja of General Catalyst- will engage in conversations on how capital, innovation, and long-term value creation are being redefined in an AI-led world.Sessions on AI in the workplace, AI adoption at scale, and digital public infrastructure will focus on real-world impact: how AI is reshaping productivity, decision-making, job roles, and organisational culture, as well as how India’s public digital systems can serve as global models for inclusivity and trust.A dedicated segment on AI sovereignty will explore what national autonomy means in an interconnected technological ecosystem - weighing the roles of governments, open-source communities, academia, and private enterprise in stewarding AI responsibly.Underlying all these conversations is a common thread: that AI is not just a technological tool, but a societal force that will shape power, opportunity, and equity in the decades to come.As the discussions play out in New Delhi, the NDTV IND.ai Summit will also be read as a reflection of a new India that is more self-assured about its role in shaping contemporary discourses on innovation and technology.India, without doubt, is increasingly framing AI as part of its own developmental and policy story - one that links innovation to public purpose, and global engagement to domestic priorities. In that sense, the Summit is as much about how a new India sees itself in the world as it is about the future of artificial intelligence.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த தேமுதிக தொண்டர்களிடம் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்த உள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
படைப்புச் சுதந்திரமும் தணிக்கை வாரியத்தின் புதிய கெடுபிடிகளும்
இயக்குநர் எச். வினோத் ‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்தில் திரையுலகின் மௌனத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது அரசியல் திரைப்படங்களுக்கு நிறுவன ஆதரவு குறித்த புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

23 C