பாகிஸ்தானில் மசூதி தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினார். அதில் 30-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். நூற்றுக் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாணம் பெஷாவரில் ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆண்களும், தற்கொலைப்படை பயங்கரவாதியின் சகோதரர்கள் ஆவர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை மூலம் தற்கொலைப்படை பயங்கரவாதியின் பெயர் யாசிர் என்றும், பெஷாவரை நிரந்தர முகவரியாக கொண்டவர் […]
‘ஏ சூப்பர்ப்பா’.. நேபாள் அணியை ஸ்டார் அணியாக மாற்ற.. ஆப்பர் வழங்கிய டேல் ஸ்டெய்ன்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசிவரை போராடிய நேபாள் அணிக்கு, தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் ஆப்பர் ஒன்றை வழங்கியுள்ளார். இதனால், நேபாள் அணி பெரிய அளவில் பலம் பெற வாய்ப்புள்ளது.
திருவள்ளூர்: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்... இளம்பெண்ணுடன் கணவன் சிக்கியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா (20). இவர் பி.எட்., இரண்டாமாண்டு பயின்று வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (31) என்பவருடன் திருமணம் நடந்தது. கௌசல்யாவும் ராஜேசும் உறவினர்கள். திருமணத்துக்குப் பிறகு கணவன் வீட்டில் இருந்தபடியே கௌசல்யா பி.எட் படிப்பை தொடர்ந்து வந்தார். கடந்த 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொத்தனார் வேலைக்கு ராஜேஷ் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா, சமையலறையில் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். திருமண கோலத்தில் கௌசல்யா, ராஜேஷ் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீட்டிற்கு வந்த ராஜேஷ், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் கௌசல்யாவை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கௌசல்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கௌசல்யா மரணம் குறித்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி போலீஸார், கௌசல்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கௌசல்யாவின் சடலத்தைப் பார்த்த அவரின் குடும்பத்தினர், சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர். அதனால் பொன்னேரி போலீஸார், ராஜேஷிடம் முதலில் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தார். இந்தச் சமயத்தில்தான் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் கௌசல்யா, கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி இருப்பதாக டாக்டர்கள், போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழன்பன் தலைமையிலான போலீஸார், ராஜேஷிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது அவர் தன்னுடைய மனைவி கௌசல்யா, சமையலறையில் எண்ணெய்யில் கால் வழுக்கி இறந்துவிட்டதாகவே கூறினார். அதை நம்பாத போலீஸார், கால் வழுக்கி கீழே விழுந்திருந்தால் எப்படி முகத்தில் நகக்கீறல் ஏற்படும் என அடுத்த கேள்வியை ராஜேஷிடம் கேட்டனர். அதோடு அந்த நகக்கீறலுக்கு காரணம் நீதான் என்று ஆதாரத்துடன் கூற ராஜேஷ், தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தீபிகா இதுகுறித்து பொன்னேரி போலீஸார் கூறுகையில், ``கொத்தனார் வேலை செய்து வரும் ராஜேஷ், செங்குன்றம் அடுத்த காந்தி நகரை சேர்ந்த தீபிகா என்கிற லோகேஸ்வரியுடன் (21) நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். ராஜேசும் தீபிகாவும் அண்ணன், தங்கை உறவுமுறை கொண்டவர்கள். அதனால் இவர்களின் பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்திருக்கிறார்கள். இந்தநிலையில்தான் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கௌசல்யாவுடன் ராஜேஷுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அதனால் தீபிகாவுடன் பேச முடியாமல் ராஜேஷ் சிரமப்பட்டிருக்கிறார். எனவே கௌசல்யாவை கொலை செய்ய ராஜேஷ் திட்டமிட்டிருக்கிறார். அதை தீபிகாவிடமும் கூறி ஆலோசித்திருக்கிறார். இதையடுத்துதான் சம்பவத்தன்று வேலைக்குச் செல்வதைப் போல சென்ற ராஜேஷ், யாருக்கும் தெரியாமல் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது மனைவி கௌசல்யா சோபாவில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்த ராஜேஷ், மனைவி கௌசல்யாவின் மூக்கை பொத்தி கழுத்தை நெரித்திருக்கிறார். அப்போது கௌசல்யா, போராடியதில் அவரின் முகத்தில் நகக்கீறல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இயைடுத்து கௌசல்யாவின் தலையை டைல்ஸ் தரையில் மோதி காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ராஜேஷ். அதைத் தொடர்ந்து சமையலறையில் எண்ணெய்யில் கால் வழுக்கி கௌசல்யா உயிரிழந்ததைப் போல செட்டப் செய்த ராஜேஷ், கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு கிரில் இல்லாத ஜன்னல் வழியாக வெளியில் சென்றுவிட்டார். ஆனால் நகக்கீறலால் ராஜேஷ் எங்களிடம் சிக்கிக் கொண்டார். இந்தக் கொலைக்கு தீபிகாவும் உடந்தை என தெரியவந்ததால் அவரையும் கைது செய்திருக்கிறோம் என்றனர்.
Vonn’s Olympic Comeback Ends in Painful Crash
American ski legend Lindsey Vonn’s brave attempt to win the Winter Olympic downhill race at the age of 41 ended
13 ஆம் தேதி ஒப்பந்த செவிலியர்கள் 719 -பேர் பணி நிரந்தரம்... அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
தமிழ்நாட்டில் திருநெல்வேவி, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிதாக செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு
Manchester City Beat Liverpool with Late Penalty
Erling Haaland scored a last-minute penalty to help Manchester City secure a thrilling 2-1 victory over Liverpool in the Premier
பூக்கி திரைப்பட வெளியீடு வரும் பிப்ரவரி 13 அன்று நடைபெறும் என விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.
Suresh Says Davis Cup Run Just Beginning
India’s latest Davis Cup star Dhakshineswar Suresh has said that his recent success for the country is only the start
PCB Chief Seeks Withdrawal of India Match Boycott
Pakistan Cricket Board (PCB) chief Mohsin Naqvi is likely to ask Prime Minister Shehbaz Sharif to reconsider the decision to
கொத்தடிமை முறை எனும் `கொடுங்கோன்மை' - சட்டமியற்றி 50 ஆண்டுகளாகியும் தொடரும் அவலம்! - விடிவு எப்போது?
`இந்தியா ஒரு சுதந்தி நாடு'... 79-வது ஆண்டை நோக்கி, இதே வாசகத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்த தேசம் அனைவருக்குமான சுதந்திர பூமியா எனக் கேட்டால்.... மிகப்பெரிய கேள்விக்குறிதான் மிஞ்சும். கொத்தடிமை முறை எனும் கொடுங்கோன்மை! ஆங்கிலேயர்கள் அடக்குமுறை தொடங்கி பண்ணையார் முறை வரை சந்தித்து... சகித்து... மூச்சுத்திணறிக் கொண்டிருந்திருக்கிறது இந்தச் சமூகம். இந்த அடிமை அடாவடித்தனங்களின் மிச்ச சொச்சமாய், இன்னமும் பொருளாதார ஏழ்மை நிலையை வைத்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது `கொத்தடிமை முறை' எனும் அரக்கன். நொடிக்கு நொடி கோடிகளில் புழங்கும் பணக்காரர்கள் பெருகி வரும் இதே டிஜிட்டல் இந்தியாதான், என்றோ கடனுக்கு வாங்கிய சிறு தொகைக்கு அரிசி ஆலைகளிலும், செங்கல் சூளைகளிலும் அடிமைத்தனத்தின் அடையாளமாய் இன்னல்படும் ஏழை வர்க்கத்துக்கும் தாய்மடி! மூன்று வேளை முறையான உணவு, உடுத்த மாற்றுத்துணி, மருத்துவம், கல்வி என அடிப்படை வசதிகள்கூட மறுக்கப்பட்டு, இயலாமையில் குமுறிக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலை இன்றும் நீடிப்பது, பெரும் சோகம். இந்தக் கொத்தடிமைத் தனத்தில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, ஆதார், ரேஷன் கார்டுகள் இதெல்லாம் கிடையாது. அவர்களின் அடையாளம் `அடிமைகள்' - அவ்வளவுதான். 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 16 மணி நேர வேலை; விடுமுறை என்பதற்கு அர்த்தம்கூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மீறிப் பேசினால் அடி, உதை... அதிக பணி. சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருந்தும், இன்றும் அரசு இயந்திரத்தின் கண்களுக்குப் புலப்படாமல்(?) எங்கோ தீப்பெட்டி தொழிற்சாலையிலோ, சூளையிலோ, ஆலையிலோ மக்கள் கூட்டம் சிக்குண்டு, அலறிக்கொண்டிருக்கிறது. வாங்கிய கடனுக்குக் கணக்கு என்பதே இல்லாமல், பண முதலைகளுக்கு உழைத்துக் கொட்டிக்கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலக்குரல்... யாருக்கும் கேட்பதே இல்லை! கொத்தடிமை முறை இங்கே எந்த அளவுக்கு சமூகத்தில் வேரூன்றி கிடக்கிறது என்பதற்கு சில தரவுகள் நியாயம் சேர்க்கின்றன. 1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரு நபர் ஆணையம், தனது ஆய்வறிக்கையில் `தமிழகத்தில் இருபது விதமான தொழில்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று கூறியுள்ளது. தமிழகத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொத்தடிமைகள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவில் எவ்வளவு பேர் கொத்தடிமைகளாக இருந்திருப்பார்கள்.... இருப்பார்கள்? எனச் சிந்தித்து பாருங்கள். தனிச்சட்டம் பொருளாதார ரீதியாக நன்கு முன்னேறிய மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் கொத்தடிமை முறை அதிகளவில் பின்பற்றப்பட்டு வருவதாக மத்திய அரசின் சமீபத்திய தரவுகள் சொல்கின்றன. இதற்காக கொத்தடிமை முறையினை ஒழித்து கொத்தடிமைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், 9 பிப்ரவரி 1976-ல் ஒரு தனி சட்டமே இயற்றப்பட்டு `மனிதனை, மனிதனே அடிமையாக நடத்துவது கொடுமையான குற்றம்' என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் ஆகியும் நம் நாட்டில் கொத்தடிமை முறை தொடர்ந்து நீடிப்பது வேதனைக்குரிய ஒன்று. இதற்கு அரசுகளின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. இந்தியாவில் 1978-லிருந்து 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 3,15,302 பேர் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 65,000-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர், ஜவுளி - திறன்வளர்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 94 சதவிகிதத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் கொத்தடிமை முறையில் சிக்கியுள்ள 1.84 கோடிப் பேரும் மீட்கப்பட்டு, இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்படும் என்னும் இலக்கை 2016-ல் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்புக்குப் பிறகு, 32,873 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். கொத்தடிமை முறை கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்கும் மத்திய அரசின் இலக்கை அடைய மிகத் தீவிரமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்த அவலத்தை முழுமையாக ஒழிக்க முடியும். கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதிலும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் இந்தியா நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதையே இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. கூடுதல் புரிதலும் விழிப்புணர்வும் தேவை! இந்தக் கொத்தடிமைத் தனத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் நிலவும் சிக்கல்கள் குறித்து, கொத்தடிமைத்தனம் குறித்த வழக்குகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜ் நம்மிடம் பேசுகையில், ``கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும், கொத்தடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் மனிதனின் பேராசையும், காலத்திற்கேற்ப கொத்தடிமைத்தனம் புதிய புதிய வடிவங்களில் மாறி வருவதும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சங்கிலியால் கட்டி வேலை வாங்கிய நிலை இருந்தால், இப்போது அது “உழைப்புச் சுரண்டல்” மற்றும் “மனித வணிகம்” போன்ற நவீன வடிவங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொத்தடிமை ஒழிப்புச் சட்டம், பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் கொத்தடிமை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, சமூகத்தின் பிரதான ஓட்டத்தில் இணைந்துள்ளனர். அரசாங்கம் மறுவாழ்வு வசதிகளையும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த சட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் இன்னும் திறம்பட செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட செயல்படுத்தும் தரப்பினருக்கு இந்த பிரச்னை குறித்து கூடுதல் புரிதலும் பயிற்சியும் தேவைப்படுகிறது. `25 வருசமா நான் பட்ட துயரம் அது!' - கொத்தடிமை முறையை ஒழிக்கப் போராடும் குப்பம்மாள் #SheInspires பெரிய சவால்! பழங்குடியின மக்கள் மற்றும் நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைத்தனத்தால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், வறுமைதான். ஒரு வேளை உணவுக்கே சிரமப்படும் நிலையை சிலர் பயன்படுத்திக் கொண்டு அவர்களை சுரண்டுகின்றனர். கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு உடனடி மறுவாழ்வு அளிப்பது அரசாங்கத்திற்கு பெரிய சவாலாகவே உள்ளது. மீட்கப்படும் தொழிலாளர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், முழுமையாக மீள ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் என நீண்ட காலம் தேவைப்படுகிறது. தற்போது அரசாங்கம் நிதி உதவி மற்றும் நலத்திட்டங்களை வழங்கினாலும், ஒருவரை நீண்ட காலம் தொடர்ந்து கவனித்து மீளமைக்கும் அமைப்பு இன்னும் போதுமான அளவில் உருவாகவில்லை. இந்த நோக்கில் மாவட்ட சட்ட சேவை ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் இணைந்து கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு அமைப்புகளை உருவாக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளன. இது இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கொத்தடிமை முறை குறைந்தபட்ச தண்டனை - சட்டத்தில் இருக்கும் குறை! சட்டம் இருந்தும் கொத்தடிமை நடைமுறை தொடருவதற்கு, குறைந்த தண்டனை ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்படுவதால், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படுவதில்லை. இதனை மனித வணிகக் குற்றமாகக் கருதி, சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றைய சூழலில் பழங்குடியினர்கள் மட்டுமல்லாமல், வட மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். குறைந்த ஊதியம், குறைந்தபட்ச ஊதிய சட்டம் மீறல் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை கொத்தடிமை, மனித வணிகம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை என்ற ஒருங்கிணைந்த பார்வையில் அணுகினால் மட்டுமே இதைத் திறம்படத் தடுக்க முடியும். கொத்தடிமை தொடர்பான புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சில தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிக இடையூறு இருந்தாலும், அவை விரைவில் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இலக்கு 2030-க்குள் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்றுவதாகும் என்றார், விரிவாக. திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் நளினி தேவி பேசுகையில், ``கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கொத்தடிமை முறை இன்னும் முழுமையாக ஒழிக்கப்படாத நிலை தொடர்கிறது. இதற்கு முதன்மையான காரணம், சமூகத்தின் அனைத்துத் தரப்புகளிலும் குறிப்பாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் உரிமையாளர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். கொத்தடிமை முறை சட்டப்படி முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற உண்மை, செங்கல் சூளை, அரிசி ஆலை உள்ளிட்ட துறைகளில் செயல்படும் பலருக்கு இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை. மேலும், கொத்தடிமை பிரச்னை ஒரு தொழிலாளர் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுவது தவறான பார்வையாகும். இது ஒரு தீவிரமான மனித உரிமை மீறல் என்ற புரிதல் சமூகத்திலும், அதிகாரிகளிடமும் வலுப்பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டம் குறித்து தொழிலாளர்களுக்கே தெளிவான அறிவு இல்லாத நிலை, அவர்களை மேலும் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது. முன்பணம் அல்லது கடன் வழங்கி, அந்தக் கடன் தீரும் வரை குறைந்த ஊதியத்தில் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதே இன்றைய கொத்தடிமைத்தனத்தின் அடிப்படை வடிவமாக உள்ளது. அதிகம் பாதிக்கப்படும் பழங்குடிகள்! இந்த முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களே. கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு குறைவு காரணமாக அவர்கள் வெளிச்சமான வேலை வாய்ப்புகளைத் தேடி செல்ல முடியாத சூழலில் சிக்குகின்றனர். வறுமைதான் அவர்களை இந்த கொத்தடிமைச் சூழலுக்கு தள்ளும் முக்கிய காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில்—குறிப்பாக விழுப்புரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில்—இந்தப் பாதிப்புகள் அதிகமாக பதிவாகின்றன. இம்மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் வேலை செய்ய இடம்பெயர்வதும், அந்தப் பகுதிகளில் இத்தகைய தொழில்கள் அதிகமாக இருப்பதும் இதற்கான காரணங்களாக உள்ளன. அதே நேரத்தில், வட மாநிலங்களில் இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். புரோக்கர்கள் மூலம் குறைந்த தொகைக்கு அழைத்து வரப்பட்ட இவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில், வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு, மொழிப் பிரச்னையால் தங்களின் நிலையை வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். கொத்தடிமை தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியாக கிடைக்காததே இந்தக் குற்றம் தொடர்ந்து நடைபெறுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. முறையான விசாரணை நடைபெற்று, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் சூழல் உருவானால், இது போன்ற செயல்கள் தவிர்க்கப்படும். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜ் மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படுகின்றன. மீட்பு நடவடிக்கையின் போதே ஒருவருக்கு ரூ.35,000 வழங்கப்படுவதுடன், ‘ரிலீஸ் சான்றிதழ்’ வழங்கப்படுகிறது. வழக்கு முடிந்து குற்றவாளிக்கு தண்டனை கிடைத்த பின்னர், இறுதி இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவிகள் தொழிலாளர்கள் தங்களுக்கான வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்க உதவும் வகையில் அமைந்துள்ளன. கொத்தடிமை தொடர்பான தகவல்கள் அல்லது புகார்கள் இருப்பின், பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும். கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்க, சட்ட அமலாக்கத்துடன் சேர்ந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே தொடர்ச்சியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரசு துறைகளுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமூகத்தின் ஒத்துழைப்புடன் மட்டுமே கொத்தடிமை முறை இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார். கொத்தடிமை முறை எவ்வளவு கொடூரமானது என நினைக்கும்போதே மனம் பதறுகிறதல்லவா! அப்படி கொத்தடிமைத்தனத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு, வாழ்வில் 20 ஆண்டுகளைத் தொலைத்த பெண் ஒருவர் தன் கண்ணீர்க் கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார். பிரசவ வலி... ஆஸ்பத்திரிக்குக்கூட போக விடல! திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கன்னிகாபுரம் எனும் கிராமத்தில் வசித்து வருகிறார் வரலட்சுமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரையிலும், வரலட்சுமி திருவள்ளூரில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றில் தன் கணவர் கோபால் மற்றும் மகள் ரேகாவோடு கொத்தடிமையாக இருந்து வந்தார். கிட்டத்தட்ட 20 வருடங்கள் அரிசி ஆலையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரலட்சுமி தன்னுடைய கடந்தகால அனுபவங்கள் குறித்தும், லட்சிய போராட்டம் குறித்தும் நம்மிடத்தில் பகிர்ந்துகொண்டார். ``என் கணவர் திருவள்ளூரில் இருக்குற அரிசி ஆலையில குறைந்த கூலிக்கு வேலை பார்த்துட்டிருந்தார். எங்க கல்யாணத்துக்காக என் கணவர் மில் முதலாளி கிட்ட 5,000 ரூபாய் கடனாக வாங்குனாராம். வாங்குன கடன் அடைக்காததால கல்யாணமான சில மாசத்துலயே அவங்க என் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி என்னையும் ஆலை'ல வேலைக்கு வர சொல்லி மிரட்டினாங்க. வேற வழி தெரியாம நாங்க இரண்டு பேரும் அங்க தங்கி வேலை பார்க்க ஆரம்பிச்சோம். நானும் என் வீட்டுக்காரர்கூட சேர்ந்து இராப்பகலா உழைச்சேன். கல்யாணம் நடந்து முடிஞ்சு அரிசி ஆலைக்கு வேலைக்குப் போனதோட சரி. அதுக்கு அப்புறமா எங்க அப்பா, அம்மானு யாரையுமே என்னால பார்க்க முடியல. நான், எங்க வீட்டுக்காரர் சேர்ந்து ஒரு நாளைக்கு 60, 70 மூட்டை நெல் பதப்படுத்தி அடுக்கி வெப்போம். எங்களுக்கு சாப்பாட்டுக்கு ஒரு மாசத்துக்கு தேவையான ரேஷன் அரிசிய முதலாளி வாங்கிக் கொடுத்துருவாரு. அதுக்கு 500 ரூவாய் கணக்கு செஞ்சு தினமும் எங்க சம்பளத்துல இருந்து 25 ரூபா பிடிச்சிப்பாங்க. வரலட்சுமி - அவர் கணவர் ஒரு நாளைக்கு நாங்க 70 மூட்டை நெல் அடுக்குனா எங்களுக்கு மொத்தத்துல 300 ரூபா கிடைக்கும். அவங்க கொடுக்குற அந்த 300 ரூபாயும் காய்கறி வாங்குறது... மத்த செலவுனு போய்டும். சொந்த பந்தம்னு ஊர்ல இருக்குறவங்க யாரையும் பார்க்க முடியாது, வேலை செய்யும்போது உடம்பு சரியில்லைன்னாகூட ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. அப்படியே வேல செஞ்சுட்டேதான் இருப்போம். இப்போ எனக்கு ஒரு பொம்பள பிள்ளை இருக்காங்க. அவளும் அந்த மில்லுலதான் பொறந்தா. என் பொண்ணு வயித்துல இருக்கும்போது எந்த செக்கிங்கிக்கும் நா ஆஸ்பத்திரிக்குப் போனதில்லை. ஒரு நாள் எனக்கு பிரசவ வலி வந்தப்ப மில் முதலாளி என்னை ஆஸ்பத்திரிக்கு போகக்கூட விடல, குழந்தை இங்கயே பொறக்கட்டும்னு சொல்லிட்டு போயிட்டாரு. நா இயற்கை உபாதைக்காக காட்டு பக்கமா யாருக்கும் தெரியாம நடந்தே வந்து ஆஸ்பத்திரிக்கு வந்துட்டேன். அங்கதான் எங்க பொண்ணு பொறந்தா, என் வீட்டுக்காரர் என்னை வந்து பாத்துட்டு போனதோட சரி... அந்த வாரமே நா திரும்ப மில்லுக்கே போய்டேன். அந்த நிலைமையிலும் நான் வேலை செஞ்சேன், குழந்தைக்குப் பால்கூட கொடுக்க முடியாது. ரொம்ப கொடுமை படுத்துவாங்க. 70 மூட்டை நெல்லுக்குக் கொறஞ்சா பொம்பளைன்னுகூட பாக்காம என்ன பயங்கரமா திட்டுவாங்க, அடிப்பங்க. இதுக்கு மேல எதுக்கு உயிர் வாழணும், செத்துடலாம்னுகூட நானும் என் கணவரும் நெனச்சிருக்கோம். ஆனா, எங்க பிள்ளைக்காகத்தான் இப்ப வரைக்கும் உயிரோட வாழ்ந்துட்டு இருக்குறோம். என்னுடைய பொண்ணு ஆறு வயசு வரைக்கும் அங்கேதான் வளந்தா. நாம படிக்காத காரணத்தால்தான் இங்க அடிமைப்பட்டு கிடக்கிறோம், நம்ம பிள்ளைய நல்லா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால் ஒரு நாள் யாருக்கும் தெரியாம என் மகள கூட்டிட்டு வந்து காஞ்சிபுரத்துல இருக்கிற ஒரு ஆசிரமத்தில சேர்த்து விட்டுட்டேன். நான் அங்க சேர்த்துட்டு வந்ததுதான் தெரியும். அதுக்கப்புறம் என் மகள நான் பார்க்கக்கூட இல்லை. சேர்த்துட்டு வந்த ஒரு வாரம் என்னையும் என் கணவரையும் திட்டிட்டே இருந்தாங்க. `நீயும் வந்து வேலை பாரு...' என் மகள் எட்டாவது முடிச்சதுக்கப்புறமாதான் என்ன அடிக்கடி பாக்க வந்தா, அவ பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சு முடிக்க...அதுக்கு மேல என்னால படிக்க வைக்க முடியல. அதுனால அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சோம். ஆனா இதுல கொடுமை என்னன்னா... அவளோட கல்யாணத்துக்குக் கூட எங்களால போக முடியலை. கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மகளும், அவளோட கணவரும் என்னைய பாக்க வந்திருந்தாங்க. அப்பா மில் முதலாளி, `நீயும் வந்து கொஞ்ச நாள் வேலை பாக்கணும். அப்பதான் உங்க அப்பா, அம்மாவை மீட்க முடியும்'னு சொன்னாரு. அதை நம்பி என்னோட மகளும் எங்ககூட வேலைக்கு வந்தா, அவளும் எங்களோட சேர்ந்து ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டா. அப்புறம் ஒரு நாள் தொண்டு நிறுவனம் மூலமா அரசு அதிகாரிகளுக்கு எங்கள பத்தி தெரிஞ்சிச்சு. அவங்க வந்துதான் எங்கள அந்த மில்லுல இருந்து மீட்டாங்க. ஆனா, அங்கிருந்து வெளிய வந்ததுக்கு அப்புறம் எங்களுக்கு இன்னும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. வெளி உலகம் ரொம்பவும் வித்தியாசமா இருந்துச்சு. எங்களுக்குத் தங்க வீடு, செய்ய வேலைனு எதுவுமே இல்லாம எங்க குடும்பம் நடுத்தெருவுல நிர்கதியா நின்னுச்சு. வோட்டர் ஐ.டி, ரேஷன் கார்டுனு எதுவுமே இல்லாம தவிச்சிட்டு இருந்தோம். அப்போ எங்கள மீட்க உதவி செஞ்ச அந்தத் தொண்டு நிறுவனம் மூலமாதான் எங்களுக்கு எல்லா அடிப்படை உதவிகளுக்கும் கெடச்சது. பொருளாதார ரீதியா அதுல இருந்து எழுந்து வர சில வருஷம் ஆச்சு. அதுக்கு அப்புறமாதான் நான், எங்களை மாதிரி கொத்தடிமைகளா சிக்கி தவிச்சிட்டு இருக்குற தொழிலாளர்கள எல்லாம் மீட்கணும்னு முடிவு பண்ணி, அதுக்கான முயற்சிகள்ல இறங்குனேன். அதுக்கு என் கணவர் ஆதரவா இருந்தாரு. அரசு அதிகாரிகளை எப்படி அணுகுறது, எந்தப் பிரச்னைக்கு யாருகிட்ட போகணும்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். கொத்தடிமையா இருந்த எனக்கு, திருவள்ளூர் மாவட்டத்துல எங்கெல்லாம் இது மாதிரி ஜனங்க இருக்காங்கன்னு தெரியும். அரசு அதிகாரிகளை சந்திச்சு புகார் அளிச்சு அவங்க மூலமா நிறைய பேர வெவ்வேறு இடங்கள்ல இருந்து மீட்டதுல என் முயற்சிகளும் நிறைய அடங்கியிருக்கு. தமிழ்நாடு முழுக்க எங்களை மாதிரி கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவங்க எல்லாரும் ஒன்றாக இணைந்து `விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்கம்' ஆரம்பிச்சோம். இப்போ இந்த சங்கத்துக்கும் நான் தலைவரா இருக்கேன். எங்க சங்கத்தின் மூலமா மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கொத்தடிமைகள் மீட்கப்பட்டிருக்காங்க. அவங்களுக்கு சங்கத்தோட சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமா தையல் பயிற்சி, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சின்னு தொழில்களைக் கற்றுக் கொடுத்துட்டு வர்றோம். வரலட்சுமி - அவர் மகள் நெறைய பேரு வெளியில வந்து சொந்தமா தொழில் செஞ்சுட்டு குடும்பத்தோட சந்தோஷமா இருக்குறாங்க. அத பாக்கும்போது எனக்கு ரொம்ப மன நிறைவா இருக்கும். ஏதோ நிறைய பேரை அந்த இருள் சூழ்ந்த உலகத்துல இருந்து வெளியில கொண்டு வந்துருக்கேன். கொத்தடிமையா இருந்து மீட்கப்பட்ட ஒவ்வொருத்தரும் என்ன மாதிரியே முயற்சி செஞ்சா, தமிழ்நாட்டுல கொத்தடிமை முறைய முழுமையா ஒழிச்சிடலாம். அந்த நம்பிக்கையிலதான் நானும் போராடிட்டு இருக்கேன். அங்கிருந்து வெளிய வந்து என்னோட மூன்று பேர பசங்க எல்லாரையும் நல்லா படிக்க வெக்குறேன். இப்போ சுயமா தையல் தொழில் செஞ்சு சம்பாதிக்குறோம். என் பெரிய பேத்தி டிகிரி முடிக்கப் போறாங்க, ரெண்டு பேர பசங்க ஸ்கூலுக்கு போயிட்டு இருக்காங்க. போதிய விழிப்புணர்வு இல்லாததாலதான் இன்னும்கூட நெறைய பேரு செங்கல் சூளையிலும், அரிசி ஆலையிலயும் கொத்தடிமைகளா இருக்காங்க. என்றாலும், அரசாங்கம் இந்த விசயத்துல இப்ப சிறப்பா செயல்பட்டு வருது. என்ன மாதிரி கொத்தடிமையா இருந்து மீண்டவங்களுக்கு நான் சொல்லுறது என்னன்னா... உங்களுக்காக நம்ம அரசாங்கமும் ஏராளமான நல்ல மனசு படைச்சவங்களும் இருக்காங்க. நம்ம இந்த துயரத்துல இருந்து மீண்டு வந்துடலாம்னு மன உறுதி இருந்தாலே போதும். நம்ம எப்படியாவது மீண்டு வந்துடலாம். அதுக்கு நான் ஒரு சின்ன உதாரணம்! என்றார் நம்பிக்கையோடு. வரலட்சுமி வாழ்கையப்போல லட்சக்கணக்கானவர்கள் ஏதோ ஒரு முதலாளியின் லாபத்துக்காக தங்களது வாழ்க்கையை கொத்தடிமைகளாக இருந்து கழித்து வருகின்றனர். அவர்களுக்கான விடுதலை என்பது எப்போது?!
Personal Finance: பிசினஸ் லாபத்தில் கோடிகளை உருவாக்குவது எப்படி? 5.6 கோடி ரகசியம் தெரியுமா?
தமிழ்நாட்டில் தொழில் செய்யும் பல வெற்றியாளர்களை நான் சந்தித்திருக்கிறேன். பிசினஸ் எப்படிங்க போகுது? என்று கேட்டால், சூப்பரா போகுதுங்க! போன வருஷத்த விட டர்ன் ஓவர் டபுள்! என்று உற்சாகமாகச் சொல்வார்கள். ஆனால், அவர்களுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கைப் பார்த்தால், அதிர்ச்சியாக இருக்கும். பல நேரங்களில் அது பூஜ்ஜியமாகவோ அல்லது மைனஸிலோ இருக்கும். இது வெறும் யூகம் அல்ல. ஒரு அதிர்ச்சிகரமான உண்மை: இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களில் (MSMEs) சுமார் 34% பேரிடம் எந்தவிதமான ஓய்வுக்காலத் திட்டமும் (Retirement Plan) இல்லை. அவர்கள் நம்புவது ஒன்றே ஒன்றுதான்: கடைசி காலத்துல என் பிசினஸை வித்து செட்டில் ஆகிடுவேன் இது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா? உங்கள் பிசினஸ் என்ற 'கூடு' கீழே விழுந்தால், உங்கள் மொத்த வாழ்க்கையும் உடைந்துவிடும் பிரச்சனை: எல்லாமே ரோலிங்-ல இருக்கு சார்! நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் மீண்டும் பிசினஸிலேயே போடுகிறீர்கள். தொழில் வளர்ந்தால் நானும் வளர்ந்த மாதிரிதானே? என்று நினைக்கிறீர்கள். ஆனால் நிதர்சனம் என்ன? உங்கள் சொத்துக்கள் அனைத்தும் இயந்திரங்களாகவும் (Machines), ஸ்டாக் (Stock) ஆகவும், கடனாளிகள் (Debtors) கையிலும் முடங்கியுள்ளன. வீட்டில் ஒரு அவசர மருத்துவச் செலவு வந்தால், பிசினஸ் அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுக்கத் தயங்குகிறீர்கள். ஐயோ, அது சப்ளையருக்குக் கொடுக்க வேண்டியதாச்சே! என்ற பதற்றம் உங்களைத் தொற்றிக்கொள்கிறது. கசப்பான உண்மை! நீங்கள் 20 வருடங்களாகத் தொழில் செய்கிறீர்கள். மாதம் சராசரியாக ₹1 லட்சம் லாபம் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அந்த லாபத்தைத் தனியாகப் பிரித்து வைக்காமல், மீண்டும் தொழிலிலேயே போட்டிருந்தால்... 20 வருடம் கழித்து உங்களிடம் இருப்பது 'பழைய இயந்திரங்களும்', 'விற்காத ஸ்டாக்கும்' மட்டும்தான். ஆனால், அதே லாபத்தில் மாதம் வெறும் ₹20,000 மட்டும் பிரித்து (SIP), வருடத்திற்கு ஒருமுறை உபரி லாபமான ₹5 லட்சத்தை (Top-up) முதலீடு செய்திருந்தால்... இன்று உங்கள் தனிப்பட்ட கணக்கில் இருக்க வேண்டிய தொகை: ₹5.6 கோடி! பிசினஸ் லாபத்தைத் தாண்டி, கையில் 5.6 கோடி ரொக்கம் இருந்தால் உங்கள் தைரியம் எப்படி இருக்கும்? money தீர்வு: 'தொழில் வேறு, நான் வேறு' இன்றே இந்த மாற்றத்தைத் தொடங்க, இந்த 5 விஷயங்களைக் கட்டாயம் செய்யுங்கள்: * உங்களுக்கு நீங்களே சம்பளம் கொடுங்கள்: லாபம் எவ்வளவாக இருந்தாலும், உங்களுக்கு மாதம் ஒரு நிலையான சம்பளத்தை (எ.கா., ₹50,000) உங்கள் பர்சனல் அக்கவுண்டிற்கு மாற்றுங்கள். * இரண்டு பாக்கெட் விதி (Two-Pocket Rule): பிசினஸ் செலவுக்கு ஒரு அக்கவுண்ட், வீட்டுச் செலவுக்கு ஒரு அக்கவுண்ட். இரண்டையும் எக்காரணம் கொண்டும் கலக்காதீர்கள். * சீரற்ற வருமானத்திற்கு 'Base SIP': பிசினஸில் ஏற்ற இறக்கம் சகஜம். எனவே, உங்கள் குறைந்தபட்ச லாபத்தில் (Worst Month Profit) இருந்து ஒரு தொகையை SIP-ஆகப் போடுங்கள். * உபரி பணத்தைப் பூட்டுங்கள் (Park Surplus): தீபாவளி, பொங்கல் போன்ற சீசன் நேரங்களில் வரும் அதிகப்படியான லாபத்தை, அப்படியே பிசினஸில் போடாமல், 50% எடுத்து மியூச்சுவல் ஃபண்டில் (Lumpsum) போடுங்கள். * சொத்துக்களைப் பிரியுங்கள் (Diversify): உங்கள் தொழில் சார்ந்த துறையிலேயே (எ.கா., டெக்ஸ்டைல் என்றால் டெக்ஸ்டைல் பங்குகளிலேயே) முதலீடு செய்யாமல், தொடர்பில்லாத துறைகளில் முதலீடு செய்யுங்கள். Personal Finance: முதலீட்டின் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்கணுமா? 15:15:15 ஃபார்முலாதான் ஒரே வழி! மாற்றம்: நிம்மதியான தூக்கம் இப்படிச் செய்வதால், நாளை ஒருவேளை தொழிலில் மந்தநிலை வந்தாலும், உங்கள் குடும்பம் பாதிக்கப்படாது. பிசினஸ் போனா என்ன? நான் ராஜா மாதிரி வாழுவேன்! என்ற அந்தத் தன்னம்பிக்கைதான் உண்மையான வெற்றி. இதைச் சரியாகச் செய்வது எப்படி? சார், ஐடியா நல்லா இருக்கு... ஆனா என் பிசினஸ் சூழலுக்கு இது செட் ஆகுமா? என்று நீங்கள் யோசிக்கலாம். சீரற்ற வருமானம் (Irregular Income) உள்ளவர்களுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு நேரடிப் பயிற்சி வகுப்பு உங்களுக்காக... Labham Workshop for Business Owners தொழில்முனைவோருக்கான சிறப்பு ஆன்லைன் வெபினார்: மாருதி பவர் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் நிறுவனர் ஆனந்தம் செல்வகுமார், தனது 25 வருடத் தொழில் அனுபவத்தில் கற்ற நிதிப் பாடங்களை உங்களுடன் பகிரவுள்ளார். தலைப்பு: பிசினஸ் ஓனர்களுக்கான சுய நிதி நிர்வாகம் + பிசினஸ் வளர்ச்சி நாள்: பிப்ரவரி 11, 2026 (புதன்) | நேரம்: மாலை 07:00 மணி கற்றுக்கொள்ளப்போவது: Cash Flow vs Savings: பணப்புழக்கத்தைச் சிக்கல் இல்லாமல் கையாள்வது எப்படி? Investment vs Withdrawals: பிசினஸைப் பாதிக்காமல் பணத்தை எப்படி வெளியில் எடுப்பது? SIP to SWP: ஒரு முழுமையான 'சொத்து உருவாக்கும்' வரைபடம். உங்கள் உழைப்பு, உங்கள் குடும்பத்தைச் சேர வேண்டுமா? அல்லது இயந்திரங்களுக்குப் போக வேண்டுமா? முடிவு உங்கள் கையில். மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும் இந்நிகழ்ச்சியில் இலவசமாகப் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்: https://labham.money/events/webinar-feb11-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_feb11_2026 Personal Loan: லோன் வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயத்தை தெரிஞ்சுக்கலனா நஷ்டம் உங்களுக்குத்தான்!
தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold
விகடன் இணையதளத்தில் தினமும் தங்கம் மற்றும் வெள்ளி விலை செய்தியை வெளியிட்டு வருகிறோம். கடந்த வாரத்தில் ஒரு நாள் அந்தச் செய்தி ஒன்றின் கீழ், கமெண்டில், எளிய மக்களுக்கு, இந்தத் தங்கம் வெள்ளி, ஒரே நாளில் இரண்டு முறை ஏறி, இறங்குவது, அதாவது இரண்டு முறையும் ஏறுவது, இறங்குவது எந்த அடிப்படையில் என்று விளக்கி ஒரு கட்டுரை போடலாமே? இந்த விலையை நிர்ணயம் செய்வது யார்? எதனால் இப்படி நிகழ்கிறது? இதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லையா? அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தங்க விற்பனை வராதா? என்று கேள்விகளை அடுக்கி இருந்தார் ஒரு வாசகர். தங்கம் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு அவரது கேள்விகளுக்கான பதில்கள் இதோ... ஒரே நாளில் தங்கம், வெள்ளி விலை இரண்டு முறை ஏறி, இறங்குவது ஏன்? தங்கம், வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்கள் சர்வதேச சந்தைகளைப் பொறுத்து அமைகிறது. இதற்கும், இந்திய சந்தைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அமெரிக்காவின் சந்தை ஆரம்பம் ஆகும்போது, நமக்கு இரவு ஆகியிருக்கும். அதனால், அந்தச் சந்தையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, நமக்கு காலையில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயமாகும். அடுத்தது, நம்முடன் சேர்த்து சில நாடுகளின் சந்தைகள் தொடங்கும்... சில நாடுகளில் 24 மணிநேரமும் சந்தை இருக்கும். அப்போது அந்தச் சந்தையில் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்தால், அது நம் சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை ஏறும், இறங்கும். இங்கே மாற்றம் என்று குறிப்பிடப்படுவது உலக அளவில் நடக்கும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் ஆகும். ஒரு நாட்டில் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது தங்கம், வெள்ளியில் பிரதிபலிக்காது. ஒரு நாட்டில் நடக்கும் மாற்றம் உலக அளவில் பிரதிபலிக்கும் என்றால் மட்டும், அதையொட்டி தங்கம், வெள்ளி விலை மாறுபடும். தினமும் இரு முறை தங்கம் விலையில் மாற்றம் இருக்காது. ஏதேனும் பெரிய நிகழ்வுகள் நடக்கும்போது மட்டுமே, இந்த மாற்றம் இருக்கும். தங்கம் 2022-ல் இந்தியா உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா? தங்கம் விலையை நிர்ணயம் செய்வது யார்? தங்கம் விலை ஏற்ற, இறக்கங்கள், தங்கத்திற்கான தேவை, போக்குவரத்து செலவுகளைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களில் உள்ள தங்க நகை சங்கங்கள் தங்கம், வெள்ளி விலையை நிர்ணயிக்கும். தங்கம் விலையில் எதனால் மாற்றங்கள் நிகழ்கிறது? இதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லையா? முன்னரே சொன்னதுபோல, தங்கம் விலை என்பது சர்வதேச நிகழ்வுகளைப் பொறுத்து அமைவது ஆகும். இதற்கு அரசாங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தங்க விற்பனை வராதா? தங்கம் விலை நிர்ணயம், தங்கம், வெள்ளி ஏற்றுமதி, இறக்குமதி அவற்றின் தரம் ஆகியவற்றின் நடைமுறைகள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படியே நடக்க வேண்டும்... நடக்கிறது... நடக்கும். தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களைப் பற்றி இன்னமும் விளக்கமாக தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கவும். Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?
Mamitha Baiju: நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன்! - 'நாளை நாளை'ட்ரோல் குறித்து மமிதா பைஜூ
மமிதா பைஜூ தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. 'ப்ரேமலு' படத்தின் வெற்றிக்குப் பிறகே தமிழில் வரிசையாகப் படங்களை கமிட் செய்தார். மமிதா பைஜூ அவர் நடித்திருக்கும் 'ஜனநாயகன்', 'கர', 'சூர்யா 46', 'இரண்டு வானம்' ஆகிய திரைப்படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இவற்றைத் தாண்டி, மலையாளத்தில் 'ப்ரேமலு' பட இயக்குநர் கிரீஷ் ஏ.டி. நிவின் பாலியை வைத்து இயக்கும் 'பெத்தல்கம் குடும்ப யூனிட்' படத்திலும் மமிதா பைஜூ நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்றிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். அந்த நிகழ்வில் மமிதா பைஜூ, விஜய்யின் 'எல்லா புகழும்' பாடலின் ஓரிரு வரிகளை மேடையில் பாடியிருந்தார். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி, ட்ரோல் செய்யப்பட்டது. Mamitha Baiju சமீபத்தில், அனஸ்வரா ராஜன், அபிஷன் ஜீவிந்த் நடித்திருக்கும் 'வித் லவ்' படத்தைப் பார்ப்பதற்கு வந்த மமிதா பைஜூவிடம் பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதில் இந்த ட்ரோல்கள் குறித்தும் கேட்டனர். அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, மக்கள் இதை வெறும் பொழுதுபோக்காகவே பார்க்கிறார்கள். நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன். அது நல்ல ஃபன்! என்று கூறியிருக்கிறார்.
திருகோணமலையில் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கடக்கிழமை (9) உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது. குறித்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு இன்று நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜா ஆலயத்தின் பீடாதிபதி திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்
`அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் செய்யும்' இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளில் ஒன்று இது. 2023-24 நிதியாண்டில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 42.20 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில், அமெரிக்காவில் இருந்து இந்தியா 45.63 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்திருந்தது. பியூஷ் கோயல் பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன? இதுவரை, ஓராண்டிற்கு 50 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி நடந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், அமெரிக்காவில் இருந்து எப்படி 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்ய முடியும்... அது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதற்கு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் பதிலளித்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளை அமெரிக்காவில் இருந்து கட்டாயம் செய்ய வேண்டியதில்லை. 'செய்ய நினைக்கிறோம் (Intend to)' என்பது தான் இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதன் படி, அமெரிக்காவில் இருந்து எரிசக்தி பொருள்கள், விமானம் மற்றும் விமான பாகங்கள், முக்கிய உலோகங்கள், டெக்னாலஜி பொருள்கள், கோக்கிங் நிலக்கரி (Coking Coal) ஆகியவற்றை இறக்குமதி செய்வோம். கச்சா எண்ணெய், எல்.என்.ஜி, எல்.பி.ஜி, விமானங்கள், அதன் இன்ஜீன்கள், உதிரி பாகங்கள் போன்ற நமக்கு மிக முக்கியமான பல இறக்குமதிகளை, அமெரிக்காவால் நமக்கு விற்க முடியும். கோக்கிங் நிலக்கரி திருவள்ளுவர் முதல் UPI வரை: இந்திய - மலேசியா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்|Quick Points 'இதில்' மட்டுமே... இப்போது நம்மிடம் 140 மில்லியன் டன் எஃகு (Steel) திறன் நம்மிடம் உள்ளது. அதை 300 மில்லியன் டன்னாக உயர்த்த உள்ளோம். அதற்கு நமக்கு கோக்கிங் நிலக்கரி மிகத் தேவை. இப்போதே நமக்குத் தேவைப்படுகிற கோக்கிங் நிலக்கரியின் மதிப்பு 17 பில்லியன் டாலர்கள். 300 மில்லியன் டன்னாக உயர்த்தும்போது, நமக்கு 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கோக்கிங் நிலக்கரி தேவைப்படும். ஆக, கோக்கிங் நிலக்கரி ஒன்றிலேயே நம்மால் 30 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்ய முடியும். நாம் ஏற்கெனவே இரண்டு, மூன்று நாடுகளிடம் இருந்து கோக்கிங் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இப்போது தேவை அதிகரிக்கும்போது, பேரம் பேசி நம்மால் குறைந்த விலைக்கே கோக்கிங் நிலக்கரியை வாங்க முடியும். விமானங்களும், உதிரி பாகங்களும் அடுத்தது, இந்தியாவிற்கு விமானங்கள் தேவையாக இருக்கிறது. அதனால், இப்போது 50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு போயிங் விமானங்களை அமெரிக்காவிற்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். இத்துடன் இன்ஜீன், உதிரி பாகங்களையும் வாங்குவோம். 80 - 100 பில்லியன் டாலர்களை வெறும் சிவில் விமானங்கள் மூலமே அடைந்துவிடுவோம் என்று நான் நினைக்கிறேன். நமக்கு எரிசக்திகளும் அதிகம் தேவை. அதற்கும் இறக்குமதிகள் தேவைப்படும். நாம் நிறைய டேட்டா சென்டர்கள், ஏ.ஐ மையங்கள் ஆகியவற்றை அமைக்கிறோம். இதற்காக இப்போதே நாம் பல நாடுகளிடம் இருந்து கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இறக்குமதி செய்கிறோம். போயிங் விமானம் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த 300 பில்லியன் டாலர்கள் என்பது 2 டிரில்லியன் டாலராக மாறும் என்று எதிர்பார்க்கிறோம். ஆக இவை அனைத்தையும் நம்மால் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்ய முடியும். முக்கியமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் இறக்குமதி என்றால், ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் இறக்குமதி செய்ய வேண்டும் என்பதில்லை. மொத்தமாகவே, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து 500 பில்லியன் டாலர் என்பது தான் பொருள் என்று கூறியுள்ளார். இந்தப் பதில் கேட்கத் திருப்திகரமாக தான் உள்ளது. ஆனாலும், அந்தக் கூட்டறிக்கையில் இன்னொரு முக்கிய பாயிண்டும் இடம்பெற்றிருக்கிறது. அது, இதில் இரு நாடுகளில் எந்த நாடு வரியை மாற்றினாலும், மற்ற நாடு அவர்களது கமிட்மென்டை அதற்கேற்றவாறு மாற்றலாம் என்பதாகும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றி அனைவருக்குமே நன்கு தெரியும். அவர் 'Make America Great Again' என்கிற கோட்பாட்டுடன் செயல்பட்டு வருகிறார். என்ன தான் கூட்டறிக்கையில், 500 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்ய இந்தியா நினைக்கிறது (Intend) என்கிற வார்த்தை இடம்பெற்றிருந்தாலும், அவர் அதை கிட்டத்தட்ட இந்தியா எட்டிவிட நிச்சயம் எதிர்பார்ப்பார். இதை இந்தியா தவறும்பட்சத்தில், நிச்சயம் இந்தியா மீது மீண்டும் வரி ஆயுதம் பாயும். ட்ரம்ப் 2022-ல் இந்தியா உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா? 2025-ம் ஆண்டு அமெரிக்காவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அந்த ஒப்பந்தத்தைத் தென் கொரியா செயல்பாட்டிற்குக் கொண்டு வரவில்லை. இதனால், தென் கொரியா மீதான வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் அச்சுறுத்தி உள்ளார் ட்ரம்ப். ஆக, நாம் அடுத்தடுத்து என்ன செய்கிறோம்... அமெரிக்காவிடம் இருந்து நாம் எப்படி இறக்குமதி செய்கிறோம் என்று ட்ரம்ப் அரசு நிச்சயம் உன்னிப்பாக கவனித்து வரும். இதை, இந்தியா நிச்சயம் கண்ணும் கருத்துமாக கையாள வேண்டும். Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?
தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மலேசியாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
மட்டக்களப்பில் பட்டி பட்டியாக உள்நுழைந்த யானைகள்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பாட்யடியாக நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி வருகின்றன. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான யானைகள் இவ்வாறு ஊருக்குள் வருவதை கிராம வாசிகள் அவதானித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள்; தினமும் அச்சுத்துடனே வாழ்வதாகவும் கவலை வெளியிடுகின்றனர். மிக நீண்ட்ட காலமாகவிருந்து அப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை துரத்தும் பணியினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில்.மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மற்றைய இளைஞன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சள் சீருடை போராட்டம்: பிரெஞ்சு கலகத் தடுப்புப் பிரிவு காவல்துறை மீது வழக்கு!
பிரான்சின் கலகத் தடுப்புப் பிரிவான CRSசைச் சேர்ந்த 30 முதல் 52 வயதுக்குட்பட்ட ஒன்பது அதிகாரிகள் பொது அதிகாரம் கொண்ட ஒருவரால் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். சிலர் மோசமான வன்முறை குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கின்றனர். கடந்த டிசம்பர் 1, 2018 அன்று அரசாங்க எதிர்ப்பு மஞ்சள் சீருடை இயக்கத்தின் போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்க் டி ட்ரையம்பை சூறையாட முயன்றபோது இந்த காவல்துறை அதிகாரிகள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்களை காவல்துறை முன்வைத்துள்ளது. பர்கர் கிங் தாக்குதலில் பலியானவர்களில் 32 வயதான நடன் ஆர்தாட் ஒருவர். சிசிடிவி காட்சிகளில் அவர் தரையில் சுருண்டு கிடப்பதையும், தனது கைகளால் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதையும் காட்டியது. அதே நேரத்தில் கலகத் தடுப்புக் காவல்துறையினர் அவரைச் சுற்றி வளைத்தனர். லோயர் பகுதியைச் சேர்ந்த ஆர்தாட் கைகளிலும் கால்களிலும் 27 அடிகளைப் பெற்ற பின்னர் ஐந்து நாட்களுக்கு வேலையிலிருந்து நீக்கப்பட்டார். காவல்துறை வன்முறை ஒரு முக்கிய பிரச்சினை என்று அவர் ஆகஸ்ட் 2024 இல் ஒரு நேர்காணலில் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார் . புகார் பதிவு செய்வதற்கு முன்பு நான் நிறைய தயங்கினேன். கலகப் பிரிவு காவல்துறையினருக்கு எதிராக சிவில் நடவடிக்கை எடுப்பதன் மூலம், நான் யாரையும் மட்டும் தண்டிக்கவில்லை என்பதை நான் அறிந்திருந்தேன். ஜூலை 2024 இல், நீண்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர், பாரிஸ் அரசு வழக்கறிஞர் ஒரு குற்றவியல் விசாரணையைக் கோரினார். சில கலகத் தடுப்பு காவல்துறை அதிகாரிகள் தடிகள் மற்றும் கேடயங்களுடன் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் கைகளை உயர்த்தி வெளியே வர முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை மீண்டும் மீண்டும் தாக்கினர் என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில், பொது அதிகாரம் கொண்ட ஒருவரால் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டதாக ஒன்பது அதிகாரிகளை குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணை நீதிபதி பரிந்துரைத்தார். கலகக்காரர்களால் பல மணிநேரங்களாக எறிகணைகளால் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாங்கள் மிகுந்த மன அழுத்தம் மற்றும் கிளர்ச்சிநிலைமைகளின் கீழ் செயல்பட்டதாக அதிகாரிகள் வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சள் சீருடையாளர்களின் 2019 பொது குறை தீர்க்கும் பதிவு புத்தகங்களை வெளியிட பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்தனர். நீண்ட விசாரணை விசாரணைக்கு வர ஏழு ஆண்டுகள் ஆன இந்த வழக்கு, மஞ்சள் சீருடை போராட்ட இயக்கத்திலிருந்து எழும் காவல்துறை அதிகாரிகளின் மிகப்பெரிய கூட்டு விசாரணைகளில் ஒன்றாகும். எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் தூண்டப்பட்ட இந்த இயக்கம், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் அவரது ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கும் எதிரான பரந்த போராட்டமாக வளர்ந்தது. போராட்டங்கள் தொடர்பாக ஐஜிபிஎன் காவல் மேற்பார்வை அமைப்பால் காவல்துறையின் மிருகத்தனம் தொடர்பான சுமார் 212 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2019 இல், வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டதற்காக ஒரு CRS அதிகாரிக்கு இரண்டு மாத பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஆண்டு மே 1 அன்று மஞ்சள் சீருடை போராட்டங்களின் போது ஒரு போராட்டக்காரர் மீது நடைபாதைக் கல்லை வீசுவது படமாக்கப்பட்டது. அவர் தனது பதவியில் தொடர்ந்தார். பாரிஸ் நீதித்துறை நீதிமன்றத்தில் விசாரணை பிப்ரவரி 12 வரை நடைபெற உள்ளது.
``உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது!’’ - ஸ்டாலின் பெருமிதம்
ரா ணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் `டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் `ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார். தொழிற்சாலைக் கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம், தொழிற்சாலையைத் திறந்துவைத்து முதல் வாகன இயக்கத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ``நம்முடைய அன்புக்குரிய டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் முதலில் உரையாற்றும்போது, `இந்த நாள் டாடா குழுமத்துக்கு ஒரு பொன் நாள்’ என்று பெருமையோடு, மகிழ்ச்சியோடு சொன்னார். அவர் ஒன்றை மறந்துவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டுக்கும் ஒரு பொன் நாள். குறிப்பாக, தமிழகத்தின் தொழில்துறைக்கான பொன் நாள். அந்த வகையில், பனப்பாக்கம் சிப்காட்டில் `டாடா ஜே.எல்.ஆர் நிறுவனத்தின் மேம்பட்ட பயணிகள் வாகன உற்பத்தி திட்டம்’ தொடங்கிவைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். டாடா குழுமம், தமிழ்நாடுமீது வைத்திருக்கிற நம்பிக்கை, பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதுவும், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போகிற இப்படியொரு சிறப்பானத் திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கியதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். முதல் வாகன இயக்கத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் இங்குப் பங்கேற்றியிருப்பது, எங்கள் எல்லோருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அவர் இருப்பது, அவருக்கு மட்டும் அல்ல, நம்முடைய தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய பெருமை. 2024-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த அடிக்கல் நாட்டுவிழாவில், `விரைந்து இந்தப் பணிகளை முடித்து, திறப்பு விழாவுக்கு நீங்கள் வரவேண்டும்’ என்று சந்திரசேகரனிடம் நான் கோரிக்கைவைத்திருந்தேன். அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, இந்த நிகழ்ச்சிக்குவந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவின் தொழில் முகங்களில், முக்கியமானது நம்முடைய டாடா நிறுவனம். ஸ்டீல், ஐ.டி, ஏர்லைன்ஸ், ஆட்டோமொபைல், நுகர்வோர்ப்பொருள்கள், ஹாஸ்பிடாலிட்டி, தொலைத்தொடர்பு போன்ற பலத்துறைகளில் தடம்பதித்து, மிகப்பெரிய சாதனைகள் படைத்திருக்கக்கூடிய குழுமம்தான் நம்முடைய டாடா குழுமம். உலக அளவில், பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிற இந்திய பன்நாட்டுக் குழுமமாகவும் டாடா நிறுவனம் இருக்கிறது. டாடா என்று சொன்னாலே, அதற்கு ஒரு `பிராண்ட் வேல்யூ’ உண்டு. அப்படிப்பட்ட டாடா நிறுவனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆழமான உறவும் இருக்கிறது. டி.சி.எஸ் நிறுவனம், தாஜ் ஹோட்டல்கள், டைட்டன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ்... இவையெல்லாம், அந்த உறவு சரித்திரத்தின் பொன் ஏடுகள். டாடா நிறுவனம், தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கின்ற பெருமைமிகு அடையாளங்கள். இந்தியாவின் வாகன உற்பத்தி மையம், தமிழ்நாடு. மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான். மோட்டார் வாகனத் துறையில், இன்றைக்குத் தமிழ்நாடு டாப் பொசிஷனில் இருக்கிறது என்றால், அதற்குப் பெரிய பாரம்பர்யமும் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பல கார் உற்பத்தி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களின் திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். அதேபோல, டாடா மோட்டார்ஸ், உலக அளவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாகவும், மின்வாகனத் துறையில் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. பன்னாட்டுத் தரவரிசைகளைக் கடைப்பிடித்து குவாலிட்டி மற்றும் நம்பகத்தன்மைமிக்க வாகனங்களை உள்நாட்டுச் சந்தைக்கும், உலகச் சந்தைக்கும் டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட பயணத்தின் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து இந்த ஆலையை நிறுவ நீங்கள் முன்வந்திருப்பதெல்லாம், எங்களுக்கு உள்ளபடியே பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் `டாடா ஜே.எல்.ஆர்’ இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒருத் திட்டம். ஏன் தெரியுமா? இந்தத் தொழிற்சாலையில் டாடா நிறுவனம், உலகத் தரம்வாய்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களை உற்பத்திச் செய்யப்போகிறார்கள். உலகப் புகழ்பெற்ற ரேஞ்சு ரோவர் எவோக் தயாரிக்கப்பட்டு, இன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கிறது. உயர்த் தொழில்நுட்பங்களை தன்னகத்தே ஏற்று, உலக அளவில் எந்த நாட்டின் தயாரிப்புகளுடனும் போட்டியிடக்கூடிய வாகனங்களை உருவாக்கும் திறன் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த ஆலை அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு வேறு எங்கேயும் பார்க்க முடியாத ஒருத் தனித்தன்மை உண்டு. எல்லா மாவட்டங்களிலும் சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த மாநிலம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். வளர்ந்துவரும் புதிய துறைகளிலும் நாம் நுழைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாம் ஏற்கெனவே லீடராக இருக்கிற துறைகளில், மேலும் உயர்ந்த தரத்தையும், இன்னும் பெரிய சாதனைகளையும் அச்சீவ் செய்ய வேண்டும். இதற்காகத்தான் ஸ்பெஷல் கவனத்தோடு, திராவிட மாடல் அரசு உழைத்துக்கொண்டு இருக்கிறது. பன்முகப்படுத்தப்பட்ட மாநிலமாக, உலக அரங்கங்களில் தமிழ்நாடு தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு எந்த அளவுக்குத் தொழில் செய்ய உகந்த எளிமையான மாநிலமாக இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். டிப்ளமோ முடித்த நம்முடைய இளைஞர்கள், இந்தத் திட்டத்தில் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் `லட்சியா’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சிப்பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் வேலை செய்துக்கொண்டே பி.டெக் பட்டம் பயிலவும், இந்த நிறுவனம் உதவிசெய்கிறது. இந்த தருணத்தில் இன்னொரு செய்தி சொல்லவும் விரும்புகிறேன். நம் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகத்துக்கு எடுத்துச்சொல்ல `முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு’ இன்னும் சில நாள்களில் நடத்தப்போகிறோம். கிட்டத்தட்ட 100 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதை நீங்கள் தெரிந்துக்கொள்ளப் போகிறீர்கள். திட்டங்களைத் தொடங்கிவைப்பது, அடிக்கல் நாட்டுவது என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதையும் வெளிப்படுத்தப் போகிறோம். தமிழ்நாட்டின் விரைவான செயல்பாடுகள், குறித்த நேரத்தில் கிடைக்கின்ற அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள், வணிகம் புரிவதை எளிதாக்கும் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் அந்த மாநாட்டில் காண்பிக்கப் போகிறோம். தமிழ்நாடு அரசு ஒரு கேரன்டி கொடுத்தால், அதை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்று உலக முதலீட்டாளர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களுக்குப் போட்டி மாநிலம் என்பதையெல்லாம் தமிழ்நாடு எப்போதோ கிராஸ் செய்துவிட்டது. இப்போது, உலக நாடுகளுடன் போட்டிப்போடக்கூடிய அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. இது, நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒரு முன்னேற்றம். ரேஞ்சு ரோவர் இந்த சிறப்பான தருணத்தில், இந்திய வாகனத் துறை வளர்ச்சிக்கும், இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றவும் மறைந்த ரத்தன் டாடா ஆற்றிய பங்களிப்புகளை மிகுந்த மரியாதையோடு நினைவுகூற விரும்புகிறேன். அவர் கண்ட கனவுபடியே, டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் மேற்கொள்ளக்கூடிய இந்த முதலீடு, இந்தியா முழுவதும் புதிய எரிசக்தி வாகனத் துறை வளர்ச்சிக்கு வலுவான ஊக்கமாக அமையும். இந்த விழா மூலமாக நாம் பெற்றிருக்கின்ற நல்லுணர்வைத் தொடர்ந்து செயல்படுத்துகிற வகையில், டாடா குழுமம் தனது பல்வேறு தயாரிப்புகளை முக்கிய உற்பத்தி மையமாகத் தொடர்ந்து தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம். எந்தத் துறையில் நீங்கள் முதலீடு செய்தாலும், அதற்கு நாங்கள் முழு ஆதரவு வழங்குவோம். திராவிட மாடல் அரசை நீங்கள் முழுமையாக நம்பலாம். எங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத்தரும் முதலீடுகளை யார் மேற்கொள்ள வந்தாலும், அவர்களை திறந்த மனதோடும், திறந்த கரங்களோடும் தமிழ்நாடு நிச்சயமாக வரவேற்கும். தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும். அதுதான் எங்கள் பண்பாடு; அதுதான் எங்கள் பாரம்பர்யம். தமிழ்நாட்டின் வளர்ச்சித் தனித்தன்மை வாய்ந்தது; பெண்களின் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பது; பொருளாதார வளர்ச்சியோடு சமூக நீதியையும் உள்ளடக்கியது. எங்களுடைய இந்த நல்முயற்சிகளுக்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
Women Candidates Face Harassment Ahead of Bangladesh Polls
As Bangladesh prepares for its parliamentary elections on Thursday, there are growing concerns about the safety of women candidates and
ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு: உண்மையை பேசுபவர்களுக்கு எலான் மஸ்க் ஆதரவு!
உலகின் பெரும் பணக்காரரும், ‘X’ (முன்னாள் ட்விட்டர்) தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)… The post ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு: உண்மையை பேசுபவர்களுக்கு எலான் மஸ்க் ஆதரவு! appeared first on Global Tamil News .
Russian Drone Attacks Kill Mother, Son in Ukraine
At least three people were killed in overnight drone attacks carried out by Russian forces in parts of eastern and
Japan PM Takaichi Wins Landslide Snap Poll
Japan’s Prime Minister Sanae Takaichi won a big victory in the snap general election held on Sunday (February 8, 2026).
Supreme Court Lifts Stay on OBC Panel Shift
The Election Commission of India has clarified that the Permanent Resident Certificate can be used as a valid document during
Casio India launches ‘Never Just One’ campaign showcasing new vintage AQ-240 series
Mumbai: Casio India has unveiled its latest campaign for the Vintage series, spotlighting the newly introduced AQ-240 model. The series is part of Casio’s broader FUTURE CLASSICS lineup, which blends heritage-inspired design with a sense of nostalgia reimagined for modern tastes.Casio’s Vintage watches have long enjoyed popularity across generations, particularly among Gen Z and millennial consumers. Built around the idea “Never Just One,” the new campaign reflects a generation that embraces multiple identities and constant evolution. Mirroring this ethos, the AQ-240 stands as a symbol of reinvention and duality, combining classic aesthetics with contemporary functionality.Set against the backdrop of urban youth culture, the campaign film uses bold, expressive visuals to capture the fluid fashion choices and dynamic lifestyles of young India. The watch is portrayed as a versatile accessory that adapts seamlessly to different moods, roles, and moments, underscoring the campaign’s message of refusing to be defined by a single expression.At the core of the AQ-240 is its distinctive dual-display dial that merges traditional analog hands with a digital screen. The dial features a radiant sun-ray finish for added depth and clarity, while a retro-inspired TV-shaped display window gives the watch its signature vintage character. The model is available in silver, blue, and gold variants, further enhancing its appeal as a style-forward timepiece.[caption id=attachment_2491016 align=alignleft width=200] Takuto Kimura [/caption]Commenting on the campaign, Takuto Kimura, Managing Director, Casio India, said, “Through this product series and its campaign, we celebrate a generation that is dynamic, diverse, and always redefining itself. The AQ-240 embodies this same spirit, merging analog and digital & retro and modern. By introducing this bold new silhouette, we honour Casio’s rich legacy of innovation and craftsmanship, while staying attuned to the rhythm, aspirations, and cultural dynamism of modern India.” The campaign has been conceptualised by Homegrown and directed by Varsha Patra. With abstract yet impactful storytelling, the film captures Gen Z’s multifaceted identities while highlighting the AQ-240’s fusion of analog and digital, retro and modern elements. The visual narrative reinforces the philosophy of ‘Never Just One’ with cultural relevance and contemporary flair.https://www.youtube.com/watch?v=ijdN4MyANc0
India, Canada Agree on Security Cooperation Plan
India and Canada have agreed to prepare a joint work plan to improve cooperation on national security and law enforcement
Akshay Kumar brings Exceed Group onboard to strengthen business strategy
Mumbai: Actor and entrepreneur Akshay Kumar has appointed Exceed Group of Companies as a strategic partner to lead and consolidate his brand and business operations. The move marks a significant step in strengthening the structure, scale, and long-term vision of Kumar’s professional ecosystem.Known for his disciplined approach, major feature films, and strong entrepreneurial decisions, Kumar has steadily built a robust business framework headed by Vedant Baali and core team associate Zenobia Kohla, who continue to drive strategy, growth, and operations. The integration of Exceed Group into his core team is aimed at further streamlining brand strategy, partnerships, and commercial growth.Commenting on the association, Akshay Kumar said, “I have always believed that strong teams and the right people are key to building a sustainable enterprise. Getting the Exceed Group on board aligns with this thought and long-term value creation across my brand and business interests.” A consistently bankable and trusted face in cinema and for brands, Akshay Kumar enjoys unmatched cross-market reach as a true pan-India superstar, connecting seamlessly with audiences across regions and demographics. His credibility, longevity, and strong consumer trust have positioned him as a preferred partner for leading national and international brands. Afsar Zaidi, Founder, Exceed Group of Companies, added, “Akshay Kumar represents consistency, credibility and scale, values that strongly align with Exceed’s approach to brand and business building. Our focus will be on creating a streamlined, future ready ecosystem that supports strategic growth while maintaining the integrity of his brand.” The move reflects Akshay Kumar’s disciplined, long-term approach to managing his brand interests. With Exceed Group on board, the focus will be on aligned strategy, measured growth, and sustained value creation.
Baby & Mom Retail rebrands as Kharesiya Brands, signalling evolution into a House of Brands
New Delhi: Baby & Mom Retail Pvt. Ltd., which began over a decade ago as a focused baby-care venture, has officially rebranded as Kharesiya Brands Pvt. Ltd., reflecting its transformation into a diversified, multi-category consumer brand platform.The new identity signals the company’s evolution into a full-fledged House of Brands spanning baby & beauty, pet care, consumer electronics, and home appliances. More than a corporate name change, the rebrand represents the company’s shift toward a brand-building ecosystem designed to create, scale, and nurture distinct consumer brands under a unified parent platform.As its portfolio expanded across categories and customer segments, the need for a cohesive umbrella identity became evident. Kharesiya Brands will now serve as that central platform, built to drive long-term scale, operational strength, and brand leadership across its growing portfolio.The rebrand coincides with strong business momentum, with the company on track to surpass ₹120 crore in GMV (Gross Merchandise Value) ARR in FY26. This growth is being driven by portfolio expansion, omnichannel presence, and deeper consumer engagement across its brands.Despite the name change, the company’s leadership team, operational foundation, and focus on delivering quality, value, and trust remain unchanged.[caption id=attachment_2491009 align=alignleft width=150] Shish Kharesiya [/caption] “This rebrand is not a departure from who we are, it’s a reflection of who we have become,” said Shish Kharesiya, Founder & CEO, Kharesiya Brands Pvt. Ltd . “Over the years, we’ve grown beyond a single category into multiple consumer spaces, each with its own identity and loyal customer base. Kharesiya Brands represents our ambition to build a true House of Brands, one that balances innovation with trust, and scale with customer connection. With our portfolio momentum and strong growth trajectory, we are excited to enter this next phase under a unified identity.” Kharesiya Brands currently operates a growing portfolio of consumer-focused brands and continues to strengthen its presence across D2C and omnichannel retail channels. The company is also investing in product innovation, supply chain capabilities, and leadership depth to support its next phase of expansion.The rebranding is expected to accelerate the company’s long-term vision of building a scalable, future-ready consumer brand platform across everyday lifestyle categories.
கச்சத்தீவு திருவிழா 27ஆமாம் திகதி –முன்னாயத்த நடவடிக்கைகளில் கடற்படையினர் தீவிரம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம்… The post கச்சத்தீவு திருவிழா 27ஆமாம் திகதி – முன்னாயத்த நடவடிக்கைகளில் கடற்படையினர் தீவிரம் appeared first on Global Tamil News .
T20 World Cup: இந்தியாவுடன் விளையாடுகிறோம்; ஆனால் - ஐசிசிக்கு பாகிஸ்தானின் நிபந்தனைகள் என்னென்ன?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது போட்டியில் பங்கேற்பதற்காகச் சில நிபந்தனைகளை ஐசிசிக்கு முன் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பாகிஸ்தானின் லாகூர் நகரில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப். 8) நடைபெற்றிருக்கிறது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர். பாகிஸ்தான் வாரியத்தின் நிபந்தனைகள் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக 'Telecom Asia Sport' ஊடகம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, * உலகக்கோப்பையில் இருந்து நீக்கிய வங்கதேச அணிக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டும். மொஹ்சின் நக்வி * ஐசிசி வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கை அதிகரித்து வழங்க வேண்டும். * இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்புப் போட்டிகள் மீண்டும் நடந்தப்படவேண்டும். * போட்டியின்போது பரஸ்பரம் இரு நாட்டு அணிகள் கை குலுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று சில நிபந்தனைகளை ஐசிசிக்கு முன் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? - ஓர் அலசல்!
எப்ஸ்டீன் கோப்பில் 169 முறை பெயர் ; ஒருநாளும் நான் சந்தித்ததில்லை; மறுக்கும் தலாய்லாமா
அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை வெளியிட்டது. இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் திபெத்திய மதகுரு தலாய் லாமா உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. […]
நிவின் பாலி நடிப்பில் உருவான 'பேபி கேர்ள்' திரைப்படம் பிப்ரவரி 12 முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் இப்படத்தைக் காணலாம்.
IICT hosts first IEPL Esports League to boost AVGC Talent and Advance India’s Orange Economy vision
Mumbai: The Indian Institute of Creative Technologies (IICT), Mumbai, hosted the inaugural edition of the IICT Esports Premier League (IEPL) on February 8, underscoring the rising importance of the Animation, Visual Effects, Gaming and Comics (AVGC) sector within India’s emerging Orange Economy.The development comes alongside renewed policy focus on creative technologies. In the Union Budget presented this month by Finance Minister Nirmala Sitharaman, ₹250 crore has been earmarked for talent development in the AVGC sector. The allocation includes support for IICT to establish AVGC content creator labs across 15,000 secondary schools and 500 colleges nationwide, aimed at building a strong talent pipeline for the country’s growing creative industries.IICT operates as a Government of India Centre of Excellence for AVGC-XR (Extended Reality), structured on the IIT-IIM model, with a budgetary allocation of ₹400 crore for its establishment and operations.The IEPL brought together students and gaming enthusiasts through a hybrid format featuring national online qualifiers and on-campus LAN finals. The tournament included competitive titles such as BGMI and Valorant, along with open-access formats like FIFA, Real Cricket 24, Hitwicket, Cosmic Race, and Beat Saver VR. The event drew over 1,000 students and visitors from more than 20 colleges across India, including Rajiv Gandhi Institute of Technology and VIT, among others.IEPL was supported by multiple industry partners. Hitwicket and Cosmic Race contributed cash prize sponsorships across select titles, while CyberPowerPC (USA) supported participant engagement with gift vouchers, branded merchandise and hardware giveaways. Xwall.io introduced a phygital sports experience combining physical movement and digital gameplay through interactive installations, and Cineon Broadcast India Limited came on board as the technology partner.Reflecting on the policy momentum, Dr. Vishwas Deoskar, CEO, Indian Institute of Creative Technologies, said, “Hon’ble Finance Minister’s announcement highlights the growing importance of the Orange Economy in India’s growth story. Through initiatives like content creator labs, we are enabling deeper collaboration between education and industry while opening new career pathways for young talent. IEPL is a strong example of how such platforms can prepare students for the future of creative and digital careers.” Professional gamer Gaurang Palav, who plays for GodLike, represented India at the 2023 World Championship and finished as the second runner-up, attended the event and said, “Platforms like IEPL are vital for visibility, learning and understanding how the esports and creative tech industries work in India. It gives young gamers exposure and confidence in their potential careers. It is encouraging to see the government pushing a creator-driven economy.” IICT confirmed that IEPL will now be organised annually as part of its broader strategy to integrate esports, creative technologies, and industry-aligned skilling into India’s education framework and economic growth agenda.
.மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குடும்ப… The post .மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது appeared first on Global Tamil News .
எம்.ஜி.ஆர் ஆக முடியாது – விஜய் மீது செல்லூர் ராஜூ தாக்கு
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகி செங்கோட்டையன் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்கப் போகிறார் செங்கோட்டையன்?” என்று கேள்வி எழுப்பிய அவர், “ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர். என சொல்லிக்கொள்ளலாம், ஆனால் மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று கிண்டலடித்தார். தேர்தலுக்கு பிறகு தவெக என்னவாகப் போகிறது என்பது இப்போதே தெரிகிறது என்றும் அவர் […]
நிழல் உலக மிரட்டல்: `190 இணையவழி மோசடி; ரூ.100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள்' - இருவர் கைது!
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை டெல்லி சைபர் பிரிவு காவல்துறை கைது செய்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்தப் புகாரில், ``கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் டிசம்பர் 12 வரை மும்பை காவல்துறை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் என்னைத் தொடர்புகொண்டு, என் ஆதார் எண் பல்வேறு குற்ற நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரித்தனர். மேலும், அப்போதே என்னை டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும், வீட்டை சோதனையிட வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் நான் பயந்துவிட்டேன். டிஜிட்டல் கைது இந்த வழக்கிலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டுமென்றால் தொகை கொடுக்க வேண்டும் என மிரட்டினார்கள். அதனால், சிறுக சிறுக என்னிடமிருந்து பணம் பறித்தார்கள். மொத்தம் ரூ.40 லட்சம் பறித்துக்கொண்டார்கள். இதை வெளியே கூறினால், என் கணவர், பிள்ளைகளையும் இந்த வழக்கில் தொடர்புபடுத்துவேன் என மிரட்டினார்கள் எனக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறை, பணப் பரிமாற்றங்களை ஆய்வு செய்தபோது அவை மேற்கு டெல்லியில் உள்ள 'பிருந்தாகார்ட் ஸ்கைலைன் ஷாப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் கணக்கிற்குச் சென்றதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பட்டியலிடப்பட்டிருந்த அனிஷ் சிங் மற்றும் மணி சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மிரட்டிப் பறிக்கப்படும் பணத்தைத் திசைதிருப்புவதற்காகப் பல்வேறு வங்கிகளில், போலி நிறுவனத்தின் பெயரில் எட்டு போலி கணக்குகளைத் திறந்து மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சைபர் கிரைம் காவல்துறை, ``கைது செய்யப்பட்ட இருவரும் சுமார் 190 இணையவழி மோசடிப் புகார்களுடன் தொடர்புடையவர்கள். இவர்களது வங்கிக் கணக்குகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் டெல்லியைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டப் பெண்ணை சுமார் மூன்று மாதங்கள் ‘டிஜிட்டல் கண்காணிப்பில்’ (வீடியோ அழைப்பிலேயே) வைத்துள்ளனர். அந்தப் பெண்ணைப் பயமுறுத்துவதற்காக, வீடியோ அழைப்பின் மூலம் போலியான எஃப்.ஐ.ஆர் (FIR) மற்றும் கைது வாரண்டுகளை காட்டியுள்ளனர். ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்குப் பிறகும், அதன் ஆதாரங்களை அழித்துவிடுமாறும் அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளனர். எனவே, காவல்துறை அதிகாரிகள் என்று கூறி யாராவது வீடியோ அழைப்பில் மிரட்டினாலோ அல்லது ஆன்லைனில் 'டிஜிட்டல் கைது' செய்வதாகச் சொன்னாலோ பொதுமக்கள் பயப்பட வேண்டாம். காவல்துறை ஒருபோதும் வீடியோ அழைப்பு மூலம் யாரையும் விசாரணை செய்யாது. இது போன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டனர். டிஜிட்டல் கைது: மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான் - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி
தென் கொரிய இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானது.
தென் கொரிய இராணுவத்தின் AH-1S கோப்ரா தாக்குதல் உலங்குவானூர்தி திங்களன்று வடக்கு கவுண்டியான கேபியோங்கில் பயிற்சிப் பறப்பின் போது விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இரண்டு பணியாளர்களும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. உலங்குவானூர்தி காலை 11 மணிக்கு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது, இன்னும் சில காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் 2026 தேர்வு விண்ணப்பம் பிப்ரவரி 8 முதல் மார்ச் 8-ம் தேதி வரை பெறப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு நீட் விண்ணப்பிக்கும் முறை முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அது என்னென்ன, தேர்வர்கள் அறிந்துகொள்ள வேண்டியவை என்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.
️ பிரித்தானிய பிரதமாின் தலைமை அதிகாரி பதவி விலகினாா் –பிரித்தானிய அரசியலில் பரபரப்பு
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரின் (Keir Starmer) தலைமை அதிகாரி (Chief of Staff) மோர்கன் மெக்ஸ்வீனி (Morgan… The post ️ பிரித்தானிய பிரதமாின் தலைமை அதிகாரி பதவி விலகினாா் – பிரித்தானிய அரசியலில் பரபரப்பு appeared first on Global Tamil News .
Seychelles President Arrives in Delhi for Talks
Seychelles President Patrick Herminie arrived in New Delhi yesterday as part of the final leg of his five-day visit to
சல்மான் கான், ரன்பீர் கபூர், அக்ஷய் குமார்... ஆர்.எஸ்.எஸ்.மாநாட்டில் அணிவகுத்த பாலிவுட் பிரபலங்கள்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டு நாள் மாநாடு மும்பையில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டதன் 100வது ஆண்டை குறிக்கும் வகையில் நடந்த இம்மாநாடு ஆர்.எஸ்.எஸ்.மாநாடு போன்று அல்லாமல் சினிமா மாநாடு போன்று இருந்தது. இம்மாநாட்டில் முதல் நாளில் நடிகர் சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோருடன், திரைப்பட இயக்குநர்களான மோஹித் சூரி, சுபாஷ் காய், நிதேஷ் திவாரி, மகாவீர் ஜெயின், ஓம் ராவத், விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர். இரண்டாம் நாளில், அக்ஷய் குமார், விக்கி கௌஷல், திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் நடிகை அனன்யா பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இது தவிர ரவீனா தண்டன், ஷில்பா ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப், ரூபாலி கங்குலி மற்றும் வினீத் குமார் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். திரைப்பட இயக்குநர்களான மதுர் பண்டார்கர், மகேஷ் மஞ்ச்ரேகர், ஆனந்த் எல். ராய், அமர் கௌஷிக், அமித் சர்மா, ரமேஷ் தௌரானி மற்றும் ஆனந்த் பண்டிட் ஆகியோரும் வந்திருந்தனர். மாநாட்டில் சல்மான் கான் பாலிவுட் பிரபலங்கள் கூட்டத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. இஸ்லாமிய நடிகர்கள் ஆர்.எஸ்.எஸ்.மாநாட்டில் பங்கேற்றது குறித்து சிவசேனா(உத்தவ்) கேள்வி எழுப்பி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பால்தான் பா.ஜ.க நன்றாக இருக்கிறது இம்மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது உரையில், ''பாஜகவின் ‘நல்ல நாட்கள்’ ஆர்.எஸ்.எஸ்ஸால்தான் வந்தன. மாறாக ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நல்ல நாட்கள் பாஜகவால் வரவில்லை. ராமஜென்மபூமி இயக்கத்திற்கு ஆர்.எஸ்.எஸ் உறுதுணையாக இருந்தது, அதற்கு ஆதரவளித்தவர்கள் பயனடைந்தனர். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ‘நல்ல நாட்கள்’ அதன் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் கொள்கை மீதான அர்ப்பணிப்பின் மூலம் வந்தன. யுன்ஃபார்ம் சிவில் சட்டம் (யுசிசி) நாட்டை ஒன்றிணைக்க உதவும். அது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கையையும் பெற்ற பிறகு கொண்டு வரப்படவேண்டும். உத்தரகாண்ட் இது தொடர்பாக ஒரு வரைவு மசோதாவை வெளியிட்டது. அதற்கு 3 லட்சம் ஆலோசனைகளைப் பெற்றது, விரிவான விவாதங்களுக்குப் பிறகு அதை நிறைவேற்றியது. அது போன்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால், அது நல்லது. யுசிசி-யைக் கொண்டுவருவதற்கு முன்பு மக்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குங்கள். யுசிசி வேறுபாடுகளுக்கு வழிவகுக்கக் கூடாது. இந்தியா பன்முகத்தன்மைக்கு மத்தியில் ஒற்றுமையைப் பேணுகிறது. எனவே இதுபோன்ற சட்டங்களை உருவாக்கும்போது இந்தக் கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நாட்டின் ஆரோக்கியமான மக்கள்தொகை விகிதத்திற்கு மூன்று குழந்தைகள் கொள்கை அவசியம். மக்கள்தொகை சரிவைத் தடுக்க வேண்டுமானால், 'ஒரு தம்பதிக்கு மூன்று குழந்தைகள்' என்பதே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்க வேண்டும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.பீகார் மாநிலத்தில் இது சமநிலையில் உள்ளது. மதமாற்றம் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்து மக்கள் தொகை குறைந்து வருகிறது. ஒருவர் தானாக விரும்பி மதம் மாறினால், அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் கட்டாயமாகவோ அல்லது ஆசை காட்டியோ செய்யப்படும் மதமாற்றங்கள் கண்டிக்கத்தக்கவை. சட்டவிரோத குடியேறுபவர்களை, அரசாங்கம் 'கண்டறிந்து நாடு கடத்தும்' கொள்கையைச் செயல்படுத்தி வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் இருந்து இது போன்ற சம்பவங்களை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும்'' என்றும் கூறினார்.
மக்களவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லை.. எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம்
நாடாளுமன்ற மக்களவை இன்று காலை துவங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்குமாறு காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனையடுத்து மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
Assam: முஸ்லிம் பிரமுகரை முதல்வர் சுட்டுக்கொல்வது போன்ற வீடியோ; கடும் கண்டனத்தால் நீக்கிய பாஜக
அஸ்ஸாம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு மத்தியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலையொட்டி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகாயைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்று கூறி வருகிறார். புதிதாக ஹிமந்த பிஸ்வாவின் வீடியோ ஒன்றை பா.ஜ.க சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஹிமந்த பிஸ்வா மாநில எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ் கோகாய் மற்றும் ஒரு முஸ்லிம் பிரமுகரின் போட்டோவில் தொப்பியைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுடுவது போன்று அந்த வீடியோ இடம் பெற்று இருந்தது. அதோடு அதில் மன்னிப்பே கிடையாது என்றும், மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவிற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ''இது இனப்படுகொலைக்கான அழைப்பைத் தவிர வேறொன்றுமில்லை. ஹிமந்த பிஸ்வா இந்தப் பாசிச ஆட்சி பல தசாப்தங்களாக மனதில் வளர்த்து வரும் ஒரு கனவு இது. இது ட்ரோல் என்று புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு வீடியோ கிடையாது. இது மிகவும் மேல் மட்டத்திலிருந்து பரப்பப்படும் விஷம். இதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். இதன் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள பதிவில், ''அசாம் மாநில பா.ஜ.க சிறுபான்மையினரை இலக்கு வைத்து, மிக அருகில் இருந்து சுட்டுக்கொலை செய்வது போன்ற ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளது. இது மிகவும் அருவருப்பானதும், அதிர்ச்சியூட்டுவதும் ஆகும். இதை ஏதோ ஒரு சாதாரண சமூக ஊடகக் கிண்டல் பதிவு என்று புறக்கணித்துவிட முடியாது. இது ஒரு பெரும் கலவரத்திற்கும் இனப்படுகொலைக்கும் அழைப்பு விடுப்பதற்குச் சமமாகும். பல தசாப்தங்களாக இந்த வெறுப்பை வளர்த்து, கடந்த 11 ஆண்டுகளில் அதை நடைமுறைப்படுத்த முயன்ற இந்தப் பாசிச ஆட்சியின் உண்மையான முகத்தையே இது பிரதிபலிக்கிறது. சமூகத்தில் நல்லிணக்கத்தைக் குலைத்து விஷத்தைப் பரப்பும் இந்தச் செயலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அந்த வீடியோவிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து பா.ஜ.க அந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. ``நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது.. - RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
Rijiju Blames Congress for Lok Sabha Disruptions
Union Parliamentary Affairs Minister Kiren Rijiju has accused the Congress party of disrupting the smooth functioning of the Lok Sabha.
Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - காரணம் என்ன?
2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி. 'குற்றம் செய்ய ஒன்று கூடுதல் மற்றும் கூட்டுச் சதி செய்தல்' என்கிற அடிப்படையில், நேற்று ஈரானிய நீதிமன்றம் முகமதிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும், அவரது பரப்புரை செயல்பாடுகளுக்காக கூடுதலாக 1.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, இவர் 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். கூடுதலாக, இரண்டு ஆண்டுகள் கோஸ்ஃப் என்கிற ஈரானிய நகரத்திற்கு உள்நாட்டுக் கடத்தல் செய்யப்படுவார்... இரண்டு ஆண்டுகள் இவர் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நர்கீஸ் முகமதி | Narges Mohammadi பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன? ஈரானிய பெண்களின் உரிமைக்காகப் போராடியதற்காக, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம், முகமதி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து கொண்டும் தொடர்ந்து அரசிற்கு எதிராகப் போராடியதற்காக, 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கூடுதல் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், முகமதியின் உடல்நிலை காரணமாகவும், சிகிச்சை காரணமாகவும் அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம், மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இப்போது முகமதிக்கு கூடுதலாக 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Career: 'Law வேண்டாம்; 'டிகிரி' போதும்' - ஒரு லட்சம் வரை சம்பளம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலை
பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது… விசிக எம்எல்ஏ செல்வபெருந்தகைக்கு பதிலடி
திருமாளவன் - ராமதாஸ் தொடர்பான விவகாரத்தில் செல்வபெருந்தகை தெரிவித்த கருத்திற்கு விசிக எம்எல்ஏ பதிலடி அளித்துள்ளார்.
நம்பிக்கை விருதுகள் 2025 : நேரில் கண்டு நெகிழ வேண்டுமா? பதிவு செய்யுங்க, அனுமதி இலவசம்!
நம்பிக்கைதான் ஆகப்பெரிய வாழ்வாதாரம். அதைப் பற்றிக்கொண்டே மனித இனம் எல்லாப் பேரிடர்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. சக மனிதர்களுக்கு அன்பையும் கருணையும் பகிர்ந்தளித்து, நம்பிக்கையூட்டுகிற அக்கறை மனிதர்களை கொண்டாடுவது ஊடகத்துக்கான அறங்களில் ஒன்று. ஆனந்த விகடன் ஒவ்வோராண்டும் அப்படியான மனிதர்களை அடையாளம் கண்டு நம்பிக்கை மனிதர்களாக சமூகத்தின் முன் நிறுத்துகிறது. பழங்குடிகளின் நல்வாழ்வுக்காக போராடுபவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்குரலாக ஒலிப்பவர்கள், அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக களமாடுபவர்கள், திரைக்கலையை களங்கமில்லாமல் மக்களின் இதயத்துக்கு நெருக்கமாக எடுத்துச் சென்றவர்கள், வாய்ப்பற்ற குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள், தடைகளை உடைத்து விளையாட்டுகளில் உச்சம் தொட்டவர்கள், வணிகம் கலங்காமல் சேவையாக மருத்துவத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் என 2025-ம் ஆண்டிலும் மனிதம் காத்தவர்கள் ஏராளம்! பெருந்தமிழர் விருது - எஸ்.வி.ராஜதுரை அடுத்தடுத்த தலைமுறைகள் ஒளிர ‘ ஆனந்தம் ’ அமைப்பு தந்த வெளிச்சம், மருத்துவத்தை சேவையென்றே கொள்கை வகுத்து இயங்கும் டாக்டர் முரளி , உறவில்லாதோர் உடல்களைப் பெற்று அவரவர் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்யும் மாமனிதர் அமீர் ஹம்சா , உயிர் கொடுத்து மலை காத்த ஜகபர் அலி , கணவனைக் கொன்ற காவல் கறுப்பாடுகளை ‘கைதியாக வெள்ளுடை தரிக்க வைப்பேன்' என்று சபதம் செய்து நிகழ்த்திக் காட்டிய வைராக்கிய மனுஷி கிருஷ்ணம்மாள் , பாதிக்கப்படும் குழந்தைகளை அரவணைத்து ஆற்றுப்படுத்தி அரணாக இருந்து சட்ட உதவிகள் வழங்கும் ‘துளிர்’ அமைப்பு , பிற்போக்குச் சங்கிலிகளை அறுத்தெறிந்த வீர மங்கைகளில் ஒருவர் ‘கபடி’ கவிதா , திரையுலகில் மதிப்பும் மரியாதையுமாகக் கொண்டாடப்படுகிற அபூர்வமான குணச்சித்திர நடிகர், யதார்த்த திரைக்கலைஞன் காளி வெங்கட் , அழியும் நிலையிலிருக்கிற ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் காப்பதற்காக தாய்மையோடு தன்னை அர்ப்பணித்த சுப்ரஜா , தோட்டம் தோட்டமாகச் சென்று இளைஞர்களைத் திரட்டித் தேர்வுக்குத் தயார் அக்கறையான மீட்பன், கணேசன் என இவர்கள் அனைவரையும் எப்போதும்போல புகழ் வெளிச்சத்தில் நிறுத்துவதன் மூலம் பெருமை கொள்கிறது ஆனந்த விகடன். இவர்களை தவிர்த்து நம்பிக்கை இளைஞர் பட்டாளமும் மேடையேற இருக்கிறது. கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் போராடிவரும் மனித உரிமைப் போராளி எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு பெருந்தமிழர் விருதும் வழங்கப்பட இருக்கிறது. 2025 - டாப் 10 மனிதர்கள்..! பிரமாண்டமான மேடையில் டாப்-10 மனிதர்கள் , டாப்-10 இளைஞர்கள் , பெருந்தமிழர் என இந்த ஆண்டும் சாதனையாளர்களின் கதைகள் அனைத்தும் நம் நெஞ்சுக்கு உரமாகக் காத்திருக்கின்றன. நேரில் கண்டு நெகிழ்ச்சியடைய நீங்கள் தயாரா? சென்னை கலைவாணர் அரங்கில் பிரமாண்டமான மேடையில் டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்கள், பெருந்தமிழர் எனச் சாதனையாளர்களுக்கு மகுடம் சூட்டும் விழா பிப்ரவரி 14-ம் தேதி நடக்கவிருக்கிறது. பதிவு செய்யுங்கள்... அனுமதி இலவசம்! Vikatan App-ல் பதிவு செய்ய: https://forms.gle/ebcJtSWAK84Vz9o2A?appredirect=website Loading…
Sun TV Network Q3 FY26 Profit Falls 11% as Costs Outpace Revenue
Chennai: Sun TV Network reported a modest increase in revenue for the third quarter of FY26, but profitability came under pressure as operating expenses and depreciation outpaced income growth.For the quarter ended December 31, 2025, the broadcaster’s total income rose 3.1% year-on-year to ₹999 crore, compared with ₹969 crore in the same period last fiscal. However, rising costs dented margins, leading to an 11% decline in net profit to ₹324 crore from ₹364 crore a year ago.Advertising revenue, a key growth driver for the network, fell sharply during the quarter. Ad income stood at ₹291.94 crore, down from ₹332.17 crore in the corresponding quarter of FY25, reflecting continued pressure in the television advertising market.Operating performance mirrored the margin strain. EBITDA for the December quarter declined 5.2% year-on-year to ₹409.79 crore, compared with ₹432.14 crore last year, indicating weaker operating leverage despite higher topline numbers.The cost side showed a steeper rise than revenue. Total expenses during the quarter increased 11.4% to ₹558 crore, up from ₹501 crore in Q3 FY25. On a year-to-date basis, expenses grew even faster, rising 25.4% to ₹2,264 crore in the first nine months of FY26, compared with ₹1,806 crore in the same period last year.While depreciation and amortisation remained flat at ₹113 crore for the December quarter, the cumulative impact over nine months was significant. For the nine-month period ended December 31, 2025, depreciation and amortisation expenses surged 47.8% to ₹625 crore from ₹423 crore in the previous fiscal, adding further pressure on reported profitability.For the nine-month period, Sun TV Network’s revenue rose a healthy 10.8% to ₹3,918 crore, compared with ₹3,536 crore in the corresponding period of FY25. Despite this growth, profit for the period declined 9.3% to ₹1,208 crore from ₹1,332 crore last year, underscoring the impact of a higher cost base.
தமிழக பாஜகவில் அதிரடி நகர்வு.. பி.எல். சந்தோஷ் அவசர ஆலோசனை -அண்ணாமலை மீண்டும் களமிறங்குவாரா?
பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி எல் சந்தோஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன . சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாக சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
Mumbai: Ratpack Stories, a part of Collective Studios, has entered into a production partnership with Mad Man Films to jointly develop and produce two feature films. The projects will be directed by Nikhil Bhat, whose cult action film Kill received global acclaim, and Saket Chaudhry, known for the commercially successful Hindi Medium.The collaboration brings together Mad Man Films, founded by producer Madhu Mantena, and Ratpack Stories, led by Kshitij Mehta, with the partnership backed by the wider Collective Artists Network ecosystem. Both films are currently in development and are expected to span different genres, with an emphasis on director-led storytelling and strong theatrical appeal.[caption id=attachment_2455427 align=alignleft width=357] Vijay Subramaniam [/caption] Vijay Subramaniam, Founder & Group CEO of Collective Artists Network, added, “This collaboration reflects Collective’s focus on enabling long-term creative partnerships. Bringing together Mad Man Films and Ratpack Stories allows us to support ambitious producers and filmmakers while building scalable, creator-first content ecosystems.” [caption id=attachment_2160142 align=alignright width=186] Madhu Mantena[/caption] Madhu Mantena, Founder of Mad Man Films, said, “Collective, under our founder Vijay’s leadership, is pushing boundaries in ways no Indian media company has before. The true scale of what he’s building will become clear in the coming years, and I’m excited to be part of that journey. After exiting Phantom last year, building a film production company from scratch again has been very intense and at times, lonely. Therefore I am very excited and happy that over the past few months, Kshitij and I have been collaborating on several films, he’s an outstanding producing partner. I'm confident this partnership will lead to some exceptional work.” [caption id=attachment_2490994 align=alignleft width=200] Kshitij Mehta [/caption]Commenting on the partnership, Kshitij Mehta, Partner at Collective Artists Network, said, “We have been collaborating creatively with Mad Man Films over the past few months, and formalising this partnership felt like a natural next step. With filmmakers like Nikhil and Saket, our shared intent is to back bold, distinctive stories that connect strongly with audiences.” Further details regarding the films, including casting and production timelines, are expected to be announced at a later stage.
Mumbai: Ratpack Stories, a part of Collective Studios, has entered into a production partnership with Mad Man Films to jointly develop and produce two feature films. The projects will be directed by Nikhil Bhat, whose cult action film Kill received global acclaim, and Saket Chaudhry, known for the commercially successful Hindi Medium.The collaboration brings together Mad Man Films, founded by producer Madhu Mantena, and Ratpack Stories, led by Kshitij Mehta, with the partnership backed by the wider Collective Artists Network ecosystem. Both films are currently in development and are expected to span different genres, with an emphasis on director-led storytelling and strong theatrical appeal.[caption id=attachment_2455427 align=alignleft width=357] Vijay Subramaniam [/caption] Vijay Subramaniam, Founder & Group CEO of Collective Artists Network, added, “This collaboration reflects Collective’s focus on enabling long-term creative partnerships. Bringing together Mad Man Films and Ratpack Stories allows us to support ambitious producers and filmmakers while building scalable, creator-first content ecosystems.” [caption id=attachment_2160142 align=alignright width=186] Madhu Mantena[/caption] Madhu Mantena, Founder of Mad Man Films, said, “Collective, under our founder Vijay’s leadership, is pushing boundaries in ways no Indian media company has before. The true scale of what he’s building will become clear in the coming years, and I’m excited to be part of that journey. After exiting Phantom last year, building a film production company from scratch again has been very intense and at times, lonely. Therefore I am very excited and happy that over the past few months, Kshitij and I have been collaborating on several films, he’s an outstanding producing partner. I'm confident this partnership will lead to some exceptional work.” [caption id=attachment_2490994 align=alignleft width=200] Kshitij Mehta [/caption]Commenting on the partnership, Kshitij Mehta, Partner at Collective Artists Network, said, “We have been collaborating creatively with Mad Man Films over the past few months, and formalising this partnership felt like a natural next step. With filmmakers like Nikhil and Saket, our shared intent is to back bold, distinctive stories that connect strongly with audiences.” Further details regarding the films, including casting and production timelines, are expected to be announced at a later stage.
ஒபாமா, அவரது மனைவி தொடர்பில் வெளியான காணொளி ; மன்னிப்பு கேட்க மாட்டேன்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 2020-ம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது என்று தெரிவித்தார். மேலும் அந்த வீடியோவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோரின் முகத்தை குரங்குகளின் உடலில் பொருத்தி பாடுவது போன்ற காட்சி இருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று […]
வி.ஜே. பப்பு மற்றும் அனுபமா நடித்துள்ள 'மை டியர் டாலி' திரைப்படம் பிப்ரவரி 20-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ. அரவிந்த் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தகவலை படக்குழு உறுதி செய்துள்ளது.
முதல்வர் குறித்து நையாண்டி வேண்டாம் – விஜய்க்கு வேல்முருகன் எச்சரிக்கை!
சென்னை : தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தவெக தலைவர் விஜய்யின் பேச்சு முறையை கடுமையாக விமர்சித்துள்ளார். “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்று, ரத்தம் சிந்தி, காவல்துறையினரிடம் அடி உதை வாங்கிய பிறகு மேயராகவும், அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்து, தற்போது முதலமைச்சராக உயர்ந்தவர். அத்தகைய தலைவரை விஜய் நையாண்டியாகவும் நக்கலாகவும் பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறியுள்ளார். விஜய் இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் […]
பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமறியலில்!
திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள், அனுமதியின்றி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது… The post பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமறியலில்! appeared first on Global Tamil News .
Mumbai: Zydus Wellness’ nutritional drink brand Complan has appointed young cricket sensation and youngest centurion Vaibhav Sooryavanshi as its new brand ambassador. The association is accompanied by the launch of Complan’s latest national campaign, ‘Thoda Plan, Thoda Complan’, aimed at reinforcing the brand’s focus on long-term child nutrition and holistic development.The campaign highlights Complan’s belief that big dreams are achieved through everyday discipline, the steady encouragement of mothers, and the right nutritional support. Vaibhav Sooryavanshi’s journey, marked by early dedication, structured training and consistent focus, reflects this philosophy of preparation backed by complete nutrition.Complan is clinically proven to support up to 2x faster growth and is formulated with milk proteins and 34 vital nutrients that help support memory, concentration and immunity, addressing the growing need for balanced physical and cognitive development in children. Tarun Arora, CEO, Zydus Wellness, said, “At Complan, our purpose has always been rooted in enabling potential. As expectations from children’s nutrition evolve, we are focused on supporting families through credible, science-backed solutions, and values that emphasize preparation and discipline. Vaibhav’s journey reflects this very philosophy. His disciplined approach to growth resonates strongly with Complan’s focus on building sustainable, well-rounded development in children.” Over the years, Complan has evolved alongside changing parental expectations and advances in nutritional science. From being known primarily as a growth-supporting drink, the brand has expanded its role to support holistic development, including physical growth, cognitive health and long-term preparedness. Vaibhav Sooryavanshi, said, “I have been drinking Complan for as long as I can remember, so it’s not just a brand to me, it’s been my partner from the local nets to the national stage. Breaking records takes more than just luck. It takes a daily plan, my mom’s support, and the right nutrition to keep me sharp. It’s that 'Thoda Plan, Thoda Complan' vibe doing the work every day so I can chase these big dreams. When you have a plan and the right fuel, you feel like you can take on anyone. The campaign is brought to life through an integrated rollout led by a television commercial inspired by Vaibhav Sooryavanshi’s real-life journey. The film captures his early years of practice, focus and discipline, often competing with older players and pushing himself to improve, while highlighting the constant support of his mother and Complan. Additional consumer engagement will include influencer collaborations and digital films.https://youtu.be/Kj8wtokr2ss?si=3MXoX3Sl28sYeAZR
Udhayanidhi Slams Centre, Calls Government Fascist
Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin on Friday strongly criticised the Central government, calling the Narendra Modi-led administration “fascist”.
நடந்து சென்ற 13 வயது சிறுவனின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் சாரதி
உடவளவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, உடவளவை – தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில், நேற்று (08) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேரியல் சந்தியிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மேலதிக விசாரணை விபத்தில் காயமடைந்த சிறுவன், உடவளவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் உடவலவ பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துடன் […]
Siva K elevated to Chief Operating Officer at KAL Radio Limited
Mumbai: KAL Radio Limited, home to leading radio brands Red FM and Suryan FM, has elevated Siva K to the role of Chief Operating Officer (COO).Prior to this, Siva served as Vice President at Suryan FM and currently also holds the position of Project Head and Vice President – Sponsorship and Marketing for Sunrisers Eastern Cape.Announcing the new role on his LinkedIn handle, Siva shared, I’m honoured to share that I have been elevated to Chief Operating Officer (COO) – KAL Radio Limited, home to the iconic brands RedFM and SuryanFM. This new responsibility is both humbling and exciting. I’m deeply grateful to the SunTV Network Limited management and Board for the trust and confidence they have placed in me. It’s a privilege to continue building on the strong legacy of these remarkable brands. Red FM and Suryan FM have always stood for bold content, cultural relevance, and authentic storytelling. I look forward to working closely with our teams to strengthen operations, drive innovation, expand our reach, and unlock the next phase of growth. My sincere thanks to the mentors, colleagues, partners, and well-wishers who have supported me through this journey. Onward and upward. Siva brings more than 25 years of experience across media, marketing and business strategy. Over the years, he has developed deep expertise in product marketing, business strategy, strategic partnerships, marketing strategy, advertising management, branding, P&L management and customer insight.Before his leadership role at Suryan FM, Siva held positions at several leading organisations including Sun TV Network Limited, Ogilvy, Times Network and Zee Entertainment Enterprises Limited. He began his career in 2000 as Senior Executive – Ad Sales at Sun TV Network Limited.
யாழில் குழு மோதல்: இருவர் காயம் –ஒருவர் கைது!
யாழ்ப்பாணம், இளவாலை காவல் நிலையத்திற்கு அருகாமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். பெரியவிளான்… The post யாழில் குழு மோதல்: இருவர் காயம் – ஒருவர் கைது! appeared first on Global Tamil News .
கச்சத்தீவு திருவிழா 27ஆமாம் திகதி –முன்னாயத்த நடவடிக்கைகளில் கடற்படையினர் தீவிரம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கடற்படையினர் முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இம்முறை குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1200.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் குறிகட்டுவானிலிருந்து […]
தபால் பெட்டிக்கருகில் மீட்கப்பட்ட சடலத்தால் பரப்ரப்பு
களுத்துறை, வஸ்கடுவ பகுதியிலுள்ள தபால் பெட்டிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் யார் என இன்னும் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Revanth Reddy Alleges BRS Phone-Tapping Blackmail
Telangana Chief Minister A. Revanth Reddy on Sunday accused the previous Bharat Rashtra Samithi (BRS) government of misusing power and
யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் வெடிபொருட்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில்… The post யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் வெடிபொருட்கள் மீட்பு! appeared first on Global Tamil News .
29 தொகுதிகள்; 60 நாள்கள்! - கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தவெக | கோவை பொதுக்கூட்டம் ஹைலைட்ஸ்
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். குறிப்பிட்ட நேரத்தை விட மிகவும் தாமதமாகத்தான் பொதுக்கூட்டம் தொடங்கியது. கோவை தவெக பொதுக்கூட்டம் கோவை தவெக பொதுக்கூட்டம் இந்த நிகழ்வுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் செங்கோட்டையன் புகைப்படம் இடம்பெறவில்லை. கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்த மற்றொரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, செங்கோட்டையன் முதல் ஆளாக பேசி புறப்பட்டார். உண்மையான அரசியல் எழுச்சி செங்கோட்டையன் பேசும்போது, “இந்த கூட்டம் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கூட்டம் கூட்டும் அரசியலுக்கு மாறாக, ஒரு ரூபாய் செலவில்லாமல் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டது உண்மையான அரசியல் எழுச்சியைக் காட்டுகிறது. செங்கோட்டையன் கொங்கு மண்டலத்தில் 29 தொகுதிகள் உள்ளன. இந்த 29 தொகுதிகளிலும் வெற்றி கனியை பறித்து தளபதி காலடியில் சமர்ப்பிப்பதுதான் நம் லட்சியம்” என்றார். இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, “இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம். நமக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. அதிமுக பற்றி கவலைப்பட வேண்டாம். தவெக 27 சதவீத வாக்கு விகிதத்தை கடந்து, தற்போது 30 சதவீத வாக்கு வங்கியில் நிற்கிறது. ஆதவ் அர்ஜுனா 2021 தேர்தலிலேயே கொங்கு மக்கள் திமுகவைப்பற்றி புரிந்து வைத்து அவர்களுக்கு ஓட்டு போடவில்லை. கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து வந்து பணியாற்றுவது எல்லாம் எடுபடாது” என்றார். புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், “கோவையில் சிறுவாணி தண்ணீருக்கு தனி சுவை இருப்பதைப் போல, இந்த மக்கள் அரசியலையும் தனித்துவமாக அணுகுகிறார்கள். கோவை மண்டலம் தமிழக அரசியலில் கோட்டையின் சாவி போன்றது. pussi ananth அந்தச் சாவியைச் சரியான தலைமையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. கொங்கு மண்டலம் தளபதியின் கோட்டையாக மாறும். நம் தலைவரை முதல்வராக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்
Vijay Eyes Chennai Seats for Assembly Polls
Chennai: Most of the senior leaders of Tamilaga Vettri Kazhagam (TVK), including party president Vijay, are planning to contest the
'திமுக கூட்டணியில் ராமதாஸ்?' - செல்வபெருந்தகை கருத்துக்கு விசிக கண்டனம்!
தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை அளித்த பதில் வி.சி.க முகாமை கொதிப்படையச் செய்திருக்கிறது. தந்தை மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்திருக்கும் நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கிறார் அன்புமணி. பெரியவர் ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு செல்லலாம் எனப் பேசப்பட்ட சூழலில் 'பா.ம.க, பா.ஜ.க இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க இருக்காது' என உடைத்துப் பேசியிருந்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். திருமாவளவன் இச்சூழலில், 'தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இணைவாரா?' என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை, ``தி.மு.க கூட்டணிக்குள் வருவதை தி.மு.க தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அதேநேரம் ராமதாஸும், வி.சி.க தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவருக்கும் இடையே இடைவெளி இல்லை. இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார். விசிக கொடியை ராமதாஸ் ஏற்றியிருக்கிறார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியிருக்கிறார். இவ்வாறு இணக்கமாக இருந்தவர்கள் தான் இருவரும். எனவே தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்துகொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்' என பதிலளித்தார். செல்வபெருந்தகையின் கருத்துக்கு ரியாக்ட் செய்த வி.சி.க திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி, கூட்டணியில் யார் யார் என்பதை தி.மு.க முடிவெடுக்கும் என்பதைதான் நாங்களும் சொல்லி விட்டோமே. ராமதாஸ் சாதியவாத மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை என கண்டித்தார். இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க நிர்வாகிகள், ராமதாஸ் இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை 14 ஆண்டுகளாக சொல்லிவருகிறது வி.சி.க. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ராமதாஸ் கூட்டணிக்கு வரலாம் என பேச்சுகள் எழுந்தவுடனேயே வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதன்பிறகு, எங்கள் தலைவருமே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டார். வி.சி.க ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்ட பிறகு 'அவர்களுக்குள் எந்த பிரச்னையுமில்லை.. சந்தித்து பேசினால் சரியாகிவிடும்.. முதல்வர் முடிவெடுப்பார்' எனப் பேசியது சரியல்ல என்றனர். கைவிட்ட எடப்பாடி... கதவடைத்த ஸ்டாலின்... தயங்கும் விஜய்! - எங்கே செல்லும் ராமதாஸின் பாதை?
AAI Identifies Site for Rameswaram Greenfield Airport
The Airports Authority of India (AAI) has identified a suitable location near Keelakarai for the proposed greenfield airport at Rameswaram
யாழ். வன்முறைக் குழுவின் சர்வதேச வலைப்பின்னல் அம்பலம்: 9 ஆண்டுகளின் பின் இருவர் நாடு கடத்தப்பட்டனர்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள், சர்வதேச நாடுகளை ஊடறுத்துத் தப்பிச் சென்ற… The post யாழ். வன்முறைக் குழுவின் சர்வதேச வலைப்பின்னல் அம்பலம்: 9 ஆண்டுகளின் பின் இருவர் நாடு கடத்தப்பட்டனர்! appeared first on Global Tamil News .
கடனாளியாக்கிய சூதாட்டம்: ஒவ்வொரு முறையும் உடையை மாற்றி தப்பிய திருடன்; காட்டிக்கொடுத்த ஷூ!
மும்பையில் தினமும் ஏராளமான திருட்டு, செயின் பறிப்பு என பலதரப்பட்ட குற்றங்கள் நடக்கிறது. இதில் அதிகமான குற்றங்களில் துப்புத்துலங்காமலே போய்விடுகிறது. மும்பை சயான் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பைக்கில் வந்த நபர் செயினை பறித்து சென்றுவிட்டார். இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்ய விரும்பவில்லை. ஆனால் போலீஸார் அப்பெண்ணிடம் பேசியபோது திருடன் பறித்து சென்றது கவரிங் செயின் என்று தெரிய வந்தது. அப்படி இருந்தும் அப்பெண்ணிடம் சொல்லி புகாரை பதிவு செய்ய வைத்தனர். அப்புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். அவர் எங்கேயாவது தலையில் இருந்து ஹெல்மெட்டை எடுக்கிறாரா என்பது குறித்து போலீஸார் 80க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் எங்கேயும் அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. அதோடு வழிப்பறி செய்துவிட்டு சிறிது தூரம் சென்றவுடன் சட்டையையும் மாற்றிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அவன் இது போன்று பல இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதோடு ஒவ்வொரு முறையும் நவிமும்பை பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடி அதனை பயன்படுத்தி திருடிவிட்டு அந்த இரு சக்கர வாகனத்தை தானே பகுதியில் கொண்டு போய்விட்டுவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். போலீஸார் அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்ததில் அத்திருடன் ஒவ்வொரு முறையும் சட்டையை மாற்றினாலும், காலில் அணியும் ஷூவை மட்டும் மாற்றாமல் தொடர்ந்து அதையே அணிந்து வந்தான். இதையடுத்து அவன் திருடிவிட்டு இரு சக்கர வாகனத்தை போடும் இடத்தில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். போலீஸார் எதிர்பார்த்ததுபோன்று அத்திருடன் திருட்டு வாகனத்தை எடுக்க வந்தான். அவனை அவன் அணிந்திருந்த ஷூ மூலம் கண்டுபிடித்து அவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஏற்கனவே அவன் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் 20 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளான். சூதாட்டத்தில் பணத்தை இழந்த திருடன் இது குறித்து போலீஸார் கூறுகையில், கைது செய்யப்பட்ட திருடன் பெயர் மோகன். அவன் தனது தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து வந்தான். அவனது குடும்பம் படித்த பணக்கார குடும்பம் ஆகும். அவனது தந்தை அமெரிக்காவில் இருக்கிறார். மோகனின் மகன் ஆடிட்டராக இருக்கிறார். மற்றொரு மகன் எஞ்சினியராக இருக்கிறார். ஆனால் மோகன் சூதாட்ட பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தான். இதனால் அதிக அளவில் கடன் ஏற்பட்டது. எனவே கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட ஆரம்பித்தான். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு கிரிமினல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு சில காலம் எந்த வித குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்தான். ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் கடன் அதிகரித்தது. எனவே வாங்கிய கடனை அடைக்க பணம் தேவைப்பட்டதால் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இத்திருட்டில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறிலங்கா தொழிலாளர்கள் பக்கம் திரும்பும் ரஷ்யா
உக்ரைன் போர் மற்றும் நீண்டகால சனத்தொகை மாற்றங்களால், அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவைநோக்கிரஷ்யா திரும்பியுள்ளது. பல பத்தாண்டுகளில் இல்லாதளவுக்கு மொஸ்கோ மிகக் கடுமையான தொழிலாளர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தநிலையில், ரஷ்ய ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் சிறிலங்கா, இந்தியா மற்றும் பங்களாதேசில் தொழிலாளர்களை தீவிரமாகத் தேடி வருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. இந்த பத்தாண்டுகளின் இறுதிக்குள் ரஷ்யாவில்,
மணிப்பூரில் மீண்டும் வெடித்த மோதல்..163 தடை உத்தரவு பிறப்பிப்பு - உச்சகட்ட பதற்றம்!
மணிப்பூரில் மீண்டும் மோதல் வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா தவாக.. வேல்முருகன் எடுத்த உறுதியான முடிவு
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், திமுக இன்னமும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து துவங்காமல் இருக்கிறது. இதனால் கூட்டணியில் குழப்பங்கள் நீடிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணி பற்றி தவாக வேல்முருகன் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
Stalin Urges PM to Speed Railway Projects
Tamil Nadu Chief Minister M.K. Stalin on Sunday (February 8, 2026) wrote a letter to Prime Minister Narendra Modi about
New Delhi: Indian brands are facing a growing and largely invisible challenge—CX Debt, the cumulative impact of small but repeated customer experience failures that steadily erode trust and loyalty. According to the 7th edition of the X Index India 2025 by Havas CX, consumers are no longer persuaded by what brands say; they are judging brands by what they consistently deliver.The study evaluates 47 Indian brands across eight categories as part of a global survey of 59,000 consumers, and for the first time measures the gap between brand promise and lived experience. The findings point to a widening experience gap in India, where trust in advertising outpaces satisfaction with real-world delivery. From Personalisation to Proof The 2025 report marks a decisive shift in consumer expectations. While earlier CX strategies focused heavily on personalisation and recognition, Indian consumers today are prioritising reliability, speed, clarity and consistency. David Shulman, Global CEO, Havas CX Network, said the trend is visible across markets. “From a global perspective, the 2025 X Index confirms a universal truth: customer experience is no longer shaped by what brands say, but by what they consistently do. Across markets, we see trust being earned, or lost, through everyday interactions. Brands that align their promise with genuine customer needs reduce experience debt and build durable, long-term value.” This evolution reflects what the report describes as a maturation in judgement. Consumers are no longer impressed by intent or creative storytelling alone; they expect proof through dependable operations. The Rise of CX Debt in India Havas CX introduces CX Debt (Experience Debt) as the accumulated cost of micro-failures such as delayed deliveries, broken digital flows, unclear communication or inconsistent service. While brands may overlook these moments individually, consumers register them collectively—and quietly withdraw loyalty.India experiences this gap more sharply due to rapid digital exposure and cross-category comparison. Consumers no longer benchmark brands within their category; instead, the best experience anywhere becomes the expectation everywhere. Rana Barua, Group CEO, Havas India, South-East Asia & North Asia (Japan & South Korea), noted, “India is moving at extraordinary speed, and consumer expectations are evolving just as fast. Indian consumers are increasingly demanding consistency and looking out for brands that simplify their experience. The X Index 2025 clearly shows that experience is now a strategic differentiator, one that directly impacts relevance, preference, and growth in this market.” Where the Experience Gap Is Widest The report’s promise-versus-delivery analysis reveals that the CX gap exists across all categories, but is most pronounced in Fashion & Luxury, Banking, Insurance and Financial Services. These sectors combine high emotional or financial stakes with frequent or stressful interactions, making even small inconsistencies highly visible.In contrast, Automotive, Hospitality and Technology emerge as the strongest-performing categories, largely due to tighter control over end-to-end execution and fewer deviations between expectation and delivery. India’s CX Leaders The X Index 2025 rankings place Tata Motors at the top for customer experience performance, followed by Tata CLiQ Luxury, OnePlus, Taj Hotels and Mahindra. Digital-first brands such as Zerodha and Apple also feature among the top performers, underscoring the value of coherent, frictionless journeys.Notably, Banking features only once in the Top 10, highlighting how difficult it remains for the category to manage CX Debt consistently at scale. Functional First, Emotion as a Multiplier The report also reweights the four pillars of customer experience in India, with functional reliability now carrying the highest importance. Emotion continues to matter deeply, but only when systems work as expected. When functional promises fail, emotional storytelling loses credibility; when they hold, emotion amplifies trust. Closing the CX Gap To help brands reduce CX Debt, Havas CX outlines a “proof stack” built on seamless experiences across touchpoints, emotion delivered through operations rather than campaigns, and performance that holds up under real-world conditions. Manas Lahiri, Chief Growth Officer, Havas India, said, “ For brands looking to scale in India, growth today is inseparable from experience. What this report highlights is that sustainable growth comes from closing the CX gap, by creating seamless customer lifecycle value management across touchpoints, and proving value at every interaction. Brands that do this well will be the closest to the consumers and lead the next phase of growth.” The Business Imperative The central warning of X Index India 2025 is unambiguous: CX Debt does not announce itself. Customers rarely complain; they simply disengage. In a market as competitive and fast-moving as India, closing the promise–delivery gap is no longer a CX ambition—it is a strategic necessity and an increasingly decisive source of competitive advantage.
தமிழ்நாடு பொதுத்தேர்வு 2026 : இன்று முதல் தொடங்கிய செய்முறைத் தேர்வு - அமைச்சர் நேரில் ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (பிப்ரவரி 9) தொடங்கியது. சென்னையில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
Mumbai: ‘Z’, India's leading Content and Technology Powerhouse has played a defining role in shaping India’s entertainment landscape, continually reimagining how stories are told and experienced. The company pairs emotionally resonant storytelling with cutting-edge innovation to craft immersive entertainment experiences which are rooted in culture and built for the future, across screens, formats, and languages. With decades of storytelling experience, the network continues to evolve audience engagement across platforms, forging deeper and more meaningful connections with viewers.Amongst these is Zee Cine Awards, a cornerstone of this legacy, which has stood as a trusted and celebrated platform honouring excellence in Hindi cinema. Over the years, it has evolved into a much-loved celebration that reflects not only industry achievement, but also the enduring bond between cinema and its audiences, recognizing them as the true champions of cinema.This year, ‘Z’ takes its fan-first philosophy, 'FANtertainment', to the next level with 'Yeh Pal Hai Fans Ka'—an extension that reinforces the belief that cinema's most unforgettable moments are shaped by the love, loyalty, and passion of fans. Maruti Suzuki presents 24th Zee Cine Awards 2026 celebrates this truth, making every moment a shared experience between stars and their biggest supporters.The 2026 edition was officially announced in Mumbai through a high-energy, fan-driven press conference, with Bollywood superstars Akshay Kumar, Tamannaah Bhatia, Jacqueline Fernandez, Sonam Bajwa, Aparshakti Khurana, Mithoon, and Palak Muchhal coming together to mark the beginning of this exciting new chapter. Their presence brought warmth, star power, and relatability, setting the tone for a season that celebrates cinema through the eyes of its biggest champions, the fans. The announcement became an immersive, fan-driven experience where fans didn't just witness the moment, they created it.Staying true to the spirit of ‘Yeh Pal Hai Fans Ka’, the announcement unfolded as an immersive experience where fans didn’t just witness the moment—they shaped it. Superstar Akshay Kumar elevated the celebration by directly engaging with the fans and inviting all the stars on stage, revealing the Maruti Suzuki 24th Zee Cine Awards 2026 ground event date.The energy continued to soar as actors Tamannaah Bhatia, Jacqueline Fernandez, Sonam Bajwa, & Aparshakti Khurana took center stage along with music composer Mithoon & singer Palak Muchhal, engaging with fans, recreating iconic hook steps, and participating in high-spirited, interactive moments. With playful exchanges, and spontaneous performances, fan engagement remained at the heart of the evening. The seamless blend of performances, interactions, and shared enthusiasm created a vibrant atmosphere, celebrating the unique bond between stars and audiences and turning every moment into a truly memorable experience.Maruti Suzuki presents 24th Zee Cine Awards 2026 continue to unfold as a shared journey across television, digital, print and fan-led experiences, creating sustained engagement from the announcement phase through to the awards night and beyond. The focus remains on strengthening emotional connection, expanding participation and celebrating fandom as a cultural force that elevates cinema. Laxmi Shetty Head – Advertisement Revenue, Broadcast & Digital, ZEEL, “As Zee Cine Awards enters its 24th edition, it stands as one of the most prestigious and enduring celebrations of Hindi cinema. Its continued relevance is powered by ZEE’s robust omni-channel ecosystem, which mirrors today’s evolving content consumption across television, digital and social platforms, enabling seamless viewer engagement. The scale and strength of ZEE’s network continue to earn long-standing trust from audiences and partners, reflected in sustained associations with marquee brands such as Maruti Suzuki, along with partners like Hell Energy, Rajdhani Dal, L’Oral Paris Glycolic Gloss, Cadbury Dairy Milk & Balaji Wafers. Maruti Suzuki’s four-year journey with Zee Cine Awards underscores the depth of this collaboration, while audience-led initiatives further highlight how the platform drives meaningful participation. Collectively, these partnerships reinforce ZEE’s position as a culturally relevant, future-ready platform delivering impactful brand engagement at scale.” Ruchir Tiwari, Chief Cluster Officer – Hindi & Marathi Movies, ZEEL, added , “Zee Cine Awards has always stood for credibility and scale, and with every edition, the endeavour is to raise the bar on what viewers experience on awards night. For 2026, audiences can expect a celebration that brings together cinema in its most spectacular form, through performances, moments, and storytelling that feel fresh, ambitious, and unlike anything seen before. The focus is on creating a night that surprises, delights, and stays with viewers long after the curtains come down.” Kartik Mahadev, Chief Marketing Officer, ZEE & ZEE5, said, “With FANtertainment and ‘Yeh Pal Hai Fans Ka’, we are celebrating how cinema truly lives, through moments that travel through culture. These are the scenes, entries, dialogues, and emotions that fans carry forward, reference, remix and relive. Fandom is created in these moments and it is audiences who give them meaning.” Partho Banerjee, Senior Executive Officer - Marketing & Sales, Maruti Suzuki India Limited said, “Zee Cine Awards is one such platform which consistently reflects this voice and passion of audiences who make this celebration truly meaningful. Maruti Suzuki and ZEE, two brands deeply embedded in India’s cultural fabric, are celebrating this partnering for the fourth time. We are proud to present our latest offering to tap the new generation of customers in the SUV segment with Maruti Suzuki Victoris - the “Indian Car of the Year 2026” which has “Got It All”. The response to Victoris has been nothing short of historic. I am thrilled to share that it has achieved 50,000 sales in just 5 months since launch—making it the fastest SUV in its segment to reach this milestone in Indian automotive history. Victoris, with its spirit of innovation and excellence, represents our pursuit to bring forth contemporary design, advanced technology, and a more aspirational mobility experience to our customers. With this, I kick-start the Zee Cine Awards 2026 and look forward to a memorable event. Unnikannan Gangadharan, Director HELL ENERGY PVT LTD said, “As HELL ENERGY DRINK marks 20 years of its global journey, it is a proud moment to celebrate this milestone at the Zee Cine Awards 2026. What started in Hungary as an entrepreneurial vision has today grown into a global brand present in over 60 countries. India remains a key focus market for us, driven by a young and aspirational consumer base. Responding to evolving preferences for a wide range, we are excited to announce the upcoming launch of HELL ZERO - White Peach Flavour, a zero-sugar variant designed for today’s lifestyle-driven consumer. We are also proud to present the HELL ENERGY DRINK – Viewers’ Choice Song of the Year, celebrating the real moment of fans and their deep connection with cinema.” Speaking at the event, Akshay Kumar said, “I entered the industry in 1991, and Zee TV was launched in 1992. In many ways, our journeys have evolved side by side. The Zee Cine Awards is a prestigious and significant platform, and I have had the pleasure of performing at this event on several occasions. I am delighted that ZCA is returning once again. I look forward to performing at the awards this year, alongside several other esteemed artists. Actress Tamannaah Bhatia said, “Zee Cine Awards has always been a celebration of cinema at its finest. Being associated with such a legacy award show is truly special, it’s a moment to honor the craft, celebrate stories, and connect with both fans and fellow actors. For me, it’s always a joy to be part of an evening that reminds us why we fell in love with films in the first place.” Actress Jacqueline Fernandez mentioned, “Zee Cine Awards is one of those rare events that feels like a family reunion of Bollywood, the best films, the best talent, and the fans who make it all worthwhile. Being part of this celebration is incredibly exciting. It’s a reminder of why we do what we do: to create magic on screen and celebrate it with everyone who believes in it.” Actress Sonam Bajwa shared, “Zee Cine Awards 2026 is not just about recognition, it’s about celebrating the magic of cinema with the entire Bollywood family. Sharing this platform with my peers and performing in front of fans who’ve supported us through every film is a feeling that never gets old. It’s an experience full of energy, excitement, and heartfelt appreciation.” Aparshakti Khurana shared, “Returning to host the Zee Cine Awards once again feels incredibly special. It’s a celebration that brings together the best of Hindi cinema, exceptional talent, unforgettable stories, and most importantly, the fans who give cinema its heartbeat. Zee Cine Awards has a unique warmth and energy, and being at the centre of that celebration, especially in a year that truly puts fans in the spotlight, is something I’m genuinely excited about.” Music Composer & Singer Mithoon added, “As a composer, performing at the Zee Cine Awards is a unique experience. It’s a stage to present music that connects deeply with people, right in front of the artists, the industry, and the fans who make my music so large. Being part of this legacy celebration is both humbling and exhilarating, it’s where art, recognition, and audience come together beautifully.” Singer Palak Muchhal said, “Music has always been about touching hearts, and the Zee Cine Awards provides the perfect stage for that. Performing here, surrounded by the industry I admire and the fans whose love keeps me inspired, is truly special. It’s a celebration of talent, dedication, and the joy that cinema and music bring to everyone.” Get ready to witness the grand return of Hindi cinema’s biggest celebration as the Maruti Suzuki presents 24th Zee Cine Awards 2026 lights up Mumbai at the NSCI Dome on 28th February and 1st March. Promising spectacular performances, star-studded glamour, and unforgettable moments, the celebration will be powered by our presenting partner Maruti Suzuki, Energy Drink Partner Hell Energy Drink and Special Partners Rajdhani Dal, L’Oral Paris Glycolic Gloss, Cadbury Dairy Milk & Balaji Wafers, coming together to make this cinematic extravaganza truly iconic.Tickets will be available on District by Zomato, while audiences across the country can relive all the magic on Zee TV, Zee Cinema, and ZEE5.-Based on Press Release
ஜப்பான் தோ்தல்: பிரதமா் சனே தகாய்ச்சி கட்சி வரலாற்று வெற்றி!
ஜப்பான் நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் சனே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தனிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு குளிா்காலத்தில் நடைபெற்ற தோ்தலில் வாக்களிக்க பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினா். இதைத்தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 316 இடங்களில் எல்டிபி கட்சி வென்ாக அந்நாட்டு […]
ஏஏ23 தீம் மியூசிக் சாதனை: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் 6 லட்சம் பதிவுகளைக் கடந்து புதிய மைல்கல்
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 'ஏஏ23' படத்தின் தீம் மியூசிக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் 6 லட்சம் பதிவுகளைக் கடந்து இந்திய அளவில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் 09 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் நாட்டை விட்டு படகுகள் மூலம் இந்தியாவிற்கு தப்பி சென்று இருந்தனர். இந்தியாவில் கைது. அந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தேவா , பிரகாஷ் மற்றும் டானியல் […]
செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளம்
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில் , கடந்த நவம்பர் மாதம் முதல் யாழில் பல்வேறு தடவைகள் கடும் மழை பெய்தமையால் , புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிக்கிறது. இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்றைய தினம் திங்கட்கிழமை நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்று தன்மையாக காணப்படுவதால் , அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு , அன்றைய தினத்திற்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது. அதேவேளை புதைகுழிக்குள் இருந்து வெள்ளம் வெளியேற்றும் நடவடிக்கைகளை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். அதேவேளை , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக கடந்த ஆண்டு நீதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியுள்ளமையால் , இவ்வாண்டுக்கு புதிய பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு, நிதியினை மீள பெற வேண்டியுள்ளமையால் , புதிய பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு
யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை துப்பரவு செய்த வேளை , துப்பரவு பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றினை அவதானித்துள்ளனர். அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பொதி தொடர்பில் சோதனையிட்டனர். அதனுள் கையெறிகுண்டு , கலிபர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன. பொதியினுள் உள்ள வெடிபொருட்கள் தொடர்பில் யாழ் . நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் , நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் , அதன் பின்னரே மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்னர்.
The Rising Influence of AI Brand Ambassadors in Marketing
For decades, human faces have been used to build trust and aspiration for brands - celebrities, influencers, founders, even mascots. Human faces clearly have distinct advantages as celebrities and real-life influencers. But as marketing becomes always-on, hyper-personalised and spread across dozens of platforms, human brand ambassadors come with some real limitations. They can be expensive, inconsistent, finite in availability and sometimes risky.This is where AI brand ambassadors are beginning to play a serious role. An AI brand ambassador is basically a computer-generated character which is energized by artificial intelligence which works as the face and voice of the brand. These are not gimmicky chatbots or sci-fi experiments. They are often photorealistic digital personas which feel real and can speak for brands, engage customers and deliver content at scale. Increasingly, global brands are discovering that AI ambassadors can do many things humans simply cannot and do them better. Why the usage of AI Brand Ambassadors is growing? Human brand ambassadors have played a powerful role in marketing over the years because they bring fame, credibility, cultural connect, real emotion and have often delivered significant brand lift. However, they can also bring with them a fair bit of unpredictability.Their availability can be a challenge given how busy they are. There is only so much that they will do within the contractual terms which are often a bit rigid. There could also be the odd scandal that can force your brand to scramble for cover to avoid reputational risk.Much of this is avoided when you use AI Brand Ambassadors. They are available round the clock, across markets and time zones. Their tone, messaging and behaviour remain consistent, regardless of scale. Additionally, they can be fully owned by the brand crafted to stand for just the right values and persona that the brand wants to be represented with. Categories which require a lot of trust, education, clarity and consistency rather than short term flair AI Brand ambassadors can serve as a great ally to the brand marketing & customer engagement process.This would especially apply to categories like finance, healthcare, travel, technology, education and similar others categories where trust and constant customer education is important to building the brand and its relationship with users. The Brand owned vs third party AI ambassadors Brands today are using AI brand ambassadors in two distinct ways:Brand Owned AI Ambassadors - These are digital personas specially curated for a brand and defined to fit perfectly into the brand’s tonality, values and its customer proposition. These often play a multi-dimensional role in the brand’s ecosystem, customer service, web and app presence, social and other content channels.Technology companies and service brands are increasingly using such ambassadors as guides, explainers and companions rather than pure promoters. AI Brand Ambassadors like this are often born for a specific role and then keep growing to acquire other roles for the brand and can become full-fledged brand representatives. The best thing about this approach is that brands have complete control and can build these ambassadors for the long run.Third party AI Influencers - The other way in which brands use Virtual AI Brand Ambassadors is like how brand influencers are used. Here brands use Virtual AI Influencers who have acquired a significant following to ride their popularity for Campaigns and content creation. The most famous example has been ‘Lil Miquela’, a virtual influencer who has partnered with brands like Prada, Calvin Klein and Samsung. Her success comes from her human like behaviour & cultural participation rather than being always salesy. There are countless other examples of Virtual AI influencers and their use by brands as influencers. Roles for Brand Ambassadors beyond Brand Promotion AI Brand Ambassadors are now taking over roles across service, content and even lower funnel sales closure. Customer service has been a value-added role for AI Brand Ambassadors which lifts the customer experience to be a warm and personal experience significantly superior to the traditional chatbot. In complex categories, AI Brand Ambassadors are being used to educate users and customers by simplifying complex subjects into conversational, easy to digest content. From a Brand Promotion standpoint AI Brand Ambassadors have become content creators who appear in videos, social posts, explainer videos, performance marketing campaigns, etc. When it comes ecommerce environments, they tend to help customers discover products and compare options sometimes in real time. Global outlook There are quite a few examples of brands that are using either their owned AI brand ambassadors or using Virtual AI Influencers. These initiatives have worked when they have been sensitive to the consumer role & emotion that they address rather than just being looked at as a technology solution. Some examples are of campaigns using owned or 3rd party Virtual AI Influencers1. Henkel Consumer Brands operates over 25 different Agentic AI Agents across 11 countries and covers at least 10 different products. These Agentic AI Agents deliver consistent, multilingual service. For example: Persil Stain Bot (Henkel): An AI agent used by Henkel to provide 24/7 expert advice on stain removal.2. Loctite Product Advisor, this brand is operating within the adhesives division and this AI Agent assists in choosing the right product.Closer home we have Naina Avtr : A photorealistic influencer from Mumbai who has worked with Nykaa, Pepsi, and Puma. We also have Radhika Subramaniam: India’s first bilingual (Tamil and English) AI travel influencer. In most of the successful cases, the audience experience and engagement mattered more than the technology itself.At Tidal7 too, we have had the joy of creating TACY for Thomas Cook which illustrates how an AI Brand Ambassador can be deployed meaningfully at scale. TACY has been created as a long-term digital asset rather than a campaign specific digital property. TACY has evolved from being a digital customer service assistant to becoming a photorealistic presenter of brand content, simplifying Thomas Cook’s offering into easy to digest content units while building on Thomas Cook’s trust and new age credentials. TACY is now used for long form storytelling, short videos, static creative and performance marketing creative and is only growing more and more influential. What the Future looks like – in India and Globally AI Brand Ambassadors are becoming more realistic, almost emotionally aware and more conversational. This is making them easier to relate to and interact with. Consequently, their role in the context of brands has been growing and is only likely to grow deeper. They are already handling customer service issues almost as well as humans, in fact, better in some cases. They will increasingly play the role of personalised brand companions, probably guide immersive brand experiences, and definitely play the role of educating current and potential customers.In India, the potential is endless with a digital first population and with increasing comfort with AI across the board. The personalisation that AI Brand Ambassadors allow and their ability to present themselves fluently in local languages gives them a fillip. AI Brand Ambassadors are not for replacing humans. They are about extending a brand’s presence, personality and usefulness in a world where attention is fragmented and expectations are high. For brands that invest thoughtfully, they may soon become as familiar and trusted as any human face ever was.(Views are personal)
நாடாளுமன்றம் புறக்கணிப்பு? – பியூஷ் கோயல் மீது திமுக நடவடிக்கை கோரிக்கை!
டெல்லி :இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதை நாடாளுமன்ற விதிகளை மீறிய செயல் என்று திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ஒப்பந்த விவரங்களை முதலில் மக்களவை அல்லது மாநிலங்களவையில் வெளியிட்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். திருச்சி சிவா, மாநிலங்களவை தலைவருக்கு […]
தமிழ்க் கட்சிகளை ஒரே நிலைப்பாட்டுக்குள் கொண்டு வர சுவிஸ் முயற்சி
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, அனைத்து தமிழ்த்தரப்புக்களையும், ஒருமித்த நிலைப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சுவிட்சர்லாந்து ஈடுபட்டுள்ளது. இதற்கமைய, சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சிறப்பு சந்திப்பு ஒன்று, கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இரா.சாணக்கியன், ப.சத்தியலிங்கம், மற்றும் எம்.ஏ.சுமந்திரன்
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு
யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாகஉள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினைநேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை துப்பரவுசெய்த வேளை , துப்பரவுபணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றினைஅவதானித்துள்ளனர். அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பொதி தொடர்பில் சோதனையிட்டனர். அதனுள்கையெறிகுண்டு , கலிபர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன. பொதியினுள்உள்ள […]
Marina Beach Toilets Shut Due to Power Issues
Modern public toilets built by the Greater Chennai Corporation (GCC) at places like Marina Beach are often kept closed, especially
பழனியாண்டிக்கு மீண்டும் சீட்? | திருச்சி நிலவரம் என்ன? | TN Election 360 updates | Vikatan TV
RSS: ``75 வயதைக் கடந்துவிட்டேன்... தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல - மோகன் பகவத் ஓப்பன் டாக்
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ``ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லை. பிராந்தியம் மற்றும் கோட்டத் தலைவர்களே, ஆர்.எஸ்.எஸ் தலைவரை நியமிக்கின்றனர். பொதுவாக, 75 வயதுக்குப் பிறகு எந்தப் பதவியும் வகிக்காமல் பணியாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. RSS மோகன் பகவத் எனக்கு 75 வயது நிறைவடைந்துவிட்டது. அதை ஆர்.எஸ்.எஸ்-க்குத் தெரிவித்தேன். ஆனால், அமைப்பு தொடர்ந்து பணியாற்றும்படி என்னிடம் கேட்டுக்கொண்டது. ஆர்.எஸ்.எஸ் எப்போது பதவி விலகச் சொல்கிறதோ, அப்போது நான் விலகிவிடுவேன். ஆனால் பணியிலிருந்து ஓய்வு பெறுவது ஒருபோதும் நடக்காது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல. அவர் இந்துவாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைப் பின்பற்றுவதில்லை. தொண்டர்கள் தங்கள் பணியின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுகிறார்கள். சாதி பேதமின்றி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார். நான் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தால், ‘கிடைக்கும் சிறந்த வேட்பாளர்’ என்ற அளவுகோலின்படியே தேர்ந்தெடுப்பேன். பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பது ஒரு தகுதியிழப்பு அல்ல. அதேபோல் பிராமணராக இருப்பது ஒரு தகுதி அல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பணி என்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை (சம்ஸ்காரம்) விதைப்பதுதானே தவிர, வெற்றுப் பிரச்சாரங்களைச் செய்வது அல்ல. அதிகப்படியான விளம்பரம் மற்றும் பிரச்சாரம் ஒரு கட்டத்தில் ஆணவத்திற்கு வழிவகுத்துவிடும். மோகன் பகவத் - RSS விளம்பரம் என்பது எப்போதும் அளவாகவும், சரியான நேரத்திலும் மட்டுமே இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களிடமிருந்து கடைசி சொட்டு இரத்தம் வரை வேலை வாங்குகிறது. இங்கே யாருக்கும் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்பாடுகளில் ஆங்கிலம் ஒருபோதும் முதன்மையான தகவல் தொடர்பு மொழியாக இருக்காது. ஆங்கிலம் ஒரு இந்திய மொழி அல்ல என்பதால், தேவைப்படும் இடங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படும். ஆர்.எஸ்.எஸ் எந்தவொரு குறிப்பிட்ட சாதியையோ அல்லது சமூகத்தையோ குறிவைத்துச் செயல்படுவதில்லை. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை தொடர வேண்டும். ஊழல் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இல்லை, அது மக்களின் மனதில்தான் உள்ளது. ஊழலுக்கு எதிராகப் போராடும் எவருக்கும் ஆர்.எஸ்.எஸ் முழு ஆதரவை வழங்கும். இது தொடர்பாகப் போராடுபவர்களுக்கு உதவுமாறு எங்கள் தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களைக் கண்டறிந்து, அது குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்களும் தகவல் தெரிவிக்க வேண்டும். என்றார். RSS 100: ஆர்.எஸ்.எஸ் - இது அரசுசாரா இயக்கமா? அரசியல் திட்டமா?

29 C