ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து…ஸ்தம்பிக்கும் விமான நிலையங்கள்
தென் பகுதி அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட பயணிகள் ஆயிரணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தின் ஐந்து ஓடுபாதைகளும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டன. டெல்டா விமான சேவை நிறுவனம் தங்கள் நெட்வொர்க் முழுவதும் சுமார் 1,100 விமானங்களை ரத்து செய்தது. ஆனால் சனிக்கிழமை சேவைகளை அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, அட்லாண்டாவில் டெல்டா விமானம் […]
சுவீடன் அரச மாளிகையில் கடமையாற்றி பாதுகாவரில் கத்தி அவரைக் கிழித்தது!
சுவீடனில் ஸ்டாக்ஹோமில் உள்ள அரச மாளிகைக்கு முன் நடந்த விபத்தில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் பனியில் சறுக்கி விழுந்தார். அவரது துப்பாக்கியில் பொருத்தப்பட்ட ஒரு வகை கத்தி (பயோனெட்) அவரது தலையின் வலது பக்கத்தை ஊடுருவிச் சென்றதாக அரச காவலரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கையாக ஏனைய பாதுகாவலர்களின் துப்பாக்கியில் பொருத்தப்பட்ட பயோனெட்டுகள் அகற்றப்பட்டன. பனி மற்றும் பனிக்கட்டியுடன் கூடிய வானிலை நிலவும் வரை காவலர்களின் பயோனெட்டுகள் அகற்றப்பட்டன. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாதுகாவலரின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுவிஸ் எல்லையில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவு ஏற்பட்டதை நேரில் பார்த்தவர்கள் மூலம் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வடக்கு இத்தாலிய பிராந்தியமான பீட்மாண்டில் உள்ள டிராஸ்குவேராவில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஐந்து பேர் புதைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மற்ற 2 பேரும் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் காயமின்றி இருந்தனர், ஆனால் அதிர்ச்சியடைந்ததாக மீட்பு சேவைகள் தெரிவித்தன. உயிரிழந்தவர்களின் விபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 2850 மீட்டர் உயரமுள்ள புன்டா வால்கிராண்டேயின் கிழக்கு முகடு பகுதியில் பனிச்சரிவு உடைந்தது. இப்பகுதி சுவிட்சர்லாந்தின் எல்லையில் அமைந்துள்ளது. பனிச்சரிவு ஏற்பட்டதை நேரில் பார்த்தவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, 2100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள பகுதியில் பனிச்சரிவு அபாயம் உள்ளது.
சாம்பல் காடான அமெரிக்க நகரம்…நிலைமை இன்னும் மோசமடையும் என எச்சரிக்கும் அதிகாரிகள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மொத்தமாக பற்றியெரிந்துவரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டுப்படுத்துவது கடினம் கட்டுப்படுத்த முடியாமல் 6 பகுதிகளில் காட்டுத்தீ பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 11 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதை அடுத்து 13 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈட்டன் தீ விபத்தில் எட்டு பேர் இறந்துள்ளனர், எஞ்சியுள்ள மூவர் பாலிசேட்ஸ் தீ விபத்தில் கொல்லப்பட்டனர். மணிக்கு 70 மைல்கள் […]
இலங்கை சந்தையில் திடீரென அதிகரித்த உணவு பொருள் ஒன்றின் விலை!
இலங்கையில் அண்மைக் காலமாக புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு கிலோ புளி அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் (12-01-2025) ஹட்டன் பகுதியில் 2,000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்கப்பட்டது. இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளிக்கான அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை […]
15 வருடங்களுக்கு பின்னர் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்
2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பேருந்தின் தகட்டை அகற்றி தப்பிச் சென்ற சந்தேகநபரான கடாபி என்ற உபேகா சந்திரகுப்தா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டிற்குத் திரும்பி பிலியந்தலைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கெஸ்பேவ, மாகந்தன பகுதியில் உள்ள ஒரு கிராமிய வங்கியைக் கொள்ளையடிக்க சென்ற சந்தேக நபர்களில் முக்கிய சந்தேகநபர், […]
அம்பாறையில் ஆரம்பமான கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று (12) நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா , அஸ்ரப் தாஹீர் ஆகியோர் கலந்து கொண்டு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். விசேட அதிதிகளாக, நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப், தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பொறுப்பாளர் சம்சுல் அலி, பாராளுமன்ற […]
மூச்சுவிட தத்தளித்த கேரி ஜான்சன்…காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதி
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சன் காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதிப்பட்டுள்ளதை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். முழுமையாக குணமடையவில்லை கடந்த 3 வாரங்கள் குளிர்கால வைரஸ் பாதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கேரி ஜான்சன் குறிப்பிட்டுள்ளார். சிகிச்சை முடித்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், காய்ச்சல் மற்றும் நிமோனியா இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருந்ததையும், ஒருவார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டிருந்த அவர், முழுமையாக இதுவரை குணமடையவில்லை […]
FACT CHECK: ஒடிசா முதல் அமைச்சர் பொது மேடையில் உணவு தயாரா என கேட்டாரா? உண்மை இதுதான்
ஒடிசா முதல் அமைச்சர் மோகன் சரண் மஜ்கி தான் பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் மேடையில் பேசி கொண்டிருந்தபோது, தனக்கு உணவு தயாராகிவிட்டதா? என கேட்டதாக பரவும் வீடியோ உண்மையா என பேக்ட் செக் செய்யப்பட்டது. அதன் முடிவுகளை இதில் காண்போம்.
இந்தியாவில் பெண்களுக்கான திட்டங்களும், அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கையும் - ஆய்வறிக்கை சொல்வதென்ன?
அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் ஒரு பெரிய சக்தியாக செயல்படுகின்றன. குறிப்பாக, பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூக நலத்திட்டங்கள் இந்தியாவின் அரசியல் அமைப்பில் புதுமை செய்து, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன. சுகாதாரம், முத்ரா கடன்கள், கல்வியறிவு, மற்றும் வீட்டுவசதி போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கானப் பெண்களைத் தேர்தல் செயல்பாட்டில் ஆர்வமாக ஈடுபடுத்தியுள்ளன. இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரும் உயர்வு SBI ஆராய்ச்சி அறிக்கையின்படி, 2024 லோக் சபா தேர்தலை 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது கூடுதலாக 1.8 கோடி பெண் வாக்காளர்கள் உருவாகி இருக்கின்றனர். பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட சமூக நலத் திட்டங்களின் வெளிப்பாடே இதற்குக் காரணமாகும். இந்த ஆய்வு இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன்படி, 1% கல்வியறிவு அதிகரித்திருக்கிறது, 45 லட்சம் பெண்கள் தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர். அதேபோல பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் வீட்டுவசதி உரிமை 20 லட்சம் பெண்களை வாக்காளர்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது. பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறிப்பாக முத்ரா கடன்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), சுகாதார சீர்திருத்தங்கள், கல்வியறிவு மேம்பாடு, மின்சார வசதிகளின் மேம்பாடு, குடிநீர் வசதிகளின் மேம்பாடு போன்ற திட்டங்கள் பெண்களின் வாக்களிப்பு எண்ணிக்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, 2019-க்கு பிறகு பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்தாத மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இந்தத் திட்டங்களை செயல்படுத்திய 19 மாநிலங்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சராசரியாக 7.8 லட்சம் அதிகரித்துள்ளது. கல்வியறிவின் தாக்கம் ஆய்வுகள் கூறும் படி, கல்வியறிவு விகிதத்தில் 1% உயர்வு மட்டும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் 25% அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது. இதன் விளைவாக, 2024 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களுக்கு இடையில் கூடுதலாக 45 லட்சம் பெண் வாக்காளர்கள் கல்வியறிவு மேம்பாட்டின் விளைவாக வந்துள்ளனர். வீட்டுவசதி மற்றும் சுகாதாரத்தின் பங்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 74% வீடுகள் பெண்களின் சொந்தமாக உள்ளது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்த உரிமை வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 20 லட்சம் பெண் வாக்காளர்கள் உருவாகி இருக்கின்றனர். அதேபோல், சுகாதார திட்டங்கள், குறிப்பாக பெண்களுக்கான நேரடி நலன்களை வழங்கும் திட்டங்கள், 2024 தேர்தலுக்கு சுமார் 21 லட்சம் பெண் வாக்காளர்களை சேர்த்துள்ளன. இது மட்டும் இல்லை, மின்சாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் அணுகல் போன்ற அடிப்படை வசதிகளும் தங்கள் பங்கை செலுத்தியுள்ளன. இந்த அறிக்கை, இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பை எவ்வாறு முன்னெடுப்பு செய்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கை இந்தியாவில் பெண்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அரசியல் சீர்திருத்தங்களில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துவதை நிரூபித்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் தேர்தல்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் சமூக-அரசியல் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
இந்தியாவில் பெண்களுக்கான திட்டங்களும், அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கையும் - ஆய்வறிக்கை சொல்வதென்ன?
அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் ஒரு பெரிய சக்தியாக செயல்படுகின்றன. குறிப்பாக, பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூக நலத்திட்டங்கள் இந்தியாவின் அரசியல் அமைப்பில் புதுமை செய்து, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன. சுகாதாரம், முத்ரா கடன்கள், கல்வியறிவு, மற்றும் வீட்டுவசதி போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கானப் பெண்களைத் தேர்தல் செயல்பாட்டில் ஆர்வமாக ஈடுபடுத்தியுள்ளன. இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரும் உயர்வு SBI ஆராய்ச்சி அறிக்கையின்படி, 2024 லோக் சபா தேர்தலை 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது கூடுதலாக 1.8 கோடி பெண் வாக்காளர்கள் உருவாகி இருக்கின்றனர். பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட சமூக நலத் திட்டங்களின் வெளிப்பாடே இதற்குக் காரணமாகும். இந்த ஆய்வு இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன்படி, 1% கல்வியறிவு அதிகரித்திருக்கிறது, 45 லட்சம் பெண்கள் தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர். அதேபோல பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் வீட்டுவசதி உரிமை 20 லட்சம் பெண்களை வாக்காளர்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது. பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறிப்பாக முத்ரா கடன்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), சுகாதார சீர்திருத்தங்கள், கல்வியறிவு மேம்பாடு, மின்சார வசதிகளின் மேம்பாடு, குடிநீர் வசதிகளின் மேம்பாடு போன்ற திட்டங்கள் பெண்களின் வாக்களிப்பு எண்ணிக்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, 2019-க்கு பிறகு பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்தாத மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இந்தத் திட்டங்களை செயல்படுத்திய 19 மாநிலங்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சராசரியாக 7.8 லட்சம் அதிகரித்துள்ளது. கல்வியறிவின் தாக்கம் ஆய்வுகள் கூறும் படி, கல்வியறிவு விகிதத்தில் 1% உயர்வு மட்டும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் 25% அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது. இதன் விளைவாக, 2024 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களுக்கு இடையில் கூடுதலாக 45 லட்சம் பெண் வாக்காளர்கள் கல்வியறிவு மேம்பாட்டின் விளைவாக வந்துள்ளனர். வீட்டுவசதி மற்றும் சுகாதாரத்தின் பங்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 74% வீடுகள் பெண்களின் சொந்தமாக உள்ளது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்த உரிமை வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 20 லட்சம் பெண் வாக்காளர்கள் உருவாகி இருக்கின்றனர். அதேபோல், சுகாதார திட்டங்கள், குறிப்பாக பெண்களுக்கான நேரடி நலன்களை வழங்கும் திட்டங்கள், 2024 தேர்தலுக்கு சுமார் 21 லட்சம் பெண் வாக்காளர்களை சேர்த்துள்ளன. இது மட்டும் இல்லை, மின்சாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் அணுகல் போன்ற அடிப்படை வசதிகளும் தங்கள் பங்கை செலுத்தியுள்ளன. இந்த அறிக்கை, இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பை எவ்வாறு முன்னெடுப்பு செய்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கை இந்தியாவில் பெண்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அரசியல் சீர்திருத்தங்களில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துவதை நிரூபித்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் தேர்தல்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் சமூக-அரசியல் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
உக்ரேனிடம் உயிருடன் சிக்கிய வடகொரிய வீரர்கள்…ஜெலென்ஸ்கி வெளியிட்ட பின்னணி
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இரண்டு வட கொரிய வீரர்களை உக்ரைன் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் சிறைபிடித்துள்ளதாக கடந்த இலையுதிர்காலத்தில் போரில் நுழைந்ததிலிருந்து வட கொரிய வீரர்கள் உயிருடன் சிக்கியதாக உக்ரைன் முதல் முறையாக அறிவித்துள்ளது. வட கொரிய துருப்புக்கள் அக்டோபரில் ரஷ்யா ஆதரவாக போரில் நுழைந்தன. உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், வடகொரிய வீரர்களின் எண்ணிக்கை 10,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம் என்றே மதிப்பிட்டன. இந்த […]
2022ல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சிக் கால புதிய அரசியலமைப்பு வரைவைக் கைவிட்டு புதிய ஆலோசனைகளை சகல கட்சிகளிடமும் கேட்டுப் பெற்றார். என்ன நடந்தது? கடந்த வருட தேர்தல் கால உரைகளில் நல்லாட்சிக்கால வரைவை மையப்படுத்தி அனைவரும் ஏற்கும் புதிய அரசியல் வரைவு தயாரிக்கப்படுமென அநுர குமார கூறினார். இதற்கு மூன்று வருடங்கள் தேவையென இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்இ இவரது தாய்க்கட்சியான ஜே.வி.பி.யின் நிகழ்நிரலில் இது காணப்படவில்லை. இன்னும் மூன்று வாரங்கள் கழிந்தால் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் அநுர அரசு மூழ்கிவிடும். நாட்டின் படைபலத்தை காட்சிப்படுத்துவதே இந்நாளின் முக்கிய இலக்கு. சிங்கள இனம் ஆளும் வர்க்கமாகவும்இ தமிழினம் ஆளப்படும் வர்க்கமாகவும் இருப்பதால் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்ப் பகுதிகளிலுள்ள அரசாங்க அலுவலகங்களும் பாடசாலைகளும் சுதந்திர தினத்தை அரசாங்க நிகழ்வாக மேற்கொள்வதே வழக்கம். ஆனால்இ காலாதிகாலமாக தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இது கரிநாளாகவே இருந்து வருகிறது. கடந்த ஏழு தசாப்தமாக தமிழ் மக்களின் தேசிய கொடியாக கறுப்புக் கொடியே இருந்து வருவதையும்இ நமோ நமோ தாயே என்ற பாடலுக்குப் பதிலாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது. 2022ம் ஆண்டு கோதபாய கையளித்த ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க ஓர் அறிவித்தலை விடுத்தார். 2023 சுதந்திர தின விழாவின்போது இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அரசியல் திட்டத்தை தாம் அறிவிக்கப்போவதாக தெரிவித்த இவர்இ இதற்கான ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு சகல அரசியல் கட்சிகளிடமும் வேண்டினார். 2024 செப்டம்பரில் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற்றப்படும்வரை எதுவுமே நடைபெறவில்லை. மைத்திரி சிறீசேனவுடன் இணைந்து நல்லாட்சி நடத்திய காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பல காரியங்கள் இடம்பெற்றன. நூறுக்கும் அதிகமான அமர்வுகள் இடம்பெற்று புதிய அரசியலமைப்புக்கான வரைவு தயாரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் என்ன நடந்தது என்பது தனிவரலாறு. எதிர்காலத்தில் இது மாணவர்களுக்கு சரித்திரப் பாடமாலாம். நல்லாட்சிக்கால அரசியல் யாப்பு தயாரிப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி மும்முரமாக ஈடுபட்டிருந்தது. அவர் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் பெரும் எடுப்புகளை இவ்வேளையில் மேற்கொண்டதை அனைவரும் அறிவர். ஆனால் அந்த வரைவுக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. எனினும்இ சுமந்திரனின் பங்களிப்புக்கு நன்றி கூறும் வகையில் அவரை தங்களின் சட்ட மாஅதிபர் என்று ரணில் ஷமகுடம்| சூட்டியதை வஞ்சகப் புகழ்ச்சி என்று எல்லாரும் கூறுவர். இது தொடர்பான மறக்க முடியாத ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அந்த வேளையில் சுமந்திரன் கனடாவுக்கு விஜயம் செய்தபோது அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்திருந்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது பதில் பின்வரும் வகையில் அமைந்திருந்தது: 'நான் அரசியல்வாதியல்ல. சட்டத்தொழில் புரிபவன். இனப்பிரச்சனைத் தீர்வுக்கான புதிய அரசியல் யாப்பை நிறைவு செய்வது எனது பணி. இதனை நிறைவு செய்ததும் அரசியலிலிருந்து விலகி விடுவேன்என்று பதிலளித்திருந்தார். தற்செயலாக அரசியலமைப்பு நிறைவேறத் தவறின் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டபோதுஇ அரசியலிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியிருந்தார். இதன்படிஇ அரசியலமைப்பு வந்தாலும்சரி வராவிட்டாலும்சரி இரண்டையும் ஒன்றாக ஏற்றுக் கொண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறிய சுமந்திரன்இ கடந்த வருட பொதுத்தேர்தலில் தோல்வி கண்ட பின்னரும் அரசியலைவிட்டு விலகாது கட்சியில் பதவிகளுக்குப் போட்டியிட்டு தோல்விகளைச் சுமந்து கொண்டிருப்பது தமிழர் அரசியலில் புதுமையான வரலாறு. இவரிடமிருந்து தமிழரசுக் கட்சியை காப்பாற்ற கடவுளாலும் முடியாதென்று இப்போது கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா இருந்தால் கூறியிருக்கக்கூடும். ரணிலைத் தோற்கடித்து புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள அநுர குமார தேர்தல்கால பரப்புரைகளின்போதுஇ நல்லாட்சிக் கால அரசியல் யாப்பை கையிலெடுத்து சகலரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வை மையப்படுத்திய புதிய அரசியமைப்பை உருவாக்கப் போவதாக கூறிவந்தார். இவரது பதவியின் நூறு நாட்கள் முடிவடைந்துவிட்டது. புதிய அரசியல் யாப்பு பற்றி எதுவுமே சொல்லக் காணோம். அடுத்த மாதம் வரவுள்ள சுதந்திர தின வேளையில்இ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இனப்பிரச்சனைத் தீர்வு பற்றி அறிவிக்கப்படுமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோன்றுதான் தேர்தல் காலத்தில் தாம் சொன்னதை அநுர குமாரவும் மறந்துவிட்டார்போல் தெரிகிறது. வசதி கருதிய மறதி என்பது அரசியல்வாதிகளுக்கு தீராத நோய். ஆனால்இ இதனை அவருக்கு நினைவூட்ட வேண்டிய தமிழர் தரப்பு - குறிப்பாக தமிழ்த் தேசிய தரப்பினரும் அதனை செய்வதற்கு மறந்துள்ளனர். புதிய அரசியல் திட்டம் பற்றிய முக்கோணச் சந்திப்புகளும்இ எதிரும் புதிருமானவர்களுடைய கருத்துப் பரிமாற்றங்களும் ஜோராக நடந்து வருகின்றனவாயினும்இ நல்லாட்சிக் காலத்தில் தயாரான யாப்புப் பற்றி பேசுவதை ஒரு துடக்காகவே கருதுவதுபோல் தெரிகிறது. ஆனால்இ தெற்கில் இரண்டு மூத்த அரசியல்வாதிகள் இதுபற்றி கருத்துக் கூறி வருகின்றனர். ஒருவர் தினேஸ் குணவர்த்தன மற்றவர் திஸ்ஸ விதாரண. இவர்கள் இருவரும் ஆயுட்கால இடதுசாரிகள். தினேஸின் தந்தை பிலிப் குணவர்த்தன லங்கா சமசமாஜ கட்சியின் ஸ்தாபகர். இக்கட்சியின் தற்போதைய தலைவர் திஸ்ஸ விதாரண. தினேஸ் குணவர்த்தன இப்போது எம்.ஈ.பி. என அழைக்கப்படும் மகாஜன எக்சத் பெரமுனவின் தலைவர். இவர்கள் இருவரும் மகிந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள். கோதபாய மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்தபோது பிரதமர் பதவி வகித்தவர் தினேஸ் குணவர்த்தன. தாங்கள் முக்கிய பதவிகள் வகித்த அரசாங்கங்களிடம் தமிழ் மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க துணிவான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள்இ மாக்சிச ஜனாதிபதி அநுர குமாரவிடம் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்திருப்பதை எவ்வாறு பார்க்கலாம். புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பது அல்லது தங்களுடைய எதிர்கால அரசியலுக்கு விதை போடுவது என்றே இதனை நோக்க வேண்டியுள்ளது. 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்இ இதுவரை காலமும் நடைமுறைச் சட்டங்களினூடாகவும் தமிழர்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பினூடாக தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டுமென்று இந்த இடதுசாரிகள் இருவரும் பொது வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல தடவைகள் புதிய அரசியல் யாப்புப் பற்றி பேசப்பட்டதாயினும் எந்த அரசாங்கமும் இதனை நிறைவேற்றவில்லை என்றும்இ முதலாளித்துவ தரப்பினரான இவர்கள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவில்லையென்றும் சுட்டிக்காட்டியுள்ள இவர்கள்இ அதே முதலாளித்துவ அரசாங்கங்களில் அங்கம் வகித்து அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் என்பதை மறந்துவிட்டனர். 1972ம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே இருந்த அரசியல் அதிகாரங்களும் நீக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்குப் பொறுப்பான அமைச்சராகவிருந்தவர் லங்கா சமாசமாஜ கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா. ஷஇரு மொழிகள் என்றால் ஒரு நாடு - ஒரு மொழி என்றால் இரு நாடுகள்| என்று அறைகூவி இலங்கை பிளவுபடாதிருக்க வேண்டுமென்றால் தமிழர்;களின் உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென குரல் கொடுத்து வந்த கொல்வின் ஆர்.டி.சில்வாவே தமிழினத்தின் ஆகக்குறைந்த உரிமைகளைக் கூட புதிய அரசியலமைப்பில் இல்லாமற் செய்த பிதாமகர் என்பதை தினேஸ் குணவர்த்தனவும் திஸ்ஸ விதாரணவும் மறந்திருப்பது விநோதமானது. இடதுசாரிகளான இவர்கள் புதிய அரசியலமைப்புக்குக் குரல் கொடுக்கும் அதேவேளையில் அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தியின் தாய்க்கட்சியான ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டு வரும் கருத்து முற்றிலும் மாறுபட்டது. வடக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியமாக இல்லை. பொருளாதார பிரச்சனையே உள்ளது என்று கூறியுள்ளதன் ஊடாக இரண்டு காய்களை ஒரே கல்லில் அவர் வீழ்த்த எத்தனிக்கிறார். முதலாவது - இனப்பிரச்சனையென்பது வடக்கில வாழும் மக்களுக்கு மட்டுமே உள்ளது என்று பிரித்துக் காட்ட எத்தனிப்பது. இரண்டாவது - ஏற்கனவே நீதிமன்ற வழக்கினூடாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்தது போன்று அரசியல் தீர்விலும் இரு மாகாணங்களையும் பிரித்து வைப்பது. ஆகஇ வடக்கும் கிழக்கும் ஒரு போதுமே தீர்வு விடயத்தில் ஒன்றுபடக்கூடாது என்பதில் ஜே.வி.பி. மிகவும் கூர்மையாகச் செயற்படுவதை இங்கு அவதானிக்க முடிகிறது. பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா அக்கறை காட்டவில்லையென்ற குரல் அநுர குமாரவின் அந்நாட்டு விஜயத்தின் பின்னர் மேலெழுந்துள்ளது. பிரதமர் மோடி இவ்விடயம் தொடர்பாக அநுர குமாரவுடன் உரையாற்றத் தவறிவிட்டாரென்ற குற்றச்சாட்டும் பல மட்டங்களில் உள்ளது. கடந்த வருடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போதுஇ இப்போது இருப்பவைகளை சரியாகப் பயன்படுத்துங்கள். இல்லாதவைகளை தொடர்ந்து கேட்பதில் பிரயோசனம் இல்லையென்றவாறு இவர் தெரிவித்த இக்கருத்தே இந்தியாவின் நிலைப்பாடு. புதிய அரசியலமைப்பில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு காணப்படுமென்று அநுர குமார கூறுவதை செயற்படுத்த மூன்று வருடங்களாகுமென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படியென்றால் அடுத்த பொதுத்தேர்தல் காலம்வரை இதற்காக காத்திருக்க வேண்டும். ஆனால்இ ஜே.வி.பி.யின் நிகழ்நிரலில் புதிய அரசியலமைப்புத் திட்டம் இல்லையென்பது அநுர குமாரவுக்கும் அவரது தோழர்களுக்கும் நன்கு தெரியும். இதனை எப்போது இவர்கள் பகிரங்கப்படுத்துவார்கள்?
பிரான்ஸ் டிராம் மோதிய விசாரணை: காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு
நேற்று சனிக்கிழமையன்று பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பேர்க்கின் மத்திய நிலையத்தில் இரண்டு டிராம்கள் மோதியதில் 68 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளே டஜன் கணக்கான மக்களைக் கொண்ட இரண்டு டிராம்களைக் காட்டியது. ஒரு வீடியோ, புகை எழுவதையும், அலாரம் ஒலிப்பது போல் குழப்பமான காட்சிகளையும் காட்டுகிறது. டிராம் ஒன்று தடங்களை மாற்றி நின்று கொண்டிருந்த டிராம் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த மோதல் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். சிலருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டன. பெரும்பாலும் காயங்கள் உச்சந்தலையில் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் முழங்கால் சுளுக்கு ஆகியவை ஏற்பட்டன. 100 பயணிகளுக்கு எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை. எனினும் அவர்களை மருத்துவர்கள் பார்வையிட்டனர். சுமார் 50 வாகனங்கள் மற்றும் 130 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்றனர்
புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு உயர் நீதிமன்ற நீதியரசர்களும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர்.எம்.எஸ்.ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பீ.அபேகோன், மற்றும் எம்.எஸ்.கே.பி.விஜேரத்ன ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.
நடுக்கடலில் பிரசவித்த அகதிப்பெண்: நெகிழவைக்கும் காட்சிகள்
சிறுபடகொன்றில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் நடுக்கடலில் பிரசவித்த குழந்தையுடன் அமர்ந்திருக்கும் நெகிழவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு சொந்தமான கானரி தீவுகள் நோக்கி 60 புலம்பெயர்வோருடன் சிறுபடகொன்று சென்றுகொண்டிருக்கும்போது படகில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தன் சக பயணிகள் உதவியுடன் அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார் அந்தப் பெண். நடுக்கடலில், பெற்றெடுத்த பிள்ளையுடன் அந்தப் பெண் படகில் அமர்ந்திருப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்தப் படகிலிருந்த […]
திருகோணமலை வீரநகர் பகுதியில் கடலரிப்பு: அச்சத்தின் மக்கள்
திருகோணமலை – வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புப் பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கடலரிப்பின் காரணமாக அப்பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான காட்சியை தம் வாழ்வில் முதல் முறை காண்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடலரிப்பினால் கடற்கரையை அண்டி காணப்படும் சில வீடுகளின் மதில்கள், அத்திவாரம், சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. இக்கடற்பகுதியில் பாரிய இரும்புப் பின்னல் தொகுதியொன்று கரையின் நீளமான பகுதிக்கு வெளிவருவதாகவும் இது என்ன என்பது தொடர்பில் அறிய முடியாதுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கடலரிப்பில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தாக்கரே, சரத் பவார் முடிவு: தனித்துவிடப்படும் காங்கிரஸ்?
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஷ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இத்தோல்வியால் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சரத் பவார் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரும் மனநிலையில் இருக்கின்றனர். இது தவிர சரத் பவாரிடம் இருக்கும் 10 எம்.எல்.ஏ.க்களும் அஜித் பவார் அணிக்கு தாவ பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் சரத் பவார் அணியை அப்படியே அஜித் பவார் அணியில் சேர்க்க இரு குடும்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே சரத் பவாரும் விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று உத்தவ் தாக்கரே கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. சுப்ரியா சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி மாநகராட்சி தேர்தல் குறித்து உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்திய போது கட்சி நிர்வாகிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து உத்தவ் தாக்கரே தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக ஏற்கெனவே அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் சூசகமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இது குறித்து பேசிய அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுத், ''வரும் மாநகராட்சி தேர்தலில் மும்பையிலிருந்து நாக்பூர் வரையிலான அனைத்து மாநகராட்சியிலும் தனித்து போட்டியிடுவோம். என்ன நடந்தாலும் பரவாயில்லை. எங்களது செல்வாக்கை நிரூபித்துக்காட்டுவோம். இதற்கு உத்தவ் தாக்கரே ஒப்புதல் கொடுத்துள்ளார். மும்பை, புனே, தானே, நாக்பூரில் தனித்து போட்டியிடுவோம். தனித்து போட்டியிடுவது என்ற முடிவு மற்ற உள்ளாட்சி தேர்தலிலும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் கட்சி தொண்டர்கள் அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தொண்டர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தோல்வியை சந்திக்க நேரிட்டது'' என்றார். உத்தவ் தாக்கரேயின் இம்முடிவால் மகாவிகாஷ் அகாடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இது குறித்து சரத் பவார் மகள் சுப்ரியா சுலே கூறுகையில்,'' உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடவேண்டும். கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டோம். உள்ளாட்சி தேர்தலில்தான் தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும்'' என்றார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேதிவார் கூறுகையில், ''சஞ்சய் ராவுத்தின் கருத்து அவரது சொந்த கருத்தாகும். ஆனாலும் இது குறித்து உத்தவ் தாக்கரேயிடம் விளக்கம் கேட்கப்படும். அதோடு கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்வோம். எங்களுக்கு தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) இயற்கையான கூட்டணி கட்சியாக இருக்கிறது. என்றார். ஏற்கெனவே டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு கொடுக்கப்போவதாக சிவசேனா(உத்தவ்) தெரிவித்துள்ளது. மும்பை மாநகராட்சியை சிவசேனா கடந்த 25 ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தற்போது சிவசேனா உடைந்துவிட்ட நிலையில் வரும் மாநகராட்சி தேர்தல் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மகாவிகாஷ் அகாடியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டும் பட்சத்தில் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஏற்கனவே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.
மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தாக்கரே, சரத் பவார் முடிவு: தனித்துவிடப்படும் காங்கிரஸ்?
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஷ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இத்தோல்வியால் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சரத் பவார் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரும் மனநிலையில் இருக்கின்றனர். இது தவிர சரத் பவாரிடம் இருக்கும் 10 எம்.எல்.ஏ.க்களும் அஜித் பவார் அணிக்கு தாவ பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் சரத் பவார் அணியை அப்படியே அஜித் பவார் அணியில் சேர்க்க இரு குடும்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே சரத் பவாரும் விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று உத்தவ் தாக்கரே கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. சுப்ரியா சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி மாநகராட்சி தேர்தல் குறித்து உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்திய போது கட்சி நிர்வாகிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து உத்தவ் தாக்கரே தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக ஏற்கெனவே அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் சூசகமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இது குறித்து பேசிய அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுத், ''வரும் மாநகராட்சி தேர்தலில் மும்பையிலிருந்து நாக்பூர் வரையிலான அனைத்து மாநகராட்சியிலும் தனித்து போட்டியிடுவோம். என்ன நடந்தாலும் பரவாயில்லை. எங்களது செல்வாக்கை நிரூபித்துக்காட்டுவோம். இதற்கு உத்தவ் தாக்கரே ஒப்புதல் கொடுத்துள்ளார். மும்பை, புனே, தானே, நாக்பூரில் தனித்து போட்டியிடுவோம். தனித்து போட்டியிடுவது என்ற முடிவு மற்ற உள்ளாட்சி தேர்தலிலும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் கட்சி தொண்டர்கள் அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தொண்டர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தோல்வியை சந்திக்க நேரிட்டது'' என்றார். உத்தவ் தாக்கரேயின் இம்முடிவால் மகாவிகாஷ் அகாடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இது குறித்து சரத் பவார் மகள் சுப்ரியா சுலே கூறுகையில்,'' உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடவேண்டும். கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டோம். உள்ளாட்சி தேர்தலில்தான் தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும்'' என்றார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேதிவார் கூறுகையில், ''சஞ்சய் ராவுத்தின் கருத்து அவரது சொந்த கருத்தாகும். ஆனாலும் இது குறித்து உத்தவ் தாக்கரேயிடம் விளக்கம் கேட்கப்படும். அதோடு கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்வோம். எங்களுக்கு தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) இயற்கையான கூட்டணி கட்சியாக இருக்கிறது. என்றார். ஏற்கெனவே டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு கொடுக்கப்போவதாக சிவசேனா(உத்தவ்) தெரிவித்துள்ளது. மும்பை மாநகராட்சியை சிவசேனா கடந்த 25 ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தற்போது சிவசேனா உடைந்துவிட்ட நிலையில் வரும் மாநகராட்சி தேர்தல் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மகாவிகாஷ் அகாடியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டும் பட்சத்தில் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஏற்கனவே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.
IPL 2025 : ஐ.பி.எல் தொடக்க தேதியை திடீரென மாற்றிய பிசிசிஐ! - காரணம் என்ன?
18 வது ஐ.பி.எல் சீசன் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. BCCI மார்ச் 14 ஆம் தேதி 18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கும் என பிசிசிஐ தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கூடிய பிசிசிஐ யின் நிர்வாகக் குழு கூட்டத்தில் 18 வது ஐ.பி.எல் சீசனின் தேதியை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, மார்ச் 21 ஆம் தேதி சீசன் தொடங்கி மே 25 ஆம் தேதி இறுதிப்போட்டியோடு தொடர் முடியும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தேதி மாற்றத்திற்கு உரிய காரணம் இருப்பதாகவும் தெரிகிறது. ஐ.சி.சியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச் 14 ஆம் தேதி சீசனை தொடங்குவதாக இருந்தால் அது சில அணிகளுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும். ஏனெனில், சாம்பியன்ஸ் டிராபியில் ஆடும் முக்கியமான வீரர்கள் ஐ.பி.எல்- க்கு வந்து செட்டில் ஆக ஒரு கால அவகாசமே கிடைக்காது. சில மாதங்களுக்கு முன்புதான் மெகா ஏலம் நடந்திருப்பதால் எல்லா அணிகளும் நிறைய புதிய வீரர்களை அணியில் எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வைத்து சீசனுக்கு முன்பாக ஒரு ப்ரீ சீசன் கேம்பை வைத்தால்தான் அணியின் கலாசாரத்தோடு அவர்கள் ஒன்றிப்போக முடியும். இதற்குக் கொஞ்ச நாட்களாவது தேவைப்படும். அதனால்தான் ஐ.பி.எல் தொடங்கும் தேதியை மாற்றும் முடிவை பிசிசிஐ எடுத்திருக்கும். IPL கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. கொல்கத்தா அணி சாம்பியன் ஆகியிருந்தது. இதனால் ப்ளே ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் நடக்கும் என்று தெரிகிறது. ஐ.பி.எல் அட்டவணையை பிசிசிஐ இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.
IPL 2025 : ஐ.பி.எல் தொடக்க தேதியை திடீரென மாற்றிய பிசிசிஐ! - காரணம் என்ன?
18 வது ஐ.பி.எல் சீசன் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. BCCI மார்ச் 14 ஆம் தேதி 18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கும் என பிசிசிஐ தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கூடிய பிசிசிஐ யின் நிர்வாகக் குழு கூட்டத்தில் 18 வது ஐ.பி.எல் சீசனின் தேதியை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, மார்ச் 21 ஆம் தேதி சீசன் தொடங்கி மே 25 ஆம் தேதி இறுதிப்போட்டியோடு தொடர் முடியும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தேதி மாற்றத்திற்கு உரிய காரணம் இருப்பதாகவும் தெரிகிறது. ஐ.சி.சியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச் 14 ஆம் தேதி சீசனை தொடங்குவதாக இருந்தால் அது சில அணிகளுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும். ஏனெனில், சாம்பியன்ஸ் டிராபியில் ஆடும் முக்கியமான வீரர்கள் ஐ.பி.எல்- க்கு வந்து செட்டில் ஆக ஒரு கால அவகாசமே கிடைக்காது. சில மாதங்களுக்கு முன்புதான் மெகா ஏலம் நடந்திருப்பதால் எல்லா அணிகளும் நிறைய புதிய வீரர்களை அணியில் எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வைத்து சீசனுக்கு முன்பாக ஒரு ப்ரீ சீசன் கேம்பை வைத்தால்தான் அணியின் கலாசாரத்தோடு அவர்கள் ஒன்றிப்போக முடியும். இதற்குக் கொஞ்ச நாட்களாவது தேவைப்படும். அதனால்தான் ஐ.பி.எல் தொடங்கும் தேதியை மாற்றும் முடிவை பிசிசிஐ எடுத்திருக்கும். IPL கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. கொல்கத்தா அணி சாம்பியன் ஆகியிருந்தது. இதனால் ப்ளே ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் நடக்கும் என்று தெரிகிறது. ஐ.பி.எல் அட்டவணையை பிசிசிஐ இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.
Ajithkumar: 'திராவிட மாடல் அரசின்...'- அஜித்தை வாழ்த்திய உதயநிதி
நடிகர் அஜித்துக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அஜித் துபாயில் நடந்த 24எச் 991 பிரிவு ரேஸில் அஜித்குமார் மற்றும் அவரது அணி 3வது இடம் பிடித்துள்ளதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது அணியினரின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பந்தயத்தில் திராவிட மாடல் அரசின் தமிழக விளையாட்டுத்துறை லோகோவைப் பயன்டுத்தியதற்காக அஜித்குமார் ரேஸிங் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். I am thrilled to hear that Ajith Kumar Sir and his team have secured third place in the 991 category at the 24H Dubai 2025. I extend my heartfelt congratulations to #AjithKumar Sir and his team for this remarkable achievement. I thank @Akracingoffl for displaying our… pic.twitter.com/udtcaSASqE — Udhay (@Udhaystalin) January 12, 2025 அஜித்குமார் இன்னும் இதுபோல் தொடர்ந்து வெற்றி பெற்று நம் நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்று உதயநிதி தனது வாழ்த்தை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி நடத்தும் மாநாடு: சாலைகளில் குவிந்த மக்கள்
ஜேர்மன் மாகாணமொன்றில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று இரண்டு நாள் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் ஏராளமானோர் சாலைகளில் குவிந்துவருகிறார்கள். புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி நடத்தும் மாநாடு ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ள Riesa நகரில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் 23ஆம் திகதி ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு […]
ஊட்டி: வனவிலங்கு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்; காத்திருந்த வனத்துறை கூண்டில் சிக்கிய கரடி!
வனவிலங்குகளுக்கான வாழிடச் சூழல் அருகி வரும் நீலகிரியில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஊட்டி அருகில் உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சதீஷ் குமார் என்கிற இளைஞர் கடந்த வாரம் தேயிலை தோட்ட பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் அருகில் உள்ள புதர் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றிருக்கிறார். புதரில் இருந்த வனவிலங்கு எதிர்பாராத விதமாக தாக்கியதில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இளைஞரின் உடலை மீட்டு கூறாய்வு செய்தனர். கரடி விடுவிப்பு மேலும் இளைஞரை தாக்கிய விலங்கினம் குறித்து கண்டறிய வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்த பகுதிகளில் தானியங்கி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தியதுடன் கூண்டுகளும் வைத்து காத்திருந்தனர். இந்நிலையில், வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் இன்று அதிகாலை கரடி ஒன்று சிக்கியிருக்கிறது. அந்த கரடியின் உடல்நிலையைப் பரிசோதித்த வனத்துறையினர், கூண்டுடன் கரடியை வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர் வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்துள்ளனர்.
ஊட்டி: வனவிலங்கு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்; காத்திருந்த வனத்துறை கூண்டில் சிக்கிய கரடி!
வனவிலங்குகளுக்கான வாழிடச் சூழல் அருகி வரும் நீலகிரியில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஊட்டி அருகில் உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சதீஷ் குமார் என்கிற இளைஞர் கடந்த வாரம் தேயிலை தோட்ட பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் அருகில் உள்ள புதர் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றிருக்கிறார். புதரில் இருந்த வனவிலங்கு எதிர்பாராத விதமாக தாக்கியதில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இளைஞரின் உடலை மீட்டு கூறாய்வு செய்தனர். கரடி விடுவிப்பு மேலும் இளைஞரை தாக்கிய விலங்கினம் குறித்து கண்டறிய வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்த பகுதிகளில் தானியங்கி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தியதுடன் கூண்டுகளும் வைத்து காத்திருந்தனர். இந்நிலையில், வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் இன்று அதிகாலை கரடி ஒன்று சிக்கியிருக்கிறது. அந்த கரடியின் உடல்நிலையைப் பரிசோதித்த வனத்துறையினர், கூண்டுடன் கரடியை வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர் வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்துள்ளனர்.
`தவிக்க விட்டுட்டுப் போயிட்டியே'- உடல்நலக் குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை; கதறிய பாகன்!
நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். நெல்லையப்பர் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் காந்திமதி யானையை கோயில் நிர்வாகம் பராமரித்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சைவத் தலங்களில் ஒன்றாக நெல்லையில் உள்ள நெல்லையப்பர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவர் யானையை அன்பளிப்பாக வழங்கினார். அதை கோயில் நிர்வாகம் சிறப்பாக பராமரித்து வந்தது. கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் பராமரிக்கப்பட்டு வந்த யானையை ராமதாஸ் என்ற பாகன் கவனித்து வந்தார். காந்திமதி யானை பக்தர்களிடம் நன்கு பழகும் என்பதால் பெண்களும் குழந்தைகளும் கூட அச்சமின்றி அதன் அருகில் சென்று பழங்களைக் கொடுப்பார்கள். கோயிலில், காந்திமதிக்கு தனி மின்விசிறி, தனி குளியல் தொட்டி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு பக்தர்களால் செல்லப் பிள்ளையாகவே பராமரிக்கப்பட்டு வந்தது. சுமார் 4 டன் எடை கொண்ட காந்திமதியின் வயது 58 என்பதால், வயது முதிர்வால் கடந்த 2015-ம் ஆண்டு கால் சவ்வு கிழிந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக காந்திமதி யானை படுக்கவும், எழுவதற்கும் சிரமப்பட்டது. கடந்த சில நாள்களாக படுக்க முடியாமல் சிரமப்பட்ட காந்திமதி, இரவு நேரத்திலும் நின்று கொண்டே தூங்கியது. மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னையால் பாதிக்கப்பட்ட காந்திமதியை வனத்துறை மற்றும் கால்நடை துறை மருத்துவர்கள் கண்காணித்து வந்தார்கள். நேற்று கீழே அமர்ந்த காந்திமதியால் மீண்டும் எழ முடியவில்லை. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு காந்திமதி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிரேன் மூலமாக யானையை எழ வைத்து உணவு கொடுக்க முயற்சி செய்யப்பட்டும் பலனின்றி இன்று காலை 7:30 மணிக்கு காந்திமதி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. யானை காந்திமதி உயிரிழந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையை பராமரித்து வந்த பாகன் ராமதாஸ் யானை முன்பு நின்று கண்கலங்கியபடி, இத்தனை காலமும் உன்னை நம்பித்தானே வாழ்ந்து வந்தேன். என்னைத் தவிக்க விட்டுப் போய்விட்டாயே.. எனக் கலங்கி அழுதது பக்தர்களை கண்கலங்க வைத்தது. பின்னர் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட காந்திமதிக்கு பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் கோயில் அருகே தாமரைக்குளம் மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் யானையின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். யானை காந்திமதி இறந்ததைத் தொடர்ந்து கோயிலின் நடை மூடப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்பு திறக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
`தவிக்க விட்டுட்டுப் போயிட்டியே'- உடல்நலக் குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை; கதறிய பாகன்!
நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். நெல்லையப்பர் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் காந்திமதி யானையை கோயில் நிர்வாகம் பராமரித்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சைவத் தலங்களில் ஒன்றாக நெல்லையில் உள்ள நெல்லையப்பர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவர் யானையை அன்பளிப்பாக வழங்கினார். அதை கோயில் நிர்வாகம் சிறப்பாக பராமரித்து வந்தது. கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் பராமரிக்கப்பட்டு வந்த யானையை ராமதாஸ் என்ற பாகன் கவனித்து வந்தார். காந்திமதி யானை பக்தர்களிடம் நன்கு பழகும் என்பதால் பெண்களும் குழந்தைகளும் கூட அச்சமின்றி அதன் அருகில் சென்று பழங்களைக் கொடுப்பார்கள். கோயிலில், காந்திமதிக்கு தனி மின்விசிறி, தனி குளியல் தொட்டி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு பக்தர்களால் செல்லப் பிள்ளையாகவே பராமரிக்கப்பட்டு வந்தது. சுமார் 4 டன் எடை கொண்ட காந்திமதியின் வயது 58 என்பதால், வயது முதிர்வால் கடந்த 2015-ம் ஆண்டு கால் சவ்வு கிழிந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக காந்திமதி யானை படுக்கவும், எழுவதற்கும் சிரமப்பட்டது. கடந்த சில நாள்களாக படுக்க முடியாமல் சிரமப்பட்ட காந்திமதி, இரவு நேரத்திலும் நின்று கொண்டே தூங்கியது. மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னையால் பாதிக்கப்பட்ட காந்திமதியை வனத்துறை மற்றும் கால்நடை துறை மருத்துவர்கள் கண்காணித்து வந்தார்கள். நேற்று கீழே அமர்ந்த காந்திமதியால் மீண்டும் எழ முடியவில்லை. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு காந்திமதி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிரேன் மூலமாக யானையை எழ வைத்து உணவு கொடுக்க முயற்சி செய்யப்பட்டும் பலனின்றி இன்று காலை 7:30 மணிக்கு காந்திமதி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. யானை காந்திமதி உயிரிழந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையை பராமரித்து வந்த பாகன் ராமதாஸ் யானை முன்பு நின்று கண்கலங்கியபடி, இத்தனை காலமும் உன்னை நம்பித்தானே வாழ்ந்து வந்தேன். என்னைத் தவிக்க விட்டுப் போய்விட்டாயே.. எனக் கலங்கி அழுதது பக்தர்களை கண்கலங்க வைத்தது. பின்னர் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட காந்திமதிக்கு பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் கோயில் அருகே தாமரைக்குளம் மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் யானையின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். யானை காந்திமதி இறந்ததைத் தொடர்ந்து கோயிலின் நடை மூடப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்பு திறக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் 4 புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இன்றையதினம் (12-01-2025) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோரே புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.
பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி “Prabhu Deva’s Vibe”!
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல
`ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணக்கிறோம்...!' - அண்ணாமலை அறிவிப்பு
அதிமுக, தேமுதிக-வைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். - =ஏ 121காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில் திமுக போட்டியிடுகிறது. இந்த இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக கட்சிகள் புறக்கணித்து இருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். ஈவிகேஎஸ் இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை. Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை நடைபெறவிருப்பது இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது பொதுமக்களைப் பட்டியில் கொடுமைப்படுத்தியதைப் பாரத்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேரதல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல் அந்த இலக்கை நோக்கியே தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! பரபரப்பு காட்சிகள்
கண்டி – அம்பரப்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் நேற்றையதினம் (11-01-2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2 இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர். மாணவியை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளி வெளியாகி பெரும் […]
யாழில் பெரும் சோகம்…திடீரென எடுத்த வாந்தி! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு சாப்பிட்டபோது புரையேறியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ்.சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இன்றையதினம் (12-01-2025) இவ்வாறு உயிரிழந்தாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குழந்தை நேற்றையதினம் கச்சான் சாப்பிட்டவேளை புரையேறியுள்ளது. பின்னர் குழந்தை உறங்கி விட்டது. உறங்கிய குழந்தை நேற்றிரவு எழுந்து வாந்தி எடுத்துவிட்டு அழுதவேளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். திருகோணமலையில் திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்ட […]
நீட் முதல் மின் கணக்கெடுப்பு வரை செயல் எங்கே? மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
நீட் முதல் மின் கணக்கெடுப்பு வரை சொல் உள்ளது செயல் எங்கே? என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழந்தது!
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்த பெற்ற, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் பழமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு
கண்டி –தவுலகலவில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி குறித்த தகவல் வெளியாகியது!
கண்டி – தவுலகல பகுதியில் வானில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பாக பல… The post கண்டி – தவுலகலவில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி குறித்த தகவல் வெளியாகியது! appeared first on Global Tamil News .
BB Tamil 8: 'ஏன் மத்தவங்க ஆட்டத்தை திசை திருப்புறீங்க?' - ரவீந்தரைச் சாடிய விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 98 -வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்திருக்கிறது. குறைவான வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அருண் எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். மொத்தம் 24 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் டிக்கெட் டு ஃபினாலே வெற்றியின் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு ரயான் முன்னேறி இருக்கிறார். எஞ்சியுள்ள 7 போட்டியாளர்களில் 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்படவுள்ளனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் வார இறுதி நாளில் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் பழைய போட்டியாளர்கள் என்னென்ன கூறி உங்கள் ஆட்டத்தை திசைதிருப்பினார்கள் என்று விஜய் சேதுபதி கேட்கிறார். அதற்கு ஜாக்குலின், தீபக், ரயான், முத்துக்குமரன் ஆகியோர் ரவீந்தரைக் கைக்காட்டினர். இதனால் ரவீந்தரிடம் பேசிய விஜய் சேதுபதி, இவர் பெட்டியை எடுக்க வேண்டும். இவர் விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் கூறி ஏன் ஆட்டத்தை திசை திருப்புகிறீர்கள் எனக் கேள்வி கேட்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோடில் பார்ப்போம். BB Tamil 8 Day 97: மேலும் ஒரு எவிக்ஷன், வன்மத்தைக் கொட்டிய 8 பேர் -என்ன நடந்தது?
கிளீன் சிறீலங்கா: எங்கிருந்து தொடங்க வேண்டும்? நிலாந்தன்.
சிறீலங்காவை கிளீன் பண்ணத்தான் வேண்டும். ஆனால் அதை எங்கிருந்து தொடங்குவது? சிறீலங்காவின் கறை எது? அல்லது அசுத்தம்… The post கிளீன் சிறீலங்கா: எங்கிருந்து தொடங்க வேண்டும்? நிலாந்தன். appeared first on Global Tamil News .
ஈழப் போர் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திரையிட காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் மற்றும் ரசிகர்கள் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Prabhudeva: சென்னையில் பிரபுதேவா லைவ் டான்ஸ் கான்சர்ட்; ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் நடப்படும் மரக்கன்று
வருகின்ற பிப்ரவரி 22-ம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் கிரவுண்டில் நடைபெறவிருக்கும் பிரபு தேவா லைவ் டான்ஸ் கான்சர்ட், இந்திய நடனத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமைவதாக உள்ளது. இந்த கான்சர்ட் தொடங்குவதற்கான டிக்கெட் விற்பனை தொடக்க விழா நேற்று இரவு ஹயாத் ரிஜென்ஸியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பம்சம், ஒவ்வொரு விற்பனையாகும் டிக்கெட் தொகை கொண்டும் ஒரு மரக்கன்று நடப்படும் என்ற அறிவிப்பாகும். அருண் ஈவென்ட்ஸ் நிறுவனம் நவீன திட்டமிடலுடனும் சூழல் விழிப்புணர்வுடனும் இதனை ஏற்பாடு செய்துள்ளது. நிறுவனத்தின் தலைவர் அருண், இந்த நிகழ்ச்சியின் மூலம் கலை, சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீது சிறந்த தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் என்று கூறியபோது, அங்கிருந்த அனைவரும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குழந்தைகள் பலர் நடனமாடி, பிரபு தேவாவை வரவேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரபு தேவா, ``சினிமாவில் கட் பண்ணி, எடிட்டிங் செய்ய முடியும். ஆனால் லைவ் கான்சர்ட்ல அத பண்ண முடியாது. இதை எப்படி பண்ண போறோம்னு ஒரு பயம் இருந்துட்டே இருக்கு. இருந்தாலும் மக்களோட அன்பையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு இத பண்ண முடியும்னு நம்புறேன்.” என்றார். இந்நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய சிறப்பு, பிரபு தேவாவின் ஐகானிக் நடன வடிவத்தைக் கொண்ட டி-ஷர்ட் வெளியீடு ஆகும். இந்த டி-ஷர்ட் ரசிகர்களுக்கு பிரபு தேவாவின் கலைத்திறமையை நினைவுகூரும் ஓர் அடையாளமாகும். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் இதைப் பற்றி கூறும்போது, இந்தியாவில் இதுவரை பாடல் கச்சேரிகள் பல நடந்துள்ளன. ஆனால் நடனத்தை மையமாக வைத்து நடத்தப்படும் கச்சேரி என்றால் இதுதான் முதன்முறை, எனத் தெரிவித்தார். அருண் ஈவென்ட்ஸ் மற்றும் IBA Ticketing partner அறிவிப்பின் படி, விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும், ஒரு மரக்கன்று நடப்படும் என்பது, நிகழ்ச்சியைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நோக்குடன் இணைத்துள்ளது. இது நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு அடையாளமாகும்.
“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்”பிசிசிஐ அறிவிப்பு!
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின், செய்தியாளர் சந்திப்பில் 18-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் தேதியை உறுதிப்படுத்தினார். மேலும் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி தலைவராக ஜெய்ஷா பதவியேற்ற நிலையில், BCCI சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் […]
Ajithkumar: `Game Starts' - துபாய் ரேஸில் ஜெயித்த அஜித் -குவியும் வாழ்த்துகள்
துபாயில் நடந்து முடிந்திருக்கும் 24H ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடம் பிடித்திருக்கிறது. துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித் கலந்துக்கொண்டிருந்தார். கார் ரேஸ் தொடங்குவதற்கு முன் பயிற்சியின் போது அஜித் விபத்தில் சிக்கினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த கார் ரேஸுக்காக தனது உடல் எடையைக் கூட அஜித் குறைத்திருக்கிறார். அந்தளவிற்கு கார் ரேஸ் மீது ஆர்வம் கொண்ட அஜித், ஒரு கட்டத்தில் கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார். Ajith Kumar ஆனால், அவர் சொல்லி கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் கார் ரேஸில் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 24H ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வெற்றியை அஜித் தேசியக்கொடியை ஏந்திக் கொண்டாடி இருக்கிறார். பலரும் அஜித்குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து இருகின்றனர். Ajith Kumar அஜித் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு நடிகர் மாதவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு, அஜித்தை நினைத்து பெருமை கொள்வதாக மாதவன் குறிப்பிட்டிருக்கிறார்.
Ajithkumar: `Game Starts' - துபாய் ரேஸில் ஜெயித்த அஜித் -குவியும் வாழ்த்துகள்
துபாயில் நடந்து முடிந்திருக்கும் 24H ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடம் பிடித்திருக்கிறது. துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித் கலந்துக்கொண்டிருந்தார். கார் ரேஸ் தொடங்குவதற்கு முன் பயிற்சியின் போது அஜித் விபத்தில் சிக்கினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த கார் ரேஸுக்காக தனது உடல் எடையைக் கூட அஜித் குறைத்திருக்கிறார். அந்தளவிற்கு கார் ரேஸ் மீது ஆர்வம் கொண்ட அஜித், ஒரு கட்டத்தில் கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார். Ajith Kumar ஆனால், அவர் சொல்லி கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் கார் ரேஸில் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 24H ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வெற்றியை அஜித் தேசியக்கொடியை ஏந்திக் கொண்டாடி இருக்கிறார். பலரும் அஜித்குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து இருகின்றனர். Ajith Kumar அஜித் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு நடிகர் மாதவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு, அஜித்தை நினைத்து பெருமை கொள்வதாக மாதவன் குறிப்பிட்டிருக்கிறார்.
யார் அந்த சார்?, விடை கிடைக்கும் வரை பட்டி தொட்டியெங்கும் வரை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வோம். திமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் பொய்யைத் தவிர எதுவும் பேசக்கூடாது என்று பதவி பிரமாணம் ஏற்று உள்ளார்களா என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர். பி. உதயகுமார் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
பெண்ணைக் கொலை செய்து 8 மாதங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த ஆடவர்
திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணொருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், அவருடன் தொடர்பில் இருந்து வந்த திருமணமான ஆண் ஒருவர், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் பகுதியில் அந்தப் பெண்ணைக் கொன்று, அவரது உடலை ஏறக்குறைய எட்டு மாதங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் படிதாரின் வாடகை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் நகைகள் அணிந்து, கழுத்தில் கயிற்றுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில், சேலை அணிந்த பெண்ணின் சிதைந்த உடல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. கொல்லப்பட்ட […]
மகள் –மனைவியுடன் கியூட் உரையாடல்…மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும் அஜீத் தனது குடும்பத்தினர் மற்றும் அணியினருடன் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பியுள்ளது. துபாய் 24H கார் ரேஸிங் தொடரில் 992 போர்ஷே பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து அஜித் அணி அசத்தியது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடத்திற்கு முன்னேறியது. இதனையடுத்து, […]
மகள் –மனைவியுடன் கியூட் உரையாடல்…மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும் அஜீத் தனது குடும்பத்தினர் மற்றும் அணியினருடன் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பியுள்ளது. துபாய் 24H கார் ரேஸிங் தொடரில் 992 போர்ஷே பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து அஜித் அணி அசத்தியது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடத்திற்கு முன்னேறியது. இதனையடுத்து, […]
இந்த ஆண்டு 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டின் ஆரம்ப பகுதியான கடந்த 11 நாட்களில் 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களது 03 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மன்னாருக்கும் நெடுந்தீவு கடற்பரப்புக்கும் இடையில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 08 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களது இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் இரணைதீவு பகுதிக்கு […]
ஈரோடு: `நாமம்'போட்டு காங்கிரஸார் எதிர்ப்பு; வைரலாகும் திமுக நிர்வாகியின் பதிவு - வெடிக்கும் சர்ச்சை
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக-வின் ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான வி.சி.சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. அதில், சந்திரகுமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தங்களிடம் இருந்து ஈரோடு கிழக்குத் தொகுதியை திமுக தட்டிப் பறித்துவிட்டதாக கூறி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் நாமம் போட்டு எதிர்ப்பைத் தெரிவித்து அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளக்தளில் பகிர்ந்து வருகின்றனர். அதேவேளை, திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட செந்தில்குமார் துரோக வலி என தலைப்பிட்டு சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ஏற்பட்ட துரோக வலியினால் இனிமேல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்வதில்லை என முடிவு செய்தேன். காங்கிரஸ் அதுபோலவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்ப மனு கொடுக்கவில்லை. அதேபோல், 2023-இல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாமல் அமைதியாகத்தான் இருந்தேன். ஆனால், கழக நிர்வாகிகள், தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் அவசியம் கேள்.. இந்த முறை உனக்குத் தான் வாய்ப்பு என உற்சாகமூட்டியதும், நானும் சராசரி மனிதனாய் பதவி சபலம் ஏற்பட்டு, அனைத்து தகுதிகளும் இருப்பதாய் எனக்கு நானே எண்ணிக்கொண்டு அதற்கான முயற்சியை முன்னெடுத்தேன். நீண்ட நாட்களாக கழகப்பணியாற்றி வந்தாலும், ஈரோடு தொகுதி பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து வரும் வி.வி.ஐ.பி-களுக்கு என்று ஒதுக்கப்படுவதால் என்னைப் போன்றவர்களின் பெயர்கள் பரிசீலனைக்கே எடுக்கப்படுவதில்லை. 1980-இல் தொடங்கி 2021-வரை ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஈரோடு தொகுதியை குறி வைப்பதால் என்னை போன்ற ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட கழக நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலனைக்கே வராமல் போய்விட்டது. கட்சியின் நலன் கருதி மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து போராடியதால், அப்போதெல்லாம் எவ்வித பொறுப்பிற்கும் வர முடியவில்லை. செந்தில்குமார் தற்போது மாவட்டச் செயலாளரை அனுசரித்து அவருடன் இருந்தாலும் வாய்ப்பைப் பெற முடியவில்லை. ஏனென்றால் நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டேன் என்பதாலும், இவன் எம்.எல்.ஏ ஆனால் கட்சியையும் கைப்பற்றி விடுவானே என்றும், எம்.எல்.ஏ என்ற நிலையோடு மட்டும் இருந்தால் பரவாயில்லை. அடுத்த நிலை அங்கீகாரத்திற்கு வந்து விடுவானே என்றும் பயந்த சிலர் எனக்கு வரும் வாய்ப்பை தட்டி விட்டனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் சில துரோகங்களால் நான் வீழ்த்தப்படுகிறேன். துரோகம் செய்யும் நபர்கள் மாறுகிறார்களே தவிர பாதிக்கப்படுபவன் நான் மட்டுமாகவே இருக்கிறேன் என்று செந்தில்குமார் கருத்து பதிவிட்டுள்ளது ஈரோடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஈரோடு திமுக முன்னோடி நிர்வாகிகள் கூறுகையில், செந்தில்குமாரைப் பொறுத்தவரை மாணவர் திமுக-வில் இருந்து நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்தவர். அவருக்கு இதுவரை பொறுப்பு ஏதும் வழங்கவில்லை. கடந்த ஆண்டு செந்தில்குமாரின் இல்லத் திருமணத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், செந்தில்குமாருக்கு இதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை. விரைவில் அவருக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் இந்த முறை அவருக்கு சீட் வழங்கப்படும் என நினைத்தோம். ஆனால், அமைச்சர் முத்துசாமியின் பரிந்துரை காரணமாக தேமுதிக-வில் இருந்து வந்த சந்திரகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செந்தில்குமார் கருத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அந்த அதிருப்தியில் அந்த பதிவை போட்டிருக்கலாம் என்றனர். செந்தில்குமார் செந்தில்குமாரிடம் பேசினோம். 2021 தேர்தலில் இருந்தே போட்டியிட வேண்டாம் என்றுதான் முடிவெடுத்திருந்தேன். இந்த முறை ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதியானதால்தான் கட்சியின் சீனியர் என்ற முறையில் நிர்வாகிகள் வலியுறுத்தியதால் வாய்ப்பு கேட்டேன். சில அரசியல் காரணங்களால் தலைமை எனக்கு சீட் வழங்கவில்லை. அதிருப்தியாக இல்லாமல் எனது மனக்குமுறுலை வெளிப்படுத்தவே இந்தக் கருத்தை பதிவிட்டேன். கட்சித் தலைமை யாரை நிறுத்தியுள்ளதோ அவர் வெற்றிக்கு உழைப்பேன் என்றார். ஒருபுறம் காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பு மறுபுறம் செந்தில்குமாரின் கருத்துப் பதிவு என ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மதுரையில் 2 புதிய பேருந்து நிலையங்கள் திறப்பு... மக்கள் மகிழ்ச்சி!
மதுரை மேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கர்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையம் மற்றும் அலங்காநல்லூரில் மேம்படுத்தப்பட்ட டாக்டர். அம்பேத்கர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர் .
அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!
ஈரோடு:காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் செய்து வரும் நிலையில், அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து தேசிய ஜனாயக கூட்டணி பாஜக-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போது வரை, இடைத்தேர்தலில் திமுக, நாதக […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சற்று முன் பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! திமுக பராக்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடபோவது இல்லை என்றும், தேர்தலை புறக்கணிப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்து உள்ளது. எனவே அந்த தொகுதியில் திமுகவை எதிர்த்து நாதக மட்டும் களத்தில் நிற்கிறது.
பதவியை ராஜினாமா செய்கிறாரா நிதிஷ்குமார்? தீயாய் பரவும் வீடியோ.. உண்மை என்ன?
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதுகுறித்த உண்மைத் தகவல் ஃபேக்ட் செக் மூலம் வெளியாகியுள்ளது.
சீனாவில் பரவும் மர்ம வியாதி…மலேசியா, இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை
நாடு முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் சீனா கடுமையாக திணறி வருகிறது. வெளிவரும் தகவல்களில், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. சீனாவில் வேகமாக வியாபித்துவரும் HMPV தொற்று தற்போது சுகாதார நிபுணர்களை நடவடிக்கை எடுக்கத் தூண்டியுள்ளது. மட்டுமின்றி, தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது சீனாவின் அண்டை நாடுகளான இந்தியாவும் மலேசியாவும் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய மாகாணமான கர்நாடகா துரித நடவடிக்கை […]
யாழில். கஞ்சாவுடன் விசுவமடு வாசி கைது
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் கேரள கஞ்சாவுடன் விசுவமடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரை வீதியில் வழிமறித்து , சோதனையிட்ட போது , அவரது உடைமையில் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் , […]
கார் ரேஸில் வாகை சூடிய அஜித்…தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! –வைரல் வீடியோ..
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க அஜித்குமார் கார் ரேஸிங் எனும் அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற ’24H சீரிஸ்’ கார் ரேஸில் “911 GT3 R” என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி (901) 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் […]
“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல”முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!
சென்னை:வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கி, நேற்று (11ம் தேதி) வரையில் நடைபெற்றது. முதல் நாளில், சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் முன்வைத்தனர். அதிலும் குறிப்பாக, “சட்டப் பேரவைக்கு ஆளுநர் வருகிறார், ஆனால் உரையாற்றாமலே போய்விடுகிறார். அதனால்தான் அவரின் […]
Pongal 2025: லாரி லாரியாக குவிந்த கரும்பு, மஞ்சள் கொத்துகள் - கோயம்பேடு மார்க்கெட் Spot visit !
'ஸ்டாலினின் இந்த ஆணவம் நல்லதல்ல...' - தேசிய கீத விவகாரத்தில் ஆளுநர் மாளிகை காட்டம்
முதல்வர் ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்போது பேரவைக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைக்கப்படாததால் சிறிது நேரத்திலேயே அவையிலிருந்து வேகவேகமாக வெளியேறினார். அந்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர். ஸ்டாலின் அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ‘தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?’ என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது முதல்வரின் இந்த பதிவுக்கு, ஆளுநர் மாளிகை இன்று (ஜனவரி 12) பதிலளித்துள்ளது. ஆளுநர் மாளிகையின் பதிவில், ஸ்டாலின் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் அபத்தமானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது என்று வற்புறுத்துகிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. ஆளுநர் ரவி இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
MadhaGajaRaja: 'ஒரு நடிகனா ரொம்ப சந்தோஷமா இருக்கேன், சண்டக்கோழிக்கு அப்புறம்..'- விஷால் ஓப்பன் டாக்
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'மதகஜராஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையே இன்று (ஜனவரி 12) காலை ரசிகர்களுடன் திரையரங்கில் படத்தைப் பார்த்த விஷால் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு 'மதகஜராஜா' படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பொதுவாக என்னுடைய படம் ரிலீஸ் ஆகும்போது திரையரங்கிற்கு வந்தால் ஒரு 10, 15 நிமிடங்கள் மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிடுவேன். மதகஜராஜா ஆனால் 'மதகஜராஜா' படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து முழுமையாகப் பார்த்தேன். அவர்களின் கைத்தட்டல், விசில், சிரிப்பு எல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு நடிகனாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்கும் சுந்தர் சாருக்கும் இது ஒரு ஸ்பெஷல் ஆன படம். 'சண்டக்கோழி'க்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த படம் இது. உழைப்பு என்பது எல்லா படத்திற்கும் கொடுப்போம். ஆனால் இந்தப் படைத்தைப் பொறுத்தவரை படத்திற்கு உழைத்ததை விட ரிலீஸ்க்கு உழைத்ததுதான் அதிகம். கடைசியில் இந்தப் படம் வெளியாகி விட்டது. ஏன் இந்தப் படம் இவ்வளவு நாளாக வெளியாகவில்லை என்று நாங்கள் ஆதங்கப்பட்டிருக்கிறோம். விஷால் கடவுள்தான் இந்த தேதியில் படத்தை வெளியாக வைத்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படத்தை எல்லோரும் பாருங்கள் என்று பேசியிருக்கிறார்.
துபாய் 24H கார் ரேஸில் அஜித் வெற்றி: தல போல வருமானு ரசிகர்கள் கொண்டாட்டம்
துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. தன் அணியுடன் சேர்ந்து அஜித் குமார் வெற்றியை கொண்டாடிய வீடியோவை பார்த்து ஏ.கே. ரசிகர்கள் மட்டும் அல்ல சினிமா ரசிகர்களும் கண் கலங்கிவிட்டார்கள்.
வசூல்ராஜா MBBS பட பாணியில் தேர்வில் மோசடி... போலீஸ் தேர்வில் சிக்கிய இளைஞர்!
மும்பையில் போலீஸ் தேர்வுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் மகாராஷ்டிரா முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர். மும்பை ஓசிவாரா என்ற இடத்தில் நடந்த தேர்வில் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த குஷ்னா தல்வி என்பவரும் தேர்வு எழுத வந்தார். அவர் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது அவரது நடவடிக்கையில் தேர்வு கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வை கண்காணிக்க வந்தவர் தல்வியை சோதித்துப்பார்த்தார். ஆனால் அவரிடம் எதுவும் இல்லை. ஆனால் அவரது காதை பார்த்தபோது உள்ளே மிகவும் சிறிய ஹெட் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஹெட் போனை வெளியில் இருந்து பார்த்தால் பார்க்க முடியாது. அது காதிற்குள் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருந்தது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே கவனிக்க முடியும். அந்த ஹெட்போன பறிமுதல் செய்தபோது அதில் அவரது நண்பர்கள் இரண்டு பேர் வெளியில் இருந்து புளூடூத் மூலம் விடையை தெரிவித்துக்கொண்டிருந்தனர். சச்சின் மற்றும் பிரதீப் ஆகிய அந்த நண்பர்கள் வெளியில் இருந்து கொண்டு தல்விக்கு விடைகளை தெரிவித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தல்வியிடமிருந்து மொபைல் போன், சிம்கார்டு, ஹெட்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தல்வி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தல்வி கைது செய்யப்பட்டுள்ளார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில்தான் கமல்ஹாசன் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதிய போது ஹெட் போன் பயன்படுத்தி விடையை வெளியில் இருந்து வாங்கி எழுதுவார். அது போன்ற ஒரு சம்பவம் இப்போது மும்பையில் நடந்திருக்கிறது. வேறு சில மாநிலங்களிலும் இது போன்ற மோசடி நடந்திருக்கிறது.
வசூல்ராஜா MBBS பட பாணியில் தேர்வில் மோசடி... போலீஸ் தேர்வில் சிக்கிய இளைஞர்!
மும்பையில் போலீஸ் தேர்வுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் மகாராஷ்டிரா முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர். மும்பை ஓசிவாரா என்ற இடத்தில் நடந்த தேர்வில் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த குஷ்னா தல்வி என்பவரும் தேர்வு எழுத வந்தார். அவர் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது அவரது நடவடிக்கையில் தேர்வு கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வை கண்காணிக்க வந்தவர் தல்வியை சோதித்துப்பார்த்தார். ஆனால் அவரிடம் எதுவும் இல்லை. ஆனால் அவரது காதை பார்த்தபோது உள்ளே மிகவும் சிறிய ஹெட் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஹெட் போனை வெளியில் இருந்து பார்த்தால் பார்க்க முடியாது. அது காதிற்குள் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருந்தது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே கவனிக்க முடியும். அந்த ஹெட்போன பறிமுதல் செய்தபோது அதில் அவரது நண்பர்கள் இரண்டு பேர் வெளியில் இருந்து புளூடூத் மூலம் விடையை தெரிவித்துக்கொண்டிருந்தனர். சச்சின் மற்றும் பிரதீப் ஆகிய அந்த நண்பர்கள் வெளியில் இருந்து கொண்டு தல்விக்கு விடைகளை தெரிவித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தல்வியிடமிருந்து மொபைல் போன், சிம்கார்டு, ஹெட்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தல்வி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தல்வி கைது செய்யப்பட்டுள்ளார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில்தான் கமல்ஹாசன் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதிய போது ஹெட் போன் பயன்படுத்தி விடையை வெளியில் இருந்து வாங்கி எழுதுவார். அது போன்ற ஒரு சம்பவம் இப்போது மும்பையில் நடந்திருக்கிறது. வேறு சில மாநிலங்களிலும் இது போன்ற மோசடி நடந்திருக்கிறது.
பேனா தினம்: சட்டையில் எழுதி கொண்டாடிய மாணவிகள்; சட்டையை கழற்றி, வீட்டுக்கு அனுப்பிய பள்ளி முதல்வர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் மாவட்டத்தில் இருக்கும் திக்வாதி என்ற இடத்தில் இருக்கும் பள்ளியில் மாணவர்கள் பேனா தினத்தை கொண்டாடினர். இதற்கு பள்ளி முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரது எதிர்ப்பை மீறி பேனா தினத்தை கொண்டாடிய மாணவிகள் ஒருவருக்கொருவர் மற்றவர்கள் சட்டையில் எதாவது வாசகத்தை எழுதினர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து பள்ளி முதல்வர் கண்டித்தார். அதோடு சட்டையில் எழுதிய மாணவிகளை அவர்களிடம் சட்டையை கழற்றும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மாணவிகள் தங்களை மன்னிக்கும்படி முதல்வரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் பள்ளி முதல்வர் அவர்களது மன்னிப்பை ஏற்காமல் அவர்களை சட்டையை கழற்றிவிட்டு, பிளேசருடன் வீட்டுக்குச் செல்லும்படி படி தெரிவித்துள்ளார். இதனால் 10 வது வகுப்பு படிக்கும் 60 மாணவிகள் மேல் சட்டையை கழற்றிவிட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டிற்கு வந்த மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் புகார் செய்தனர். இதனால் கோபம் அடைந்த பெற்றோர் இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் மாத்வி மிஸ்ராவிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரி மிஸ்ரா கூறுகையில்,'' பல பெற்றோர்கள் பள்ளி முதல்வருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலரிடமும் இது தொடர்பாக வாக்குமூலம் வாங்கி இருக்கிறோம். இப்புகார் குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. கமிட்டியின் விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். புகார் செய்ய சென்ற பெற்றோருடன் ஜரியா தொகுதி எம்.எல்.ஏ ராகினி சிங்கும் உடன் சென்று இருந்தார். பள்ளியில் நடந்த சம்பவம் வெட்கக்கேடாது என்றும், துரதிஷ்டவசமானது என்றும் ராகினி தெரிவித்தார்.
பேனா தினம்: சட்டையில் எழுதி கொண்டாடிய மாணவிகள்; சட்டையை கழற்றி, வீட்டுக்கு அனுப்பிய பள்ளி முதல்வர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் மாவட்டத்தில் இருக்கும் திக்வாதி என்ற இடத்தில் இருக்கும் பள்ளியில் மாணவர்கள் பேனா தினத்தை கொண்டாடினர். இதற்கு பள்ளி முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரது எதிர்ப்பை மீறி பேனா தினத்தை கொண்டாடிய மாணவிகள் ஒருவருக்கொருவர் மற்றவர்கள் சட்டையில் எதாவது வாசகத்தை எழுதினர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து பள்ளி முதல்வர் கண்டித்தார். அதோடு சட்டையில் எழுதிய மாணவிகளை அவர்களிடம் சட்டையை கழற்றும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மாணவிகள் தங்களை மன்னிக்கும்படி முதல்வரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் பள்ளி முதல்வர் அவர்களது மன்னிப்பை ஏற்காமல் அவர்களை சட்டையை கழற்றிவிட்டு, பிளேசருடன் வீட்டுக்குச் செல்லும்படி படி தெரிவித்துள்ளார். இதனால் 10 வது வகுப்பு படிக்கும் 60 மாணவிகள் மேல் சட்டையை கழற்றிவிட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டிற்கு வந்த மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் புகார் செய்தனர். இதனால் கோபம் அடைந்த பெற்றோர் இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் மாத்வி மிஸ்ராவிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரி மிஸ்ரா கூறுகையில்,'' பல பெற்றோர்கள் பள்ளி முதல்வருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலரிடமும் இது தொடர்பாக வாக்குமூலம் வாங்கி இருக்கிறோம். இப்புகார் குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. கமிட்டியின் விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். புகார் செய்ய சென்ற பெற்றோருடன் ஜரியா தொகுதி எம்.எல்.ஏ ராகினி சிங்கும் உடன் சென்று இருந்தார். பள்ளியில் நடந்த சம்பவம் வெட்கக்கேடாது என்றும், துரதிஷ்டவசமானது என்றும் ராகினி தெரிவித்தார்.
ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன்: ஈரானுக்கு பயணிக்கவேண்டாம் என்றும் எச்சரிக்கை
பிரான்சுக்கான ஈரான் தூதருக்கு அந்நாடு சம்மன் அனுப்பியுள்ளது. அத்துடன், பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானுக்குப் பயணிக்கவேண்டாம் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன் பிரான்ஸ் நாட்டவர்களான Cecile Kohler என்பவரும் அவரது துணைவரான Jacques Paris என்பவரும், 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஈரானில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல, Olivier என்னும் பிரான்ஸ் குடிமகனும் 2022 அக்டோபர் முதல் ஈரானில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஈரானில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டவர்களின் நிலைமை மோசமடைந்துவருவதாகவும், அவர்களுடைய […]
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Fact Check : லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றி எரியும் தீ என வைரலாகும் வீடியோ.. உண்மை இதுதான்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயங்கர தீ கொழுந்துவிட்டு எரிவது போல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.அதன் உண்மைத் தன்மை குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த ஆணவம் நல்லதல்ல.. ஆளுநருக்கு வந்துச்சே கோபம்!
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக அரசின் உரையை படிக்காமல் சென்ற ஆளுநரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ராஜ்பவன் காட்டமாக பதில் அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மலைவாழ் மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மலைவாழ் மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்! ஒரு மாதத்தில் தொலைத்தொடர்பு வசதி தங்கள் பகுதிட்டு ஏற்படுத்தி தரப்படும் என மலைவாழ் மக்களிடம் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.
`குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பணி இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும்' - இஸ்ரோ நாராயணன் பேட்டி
இஸ்ரோ தலைவராக பதவி ஏற்க உள்ள நாராயணன் கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் இன்று சாமிதரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு முக்கியமான பொறுப்பை பாரத பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார்கள். ஐ.எஸ்.ஆர்.ஓ என்பது மிகப்பெரிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தலைவராக பொறுப்பு கிடைத்திருப்பது இறைவனின் அருளும் ஆசீர்வாதமும்தான் காரணம். பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆசீர்வாதங்கள் எல்லாம் சேர்ந்து எனக்கு இந்த பொறுப்பு கிடைத்திருக்கிறது. ஐ.எஸ்.ஆர்.ஓ-விலுள்ள 17,500 ஊழியர்கள் அனைவரும் நன்றாக பணியாற்றக் கூடியவர்கள். ஒரு குழுவாக இணைந்து நாட்டுக்காக சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் வழிபாடு நடத்திய விஞ்ஞானி நாராயணன் ஐ.எஸ்.ஆர்.ஓ பணியை பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பாக நான் எதையும் பிரித்து கூற மாட்டேன். மொத்தம் குழுவாக இணைந்து நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பிரதமர் என்ன வழிகாட்டுதல் கொடுத்து இருக்கிறாறோ அந்த பணியை அனைவரும் இணைந்து செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் வேலையை செய்து வருகிறோம். ஏற்கெனவே 2 செயற்கை கோள்களை அருகருகே கொண்டு நிறுத்தி நாம் சாதனை படைத்திருக்கிறோம். இது சந்திராயன் 4 நிலவில் தரை இறங்குவதற்கு பயன்படும். இந்தியாவிற்கு விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைக்க இருக்கிறோம். குடும்பத்தினருடன் விஞ்ஞானி நாராயணன் அடுத்த கட்டமாக ஆட்களை விண்வெளிக்கு கொண்டு சென்று அழைத்து வர இருக்கிறோம். தொலைத்தொடர்பு, தொலை உணர்வு நேவிகேஷன் சேட்டிலைட் ஏவுதல் போன்ற எதிர்கால திட்டங்கள் உள்ளன. நான் பொறுப்பேற்ற பிறகு அனைவருடனும் விரிவாக ஆலோசனை நடத்தி அடுத்த திட்டங்கள் குறித்து அறிவிப்போம். குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ராக்கெட் ஏவுதளம் பணி இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும். 30,000 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை சுமந்துசெல்லும் ராக்கெட் தயாரிக்க திட்டமிட்டு பணிகள் நடந்துவருகிறது என்றார்.
கரூரில் பேருந்து நிழற்குடை திட்டத்தில் பல்வேறு முறைகேடு! எம்.பி ஜோதிமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
கரூர் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிழல் குடை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, தரமற்ற முறையில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மீது பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப் பிரமாணம்
புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நால்வா் இன்று (12) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்… The post புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப் பிரமாணம் appeared first on Global Tamil News .
சென்னையில் இன்றும் நாளையும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருத்தித்துறையில் வெடி கொளுத்திய இருவர் கைது
யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக பட்டாசு கொளுத்திய இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பகுதியில் உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது , நீதிமன்றுக்கு அருகில் அதிக சத்தமான பெருமளவான வெடிகளை கொளுத்தியமையால் , சத்தம் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் சுமார் 30 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்நிலையில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் வெடிகளை கொளுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் இருவரை கைது செய்து […]
இந்த ஆண்டு 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள்அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டின் ஆரம்ப பகுதியானகடந்த 11 நாட்களில் 18… The post இந்த ஆண்டு 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது appeared first on Global Tamil News .
யாழில். திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொக்குவிலை சேர்ந்த ரவீந்திரன் சுதாகர் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்தவரை மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்!
யாழ் போதனா வைத்தியசாலை என்புமுறிவு விடுதிகள் (Ward 14 மற்றும் 17) புதிய கட்டிடத்தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னதாக மருத்துவ கட்டிடத்தொகுதியில் (நுழைவாயில் 6 முன்புறம்) செயல்பட்டு வந்த என்புமுறிவு சத்திரசிகிச்சை விடுதிகள், தற்போது நவீன வசதிகளுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய விடுதிகளில் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மிகவும் இலகுவாக சிகிச்சை பெற முடியும். மற்றும் என்புமுறிவு நோயாளிகளை பார்வையிட வருவோர், […]
யாழ் போதனாவின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு
யாழ் போதனா வைத்தியசாலை என்புமுறிவு விடுதிகள் (Ward 14 மற்றும் 17) புதிய கட்டிடத்தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளன. யாழ்… The post யாழ் போதனாவின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் கேரள கஞ்சாவுடன் விசுவமடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை… The post கஞ்சாவுடன் ஒருவர் கைது appeared first on Global Tamil News .
பான் கார்டில் நடக்கும் பெரிய மோசடி.. மறந்தும் கூட இதைச் செய்யாதீர்கள்!
உங்களுடைய பான் கார்டு விஷயத்தில் பெரிய மோசடி நடைபெறுகிறது. அதில் நீங்கள் சிக்காமல் இருக்க இதைச் செய்தால் போதும். இல்லாவிட்டால் ஆபத்து.
Trump: டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர்! - இந்தியா - அமெரிக்கா உறவு வலுக்குமா?!
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிரம்ப் வரும் 20-ம் தேதி 47-வது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவிற்கு பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விழாவிற்கான அழைப்பு இந்தியாவிற்கும் வந்துள்ளது. டிரம்ப் பதவியேற்கும் நிகழ்வில், இந்தியா சார்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார். இவருடன் சில இந்திய அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியா - அமெரிக்கா உறவு வலுக்குமா?! டிரம்ப் பதவியேற்பு விழா மட்டுமல்லாமல், அவர் அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்களுடன் மீட்டிங்கும் நடக்க உள்ளது என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் சமீப காலமாக நல்ல உறவு நிலவி வருகிறது. வணிகம் முதல் முதலீடுகள் வரை அமெரிக்காவிற்கும், இந்தியாவுக்கும் நல்ல உறவு உள்ளது. டிரம்ப் அதிபராக பதவியேற்றப் பிறகு கொண்டு வரப்போவதாக கூறியுள்ள சில சட்ட திட்டங்கள் இந்தியாவிற்கு எதிராக உள்ளது. இந்த நிலையில், டிரம்ப் பதவியேற்பு விழா மற்றும் அதிகாரிகளுடனான மீட்டிங் நட்பு பாலத்திற்கு தொடக்கமாக அமையலாம்.
Trump: டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர்! - இந்தியா - அமெரிக்கா உறவு வலுக்குமா?!
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிரம்ப் வரும் 20-ம் தேதி 47-வது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவிற்கு பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விழாவிற்கான அழைப்பு இந்தியாவிற்கும் வந்துள்ளது. டிரம்ப் பதவியேற்கும் நிகழ்வில், இந்தியா சார்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார். இவருடன் சில இந்திய அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியா - அமெரிக்கா உறவு வலுக்குமா?! டிரம்ப் பதவியேற்பு விழா மட்டுமல்லாமல், அவர் அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்களுடன் மீட்டிங்கும் நடக்க உள்ளது என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் சமீப காலமாக நல்ல உறவு நிலவி வருகிறது. வணிகம் முதல் முதலீடுகள் வரை அமெரிக்காவிற்கும், இந்தியாவுக்கும் நல்ல உறவு உள்ளது. டிரம்ப் அதிபராக பதவியேற்றப் பிறகு கொண்டு வரப்போவதாக கூறியுள்ள சில சட்ட திட்டங்கள் இந்தியாவிற்கு எதிராக உள்ளது. இந்த நிலையில், டிரம்ப் பதவியேற்பு விழா மற்றும் அதிகாரிகளுடனான மீட்டிங் நட்பு பாலத்திற்கு தொடக்கமாக அமையலாம்.
“பெரியார் என்ன புரட்சி செய்தார்?”–பெரியாா் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக, மாநிலம் முழுவதும் அவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சீமானின் பேச்சு […]
தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இணுவில் அம்மன்… The post தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது appeared first on Global Tamil News .
நீங்க திருந்தவே மாட்டீங்களா, ஏன் இப்படி பண்றீங்க சமந்தா?: ரசிகர்கள் கவலை
சமந்தா செய்த காரியத்தை பார்த்த அவரின் ரசிகர்கள், நீங்க திருந்தவே மாட்டீங்களா, எத்தனை முறை சொன்னாலும் கேட்பதே இல்லை. உங்களை வச்சுக்கிட்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை என புலம்புகிறார்கள்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக பட்டாசு கொளுத்திய இருவர் கைது செய்யப்பட்டு காவல்துறைப்… The post வெடி கொளுத்திய இருவர் கைது appeared first on Global Tamil News .
திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.கொக்குவிலைசேர்ந்த ரவீந்திரன் சுதாகர் (வயது 42) என்பவரேஉயிரிழந்துள்ளார்.… The post திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு appeared first on Global Tamil News .
பெரியார் விவகாரம் : `ஆதாரம் இருக்கு... ஆனா இல்ல’ - சீமான் சர்ச்சை பேச்சுக்கு நா.த.க சொல்வதென்ன?
பெரியார் குறித்த கருத்து பெரியார் குறித்து, `விமர்சனம்’ என்கிற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என கொதிக்கிறது திராவிட அமைப்புகள். அதேசமயம் ஆளுநருக்கு ஆதரவான கருத்தை உதிர்திருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது. சீமானின் பேச்சுக்கு ஆதாரம் எங்கே? என்ற கேள்வி வலுவாகியிருக்கும் சூழலில் `ஆதாரம் இருக்கு..ஆனா இல்ல’ என மழுப்பி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். பெரியார் கடந்த ஜனவரி 8-ம் தேதி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் `பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்றா தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு எனச் சொன்னது பெண்ணிய உரிமையா?” எனக் கேட்டார். ஆனால் பெரியார் அவ்வாறு பேசவில்லை என அடித்துச் சொல்கிறார்கள் பெரியாரியவாதிகள். `சீமானை இயக்குகிறது ஆர்.எஸ்.எஸ்’ மறுபக்கம் ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என் ரவி வெளியேறியது குறித்து எழுந்த கேள்விக்கு தி.மு.க மீது பாய்ந்த சீமான்``நீங்கள் எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா, இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்று விட்டார்” என ஆளுநருக்கான ஆதரவை நல்கினார். பெரியாரைக் கொச்சைப்படுத்தி, திராவிட அரசியலை நீர்த்துப்போகச் செய்வதற்கான சதித்திட்டங்களைத் தொடங்கிவிட்டது ஆரியம். அதன் ஒரு பகுதியாக, சீமானை இயக்குகிறது ஆர்.எஸ்.எஸ் என்கிற விமர்சனத்தை தி.மு.க கூட்டணியினர் முன்வைக்கின்றனர். பெரியாருக்கு மரியாதை செலுத்தும் சீமான் நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் ``ஆளுநர் உரைமீது விமர்சனத்தை முன்வைப்பது எதிர்க்கட்சிகளின் உரிமை. ஆனால் ஆளுநர் உரையில் இருப்பதை அப்படியே வாசிப்பதுதான் சட்டமன்ற மரபு. அந்த மரபைமீறி ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றதை நியாயப்படுத்துவது என்பது பா.ஜ.க-வின் நிலைப்பாடாக இருக்கிறது. அதையே சீமானும் எடுக்கிறாரா என்ற சந்தேகம் கிளம்புகிறது. அதேபோல் பெரியாரை விமர்சிப்பதும் பாராட்டுவதும் அவரவர் உரிமை ஆனால் பெரியார் சொன்னதாக சீமான் சொல்வதற்கு ஆதாரம் எங்கே? என்பதுதான் அவர் முன்பிருக்கும் கேள்வி. ஆனால் அவரிடம் ஆதாரம் இல்லாததால்தான் நாட்டுடைமையாக்குங்கள் என பிதற்றுகிறார்கள்” என்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் ஏஜென்ட் சீமான்! -‘கடுகடு’ மனோ தங்கராஜ் இதுகுறித்து விளக்கம்கேட்க நா.த.க-வின் மாணவர் பாசறை மாநிலச் செயலாளர் அபுபக்கரிடம் பேசினோம், ``ஆர்.என் ரவி ஆளுநருக்கான உரையை வாசிக்காமல் வெளியேறியது தவறு என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. இவ்விவகாரத்தில் ஆளுநரை கண்டித்து அண்ணன் சீமான் பேசியிருக்கிறார். அபுபக்கர், நாம் தமிழர் அதேசமயம் ஆளுநர் உரையில் தமிழ்நாட்டின் யதார்த்த சூழலுக்கு எதிரானவற்றை எழுதிக்கொடுத்ததும் தவறு என்கிறார். ஆனால் இதைவைத்து ஆளுநருக்கு ஆதரவான கருத்து எனக் கட்டமைக்கிறார்கள். மேலும் பெரியார் விவகாரத்தில் அண்ணன் சொன்ன குறிப்பிட்ட கருத்துக்கு மீளாய்வு செய்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தை பெற்றுக் கொள்ளாமல் உறவு வைத்துக் கொள்வது குறித்து பெரியார் சொன்னதாக வீரமணி பேசியிருக்கிறார். பிறர் மனைவி நோக்குவது தவறல்ல என சேலம் மாநாட்டில் பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த புறநிலை சாட்சிகளை வைத்து அதற்கான தரவுகளை தேடிக் கொண்டிருக்கிறோம். பெரியார் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டால் ஆதாரம் தருகிறோம்” என்றார் மழுப்பலாக. `ஆதாரம் இருக்கு.. ஆனா இல்ல’ என்ற கதையாக தெரிகிறதே! காவி கட்டும் சீமான்... கைகொடுத்த ரஜினி! - போயஸ் சந்திப்பு பின்னணி!
பெரியார் விவகாரம் : `ஆதாரம் இருக்கு... ஆனா இல்ல’ - சீமான் சர்ச்சை பேச்சுக்கு நா.த.க சொல்வதென்ன?
பெரியார் குறித்த கருத்து பெரியார் குறித்து, `விமர்சனம்’ என்கிற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என கொதிக்கிறது திராவிட அமைப்புகள். அதேசமயம் ஆளுநருக்கு ஆதரவான கருத்தை உதிர்திருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது. சீமானின் பேச்சுக்கு ஆதாரம் எங்கே? என்ற கேள்வி வலுவாகியிருக்கும் சூழலில் `ஆதாரம் இருக்கு..ஆனா இல்ல’ என மழுப்பி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். பெரியார் கடந்த ஜனவரி 8-ம் தேதி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் `பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்றா தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு எனச் சொன்னது பெண்ணிய உரிமையா?” எனக் கேட்டார். ஆனால் பெரியார் அவ்வாறு பேசவில்லை என அடித்துச் சொல்கிறார்கள் பெரியாரியவாதிகள். `சீமானை இயக்குகிறது ஆர்.எஸ்.எஸ்’ மறுபக்கம் ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என் ரவி வெளியேறியது குறித்து எழுந்த கேள்விக்கு தி.மு.க மீது பாய்ந்த சீமான்``நீங்கள் எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா, இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்று விட்டார்” என ஆளுநருக்கான ஆதரவை நல்கினார். பெரியாரைக் கொச்சைப்படுத்தி, திராவிட அரசியலை நீர்த்துப்போகச் செய்வதற்கான சதித்திட்டங்களைத் தொடங்கிவிட்டது ஆரியம். அதன் ஒரு பகுதியாக, சீமானை இயக்குகிறது ஆர்.எஸ்.எஸ் என்கிற விமர்சனத்தை தி.மு.க கூட்டணியினர் முன்வைக்கின்றனர். பெரியாருக்கு மரியாதை செலுத்தும் சீமான் நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் ``ஆளுநர் உரைமீது விமர்சனத்தை முன்வைப்பது எதிர்க்கட்சிகளின் உரிமை. ஆனால் ஆளுநர் உரையில் இருப்பதை அப்படியே வாசிப்பதுதான் சட்டமன்ற மரபு. அந்த மரபைமீறி ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றதை நியாயப்படுத்துவது என்பது பா.ஜ.க-வின் நிலைப்பாடாக இருக்கிறது. அதையே சீமானும் எடுக்கிறாரா என்ற சந்தேகம் கிளம்புகிறது. அதேபோல் பெரியாரை விமர்சிப்பதும் பாராட்டுவதும் அவரவர் உரிமை ஆனால் பெரியார் சொன்னதாக சீமான் சொல்வதற்கு ஆதாரம் எங்கே? என்பதுதான் அவர் முன்பிருக்கும் கேள்வி. ஆனால் அவரிடம் ஆதாரம் இல்லாததால்தான் நாட்டுடைமையாக்குங்கள் என பிதற்றுகிறார்கள்” என்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் ஏஜென்ட் சீமான்! -‘கடுகடு’ மனோ தங்கராஜ் இதுகுறித்து விளக்கம்கேட்க நா.த.க-வின் மாணவர் பாசறை மாநிலச் செயலாளர் அபுபக்கரிடம் பேசினோம், ``ஆர்.என் ரவி ஆளுநருக்கான உரையை வாசிக்காமல் வெளியேறியது தவறு என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. இவ்விவகாரத்தில் ஆளுநரை கண்டித்து அண்ணன் சீமான் பேசியிருக்கிறார். அபுபக்கர், நாம் தமிழர் அதேசமயம் ஆளுநர் உரையில் தமிழ்நாட்டின் யதார்த்த சூழலுக்கு எதிரானவற்றை எழுதிக்கொடுத்ததும் தவறு என்கிறார். ஆனால் இதைவைத்து ஆளுநருக்கு ஆதரவான கருத்து எனக் கட்டமைக்கிறார்கள். மேலும் பெரியார் விவகாரத்தில் அண்ணன் சொன்ன குறிப்பிட்ட கருத்துக்கு மீளாய்வு செய்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தை பெற்றுக் கொள்ளாமல் உறவு வைத்துக் கொள்வது குறித்து பெரியார் சொன்னதாக வீரமணி பேசியிருக்கிறார். பிறர் மனைவி நோக்குவது தவறல்ல என சேலம் மாநாட்டில் பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த புறநிலை சாட்சிகளை வைத்து அதற்கான தரவுகளை தேடிக் கொண்டிருக்கிறோம். பெரியார் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டால் ஆதாரம் தருகிறோம்” என்றார் மழுப்பலாக. `ஆதாரம் இருக்கு.. ஆனா இல்ல’ என்ற கதையாக தெரிகிறதே! காவி கட்டும் சீமான்... கைகொடுத்த ரஜினி! - போயஸ் சந்திப்பு பின்னணி!
BB Tamil 8 Day 97: மேலும் ஒரு எவிக்ஷன், வன்மத்தைக் கொட்டிய 8 பேர் -என்ன நடந்தது?
டாப் 5-ல் இருக்க வேண்டிய இன்னொரு நபர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் என்பது பல விநோதமான மர்மங்களைக் கொண்டது. கோப்பையின் மூலம் கிடைக்கும் வெற்றி என்பதைத் தாண்டி ‘பிக் பாஸ் வீடு தந்த அக மாற்றத்தை உண்மையான வெற்றியாக’ அருண் கருதுவது சிறப்பானது. அதை அவர் வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொண்டால் அவரது வாழ்க்கை இன்னமும் சிறப்பாக மேம்படும். இது அருணிற்கானது மட்டுமல்ல. பிக் பாஸ் பார்வையாளர்கள் அனைத்திற்குமானது. இந்த நிகழ்ச்சி உள்ளே ஏற்படுத்தும் மாற்றம்தான் முக்கியமானது. மற்றபடி இவர் ஜெயித்தார், இவர் தோற்றார் என்பதெல்லாம் அதற்குப் பிறகுதான். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 97 “இவங்க என்ன செஞ்சு குப்பை கொட்டப் போறாறங்கன்னு பார்ப்போம்ன்னு எட்டு பேரை புதுசா உள்ளே அனுப்பிச்சா.. வாரம் முழுவதும் வன்மமா கொட்டினாங்க..” என்கிற மாதிரி சேலன்ஜ் 8 அணி பற்றிய விமர்சனத்துடன் தன் உரையை ஆரம்பித்தார் விசே. சவுந்தர்யாவை பிக் பாஸ் தேற்றிய விதம் பற்றி சொல்லும் போது “தாலாட்டு பாடி தூங்க வைக்காததுதான் குறை” என்று நக்கலடித்தார். “எல்லோருமே நம்ம செல்லங்கள்தான். அதுல ஒண்ணு வீக்கா ஃபீல் பண்ணும் போது தட்டிக் கொடுத்து ஓட வைக்க வேண்டியது நம்ம வேலைதானே?” என்று அதையே பாசிட்டிவ் நோக்கில் சொன்ன பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். “அஞ்சு பேர் கொண்ட குழுவுலதானே நீ இருந்தே. அப்புறம் எப்படி சவுந்தர்யா கிட்ட போய் சேர்ந்தே?” என்று நேரடிக் கேள்வியை ஜாக்குலினிடம் கேட்டார் தர்ஷா. ஜாக்குலின் அதற்குப் பதில் சொல்ல முனைவதற்குள் “அவ அறிவிற்கு எட்டற மாதிரி பதில் சொல்லு.. ஜாக்” என்று சீரியஸான டோனில் ரவி சொன்னது தர்ஷாவை கலாய்ப்பது போல் இருந்தது. “நான் குழுவுல இல்லை. மனம் விட்டுப் பேசறதுக்கு யாராவது ஒருத்தரை நம்புன்னுதான் உன் கிட்ட சொன்னேன்” என்று ஜாக்குலின் பதிலளிக்க “அப்படியா சொன்னே?” என்று ஆச்சரியப்பட்டார் தர்ஷா. வெளியில் இருந்து வருபவர் தன் கேள்விகளை திறமையாக கூர்திட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் தர்ஷா அப்படிச் செய்யவில்லை. ஆனால் உள்ளே இருக்கும் ஜாக்குலின் முதல் சீசன் சம்பவங்களைக் கூட இன்னமும் நினைவில் வைத்திருக்கும் ‘வல்லாரை நாயகி’யாக இருக்கிறார். மரத்தடி ஜோசியர் மாதிரி ஆருடம் சொல்கிற ரவி ‘உண்மையில் டாப் 8 யார்?” என்று ரவியிடம் கேட்டார் சவுந்தர்யா. ரவியை சக போட்டியாளராக நினைக்காமல் ஏதோ மரத்தடி ஜோசியர் மாதிரி ஆளாளுக்கு அவரிடம் ஆலோசனை கேட்க “முதல் ஒரு வாரம் துன்பப்பட்டு, துயரப்பட்டு, லோல்பட்டு இருப்பே. அப்புறம் அது பழகிடும்” என்கிற மாதிரியே ஆலோசனை சொல்கிறார். சவுந்தர்யாவின் கேள்விக்கு “முத்து.. ரயான்.. தீபக்.. அப்புறம்… அருண், விஷால் என்று இழுத்தவர் “ஆனா சவுண்டு நீ இருக்கே தெரியுமா.. பக்கா பிளானிங் அண்ட் ஹோம்வொர்க்” என்று சொல்ல ‘என்னையா சொல்றீங்க?’ என்கிற மாதிரி வெள்ளந்தியாகப் பார்த்தார் சவுந்தர்யா. (இது உலக நடிப்பும்மா!). “அறிவு சார்ந்த உரையாடல்ல உன்னை எங்குமே பார்த்தது கிடையாது. ஆனா மத்தவங்க சொல்லத் தயங்கறதை டக்குன்னு சொல்லிட்டுப் போயிடுவே” என்று ரவி சொன்னது பாராட்டா அல்லது கலாய்ப்பா என்பது ஆராய்ச்சிக்குரியது. “முத்துவிற்கு நான்தான் PR” என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டார் ரவி. இன்னொரு உரையாடலில் இந்த விஷயம் தெரிந்தது. தீபக் ப்ரோவிற்கு PR கிடையாதாம். “என்னதான் இன்ப்யூளயன்ஸ் பண்ணாலும் ஆர்கானிக்கான அன்பு காட்டற மக்கள் சப்போர்ட் இல்லாம எதுவும் முடியாது” என்பதையும் கூடவே சம்பிரதாயத்திற்காக சொல்லி விடுகிறார்கள். “ப்ரீஸ் டாஸ்க்ல பொதுவா பிரெண்ட்ஸ் அனுமதிக்க மாட்டாங்க. ஆனா சவுந்தர்யாவிற்கு இந்த விஷயம் முன்னாடியே எப்படி தெரிஞ்சது?” என்று அடுத்த சந்தேக வெடிகுண்டை ரவி தூக்கிப் போட அறையில் நிசப்தம். எனில் லவ் பிரபோசல் அத்தனையும் செட்டப்பா கோப்பால்?! என்கிற கேள்வி எழுந்திருக்கும். “வெறும் பி.ஆர்.பிரமோஷன் வெச்சுலாம் ஒருத்தர 98 நாள் காப்பாத்த முடியாது. உன்னை மாதிரி மத்தவங்களையும் ரியாக்ஷன் பண்ணச் சொல்லேன் பார்ப்போம். கேவலமா இருக்கும். உன் கிட்ட ஏதோவொரு ஸ்பெஷல் இருக்குடா செல்லம்” என்கிற மாதிரி சவுந்தர்யாவை மோட்டிவேட் செய்து கொண்டிருந்தார் சிவா. வீக்கெண்ட் எபிசோடில் இந்த விஷயம் நிச்சயம் பேசப்படும் என்கிற பீதியில் இருந்த சவுந்தர்யாவிற்கு சிவாவின் ஆறுதல் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. சுனிதா போட்ட வெடிகுண்டின் தன்மை இன்னமும் குறையால் புகைந்து கொண்டிருக்கிறது. “என்னைப் பத்தி வெளில என்ன பேசறாங்க?” - ரவியிடம் விசே கிண்டல் மேடையில் விஜய்சேதுபதி. ‘வெளியுலக விஷயங்களை சொல்லாதீங்கன்னு எத்தனை முறை சொன்னாலும் கேக்க மாட்டாங்களே’ என்கிற சலிப்புடன் உள்ளே சென்ற விசே, அப்படியே முகம் மாற்றி “டான்ஸ் ஆடினது சூப்பர்” என்று அனைவரையும் வஞ்சகமில்லாமல் பாராட்டினார். (முதல்லயே அடிக்க முடியுமா.. கொஞ்ச நேரம் போகட்டும் என்கிற கருணை அதில் இருந்தது!). மக்கள் கைத்தட்டலை வைத்து “மூணு பேருக்கு க்ளோசப் வெச்சாங்க. அப்ப மட்டும் கிளாப்ஸ் வந்தது. ஆனா அந்த மூணு பேரு யாருன்னு சொல்ல மாட்டேன். உங்களுக்கும் அது தெரியாது. நல்லாயிருக்குல்ல இந்த கேம்?” என்று போட்டியாளர்களை வைத்து விசே ஆடிய ‘கேம் சேஞ்சர்’ ஆட்டம் சுவாரசியம். புதிய அணி மற்றும் பழைய அணியை தனித்தனியாக அமர வைத்த விசே, “திரும்பி வந்தவங்க சொல்லுங்க.. எப்படியிருந்தது?” என்று ஆரம்பித்து முதலில் ரவியை எழுப்பி “என்னைப் பத்தி வெளியே என்ன பேசிக்கறாங்க. கொஞ்சம் சொல்லுங்க சார்” என்று ஆரம்பத்திலேயே நகைச்சுவை திரியைக் கொளுத்தினார். அந்த அளவிற்கு ரவியின் வம்புகள் கரைபுரண்டு ஓடியது. ‘ஆரம்பத்துல கெஸ்ட்ன்னு நெனச்சேன். அப்புறம்தான் போட்டியாளர்ன்றதை ஃபீல் பண்ண முடிஞ்சது’ என்பதே பலரும் சொன்ன பொதுக்கருத்தாக இருந்தது. ஆனால் எவருமே போட்டியாளர் என்கிற டஃப் பைட்டை தராமல் விருந்தினர் போலவேதான் இருந்தார்கள். சுனிதாவின் கவிதை இம்சையை நீண்ட நாள் கழித்து கேட்க முடிந்தது. “நீங்க கவிதைப் புத்தகம் போடலாம்.. சீரியசா சொல்றேன்” என்று அதைப் பாராட்டினார் விசே. (‘இருக்கும் கவிஞர்கள் இம்சைகள் போதும், என்னையும் கவிஞன் ஆக்காதே’ என்கிற பாடல்வரிதான் நினைவிற்கு வருகிறது!) அருணுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அருணின் மாற்றத்தை பிரத்யேகமாக குறிப்பிட்டு விசே பாராட்டியது சிறப்பு. ‘ஜால்ராஸ்’ என்று அர்னவ் சீண்டினாலும் அதற்குப் பொறுமையாக பதில் சொன்ன அருணின் டிரான்ஸ்பர்மேஷனை சிலாகித்துப் பாராட்டி புத்தர் கதையையும் எளிமையாக மேற்கோள் காட்டினார் விசே. ‘பழைய அருணா இருந்தா சண்டைக்கு போயிருப்பாராம்’. ரவியும் ரியாவும் ‘unfair eviction’ என்கிற வார்த்தையை சொன்னதை மறுத்தேயாக வேண்டிய கட்டாயம் விசேவிற்கு இருக்கிறது. எனவே ‘ஒருத்தர் எவிக்ட் ஆகறதை யார் முடிவு பண்றாங்க.. மக்கள்தானே.. அப்ப அது unfair-ஆ?’ என்று விசே மேடையில் கேட்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. எனில் மக்களின் ஆசைப்படியாகவா பிக் பாஸ் ஷோ நடக்கிறது?! அங்கும் அரசியல் இல்லையா? “அரசியல் நம்மை சுத்தியும் நடக்கும். நம்மை வெச்சும் நடக்கும்’ - இதுவும் ஜெப்ரிக்கு அறிவுரையாக விசே சொன்னதுதான். “ஜெயிக்கறவங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்கேன்” என்று சொல்லி சொதப்பினார் ரியா. “நீங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று யூகிக்கிறீர்கள்?” என்று அர்னவ்விடம் கேட்க அவர் மாற்றி மாற்றி பதில் சொன்ன போது சுவற்றில் தலையை முட்டிக் கொண்டார் தீபக். அர்னவ்வின் அலப்பறை ஓவராக இருந்ததால் மக்களின் ஏளனத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாவது இயல்பானது என்பது கைத்தட்டல்களின் மூலம் தெரிந்தது. சுனிதா பற்ற வைத்த நெருப்பு அடுத்த வந்த சுனிதா, PR வெடிகுண்டின் இன்னொரு முனையைப் பற்ற வைத்து வீச சவுந்தர்யாவின் முகம் பிளாங்க்காக மாறியது. “இது இந்த ஷோவின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது. பணம் இருப்பவர்கள் மட்டுமே செலவு செய்து வெற்றியடைய முடியும் என்கிற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும்” என்றெல்லாம் சுனிதா இறங்கி அடிக்க “என்னதான் PR பண்ணாலும் கடைசில ஃபர்பாமன்ஸ்தானே பேசும்?” என்று விசே ஒரு கவுன்ட்டர் தர, ‘வொி குட் விஜய்சேதுபதி. அப்படிப் போடு’ என்கிற மாதிரி கைத்தட்டினார் சவுந்தர்யா. அதுவரை இருந்த பீதி பெரும்பாலும் கலைந்திருக்கும். “நல்ல பிளேயர்ஸ் வெளியே போற போது நானே வருத்தப்பட்டிருக்கேன். ஆனா என்ன செய்யறது.. இதையெல்லாம் மக்கள்தான் முடிவு பண்றாங்க” என்கிற விளக்கத்தை விசே தர “சார் பர்சனலா ஒரு விஷயம் சொல்றேன். PR பண்ணி ஒருத்தர் புகழ்ந்துக்கட்டும். கப்பு கூட ஜெயிக்கட்டும். ஆனா இன்னொரு போட்டியாளரை அசிங்கப்படுத்தி கீழ இறக்கறது.. சரியில்லை இல்லையா.. அது எனக்கு நடந்திருக்கு” என்று சுனிதா சொன்னதிலும் பாயிண்ட் இருந்ததால் பார்வையாளர்களின் கைத்தட்டல் கேட்டது. “யார் வேணா என்ன வேணா சொல்லட்டுங்க.. மக்கள் பார்க்கறாங்க.. மஞ்சரி.. எப்படி வெளில போனாங்க.. மக்கள் ஏன் அப்படி முடிவு பண்ணாங்க.. எனக்கும் நெகட்டிவ் பப்ளிசிட்டி நிறைய வந்திருக்கு. ஆனா நான் அதுல கவனம் செலுத்தல. என்னை எப்படி மேம்படுத்திக்கறதுன்னுதான் பார்த்தேன். ஓகேவா?” என்று சுனிதாவிற்கு விளக்கம் சொன்ன பிறகு பிரேக்கில் சென்றார் விசே. PR என்பது நல்லதா, கெட்டதா…? மறுபடியும் அதேதான். போட்டி நிறைந்த காலக்கட்டத்தில் PR என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் வசதியற்றவர்கள் போட்டி போட முடியாத இடம் என்கிற கோணமும் உள்ளது. அப்படியே PR செய்தாலும் அதை சம்பந்தப்பட்ட போட்டியாளரை பாசிட்டிவ்வாக பிரமோட் செய்ய மட்டும் பயன்படுத்தலாமே தவிர, இன்னொரு போட்டியாளரை மலினப்படுத்துவது என்பதை.. (இதுக்குப் பேரு என்ன தெரியுமா… என்று ஒரு திரைப்படத்தில் விசே சொன்ன வசனத்தையே இங்கும் சேர்க்கலாம்). விசே தலை மறைந்ததும் இந்த விஷயம் வீட்டிற்குள் புகைந்தது. கடுகடுவென்ற முகத்துடன் இருந்த சவுந்தர்யா ‘என்னவாம் இவங்களுக்கு?’ என்கிற மோடில் இருந்தார். (காண்டாவுது மச்சான்!) “நீ நெகட்டிவ்வா பண்றதைத்தான் வெளில நெகடிவ்வா காட்டறாங்க” என்று சுனிதாவிற்கு புதிய விளக்கத்தை அளித்தார் சாச்சனா. பிரேக் முடிந்து திரும்பிய விசே, பார்வையாளர்களின் கேள்வி நேரத்திற்குள் நுழைந்தார். ஓர் இளைஞர் கேட்ட கேள்வி அர்த்தபூர்வமானது. “பொிய பட்ஜெட் படம் ஒண்ணு பயங்கரமான மார்கெட்டிங்ல வெளியாகுது. அந்தப் படத்திற்குத்தான் நிறைய ஸ்கீரின் கிடைக்கும். அப்படின்னா நல்லா இருக்கற சின்ன படங்கள் இதனால பலியாவுது இல்லையா?” என்கிற மாதிரி அந்தக் கேள்வி நியாயமாக இருந்தது. ‘நல்ல படமா இருந்தாலும் மக்கள்தான் ஆதரிக்கணும்’ “சார்.. இப்ப.. கடைசி விவசாயியின்னு ஒரு படம் பண்ணோம். ரொம்ப நல்ல படம் சார். ரெவ்யூவர்ஸ் எல்லாமே பாசிட்டிவ் ரிசல்ட் தந்தாங்க. ஒருத்தர் கூட தப்பா சொல்லல. ஆனாலும் படம் ஓடலை. நான் மக்கள் மேல பழி போடலை. ஒருத்தருக்கு பிடிச்சது இன்னொருத்தருக்கு பிடிக்கணும்னு அவசியமில்ல. ஏன்னா பெரிய படம் பண்றவங்களும் கஷ்டப்பட்டுத்தான் தன்னோட இடத்திற்கு வந்திருக்காங்க. அந்தப் பேரை சம்பாதிச்சிருக்காங்க. மகாராஜா படம் கூட ஓடுமான்னு எனக்கு ஆரம்பத்துல சந்தேகம் இருந்துச்சு. சில போ் எப்படி இன்னமும் இருக்காங்கன்னு எனக்கும் ஆச்சரியமா இருக்கும். பிரமோஷன்லயே எல்லாம் நடக்காது. கடைசில மக்கள் முடிவு எடுக்கறதுதான்” என்று அந்த இளைஞருக்கு நீண்ட விளக்கத்தை அளித்தார் விசே. அடிப்படையான திறமை, வசீகரம், பிரத்யேகமான ஏதோவொன்று அல்லாமல் மக்கள் எளிதில் எவரையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரமோஷன் என்பது டாப்பிங் மாதிரிதான். அதுவே வெற்றியைத் தேடித் தராது. சவுந்தர்யாவிடம் உள்ள ‘ஏதோவொன்று’ கணிசமான பார்வையாளர்களால் ரசிக்கப்படுவதால்தான் (வாக்கு அரசியல் தாண்டி) அவரால் இன்னமும் இங்கே இருக்க முடிகிறது என்கிற உண்மையை மறுக்க முடியாது. பார்வையாளருக்கு பதிலளித்து விட்டு உள்ளே வந்த விசே “சுனிதா.. நான் சொன்னதை நீங்களா புரிஞ்சுக்கங்க. சாச்சனா சொன்ன ஆங்கிள்ல புரிஞ்சுக்காதீங்க. அது தப்பு” என்று சாச்சனாவிற்கு மறைமுக கொட்டு வைத்தார் விசே. “ஓகே.. இப்ப டாப் 8 போட்டியாளர்கள் சொல்லுங்க. புதுசா வந்தவங்க எப்படி?” என்று பிளேட்டை மாற்றிப் போட்டு ஆரம்பித்தார் விசே. அருண் சொன்ன சுவாரசியமான உதாரணம் “ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வருவாங்க. ஆரம்பத்துல நல்லாதான் இருக்கோம். அப்புறமா கூப்பிட்டு கூப்பிட்டு வம்பு பேச ஆரம்பிச்சிடுவாங்க. எப்படா கிளம்புவாங்கன்ற மாதிரி ஆயிடும்” என்கிற சுவாரசியமான உதாரணத்தைச் சொல்லி ரசிக்க வைத்தார் அருண். (சமயங்கள்ல நல்லாப் பேசறாப்பல!) . “மெஷின் கன்னோட வந்தவங்களைப் பார்த்தா ஆரம்பத்துல பயமாத்தான் இருந்தது. அப்புறம்.. சோபால சாய்ஞ்சு கதை பேச ஆரம்பிச்சிட்டாங்க. ‘இந்த வீடு எங்களை மாத்தியிருக்கு’ன்ற விஷயத்தை அவங்க மூலம்தான் இன்னமும் ஆழமா தெரிஞ்சிக்கிட்டோம். எங்களுக்குள்ள இவ்வளவு பாண்டிங் இருக்குன்னு புரிஞ்சது” என்று ஜாக்குலின் பேசியதும் சுவாரசியம். (பொது எதிரி உள்ளே வரும் போது ஒற்றுமை தன்னால் வந்து விடும்!). “அவங்க ஆடற கேமில் கவனம் செலுத்தறதை விட்டுட்டு எங்களை குறை சொல்றதையும் வேலையா வெச்சிருந்தாங்க” என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னார் பவித்ரா. முத்து எழுந்ததும் பலத்த கைத்தட்டல். ‘அய்யோ.. இதை நெனச்சாதான் பயமா இருக்கு’ என்று கைகூப்பினார் முத்து. ‘தன்னடக்கமா இருக்கிறாராமாமாம்’ என்று கிண்டலடித்தார் விசே. முத்து விவரிப்பது எப்போதுமே சுவாரசியமாக இருக்கும். பயபுள்ள இதுக்கென்றே ரூம் போட்டு யோசிப்பார் போல. “நம்ம மேல பல பேரு கல்லை வீசினா அதை எப்படி தடுக்கலாம்ன்னு பிக் பாஸ் தந்த டிரைனிங் செஷன் மாதிரி இருந்தது சார். ‘எங்களை எப்படி எக்ஸ்போஸ் பண்ணலாம்’ன்ற டிராப்புல இவங்க மாட்டிக்கிட்டாங்க. நாங்க அந்த வலைல விழல. வீடு அப்படி எங்களை மாத்தியிருக்கு. யாராவது கேள்வி கேட்டா முடியை உசுப்பற சவுந்தர்யா புள்ள கூட இப்ப கட்டின பசு மாதிரி சாந்தமா இருக்கு சார்.. இதுக்கு மேல என்ன வேணும்?” என்று கேட்டு வந்தவர்களை பங்கம் செய்தார் முத்து. “நாங்க அலையன்ஸ் போட்டுக்கிட்டோம். வர்றவங்க கிட்ட இருந்து எப்படி சேஃப்பா ஆடறதுன்னு” என்று ஆரம்பித்தார் விஷால். “அப்புறம். விஷால்.. உங்களைப் பத்தி ஒரு விஷயம் போயிட்டிருக்குல்ல. அது உங்க பர்சனல். அதைப் பத்தி பேச யாருக்கும் உரிமை கிடையாது. அதை நெனச்சுல்லாம் ஸ்ட்ரெஸ் ஆவாதீங்க” என்று விஷாலுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்தார் விசே. அருண் எவிக்ஷன் - விஷால் கண்ணீர் - நண்பேன்டா அடுத்து எழுந்தார் சவுந்தர்யா. “கஷ்டப்பட்டு மலை உச்சிக்கு ஏறும் போது தள்ளி விடறதுக்குன்னே எட்டு பேர் வந்திருக்காங்க. ‘நீ இன்னும் இருக்கியா?’ன்ற மாதிரியே பார்க்கறாங்க.. வந்தவங்க கெஸ்ட் மாதிரிதான் நடந்துக்கறாங்க. இவங்க ஜெயிக்கற வேலையைப் பார்க்காம ‘இவங்கதான் ஜெயிக்கணும்’ன்ற மாதிரி வேலையைப் பார்க்கறாங்க” என்று பி.ஆர் பணியை எதிர் தரப்பிற்கே தள்ளி விட்டு கெத்து காட்டினார் சவுண்டு. பிரேக் முடிந்து திரும்பிய விசே எவிக்ஷன் கார்டை தூக்கினார். “ஏற்கெனவே சொன்னதுதான். இதுக்கு அப்புறம் எல்லோருமே வெற்றியாளர்கள்தான். மனமாற்றம்தான் உண்மையான வெற்றி’ என்கிற ஆறுதலோடு கார்டை எடுத்தார் விசே. ‘அருண்’ என்று அதில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் ‘அய்யய்யோ’ என்று அதிர்ச்சியைடந்தார் விஷால். விஷாலைப் போலவே வர்ஷினியும் கண்ணீர் விட்டார். (ஸ்கூல் டாஸ்க்ல பூத்த பூ இன்னமும் வாடலை போல!). புன்னகை முகத்துடன் அனைவருடன் அருண் பாசிட்டிவ்வாக பேச ‘கல்யாணத்துக்கு கூப்பிடுவல்ல?’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார் தர்ஷா. அருணிற்கும் விஷாலிற்குமான நட்புணர்ச்சி இந்தச் சமயத்தில் மிக ஆழமாக எதிரொலித்தது. அருண் கிளம்பும் போது ரயானும் கண்ணீர் விட்டார்.. ‘நான் உனக்கு அண்ணன்டா’ என்று பாசத்தைக் கொட்டினார் அருண். “பிக் பாஸ்.. உங்களை நேரில் பார்த்ததில்ல. ஆனா உங்க குரல் இருக்கே.. அது மீது பயம்.. மரியாதை.. லவ் எல்லாம் இருக்கும் அருண்ன்னு சொல்லும் போதெல்லாம் எனக்கு சந்தோஷமா இருக்கும். இந்த ஷோவிற்குப் பின்னால் இருக்கிற அத்தனை நண்பர்களுக்கும் நன்றி” என்ற அருணிடம் “இதுவரைக்கும் நான் இப்படியொரு காம்ப்ளிமெண்ட் யாருக்கும் சொன்னதில்லை. அருண்.. You are truly a gentleman” என்று சொல்லி அவரை நெகிழ வைத்தார் பிக் பாஸ். பாசிட்டிவ்வாக பேசிய அருண் மேடைக்கு வந்த அருணை பாசத்துடன் வரவேற்றார் விசே. வழக்கம் போல் வீடியோ சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தது. இப்படியொரு வீடியோவை நமக்கும் யாராவது தயார் செய்து தருவார்களா என்கிற ஏக்கம் வருமளவிற்கான தயாரிப்பு. “இந்த வீடு தந்த அனுபவத்தையும் மாற்றத்தையும் என் வாழ்நாள் முழுக்க தக்க வைத்துக் கொள்வேன்” என்று பாசிட்டிவ்வாக பேசிய அருணிடம் “அதுதான் தேவை. ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்தி விடை தந்தார் விசே. வீட்டாரிடம் பேசும் போது “ஜெயிக்கணும்னு ஒரு இளைஞன் வெறித்தனமா ஓடுவான் சார். அவனைப் பார்க்கணும்னா இப்ப பாருங்க. முத்து” என்று சிறப்பான வாழ்த்துரையை வழங்கி விட்டுச் சென்றார் அருண். இன்றைய எபிசோடில் இன்னொரு எவிக்ஷனும் இருக்கிறது. அது தீபக்காம். பேசாமல் பிக் பாஸையும் வெளியே அனுப்பி விட்டு ஷோ நடத்தலாம்! அடப் போங்கப்பா!..