நாங்க வெள்ளை .. குழந்தை மட்டும் இப்படி? DNA ரிப்போர்ட்டால் உறைந்த தம்பதி; நீதிமன்றத்தில் வழக்கு
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் மில்ஸ் மற்றும் டிஃப்பனி ஸ்கோர் தம்பதியினர், ஒரு கருத்தரிப்பு மையத்தின் (Fertility Clinic) அலட்சியத்தால் தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒரு குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தம்பதிக்கு கடந்த டிசம்பர் 11-ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்த்த தம்பதியினர், குழந்தை தங்களைப் போல இல்லாமல் வேறொரு இனத்தைச் சேர்ந்தவர் (Non-Caucasian) போல இருப்பதை உணர்ந்துள்ளனர். சேமித்து வைத்திருந்த கருக்கள் மரபணு சோதனை […]
புதைகுழி கூறும் அதிர்ச்சி உண்மை ; புதிய தகவல்களை வழங்கும் ஜோர்தானின் பாரிய புதைகுழி
கி.பி. 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை பைசாந்திய பேரரசில் (Byzantine Empire) லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ‘ஜஸ்டினியன் பிளேக்’ (Plague of Justinian) எனப்படும் கொடிய நோய் குறித்த புதிய மற்றும் தெளிவான விபரங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். தற்போதைய ஜோர்தானில் உள்ள ஜெராஷ் (Jerash) நகரில் கண்டறியப்பட்ட ஒரு பாரிய மனிதப் புதைகுழியை ஆய்வு செய்ததில், அது பல ஆண்டுகளில் உருவான ஒன்றல்ல, மாறாக அந்தப் பெருந்தொற்றின் போது ஒரே நேரத்தில் புதைக்கப்பட்டவர்களுடையது என்பது […]
பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்!
கொவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்தில், முடங்கிப்போன சிறு வணிகங்களை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் ‘Bounce Back Loan’… The post பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்! appeared first on Global Tamil News .
லண்டன்-பெங்களூரு விமானத்தில் திடீர் கோளாறு; அவசர தரையிறக்கம்
லண்டன், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 787-8 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. அப்போது, அதன் விமானிகளில் ஒருவர் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் வேலை செய்யவில்லை என கண்டறிந்து உள்ளார். உடனடியாக நடுவானில் சென்ற விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போயிங் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் […]
பிரபல சிங்கள நடிகர் ஹேமல் ரணசிங்க கைது
நபரொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நடிகர் ஹேமல் ரணசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடிகர் ஹேமால் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (3) கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹேமால் ரணசிங்க இன்று காலை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகிய போதே பொலிஸாரால்கைதுசெய்யப்பட்டுள்ளார். இரண்டாம் இணைப்பு நடிகர் ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு நபரொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று காலை கைதுசெய்யப்பட்ட நடிகர் ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட […]
மும்பையில் 2 விமானங்கள் உரசி விபத்து... என்ன நடந்தது? திக் திக் நிமிடங்கள்
மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் தரையில் நகரும்போது இறக்கைகள் லேசாக உரசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரிபால சிறிசேன தலை தப்பியது!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளை பிறப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் இடம்பெற்ற குற்றவியல் ரீதியான கொலை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மைத்திரிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. மைத்திரிக்கு அழைப்பாணை இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய ஐந்து பேர் […]
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணை ரத்து:
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று… The post முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணை ரத்து: appeared first on Global Tamil News .
தவெகவின் வியூகங்கள், கூட்டணி எதிர்பார்ப்புகள், மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இணைப் பொதுச்செயலாளர் CTR நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக கூட்டணி குறித்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Marking World Cancer Day, GEM Hospital today reaffirmed its commitment to advancing cancer care by launching Dr. GEM, an innovative
The British Drain of Wealth: Why India’s Economic Past Still Shapes Its Present
As India asserts itself as one of the world’s largest economies, its leaders increasingly frame this rise against a long
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இரண்டு அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கு உரிமை இருந்தாலும், அவர் மேலும் 03 அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்தினார் .பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் எரிபொருள் கொடுப்பனவுகளையும் சட்டவிரோதமாகப் பெற்றார் என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் அவரது வசம் இருந்தபோது, ஜனவரி 2025 முதல் கொழும்பு 04, லோரிஸ் லேனில் அமைந்துள்ள ஒரு அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தையும் அவர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாகப் பெற்றுள்ளார். அத்துடன் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் விவரங்கள் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த தகவல்களை வேண்டுமென்றே வழங்க மறுத்தல் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் நிர்வாக மற்றும் ஒழுங்கு அதிகாரங்களில் தலையிடுதல், அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் வெளிநாட்டு உதவித்தொகைகளில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே முன்னாள் சபாநாயகர் தனது போலியாக கல்விசான்றிதழ்களை வழங்கியதான குற்றச்சாட்டுக்களையடுத்து பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து ; மூவர் உயிரிழப்பு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற கோரமான சாலை விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஹியர்ஸ்ட் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 11-ல், ஒரு சரக்கு லொறி மற்றும் பயணிகள் வாகனம் (SUV) நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை 11-ல் நெடுஞ்சாலை 631 அருகே இந்த “கடுமையான விபத்து” நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில், கெனோராவைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவர், கிரீன்ஸ்டோனைச் சேர்ந்த 36 வயதுடைய […]
காதலியான பொலிஸ் கான்ஸ்டபிளை கொன்ற காதலனுக்கு மரண தண்டனை; கொழும்பு நீதிமன்றம் அதிரடி
தனது இளம் காதலியும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுமான பெண்ணை, கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காக, குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி மரண தண்டனை விதித்தார். பிரதிவாதிக்கு எதிராக அரச தரப்பால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிசெய்த நீதிபதி, பாதிக்கப்பட்டவரின் உடலில் காணப்பட்ட நாற்பத்தேழுக்கும் மேற்பட்ட கடுமையான வெட்டுக் காயங்களைக் கருத்தில் கொண்டு, இந்தக் கொலை பிரதிவாதியால் மிகவும் திட்டமிட்ட மற்றும் […]
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் உள்ளக முரண்பாடு உச்சம் பெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அணி அறிவித்துள்ளது. கட்சியின் கொள்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான உள் முரண்பாடுகளைத் தொடர்ந்து, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் அணி தெரிவித்துள்ளது. முன்னதாக அரசியலமைப்பு சபையிலிருந்து சிவஞானம் சிறீதரன் விலக மறுத்திருந்த நிலையில் அத்தகைய முடிவையெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையிலிருந்து இராணுவ அதிகாரிகளை பதவிக்கமர்த்தும் நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்திருந்தமை, கட்சியின் நீண்டகால நிலைப்பாடுகளுக்கும் தமிழ் வாக்காளர்களின் உணர்வுகளுக்கும் முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்ததைத் தொடர்ந்து ஒழுக்காற்று நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அத்தகைய அறிவிப்புக்கள் தொடர்பில் சிவஞானம் சிறீதரன் இதுவரை கருத்து எதையும் தெரிவித்திருக்கவில்லை.
Epstein, Trump, Naravane - திண்டாடும் MODI Govt? | Annamalai - தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி? | TVK
‘பயிற்சி போட்டியில்’.. மிரட்டலாக செயல்பட்ட நேபாள் அணி: அடுத்தடுத்து அரை சதம்.. யுஏஇ அணி படுதோல்வி!
டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டியில், நேபாள் அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. ஐக்கிய அரபு அமீரக அணியால், நேபாள் அணிக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியவில்லை.
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும்… The post வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் – புதிய இராணுவ தளபதியின் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததா ? appeared first on Global Tamil News .
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, இறுதியில் வெற்றியைப் பெற்று, பைனலுக்கு முன்னேறியுள்ளது.
ஈரான் அணுசக்தி விவகாரம்! பதற்றத்தைத் தணிக்க தொடா் முயற்சி: ரஷியா
ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரத்தில் நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்க , ரஷியா தொடா்ந்து முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரானிடம் இருக்கும் அணுசக்தி மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, ரஷியாவுக்கே கொண்டு வந்து சுத்திகரிக்கவோ அல்லது பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவோ தாங்கள் தயாராக இருப்பதாக ரஷியா மீண்டும் உறுதியளித்துள்ளது. இது தொடா்பாக ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரானின் யுரேனியத்தை ரஷியாவுக்கு மாற்றிப் […]
சட்டத்தரணிகள் மீது தாக்குதல்; இரு பெண்கள் கைது
நுகேகொடை நகரசபை சந்திக்கு அருகில் சட்டத்தரணிகள் இருவரை வழிமறித்து அச்சுறுத்தல் விடுத்து, வாகனத்தைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 30 ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகளை முடித்துவிட்டுத் திரும்பிய இரண்டு சட்டத்தரணிகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் பிரதேசவாசிகள் சிலர் கூட்டமாகச் சேர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து, வாகனத்தைச் சேதப்படுத்தியதாகப் பாதிக்கப்பட்ட சட்டத்தரணிகளால் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. […]
: ️ விளையாட்டு மைதானத்தில் மத சிலை-இளைஞர்கள் எதிர்ப்பை மீறி நகரசபை அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு
மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்தில் மதச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகவும் முரண்பாடாகவும் உருவெடுத்துள்ளது. விளையாட்டு… The post : ️ விளையாட்டு மைதானத்தில் மத சிலை-இளைஞர்கள் எதிர்ப்பை மீறி நகரசபை அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு appeared first on Global Tamil News .
Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக - எப்படி?
2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் கலவரம் தொடங்கியது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என அந்தப் பகுதியில் பல்வேறு கொடூரங்கள் நடந்தேறிக்கொண்டே இருந்தன. இந்தக் கலவரத்தைத் தடுக்க தவறிவிட்டார் என்றும்... கலவரத்தைச் சரிவர கையாளவில்லை என்று அந்த மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் பிரேன் சிங்கின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. யும்னம் கெம்சந்த் சிங் | Yumnam Khemchand 'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' - தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. இப்போது மணிப்பூரின் பாஜக தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார். அடுத்ததாக, இவர் மணிப்பூரின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். PTI-ன் தகவலின் படி, பெண் தலைவரான நெம்சா கிப்கென் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். யும்னம் கெம்சந்த் சிங் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். நெம்சா கிப்கென் குக்கி இனத்தைச் சேர்ந்தவர். இரு இனங்களுக்கு இடையே பேலன்ஸ் செய்யவே, பாஜக இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points
Madhavan: நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்! - நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன். சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார். R Madhavan அந்தப் பேட்டியில் அவர், “‘விக்ரம் வேதா’ படம் என்னுடைய இந்த பிரேக்குக்குப் பிறகுதான் நடந்தது. ‘இறுதிச் சுற்று’ படத்திற்கு முன்பு, நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன். அதனால்தான் ஒரு இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது. நான் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் பாடலுக்காக ஷூட்டிங் செய்துகொண்டிருந்தேன். ஆரஞ்சு பேண்ட், பச்சை சட்டை அணிந்து சாலையின் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு சுவிஸ் விவசாயி உட்கார்ந்திருந்தார். தேநீர் குடித்தபடி எங்களை ‘இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்பது போலப் பார்த்தார். பல திறமைகளை நான் கொண்டிருக்கிறேன். ஆனால் என் திரைப்படங்களில் அவை எதையும் நான் காட்டவில்லை. பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது மட்டுமே நான் செய்த ஒரே முயற்சியாக இருந்தது. அதன் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது என் தவறை உணர்ந்திருக்கிறேன். அதன் பிறகுதான் நான் விளம்பரப் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். சென்னையிலும் இந்தியாவின் பல இடங்களிலும் அதிகம் பயணம் செய்தேன். மாதவன் அந்த நான்கு ஆண்டு கால அனுபவமும், பெற்ற நுண்ணறிவும் தான் இப்போது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். நான் திரும்பி வந்தபோதுதான் என்னுடன் பணியாற்றிய பழைய இயக்குநர்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு முன்னோக்குச் சிந்தனை உள்ளவர்கள் இல்லை என்பது புரிந்தது. அதன் பிறகுதான் நான் புதிய இயக்குநர்களைத் தேட ஆரம்பித்தேன்” என்றார்.
அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு
அமெரிக்காவில் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு (82) புவி அறிவியல் ஆய்வுக்காக உயரிய ‘கிராஃபூா்ட்’ பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசளிக்கும் ஸ்வீடனின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி இந்தப் பரிசை அறிவித்துள்ளது. புவி அறிவியலுக்கான ‘நோபல் பரிசு’ என்று கருதப்படும் கிராஃபூா்ட் பரிசு, கரியமில வாயுவைவிட பூமியை மிகக் கடுமையாக வெப்பமயமாக்கும் காரணிகள், வளிமண்டல பழுப்பு நிற மேகங்கள் ஆகியவை குறித்து பல ஆண்டுகளாக ராமநாதன் மேற்கொண்ட ஆராய்ச்சியை அங்கீகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு […]
15 Years-க்கு முன்னாடி இருந்த Vijay Antony Vibes Pookie-ல இருக்கும்! | Ajay Dhishan | Interview
கர்நாடக மணப்பெண் கைது: திருமணத்தன்று மணமகனை கொல்ல முயற்சி!
கர்நாடக மாநிலம் கொல்லேகலாவில் தனது திருமணத்தை நிறுத்த மணமகனைக் கொலை செய்ய முயன்ற மணப்பெண் மற்றும் அவரது காதலனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' - தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம்
நேற்று, முன்னாள் ராணுவத் தளபதி நரவானே தனது 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' புத்தகத்தில் எழுதியிருந்த வரிகளை நாடாளுமன்றத்தில் படிக்க முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ஆனால், அதை கடைசி வரை படிக்கவே விடவில்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார் ராகுல் காந்தி. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது... ஓம் பிர்லா இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு? நேற்று ஜனாதிபதி உரையின் மீதான தீர்மானத்தில், நான் பேசும்போது, நான் பேச விரும்புவது எந்தப் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிறது என்பதை கூறச் சொன்னீர்கள். இன்று நான் பேசும்போது, பத்திரிகையின் பெயரை குறிப்பிட்டேன். நாடாளுமன்றத்தின் வழக்கத்தின் படி, உறுப்பினர் பேச விரும்பும் ஆவணம் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அதில் இருக்கும் கருத்துகளுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது சரியாக செய்தாலே, அவைத்தலைவர் உறுப்பினரை அந்த ஆவணத்தைப் படிக்க அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு, அதற்கான பதிலைத் தருவது அரசின் பக்கம் சென்றுவிடுகிறது. அத்துடன் அவைத்தலைவரின் பொறுப்பும் முடிந்துவிடுகிறது. திட்டமிட்டு தடுக்கப்படுகிறது ஆனால், என்னை அவையில் பேசவிடாமல் தடுப்பது வழக்கத்தை மீறுவதாக அமைகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு குறித்து ஒரு எதிர்க்கட்சித் தலைவராக எனக்குப் பேச உள்ள உரிமையை திட்டமிட்டு தடுப்பதாக அமைகிறது. ஜனாதிபதியின் உரையில் தேசிய பாதுகாப்பு முக்கிய பகுதியாக இருந்தது. அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். மதிப்பிற்குரிய அவைத்தலைவராக, எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பினரின் உரிமையையும் அவையில் பாராபட்சமின்றி காப்பது உங்களது கடமையாகும். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒவ்வொரு உறுப்பினரும் பேசுவது நம் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்! இந்திய நாடாளுமன்றம் Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? - பட்ஜெட் அறிவிப்பு படி, யாருக்கு வரி? யாருக்கு வரி இல்லை? நாடாளுமன்ற வரலாற்றிலேயே... அடிப்படை ஜனநாயக உரிமையை மறுப்பது முன்னெப்போதும் இல்லாத சூழலுக்கு வழிவகுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக, அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் உரையின் மீது எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதைத் தடுக்க அவைத் தலைவர் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். இது நமது ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை. அதற்கான கடும் எதிர்ப்பை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தி கடிதம் ராகுல் காந்தி கடிதம்
திருமணத்தை மீறிய உறவு..இளம்பெண்ணுக்கு பொதுவெளியில் கொடூர தண்டனை -இந்தோனேஷியாவில் பயங்கரம்!
இந்தோனேஷியா தகாத உறவுக்கொண்ட இளம் பெண்ணுக்கு பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா திட்டம் (PMKVY)!
PM Kaushal Vikas Yojana (PMKVY): இளைஞர்களுக்கு தொழில் தொடர்பான திறன் பயிற்களை வழங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இந்திய அரசு கொண்டுவந்துள்ள குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டமான பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் மீண்டும் ஒரே திரையில் இணைய உள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'டார்க் காமெடி' பாணியில் உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் யாழ்ப்பாணம் கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த […]
ஒரு கணவன் இரு மனைவிகள்; சடலைத்தை பெற மருத்துவனையில் பெண்கள் குடுமிப் பிடி சண்டை
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் முதன் மனைவியும் , இரண்டாவது மனைவியும் குடுமி பிடி சண்டைப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இதனையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி, தலையீட்டு சட்டப்பூர்வமான முதலாவது மனைவிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற சுகாதார உதவியாளர் ஒருவரே உயிரிழந்தவராவார். குறித்த நபர் சுமார் 30 […]
அமெரிக்காவில் 1200 விமானங்கள் இரத்து
அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் வானிலை அமைப்பு வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மிகக் கடுமையான தாக்கங்கள் கடலோரப் பகுதிகளில் உணரப்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்திய குளிர்கால வானிலை அமெரிக்க மின் கட்டமைப்புகளில், குறிப்பாக கரோலினாஸில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கின் சில பகுதிகளில் மின் தடைகள் […]
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் ஜனாதிபதி உத்தரவிட்டார்
அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில், அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸ்கோவ் தனது வெளியுறவு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். அச்சுறுத்தல்கள் மற்றும் நியாயமற்ற எதிர்பார்ப்புகள் இல்லாத பொருத்தமான சூழல் இருந்தால், நாட்டின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்காத நியாயமான மற்றும் நியாயமானஉரையாடலில் ஈடுபடத் தயாராக இருப்பதாக ஈரானிய ஜனாதிபதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு கால அவகாசம் குறைவாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஏவுகணைகளைப் பயன்படுத்தாமல் போர்க்களத்தில் எதிரியை ஆச்சரியப்படுத்த ஈரான் தயாராக உள்ளது
எதிரி தனது அணு ஆயுதங்களைப் பற்றி ஊகிக்கத் தயாராகி வருவதால், ஈரான் யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு போருக்குத் தயாராகி வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறைந்த விலை, ஆனால் சக்திவாய்ந்த மற்றும் விரைவான தாக்குதல்களுக்கு அது தயாராகி வருகிறது. ராணுவ ஆய்வாளர்கள் கூட ஈரானின் தொழில்துறை போர் தயாரிப்புகளில் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர், சேதமடையாமல் தாக்கக்கூடிய அளவிற்கு உற்பத்தி செயல்முறை உட்பட ஈரான் தற்போது 80,000 ஷாஹெட் ட்ரோன்களின் மிகப்பெரிய கையிருப்பைக் கொண்டுள்ளதாகக் கூப்படுகிறது. இது தொழில்துறை அளவிலான ட்ரோன் போர் உத்தியை நோக்கிய ஒரு பெரிய மாற்றமாகும் என்று வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. ரானிய தொழிற்சாலைகள் ஒரு நாளைக்கு 400 ஷாஹெட் ட்ரோன்களை உற்பத்தி செய்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம், ஈரான் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கூட முறியடிக்க முடியும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, ஷாஹெட்-136 ட்ரோன்கள், அவற்றின் நீண்ட தூரம், குறைந்த விலை மற்றும் கனமான போர்முனை காரணமாக, பாலிஸ்டிக் ஏவுகணைகளை நம்பாமல் எதிரியை தொடர்ந்து அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளன என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய அணுசக்தியைக் கொண்ட ஈரான், குறைந்த செலவில் ஒரு தனித்துவமான உத்தியைப் பயன்படுத்தி, அதன் மிக சக்திவாய்ந்த ஆயுதத்தை வீணாக்காமல் எதிரியை முடக்குவதற்கான ஒரு பணிக்குத் தயாராகி வருகிறதா? இராணுவ ஆய்வாளர்கள் கேட்கின்றனர். டிஃபென்ஸ் செக்யூரிட்டி ஆசியாவின் தனி அறிக்கையின்படி, இது போர்க்களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பெரிய அளவிலான தொழில்துறை போர் உத்தியாக மாறும். ஈரானிய தொழிற்சாலைகள் ஒரு நாளைக்கு ஷாஹெட் ட்ரோன்களை உற்பத்தி செய்யும் விரைவான விகிதம், போர்க்கள இழப்புகளிலிருந்து ஈரான் விரைவாக மீண்டு, எந்தவொரு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பையும் முறியடிக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மிகப்பெரிய உற்பத்தி திறன், ஈரானின் மதிப்புமிக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தாமல் எதிரியைத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க அனுமதிக்கிறது. ஷாஹெட்-136 ட்ரோன் 2,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வரம்பைக் கொண்டுள்ளது. இது 40 முதல் 50 கிலோகிராம் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிக்கும் மின்னூட்டத்தை சுமந்து செல்லக்கூடியது மற்றும் எளிதாகவும் மலிவாகவும் தயாரிக்கக்கூடிய எளிய இயந்திரத்தைக் கொண்டுள்ளது. இது இலகுரக பொருட்களால் ஆனது, இதனால் ரேடார் மூலம் கண்டறியப்படாமல் குறைந்த உயரத்தில் பறக்க முடியும். செயற்கைக்கோள் தொழில்நுட்பம் (GNSS) மற்றும் நெரிசல் தடைகளை எதிர்கொண்டாலும் கூட இது செயல்படக்கூடிய வழிகாட்டுதல் அமைப்பைக் கொண்டுள்ளது. உக்ரைன் போர், இத்தகைய ட்ரோன்களை கூட்டமாகப் பயன்படுத்துவது எரிசக்தி அமைப்புகள் மற்றும் வணிக துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பை எளிதில் அழிக்கக்கூடும் என்பதையும் நிரூபித்துள்ளது. ஈரானின் அணுசக்தி நோக்கங்கள் மற்றும் அதன் பிராந்தியத்தில் அமெரிக்க துருப்புக்கள் இருப்பதால் இரு தரப்பினருக்கும் இடையிலான பதட்டமான சூழ்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், உலகின் தினசரி எண்ணெய் வர்த்தகத்தில் 1/5 பங்கு கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலுமாக மூடுவதாக ஈரான் அச்சுறுத்துகிறது. ஈரானிய பாதுகாப்பு அதிகாரி அக்பர், அந்தப் பகுதியில் உள்ள காற்று, நீர் மற்றும் நீருக்கடியில் அதன் முழு கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளது என்று கூறுகிறார். அந்த கடல் பாதையின் பாதுகாப்பும் போக்குவரமும் தெஹ்ரான் எடுக்கும் முடிவுகளால் தீர்மானிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
மாணவர்களை திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துத் தரும் முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் 4 இலவச பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம், தனது அனுபவத்தையும் தாண்டித் தன்னையே வியக்க வைத்ததாக டி. ராஜேந்தர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அரச குடும்பத்தில் குழப்பம் இருந்தபோதிலும், நோர்வே முடியாட்சி தொடர்கிறது - நாடாளுமன்றத்தில் ஒப்புதல்
இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், முடியாட்சியைத் தொடர நார்வே நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்துள்ளது. அரச குடும்பத்திற்குள் சமீபத்திய பிரச்சினைகள் மற்றும் குடும்பத்திற்கான பொதுமக்களின் ஆதரவில் சிறிது சரிவு இருந்தபோதிலும், குடியரசை நிறுவுவதற்கான திட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வாக்கெடுப்பில், 169 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 141 பேர் முடியாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். 26 உறுப்பினர்கள் மட்டுமே மன்னர் ஹரால்ட் மற்றும் அவரது சந்ததியினரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து குடியரசை நிறுவுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 1905 ஆம் ஆண்டு ஸ்வீடனிடமிருந்து நோர்வே சுதந்திரம் பெற்றதிலிருந்து, முடியாட்சி அரசியலில் ஈடுபடாமல் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சேவை செய்து வருவதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், ஒரு குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட எம்.பி.க்கள் குழு, ஒரு ஜனநாயக நாட்டில் மரபுரிமை சலுகைகளுடன் கூடிய முடியாட்சி இருக்கக்கூடாது என்றும், மக்கள் நாட்டின் தலைவராக ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். இளவரசி மெட்டே-மாரிட்டின் மூத்த மகனுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது, இது நோர்வே அரச குடும்பத்தை கடுமையான பொது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. 29 வயதான மௌரிஸ் போக் ஹோய்பி, இளவரசியின் முந்தைய உறவில் பிறந்த மகன். அவர் பட்டத்து இளவரசர் ஹாகோனின் வளர்ப்பு மகன் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை உட்பட 38 கடுமையான குற்றச்சாட்டுகளை அட்டர்னி ஜெனரல் அவர் மீது சுமத்தியுள்ளார். இந்த சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன, மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான மாரிஸ் போக்கின் சட்டக் குழு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளையும் அவர் மறுப்பதாகக் கூறியது. அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பொதுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவரை நான்கு (4) வாரங்களுக்கு காவலில் வைக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையில் பங்கேற்க வேண்டாம் என்று நோர்வே அரச குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர், மேலும் 88 வயதான மன்னர் ஹரால்ட் உட்பட மூத்த அரச குடும்பத்தினர் பொதுவில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இந்த விசாரணை நோர்வேயில் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதற்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமையும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். மறைந்த நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இளவரசி மெட்-மாரிட்டின் கடந்தகால உறவுகள் பற்றிய பேச்சையும் இந்த சம்பவம் மீண்டும் தூண்டியுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்களில் அவரது பெயர் நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் இது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார், எப்ஸ்டீனின் பின்னணியை முறையாக விசாரிக்கத் தவறியது ஒரு தவறு மற்றும் அவமானம் என்று கூறினார்.
நீலகிரி: தோட்ட தொழிலாளர் வம்சாவளி டு அரசு செலவில் மலேசியாவில் உயர்கல்வி! - அசத்தும் அரசு பள்ளி மாணவி
தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் புளியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர், மாணவி பிரேமா. தோட்ட தொழிலாளர்களான பரமேஸ்வரி - கணேஷ் மூர்த்தி தம்பதியரின் மகளான இவர், தொடக்க கல்வி முதலே படிப்பில் அதீத நாட்டம் செலுத்தி வருகிறார். அருகில் உள்ள புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 - ம் வகுப்பு வரை படித்த மாணவி பிரேமா, அரசு பொதுத் தேர்வில் 462 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவராக அசத்தியிருக்கிறார். மாணவி பிரேமா இந்த மதிப்பெண் மூலம் குன்னூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 11 மற்றும் 12- ம் வகுப்பு பயில தேர்வாகியிருக்கிறார். அங்கும் சிறப்பாக கல்வி பயின்ற மாணவி பிரேமா, தமிழ்நாடு அரசின் முழு உதவியுடன் வெளிநாட்டில் கல்வி பயிலும் சிறப்பு திட்டத்தில் தேர்வு எழுதியிருக்கிறார். அதில் தேர்ச்சி பெற்ற மாணவி பிரேமா, மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நான்கு வருட பொறியியல் கல்வி பயில தேர்வாகியிருக்கிறார். தேயிலை தோட்ட தொழிலாளர் வம்சாவளியைச் சேர்ந்த மாணவி பிரேமா, முதல் தலைமுறை `பட்டதாரி' ஆகப்போகும் பெருமிதத்துடன், பட்டப்படிப்பு உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மாணவி பிரேமா குறித்து நம்மிடம் பேசிய புளியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், மாணவி பிரேமா பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பாடங்களை நன்கு புரிந்து படிக்கக்கூடிய திறன் பெற்றவர். ஆசிரியர்களிடம் உரிமையுடன் சந்தேகங்களைக் கேட்டு பாடங்களைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர். அரசின் மாதிரிப் பள்ளியில் படிக்கிற போது வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி படிப்பேன் என்று உறுதி கூறியிருந்தார். மாணவி பிரேமா தமிழ்நாடு அரசின் முழு செலவில் மலேசியாவில் உள்ள அல் புகாரி இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்காண்டு பொறியியல் படிப்பான தரவு அறிவியல் கல்வியை பயில இருக்கிறார். அயராத உழைப்பாலும் கல்வி மீதான அதீத ஈடுபாட்டாலும் இன்றைக்கு அதை சாத்தியமாக்கியிருக்கிறார். அரசு பள்ளியில் பயின்றால் எந்த உச்சத்தையும் அடையலாம் என்பதற்கு மாணவி பிரேமா நல்ல முன்னுதாரணம் என்றார். வாழ்த்துகள் பிரேமா!!! தேயிலை தோட்டத்துச் சிறு செடி, விருட்சமாகி வான் தொடட்டும்!
நாடாளுமன்ற மக்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக மதுரை எம்.பி. சு. வெங்கடேஷன் உள்ளிட்ட எட்டு எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதுரை எம்பி சு. வெங்கடேஷன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
உலகின் முதல் ஆளில்லா விமானம் தனது பயணத்தைத் தொடங்குகிறது!
உலகின் முதல் ஆளில்லா கலப்பின விமானமான காய் ஹாங் YH-1000S, பெரிய சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்ட ஒரு வகை ட்ரோன், சீனாவின் சோங்கிங்கில் தனது முதல் விமானத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த விமானம் சீன விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பறப்பதற்கான தகுதிகள் மற்றும் தரநிலைகளின்படி தயாரிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான விமானமாகும், மேலும் விமானத்தில் விமானி அல்லது எந்த அதிகாரியும் இல்லை. உலகளாவிய சந்தை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பெரிய ஆளில்லா விமானத்தை, சர்வதேச தளவாடங்கள் மற்றும் விநியோகம், அவசரகால மீட்பு மற்றும் பேரிடர் தணிப்பு, செயற்கை வானிலை மாற்றம், கடல்சார் கண்காணிப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பு போன்ற துறைகளில் பயன்படுத்தலாம்.
`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல...' - ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி
வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓட்டுநராகப் பணியாற்றும் நந்தினி என்ற பெண்மணி, இன்று இணையதளங்களில் பலருக்கு உத்வேகம் அளிக்கும் நாயகியாக மாறியுள்ளார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த நந்தினி, ஒரு 'சிங்கிள் மதர்'. வாழ்வாதாரத்திற்காகப் போராடிக்கொண்டிருந்த இவர், மூன்று குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியையும், பாதுகாப்பான வாழ்க்கையையும் வழங்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன், ஹைதராபாத் நகரத்திற்கு இடம்பெயர்ந்தார். வேறு எந்த உதவியும் இல்லாத நிலையில், தனது ஓட்டுநர் திறமையையே ஆயுதமாக மாற்றிக்கொண்டு, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 'உபெர்' (Uber) ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் சுரேஷ் கொச்சட்டில் என்ற பயணி, நந்தினியின் காரில் பயணம் செய்தபோதுதான் இவரது கதை, பொதுவெளிக்கு வந்தது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் இடைவிடாது கார் ஓட்டும் நந்தினியின் கடின உழைப்பைக் கண்டு வியந்த சுரேஷ், அவரைப் பற்றிய புகைப்படத்தையும் கதையையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையில், ஒரு பெண்ணாக இரவு நேரங்களிலும் தடையின்றிப் பணியாற்றுவது அத்தனை எளிதானது அல்ல. ஆனால், என் குழந்தைகளின் பசியும் அவர்களின் கல்வியுமே எனக்குப் பயத்தைத் தரவில்லை என்று கூறும் நந்தினி, தினமும் அதிகாலை முதல் இரவு வரை உழைக்கிறார். இவரது மூத்த மகள் தற்போது பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பதும், மற்ற இரண்டு குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. Today, I was using cabs to travel from one studio to another for the Union Budget debates. When I booked a @Uber_India cab from Nationalist Hub to 99TV in Hyderabad and two of the drivers cancelled after accepting the booking. @Uber automatically assigned a third driver and I… pic.twitter.com/aR194nbLHE — Suresh Kochattil (@kochattil) February 1, 2026 நந்தினியின் இந்தக் கதை, பெண் அதிகாரம் (Women Empowerment) என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அது செயல் என்பதை நிரூபித்துள்ளது. இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, உபெர் நிறுவனமும் பொதுமக்களும் நந்தினியின் தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர். யார் உதவியும் தேவையில்லை, ஒரு பெண்ணால் சுயமாகத் தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்பதற்கு நந்தினி ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தச் சூழலிலும் ஒரு பெண்ணால் வெற்றி பெற முடியும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது, நந்தினியின் போராட்டங்கள் மிகுந்த வாழ்க்கை!
கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது!
திருகோணமலை காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்ததற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் கூறுகிறது. இன்று உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4737 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதன்படி, 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலை ரூ.12,000 குறைந்து ரூ.368,000 ஆக உள்ளது என்று அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல், 22 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலையும் ரூ.338,600 ஆக குறைந்துள்ளது.
ஷிராந்தி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வந்தபோது என்ன நடந்தது?
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 'சிரிலிய'என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் இன்று (03) பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் (FCID) ஆஜரானார்கள். பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவு (FCID) முன் ஆஜரான ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் சில நிமிடங்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறினார். இதற்கிடையில், 'சிரிலிய சவிய'என்ற அரச வங்கியின் சுதுவெல்ல கிளையில் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட மூன்று பேரின் கூட்டுக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது, மேலும் கணக்கைத் திறப்பதற்கான முகவரி 'கார்ல்டன் தங்காலை'ஆகும். இதற்கிடையில், ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை தொடர்பாக 'சிரிலிய சவிய'மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை செப்டம்பர் (20) 2018 அன்று நீதிமன்றத்தில் 'சிரிலிய சவிய'அறக்கட்டளைக்குச் சொந்தமான WP KA 0642 என்ற பதிவு எண்ணைக் கொண்ட ஒரு டிஃபென்டர் வாகனம் தாஜுதீனை கடத்தப் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை அளித்தது. இருப்பினும், 2019 இல் கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த விசாரணைகளை நடத்திய மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர உட்பட அனைத்து அதிகாரிகளையும் அவர் இடமாற்றம் செய்தார்.
மிருணாள் தாகூர் தனுஷ்: “தனுஷ் என் சகோதரர் மாதிரி..”–வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள்!
நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் குறித்துப் பரவி வந்த வதந்திகளுக்கு, தனுஷ் எனக்குச் சகோதரர் போன்றவர் எனக்கூறி மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அநீதி, அராஜகம், தில்லுமுல்லு –திமுகவை கிண்டலடித்த விஜய்
அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளார். தவெக 3வது ஆண்டு தொடக்க விழா தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3வது ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொள்கை தலைவர்களின் புகைப்படங்களுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பின்னர் பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழகத்தில் […]
Yogi Da Movie Press Meet Stills
Classic Bengali Mutton Curry Slow-Cooked with Spices
This Bengali-style mutton curry is rich, spicy, and full of flavour. The mutton is first marinated in yogurt and spices,
Healthy Corn Palak Khichdi Easy Comfort Recipe
Corn Palak Khichdi is a simple, healthy, and comforting meal. It is full of nutrients from spinach, rice, dal, and
“ICC தூங்கியதா?” – இந்தியா போட்டி புறக்கணிப்புக்கு கம்ரான் அக்மல் ஆதரவு!
கொழும்பு : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), டி20 உலகக் கோப்பை 2026-இல் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் மோதலை புறக்கணிப்பதாக PCB தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தனது அணிக்கு உலகக் கோப்பையில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது, ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு மட்டும் அனுமதி மறுத்துள்ளது. இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.ஐசிசி இந்த அறிவிப்புக்கு […]
`என் ஆளுங்களுக்கு ஒரு மேடை; அதனால..!' - தவெக மேடையில் பாடி ஆடிய வேல்முருகன் சொல்வது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மேடையில் பாடிய பாடகர் வேல்முருகன் மீது திருநெல்வேலி இந்து முன்னணியினர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். விழா மேடையில் அரசியல் நோக்கத்துடன் முருகக் கடவுளை இழுத்துப் பாடியது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த விழாவில் அவர் பாட்டு பாடிய போது விஜய்யும் அவருடன் டான்ஸ் ஆடியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். அதிமுகவின் ஜெயக்குமார் விஜய் டான்ஸ் ஆடியதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். குற்ற உணர்ச்சியே இல்லாமல் மேடையில் டான்ஸ் ஆடுகிறார்.!- விஜய்யை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார் தவெக மேடையில் வேல்முருகன் வேல்முருகன் பாடிய பாடலில் ' கொள்ளையடித்த கூட்டம்' என்பன போன்ற வார்த்தைகளெல்லாம் இடம் இருந்தது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 'வேல்முருகன் எல்லோருக்கும் பொதுவான சிறந்த நாட்டுப்புறப் பாடகர், அவர் இவர்களது அரசியலில் சிக்கியிருக்க கூடாது' எனச் சிலரும், 'வேல்முருகன் பாடியது சரியே, விஜய்க்கு இருக்கும் ஆதரவை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்' என தவெகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேல்முருகனிடமே பேசினோம். ``நான் எல்லோருக்கும் பொதுவான ஆள், பிரதமர் மோடி ஒரு மேடையில் என்னைக் கட்டிப் பிடித்தார். உதயநிதிக்கு 'வேணாம் மச்சான்' பாட்டு பாடியிருக்கேன். அதனால வம்பு வழக்கெல்லாம் எனக்கு எதுக்கு? மூணாவது வருஷ தொடக்க விழானு கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க. என்னை நம்பி என் கூட இருக்கிறவங்களுக்கு பாட ஒரு மேடையும் நாலு காசும் கிடைக்கும்கிறதால போய் பாடினேன். நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க. மத்தபடி இது குறித்துப் பேசறதுக்கு எதுவுமில்லை என முடித்துக் கொன்டார்.
US India Trade deal: PM Modi-க்கு அழுத்தம் கொடுத்தாரா Trump | Decode
என்டிஏவில் இணைந்த தினகரன்.. சசிகலாவின் ரியாக்சன் இதுதான்.. விஜய் பற்றி பறந்து வந்த கேள்வி
சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்புகள் துவங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதனிடையில் சசிகலா, ஓபிஎஸ் இருவரும் தனித்து விடப்பட்டு விட்டதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலா செய்தியாளர்களிடம் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Skincare Becomes Essential in Modern Men’s Grooming
For many years, skincare has been surrounded by the idea that it is only for women. Many people believed that
ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!
நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக `அமளி அனல்' தகித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் கையிலெடுத்த `சீன ஊடுருவல்' விவகாரம்தான். ‘Four Stars of Destiny’ முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே எழுதி இன்னும் வெளியிடப்படாத நினைவுக்குறிப்பான ‘Four Stars of Destiny’ புத்தகத்தை மேற்கோள்காட்டி, ராகுல் பேச முற்பட, அதற்கு பாஜக எம்.பி-க்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. `வெளியாகாத புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பேசுவது என்பது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது.' - இதுவே பாஜக தரப்பில் முன்வைக்கப்படும் வாதம். இந்த விவகாரத்தின் எதிரொலியாக அவை நடவடிக்கைகள் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டன. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய ராகுல், `அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரிக்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதை நிச்சயம் நான் சொல்வேன். யாரும் தடுக்க முடியாது' எனக் கூறியிருந்தார். இணைய தேடலில் வைரல்... இதன் தொடர்ச்சியாக இன்று கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்.பி-க்கள் ராகுல் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, பேப்பரைக் கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி-க்கள் மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இணைய தேடலில் வைரலானது ` Four Stars of Destiny’ என்ற சர்ச் கீவொர்டு. அப்படி என்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்? இன்னும் வெளியிடப்படாத அந்தப் புத்தகம் குறித்து பொது வெளியில் கிடைக்கப்பெறும் தகவல்களை வைத்து, இனி பார்க்கலாம்! இந்திய ராணுவத்தின் தளபதியாக 2019-2022 வரை பதவி வகித்தவர்தான் ஜெனரல் நரவானே. கொரோனா பேரிடர் காலத்தில் ராணுவப் படைகளை திறம்பட நிர்வகித்தவர். ராணுவ ஜெனரல் என்பதைத் தாண்டி, புத்தக ஆசிரியராகவும் அறியப்படுகிறார். அவர் எழுதிய ‘Four Stars of Destiny’ என்ற புத்தகம்தான் தற்போது வரை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மதிப்பாய்வில் இருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்துக்கு முன்பு நரவானே எழுதிய `The Cantonment Conspiracy' என்ற மர்டர் மிஸ்ட்ரி புத்தகம் வெளியாகி விற்பனையில் இருக்கிறது. அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. மனோஜ் முகுந்த் நரவானே இந்த இரண்டு புத்தகங்களுமே Penguin Random House India பதிப்பகத்தின் வெளியீடுகள்தான். இதில் ‘Four Stars of Destiny’ புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. 2024-ம் ஆண்டே வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து வெளியீட்டாளருக்கு, `பதிப்பாய்வு முடியும் வரை, இதன் உள்ளடக்கத்தையோ, பகுதிகளையோ, புத்தகத்தின் சாஃப்ட் காப்பீஸ்-களையோ வெளியிட வேண்டாம்' என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் இலக்கிய திருவிழா ஒன்றில் இந்தப் புத்தகம் குறித்து அதன் ஆசிரியரான நரவானேவிடம் கேட்கப்பட்டது. `இந்தப் புத்தகத்தை எழுதிய அனுபவம் மிகச் சிறப்பானது. நான் எழுதி, அவர்களிடம் (பதிப்பகம்) கொடுத்துவிட்டேன். இனி அது அவர்கள் வேலை' எனக் குறிப்பிட்டார். இதற்கிடையில் 2023-ம் ஆண்டு டிசம்பரில் PTI செய்தி நிறுவனம், இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் என குறிப்பிட்டு சிலவற்றை வெளியிட்டது. அதில்தான், ஜெனரல் நரவானே - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையே 2020-ம் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி இரவு நடைபெற்ற உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தப் புத்தகம் குறித்து CARAVAN இதழில் வெளியாகியிருந்த கட்டுரையை மேற்கோள்காட்டி தான் ராகுல் காந்தி மக்களவையில் பேச முயன்றார். The Cantonment Conspiracy ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு, இந்திய ராணுவத்துக்கு அத்தனை அழுத்தம் மிகுந்ததாக இருந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் படைகள், கிழக்கு லடாக்கில் உள்ள ரெச்சின் லாவில் LAC கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி நகர்ந்து வந்திருக்கின்றன. நரவானே அந்த நினைக்குறிப்பு புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லப்படும் உரையாடல் இனி... `அது ஆகஸ்ட் 31-ம் தேதி 2020... டேங்கர்களுடன் முன்னேறிய சீன மக்கள் விடுதலை ராணுவப் படைகள் குறித்து இரவு 8:15 மணியளவில் ஜெனரல் ஜோஷி, மிகவும் பதற்றத்துடன் என்னை அழைத்தார். `சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் காலாட் படை, 4 டாங்கிகளுடன் மெதுவாக ரெச்சின் லா நோக்கி முன்னேறுகின்றனர்' என்றார். மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!- ராகுல் காந்தி விமர்சனம் `என்னுடைய உத்தரவு என்ன?' உடனே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படை தலைமை தளபதி ஆகியோரை தொலைபேசி மூலமாக அணுகினேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் எனக்கு கேட்க இருந்தது ஒரே கேள்விதான். `என்னுடைய உத்தரவு என்ன?' அவர்கள் முன்னேறிக் கொண்டே இருந்தனர். ஆனால், `ஹை கமாண்ட் உத்தரவு வரும் வரை சுடவேண்டாம்' என்பது எனக்கு வழங்கப்பட்ட தெளிவான உத்தரவாக இருந்தது. இரவு 9:10 மணியளவில் எனக்கு மேலும் ஒரு தகவல் வந்தடைந்தது... அவர்கள் முன்னேறி, ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கிறார்கள் என்று. ராஜ்நாத் சிங் 9:25 மணிக்கு மீண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சரை தொடப்பு கொண்டு, நிலைமை மிகவும் பதற்றமாக இருக்கிறது என்பதை விவரித்தேன். மேலும், தெளிவான உத்தரவை வேண்டினேன். இதற்கிடையில் இரு நாட்டு அதிகாரிகள் இடையே ஹாட்லைன் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்தது. சீன தளபதி, `இரு தரப்பும் மேலதிக நடவடிக்கைகளை நிறுத்தி மறுநாள் காலை 9:30 மணியளவில் உள்ளூர் ராணுவ ஜெனரல்கள் சந்திப்பை நடத்தலாம்' என முன்மொழிந்தார். இந்த தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இரவு 10 மணியளவில் கடத்தினேன். இந்தியா- சீனா ஆனால், இரவு 10:10 மணிக்கு மீண்டும் அழைத்த ஜெனரல் ஜோஷி, `சீன டாங்கிகள் முன்னேறி, சுமார் 500 மீட்டர் தூரத்தில்தான் இருக்கின்றன' என்றார். உடனே நிலைமையின் தீவிரத்தை பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தேன். அவர் பிரதமருடன் பேசிவிட்டு திரும்ப அழைப்பதாகக் கூறினார். இரவு 10:30 மணியளவில் அவர் மீண்டும் அழைத்தார். பிரதமர் மோடி `சரியென தோன்றுவதைச் செய்யுங்கள்!' தான் பிரதமருடன் பேசியதாகவும், `இது முழுக்க ராணுவ முடிவு. உங்களுக்கு சரியென தோன்றுவதைச் செய்யுங்கள்' என்றார். இத்தகைய உத்தரவை பெற்ற பிறகு, முழு பொறுப்பும் என் மீது விழுந்தது. சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்தேன். அந்த நேரத்தில் சுவர் கடிகாரத்தின் டிக்-டிக் சத்தத்தைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. இவ்வாறு... நரவானே நினைவுகூர்வதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. வெளியாகாத இந்தப் புத்தகம்தான் அரசியல் வெளியில் தற்போது பெரும் பூகம்பங்களுக்கு விதித்திருக்கிறது! INPUTS - The Indian Express Lok Sabha: `நிச்சயம் அதை சொல்வேன்; அந்த வரிக்குத்தான் மோடியும்' - ராகுல் பேச்சும், பாஜக எதிர்ப்பும்!
Sociowash secures D2C Media Mandate for AGEasy
Delhi: Sociowash, an integrated advertising agency, has secured the D2C media mandate for AGEasy, a unique phygital, direct-to-consumer business of Antara Senior Care—India’s only fully integrated senior care ecosystem. The partnership marks a strategic step towards expanding AGEasy’s digital footprint and reinforcing its position as a trusted senior wellness brand.As part of the mandate, Sociowash will lead AGEasy’s D2C media promotions and digital advertising efforts, with a focus on driving revenue growth and strengthening engagement across digital platforms. The agency will oversee end-to-end media strategy and execution, amplifying AGEasy’s mission of enabling seniors to age with ease and joy through thoughtfully designed products backed by expert insights.Launched in 2023, AGEasy offers a curated portfolio of over 85 products and more than 180 SKUs addressing key areas of senior wellness, including joint care, lung care, fall prevention and assisted mobility. Through compassionate innovation, the brand has already impacted the lives of over five lakh seniors, helping restore dignity, independence, and everyday ease.Expressing his delight on the partnership, Shlok Hari, Business Head (Media), Sociowash, said, “Collaborating with AGEasy gives us the opportunity to help build-up a purpose-driven brand that improves lives. Our focus will be on building a strong digital narrative that resonates with seniors and their families, while creating meaningful engagement around health, care, wellness and independence.” Mukesh Ghuraiya, Chief Marketing Officer, Antara Senior Care, said, “At AGEasy, our vision is to empower seniors with everyday products and solutions that help them live more independent, fuller and healthier lives. We believe in helping seniors remain in charge. Sociowash’s integrated digital expertise and creative storytelling approach align perfectly with our mission to make everyday wellness solution accessible and trusted.” This association further strengthens Sociowash’s growing portfolio of impact-driven brands. With over a decade of experience in delivering data-led, human-centric digital strategies, Sociowash continues to help brands build meaningful connections through purposeful storytelling and measurable outcomes.
Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? - பட்ஜெட் அறிவிப்பு படி, யாருக்கு வரி? யாருக்கு வரி இல்லை?
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கலான மத்திய பட்ஜெட்டில், Sovereign Gold Bond (SGB) குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 'மூலதன ஆதாய வரி ரத்து' என்பது மட்டும் பலருக்கும் பாதி புரிந்தது... ஆனால், அது யாருக்கு... எப்படி என்கிற ஏகப்பட்ட குழப்பங்கள் மக்களிடம் இருந்து வருகின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதிலை தெளிவாக விளக்குகிறார் Composite Investments Pvt. Ltd-ன் ஃபண்ட் மேனேஜர் கஜேந்திர மணவாளன். Composite Investments Pvt. Ltd-ன் ஃபண்ட் மேனேஜர் கஜேந்திர மணவாளன் இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு? SGB - இது இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் தங்கப் பத்திரம் ஆகும். இது பிசிக்கல் தங்கத்திற்கு நல்ல மாற்று. மேலும், இதை இந்திய ரிசர்வ் வங்கியே வழங்குவதால், இதில் பாதுகாப்பும் மிக அதிகம். 'இப்போது நகை வேண்டாம். ஆனால், தங்கத்தில் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், அதில் பாதுகாப்பும் வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு நல்ல நண்பன் இந்தத் தங்கப் பத்திரம். முதலீடு என்பதைத் தாண்டி, சாவரின் கோல்டு பாண்டிற்கு ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டியும் கிடைக்கிறது. இந்தப் பத்திரத்தின் முதிர்ச்சி காலத்தில், அப்போதைய தங்க மதிப்பைப் பொறுத்து நமக்கு தொகை கிடைக்கும். இது தான் சாவரின் கோல்டு பாண்டின் சின்ன இன்ட்ரோ. இப்போது பட்ஜெட் அறிவிப்பிற்கு வருவோம். இந்தப் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்ததாவது... 1. இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து நேரடியாக சாவரின் கோல்டு பாண்டை வாங்கியிருந்தால் மட்டுமே, முதிர்ச்சி காலத்தின் போது, மூலதன ஆதாய வரிக்கு (Capital Gain Tax) விலக்கு கிடைக்கும். 2. ஒருவேளை, இந்தப் பத்திரத்தைச் சந்தையில் இருந்து வாங்கியிருந்தால், முதிர்ச்சி காலம் வரை பத்திரத்தை வைத்திருந்தாலும், மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். 3. வருகிற ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு, விற்கப்படும் சாவரின் கோல்டு பாண்டில் இருந்து வரும் வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். வரி 'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail இன்னும் புரியவில்லையா... சின்ன உதாரணத்துடன் பார்ப்போம். SOVEREIGN GOLD BONDS 2.50% DECEMBER 2031 SR-III 2023-24 - இது 2024-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. இந்தப் பத்திரத்தின் அப்போதைய முக மதிப்பு ரூ.6,199. இதன் முதிர்ச்சி காலம் ஜனவரி 30, 2031. இந்தப் பத்திரத்தை ராஜூ, ராமு வாங்கியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ராஜூ இந்தப் பத்திரத்தை 2031-ம் ஆண்டு வரைக்கும் அவரே வைத்திருக்கிறார். அவருக்கு 2031-ம் ஆண்டு கிடைக்கும் முதலீட்டுத் தொகை ப்ளஸ் வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி வசூலிக்கப்படாது. ராமு இந்தப் பத்திரத்தை விற்கிறார்... விற்றுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அவரது வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். தங்கம் Fastag: 'ஸ்கேன்' பிரச்னை இனி இல்லை; ஃபாஸ்ட் டேக்-ல் அமலாகிய புதிய நடைமுறை - விவரம் என்ன? ராமுவிடம் இருந்து சோமு இந்தப் பத்திரத்தை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இந்தப் பத்திரத்தை 2031-ம் ஆண்டு முதிர்ச்சி காலம் வரையில் வைத்திருந்தாலும் கூட, இவருக்கு வரும் வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். சோமு இதற்கு முன்பு அந்தப் பத்திரத்தை வாங்கியிருந்தாலும் கூட, இனி மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். பட்ஜெட் அறிவிப்பிற்கு முன், சோமு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் - தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?
சிறிதரனின் பதவி பறிப்பு –தமிழ் அரசின் நாடாளுமன்ற குழு தலைவராக சாணக்கியன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக, இரா.சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு, நாடாளுமன்றக் குழுத் தலைவர்
KRAFTON India and Leo India launch ‘BGMI Career Mode’ to translate gameplay into career skills
Mumbai: KRAFTON India, the publisher of India’s most loved online multiplayer game BATTLEGROUNDS MOBILE INDIA (BGMI), today announced the launch of BGMI Career Mode, a first-of-its-kind, game-led platform that explores how in-game behaviour can be translated into real-life, career-relevant skill insights for gamers. The initiative aims to complement resumes, LinkedIn profiles and personal development journeys for students, gamers and working professionals.Developed in partnership with Aeos Group and Leo India, BGMI Career Mode combines structured psychometric frameworks with gameplay analytics to generate a personalised Career Mode report. The report highlights attributes commonly demonstrated during gameplay—such as problem-solving, adaptability, teamwork, decision-making under pressure and leadership—and organises them across three broad categories: Core Skills, Adaptive Skills and Additional Attributes.Designed as an exploratory initiative, BGMI Career Mode helps players reflect on their cognitive strengths, soft skills and personality traits that may surface during play, and express them in a structured, credible format. The platform brings together assessment thinking and gameplay analytics, translating moments of play into meaningful behavioural insights. The platform is now live at www.bgmicareermode.com.Commenting on the launch, Srinjoy Das, Associate Director – Product and Marketing, KRAFTON India, said, “Gaming today is an important part of youth culture, and it’s also a space where real behaviours and skills naturally emerge. BGMI Career Mode is a humble and exploratory attempt to see how those moments of play can be translated into a structured, credible reflection that helps players better understand their cognitive strengths, soft skills, and growth areas. It reflects our belief that young people deserve accessible tools that acknowledge learning wherever it happens—not just in classrooms or formal settings.” Sachin Kamble, Chief Creative Officer – Leo South Asia, added, “Gaming has always been seen as an escape from real life. We wanted to flip that narrative. BGMI Career Mode is our attempt to giving gameplay a purpose by transforming hours of game play into insights that feel credible, personal, and meaningful in the real world.” As organisations increasingly look beyond traditional credentials to assess candidates more holistically, BGMI Career Mode examines whether gaming can serve as an unconventional yet meaningful lens into how individuals think, collaborate and perform. By translating hours of gameplay into structured behavioural insights, the initiative also seeks to validate the time and effort players invest in gaming.How BGMI Career Mode WorksThe platform integrates two key inputs to create a structured reflection. The first is a psychometric layer, where players complete a guided assessment to capture behavioural preferences, personality indicators and work-style tendencies, offering a baseline understanding of how an individual approaches situations, learning and collaboration. The second is a gameplay layer, where in-game behaviour is analysed to observe decision-making patterns that emerge during competitive play, including strategic thinking, composure under pressure, adaptability, teamwork and attention to detail. These inputs are synthesised to generate a comprehensive Career Mode report.A distinctive aspect of BGMI Career Mode is its focus on personality reflection. Gaming environments often allow players to express their most authentic selves—sometimes more freely than in academic or professional settings. The initiative seeks to surface these expressions, helping players gain clearer insights into how they respond to strategy, pressure and collaboration.The campaign has been launched across digital platforms and will be amplified by Tier 1 Bollywood celebrities, leading gaming and entertainment influencers, and the vast BGMI community. It also includes robust on-ground activations across four major cities—Mumbai, Pune, Kolkata and Jaipur—targeting college students.With BGMI Career Mode, KRAFTON India reinforces its belief that gaming can be a meaningful part of youth culture and personal development, offering credible, accessible tools that recognise skills developed beyond conventional learning environments.https://youtube.com/shorts/ORal7mZm2Wc?si=P1TRwhloSAcOyQZz
Spice Lounge Food Works to host landmark event celebrating 50 years of Maestro Ilaiyaraaja
Hyderabad: Spice Lounge Food Works Limited has announced that XORA World, its cultural and experiential events platform, will host a landmark music event celebrating 50 years of Maestro Ilaiyaraaja, one of India’s most iconic and influential music composers. The large-scale live event is scheduled to take place on 28 March 2026 at Gachibowli Stadium, Hyderabad.XORA World is a proprietary platform of Rightfest, a wholly owned subsidiary and group entity of Spice Lounge Food Works Limited. The upcoming event marks a significant milestone for XORA World and reflects the Company’s strategic expansion into experience-led consumer platforms, complementing its core food and beverage businesses.With a prolific career spanning five decades, Maestro Ilaiyaraaja has composed over 7,000 songs across thousands of films in multiple languages. His music continues to resonate across generations, firmly establishing him as a cultural icon with enduring influence. Hosting this commemorative event underscores XORA World’s ambition to curate large-scale, high-impact cultural experiences with national relevance.Spice Lounge Food Works Limited has been consciously expanding its operating canvas beyond traditional restaurant formats into adjacent experiential and lifestyle verticals, including curated cultural events and live experiences. These initiatives are designed to complement the Company’s core food and beverage platform while strengthening its consumer-facing ecosystem.Such initiatives aim to: Strengthen direct-to-consumer engagement capabilities Build proprietary platforms with strong cultural and emotional resonance Create high-visibility consumer touchpoints across key urban markets Enhance brand recall and ecosystem synergies across the Company’s businesses Commenting on the announcement, Mohan Babu Karjela, Chairman & Director, Spice Lounge Food Works Ltd, said, “Maestro Ilaiyaraaja is not just a musician, he is a cultural institution whose work has shaped generations. Celebrating his 50-year journey is a rare and prestigious opportunity. For XORA World, this represents a defining milestone, demonstrating our ability to build large-format, culturally resonant platforms. For Spice Lounge Food Works, it reinforces our vision of creating consumer-facing lifestyle ecosystems that extend beyond food into experiences, culture and community.”
ரூ.200 லட்சம் கோடியை தாண்டிய இந்தியாவின் கடன் –அதற்கு வட்டி மட்டும் இத்தனை கோடியா?
இந்தியாவின் கடன் ரூ.200 லட்சம் கோடியை தாண்டியுள்ள நிலையில், அதில் வட்டிக்காக எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதை பார்க்கலாம். இந்தியாவின் கடனுக்கான வட்டி 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் கடன் மதிப்பு சுமார் ரூ.200 லட்சம் கோடியை தாண்டியதாக […]
Citi names Behzad Merchant as Business Execution Lead for India
Mumbai: Citi has announced the appointment of Behzad Merchant as Business Execution Lead for India, with additional oversight for Bangladesh and Sri Lanka. He will report directly to Varittha Prichapanich, Business Execution Lead, Asia South, with a matrix reporting line to K Balasubramanian, CEO, Citi India, and Banking Head, Indian Subcontinent.In his new role, Behzad will be responsible for driving strategic, business-critical and regulatory initiatives and programmes across India, while strengthening governance frameworks and further enhancing Citi’s risk and controls environment.Commenting on the appointment, K Balasubramanian, CEO, Citi India, and Banking Head, Indian Subcontinent, said: “Behzad’s appointment reflects our continued focus on strong execution, disciplined risk management, and robust governance across our India franchise. His deep experience, familiarity with Citi, and leadership capabilities will be valuable as we support growth, while maintaining high standards of control and operational excellence.” Varittha Prichapanich, Business Execution Lead, Asia South, added: “Behzad brings a rare combination of operational depth, technology acumen and risk mindset – exactly what is needed to deliver at scale in a dynamic environment. His understanding of India and the Indian Subcontinent, combined with his execution focus, will be instrumental in strengthening governance and delivery across the business.” Behzad brings over 25 years of experience across banking, operations, technology, and risk and controls. He moves into the role from Citi’s Asia South Technology Controls team, where he supported key markets including India, Sri Lanka, and Bangladesh.Prior to this, he spent two and a half years at JPMorgan as Business Risk & Controls Lead for the Payments business in Asia, where he oversaw regional frameworks and also served as India Site Lead for Global Payments Risk and Controls. Earlier in his career, Behzad spent nearly two decades at Citi in leadership roles spanning operations, technology, and control functions.He is a Commerce graduate and an alumnus of the Indian Institute of Management Bangalore.
US Tariff Cuts Boost Hopes for Device Makers
The deal to reduce US tariffs on Indian goods was finalised during a phone call between the leaders of India
“கிரிப்டோவில் அமெரிக்காவே முதலிடம் வகிக்க வேண்டும்!”– அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்!
கிரிப்டோகரன்சி (Cryptocurrency) துறையில் அமெரிக்கா உலகத் தலைவராக உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.… The post “கிரிப்டோவில் அமெரிக்காவே முதலிடம் வகிக்க வேண்டும்!” – அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்! appeared first on Global Tamil News .
Health Ministry Alerts Facilities Over Nipah Threat
The Epidemiology and Disease Control Division (EDCD) of the Health Ministry has said that all health facilities and related agencies
Eloelo Group promotes Nishant Kumar to Chief Marketing Officer
Bengaluru: Eloelo Group, a consumer internet groups building the Bharat Entertainment Stack, has announced the elevation of Nishant Kumar to the role of Chief Marketing Officer (CMO). The leadership move forms part of the Group’s planned strategy to accelerate growth, strengthen execution capabilities and build long-term organisational scale.Nishant Kumar has been elevated from his previous role as Senior Vice President – Marketing & Revenue and has been a core member of the Eloelo Group leadership team for the past two years. During this period, the Group has delivered sustained growth across its Bharat-first product portfolio, building a combined pan-India user base of over 150 million.Under his leadership, Eloelo Group scaled its presence from approximately 20 million users to over 150 million users, unlocked new monetisation streams across the Bharat internet ecosystem, and delivered consistent revenue acceleration over multiple consecutive quarters.He played a pivotal role in building Story TV from the ground up, enabling it to emerge as India’s most downloaded app on the Google Play Store and a market leader in the fast-growing microdramas segment. He also led growth initiatives for Master, positioning it as India’s most downloaded education app and an emerging leader in the micro-learning category.Commenting on the elevation, Saurabh Pandey, Founder & CEO, Eloelo Group , said, “As Eloelo Group accelerates toward 250 million users, it was critical to empower the leadership team with one of the most experienced operators behind our success over the last two years. Having known and worked with Nishant for years, I have seen him personally own the growth and revenue engine that powered our 0-to-1 journey. As we scale further, Nishant’s inspiring leadership, which has created one of the best marketing teams in the industry, and his execution ability that has delivered unprecedented scale across monetisation, users and market share, will be the driving force behind our next phase of growth.” Sharing his perspective on the road ahead, Nishant Kumar, Chief Marketing Officer, Eloelo Group, said, “Having driven the Group’s growth since Day 1, I am excited to step into this expanded role and position Eloelo Group as a market leader across multiple categories in India’s booming internet landscape. As we evolve into a powerhouse housing millions of users across industry-leading platforms, my focus will be to drive market share, expand revenue growth, and cement Story TV, Master and the Group as the uncontested leaders in their respective domains. I am grateful to my team and the leadership for trusting me with this mandate.” A senior growth and marketing leader with over a decade of experience, Nishant Kumar has previously held leadership roles at some of India’s leading organisations, including Flipkart, Ola and Apollo Hospitals, where he led growth, marketing and revenue functions.
Confiance Communications bags India PR Mandate for Türkiye Tourism for fifth consecutive term
Gurugram: Integrated communications firm Confiance Communications has been reappointed as the official India PR Partner for the Trkiye Tourism Board for the fifth consecutive term. The renewed mandate reinforces Confiance’s consistent role in strengthening Trkiye’s positioning within the Indian outbound tourism market and reflects the tangible impact of the four-year partnership on tourism growth from India.Since the inception of the collaboration in 2022, Confiance Communications has driven sustained visibility for Trkiye as a premier travel destination, while building a dynamic communications ecosystem that goes beyond traditional public relations. Over the past four years, the firm has conceptualised and executed a comprehensive 360-degree communications strategy encompassing films, OTT platforms, social media, press outreach, trade shows, cultural events and on-ground activations.A key pillar of this strategy has been high-impact collaborations with leading Bollywood production houses, including Yash Raj Films, which have successfully integrated Trkiye into mainstream Indian entertainment. These initiatives have leveraged cinema and OTT storytelling to position the country as a cinematic and aspirational destination. Alongside this, Confiance has forged bespoke partnerships with celebrities and influencers to amplify Trkiye’s experiential travel offerings through digital-first narratives.The firm has also played a critical role in strengthening Trkiye’s media presence in India through deep-rooted press relationships, exclusive press familiarisation trips and strategic media engagements, ensuring the destination remains central to India’s outbound tourism discourse. In parallel, Confiance has leveraged its extensive network within the Indian travel and hospitality ecosystem to build alliances across high-value segments such as destination weddings, MICE, luxury and experiential travel. Collaborations with marquee Indian enterprises, wedding planners and industry leaders have further expanded Trkiye’s appeal among corporates and high-net-worth travellers.During the course of the partnership, Confiance has executed several landmark destination marketing initiatives, including facilitating exclusive travel trade partnerships with associations such as TAAI and OTOAI, positioning Trkiye as a priority destination among Indian travel professionals. The firm has also co-curated experiential events celebrating Trkiye’s heritage, gastronomy and culture. Notable initiatives include six-city roadshows across Indian metros in 2024 and 2025, Turkish Food Festivals, Coffee Days, travel agent and media conventions, and immersive on-ground activations. These efforts have translated into strong year-on-year growth in Indian arrivals to Trkiye since 2022.Speaking on the continued partnership, Bushra Ismail, Founder & Chief Strategist, Confiance Communications, said, “Representing Trkiye Tourism in India has been an incredibly dynamic and gratifying journey—one that goes beyond promotion to presenting deep-rooted cultural identity and fostering industry collaborations. Over the years, we have deployed 360-degree strategic initiatives to integrate Trkiye into India’s mainstream tourism and entertainment landscapes, forging relationships that have transformed the way Indian travellers perceive the country. With this renewed mandate, we aim to deepen Trkiye's resonance with Indian travellers and unlock new dimensions of cultural exchange.” Commenting on the association, Trkiye Tourism Authorities said, “Confiance Communications has played an integral role in highlighting Trkiye’s narrative in India, seamlessly translating our country’s cultural depth and modern appeal into powerful, market-driven storytelling. Their ability to understand and tap into the evolving aspirations of Indian travellers, combined with their strategic engagement across verticals, has contributed significantly to positioning Trkiye as a leading choice for high-value tourism. The continued success of this partnership underscores the impact of their efforts.” With the renewed mandate, Confiance Communications plans to further expand Trkiye Tourism’s footprint in India through deeper industry integrations. The firm will lead collaborations with India’s top luxury travel consortiums, roll out high-profile campaigns across film and digital platforms, and introduce specialised programmes focused on emerging segments such as medical and wellness tourism. These initiatives are aimed at reinforcing Trkiye’s position as one of the most sought-after international destinations for Indian travellers in 2026.
புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்- அரசியலமைப்பு பேரவை அனுமதி
மூத்த பிரதி கணக்காய்வாளர் நாயகம், எல்.எஸ்.பி. ஜெயரத்னவை சிறிலங்காவின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு, அரசியலமைப்பு பேரவை இன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை நடந்த அரசியலமைப்பு பேரவையின் அமர்வின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம், 2025 ஏப்ரல் மாதம் சூலாலந்த விக்ரமரத்ன கணக்காய்வாளர் நாயகம் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், கடந்த
மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!- ராகுல் காந்தி விமர்சனம்
மக்களவையில் ராகுல் காந்தி நேற்று (பிப்.2) முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி வெளி வராத `Four Stars Of Destiny' புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்திக்கட்டுரையின் அடிப்படையில் பேச முற்பட்டார். அதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தொடர்ந்து ராகுல் காந்தி பேச முற்பட்டபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் கடுமையாக எதிர்த்திருந்தனர். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எம்.பி-கள் சஸ்பென்ட் இந்நிலையில் இன்று (பிப்.3) நாடளுமன்றத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டி மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சு.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர், அம்ரிந்தர் சிங், டீன் குரிய கோஸ் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். எம்.பி-கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயப்படுகிறார் மோடி! அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி, நரவானே, எப்ஸ்டீன் கோப்பு, அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசினாலே மோடி பயப்படுகிறார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த (அமெரிக்க-இந்தியா) வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி நேற்று இரவு கையெழுத்திட்டார். அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. அதனால் நமது பிரதமர் சமரசத்திற்கு உள்ளாகியிருக்கிறார். அவர் நம் நாட்டை விற்றுவிட்டார். பிரதமர் மோடி நரேந்திர மோடி ஜி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கிறார்கள். அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி ஜி மீதான வழக்குதான். எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தம் உள்ளது. இதனை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார். Loading…
‘பயிற்சி போட்டி: இலங்கை ஏ அணியை வீழ்த்திய ஓமன் அணி: காட்டடி அடித்த ஓபனர் ஆமிர் கலீம்!
டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டியில், இலங்கை ஏ அணிக்கு எதிராக ஓமன் அணி அபார வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, ஓபனர் ஆமிர் கலீம் 47 பந்துகளில் 80 ரன்களை குவித்து, வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
Aari Arujunan Prepares for Diverse Upcoming Roles
Actor Aari Arujunan is currently working on several exciting new film projects, and he says each movie will show him
ஸ்டாலின் வருகையால், தள்ளிப்போன விஜய்யின் வேலூர் விசிட்! - வேகம் காட்டும் தவெக நிர்வாகிகள்
வே லூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அந்த தேதியில் நிகழ்ச்சியை நடத்த சில சிக்கல்கள் இருந்ததால் வேறு தேதியையும் தவெக-வினர் பரிசீலித்து வந்தனர். இதற்காக, வேலூர்-திருப்பத்தூர் மாவட்டங்களின் எல்லைகளைப் பிரிக்கும் அகரம்சேரியில் 25 ஏக்கரிலான பிரமாண்ட வெளிப்புற மைதானம் தேர்வுசெய்யப்பட்டு, அதைச் சீரமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஜய் வருகைக் குறித்தான தேதியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வரும் 14-ம் தேதி சனிக்கிழமை, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் தி.மு.க வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடும் நடைபெற உள்ளது. அகரம்சேரியில் சீரமைக்கப்படும் விஜய் நிகழ்ச்சிக்கான இடம் முதலமைச்சர் ஸ்டாலின், அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதனிடையே, முதலமைச்சர் வருகைக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 13-ம் தேதியன்று விஜய்யின் நிகழ்ச்சிக்கு த.வெ.க நிர்வாகிகள் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு, காவல்துறைத் தரப்பில் இருந்து திட்டவட்டமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே தான், ஸ்டாலின் வந்துசென்ற பிறகு மூன்றாவது வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் அல்லது பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில், வேகம் காட்டுகிறார்கள் த.வெ.க நிர்வாகிகள்.
Silambarasan TR Turns 43: Fans Flood Internet
Silambarasan TR, popularly known as Simbu or STR, is a legendary figure in Tamil cinema. His career has been full
தமிழக அரசின் விருதுகள் –வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள்
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளியாகாத ஒரு படத்திற்கு விருது வழங்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும்… The post தமிழக அரசின் விருதுகள் – வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள் appeared first on Global Tamil News .
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு 3 நவீன படகுகள்.. சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் விரும்பும் பகுதியாக உள்ளது திருவள்ளுவர் சிலை. இங்கு குமரி முனையில் இருந்து பயணிகள் எளிமையாக பயணம் மேற்கொள்வதற்கு மூன்று புதிய பயணிகள் படகுகள் கொண்டு வரப்படவுள்ளது. இந்த திட்டம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Beyond Key appoints Milin Dholakia as Chief Operating Officer
Mumbai: Beyond Key has announced the appointment of Milin Dholakia as Chief Operating Officer (COO), strengthening the company’s leadership team as it sharpens its focus on operational excellence, scalable global delivery, and future-ready execution.Milin brings over two decades of experience in leading complex technology programmes, global delivery operations, and business performance across international markets, with significant leadership exposure in North America. His career spans building resilient delivery models, scaling cross-border teams, and driving sustained business growth in mature and highly competitive environments. Known for translating technology strategy into measurable business outcomes, Milin has consistently helped organisations move from fragmented execution to integrated, high-impact delivery.Recognised for his ability to align people, processes and technology, Milin’s deep understanding of business dynamics, client expectations and operating models adds a critical dimension to Beyond Key’s global growth strategy. His appointment marks an important step in Beyond Key’s evolution from a technology services provider to a strategic digital transformation partner focused on simplifying operations, improving decision-making and accelerating growth for clients worldwide.Commenting on the appointment, Piyush Goel, Founder & CEO, Beyond Key, said, “Milin’s leadership comes at a defining moment for Beyond Key. As our clients increasingly seek partners who can deliver at scale with speed, quality, and intelligence, his experience in building strong operating frameworks particularly across global markets will be invaluable. This appointment significantly strengthens our ability to deliver consistent, outcome-driven value worldwide.” Sharing his perspective on joining the company, Milin Dholakia said, “Beyond Key has built a strong foundation of trust, capability, and ambition. I’m excited to work alongside this talented team to scale operations, elevate delivery excellence, and strengthen our impact for clients across North America and other global markets as they navigate rapid technological change.” With Milin stepping into the COO role, Beyond Key will further sharpen its focus on predictable, high-quality global delivery, AI-enabled operating and execution models, faster realisation of business value from technology investments, and stronger alignment between strategy, execution and measurable outcomes.For clients and partners, this leadership appointment translates into greater reliability, faster execution and solutions designed to scale seamlessly with evolving business needs.
Margot Robbie Stuns at Wuthering Heights Premiere
Actress Margot Robbie turned heads at the Paris premiere of “Wuthering Heights” with a stunning fashion statement. Robbie, who plays
Margot Robbie Stuns at Wuthering Heights Premiere
Actress Margot Robbie turned heads at the Paris premiere of “Wuthering Heights” with a stunning fashion statement. Robbie, who plays
மன்னார் பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் அதனால் உள்ளூர் மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து வடமாகாண… The post ⚓ கிவுல் ஓயாதிட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். appeared first on Global Tamil News .
மன்னார் பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் அதனால் உள்ளூர் மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து வடமாகாண… The post ⚓ கிவுல் ஓயாதிட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். appeared first on Global Tamil News .
ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் ஜாமினில் விடுதலை
மேற்காசிய நாடான ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் வெகுண்டெழுந்த மக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, குழந்தைள் உட்பட 6,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 30,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்களில், 26 வயது இளைஞரான எர்பான் சுல்தானியும் ஒருவர். போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக, அவருக்கு துாக்கு தண்டனை விதிக்க உள்ளதாக செய்தி […]
JioStar Group appoints Stephan Bugaj as SVP – GenAI Content & Technology
Mumbai: JioStar Group has announced the appointment of Stephan Bugaj, Emmy Award winner, as Senior Vice-President – GenAI Content & Technology, marking a significant step in the Group’s vision to create AI-native, next-generation entertainment experiences.The appointment underscores JioStar Group’s commitment to building intelligent content pipelines, interactive storytelling formats and scalable creative frameworks that enable faster experimentation, deeper audience engagement and the evolution of entertainment for global audiences.Prior to joining JioStar Group, Stephan Bugaj served as Chief Creative Officer at Genvid Entertainment, where he co-developed the Massively Interactive Live Event (MILE) format, a pioneering model that merges streaming, gaming and live audience participation. He has also led the creation of AI-native creative pipelines and tools for filmmakers and, as a creator-showrunner, spearheaded interactive storytelling productions that blend real-time engagement with premium narrative content, setting new benchmarks in intelligent media experiences.A senior creative and technology leader with over three decades of experience, Stephan Bugaj has held leadership roles at DJ2 Entertainment, Pixar Animation Studios, Telltale Games and Hanson Robotics. He is widely recognised for translating emerging technologies into scalable creative platforms. His expertise spans AI-driven content systems architecture, adaptive narrative frameworks, digital production pipelines and immersive media platforms, all focused on expanding creative possibilities and shaping the future of entertainment.With his appointment, Stephan Bugaj will play a key role in advancing JioStar Group’s AI strategy across content creation and technology, supporting the development of interactive, intelligent and audience-first entertainment formats.JioStar Group is already investing in AI-powered capabilities across its content ecosystem, including conversational interfaces, second-screen engagement layers and AI-assisted content workflows. The addition of Stephan Bugaj is expected to further accelerate innovation across next-generation experiences and interactive formats designed for digital-first audiences at scale.
ஷிரந்தி ராஜபக்ஷவிடம் 4 மணித்தியாலங்களுக்கும் மேல் வாக்குமூலம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஷிரந்தி ராஜபக்ஷ இன்றைய தினம் (03) காலை 9.30 மணியளவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்திருந்தார். நிதி மோசடிகள் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஷிரந்தி ராஜபக்ஷ மேலும் இருவருடன் இணைந்து […]
Mumbai: Cumin Co., the health-first kitchenware brand, has launched ‘Table of Love’, a Valentine’s Day-led limited-edition campaign that reframes cookware as an emotional, collectible purchase rather than a permanent household utility. At the heart of the campaign is the Ros Dutch Oven — a soft blush-pink, heart-detailed cast iron piece designed to be available only for the season.From a brand and marketing standpoint, the launch stands out for its rarity-led approach. In a category traditionally driven by evergreen SKUs and performance-focused communication, Cumin Co. borrows cues from streetwear and culture-drop playbooks, introducing urgency, emotion and storytelling into a typically functional product segment. The campaign also coincides with the brand’s first anniversary, positioning the launch as a celebratory milestone rather than a routine product extension.The Table of Love campaign treats the dining table as a space for connection, shared memories and intimate moments. This thought extends beyond the product into a bold, digital-first and city-wide activation. As part of the rollout, Cumin Co. has transformed its website and social media platforms with a pink takeover, while playful pink balloon installations across Delhi-NCR bring the campaign into everyday urban spaces, creating moments of surprise and organic discovery.Despite its emotion-forward narrative, the product remains anchored in Cumin Co.’s health-first philosophy. The Ros Dutch Oven is crafted from 100% non-toxic cast iron with a porcelain enamel coating. It is accompanied by a curated Love Kit inspired by the five love languages, adding a strong layer of gifting, personalisation and experiential value to the release.With Table of Love, Cumin Co. presents a campaign-first brand story that brings together limited-edition culture, experiential marketing and design-led thinking. The initiative highlights how legacy categories like kitchenware are being reimagined for younger, design-conscious consumers who seek meaning, aesthetics and emotional resonance alongside functionality.
கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர் இ.சந்திரசேகர் கூறியுள்ளார். கடந்தகாலத்தில் மகாவலி அதிகாரசபை ஊடாக சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றது உண்மைதான், ஆகவே புதிய திட்டங்கள் வரும்போது மக்களுக்கு அச்சம் வருவது நியாயமானது, அது கடந்தகால அனுபவத்தின் ஊடாக வருகிறது. கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அந்த பிரதேசத்திற்கு சொந்தமான தமிழ் மக்களையே அங்கு குடியேற்றப்போகிறோம். மாவட்டச் செயலர் ஊடாக குடியேற்றங்கள் இடம்பெறவுள்ளது. அதுதான் உண்மையாக […]
தவெக தேர்தல் ரேஸ் ஆரம்பம் – பனையூரில் விருப்ப மனு விநியோகம்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் இந்த விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.விருப்ப மனு பெறும் பணி தொடங்குவதற்கு முன்பே தவெக தொண்டர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே பெரும் உற்சாகம் நிலவுகிறது. 234 […]
Elon Musk Sparks Debate Over The Odyssey Casting
Christopher Nolan’s upcoming film “The Odyssey” hasn’t even been released yet, but it is already creating a lot of buzz

23 C