அமெரிக்காவுடன் இணைப்பு: கிரீன்லாந்து தலைவா்கள் எதிா்ப்பு
அமெரிக்காவுடன் தங்கள் பிராந்தியத்தை இணைக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியதற்கு கிரீன்லாந்து அரசியல் கட்சித் தலைவா்கள், கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். தங்கள் தீவின் எதிா்காலத்தை தாங்களே தீா்மானிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்து கிரீன்லாந்து பிரதமா் ஜென்ஸ்-ஃப்ரெடரிக் நீல்சன் மற்றும் நான்கு கட்சித் தலைவா்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் அமெரிக்கா்களாக இருக்க விரும்பவில்லை. டென்மாா்க்கா்களாகவும் இருக்க விரும்பவில்லை. நாங்கள் கிரீன்லாந்தா்களாகவே இருக்க விரும்புகிறோம். கிரீன்லாந்தின் எதிா்காலத்தை கிரீன்லாந்து மக்களே […]
மலையகத் தியாகிகள் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்ட போராட்டமும் விமர்சனப் பார்வையும்!
மலையகத் தியாகிகள் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்ட போராட்டமும் விமர்சனப் பார்வையும்! ஒரு பல்கலைக்கழக மாணவியாக, மலையகப் பின்னணியில் இருந்தோ… The post மலையகத் தியாகிகள் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்ட போராட்டமும் விமர்சனப் பார்வையும்! appeared first on Global Tamil News .
✈️ விமான நிலையத்தில் £75 அபராதம் –கண்ணீர் சிந்திய Ryanair பயணிகள்
பேர்மிங்காமில் இருந்து இத்தாலியின் வெரோனா (Verona) நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தின் நுழைவாயிலில் (Gate), சுமார் 15 பயணிகள் தலா… The post ✈️ விமான நிலையத்தில் 75 அபராதம் – கண்ணீர் சிந்திய Ryanair பயணிகள் appeared first on Global Tamil News .
`பதிவிடுவது பயனல்ல, அதை அச்சில் எழுத்தாக்க வேண்டும்!'- சென்னை புத்தகக் காட்சியில் ஆழி செந்தில்நாதன்
சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சியில், மொழியுரிமை செயல்பாட்டாளரும், ஆழி பதிப்பகத்தின் நிறுவனருமான செந்தில்நாதன் பேசினார். ஏன் ஆழி ? ``ஆழி என்பது ஆழமானது. அது போன்று நல்ல ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். இதுவரை 400 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். ஆழி பதிப்பகத்தை பொறுத்தவரை அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற விஷயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து எழுத்தாளர்கள் நேரடியாக எழுதுவதும், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்களாகவும், தொகுப்புகள் ஆகவும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். கடல், கடல்வழி பயணம் பற்றி படிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சியோடு இணைந்து பிற நாடுகளில் உள்ள புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறோம். ஆழி பதிப்பகத்தில் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் சிறப்பு என்னவென்றால், நூற்றாண்டை தொட்டிருக்கும் சுயமரியாதை இயக்கத்தை நினைவூட்டும் வகையில், 100 புத்தகங்களை சுயமரியாதை இயக்கம் சார்ந்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 புத்தகங்களை தொகுத்து இந்த ஆண்டு இந்த அரங்கத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறோம். நீதிக்கட்சி,பெரியார், அண்ணா , கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் என இந்த புத்தகங்கள் வெளிவந்துள்ளது. ஜென் சி களின் எழுத்துலகம் இந்தத் தலைமுறை 1952 இல் வெளிவந்த பராசக்திக்கும் 2026 இல் வெளிவர இருக்கும் பராசக்திக்கும் இடையிலான அரசியல் விஷயங்கள் நிறைய மாணவர்களிடையே சென்றடைந்து இருக்கிறது. இளம் தலைமுறைக்கு ஏன் புத்தகங்கள் முக்கியம் என்றால், சமூக வலைதள பக்கத்தில் வெறும் பதிவுகள் போடுவதால் மட்டும் பயன் அல்ல. அது புத்தகமாக மாறும்போது பிரிண்ட் ஆக இருக்கலாம் இ புக்காக இருக்கலாம். நீங்கள் பதிவிடுபவர் என்ற நிலையிலிருந்து மாறி, நீங்கள் ஒரு எழுத்தாளர் ஆகும் போது, அதிகாரம் பெற்ற நிபுணராக மாறுகிறீர்கள். பல துறைகளைப் பற்றிய விஷயங்கள் பலரை சென்றடைய வேண்டும். அது நீண்ட நாள் நீடிக்க வேண்டும். அந்தக் கண்ணோட்டத்தில் இருந்து ஜென் சி மாணவர்கள் எழுத ஆரம்பிக்க வேண்டும். இந்த நாளின் உலக சூழலை எடுத்துக் கொண்டால் நான் விரும்பக்கூடிய புத்தக பரிந்துரைகள் இதுதான்..! 1. இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் காக்கப்பட வேண்டியது ஜனநாயகம் தான். ஜனநாயகத்தைப் பற்றி உலக அளவில் பல அறிஞர்கள் பல கண்ணோட்டத்தில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நீங்கள் கேட்பதால் உடனே என்னால் சொல்ல முடியவில்லை. செயற்கை நுண்ணறிவிடமே முதல் 10 புத்தகங்கள் கேளுங்கள் . அதுவே உங்களுக்கு பதில் அளிக்கும். 2. இந்தியாவில் உள்ள எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் எதுவென்றால் குறிப்பாக ஆண்கள் படிக்க வேண்டும் இந்த புத்தகத்தை. பெரியாரின் பெண் ஏன் அடிமையானால்? இது பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்கள் படிக்க வேண்டிய கட்டாயமான புத்தகம். 3. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்து இருக்கிறது. இவை அனைத்திற்கும் திராவிட கட்சிகளின் ஆட்சியாளர்களுக்கு நன் மதிப்பு கொடுத்தாலும் இதன் வேர் தொடங்கியது அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம் என்ற புத்தகம் தான். இதை அனைவரும் படிக்க வேண்டும். 1947லிருந்து தமிழ்நாடு பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்த புத்தகத்திலிருந்து தான் தொடங்குகிறது. 4. உலக அளவில் தற்போது வளர்ந்து வரக்கூடியது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதைப் பற்றி அறிந்து கொள்ள பல புத்தகங்கள் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவை பற்றி அறிய செயற்கை நுண்ணறிவிடமே கேளுங்கள், உன்னை பற்றி படிப்பதற்கு எந்த புத்தகங்கள் நன்றாக இருக்கும் என்று..! நான் படித்தது, ஆங்கிலத்தில் Super Intelligence என்ற புத்தகம் இருக்கிறது. அதை நாங்கள் ஆழி பதிப்பகத்தில் மெய்யறிவு என்ற புத்தகமாக வெளியிட்டு இருக்கிறோம். 5. காலநிலை மாற்றம் மனிதன் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால். Greta Thunberg என்ற சுற்றுச்சூழல் ஆர்வலரின் சுற்றுச்சூழல் தொகுப்பான The collection of best article on Climate change இது அமேசானில் கிடைக்கும். இன்றைய உலக சூழலியல் பற்றி விளக்கும் புத்தகமாக இது அமைகிறது. விகடன் பிரசுரம்
தையிட்டி: காணிப் பிரச்சினையா? நிலாந்தன்.
வருஷம் பிறந்த பின் வந்த முதலாவது பௌர்ணமி நாளில் தையிட்டியில் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் மக்களும் நில மீட்புக்காக… The post தையிட்டி: காணிப் பிரச்சினையா?நிலாந்தன். appeared first on Global Tamil News .
பிரித்தானியாவில் ஆபத்திலுள்ள 2,500 போின் வேலைவாய்ப்புகள்
பிரித்தானியாவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனங்களான Claire’s மற்றும் The Original Factory Shop (TOFS) ஆகியவை நிர்வாகச்… The post பிரித்தானியாவில் ஆபத்திலுள்ள 2,500 போின் வேலைவாய்ப்புகள் appeared first on Global Tamil News .
️ தைப்பொங்கலுக்கு யாழ் செல்லும் ஜனாதிபதி
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 15 மற்றும் 16… The post ️ தைப்பொங்கலுக்கு யாழ் செல்லும் ஜனாதிபதி appeared first on Global Tamil News .
Parasakthi Movie Review | Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela| Sudha Kongara | Vikatan
Parasakthi Story: Hindi Imposition and பொள்ளாச்சி சம்பவம் | Decode | பராசக்தி
America vs China vs Japan: அதிக லாபம் தரும் பங்குச்சந்தை எது? | IPS Finance - 408
DMK வாக்குறுதிகள்: பொய் சொல்லும் CM STALIN? | DMDK மாநாடு ஹைலைட்ஸ்! | ADMK TVK NTK | Imperfect Show
`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர் இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை, திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது, இதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமி தைத்திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளார். மேலும் முதலமைச்சர் சொல்வது உண்மைதான் சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்றார்.
200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்: மு.க ஸ்டாலின் சூளுரை
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில், பொங்கல் வைத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பசுக்களுக்கு உணவளித்ததுடன், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி அனைவருக்கும் வாழ்த்தும் தெரிவித்தார். 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி இந்த […]
️ பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை விபத்து -காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். யாழ். போதனா வைத்தியசாலையில்… The post ️ பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை விபத்து -காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on Global Tamil News .
பராசக்தி: இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது- கமல்
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பராசக்தி'. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'பராசக்தி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கமல் பராசக்தி அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அன்புள்ள இளவல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு... தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம். பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது முதல் பாராட்டு இந்த பயோபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும் இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும். கமல்ஹாசன் இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள் என்று பதிவிட்டிருக்கிறார்.
️ தையிட்டி காணி விவகாரம்: விகாராதிபதியின் மறுப்பும் தொடரும் இழுபறியும்
விசாரணைகள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விவகாரம் மீண்டும் ஒரு சிக்கலான… The post ️ தையிட்டி காணி விவகாரம்: விகாராதிபதியின் மறுப்பும் தொடரும் இழுபறியும் appeared first on Global Tamil News .
சீரற்ற கால நிலை –கடல் கொந்தளிப்பால் மூர்க்கம் கடற்கரை பாதிப்பு
யாழ்ப்பாணம், பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் (Moorrkham) கடற்கரை, நேற்றைய தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட கடும்… The post சீரற்ற கால நிலை – கடல் கொந்தளிப்பால் மூர்க்கம் கடற்கரை பாதிப்பு appeared first on Global Tamil News .
Bigg Boss Tamil 9: பணத்தேவை, மனச்சோர்வு - வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது ஏன்?
பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பார்க்கப் பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் கானா வினோத். வடசென்னை பகுதியைச் சேர்ந்த இவர் விஜய் டிவிக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்தான். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் முந்தைய சில பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் நிறைவு நாள் கொண்டாடங்களின் போது கானா பாட்டு பாடியிருக்கிறார். அந்த தொடர்பில்தான் பிக்பாஸ் வாய்ப்பு வந்ததாகத் தெரிகிறது. கானா வினோத்துடன் மன்னர் முத்து நிகழ்ச்சியிலும் ஒருசில சர்ச்சைகளைத் தாண்டி தனித்து விளையாடினார் என்று சொல்லலாம். அதனாலேயே ஒவ்வொரு எவிக்ஷனின் போதும் இவருக்கு ஓட்டுகள் கிடைத்து எவிக்ட் ஆகாமல் தப்பித்து வந்தார். வெளியில் பி.ஆர் ஒர்க் என்றெல்லாம் எதுவும் இவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. கமருதீன் ‘சாதாரண குடும்பப் பின்னணி. கானா கச்சேரிகள் மூலம் கிடைக்கிற வருமானம் பத்தாதுனுதான் அவங்க மனைவி சின்னதா பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க. அவருக்கு ஆதரவு தெரிவிச்சதெல்லம் அவரு கூட இருந்த பசங்கதான். வடசென்னை பின்புலத்துல இருந்து அந்த மாதிரி ஒரு ஷோவுல கலந்துகிட்டு 90 நாட்களைக் கடந்த்தே பெரிய சாதனைதான். பணப்பெட்டி எடுத்த பிறகு ஒரு விஷயத்தை ஓபனா சொல்லியிருந்தாரே, ‘இந்தப் பணம் கோடிக்குச் சமம்’னு அதுதான் நிஜம். அதுவும் போக அந்த ஷோவுல டைட்டில் வாங்கினா 50 லட்சம் தர்றவங்க ரெண்டாவது இடத்துக்கு எதுவுமே தர்றதில்ல, இதையெல்லாம் யோசிச்சுதான் பணத்தை எடுத்திருப்பார். ரொம்ப நல்ல முடிவும் கூட’ என்கிறார் வினோத்தை அவர் கானா பாட ஆரம்பித்த காலத்திலிருந்து அறிந்து தெரிந்து வைத்திருக்கும் வடசென்னை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர். பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வினோத்தின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, ‘நம்பிக்கையோடதான் விளையாடிட்டிருந்தான். டைட்டில் கிடைச்சிடும்னு நம்பினோம். ஆனா பணத்தை எடுக்கிற முடிவை கடைசி நிமிடத்துலதான் எடுத்திருக்கணும். ஏன்னா, ஷோவுக்கு போறதுக்கு முன் ‘முடிஞ்ச எஃபெக்ட் போடுவோம், பார்த்துக்கலாம்’னு உற்சாகமாப் போனான் ஷோவுல கமருதீனுக்கு நிகழ்ந்த அனுபவம் ரொம்பவே பாதிச்சிடுச்சு. ஷோவுல எது வேண்டுமானாலும் நடக்கலாம்னு கடைசி சில நாட்கள்ல புரிஞ்சிருக்கு. அதனாலேயே பணத்தை எடுத்துட்டு வெளியேறிட்டார்’ என்கின்றனர் இவர்கள்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் பலி –இளைஞர் கைது
அமெரிக்காவின் மிசிசிப்பி (Mississippi) மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்… The post அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் பலி – இளைஞர் கைது appeared first on Global Tamil News .
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 உயர்கிறதா? பெண்களுக்கு விரைவில் இனிப்பான பரிசு- அமைச்சர் ஐ.பெரியசாமி!
தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்றும், இனிப்பான செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது மகளிர் உரிமைத் தொகை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மம் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்
“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 97 இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது. இதில் வினோத் விடைபெறும் பகுதியைத் தவிர எதுவுமே சுவாரசியமாக இல்லை. “வீட்டுக்கு திரும்பி வந்தவங்க கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. அதை ஏன் ஆட்டத்துல இருக்கும்போதே காட்டலை.. நானும் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். வெளியல விமர்சனங்கள் பார்த்துட்டு வந்தாங்களான்னு தெரியல. BB TAMIL 9 DAY 97 ஒரு வார்த்தையை வெச்சு ஒரு நாள் முழுக்க டிகோட் பண்ணிட்டு இருக்காங்க. வாங்க என்னன்னு விசாரிப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்’ என்றார் விசே. அந்த வெள்ளிக்கிழமையில் வழக்கம் போல் ஒன்றுமில்லை. கார்டன் ஏரியாவில் கைகாலை நீட்டி படுத்து விட்ட திவாகரை வைத்து மற்றவர்கள் செய்த ‘டெட்பாடி காமெடி’ நன்று. திவாகரும் இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார். உள்ளே வந்த விசே முதலில் பிரவீன் காந்தியிடம் ஒரண்டை இழுத்தார். “உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதா.. வெளில நீங்க பேசின வீடியோ பார்த்தேன்” என்று விசே, சங்கடமான சிரிப்புடன் “பிடிக்கும் சார்” என்றார் டைரக்டர். ‘விஜய்சேதுபதி எங்களை பேசவே விட மாட்டார்’ என்பது முதல் பல விஷயங்களை பிரவீன் காந்தி நேர்காணல்களில் சொல்லியிருந்தார் போல. எஃப்ஜேவும் கானா வினோத்தும் இதே விஷயத்தை வீட்டிற்குள்ளேயே சொன்னார்கள். ‘அவர் கிட்ட என்ன விளக்கம் தர்றது. உக்காருன்னுவாரு. BB TAMIL 9 DAY 97 ஸாரி சொன்னாலும் எடுபடாது. ஹோஸ்டிற்கு மரியாதை தரணுமில்ல” என்று இவர்கள் பேசியதை வைத்தும் நையாண்டி செய்தார் விசே. இவர்கள் சொல்லும் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்பது விசேவிற்குத் தெரியும். எனில் ஏன் மறைமுகமாக கிண்டல் செய்து மடக்க நினைக்கிறார். “என் மீது விமர்சனங்கள் சொல்லுங்க.. அது எனக்குப் பிடிக்கும்” என்று சொல்கிற விசே, அப்படி உண்மையான விமர்சனங்கள் வந்தால் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கிறாரா? Anyway, விசேவின் கிண்டல் வெறும் ஜாலிக்குத்தான் என்றால் ஓகே. “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு” - திவாகர் பெருமித அறிவிப்பு முன்னாள் போட்டியாளர்களிடம் “வெளியுலக அனுபவம் எப்படி இருந்தது?” என்று விசாரிக்க அனைவருமே சொல்லி வைத்தாற் போல ஆஹாஓஹோ என்றார்கள். ‘ரோட்ல ஆட்டோக்காரர் செல்ஃபி எடுக்கறார். பால்காரர் ஆட்டோகிராஃப் கேட்கிறார்” என்று புளகாங்கிதப்பட்டார்கள். ஒருவர் அசட்டுத்தனமான ரீல்ஸ்கள் போட்டு அதன் மூலம் பிரபலமாகி விட்டார் என்றால், அவருடன் செல்ஃபி எடுக்க அலைமோதும் கூட்டம்தான் நாம். அவர்களைத்தான் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கூப்பிடுவார்கள். ஏன் பிக் பாஸில் கூட கூப்பிடுவார்கள் என்பதற்கான உதாரணம் திவாகர். ஆனால் இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகம்தான். இன்னொரு ரீல்ஸ்காரர் புகழ்பெற்றால் கூட்டம் அவர் பின்னால் ஓடிவிடும். பிக் பாஸ் தரும் வெளிச்சத்தை எப்படி திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கமல் ஏற்கெனவே இதை சிறப்பாகச் சொன்னார். ‘இந்த மேடை உங்களுக்கு புகழை பெற்றுத் தரும். அதை கையாள்வது உங்கள் பொறுப்பு’ என்று. இதற்கு முன்னால் பிக் பாஸில் கலந்து கொண்டவர்களில் அரிதாக சிலர் மட்டுமே இன்னமும் லைம் லைட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆளையே காணோம். ஓவியா உட்பட. BB TAMIL 9 DAY 97 “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு சார்.. விஜய்சேதுபதி கிட்ட நீங்க திட்டு வாங்கற காட்சிகள் க்யூட்டா இருக்குன்னு சொல்றாங்க” என்று வித்தியாசமாக சொன்னார் திவாகர். “நீங்க எது பண்ணாலும் அது க்யூட்தான் சார்” என்று கிண்டலடித்தார் விசே. “ஆட்டோல ஏறினேன்.. ஆட்டோகாரர் கண்டுபிடிச்சிட்டார்’ என்று திணறித் திணறி வியானா விவரித்த போது திவாகரின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. மற்ற எல்லோரையும் விசாரித்து பிரேக்கில் சென்ற விசே “அய்யோ.. பிரவீன் காந்தியை கேட்க மறந்துட்டேன். அப்புறம் வெளில போய் ஏதாவது சொல்வாரு” என்று மீண்டும் திரும்பி வந்தது, வேண்டுமென்றே செய்த குறும்போ?! பிரேக் முடிந்து திரும்பியதும் ‘ஒரு சர்ப்ரைஸ்’ என்று ஆரம்பித்தார் விசே. வந்தது கானா வினோத். உணர்வுப்பூர்வமாக நிகழ்ந்த ‘கானா வினோத்’ farewell இதுவரை மற்றவர்களின் பயண வீடியோவை ஒரு சம்பிரதாய மனநிலையில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் கானா வினோத்தின் பயண வீடியோ ஸ்பெஷலாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது. ரஞ்சித் படங்களில் இருந்து இணைக்கப்பட்ட பாடல்கள் அருமையான உணர்வைத் தந்தன. மைக்கை கையில் வாங்கி ‘செக்.. செக்’ என்றவர் ‘செக் வர்றதுக்கு 45 நாள் ஆகுமாமே?’ என்று டைமிங்கில் கிண்டலடித்தார். “நல்ல பசில பிரியாணிக்கு காத்திருக்கிறத விட கூழ் முக்கியம். அப்படித்தான் இந்த 18 லட்சம். இதை வெச்சு என் குடும்பத்தை பார்த்துப்பேன். இந்த முடிவு நானா எடுத்ததுதான்.. மத்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு பணத்தை தூக்கிட்டேன்” என்று ஜாலியாக பேசினார் வினோத். BB TAMIL 9 DAY 97 “உங்க பாடி லேங்வேஜ்ல ஒரு ‘அதுப்பு’ இருக்கு. அது பார்க்க நல்லா இருக்கு” என்று லோக்கல் மொழியில் விசே பாராட்டியது சிறப்பு. கெமி ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ‘உங்க கண்ணாடி வேணும்’ என்று அடம்பிடித்த வினோத்திற்கு வரவழைத்து தந்தார் விசே. வீட்டிற்குள் நுழைந்ததும் “என்னா தர்பீஸூ.. நான் இல்லாம ஜாலியா இருக்கிறயா.. நான் வெளில போகணும்ன்னு ஒவ்வொரு காமிராலயும் சொல்லிட்டு நல்லா இருக்கியான்னு கேட்கறே” என்று திவாகரை கலாய்த்தார் வினோத். வினோத்தின் மனைவி பாக்யா வந்து பேசியதும் “பொண்டாட்டி சொல்றதைக் கேளுங்க. வாழ்க்கைல உருப்படுவீங்க” என்கிற முக்கியமான செய்தியை சொல்லி விட்டு விடைபெற்றார் வினோத். வீட்டிற்குள் திரும்பி வந்த போது ஏற்பட்ட அனுபவம், அவர்களிடம் போட்டியாளர்கள் எதிர்கொண்ட அனுபவம் என்று இரண்டு பகுதிகளாக விசாரித்தார் விசே. அதில் சுவாரசியமாக ஒன்றுமில்லை. “இங்க இருக்கறவங்க யாரையும் மிஸ் பண்ணலை. அவங்க வெளிய இருக்காங்க. ஆதும்மா” என்று வித்தியாசமாக சொன்னார் வியானா. “அப்படின்னா நீங்க வந்தது இவங்களுக்கு பிடிக்கலைன்னு வெச்சுக்கலாமா?” என்று விசே மடக்க “may be” என்றார். (வீட்டிற்குள் இருந்த போது குழந்தை மாதிரி இருந்த வியானா, ரீஎன்ட்ரியில் கோட்டானாக மாறியிருக்கிறாரே?!) BB TAMIL 9 DAY 97 பிரவீன்ராஜை மடக்கி மடக்கி வறுத்தெடுத்த விசே பிரவீன்ராஜ் திரும்ப வரும் போது ‘மிதப்பாக’ சொன்ன ஒரு வாக்கியத்தால் விசேவிடம் மாட்டிக் கொண்டார். “இந்த ஆட்டத்துல humanity-ஐ இழந்துட்டு ஆடறீங்க.. உண்மையா இல்ல” என்றெல்லாம் அவர் சொன்னதை பிக் பாஸ் டீம் அண்டர்லைனில் குறித்துக் கொண்டது போல. “Humanity இல்லாத அளவிற்கு அப்படி என்ன நடந்துச்சு.. ஒரு சம்பவத்தை சொல்லுங்க.. நாங்க அப்படி என்ன கவனிக்கத் தவறிட்டோம்.. விசாரிக்காம விட்டுட்டோம்.. சொல்லுங்க. சொல்லுங்க…’ என்று விசே மடக்க, பந்து எறிந்த சம்பவத்தை பொருத்தமில்லாமல் சொன்னார் பிரவீன்ராஜ். “அந்த ஸ்மைலி பந்தா.. அதுல அடிச்சா வலிக்குமா.. அது திசை திருப்புவதற்காக செய்தது.. வேற உதாரணம் சொல்லுங்க” என்று மீண்டும் மடக்கினார் விசே. ஒருவர் என்ன சுற்றி விட்டாலும் அவரை மறுபடியும் பாயிண்ட்டிற்கு அழைத்து வந்து விவாதிக்கும் திறமை விசேவிடம் நிறைய இருக்கிறது. எதையாவது சொல்லி இவரிடம் தப்பித்துக் கொள்வது சிரமம். ஆனால் இந்த தர்க்கத் திறமையை விசே கடுமையான தொனியில் வெளிப்படுத்துகிறார். எதிராளியின் வாயை உடனே அடைத்து விடும் அதிகாரம் அவரிடம் வெளிப்படுகிறது. பிக் பாஸ் ஹோஸ்ட் என்கிற பொஷிஷனை வைத்துக் கொண்டு மேலாதிக்கம் செய்கிறார். மாறாக இரு தரப்பிற்குமான சௌகரியத்தை தந்து மடக்குவது நன்றாக இருக்கும். கமல் இதை சிறப்பாகச் செய்வார். பிரவீன்ராஜ் என்னதான் மல்லுக்கட்டினாலும் அவர் சொன்ன உதாரணங்கள் மொக்கையாக இருந்ததால் வாதம் எடுபடவில்லை. ஆனால் பிரவீன்ராஜ் சொன்னது பொத்தாம் பொதுவாக பார்த்தால் உண்மைதான். நாம் ஒரு போட்டிக்குள் நுழையும் போது நம்மிடமுள்ள மனிதத்தன்மை தன்னிச்சையாக குறைந்து விடுகிறது. சுயநலம் பெருகி விடுகிறது. பேருந்து இருக்கையை ஓடிச் சென்று கைப்பற்றும் அன்றாட நடைமுறையிலேயே இதைப் பார்க்கலாம். ஒரு வயதான பெரியவரை இடித்துத் தள்ளிக்கொண்டாவது இருக்கையைப் பற்றும் சுயநலவாதிகளாக மாறி விடுகிறோம். அந்த நேரத்தில் மனிதனின் ஆதாரமான நல்ல விஷயங்கள் மறைந்து போட்டி மனப்பான்மை மட்டுமே பெருகி விடுகிறது. BB TAMIL 9 DAY 97 பிக் பாஸ் தரும் அனுபவத்தை சரியான நோக்கில் அடைகிறோமா? “பிரவீன்காந்தி.. கவனிச்சீங்களா.. இவரை முழுசா பேச விட்டேன்..” என்று கிண்டலடித்த விசே, பிரவீன்ராஜிடம் உள்ள விவாதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் விசே சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. “இந்த வீடு உங்களுக்கு பல அனுபவங்களைத் தந்திருக்கும். அதை வெச்சு வெளில போய் யோசிச்சிருப்பீங்க.. அந்தச் சிந்தனை ஞானமா மாறியிருக்கும்.. இப்படியெல்லாம் நான் எதிர்பார்த்தேன். ஆனா நீங்க பழைய விஷயங்களை அப்படியே சுமந்துட்டு வந்திருக்கீங்க. இனி மேலாவது மாறுங்க” என்று சொன்ன உபதேசம் நன்று. இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் பொருந்தும். எத்தனையோ சீசன்களாக நானும் இதைத்தான் சொல்லி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மீதான வம்புகளை மட்டும் உற்சாகமாக பேசுவதால் இழப்பு நமக்குத்தான். மாறாக போட்டியாளர்களின் இடத்தில் நம்மை வைத்து அந்தத் தவறுகளை சுயபரிசீலனையுடன் பார்த்தால் நமக்குள்ளும் மாற்றங்கள் நிகழும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மீதான நுகர்வின் வெற்றி. மாறாக வெறும் அரட்டையாக முடித்தால் இழப்பு நமக்கே. விசேவிடம் அடுத்து மாட்டியவர் வியானா. கான்வென்ட் தேவதையாக வெளியே சென்றவர், விநோத டிராகுலாவாக மாறி உள்ள வந்ததின் மர்மம் பிடிபடவில்லை. அதிலும் குறிப்பாக விக்ரமை டார்கெட் செய்து ‘நீங்க ஒரு பிராடு. வக்ரம்.. மத்தவங்களை மானிபுலேட் பண்றீங்க. ரூல்ஸ் மதிக்கணும்னு மத்தவங்களுக்கு சொல்வீங்க. நீங்க பின்பற்ற மாட்டீங்க..” என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வியானா வைத்த போது அதற்கான காரணம் நிச்சயமாக புரியவில்லை. வெளியில் எதையோ தவறாக பார்த்து விட்டு புரியாமல் வந்து பேசுகிறார் என்பது மட்டும் புரிந்தது. BB TAMIL 9 DAY 97 விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியது ஏன்? இன்று விசே வியானாவிடம் கிடுக்கிப்பிடி போட்டு “வக்ரம்ன்ற வார்த்தையை சொல்ல வேணாம்ன்னு ஏற்கெனவே சொன்னேன். அப்படியும் சொல்லியிருக்கீங்க.. நீங்க ஏதோ பாதிக்கப்பட்டிருக்கீங்க போல. அதை என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க” என்று விசாரித்தார். ஏதோவொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகப் போகிறது என்று பார்த்தால், பிரவீன்ராஜை விடவும் மொக்கையான சம்பவத்தை உதாரணமாகச் சொன்னார் வியானா. உண்மையில் அது அவர் மீதே பூமராங் போல பாய்ந்தது. ஒரு டாஸ்க் நடப்பதற்கு முன்னால் அதற்கு நடுவராக யார் இருக்கப் போகிறார் என்பதற்கான விவாதம் பெண்கள் அணியில் நடந்தது. அதற்கான தகுதிக் காரணமாக வியானா சொன்ன காரணம் “நான் நம்ம அணி சார்பா பேசி பாயிண்ட் எடுத்துடுவேன்’. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வியானா வாயை விட்டு விட்டார். இதை அப்போதே திவ்யா கண்டித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் அணி “பாரபட்சமாக நடந்து கொள்வேன் என்று சொல்பவரை நீதிபதியாக எங்களால் ஏற்க முடியாது. மாற்றுங்கள்” என்று போராட்டம் நடத்தினார். விக்ரம் செய்தது சரியான விஷயம். ஆனால் வியானா என்ன சொல்கிறார் என்றால், “பிக் பாஸ் சொன்ன உடனே கேட்டுக்கற விக்ரம், இதுல மட்டும் ரூல்ஸை தனக்கேத்த மாதிரி மாத்திக்கறாரு” என்று வாதாடுகிறார். மேலோட்டமாக யோசித்தாலே வியானா பக்கம் தவறு என்பது புரிந்து விடும். இந்த மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டா அத்தனை வன்மத்தைப் பொழிந்தார் வியானா? BB TAMIL 9 DAY 97 இந்த வாரத்தில் ஒரு சிறப்பான எவிக்ஷன் “சுபிக்ஷாவை தன்னிச்சையாக விளையாட விட்டிருந்தால் அவர் டைட்டில் அடித்திருப்பார்” என்பதும் வியானா சொல்கிற குற்றச்சாட்டு. நாம் பார்த்தவரையில் விக்ரம் சுபிக்ஷாவிற்கு வழிகாட்டும் வேலையை மட்டுமே செய்தார். ஆனால் ஒருவரின் நிழலில் நாம் இருக்கக்கூடாது என்பது சுபிக்ஷாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் விக்ரமின் தவறு என்னவிருக்கிறது? அப்படியே இது விக்ரமின் ஸ்ட்ராட்டஜி என்றாலும் அதிலிருந்து விடுபடுவதுதானே சுபிக்ஷாவின் வேலை? டாஸ்க்கில் ஆதிரையின் காலைப் பிடித்து இழுத்ததற்கும் விக்ரம் அவரிடம் மனமார மன்னிப்பு கேட்டு விட்டார். எல்லோரிடமும் வருந்தினார். சம்பந்தப்பட்ட ஆதிரையே இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு விட்டார். ஆக விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியதில் உப்புக்கு கூட பெறாத காரணங்கள்தான் இருக்கிறது. அவருக்கு விக்ரம் மீது ஏதோவொரு கோபம். அல்லது அவருக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். BB TAMIL 9 DAY 97 “நீங்க சொன்ன காரணங்கள் எதுவும் பொருத்தமில்ல. இங்க இருந்து நல்ல விஷயங்களை எடுத்துட்டுப் போங்க. தேவையில்லாதத சுமக்காதீங்க. விக்ரம் எனக்கு என்ன செல்லப்பிள்ளையா.. சரியான காரணம் இருந்தா நானே அவரைக் கேட்டிருக்கேன்” என்பதுடன் விடைபெற்றுக் கொண்டார் விசே. இந்த வாரத்தில் ஒரு அவசியமான எவிக்ஷன் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.!
போராட்டக்காரா்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் இணைய மற்றும் தொலைபேசி வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளதால், உலகின் பிற பகுதிகளிடம் இருந்து ஈரான் துண்டிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அத்துடன் கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் […]
Jana Nayagan: ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க! - சரத்குமார்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகன் | விஜய் தணிக்கைத் துறை அதிகாரிகள் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படத்தை முடக்குகிறார்கள் என பல்வேறு தரப்புகளிலிருந்து தணிக்கைத் துறைக்கு கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில் சரத்குமார் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார். சரத்குமார் பேசுகையில், சென்சார் போர்டு அவங்க வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி எவ்வளவோ படங்களை நிறுத்தியிருக்காங்க. 'தக் லைஃப்' படத்துக்கு அது நடந்திருக்கு. ஜெயலலிதா அம்மா ப்ரீயடிலும் விஜய்க்கு அது மாதிரி நடந்திருக்கு. அதனால, இது மாதிரிலாம் நடக்கிறது அரசியல் கிடையாது. எல்லாமே அரசியலாகத்தான் நடக்குதுங்கிற எண்ணத்தை முதல்ல மாத்தணும். அந்த படத்துல ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க. நடிகர் சரத்குமார் மக்களை முன்னிறுத்தித்தான் சென்சார் போர்ட்ல உறுப்பினர்கள் படத்தைப் பார்க்கிறாங்க. அரசியல்வாதிகள் அங்கு கிடையாது. 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆகணும்னு ஆசை அனைவருக்கும் இருக்கும். படமெடுக்கிறது ரொம்ப கஷ்டம், அது ரிலீஸ் ஆகணும். ஆனா, அது சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கணும். எதிர்க்கட்சிகளுக்கு வேற வேலை இல்ல. எதை அரசியல்படுத்தணும், எதை மக்களுக்கு கொண்டு போகணும்னு தெரியல. நம்ம நாடு ஜனநாயக நாடு. அதை விட்டுட்டு 'ஜனநாயகன்' சினிமாவைப் பத்தி பேசுறதுதான் உங்களுக்கு முக்கியமா தெரியுது!? எனக் கூறியிருக்கிறார்.
`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரணத்துக்கு பாமக கட்சித் தலைவர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் உயர்சிகிச்சை அளிப்பதற்கான உதவி செய்யாததுதான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குருவுக்கு கனல் அரசு என்ற மகனும், விருதாம்பிகை என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், குருவின் மகள் விருதாம்பிகை ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். சேலம் மாவட்டம், ஓமலூரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை விருதாம்பிகை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னியர் சமூக மக்களின் ஒற்றுமைக்காகவும், அனைத்து சமுதாய மக்களின் நலன் கருதி ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை என்பது வன்னியர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதுதான். வன்னியர் சங்கமும் இதற்காகத்தான் தொடங்கப்பட்டது. புதிய கட்சி மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய மகனுக்காக சங்கம் மற்றும் பாமக கொள்கையில் இருந்து பின்வாங்கினார். ஆனால், என் தந்தை தனது உயிர்மூச்சு இருக்கும் வரை வன்னியர் சமுதாயத்துக்காகப் போராடினார். எந்த மகனுக்காக, அவரை நம்பியிருந்த வன்னியர் சமுதாயத்தை ராமதாஸ் புறந்தள்ளினாரோ, இன்று பதவிக்காக அன்புமணி ராமதாஸை இழிவுபடுத்தி பேசி வருகிறார். ராமதாஸ் மீது எனக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், வயதான காலத்தில் அவரை அன்புமணி இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாமக பிரிந்து கிடப்பதக்கு காசு தான் காரணம். 10.5 சதவீதம் தருகிறேன் என்று வன்னியரை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, அன்புமணி அதிமுக-வுடன் கூட்டணி வைக்கிறார். வன்னியரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து நிற்கிறார் அன்புமணி. ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளார் அன்புமணி. அரசியல் லாபத்துக்காகவும், காசுக்காகவும் அன்புமணி செயல்படுகிறார். அப்பா, மகனின் துரோகத்தை வன்னியர் மக்கள் மெல்ல மெல்ல புரிந்துகொண்டு வருகிறார்கள். அதை மக்களிடம் கொண்டு செல்லவே கட்சி தொடங்கியுள்ளேன் என்றார்.
Jana Nayagan: என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க! - பா. ரஞ்சித்
திரைப்படங்களில் தணிக்கைத் துறையின் அரசியல் தலையீடுகள் குறித்தான விவாதம்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வெளியாவதாகத் திட்டமிட்டிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. Jana Nayagan - Vijay 'பராசக்தி' திரைப்படத்திலும் முக்கியமான அரசியல் காட்சிகளையும், வசனங்களையும் தணிக்கைத் துறையினர் கட் செய்திருப்பதற்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், 49வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த இயக்குநர் பா. ரஞ்சித் தணிக்கைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், அதில் அவருடைய திரைப்படங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார். பா. ரஞ்சித் பேசும்போது, திரைப்படங்கள் வணிகம் சம்பந்தப்பட்டது. இன்னைக்கு அதுல அரசியல் தலையீடுகளும் இருக்கு. இன்னைக்கு சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்ல வாய்ப்புகளை நிறைய உருவாக்கிட்டிருக்கோம். 'நீலம்' போல நிறைய வாய்ப்புகள் அளிக்கக்கூடிய நிறைய பதிப்பகங்கள் இருக்கு. ஒரு கலைஞன், தான் சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்வதற்கான ஒரு களத்தை உருவாக்குறதுதான் ரொம்ப முக்கியமானது. பராசக்தி எழுத்துத் துறையில இது ஆரோக்கியமாகத்தான் இருக்குனு நினைக்கிறேன். ஆனா, சாகித்ய அகாடமி விருதுகளிலும் இப்போ சில சிக்கல்கள் ஆரம்பிச்சிருக்காங்க. என்றவர், தமிழ் சினிமாவுல ஆரோக்கியமான போக்குதான் இருப்பதாகப் பார்க்கிறேன். சமீபத்துல 'சிறை' திரைப்படம் மக்களால கொண்டாடப்பட்டு வெகுஜன அரசியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுச்சு. தமிழ்ச் சூழல்ல இது மாதிரியான சினிமாக்களை எப்போதும் ஆதரிச்சிருக்காங்க. இன்னைக்கு இளைஞர்களும் சமூகக் கருத்துகளைச் சொல்ல வேண்டும்னு முனைப்போடு இயங்குறாங்க. ரொம்பவே நேர்மறையான விஷயங்கள் ஏற்பட்டிருக்கு. அதுனாலதான் சில சிக்கல்களும் ஏற்பட்டிருக்குனு நான் நினைக்கிறேன். சமீபத்துல, 'ஜனநாயகன்', 'பராசக்தி' படங்கள்ல தணிக்கைத் துறையின் தலையீடு அதிகமாகி இருக்கிறதைப் பார்க்கிறோம். Pa Ranjith 'பராசக்தி' மாதிரி என்னுடைய இயக்கத்துல, தயாரிப்புல வந்த படங்கள் நிறைய பிரச்னைகளைச் சமாளிச்சிருக்கு. என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க. அதை மீறித்தான் என்னுடைய படங்கள் மக்களை வந்து சேர்ந்திருக்கு. இன்னைக்கு 'பராசக்தி' படம் மூலமாக இது மாதிரி நிறைய சிக்கல்கள் இருக்குனு மக்களுக்கு தெரிய வந்திருக்கு. இதன் பிறகு இந்தப் பிரச்னைக்கு தீவிரமாகப் படைப்பாளிகள் குரல் கொடுக்கணும்னு என்னுடைய விருப்பம். எனக் கூறியிருக்கிறார்.
காஸா விஷயத்தில் பாகிஸ்தான் தேவையில்லை: இஸ்ரேல் கறார்
காஸா மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கேற்பை இஸ்ரேல் மறுத்துள்ளது. காஸாவை கைப்பற்றுவதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இதற்காக சர்வதேச நிலைப்படுத்தல் படையையும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது. இந்தப் படையில் சேருவதற்காக பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை அமெரிக்கா கோரியுள்ளது. ஆனால், காஸாவுக்கான எதிரான போரில் பாகிஸ்தான் பங்கேற்பதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இஸ்ரேல் தூதர் ரூவென் அஸார் பேசுகையில், “நாம் முன்னேறக்கூடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு ஹமாஸ் அகற்றப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. […]
நகைக் கடையில் புது ரூல்ஸ்.. புர்கா அணிந்து வரக் கூடாது.. சர்ச்சையை கிளப்பிய புது ரூல்ஸ்!
நகைக் கடைகளில் திருட்டு போன்ற மோசடிகளைத் தடுக்க புர்கா அணிந்து வரக்கூடாது என்று நகைக் கடைகளில் போர்டு வைத்துள்ளனர்.
ஹோட்டல்களில் கட்டாயமாக வசூலிக்கும் சேவைக்கட்டணம்.. அரசு அதிரடி நடவடிக்கை!
கட்டாய சேவை கட்டணம் வசூலித்து நுகர்வோர் உரிமைகளை மீறிய குற்றத்துக்காக நாடு முழுவதும் உள்ள 27 உணவகங்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை சுதந்திர நாளை ‘கரிநாளாக’அறிவித்து வடக்கு கிழக்கில் பாரிய பேரணி: தாயக செயலணி அழைப்பு!
இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக செலணி அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள். 04.02.1948 அன்று பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்நாளில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ்த் […]
தமிழர் பகுதியில் ஆட்டை காப்பாற்ற சென்ற சிறுவன் பலி ; ஸ்தலத்திலேயே பிரிந்த உயிர்
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமவதி வீதியிலுள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று நேற்று சனிக்கிழமை (10) காலை இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த 6 ஆம் திகதி அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்டிருந்த நிலையில் மற்றுமொறு சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகளில் ஒரு சிறு துண்டேனும் திருப்பி கொடுக்க முடியாது என திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொழும்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. இதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளில் பகுதியளவேனும் […]
இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று (10) பிற்பகல் 02.58 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 77 கிலோமீற்றர் (47.85 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தையிட்டி விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு துண்டேனும் திருப்பி தரோம் என்கிறார் விகாராதிபதி
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகளில் ஒரு சிறு துண்டேனும் திருப்பி கொடுக்க முடியாது என திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொழும்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. இதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளில் பகுதியளவேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏமாற்றம். திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளை தவிர ஏனைய காணிகளை மக்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளை சூழவுள்ள வேலிகளை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன இந்நிலையில் தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி , தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் ஒரு பகுதியை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிப்பார் அல்லது அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என காணி உரிமையாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அந்நிலையில் குறித்த செய்தி அவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. காணிகளை விடுவிக்க முடியும் - கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை. தையிட்டி விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளில் ஒரு துண்டேனும் மீள வழங்க முடியாது என வெளியான செய்தி தொடர்பில் கடற்தொழில் அமைச்சரிடம் கேட்ட வேளை, தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்கவே எமது அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அடுத்த கட்ட கலந்துரையாடல் மிக விரைவில் நடைபெறும். அதில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
யாழில். நிலவிய சீரற்ற கால நிலை - கடல் கொந்தளிப்பால் மூர்க்கம் கடற்கரை பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, கொங்றீட் வீதி, சீமெந்து இருக்கைகள், நடைபாதை உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்கள் அத்தனையும் கடற்கொந்தளிப்பில் அள்ளுண்டு போய் அழிவடைந்துள்ளன. அது தொடர்பில் பருத்தித்துறை நகர சபை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் திணைக்கள பொதிப்பதிகாரிகளுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார்.
கனடாவில் விசா இல்லாத ஊழியர்களை துன்புறுத்திய தமிழ் கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்திய மூன்று உணவக உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கல்கரியில் உள்ள மெரினா தோசை மற்றும் தந்தூரி கிரில் ஆகியவற்றின் உரிமையாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கமைய உணவக உரிமையாளர்களான மணிகண்டன் காசிநாதன், சந்திரமோகன் மர்ஜாக் மற்றும் மேரி ரோச் ஆகியோருக்கு தலா 90 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய ஊழியர்கள் மேலும், அவர்களால் மோசடி செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கும் 44,000 டொலர் அளவிலான பணத்தை […]
ஈரோடு புதிய சோலார் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை: பயணிகள் அச்சம்!
ஈரோடு புதிய சோலார் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Vijay: Jananayagan படம் எப்போது Release ஆகும்? - Mersal Producer Murali Open Talk | Jananayagan
கிளிநொச்சியில் கடும் பனி மூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் பனி மூட்டம் நிலவுகின்றது. நாட்டின் வடக்கு பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாரதிகள் அவதானம் இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை கடும் பனி மூட்டத்துடனான வானிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக, குறித்த வீதியூடாக பயணிப்பவர்கள் கடும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர். அத்துடன், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
இந்தியா –நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று வதோராவில் நடைபெறுகிறது
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு
இந்தியாவில் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் –அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா
இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார் என்ற ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது
சென்னையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 2வது
மத உணர்வுகளைத் தூண்டுவிடும் போலி வீடியோவை பரப்பியதாக மகராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் மீது வழக்குப்பதிவு
டெல்லி சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அதிஷி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது
வலுவிழந்து வரும் காற்றழுத்த தாழ்வு : வெளியான வானிலை முன்னறிவிப்பு
மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல முறை மழை பெய்யும். வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மாலை அல்லது இரவில் மற்ற இடங்களில் சில இடங்களில் மழை […]
சென்னையில் போரூர் –வடபழனி மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம்
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் – வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம்
வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ; வாகனப் பதிவில் TIN இணைப்பு
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.புதிய வாகனப் பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள வாகனங்களின் உரிமை மாற்றங்கள் ஆகிய இரண்டிற்கும் இந்த விதிமுறை பொருந்தும். புதிய உரிமையாளர் தனது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது வணிகப் பதிவு (Business Registration) இலக்கத்துடன் சேர்த்து, தனது […]
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி
Grok AI ChatBot-க்கு தடை விதித்த இந்தோனேசியா
எலோன் மஸ்க்கின் Grok AI ChatBot இந்தோனேசியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.இந்தச் செயலி மூலம் ஆபாசமான மற்றும் தவறான (Deepfake) புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து,
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
வடக்கு இலங்கை கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு இலங்கை மற்றும்
அயோத்தி ராமர் கோயிலில் நமாஸ் செய்ய முயற்சி: காஷ்மீர் நபரின் செயலால் அதிர்ச்சி!
அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில்தான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அக்கோயிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு நேற்று ஒருவர் காஷ்மீர் பிரஜை போன்று உடையணிந்து வந்தார். அவர் கோயில் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் கோயிலின் தென்பகுதியில் உள்ள சீதா கோயில் அருகில் அமர்ந்து திடீரென நமாஸ் செய்ய ஆரம்பித்தார். இதைபார்த்த பாதுகாப்பு படையினர் அவரை நமாஸ் செய்ய விடாமல் தடுத்தனர். உடனே அவர் உருது மொழியில் ஏதோ மந்திரங்களை சொன்னார். இதனால் அவரை போலீஸார் பிடித்துச்சென்றனர். அவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் அகமத் ஷேக் என்றும், அவரது சொந்த ஊர் காஷ்மீரின் சோபியன் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமோ அல்லது கோயில் நிர்வாகமோ எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் ஒருவர் கோயில் வளாகத்தில் நுழைந்து நமாஸ் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் வளாகத்தை சுற்றிலும் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அசைவ உணவுகளை சாப்பிட தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு கோயிலில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் ஹோட்டல்களிலும் அசைவ உணவு மற்றும் மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட உதவி உணவு கமிஷனர் மணிக் சந்திர சிங் கூறுகையில், `` ராமர் கோவில் பகுதியைச் சுற்றி அசைவ உணவு விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் வந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ராமன் கோயில் பகுதியிலும் அருகிலுள்ள இடங்களிலும் அசைவ உணவை ஆன்லைனில் விநியோகம் செய்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது இந்த உத்தரவை மீறினால், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்''என்று கூறினார்.
சிபிஐ முன்பு விஜய்… தனி விமானத்தில் புறப்பட ஏற்பாடு- டெல்லி போலீசுக்கு மெயில்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகவுள்ளார். இதையொட்டி போலீசாரிடம் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சாண்ட்ரா வெளியேற்றப்பட்டார்: அப்போ திவ்யா தான் பிக் பாஸ் டைட்டில் வின்னரா?
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருப்பவர் சாண்ட்ரா. டைட்டில் வின்னராகும் வாய்ப்பு இருக்கிறது என்று பேசப்பட்ட நிலையில் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.
சென்னையில் மழை கொட்டப்போகுது...23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை!
சென்னை உள்பட 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி வென்றால், அது பெரிய சாதனையாக மாறும். இப்போட்டிக்கான மூன்று முக்கிய அரிய தகவல்கள் குறித்து பார்க்கலாம். உத்தேச 11 குறித்த தொகுப்பு!
அடம் பிடிக்கும் ட்ரம்ப்; நோபல் பரிசை பகிர நினைத்த மச்சாடோ - எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி!
தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறார். அடம் பிடிக்கும் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு கூட வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தினேன். என்னை விட அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்குத் தகுதியானவர் இங்கு யாருமில்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எதுவும் செய்ததில்லை. அவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று பேசியிருந்தார். ட்ரம்ப் நோபல் பரிசை பகிர நினைக்கும் மச்சாடோ இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். மச்சாடோவின் பதிவு இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், எனக்குக் கிடைத்த இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜனவரி 3-ம் தேதி (மதுரோ பிடிபட்ட நாள்) வரலாற்றில் நீதிக்காகக் கொடுங்கோன்மை வீழ்ந்த நாளாகக் குறிக்கப்படும். இது வெனிசுலா மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மதுரோ சிறைபிடிக்கப்பட்டபோது, சுதந்திரத்தின் மணி ஒலித்துவிட்டது என்று பதிவிட்டிருந்தார். மரியா கொரினா மச்சாடோ எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி இந்நிலையில் தனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறிய மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது, “ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை என்று மச்சாடோவின் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நோபல் கமிட்டி.
ரூர்கேலாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 6 பேர் காயம்!
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர். தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ-1 விமானம் ஒன்று தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், ரூர்கேலாவுக்கு முன்னதாக 10 கி.மீ. தொலைவில் ஜல்டா அருகே சென்று கொண்டிருந்தபோது விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகள், 2 பணியாளர்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் […]
கல்வி அமைச்சு முன் காலவரையற்ற போராட்டத்தில் குதிக்கிறார் விமல் வீரவன்ச
புதிய கல்வி சீர்திருத்தங்களை கைவிடக் கோரியும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரியவை பதவி விலகக் கோரியும், காலவரையற்ற போராட்டத்தை நடத்தவுள்ளதாகதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். “குழந்தைகளுக்காக பெரியவர்கள் நிற்கிறார்கள்” என்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் நாளை காலை 9 மணிக்குகல்வி அமைச்சுக்கு முன்பாக, தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று டத்திய
`மகாராஷ்டிராவை வலுப்படுத்த டிரம்ப் போன்ற ஒருவருக்குகூட ஆதரவளிக்க தயங்க மாட்டேன்'- ராஜ் தாக்கரே
மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே தேர்தல் கூட்டணியில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரது கட்சியும் மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேர்தல் தோல்வி பயத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. இத்தேர்தல் கூட்டணி குறித்து ராஜ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில்,''மராத்தி மக்களின் நலன், மராத்தி மொழியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, மற்றும் ஒரு வலிமையான மகாராஷ்டிரா ஆகியவையே எனக்கு மிகவும் முக்கியம். அரசியலில் வலைந்து கொடுக்கிறோம் என்பதற்காக கொள்கையில் சமரசம் செய்து கொண்டதாக அர்த்தமாகாது. மகாராஷ்டிரா வலுவாக இருக்கவேண்டும் என்பதற்காக டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஒருவருக்கு கூட ஆதரவு கொடுக்க தயங்க மாட்டேன். ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய, நோக்கம் 'தெளிவாகவும் தூய்மையாகவும்' இருக்கும் வரை, அதற்காக எந்த முறையையும் பயன்படுத்தலாம்''என்றார். மராத்தி மொழியைச் செம்மொழியாக அறிவித்ததன் பின்னணியில் உள்ள மத்திய அரசின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய ராஜ் தாக்கரே, அந்த மொழிக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். செம்மொழியாக அறிவித்துவிட்டு அதன் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. சமஸ்கிருதத்திற்காக கணிசமான நிதி செலவிடப்படுகிறது. தொடர்ச்சியான நிதி ஆதரவு இல்லாமல் ஒரு மொழி உயிர்வாழவோ அல்லது வளரவோ முடியாது என்று கூறினார். உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி அமைத்தது குறித்து கூறுகையில், _` இந்த கூட்டணி மராத்தியர்களை மட்டுமே மையமாகக் கொண்டது. அதற்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. இது மாநில அல்லது மத்திய அளவில் ஒரு கூட்டணியாக மாறும் என்று கருதுவது தவறானது. ஏனெனில் தேர்தல் கூட்டணிகள் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயம். மகாராஷ்டிராவை வலுப்படுத்த உதவும் என்றால், டிரம்ப் போன்ற ஒருவருக்கு ஆதரவளிக்கக்கூட எனக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. அரசியல் அடையாளங்களை விட மாநிலத்தின் நலன்களே எனக்கு முக்கியம். தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தாலும், மராத்தி அடையாளம் குறித்த எனது கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்வேன். நான் முழுமையான மராட்டியன். இந்த விஷயத்தில் நான் பின்வாங்கமாட்டேன்''என்று தெரிவித்தார்.
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஏட்டிக்குப் போட்டியாக போராட்டம்
மத்துகமவில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரால் ஏட்டிக்குப் போட்டியாக இரண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மத்துகம நகரில் நேற்று அரசாங்கத்துக்கு ஆதரவான பெண்கள் அமைப்புகளின் ஏற்பாட்டில், எதிர்க்கட்சிகளால் பெண்கள் குறிவைக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பெருமளவில் பெண்கள் கலந்து கொண்டதுடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பல பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். அதேவேளை, இலவசக் கல்வி மற்றும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு
கோவை: `திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'- பாஜக செயல் தலைவர் நிதின் நபின் சபதம்
பாஜக அகில இந்திய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக கோவை வந்துள்ளார். நேற்று மாலை பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில பாஜகவின் மூத்த நிர்வாகிகள், கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய நிதின் நபின், நிதின் நபின் “இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் முன்னேறிய நகரமாக கோவை உள்ளது. கோவைக்கு வந்தே பாரத் ரயிலை மோடி வழங்கியுள்ளார். ஜவுளித்துறை, சிறு குறு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் முன்னேற்றம், உள்நாட்டு கட்டமைப்பு போன்றவற்றில் அதிக முதலீடு செய்துள்ளோம். கொங்கு மண்டலம் முன்னேற்றத்திற்கான பகுதி. கோவை தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் நலனுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கி வருகிறார், ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அப்படி இல்லை. ஊழல், லஞ்சம் என்றால் அது திமுக ஆட்சி தான். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கல்லூரி மாணவிகள் மீது பாலியல் வன்முறை நடைபெறுகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு சில அமைச்சர்கள் கொச்சையாக பேசி வருகிறார்கள். பாஜக சபதம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத்தை ஏற்ற விடாமல் மாநில அரசு செயல்பட்டுள்ளது. திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை கொண்ட அரசாங்கம் வர வேண்டும்” என்றார். பிறகு பாஜகவின் வெற்றிக்காக சபதம் எடுத்தனர்.
அமெரிக்க தூதுவருக்கு நாளை பிரமாண்டமான பிரியாவிடை விருந்து
கொழும்பில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், வரும் 16 ஆம் நாள் நாட்டை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பிரியாவிடை சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து விடைபெற்றுக் கொண்டுள்ளார். இதன்போது, அண்மைய பேரிடர் அவசரநிலையின் போது, அமெரிக்க வழங்கிய உதவிகளில் அவர் ஆற்றிய பங்கிற்கும், 2023 ஒக்டோபரில்
Rain: கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்துவிட்டதாகவும், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மழை இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, சனிக்கிழமை காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்த புயல் சின்னம் சனிக்கழமை பிற்பகலில் வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே முல்லைத் தீவுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது. இதுதொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஜன. 12 முதல் ஜன. 16-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஜன. 11,12 தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன்: ஒட்டுமொத்த திரையுலகமும் அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது- கமல்ஹாசன்
‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், தணிக்கை வாரியத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஜனநாயகன் அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது. சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நியாயமான மற்றும் சரியான நேரத்திலான செயல்முறையை நம்பி வாழும் சிறு வணிகங்கள் அடங்கிய ஒரு அமைப்பின் கூட்டு முயற்சியாகும். இதில் தெளிவின்மை ஏற்படும்போது தான் படைப்பாற்றல் தடைபடுகிறது. பொருளாதாரம் சீர்குலைகிறது. பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைகிறது. அதனால், தற்போது தணிக்கை சான்றிதழுக்கான கால வரம்பு, வெளிப்படைத்தன்மை, நீக்கப்படும் காட்சிகளுக்கான நியாயமான காரணங்களை எழுத்துபூர்வமாக ஒப்படைப்பது உள்ளிட்ட கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. கமல்ஹாசன் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து அரசுடன் ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும் என்று தெரிவித்திருக்கிறார்.
நாளை கொழும்பு வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நாளை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். எதியோப்பியா, சோமாலியா, தன்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார். நாளை கொழும்பு வரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, செவ்வாய்க்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் காலை உணவு சந்திப்பை நடத்தவுள்ளார்.
வெனிசுலா ஒத்துழைப்பதால் புதிய தாக்குதல் ரத்து: டிரம்ப்
வெனிசுலா இடைக்கால அரசு தங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதால், அந்த நாட்டின் மீதான அடுத்தக்கட்ட தாக்குதல் திட்டத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறாா். எண்ணெய் ஏற்றுமதி, பாதுகாப்பு விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அதனால் இரண்டாம் கட்ட ராணுவ நடவடிக்கைத் திட்டத்தை ரத்து செய்கிறேன். நிக்கோலஸ் […]
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியலில் சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் என்பவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. 2026 ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் பெயரிடப்பட்ட நபர்கள் குழுக்கள் மற்றும் […]
யாழில். பாதுகாப்பற்ற புகையிரக்கடவையில் விபத்து –இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் புகையிரதம் – மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சனிக்கிழமை பயணித்த சொகுசு புகையிரதத்துடன் , அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் புகையிரதம் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். குறித்த புகையிரத […]
மற்றொரு இஸ்லாமிய அமைப்பும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்ப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுவொன்றை, சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவினால் கடந்த 6ஆம் திகதியிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு அரசிதழில், தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏற்கனவே இருந்த அமைப்புகளுடன்,சூப்பர் முஸ்லிம்
நம்பிக்கையில்லா பிரேரணையை தாமதிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு
கல்வி அமைச்சரான, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பதை தாமதப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் வயது வந்தோர் வலைத்தளத்திற்கான இணைய இணைப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான சர்ச்சை மற்றும் தற்போதைய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த கரிசனைகளின் அடிப்படையில், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர ஐக்கிய
யாழ். பல்கலை மாணவர்களினால் நினைவு கூரப்பட்ட மலையக தியாகிகள்
மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 1939 டிசம்பர் இறுதியில் ஆரம்பமாகி 1940 ஜனவரி வரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக ஜனவரி 10ஆம் திகதி உயிர்கொடை செய்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவு கூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் ரஷியா மீண்டும் ஆரெஷ்னிக் ஏவுகணைத் தாக்குதல்
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஆரெஷ்னிக் ரக ஏவுகணை மூலம் உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: உக்ரைன் மீது ரஷியா சரமாரியான ஏவுகணைகளை வீசி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது. இதில் 4 போ் உயிரிழந்தனா். உக்ரைன் வீசிய ஏவுகணைகளில் ஆரெஷ்னிக் ஏவுகணையும் ஒன்று. நேட்டோ நாடான போலந்துக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் ஐரோப்பிய இறையாண்மையைக் குலைக்கும் நடவடிக்கை […]
தமிழகத்தில் அமைய இருக்கும் தென் இந்தியாவில் முதல் ஹாட் ஏர் பலூன் சாகசப் பூங்கா!
தமிழகத்தில் தென் இந்தியாவில் முதல் ஹாட் ஏர் பலூன் சாகசப் பூங்கா அமைய இருக்கிறது . இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த இடத்தில் மினி டைடல் பூங்கா வருகிறது தெரியுமா?
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த இடத்தில் மினி டைடல் பூங்கா வரப்போகிறது தெரியுமா ? இது தொடர்பாக விரிவான தகவல்களுடன் இந்த செய்தி தொகுப்பில் காணலாம் .
கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய பெண்ணுக்கு ஒரு லட்சம் டொலர் பரிசு
கனடவில் கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய டொராண்டோவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் 1 இலட்சம் டொலர் பரிசு வென்றுள்ளார். எட்டோபிகோவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண்ணான மேரி ஸாமிட், ஓ.எல்.ஜீ நிறுவனத்தின் லொத்தர் சீ்டிடன் மூலம் அதீர்ஸ்டம் வென்றுள்ளார். என் கணவர் கடந்த செப்டம்பர் மாதம் இறந்துவிட்டார். அந்த வேதனையிலிருந்து என் மனதை ஓரளவு திசைதிருப்ப இந்த லாட்டரி டிக்கெட்டுகள் உதவியதாகத் தெரிவித்துள்ளார். நேரத்தை நல்ல முறையில் செலவிட இது ஒரு வழியாக இருந்தது,” என்று […]
கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய பெண்ணுக்கு ஒரு லட்சம் டொலர் பரிசு
கனடவில் கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய டொராண்டோவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் 1 இலட்சம் டொலர் பரிசு வென்றுள்ளார். எட்டோபிகோவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண்ணான மேரி ஸாமிட், ஓ.எல்.ஜீ நிறுவனத்தின் லொத்தர் சீ்டிடன் மூலம் அதீர்ஸ்டம் வென்றுள்ளார். என் கணவர் கடந்த செப்டம்பர் மாதம் இறந்துவிட்டார். அந்த வேதனையிலிருந்து என் மனதை ஓரளவு திசைதிருப்ப இந்த லாட்டரி டிக்கெட்டுகள் உதவியதாகத் தெரிவித்துள்ளார். நேரத்தை நல்ல முறையில் செலவிட இது ஒரு வழியாக இருந்தது,” என்று […]
லண்டன் ஹரோ , வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு -70 பேர் கைது
லண்டனின் ஹரோ (Harrow) மற்றும் வீல்ட்ஸ்டோன் (Wealdstone) ஆகிய தமிழா்கள் வாழும் பகுதிகளில் அண்மைய நாட்களில் பாரிய காவல்துறை… The post லண்டன் ஹரோ , வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு -70 பேர் கைது appeared first on Global Tamil News .
அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு!
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (ஜனவரி 10) ஒரு… The post அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு! appeared first on Global Tamil News .
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ரிக்டர் அளவில் அதிர்வு!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ரிக்டர் அளவில் அதிர்வு! இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள தலவுட்… The post இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ரிக்டர் அளவில் அதிர்வு! appeared first on Global Tamil News .
யேசு கிறிஸ்துவே ….தனது வழக்கறிஞர் என நீதிமன்றில் கூறிய பெண்ணால் எழுந்த சர்ச்சை
கனடாவில் பெண் ஓருவர் யேசு கிறிஸ்துவே தனது வழக்கறிஞர் என நீதிமன்றில் கூறிய விநோத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நீதிமன்றம் நியமித்த மனநல நிபுணரிடம் குறித்த பெண் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்து, குறித்த பெண் விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியானவராக உள்ளார் என பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. டெனிஸ் ஏஞ்சலா நொரிஸ் என்பவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் அகசிஸ் பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட சம்பவத்தின் […]
ஈரானில் வெடித்த மக்கள் புரட்சி: தெக்ரானில் மசூதிக்குத் தீவைப்பு!
ஈரானில் வெடித்த மக்கள் புரட்சி: தெக்ரானில் மசூதிக்குத் தீவைப்பு! ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய… The post ஈரானில் வெடித்த மக்கள் புரட்சி: தெக்ரானில் மசூதிக்குத் தீவைப்பு! appeared first on Global Tamil News .
வரதட்சிணையாக கிரீன்லாந்து! டென்மார்க் இளவரசியை டிரம்ப் மகன் திருமணம் செய்தால்!!
டென்மார்க்கின் இளவரசியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் திருமணம் செய்துகொண்டால், வரதட்சிணையாக கிரீன்லாந்து கொடுக்கப்படுமா என்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், டென்மார்க்கின் இளவரசியான இசபெல்லாவை (18) டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் (19) மணமுடிக்க வேண்டும் என்று எக்ஸ் பயனர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இசபெல்லாவை திருமணம் செய்தால், அமெரிக்காவுக்கு வரதட்சிணையாக கிரீன்லாந்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இசபெல்லா – பாரன் டிரம்ப் இருவரின் படங்களையும் […]
மட்டக்களப்பு மரக்கறி வியாபாரிக்கு மர்ம நபர் செய்த சம்பவம் ; மக்களே அவதானம்
மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியின் ஓரத்தில் ‘பட்டா’ ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு மோசடிக்கு ஆளாகியுள்ளார். போலி நாணயத்தாள் இது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி இன்று காலை ஒருவர் வந்து தன்னிடம் மரக்கறி கொள்வனவு செய்து 5,000 ரூபா தாளைத் தந்துவிட்டு தான் சரியாகக் கவனிக்காததால் மிகுதிப் பணத்தையும் […]
இந்தியாவில் இனிப்புகளின் தலைநகரம் எது தெரியுமா? பொங்கல் பண்டிகைக்கு ஒரு விசிட் போடுவோமா!
கொல்கத்தாவின் இனிப்பு கலாச்சாரம் இந்தியாவின் செழுமையான உணவு மரபின் உயிருள்ள சான்றாக உள்ளது. இனிப்புகளை விரும்புபவர்களுக்கு, சுவையும் பாரம்பரியமும் ஒன்றாக கலந்த ஒரு அனுபவத்தை தரும் நகரம் கொல்கத்தாவே ஆகும்.
பாதுகாப்பற்ற புகையிரக்கடவையில் விபத்து –இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் ,பாதுகாப்பற்ற புகையிரத கடவை, கோர விபத்து – இளைஞன் படுகாயம் யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு… The post பாதுகாப்பற்ற புகையிரக்கடவையில் விபத்து – இளைஞன் படுகாயம் appeared first on Global Tamil News .
உக்ரைனில் ரஷியா மீண்டும் ஆரெஷ்னிக் ஏவுகணைத் தாக்குதல்
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஆரெஷ்னிக் ரக ஏவுகணை மூலம் உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: உக்ரைன் மீது ரஷியா சரமாரியான ஏவுகணைகளை வீசி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது. இதில் 4 போ் உயிரிழந்தனா். உக்ரைன் வீசிய ஏவுகணைகளில் ஆரெஷ்னிக் ஏவுகணையும் ஒன்று. நேட்டோ நாடான போலந்துக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் ஐரோப்பிய இறையாண்மையைக் குலைக்கும் நடவடிக்கை […]
மழையுடனான காலநிலையால் மின்சார வயர் மீது வீழ்ந்த பனை மரம்: கிளிநொச்சி பண்ணை பகுதியில் பதற்றம்
கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுகொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் ,கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றது. கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் வீதியின் விவசாய பண்ணைக்கு அருகில் பனை மரம் மின்சார வயரில் வீழ்ந்து காணப்படுகின்றது. அதனை அகற்றும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட பராசக்தி திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் கடைசி வார எவிக்ஷனில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர். கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். சாண்ட்ரா | BB Tamil 9 Day 93 கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் பணப்பெட்டி டாஸ்க்கில் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் வினோத். இந்நிலையில் அடுத்த வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என்ற பேச்சு முதலில் அடிபட்டது. தவிர போட்டியில் தற்போது ஐந்து பேர் மட்டுமே இருப்பதால் இவர்கள் டாப் ஐந்து பேராக இறுதிச் சுற்றுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கமருதீன் ஆனால் இந்த வாரமும் எவிக்ஷனை நிகழ்த்தியிருக்கிறார் பிக்பாஸ். வழக்கமான வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. எவிக்ட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் அவர்களிடமும் பணப்பெட்டி எடுத்துச் சென்ற கானா வினோத்திடமும் பேசிய விஜய் சேதுபதி பின் வழக்கமான விசாரிப்புகளுக்குச் சென்றார். பிறகு எவிக்ஷனுக்கான நேரம் எனச் சொல்லி இருந்த ஐந்து பேரில் சாண்ட்ராவை வெளியில் அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கணவர் பிரஜினுடன் தம்பதி சகிதமாக வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் வந்தது நினைவிருக்கலாம். பிரஜின், சாண்ட்ரா முந்தைய சில சீசன்களில் டாப் ஐந்து பேர் கடைசி நாள் வரை வந்த நிலையில் இந்த சீசனில் மட்டும் எப்படி கடைசி வாரத்தில் ஒருவர் அவுட் என தெரியவில்லை. கமருதீன் பார்வதிக்கு ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பெரிய அதிர்வை உண்டாக்கியதென்னவோ நிஜம்தான். ஒருவேளை அதைச் சமன் செய்ய பிக்பாஸ் சாண்ட்ராவை அனுப்பி விட்டாரோ என்னவோ?
️ எலான் மஸ்கின் துணிச்சலான முடிவு: ஈரானில் ஸ்டார்லிங்க் இணையம் இலவசம்!
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்களின் குரலை ஒடுக்க அந்நாட்டு அரசு நாடு தழுவிய… The post ️ எலான் மஸ்கின் துணிச்சலான முடிவு: ஈரானில் ஸ்டார்லிங்க் இணையம் இலவசம்! appeared first on Global Tamil News .
அமெரிக்கா கைப்பற்றிய ஐந்தாவது எண்ணெய் கப்பல்
கரீபியன் கடலில் மேலும் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க இராணுவம் கைப்பற்றியுள்ளது. வெனிசுவேலாவுக்கு எதிரான அழுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் தடை விதித்துள்ள கப்பல்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஒலினா’ (Olina) எனப்படும் எண்ணெய் கப்பல் எவ்வித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது. மீண்டும் ஒருமுறை, எங்கள் பல்துறை இணைந்த படைகள் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளன – ‘குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான தஞ்சம் எங்கும் இல்லை’” என அமெரிக்கா தெரிவித்துள்ளது. […]
ஜிஎஸ்டி முதல் முதலீட்டாளர் பாதுகாப்பு வரை.. பிரதமர் மோடியின் 2025 சீர்திருத்த நடவடிக்கை!
2025 ஆம் ஆண்டு இந்தியாவின் சீர்திருத்த பயணத்தில் வரலாற்று மைல்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

24 C