‘தமிழக வெற்றிக் கழகம்’அர்த்தம் இது தான்! வீடியோவாக விளக்கிய விஜய்!
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது விழுப்புரத்தில் உள்ள வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திறன்களை மேடையில் அறிவித்தனர். அதன்பின், இறுதியாக தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அதில், தான் அரசியலுக்கு வந்த காரணம், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த காரணம் என அனைத்தையும் விளக்கி கூறினார். அதன் பிறகு, வீடியோவாக தவெக கட்சியின் பெயர் விளக்கத்தை கூறியிருந்தார் விஜய். தவெக பெயர் காரணம் : தமிழக […]
TVK: மாநாட்டு மேடையில் விஜய் மற்றும் ஆனந்துடன் மூவர் - யார் அவர்கள்?
விஜய்யின் த.வெ.க மாநாடு தற்போது விக்கிரவாண்டியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டு மேடையில் ஐந்து நாற்காலி போடப்பட்டதில் இருந்து, 'யார் அந்த ஐந்து பேர்?' என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்திருந்தது. த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் உடன் த.வெ.க நிர்வாகிகளான தாஹிரா, ராஜசேகர், பி.வெங்கட்ராமன் ஆகியோர் மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கின்றனர். TVK தாஹிரா வேலூரைச் சேர்ந்தவர். இவருக்கு த.வெ.க-வில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் த.வெ.க-வின் தலைமை நிலைய செயலாளர். சென்னை பம்மலை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் த.வெ.க-வின் பொருளாளர். இவர்கள் மூவரும் விஜய் மேடையில் ஏறியதில் இருந்து அவருடனேயே இருந்து வருகின்றனர். இவர்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்தும் மேடையில் உடன் இருந்தார். இன்றைய மாநாட்டில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள் குறித்துத் தெரிந்துகொள்ள: 1. TVK Vijay: `தவெக ஏன் கட்சியின் பெயர்'- சுவாரஸ்யமான விளக்கமளித்த விஜய் 2. TVK Vijay Speech: `பாம்பே ஆனாலும் பயமில்ல' - கர்ஜித்த விஜய்! 3. TVK Vijay : `எங்களுக்கு இரண்டு எதிரிகள்...' - மாநாட்டு மேடையில் விளக்கிய தவெக தலைவர் விஜய்
அரசியலுக்கு வந்தது ஏன்? பதில் சொல்லிய தவெக தலைவர் விஜய்!
விழுப்புரம் :விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், பாம்பு கதையடன் தனது உரையை தொடங்கியதோடு, கொக்கை விளக்கத்தையும் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன் மீதான விமர்சனம், ட்ரோல், தமிழகத்தில் நடக்கின்ற அரசியல் பற்றியும், திராவிடத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அத்துடன் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? என்கிற விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அரசியலுக்கு வந்தது ஏன்? “இந்த அரசியல் நமக்கு எதற்கு…? நடித்தோமா நாலு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் […]
TVK Vijay Speech: `அவங்க பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா?' - மாநாட்டில் விஜய் கூறிய பன்ச்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் கொள்ககளையும் நிலைபாடுகளையும் விஜய் பேசும்போது ஒவ்வொன்றாக எடுத்துரைத்தார். மாநாட்டில் விஜய் பேசிய சில பன்ச் லைன்க்ள் இங்கே! `சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி மட்டும்தான் மாறணுமா? முன்னேற்றம் காணனுமா? ஏன் பாலிடிக்ஸ் மாறக்கூடாதா? முன்னேற்றம் காணக்கூடாதா?' `புள்ளிவிவரம் புலியாக கதறப்போறதும் இல்ல, உலக இலக்கியத்தின் வாக்கியங்களை சொல்லி `MP3 ப்ளேயர்' ஆன் பண்ணின மாதிரி பேசப்போறதும் இல்ல...இங்க ஏற்கெனவே இருக்கிற அரசியல் வாதிகளை பற்றி பேசி டைம் வேஸ்ட் பண்ணப்போறது இல்ல! அதுக்காக கண்ணை முடிட்டு இருக்கப் போறதும் இல்ல.' `என்னது பெரியார் உங்க கொள்கை தலைவரா? அப்படினு சொல்லிட்டு ஒரு கூட்டம் கூச்சல் போட்டுட்டு பெயிண்ட் டப்பாவை தூக்கிட்டு கிளம்பியிருவாங்க.' `சொல் அல்ல முக்கியம்..செயல் , செயல் , செயல்தான் முக்கியம்!' `எதை நினைச்சு அரசியலுக்கு வந்தோமோ..அதை கொஞ்சம்கூட பிசிறு இல்லாமல் செஞ்சு முடிப்போம்! அதுவரைக்கும் நெருப்பாகதான் இருப்போம்!' `சில விஷயங்கள்ல பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இறங்கி அடிச்சல்தான் நம்மை நம்புகிறவங்களுக்கு நல்லது செய்ய முடியும்னு இங்க தோணுச்சு!' மாநாட்டில் விஜய்... `எதிரிகள் இல்லாத வெற்றிகள் இருக்கலாம். ஆனா, களம் இருக்கமுடியாது!' `நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்தி. நம்முடைய இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள்!' `மகத்தான அரசியல்தான் அது மக்களுக்கான அரசியல்தான்!' `திராவிட மாடல்னு சொல்லிகிட்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரை வச்சு..தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கிற ஒரு குடும்ப சுயநல கூட்டம்தான் நம்முடைய அடுத்த எதிரி!' `மாற்று அரசியல்ங்கிற ஏமாற்ற வேலைகளையெல்லாம் நாம இப்போ செய்யப்போறது இல்ல!' `Extra Luggage -ஆக நான் இங்க வரல ப்ரோ!' `ஒரு முடிவோடதான் வந்திருக்கேன். இனிமேல் நோ லுக்கிங் பேக்!' `பவரை கையில வச்சுகிட்ட தனக்கு அடிபணியாதவர்களை பகை தீர்க்க வந்த கூட்டமில்ல! பக்கா ப்ளானோட, பப்ளிக் இன்டர்ஸ்டோட, பவர் பேக்டாக திரண்டிருக்கிற கூட்டம்!' மாநாட்டில் விஜய்... `சோசியல் மீடியாவுல கம்பு சுத்த வந்த கூட்டம்னு நினைச்சுடாதீங்க! சமூகத்திற்காக வாளேந்தி நிற்கப் போகிற கூட்டம்!' `ஏ டீம், பி டீம்னு பொய் பிரச்சாரம் பண்ணி இந்த படையை வீழ்த்திடலாம்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்காதீங்க!' ` அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா? நீங்களும் அவங்களுக்கு கொஞ்சம்கூட சளைக்காதவர்கள்தானே...மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சினு மக்களை ஏமாத்துறீங்க!'
TVK Vijay: `தவெக ஏன் கட்சியின் பெயர்'- சுவாரஸ்யமான விளக்கமளித்த விஜய்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வி.சாலையில் தற்போது நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். மாநாட்டில் விஜய் தனது உரையை ஆற்றியபிறகு கட்சிப் பெயருக்கான விளக்கம் ஒளிப்பரப்பட்டது. அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். அரசியலில் மட்டும் அல்ல பொதுவாகவே நமக்கு ஒரு பெரிய அடையாளம் இருக்க வேண்டும் என்றால் நம் பெயரே ஒரு அடையாளமாக மாற வேண்டும். அதற்கு பாஸிட்டிவ் எனர்ஜி பெயரில் இருக்க வேண்டும். அந்த எனர்ஜியைக் கொடுக்கிறதே அந்தப் பெயரில் இருக்கும் வார்த்தைகளின் வலிமைகள்தான். Tvk அப்படி ஒரு நேர்மறை அர்த்தம், நேர்மறை அதிர்வு, நேர்மறை வலிமையும் ஒரு சேரக் கொண்ட ஒரு சொல் இருக்கிறது. என்னைக்குமே தன்னோட தன்மையை இழக்காத ஒரு சொல் அது. இந்த வார்த்தையைச் சொல்லும்போதே உச்சரிக்கிறவர்கள் மட்டும் அல்ல ஒட்டு மொத்த ஒரு பெரும் கூட்டத்தையே உணர்ச்சியின் உச்சத்தில் சொல்ல வைக்கின்ற சொல் அது. எல்லாரையும் உற்சாகப்படுத்த வைக்கின்ற சொல் அது. நம் மக்களின் நாடி, நரம்பு ஞானேற்றும் அந்த சொல் அந்த வார்த்தை வேறென்ன? வெற்றி... வெற்றி... வெற்றி... வெற்றிதான் அந்த சொல். வெற்றி என்றால் நினைத்தது எல்லாத்தையும் செய்து முடிக்கிறது, மனசுக்குள்ள இருக்க நோக்கத்தை நிறைவேற்றுவது, வாகை சூடுவது என பல அர்த்தங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வார்த்தைதான் நம் கட்சியின் மையச் சொல்லாகவும், மந்திரச் சொல்லாகவும் மாறி இருக்கிறது. பிறகு நம் கட்சியின் முதல் சொல் தமிழகம் நம் மக்களுக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும், சொல்கின்ற ஒரு வார்த்தை கட்சி பெயரின் முதல் வர்க்த்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணி தேர்ந்தெடுத்ததுதான் இந்த தமிழகம் என்ற வார்த்தை. தமிழகம் என்றால் தமிழர்களின் அகம், தமிழர்கள் வாழும் இடம் என்று சொல்லலாம். புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுபத்து என்று நம் இலக்கியங்களில் இடம்பிடித்த ஒரு வார்த்தைதான் இந்த தமிழகம் என்று தமிழை முறையாகப் படித்த பலர் நமக்கு ஆழமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். Tvk Vijay இந்தத் தமிழகம்தான் அண்ணாவினால் முறைப்படி தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இப்போது கட்சியின் மூன்றாவது சொல்லிற்கு வருவோம். கழகம் அப்படி என்றால் படை பயிலும் இடம் என்று அர்த்தம் இருக்கிறது. அந்தவகையில் நம் இளம் சிங்கங்கள் பயிலும் இடம்தான் நம் கட்சி, நம் கழகம். தமிழகம் ...வெற்றி.... கழகம் .... இந்த மூன்று எழுத்தையும் இணைத்து அரசியல் உலகின் அணையா பெருஞ் சுடர்தான் இந்த 'தமிழக வெற்றிக் கழகம்' என்று விஜய்யின் குரலில் கட்சிப் பெயருக்கான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
பிள்ளையானின்கிழக்கு நமதேதேர்தல் விஞ்ஞாபனம் மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் தேர்தல் விஞ்ஞாபனம் மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் அம்பாறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கட்சியின் சார்பில் தேர்தலில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.
ஆட்சி ஆதிகாரத்தில் பங்கு.. கூட்டணி கட்சிகளுக்கு வலை விரித்த விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
TVK: கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன்..! - விஜய் சொன்ன குட்டிக்கதை
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள் அந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொள்கைகளை விளக்கிப் பேசிய விஜய், தனது ஸ்டையில் ஒரு குட்டிக்கதை சொன்னார். ``இது ஆடியோ லான்சில் பேசுவதுபோன்ற மோடிவேஷனல் கதை அல்ல. நாம் என்ன செய்யப்போகிறோம், என்ன முடிவு எடுக்கப்போகிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லப்போகிற கதை” என்று சொல்லத் தொடங்கினார் விஜய். தொடர்ந்து விஜய், ஒரு நாட்டில் ஒரு பெரிய போர் வந்ததாம். அப்போது பவர்ஃபுள்ளான தலைமை இல்லாததால், ஒரு சின்ன குழந்தையிடம் பொறுப்புகள் இருந்ததாம். அப்போது நாட்டில் இருந்த பெருந்தலைகள் எல்லாரும் பயந்துவிட்டனர். ஆனால் அந்த சின்ன பையன் படைகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போருக்கு போலாம் என்று சொன்னானாம். அப்போதந்த பெருந்தகைகள் எல்லாரும், இது சாதாரண விஷயம் கிடையாது. நீ ஒரு சின்ன பையன் அங்க பவர்ஃபுல்லான எதிரிகள் இருப்பார்கள். இது ஒன்றும் விளையாட்டு கிடையாது நீ பாட்டுக்கு விளையாடிவிட்டு ஓடி வருவதற்கு... போர் என்றால் படையை நடத்த வேண்டும். எதிரிப்படைகளை சமாளிக்க வேண்டும், அதைவிட முக்கியமாக ஜெயிக்க வேண்டும். உனக்கோ கூட்டமோ துணையோ யாரும் இல்லை. நீ எப்படி இந்த போரை நடத்துவ, எப்படி ஜெயிப்ப எனக் கேட்டார்களாம். அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் நாட்டின் படைகளை நடத்திக் கொண்டு சென்ற அந்த பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த சின்ன பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். படிக்காதவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், கெட்ட பையன்சார் அந்த சின்ன பையன். என்று கூறினார். விஜய் சொன்ன கதை பாண்டிய நெடுஞ் செழியனின் கதை என்று கூறப்படுகிறது.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
TVK: கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன்..! - விஜய் சொன்ன குட்டிக்கதை
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள் அந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொள்கைகளை விளக்கிப் பேசிய விஜய், தனது ஸ்டையில் ஒரு குட்டிக்கதை சொன்னார். ``இது ஆடியோ லான்சில் பேசுவதுபோன்ற மோடிவேஷனல் கதை அல்ல. நாம் என்ன செய்யப்போகிறோம், என்ன முடிவு எடுக்கப்போகிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லப்போகிற கதை” என்று சொல்லத் தொடங்கினார் விஜய். தொடர்ந்து விஜய், ஒரு நாட்டில் ஒரு பெரிய போர் வந்ததாம். அப்போது பவர்ஃபுள்ளான தலைமை இல்லாததால், ஒரு சின்ன குழந்தையிடம் பொறுப்புகள் இருந்ததாம். அப்போது நாட்டில் இருந்த பெருந்தலைகள் எல்லாரும் பயந்துவிட்டனர். ஆனால் அந்த சின்ன பையன் படைகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போருக்கு போலாம் என்று சொன்னானாம். அப்போதந்த பெருந்தகைகள் எல்லாரும், இது சாதாரண விஷயம் கிடையாது. நீ ஒரு சின்ன பையன் அங்க பவர்ஃபுல்லான எதிரிகள் இருப்பார்கள். இது ஒன்றும் விளையாட்டு கிடையாது நீ பாட்டுக்கு விளையாடிவிட்டு ஓடி வருவதற்கு... போர் என்றால் படையை நடத்த வேண்டும். எதிரிப்படைகளை சமாளிக்க வேண்டும், அதைவிட முக்கியமாக ஜெயிக்க வேண்டும். உனக்கோ கூட்டமோ துணையோ யாரும் இல்லை. நீ எப்படி இந்த போரை நடத்துவ, எப்படி ஜெயிப்ப எனக் கேட்டார்களாம். அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் நாட்டின் படைகளை நடத்திக் கொண்டு சென்ற அந்த பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த சின்ன பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். படிக்காதவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், கெட்ட பையன்சார் அந்த சின்ன பையன். என்று கூறினார். விஜய் சொன்ன கதை பாண்டிய நெடுஞ் செழியனின் கதை என்று கூறப்படுகிறது.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மதுரையில் தீபாவளி விற்பனை களைகட்டியது - 3 நாட்களே உள்ள நிலையில் கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்!
மதுரையில் தீபாவளி விற்பனை களைகட்டியது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
பெரமுன :எஞ்சியவர்களும் கலைப்பு!
இலங்கையில் தீண்டுவார் அற்ற கட்சியாக மாறிவரும் பெரமுனவில் தொடர்ந்தும் வெளியேற்றங்கள் நடந்தவண்ணமேயுள்ளது.பலரும் கட்சியை விட்டு தப்பித்து ஓடியுள்ள நிலையில் எஞ்சியவர்கள் மோசடி குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டுவருகின்றனர். வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்டதான சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பெரமுன உறுப்பினர் ம.பரமேஸ்வரன், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றசாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ம.பரமேஸ்வரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என மத்தியகுழு அறிவித்துள்ளது. குறித்த நபர் மீதான முறையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அந்நபரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து கட்சியின் மத்தியகுழு பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TVK Vijay Speech: திராவிட மாடல்; முகமூடி; குடும்ப சுயநலக் கூட்டம்; எங்கள் அரசியல் எதிரி- விஜய்
தற்போது விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து வருகிறது. தங்களது கொள்கை தலைவர்கள், அரசியல் எதிரிகள் பற்றிக் கூறிய விஜய், மேலும் பேசும்போது, இங்கே ஒரு கூட்டம் கொஞ்ச காலமாக ஒரே பாட்டை பாடிக்கொண்டு, யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசிவிட்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் மட்டும் அண்டர் கிரவுண்டில் டீலிங் போட்டுக் கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் அறிக்கை வெளியிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எப்போதும் இந்த பாசிசம் பாசிசம் பாசிசம் அவ்வளவுதான். TVK Vijay Speech ஒற்றுமையாக இருக்கின்ற நம் மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரிவினை பயத்தைக் காட்டி ஃபுல் டைம் சீன் போடுவது வேலையாகிவிட்டது. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா... அவர்களுக்கு நீங்களும் கொஞ்சமும் சளைக்காதவர்கள்தான். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறீர்கள். அதனால், இனிமேல் உங்களை எதிர்க்கிறவர்களுக்கு என்னதான் நீங்கள் கலர் பூசும் மோடி மஸ்தான் வேலையை செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டிக் கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநலக் கூட்டமும் தான் நம் அரசியல் எதிரி. கொள்கை கோட்பாட்டளவில் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள். என்று நேரடியாகவே திமுக-வை சாடினார்.
TVK Vijay Speech: திராவிட மாடல்; முகமூடி; குடும்ப சுயநலக் கூட்டம்; எங்கள் அரசியல் எதிரி- விஜய்
தற்போது விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து வருகிறது. தங்களது கொள்கை தலைவர்கள், அரசியல் எதிரிகள் பற்றிக் கூறிய விஜய், மேலும் பேசும்போது, இங்கே ஒரு கூட்டம் கொஞ்ச காலமாக ஒரே பாட்டை பாடிக்கொண்டு, யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசிவிட்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் மட்டும் அண்டர் கிரவுண்டில் டீலிங் போட்டுக் கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் அறிக்கை வெளியிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எப்போதும் இந்த பாசிசம் பாசிசம் பாசிசம் அவ்வளவுதான். TVK Vijay Speech ஒற்றுமையாக இருக்கின்ற நம் மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரிவினை பயத்தைக் காட்டி ஃபுல் டைம் சீன் போடுவது வேலையாகிவிட்டது. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா... அவர்களுக்கு நீங்களும் கொஞ்சமும் சளைக்காதவர்கள்தான். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறீர்கள். அதனால், இனிமேல் உங்களை எதிர்க்கிறவர்களுக்கு என்னதான் நீங்கள் கலர் பூசும் மோடி மஸ்தான் வேலையை செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டிக் கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநலக் கூட்டமும் தான் நம் அரசியல் எதிரி. கொள்கை கோட்பாட்டளவில் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள். என்று நேரடியாகவே திமுக-வை சாடினார்.
இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு
பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் முழு உறுப்பினராக சேர்வதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை ஒன்பது என்ற எண்ணிக்கையில் தக்கவைக்கும் முடிவைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவரட குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அமைப்பின் பங்காளி உறுப்பு நாடாக இணைவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் அமைச்சரவை அத்துடன், உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் […]
கட்டுநாயக்காவில் வந்திறங்கியவரும் கைது; அழைத்து செல்ல வந்தவர்களும் கைது
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய வளாகத்தில் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்கு வந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருளுடன் கைதான நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரிடமிருந்து 05 கிலோ 26 கிராம் ஐஸ் போதைப்பொருள் […]
என் தங்கை இறப்பு, அடுத்த பாதிப்பு அனிதா மரணம் –த.வெ.க தலைவர் விஜய்!
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரமாண்ட மாநாடு தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கும் அளவுக்கு விக்ரவாண்டி வி.சாலையில் படு பிரமாண்டமாக நடைபெற்றது, மொத்தமாக, மாநாட்டிற்கு சுமார் 13 லட்சத்தி 80 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாநாட்டில் கலந்துகொண்ட கட்சித் தலைவர் விஜய் தன்னுடைய தொண்டர்களுக்குக் குட்டி கதை முதல் கட்சியின் கொள்கைகள் என பல விஷயங்களைப் பற்றியும் பேசினார். அதில் மிகவும் முக்கியமாக தன்னுடைய தங்கை இறப்பு தனக்கு எவ்வளவு பாதித்தது? என்பது […]
TVK Vijay: 'பெரியார் டு அஞ்சலையம்மாள்; கொள்கை தலைவர்கள்... ஏன்?' - விஜய் சொன்ன விளக்கம்
விஜய் அரசியல் கட்சித் தொடங்கிய நாள்முதல் அவரின் கொள்கைகள் என்னவென்று பலதரப்பிலிருந்தும் கேள்விகளை எழுப்பியது. அதற்கெல்லாம், பதிலளிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி. சாலையில் அக்டோபர் 27-ல் நடைபெறும், அதில் கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டில் அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து, கடந்த சில நாள்களாகவே மாநாட்டுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், இன்று மாலை மூன்று மணியளவில், பெரும் தொண்டர்கள் கூட்டத்துக்கு மத்தியில் மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மேடையில் பறையிசையுடன் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. `ஏன் கொள்கை தலைவர்களாக ஏற்றோம்?’ பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை ஏன் கொள்கை தலைவர்களாக ஏற்றோம் என்பது குறித்து விஜய் பேசியதாவது, பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அண்ணா கூறியபடி, `ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனாலும், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூகநீதி, பகுத்தறிவு சிந்தனை என பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம். பெரியாருக்கு அப்புறம் எங்களின் கொள்கைத் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர் . காமராஜர் இந்த மண்ணில் மதசார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாகத்துக்கும், செயல்பாட்டுக்கும் முன்னுதாரணமாக இருப்பதால் அவரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். கொள்கை தலைவர்கள் ஏன்?! இந்திய துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கி காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் . இந்தியாவில் இந்தப் பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறவர்கள் எல்லோரும் நடுங்கிப் போய் விடுவார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்தவும், சாதியை ஒடுக்குமுறையைக்கு எதிராகவும் போராடிய அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். பெண்களைக் கொள்கை தலைவர்களாக ஏற்று களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றி கழகம்தான். அதில், ஒருவர் ஆகப்பெரும் வீராங்கனை இந்த மண்ணை கட்டி ஆண்ட பேரரசி வேலுநாச்சியார் . சொந்த வாழ்க்கையின் சோகத்தை கூட மறந்துவிட்டு இந்த மண்ணுக்காக வாளேந்தியும், வேலேந்தியும் போர்க்களம் புகுந்த ஆணைக் காட்டிலும் வீரமான வேகமான புரட்சியாளர்தான் நம் வேலுநாச்சியார். இன்னொருவர் முன்னேறத் துடிக்கின்ற சமூகத்தில் பிறந்து, இந்த மண்ணில் பின்தங்கி விடக்கூடாது என்று அதன் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள் . சொத்தை இழந்தாலும் சுயநலம் பார்க்காமல் இந்த மண்ணுக்காக இந்திய சுதந்திர போராட்ட களத்தில் இறங்கி போராடிய புரட்சி பெண்மணிதான் நம் அஞ்சலையம்மாள். இவர்கள்தான் நம் கொள்கை தலைவர்கள். இவர்களை நாம் பின்பற்றுவதே நம் மதசார்பின்மைக்கும் சமூக நல்லிணத்துக்குமான மிகப்பெரிய சான்றாக இருக்கும் என்று விளக்கமளித்தார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
TVK Vijay: 'பெரியார் டு அஞ்சலையம்மாள்; கொள்கை தலைவர்கள்... ஏன்?' - விஜய் சொன்ன விளக்கம்
விஜய் அரசியல் கட்சித் தொடங்கிய நாள்முதல் அவரின் கொள்கைகள் என்னவென்று பலதரப்பிலிருந்தும் கேள்விகளை எழுப்பியது. அதற்கெல்லாம், பதிலளிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி. சாலையில் அக்டோபர் 27-ல் நடைபெறும், அதில் கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டில் அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து, கடந்த சில நாள்களாகவே மாநாட்டுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், இன்று மாலை மூன்று மணியளவில், பெரும் தொண்டர்கள் கூட்டத்துக்கு மத்தியில் மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மேடையில் பறையிசையுடன் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. `ஏன் கொள்கை தலைவர்களாக ஏற்றோம்?’ பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை ஏன் கொள்கை தலைவர்களாக ஏற்றோம் என்பது குறித்து விஜய் பேசியதாவது, பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அண்ணா கூறியபடி, `ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனாலும், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூகநீதி, பகுத்தறிவு சிந்தனை என பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம். பெரியாருக்கு அப்புறம் எங்களின் கொள்கைத் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர் . காமராஜர் இந்த மண்ணில் மதசார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாகத்துக்கும், செயல்பாட்டுக்கும் முன்னுதாரணமாக இருப்பதால் அவரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். கொள்கை தலைவர்கள் ஏன்?! இந்திய துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கி காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் . இந்தியாவில் இந்தப் பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறவர்கள் எல்லோரும் நடுங்கிப் போய் விடுவார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்தவும், சாதியை ஒடுக்குமுறையைக்கு எதிராகவும் போராடிய அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். பெண்களைக் கொள்கை தலைவர்களாக ஏற்று களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றி கழகம்தான். அதில், ஒருவர் ஆகப்பெரும் வீராங்கனை இந்த மண்ணை கட்டி ஆண்ட பேரரசி வேலுநாச்சியார் . சொந்த வாழ்க்கையின் சோகத்தை கூட மறந்துவிட்டு இந்த மண்ணுக்காக வாளேந்தியும், வேலேந்தியும் போர்க்களம் புகுந்த ஆணைக் காட்டிலும் வீரமான வேகமான புரட்சியாளர்தான் நம் வேலுநாச்சியார். இன்னொருவர் முன்னேறத் துடிக்கின்ற சமூகத்தில் பிறந்து, இந்த மண்ணில் பின்தங்கி விடக்கூடாது என்று அதன் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள் . சொத்தை இழந்தாலும் சுயநலம் பார்க்காமல் இந்த மண்ணுக்காக இந்திய சுதந்திர போராட்ட களத்தில் இறங்கி போராடிய புரட்சி பெண்மணிதான் நம் அஞ்சலையம்மாள். இவர்கள்தான் நம் கொள்கை தலைவர்கள். இவர்களை நாம் பின்பற்றுவதே நம் மதசார்பின்மைக்கும் சமூக நல்லிணத்துக்குமான மிகப்பெரிய சான்றாக இருக்கும் என்று விளக்கமளித்தார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
தவெக பெயர் காரணம்! விளக்கம் கொடுத்த விஜய்
தவெக கட்சியின் பெயர் குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டார்.
Kauvery Hospitals in association with the Women Motorsport Club, organized a Bikeathon Rally to raise awareness about breast cancer. The
`உங்க Support எனக்கு தைரியத்தை கொடுத்திருக்கு!’ - TVK Vijay Speech | Throwback | Vijay Full Speech
`உங்க Support எனக்கு தைரியத்தை கொடுத்திருக்கு!’ - TVK Vijay Speech | Throwback | Vijay Full Speech
TVK: “மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதை! - தவெக உறுதிமொழி | தவெக முதல் மாநாடு
TVK: `வர்ணாசிரம எதிர்ப்பு, மாநில உரிமை, ஆளுநர் பதவி அகற்றம்’ - விஜய் கட்சியின் முழு செயல்திட்டங்கள்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. `வெற்றிக் கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கிய அம்சமே கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை பிரகடனப்படுத்துவதுதான். அந்த வகையில் கட்சித் தலைவர் விஜய் வழங்க கொள்கைகளை பெற்று வாசித்தார் பேராசிரியர் சம்பத் குமார். அவரைத் தொடர்ந்து செயல்திட்டங்களை தலைவர் விஜயிடம் இருந்து பெற்று வாசித்தார் கேத்தரின் பாண்டியன். செயல்திட்டங்கள்: நிர்வாக சீர்திருத்தம் அரசு தனியார் துறை எதுவாகினும் அதில் எவ்வகையிலும் எவ்வடிவிலும் அரசியல் தலையீடு இருக்கவே கூடாது'. இந்த நிலைப்பாட்டை உறுதிபடுத்தி லஞ்சலாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்துக்கு வழி வகுக்கப்படும். சாதி, மத மற்றும் பாலியல் சார்பின்மை அரசு நிர்வாகத்தின் வழிகாட்டு வழிமுறைகளாக கடைபிடிக்கப்படும். அரசு நிர்வாகம் எப்போதும் அரசியல் சார்ந்ததாகவும் முற்போக்கு சிந்தனையுடனும் பன்முகத்தன்மையுடனும் இயங்கும். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறைபடுத்தப்படும். அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிக்காக உயர் நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது போல, மதுரையில் தலைமைச் செயலக கிளை அமைக்கப்படும். சமூகநீதி சமூகநீதி, மதச்சார்பின்மை கோட்பாடுகள் செயல்படுத்தப்படும். சமதர்ம சமத்துவ கோட்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரான வர்ணாசிரம கோட்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் அவற்றிற்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் சமமான விகிதாச்சார இடப்பங்கீடு அளிக்கப்படும். சாதி, மதம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவச் சூழல் வழங்கப்படும். பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்துடன் இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களின் முன்னேற்றத்திலும் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மொழிக் கொள்கை தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டிற்கு எப்போதும் ஏற்றக் கொள்கை. தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி, வழிபாட்டு மொழி, வழக்காடு மொழி என்பது உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சி கல்வி வரை கற்கலாம் என்பதும் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும். கீழடி, கொந்தகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பழந்தமிழரின் வைகை நதி நாகரீகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை அளிக்கப்படும். மாநில உரிமை மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கை நடைமுறைபடுத்தப்படும். எப்படி மருத்துவம் மாநில பட்டியலில் உள்ளதோ அதேப்போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக இருப்பதால் ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்வி எழும்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும். மகளிர் நலன் தமிழக வெற்றிக் கழகத்தில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு கட்சி பலன்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மகளிருக்கு வழங்கப்படும். படிப்படியாக அது உயர்த்தப்பட்டு 50 விழுக்காடு என்ற நிலை எட்டப்படும். அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும். பெண்கள் குழந்தைகள் முதியோர் பாதுகாப்பிற்கு தனி துறை உருவாக்கப்படும். மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது போல மாவட்டம்தோறும் மகளிருக்கான மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் உருவாக்கப்படும். பகுத்தறிவு மற்றும் தீண்டாமை மனிதகுல அழிவிற்கு வழி வகுக்கிற உடல், மன நலனுக்கு கேடாக அமையும் அறிவியல் சாராத சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும். தீண்டாமை என்பது குற்றம்! தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளை கொண்ட காமராஜர் மாதிரி அரசு பள்ளி ஒன்று உருவாக்கப்படும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கான தரம் உயர்த்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறைக்கென தனியாக அரசு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். மருத்துவம் மாவட்ட அளவில் அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தரம் உயர்த்தப்பட்டு அங்கேயே போதுமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வசதிகள் உருவாக்கப்படும். புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்படும். விவசாயம் விவசாயிகளின் விற்பனை விலை மற்றும் நுகர்வோர் வாங்கும் விலை இவற்றிற்கு இடையேயான இடைவெளியை குறைக்க அறிவியல் பூர்வமான முறைகள் நடைமுறைபடுத்தப்படும். நீர்நிலைகளில் உள்ளா ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதேபோல ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் மீட்டெடுக்கப்படும். அதிக கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்கள் தமிழ்நாடு முழுவது அமைய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களின் மரபுவழி தொழிலான பணை தொழில் மேம்படுத்தப்படும். ஆவின் பாலகங்களில் கருப்பட்டி பாலும் வழங்கப்படும். பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும். நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்படும். பள்ளி மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களின் சீருடைகள் நெசவாளர்களிடமிருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதார மேம்பட அவர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை அரசு உணவகங்கள் மற்றும் விடுதிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை, கனிம வளங்கள் கொள்ளை போன்றவற்றைத் தடுக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும். நகர கிராம பேதம் களைய மாநகரங்களில் மக்கள் தொகையைக் குறைக்க மற்ற பகுதிகள் வளர்ச்சி அடைய மண்டலவாரியான பகுதிசார் வளர்ச்சியைப் பரவலாக்கும்படி, மண்டலவாரியான துணை நகரங்கள் உருவாக்கப்படும். தொழிற்சாலைகள் உரிய விதிகளைப் பின்பற்றுவதையும், அவற்றின் கழிவுகள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறாமல் இருப்பதையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயலிழந்து இருப்பதால் அந்த அமைப்பு இனி சீரமைக்கப்படும். வனவிலங்குகள் பறவைகள் மற்றும் அழியக்கூடிய அபாய நிலையில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பளவு அதிகரிக்கப்படும். போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
TVK: `வர்ணாசிரம எதிர்ப்பு, மாநில உரிமை, ஆளுநர் பதவி அகற்றம்’ - விஜய் கட்சியின் முழு செயல்திட்டங்கள்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. `வெற்றிக் கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கிய அம்சமே கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை பிரகடனப்படுத்துவதுதான். அந்த வகையில் கட்சித் தலைவர் விஜய் வழங்க கொள்கைகளை பெற்று வாசித்தார் பேராசிரியர் சம்பத் குமார். அவரைத் தொடர்ந்து செயல்திட்டங்களை தலைவர் விஜயிடம் இருந்து பெற்று வாசித்தார் கேத்தரின் பாண்டியன். செயல்திட்டங்கள்: நிர்வாக சீர்திருத்தம் அரசு தனியார் துறை எதுவாகினும் அதில் எவ்வகையிலும் எவ்வடிவிலும் அரசியல் தலையீடு இருக்கவே கூடாது'. இந்த நிலைப்பாட்டை உறுதிபடுத்தி லஞ்சலாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்துக்கு வழி வகுக்கப்படும். சாதி, மத மற்றும் பாலியல் சார்பின்மை அரசு நிர்வாகத்தின் வழிகாட்டு வழிமுறைகளாக கடைபிடிக்கப்படும். அரசு நிர்வாகம் எப்போதும் அரசியல் சார்ந்ததாகவும் முற்போக்கு சிந்தனையுடனும் பன்முகத்தன்மையுடனும் இயங்கும். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறைபடுத்தப்படும். அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிக்காக உயர் நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது போல, மதுரையில் தலைமைச் செயலக கிளை அமைக்கப்படும். சமூகநீதி சமூகநீதி, மதச்சார்பின்மை கோட்பாடுகள் செயல்படுத்தப்படும். சமதர்ம சமத்துவ கோட்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரான வர்ணாசிரம கோட்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் அவற்றிற்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் சமமான விகிதாச்சார இடப்பங்கீடு அளிக்கப்படும். சாதி, மதம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவச் சூழல் வழங்கப்படும். பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்துடன் இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களின் முன்னேற்றத்திலும் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மொழிக் கொள்கை தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டிற்கு எப்போதும் ஏற்றக் கொள்கை. தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி, வழிபாட்டு மொழி, வழக்காடு மொழி என்பது உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சி கல்வி வரை கற்கலாம் என்பதும் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும். கீழடி, கொந்தகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பழந்தமிழரின் வைகை நதி நாகரீகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை அளிக்கப்படும். மாநில உரிமை மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கை நடைமுறைபடுத்தப்படும். எப்படி மருத்துவம் மாநில பட்டியலில் உள்ளதோ அதேப்போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக இருப்பதால் ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்வி எழும்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும். மகளிர் நலன் தமிழக வெற்றிக் கழகத்தில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு கட்சி பலன்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மகளிருக்கு வழங்கப்படும். படிப்படியாக அது உயர்த்தப்பட்டு 50 விழுக்காடு என்ற நிலை எட்டப்படும். அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும். பெண்கள் குழந்தைகள் முதியோர் பாதுகாப்பிற்கு தனி துறை உருவாக்கப்படும். மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது போல மாவட்டம்தோறும் மகளிருக்கான மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் உருவாக்கப்படும். பகுத்தறிவு மற்றும் தீண்டாமை மனிதகுல அழிவிற்கு வழி வகுக்கிற உடல், மன நலனுக்கு கேடாக அமையும் அறிவியல் சாராத சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும். தீண்டாமை என்பது குற்றம்! தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளை கொண்ட காமராஜர் மாதிரி அரசு பள்ளி ஒன்று உருவாக்கப்படும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கான தரம் உயர்த்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறைக்கென தனியாக அரசு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். மருத்துவம் மாவட்ட அளவில் அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தரம் உயர்த்தப்பட்டு அங்கேயே போதுமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வசதிகள் உருவாக்கப்படும். புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்படும். விவசாயம் விவசாயிகளின் விற்பனை விலை மற்றும் நுகர்வோர் வாங்கும் விலை இவற்றிற்கு இடையேயான இடைவெளியை குறைக்க அறிவியல் பூர்வமான முறைகள் நடைமுறைபடுத்தப்படும். நீர்நிலைகளில் உள்ளா ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதேபோல ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் மீட்டெடுக்கப்படும். அதிக கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்கள் தமிழ்நாடு முழுவது அமைய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களின் மரபுவழி தொழிலான பணை தொழில் மேம்படுத்தப்படும். ஆவின் பாலகங்களில் கருப்பட்டி பாலும் வழங்கப்படும். பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும். நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்படும். பள்ளி மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களின் சீருடைகள் நெசவாளர்களிடமிருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதார மேம்பட அவர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை அரசு உணவகங்கள் மற்றும் விடுதிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை, கனிம வளங்கள் கொள்ளை போன்றவற்றைத் தடுக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும். நகர கிராம பேதம் களைய மாநகரங்களில் மக்கள் தொகையைக் குறைக்க மற்ற பகுதிகள் வளர்ச்சி அடைய மண்டலவாரியான பகுதிசார் வளர்ச்சியைப் பரவலாக்கும்படி, மண்டலவாரியான துணை நகரங்கள் உருவாக்கப்படும். தொழிற்சாலைகள் உரிய விதிகளைப் பின்பற்றுவதையும், அவற்றின் கழிவுகள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறாமல் இருப்பதையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயலிழந்து இருப்பதால் அந்த அமைப்பு இனி சீரமைக்கப்படும். வனவிலங்குகள் பறவைகள் மற்றும் அழியக்கூடிய அபாய நிலையில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பளவு அதிகரிக்கப்படும். போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
அரசியல் களத்தில் இறங்கியது ஏன்? - த.வெ.க மாநாட்டில் விஜய் கொடுத்த விளக்கம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் தான் ஏன் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் விளக்கம் கொடுத்துள்ளார்.
தவெக மாநாடு... சொல் முக்கியமல்ல செயல்தான் முக்கியம்; தொண்டர்களிடையே வேண்டுகோள் வைத்த விஜய்!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விஜய் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உரையை தொடங்கினார் அப்போது விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
விமானங்களுக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் நிலையில், தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு, தவறான தகவல்களை உடனடியாக நீக்குமாறு சமூக வலைதளங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோா் குறித்த தகவல்களை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 சட்டத்தின்படி அரசுக்கு உடனடியாக தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இத்துடன் […]
TVK Maanadu : Vijay டார்கெட் செய்யும் கட்சி இதுதான் | live Report
TVK Maanadu : Vijay டார்கெட் செய்யும் கட்சி இதுதான் | live Report
“இங்கு பாம்பு தான் அரசியல்”…தொண்டர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சொன்ன குட்டிக்கதை!!
விழுப்புரம் :த.வெ.கவின் பிரமாண்ட மாநாடு இன்று விக்கிரவாண்டி வி சாலையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் வருகை தந்திருக்கிறார்கள். அலைமோதும் மக்கள் கூட்டத்துடன் விஜயின் பேச்சுக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் விஜய் அரசியல் ஒரு பாம்பு எனத் தனது பேச்சை ஆரம்பித்து குட்டிஸ்டோரியை பேசத்தொடங்கினார். இது குறித்து அவர் பேசியதாவது ” ஒரு குழந்தை தன்னுடைய அம்மாவைப் பார்த்து அம்மா என்று சொல்லும் போது […]
காய்கறி வாங்கிட்டீங்களா இல்லையா? ரேட் என்னனு பாருங்க!
சென்னையில் இன்றைய (அக்டோபர் 27) காய்கறி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
TVK Vijay: `உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன்...' - தவெக கொள்கைப் பாடல் வரிகள் இங்கே!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வி.சாலையில் இன்று மாலை 3 மணியளவில் கட்சிப் பாடலுடன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. விஜய்யின் பெற்றோர்களான ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். மாநாட்டில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். விஜய் தொண்டர்களுக்கு கை அசைத்தப்படி, முழுமையாக நடந்து சென்று பின் மேடைக்குத் திரும்பினார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். வரவேற்புரை முடிந்ததும், கட்சியின் புதிய கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் வரிகள் இங்கே!!! tvk vijay வெற்றி வெற்றி வெற்றி வாகை வெற்றி வெற்றி வெற்றி வாகை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ தமிழ்த்தாயின் பிள்ளை தலைச்சன் இதோ உழைக்கும் இனத்தின் விளைச்சல் இதோ வெற்றி வெற்றி வெற்றி வாகை வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வாகை தமிழ் வணக்கம் அனைவருக்கும் புது சரித்திரம் இனி பிறக்கும் போர் துவக்கம் யார் தடுத்தும் இது நடநடவென நடக்கும்! பறை முழங்கிட தரை நடுங்கிட தலைமுறை தலை நிமிர்த்தும் இனம் விடுதலையினை சுவைக்கும் ஒளிநிரந்தரமென நிலைக்கும். நில்லாமல் போராடு வெல்லும் வரை இல்லாமை இல்லாமல் செல்லும் வரை துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை நினைத்தால் முடிப்போம் மாறும் நிலை ஐயா! வாகை வாகை வாகை வெற்றித் தமிழ் வாகை யானை யானை யானை யானை இது ரெட்டைப் போர் யானை ``என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவராக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு தமிழக வெற்றி கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன் கொள்கைத் தலைவர்கள் யார்? கொள்கை வேர்தன்னைப் பார் கொள்கைத் தலைவர்கள் யார்? கொள்கை வேர்தன்னைப் பார் மொழி எழுந்திட தரை விழுந்திட்ட குருதியில் மன உறுதியும் பெற மதம், இனம், மொழி, பாலினமது சமமெனப் புது யுகம் பிறந்திட நீர் மருத்துவம் காற்று உணவோடு கல்வி உலகத்தரமடைந்திட அறிவியலோடு அழகிய தமிழ்நாடெனப் புகழ் வானுயர்ந்தியட TVK vijay நமது உரிமை நமது பெருமை கரங்கள் இணைய மாறும் நிலைமை மண் பயனுற பெண் பயனுற இத்தலைமுறை புத்தொளி பெற வெற்றித் தலைவன் வழியில் நித்தம் செல்வோம் கொள்கைத் தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம் மொழித்தியாக முன்னோரைக் கொண்டாடவே மதச்சார்பு இல்லா ஜனம் சேரவே விழிப்போம் உழைப்போம் நமக்காகவே இலக்கே நமக்கே ஜெயம் நாளையே தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலம் அமைக்கும் கழகம் தமிழக வெற்றிக் கழகம் தமிழ் நாட்டை உயர்த்தும் கழகம் நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழக வெற்றிக் கழகம் வாழி புதியதோர் விதி ஒன்றை புதுமையை நாம் செய்வோம்!
TVK Vijay: `உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன்...' - தவெக கொள்கைப் பாடல் வரிகள் இங்கே!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வி.சாலையில் இன்று மாலை 3 மணியளவில் கட்சிப் பாடலுடன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. விஜய்யின் பெற்றோர்களான ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். மாநாட்டில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். விஜய் தொண்டர்களுக்கு கை அசைத்தப்படி, முழுமையாக நடந்து சென்று பின் மேடைக்குத் திரும்பினார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். வரவேற்புரை முடிந்ததும், கட்சியின் புதிய கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் வரிகள் இங்கே!!! tvk vijay வெற்றி வெற்றி வெற்றி வாகை வெற்றி வெற்றி வெற்றி வாகை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ தமிழ்த்தாயின் பிள்ளை தலைச்சன் இதோ உழைக்கும் இனத்தின் விளைச்சல் இதோ வெற்றி வெற்றி வெற்றி வாகை வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வாகை தமிழ் வணக்கம் அனைவருக்கும் புது சரித்திரம் இனி பிறக்கும் போர் துவக்கம் யார் தடுத்தும் இது நடநடவென நடக்கும்! பறை முழங்கிட தரை நடுங்கிட தலைமுறை தலை நிமிர்த்தும் இனம் விடுதலையினை சுவைக்கும் ஒளிநிரந்தரமென நிலைக்கும். நில்லாமல் போராடு வெல்லும் வரை இல்லாமை இல்லாமல் செல்லும் வரை துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை நினைத்தால் முடிப்போம் மாறும் நிலை ஐயா! வாகை வாகை வாகை வெற்றித் தமிழ் வாகை யானை யானை யானை யானை இது ரெட்டைப் போர் யானை ``என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவராக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு தமிழக வெற்றி கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன் கொள்கைத் தலைவர்கள் யார்? கொள்கை வேர்தன்னைப் பார் கொள்கைத் தலைவர்கள் யார்? கொள்கை வேர்தன்னைப் பார் மொழி எழுந்திட தரை விழுந்திட்ட குருதியில் மன உறுதியும் பெற மதம், இனம், மொழி, பாலினமது சமமெனப் புது யுகம் பிறந்திட நீர் மருத்துவம் காற்று உணவோடு கல்வி உலகத்தரமடைந்திட அறிவியலோடு அழகிய தமிழ்நாடெனப் புகழ் வானுயர்ந்தியட TVK vijay நமது உரிமை நமது பெருமை கரங்கள் இணைய மாறும் நிலைமை மண் பயனுற பெண் பயனுற இத்தலைமுறை புத்தொளி பெற வெற்றித் தலைவன் வழியில் நித்தம் செல்வோம் கொள்கைத் தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம் மொழித்தியாக முன்னோரைக் கொண்டாடவே மதச்சார்பு இல்லா ஜனம் சேரவே விழிப்போம் உழைப்போம் நமக்காகவே இலக்கே நமக்கே ஜெயம் நாளையே தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலம் அமைக்கும் கழகம் தமிழக வெற்றிக் கழகம் தமிழ் நாட்டை உயர்த்தும் கழகம் நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழக வெற்றிக் கழகம் வாழி புதியதோர் விதி ஒன்றை புதுமையை நாம் செய்வோம்!
‘ஆளுநர் பதவி தேவையில்லை’…’போதை இல்லாத தமிழ்நாட்டை படைப்போம்’–தவெக செயல்திட்டம்.
விழுப்புரம் : தவெக முதல் மாநாடு இன்று பிரம்மாண்டமாக தொடங்கிய நிலையில், தமிழக முதலில் அக்கட்சியின் தலைவர் 100 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினார். அதன்பின், கட்சியின் செயல்திட்டம் மேடையில் அறிவிக்கப்பட்டது. அந்த செயல்திட்டத்தில், “சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை. அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள் நிராகரிக்கப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை ஏற்படுத்தப்படும். சாதி, மதம், நிறம், மொழி, இனம், பாலின பாகுபாடின்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். மாநில தன்னாட்சி வேண்டும். மது, போதை இல்லாத […]
TVK Vijay Speech: `பாம்பே ஆனாலும் பயமில்ல' - கர்ஜித்த விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநட்டில் கட்சிக்கான கொள்கை பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். `என்நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவராக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காமராஜரையும் மாநாட்டில் விஜய்... அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளோடு தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன்!' என விஜய்யின் குரலும் அந்த பாடலில் இடம்பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து பேச தொடங்கிய கழக தலைவர் விஜய் தனது வழக்கமான ஸ்டைலில் ஒரு குட்டி கதையுடன் தொடங்கினார். பேச தொடங்கிய அவர் ஒரு குழந்தை முதன் முதலாக அம்மானு சொல்லும்போது அவங்களுக்கு ஒரு சிலிர்ப்பு வரும். அந்த சிலிரிப்பு பத்தி அவங்களாக தெளிவாக சொல்ல முடியும். அந்த உணர்வு எப்படி இருந்ததுனு கேட்டால் அந்த குழந்தைக்கு எப்படி சொல்லும்? குழந்தைகிட்ட எதை கேட்டாலும் பால் வாசத்துடன் மழலையுடன் சிரிக்க மட்டும்தான் தெரியும். விஜய் அந்த உணர்வை சிலாகிச்சு அந்த குழந்தையால சொல்ல முடியாதுல. அப்படி ஒரு உணர்வோடதான் உங்க முன்னாடி நான் நிற்கிறேன். அம்மாகிட்டகூட தன்னுடைய உணர்வை சொல்ல தெரியாமல் இருக்கிற அந்த குழந்தைக்கு முன்னால் ஒரு பாம்பு வந்து படமெடுக்குதுனு வைங்க....எல்லோரும் பாம்பை கண்டதும் ஓடிடுவாங்க. `பாம்பை கண்டால் படையே நடுங்கும்'னு ஒரு பழமொழியே இருக்கு. தன்னோட அம்மாவை பார்த்து சிரிச்ச அதே சிரிப்போட அந்த பாம்பையும் கொஞ்சம்கூட அலட்டிக்காமல் கையில பிடிச்சு விளையாடும். அப்போ அந்த குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் இல்லையானு ஒரு கேள்வி வரும். பாச உணர்வையே என்னனு சொல்ல தெரியாத குழந்தைக்கு பயம்னா மட்டும் என்னனு சொல்ல தெரியும். இங்க அந்த பாம்புதான் அரசியல். அதை கையில பிடிச்சு விளையாட ஆரம்பிக்கிறதுதான் உங்கள்....! அரசியலுக்கு நாம குழந்தைதான் . த.வெ.க கொள்கை பாடல் இது மற்றவர்களுடைய கருத்து. ஆனா, பாம்பாக இருந்தாலும் பயம் இல்லைங்கிறதுதான் நம்முடைய நம்பிக்கை. அரசியல் சினிமா கிடையாது. அரசியல் போர்களம் ஆச்சே! பாம்பாக இருந்தாலும் பாலிடிக்ஸாக இருந்தாலும் கையில எடுக்கணும்னு முடிவு பண்ணினதுக்குப் பிறகு சீரியஸ்னெஸுடன் சிரிப்பையும் கலந்து செயல்படுறதுதான் நம்ம ஸ்டைல். அப்படி இருந்தால்தான் இந்த களத்துல எதிர்ல நிற்கிறவர்களை சமாளிக்க முடியும். என்றார்
TVK Vijay Speech: `பாம்பே ஆனாலும் பயமில்ல' - கர்ஜித்த விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநட்டில் கட்சிக்கான கொள்கை பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். `என்நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவராக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காமராஜரையும் மாநாட்டில் விஜய்... அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளோடு தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன்!' என விஜய்யின் குரலும் அந்த பாடலில் இடம்பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து பேச தொடங்கிய கழக தலைவர் விஜய் தனது வழக்கமான ஸ்டைலில் ஒரு குட்டி கதையுடன் தொடங்கினார். பேச தொடங்கிய அவர் ஒரு குழந்தை முதன் முதலாக அம்மானு சொல்லும்போது அவங்களுக்கு ஒரு சிலிர்ப்பு வரும். அந்த சிலிரிப்பு பத்தி அவங்களாக தெளிவாக சொல்ல முடியும். அந்த உணர்வு எப்படி இருந்ததுனு கேட்டால் அந்த குழந்தைக்கு எப்படி சொல்லும்? குழந்தைகிட்ட எதை கேட்டாலும் பால் வாசத்துடன் மழலையுடன் சிரிக்க மட்டும்தான் தெரியும். விஜய் அந்த உணர்வை சிலாகிச்சு அந்த குழந்தையால சொல்ல முடியாதுல. அப்படி ஒரு உணர்வோடதான் உங்க முன்னாடி நான் நிற்கிறேன். அம்மாகிட்டகூட தன்னுடைய உணர்வை சொல்ல தெரியாமல் இருக்கிற அந்த குழந்தைக்கு முன்னால் ஒரு பாம்பு வந்து படமெடுக்குதுனு வைங்க....எல்லோரும் பாம்பை கண்டதும் ஓடிடுவாங்க. `பாம்பை கண்டால் படையே நடுங்கும்'னு ஒரு பழமொழியே இருக்கு. தன்னோட அம்மாவை பார்த்து சிரிச்ச அதே சிரிப்போட அந்த பாம்பையும் கொஞ்சம்கூட அலட்டிக்காமல் கையில பிடிச்சு விளையாடும். அப்போ அந்த குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் இல்லையானு ஒரு கேள்வி வரும். பாச உணர்வையே என்னனு சொல்ல தெரியாத குழந்தைக்கு பயம்னா மட்டும் என்னனு சொல்ல தெரியும். இங்க அந்த பாம்புதான் அரசியல். அதை கையில பிடிச்சு விளையாட ஆரம்பிக்கிறதுதான் உங்கள்....! அரசியலுக்கு நாம குழந்தைதான் . த.வெ.க கொள்கை பாடல் இது மற்றவர்களுடைய கருத்து. ஆனா, பாம்பாக இருந்தாலும் பயம் இல்லைங்கிறதுதான் நம்முடைய நம்பிக்கை. அரசியல் சினிமா கிடையாது. அரசியல் போர்களம் ஆச்சே! பாம்பாக இருந்தாலும் பாலிடிக்ஸாக இருந்தாலும் கையில எடுக்கணும்னு முடிவு பண்ணினதுக்குப் பிறகு சீரியஸ்னெஸுடன் சிரிப்பையும் கலந்து செயல்படுறதுதான் நம்ம ஸ்டைல். அப்படி இருந்தால்தான் இந்த களத்துல எதிர்ல நிற்கிறவர்களை சமாளிக்க முடியும். என்றார்
பெரியார் தான் கொள்கை தலைவர்... எப்படி தெரியுமா? தவெக தலைவர் விஜய் அதிரடி!
தவெக முதல் மாநில மாநாட்டில் தந்தை பெரியார் தான் கொள்கை தலைவர் என்றும், அது எப்படி என்றும் கட்சி தலைவர் விஜய் விளக்கியுள்ளார். ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் ஏற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சமூகநீதி, மாநில தன்னாட்சி, விகிதாச்சார இடஒதுக்கீடு : தவெக கொள்கைகள் அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பமே வெறித்தனம்.. விஜய்யா இது.. முதல் மாநாட்டிலேயே தெறிக்கவிட்ட தளபதி!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் எந்த ஃபார்மாலிட்டிஸும் இல்லாமல் சரமாரியாக வெளுத்து வாங்கினார் விஜய்.
தமிழக வெற்றிக்கழக மாநில மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது முதலில் மேடைக்கு வந்த விஜய் போராட்டத் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு கொடியேற்றப்பட்டு கொள்கை பாடல் அறிமுகம் செய்யப்பட்டது அதில் இறுதியாக மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்ட மக்களுக்கு நன்மை செய்ய நான் வருகிறேன் என்ற வரியை விஜய் தனது குரலில் பாடியுள்ளார்.
ராஜபாளையம் கிராம மக்களிடம் ஒரு கோடிக்கு மேல் மோசடி! பிரபல நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார்!
அதிக பணம் தருவதாக கூறி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் டிரான்ஸ் இந்தியா நிறுவனம் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. ஏமாந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அதே நிறுவனத்தை சேர்ந்தவர்கள் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு முயல்வதாக வந்த தகவலை அடுத்து அந்த நிறுவன ஊழியர் செழியன் என்பவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடமிருந்து தப்பிச் சென்ற அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியார், அம்பேத்கர், காமராஜர், வழியில் நடக்க.. “நான் வரேன்”தவெக தலைவர் விஜய்.!
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடானது தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கினார். அதன்பிறகு, கட்சியின் இரண்டாவது பாடலும் மாநாட்டில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த பாடல் தொண்டர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 2 முறை மாநாட்டில் ஒலிக்கப்பட்டது. பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் தொண்டர்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு காமராஜர், அம்பேத்கார், பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோருடைய […]
TVK : `அதிமுக ஓட்டு விஜய் கட்சிக்குச் செல்லும்!' - சொல்கிறார் புகழேந்தி
அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புகழேந்தி, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக-வை ஒருங்கிணைப்பது கஷ்டமாக உள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. புகழேந்தி அவர் எந்தக் காலத்திலும் பின்வாங்கி விட வேண்டாம். விஜய் மாறுதலுக்காக வருகிறார். விஜயகாந்த் இருந்திருந்தால் அந்த மாறுதல் வேறு மாதிரி இருந்திருக்கும். விஜய்யால் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் பாதிப்பு வரும். அதிமுக ஓட்டு விஜய்க்குச் சென்று விடும். புதிய வரவுகளால் அதிமுக-வுக்குத்தான் பெரிய பாதிப்பு ஏற்படும். பொதுமக்கள் அனைவரும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும், எம்.ஜி.ஆர் ஆட்சி வேண்டும் என்ற நினைக்கிறார்கள். TVK| Vijay - விஜய் - தவெக அதிமுக-வை தற்போதுள்ள தலைவர்கள் நடத்தவில்லை. பாஜக தான் நடத்துகிறது. தற்போது ரெய்டு செல்லும் போது எடப்பாடி பழனிசாமி ஏன் வாய் திறக்கவில்லை. மேலும் பாஜக-வை பார்த்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவருக்கும் பயம். எஸ்.பி.வேலுமணி பாஜக கனவில் இருக்கிறார். அதனால் அவர் எதுவும் பேச மாட்டார். எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்தால் அனைத்தும் மாறிவிடும். எடப்பாடி பழனிசாமி ஆனால் எடப்பாடி பழனிசாமி திருந்துவதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறியது எடப்பாடி பழனிசாமி தான். ஆனால் தற்போது திமுக-வை கை காண்பிக்கிறார்.” என்று குற்றம்சாட்டினார். TVK : ``மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதை! - தவெக உறுதிமொழி | தவெக முதல் மாநாடு Live Updates!
TVK : `அதிமுக ஓட்டு விஜய் கட்சிக்குச் செல்லும்!' - சொல்கிறார் புகழேந்தி
அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புகழேந்தி, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக-வை ஒருங்கிணைப்பது கஷ்டமாக உள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. புகழேந்தி அவர் எந்தக் காலத்திலும் பின்வாங்கி விட வேண்டாம். விஜய் மாறுதலுக்காக வருகிறார். விஜயகாந்த் இருந்திருந்தால் அந்த மாறுதல் வேறு மாதிரி இருந்திருக்கும். விஜய்யால் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் பாதிப்பு வரும். அதிமுக ஓட்டு விஜய்க்குச் சென்று விடும். புதிய வரவுகளால் அதிமுக-வுக்குத்தான் பெரிய பாதிப்பு ஏற்படும். பொதுமக்கள் அனைவரும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும், எம்.ஜி.ஆர் ஆட்சி வேண்டும் என்ற நினைக்கிறார்கள். TVK| Vijay - விஜய் - தவெக அதிமுக-வை தற்போதுள்ள தலைவர்கள் நடத்தவில்லை. பாஜக தான் நடத்துகிறது. தற்போது ரெய்டு செல்லும் போது எடப்பாடி பழனிசாமி ஏன் வாய் திறக்கவில்லை. மேலும் பாஜக-வை பார்த்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவருக்கும் பயம். எஸ்.பி.வேலுமணி பாஜக கனவில் இருக்கிறார். அதனால் அவர் எதுவும் பேச மாட்டார். எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்தால் அனைத்தும் மாறிவிடும். எடப்பாடி பழனிசாமி ஆனால் எடப்பாடி பழனிசாமி திருந்துவதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறியது எடப்பாடி பழனிசாமி தான். ஆனால் தற்போது திமுக-வை கை காண்பிக்கிறார்.” என்று குற்றம்சாட்டினார். TVK : ``மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதை! - தவெக உறுதிமொழி | தவெக முதல் மாநாடு Live Updates!
வெற்றி.. வெற்றி.. என தொடங்கும் தவெக கொள்கை விளக்கப் பாடல் வெளியீடு.!
விழுப்புரம் : தவெக பாடல் பிண்ணனியில் ஒலிக்க 100 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார் கட்சித்தலைவர் விஜய். இதனை தொடர்ந்து,தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று தொடங்கிய கொள்கை பாடலில் துப்பார்க்கு துப்பாய என்ற திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தவெக செயல்படும் என்றும் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் வழியில் நான் பயணிப்பேன் […]
சமூக நீதியின் பாதையில் பயணிப்போம்: தவெக மாநாட்டில் தொண்டர்கள் உறுதி மொழி ஏற்பு.!
விழுப்புரம் : தவெக முதல் மாநாடு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு, சுமார் 8 லட்சம் குவிந்துள்ள மாநாட்டுத் திடலில் தொடக்கத்தில், மாநாடு மேடையில் நடந்து வந்த அவருக்கு வழிநெடுகிலும் கட்சி துண்டுகளை தொண்டர்கள் வீசினர். அதனை லாவகமாக பிடித்து தோளில் சுமந்து சென்றார். அதன்பிறகு, தவெக மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கொடிக் கம்பத்தில் கட்சி தலைவர் விஜய் கட்சிக் கொடியை ஏற்றினார். பின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு அதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகி கட்சியின் உறுதிமொழியை […]
மதச்சார்பின்மை, சமூக நீதி : தவெக மாநாட்டில் வாசிக்கப்பட்ட உறுதிமொழி!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சியின் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதில் மதச்சார்பின்மை, சமூக நீதி உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
கொடியை ஏற்றியவுடன் நெகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே கண்கலங்கிய தவெக தலைவர் விஜய்!
விழுப்புரம் :த.வெ.கவின் பிரமாண்ட மாநாடு இன்று விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் சரியாக 3 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மாநாடு தொடங்கியதை தொடர்ந்து சரியாக 4 மணி அளவில் தொண்டர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் மேடைக்கு வருகை தந்தார். அப்போது, கட்சி பாடல் ஒலிக்கபட்டது. அதன்பிறகு, மாநாடு நடைபெறும் மேடைக்கு வருகை தந்தார். வந்தவுடன் தனது தொண்டர்களுக்கு கை அசைத்து நலம் விசாரித்தார். நடைபாதையில் கட்சித் தலைவர் விஜய் நடந்து கொண்டிருக்கும் போது மேடை பக்கவாட்டு தடுப்புகளை […]
தொண்டர்கள் வீசிய துண்டை தோளில் சுமந்து சென்ற தவெக தலைவர் விஜய்.!
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு தற்போது விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு தொடங்கியதும் மேடையை நோக்கி அமைக்கபட்ட பிரமாண்ட நடைமேடையில் தவெக தலைவர் விஜய் நடந்து வந்தார். அப்போது இரு பக்கத்தில் இருந்தும் கட்சி தொண்டர்கள் தவெக கட்சி துண்டை அன்பாக வீசினர். அதனை லாவகமாக எடுத்து தோளில் அணிந்து தனது ரோம்ப் வாக் சென்றார் தவெக தலைவர் விஜய். இதனை கண்ட மற்ற தொண்டர்களும் […]
Tvk Vijay: பறக்கும் கொடி; ஆர்ப்பரிக்கும் தவெக தொண்டர்கள்!|Photo Album
Tvk Vijay: பறக்கும் கொடி; ஆர்ப்பரிக்கும் தவெக தொண்டர்கள்!|Photo Album
கூட்டத்தை பார்த்து எமோஷனால் ஆன விஜய்.. கண்களில் வழிந்த கண்ணீர்.. கலங்கிய தொண்டர்கள்!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தொண்டர்கள் கூட்டத்தை கண்டு எமோஷனலான விஜய் மேடையிலேயே கண்ணீர் விட்டார். இதனைக் கண்ட தொண்டர்களும் கண்கள் கலங்கினர்.
த.வெ.க மாநாடு: விஜய் உடன் மேடையில் அமர்ந்த 4 பேர்... யார் இவர்கள்!
விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் மேடையில் கட்சியின் தலைவர் விஜய் உடன் நான்கு பேர் அமர்ந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
TVK : `தம்பி விஜய் செய்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும்!' - தவெக மாநாடு குறித்து சீமான்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் தொடங்கியிருக்கிறது. விஜய் தனது கொள்கைகள் குறித்து முதன்முறையாக பேச உள்ளதால் இந்த மாநாட்டுக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. விஜய்க்கு அரசியல் களத்தில் இருந்து எப்போதும் ஆதரவளித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாடு தொடங்குவதற்கு சற்றுமுன் விஜய் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார். அவர், நாங்கள் அரசியலுக்கு வரும்போது எங்களுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இல்லை. இன்றைய பிள்ளைகள் திரைத்துறை பின்னணியில் இருந்துவரும்போது அதன் வீச்சும், ரீச்சும் அதிகமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் இன்றும் அனாதையாக இருக்க வேண்டியது உள்ளது. இந்த மாநாடு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். எனப் பேசினார். விஜய் மாநாட்டுத் திடலில் அண்ணா, பிரபாகரன், எம்.ஜி.ஆர் புகைப்படங்கள் இல்லாதது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அண்ணா திமுக-வின் தோற்றுனர். அவர் வந்த பிறகுதான் தமிழ் இலக்கியமும் வரலாறும் அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. அதற்காக அவர்மீது மரியாதை உள்ளது. அவர் இருந்திருந்தால் நம் நிலத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும். அண்ணாவை விரைவாக மரணம் ஆட்கொண்டது ஒரு கெடு வாய்ப்பு. அண்ணாவை வைக்காததற்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பெரியாரை வைத்தது அவர், அண்ணாவுக்குமான குறியீடாக இருப்பது காரணமாக இருக்கலாம். சேர, சோழ, பாண்டியர்களையும் வேலு நாச்சியாரையும் வைத்ததால், அவர்களது பேரன்தான் பிரபாகரன் என விட்டிருக்கலாம். பிரபாகரனை அண்ணன் வைத்திருப்பதால் நாம் வைக்க வேண்டாம் என்றும் நினைத்திருக்கலாம். கட்டவுட் அல்ல அரசியல், கருத்தியல்தான் அரசியல். வேலுநாச்சியாரையும் அம்பேத்கரையும் வைப்பது பெரிதல்ல, அவர்களை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். நான் பேசவில்லை என்றால், சுந்தரலிங்கம், வேலுநாச்சியாரையெல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்குமா? எனவே தம்பி வைத்திருக்கும் புகைப்படங்களுக்காக நாம் பெருமையடைய வேண்டும். என பதிலளித்தார். மேலும் அவர், விஜய் தொடங்குவதற்கு அவரது சினிமா பிரபல்யம் உதவும். ஆனால் தலைவனாக தன்னை தக்கவைத்துக்கொள்ள மக்கள் பிரச்னைகளை சந்தித்து மக்களின் முகமாக போராட்டக்களங்களில் நிற்க வேண்டும். தலைவனாக நிலைத்திருக்க உழைக்க வேண்டும். என்றும் பேசினார். Vijay: `விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பதில் இந்த அரசுக்கு என்ன பிரச்னை?' - பிரேமலதா கேள்வி!
கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லை! ஜோசப் ஸ்டாலின்
நாட்டில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான யோசனைகள் தொடர்பாக பிரதமர் கேட்டறிந்து கொண்டார். எனினும், அதற்கான பதிலை அவர் வழங்கியிருக்கவில்லை. இந்நிலையில், […]
தவெக மாநாடு: விடுதலை வீரர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை... மேடையில் மரியாதை செலுத்திய விஜய்
விடுதலை போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், மன்னர்கள் உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பெயர்களையும் வேட்பாளர்களின் சின்னங்களையும் அடையாளப்படுத்தி நினைவிற் கொள்ள முடியாது அப்பாவி மக்கள் அவலப்படுகின்றனர். இது போதாதென்று மந்தி(ரி)ப் பதவிக்கும் வேட்டை நடைபெறுவதாக தெற்கிலிருந்து செய்தி வருகிறது. முதலில், ஆகக்குறைந்தது ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார தமிழர் தாயகத்தில் பெற்ற 246,187 வாக்குகளையாவது சுமந்திரன் அணி பெறுமா என்பதே இன்றுள்ள கேள்வி. பொதுத்தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகின்ற போதிலும், முன்னைய காலங்கள் போன்று அட்டகாச ஊர்வலங்கள், ஆதரவுக் கூட்டங்கள் என்பவை இதுவரை காணப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்த சூட்டோடு சூடாக பொதுத்தேர்தல் இடம்பெறுவதால், அதில் வெற்றி பெற்றவர்களே இதிலும் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளதுபோல தெரிகிறது. மூன்று எம்.பிக்களுடன் மட்டுமே உள்ள ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி மூன்று இலக்கங்களுக்கும் அப்பால் வெற்றியீட்டினால் மட்டுமே நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெறமுடியும். பொதுத்தேர்தல் மாவட்ட ரீதியாக இடம்பெற்றாலும், 160 தொகுதிகள் வரையறை செய்யப்பட்டவாறே உள்ளன. இவற்றுள் 106 தொகுதிகளில் அநுர குமார கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூடிய வாக்குகளைப் பெற்றது. 225 எம்.பிக்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113ஐ பெற்றால் மட்டுமே மசோதாக்களை இலகுவாக நிறைவேற்ற முடியும். கடந்த மாத ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 46 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை தேசிய மக்கள் சக்தி பெற்ற 106 உடன் ஒப்பிடுகையில் 50 வீதத்துக்கும் குறைவானது. இதனால் அநுர குமார அணி 113 ஆசனங்களை இலகுவாக வெற்றி கொள்ளலாமென மற்றைய கட்சிகள் தங்களுக்குள் நம்புகின்றன. தெற்கில் மற்றைய கட்சிகள் நடத்தும் போட்டி எதிர்கட்சியை கைப்பற்றுவதற்கானது. ஆனால், சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவோம் என்ற முழக்கத்துடன் இவரது அணியினர் அறிக்கைப் பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். இதனை முறியடிப்பதற்காக அநுர குமார அணி பெரும்பான்மையான வேட்பாளர்களாக இளைஞர்களையும் பெண்களையும் களத்தில் இறக்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தமது தரப்பின் பரப்புரைக்கு தலைமை தாங்கிவரும் ரணில் விக்கிரமசிங்க, இளையோரால் நாடாளுமன்றத்தை நிரப்பினால் ஆட்சி வெற்றி பெறாது என்ற பாணியில் தமது கருத்துகளை விசிறி வருகிறார். நாட்டின் பொருளாதார நிலைமையை தொடர்ந்து சீராக்க வேண்டுமானால் தமது நிர்வாகத்திலிருந்த துறைசார் அனுபவஸ்தர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டுமென்று வேண்டுகிறார். இப்போதுள்ள அரசியல் களம் இவரது குரலுக்கு வாய்ப்பானதாக இல்லை. 1970ல் சிறீமாவோ பண்டாரநாயக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் ஆட்சிக்கு வந்தபோது அவரது மகனான அநுர பண்டாரநாயக்க மற்றும் மகிந்த ராஜபக்ச உட்பட பலர் முப்பது வயதுக்கும் குறைவான இளையவர்களாக இருந்தனர். 1977ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆறிலிரண்டு பெரும்பான்மையில் ஆட்சியைக் கைப்பற்றியபோது அவரது பெறாமகனான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுர டானியல் உட்பட பெரும்பான்மையினர் திருமணம் புரிந்திராத இளையோராக இருந்தனர். மேலே பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பல இளையோர் பிற்காலத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல அமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர். முதியோர் இல்லம் செல்ல வேண்டியவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று அரசியல் முழக்கமிடும் இக்காலத்தில் இளையோரை தவிர்க்க வேண்டுமென்றும் அவர்கள் அவர்கள் அனுபவமற்றவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு அவர்களை நீக்குமாறு கோருவது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. பெரும்பான்மையான இளையோர் மற்றும் பெண்களை வேட்பாளர்களாக்கியுள்ள ஜனாதிபதி அநுர குமார அணி, எப்பாடுபட்டாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறும் இலக்குடன் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவும், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கவும் மூன்றிலிரண்டு அவசியம் என்பதை காரணம் கூறி வாக்குக் கேட்கப்படுகிறது. இது விடயத்தில் எதிர்பாராத வகையில் எதிர்தரப்பிலிருந்து இவர்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தேவையான ஆதரவை நாடாளுமன்றத்தில் தங்களால் தரமுடியுமென்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவும் முற்கூட்டியே (அநுர அணி கேட்காமல்) அறிவித்துள்ளனர். இதுகூட அரசியலில் வித்தியாசமான ஒரு நகர்வு. அதாவது அநுர அணிக்கு மூன்றிலிரண்டு எண்ணிக்கை தேர்தலூடாக தேவையில்லை என்பதை வாக்காளப் பெருமக்களுக்குத் தெரிவிப்பதற்கானது. எதிர்கட்சிகள் அறிவித்திருக்கும் இந்த ஆதரவு அநுர குமார தரப்பை ஓர் இக்கட்டுக்குள் தள்ளியுள்ளது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எதிர்கட்சிகள் வழங்குமானால் தனிக்கட்சியாக அந்த வெற்றியை அநுர குமார பெறுவதை தடுக்கலாம். அதேசமயம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட வேண்டிய கட்டாயத்துக்குள்ளும் அநுர குமார நிர்ப்பந்திக்கப்படுவார். தெற்கில் அரசியல் நிலைவரம் அநுர குமாரவை மையப்படுத்தி நகர்ந்து கொண்டிருக்கையில், தமிழர் தாயகத்தின் நிலைமை கடந்த வாரம் குறிப்பிட்டதுபோன்று மாட்டு வால் போல் கீழ்நோக்கி வளர்ச்சி காண்கிறது. இங்கு போட்டியிடும் தமிழ் கட்சிகளின் பெயர்களையும் அவர்களின் சின்னத்தையும் மட்டுமன்றி வேட்பாளர்களின் பெயர்களைக்கூட அடையாளப்படுத்தி நினைவில் வைத்திருக்க முடியாத அவலம் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் தாய்க்கட்சியாகவும், அவர்களின் தேசிய உரிமைக் கட்சியாகவும் மதிக்கப்பட்டு வந்த இலங்கை தமிழரசு கட்சி ஒரு கொழும்பு இறக்குமதியால் சின்னாபின்னமாகி நிற்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சியை அந்தக் கொழும்பன் இழுத்துச் சென்றபோதே இந்த நிலைமை அந்தக் கட்சிக்கு ஏற்படுமென்று உள்வீட்டுக்காரர்கள் உணர்ந்திருந்தனர். பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட சம்பந்தன் உயிருடன் இருந்தபோதே, 'ஐயா சொல்கிறார் - ஐயா விரும்புகிறார் - ஐயாவின் கருத்துஎன்று தனது விருப்பங்களை அந்தக் கொழும்பான் நிறைவேற்றியபோதே வீட்டின் அழிவு ஆரம்பமானது. 'ஐயாவுக்கு வயது போய்விட்டது, அவர் பதவி துறக்க வேண்டும்என்று பகிரங்கமாக சொன்னபோதே, கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பான் துடிக்கிறார் என்பது தெரியவந்தது. கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டு படுதோல்வி கண்டபின்னர் செயலாளர் பதவியை தமக்குத் தருமாறு புதிய தலைவராகத் தெரிவான சிவஞானம் சிறீதரனிடம் கொழும்பான் கேட்டபோதே, வரப்போகும் தேர்தலில் வேட்பாளரை நியமிக்கும் அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. அதுவும் கைகூடாத நிலையில், கட்சியின் பதில் பொதுச்செயலாளரான தமது சகாவை அழைத்து வேட்பாளர் தெரிவை கனகச்சிதமாக நிறைவேற்றினார். பதில் பொதுச்செயலாளராக இருப்பவர் முன்னர் வடமாகாணசபையில் ஒரு அமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அப்பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டவர் என்பது பழங்கதையல்ல. இப்போது பொதுத்தேர்தலில் போட்டியிடும் இந்த அணியின் வேட்பாளர்கள் அனைவரும் கொழும்பானின் கைப்பொம்மைகள். உள்ளத்தால் ஒத்துவராத சிறீதரனை முதன்மை வேட்பாளராக்கி வாக்காளர்களை ஏமாற்றும் முயற்சி அரங்கேற்றப்படுகிறது. தாமே அதிகூடிய வாக்குகள் பெற்று தெரிவாக வேண்டும் அல்லது போனஸ் ஆசனத்தைப் பெற வேண்டுமென்பது கொழும்பானின் இலக்கு. அதுவும் தவறினால் தேசியப் பட்டியலூடாக எம்.பியாவதற்கு திட்டமுண்டு. (கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க தேசியப் பட்டியலூடாக எம்.பியானது போன்று). தாயகத்தின் தற்போதைய களநிலைவரத்தை விபரிக்கும் ஒளிக்காட்சியொன்று காற்று புக முடியாத இடங்களிலும் ஊடுருவி செல்கிறது. தமிழரசு கட்சிக்குள் அதிகம் பேசப்படும் சுமந்திரன், சிறீதரன் ஆகியோரின் கொடும்பாவிகள் மீதும் அவர்களின் புகைப்படங்கள் மீதும் பொதுவெளியில் வைத்து குற்றப்பத்திரிகைகளை வாசிக்கும் இளைஞர் கூட்டம் தாக்குதல் நடத்துவதை இதில் காண முடிகிறது. இந்தளவுக்கு தமிழரசின் நிலை கேவலமாகியுள்ளது. இதனை உணராத கட்சித் தலைகள் தங்களின் வெற்றியை உறுதிப்படுத்தி கொழும்பில் அமைச்சர் பதவிக்கு கண் வைத்துள்ளதாக கொழும்பிலிருந்து சிங்கள அரசியல் கட்சிக;டாக செய்திகள் வெளிவருகின்றன. வேட்டி போனாலும் பரவாயில்லை, கௌபீசணமாவது காப்பாற்றப்படுமா என்ற நிலையில் மந்தி(ரி) பதவியா? இவர்கள் பார்வைக்கு ஒரு கணக்கு. 1977 பொதுத்தேர்தலில் 421,888 வாக்குகளை வடக்கு கிழக்கில் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, 2004 பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பாகி 633,654 வாக்குகளைப் பெற்றது. 2020 பொதுத்தேர்தலில் 327,118 வாக்குகளை மட்டுமே கூட்டமைப்பினால் பெற முடிந்தது. கடந்த மாத ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தாயகத்தில் போட்டியிட்ட அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி எந்த ஆர்ப்பாட்டமுமின்றி 246,187 வாக்குகளை இலகுவாக பெற்றது. தமிழரசு கட்சி என்ற பெயரில் தனியனாக போட்டியிடும் சுமந்திரன் அணி வருகின்ற பொதுத்தேர்தலில் 246,187 வாக்குகளையாவது பெற்று மானத்தைக் காப்பாற்றுமா?
யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி; வீடொன்றில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த முதியவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த 79 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் நேற்று சனிக்கிழமை (26) டெங்கு ஒழிப்பு கள சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்போது அதிகாரிகள் இந்த முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார். சடலத்தை பார்வையிட்ட அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, […]
“தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது”–கொடியை ஏற்றினார் விஜய்.!
விழுப்புரம் : தவெக மாநாடு தொடங்கிய நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாட்டு மேடையில் தோன்றிய விஜய், அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை நோக்கி வணக்கம் செய்தார். இருபுறமும் அலைகடலென திரண்டிருந்த தொண்டர்கள் நடுவே அமைக்கப்பட்டு இருந்த ராம்ப்பில் நடந்து சென்ற தலைவர் விஜய்யை நோக்கி, தொண்டர்கள் கட்சித் துண்டுகளை வீச, சிலவற்றை அப்படியே கேட்ச் பிடித்த விஜய், தன் தோளில் அணிந்து கொண்டார். தற்பொழுது, மாநாட்டு மேடையில் இருந்து ரேம்பில் நடந்து வந்து பின், 101 […]
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழு தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (27.10. 2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேச்சை […]
TVK : விஜய் மாநாடு குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நடைபெறும் மாநாடு குறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, விஜய் அவர்கள் எனக்கு நீண்டகால நண்பர். என்னுடைய முதல் திரைப்படத்தை அவரை வைத்துத்தான் தயாரித்தேன். அவருடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். என்று பேசினார். தமிழகத்தில் நிலைத்திருக்கும் திராவிட சித்தாந்ததுக்கு சவாலாக கட்சிகள் தொடங்கப்படுவது குறித்த கேள்விக்கு, இங்கு யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. 75 ஆண்டுக்காலமாக எந்தக் கட்சியும் தொடங்கப்படவில்லை என்று நீங்கள் சொல்லிவிட முடியாது. பல கட்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. பல கட்சிகள் காணாமல் போயிருக்கிறது. மக்கள் பணியில் எப்படி ஈடுபடுகிறோம் என்பதுதான் முக்கியம் என்று பதிலளித்தார். TVK Vijay : மருத்துவ முகாம்கள், ஆம்புலம்ஸ்கள், QR கோடு... தவெக மாநாட்டு ஏற்பாடுகள் ஹைலைட்ஸ்!
புவியியல் ரீதியில் மதுரை மேடான பகுதி. தற்போது தனித் தீவாக மாறியதற்கு திமுகவின் அலட்சியபோக்கே காரணம். அதிமுக ஆட்சி காலத்தில் 12 புயல்களை எதிர்கொண்டோம். அப்போது அமைச்சர் நேரு வெளிநாடு சென்று விட்டாரா? என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
TVK: `கழுத்தில் மாலையென குவிந்த தவெக கட்சித் துண்டுகள்' - விஜய்யின் Ramp walk புகைப்படங்கள்
TVK : ``மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதை! - தவெக உறுதிமொழி | தவெக முதல் மாநாடு Live Updates!
TVK: `கழுத்தில் மாலையென குவிந்த தவெக கட்சித் துண்டுகள்' - விஜய்யின் Ramp walk புகைப்படங்கள்
TVK : ``மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதை! - தவெக உறுதிமொழி | தவெக முதல் மாநாடு Live Updates!
சர்வதேசத்தை கலங்கவைத்த காசா சிறுமி : வைரலாகும் காணொளி
காசாவில் (Gaza) ஆறு வயது சிறுமி ஒருவர் தனது சகோதரியை மருத்துவமனையிலிருந்து தெற்கு காசாவில் உள்ள கூடாரம் வரை முதுகில் சுமந்து செல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கமர் எனும் குறித்த சிறுமி அல் – புரேஜ் முகாமில் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த காணொளியில் அந்த சிறுமி “முகாம் மீது குண்டுகள் விழுந்தன, நாங்கள் சிதறி ஓடினோம். அதில், என் தங்கை பிரிந்து சென்றுவிட்டாள். அவள் ஓடிவிட்டாள. அதனால், […]
தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு விஜய் வருகை தந்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கட்சி பாடலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடலுக்கு பின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. மேடையில் பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கலைநிகழ்ச்சிகளை தொண்டர்கள் உற்சாகத்துடன் கேட்டு ஆரவாரம் செய்து நடனமாடி வருகின்றனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விக்கிரவாண்டி சாலையில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் […]
த.வெ.க மாநாடு: சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை!
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரமாண்டமாக இன்று தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட மாநாட்டுக்கு மார் 8 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒட்டு மொத்த கவனமும் மாநாடு பக்கம் தான் இருந்த நிலையில், கட்சி பாடல் ஒலிக்க தொண்டர்களின் தலைவா…தலைவா என்ற கரகோஷத்துடன் விஜய் மாநாடு நடைபெறும் மேடைக்கு வருகை தந்தார். வருகை தந்த பிறகு மாநாடு நடைபாதையில் கட்சித் தலைவர் விஜய் நடந்து […]
TVK : தவெக மாநில மாநாடு: காரில் சென்ற திருச்சி இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட இருவர் விபத்தில் பலி!
நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி, நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்தார். இந்நிலையில், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை பகுதியில் இன்று பிரமாண்டமாக நடத்தி வருகிறார். இன்று மாலை 3 மணியளவில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. வி.சாலை பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு நேற்று முதலே ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்தவண்ணம் உள்ளனர். சீனிவாசன் இந்த சூழலில், மாநாடு நடைபெறும் இடத்துக்கு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட இளைரணி செயலாளரும், வழக்கறிஞருமான சீனிவாசன், கலை உள்ளிட்ட 5 பேரோடு பயணம் மேற்கொண்டுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே அவர்கள் சென்ற கார் சென்றபோது, சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி, சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட இளைரணி செயலாளர் சீனிவாசனும், துணைத் தலைவர் கலை என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கார் வேகமாக சென்ற நிலையில் கார் சக்கரம் கழன்று இந்த கோர விபத்து நடைபெற்றதாகச் சொல்லப்படுக்கிறது. அதோடு, அதில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. TVK : மாநாட்டு மேடையேறினார் தவெக தலைவர்... உற்சாகத்துடன் ரேம்ப் வாக் செய்யும் விஜய்! | தவெக முதல் மாநாடு Live Updates!
TVK Vijay: `கோடி பேர் இருக்காங்க டா' - மாநாட்டின் கூட்டம்; வாழ்த்திய இயக்குநர்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வி.சாலையில் இன்று மாலை 3 மணியளவில் கட்சிப் பாடலுடன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. விஜய்யின் பெற்றோர்களான ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளனர். விஜய்யின் இந்த மாநில மாநாட்டிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். TVK Vijay குறிப்பாக சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் இயக்குநர் ரத்னகுமார் 'கோடி பேர் இருக்காங்க டா' என்று விஜய்யின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். https://t.co/TOmtBT9xNt pic.twitter.com/hU3lnQZ7PK — Rathna kumar (@MrRathna) October 27, 2024 TVK : மாநாட்டு மேடையேறினார் தவெக தலைவர்... உற்சாகத்துடன் ரேம்ப் வாக் செய்யும் விஜய்! | தவெக முதல் மாநாடு Live Updates!
இணையத்தில் ட்ரெண்டாகும் ‘என் உயிரினும் மேலான’ஹேஸ்டேக்..!
சென்னை : கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. 10 தலைப்புக்கள் கீழ் மாநிலம் முழுவதும் இருந்து 17ஆயிரம் பேர் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று இருந்தார். இந்த நிகழ்வை குறிப்பிடும் வகையில் இணையத்தில் திமுகவினர் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். […]
தவெக மாநாடு: விஜய்க்கு ஆசி வழங்கிய தாய் ஷோபா... என்ன சொன்னார் தெரியுமா?
தவெக தலைவர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக கிராமிய கலைகளுடன் தொடங்கியது மாநாடு..! பரை இசையுடன் படையெடுக்கும் தவெக.!
விழுப்புரம் :தவெக கட்சியின் முதல் மாநாடானது தற்போது பிரம்மாண்டமாக வி.சாலையில் தொடங்கி இருக்கிறது. முன்னதாக விஜய் நடித்த சுறா படத்தின் ‘வெற்றி கொடிகட்டு பாடல்’ ஒலிக்கப்பட்டது. மேலும், மாநாடு திடலில் குவிந்துள்ள தொண்டர்கள், ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதன் பின், மாநாட்டின் நிகழ்வுகள் கிராமிய கலையுடன் தொடங்கியுள்ள நிலையில், முதன் முதலாக பரை இசையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் இந்த நிகழ்ச்சி ஈர்த்துள்ளது. எளியோருக்கான அரசியலையும், சமநிலை மற்றும் சமத்துவம், கல்வி, சட்டம் என்ற பல்வேறு […]
களைகட்டிய தவெக மாநாடு: “தலைவா.. வா..”முழக்கமிடும் ரசிகர்கள்.!
விழுப்புரம்: தவெக மாநாடு விக்ரவாண்டியின் வி.சாலையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மாநாட்டின் திடலுக்குள் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், ரசிகர்களின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இடையே இன்று காலை முதல் திடலுக்கு வந்து விஜயை பார்க்க வேண்டும், அவருக்கான தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என காத்துக்கிடக்கின்றனர். தமிழக மக்கள் மட்டும் இன்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விஜய்க்கு ஆதரவு […]
கமல் இல்லனாலும் இது மட்டும் மாறவே இல்ல:எங்களுக்கும் கஷ்டமாத்தான் இருக்கு விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் இல்லாவிட்டாலும் ஒரேயொரு விஷயம் மட்டும் மாறவே இல்லை. அது மாறவும் மாறாது போன்று. இந்நிலையில் தனக்கு கஷ்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
த.வெ.க. மாநாடு: வெயிலால் 120 பேர் மயக்கம்... தொண்டர்கள் அடுத்தடுத்து மயங்குவதால் பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடலில் வெயிலின் தாக்கத்தால் 120 பேர் மயக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இஸ்ரேல் தாக்குலுக்கு முன்னர் ஈரானை எச்சரித்த ரஷ்யா
நேற்று காலை ஈரான் (iran) இராணுவ தளங்கள் மீதான இஸ்ரேலிய (israel) வான்வழித் தாக்குதல்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாக ரஷ்யா (russia), ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக பெயரிடப்படாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி ஸ்கை நியூஸ் அரேபியா தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் உளவுத்துறை தகவல் ஈரானுக்கு வழங்கப்பட்டதாக அந்த செய்திதளம் தெரிவித்துள்ளது. இரண்டு ஈரானிய வீரர்கள் பலி இதேவேளை ஈரானிய அரச செய்தி நிறுவனமான […]
முன்கூட்டியே ஆசிரியர்களுக்கு ஊதியம் : குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு?
தீபாவளியை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை, முன்பணம், தீபாவளிக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தவெக மாநாடு : தொடங்கியது வெற்றிக் கொள்கைத் திருவிழா! தொண்டர்கள் ஆரவாரம்!
விழுப்புரம் : தவெக கட்சியின் முதல் மாநாடானது தற்போது தொண்டர்களின் ஆரவாரத்துடன் தொடங்கியிருக்கிறது. நள்ளிரவு முதல் தொண்டர்கள், ரசிகர்கள் என பல மாநிலங்களில் இருந்தும் விஜயை காண குவிந்துள்ளனர். மேலும், காலை முதல் வெயில், பசி, தாகம் என எதையும் பாராமல் விஜயின் பேச்சுக்காகவே காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது தவெக கட்சியின் முதல் மாநாடானது தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்வில், தொடர்ந்து கட்சித் தலைவரான விஜய் விரைவில் மாநாட்டு மேடைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், […]
TVK :`வாழ்த்துகள் விஜய் அண்ணா'- சிவகார்த்திகேயன் முதல் விஜய் சேதுபதி வரை... வாழ்த்திய பிரபலங்கள்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியின் வி.சாலையில் தற்போது நடைபெறவிருக்கிறது. அதற்காக நேற்று இரவு முதலே தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் இருந்தும் அவரது ரசிகர்கள் வந்தபடி இருக்கின்றனர். விஜய்யின் இந்த மாநில மாநாட்டிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க, தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகள் என்று வாழ்த்தி தெரிவித்த இருக்கிறார். TVK Vijay இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ❤️ @tvkvijayhq — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 27, 2024 இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று சிவகார்த்திகேயனும் தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். Congratulations Thalapathy @actorvijay Anna on this incredible milestone #TVKMaanaadu Bring the same passion and dedication to politics that you’ve shown in cinema. Wishing you a great success on this new journey !!! — Jayam Ravi (@actor_jayamravi) October 27, 2024 சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் சிறப்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா என்று ஜெயம் ரவி வாழ்த்தி இருக்கிறார். இதனைத்தொடர்ந்து , உங்கள் பார்வை பலருக்கு நேர்மறையான மாற்றத்தையும் வெளிச்சத்தையும் கொண்டு வரட்டும் என்று வெங்கட் பிரபுவும் , உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அர்ஜுன் தாஸும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். உங்கள் அற்புதமான தொடக்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். உங்கள் திரைப்படங்கள் மூலம் எங்களில் பலருக்கும் நீங்கள் உண்மையிலேயே உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். விரைவில் உங்கள் அரசியல் பயணத்திலும் நினைவுகூரப்படுவீர்கள், பாராட்டப்படுவீர்கள். My heartfelt wishes to @actorvijay sir, for your wonderful start today, You have been truly an inspiration to many of us not only through your films alone, soon will be remembered and appreciated for your political journey too in the coming years… I am sure today will be a… — Vasanth Ravi (@iamvasanthravi) October 27, 2024 இன்று உங்களுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று வசந்த் ரவி வாழ்த்தி இருக்கிறார். மேலும், விஜய் அண்ணாவின் உரையை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றேன். இந்தப் புதிய பயணம் அவருக்கு பாஸிடிவ்வையும், வெற்றியையும் தரட்டும் என்று சிபி சத்யராஜ் தெரிவித்திருக்கிறார். View this post on Instagram A post shared by Sibi Sathyaraj (@sibi_sathyaraj) இதனைத்தொடர்ந்து சசிகுமார் , உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல் வாழ்த்துகள்… விஜய் சார் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நடிகர் சதீஷ் , திரைத்துறையைப் போல் இதிலும் வெற்றிக் கொடி நாட்ட வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார். தவிர நெல்சன், விக்ராந்த் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். அன்புள்ள விஜய் சார், சினிமாவை விட்டுவிட்டு தேர்தல் அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய முடிவு. உங்கள் மிகப்பெரிய பயணம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்று ஆர்.ஜே பாலாஜி வாழ்த்தி இருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
புஷ்பா 2 ரிலீஸ்..ப்ரோமோஷனுக்கு மட்டும் நூறு கோடி..அடுத்தகட்டத்துக்கு சென்ற அல்லு அர்ஜுன்..!
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் பிளான் பற்றிய தகவல் கிடைத்துள்ளது
கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழா!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக, கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.
கூட்டத்தை காட்டி மிரட்டிய விஜய்.. உதயநிதி வாயிலேருந்து வந்த அந்த வார்த்தை!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழககம் கட்சியின் மாநாட்டிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் வருகை எடப்பாடிக்கு பாதிப்பு! அதிமுக புகழேந்தி பரபரப்பு பேட்டி!
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எடப்பாடி பழனிசாமிக்கு பாதிப்பு என அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி பேட்டி அளித்துள்ளார்.
மார்பிங் போட்டோக்கள்; ரெக்கார்டிங் வீடியோ கால்... இன்ஸ்டா இளைஞனால் பதறிய வேலூர் இளம்பெண்
பெங்களூரு ஹுலிமாவு பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது 19 வயது மகன் ஸ்ரீநாதா. இவருக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகியுள்ளார். நல்லவனைபோல நடித்து, நட்புப் பாராட்டிய ஸ்ரீநாதாவை நம்பி இளம் பெண்ணும் தனது போட்டோக்களை அனுப்பியுள்ளார். அந்த போட்டோக்களை `மார்பிங்’ மூலம் நிர்வாணமாக இருப்பதைபோல் மாற்றிய ஸ்ரீநாதா, இளம்பெண்ணுக்கே பகிர்ந்துள்ளார். தனது போட்டோக்கள் மார்பிங் செய்யப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ளார் இளம்பெண். இதையடுத்து, போட்டோக்களை ஆபாச இணையதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி, ஒரே முறை வீடியோ கால் பேச இளம்பெண்ணை வற்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார் ஸ்ரீநாதா. இளம்பெண்ணும் பயந்துபோய் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, சல்லாப எண்ணத்துடன் இளம்பெண்ணை ஆபாசமாக நடந்துகொள்ளச் சொல்லியிருக்கிறார். இளம்பெண்ணும் அவர் சொன்னபடி நடந்துகொண்டதால், அதை அப்படியே ரெக்கார்டிங் செய்துள்ளார் ஸ்ரீநாதா. கைது செய்யப்பட்ட ஸ்ரீநாதா இதையடுத்து, இளம்பெண்ணுக்கு அந்த ஆபாச வீடியோ கால் ரெக்கார்டிங்கையும் அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதன் பிறகே, தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி இளம்பெண் அழுது இருக்கிறார். இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்.பி மதிவாணனிடம் புகார் கொடுக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில், சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் தலைமையிலான போலீஸார், ஸ்ரீநாதாவை கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் போலியான அக்கௌண்ட்டுகளை வைத்துகொண்டு மேலும் சில பெண்களையும் ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விசாரணைக்குப் பிறகு ஸ்ரீநாதா நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ``சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத கணக்குகளில் இருந்து வரும் மெசேஜ்களை நம்பி இளம் பெண்கள் ஏமாற வேண்டாம்’’ என சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மார்பிங் போட்டோக்கள்; ரெக்கார்டிங் வீடியோ கால்... இன்ஸ்டா இளைஞனால் பதறிய வேலூர் இளம்பெண்
பெங்களூரு ஹுலிமாவு பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது 19 வயது மகன் ஸ்ரீநாதா. இவருக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகியுள்ளார். நல்லவனைபோல நடித்து, நட்புப் பாராட்டிய ஸ்ரீநாதாவை நம்பி இளம் பெண்ணும் தனது போட்டோக்களை அனுப்பியுள்ளார். அந்த போட்டோக்களை `மார்பிங்’ மூலம் நிர்வாணமாக இருப்பதைபோல் மாற்றிய ஸ்ரீநாதா, இளம்பெண்ணுக்கே பகிர்ந்துள்ளார். தனது போட்டோக்கள் மார்பிங் செய்யப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ளார் இளம்பெண். இதையடுத்து, போட்டோக்களை ஆபாச இணையதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி, ஒரே முறை வீடியோ கால் பேச இளம்பெண்ணை வற்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார் ஸ்ரீநாதா. இளம்பெண்ணும் பயந்துபோய் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, சல்லாப எண்ணத்துடன் இளம்பெண்ணை ஆபாசமாக நடந்துகொள்ளச் சொல்லியிருக்கிறார். இளம்பெண்ணும் அவர் சொன்னபடி நடந்துகொண்டதால், அதை அப்படியே ரெக்கார்டிங் செய்துள்ளார் ஸ்ரீநாதா. கைது செய்யப்பட்ட ஸ்ரீநாதா இதையடுத்து, இளம்பெண்ணுக்கு அந்த ஆபாச வீடியோ கால் ரெக்கார்டிங்கையும் அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதன் பிறகே, தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி இளம்பெண் அழுது இருக்கிறார். இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்.பி மதிவாணனிடம் புகார் கொடுக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில், சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் தலைமையிலான போலீஸார், ஸ்ரீநாதாவை கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் போலியான அக்கௌண்ட்டுகளை வைத்துகொண்டு மேலும் சில பெண்களையும் ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விசாரணைக்குப் பிறகு ஸ்ரீநாதா நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ``சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத கணக்குகளில் இருந்து வரும் மெசேஜ்களை நம்பி இளம் பெண்கள் ஏமாற வேண்டாம்’’ என சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு விஜய் வருவார்: புஸ்ஸி ஆனந்த் தகவல்.!
விழுப்புரம் : த.வெ.க மாநாடு பிரமாண்டமாக இன்று நடைபெறவிருக்கும் நிலையில் , இன்னும் சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு தவெக தலைவர் விஜய் வரவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அலைகடலென திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு இடையே ராம்ப் வாக்கில் நடந்து வரவுள்ள விஜய், ரிமோட் மூலம் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டு நிகழ்வுகளை தொடங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொள்கை வெளியீடு, கட்சிக்கான பாடல் வெளியீடு என அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதை […]
பேரணாம்பட்டு: மலைக்கிராம மாணவிகளிடம் அத்துமீறல்... தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!
வே லூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், பேரணாம்பட்டு அடுத்துள்ள ஓர் மலைக்கிராம அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், 9-ம் வகுப்புப் பயிலும் 3 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் உதயகுமார் குறித்து நேற்று முன்தினம் மாலை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமிக்குப் புகார் சென்றது. இதையடுத்து, குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி. தலைமை ஆசிரியர் உதயகுமார் வருவாய்க் கோட்டாட்சியர் சுபலட்சுமி, பேரணாம்பட்டு தாசில்தார் வடிவேல் ஆகியோரும் சம்பந்தப்பட்ட மாணவிகளின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்தினர். மாணவிகளின் தோள் மீது கை போடுவது, தகாத வார்த்தைகளால் பேசுவது எனத் தலைமை ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் `போக்ஸோ’ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று கைதுசெய்யப்பட்டார் தலைமை ஆசிரியர் உதயகுமார்.
பேரணாம்பட்டு: மலைக்கிராம மாணவிகளிடம் அத்துமீறல்... தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!
வே லூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், பேரணாம்பட்டு அடுத்துள்ள ஓர் மலைக்கிராம அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், 9-ம் வகுப்புப் பயிலும் 3 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் உதயகுமார் குறித்து நேற்று முன்தினம் மாலை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமிக்குப் புகார் சென்றது. இதையடுத்து, குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி. தலைமை ஆசிரியர் உதயகுமார் வருவாய்க் கோட்டாட்சியர் சுபலட்சுமி, பேரணாம்பட்டு தாசில்தார் வடிவேல் ஆகியோரும் சம்பந்தப்பட்ட மாணவிகளின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்தினர். மாணவிகளின் தோள் மீது கை போடுவது, தகாத வார்த்தைகளால் பேசுவது எனத் தலைமை ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் `போக்ஸோ’ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று கைதுசெய்யப்பட்டார் தலைமை ஆசிரியர் உதயகுமார்.
மகாராஷ்டிரா: இறுதி கட்டத்தை நெருங்கும் வேட்புமனுத் தாக்கல்... தொடரும் தொகுதி பங்கீடு இழுபறி
இழுபறி மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 29ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால் ஆளும் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது. இக்கூட்டணியில் இன்னும் 12 தொகுதிகளுக்கு இறுதி தீர்வு காணப்படாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க இது வரை 121 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிகள் தலா 45 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதேசமயம் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் உள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இது வரை 83 வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 87 வேட்பாளர்களையும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 67 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மகாவிகாஷ் தலைவர்கள் இக்கூட்டணியில் இன்னும் 15 தொகுதிகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதையடுத்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாஹேப் தோரட் மீண்டும் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி இருக்கிறார். பாலாசாஹேப் தோரட் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``எங்களது மூன்று கட்சிகளும் 280 தொகுதியில் போட்டியிடும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மும்பையில் 2 முதல் 3 தொகுதியில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அத்தொகுதியில் நட்பு ரீதியில் போட்டியிடுவது குறித்து இன்னும்முடிவு செய்யவில்லை என்றும், அதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பாலாசாஹேப் தோரட் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 39 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் சயான் கோலிவாடா தொகுதியில் கணேஷ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜ.க சார்பாக தமிழ் செல்வம் போட்டியிடுகிறார். இதனால் ஒரே தொகுதியில் இரண்டு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் கணேஷ் குமார் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பாக மான்கூர்டு தொகுதியில் நவாப் மாலிக் போட்டியிட விரும்பினார். ஆனால் அதற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்ததால் நவாப் மாலிக்கை அஜித்பவார் தேர்தலில் நிறுத்தாமல் அவரது மகளுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதனால் மான்கூர்டு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட நவாப் மாலிக் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவரை சந்தித்து அஜித் பவார் பேசினார். ஆனாலும் அதனை கேட்க நவாப் மாலிக் மறுத்துவிட்டார். மான்கூர்டு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY