சண்டே ஸ்பெஷலாக டிவியில் (மே 18) போடப்படும் படங்கள்.. அட்டகாசமான லிஸ்ட் இதோ!
சின்னத்திரையில் சண்டே ஸ்பெஷலாக (18/05/2025) டிவியில் என்னனென்ன படங்கள் போடப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
Mumbai: In a significant strategic shift, ZEE Entertainment Enterprises Ltd. (Z) has unveiled its new corporate identity, positioning itself as a Content and Technology Powerhouse . The transformation marks a milestone in the company’s three-decade journey and underscores its commitment to shaping the future of entertainment by integrating cutting-edge technology with rich storytelling. The announcement was made by CEO Punit Goenka during the ZEE Cine Awards 2025, where the company revealed a futuristic and dynamic brand universe designed to reflect the evolving aspirations of a young, emerging India. The full rollout across all Z platforms is scheduled for June 8, 2025, coinciding with the awards show telecast. A New Era for Z: Purpose-Driven, Tech-Enabled As part of this strategic repositioning, Z is aligning its operations around three core drivers— Purpose, Mission, and Vision —aimed at enhancing long-term growth, operational excellence, and stakeholder value. Purpose : “To enrich the lives of people around the world by creating extraordinary moments, which celebrate the power of optimism and togetherness.” Vision : “To bring about a positive change in people’s lives through purposeful entertainment.” Mission : “To consistently strive towards creating value for all stakeholders, with a sharp focus on keeping consumers entertained and informed through world-class infotainment platforms.” This framework will guide Z’s decision-making and execution across content creation, distribution, and monetization—now increasingly driven by data, digital infrastructure, and emerging technologies. New Brand Identity: Blending Legacy with the Future Z’s revamped brand universe represents a careful blend of its deep-rooted legacy and forward-looking ambitions. Designed with a sharp, modern aesthetic, the new identity reflects the company’s resolve to remain agile and adaptive in a rapidly evolving digital landscape. [caption id=attachment_2245073 align=alignleft width=200] Punit Goenka [/caption] The refreshed visual language is inspired by India’s rich cultural tapestry and global sensibilities, presenting Z as a future-ready media entity. From broadcast to OTT and digital, the new brand architecture will extend across all platforms, embracing a unified look that reinforces brand equity while allowing flexibility for creative expression. “The futuristic, dynamic design reflects the capabilities of our people and platforms to innovate, scale, and deliver impactful experiences,” said CEO Punit Goenka. “It is an expression of our bold spirit and our aspiration to shape the future of content and technology, both in India and globally.” ‘Yours Truly, Z’: A Brand Promise of Authenticity and Connection At the heart of this transformation lies Z’s new brand promise— ‘Yours Truly, Z’ —a heartfelt commitment to its viewers, partners, employees, and stakeholders. The promise symbolizes authenticity, trust, and the emotional connection the brand has nurtured over three decades. In open letters addressed to its stakeholders, Z expressed its gratitude and aspirations. To its viewers, Z pledged: “I promise to make you laugh louder, dream bigger and feel more deeply in every moment and through every experience. After all, life is not about counting the beats of your heart, but counting the moments that make your heart beat!” To its employees, the letter read: “The most beautiful part of our story is not what we have achieved together, but the journey we have undertaken to achieve it. You are not just a part of this journey; you are the journey.” This emotional articulation will be brought to life across Z’s platforms in multiple Indian languages, reinforcing the brand’s deep cultural relevance and inclusive approach. Core Brand Pillars and Strategic Direction Z’s future roadmap is anchored in key brand pillars that emphasize innovation, agility, inclusivity, and accountability. The company aims to revolutionize the consumer experience by: Integrating advanced technologies into content production and distribution. Enhancing consumer touchpoints with immersive, personalized content across platforms. Unlocking value-accretive opportunities across emerging and existing markets. Strengthening its human capital by aligning talent with a unified growth vision. The transformation also positions Z to play a central role in reshaping India’s Media & Entertainment industry , while expanding its global footprint. Legacy Meets Innovation With over 30 years of industry leadership, Z has consistently set benchmarks in Indian media—becoming the first Indian broadcaster to go global and pioneering formats that defined modern television in the country. This new phase builds upon that legacy, with a clear focus on profitability, performance , and purpose-driven storytelling . “As we look ahead, our endeavor is not just to entertain, but to inspire, enrich, and impact lives meaningfully,” Goenka added. “Our brand promise and core pillars will serve as our North Star as we pursue purposeful business outcomes and build a future-ready enterprise.”
RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) இடையேயான போட்டி மூலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கவிருந்தது. ஆனால் 10 மணிக்கு மேலாகியும் மழை முழுவதும் விடாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.பெங்களூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் டாஸ் போடுவதிலும், போட்டி தொடங்குவதிலும் முதலில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், போட்டி குறைந்தது 5 ஓவர்களாவது நடக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் […]
திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. தாலிய அடமானம் வச்சி வாங்குனேன் - கண்ணீர் விட்டு கதறிய ஓனர்!
சென்னையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், கார் உரிமையாளர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு பாவம் பார்த்த துருக்கி! பங்கம் செய்த பெங்களூரு ஆடைகள் சங்கம்...
பாகிஸ்தானுக்கு பாவம் பார்த்த துருக்கிக்கு, வலுக்கும் எதிர்ப்புகள் காரணமாக, அந்நாட்டுகான ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பெங்களூரு ஆடைகள் சங்கங்கள் எடுத்த முடிவு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்!
ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் நிலையான ஓய்வூதியம் வழங்குவதற்காக, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய ஓய்வூதிய திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) குறித்த முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் காண்போம்.
யார் அந்த தம்பி.. ரத்தீஷுக்கு எப்படி வந்தது இவ்வளவு அதிகாரம்? - அதிமுக சரமாரி கேள்வி!
டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமறைவான ரத்தீஷ் குறித்து திமுகவுக்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
அதிகரிக்கப்படும் மின் கட்டணம் ; முழு கட்டண திருத்த விபரம்
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 18.3 சதவீதம் உயர்த்த வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. கட்டணத் திருத்தம் மின்சார சபைக்கு ஏற்படும் நிதி இழப்புகளைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டணத் திருத்தம் முன்மொழியப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் கோரிக்கை இல்லாமல் மின்சாரக் […]
மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 கிளர்ச்சியாளர்கள் நேற்று (மே 16) கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், சூராசந்திரப்பூரின் துயிபோங் பகுதியில் சின் குக்கி நேஷனல் டிஃபென்ஸ் ஃபோர்ஸ் எனும் அமைப்புக்கு ஆள் சேர்த்த நபர் ஒருவர், கடந்த மே 15 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரும், அப்பகுதி மக்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் […]
டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை : வெதர்மேன் விடுத்த எச்சரிக்கை!
டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அது தொடரும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
``தோனி டெஸ்ட்ல ரிட்டையர் ஆகிட்டு இன்னும் ஐ.பி.எல் ஆடுறாரு, ஆனா கோலி..'' - சஞ்சய் மஞ்சரேக்கர்!
'கோலி பற்றி சஞ்சய் மஞ்சரேக்கர்!' பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையினால் போட்டி தாமதமாகியிருக்கிறது. டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலி ஆடப்போகும் முதல் போட்டி இது. Sanjay Manjrekar அதனால் இந்தப் போட்டிக்கு முன்பாக பலரும் விராட் கோலியின் டெஸ்ட் கரியரிரை பற்றிய தங்களின் அபிப்ராயங்களை பகிர்ந்திருந்தனர். அதில் வர்ணணையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தோனியுடன் கோலியை ஒப்பிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். 'கோலியின் உச்சக்கட்ட பார்ம்!' சஞ்சய் மஞ்சரேக்கர் பேசியதாவது, 'விராட் கோலி என்கிற பெயரை கேட்டாலே ரசிகர்கள் காந்தம் போல ஈர்க்கப்படுகின்றனர். பல ஆண்டுகால கடின உழைப்பால்தான் விராட் கோலி இந்த நிலையை எட்டினார். 2010-11 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அடிலெய்ட் டெஸ்ட்டில் கோலி சதமடித்திருப்பார். அந்தத் தொடரில் இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட ஒரே சதம் அதுதான். Virat Kohli 2015 - 19 காலக்கட்டத்தைதான் அவரின் உச்சக்கட்டம் என்பேன். அந்த சமயத்தில் அவரின் ஆவரேஜ் 63. மேலும், கோலி மற்ற இந்திய பேட்டர்களிலிருந்து வித்தியாசமானவர். அவர்களிலிருந்து இவரின் பாணியும் குணாதிசயமும் வேறு. கோலி இப்போதைய சாதிக்க துடிக்கும் இளம் தலைமுறையின் துடிப்பான பிரதிநிதியாக இருந்தார். Virat Kohli : `காட்டையே அள்ளி உண்ணும் மிருகம்!' - விராட் கோலி ஏன் 'GOAT' தெரியுமா? 'தோனியை விட...' கிரிக்கெட்டை விட தனிப்பட்ட வீரர்கள் பெரிதில்லை என்பார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் அபாயத்தில் இருந்தபோது கோலிதான் தன்னுடைய ஆட்டத்தின் வழி டெஸ்ட் போட்டியை நோக்கி கவனத்தை ஈர்த்தார். தோனி 2014 லிலேயே டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், இன்னமும் ஐ.பி.எல் இல் ஆடிக்கொண்டிருக்கிறார். கோலி அப்படியில்லை. Virat Kohli கோலி தன்னால் முடிந்தளவுக்கு நீண்ட காலமாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடியிருக்கிறார். கோலிக்கு டெஸ்ட் போட்டிகள் தேவை என்பதை விட, டெஸ்ட் போட்டிகளுக்குதான் கோலி தேவைப்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் அந்த 4 இன்னிங்ஸ்களிலும் ரொம்பவே அயர்ச்சியோடு சுவாரஸ்யமே இல்லாமல் ஆடிய காலமெல்லாம் உண்டு Virat Kohli 2011 இங்கிலாந்தில் போராடாமலேயே தோற்றோம். ஒரு முறை நியூசிலாந்துக்கு சென்றிருப்போம். அங்கே மெக்கல்லம் நமக்கு எதிராக முச்சதம் அடிப்பார். இந்திய அணி எந்தவிதத்திலும் சவாலளிக்காமல் வெற்றிக்கான போராட்டமே இல்லாமல் போன காலக்கட்டமெல்லாம் இருந்தது. கோலி கேப்டனாக ஆன பிறகு அப்படி ஒரு போட்டியை கூட பார்க்கவில்லை. ஏன், ஒரு செஷனை கூட பார்த்ததில்லை. தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்கிற துணிச்சலோடு வெற்றிக்காக முயற்சி செய்வார்.' என்றார். ``விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதுவன்!'' - சின்னசாமியில் நெகிழ்ந்த ஹர்ஷா போக்லே!
ஊடகவியலாளரை பலியெடுத்த விபத்து; சாரதி தப்பியோட்டம்
ஹபரணை – திருகோணமலை வீதியில் அநுராதபுரம், ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்த இளம் […]
``டாஸ்மாக் ரெய்டு பயத்தில், அதிமுக-வினர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏவல்..'' - இபிஎஸ் காட்டம்
தி ருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் குறித்து அவரின் சொந்தக் கிராமமான `சேவூர் மக்கள்’ என்ற பெயரில், கடந்த 2022-ம் வருடமே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 12 பக்கப் புகார் கடிதம் பறந்தது. அதில், ``2016 மற்றும் 2021 தேர்தல்களின்போது, வேட்பு மனுக்களுடன் சேவூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த சொத்து மதிப்பினை ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மைத் தெரியவரும். ராமச்சந்திரனின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்திருக்கிறது’’ என்கிற குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தன. சேவூர் ராமச்சந்திரன் அதையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரின் மனைவி மணிமேகலை, இரு மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிந்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் ஆரணியில் இருக்கின்ற சேவூர் ராமச்சந்திரனின் வீடு மற்றும் அவரின் இரு மகன்கள் வசித்துவரும் வீடுகளிலும் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர் தஞ்சாவூர்: முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை! ரெய்டு நடப்பதை அறிந்த அ.தி.மு.க-வினர் ராமச்சந்திரன் வீட்டு முன்பு குவிந்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராகவும், ஆளும்கட்சியான தி.மு.க-வைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த சோதனைக் குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாவது, ``அன்புச் சகோதரர் சேவூர் ராமச்சந்திரனை குறிவைத்து ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ரெய்டுகள் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க-வின் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியிருக்கிறார். டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து மக்களிடம் எப்போது மௌனம் கலைக்கப் போகிறார்? பின்னப்பட்ட புனைக்கதைகளால் போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அ.தி.மு.க இயக்கத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம்’’ எனக் கூறியிருக்கிறார். Tasmac ED Raid: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!
காசாவை வாட்டும் பட்டினி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கவலை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வளைகுடா நாடுகளுக்கு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணத்தில், இஸ்ரேலைத் தவிர்த்தது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பயணத்தின்போது, காசாவில் நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை குறித்தும், அங்குள்ள மக்களின் அவல நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். உணவுப் பற்றாக்குறை அதிகரிப்பு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு மாத போர் நிறுத்தம் மார்ச் மாதத்தில் முறிந்ததை அடுத்து, காசா மீது இஸ்ரேல் மீண்டும் முழு அளவிலான தாக்குதலைத் […]
துபாய்–அபுதாபி இடையே வெறும் 50 நிமிடம் தான்! எதிஹாட் ரயில் திட்டம் பற்றி தெரியுமா?
துபாய்–அபுதாபி இடையே வெறும் 50 நிமிட பயணத்தை வழங்கும் யுஏஇ இன் எதிஹாட் ரயில் திட்டம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ராணுவ வீரர்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேட்ட செல்லூர் ராஜு
தனது பேச்சால் ராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
பீகாரில் உள்ள கயா நகரம் இனி ‘கயா ஜி’ என்று அழைக்கப்படும்!
பீகாரின் கயாவில் உள்ள புத்தகயா, உலகின் மிக முக்கியமான மற்றும் புனிதமான புத்த யாத்திரை மையங்களில் ஒன்றாகும். இங்குதான் போதி
வடக்குக் கிழக்கிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி பிரபலங்கள் தான் பின்னடைவைக் கொண்டு வந்திருந்ததாக கட்சி தலைமை கொழும்பில் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஆகியோரது செயற்பாடுகளை கட்சி தலைமை கண்டித்துள்ளது. அதிலும் சந்திரசேகரின் சொற்களும் உடல்மொழியும் நையாண்டித்தனமான பரிகசிப்பும் ஆதரவாளர்களைக் கூட தலைகுனிய வைத்துள்ளதாக புகார் இடப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் சந்திரசேகர் கட்சியில்; 30 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்டவர். ஒரு தடவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இப்பொழுது அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர். இப்படியெல்லாம் இருந்தும் எதைப்பேசுவது? எப்படிப் பேசுவது? அரசியல் விடயங்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாத நிலையிலேயே சந்திரசேகருடைய நடவடிக்கைகளும் வார்த்தைகளும் உள்ளதாக உள்ளுர் அவதானியொருவர் தெரிவித்துள்ளார். மறுபுறம் அரை அவியல் இளங்குமரனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அரசியல் விடயங்களைப் பற்றிய பேச்சுகளில் மிகப் பலவீனமாக உள்ளார்.ஏழாலையில் யாழ்ப்பாணமென்கிறார்.அரசின் வர்த்தமானியை நம்பவில்லையென்கிறார். இன்னொருபுறம் ரஜீவனோ பெண்களை தற்கொலை செய்ய சொல்லி ஆலோசனை சொல்லும் ரகத்திலுள்ளார். இத்தகைய அரைவேக்காடுகளே கட்சியின் பின்னடைவிற்கு காரணமென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
யாழ் ஆவா குழுவின் தலைவரை, கனடாவிலிருந்து நாடு கடத்த உத்தரவு!
பிரான்சின் பாரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலின் தலைவர் என நம்பப்படும் இலங்கையர்… The post யாழ் ஆவா குழுவின் தலைவரை, கனடாவிலிருந்து நாடு கடத்த உத்தரவு! appeared first on Global Tamil News .
1000 போர் கைதிகள் பரிமாற்றம்! உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் நீடிக்கும் சிக்கல்
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே குறிப்பிடத்தக்க கைதிகள் பரிமாற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. போர்க் கைதிகளை பரிமாற்றம் 2022 பிப்ரவரியில் ரஷ்யா கீவ் மீது படையெடுத்ததில் இருந்து நடந்த முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில், ரஷ்யாவும் உக்ரைனும் தலா 1,000 போர்க் கைதிகளை (PoWs) பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டன. இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவாகும், இதனை மாஸ்கோவின் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். கைதிகள் பரிமாற்றம் தொடர்பான இந்த […]
சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!
சென்னை : திருவான்மியூர் – தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின் தரமணி பகுதியில், அடையாறு U-வடிவ பாலத்திற்கு அருகே உள்ள சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தில் ஒரு சொகுசு கார் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுகாரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால், தரமணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் வேகமாக […]
வவுனியாவில் இன்று வீசிய சூறாவளிக்காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று காலை ஏழு மணியளவில் மினி சூறாவளிக் காற்று வீசியதுடன், மழையும் பொழிந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்தடையும் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா நகரப் பகுதியில் இருந்த நடைபாதை விற்பனை நிலையங்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. குறிப்பாக மின் வடங்களுக்கு மேல் மரங்கள் வீழ்ந்தமையால் சில பகுதிகளில் மின்சார தடங்கல் ஏற்ப்பட்டது. தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை கைது செய்யப்பட்ட ஆறு பேரில் பெண் யூடியூபர் ஒருவரும் அடங்குவார். கைது செய்யப்பட்ட இந்த அனைவரும் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், எதிரிக்கு தகவல்களை வழங்கியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களில் கைதாலில் ஒருவர், பானிபட்டில் ஒருவர், நுஹ் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டனர், ஹிசாரில் இருந்து ஒரு பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது […]
மின் கட்டணத்தை குறைககவுள்ளதாக தெரிவித்து ஆட்சியேறிய அனுர அரசு திண்டாடத்தொடங்கியுள்ளது. செலவுகளை ஈடுசெய்ய மின்சார கட்டணங்களை 18.3% அதிகரிக்க வேண்டும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய ஜூன் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது. ஏற்கனவே மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்கட்சிகள் எச்சரித்திருநதமை குறிப்பிடத்தக்கது
மீண்டும் பரவும் கொரோனா : தமிழக மக்கள் பயப்பட வேண்டாம் - சுகாதாரத் துறை விளக்கம்!
சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை மக்களுக்கு விளக்கியுள்ளது.
RCBvsKKR : '8:45 மணி வரை கெடு; மழை தொடர்ந்தால் ஓவர் எப்படி குறையும்?
'சின்னசாமியில் மழை!' பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையின் காரணமாக போட்டியின் டாஸ் தாமதமாகியிருக்கிறது. ஒருவேளை, மழை விடாது பெய்யும்பட்சத்தில் என்ன நடக்கும்? ஓவர்களை எப்படி குறைப்பார்கள்? RCB 'ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு!' இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. இந்தப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் பெங்களூரு அணி முதல் அணியாக ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறும். கொல்கத்தா வெல்லும்பட்சத்தில் இன்னும் அந்த ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்கும். ஒருவேளை மழை முழுவதுமாக பெய்து போட்டி கைவிடப்படும்பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும். அப்போது கொல்கத்தா அணி தனது ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழக்கும். மழையினால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படும்பட்சத்தில், எப்படி குறைக்கப்படும்? அதற்கான விதிகள் என்ன? வழக்கமாக ஐ.பி.எல் போட்டிகளில் 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7:30 மணிக்கு போட்டி தொடங்கும். மழையினால் போட்டி பாதிக்கப்பட்டு 7 மணிக்கு டாஸ் போட முடியவில்லையெனில், 7:15 க்குள்ளாவது டாஸ் போடப்பட வேண்டும். அப்படியெனில்தான் 7:30 மணிக்கு போட்டி தொடங்கும். தாமதமானால் திட்டமிட்டப்படி போட்டி தொடங்காது. கொஞ்சம் தாமதமாகும். RCB vs KKR 8:45 மணி வரைக்கும் ஓவர்களை குறைக்கமாட்டார்கள். மழையினால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும். மேலும், மழையினால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு இன்னிங்ஸ் பிரேக் 20 நிமிடத்திலிருந்து 10 நிமிடமாகக் குறைக்கப்படும். 8:45 க்குள் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டுவிட்டால் முழுமையாக 20 ஓவர் போட்டி நடைபெற்றுவிடும். 8:45 மணிக்கு மேலும் மழை விடவில்லை அல்லது பிட்ச் தயாராகவில்லையெனில், 8:45 மணிக்கு மேலாக ஒவ்வொரு 4 நிமிடங்கள் 25 நொடிகளுக்கும் ஒவ்வொரு ஓவராகக் குறைக்கப்பட்டுக் கொண்டே வரும். அதாவது, 8:49 க்கு ஆட்டம் தொடங்கினால் 19 ஓவர் ஆட்டமாக நடைபெறும். 8:53 க்கு தொடங்கினால் 18 ஓவர் ஆட்டமாக நடைபெறும். KKR இந்த அடிப்படையில் கடைசி கட் ஆப் டைம் 10:56 ஆகும். இரவு 10:56 மணிக்குள் டாஸ் போடப்பட்டு போட்டிக்குத் தயாராகிவிட்டால் 5 ஓவர் போட்டியை நடத்தி முடித்துவிடுவார்கள். ஐ.பி.எல்-இல் ஒரு போட்டியில் முடிவை எட்ட குறைந்தபட்சமாக 5 ஓவர் போட்டியையாவது நடத்த வேண்டும். பெங்களூருவில் மைதானத்தில் மழை நீரை வெளியேற்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும், மழை நின்றால் 45 நிமிடத்தில் போட்டியை நடத்திவிடலாம் என்கிறார்கள்.
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. கார் விழுந்து விபத்து - சென்னையில் பரபரப்பு!
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் சிக்னல் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பள்ளம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காரினை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சைடு நின்ற சீனா! சிக்கிய 10 முக்கிய ஆதாரங்கள்...
அண்மையில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரின்போது சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததற்கு 10 முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளன. அவற்றை இந்த செய்தியில் காண்போம்.
கனடாவின் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் அலெக்ஸான்டர் என்ற கிராமப் பகுதிக்குள் தற்போதைக்கு வர வேண்டாம் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவுகை காரணமாக இந்த எச்சரிக்கையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அலெக்ஸான்டர் Alexander என்ற கிராமப்புற மாநகராட்சியின் மேயர் ஜாக் பிரிஸ்கோ கோரியுள்ளார். எதிர்வரும் நீண்ட விடுமுறைக் காலத்தில் அந்தப் பகுதிக்கு மக்கள் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இங்கு பெரும்பாலான பகுதிகள் பருவகால குடில்களால் நிரம்பியுள்ளன. உங்கள் குடில்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வர வேண்டாம். அது பாதுகாப்பான நேரம் […]
RCB vs KKR : ‘மழையால் ஆட்டம் பாதிப்பு’.. இது ஆர்சிபிக்கு பிரச்சினையாக அமையுமா? புள்ளி விபரம் இதோ!
ஆர்சிபி, கேகேஆர் இடையிலான போட்டி, பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மழை காரணமாக இப்போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.
Masters படிக்க அடுத்த 5-10 வருஷம் உபயோமில்லாத ஊர் UK.!
UK வில் மாஸ்டர்ஸ் சேர்ந்து படிப்பது என்பது இப்போது மிக எளிதாகி விட்டது. Brexitக்கு பின்னர் EU மாணவர்கள் UK
திமுகவுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி : அடுத்த குறி இந்த அமைச்சருக்கா? - வெளியான முக்கிய தகவல்!
திமுக அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் விதமாக அடுத்தடுத்த அமலாக்கத் துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அடுத்த குறி யாருக்கு என்பது குறித்த தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தக் லைஃப் படத்தில் த்ரிஷாவின் ரோல்..ட்விஸ்ட் வைத்த மணிரத்னம்..ஷாக்கான ரசிகர்கள்
கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக்லைப் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. கமலுடன் இப்படத்தில் சிம்பு இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் குறித்து ரசிகர்களால் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது
செம்மணியில் மனித எலும்புக்கூடு மீட்பு –பாரிய மனித புதைகுழிக்கான சாத்தியம்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் தோண்டிய போது, மனித என்பு எச்சங்கள் பல மீட்கப்பட்டன. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் தொடக்கம், குறித்த பகுதியில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று,
ThugLife: கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன்; 'தக் லைஃப்'ட்ரெய்லர் வெளியீட்டு விழா | Photo Album
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதாம். சிங்கப்பூரில் மட்டும் 14,200 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் கொரோனாவிற்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இதன் தாக்கம் தீவிரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைந்து […]
பிரித்தானிய உயர் ஆணையராக பொறுப்பேற்றுள்ள முதல் அகதி
ஒரு காலத்தில் ஈரானிலிருந்து அகதியாக பிரித்தானியாவுக்கு வந்த ஒருவர், இன்று பிரித்தானிய உயர் ஆணையர் என்னும் பெரும் கௌரவத்தை எட்டிப் பிடித்துள்ளார். யார் இந்த நபர்? அப்படி அகதியாக வந்து இன்று ஃபிஜி நாட்டுக்கான பிரித்தானியாவின் உயர் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அந்த நபரின் பெயர், கான்பார் ஹொசைன் போர் (44). 1987ஆம் ஆண்டு, தனக்கு ஆறு வயது இருக்கும்போது, ஈரான் நாட்டிலிருந்து தன் தாயைப் பின்தொடர்ந்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்தவர் கான்பார். அவர் ஈரானில் பள்ளியில் கல்வி […]
1000 கோடி ரூபாய் ஊழல் ? தவறான தகவலை நிருப்பிக்க EDரெய்டு -அமைச்சர் முத்துசாமி ஆவேசம்!
டாஸ்மாக் நிறுவனத்தின் நடவடிக்கைகளில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கற்பனையால் அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. அந்த தவறான தகவலை நிருப்பிக்க, டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து துன்புறுத்தி வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழின அழிப்பு நினைவு நாள் –பிரித்தானியப் பிரதமரின் செய்தி
தமிழின அழிப்பின் 16வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிறிலங்காவில் மோதல்கள் முடிவுக்கு வந்ததன் ஆண்டு நிறைவை இன்று நாம் அனுசரிக்கிறோம். சிறிலங்கா போரில் கொல்லப்பட்ட மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூரும் வகையில், சிறிலங்காவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும், பிற சமூகங்களும் ஒன்றுகூடுகிறார்கள். தமிழர்களையும் பாதிக்கப்பட்ட அனைவரையும்
சூரிச்சில் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இன்று சனிக்கிழமை பிற்பகல் சூரிச்சில் உள்ள லிம்மட்குவாயில் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நமது பணிக்கு மரியாதைஎன்ற முழக்கத்தின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் பின்னணி இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகும் தேசிய ஒப்பந்தம் ஆகும். யூனியா மற்றும் சினா தொழிற்சங்கங்கள் எளிதான பேச்சுவார்த்தைகள் இல்லைஎன்று எதிர்பார்க்கின்றன. இந்த ஆர்ப்பாட்டம் நகர மையப்பகுதி வழியாக ஹெல்வெட்டியாபிளாட்ஸ் வரை செல்கிறது. பல பாதைகள் தடைபட்டுள்ளன.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி பிரச்னைக்கு நான் காரணமா? - ஜி.கே.மணி ஆதங்கம்!
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதலுக்கு நீங்கள் காரணமா என்ற கேள்விக்கு ஜி.கே.மணி ஆதங்கத்துடன் பதில் அளித்துள்ளார்.
மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் –சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ”தக் லைஃப்” திரைப்படம் ஜூன் 5ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் அதிரடி காட்சிகள் நிறைந்த அதன் பிரமாண்டமான டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். ஆம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரை வைத்து பார்க்கையில், தனது அடுத்த வாரிசாக சிம்புவை அறிமுகப்படுத்துவது போல் முதலில் காட்சிகள் வருகிறது. பின்னர் அதுபகையாக உருவெடுப்பது அடுத்தடுத்த காட்சிகளின் […]
லாபத்தில் வரலாறு காணாத சாதனை.. பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் அறிவித்த சவுத் இந்தியன் பேங்க்!
கேரளாவைச் சேர்ந்த சவுத் இந்தியன் பேங்க் (South Indian Bank) வளர்ந்து வரும் தனியார் வங்கி. மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை சவுத் இந்தியன் பேங்க் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம், வட்டி வருமானம் என பல்வேறு விஷயங்களில் வரலாறு காணாத உச்சத்தை சவுத் இந்தியன் பேங்க் பதிவு செய்துள்ளது. வருமான வளர்ச்சி: சவுத் இந்தியன் பேங்கின் நிகர லாபம் 21.75 சதவிகிதம் உயர்ந்து 1303 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வட்டி வருமானம் 4.61% உயந்து 3,485.64 கோடி ரூபாயாக உள்ளது. செயல்பாட்டு லாபம் 21.55 சதவிகிதம் உயர்ந்து 2,270.08 கோடி ரூபாயாக உள்ளது. இதர வருமானம் 19.66 சதவிகிதம் உயர்ந்து 1,813.43 கோடி ரூபாயாக உள்ளது. டெபாசிட் வளர்ச்சி: மொத்த டெபாசிட்டுகள் 5.50 சதவிகிதம் உயர்ந்து 1,07,525 கோடி ரூபாயாக உள்ளது. காசா டெபாசிட் 3.17% உயர்ந்து 33,729.72 கோடி ரூபாயாக உள்ளது. சேமிப்புக் கணக்கு டெபாசிட்டுகள் 4.06 சதவிகிதம் உயர்ந்து 27,699.31 கோடி ரூபாயாக உள்ளது. என்.ஆர்.ஐ டெபாசிட்டுகள் 6.42 சதவிகிதம் உயர்ந்து 31,602.84 கோடி ரூபாயாக உள்ளது. bank deposit - வங்கி டெபாசிட் கடன் வளர்ச்சி: சவுத் இந்தியன் பேங்க் வழங்கிய மொத்த கடன்கள் 8.89 சதவிகிதம் உயர்ந்து 87,578.52 கோடி ரூபாயாக உள்ளது. கார்ப்பரேட் பிரிவில் வழங்கப்பட்ட கடன்கள் 12.82 சதவிகிதம் உயர்ந்து 36,198 கோடி ரூபாயாக உள்ளது. நகைக் கடன்கள் 9.47 சதவிகிதம் உயர்ந்து 16,982 கோடி ரூபாயாக உள்ளன. வீட்டுக் கடன்களின் மதிப்பு 54.97 சதவிகிதம் உயர்ந்து 7,877 கோடி ரூபாயாக உள்ளது. வாகனக் கடன்கள் 24.32 சதவிகிதம் உயர்ந்து 1,599 கோடி ரூபாயாக உள்ளன. வாராக் கடன்கள்: மொத்த வாராக் கடன் விகிதம் 4.50 சதவிகிதத்தில் இருந்து 3.20 சதவிகிதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 1.46 சதவிகிதத்தில் இருந்து 0.92 சதவிகிதமாக குறைந்துள்ளது. புதிய உச்சங்கள்: சவுத் இந்தியன் பேங்க் வங்கியில் வரலாறில் முதல் முறையாக 1,95,104.12 கோடி ரூபாய்க்கு தொழில் நடந்துள்ளது. நிகர லாபம் 1303 கோடி ரூபாய் என்பது மற்றொரு புதிய உச்சம். செயல்பாட்டு லாபம் 2,270.08 கோடி ரூபாய், இதர வருமானம் 1,813.43 கோடி ரூபாய், நிகர வட்டி வருமானம் 3,485.64 கோடி ஆகிய அனைத்துமே சவுத் இந்தியன் பேங்கிற்கு வரலாறு காணாத உச்சம். Dividend stocks - டிவிடெண்ட் டிவிடெண்ட்: பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும் 40 பைசா டிவிடெண்ட் வழங்கப்படும் என்று சவுத் இந்தியன் பேங்க் அறிவித்துள்ளது. பங்கு விலை: நிதிநிலை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மே 15-ம் தேதி வர்த்தகத்தில் சவுத் இந்தியன் பேங்க் பங்கு விலை 4 சதவிகிதத்தை தாண்டி உயர்ந்தது. மீண்டும் மே 16-ம் தேதி வர்த்தகத்தில் பங்கு விலை கிட்டத்தட்ட 2 சதவிகிதம் வரை ஏறியது. Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. General Disclaimer and Terms & Conditions of the research report INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration) முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.
யாழ் செம்மணியில் பாரிய மனித புதைகுழி ; வெளியிடப்பட்டுள்ள அச்சம்
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. 1995, 1996 ஆண்டுகளில் செம்மணி படுகொலை குறித்த மனித எச்சங்கள் 1995, 1996ஆம் […]
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை; காரணம் என்ன?
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாகும். அந்த வகையில், 2025-ம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு மே 4-ம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது.
சென்னை : நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி மோகனின் பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார், ஆர்த்தி ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரவி மோகன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரவி மோகன் சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட கடிதத்தை வெளியிட்ட பிறகு அவரது அறிக்கை வந்துள்ளது. அதில், இத்தனை ஆண்டுகளாக […]
20 நாட்கள் கழித்து அட்டாரி-வாகா எல்லை மீண்டும் திறப்பு: பின்னணியில் தாலிபான் அரசு..
பாகிஸ்தான் போர் பதற்றத்துக்கு இடையே மூடப்பட்டு இருந்த அட்டாரி-வாகா எல்லை திடீரென திறக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சிகரெட் பிரச்சனையில் ஐடி நிறுவன ஊழியர் கார் ஏற்றிக் கொலை... பெங்களூரில் கொடூரம்
பெங்களூரில் சிகரெட் தர மறுத்த ஐடி நிறுவன ஊழியர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன்.., ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனை இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையை சேர்ந்தவர் வினோத் குமார் (34). இவர் சந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதில், ஜீன்ஸ், டி-சர்ட் ஆடை அணிவதும் மற்ற ஆண்களுடன் சந்தியா பேசுவது வினோத் குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர் சந்தியாவுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார். பின்னர், கடந்த 2019 ஒக்டோபரில் சாந்தா குரூசில் […]
நீயா ? நானா ? மிரட்டலாக வெளியான தக் லைஃப் ட்ரைலர் ..ரசிகர்களின் ரியாக்ஷன்ஸ்
கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக்லைப் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது
சீமான் செய்த செயல்... தொண்டர்களுக்கு கரும்பு ஜூஸ்- வைரலாகும் வீடியோ
கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நாதக சார்பில் 'தமிழினம் பேரெழுச்சி' பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இன்று அங்கு சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது தொண்டர்களுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண்
கைதி ஒருவருக்கு முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருட்களை கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்கு முறுக்கு பைக்கற்றுடன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளால் சோதனை இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முறுக்கு பைக்கற்றுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4,674 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 5,625 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட பெண் பொறள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது […]
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 153 பேரின் உடல்கள் காசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் மேலும் 459 பேர் காயமடைந்ததாகவும் முற்றுகைக்குள் உள்ள காசாப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் முந்தைய நாட்களில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட ஏழு பேரும் அடங்கும் என்று டெலிகிராமில் ஒரு அறிக்கை மேலும் கூறியது. இந்த புள்ளிவிவரங்களின்படி, போர் தொடங்கியதிலிருந்து காசாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,272 ஆகவும், 120,673 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் எதிரி பாகிஸ்தான்... ஒவைசி கடும் பாய்ச்சல்
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி கடும் பாய்ச்சல்...
காசாவைக் கைப்பற்றப் பெரும் தாக்குதல்களைத் தொடங்குகிறது இஸ்ரேல்
ஹமாஸை தோற்கடித்து, காசாவில் மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அதன் ஹீப்ரு எக்ஸ் கணக்கில், அந்தப் பகுதியின் மூலோபாயப் பகுதிகளை கைப்பற்ற ''ஆபரேஷன் கிதியோன் ரதங்கள்''துருப்புக்களை அணிதிரட்டியதாகக் கூறியது. கிதியோன் ரதங்கள் - ஒரு பைபிள் போர்வீரனைக் குறிக்கும். ஹமாஸ் இனி ஒரு அச்சுறுத்தலாக இல்லாமல், நமது பணயக்கைதிகள் அனைவரும் வீட்டிற்குள் திரும்பும் வரை அது செயல்படுவதை நிறுத்தாது என்றும், 24 மணி நேரத்தில் காசா பகுதி முழுவதும் 150க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகளைத் தாக்கியதுஎன்றும் அது கூறியது. போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும், அதன் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும் சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் போதிலும், இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது மற்றும் எல்லையில் கவசப் படைகளைக் கட்டமைத்துள்ளது. இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன என்பது தெளிவாகிறது. ஆனால் இஸ்ரேலிய இராணுவம் அதன் ஆங்கில மொழி எக்ஸ் கணக்கில் இதே போன்ற இடுகைகளில் செயல்பாட்டுப் பெயரைப் பயன்படுத்தவில்லை. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு மாத போர் நிறுத்தம் முறிந்ததை அடுத்து, மார்ச் மாதம் இஸ்ரேல் அந்தப் பகுதியில் உதவித் தடையை விதித்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை காசாவில் நிறைய மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்று கூறினார்.
நயினார் நாகேந்திரனா இப்படி பேசியது.. பாஜக தலைவரானதும் மாறிப் போயிட்டார் - மனோ தங்கராஜ் காட்டம்!
ட்விட்டரில் பாகிஸ்தான் ஆதரவு கருத்து தெரிவிப்போர் தமிழர் என்று சொல்ல அருகதை அற்றவர்கள், தேசப்பற்று இல்லாவிடில் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.பாஜக தலைவர் ஆனதும் சாதி வெறியும், மத வெறியும் அவருள் குடிபெயர்ந்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த பிரபல யூடியூபர் உள்பட 6 பேர் கைது... போலீஸ் தீவிர விசாரணை
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் பாடத்தில் மாணவர்கள் தோல்வி! பள்ளிக்கல்வித்துறையில் அலட்சியம் காரணம்-டிடிவி தினகரன் விமர்சனம்
மதுரை உசிலம்பட்டியில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 9 மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பது பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஒரு புறம் பேச்சுவார்த்தை: மறுபுறம் தாக்குதல்!
துருக்கியில் ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடத்துகொண்டிருக்க மறுபுறம் உக்ரைனில் வடகிழக்கு உக்ரைன் பிராந்தியமான சுமியில் ஒரு ரஷ்ய ட்ரோன் ஒரு சிற்றுந்து மீது மோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர். துருக்கி இஸ்தான்புல் நகரில் ரஷ்யாவும் உக்ரைனும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை இந்தத் தாக்குதல் நடந்தது. சுமி பகுதியில் உள்ள உக்ரேனிய இராணுவ உபகரணங்கள் நிறுத்தும் பகுதியை ரஷ்யப் படைகள் ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் டாஸ் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை துருக்கியில் நடந்த ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளின் சந்திப்பு ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. கடந்த பிப்ரவரி 2022 இல் ரஷ்யா தொடங்கிய போரின் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் நேரடி உரையாடல் இதுவாகும்.
திருப்பதி ஏழுமலையானுக்கு 5 கிலோ தங்க ஹஸ்தங்கள் காணிக்கை
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா எனும் பக்தர் 5.267 கிலோ எடையில் 2 தங்க ஹஸ்தங்களை (கைகள்) நேற்று காணிக்கையாக வழங்கினார். ரூ.3.63 கோடி மதிப்புடைய இந்த தங்க ஹஸ்தங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி பெற்றுக்கொண்டார். முன்னதாக ஏழுமலையானை சஞ்சீவ் கோயங்கா தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
இறந்த பின்னும் வாழும் இலங்கை தமிழ் பெண் ; உறவினர்கள் நெகிழ்ச்சி
பதுளை வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்த பெண்ணொருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசறை ஹொப்டன் பகுதியை சேர்ந்த எஸ் ரமணி (வயது 48) என்பவரே இவ்வாறு மூளைச்சாவு அடைந்துள்ளார். 48வயதான பெண்ணொருவர் திடீரென சுகயீனமுற்ற நிலையில் அவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உறுப்புகளை தானம் செய்ய முடிவு எனினும் குறித்த பெண் மூளைச்சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து அதை வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளனர். […]
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை –சென்னை உயர்நீதிமன்றம்.!
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது’ என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த மே 4-ஆம் நாள் நடைபெற்ற இளங்கலை நீட் தேர்வின்போது, ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில் கனமழை காரணமாக 1.15 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு, மழை நீரும் புகுந்ததால் சரியாக தேர்வை எழுத முடியவில்லை எனக் கூறி மறு தேர்வு நடத்த வேண்டும் என 13 மாணவர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு […]
யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம்
யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது சுடரேற்றி, சரோஜினி யோகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வெ. யோகேஸ்வரனின் மனைவியான சரோஜினி யாழ்,மாநகர முதல்வராக இருந்த […]
காவிரியில் வெளுத்து வாங்கிய மழை : மேட்டூர் அணை நீர்வரத்து கிடுகிடு உயர்வு!
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து என்பது அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிலவரம் உள்ளிட்டவற்றை விரிவாக காணலாம.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குகிறார்கள்.
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு படுதோல்வி! ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு...
எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி படுதோல்வியை சந்திப்பார் எனவும், அவரது பித்தலாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி மக்கள் வைப்பார்கள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையில் வேலை; 8-ம் வகுப்பு தகுதி போதும் - ரூ.58,100 வரை சம்பளம்!
இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள 6 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணபப்ங்கள் வரவேற்கப்படுகிறது. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மும்பை: ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்; அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி; மருத்துவர்கள் சொல்வது என்ன?
பொதுவாக இரட்டை குழந்தைகள் ஒட்டிப் பிறப்பது மிகவும் அபூர்வம். அதுவும் ஒரு லட்சம் குழந்தை பிறந்தால் அதில் ஒரு குழந்தை மட்டுமே இது போன்று பிறக்க வாய்ப்பு இருக்கிறது. மும்பையில் ஏற்கனவே கடந்த 13 ஆண்டுக்கு முன்பு இரண்டு பெண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன. அக்குழந்தைகளைப் பெற்றோர் கைவிட்டனர். இதையடுத்து மும்பையில் உள்ள வாடியா மருத்துவமனை நிர்வாகம் அக்குழந்தைகளை இரண்டாகப் பிரித்து மருத்துவமனையிலேயே வளர்த்து வருகின்றனர். குழந்தை இப்போது அது போன்று மேலும் ஒரு இரட்டையர்கள் ஒட்டிப் பிறந்துள்ளனர். மும்பை காந்திவலியில் உள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் ரஞ்சனா என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காகப் பதிவு தன்னைச் செய்து வைத்திருந்தார். அவர் கர்ப்பமாகி 7 மாதங்கள் கடந்த பிறகுதான் மருத்துவமனைக்கே வந்தார். அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். ஒட்டிப் பிறந்த சகோதரிகளைக் கைவிட்ட பெற்றோர்; 13 ஆண்டுகளாக வளர்க்கும் மருத்துவமனை; நெகிழ்ச்சி பின்னணி எந்த வித அசாதாரணமும் தென்படவில்லை. அப்பெண் தனியார் மருத்துவமனை ஒன்றிலும் ஸ்கேன் செய்து பார்த்தார். இரண்டிலும் குழந்தைக்கு எந்தவித பிரச்னையும் இருப்பதாகத் தென்படவில்லை. திடீரென ரஞ்சனாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அப்பெண்ணிற்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்த்தனர். குழந்தையைப் பார்த்ததும் டாக்டர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர். குழந்தை இரண்டு தலையுடன் நெஞ்சுப்பகுதி ஒட்டிய நிலையில் இரட்டையர்களாகப் பிறந்திருந்தனர். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். இரண்டு குழந்தைகள் அதனைத் தொடர்ந்து சயான் லோக்மான்ய திலக் மருத்துவமனைக்கு அக்குழந்தைகள் மாற்றப்பட்டுள்ளனர். அக்குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு டாக்டர் பராஸ் கோத்தாரி கூறுகையில், ''குழந்தையின் உள் உறுப்புகள் எப்படி இருக்கிறது என்பதை முதலில் ஆய்வு செய்து பார்க்கவேண்டும். அதன் பிறகுதான் ஆப்ரேஷன் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். Kashmir: `ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்' பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பலியான சோகம்.. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
ஆபரேஷன் சிந்தூர்: சசி தரூர் தலைமையில் கனிமொழி உள்ளிட்ட எம்.பிகள் வெளிநாட்டு பயணம்; காரணம் என்ன?
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது இந்தியா. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்தப் பின், பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக நின்றது. தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்தது. இந்த நிலையில், தற்போது மத்திய அரசு, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு அனுப்பி 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்க உள்ளது. இதில் ஐக்கிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் அடங்கும். மத்திய அரசின் அறிவிப்பு யார் யார் செல்கிறார்கள்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றதும் பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இந்தத் திட்டத்திற்கு அனுப்பப்போவதில்லை. இதில் அனைத்து கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதன் படி, இந்தத் திட்டத்தில் மூலம் கூட்டாளி நாடுகளுக்கு செல்லப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்... 1. சசி தரூர், காங்கிரஸ் 2. ரவி சங்கர் பிரசாத், பாஜக 3. சஞ்சய் குமார் ஜா, ஜனதா தளம் 4. பைஜயந்த் பாண்டா, பாஜக 5. கனிமொழி கருணாநிதி, திமுக 6. சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ் 7. ஶ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவ சேனா இந்தக் குழுவிற்கு சசி தரூர் தலைமை தாங்க உள்ளார். எப்போது செல்வார்கள்? இவர்கள் இந்த மாத இறுதியில் குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்கள். இது கிட்டதட்ட 10 நாள் பயணமாக இருக்கும். என்ன செய்வார்கள்? இவர்கள் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு சென்று இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்குவார்கள். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர்கள் அந்த நாடுகளில் எடுத்துரைப்பார்கள். `ஆபரேஷன் சிந்தூர்'... கலக்கிய இரண்டு முகங்கள்... வடிவெடுத்த பின்னணி!
சவுதி அரேபியா: ட்ரம்ப்பை வரவேற்று `அல்-அய்யாலா'நடனம்; வைரலாகும் காட்சிகள்.. பின்னணி என்ன?
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்டார். டிரம்ப்பின் இந்த 2.0 ஆட்சி முறை இதுவரை இல்லாத அளவிற்கு வேறொரு அதிரடி கோணத்தில் இருக்கும் என்று கணித்து போன்றே பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், 4 நாள்கள் அரசு முறை பயணமாக டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்ற டிரம்ப் தனி விமானம் மூலம் ரியாத் விமானநிலையம் சென்றடைந்தார். அங்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் அரசு சார்பில் வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தினார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் சவுதி நாட்டு ஆண்கள் இசைக்கருவிகளை வாசிக்க , அந்நாட்டு பெண்கள் தலைமுடியை அவிழ்த்து விட்டு இசை தாளத்திற்கு ஏற்ப சுழற்றி விட்டு பாடல் பாடி ஆடுகின்றனர். இது பார்ப்பதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு கிராமப்புரங்களில் பெண்கள் ஒப்பாரி வைத்து பாடும் போதும் இதே போன்று தலைமுடியை அவிழ்த்து சுழற்றுவது போன்றே இருக்கிறது. இப்படி தலைமுடியை அவிழ்த்து சுழற்றுவிட்டு பாடுவது சவுதி அரேபியாவின் பாரம்பரிய நடன முறையில் ஒன்று. இதற்கு அல்-அய்யாலா எனப்பெயர். அல்-அய்யாலா என்பது பாரம்பரிய உடை அணிந்து ஆண்கள் இசையை வாசிக்க, பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து அந்த இசை தாளத்திற்கு ஏற்ப தலைமுடியை சுழற்றி பாடலுக்கு ஏற்ப ஆடுவதாகும். இந்த நடனம் பொதுவாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளிலும் கொண்டாட்டங்கள் மற்றும் திருமணங்களின் போது பொதுவாக நிகழ்த்தப்படுகிறது. அரசு முறை பயணமாக தங்கள் நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பை , சவுதி நாட்டு பாரம்பரிய கலாச்சார முறையை பறைச்சாற்றி வரவேற்கும் விதமாக இந்த அல்-அய்யாலா நடனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வரவேற்பை ஏற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் எவ்வளவு அழகான நகரம் இது . எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இங்கு வந்ததில் மிகிழ்ச்சி என பேசியிருந்தார். Trump Tower: `ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தது' - டெல்லி மக்களை கவரும் ரூ.3,250 கோடி ட்ரம்ப் டவர்
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருச்சி, நாகை, மயிலாடுதுறை, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் […]
பிரதமர் மோடியின் ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய தொழில்நுட்பத்தால் கிடைத்த வெற்றி - எல்.முருகன் பெருமிதம்!
கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடியின் 'ஆப்ரேஷன் சிந்தூர்' சாதனையை வியந்து பேசினார். உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரித்து எதிரிகளை தாக்கும் திறன் பெற்றிருப்பது மோடியின் சாதனை என்றார்.
இந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 பேர் பலி
இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதன்கிழமையில் இன்டன் ஜயா பகுதியில், அப்பகுதி மக்களுக்கு சுகாதார மற்றும் கல்வி சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 18 கிளர்ச்சியாளர்களும், 2 காவல் அதிகாரிகளும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 3 கிளர்ச்சியாளர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், […]
Auto Sector ad volumes up 27% in Print, 2.5x on Radio: TAM AdEx Report
Mumbai: The Indian auto industry ramped up its advertising spend significantly in 2024, according to the latest TAM AdEx Cross Media Advertising Recap – Auto Sector report. With consistent growth across TV, print, radio, and digital platforms, the sector reaffirmed its aggressive push for consumer attention in a recovering and competitive market.Cross-Media Growth Driven by Two-Wheelers and CarsThe report highlights that ad volumes across media channels surged past pre-pandemic benchmarks. Two-wheelers and cars continued to dominate as top advertising categories, reflecting strong consumer interest and brand rivalry.Television Advertising: Prime Time and Two-Wheelers LeadTelevision ad volumes grew by 7% over 2020 and 18% over 2022, with the final quarter of 2024 seeing a sharp 40% increase over Q1. Two-wheelers claimed 44% of TV ad volume, led by TVS Motor Company and Honda Shine, which emerged as the most advertised brand. News and movie channels dominated with 63% and 16% ad volume shares, respectively. “The Indian consumer's growing interest in two-wheelers is clearly reflected in television advertising trends,” the report noted.Print: Cars Rule the PagesPrint ad space surged 27% over 2020, with cars (50%) and two-wheelers (41%) being the most advertised categories. Maruti Suzuki India was the top advertiser with a 16% share. The North zone and Hindi publications were the leading regions and languages, respectively. Print promotions remained robust, with 62% of space dedicated to sales-led messaging.Radio: Maruti Suzuki Dominates AirwavesRadio advertising volumes jumped 2.57x compared to 2020. Cars accounted for 69% of ad volumes, with Maruti Suzuki again leading the advertiser pack with a 26% share. Gujarat was the most active state, and Maruti Suzuki Arena was the top brand advertised on radio.Digital: Impressions SkyrocketDigital advertising impressions witnessed an explosive 20x growth from 2020 levels, with continued momentum across quarters. Cars took the lead with 55% share, followed by two-wheelers (26%). Maruti Suzuki India was the top advertiser in the digital space, while Hyundai Motor India led in brand-specific campaigns. Programmatic advertising emerged as the dominant mode, accounting for 89% of all impressions.“The rapid scale of programmatic advertising shows how automation is reshaping digital strategies in the auto space,” the report said.The data clearly positioned Maruti Suzuki India as the undisputed leader across TV, print, radio, and digital, consistently appearing as the top advertiser across formats.The report underscores the Indian auto industry's aggressive marketing stance across platforms, driven by innovation, regional customization, and strategic use of prime time and high-dwell formats. With digital and regional channels gaining momentum, brands are increasingly adopting a multi-touchpoint strategy to stay top-of-mind in a rapidly evolving consumer landscape.
தாயைக் கொன்றுவிட்டு நாடகமாடிய 13 வயது வளர்ப்பு மகள்; Instagram Chatல் வெளியான பகீர் பின்னணி
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் உள்ள பராலகேமுண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி திடீரென இறந்துபோனார். அவரது உடல் உறவினர்கள் முன்னிலையில் புபனேஷ்வரில் தகனம் செய்யப்பட்டது. ராஜலட்சுமி மாரடைப்பு காரணமாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமியின் சகோதரர் பிரசாத் ராஜலட்சுமியின் வளர்ப்பு மகளின் போனை புபனேஷ்வர் வீட்டில் கண்டுபிடித்தார். அந்த போனை பிரசாத் போலீஸாரிடம் கொடுத்தார். போலீஸார் அதனைச் சோதனை செய்து பார்த்தபோது இன்ஸ்டாகிராம் சாட்டிங் விபரங்களை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் ராஜலட்சுமியின் 13 வயது வளர்ப்பு மகள் தனது தாயாரைக் கொலை செய்யத் தனது ஆண் நண்பர்களுடன் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்தது தெரிய வந்தது. கொலை இதையடுத்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்ததில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ராஜலட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புபனேஷ்வர் தெருவில் கிடந்த பெண் குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து வந்தார். ராஜலட்சுமி தம்பதிக்குக் குழந்தை இல்லை. அக்குழந்தையைத் தங்களது சொந்த குழந்தையாக வளர்த்து வந்தனர். அக்குழந்தைக்கு 13 வயதாகிவிட்ட நிலையில் அவருக்கு கணேஷ் (21), தினேஷ்(20) ஆகிய இரண்டு பேருடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ராஜலட்சுமி தொடர்பைத் துண்டிக்கும்படி கேட்டுக்கொண்டார். பிரிந்து சென்ற மனைவி திடீர் கர்ப்பம்; ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் - ஒரே இரவில் 3 பேர் கொலை! இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தினேஷும், கணேஷும் சேர்ந்து ராஜலட்சுமி பெயரில் இருக்கும் சொத்தை அடையத் திட்டம் தீட்டினர். இதையடுத்து 13 வயது மைனர் பெண்ணிடம் இருவரும் பேசி ராஜலட்சுமியைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதற்காக 13 வயது பெண் இரவில் தனது தாயாருக்குச் சாப்பாட்டோடு சேர்த்து மயக்க மருந்தையும் கலந்து கொடுத்தார். அதனைச் சாப்பிட்டு ராஜலட்சுமி மயக்கம் அடைந்தவுடன் தனது ஆண் நண்பர்கள் இரண்டு பேரையும் வீட்டிற்கு வரவழைத்து தலையணையால் முகத்தில் அமுக்கிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. ராஜலட்சுமி தனது மகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். கேந்திரீய வித்யாலயா பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பராலகேமுண்டி என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தார். ராஜலட்சுமியைக் கொலை செய்தது தொடர்பாக போலீஸார் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் கணேஷ்தான், 13 வயது பெண்ணிடம் ராஜலட்சுமியைக் கொலை செய்துவிட்டால் நாம் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் நமது நட்பைத் தொடர முடியும் என்று கூறி கொலை செய்யத் தூண்டி இருக்கிறார். கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமி இதைத் தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்தனர். காலையில் 13 வயது பெண் தனது தாயார் மயங்கி இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் அவரைச் சோதித்தபோது இறந்திருந்தார். தனது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக 13 வயது பெண் தெரிவித்தார். ராஜலட்சுமிக்கு ஏற்கனவே இருதய பிரச்னை இருந்தது. இதனால் அவர் சொன்னதில் உறவினர்களுக்கு எந்த வித சந்தேகமும் வரவில்லை. 13 வயது பெண் தனது தாயாரின் தங்க ஆபரணங்களை எடுத்து கணேஷிடம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. கணேஷிடமிருந்து 30 கிராம் தங்கம், 3 மொபைல் போன் மற்றும் கொலை செய்யப் பயன்படுத்திய இரண்டு தலையணைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் மூன்று பேரிடமும் விசாரித்து வருகின்றனர். மும்பை: கட்டிலுக்கு அடியில் சடலமாக மீட்கப்பட்ட 63 வயது பெண்; தலைமறைவான பார்ட்னருக்கு வலைவீச்சு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
Madhavan Sekar promoted to Head of Marketing – Amazon Pay at Amazon
Mumbai: Madhavan Sekar has been elevated to the role of Head of Marketing - Amazon Pay at Amazon, marking a significant milestone in his career with the tech and ecommerce giant. He previously served as Category Leader – UPI at Amazon Pay, where he played a key role in scaling the digital payments ecosystem.Sharing the update on his LinkedIn profile, Madhavan stated, Still Day 1. I’m humbled to share that I’m starting a new position as Head of Marketing - Amazon Pay at Amazon! Looking forward to engaging deeply with Financial Services and Payments industry leaders. Madhavan brings with him over 15 years of diversified experience across sales, marketing, and technology, spanning sectors such as FMCG, ecommerce, retail, and IT. Before joining Amazon, he held roles at SAJ Food Products - Bisk Farm, Reliance Retail, Britannia Industries, Madura Coats, Ashoka Foundation, Saint-Gobain, and Tata Consultancy Services (TCS), where he began his career as an Assistant Systems Engineer in 2005.An alumnus of SVKM's Narsee Monjee Institute of Management Studies (NMIMS), Madhavan holds an MBA in Marketing and has consistently demonstrated a strong ability to blend customer-centric thinking with digital innovation.
விஜய் - பிரசாந்த் கிஷோர் கனெக்ஷன் கட்: பின்னணியில் ரொம்ப பெரிய இடம்!
ஜூன் இரண்டாவது வாரத்திலிருந்து விஜய் மக்களை சந்திக்க உள்ளதாகவும் அதன் பின்னர் தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் மாறும் என்கிறார்கள்.
“படை தலைவன்” பட இசை வெளியீட்டு விழாத் துளிகள் !!
VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க, தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு
Can Home Appliances Benefit From Experience Driven Marketing?
The constantly changing marketing strategies to keep brands relevant indicate that companies need robust tactics and unique ideas for sustained visibility and brand recall values. Rapid urbanisation, growing disposable income, and rising customer expectations contribute to how people buy, experience and recall brand products. While the goal for companies is to build long-lasting impressions and embed their products as the go-to brand for consumers, they initially relied on discounts, print advertising, and dealer-led sales. However today, consumers are looking for more information, relatability, and credibility.Looking at the home appliance sector, we witness a surge in different promotional strategies as products in this industry fall under essential consumer needs rather than luxury items. The real challenge for brands is to communicate how their essential offerings stand out in a highly competitive market.One of the most beneficial strategies for home appliances is experience-driven marketing that focuses on integrating a new perspective of brands for the consumers. A marketing tactic that has stood the test of time yet continues to evolve with changing consumer behaviour and technological advancements.This article will delve into the various key advantages that come with experiential marketing for home appliances. Understanding the Buyer’s Journey Any appliance purchase can seldom be a quick transaction. It involves an elaborate deliberation, and extensive online-offline research, with inputs from family members and suggestions from the salespeople. It is not just buying a product, but it is an investment in a tool that makes life effortless everyday.Consumers tend to prioritise credibility and value. When buying an appliance such as a mixer grinder or a water purifier, they want to make sure this will last more than five years, stay reliable and will be an additional factor to their convenience.With experiential marketing, we can reduce the period of this decision-making process by providing the customer an opportunity to see and understand the mechanisms of the product. Live demonstrations, hands-on events, or even pop-up shops can create a huge difference in consumers’ thought processes. Taking Brands to the Consumer The biggest learning to gain in this industry is that brands cannot keep waiting for the consumer to come to them any longer. It is essential for a product to be present where potential customers are. From housing societies, and local markets to regional expos, and community events, brands have to be on-ground to get directly in touch with the consumer.An involved marketing technique can not only spike the sales of home appliances but also improve engagement, referrals, and strengthen word-of-mouth. People recommend what they can vouch for. This kind of advocacy is earned through experience. Personalised Marketing for a Diverse Market In an incredibly diverse market, experience-driven marketing becomes not only relevant but essential. At its core, it is about creating meaningful interactions, and personalised marketing is one of the most effective tools to do that.Tailoring strategies to suit the preferences, language comfort, and lifestyle needs of a specific region and target consumers makes the experience more relevant and memorable for the audience. For instance, cooking habits alone vary significantly across regions, which means one marketing plan will not fit in every market.To truly connect, engagement marketing in Punjab must be distinct from that in Mumbai. Each experience must be designed thoughtfully for the local audience to deliver value. Personalised approach in experiential marketing often triggers the emotional mindset of the people, which is the best way to forge a relationship with customers. Complementing this with regionally relevant marketing can strengthen the emotional connection and build long- lasting relationship with people. The Role of Phygital Experiences The urban consumers are increasingly tech-savy. They research online, compare brands, watch reviews, and often see a product digitally before stepping into a store. However, they still value a personal touch before reaching the final decision.To address this blend of behaviour, brands need to invest in phygital (physical & digital) experiences. In a large retail setup, digital tools should offer AR-enabled product demos, QR codes that unlock how-to-use instruction videos, and comparison tools for instant feature breakdowns.By merging digital convenience with in-store depth, we create a journey that is both seamless and informative. The idea is not just to stay visible, it is about relevance and readiness at every touch point. Guerrilla Marketing as a Tool for Festive Engagement Guerrilla marketing is a creative and unique way of promoting a brand and engaging people in unexpected environments. It relies on surprise, interaction, and memorability rather than large-scale media spending. When carried out well, it can spark curiosity and create a strong emotional connection with the audience.It also plays an instrumental role in creating brand experiences, especially when people are already in the mindset to engage and explore. It helps the brand to look beyond predictable campaigns and capture attention in a distinct manner.The festival season in India brings a wide array of opportunities. From Diwali, Pongal to Eid, families want to change the outlook of their homes, particularly their living spaces. Involving the guerrilla marketing strategy can be a great way to establish a relationship with consumers.Including potential customers through simple and enjoyable activities during their shopping journeys can make them feel connected to the brand. When a product becomes part of a celebration, it is no longer just a purchase. It becomes a shared moment that can lead to long term loyalty. Engaging with Families In Indian homes, purchase decisions are often family affairs. The person who uses the product may not always be the one paying for that purchase. There is a funnel of approval that goes in a family and a strategy for marketing needs to speak to multiple stakeholders, like homemakers, earning members and even the children.We cannot alienate families while creating plans for one customer. In experience-driven marketing, activities are designed to be inclusive. They offer information for the decision-maker, trials for the user, and even interactive moments that engage young members. When a family participates in this process, there is a sense of involvement that leads to deeper brand commitment. Looking Ahead: From Utility to Identity The future of home appliances marketing in India lies in creating identity, not just utility. To become a home brand for families is what makes customers loyal. Experiential marketing makes this possible as it allows different brands to move from being a product on the shelf to a part of a customer's lifestyle.In a market that thrives on touch, conversation, community validation, experiences speak for themselves. Experiment-driven marketing brings the opportunity to stand out in a crowd by building credibility, recall, and relationships. Most importantly, it places the brand firmly in the customer’s consideration set, where purchase decisions are made. (Views are personal)
Lava introduces Demo@Home to bring smartphone experience to customers’ doorsteps
New Delhi: Lava International Limited, a homegrown smartphone brand, has launched a groundbreaking new initiative—Demo@Home—aimed at revolutionizing the smartphone buying experience. Designed with a customer-first approach, this service enables consumers to experience Lava’s latest flagship smartphones in the comfort of their homes, before making a purchase decision.Currently live across Delhi, Mumbai, and Bengaluru, Demo@Home allows prospective buyers to request a free, no-obligation product demonstration. Lava representatives will provide a hands-on walkthrough of the brand’s latest devices, including the Agni 3, Blaze Duo, Blaze 3 5G, and Blaze AMOLED, showcasing features such as AI-powered cameras, dual displays, and curved screen designs. Puravansh Maitreya, Head of Marketing, Lava International Limited , commented on the launch, “With the Free Home Demo, we're not just selling smartphones — we're redefining how India shops for technology. It’s time the industry prioritized trust and transparency over pushy sales. Lava is proud to lead this shift. This initiative allows customers to make confident, informed choices in a space they’re most comfortable - their home. It's a step towards building deeper relationships with our users.” Booking a Demo@Home appointment is simple. Customers can visit Lava’s official website, fill out a short form with their name, contact number, address, city, and preferred time slot, and select the device they’d like to explore. A Lava executive will then contact the customer to confirm the appointment and provide a guided in-person demo at the scheduled time.What sets Demo@Home apart is its no-pressure, no-cost approach. Users are not obligated to make a purchase during or after the demonstration. However, if they choose to proceed, they have the flexibility to place an order through the Lava website, e-commerce portals, or directly via the visiting Lava representative.This service complements Lava’s existing Service@Home program—a free doorstep support service for after-sales assistance. Together, both initiatives reflect Lava’s larger commitment to building a transparent, accessible, and customer-centric smartphone ecosystem.
Ace: ஒரு நடிகரா அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்ருக்கிறேன் - விஜய் சேதுபதி குறித்து நடிகை ருக்மிணி
ஆறுமுககுமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஏஸ்’(ACE) . கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்திருக்கிறார். மே 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ‘ஏஸ்' படத்தில்... இந்நிலையில் ‘ஏஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (மே 17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ருக்மிணி வசந்த், “‘ஏஸ்’ என்னுடைய முதல் தமிழ் படம். எல்லாருக்குமே முதல் படம் என்றால் மிகவும் ஸ்பெஷலானதுதான். Anurag Kashyap: என் மகள் திருமணத்திற்காக விஜய் சேதுபதி செய்த உதவி - அனுராக் காஷ்யப் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சாருடன் சேர்ந்து நடிப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ஒரு நடிகரா அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘ஏஸ்’ ஒரு காமெடியான குடும்பத் திரைப்படம். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். ருக்மிணி வசந்த் இதற்கு முன் சீரியஸ் ஆன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக காமெடியான ஜானரில் நடித்திருக்கிறேன். முதல் தமிழ் படம் என்பதால் டயலாக் பேசுவதற்குச் சிரமமாக இருந்தது. ஆனால் அதை எல்லாம் பொறுத்துக்கொண்டு மிகவும் பொறுமையாக இருந்தார்கள். அதற்காகப் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். எங்க அப்பாவோட கடைசி காலத்துல தன் புள்ள உறுப்படுமானு கேட்டப்ப அந்த படத்த காட்டினேன் - விஜய் சேதுபதி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, […]
`அந்த தம்பிய திரும்ப மீட் பண்ணினேன்; அப்போ, சொன்னான்..!’ - Neeya Naana வீரசெல்வி பேட்டி
ஒரு மனிதனுக்குள் இருக்கும் சாதிவெறி என்பது, தீயை விட ஆபத்தானது. அது, எத்தனை பேரை தீக்கிரையாக்கும் என்பதே தெரியாது. ஆனால், அந்த சாதியத் தீயை 'நீயா நானா?'வில் தனது அறிவார்ந்த விவாதத்தால் ஊதி அணைத்து, ‘இதுதான் உண்மையான வீரம்’ என வெற்றி வாகைச் சூடியிருக்கிறார், பெயருக்கேற்றார்போலவே, உண்மையான ‘வீராதி’ வீரசெல்வி. “சின்ன வயசிலேர்ந்து ரத்தத்தில ஊறினது” என்ற சிறுவனிடம், “ரத்தத்துல எப்படி தன்னால ஊறும்? இதெல்லாம் அசிங்கம்டா தம்பி” எனக்கூறி, ‘என் சாதிப்பெருமையை பேசும்போது மீசையை முறுக்கணும்னு தோணும். கண்ணுல ஒரு திமிரு, அகங்காரம் எல்லாமே தெரியும்.’ என்று பேசிய சிறுவனை ‘பிறப்பால் அனைவரும் சமம்’ என சொல்லவைத்திருக்கும் வீரசெல்வியைத்தொடர்புகொண்டு 'உங்களால் இப்படியொரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை நினைக்கும்போது எப்படி இருக்கு? என்றோம். வீரசெல்வி `திரும்ப மீட் பண்ணினேன்' என்னால அந்தத் தம்பி மாறிட்டான்னு முழு கிரெடிட்டையும் எடுத்துக்கமுடியாது. அவன் பேசின பிறகு, எல்லோரும் ட்ரோல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாம ஏதோ தப்பா பேசிட்டோம்னு உணர ஆரம்பிச்சிருக்கான். ஏன்னா, அந்த வீடியோ உலகம் முழுக்க வைரல் ஆக ஆரம்பிச்சிடுச்சு. அவன், மாறினதுக்கு அதுவும் காரணம். அவனை இப்போ திரும்ப மீட் பண்ணினேன். 'நீங்க சொன்ன மாதிரியேதான்க்கா நடந்துச்சு. சாதி கட்சியில என்னை வேலைக்காக மட்டும்தான் பயன்படுத்திக்கிறாங்க. அங்கீகாரம் கொடுக்கமாட்றாங்க. வேலையை வாங்கிட்டு அனுப்பிடுறாங்க. எல்லாத்தையும் உணர்ந்துட்டேன்'னு ஃபீல் பண்ணி சொன்னான். அவனோட குடும்பம் சாதாரண கூலி வேலைக்கு போற குடும்பம்தான். இப்போதாவது, குடும்பத்தை பற்றிய புரிதலும், சமூகத்தைப் பற்றிய தெளிவும் வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். என்ன ஒண்ணு, வீடியோவுல தமிழ்ச்செல்வி அக்காவாலதான் மாறினேன்னு சொன்னான். ஆனா, என் பேரை மாற்றி சொல்லிட்டான். என் பேரு தமிழ்ச்செல்வி இல்ல. வீரசெல்வி. எல்லாரும் தமிழ்ச்செல்வி… தமிழ்ச்செல்வின்னு வீடியோ போட ஆரம்பிச்சுட்டாங்க. நான் சாதி பற்றி ஒரு தெளிவோட இருக்கிறதுல எங்கம்மாவுக்கு சந்தோஷம். என்றவர், தன்னோடு குடும்பம் பத்தி பேச ஆரம்பிக்கிறார். கண்கூடா பார்த்திருக்கேன்! ``நாங்க தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் பாளமுத்தி கிராமம். அப்பா, மதியழகன். பாதி பெரியாரிஸ்ட்டுன்னு சொல்லலாம். அவர் திமுகக்காரர். சாதியெல்லாம் பெருசா பார்க்கமாட்டார். எங்கம்மா குடும்பம் கிராமத்தில் தலைமை குடும்பம். அப்படிப்பட்டக் குடும்பத்தில் பிறந்த எங்கம்மாவும் பெருசா சாதியெல்லாம் பார்க்கமாட்டாங்க. அம்மா நிறைய பேருக்கு ஃபீஸ் எல்லாம் கட்டி ஹெல்ப் பண்ணியிருக்காங்க. அப்பாவும் அம்மாவும் அப்படி இருந்ததாலதான், எல்லோரும் மனிதர்கள்தான்; எல்லோரும் சமம்தான்ங்கிற புரிதல் வந்தது. வீரசெல்வி எங்க ஊருக்கு பேருந்து வசதிக்கூட கிடையாது. ஆனா, எங்க ஊர்ல பட்டியிலின மக்கள் தோளில் துண்டு போடக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாதுன்னு சாதிக்கொடுமையெல்லாம் நிகழ்ந்துட்டிருக்கு. 100 ரூபாய் கூலி கொடுத்துட்டு 500 ரூபாய்க்கு வேலை வாங்குவாங்க. பத்து வயசு சிறுவன் 70 வயது முதியவரை பேரை விட்டு மரியாதை இல்லாம கூப்பிடுவான். இந்த சாதி ஆணவத்தையெல்லாம் கண்கூடா பார்த்திருக்கேன். என்னை மாதிரியே நிறையே பேரு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க! இந்தமாதிரி சாதிக்கொடுமை பண்றவங்க எல்லாம் என்கூட நெருங்கிப் பழகினவங்களா இருந்திருக்காங்க, சொந்தக்காரங்களா இருந்திருக்காங்க. சாதிக் கொடுமையால அடக்குமுறைக்கு உள்ளாகிற மக்களுக்குத்தான் வலியும் வேதனையும் அதிகம். 'அவங்களை அடக்குமுறை பண்ணாதீங்க, அது தப்பு'ன்னு சொல்லக்கூடியவங்க எல்லா சாதியிலும் இருக்காங்க. அடக்குமுறை பன்ற கும்பலில் மனிதாபிமானமுள்ளவங்களும் இருப்பாங்க. அவங்களால வாயைக்கூட திறக்கமுடியாது. அப்படி வாயைத் திறக்கமுடியாம நானும் இருந்திருக்கேன். கிட்டத்தட்ட, ‘பரியேறும் பெருமாள்’ படத்துல வர்ற யோகிபாபு கேரக்டர் மாதிரிதான் நான் வாழ்ந்திருக்கேன். என்னை மாதிரியே நிறையே பேரு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. நான் அமைதியா இருந்ததுக்காக, இப்போ எல்லோர்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். சாதியால, ஒரு புண்ணியமும் கிடையாது! ஆனா, இப்போ எங்க உறவினர் பசங்க யாராவது, அடக்குமுறைக்குள்ளாகுறவங்களை பேரை விட்டு கூப்பிட்டா 'வாயை உடைச்சுடுவேன்'னு தைரியமா சொல்லுவேன். எங்க வீட்டுல, எங்க குடும்பத்துல, எங்க உறவினர்கள் எல்லாருமே நான் கடுமையா எதிர்ப்பேன்னு பயப்படுவாங்க. சாதியால, ஒரு புண்ணியமும் கிடையாது. வீரசெல்வி 2016 –ல் என் அப்பா இறந்துட்டார். நான், என்ஜீனியரிங் படிச்சிருக்கேன். என்னுடைய தங்கச்சியும் என்ஜீனியரிங் படிச்சிருக்கா. எங்கம்மா ரெண்டு பேரையும் நல்லா படிக்க வெச்சிருக்காங்க. அம்மா மல்லிகா ப்ளஸ் டூ படிச்சிருக்காங்க. பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் காலேஜ்ல லேப் அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணிக்கிட்டிருக்காங்க. அப்பா இறந்தாலும் நாங்க படிச்ச கல்விதான் எங்களை வளர்த்துக்கிட்டிருக்கு. நான், இப்போ சென்னையில ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கேன். படிச்சாலே சாதியைப் பற்றின புரிதல் வரும். இந்த பிரபஞ்சத்துல நாம ஒரு துகள்தான் அப்படிங்கிறது புரிய வரும். அதனால, கல்விதான் நமக்கு ரொம்ப முக்கியம். அந்த தம்பிக்கு படிப்பு குறைவா இருக்கிறதாலதான் சமூகத்தைப் பற்றிய புரிதல் இல்லாம பேசிக்கிட்டிருந்தான். `படிப்பு ஒண்ணுதான் நம்மளை முன்னேற்றும்’ சமீபத்துல, ஒரு கட்சி மாநாடு நடந்துச்சு. 'நம்ம சாதியினர் படிக்கல. ஆட்சியாளர்கள் படிப்பை கொடுக்கல. வேலை கிடைக்காம கஷ்டப்பட்டுட்டுக் கிடக்குறாங்க'ன்னு அக்கட்சி தலைவர் பேசுறார். அதே மேடையில், 'நாங்க அக்னியிலருந்து பிறந்தவங்க'ன்னு சொல்லி சாதிவெறியையும் ஊட்டுறார். இப்படி சாதிவெறிய ஊட்டிக்கிட்டே இருந்தா, எப்படி படிக்கப் போவாங்க? 40 வருடமா சாதிவெறியை ஊட்டி ஊட்டி படிக்கவிடாம செஞ்சதே இந்தத் தலைவருங்கதான். அவங்க சுயநலத்துக்காக செய்யும் அரசியலை பெற்றோர்கள்தான் புரிஞ்சிக்கிட்டு பிள்ளைங்களை நல்லா படிக்கவெக்கணும். படிப்பு ஒண்ணுதான் நம்மளை முன்னேற்றும். தினகரன் படிப்பு எவ்ளோ முக்கியம்ங்கிறதை தம்பி தினகரனும் புரிஞ்சுக்கிட்டான். எல்லோரும் ட்ரோல் பண்ணி பண்ணி அவனோட பாடி லாங்வேஜ் மாறிடுச்சு. ராஜ வம்சம்னு சொல்லிக்கிட்டிருந்தான். இப்போ, அவனோட தோரணை, ராஜவம்ச கெத்து எல்லாம் காணாம போயிடுச்சு. அதனால, அவனை பாராட்டி வரவேற்கணுமே தவிர, மீண்டும் ட்ரோல் பண்ணி அவன் மனசை காயப்படுத்தக்கூடாது. அதுதான், என்னோட விருப்பம். ப்ளீஸ் தயவு செஞ்சு இனியும் அவனை ட்ரோல் பண்ணாதீங்க.” என்கிறார், வீரசெல்வி. நீயா நானா: ` நான் மெனக்கிட்டு ஸ்ரேயா கோஷலை இமிடேட் பண்ணல; அதனால எனக்கு அது உறுத்தல!' - பாடகி ஹரிதா
Crompton redefines fan design with new campaign ‘Sculpted, Not Made’
Mumbai: Crompton Greaves Consumer Electricals Ltd., has launched a new campaign titled ‘ Sculpted, Not Made ’, setting a bold new direction in product design and innovation. The campaign marks the debut of the brand’s latest Fluido fan range—a stunning reimagination of ceiling fans as sculptural, fluid design elements that blend artistry with performance.In a world where homes have become expressions of personal identity, Crompton addresses a common yet overlooked design gap: the ceiling fan. Despite rapid changes in home aesthetics, fans have often lagged behind in visual appeal. With ‘ Sculpted, Not Made ’, Crompton positions its Fluido fans not as mere appliances, but as functional art pieces that elevate interiors.The campaign’s central idea is brought to life through a visually arresting TVC that takes viewers into a sculptor’s studio—where flowing forms and intricate craftsmanship mirror the design of the Fluido fan. In a symbolic scene at an art auction, the Fluido is revealed as the ultimate masterpiece, underscoring its artistic value and premium aesthetic.[caption id=attachment_2459591 align=alignleft width=200] Tanmay Prusty[/caption] Tanmay Prusty, CMO – Crompton Greaves Consumer Electricals Ltd ., explained the brand’s vision behind the campaign, “ At Crompton, we don’t begin with design—we begin with people: with how they live and what they truly value in the spaces they call home. Over the years, we’ve seen homes evolve into reflections of individual style and self-expression. As the leader in the fans category, we understood that the modern fan couldn’t remain just a ceiling utility—it had to evolve into something more personal. That’s exactly what led us to create Fluido. Every element—from its fluid curves inspired by nature’s flowing forms to its sculptural balance—has been thoughtfully crafted to make a bold statement. Along with the superior performance that Fluido delivers with our trusted Crompton engineering, it also reimagines the fan as a seamless part of the living space, one that adds character and elevates the room. Fluido reflects our design-first approach, where innovation meets artistry and intention shapes every detail. It’s more than a product—it’s how we envision the future of home dcor. Our new campaign, ‘Sculpted, Not Made’, captures this vision beautifully, portraying Fluido not as an appliance, but as a piece of art designed to belong. As the category leader, we’re proud to once again raise the bar—not just for performance, but for design that truly connects with today’s lifestyle.” [caption id=attachment_2459590 align=alignright width=200] Shruthi Subramaniam[/caption]Conceptualized by BBDO India, the campaign is a celebration of aesthetic innovation, casting ceilings as the new canvas for personal style. Shruthi Subramaniam, Sr. Creative Director, BBDO India, remarked, “Our personal spaces are a reflection of our personality. We thoughtfully curate art for our walls. We tastefully pick carpets for our floors. But what about our ceilings? When we first saw Crompton’s stunning new Fluido range of fans, we knew it was a disruptor. Not just a category disruptor, but a design disruptor. The fans are simply stunning. I love how ceilings can now become the backdrop for impeccable taste.” https://www.youtube.com/watch?v=_DLeDxfysl4
Neeraj Chopra: கனவாக இருந்த 90 மீ இலக்கு; இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை; எப்படிச் சாதித்தார் நீரஜ்?
'நீரஜ் சோப்ரா - 90 மீ மார்க்!' நீரஜ் சோப்ரா தனது கரியரில் இதுவரை எட்டாத இலக்கை எட்டியிருக்கிறார். தோஹாவில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் 90.23 மீட்டருக்கு ஈட்டியை வீசி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். 90 மீட்டர் இலக்கை தாண்ட வேண்டும் என்பது நீரஜின் நீண்ட நாள் கனவு. அதை இப்போதுதான் சாதித்திருக்கிறார். Neeraj Chopra - நீரஜ் சோப்ரா 'பின்னணி!' நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றிருந்தார். அப்போது கூட 87.58 மீட்டருக்குத்தான் ஈட்டியை வீசியிருந்தார். அதேமாதிரி, பாரிஸ் ஒலிம்பிக்ஸிலுமே 89.45 மீட்டருக்குத்தான் ஈட்டியை வீசியிருந்தார். வெள்ளியைத்தான் வென்றிருந்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் 92.97 மீட்டருக்கு ஈட்டியை வீசி தங்கத்தைத் தட்டிச் சென்றிருந்தார். நீரஜ் சோப்ரா ஒவ்வொரு தொடருக்குள் செல்லும் போதும் அவரிடம் இந்த 90 மீ மார்க் பற்றிதான் அதிகமாக கேள்வி கேட்கப்படும். நீரஜூக்கும் அந்த 90 மீட்டரை எப்படியாவது தாண்டிவிட வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்தது. Neeraj Chopra - நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ராவுக்கு முன் உலகளவில் 24 வீரர்கள் இந்த 90 மீட்டர் மார்க்கை தாண்டியிருக்கின்றனர். இப்போது ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களிலும் ஆண்டர்சன் பீட்டர்ஸ், அர்ஷத் நதீம், ஜூலியன் வெபர் என நிறைய பேர் 90 மீட்டரைத் தாண்டியிருக்கின்றனர். நீரஜ் சோப்ரா 90 மீட்டர் இலக்கை தாண்டாவிட்டாலும் அவரிடம் இருக்கும் சீரான தன்மை வேறு யாரிடமும் இருக்காது. Neeraj Chopra - நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்ஸூக்குப் பிறகு 14 முறை 88-90 மீட்டர் தூரத்துக்குள் வீசியிருக்கிறார். இந்தளவுக்குச் சீராக வேறு எந்த வீரரும் வீசவில்லை. ஆனால், அவர்களிடம் 90 மீட்டருக்கு மேலான வீச்சுகள் இருக்கும். நீரஜிடம் அது இருக்காது. அது ஒரு குறையாகவே இருந்தது. 'எட்ட முடியாத இலக்கு!' நீரஜூம் எவ்வளவோ முயன்று பார்த்தார் 89-90 க்கு இடையே மட்டும் 6 வீச்சுகளை வீசியிருக்கிறார். சில செ.மீ இடைவெளியில் அவையெல்லாம் 90 மீ இலக்கை எட்ட தவறியிருந்தன. Neeraj Chopra - நீரஜ் சோப்ரா 2022 இல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் 89.94 மீட்டருக்கு வீசியிருந்தார். வெறும் 6 செ.மீட்டரில் அப்போது 90 மீ மிஸ் ஆனது. பாரிஸ் ஒலிம்பிக்ஸில் நீரஜின் சக போட்டியாளர்கள் ஏற்கனவே 90 மீட்டருக்கு மேல் வீசியவர்கள் என்கிற ஒரு சின்ன ஐயம் இருந்துகொண்டேதான் இருந்தது. ஆனால், அதெல்லாம் எப்போதாவதுதான் வரும். மேலும், அவர்களால் நீரஜ் அளவுக்கு அழுத்தமான சூழலைக் கையாள முடியாது என்கிற நம்பிக்கை இருந்தது. Neeraj Chopra : 'பாகிஸ்தான் வீரருடன் நெருங்கிய நட்பில் இல்லை!' - நீரஜ் சோப்ரா விளக்கம்! ஆனாலும் சர்ப்ரைஸாக அர்ஷத் நதீம் 92.97 மீட்டருக்கு வீசினார். இதுவே நீரஜூக்குப் பெரிய அழுத்தமாகி விட்டது. 6 வாய்ப்புகளில் ஒன்றே ஒன்றை மட்டும்தான் சரியாக வீசினார். அது 89.45 மீட்டரில் விழுந்து வெள்ளியை மட்டுமே வாங்கிக் கொடுத்தது. அந்த 90 மீ மார்க் என்கிற எட்ட முடியாத கனவு நீரஜின் ஒலிம்பிக்ஸ் சாம்பியன் என்கிற பெருமையையே பறித்துக் கொண்டது. பாரிஸ் ஒலிம்பிக்ஸூக்குப் பிறகு நீரஜின் ஏக்கம் இன்னும் அதிகம் ஆனது. சுவிட்சர்லாந்தின் லாசானேவில் நடந்த இதே டைமண்ட் லீகின் முதல் சுற்றில் 89.49 மீட்டருக்கு வீசினார். இந்த முறை 51 செ.மீ இல் கோட்டைவிட்டார். Neeraj Chopra - Zelency 'புதிய பயிற்சியாளர்!' 90 மீட்டர் இலக்கைத் தொடர்ந்து எட்ட முடியாத சூழலில்தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனக்கு 5 ஆண்டுகளாகப் பயிற்றுவித்து வந்த க்ளாஸ் பர்தோனியஷிடமிருந்து விடைபெற்றார். செக் குடியரசைச் சேர்ந்த ஜேன் ஜெலன்ஷி என்கிற பயிற்சியாளருடன் புதிதாக இணைந்தார். ஜெலன்ஷி தன்னுடைய கரியரில் 52 முறை 90 மீ தூரத்துக்கு மேல் ஈட்டியை வீசியவர். அவருடனான பயிற்சி நீரஜூக்கு நல்ல பலனைக் கொடுத்தது. Neeraj Chopra - நீரஜ் சோப்ரா நீரஜின் டெக்னிக்கில் சில பயனுள்ள மாற்றங்களைச் செய்தார். நீரஜ் நீண்ட நாட்களாக இடுப்பு வலியாலும் அவதிப்பட்டு வந்தார். அதிலிருந்தும் இப்போது முழுமையாக மீண்டு வந்திருக்கிறார். இதன் விளைவாகத்தான் அவரால் முதல் முறையாக அந்த எட்ட முடியாத 90 மீ இலக்கை எட்ட முடிந்தது. 'இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை!' இந்தத் தொடருக்கு முன்பாக நீரஜ் மீது நிறைய அழுத்தங்கள் இருந்தது. ஈட்டி எறிதலைப் பிரபலப்படுத்தும் விதமாக Neeraj Chopra Classic என்ற தொடரை பெங்களூருவில் நடத்த திட்டமிருந்தார். அதில் உலகளவில் சிறந்த நிறைய வீரர்களுக்கு அழைப்பு விடுத்தார். Neeraj Chopra : 'என்னுடைய தேசப்பற்றை கேள்வி கேட்பது வேதனையாக இருக்கிறது!' - நீரஜ் சோப்ரா பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீமுக்கும் அழைப்பு சென்றது. இதன்பிறகுதான் இரு நாடுகளுக்கு இடையேயையும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. உடனே சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள். 'என்னுடைய தேசப்பற்றைக் கேள்வி கேட்கிறார்கள்' என மனம் நொந்துபோய் அறிக்கைவிட்டிருந்தார். இந்தத் தொடருக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பிலும் இதைப் பற்றிதான் அவரிடம் அதிகமாக கேட்கப்பட்டது. இந்த சர்ச்சைக்கும் அழுத்தத்துக்கும் நடுவில்தான் நீரஜ் சாதித்திருக்கிறார். 'இது ஆரம்பம்தான். இன்னும் நிறைய 90 மீ வீச்சுகள் வரும்' என நீரஜ் பேசியிருக்கிறார். அசத்துங்க நீரஜ்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சுத்த ரத்னேஸ்வரர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள், இக்கோவில் பராந்தக சோழன் I காலத்திலேயே இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில உள்ள பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து மதத்தை சார்ந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேளக்குழு, பரிச்சாரகர், அலுவலக உதவியாளர், அத்யாபாகம், பகல் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் தேவை, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
Don’t Fake It: Ethical Boundaries for AI in Communications
AI is no longer just a buzzword, it’s rewriting the way we tell stories, connect with audiences, and shape brand perception. But as one recent viral example shows, it’s not all smooth sailing. You might have seen the speculative Adidas ad created by filmmaker Blair Vermette. It featured people dancing in floralprint Adidas gear and looked every bit like a high-end campaign. Except there was one twist, the collection didn’t exist. The entire thing was AI-generated. People loved it so much they asked Adidas to make it real. That’s the power of AI, but also a red flag. If we can generate desire for something that doesn't exist, where do we draw the line between marketing and manipulation?As PR professionals, we have to pause and ask if we are using AI to inform and inspire or to deceive and distort? Here's why that distinction matters now more than ever. Are We Reflecting Desires or Manufacturing Them? Traditionally, marketing aimed to reflect what people already wanted. Now, with generative AI we're not just responding to demand, we are creating it. The Adidas ad didn’t just promote something, it tested an idea in real time. Useful? Yes. Ethical? That depends.Many experts argue that AI gives companies insight into our preferences and even our vulnerabilities. That’s powerful stuff. But it also creates the risk of nudging consumers toward things they didn’t even want until the algorithm decides they should. The line between personalisation and manipulation starts to blur. We need to stay on the right side of it. The FOMO Trap: When Marketing Gets Pushy We all know marketing thrives on urgency Only 2 left or Flash sale ends tonight . AI takes that to a new level tailoring these messages to individual users based on what gets them to click. But here’s the kicker, sometimes there isn’t really a scarcity. The AI just knows that fear of missing out works on you.Over time, this kind of psychological pressure creates distrust. When consumers start feeling manipulated, they tune out or, worse, they call you out.So what's the fix? Honesty. Transparency. It’s not just nice to have, it's a business case for being real. Why Transparency Isn’t Optional Anymore In today’s hyper aware environment people want to know what’s real and what’s AI assisted. If you are using AI to write copy, generate visuals or test concepts just say so. Some governments are even moving toward requiring that AI generated content be clearly disclosed.Think of it this way, no one minds if AI helps you brainstorm. But if it’s creating entire campaigns without context and your audience feels duped the backlash will be swift. One fashion brand learnt this the hard way when they tested AI models to show off body diversity and the public wasn’t impressed. They didn’t want synthetic inclusion, they wanted the real thing. Virtual Influencers and the Authenticity Question Let’s talk about AI influencers like India’s own “Kyra”. On the surface they’re a marketer’s dream, always on brand, always available and scandal proof. In a market like India where cultural nuance and emotional connection matter, virtual influencers still have a long way to go.The takeaway here? Use AI influencers if you must, but make sure your audience knows they’re virtual. And more importantly, don’t use them as a shortcut to avoid genuine storytelling. The Copyright Elephant in the Room There’s another layer to this intellectual property. AI tools don’t create from scratch, they remix what they’ve been trained on. Some companies have already landed in legal hot water for using unlicensed data to train these models.If you’re using AI-generated content for a campaign, you need to know what went into it. Was it trained on licensed data? Is the output actually yours to use?To stay safe, partner with AI tools that are transparent about their training data. Better yet, keep a human in the loop. Creativity can be co-piloted by machines but ownership, accountability and final approval must stay with us. AI Lacks What Matters Most: Empathy AI is efficient. It can predict, optimize, and even surprise us. But what it can’t do is care. Empathy, intent, and emotional timing are human traits. And in communication, they matter more than polished copy or trendy visuals.One Indian healthcare brand tried using an AI avatar to share emergency tips. Smart idea until they realised the bot might offer generic or even misleading advice. They quickly reined it in. Some messages, especially in healthcare or crisis communications, need a real voice with realunderstanding. Final Thoughts : Use the Tech, But Keep the Trust There’s no denying that AI will change how we work. It already is. But we need to be intentional. If your storytelling loses the human element, your brand might lose its audience.Let’s not fake authenticity. Let’s not fake urgency. And let’s definitely not fake inclusion, creativity or empathy. Because once trust is broken it’s nearly impossible to rebuild.AI can help us go faster. But only we can make sure we’re going in the right direction. As a PR professional, the challenge is not just to adopt AI, it’s to adopt it responsibly. And that starts with remembering who we’re really talking to, and that is living humans. (Views are personal)
அன்னதான திட்டம்:தொடங்கி வைத்த உதயநிதி..இனி நாள்முழுவம் உணவு -வெளியான அறிவிப்பு!
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னதான திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சனி, முக்கிய திருவிழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்க உள்ளனர். அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுடன் துணை முதல்வர் உதயநிதி உணவருந்தினார் .
பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி ரிலீஸ்!
இந்தக் கோடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு அபூர்வமான சினிமா நிகழ்வாக, பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’, வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி,