SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

குளிருக்கு வீட்டில் தீ மூட்டிய குடும்பத்தினர்; மூச்சுத்திணறி 3 பேர் பலி

சண்டிகர், உத்தரபிரதேசம், பஞ்சா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் குளிர் அதிக அளவில் காணப்படுகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனிடையே, பஞ்சாப் மாநிலம் தரன் தரன் மாவட்டம் அலிபூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஷ்தீப் சிங் (வயது 21). இவருக்கு திருமணமாகி ஜஷந்தீப் கவுர் (வயது 20) என்ற மனைவியும், குர்பாஸ் சிங் (ஒன்றரை வயது) என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில், அதிக குளிரில் இருந்து தப்பிக்க அர்ஷ்தீப் சிங் […]

அதிரடி 12 Jan 2026 9:30 am

இந்தியா வந்தடைந்தார் ஜெர்மனி அதிபர் –பிரதமர் மோடியை சந்திக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான

சென்னைஓன்லைனி 12 Jan 2026 9:29 am

பி.எஸ்.எல்.வி. -சி62 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி62 விண்ணில் ஏவப்படுகிறது. இது

சென்னைஓன்லைனி 12 Jan 2026 9:26 am

சோமநாதரின் வரலாறுதான் இந்தியாவின் வரலாறு –பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி நேற்று பிரசித்தி பெற்ற சோமநாத் கோவிலுக்குச் சென்றார். இந்தக் கோவில் முதல்

சென்னைஓன்லைனி 12 Jan 2026 9:25 am

அதிக ஆர்ப்பரிப்பு எழுவது எனக்கு பிடிக்கவில்லை –விராட் கோலி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின்

சென்னைஓன்லைனி 12 Jan 2026 9:23 am

தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!

அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை. அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டினர். அப்போது சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக்கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளி, மற்றொன்றில் சூலினி துர்கை எனச் சரபேஸ்வரராக வடிவெடுத்து நரசிம்மரைத் தன் கால்களில் தாங்கிப்பிடித்து அவரின் உக்ரம் தணித்தார். அவ்வாறு பிரபஞ்சத்தின் நடுக்கம் தீர்த்த பெருமானாக ஈசன் கோயில் கொண்டிருக்கும் தலமே திருபுவனம். மற்றுமொரு புராணத்தில் திரிபுரங்கள் எனப்படும் மூன்று அசுரக் கோட்டைகளை ஈசன் எரித்து அதனால் மக்களிடம் உண்டான நடுக்கத்தைப் போக்கியவர் என்பதாலும் இவருக்கு கம்பகரேஸ்வரர் அதாவது நடுக்கம் தீர்த்த பெருமான் என்கிற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள். திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் திருக்கோயில் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன், சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது. இங்கு அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி. அம்பாளுக்கு நான்கு கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக அற்புதத் திருக்கோலத்தில் காட்சி அருள்கிறாள் அன்னை. அம்பாளின் பீடம் ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது. மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! இங்குள்ள கம்பகரேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. காண்பதற்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய கோயில்களின் அமைப்பில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில் புராணகால சிறப்பு பெற்றது. தமிழகத்தின் அற்புதமான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் இதுவும் ஒன்று எனலாம். வரகுண பாண்டியனுக்கு உண்டான தோஷம் நீங்கிய தலம் இந்தத் திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் ஆலயம். முன் வாசல் வழியே நுழைந்து ஈசனை வணங்கி, நடுக்கம் தீர்ந்தது மீண்டும் தோஷமும் நடுக்கமும் பீடிக்காத வகையில் பின்வாசல் வழியே சென்றான் என்கிறது தலபுராணம். இன்றும் அவ்வாறே நோயுற்றவர்கள் ஈசனை வழிபட்டுத் திரும்பிச் செல்கின்றனர். திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் திருக்கோயில் நாட்டிய கரண சிற்பங்கள், மனுநீதிச் சோழன் வரலாறு, போர்க்களக் காட்சிகள், தலைக்கோலி பட்டம் பெற்ற பெண் சிற்பம், யானை மீது சுந்தரரும், குதிரை மீது சேரமான் பெருமானும் செல்லும் சிற்பம் என இந்த ஆலயம் முழுக்கவே அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஏழு நிலைகள் கொண்ட பிரமாண்ட கோபுரம், சச்சிதானந்த விமானம் கொண்ட கருவறை, மண்டபங்கள், எண்ணற்ற சந்நிதிகள் என ஆலயம் பரந்து விரிந்துள்ளது. ஆலயக் கருவறை உயர்ந்த தளத்தில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் கொண்டுள்ளது. கருவறை சந்நிதி, யானை இழுத்துச் செல்வது போன்ற ரத அமைப்புடன் அமைந்திருக்கிறது. வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்! இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி வேறெங்கும் காண முடியாத பிரமாண்டமும் அழகும் கொண்டது. ஏழரை அடி உயரம் கொண்டு அச்சமூட்டும் வகையில் சரபர் காட்சி அளிக்கிறார். பிரத்யங்கரா, சூலினி எனும் இரு மஹாசக்திகளை இறக்கைகளாகக் கொண்ட சரபர் மகாவல்லமை கொண்டவர். ஞாயிறு ராகு காலத்தில் 11 வாரங்கள் தொடர்ச்சியாக 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து சரபேஸ்வரரை வணங்கினால் எல்லாவித அச்சங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும். தீய சக்திகளின் பிரச்னைகள், சத்ரு பயம், வழக்குப் பிரச்னைகள் எல்லாம் விலகி வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. சரபேஸ்வரர் இங்கு வந்து ஈசனையும் சரபேஸ்வரரையும் வணங்கி விளக்கேற்றி வழிபட்டால் நிச்சயம் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!

விகடன் 12 Jan 2026 8:49 am

வானில் பறக்கவிடப்பட்ட டூம்ஸ்டே விமானம்! அமெரிக்காவில் போர்ப் பதற்றமா?

அமெரிக்க வான்வெளியில் டூம்ஸ்டே விமானம் பறக்கவிடப்பட்டது மற்றைய நாடுகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உலகளவிலான பதற்ற நிலை அல்லது போர்ப் பதற்றம் ஏற்படும்போது மட்டுமே அமெரிக்க அதிபரின் ரகசிய விமானங்களில் ஒன்றான டூம்ஸ்டே விமானம் (Boeing E-4B Nightwatch – போயிங் இ-4பி நைட்வாட்ச்) பறக்கவிடப்படும். இந்த விமானத்துக்குள் இருந்தவாறே அரசை இயக்கும் அளவுக்கு வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சுமார் 51 ஆண்டுகால வரலாற்றில் கடந்த வாரத்தில் அமெரிக்க வான்வெளியில் டூம்ஸ்டே விமானத்தைக் […]

அதிரடி 12 Jan 2026 8:30 am

‘ஒரே போட்டியில்’..சச்சினின் வாழ்நாள் சாதனையை தகர்த்த கோலி: மற்றொரு சாதனை ஒரு ரன்னில் மிஸ்!

ஒரே போட்டியில், சச்சின் டெண்டுல்கரின் 2 வரலாற்று சாதனையை விராட் கோலி தகர்த்தார். மேலும் ஒரு வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்து அசத்தினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90+ ரன்னில் அவுட் ஆனார்.

சமயம் 12 Jan 2026 8:11 am

கிளிநொச்சி மின்சார சபையின் சுற்றுலா இல்லத்தில் புதையல் தோண்டிய மின்சார சபை ஊழியர்கள் கைது

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சி மின்சார சபைக்கு சொந்தமான சுற்றுலா இல்லத்தில் அனுமதியின்றி அரசாங்க நிலத்தை சுரண்டுதல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் போன்ற குற்றத்திற்காக நான்கு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நால்வரையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 12 Jan 2026 7:50 am

பணிந்த அரசு; தூய்மைப் பணியாளர்களை சந்திக்கும் அமைச்சர் சேகர் பாபு - வெற்றியை நோக்கி போராட்டம்?

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இன்றோடு நிறைவடையும் நிலையை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு இன்று தூய்மைப் பணியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேசவிருக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் சென்னையில் மாநகராட்சி சார்பில் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை பேணும் பணிகளை தனியாருக்கு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 1900 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். ரிப்பன் பில்டிங் முன்பாக தொடங்கி அவர்களின் போரட்டம் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தது. மெரினா கடல், கலைஞர் சமாதி, உழைப்பாளர் சிலை, ஆட்சியர் அலுவலகம், அண்ணா அறிவாலயம், கூவம் நதி என பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி கைதாகினர். இன்னொரு பக்கம் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை அம்பத்தூரில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தையும் முன்னெடுத்தனர். தொடர்ந்து போராடியும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்களோ அதிகாரிகளோ அழைத்து பேசாமல் இருந்ததால், போராட்டம் தீவிரமடைந்து கொண்டே சென்றது. சேகர் பாபு இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர் பாபு தரப்பினர் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை தொடர்புகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்துதான் இன்று அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 150 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் பலனாக கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் தூய்மைப் பணியாளர்கள் அம்பத்தூரில் கூட தொடங்கியிருக்கின்றனர்.

விகடன் 12 Jan 2026 7:47 am

தொழிலதிபர்களை கடத்தி கொடுமைப்படுத்தி, பணம் பறித்த போலி இராணுவ மேஜர்

கொழும்பில் இராணுவ மேஜர் என்று கூறி செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்களைக் கடத்துதல், மிரட்டுதல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் தொடர்புடைய ஒருவர் நேற்று முன்தினம் பேலியகொட குற்றப்பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். பேலியகொட குற்றப்பிரிவு பணிப்பாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகலவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பொலிஸாரை ஏமாற்ற மேஜராக செயல்பட்டு பல்வேறு குற்றங்களைச் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். குற்றச்செயல்கள்சந்தேக நபர் வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர் […]

அதிரடி 12 Jan 2026 7:47 am

புத்தாண்டு விருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி –கருப்பை பரிசோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சி

புத்தளத்தில் வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்து 2 கண்ணாடி போத்தல்களை மாரவில ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவராகும். கடந்த 9 ஆம் திகதி 1990 அம்பியுலன்ஸ் சேவையால் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பல பரிசோதனைகள் செய்ய வைத்தியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். பெண்ணின் வயிற்றில் போத்தல்கள் மேலும் அவரை ஸ்கேன் செய்ய […]

அதிரடி 12 Jan 2026 7:45 am

கோயிலில் விடப்பட்ட மூதாட்டி; பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க உதவிய டிஎஸ்பி; பொன்னமராவதியில் நெகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அழகியநாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பித்தளைப் பாத்திரம், பழைய இரும்புப் பெட்டி, சேலையுடன் மூதாட்டி ஒருவர் கொண்டுவந்து விடப்பட்டார். உணவின்றி கடும் குளிரில் வாடிய அந்த மூதாட்டியைப் பார்த்த குருக்கள் சரவணன், அவருக்கு உணவு கொடுத்து, அவரின் நிலை குறித்து கேட்டறிந்தார். அதோடு, இந்த மூதாட்டி குறித்து பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். aged women தகவல் அறிந்த பொன்னமராவதி டி.எஸ்.பி தங்கராமன் அறிவுறுத்தலின்படி அழகியநாட்சி அம்மன் கோயில் வளாக பகுதிக்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் பத்மா, மூதாட்டியை விசாரித்தபோது மூதாட்டி பெயர் பொட்டையம்மாள், மேலூர் அருகில் உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்த பாக்கியம் என்பவரின் மனைவி என்பது தெரியவந்தது. அதோடு, தன்னை ஆட்டோவில் அழைத்து வந்து இந்தப் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றதாகவும் மூதாட்டி கண்ணீரோடு கூறினார். மூதாட்டியின் பாதுகாப்பற்ற நிலையை டி.எஸ்.பி தங்கராமனிடம் தெரிவித்த காவல் ஆய்வாளர் பத்மா, டி.எஸ்.பி. தங்கராமன் அறிவுறுத்தலின்படி அறந்தாங்கி குரும்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் 'புதிய நமது இல்லம் அறக்கட்டளை' தொண்டு நிறுவனத் தலைமை சேவகர் சந்திரசேகரன் என்பவரைத் தொடர்பு கொண்டு காவல்துறை சார்பில் மீட்கப்பட்ட மூதாட்டியை பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். dsp அதனைத்தொடர்ந்து, காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் காவலர் பாண்டியன் மற்றும் பொன்னமராவதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், காமராஜ் நகர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் நிர்வாகியுமான இரா.பாஸ்கர் இந்தியன் ஆகியோர் அறந்தாங்கி குரும்பூரில் உள்ள 'புதிய நமது இல்லத்தில்' பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்த்தனர். மேலும், நான்கு நாட்களாகப் பரிதவித்து வந்த மூதாட்டியை மீட்டுப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்த பொன்னமராவதி டி.எஸ்.பி தங்கராமன் தலைமையிலான காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர்: சுயம்புமூர்த்தி, நோய் தீர்க்கும் பஞ்சாம்ருதம்!

விகடன் 12 Jan 2026 7:44 am

வரலாற்றில் முதல் முறை ; தனியார் கடன் வழங்கல் உச்சம்

தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை அதிகரித்துள்ளது. அதன்படி, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 262 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், கடந்த வருடத்தில் தனியார் கடன் வழங்கல் 26 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் மூலம் மொத்த தனியார் கடன் வழங்கல் முதல் முறையாக பத்தாயிரத்து 29 பில்லியன் ரூபாயைக் கடந்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

அதிரடி 12 Jan 2026 7:42 am

தவெக தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டார்… கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ முன் இன்று ஆஜர்!

கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ முன்பு ஆஜராகி தவெக தலைவர் விஜய் விளக்கம் அளிக்கவுள்ளார். இதையொட்டி இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

சமயம் 12 Jan 2026 6:56 am

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்காக இன்று தில்லி செல்கிறார் விஜய்!

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவா் விஜய் திங்கள்கிழமை (ஜன.12) காலை தில்லி செல்கிறாா். கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, கடந்த டிசம்பா் இறுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் […]

அதிரடி 12 Jan 2026 6:30 am

இஸ்ரோ அனுப்பும் PSLV C-62 ராக்கெட்… இ.ஓ.எஸ்-என்1 செயற்கைக்கோள் என்ன செய்யப் போகிறது? புத்தாண்டு ஸ்பெஷல்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் புத்தாண்டில் முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு தயாராகியுள்ளது. இன்று காலை அனுப்பப்படும் இ.ஓ.எஸ்.-என்1 செயற்கைக்கோளின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 12 Jan 2026 6:10 am

அட்டைப்படம்

விகடன் 12 Jan 2026 5:47 am

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னையில் செம குளிர்- IMD அலர்ட்!

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்திருக்கிறது. மேலும் சென்னையில் நிலவும் குளிர் பற்றி வெதர்மேன் சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

சமயம் 12 Jan 2026 5:35 am

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

அதிசக்திவாய்ந்த சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆதித்யா எல்-1 விண்கலம் புதிய தரவுகளை அளித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது. 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் சூரியப் புயல் பூமியை தாக்கியது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வானியற்பியல் இதழில் வெளியானது. இந்தியாவின் முதல் சூரிய விண்கலமான ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் சா்வதேச […]

அதிரடி 12 Jan 2026 4:30 am

இந்தோனேசியாவில் ‘குரோக்’குக்குத் தடை

தொழிலதிபா் எலான் மஸ்கின் எக்ஸ்ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான குரோக் இணையதளத்துக்கும், அதன் செயலிக்கும் இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றிக் காட்டுவது போன்ற குரோக்கின் உள்ளடக்கங்கள் இந்தோனேசியாவின் சட்டங்கள் மற்றும் கலாச்சார மாண்புகளுக்கும் எதிராகவும் மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்ளதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஜன. 9) முதல் அமலுக்கு வந்துள்ள இந்தத் தடையை அனைத்து இணைய சேவை நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் […]

அதிரடி 12 Jan 2026 3:30 am

லண்டனில் நடந்தது ஒரு வித்தியாசமான பயணம்! #NoTrousersTubeRide

லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு வேடிக்கையான நிகழ்வு இந்த வார இறுதியில் மீண்டும் ஒருமுறை உலகின்… The post லண்டனில் நடந்தது ஒரு வித்தியாசமான பயணம்! #NoTrousersTubeRide appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Jan 2026 12:59 am

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான உயிர்களை பறிக்கும் அமைதியான கொலையாளி

உலகளாவிய ரீதியில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer), ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாகி வருகிறது. உலக சுகாதார அமைப்புகளின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பெண்கள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர் என இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சச்சிமாலி விக்ரமசிங்க […]

அதிரடி 12 Jan 2026 12:30 am

டிரோன் மூலம் கண்காணித்ததாக குற்றச்சாட்டு –தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா

பியாங்யாங், வடகொரியா, தென்கொரியா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ள நிலையில், எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. வடகொரியாவை மிரட்டும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தங்கள் வான் எல்லைக்குள் டிரோன்களை அனுப்பி முக்கிய ராணுவ தளங்களை கண்காணித்ததாக தென்கொரியா மீது வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக வடகொரிய ராணுவம் […]

அதிரடி 12 Jan 2026 12:30 am

தைரியமான ஆள் என்றால் வந்து பாருங்கள் –டிரம்பிற்கு கமேனி சவால்!

ஈரான் – அமெரிக்கா இடையே முற்றிய வார்த்தைப் போர்: கமேனியின் அதிரடிப் பதில்! ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான… The post தைரியமான ஆள் என்றால் வந்து பாருங்கள் – டிரம்பிற்கு கமேனி சவால்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Jan 2026 12:23 am

⚖️கமல்ஹாசனின் அடையாளங்களை அனுமதியின்றிப் பயன்படுத்த இடைக்காலத் தடை

நடிகர் கமல்ஹாசன் தனது பெயர், புகைப்படம் மற்றும் ‘உலக நாயகன்’ என்ற பட்டத்தை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைத்… The post ⚖️கமல்ஹாசனின் அடையாளங்களை அனுமதியின்றிப் பயன்படுத்த இடைக்காலத் தடை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 11:50 pm

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர்-அக்கரைப்பற்று மாநகர முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை சினேகபூர்வமாக சந்தித்து பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் இதன் போது சந்தித்து பிரதேச அபிவிருத்தி சமகால அரசியல் நிலைமை மற்றும் அரசாங்கத்துடன் உள்ள ஒத்துழைப்பு தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். எதிர்காலத்தில் பிரதேசத்தின் கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும் மேம்படுத்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் […]

அதிரடி 11 Jan 2026 11:30 pm

ஆட்சியில் பங்கா? உபதேசம் எடுபடாது.. திராவிட மண்ணில் பலிக்காது.. வைகோ திட்டவட்டம்!

கூட்டணியில் பங்கு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகளில் மதிமுகக்கு உடன்பாடு இல்லை என்றும், அமைச்சரவை பதவி கேட்டு ஒருபோதும் வலியுறுத்தியதில்லை என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

சமயம் 11 Jan 2026 11:03 pm

`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?

மும்பையில் வரும் 15-ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை வந்திருந்தார். அவர் தாராவி மற்றும் மலாடு பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்படி பிரசாரம் செய்தபோது மத்தியில் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அரசும் ஆட்சியில் இருக்கிறது என்றும், எனவே மும்பையில் பா.ஜ.க மேயர் வரவேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ''மும்பை மகாராஷ்டிரா நகரம் கிடையாது. அது ஒரு சர்வதேச நகரம். மும்பை பட்ஜெட் 75 ஆயிரம் கோடியாக இருக்கிறது. சஞ்சய் ராவுத் பெங்களூரு பட்ஜெட் 18 ஆயிரம் கோடியாகவும், சென்னை பட்ஜெட் 8 ஆயிரம் கோடியாகவும் இருக்கிறது. எனவே மும்பை நிர்வாகத்தில் நல்லவர்களை அமர்த்துங்கள்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அண்ணாமலையில் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையை மகாராஷ்டிரா நகரம் கிடையாது என்று எப்படி அண்ணாமலை கூறலாம் என்று சிவசேனா(உத்தவ்) கட்சி எம்.பி.சஞ்சய் ராவுத் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,''அண்ணாமலை மும்பைக்காக போராடி உயிர்தியாகம் செய்த 106 தியாகிகளை அவமதித்துவிட்டார். சூரியன், சந்திரன், நட்சத்திரம் இருக்கும் வரை மும்பை மகாராஷ்டிராவோடுதான் இருக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். ஆனால் பா.ஜ.க நட்சத்திர பேச்சாளர்கள் மும்பை மகாராஷ்டிரா நகரம் கிடையாது என்று சொல்கிறார்கள். இது போன்று கருத்து தெரிவித்த அண்ணாமலை மீது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். அண்ணாமலையில் கருத்து அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. மும்பை மகாராஷ்டிராவிற்கு சொந்தமானது கிடையாது என்றால் வேறு யாருக்கு சொந்தம்'' என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து அதே கட்சியை சேர்ந்த அகில் சித்ரே கூறுகையில், ''மும்பையின் பெயரும் அடையாளமும் மராத்தி மக்களின் போராட்டங்களிலும் தியாகங்களிலும் வேரூன்றியுள்ளன. வேண்டுமென்றே அதை 'பம்பாய்' என்று அழைப்பதும், மகாராஷ்டிராவில் அதன் இடத்தைக் கேள்விக்குள்ளாக்குவதும் அந்த மரபுக்கு நேரடியாக விடுக்கப்படும் சவாலாகும். இது தேர்தல்களின் போது பதட்டங்களைத் தூண்டும்'' என்று அவர் கூறினார்.

விகடன் 11 Jan 2026 10:45 pm

அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள் - கடற்கரை பொங்கல் விழாவில் நெகிழ்ந்த நடிகை தேவயானி!

கன்னியாகுமரி ரஸ்த்தாகாடு கடற்கரையில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 12-வது சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. இதில் 3006 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டனர். சினிமா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நாகர்கோவில் மேயர் மகேஷ், சபாநாயகர் அப்பாவு, எம்.பி விஜய்வசந்த், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை தேவயானி, கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள்கூடி ஒற்றுமையாக பொங்கலிடும் இந்த காட்சி மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற காட்சியை நான் இதற்கு முன் கண்டதில்லை. அதற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி. கடவுளின் அருள் இருந்தால்தான் இதுபோன்று நடக்கும். பொங்கல் என்பது தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் ஒரு அருமையான விழா. பொங்கலன்று சூரியனை வணங்குகிறோம். இயற்கைக்கு நன்றி சொல்கிறோம். கூட இருக்கும் பிராணிகளுக்கு நன்றிசொல்லி வணங்குகிறோம். அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள். நான்கு நாட்கள் விடுமுறையில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருங்கள் என்றார். மேலும், ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 'மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு...' என்ற பாடலையும் தேவயானி மேடையில் பாடினார். பொங்கல் விழாவில் நடிகை தேவயானி இதில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழர்களுடைய பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர், சாமானிய மக்களும் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக ரொக்கப் பணமாக 3000 ரூபாய் கொடுத்துள்ளார். சாமானிய வீட்டு ஏழை பெண்கள் இலவச மகளிர் பேருந்து எப்போது வரும் என்று கேட்கிறார்கள். நாள் ஒன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என்று உத்தரவு பிறப்பித்து  ஆண்டுக்கு 3760 கோடி ரூபாயை முதலமைச்சர் அள்ளிக் கொடுத்துள்ளார். ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றார். கடற்கரையில் நடைபெற்ற பொங்கல் விழா பட்டப்படிப்பு படிக்க மாதம் 1000 ரூபாய் கொடுக்கின்ற நம்முடைய முதல்வர் சாமானிய ஏழை மக்களை பற்றி சிந்தித்து செயல்பட்டதனுடைய விளைவு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் 60  சதவிகிதம் பேர் பட்டம் படித்திருக்கின்றார்கள். திராவிட சமத்துவ மாடல் தான் இவ்வளவு பெரிய வெற்றியை நமக்கு தந்திருக்கின்றது. நம் முதல்வர் சாமானிய மக்களை பற்றி சிந்திக்கின்றார். ஏழைகளைப் பற்றி சிந்திக்கின்றார். ஒரே கையெழுத்தில் 6800 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் முதல்வர். ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகள்தான். விவசாயி சேற்றில் காலை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்றார்.

விகடன் 11 Jan 2026 9:46 pm

இடைக்கால அரசு பதவியேற்ற உடன் காசா குறித்து முக்கிய அறிவிப்பு

காசா அமைதி படைக்கு ராணுவ வீரர்களை அனுப்ப வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல், மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. அங்கு, அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கிறது. நம் நாட்டுக்கு எதிரான மனநிலையை கொண்ட முகமது யூனுஸ், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். […]

அதிரடி 11 Jan 2026 9:30 pm

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் என்னதான் நடக்கிறது? புகைச்சலை மூட்டும் விவாதத்திற்கு என்ன காரணம்?

காங்கிரஸ் கட்சியினர், தவெகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என்ற விருப்பத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ஆட்சியில் பங்கு தருவோம் என்று விஜய் கூறி புகைச்சலுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தார்.

சமயம் 11 Jan 2026 9:18 pm

இருளை வென்ற ஒளி: ஈரானில் மக்களின் மௌனப் புரட்சி!

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் (Tehran) போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு ஒரு அதிரடி… The post இருளை வென்ற ஒளி: ஈரானில் மக்களின் மௌனப் புரட்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 8:42 pm

ப்பர் முஸ்லிம் அமைப்புக்கும் தடை!

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் என்பவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. 2026 ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் பெயரிடப்பட்ட நபர்கள் குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதே வேளை இலங்கையில் 2021.04.13 ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச இருந்த போது 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கமைய பின்வரும் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. 1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ) 2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ) 3. ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ) 4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ) 5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் - ஈ - அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா 6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர்அத்தபாவிய்யா 7. ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா 8. ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா 9. அல்கய்தா அமைப்பூ 10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம் 11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

பதிவு 11 Jan 2026 8:37 pm

அமெரிக்க நகர தெருவுக்கு வங்காளதேச கலிதா ஜியா பெயர்

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ஹாம்ட்ராம்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தெருவுக்கு வங்காளதேச முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவை கவுரவிக்கும் வகையில் ‘கலிதா ஜியா தெரு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்க தேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி காலமானார். கலிதா ஜியா வங்காளதேசத்தில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர். இந்தநிலையில் ஹாம்ட்ராம்க் நகரில் உள்ள […]

அதிரடி 11 Jan 2026 8:30 pm

அறுகம்பையில் உள்ள இஸ்ரேலர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டுஇல்லத்தை மீளப் பெற்ற உரிமையாளர் தமீமுக்கு பாராட்டு

பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் சபாத் இல்லம் நேற்று (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது. பொத்துவிலைச் சேர்ந்த தமீம் எனப்படுபவர் சுற்றுலா ஹோட்டல் செய்வதற்காக ஒருவருக்கு விற்பனை செய்த இந்த இடத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் பெற்று ஹோட்டல் அன்ட் ரெஸ்டாரண்டாக இயக்கி வந்தார் . அத்துடன் இஸ்ரேலியர்கள் ஒன்று சேறும் இடமாகவும் பயன்பாடுத்தி வந்த நிலையில் அங்கு இஸ்ரேலர்கனின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதான சபாத் […]

அதிரடி 11 Jan 2026 8:30 pm

கொலையாளிகளிற்கு அனுர பதவியுயர்வு?

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள லெப்டினன்ட் கர்னல் எரந்த ரதீஷ் பீரிஸ், கேர்னல் பதவியிலிருந்து பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேர்னல் எரந்த ரதீஷ் பீரிஸ் என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட சந்தரப்பத்தில் கிரிதலே இராணுவ புலனாய்வு பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன்ட் கேர்னல் ஷம்மி குமாரரத்னவின் கீழ் பணியாற்றிய மேஜர் ஒருவர் ஆவார். இந்த வழக்கில் அவரது தொடர்பு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு பல ஆண்டுகளாக மேற்கொண்ட விசாரணைகளில் ஏராளமான ஆதாரங்களை இணைத்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆரம்பித்த முறையான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, எரந்த பீரிஸ் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கிரிதலே முகாமில் பணியாற்றியுள்ளார். இதேவேளை, இந்த முகாமில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் பிரகீத் கடத்தல்களில் நேரடியாக ஈடுபட்டதற்கான சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றத்தில் எரந்த பீரிஸ் ஈடுபட்டிருப்பதை நிரூபிக்க குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உள்ள வலுவான ஆதாரம் தொலைபேசி தரவுகளின் பகுப்பாய்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்திலிருந்து பெறப்பட்ட இரகசிய தகவல்களின்படி, நான்கு மூத்த அதிகாரிகள் இன்று (11.01.2026) முதல் தற்காலிக பிரிகேடியர்பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆவணத்தின்படி, எரந்த பீரிஸுடன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 11 Jan 2026 8:23 pm

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு தலையிட வேண்டும்!

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், அங்குள்ள தமிழ் மக்களின் உரிமைகளை மேலும் நசுக்கும் வகையில் அமைந்துவிடக்… The post இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு தலையிட வேண்டும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 7:42 pm

காசு மேலே காசு ?

அனுர அரசை தொடர்ந்தும் இந்தியா நம்பமறுத்துவருகின்ற நிலையில் சலுகைகளை அள்ளிவீசி கைகளுள் வைத்துக்கொள்ள முற்பட்டுள்ளது. இந்தியா அரசின் உதவியுடன் வடக்கு ரயில் பாதையின் முழுமையான சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்கும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக ரயில் பாதை சேதமடைந்தது, அதன்படி, மஹாவாவிலிருந்து ஓமந்தை வரையிலான ரயில் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் நிறுத்தப்படவுள்ளது. இந்தியா அரசின் உதவியில் சுமார் 5 மில்லியன் டொலர்கள் இந்த கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பதிவு 11 Jan 2026 7:37 pm

பயங்கரவாத தடைப் பட்டியலில் கல்முனை டாக்டர் ரயீஸ் மற்றும் 11 அமைப்புகள்!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும்… The post பயங்கரவாத தடைப் பட்டியலில் கல்முனை டாக்டர் ரயீஸ் மற்றும் 11 அமைப்புகள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 7:30 pm

பயங்கரவாத தடைப் பட்டியலில் கல்முனை டாக்டர் ரயீஸ் மற்றும் 11 அமைப்புகள்!

முக்கிய அறிவிப்பு: பயங்கரவாத தடைப் பட்டியலில் கல்முனை டாக்டர் ரயீஸ் மற்றும் 11 அமைப்புகள்! பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால்… The post பயங்கரவாத தடைப் பட்டியலில் கல்முனை டாக்டர் ரயீஸ் மற்றும் 11 அமைப்புகள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 7:30 pm

உக்ரைன் மீது புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போராட்டத்தை முடிக்க முயற்சிகள் நடைபெற்று வந்தபோது, ரஷ்யா புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் 20 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை உடனடியாக நடந்த தாக்குதலில், கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். கத்தார், […]

அதிரடி 11 Jan 2026 7:30 pm

மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பில் மீண்டும் மனித எச்சங்கள் கண்டெடுப்பு -தேசிய  மக்கள் சக்தி உறுப்பினருக்கு  பாராட்டு

video link- https://fromsmash.com/I.artrL53W-dt மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு மையவாடி-பயனற்று போகும் தற்காலிக தீர்வுகள் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி அண்மையில் எற்பட்ட டிக்வா புயல் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடும் காற்றுடன் கூடிய கடும் கடற்கொந்தளிப்பு காரணமாக தினமும் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. இதனால் இம்மையவாடியில் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான கடலரிப்பு […]

அதிரடி 11 Jan 2026 7:06 pm

சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க.. ஆணையம் வேண்டுகோள்!

சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே, போகி நாளில் விமான சேவைகள் பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெற முடியும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்து உள்ளது.

சமயம் 11 Jan 2026 6:45 pm

“சவால்களைக் கடந்து நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்”டக்ளஸ் தேவானந்தாவிற்கு கங்காராம விகாராதிபதி ஆசி!

சிறையிலிருந்து பிணையில் விடுதலையான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இன்று கொழும்பு கங்காராம… The post “சவால்களைக் கடந்து நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்” டக்ளஸ் தேவானந்தாவிற்கு கங்காராம விகாராதிபதி ஆசி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 6:42 pm

போலி வங்கி கணக்குகள்… நூதன முறையில் ரூ.11 கோடி மோசடி –ஒடிசாவில் கும்பல் கைது

பூரி, ஒடிசாவின் கந்தமால் மாட்டத்தில் தனிநபர்களின் பெயர்களில் போலியாக வங்கி கணக்குகள் தொடங்கி, அவற்றின் உதவியுடன் நூதன முறையில் ரூ.11 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி உதவி போலீஸ் சூப்பிரெண்டு ராமேந்திர பிரசாத் கூறும்போது, 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள், வெவ்வேறு பெயர்களில் போலியாக வங்கி கணக்குகளை தொடங்கி, சைபர் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, அவர்கள் பயன்படுத்தி கொள்ள உதவியாக அவற்றை […]

அதிரடி 11 Jan 2026 6:30 pm

சம்மாந்துறை சிறுவர் பூங்கா நவீன மயப்படுத்தப்பட உள்ளது-தவிசாளர் மாஹிர் நேரில் ஆய்வு

சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்து, நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் திட்டத்தின் கீழ், பிரதேச சபை தவிசாளர் மாஹிர் இன்று (11) பூங்காவிற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, பூங்காவின் தற்போதைய நிலைமைகளை அவதானித்த தவிசாளர், அங்கு வருகை தந்திருந்த சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பூங்காவில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களின் தரம் குறித்து பயனாளர்களின் கருத்துக்கள் இதன்போது விரிவாகப் பெறப்பட்டன. […]

அதிரடி 11 Jan 2026 6:25 pm

சென்னையில் படகு சவாரிக்கு தயாரா? மாதவரம், மணலி ஏரிகளில் எப்போது தொடக்கம் தெரியுமா?

சென்னை மாதவரம் மற்றும் மணலி ஏரிகளில் படகு சவாரி சேவையானது, ஜனவரி 13 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த சவாரி தொடங்குகிறது.

சமயம் 11 Jan 2026 6:14 pm

வற்றாப்பளையில் சிதைந்துபோயுள்ள வீதிகள்: மக்கள் அவதி –நேரில் சென்று ஆராய்ந்தார் ரவிகரன்!

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு (G.N Division) கிராம அலுவலர் பிரிவில் உள்ள… The post வற்றாப்பளையில் சிதைந்துபோயுள்ள வீதிகள்: மக்கள் அவதி – நேரில் சென்று ஆராய்ந்தார் ரவிகரன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 6:13 pm

IND vs NZ 1st ODI: ‘பவர் பிளேவில்’.. பெரிய தப்பை செய்த இந்தியா! பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய டேரில் மிட்செல்!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு 300 ரன்களை எடுத்துள்ளது. பவர் பிளேவில் இந்திய அணி சொதப்பலாக பந்துவீசியதால்தான், நியூசிலாந்து அபாரமாக செயல்பட்டது.

சமயம் 11 Jan 2026 6:11 pm

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கரூர் மற்றும் திருச்சியில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது கண்டறியப்பட்டு, 15 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு துறை தரப்பில் விசாரித்தோம். கரூர் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் 15 வயது சிறுமி கடந்த 2021- ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் அந்த சிறுமிக்கு இத்தகைய கொடுமை அரங்கேறியுள்ளது. இப்படி, தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமிக்கு, கடந்த 2023 - ம் வருடம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அந்த குழந்தையை தனியார் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றதால், மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பிறகு, காவல்துறை அணுகியபோது அந்த சிறுமி தரப்பு குழந்தையை பெற்றுக்கொள்ள மறுத்ததால், திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு, இந்த விவகாரம் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 23 - ம் தேதி குழந்தைகள் நலக்குழு சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிறுமியின் குடும்பத்தினருக்கு கடிதம் அனுப்பியதோடு, கடந்த 3 - ம் தேதி அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டோம். trichy அந்த சிறுமியை அவரின் தாத்தா, அங்கிருந்த இளைஞர், மற்றொரு முதியவர், மற்றும் நெருங்கிய உறவினர்கள் என்று பலரும் தன்னை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்த சிறுமி கூறினார். அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பிறகு, சிறுமியின் தாய், தாத்தா உள்ளிட்ட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. விசாரணை போய்க்கொண்டிருக்கிறது என்றார்கள். 15 வயது சிறுமி ஒருவருக்கு அவரது தாத்தா உள்ளிட்ட உறவினர்களே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடன் 11 Jan 2026 6:07 pm

''இதுவொரு முக்கியமான மைல்கல் - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம். போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. போரூர் - வடபழனி வழித்தடத்தில் சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று காலை சோதனை ஓட்டத்தை நடத்தியது. சென்னை மெட்ரோ டவுன் லைனில் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தியவர்கள் கூடிய விரைவில் இதேபோல அப் லைனிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அந்த வழித்தடம் திறக்கப்படும் தேதி குறித்து சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர், இன்று சோதனை ஓட்டம் நடத்தினோம். அது வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இதுவொரு முக்கியமான மைல்கல். கடந்த ஜூன் மாதத்தில் பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை சோதனை ஓட்டம் நடத்தினோம். அதன் வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை மெட்ரோ இருந்தால்தான் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வடபழனி மெட்ரோவிலிருந்து போரூர் செல்லும் வழித்தடத்திற்கு லிங்க் பிரிட்ஜ் அமைத்திருக்கிறோம். மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் கடந்த நான்கு மாதங்களாக போரூர் - வடபழனி வழித்தடத்தின் மின்சாரம், டிராக் ஆகியவற்றுக்காக எங்களின் சி.எம்.ஆர்.எல் ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த மாத முடிவிற்குள் முழுமையான வேகத்தில் சோதனை நடத்தவிருக்கிறோம். வேகத்திற்கான சான்றிதழ், வழித்தடத்தின் ஆய்வு கூடிய விரைவில் நடைபெறும். பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே சேவை தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான பாதையின் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும். எனக் கூறினார்.

விகடன் 11 Jan 2026 5:56 pm

Parvathy Thiruvothu: அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன்! - நடிகை பார்வதி திருவோத்து

நடிகை பார்வதி திருவோத்து, அவருடைய குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அவர் சிறு வயதில் இருக்கும்போது தெரியாத நபர் ஒருவர் அவரைத் துன்புறுத்தியது குறித்தும், அது அவரிடத்தில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது குறித்தும் பகிர்ந்திருக்கிறார். Parvathy Thiruvothu அவர், “எனக்கு அப்போது சிறு வயது. என்ன நடக்கிறது என்றே அப்போது எனக்குத் தெரியவில்லை. ரயில் நிலையத்தில் அம்மாவை விட்டுவிட்டு அப்பாவுடன் திரும்பி வரும்போது, ஒருவர் வந்து மார்பில் அடித்துவிட்டார். அது தொடுவது போலக்கூட இல்லை. என்னை அறைந்தது போல இருந்தது. அப்போது நான் குழந்தையாக இருந்தேன். அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். என் அம்மா தெருக்களில் நடக்கும்போது எப்படி நடக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தார். கடை ஜன்னல்களில் பொருட்களைப் பார்க்காதே. ஆண்களின் கைகளைப் பார்த்துக்கொண்டே நடக்க வேண்டும். ஒரு தாய் தன் குழந்தைக்கு இப்படிக் கற்றுக்கொடுக்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பாருங்கள். Parvathy Thiruvothu | பார்வதி திருவோத்து மேலும், ஆண்களிடமிருந்து பல சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருவர் தனது வேட்டியை தூக்கி அவரின் உறுப்பைக் காட்டிக்கொண்டிருப்பார். அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்று சுத்தமாகப் புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து மட்டுமே திரும்பிப் பார்க்கும்போது, இத்தகைய அனுபவங்கள் நமது உடலிலும் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று உணர்கிறோம்.” எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 5:50 pm

ஈரான் தூதரகத்தின் மீது ஏறி கொடியை மாற்றிய போராட்டக்காரர்!

லண்டனின் கென்சிங்டன் (Kensington) பகுதியில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தில் சனிக்கிழமை (ஜனவரி 10, 2026) இந்த அதிரடிச் சம்பவம்… The post ஈரான் தூதரகத்தின் மீது ஏறி கொடியை மாற்றிய போராட்டக்காரர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 5:46 pm

களைகட்டும் பொங்கல் ஷாப்பிங்.. தி.நகர் ரங்கநாதன் தெருவில் என்னாச்சு தெரியுமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் வாங்க சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று (ஜனவரி 11) மக்கள் அலைகடலென திரண்டு வருகின்றன்றனர்.

சமயம் 11 Jan 2026 5:31 pm

ஹிந்து இளைஞர் சுட்டுக் கொலை ; பாகிஸ்தானில் வெடித்தத போராட்டம்

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 4ம் திகதி பாடின் மாவட்டத்தில் உள்ள ராஹோ கோல்ஹி கிராமத்தில் கைலாஷ் கோல்ஹி, 25, என்ற ஹிந்து இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சிறிய குடிசை வீடு கட்டியபோது, அப்பகுதியைச் சேர்ந்த சர்பராஸ் நிசாமானி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சர்பராஸ், பட்டப்பகலில் வீடு புகுந்து கைலா ஷை சுட்டார். இதில், அவர் உயிரிழந்தார். இந்தக் […]

அதிரடி 11 Jan 2026 5:30 pm

கிளிநொச்சியின் இளம் குடும்ப பெண் யாழில் நேர்ந்த துயரம்

மூச்செடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக சிகிச்சை இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் சுவாசிக்க சிரமப்பட்டதன் காரணத்தினால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அதிரடி 11 Jan 2026 5:29 pm

சிறையிலிருந்து வந்த கையுடன் விகாரைக்கு விரைந்த டக்ளஸ் ; தேரர் கூறிய முக்கிய ஆலோசனை

கொழும்பு கங்காராம விகாராதிபதியை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். இதன்போது, “பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று விகாராதிபதி தெரிவித்தார். அரசியல் செயற்பாடுகள் இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது” என்று விகாராதிபதி தெரிவித்தார். மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக, அவதூறு […]

அதிரடி 11 Jan 2026 5:15 pm

வைத்தியசாலைக்குச் சென்ற 21 வயது இளம் தாய் மாயமானார் –தேடும் உறவினர்கள்!

மன்னார், சௌத்பார் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (சனிக்கிழமை, ஜனவரி 10,… The post வைத்தியசாலைக்குச் சென்ற 21 வயது இளம் தாய் மாயமானார் – தேடும் உறவினர்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 5:07 pm

பசுமை எதிர்காலத்தை நோக்கி.. குஜராத் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

2030க்குள் 100 ஜிகாவாட்டிற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைவதாக குஜராத் அரசு உறுதி அளித்துள்ளது. இது இந்தியாவின் ஆற்றல் மாற்றப் பயணத்தில் குஜராத் மாநிலத்தின் முக்கிய பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

சமயம் 11 Jan 2026 4:58 pm

பொங்கல் பரிசாக பணி நிரந்தரம் வேண்டும்.. பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வரிடம் கோரிக்கை!

பொங்கல் பண்டிகை பரிசாக தமிழக முதல்வர் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமயம் 11 Jan 2026 4:46 pm

ஜனநாயகனுக்கு ரெட் சிக்னல்.. பராசக்திக்கு க்ரீன் சிக்னலா.. ஒரு குழந்தை அழுதால்.. குஷ்பூ விளக்கம்!

மத்திய அரசு திரைப்படங்களை தடை செய்யும் எண்ணத்தில் இருந்திருந்தால், முதலில் ‘பராசக்தி’ படத்தையே தடை செய்திருக்க வேண்டும் என பாஜக மகளிர் அணி நிர்வாகி குஷ்பூ தெரிவித்தார்.

சமயம் 11 Jan 2026 4:37 pm

சர்வதேச விதிகளை மீறும் டிரம்ப்… டன் கணக்கில் தங்கத்தை மீட்ட ஆர்.பி.ஐ - இந்தியா அதிரடி முடிவு!

கடந்த ஜனவரி 20, 2025 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக மீண்டும் டிரம்ப் பதவி ஏற்றப் பிறகு, அதிக அளவிலான சர்வதேச விதிகளை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அமெரிக்காவின் நலனுக்காக உலக நாடுகளின் மீது வர்த்தக மற்றும் ஆயுத ரீதியிலான போர்களை அத்துமீறி நிகழ்த்துவதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமயம் 11 Jan 2026 4:35 pm

ஈரானிய மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக டொராண்டோவில் பிரம்மாண்ட பேரணி! ☀️

கனடாவின் டொராண்டோ நகரில், ஈரானில் நிலவும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அங்குள்ள மக்களின் வீரமிக்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்… The post ஈரானிய மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக டொராண்டோவில் பிரம்மாண்ட பேரணி! ☀️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 4:35 pm

திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து வர இருக்கும் திட்டங்கள்-மகிழ்ச்சியில் மக்கள்!

திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றன. இதனை அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கி வைத்தனர்.

சமயம் 11 Jan 2026 4:34 pm

ஈரானில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் ; 51 பேர் பலி

ஈரானில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் அந்நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் திகதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கமேனி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் […]

அதிரடி 11 Jan 2026 4:30 pm

சொத்து வாங்குவோர் கவனத்துக்கு.. பட்டா மாறுதல் ரொம்ப முக்கியம்.. ஆன்லைன் வசதி இருக்கு!

சொந்தமாக நிலம், சொத்து வாங்குவோர் பட்டா விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பட்டா மாறுதல் செய்யும்போது இந்த விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.

சமயம் 11 Jan 2026 3:55 pm

இலங்கையின் சுற்றுலா துறை தொடர் வீழ்ச்சி: பயணிகள் வருகை அதிகரித்த போதும் 15% குறைந்த வருமானம்!

தொடர் கொள்கை மாறுபாடுகளும், கொரோனா பேரிடரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை பெரும் பஞ்சசத்துக்குள் தள்ளின. அடிப்படை பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தவறான கொள்கைகளை தவறான நேரத்தில் எடுத்ததே இலங்கையின் பஞ்சத்திற்கு காரணமாக கருதப்பட்டது.

சமயம் 11 Jan 2026 3:52 pm

`எழுத்துலகம் பெரிய கடல்; அதில் கால்களையாவது நனைத்திடுங்கள்!' - கவிஞர் மனுஷ்யபுத்திரன்

உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனை, சென்னை புத்தகக் காட்சியில் சந்தித்து உரையாற்றினோம். நம்மிடம் பேசிய அவர், ``இன்றைய இளைஞர்கள் ஜென்சி கிட்ஸ் என்ற கருத்தாக்கத்தையே நான் ஏற்க மறுக்கிறேன் . ஏனென்றால், இந்த தலைமுறையைச் சேர்ந்த 100 இளைஞர்களை எடுத்துக் கொண்டால் 100 பேரும் ஒரே விதத்தில் இருப்பதில்லை. 10 பேர் அரசியலை பின்பற்றுவார்கள்,10 பேர் விளையாட்டை பின்பற்றுவார்கள், 10 பேர் சினிமாவை பின்பற்றுவார்கள், 10 பேர் மது மற்றும் போதையின் பிடியில் சிக்கி இருப்பார்கள். ஆக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான குண நலன்கள் இருக்கும். பொதுவாக ஜென்சி கிட்ஸ்கள் என்றாலே இப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. இன்று சமூக வலைதள பக்கத்தில் துண்டு (Shorts) காணொளிகளில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ரீல்ஸ்களை போடுபவர்களை ஜென்சி கிட்ஸ்களின் பிரதிநிதிகளாக பார்க்கிறோம். இது தவறான கண்ணோட்டம். இன்றைய இளைஞர்கள் பலவிதமாக இருக்கிறார்கள். படிக்கும் பழக்கம் ஒருவர் சொல்லிக் கொடுப்பதால் மட்டும் வருவது கிடையாது. எனக்கு ஒரு புத்தகம் முக்கியமானதாக தோன்றும். ஆனால் அது மற்றவர்களுக்கு முக்கியமானதாக இல்லாமல் இருக்கும். ஆக நமக்குத் தேவையான, நாம் எந்தத் துறைக்கு போகிறோம் என்பதை பார்த்து புத்தகம் படிக்கும் பழக்கத்தை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். கதை பிடிக்கும் என்றால் கதை படியுங்கள், கவிதை பிடிக்கும் என்றால் கவிதை புத்தகங்கள் வாசியுங்கள். சிறுகதை என்றால் ஜெயகாந்தன், அழகிரிசாமி, அசோக மித்ரன் இருக்கிறார்கள். கவிதை என்றால் கலாப்பிரியா, ஞானக்கூத்தன் ஆத்மாநாம், விக்ரமாதித்தன் என பல கவிஞர்கள் இருக்கிறார்கள். வாசிப்பை சுருக்க முடியாது. எழுத்துலகம் என்பது ஒரு பெரிய கடல். இங்கு என்ன இருக்கிறது, என்ன கிடைக்கும் என்றாவது வந்து கால்களையாவது நனைக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு புத்தகப் பரிந்துரையை விட நான் சொல்வது என்னவென்றால், இணையத்திலும், களத்திலும் அரசியல் பெயரில் அரசியலற்று சுற்றுகிறார்கள். அரசியல் களத்தில் வருகிறீர்கள் என்றால் உங்களின் வாழ்வையும் இந்த சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய தலைவரின் பின்னால் செல்லுங்கள். உங்களை அரசியல் அடியாட்களாக வெறும் சாதி மத பிற முட்டாளாக்கும் கவர்ச்சி அரசியலுக்கு பின்னால் செல்வது தவறான போக்கு. புத்தகப் பரிந்துரை என்பதையே நான் விரும்புவதில்லை. நான் இளைஞனாக இருந்த போது படித்தது என்றால் லியோ டால்ஸ்டாய் எழுதிய War and Peace 3000 பக்கங்களை கொண்டது. Dostoevsky எழுதிய Crime and Punishment படித்தேன். இது எல்லாம் நான் 18 வயதாகும் போது படித்தது. இப்போதுல்ல ஜென்சி கிட்ஸ்கள் இதையெல்லாம் படிப்பார்களா..? நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் பயணிக்க விரும்பும் துறை சார்ந்த புத்தகங்கள் வாங்கி படியுங்கள். ஒவ்வொருவருக்கும் புத்தக ரசனை மாறுபட்டது என்றார்.

விகடன் 11 Jan 2026 3:49 pm

தைப்பொங்கலுக்கு யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி

தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார். மறுநாள் 16ஆம் திகதி […]

அதிரடி 11 Jan 2026 3:47 pm

Grok AI சர்ச்சை: 'இந்திய சட்டத்தின் படி நடப்போம்' - தவறை ஒப்புக்கொண்ட எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம், தனது Grok AI மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டு 600 கணக்குளை ஒப்புக்கொண்டிருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எக்ஸ் தளத்தின் Grok AI மூலம் ஆபாச உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருந்தது. Grok AI இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளை ஒப்புக்கொண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்போம் என்றும் உறுதி அளித்துள்ளது. தவிர ஆபாசமான ப்ராம்ப்ட்களை (Prompts) பயன்படுத்தித் தவறான உள்ளடக்கங்களை உருவாக்கிய சுமார் 600-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக நீக்கி இருக்கிறது. விதிகளை மீறி உருவாக்கப்பட்ட 3,500-க்கும் அதிகமான ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை எக்ஸ் தளத்திலிருந்து அகற்றியிருக்கிறது. எலான் மஸ்க் இனி வரும் காலங்களில் Grok AI மூலம் ஆபாசமான அல்லது பாலியல் ரீதியான படங்களை உருவாக்க முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறது.

விகடன் 11 Jan 2026 3:40 pm

வலிமை இழந்த கம்யூனிஸ்ட்.. பின்னடைவில் காங்கிரஸ்.. எதிர்காலம் மோடிதான்.. அமித் ஷா நம்பிக்கை!

பாஜக மற்றும் என்டிஏ ஆட்சி செய்த மாநிலங்கள் வளர்ச்சியடைந்துள்ளன என்றும், அதே பாதையில் கேரளாவும் செல்ல வேண்டும் என்றும் திருவனந்தபுரத்தில் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சமயம் 11 Jan 2026 3:33 pm

அமெரிக்காவுடன் இணைப்பு: கிரீன்லாந்து தலைவா்கள் எதிா்ப்பு

அமெரிக்காவுடன் தங்கள் பிராந்தியத்தை இணைக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியதற்கு கிரீன்லாந்து அரசியல் கட்சித் தலைவா்கள், கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். தங்கள் தீவின் எதிா்காலத்தை தாங்களே தீா்மானிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்து கிரீன்லாந்து பிரதமா் ஜென்ஸ்-ஃப்ரெடரிக் நீல்சன் மற்றும் நான்கு கட்சித் தலைவா்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் அமெரிக்கா்களாக இருக்க விரும்பவில்லை. டென்மாா்க்கா்களாகவும் இருக்க விரும்பவில்லை. நாங்கள் கிரீன்லாந்தா்களாகவே இருக்க விரும்புகிறோம். கிரீன்லாந்தின் எதிா்காலத்தை கிரீன்லாந்து மக்களே […]

அதிரடி 11 Jan 2026 3:30 pm

மலையகத் தியாகிகள் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்ட போராட்டமும் விமர்சனப் பார்வையும்!

மலையகத் தியாகிகள் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்ட போராட்டமும் விமர்சனப் பார்வையும்! ஒரு பல்கலைக்கழக மாணவியாக, மலையகப் பின்னணியில் இருந்தோ… The post மலையகத் தியாகிகள் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்ட போராட்டமும் விமர்சனப் பார்வையும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 3:20 pm

✈️  விமான நிலையத்தில் £75 அபராதம் –கண்ணீர்  சிந்திய   Ryanair பயணிகள்  

பேர்மிங்காமில் இருந்து இத்தாலியின் வெரோனா (Verona) நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தின் நுழைவாயிலில் (Gate), சுமார் 15 பயணிகள் தலா… The post ✈️ விமான நிலையத்தில் 75 அபராதம் – கண்ணீர் சிந்திய Ryanair பயணிகள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 3:09 pm

`பதிவிடுவது பயனல்ல, அதை அச்சில் எழுத்தாக்க வேண்டும்!'- சென்னை புத்தகக் காட்சியில் ஆழி செந்தில்நாதன்

சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சியில், மொழியுரிமை செயல்பாட்டாளரும், ஆழி பதிப்பகத்தின் நிறுவனருமான செந்தில்நாதன் பேசினார். ஏன் ஆழி ? ``ஆழி என்பது ஆழமானது. அது போன்று நல்ல ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். இதுவரை 400 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். ஆழி பதிப்பகத்தை பொறுத்தவரை அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற விஷயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து எழுத்தாளர்கள் நேரடியாக எழுதுவதும், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்களாகவும், தொகுப்புகள் ஆகவும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். கடல், கடல்வழி பயணம் பற்றி படிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சியோடு இணைந்து பிற நாடுகளில் உள்ள புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறோம். ஆழி பதிப்பகத்தில் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் சிறப்பு என்னவென்றால், நூற்றாண்டை தொட்டிருக்கும் சுயமரியாதை இயக்கத்தை நினைவூட்டும் வகையில், 100 புத்தகங்களை சுயமரியாதை இயக்கம் சார்ந்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 புத்தகங்களை தொகுத்து இந்த ஆண்டு இந்த அரங்கத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறோம். நீதிக்கட்சி,பெரியார், அண்ணா , கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் என இந்த புத்தகங்கள் வெளிவந்துள்ளது. ஜென் சி களின் எழுத்துலகம் இந்தத் தலைமுறை 1952 இல் வெளிவந்த பராசக்திக்கும் 2026 இல் வெளிவர இருக்கும் பராசக்திக்கும் இடையிலான அரசியல் விஷயங்கள் நிறைய மாணவர்களிடையே சென்றடைந்து இருக்கிறது. இளம் தலைமுறைக்கு ஏன் புத்தகங்கள் முக்கியம் என்றால், சமூக வலைதள பக்கத்தில் வெறும் பதிவுகள் போடுவதால் மட்டும் பயன் அல்ல. அது புத்தகமாக மாறும்போது பிரிண்ட் ஆக இருக்கலாம் இ புக்காக இருக்கலாம். நீங்கள் பதிவிடுபவர் என்ற நிலையிலிருந்து மாறி, நீங்கள் ஒரு எழுத்தாளர் ஆகும் போது, அதிகாரம் பெற்ற நிபுணராக மாறுகிறீர்கள். பல துறைகளைப் பற்றிய விஷயங்கள் பலரை சென்றடைய வேண்டும். அது நீண்ட நாள் நீடிக்க வேண்டும். அந்தக் கண்ணோட்டத்தில் இருந்து ஜென் சி மாணவர்கள் எழுத ஆரம்பிக்க வேண்டும். இந்த நாளின் உலக சூழலை எடுத்துக் கொண்டால் நான் விரும்பக்கூடிய புத்தக பரிந்துரைகள் இதுதான்..! 1. இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் காக்கப்பட வேண்டியது ஜனநாயகம் தான். ஜனநாயகத்தைப் பற்றி உலக அளவில் பல அறிஞர்கள் பல கண்ணோட்டத்தில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நீங்கள் கேட்பதால் உடனே என்னால் சொல்ல முடியவில்லை. செயற்கை நுண்ணறிவிடமே முதல் 10 புத்தகங்கள் கேளுங்கள் . அதுவே உங்களுக்கு பதில் அளிக்கும். 2. இந்தியாவில் உள்ள எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் எதுவென்றால் குறிப்பாக ஆண்கள் படிக்க வேண்டும் இந்த புத்தகத்தை. பெரியாரின் பெண் ஏன் அடிமையானால்? இது பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்கள் படிக்க வேண்டிய கட்டாயமான புத்தகம். 3. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்து இருக்கிறது. இவை அனைத்திற்கும் திராவிட கட்சிகளின் ஆட்சியாளர்களுக்கு நன் மதிப்பு கொடுத்தாலும் இதன் வேர் தொடங்கியது அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம் என்ற புத்தகம் தான். இதை அனைவரும் படிக்க வேண்டும். 1947லிருந்து தமிழ்நாடு பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்த புத்தகத்திலிருந்து தான் தொடங்குகிறது. 4. உலக அளவில் தற்போது வளர்ந்து வரக்கூடியது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதைப் பற்றி அறிந்து கொள்ள பல புத்தகங்கள் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவை பற்றி அறிய செயற்கை நுண்ணறிவிடமே கேளுங்கள், உன்னை பற்றி படிப்பதற்கு எந்த புத்தகங்கள் நன்றாக இருக்கும் என்று..! நான் படித்தது, ஆங்கிலத்தில் Super Intelligence என்ற புத்தகம் இருக்கிறது. அதை நாங்கள் ஆழி பதிப்பகத்தில் மெய்யறிவு என்ற புத்தகமாக வெளியிட்டு இருக்கிறோம். 5. காலநிலை மாற்றம் மனிதன் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால். Greta Thunberg என்ற சுற்றுச்சூழல் ஆர்வலரின் சுற்றுச்சூழல் தொகுப்பான The collection of best article on Climate change இது அமேசானில் கிடைக்கும். இன்றைய உலக சூழலியல் பற்றி விளக்கும் புத்தகமாக இது அமைகிறது. விகடன் பிரசுரம்

விகடன் 11 Jan 2026 3:01 pm

பிரித்தானியாவில்  ஆபத்திலுள்ள 2,500  போின் வேலைவாய்ப்புகள்  

பிரித்தானியாவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனங்களான Claire’s மற்றும் The Original Factory Shop (TOFS) ஆகியவை நிர்வாகச்… The post பிரித்தானியாவில் ஆபத்திலுள்ள 2,500 போின் வேலைவாய்ப்புகள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 2:58 pm

புட்டினுக்கு கிம் ஜோங்-உன் எழுதிய  கடிதம்: “நிபந்தனையற்ற ஆதரவும்!”

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அனுப்பியுள்ள புதிய கடிதத்தில், ரஷ்யாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும்… The post புட்டினுக்கு கிம் ஜோங்-உன் எழுதிய கடிதம்: “நிபந்தனையற்ற ஆதரவும்!” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 2:47 pm

️ தைப்பொங்கலுக்கு  யாழ் செல்லும் ஜனாதிபதி   

தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 15 மற்றும் 16… The post ️ தைப்பொங்கலுக்கு யாழ் செல்லும் ஜனாதிபதி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 2:44 pm

`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர் இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை, திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது, இதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமி தைத்திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளார். மேலும் முதலமைச்சர் சொல்வது உண்மைதான் சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்றார்.

விகடன் 11 Jan 2026 2:35 pm

200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்: மு.க ஸ்டாலின் சூளுரை

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில், பொங்கல் வைத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பசுக்களுக்கு உணவளித்ததுடன், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி அனைவருக்கும் வாழ்த்தும் தெரிவித்தார். 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி இந்த […]

அதிரடி 11 Jan 2026 2:30 pm

️ பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை விபத்து -காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். யாழ். போதனா வைத்தியசாலையில்… The post ️ பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை விபத்து -காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Jan 2026 2:26 pm

யாழில். பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் , படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொட்டடி பகுதியை சேர்ந்த சிவராசா சிவலக்சன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை பயணித்த சொகுசு புகையிரதத்துடன் , அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில், யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த புகையிரத கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்படும் நிலையில் , பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற நிலையிலும் அதனை பாதுகாப்பான புகையிரத கடவையாக மாற்றம் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் , தொடர்ந்து அது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுகிறது

பதிவு 11 Jan 2026 2:23 pm

பராசக்தி: இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது- கமல்

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பராசக்தி'. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'பராசக்தி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கமல் பராசக்தி அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அன்புள்ள இளவல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு... தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம். பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது முதல் பாராட்டு இந்த பயோபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும் இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும். கமல்ஹாசன் இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 2:15 pm