SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

அமித் ஷாவை சந்தித்த நயினார் நாகேந்திரன்.. சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது என்ன?

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சமயம் 14 Dec 2025 9:34 pm

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க!

மார்கழி என்றாலே உற்சாகம்தான். மார்கழி மாதத்தின் விடியற்காலைகள் பாசுரங்களாலும், வண்ண வண்ணக் கோலங்களாலும் எழில் கூடும். மனதில் மகிழ்ச்சி பெருகும். அப்படி நீங்கள் போடும் கோலத்திற்கு பரிசும் கிடைக்கும் என்றால், கூடுதல் மகிழ்ச்சிதானே?! அதற்கு... உங்களுடன் இணையவிருக்கிறது சென்னையிலிருக்கும் கீதம் உணவகம்! கோலம் போட்டி கீதம் உணவகம் நடத்தும் மாபெரும் நிகழ்வு.. ‘மார்கழி வண்ணக் கோலம் போட்டி’! இதில் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளன அவள் விகடன் இதழ் மற்றும் தினமலர் நாளிதழ். இப்போட்டியில் பங்கு பெற சென்னையில் உள்ள கீதம் உணவகங்களில் நீங்கள் கோலம் போட வேண்டும். டிசம்பர் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தினமும் காலையில் 4 மணி முதல் 7 மணி வரை போட்டியாளர்கள் கோலம் போட அனுமதிக்கப்படுவார்கள். இந்த 16 நாள்களில் போடப்பட்ட கோலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று கோலங்களுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. முதலிடம் ரூ.25,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன், இரண்டாமிடம் ரூ.10,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன், மூன்றாமிடம் ரூ.5,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வழங்கப்படும். அனைத்துப் போட்டியாளர்களுக்கும் கிரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனம் வழங்கும் ரூ.500 மதிப்பிலான பரிசுக் கூப்பனும், கீதம் உணவகம் சார்பாக 250 மதிப்பிலான பரிசுக் கூப்பனும் வழங்கப்படும். கூடவே, போட்டியாளர்கள் அனைவருக்கும் கீதம் உணவகத்தில் காலை உணவு வழங்கப்படும். தினமும் 50 கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு விகடன் இணையதளத்தில் வெளியிடப்படும். கோலம் - கோப்புப்படம் போட்டியில் பங்கு பெற விதிமுறைகள்... * போட்டியில் அனைத்து பாலினத்தவரும், அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம். * அண்ணா சாலை, தி. நகர், அண்ணா நகர், வேளச்சேரி, பல்லாவரம், அசோக் நகர், போரூர், மேடவாக்கம். துரைப்பாக்கம், நாவலூர், ஈ.சி.ஆர், ஊரப்பாக்கம், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கீதம் உணவகங்களில் கோலம் போடப்பட வேண்டும். * காலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோலம் போட அனுமதி வழங்கப்படும். https://docs.google.com/forms/d/1U4Anfb-zmZv1lGueay9GBxt36BFeepfFkwqRrRv6HLo/edit?usp=drivesdk என்ற இணைப்பு மூலமோ; 73972 22111 என்ற மொபைல் எண்ணுக்கு அழைத்தோ, நேரடியாக கீதம் கிளைகளுக்குச் சென்றோ பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு கிளையிலும் ஒரு நாளைக்கு 10 பேர் மட்டுமே கோலம் போட அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. * ஒரு நபர் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் போட்டியில் கலந்துகொள்ளலாம். * கோலம் போடத் தேவையான பொருள்களை போட்டியாளர்களே கொண்டு வரவேண்டும். * வெற்றியாளர்களை முடிவு செய்வதில் தேர்வுக்குழுவின் தீர்ப்பே இறுதியானது.

விகடன் 14 Dec 2025 9:33 pm

காசாவில் பைரன் புயல் தாக்கத்தால் 14 பேர் உயிரிழப்பு

காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை […]

அதிரடி 14 Dec 2025 9:30 pm

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, ஜனநாயக போராளிகள் கட்சியினுடைய தலைவர் சி.வேந்தன் ஈகை சுடர் ஏறினதை தொடர்ந்து, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

பதிவு 14 Dec 2025 8:59 pm

இன்ஜின் இல்லாத கார் தான் அதிமுக.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி அடிமையாக இருந்து வசதியாக வாழ்வதை விட சுயமரியாதையுடன் தனித்து வாழ வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

சமயம் 14 Dec 2025 8:49 pm

சீன வானில் அதிசயத்தை நிகழ்த்திய பறவைக்கூட்டம்

சீனாவில் லட்சக்கணக்கான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து நடனமாடுவது போல வானில் ஜாலம் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் வெப்ப மண்டல பசுபிக் தீவுகள் ஆகியவற்றை தாயகமாகக் கொண்டு உள்ளவை தான் ஸ்டாலிங் பறவைகள். எதிரிகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள எப்போதுமே கூட்டமாகவே மட்டும் வாழும். அதேபோல் வானில் பறக்கும்பொழுது ஒன்றொடொன்று இணைந்து கூட்டமாகவே பறக்கும். இந்தப் பறவைகளின் குரல் பலரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. மனிதர்கள் பேசுவது போன்ற […]

அதிரடி 14 Dec 2025 8:30 pm

திராவிட மாடல் ஆட்சி 2.O.. திமுக இளைஞரணி மாநாடு.. மு.க. ஸ்டாலின் பேசியது இது தான்!

திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில், மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். தமிழ்நாட்டை மாற்றியமைத்த திராவிட மாடல் ஆட்சி 2.O-க்கு இளைஞரணியினர் அடித்தளமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சமயம் 14 Dec 2025 8:04 pm

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு, 'பயங்கரவாத சம்பவம்'என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குற்றவாளி உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார். இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர், அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொரு குற்றவாளியின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் மூன்றாவது குற்றவாளி ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யோன் தெரிவித்தார்.

பதிவு 14 Dec 2025 8:01 pm

பின்வாங்கியது காவல்துறை

யாழ் சிறைச்சாலையில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து கோமா நிலையில் இருக்கும் சிவராமலிங்கம் தர்சனின் சகோதரி , அவரது அண்ணன் தாக்கப்பட்டதற்கான போதிய சந்தேகங்கள் இருப்பதாக தனது ஆதங்கத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதன் பின்னர் அவர் மேல் யாழ் சிறைச்சாலை அதிகாரி பொலீசில் முறைப்பாடு செய்தார். அதன் பின்னர் இன்று சிறைச்சாலை சார்பாக கொடுக்கப்பட்ட முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது. இது மிக மோசமான அடக்குமுறை ,நீதியான விசாரணை இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் மனிதவுரிமை ஆணையகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

பதிவு 14 Dec 2025 7:55 pm

கலைஞர் பேரன் டூ திமுகவின் எதிர்காலம்! உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை...

கலைஞரின் பேரன் முதல் திமுக கழகத்தின் எதிர்காலமாக மாறி வரும் உதயநிதி ஸ்டாலின் குறித்த பின்னணியை விரிவாக காண்போம்.

சமயம் 14 Dec 2025 7:54 pm

மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகள் அநுர அரசுக்கு வழங்கிய நற்சான்றுஆட்சியின் நீட்சிக்கான வழிகாட்டி! பனங்காட்டான்

வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் சஜித். மாகாணசபை தேர்தல் மூலம் நிவாரணம் பெற தமிழரசுக் கட்சி முயற்சி. பேபி நாமல் அரசியலில் இன்னமும் புட்டிப்பால் குடிக்கிறார். மழை விட்டும் தூவானம் போகவில்லையென்பது ஒரு வாழ்மொழி. மழை நிலத்தை நனைக்கும் வெறும் தண்ணீர் அல்ல. மனிதனின் அன்றாட வாழ்வுக்கு அத்தியாவசியமானது. ஆனால்இ மழை காற்றுடன் இணையும்பொழுது அதன் வீச்சு வேறாகிறது. மழை தூறுகிறதுஇ மழை பெய்கிறதுஇ மழை பொழிகிறது என்ற சொல்லாடல்கள் ஊடாக தென்றலுக்கும் புயலுக்கும்இ சூறாவளிக்குமிடையிலான அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம். சூறாவழியால் ஏற்பட்ட அனர்த்தத்தை இலங்கை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேசமும் இதனை உணர்ந்து உதவிக் கரங்களை நீளமாக நீட்டுகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசு அநுர குமர தலைமையில் கண்களை மூடிக்கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது. இதற்கு ஏதுவாக உலகம் தாராளமாக உதவுகிறது. அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவுகளைப் பார்க்கும்போது நாடு வழமைக்குத் திரும்ப பல மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகலாம். இலங்கை எல்லோருக்கும் பொதுவானது என்பதை எடுத்துக்காட்ட (இதுவும் ஒருவகை அரசியல்தான்) கடந்த 12ம் 13ம் திகதிகளில் இடம்பெறவிருந்த இலங்கையர் தினம் என்னும் தேசிய நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி நேரடியாகச் சென்று பார்வையிடுகிறார். சிறுவர் முதல் முதியோர் வரையானவர்களை அணைத்து ஆறுதல் கூறுகிறார். குடும்ப உறவுகளை இறந்தவர்களுக்கு தேறுதல் கூறி உடனடி நிவாரணத்துக்கு உத்தரவாதம் வழங்குகிறார். மத்திய மாகாணத்தின் பெரும்பகுதிகளே பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. மண் சரிவுகளில் அகப்பட்டு காணாமல் போயுள்ள சுமார் 200க்கும் அதிகமானவர்களுக்கு இறப்புப் பதிவு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது பெறுபவர்களுக்கு தாமதமின்றி அதற்கான நிவாரணம் கிடைக்குமாம். வீடுகளை சுத்தப்படுத்த 25இ000 ரூபாஇ மேலதிக செலவுகளுக்கு 50இ000 ரூபாஇ உயிரிழப்புகளுக்கும்இ வீடழிப்புகளுக்கும் நிறைவான நிவாரணம். ஜனாதிபதி உத்தரவில் அரச இயந்திரம் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எங்கிருந்து நிதி கிடைக்கும் என்ற ஆராய்ச்சியில் எதிர்க்கட்சிகள் தங்கள் சக்தியை செலவழிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள பலர் இன்னமும் தங்கள் தொகுதிகள் பக்கமே போகவில்லை. தங்கள் வாக்குகளால் எம்.பியானவர்களைத் தேடி தொகுதி மக்கள் நெடுமூச்சு விடுகின்றனர். எந்தவொரு நாடாளுமன்ற எம்.பியாவது தங்களின் ஒரு மாதச் சம்பளத்தைக்கூட நிவாரண நிதிக்கு வழங்கியதாக இதுவரை தெரியவில்லை. அர்ச்சுனா இராமநாதன் தமது பங்காக நான்கு இலட்சம் ரூபாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள் அவ்வப்போது எங்காவது சென்றுவிட்டு ஊடகங்களில் செய்தி போடுகின்றனர். ஒரு நாள் மழைக்கு ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய எம்.பிக்களின் காலம் முன்னர் இருந்தது. 1978ம் ஆண்டு சூறாவளியின்போது எம்.பிக்களின் தாராள நிதி உதவியை நேரில் தரிசித்த சாட்சி இந்தப் பத்தி எழுத்தாளர். ஆனால்இ இன்று நிலைமை அப்படிக் காணப்படவில்லை. உலக நாடுகள் முன்னர் வழங்கிய உதவி போதாது என்று மேலும் மேலும் வழங்கி வருகின்றன. சில நாடுகள் இரண்டாம் முறையாகவும் வழங்குகின்றன. மேலும் உதவிக்கு உத்தரவாதம் கொடுக்கின்றன. இலங்கையின் மீட்பு முயற்சிக்கு இலங்கைப் பணத்தில் ஆயிரம் கோடி ரூபாவை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை இணங்கியுள்ளதாக அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிரான்சே கூறியுள்ளார். அதேசமயம் இனி வரக்கூடிய காலநிலை மாற்ற பேரிடர்களை எதிர்கொள்ள முதலீடுகள் தேவையென்று அநுர அரசுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார். பேரிடரிலிருந்து இலங்கை மீள்வதற்கு அரசு கேட்ட 200 மில்லியன் டாலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவெடுத்துள்ளது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்கு 200 மில்லியன் டாலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ் அரசியல் கட்சிகளின் பாரிய கடமை. தொல்பொருள்இ வனபரிபாலன திணைக்களங்கள் இவ்வாறான நிதிகளில் தங்கள் கைங்கரியங்களை நிறைவேற்றக்கூடிய அபாயம் உண்டு. இதற்கு கடந்த காலஇ நிகழ்கால அனுபவங்கள் பல உள்ளன. கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் ஒன்றிணைந்து தங்கள் சொந்தப் பணத்தில் 3.6 மில்லியன் ரூபாவை நிவாரணத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது முற்றிலும் முன்மாதிரியான ஒரு செயற்பாடு. அமெரிக்காவின் இராஜாங்க உதவிச் செயலாளர் அலிசன் கூக்கர் இப்போது இலங்கையில் நிற்கிறார். அமெரிக்காவின் சி-130 உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில் இவரது வருகை அதனுடன் சேர்ந்துள்ளது. ஜனாதிபதி அநுர குமரவை நேரில் சந்தித்து உரையாடிய இவர்இ இலங்கையின் மீள் எழுச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்க தயார் என்று உறுதியளித்துள்ளார். ஆங்கிலத்தில் பிளாங் செக் என ஒன்றுண்டு. ஒரு தொகையுமே குறிப்பிடாது வழங்கப்படும் காசோலை என்பது இதன் அர்த்தம். அதாவதுஇ காசோலையின் பெறுனர் தமக்குத் தேவையான தொகையை இதில் எழுதலாம். அவ்வாறான உத்தரவாதம் அலிசன் உடையது. இது தவிரஇ இலங்கை மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் தீர்வை வரியை ரத்தாக்குவது அல்லது குறைப்பது பற்றியும் அமெரிக்கா ஆலோசிப்பதாக கூறியுள்ளார். இந்தியாஇ சீனா போன்ற நாடுகள் வழங்கும் உதவிகளுக்கு நிகராக அல்லது அதனிலும் மேலாக அமெரிக்க உதவி கிடைக்கலாம்போலத் தெரிகிறது. ஏற்கனவே சி-130 நடவடிக்கைகள் மீது பலரும் ஐயம் வெளியிட்டு வரும் வேளையில் அமெரிக்காவின் அளவு கடந்த உதவிகள் மேலும் அச்சமூட்டுவதாக அமையலாம். முதலாளித்துவ மேலாண்மை கொள்கைகளைக் கொண்ட நாடுகளை எதிர்த்து வந்த ஜே.வி.பி.யின் பினாமி ஆட்சிக்கு அமெரிக்கா உதவுவது என்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. உதவி எங்கிருந்து வந்தாலும் அதை தட்டிக்கழிக்க முடியாத நிலை இலங்கையினுடையது. இதனால் அரசியல் சித்தாந்தங்களை வெளிப்படுத்தி கிடைக்கும் உதவிகளை வெட்டுவதற்கு சிலர் முயற்சிப்பது கண்கூடு. கடந்த ஆட்சிக் காலங்களில் ஊழல் புரிந்துஇ கொள்ளையடித்து பொத்தி வைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியைக்கூட நிவாரணத்துக்கு வழங்க உள்நாட்டு அரசியல்வாதிகள் முன்வரவில்லை. ஆனால்இ இவர்கள் வெளியிட்டுவரும் கருத்துகளும் அபிப்பிராயங்களும் அரசாங்கத்தைச் சாடுவதாகமும் மக்கள் மத்தியில் ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க நினைவு நிதியத்திலிருந்து 250 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதுடன் அவசியமற்ற தப்பபிப்பிராயங்களை பரப்ப வேண்டாமெனவும் வேண்டியுள்ளார். மகிந்த ராஜபக்ச திடீர் நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியுள்ளார். இவரது பொதுஜன பெரமுன விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் பேரிடர் உயிர்ச் சேதங்களுக்கு ஆளும் தரப்பே முழுப்பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடு பேரிடர் விடயத்தில் தாமதமானது என்பது உண்மை. அதனை ஆட்சித்தரப்பே ஒருவகையில் ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே பேரிடர் எச்சரிக்கை வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பது சகல எதிர்க்கட்சியினரதும் குற்றச்சாட்டு. எச்சரிக்கை ஏற்கனவே வழங்கப்பட்டதென்றால் இது விடயத்தில் அரசாங்கத்தைச் சுட்டி நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றம் எதிர்க்கட்சிகள் மீதும் விழுகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் அழிவின் பின் பாதிக்கப்பட்டவர்களை ராஜபக்ச அரசு மீளக்குடியேற்றியது என்று சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்சஇ அநுர அரசு இப்போது ஏன் அவ்வாறு செயற்படவில்லை என்று கேட்டிருக்கிறார். முள்ளிவாய்க்கால் போரில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுககள் இத்தனை ஆண்டுகளாக வீதிகளில் நிற்பதை இவர் அறியவில்லைப் போலும். பேபி நாமல் பாவம்! இன்னமும் அரசியலில் புட்டிப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பிலுள்ள தூதுவர்களைச் சந்திப்பதில் மினக்கெடுகிறார். இவர்களை சந்திப்பதை ஊடகங்கள் ஊடாக படம் காட்டுகிறார். எல்லாவற்றிலுமே குறை காண்பவராக மல்லுக்கட்டுகிறார். இவரது கட்சி நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாக எங்கும் காணப்படவில்லை. எல்லாவற்றிலும் மேலானது தமிழர் தரப்பில் இடம்பெறும் அதிரடிகள். நிவாரணப் பணிகளைவிட இவர்களின் அறிவார்ந்த நிலைப்பாடு நிச்சயம் சொல்ல முடியாத மாகாணசபை தேர்தல். முன்னைய உள்ளாட்சித் தேர்தலின்போது வெளியேறியவர்களை (வெளியேற்றப்பட்டவர்கள்) மீண்டும் தமிழரசுடன் இணைப்பதற்கான முதற் கூட்டம் முடிவடைந்துள்ளது. இது ஒரு தொடர்கதையாகுமாம். இச்சந்திப்பின் பிறையோரிட்டி தமிழரசின் சுமந்திரனை மாகாணசபை தலைவராக்குவது. இதற்காக எந்த விட்டுக்கொடுப்புக்கும் தமிழரசு இறங்கியுள்ளது. பேரழிவின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அநுர அரசின் நிகழ்ச்சிப் பட்டியலில் இப்போதைக்கு மாகாணசபை தேர்தல் இல்லையென்று பெலவத்தை வட்டாரங்கள் சொல்லுகின்றன. இவ்வேளையில் மல்வத்தஇ அஸ்கிரிய பீடாதிபதிகள் அநுர அரசின் துரித நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ் இந்த ஆட்சியின் நீட்சிக்கான வழிகாட்டியாகத் தெரிகிறது.

பதிவு 14 Dec 2025 7:54 pm

மாமனிதர் தராகிக்கு விருது!

தாரகி அல்லது தராக்கி என்று பரவலாக அறியப்பட்ட மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் துணிகரமான பத்திரிகைச் செயற்பாட்டுக்காக பிரித்தானியாவில் அவருக்கு வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது. மாமனிதர் சிவராமின் ஆழமான பகுப்பாய்வுக்கும், தாயகத்தின் நெருக்கடியான போர்ச் சூழலில் அவர் செயலாற்றிய வீரத்துக்குத் தலைவணங்கியும் இலங்கையில் நடந்தேறும் அரச ஒடுக்குமுறையை உலகுக்கு அம்பலப்படுத்திய செயற்பாட்டுக்குமாக வரதகுமார் நினைவு விருது இலண்டனில் 2025 டிசம்பர் 13 ஆம் நாள் சனியன்று வழங்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முதலில் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டும் பின்னர் பிரித்தானியாவை மையமாகக் கொண்டும் ஈழத்தமிழர் அரசியல், மரபியல், மனித உரிமை ஆகிய விடயதானங்களை தரவுப்படுத்துவதில் தமிழ் தகவல் நடுவம் (Tamil Information Centre, TIC) என்ற அமைப்பு தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழத்தமிழரிடையே சுதந்திரன் என்ற பத்திரிகை இயங்கியதற்குச் சமாந்தரமாக, ஆனால் கட்சிசார்பற்ற சுயாதீன ஆங்கில வாராந்தப் பத்திரிகையாக சற்றர்டே றிவியூ இயங்கிவந்தபோது அதன் ஆசிரியராக மறைந்த மூத்த பத்திரிகையாசிரியான எஸ். சிவநாயகம் பணியாற்றியிருந்தார். அவர் தமிழ் தகவல் நடுவத்தில் இணைந்து பிற்காலத்தில் காத்திரமான தரவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருந்த போது அவரோடு நெருக்கமாகப் பணியாற்றிய வைரமுத்து வரதகுமார் (1949-2019) நடுவத்தின் பணிகளை அதன் முழுநேரச் செயற்பாட்டாளராகவும் வாழ்நாட் செயற்பாட்டளராகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தார். அத்தகைய பாரம்பரியம் கொண்ட தமிழ் தகவல் நடுவத்தால் ஆண்டுதோறும் மனித உரிமை நாளை ஒட்டி வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுவருகிறது. பிரித்தானியாவில் இருந்து இயங்கும் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரான போல் ஹெரன் என்பவருக்கும் இரண்டாம் தலை முறை ஈழத்தமிழர் வழக்கறிஞையான சாந்தி சிவகுமாரனுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை விருது வழங்கப்பட்டது. பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இலங்கைத் தூதரலாயத்தில் கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கெதிரான சட்ட நடவடிக்கை உள்ளடங்கலாக பல சட்ட நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தமைக்கான அங்கீகாரமாக மனித உரிமை விருதுகள் வழங்கப்பட்டன. மாமனிதர் சிவராமுக்கான சிறப்பு விருதை அவரின் மனைவி பிள்ளைகளிடம் சேர்க்கும் முகமாக தமிழ்நெட் ஆங்கில ஊடகத்தின் நிறுவக ஆசிரியரும் சிவராமின் நெருங்கிய ஊடக நண்பருமான ஜெயா கோபிநாத் (நோர்வே) பெற்றுக்கொண்டு சுருக்கமான நினைவுரை ஒன்றையும் நிகழ்வில் வழங்கியிருந்தார். தனது உரையின் போது மாமனிதர் சிவராமின் துணைவியாரும் அவர்களது மகனும் இரு மகள்மாரும் இந்த விருது வழங்கிய நிகழ்வைக் காணும் போது தமிழினம் மாமனிதர் சிவராமின் மீது நன்றியறிதலோடு இருப்பதைக் குறிப்பெடுத்துக்கொள்வார்கள் என்று தெரிவித்தார். சிவராம் தான் வாழ்ந்த காலத்தில் தனது வாழ்க்கையில் இனி எந்த அங்கீகாரமும் ஒரு விடயத்தை விட பெரிதாக அமையாது என்று தனக்குக் கூறியிருந்ததாகத் தெரிவித்த ஜெயா, அந்தச் சம்பவத்தையும் அங்கு விவரித்தார். 2004 நவம்பர் மாவீரர் நாளை ஒட்டிய நாட்களில் தேசியத்தலைவர் சிவராமை அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களோடும் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களோடும் சந்தித்தபோது தலைவர் பிரபா சிவராமின் கைகளைத் தனது இரண்டு கைகளாலும் இறுகப்பற்றி கொழும்பில் இருக்கவேண்டாம் என்றும் தற்காலிகமாக ஆதல் வெளிநாட்டில் தங்கியிருக்குமாறும் கண்கள் பனிக்க வேண்டிக்கொண்டார் என்றும் அதைவிடத் தனக்குப் பெரிய அங்கீகாரம் வேறு எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை என்று சிவராம் தனக்குப் பெருமையோடு தெரிவித்திருந்ததாகவும் ஜெயா அங்கு குறிப்பிட்டு, சிவராமின் குடும்பத்தினர் சார்பாக அந்த விருதுக்கான ஏற்புரையை வழங்கினார். மாமனிதர் சிவராமை காப்பாற்றுவதற்கு ஏற்ற நிதிப்பலம் தமிழ்நெற்றுக்கு இருக்கவில்லையென்றும் நிதிப்பலத்தைக் கொண்டிருந்த தமிழ் ஊடகங்கள் அவருக்கேற்ற சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்தும் சூழலைப் புலம்பெயர் சூழலில் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் தமிழ்நெற் நிறுவக ஆசிரியர் தனது ஏற்புரையில் வெளிப்படுத்தினார். சிவராமின் குடும்பத்தினர் கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் கனடாவில் யாழ். ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25 ஆவது ஆண்டு நினைவுநாள் பல ஊடகத்துறையினரின் பங்கேற்போடு நடந்தேறியபோது அந்த நிகழ்வில் சிவராம் அவர்களின் பாரியார் பவானியும் அவரின் பிள்ளைகளும் நிமலராஜனின் குடும்பத்தினரோடும் பிள்ளைகளோடும் இணைந்து கலந்துகொண்டதையும் தனது உரையில் ஜெயா குறிப்பிட்டார்.

பதிவு 14 Dec 2025 7:42 pm

திமுக இளைஞரணி மாநாடு.. தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்நாக்ஸ்.. அந்தப் பையில் வேறென்ன இருந்தது தெரியுமா?

திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், உணவுப் பைகள் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.

சமயம் 14 Dec 2025 7:36 pm

கண்டியின் கடைசித் தமிழ் மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசு இலங்கையில்!

மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசான அசோக் ராஜா இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளார். கண்டியின் கடைசித் தமிழ் மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசான அசோக் ராஜா சுற்றுலாப் பயணமாக இன்று (13.12.2025) கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

அதிரடி 14 Dec 2025 7:33 pm

மியான்மருடன் தொடரும் மோதல்: 4 தாய்லாந்து வீரா்கள் பலி

கம்போடியாவுடன் ஐந்து நாள்களாகத் தொடரும் எல்லை மோதலில் 4 தாய்லாந்து வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து தாய்லாந்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: கம்போடிய எல்லைப் பகுதியில் இருந்து அந்த நாட்டுப் படைகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தியதால், 4 தாய்லாந்து வீரா்கள் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்துள்ளனா். இது ஜூலை மாத போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். இருந்தாலும், தாய்லாந்து படைகள் பதிலடி கொடுத்து, கம்போடிய படைகளுக்கு பெரும் இழப்பை […]

அதிரடி 14 Dec 2025 7:30 pm

இந்தியா தற்போது நல்லம்:ஜேவிபி

சூறாவளி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மருத்துவ சேவைகளை வழங்கிய இந்திய இராணுவ மருத்துவ குழுவினர் இன்று (14) மதியம் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டனர். இந்திய இராணுவ மருத்துவக் குழுவினருக்கு சுகாதார அமைச்சர் உட்பட சுகாதார அமைச்சக குழுவினர், இந்திய தூதரக குழுவினர் நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், மஹியங்கனை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக 85 பேர் கொண்ட இந்திய இராணுவ மருத்துவக் குழு நாட்டிற்கு வந்தது. மஹியங்கனை நகரத்தின் மையத்தில் ஒரு சிறப்பு நடமாடும் மருத்துவமனை அமைக்கப்பட்டு சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பதிவு 14 Dec 2025 7:24 pm

அமெரிக்கப் படையினர் சிறிலங்காவை விட்டுப் புறப்பட்டனர்

டிட்வா புயலை அடுத்து பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சிறிலங்கா வந்த அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த (INDOPACOM) படையினர் தங்கள் மனிதாபிமான உதவிப் பணியை முடித்துக் கொண்டு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர். 60 அமெரிக்கப் படையினரும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இன்று அமெரிக்க விமானப்படையின் C 130 விமானத்தில் புறப்பட்டனர். கடந்த 7ஆம் திகதி சிறிலங்கா வந்த அவர்கள் ,

புதினப்பலகை 14 Dec 2025 7:19 pm

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. யூதர்களின் விழாவான ஹனுக்கா-வை (Hanukkah) கொண்டாட கடற்கரையில் கூடியிருந்த சுமார் 1,000 முதல் 2,000 பேர் வரையிலான மக்கள் கூட்டத்தின்மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்தனர். Mass Shooting at Bondi Beach Chanukah in Sydney, Australia This guy who's hits them on the head is a fucking hero A man at Bondi Beach literally grabbed a terrorist’s gun with his bare hands and saved countless lives. That’s not bravery — that’s instinctive heroism. In a world… pic.twitter.com/8bHKGs98kf — KRoshan (@Kroshan4k) December 14, 2025 இந்த சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை தரப்பில், துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு பேரில் ஒருவர் போலீஸ் அதிகாரிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாகவும், இன்னொரு நபர் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கம் இந்த சம்பவத்தில்,மர்ம நபர் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை ஒருவர் பிடிங்கி பலரின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ``பான்டியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வேதனையளிக்கிறது. காவல்துறையினரும், அவசரகாலப் பணியாளர்களும் மக்களைக் காப்பாற்ற களத்தில் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். pic.twitter.com/JKCZNPOSKd — Anthony Albanese (@AlboMP) December 14, 2025 அதேவேளையில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இந்தத் தாக்குதல் குறித்து, ``ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பான்டி கடற்கரையில் ஹனுக்காவின் மெழுகுவர்த்தியை ஏற்றச் சென்ற யூதர்கள், நமது சகோதர சகோதரிகள் இழிவான தீவிரவாதிகளால் மிகவும் கொடூரமான தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர். இந்தத் தருணத்தில் இஸ்ரேலின் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது. காயமடைந்தவர்கள் குணமடையவும், உயிரிழந்தவர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஜெருசலேமிலிருந்து எங்களின் ஆதரவை நாங்கள் அனுப்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 14 Dec 2025 7:13 pm

மகேஸ்வரன் கொலை:குற்றவாளிக்கு மரணதண்டனை உறுதி!

முன்னாள் அமைச்சர்மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அரச ஆதரவு ஆயுதக்குழு உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக தண்டனையை உறுதி செய்து, கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட ஜோன்சன் கொலின் வாலண்டினோ அல்லது 'வசந்தன்'தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்தது. பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சிறப்பு அனுமதியை குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் யசந்த கோடகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரினார். ஜனவரி 1, 2008 அன்று கோட்டஹேனாவில் உள்ள பொன்னம்பலவனேஸ்வரர் கோவிலுக்குள் மகேஸ்வரன் மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். மகேஸ்வரனின் மெய்க்காப்பாளர்களுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவரும் காயமடைந்தார். மகேஸ்வரனும், குற்றம் சாட்டப்பட்டவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அப்போது அவர்தான் தன்னைச் சுட்ட நபர் என்று அடையாளம் காட்டினார். குற்றம் சாட்டப்பட்டவரின் இரத்தத்தில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ சான்றுகள் அவரை குற்றத்துடன் தொடர்புபடுத்தியதாகவும் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இவை மறுக்க முடியாத உண்மைகள் என்று அவர் ஒப்புக்கொண்டார், மனுவை வாபஸ் பெற நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.மனுதாரர் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பதிவு 14 Dec 2025 6:58 pm

2026 தமிழ்நாடு தேர்தல்: திமுகவில் இளைஞர்களுக்கு அதிக சீட்! முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

திருவண்ணாமலை வடக்கு மண்டல திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்க பேசினார். இதை விரிவாக காண்போம்.

சமயம் 14 Dec 2025 6:52 pm

இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா! அசாத்தியமா!! கிருபா இராஜரெட்னம்!

இலங்கையில் நிலநடுக்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியும், கல்விமான்கள் மத்தியில் சர்ச்சையும், பனிப்போரும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை ஊடகங்கள்… The post இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா! அசாத்தியமா!! கிருபா இராஜரெட்னம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 5:57 pm

யார் இந்த நிதின் நபின்? பீகார் எம்எல்ஏ டூ பாஜக தேசிய தலைவர்... முழு தகவல் இதோ

ஜேபி நட்டா பதவி காலம் முடிவை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? அவரது பின்னணி என்ன என்று காண்போம்.

சமயம் 14 Dec 2025 5:55 pm

தனுஷ்கோடியில் உருவான மணல் திட்டில் குவிந்த கடல் புறாக்கள்

ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனையானது, 2 கடல்கள் சங்கமிக்கும் இடமாகும். இதில் தென்கடல் பகுதியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் 2 இடங்களில் புதிதாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளன. அரிச்சல்முனை சாலை வளைவில் நின்று பார்த்தாலே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடலின் நடுவே அந்த மணல் திட்டுகள் தெளிவாக தெரிகின்றன. இந்த மணல் திட்டுகளில் ஆயிரக்கணக்கான கடல் காவா என்று சொல்லக்கூடிய கடல் புறாக்கள் குவிந்துள்ளன. கடலின் மேற்பரப்பில் கூட்டமாக […]

அதிரடி 14 Dec 2025 5:30 pm

நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் பயண நேரம் பாதியாக குறையும்! இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்தது

திருவனந்தபுரம் கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரயில் பாதை திட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் மூலம் நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பயண நேரம் பாதியாக குறையும் என தெரிகிறது. இதுபற்றி விரிவாக காண்போம்.

சமயம் 14 Dec 2025 5:04 pm

ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி.. தாக்குதலுக்கான காரணம் என்ன?

சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த கொடூர தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

சமயம் 14 Dec 2025 4:59 pm

இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்து

அனர்த்தத்துக்கு பின்னரான இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவுனரும் இந்தியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட முன்மொழிந்துள்ளார். அண்மையில் புது டெல்லிக்கு விஜயம் செய்த மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட பலருடன் சந்திப்புகளை மேற்கொண்டார். அத்துடன், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், 4வது இந்தியா–ஜப்பான் […]

அதிரடி 14 Dec 2025 4:57 pm

மன்னாரில் ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் வழங்கிய சிறுமி

மன்னாரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு சிறுமி ஒருவர் நினைவு சின்னம் வழங்கியுள்ளார். மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கு சனிக்கிழமை (13) மாலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். குறித்த கலந்துரையாடலின் நிறைவில் சிறுமி ஒருவர் தான் வரைந்த ஓவியம் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளித்தார்.

அதிரடி 14 Dec 2025 4:52 pm

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் உதவிக்கரம்! நிதியுதவி பெறுமதி அதிரடி உயர்வு!

இலங்கையைப் புரட்டிப்போட்ட டித்வா புயலுக்குப் பிறகு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு உலகம் முழுவதும்… The post இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் உதவிக்கரம்! நிதியுதவி பெறுமதி அதிரடி உயர்வு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 4:48 pm

பாக்., ஈரானில் இருந்து 2 நாள்களில் 10,000 ஆப்கன் மக்கள் வெளியேற்றம்!

பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2 நாள்களில் மட்டும் 10,000 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான ஆப்கன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில், அந்நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து கடந்த வியாழன் (டிச.11) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 1,939 குடும்பங்களைச் சேர்ந்த 10,043 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவித்துள்ளது. இதனைத் […]

அதிரடி 14 Dec 2025 4:30 pm

சிட்னியில் துப்பாக்கிச் சூடு! பொண்டி கடற்கரைப் பகுதியில் 10 பேர் பலி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதி இன்று (14.12.25) துப்பாக்கிச் சூட்டுக் களமாக… The post சிட்னியில் துப்பாக்கிச் சூடு! பொண்டி கடற்கரைப் பகுதியில் 10 பேர் பலி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 4:29 pm

சென்னை MTC பஸ் கண்காட்சி: தி நகர் பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள்...

சென்னை எம்டிசி பஸ் கண்காட்சி இன்று தி நகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பழமையான பேருந்தை காண மக்கள் பலரும் தி நகரில் குவிந்து வருகின்றனா்

சமயம் 14 Dec 2025 4:10 pm

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடுவழியில் தீப்பிடித்த சிற்றூந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை (14) பயணித்த சிற்றூந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு சேவைப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 14 Dec 2025 4:07 pm

FJ-ஐ விளாசிய விஜய் சேதுபதி: இந்த கோபத்த பாரு மேல காட்டியிருக்கணும் எனும் பார்வையாளர்கள்

பிக் பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்.ஜே. செய்த விஷயம் குறித்து பேசி அவரிடம் கோபப்பட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அதை பார்த்தவர்களோ, எங்க காட்ட வேண்டிய கோபத்தை எங்க காட்டுறீங்க என கேட்டிருக்கிறார்கள்.

சமயம் 14 Dec 2025 4:00 pm

IPL 2026: ‘லிவிங்ஸ்டன் வேணாம்’.. 34 வயது ஆல்ரவுண்டரை டார்கெட் செய்யும் சிஎஸ்கே: EX ஆர்சிபி வீரராம்!

ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லிவிங்ஸ்டனுக்கு பதில், 34 வயது ஆல்ரவுண்டரை டார்கெட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெமிரான் கிரீனுக்காக இந்த முடிவு எனக் கூறப்படுகிறது.

சமயம் 14 Dec 2025 3:57 pm

ஈரோட்டில் தவெக கூட்டத்துக்கு அனுமதி.. ஆனால் ஒரு கன்டிஷன்.. செக் வைத்த எஸ்.பி.!

ஈரோட்டில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ள விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதி வழங்கி உள்ளார்.

சமயம் 14 Dec 2025 3:49 pm

புயலுக்குப் பின் – நிலாந்தன்.

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது.… The post புயலுக்குப் பின் – நிலாந்தன். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 3:47 pm

’’நேரம் வந்தால் வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய்அறிவிப்பார்..’’ – தவெக அறிவிப்பு!

தவெக தலைவர் விஜய், சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Dec 2025 3:45 pm

IND vs PAK : ‘குட்டி ஹர்திக் பாண்டியா காட்டடி’.. வைபவ் சூர்யவன்ஷி சொதப்பல்: பாகிஸ்தான் சிறந்த பந்துவீச்சு!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2025 தொடரில், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி அபாரமாக பந்துவீசியது. இந்திய அணியில், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மட்டுமே அபாரமாக விளையாடினார்.

சமயம் 14 Dec 2025 3:35 pm

டாக்காவில் 12 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 42 பேர் மீட்பு

டாக்காவில் 12 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. வங்க தேசம் தலைநகர் டாக்காவில் உள்ள 12 மாடி கட்டடத்தின் தரை தளத்தில் சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் அதிகாலை 5:45 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்தனர். உடனே கட்டடத்திலிருந்து 42 பேரை தீயணைப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். சம்பவ இடத்தில் 18 தீயணைப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி அன்வாருல் […]

அதிரடி 14 Dec 2025 3:30 pm

சவுக்கு சங்கர் கைது… குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவின் அராஜகம்- மார்க்கண்டேய கட்ஜு விமர்சனம்!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆளும் திமுக அரசு ஊழல் கறைபடிந்து காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சமயம் 14 Dec 2025 3:18 pm

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை - வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

பதிவு 14 Dec 2025 3:17 pm

MUM vs HAR: ‘எதிர்பார்க்காத ட்விஸ்ட்’.. காட்டடி அடித்த டெஸ்ட் பேட்டர்: 235-யை சேஸ் செய்த மும்பை அணி!

ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி அபாரமாக செயல்பட்டு, இறுதியில் 235 ரன்களையும் சேஸ் செய்து அசத்தியது. இப்போட்டியில், டெஸ்ட் அணி பேட்டர் அபாரமாக செயல்பட்டு ரன் மழை பொழிந்தார்.

சமயம் 14 Dec 2025 3:09 pm

அன்புமணி பணமோசடி செய்தாரா? தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் பரபரப்பு புகார்!

அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 14 Dec 2025 3:00 pm

ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கிளியை காப்பாற்ற முயன்ற தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்

பெங்களூர், பெங்களூருவின் கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார்( வயது 32). தொழிலதிபரான இவர் தனது வீட்டில், மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வந்தார். இதன் விலை ரூ.2.5 லட்சம் என சொல்லப்படுகிறது. நேற்று காலையில் அந்த கிளி, வீட்டிலிருந்து பறந்து அருகிலுள்ள மின் கம்பத்தில் விழுந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார், இரும்பு பைப் குழையை எடுத்து கிளியை மீட்கலாம் என திட்டமிட்டுள்ளார். கிளி இருந்த இடத்தின் அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர் மீது […]

அதிரடி 14 Dec 2025 2:30 pm

சென்னை வானில் விண்கல் மழை… இன்று இரவு ரெடியாருங்க- தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!

தமிழக மக்கள் இன்று இரவு வானில் விண்கல் மழையை கண்டு ரசிக்கலாம் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டிருக்கிறார். இது முக்கியமான வானியல் நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

சமயம் 14 Dec 2025 2:07 pm

``வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் - அன்புமணி

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் போன்ற ஒன்றை அருந்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிகள் பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுவை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Liquor - மது இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று போற்றப்படும் பாளையங்கோட்டையில் முருகன் குறிச்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்று முன்னேற வேண்டிய வயதில் மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது. அண்மைக்காலமாகவே பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்தும் சர்ச்சைக் காணொலிகள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அரசுப் பள்ளிக்கு சென்ற மாணவிகள் ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்தில் மது அருந்தும் காணொலி இணையத்தில் வேகமாக பரவியது. அதற்கு முன் திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவரின் பிறந்தநாளையொட்டி 11-ம் வகுப்பு மாணவிகள் சிலர் மது அருந்தி வகுப்பறையில் மயங்கி விழுந்ததும், கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் குடித்து விட்டு போதையில் சாலையில் தகராறு செய்ததும் செய்திகளாகின. பாமக அன்புமணி அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில், 9-ஆம் வகுப்பு மாணவிகளே வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தியிருப்பதைப் பார்க்கும் போது தமிழ்நாட்டை திமுக ஆட்சியாளர்கள் எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்ற அச்சமும், கவலையும் தான் ஏற்படுகின்றன. சில தலைமுறைகளுக்கு முந்தைய தமிழக இளைஞர்களுக்கு மது என்றால் என்ன? என்பதே தெரியாமல் இருந்தது. பின்னர் அந்த நிலை மாறி தமிழகத்தில் மது அருந்துபவர்களின் குறைந்தபட்ச வயது 25 ஆக குறைந்தது. இப்போது 10 அல்லது 11 வயது சிறுவர்கள் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். அதை உறுதி செய்யும் வகையில் தான் 9-ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்தும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. மது சார்ந்த அனைத்து சீரழிவுகளுக்கும் திமுக தான் காரணமாக இருந்திருக்கிறது. மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவிகள் மீதான இந்த நடவடிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. டாஸ்மாக் கடை இது மாணவிகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதித்து விடும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும். மது அருந்தியதற்காக மாணவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மீதோ அல்லது அவர்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்தவர்கள் மீதோ என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து இத்தகைய நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக திகழும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? ஒரு மாணவர் அவரது வீட்டில் இருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மதுக்கடைகளை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையை தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களுமே மக்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கைக்கெட்டும் தொலைவில் மது கிடைக்கும் போது, பதின் வயதினருக்கே உரிய சாகச மனநிலை மதுவை சுவைத்துப் பார்க்கத் தூண்டும். இது தான் மாணவச் செல்வங்கள் பதின் வயதில் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை திமுக அரசு செய்தாக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் அந்த பரிகாரம் ஆகும். அதை உடனடியாகச் செய்து இளம் தலைமுறையினரை அரசு காப்பாற்ற வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். திமுக கூட்டணி கட்சிகள் இன்று அடிமைகளாக செயல்பட்டு வருகின்றன - சொல்கிறார் செல்லூர் ராஜூ

விகடன் 14 Dec 2025 2:00 pm

வரலாறு காணாத பிரியாவிடை! ஜான் சீனா ஓய்வு:

“Never Give Up” (ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே) என்ற தாரக மந்திரத்தின் நாயகனும், ’90ஸ் கிட்ஸின்’ ஹீரோவுமான WWE ஜாம்பவான்… The post வரலாறு காணாத பிரியாவிடை! ஜான் சீனா ஓய்வு: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:49 pm

துப்பாக்கி வெடித்ததில் நொடிப்பொழுதில் மாறிய குடும்பஸ்தரின் வாழ்க்கை

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை பம்பஹின்ன , வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய விஜேசுந்தர பண்டார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வந்துள்ளதுடன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்தே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து சமனல வேவ […]

அதிரடி 14 Dec 2025 1:47 pm

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை

‘டித்வா’ புயல் தாக்கத்தையடுத்து நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்ட வர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி சபரிமலை சபரீச ஐயப்பன் ஆலயத்தில் பிரார்த்திக்கப்பட்டது. யாழ்ப்பாணம், கோண்டாவில் அமைந்துள்ள ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை விசேட புஷ்பாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்கார பூஜைகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. அதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. […]

அதிரடி 14 Dec 2025 1:44 pm

BB Tamil 9 Day 69: ‘கேக்கல... சத்தமா... கேக்கல.. ‘ - பிகில் விஜய்யாக மாறிய விசே

மறுபடியும் அதேதான் ‘இவரே பாம் வைப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற மாதிரிதான் பிக் பாஸ் ஷோ போய்க்கொண்டிருக்கிறது. பாரு, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்களின் சேட்டைகளை, அதனால் ஏற்படும் சண்டைகளை போதுமான அளவிற்கு வளரவிட்டு வார நாட்களில் கன்டென்ட் தேற்றுவது. பிறகு வீக்கெண்ட் ஷோவில் இவர்களே அதை ஹோஸ்ட் மூலமாகக் கண்டிப்பது. ‘செம சூப்பரா கேட்டாருப்பா’ என்று பார்வையாளர்களை பரவசப்படுத்துவது. இதுவொரு வணிக தந்திரம். பிக் பாஸ், ஹோஸ்ட், சக போட்டியாளர்கள் என்று எவரையும் மதிக்காத பாரு மற்றும் கம்முவை உடனே வெளியே அனுப்பவேண்டும். செய்வார்களா? செய்யமாட்டார்கள். TRP இறங்கிவிடும். நெகட்டிவ் கன்டென்ட்டிற்குத்தான் இன்றைய தேதியில் வணிக மதிப்பு இருக்கிறது. வேறு திறமையான போட்டியாளர்களை உள்ளே இறக்கினால் இதை சமன் செய்யமுடியும். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 69 “நான் ரொம்ப போல்டான பொண்ணு’ன்னு சொல்லிட்டு உள்ளே போனவங்கள்லாம் மைக்ல பேச பயப்படறாங்க. அவங்க பண்ண தப்புக்கு வீடே தண்டனை அனுபவிக்குது. ஆனா இவங்களுக்கு அந்த கில்ட்டே இல்ல. வாங்க விசாரிப்போம்” என்று ஃபயர் மோடில் உள்ளே சென்றார் விசே. “எல்லோரும் டீ காஃபி குடிக்காம நல்லாயிருக்கீங்களா?” என்று சர்காஸமாக விசாரித்துவிட்டு நேரடியாக பாரு -கம்முவிடம் வந்தார். “பிக் பாஸிற்கும் மத்தவங்களுக்கும் உங்க பிரைவஸியை மதிக்கத் தெரியல. அதனால உங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கும். அந்த பிரைவஸியை நான் தரேன். ரெண்டு பேரும் மைக்கை கழட்டி வெச்சிடுங்க” என்றார் விசே. BB Tamil 9 Day 69 சாக்லேட் பிடுங்கப்பட்ட குழந்தைபோல இந்த எபிசோடு முழுக்க முகத்தை வைத்துக்கொண்டிருந்த பாரு, ‘ஸாரி சார்’ என்று உருக்கமாக நடிக்க முயன்றார். ஆனால் நடிப்பு வரவில்லை. பாருவாவது பரவாயில்லை. ஆனால் கம்முவோ நெஞ்சழுத்தக்காரன்போல, பிரேக்கில் எல்லாம் மைக்கை மாட்டி அட்ராசிட்டி செய்தார். “மத்தவங்க சொல்லுங்க... நீங்க அவங்களுக்கு ஒரு தண்டனை கொடுத்தீங்க. அவங்க அதுக்கு கில்ட்டா ஃபீல் பண்ணாங்களா?” என்று விசாரிக்க ஆரம்பித்தார். முதலில் எழுப்பியது வினோத்தை. “அது வந்து சார்.. அவங்க அப்ப குற்றவுணர்ச்சியா இருந்தாங்க” என்று மழுப்பலான பாணியில் வினோத் பதில்சொல்ல விசேவிற்கு சரியான கோபம் வந்தது. “ஓ.. நீங்க கம்முவோட நெருங்கிய நண்பர்.. இல்லையா.. உக்காருங்க” என்று அமர வைத்தார். பாரு -கம்மு - வினோத் - அமித் - நால்வரையும் ரோஸ்ட் செய்த விசே வினோத்திற்கு ஊமைக்குத்தாக விழுந்ததால் மற்ற அனைவருமே பாரு கம்மு ஜோடியின் சேட்டைகளை எரிச்சலுடன் சொன்னார்கள். சான்ட்ராகூட பாருவிற்கு எதிராக சாட்சியம் சொன்னார். மாற்றிச்சொன்னால் விசே பின்னி விடுவார் என்கிற பயம். விக்ரம் எழுந்தபோது கைத்தட்டல். “பிக் பாஸை மதிக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கெடைச்சது. ஆனா அவங்களோ நாங்க எக்ஸ்ட்ரா வேலைகொடுக்கற மாதிரி ஃபீல் பண்ணாங்க” என்றார் விக்ரம். அனைவரின் சாட்சியங்களையும் கேட்ட விசே “ஏம்மா பாரு. கெமிகூட கேம் ஆடினப்பகூட நீங்க மைக்கை கழட்டி வெக்கலை. ஆனா ஜாக்கிங் போகும்போது மட்டும் மைக் தொந்தரவா இருக்கா? உங்களுக்கு குற்றவுணர்ச்சி கொஞ்சம்கூட இல்ல. ‘கஞ்சி குடிச்சு வாழ்ந்தவங்கதானேன்னு எகத்தாளமா பேசியிருக்கீங்க.. இதே விஷயம் உங்களுக்கு நடந்தா சும்மா இருப்பீங்களா..?” என்று வெடிக்க முகத்தை பாவமாக வைத்துக்கொண்டார் பாரு. BB Tamil 9 Day 69 “கோர்ட் ரூம்லகூட நாங்க எல்லாம் வந்துட்டோம். இவங்க வெளிய வரல. பிக் பாஸ் அறிவிப்பு வந்தப்ப எங்களுக்கு பகீர்ன்னு ஆயிடுச்சு” என்றார் சபரி. “ரெண்டு பேர் சேர்ந்து ஒட்டுமொத்த வீட்டையே வெறுப்பேத்தி இருக்காங்க.. நீங்க எல்லாம் என்னதான் பண்ணீங்க.. நாளைக்கு சோறும் கட் பண்ணாதான் கேள்வி கேப்பீங்களா.. ?” என்று காட்டமாக கேட்ட விசே “பாரு.. உங்களுக்கு சொல்ல ஏதாச்சும் கருத்து இருக்கா.. சொன்னா மட்டும் என்ன ஆகப் போவுது.. அடுத்த வாரமும் இதையேதான் பண்ணப் போறீங்க.. இருந்தாலும் சொல்லுங்களேன்.. கேப்போம்” என்றார். ‘கேக்கல.. சத்தமா.. கேக்கல.. ‘ - பிகில் விஜய்யாக மாறிய விசே மைக் இல்லாமல் பாரு பேசியது சரியாக கேட்கவில்லை. அப்படியே மெலிதாக கேட்டாலும் “சத்தமா பேசுங்க பாரு.. சரியா கேக்கலை.. மக்களே உங்களுக்கு கேட்குதா.. எங்களுக்கும் கேக்கலை. பாரு பேசறது சரியா கேக்கலைன்றதால ஒரு பிரேக்” என்று சர்காஸமாக சொல்லி விட்டு சிரிப்புடன் அகன்றார் விசே. கூட்டம் வெடித்துச் சிரித்தது. பிரேக்கில் அனுமதி பெறாமல் மைக்கை எடுத்து மாட்டிய கம்மு, “ஏண்டா.. டேய்.. இவ்வளவு நேரம் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டுப் போனாரே.. அப்பக்கூட திருந்த மாட்டியா?” என்கிற மாதிரி மற்றவர்கள் ஆட்சேபிக்க, அரை மனதாக மைக்கை கழட்டி வைத்தார். அடுத்த தலைப்பு திவ்யா பிரச்சினை. “என்னம்மா நடந்தது. சொல்லுங்க?” என்று ஆரம்பித்தார் விசே. கம்ருதீன் பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை நடந்த சம்பவத்துடன் பட்டியலிட்டார் திவ்யா. BB Tamil 9 Day 69 “அந்தச் சமயத்துல கூட யார்லாம் இருந்தது?” என்று விசே கேட்க அமித், சான்ட்ரா, வினோத், ரம்யா (ஜெயில்) என்று பதில் வந்தது. அமித்தை எழுப்பிய விசே “நீங்கதானே வீட்டு தல. இத்தனை பெரிய பிரச்சினை போயிட்டு இருந்தது. நீங்க பாட்டுக்கு மிக்சர் சாப்பிட்டுட்டு உக்காந்து இருக்கீங்க” என்று கேட்க “சார்.. நான் கேட்டேன் சார்..” என்று பலவீனமாக ஆரம்பித்தார் அமித். “நாங்களும் வீடியோவை பார்த்துட்டுதான் வந்திருக்கோம். அதனாலதான் திவ்யால இருந்து ஆரம்பிச்சேன். எங்களுக்கு ஆர்டர் மறக்காது. வியானா உங்க பொண்ணு மாதிரின்னு சொல்றீங்க. அவங்களுக்கு இப்படி நடந்தாலும் வேடிக்கை பார்ப்பீங்களா.. அநியாயத்தை யார் வேணா கேக்கலாம். இந்தப் பிரச்சினைல வார்த்தைகள் எல்லை மீறிப் போச்சு” என்றார். பிரச்சினையை வேடிக்கை பார்த்தவர்களுக்கு விழுந்த ஊமைக்குத்து அடுத்ததாக ரம்யா பக்கம் நகர்ந்த விசே “போன வாரம் கம்ருதீன் உங்களை வாடி போடின்னு சொன்னப்ப.. திவ்யாதானே.. உங்களுக்கு சப்போர்ட்டுக்கு வந்தாங்க. ஒரு பொண்ணுக்கு நடக்கறத உங்களால கேக்க முடியாதா?” என்று மடக்கிய விசே, அடுத்ததாக சான்ட்ராவை எழுப்பினார். ‘அய்யோ.. பாவம்.. எனக்கு ஒண்ணும் தெரியாது’ என்கிற மோடில் எழுந்தார் சான்ட்ரா. “பிரஜினுக்கு இப்படியொரு விஷயம் நடந்தா, நீங்க வேடிக்கை பார்ப்பீங்களா.. திவ்யா இடத்துல உங்களுக்கு நடந்திருந்தா ?” என்று கேட்க சான்ட்ராவிடம் பதில் இல்லை. அடுத்ததாக வினோத். “நான் எவ்வளவோ சொன்னேன் சார். மன்னிப்பு கேட்க நான்தான் கூட்டிட்டு வந்தேன்” என்று அவர் சொல்ல, உருக்கமாக கண்ணீர் விடுவது போல் பாவனை செய்தார் விசே. “நாங்கதான் பார்த்தமே.. மன்னிப்பு கேட்க வந்துட்டு.. ரெண்டு பேரும் சிரிக்கறீங்க. BB Tamil 9 Day 69 உங்க நண்பர் கம்ருதீன்.. உங்களையே அவமதிக்கறாரு.. அது கூட உங்களுக்குப் புரியல.. கோர்ட்ல உங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா மட்டும் எப்படில்லாம் குதிச்சீங்க.. அந்தக் கோபம் இப்ப எங்க போச்சு?” என்று விசே கேள்விகளால் மடக்க வினோத்திடம் பதில் இல்லை. கம்ருதீன் கையைத் தூக்க “நீங்கதானே இந்த முடிவை எடுத்தீங்க.. செஞ்ச தவறுக்கு வருந்தியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா.. இந்த ஷோவிற்கு எதுக்கு வந்தீங்க.. அந்த வேலையைப் பார்க்கலையே.. நாங்க என்ன உங்க வீட்லயா வந்து எட்டிப் பார்த்தோம்.. போன வாரம்தானே உங்களைப் பாராட்டினேன். நீங்க பண்ற செயல்களால நீங்களேதான் உங்க மதிப்பை இழக்கறீங்க.. திவ்யாவை என்ன வார்த்தைகள்லாம் பேசினீங்க. கலாயக்கறதுக்கு அவங்க உங்க பிரெண்ட் கிடையாது. போடி வாடின்னுல்லாம் பேச உங்களுக்கு உரிமை இல்லை” என்று எரிச்சலுடன் கூறி விட்டு பிரேக்கில் சென்றார் விசே. மைக்கை திரும்பவும் மாட்டி அட்ராசிட்டி செய்த கம்ருதீன் தனக்கு எதிராக சாட்சியம் சொன்ன அரோவிடம் “ஓ.. இப்ப நல்லவங்களா ஆயிட்டிங்களா?” என்று மீண்டும் மைக்கை மாட்டி அட்ராசிட்டி செய்தார் கம்மு. பிரேக் முடிந்து திரும்பிய விசே “கம்மு.. கம்முன்னு இருக்க வேண்டியதுதானே.. ஏன் மைக்கை எடுத்தீங்க… பதில் சொல்லுங்க” என்று கேட்க, மைக் இல்லாமல் கம்ரு பேசியது கேட்கவில்லை. ‘கேக்கலை. சத்தமா..’ என்கிற விளையாட்டை மீண்டும் ஆரம்பித்தார் விசே. அடுத்தது கேப்டன்ஸி பற்றிய விசாரணை. ‘வீட்டு தல எப்படியிருந்தாரு?’ என்று கேட்க வழக்கம் போல அனைவரும் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். “நான் கேட்டப்போ.. நல்லா இருக்குன்னுதான் சொன்னாங்க’ என்று பரிதாபமாக விளக்கம் கொடுத்தார் அமித். ‘அது நல்லா பண்ணுதுக்கு.. இது நல்லா பண்ணாததுக்கு. ரெண்டும் வேற வேற..” என்று எரிச்சலானார் விசே. BB Tamil 9 Day 69 “பாருவும் கம்முவும் கொடுத்த தண்டனையை ஒழுங்கா செஞ்சாங்களா?” என்று விசாரிக்க “சில விஷயங்கள் பண்ணாங்க” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார் அமித். மற்றவர்களை விசாரிக்கும்போது இருவரும் ஏறத்தாழ ஒன்றுமே செய்யவில்லை என்பது தெரிந்தது. செய்த சிறிய வேலைகளைக் கூட அரைமனதாகவும் அரைகுறையாகவும் மற்றவர்களை கரித்துக்கொட்டிக் கொண்டே செய்தார்கள் என்பதும் தெரிய வந்தது. “ஓ.. அப்படின்னா அமித் சொல்லும்போது மட்டும் செஞ்சாங்களா.. மத்தவங்க சொல்றது பொய்யா..” என்று அமித் மீது மிகையாக கோபத்தைக் காட்டினார் விசே. ‘பதில் சொன்னாலும் பிரச்சினை.. சொல்லா விட்டாலும் பிரச்சினை’ என்கிற மாதிரி தவிப்புடன் நின்றிருந்தார் அமித். வீட்டு தல போஸ்ட்- இந்த சீசனில் நல்ல பெயரை எவருமே வாங்கவில்லை ‘வீட்டு தல’ பொறுப்பை ஓரளவிற்கு சிறப்பாகவே செய்ய முயன்றார் அமித். கம்முவிற்கும் பாருவிற்கும் தண்டனை அளிக்க முயன்றார். அவர்கள் செய்ய முரண்டு பிடிக்கும்போது அஹிம்சை முறையில் சிலுவையை சுமக்க முயன்றார். இயன்ற போதெல்லாம் ‘கம்மு.. இதைச் செய்யுங்க. பாரு அதைச் செய்யுங்க’ என்று வேண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் அமித் போன்ற பலவீனமான தலயால் சண்டி மாடுகளை வைத்து வண்டி ஓட்ட முடியாது. பிக் பாஸையே மதிக்காத பாருவும் கம்முவும் அமித்தையா மதிக்கப் போகிறார்கள்? திவ்யா பிரச்சினையில் ஆரம்பத்தில் அமித் அமைதியாக வேடிக்கை பார்த்தது தவறு. ஆனால் திவ்யா இதை ஆத்திரத்துடன் சுட்டிக் காட்டியவுடன் “நான் பேசறேன்.. நீங்க அமைதியா இருங்க” என்று தன்னாலான முயற்சிகளைச் செய்தார். ஆனால் இதையெல்லாம் தலைமைப்பண்புடன் ஸ்ட்ராங்காக செய்தாரா என்றால் இல்லை. BB Tamil 9 Day 69 “நீங்க biased-ஆ இருந்திருக்கீங்க அமித். தண்டனையை ஏத்துக்கலாமா, வேண்டாமான்னு அவங்கதான் முடிவு எடுப்பாங்களா, அதையும் ஒழுங்கா பண்ண மாட்டாங்களா.. நீங்க அடுத்தக் கட்டம் போயிருக்க வேண்டியதுதானே.. ‘சொல்லிப் பார்த்தேன். செய்யலைன்னு பிக் பாஸ் கிட்ட போயிருக்க வேண்டியதுதானே..” என்று அமித்திடம் கோபத்தைக் காட்டினார் விசே. ஒருவேளை அமித் பிக் பாஸிடம் சென்றிருந்தால் “சார்.. இந்த கேமை நீங்கதானே ஆடணும்.. ஒவ்வொண்ணுத்துக்கும் பிக் பாஸ் ஸ்கிரிப்ட் தர முடியுமா?” என்றும் விசே மடக்கியிருக்கலாம். தண்டனையை செய்யாமல் டபாய்த்த பாரு -கம்முவிடம் வேறு மாதிரியான தந்திரத்தை பயன்படுத்தி டிராமாவை அதிகப்படுத்தி ஷோவை சுவாரசியமாக ஆக்கியிருக்கலாம் என்பதுதான் விசே சொல்ல வருவதாகத் தோன்றுகிறது. ‘நீங்க செய்ய மாட்டீங்களா. அப்ப நான் செஞ்சிடறேன்’ என்பதில் சுயவதைதான் இருக்கிறதே ஒழிய, சுவாரசியம் இல்லை. BB Tamil 9 Day 69 ‘காமிரா பார்க்காத வேலை என்னதான் செஞ்சீங்க?’ -பாருவை பங்கமாக கலாய்த்த விசே “நிறைய பாத்திரங்கள் போட்டுட்டாங்க.. நாங்க வேலை செஞ்சோம்.. இதையெல்லாம் மத்தவங்க கவனிச்சிங்களான்னு தெரியல. காமிரால பதிவாச்சான்னு தெரியல” என்று பாரு வாயை விட்டு விட “காமிரால பதிவாகாத மாதிரி நீங்க என்ன வேலைதான் பண்ணீங்க?’ என்று டபுள் மீனிங்கில் விசே கலாய்த்தது சுவாரசியமான காட்சி. இத்தனை காமிராக்கள் இருக்கும் போது பாரு வேலை செய்வதை மட்டும் அவை பதிவாக்காமல் விட்டு விடுமா? இந்த சீசனில் நல்ல பெயர் வாங்கிய எந்த ‘தல’யும் இல்லை. அனைவருக்குமே கெட்ட பெயர். ஒருவேளை பாரு வீட்டு ‘தல’யானால் இந்த அவப்பெயரை நீக்குவார் என்று தோன்றுகிறது. (சும்மா. லுலுவாய்க்கு!) ரம்யாவிற்கு காஃபி தந்து வழியனுப்பிய விசே பிரேக் முடிந்து திரும்பி வந்த விசே ‘சரி.. அடுத்த விஷயத்திற்கு போகலாமா?” என்று எவிக்சன் சமாச்சாரத்திற்கு வந்தார். சொல்லி வைத்தாற்போல் மெஜாரிட்டியாக ரம்யாவின் பெயரைச் சொன்னார். பாரு எஃப்ஜேவின் பெயரைச்சொல்ல, திவ்யாவோ கம்முவின் பெயரைச் சொன்னார். எவிக்ஷன் கார்டில் ரம்யாவின் பெயரைப்பார்த்ததும் பெரிய அழுகையொலி கேட்டது. அது ரம்யா அல்ல. சான்ட்ரா. “அய்யோ.. இனிமே நான் தனியா இங்க பண்ணுவேன்’ என்று எல்கேஜி குழந்தை மாதிரி அழ ஆரம்பித்தார். இவர் யாரை நம்பி இந்த ஷோவிற்கு வந்தார் என்றே தெரியவில்லை. BB Tamil 9 Day 69 தன்னை யாராவது pamper செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று சான்ட்ரா எதிர்பார்ப்பது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. பெரும்பாலான நேரங்களில் இவர் கண்ணை கசக்கிக் கொண்டேயிருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேடைக்கு வந்த ரம்யா வீடியோவைப் பார்த்துவிட்டு “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆனா அழுகையாவும் வருது.. என் மேலயே கோபமா வருது” என்று கலவையான ஃபீலீங்கைச் சொன்னார். “இத்தனை தெளிவா பேசற ரம்யாவை வீட்டுக்குள்ள பார்க்கவே முடியலையே?’ என்றார் விசே காஃபி குடிக்காமல் பைத்தியம்போல் இருந்த ரம்யாவிற்கு ‘யாராவது காஃபி கொடுங்கப்பா” என்று விசே கேட்க, உண்மையிலேயே மேடைக்கு காஃபி வந்தது. “நான் மைக்கை பிடிச்சுக்கறேன்.. நீங்க குடிச்சிட்டே பேசுங்க.. சர்க்கரை சரியா இருக்கா.. டிகாக்ஷன் ஓகேவா?” என்று கலாய்த்தார் விசே. திக்குத்திசை தெரியாமல் பயணிக்கும் சீசன் 9 ரம்யாவை வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்த விசே, பாருவையும் கம்முவையும் மைக் மாட்ட அனுமதி தந்தார். “நீங்க மக்கள்கிட்ட இருந்து உங்களை துண்டிச்சிக்கிட்டா, அப்புறம் அவங்க உங்களை துண்டிச்சிடுவாங்க..” என்று வார்னிங் தந்துவிட்டு விசே கிளம்பினார். “இப்பத்தான் ரிலீஃப்பா இருக்கு” என்று மைக் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தார் பாரு. ரொமான்ஸ் சமயத்தில் பாரமாக தெரிந்த அதே மைக், இப்போது இன்பகரமாக இருக்கிறதாம். என்னவொரு மாற்றம்?! BB Tamil 9 Day 69 பாருவும் கம்முவும் மறுபடி ரகசியம் பேசினார்கள். ‘கேம் முடியற வரைக்கும் நாம பேசிக்க வேண்டாம்” என்று பாரு சொல்ல “டக்குன்னு முடிவெடுக்காத. ஒரு வாரம் இருந்து பார்ப்போம்” என்று கம்மு உருக்கத்துடன் சொல்ல, காதல் பறவைகள் இரண்டும் ஒவ்வொரு திசை நோக்கி பறந்தன. கம்மு உருக்கமாக பார்க்க, பாரு சோகத்தோடு ‘சூப் சாங்’ பாடுவதோடு எபிசோட் நிறைந்தது. முந்தைய சீசன்களில் உடலை வருத்தும் கடுமையான டாஸ்குகள் இருந்தன. இந்த சீசனில் அப்படியொன்றும் இல்லை. அதற்கே இவர்கள் இப்படி ஆடுகிறார்கள். போதாதற்கு நிறைய விதிமீறல்கள். நிகழ்ச்சியிலும் பெரிதாக சுவாரசியம் இல்லை. சண்டை மட்டும்தான். தட்டுத் தடுமாறி திக்கு திசை தெரியாமல் பயணிக்கும் கப்பல் மாதிரி தத்தளிக்கிறது சீசன் 9.

விகடன் 14 Dec 2025 1:42 pm

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை.

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் 1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. […]

அதிரடி 14 Dec 2025 1:41 pm

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 8 பேர் காயம்!

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும்… The post அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 8 பேர் காயம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:35 pm

அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷியாவும் உக்ரைனும் வான் வழி தாக்குதல் – 2 பேர் பலி!

அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷியாவும் உக்ரைனும் சரமாரி வான் வழி தாக்குதல்களைத் தொடர்ந்ததால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. வெள்ளிக்கிழமை(டிச. 12) நள்ளிரவில் ரஷியாவிலிருந்து உக்ரைனில் மின்சார உற்பத்தி உள்பட ஆற்றல் துறைக்கான உள்கட்டமைப்புகளையும் துறைமுகங்களையும் குறிவைத்து ட்ரோன்களாலும் ஏவுகணைகளாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் உக்ரைனில் சில பகுதிகள் மின்சார விநியோகம் தடைபட்டு அப்பகுதிகளைச் சேர்ந்தோர் இருளில் தவித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களை விவரித்துப் பேசிய உக்ரைன் அதிபர் […]

அதிரடி 14 Dec 2025 1:30 pm

   மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்பு!

சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அகில் விஸ்வநாதன் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள… The post மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:26 pm

Vote chori: மாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் ராம் லீலா மைதானம்; காங்கிரஸ் திட்டம் என்ன?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பா.ஜ.க வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார். பா.ஜ.க-வின் இந்த வாக்கு திருட்டுக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த புதன் கிழமை நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் ராகுல் காந்திக்கும் அமித் ஷாவுக்கும் இடையே வாக்கு திருட்டு தொடர்பாக வாக்குவாதம் நடந்தது. அமித் ஷா ராகுல் காந்தியின் உரையில், வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் உட்பட, சமீபத்திய செய்தியாளர் சந்திப்புகளில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்குமாறு அமித் ஷாவிடம் சவால் விடுத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக சாடினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆவேசமடைந்த அமிஷ் ஷா, ``நாடாளுமன்றம் ராகுல் காந்தியின் விருப்பப்படி செயல்படாது. எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது. தேர்தலில் வெற்றிபெற்றால் தேர்தல் ஆணையம் பாராட்டப்படுகிறது தோல்வியடைந்தால் விமர்சிக்கப்படுகிறது. என்றார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி 'வாக்கு திருட்டு'க்கு எதிராக போராட்டத்தை அறிவித்திருக்கிறது. டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று நடக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்த போராட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்துக்கு தயாராகுல் ராம்லீலா மைதனாம் இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேல், ``எங்கள் கட்சி ராம்லீலா மைதானத்தில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' என்ற பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தீர்க்கமான போரை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இந்த பேரணியில் ஏராளமான மக்கள் கலந்துகொள்வார்கள் என்றார். ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கேசவ் மஹ்தோ கம்லேஷ்,``ஜார்க்கண்ட் பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தப் போராட்டத்துக்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. ஜார்க்கண்ட் முழுவதிலும் இருந்து கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பிரதிநிதிகள் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் டெல்லிக்கு வந்துவிட்டனர். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் போராட்டம் குறித்த அறிவிப்புக்கு முன்பு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், ``தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் நடுநிலையான நடுவர் இல்லை. இது உண்மையில் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. அதனால்தான் நாங்கள் முழுமையாக ஒரு பிரசாரம் மற்றும் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளோம். ராகுல் காந்தி - மல்லிகர்ஜுன கார்கே ஐந்து கோடி கையெழுத்துகள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நாங்கள் சந்திப்பிற்கு நேரம் கேட்டுள்ளோம்... நாடாளுமன்றத்திலும் இந்த வாக்குத் திருட்டுப் பிரச்னை குறித்து விவாதித்தோம். எங்கள் தலைவர் நேரடியான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். விமர்சிப்பது மட்டுமல்லாமல், நாங்கள் தெளிவான ஆலோசனைகளையும் வழங்குகிறோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து நிறைய புகார்கள் உள்ளன. என்றார். தமிழ்நாடு வரும் அமித் ஷா; இறுதி முடிவை ஒத்திவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் - என்ன நடக்கிறது?

விகடன் 14 Dec 2025 12:57 pm

சொந்த மண்ணில் ஓர் உரிமைப் போராட்டம்! காங்கேசன்துறை மயான விடுதலை!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மக்களின் நீண்ட காலக் கோரிக்கை ஒரு வரலாற்றுத் துயரத்தின் குறியீடு. 1990களில் இடம்பெயர்ந்து, 25 ஆண்டுகளுக்குப்… The post சொந்த மண்ணில் ஓர் உரிமைப் போராட்டம்! காங்கேசன்துறை மயான விடுதலை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 12:57 pm

பிக் பாஸ் ஆரம்பிச்சு 70 நாளாகியும் இன்னும் உங்களுக்கு தான் புரியல மிஸ்டர் விஜய் சேதுபதி: பார்வையாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களோ விஜய் சேதுபதிக்கு தான் இன்னும் எதுவுமே புரியாமல் இருக்கிறது என்கிறார்கள். அவர்கள் அப்படி சொல்ல என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமயம் 14 Dec 2025 12:47 pm

உயரும் மகளிர் உரிமைத் தொகை… ரூ.1,000 விடுபட்டவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தர்மபுரியில் ஸ்டாலின் உறுதி!

தர்மபுரியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்களுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் இந்த தொகை உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமயம் 14 Dec 2025 12:37 pm

இந்தோனேசியா வெள்ளம்! 1000-ஐ கடந்த உயிர்ப் பலிகள்; 218 பேர் மாயம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சும்தரா தீவில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அங்குள்ள 3 மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரிடரில், அங்குள்ள கட்டுமானங்கள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1000-க்கும் அதிகமான மக்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான 218 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக […]

அதிரடி 14 Dec 2025 12:30 pm

CUET PG 2026 விண்ணப்பம் தொடக்கம்; மார்ச் மாதம் தேர்வு - நேரடியாக விண்ணப்பிக்க லிங்க் இதோ

முதுகலை பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான முதுகலை க்யூட் 2026 (CUET PG 2026) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் இத்தேர்வு 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் https://exams.nta.nic.in/cuet-pg/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

சமயம் 14 Dec 2025 12:19 pm

6 மாசத்துல வரும்னு செல்வராகவன் சொன்னது விவாகரத்தை தானா?: ரசிகர்கள் அதிர்ச்சி

ஆர்யன் பட பேட்டியில் செல்வராகவன் பேசிய வீடியோவை பலரும் ஷேர் செய்து விவாகரத்து குறித்து தான் அக்டோபர் மாதமே பேசியிருக்கிறாரா இயக்குநர் செல்வராகவன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமயம் 14 Dec 2025 11:54 am

தேமுதிக: ``2026 தேர்தலுக்குத் தயார், 234 தொகுதியும் எங்கள் இலக்கு - பிரேமலதா கொடுத்த அப்டேட்

தேமுதிகவின் இளைஞர் அணிச் செயலாளரான விஜய பிரபாகரனின் 34-வது பிறந்தநாள் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதற்கிடையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இன்றைக்கு விஜய பிரபாகருடைய பிறந்த நாள். விமானம் ரத்து போன்ற சிக்கலால் விஜய பிரபாகரன் இன்னும் சென்னை வந்து சேரமுடியவில்லை. விஜய பிரபாகரன் மும்பையில் அதிகாலை 4 மணியிலிருந்து விமான நிலையத்தில் காத்திருக்கிறார். இன்று மாலைக்குள் சென்னை வந்துவிடுவார். தம்பியை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த மாதம் 28-ம் தேதி கேப்டனுடைய குரு பூஜை நிகழ்ச்சி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும், நிர்வாகிகள் தொண்டர்கள் வருகிறார்கள். அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே மூன்று கட்டம் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' மற்றும் 'மக்களைத் தேடி மக்கள் தலைவர்' ரத யாத்திரையை முடித்திருக்கிறோம். ஜனவரி 9 கடலூரில் நடக்கின்ற மாநாடுக்கும் தயாராகி வருகிறோம். அந்த மாநாடுதான் இப்போதைக்கு எங்களுடைய அடுத்த இலக்கு. அந்த மாநாட்டில் ஒரு நல்ல ஒரு அறிவிப்பு நிச்சயமாக வழங்குவோம். கேப்டன் இருந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளும், மத்தியில் இருக்கும் கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். அந்த வகையில எல்லாருமே தோழமையோடு, நட்புணர்வோடு பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நல்ல ஒரு தகவலை அறிவிப்போம். பிரேமலதா விஜயகாந்த் எங்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் களத்தில் இருக்கிறார்கள். ஒருவருடமாக இந்தத் தேர்தலுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 68000 பூத்திலும் பூத் கமிட்டி அமைத்திருக்கிறோம். எனவே, தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் இப்போது உங்களிடம் உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 234 தொகுதிகளும் எங்கள் இலக்குதான். காங்கிரஸ் - தாவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்றால் அது குறித்து அவர்களிடம்தான் பேச வேண்டும். எங்களுக்கு எந்தக் கருத்தும் கிடையாது. எல்லா கட்சியும் எங்களுக்கு நட்புதான் என்பதால், உரிய நேரத்தில் தெளிவாக பதில் சொல்லவோம். என்றார். திமுக கூட்டணி கட்சிகள் இன்று அடிமைகளாக செயல்பட்டு வருகின்றன - சொல்கிறார் செல்லூர் ராஜூ

விகடன் 14 Dec 2025 11:49 am

மக்கள் சக்தியால் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் - செங்கோட்டையன் பேச்சு!

தவெகவில் விருப்பமனு வாங்குவது எப்பொழுது?என்பது குறித்த தகவலை அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.

சமயம் 14 Dec 2025 11:41 am

ராஜஸ்தான்: ஆம்புலன்சில் உள்ள சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் பயனா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேற்று முன் தினம் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரே நாள் ஆன பச்சிளம் குழந்தைக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு குழந்தையை மருத்துவமனைக்கு தந்தையும், உறவினரும் கொண்டு சென்றுள்ளனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அந்த ஆம்புலன்சில் உள்ள […]

அதிரடி 14 Dec 2025 11:30 am

இன்ஸ்டாவில் இருந்து செல்வராகவன் போட்டோக்களை நீக்கிய மனைவி: கஸ்தூரி ராஜா வீட்டில் 3வது விவாகரத்தானு ரசிகர்கள் கவலை

கீதாஞ்சலி செல்வராகவன் தன் கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியிருப்பது சினிமா ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா என்கிறார்கள்.

சமயம் 14 Dec 2025 10:52 am

தாவரவியல் பூங்காவாக மாறவுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் ?

மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தாவரவியல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினர் பொதுமக்களிடமிருந்து கையெழுத்து வேட்டை ஆரம்பித்துள்ளார்கள். என ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தீபன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில் மாவீரர் துயிலும் இல்லங்களின் கண்ணியத்தையும் உணர்வுகளையும் உதாசினம் செய்யும் நோக்கில் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் துயிலும் இல்லங்களை மாற்றம் செய்வதால் விடுதலைப் போராட்டத்தின் வரலாறுகளை முற்றும் முழுதாக அளிக்கும் நோக்கில் செயல்படுகின்றார்கள் அவற்றை கண்டித்து மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் என்ற அமைப்பு கையெழுத்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்

பதிவு 14 Dec 2025 10:43 am

ஹெச்-1பி விசா விவகாரம்! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக 20 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு!

ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகக் கட்டணம் விதித்துள்ளதை எதிர்த்து கலிபோர்னியா உள்பட 20 அமெரிக்க மாகாணங்களின் அரசுகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. அமெரிக்காவில் பணிபுரிய புதியதாக விண்ணப்பிக்கப்படும் ஹெச்-1பி விசாக்களுக்கு ரூ.91 லட்சம் (1 லட்சம் அமெரிக்க டாலர்கள்) கட்டணமாக விதித்து கடந்த செப்.19 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதனால், வெளிநாட்டு தொழிலாளர்களைப் பெரிதும் சார்ந்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிபர் […]

அதிரடி 14 Dec 2025 10:30 am

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை.

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் 1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அதன் போது, காங்கேசன்துறை இந்து மயானம் அமைந்துள்ள காணியும், அதனை சூழவுள்ள காணிகளும் விடுவிக்கப்படாது , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த நிலையில் , தற்போது அப்பகுதி அனைத்தும் துறைமுக அதிகார சபையின் ஆளுகைக்குள் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இந்து மயானத்தை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக சுமார் 10 வருட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமது முன்னோர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில் , தமது சொந்த மண்ணில் உள்ள இந்து மயானத்திலையே தமது உடல்களும் தகனம் செய்யப்பட்ட வேண்டும் என அங்குள்ள முதியவர்கள் பலரும் தமது இறுதி ஆசையாக கூறி வரும் நிலையில் , மாயனத்தினையும் அதற்கான பாதையையும் மீள பெற்று தருமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்ததை , அடுத்து , அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் வந்து அவ்விடத்தினை பார்வையிட்டார். அதன் போது , மயானத்தினை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி விரைவில் அதனை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.

பதிவு 14 Dec 2025 10:28 am

Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 'G.O.A.T. Tour' (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் ரசிகர்களைச் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டது. அதன் ஒருபகுதியாக மெஸ்ஸி நேற்று (13-ம் தேதி) ஹைதராபாத் வந்தடைந்தார். உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பல புகைப்பட நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அங்கு கால்பந்து விளையாடினார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்களையும் சந்தித்தார். View this post on Instagram இந்த நிகழ்வில் லியோனல் மெஸ்ஸி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தார். அப்போது மெஸ்ஸி, ராகுல் காந்திக்கு 'GOATED 10' என்ற எண் கொண்ட ஜெர்சியை பரிசளித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் உரையாற்றினர் கொல்கத்தாவைப் போல இந்த மைதானத்திலும் மெஸ்ஸியை ரசிகர்களால் அருகில் பார்க்கமுடியாத சூழலே நிலவியது. அதனால், ஆயிரக்கணக்கான ரூபாயை செலவு செய்து மெஸ்ஸியைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா

விகடன் 14 Dec 2025 10:20 am

இலங்கையர்களுடன் சென்ற வௌிநாட்டு கப்பல் ஒன்றை தடுத்து நிறுத்திய ஈரான்

இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட கப்பல் பணிக்குழாமினர் அடங்கிய வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகள் தடுக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன் லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து குறித்த கப்பலை ஈரான் அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கடத்தல்கள் குறித்த கப்பலில் இலங்கையர்களைத் தவிர இந்திய மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிறுத்துவதற்கான உத்தரவுகளை மீறியமை, தப்பிச் செல்ல முயற்சித்தமை […]

அதிரடி 14 Dec 2025 10:18 am

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்வது எப்படி?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்வது எப்படி? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

சமயம் 14 Dec 2025 10:08 am

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக 100 ஸ்டார்லிங்க் அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இணையச் சேவைகள் ஸ்டார்லிங்க் (Starlink) என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு செயற்கைக்கோள் இணையச் சேவையாகும். இந்நிலையில், இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் […]

அதிரடி 14 Dec 2025 10:06 am

திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு.. பிரமாண்டம் காட்டும் திமுக!

திருவண்ணாமலையில் இன்று திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

சமயம் 14 Dec 2025 10:04 am

பிக் பாஸ் பேச்சை கேட்காத பாரு, கம்மு இல்லை வியானா, ரம்யா வெளியேற்றம்: பார்வையாளர்கள் அதிருப்தி

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து பார்வதி மற்றும் கம்ருதீனை வெளியேற்றுவார்கள் என்று பார்வையாளர்கள் காத்திருந்த நிலையில் ரம்யா மற்றும் வியானா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சமயம் 14 Dec 2025 9:39 am

Vijay : திருச்செங்கோட்டில் போட்டியிடும் அருண் ராஜ்; முதல் வேட்பாளரை அறிவிக்கும் தவெக! - விவரம் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னமும் இரண்டரை மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், தவெக தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று முதல் அறிவிக்க திட்டமிட்டிருக்கிறது. அதன்படி ஈரோட்டின் திருச்செங்கோட்டில் இன்று ஒரு நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. TVK Arun Raj நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த கட்சியின் வேட்பாளர்களை வேக வேகமாக அறிவித்து வருகிறார். காங்கிரஸ் 234 தொகுதிக்கும் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. இந்த வரிசையில் தவெகவும் தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பாக பனையூரில் தவெகவின் மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழுவினரின் கூட்டம் நடந்திருந்தது. அதில், வியூக வகுப்பு குழுவினர் லேட்டஸ்ட்டாக எடுத்திருந்த ஒரு சர்வேயும் பவர்பாய்ண்டாக போட்டுக் காட்டப்பட்டிருந்தது. அதன்படி 160 தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தவெக தலைமை நம்புகிறது. இதைத் தொடர்ந்துதான் இன்று முதல் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் போட்டிப் போடப்போகும் தொகுதியை வரிசையாக அறிவிக்கவிருக்கின்றனர். TVK - Arun Raj விஜய்யுடனான நட்பால் ஐ.ஆர்.எஸ் பணியை விட்டுவிட்டு தவெகவில் இணைந்து கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் பொறுப்பை வாங்கிய அருண் ராஜ் திருச்செங்கோட்டில் வேட்பாளராக நிற்கவிருக்கிறார். இதற்காக அவரின் குழு கடந்த சில வாரங்களாக தொகுதியில் இறங்கி பல்ஸ் பார்த்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இன்று திருச்செங்கோட்டில் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுச்செயலாளர் ஆனந்தும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அருண் ராஜை நிர்வாகிகள் மத்தியில் வேட்பாளராக அறிமுகப்படுத்தி, அவரின் வெற்றிக்கு அத்தனை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பேசவிருக்கின்றனர்.

விகடன் 14 Dec 2025 9:35 am

திருச்சியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் உயிரிழப்பு-மேயர் சொன்ன குட்நியூஸ்!

திருச்சியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேயர் சொன்னதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.

சமயம் 14 Dec 2025 9:31 am

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: மன்னிப்பு கேட்ட மம்தா –நடந்தது என்ன?

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்துக்கு வருகை தந்தார். அவரை காண்பதற்காக ரூ 5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் பெற்று ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். கொல்கத்தாவிலிருந்து மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸியை நேரில் பார்ப்பதற்காக […]

அதிரடி 14 Dec 2025 9:30 am

AI வளர்ச்சி: ``நீங்களும் நானும் தான் கடைசி தலைமுறை - வெளிப்படையாக பேசிய புனீத் சந்தோக்

Lமைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனீத் சந்தோக் மற்றும் உலகின் பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர்  Microsoft AI Tour என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தியா வந்திருக்கின்றனர். அவர்கள் மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய புனீத் சந்தோக், `` பெரும்பாலானவர்கள் AI செயற்கை நுண்ணறிவு வேலைகளைப் பறித்துவிடும் என அஞ்சுகிறார்கள். ஆனால், உண்மையில் AI தானாகவே வேலைகளைப் பறிக்காது. மைக்ரோசாப்ட் இந்தியா தலைவர் புனீத் சந்தோக் இருப்பினும், வேலைவாய்ப்பு இழப்புக்கு உண்மையான அச்சுறுத்தல் 'கற்றுக்கொள்ள மறுப்பது' என்ற வடிவத்தில் வரும். இந்த புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள வேலைகளைப் பகுப்பாய்வு செய்து பணிகளை பிரித்துவிடும். அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு வேகமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அதனால், தொழில்துறை அமைப்பே மாறிவருகிறது. அதாவது ஒருமுறை கற்றுக்கொண்டு, அந்த அறிவை வாழ்நாள் முழுவதும் ஒரு தொழிலுக்குப் பயன்படுத்துவது என்ற கருத்து இப்போது சிதைந்து வருகிறது. நீங்களும் நானும் தான் நிலையான, நீண்ட கால வேலைவாய்ப்புகளைக் கொண்ட கடைசித் தலைமுறை. நம் குழந்தைகள் பலவிதமான பணிகளைச் செய்வார்கள். எனவே இந்த புதிய தொழில்நுட்ப யுகத்தில் கற்றல் என்பது மிகவும் அவசியமானது. அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவில் டெல்லியில் வசிப்பவரை விட ஆக்ஸிஜன் மாஸ்க்கின் முக்கியத்துவத்தை வேறு யாரும் நன்கு புரிந்துகொள்ள முடியாது. அப்படித்தான் இந்த வளர்ந்து வரும் AI உலகம். என்றார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, ``செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எந்தவொரு நிறுவனத்திற்கும் தரவுதான் மிகவும் மதிப்புமிக்க வளம். ஆனால், அந்தத் தரவை நீங்கள் செயற்கை நுண்ணறிவுக்குப் பொருத்தமான சூழலில் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் சத்யா நாதெல்லா மகாராஷ்டிரா மைக்ரோசாஃப்ட்டின் செயற்கை நுண்ணறிவு கருவிகளை இணையப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகிறது. மகாராஷ்டிராவின் 23 காவல் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ள நாக்பூர் திட்டம் மூலம் இணையக் குற்ற விசாரணைகளை 80 சதவீதம் குறைத்திருக்கிறது. மேலும் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 1,100 காவல் நிலையங்களுக்கும் இதை விரிவுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது தவிர, அதானி சிமென்ட், யெஸ் வங்கி, ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் எல்டிஐமைண்ட்ரீ போன்ற பல வாடிக்கையாளர்களுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்றி வருகிறது என்றார். Finfluencer & AI நம்பி மோசம் போய்டாதீங்க மக்களே | SEBI | Indigo Flight | IPS Finance - 378

விகடன் 14 Dec 2025 9:05 am

Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் கண்களில் விளக்கெண்ணெய் விடுவது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு துளி விளக்கெண்ணெயை (Castor Oil) கண்களில் விடும் பழக்கம் பல காலமாக, பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும், பார்வைத்திறன் மேம்படும், உடலுக்கும் குளிர்ச்சி என்றெல்லாம் சொல்கிறார்களே, உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் முன்பெல்லாம், வீட்டுப் பெரியவர்கள் விளக்கெண்ணெயை (Castor Oil), டிரை ஐஸ் எனப்படும் கண் வறட்சிக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது  கண் மருத்துவர்கள், கண்ணுக்குள் விளக்கெண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியே அறிவுறுத்துகிறோம். ஏனென்றால், விளக்கெண்ணெய் போடுவதால் கண்ணில் தொற்று (Infection), எரிச்சல் (Irritation) போன்ற பிரச்னைகள் வரலாம். இருப்பினும், சிலர் இன்னும் கண் வறட்சிக்கு  விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. கண்களுக்குக் குளிர்ச்சி, கண்களைப் பிரகாசமாக வைக்கும் என்றெல்லாம் அதற்கு காரணங்களும் சொல்வதைப் பார்க்கிறோம். கண்களுக்கு வெளியே தடவிக்கொண்டால் அந்த அளவுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், கண்ணுக்குள் சொட்டு மருந்து போல, விளக்கெண்ணெய் விட்டுக்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். காலங்காலமாகப் பின்பற்றும் விஷயம்தானே? அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்றும் சிலர் விவாதம் செய்வதைப் பார்க்கிறோம். விளக்கெண்ணெய் கண்களுக்குள் விளக்கெண்ணெய் விடுவதைத் தவிர்க்கச் சொல்வதற்கு முக்கியமான  இரண்டு  காரணங்கள் உண்டு. விளக்கெண்ணெய் என்றாலும், அது கண்களில் தொற்று (Infection in the eyes) ஏற்படக் காரணமாகலாம். கண்களில் எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையில் ஒருவர் பயன்படுத்தும் விளக்கெண்ணெயின் தரம் எப்படிப்பட்டது என்பது மிக முக்கியம். அது சுத்திகரிக்கப்படாததாக இருக்கும்பட்சத்தில், இன்னும் ஆபத்தானது. எனவே, கண்கள் தொடர்பான எந்தப் பிரச்னைக்கும் மருத்துவ ஆலோசனையோடு சிகிச்சைகளைப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

விகடன் 14 Dec 2025 9:00 am

வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் வேலைகள் துரிதப்படுத்த நடவடிக்கை-மாநகராட்சி ஆணையர்!

வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் வேலைகள் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார்.

சமயம் 14 Dec 2025 8:44 am

Midlife Crisis: நடுத்தர வயதில் வருகின்ற பயம்; கடப்பது எப்படி? - வழிகாட்டும் நிபுணர்!

நம் அனைவருக்குமே, நம் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில், வாழ்தலின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் மிக அதிகமாக இருந்திருக்கும். அப்படியான நேரத்தில், `என்ன ஆனாலும் சரிப்பா, வாழ்ந்து பார்த்துடறேன்' என உற்சாகத்துடன் சொல்லி, வழக்கத்தைவிடவும் அதிக புத்துணர்ச்சியோடு செயல்பட்டிருப்போம். இதேபோல, காரணமே இல்லாமல், `என்ன வாழ்க்கைடா இது' எனத் துவண்டுபோவது, வாழ்வின் மீதுள்ள பிடிப்பு மொத்தமும் போய், `இனி என்ன செய்யுறது' எனப் புரியாமல் திகைத்து நிற்பது, அடுத்தது என்ன என்ற கேள்வியும், அது தரும் பயங்களும்கூட இயல்பானதுதான். இது தற்காலிகமானதும்கூட. குறிப்பாக, நடுத்தர வயதில் இந்த மனநிலை மாற்றங்கள் அதிகம் நிகழும். இதுதான் மிட்லைஃப் க்ரைசிஸ். இது குறித்து, மனநல மருத்துவர் வசந்திடம் பேசினோம். காரணம் மற்றும் மிட்லைஃப் க்ரைசிஸ் தடுக்க... Midlife Crisis ''மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னைக்கான முக்கியக் காரணம், மனநலனில் கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருத்தல்தான். 30களின் இறுதியிலேயோ 40களின் தொடக்கத்திலேயோகூட ஒருவருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டுவிடலாம் என்பதால், முப்பதை தாண்டிய உடனே மனநலனில் கவனமாக இருக்கத் தொடங்க வேண்டும். இங்கு, 30களைத் தாண்டிய பின்னர் நம் வாழ்க்கை அலுவலகம், வேலை, குடும்பம் என ஏதோவொன்றின் பின்னே பின்னப்பட்டுவிடுகிறது. அதற்கிடையில், நமக்காகவும் நாம் இயங்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம் என்பதுதான் பிரச்னை. அனைத்து வயதினருமே, தங்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, மனநிறைவான வாழ்க்கையை முன்னெடுத்தால் மட்டுமே மிட்லைஃப் க்ரைசிஸை முழுமையாக வரும் முன் தடுக்கமுடியும். வந்த பிறகு என்ன செய்வது..? Midlife Crisis Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது? `என்னால் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இப்போது மிட்லைஃப் க்ரைசிஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது' என்பவர்கள், தயங்காமல் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். மனநலப் பிரச்னைகள் அனைத்துமே, முறையான ஆலோசனை மூலம் சரிசெய்ய முடிபவைதான் என்பதால், பிரச்னை குறித்த பயம் அறவே வேண்டாம். ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான் என்ற உத்வேகத்துடன் இருக்கப் பழகுங்கள். உங்களை மகிழ்ச்சியாக்கும் விஷயங்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றைச் செய்து வாருங்கள். திட்டமிடுங்கள்! Midlife Crisis Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! 40 வயதென்பது, ஒருவர் புரொஃபஷனலாகத் தன்னுடைய பெஸ்ட்டைக் கொடுத்துவிட்டு சற்றே பெருமூச்சுவிடத் தொடங்கும் தருணம் என்பதால், வேலையைச் சற்று சோர்வுடனோ அலட்சியத்துடனோ அணுகும் மனநிலை இருக்கும். அப்படியான நேரத்தில் மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னையும் ஏற்பட்டால், வருங்காலம் குறித்த பயம் ஏற்படத் தொடங்கும். இப்படியான சிக்கல்களையெல்லாம் தடுக்கச் சிறந்த வழி, திட்டமிடுதல்தான். ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான்! வாழ்வில் எதன் மீதெல்லாம் உங்களுக்கு பயம் இருக்கிறதோ, அவற்றில் ஏற்படவிருக்கும் சிக்கல்களை முன்கூட்டியே அனுமானித்து, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளைச் செய்து வாருங்கள். முன்பே சொன்னதுபோல, ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான். தினமும் போகின்ற போக்கில் வாழாமல், வாழ்க்கையை நேர்த்தியான திட்டமிடலோடு வாழ்ந்து வாருங்கள். முக்கியமாகப் பொருளாதார தேவைகள் குறித்து தகுந்த நபரோடு ஆலோசித்து சரியாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என்கிறார் மனநல மருத்துவர் வசந்த்.

விகடன் 14 Dec 2025 8:31 am

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு

நைப்பியிடா: மியான்மரில் சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் சனிக்கிழமை(டிச.13) அதிகாலை நிலப்பரப்பில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் ஆழத்தில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, மியான்மரில் வியாழக்கிழமை 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் […]

அதிரடி 14 Dec 2025 8:30 am

தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவு!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே காலக்கெடுவை நீட்டித்த நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது . விரைவில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Dec 2025 8:07 am

கேரள உள்ளாட்சித் தேர்தல்: ``மதவாத சக்திகளின் தீய திட்டங்களில் சிக்கிவிடக் கூடாது - பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. 14 வருவாய் மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 6 மாநகராட்சி மேயர்கள், 86 நகராட்சி தலைவர்கள், 152 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 941 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுவதற்கான தேர்தல் இது. மொத்தமுள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளில் 23,576 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் கருத்து தெரிவித்த கேரளாவை ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், இந்த உள்ளாட்சி தேர்தலில் சரித்திர முன்னேற்றம் ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த நிலையில் உள்ளாட்சிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சுமார் 30 ஆண்டுகளாக சி.பி.எம் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி உள்ளது. 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 50 வார்டுகளை கைப்பற்றியது பா.ஜ.க கூட்டணி. கேரள மாநில சரித்திரத்தில் முதன் முறையாக பா.ஜ.க ஒரு மாநகராட்சியில் பெரும்பான்மை பெற்றுள்ளது. 2020 உள்ளாட்சி தேர்தலில் 53 சீட்டுகளை பெற்ற சி.பி.எம் கூட்டணி இப்போது 29 சீட்டுகளை பிடித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 19 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த தேர்தல் முடிவு குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திருவனந்தபுரம் மாநகராட்சியில் என்.டி.ஏ கூட்டணியின் வெற்றி, மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயம். கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்பார்த்தபடி தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரிய முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. அதற்கான காரணங்கள் ஆராயப்படும், தேவையான திருத்தங்களைச் செய்த பிறகு இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்னேறிச் செல்லும். மதவாத சக்திகளின் தீய திட்டங்களில் மக்கள் சிக்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக இந்தத் தேர்தல் முடிவு உள்ளது. இது மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எனத் தெரிவித்திருக்கிறார். நன்றி திருவனந்தபுரம்- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

விகடன் 14 Dec 2025 7:52 am

யாழ் சிறைசாலையின் நெகிழ்ச்சி செயல் ; அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட பொதிகள்

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்று (13) கையளிக்கப்பட்டன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அத்தியட்சகர் பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து […]

அதிரடி 14 Dec 2025 7:52 am

அமெரிக்க மூலோபாய நலன்களின் மையப் புள்ளி சிறிலங்கா

சிறிலங்காவில், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடையும் செல்வாக்கை எதிர்கொள்வதில் வொசிங்டன் கவனம் செலுத்தும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, எரிக் மேயர் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் முன்பாக, அவர் விளக்கமளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் பாதையில், சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம், சுதந்திரமான மற்றும் திறந்த

புதினப்பலகை 14 Dec 2025 7:50 am

மன்னாரில் ஜனாதிபதி அநுர ; வடக்கு அதிகாரிகளுக்கு வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்று (13) மாலை இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் […]

அதிரடி 14 Dec 2025 7:49 am

அவசரமாக கூடும் நாடாளுமன்றில் 1000 பில்லியன் ரூபாவுக்கு குறைநிரப்பு பிரேரணை

வரும் 18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தில், அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது. டிட்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதிக்கு ஒப்புதல் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் கீழ், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டியுள்ளார். இது தொடர்பான அரசிதழ்

புதினப்பலகை 14 Dec 2025 7:47 am

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில அரிசி வகைகளை பயிரிடும் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் அரிசியை இறக்குமதி செய்ய நேரிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெள்ளத்தினால் சேதம் வெள்ளத்தினால் சேதமடைந்த கல்நேவ பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்களை மீண்டும் பயிரிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் போகத்தில் பயிரிடப்படும் நாட்டு அரிசியைத் […]

அதிரடி 14 Dec 2025 7:46 am