SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

IPS அதிகாரியின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச்சென்ற அதிகாரிகள் மீது திருட்டு வழக்கு!

சென்னை தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை மண்டல இயக்குனரின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்று, விபத்தும் ஏற்படுத்திய விவகாரத்தில் கார் சாவி எடுத்து கொடுத்தவர் மற்றும் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியவர் என்ற அடிப்படையில், இரு அதிகாரிகள் மீது திருட்டு வழக்கு பதியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, அயப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் இந்திய அரசு போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை சென்னை மண்டல அலுவலகம் உள்ளது. இந்த மண்டல அலுவலகம் இயக்குனர் அரவிந்தன் ஐ.பி.எஸ். தலைமையில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இங்கு நுண்ணறிவு அதிகாரியாக பணியாற்றி வரும் பாரத் யாதவ் என்பவர் மதுபோதையில் நேற்றிரவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த தொலை தொடர்பு அதிகாரி சுபேந்திர சர்மா என்பவரிடம், இயக்குனர் அரவிந்தன் பயன்படுத்தும் கார் சாவியை கேட்டு பெற்றுள்ளார். இதையடுத்து காரை பூந்தமல்லிக்கு ஓட்டிச் சென்ற அவர், வழியில் விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இதனை அடுத்து வாகனத்தை இயக்கியவர், ஓட்டியவர் என இருவர் மீது உதவி இயக்குனர் வேணுகோபால் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்கீழ், “அனுமதியின்றி காரை எடுத்துச் சென்றதால், காரை திருடிச் சென்றுள்ளனர்” எனவழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயர் அதிகாரி ஒருவரின் அலுவலக வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றது மட்டுமின்றி விபத்துக்குள்ளாகிய சம்பவத்தை அடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் இருவர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதியதலைமுறை 24 Mar 2023 11:38 am

“சூரியன் மீண்டும் நாளை உதிக்கும்..” வைரலாகும் SKY-க்கு ஆதரவாக ரோகித் போட்ட ட்வீட்!

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், ஹாட்ரிக் டக் அவுட்டான நிலையிலும், கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக 2018இல் பதிவிட்டிருந்த ரோகித் சர்மாவின் ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டியிலும் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார்.தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், முதல் பந்திலேயே அவர் அவுட் ஆன போதும் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு 3வது போட்டியிலும் வாய்ப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற அந்த கடைசிப் போட்டியிலும் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் முதல் பந்திலேயே போல்டாகியதுடன் டக் அவுட் முறையில் அவர் வெளியேறி இருந்தார். இதன்மூலம் தொடர் ஒன்றில் ஓர் அணிக்கு எதிராக தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் டக் அவுட்டானபோதும் ரோகித்திடம் சூர்யகுமார் யாதவ் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதும் அவர், “முந்தைய போட்டிகளில் தனது திறமையை சூர்யகுமார் யாதவ் காட்டியுள்ளார். ஆகையால் அவரது திறமைக்கு ஏற்றவாறு இன்னும் கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அவருக்கும் நன்றாக தெரியும், மீண்டும் நல்ல மனநிலைக்கு வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என உணர்ந்திருப்பார்.அவருக்கு முந்தைய தொடர்களில் உரிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால் கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு சில தவறுகள் இருந்தாலும் இன்னும் கூடுதல் வாய்ப்பை கொடுக்க வேண்டும். சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று திறமையான வீரர்கள் யாரும் ஒருபோதும் நினைத்து விடக்கூடாது. அவர் இப்போது நல்ல பார்மில் தான் இருக்கிறார். ஆனால் இப்போது மாற்றுவீராக மட்டுமே விளையாடி வருகிறார்” என்று சொன்னதுடன், 3வது போட்டியிலும் வாய்ப்பு வழங்கியிருந்தார்.3-வது போட்டியிலும் அவர் தோற்றதால் மீண்டும் அவரிடம் சூர்யகுமார் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போதுபேசிய அவர், “சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவருக்கு மூன்று நல்ல பந்துகள் கிடைத்தன, அதைத் தவறவிட்டார். ஆனால், இதில் பெரிதாக கவனம் செலுத்த வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி இதைக் கையாள வேண்டும், எப்படி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.அவர் நன்றாக ஸ்பின் விளையாடுவதை கடந்த இரண்டு வருடங்களாகப் பார்த்து வருகிறோம். அதனால்தான் கடைசி 15-20 ஓவர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் மூன்று பந்துகளை மட்டுமே விளையாட முடிந்தது. இது யாருக்கும் நடக்கலாம். இதனால் அவரது திறமை குறைந்து போகப்போவதில்லை. அவர் இதை கடந்து வருவார்” என்றார்.இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதேபோன்றதொரு முந்தைய நெருக்கடியான சூழலில் அவருக்கு ஆதரவாக ரோகித் சர்மா பதிவிட்ட ட்விட்டர் பதிவும் வைரலாகி வருகிறது. 2018இல் இதேபோன்று சூர்யகுமார் திணறிய சமயத்தில், “சூரியன் மீண்டும் நாளை உதிக்கும்” என்று ரோகித் சர்மா அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்த ட்வீட் தற்போது வைரலாகிவருகிறது.

புதியதலைமுறை 24 Mar 2023 11:38 am

யார் இந்த அமிர்தா அஹுஜா? ஹிண்டன்பர்க் தாக்குதலில் சிக்கிய இந்திய பெண்!

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புதிய ஆய்வறிக்கை. புகார்களில் சிக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த அமிர்தா அஹுஜா.

சமயம் 24 Mar 2023 11:35 am

காய்கறி சாகுபடி.. கோவை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி!

காய்கறி சாகுபடி குறித்த இலவச பயிற்சி கோவையில் நாளை நடைபெறுகிறது.

சமயம் 24 Mar 2023 11:32 am

மத்திய பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டரில் 4.0 ஆக பதிவு..!

மத்திய பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசம், குவாலியருக்கு தென்கிழக்கே 30 கி.மீ தொலைவில் இன்று காலை 10:31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

டினேசுவடு 24 Mar 2023 11:32 am

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்

அடேடேரென 24 Mar 2023 11:30 am

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், வருமானத்தை அதிகரிக்காமல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை

அடேடேரென 24 Mar 2023 11:30 am

ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த மத குரு யாழில் இருந்து நடைபயணம்

நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டி வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம்

அடேடேரென 24 Mar 2023 11:30 am

கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (25) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அடேடேரென 24 Mar 2023 11:30 am

கான்ஸ்டபிளுடன் இணைந்து OIC செய்த காரியம்!

கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடேடேரென 24 Mar 2023 11:30 am

தீயாக பரவும் பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும்

அடேடேரென 24 Mar 2023 11:30 am

பஸ் மோதி பெண் ஒருவர் பலி!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (23) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ள

அடேடேரென 24 Mar 2023 11:30 am

10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு!

இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூடு, வௌ்ளை சீனி, கடலைப்

அடேடேரென 24 Mar 2023 11:30 am

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி

வவுனியாவில் காச நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றுள்ளது. உலக காச நோய் தினமான இன்று (24.03) வவுனியா மாவட்ட

அடேடேரென 24 Mar 2023 11:30 am

ராகுல் காந்திக்கு சிறை –மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு..!

ராகுல் காந்தி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களைவை தொடங்கிய சில வினாடிகளிலேயே ஒத்திவைப்பு. கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுலுக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் […]

டினேசுவடு 24 Mar 2023 11:25 am

சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தது போலீஸ்

சென்னை: சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை போலீஸ் பறிமுதல் செய்தது. மணிப்பூரில் இருந்து 9 கிலோ மொத்தாம்பெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த நந்தா, சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தினகரன் 24 Mar 2023 11:22 am

சுமையை அதிகரித்தால் தப்பிக்க முடியாது !!

எங்களிடம் கடன் மறுசீரமைப்புக்கு சரியான திட்டங்கள் இருந்திருந்தால் இவ்வாறு நிபந்தனைகளுக்கு இணங்கியிருக்க வேண்டியதில்லை என்றும் கடன்சுமையை அதிகரிப்பதால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்ததும் மேலே வருவோம் என்று […]

அதிரடி 24 Mar 2023 11:20 am

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை !!

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக நிதி அமைச்சின் கீழ் நிறுவன மறுசீரமைப்பு அலகு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் லிமிடெட், ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி மற்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளன. இந்தநிலையில் அரச நிறுவனங்களில் ஆழமான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிரடி 24 Mar 2023 11:19 am

டெல்லி: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 5-ம் வகுப்பு மாணவி; 54 வயது பியூன் சிக்கியது எப்படி?

டெல்லி மாநகராட்சியின் முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் பயின்று வந்த 5-ம் வகுப்பு மாணவி, திடீரென கடந்த 15-ம் தேதி முதல் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார். இறுதி தேர்வுக்கும் அவர் வரவில்லை. அதனால், மாணவியின் வகுப்பாசிரியர் மாணவியின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார். அப்போதுதான் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. கைது இது குறித்து ஆசிரியர், ``ஆண்டுத் தேர்வுக்கு மாணவி வராததற்கான காரணத்தை அறிய, அவரின் அம்மாவிடம் பேசினேன். ஆரம்பத்தில், மாணவி வயிற்று வலியால் அவதிப்படுவதாக தெரிவித்தார். அதில் உண்மை இல்லை என உணர்ந்ததால், மீண்டும் மீண்டும் அவரிடம் விசாரித்தபோதுதான் தன் மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார். உடனே இதை பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவித்தேன். அதோடு காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறோம் எனத் தெரிவித்தார். இந்த புகார் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவுசெய்தது. இதையடுத்துப் பேசிய காவல் துறையினர், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த அஜய் (54) கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியின் முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் பியூனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், மார்ச் 14-ம் தேதி பள்ளிக்கு சென்ற 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியை, எதோ ஒரு காரணம் கூறி பியூன், அவரின் மூன்று நண்பர்கள் தனியான ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கின்றனர். காவல்துறை அதன்பிறகு மயக்கம் தெளிந்த மாணவி வீட்டுக்கு சென்றிருக்கிறார். சம்பவம் நடந்த அன்றே காவல்நிலையத்துக்கு அவரின் பெற்றோர் புகாரளிக்காததால், நடவடிக்கை எடுக்க தாமதமாகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமான அஜய் என்ற பியூன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மேலும் அவரின் கூட்டாளிகளை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி நகர காவல்துறை மற்றும் எம்சிடிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பச்சிளம் குழந்தையைக் காவல்துறை அதிகாரி மிதித்துக் கொன்றாரா?-ஜார்க்கண்ட் முதல்வர் விசாரணைக்கு உத்தரவு

விகடன் 24 Mar 2023 11:18 am

டெல்லி: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 5-ம் வகுப்பு மாணவி; 54 வயது பியூன் சிக்கியது எப்படி?

டெல்லி மாநகராட்சியின் முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் பயின்று வந்த 5-ம் வகுப்பு மாணவி, திடீரென கடந்த 15-ம் தேதி முதல் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார். இறுதி தேர்வுக்கும் அவர் வரவில்லை. அதனால், மாணவியின் வகுப்பாசிரியர் மாணவியின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார். அப்போதுதான் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. கைது இது குறித்து ஆசிரியர், ``ஆண்டுத் தேர்வுக்கு மாணவி வராததற்கான காரணத்தை அறிய, அவரின் அம்மாவிடம் பேசினேன். ஆரம்பத்தில், மாணவி வயிற்று வலியால் அவதிப்படுவதாக தெரிவித்தார். அதில் உண்மை இல்லை என உணர்ந்ததால், மீண்டும் மீண்டும் அவரிடம் விசாரித்தபோதுதான் தன் மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார். உடனே இதை பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவித்தேன். அதோடு காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறோம் எனத் தெரிவித்தார். இந்த புகார் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவுசெய்தது. இதையடுத்துப் பேசிய காவல் துறையினர், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த அஜய் (54) கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியின் முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் பியூனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், மார்ச் 14-ம் தேதி பள்ளிக்கு சென்ற 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியை, எதோ ஒரு காரணம் கூறி பியூன், அவரின் மூன்று நண்பர்கள் தனியான ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கின்றனர். காவல்துறை அதன்பிறகு மயக்கம் தெளிந்த மாணவி வீட்டுக்கு சென்றிருக்கிறார். சம்பவம் நடந்த அன்றே காவல்நிலையத்துக்கு அவரின் பெற்றோர் புகாரளிக்காததால், நடவடிக்கை எடுக்க தாமதமாகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமான அஜய் என்ற பியூன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மேலும் அவரின் கூட்டாளிகளை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி நகர காவல்துறை மற்றும் எம்சிடிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பச்சிளம் குழந்தையைக் காவல்துறை அதிகாரி மிதித்துக் கொன்றாரா?-ஜார்க்கண்ட் முதல்வர் விசாரணைக்கு உத்தரவு

விகடன் 24 Mar 2023 11:18 am

திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூவிருந்தவல்லி சிறப்பு காவல் படை துணை கண்காணிப்பாளர் மனோஜ்குமார் திருக்கோவிலூர் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினகரன் 24 Mar 2023 11:17 am

4 தமிழக மீனவர்கள் விடுதலை.! இலங்கை நீதிமன்றம் உத்தரவு.! படகுகள் நிலைமை.?

கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட 4 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக புகார் கூறி தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடிப்பதும், பிறகு மீனவர்களை மட்டும் விடுவித்து படகுகளை அரசுடைமையாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிபந்தனை : கடந்த 12ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்களை படகுடன் சேர்த்து இலங்கை ராணுவம் சிறைபிடித்தது. தற்போது கைது செய்யப்பட்ட […]

டினேசுவடு 24 Mar 2023 11:16 am

ஊடகங்களை ஒடுக்கும் தேவை எங்களுக்கு இல்லை

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு நாம் வங்குரோத்து நாடாக மாறினோம். IMF மற்றும் எங்கள் கடன் வழங்குநர்களின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் கடனை மறுசீரமைக்க வேண்டியேற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இது வெறும் ஆரம்பம் தான். IMF ஆதரவு தொடர்பில் நிதி உத்தரவாதத்தைப் பெற்ற பிறகு, நம் நாடு வங்குரோத்து நாடாக கருதப்படமாட்டாது. இப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அதாவது பலதரப்புக் கடன் வழங்குநர்கள் மற்றும் இருதரப்புக் கடன் வழங்குநர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம். ஆனால் நாம் திரும்பிப் பார்க்காமல் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் எனவே இது முடிவல்ல. ஒருபுறம், இது ஆரம்பம் மட்டுமே. அடுத்ததாக கடன் தருபவர்களுடனும் கலந்துரையாட வேண்டும். கடன் வழங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நேரம், எமக்கு நான்கு வருட வேலைத்திட்டமும் உள்ளது. அதனால்தான் இந்த ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நான் அதை சட்டப்படி செய்ய விரும்பவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த உடன்படிக்கைக்கு வாக்களிப்பது எங்களை மேலும் பலப்படுத்துகிறது. இதற்கு மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கையை நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை கடன் வழங்குநர்களுக்கு காட்ட வேண்டும். எனவே முதலில், இது ஒரு கடன் மறுசீரமைப்பு, ஆனால் கடன் மறுசீரமைப்பு மட்டும் அல்ல, நாம் அதை நமது பொருளாதார மறுசீரமைப்பாக மாற்ற வேண்டும். முதலில், எங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மை உள்ளது. இந்த செயல்முறை மூலம் நமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மிகவும் கடினமான காலமாக இருப்பதோடு, நாம் அரச செலவினங்களை ஸ்தீரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது அரச செலவினங்களின் தன்மையையும், நமக்குக் கிடைக்கும் வருமானத்தையும் விவரிக்கிறது. இது முதன்மை வரவுசெலவுத் திட்டத்தில் மேலதிகம் இருப்பதை உறுதி செய்வதோடு, வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. நாம் அரசாங்க வரவு செலவுத் திட்டத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் இது எங்களுக்கு முதன்மை வரவுசெலவுத் திட்ட மேலதிகம் மற்றும் வருமான அதிகரிப்பை உறுதி செய்கிறது. நாம் மேற்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சியை அடைய உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் மேலும் தாராளமயவாதத்தை (லிபரல்) தொடருவோம். தாராளமயம் என்பது நல்ல வார்த்தையல்ல என்றும், வெளிநாட்டு முதலீட்டுக்காக அதைத் திறந்து விடுகிறோம் என்றும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள். நாம் பல்வேறு முதலீட்டுத் துறைகள் மற்றும் உற்பத்தித் துறையில் கூடுதல் அன்னிய முதலீட்டையும் நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம். அதன் மூலம் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதே அர்த்தம் ஆகும் என குறிப்பிட்டுள்ளார். 10 வருடங்களில் நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடாக மாறும் திட்டத்திற்கு. இந்தக் கடனை அடைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, மு தல் பணியாக இந்த உடன்படிக்கையை அங்கீகரித்து அதன் பின்னர் கடனை மறுசீரமைக்க வேண்டும் என்றும் கடனை திருப்பிச் செலுத்தும் முறையை அதன்போதே அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இரண்டாவதாக, விவசாயம் மற்றும் மீன்பிடிக் கைத்தொழில் நவீனமயமாக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, இலங்கையை பிராந்திய விநியோக மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுற்றுலாத் துறை, டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் ஆகியவை நிச்சயமாக மேம்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் புதிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும். இன்னும் 25 வருடங்களில் அதாவது 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை உயர் நடுத்தர வருமான நாடாக மாற்றுவதே எனது நோக்கம் ஆகும். ஒரே இடத்தில் தேக்க நிலையில் உள்ள பொருளாதாரத்துடன் எம்மால் முன்னேற முடியாது. நம் நாட்டில் நடந்த அனைத்து பிரச்சினைகளும் இந்த பிரச்சினையுடன் தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 1971இல் ஏற்பட்ட வேலையில்லாப் பிரச்சினையைப் போன்று, 1983இல் மொழி மட்டுமன்றி, தமிழ் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பின்மையால் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதுதான் 1989 இலும் நடந்தது. எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன. பொருளாதார வளர்ச்சியின்மை மற்றும் உறுதியற்ற தன்மை இரத்தம் சிந்துவதற்கு வழிவகுத்தது. இப்போது புதிதாக தொடங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒரு வரலாற்று செயல்முறை. அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். இந்த சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறை பற்றி அறிந்து கொள்ள எந்த நேரத்திலும் அதிகாரிகளுடன் பேசுவதற்கு பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த உடன்படிக்கையை நாம் முன்னெடுப்பதா இல்லையா என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இல்லை என்றால் வருங்கால சந்ததி நம்மை சபிக்கும். எனவே, அனைவரின் வாழ்க்கையையும் எளிதாக்கும் வகையில் நமது பொருளாதாரத்தில் இந்த நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்த உங்கள் ஆதரவை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒப்பந்தத்தை நாங்கள் முதல் பணியாக அங்கீகரித்து, கடனை மறுசீரமைக்கச் செல்கிறோம். அதன் பிறகே கடனை எப்படி செலுத்துவது என்பதை தீர்மானிக்க வேண்டும். எங்கள் நிகழ்ச்சிகள் முடிவடையவில்லை. ஏன் முடிக்கவில்லை? அது அரசியலாக மாறியது. இல்லையெனில், அது பொதுமக்களின் கருத்துக்கு உட்பட்டது. மக்கள் கருத்தை உருவாக்கியது ஊடகங்கள்தான். இம்முறை இத்திட்டம் வெற்றியடைய ஊடகங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோருகிறேன். மேலும், எம்.சி.சி மானியத்தை இலங்கை பெறப்போகும் போது, சில தரப்பினர் நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றம்சாட்டினர். IMF வந்ததும் மேற்குலகிடம் சரணடைவோம் என்று சொன்னார்கள். அதனால் இப்படியே தொடர்வது கடினம். எனவேதான் சர்வதேச நாணய நிதியத்தின் 17ஆவது வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய இணையுமாறு ஊடகங்களைக் கோருகின்றோம். இந்த செயல்முறை மிகவும் கடினம். நாம் அனைவரும் அதை உணர்கிறோம். இது நான்கு வருட செயல்முறை. இது 2026இல் முடிவடையும். என்னுடன் வெகு தூரம் பயணித்தவர்கள், எனது கொள்கைகள் சரி என்று சொன்னவர்கள் இப்போது எனக்கு எதிராக பேசுகிறார்கள். அதனால் எதிர்த்தவர்கள் ஒன்று சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் இப்போது கடினமான இடத்தில் இருக்கிறோம். பழைய விளையாட்டுகளை மீண்டும் விளையாட முடியாது. பழைய விளையாட்டுகளைத் தொடர்ந்தால் மீண்டும் விழ நேரிடம். எனவே, கடந்த காலத்தை மறந்து முன்நோக்கிச் செல்ல வேண்டும். நாங்கள் அனைவரும் தவறு செய்தோம். இதை இப்போது ஏற்றுக்கொண்டு எங்களை ஆதரிக்கவும். இந்தப் பணத்தில் சம்பளம் வழங்குகிறோம். இது திருட்டல்ல. திருட்டு என்ற கதைகளினால், இவைகளை இழந்தோம். இதுபோன்ற கதைகளைப் பரப்ப வேண்டாம். இப்படி கூறுபவர்கள் இதைவிட திருடுகின்றனர். இங்கிருப்பவர்களைவிட எனது சம்பளம் குறைவாகவே இருக்கிறது. எமது மனப்பான்மையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நான் திருடர்களைப் பாதுகாக்க வந்ததாகக் குற்றம் சாட்டினார்கள். ஆனால், IMF உடன் ஆலோசித்து தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைக் கொண்டு வருகிறோம். எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும் இப்படி எதனையும் செய்யவில்லை. நீதியமைச்சர் இதுகுறித்து எதிர்க்கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவார். அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே இதனை பாராளுமன்றத்தில் முன்வைத்தோம். இதை யாரும் எதிர்க்க முடியாது. சில புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் புதிய சட்டங்கள் சிலவற்றையும் கொண்டுவரவுள்ளோம். பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஊடகங்களை ஒடுக்கும் தேவை எங்களுக்கு இல்லை. ஊடகங்கள் என்னையே அதிகமாக விமர்சிக்கின்றன. எனக்கே ஊடகங்கள் இல்லாமல் போனது. ஊடகங்கள் மீதிருந்த குற்றவியல் சட்டத்தை நான் தான் நீக்கினேன். தகவல் அறியும் உரிமையையும் நான்தான் வழங்கினேன். சுயாதீன ஆணைக்குழுக்கள் மூன்று தடவைகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தேன். இப்படிக்கு இருக்கும் போது ஊடகங்களை ஒடுக்கியதாக எப்படி கூற முடியும்? தேசியப் பிரச்சினையைத் தீர்க்கச் சொல்கிறார்கள். ஆனால் நான் அந்த விடயங்களை செய்து கொண்டிருக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்து ஏனைய பிரச்சினைகளை களைய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல என்று ஊடகங்களில் யாரும் கூறவில்லை. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் செயற்படுகின்றோம் என முன்னரே கூறியிருந்தேன். எந்த ஊடகமும் அதை எதிர்க்கவில்லை. அதனை நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இந்தப் போர்வையில் இனவாதத்தை உருவாக்காதீர்கள். ஒரு ஊடக நிறுவனம் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. ஒரே விடயத்தை நான்கு நாட்கள் ஒளிபரப்பினார்கள். இதனைப் பார்த்துவிட்டு தமிழ் ஒருவர் தாக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைக் ஒளிபரப்பினால் பரவாயில்லை. அதற்கு இன்னொரு பக்கம் இருப்பதைக் காட்ட வேண்டும். ஆர்ப்பாட்டங்களைக் காட்ட வேண்டாம் என்றும் எனது நலவுகளை மாத்திரம் ஒளிபரப்புமாறும் நான் கேட்கவில்லை.“ எனக் குறிப்பிட்டார்.

பதிவு 24 Mar 2023 11:15 am

சென்னை வாசிகளுக்கு செம குட் நியூஸ்.. ஏதெர் மின்சார வாகன நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் உள்ள MRTS / புறநகர் ரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்களை ஏதெர் எனர்ஜி மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து நிறுவுகின்றன.

சமயம் 24 Mar 2023 11:14 am

சிபிஐ-ஐ ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் 14 கட்சிகள் மனு

டெல்லி: சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 கட்சிகள் மனு அளித்துள்ளனர். சிபிஐ, அமலாக்கப்பிரிவை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வதை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையில் திமுக, ஆர்ஜேடி, பிஆர்எஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தினகரன் 24 Mar 2023 11:12 am

தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை. பங்குனி உத்திர திருநாள் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் […]

டினேசுவடு 24 Mar 2023 11:07 am

டி.எம்.சௌந்தரராஜன் சாலையை திறந்து வைத்த முதல்வர்..!

செளந்தரராஜன் வசித்த வீடு அமைந்துள்ள மந்தவெளிப்பாக்கத்தின், மேற்குவட்ட சாலையின் பெயர் டி.எம்.சௌந்தரராஜன் சாலை என மாற்றம் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன். காதல், தத்துவம், சோகம், துள்ளல் என எல்லா வகை உணர்வுகளில் 10,000-க்கும் மேற்பட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இதில் சுமார் 3,000 பக்திப் பாடல்கள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்த பாடல்கள் என 40 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வந்தவர். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார் டி.எம். சௌந்தரராஜன் சாலை என […]

டினேசுவடு 24 Mar 2023 11:05 am

ஒரே குடும்பத்து தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் ஆபாச சேட்டிங் செய்த பலே பாதிரியார்.!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோ (29). கடந்த சில நாட்களுக்கு முன்… The post ஒரே குடும்பத்து தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் ஆபாச சேட்டிங் செய்த பலே பாதிரியார்.! appeared first on Tamilvoice.com .

தவைஸ்னேவ்ஸ் 24 Mar 2023 11:05 am

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தென்காசி: பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரி பொதுத்தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் துரை.ரவிசந்திரன் அறிவித்தார். மேலும் தென்காசியில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் 5ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளார்.

தினகரன் 24 Mar 2023 11:05 am

வீடியோ வெளியிட்ட பீகார் அமைச்சர்…கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், இன்று அதிகாலையில் டுவிட்டரில்… The post வீடியோ வெளியிட்ட பீகார் அமைச்சர்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! appeared first on Tamilvoice.com .

தவைஸ்னேவ்ஸ் 24 Mar 2023 11:04 am

தலைமறைவாக இருக்கும் அம்ரித்பால் சிங்; அடைக்கலம் கொடுத்தவர் கைது.!

வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங், தலைமறைவாக இருக்க உதவியவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலிஸ்தானி ஆதரவாளரும், வாரிஸ் பஞ்சாப் டி தலைவருமான அம்ரித்பால் சிங், பஞ்சாபிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், கடைசியாக ஹரியானாவின் குருஷேத்திரத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தலைமையகம்) சுக்செயின் சிங் கில் தெரிவித்தார். அம்ரித்பால் சிங் என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர், குருக்ஷேத்ராவின் ஷஹபாத் மார்கண்டாவில் இருந்து குடையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சியை பஞ்சாப் […]

டினேசுவடு 24 Mar 2023 11:04 am

கவர்ச்சி ஆடையில்…டாப்சி கழுத்தில் அம்மன் உருவத்துடன் நெக்லஸ் –வலுக்கும் கண்டனம்!

ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து… The post கவர்ச்சி ஆடையில்… டாப்சி கழுத்தில் அம்மன் உருவத்துடன் நெக்லஸ் – வலுக்கும் கண்டனம்! appeared first on Tamilvoice.com .

தவைஸ்னேவ்ஸ் 24 Mar 2023 11:04 am

ரஜினிகாந்த் மகள் வீட்டில் திருட்டு.! மேலும் ஒருவர் கைது.! அடகு வைத்ததால் மாட்டிக்கொண்ட நபர்.!

ஐஸ்வய்ரா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய நகைகளை அடகு பெற்று கொண்டதாக மயிலாப்பூரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடுபோனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நகைகள் மீட்பு : இந்த விசாரணையை அடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலைபார்த்த ஈஸ்வரி என்ற பெண்ணும் , ஓட்டுநர் வெங்கடேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்க […]

டினேசுவடு 24 Mar 2023 11:03 am

60 கோடி ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 60 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான மசாலாப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 60 இலட்சம் சிகரட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், 19,510 கிலோகிராம் காய்ந்த மஞ்சள், 4,500 கிலோகிராம் மஞ்சள் கிழங்கு மற்றும் 4,900 கிலோகிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை கைப்பற்றியதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

அதிரடி 24 Mar 2023 11:03 am

ப்ளூ டிக் வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்..! ட்விட்டர் நிறுவனம் அதிரடி முடிவு..!

ட்விட்டர் நிறுவனம் பயனர்களின் பழைய ப்ளூ டிக்-க்குகளை நீக்க முடிவு செய்துள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து புதிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பயனர்களின் பழைய ப்ளூ டிக்-க்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் ப்ளூ டிக்கிற்கு பணம் செலுத்தாத பத்திரிகையாளர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் விரைவில் அதை இழக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கட்டணம் செலுத்தி ப்ளூ […]

டினேசுவடு 24 Mar 2023 11:02 am

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுமக்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல தடை

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுமக்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல்துறை வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

தினகரன் 24 Mar 2023 11:01 am

ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு ஆபத்தா?- சட்ட நிபுணர்கள் கருத்து!!

பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்காக குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஒருவர் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யாக உள்ளார். இந்த […]

அதிரடி 24 Mar 2023 11:00 am

அஜித் தந்தை மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல் - உதயநிதி நேரில் அஞ்சலி!

அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமயம் 24 Mar 2023 10:58 am

2048 ஆண்டளவில் இலங்கையை உயர் நடுத்தர வருமான நாடாக மாற்றுவதே எனது நோக்கம்!!

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு நாம் வங்குரோத்து நாடாக மாறினோம். IMF மற்றும் எங்கள் கடன் வழங்குநர்களின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் கடனை மறுசீரமைக்க வேண்டியேற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என ஜனாதிபதி […]

அதிரடி 24 Mar 2023 10:58 am

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? சொல்கிறார் ஆதித்ய குருஜி!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஆதித்ய குருஜி.

விகடன் 24 Mar 2023 10:55 am

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? சொல்கிறார் ஆதித்ய குருஜி!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஆதித்ய குருஜி.

விகடன் 24 Mar 2023 10:55 am

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவசர ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, வி.சி.க. சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர்.

தினகரன் 24 Mar 2023 10:51 am

viral videos: காட்டு ராஜாவை கலங்கடித்த காட்டெருமை..!

காற்றில் பறந்த சிங்கம்: காட்டுக்கே ராஜாவாக இருக்கும் சிங்கத்தை காட்டெருமை ஒன்று முட்டி தூக்கி காற்றில் பறக்க விடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தரையில் அமர்ந்திருக்கும் எருமை ஒன்றை பொறுமையாக உண்டுகொண்டுருக்கும் சிங்கத்தை அதன் கூட்டாளி ஒன்று முட்டி தூக்குகிறது. சிங்கத்திற்கு சற்று அடி பலம் போல தெரிகிறது. pic.twitter.com/HhWPVoRJXM — nature is fucking lit (@natureisfuckin4) March 20, 2023

டினேசுவடு 24 Mar 2023 10:50 am

உரிய அனுமதியின்றி பேருந்து நிலைய கட்டுமான பணி மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

கரூர்: உரிய அனுமதியின்றி பேருந்து நிலைய கட்டுமான பணி மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தினகரன் 24 Mar 2023 10:43 am

மரத்தில் கட்டி வைக்கப்பட்ட காதலன்; கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காதலி - மும்பையில் அதிர்ச்சி

மும்பை அருகில் உள்ள விரார் மலைப்பகுதிக்கு காதல் ஜோடியினர் நடைபயிற்சிக்காக சென்றனர். அவர்கள் மலையில் ஏறி ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இருவருக்கும் 20 வயது இருக்கும். அப் போது அங்கு வந்த இரண்டு பேர் காதல் ஜோடியை போட்டோ எடுத்துக்கொண்டு, அதனை சோஷியல் மீடியாவில் வெளியிடப்போவதாக மிரட்டி பணம் கேட்டனர். ஆனால் அந்தப் பெண்ணுடன் வந்தவரிடம் போதிய பணம் இல்லை. எனவே அவர் தன் நண்பருக்கு போன் செய்து பணம் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். பணம் வந்த பிறகும் இருவரும் அப்படியே செல்லாமல் அந்தப் பெண்ணை தொடக்கூடாத இடத்தில் தொட்டனர். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் காதலன் அருகில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து அதனை இருவரில் ஒருவன் தலையில் ஓங்கி அடித்தார். உடனே இரண்டு பேரும் சேர்ந்து காதலனை மடக்கிப்பிடித்தனர். அவரின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அருகிலிருந்த மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் அவருடன் வந்த பெண்ணை அருகில் இருக்கும் இடத்துக்கு கடத்திச் சென்றனர். சம்பவம் நடந்த பகுதி மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தவர் போராடி தன் கட்டை அவிழ்த்துக்கொண்டு நிர்வாணமாகவே அருகில் தன் காதலியை தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி வழியாக வந்த சிலரிடம் போன் செய்ய உதவும்படி கேட்டார். ஆனால் அவர் நிர்வாணமாக இருந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கருதி யாரும் உதவ முன் வரவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் உண்மையை உணர்ந்து அவருக்கு தன் போனை கொடுத்து போலீஸாரிடம் பேசக்கொடுத்தார். உடனே சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து அவருக்கு மாற்று உடை கொடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து ராஜேந்திர காம்ப்ளே, ``அந்தப் பெண்ணுடன் வந்த வாலிபர் எங்களிடம் என்ன நடந்தது என்று சொன்னவுடன் பெண்ணை தேட ஆரம்பித்தோம். அந்தப் பெண்ணின் போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட வாலிபர் குற்றவாளிகளில் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்ததில் காயமடைந்திருந்தார். எனவே தலையில் காயத்துடன் யாராவது வந்தால் உடனே தகவல் கொடுக்கும்படி வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கொடுத்தோம். உடனே ஒரு கிளினிக் டாக்டர் அது போன்ற காயத்துடன் ஒருவர் சிகிச்சைக்காக வந்திருப்பதாக தெரிவித்தார். அந்த நபரின் புகைப்படத்தை அனுப்ப சொல்லி குற்றவாளி அவர் தான் என்பதை உறுதி செய்து கொண்டு விரைந்து சென்று இரண்டு பேரையும் கைது செய்தோம் என்றார். அவர்களது பெயர் தீரஜ் ராஜே (25) மற்றும் லட்சுமண் ஷிண்டே (22) என்று தெரிய வந்தது. பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டுவிட்ட இரண்டு பேரும் வீரார் கிழக்கு பகுதியில் வசித்து வந்தனர். போலீஸ் தனிப்படை அந்தப் பெண்ணை தேடி அவரின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அந்தப் பெண் இருந்தார். அவரை சமாதானப்படுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அந்தப் பெண் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், இரண்டு பேரும் ஒதுக்குப்புறமான இடத்துக்கு கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். என் மொபைல் போனை பறித்துக் கொண்டு என் பேக்கை தீ வைத்து எரித்துவிட்டு ,என்னை காட்டுக்குள் விட்டு சென்றுவிட்டனர். கைது அதோடு என்னுடைய நண்பரை கட்டி வைத்திருக்கும் இடத்துக்கு செல்லாமல் அதிர்ச்சியில் அப்படியே வீட்டுக்கு வந்துவிட்டேன்' என்று தெரிவித்திருக்கிறார். மிரட்டி பணம் பறித்தல், பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். குற்றம் நடந்து இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டனர்'' என்று தெரிவித்திருக்கிறார். மும்பை: சோனு நிகம் தந்தை வீட்டில் ரூ.72 லட்சம் திருட்டு - முன்னாள் டிரைவரைத் தேடும் போலீஸ்

விகடன் 24 Mar 2023 10:42 am

மரத்தில் கட்டி வைக்கப்பட்ட காதலன்; கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காதலி - மும்பையில் அதிர்ச்சி

மும்பை அருகில் உள்ள விரார் மலைப்பகுதிக்கு காதல் ஜோடியினர் நடைபயிற்சிக்காக சென்றனர். அவர்கள் மலையில் ஏறி ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இருவருக்கும் 20 வயது இருக்கும். அப் போது அங்கு வந்த இரண்டு பேர் காதல் ஜோடியை போட்டோ எடுத்துக்கொண்டு, அதனை சோஷியல் மீடியாவில் வெளியிடப்போவதாக மிரட்டி பணம் கேட்டனர். ஆனால் அந்தப் பெண்ணுடன் வந்தவரிடம் போதிய பணம் இல்லை. எனவே அவர் தன் நண்பருக்கு போன் செய்து பணம் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். பணம் வந்த பிறகும் இருவரும் அப்படியே செல்லாமல் அந்தப் பெண்ணை தொடக்கூடாத இடத்தில் தொட்டனர். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் காதலன் அருகில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து அதனை இருவரில் ஒருவன் தலையில் ஓங்கி அடித்தார். உடனே இரண்டு பேரும் சேர்ந்து காதலனை மடக்கிப்பிடித்தனர். அவரின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அருகிலிருந்த மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் அவருடன் வந்த பெண்ணை அருகில் இருக்கும் இடத்துக்கு கடத்திச் சென்றனர். சம்பவம் நடந்த பகுதி மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தவர் போராடி தன் கட்டை அவிழ்த்துக்கொண்டு நிர்வாணமாகவே அருகில் தன் காதலியை தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி வழியாக வந்த சிலரிடம் போன் செய்ய உதவும்படி கேட்டார். ஆனால் அவர் நிர்வாணமாக இருந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கருதி யாரும் உதவ முன் வரவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் உண்மையை உணர்ந்து அவருக்கு தன் போனை கொடுத்து போலீஸாரிடம் பேசக்கொடுத்தார். உடனே சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து அவருக்கு மாற்று உடை கொடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து ராஜேந்திர காம்ப்ளே, ``அந்தப் பெண்ணுடன் வந்த வாலிபர் எங்களிடம் என்ன நடந்தது என்று சொன்னவுடன் பெண்ணை தேட ஆரம்பித்தோம். அந்தப் பெண்ணின் போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட வாலிபர் குற்றவாளிகளில் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்ததில் காயமடைந்திருந்தார். எனவே தலையில் காயத்துடன் யாராவது வந்தால் உடனே தகவல் கொடுக்கும்படி வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கொடுத்தோம். உடனே ஒரு கிளினிக் டாக்டர் அது போன்ற காயத்துடன் ஒருவர் சிகிச்சைக்காக வந்திருப்பதாக தெரிவித்தார். அந்த நபரின் புகைப்படத்தை அனுப்ப சொல்லி குற்றவாளி அவர் தான் என்பதை உறுதி செய்து கொண்டு விரைந்து சென்று இரண்டு பேரையும் கைது செய்தோம் என்றார். அவர்களது பெயர் தீரஜ் ராஜே (25) மற்றும் லட்சுமண் ஷிண்டே (22) என்று தெரிய வந்தது. பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டுவிட்ட இரண்டு பேரும் வீரார் கிழக்கு பகுதியில் வசித்து வந்தனர். போலீஸ் தனிப்படை அந்தப் பெண்ணை தேடி அவரின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அந்தப் பெண் இருந்தார். அவரை சமாதானப்படுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அந்தப் பெண் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், இரண்டு பேரும் ஒதுக்குப்புறமான இடத்துக்கு கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். என் மொபைல் போனை பறித்துக் கொண்டு என் பேக்கை தீ வைத்து எரித்துவிட்டு ,என்னை காட்டுக்குள் விட்டு சென்றுவிட்டனர். கைது அதோடு என்னுடைய நண்பரை கட்டி வைத்திருக்கும் இடத்துக்கு செல்லாமல் அதிர்ச்சியில் அப்படியே வீட்டுக்கு வந்துவிட்டேன்' என்று தெரிவித்திருக்கிறார். மிரட்டி பணம் பறித்தல், பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். குற்றம் நடந்து இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டனர்'' என்று தெரிவித்திருக்கிறார். மும்பை: சோனு நிகம் தந்தை வீட்டில் ரூ.72 லட்சம் திருட்டு - முன்னாள் டிரைவரைத் தேடும் போலீஸ்

விகடன் 24 Mar 2023 10:42 am

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு –முதல்வர், ஈபிஎஸ் ஆகியோர் இரங்கல்!

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகரில் இன்று காலை நடைபெறுகிறது. இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி அவர்கள், நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு சினிமா மற்றும் […]

டினேசுவடு 24 Mar 2023 10:36 am

IPS அதிகாரியின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச்சென்ற அதிகாரிகள் மீது திருட்டு வழக்கு!

சென்னை தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை மண்டல இயக்குனரின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்று, விபத்தும் ஏற்படுத்திய விவகாரத்தில் கார் சாவி எடுத்து கொடுத்தவர் மற்றும் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியவர் என்ற அடிப்படையில், இரு அதிகாரிகள் மீது திருட்டு வழக்கு பதியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, அயப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் இந்திய அரசு போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை சென்னை மண்டல அலுவலகம் உள்ளது. இந்த மண்டல அலுவலகம் இயக்குனர் அரவிந்தன் ஐ.பி.எஸ். தலைமையில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இங்கு நுண்ணறிவு அதிகாரியாக பணியாற்றி வரும் பாரத் யாதவ் என்பவர் மதுபோதையில் நேற்றிரவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த தொலை தொடர்பு அதிகாரி சுபேந்திர சர்மா என்பவரிடம், இயக்குனர் அரவிந்தன் பயன்படுத்தும் கார் சாவியை கேட்டு பெற்றுள்ளார். இதையடுத்து காரை பூந்தமல்லிக்கு ஓட்டிச் சென்ற அவர், வழியில் விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இதனை அடுத்து வாகனத்தை இயக்கியவர், ஓட்டியவர் என இருவர் மீது உதவி இயக்குனர் வேணுகோபால் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்கீழ், “அனுமதியின்றி காரை எடுத்துச் சென்றதால், காரை திருடிச் சென்றுள்ளனர்” எனவழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயர் அதிகாரி ஒருவரின் அலுவலக வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றது மட்டுமின்றி விபத்துக்குள்ளாகிய சம்பவத்தை அடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் இருவர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதியதலைமுறை 24 Mar 2023 10:35 am

“சூரியன் மீண்டும் நாளை உதிக்கும்..” வைரலாகும் SKY-க்கு ஆதரவாக ரோகித் போட்ட ட்வீட்!

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், ஹாட்ரிக் டக் அவுட்டான நிலையிலும், கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக 2018இல் பதிவிட்டிருந்த ரோகித் சர்மாவின் ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டியிலும் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார்.தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், முதல் பந்திலேயே அவர் அவுட் ஆன போதும் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு 3வது போட்டியிலும் வாய்ப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற அந்த கடைசிப் போட்டியிலும் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் முதல் பந்திலேயே போல்டாகியதுடன் டக் அவுட் முறையில் அவர் வெளியேறி இருந்தார். இதன்மூலம் தொடர் ஒன்றில் ஓர் அணிக்கு எதிராக தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் டக் அவுட்டானபோதும் ரோகித்திடம் சூர்யகுமார் யாதவ் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதும் அவர், “முந்தைய போட்டிகளில் தனது திறமையை சூர்யகுமார் யாதவ் காட்டியுள்ளார். ஆகையால் அவரது திறமைக்கு ஏற்றவாறு இன்னும் கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அவருக்கும் நன்றாக தெரியும், மீண்டும் நல்ல மனநிலைக்கு வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என உணர்ந்திருப்பார்.அவருக்கு முந்தைய தொடர்களில் உரிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால் கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு சில தவறுகள் இருந்தாலும் இன்னும் கூடுதல் வாய்ப்பை கொடுக்க வேண்டும். சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று திறமையான வீரர்கள் யாரும் ஒருபோதும் நினைத்து விடக்கூடாது. அவர் இப்போது நல்ல பார்மில் தான் இருக்கிறார். ஆனால் இப்போது மாற்றுவீராக மட்டுமே விளையாடி வருகிறார்” என்று சொன்னதுடன், 3வது போட்டியிலும் வாய்ப்பு வழங்கியிருந்தார்.3-வது போட்டியிலும் அவர் தோற்றதால் மீண்டும் அவரிடம் சூர்யகுமார் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போதுபேசிய அவர், “சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவருக்கு மூன்று நல்ல பந்துகள் கிடைத்தன, அதைத் தவறவிட்டார். ஆனால், இதில் பெரிதாக கவனம் செலுத்த வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி இதைக் கையாள வேண்டும், எப்படி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.அவர் நன்றாக ஸ்பின் விளையாடுவதை கடந்த இரண்டு வருடங்களாகப் பார்த்து வருகிறோம். அதனால்தான் கடைசி 15-20 ஓவர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் மூன்று பந்துகளை மட்டுமே விளையாட முடிந்தது. இது யாருக்கும் நடக்கலாம். இதனால் அவரது திறமை குறைந்து போகப்போவதில்லை. அவர் இதை கடந்து வருவார்” என்றார்.இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதேபோன்றதொரு முந்தைய நெருக்கடியான சூழலில் அவருக்கு ஆதரவாக ரோகித் சர்மா பதிவிட்ட ட்விட்டர் பதிவும் வைரலாகி வருகிறது. 2018இல் இதேபோன்று சூர்யகுமார் திணறிய சமயத்தில், “சூரியன் மீண்டும் நாளை உதிக்கும்” என்று ரோகித் சர்மா அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்த ட்வீட் தற்போது வைரலாகிவருகிறது.

புதியதலைமுறை 24 Mar 2023 10:35 am

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 683,007,456-ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20,241,601 […]

அதிரடி 24 Mar 2023 10:30 am

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்பட மாட்டாது

அடேடேரென 24 Mar 2023 10:30 am

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், வருமானத்தை அதிகரிக்காமல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை

அடேடேரென 24 Mar 2023 10:30 am

ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த மத குரு யாழில் இருந்து நடைபயணம்

நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டி வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம்

அடேடேரென 24 Mar 2023 10:30 am

கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (25) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அடேடேரென 24 Mar 2023 10:30 am

கான்ஸ்டபிளுடன் இணைந்து OIC செய்த காரியம்!

கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடேடேரென 24 Mar 2023 10:30 am

தீயாக பரவும் பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும்

அடேடேரென 24 Mar 2023 10:30 am

பஸ் மோதி பெண் ஒருவர் பலி!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (23) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ள

அடேடேரென 24 Mar 2023 10:30 am

எனது தந்தையாரின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம்: நடிகர் அஜீத்குமார் வேண்டுகோள்

சென்னை: எனது தந்தையாரின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம் என்று நடிகர் அஜீத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடும்பத்தினருடன் இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினகரன் 24 Mar 2023 10:26 am

#WIPL ELIMINATOR: இறுதி போட்டிக்கு செல்லப் போவது யார்..? மும்பை மற்றும் உபி அணிகள் இன்று மோதல்..

மகளிர் ஐபிஎல் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று மாலை நடைபெறுகிறது. இந்தியாவில் முதல்முறையாக மகளிருக்கான ஐபிஎல் தொடர் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூர், மும்பை, குஜராத், டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து அணிகளை கொண்ட இந்த தொடர், மார்ச் 4ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளை குவித்த டெல்லி, முதல் அணியாக நாளை மறுநாள் (26.03.2023) நடக்கவிருக்கும் இறுதி […]

டினேசுவடு 24 Mar 2023 10:23 am

நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி மரியாதை..!

அமைச்சர் உதயநிதி அவர்கள், நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகர் இன்று காலை நடைபெறுகிறது. அமைச்சர் உதயநிதி அஞ்சலி இந்த நிலையில், அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி அவர்கள், நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு […]

டினேசுவடு 24 Mar 2023 10:22 am

டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்ற பெயர் பலகையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்ற பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு மறந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பெயர் சூட்டப்பட்டது.

தினகரன் 24 Mar 2023 10:18 am

அலுவல்மொழி ஆய்வுக்குழு சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

சென்னை: 100 சதவீத இந்தி மொழி அமலாக்கம் தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் அலுவல் மொழி ஆய்வுக்குழு சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார். அலுவல் மொழி ஆய்வுக்குழு அனுப்பிய சுற்றறிக்கை அப்பட்டமான விதிமீறல் என்றும் அவர் தெரிவித்தார்.

தினகரன் 24 Mar 2023 10:17 am

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி –பாஜக நிர்வாகி கைது…!

பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிசை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். பாஜக நிர்வாகி கைது இந்த நிலையில், ரூ.2348 கோடி […]

டினேசுவடு 24 Mar 2023 10:15 am

Today’s Live : தமிழ்நாட்டின் முதல் மிதவை படகு உணவகம்..! சென்னை ஈசிஆர் சாலையில் தொடக்கம்…!

தமிழ்நாட்டின் முதல் மிதவை உணவகம் : சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணியை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். இதில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமாக 2 அடுக்கில் படகு உணவகம் அமைக்கப்பட உள்ளது. படகின் தரைத்தளம் முழுவதும் குளிர்சாதன வசதி, சமயலறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டினேசுவடு 24 Mar 2023 10:13 am

பட்ஜெட் கூட்டத்தொடரில் 2-வது நாள் விவாதம் தொடங்கியது

சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடரில் 2-வது நாள் விவாதம் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

தினகரன் 24 Mar 2023 10:09 am

கியூப் விளையாட்டில் புதிய சாதனை படைத்த சீன சிறுவன்!

சீனாவை சேர்ந்த இளம் வீரரான யிஹெங் (9), கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, 4.86 வினாடிகளில்… The post கியூப் விளையாட்டில் புதிய சாதனை படைத்த சீன சிறுவன்! appeared first on Tamilvoice.com .

தவைஸ்னேவ்ஸ் 24 Mar 2023 10:07 am

Ajith: தன் தந்தையை பற்றி முதல்முறையாக பேசிய அஜித்..வைரலாகும் வீடியோ..!

நடிகர் அஜித்தின் தந்தை பி.சுப்ரமணி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.தன் தந்தையை பற்றி அஜித் பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரல்

சமயம் 24 Mar 2023 10:03 am

'கேப்டனே இல்லாத இந்திய அணி'...ரோஹித் அப்படி செய்ததால்..கவாஸ்கர் கடும் விமர்சனம்!

கேப்டனே இல்லாமல்தான் இந்திய அணி இருக்கிறது என சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

சமயம் 24 Mar 2023 10:03 am

சென்னை செங்குன்றம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை செங்குன்றம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மணிப்பூரில் இருந்து வாங்கி சென்னையில் விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

தினகரன் 24 Mar 2023 10:02 am

கோர்ட்டில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு- கணவர் வெறிச்செயல் !!

கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு கவிதா (வயது33) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு கவிதா பஸ்சில் சென்ற போது, அதே பஸ்சில் பயணித்த பயணி ஒருவரிடம் நகையை திருடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஜெயிலிலில் இருந்து வெளியில் வந்த கவிதாவுக்கு வேறு […]

அதிரடி 24 Mar 2023 10:00 am

பாக்கியலட்சுமி சீரியல்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. ராதிகாவை தலைதெறிக்க ஓட விட்ட பாக்யா.!

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக பாக்யாவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராதிகா செய்யும் ஒவ்வொரு காரியமும் அவளுக்கே எதிராக திரும்பி விடுகிறது. அந்த வகையில் தான், கேண்டீன் ஆர்டரை கேன்சல் செய்துவிடுவேன் என மிரட்டி ராதிகா கொடுத்த டாஸ்க்கை, கனகச்சிதமாக முடித்துவிட்டு டையலாக் பேசி மாஸ் காட்டுகிறாள் பாக்யா.

சமயம் 24 Mar 2023 9:59 am

அத்துமீறும் காலிஸ்தான் ஆதரவாளர்கள்... என்ன செய்கின்றன மத்திய, மாநில அரசுகள்?!

காலிஸ்தான் தனி நாடு கோரும் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். போலீஸாரின் இந்த நடவடிக்கையால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். காலிஸ்தான் ஆதரவாளர்கள் லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், அங்கு இந்தியாவின் தேசியக்கொடியை இறக்கிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்ற முயன்று அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல, அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்பாகவும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான முயற்சியில் கடந்த வாரம் போலீஸார் இறங்கினர். ஆனால், காரில் பயணம் செய்துகொண்டிருந்த அம்ரித்பால், போலீஸிடமிருந்து தப்புவதற்காக காரைவிட்டு இறங்கி பைக்கில் தப்பிவிட்டார் என்று போலீஸ் கூறுகிறது. இன்னொருபுறம், அம்ரித்பாலை காவல்துறையினர் பிடித்துவிட்டதாகக் கூறும் அவருடைய ஆதரவாளர்கள், நீதிமன்றத்தில் அம்ரித்பாலை ஆஜர்ப்படுத்த வேண்டுமென்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் அந்த மனுவை விசாரித்த நீதிபதி, பஞ்சாப் மாநிலத்தில் 80,000 போலீஸார் இருக்கும்போது, அவர்களை மீறி அந்த நபர் எப்படி தப்பிச்சென்றார் என்று கேள்வி எழுப்பினார். அப்படியென்றால், உளவுத்துறையின் ஒட்டுமொத்த தோல்விதான் அதற்குக் காரணம் என்று மாநில அரசை நீதிபதி சாடினார். நீதிமன்றத்தின் விமர்சனத்துக்குப் பிறகு, தேடுதல் நடவடிக்கையை போலீஸார் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். ஆறு விதமான தோற்றங்களில் இருக்கும் அம்ரித்பால் சிங்கின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டிருக்கிறார்கள். மாநிலத்தின் அமைதிக்கும், நல்லிணத்துக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 154 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அம்ரீத்பால் சிங் அம்ரித்பால் மீதும், அவருடைய ஆதரவாளர்கள் சிலர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் சிலர், பாதுகாப்பு காரணங்களுக்காக அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அம்ரித்பால் சிங்கின் சொந்த கிராமமான ஜல்லுபூரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அம்ஜலந்தர் பகுதியில் ஆளில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த இசுசு கார் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரிலிருந்து கைத்துப்பாக்கி, வாள், வாக்கி டாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், காலிஸ்தான் இயக்கத்தை ஆரம்பித்து வன்முறைகளில் ஈடுபட்ட பிந்த்ரன்வாலே, ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார். அதுபோன்ற ஒரு சூழல் உருவாகுமோ என்ற அச்சம் பஞ்சாப் மக்களிடையே தற்போது உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில், மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் போலீஸாரும் துணை ராணுவப்படையினரும் அணிவகுப்பு நடத்தினர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ‘பஞ்சாப்பில் பயங்கரவாதச் சூழலை ஏற்படுத்த வேண்டாம்’ என்று மத்திய, மாநில அரசுகளை ‘அகல் தக்த்’ என்ற சீக்கிய அமைப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்கு அகல் தக்த் அமைப்பு பிற சீக்கிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தியிருக்கிறது. அதன்படி, சீக்கிய அமைப்புகளின் உயர்மட்டக் கூட்டம் மார்ச் 27-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிடுக்கிப்பிடி போடும் அமலாக்கத்துறை... கவனம் பெறும் கே.சி.ஆர் மகள் கவிதா - பின்னணி என்ன?! அஜ்னாலா காவல்நிலையம் மீதும் பிப்ரவரி 23-ம் தேதி அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு, பஞ்சாப் சூழலை மத்திய அரசு உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கியது. டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் சிங் மான். அமித் ஷா தேசத்துக்கு எதிராகச் செயல்படும் எந்த சக்தியையும் அனுமதிக்க மாட்டோம் என்று பக்வந்த் சிங் மான் கூறியிருக்கிறார். பிரிவினைவாத செயல்பாடுகளுக்கு எதிராக மத்திய அரசும் மாநில அரசும் கைகோத்து களமிறங்கியிருக்கின்றன. வன்முறை ஏதுமின்றி அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே பஞ்சாப் மக்களின் விருப்பம்.!

விகடன் 24 Mar 2023 9:57 am

அத்துமீறும் காலிஸ்தான் ஆதரவாளர்கள்... என்ன செய்கின்றன மத்திய, மாநில அரசுகள்?!

காலிஸ்தான் தனி நாடு கோரும் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். போலீஸாரின் இந்த நடவடிக்கையால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். காலிஸ்தான் ஆதரவாளர்கள் லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், அங்கு இந்தியாவின் தேசியக்கொடியை இறக்கிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்ற முயன்று அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல, அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்பாகவும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான முயற்சியில் கடந்த வாரம் போலீஸார் இறங்கினர். ஆனால், காரில் பயணம் செய்துகொண்டிருந்த அம்ரித்பால், போலீஸிடமிருந்து தப்புவதற்காக காரைவிட்டு இறங்கி பைக்கில் தப்பிவிட்டார் என்று போலீஸ் கூறுகிறது. இன்னொருபுறம், அம்ரித்பாலை காவல்துறையினர் பிடித்துவிட்டதாகக் கூறும் அவருடைய ஆதரவாளர்கள், நீதிமன்றத்தில் அம்ரித்பாலை ஆஜர்ப்படுத்த வேண்டுமென்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் அந்த மனுவை விசாரித்த நீதிபதி, பஞ்சாப் மாநிலத்தில் 80,000 போலீஸார் இருக்கும்போது, அவர்களை மீறி அந்த நபர் எப்படி தப்பிச்சென்றார் என்று கேள்வி எழுப்பினார். அப்படியென்றால், உளவுத்துறையின் ஒட்டுமொத்த தோல்விதான் அதற்குக் காரணம் என்று மாநில அரசை நீதிபதி சாடினார். நீதிமன்றத்தின் விமர்சனத்துக்குப் பிறகு, தேடுதல் நடவடிக்கையை போலீஸார் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். ஆறு விதமான தோற்றங்களில் இருக்கும் அம்ரித்பால் சிங்கின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டிருக்கிறார்கள். மாநிலத்தின் அமைதிக்கும், நல்லிணத்துக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 154 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அம்ரீத்பால் சிங் அம்ரித்பால் மீதும், அவருடைய ஆதரவாளர்கள் சிலர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் சிலர், பாதுகாப்பு காரணங்களுக்காக அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அம்ரித்பால் சிங்கின் சொந்த கிராமமான ஜல்லுபூரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அம்ஜலந்தர் பகுதியில் ஆளில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த இசுசு கார் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரிலிருந்து கைத்துப்பாக்கி, வாள், வாக்கி டாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், காலிஸ்தான் இயக்கத்தை ஆரம்பித்து வன்முறைகளில் ஈடுபட்ட பிந்த்ரன்வாலே, ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார். அதுபோன்ற ஒரு சூழல் உருவாகுமோ என்ற அச்சம் பஞ்சாப் மக்களிடையே தற்போது உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில், மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் போலீஸாரும் துணை ராணுவப்படையினரும் அணிவகுப்பு நடத்தினர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ‘பஞ்சாப்பில் பயங்கரவாதச் சூழலை ஏற்படுத்த வேண்டாம்’ என்று மத்திய, மாநில அரசுகளை ‘அகல் தக்த்’ என்ற சீக்கிய அமைப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்கு அகல் தக்த் அமைப்பு பிற சீக்கிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தியிருக்கிறது. அதன்படி, சீக்கிய அமைப்புகளின் உயர்மட்டக் கூட்டம் மார்ச் 27-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிடுக்கிப்பிடி போடும் அமலாக்கத்துறை... கவனம் பெறும் கே.சி.ஆர் மகள் கவிதா - பின்னணி என்ன?! அஜ்னாலா காவல்நிலையம் மீதும் பிப்ரவரி 23-ம் தேதி அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு, பஞ்சாப் சூழலை மத்திய அரசு உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கியது. டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் சிங் மான். அமித் ஷா தேசத்துக்கு எதிராகச் செயல்படும் எந்த சக்தியையும் அனுமதிக்க மாட்டோம் என்று பக்வந்த் சிங் மான் கூறியிருக்கிறார். பிரிவினைவாத செயல்பாடுகளுக்கு எதிராக மத்திய அரசும் மாநில அரசும் கைகோத்து களமிறங்கியிருக்கின்றன. வன்முறை ஏதுமின்றி அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே பஞ்சாப் மக்களின் விருப்பம்.!

விகடன் 24 Mar 2023 9:57 am

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில அரசு ஊழியர் தேர்வுக்கு மாநில தேர்வாணையம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

தினகரன் 24 Mar 2023 9:57 am

அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். அ.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு நடிகர் அஜித்குமார் லைகா தயாரிப்பில் படம் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது. இதற்கிடையில், அஜித் குமார் தன் தந்தையுடன் நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது” என சமீபத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியம் உயிரிழந்திருக்கிறார். அவரின் வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்திருக்கிறார்.

விகடன் 24 Mar 2023 9:49 am

அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். அ.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு நடிகர் அஜித்குமார் லைகா தயாரிப்பில் படம் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது. இதற்கிடையில், அஜித் குமார் தன் தந்தையுடன் நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது” என சமீபத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியம் உயிரிழந்திருக்கிறார். அவரின் வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்திருக்கிறார்.

விகடன் 24 Mar 2023 9:49 am

நல்லூர் நீர்வள உரையாடல்

நல்லூர் நீர்வள உரையாடல்நல்லூர் பிரதேச சபை அரங்கில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 2.30 மணி தொடக்கம் 05 மணி வரையில் நடைபெறவுள்ளது. யாழ் பல்கைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் - இளைய நீர்த்துறையாளர் - வடக்கு வட்டமும் இணைந்து நடாத்தும் உரையாடலில், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளவர்களும் நீர் சார் ஆர்வலர் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து கலந்துரையாடவுள்ளனர்.

பதிவு 24 Mar 2023 9:48 am

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று… The post நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்.. திரையுலகினர் இரங்கல்! appeared first on Tamilvoice.com .

தவைஸ்னேவ்ஸ் 24 Mar 2023 9:46 am

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,300 பேருக்கு கொரோனா பாதிப்பு ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,927 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,818 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,61,922 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,65,34,827 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 6,117 […]

டினேசுவடு 24 Mar 2023 9:45 am

கூட்டணியில் குழப்பம் இல்லை –அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என அண்ணாமலை பேட்டி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை திரும்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. அமித்ஷாவுடனான எனது […]

டினேசுவடு 24 Mar 2023 9:45 am

தொடர் உயர்வில் தங்கம் விலை..! சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு..

கடந்த 1 வாரமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், இன்றும் ஒரே நாளில் சவரனுக்குரூ.160 உயர்ந்துள்ளது . கடந்த 1 வாரத்தில் மட்டும் ரூ.4,000 ரூபாய் வரை அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது . அமெரிக்கா மைய்ய வாங்கி அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியதே இதற்கு கரணம் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள். தங்கம் விலை இன்று (24.03.2023) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை […]

டினேசுவடு 24 Mar 2023 9:44 am

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றிய ஸ்டாலின்... என்ன செய்யப்போகிறார் ஆளுநர்?!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அக்டோபர் 19-ம் தேதி தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி, நவம்பர் 27-ம் தேதி திருப்பியனுப்பினார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்ததுடன், டிசம்பர் 2-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடக் கேட்டுக்கொண்டார். ஆன்லைன் சூதாட்டம் ஆனால் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்திய ஆளுநர், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியதாக தகவல் கசிய, எதிர்ப்புகள் வலுத்தன. இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ``மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால்தான் ஆளுநர் ரவி, மசோதாவுக்கு கையெழுத்திட மறுக்கிறாரா?’ என சாடினார். அதற்கடுத்த வாரத்திலேயே மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர். ``ஆன்லைன் சைபர் என்பது மத்திய அரசின் வரம்புக்குள் வரும் விஷயம். எனவே சீரான முறையில் தேசிய அளவில் ஒழுங்காற்று நடவடிக்கையே இதில் அவசியமேயொழிய மாநில அரசு மட்டுமே ஒழுங்குமுறையோ சட்டத்தையோ கொண்டு வருவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19 (1) (g) பிரிவின் கீழ் அவரின் அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அடிப்படை உரிமைக்கு எதிராக எந்த அரசாங்கமும் சட்டம் இயற்ற முடியாது. இந்த விஷயங்களை ஏற்கெனவே தெளிவுபடுத்தி அறிவுறுத்திய பிறகும் மாநில அரசு முன்பு அவசர சட்டத்தில் நிறைவேற்றிய அதே அம்சங்களையே ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஒரு மாநில அரசாங்கத்தால் திறமையான விளையாட்டை ஒழுங்குபடுத்த மட்டுமே முடியும், முற்றிலும் தடை செய்ய முடியாது.” என்று திருப்பி அனுப்பப்பட்ட கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியானது. நாடாளுமன்றம் ஆனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு, என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. மார்ச் 21-ம் தேதி நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி பார்த்திபன் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “பந்தயம் மற்றும் சூதாட்டம் என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள பட்டியல்-II-இல் 34ஆம் அம்சமாக வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது” என்றார். ஆன்லைன் ரம்மி: ``தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு! - மத்திய அரசு விளக்கம் மத்திய அரசு இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதும் இதை தெளிவுபடுத்திவிட்டது என்கிறது தி.மு.க வழக்கறிஞர் தரப்பு. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க வழக்கறிஞர் தரப்பு, ``ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் கூறியது ஆணவத்தின் உச்சம், ஒரு சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவுசெய்ய வேண்டியது நீதிமன்றம்தான். ஆளுநர் என்பவர் மத்திய அரசால் அனுப்பப்பட்ட ஓர் அதிகாரி. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டமியற்ற மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு 2 முறை கூறிவிட்டது. எனவே ஆளுநர் இப்போது மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா? அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஆளுநர் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?” என்கிறார்கள். `ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்கிறது மத்திய அரசு - இனி என்ன?! இதனிடையே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. மனித உயிர்களை பலிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒடுக்குவதில், இதயம் உள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது, இருக்கவும் கூடாது” என்றார். இதையடுத்து மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாவை மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றினால், அந்த சட்டவரைவிற்கு ஆளுநர் கட்டாயம் இசைவு தரவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் 200-வது பிரிவு குறிப்பிடுகிறது. அதேசமயம், “ஆன்லைன் கேமிங் என்ற விவகாரம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeiTY) ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். எனவே மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தருவாரா? ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால் தமிழக அரசு நீதிமன்றத்தை நாடப்போகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனிடையே நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று ஆளுநருக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி தடை மசோதா: 41 உயிர்கள் பலி; கனத்த இதயத்தோடுதான் இங்கு நிற்கிறேன் - ஸ்டாலின் உருக்கம்

விகடன் 24 Mar 2023 9:43 am

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றிய ஸ்டாலின்... என்ன செய்யப்போகிறார் ஆளுநர்?!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அக்டோபர் 19-ம் தேதி தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி, நவம்பர் 27-ம் தேதி திருப்பியனுப்பினார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்ததுடன், டிசம்பர் 2-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடக் கேட்டுக்கொண்டார். ஆன்லைன் சூதாட்டம் ஆனால் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்திய ஆளுநர், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியதாக தகவல் கசிய, எதிர்ப்புகள் வலுத்தன. இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ``மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால்தான் ஆளுநர் ரவி, மசோதாவுக்கு கையெழுத்திட மறுக்கிறாரா?’ என சாடினார். அதற்கடுத்த வாரத்திலேயே மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர். ``ஆன்லைன் சைபர் என்பது மத்திய அரசின் வரம்புக்குள் வரும் விஷயம். எனவே சீரான முறையில் தேசிய அளவில் ஒழுங்காற்று நடவடிக்கையே இதில் அவசியமேயொழிய மாநில அரசு மட்டுமே ஒழுங்குமுறையோ சட்டத்தையோ கொண்டு வருவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19 (1) (g) பிரிவின் கீழ் அவரின் அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அடிப்படை உரிமைக்கு எதிராக எந்த அரசாங்கமும் சட்டம் இயற்ற முடியாது. இந்த விஷயங்களை ஏற்கெனவே தெளிவுபடுத்தி அறிவுறுத்திய பிறகும் மாநில அரசு முன்பு அவசர சட்டத்தில் நிறைவேற்றிய அதே அம்சங்களையே ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஒரு மாநில அரசாங்கத்தால் திறமையான விளையாட்டை ஒழுங்குபடுத்த மட்டுமே முடியும், முற்றிலும் தடை செய்ய முடியாது.” என்று திருப்பி அனுப்பப்பட்ட கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியானது. நாடாளுமன்றம் ஆனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு, என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. மார்ச் 21-ம் தேதி நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி பார்த்திபன் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “பந்தயம் மற்றும் சூதாட்டம் என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள பட்டியல்-II-இல் 34ஆம் அம்சமாக வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது” என்றார். ஆன்லைன் ரம்மி: ``தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு! - மத்திய அரசு விளக்கம் மத்திய அரசு இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதும் இதை தெளிவுபடுத்திவிட்டது என்கிறது தி.மு.க வழக்கறிஞர் தரப்பு. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க வழக்கறிஞர் தரப்பு, ``ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் கூறியது ஆணவத்தின் உச்சம், ஒரு சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவுசெய்ய வேண்டியது நீதிமன்றம்தான். ஆளுநர் என்பவர் மத்திய அரசால் அனுப்பப்பட்ட ஓர் அதிகாரி. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டமியற்ற மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு 2 முறை கூறிவிட்டது. எனவே ஆளுநர் இப்போது மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா? அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஆளுநர் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?” என்கிறார்கள். `ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்கிறது மத்திய அரசு - இனி என்ன?! இதனிடையே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. மனித உயிர்களை பலிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒடுக்குவதில், இதயம் உள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது, இருக்கவும் கூடாது” என்றார். இதையடுத்து மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாவை மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றினால், அந்த சட்டவரைவிற்கு ஆளுநர் கட்டாயம் இசைவு தரவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் 200-வது பிரிவு குறிப்பிடுகிறது. அதேசமயம், “ஆன்லைன் கேமிங் என்ற விவகாரம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeiTY) ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். எனவே மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தருவாரா? ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால் தமிழக அரசு நீதிமன்றத்தை நாடப்போகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனிடையே நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று ஆளுநருக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி தடை மசோதா: 41 உயிர்கள் பலி; கனத்த இதயத்தோடுதான் இங்கு நிற்கிறேன் - ஸ்டாலின் உருக்கம்

விகடன் 24 Mar 2023 9:43 am

சிறைக்கைதிகளும் தமிழ் படங்களும் ! - சினிமா காதலர் ஷேரிங்ஸ்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் கடந்தாண்டு வெளியான பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் போது சிறைக்கைதிகளின் தேர்ச்சி விகிதம், அவர்களில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் குறித்து பத்திரிக்கைகள் கவனம் செலுத்தியிருந்தன. சிலர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தார்கள். அதேபோல எழுத்தாளர் இமையம், சிறைச்சாலை நூலகங்களை சீர்படுத்த வேண்டும் என்றும், சிறைவாழ்க்கை வாழ்ந்த ஒருவர் கவிஞராக மாறியது குறித்தும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையை ஈரோடு அன்புராஜ் (வாழ்வை எங்கிருந்தும் தொடங்கலாம் என்ற தலைப்பில் அவரை பற்றி பவா செல்லத்துரை பேசிய காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது) பாராட்டி இருந்தார். இந்த இரண்டு விஷயங்களையும் கவனித்த போது சிறைச்சாலை வாழ்க்கை குறித்த திரைப்படங்கள் குறித்து எழுத தோன்றியது. அவ்வாறு எழுதப்பட்டது தான் இக்கட்டுரை. Representational Image தமிழ் சினிமாவில் சிறைச்சாலை வாழ்க்கை குறித்து பதிவுசெய்த திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் நான் 90'ஸ் கிட் என்பதால் கடந்த இருபது வருடங்களில் வெளியான திரைப்படங்களில் உள்ள சிறைச்சாலை குறித்த பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன். சிறைச்சாலை கைதிகளின் குழந்தைகள்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறைச்சாலை கைதிகளின் குழந்தைகள் பற்றி அக்கறை கொண்டு பேசியிருந்ததை சமூக வலைதளங்களில் பாராட்டி இருந்தனர். மகாநதி *கமல் நடித்த மகாநதி. எந்த தவறும் செய்யாத போதும் சிறையில் அடைக்கப்படுவார் கமல். சிறையிலிருக்கும் தன் அப்பாவை குழந்தைகள் சந்திக்க வருகிறார்கள். அப்போது இந்த வயசுலயே ஜெயிலு பக்கம் உங்கள வர வச்சுட்டனே என்று வருந்துவார் கமல். சிறையிலிருக்கும் கமலின் குழந்தைகள் சில காலங்களில் அனாதையாகி வழிதவறி போய்விடுவார்கள். *காக்கா முட்டை படத்தில் தன் அப்பா ஜெயிலில் அடைக்கப்படுவதால் அம்மா ஒருவரின் அரவணைப்பில் வளரும் இரண்டு சிறுவர்களும் வேறு வழியில்லாமல் அப்பாவை வெளியே கொண்டு வருவதற்காக அம்மாவுக்கு பணம் கொடுத்து உதவ, காசு சம்பாதிக்கும் பொருட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறுகிறார்கள். காக்கா முட்டை *வானம் கொட்டட்டும் படத்தில் சிறுவயதிலயே தங்களை பற்றி கவலைபடாமல் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போன தந்தை மீது கோபத்தில் இருப்பார்கள் அவர்களது பிள்ளைகள். சிறையிலிருந்து திரும்பி வந்த அப்பாவிடம் மகன் சரியாக முகம் கொடுத்து கூட பேசமாட்டார். *கைதி படத்தில் சிறையிலிருந்து வெளியேறும் கைதி கார்த்தி முதல் வேலையாக ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் தன் மகளை தான் பார்க்க செல்வார். அப்போது அந்த மகள் ஏன் இவ்வளவு நாள் என்ன பாக்க வரல என்று கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் மகளை கட்டிக்கொண்டு அழுவார் கார்த்தி. (அப்படத்தில், சிறையிலிருந்து வெளியேறும் ஒரு கைதியின் மகள் போலீஸ் உடையுடன் போட்டோ எடுத்திருப்பது போன்ற காட்சி, கவிதை!) கைதி *கபாலி படத்தில் சிறையில் புத்தகம் படிப்பது போல் அறிமுகமாகும் ரஜினி, சிறையிலிருந்து வெளியேறியதும் தொலைந்து போன தனது குடும்பத்தை தேடிப்போவது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். வளர்ந்து நிற்கும் துடிப்பான தன் மகளை சில நொடிகள் அதிசயித்து பார்ப்பார் ரஜினி. சிறுவர் சீர்திருத்த பள்ளி: *சிறுவர் சீர்திருத்தபள்ளி குறித்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட மிக முக்கியமான படம் நந்தா. அந்தப் படத்தில், தவறான பாதையில் பயணிக்கும் தன் தந்தையை கொலை செய்துவிட்டு சிறுவயதிலயே சிறைக்குச் செல்கிறான் நாயகன். அப்படி சிறையிலடைக்கப்பட்ட சிறுவன் அங்கேயும் அடிதடியில் ஈடுபடுவதை பார்த்த தாய், அன்று முதல் அவன் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆவது வரை அவனை பார்க்காமல் அவனை நினைத்து அழுதபடி இருக்கிறார். சிறையிலிருந்து வெளியேறிய பிறகும் அவன் கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்க தொடங்க, அம்மா அவனை வெறுக்கிறார். இறுதியில் அவனுக்கு தாய் கையாலயே மரணம் நேர்கிறது. நந்தா *விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளி குறித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்தப் படத்தில் தவறான பாதையில் பயணிக்கும் தன் தாயை கொலை செய்துவிட்டு சிறுவயதிலயே சிறைக்குச் செல்கிறான் நாயகன். அவன் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த பிறகு சொந்தக்காரர்களால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகிறான். *மூடர்கூடம் படத்தில் தனியார் கம்பெனிக்கு நேர்முகத் தேர்விற்குச் செல்லும் நாயகன் கடைசி சுற்று வரை தேர்வாகி இறுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்தவன் என்ற விஷயம் வெளியே வந்தவுடன் கம்பெனியால் வேலை கொடுக்கப்படாமல் நிராகரிக்கப்படுகிறான். மூடர்கூடம் *வசந்தபாலனின் ஜெயில் படத்தில் பாண்டி என்கிற நாயகன், சிறுவயதில் பொய் வழக்கில் சிக்கி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தபிறகு அவனுக்கு அக்கம்பக்கத்து சின்ன சின்ன கடைகளில் கூட வேலை கிடைக்காமல் கடைசியில் பொய் சொல்லி வேலைக்கு சேரும் நிலைமைக்கு ஆளாகிறான். *காதலும் கடந்து போகும் படத்தில் தவறான சகவாசத்தால் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகி சரியான வேலை எதுவும் கிடைக்காமல் இருக்கும் விஜய்சேதுபதி, தன்னிடம் அடியாள் அசிஸ்டன்டாக சேர துடிக்கும் மணிகண்டனின் கன்னத்தில் நாலு அறைவிட்டு இதெல்லாம் பண்ணா உன்ன தலைல தூக்கி வச்சு கொஞ்சுவாங்கனு நினைச்சியா? என்று திட்டி வேறு வேலைக்குப் போக சொல்வார். காதலும் கடந்து போகும் சிறைச்சாலை மரணங்கள் & அதிகார மீறல்கள்: *விசாரணை படத்தில் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஆதரவற்று கர்நாடகாவில் வேலை செய்யும் இளைஞர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தி அவர்களை அடித்து சித்ரவதைக்கு உள்ளாக்கி கடைசியில் அவர்களை சுட்டுத்தள்ளுகிறது போலீஸ் துறை. *ஜெய்பீம் படத்தில் இருளர் இன மக்களில் ஒருவரான ராசாக்கண்ணு மீது திருட்டு பட்டம் சூட்டி பொய் குற்றம் சுமத்தி சிறையிலடைத்து அடித்து உதைத்து நெஞ்சில் மிதித்தே கொல்கிறார்கள். நெஞ்செலும்பு உடைந்து இதயத்தில் எலும்பு குத்தி இறந்து போகிறார் ராசாக்கண்ணு. *ரைட்டர் படத்தில் காவல் துறையில் நிகழும் தற்கொலைகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு இளைஞன் மீது பொய் வழக்கு சுமத்தி கடைசியில் அந்த இளைஞனை சுட்டுத்தள்ளுகிறது காவல் துறை. *மௌனகுரு படத்தில் அப்பாவி இளைஞன் மீது பொய்க்குற்றம் சுமத்தி அவனை சுட்டுத்தள்ள முயலுகிறது காவல்துறை. மனநிலை மருத்துவமனையில் அடைக்கப்பட்டு மெண்டல் என முத்திரை குத்தப்படுகிறான் அப்பாவி இளைஞன். ஜெய்பீம் *வழக்கு எண் 18/9 படத்தில் ஒரு இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தி அப்பாவி நாயகனை கைதுசெய்து சிறையில் அடைத்து அடித்து சக்கையாக்கி அவனை துன்புறுத்துகிறார்கள். (கொஞ்சம் சம்பந்தமில்லை என்றாலும் சிவாஜி படத்தையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். காவல்துறையினரால் லாக்கப்பில் கடுமையாக தாக்கப்படும் ரஜினி, மின்சார கம்பிகளை பிடித்து உயிரிழப்பது போல் வைத்திருக்கும் காட்சியும் கவனிக்கத்தக்க ஒன்று!) சிறைச்சாலையில் நிகழும் குற்றங்கள்: *கமலின் விருமாண்டி படத்தில் பொய் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இருக்கும் கமல் மீது தாக்குதல் நடத்தப்படும். நேர்மையான சில கைதிகள் தவறான சில காவலாளிகள் என்று இரண்டு பிரிவாக பிரிந்து சிறைச்சாலைக்குள் பெரிய வன்முறை நிகழ்கிறது. *விஜய்யின் மாஸ்டர் படத்தில் சிறுவர் சீர்திருத்தபள்ளி சிறுவர்களை போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். சிறுவர் சீர்திருத்தபள்ளியில் உள்ள சீனியர் ஜூனியர் பாகுபாடு, சிறுவர்களின் தற்கொலைகள் குறித்து பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. விருமாண்டி *வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சார்ந்த இளைஞர்கள் சிறையிலடைக்கப்பட்டு எப்படி அவர்கள் போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு அடிமையாகிறார்கள் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கும். சிறைக்குள் நிகழும் கேங் வன்முறைகளை அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட படம். சிறையில் பெண்கள் நடத்தப்படும் விதம்: *பாய்ஸ் படத்தில் ஜெனிலியா சிறையிலடைக்கப்பட்டு அவதிக்குள்ளாவார். கொசுவே கொசுவே குண்டு குண்டு கொசுவே என்ற பாடலில் அவரது சிறை வாழ்க்கை துயரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். *ராவணன் படத்தில் காவால்துறை அதிகாரிகள் வீரன் என்கிற நாயகனின் தங்கையை தூக்கிச் சென்று விடிய விடிய கற்பழிக்கப்பட்டதை பற்றி வசனமாக வைத்து அந்தக் கொடுமையை அனுபவித்த தங்கை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். *அருவி படத்தில் அருவியை கைது செய்து விசாரணை செய்யும் பெண் போலீஸ் அருவியை அடிக்க கை ஓங்க தொட்றீ பாக்கலாம் என்று அருவி வசனம் பேசுவதுபோல் காட்சி இடம்பெற்றிருக்கும். புறம்போக்கு என்கிற பொதுவுடைமை சிறையில் சில நல்லவர்கள்: *புறம்போக்கு எனும் பொதுவுடைமை படத்தில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஒரு மக்கள் போராளியின் சிறைச்சாலையில் அவரது இறுதிகட்ட போராட்டங்களை படமாக்கி இருப்பார்கள். சிறை வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு: * சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதிகளின் குழந்தைகளின் நிலைமை என்ன? *சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட பெற்றோர்களின் நிலைமை என்ன? *சிறைச்சாலையில் மரணமடைந்த இளைஞர்களின் உறவினர்களின் நிலைமை என்ன? *சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு வேறு வழியில்லாமல் அங்கு நடைபெறும் குற்றங்களுக்கு துணை போகும் இளைஞர்களின் எதிர்கால நிலைமை என்ன? நிமிர்ந்து நில் *சிறைச்சாலையில் அடைக்கப்படும் இளம்பெண்களின் நிலைமை என்ன? *சிறைச்சாலையில் அடைக்கப்படும் மக்களுக்கான போராளியின் நிலைமை என்ன? போன்றன குறித்து நாம் இன்னும் அதிகம் விவாதிக்க வேண்டும். சிறைச்சாலை பற்றிய முக்கியமான வரிகள்: *சமுத்திரக்கனியின் நிமிர்ந்து நில் படத்தில், உலகத்துலயே பெரிய சிறைச்சாலைய கட்டி வச்சுட்டு அத பொது அறிவு புத்தகத்துல கேள்வியா கேட்குற நிலைமைல இருக்கோம் என்று ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். *கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஜூனியர் விகடனில் வெளியான ஜெயில் மதில் திகில் தொடரை எழுதிய காவல் துறை அதிகாரி சொன்ன ஒரு வாக்கியத்தை நாம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அந்த வாக்கியம், ஒரு ஊரில் புதிதாக ஒரு சிறைச்சாலை கட்டப்படுகிறது என்றால் அது அந்த தேசத்திற்கே ஏற்பட்ட அவமானம்! விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 24 Mar 2023 9:41 am

சிறைக்கைதிகளும் தமிழ் படங்களும் ! - சினிமா காதலர் ஷேரிங்ஸ்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் கடந்தாண்டு வெளியான பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் போது சிறைக்கைதிகளின் தேர்ச்சி விகிதம், அவர்களில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் குறித்து பத்திரிக்கைகள் கவனம் செலுத்தியிருந்தன. சிலர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தார்கள். அதேபோல எழுத்தாளர் இமையம், சிறைச்சாலை நூலகங்களை சீர்படுத்த வேண்டும் என்றும், சிறைவாழ்க்கை வாழ்ந்த ஒருவர் கவிஞராக மாறியது குறித்தும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையை ஈரோடு அன்புராஜ் (வாழ்வை எங்கிருந்தும் தொடங்கலாம் என்ற தலைப்பில் அவரை பற்றி பவா செல்லத்துரை பேசிய காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது) பாராட்டி இருந்தார். இந்த இரண்டு விஷயங்களையும் கவனித்த போது சிறைச்சாலை வாழ்க்கை குறித்த திரைப்படங்கள் குறித்து எழுத தோன்றியது. அவ்வாறு எழுதப்பட்டது தான் இக்கட்டுரை. Representational Image தமிழ் சினிமாவில் சிறைச்சாலை வாழ்க்கை குறித்து பதிவுசெய்த திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் நான் 90'ஸ் கிட் என்பதால் கடந்த இருபது வருடங்களில் வெளியான திரைப்படங்களில் உள்ள சிறைச்சாலை குறித்த பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன். சிறைச்சாலை கைதிகளின் குழந்தைகள்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறைச்சாலை கைதிகளின் குழந்தைகள் பற்றி அக்கறை கொண்டு பேசியிருந்ததை சமூக வலைதளங்களில் பாராட்டி இருந்தனர். மகாநதி *கமல் நடித்த மகாநதி. எந்த தவறும் செய்யாத போதும் சிறையில் அடைக்கப்படுவார் கமல். சிறையிலிருக்கும் தன் அப்பாவை குழந்தைகள் சந்திக்க வருகிறார்கள். அப்போது இந்த வயசுலயே ஜெயிலு பக்கம் உங்கள வர வச்சுட்டனே என்று வருந்துவார் கமல். சிறையிலிருக்கும் கமலின் குழந்தைகள் சில காலங்களில் அனாதையாகி வழிதவறி போய்விடுவார்கள். *காக்கா முட்டை படத்தில் தன் அப்பா ஜெயிலில் அடைக்கப்படுவதால் அம்மா ஒருவரின் அரவணைப்பில் வளரும் இரண்டு சிறுவர்களும் வேறு வழியில்லாமல் அப்பாவை வெளியே கொண்டு வருவதற்காக அம்மாவுக்கு பணம் கொடுத்து உதவ, காசு சம்பாதிக்கும் பொருட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறுகிறார்கள். காக்கா முட்டை *வானம் கொட்டட்டும் படத்தில் சிறுவயதிலயே தங்களை பற்றி கவலைபடாமல் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போன தந்தை மீது கோபத்தில் இருப்பார்கள் அவர்களது பிள்ளைகள். சிறையிலிருந்து திரும்பி வந்த அப்பாவிடம் மகன் சரியாக முகம் கொடுத்து கூட பேசமாட்டார். *கைதி படத்தில் சிறையிலிருந்து வெளியேறும் கைதி கார்த்தி முதல் வேலையாக ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் தன் மகளை தான் பார்க்க செல்வார். அப்போது அந்த மகள் ஏன் இவ்வளவு நாள் என்ன பாக்க வரல என்று கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் மகளை கட்டிக்கொண்டு அழுவார் கார்த்தி. (அப்படத்தில், சிறையிலிருந்து வெளியேறும் ஒரு கைதியின் மகள் போலீஸ் உடையுடன் போட்டோ எடுத்திருப்பது போன்ற காட்சி, கவிதை!) கைதி *கபாலி படத்தில் சிறையில் புத்தகம் படிப்பது போல் அறிமுகமாகும் ரஜினி, சிறையிலிருந்து வெளியேறியதும் தொலைந்து போன தனது குடும்பத்தை தேடிப்போவது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். வளர்ந்து நிற்கும் துடிப்பான தன் மகளை சில நொடிகள் அதிசயித்து பார்ப்பார் ரஜினி. சிறுவர் சீர்திருத்த பள்ளி: *சிறுவர் சீர்திருத்தபள்ளி குறித்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட மிக முக்கியமான படம் நந்தா. அந்தப் படத்தில், தவறான பாதையில் பயணிக்கும் தன் தந்தையை கொலை செய்துவிட்டு சிறுவயதிலயே சிறைக்குச் செல்கிறான் நாயகன். அப்படி சிறையிலடைக்கப்பட்ட சிறுவன் அங்கேயும் அடிதடியில் ஈடுபடுவதை பார்த்த தாய், அன்று முதல் அவன் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆவது வரை அவனை பார்க்காமல் அவனை நினைத்து அழுதபடி இருக்கிறார். சிறையிலிருந்து வெளியேறிய பிறகும் அவன் கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்க தொடங்க, அம்மா அவனை வெறுக்கிறார். இறுதியில் அவனுக்கு தாய் கையாலயே மரணம் நேர்கிறது. நந்தா *விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளி குறித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்தப் படத்தில் தவறான பாதையில் பயணிக்கும் தன் தாயை கொலை செய்துவிட்டு சிறுவயதிலயே சிறைக்குச் செல்கிறான் நாயகன். அவன் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த பிறகு சொந்தக்காரர்களால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகிறான். *மூடர்கூடம் படத்தில் தனியார் கம்பெனிக்கு நேர்முகத் தேர்விற்குச் செல்லும் நாயகன் கடைசி சுற்று வரை தேர்வாகி இறுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்தவன் என்ற விஷயம் வெளியே வந்தவுடன் கம்பெனியால் வேலை கொடுக்கப்படாமல் நிராகரிக்கப்படுகிறான். மூடர்கூடம் *வசந்தபாலனின் ஜெயில் படத்தில் பாண்டி என்கிற நாயகன், சிறுவயதில் பொய் வழக்கில் சிக்கி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தபிறகு அவனுக்கு அக்கம்பக்கத்து சின்ன சின்ன கடைகளில் கூட வேலை கிடைக்காமல் கடைசியில் பொய் சொல்லி வேலைக்கு சேரும் நிலைமைக்கு ஆளாகிறான். *காதலும் கடந்து போகும் படத்தில் தவறான சகவாசத்தால் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகி சரியான வேலை எதுவும் கிடைக்காமல் இருக்கும் விஜய்சேதுபதி, தன்னிடம் அடியாள் அசிஸ்டன்டாக சேர துடிக்கும் மணிகண்டனின் கன்னத்தில் நாலு அறைவிட்டு இதெல்லாம் பண்ணா உன்ன தலைல தூக்கி வச்சு கொஞ்சுவாங்கனு நினைச்சியா? என்று திட்டி வேறு வேலைக்குப் போக சொல்வார். காதலும் கடந்து போகும் சிறைச்சாலை மரணங்கள் & அதிகார மீறல்கள்: *விசாரணை படத்தில் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஆதரவற்று கர்நாடகாவில் வேலை செய்யும் இளைஞர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தி அவர்களை அடித்து சித்ரவதைக்கு உள்ளாக்கி கடைசியில் அவர்களை சுட்டுத்தள்ளுகிறது போலீஸ் துறை. *ஜெய்பீம் படத்தில் இருளர் இன மக்களில் ஒருவரான ராசாக்கண்ணு மீது திருட்டு பட்டம் சூட்டி பொய் குற்றம் சுமத்தி சிறையிலடைத்து அடித்து உதைத்து நெஞ்சில் மிதித்தே கொல்கிறார்கள். நெஞ்செலும்பு உடைந்து இதயத்தில் எலும்பு குத்தி இறந்து போகிறார் ராசாக்கண்ணு. *ரைட்டர் படத்தில் காவல் துறையில் நிகழும் தற்கொலைகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு இளைஞன் மீது பொய் வழக்கு சுமத்தி கடைசியில் அந்த இளைஞனை சுட்டுத்தள்ளுகிறது காவல் துறை. *மௌனகுரு படத்தில் அப்பாவி இளைஞன் மீது பொய்க்குற்றம் சுமத்தி அவனை சுட்டுத்தள்ள முயலுகிறது காவல்துறை. மனநிலை மருத்துவமனையில் அடைக்கப்பட்டு மெண்டல் என முத்திரை குத்தப்படுகிறான் அப்பாவி இளைஞன். ஜெய்பீம் *வழக்கு எண் 18/9 படத்தில் ஒரு இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தி அப்பாவி நாயகனை கைதுசெய்து சிறையில் அடைத்து அடித்து சக்கையாக்கி அவனை துன்புறுத்துகிறார்கள். (கொஞ்சம் சம்பந்தமில்லை என்றாலும் சிவாஜி படத்தையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். காவல்துறையினரால் லாக்கப்பில் கடுமையாக தாக்கப்படும் ரஜினி, மின்சார கம்பிகளை பிடித்து உயிரிழப்பது போல் வைத்திருக்கும் காட்சியும் கவனிக்கத்தக்க ஒன்று!) சிறைச்சாலையில் நிகழும் குற்றங்கள்: *கமலின் விருமாண்டி படத்தில் பொய் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இருக்கும் கமல் மீது தாக்குதல் நடத்தப்படும். நேர்மையான சில கைதிகள் தவறான சில காவலாளிகள் என்று இரண்டு பிரிவாக பிரிந்து சிறைச்சாலைக்குள் பெரிய வன்முறை நிகழ்கிறது. *விஜய்யின் மாஸ்டர் படத்தில் சிறுவர் சீர்திருத்தபள்ளி சிறுவர்களை போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். சிறுவர் சீர்திருத்தபள்ளியில் உள்ள சீனியர் ஜூனியர் பாகுபாடு, சிறுவர்களின் தற்கொலைகள் குறித்து பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. விருமாண்டி *வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சார்ந்த இளைஞர்கள் சிறையிலடைக்கப்பட்டு எப்படி அவர்கள் போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு அடிமையாகிறார்கள் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கும். சிறைக்குள் நிகழும் கேங் வன்முறைகளை அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட படம். சிறையில் பெண்கள் நடத்தப்படும் விதம்: *பாய்ஸ் படத்தில் ஜெனிலியா சிறையிலடைக்கப்பட்டு அவதிக்குள்ளாவார். கொசுவே கொசுவே குண்டு குண்டு கொசுவே என்ற பாடலில் அவரது சிறை வாழ்க்கை துயரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். *ராவணன் படத்தில் காவால்துறை அதிகாரிகள் வீரன் என்கிற நாயகனின் தங்கையை தூக்கிச் சென்று விடிய விடிய கற்பழிக்கப்பட்டதை பற்றி வசனமாக வைத்து அந்தக் கொடுமையை அனுபவித்த தங்கை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். *அருவி படத்தில் அருவியை கைது செய்து விசாரணை செய்யும் பெண் போலீஸ் அருவியை அடிக்க கை ஓங்க தொட்றீ பாக்கலாம் என்று அருவி வசனம் பேசுவதுபோல் காட்சி இடம்பெற்றிருக்கும். புறம்போக்கு என்கிற பொதுவுடைமை சிறையில் சில நல்லவர்கள்: *புறம்போக்கு எனும் பொதுவுடைமை படத்தில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஒரு மக்கள் போராளியின் சிறைச்சாலையில் அவரது இறுதிகட்ட போராட்டங்களை படமாக்கி இருப்பார்கள். சிறை வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு: * சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதிகளின் குழந்தைகளின் நிலைமை என்ன? *சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட பெற்றோர்களின் நிலைமை என்ன? *சிறைச்சாலையில் மரணமடைந்த இளைஞர்களின் உறவினர்களின் நிலைமை என்ன? *சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு வேறு வழியில்லாமல் அங்கு நடைபெறும் குற்றங்களுக்கு துணை போகும் இளைஞர்களின் எதிர்கால நிலைமை என்ன? நிமிர்ந்து நில் *சிறைச்சாலையில் அடைக்கப்படும் இளம்பெண்களின் நிலைமை என்ன? *சிறைச்சாலையில் அடைக்கப்படும் மக்களுக்கான போராளியின் நிலைமை என்ன? போன்றன குறித்து நாம் இன்னும் அதிகம் விவாதிக்க வேண்டும். சிறைச்சாலை பற்றிய முக்கியமான வரிகள்: *சமுத்திரக்கனியின் நிமிர்ந்து நில் படத்தில், உலகத்துலயே பெரிய சிறைச்சாலைய கட்டி வச்சுட்டு அத பொது அறிவு புத்தகத்துல கேள்வியா கேட்குற நிலைமைல இருக்கோம் என்று ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். *கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஜூனியர் விகடனில் வெளியான ஜெயில் மதில் திகில் தொடரை எழுதிய காவல் துறை அதிகாரி சொன்ன ஒரு வாக்கியத்தை நாம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அந்த வாக்கியம், ஒரு ஊரில் புதிதாக ஒரு சிறைச்சாலை கட்டப்படுகிறது என்றால் அது அந்த தேசத்திற்கே ஏற்பட்ட அவமானம்! விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 24 Mar 2023 9:41 am

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 2 பேர் கைது

சென்னை: ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் கைது செய்யப்பட்டார். ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஹரிஷை போலீசார் கைது செய்தனர்.

தினகரன் 24 Mar 2023 9:40 am