அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இனி கட்டணம்.. புதிய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஈரான்
டெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் கடந்த 28-ந்தேதி கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தியது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மட்டுமின்றி 180 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பழி தீர்க்கும் வித மாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. […]
Stalin Targets EPS, Amit Shah in Campaign
In Chennai, Chief Minister M. K. Stalin stepped up his political attack during a campaign event in Tiruchirappalli (Trichy) on
30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்: இந்தியர்கள் மட்டும் இத்தனை பேரா..?
வாஷிங்டன், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஏஐ முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளதது. ஓபன் ஏஐ உள்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏஐ மையங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் […]
தெற்கின் மூத்த அரசியல்வாதி காலமானார்
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83-வது வயதில் காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான விஜேசேகர, 1989 முதல் 2010 வரையிலான காலத்தில் மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2009- தற்கொலைத் தாக்குதலில் படுகாயம் தனது அரசியல் பயணத்தின்போது அவர் பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தார். 2009-ஆம் ஆண்டில், அக்குரஸ்ஸையில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்வை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் விஜேசேகர […]
யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம்
சுகாதார அமைச்சின் வருடாந்த இடமாற்ற நியமத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றக் கடிதங்களை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேற்படி சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து கடந்த 20 ஆம் திகதி வழங்கியிருந்தார். யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி க.மகேந்திரன் நல்லூர் சுகாதார […]
US Embassy Warns of Possible Militia Attacks in Baghdad
The U.S. Embassy in Baghdad has issued a security warning, stating that Iranian-aligned Iraqi militias may attack central Baghdad in the next 24 to 48...
அனுமதியின்றி இயங்கும் கடலட்டை பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது
இலங்கையின் கடலட்டைகளுக்கு சர்வதேச சந்தையில் உள்ள மிகச் சிறப்பான வர்த்தக நாமத்தைப் பாதுகாப்பதற்கு, அனுமதியின்றி இயங்கும் பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது என கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் கடலட்டைப் பண்ணைகளுக்குச் […]
யாழில்.1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள்
யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது எனகரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை […]
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு
கிழக்கு இந்தோனேசியாவின் தெர்னேட் நகரத்திற்கு அருகே, வடக்கு மொலுக்கா கடலில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதனை 7.8 ரிக்டர் என பதிவு செய்தது. நிலநடுக்கம் கடலுக்குள் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நடந்தது, மற்றும் மையப்புள்ளி தெர்னேட் நகரத்திலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் பின்னர் அருகிலுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தீவுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் […]
தென்பகுதியை விட வடக்கில் அனுமதிகளைப் பெறுவதில் அதிக தாமதங்கள்
கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில் மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, நீர்வாழ் உயிரினச் செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் […]
Ryan Williams’ Journey to India Debut
Ryan Williams has had a unique and challenging journey in football. Born in Perth, he once represented Australia in an
அமெரிக்க தளத்தை அதிரவைத்த தாக்குதல்; ஈராக்கில் பெரும் பதற்றம்
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. குர்திஸ்தான் பிராந்தியத்தின் தஹுக் மாகாணத்தில் அமைந்துள்ள சர்சாங் எண்ணெய் வயல் மீது ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி தெரிவிக்கின்றது. ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘HKN Energy’ நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அங்கு எண்ணெய் உற்பத்தி […]
India’s Defense Exports Break Record with ₹38,424 Crore in FY 25-26
India achieved a historic milestone in its defense exports during the financial year 2025-26, reaching a record high of ₹38,424 crore. This represents...
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலால் எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று புதன்கிழமை(1) அதிகாலை தெரிவித்தது. குவைத் சர்வதேச விமான நிலையம், ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களால் ஏவப்பட்ட ட்ரோன்களின் அப்பட்டமான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ராஜி கூறியதாக, அரசுக்குச் சொந்தமான குவைத் செய்தி […]
ஏப்ரலில் வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு: ஐரோப்பிய நாடுகளுக்கு IEA எச்சரிக்கை
உலகளவில் ஏப்ரலில் வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் என IEA எச்சரிக்கை விடுத்துள்ளது. வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலக அளவில் ஏப்ரலில் எரிசக்தி விநியோகத்தில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று சர்வதேச எரிசக்தி முகமையின்(IEA) தலைவர் பாத்தி பிரோல் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருப்பதால் மார்ச் மாதத்தை விட ஏப்ரலில் எண்ணெய் விநியோக தட்டுப்பாடு இரண்டு மடங்கு அதிகரிக்கும் என நோர்வே வங்கி […]
வாரிவனம் முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம்!
யாழ்.சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிசேகப் பெருவிழா இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. சிவஸ்ரீ சி.சோதிரத்தினக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிசேக பெருவிழாவில்,50 மேற்பட்ட அந்தணக் குருமார்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும், தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிசேகம் இடம்பெறவுள்ளது. முன்னர் சோழர் காலத்து கட்டடக்கலை அம்சங்களோடு சிறப்புற்று விளங்கிய சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவனாலயத்தின் எல்லையில்,கிராமிய தெய்வமாக வீற்றிருந்து முத்துமாரி அம்மன் அருள் பாலித்து வந்தார். பிற்காலத்தில் போர்த்துக்கேயரால் சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவனாலயம் […]
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததான முகாம்
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். இந்நிகழ்வில் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் , இரத்த வங்கி மருத்துவ அதிகாரி ச. மருதராஜன்,தாதிய மேற்பார்வையாளர், இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மேலும், இரத்த தானம் […]
திருச்சியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய்!
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை, பெரம்பூர் தொகு தியில்
வயல்வெளியில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
வயல்வெளியில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (1) மரணமடைந்தவர் சம்மாந்துறை-10 சாலி வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆதம்பாவா றியால் ஆவார். கடந்த செவ்வாய்க்கிழமை(31) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிக்கு சென்ற நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தர் காணாமல் சென்றிருந்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அல் அமீர் பாடசாலைக்கு பின்புறமாக உள்ள வயல்வெளி பகுதியில் அடையாளம் காணப்படாத […]
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக உள் மாவட்டங்களில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை 900 மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்
கிறிஸ்த்தவத் தொண்டு நிறுவனங்களையும் தேவாலயங்களையும் குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் –எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் திருவாரூர், திருச்சியில் திமுக கூட்டணி
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் –கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் இன்று (ஏப்ரல் 2, 2026) காலை உள்ளூர் நேரப்படி 06:48 மணியளவில் ரிக்டர் அளவில் 7.4 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் இயக்கப்பட இருக்கும் மினி பஸ்கள்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) சார்பில் 220 சிற்றுந்துகள் (Mini Buses) விரைவில் இயக்கப்பட உள்ளன. பணமில்லாப் பரிமாற்றம் மற்றும் நடத்துனர் இல்லாத நவீன வசதிகளுடன்
IMTOF & IPPEX 2026 கண்காட்சி 2026
சென்னை, உலகத் தரத்தில் ஒரு முக்கிய தொழில்துறை நிகழ்வை வரவேற்கத் தயாராக உள்ளது. Madras Machine Tools Manufacturers Association (MMTMA) ஏற்பாடு செய்யும் IMTOF &
தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla). தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி
பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடு: 35 நாடுகளிடையே ஒருமித்த முடிவு!
லண்டன் : பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையிலான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் மொத்தம் 500 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன. அவற்றுள் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுடன் (எல்பிஜி) இந்தியாவுக்கு வர வேண்டிய 19 சரக்கு […]
விரைவில் வெளியேறுவோம்; ஈரான் போருக்கு 2, 3 வாரங்களில் தீர்வு! –டிரம்ப்
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என்றும், அமெரிக்க ராணுவத்தினர் ஈரானை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விரைவில் வெளியேறுவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை […]
எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய நடவடிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியில், உள்நாட்டில் எரிபொருள் விலையை நிலையாகப் பேணுவதற்கு அரசாங்கம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. 2026 மார்ச் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பின்வரும் நிபந்தனைகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது: இதன் இறக்குமதி விலை, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விற்பனை விலையை விட அதிகரிக்கும் பட்சத்தில், எரிபொருள் இறக்குமதி வழங்கும் நிறுவனங்கள் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாய் செலுத்த வேண்டும். மக்களுக்கு […]
யாழ். அல்லைப்பிட்டியில் சிறுவன் கொலை ; குடும்பத்தினருக்கு தொடரும் அச்சறுத்தல்
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி பொலிசார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவன் அல்ஃபினோ அருள்பாய்ஸ் என்பவரின் குடும்பத்தினர், தங்களிடம் அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், அந்நிலையில் மறைமுகமாக பின் தொடரப்பட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் போது, குடும்பத்தினர் மோட்டார் சைக்கிள்களில் அச்சுறுத்திய நபர்கள் பற்றிய ஒளிப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழு யாழ். பிராந்திய அலுவகத்திற்கான அறிக்கையின் பின்னர், த. கனகராஜ், யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விசாரணையை […]
எரிபொருள் கையிருப்பு குறித்து வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இன்று ( 02) 32,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருள் (Jet-A1) அடங்கிய கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6-7 மற்றும் 7-8 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளன. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரங்களுக்குத் […]
திபெத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய […]
ரஷியா ராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி
மாஸ்கோ, கிரிமியா தீபகற்பத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது ரஷியாவின் அன்டோனோவ்-26 ராணுவ விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். விமான விபத்தில் 29 பேர் உயிரிழந்ததை ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. நேற்று அங்கு உள்நாட்டு நேரப்படி மாலை 6 மணியளவில், கிரிமியன் தீபகற்பத்தின் மீது திட்டமிடப்பட்ட பயணத்தில் இருந்த ஏ.ன்-26 ராணுவ போக்குவரத்து விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் ஏ.என்-26 […]
50 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக மனிதர்கள் நிலவுக்குச் செல்கின்றனர்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக முதன்முறையாக, மனிதர்கள் நிலவுக்குப் பயணிக்கின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நான்கு விண்வெளி வீரர்கள் உள்ளூர் நேரப்படி 18:35 மணிக்கு (மத்திய ஐரோப்பிய நேரப்படி 00:35) விண்ணில் ஏவப்பட்டனர். ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் ராக்கெட் அமைப்புடன் கூடிய ஓரியன் விண்கலத்தில் அந்த நால்வரும் உள்ளனர். நெருக்கடி நிறைந்த ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் ஏவுதல், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக முன்னதாகப் பலமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஏவுதலுக்கு முன்பு ஜெர்மன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கெர்ஸ்ட் ஜெர்மன் செய்தி நிறுவனத்திடம், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார். அதே நேரத்தில், அவரது சக விண்வெளி வீரரான மத்தியாஸ் மாரர், இது விண்வெளிப் பயணத்தின் ஒரு முற்றிலும் புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்டார். விண்வெளியிலும், பூமியிலும், அவற்றுக்கு இடையில் உள்ள எல்லா இடங்களிலும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், இப்போது விண்மீன்களுக்கு அப்பாலும் நாம் வெற்றி பெற்று வருகிறோம் என்று ஏவுதலுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் என்ற இணையதளத்தில் கருத்து தெரிவித்தார். 2022-ல் நடைபெற்ற ஆளில்லா 'ஆர்டெமிஸ் 1'பயணத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 'ஆர்டெமிஸ் 2'உருவாக்கப்பட்டுள்ளது. 'ஓரியன்'விண்கலத்தில், அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், அவரது சக அமெரிக்க வீரர்களான விக்டர் குளோவர் மற்றும் ரீட் வைஸ்மேன், மற்றும் கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் அடங்கிய குழுவினர், அந்த விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்புவதற்கு முன்னர் சுமார் பத்து நாட்கள் நிலவைச் சுற்றிப் பறப்பார்கள். இந்தப் பயணம், பூமி மற்றும் சந்திரனைச் சுற்றி ஒரு எட்டு வடிவப் பயணத்தைப் போன்றது. நான்கு விண்வெளி வீரர்களும் மொத்தமாக 23 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தின் மிகத் தொலைவான புள்ளியில், அவர்கள் பூமியிலிருந்து சுமார் 3,70,000 கிலோமீட்டர் தொலைவிலும், சந்திரனின் மறுபக்கத்திற்குப் பின்னால் சுமார் 7,500 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பார்கள். அங்கிருந்து, அவர்களால் ஒரே நேரத்தில் பூமியையும் சந்திரனையும் பார்க்க முடியும் மேலும், மனிதர்கள் இதுவரை பயணித்ததை விட பூமியிலிருந்து மிகத் தொலைவிற்கு அவர்களால் பயணிக்கவும் முடியும். க்ளோவர், கோச் மற்றும் வைஸ்மேனுக்கு இது இரண்டாவது விண்வெளிப் பயணமாகும், ஹேன்சனுக்கு இது முதலாவது. நாசாவின் நிலவுப் பயணத்தில் பங்கேற்ற முதல் பெண் கோச், முதல் வெள்ளையரல்லாத நபர் க்ளோவர் மற்றும் முதல் கனடியர் ஹேன்சன் ஆவர். இதுவரை பன்னிரண்டு அமெரிக்கர்கள் நிலவில் கால் பதித்துள்ளனர். நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார், அவர் ஜூலை 20, 1969 அன்று நிலவில் கால் பதித்தார். நிலவில் நடந்த கடைசி நபர் நாசா விண்வெளி வீரர் யூஜின் செர்னன் ஆவார், அவர் டிசம்பர் 1972-ல் அப்பல்லோ 17 பயணத்தின்போது நிலவில் நடந்தார்; இவர் 2017-ல் காலமானார். 1969 மற்றும் 1972-க்கு இடையில், அப்பல்லோ பயணங்கள் மூலம் மொத்தம் பன்னிரண்டு விண்வெளி வீரர்களை நிலவில் இறக்கிய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. ஓரியன்விண்கலம் பெரும்பாலும் முழுமையாகத் தானியங்கி முறையில் பறக்கிறது. இருப்பினும், சோதனை நோக்கங்களுக்காக, விண்வெளி வீரர்கள் அவ்வப்போது கைமுறையாகவும் அதனை இயக்க வேண்டியுள்ளது. மேலும், அறிவியல் ஆராய்ச்சி உட்பட, எண்ணற்ற சோதனைகள், உணர்விகள் மற்றும் அளவீடுகளின் உதவியுடன் அனைத்து அமைப்புகளையும் தங்கள் உடல்நிலையையும் அவர்கள் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். புகைப்படங்கள் எடுப்பது மற்றும் பூமி, சந்திரன் ஆகியவற்றை ஆய்வு செய்வதும் அவர்களின் பணிகளில் அடங்கும். கிரேக்கப் புராணங்களில் வரும் சந்திர தேவதையும், அப்பல்லோ கடவுளின் இரட்டைச் சகோதரியுமான ஆர்டெமிஸின் பெயரால் அழைக்கப்படும், ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டெமிஸ்திட்டத்தை நாசா 2017-ல் அறிவித்தது. இது முதலில் 2024-க்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்குவதை (ஆர்டெமிஸ் 3) நோக்கமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், அதன் பிறகு பலமுறை இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாசாவின் புதிய தலைவரான ஜாரெட் ஐசக்மேன், சமீபத்தில் 'ஆர்டெமிஸ்'திட்டங்களை முற்றிலுமாக மாற்றியமைத்தார். ஆரம்பத்தில் 2028-ஆம் ஆண்டில் நிலவில் ஒரு குழுவைத் தரையிறக்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்த 'ஆர்டெமிஸ் 3'திட்டம், இப்போது அடுத்த ஆண்டு ஏவப்படவுள்ளது ஆனால் நிலவில் தரையிறங்காது. மாறாக, இந்த விண்வெளிப் பயணத்தின் போது 'ஓரியன்'விண்கலம் ஒன்று அல்லது இரண்டு நிலவுத் தரையிறங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. மேலும், 2028-ல் 'ஆர்டெமிஸ் 4'மற்றும் 'ஆர்டெமிஸ் 5'என இரண்டு நிலவுத் தரையிறங்கும் முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படலாம். நிலவில் மனிதர்கள் நிரந்தரமாகத் தங்குவதும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ஈசா (Esa) உட்பட பல தனியார் விண்வெளி நிறுவனங்களும் சர்வதேச கூட்டாளிகளும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தும் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. ஈசாவின் சேவைத் தொகுதிக்கான பாகங்களை சுவிஸ் நிறுவனங்கள் வழங்கியுள்ளன: சூரியத் தகடுகளை சீரமைப்பதற்கான கட்டுப்பாட்டு அமைப்புகள் சூரிச்சில் உள்ள பியாண்ட் கிராவிட்டி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளன. மேலும், ஏகிள் விடி-யில் உள்ள ஆப்கோ டெக்னாலஜிஸ் நிறுவனம், கட்டுமானம் மற்றும் போக்குவரத்தின் போது சேவைத் தொகுதிக்கு ஆதரவளிப்பதற்காக இயந்திரவியல் தரை உபகரணங்களையும், அத்தொகுதியைப் பொருத்துவதற்கான சுழலும் தளத்தையும் வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக, விண்வெளிப் பயண நாடுகளிடையே நிலவை நோக்கிய ஒரு புதிய போட்டி உருவாகி வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய போட்டியாளர் சீனா ஆகும்; அது 2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்க இலக்கு வைத்துள்ளது. ரஷ்யாவும் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறது, ஆனால் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக ஏற்படும் தாமதங்களால் தவிக்கிறது.
கிரிமியாவில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 29 பேர் பலி!
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதியில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் , அதில் பயணித்த 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தன. சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி, விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களும் 23 பயணிகளும் உயிரிழந்தனர் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி டாஸ் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவும் இந்த விபத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை வழங்கவில்லை. 2026 மார்ச் 31 அன்று, கிரிமியா குடியரசின் பக்சிசரே மாவட்டத்தில் உள்ள குய்பிஷேவோ கிராமத்திற்கு அருகே, பறந்துகொண்டிருந்த ஏஎன்-26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் 7 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் இருந்தனர் என்று அக்குழு தெரிவித்துள்ளது. விமானப் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தளங்கள் மீது 41 தாக்குதல்கள் நடத்தியதாக ஈராக்கிய ஆயுதக் குழு பொறுப்பேற்றது!
அமெரிக்க தளங்கள் மீது 41 தாக்குதல்கள் நடத்தியதாக ஈராக்கிய ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது. ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம், தங்கள் போராளிகள் ஈராக்கிற்குள்ளும் மற்றும் பரந்த பிராந்தியம் முழுவதிலும் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து 41 தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. டெலிகிராம் வழியாக வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், இன்றைய தாக்குதல்களை நடத்துவதற்காக டஜன் கணக்கான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை அக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
4 லட்சம் கிட்கேட் சாக்லேட்டுகளை கொள்ளையடித்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னர், இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட 12 டன் எடையுள்ள 4 லட்சம் அளவிலான கிட்கேட் சாக்லேட்டுகளை லாரியுடன் மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்காக சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான புதிய ‘F1’ வகை சாக்லேட் பார்களை நெஸ்லே நிறுவனம் தயார் செய்துள்ளது. இந்த சாக்லேட்டுகள் ஃபார்முலா ஒன் (F1) கார் பந்தயத்தால் ஈர்க்கப்பட்டு, பந்தயக் கார்களின் வடிவத்தில் வடிவமைத்து, புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு […]
அமெரிக்கா இனி உதவாது: – நட்பு நாடுகளை அதிரவைத்த டிரம்பின் பேச்சு
டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோர்முஸ் ஜலசந்தியால் ஜெட் எரிபொருள் பெற முடியாத இங்கிலாந்து போன்ற, ஈரானின் தலையை துண்டிக்கும் செயலில் தலையிட மறுத்த அனைத்து நாடுகளுக்கும், என்னிடம் ஒரு யோசனை உள்ளது. முதலாவதாக, அமெரிக்காவிடமிருந்து எரிபொருள் வாங்குங்கள், எங்களிடம் ஏராளமாக உள்ளது. இரண்டாவதாக, தாமதமான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஈரானில் உள்ள ஜலசந்திக்கு சென்று, அதை அப்படியே கைப்பற்றுங்கள். உங்களுக்காக நீங்களே போராடக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு உதவி செய்யவில்லை அதைப் போல, […]
ட்ரம்ப் பெயரில் விமான நிலையம் ; எரிக் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் என்ற சர்வதேச விமான நிலையம், இனி ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் மற்றும் தொழிலதிபரான எரிக் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான சட்டமூலம் ஒன்றிற்கு புளோரிடா ஆளுநர் ரான் டிசேன்டிஸ் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக புளோரிடா மாகாண பிரதிநிதி மேக் வெயின்பெர்கர், ஆளுநர் ரான் டிசேன்டிஸ், புளோரிடா அட்டார்னி […]
அமெரிக்கக் கல்வி நிலையங்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!
அமெரிக்கா தனது தாக்குதலுக்கு பகிரங்க மன்னிப்பு கோரவில்லை என்றால், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் லெபனானில் உள்ள அமெரிக்கக் கல்வி நிலையங்கள் ‘முறையான இலக்குகளாக’ (Legitimate Targets) மாற்றப்படும்” என ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. மினாப் பள்ளி மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை (Pentagon) நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது ஒரு ‘தவறான இலக்கு’ (Targeting Error) என்பது தெரியவந்துள்ளது. மாணவர்கள் மீது ஒரு துளி ரத்தம் பட்டாலும் விளைவுகள் […]
மாணவரிடம் அத்துமீறிய அதிபர் கைது
அகுரம்பொடப் பகுதியில், ஒரு மாணவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவர் அதிபரால் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி, 9-ஆம் வகுப்பு பயிலும் அச்சிறுவனின் தந்தை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அதிகார சபையிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மஹாவெலப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்தனர். சம்பந்தப்பட்ட மாணவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
துபாய் கடற்கரையில் குவைத் எண்ணை கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல்
துபாய் , வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இந்தநிலையில் துபாய் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த குவைத்தின் அல்-சல்மி என்ற்ற எண்ணை கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடட்தியது. அந்த கப்பலில் கச்சா எண்ணய் ஏற்றப்பட்டிருந்தது. டிரோன் தாக்குதலால் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் மேல்தளம் கடும் சேதம் அடைந்தது. தீயை அணைக்க கடல்சார் தீய்ணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினார்கள். இந்த தாக்குதலில் […]
தெற்கு லெபனானில் தாக்குதல்; இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலி
டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4 வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. தெற்கு லெபனானில் உள்ள பகுதிகளை இஸ்ரேல் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் படையினரை கொண்டு தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், […]
தமிழர் பகுதியொன்றில் 18 வயது இளைஞனின் விபரீத முடிவால் பெரும் துயரில் குடும்பம்
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது வீட்டிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது. ஏதேனும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பெரிய […]
இலங்கைப் பெண்களின் தலைமுடியில் பாதரசமா; வெளியான பகீர் தகவல்
இலங்கைப் பெண்களின் தலைமுடியில் குறிப்பாக புத்தளம் பகுதியில் வாழ்வோருக்கு பாதரசம் உலோகம் அபாயகரமான அளவில் காணப்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவரும், சிரேஷ்ட ஆலோசகருமான ஹேமந்த விதானகே தெரிவிக்கையில், சூழலிலும் கடல்வாழ் உயிரினங்களிலும் தேங்குவதாகவும் இறுதியில் உணவுச் சங்கிலி ஊடாக மனித உடலுக்குள் நுழைவதற்கும் வாய்ப்பு இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. இது மிகவும் பாரதூரமான நிலையாகும். நுரைச்சோலை, பனியடிய, நாரக்கல்லிய மற்றும் […]
Delhi Capitals Opt to Bowl Against Lucknow
In an exciting IPL match, Axar Patel, the captain of Delhi Capitals, won the toss and decided to bowl first
டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் திடீர் திருப்பம்! வெளியான பரபரப்பு தகவல்!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு செப். 11 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது கழுத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். […]
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி படைத்த வரலாற்று சாதனை
2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் விபரமும் தற்போது வெளியாகியுள்ளன. கல்லூரியின் உத்தியோகபூர்வ பக்கத்தில் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேற்று விபரம் இதன்படி 64 மாணவர்கள் 3A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் 31 மாணவர்கள் 2A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், 21மாணவர்கள் A2B பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். வெளியான பெறுபேறுகளின் படி உயிரியல் விஞ்ஞானப் […]
கல்விக்கு வறுமை தடையில்லை; யாழ் ஊர்காவற்துறை மாணவி சாதனை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio-Technology) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், கிஷானி யாழ். மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27-வது இடத்தையும் பெற்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 10 மாதக் குழந்தையாக இருந்தபோது தந்தை பலி கிஷானி 10 மாதக் குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை கடற்றொழிலுக்குச் சென்ற […]
தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்
இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் விவகாரம் அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா என ஆரம்ப விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் கல்முனை […]
U.K. Ready to Lead Hormuz Opening
U.K. Prime Minister Keir Starmer announced the country’s willingness to take a leading role in reopening the Strait of Hormuz. He also revealed plans ...
Arjun Tendulkar Shares His Struggles; ‘I Had Two Stress Fractures
Growing up as Sachin Tendulkar’s son comes with its own challenges. While外界 often compares Arjun’s achievements to his father’s legendary career, the ...
ஃப்ரிட்ஜுக்குள் இளம்பெண்ணின் உடல்: திடுக் பின்னணி
காதலியைக் கொலை செய்து அவரது உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் அடைத்த நபர் ஒருவர், பொலிசில் சரணடைந்துள்ளார். ஃப்ரிட்ஜுக்குள் இளம்பெண்ணின் உடல் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மௌனிகா (29). ராஜம் என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் Ch ரவீந்த்ரா (35) என்னும் நபருக்கும் மௌனிகாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்திய கடற்படையில் டெக்னீஷியனாக பணி புரிந்துவரும் ரவீந்த்ரா, தன் மனைவி அவரது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில், மௌனிகாவை தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், […]
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிர்ந்த குண்டுவெடிப்பு வீடியோவால் பரபரப்பு
வாஷிங்டன் டி.சி. ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் […]
பா. ஸ்ரீகுமார் பூமியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது நிலவு. இந்த நிலவைச் சுற்றிவர அமெரிக்க விண்வெளி வீரர்களைத் தயாராக்கி வருகிறது ‘நாசா’. நிலவை ஆய்வுசெய்யும் தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதன்கிழமை (ஏப்.1) (அமெரிக்க நேரம் மாலை 6.24 மணி- இந்திய நேரம் ஏப்ரல் 2, அதிகாலை 3.54 மணி) விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது. 1972-ஆம் […]
சம்மாந்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் தீவிர விசாரணை
வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01) மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா ரியால் என்பவராவார். இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் காணப்பட்ட போதிலும் […]
நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா
நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் அதிகாலை 4.00மணி தொடக்கம் வழிபாடுகள் ஆரம்பமாகி, பரிவார யாகசாலைகளில் 10ஆம் கால யாகபூஜை நிறைவு பெற்று, தொடர்ந்து விநாயகர், சிவன், அம்பாள் யாகசாலை உபசார பூஜையுடன் பிரதான கும்பங்கள் வீதியுலா கொண்டுவரப்பட்டு தூபிகள் அபிஷேகிக்கப்பட்டதும் கைலாச விநாயகர், கைலைநாயகி சமேத கைலாசநாதர், பஞ்சமுக கணபதி, ஸ்கந்தப்பெருமான் உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம் நிகழ்ந்தது. தொடர்ந்து தசதர்சனம், ஆசீர்வாதம் என்பனவும் இடம்பெற்றன. […]
இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம்
இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு யூதா்களைக் கொலை செய்யும் பாலஸ்தீனா்களுக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டம், சா்வதேச அளவில் கண்டனங்களையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், இச்சட்டத்துக்கு ஆதரவாக 62 வாக்குகள் கிடைத்தன. இப்புதிய சட்டத்தின்படி, மேற்கு கரை பகுதியில் உள்ள ராணுவ நீதிமன்றங்களில் தண்டனை பெற்ற பாலஸ்தீனா்களுக்கு மரண தண்டனை மட்டுமே முதன்மைத் […]
அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)###################### புங்கையூர் செல்வியே,புன்சிரிப்பு நாயகியேஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய்ஒளி வீசும் அற்புதமே.. மேல்மருவட்டத்தூர் அம்மன் மீது,பேரன்பு கொண்டு வாழும்சுதாகரன் செலவியரே.. இன்றைய பிறந்தநாளில்இங்கிதமான நல் வாழ்த்துக்கள்.. இன்றைய நாளில் சுவிஸ் நாட்டில் பிறந்தநாள் காணும் செல்வி என அன்பாக எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி. சுதாகரன் கிருபாதேவி அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” மழலைகளுக்கு கற்றல் உதவி […]
அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்காவைச் சார்ந்த பெரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களைக் குறிவைத்து ஏப். 1 முதல் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்கி வருகிறது. அதேபோல், ஈரானிலுள்ள உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்கி […]
ஈரானிலிருந்து இந்தியா வரவிருந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரானின் மஷ்ஹாத் விமான நிலையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், இந்தியாவுக்கு வரவிருந்த விமானம் சேதமடைந்தது. இந்த தாக்குதல் ஈரானுக்கான மனிதாபிமான உதவி பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த விமானம், ஈரானிய மக்களுக்கான அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் இதர உதவிகளைப் பெற்று செல்வதற்காக ஏப்ரல் 1-ஆம் திகதி புதுடெல்லிக்கு வரவிருந்தது. முன்னதாக, மார்ச் 18 அன்று இந்தியா தனது முதல் தவணை மருத்துவ உதவிகளை ஈரான் செஞ்சிலுவை […]
இன்று முதல் மின்சாரக் கட்டணம் அதிரடி உயர்வு ; வெளியான முழுமையான விபரங்கள்
நாட்டில் இன்று முதல் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான கட்டணங்களும் வெவ்வேறு விகிதங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர் முதல் அதிகப்படியான பாவனையாளர்கள் வரை அனைவருக்குமே இந்தக் கட்டண உயர்வு சுமையை ஏற்படுத்தியுள்ளது: 30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 – 60 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, […]
முல்லைத்தீவில் இருந்து மருத்துவ துறைக்கு தெரிவான இஸ்லாமிய மாணவி; பலரும் வாழ்த்து
முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியதாக வைத்திய துறைக்கு பல்கலைகழகம் தெரிவான முதலாவது இஸ்லாமிய தமிழ் மாணவி NIDHA FATHIMA இற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. அந்தவகையில் நேற்று நள்ளிரவு வெளியான 2025 ஆண்டிற்கான கா.பொ.த உயர்தர பரீட்சை பேருபேறுகளில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி M.NIDHA FATHIMA முல்லைத்தீவு மாவட்ட நிலை – 01 ஆம் இடத்தையும் , தேசிய நிலை – 207 ஆம் இடத்தையும் பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார். இந்நிலையில் நீண்டகாலத்திற்கு பின்பு முல்லைத்தீவு மகா […]
A/L பெறுபேறுகள் : உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற கொழும்பு மாணவன்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (31) இரவு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியதுடன், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை, […]
இன்று முதல் தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!
சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் பாட்டில்கள் வீசிய இருவர் கைது!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில
போரை விரைந்து முடிக்க பெரிய குண்டுகள் தேவை: அமெரிக்க பாதுகாப்புத் துறை
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க படைகளுக்கு பெரிய குண்டுகள் வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். தங்கள் குழந்தைகளுக்காகவும், பேரக் குழந்தைகளுக்காகவும் இந்த வீரர்கள், போரை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஆதரவு பெற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் […]
வணிக சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு!
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளன.
நேற்று நள்ளிரவு வெளியான 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. அதேவேளை 30, 898 பரீட்சாத்திகள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. […]
லெபனானில் குண்டுவெடிப்பு: அமைதி காப்பாளர்கள் 2 பேர் பலி; பலர் காயம்
பெய்ரூட் லெபனான் நாட்டில் ஐ.நா.வின் அமைதி காப்பாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது. அவர்கள் வாகனத்தில் சென்றபோது பனி ஹய்யன் என்ற இடத்திற்கு அருகே அடையாளம் தெரியாத இடத்தில் இருந்து குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. இதில், அந்த வாகனம் வெடித்து, உருக்குலைந்து போனது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த அமைதி காப்பாளர்கள் 2 பேர் சிக்கி படுகாயம் அடைந்து பலியானார்கள். இதுதவிர ஒருவருக்கு பலத்த காயமும், மற்றொரு நபருக்கு காயமும் ஏற்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 2-வது […]
வர்த்தகத் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்
வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சுபைதீன் முஹமட் பர்தான் அகில இலங்கை ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் வர்த்தகத் துறையில் முதலிடம் பெற்றுள்ளது அம்மாணவனுக்கும் இந்த வெற்றியில் பங்கெடுத்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. பரீட்சை திணைக்களத்தின் […]
அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குங்கள்; இல்லையேல் போரிடுங்கள்! –அதிபர் டிரம்ப்
அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையெனில் ஈரானுடன் போரிட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஈரானுக்கு எதிரான போரில் எங்களுக்கு உதவாத பிரிட்டனைப் போன்று ஹோர்முஸ் நீரிணை வழியாக ஜெட் எரிபொருள்கள் கிடைக்காத நாடுகளுக்கு என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. முதலாவதாக நீங்கள் எங்களிடமிருந்து (அமெரிக்கா) எண்ணெய்யை வாங்கிக்கொள்ளுங்கள். எங்களிடம் […]
என் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று! –பேராசிரியர் அசோக் கே.சுந்தரமூர்த்தி
சென்னையில் நடைபெற்ற ‘திரைமொழி’ மாத இதழ் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியர் அசோக் கே.சுந்தரமூர்த்தி, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநரும் பெப்ஸி தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறிய
பீகாரில் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
புதுடெல்லி, பீகார் மாநிலம் நாளாந்தா மாவட்டத்தில் உள்ல ஷீத்லா கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்காக மக்கள் அதிகளவில் கூடி இருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் பெண்கள் என தெரியவந்துள்ளது. உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். […]
VAT வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அனைத்து VAT வரிப் பதிவுதாரர்களும் பின்பற்ற வேண்டிய புதிய வரிப்பட்டியல் (Tax Invoice) வடிவம் மற்றும் அதன் விபரங்கள் தொடர்பான நடைமுறைப்படுத்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதியிடப்பட்ட 2463/05 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, புதிய வரிப்பட்டியல் நடைமுறைகள் 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தது. எனினும், தற்போது இந்த திகதி 2026 ஜூலை […]
காணொளி ஆதாரத்தால் சிக்கிய முச்சக்கர வண்டி சாகசம் ; போதையில் இரு இளைஞர்கள் கைது
கம்பஹா, வெலிவேரிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (30) நெடுங்கமுவ முதல் மீகஹவத்த வரையிலான பிரதான வீதியில், முச்சக்கர வண்டியை ஆபத்தான முறையில் செலுத்தி இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடும் காணொளி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து மேலாண்மை மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதிப் காவல்துறை மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. […]
தேனி, மேகமலை வழிவிடும் முருகன், காவல் காக்கும் கௌமாரி அம்மன்! - சுற்றுலாவுடன் ஒரு தரிசனம்!
கோடைகாலத்துக்குச் சுற்றுலாவும் செல்ல வேண்டும்... அதேவேளையில் இறை தரிசனமும் செய்ய வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும். அதில் இருந்து விலகி கொஞ்சம் இயற்கையோடு சுத்தமான காற்றை சுவாசிப்பதோடு மலை கிராம மக்களின் தெய்வங்களை தரிசிப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். அப்படி ஒரு தலம் தான் மேகமலை. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது, மேகமலை. சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதி எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் மலை என்பதால் ‘மேகமலை’ என்றானது. மேகமலை தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு மலைப்பாதை வழியாகத்தான் செல்ல முடியும். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தூரத்துக்கு தேயிலைத் தோட்டங்கள். மேகமலை செல்ல சின்னமனூரிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை பேருந்து வசதி இருக்கிறது. கட்டணம் சுமார் 20 ரூபாய். காரில் செல்பவர்களுக்குக் கொஞ்சம் கடினம்தான். வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் கார் ஓட்டிப் பழக்கம் இல்லாதவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஜீப் போன்ற வாகனங்கள் பயணிக்க உதவும். இப்படிப்பட்ட கடினமான மலைப்பயணத்தில் நாம் முதலில் தரிசிப்பதே, ‘வழிவிடும் முருகன்’ திருக்கோயிலைத்தான். இவரை தரிசித்துச் சென்றால் மலைப்பாதையில் வரும் ஆபத்துகளைப் போக்கிப் பயணத்தைப் பாதுகாப்பாக ஆக்குவார் என்பது நம்பிக்கை. முற்காலத்தில் மலைமேலே உள்ள டீ எஸ்டேட்களுக்கு அடிவார கிராமங்களிலிருந்து மக்கள் சென்று வருவார்கள். ஆங்கிலேயர்களின் காலத்தில், மலையில் பாதை அமைக்கும் போது ஒரு பெரிய பாறையை உடைக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் பணியைச் செய்யமுடியாமல் தொடர்ந்து தடைப்படவே அந்தப் பாறை தெய்வ சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து அதை வணங்கத் தொடங்கினர் மக்கள். 1983-ம் வருடம், சித்திரா பௌர்ணமியன்று இந்த இடத்தில் முருகன் சிலையுடன் சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து, முருகனுக்கு, ‘வழிவிடும் முருகன்’ என்ற பெயரும் வைத்து வழிபடத் தொடங்கினார்கள் ஊர் மக்கள். கல்யாணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என்று எல்லோரின் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் வரப்பிரசாதியான கடவுள், இந்த வழிவிடும் முருகன் என்கிறார்கள் பக்தர்கள். இங்கே ஒரு வித்தியாசமான வேண்டுதல் உண்டு. ஏதேனும் வேண்டுதலை நினைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள், சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளுக்கு அருகே இரண்டு கைகளையும் வைத்து, கண்களை மூடிக்கொள்ளவேண்டும். சிறிது நேரத்தில், சிவலிங்கத்தின் அருகிலிருக்கும் கையும் நாகர் சிலைக்கு அருகிலிருக்கும் கையும் (வணக்கம் வைப்பது போல்) ஒன்றுசேர்ந்து விட்டால் வேண்டிக்கொண்டது நிறைவேறும் என்பது ஐதிகம். வழிவிடும் முருகன் கோயிலின் அருகே, மலைக்கு மேல் போகிற வாகனங்களுக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று வேண்டிக்கொண்டு, பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள். மேகமலை முருகன் ஒரு த்ரில்லிங்கான பயணம் மேகமலை முருகன் கோயிலை அடையப் பல கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை வழியாகப் பயணிக்க வேண்டும். போகப் போக 20 அடிகளாகக் குறுகிவிடுகிறது பாதை. பேருந்து மெள்ள மெள்ள ஊர்ந்துதான் செல்லவேண்டும். ஒரு நேரத்தில் ஒரு வண்டி மட்டும்தான் செல்ல முடியும். சாலையை ஒட்டி காணப்படும் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளும் வனத்தின் அழகும் நம்மை ஆச்சரியப்படவைப்பதுடன், சற்றே அச்சம் கொள்ளவும் வைக்கின்றன. ஆனால், வழிவிடும் முருகப்பெருமானின் கருணையால், இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார்கள் ஊர் மக்கள். சுமார் ஒரு மணி நேர மலைப் பாதைப் பயணத்துக்குப் பிறகு மேகமலையின் தொடக்கத்திலேயே நம்மை வரவேற்கிறது அருள்மிகு கௌமாரியம்மன் கோயில். இங்குள்ள கௌமாரி என்பவள் அம்பிகையின் அம்சமாகத் தோன்றிய சப்தகன்னியரில் ஒருத்தி. முருகனின் சக்தி என்று போற்றப்படுபவள். ஆங்கிலேயர் காலத்தில் இந்த மலையைச் சரி செய்து தேயிலைத் தோட்டம் அமைக்க, தேனியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்களை இந்த மலைக்கு அழைத்து வந்தார்கள். தங்கள் சொந்தபந்தங்களை, ஊரை, சாதிசனத்தை விட்டு விட்டு இந்தக் குளிரிலும், காட்டு விலங்குகளுக்கு மத்தியிலும் வாழ்ந்த அந்த மக்கள், தாங்கள் சாமி கும்பிட ஒரு கோயில் வேண்டும் எனக் கேட்டார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்ற ஆங்கிலேய அதிகாரியான டைமண்ட் என்பவர், மக்களின் தெய்வமான கௌமாரி அம்மனுக்கு இந்தக் கோயிலைக் கட்டிக்கொடுத்தார். அன்றுமுதல் இன்றுவரை மக்களுக்கு அருள்பாலிக்கிறாள் அன்னை கௌமாரி. இங்குள்ள மக்கள் சாதி பார்ப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தால் போதும், நேராக இந்தக் கோயிலுக்கு வந்து தாலி கட்டி எளிமையாகக் கல்யாணத்தை முடித்துக்கொள்வார்கள். சித்திரையில் திருவிழா களைகட்டும். அப்போது, மேகமலையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கே கூடிவிடுவார்கள். இந்த மக்களுக்கு நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் துணையாக இருப்பவள் இந்தக் கௌமாரிதான். மேகமலை வழிவிடும் முருகன் கோயில் கௌமாரியம்மனை வழிபட்டுவிட்டு, தொடர்ந்து மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு போன்ற பகுதிகளுக்கும் சென்று இயற்கையெழிலைக் கண்குளிரக் காணலாம். சின்னமனூரிலிருந்து சில சிற்றூர்களைக் கடந்து சென்றால், தென்பழநி வனப்பகுதி செக்போஸ்ட் வரும். இந்த செக்போஸ்டில் உள்ள அதிகாரிகளிடம், சுற்றுலா செல்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தால்தான், வனப்பகுதிக்குள் நுழைய அனுமதி கொடுப்பார்கள். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால், காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கிறார்கள். வாய்ப்பிருப்பவர்கள் மேகமலை சென்று வழிவிடும் முருகனையும் காத்தருளும் கௌமாரியையும் தரிசனம் செய்வதோடு இயற்கை எழிலையும் கண்டு ரசித்து வாருங்கள். இந்தக் கோடையில் மனமும் உடலும் குளுமையாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, 2 பேர் பலவீனப்படுத்து கிறார்கள். இதனால், ருதுராஜ் கெய்க்வாட், மகேந்திரசிங் தோனி ஆகியோர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இருப்பினும், நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை.
சிலிண்டர் விலை உயர்வு... கலக்கத்தில் பொதுமக்கள்- சென்னையில் பல ஹோட்டல்கள் மூடல்
போர்ச் சூழலால் வணிக சிலிண்டர் விலை உயர்வால் சென்னையில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு உள்ளது
க.பொ.த உயர்தரத்தில் அகில இலங்கை முதல் இடம் பெற்ற தமிழ் மாணவன்
2025ஆம் ஆண்டுக்கான க.பொ. த உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் (physical science) கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார். இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கும் பள்ளிக்கல்வி சூழலுக்கும் பெருமையூட்டும் தருணமாகும். பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகியவற்றுக்குச் சென்று, பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
2025 (2026)ஆம்ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அதன்படி, தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.doenets.lk/examresults www.doenets.lk குறித்த பரீட்சையில் மொத்தம் 281,810 விண்ணப்பதாரர்களில், 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதேநேரம், 111 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 22 வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் மிகப் பெரிய ராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு ராணுவங்களும் சேர்ந்து கடந்த பிப். 28 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. 5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு […]
மியான்மா் ராணுவத் தளபதி ராஜிநாமா: அதிபராகும் முயற்சியில் தீவிரம்
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவத் தளபதி மின் ஆங் லயிங் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். மியான்மரில் கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ராணுவ ஆதரவு பெற்ற யுஎஸ்டிபி கட்சி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஜனநாயக வெற்றி மூலம் நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கும் முயற்சியில் மின் ஆங் லயிங் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. எனினும், மியான்மா் […]
நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 20 போ் உயிரிழப்பு
நைஜீரியாவின் வடக்கு மத்திய பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 20 போ் உயிரிழந்தனா். பீடபூமி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல், குடியிருப்புப் பகுதிகளில் சரமாரியாகச் சுட்டதில் பலா் காயமடைந்தனா். சம்பவ பகுதியில் பதற்றம் நிலவுவதால், மேலும் வன்முறை பரவாமல் தடுக்க, அங்கு 48 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. தப்பியோடிய மா்ம கும்பலைத் தேடும் பணி நடைபெறுகிறது.
ஈரான் போரில் ஈடுபடும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியில் பறக்கத் தடை!
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்க விமானங்களுக்குத் தடை விதித்து ஸ்பெயின் உத்தரவு. ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசு தடை விதித்துள்ளது. இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபல்ஸ், “ஈரான் போர் தொடர்பாக ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதியில்லை” என்று தெரிவித்தார். ஸ்பெயின் வான்வெளி அனுமதி மறுத்ததால் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் அமெரிக்க […]
இலங்கையில் ஒன்லைன் முறைக்கு மாறும் மற்றொரு சேவை
அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய மத்திய மின்னணுவியல் கட்டமைப்பு இன்று (31) முதல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இது குறித்துத் தெரிவிக்கையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், இந்த மத்திய மின்னணுவியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டமைப்பு இன்று முதல் சொத்து மற்றும் […]
ஈரான் போரில் பிரித்தானியா நேரடியாக பங்கேற்காது: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதி
ஈரான் உடனான போரில் பிரித்தானிய கலந்து கொள்ளாது என்று அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். பிரித்தானியாவின் போர் இல்லை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இராணுவ நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். நேட்டோ உறுப்பு நாடுகள் இந்த போரில் கலந்து கொள்ள முன்வராத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேட்டோ உறுப்பு நாடுகள் மீது கடும் கண்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் போரில் […]
ஈரானில் தொடரும் டிஜிட்டல் இருள் ; இரண்டாவது மாதமாக இணையத் தடை நீடிப்பு
ஈரானில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நாடு தழுவிய இணையத் தடை தற்போது இரண்டாவது மாதத்தில் கால்பதித்துள்ளதாக இணையக் கண்காணிப்புக் குழுவான நெட்பிளாக்ஸ் (NetBlocks) தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஈரான் அதிகாரிகள் சர்வதேச இணைய இணைப்பைத் துண்டித்தனர். தற்போது 30 நாட்களைக் கடந்து, 5-ஆவது வாரமாக இந்தத் தடை நீடிக்கிறது. இதனால் சுமார் 9 கோடி […]

33 C