ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!
ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்குவதைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகள் மீதும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். போராட்டங்களுக்கு இடையே மக்கள் 2,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்கா அறிவித்துள்ள இந்தத் திடீர் வரி, ஈரானுக்குப் புதிய நெருக்கடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தனது “ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரானுடன் […]
அரச அலுவலகம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பதுளை மாவட்ட செயலகத்தில் மூன்று குண்டுகள் இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை ஏற்ற பொலிஸார் ஊழியர்களை வெளியேற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு முன்னர் குண்டுகள் வெடிக்கும் என்று அழைப்பு விடுத்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் குண்டுகள் இருந்ததாக மேலும் கூறப்பட்டது.
திருகோணமலையில் புத்தர் ; தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலை கடற்கரை பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக 10 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட நான்கு பௌத்த தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்களையும், விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
VIBE-ல் இருக்கும் முதல்வர் ஸ்டாலின்.. அந்தப் பதவிக்கே ஒரு இழுக்கு.. மு.க.ஸ்டாலினை விமர்சித்த ஈபிஎஸ்!
ஆசிரியர் கண்ணனின் மறைவு, ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாலும் உருவான வேதனை என கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மேலும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
594 கி.மீ. கங்கை எக்ஸ்பிரஸ்வே.. எப்போது திறப்பு தெரியுமா? இந்தியாவின் நீளமான விரைவுச்சாலை இதுதான்!
கங்கை எக்ஸ்பிரஸ்வே திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு, உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் இருந்து கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் பயண நேரம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா 75 நாடுகளுக்கான விசா நடைமுறைகளை நிறுத்த தீா்மானம்
அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, சுமார் 75 நாடுகளுக்கான விசா நடைமுறைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க… The post அமெரிக்கா 75 நாடுகளுக்கான விசா நடைமுறைகளை நிறுத்த தீா்மானம் appeared first on Global Tamil News .
Network18 Operating Revenue Up 5% to ₹500 Crore in Q3 FY26 Despite Ad Slump
Mumbai : Network18 reported a resilient performance with operating revenue rising 5% year-on-year to ₹500 crore in Q3 FY26, compared with ₹477.2 crore in Q2 FY26, despite continued weakness in the macro advertising environment. Financial Performance* Rs(Cr) Q3FY26 Q2FY26 Q3FY25 YoY QoQ 9MFY26 9MFY25 YoY News Business Operating Revenue 500.4 477.2 476.4 5.0% 4.9% 1,408.0 1,374.5 2.4% News Business Operating Expense 488.6 469.8 464.8 5.1% 4.0% 1,384.6 1,353.3 2.3% News Business Operating EBITDA 11.8 7.4 11.6 2.2% 60.7% 23.4 21.1 10.6% Operating EBITDA margin 2.4% 1.5% 2.4% 1.7% 1.5% *Above numbers are for Network18 Standalone entity and do not include Marathi news channel (News18 Marathi, subsidiary), Fintech business (Moneycontrol Dot Com India Limited, subsidiary), and History TV18 (AETN18, subsidiary) The growth comes at a time when advertising inventory demand for the TV news industry declined by over 10% YoY. Network18, however, limited the impact through a significantly lower decline in inventory utilisation, supported by its strong market positions and a diversified portfolio across languages and platforms.For the first nine months of the financial year, Network18 posted 2.4% revenue growth despite a high base from election-related advertising, reinforcing its resilience and leadership as India’s No.1 news network.In view of the soft revenue environment, Network18 maintained prudent control on expenses, resulting in operating costs also growing only marginally during this period.Commenting on the performance, Adil Zainulbhai, Chairman of Network18, said, “Once again we have demonstrated that we continue to defy industry trends by delivering a resilient performance amidst a challenging macro environment. We hope that the positive steps taken by the government over the last few months to boost consumer spending will translate into increased consumption which will benefit companies like ours. Meanwhile we continue with our unwavering focus on strengthening our position as India’s premier news destination.” During the period, Network18 made significant strategic moves to deepen its market leadership.The company expanded Creator18, its newly launched creator-led advertising vertical, growing its roster to more than 60 exclusive creators. The top 10 creators in the portfolio together deliver an unduplicated reach of over 2 billion. It helps brands like Swiggy, Quillbot, OpenAI, and Samsung to build audience outreach on social platforms. Creator18 is also powering content on Network18. Its first creator-led show, ‘ Viral Baat Raunac Ke Saath’, aired on News18 India and garnered over 3 million views on YouTube.Earlier this month, Network18 renewed its long-standing partnership with CNN International for another 10 years, reinforcing its stronghold in the English news segment.Meanwhile, Moneycontrol remained a key growth driver, delivering double the page views and over three times the time spent compared to its nearest competitor during the quarter. Moneycontrol Pro crossed one million paid subscribers, reinforcing its position as India’s largest digital news subscription platform. The premium, intelligence-led Moneycontrol Super Pro continued to gain strong consumer traction, steadily expanding its subscriber base. During the quarter, Moneycontrol’s lending business also recorded sharp growth, further supporting overall performance.The network maintained its position as India’s number one news network, with TV viewership share rising by 110 bps YoY to 14.2%. On digital platforms, Network18 reached approximately 300 million users every month, making it the largest digital news and information network in the country. ( Source: BARC, TG: 15+ | Market: All India | Wk’52’25 vs Wk’52’24; Comscore Total Digital Population Report, Nov’25) Across television, Network18 continued to lead in Hindi, English, Marathi and Kannada markets, while retaining strong positions in Bengali and several Hindi-speaking regional markets. Its portfolio of 20 news channels, including 14 regional channels, remains the largest in India, reaching over 230 million viewers every month, around 45% higher than the nearest competitor, and commanding an all-India TV viewership share of 14%. ( Source: BARC | Market: India, News Genre | TG: 15+ | Week 49’25-52’25 )Within key news genres, CNBC-TV18 retained its position as the No.1 business news channel with a 43%+ viewership share, while News18 India remained the leading Hindi news channel with a 13.2% share. CNN-News18 continued to dominate the English news genre with a 36.1% share.( Source: BARC | Market: 10L+ | TG: NCCS AB, Male 22+ | Mon-Fri, 0800 -1600 | Week 49’25-52’25 ; BARC | Market: HSM | TG: 15+ | Week 49’25-52’25 ; BARC | Market: India | TG: NCCS AB 15+ | Week 49’25-52’25) Regionally, the network led the Marathi market with 28.5% share and the Kannada market with 24.9% share, while maintaining strong traction in West Bengal and other Hindi-speaking regions. (Source: BARC | Market: Mah/Goa, Karnataka | TG: NCCS AB 15+ | Week 49’25-52’25) On the digital front, Network18 strengthened its leadership, remaining the largest digital news network on YouTube with over 100% YoY growth and more than 2.5x ( Source: Playboard, Social Blade, Oct’25-Dec’25 ) the video views of its nearest competitor, reinforcing its dominance across platforms.
உலகளவில் மிக ஏழ்மையான நாடுகள் எவை தெரியுமா? இந்த வறுமைக்கு இதுதான் காரணம்!
ஆதிக்கத்தின் தாக்கங்கள், ஊழல், பலவீனமான நிர்வாக அமைப்புகள், உள்நாட்டு மோதல்கள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள், கடன் சுமை போன்றவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து, நாடுகளை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகின்றன.
Vaa Vaathiyaar Public Review | FDFS | Karthi, Krithi Shetty | Nalan Kumarasamy | Santhosh Narayanan
Iran Protest: மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம்! என்ன செய்ய வேண்டும் | IPS Finance - 411
Mahindra’s Suspension Secrets Revealed | Mr. Velusamy (President – Automotive, M&M) | XUV 7XO
2 முறை No சொன்ன Rahul - Upset Stalin? | Modi Pongal விழாவில் Parasakthi படக்குழு! | IPS Vikatan
பராசக்தி : மதுரையில் உண்மையில் என்ன நடந்தது? | மாப்பிள்ளை விநாயகர் Soda கதிர்வேல் Interview
அருண் சித்தார்த்தின் அலுவலக கதவுக்கு தீ வைப்பு –விசாரணைகளை ஆரம்பித்துள்ள தடயவியல் பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாவடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் அமைத்துள்ள இரண்டு கடைகளை கொண்ட கடைத்தொகுதிக்கு இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை தீ வைக்கப்பட்டுள்ளது. இரு நபர்கள் கதவுக்கு தீ மூட்டி விட்டு தப்பி செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. பூட்டப்பட்டிருந்த இரும்பு கதவுகளுக்கே தீ வைக்கப்பட்டமையால் ,பெரியளவிலான சேதங்கள் […]
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி.. வரும் தேர்தலில் வேட்பாளர்கள் மாற்றமா? என்ன சொல்றீங்க?
கடையநல்லூர் தொகுதியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு பக்கம் அதிமுக –மறு பக்கம் திமுக தலைமையிலான கூட்டணி என்ற இருமுனைப் போட்டியாக மாறும் சூழல் உள்ளது.
அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் –ஈரான் அதிரடி எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை… The post அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – ஈரான் அதிரடி எச்சரிக்கை! appeared first on Global Tamil News .
45 சவரன் தங்க நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்; நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி உரிமையாளர்
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான திருமதி பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்ததற்காக, லலிதா ஜுவல்லரி உரிமையாளர் டாக்டர் எம்.கிரண் குமார், அவரை வீட்டிற்கு அழைத்து கௌரவித்தார். நேர்மையை போற்றிய லலிதா ஜிவல்லரி அதிபர் “இத்தகைய மனிதர்களே நமது சமுதாயத்தின் முன்மாதிரிகள். அவர்களை கௌரவித்து கொண்டாடுவது நமது கடமை, என்று கூறிய அவர், தனது பாராட்டின் அடையாளமாக ஒரு வெள்ளித் தட்டை பரிசாகவும் வழங்கினார். இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வதற்கு மிகுந்த நேர்மையும், உண்மையும் தேவை. இவ்வளவு உயர்ந்த பண்புகள் கொண்ட ஒருவரை வீட்டிற்கு அழைத்து சந்தித்தது, எனக்கு தனிப்பட்ட முறையில் பெருமையாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
வயிற்றுப் பரிசோதனையில் புதிய புரட்சி: வெறும் 8 நிமிடங்களில் AI மாத்திரை சிகிச்சை!
இனி எண்டோஸ்கோபி (Endoscopy) செய்ய பயப்படத் தேவையில்லை! சீனாவின் புதிய AI-அடிப்படையிலான கேப்சூல் (Capsule) தொழில்நுட்பம் வயிற்றுப்… The post வயிற்றுப் பரிசோதனையில் புதிய புரட்சி: வெறும் 8 நிமிடங்களில் AI மாத்திரை சிகிச்சை! appeared first on Global Tamil News .
முக்கிய அறிவிப்பு: ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு 11 நாடுகள் அறிவுறுத்தல்!
ஈரானில் நிலவி வரும் தீவிர உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, அங்கு தங்கியிருக்கும் தங்களது நாட்டுப்… The post முக்கிய அறிவிப்பு: ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு 11 நாடுகள் அறிவுறுத்தல்! appeared first on Global Tamil News .
ஈரானின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் ; ஜேர்மனி
ஈரானில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பு அரசாங்கத்தின் வீழ்ச்சியை காட்டுவதாக ஜேர்மனி விமர்சித்துள்ளது. ஈரானின் ஆட்சி அதன் “இறுதி நாட்கள்களில் இருப்பதாக ஜேர்மனி சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார். வன்முறை மூலம் மட்டுமே ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும் என்றால், அந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் தற்போது இடம்பெற்று போராட்டங்களில் அமெரிக்கா தலையிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி சந்தி: பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்யக் குவிந்த பொதுமக்கள்.
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியில் வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.
⚡ மின் கட்டண அதிகரிப்பு கோரிக்கை நிராகரிப்பு
இலங்கை மின்சாரப் பயனாளர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை உயர்த்துவதில்லை என… The post ⚡ மின் கட்டண அதிகரிப்பு கோரிக்கை நிராகரிப்பு appeared first on Global Tamil News .
“அகன்று செல் “: போதைக்கு எதிரான விழிப்புணர்வு
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், “அகன்று செல்” (Go Away) எனும் தொனிப்பொருளில்… The post “அகன்று செல் “: போதைக்கு எதிரான விழிப்புணர்வு appeared first on Global Tamil News .
விஷம் அருந்திய பகுதி நேர ஆசிரியர் உயிரிழப்பு - ஆசிரியர் போராட்டத்தில் சோகம்!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி பகுதி நேர ஆசிரியர் கண்ணன், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார்.
'சாரிடான் மாத்திரைதான் மிச்சம்' - பராசக்தி படத்தைக் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் எம்.பி கார்த்தி் சிதம்பரம் விமானம் கோவை நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று. அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது நம்முடைய அரசியல் சாசனத்திற்கும், நம் ஆட்சி முறைக்கும் எதிரானது. கார்த்தி சிதம்பரம் அடிக்கடி தேர்தல் நடைபெறும் போது, மக்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருப்பார்கள். இல்லையென்றால் மெத்தனப்போக்கோடு இருப்பார்கள்” என்றார். அப்போது “பராசக்தி படம் பார்த்தீர்களா” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கார்த்தி சிதம்பரம், “சாரிடான் மாத்திரை தான் மிச்சம். நான் பராசக்தி, ஜனநாயகன் ஆகிய 2 படங்களையும் பார்க்க போவதில்லை. திரைப்படத்தின் மூலம் தமிழ்நாடு அரசியலை நிர்ணயம் செய்ய நினைத்தால் தவறு. பராசக்தி படம் வரலாற்று படமா. பராசக்தி சரித்திரத்தைப் படித்தவர்களும், ஆராய்ச்சி செய்தவர்களும் தான் இந்த படத்தை எடுத்துள்ளார்களா. பராசக்தி படக் குழுவினர் டெல்லி பொங்கல் விழாவில் கலந்து கொள்ளட்டும் அல்லது ஆஸ்கர் விருதுக்கு கூட பரிந்துரைக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. எந்தக் கட்சி ஆட்சி அதிகாரம் வேண்டாம் என்று தேர்தலில் நிற்கிறார்கள். அதற்காக தானே தேர்தலில் நிற்கிறார்கள். நியாயமான பிரச்னை எதுவாக இருந்தாலும் ராகுல் காந்தி ஆதரவளிப்பார். விஜய்க்கு ஓட்டு வரும் என்பதில் சந்தேகம் கிடையாது. தவெக விஜய் அது சீட்டாக மாறுமா என்று சொல்லத் தெரியாது. தமிழக வெற்றிக் கழகத்தினர் ரசிகர் மன்றமாக இருப்பதால், ரசிகர்களாகத்தான் வருகிறார்கள். கொள்கை பிரகடனத்தை கேட்பதற்காக கூட்டம் வரவில்லை. அரசியல் கட்சிகளின் மேடை பேச்சுகளை கேட்பதற்கு மக்கள் பெரிதும் விரும்புவதில்லை” என்றார்.
-40 மதிப்பெண்கள் பெற்றாலும் முதுகலை மருத்துவம் படிக்கலாம் - NEET PG 2025 கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பு
முதுகலை நீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் -40 வரை குறைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவத் தரத்தின் நிலையை கேள்விக்குள்ளாக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவேற்றி வந்ததால் அவரை சிலர் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், சைஜூ பதிவிடும் வீடியோக்களுக்கு கமெண்ட்ஸ்களை தெரிவித்து வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து சென்னை இளம்பெண்ணுடன் சைஜூ போனில் நட்பாக பேசி பழகி வந்திருக்கிறார். பின்னர் இந்த நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. அதன்பிறகு இருவரும் வீடியோ காலில் மணிக்கணக்கில் பேசி வந்திருக்கிறார்கள். ஆபாச வீடியோ இந்தநிலையில் இளம்பெண்ணை உருக, உருக காதலிப்பதாக நடித்த சைஜூ, நீயும் நானும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என இளம்பெண்ணை மூளைச்சலவை செய்திருக்கிறார். முதலில் சம்மதிக்காத இளம்பெண்ணை, நீ என்னை நம்பவில்லையா என கேட்டிருக்கிறார் சைஜூ. அதன்பிறகே இளம்பெண்ணும் காதலன் சைஜூவை நம்பி, வீடியோ காலில் நிர்வாணமாக பேசி வந்திருக்கிறார். அதை மற்றொரு செல்போனில் வீடியோவாக எடுத்த சைஜூ, தன்னுடைய சுயரூபத்தை இளம்பெண்ணிடம் காண்பித்திருக்கிறார். உன்னுடைய நிர்வாண வீடியோ, படங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. அதை சமூகவலைதளத்தில் வெளியிடாமலிருக்க நான் கேட்கும் பணத்தை நீ எனக்கு அனுப்ப வேண்டும் என சொல்லி மிரட்டியிருக்கிறார். வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதிய இளம்பெண், சைஜூ கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த வகையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை இளம்பெண்ணை மிரட்டி பறித்த சைஜூ, மீண்டும் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்திருக்கிறார். அதனால், இளம்பெண், விவரத்தை குடும்பத்தினரிடம் கூறியதோடு தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகாரளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸாரை விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இளம்பெண் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் சைஜூவை போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் புகார் கொடுத்த இளம்பெண் மட்டுமல்லாமல் இன்னும் சிலரை சைஜூ ஏமாற்றியது தெரியவந்தது. அதனால் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய சைஜூவின் இரண்டு செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்ததோடு அவரால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் எனவும் விசாரித்து வருகிறார்கள். விசாரணைக்குப்பிறகு பைக் ரேஸர் சைஜூவை கைது செய்து தாம்பரம் மத்திய குற்றபிரிவு போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பு செயலாளராக கடமை ஆற்றிய குகப்பிரியன் என்பவர், போதைப்பொருள் தொடர்பான பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்றைய தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குகப்பிரியன் குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு, விளையாட்டு திடல்கள் மற்றும் மாணவர்கள் கூடும் பொது இடங்களில் போதைப்பொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், போதைப்பொருள் வாங்கும் மற்றும் விநியோகிக்கும் முயற்சியின் போது முனையப் பகுதி ஒன்றில் குகப்பிரியன் பிடிபட்டதாகவும், பின்னர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் கண்ணன், மன உளைச்சலின் உச்சத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
உலகம் முழுவதும் X சமூக வலைதளம் முடக்கம்: ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு
எலான் மஸ்கிற்கு சொந்தமான X (முன்னாள் Twitter) சமூக வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, படிப்படியாக சீர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முடக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் தளத்தை அணுக முடியாமல் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவில், உச்சகட்டத்தில் 28,300-க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டன.பின்னர் அந்த எண்ணிக்கை குறைந்து சுமார் 700 புகார்களாக இறங்கியது. இங்கிலாந்து: 8,000-க்கும் மேற்பட்ட புகார்களிலிருந்து சுமார் 130 ஆக குறைந்தது. கனடா: நாள் தொடக்கத்தில் 3,200-க்கும் அதிகமான புகார்கள் பதிவான […]
திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத கட்டுமானங்களை அமைத்து, அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பலாங்கொட வனவாசி காசியப்ப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பெரும்பான்மையினத்தவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் 19 ந் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கரையோர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி கடற்கரையில் 2025 நவம்பர் மாதம் கட்டுமானத்தை அமைத்தமை மற்றும் சிலையை வைத்தமை தொடர்பில் வனவாசி பலங்கொட காசியப்ப தேரர்,திருகோணமலை கோட்டை விகாராதிபதி கல்ஞானவன்ச திஸ்ஸ தேரர்,சுகித்த வன்ச தேரர்,சிறிமாபுர விகாரையை சேர்ந்த நந்த தேரர் ஆகிய தேரர்களும்,கோட்டை விகாரையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான தீபானி லியனகே,விதுரங்க லொக்கு கலப்பதி,எல்.ரீ.பெரேரா,பியலால் பிரேமசிறி,தெக்கும் துலார குணதிலக்க ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதிப்ப லியனகே,சுகத் பிரசன்ன ஆகிய மேலும் இருவர் எதிரிகளாக பெயரிடப்பட்டு இருந்தனர்.அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.அவர்கள் இருவர் தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுக.. நம்பிக்கை துரோகம்.. பாஜக அண்ணாமலை கொந்தளிப்பு!
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட போது வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெரம்பலூரை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் –மூன்று இளைஞர்கள் கைது
இந்தியாவில் இருந்து புறாக்களைகடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களைபொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களைஅடைத்து நெடுந்தீவுக்குபடகில் கடத்தி வந்த இளைஞர்கள் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புறாக்களைகடத்தி வந்த மூன்று இளைஞர்களையும்பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களால்கடத்தி வரப்பட்ட புறாக்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார் –கடற்தொழில் அமைச்சரிடம் தூதுவர் உறுதி
வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்களில் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்ய முன் வர வேண்டும் அதற்கு தூதுவர் துணையாக செயற்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு , வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில், முடிந்த முழுமையான ஒத்துழைப்பை அவுஸ்திரேலியா வழங்கத் தயார் என உறுதி அளித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு இன்றையதினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டபோதேஇவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. தூதுவரிடம் […]
தாய்லாந்தில் ரயிலில் கிரேன் சரிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர்
தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் ஓடும் ரயில் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில்குறைந்தது 32பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 66 பேர் காயமடைந்தனர். கிரேன் ரயிலை தடம் புரட்டி அந்த சில பெட்டிகளை நசுக்கியது. அவற்றில் ஒன்று தீப்பிடித்தது. காயமடைந்தவர்களில் ஒரு வயது குழந்தை மற்றும் 85 வயதுடைய ஒருவர் அடங்குவர். ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு இந்த விபத்து நடந்தபோது, ரயிலில்சுமார்171 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தாய்லாந்து மாநில ரயில்வே விசாரணையைத் தொடங்கியுள்ளது. கிரேனுக்குப் பொறுப்பான கட்டுமான நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது. இத்தாலியன்-தாய் டெவலப்மென்ட் பப்ளிக் கம்பெனி லிமிடெட் இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதாக வருத்தம் தெரிவித்தது. விபத்து நடந்தபோது, பாங்காக்கிலிருந்து வடகிழக்கு உபோன் ரட்சதானி மாகாணத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பெரும்பாலும் பள்ளி மற்றும் வேலைக்காக மற்ற மாவட்டங்களுக்கு பயணிக்கும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் ஏற்றிச் சென்றது. உள்ளூர் செய்தி ஊடகமான தி நேஷன், ரயிலின் மீது விழுந்த ஒரு பெரிய பகுதியை கிரேன் தூக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பெட்டிகள் தடம் புரண்டன.
போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர் உயிரிழப்பு.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
பணி நிரந்தரம் கோரி சென்னையில் 6 நாட்களாகப் போராடிய பெரம்பலூர் பகுதி நேர ஆசிரியர் கண்ணன், கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' - சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!
தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 20 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த ‘Are you dead?’ என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது. சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி சீன மொழியில் Sileme (நீங்கள் இறந்துவிட்டீர்களா?) என்ற பெயரில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் அந்த செயலியில் இருக்கும் பெரிய பட்டனை பயன்படுத்துபவர் அழுத்த வேண்டும். இரண்டு நாள்களுக்கு மேல் அந்த செயலியில் செக் இன் செய்து பட்டனை அழுத்தாவிட்டால், அதிலிருக்கும் அவசர தொடர்பு எண்ணுக்கு இந்த செயலி தகவல் அனுப்பும் வகையில் இது செயல்படுகிறது. கடந்த ஆண்டு, மே மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பலரும் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். முதலில் இலவசமாக வெளியிடப்பட்ட இந்த செயலிக்கு வரவேற்பு அதிகரித்ததால், அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 8 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.103.45 செலுத்தி இதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியானது சீனாவில் அதிகம் பேர் பதிவிறக்கம் செய்த கட்டண செயலிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதே போல ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் வாழும் சீனர்களும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். சீனாவில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. இதனைப் பெரும்பாலும் இளம் வயதினரே பயன்படுத்துவதால், முதியோருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட செயலியை உருவாக்குவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. Chinese “எந்த வயது உடையவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த செயலி அவசியம் வேண்டும்”, “ நான் தனியாக இருக்கும்போது இறந்து போனால் என் உடலை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற கவலை இனிமேல் இல்லை”, வீட்டை விட்டு வெகு தூரம் சென்று, தனியாக தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த செயலி உதவும்” என... இந்த செயலிக்கு சீனர்கள் மத்தியில் வரவேற்பு குவிகிறது. மறுபுறம், பயனுள்ளதாக இருந்தாலும், இப்படியா பெயர் வைப்பது? ‘Are you okay? ‘How are you?’ என்பது மாதிரியான நேர்மறையான சொற்களை பயன்படுத்தலாமே’ என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
India Today Group’s Tak Network launches TAK 360 – गली से ग्लोब तक
Mumbai: India Today Group’s Tak Network has launched Tak 360, the country’s first FAST news channel. Designed for the evolving digital audience, Tak 360 caters to the growing demand for real-time, multi-genre news across connected devices.Anchored in the philosophy of “गली से ग्लोब तक”, Tak 360 integrates hyperlocal reporting with national and global perspectives offering a seamless and comprehensive news experience. The channel delivers round-the-clock coverage across key genres including politics, business, crime, culture, sports, fitness and wellness, broadening the scope of news while maintaining editorial depth and credibility.Speaking on the launch, Kalli Purie, Vice Chairperson and Executive Editor-in-Chief of the India Today Group, said, ‘India Today Group has consistently innovated across content formats and genres. With Tak 360, we are taking that legacy into the connected TV era. As audiences increasingly shift to connected platforms, Tak 360 strengthens our position as the country’s most future-ready digital news network”Tak 360 will stream live across the India Today Group’s connected and digital footprint –spanning across News Tak on YouTube and web, Aaj Tak’s website & app, India Today’s website & app along with the Group’s CTV apps (India Today, GNT and Aaj Tak) – giving audiences worldwide frictionless, always-on access.Backed by a robust editorial foundation, round the clock programming and a commitment to balanced and inclusive reporting, Tak 360 aims to become a trusted national destination that mirrors India’s diversity while redefining fast news consumption on connected TV.
கிரீன்லாந்தை இணைக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
வாஷிங்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து. இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷ்யா, சீன கப்பல்களால் நிரம்பியுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் கிரீன்லாந்து இணைக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தாங்கள் கிரீன்லாந்து மக்களாகவே இருக்க விரும்புவதாக அந்நாட்டு அரசியல் […]
தாய், மனைவியை கொடூரமாக கொன்று நரமாமிசம் சாப்பிட்ட இளைஞர் –பகீர் சம்பவம்
தாய், மனைவியை கொடூரமாக கொன்று இளைஞர் ஒருவர் நரமாமிசம் சாப்பிட்டுள்ளார். குடிக்கு அடிமை உத்தர பிரதேசம், குஷிநகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் குப்தா(30). இவர் மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார். இவரின் மனைவி பிரியங்கா மற்றும் தாயார் ரூனா தேவி இருவரும் குஷிநகரில் வசித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய சிக்கந்தர் அங்கேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மதுபானம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். கொடூர கொலை இதனால் தாயையும், மனைவியையும் அடிக்கடி […]
திருகோணமலை பதற்றம்: பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்!
திருகோணமலை பகுதியில் அனுமதியின்றி புத்தர் சிலை வைக்கப்பட்டமை மற்றும் அது தொடர்பான அமைதியற்ற சூழல் குறித்து கைது… The post திருகோணமலை பதற்றம்: பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்! appeared first on Global Tamil News .
மட்டக்களப்பில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு நகருக்கு மக்கள் வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவி வரும் அதேவேளை மட்டக்களப்பு பொதுச்சந்தை மற்றும் மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகைதந்து பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். பொங்கலுக்குரிய பொருட்கொள்வனவிலும் புத்தாடைக் கொள்வனவிலும் மக்கள் அதிகளவில் மட்டக்களப்பு நகரில் தற்போது காணப்படும் சனப்பெருக்கம் காரணமாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் அதிகளவான மக்கள் வருகைதருவதன் காரணமாக மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட போக்குவரத்து நடைமுறைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆர்வம் காட்டுகின்றனர்.
யாழ் திருநெல்வேலியில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியில் வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது. தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியில் வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் பொதுமக்கள் பொருட்களை புதன்கிழமை (14) கொள்வனவு செய்தனர். வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும், மண்பானை, மண்சட்டி போன்ற பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தெகுதியில் படுவான் கரைப் பிரதேசத்தையுமும், எழுவான் கரையையும் இணைக்கும் பிரதான நகரமாக களுவாஞ்சிக்குடி நகர் பிரதான வர்த்தக நிலையமாக விளங்குகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியாவில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்
தைப்பொங்கல் தினத்தை நாளை (15) கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தைப்பொங்கலை கொண்டாட மக்கள் மும்முரமாக செயற்பட்டு வருவதைக் காணமுடிகிறது. வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழ வகைகள் என்பவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. தைப்பொங்கல் திருநாள் நாளை உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது. கடந்த வருடத்தினை விட இந்த வருடம் மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்து வருவதாக வவுனியாவில் உள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
Lokesh Kanagaraj: அல்லு அர்ஜூனை இயக்கும் லோகேஷ் கனகராஜ் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
‘லியோ’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால், லோகேஷ் கனகராஜ் தற்போது அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. A Collaboration that will be Eternal in Indian Cinema Icon Star @alluarjun X @Dir_Lokesh X @MythriOfficial X @anirudhofficial STRIVE FOR GREATNESS ▶️ https://t.co/AGCi8q89x2 Shoot begins in 2026 #AALoki #AA23 #LK7 pic.twitter.com/op2vnureqp — Mythri Movie Makers (@MythriOfficial) January 14, 2026 இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், உங்களுடன் இந்தப் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அல்லு அர்ஜூன் சார். இதைக் கோலாகலமான, மிகப் பெரிய வெற்றியாக மாற்றுவோம். அல்லு அர்ஜுன் மீண்டும் ஒரு முறை எனது சகோதரர் அனிருத்துடன் இணைகிறேன் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். Blessed with the best @alluarjun #AALoki Looking forward to kicking off this journey with you sir Let's make it a massive blast Once again with my brother @anirudhofficial #AA23 #LK7 @MythriOfficial pic.twitter.com/AZpufiNI2t — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 14, 2026
“5 Homemade Toners to Fight Winter Dry Skin”
Are you noticing dry, dull, or flaky skin this winter? This happens because your skin loses moisture quickly during the
டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? ஜல்லிக்கட்டு போட்டிக்கான தீவிர நடவடிக்கை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் நாளில் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையின் உலா பேருந்து … 50 ரூபாயில் நம்மை பிளாக் & ஒயிட் காலத்துக்கு கூட்டிச்செல்லும் பஸ்!
சென்னையில் 1970 கால கட்டத்தில் இருந்த பேருந்து வடிவமைப்பிலேயே பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலா பேருந்துகள் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பேருந்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இடைநிலை ஆசிரியர் போராட்டம் : ஆசிரியர்களுடன் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை.. முடிவு என்ன?
இடைநிலை ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு செய்துள்ளது.
TRB உதவிப் பேராசிரியர் தேர்வு 2025 முடிவுகள் வெளியீடு எப்போது? விரைவில் வரும் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப டிசம்பர் 27-ம் தேதி தேர்வு நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly முன்னெடுப்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கலை பட்டதாரியான செந்தில். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இதில் கடந்த ஏழு வருடங்களாக இயற்கைக்கு முரணான பிளாஸ்டிக் ஸ்ட்ராவினைத் தவிர்த்து, இயற்கையான முறையில் பப்பாளி தண்டுகளை பயன்படுத்தி புதிய இயற்கையான ஸ்ட்ராவினை உருவாக்கி வாடிக்கையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து இயற்கை ஆர்வலர் செந்தில் கூறுகையில், நான் காலேஜ் படிக்கும்போதே அப்பாகூட சேர்ந்து இளநீர் விக்க ஆரம்பிச்சேன். காலேஜ் முடிச்சதுக்கு அப்பறம் நெறைய தனியார் கம்பெனியில வேலை பார்த்தேன், ஒன்னும் செட் ஆகலன்னு ஊருகே திரும்ப வந்துட்டேன். அதுக்கு அப்பறம் தான் அப்பா பண்ண இளநீர் வியாபாரத்தையே நாமும் பண்ணலான்னு பண்ண ஆரம்பிச்சேன். இப்ப நான் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சி 12 வருசம் ஆச்சி. இதுல கடந்த ஏழு வருசமா பப்பாளி தண்டுலதான் ஸ்ட்ரா செஞ்சி வாடிக்கையாளருக்குக் கொடுக்குறேன். இயற்கையான முறையில இளநீர்ல கொடுக்குறோம். இயற்கையான முறையிலயே ஸ்ட்ராவும் கொடுக்கணும்னு யோசிச்சா என்ன? பிளாஸ்டிக் ஸ்ட்ரால்ல கண்ணுக்குத் தெரியாத கெமிக்கல்கள் இருக்கும். இந்த பிளாஸ்டிக் ஸ்ட்ரா தயாரிக்கிறத்துக்கு முக்கியமா பாலிப்ரொப்லீன் பயன்படுத்துறாங்க. இதுனால மக்கள் இந்த ஸ்ட்ராவ்ல குடிக்கும்போது அவங்க குடிக்கிற பானத்துல பாலீத்தின் கலந்து, அவங்களுக்கு பாதிப்ப ஏற்படுத்துறது மட்டுமல்லாம... சுற்றுச்சூழலையும் ரொம்பவே பாதிக்குது. அதனால இயற்கையா பண்ணனும்னு முதல்ல பேப்பர் ஸ்ட்ராவ பயன்படுத்தி பார்த்தேன். அதுல ரெண்டு இழு இழுத்தாலே பேப்பரும் கரைஞ்சு போயிடுது. இது கதைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சிடுச்சி... அடுத்து என்ன பண்ணலான்னு யோச்சப்ப தான் கொட்டமுத்து இலைய ட்ரை பண்ணி பார்த்தேன். அதுல குழல் இருந்துச்சி. ஆனா, நீட்னஸ் இல்ல. அப்பறம் அல்லி தண்ட ட்ரை பண்ணலாம்னு பண்ணேன்... அதுல ஓட்டையே இல்ல. அப்படி ட்ரை பண்ணும் போது பசங்க பப்பாளி இலைய வச்சி விளையாடிட்டு இருந்தத பார்த்தேன். பப்பாளி இலை தண்டுல குழலும் இருந்துச்சி. அதோட ஒரு முன இலையோடையும், மறு முன பப்பாளி தண்டோடையும் ஜாயின்ட் ஆகி இருந்துச்சி. தண்டுலேந்து குழல் எடுத்து பார்த்தா ரெண்டு சைடும் லாக் ஆகி இருக்குறதுனால வண்டு, பூச்சி, தூசிலா இல்லாமா ரொம்ப ஃபிரஷ்ஸா இருந்துச்சி. முதல்ல ஸ்ட்ரா செஞ்சி வீட்ல பயன்படுத்தி பார்த்தோம். நல்லா இருந்துச்சி திரும்ப கடையிலையும் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அந்த குழல் ரெண்டு நாள் தான் ஃபிரஸ்ஸா இருக்குமே. ரெண்டு நாளுக்கு அப்பறம் புதுசா குழல் செய்யனும். ஆரம்பத்தில் எல்லாரும் காச மிச்சம் பண்ண இப்படி செய்யுறதா அப்படி இப்படின்னுல்லாம் பேசுனாங்க. மக்களுமே ஆரம்பத்துல விரும்பல. நான் சொல்லி புரியவச்சேன். இப்ப மக்களும் பாராட்டுறாங்க. முன்னாடி எல்லாம் நாளு பேரு இளநீர் குடிக்க வந்தா ரெண்டு பேரு என்ன ஸ்ட்ரான்னு கேட்குறது வழக்கம். ஆனா, இப்போலாம் வர நாளு பேருமே இப்படி பண்றது ரொம்ப நல்ல விஷயம்னு பாராட்டுறாங்க. அப்ப காச மிச்சம் பண்ணுறதா சொன்னவங்க எல்லாரும் பரவல்லப்பா இத்தன வருசமா தொடர்ந்து செய்யுறியேன்னு ஆச்சர்யபடுறாங்க. நா பண்ணுனத பார்த்துட்டே மாயரத்துலே நெறைய பேர் பண்ணாங்க. ஆனால், யாரும் தொடர்ந்து பண்ணல. இயற்கை சார்ந்து நம்மளால முடிஞ்சதை கண்டிப்பா செய்யணும். அப்படி பண்ணலன்னா கூட இயற்கைக்கு முரணா எதுவும் பண்ணாம இருந்தாகூட போதும். முப்பது சதவீத மக்கள் மட்டும்தான் இயற்கையான கரும்பு ஜூஸ், இளநீர்லாம் குடிக்கிறாங்ளே! ஒடம்பு முடியலன்னு டாக்டர்ட்ட போனா அங்க டாக்டர் சொல்லுவாரு, இளநீர் குடிங்கன்னு. அப்பதான் இளநீயோட அருமையே தெரியும். இப்டி மக்கள் எல்லாரும் டாக்டர் சொல்றப்ப மட்டும் இல்லாமா இயற்கைக்கு உகந்த குளிர்பானங்கள எப்போதும் குடிங்க என்று கூறினார்.
ஜனவரி 16 வரை வானிலை இப்படி தான் இருக்கும்…ஆய்வு மையம் முக்கிய தகவல்!
சென்னை : வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14-01-2026 மற்றும் 15-01-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 16-01-2026 […]
2026-ம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: முதலிடம் பிடித்த நாடு எது?
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பட்டத்தை சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஈரானில் பதற்றம் அதிகரிப்பு.. இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை என்ன தெரியுமா?
ஈரான் போராட்டங்களை கடுமையாக அடக்கினால் மத்திய கிழக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையால், ஈரானில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமாக கருதப்பட்டு, உடனடி நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
“WHO Urges Higher Taxes on Sugary Drinks”
Sugary drinks and alcoholic beverages are becoming cheaper in many countries because taxes on them are too low. This is
ராணிப்பேட்டை: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் - மனைவி கையை வெட்டிய முதியவர் கைது
ரா ணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாடோடியின குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவரின் மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். பிள்ளைகள் மூவரும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனியாக வசிக்கின்றனர். இதனால், வயோதிக காலத்திலும் ஆறுமுகம், லட்சுமி கூலிவேலைச் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மது குடிக்க பணம் கேட்டு முதியவர் ஆறுமுகம் மனைவியிடம் சண்டைப் போட்டிருக்கிறார். நேற்று இரவு மது அருந்திவிட்டுவந்த முதியவர் ஆறுமுகம், பணம் தராத மனைவி மீது ஆத்திரமடைந்து, கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. முதியவர் ஆறுமுகம் இதில், லட்சுமியின் வலது கையில் வெட்டு விழுந்ததில், கை துண்டானது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து லட்சுமியை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் பற்றி, கலவை போலீஸார் வழக்கு பதிவு செய்து, முதியவர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார்
வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்களில் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்ய முன் வர வேண்டும் அதற்கு தூதுவர்… The post வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார் appeared first on Global Tamil News .
ரம்யாவை கர்மா விடாதுனு திட்டும் பிக் பாஸ் பார்வையாளர்கள்: திவ்யாவிடம் அத்துமீறிய திவாகர்
கனி அக்கா சொன்னதை கேட்டவர்களோ அவரையும், ரம்யாவையும் கண்டபடி திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நிஜமாகவே பாம்பு தான், கர்மா அடிக்கப் போகிறது ரம்யா என்கிறார்கள்.
“Karthi’s ‘Vaa Vaathiyaar’ Opens to Positive Response”
The much-awaited Karthi and Krithi Shetty starrer “Vaa Vaathiyaar” has hit theaters today, January 14. The film, directed by Nalan
ஈரானில் வெடித்த போராட்டம்…இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற எச்சரிக்கை!
ஈரான் : அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் தற்போது இருக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்றும், புதிய அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஈரானில் நிலவும் அரசியல் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
`விரதம் இருந்தா கேன்சர் செல் செத்துப் போயிடும்'- அண்ணாமலையின் கருத்துகள் உண்மையா?
கேன்சர் செல்களுக்கு சாதாரண செல்களைவிட 7 மடங்கு அதிக எனர்ஜி வேண்டும். அந்த எனர்ஜியை குறைச்சுட்டா கேன்சர் செல் செத்துப்போயிடும். வாரத்துல ஒருநாள் சாப்பிடாதீங்க. ஆட்டோமெட்டிக்கா உடம்புல இருக்கிற கேன்சர் செல் செத்துப் போயிடும். வருஷத்துக்கு ஒருக்கா ஏழு நாள் விரதம் இருங்க. மொத்த கேன்சர் செல்லும் இறந்துடும் என பாஜக-வின் முக்கிய நிர்வாகி அண்ணாமலை பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு ஆதரவாககவும் எதிராகவும் பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். cancer விரதம் இருப்பதற்கும் கேன்சர் செல்கள் அழிவதற்கும் தொடர்பிருக்கிறதா என்று விளக்குகிறார் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெ.கென்னி ராபர்ட். விரதம் இருப்பதற்கும் புற்றுநோய்க்கும் நேரடி தொடர்பிருக்கிறா என்று மனிதர்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான ஆய்வுகள் எதும் இதுவரை இல்லை. ஆனால், சிகிச்சைக்கு முந்தைய ஆய்வுகள், விலங்குகள் மீதான ஆய்வுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு இது ஓரளவு பயனளிக்கலாம் என்றும் இது தொடர்பான கூடுதல் ஆய்வுகள் தேவைப்படலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, புற்றுநோய் சிகிச்சைக்கான மாற்றாக இதைக் கருத முடியாது. மேலும் விரதம் இருப்பது மட்டுமே புற்றுநோய்க்கான தனி சிகிச்சையாகவும் கருத முடியாது. ஒவ்வொரு நபரின் உடலுக்குமான ஊட்டச்சத்து தேவைகள் வேறு வேறாக இருக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக எடை இழப்பு, ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்படும். எனவே, புற்றுநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையோ கீமோதெரபி சிகிச்சையோ கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் உடலில் குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் சிகிச்சையைத் தாங்கிக் கொள்ள முடியும். Fasting சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடுமா? புற்றுநோய் செல்கள் வேகமாக பல்கிப் பெருகக்கூடிவை. குளுக்கோஸ் (சர்க்கரை) மட்டும் சார்ந்து பெருகக்கூடிய கேன்சர் செல்களுக்கு இது பயனளிக்கலாம். ஆனால், அனைத்து கேன்சர் செல்களும் குளுக்கோஸை மட்டும் எடுத்துக்கொண்டு பெருகக்கூடியவை கிடையாது. காரணம், புற்றுநோய் என்பது ரத்தத்திலும் வரலாம், எலும்புகளுக்குள்ளும் வரலாம், உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். எனவே, சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடும் என்பதைப் பொதுவான கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும் கேன்சர் என்பது நாம் சாப்பிடும் உணவோடு மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. மரபணு மாற்றங்களும் காரணம். ஒருவர் விரதம் இருக்கும்போது உடலில் இருக்கும் கொழுப்பு, தசை உள்ளிட்டவற்றில் இருந்தும் செல்கள் ஆற்றலை எடுத்துக்கொள்ளும். ஒருநபர் விரதம் இருந்தாலும் கேன்சர் செல்கள் உடலில் இருக்கிற ஆற்றலை வைத்தே உயிர் வாழக்கூடியவை. புற்றுநோய் சிகிச்சையைப் பொறுத்தவரை முழுமையான, சம நிலையான சிகிச்சை முறைகளைத் தான் பின்பற்ற வேண்டும். புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெ.கென்னி ராபர்ட். புற்றுநோய் வராமல் தடுக்குமா? விரதம் இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் என்பதற்கும் இன்னும் பெரிய அளவில் ஆதாரங்கள் இல்லை. ஆனால், ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கும், உடலில் கூடுதல் கலோரி சேர்வதைத் தடுப்பதற்கு விரதம் உதவக்கூடும். ஆனால், இதுவும் எல்லாருக்கும் பொருந்தாது. காரணம், ஒவ்வொருவரின் உடல்வாகு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அறிவியல் என்பது நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சைக்கு பயனளிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டால், மருத்துவர்கள் அதைப் பரிந்துரைப்பார்கள். ஆனால், அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லாமல் அதை முயற்சிப்பது சரியல்ல. விரதம் புற்றுநோயாளிகளுக்கு விரதம் இருப்பது தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் அவரவர் சிகிச்சை பெறும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. சுயமாக எதையும் முயற்சிக்க வேண்டாம் என்கிறார் மருத்துவர் ஜெ. கென்னி ராபர்ட்.
ஈரான் மீது புதிய தடைகளை விதிக்கும் ஐரோப்பா
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக அடக்கி வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, புதிய தடைகளை (sanctions) விரைவில் முன்மொழிய உள்ளதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டர் லெயன் அறிவித்துள்ளார். ஈரானில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. மோசமான வன்முறை பயன்பாடும், தொடர்ச்சியான கட்டுப்பாடுகளும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை,” என்று தெரிவித்துள்ளார். அடக்குமுறைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக கூடுதல் தடைகள் விரைவில் முன்மொழியப்படும். சுதந்திரத்திற்காக துணிச்சலுடன் போராடும் ஈரான் மக்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நிற்கிறது,” […]
வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் குத்திக்கொலை
டாக்கா, வங்காளதேசத்தின் பெனி மாவட்டம் தகன்புயான் நகரை சேர்ந்தவர் ஷோமிர் குமார் தாஸ் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் ஷோமிர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்தன. வங்காளதேசத்தில் சமீப காலமாக இந்துக்களை குறிவைத்து அதிகளவில் தாக்குதல் நடைபெறுகிறது. […]
`புதிய சிந்தனைகளை வரவேற்போம்'ஜிவாமே ஷோரூமில் பொங்கல் கொண்டாட்டம் - நடிகை மேகா ஆகாஷ் பங்கேற்பு
பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியோடு நவீன பேஷனையும் இணைத்து, இந்தியாவின் நம்பர் 1 உள்ளாடை நிறுவனமான ஜிவாமே, சென்னை பீனிக்ஸ் மார்கெட்சிட்டி மாலில் உள்ள தனது ஷோரூமில் உற்சாகமான கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த விழாவை நடிகை மேகா ஆகாஷ் தொடங்கி வைத்தார். அவர் விழாவிற்கு சிறப்பு சேர்த்தது மட்டுமின்றி, வரும் 30-ந்தேதி தொடங்கவிருக்கும் ஜிவாமேவின் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ குறித்தும் வாடிக்கையாளர்கள் இடையே பேசினார். வண்ணமயமான பொங்கல் விழாவுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜிவாமேவின் பல்வேறு வகையான உள்ளாடைகள், ஷேப்வேர், ஸ்லீப்வேர், லவுஞ்ச்வேர் மற்றும் விளையாட்டு உடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இது வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களை வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் நடிகை மேகா ஆகாஷ் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை, தன்னம்பிக்கை என்பது நமக்கான வசதியில் இருந்தே தொடங்குகிறது. அதில் நமது உள்ளாடைகள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. பெண்களின் எதார்த்தமான வாழ்க்கைக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் ஏற்றவாறு ஜிவாமே ஆடைகளை வடிவமைக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். வரவிருக்கும் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ மூலம், பெண்களுக்குப் பொருத்தமான, அழகான மற்றும் ஒவ்வொரு நாளும் தன்னம்பிக்கை அளிக்கும் உள்ளாடைகளை வழங்குவதை ஜிவாமே இன்னும் எளிதாக்குகிறது என்று பேசினார். ஜிவாமே மார்க்கெட்டிங் தலைவர் தமன் பாலி பேசுகையில், இந்தியப் பெண்கள், அவர்களின் தினசரி வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் முக்கியமான தருணங்களுக்கு ஏற்ப எங்களின் உள்ளாடைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் பொங்கல் பண்டிகை என்பது எல்லோரும் ஒன்றுகூடும் நிகழ்வாகும். இந்தத் தருணத்தில் பெண்களுடன் இணைந்து கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது போன்ற நேரடி அனுபவங்கள் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதோடு வரவிருக்கும் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ மூலம், பெண்களுக்குத் தேவையான புதிய உள்ளாடைகளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம் என்பதையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். Zivame இந்த நிகழ்ச்சி ஜிவாமேவின் தயாரிப்புகள் பற்றிய கொள்கையை அனைவரின் கண்முன்னே கொண்டுவந்தது. இந்தியப் பெண்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் வகையில், சிறந்த சிந்தனையுடன் கூடிய வடிவமைப்பும் புதுமையும் எவ்வாறு இணைகின்றன என்பதை இது எடுத்துக்காட்டியது. தயாரிப்பு நிபுணர்களின் நேரடி விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள், பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதிலும், அவர்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்யும் சூழலை ஏற்படுத்தியது. இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள், சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர். கலாச்சாரத்தோடு கூடிய சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்ற ஜிவாமேயின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது. அதே நேரத்தில், முக்கிய நகரங்களில் தங்கள் பிராண்டை பெரும்பாலான மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்தியது. விரைவில் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ துவங்கவுள்ள நிலையில், உள்ளாடைகள் குறித்த பழைய கண்ணோட்டங்களை மாற்றுவதை ஜிவாமே தொடர்கிறது. பெண்களுக்கான வசதி, தன்னம்பிக்கை மற்றும் அவர்களுக்கானத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு இது முன்னுரிமை அளிக்கிறது. சிறந்த வடிவமைப்புகள் மற்றும் பிரபலமானவர்களின் ஆதரவு மூலம், பெண்கள் உள்ளாடைகளைத் தயக்கமின்றி நம்பிக்கையுடன் வாங்குவதற்கான சூழலை உருவாக்குவதே தங்கள் லட்சியம் என்பதை ஜிவாமே இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. About Zivame: Founded in 2011, Zivame has built a category-first model that seamlessly blends deep consumer insights with innovation, technology, and trend-driven design—all while keeping women’s comfort at its core. Come 2025, with a portfolio of over 30,000 styles across lingerie, sleepwear, shapewear, and activewear and more—in 100+ sizes—and a strong retail footprint of 170+ exclusive brand outlets across India, the brand is not just a retailer, but a trusted destination for women across age groups and geographies. Since its inception, Zivame has consistently been at the forefront of innovation—from launching India’s first online FitCode to running breakthrough campaigns like Museum of Boobs. By combining tech-enabled solutions with deep consumer insight, Zivame has redefined intimatewear retail in India and built one of the most influential fashion-retail ecosystems in the country.
“Vijay’s ‘Theri’ Re-Release Delayed, Fans Wait”
The re-release of the popular Thalapathy Vijay movie “Theri” has been postponed. The delay happened because producers of several new
Kanaka, Ramarajan: Stars of Tamil Cinema’s Golden Era
Actors Ramarajan and Kanaka are remembered as two iconic stars of the golden age of Tamil cinema. Both were hugely
'அன்பு, கருணை, பரிவு' - மாணவர்கள் மத்தியில் நெகிழ்ந்த ராகுல் காந்தி! - முழு உரை
நீலகிரியின் கூடலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி இந்திய அரசியல் தொட்டு AI வரைக்கும் பல விஷயங்கள் குறித்தும் பேசியிருந்தார். Rahul Gandhi ராகுல் காந்தி பேசியவை, 'இது தகவல் தொழில்நுட்பத்தின் காலம். ஏஐ வளர்ந்துகொண்டே இருக்கிறது. நம்மைச் சுற்றி எவ்வளவோ தகவல்களும் செய்திகளும் கொட்டிக் கிடக்கிறது. நம்மால் அவற்றை இலவசமாகவும் அணுக முடிகிறது. இப்படியொரு காலக்கட்டத்தில் பள்ளிகள் மாணவர்களை எந்தவிதத்தில் வழிநடத்துகிறார்கள் என்பது முக்கியம். கொட்டிக் கிடக்கும் தகவல்களையும் செய்திகளையும் நாம் அறிவாக மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த அறிவோடு ஞானத்தையும் பண்பையும் பிணைத்து செயல்பட வேண்டும். பண்பற்ற அறிவு மிகமோசமான உலகத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும். ஒருவரோடு ஒருவர் சண்டையிட செய்யும். ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்கிறோம். இளம் மாணவர்களை நல்ல குடிமகன்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு பள்ளிகளுக்கு இருக்கிறது. Rahul Gandhi நிகழ்ச்சிக்கு முன்பாக சில மாணவிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்றேன். சிலர் விமானி என்றனர். சிலர் ஆராய்ச்சியாளர் என்றனர். இன்னும் சிலர் மருத்துவர் என்றனர். ஆனால், யாருமே அரசியல்வாதி ஆக வேண்டுமென்று கூறவில்லை. நான் அரசியலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. அரசியல்வாதி, டாக்டர், விமானி யாராக இருந்தாலும் அவர்களுக்கு சக மனிதர்களை நோக்கிய ஒரு கருணையும் பணிவும் இருக்க வேண்டும். அதுதான் மக்களை புரிந்துகொள்ளவும் ஒரு மேம்பட்ட தேசத்தை கட்டமைக்கவும் உதவும். நீங்கள் உங்களின் விருப்பப்படி என்ன ஆக வேண்டுமே ஆகுங்கள். எதை நினைத்தும் பயப்படாதீர்கள். எதை நினைத்தும் பதற்றப்படாதீர்கள். ஆனால், எப்போதும் உங்கள் நெஞ்சில் இருக்கும் கருணையையும் பணிவையும் விட்டுவிடாதீர்கள். அதை மட்டும் வளர்த்துக் கொண்டே இருங்கள். Rahul Gandhi நம்முடைய நாடு இன்னமும் கற்றலில் நிறைவுபெறாத நாடு. நிறைய விஷயங்களை இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறோம். இப்படியொரு சூழலில் பெண்களை கண்ணியமாக நடத்துவது எந்தளவுக்கு முக்கியம் என நினைக்கிறீர்கள்? என்னுடைய பாட்டிதான் (இந்திரா காந்தி) எங்களின் குடும்பத் தலைவி. சிறுவயதிலிருந்து அவரை பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். அவரிடமிருந்தும் என் அம்மாவிடமிருந்தும் சகோதரியிடமிருந்தும் நிறைய விஷயங்களை கற்றிருக்கிறேன். ஆண்களை விட பெண்கள் பெரும் திறன் படைத்தவர்கள் என நம்புகிறேன். ஆண்களை விட பெண்கள் நிறைய நீண்ட நெடிய கனவுகளையும் தொலைதூரப் பார்வையையும் கொண்டவர்கள். அவர்கள் ஆகப்பெரும் காரியங்களை செய்ய தகுதியானவர்கள். நம்முடைய தேசத்தின் வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் அதிகாரத்திலும் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கப் போகிறது. உங்களுடைய பள்ளிக்காலத்தின் மறக்க முடியாத நினைவுகளைப் பற்றி கொஞ்சம் கூறுங்களேன். பள்ளியில் நான் ஒரு சேட்டைக்காரப் பையன். யாரையாவது தொல்லை செய்துகொண்டே இருப்பேன். நான் படித்தது ஒரு போர்டிங் ஸ்கூல். நான் அங்கே ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், அப்பா அம்மாவிடம் மகிழ்ச்சியாக இல்லாததைப் போல பாவனை செய்துவிடுவேன். அப்போதுதான் அவர்கள் என்னை அடிக்கடி வந்து பார்ப்பார்கள். Rahul Gandhi பள்ளியில் எனக்கு ஒரு கெமிஸ்ட்ரி டீச்சர் இருந்தார். அவர் மிகச்சிறப்பாக கெமிஸ்ட்ரி கற்றுக்கொடுப்பார். நாம் எப்படி சிந்திக்க வேண்டும், தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பார். அவர் குறித்த நினைவுகள் இன்னமும் மனதில் இருக்கிறது. Rahul Gandhi கேள்வி கேட்ட மாணவியிடம் ராகுல் காந்தி ஒரு பதில் கேள்வி கேட்டார், 'ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும்?' என்றார். 'முதலில் மாணவர்களுக்கு கீழ்படிதலும் கட்டுப்பாடுகளுமே ரொம்ப முக்கியம்' என்றார் மாணவி. பதிலுக்கு ராகுல், 'நான் கீழ்படிதல்மிக்க மாணவன் கிடையாது. ஆசிரியர்களிடம் அதிகமாக கேள்வி கேட்பேன். ஒருவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டோமானால் நாம் சுயமாக சிந்திப்பது குறைந்துவிடும். Rahul Gandhi உங்களை இந்த இடத்தில் நில்லுங்கள் என்றால், ஏன் எதற்கு என கேட்க வேண்டும். தீவிரமாக கீழ்படிதல் குணத்தை கொண்டிருப்பதும் நல்லதல்ல. கீழ்படிதல் என்கிற விஷயத்தில் கொஞ்சம் சமநிலையோடு சிந்திக்க வேண்டும்' என்றார். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமான பின்னணியிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நமக்கு ஒரு சிறந்த கல்விமுறை தேவைப்படுகிறது. கல்வி பெரும் பொருளை கேட்கக்கூடிய விஷயமாக இருக்கக்கூடாது. அதற்கு கல்வி முழுவதுமாக தனியாரிடம் செல்லக்கூடாது. தனியாரிடம் பள்ளிகள் இருக்கலாம். ஆனால், அரசின் கையில்தான் கல்வியை கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய பொறுப்பு இருக்க வேண்டும். அதற்கு பட்ஜெட்டில் கல்விக்காக அதிக தொகையை செலவிட வேண்டும். இரண்டாவது நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஐ.டி மற்றும் சேவைத்துறைகளை தாண்டி உற்பத்தித்துறையில் நாம் கோலோச்ச வேண்டும். சிறுகுறு வணிகங்களை பெருக்க வேண்டும். அதன்வழி எல்லாருக்குமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். Rahul Gandhi சமீபத்தில் இந்த நாட்டையும் மக்களையும் இளைஞர்களும் ஜென் Z க்களும்தான் காப்பாற்றப் போவதாக ஒரு பதிவை இட்டிருந்தீர்கள். நாங்கள் அதை நோக்கி செல்ல என்ன செய்ய வேண்டும்? இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே உங்களுக்கு ஒரு குரல் இருக்கும். எனக்கு ஒரு குரல் இருக்கும். நம் முன்னால் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு குரலும் கருத்தும் இருக்கும். ஆனால், இப்போது அந்த ஜனநாயக குரல்களின் மீதும் ஜனநாயக அமைப்புகளின் மீதுமே தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசே அதை செய்கிறது. தேர்தல் ஆணையம் உட்பட தன்னாட்சி அமைப்புகளை பற்றி படர்ந்திருக்கிறார்கள். அவர்களின் கொள்கைக்கு எதிரான கருத்துடையவர்களை அச்சுறுத்துகிறார்கள். உங்களை போன்ற இளமையான பயமறியாத கேள்வி கேட்கும் நேர்மையுடைய இளைஞர்களால்தான் இதை மாற்ற முடியும். Rahul Gandhi இந்த காலத்திலும் மக்கள் மத்தியில் சாதி, மத, இனரீதியாகவும் இன்னபிற ரீதியிலும் வேற்றுமைகள் ஊன்றியிருப்பதை பார்க்க முடிகிறது. இதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்? நீங்கள் இப்படி எதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு சௌகரியமாக இருந்தால் சொல்லலாம். (கேள்வி கேட்ட மாணவனிடம் ராகுல் காந்தி..) உடலமைப்புரீதியாக (Body Shaming) என்னை தாக்கியிருக்கிறார்கள். Rahul Gandhi ராகுல் காந்தி : உங்களை அப்படி ஒரு தாக்குகிறார் என்றால் அது அவருடைய குறுகிய மனதின் வெளிப்பாடுதான். உங்கள் பக்கம் எந்த பிரச்னையும் இல்லை. என்னையும் என்னுடைய எதிர்க்கட்சியினர் அப்படி தாக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு எதோ கோபம், எதோ பதற்றம். அவர்கள் அசௌகரியமாக இருக்கிறார்கள். அதனால்தான் நம்மை தாக்குகிறார்கள். இந்தியா பல கலாசாரங்களையும் பண்பாடுகளையும் உள்ளடக்கிய நாடு. நான் சில மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி போன்ற மொழிகள் தெரியும் என்றனர். இதுதான் இந்தியா. நாம் எல்லா கலாசாரங்களையும் மதிக்க வேண்டும். இங்கே உங்களுக்கு விருப்பமான ஒரு மொழியையோ மதத்தையோ பின்பற்றும் உரிமை இருக்கிறது. அதேநேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத மதத்தையோ மொழியையோ பின்பற்றுபவர்கள் மீது தாக்குதல் நடத்த எந்த உரிமையும் இல்லை. பண்பட்ட மனதோடு கனிவோடு அன்போடு நடந்துகொள்ள பழகினால் இதையெல்லாம் தவிர்க்க முடியும். Rahul Gandhi உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆரவல்லி மலைத்தொடர் பெரும் ஆபத்தில் இருக்கிறது. வன அழிப்புக்கும் சுரங்கங்களின் ஆக்கிரமிப்புக்கும் அந்த தீர்ப்பு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நான் கூடலூரிலிருந்து வருகிறேன். அதுவும் ஒரு மலைப்பகுதி. இயற்கை வளங்களின் மீதான தாக்குதல் எனக்கு அச்சத்தை கொடுக்கிறது. இதில் உங்களுடைய கருத்து என்ன? உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால், வளர்ச்சி என்று சொல்லப்படுபவைக்காக சுற்றுச்சூழலையும் இயற்கையையும் தியாகம் செய்ய முடியாது. இயற்கையோடு இணைந்த வளர்ச்சியைப் பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டும். இயற்கையை அழித்து ஒரு போதும் வளர்ச்சியை எட்ட முடியாது. மலைகளையும் நீர் நிலைகளையும் இன்னபிற இயற்கை வளங்களையும் கொஞ்சம் தீவிரமான பரந்துபட்ட சிந்தனையோடு அணுக வேண்டும். அவையெல்லாம் உங்களுக்கும் எனக்கும் மட்டும் சொந்தமல்ல. வருங்கால தேசத்துக்கும் நம்முடைய சந்ததியினருக்குமே கூட அது சொந்தமானது. அதனால் இயற்கையை கவனமோடுதான் கையாள வேண்டும்' என்றார்.
பொங்கல் பண்டிகையிலும் தொடர் விசாரணை.. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆஜர்!
கரூர் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை பல்வேறு தரப்பினரிடம் விரிவுபடுத்தப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் முக்கியமான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயை லேசாக நினைக்கவில்லை –அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் !
சென்னை :தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். “விஜயை லேசாக நினைக்கவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார், மாஸ் இருக்கும் ஸ்டார்” என்று கூறிய அவர், தவெகவில் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளதாகவும், களத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். தொண்டர்கள் பரபரப்பாக வேலை செய்வதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அண்ணாமலை தனது பேட்டியில் தவெகவின் அரசியல் […]
BB Tamil 9: எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க - வினோத்திடம் அழும் அரோரா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். டாப்-4 போட்டியாளர்களாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர். BB Tamil 9 வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இன்று சாண்ட்ரா மற்றும் வினோத் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க என அரோரா வினோத்திடம் சொல்லி அழுகிறார். நான் உன்னை எதுவும் நினைக்கல. நானே தான் பணத்தை எடுத்தேன். ஒருவேளை 18 லட்சம் போயிருச்சேன்னு தான் இப்போ அழுகுறியா? என வினோத் அரோராவை கிண்டலடிக்கிறார்.
Russo Brothers Tease Avengers: Doomsday Release
Marvel fans are buzzing with excitement after directors Joe and Anthony Russo teased their upcoming film Avengers: Doomsday. The Russo
சத்தியமங்கலம்: 42 தனியார் விடுதிகளுக்கு சீல்; வருவாய்த்துறையினர் நடவடிக்கை - பின்னணி என்ன?
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் ஒலி விழிப்புணா்வு இயக்கத்தின் நிறுவனா் கற்பகம் என்பவர் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு அண்மையில் வந்தபோது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்படும் 42 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இல்லாவிட்டால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, தலமலை,கோ்மாளம் மற்றும் ஆசனூா் பகுதிகளில் செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சார்பில் ஜனவரி 6-ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், விடுதி உரிமையாளா்கள் இதுவரை எந்தவிதமான உரிய ஆணவங்களையும் சமா்ப்பிக்கவில்லை. நீதிமன்றம் இதையடுத்து, ஊரக உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா் உமாசங்கா் தலைமையில் 5 குழுக்களாக பிரிந்து வருவாய், காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கோ்மாளம், தலமலை மற்றும் ஆசனூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 42 விடுதிகளுக்கு சீல் வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்,சம்பந்தப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் உரிய பதில் தராததால், 42 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. விடுதி உரிமையாளா்கள் முறைப்படி விண்ணப்பித்து உரிய அனுமதியுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.
கொஞ்சமா பணம் போடுங்க; ஆனா, கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க! - உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!
‘இதுக்கு இல்லையாடா ஒரு எண்டு’ என்கிற மாதிரி, தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. உயர்ந்தால் கூட ஓரளவு பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், தினமும் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்த நிலை தொடருமா? தங்கத்தில் முதலீடு செய்யலாமா… வேண்டாமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். ``தங்கம், வெள்ளி விலையின் தற்போதைய நிலை என்ன? ``சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை ஏறுமுகத்தில் தான் இருக்கின்றன. 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 டாலர்களுக்கு குறைவாக இருந்தது ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை. ஆனால், அதன் தற்போதைய நிலை 89.60 டாலர்கள் என உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியுடன் காப்பரும் ஏறுமுகத்தில் இருக்கிறது. மற்ற உலோகங்களும் ஏறுமுகத்தில் தான் இருக்கின்றன. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில் ``ஏன் தங்கம், வெள்ளி விலை ஏறுமுகத்தில் இருக்கிறது? ``ஈரான் உள்நாட்டு பிரச்னை, நீளும் ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லேண்ட் மீது வைத்துள்ள குறி, அமெரிக்க பெடரல் ரிசர்வின் ஆளுநர் ஜெரோம் பவல் மீதுள்ள குற்றச்சாட்டுகள், ட்ரம்ப் விதிக்கும் கூடுதல் வரிகள்அமெரிக்க பெடரல் வங்கி அடுத்து வட்டி விகிதத்தைக் குறைக்குமா… குறைக்காதா என்கிற எதிர்பார்ப்பு... இப்படி உலக அளவில் பல நிலையற்ற தன்மைகள் நிலவி வருகின்றன. இது சந்தையில் பொருளாதார நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைப் பாதுகாப்பாக தங்கத்தின் பக்கம் மாற்றி வருகின்றனர். அதனால், தற்போது தங்கம், வெள்ளியின் விலை ஏறுமுகத்தில் இருக்கின்றன. தங்கம், வெள்ளி விலை உயர்வு Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க! ``இப்போது தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா அல்லது காத்திருக்கலாமா? ``தொடர்ந்து ‘அப்-ட்ரெண்டில்’ இருந்து வருகிறது தங்கமும், வெள்ளியும். இப்போதைக்கு அதில் பெரியளவில் கரெக்ஷன் வராது. உலக அளவில் அரசியல், பொருளாதாரம் நிலைபெறும் வரை விலையில் மாற்றம் வர வாய்ப்பில்லை. ஆக, அரசியலும், பொருளாதாரமும் நிலையான பாதைக்கு விரைவில் திரும்பிவிடுமா என்கிற கேள்விக்கு, நமக்கே பதில் தெரியும். அதனால், தங்கம், வெள்ளியில் டிரேட் செய்ய நினைப்பவர்கள், டிரேட் செய்யலாம். ஆனால், கவனம் தேவை. இன்னொரு பக்கம், முதலீடு செய்ய நினைப்பவர்கள் லம்சம் முதலீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். இ.டி.எஃப்பில் எஸ்.ஐ.பி முறையைத் தேர்ந்தெடுங்கள். ஆனால், அதிலும் பெரிய தொகையைப் போடாமல், குறைந்த அளவு தொகை மட்டும் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள். கொஞ்சத் தொகையை முதலீடு செய்தாலும், தாராளமாக முதலீடு செய்யலாம். கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில், இப்போது உலக அளவில் அரசியல், பொருளாதார நிலைத்தன்மை வர வாய்ப்பில்லை. அதனால், தங்கம், வெள்ளி தொடர்ந்து உயர்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்”. Birth Certificate பெற, EB Bill கட்ட WhatsApp-ல் ஒரு மெசேஜ் போதும்; தமிழக அரசின் புது அப்டேட் |How to பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
Emilia Clarke Says She’s Done With Fantasy
Emilia Clarke became world-famous for playing Daenerys Targaryen in the fantasy TV series Game of Thrones. She played the powerful
என் தந்தை நீங்க தான்; உலகை அதிரவைக்கும் டொனால்ட் ட்ரம்ப் இற்கே ஷாக் கொடுத்த பெண்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உயிரியல் தந்தை என்று கூறி, தந்தைவழி உறவை நிரூபிக்க அனுமதிக்கக் கோரி துருக்கியப் பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான நெக்லா ஓஸ்மென் என்ற பெண், தனக்கு ட்ரம்ப்புடன் ஒற்றுமை இருப்பதாகக் கூறி, அதை நிரூபிக்க மரபணு பரிசோதனை கோருகிறார். நிரூபிக்க மரபணு பரிசோதனை துருக்கிய தலைநகர் அங்காராவில் வசிக்கும் அவர், செப்டம்பர் 25 ஆம் திகதி அங்காரா 27ஆவது குடும்ப நீதிமன்றத்தில் இந்த […]
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கடல் வழியாக தப்ப முயன்ற நிலையில் கைது
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள் , இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தப்பி வர முயன்ற நிலையில் கைதாகியுள்ளனர். அம்பாறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்த இருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு தங்க நகைகளை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , சில காலங்களுக்கு பிணையில் முன்னர் விடுவிக்கப்பட்டனர். பிணையில் வெளியே வந்தவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற வேளை இராமேஸ்வரம் பகுதியில் வைத்து க்யூ பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நம்ம கலாச்சாரத்த இங்க வந்து கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு –சிவகார்த்திகேயன்!
டெல்லி : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பொங்கல் பானை தயாரிப்பு, மரபு உணவுகள் தயாரிப்பு, கொலம் வரைவு, பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்றன. தமிழக கலை-கலாசாரத்தை தேசிய தலைநகரில் பரவலாக கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.இவ்விழாவில் ‘பராசக்தி’ திரைப்படக் குழு சிறப்பு அழைப்பாளர்களாக […]
தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.! படங்கள் &வீடியோ..
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில், இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்றையதினம் என்பது குறிப்பிடத்தக்கது.. இதனை முன்னிட்டு புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை “மாணிக்கப் பொங்கல் நாளாக” கொண்டாடும் முகமாக, அடிப்படை வசதிகள் குறைகளைக் கொண்ட வன்னி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை தத்தெடுத்து அங்கு வாழும் குடியிருப்பாளர்களுக்கும், […]
சட்டவிரோத மின் வேலியில் சிக்கி கணவன் - மனைவி உயிரிழப்பு
வரக்காப்பொல, ஹுனுவல பிரதேசத்தில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். வயல் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹுனுவல, துல்ஹிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான கணவரும், 58 வயதான மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்தச் சட்டவிரோத மின்சார இணைப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்; களைகட்டிய நிகழ்ச்சிகள் - Album
கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்-நோ சொல்லும் திமுக;கூட்டணி அரசியல் எந்த எல்லை வரை?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் அதிகமாக பேசப்படும் விவாதம் கூட்டணி ஆட்சி என்பதே. 2026 அரசியல் களம் “ஒற்றை கட்சி ஆட்சியா அல்லது கூட்டணி கட்சிகளின் ஆட்சியா?” என்ற கேள்வி மீண்டும் தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
வேலூர்: கடந்த ஓராண்டில் 184 குட்கா வழக்குகள் - 220 பேர் கைது; வங்கிக் கணக்குகள் முடக்கம்!
வே லூர் மாவட்டத்தில், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது மாவட்டக் காவல்துறை. அதன்படி, 2025 ஜனவரி 1-ம் தேதி தொடங்கி, 2026 ஜனவரி 12-ம் தேதியான நேற்று முன்தினம் வரை சட்டவிரோதமாக `குட்கா’ விற்பனைச் செய்யப்பட்டது தொடர்பாக மட்டுமே மாவட்டத்தில் 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 4,654 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த 8,67,857 ரூபாய்க்கான பரிவர்த்தனையும் முடக்கப்பட்டிருக்கிறது. குட்கா சோதனை மேலும், குட்கா விற்பனை தொடர்பாக 2 பேர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, 12 கார்கள் மற்றும் 30 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர் நடவடிக்கையாக, நேற்றைய தினமும் மாவட்டம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதிலும், 3 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விற்பனையாளர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். `இதுபோன்ற போதைப்பொருள் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வேலூர் மாவட்டக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
Tata Punch Command Max: அட்டகாச லுக்; ஸ்மார்ட் இன்டீரியர்! | Launch Photo Album
கோயம்பேடு சந்தையில் குவிந்த கரும்பு, மஞ்சள் - உற்சாகமாக வாங்கிச் செல்லும் மக்கள்!
மோடியுடன் பொங்கல் விழா : `ஜனநாயகன் எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான்' - சிவகார்த்த்திகேயன்
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர். பொங்கல் விழாவில் சிவகார்த்த்திகேயன், ரவி மோகன் குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட 'பராசக்தி' படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எல்லோருக்கும் இந்தப் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சிசையைத் தர வேண்டும். 'பராசக்தி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தை டெல்லியில் கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் மோடியை முதல் முறை இன்று நேரில் சந்தித்தேன். அது மறக்க முடியாத தருணமாக இருந்தது. அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 'ஜனநாயகன்' எப்போது வெளியானாலும் கொண்டாட்டம் தான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். #Thiruvasagam was performed today in #Pongal2026 celebration at Delhi in front of our honourable prime minister @narendramodi sir … @DrLMurugan . Will launch it soon officially ❤️ pic.twitter.com/ldFiIPqeBA — G.V.Prakash Kumar (@gvprakash) January 14, 2026 இந்த பொங்கல் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திருவாசகம் பாடலை அவரின் இசையில் பாடினார். . இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பொங்கல் விழாவில் திருவாசகத்தை அரங்கேற்றம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இது விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டிருக்கிறார்.
பொங்கலிட்ட மோடி; ஜி.வி பிரகாஷ் இசை நிகழ்ச்சி; பங்கேற்ற பராசக்தி படக்குழு! - டெல்லி பொங்கல் விழா!
டெல்லி பொங்கல் விழா டெல்லி பொங்கல் விழா டெல்லி பொங்கல் விழா டெல்லி பொங்கல் விழா
விஜய், சீமானை குறைத்து மதிப்பிடக்கூடாது… திமுகவை வீழ்த்துவதுதான் நோக்கம் -அண்ணாமலை பேட்டி
வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில்தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை குறைத்து மதிப்பிடக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பேசு பொருளாகி உள்ளது.
யாழில். தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு சென்ற இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்
யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் இன்றைய தினம் புதன்கிழமை யாழில். உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அங்கு கடற்தொழில்அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , எஸ். பவானந்தராசா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, க.இளங்குமரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின்இணைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் ஆகியோர் அடங்கிய குழுவினரைசந்தித்து கலந்துடையாடினார்.
தெருநாய்க்கடி சம்பவங்களுக்கு அதிக நிவாரணம் வழங்க உத்தரவிட நேரிடும் என மாநிலங்களை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது. தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில அரசுகள் முறையாகச் செயல்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள நாய்களைப் […]

25 C