ஐரோப்பாவில் புதிய பதற்றம் ; ரஷிய எண்ணெய் விநியோகத் தடை
ரஷியாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் உடனடியாகச் சீரமைத்து தொடங்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி மற்றும் மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. உக்ரைன் போரை முன்னிட்டு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் தங்கள் எரிசக்தி தேவைக்காக இப்போதும் ரஷியாவையே நம்பியுள்ளன. எனவே, அந்நாட்டுடன் இணக்கமான உறவைப் பேணி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில், […]
டித்வா புயலினால் மண்சரிவுக்குள்ளான பகுதியில் மீண்டும் ஆபத்து
டித்வா’ புயலினால் ஏற்கனவே மண்சரிவுக்குள்ளான அரநாயக்க பகுதியில் நேற்று மழை பெய்ததால் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளுக்கு இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அரநாயக்க நகரில் இருந்து தோதல்தோய வரை செல்லும் பிரதான வீதி நடுவே மிகவும் அபாயகரமான முறையில் வெடித்துத் தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தோதல்தோய கிராமத்திற்கு வாகனங்களில் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மாற்று வீதியான புவக்வத்த வீதியும் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளது.
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க மறுத்ததால் பழிவாங்கினர்- தந்திரி வெளிப்படுத்திய தகவலால் விவாதம்!
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரக பலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முன்னாள் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைதுசெய்யப்பட்டிருந்தார். சுமார் 41 நாள்கள் சிறைவாசத்திற்குப் பின் அவருக்கு கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவால் வலுவான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. கூட்டுச்சதியில் அவர் ஈடுபட்டதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோயில் பூஜைகள் உள்ளிட்ட தாந்திரீக விஷயங்களுக்கு மட்டுமே தந்திரி பொறுப்பானவர் ஆவார் எனவும் கோர்ட் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தடையாக இருந்ததால் பழிவாங்கும் விதமாக அரசு இந்த வழக்கில் கைதுசெய்துள்ளதாக தந்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட்டில் தந்திரி கண்டரரு ராஜீவரரு சமர்ப்பித்த ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் தந்திரி கூறியுள்ளதாவது: ``சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பதை தடுத்ததைத் தொடர்ந்து பழிவாங்கும் விதமாக தங்கம் கொள்ளை வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்கவைத்துள்ளனர். சபரிமலை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை திருப்திபடுத்தும் விதமாக சில போலீஸ் அதிகாரிகள் இளம்பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க முயன்றனர். அதற்கான முயற்சிகள் நடந்தபோது பூஜைகளை நிறுத்தி வைப்பேன் என்றும், கோயிலை விட்டு வெளியேறிவிடுவேன் எனவும் நான் தெரிவித்தேன். கோயிலுக்குள் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டேன் என தீர்க்கமான முடிவை எடுத்தேன். சபரிமலை கோயிலை தினமும் திறக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டியதையும் எதிர்த்ததாலும், அரசுக்கு என்மீது கோபம் இருந்தது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றியை நான் சபரிமலைக்கு அழைத்துவந்தது போன்று சித்திரிக்கும் விதமாக சில விஷயங்களை விசாரணைக்குழு மறைத்துவைத்தது. சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே சமர்பித்த இரண்டு அறிக்கைகளிலும் எனது பெயர் இல்லை. திடீரென எனது பெயரை சேர்த்துள்ளனர். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு சபரிமலை கோயில் ஆசாரங்கள், அனுஷ்டானங்கள், பூஜைகள் ஆகியவை மட்டுமே எனக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ, சொத்துக்களை பராமரிப்பதிலோ தந்திரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. தேவசம்போர்டு வழிகாட்டு நெறிமுறைகள்படி கோயிலில் விலைமதிப்புமிக்க பொருள்கள் மற்றும் திருவாபரணங்களை கணக்கெடுப்பது, பாதுகாப்பது போன்றவை தேவசம்போர்டுக்கு மட்டுமே உள்ள பொறுப்பு ஆகும். நிர்வாகத்தின் முறைகேடுகளை தடுக்க எனக்கு சட்டப்பூர்வமான பொறுப்பு இல்லை. அதனால், இதுபோன்ற விஷயங்களில் நான் பதில் கூறாமல் இருப்பதை குற்றத்துக்கு கூட்டாக நின்று சதிசெய்ததாக கருதமுடியாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவை ஆளும் சி.பி.எம் அரசு சபரிமலை விவகாரத்தில் தந்திரியை பழிவாங்கிவிட்டதாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
வேலூரில் விஜய் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்..- டாஸ்மாக்கை மூட உத்தரவு! ஏன்?
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!
பாகிஸ்தானையொட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சமீபத்திய காலமாகவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவத்தினர் பெஹ்ஷூத் மாவட்டத்தில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த […]
மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டாலின் பேச்சு
fமதுரை உத்தங்குடியில் தென் மண்டல வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”வீரம் என்றால் மதுரை. பாசம் என்றால் மதுரை. கோவில் என்றால் மதுரை. சாப்பாடு என்றாலும் மதுரை. இங்கு எல்லாமே ஃபேமஸ் தான். இப்படிப்பட்ட மண்ணில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி மாநாடு நடைபெறுவது பெருமை. அமைச்சர் மூர்த்திக்கு ஒரு பழக்கம் உண்டு எதையும் சிறிதாகச் செய்ய தெரியாது எல்லாமே பிரமாண்டம்தான். நாமதான் ஜெயிக்கிறோம் எப்பவுமே நாமதான் ஜெயிக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலின் போது BLA-2 உறுப்பினர்களுக்கான பயிற்சியை மண்டல வாரியாக நானே சென்று நடத்தினேன். அதனால்தான் 40க்கு 40 என்ற வெற்றியைப் பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முறையில் ஆப் மூலமாக 1 கோடியே 10 லட்சம் குடும்பங்களை இணைத்தோம். எஸ்ஐஆர் வாக்காளார் சிறப்பு சீர்திருத்தின் போது பலரிடm வாக்குகளும் நீக்கப்பட வாய்ப்பு இருந்த நிலையில் அதை பாதுகாத்தது நமது இயக்கம் தான். மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் BLC 75,032 பேர், BDAவில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் என மொத்தம் சுமார் ஏழு லட்சம் பேர். வருகிற தேர்தலில் நமது வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த ஏழு லட்சம் பேர்தான். 2019 முதல் எல்லா தேர்தல்களிலும் வெற்றிமேல் வெற்றி தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை மக்கள் தந்தார்கள். இப்போது அதைவிட அதிக திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் 350 வாக்குகள் இலக்கு. அதை செய்தால் 2 கோடி 50 லட்சம் வாக்குகளை பெற முடியும். இந்த தேர்தலில் 2.5 கோடிக்கு குறையாத வாக்குகளை பெற வேண்டும். அதை வாங்கிக் கொடுப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு தேவையானதை செய்து தருவது என் பொறுப்பு. மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த இரண்டு மாதம் நமக்கு நோ ரெஸ்ட். ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது ஐந்து முறை நேரில் சந்திக்க வேண்டும். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் எல்லாம் இருக்கட்டும். ஆனால் வீட்டு வாசலில் சென்று கையெடுத்து கும்பிட்டு வாக்கு கேட்பதற்குச் சமம் எதுவும் இல்லை. வாக்குப்பதிவு முடிந்து சீல் வைத்து எடுத்துச் செல்லும் வரை கவனம். கடைசி வாக்கு எண்ணப்படும் வரை கவனம். தேர்தல் தேதி எப்போது வந்தாலும் பரப்புரை நம்மால் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை முடக்க முயன்றதை முறியடித்து முன்கூட்டியே வழங்கினோம். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதை 2000 ஆக கொடுப்போம். மக்களுக்காக கொடுத்தால் அது தமிழக அரசு. மக்களிடமிருந்து எடுத்தால் அது ஒன்றிய அரசு. எந்த தொகுதியில் யார் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்து கொள்கிறேன். கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன. மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகிறார். அவரிடம் மதுரை மெட்ரோ எங்கே?, கோவை மெட்ரோ எங்கே?, தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் எங்கே?, கீழடி அறிக்கை ஏன் வெளியிடவில்லை?, நீட் விலக்கு ஏன் தரவில்லை? என மக்கள் நீங்கள் கேட்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனுக்காக கேட்க வேண்டியதை எடப்பாடி கே. பழனிசாமி கேட்கவில்லை. அந்த பயந்தகோலி பழனிசாமி போல இருக்க மாட்டோம், நாங்கள் பயப்பட மாட்டோம். இந்தியாவிலேயே அதிக வழக்குகளை சந்தித்து வரும் கட்சி திமுக. மிசா, தடா, எமர்ஜென்சி பார்த்த இயக்கம் திமுக. சிபிஐ, இ.டி, ஐ.டி எதற்கும் அஞ்ச மாட்டோம். மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மாதங்களில் ஏழு மாநாடுகள். ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் பேரை சந்தித்துள்ளேன். இப்போது காட்டுவது ட்ரைலர் தான். திருச்சியில் மார்ச் 9ஆம் தேதி பத்து லட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடு பார்க்கப் போகிறது. மெயின் பிக்சர் திருச்சியில் உள்ளது. மக்களிடம் கேளுங்கள் தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இந்தப் போரில் தமிழ்நாடு வெல்லும். ஒன்றாக இந்தி திணிப்பை எதிர்த்து வெல்வோம். ஒன்றாக மாநில சுயாட்சியை மீட்க வெல்வோம். உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக இருக்க வேண்டும் இது என் வாக்குறுதி” என்றார்.
மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்!
அரை நூற்றாண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது! நாசா (NASA) தனது அதிரடித் திட்டமான ஆர்டெமிஸ் (Artemis) திட்டத்தின்… The post மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்! appeared first on Global Tamil News .
பல வருடங்களாக இறந்த தந்த கணவரின் சாம்பலை உண்ணும் மனைவி! அமெரிக்காவில் விசித்திர பெண்
அமெரிக்காவில் இறந்து போன தந்த கணவரின் சாம்பலை பல வருடங்களாக சாப்பிட்டு வரும் ஒரு பெண் தொடர்பான தகவல் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் அந்த பெண்ணின் கணவர் 2011ம் வருடம் ஆஸ்துமா நோயால் மரணம் அடைந்தார். அவரின் சாம்பலை வீட்டில் வைத்திருந்தார் அவரின் மனைவி. ஒருநாள் எதேச்சையாக அந்த சாம்பலில் கைவிரல் பட்டுவிட அதை தொடைக்க விரும்பாத அவர் வாயில் வைத்து சுவைத்து பார்த்திருக்கிறார். தன் கணவரே தன்னுடன் இருப்பது போல உணர்ந்த அந்த […]
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் இன்று (22) கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை பிராந்திய உதவி […]
பணம், போதை, பாலியல் துன்புறுத்தல்.. லண்டனில் சிறுமிகளுக்கு நிகழும் கொடுமை –திடுக்கிடும் தகவல்கள்
லண்டன், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், இந்த கும்பல்களால் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சூழலில், லண்டனில் போதைப்பொருள் கும்பல்களால் சிறுமிகளுக்கு நிகழும் கொடுமைகள் குறித்து ஆங்கில நாளிதழில் வெளியாகியிருக்கும் அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து […]
விபத்துக்குள்ளான நண்பர்களை பார்க்கச்சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
காலி, தடல்ல மயானத்திற்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இளைஞர் பலி சம்பவத்தில் உயிரிழந்தவர் கிந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார். காயமடைந்த ஏனைய இரு இளைஞர்களும் கிந்தோட்டை மற்றும் தடல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை ரத்கம, பிந்தாலிய சந்தியில் விபத்துக்குள்ளான […]
சிவனொளிபாதமலைக்கு சென்ற யாத்தீரிகருக்கு நேர்ந்த கதி
சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற 81 வயதுடைய ஆண் ஒருவர் திடீரென ஏற்பட்ட சுகவீனத்தால் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். உடற்கூற்று பரிசோதனை இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று காலை சிவனடிபாதமலைக்கு அவரது குடும்பத்தினருடன் செல்லும் போது கடும் சுகவீனம் காரணமாக மலை உச்சியில் இருந்து மிகவும் சிரமத்தின் மத்தியில் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து அவசர அம்பூலன்ஸ் மூலம் கிளங்கன் […]
2 தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை-அம்பாறையில் முன்னெடுப்பு
நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கையெழுத்து சேகரிக்கின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (22) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாகவும் கையெழுத்து சேகரிக்கும் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இக்கையெழுத்து சேகரிக்கும் பணியானது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை […]
எச். ராஜா உடல்நலம் குறித்து விசாரித்த துணை குடியரசுத் தலைவர்.. எச். ராஜாவின் பதில் என்னவாக இருந்தது?
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் விசாரித்தார்.
36 ஆண்டு கால ஏக்கம் –மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?
மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி… The post 36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? appeared first on Global Tamil News .
போர் பதற்றம்: ஜோர்தானில் குவிக்கப்படும் அமெரிக்கப் போர் விமானங்கள்!
மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரணமான சூழலுக்கு மத்தியில், ஜோர்தானில் உள்ள முவாஃபக் சால்டி (Muwaffaq Salti) விமானத் தளத்தில்… The post போர் பதற்றம்: ஜோர்தானில் குவிக்கப்படும் அமெரிக்கப் போர் விமானங்கள்! appeared first on Global Tamil News .
கும்பகோணம்: பாமக மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு! - பின்னணி என்ன?
கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி 3-ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு வயது 20. திருமங்கலக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவருக்கும் வயது 20. இருவரும் பள்ளி படிக்கும் போதிலிருந்தே பழகி வந்துள்ளனர். பாலகிருஷ்ணன் அந்த மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாணவிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயம் செய்திருந்தனர். ம.க.ஸ்டாலின் இதையடுத்து கடந்த 17-ம் தேதி கல்லூரிக்கு வந்த மாணவியிடம் பேச வேண்டும் என்ற பாலகிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயற்சி செய்ததாவும், இதற்கு மாணவி மறுத்ததால் அவரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் மாணவி மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். இதை தொடர்ந்து மாணவனை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வலுகட்டாயமாக தாலி கட்டுவதற்கு செய்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க-வினர் (ராமதாஸ் அணி) ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக அறிவித்ததுடன், கும்பகோணம் பகுதியில் போஸ்டரும் ஒட்டினர். இந்நிலையில் வருகிற 27ம் தேதிக்குள் மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் 28ம் தேதி அன்று ஆடுதுறையில் கடையடைப்பு செய்து, ஊர்வலம் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தங்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து மற்றும் பதிவுகளை பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணனின் அம்மா கும்பகோணம் மேற்கு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீஸார் ம.க.ஸ்டாலின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3: விறுவிறுப்பான LIVE COOKING! இறுதிச்சுற்றுக்கு சென்ற மூவர்!
சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டி நேற்று திண்டுகல்லில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, போட்டியின் விதிமுறை படி வீட்டிலிருந்தே சமைத்து எடுத்து வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த போட்டியில் மொத்தம் 125 போட்டியாளர்கள், தக்காளி அல்வா, நெல்லிக்காய் லேகியம், வெற்றிலை பாயசம் என பலவகையான உணவுகளை வைத்து திண்டுக்கல்லையே மணக்க வைத்தனர். முதல் சுற்றில், தரமான சுவை, ஆரோக்கியம், செய்முறை போன்ற அடிப்படைகளை கொண்டு அடுத்த கட்ட சுற்றிற்கு 10 நபர்களை தேர்வு செய்தார் போட்டியின் நடுவர் செஃப் தீனா. முதல் சுற்று முடிந்து காத்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஜாலியான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3 சத்யா, சௌபாக்யா, நாகா, அஸ்வின் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட ஸ்பான்சர்கள் மூலம், எந்த சீசனிலும் இல்லாத அளவில் 25 பேருக்கு முதல் சுற்றில் வீட்டில் சமைத்து காட்சிப்படுத்திய உணவுகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது, இதில் நாகா சுவை சாம்பியன் பட்டத்தை சுவாதி தட்டி சென்றார். இரண்டாவது சுற்றில் லைவ் குக்கிங் செய்யப்பட்டது, நாகா பிராண்ட், சக்தி மசாலா, கோல்ட் வின்னர், போன்ற பொருட்களை வைத்தும் அதனுடன் ஒரு இனிப்பு உணவையும் சேர்த்து சமைக்க வேண்டும் என்பதுதான் இரண்டாவது சுற்றின் விதிமுறை. ராகி அடை, முட்டை தொக்கு, சிக்கன் பெப்பர் ட்ரை, வெஜ் போண்டா, ரவா லட்டு, சிக்கன் சிப்ஸ், உப்பு கறி, கறிவேப்பிலை சிக்கன், பன்னீர் எக், ராகி ரொட்டி, ஜவ்வரிசி பாயசம், சிக்கன் கிரேவி, ரவா ஸ்வீட், கார்ன் ப்ஃளவர் ஸ்வீட், ராகி மாவு கைமா, கேசரி என பத்து போட்டியாளர்களும் பலவகையான ரெசிபிகளை செய்து அசத்தினர். சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3 இதில் கடும் போட்டி நிலவியது. இதன் முடிவில் உமா மோகன், விஜய், துர்கா பாய் ஆகிய மூவரையும் தேர்வு செய்தார் செஃப் தீனா, இவர்களின் ரெசிபிகள் அனைத்தும் அனைவரது நாவையும் கட்டி இழுத்தது. இதில் ட்விஸ்ட் ஆக ஒரு போட்டியாளரை மட்டும் தேர்வு செய்து அறிவிக்காமல் அந்த ஒரு நபரை மட்டும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக சென்னைக்கு அழைக்க இருக்கின்றனர். இதனையடுத்து, சக்தி மசாலா, லலிதா ஜுவல்லரி, ஆர் கே ஜி நெய்,அஸ்வின் ஸ்வீட்,நாகா, கோல்ட் வின்னர், சௌபாக்யா, சுப்ரிம் ஃபர்னீசர், இந்தியன் ஆயில் போன்ற ஸ்பான்சர்கள் மூலம் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கபட்டது, லைவ் குக்கிங்கில் கலந்துகொண்ட மற்ற ஏழு நபர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3 இரண்டாவது சுற்றில் தகுதி பெற்ற மூவரும் சென்னையில் நடக்கவிருக்கும் இறுதி போட்டியில் பங்கேற்ப்பார்கள்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு என்ன செய்தது? டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தனர்? என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
எடப்பாடி தொகுதியில் 3வது இடம் பிடிச்ச பழனிசாமி… அதிமுக தோற்ற வரலாறு… எந்த தேர்தல், என்ன காரணம்?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வரும் நிலையில், இவர் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வி அடைந்த வரலாறு தெரியுமா? அப்போதைய கள நிலவரம் குறித்து விரிவாக அலசலாம்.
முன்னாள் மனைவிக்கு 4 கோடி ரூபாய் காரை பரிசளித்த ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். ஹர்திக் பாண்டியா – நடாஷா கணவன், மனைவியாக இருவரும் பிரிந்தாலும், ஒரு பெற்றோராக தங்களது மகன் அகஸ்தியா வளர்ப்பிலும், நலனிலும் எந்த குறையும் இல்லாமல் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கிற்கும், தனது மகன் அகஸ்தியாவிற்கும் சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான கருப்பு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக கொடுத்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. Hardik Pandya gifted a 4 crore worth Black Defender to his son Agastya Pandya and ex-wife Natasa Stankovic ❤️ - Hardik Pandya taking care of his ex-wife even after the divorce. - Hardik Pandya is truly a gentleman pic.twitter.com/98bH1evA7H — Cricket Central (@CricketCentrl) February 22, 2026
யாழில். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மக்கள விளக்கு ஏற்றி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. இவ் பேராளர் மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு செல்ல 36 வருடங்களாக அனுமதி கோரி காத்திருக்கும் மக்கள்
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் திருவிழா செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அப்பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதனால் கடந்த 36 வருடங்களாக அப்பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதியை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இம்முறை காணிக்கை மாத ஆலய திருவிழாவை ஆலயத்தில் செய்வதற்கு ஏதுவாக ஆலய சூழலை விடுவித்து தருமாறு, ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , இராணுவ தளபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் , எவ்விதமான சாதகமான பதில்களும் தமக்கு கிடைக்கவில்லை என மயிலிட்டி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மயிலிட்டி புனித காணிக்கை மாதா ஆலயமானது 1850 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த ஒரு கத்தோலிக்க ஆலயமாகும். இவ் ஆலயத்துடன் இணைந்ததாக மயிலிட்டி றோ.க பாடசாலை,கன்னியர் மடம்,குருவானவரின் பங்கு பணிமனை,கோயிலுக்கு சொந்தமான தோட்டக்காணி உள்ளடங்கலாக அண்ணளவாக 52 பரப்பு கொண்ட இடமாக காணப்படுகின்றது. எமது ஊரினை வரையறுக்கும் போது முழுவதுமே கடற்கரையை அண்டிய பிரதேசமாக காணப்படுகின்றது. அதாவது பருத்தித்துறை பொன்னாலை வீதிக்கு வடக்கு தெற்காக 300 தொடக்கம் 500 மீற்றர் நீளமான பிரதேசமாக காணப்படுகின்றது. இதிலும் எமது கோயில் காணியில் ஒரு பகுதியை மட்டுமாவது விடுவிப்பு செய்வதற்குரிய நடவடிக்கையினை செய்து தரும் பட்சத்தில் ஒரு ஆலயத்தினை கட்டி எமது மக்கள் அனைவரும் சேர்ந்து திருப்பலியில் பங்குபற்றி எமது ஆன்மீக தாகத்தினை தீர்த்துக்கொள்வதற்கு எமது ஆலய காணியினை விடுதலை செய்து தாருங்கள். ஆலய காணியினை பெற்றுக்கொள்வதற்காக யாழ்பாண ஆயர்,கொழும்பு கர்தினால் ஆயர்,பாதுகாப்பு அமைச்சு, கடற்தொழில் அமைச்சர், யாழ்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்கள், ஜனாதிபதி செயலாளர், இராணுவ அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் இதுவரைக்கும் எந்த ஒரு சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை. நாம் வன்முறையினை விரும்பாத மக்களாக எந்த ஒரு அரசியல் செல்வாக்கும் இல்லாதவர்களாக கடவுளின் கையில் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, எமது காணிக்கை மாதாவை வழிபட பலவேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.
திமுகவோடு இணைந்த தேமுதிக .. திமுகவுக்கு பாடம் புகட்டும் கூட்டம்- L.முருகன் சொன்ன வார்த்தை !
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வரிகளை ரத்து செய்த அமெரிக்க உயர்நீதிமன்றம்; கனடா மீது நீடிக்கும் வரிகள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனினும் இது கனேடிய தொழிலாளர்களுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி அல்ல என கனடாவின் மிகப்பெரிய தனியார் துறை தொழிற்சங்கமான Unifor தெரிவித்துள்ளது. “இந்தத் தீர்ப்பு ட்ரம்ப்பின் வரிகள் சட்டவிரோதமானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், கனேடிய தொழிலாளர்கள் இதனை வெற்றியாகக் கருதக்கூடாது” என Unifor தேசியத் தலைவர் லானா பெய்ன் தெரிவித்துள்ளார். வரிகள் இப்போதும் அமுலில் உள்ளன கனடா மீது , வாகன உற்பத்தி, உருக்கு, அலுமினியம் […]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய பொதுப் பட்டமளிப்பு வைபவம் கடந்த நான்கு நாள்களில் 12 அமர்வுகளாக நடைபெற்று இன்று நிறைவடைந்தது. இம்முறை 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜெ. பிறந்த நாளில் தொண்டர்களுக்கு ஈபிஎஸ் தரும் கிஃப்ட்.. ராஜேந்திர பாலாஜியின் பங்கு என்ன?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி (நாளை மறுநாள்), அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.
13 வருடங்களுக்கு முன் தனுஷ் சாருடன் வந்தேன்; முதல் வரிசையில் உட்கார எனக்கு..! - சிவகார்த்திகேயன்
70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது. இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. சிவகார்த்திகேயன் - தனுஷ் விருது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், இந்த Filmfare விருது தான் எனது முதல் விருது. 13 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு தனுஷ் சாருடன் தான் வந்தேன். அவர் தான் 'சும்மா வா... ஜாலியாக போயிட்டு வரலாம்' என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது. இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகள் இருக்கிறது. 'அமரன்' படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது 'அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்' என்று சொன்னேன். அதேபோல இந்த படம் இன்னும் எனக்கு விருதுகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்தினருக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இந்த படத்திற்காக நான் கமல்ஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்த எக்கச்சக்கமான Filmfare விருதுகளை பார்த்தேன். அமரன் அப்போது 'அமரனுக்காக எனக்கும் கிடைக்கும்' என்று நினைத்தேன். இன்று அது கிடைத்திருக்கிறது. நான் மிகவும் சீரியஸான நபர் கிடையாது. ஜாலியான நபர் தான். ஆனால் அமரன் மாதிரி ஒரு சீரியஸான படத்தில் நடித்த பிறகு 'ஏன் இப்படிச் செய்தாய்?' என்று யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பாராட்டினார்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி. முக்கியமாக என் ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை அடித்து துவைத்தாலும், மிதித்தாலும் என்னை தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருப்பது நீங்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று Filmfare விருதுடன் மேடையில் நிற்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
அடுத்தடுத்து 2 திமுக அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதி- அமைச்சர்களுக்கு என்ன நடந்தது?
திமுகவின் முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்!
யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவினார் மலாயாவின் முஸ்லிம் மன்னர்! 1927 இல், மலாயாவில் வெளியான புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்… The post நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! appeared first on Global Tamil News .
️ சிலாபத்தில் 2 கோடி பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இருவா் கைது
சிலாபம், தொடுவாவ பகுதியில் சுமார் 20 மில்லியன் ரூபா (2 கோடி) பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இரண்டு சந்தேக… The post ️ சிலாபத்தில் 2 கோடி பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இருவா் கைது appeared first on Global Tamil News .
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகள் செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், இதுவரை வசூலிக்கப்பட்ட சுமாா் 17,500 கோடி டாலா் வரிப்பணம் மீண்டும் திரும்பக் கிடைக்குமா என்ற கேள்வி உலக வா்த்தகா்களிடையே எழுந்துள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்றம் வரிகளை ரத்து செய்துள்ளதே தவிர, வசூலிக்கப்பட்ட பணத்தைத் திரும்ப வழங்குவது தொடா்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கவில்லை. இதனால், வரியைச் செலுத்திப் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பல சட்ட ரீதியான சிக்கல்கள் உருவாகியுள்ளன. வரிப்பணத்தைத் திரும்பப் […]
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் அதிரடி வான்வழித் தாக்குதல்!
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் இன்று (பெப்ரவரி 22, 2026) அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நங்கர்ஹார்… The post ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் அதிரடி வான்வழித் தாக்குதல்! appeared first on Global Tamil News .
களுத்துறையில் புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி
இன்று காலை (பெப்ரவரி 22, 2026) களுத்துறை பகுதியில் இடம்பெற்ற கோர புகையிரத விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள்… The post களுத்துறையில் புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி appeared first on Global Tamil News .
இந்த அரசாங்கம் எனது மகனுக்கு நீதியை பெற்று தர வேண்டும்
எனது மகனை சுட்டு படுகொலை செய்த காவல்துறையினரை பாதுகாக்காது மகனுக்கு நீதியை பெற்று தர இந்த அரசாங்கம்… The post இந்த அரசாங்கம் எனது மகனுக்கு நீதியை பெற்று தர வேண்டும் appeared first on Global Tamil News .
குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் - சுரேஷ் கோபி
கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், குருவாயூர் தேவசம் போர்டின் தலைவராகி குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. அதைத்தாண்டி நான் வேறு எதுவும் விரும்பவில்லை. இப்போது நான் இருக்கும் நிலை எனது ஆசை அல்ல. இதைச்சொல்வதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன். இல்லையென்றால், வட இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் 'சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குருவாயூர் தேவசம் போர்டு தலைவராகப் போய்விட்டார்' என்று கிளப்பிவிட்டுவிடுவார்கள். ஒருவிதத்திலும் வாழமுடியாத நிலை ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய பல பெண்கள் இருக்கிறார்கள். அது என் பாட்டியிடம் இருந்து தொடங்குகிறது. என் பாட்டி சுவையான மற்றும் சத்தான உணவை சமைத்துக் கொடுத்தார். பின்னர் அதை என் அம்மா ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு என் சக்தியாக மனைவி ராதிகா உள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி பிள்ளைகளை வளர்ப்பதில் என் மனைவி ராதிகா முக்கிய பங்குவகித்தார். அதை எல்லாம் நான் முக்கிய விஷயமாக பார்க்கிறேன். என் வருமான கணக்குகளை பார்த்தால் என் மனைவிக்கு நான் அளிக்கும் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியவரும். எனக்கு ஒரு பிளாட் இருக்கிறது என்றால், அதில் ஒரு தளம் என் பெயரிலும், அடுத்த தளம் என் மனைவி பெயரிலும் இருக்கும். எனது சொத்துக்களில் பாதி என் மனைவி பெயரில் இருக்கும். என் பெயரில் ஒரு சொத்து இருந்தால், என் மனைவி ராதிகா பெயரில் இரண்டு சொத்துக்கள் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். சுரேஷ்கோபி மத்திய அமைச்சர் பதவியைத் தவிர, மற்ற எல்லா ஆவணங்களிலும் என் மனைவிக்கு சமமான பங்கு அளிக்கும் வகையில் நான் ஒரு தெளிவான கோட்டை ஏற்படுத்தி உள்ளேன். அந்தக் கோடு என் இதயத்திலும் உள்ளது. அரசியல் ஆர்வலராக மாறுவதற்கான தகுதி நேர்மையாகும். இந்தத் தகுதி நமக்கு இருந்தால், நம் எதிரிகள் நம்மைப் பார்த்து பயப்படுவார்கள் என்றார்.
யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.… The post யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு appeared first on Global Tamil News .
நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேறுசில கட்சிகளை இணைக்க திட்டம் இருக்கிறது என்றும் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவால் தொகுதிகளை தியாகம் செய்ய வேண்டும் என்றும் திமுக கூறியது. ஸ்டாலின்- காதர் மொகிதீன் 5 தொகுதிகளை தராவிட்டால் 4 தொகுதிகளையாவது தர வேண்டுமென்று கேட்டுள்ளோம். கடந்த முறை 3 தொகுதிகளை தந்த திமுக இம்முறை 2 தொகுதிகளை அளிக்க முன்வந்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் அழைப்பு வரும். போட்டியிட சின்னம் சார்ந்து எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு ஏணி சின்னம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை சின்னம் பிரச்னை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம்
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி… The post தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் appeared first on Global Tamil News .
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான பரஸ்பர வரியை 10-லிருந்து 15 சதவிகிதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அதிரடி பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்திருந்தது செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது 10 சதவிகித வரி விதிக்கும் புதிய பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் […]
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம்… The post ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு appeared first on Global Tamil News .
இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை
இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம்… The post இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை appeared first on Global Tamil News .
TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர். செயல்வீரர்கள் கூட்டம் ஆதவ் அர்ஜூன் பேசுகையில், 'பிகில் படத்தில் 'நம்ம ஆளுங்களை எல்லாம் அடிச்சிட்டாங்க' என ட்ரைவர் சொல்ல 'உடனே அந்த இடத்துக்கு வண்டியை விடு'னு தலைவர் சொல்வார். 'தொக்கா மாட்னானுக' என தலைவர் வசனம் பேசிவிட்டு கார் கதவை திறக்கையிலேயே 5 பேர் பறப்பார்கள். துறைமுகம் தொகுதியில் அமைதியாக பிரசாரம் செய்த எங்கள் நிர்வாகிகள் மீது கை வைத்ததால்தான் தலைவர் முதலில் வட சென்னையில் களமிறங்குகிறார். சென்னை எங்களின் கோட்டை என்கிறார்களே அதனால்தான் முதலில் சென்னைக்குள் இறங்குகிறோம். இனி சென்னைன்னா தவெகதான். வடசென்னையில் சேகர் பாபு என்றால் இங்கே அவரின் காட்பாதர் வி.எஸ்.பாபு இருக்கிறார். செயல்வீரர்கள் கூட்டம் வடசென்னை மக்கள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தை திமுக உருவாக்கிவிட்டது. இங்கே இருக்கும் அத்தனை மக்களும் உழைப்பாளிகள். இங்கே எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை. திமுகவுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்யவே வேண்டாம். திமுக பற்றி வைகோ பேசியவற்றை எடுத்து போட்டாலே போதும். தீயசக்தி திமுகவை வீழ்த்த கேப்டன் உருவாக்கிய கட்சி தேமுதிக. தண்ணி போட்றவன் எல்லாம் கேப்டன் இல்லனு திமுக பேசுனாங்க. ஸ்டாலின் அதை கேட்டு சிரிச்சிட்டு இருந்தாரு. கேப்டனின் ஆன்மா ஒரு போதும் இவர்களை மதிக்காது. எந்த இடத்துல அதிக வறுமை இருக்கிறதோ எந்த இடத்தில் மக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் போட்டியிட வேண்டுமென தலைவர் சொல்வார். தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பமாக இருக்கும்' என்றார். செயல் வீரர்கள் கூட்டம் ஆனந்த் பேசுகையில், 'ஆதவ் முன்வைத்த தீர்மானத்தை நாங்கள் எல்லாரும் மனதார ஏற்றுக்கொள்கிறோம். உங்களுடைய விருப்பத்தை தளபதியிடம் சொல்வோம்.' என்றார். -
மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை-ஒரு வாரத்தில் நான்கு உணவகங்கள் மீது நடவடிக்கை
மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள் தொடர்ச்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக பொது… The post மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை-ஒரு வாரத்தில் நான்கு உணவகங்கள் மீது நடவடிக்கை appeared first on Global Tamil News .
முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம்
முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடித முகவரியை தமது முகநூலில் பகிர்ந்து , அலுவலகத்தில் வந்து கடிதத்தினை… The post முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம் appeared first on Global Tamil News .
திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி-இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்ப்பு!
திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்து உள்ளது. இந்த விலை இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TVK : பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்!' - செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி செய்த நிர்வாகிகள்?
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர். செயல் வீரர்கள் கூட்டம் பெரம்பூர் தொகுதியின் மாவட்டச் செயலாளரான சிவா பேசுகையில், 'தலைவருக்கு மிகவும் பிடித்த தொகுதியாக பெரம்பூர் தொகுதியை மாற்றிவிட்டேன். ஓராண்டில் 44000 பேரை தொகுதிக்குள் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறேன். இன்னும் 35 நாட்கள்தான் இருக்கிறது. ஒரு நாளும் தூங்காமல் உழைத்து தளபதியை வெல்ல வைத்து முதல்வராக்க வேண்டும்' என்றார். சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் மா.செ வி.எஸ் பாபு பேசுகையில், 'முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான். இந்தத் தொகுதியிலிருந்துதான் முதல்வர் வரப்போகிறார். திமுக, அதிமுகவில் வட்டச் செயலாளர் பதவி வாங்கவே 25 வருடம் குடும்பத்தை விட்டு விட்டு சாக வேண்டும். ஆனால், தவெகவில்தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளர் ஆக முடியும். செயல் வீரர்கள் கூட்டம் திமுக, அதிமுகவினர் என்ன செய்வார்கள் என எனக்கு தெரியும். பொதுச்செயலாளர் மட்டும் உத்தரவிட்டால் நான் அத்தனை பேரையும் ஓட விட்டு விடுவேன். திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதியெல்லாம் தவெகவுக்குதான். தலைவரை மட்டும் ஒரு நான்கைந்து முறை தொகுதிக்கு பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள்' என்றார். செயல் வீரர்கள் கூட்டம் 'பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் அத்தனை பேரும் டெபாசிட் இழப்பார்கள்' என்றார் செங்கோட்டையன்
Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47'குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்
சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47' படம் உருவாகி வருகிறது. சூர்யாவுடன் ஜித்து மாதவன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்காக இருக்குமோ அல்லது இருமொழிப் படமாக இருக்குமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது. Surya 47 இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது, “ 'சூர்யா 47' ஒரு பக்கா தமிழ் திரைப்படம். இந்தப் படம் எந்தவொரு மலையாளப் படத்தின் தழுவலும் அல்ல. நேரடியாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பின்னணியைக் கொண்ட ஒரு பிரத்யேகமான கதைக்களமாகத் தான் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து 'ஆவேசம்-2' குறித்து பேசிய அவர், தற்போது முழுக் கவனமும் ‘சூர்யா 47’ படத்தின் மீது மட்டுமே இருக்கிறது. இதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தி வருகிறேன். ‘ஆவேசம் 2’ குறித்த ஆரம்பக்கட்ட யோசனைகள் இருந்தாலும், அது இப்போதைக்குத் தொடங்கும் நிலையில் இல்லை. ஜித்து மாதவன் சூர்யாவின் படப்பிடிப்பிற்குப் பிறகுதான் அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
திமுக தொகுதி பங்கீடு- ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
திமுக தொகுதி பங்கீடு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
“மக்கள் போற்றும் மகத்தான தலைவர் அவர்.!- மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி
'ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர்' என பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசிய பிரதமர் மோடி, “மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதா - மோடி நான் தமிழ்நாட்டிற்கு எப்போது சென்றாலும் அந்த மாநில மக்கள் ஜெயலலிதா மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன். ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது. அந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அவரது தேசபக்தி மிகப்பெரியது. என்னுடைய முதல்வர் பதவியேற்பு விழா நடந்த பொழுதெல்லாம் அவர் நேரில் வந்து கலந்து கொண்டார். மக்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களி்ன் மனதில் என்றென்றும் இருப்பார்கள் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா. ஜெயலலிதா - மோடி ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது. ஜெயலலிதாவின் சிந்தனை மிகவும் தெளிவானது. நிர்வாகத்தை திறமையாக கையாள்வது குறித்து நாங்கள் அடிக்கடி ஆலோசித்துள்ளோம்” என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.
மாகாண சபைத் தேர்தல் உறுதி! வடக்கு, கிழக்கிலும் வெற்றிவாகை சூடும்: அருண் ஹேமச்சந்திரா அதிரடி
மாகாண சபைத் தேர்தலை, தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயமாக நடத்தும் என்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாம் பாரிய வெற்றியைப் பெறுவோம் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். உரிய காலத்தில் தேர்தல் நிச்சயம்அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசின் மீது […]
நடு வீதியில் துடிதுடித்து பலியான இளம் யுவதி ; 24 வயது இளைஞனால் வந்த வினை
கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணை அவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த […]
பகவந்த் கேசரி இயக்குநர் படத்தில் 2வது ஹீரோவாக நடிக்கிறாரா கார்த்தி?: அனில் ரவிபுடி விளக்கம்
சங்கராந்தி வின்னரான மனசங்கர வரபிரசாத் காரு படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தன் அடுத்த படத்தின் ஹீரோ குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். கார்த்தியின் பெயர் அடிப்பட்ட நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.
25 வயது யுவதியின் மோசமான செயல் ; இரகசிய தகவலால் பிடிபட்ட பெண்
கல்கிஸ்ஸ, வில்லியம் பிளேஸ் பகுதியில் 110 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணாவார். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவின் புதிய சிஇஓ ஆஷா சா்மா!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவான ‘எக்ஸ்பாக்ஸ்’ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஆஷா சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 38 ஆண்டுகளாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, எக்ஸ்பாக்ஸ் பிரிவின் முகமாகத் திகழ்ந்த ஃபில் ஸ்பென்சா் பணி ஓய்வு பெறுவதைத் தொடா்ந்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் கோடைக்காலம் வரை நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியைத் தொடா்ந்து, அதிகாரப் பகிா்வை சுமூகமாக முடித்துக் கொடுக்க ஃபில் ஸ்பென்சா் ஒப்புக்கொண்டுள்ளாா். புதிய சிஇஓ-ஆக பொறுப்பேற்றுள்ள ஆஷா சா்மா, […]
SIR: சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவு; நாளை வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்!
கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. SIR அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர். SIR பணிகள் அதேபோல், இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தமாக 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ச்சனா பட்நாயக் இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (பிப்.23) வெளியாக உள்ளது. மாவட்டங்களில் நாளை காலை 10 மணிக்கு மேல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் தரவுகளை வெளியிடுகிறார்.
பாலத்திலிருந்து கீழே பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்த கெப் ரக வாகனம் ; ஏற்பட்ட பாரிய சேதம்
மொனராகலை – பொத்துவில் பிரதான வீதியில், மொனராகலை நகருக்கு அண்மித்த பகுதியில் பாலமொன்றிலிருந்து கெப் வாகனம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மொனராகலை நகரை அண்டிய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த டபள் கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்திலிருந்து கீழே விழுந்து தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. மேலதிக விசாரணை எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் குறித்த வாகனத்திற்கும் பாலத்திற்கும் பலத்த சேதங்கள் […]
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் - பவானந்தராஜா எம்.பி நம்பிக்கை
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான நிமலன் என்பவரை சிறையில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பிலான முக்கிய நகர்வுகளையும் எடுத்து வருகிறது. அந்நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருவதுடன் அவர்களது கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்து , உரிய தரப்புக்களுக்கு அவை தொடர்பில் அறிவித்துள்ளேன். கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலைக்கு சென்று . அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் மிக விரைவில் சாத்தியமாகும் என தான் நம்புவதாக மேலும் தெரிவித்தார் .
அதிவேக ரயிலுடன் மோதிய கெப் வாகனம் ; மூவர் படுகாயம்
இன்று (22) காலை 7.30 மணியளவில் காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தின் சாரதி பலத்த காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், குறித்த ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நபர்கள் காயம் இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் […]
உடன் பிறந்த அண்ணனுக்கு தம்பி நிகழ்த்திய கொடூரம் ; இலங்கையில் அரங்கேறிய பயங்கரம்
நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய தாக்குதலில் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அண்ணன் உயிரிழந்துள்ளார். சம்பவம் கொழும்பு, ஹோமாகமை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, உயிரிழந்த நபருக்கும் அவரது 28 வயதுடைய தம்பிக்கும் இடையில் காணி விவகாரம் தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று இரவு இருவருக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த தம்பி, மறைத்து வைத்திருந்த வாளால் […]
தங்க நகை பூங்காவிற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல்!
தங்க நகை பூங்காவிற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை - குவியும் பாராட்டுக்கள்
இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இரு பார்வைகளையும் இழந்த வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக்கலைமாணிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுள் துரைராசா அருண்குமார் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர் தரத்தில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகம் சென்றவர் எ வாழ்வக வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதாரண மாணவர்களுக்கு இணையான புள்ளிகள் பெற்று சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இற்றைவரை இவருக்கே உரியதாகின்றது. இருபார்வையினையும் இழந்த இரண்டு மாணவர்களும் நீண்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
KHxRK: நெல்சன் படத்தில் ரஜினி, கமல் இரண்டு பேருமே anti-ஹீரோவா?
நெல்சன் படத்தின் ஹீரோ கமல் ஹாசனா இல்லை ரஜினிகாந்தா என்பது தான் தற்போது பலரும் கேட்கும் கேள்வியாகும். இந்நிலையில் சினிமா ரசிகர்கள் மூன்று விதமான விளக்கங்கள் அளித்திருக்கிறார்கள்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் காஷ்மீர் செல்கிறார்
காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா அடுத்த வாரம் 26-ந்தேதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி
சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின் பிளான்
சென்னை சவுகார்பேட்டையில் கூரியர் நிறுவனம் ஒன்றை வைத்திருப்பவர் ராவல்சிங். சென்னை விமான நிலையத்திற்கு இவரது நிறுவனத்திற்கு 1.5 கிலோ எடை கொண்ட தங்க நகைகளின் பார்சல்கள் வந்துள்ளன. அதை எடுத்து வர, தன் கடையில் வேலை பார்க்கும் கோவாராம் மற்றும் பக்கத்துக் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஜித்தேந்தர் குமாரையும் அனுப்பியிருக்கிறார் ராவல்சிங். பைக்கில் சென்ற இருவரும் நீண்ட நேரமாக கடைக்கு வரவில்லை. இருவரது போனுமே 'ஸ்விட்ச் ஆஃப்'. தங்கம் | நகைகள் கோவாராமின் போன்கால் கொஞ்ச நேரத்தில், கோவாராமிடம் இருந்து மற்றொரு எண்ணில் இருந்து கால் வந்திருக்கிறது. அருகில் இருந்த ஆட்டோகாரரிடம் இருந்து போன் வாங்கி பேசுவதாக கூறியிருக்கிறார். கோவாராமும், ஜித்தேந்தர் குமாரும் தங்க நகைகள் பார்சல்களை வாங்கி கொண்டு கிண்டி வழியே வந்துக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது, அவர்களை வழிமறித்த இருவர் தங்களை 'செங்கல்பட்டு ஜி.எஸ்.டி ஆபீசர்ஸ்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக, பார்சல் மற்றும் மொபைல் போன்களையும் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் அழைத்து சென்றிருக்கிறார்கள். பெருங்களத்தூர் அருகே அதிகாரிகளாக அறிமுகம் செய்து கொண்டவர்கள் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். அதன் பின் தான், ராவல்சிங்கிற்கு போன் செய்திருக்கிறார் கோவாராம். ராவல்சிங் போலீஸில் புகார் கொடுக்க விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணையில், இவை அனைத்தும் ஜித்தேந்தர் குமாரின் வேலை என்று தெரிய வந்திருக்கிறது. தங்க நகைகளைக் கொள்ளையடிப்பதற்காக தனது சொந்த ஊரான ராஜஸ்தானில் இருந்து இரு நண்பர்களை வரவழைத்திருக்கிறார் ஜித்தேந்தர் குமார். தற்போது ஜித்தேந்தர் குமார் மற்றும் அவருடைய ஒரு நண்பரை கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். இன்னொருவரை தேடி வருகிறார்கள் போலீஸார்.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக
2000 ரூபாய் வரப் போகுது.. ரெடியா இருங்க.. அக்கவுண்ட் செக் பண்ணிங்க.. பிஎம் கிசான் அப்டேட்!
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அடுத்த தவணைத் தொகை 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் தெரியுமா?
அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்க ஆளுநர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது
SIR பணி நிறைவடைந்தது –இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள
தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சி –முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:- தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுக தான்; எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம். அதிமுகவிற்கு
டி20 உலகக் கோப்பை தொடர் –சூப்பர் 8 சுற்றில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள்
தி.மு.கவை தொட்டுப் பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி தரும் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளின்
அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொலை - பொலிசாரை கைது செய்ய கோரி யாழில்.போராட்டம்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த போராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததாகவும் , அதன் போது வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வாகன சாரதியான சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். நிற்காமல் சென்ற வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனவும் , அதொரு பொலிஸாரின் திட்டமிட்ட படுகொலை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழும்பி வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார். சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறை துறைமுக புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு தயார்
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆவணம் சட்டப்பூர்வ ஒப்புதலுக்காக, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாகதுறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக, இந்திய அரசு 63.5 மில்லியன் டொலர் நிதி உதவியை
க்ளிங் ரேப் டயட்: பிளாஸ்டிக் போர்த்தி மெல்லும் சீன சமூக ஊடக ட்ரெண்ட் – உண்மை என்ன?
சீனாவில் சமூக ஊடகங்களில் பரவும் ‘க்ளிங் ரேப் டயட்’ முறையில் உணவை பிளாஸ்டிக் ரேப் போர்த்தி மென்று துப்பி எடை குறைக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது பல ஆரோக்கிய ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு- கொ.ம.தே.க 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது
சிபிஎம் கேட்கும் டபுள் டிஜிட்… பிப்ரவரி 26ல் திமுக எடுக்கும் முடிவு- மீண்டும் அதே 6 சீட்டா?
திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வரும் 26ஆம் தேதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற சிபிஎம் கட்சி திட்டமிட்டிருக்கிறது.
தல பிரியாணி ரெசிபி என்ன மேடம்?: யாரும் எதிர்பாராத பதில் அளித்த ஷாலினி அஜித் குமார்
அஜித் குமார் சூப்பராக பிரியாணி சமைப்பார் என்று அவர் கையால் சாப்பிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த ரெசிபியை ஷாலினியிடம் கேட்டதற்கு எதிர்பாராத பதிலை அளித்திருக்கிறார்.
'நோட் பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold
ஜனவரி மாதத்தில் (2026) பவுனுக்கு ரூ.1.34 லட்சம் வரை சென்ற தங்கம் விலை, இப்போது ரூ.1.17 லட்சத்திற்கு கீழிறங்கி விற்பனையாகி வருகிறது. ஆனால், இனி தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில காரணங்களைப் பகிர்ந்து கொள்கிறது, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தரப்பு. தங்கம் உலக நாடுகளின் மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட' ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன? > சமீப நாள்களாக குறைந்த தங்கம் விலை இறங்குமுகத்திற்கானது அல்ல. அது கரெக்ஷன் ஆகி வந்தது. இப்போது கிட்டத்தட்ட 20 சதவிகிதம் தங்கம் விலை கரெக்ஷன் ஆகிவிட்டது. அதனால், அது மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பலாம். > ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் சுமுகத் தீர்வை எட்டவில்லை. அதற்குள் அமெரிக்கா - இரான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகரலாம். > அமெரிக்காவில் அடுத்த வாரம் வெளியாக உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்க அறிக்கை மிக முக்கியமானது. காரணம், இதை வைத்தே, அடுத்து வட்டி விகிதம் குறைக்கலாமா... வேண்டாமா என்று முடிவு எடுக்க உள்ளது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி. ஒருவேளை, வட்டி குறைக்கப்பட்டால், தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். தங்கம் Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? இந்தச் சங்கம் கூறுவதைத் தாண்டி, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிச் சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இதையடுத்து ட்ரம்ப் தற்போது உலகளவிலான வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார். இது உலக அளவில் மீண்டும் ஒரு பதற்றத்தை உண்டாக்கக் கூடும். இதனாலும், தங்கம் விலை அதிகரிக்கலாம். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால், அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதையும் கவனிங்க மக்களே. தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கியதா பாகிஸ்தான்? மறுக்கும் ஆப்கானிஸ்தான்! - தாக்குதல் பின்னணி?
ரஷிய எண்ணெய் விநியோகத் தடை: உக்ரைனுக்கு ஹங்கேரி, ஸ்லோவாகியா நெருக்கடி!
ரஷியாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் உடனடியாகச் சீரமைத்து தொடங்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி மற்றும் மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. உக்ரைன் போரை முன்னிட்டு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் தங்கள் எரிசக்தி தேவைக்காக இப்போதும் ரஷியாவையே நம்பியுள்ளன. எனவே, அந்நாட்டுடன் இணக்கமான உறவைப் பேணி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில், […]
நீங்க Dividend-க்கு Eligible ஆகணுமா? இதை பண்ணுங்க | OBS - 295 | Weekly Roundup Show 2.o
Hair Transplant Scam: முடிக்காக உயிரை பணையம் வைக்காதீங்க! - Dr Sivakumar shocking interview
ADMK-வில் OPS தவறவிட்ட 5 வாய்ப்புகள்! | DMK Stalin | EPS | Political Pulse | Vikatan TV
புங்குடுதீவு படுகொலை - 06 மாதங்களின் பின் கைதான சந்தேகநபர் ; மேலுமொருவர் வெளிநாட்டில் ?
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் நபர் ஒருவரை வெட்டி கொலை செய்ததுடன் , நால்வருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் ஒருவர் சுமார் 06 மாத கால பகுதியின் பின்னர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் புங்குடுதீவு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற கத்தி குத்து தாக்குதலில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். தாக்குதல் சம்பவத்தினை தடுக்க முற்பட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் தாக்குதலாளிகள் தாக்குதலை மேற்கொண்டதில் அவர்களும் படுகாயமடைந்திருந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை அடையாளம் கண்டு , அவர்களை கைது செய்வதற்கான நடவாடிக்கைகளை முன்னெடுத்த வேளை நால்வரும் தலைமறைவாகினர். தலைமறைவானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்ட வேளை, சந்தேகநபர்களில் ஒருவர் முல்லைத்தீவு காட்டு பகுதியை அண்மித்த பகுதியில் நடமாடுவதாக அறிந்து , அங்கு விரைந்த பொலிஸார் கடந்த செப்டெம்பர் மாதம் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் ,06 மாத கால பகுதிக்கு பின்னர் மற்றுமொரு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதேவேளை ஏனைய இருவரில் ஒருவர் வெளிநாடொன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் , மற்றைய நபரை கைது செய்வதற்கு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு சரிந்து விட்டது
தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து வாய்ச்சவடால் விடுவதை விடுத்து, உடனடியாகத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இது குறித்து கயந்த கருணாதிலக எம்.பி. ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்:- அரசு ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள்ளேயே மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு சரிந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்தநிலையில் வடக்கு, கிழக்கில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வெறும் பகற்கனவு மாத்திரமே. தேசிய மக்கள் சக்திக்கு உண்மையாகவே மக்கள் செல்வாக்கு இருந்தால், தேர்தலை நடத்த ஏன் அஞ்ச வேண்டும்? உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்துவோம் என்று இழுத்தடிப்புச் செய்யாமல், உடனடியாக ஜனநாயக ரீதியாகத் தேர்தலை நடத்தி மக்கள் யாருக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதைப் பார்க்குமாறு சவால் விடுகின்றோம். சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது. - என்றார்.
சட்டத்தரணி உள்ளிட்ட இருவர் கொலை - கைதான துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ சிப்பாய்
அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த துப்பாக்கிதாரி ஒரு முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும், 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் அவர் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதற்கமைவாக, இந்தக் குற்றத்திற்கு உதவி வழங்கியமை மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கடந்த 16 ஆம் திகதி கொட்டாவை மற்றும் அத்துருகிரிய பொலிஸ் பிரிவுகளிலும், 17 ஆம் திகதி கஹதுடுவ பொலிஸ் பிரிவிலும் மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்த மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் ஹோமாகம வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, இந்தக் குற்றத்தின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவரை அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தூவ பிரதேசத்தில் வைத்து நேற்று (21) கைது செய்துள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்த குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று (22) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
PSU Banks - Private Banks: எதில் முதலீடு செய்வது நல்லது? | IPS Finance - 443
America Model-ஐ பின்பற்றும் Vijay? | Supreme Court-ஐ மதிக்காத Trump | AI Summit Protest: Cong Vs BJP
ரஜினி, கமலில் யார் ஹீரோவா இருந்தா என்ன?:ரூ. 1000 கோடி வசூல் உறுதி எனும் ரசிகாஸ்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் ப்ரொமோவை பார்த்த ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ரசிகர்களோ இது தான் தமிழ் சினிமாவில் ரூ. 1000 கோடி வசூல் செய்யப் போகும் முதல் படம் என்கிறார்கள்.
முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம்
முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடித முகவரியை தமது முகநூலில் பகிர்ந்து , அலுவலகத்தில் வந்து கடிதத்தினை பெற்றுக்கொள்ளுமாறு தாளையடி அஞ்சல் அலுவலகம் கோரிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி அஞ்சல் அலுவகத்தினால் , தமது பிரதேசத்திற்கு வந்த கடிதங்களின் முகவரியை கண்டறிந்து கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பிக்க முடியாத கடிதங்களை , அவற்றின் முகவரியுடன் தமது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டு , உரியவர்கள் அலுவலகத்தில் வந்து கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பதிவிட்டுள்ளனர். தனிப்பட்ட நபர்களின் விபரங்களை பொது வெளியில் பகிர்வது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் , தற்போது குறித்த பதிவுகளை அஞ்சல் அலுவலகத்தினர் தமது உத்தியோகபூர்வ முகநூலில் இருந்து நீக்கியுள்ளனர்

27 C