SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

ட்ரம்ப் ஒரு குற்றவாளி ; கமேனியின் கருத்துக்களால் வலுக்கும் போர் பதற்றம்

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது ஈரான் வன்முறை ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போராட்டக்காரர்கள் […]

அதிரடி 18 Jan 2026 9:30 am

ஓசூர் ஏர்போர்ட் திட்டம்… மீண்டும் ’நோ’ சொன்ன மத்திய அரசு… காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதனை மத்திய அரசு மீண்டும் நிராகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

சமயம் 18 Jan 2026 9:06 am

‘232 வருடத்தில் முதல் முறை’.. 40 ரன்னை சேஸ் செய்ய முடியாமல் அவுட் ஆன.. பாகிஸ்தான் கேப்டன் அணி!

பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் வழிநடத்தும் பாகிஸ்தான் உள்ளூர் அணி, 40 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம். இந்த நிகழ்வு, உலக அளவில் வைரலாகி வருகிறது.

சமயம் 18 Jan 2026 9:00 am

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு

வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடிக்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையின்போது 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெனிசியூலா பாதுகாப்பு அமைச்சரால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி இராணுவ நடவடிக்கையில் 51 வெனிசியூலா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 32 பேர் கியூபா படையினர் பலியாகியுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மதுரோவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளனர். இதற்கமைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது வெனிசியூலாவில் மொத்தம் 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலின்போது […]

அதிரடி 18 Jan 2026 8:30 am

40 ஆண்டுகள் கடந்து மேலும் 5 ஆண்டுகள் ஆட்சியைத் தொடரப்போகும் யோவேரி முசேவேனி

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசேவேனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் அவரது நான்கு தசாப்த கால ஆட்சியை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்துள்ளார். அவர் 72% வாக்குகளைப் பெற்றதாகவும், அவருக்கு நெருக்கமான போட்டியாளரான போபி வைன் 25% வாக்குகளைப் பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவர் போலி முடிவுகள் மற்றும் வாக்குச்சீட்டு நிரப்புதல் என்று விவரித்ததைக் கண்டித்துள்ளார். வைன் எந்த விவரங்களையும் வழங்கவில்லை, மேலும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை, ஆனால் ஆப்பிரிக்க ஒன்றிய தேர்தல் பார்வையாளர்கள் வாக்குச்சீட்டுத் திணிப்புக்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை என்று கூறினர். வைன் வன்முறையற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 81 வயதான முசேவேனி, 1986 ஆம் ஆண்டு முதன்முதலில் கிளர்ச்சித் தலைவராக ஆட்சிக்கு வந்தார். ஆனால் அதன் பின்னர் ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் செயல்முறை வன்முறையால் பாதிக்கப்பட்டது, மேலும் 43 வயதான முன்னாள் பாப் நட்சத்திரமான வைன், சமீபத்திய நாட்களில் நாடு முழுவதும் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார். அதிகாரிகள் இதுவரை ஏழு இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர். முடிவுகளை அறிவித்த தேர்தல் ஆணையத் தலைவர் சைமன் பியாபகாமா, இரு பிரிவுகளின் ஆதரவாளர்களையும் ஒற்றுமையைத் தழுவி முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தேசிய வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அப்பால், மிகக் குறைந்த கொண்டாட்டங்களே நடந்துள்ளன, தலைநகர் கம்பாலாவில் பெரும்பாலான சாலைகள் காலியாகவும், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், பல சுற்றுப்புறங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை முதல் நாட்டில் இணைய அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளது, இதனால் தகவல்களைச் சரிபார்ப்பது கடினமாக உள்ளது. தவறான தகவல்கள், மோசடி மற்றும் வன்முறையைத் தூண்டுவதைத் தடுக்க இந்த மின்தடை அவசியம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் ஆழ்ந்த கவலைக்குரியது என்று கண்டித்துள்ளது. இணையத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று மது கோரியுள்ளார்.

பதிவு 18 Jan 2026 8:10 am

கல்முனை மாநகர சபை தேர்தல் குறித்து ஆரூடம் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளர்

video link- https://fromsmash.com/p1-GOZPp1o-dt ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில் மர நிழலில் மகிழ்வுறுவோம் என்ற தொனிப் பொருளில் கல்முனைத் தொகுதி நற்பிட்டிமுனையில் நடைபெற்ற கூட்டத்தில் கல்முனை மாநகர சபை தேர்தல் குறித்து ஆரூடம் தெரிவித்தார் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில் மர நிழலில் மகிழ்வுறுவோம் என்ற தொனிப் பொருளில் கல்முனைத் தொகுதி நற்பிட்டிமுனையில் வியாழக்கிழமை(15) இரவு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் […]

அதிரடி 18 Jan 2026 7:57 am

யார் இந்த சந்தனா சின்ஹா? 1,500 குழந்தைகளை மீட்ட RPF பெண் சிங்கம்- மெகா ரயில் சம்பவம்!

இந்திய ரயில்வேயின் கீழ் குழந்தைகளை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் சந்தனா சின்ஹாவின் செயல்பாடுகள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. இதற்காக மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

சமயம் 18 Jan 2026 7:51 am

BB Tamil 9: சீசன் 9-ல் அதிக சம்பளம் வாங்கியவர்களும், சம்பளம் இன்றி போனவர்களும்! யார் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 2017 ல் தொடங்கிய முதல் சீசன் தொட்டு ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும்போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாங்கும் சம்பளம் குறித்த செய்தியை வெளியிட்டு வந்துள்ளோம். இந்த சீசனிலும் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த சீசனின் அதிக தொகை வாங்கிய போட்டியாளர் யார் எனப் பார்க்கலாமா? சந்தேகமே வேண்டாம், ஒவ்வொரு சீசனிலும் டைட்டில் வின்னர்தான் அந்த நிகழ்ச்சியை வைத்து அதிக பரிசுத் தொகை பெறுபவராக இருப்பார். ஏனெனில் டைட்டிலுக்கான பரிசுத் தொகையுடன், அவர் நூறு நாள், சரியாக சொல்வதென்றால் 105 நாள்கள், அந்த வீட்டில் இருந்நதற்கான சம்பளமும் கிடைக்கும். இதில் வெற்றியாளருக்கான பரிசுத் தொகைக்கு 30 % வரி பிடித்தம் இருக்குமென்கிறார்கள். டைட்டில் வின்னரை அடுத்து பணப் பெட்டியை எடுத்துச் செல்பவருக்கும் அதிக தொகை கிடைக்குமென தெரிகிறது. ஏனெனில் பெட்டியில் எடுத்துச் செல்லும் பணம் தவிர்த்து அவர் அந்த வீட்டில் தங்கியிருந்த நாட்களூக்கான சம்பளமும் அவருக்குக் கிடைக்கிறது. divya ganesh அந்த வகையில் இந்த சீசனில் அதிக தொகை பெற்றவர் என்றால் திவ்யா கணேஷ் தான். அவருக்கு சம்பளமாக நாள் ஓன்றுக்கு முப்பதாயிரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. வைல்டுகார்டு போட்டியாளர் என்பதால்,. அவர் வீட்டில் இருந்த 80 நாள்களுக்கு அந்த தொகையே சுமார் 25 லட்சம் வரை கிடைக்கிறது. டைட்டில் வின்னருக்கான தொகை 50 லட்சம். இந்த தொகையில் சுமார் ரூ,15 லட்சம் வரியாகச் சென்றால், ரூ.35 லட்சம் கிடைக்கலாம். ஆக மொத்தத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமாகவே இவருக்குக் கிடைக்கும் என்கிறார்கள். அடுத்து கானா வினோத். இவர் பணப் பெட்டியில் எடுத்துச் சென்ற தொகை பதினெட்டு லட்சம். இதில் ஐந்தரை லட்சம் வரை வரியாகப் போய் விடும். தவிர இவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு எட்டாயிரம் வரை பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் நிகழ்ச்சியில் இருந்த 100 நாட்களைக் கணக்கிட்டால் எட்டு லட்சம் கிடைக்கும். மொத்தத்தில் சுமார் இருபது லட்சம் வரை இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கியவர்கள் எனக் குறிப்பிட்டால் முதல் இடத்தில் திவ்யாவும் இரண்டாவது இடத்தில் கானா வினோத்தும் இருக்கின்றனர். Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?! பணப்பெட்டியுடன் வினோத் அதேநேரம் இறுதிச் சுற்று வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கு, அவர்களுக்கான தினசரி ஊதியம் மட்டுமே வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சீசனில், நாள் ஒன்றுக்கு கலையரசனுக்கு ரூபாய் எட்டாயிரமும், கனி, எஃப் ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு பத்தாயிரமும் பேசப்பட்டாதாகக் கூறப்படுகிறது. அரோரா, வியானா இருவருக்கும் 12,000 ரூபாய் என்கிறார்கள். பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா, சபரி, திவாகர் ஆகியோருக்கு 15 முதல் இருபதாயிரத்துக்கு இடைப்பட்ட தொகை பேசப்பட்டதாம். வைல்டு கார்டு மூலம் சென்ற நான்கு பேருக்குமே முப்பதாயிரம் என்றார்கள். நிறைவாக இந்த சீசனில் சம்பளமே இல்லையென்றால் கமருதீன், பார்வதி, நந்தினி மூன்று பேரைச் சொல்லலாம் நந்தினி நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளே வெளியேறி விட்டார். பார்வதி, கமருதீன் இருவருக்கும் ரெட் கார்டு தரப்பட்டதால் அவர்களுக்கும் ஊதியம் இருக்காது எனக் கூறப்படுகிறது.

விகடன் 18 Jan 2026 7:46 am

கிரீன்லாந்து சர்ச்சை: 8 ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதித்தார் டிரம்ப்

டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகியவை பிப்ரவரி 1 முதல் அனைத்து பொருட்களுக்கும் 10% வரியை எதிர்கொள்ள உள்ளன. கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எட்டு ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி 1 முதல் 10% இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை சமூக ஊடகப் பதிவில், டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் வரியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் முழுமையாகவும் வாங்குவதற்குஒரு ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஜூன் 1 ஆம் திகதி அது 25% ஆக உயரும் என்றும் டிரம்ப் கூறினார். வரி அச்சுறுத்தல் என்பது டிரம்ப் மற்றும் நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையிலான மோதலின் கடுமையான மற்றும் ஆபத்தான விரிவாக்கமாகும். இது 1949 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு கூட்டு அளவிலான பாதுகாப்பை வழங்கும் கூட்டணியை மேலும் இறுக்குகிறது. குடியரசுக் கட்சித் தலைவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப நட்பு நாடுகளையும் போட்டியாளர்களையும் வளைக்க வர்த்தக அபராதங்களைப் பயன்படுத்த பலமுறை முயன்றுள்ளார். இது சில நாடுகளிடமிருந்து முதலீட்டு உறுதிமொழிகளையும் சீனா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற பிற நாடுகளிடமிருந்து பின்னடைவையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்க சட்டத்தின் கீழ் டிரம்ப் எவ்வாறு வரிகளை விதிக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்ற சவாலுக்கு உட்பட்ட பொருளாதார அவசரகால அதிகாரங்களை அவர் மேற்கோள் காட்ட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

பதிவு 18 Jan 2026 7:45 am

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்

முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க (Nandana Gunathilake) இன்று (18) காலமானார். ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 64 ஆவது வயதில் இன்று (18) காலமாகியுள்ளார். அரசியல் வாழ்க்கை ஜே.வி.பி.யின் ஆரம்பகால உறுப்பினரான இவர், ஜே.வி.பி.யைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். இதன்பின்னர், ஜே.வி.பி.யிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து, பாணந்துறை மாநகர […]

அதிரடி 18 Jan 2026 7:35 am

மாறுவேடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

கொழும்பு – ஜிந்துபிட்டியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, இரண்டு சிறுவர்கள் காயமடைந்த சம்பவம், வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் குற்றவாளியான ‘பழனி ரிமோஷன்’ என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று இரவு முச்சக்கரவண்டியொன்றில் பிரவேசித்த சந்தேகநபர்கள் இந்தத் […]

அதிரடி 18 Jan 2026 7:32 am

யாழில் வீடொன்றில் தீப்பரவல் ; குப்பைக்கு வைத்த தீயால் அனர்த்தம்

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால் , வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது. அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு , வெளியே சென்றுள்ளனர். குப்பையில் பற்றிய தீ அருகில் வீட்டின் கூரையில் பற்றி வீடு தீப்பற்றியுள்ளது. இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்துள்ளது

அதிரடி 18 Jan 2026 7:30 am

உறவுகளை அஞ்சலிப்பதற்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தைஇராணுவத்திடமிருந்து விடுவிக்க தீர்மானம் வேண்டும்- தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும். உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் அக் காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தினார். இராணுவத்தினரால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் விடயத்தில், 19.42 ஏக்கர் நிலம் உரிமையாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு – […]

அதிரடி 18 Jan 2026 7:27 am

தமிழகத்தை நொதிக்கச் செய்தல்: தமிழக நீக்கம்=தமிழ்த் தேசிய நீக்கம் ? நிலாந்தன்.

தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று… The post தமிழகத்தை நொதிக்கச் செய்தல்: தமிழக நீக்கம்=தமிழ்த் தேசிய நீக்கம் ?நிலாந்தன். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Jan 2026 7:27 am

கோவையில் களைகட்டிய 'பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு': நீர்நிலைகள் மீது தனி கவனம்!

கோவையில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (PBC) மற்றும் ஆசிய நீர் பறவைகள் கணக்கெடுப்பு (AWC) சிறப்பாக நடைபெற்றது. பேரூர் - சுண்டகாமுத்தூர் குளத்தில் ஆர்வலர்கள் திரட்டிய அரிய தகவல்கள் இதோ.

சமயம் 18 Jan 2026 7:05 am

போகி முதல் பொங்கல் வரை: சென்னையில் மளமளவென நடந்த குப்பை அகற்றும் பணிகள்!

பொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து 160 டன்னுக்கு அதிகமான குப்பைகளை மாநகராட்சி அகற்றியுள்ளது . இது தொடர்பான விரிவான விவரம் உள்ளே.

சமயம் 18 Jan 2026 6:40 am

ஈரான்: 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; டிரம்ப் வரவேற்பு

தெஹ்ரான், ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, கடந்த டிசம்பர் 28-ந்தேதி தொடங்கிய போராட்டம் ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களுக்கு பரவியது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி […]

அதிரடி 18 Jan 2026 6:09 am

இனி டோல்கேட்டில் நிற்கவே வேண்டாம்! சென்னையில் 3 இடங்களில் வருகிறது புதிய தொழில்நுட்பம்!

சென்னையில் பரனூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 சுங்கச்சாவடிகளில் MLFF (Multi-Lane Free Flow) தொழில்நுட்பம் சோதனைக்கு வருகிறது. இனி வாகனங்கள் நிற்காமல் செல்லலாம். முழு விவரம் உள்ளே.

சமயம் 18 Jan 2026 5:43 am

சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026: 102 நாடுகள் பங்கேற்பு!

102 நாடுகள், 2000+ ஒப்பந்தங்களுடன் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி 2026 தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் நூல்களை உலகறியச் செய்யும் அரசின் புதிய முயற்சிகள் பற்றி அறியவும்.

சமயம் 18 Jan 2026 5:35 am

ஈரான் வான்வெளி… விமான நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் திடீர் அறிவுறுத்தல்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நடுவே, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு முகமை, விமான நிறுவனங்களை ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தவறாக அடையாளம் தற்போதைய சூழ்நிலை மற்றும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது தவறாக அடையாளம் காணப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றே ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு வகையான ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பு […]

அதிரடி 18 Jan 2026 3:30 am

யாழ்ப்பாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை: இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை ஊர்காவற்துறை காவற்தறையினர் அதிரடியாக கைது… The post யாழ்ப்பாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை: இரு இளைஞர்கள் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Jan 2026 2:08 am

உலக நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை ; கிரீன்லாந்தை கையகப்படுத்த உதவாவிட்டால் இது தான் நடக்கும்

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் பேசுகையில், “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து தேவைப்படுவதால், கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கக் கூடும்” என்று தெரிவித்தார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக ட்ரம்ப் அரசு உருவாக்கி வரும் கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்புக்கு கிரீன்லாந்து முக்கியமானது என்று கூறிவரும் ட்ரம்ப், அதனைக் கைப்பற்றும் முயற்சியிலும் […]

அதிரடி 18 Jan 2026 1:30 am

ஆசிரியரின் வெளித்தோற்ற விழுமியங்கள்

ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அறிவுக்கண் திறப்பவர் மட்டுமல்ல. அவர் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியும் ஆவார். “ஆள் பாதி ஆடை பாதி” என்ற பழமொழிக்கேற்ப ஒரு ஆசிரியரின் தோற்றம் அவரது ஆளுமையும் அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தின் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது. ஆசிரியர்களின் ஆடை மற்றும் வெளித்தோற்ற விழுமியங்கள் என்பது வெறும் தனிநபர் விருப்பம் சார்ந்ததல்ல. அது ஒரு தொழில் முறை தகுதி சார்ந்த விடயமாகும். ஆசிரியர்களின் ஒழுக்க விழுமிய முறைமை தொடர்பாக சுற்றறிக்கை இலக்கம் […]

அதிரடி 18 Jan 2026 12:30 am

நுவரெலியாவில் அதி குறைந்த வெப்பநிலை பதிவு

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று(17.1.2026) நுவரெலிய வானிலை ஆய்வு நிலையத்தில் பதிவாகியுள்ளது. இதன்படி, அங்கு வெப்பநிலை 8.0 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை திணைக்கள தகவல்படி, பண்டாரவளையில் அதிகாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 டிகிரி செல்சியஸாகவும், பதுளையில் 14.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. வடமத்திய மாகாணத்தின், பொலன்னறுவையில் குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

அதிரடி 18 Jan 2026 12:30 am

லண்டனில் ஈரான் தூதரகம் முன்பாக பெரும் பதற்றம்: போராட்டக்காரர்கள் –காவற்துறை மோதல்!

லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்பாக நேற்று இரவு நடைபெற்ற பாரிய போராட்டம் வன்முறையாக மாறியதில், தூதரகக் கட்டிடம்… The post லண்டனில் ஈரான் தூதரகம் முன்பாக பெரும் பதற்றம்: போராட்டக்காரர்கள் – காவற்துறை மோதல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Jan 2026 12:23 am

தங்க மோசடி வழக்கு ; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

பாரிய அளவிலான தங்க மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தேகநபர் குருணாகலைச் சேர்ந்த லொகுபதுருகே மகே விந்தக டி சில்வா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்,சுமார் மூன்றரைக் கிலோ தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் 50 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட இரும்புத் துண்டுகளைக் கொடுத்து அவர் ஏமாற்றியுள்ளார். தங்க மோசடி வழக்கு ; […]

அதிரடி 17 Jan 2026 11:30 pm

காங்கிரஸ் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன? கூட்டணி குறித்த முடிவு இதுதானா!

தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணியைப் பற்றிய விவாதத்தை பொதுவெளியில் பேசக் கூடாது. சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட கூடாது. தலைமை எடுக்கும் முடிவுகளை மாநில காங்கிரஸ் கமிட்டி கட்டுப்பட வேண்டும்.

சமயம் 17 Jan 2026 11:22 pm

Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?!

அக்டோபர் முதல் வாரத்தில் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 9 வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது. சில நிமிடங்களூக்கு முன் நிறைவடைந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்ற திவ்யா கணேஷ் பிக்பாஸ் சீசன் 9 ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குத் தேர்வாகியிருந்த இருபது பேரில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே பிரபலமாவர்களாக இருந்தனர். எனவே வைல்டு கார்டு மூலம் அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் சில தினங்களுக்கு பிறகு நிகழ்ச்சிக்குள் சென்றனர். Bigg Boss Tamil 9 அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறினர். இன்னொரு புறம் யாரும் எதிர்பாராத அதிரடியாக சிறப்பாக விளையாடி வந்த கமருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு தந்து அனுப்பப்பட்டதும் நிகழ்ந்தது. மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார், டைட்டில் வெல்வார் என மக்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் இந்நிலையல் சீசனின் கிரான்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்த சபரி, விக்ரம், திவ்யா கணேஷ், அரோரோ ஆகிய நால்வருடனும விஜய் சேதுபதி கடந்த நூறு நாள் அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நான்கு பேரில் 4வது மற்றும் 3வது இடம் பிடித்தவர்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி விக்ரம் நான்காவது இடத்தையும் அரோரா 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. divya ganesh கடைசியாக மிச்சமிருந்த திவ்யா கணேஷ் மற்றும் சபரி இருவரில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இரண்டாவது இடம் பிடித்தார் சபரி. விஜய் சேதுபதி திவ்யா கணேஷ் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்த எபிசோடை நாளை, ஞாயிறு அன்று காணலாம். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வென்றிருக்கிறார். இதற்கு முன் முன் சீசன் 7 ல் வைல்டு கார்டு மூலம் சென்ற அரச்சனா டைட்டில் வென்றது நினைவிருக்கலாம்.

விகடன் 17 Jan 2026 11:15 pm

சற்றுமுன்: துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். செய்தி அறிந்த உடனேயே நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சமயம் 17 Jan 2026 10:52 pm

வங்காளதேசத்தில் இந்து ஆசிரியர் வீட்டுக்கு தீவைத்த கும்பல்

வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. 8 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சில்ஹெட் மாவட்டம் கோவாயின்காட் உபஜிலாவில் வசிக்கும் ஆசிரியர் பிரேந்திர குமார் டே என்பவரின் வீட்டுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து தப்பினர். ஆனால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் […]

அதிரடி 17 Jan 2026 10:30 pm

தையிட்டி மக்களின் காணிகளை மீள ஒப்படையுங்கள்: ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி நேரில் வலியுறுத்து!

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவித்து, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ்.… The post தையிட்டி மக்களின் காணிகளை மீள ஒப்படையுங்கள்: ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி நேரில் வலியுறுத்து! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 10:22 pm

ஆமியிடம் எவ்வளவு உள்ளது

வடக்கில்.இராணுவம் வசமுள்ள காணிகள் பற்றி அனுரவுக்கு தெரியாதா என தமிழ் அரசியல் தரப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பலாலியில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள் காணிகளை பார்வையிட அனுர கால்நடையாக பயணிப்பது பேசுபொருளாகியுள்ளது. வட்டக்கச்சி விவசாய அரச பண்ணையில் 415 ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது . வெள்ளாங்குளத்தில் 500 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது . தேராவிலில் 1,200 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது . முட்கொம்பனில் 100 ஏக்கர் தென்னம் தோட்டம் இராணுவம் வசம் இருக்கிறது . முழங்காவிலில் 1,800 ஏக்கர் மரமுந்திரிகை தோட்டத்தில் பெரும்பகுதி இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது . சாந்தபுரத்தில் 680 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது . ஜெயபுரத்தில் 120 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது . மலையாளபுரத்தில் 798 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது. தேறாங்கண்டல் பல நூறு ஏக்கர் விவசாய பண்ணையும் இன்னமும் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது இது போதாதென்று யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட வளமான விவசாய நிலமும் இராணுவம் வசம் இருக்கின்றது .

பதிவு 17 Jan 2026 10:21 pm

யாழில். குப்பைக்கு வைத்த தீ வீட்டை காவுகொண்டது!

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால் , வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது அரியாலை பகுதியில் உள்ள… The post யாழில். குப்பைக்கு வைத்த தீ வீட்டை காவுகொண்டது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 10:14 pm

சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் இது இருக்காது.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிகளில் இந்த வசதி இருக்காது.. வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. கடுமையாகும் விதிமுறைகள்.

சமயம் 17 Jan 2026 9:37 pm

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்: மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக அச்சம்!

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்: மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக அச்சம்! இந்தோனேசியா: ஜாவா தீவின்… The post இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்: மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக அச்சம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 9:35 pm

ஈரானுக்கு ஆதரவாக நிற்போம் ; ரஷ்ய ஜனாதிபதி புடின்

மத்திய கிழக்கு மற்றும் ஈரான் நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விவாதித்தார். மேற்காசிய நாடான ஈரானில் அடக்குமுறை மத ஆட்சிக்கு எதிராக, கடந்த இரு வாரங்களாக போராட்டங்கள் வெடித்துள்ளன. பதற்றமான சூழல் பொருளாதார சீரழிவு, பணவீக்கம் ஆகியவை காரணமாக துவங்கிய இந்த போராட்டம், தற்போது அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற அளவுக்கு தீவிரமடைந்துள்ளது. இதனால், ஈரான் […]

அதிரடி 17 Jan 2026 9:30 pm

ரயில் பயணிகளுக்கு முக்கியமான விதிமுறை.. இப்படி செஞ்சா அபராதம் கட்டணும்!

ரயில் பயணிகள் இந்த விதிமுறையை மீறி பயணம் செய்தால் அதிகளவு அபராதம் செலுத்த வேண்டும். மற்ற தண்டனைகளும் கிடைக்கலாம்.

சமயம் 17 Jan 2026 9:02 pm

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராக விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் இன்று சனிக்கிழமை (17) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (PSTA) தொடர்பான ஆபத்துக்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த… The post மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராக விசேட கலந்துரையாடல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 8:56 pm

அலங்காநல்லூரில் சீறி பாய்ந்த காளைகள்... துணிந்து நின்ற வீரர்கள்! | ஜல்லிக்கட்டு கிளிக்ஸ்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

விகடன் 17 Jan 2026 8:46 pm

இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரை.. மீண்டும் சாதனையை முறியடிப்பாரா நிர்மலா சீதாராமன்?

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிக நீண்ட உரையை வாசித்து தனது சாதனையை தானே முறியடிப்பாரா?

சமயம் 17 Jan 2026 8:42 pm

அலை தணிகின்றதா?

தையிட்டி பேச மாட்டார், அரசியல் தீர்வு பேச மாட்டார்!பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் பேச மாட்டார்! ஆனால் நீ நடந்தால் நடை அழகு என பொதுவெளியில் அனுரவின் யாழ்ப்பாண பயணத்தை முன்வைத்து சமூக ஊடக பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்போது யாழில் அனுரவிற்கு பின்னால் இருக்கும் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் யார் என பார்த்தால் கடந்தகாலங்களில் ஆளும் அரசாங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த டக்ளஸ், அங்கஜன் போன்றோரின் பின்னால் நின்ற படித்தவர்கள் என்று அறியப்படும் ஒரு கூட்டம் தான் என்கிறன சுயாதீன தரப்புக்கள்.. அவர்கள் எப்பொழுதும் நாட்டை ஆளும் ஜனாதிபதியின் கட்சியை ஆதரிக்கும் கொள்கை கொண்ட கூட்டம் என்பது தெரியாத ஒன்றல்ல. ஜனாதிபதி தேர்தலில் திசைகாட்டிக்கு யாழில் கிடைத்த வாக்குகள் வெறும் 25000 க்கும் குறைவு, ஆனால் அனுர சிங்கள மக்களின் வாக்குகளால் நாட்டின் ஜனாதிபதியாகி இரண்டு மாதத்தினுள் நடந்த பொது தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் திசைகாட்டிக்கு அளித்த வாக்குகள் 81ஆயிரமாகும். ஒருவேளை 2024ல் ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தால் டக்ளஸ்,அங்கஜன், விஜயகலா போன்றவர்கள் இன்று அமைச்சர்களாகவும், முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்திருப்பார்கள். ஆனால்; கடந்த காலங்களில் அனுராவின் கூட்டத்திற்கு யாழ் மக்களை பெரூந்து மூலம் கட்டாயப்படுத்தி யாரும் ஏற்றியதில்லை, ஆனால் இந்த முறை நடந்ததை பார்க்கும் போது அனுர அலை யாழில் அடங்கிவருவது தெளிவாக தெரிகிறதெனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவு 17 Jan 2026 8:42 pm

மன்னார் –புத்தளம் வீதி திறப்பு: அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் மக்கள் அவதி! ️

மன்னார் – புத்தளம் வீதி திறப்பு: அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் மக்கள் அவதி! ️ மன்னாரில் இருந்து… The post மன்னார் – புத்தளம் வீதி திறப்பு: அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் மக்கள் அவதி! ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 8:39 pm

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம்: குட்டெரெஸ் வலியுறுத்தல்

ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் தேவை என 2026-ஆம் ஆண்டுக்கான தனது முன்னுரிமைகள் குறித்த உரையியில் அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தினாா். மேலும், தெற்கில் உள்ள சக்திவாய்ந்த நாடுகள் ஐ.நா. அமைப்புகளுக்கு தலைமை தாங்க வேண்டும். இல்லையெனில், இன்று பதவிகளைப் பற்றிக்கொண்டிருப்பவா்கள் நாளை அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் என அவா் எச்சரித்தாா். 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை உரையாற்றிய அதன் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது: […]

அதிரடி 17 Jan 2026 8:30 pm

துபாயில் மறைந்திருந்த நபர்கள்; இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட பெண் உள்ளிட்ட மூவர்

துபாயில் மறைந்திருந்த இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் ஒரு பெண்ணும் சிறப்பு பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பறித்தல், கொள்ளை மற்றும் கொலைசந்தேக நபர்கள் நேற்று காலை 05.20 மணிக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மூன்று சந்தேக நபர்களில் எல்பிட்டியவின் உரகாஹவைச் சேர்ந்த 52 வயதான ரவின் […]

அதிரடி 17 Jan 2026 8:30 pm

அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சங் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ததையடுத்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாக கருதப்படும் எரிக் மேயர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கிய தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்தில், அமெரிக்க அரசின் தூதரக நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பதிவு 17 Jan 2026 8:22 pm

டெல்லியில் பயங்கரவாத அச்சுறுத்தல்.. இந்திய உளவுத்துறை எச்சரிக்கை.. குடியரசு தின பாதுகாப்பு!

குடியரசு தின விழாவுக்கான தயாரிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கர்தவ்ய பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் சுமார் 30 அலங்கார வாகனங்கள் பங்கேற்க உள்ளன. பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

சமயம் 17 Jan 2026 8:00 pm

தவெகவா.. பாஜகவா.. யாருடன் கூட்டணி? டிடிவி, ஓபிஎஸ் பளீச் பதில்!

அமமுக – பாஜக கூட்டணி குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. என்டிஏ அல்லது தவெக என்ற இரண்டு வாய்ப்புகள் முன் டிடிவி தினகரன், ஓபிஎஸ் நிற்கும் நிலையில், கூட்டணி அரசியல் சூடு பிடித்துள்ளது.

சமயம் 17 Jan 2026 7:09 pm

IND vs BAN U19: ‘படுமோசமாக சொதப்பிய இந்திய பேட்டர்கள்’.. சூர்யவன்ஷி, குண்டு அதிரடி பேட்டிங்! ஸ்கோர் விபரம்!

வங்கதேச யு19 அணிக்கு எதிராக இந்திய யு19 அணி பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிக்யன் குண்டு ஆகியோர் மட்டுமே பெரிய ரன்களை எடுத்ததால், இந்திய அணி 238 ரன்களை எடுத்தது.

சமயம் 17 Jan 2026 7:06 pm

போராட்டங்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு டிரம்ப் தான் பொறுப்பு - கமேனி

ஈரானில் நடந்த போராட்டங்களின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் பொறுப்பு என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி குற்றம் சாட்டினார் . மனித உரிமை குழுக்களின் கூற்றுப்படி, 3,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானிய தேசத்திற்கு எதிராக அவர் சுமத்தியுள்ள உயிரிழப்புகள், சேதங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதியை நாங்கள் குற்றவாளி என்று கருதுகிறோம் என்று அவர் சனிக்கிழமை ஒரு மத விடுமுறையைக் குறிக்கும் உரையின் போது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கூறினார். இது ஒரு அமெரிக்க சதி என்று கூறிய காமெனி, அமெரிக்காவின் இலக்கு ஈரானை விழுங்குவது. இலக்கு ஈரானை மீண்டும் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது என்று மேலும் கூறினார். போராட்டங்களின் போது, ​​ஈரான் அரசாங்கம் பரவலான கொலைகளைத் தூண்டினால், அமெரிக்கா ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று டிரம்ப் பலமுறை கூறினார் . அந்த போராட்டங்கள் அன்றிலிருந்து தணிந்துவிட்டன. ஈரானில் நடந்த போராட்டங்களில் 3,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பதிவு 17 Jan 2026 7:02 pm

கிரீன்லாந்து தொடர்பான சர்ச்சை தீவிரமடைகிறது

கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இந்த மாதம் கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள பதட்டங்கள் அதிகரித்துள்ளன. வெள்ளிக்கிழமை, டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சுயராஜ்ய ஆர்க்டிக் தீவைக் கைப்பற்றும் தனது திட்டங்களை எதிர்க்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்தார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கு ஆதரவைக் காட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் இரு கட்சிக் குழு இரண்டு நாள் பயணமாக கோபன்ஹேகனுக்கு வருகை தரும் வேளையில் இந்த போராட்டங்கள் நடைபெற உள்ளன. அமெரிக்க மக்கள் அமெரிக்க ஜனாதிபதியின் பிராந்திய அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தூதுக்குழு கூறுகிறது. ஜெர்மனி உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு இராணுவ உளவுப் பணியில் ஐரோப்பியர்கள் கிரீன்லாந்திற்கு ஆதரவைக் காட்டியுள்ளனர்.

பதிவு 17 Jan 2026 7:02 pm

அதிமுக வாக்குறுதிகள்.. காபி பேஸ்ட் அரசியல்.. துரோகி பழனிசாமி.. வெளுத்து வாங்கிய ரகுபதி!

கடந்த தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேறாத நிலையில், இப்போது புதிய யோசனைகள் எதுவுமின்றி திமுக திட்டங்களையே காப்பியடிக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்து உள்ளார்

சமயம் 17 Jan 2026 6:57 pm

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல: நாடு தழுவிய போராட்டம் முன்னெடுப்பு

டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கையகப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் டென்மார்க் தலைநகரில் வீதிகளில் இறங்கினர். கோபன்ஹேகன் நகர மண்டபத்திற்கு வெளியே சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கடலாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் கொடிகளை அசைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு, கலாலித் நுனாத்! - கிரீன்லாந்தில் பரந்த ஆர்க்டிக் தீவின் பெயர் என்று கோஷமிட்டனர். கோபன்ஹேகனிலும், ஆர்ஹஸ், ஆல்போர்க், ஓடென்ஸ் மற்றும் கிரீன்லாந்து தலைநகர் நூக்கிலும் கிரீன்லாந்து சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்புகள் மற்றும் பேரணிகளில் பங்கேற்பதாக ஆயிரக்கணக்கான மக்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தனர். கிரீன்லாந்தின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த செய்தியை அனுப்புவதே இதன் நோக்கம்என்று டென்மார்க்கில் உள்ள கிரீன்லாந்தர்களின் சங்கமான உகுட் அதன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. கிரீன்லாந்தை கட்டுப்பாட்டில் எடுக்கும் அமெரிக்காவின் சட்டவிரோத திட்டங்களைஎதிர்த்து, இன்று பிற்பகல் கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் ஒரு சகோதரி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கிரீன்லாந்து கொடிகளை ஏந்தியபடி அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி செல்வார்கள். கோபன்ஹேகனில் நடைபெறும் பேரணி டென்மார்க் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு போராட்டம் நடைபெறவுள்ளது. கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் , மாலை 4:00 மணிக்கு (1500 GMT) தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர், இது கிரீன்லாந்தை கட்டுப்பாட்டில் எடுக்கும் அமெரிக்காவின் சட்டவிரோத திட்டங்களுக்கு எதிரானது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கிரீன்லாந்து கொடிகளை ஏந்தி அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். கிரீன்லாந்தில் குறைந்தது 900 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தனர். கிரீன்லாந்தில் 57,000 பேர் வரையில் வாழுகின்றனர்.

பதிவு 17 Jan 2026 6:44 pm

‘பிபிஎல் தொடரில் பாபர், ரிஸ்வான்’.. வங்கதேச தொடரில் பர்கான்: வரிசையாக அசிங்கப்படும் பாக்கி வீரர்கள்!

வங்கதேச பிரிமியர் லீக் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் டி20 அணி ஓபனர் பர்கான், அசிங்கப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. பர்கான் சமீப காலமாகவே தொடர்ச்சியாக சர்ச்சையில் மாட்டி வருகிறார்.

சமயம் 17 Jan 2026 6:43 pm

Vikatan : இந்தவாரம் தொடங்கப்பட்ட `புதிய'ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா? | முழுத் தொகுப்பு

விகடன் இணையதளத்தில் இந்த வாரம், தினம் தினம் `தொடர்' என புதியதாக 8 தொடர்களின் முதல் அத்தியாயம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நீங்க எதையாவது மிஸ் பண்ணிட்டீங்களா...? நோ ப்ராப்ளம். இங்கே முதல் வார தொடர்களின் தொகுப்பை காணலாம்..! அண்ணாவின் `முதல்’ வெற்றி முதல் களம் அண்ணாவின் `முதல்’ வெற்றி | முதல் களம் - 01 தமிழ்நாட்டில் 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவுக்கு கிடைத்த மகத்தான வெற்றியிலிருந்துதான் தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கியது என்பது கடந்த கால அரசியல் வரலாற்றை அறிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், திமுகவின் எழுச்சி மற்றும் அண்ணாவின் முதல் தேர்தல் வெற்றியின் பின்னணியில் தமிழக அரசியலின் அதிகம் அறியப்படாத இன்னொரு பக்கமும் உள்ளது - அது, கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி. இரு கட்சிகளும் பொதுவுடமை கருத்துகளையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியபோதிலும், கம்யூனிஸ்ட் கட்சி சறுக்கியது எங்கே, இதில், அண்ணாவின் பங்களிப்பு என்ன? அண்ணாவுக்கு முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்த 1957-ஆம் ஆண்டுத் தேர்தலின் சுவாரஸ்ய பக்கங்கள் இங்கே... க்ளிக்: அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01 தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு கூட்டணி சர்க்கஸ் தேமுதிக | விஜயகாந்த் | கூட்டணி சர்க்கஸ் 01 குழம்பி நிற்கும் காங்கிரஸ். ரீல் ஓட்டும் பிரேமலதா. 'மெகா கூட்டணி' என மணற் கோட்டை கட்டும் எடப்பாடி. கூட்டணி வலுவாக இருக்கிறது என தினசரி அலாரம் போல அலறும் திமுக. கூட்டணிக்காக காத்திருக்கிறது தவெக. கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தால் செம ரகளையாக இருக்கும். அதற்காகவே ஸ்பெசலாக வருகிறது  'கூட்டணி சர்க்கஸ்'  - கட்சிகளின் கூட்டணி கலாட்டாக்கள்!' க்ளிக்: தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01 'கன்னியம்மை' தெய்வமான கதை ஆங்காரிகளின் கதை ஆங்காரிகளின் கதை 01| கன்னியம்மை நாட்டார் தெய்வங்களின் தோற்றக்கதையில் பல்வேறு மாறுதல்கள் தோன்றினாலும், இன்றும் நெல்குதிருக்குள்ளும், தெரடுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கிற தெய்வங்களை கட்டியெழுப்பி அவைகளின் அவலங்களையும், கொடூரங்களையும் அறிந்து ஆராய வேண்டியது இக்காலத்தின் அவசியமாகிறது. அவ்வாறு வெகுசனம் அறியாத ஆங்காரிகளின் கதைகளை அறிவோம்! க்ளிக்: ஆங்காரிகளின் கதை 01: முண்டம்புள்ளி... பாவச்சோறு... நடுவீட்டுகாரங்க! - 'கன்னியம்மை' தெய்வமான கதை கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ ‘வாவ்’ வியூகம் ‘வாவ்’ வியூகம் | காமராஜர் கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான்  ‘வாவ்’ வியூகம் . க்ளிக்: கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 இது வளம் பெருக்கும் மேட்டூர் அணையின் கதை! அணை ஓசை அணை ஓசை | மேட்டூர் அணை மேட்டூர் அணை கட்டிய வரலாற்றை முழுமையாக பதிவு செய்து, பொறியாளர்களின் உழைப்பு, தொழிலாளர்களின் வியர்வை, இடம்பெயர்ந்த மக்களின் கண்ணீர், சட்டமன்ற விவாதங்கள், பொது நலத் திட்டங்கள் – அனைத்தையும் ஒன்றாகக் கூறும் வரலாற்றுப் பதிவுக்கு வாசகனை அழைக்கும் ஓர் அழைப்பு: “வருக, காவிரியோடு பயணிப்போம்!” அணை ஓசை : இது வளம் பெருக்கும் மேட்டூர் அணையின் கதை! - பகுதி 01 மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்! நினைவுச் சுவடுகள் : நினைவுச் சுவடுகள் 01 இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார்  பா. முகிலன் , தமிழக தேர்தல்களின்  நினைவுச் சுவடுகள்  தொடர் மூலம்! நினைவுச் சுவடுகள் :மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்! | பகுதி 01 கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! அரசியல் ஆடுபுலி 01 அரசியல் ஆடுபுலி 01 | 1977 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்... திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக வாய்ப்புள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை அதிமுகவின் சார்பாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது கட்சியை திமுகவுடன் இணைக்கப் போகிறார். இது போன்ற செய்திகள் அரசியல் பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் நடக்குமா?, இது சாத்தியமா? என்று நாமும் ஆச்சர்யத்தில் மூழ்கி இருப்போம். ஆனால் , அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் எதுவும் சாத்தியம். ஆட்சி அதிகாரம், பதவி கிடைத்திட, கொள்கை கோட்பாடுகள் ஓரங்கட்டி வைக்கப்பட்ட சான்றுகள் கடந்த கால அரசியலில் ஏராளம் கிடைக்கின்றன. 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01 Vote Vibes அண்ணா | Vote Vibes 02 தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது குறித்து தான் பார்க்க போகிறேம் `Vote Vibes' தொடரில்..! Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02

விகடன் 17 Jan 2026 6:40 pm

வள்ளியூர் அருகே பொங்கல் விளையாட்டுகள் கோலாகலம்: இளவட்டக்கல் தூக்கி அசத்திய பெண்கள்

திருநெல்வேலி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் நேற்று பொங்கல் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடத்தப்பட்டன. இதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. 45 கிலோ, 60 கிலோ, 95 கிலோ, 129 கிலோ எடை கொண்ட இளவட்டக் கற்களை தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். உரலை தலைக்கு மேலே […]

அதிரடி 17 Jan 2026 6:30 pm

எலான் மஸ்க் – ரயன்ஏர் மோதல்.. உலக விமானத் துறையில் பேசுபொருளான மஸ்க் சர்ச்சை!

ரயன்ஏர் விமானப் படையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட விமானங்களில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை நிறுவ முடியாது என ஓ’லீரி அறிவித்தார். ஆன்டென்னா பொருத்துவதால் விமானத்தின் எடை அதிகரித்து, காற்று இழுப்பு ஏற்பட்டு, எரிபொருள் செலவு உயர்வதாக அவர் விளக்கினார்.

சமயம் 17 Jan 2026 6:28 pm

டி20 உலகக்கோப்பை தொடரில் அபிஷேக் ஆக்ரோஷமாக விளையாடுவார்! சஞ்சய் பங்கர் ஓபன் டாக்!

டெல்லி : இந்திய அணியின் இடது கை தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் அணி விரும்பும் பயமற்ற, ஆக்ரோஷமான கிரிக்கெட் பாணியை பிரதிபலிக்கும் வீரர் என்று முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்த அபிஷேக் சர்மா, 859 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி பயமற்ற, ஆக்ரோஷமான டி20 கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறது என்றும், இதற்கு […]

டினேசுவடு 17 Jan 2026 6:08 pm

இணைப்பாடவிதான செயற்பாட்டால் யாழ் இந்துகல்லூரி மாணவன் படைத்த சாதனை!

யாழ்ப்பாணம் இந்துக்காலூரி மாணவரான செல்வன் கருணாகரன் திவாசவன் பிறக்கிருத்திய செயற்பாடுகளில் சாதித்தனூடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார் . இயன் மருத்துவ துறை (Physiotherapy ,University of Colombo பாடத்திற்கு தெரிவாகியிருந்த க.திவாசவன் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய மட்ட சாதனையாளர்கள் நேர்முகத்தேர்வின் பின்னர் ஊவா வெல்லச பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலதிக வாய்ப்பை பெற்றுக்கொடுத்தஇணைப்பாடவிதான செயற்பாடு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களிலும் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கான Z புள்ளியின் அடிப்படையில்தான் […]

அதிரடி 17 Jan 2026 6:04 pm

உடல், உள ரீதியில் நலிவுற்ற முதியோருக்கு – வசிப்பிடங்களுக்கு சென்று சுகாதார சேவைகள்

சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சுகாதாரத்துறை சமுதாய அமைப்புகளின் பங்கேற்புடன் பொருளாதார, உடல் மற்றும் உளவியல் ரீதியில் நலிவுற்ற முதியோருக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று உயர் தரத்திலான சுகாதார சேவைகள் வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார். முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி பிரதேசத்தில் முதியோருக்கான மருத்துவ முகாம் பெப்ரவரி மாதம் 6 ஆம்,7 ஆம் திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இது […]

அதிரடி 17 Jan 2026 6:01 pm

ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் உறவு: ஜனாதிபதி புபுட்டின் அதிரடி அறிவிப்பு!

ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் உறவு: ஜனாதிபதி புபுட்டின் அதிரடி அறிவிப்பு! ஐரோப்பிய நாடுகளுடன் தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க… The post ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் உறவு: ஜனாதிபதி புபுட்டின் அதிரடி அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 5:41 pm

தாயகம் திரும்பும் இந்தியர்கள்.. கவலைக்கிடத்தில் ஈரான் பாதுகாப்பு.. அரசின் தீவிர நடவடிக்கை!

ஈரானில் நடைபெறும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

சமயம் 17 Jan 2026 5:41 pm

புதுச்சேரி: ஆரோவில்லில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி

ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

விகடன் 17 Jan 2026 4:54 pm

விஜய் - காங்கிரஸ் கூட்டணியா? டெல்லியில் முக்கிய ஆலோசனை... வெயிட்டிங்கில் தவெக தொண்டர்கள்!

திமுக–காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு மற்றும் ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியங்களும் காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் திமுகவுடன் தொடருமா அல்லது புதிய அரசியல் பாதையை தேர்வு செய்யுமா என்ற கேள்வி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 17 Jan 2026 4:48 pm

தமிழகத்தில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் –வானிலை மையம் தகவல்!

சென்னை :வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 17-01-2026 முதல் 21-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23-01-2026: கடலோர […]

டினேசுவடு 17 Jan 2026 4:47 pm

Soori: பிரச்னை உருவாக்குவது சரியானது அல்ல! - விமர்சித்தவருக்கு எக்ஸ் பக்கத்தில் சூரி தந்த பதில்!

நடிகர் சூரி தற்போது 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண நடிகர் சூரி சென்றிருந்தார். அங்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்திய சூரியை சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர் விமர்சித்திருந்தார். அந்த விமர்சனத்திற்கு பதில் ஒன்றைக் கொடுத்து சூரி மறுபதிவிட்டிருக்கிறார். நடிகர் சூரி அந்தப் பதிவில் அவர், தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை, அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது. இன்று சினிமாவில் Content தான் King. அதைத் தீர்ப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல. அதைப் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான். நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும், இல்லைன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை. எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின்… — Actor Soori (@sooriofficial) January 17, 2026 இதையடுத்து சூரியை விமர்சித்துப் போட்ட பதிவைப் பதிவிட்டிருந்தவரே நீக்கி சூரியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதற்கு சூரி, தம்பி. தன் தவறை உணர்ந்து அதை ஒத்துக்கொள்ளும் மனசு எப்போதும் மதிப்புக்கு உரியதுதான். வேடிக்கை என்ற பெயரில்கூட பிறரின் பெயர், படம் அல்லது நிழலைப் பயன்படுத்திப் பிரச்சினை உருவாக்குவது சரியானது அல்ல. அது நமக்கும், அவர்களுக்கும் மதிப்பைக் கெடுக்கும். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமும் ஒரு காரணமும் உண்டு. அதை மறக்கும் சொற்களும் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக் குறிப்பிட்டு ரிப்ளை கொடுத்திருக்கிறார்.

விகடன் 17 Jan 2026 4:46 pm

ஒருவரை தாக்கி சித்திரவதை புரிந்த பொலிஸ் பரிசோதகருக்கு சிறைத்தண்டனை

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் பரிசோதகர், 2020 ஆம் ஆண்டில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போதே இவ்வாறு நபரைத் தாக்கி காயப்படுத்தியிருந்தார். தற்போது சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குறித்த நபருக்கு 7 வருட சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு 17 Jan 2026 4:43 pm

யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும் காற்சட்டடையை ஒத்த ஆடையை அணிந்திருந்தவரே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

பதிவு 17 Jan 2026 4:42 pm

`10 ரூபாய்க்கு பசி தீரும் அளவுக்கு சாப்பாடு!' - நெகிழ வைக்கும் சேலம் தம்பதியின் கதை

விலைவாசி போற நிலைமையில, 10 ரூபாய்க்கு சாப்பாடுனு யாராவது சொன்னா எப்படி இருக்கும். அதெல்லாம் சாத்தியம் இல்லனு சொல்லுவோம்... 10 ரூபாய்க்கு ஒரு தம்பதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாப்பாடு கொடுத்து வர்ராங்கானு கேள்விபட்டா, அவங்கள எப்படி சந்திக்காம இருக்க முடியும்.. சேலம், செவ்வாய் பேட்டையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘பத்து ரூபாய் சாப்பாட்டு கடை’யை நடத்திவரும் தம்பதியினரான ரவி தங்கதுரை, விஜயலட்சுமி அவர்களை நேரடியாக சென்று சந்தித்தோம்... ``எதற்காக இந்த பத்து ரூபாய் சாப்பாட்டு கடை? “இந்த சுற்றுவட்டாரத்தில் நிறைய கூலி தொழிலாளர்கள் இருக்காங்க. தினசரி சம்பளத்தில வயிறு நிறைய சாப்பிட முடியாத நிலை. ஒரு டீயும், ஒரு போண்டாவும் சாப்பிட்டு பசியை அடக்கிக்கொள்றத நான் கண்கூடாக பார்த்தேன்,” என்கிறார் ரவி தங்கதுரை. ஒரு போட்டோகிராபராக இருக்கும் அவர், நண்பர்களுடன் சேர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்து வந்திருக்கிறார். பத்து ரூபாய் சாப்பாட்டு கடை ஆனால், அதுவே அவருக்குள் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. “நாம அன்னதானம்னு சொல்லிட்டு மக்களை சோம்பேறியாக்குறோமா? இலவசம்னா உணவு வீணாகுதே… அந்த மன வருத்தத்தோட வெளிப்பாடுதான் இந்த பத்து ரூபாய் சாப்பாட்டு கடை.” இந்த கடை தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இயங்குகிறது. பத்து ரூபாய் சாப்பாட்டு கடை `10 ரூபாய் கொடுத்தால், பசி தீரும் அளவுக்கு உணவு' மூத்த குடிமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்,கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களிடமிருந்து ஒரு ரூபாய்கூட வாங்கப்படுவதில்லை. இன்று ஒரு நாளைக்கு சுமார் 400 பேர் இங்கு உணவருந்துகிறார்கள். ` பல வகை உணவுகள் ஏன்?' “பசியை போக்க ஏதாவது ஒரு உணவு மட்டும் கொடுத்தா போதும் என்பதில்லை. நம்ம வீட்ல எத்தனை வகை சாப்பாடு சாப்பிடுறோமோ, அதே மாதிரி இருக்கணும்னு நினைச்சோம்,” என்கிறார் ரவி. அதன் விளைவாக, ஒரு நாளைக்கு 5 வகை உணவுகள், வாரத்தில் ஒரு நாள் முழு ‘மீல்ஸ்’. ரவி தங்கதுரை, விஜயலட்சுமி `இந்த விலைவாசி உயர்ந்து வரும் காலத்தில் இது எப்படி சாத்தியம்?' “இது பிஸ்னஸ் இல்ல… சேவை. அதனால்தான் இந்த கடைக்கு நாங்க எந்த பெயரும் வைக்கல.” தேவை உள்ளவர்களையும், கொடுக்க தயாராக இருப்பவர்களையும் இணைப்பதே எங்களின் முறை. எங்கள் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் இருந்து ஒரு சிறு பகுதியை இதற்காக ஒதுக்க முடிவு செய்து தொடங்கினோம். இன்று, பிறந்தநாள், திருமண நாள், நினைவு நாள் என்று பலர் தானாகவே உணவுக்கு பொறுப்பு ஏற்க முன்வருகிறார்கள். உணவை அன்போடு பரிமாறிக் கொண்டிருந்த திருமதி. விஜயலட்சுமி கூறுகிறார் ! “சின்ன வயசுல இருந்தே சமையல் மீது ரொம்ப ஆர்வம். மெஸ் வைக்கலாம்னு யோசிச்சபோ தான், என் கணவர் இந்த எண்ணத்தை சொன்னார். பணத்தை தாண்டி, நம்ம திறமை மக்களின் பசியை போக்க உதவுனா அதைவிட சந்தோஷம் வேற என்ன?” இவர் மற்றும் இந்தப் பகுதியில் இருக்கும் நான்கு மகளிர் இணைந்து, தினமும் திருப்தியுடன் சமையல் பணியை செய்து வருகிறார்கள். பத்து ரூபாய் சாப்பாட்டு கடை பத்து ரூபாய் சாப்பாட்டு கடை பத்து ரூபாய் சாப்பாட்டு கடை பத்து ரூபாய் சாப்பாட்டு கடை பத்து ரூபாய் சாப்பாட்டு கடை ஒரு கனவு… இந்த தம்பதியினர் இருவரும், “இதுதான் எங்களுடைய பிறவி பலன்” என்ற நம்பிக்கையோடு வாழ்கிறார்கள். “ஒரு நாள் இந்த உலகமே பசி இல்லாத உலகமா மாறணும். அப்போ இதுபோன்ற கடைகளும், அன்னதானமும் தேவையில்லாம போகணும்.” அந்த நம்பிக்கை, அவர்களின் முகத்தில் தெளிவாக தெரிந்தது. உணவருந்த வந்த மக்களும், உழைத்த காசு கொடுத்து , வயிறு நிறைய, சுவையாக தான் சாப்பிடுகிறோம் என்ற திருப்தியையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தினர்.!

விகடன் 17 Jan 2026 4:38 pm

Gen Z தலைமுறை பாஜகவை நம்புகிறதா? பாஜகவின் அரசியல் வளர்ச்சி எப்படி? பகீர் கிளப்பும் மோடி!

மால்தா கூட்டத்தில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை, வரவிருக்கும் மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல் சூழலை மேலும் சூடுபடுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

சமயம் 17 Jan 2026 4:35 pm

முக்கியச் செய்தி: கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப்பின் அதிரடி எச்சரிக்கை!

கிரீன்லாந்து தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சிக்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத்… The post முக்கியச் செய்தி: கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப்பின் அதிரடி எச்சரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 4:34 pm

ஏன் இலவசத்தை அறிவிக்கிறீர்கள்? –இபிஎஸ்க்கு சீமான் கேள்வி!

சென்னை :நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இலவசங்கள் மூலம் எந்தவிதமான நீடித்த வளர்ச்சியும் ஏற்படாது எனக் கூறிய அவர், தமிழ்நாடு ஏற்கனவே கடன் சுமையில் சிக்கியுள்ள நிலையில், மீண்டும் மீண்டும் இலவச அறிவிப்புகள் தேவையா என்ற கேள்வியை எழுப்பினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பில் புதுமை எதுவும் இல்லை […]

டினேசுவடு 17 Jan 2026 4:18 pm

உயர்தர மாணவர்களுக்கான செய்முறைப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) மனைப்பொருளியல் (Home Economics) பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவித்தலுக்கமைய, உரிய செய்முறைப் பரீட்சையானது வரும் 2026 ஜனவரி 24 ஆம் திகதி முதல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 42 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் […]

அதிரடி 17 Jan 2026 4:15 pm

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றைய தினம் சனிக்கிழமை நினைவு… The post பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 4:14 pm

கொடூரமாக சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறை

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி, கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகரவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 10,000 ரூபா அபராதம் குறித்த பொலிஸ் பரிசோதகர், 2020 ஆம் ஆண்டில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போதே இவ்வாறு நபரைத் தாக்கி காயப்படுத்தியிருந்தார். தற்போது சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் […]

அதிரடி 17 Jan 2026 4:09 pm

எலான் மஸ்க்கின் ‘Starlink’-க்கு சவால்! விண் வெளியில் சீனாவின் பிரம்மாண்ட ‘மெகா’திட்டம்!

விண்வெளி ஆதிக்கத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள சீனா, சுமார் 2,00,000 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தனது அதிரடித் திட்டத்தை… The post எலான் மஸ்க்கின் ‘Starlink’-க்கு சவால்! விண் வெளியில் சீனாவின் பிரம்மாண்ட ‘மெகா’ திட்டம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 4:08 pm

முல்லைத்தீவில் பெரும் சோகம் ; 19 வயது இளைஞன் யானை தாக்கி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பொன்முடி சுயந்தன் என்பவராவார். வழமை போல விவசாய நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல விதமான கஷ்டங்களும், இயற்கை அனர்த்தங்களும் சூழ்ந்த […]

அதிரடி 17 Jan 2026 4:03 pm

வடக்கின் பெற்றோர்கள் அன்றும், இன்றும் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது; யாழில் ஜனாதிபதி

வடக்கின் பெற்றோர்கள் அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த நிலையில் , இன்று போதைப்பொருள் காரணமாக தமது பிள்ளைகள் குறித்து அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வடக்கு மாகாண நிகழ்ச்சி நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் ‘அகன்று செல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. அதிகாரத்தை இழந்த […]

அதிரடி 17 Jan 2026 3:58 pm

குடிநீரிலும் பிரச்சினையா? இந்தூர் மக்களைச் சந்தித்த ராகுல்.. அரசு பொறுப்பேற்க வலியுறுத்தல்!

குடிநீர் பிரச்சினையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும் என மத்தியப் பிரதேச அரசு அறிவித்து உள்ளது.

சமயம் 17 Jan 2026 3:51 pm

யாருடன் கூட்டணி? “உரியவர்கள் அறிவிப்பார்கள்”…டிடிவி தினகரன் பதில்!

சென்னை :மகாராஷ்டிராவில் மும்பை உட்பட பல மாநகராட்சிகளுக்கான தேர்தல் நாளை (ஜனவரி 15) நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைவர்களின் முக்கிய கூட்டம் வரும் ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகம் அருகே நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும், கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்பது அப்போது தெரியவரும் என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் பிரதமர் […]

டினேசுவடு 17 Jan 2026 3:27 pm

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி 2026: 15 வருஷ அதிமுக கோட்டை… திமுக நிறுத்தும் வேட்பாளர் யார்?

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரி தொகுதியில் யார், யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், திமுகவிற்கு வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 17 Jan 2026 3:23 pm

அன்று அம்பேத்கர் தோற்றார்; ஆனால் அவரின் அந்த வாதங்கள் இன்று சட்டமாகியிருக்கின்றன - ஷாலின் மரியா

வாசகர்களின் வரவேற்புடன் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், பல்வேறு புதிய புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இன்று காலச்சுவடு பதிப்பக அரங்கில் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான ஷாலின் மரியா லாரன்ஸ் எழுதிய ‘பொம்பளைங்க பஞ்சாயத்து’ நூல் வெளியானது. இந்நூலை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான சிவகாமி வெளியிட்டார். 49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி தன்னுடைய புத்தகம் குறித்து எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் விகடனிடம் பேசுகையில், “இது எனது நான்காவது புத்தகம். இதில் இரண்டு புத்தகங்கள் தீவிர பெண்ணியத்தைப் பேசும் நூல்கள். இப்போது வெளியாகும் இந்தப் புத்தகம் கூடுதல் சிறப்பானது என்பதற்குக் காரணம், இதில் நான் அம்பேத்கரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரையும் சேர்த்து எழுதியிருக்கிறேன். இதுவரை என் புத்தகங்களில் அம்பேத்கரைச் சேர்க்காதது எனக்கே ஒரு அவமானமாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு இவ்வளவு நல்லது நடந்ததற்குக் காரணமே அம்பேத்கர்தான். அம்பேத்கர் அமைச்சராக இருந்து ராஜினாமா செய்ததும் பெண்களுக்காகத்தான். இந்தப் புத்தகம் பல விஷயங்களைப் பேசுகிறது. மோசமான திருமணங்களில் இருந்து, நச்சுத்தன்மை நிறைந்த காதல் உறவுகளில் இருந்து பெண்கள் எப்படி வெளியில் வர வேண்டும் என்பதையும் இதில் எழுதியிருக்கிறேன். காதல், காமம் என எல்லா உறவுகளிலும் சுயமரியாதை அவசியம். இந்திய அரசியலமைப்பு ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கிறது. Book Fair: சாதி, நிலம், பொருளாதாரம் போன்றவற்றையும் பேசுவதுதான் தலித் பெண்ணியம்- எழுத்தாளர் சிவகாமி திருமணப் பலாத்காரம் இன்றுவரை குற்றமாகக் கருதப்படவில்லை. ஆனால் அம்பேத்கர் அப்போதே அது குற்றம் என்று கூறியவர். இந்தப் புத்தகம் அம்பேத்கரை ஒரு பெண்ணியவாதியாக மறு அறிமுகம் செய்கிறது. ஆண்களும் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு அம்பேத்கர். அவர் பெண்களை அரசியல்படுத்தினார். இன்றைய அரசியல் தலைவர்கள் பெண்களைச் சேர்க்காமல் எப்படி அரசியல் பேச முடியும் என்று அம்பேத்கரைக் காட்டி கேள்வி கேட்கலாம். எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் பெரியாரும் பெண்ணியம் பேசினார், அவரும் முக்கியமானவர்தான். ஆனால் சட்டங்களை இயற்றி, அவற்றை நடைமுறையில் கொண்டு வந்தவர் அம்பேத்கர். உலகம் முழுவதும் கருக்கலைப்பு உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் சட்டபூர்வமாகக் கருக்கலைப்பு செய்ய முடிகிறது. அதற்குக் காரணம் அம்பேத்கரும் இந்திரா காந்தியும்தான். பெரியாரை பெண்ணியவாதியாக நிறையப் பேசியிருக்கிறோம். இப்போது அம்பேத்கரைப் பேச வேண்டும். Book Fair: ``எழுத்தின் பலம் அதன் எளிமையில் தான் இருக்கிறது! - எழுத்தாளர் கீதா இளங்கோவன் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களைப் பார்த்துதான் அம்பேத்கர் எட்டு மணி நேர வேலை நேரம் முதல் மகப்பேறு மசோதா வரை கொண்டு வந்தார். பெண்களுக்கான சட்டங்களை அம்பேத்கர் கொண்டு வரவில்லை என்றால், இந்தியா ஒரு ஆப்கானிஸ்தான் அல்லது இன்னொரு ஈரான் ஆகி இருக்கும். சரோஜினி நாயுடு கூட, அம்பேத்கர் குடும்ப அமைப்பை ஒழிக்கிறார் என்று விமர்சனம் செய்தார். ஒருமுறை, ஓரினச்சேர்க்கை ஜோடியின் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டபோது, அதற்கு எதிராக அம்பேத்கர் வாதாடினார். அன்றைக்கு அவர் தோற்றுவிட்டார். ஆனால் அவர் முன்வைத்த வாதங்களை அடிப்படையாக வைத்துதான் இன்று செக்ஷன் 377 குற்றமற்றதாக அறிவிக்கப்பட்டது. பெண்கள் வேலை செய்யும் இடங்களில் கழிப்பறையைக் கட்டாயமாக்கியதும் அம்பேத்கர்தான். இவ்வளவும் செய்தது அம்பேத்கர்தான் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் 1950லேயே ஒருவர் இவ்வளவு செய்ய முடிந்தால், 2026ல் நம்மால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். நமக்கான சட்டங்கள் உருவாக வேண்டும். உதவித்தொகை மட்டும் போதாது. இன்றைய பெண்ணியம் கேட்கும் பல கேள்விகளுக்கான பதில்கள் வரலாற்றிலேயே இருக்கின்றன. பெரியாரே ஒரு இடத்தில், ‘அம்பேத்கர்தான் எனது தலைவர்’ என்று கூறியிருக்கிறார். காரணம், இருவரும் சமத்துவத்தை நம்பியவர்கள். ஆனால் அம்பேத்கர் சட்டமியற்றி, சமத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒரு படி முன்னே சென்றவர். மகாத்மா புலேவுக்குப் பிறகு பெண்களுக்காக இவ்வளவு உறுதியாக பாடுபட்டவரை நான் பார்க்கவில்லை” என்றார்

விகடன் 17 Jan 2026 3:09 pm

'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02

தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது குறித்து தான் பார்க்க போகிறேம் `Vote Vibes' தொடரில்..! திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை! Vote Vibes 02 இன்றைய தேதிக்கு தேர்தல் அரசியலில் திமுக ஒரு மாபெரும் சக்தி. ஆனால், 1956 இல் அப்படியொரு சம்பவம் மட்டும் நடந்திடாமல் போயிருந்தால் திமுக தேர்தலிலேயே போட்டியிட்டிருக்க மாட்டார்கள். திமுவை தேர்தல் பாதைக்கு அழைத்து வந்த அந்த சம்பவம் என்ன தெரியுமா? அறிஞர் அண்ணா 1949 செப்டம்பர் 17 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் பெரியாரின் பிறந்தநாளில் திமுக என்கிற கட்சியைத் தொடங்கினார் அண்ணா. 1952 இல் சுதந்திரத்துக்கு பிறகு மதராஸ் மாகாணத்துக்கான முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்திருந்தது. திமுக தோற்றத்துக்குப் பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே அந்த கட்சி போட்டியிடவில்லை. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சிக்கும் காமன்வீல் கட்சிக்கும் திமுக தங்களின் ஆதரவை தெரிவித்தது. 1957 இல் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மதராஸ் மாகாணம் தயாராகி வந்தது. அந்தத் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்கிற குழப்பம் திமுகவுக்குள் நிலவியது. திருச்சி மாநாடு 1956 இல் திருச்சியில் திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு நடந்திருந்தது. அந்த மாநாடு மைதானத்தின் நுழைவு வாயிலில் அண்ணா இரண்டு பெட்டிகளை வைத்தார். திமுக தேர்தலில் போட்டியிடலாம் என நினைப்பவர்கள் ஒரு பெட்டியிலும் போட்டியிட வேண்டாம் என்பவர்கள் ஒரு பெட்டியிலும் வாக்களிக்க வேண்டும் என்றார். மாநாட்டு திடலிலேயே வாக்குகள் எண்ணப்பட்டன. திமுக தேர்தலில் போட்டியிட வேண்டுமென பெருவாரியாக தொண்டர்கள் வாக்களித்தனர். மாநாட்டின் மேடையிலேயே திமுக தேர்தலில் போட்டியிடுமென அண்ணா அறிவித்தார். அண்ணா, கருணாநிதி 1957 இல் நடந்த தேர்தலில் 15 தொகுதிகளில் திமுக வென்றது. காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணாவும் குளித்தலையில் இருந்து கருணாநிதியும் வென்று முதல் முறையாக சட்டமன்றத்துக்கு சென்றார்கள். 1962 தேர்தலில் 50 இடங்களை திமுக வென்றது. எதிர்க்கட்சி அந்தஸ்த்திலும் அமர்கிறது. 1967 தேர்தலில் பெரும்பான்மையாக வென்று ஆட்சியையும் பிடிக்கிறது. அண்ணாதுரை மதராஸ் மாகாணத்தின் முதல்வர் ஆனார். மதராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது. அப்போது இருந்து இப்போது வரைக்கும் தமிழக அரசியல் திமுகவை மையப்படுத்தி இருப்பதற்கும் தேர்தல் அரசியலில் திமுக மாபெரும் சக்தியாக இருப்பதற்கும் 1956 இல் நடந்த திருச்சி மாநாடுதான் மிக முக்கிய காரணம்.! Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்

விகடன் 17 Jan 2026 3:06 pm

விஜய், அஜித், சூர்யா... இந்தாண்டிலும் வரிசை கட்டி நிற்கும் ரீரிலீஸ் படங்கள்!

விஜய்யின் 'கில்லி' ரீ ரிலிஸ், தமிழ் சினிமா ரீ ரிலிஸில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களும் ரீ ரிலீஸ் வரிசைகட்ட ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் மறுவெளியீட்டுக்கு வரிசை ரெடியாகி வருகின்றன. மௌனம் பேசியதே நூறாண்டு கால தமிழ் சினிமா எத்தனையோ டிரெண்ட்களை பார்த்திருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்த்திராத டிரெண்ட் ரீ ரிலீஸ் டிரெண்ட். ஒரு சமயத்துல திடீரென சிவாஜியின் 'வசந்த மாளிகை' வெளியாகும்.. உடனே போட்டியாக எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை திரையிடுவார்கள். இரண்டையுமே அதனதன் ரசிகர்கள் மட்டுமே பார்த்துவிட்டு கடந்திருப்பார்கள். பழைய படங்களை இந்த தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் விதமாக ரீரிலீஸ் படங்கள் இருந்து வருகின்றன. விஜய்யின் 'தெறி' அஜித்தின் 'மங்காத்தா', மாதவனின் 'தம்பி', சூர்யாவின் 'மௌனம் பேசியதே' என பல படங்கள் மறு வெளியீட்டிற்கு வரிசை கட்டுகின்றன. மாதவன் இந்த பொங்கலுக்கு விஜய்யின் 'ஜன நாயகன்' வெளியாகாததால், 'தெறி' படத்தை பொங்கலுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், கார்த்தி, ஜீவா படங்களும் வெளியாகவே, குறைந்த அளவிலான திரைகளே கிடைக்கும் என்பதால் 'தெறி' ரீரிலீஸை ஒத்தி வைத்துள்ளனர். அஜித்தின் 'மங்காத்தா' ரீரிலீஸ் பேச்சு சில வருஷங்களாகவே இருந்து வந்தது. ஆனால் சரணின் 'அட்டகாசம்' வெளியானது. இப்போது 'மங்காத்தா'வை இம்மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித் சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடித்த 'தம்பி' படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. 20வது ஆண்டையொட்டி 'தம்பி'யை ரீரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். ''தம்பி'யில் இயக்குநர் சீமான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறேன். அதனால் தான் வேறொரு பரிமாணத்தை கொடுக்க முடிந்தது'' என மாதவனின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் தான் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தை ரீரிலீஸ் செய்திருந்தனர். இந்நிலையில் அமீரின் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான 'மௌனம் பேசியதே'வையும் ரீரிலீஸ் செய்ய உள்ளனர். 20 ஆண்டுகளை கடந்து விட்ட 'மௌனம் பேசியதே' பாடல்களுக்காகவும் பெயர் பெற்றதோடு, இயக்குநராக அமீருக்கும் பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படமானது. இந்த போட்டியில் வெள்ளி விழா நாயகன் ராமராஜனின் 'கரகாட்டக்காரன்' படமும் மீண்டும் திரையை தொடவிருக்கிறது. இப்போது டிஜிட்டலைஸ்டு செய்துவிட்டனர். தகுந்த நேரத்தில் படத்தை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். ராமராஜன், கனகா ரீ ரிலீஸ் படங்கள் போட்டி போடுவதால் சின்ன பட்ஜெட் படங்களின் இயக்குநர்கள் கலக்கத்தில் உள்ளனர். ''சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களில் ஒரு ஷோ மட்டுமே கொடுக்கறாங்க. அதுவும் ஆடியன்ஸுக்கு வசதி இல்லாத நேரத்தில் ஷோக்களை போடுறாங்க. ஒரு படம் நல்ல படம் என்று பெயர் எடுப்பதற்குள் அந்த படத்தை தியேட்டரில் இருந்தே தூக்கிடுறாங்க. இப்படியொரு நிலை இருக்கும் சூழலில், பழைய படங்களையே தேடித் தேடி திரையிட்டால், சின்ன பட்ஜெட் படங்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். எங்க மீதும் கருணை காட்டுங்க!'' என்ற குரல்களும் வழக்கம் போல ஒலிக்கத்தான் செய்கிறது.

விகடன் 17 Jan 2026 3:02 pm

‘முன்பு ரிஸ்வான்’.. இப்போ பாபர் அசாம்: பிபிஎல் தொடரில் தொடர்ந்து அசிங்கப்படும் பாகிஸ்தான் வீரர்கள்!

தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடர், உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. காரணம், தொடர்ச்சியாக பாகிஸ்தான் வீரர்களை அசிங்கப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமயம் 17 Jan 2026 3:01 pm

BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!

இந்த எபிசோடில் சாண்டி + கவின் என்ட்ரி, ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. சீசன் 3-ல் நிகழ்ந்த ஜாலியான சம்பவங்கள் நினைவில் வந்து போயின.  திவாகர் அபாண்டமாக வார்த்தைகளை இறைக்கிறார் என்பது தெரிந்தும், வினோத் மற்றும் பிரவீன்ராஜ் திவாகரை provoke செய்வது தொடர்கிறது. இதன் விளைவுகள் பார்க்க ரசிக்கும்படியாக இல்லை.  BB TAMIL 9 DAY 103 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 103 ‘இன்னமும் மூன்றே நாட்கள்’ என்கிற countdown அறிவிப்பு வெளியே இருக்க, ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது.   காலையிலேயே திவாகரை ஒரண்டை இழுக்க ஆரம்பித்தார் வினோத். “ஹேப்பி மாட்டுப் பொங்கல். அதை குளிக்க வெச்சு கூப்பிட்டுட்டு வாங்க.. கொம்புல கட்ட ரிப்பன்லாம் ரெடியா?” என்று பிரவீன் ராஜூம் இதில் இணைந்து கொண்டார். கலையிடம் ஜாடையாக சொல்வது போல இந்தக் கிண்டல் நிகழ்ந்தது.  பொறுத்துப் பார்த்த திவாகர், வெறி கொண்ட வேங்கையாக பாய்ந்து வந்தார். திவாகரை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலையில் துண்டு போட விரும்பும் தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியை அவசியம் பார்க்க வேண்டும்.  ‘புலி உறுமுது. இடி இடிக்குது’ பாடல் பின்னணியில் ஒலிக்காத குறையாக வேகமாக வந்த திவாகர், கையை ஓங்கி “மதுரைக்காரன் அடி எப்படி இருக்கும்ன்னு தெரியும்ல. அவ்ளதான் பார்த்துக்க’ என்று மிரட்ட ‘அய்யோ.. பயமா இருக்குதுப்பா’ என்கிற மாதிரி வினோத் பாவ்லா செய்தார். பிக் பாஸ் வேறு உள்ளே புகுந்து ‘திவாகர் மைக்கை ஒழுங்கா மாட்டுங்க’ என்று சொல்லி திவாகரின் ஆக்ஷன் மோடில் தண்ணீர் ஊற்றினார்.  மக்களைக் கூட்டி அமர வைத்தார் பிக் பாஸ். (இதற்கே எத்தனை நேரம் ஆயிற்றோ?!) நகைச்சுவை முடிந்த பிறகு ஆக்ஷன் வர வேண்டுமே? ‘முரண்பாடுகளின் தொகுப்பு’ என்று லேபிள் ஒட்டி வீடியோவை ஒலிபரப்ப ஆரம்பித்தார்.  BB TAMIL 9 DAY 103 சண்டைக் காட்சி வீடியோவின் நடுவிலேயே சண்டை! நியாயமாக இந்த வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால், ஒட்டு மொத்த சீசனின் பெரும்பாலான பகுதியை நாள் கணக்கில் ஓட்ட வேண்டும். இந்த சீசனில் அத்தனை சண்டைகள். என்றாலும் அதில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பினார்கள். நீண்ட நாள் கழித்து தலைவி பாருவின் அலப்பறையைப் பார்த்த அவரது ரசிகர்கள் கண்கலங்கி நெகிழ்ந்திருப்பார்கள்.  ‘நட்பு’ வீடியோவில் என் முகம் ஒருமுறை கூட வரவில்லை என்று கலங்கிய திவ்யாவிற்கு பெரிய ஆறுதல். ‘சண்டை’ வீடியோவில் பல முறை வந்தார். தான் சண்டையிட்ட காட்சிகளைப் பார்த்து ரம்யா வெட்கத்தில் தலைகுனிந்தார். வீட்டில் பாரு இருந்திருந்தால் இன்னமும் ரகளையாக இருந்திருக்கும்.  மக்கள் சண்டை வீடியோ வைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் ஒரு சண்டை வந்ததுதான் காமெடி. திவாகருக்கும் ரம்யாவிற்குமான ஒரு சண்டை டிவியில் ஒளிபரப்பான போது, ‘வாத்தியார்’ படத்தைப் பார்த்து கத்தும் ரசிகன் மாதிரி ‘திவாகரை அப்படியே லெஃப்ட்ல ஒண்ணு போடு ரம்யா’ என்கிற மாதிரி வினோத் குஷியாக கத்த, திவாகருக்கு கோபம் வந்து பீப் வார்த்தைகளை இறைத்தார். வினோத் பதிலுக்கு துப்புவது போல் காட்ட, அதற்கு பதிலடியாக திவாகரும் துப்ப, பாவம் சம்பந்தமேயில்லாமல் பக்கத்திலிருந்த பிரஜினின் மீது எச்சி பட்டு விட்டது. ‘த்தூ.. த்தூ..’ சண்டையில் மாட்டிக் கொண்டது பிரஜன். BB TAMIL 9 DAY 103 திவாகர் - வினோத் - த்தூ.. த்தூ.. துப்பி சண்டை வீடியோ முடிந்ததும் பிரஜின் இந்த ‘எச்சி’ சண்டையைப் பற்றி ஆவேசமாக பஞ்சாயத்து எழுப்ப திவாகருக்கும் பிரஜனுக்கும் முட்டிக் கொண்டது. “நாம இன்னிக்கு சாயந்திரம் போயிடுவோம். ஃபைனலிஸ்ட் கொண்டாட்டமா இருக்கட்டும். நாம் என்ன விதைக்கிறோமோ, அதுதான் வரும்” என்றெல்லாம் பிரஜன் உபதேசம் செய்ய ‘ஊத்தப்பம்’ காமெடி மாதிரி “அதை அவன் கிட்ட சொல்லு” என்று சுருக்கமாக எதிர்கொண்டார் திவாகர்.  பெரும்பாலான சமயங்களில் வினோத் வம்பிழுப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. திவாகர் அதற்கு ஓவர் ரியாக்ட் செய்கிறார். உக்கிரமான சண்டையின் நடுவே ‘ப்ரோ.. ஆப்பிள் ஒண்ணை அவன் கையில் கொடுத்தா கம்முன்னு இருக்கப் போறான்.. இதுக்கு ஏன் டென்ஷன் ஆவறீங்க?” என்று வினோத் சண்டையைக் கலைத்தது காமெடி.  பிரஜன் திவ்யா நட்பைப் பற்றி சான்ட்ரா பொசசிவ் ஆனாரா என்று அவர்களுக்குள் ஒரு மினி பஞ்சாயத்து ஆரம்பித்தது. “வியானாவும் ரம்யாவும் இதைப் பத்தி சொன்னாங்கள்ல..” என்று பிரஜன் ஆரம்பிக்க “ஆமாம். அவங்க சொல்லித்தான் தெரியும். வேணுமின்னா அவங்களையே கூப்பிடலாம்” என்று திவ்யா தொடர “நேரா கேட்டா ஒத்துக்க மாட்டாங்க” என்று பிரஜன் மறுக்க.. இந்தப் பஞ்சாயத்து அதற்குள் அணைந்து போனது. வாசலில் பாட்டு சத்தம் கேட்டதுதான் காரணம்.  திவ்யாவிடம் மிகவும் அனுசரணையாக பிரஜன் நடந்து கொண்டதற்கு சந்தேகப்பட்டு சான்ட்ரா வெடித்த காட்சிகளை நாமே பார்த்தோம். பிறகு ஏன் இதை மழுப்ப நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாவம் பிரஜன். சான்ட்ரா ஏற்படுத்தி வைத்திருக்கும் கறைகளை கழுவியே அவரது காலம் முடிந்து விடும் போலிருக்கிறது.  BB TAMIL 9 DAY 103 சாண்டி - கவின் என்ட்ரி - குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா பக்தியும் தியானமும் கலந்த பாணியில் ‘குருவே சரணம்’ என்கிற பாடல் ஒலித்த போது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘குருநாதா சரணம்’ என்று வந்த போது பிடித்து விட்டார்கள். வந்தவர் சாண்டி. தனது சிஷ்யனை நீண்ட காலம் கழித்துப் பார்க்கும் செல்லக் கோபத்தில் தோப்புக் கரணம் போட வைத்தார் பிக் பாஸ். பிறகுதான் ‘சிஷ்யா’ என்று அழைத்தார். “உங்கள் வெற்றியைப் பார்த்து பெருமை’ என்று பெருமிதம் கொண்டார்.  சபையைக் கூட்டி அமர வைத்த சாண்டியால், திவாகரின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘வாயை மூடி தொண்டைக்குள் சிரிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்’ என்றாலும் அடுத்த சில நிமிடங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டார் திவாகர். “அடுத்த படத்துல வில்லனா நடிக்கறேன். அதுக்கான டிப்ஸ் நீங்கதான் தரணும்” என்று சாண்டி கிண்டலடித்ததை சீரியஸாக எடுத்துக் கொண்டு தலையாட்டினார் திவாகர்.  ‘பணப்பெட்டியை எடுத்தது யாரோட முடிவு. நல்ல விஷயம்தான். ஆனா அவசரப்பட்டுட்டியே குமாரு’ என்று வினோத்திற்கும் ஒரு கிண்டல். “என்னங்கய்யா பண்ணீங்க.. என் குருநாதனை.. கதறி எனக்கு வாய்ஸ் நோட்டு அனுப்பறாரு” என்ற சாண்டி, “நடன வடிவமைப்பாளனாக இருந்த என்னை நடிகனாக்கி அனுப்பியது பிக் பாஸ் வீடுதான். தமிழ், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிக்கறேன்’ என்றது சிறப்பு.  “வினோத் + திவாகர் காம்போவை மக்கள் ரசிக்க ஆரம்பிச்சாங்க.. ஆனா நீங்களே அதுல குச்சியை விட்டு கலைச்சிட்டீங்க” என்று சாண்டி சொன்னது உண்மை. சாண்டியைத் தொடர்ந்து கவின் என்ட்ரி. (எத்தனை முறை வருவாரோ?!). அவரும் அதே மாதிரியான அட்வைஸை தந்தார். “உங்க காமெடி ஒர்க்அவுட் ஆகணும்னா give and take policy இருக்கணும்” என்று சொன்னார் கவின். (நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்ட அதே விஷயம்). BB TAMIL 9 DAY 103 “நீங்க சீசன்3-ல வந்து மாட்டியிருக்கணும்.. ஒண்ணு  நான் சீக்கிரம் எலிமினேட் ஆகியிருப்பேன். உங்களைத் துரத்தியிருப்பேன்” என்று திவாகரிடம் சாண்டி சொன்னது சுவாரசியம். சாண்டியும் கவினும் இணைந்து நடிக்கப் போகின்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.  இறுதிப்போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், பயண வீடியோ ஆகியவற்றைக் காண்பித்து ஊக்க உரை தந்து அனுப்புவது பிக் பாஸின் வழக்கமான சடங்கு. முதல் நபராக விக்ரமிற்கு இது நிகழ்ந்தது. “உங்களுக்கு பெருமை சேர்ப்பேன். பிக் பாஸ் ஹோஸ்ட்டாக வருவேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் விக்ரம்.  இது முடிந்ததும் வீட்டிற்குள் நுழைந்து சென்டிமென்ட்டாக ஆரம்பித்து “அப்படியெல்லாம் சீனே இல்ல. மூடிட்டு படுங்கடா” என்று டிவிஸ்ட் தந்தது ஜாலியான காட்சி.  இன்னமும் இரண்டு நாள். வெற்றியாளர் யார் என்று தெரிந்து விடும். ஆனால் அந்த பரபரப்பும் ஆர்வமும் துளியும் இல்லாத சீசன் இது மட்டும்தான்.! 

விகடன் 17 Jan 2026 2:49 pm

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றைய தினம் சனிக்கிழமை நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி நினைவு கூர்ந்திருந்தனர். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

பதிவு 17 Jan 2026 2:49 pm

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி நினைவு கூர்ந்திருந்தனர். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக வெளியிடப்பட்டது.

அதிரடி 17 Jan 2026 2:45 pm

ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டம் (JBY)!

Janasri Bima Yojana Scheme (JBY): பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மக்களுக்காக குறைந்த பிரீமியத் தொகையில் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய அரசும், எல்ஐசி நிறுவனமும் இணைந்து கொண்டுவந்துள்ள ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 17 Jan 2026 2:42 pm

நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள் - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்

பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்று அப்போது தெரியும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படமும் இடம்பெற்றுள்ளது. பேனரில் இடம்பெற்ற டிடிவி தினகரன் இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காத டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், தினகரன் தலைமறைவாகிவிட்டார் என்று எனக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தயகத்தினால் வீட்டிலேயே இருக்கிறார். சோர்ந்து போய்விட்டார் என்றும் தகவலைப் பரப்புகிறார்கள். ஆனால் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. மனதில் எந்த கணமும் இல்லை. டிடிவி தினகரன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள். அதன்பிறகு உங்களுக்கு கூட்டணி குறித்து தெரிய வரும். நான் ஒரு கூட்டணியில் சேரும்போது அந்தக் கூட்டணிக்கு தலைமைத் தாங்குபவர்கள் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 17 Jan 2026 2:33 pm

பிப்ரவரி 1ஆம் தேதி பங்குச் சந்தை திறந்திருக்குமா? பட்ஜெட் நாளில் முதலீட்டாளர்களுக்கு முக்கிய அப்டேட்!

பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் பங்குச் சந்தை திறந்திருக்குமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. பங்குச் சந்தை முதலீடாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு.

சமயம் 17 Jan 2026 2:32 pm