SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

ரஷியா –உக்ரைன் போர் நிறுத்தம் தாமதமாவது ஏன்? டிரம்ப் பதில்!

ரஷியா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தாமதமாவது ஏன்? என்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துப் பேசியுள்ளார். உக்ரைன்-ரஷியா போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பம்பரமாகச் சுழன்று செயல்பட்டு வரும் டிரம்ப், இவ்விவகரம் குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன்(2-ஆம் முறை அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபின்). ஆனால், உக்ரைன் – ரஷியா இடையேயான சண்டை மட்டும், அவ்விஷயத்தில் […]

அதிரடி 1 Feb 2026 8:30 am

கணவர்மாரை மாற்றவேண்டாம்; 80 இற்க்கும் மேற்பட்ட மனைவியர் போராட்டம்!

சிவில் பாதுகாப்புப் படை வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி இன்று (31) கந்தளாயில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த மாதம் கந்தளாயில் கடமையாற்றிய சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் பலர் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 80-க்கும் மேற்பட்ட மனைவியர் போராட்டம் இந்தத் தீர்மானத்தினால் தமது குடும்ப வாழ்வாதாரமும், பிள்ளைகளின் கல்வியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 80-க்கும் மேற்பட்ட மனைவியர் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். […]

அதிரடி 1 Feb 2026 7:57 am

இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் ; நால்வர் மருத்துவமனையில்

வென்னப்புவ பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடிப் படகுகளில் இருந்த 12 கடற்றொழிலாளர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வென்னப்புவவிலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற ‘தினிதி துவ’ மற்றும் மற்றொரு படகில் இருந்த கடற்றொழிலாளர்கள், சர்வதேச கடற்பரப்பில் தொழிலை முடித்துவிட்டு கடந்த 28ஆம் திகதி காலை இலங்கை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படைக் கப்பலால் மறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடற்றொழிலாளர்களிடம் போதைப்பொருள் இருக்கிறதா என்று வினவி […]

அதிரடி 1 Feb 2026 7:47 am

வெளிநாடுகளில் பதுங்கிய குற்றவாளிகள் ; அநுர அரசின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை

இலங்கையில் கொலை, கப்பம் கோருதல், போதைப்பொருள் கடத்தல், கொள்ளை மற்றும் பாரிய தாக்குதல் குற்றங்களுடன் தொடர்புடைய 95 குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளதாக சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள இந்த 95 சந்தேக நபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் […]

அதிரடி 1 Feb 2026 7:27 am

சிஐடியில் முன்னிலையாகுமாறு நாமல், ஷிராந்திக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கடந்த 27 ஆம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தனிப்பட்ட காரணத்தினால் தன்னால் குறிப்பிட்ட […]

அதிரடி 1 Feb 2026 7:07 am

பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 1 Feb 2026 7:00 am

பட்ஜெட் 2026: 5 மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் வருமா? எதிர்பார்ப்பில் மக்கள்!

மத்திய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. விரைவில் 5 மாநிலங்களுக்கு தேர்தல் வர இருப்பதால் பல்வேறு புதிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சமயம் 1 Feb 2026 5:20 am

அடிப்படை வேரியன்ட்களிலும் அசத்தல் பாதுகாப்புத் தொழில்நுட்பம்!

கார் பிரியர்களுக்குக் கோலாகலமாக மலர்ந்திருக்கிறது 2026. மஹிந்திரா XEV 9e, மஹிந்திரா XUV 7XO, ஸ்கோடா குஷாக், டொயோட்டா eபெல்லா (மாருதி சுஸூகி eVitara-வின் டொயோட்டா வெர்ஷன்), ரெனோ டஸ்ட்டர் போன்ற கார்கள் துவங்கி ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ ஆகிய கார் கம்பெனிகளும் ஒன்றன் பின் ஒன்றாக பல கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றன. பஜாஜ், இந்த ஆண்டுக்கான தனது கணக்கைத் தொடங்கிவிட்ட நிலையில், மற்ற இருசக்கர வாகனக் கம்பெனிகள் புது அறிமுகங்களோடு சுறுசுறுப்பாகி வருகின்றன. புதுக் கார்கள் மட்டும் அறிமுகமாகவில்லை. புதுப் புது தொழில்நுட்பங்களையும் தினம் தினம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன ஆட்டோமொபைல் கம்பெனிகள். அதிலும் குறிப்பாக தனது XUV 7XO காரில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் DaVinci dampers தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தி இருக்கிறது. முன்பதிவு ஆரம்பமான முதல் நாளிலேயே டாடா சியராவுக்கு 70,000 முன்பதிவுகள் வந்ததும், மஹிந்திராவின் XEV 9s மற்றும் XUV 7XO கார்களுக்கு 90,000-த்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்ததும் வாடிக்கையாளர்களின் எழுச்சிக்குச் சான்றாக விளங்குகின்றன. விலை உயர்ந்த கார்களில் இருக்கும் தொழில்நுட்பங்களை, வணிக நுட்பத்தின் துணை கொண்டு நடுத்தரக் கார்களிலும் கொடுக்க முடியும் என்பதை மஹிந்திராவின் கார்கள் நிரூபித்து வருகின்றன. அந்த வகையில் பெரிய ஆல் வீல் டிரைவ் கார்களின் வல்லமையை, ஃப்ரன்ட் வீல் டிரைவ் கொண்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவிகளிலும் கொடுக்க முடியும் என்று டாடா மோட்டார்ஸ் நிரூபித்திருக்கிறது. ஒரு காலத்தில் செல்வந்தர்கள் மற்றும் அதிகாரமிக்கவர்கள் ஆகியோரிடம் மட்டுமே இருந்த தொலைபேசி, இப்போது அனைவரையும் வந்து சேர்ந்திருப்பதைப்போல அதிக விலை கொண்ட கார்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களும் வசதிகளும், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் கார்களுக்கும் வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. - ஆசிரியர்

விகடன் 1 Feb 2026 4:54 am

கனடாவில் 80 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி யார்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் லண்டன் நகரில் விற்கப்பட்ட வெற்றி லொத்தர் சீட்டுக்கான 80 மில்லியன் டொலர் பரிசு, விற்பனை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் இதுவரை யாராலும் கோரப்படவில்லை. இது கனடா லொத்தர் சீட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகும். நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். வெற்றியாளர் ஒருவர் தானா அல்லது குழுவா என்பது கூட தெரியவில்லை, ஏனெனில் இதுவரை எவரும் எங்களை தொடர்புகொள்ளவில்லை,” என ஒன்றாரியோ லொத்தர் சீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெற்றியாளர்கள் பொதுவாக நிதி ஆலோசகர்கள், […]

அதிரடி 1 Feb 2026 3:30 am

திருடப்பட்ட சோழர் காலச் சிலைகள் மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைப்பு: அமெரிக்கா

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள் திருடப்பட்டு, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, தங்கள் சிலைகளை ஒப்படைக்குமாறு அமெரிக்கா மீது இந்தியா குற்றம் சாட்டியது. இதனிடையே, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆவணக் காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, திருடப்பட்ட சிலைகள் 1956 முதல் 1959 வரையில் தமிழகத்தின் […]

அதிரடி 1 Feb 2026 1:30 am

அநுர அரசை விரட்டி நாமலை ஜனாதிபதி ஆக்கினால் தான் நாட்டைப் பாதுகாக்க முடியும்! என்கிறார் சரத் வீரசேகர!

இலங்கையின் பௌத்த சாசனம் மற்றும் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால், தற்போதைய அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தை விரட்டியடித்து விட்டு,… The post அநுர அரசை விரட்டி நாமலை ஜனாதிபதி ஆக்கினால் தான் நாட்டைப் பாதுகாக்க முடியும்! என்கிறார் சரத் வீரசேகர! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 1:22 am

அமெரிக்க அரசின் Federal Government அதிகாரபூர்வமாக shutdown நிலைக்கு சென்றுள்ளது.

காங்கிரஸில் (Congress) பட்ஜெட் ஒப்புதல் கிடைக்காததன் விளைவாக, அரசின் பல துறைகள் தற்காலிகமாக செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. அத்தியாவசிய… The post அமெரிக்க அரசின் Federal Government அதிகாரபூர்வமாக shutdown நிலைக்கு சென்றுள்ளது. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 1:15 am

இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய தென்னாப்பிரிக்கா ; பதிலடி கொடுத்த நெதன்யாகு

தென்னாப்பிரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதரக அதிகாரி ஏரியல் சீட்மேன் (Ariel Seidman), இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாகக் கூறி, அவரை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டது. அவருக்கு 72 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அரசாங்கம் பலஸ்தீனத்திற்கான தென்னாப்பிரிக்கத் தூதுவர் ஷான் எட்வர்ட் பைனெவெல்ட்டை (Shaun Edward Byneveldt) அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா […]

அதிரடி 1 Feb 2026 12:30 am

திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிரடி 1 Feb 2026 12:30 am

8.8 கோடி ரூபாய் மாணிக்கக்கல் மோசடி:  ஒருவர் கைது!

வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காசோலைகளை (Dishonoured Cheques) வழங்கி, பல கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்… The post 8.8 கோடி ரூபாய் மாணிக்கக்கல் மோசடி: ஒருவர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 11:56 pm

145K+ சட்டவிரோதக் குடியேற்றச் சிறுவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

அமெரிக்காவில் 145,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றச் சிறுவர்கள் (Illegal Immigrant Children) குறித்த சமீபத்திய அறிக்கை சர்வதேச அளவில்… The post 145K+ சட்டவிரோதக் குடியேற்றச் சிறுவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 11:42 pm

கருகிப்போன உடல்: அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டது எப்படி?

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் நேற்றுமுன்தினம் காலை பாராமதி பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதில் அமித் ஷா, நிதின் கட்கரி, சரத் பவார், தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அஜித் பவார் […]

அதிரடி 31 Jan 2026 11:30 pm

எச்.ராஜாவுக்கு என்ன நடந்தது? அரசியலாக்க வேண்டாம்.. மனம் திறந்த தமிழிசை சௌந்தரராஜன்!

அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஒருவரின் உடல் நிலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமயம் 31 Jan 2026 10:47 pm

பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் – 41 பயங்கரவாதிகள் பலி

லாகூர், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பாகும். அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் […]

அதிரடி 31 Jan 2026 10:30 pm

நீங்க ஆட்டோமொபைலை கண்டுபிடிச்சிங்க; நாங்க டிரைவிங்கை கண்டுபிடிச்சோம் - Benzக்கு வாழ்த்து சொன்ன BMW

1980 மற்றும் 90-களில் ஆட்டோமொபைல் உலகில் ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே ஒன்னு பென்ஸ், இன்னொன்னு பிஎம்டபிள்யூ’. இன்றுவரை இந்தப் போட்டி தொடர்கிறது.  80 & 90-களில் இருந்த ஆட்டோமொபைல் பிரியர்களுக்குத் தெரியும் பென்ஸ் AMG கார்களுக்கும், BMW M சீரிஸ் கார்களுக்கும் இடையில் நடந்த போட்டி. BMW M3 Vs Mercedes 190E 2.3-16, பென்ஸ் E55 AMG Vs BMW M5 போன்ற சில கார்களுக்கு இடையில் நடந்த போட்டிகள் அதற்குச் சான்று. ஆனால், இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல.  ‘எதிரியாகவே இருந்தாலும் மதிக்க வேண்டும்’ எனும் பண்பு BMW-க்குத் தெரியும் போல. கடந்த ஜனவரி 29-ம் நாளோடு 140 ஆண்டுகளை பென்ஸ் நிறுவனம் நிறைவு செய்கிறது. அதற்கு வாழ்த்துக் கூறும் வகையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் நகைச்சுவை மற்றும் வியாபாரம் இரண்டையும் இணைத்து பென்ஸ் நிறுவனத்துக்கு ஒரு வாழ்த்து தெரிவித்துள்ளது.  1886-ம் ஆண்டு இதே நாளில்தான் கார்ல் பென்ஸ் தனது ‘மோட்டார்வாகன்’ வாகனத்துக்கான காப்புரிமையைப் பெற்றார். இன்றைய நவீன வாகனங்களுக்கான அடித்தளம் இந்த ‘மோட்டார்வாகன்’தான்.  பென்ஸைவிட பிஎம்டபிள்யூவுக்கு 30 வயது குறைவுதான். இரண்டு நிறுவனங்களுமே வெவ்வேறு நோக்கங்களில் தொடங்கப்பட்டு, பின்னர் ஒரே நேர்கோட்டில் இணைந்தவை.  பென்ஸ் புதுமை மற்றும் பொறியியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் பிஎம்டபிள்யூ அதன் இன்ஜின்களுக்கும், ரைடிங்குக்கும் முக்கியத்துவம் கொடுத்தது.  இந்த இரண்டையும் குறிப்பிடும் வகையில் பிஎம்டபிள்யூவின் வாழ்த்து உள்ளது. பிஎம்டபிள்யூ தனது இன்ஸ்டா பதிவில் முதல் படத்தில் கார்ல் பென்ஸின் புகைப்படத்தோடு “அதிர்ஷ்டவசமாக கார்ல் பென்ஸ் ஆட்டோமொபைலைக் கண்டுபிடித்துவிட்டார்.” எனும் வாசகமும், இரண்டாம் படத்தில் ”அதனால் நாங்கள் ஓட்டுநர் இன்பத்தைக் கண்டிபிடித்தோம்” எனும் வாசகமும் உள்ளது.  இதற்கு பென்ஸ் நிறுவனமும் நன்றி தெரிவித்து கமென்ட் செய்துள்ளது. இன்றைய ஆட்டோமொபைல் உலகம் பென்ஸிடமிருந்துதான் தொடங்கியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த போஸ்ட்டுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பு, கமென்டுகளையும், லைக்குகளையும்  வாரி வழங்குகிறார்கள். நம்மூர் ஆட்டக்காரர்கள் இப்படி வாழ்த்தவில்லை என்றாலும் வசைபாடாமல் இருக்கிறார்கள். அதுவரை சந்தோஷம்! 

விகடன் 31 Jan 2026 10:01 pm

UGC NET 2025 முடிவுகள் வெளியீடு தேதி அறிவிப்பு; வேகமாக செயல்படும் NTA - அறிந்துகொள்ளுவது எப்படி?

டிசம்பர் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் 2025 தேர்வு முடிவுகள் வரும் பிப்ரவரி 4-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

சமயம் 31 Jan 2026 9:40 pm

ராஃபா எல்லை நாளை திறப்பு

காஸா-எகிப்து இடையிலான ராஃபா எல்லைப்பாதை ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கடந்த 2024, மே மாதத்தில் இஸ்ரேல் படைகள் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த வழித்தடம் மக்கள் போக்குவரத்துக்காகத் திறக்கப்படுகிறது. காஸாவில் இருந்து கடைசி இஸ்ரேல் பிணைக்கைதியின் உடல் அண்மையில் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இஸ்ரேல் இம்முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், போரினால் காஸாவிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தாயகம் திரும்பலாம். இருப்பினும், இதற்கு இஸ்ரேலிடம் முன்கூட்டியே பாதுகாப்பு […]

அதிரடி 31 Jan 2026 9:30 pm

வரலாற்றில் இல்லாத அளவிலான நிதி அதிர்ச்சி!

மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய Liquidation Event ஒன்று உலக சந்தைகளை உலுக்கியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி… The post வரலாற்றில் இல்லாத அளவிலான நிதி அதிர்ச்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 9:29 pm

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது!

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. பிறப்பு விகிதம்… The post அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 9:05 pm

JEE Main 2026 Session I ஆன்சர் கீ, தேர்வு முடிவுகள் எப்போது? NTA வெளியிட்ட தேதிகள், Session II விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 1 தொடக்கம்

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜேஇஇ மெயின் 2026 முதல் கட்டத் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் பிப்ரவரி 5 வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.

சமயம் 31 Jan 2026 9:01 pm

காங்கோவில் கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 227க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கிழக்கு காங்கோ மாகாணமான வடக்கு கிவுவில் உள்ள கோல்டன் (coltan) சுரங்கத்தில் கனமழைக்குப் பிறகு நிலச்சரிவு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்றுப் புதன்கிழமை சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருந்து, 227 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மாகாண அதிகாரிகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இறந்தவர்களில் சுரங்கத் தொழிலாளர்கள், சந்தை வர்த்தகர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர். பாதிக்கப்பட்ட சுரங்கம் ரூபாயா கோல்டன் சுரங்கமாகும். இது உலகளவில் வெட்டியெடுக்கப்படும் கோல்டானில் 15 சதவீதத்தைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளுக்கான சில்லுகள் மற்றும் மின்சார கார்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்ய இந்த உலோகத் தாது தேவைப்படுகிறது. வளங்கள் நிறைந்த இந்த நாட்டில் பல சுரங்கங்களில் வேலை நிலைமைகள் ஆபத்தானதாகக் கருதப்படுகின்றன. பாதுகாப்பு தொழில்நுட்பம் பெரும்பாலும் கிடைக்காது. மேலும் பல சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்களும் பயன்படுத்தப்படுகிறார்கள். கிழக்கு காங்கோவின் வளமான தாதுப் பொருட்கள் இப்பகுதியில் மோதலைத் தூண்டுகின்றன. இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. மேலும் 100 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போராளிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ரூபாயாவில் உள்ள சுரங்கம் M23 போராளிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு வருடம் முன்பு மாகாண தலைநகரான கோமாவையும் கைப்பற்றியது மற்றும் கிழக்கு காங்கோவின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகிறது.

பதிவு 31 Jan 2026 8:52 pm

 இந்தியாவிடமிருந்து  இலங்கைக்கு 10 பெய்லி பாலங்கள் 

“டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை விரைவாகச் சீரமைக்க உதவும் வகையில், நட்புக்கரம் நீட்டியுள்ள இந்தியா பாதிக்கப்பட்ட பகுதிகளில்… The post இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 10 பெய்லி பாலங்கள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 8:41 pm

ஈரான் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் குண்டு வெடிப்பு

ஈரானிய நகரமான பந்தர் அப்பாஸில் நடந்ததாகக் கூறப்படும் குண்டுவெடிப்பு, அமெரிக்கா- ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் நிகழ்ந்துள்ளது. வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. நகரின் மோலெம் பவுல்வர்டு பகுதியில் எட்டு மாடி கட்டிடத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாகவும், இரண்டு தளங்கள், பல வாகனங்கள் மற்றும் கடைகள் அழிக்கப்பட்டதாகவும் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்தில் இருப்பதாக அது மேலும் கூறியது. ஊடக வதந்திகளைத் தொடர்ந்து, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), மாகாணத்தில் உள்ள அதன் கடற்படைப் படைகளுக்குச் சொந்தமான எந்த கட்டிடங்களும் குறிவைக்கப்படவில்லை என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஒரு விமானம் தாங்கிக் கப்பல் குழுவை அந்தப் பகுதிக்கு அனுப்பிய பின்னர், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கியமான தருணத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது . கடந்த புதன்கிழமை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஈரானுக்கு எதிராக அச்சுறுத்தல்களை வெளியிட்டார். அதன் அணுசக்தி திட்டம் குறித்து தெஹ்ரான் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பதிவு 31 Jan 2026 8:38 pm

️ இஸ்ரேல் –சவுதிக்கு பாரிய ஆயுத விற்பனை  –அமெரிக்கா பச்சைக்கொடி

இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்பிலான பாரிய ஆயுத விற்பனைக்கு அமெரிக்க அரசாங்கம் பச்சைக்கொடி… The post ️ இஸ்ரேல் – சவுதிக்கு பாரிய ஆயுத விற்பனை – அமெரிக்கா பச்சைக்கொடி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 8:21 pm

மாவையின் பின்னால் புதிய பாதை!

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டு உருவாகிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மறைந்த மாவையின் நினைவேந்தலில் வடக்கு கிழக்கு சார்ந்து எம்.ஏ.சுமந்திரன் அணி தவிர்ந்த புதிய அணி உருவாக்கம் வலுப்பெற்றுள்ளது. இன்றைய நிகழ்வில் படங்கள் புதிய அரசியல் பாதையை தெளிவாக்கியுள்ளது.

பதிவு 31 Jan 2026 8:19 pm

நகைச்சுவை செய்யும் எடப்பாடி.. வாழ்நாள் அடிமை.. கடுமையாக விமர்சித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்

சமயம் 31 Jan 2026 8:17 pm

4ம் திகதி கரிநாள்:வலுக்கும் ஆதரவு!

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்அறிவித்துள்ளார். எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக இப்போராட்டமானது வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதிவு 31 Jan 2026 8:06 pm

சென்னை ஐபிஎல் 2026 அப்டேட்: ருதுராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்! சிஎஸ்கே-வின் முக்கிய பிளான்!

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது 29-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஐபிஎல் 2026 சீசனுக்கான சென்னை அணியின் பலமான பிளேயிங் லெவன் மற்றும் மினி ஏலத் தகவல்கள் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 8:05 pm

இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியீடு? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து உள்ளார்.

சமயம் 31 Jan 2026 7:49 pm

இலங்கையில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (31) பிற்பகல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இலங்கை புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. கடற்பகுதியில் நில அதிர்வு பதிவாகியிருந்தாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வை உணர்ததாக கூறப்படுகிறது.

பதிவு 31 Jan 2026 7:40 pm

உங்கள் உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா? எலான் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ் ஆப் மறுப்பு!

பயனர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாக எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்துக்கு வாட்ஸ் ஆப் செயலியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப்-க்கு மாற்றாக பல செயலிகள் இருந்தாலும், வாட்ஸ் ஆப் தான் முன்னணி செயலியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ் ஆப் பயனர்களின் உரையாடல்களை அந்நிறுவன ஊழியர்களால் படிக்க முடியும் என்று நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்கள் சமீபத்தில் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியது. இதனிடையே, வாட்ஸ் ஆப் மீதான […]

அதிரடி 31 Jan 2026 7:30 pm

தனுஷ் D55 பட அப்டேட்: ஸ்ரீலீலா மற்றும் சாய் அபயங்கர் வருகை! மாஸ் தகவல்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'D55' படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 7:05 pm

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு- ஆசிரியர்களின் கனவு நினைவாகுமா?

இடைநிலை ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னைக்கு தீர்வு காண மூவர் குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதனால், 37 நாட்களாக நடந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு மீது நம்பிக்கை வைத்து, மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமயம் 31 Jan 2026 6:57 pm

திட்டமிட்டு ஏமாற்றிய திமுக அரசு.. மறக்க முடியாத பாடம் புகட்டப்படும்.. அன்புமணி ராமதாஸ் விளாசல்

ஜனவரி 1 முதல் திட்டம் செயல்பாட்டில் இருப்பது போல அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எந்தப் பயனும் வழங்கப்படாததன் மூலம் அந்த மோசடி அம்பலமாகிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமயம் 31 Jan 2026 6:55 pm

IND vs NZ 5th T20: ‘டாஸ் வென்றது இந்தியா’.. மொத்தம் மூன்று மாற்றங்கள்: திலக் வர்மா குறித்து சூர்யகுமார் யாதவ் பேட்டி!

நியூசிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மொத்தம் மூன்று மாற்றங்களை செய்துள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு 5ஆவது போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமயம் 31 Jan 2026 6:55 pm

Nvidia’s $100 Billion OpenAI Deal Faces Delay

Nvidia’s plan to invest up to $100 billion in OpenAI has stalled, the Wall Street Journal reported on Friday. Some

சென்னைஓன்லைனி 31 Jan 2026 6:53 pm

புதிய வியூகத்தைக் கையிலெடுக்கும் திமுக - திருப்போரூர் திட்டம் என்ன?

ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற வேகத்தில் அடுத்தடுத்த செயல்பாடுகளில் தீவிரம் காட்டிவருகிறது ஆளும் தரப்பான தி.மு.க. தேர்தலுக்கு முன்பான தேர்தல் பணிகளில் அந்தக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாட்டை நடத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே இளைஞர் அணியின் மண்டல மாநாடு, மண்டல பெண்கள் மாநாடு என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி வரும் தி.மு.க, இப்போது வாக்குச்சாவடி முகவர்களுக்குத் தேர்தல் வியூகங்களைப் பற்றி விளக்கம் அளிக்க அடுத்த மாநாட்டினை நடத்த உள்ளது. அதில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான புதிய யுக்தியையும் தி.மு.க கையில் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்கும் வாக்குமுகவர்களே தேர்தல் களத்தின் அடிப்படை பணியாளர்கள். அவர்களை சரியான விதத்தில் பணியமர்த்தும் கட்சிகளே தேர்தல் நாள் அன்று தங்கள் தரப்பு வாக்குகளை முழுமையாகக் கைப்பற்ற முடியும் என்பதால் அனைத்து கட்சிகளுமே, வாக்குச்சாவடி முகவர்கள் விஷயத்தில் உஷாராக இருப்பது வழக்கம். எனவேதான் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள், பாக முகவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்த உள்ளது. திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் இது குறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, “தேர்தல் வேலைகளை தி.மு.க இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. மாநாடுகள் எல்லாம் ஒருபுறம் என்றாலும், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாக முகவர்களை சரி செய்யும் வேலைகளைத்தான் தற்போது தலைமை மேற்கொண்டுவகிறது. இந்த முறை த.வெ.க வேறு களத்தில் இருப்பதால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகளை குறிவைத்து தி.மு.க வேலை செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நுாறு வாக்குகளுக்கு ஒரு பாக முகவர் என்கிற கணக்கில் ஆட்களை நியமனம் செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து நுாறு வாக்காளர்களை ஒரு பாகவர் முகவர் கண்காணித்து அவர்களை தி.மு.க-வுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வைக்கும் வேலையை இந்த பாக முகவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வாக்காளர்கள் விவரங்களை வைத்து பாக முகவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின் இந்த பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடுதான் திருப்போரூரில் நடக்க உள்ளது. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களை இந்த மாநாட்டிற்கு அழைக்க உள்ளனர். இதன் தொடர்ச்சியாக திருப்பத்துார், மதுரை, கோவை என அடுத்த நான்கு இடங்களுக்கான மாநாடுகள் பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளது, தி.மு.க தலைமை. இந்த மாநாடுகள் நிறைவடைந்த பிறகே திருச்சியில் மாநில மாநாடு மார்ச்-8ம் தேதி அன்று நடக்க உள்ளது என்றனர். தி.மு.க-வின் இந்த வியூகங்கள் குறித்து மண்டல வாரியாக தி.மு.க வில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். திருப்போரூர் மாநாடு முடியும் முன்பே அடுத்த மூன்று மாநாடுகளுக்கான இடங்களையும் தேர்வு செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்கு இடையில் மகளிர் மாநாடு தென் மண்டலத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. அந்த மாநாடு முடிந்த கையோடு பாக முகவர்கள்,வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு, அடுத்து மாநில மாநாடு என வரிசையாக மாநாடுகள் நடக்க இருப்பதால், நிர்வாகிகளுக்குப் பெரும் பணிச்சுமையும் ஏற்படுகிறது என்கிற புலம்பலும் தி.மு.க நிர்வாகிள் மத்தியில் உள்ளது.

விகடன் 31 Jan 2026 6:41 pm

Meta Faces Trial Over Child Exploitation Claims

Meta Platforms, the parent company of Facebook, Instagram, and WhatsApp, will go to trial next week in a lawsuit filed

சென்னைஓன்லைனி 31 Jan 2026 6:38 pm

900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி: மருத்துவர்கள் தெரிவித்துள்ள நல்ல செய்தி

அபூர்வ நரம்புமண்டல நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு, 900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி ஒருத்தியால் தற்போது வாயை மூட முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி கொல்கத்தாவில் அபூர்வ நரம்புமண்டல நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு, 912 நாட்களாக வாயை மூட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறாள் 10 வயது சிறுமி ஒருத்தி. பல்வேறு மருத்துவமனைகளில் அவளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடைசியாக R Ahmed Dental […]

அதிரடி 31 Jan 2026 6:30 pm

விராட் கோலி விக்கெட்டை எடுத்தால் காலில் விழுந்திடுவேன்-விஷால் நிஷாத் ஓபன் டாக்!

டெல்லி : பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய வீரர் விஷால் நிஷாத், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை தனது ஐடலாகக் கொண்டுள்ளார். கோலியின் ஆளுமை, ஆர்வம், வெற்றி மீதான தாகம் ஆகியவை தன்னை கிரிக்கெட் விளையாடத் தூண்டியதாக அவர் தெரிவித்தார். “விராட் கோலி எனது ஐடல். அவரது அணுகுமுறையும், டிரைவும் என்னை மிகவும் ஈர்க்கிறது. அவர் எனக்கு மிகவும் பிடித்தவர்” என்று விஷால் நிஷாத் கூறினார். ஐபிஎல் போட்டிகளில் கோலியை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் […]

டினேசுவடு 31 Jan 2026 6:15 pm

விஜய்யை விமர்சித்த செந்தில் பாலாஜி.. என்ன சொன்னார் தெரியுமா? முழு விவரம் இதோ!

கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தவெக தலைவர் விஜய்யைப் பற்றி கேட்டு ஏன் நேரத்தை வீண்டிக்கிறீர்கள் என்று விமர்சித்து உள்ளார்.

சமயம் 31 Jan 2026 6:09 pm

Delicious Peshawari Chicken Biryani for Special Occasions

If you like biryani, you will love this Peshawari Chicken Biryani. It is great for family meals and special occasions.

சென்னைஓன்லைனி 31 Jan 2026 6:07 pm

பிரீஃப் கேஸ் முதல் டேப்லெட் வரை.. பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வரும் முறையில் வந்த மாற்றங்கள்!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சர்கள் கையில் கொண்டுவரும் பெட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். பேராடு முறை ஏன் வந்தது? ஃப்ரீப் கேஸ் முறை ஏன் கைவிடப்பட்டது?

சமயம் 31 Jan 2026 6:05 pm

விஜய் NDTV பேட்டி: “நான் கிங் மேக்கர் அல்ல, கிங்!”அதிரடி அரசியல் விளக்கம்!

நடிகர் விஜய் தனது முதல் தேசிய ஊடகப் பேட்டியில் தமிழக அரசியல், 'ஜன நாயகன்' படத்தின் ரிலீஸ் சிக்கல் மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பல அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 6:05 pm

`ஜெயலலிதா விஜய்யைக் கைதுசெய்திருப்பார்; ஸ்டாலின் கரிசனம் காட்டியிருக்கிறார்!' - பி.டி.செல்வகுமார்

தூத்துக்குடியில் த.வெ.க தலைவர்  விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.செல்வகுமார் தமிழ்ச்சாலையில் உள்ள  பிரஸ்கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகர் விஜய்க்கும், அவர் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை. தந்தை சந்திரசேகர்தான் சினிமாவில் விஜய்யின் வளர்ச்சிக்கு முழுக் காரணம், முக்கியக் காரணம். ஆனால், சந்திரசேகருக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் இல்லை. ஜனநாயகன் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. சென்சார் பிரச்னையைத் தீர்க்க வேண்டியது படக்குழுதான். த.வெ.க விஜய்  சென்சார் பிரச்னையில் ஒரே ஒரு உறுப்பினருக்கு மட்டுமே மாறுபட்ட கருத்து இருந்திருக்கிறது. இதனை படக்குழுதான் சரி செய்திருக்க வேண்டும். மாநில அரசுக்கும், சென்சாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?  தி.மு.க, பா.ஜ.க யாரும் படம்  வெளியிடுவதை தடுக்கவில்லை. ஆர்.கே.செல்வமணியின் விஸ்வரூபம் போன்ற பல படங்கள் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்துள்ளது. அதே போன்றுதான் ஜனநாயகன் படமும்.  இந்த பிரச்னையை தீர்த்த பின்புதான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்க வேண்டும். உங்கள் கடமையிலிருந்து நீங்கள் தவறி விட்டு பிறர் மேல் பழி போடுவது தவறு. ஒரு படம் வெற்றி பெற்றால், புகழ் வந்தால், கைதட்டல் வந்தால், ரசிகர்கள் விசில் அடித்தால் எல்லாப்  புகழும் உங்களுக்கு. ஆனால், பிரச்னை என்று வந்தால் மட்டும் நீங்கள் காரணம் இல்லையா? இதுதொடர்பான பிரச்னையை சரி செய்ய வேண்டியது யார்? சென்சார் வரவில்லை என்றவுடன் மத்தியரசுதான் பிரச்னை என்று கூறுகிறீர்கள். முழுக்க, முழுக்க இது விஜய்யின் தவறுதான். கரூரில் மாநாடு போட வேண்டும் என்று கேட்டது யார்? அப்பாவி மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. 41 பேர் இறந்ததற்கு விஜய்தான் பொறுப்பு. ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது விஜய்யை கைது செய்து இருப்பார். விஜய் ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் விஜய் மீது கரிசனம் காட்டி இருக்கிறார். அ.தி.மு.க, பா.ஜ.கவினர்  கரூரில் நடந்த சம்பவத்திற்கு அப்போது விஜய்க்கு ஆதரவாகப் பேசினார்கள். தற்போது விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன் எதிராகப் பேசி ஒரு சுயநல அரசியலை செய்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போது அங்கு சென்ற விஜய், ஏன் மதுரை மாநாட்டில் இறந்தவர் வீட்டிற்கு செல்லவில்லை?  பப்ளிசிட்டி வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானலும் விஜய் செல்வார். வரும் சட்டமன்றத் தோ்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜய், திரைப்படத்தில் பேசும் பஞ்ச் டயலாக் அரசியலில் எடுபடாது.” என்றார்.  

விகடன் 31 Jan 2026 6:01 pm

வேலூரில் தவெக பொதுக்கூட்டம்- என்னென்ன பேச போகிறார் விஜய்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேலூரில் அடுத்தகட்ட பிரச்சாரத்தை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

சமயம் 31 Jan 2026 5:56 pm

விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?

வே லூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்டமான வெளிப்புற மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் விசாலமான, பாதுகாப்பான இடமாகவும், அவைக் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறையினரின் மேற்பார்வையில் 7 ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மைதானத்தைச் சமன்படுத்தும் பணியில் த.வெ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர். இடம் சீரமைக்கும் பணி இது பற்றி, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் கேட்டபோது, ``த.வெ.க தலைமை அலுவலகத்தில் இருந்து ஓரிரு நாளில், தளபதி வருகைக் குறித்த தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு, காவல்துறையினரிடம் அனுமதி கேட்போம். அதற்கு முன்னதாக, இடத்தை சமன்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் 26 ஏக்கரில் இருந்து 30 ஏக்கர் வரையிலான விசாலமான இடத்தைத் தான் தேர்வு செய்திருக்கிறோம். வாகனங்களை பார்க்கிங் செய்யவும் 50 ஏக்கர் இடத்தை பார்வையிட்டு வருகிறோம்’’ என்றார்.

விகடன் 31 Jan 2026 5:54 pm

'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' - விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் இன்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த சிலரது ஆசைகள், எண்ணங்களை என்னிடம் கேள்வியாக கேட்கிறீர்கள். அவர்களின் ஆசைகளும், எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. 2021 தேர்தலில் எப்படி எங்களை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தார்களோ, அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை தருவதற்கு வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள். நாங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம். ஊடகத்தினர் யாரும் தவெகவிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. செய்தி வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் ஒரு புறம் மட்டுமே கேள்வியை கேட்கிறார்கள். இருபுறமும் கேள்வியை கேட்டீர்கள் என்றால் அந்த கேள்வி நியாயமானதாக இருக்கும். சந்திக்கவே  முடியாமல் எல்லைக்கு அப்பாற்பட்டு நாட் ரீச்சபிளில் இருப்பவர்களை பற்றி கேள்வி கேட்டு எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்” என்றார்.

விகடன் 31 Jan 2026 5:52 pm

Kajal Remains Timeless Eye Makeup Essential

For centuries, women have used kajal on their eyes, not only to enhance their beauty but also as a cultural

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:46 pm

Supreme Court Bans Stem Cell Therapy for Autism

The Supreme Court of India has ruled that stem cell therapies cannot be offered as a medical treatment for Autism

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:38 pm

Government Sets Minimum Import Price for Antibiotic Ingredients

The government has imposed a minimum import price on three important ingredients used in making penicillin-class antibiotics. These ingredients are

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:32 pm

மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புறநகர்ப் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரண்டு செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது சமீபத்தில் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அதாவது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 196 பேர் கண்காணிப்பில் உள்ளனர். வௌவால், பன்றி உள்ளிட்டவைகளால்தான் நிபா தொற்று மனிதர்களுக்கு பரவுகிறது. இந்தத் தொற்றால், காய்ச்சல், தலைவலி, மூளை வீக்கம், சுவாசப் பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்தியாவில் […]

அதிரடி 31 Jan 2026 5:30 pm

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் டீ. எம். எம் அன்ஸார் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமான்லெப்பை, எம்.எஸ்.அப்துல் வாஸித் மற்றும் அக்கரைப்பற்று […]

அதிரடி 31 Jan 2026 5:30 pm

️ யுக்ரைன்  மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ரஷ்யா இணக்கம்!

யுக்ரைன் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த (Ceasefire) ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, சர்வதேச அளவில் பெரும்… The post ️ யுக்ரைன் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ரஷ்யா இணக்கம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 5:18 pm

இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்னைக்கு மூவர் குழு அறிக்கை அடிப்படையில் தீர்வு காணப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமயம் 31 Jan 2026 5:13 pm

அஜித் என்னிடம் சொன்ன அந்த 6 மாதங்களில் உருவானப் படம்தான் அது! - ரவி கே சந்திரன் ஷேரிங்க்ஸ்

இந்திய சினிமாவின் சீனியர் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர் ரவி கே. சந்திரன். 'கண்ணத்தில் முத்தமிட்டாள்', 'ஆய்த எழுத்து', 'தில் ஜாதா ஹை', 'கஜினி (இந்தி ரீமேக்)' உள்ளிட்ட பல ஹிட் படைப்புகளின் ஃபிலிம்களோடு உறவாடியவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த 'பராசக்தி' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். நம் சினிமா விகடன் யூட்யூப் சேனலின் 'பாயின்ட் ஆஃப் வியூ' தொடருக்காக அவரைச் சந்தித்து உரையாடினோம். Ravi K Chandran நம்மிடையே பேசிய ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களுக்கும் நான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். மும்பையில் எனக்கு வீடு இருந்தது, அதனால் பாலிவுட்டில் நீண்ட வருடங்கள் பணி புரிந்தேன். அங்கிருக்கும் அத்தனை பெரிய இயக்குநர்களுடனும் நான் பணிபுரிந்துவிட்டேன். இப்போது அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிற 'துரந்தர்' பட இயக்குநர் ஆதித்ய தர் இயக்கவிருந்த முதல் படத்திற்கு நான்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டியது. ஆனால், அப்போது மிஸ் ஆகிவிட்டது. என்றவர், நானும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஒன்றாக இங்கு சென்னையில் வாக்கிங் போவோம். அப்போதே நாங்கள் இணைந்து பணிபுரியும் திட்டங்கள் குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். ஒரு நாள் ஆமீர் கானின் 'ஃபனா' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது அவர் என்னிடம், 'கஜினி' திரைப்படத்தை என்னை இந்தியில் ரீமேக் செய்யச் சொல்கிறார்கள் என்றார். தமிழ் பதிப்பை எடுத்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸே இப்படத்தை இயக்குகிறார். நீங்கள்தான் அதற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும்' என்றார். அப்போது நான் ரீமேக் அதிகமாக செய்துவிட்டேன். மீண்டும் ரீமேக் செய்ய வேண்டாம் என்கிற முடிவில் இருந்தேன். அமீர் கான் என்னை சமாதானம் செய்து என்னை பணிபுரியச் சொன்னார். அப்படிதான் முருகதாஸுடன் பயணம் அமைந்தது. அவர் இயக்குநராக இருந்தது எனக்கு வேலைகளையும் எளிதாக்கியது. பிறகு நானும் முருகதாஸும் 'ஏழாம் அறிவு' படத்தில் இணைந்தோம். சொல்லப்போனால் எங்கள் மூவருக்குள் ஒரு ட்ரிவியா இருக்கிறது. நான் 'சிட்டிசன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கமிட்டானேன். அப்படியான வேளையில், அமீர் கான் நடிக்கும் மற்றொரு படத்திற்கும் நான் ஒளிப்பதிவு செய்ய கமிட்டாகி இருந்தேன். அஜித்திடம் 6 மாதங்களுக்கு நானிங்கு இருக்கமாட்டேன் எனவும் சொல்லிவிட்டேன். அவர் 'நீங்கள் சென்று வாருங்கள். வந்த பிறகு நாம் படப்பிடிப்பு வைத்துக் கொள்வோம். அதற்கிடையில் நான் மற்றொரு இயக்குநருக்கு தேதி கொடுத்துவிடுகிறேன்.' என்றார். அப்படி அந்த 6 மாதங்களில் உருவான படம்தான் முருகதாஸ் இயக்கிய 'தீனா' திரைப்படம். 'ஆய்த எழுத்து' படத்திற்குப் பிறகு முழுமையாக இந்தியில் பணிபுரிந்து வந்தேன். என்னுடைய மூத்த மகனை கண்டித்து படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சென்னை வர முடிவு செய்தேன். அப்படியான நேரத்தில்தான் 'ஏழாம் அறிவு' பட வாய்ப்பு வந்தது. பாலிவுட்டில் 'டான்' படத்திற்காக வாங்கிய அட்வான்ஸைக் கொடுத்துவிட்டு, சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டேன். என்றார். அப்படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடித்திருந்த 'ஆதித்ய வர்மா' படத்திற்குதான் வந்திருந்தீர்களே... என எழுப்பிய கேள்விக்கு, முதலில் என்னை அந்தப் படத்தை டைரக்ட் செய்ய சொல்லியிருந்தார்கள். பாலா சார் ஏற்கெனவே அப்படத்தை எடுத்து முடித்துவிட்டார். மீண்டும் நான் வந்து இயக்குவது சரியாக இருக்காது எனக் கூறி மறுத்துவிட்டேன். நான் பாலா சார் மீது பெரும் மதிப்பும் வைத்திருக்கிறேன். எனப் பேசினார். முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

விகடன் 31 Jan 2026 5:10 pm

Prabhu Deva, Vadivelu Reunite for Bang Bang

Fans are thrilled as Prabhu Deva and Vadivelu are teaming up once again on the big screen after many years

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:09 pm

கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு  தண்டப்பணம் அறவீடு

video link- https://fromsmash.com/lMU4VAm9oc-dt கல்முனை மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகள் மாநகர சபையினால் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள் மற்றும் பிரதான வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளைக் கைப்பற்றும் நடவடிக்கை கடந்த சில நாட்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாடுகளுக்கு தலா 5000 ரூபா வீதம் தண்டப் […]

அதிரடி 31 Jan 2026 5:08 pm

பட்ஜெட்டில் இருக்கும் முக்கியமான வார்த்தைகள்.. அர்த்தம் என்ன தெரியுமா?

மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் வாசிக்கும் இந்த ஆங்கில பொருளாதார வார்த்தைகளுக்கான அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? ஈசியா கத்துக்கலாம் வாங்க..!

சமயம் 31 Jan 2026 5:05 pm

Hiphop Adhi Dedicates State Award to K.V. Anand

Amid the glitz and glamour of the Tamil Nadu State Awards, which honour creative artists across various fields, composer Hiphop

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:03 pm

4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது

video link- https://fromsmash.com/sSR9BcO9xF-dtசுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில் […]

அதிரடி 31 Jan 2026 5:03 pm

திருகோணமலை –முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்:

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான… The post திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 5:02 pm

ஈபிஎஸ்ஸின் ஆசை நடக்காது.. முகத்தை மூடிக் கொண்டு செல்லவில்லையே.. அமைச்சர் கீதா ஜீவன் கருத்து!

திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு குறித்து விமர்சித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி கொடுத்து உள்ளார்.

சமயம் 31 Jan 2026 5:00 pm

திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?!

தமிழ் மன்னர்கள் தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியது, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அண்ணாமலை திருமாவளவன் தமிழ் மன்னர்கள் தொடர்பாக என்ன பேசினார்? ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சம்ஸ்கிருத மயமானது, இந்துத்துவமயமானது. ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் காலத்தில்தான். வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ் பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக்கொண்டார்கள். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை என்று விமர்சித்திருந்தார்.

விகடன் 31 Jan 2026 4:56 pm

யாழில். மாவைக்கு சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு… The post யாழில். மாவைக்கு சிலை திறப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 4:51 pm

Orlando Bloom Stars in Jungle Thriller ‘The Last’

Hollywood star Orlando Bloom, best known for his roles in ‘Pirates of the Caribbean’ and ‘The Lord of the Rings’,

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:49 pm

2 கோடி 30 இலட்சம்  ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் மாமா , மருமகன்  கைது

video link- https://fromsmash.com/UwEkWUDvu5-dt 2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில் கைதான 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரது வாக்குமூலம் […]

அதிரடி 31 Jan 2026 4:45 pm

நாஞ்சிக்கோட்டை: பூட்டியே கிடக்கும் பொதுக் கழிவறை; அவதியுறும் மக்கள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் உள்ள கழிவறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் மக்கள், இங்க ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போறாங்க.100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குது. தஞ்சாவூர் டு நாஞ்சக்கோட்டை செல்லும் சாலையில்தான் இந்த முனியாண்டவர் காலனி இருக்குது. முறையான பொதுக் கழிவறை இருந்தும் எந்த ஒரு பயன்பாடும் இன்றி பூட்டியே கெடக்குது. இங்க உழவர் சந்தை, ஸ்கூல், கோயில், நிறைய அங்காடிகள் இருக்கு. இப்படிப்பட்ட முக்கியமான இடத்துல பொதுக் கழிப்பிடம் பூட்டியே இருக்குறது, மிகவும் சிரமத்தை ஏற்படுத்துது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடத்துல தஞ்சை மாநகராட்சி மூலமா அஞ்சு லட்சம் செலவில் பொதுக் கழிவறை கட்டப்பட்டது. இப்போ இந்த பொதுக் கழிவறை எவ்வித பயன்பாடும் இல்லாம ரொம்பா நாளாவே பூட்டியே கெடக்குது. இதனால அந்த வழியாக போகுற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிங்க ஆத்திர அவசரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. நிலைமை இப்படி இருக்குறதால, பெரும்பாலானவங்க சாலையோரங்கள்லையே இயற்கை உபாதைகள கழிக்குறாங்க. அதனால, சுகாதார சீர்கேடு நிலவி, நோய்பரவல் அபாயமும் இருக்குது. கிட்டத்தட்ட ஆறு மாசமா இந்தக் கழிவறையைத் திறக்க வேண்டும்னு கோரிக்கை வெச்சுட்டு இருக்கோம். ஆனா அதிகாரிங்க மக்கள் சுகாதார விஷயத்துல அலட்சியமா இருக்காங்க. எந்தவித நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுத்தப்பாடில்லை என்று மனம் நொந்தனர். இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் கல்பனாவிடம் கேட்டதற்கு,   “எங்களுக்கும் இதை திறக்கச் சொல்லி ஏராளமான கோரிக்கை வந்தது.‌ ஆனால் இதில் இன்னும் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும்‌. அதனால்தான் இதனை இன்றளவும் திறக்காமல் வைத்திருக்கிறோம். விரைவில் இக்கழிவறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.

விகடன் 31 Jan 2026 4:44 pm

‘தலைகுனிந்து நிற்கும் தமிழகம்’…முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு.!

சென்னை :தமிழகத்தில் திமுக ஆட்சியின் 56 மாத காலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் ஆட்சியாளர்களை மக்கள் அறிந்திருப்பார்கள் என்று கூறிய அவர், இந்த சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.மகாத்மா காந்தி கூறியபடி, நடு இரவில் […]

டினேசுவடு 31 Jan 2026 4:42 pm

லண்டனில் மாயமாகியுள்ள சிறார்கள்: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

தென் லண்டனில் கடந்த இரண்டு வாரங்களாக மாயமாகியுள்ள இரு சிறார்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். லண்டன் நகரைச் சேர்ந்த 15 வயதான மியா கூப்பர்-லெரூ மற்றும் 14 வயதான ஆய்டன் கூப்பர்-லெரூ ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயுள்ளனர். இவர்களின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினரும் பொலிஸாரும் கவலை வெளியிட்டுள்ளனர். மியா வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண். நீண்ட கருமேகப் பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு கண்கள் கொண்டவர். கடைசியாக நீல நிற […]

அதிரடி 31 Jan 2026 4:30 pm

Alia Bhatt Shares Fun Behind-the-Scenes Photoshoot

Actress Alia Bhatt gave her fans a fun glimpse into the chaos behind one of her latest photoshoots. She shared

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:29 pm

காங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 200 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் கிழக்கு கிழக்கு பகுதியில் ‘ருபாயா’ எனும் இடத்தில் Coltan என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:16 pm

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)############################## யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப் மாநிலத்தில் வசிப்பவரும், சிறந்த சமய, சமூகப் பற்றாளருமான சுதா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு சீவரெத்தினம் சுதாகரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இன்றைய தினம் முன்பள்ளி மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் […]

அதிரடி 31 Jan 2026 4:14 pm

பிப்ரவரி 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சத்தீவு – கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:14 pm

வெள்ளியங்கிரி மலை மீது செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இதன் அருகே 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இது

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:12 pm

2026 மத்திய பட்ஜெட் எப்போது தாக்கலாகும்? எதில் பார்க்க முடியும்?

2026 மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்த உங்களுடைய முக்கியமான கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ..

சமயம் 31 Jan 2026 4:11 pm

யாழில். மாவைக்கு சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் - காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

பதிவு 31 Jan 2026 4:09 pm

மோடி–வெனிசுலா அதிபர் பேச்சு எதிரொலி – எண்ணெய் வாங்க அமெரிக்கா சிக்னல்!

வாஷிங்டன் :அமெரிக்கா, ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மாற்றாக வெனிசுலா நாட்டின் எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையேயான எண்ணெய் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது நலன்களை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. வெனிசுலா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது ரஷ்யாவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று அமெரிக்க தரப்பு கருதுகிறது. நேற்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியிருந்தார். […]

டினேசுவடு 31 Jan 2026 4:06 pm

நான் 'crippling anxiety'-யால் அவதிப்பட்டேன்- இடைவெளி எடுத்துக்கொண்டது குறித்து ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் 'ஆகாசம்லோ ஒக தாரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சாதினேனி இயக்குகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். 'ஆகாசம்லோ ஒக தாரா' அந்த நேர்காணலில் 2018-ல் நடிப்​பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்​துக் கொண்​டது குறித்து ஸ்ருதி ஹாசன் பகிர்ந்திருக்கிறார். அந்த இடைவெளியில் என்னை நானே மறுமதிப்பீடு செய்துகொண்டேன். சில மனநலப் பிரச்னைகளுக்காக நான் அந்த இடைவெளியை எடுத்துகொண்டேன். கடுமை​யானப் பதற்​றத்​தால் அவதிப்​பட்​டேன்! நான் பல ஆண்​டு​களாகக் கடுமை​யானப் பதற்​றத்​தால் (crippling anxiety) அவதிப்​பட்​டேன். அந்த பதற்​றத்​தால் என்னுடைய அன்​றாட வேலைகளை செய்ய முடியவில்லை. நான் எதைத் தேடு​கிறேன், நான் யார் என்​ப​தில் எனக்​குத் தெளி​வில்​லை. அந்த இடைவெளி​யில், லண்​டனில் இருந்​தேன். அங்கு இசை​யின் மூலம் என்னை நான் மீண்​டும் கண்​டறிந்​தேன். ஸ்ருதி ஹாசன் என்னை நானே மீட்டெடுத்தேன்... தின​மும் என் உடைகளை நானே துவைப்​பது, எனக்​கான உணவை நானே சமைப்​பது, மெட்ரோ ரயி​லில் பயணிப்​பது, திரும்பி வந்து புதி​தாக எழுதப் பயிற்சி செய்​வது, புதிய புதிய இசைகளை உருவாக்குவது என என்னை நானே மீட்டெடுத்தேன். எப்​போதும் ஒரு கலைஞ​ராக இருப்​பதையே நான் மிக​வும் விரும்​பு​கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியைத் தரு​கிறது. வழக்​க​மான கதா​பாத்​திரங்​களை விடுத்து சவாலான வேடங்​களில் நடிக்​க​வும் ஆர்​வ​மாக இருக்​கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 31 Jan 2026 4:03 pm

Silver Crash Raises Fears of Next Market Correction

A historic drop in silver prices has sparked a renewed debate about market bubbles, high leverage, and which investments could

சென்னைஓன்லைனி 31 Jan 2026 3:54 pm

“ஓய்வு பெறச் சொன்னவர்களுக்கு நன்றி!”

அவுஸ்திரேலிய ஓபன் (Australian Open) டென்னிஸ் தொடரில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நோவாக் ஜோகோவிச் (Novak… The post “ஓய்வு பெறச் சொன்னவர்களுக்கு நன்றி!” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 3:53 pm

இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் –ஜி.கே.மணி பேட்டி

பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம். அந்த கட்சியை

சென்னைஓன்லைனி 31 Jan 2026 3:51 pm