US Highlights South Korea’s Role in Trump Administration’s Energy Strategy
The United States has recognized South Korea’s key role in the energy strategy during the Trump administration. Officials from the
Thug Life: ``மொழி போர் நடந்துட்டு இருக்குற நேரம்; இது எங்களுடைய மும்மொழி திட்டம் - நடிகர் கமல்
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், 'தக் லைஃப்' எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியிட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். Thug Life press meet இதில் பேசியிருக்கும் கமல், இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் இப்போது பேசுறேன். இது அரசியல் கிடையாது. தமிழனின் யதார்த்தம். விருந்தோம்பல் தமிழனுக்கு கைப்பழக்கம். இதை 2000 வருஷமாக செய்றோம். இன்னைக்கு வெவ்வேறு பகுதிகள்ல இருந்து வந்திருக்காங்க. அபிராமி 11 வயசுல நடிக்க வந்ததாக சொன்னாங்க.. பக்கத்துல த்ரிஷா இருக்காங்கனு பார்த்து சொல்லியிருக்கலாம். அப்படிதான் சிம்பு வந்தாரு இப்போதும் மணி சாருக்கும் எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள்தான் 'நாயகன்' மற்றும் 'தக் லைஃப்' திரைப்படங்கள். வியாபாரக் கணக்குல சிலரைப் படதுக்குள்ள கொண்டு வருவாங்க. மக்கள் முடிவுக்கும் விருப்பதுக்கு விநியோகஸ்தர்கள் தலை வணங்குவாங்க. அப்படிதான் புதிய திறமைகள் வர்றாங்க. அப்படிதான் சிம்பு வந்தாரு. அவங்க அப்பா வந்தாரு. இயக்குநர் பெயர் வெறும் மணி ரத்னம் கிடையாது. 5.30 மணி ரத்னம். சரியாக அத்தனை மணிக்கு வந்திடுவார். இரவு முழுக்க அதே நினைப்போடா இருந்தால்தான் அலாரம் இல்லாமல் வரமுடியும். 'நாயகன்' படத்துல இருந்தே அவருக்கு இந்தப் பழக்கம் இருக்கு. இந்த விஷயத்துல அவர்கிட்ட நான் பாலசந்தரைப் சாரை பார்த்தேன். டி.ஆருக்கு என் மேல அளப்பரிய பிரியம். எனக்கு ஒன்னுனா ஓடி வந்திடுவார். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்ங்கிற மாதிரி சிம்புவும் குறையாமல் பாசம் காட்டினார். இந்தப் படத்துல எனக்கு ரெண்டு கதாநாயகிகளும் ஐ லவ் யூ சொல்லவே இல்ல. இந்தப் படத்தில எனக்கு ஐ லவ் யூ சொன்ன ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ்தான். நானும் ரஹ்மானும் ஒப்பன்ஹைமர் சினிமாவை ஒன்றாக லாஸ் ஏஞ்சல்ஸ்ல பார்த்தோம். Thug Life: கமல் சார் என்னுடைய குரு; ஒரு ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படம்.. - நெகிழ்ந்த நடிகர் சிம்பு மணிரத்னம் முதல் முறையாக..! இன்னைக்கு பலரும் எழுத நினைக்கிறார்கள். அது தவறு கிடையாது. ஆனால் ஒருங்கிணைந்து செயல்படுவதே முக்கியம். நான் முன்னாடி சொன்ன கதை பிடித்திருந்ததாக மணி சொன்னாரு. அந்த கதையிலிருந்து இன்ஸ்பயராகி அவர் களத்துல பயணிச்சிருக்கார். பெண்ணை கொடுத்தாச்சு. மாப்பிளை அவரு. குழந்தை எப்படி வருதுன்னு பார்க்கணும். நடிகர் கமல் மணிரத்னம் முதல் முறையாக ராஜ் கமல் நிறுவனத்துல படம் பண்ணியிருக்கார். இந்தப் படம் கண்டிப்பாக ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள் அதனால்தான் இந்த நம்பிக்கை. நான் இப்போது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தால்கூட சினிமா பற்றிதான் பேசுவேன். நீங்க கேட்கிற எல்லா விஷயங்களும் இருக்கும். ஆனா, வேற மாதிரி இருக்கும். பழகுனா சினிமாவையே நீங்க பார்பீங்களா? நான் தினமும் கத்துக்கிறேன். கத்துகிட்ட விஷங்களை மறக்க நினைக்கிறேன். மொழி போர் நடந்துட்டு இருக்குற நேரம். இது எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால்தான் ரஹ்மான் கொடுத்த ஐடியாவை ஜிங்குச்சானு வார்த்தையை பயன்படுத்தினோம். அது சீனா வார்த்தையாகக் கூட இருக்கலாம். என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.
Russian Embassy Denies Airstrike on Indian Pharma Warehouse in Kyiv, Accuses Ukraine of the Attack
The Russian Embassy in Ukraine has denied carrying out an airstrike on an Indian pharmaceutical warehouse in Kyiv. The embassy
கொழும்பு அரச வங்கியொன்றில் தீ விபத்து
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் இன்று (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை: மீனாவுக்கு எதிராக நடக்கும் சதி.. சிந்தாமணியுடன் கூட்டணி சேர்ந்த விஜயா!
சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் மண்டப ஆர்டருக்கு பணம் ரெடி பண்ணுவதற்காக அலைந்து கொண்டு இருக்கிறாள் மீனா. இதனிடையில் சிந்தாமணியுடன் கூட்டணி சேர்ந்து அவளுக்கு பணம் கிடைக்குறதுக்கான வாய்ப்பே இல்லை என சொல்லி சந்தோஷப்படுகிறாள் விஜயா. இதனையடுத்து இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்டில் நடந்தவை குறித்து தற்போது பார்க்கலாம்.
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுக பகுதியை குறிவைத்து நடத்தப்பட்டது எனக் கூறப்படுறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வருவாய் ஆதாரங்களை தடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. […]
Red Comet Films crafts a visual punch for Bangur Cement’s latest Campaign
New Delhi: Red Comet Films (RCF), the Delhi-based production house known for its cinematic storytelling and brand-led content, has teamed up with creative agency Ginger Monkey to launch a striking new ad campaign for Bangur Magna Cement. Built around the compelling insight that “what’s truly strong doesn’t need to shout,” the campaign combines visual tension with storytelling simplicity to deliver a lasting message: when it comes to building a solid home, the quality of concrete makes all the difference.Directed by Vikalp Chabbra and produced by Ankit Ahuja, the film features acclaimed actors Abhishek Banerjee in the Hindi version and Suhas in the Telugu adaptation. The ad opens with a relatable yet high-stakes premise: two teams compete to build the strongest house possible using different materials. The suspense builds until a single hammer blow reveals the winner — the home constructed with Bangur Magna Cement.[caption id=attachment_2456802 align=alignleft width=200] Ankit Ahuja[/caption] “There is something powerful about letting the product speak for itself. Our goal was to make you feel the difference, not just hear about it. That is what this film does. And having actors like Abhishek and Suhas bring it to life across languages just made it hit harder,” said Ankit Ahuja, Founder and Producer at Red Comet Films. The film creatively illustrates the core value of strength without resorting to excessive dialogue or overt branding, instead relying on cinematic impact to communicate its message.[caption id=attachment_2456800 align=alignright width=200] Sushrut Pant[/caption]Commenting on the brand’s intent, Sushrut Pant, Marketing Head, Shree Cement Ltd, said, “Our brand Bangur Cement strives to solve the problems of our key consumer segment, the independent home builders. The homes they build would only be as good as the concrete they use and with our premium products, Bangur Magna and Bangur Roofon Plus, we promise them solid concrete solutions for solid homes. We have identified a unique insight that consumers worry about the quality of unbranded items used for concrete like sand, aggregates, and water. We solve for this concern by reassuring consumers through our advertisements that with Magna and Roofon Plus cement they do not need to worry about the quality of concrete.” [caption id=attachment_2456801 align=alignleft width=200] Abhishek Asthana[/caption] Ginger Monkey’s founder Abhishek Asthana elaborated on the creative approach, “The best kind of storytelling is when the message lands without saying much. This film is built on that belief, where a simple test becomes a metaphor for trust, and strength becomes something you feel. The challenge was to keep it rooted, relatable, and rewarding and the result is a story that sticks.” Director Vikalp Chabbra emphasized the visual tone and emotional impact of the piece, “We wanted to create an ad that feels real and stays with you, not just another product demonstration. We focused on visual tension and contrast, building up to a payoff that is both satisfying and rooted in truth.” This campaign adds to Red Comet Films’ impressive portfolio, which spans a diverse clientele including Mini Cooper, Platinum Guild India, The Este Lauder Companies, and Pee Safe. Known for its ability to balance cinematic craft with brand clarity, RCF continues to push creative boundaries while staying grounded in storytelling that connects.https://youtu.be/MFnllUt9uVc?si=z0I6Tci05jmhO8Cvhttps://youtu.be/mp5BtE79krQ?si=lZIFKfnl1V4HsZIM
On the occasion of Prakash Parv, Union Home Minister Amit Shah paid tribute to Guru Tegh Bahadur and praised his
பணம் –தங்கத்துடன் காவல்துறை கான்ஸ்டபிள் உள்ளிட்டோா் கைது
தெவுந்தர – ஹும்மன வீதியில் மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட… The post பணம் – தங்கத்துடன் காவல்துறை கான்ஸ்டபிள் உள்ளிட்டோா் கைது appeared first on Global Tamil News .
Aditya Vasan Singla appointed Co-Chair of ICCO NextGen Board 2025
Gurugram: Aditya Vasan Singla, Principal at Astrum, India’s first science-based specialist reputation management advisory, has been appointed as Co-Chair of the International Communications Consultancy Organisation (ICCO) NextGen Board for 2025. The appointment, effective from March 12, 2025, marks a significant milestone in ICCO’s mission to nurture future-ready talent in the global communications industry.The ICCO NextGen Board 2025 continues the organization’s legacy of fostering professional development, knowledge-sharing, and innovation across borders. Representing a diverse mix of emerging leaders from around the world, the board aims to redefine how the communications industry attracts, develops, and retains young talent in an ever-evolving global landscape. “I feel privileged to be offered this opportunity to collaborate with some of the brightest minds across the globe to aid the development of the NextGen talent and best practices for the global public relations industry,” said Aditya Vasan Singla. “I believe it is crucial for us to collaborate and co-create solutions that push our industry forward, ensuring we are future ready and resilient.” Ashwani Singla, Founding Managing Partner of Astrum , expressed his support for the appointment, “ICCO’s focus on the NextGen talent is a step in the right direction to fuel excellence and attract the brightest minds as practitioners of strategic communications. I am delighted that Aditya is contributing to advance this laudable objective.” The newly appointed board will be co-chaired by Karishma Hingorani (Middle East Public Relations Association - MEPRA) and Aditya Vasan Singla (Public Relations Consultants Association of India - PRCAI), alongside a distinguished team of young PR leaders including Srishti Sharma (PRCAI - India), Rumyana Tancheva (Bulgarian Association of PR Agencies - BAPRA), and Zahra Zakriya (MEPRA - UAE).The ICCO NextGen initiative is a vital part of ICCO’s broader strategy to empower the next generation of communication professionals. Through global engagement, actionable platforms, and peer-led innovation, the group has emerged as a vibrant think tank and springboard for young talent in the PR and strategic communications industry.Aditya brings nearly a decade of consulting experience in ESG and Strategic Communications. His professional journey includes key roles at PwC and ERM, where he led multidisciplinary teams on complex mandates for multinational corporations. Aditya began his career in the Office of Shri Piyush Goyal, a senior minister in the Indian government, focusing on political communications and policy research.He holds an MSc in Environmental Economics from the London School of Economics (LSE) and a MA in Economics and Geography from the University of Aberdeen, Scotland. Passionate about global collaboration and innovation, Aditya is widely regarded for his ability to bridge policy, communications, and sustainability in transformative ways.
FBI Arrests Harpreet Singh for Involvement in Terror Attacks in Punjab
The Federal Bureau of Investigation (FBI) has arrested Harpreet Singh for his role in planning and supporting terror attacks in
காவலிலுள்ள சந்தேகநபர் வழங்கிய தகவலின்படி ஆயுதங்கள் மீட்பு
கடந்த 12 ஆம் திகதி அதுருகிரிய காவல்துறை அதிகாரிகள் குழுவால் 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ்… The post காவலிலுள்ள சந்தேகநபர் வழங்கிய தகவலின்படி ஆயுதங்கள் மீட்பு appeared first on Global Tamil News .
Anurag Kashyap: `சாதி இல்லை என்றால் நீங்களெல்லாம் யார்?’ - பூலே பட விவகாரத்தில் அனுராக் காட்டம்
அனுராக் கஷ்யப் பூலே திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூகத்தினர் மீது விமர்சனங்களை வைத்துள்ளார். சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டத் திரைப்படம் பூலே. Phule Movie அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது பல்வேறு பிரச்னைகளால் ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பூலே படத்துக்கு திரைப்பட தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ‘மஹர்’, ‘மாங்’, ‘பேஷ்வாய்’ உள்ளிட்ட சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றும், 3000 ஆண்டுகள் அடிமைத்தனம் என்பதை எத்தனை ஆண்டுகள் அடிமைத்தனம் என மாற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இயக்குநர் மகாதேவன் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் அனுராஜ் கஷ்யப். அது ஒரு மோசடி அமைப்பு என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சாடியுள்ளார். முழு அமைப்பும் மோசடியானது அனுராக் காஷ்யப் பஞ்சாப் 95, டீஸ், தடக் 2, புலே - இன்னும் எத்தனை படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று எனக்குத் தெரியவில்லை... இந்த சாதிய, பிராந்தியவாத, இனவெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது. எனக் கூறியுள்ளார். அவர்களை எது தொந்தரவு செய்கிறது என்பதை வெளிப்படையாகக் கூட சொல்ல முடியாத கோழைகள். என்றவர், ``திரைப்படத்தை எதிர்க்கும் குழுக்கள் எப்படி வெளியீட்டுக்கு முன்பே படத்தை அணுகுகின்றனர்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் அமைப்புகளும் குழுக்களும் படத்தை வெளியிடுவதற்கு முன்பே, யாரும் அனுமதி வழங்காமல் எப்படிப் பார்க்கிறார்கள்? முழு அமைப்பும் மோசடியானது, என எழுதியுள்ளார். சாதி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் யார்? மற்றொரு பதிவில் சாதியை சுற்றியுள்ள முரண்பாடான கருத்துகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். தாடக் 2 திரைப்படத்தின் தணிக்கையின்போது இந்தியாவில் சாதிய அமைப்பை மோடி ஜி ஒழித்துவிட்டார் என்று எங்களிடம் சொன்னார்கள். View this post on Instagram A post shared by Anurag Kashyap (@anuragkashyap10) இங்கே சாதிய அமைப்பு இல்லை என்றால், ஏன் பிராமணர்கள் பூலே திரைப்படததின் மீது கோபம்கொள்கின்றனர்? சாதி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் யார்? ஏன் கோபத்தில் கொதிக்கிறீர்கள்? சாதிய அமைப்பு இல்லை என்றால் எப்படி ஜோதிராவ் பூலே சாவித்ரிபாய் பூலே இன்னும் பேசுப் பொருளாக இருக்கிறார்கள், இந்தியாவில் சாதி உள்ளதா இல்லையா என்று முடிவு செய்யுங்கள். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என வெளிப்படையாக எழுதியுள்ளார். Bison: ``வாழ்நாள் அனுபவம், ஆன்மாவை வலிமைப்படுத்தியது.. -துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் சொல்வதென்ன?
துபாய்ல இனி எவ்ளோ மழை கொட்டினாலும் வெள்ளம் வராது.. 1.43 பில்லியன் திர்ஹம்ஸில் அதிரடி திட்டம்!
துபாயில் வெள்ளப்பாதிப்புகளை தடுக்கும் வகையில் 1.43 திர்ஹம் அளவில் அதிரடி திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துபாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் உயிரிழந்த நிலையில் துபாய் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Gujarat Government to Start Buying Chana and Mustard at MSP from April 21
The Gujarat government has announced that it will start buying chana (gram) and mustard directly from farmers at Minimum Support
IPL 2025 : ‘சாம்சனுக்கும், டிராவிட்டுக்கும் சண்டை’.. வைரலாகும் வீடியோ: என்ன காரணம்? முழு விபரம் இதோ!
சஞ்சு சாம்சனுக்கும், ராகுல் டிராவிட்டிற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சாம்சன் அணியைவிட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Zee Kannada Dominates Viewership Charts as Regional Entertainment and Sports Thrive in Karnataka
Bengaluru: The Kannada television industry continues to witness impressive growth, fueled by a strong lineup of culturally resonant entertainment and increasingly popular regional sports content. According to the latest viewership data for the 2+ target group (TG) in Karnataka, Zee Kannada has emerged as the undisputed leader among Kannada-language channels, setting a benchmark for others in the regional broadcasting landscape. Zee Kannada Leads with Unmatched Numbers Topping the charts with a commanding weekly Average Minute Audience (AMA) of 1432.3 (in thousands) , Zee Kannada has solidified its position at the forefront of Kannada television. This staggering number places the channel miles ahead of its competitors, with a lead of over 770 AMA points from the second-ranked channel. Zee Kannada’s enduring popularity stems from its winning mix of serial dramas, high-energy reality shows, and culturally rooted programming that resonates deeply with viewers across Karnataka. Colors Kannada Holds Steady at Second Place In the second spot, Colors Kannada posted a weekly AMA of 657.82 , maintaining a strong and stable presence in the market. The channel continues to captivate a wide-ranging demographic with its family dramas and engaging weekend reality shows. While the gap between Colors Kannada and Zee Kannada is significant, Colors’ consistency ensures it remains a key player in the Kannada GEC (General Entertainment Channel) space. Star Suvarna Gains Ground in Close Competition Star Suvarna takes the third position with a weekly AMA of 549.7 , showcasing a steady and growing connection with Kannada audiences. The channel’s strategy of offering a diverse mix of serials, comedy programs, and lifestyle shows has helped it close in on Colors Kannada, hinting at an evolving rivalry for the second spot in the weeks ahead. Udaya TV Retains Loyal Viewership At number four is Udaya TV , a legacy brand in Kannada entertainment, with an AMA of 379.83 . Despite intensifying competition, Udaya continues to draw a dedicated viewership base, thanks to its nostalgic programming and strong brand recall among older audiences. Its continued relevance is a testament to its enduring content strategy. Regional Sports on the Rise with Star Sports 1 Kannada Rounding out the top five is Star Sports 1 Kannada , notching a weekly AMA of 317.16 . Its presence in this elite list marks a significant shift in viewer preferences, with regional sports—especially cricket—capturing the attention of Kannada-speaking audiences. The channel’s localized commentary and coverage of marquee events like the Indian Premier League (IPL) and the Karnataka Premier League (KPL) are major contributors to its growing popularity. The latest data underscores the dynamic nature of Kannada television, where both entertainment and sports content are driving viewership. Zee Kannada’s dominance highlights the power of culturally aligned programming, while the rise of regional sports channels like Star Sports 1 Kannada indicates a broadening horizon for content consumption in Karnataka.
PM Modi Wishes for Peace and Unity to Prevail on Good Friday
Prime Minister Narendra Modi shared his heartfelt wishes on Good Friday. He expressed his hope that the spirit of peace,
இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் காஸா! அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்!
காஸாவின் பல்வேறு இடங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். வடகிழக்கு காஸாவின் அல்-துஃபா பகுதியிலுள்ள ஹஸ்ஸொவ்னா குடும்பத்தின் வீட்டின் மீது நேற்று முன்தினம் (ஏப்.16) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் பொது பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் மஹ்மொத் பசல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 3 பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளதாகவும், அவர்களது தாக்குதலில் […]
நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீ. 2023-ல் வெளியான இறுகப்பற்று திரைப்படத்திற்கு பிறகு வேறு படத்தில் நடிக்காமல் இருந்த ஸ்ரீ, சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தான் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. நல்ல திறமையான நடிகராக அறியப்பட்ட ஸ்ரீ, ஆளே மாறிப்போய் மெலிந்த தோற்றத்தில் நிறைய முடி வளர்த்து […]
ஸ்ரீ சிகிச்சையில் இருக்கிறார்; அவரது வீடியோக்களை நீக்குங்கள் - லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கை
'வழக்கு எண் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'மாநகரம்' போன்ற திரைப்படங்களின் மூலமாக நமக்குப் பரிச்சயமானவர் நடிகர் ஶ்ரீ. இவரின் சமூக வலைத்தளப் பக்கத்தின் பதிவுகள்தான் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மிகவும் உடல் மெலிந்த நிலையில் இருக்கும் அவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் தற்போது தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. இதையறிந்த அவர்களது நண்பர்கள், நடிகர் ஶ்ரீ தங்கியிருக்கும் இடத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்வதாகக் கூறியிருந்தனர். நடிகர் ஸ்ரீ இந்நிலையில் தற்போது நடிகர் ஶ்ரீ மீட்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையில் நலம் பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அவரது தற்போதைய நிலை குறித்த வீடியோக்களையும், வதந்திகளையும் இணையதளங்கள், சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அதுதொடர்பான அறிக்கையைப் பகிர்ந்திருக்கும் 'மாநகரம்' படத்தில் நடிகர் ஶ்ரீயை இயக்கிய லோகேஷ் கனகராஜ், நடிகர் ஸ்ரீக்குத் தற்போது மருத்துவ நிபுணர் சிகிச்சை அளித்து வருகிறார். அவரது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிலகாலம் விலகி இருக்கிறார் என்பதை அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீ குணமடைந்து இயல்பு வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவருக்கு இப்போது பிரைவசி தேவைப்படுவதை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீ-யின் நிலை குறித்த ஊடகங்களின் செய்திகளும், பரவும் தவறான தகவல்களும் மிகவும் வேதனை அளிக்கின்றன. மேலும், ஸ்ரீ-யின் உடல் நிலை குறித்த வதந்திகள், தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு இணைய ஊடகங்கள் மற்றும் ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம். pic.twitter.com/KAx4QxH7uF — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 18, 2025 ஸ்ரீ-யின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் தொடர்புடைய ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் அல்லது நேர்காணல்களை நீக்குமாறும், அவர் குணமடைவதில் கவனம் செலுத்தும் வேளையில் அவரது பிரைவசியை மதிக்குமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம். சில நபர்கள் நேர்காணல்களில் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனை முழுமையாக மறுக்கிறோம். இந்தத் தருணத்தில் உங்களது தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார். Actor Sri: ஆபாச கேப்ஷன்; ஆளே மாறிப்போன ஶ்ரீ... ரசிகர்கள் வருத்தம்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX Vikatan Whatsapp Channel
From Fantasy to Finance: Who’s Watching What in IPL 2025 Ad Land – eDART-IPL25 study
As the Indian Premier League 2025 enters its third week, it’s clear that the tournament continues to be more than just a cricketing spectacle. With platforms like Star Sports and JioCinema (JioHotstar) battling for viewer attention, and brands vying for resonance across a highly fragmented audience, the latest data offers fascinating insights into what’s truly cutting through the clutter. According to the Week 3 highlights report and the ongoing eDART-IPL25 study conducted by CrispInsight and Kadence International , IPL’s advertising ecosystem is witnessing a clear demographic divide in terms of brand recall, engagement, and content preferences. Gender-Based Brand Recall Patterns The study, based on inputs from over 20,000 viewers across 60+ cities, reveals striking differences between male and female viewers in terms of brand association: 21% of men recalled automobile brands , while 17% of women recalled food and snack brands. Women were also more likely to recall ads related to two-wheelers (6%) and personal care (3%) . Meanwhile, men displayed high recall for fantasy sports (48%) , tyres (16%) , and financial services (6%) . These findings highlight how different categories resonate based on lifestyle and values, not just ad frequency. Age-Based Recall Trends Audience age also plays a key role in brand recall: 15–19-year-olds showed high responsiveness to fantasy sports (39%) and beverage brands (23%) . In contrast, the 45+ demographic recalled brands in banking (29%) , liquor (21%) , and e-commerce (18%) , reflecting their consumption priorities and lifestyle preferences. Platform & Format Engagement While Star Sports retained its leadership in TV viewership with a 10.3% market share , JioCinema (JioHotstar) made notable strides in digital engagement, especially through its regional language offerings. Languages such as Tamil and Bhojpuri saw significant spikes in consumption, driven by vernacular commentary and second-screen features like live polls and AR overlays. Brand Campaign Performance Some standout campaigns from Dream11 , CRED , and Swiggy Instamart leveraged interactive formats like gamification , fantasy leagues , and influencer activations to boost recall—especially among Gen Z . However, as the study points out, relevance is emerging as a stronger driver of recall than just visibility. “Even within the same telecast, brand impressions vary drastically across demographics,” said a CrispInsight spokesperson. “Brands that align with the viewer’s identity—especially among women and younger audiences—tend to outperform expectations.” A Call for Inclusive Advertising Aman Makkar, Partner at Kadence International, emphasized the opportunity brands have with women as an under-leveraged demographic in sports marketing. “Categories like snacks, wellness, and mobility should adopt a more inclusive approach. The ROI is evident when messaging is targeted and authentic.” The key insight from Week 3 is clear: in IPL 2025’s fiercely competitive ad landscape, the winners will be brands that go beyond broad-based visibility to create deeper, more meaningful connections . With more matches to come and an increasingly diverse IPL audience, the message for marketers is unambiguous— relevance beats reach .
தீயில் முற்றாக எரிந்து நாசமான கடை
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வியாழக்கிழமை (17) மாலை ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக கடை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது. கடைக்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளும் முற்றாக எரிந்துள்ளதாக தெரிய வருகிறது. அருகில் உள்ள கிருஸ்தவ தேவாலயத்தில் பெரிய வியாழன் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் அங்கிருந்த இளைஞர்கள் ஓடி வந்து தீப்பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் கடை […]
அதிமுக: தலைமையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்காதீர்கள் - கட்சியினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்
தலைமையின் அனுமதி இல்லாமல் யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு அதன் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது... கழக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள்! கழக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டு; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும். அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிக்கை! ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. `டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது' -எடப்பாடி தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/TxhoVRNRIR — AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) April 17, 2025 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள்; இறுக்கிப் பிடிக்கும் சட்டங்கள்... | பூப்பு முதல் மூப்பு வரை
பன்னிரண்டு மாதங்களுக்கு மேலான பாதுகாக்கப்படாத தொடர் உடலுறவுக்குப் பிறகும், ஒரு தம்பதியருக்கு குழந்தைப்பேறு கிடைக்காத நிலையைத் தான் 'Infertility' எனும் கருவுறாமை நிலை என மருத்துவர்கள் அழைக்கின்றனர். பொதுவாக இயற்கையாகக் கருத்தரிக்கவியலாத காரணங்கள் ஆண்-பெண் இருவரில் ஒருவரிலோ, அல்லது இருவருமிலோ இருக்கக்கூடும் என்றாலும், அவற்றை எளிய சிகிச்சை முறைகளால் குணப்படுத்த முடியாத நிலையில், அடுத்து மேற்கொள்ளப்படுவது தான் 'Assisted Reproductive Techniques' (ART) எனும் செயற்கைக் கருத்தரித்தல் முறை. இந்த செயற்கைக் கருத்தரிப்பு முறைகளில் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றையும், அவற்றிற்கான ஏன், எதற்கு, எப்படியையும் இனி பார்ப்போம்.. பொதுவாக, IUI (In Utero Insemination) எனும் செயற்கை விந்தூட்டல் முறை, IVF (In Vitro Fertilization) எனும் சோதனைக்குழாய் முறை மற்றும் Surrogacy என்னும் வாடகைத்தாய் முறை ஆகிய மூன்று செயற்கை கருத்தரித்தல் முறைகளே கருவுறாமை சிகிச்சையில் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன. Infertility இங்கிலாந்து மருத்துவர்கள் ராபர்ட் எட்வர்ட்ஸ் மற்றும் பாட்ரிக் ஸ்டெப்ட்டோ ஆகியோரின் முயற்சியால் லூயிஸ் பிரவுன் என்ற உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை பிறந்து கிட்டத்தட்ட 48 வருடங்கள் கடந்த இன்றைய நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) வாயிலாக விந்தணு மற்றும் கருமுட்டைகளின் தரம் ஆய்வு, சினைப்பை புத்துயிர்ப்பு (Ovarian rejuvenation) சிகிச்சை, செயற்கை கருவிலேயே மரபணுக்கள் பரிசோதனை (PGT) உள்பட பல அதிசயிக்கத் தக்க மாற்றங்களை செயற்கை கருத்தரிப்பு, நாளுக்கு நாள் சந்தித்துக்கொண்டு தான் வருகிறது. மேற்சொன்ன இந்த முக்கிய செயற்கை கருத்தரிப்பு முறைகளை பற்றியும், அவற்றின் நன்மை தீமைகளைப் பற்றியும் நாம் சற்று ஆழமாகப் புரிந்துகொள்ளும் முன், சில முக்கியத் தகவல்களைப் பார்ப்போம்.. பூப்பு முதல் மூப்புவரை உன் குத்தமா, என் குத்தமா....? கருவுறாமை... காரணங்கள், பின்னணி, பரிசோதனைகள்! சவாலாக நிற்கும் கருவுறாமை: 5-ல் ஒருவருக்கு பாதிப்பு! இன்றைய இளைய தலைமுறையினர் சந்தித்துவரும் மிகப்பெரிய சவால் கருவுறாமை எனலாம். சுற்றுச்சூழல் மாசு, மேற்கத்திய உணவுமுறைகள், நோய்த்தொற்றுகள், மரபணு பிரச்னைகள் இவற்றுடன் கல்வி மற்றும் தொழில் சார்ந்த மாற்றங்கள், அதனால் தாமதிக்கும் திருமண வயது, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்கள் என பற்பல காரணங்கள் தனித்தும் ஒன்றுகூடியும், குழந்தையின்மையை ஏற்படுத்துவதும், அதற்காக அதிகளவில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதும் இன்றைய நவீன உலகில் இயல்பானதொன்றாக மாறிவிட்டது..! கட்டுரையாளர்: டாக்டர் சசித்ரா தாமோதரன் புள்ளியியல் படி, ஐந்தில் ஒரு தம்பதியினருக்கு குழந்தைப்பேறின்மை காணப்படுவதைப் போலவே, இதுநாள் வரை மிக அரிதாக பெருநகரங்களில் மட்டுமே இயங்கிவந்த செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இன்று Tier 2, Tier 3 என அழைக்கப்படும் சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். பெருகி வரும், அதேசமயம் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் இந்த அறிவியல் முன்னேற்றமானது குழந்தைப்பேறின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு, அதுவும் குழந்தைப்பேற்றுக்காக நமது நாட்டில் மட்டுமே காத்திருக்கும் கிட்டத்தட்ட 2.64 கோடி தம்பதியினருக்கு நிச்சயம் பெரு வரம் தான். உலகளவில் இந்த மாற்றங்கள் அனைத்தும் நிகழ்ந்து வருகின்றன என்றாலும், ஆசிய பசிபிக் பகுதிகளில், குறிப்பாக நமது நாட்டில் செயற்கை கருத்தரிப்பு என்பது ஒரு மிகப்பெரிய வாணிபமாக உருவெடுத்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. உலகளவில் தற்போது 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என இருக்கும் செயற்கை கருத்தரிப்பின் பங்குச்சந்தை, 2030-ம் ஆண்டிற்குள் 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 4500 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாட்டன், முப்பாட்டன் சுவாசித்த ரசாயனங்கள்: பேரன், கொள்ளுப்பேரனை பாதிக்கும்!பூப்பு முதல் மூப்புவரை நமது நாட்டிலும், வருடத்தில் 2-2.5 லட்சம் ஐ.வி.எஃப். சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தற்போதைய நிலையில், செயற்கை கருத்தரிப்பின் பங்குச்சந்தை, முந்தைய 7.8 சதவிகிதத்திலிருந்து வரும் நாள்களில் 18.08% அளவில் பொருளாதாரத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் குறைந்த செலவில் சிகிச்சை என்பதால், மெடிக்கல் டூரிசம் மூலம் வரும் வருவாயும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செயற்கைக் கருத்தரிப்பு... அதிக வருவாய் என்றாலே அதிகப் பிரச்னைகளும், தொழில்நுட்ப துஷ்பிரயோகங்களும் தான் என்பதை அறிவோம். தமிழக அரசின், அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு முறைகள் இனி செயலாக்கப்படும் எனும் சமீபத்திய அறிவிப்பு நமக்கு நினைவிருக்கும். உண்மையில் இதுவரை மத்திய அரசின் நலத்திட்டம் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும், கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் மட்டுமே செயற்கை கருத்தரிப்பு முறைகளை அரசு நலத் திட்டத்தில் இணைத்து, இவற்றை எளிமைப்படுத்தி உள்ளன என்றாலும், பெரிதும் தனியார்மயமாக மட்டுமே இயங்கும் இந்தத் துறையில் ஒழுங்கீனங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.! பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சீக்கிரமே வயதுக்கு வருவார்களா பெண்கள்?: பூப்பு முதல் மூப்புவரை கருத்தரிப்பு சிகிச்சைகளும், கோடிகளில் புரளும் வர்த்தகமும்... 13 வயதில் அடுத்தடுத்து கருமுட்டை தானம் செய்த வாரணாசி சிறுமியும், 16 வயதில் அடுத்தடுத்து கருமுட்டை தானம் செய்த ஈரோடு சிறுமியும், பல பிரபலங்களின் வாடகைத் தாய் முறைகளும், இன்னும் பிற செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளும், இதனால் கோடிகளில் புரளும் வர்த்தகமும் பல கேள்விகளையும் நெறிமுறைகளையும் நம்மிடையே எழுப்புகின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, 2008-ம் ஆண்டில் ஐசிஎம்ஆர் (ICMR) அளித்த செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பரிந்துரைகளை இன்னும் முறைப்படுத்தி, ART Bill எனும் இனப்பெருக்க சிகிச்சை மசோதாவை 2021-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அரசாங்கம், 2022-ம் ஆண்டில் ஏ.ஆர்.டி. சட்டமாக அதனை நிறைவேற்றியுள்ளது. செயற்கை கருத்தரிப்பு சில நெறிமுறைகள்... இந்த இனப்பெருக்க சிகிச்சை சட்டத்தின்படி, சிகிச்சை பெறுபவர்களும் அளிப்பவர்களும் நிச்சயம் பின்பற்ற வேண்டிய சில நெறிமுறைகளை நாம் தெரிந்து கொள்வோம்: சிகிச்சை பெறுபவர்களின் வயது வரம்பு பெண்ணுக்கு 21-50, ஆணுக்கு 21-55 என ஏ.ஆர்.டி. சட்டம் வரையறைப்படுத்தியுள்ளது. இதில் வயது சான்றிதழ், திருமணச் சான்றிதழ், தேவைப்படும் இடத்தில் விவாகரத்து சான்றிதழ் ஆகியவற்றை இந்திய பிரஜைகளுக்கும், இவற்றுடன் பாஸ்போர்ட் மற்றும் மெடிக்கல் விசாவை வெளிநாட்டவர்களுக்கும் வலியுறுத்தும் இந்தச் சட்டம், திருமணமாகாத தம்பதியினர், மூன்றாம் பாலினத் தம்பதியினர் மற்றும் தனித்து வாழும் ஆண் ஆகியோருக்கு இந்தச் சேவையை முற்றிலும் மறுக்கிறது. தம்பதியினருக்கு (commissioning couple) மேற்கொள்ளப்படும் சிகிச்சை குறித்த தெளிவான புரிதல்களும், சிகிச்சை முறையின் பக்கவிளைவுகள் மற்றும் விலை விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்த உறுதிமொழியை எழுத்துருவில் பெற வேண்டும் என்றும் அதன் ரகசியங்கள் முழுதும் காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மேலும், கருமுட்டை அல்லது விந்தணு தானம் அளிப்பவர்களின் வயதையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் வலியுறுத்துவதுடன் அவர்களது மறைகாப்பையும் (secrecy) உறுதிபடுத்தச் சொல்கிறது. மாத்திரையா, ஆணுறையா, பெண்ணுறையா... கருத்தடைக்கு எது சிறந்தது? - பூப்பு முதல் மூப்புவரை இறுக்கிப் பிடிக்கும் சட்டம்... மறுபக்கத்தில் சிகிச்சையளிக்கும் நிலையங்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இன்னும் கடினமாகும் இந்த ஏ.ஆர்.டி. சட்டம், செயற்கை கருத்தரிப்பு நிலையங்களை முதல் நிலை, இரண்டாம் நிலை (Level I, II) என்று பிரிப்பதுடன், அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை முறைப்படுத்தி, அதற்கான மருத்துவர்களின் நிபுணத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இதற்கான மருத்துவக் குழு, மருத்துவ உபகரணங்கள், அவற்றின் தரச்சான்று ஆகியன பரிந்துரைகளின்படி இருக்க வேண்டும் என்பதையும், அத்துடன், செயற்கை கருத்தரிப்பில் ஈடுபடும் ஒவ்வொரு கருத்தரிப்பு மையமும், தேசிய பதிவேட்டில் பதிவுசெய்து, அதற்கான உரிமத்தைப் பெற்று இருக்கவேண்டும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஃபாஸ்ட் புட் அயிட்டங்களா உள்ளே தள்ளுறீங்களா..? கருத்தரிப்பு வங்கிகள் (ART bank) மற்றும் வாடகைத் தாய் முறையை (Surrogacy) இன்னும் இறுக்கிப் பிடிக்கும் இந்தச் சட்டம், வணிகரீதியான செயற்கை கருத்தரிப்பில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதை அழுத்தமாக எடுத்துக்கூறுகிறது. இவையனைத்தும் முறையாக மாநில அரசின் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்தச் சட்டம், சிகிச்சை முறைகளில் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்பட்டால் 25 லட்சம் வரை அபராதம் மற்றும் 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என, அதற்கான தண்டனைகளையும் வலிமைப்படுத்தியுள்ளது. இன்று, வீதிக்கு இரண்டு ஃபாஸ்ட் புட் கடைகளைத் திறந்த நாம்தான், அதே வீதியில் ஒரு செயற்கைக் கருத்தரிப்பு மையம் அமையவும் காரணமாக இருக்கிறோம். அவற்றின் வகைகளையும் முறைமைப்படுத்தும் சட்டங்களையும் தெரிந்து கொண்ட நாம், இனி அவற்றின் செயல்பாடுகளை, அதாவது செயற்கை கருத்தரிப்பில் ஏன், எதற்கு எப்படியைத் தெரிந்துகொள்வோம்.! பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது. டீன் ஏஜில் மனநலம்... இந்த மூன்று பேருக்கும் உண்டு பொறுப்பு... பூப்பு முதல் மூப்பு வரை! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
ஒகாமி என்ற ஓநாய் வகை நாய் 50 கோடி இல்லையா? அமலாக்கத்துறை சோதனையால் வெளிவந்த உண்மை!
பெங்களூருவைச் சேர்ந்த நாய் வளர்ப்பவர் ஒருவர், லண்டனில் இருந்து 50 கோடி ரூபாய் கொடுத்து ஓநாய் வகை நாய் வாங்கியதாகக் கூறியது பொய்யானது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பொன்முடி மீது வழக்குப்பதிவு? காவல்துறை தீவிர ஆலோசனை.. பரபரக்கும் அரசியல் வட்டாரம்!
சைவம் வைணவம் தொடர்பாக ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி, கொம்பனை களமிறக்கி இருப்பதாகவும், இதனால், இனி அவர்களுக்கு வெற்றி மழை தான் என்றும், சிஎஸ்கே விருதையும் காலி செய்துவிடுவார்கள் எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
JioHotstar and Balaji Digital announce Psychological Family Thriller Kull, Streaming May 2
Mumba: JioHotstar, in collaboration with Balaji Digital, has announced its latest edge-of-the-seat thriller Kull, a gripping drama set against the backdrop of a powerful, deeply fractured dynasty. With its official teaser unveiled today, the series will premiere exclusively on JioHotstar on May 2, 2025.Centered around the enigmatic Raisinggh family, Kull delves deep into a sinister web of secrets, memory lapses, betrayal, and generational trauma. The show boasts a stellar ensemble cast featuring Nimrat Kaur, Amol Parashar, Riddhi Dogra, Gaurav Arora, Rohit Tiwari, and Rahul Vohra. Directed by Sahir Raza, the series is created by Ekta R Kapoor and Shobha Kapoor, and produced by Balaji Digital.Speaking about her role, Nimrat Kaur shared, “Kull is a reminder that sometimes the darkest secrets are the ones families hide. I play the character of Indirani who is layered, guarded, fierce and complex; and it was indeed challenging to bring her to life! This show dissects the legacy of silence and secrets and I can't wait for the audience to see how the story unravels. Kull is filled with raw emotion, and I’m so excited for everyone to experience it on JioHotstar.” Director Sahir Raza added, “Kull isn’t just a thriller, it’s a descent into the dark corners families dare not speak of. Beneath every frame lies silence, guilt, and buried truths clawing their way to the surface. This is a story about legacy, about secrets so powerful they shape generations and working alongside an extraordinary cast along with visionary minds of Ekta and Shobha Kapoor for this has been nothing short of transformative. What we’ve created is intimate, and raw and I hope audiences on JioHotstar feel every shiver, every secret, every scar we poured into it.” https://youtu.be/-Fr0bGtDO0U?si=DMiQhAwXy0Hb4ui1
Health: அடிக்கடி கிரில்டு சிக்கன் சாப்பிடுறீங்களா? மருத்துவர் எச்சரிப்பது என்ன?
அ சைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும். தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும். தந்தூரி ரொட்டி, சிக்கன் மட்டும் அல்ல. இப்போது, பல்வேறு கிரில்டு உணவுகள் எல்லா நகரங்களிலும் கிடைக்கின்றன. எண்ணெய்யில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா? விளக்கம் தருகிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சதீஷ். கிரில்டு சிக்கன் கிரில்டு உணவுகள் எப்படித் தயாராகின்றன? இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர். இதனுடன், சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர். தீயில் 20 நிமிடங்களாவது சுட்டு எடுக்கின்றனர். இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது. இறைச்சியுடன் எண்ணெய், மசாலா பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நெருப்பில் வாட்டப்படும்போது, பாதிப்பை ஏற்படுத்துகின்றன. Health: வேக வேகமாக சாப்பிட்டா ஆயுள் குறையுமா? - டாக்டர் விளக்கம்! இறைச்சிகள் தரமானவையா? குறைவான விலையில் கிடைப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சியைக்கூட வாங்கிப் பயன்படுத்துகின்றனர். மீதமாகும் இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். ஃப்ரெஷ்ஷான இறைச்சியை வாங்கிச் சமைக்கும்போது பாதிப்பு இல்லை. ஆனால், முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அசைவ ஹோட்டல்களில் 10, 15 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. தவிர, மசாலாக்கள் தடவப்பட்ட நிலையில் இன்னும் நிறையக் கோழிகள் உள்ளே ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே நாளில் தீர்ந்துவிடுவது இல்லை. எப்போது வெட்டப்பட்டது எனத் தெரியாத இறைச்சியைத்தான், நாம் வாங்கிச் சாப்பிடுகிறோம். தீயில் சுட்ட சோளம் நல்லது! சோளத்தைச் சுட்டு விற்பார்கள். அதில் ரசாயனங்களோ, நிறங்களோ, செயற்கை உப்புகளோ, எண்ணெய்யோ சேர்ப்பது இல்லை. சோளத்தைச் சுட்ட பிறகுதான், சுவைக்காக உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்கப்படுகின்றன. எனவே, இவற்றைச் சாப்பிடுவதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. Mushroom: காளான்களை ஏன் அடிக்கடி சாப்பிடணும்..? காரணம் சொல்லும் நிபுணர்கள்! கிரில்டு சிக்கன் என்னென்ன பாதிப்புகள் வரலாம்? விதவிதமான சுவைகளில் உணவை ருசிப்பது தவறு இல்லை. ஆனால், இத்தகைய உணவுகள் முழுக்க முழுக்க சுவைக்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதனால், உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை உப்பு மற்றும் நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதைச் சாப்பிடுவதால், முதலில் அல்சர் வரும். ரசாயனங்கள் கலக்கப்பட்டு பழைய இறைச்சியைச் சாப்பிடும்போது வயிறு தொடர்பான புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எப்போதேனும் ஓரிரு முறை சாப்பிட்டால், பிரச்னை இல்லை. தொடர்ந்து ஆண்டுக்கணக்காகச் சாப்பிடும் பழக்கம் இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல், புற்றுநோய் செல்கள் அதிகமாதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
Cannes Lions 2025 Jury announced: India Boasts 12 Creative Leaders
In a powerful recognition of India’s rising influence in global creative leadership, Cannes Lions International Festival of Creativity has announced its prestigious 2025 Awarding Jury line-up—and it proudly includes a remarkable group of creative minds from India. These jurors will play a vital role in evaluating and awarding the world’s best creative work from June 16–20, 2025, in Cannes, France. From advertising legends to data-driven innovators, India’s representation this year cuts across disciplines and brings a diverse and dynamic perspective to the global jury rooms. Here’s a closer look at the Indian talents shaping the creative benchmarks for the year: Josy Paul , Chairperson and Chief Creative Officer, BBDO India – serving as Jury President for the Sustainable Development Goals Lions, marking a proud moment for India’s commitment to purpose-driven creativity. Russell Barrett , Chief Creative Experience Officer, TBWAIndia – on the Brand Experience & Activation Lions Jury. Vikram Pandey , Chief Creative Officer, Leo – representing India on the Creative Data Lions Jury. Mahima Mathur , Creative Director, DDB Mudra Group – selected for the Design Lions Jury. Prasoon Joshi , Chairman – APAC, McCann Worldgroup – returning to the global stage as part of the Entertainment Lions Jury. Harshad Rajadhyaksha , Chief Creative Officer, Ogilvy India – joining the Entertainment Lions for Music Jury. Murtuza Madraswala , Head of Marketing, Content & Communications, NBA India – representing India on the Entertainment Lions for Sport Jury. Harman Dhillon , Executive Director - Beauty & Wellbeing, Hindustan Unilever – part of the Glass: The Lion for Change Jury. Prasanth Kumar , CEO South Asia, GroupM Media India – on the Media Lions Jury. Pallavi Chakravarti , Founder and Chief Creative Officer, Fundamental – on the Outdoor Lions Jury. Archana Jain , CEO, PR Pundit Havas Red – contributing to the PR Lions Jury. Mayuresh Dubhashi , Chief Creative Officer, FCB India – joining the Social & Creator Lions Jury. Simon Cook, CEO of LIONS, emphasized the importance of the jury’s role: “This year’s line-up brings together some of the most highly respected and accomplished industry talent from around the world. Their expertise will help define the creative standards that continue to drive our industry forward.” Adding to that, Marian Brannelly, Global Director of Awards, LIONS, noted, “We’re welcoming Jury members from 52 markets this year, including first-time representation from Ivory Coast and Kazakhstan, along with our highest-ever representation from Africa, Asia and the Middle East.”
பிள்ளையானின் கைதால் கலக்கமடைந்த ரணில்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் கைது செய்யப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருத்தமடைந்துள்ளார் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “வழக்கறிஞர் உதய கம்மன்பில தனது வாழ்க்கையில் ஒருபோதும் ஒரு வழக்கை வாதிட நீதிமன்றத்திற்குச் சென்றதில்லை அவர் முதலில் வாதிடுவது பிள்ளையான் வழக்குக்கே. ரணில் விக்ரமசிங்க சட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பிள்ளையானுடன் தொலைபேசியில் பேச முயற்சிக்கிறார். ஆனால் இப்போது நம்மிடம் இருப்பது முன்பு இருந்தது போன்ற பொலிஸ் அமைப்பு அல்ல. நாங்கள் மாறிவிட்டோம். அவர் முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம். ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். அடுத்து, கம்மன்பில அவருக்கு உதவ முயற்சிக்கிறார். ஒரு சாதாரண நபரை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்ட பிறகு, கம்மன்பில தான் வழக்கறிஞர் என்று கூறுகிறார். கிழக்கு மாகாணத்தில் எத்தனை குற்றங்கள் நடந்தன என்பது உங்களுக்குத் தெரியும். ஏராளமான பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகப் பேச்சு நிலவுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும் சந்தேகங்கள் உள்ளன. இவை அனைத்தும் நடைமுறையில் இருக்கும்போது, இதுபோன்ற குற்றங்கள் குறித்து விசாரிக்கப்படும் பிள்ளையானை மீட்பதில் உதய கம்மன்பில தலைவராகிறார். இந்த நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட குற்றங்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் என டில்வின் கூறியுள்ளார்.
Marketing Strategies for Legacy Brands in the Age of Millennials and Gen Z
Marketing has evolved phenomenally in scope and technology, and it’s mandatory for legacy brandssuch as PNG Jewellers who have successfully evolved by blending their deep-rooted heritage withmodern marketing techniques. To resonate with millennials and Gen Z, brands must innovate whilepreserving their authenticity and trust. Here’s a strategic approach that legacy brands can adopt toengage these younger generations.It’s best to begin with authentic storytelling via a digital-first approach . Today’s younger consumersengage more with brands that communicate authentic narratives and have a strong online presence.PNG Jewellers has embraced this by leveraging social media storytelling by showcasingcraftsmanship, behind-the-scenes processes, customer stories via Instagram Reels, and YouTubeShorts. Maintaining consistency across platforms, the brand ensures messaging across its website,marketplaces, while aligning social media with its traditional values.Encouraging user-generated content (UGC), customers sharing their PNG Jewellers experiences helpbuild trust and credibility. Adding hyper-targeted marketing and personalisation to the mix, PNGJewellers provides customer-centric communication with sales staff personally calling, visiting, andinviting loyal customers to store events such as Diwali Faral, Haldi-Kunku, and Ganpati celebrations.This impresses millennials and Gen Z, who expect personalized experiences when shopping, bothonline and offline. We also use WhatsApp marketing and direct messaging, engaging customersthrough personalized offers and updates. Then comes sports endorsements, in which we engagewith several cricket leagues by sponsoring the cricket competitions nearby our stores.In the era of influencers and celebrity collaborations, younger audiences trust influencers andcelebrities over traditional advertising. PNG Jewellers integrates this through Bollywoodcollaborations, associating with celebrities who resonate with its target audience for brandcampaigns. PNG Jewellers partners with fashion influencers to showcase collections in everydaystyling and tie up Bollywood stylists for content around campaign and products. Balancing sports andcultural endorsements with sponsorships of World Pickleball League on the one hand and theatreacts such as the one-act play competition ‘Dajikaka Theatre Play Karandak’ on the other, PNGJewellers keeps its target audience hooked to its diverse activities.At PNG Jewellers, retail is about providing an experience and not only a service, which is why thecompany works to make sure that its omnichannel approach is seamless. Younger consumers wantto shop online, but when it comes to spending larger amounts of money, they look for trust andpersonal attention. PNG Jewellers utilizes Amazon, AJIO, and TATA Cliq Fashion in addition to theirstorefronts to increase sales.To meet the growing popularity of trend-driven jewellery, the brand has created a sub brand for GenZ called “Litestyle” that is easier to carry around while also being affordable. The brand has twophysical showrooms in Porvorim, Goa, and at JM Road, Pune, respectively.Sustainability has become a core factor for customers, and so PNG Jewellers is committed to beingresponsible environmentally, through initiatives such as women empowerment programs.Exceptional limited collections for Diwali and Gudi Padwa is when the brand combines modernculture with traditional jewellery artistry.To cut deep into the market, PNG Jewellers produces interactive digital magazines, which containsunique stories that combine modern craft and heritage art, creating a stronger bond between thepopulace and their brand. (Views are personal)
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பதில் பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால், அனைத்து மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரக்கூடிய தேவாலயங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யவும், பிரதான ஆராதனைகள் நடைபெறும் தேவாலயங்களில் அதிக கவனம் செலுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், இதற்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான பணத்துடன் புலனாய்வு அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது
தேவேந்திர முனை- ஹும்மான வீதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால், மோட்டார் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 28 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும்,150 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இன்று (17) அதிகாலை 4.00 மணியளவில் வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போதே அதிகாரிகள் பணம் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றியுள்ளனர். அதன்படி, இந்தப் பணம் மற்றும் தங்க நகைகளுடன் சந்தேகத்தின் பேரில் 5 நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மேல் மாகாண புலனாய்வுத் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாகவும், அவர் காரின் சாரதியாக செயற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் அதிகாரியின் பிரதான இல்லமான மாத்தறையின் வெரது பகுதியில் உள்ள வீட்டில் நண்பர்களுடன் விருந்து நடைபெற்றது. நிகழ்வுக்குப் பிறகு, தேவேந்திர முனை பகுதியில் வசிக்கும் நண்பர்களை அவர்களது வீடுகளுக்கு இறக்கிவிடச் சென்று கொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார். அப்போது மேற்கொண்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, இந்தப் பணம் வெளிநாட்டில் இருந்த ஒரு சகோதரியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறினார். இருப்பினும், அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையில், அவர்கள் பயணித்த கார் தெனிபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் அவர் இந்த பொலிஸ் அதிகாரியின் சகோதரி என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 45 முதல் 50 வயதுக்குட்பட்ட தேவேந்திர முனை, மாத்தறை வெரதுவ, உடுபீக்வெல்ல மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
அண்ணாமலைக்கு அடுத்த பெரிய அசைன்மென்ட்... அமித் ஷா போடும் பாஜக நேஷனல் பிளான்!
தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையின் திறமைகளை தேசிய அளவில் கட்சிக்கு பயன்படுத்தி கொள்ளப் போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். அந்த வகையில் பல்வேறு புதிய பொறுப்புகள் அடுத்தடுத்து தேடி வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்; சங்கல்பியுங்கள்
30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்! சங்கல்பியுங்கள்! உங்கள் சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்து நடத்தவுள்ளது. சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம் பைரவ வடிவங்களில் சிறப்பானவர் சொர்ணாகர்ஷண பைரவர். சொர்ணம் அதாவது தங்கத்தை ஆகர்ஷணம் செய்து தனது பக்தர்களுக்கு வழங்குவதாலேயே சொர்ணாகர்ஷண பைரவர் என்று போற்றப்படுகிறார். தான்னாலேயே பூமியில் செல்வவளம் கொழிப்பதாகவும், தன்னிடம் உள்ள செல்வத்தின் அளவு குறித்தும் இறுமாப்பு கொண்டார் குபேரன். இது தவறு என்று கருதிய சொர்ணாகர்ஷண பைரவர், குபேரரை காவிரிப் பூம்பட்டினத்தில் பட்டினத்தாராகப் பிறக்க வைத்தார் என்று ஒரு புராணக் கதை உண்டு. தன்னை வேண்டி நியாயமாக வாழும் அனைவருக்கும் செல்வவளம் அளிப்பவர் சொர்ணாகர்ஷண பைரவர். திருமகள், குபேரர் ஆகிய இருவருக்கும் அதிபதியாக விளங்கி அதிர்ஷ்டத்தையும் ஆனந்தத்தையும் வழங்கும் அருள் வள்ளல் இவர். இவரை அட்சய திருதியை நாளில் வணங்கினால் அளவில்லாத செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. அதிலும் வெற்றியின் அடையாளமான அன்னை பைரவியோடு இணைந்து பைரவரை வணங்க சிறப்பிலும் சிறப்பிலும் சேரும். நவகிரகங்களில் சூரியனைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர் சொர்ணாகர்ஷண பைரவர். இவருக்குத் துணையாக இருப்பவள் பைரவி. சொர்ண கலசத்தை ஏந்தி அதில் திருமகளை ஆவாகணப்படுத்தி இருக்கும் சொர்ண பைரவர் வடிவத்தை வணங்க வாழ்வில் உண்டாகும் தோல்வி, வீழ்ச்சி, நஷ்டம் போன்றவைகளில் இருந்து விடுபடலாம். நிலையான செல்வத்தை, நிலையான இன்பத்தை, நிலையான புகழை, நிலையான ஆரோக்கியத்தை, நிலையான அமைதியைப் பெறலாம் என்பது உறுதி. திருதியை, அஷ்டமி மற்றும் பௌர்ணமி, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சொர்ணாகர்ஷண பைரவரை வணங்கினால் வேண்டியது விரைவில் நிறைவேறும் என்பதும் ஐதிகம். அதிலும் அட்சய திருதியை நாளில் தம்பதி சமேதரான சொர்ணாகர்ஷண பைரவருக்கும் ஸ்ரீபைரவிக்கும் திருமணம் நடத்தி வைத்து வேண்டிக்கொண்டால் உங்கள் எல்லாவித வேண்டுதல்களும் நிறைவேறும். பெரும் பொருள் செலவில் நடத்தப்படும் இந்த சொர்ணாகர்ஷண பைரவர் - பைரவி திருமண வைபவத்தை உங்கள் சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்து நடத்தவுள்ளது. சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம் பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஞானமேடு பகுதியில் அமைந்திருக்கிறது ஸ்ரீபைரவி சமேத ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம். இங்கு பைரவியை மடியில் அமர்த்திக் கொண்டு ஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். மகான் சேஷாத்திரி சுவாமிகள் தவமிருந்த புண்ணிய பூமியான இங்கு முத்து குருக்கள் சுவாமிகளின் உத்தரவுப்படி இங்கு இந்த ஆலயத்தைக் கட்டி கோலாகலமாக இங்கு விழாக்கள் எடுத்து வருகிறார். வரும் அட்சய திருதியை நாளில் அன்பர்கள் செல்வவளம் பெருகவும் தரித்திரம் ஒழியவும் 30-4-2025 அன்று சிறப்பான சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி கல்யாண வைபவம் நடைபெற உள்ளன, வாசகர்கள் இதில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். அட்சய திருதியை நாளில் (30-4-2025) இந்த வைபோகத்தில் கலந்து கொண்டால் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக பொன் பொருள் சேரும். சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம் குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். பதிவு செய்ய இந்த QR - கோடை பயன்படுத்திக் கொள்ளவும். சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்
வீட்டில் எந்தெந்த அறை எப்படி, எத்தனை அடியில் இருக்க வேண்டும்? - சொந்த வீடு கட்ட நிபுணர் டிப்ஸ்!
வீடு கட்டுவது முடிவாகிவிட்டது என்றால் அடுத்தது என்ன பிளானிங் தான். ஒவ்வொரு அறையும் இப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து முடிவுகளை செய்வோம். இந்த முடிவுகளை நீங்கள் எளிதாக எடுக்க நிபுணரின் டிப்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இதோ உங்களுக்கான டிப்ஸ்களை வழங்குகிறார் ரியல் எஸ்டேட் ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி. வீடு ஒன்று தான். ஆனால், அறைகள் பல. ஒவ்வொரு அறையும் வெவ்வேறு பயன்பாட்டிற்கானது. அதனால், அதற்கேற்ப அறைகளை அமைக்க வேண்டும். அது எப்படி என ஒவ்வொரு அறையாக பார்ப்போம். சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி ஹால் குறைந்தபட்சமாக 16 x 12 அடி இருக்க வேண்டும். வெளிச்சமும், காற்றோட்டமும் மிக மிக முக்கியம். இந்த அறையில் ஃபிரெஞ்ச் ஜன்னல் வைப்பது நல்ல சாய்ஸ். வெளிச்சம், காற்றோட்டம், வேடிக்கை பார்ப்பது அனைத்திற்கும் இது உதவும். வீட்டின் வெளியே இருந்து உள்ளே நுழைந்ததுமே இந்த அறை இருப்பது நல்லது. சோபா, ஏ.சி, லைட்டுகள், ஷோ கேஸ், ஊஞ்சல், திவான் படுக்கை, கலை படைப்பு மற்றும் அலங்கார வேலைப்பாடுகள், போல என்னென்ன ஹாலில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அதற்கெல்லாம் சேர்த்து இடம் இருப்பதுப்போல பிளான் செய்துகொள்ளுங்கள். சமையலறை, டைனிங் ஹால், பெட் ரூம், பூஜையறை, படிக்கும் அறை என அனைத்து அறைகளுக்கும் எளிதாக செல்லதக்க வண்ணம் இந்த அறை அமைத்து இருக்க வேண்டும். சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், இந்த அறை வீட்டின் முக்கிய அம்சமாகவும் நடுநாயகமாகவும் இருக்க வேண்டும். மேலும் அழகு சேர்க்க அலங்கார மின் விளக்குகள், சரவிளக்கு (chandelier), தொங்கும் விளக்குகள் (hanging lights), சுவர் விளக்குகள்(wall lights) மற்றும் கவன விளக்கு (focus lights) அமைக்கலாம். சொந்த வீடு கட்ட போறீங்களா? உங்கள் பட்ஜெட்டில் கடைபிடிக்க வேண்டிய `13' கோல்டன் ரூல்ஸ்! சமையலறை இந்த அறை U அல்லது L வடிவில் அமைந்திருப்பதும், தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசை நோக்கி இருத்தல் நல்லது. சமைப்பதற்கு, பாத்திரம் கழுவுவதற்கு, சமைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு என தனித்தனியாகவும், கொஞ்சம் விசாலமாகவும் இடம் இருக்க வேண்டும். சமையலறை மேடை (kitchen working slab) 2 அடி 8 இன்ச்சிலிருந்து 3 அடி உயரத்திற்கு இருக்க வேண்டும். காற்றோட்டம் அவசியம். சமையலறை மேடைக்கு மேலேயும், கீழேயும் சமையலுக்கு தேவையான சாமன் மற்றும் உபகரணங்கள் வைக்க ஸ்டோரேஜுகளுக்கான இடம் இருக்க வேண்டும். சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் அல்லது சிம்னியை மற்றும் சிறிய மின்விசிறி கட்டாயம் அமைத்துவிடுங்கள். இது உங்களை வேர்க்க விருவிருக்க சமைப்பதில் இருந்து தப்பிக்க வைக்கும். இந்த அறையில் வெளிச்சத்திற்கு தேவையான டியூப் லைட் மற்றும் சுவர் விளக்குகளை அமைக்க வேண்டும். சமையலறை பூஜை அறை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். வீட்டின் அமைதியான இடத்தில் பூஜை அறை அமைந்திருப்பது சிறந்தது. சிறிய விளக்கு மற்றும் அலங்கார விளக்குகள் மாட்டலாம். டைனிங் அறை சமையலறைக்கு பக்கத்திலேயே இருக்க வேண்டும். இந்த அறை செவ்வக வடிவில் அமைந்திருப்பது நல்லது. டைனிங் டேபிளுக்கு தேவையான இடம் இருக்க வேண்டும். போதுமான காற்றோட்டம் மற்றும் இயற்கையான வெளிச்சம் இந்த அறையில் வருமாறு இருந்தால் நல்ல ஃபீல் கிடைக்கும். வெளிச்சத்திற்கு வேண்டிய போதிய மின் விளக்குகள் வேண்டும். சொந்த வீடு... உங்களுக்கு சுகமா, சுமையா..? நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் மக்களே..! பெட் ரூம்கள் குறைந்தபட்சமாக 12 x 10 அடி இருக்க வேண்டும். கட்டில், அலமாரி, புதிய மற்றும் பழைய துணிகளை வைக்க என போதுமான இடம் இங்கே வேண்டும். வெளியில் இருந்து அறையை பார்த்தால் கட்டில் தெரியாதவண்ணம் அமைத்தல் வேண்டும். இந்த அறையில் ஒரு சிறிய மேஜை, நாற்காலி, மேஜை விளக்குடன், இன்டர்நெட் வைஃபை வசதியுடன் சின்ன ரீடிங் ஸ்பேஸ் இருந்தால் சூப்பர். டியூப் லைட், இரண்டு சுவர் விளக்கு, பாத நடை (foot lamp) விளக்கு இருந்தால் லுக்காக இருக்கும். பெட் ரூம் கழிவறை குறைந்தபட்சம் 4 x 7 அடி இருக்க வேண்டும். இந்தியன் அல்லது வெஸ்டர்ன் கழிப்பிடத்திற்கு (water closet) தேவையான இடம் இருக்க வேண்டும். இதை தாண்டி வாஷ்பேசினுக்கும், குளிப்பதற்கும் போதுமான இடம் வேண்டும். தரையிலிருந்து 7 அடி உயரத்திற்கு சுவற்றில் டைல்ஸ் ஒட்டியிருப்பது நல்லது. இது சுவற்றை சுத்தம் செய்யவும் பளபளவென வைக்க எளிதாக இருக்கும். பாதுகாப்பு காரணத்திற்காக கழிவறைகளில் Anti - Skid டைல்ஸ்களை பயன்படுத்துங்கள். கழிவறை சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைக்கவும், டைலய்ட்ரீஸ் வைக்கவும் தனித்தனி இடமாக சுவற்றில் அல்லது வாஷ்பேசின் கீழ் ஒரு இடத்தை அமைக்கலாம். ஒரு நடு விளக்கு, ஒரு சுவர் விளக்கு, ஒரு வாஷ் பேசின் விளக்கு, எக்ஸாஸ்ட் ஃபேன், சவரம் செய்யும் மின் சாதன பொருத்த வசதி என அனைத்தும் கழிவறையில் இருந்தால் உங்களுக்கு டபுள் ஈசியாக இருக்கும். சொந்த வீடு பூமி மனை யோகம் அருளும் வராஹர் தரிசனம் படிகள்: ஒவ்வொரு படியும் (raiser) 6 இன்சிற்கும் மேலே இருக்கக்கூடாது. படிகளின் அகலம் (breadth) 3 அடி 3 இன்ச், கால் வாய்ப்புகள் (tread) 10 இன்ச், இருக்க வேண்டும். மாடி படிக்கட்டுகள் இடையே படிகட்டின் தரையிறக்கம் மற்றும் தளம் (landing space) ஒவ்வொரு 10 படிக்கு ஒன்று இருப்பதுப்போல அமைத்து கொண்டால், படி ஏறி இறங்கும்போது கால்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும். வலுவான கைபிடி (handrail) கட்டாயம் வேண்டும். மின்சாரம் இல்லாதப்போதும், படியில் ஏறி, இறங்க அந்த இடத்தில் இயற்கை வெளிச்சம் ஊடுறுவதுப்போல கட்டப்பட்டிருக்க வேண்டும். போர்டிகோ போர்டிகோ அமர்ந்து ரிலாக்ஸ் செய்ய போதுமான இடம் இருக்க வேண்டும். டூ வீலர், கார், இதர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், காலணிகள், குடைகள், கைதடி வைப்பதற்கான இடம். செடிகள் வளர்ப்பதற்கு போதிய இடம். உங்களிடம் செல்லப்பிராணி, ஊஞ்சல் இருந்தால் அதற்கான இடம் என இருக்க வேண்டும். மொட்டை மாடி வெயிலாக இருந்தாலும், மழையாக இருந்தாலும், எல்லா பருவ நிலை மாற்றங்களையும் சமாளிக்க உதவும் வெதர் ஃப்ரூப் லேயருடன் களிமண் டைல்ஸ் போட்டுக் கொள்ளலாம். இதையும் தாண்டி, உங்கள் ரசனைக்கேற்ப வீட்டின் முன் வடிவமைப்பு மற்றும் முகப்புக்கு தேவையான மின் விளக்குகள், வண்ண பெயின்டிங், அலங்கார வெளிக்கதவு, ஜன்னல், இரும்பு கேட், வெளிப்பூச்சு, சுற்றுச்சுவர், சுற்றுச்சுவர் மின்விளக்குகள் போன்றவற்றை பக்காவாக பிளான் செய்து நடைமுறைப்படுத்தி விடுங்கள். ஹேப்பி ஹோம்! சொந்த வீடு... அந்தஸ்துக்கு மட்டுமல்ல... அவசரத்துக்கும் கைகொடுக்கும்! - எப்படி, யாருக்கு, ஏன்? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
கூடலூர்: சிறையில் கைதி சித்ரவதை, 6 பேர் சஸ்பெண்ட் - நள்ளிரவு வரை நீண்ட விசாரணை! என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள பாடந்துறை பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான நிஜாமுதீன். தேவர் சோலை காவல்நிலைய போலீஸாருக்கும் நிஜாமுதீனுக்கும் இடையே கடந்த வாரம் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போதைப்பொருள் வைத்திருந்தாக நிஜாமுதீனை கடந்த 12 -ம் தேதி தேவர்சோலை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் விசாரணை நிஜாமுதீன் மீது வழக்குபதிவு செய்து கூடலூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர். சிறைக்குள் வைத்து இரும்பு கம்பியாலும் லத்தியாலும் நிஜாமுதீனை கண்மூடித்தனமாக தாக்கி காயத்தை ஏற்படுத்தியதாக அவரின் உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் கூடலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிறையில் விசாரணை நடத்தியுள்ளனர். `சிறையில் கைதி சித்ரவதை' - பாதுகாப்பு அதிகாரி உட்பட மேலும் 11 காவலர்கள் சஸ்பெண்ட் இதனைத் தொடர்ந்து சிறைத்துறையின் கோவை மண்டல டி.ஐ.ஜி நேற்று காலை முதல் நள்ளிரவு வரை கூடலூர் கிளை சிறையில் விசாரணை நடத்தியிருக்கிறார். சிறைக் காவலர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிஜாமுதீனை ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை அத்துமீறல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கூடலுார் கிளை சிறை கண்காணிப்பாளர் கங்காதரன், சிறைத்துறை காவலர்கள் மலர்வண்ணன், சின்னசாமி, தினேஷ் பாபு, அருண், கோபி ஆகிய 6 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த அத்துமீறல் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ``எங்களையே எதிர்த்து பேசுவியா? - சிறைக்குள் கைதியை தாக்கிய 5 காவலர்கள் சஸ்பெண்டு
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் சுதாகர் ரெஸ்டாரண்ட்டுக்கு வந்து தன்னை ஏமாற்றிய விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கிறாள் பாக்யா. ஆனால் அப்போதும் கூட வீட்டில் உள்ளவர்கள் தங்களுடைய பணக்கார சம்பந்திக்கு சப்போர்ட்டாக பேசுகின்றனர். இதனையடுத்து இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் நடந்தவை குறித்து தற்போது பார்க்கலாம்.
பிரித்தானிய தடைகள் –இன்னமும் ஆராயாத அமைச்சரவை குழு
சிறிலங்காவின் மூன்று முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் கருணா மீது தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த முடிவு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு, இன்னமும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை. பிரித்தானியாவின் முடிவு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளுடன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக சிறிலங்காவின் அமைச்சரவைக் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் பாதுகாப்பு பிரதி
ராம்நாத் கோயங்கா: இதழியல் துறையின் இடிமுழக்கம் –பிறந்தநாள் சிறப்பு!
இன்று, ஏப்ரல் 18, ராம்நாத் கோயங்கா அவர்களின் பிறந்தநாள். இந்திய இதழியல் வரலாற்றில் ஒரு துருவ நட்சத்திரமாக ஜொலித்தவர் ராம்நாத்
இந்தியாவுடன் தரைவழி இணைப்பு குறித்து பேச மறுத்த சிறிலங்கா ஜனாதிபதி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுக்களின் போது, இந்தியாவுடன் தரைவழி இணைப்புத் திட்டத்தைப் பரிசீலிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2002- 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது இரு நாடுகளையும் இணைக்கும் தரைப்பாலம் குறித்து முதலில் கலந்துரையாடப்பட்டது. 2023 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது, புதுடெல்லிக்கு
ஹார்வர்டு பல்கலை.க்கு அளிக்கப்படும் வரி விலக்கு ரத்து?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்படும் வரி விலக்கை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் மக்களின் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து அவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவது வழக்கம். பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதற்கு கண்டனம் தெரிவித்து நீண்ட போராட்டத்தை ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வருகின்றனர். ரூ. 19,000 கோடி நிதி நிறுத்திவைப்பு மாணவர்களின் […]
Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமாக பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் உலகில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுகையில் கவனமாக பேச வேண்டும் என்றும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டாம் என்றும் […]
Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமாக பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் உலகில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுகையில் கவனமாக பேச வேண்டும் என்றும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டாம் என்றும் […]
பின்கதவு வழியாக ‘குவாட்’டுக்குள் இழுக்கப்படுகிறது சிறிலங்கா
அண்மையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என, சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், குவாட் உறுப்பு நாடான இந்தியாவுடன் பாதுகாப்பு தொடர்பில் உடன்பாடு செய்து கொள்ள எடுத்த தீர்மானம் குறித்து, எமது கவலையையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக,
Arjun: 13 வருட காதல்; `பெற்றோர் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்தம்' - அர்ஜுன் மகள் பதிவு
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜுன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் 90-களில் முன்னணி ஆக்ஷன் ஹீரோ. இப்போது வில்லனாக, குணச்சித்திர நடிகராக எனப் பல முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த வருடம் விமரிசையாக திருமணம் நடந்தது. இளைய மகள் அஞ்சனாவுக்கு சினிமாவின் மீது துளியும் ஆர்வம் இலை. ஒரு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதே அவரின் ஆசை. எனவே கடந்த 2023-ம் ஆண்டு 'ஹேண்ட் பேக்' தாயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். View this post on Instagram A post shared by Anjana Arjun (@anj204) இந்த நிலையில், மொத்த குடும்பமும் இத்தாலியில் இருக்கும்போது, ``கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்றுக் கொண்டேன்' எனக் கூறி, அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனாவின் காதலர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை. Allu Arjun: ``அவர்கள் எனக்கு கிரெடிட் கொடுத்ததில்லை ஆனால், அல்லு அர்ஜூன்'' -கணேஷ் ஆச்சாரியா
Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கெட்ட வாடை.. மருத்துவ சிகிச்சை தேவையா?
Doctor Vikatan: என்னால் சிறிய அளவிலான துர்நாற்றத்தைக்கூட சகித்துக்கொள்ள முடிவதில்லை. எப்போதும் என்னைச் சுற்றி ஏதேனும் நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். வீட்டினுள் ரூம் ஸ்பிரே, ஊதுவத்தி, சாம்பிராணி என ஏதோ ஒரு நறுமணம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இதனால் லேசான கெட்ட வாடை கூட என்னை அதிகபட்ச ஸட்ரெஸ்ஸுக்குள் தள்ளுகிறது. இது இ.என்.டி தொடர்பான பிரச்னையா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ் மருத்துவர் பி.நட்ராஜ் துர்நாற்றத்தால் சங்கடம் ஏற்படுவது என்பது இயற்கையான ஓர் உணர்வுதான். உண்மையில் அது ஒருவித தற்காப்பு நடவடிக்கை (defence mechanism) என்றே சொல்லலாம். இந்த உணர்வின் மூலம் கெட்டுப்போன உணவு வகைகளைக் கண்டறிவது போன்ற பல பயன்கள் உண்டு. சாதாரண மணம் அல்லது லேசான துர்நாற்றம்கூட சிலருக்கு அதிக சங்கடத்தை ஏற்படுத்தலாம். சில சமயம் சாதாரண உணவு வாசனைகூட குமட்டலை ஏற்படுத்திய அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் மாற்றங்களால்கூட இது நிகழலாம். உதாரணத்துக்கு, கர்ப்ப காலத்தைச் சொல்லலாம். கர்ப்ப காலத்தில், சிலருக்கு பழகிய வாசனைகூட பிடிக்காமல் போவதையும், குமட்டல் உணர்வை ஏற்படுத்துவதையும் பார்க்கலாம். அதே போல சர்க்கரை நோய், ஊட்டச்சத்து குறைபாடு, சிலவகை நரம்பியல் நோய்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால், இவையெல்லாம் மிக அரிதானவையே. கர்ப்ப காலத்தில், சிலருக்கு பழகிய வாசனைகூட பிடிக்காமல் போவதையும், குமட்டல் உணர்வை ஏற்படுத்துவதையும் பார்க்கலாம். Doctor Vikatan: ஜலதோஷம் பிடிக்கும்போது வாசனை தெரியாமல் போவது ஏன்? கோவிட் நோய் தாக்குதலின் அறிகுறியாக வாசனை அறியும் திறன் இல்லாமல் போவது என்பதைப் பலரும் அறிந்திருப்பார்கள். வாசனை அறியும் திறன் இல்லாமல் போனதைப் போலவே இந்த அதிக வாசனை சென்சிட்டிவிட்டியும் சில பேருக்கு இருப்பதை மருத்துவர்கள் பார்த்தோம். இந்தப் பிரச்னை தற்காலிகமாக இருந்தால் அது தானாகவே நீங்கிவிடும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை நாள்பட இருந்தால் காது-மூக்கு-தொண்டை மருத்துவர் அல்லது நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
`ஓசன்னா... தேவனே எம்மைக் கைவிடாதிரும்' - இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏன் நினைவுக்கூற வேண்டும்?
மனித குல வரலாற்றில் மோசமான இரவுகளில் ஒன்று. அவரை அவர்கள் அறிவார்கள். அவர் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் பிரசங்கம் செய்பவர். மதம் வணிகமானபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பி, 'கடவுளின் வீட்டை மீட்க வேண்டும்' என்றவர். ஆனால் அப்போதெல்லாம் அவரைக் கைது செய்யவில்லை. ஆனால் ஒரு இரவில் திருடனையும் கொள்ளைக்காரனையும் கைது செய்வதுபோல அவரைக் கைது செய்தார்கள். அப்படி நடக்கப்போவதை அவர் அறிந்தே இருந்தார். கைது செய்யப்படுவதற்கு சில கணங்களுக்கு முன்பு அவர் கர்த்தரை நோக்கி முழங்கால் இட்டு ஜபம் செய்தார். 'பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது' என்று ஜபம் செய்தார். மனித வாழ்க்கை நிலையில்லாதது... அழிந்துபோகக் கூடியது... இந்த மனித வாழ்க்கை நிலையில்லாதது. அழிந்துபோகக் கூடியது. நீதியின் வழியில் நடப்பவர்களுக்கு மிகவும் கடினமானது, அது தேவனின் குமாரனாகவே இருந்தாலும். இயேசு தேவனின் ஒரே குமாரன். அதை அவரை அறிந்த அனைவரும் அறிவார்கள். அவர் தேவனின் ராஜ்ஜியம் குறித்து மக்களிடையே பிரசங்கம் பண்ணினார். 'அன்பே பிரதானம்' என்று போதித்தார். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் அநேகருக்குப் பகிர்ந்துகொடுத்தார். அவர் பிய்த்துக்கொடுத்தது அப்பங்களை அல்ல அன்பை. அன்பு ஒன்றுதான் கொடுக்கக் கொடுக்க வளரும். இறந்தவர்களை பிழைக்கச் செய்தார். முடமானவன் அவரின் ஒரு சொல்லில் எழுந்து நடந்தான். அவரின் வஸ்திரத்தைத் தொட்டவன் வியாதி நீங்கி குணம் அடைந்தான். இப்படி அவரை நம்பியவர்களுக்கெல்லாம் அவர் நன்மையையே செய்துவந்தார். ஆனாலும் அவர் அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார். பஸ்காபண்டிகைக்கு முன் தின இரவில் இயேசுவைக் கைது செய்ய பிரதான ஆசார்யரும் வீரர்களும் கூட்டமாக வந்தனர். அப்போது கைது செய்ய வந்தவர்களில் ஒருவனின் காதை சீடர் ஒருவன் வாளால் வெட்டினான். அந்த கணத்தில் இயேசு துடித்துப்போனார். 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு' என்று உபதேசம் செய்தவர் அல்லவா... தாக்கப்பட்டவனின் காதைத் தொட்டார். அது மீண்டும் ஒட்டிக்கொண்டது. அந்த அற்புதத்தைக் கண்டபின்னும் அவர் கைது செய்யப்பட்டார். குணம் அடைந்தவன் அவர் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டபோது எப்படித் துடித்திருப்பான்... அதன்பின் நடந்த விஷயங்களை கண்ணீர் பெருகாமல் நினைவுகூர்வதும் கடினம். அவர் தேவனின் குமாரர் என்பதை மறந்துவிடுவோம். ஒரு சாமானியன் என்றே வைத்துக்கொள்வோம். யாரோ ஒரு மனிதனின் கண்களை மூடி அவன் கன்னத்தில் அறைந்து அவதூறான வார்த்தைகளைச் சொல்லி அவனை முரட்டுத்தனமாக அடிப்பதை யார்தான் பார்த்துக்கொண்டிருக்க முடியும்... தேவனின் குமாரர் என்பதை மறந்துவிடுவோம்; ஒரு சாமானியன் என்றே வைத்துக்கொள்வோம்! ஆனால் அந்த நகரத்தின் மக்கள் சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அவரை பிலாத்து என்னும் ஆளுநரிடம் விசாரணைக்காக அனுப்பினர். விசாரணை செய்தவரால் இயேசுவிடம் எந்தக் குற்றமும் காணமுடியவில்லை. அவரை விடுதலை செய்ய விரும்பினான். ஆனால் பைத்தியம் பிடித்தவர்கள்போல் கூடியிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு அஞ்சினான். 'பஸ்கா பண்டிகையின்போது கைதிகளில் ஒருவரை விடுதலை செய்ய அதிகாரம் இருப்பதாகவும் அது இந்த இயேசுவா அல்லது பராபஸ்ஸா' என்று கேட்டார். பராபஸ் ஒரு கொலைகாரன். ஆனால் இயேசுவோ மக்களோடு மக்களாக மக்களுக்காக வாழ்ந்தவர். ஆனால் மக்கள் அந்த கணத்தில் அவரைக் கைவிட்டார்கள். பராபஸ் விடுதலையாக இயேசுவை சிலுவையில் அறையுங்கள் என்று கூச்சலிட்டனர். இயேசு தன் கடைசி தருணத்தில், 'ஏலி ஏலி லாமா சபக்தானி' என்று சொன்னார். 'தேவனே தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்' என்பது அதன் பொருள். ஆனால் உண்மையில் தேவன் அவரைக் கைவிடவில்லை. யாருக்காகப் பேசினாரோ அந்த மக்கள்தான் அவரை முதலில் கைவிட்டனர். மன்னர் அவர்களிடத்தில், 'இந்த நீதிமானுடைய ரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்' என்றான். அப்போதாவது அவர்கள் விழிப்படைந்திருக்க வேண்டும். ஆனால் வெறுப்பு அவர்களின் கண்களை மறைத்தது. 'இவனுடைய ரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக' என்று சொன்னார்கள். அதன்பின் நடந்தவற்றைக் கண்டு அந்த நகரின் பெண்கள் கலங்கி அழுதனர். இயேசுவை கபாலஸ்தலம் என்னும் சிறு குன்றுக்கு அழைத்துச் சென்று அங்கே இரண்டு திருடர்களுக்கு மத்தியில் சிலுவையில் அறைந்தனர். ஓசன்னா! இயேசுவின் உடலில் இருந்த ரத்தம் ஒவ்வொரு சொட்டாக அந்த நிலத்தின் மீது விழுந்தது. அது வீணான ரத்தம் அல்ல. கல்வாரி சிலுவையில் நமக்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தம். பரலோகத்தில் இருக்கும் பிதாவானவர் தன் ஒரே குமாரனான இயேசுவை சிலுவையில் மரிக்கக் கொடுத்தார். யாரெல்லாம் பாவத்தினால் தேவனின் சந்நிதியில் இருந்து விலகிப்போகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இயேசுவின் ரத்தத்தினால் மீட்படைய வழி செய்தார். அன்றிலிருந்து இன்றுவரை அவரே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார். யார் எல்லாம் அன்பின் வழியில் அனைத்து உயிர்களையும் நேசிக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் தன்னிடம் சேர்த்துக்கொள்ள அவர் ஆயத்தமாக இருக்கிறார். ஒவ்வொரு புனித வெள்ளி அன்றும் நாம் நினைவு கூரவேண்டியது இயேசுவின் சிலுவை தியாகத்தைத்தான். அவரின் தியாகத்தை உணர்ந்து நாம் கண்ணீர் சிந்தும்போது நாம் அவராகவே ஆகிவிடுவோம். அப்போது இறைவன் நமக்குள் வந்து ஆசீர்வதிப்பார். அந்த அற்புதம் நிகழ நாம் அனைவரும் அவரை, 'ஓசன்னா' என்று சொல்லி அழைத்துப் பிரார்த்திப்போம். தேவன் எப்போதும் நம்மைக் கைவிடாது காப்பார்.
விஜய்யின் GOAT பட வசூலை தாண்டுமா குட் பேட் அக்லி ?
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இதுவரை நல்ல வசூலை பெற்று வருகின்றது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற குட் பேட் அக்லி திரைப்படம் விஜய்யின் GOAT வசூலை தாண்டுமா என்பது தான் அஜித் ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகின்றது. இதைத்தொடர்ந்து GOAT வசூலை குட் பேட் அக்லி முந்துமா என்பது பற்றி தற்போது பார்க்கலாம்
உலக பாரம்பரிய தினம்: நம் பண்பாட்டு பொக்கிஷங்களைப் பாதுகாப்போம்!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக (International Day for Monuments and Sites)
நட்சத்திர பலன்கள்: ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை #VikatanPhotoCards
காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு –யாழில் சம்பவம்
தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. தவறான முடிவு குளத்தில் தாமரைப்பூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் […]
மகாராஷ்டிரம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்!
தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான மாநில அரசின் தீா்மானம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி மூன்றாவது கட்டாய மொழிப் பாடமாக கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் தற்போது 1 முதல் […]
``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷன் போட்ட சீனா
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடக்கும் வரி பிரச்னை உலகறிந்தது. 'பேச்சுவார்த்தைக்கு தயார்' என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தூதை ஒருவழியாக சீனா ஏற்றுக்கொண்டது. நேற்று, சீனாவின் வர்த்தக அமைச்சகம், பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால், சீனாவை சமமாகவும், மரியாதையாகவும் நடத்த வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் இந்தநிலையில், நேற்று, இத்தாலி அதிபர் மெலோனி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், சீனா உடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் போடப் போகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார். எந்த நாடும்... - டொனால்டு ட்ரம்ப் யாரும் போட்டியிட முடியாது மேலும், 'சீனா அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்காக பலமுறை அணுகியது' என்று கூறியிருக்கிறார். ட்ரம்ப்பின் இந்த வரி விதிப்பால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் சீனாவுடன் நெருக்கம் ஆகிறதே... இதனால் வருத்தப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு, இல்லை. எந்த நாடும் அமெரிக்கா உடன் போட்டியிட முடியாது என்று பதில் சொல்லியுள்ளார். சீனா உள்பட அனைத்து நாடுகளும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த நினைக்கிறது. சீனா உடன் விரைவில் நல்ல ஒப்பந்தம் போடப்படும் என்று கூறியுள்ளார். `நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு ஜாக்பாட்! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திரசிங் தோனி காயம் காரணமாக அவதிப்படுவதால், அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி விலகும் பட்சத்தில் மாற்று கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரிஷபம் | Guru Peyarchi 2025 | செல்வ வளம் சேரும் காலம் | குரு தலத்திலிருந்து குருப்பெயர்ச்சி பலன்கள்
குருஸ்தலங்களில் இருந்து குருப்பெயர்ச்சி பலன்கள் என்னும் இந்த நிகழ்ச்சியில் 12 ராசிகளுக்குமான பலன்களை அந்தந்த ராசிக்குரிய குருஸ்தலத்தில் இருந்து கணித்துச் சொல்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். இந்த வீடியோவில் அருள்மிகு மேதா தட்சிணாமூர்த்தி திருக்கோயில் தலத்தில் இருந்து ரிஷப ராசிக்கான பலன்களைத் தருகிறார் பாரதி ஶ்ரீதர்.
இங்க மட்டும் எப்படி கடல் இவ்ளோ சுத்தமா இருக்கு? லட்சத்தீவு ஆச்சரியம் | Travel Contest
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இயற்கையை விரும்புபவர்களுக்கும், ஸ்கூபா டைவிங், நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் சாகச பிரியர்களுக்கும் லட்சத்தீவை சொர்க்க பூமி என்றே சொல்லலாம். கவரத்தியை தலைமையிடமாக கொண்ட லட்சத் தீவில் அகத்தி, அமினி, கட்மத், அந்த்ரூத், மினிகாய், கில்தான், சேத்லத், பித்ரா உள்ளிட்ட 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். தின்னகரா, கல்பிட்டி, பங்காரம் ஆகிய தீவுகள் சுற்றுலா வாசிகளுக்கானது. அங்கு சுற்றுலாவாசிகளுக்கான ரிசார்ட்கள் மட்டுமே உண்டு.! இந்திய வரைபடத்தில் அரபிக் கடலில் புள்ளி புள்ளியாக தென்படும் லட்சத்தீவில் மக்கள் தொகை மிகவும் குறைவு தான். ஒவ்வொரு தீவிலும் 7 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் வசிப்பார்கள். எனவே, மொத்தமாக பார்க்கும் போது, சுமார் ஒரு லட்சம் பேர் இருப்பார்கள். சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest மீன்பிடித்தல் பிரதான தொழில் லட்சத்தீவில் மீன் பிடித்தல் முக்கிய தொழில். தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் கொப்பறை உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதுதவிர, சுற்றுலா மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். இங்குள்ள கடற்கரையில் உள்ள மணல் வெள்ளை நிறத்தில் காணப்படும். அதில் மாலை நேரத்தில் அமர்ந்து ஓய்வு எடுப்பதே, இங்குள்ள மக்களின் பொழுதுபோக்கு.! கடந்த ஆண்டு மாலத்தீவுக்கும் நமக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது, மாலத்தீவுக்கு இணையாக இந்த தீவு புரமோட் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி லட்சத்தீவுக்கு வந்து 2 நாள்கள் தங்கினார். அப்போது, அவர் கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வேண்டாம்! கடல் என்பது இங்கு வசிக்கும் மக்களுக்கு கடவுள். தொழிற்சாலைகள் எதுவும் இங்கு இல்லை. அதனால், கழிவுகளை கடலில் வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல், சாக்கடை கழிவு நீர் வாய்க்காலும் இல்லை. வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பூமிக்கு உள்ளேயே கிரகித்துக் கொள்ளும். நீலவண்ண கடல் – பால்வண்ணத்தில் கடற்கரை சில வருடங்களுக்கு முன்பு, லட்சத்தீவு சுற்றுலா சென்றிருந்தேன். அந்த தீவை பொருத்தவரை, அங்குள்ள கடல் நீல வண்ணத்தில் இருக்கும். கடற்கரை மணல் பால் வண்ணத்தில் இருக்கும். கடலில் எங்கும் அசுத்தம் என்பது இருக்காது. ஏனெனில் கடல் என்பது இங்கு வசிக்கும் மக்களுக்கு கடவுள். தொழிற்சாலைகள் எதுவும் இங்கு இல்லை. அதனால், கழிவுகளை கடலில் வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல், சாக்கடை கழிவு நீர் வாய்க்காலும் இல்லை. வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பூமிக்கு உள்ளேயே கிரகித்துக் கொள்ளும். முழுக்க முழுக்க தென்னை மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி என்பதால், ஆங்காங்கே மக்கள் வீடு கட்டி வசிக்கின்றனர். வீடு கட்டுவதற்கு தேவையான செங்கல், ஜல்லி, மணல், கம்பி, சிமென்ட் எல்லாம் இங்கே கேரளத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அதேபோல், அரிசி, பருப்பு, காய்கறி, பெட்ரோல், டீசல் என அனைத்து பொருள்களும் கரையில் இருந்து தான் செல்ல வேண்டும். இதனால், விலை சற்று அதிகமாக இருக்கும். அங்கே வசிப்பவர்கள் 99% பேர் இஸ்லாமியர்கள். மீது ஒரு சதவீதம் பிற மதத்தவர்கள் அதாவது, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, அலுவல் நிமித்தமாக சென்றவர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள், மருத்துவர், செவிலியர், போலீஸ்காரர், விமான, கப்பல் போக்குவரத்து ஊழியர்கள், அஞ்சலக பணியாளர்கள் இந்த 1% சதவீதத்தில் இடம்பெறுவார்கள். முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் என்பதால், வெள்ளிக்கிழமை அங்கே அரசு விடுமுறை! ஞாயிற்றுக்கிழமை பணிநாள். Travel Contest: 'ஒரு கருப்பு முட்டை சாப்பிட்டா 7 வருட ஆயுள் கூடுமா?' - அதிசயமான ஜப்பான் எரிமலை பயணம் ஒரு முக்கியமான விஷயம். மக்கள் வசிக்கும் 10 தீவிலும், எந்த தீவிலும் மீன் சந்தை, மீன் கடைகள் கிடையாது. அதேபோல், எல்லா வகை மீன்களையும் இவர்கள் பிடிப்பது கிடையாது. இவர்கள் பிடிக்கும் ஒரே மீன் ரகம் சூறைமீன். ஆங்கிலத்தில் இதற்கு பெயர் டுனா. மீன் சந்தையே கிடையாது தீவில் 100 குடும்பம் இருக்கிறது என்றால், அதில் 75 சதவீதம் பேர், மீன்பிடித்தல், மீதி 5 சதவீதம் பேர் தேங்காய் உற்பத்தி, 10 சதவீதம் பேர் அரசாங்க வேலை, 5% பேர் வயதான முதியவராக இருப்பர். 5% பேர் வர்த்தகம் உள்ளிட்ட இன்னபிற தொழில் செய்வர். எனவே, முழுக்க முழுக்க மீன்பிடித்தலும், தென்னை சார்ந்த தொழிலும் தான் பிரதானம். ஒரு முக்கியமான விஷயம். மக்கள் வசிக்கும் 10 தீவிலும், எந்த தீவிலும் மீன் சந்தை, மீன் கடைகள் கிடையாது. அதேபோல், எல்லா வகை மீன்களையும் இவர்கள் பிடிப்பது கிடையாது. இவர்கள் பிடிக்கும் ஒரே மீன் ரகம் சூறைமீன். ஆங்கிலத்தில் இதற்கு பெயர் டுனா. லட்சத்தீவில் வீடுகள் வரிசையாக இருக்காது. ஏனெனில் தென்னந்தோப்புக்குள் வீடு என்பதால், ஆங்காங்கே வீடுகள் இருக்கும். தென்னை மரங்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக, அங்கொரு வீடு, இங்கொரு வீடு இருக்கும். தென்னை சூழ்ந்திருப்பதால், தீவுக்குள் வெயிலின் தாக்கம் இருக்காது. அகத்தி தீவை எடுத்துக் கொண்டால், அதன் நீளம் 7 கிலோ மீட்டர். அகலம் 500 மீட்டரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் பரப்பளவு இருக்கலாம். தீவின் வடக்கு முனையில் கலங்கரை விளக்கம், தெற்கு முனையில் விமான நிலையம் தான் எல்லை. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மிக குறுகிய ஓடுபாதை இங்குதான் இருக்கிறது. பனங்கிழங்கை பார்த்து பதறிய அதிகாரி! - சவுதி பயண அனுபவம் | Travel Contest ஒரு வீட்டில் ஒரு படகு இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள் என 5 முதல் 7 பேர் மீன்பிடிக்கச் செல்வார்கள். படகில் வலை இருக்காது. தூண்டில் இருக்கும். அந்த தூண்டில் வித்தியாசமாக இருக்கும். 10 அடி உயரம் கொண்ட மூங்கில் குச்சியில் நரம்பு கயிறு, தூண்டில் முள் கட்டப்பட்டிருக்கும். நடுக்கடலுக்கு சென்றால் படகை ஒட்டியே, சூறைமீன்கள் துள்ளி விளையாடும். அப்போது, தூண்டிலை மீனுக்கு நேராக வீசும்போது கடிக்கும். அப்போது லாவகமாக சுண்டினால், கடலில் இருக்கும் மீன், அடுத்த வினாடியே படகின் நடுப் பகுதிக்குள் உள்ள தொட்டியில் விழும். கையை வைத்து தூண்டில் முள்ளை எடுக்க வேண்டிய அவசியமில்லை. மீண்டும் தூண்டிலை போட்டு ஒரே ஒரு சுண்டு… அடுத்தநொடி மீன் தொட்டிக்குள் விழும். ஒவ்வொரு மீனும் குறைந்த பட்சம் 5 கி.கி முதல் 10 கி.கி வரை இருக்கும். எனவே, தூண்டில் போட்டு மீன்பிடிப்பதில் அதிக வலு வேண்டும். புதிதாக வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இந்த முறையில் மீன்பிடிக்க முடியாது. அரை மணிநேரத்தில் இருந்து ஒரு மணிநேரத்திற்குள் மீன்பிடித்து விடுவார்கள். மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும்போது, படகு திணறிக்கொண்டு வரும். அந்த அளவுக்கு அதிக மீன்பிடித்துக் கொண்டு வருவார்கள். அதேபோல், விருந்தோம்பலுக்கு பெயர் போனவர்கள் இந்த மக்கள், காலை உணவாக இருக்கட்டும், மதிய உணவாக இருக்கட்டும் நாம் என்ன வகையான உணவை விரும்புகிறோம் என அறிந்து, அதை சுவையாக செய்து கொடுக்க ரொம்ப மெனக்கெடுவார்கள். நான் போயிருந்தது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு என்பதால், விருந்து உபசரிப்பு அருமையாக இருந்தது. ஒவ்வொரு வீட்டு திண்ணையிலும் வெற்றிலைப் பெட்டி, டீ பிளாஸ்க் கட்டாயம் இருக்கும். நாம் சாலை வழியாக நடந்து செல்லும்போது, வீட்டிற்கு வாங்க… ஒரு டீ குடிச்சிட்டுப் போங்கன்னு உரிமையோடு அழைப்பார்கள். டீ குடிச்ச உடனே, முருக்கான் போடுங்கள் என்பார்கள் வெற்றிலையை தான் அப்படி சொல்கிறார்கள். நமக்கு வெற்றிலை பழக்கம் இல்லை என்று சொன்னால் ரொம்பவே ஆச்சரியப்படுகிறார்கள். Travel Contest: சுற்றுலாவை முழுமையாக அனுபவிக்க என்ன செய்யலாம்? கவனிக்க வேண்டிய விஷயங்களின் லிஸ்ட்! பவளப்பாறைகளை கண்ணால் பார்க்கலாம் லட்சத்தீவு கடலின் மற்றொரு சிறப்பு பவளப்பாறைகள், உலகின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பவளப்பாறைகளை பார்க்க முடியும். அதிலும் லட்சத்தீவில் அதிகம் இவை உண்டு. கடலில் உள்ள உயிரினங்களில் சுமார் 25 சதவிகிதம் பவளப்பாறை திட்டுகளில்தான் காணப்படுகின்றன. கடல் முள்ளெலி, நட்சத்திர மீன்கள், சுறா, இறால், சிங்கி இறால்கள், நத்தைகள், சிறிய வண்ண மீன்கள், மெல்லுடலிகள் போன்றவை பவளப்பாறை திட்டுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. பவளப்பாறைகள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி சுண்ணாம்பாக மாற்றுவதால், இவை நிலத்தின் காடுகளைப் போல கரியமில வாயு தேக்கியாகவும் செயல்படுகின்றன. இதன்மூலம் பூமி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த பெரிதும் துணை புரிகின்றன. நம் நாட்டில் உள்ள மீனவர்கள் கடலில் வலை எடுத்துச் சென்று, வஞ்சிரம், பாறை, மத்தி, சங்கரா, நண்டு, இறால் என பல்வேறு வகையான மீன்களை பிடிக்கின்றனர். ஆனால், லட்சத்தீவு மக்கள் சூறை மீன்களை மட்டுமே பிடிக்கின்றனர். அவற்றை அப்படியே கரைக்கு கொண்டு வருகின்றனர். அதாவது கடலுக்கு சென்றுவிட்டு, படகை தங்களது வீட்டிற்கு அருகேயே கொண்டு வந்துவிடுவார்கள். பின்னர் சின்ன படகில் சென்று மீனை கொண்டு வந்து, அண்டாவில் வேகவைத்து பின்னர் காய வைப்பார்கள். ஊருக்குள் வெயில் இருக்காது என்பதால், கடற்கரையோரம் பரண் அமைத்து, மீனை கருவாடு ஆக்குவார்கள். அவற்றை சாக்கு மூட்டையில் கட்டி வைத்து வீட்டில் சேமிப்பார்கள். இவ்வாறு சேமிக்கும் கருவாட்டுக்கு பெயர் தான் மாசிக்கருவாடு. இந்த கருவாட்டை வருடத்திற்கு ஒருமுறை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவந்து முகவர்கள் மூலம் விற்பனை செய்வார்கள். கருவாட்டை ஏற்றுமதி செய்ய வசதியாக அரசாங்கம் சார்பில் சரக்கு கப்பல் இயக்கப்படும். Travel Contest: மலை ரயிலில் பயணிக்கணுமா? இந்த வழிமுறைய ஃபாலோ பண்ணுங்க! வீட்டிற்கு அருகேயே படகு நிறுத்தம் இன்னொரு முக்கியமான விஷயம், இங்கே மீன்பிடி படகுகள் எல்லாம், குடியிருக்கும் வீடு அல்லது, படகு பழுதுபார்க்கும் ஷெட் அருகே, கடலில் கட்டப்பட்டிருக்கும். மீன்பிடி இறங்குதளம் இங்கே இல்லை. கொச்சியில் இருந்து செல்லும் பயணிகள் கப்பல், தீவுக்கு 5 கிலோ மீட்டருக்கு அப்பால் நடுக்கடலில் நின்றுவிடும். அங்கிருந்து படகுகள் மூலம் பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டு, கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் பாலத்தில் இறக்கி விடப்படுவார்கள். வெளியூரில் இருந்து சரக்கு ஏற்றிவரும் பெரிய படகுகள் இந்த பாலத்தினை சரக்கு இறக்கிட பயன்படுத்திக் கொள்ளும். இன்னொரு விஷயம் இங்கிருந்து மீன் ஏற்றுமதி கிடையாது. ஒன்லி மாசி கருவாடு ஏற்றுமதிதான். சூறை மீனை மதிப்பு கூட்டி, ஊறுகாயாக விற்பனை செய்வார்கள். அதேபோல், 2-வது இடத்தில் இருக்கும் தொழில் தென்னை சாகுபடி, இங்கிருந்து ஒரு தேங்காய் கூட வெளியூருக்கு ஏற்றுமதி செய்யப்படாது. முழுக்க காயவைத்து, கொப்பறை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும். கொப்பறையை கொள்முதல் செய்வதற்காக வருடத்திற்கு ஒருமுறை சிறப்பு கப்பல் இயக்கப்படும். தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உண்டு. அதேபோல், இந்த மக்கள், சூறை மீனைத்தான் சாப்பிடுவார்கள். ஒருவேளை இந்த மீன்கள் மட்டும்தான், இந்த கடலில் கிடைக்குமோ என தெரியவில்லை. வாய் ஊசி போல் இருக்கும் ஊழி மீன்களை பிடிப்பார்கள். அதனை சமையலுக்கு பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் கரையோரம் வலை விரித்து, சிறிய ரக மீன்பிடிப்பார்கள். இங்கே யாரும் மீனை விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். எல்லோர் வீட்டிலும் ஒருத்தர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள் என்பதால், படகை விட்டு கரையோரும் போது, கையோடு ஒரு மீன் அல்லது 2 மீனை வீட்டிற்கு கொண்டுவந்து விடுவார். மீனை படகில் இருந்து இறக்குபோது நாம் வேடிக்கை பார்த்தால், உங்களுக்கு மீன் வேண்டுமா, இலவசமாகவே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அன்பாக கொடுப்பார்கள். அந்த அளவுக்கு இரக்க குணம் மிக்கவர்கள் இவர்கள்! -சி.அ.அய்யப்பன் சென்னை Travel Contest: அமெரிக்கா என்றாலே வானுயர கட்டிடங்கள் மட்டும்தானா? - வெளிர் நீல கடல் பற்றி தெரியுமா? My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை டூர் இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம். இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும். வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகை விவரம்: முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்) இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்) நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்) நினைவில் கொள்க: நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025 ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம் உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
அதிமுக –பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,”கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கூட்டணி அரசுக்கு (வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம்) வாய்ப்பே இல்லை என அதிமுக தரப்பு கூறி வரும் நிலையில், அதுபற்றி தேசிய தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும் என தமிழக பாஜக கூறி வருகிறது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான […]
சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் நாம் சுற்றுலா என்று சென்று திரும்பினால் அங்க என்னென்ன பார்த்தீர்கள் என்பார்கள். இன்னும் சிலர் அங்க என்னென்ன வாங்கின. நான் பணம் குடுக்க மாட்டேனா, எனக்கு ஓன்னு வாங்கிண்டு வந்திருக்ககூடாதா? இப்படியும் சிலர் இப்பரந்த உலகில் மனிதநேயம் என்பது எவ்வளவு இருக்கின்றது. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற வார்த்தைகள் எவ்வளவு பொருந்தும் என்பதையெல்லாம் நான் சுற்றுலாவில்தான் உணர்ந்தேன். பல இடங்களில் நான் சந்தித்த மனிதர்கள் என் கண் முன்னால் வந்து புன்னகைக்கிறார்கள். மனம் வெறுமை அடையும் பொழுதும் யாராவது தீமை செய்யும் பொழுதும் சுற்றுலாவில் நான் சந்தித்த மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். Ayodhya அயோத்தயா: காசியில் இருந்து காலை ஆறு மணிக்கு நானும் , என் தாயும், ஏழு வயது மகளும் அயோத்தியாவிற்கு பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றோம். இரண்டரை மணி ஆகும் என்பதை இரண்டரை மணிநேரம் தான் ஆகும் என்று தவறாக புரிந்து கொண்டோம். நல்ல பசிவேறு. குழந்தை துவண்டுவிட்டாள். பத்தாதற்கு நாங்கள் சென்ற பஸ்ஸை நிறுத்திவிட்டு இந்த பஸ் அயோத்யா போகாது, இந்த டிக்கெட்டை வைத்துக் கொண்டு வேற பஸ் பிடித்துச் செல்லுங்கள் இன்னும் ஒரு மணி நேரம் பயணம் என்றார் கண்டக்டர். Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வேண்டாம்! வரும் அயோத்யா பஸ்ஸெல்லாம் கால் வைக்க இடமில்லை. அப்படி ஒரு கூட்டம். லக்கேஜுடன் எப்படி ஏறுவேன் . மூவரும் முக்கட்டாக பசியுடன் உட்கார்ந்து இருந்தோம். ஒரு கூட்டமான பஸ் டைவ் அடித்து வரும் பொழுது மாதாஜி மாதாஜி எனறு அலறல். என் பெண் அதை கவனித்துவிட்டாள். பஸ் ஜன்னல் வழியாக ஓரு தலை. அதை நோக்கி ஓடினோம் . எங்கள் லக்கேஜையும் வாங்கி வைத்து என் தாயையும் உள்ளே ஏற்றி என்னையும் உள்ளே திணித்தவர் யார் என்கிறீர்கள் காசியில் இருந்து கிளம்பிய பஸ் கண்டக்டர் . முதல் பஸ் ஸ்டாப் சென்று எங்களுக்காக சீட் போட்டுக் கொண்டு வந்து எங்களை ஏற்றிவிட்டார். kedarnath கேதார்நாத் கேதார் நாத்ஜியை தரிசித்துவிட்டு குதிரையில் கீழே இறங்குகின்றேன். கூட வந்தவர்களின் குதிரை சென்று விட்டது. குதிரைவாலாவை டீக்கடை பக்கம் நிறுத்தச் சொல்லி டீ கேட்கின்றேன். எப்பவுமே நம்முடன் வரும் கோடாவாலா நம் உணவு, மற்றும் டீயைச் சாப்பிட மாட்டார்கள். யாத்ரீகளின் உணவுப்பொருள்களை வாங்க மாட்டார்கள் கொடுத்த டீ டம்ளரை என்னுடைய உதடுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் என் இரண்டு கைகளும் டீ டம்ளருடன் ஆடுகின்றன.(நடுங்குகின்றது) என் கோடாவாலா அருகில் வந்து, கழுத்தைச் சுற்றி இருந்த தன் மப்ளரை கையில்கட்டி டம்ளரைப் பிடித்துக் கொள்ள வைத்துத் தானும் உதவி என்னைக் குடிக்க வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக சூடு உள்ளே சென்றவுடன் தெம்பு வந்தது. அடுத்த ஜென்மத்தில் அவருக்கு நான் நர்ஸாக பணிவிடை செய்ய வேண்டும். Travel Contest: 'உப்புச் சுரங்கம்; சாகச தீம் பார்க்; விமான மியூசியம்' - பிரமிப்பான போலாந்து சுற்றுலா காசி நாங்கள் ஒரு வாரம் காசியில் தங்கினோம். அதற்கும் முன்னால் பத்து நாள்களுக்கு நார்த் டூர் சுற்றியதில் நம் சாப்பாடு இல்லாததால் என் பெண்ணிற்கு வயிற்றுப்போக்கு. மறுநாள் திருப்பதி வருகின்றோம். ஹனுமந்த் காட்டில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் யாராவது தமிழ்க்காரர்களை பார்தால் ஒரு டம்ளர் சாதம் மட்டும் வடித்துக் கொடுத்தால் தயிர் கலந்து குழந்தைக்கு மாத்திரம் தூக்கில் எடுத்துச் செல்லலாம் டிரெயினுக்கு என்று அலைந்தேன். அங்கு கிடைக்கும் சாதம் மிகவும் கொட்டைகொட்டையாக இருந்தது. அங்கிருந்த பெரியவரிடம் என் நிலைமை கூறினேன். அதுக்கென்னம்மா, காலையில்தானே டிரெயின். இன்று இரவு 7 மணிக்கு இங்குவா. நான் பண்ணித்தரேன் கவலைப்படாதே என்றார். அந்த நேரத்துக்கு சென்ற என்னை தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்த அம்மையார் வாம்மா, குக்கரை திறந்து அந்த சாதத்தை தூக்கில் எடுத்துக்கோ. ஒங்க 3 பேருக்கும் நாளை காலைக்கு இட்டிலி பொட்டலம் கட்டி வைச்சிருக்கேன் எடுத்துக்கோ என்றார்! எத்தனையோ மறுத்தும் அவர் கேட்கவில்லை. மாமி நீங்க எடுத்து தாங்கோ என்றேன். அவருக்கு இரண்டு கால்களும் ஸ்வாதீனத்தில் இல்லை. நான் என்னால் முடிந்த பணத்தைக் கொடுத்து, காசிக்கு வந்து இனாமாக சாதத்தை எடுத்துக்கறது கஷ்டமாக இருக்குன்னேன் அப்பிடியா நீ திருப்பதி போகும் பொழுது அதை உண்டியில் போட்டுட்டு, இந்த கால் இல்லாதவளுக்கு, மனிதருக்கு உதவும் படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததுக்கு நன்றி சொன்னேன் என்று சொல்லி போட்டு என்றார். என் கண்ணில் நீர் அவர் எனக்குக் காசி அன்னபூர்ணா தேவியாக காட்சி அளித்தார். Travel Contest: 'உப்புச் சுரங்கம்; சாகச தீம் பார்க்; விமான மியூசியம்' - பிரமிப்பான போலாந்து சுற்றுலா ஒரிஸ்ஸா: இரண்டரை மணி நேரம் சிலிகா லேக்கில் பயணம் செய்தால் ஏற்பட்ட சிக்கில் (கடல் சிக்னஸ்) வாந்தி மயக்கம் எனக்கு. போட்டில் படுத்து விட்டேன். உறவினர் போட்மேன் பாதுகாப்பில் என்னை விட்டுச் சென்றனர். அவர் போட்டைக் கட்டிவிட்டு, அருகே கடைக்குச் சென்று ஒரு குளிர்பானம் வாங்கி வந்து, என்னை மெதுவாக எழுப்பி அதை குடிக்கவைத்து தெம்பூட்டினார். அவர் அதிகம் படித்தவரில்லை. நாகரீகம் கொண்ட உடை அணிந்தவரில்லை. ரிக்க்ஷாகாரர் (பகவான் கி ஸ்தான் பர் ஜகடா நஹி) பகவான் ஜகன்னா தன் இருக்கும் இந்த இடத்தில் நான் ஏன் சண்டை போடுவேன்? என்கிறார். அப்படி ஒரு கடவுள் பக்தி நம்பிக்கை. இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் யோசனை செய்து பாருங்கள். நாம் வாழ்நாளில் இது போன்று உதவி செய்தவர்கள் எவ்வளவு பேர் இருப்போம்? நுனிநாக்கு ஆங்கிலமும், நாகரீக உடைகளை அணியவும் நம்பிள்ளைகளுக்குக்கற்று கொடுக்கும் நாம், இது போன்ற மனப்பான்மையைச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறோமா என்று யோசனை செய்து பாருங்கள். நம் பாரத நாடு விரிந்து காணப்படுவது போன்று மக்கள் மனமும் விரித்து இருக்கின்றது அவற்றை உணர சுற்றுலா நமக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது. அவர்களை பார்க்கும் பொழுது நாமும் அப்படி மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கணும் என்ற வைராக்யம் தோன்றுகிறது. சுற்றுலா, கண்ணுக்கு மட்டும் விருந்தல்ல மனதை விரிவடையச் செய்யும் மனித நேயத்தைப் பதியவைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. -எம்.ஆ.ர். பர்வதம் Travel Contest: ஆப்பிரிக்க கடற்கரையின் உல்லாசப்போக்கிடத்திற்கு ஒரு கப்பல் பயணம்! My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை டூர் இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம். இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும். வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகை விவரம்: முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்) இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்) நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்) நினைவில் கொள்க: நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025 ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
இதுவரை குட் பேட் அக்லி திரைப்படம் செய்துள்ள ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
அஜித்குமாரின் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆதிக் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியாகி எட்டு நாட்களை கடந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து இப்படம் செய்துள்ள வசூல் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது
“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!”நயினார் நாகேந்திரன் பேச்சு!
“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னர் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் அண்ணாமலை இருந்தார். அதிமுக – பாஜக கூட்டணி , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் என கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காவே அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் […]
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய குட் பேட் அக்லி நடிகர் ஷைன் டாம் சாக்கோ..விவரம் உள்ளே
குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்தவர் தான் ஷைன் டாம் சாக்கோ. இவர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஷைன் டாம் சாக்கோ ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவர் மீது பிரபல நடிகை ஒருவர் மலையாள நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது
Helmet: உங்களுக்கு ஏற்றபடி ஹெல்மெட் வாங்குவது முதல் பராமரிப்பு வரை..!
போ லீஸ் கெடுபிடிக்குப் பயந்து ஹெல்மெட் அணிபவர்களே அதிகம்! நாம் வேண்டாவெறுப்பாக ஹெல்மெட் அணிந்தாலும், அது என்னவோ நம்மைக் காக்கும் வேலையைச் செய்துகொண்டே இருக்கிறது. கடும் வெயிலில், வியர்வையில் குளிப்போம்; தலையில் பெருகும் வியர்வை, ஹெல்மெட்டையும் நனைத்துவிடும். வண்டியை பார்க்கிங் செய்யும் இடத்தில், சுற்றுச்சூழல் பிரச்னைகளால் ஹெல்மெட் மூலம் தொற்று ஏற்படும் அபாயம் உண்டு; மழைக்காலத்தில், ஈரத்தில் ஊறி, அதிகமாகப் பாதிக்கப்படுவதும் ஹெல்மெட்தான். கவனிக்காமல்விட்டால், தலையில் ஒவ்வாமை, பொடுகு மற்றும் முடிகொட்டுதலுக்குக் காரணமாகிவிடும். எனவே, ஹெல்மெட்டை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஹெல்மெட் பராமரிப்பு சிறுசிறு பூச்சிகள்கூட ஹெல்மெட்டின் உட்பகுதியில் ஏறிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. நம்மில் பலரும் வெளியில் கிளம்பும்போது சோதித்துப் பார்க்காமலேயே ஹெல்மெட்டை அணிந்து கொள்கிறவர்கள்தான். இது தவறு. பொதுவெளியில் வண்டியை நிறுத்தி, ஹெல்மெட்டை அதனுடன் வைத்துவிட்டுச் செல்வதால், அதில் அழுக்குகளும் தூசும் படிந்திருக்கும். சிறுசிறு பூச்சிகள்கூட ஹெல்மெட்டின் உட்பகுதியில் ஏறிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஒவ்வொரு முறையும் ஹெல்மெட்டைத் தலையில் அணியும் முன், நன்கு பரிசோதித்து, சுத்தம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். ஃபைபர் கண்ணாடி பொருத்தப்பட்ட ஹெல்மெட் கண்களைப் பாதுகாக்கும். எப்போதுமே கண்களைப் பாதுகாக்கும் வகையில், ஃபைபர் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்துங்கள். இந்த வெயில் காலத்தில், இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது, சூரியக் கதிர்களால் கண்கள் பாதிப்படையும். சில நேரங்களில் புழுதி, பூச்சிகள் கண்ணில்பட்டு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பளிச் என நன்றாகச் சுத்தம்செய்யப்பட்ட, ஃபைபர் கண்ணாடி பொருத்தப்பட்ட ஹெல்மெட் அணிவது, பல்வேறு தொந்தரவுகளில் இருந்து கண்களைப் பாதுகாக்கும். பைக்கில் ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் டூவீலரில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோரின் கவனத்துக்கு 10 விஷயங்கள் காலை, மாலை என எந்த நேரமாக இருந்தாலும் ஹெல்மெட் அணிந்தே செல்ல வேண்டும். பலருக்கும் வேகமான காற்றோ, பனியோ காதில் புகுவது தொந்தரவு தரும் விஷயம். அலர்ஜி காரணமாக, தும்மல், சைனஸ் ஏற்படும். சளி, தும்மல், ஆஸ்துமா, சைனஸ், இருமல் போன்ற தொந்தரவு உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, காலை, மாலை என எந்த நேரமாக இருந்தாலும் ஹெல்மெட் அணிந்தே செல்ல வேண்டும். ''சக்கரத்தில் சிக்கலாம்; கழுத்தெலும்புகூட உடையலாம்...'' டுவீலரில் சிக்கும் துப்பட்டாவும், ஆபத்தும்! ஹெல்மெட் சூரியனிடமிருந்தும் காக்கும்! அதிக வெப்பத்தில், புகை, மாசு நிறைந்த இடங்களில் வண்டி ஓட்டும்போது, முகம் கருமையாகிவிடும். சூரியனிடம் இருந்து வரும் வீரியம் மிக்க புற ஊதாக் கதிர்கள் இதற்கு முக்கியக் காரணம். ஹெல்மெட் அணிந்திருந்தால், இப்படி முகம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். தினமும் குளிப்பதோடு, மூன்று முறை நல்ல தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். ஹெல்மெட் சூரியனிடமிருந்தும் காக்கும்! `அன்னிக்கு மட்டும் பைக் சாவிய பிடுங்கியிருந்தா’- உடல் உறுப்புதான நாள்; ஹிதேந்திரன் பெற்றோர் உருக்கம் அது முழுக்க உண்மை இல்லை. ஹெல்மெட் வாங்கும்போது தாடைப் பகுதியைப் பாதுகாக்கும் வகையில், உங்களது முகத்துக்கு ஏற்றவாறு பார்த்து வாங்க வேண்டும். `ஹெல்மெட் போடுவதால் முடி கொட்டுகிறது’ எனச் சிலர் சொல்வார்கள். அது முழுக்க உண்மை இல்லை. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு, சூரியக் கதிர்களால் முடியில் இருக்கும் செல்கள் பாதிக்கப்படும். சுற்றுப்புற மாசு முடியைப் பாதித்து, பொடுகை ஏற்படுத்தக்கூடும். ஹெல்மெட்டைப் சுத்தமாகப் பயன்படுத்தினால், தலைமுடி பாதிக்கப்படாது. ஹெல்மெட்டை சுத்தம் செய்வது எப்படி? ஹெல்மெட்டை சுத்தம்செய்து பயன்படுத்தினால், திடீர் ஆபத்தை மட்டும் அல்ல... முகத்தின் அழகு மற்றும் ஆரோக்கியத்தையும் காக்கலாம். வாரம் ஒரு நாளாவது ஹெல்மெட்டின் உட்பகுதியில் நல்ல வெயில்படும்படி வைக்க வேண்டும். துடைப்பதற்கு சுத்தமான பருத்தித் துணியைப் பயன்படுத்தலாம். ஹெல்மெட் ஹெல்மெட்டை சுத்தம் செய்ய பிரத்யேக ஷாம்பு, ஸ்ப்ரேக்கள் சந்தையில் கிடைக்கின்றன. இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை இவற்றைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். உட்பகுதிகளைத் தனியாகக் கழற்றி எடுத்து, மீண்டும் பொருத்தும் வகையிலான ஹெல்மெட்டை வாங்குவது நல்லது. இவற்றை சோப்பு நீரில் 5 - 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவுவது எளிது. Per day...how many/much 27: ஹெல்மெட் உள்ளே மொபைல் வைத்துப் பேசுகிறீர்களா... காது பத்திரம்!
மதுரை சித்திரை திருவிழா : ஏப்ரல் 29 முதல் மே 2 வரை ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 28 முதல் மே 10 வரை நடைபெற உள்ளது. மே 8-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும்.
அதை நினைத்தால் தான் பயமா இருக்கு..ரெட்ரோ பற்றி சூர்யா ரசிகர்கள் கவலைப்படும் ஒரே விஷயம்
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கின்றது. அத்துடன் படத்தின் ட்ரைலரும் வெளியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து ரெட்ரோ திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு சென்சார் செய்யப்பட்ட நிலையில் இப்படத்தை நினைத்து ஒரே ஒரு விஷயத்திற்காக பயமாக இருப்பதாக சூர்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவமானப்படுத்த, மும்பை இந்தியன்ஸ் அணி வித்தியாசமாக வென்றதாக சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
துருக்கியிலிருந்து தாயகம் திரும்பிய 1,75,000 சிரியா மக்கள்!
துருக்கி நாட்டிலிருந்து 1,75,000-க்கும் மேற்பட்ட சிரியா மக்கள் தங்களது தாயகத்திற்கு திரும்பியுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியா நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக அஸாத் குடும்பம் ஆட்சி செய்து வந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டு போரில் கிளர்ச்சிப்படையினர் வெற்றி பெற்று பஷார் அல்-அஸாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்தப் புரட்சியின் மூலம் கிளர்ச்சிப்படையினரின் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டு சிரியாவை மீண்டும் சர்வதேச அங்கீகாரமுள்ள நாடாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]
இத்தாலியில் கேபிள் கார் விபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழப்பு
இத்தாலியின் தெற்கு நகரமான நேபிள்ஸ் அருகே நேற்று வியாழக்கிழமை நடந்த கேபிள் கார் விபத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். மற்றொருவர் காணாமல் போனதாக உள்ளூர் மீட்பு சேவைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து காஸ்டெல்லம்மரே டி ஸ்டேபியா நகரில் உள்ள மான்டே ஃபைட்டோவில் நடந்தது. பயணிகள் வெசுவியஸ் மலையையும் நேபிள்ஸ் விரிகுடாவையும் கண்டு ரசிக்கக்கூடிய கேபிள் கார் ஒரு வாரத்திற்கு முன்புதான் சுற்றுலாப் பருவத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது. 1,100 மீட்டர் உயரமுள்ள (3,600 அடி) மலையை அடைய பொதுவாக சுமார் 10 நிமிடங்கள் எடுக்கின்றது.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை வரவேற்க ஜெய்ப்பூர் தயாராகிறது!
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் ஏப்ரல் 22 அன்று ஜெய்ப்பூருக்கு வருகிறார். அவர் தொழில்துறை தலைவர்களைச் சந்தித்து வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றுவார்.
சென்னையில் கட்டுமானப் பணிகளை தாமதப்படுத்தியதால் 15 லட்சம் ரூபாய் அபராதம்!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB), ஒரு ஒப்பந்ததாரருக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பெர்லினில் 15 நோயாளிகள் மர்ம மரணம்: கொலைகளுக்கு மருத்துவர் எடுத்த பயங்கர வழிமுறை!
பெர்லினில் 15 நோயாளிகளின் மரணம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவர் கைது பெர்லினில் நோயாளிகளின் இறுதி நேர கவனிப்பு மருத்துவர் ஒருவர் 15 நோயாளிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 2021 முதல் ஜூலை 2024 வரை பன்னிரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என மொத்தம் பதினைந்து பேரின் மரணத்திற்கு இந்த 40 வயது மருத்துவர் வேண்டுமென்றே காரணமானதாக அரசு வழக்கறிஞர்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், கொலை […]
மிகப்பெரிய போர்க்கப்பலை உருவாக்கும் வட கொரியா: வைரலாகும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்
வட கொரியா இதுவரை கட்டியதிலேயே மிகப்பெரிய போர்க்கப்பலை உருவாக்குவதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தகவல் தெரியவந்துள்ளது. செயற்கைக்கோள் புகைப்படங்கள் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வட கொரியா தனது கடற்படை பலத்தை கணிசமாக அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றன. அந்நாடு இதுவரை கட்டியதிலேயே மிகவும் லட்சியமான போர்க்கப்பல் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்ட படங்கள், நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் ஒரு பெரிய கப்பல் உருவாகி வருவதை வெளிப்படுத்துகின்றன. […]
3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பாக, அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷானால் இரண்டு ரன்கள் […]
டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக பதவியில் இருக்க முடியுமா?
கார்த்திகே சிங் 78 வயதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூனாறாவது பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாக இருப்பது குறித்து சிந்திப்பதாக மார்ச் 30 ஆம் திகதி கூறினார். தான் பகிடி விடுவதாக நினைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சட்டங்களில் உள்ள ‘ ஓட்டைகளை ‘ பயன்படுத்தி மூன்றாவது பதவிக்காலத்துக்கும் ஜனாதிபதியாக தன்னால் இருக்கக் கூடியது சாத்தியம் என்றும் அவர் மேலும் கூறினார். அமெரிக்க அரசியலமைப்பு அனுமதிக்குமா? அமெரிக்க ஜனாதிபதிகள் இரு பதவிக்காலங்களுக்கு தெரிவாவதை மட்டுப்படுத்தும் […]
திமுக சீக்ரெட் சர்வே- சிக்கலில் கொங்கு மண்டல செல்வாக்கு... ஸ்டாலின் போடும் 2026 தேர்தல் பிளான்!
வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பல்வேறு விதமான கூட்டணிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த சூழலில் கொங்கு மண்டலத்தில் கொடி நாட்டுவதற்காக திமுக சீக்ரெட்டாக சில விஷயங்களை கையில் எடுத்துள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dhoni: தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..! - நினைவுகள் பகிரும் மோஹித் சர்மா
ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை இதுவரை வென்ற 9 இந்தியர்களில் மோஹித் சர்மாவும் ஒருவர். 2013-ல் சி.எஸ்.கே அணியில் தனது பயணத்தைத் தொடங்கிய மோஹித் சர்மா, தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் அதே அணியில் ப்ரைம் பவுலராகச் செயல்பட்டு மொத்தமாக 57 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2014 சீசனில் ஊதா நிற தொப்பி வென்றார். சி.எஸ்.கே-வில் அறிமுகமான அதே ஆண்டில் இந்திய அணியிலும் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, 2015 ஒருநாள் உலகக் கோப்பையிலும் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடினார். மோஹித் சர்மா - தோனி அடுத்து, சென்னைக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்படவே, 2016-ல் பஞ்சாப் அணிக்குச் சென்றார். அங்கு 2018 வரை விளையாடிய மோஹித் சர்மாவை, 2019-ல் ரூ. 5 கோடி கொடுத்து வாங்கியது சென்னை. ஆனாலும், அந்த சீசனில் ஒரே போட்டியில் மட்டுமே சென்னை அவரை ஆட வைத்தது. அதையடுத்து, 2020-ல் ரூ. 50 லட்சத்துக்கு டெல்லி அணியும் அந்த சீசனில் ஒரே போட்டியில் மட்டுமே ஆடவைத்தது. அதன்பிறகு, 2021, 2022 சீசனில் எந்த அணியும் இவரை ஏலத்தில் வாங்கவில்லை. இருப்பினும், 2022-ல் புதிதாக அறிமுகமான குஜராத் அணியில் நெட் பவுலராக இணைந்தார். 2023-ல் அதே அணியால் ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மோஹித் சர்மா, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சிறப்பாகப் பந்துவீசி, 27 விக்கெட்டுகள் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முக்கியப் பங்காற்றினார். மோஹித் தனது ஐ.பி.எல் கரியரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சீசன் இதுதான். இருப்பினும், கடந்த சீசன் (2024) அவருக்கு சிறப்பாக அமையவில்லை. 12 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினார். மோஹித் சர்மா இதனால், நடப்பு சீசனுக்கான (2025) மெகா ஏலத்தில் குஜராத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, டெல்லி அணியால் ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். இந்த நிலையில், சி.எஸ்.கே-வில் தான் விளையாடிய காலத்தில் தோனி, டென்னிஸ் ஜாம்பவான் மரியா ஷரபோவாவின் பெயரை தனக்கு செல்லப்பெயராக (Nickname) வைத்து அழைத்த நினைவுகளை மோஹித் சர்மா பகிர்ந்திருக்கிறார். மோஹித் சர்மா - தோனி ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் இதனைப் பகிர்ந்துகொண்ட மோஹித் சர்மா, மஹி பாய் (தோனி) எனக்கு மரியா ஷரபோவா என்று செல்லப்பெயர் வைத்தார். `சில டென்னிஸ் பிளேயர்ஸைப் போல சத்தம் போடுகிறீர்கள்' என்று அதற்கு காரணமும் சொன்னார். அதற்கு நான், `அவ்வாறு கத்தும்போது, நாம் மெதுவாகப் பந்துவீசினாலும் 140 - 150 கி.மீ வேகத்தில் பந்துவருவதாக பேட்மேன்ஸ்கள் நினைப்பார்கள். அது எனக்கு பிளஸ் பாய்ன்ட்தான்' என்பேன் எனக் கூறினார். டென்னிஸ் ஜாம்பவான் மரியா ஷரபோவா, 2006 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Mohit Sharma: `ஒருபோதும் வீழ்ந்ததாய் எண்ணாதே!' - சிதையாத தோனியின் நம்பிக்கை; ஒரு கம்பேக் கதை!
TASMAC Raid: பொய் தகவல் கூறி வழக்கை திசைதிருப்ப முயற்சி - தமிழக அரசை குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகள், இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, சோதனையின் போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்கவைக்கப்படவில்லை எனவும், ஒரு சில ஆண் அதிகாரிகள் மட்டுமே மூன்று நாளும் தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும் தனது வாதத்தை முன்வைத்தார். TASMAC மேலும், சோதனையின்போது டாஸ்மாக் அதிகாரிகளுக்கோ அல்லது அலுவலக உடமைகளுக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை எனவும், இதனை எல்லாம் ஒப்புக்கொண்டு அதிகாரிகள் பஞ்சநாமாவில் கையெழுத்துட்டுள்ளதாகவும் எஸ்.வி.ராஜூ தெரிவித்தார். அதோடு, சோதனையின் போது அமலாக்கத்துறை சார்பில் பெண் அதிகாரிகள் இருந்ததாகவும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை கூறி இந்த விவகாரத்தை திசை திருப்ப முயல்வதாக அமலாக்கத்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை அதுமட்டுமல்லாமல், அமலாக்கத்துறை அதிகாரிகள் எதற்காக வந்திருக்கிறோம் என்ற தகவலை டாஸ்மாக் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாளரிடம் தெரிவித்த பின்னரே சோதனை தொடங்கப்பட்டதாகவும், அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டு போதிய ஓய்வு தரப்பட்டதாகவும் தெரிவித்த எஸ்.வி.ராஜூ, நள்ளிரவில் பாதுகாப்பு கருதி பெண் ஊழியர்கள் முன் கூட்டியே அனுப்பப்பட்டதாகவும், சோதனையின்போது யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை எனவும் கூறினார். அமலாக்கத்துறை வாதம் நிறைவடைந்த நிலையில் டாஸ்மாக் தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மதுரை: டாஸ்மாக் மதுக்கடையில் தகராறு; போலீஸ்காரரை தாக்கி கொலை செய்த கும்பல்
NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * `வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு * கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார் * கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - தம்பிதுரை * வெற்றிக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்! - ஜி.கே.வாசன் * கூட்டணியில் விரிசல் இல்லை! - பாஜக தலைமை * ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே கூட்டணி! - கிருஷ்ணசாமி * தமிழ்நாட்டின் உயர் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்துவோம்! - துணைவ வேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் * தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து! - பிரதமருக்குக் கடிதம் எழுதிய முதல்வர் * புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்! - எடப்பாடி * மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்! - பின்னணி என்ன? * கல்வி நிலையங்களில் சாதிப் பெயர்களை நீக்குக! - உயர் நீதிமன்றம் * சீமான் பேச்சு: கடுமை காட்டிய உயர் நீதிமன்றம்! * 1000 கோடி டாஸ்மாக் முறைகேடுகளுக்கு ஆதாரம் இருக்கிறது! - உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை * தர்பூசணிப் பழங்களில் ரசாயனம் இல்லை! - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு * இந்து அமைப்புகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? - இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் * மகாராஷ்டிராவில் 5-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்! * நேஷ்னல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்! * உ.பி: சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு சிகரெட் கொடுத்த அரசு மருத்துவர்! * முர்ஷிதாபாத் வன்முறைக்குக் காரணம் பாஜகதான்! - மம்தா * தெலங்கானா: காடுகளை அழிக்கக்கூடாது - கடுமை காட்டிய உச்ச நீதிமன்றம்! * கர்நாடகா: இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர்! * இந்தியா வரும் அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸ்! * சீனாவுக்கு 245% வரி போடுவோம்! - அமெரிக்கா எச்சரிக்கை? முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.
'Vijay'-யை காட்டி கேம் ஆட துடித்த BJP...சுதாரித்த EPS?! | Elangovan Explains
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 30,000 பேர் : ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
இலங்கையின் அரச சேவையில் புதிதாக 30,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். மன்னாரில் (Mannar) இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”5 முதல் 6 வருடங்களுக்கு பின்னர் தற்போது 30,000 பேரை அரச சேவையில் சேர்க்கவுள்ளோம். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை. பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவோம், விண்ணப்பங்களை […]
பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குல்தீப், தனது மனைவி அன்ஷுதியாகியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். குல்திப் தியாகி (46), எழுதிவைத்திருக்கும் தற்கொலைக் குறிப்பில், தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது பற்றி குடும்பத்தில் யாருக்கும் தெரியாது, சிகிச்சை அளித்தாலும் குணமடையாது என்று தெரிந்ததால் பணத்தை வீணாக்க விரும்பவில்லை, தனது மனைவி தன்னுடனே இருக்க […]
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு செய்யாவிட்டால் ஒதுக்கப்பட்ட நிதியை கையாள்வதில் தடைகள் ஏற்படுமென மிரட்டல் தொனியில் அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளவாது, மன்னாரில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சுற்றாடல் அமைச்சர் இந்த வருடம் பாதீட்டில் இதுவரை எந்த அரசாங்கங்களும் செய்யாத அளவிற்கு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக நிதியொதுக்கியுள்ளோம். இந்த நிதியை முறையாக அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த நிதியை செலவளிப்பதில் தடைகள் ஏற்படலாம். ஆகவே மக்கள் தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது மிகமோசமான பிரச்சாரயுக்தியாகும். ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் மாகாணங்களின் அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு செய்வது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் கடமையாகும். அதனை அவர்கள் தவிர்க்க முடியாது. வடக்கு மாகாணம் இலங்கையில் தான் அமைந்துள்ளது. வடக்கு மாகாணம் நான் அறிந்தவரையில் தனிநாடல்ல. அப்படிப் பார்த்தால் கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தினால் உட்கட்டுமானங்கள் நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாதுள்ளது. அங்குள்ள மக்களின் தேவைகள் நாட்டின் ஏனைய மாகாணங்களில் வாழுகின்ற மக்களின் தேவையைவிட வேறுபட்டது. ஆகவே வடக்கு மாகாணத்திற்கு விசேடமாக அதிக நிதி ஒதுக்கீடுகளை இந்த அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நிதியொதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் உங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளோம். அதனை முறையாக பயன்படுத்த எங்களுக்கு மட்டுமே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதன் அர்த்தம் நீங்கள் வேறு யாருக்காவது வாக்களித்தால் அந்த நிதியை நாங்கள் விடுவிக்கமாட்டோம் என்றே அர்த்தப்பட வேண்டியுள்ளது. மத்திய அரசினால் மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியானது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கு சொந்தமானது. அதனை அனுபவிக்க அனைத்து மக்களிற்கும் உரிமையுள்ளது. அதுவே ஜனநாயகம். பாதீட்டு நிதி என்பது தேசிய மக்கள் சக்தியின் கட்சி நிதியோ சனாதிபதியின் சொந்த நிதியோ அல்ல. இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து பெறப்படுகின்ற நிதியாகும். எனவே இவ்வாறான மிரட்டும் தொனியிலான பாணியில் தேர்தல் பிரசாரம் செய்வதை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அமைச்சரின் மிரட்டலுக்கு சரியான பதிலை எதிர்வரும் தேர்தலில் வாக்குப் பலத்தினால் தமிழ் மக்கள் காட்டுவார்கள் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இபிஎஸ் விருந்து.. சைவம் முதல் அசைவம் வரை : ரெடியான மெனு!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் விருந்தளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டக்ளஸ் கைது:சந்திரசேகரனும் சாட்சி!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைதாகலாமென தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப்பூங்காவில் இன்று(17) ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க கலந்து கொண்ட உள்ளூராட்சி மன்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சந்திரசேகரன் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில், கடந்த காலங்களில், ஆட்கடத்தல்,ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கொலையாளி அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவரையும் பழிவாங்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு கிடையாது.ஆனால் பொதுமக்களின் சொத்துக்களை திருடி மோசடி செய்திருந்தால் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் கடப்பாடு எங்களுடையது. அதை நாங்கள் செய்கின்றோம்.அவர்களுக்கு தண்டனை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது நீதிமன்றமாகும் எனவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
‘கேங்கர்ஸ்’படம் ஆரம்பிக்க விதை போட்டது வடிவேல் அண்ணன்தான் –சுந்தர் சி
அவ்னி சினிமாக்ஸ் பிரைவீட்லிமிட்ட( Avni Cinemax (P) Ltd) சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD
உண்மை குற்றவாளிகள் முதலில் பிடிபடட்டும்!
பிள்ளையானை கைது செய்து தண்டிப்பதன் மூலம் ஈஸ்டர் தாக்குதலை திசை திருப்ப அனுர அரசு முற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, உயிர்த்த ஞாயிறு தின சிறப்பு செய்தியில், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் யார், அந்தக் கொடூரமான செயலுக்கு உதவியவர்கள் யார் என்பதைக் கண்டறிவது அவசரமான விடயம் என்று வலியுறுத்தியுள்ளது. மிருகத்தனமான தாக்குதல் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தால் சில நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் கவனிக்கிறோம். இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம் என்றாலும், நியாயம் மற்றும் நீதியின் அடிப்படையில், விசாரணைகளின் இறுதி நோக்கம் குற்றவாளிகள் யார், அந்தக் கொடூரமான செயலில் உதவியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் எனவும் இலங்கையில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, தெரிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 162 ரன்களை எடுத்தது. கடைசி நேரத்தில், ஓவர்கள் வழங்குவதில் ஹர்திக் சொதப்பியதால், சன் ரைசர்ஸ் திடீர் ரன் மழை பொழிந்தது.
ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக அபிசேக் சர்மா […]