வந்துட்டாங்கய்யா…வந்துட்டாங்க! மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் எதிர்கால AI ஃப்ரண்ட்ஸ் (‘PALs’)! ✨
செயற்கை நுண்ணறிவு (AI) எப்பொழுதும் அடைய நினைத்த இலக்கை நோக்கி தற்போது தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. புதிய தலைமுறை AI மனிதர்கள்
தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் 2025 - கனடா
கனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியாவின் மைதானமும் இடம் பெற்று உள்ளது.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2025 - நோர்வே
நோர்வே நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதிய SETC Volvo பேருந்து எப்படி இருக்கு? | Photo Album
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - யேர்மனி
யேர்மனியில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - சுவிஸ்
சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - சுவீடன்
சுவீடன் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கிய துருக்கி ராணுவ சரக்கு விமானம்! 20 வீரர்கள் பலி!
ஜார்ஜியா நாட்டில், துருக்கி ராணுவத்தின் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானத்தின் 20 பணியாளர்களும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி ராணுவத்திற்குச் சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று (நவ. 11) அஜர்பைஜான் நாட்டில் இருந்து துருக்கி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஜார்ஜியாவின் எல்லைக்குள் சென்றவுடன் அந்த விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜார்ஜியாவின் சிக்நாகி பகுதியின் அருகில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை சம்பவ […]
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - நெதர்லாந்து
தெதர்லாந்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
தேனி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்; தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் வழிபாடு | Photo Album
காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம்
ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..!
twitter.com/drkrvcvijay காலையில கோழிக்கறி வாங்கக் கடைக்குப் போனதும் அங்க அந்தக் கோழிய அடிச்சுக் கொல்றத பார்த்த உடனே கோழிக்கறி வாங்குறதுக்கு மனசே கேட்கல! சரின்னு மட்டன் அரை கிலோ வாங்கிட்டு வந்துட்டேன்! twitter.com/LAKSHMANAN_KL வரும் தேர்தலில் அ.ம.மு.க தனித்துப் போட்டியிடுவது என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும் - டி.டி.வி தினகரன். # தனித்துப் போட்டியிட்டா அ.ம.மு.கவுக்கு அதுதான் கடைசி வாய்ப்புனு உங்களுக்குத்தான் நல்லாவே தெரியுமே?! twitter.com/Greesedabba2 இன்டர்வியூக்கு வரச் சொல்லி, அவனுக கம்பெனில உள்ள தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு எல்லாம் ஓசியிலயே சொல்யூஷன் கண்டுபுடிக்க டிரை பண்ணுறானுக..! facebook.com/Bogan Sankar ரயிலில் நமது பக்கத்து இருக்கையில் வந்து அமர்கிறவர் மீதான விரோதம் போகவே ஒன்றிரண்டு மணி நேரம் ஆகிறது. பல நேரங்களில் அவர் இறங்கும்வரை அதுபோவதே இல்லை. திருமணம் என்கிற பெயரில் நமது படுக்கையில் வந்து படுத்துக்கொள்கிறவர்கள் மீதான விரோதம் போக சில வருடங்களாவாவது ஆகாதா? twitter.com/dingudongubellu நண்பர்களிடம் கொடுத்த பணமெல்லாம் பிப்ரவரி 30-ம் தேதியில் திரும்பக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது! twitter.com/56856832 ‘‘ஒரு வருஷம் கழிச்சு மீட் பண்ணுறோம்... ஏதாவது ட்ரெண்டிங்கா பேசு!’’ ‘‘SIR ஃபார்ம் ஃபில்லப் பண்ணிக் கொடுத்துட்டியா?’’ twitter.com/saranya121289 வளர்ச்சி என்பது, ‘என்னோட நம்பர் தரேன், எப்ப வேணாலும் கால் பண்ணுங்க' என்று தொடங்கி, ‘உங்களோட நம்பர் கொடுங்க, நான் பிறகு கூப்பிடுகிறேன்' என்பதோடு முடிகிறது... twitter.com/Suyanalavaathi me: சும்மா இருக்கும் போதுதான் mobile யூஸ் பண்ணுறோம்... ஆனாலும் சார்ஜ் வேகமா குறையுதே! my mobile: தம்பி... தம்பி... நீ எப்பவுமே சும்மாதானப்பா இருக்க! facebook.com/Villavan Ramadoss அதிவேக வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகளில் ரேஸ் ஓட்டும் கும்பல் எல்லாமே சந்தேகம் இல்லாமல் சமூக விரோதிகள்தான். இதில் பலருக்கு தான் செய்வது தவறு எனும் எண்ணமே இருப்பதில்லை. எனவே இவர்கள் அறிவுரையால் திருந்த வாய்ப்பு இல்லை. மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு அடுத்த ஒரு ஆண்டு முழுக்கவே போக்குவரத்துக் காவல்துறை இவர்களை மட்டும் இலக்கு வைத்து வேலை செய்தால்கூட இந்த கும்பலை முழுதாகக் கட்டுப்படுத்துவது சிரமம். இவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் வீட்டுக்கு ஒரு விபத்தைப் பரிசளிப்பார்கள். twitter.com/asdbharathi எல்லாக் குற்றங்களுக்கும் பின்னணியில் ஒரு போதைதான் இருக்கிறது. twitter.com/basebalu செங்கல்லை இரண்டாக உடைத்தால் பிளாக் பெல்ட். கட்சியை இரண்டாக உடைத்தால் கௌரவ பிளாக் பெல்ட்! twitter.com/ak47_twitz சகமனிதனின் சந்தோஷத்தைப் பார்த்துத் தானும் மகிழ்ச்சியடையும் மனிதர்களால்தான் இப்பூமி நிரம்பியிருக்கிறது. அதை வெளிக்கொணர்வதற்குத் தேவையெல்லாம் கொஞ்சம் அன்பு மட்டும்தான்! twitter.com/sasitwittz நம்மள யாரும் எழுப்பாம நாமளே சீக்கிரம் எழுந்தால் அன்று ‘சண்டே’ என்று அறிக..! twitter.com/SelvaBsctwitz புருஷனை காமெடியனா பார்க்க வச்சு அழகு பார்க்குறதுல அப்படி இந்தப் பொண்டாட்டிகளுக்கு என்னதான் சந்தோஷமோ?! facebook.com/Shoba Sakthi பத்து வருடங்களுக்கு முன்பு நான் பாரிஸில் வீட்டில் இருந்தபோது, எனக்கொரு அலைபேசி அழைப்பு வந்தது: ‘‘வணக்கம் தம்பி ஷோபாசக்தி. என் பெயர் ரகுபதி சர்மா. சைவ சமய மதகுரு. எனக்கு அறுபது வயதாகிறது. நான் உங்களுடைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பல உண்மைகளை அச்சமில்லாமல் எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு என் ஆசிகள்.’’ எனக்குக் கொஞ்சம் சலிப்பாகத்தான் இருந்தது. ‘மதகுருவுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இவரென்ன எனக்கு ஆசி வழங்குவது!' என்று நினைத்தவாறே ஏதாவது பதில் பேச வேண்டுமே என்பதால் ‘‘நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்?’’ என்று கேட்டேன். ‘‘நான் மகஸின் சிறைச்சாலையிலிருந்து பேசுகிறேன். இங்கே தண்டனைக் கைதியாக இருக்கிறேன்.’’ நான் திடுக்குற்றுப்போய்விட்டேன். இலங்கைச் சிறையிலிருந்தா? அங்கிருந்து எப்படி அலைபேசியில் அழைக்கிறார்? நிச்சயம் இதுவொரு சட்டவிரோத அழைப்பு. அலைபேசியும் கையுமாகப் பிடிபட்டார் எனில் அவருக்கு இன்னும் சிக்கலாகிவிடுமே என்றெல்லாம் என் மனம் பதைபதைத்தது. எனினும், அவசர அவசரமாக அவருடன் உரையாடல் தொடர்ந்தது. கடகடவென அவர் தனது கதையைச் சொன்னார்: ‘‘ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மீது கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு நான் இருப்பிட வசதி வழங்கினேன் என்ற குற்றச்சாட்டில் 2000-ம் ஆண்டு நானும் என் மனைவியும் கைது செய்யப்பட்டோம். 2015-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. என் மனைவி விடுதலை செய்யப்பட்டார். எனக்கு முந்நூறு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.’’ அவரோடு பேசிய பின்புதான், இலங்கையில் முந்நூறு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது என்ற செய்தியே எனக்குத் தெரிய வந்தது. மிகப் பெரிய அதிர்ச்சியும் துயரமும். அவர் பின்பும் சில தடவை என்னோடு அலைபேசியில் பேசினார். அவர் சிறையிலிருப்பதால் நான் அவரை அலைபேசியில் அழைக்க முடியாது. முந்நூறு வருடங்கள் சிறைத் தண்டனை என்பது என்னை அலைக்கழித்துக்கொண்டேயிருந்தது. அந்த அலைக்கழிப்பில் 2019-ல் உருவானதுதான் என்னுடைய ‘இச்சா' நாவல். அந்த நாவலின் நாயகியான தற்கொலைப் போராளி ஆலாவுக்கு முந்நூறு வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும். அவள் சொல்வாள்: ‘‘சிறப்பு நீதிமன்றத்தில் என்மீதான வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு, எனக்கு முந்நூறு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மீதான கொலை முயற்சி வழக்கில் 65 வயதுப் பெரியவர் ஒருவருக்கும் இதே அளவான தண்டனை வழங்கப்பட்டது.’’ மகஸின் சிறையிலிருந்து அலைபேசி வழியாக அவசர அவசரமாக எனக்குக் கிடைத்த வார்த்தைகளே ‘இச்சா' நாவல் உருவாக தொடக்கப்புள்ளியாக இருந்தது. நாவலில், ஆலா கொழும்பில் தங்கியிருந்து தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிடுவாள். அவள் தங்குமிடம் ஒரு சைவ சமய மதகுருவின் வீடு. மதகுருவும் அவரது மனைவியும் ஆலாவைப் பாதுகாத்து உபசரிப்பார்கள். நாவல் வெளியான பின்பு எனக்குக் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. முந்நூறு வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர் எனது நாவலை எப்படி எதிர்கொள்வார்? சில காலங்களுக்குப் பின்பு சிறைச்சாலையிலிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது. பேசியபோது, இச்சா நாவலில் ஆலா சொன்ன வார்த்தைகள் என் ஞாபகத்தில் வந்தன: ‘‘சுக்கிராச்சாரியாரின் சாபத்தால் முதுமையடைந்த யயாதிக்கு அவனின் மகன் புரு தனது இளமையைத் தானமாகக் கொடுத்ததுபோல, நான் விடுதலையாகி வரும்போது உங்களின் இளமையை எனக்குத் தானமாகத் தரப்போவது உங்களில் எவர்?’’ இச்சா நாவலின் நாயகி ஆலா 7 வருடங்கள் சிறையில் உழன்ற பின்பு, ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பால் விடுதலையானாள். அவளை நான் உருவாக்கக் காரணமாக இருந்தவர் 22 வருடங்கள் சிறையில் உழன்ற பின்பு, ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பின் கீழ் 2022-ம் ஆண்டு விடுதலையானார். யதார்த்தத்தை வளமான கற்பனையால் தோற்கடிக்க முடியும் என்பார் எழுத்தாளர் மார்க் ட்வைன். ஆனால், எப்போதாவது ஒரு தடவை கற்பனையை யதார்த்தம் தோற்கடித்தும்விடுகிறது. twitter.com/mohanramko ‘‘யாரை வேணும்னாலும் நான் கேள்வி கேட்பேன்!’’ ‘‘போலீசா நீங்க..?’’ ‘‘போலீசா... யூடியூபர்ங்க!’’ twitter.com/rosnthorns பிடிச்சவங்க இருக்கட்டும், வெறுப்பவங்க போகட்டும்... நாம் நாமாகவே இருப்போம்! twitter.com/Kozhiyaar மனைவிகிட்ட சண்டை போட்டுட்டு வெளிய சாப்பிடுறவன் மனிதன், வெளிய சாப்பிடுறதுக்காகவே மனைவிகிட்ட சண்டை போடுறவன் மாமனிதன்! facebook.com/அ.பாரி மளிகைக்கடையில் கொசுறாகக் கொடுக்கும் கறிவேப்பிலையைப் பார்த்து, ‘‘எலையே இல்லாம, வெறும் குச்சியா இருக்கு, இது யாருக்கு வேணும், வேற கொடுங்க அண்ணாச்சி’’ என்று கேட்டு, மாற்றுக் கறிவேப்பிலை வாங்கி, திரும்பும்போதும் மறக்காமல், அந்த ‘இது யாருக்கு வேணும்' கறிவேப்பிலையையும் சேர்த்து எடுத்துட்டு வரான் பாரு, அவனுக்குப் பேர்தான் நடுத்தர வர்க்கம். facebook.com/Karthik காலையில் அறிமுகமாகி, மதியம் பேச ஆரம்பித்து, மாலையில் ‘‘ஏன் யாரோ மாதிரி பேசற’’ என்று கோபித்துக்கொள்ளவில்லை என்றால் அதென்ன ஆண்-பெண் பழக்கம்! facebook.com/HariharasuthanThangavelu நியூயார்க் நகரம், இரவு நேரம். ஒரு அமெரிக்க பெண், ஆண் நண்பருடன் காரில் அமர்ந்திருக்கிறார். அங்கு வந்த போதை ஆசாமிகள் அவரை மிரட்டி, அடித்து, பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிறார்கள். அரசை விடுங்கள், மக்களும் மீடியாவும் இதை எப்படிக் கையாளுவார்கள். நியூயார்க் நாசமாகிறது, பாதுகாப்பு என்பதே இல்லை, பென்டலின் போதை தலைவிரித்தாடுகிறது, NYPD என்ன செய்கிறது என வெளுத்துவிடுவார்கள். அங்கு ரோட்டில் திரியும் ஒரு தெருநாய்கூட, “நீ ஏங்கண்ணு அந்த நேரத்துல கார்ல இருந்த” என மட்டித்தனமாக யோசிக்காது. கோவைச் சம்பவத்தில் இப்படிக் கேள்வி எழுப்புபவர்கள் ஒரு நாய்க்கும் குறைவான அறிவு கொண்டவர்களே! தாக்குதல் அமெரிக்காவில் நிகழ்ந்தால் சமூகம் காரணம். கோவை என்றால் மட்டும் பெண்தான் காரணமா? இப்போது சொல்லுங்கள், யார் தற்குறி? பொம்பளப் புள்ள அதிகமா படிக்கக்கூடாது, வெளிய வரக்கூடாது, பசங்ககூட பேசக்கூடாது, சத்தமா சிரிக்கக்கூடாது, கால் மேல கால் போட்டு உக்காரக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது எனப் பல பிற்போக்குத்தனங்களைக் கடந்த இருபது வருடங்களில் பெண்கள் உடைத்தி ருக்கிறார்கள். பெண்களின் சுதந்திரத்திலும் அவர்களுக்கான பாதுகாப்பிலும்தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது. பெண்ணுக்கும் இந்தப் பூமி சொந்தம். பகல், இரவு, காடு, ஆறு, மலை, அருவி என ஒரு ஆணுக்கான அனைத்தும் பெண்ணுக்கும் ஆனவையே. ஆகவே பாதிக்கப்பட்டவரை விடுத்து, நிகழ்த்தியவர்களைப் பற்றிப் பேசுங்கள். அவர்களே இச்சமூகத்திலிருந்து அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் செய்த கொடூரத்திற்கு காலில் மட்டும் சுட்டிருக்கக்கூடாது... twitter.com/Greesedabba2 க்ளைமாக்ஸில் வில்லன்களை போலீஸில் பிடித்துக்கொடுத்தால், கோர்ட்டும் சட்டமும் குற்றவாளிகளை தண்டித்துவிடும் என்ற நம்பிக்கையோடு 80-90’களின் திரைப்படங்கள் முடிந்தவரை, வாழ்க்கை நிம்மதியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. twitter.com/saravankavi ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் மக்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள்: - பிரதமர் மோடி # பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் புல்டோசரை வைத்து மிரட்டுவார்கள்னு அதையும் சொல்லிட்டுப் போங்க... twitter.com/iqkubal ‘‘ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணுனியே... என்ன கத்துக்கிட்ட?’’ ‘‘இனிமேல் ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்...’’
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - இத்தாலி
இத்தாலி நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிழக்வுகள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - டென்மார்க்
டென்மார்க் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - பிரான்சு
பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - பிரித்தானியா
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்
ஜப்பான் நிலையான (Sustainable) கண்டுபிடிப்பில் மீண்டும் ஒருமுறை தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்துள்ளது. அந்நாட்டு விஞ்ஞானிகள், உப்புநீரையும் (Saltwater) நல்லநீரையும் (Freshwater)
சென்னை1 செயலி மூலம் இன்று முதல் 1 ரூபாய்க்கு பயணம் செய்யலாம்...அது எப்படி தெரியுமா?
சென்னை 1 செயலி மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட வழித்தடங்களில் 1 ரூபாய்க்கு பயணம் செய்யும் சிறப்பு வசதியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
மத்தலவை குறி வைக்கும் அமெரிக்கா
2014 ஆம் ஆண்டில், சீனஅரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீன தேசிய வான்வழி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், சிறிலங்காவில் விமானப் பராமரிப்பு தளத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது. சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான, சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்குவதே சீன திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதும், விமானங்கள் பழுதுபார்ப்புகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சி முடிவு
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருமனதாக தீர்மானித்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக எடுக்க வேண்டிய இறுதி நிலைப்பாடு குறித்து, கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி,
போதிய ஆதாரங்கள் இல்லாததால் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு, முறையற்ற மருத்துவ காப்புறுதி ஒப்பந்தம் மூலம் 4.7 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க நேற்றுக்காலை கைது
சிறிலங்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால், சிறிலங்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வு சேவைகள் திறம்பட செயல்படுவதாகவும், தற்போது எந்த பாதுகாப்பு கவலைகளும் இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார். சிறிலங்காவுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல் இருப்பதாக எந்த தகவலும் இல்லை. சிறிலங்காவின் புலனாய்வு சேவை தீவிரமாக செயற்படுகிறது. எமது முப்படைகள் மற்றும்
உலக கருணை தினம்: இன்றைய உலகின் அவசியம்!
நவம்பர் 13 – இது உலகெங்கிலும் உலக கருணை தினமாக (World Kindness Day) கொண்டாடப்படுகிறது. வெறுப்புணர்வும், பிரிவினைவாதமும் தலைதூக்கி
சுவிஸ் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக் கொலை
சுவிஸ் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றிலிருந்த 120 நாய்களை, அதிகாரிகள் கருணைக் கொலை செய்துள்ளனர். அந்த நாய்கள் சரியான உணவின்றி வாடி வந்ததாகவும், நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், வேறு வழியின்றி அவைகளைக் கருணைக் கொலை செய்ய நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அவற்றில் பல நாய்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று கூறும் விலங்குகள் நல ஆர்வலர்கள், அவைகளைக் கொல்லும் முடிவு அவசரமாக எடுக்கப்பட்டுள்ளதாகக் […]
அமெரிக்கா அரசுத் துறைகள் முடக்க நீக்கம்: செனட் மசோதா நிறைவேற்றம்
செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற அனுமதி இல்லாததால் அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி, அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சமரசம் செய்துகொள்ள சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்ததையடுத்து, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு
புதுடெல்லி: டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிய மருத்துவர் உமர் நபியின் உடலை அடையாளம் காண்பதற்காக அவருடைய தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லோக் நாயக் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. உடல்கள் சிதைவடைந்திருப்பதால் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறியது ஹுண்டாய் ஐ-20 கார் என்றும் அதை ஓட்டி வந்தது காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்றும் தெரியவந்துள்ளது. முன்னதாக […]
டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு
புதுடெல்லி: டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிய மருத்துவர் உமர் நபியின் உடலை அடையாளம் காண்பதற்காக அவருடைய தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லோக் நாயக் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. உடல்கள் சிதைவடைந்திருப்பதால் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறியது ஹுண்டாய் ஐ-20 கார் என்றும் அதை ஓட்டி வந்தது காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்றும் தெரியவந்துள்ளது. முன்னதாக […]
போர் நிறுத்தத்திற்குப் பிறகு எப்படி இருக்கிறது காஸா?
காஸாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது… தற்போது காஸாவில் மக்களின் நிலை என்ன? இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக். 7ல் தொடங்கிய போர், 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கடந்த மாதம் அக். 10 ஆம் தேதி முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. போர் […]
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் டெல்லி செங்கோட்டை பகுதியில் திங்கட்கிழமை நடந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான விசாரணையில், டெல்லியில் 25/11 பாணியில் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்களும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த சம்பவத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி அன்று நடந்த தாக்குதல்களில், தாஜ் மஹால் […]
தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி 15 பேருக்கு நேர்ந்த கதி
ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதியில் டிப்பர் லொறியும் தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மாத்தறையில் இருந்து மஹல்வெவ சென்ற தனியார் பேருந்தும் ஹம்பாந்தோட்டையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த 15க்கும் அதிகமானோர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் […]
VS Hospitals Launches HOPE and Department of Genetics to Redefine Precision Cancer Care
Ushering in a new era of precision oncology, VS Hospitals, a leading cancer care centre in Chennai, is launching HOPE,
பிரிந்து சென்றவர்களை மீண்டும் கூட்டு சேர்க்க முயற்சி ?
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்திற்கமைய அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.இரட்ணலிங்கத்துக்கு கடிதம் மூலம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழினம் சார்ந்த பல பொது விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பாரிய விமர்சனங்கள் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆராய்ந்தது. அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் முக்கியமான சகல பொது விடயங்களில் இணைக்கப்பாட்டுடன் இணைந்து செயற்படுவது காலத்தேவை என கருதி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஓர் பூர்வாங்க கலந்துரையாடலை நடாத்துவற்கு உத்தேசித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
ஜிஎஸ்டி 2.0-க்குப் பின்! - குறுங்கதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அன்று மாலை, பூங்கா ஒன்றில் பரமன் அடைந்த அமைதி அலாதியானது. மரங்களின் அசைவில் காற்றில் மிதந்து வந்த அமைதி அது. சற்று நேரத்திற்கு முன் வீட்டில் நடந்த களேபரமும், மனக்கணக்கும் அந்த அமைதியில் கரைந்து போயின. அவர் மனதில் சில மாதங்களாகவே ஒரு பெரும் சுமை கனத்தது. கொஞ்சம் யோசிச்சுப் பாரு பார்வதி! நிர்மலா அம்மா ஜிஎஸ்டி-யைக் குறைச்சதுல வீட்டுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? அவரது குரலில் ஒரு வித வருத்தம் தெரிந்தது. போன வருஷம் தான், ஒரு பதினைந்து வருஷப் பழமையான, லொடக்கு ஸ்கூட்டரை மாத்திட்டு, பையன் காலேஜ் போகலைன்னு போர்க்கொடி தூக்கினதால், லட்ச ரூபாய் கொடுத்து ஒரு பைக் வாங்கி குடுத்தேன். தசரா சமயம் பழைய ஃபிரிட்ஜை எக்ஸ்சேன்ஜ் செஞ்சு புதுசு வாங்கினேன். இப்போ குறைச்ச ஜிஎஸ்டி பலனை நம்மால் அடைய முடியலையே! எவ்வளவு நஷ்டம்னு நீயே கணக்குப் போட்டுப் பாரு! நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பரமன், 'ஜிஎஸ்டி பலனை மிஸ் செய்து விட்டோம்' என்று ரொம்பவே ஃபீல் பண்ணினார். ஆனாலும், குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி காலத்தில் எதையாவது வாங்கிப் போட்டால் தான் மனசு திருப்தி அடையும்னு வீட்டில் நச்சரிப்பு. GST திரும்ப ஜாஸ்தி பண்றதுக்குள்ள கண்டிப்பா வாங்கணும். வீட்டிற்கு வெளியே எங்கே சென்றாலும், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரும், 'கிஸ்தி கம்மியாச்சே! என்ன வாங்கினீங்க?' என்று பயங்கர விசாரிப்பு. 'வாங்கினால் பார்ட்டி ஸ்வீட்' என்று வேறு ஆரம்பிப்பார்கள். இந்த மாதிரியான விசாரணைகள் தான் அவரை ரொம்பவே இம்சித்தன. ஒருநாள், அவர் அந்த இம்சையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தார். வீட்டில் மனைவி பார்வதி, பையன் மற்றும் மகள் அமர்ந்திருந்த நேரத்தில், நிதானமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் குரலில் ஒருவிதமான கிளர்ச்சி இருந்தது. பார்வதி, கீர்த்தி, கீர்த்தனா. எல்லாரும் சந்தோஷப்படுங்க. கடைசியில, ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட இந்தக் காலக்கட்டத்தில் நம்ம பழையது ஒண்ணு எக்ஸ்சேஞ்ச் செஞ்சு ஒண்ணு ஆர்டர் பண்ணிட்டேன்! அவ்வளவு தான்! எல்லோருடைய முகத்திலும் ஒரு மின்னல் வெட்டியது போல பயங்கர சந்தோஷம். அப்பா! நிஜமாவா ?. எப்போ வருது ? SUV தானே? ஹைபிரிட் இல்ல எலெக்ட்ரிக்கா? புது மாடலா ? என்று மகன் உற்சாகமாகக் கேட்டான். கார் வாங்கினா மொதல்ல ஊட்டி போகணும் என்று மகள் துள்ளினாள். பார்வதி ஆர்வத்துடன் கணவரை நிமிர்ந்து பார்த்தார். என்ன வித்து என்ன வாங்கினீங்க ? எதுக்கு எக்ஸ்சேஞ்ச் பண்ணீங்க ?. லோன் கீன் எதுவும் போட்டு வாங்காதீங்க. . நியாமான கவலையை அவள் வெளிப்படுத்தினாள். ஆமாம்! வீட்டில் எக்ஸ்சேஞ்ச் பண்ணி வாங்க என்ன இருக்கு? பைக் போன வருஷம் தான் வாங்கினோம். அது விக்க வேண்டாமே என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. எல்லோரும் அவரையே பார்த்தார்கள். அவர் தான் சஸ்பென்ஸை விடுவிக்க வேண்டும். அவர் ஒரு புன்முறுவலுடன், ஒரு ரகசியத்தை உடைப்பது போலப் பேச ஆரம்பித்தார். என் அப்பா காலத்துல இருந்த ஒரு சைக்கிள், கராஜில் துருப்பிடித்துக் கிடக்குதில்லையா? நல்ல வெயிட் அது... அதை ஒரு 500 ரூபாய்க்கு வித்தேன். அந்தப் பணத்தோடு மிச்சத்தை போட்டு ஒரு புது ஹெர்குலஸ் சைக்கிள் வாங்கிட்டேன். GST முன்னாடி 12 பர்சண்ட் . இப்போ 5 பர்சன்ட். ! வீடே ஒரு கணம் மயான அமைதியானது. மாடல் பேரு 'ஹேவாக்'. கலர் ஆர்மி கிரீன் . சூப்பரா இருக்கு. அக்கம் பக்கம் காய்கறி, பால்னு எது வாங்கப் போனாலும், அது ரொம்ப வசதியா இருக்கும். முக்கியமா, எக்ஸைஸ் பண்ணின மாதிரியும் ஆச்சுமில்லையா? என்று அவர் பெருமிதத்துடன் பேசி முடித்தார். அவர் பேசி முடித்ததும், எல்லோருக்கும் கொஞ்ச நேரம் மூச்சு உள்ளே போகவில்லை, வெளியே வரவில்லை. மொத்தக் குடும்பமும் ஆழமான மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. ஜிஎஸ்டி சலுகையில் விலையுயர்ந்த கார் வரும் என்று கனவு கண்டிருந்த அவர்கள் முகத்தில் ஏமாற்றமா, அதிர்ச்சியா, அல்லது ஆச்சரியமா என்று எதுவும் தெரியவில்லை. அவர் மெதுவாக எழுந்து, சாவியை எடுத்து சைக்கிள் நிற்கும் கராஜை நோக்கிச் சென்றார். அவர் முகத்தில் இப்போது ஒரு திருப்தி. 'தேவையற்ற ஒன்றை விற்று, ஆரோக்கியம் தரும் ஒரு தேவையைப் பூர்த்தி செய்து விட்டோம்' என்ற நிம்மதி அது. விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
SIR விவகாரம்: BLO யார்? விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகமா?
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், BLO அலுவலர் கொண்டு வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதில் மக்களிடத்தில் நிறைய சந்தேகங்களும் குழப்பங்களும் எழுந்து உள்ளன.
டெல்லி கார் வெடிப்பு: ``படித்தவர்களையும் தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை? - பா. சிதம்பரம் கேள்வி
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் சில தினங்களுக்கு முன்பு 2,563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடில் ரத்தேர், முசம்மில், ஷாஹீன் ஷாஹித் என்ற பெண் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில்தான் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை கார் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இந்தியாவின் தலைநகர், குறிப்பாக அதி உயர் பாதுகாப்புப் பகுதியான செங்கோட்டை பகுதியில் எப்படி அந்த கார் ஊடுருவ முடிந்தது? டெல்லி துயரச் சம்பவம் இந்த சம்பவம் நடந்து முடியும்வரை உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது? இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு? போன்றக் கேள்விகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை நோக்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னும் பின்னும், நான் இரண்டு வகையான தீவிரவாதிகள் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறேன். வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள். ஆபரேஷன் சிந்தூரைப் பற்றிய விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் நான் இதைத் தெரிவித்தேன். உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள் என்ற எனது கருத்தைக் குறிப்பிட்டதற்காக நான் கேலி செய்யப்பட்டு, இணையத்தில் வசைபாடப்பட்டேன். எனினும், அரசாங்கம் இதைப் பற்றி மிகவும் மௌனம் காத்தது என்று நான் சொல்லியாக வேண்டும். பா. சிதம்பரம் ஏனெனில், உள்நாட்டில் உருவான தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும். இந்தப் பதிவின் நோக்கம், இந்தியக் குடிமக்களை படித்தவர்களையும் கூட தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலைகள் என்னென்ன என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Delhi Red Fort Car Blast: அடுத்தடுத்து கோட்டைவிடும் Amit shah; வெளியான SHOCK தகவல்கள்|Imperfect Show
2900 கிலோ வெடி பொருட்கள்; புல்வாமா கனெக்சன்! - Delhi Car Blast Latest Updates
Foodies Findings,?Weight போட்டா தம்பி கலாய்ப்பான் |RJ Vigneshkanth |Vikatan Digital Awards UNCUT
‘பயங்கரவாத அமைப்புடன் எனது மகளுக்கு தொடர்பு இருப்பது தெரியாது’ –பெண் டாக்டரின் தந்தை
புதுடெல்லி, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் என்பவர் காஷ்மீரைச் சேர்ந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பெண் டாக்டர் காஷ்மீர் அழைத்து செல்லப்பட்டார். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன்படி லக்னோவில் உள்ள ஷாஹீன் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது. அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், […]
MOSPI-இன் அதிரடி மாற்றம்: INDEX மறுசீரமைப்பு, கவனிக்க வேண்டியது என்ன? | IPS Finance - 358
புதுசா Business பண்றவங்க Golden Triangle-ஐ கவனிங்க | Micro to mighty | EPI - 02
Prankல தான் எல்லாருடைய உண்மை முகம் தெரிஞ்சது..! - Biggboss Praveen Raj Dev Shares | Serial | Cinema
Vijay-யிடம், Rahul டீம் டீல்? புது ரூட் எடுக்கும் Stalin! | Elangovan Explains
TN-ல் தொடர் கொலைகள்!| Delhi Bomb Blast: 11 நாள்களாக தூங்கிய உளவுத்துறை?| DMK BJP TVK|Imperfect Show
இரட்டை வரி; கேரள, கர்நாடகாவின் அதிரடி அபராதம் - ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சொல்வதென்ன?
கடந்த நவம்பர் 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் அதிகாலை 3 மணி அளவில் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பயணம் செய்த பயணிகளையும் நடுவழியிலேயே இறக்கவிட்டதால், அவர்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். கேரளா போக்குவரத்து துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தலா 2 லட்சம் வரை அபராதம் என மொத்தம் ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில பேருந்துகளும் கேரள போக்குவரத்துத் துறையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகள் சென்னையில் நடந்த ஆம்னி பஸ் எக்ஸ்போ ‛‛தனியார் பேருந்துக் கட்டணம் ஏன் அதிகமாக இருக்கிறது!’’ இதுகுறித்து கேரள மோட்டார் வாகனத் துறை (MVD), பிற மாநிலத்திலிருந்து கேரளா வரும் பல தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள மாநில சாலை வரிகளைச் செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதனால் கேரளாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எனத் தெரிவித்திருக்கிறது. கர்நாடகாவிலும் தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதம் இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டும் வரை தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல கர்நாடகாவிலும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகள் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை இந்நிலையில் தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாத நிலை நீடிப்பது பற்றி அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், 7.11.2025-தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளது. இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக, ஆபரேட்டர்கள் இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்நிகழ்வை தொடர்ந்து 07.11.2025 முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் 150 ஆம்னி பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படைந்து மற்றும் தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆம்னி பேருந்துகள் தினசரி உரிமையாளர்களுக்கு 2 கோடி ருபாய்க்கு மேல் இழப்பு ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையான இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு ( 90 நாட்கள்) தமிழக சாலை வரி ரூபாய்.1,50,000.00, AITP சாலை வரி ரூபாய்.90,000.00 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூபாய் 4,50,000.00 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து 10.11.2025 அன்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களையும், (11.11.2025) உயர்திரு போக்குவரத்து ஆணையர் அவர்களையும் சந்தித்து இப்பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கை வைத்தோம். அமைச்சர் அவர்களும் அரசுடன் பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாக உறுதி அளித்தார்கள். மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 600 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. தினசரி உரிமையாளர்களுக்கு 2 கோடி ருபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது மற்றும் இதனால் 7000க்கும் மேற்பட்ட பணியாளர்களும், இதைச்சார்ந்து 10000 தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளார்கள். ஆம்னி பேருந்துகள் சென்னை: 100வது நாளை எட்டிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ரிப்பன் மாளிகையில் போலீஸார் குவிப்பு அடுத்து வரும் வாரங்களில் கேரளாவிற்கு தினசரி 300 பேருந்துகளுக்கு மேல் சபரிமலைக்கு செல்ல இருப்பதால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களும் விரைவாக மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவையை தொடங்க உதவுமாறு கேட்டுக்கொள்றோம். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராகப் பேருந்துகள் இயக்க வழி வகையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் சுமூகமான தீர்வு கிடைக்கும் வரையில் வெளி மாநிலங்களுக்கான 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வவுனியாபேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு நீர்த் தேக்கத்தில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதைத் தொடர்ந்து அவர் இன்று (12.11) இரவு தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில, வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம், பேராறு நீர்த்தேக்கத்தில் மிக அதிகளவான மீன்கள் இன்று மாலை (12.11.2025) தொடக்கம் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை மீன்பிடியினை தற்போதைக்கு தவிர்க்குமாறும், பொதுமக்கள் குறித்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன். விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்படும் வரை குறித்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
IPL 2026: ‘டிரேடிங்கில் வெளியேறும்’.. அர்ஜுன் டெண்டுல்கர்: இந்த அணிக்கு மெய்ண் பௌலராக செல்கிறார்?
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து, டிரேடிங்கில் வெளியேறும் அர்ஜுன் டெண்டுல்கர். இனி மெய்ண் பௌலராக விளையாட உள்ளார். மாற்றாக ஷர்தூல் தாகூரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கமல் படம் ஃப்ளாப் ஆகணும்னு பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணம்! - 70ஸ் பெண்ணின் பால்ய நினைவுகள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அதிகாலைப் பொழுது 'மை விகடன்' ' தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்த்த அனுபவம்'... உறங்கிக் கொண்டிருந்த நினைவலைகளைத் தட்டி எழுப்பியது. ஒன்றா இரண்டா .. நினைவு தெரிந்த நாள் முதலா பட்டாசு, இனிப்பு பலகாரங்கள் அவ்வளவு ஏன் புது டிரஸ் எடுக்காவிட்டால் கூட பரவாயில்லை தீபாவளியை சினிமா இல்லாமல் கடந்ததில்லை நான்! தீபாவளி அன்று நிச்சயம் படம் பார்த்தே ஆக வேண்டும் . இல்லாவிட்டால் அது தீபாவளியே இல்லை என்பதுதான் என்னுடைய கொள்கை. என் அப்பா எனக்காக திரையரங்கில் அலுவலக ஊழியரிடம் சொல்லி டிக்கெட் வாங்கி தந்து விடுவார். 78 தீபாவளி.. தாய் மீது சத்தியம் திரைப்படம்.. தலைவர் மனதிற்குள் நுழைந்த தருணம். 83 தங்கமகன் 84 நல்லவனுக்கு நல்லவன் 85 படிக்காதவன் 86 மாவீரன்... இப்படி பிடித்த தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களை பார்த்த தருணங்களை அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது. இதில் ஒரு வேடிக்கை என்னன்னா எப்போதெல்லாம் ரஜினி படம் ரிலீஸ் ஆகிறதோ அப்போதெல்லாம் கமல் படமும் ரிலீஸ் ஆகும். நான் ரஜினியின் பரம ரசிகை என்பதால் கமல் படம் ஃப்ளாப் ஆகணும்னு பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணங்கள் போட்டதையெல்லாம் இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும் நிகழ்வுகள். .. இப்படி சினிமா பைத்தியமான எனக்கு அமைந்த புகுந்த வீடோ சினிமாவே பிடிக்காதவீடு. . திருமணத்தின் போது நினைத்தேன் தலை தீபாவளிக்கு அப்பா வீட்டுக்கு போறப்ப அப்பா நிச்சயம் நமக்கு தீபாவளி ரிலீஸ் படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுப்பார். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் எதிர்பாரவிதமா அப்பா தவறியதால் அந்த வருடம் தலை தீபாவளி இல்லை. புகுந்த வீட்டில் தான் அந்த வருடதீபாவளி . மனசு முழுக்க அப்பா தவறிய சோகம் ஒரு பக்கம் தீபாவளி ரிலீஸ் படம் பார்க்காத வருத்தம் ஒரு பக்கம். ஏதோ ஒப்புக்கு வீட்டில் பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்கச் சென்றுவிட்டேன். மாலை 4 மணி இருக்கும் என்னவர் என்னை எழுப்பி ,கிளம்பு வெளியே செல்லலாம் என்றார். நான் வரலைன்னு சொல்ல , ஒரு மாறுதலுக்காகவாது வெளியில் சென்று வரலாம் ன்னு கூப்பிட அரைகுறை மனதோடு எங்கு செல்கிறோம் என்று கூட கேட்காமல் ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்தேன். வழி நெடுக ஏதேதோ சிந்தனைகள். வீதியெங்கும் பட்டாசு வெடிகளின் சத்தம் , புகைகளுக்கு நடுவில் கதாநாயகனும் கதாநாயகியும் பயணிப்பது போல் .. வடபழனி கமலா தியேட்டரில் வண்டி நிற்க, அவர் இறங்கச் சொல்ல ,நிமிர்ந்து பார்க்கையில் இயக்குனர் சிகரத்தின் 'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படபோஸ்டர். அப்பொழுதுதான் அன்பு எனும் சொல்லின் அர்த்தம் அறிந்தேன் அவர் கையிலிருந்த டிக்கெட் டுகளில்..! வாழ்வியல் உறவுகளைப் பேசிய புதுப்புது அர்த்தங்கள்.. திரைப்படம் எனக்குள் எதை எதையோ கற்பித்தது. அன்புக்கும் வெறுப்பிற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் உண்டு.. சற்று தாண்டினாலும் .. அது வேறொரு அர்த்தத்தை கொடுத்து விடும் என்பதை துல்லியமாக இயக்குனர் சிகரம் சொல்லி இருந்த விதம்.. கவிதை! கணவன் மேல அளவுக்கு மீறி பாசம் வச்ச கீதா, பொஸசிவ்னஸ் கொண்ட மனைவிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் ரகுமான், விசுவாசமான பி .ஏ விவேக்கின் 'இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்' அழியாத தத்துவமான டயலாக், முதிய வயதிலும் பரஸ்பர அன்புடன் வாழும் பூர்ண விஸ்வநாதன் சௌகார் ஜானகி தம்பதிகள், ரொமான்ஸ் குறும்புகளோடு ஜனகராஜ், காக்கிநாடா காஞ்சனா அம்மா ஜெயசித்ராவின் கண்டிப்பா மிகுந்த கட்டுப்பாடு, சித்தாராவின் வெள்ளந்தி சிரிப்பு, இசைஞானியின் பாடல்கள்... தீபாவளி இனிப்புகளை போல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய். மறக்கவில்லை. குறிப்பாக குருவாயூரப்பா பாடலில் புகைப்படங்கள் ஃப்ரீசாகும் விதம் வேற லெவல்.. கைதட்டி ரசித்த தருணம் இன்னமும் நெஞ்சுக்குள் ... படத்தில் ஒரு இடத்தில்' நீ சிரிக்கிறப்ப தெரியற அந்த தெத்துப்பல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ன்னு பூரணம் விஸ்வநாதன் சித்தாராவை பார்த்து குறிப்பிடுவார்.அந்த டயலாக்கை இவர் சொல்லி நான் கேட்டது அப்ப நினைவுக்கு வந்து இதழ்களில் புன்னகை பூக்கச் செய்தது தனிக்கதை. 'அழகான நொடிகளுக்குள்ளேயே பயணிக்கிறது சில திரைப்படங்கள்.. அழகிய நினைவலைகளாய்' எனக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சு இன்ப அதிர்ச்சி கொடுத்த என்னவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எது எப்படியோ இன்னமும் தொடர்கிறது எனது தீபாவளி ரிலீஸ் திரைப்பட கொண்டாட்டங்கள். இப்பொழுது சற்று வித்தியாசமாக.. திரைப்படம் பார்த்து விமர்சனம் எழுதும் அளவிற்கு ... இனியும் தொடரும்! சினிமாவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பது முக்கியம். சினிமா பார்ப்பது பிடிக்கும்ன்னா அதுவே உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் விஷயமாக இருக்கும். அதை ஒரு அலுப்புடனோ, சலிப்புடனோ, பார்த்தால் மன அழுத்தமாக மாறும்; பிடித்து செய்தால் எந்த காரியமும் நம் அழுத்தத்தை நம் மன அழுத்தத்தை போக்கக்கூடியதுதான்' . என்னைப் பொறுத்தவரை என்னுடைய stressbuster திரைப்படங்கள் பார்ப்பது தான். பி.கு(இந்த வருட தீபாவளி ரிலீஸ்? உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. Dude பார்த்தேன்.. விமர்சனம் செய்யும் அளவுக்கு அந்தப் படத்தில் எதுவும் இல்லை.முடியலடா சாமி ! தீபாவளிரிலீஸ்.. படம் பார்த்த அனுபவம்.. தலைப்பு கொடுத்த மை விகடனுக்கு ஒரு கிலோ 'மைசூர்பா 'பார்சல் என்றென்றும் அன்புடன் ஆதிரை வேணுகோபால். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
குண்டு வைத்து கைது:மீண்டும் காவல்துறை களத்தில்!
கடந்த அரசுகள் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களென குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துவந்திருந்தது. எனினும் தற்போதைய அரசு அதே பாணியில் வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை வைத்திருந்ததாக கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகளை அரங்கேற்றிவருகின்றது. இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் ஆவா குழுவின் தலைவர் என குற்றஞ்சாட்டி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் நேற்றையதினம் (11) சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கைக்குண்டுகளை வைத்திருந்தாக கூறியே கைதுகள் முன்னெடுக்கப்பட்டதாக கைதானவர்களது மனைவிமார் ஊடகங்களிடையே தெரிவித்துள்ளனர். ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒரவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதா காவல்துறை தெரிவித்துள்ளது. சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் முப்படைகள்!
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவமும் , காவல்துறையினரும் தொடர்புபட்டுள்ளதாக தமிழ் கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்த நிலையில் அனுர அரசு அத்தகைய குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் இராணுவமும் , காவல்துறையினரும் தொடர்புபட்டு காணப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஏற்றுக்கொண்டுள்ளார். வடக்கு கல்வி வீழ்ச்சிக்கு போதைப்பொருள் மாhப்பியாக்கள் காரணம் என்றும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்திருந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ; வடக்கில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளனர் , அவர்களை எப்போது வெளியேற்ற போகின்றீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் வழங்கிய கடற்றொழில் அமைச்சர், வடக்கில் போதைப்பொருள் கடத்தலில் கடந்த காலங்களில் காவல்துறையும், இராணுவமும் இணைந்து தொடர்புபட்டுள்ளனர். அந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.அதற்கு பின்னால் போதைப்பொருள் மாப்பியாக்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பங்காளிக்கட்சிகளது; தலையீடுகளும், இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Sania mirza: ``நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் - விவாகரத்து குறித்து சானியா மிர்சா!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஷோயிப் மாலிக் சனா ஜாவேத் என்பவரைத் மணமுடித்தார். அப்போதுதான் சானியா மிர்சாவுக்கும் - ஷோயிப் மாலிக்குக்கும் விவாகரத்து ஆனது வெளியே தெரியவந்தது. இந்த நிலையில், 'சர்விங் இட் அப் வித் சானியா' என்ற பாட்காஸ்டில் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஃபரா கானும், சானியா மிர்சாவும் கலந்துகொண்டு உரையாடினர். sania mirza அப்போது, சானியா மிர்சா, ``இன்று எல்லோரும் ஒரு போராட்டக் கதையை விரும்புகிறார்கள். போராட்டம் இல்லாதவர்கள் கூட மிகவும் வித்தியாசமான ஒரு போராட்டக்கதையை தங்களுக்காக உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்... என் குழந்தைகளுக்கு ஒரு விஷயம் இல்லை என்றால் உங்கள் குழந்தைக்கு வேறு ஒரு விஷயம் இருக்காது. ஆகமொத்தம் எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிடுவதில்லை. நிதிப் போராட்டம் என்பது மிகவும் வெளிப்படையான, மிகவும் கடினமான போராட்டம். ஏனென்றால் நீங்கள் விரும்புவதைத் செய்வதற்கான சுதந்திரம் நிதி இல்லை என்பதால் தடைபடும். அதே நேரம், அது அந்த நாளைக் கடந்து செல்வது அல்லது அந்த மாதத்தைக் கடந்து செல்வது பற்றியது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். கடந்த காலங்களில் விவாகரத்துப் பெற்றவர்களின் குழந்தைகள் பெரும் சிரமங்களைச் சந்தித்திருக்கின்றனர். அந்தக் காலங்களும் மிகவும் வித்தியாசமாக இருந்தன. இப்போது குழந்தைகளின் வாழ்க்கையில் விவாகரத்து இயல்பாக்கப்பட்டிருக்கிறது. என் குழந்தை படிக்கும் பள்ளியில் இது மிகவும் இயல்பாக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். sania mirza ஒரு வகுப்பில் பலக் குழந்தைகள் விவாகரத்து ஆன பெற்றோரிடமிருந்து வருகிறார்கள். அதே நேரம் நாம் இன்னொரு கோணத்திலிருந்து இதை அணுக வேண்டும். நீங்கள் இதை எவ்வளவு இயல்பாக்கினாலும், பெற்றோர் பிரிவால் நிச்சயம் குழந்தை பாதிக்கப்படும். அதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால், அந்தக் குழந்தைக்கு எது சிறந்ததோ அதைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டியது அவசியம். எனவே நீங்கள் புரிந்துகொண்டு உங்களுக்குத் தெரிந்ததை ஒரு சிறந்த சூழ்நிலையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு குழந்தை மகிழ்ச்சியற்ற இருவரைப் பார்க்கப் போகிறது என்றால், நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். என்றார். அபிநய் தனியாகக் குடித்துக்கொண்டிருப்பார், ஆனால் அவரின் மறுபக்கம் - விஜயலட்சுமி உருக்கமான பதிவு
அரியலூர் தொகுதி: 2026 தேர்தலில் யாருக்கு சாதகமாகும்?
அரியலூர் சட்டமன்றத் தொகுதி இம்முறை திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி காண வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி, திமுக முன்னிலை வகிக்கிறது என்று தொகுதி மக்களே மதிப்பிடுகின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்; ராகுல் காந்தியை தொடர்புபடுத்திய பொன்னார் - கண்டித்த விஜய் வசந்த்!
கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லி குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறுகையில், ``நீண்ட காலமாக எந்தவித பயங்கரவாத தாக்குதல்களும் இல்லாமல் இருந்தது. இப்போது இது நடந்துள்ளது. குண்டு வெடித்தால் பீகார் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும். அப்படியென்றால் காங்கிரஸ் தான் திட்டமிட்டுள்ளதா? ராகுலை கைது செய்ய வேண்டுமா..வேண்டாமா? என பேசியிருந்தார். பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியை தொடர்புபடுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய வெறுப்பூட்டும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன். விஜய் வசந்த் பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற முன்னாள் மத்திய அமைச்சர் பதவியில் இருந்த ஒருவர், அரசியல் நலனுக்காக இவ்வளவு கீழ்மட்ட பொய்களை பரப்புவது வெட்ககரமானதும், நாட்டின் பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்யும் ஆபத்தான செயல் ஆகும். டெல்லியில் நடைபெற்றது ஒரு சோகமான நிகழ்வு. இந்திய நாட்டினர் அனைவரும் ஓட்டு மொத்தமாக ஒருமித்து நின்று இதை கண்டித்து, மறைந்தவர்கள் மற்றும் காயம் காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்த வேளையில் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் விஷ வார்த்தைகள் அவர்கள் காயத்தை இன்னும் ஆழப்படுத்தும். அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க நடத்திய நாடகங்களை இந்த நாடு மறக்கவில்லை. குண்டுவெடிப்பு இத்தகைய நெறிமுறையற்ற மற்றும் விஷமக்குரல்கள், அரசியலின் அடிப்படை நாகரிகத்தை சிதைக்கின்றன. நாட்டின் விடுதலைக்காகவும், கிடைத்த விடுதலையை கட்டி காக்கவும் பல தியாகங்கள் செய்த காங்கிரஸ் கட்சி மீதும், நாட்டின் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மக்களோடு பயணித்து வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதும் ஆதாரமற்ற வீண் பழிசுமத்திய பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார். பொன்னார் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காமல் இருந்தால் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
வெங்காய மாலைகளுடன் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், இன்று (12) சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காய மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு வெங்காயத்திலான மாலை அணிந்து சென்றுள்ளனர். அத்துடன், அவர்கள் விவசாயியின் மகன் அரசனானான் … விவசாயி பாழானான்… என கோஷமிட்டவாறு சபைக்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது. இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பிரதேச சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. அதன்போதும், பெரிய […]
அவர்கள் தற்குறிகள் அல்ல, நம்ம பசங்க - திமுக எம்.எல்.ஏ எழிலன் சொல்லும் லாஜிக்!
சமீபமாக சமூகவலைதளங்களில் ஒரு சிலரை 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு பல்வேறு விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக விஜய்யின் ரசிகர்கள் தவெகவிற்கு ஆதரவாகப் பேசும்போது, அந்த ரசிகர்கள் கூட்டத்தில் பலருக்கு அரசியல் அறிவு இல்லை என்று 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன், திமுக 75 அறிவு திருவிழா கருத்தரங்கில் சமூக வலைதளங்களில் 'தற்குறிகள்' என பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்களை விமர்சனம் செய்துகொண்டிருப்பதாகப் பேசியிருக்கிறார். மருத்துவர் எழிலன் இது குறித்துப் பேசியிருக்கும் திமுக எம்.எல்.ஏ எழிலன், சமீபமாக 'தற்குறிகள்... தற்குறிகள்' என பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்களை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறோம். அது தவறான அணுகுமுறை. அவர்களிடம் நாம் பேசாமல், அரசியல் விழிப்புணர்வு செய்யாமல் தவறவிட்டது நம்முறைய தவறுதான். பள்ளி, கல்லூரிகளில் அவர்களுக்கு சமூக நீதி, பகுத்தறிவு பற்றி சொல்லித் தராமல் ஒரு இளம் தலைமுறையினரை தவறான வழியில் செல்லவிட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் உரையாடி மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மருத்துவர் எழிலன் அந்த ரசிகர்கள் கூட்டத்தின் தலைவர்கள் சுயநல நோக்கத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த ரசிகர்கள் கூட்டத்திடம் நாம் உரையாடினால், அவர்கள் விழிப்புணர்வைப் பெற்று நல்ல வழியில் செல்வார்கள். அவர்கள் ஒன்றும் சங்கிகள் கிடையாது. அவர்களிடம் வெறுப்பைக் காட்டாமல் பகுத்தறிவை, சமூகநீதியைச் சொல்லிக் கொடுத்து உரையாட வேண்டும். அவர்களை நாம் கைப்பற்ற வேண்டும். அவர்கள் நம்ம பசங்க என்று பேசியிருக்கிறார் எழிலன்
பிரான்சின் ‘மன்னிப்புக் கோரும் ரொட்டிப் பெட்டி’: உணவு விரயத்தைத் தடுக்கும் சமூக முயற்சி!
உணவு விரயம் என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சனை. ஆனால், இந்த சிக்கலை எதிர்கொள்ள பிரான்சில் உள்ள
மாநில அளவில் வேலையின்றி தவிக்கும் பெண்கள்.. தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் தெரியுமா?
இந்திய நாட்டின் நகர்ப் புறங்களில் முறையான அல்லது வழக்கமான ஊதிய வேலை வாய்ப்பின்றி பெண்கள் தவித்து வருவதால், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன
வருகைப் பதிவேடு தாதியர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக அல்ல
வருகைப் பதிவேடு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எந்த ஒரு பணியாளர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக… The post வருகைப் பதிவேடு தாதியர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக அல்ல appeared first on Global Tamil News .
ராஜஸ்தான்: ஐஏஎஸ் கணவர் மீது ஐஏஎஸ் மனைவி புகார் - FIR பதிவு செய்த காவல்துறை!
2014-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் பாரதி தீட்சித் - ஆஷிஷ் மோடி இருவரும் காதலித்து அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநில அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித்தும், இவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பாரதி தீட்சித் மாநில காவல்துறைத் தலைவரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ``ராஜஸ்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இயக்குநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆஷிஷ் மோடி, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து என்னை திருமணம் செய்துகொண்டார். police அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினார். அக்டோபர் 15 ஆம் தேதி எனது கணவரும் அவரின் சில கூட்டாளிகளும் என்னை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் காரில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தனர். விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள துப்பாக்கி முனையில் மிரட்டினார். என் அறையில் மறைமுகமாக ஒரு கேமராவை நிறுவியும், என் செல்போனை வேவு பார்க்கும் சாதனங்களுடன் இணைத்தும் கொடுமைபடுத்தினார். எனவே, என் கணவர் மீதும் அவரின் கூட்டாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பேசிய ஆஷிஷ் மோடி, ``என் மீதான குற்றச்சாட்டுக்கான விசாரணையில் நான் முழுமையாக ஒத்துழைப்பேன். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நவம்பர் 4, 2025 முதல் 7 வரை நான் பீகாரில் இருந்தேன். இந்த விவகாரம் தற்போது காவல்துறை விசாரணையில் இருப்பதால், இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். 3 சம்பவங்கள்: சொதப்பிய Delhi Police | Uttarakhand Cloudburst Seeman DMK | Imperfect Show 5.8.2025
'அழகோட வரையறை மாறிக்கிட்டேதான் இருக்கும்!' - விவசாய குடும்பத்திலிருந்து உலகை கலக்கும் மாடல் பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தெற்கு காக்கூரை சேர்ந்தவர் ஜோதி மலர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் பி.டெக் முடித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் புனேயில் அமைதி, சுற்றுச்சூழல், சுற்றுலா, கலாசாரத்தை வலியுறுத்தி நடந்த தேசிய மிஸ் ஹெரிடேஜ் அழகி போட்டியில் கலந்துகொண்டு 'மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025' எனும் பட்டத்தை வென்றிருந்தார். ஜோதி மலர் தற்போது தாய்லாந்தில் நடைபெற்ற 'மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல்-2025' என்ற ஹெரிடேஜ் அழகிப்போட்டியில் கலந்துகொண்டு 'கலாசார தூதர்' பட்டத்தை பெற்று இருக்கிறார். விவசாய குடும்பத்தில் பிறந்து வெளிநாடுகளுக்கு சென்று பல அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதி மலருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது, 'சின்ன வயசுல இருந்தே சினிமான்னா ரொம்ப பிடிக்கும். அதுல ஹீரோயின்ஸ்லாம் எப்படி டிரஸ் பண்ணிட்டு வருவாங்கன்னு ரொம்ப ஆர்வமாக பார்ப்பேன். அழகோட வரையறை மாறிகிட்டே இருக்கும் நம்ம வளர வளரதான் இந்த சமூகத்துல அழக எப்படி பார்க்குறாங்கனு எனக்கு தெரிய வந்துச்சு. ஒவ்வொரு முறையும் அழகோட வரையறை மாறிகிட்டே இருக்கும். நான் சின்ன வயசுல இருக்கும்போது ரவுண்ட் முகம் இருந்தா தான் நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. இப்போ பார்த்தீங்கன்னா ஜாலைன்-ல முகம் இருந்தா தான் நல்லா இருக்கும்’னு சொல்றாங்க. ஒவ்வொரு காலக்கட்டத்துக்கு ஏத்த மாதிரி அழகுங்குறது மாறிக்கிட்டே தான் இருக்கும். சென்னை வந்ததுக்கு அப்புறம்தான் மாடலிங் பத்தி தெரிஞ்சுகிட்டேன். முதல்ல முயற்சி செய்யும்போது எனக்கு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கல. காலேஜ்லாம் முடிச்சிட்டு பெங்களூரில் மாடலிங் துறை நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. இந்தியாவை ரெப்ரசன்ட் பண்ணணும்’னு ஆசை வேலை பார்த்துக்கிட்டே மாடலிங், ஆக்டிங் ரெண்டுமே கத்துக்கிட்டேன். ஆரம்பத்துல வாய்ப்புகள் கிடைக்காம கஷ்டமாக தான் இருந்துச்சு. அதுக்கு அப்புறம் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. தொடர்ந்து மாடலிங் பண்ணேன். தொடர்ந்து போட்டிகள்ல கலந்துகிட்டு இந்தியாவை எப்படியாவது ரெப்ரசன்ட் பண்ணணும்’னுங்கிற ஆசை இருந்துச்சு. இந்தத் துறையில போட்டிகள் அதிகமா இருக்கும். எல்லோரும் நல்ல டிரஸ் பண்ணி அவுங்கள மெயின்டைன் பண்ணி வச்சுருப்பாங்க. அதெல்லாம் பார்த்தப் பிறகு எனக்கு ஒரு பயம் இருந்துச்சு. ஆனா அதை அப்படியே விட்டுடாம என்னைய நானே தயார் படுத்திக்கிட்டேன். நம்பிக்கையோடு இருக்கணும்... ஆரம்பத்துல பிராக்டிஸ்லாம் பண்ணும்போது 6 முதல் 8 மணி நேரம் ஹீல்ஸ் போட்டு நடக்கணும். அதெல்லாம் பழக்கம் இல்லாதனால ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இந்த துறையில இருக்கவுங்களுக்கு எந்த இடத்துல ‘No’ சொல்லனுமோ அந்த இடத்துல சொல்லத் தெரிஞ்சுருக்கணும். மாடலிங் துறையின்னு இல்ல எந்தத் துறையா இருந்தாலும் நம்பிக்கையாக பண்ணோம்னா கண்டிப்பா சக்சஸ் ஆயிடலாம். அப்பா தான் ஆசான் நான் சின்ன வயசுல இருந்தப்போ ரொம்ப நிதி நெருக்கடி இருந்துச்சு. எங்க அப்பா விவசாயி தான். ஆனா எனக்கு நிறைய சொல்லி கொடுத்து வளர்த்திருக்காரு. சிலம்பம் கத்துக்கொடுத்துருக்காரு. அப்பா என்று சொல்றதை விட அவர் எனக்கு ஆசான். என்னைய அவர் தான் செதுக்கிருக்காரு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பட்டம் வின் பண்ணிருக்கேன் என்பதை தாண்டி அம்மா, அப்பாவுக்கு பெருமை சேர்த்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நம்ம தேசியக்கொடியை ஏதாவது ஒரு இடத்துல ரெப்ரஷன்ட் பண்ணணும்னு நினைச்சேன். அதைப் பண்ணிட்டேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நெகிழ்ச்சியாகப் பேசி முடித்தார் ஜோதி மலர்.
இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு: டீன் ஏஜ் பயனர்களுக்கான புதிய தானியங்கி அம்சங்கள்!
இணையத்தில் குறிப்பாகச் சமூக ஊடகங்களில் இளம் வயதினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இன்ஸ்டாகிராம் (Instagram) தனது டீன் ஏஜ் (Teenager)
கிருஷ்ணகிரி: திமுக-வுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிமுக கவுன்சிலர் - கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்!
கி ருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் ஃபரிதா நவாப். இவர், தி.மு.க-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக கட்சிப்பொறுப்பிலும் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 16-10-2025 அன்று, தலைவர் ஃபரிதா நவாப்பின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, ஆளும்கட்சிக் கவுன்சிலர்களே நகராட்சி ஆணையர் சதீஷ்குமாரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக முன்வைத்தனர். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 10-ம் தேதியான நேற்று முன்தினம், நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் முன்னிலையில் `வாக்குச்சீட்டு’ நடைமுறையில் நடத்தப்பட்டது. கவுன்சிலர் நாகஜோதி தீர்மானத்தை நிறைவேற்ற நகராட்சியில் மொத்தமிருக்கும் 33 கவுன்சிலர்களில், 27 பேர் ஆதரிக்க வேண்டும். தி.மு.க கவுன்சிலர்கள் 21 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், சுயேட்சைக் கவுன்சிலர்கள் 4 பேர் என மொத்தம் 26 கவுன்சிலர்கள் வாக்களிக்கத் தயாரானார்கள். அப்போதும், மேலும் ஒருக் கவுன்சிலரின் ஆதரவுத் தேவை என்பதால், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 5 பேரிடமும் தி.மு.க-வினர் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 4 பேர் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், 9-வது வார்டு கவுன்சிலரும், கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க மகளிர் அணிப் பொருளாளருமான எம்.நாகஜோதி என்பவர் மட்டும் சம்மதித்தார். இதையடுத்து, அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதியுடன் சேர்ந்து 27 கவுன்சிலர்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கலந்துகொண்டு வாக்குச் செலுத்தியதால், தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால், ஃபரிதா நவாப்பிடம் இருந்த தலைவர் பதவி உடனடியாகப் பறிபோனது. தி.மு.க-வினரின் இந்த உட்கட்சி மோதல் அரசியலுக்குள் ஒருத்தரப்புக்கு ஆதரவாக அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதி செயல்பட்டது, அ.தி.மு.க-வினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காக, கடந்த சில நாள்களாகவே, நாகஜோதி தி.மு.க கவுன்சிலர்களின் அரவணைப்பில்தான் இருந்து வந்தார். நீக்கம் அறிவிப்பு இது குறித்து, அ.தி.மு.க தலைமைக்குப் புகார்கள் பறக்கவே, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கவுன்சிலர் நாகஜோதி நீக்கப்பட்டிருக்கிறார். ``கழகத்தின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாகஜோதி இன்று முதல் கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். அவரிடம் கழக உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது’’ என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
சின்னச்சாமி மைதானத்தில் இருந்து வெளியேற ஆர்சிபி முடிவு செய்துள்ளது. 2018ஆம் ஆண்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய பிட்சில் ஆட ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அஜித் குமார் ரேசிங் அணியுடன் கைகோர்த்த ரிலையன்ஸ்.. கேம்பா எனர்ஜிதான் இனி டிரெண்ட்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL) அஜித் குமார் ரேசிங் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்: உலகத் தலைவர்கள் கண்டனம்
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலுள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ள நிலையில், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். உலகத் தலைவர்கள் கண்டனம் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மலேசிய பிரதமரான அன்வர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லி செங்கோட்டை அருகே பல […]
துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது: பயணித்த 20 பேரும் பலி!
துருக்கிய இராணுவ விமானம் விபத்தில் இருந்த எங்கள் வீரமிக்க வீரர்கள் தியாகிகளானார்கள் என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒரு செய்தியை வெளியிட்டார். ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கிய இராணுவ சரக்கு விமானத்தில் இருந்த 20 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் புதன்கிழமை அறிவித்தார். அஜர்பைஜானில் இருந்து துருக்கிக்குச் செல்லும் வழியில் புறப்பட்ட C-130 ஹெர்குலஸ் விமானத்தில் பணியாளர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நவம்பர் 11, 2025 அன்று அஜர்பைஜானில் இருந்து நமது நாட்டிற்கு புறப்பட்ட எங்கள் C-130 இராணுவ சரக்கு விமானம் ஜோர்ஜியா - அஜர்பைஜான் எல்லைக்கு அருகே விபத்துக்குள்ளானதில், எங்கள் வீரமிக்க வீரர்கள் தியாகிகளானார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலேர் விபத்தில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவித்தார். ஜோர்ஜியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சேவை, விமானம் அதன் வான்வெளிக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே ரேடாரில் இருந்து மறைந்துவிட்டதாகக் கூறியது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது. துருக்கியைச் சேர்ந்த விசாரணைக் குழு இன்று புதன்கிழமை அதிகாலை விபத்து நடந்த இடத்தை அடைந்து. ஜோர்ஜிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விமானத்தின் இடிபாடுகளை ஆய்வு செய்து வருவதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துருக்கியின் தனியார் ஒளிபரப்பாளரான NTV அறிக்கையின்படி, விமானத்தின் சிதைவுகள் பல இடங்களில் பரவியிருந்தன. விபத்து காட்சிகளை வெளியிட வேண்டாம் என்று துருக்கி கேட்டுக்கொள்கிறது. C-130 ஹெர்குலஸ் விமானம் அமெரிக்க உற்பத்தியாளரான லாக்ஹீட் மார்டினால் தயாரிக்கப்பட்டது மற்றும் உலகெங்கிலும் உள்ள பல விமானப்படைகளால் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை அஜர்பைஜான் ஊடகங்களில் விமானம் விழுந்தபோது பக்கவாட்டில் சுழன்று மலைப் பகுதியில் கீழே விழுந்தது. தரையில் விழுந்து விமானம் நொருக்கி பெரிய கரும்புகை வெளியானது என்று கூறப்படும் காட்சிகள் பரப்பப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகள் எரிந்து கொண்டிருந்ததாக செய்தி நிறுவனங்கள் கூறிய காட்சிகளும் இருந்தன. பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை காரணம் காட்டி, விபத்தின் படங்களை வெளியிட வேண்டாம் என்று துருக்கிய இராணுவம் பத்திரிகைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் அல்லது அஸ்தி எப்போது துருக்கிக்கு திருப்பி அனுப்பப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
Gen Z-யின் புதிய வேலை: அதிபணக்காரக் குடும்பங்களின் ‘சூப்பர்’ஆயா வேலை!
பாரம்பரிய வேலைவாய்ப்புகள் ஆட்டம் காணும் இக்காலத்தில், குறிப்பாகத் தொழில்நுட்பத் துறையிலும், வெள்ளைச் சட்டை அணிந்து செல்லும் பெருநிறுவனங்களிலும் பேரளவு ஆட்குறைப்புகள்
`ரௌடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை' - என்ஐஏ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு 2023 அக்டோபர் 25 அன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி `கருக்கா' வினோத் (42) காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கருக்கா வினோத் இந்த வழக்கு விசாரணையை முடித்த என்ஐஏ, 680 பக்க குற்றப் பத்திரிகையை பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதற்கிடையில், நீதிபதிகளை நோக்கி கருக்கா வினோத் காலணியை வீசிய சம்பவமும் பேசுபொருளானது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 'கடந்த 2023-ல் ஆளுநர் மாளிகை முன்பு அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது' என்று பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாமக: திமுக தேர்தல் நேரத்துல இறங்கி வேலை செய்றாங்க, ஆனா நம்ம? - நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி
R K SWAMY’s Profit Jumps 44% in Q2 FY26; Revenue Grows 12% YoY
Mumbai: Integrated marketing services provider R K SWAMY Limited reported a strong financial performance for the second quarter and first half of FY26, driven by consistent client retention and growing traction across new service verticals. For the half year ended September 30, 2025 , the company posted consolidated revenue of ₹156.63 crore , up 12.2% from ₹139.63 crore in the corresponding period last year. Profit Before Tax (PBT) rose 27.9% to ₹6.73 crore compared to ₹5.26 crore a year ago, reflecting improved operational efficiency and a balanced growth across business lines. [caption id=attachment_2352924 align=alignleft width=120] Shekar Swamy[/caption] During the second quarter (Q2 FY26) , R K SWAMY registered revenues of ₹76.38 crore , a 12.1% increase over the same quarter last year. PBT surged 44.2% to ₹3.13 crore, underscoring the company’s robust execution and margin expansion. “It is good to see progress across disciplines. Client retention is near 100%. Our new launch like the Brand & Marketing Consulting Group is seeing traction. A few former large clients have returned to the fold. We have a major new service ready for launch soon. All in all, a good busy period,” said Shekar Swamy, Managing Director and Group CEO, R K SWAMY Ltd. [caption id=attachment_2459988 align=alignright width=130] Rajeev Newar[/caption] Commenting on the company’s operational investments, Rajeev Newar, Group CFO , added, “Our investments last year in the Customer Experience Center (CXC) and Computer Aided Telephone Interviews (CATI) capacity are steadily yielding results. Our focus is on capacity utilisation of these facilities, which is increasing month on month. We will continue with this strategy of investing in marketing infrastructure.” R K SWAMY Limited remains the only integrated marketing services company listed on the main board of the BSE and NSE , offering services across advertising, digital, market research, data analytics, and consulting. The company’s continued emphasis on innovation, client relationships, and marketing infrastructure is expected to drive sustained growth in the coming quarters.
சொந்த வாகனத்தை விற்க போறீங்களா? தப்பு பண்ணீடாதீங்க.. உஷாரா இருங்க..!
டெல்லியில் கார் குண்டு வெடிப்புக்கு பிறகு, சொந்த கார் போன்ற வாகனங்களை வேறொருவருக்கு விற்பனை செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள் குறித்து எச்சரிக்கை எழுந்து உள்ளது.
கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி: தொல்.திருமாவளவனும் பங்கேற்பு!
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இத்தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்துகொள்கிறார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றவுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி இம்மாதம் 23ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம்முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மோடி தான் எங்கள் டாடி: மீண்டும் பரபரப்பை பற்ற வைத்த கே.டி.ராஜேந்திர பாலாஜி
பிரதமர் மோடியை மீண்டும் 'டாடி' என அழைத்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. திமுகவால் மத்திய அரசிடம் இருந்து திட்டங்களைப் பெற முடியாது என விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக திறப்பு விழா நடத்துவதாகவும், தென் மாவட்டங்களை திமுக வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவின் ஊழல்களை விசாரிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீங்கள் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இந்த வாய்ப்பிற்கு கட்டாயம் விண்ணப்பிக்கலாம். தொடக்கமே ரூ.88 ஆயிரத்திற்கு மேல் சம்பளத்துடன் அரசு பணியை பெறலாம். ஆம், ECGC என்ற பொதுத்துறை நிறுவனம் ப்ரொபஷனரி அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்து.. வீட்டு உரிமை யாருக்கு? ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களும் வீட்டை வாடகை விடுவோரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விதிமுறை.. என்னனு பாருங்க.
வெடித்த கண்ணிவெடி: கம்போடியா-தாய்லாந்து சண்டை நிறுத்த ஒப்பந்தம் நிறுத்திவைப்பு
கம்போடியா உடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தியுள்ளது. கம்போடியா-தாய்லாந்து மோதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து சமீபத்திய கோடைக்காலத்தில் 5 நாட்கள் நீடித்த சண்டையில் பரஸ்பரம் மோதிக் கொண்டனர். அண்டை நாடுகளான இருவரும் இந்த மோதலை சமீபத்திய வரலாற்றின் மோசமான மோதல் என வரையறுத்து இருப்பதோடு, இதற்கான காரணத்தை இருநாடுகளும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இரு நாடுகளும் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்ட நிலையில் சுமார் 3,00,000க்கும் மேற்பட்டோர் […]
புத்தகப் புழு, ஒரே நம்பிக்கை! தில்லி கார் வெடிப்பில் சந்தேகிக்கப்படும் உமர் பற்றி குடும்பத்தினர்!
தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் பற்றி அவரது குடும்பத்தினர் கூறுகையில், எப்போதும் புத்தகப் புழுவாக இருப்பார், எங்கள் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாகத் திகழ்ந்தவர் என்கிறார்கள். தில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில், உமரின் பெயரைப் பார்த்த போது சொல்ல முடியாத அதிர்ச்சியை குடும்பத்தினர் அடைந்ததாகவும் கூறுகிறார்கள். கடந்த வாரம், ஜம்மு- காஷ்மீர், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநில காவல்துறையினர் கூட்டாக மேற்கொண்ட […]
DRI Busts Gold Smuggling Racket, 11 Arrested
Officials from the Directorate of Revenue Intelligence (DRI) have arrested 11 people for allegedly being part of a gold smuggling
BBDO India’s Josy Paul named Jury Chair at the 2026 Clio Awards
Mumbai: BBDO India’s Chairperson and Chief Creative Officer, Josy Paul, has been appointed as Jury Chair for the Public Relations category at the upcoming 2026 Clio Awards — one of the world’s most prestigious honours celebrating creativity in advertising and communications.The appointment recognises Paul’s long-standing contribution to the advertising industry and his pioneering approach to purpose-driven creativity. The Clio Awards’ 2026 program will bring together over 100 creative leaders from across the globe. Jury sessions will be held at JA Resort & Spa in Dubai, where members will determine the Grand, Gold, Silver, and Bronze Clio winners across various categories.Speaking about his new role, Josy Paul said, “Public relations has evolved into a powerful force that shapes culture and behaviour. It’s about sparking meaningful conversations and driving genuine action. As Jury Chair, I look forward to celebrating work that not only captures attention but earns belief - work that moves people, and markets.” This marks another significant milestone for BBDO India, whose work has consistently been recognised on the global stage for blending creativity with social impact. Under Paul’s leadership, the agency has produced some of India’s most loved, globally awarded, and culturally resonant campaigns.The 67th Annual Clio Awards will take place on May 12, 2026, at Cipriani 25 Broadway in New York City.Clio Awards 2026 Jury Chairs include: Audio & Audio Craft: Nancy Crimi-Lamanna, CCO, FCB Canada Brand: Perry Fair, Global Head of Creative, Mattel, Inc. Branded Entertainment & Content: Javier Campopiano, Global Chief Creative Officer, McCann World Group Creative Business Transformation, Effectiveness & Strategy: Ariana Stolarz, Global CSO, Accenture Song Design: Sally Anderson, CCO, MetaDesign China Creative Commerce & Direct: Alexander Schill, Global CCO, Serviceplan Group Digital/Mobile & Experience/Activation: Debbi Vandeven, Global CCO, VML Film: Rodrigo Jatene, CCO, LATAM, Wieden+Kennedy Film Craft (Animation & VFX): Yannis Konstantinidis, Co-founder & Creative Director, NOMINT Film Craft (Copywriting): Carlos Camacho, CCO, Gut Asia Film Craft (Direction & Cinematography): Emma Lundy, Executive Producer & Partner, Giant Films Film Craft (Editing): Rich Orrick, Founding Partner/Film Editor, Work Editorial Film Craft (Music & Sound Design): Claudia Incio, Founder & Music Director, Agosto Music Film Craft (Production Design): Lora Schulson, Global Chief Production Officer, 72andSunny Media: Asmirh Davis, Founding Partner & President, Majority Print & Out of Home: Liz Taylor, Global CCO, Ogilvy Public Relations: Josy Paul, Chairperson & CCO, BBDO India Private Limited Social Media: Amy Ferguson, Partner & CCO, Terri & Sandy For more information about the Clio Awards, visit www.clios.com.
வெள்ளி உற்பத்தி.. உலகின் டாப் 10 நாடுகள் இவைதான்.. வெளியான லிஸ்ட்!
உலக அளவில் வெள்ளி உற்பத்தியில் முதல் 10 இடங்களை வகிக்கும் நாடுகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. வாங்க பார்க்கலாம்.
ஆண் பாதி - பெண் பாதி ஆச்சரியப்படுத்திய அரிய சிலந்தி!
தாய்லாந்து நாட்டில் கண்டறியப்பட்ட பாதி ஆணும் பாதி பெண்ணுமான சிலந்தி இனம் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இருபாலின அல்லது இரண்டு பாலுறுப்புகளைக் கொண்ட பூச்சிகள் இருந்தாலும், இந்த சிலந்தியின் உடல் சரியாக இரண்டாக பிரிந்திருப்பது ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஒரு பாதி உடல் ஆரஞ்சு நிறத்திலும் மற்றொரு பாதி உடல் சாம்பல் நிறத்திலும் காணப்படுகிறது. இரண்டு பக்கங்களும் தனித்தனியான தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த சிலந்தியை டமார்கஸ் இனாசுமா ( Damarchus inazuma) என அழைக்கின்றனர். ஒரு உயிரினம் ஆண் மற்றும் பெண் உறுப்புகளையும் தன்மையையும் கொண்டிருப்பது கைனட்ரோமோர்பிசம் (gynandromorphism) என அழைக்கப்படுகிறது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் பெரிய சிலந்திகள் Bemmeridae என்ற குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த குடும்பத்தில் gynandromorphism தன்மை காணப்படுவது இதுவே முதன்முறை. Mygalomorphae என்ற பழமையான சிலந்தி வகைகளில் இது மூன்றாவது gynandromorphism கண்டுபிடிப்பாகும். inazuma One Piece ஜூடாக்சா (Zootaxa) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த சிலந்தியின் உடல் சரியாக இரண்டாக பிரிந்துள்ளது. வலது பக்கம் ஆண் தன்மையையும் இடது பக்கம் பெண் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. பெண் பக்கம் ஆரஞ்சு நிறத்தில் பெரிய பற்களுடன் காணப்படுகிறது, ஆண் பக்கம் வெளிர் சாம்பல் நிறத்தில் சற்று சிறியதாக உள்ளது. இதன் இந்த வித்தியாசமான தோற்றம் காரணமாக ஒன் பீஸ் அனிமேஷன் தொடரில் வரும் ஆணாகவும் பெண்ணாகவும் மாறக்கூடிய கதாப்பாத்திரத்தை சுட்டிக்காட்டும் வகையில், Damarchus inazuma எனப் பெயரிட்டுள்ளனர். இந்த சிலந்தி விஷமுள்ளதா உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இனி வரும் பரிசோதனைகளில் விடை கண்டுபிடிக்கப்படும் என ஆய்வாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
WPP appoints Elav Horwitz as first Chief Innovation Officer
Mumbai: WPP today announced the appointment of Elav Horwitz as its first Chief Innovation Officer, a new leadership role created to strengthen the company’s position in applied AI and to deliver cutting-edge, technology-driven solutions for clients worldwide.In her new role, Elav will be responsible for connecting WPP’s global ecosystem of technology partners with its creative and strategic talent. She will focus on fostering a culture of collaboration and agile innovation to drive applied AI and client transformation—redefining how brands engage with commerce, content, and culture. Elav will continue to report to Stephan Pretorius, Chief Technology Officer, WPP.A leading voice in responsible technology and creative innovation, Elav also serves as an advisor to the Spotify and Meta Creative Councils and is a founding member of the leadership community Chief.Her appointment underscores WPP’s continued investment in technology and data and follows a series of strategic hires that bolster its innovation capabilities, including Daniel Barak as WPP's first Global Creative and Innovation Lead, Sarah Salter as VP of Global Partnerships & AI Innovation, and Mathieu Albrand as Director of AI Strategy and Innovation. “Innovation is at the heart of everything we do at WPP, and Elav’s promotion to Chief Innovation Officer together with the world-class team she is assembling underscores our commitment to actively shape the future of our industry,” said Stephan Pretorius, Chief Technology Officer, WPP. “She will be instrumental in ensuring our company remains at the center of technology-driven innovation, translating the power of applied AI into concrete solutions that drive material business impact for our clients.” “Never before has the need for innovation and agility been more critical than in our AI era,” said Elav Horwitz, Chief Innovation Officer, WPP . “We must show our teams, clients and the entire industry what's possible by uniting the best talents, capabilities, partners and a forward-thinking mindset, enabling us to deliver results in a matter of hours and make the future both tangible and democratised.” [caption id=attachment_2477139 align=alignleft width=200] Cindy Rose [/caption] “As we rewrite the marketing playbook for the AI era, we’re thrilled to have Elav lead our innovation agenda,” said Cindy Rose, CEO of WPP. “This appointment underscores our investment to embed innovation into the core of everything we do, ensuring our clients benefit from the most advanced and effective solutions. Under Elav’s leadership, WPP’s innovation team will focus on three core pillars designed to deliver transformative client outcomes:Innovative Talent:Building on WPP’s network of over 50 emerging creative technologists from its Creative Tech Apprenticeship Programme, Elav’s team will drive rapid prototyping, experimentation, and AI-powered production for brands. The programme—now expanding with Google as the primary curriculum partner—trains participants in creative coding, generative AI, and robotics over nine weeks to solve real-world client challenges.Cutting-Edge Technology Models:WPP will deepen client access to advanced AI models through strategic collaborations with Adobe, Amazon, Google, IBM, Meta, Microsoft, Roblox, Spotify, Stability AI, TikTok, Universal Music Group, and Vercel, among others. WPP will also partner with emerging AI startups, integrating their technologies into its ecosystem to deliver campaign-ready assets in days and achieve efficiency gains of up to 70%.Innovation in Motion:Elav’s team will champion co-creation through WPP Open and WPP Open Pro, embedding AI across creative, production, and media workflows. A new AI Client Council will invite key clients to test and scale emerging technologies collaboratively, accelerating adoption and impact across industries.These initiatives are already driving measurable outcomes, with recent projects such as AKQA’s “The Generative Store” showcasing new standards in personalized retail and campaign innovation.Elav’s appointment follows the launch of WPP Open Pro, the latest version of WPP’s AI marketing platform that empowers clients to independently plan, create, and publish campaigns—bringing the company’s world-class AI capabilities directly to brands of all sizes.
திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்தநாளில், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) லண்டனில் வசிக்கும் திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் கற்றல் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கான இடர்கால கற்றலுக்கான வசதிக்கு கொப்பிகள் அந்த கற்பகபுரம் அபிவிருத்தி உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. புங்குடுதீவை பூர்வீகமாக் கொண்ட அமரர்கள் சொக்கர் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் லண்டனில் வசிக்கும் ஆனந்தன் என அழைக்கப்படும் […]
ஐபிஎஸ் அதிகாரிகளை மீண்டும் வம்புக்கு இழுத்த சவுக்கு சங்கர் - கரூரில் பேசியது என்ன்?
சென்னை ஆணையர் அருண், டிஐஜி வருண்குமார் போன்றோரை யூடியூபர் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிஎஸ்கே இந்த 3 வீரர்களை தான் எடுக்கும்! அடிச்சு சொல்லும் அஸ்வின்!
சென்னை : ஐபிஎல் 2026 மெகா ஏலத்தை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி எந்த வீரர்களை இலக்காக வைக்கும் என்று தனது யூடியூப் சேனலில் விரிவாகப் பகிர்ந்துள்ளார். கேமரூன் கிரீன் பற்றி பலரும் பேசினாலும், சிஎஸ்கே அவரை குறிவைக்காது என்றும், மாறாக மூன்று வீரர்களை மட்டுமே தீவிரமாகத் தேடும் என்றும் அஸ்வின் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் “சிஎஸ்கே முதலில் டேவிட் மில்லர் […]
லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று ( கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில்… The post பிரசன்ன பிணையில் விடுதலை appeared first on Global Tamil News .
வங்கதேசம், அயர்லாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், முகமதுல் ஹசன் ஜாய் அபாரமாக செயல்பட்டு ரன் மழை பொழிந்து வருகிறார். மேலும், மற்ற பேட்டர்களும் தொடர்ச்சியாக அதிரடி காட்டுகிறார்கள்.
பழைய தங்கத்தை மாற்றிக் கொள்ள சிறந்த வாய்ப்பு- கோல்ட எக்ஸ்சேஞ்ச் மேளாவை அறிவித்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்
வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கோல்ட எக்ஸ்சேஞ்ச் மேளா-வை ஜிஆர்டி ஜுவல்லாஸ் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்க நகைகளை கொண்டு வந்து. ஒரு கிராமிற்கு ரூ 150 கூடுதலாக பெறும் சிறப்பான வாய்ப்பையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இந்தக் குறுகிய கால சலுகை, வாடிககையாளர்கள் தங்களின் பழைய ஆபரணங்களை மாற்றி, திருமணங்கள் மற்றும் விசேஷ தருணங்களுக்கு புதிய அழகான நகைகளை ஜிஆர்டியிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் சிறந்த வாய்ப்பை அளிப்பது குறிப்பிடத்தக்கது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இந்த முயற்சியைப் பற்றி பேசும் போது, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா திரு. ஜி.ஆர, 'ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள் கூறினார். 'பழைய தங்கத்தை மாற்றுவதற்கான சிறந்த நேரம் இதுதான்! எங்கள் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளாவின் மூலம், வாடிக்கையாளாகள் கூடுதல் மதிப்பைப் பெற்று. தங்களின் கொண்டாட்டங்களை இன்னும் சிறப்பாக மாற்றிக் கொள்ளலாம். மேலும, ஜிஆர்டி ஜுவல்லாஸ நிறுவனத்தின் மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், -கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளா-வின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்தை, அவர்களின் இல்ல திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு ஏற்ற அற்புதமான புதிய வடிவமைப்புகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். மேலும், ஒரு மகிழ்ச்சிகரமான எங்களது ஜிஆர்டி Golden Eleven Flexi Plan'-ஐ பற்றி இந்நேரத்தில் கூற கடமைப்பட்டுள்ளேன்: இந்த மாதந்தோறும் நகை வாங்கும் திட்டமானது. 18% வரை சேதாரம் (VA) இல்லாமல் நகைகளை வாங்கிக் கொள்ளுங்கள். இது வாடிக்கையாளர்களுக்கு தங்க விலை மாற்றங்களில் இருந்து ஒரு விடுதலையை வழங்குவதுடன் எடை அல்லது மதிப்பை அடிப்படையாகக் கொண்ட சுலபமான விருப்பங்களையும் வழங்குகிறது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ். இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்கு பெயர் பெற்றது. தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களின் நேர்த்தியான கலெக்ஷன்களுடன். இந்த நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இன்று, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தென்னிந்தியா முழுவதும் 65 க்கும் மேற்பட்ட ஷோரூம்களையும் மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளைகளுடன் மொத்தம் 66 கிளைகளுடன் இயங்கி வருகிறது. மேலும் பாரம்பரியமான தன்னுடைய கலைநயம் மற்றும் நம்பகத்தன்மையை ஒருங்கிணைத்து, தன்னைச் சார்ந்த சமூகங்களுக்கான அர்ப்பணிப்பை தொடர்கிறது.
செங்கோட்டையில் ஒரு ‘பளிச்’ சத்தம்: 56 இன்ச் துணிச்சலும், எதிர்க்கட்சிகளின் ‘புலம்பல்’ தேசபக்தியும்!
டெல்லியின் பாதுகாப்பு நிறைந்த செங்கோட்டைப் பகுதியில் கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது சாதாரண இன்ஜின் கோளாறு இல்லையாம், வெடிபொருள்
அமெரிக்காவால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.. என்ன தெரியுமா?
இந்தியாவில் இருந்து பெரிய செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு ரஷ்யா போன்ற நாடுகளை நம்பி இருந்த இஸ்ரோ, இப்போது விண்வெளி சோதனைகளில் உலகிற்கு நம்பிக்கையின் கதிராகக் பார்க்கப்படுகிறது.

26 C