SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

நேபாளத்தில் பேருந்து விபத்து 13 போ் உயிரிழப்பு

மேற்கு நேபாளத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 போ் உயிரிழந்தனா். சுதூா்பாச்சிம் மாகாணத்தின் பைதாடி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்தது. பூா்ச்சௌடி எனும் இடத்திலிருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து, மலைப்பாதையில் பயணித்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமாா் 200 மீட்டா் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவலறிந்த நேபாள ஆயுதப் படையினா், காவல் துறையினா் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். சம்பவ […]

அதிரடி 7 Feb 2026 10:30 pm

வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கை மின்சார சபை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிறிய நீர் மின் நிலையங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதற்கான கொள்முதல் விலையை குறைத்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படாத நிலையில், இது மின் நிலையங்களை உருவாக்க வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. 150,000 பேருக்கு கடன் சூரிய மின்சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை சமீபத்தில் ரூ. […]

அதிரடி 7 Feb 2026 10:30 pm

அரேபியக் கடலில் அமெரிக்க கடற்படையின் பிரமாண்டமான அட்டகாச அணிவகுப்பு!

அரேபியக் கடலில் இன்று The Abraham Lincoln Carrier Strike Group ஒருங்கிணைந்த கடற்படை நடவடிக்கையில் பங்கேற்றது. இந்தப்… The post அரேபியக் கடலில் அமெரிக்க கடற்படையின் பிரமாண்டமான அட்டகாச அணிவகுப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 10:27 pm

வரலாற்றுச் சாதனை: ரஷ்யாவின் தங்க கையிருப்பு $400 பில்லியனை கடந்தது!

உலக வரலாற்றில் முதன்முறையாக, ரஷ்யாவின் தங்க கையிருப்பு மதிப்பு $400,000,000,000 (400 பில்லியன் அமெரிக்க டொலர்) ஐ கடந்துள்ளது.… The post வரலாற்றுச் சாதனை: ரஷ்யாவின் தங்க கையிருப்பு $400 பில்லியனை கடந்தது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 10:11 pm

தவெக கொண்டு வந்த புது ஐடியா.. இனி QR Code மூலமாகவும் பெறலாம்.. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், க்யூ ஆர் கோடு-ஐ பயன்படுத்தி, விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

சமயம் 7 Feb 2026 9:56 pm

யாழ்ப்பாணம்: செம்பியன்பற்றில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் வெடிக்காத நிலையில் பாரிய மோட்டார் குண்டு ஒன்று இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.… The post யாழ்ப்பாணம்: செம்பியன்பற்றில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு மீட்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 9:42 pm

யாழ்ப்பாணப் பல்கலையில் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான நீடித்த வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், அனைத்துலக சுற்றுச் சுழல் ஆய்வு மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் 10 ஆம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி – நாகர்கோவில், இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு மையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த விலங்கியல் துறையும் இணைந்து இம்மாநாட்டை நடத்தவுள்ளனர். இச் சர்வதேச மாநாட்டில் உலக மற்றும் பிராந்திய சுற்றுச்சூழல் […]

அதிரடி 7 Feb 2026 9:30 pm

கான்ஸ்டபிளின் செயலால் அதிர்ந்து போன நீதிமன்றம்.. இந்த தண்டனை போதுமா?

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சமயம் 7 Feb 2026 9:12 pm

அவசரகால சட்டம் பிக்குகளிற்கு இல்லை!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் .அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். கோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்கட்சியினர் உறுப்பினர் குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறானது. போலியானது. சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே எதிர்க்கட்சியினர் ஏன் இவ்வாறு பொய்யுரைக்கிறார்கள்.

பதிவு 7 Feb 2026 8:57 pm

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை  கைவிட வேண்டும்

சிறிலங்காவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அனைவருக்கும் நீதி (Justice for All) என்ற அனைத்துலக மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், ஏற்கனவே உள்ள துஷ்பிரயோகங்களை வலுப்படுத்தி விரிவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப்

புதினப்பலகை 7 Feb 2026 8:45 pm

ஜேவிபி:மதிப்பதேயில்லை!

இந்திய வம்சாவளி அமைச்சரான சந்திரசேகரன் கூட தம்மை மதிப்பதில்லையென்ற இந்திய வெளிவிவகார அமைச்சின் ஒப்பாரிகள் மத்தியில் ஜனதா விமுக்தி பெரமுன பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அவரது குழுவினருடன் ஒரு அன்பான உரையாடல் நடந்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நமது ஆழமான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சமூக நல முயற்சிகள் குறித்துப் பேசினோம். பொருளாதார நெருக்கடியின் போதும், சமீபத்தில் தித்வா சூறாவளிக்குப் பிறகும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நின்றதென ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே அண்மையில் சீன சென்றிருந்த நிலையில் டெல்லிக்கு காவடி தூக்கிய ஜனதா விமுக்தி பெரமுன பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவவுடன் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் இணைந்திருந்தார்.

பதிவு 7 Feb 2026 8:23 pm

புதிதாக வந்து இறங்கியவையா?

வாழைச்சேனை, குடும்பிமலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சுவீடன் நாட்டுத் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்துள்ளது. பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவு சிறப்புப் பணிக்குழுவுடன் இணைந்து இந்த மூன்று ராக்கெட் லாஞ்சர்களையும் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர். குடும்பிமலைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தபோது யாரோ ஒருவரால் இவை தோண்டி எடுக்கப்பட்டு அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட மூன்று ராக்கெட் லாஞ்சர்களும் சுவீடனில் தயாரிக்கப்பட்ட 84மிமீ ஆர்.சி.எல் எம்2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் என்றும், அவை பயன்படுத்த ஏற்றவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதிவு 7 Feb 2026 8:16 pm

பரோடா வங்கி MSME பிரிவில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு; 419 காலிப்பணியிடங்கள், பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு

வங்கியில் பணி வாய்ப்பை எதிர்பார்வர்களுக்கான நல்ல வாய்ப்பு, பரோடா வங்கியில் MSME பிரிவில் காலியாக உள்ள 419 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமயம் 7 Feb 2026 8:04 pm

கொலையில் முடிந்த குடும்ப தகராறு ; நான்கு பெண்கள் 2 ஆண்கள் கைது

கொழும்பு இரத்மலானை, தர்மராம வீதி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மராம வீதி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞனின் குடும்பத்தினருக்கும் அயல் வீட்டு குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் பொலிஸாரால் […]

அதிரடி 7 Feb 2026 7:59 pm

IND vs USA: ‘கம்பீரின் மோசமான ரெக்கார்ட் பட்டியலில்’.. இணைந்த அபிஷேக் சர்மா: டக்அவுட் ஆகி சொதப்பல்!

கௌதம் கம்பீரின் மோசமான வீரர்கள் பட்டியலில், அபிஷேக் சர்மா இணைந்துள்ளார். அமெரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில், அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி சொதப்பினார். பவர் பிளேவில் இந்தியா தடுமாறி வருகிறது.

சமயம் 7 Feb 2026 7:50 pm

Robotic Submersible Lost Beneath Antarctica Ice Shelf

In January 2024, a robotic submarine mysteriously disappeared while exploring one of Antarctica’s most closely studied ice shelves. The vehicle

சென்னைஓன்லைனி 7 Feb 2026 7:41 pm

WhatsApp Introduces Custom Lists for Status Updates

WhatsApp keeps adding new features, making it more than just a messaging app. Now, a new Instagram-like feature may soon

சென்னைஓன்லைனி 7 Feb 2026 7:34 pm

துரந்தர் 2 வசூல் நிலவரம்: ரிலீசுக்கு முன்பே ₹245 கோடி! மிரட்டும் ரன்வீர் சிங்!

துரந்தர் 2 வசூல் நிலவரம் தற்போது இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Feb 2026 7:30 pm

துரந்தர் 2 வசூல் நிலவரம்: ரிலீசுக்கு முன்பே ₹245 கோடி! மிரட்டும் ரன்வீர் சிங்!

துரந்தர் 2 வசூல் நிலவரம் தற்போது இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Feb 2026 7:30 pm

ரஷ்ய இராணுவ உளவுத்துறை துணைத்தலைவர் மீது துப்பாக்கி சூடு

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 443வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க இரு தரப்பும் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. […]

அதிரடி 7 Feb 2026 7:30 pm

Easy and Healthy Chana Palak Rice Recipe

Chana Palak Rice is a healthy and tasty meal made with chickpeas and spinach. Both ingredients are nutritious, making this

சென்னைஓன்லைனி 7 Feb 2026 7:22 pm

Easy and Quick Eggless Banana Pancake Recipe

Eggless Banana Pancakes are a quick and easy breakfast that everyone will love. You only need bananas, sugar, milk, and

சென்னைஓன்லைனி 7 Feb 2026 7:13 pm

Thiruvananthapuram Records Highest Stray Dog Bites

Thiruvananthapuram district has once again recorded the highest number of stray dog bites in Kerala. In 2025, a total of

சென்னைஓன்லைனி 7 Feb 2026 6:50 pm

பேராசிரியர் பிரதீபராஜா –‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்”

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்” எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்த பொதுகூட்ட நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இணையத்தின் தலைவர் ந.சுகிர்தராஜ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போதே பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கௌரவிக்கப்பட்டுள்ளார்.. L

அதிரடி 7 Feb 2026 6:50 pm

Bangladesh Reports Woman’s Death from Nipah Virus

The World Health Organization (WHO) reported on Friday, February 6, 2026, that a woman in northern Bangladesh died in January

சென்னைஓன்லைனி 7 Feb 2026 6:44 pm

தமிழ்நாடு vs என்டிஏ.. தமிழ்நாடு தான் சூப்பர் ஸ்டார்.. இளைஞரணி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் சிறப்புரை!

விருதுநகரில் தென்மண்டல திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. அதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

சமயம் 7 Feb 2026 6:43 pm

‘Thalaivar Thambi Thalaimaiyil’ Ready for OTT Release

Thalaivar Thambi Thalaimaiyil’ is now all set for its OTT release after performing very well in theatres. The film’s strong

சென்னைஓன்லைனி 7 Feb 2026 6:39 pm

நடிகர் சுதாகர் நெகிழ்ச்சி: பாரதிராஜா முதல் தெலுங்கு சினிமா வரை –பகீர் பின்னணி!

நடிகர் சுதாகர் நெகிழ்ச்சி கலந்த இந்தத் தகவல்கள் தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம்

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Feb 2026 6:35 pm

விழுப்புரம்: அணிவகுத்த பாரம்பர்ய உணவுகள்; சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மகுடம் சூடிய மூவர்!

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழிகாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தற்போது நடைபெறும் மூன்றாவது சீசனின் முதல் போட்டி விழுப்புரத்தில் இன்று தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் விழுப்புரம், அரசூர், கோலியனூர், வளவனூர், செஞ்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். டாப் 10 தேர்வாளர்கள் அத்துடன் கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முதல் சுற்று தேர்வுக்காகப் பனங்கிழங்கு லட்டு, நுங்கு தேங்காய்ப்பால் சொதி, பனைமாவு பக்கோடா மிளகு மசாலா, சிரட்டை கருப்பட்டி புட்டு, பூண்டு பனைமாவு ஊத்தப்பம், பனையோலை கொழுக்கட்டை,பனங்கிழங்கு பாயாசம், பதநீர் தட்டைப்பயிறு களி கஞ்சி, கருப்பு உளுந்து கல்கண்டு மூலிகைப் பால், பனங்கிழங்கு கொத்து சப்பாத்தி, பீட்ரூட் பொரி தேங்காய்ப்பால் கேக், வாழைத்தண்டு துவையல், சீராளம், கம்பு பத்ரி, வெந்தய சாலட், மா இஞ்சி தொக்கு போன்றவை மணம் மாறாமல் வரிசைகட்டி நின்றன. அதேபோல எள்ளு இட்லி, கேழ்வரகு சிமிலி உருண்டை, பிரண்டை சாதம், சம்பா ரவை அல்வா, சிவப்பு அவல் உசிலி, மஷ்ரூம் பாயாசம், கம்பு கட்லெட், பாசிப்பருப்பு ஸ்வீட் உப்புமா, பன்னீர் ரோஜா குல்கந்து, மரவள்ளிக்கிழங்கு ப்ரௌனி, சைவ ஈரல் வறுவல், தக்கடி, கோழி ஆப்பம், கடல்பாசி ஜெல்லி, வட்டிலாப்பம் என விதவிதமாக சமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். அதேபோல பிராக்கோலி சீஸ் கட்லெட், பக்லாவா, வழுதுணங்காய் தொக்கு, ராகி பிரௌனி, பிரண்டை வத்தல் போன்றவற்றை என வித விதமாக இருந்த அனைத்து உணவுகளையும் சுவைத்த செஃப் தீனா, அதன் செய்முறை குறித்து போட்டியாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். லைவ் கிச்சன் தேர்வாளர்களுடன் செஃப் தீனா இதற்கிடையில் காத்திருந்த போட்டியாளர்கள் மற்றும் அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு மேடையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பெற்றன. தொடர்ந்து சீராளம், வெள்ளை பூரி, கோங்குரா சாதம், பசலைக்கீரை சாதம், பனங்கிழங்கு புட்டு, பிரண்டை வத்தல் செய்த நித்தியா, வெந்தயத் துவையல், கொத்தவரங்காய் துவையல், வாழைத்தண்டு துவையல், பீட்ரூட் பொறியல், தோசை சிப்ஸ், ஸ்வீட் லாலிபாப் கிளோரி, நரிப்பயறு துவையல், மூங்கில் குருத்து மசாலா, உண்ணிப்பூ பாயாசம், பப்பாளிக்காய் பொரியல், பொம்னாச்சிக்காய் பச்சடி, நஞ்சிக்கொட்டான் இலை ரோல் செய்த புவனேஸ்வரி, வஞ்சிரம் மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்த 80 வயது கிருஷ்ணவேணி அம்மாள் போன்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். அதையடுத்து செஃப் தீனா டாப் 10 தேர்வாளர்களை அறிவித்தவுடன், கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. பக்லாவா செய்த அல்நூரா அஸ்லாம், வத்தல் குழம்பு செய்த கற்பகவள்ளி, கறுப்பு உளுந்து பிஸ்கட் செய்த தர்ஷினி, பனங்கிழங்கு லட்டு செய்த தேவசினேகா, பனம்பழ அல்வா, பதநீர் நுங்கு மாம்பழநீர் செய்த வனஜா, ரத்தசாலி அரிசி கொழுக்கட்டை, ரத்தசாலி அரிசி புட்டு செய்த முருகன், உண்ணிப்பூ பாயசம், நரிப்பயறு துவையல் செய்த புவனேஸ்வரி, மஷ்ரூம் பாயாசம் மற்றும் சம்பா ரவை அல்வா செய்த சுமதி கோபால், வட்டிலாப்பம் செய்த ரசியாபேகம், சைவ உணவு வகைகளை செய்த சுவாதி சுந்தர் போன்றவர்களை அறிவித்தார். அந்த 10 பேருக்கும் சான்றிதழ்களுடன், பரிசுகளையும் வழங்கினார் செஃப் தீனா. ராகி ப்ரௌனி டு பிரண்டை வத்தல்.! பிரமாண்டமாக துவங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3 இறுதிச் சுற்றுக்கு தேர்வானவர்களுடன் செஃப் தீனா அவள் விகடனுடன் கோல்டு வின்னர், சத்யா, நாகா, எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், RKG நெய், மெரிபா பனீர், சௌபாக்யா, லலிதா ஜூவல்லரி, விகடன் ப்ளே, ஆஸ்கார் டி.வி போன்றவை இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், நாகா ரவையில் உண்ணிப்பூ பாயாசம், நாகா கடலை மாவில் நாட்டு நஞ்சுக்கொட்டான் ரோல் செய்த புவனேஸ்வரி `நாகா சுவை சாம்ப்' வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அரங்கத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனித்தனி சமையல் டேபிளில் அந்த 10 பேரும் சமையல் செய்தனர். அவர்களில் முருங்கை பல்ப் கொத்சு செய்த புவனேஸ்வரி, உருளை ரோல் மற்றும் சம்பா பாயாசம் செய்த முருகன், சர்க்கரைவள்ளி கிழங்கு சாதம் செய்த வனஜா மூவரையும் சென்னையில் நடக்கும் இறுதிச் சுற்றுக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சக்தி மசாலா, கோல்டு வின்னர், சத்யா, நாகா ரவா, எக்சோ, அஸ்வின் ஸ்வீட்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. நாளை 08.02.2026 அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி, புதுச்சேரியில் ஜி.வி.ஹால், கர்ணன் தெரு, கருவடிக்குப்பம், லாஸ்பேட் மெயின் ரோடு, கென்னடி கார்டன் பகுதியில் நடைபெற இருக்கிறது.

விகடன் 7 Feb 2026 6:35 pm

ஒரு ஜோடி கொலுசுக்காக…பெண்ணுக்கு நிகழ்ந்த பயங்கரம்

இந்தியாவின் ராஜஸ்தானில், ஒரு ஜோடி கொலுசுக்காக பெண்ணொருவர் கொடூரமாக கொல்லப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஒரு ஜோடி கொலுசுக்காக… ராஜஸ்தானிலுள்ள Kodyai என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா தேவி (60). செவ்வாய்க்கிழமையன்று, அருகிலுள்ள வனப்பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்ற கமலா வீடு திரும்பாததால், தாயைத் தேடிச் சென்றுள்ளார் அவரது மகனான ஹன்ஸ் ராஜ். தாயைத் தேடிச் சென்ற ராஜுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், கழுத்தறுபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த கமலாவின் கால்கள் இரண்டும் வெட்டப்பட்டிருந்தன. […]

அதிரடி 7 Feb 2026 6:30 pm

பேராசிரியர் பிரதீபராஜா –‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைப் பேராசிரியரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா அவர்களுக்கு நம் மண்ணின் வானிலை வல்லோன் என… The post பேராசிரியர் பிரதீபராஜா – ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 6:27 pm

Chris Pratt and Katherine Schwarzenegger: Hollywood Power Couple

Chris Pratt and Katherine Schwarzenegger have been happily married since 2019 and share three daughters. Both of them have successful

சென்னைஓன்லைனி 7 Feb 2026 6:17 pm

மன்னாரில் கண்டல் தாவரங்கள் நடுகை

மன்னார் நகரின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் கரையோரப் பகுதிகளில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் மன்னார் ரொட்ராக்ட்… The post மன்னாரில் கண்டல் தாவரங்கள் நடுகை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 6:14 pm

Taylor Swift to Attend Super Bowl LIX Event

Taylor Swift will attend Super Bowl LIX on February 9, 2026, but she will not perform during the halftime show.

சென்னைஓன்லைனி 7 Feb 2026 6:11 pm

இந்தியா –அமெரிக்கா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் என்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பரஸ்பர… The post இந்தியா – அமெரிக்கா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் என்கிறார் பிரதமர் மோடி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 6:07 pm

⛈️ ட்வா புயலால்  103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனா் 

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ட்வா (Twa) புயல் ஏற்படுத்திய தாக்கத்தினால் 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.… The post ⛈️ ட்வா புயலால் 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனா் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 6:03 pm

பெண்களும், இளைஞர்களும் முதல்வர் பக்கம் தான்.. – திமுக இளைஞரணி மாநாட்டில் கர்ஜித்த கனிமொழி!

விருதுநகர் திமுக மாநாட்டில் முதல்வருடன் பெண்களும் இளைஞர்களும் உறுதியாக உள்ளதாக கனிமொழி பேசியுள்ளார்.

சமயம் 7 Feb 2026 5:56 pm

ஈபிஎஸ்க்கு ஆளுமை இல்லை.. செயல்பாடுகள் பிடிக்கவில்லை.. தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகி!

அதிமுகவை வழிநடத்தும் திறன், அதாவது ஆளுமை எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்ற காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து உள்ளதாக வி.எஸ். பாபு தெரிவித்து உள்ளார்.

சமயம் 7 Feb 2026 5:50 pm

Raghav Juyal Cast in Star-Studded Ramayana

Raghav Juyal, who recently impressed audiences with his performance in Aryan Khan’s directorial debut, The Bads of Bollywood, is steadily

சென்னைஓன்லைனி 7 Feb 2026 5:33 pm

“தலைவரின் வாழ்வு 14 பேரின் சடலங்கள் மீது கட்டமைக்கப்பட்டதா?”

தேசியத் தலைவர் மேதகு வே*பிரபா*கரனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கள்… The post “தலைவரின் வாழ்வு 14 பேரின் சடலங்கள் மீது கட்டமைக்கப்பட்டதா?” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 5:33 pm

சீக்கடிலோ ஓடிடி விமர்சனம்: சோபிதா தூலிபாலா மிரட்டும் க்ரைம் த்ரில்லர் –முக்கிய அப்டேட்!

சீக்கடிலோ ஓடிடி விமர்சனம் (Cheekatilo OTT Review) தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகை சோபிதா தூலிபாலா நடிப்பில் தெலுங்கு க்ரைம் த்ரில்லராக உருவான ‘சீக்கடிலோ’ திரைப்படம்

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Feb 2026 5:30 pm

சீக்கபிலோ ஓடிடி விமர்சனம்: சோபிதா தூலிபாலா மிரட்டும் க்ரைம் த்ரில்லர் –முக்கிய அப்டேட்!

சீக்கபிலோ ஓடிடி விமர்சனம் (Cheekatilo OTT Review) தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகை சோபிதா தூலிபாலா நடிப்பில் தெலுங்கு க்ரைம் த்ரில்லராக உருவான ‘சீக்கபிலோ’ திரைப்படம்

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Feb 2026 5:30 pm

வீதியில் வைத்து ஆசிரியையின் உதடுகளை துண்டித்த மாணவன்!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அவரது உதடுகளை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, அவரது இரண்டு உதடுகளையும் துண்டித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவனின் செயலால் மனமுடைந்த ஆசிரியை சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியையின் சகோதரர் அளித்துள்ள முறைப்பாட்டின்படி, ஆக்ரா வீதியில் உள்ள ஒரு தனியார் […]

அதிரடி 7 Feb 2026 5:30 pm

India-US Trade Deal to Boost Aerospace Exports

The US–India interim trade framework, announced on February 7, 2026, is expected to increase India’s role in supplying aerospace parts

சென்னைஓன்லைனி 7 Feb 2026 5:26 pm

Jaguar Land Rover Posts Losses After Cyberattack

Jaguar Land Rover (JLR), the British luxury car brand owned by Tata Motors Passenger Vehicles Ltd, is still facing financial

சென்னைஓன்லைனி 7 Feb 2026 5:19 pm

யப்பானில் முதல் போக்கிமொன் தீம் பூங்கா திறந்து வைப்பு

டோக்கியோவில் போகிமொனின் முதல் நிரந்தர தீம் பூங்காவான போகிபார்க் கான்டோவைத் திறப்பதன் மூலம் ஜப்பான் ஒரு புதிய ஈர்ப்பை வரவேற்றது. யோமியூரிலாந்திற்குள் அமைந்துள்ள இது, நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் வேளையில் வருகிறது. இந்த தளம் 26,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஒரு காட்டுப் பாதை, அங்கு பார்வையாளர்கள் மலைகள், புல் மற்றும் பாறைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்ட வாழ்க்கை அளவிலான போகிமொன்களைக் கடந்து நடந்து செல்கிறார்கள். மற்றொன்று சவாரிகள், கடைகள் மற்றும் உணவு, கேரோசல் விளையாட்டுகள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பிரத்யேக பொருட்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. போகிமொன் ஈர்ப்புகள் கடந்த காலங்களில் தோன்றியிருந்தாலும், அவை அனைத்தும் தற்காலிகமானவை, மார்ச் முதல் செப்டம்பர் 2005 வரை ஓடி பின்னர் தைவானில் மீண்டும் உருவாக்கப்பட்ட நகோயாவில் உள்ள போகிமொன் தி பார்க், அத்துடன் 1999 இல் ஆஸ்திரேலியாவின் வார்னர் பிரதர்ஸ் மூவி வேர்ல்டில் ஒரு போகிமொன் தீவு சாகசம் ஆகியவை இதில் அடங்கும். லாட்டரி விற்பனையில் ஆரம்ப டிக்கெட்டுகள் காணாமல் போனது. அதிக தேவையை பிரதிபலிக்கிறது. மதிப்புரைகள் ஒரு சூடான, ஆழமான சூழலை எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும் சில பார்வையாளர்கள் திரும்பி வருவதற்கு காரணங்கள் இல்லை என்று கூறுகிறார்கள். இந்த பூங்கா ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட போகிமான் இரசிகர்களுக்கான களமாக அமைந்துள்ளது.

பதிவு 7 Feb 2026 5:08 pm

பொலநறுவையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ராக்கெட் லாஞ்சர்கள் மீட்பு

பாலச்சேனை மற்றும் குடும்பிமலைப் பகுதிகளில் பயன்பாட்டுக்கு உகந்த 84 மில்லி மீற்றர் RCL M2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளன பொலநறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாழச்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு 7 Feb 2026 5:05 pm

India - US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!' - க.கனகராஜ் | களம் 03

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,  `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'. களம் 03 க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்) (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மாபெரும் வெற்றி என மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டாடி மகிழ்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இருதரப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக எக்ஸ் தளத்தில் பதிவிடுவது, அதை பகிர்ந்து இந்தியாவின் பிரதமர், அமைச்சர்களும் கொண்டாடுவது மிக மோசமான முன்னுதாரணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்று தேடித்தேடி பார்த்தால் நிகரமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், வர்த்தக கொள்கைக்கும், பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்று உறுதியாக சொல்ல முடியும். ஏற்றுமதி - இறக்குமதி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மீது 25 சதவிகிதம் இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதற்காக 25 சதவிகிதம் தண்டனை வரி என்பதை குறைத்து 18 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 18 சதவிகிதம் வரி என்பது இதர நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது அதிகம் தான் என்றாலும், இந்திய பொருட்களால் போட்டியிட முடியும் என்பது சற்று பலன் தரக்கூடியதுதான். ஆனால், இதற்காக நாம் இழப்பது எவ்வளவு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இறக்குமதிக்கு இலக்கா அல்லது இழப்பிற்கு இலக்கா? 2025 ஆம் ஆண்டு முழுவதும் மொத்தமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் அளவு சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாகும். அது இப்போது 10 மடங்காக அதிகரித்து 45 லட்சம் கோடி ரூபாய் (500 பில்லியன் டாலர்) அளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு இறக்குமதி வரி விதிப்பு மூலம் இந்தியா சுமார் 25,000 கோடி ரூபாய் வரியாக பெற்றிருக்கிறது. இந்நிலையில், இறக்குமதி 10 மடங்காகும் என்ற சொல்லப்படும் நிலையில் இறக்குமதிக்கான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் அளவிலேயே இறக்குமதி மட்டும் உயர்கிறது என்று வைத்துக் கொண்டால் சுமார் 2 1/2 லட்சம் கோடி அளவிற்கு நாம் இறக்குமதி வரி வசூலிக்க வேண்டும். சிபிஐ(எம்) க.கனகராஜ் ஆனால், அது இனிமேல் முற்றிலுமாக இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இந்திய கஜானவிற்கு வரவேண்டிய இரண்டரை லட்சம் கோடி இனி வராது. ஒரு ஒப்பந்தத்தின் மூலம் மாறுதல் செய்கிறோம். அப்படியே ஒப்பீடு செய்வது சரியல்ல என்று ஒருவர் சொல்லக்கூடும். அப்படி வைத்துக் கொண்டால் கூட அமெரிக்கா சொல்லும் 45 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதிக்கு 10 சதவிகிதம் வரி விதித்தால் அது 4 1/2 லட்சம் கோடி. 5 சதவிகிதம் விதித்தால் 2 1/4 லட்சம் கோடி. ஒரு சதவிகிதம் விதித்தால் கூட 45,000 கோடி. ஆனால், இதை முற்றிலுமாக விட்டுக்கொடுக்க மோடி அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இந்திய மக்களின் பிரதான உணவு தானியங்களான அரிசிக்கும், கோதுமைக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. உத்தேசமாக, இதன் மூலமாக மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாயை இந்திய அரசாங்கம் பெறுகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை விட்டுத்தர முன்வருகிற இந்தியா உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி-யை விலக்கிக் கொள்ள தயாராக இல்லை. India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி சூர்யா | களம் 02 இரண்டாவதாக, இந்தியாவிற்கு தேவைப்படுகிற பொருளை தேவைப்படுகிற அளவிற்கு இறக்குமதி செய்யலாம். ஆனால், 45 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யச் சொல்வதும் அதுபற்றி மோடி அரசாங்கம் மௌனம் காப்பதும் ஏனென்று தெரியவில்லை. 45 லட்சம் கோடி என்பது இந்தியாவின் 2026 பட்ஜெட்டில் 84 சதவிகிதம். இந்த அளவிற்கு இறக்குமதி செய்வது என்று இலக்கு வைப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும். ஒரு நாடு தன் தேவைக்குத்தான் இறக்குமதி செய்ய வேண்டுமே தவிர, இன்னொரு நாட்டின் வியாபாரத்திற்காக தன் நாட்டு தொழில்களை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று விடுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. இது வெறும் பொருள் இறக்குமதி சார்ந்ததாக மட்டும் இருக்காது. இந்திய தொழில்கள் பாதிக்கப்படும், தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள், அந்நிய செலாவணி குறையும், நடப்பு கணக்கில் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும். இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் டொனால்ட் ட்ரம்ப் சொல்கிறார் என்பதற்காக அமைதி காப்பது இந்தியாவின் நலனை காவுக் கொடுப்பதாகும். மோடி - ட்ரம்ப் ரஷ்ய கச்சா எண்ணையும் வெனிசுலா கச்சா எண்ணையும் ஏதோ தான் அமைதிக்காக அவதாரம் எடுத்தது போல் டொனால்ட் ட்ரம்ப் பேசித் திரிகிறார். நரேந்திர மோடி தனது நன்றி அறிவிப்பு எக்ஸ் பதிவில் டொனால்ட் ட்ரம்ப்பின் அமைதி முயற்சிகளை பாராட்டி புளகாங்கிதம் அடைந்துள்ளார். ஒரு நாட்டின் அதிபரை திருட்டுத்தனமாக இரவு நேரத்தில் புகுந்து மனைவியோடு கடத்திக் கொண்டுவந்து தன் நாட்டில் சிறை வைப்பது அமைதி நடவடிக்கையா? 66,000 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்தபோது இஸ்ரேலுக்கு துணையாக நின்றது அமைதி நடவடிக்கையா? கனடாவை தனது மாநிலங்களில் ஒன்றாக இணைத்துக் கொள்ள போகிறேன் என்று கொக்கரிப்பது அமைதி நடவடிக்கையா? கீரின்லாந்து எனக்குத்தான் சொந்தம் என்று திமிர்த்தனமாக பேசுவது அமைதி நடவடிக்கையா? இத்தனை இருந்தபிறகும், ரஷ்யா போரில் ஈடுபடுவதற்கு எண்ணை வியாபாரம் தான் காரணம், எனவே போருக்கு எதிராக எனது நடவடிக்கை இது என்று ட்ரம்ப் பசப்பித்திரிகிறார். இதே ட்ரம்ப் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து போரை நிறுத்து என்று சண்டியர்த்தனம் செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொண்டவர். அதன்பிறகு அரிய வகை தனிமங்களை அடிமாட்டு விலைக்கு விற்க உக்ரைனை நிர்ப்பந்தித்து அடிமை சாசனம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகு போருக்கு ஆயுதமும், பணமும் கொடுத்ததை எந்த வகையில் சேர்க்க. ஆனாலும், அமெரிக்கா சொல்கிறது ரஷ்யாவிடம் எண்ணை வாங்காதே என்று. அதிலாவது, தர்க்க ரீதியாக ஏதோ நியாயம் இருப்பதாக நாமும் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால், வெனிசுலாவிடம் தான் கச்சா எண்ணை வாங்க வேண்டும் என்று சொல்வது என்ன வகையில் நியாயம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 68 டாலராக இருந்தபோது ஆரம்பித்து இப்போது வரை ஒரு பீப்பாய் 60 டாலருக்கு ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 68 டாலர். அதாவது ஒரு பீப்பாய்க்கு 8 டாலர் அதிகம். ஒரு நாளைக்கு 21 லட்சம் பீப்பாய்களை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்தது. இப்போது ஏற்படும் இழப்பை யார் சரிக்கட்டுவார்கள். ஏற்கனவே இறக்குமதி பொருட்களுக்கு வரியே இல்லை என்பதன் மூலம் குறைந்தபட்சம் 45,000 கோடியிலிருந்து சில லட்சம் கோடிகள் வரை இந்தியா இழக்கும் நிலையில், இன்னொரு பக்கம் கச்சா எண்ணை இறக்குமதியை ரஷ்யாவிடமிருந்து மாற்றுவதால் அதுவும் ஒரு மிகப்பெரிய இழப்பாக அமையப்போகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தை இந்தியாவிற்கு ஆதரவான ஒப்பந்தம் என்று கொண்டாட முடியாது. மாறாக, இத்தகைய அள்ளிக் கொடுக்கும் அடிபணிந்து போகும் ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தை, தொழில்களை சீரழிக்கப் போகிறது. ட்ரம்ப் - மோடி இன்னும் என்னவெல்லாம் மறைந்திருக்கிறது என்பது முழுமையான ஒப்பந்தம் வெளிவந்தால் மட்டுமே வெளிச்சம் கிடைக்கும். அதில் ஒன்றும் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட இந்தியாவிற்கு சாதகமான எதுவும் இருந்துவிடும் என்று நம்புவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. எனவே, இந்த ஒப்பந்தம் உண்மையில் இருதரப்பு ஒப்பந்தம் அல்ல இந்தியா மீது அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டும்தான்.! (தொடரும்) India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01

விகடன் 7 Feb 2026 5:04 pm

திமுக அரசின் சட்டவிரோத செயல்.. எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி.. ஃபெயிலியர் மாடல் அரசு என விமர்சனம்!

திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சமயம் 7 Feb 2026 5:01 pm

இத்தாலி மிலன் மற்றும் கோர்டினாவில் குளிர்கால ஒலிம்பிக் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது

லன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை சான் சிரோ மைதானத்தில் ஒரு பிரகாசமான விழாவுடன் தொடங்கின, பனி மூடிய இத்தாலிய ஆல்ப்ஸ் முழுவதும் விளையாட்டு அரங்குகளில் கொண்டாட்டங்கள் எதிரொலித்தன. வரலாற்றில் மிகவும் புவியியல் ரீதியாக பரவலான ஒலிம்பிக்கை இந்த களியாட்டம் பிரதிபலித்தது. மிலனின் ஆர்ச் ஆஃப் பீஸிலும், மிலனில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெண்களுக்கான ஆல்பைன் ஸ்கீயிங்கை நடத்தும் அழகிய ரிசார்ட்டான கோர்டினா டி'ஆம்பெஸ்ஸோவிலும் இரண்டு கொப்பரைகளை ஏற்றுவதில் இது உச்சக்கட்டத்தை அடைந்தது. இத்தாலிய பனிச்சறுக்கு ஒலிம்பிக் சாம்பியன்களான ஆல்பர்டோ டோம்பா மற்றும் டெபோரா காம்பாக்னோனி, மிலனின் அமைதி வளைவில் லியோனார்டோ டா வின்சியின் முடிச்சு வடிவங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு சிக்கலான கொப்பரையை ஏற்றி வைத்தனர். கோர்டினாவின் உறைபனி மலைக் காற்றில், இந்தப் பணி இத்தாலிய முன்னாள் தங்கப் பதக்கம் வென்ற சோபியா கோகியாவிடம் விழுந்தது, அவர் முன்பு பெண்களுக்கான டவுன்ஹில் போட்டிக்கான பயிற்சி ஓட்டத்தில் பங்கேற்றிருந்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சான் சிரோ மைதானத்தில் பெரிய திரையில் தோன்றியபோது, ​​கூட்டத்தினரிடமிருந்து பலத்த கூச்சல்கள் எழுந்தன. இந்த நிகழ்வு மற்றபடி இணக்கமானதாக இருந்தது. ஆனால் அமெரிக்க அணி தங்கள் அணிவகுப்பைத் தொடங்கியபோது பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைதட்டலைப் பெற்றது. அமெரிக்க தூதுக்குழுவின் பாதுகாப்பின் ஒரு பகுதியாக அமெரிக்க குடியேற்ற அமலாக்க நிறுவனமான ICE இன் முகவர்கள் இருப்பது குறித்து இத்தாலியில் கோபம் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் இத்தாலிய அரசாங்கம் முகவர்களுக்கு அதன் மண்ணில் எந்த செயல்பாட்டுப் பங்கும் இருக்காது என்று கூறியுள்ளது. இந்த ஒலிம்பிக்கிற்கான அசாதாரண அமைப்பின் நகர-மலை இருவேறுபாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவும், உலகளாவிய பதட்டங்களின் போது ஒற்றுமை உணர்வை ஈர்க்கவும் முயற்சிப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். நல்லிணக்கம் மற்றும் அமைதியின் கருப்பொருள்களை வெளிப்படுத்த அவர்கள் முயன்றதாகக் கூறியுள்ளனர். தென்னாப்பிரிக்க நடிகர் சார்லிஸ் தெரோனும் இத்தாலிய ராப்பர் காலியும் இரவின் இறுதியில் அமைதி செய்திகளை வழங்கினர். சான் சிரோ நிகழ்ச்சியில் கலைஞர்கள் இத்தாலிய ஓபராவின் மூன்று சிறந்த மாஸ்டர்களான கியூசெப் வெர்டி, கியாகோமோ புச்சினி மற்றும் ஜியோச்சினோ ரோசினி ஆகியோரின் பெரிய தலைகளை அணிந்திருந்தனர், அதே நேரத்தில் அமெரிக்க பாப் நட்சத்திரம் மரியா கேரி, இறகுகளுடன் கூடிய வெள்ளை நிற வரிசையான உடையில், இத்தாலிய மொழியில் வோலேர்மற்றும் எதுவும் சாத்தியமற்றதுஎன்று பாடினார். இத்தாலிய பாடகி ஆண்ட்ரியா போசெல்லி நெசுன் டோர்மாநிகழ்ச்சியை நிகழ்த்திய பிறகு உற்சாகமான வரவேற்பைப் பெற்றார், மேலும் டஜன் கணக்கான மாடல்கள் சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை கால்சட்டை உடைகளை அணிந்து மேடை முழுவதும் ஓடிவந்து அர்மானியை கௌரவித்தனர். நாம் எவ்வளவு கடுமையாக விழுந்தாலும், நாம் தைரியமாக இருக்க முடியும், கனிவாக இருக்க முடியும், மீண்டும் எழுந்திருக்க முடியும் என்பதை நீங்கள் எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள்என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கிறிஸ்டி கோவென்ட்ரி போட்டியாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கியதாக அறிவித்தார். முதல் முறையாக, பயணத்தைக் குறைக்கும் முயற்சியில், பிப்ரவரி 6-22 வரை நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் தாங்கள் போட்டியிடும் இடத்திற்கு மிக அருகில் உள்ள இடங்களில் 2,900 விளையாட்டு வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அடுத்த இரண்டு வாரங்களுக்கும் மேலான போட்டி இடங்களின் முழுமையான தொகுப்பு 22,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது. பல நகர விழா வடிவம், மிலனுக்கு பல மணிநேர நடைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியமின்றி, ஆல்பைன் ஸ்கீயிங், பாப்ஸ்லெட், கர்லிங் மற்றும் ஸ்னோபோர்டிங் போன்ற மலைப்பகுதி விளையாட்டுகளை பிரதிநிதித்துவப்படுத்த அனுமதித்தது.

பதிவு 7 Feb 2026 5:00 pm

Sofia Goggia Lights Olympic Cauldron in Cortina

Italian ski star Sofia Goggia played an important part in helping Italy win the rights to host the Milan Cortina

சென்னைஓன்லைனி 7 Feb 2026 4:57 pm

14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்டியமைத்தார்?

தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மனோகரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில் தலைவரின் திருமண வாழ்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக்கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது. அவ்வாறயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்டியமைத்தார்? மேலும் நாட்டுப் பேச்சாளர் என்று ஒருவருக்கு மதிப்பளிக்கும் போது அவரது போராட்ட பங்களிப்பு சமூகத்துடனான உறவாடல் போன்ற விடயங்கள் மிக ஆழமாக பரிசீலித்த பின்னே அறிவிக்கப்படுகின்றது. மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம். ஆனால் பாலச்சந்திரன் என்ற தனது மகன் மாவீரர் என்ற நிலையை அடைந்த பின்பும் எந்தெந்த வழிகளில் எமது இனத்திற்கு உதவலாம் என மாவீரர் விடயங்களில் திருமண ஏற்பாடுகள் உட்பட எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன். தமிழக அரசியலில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருந்தாலும் எவரையும் பகைக்காத போக்கே பொதுவாக இருந்து வந்துள்ளது தன்னை எல்லோரையும் விட மேலாக கருதி சில அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார் தலைவர் என கற்பனையாகவோ தவறாக விளங்கியோ கூறுவது இதுவரை இவர் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை மனம் நோக வைத்துள்ளது. அந்தவகையில் இத்தகைய தவறான தமது கருத்துக்களை திருமாவளவன் மீளப் பெற வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 7 Feb 2026 4:57 pm

மன்சூர் அலிகானின் உண்ணாவிரத போராட்டம்… மோடியை விமர்சித்த மன்சூர்- காரணம் என்ன?

நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 7 Feb 2026 4:53 pm

BCCI Announces ₹7.5 Crore Reward for U19 Champions

The Board of Control for Cricket in India (BCCI) has announced a cash reward of ₹7.5 crore for the Indian

சென்னைஓன்லைனி 7 Feb 2026 4:49 pm

யப்பானில் கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர்

சனவரி 20 முதல் யப்பான் முழுவதும் பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் நாடு முழுவதும் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர். யனவரி 20 முதல் பனிப்பொழிவால் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் யப்பானின் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. வார இறுதியில் யப்பானில் மேலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. நிகாட்டா மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் அதிகபட்சமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர், 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமோரி நகரம் மற்றும் வக்கானை ஆகிய இடங்களில் பனிமூட்டம் காணப்பட்டது, பல வாகனங்கள் பனியில் சிக்கித் தவித்தன. யப்பானின் வானிலை ஆய்வு மையம், வார இறுதியில் மேற்கு மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் மேலும் பலத்த பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரித்துள்ளது. யப்பானின் வடக்கு முதல் மேற்கு வரையிலான கடும் பனிப் பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள் குறித்து உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையாக இருக்கவும், பனிச்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. யப்பான் ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

பதிவு 7 Feb 2026 4:49 pm

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – மத்திய அரசு உறுதி!

டெல்லி :இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய விவசாயிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். “இந்திய விவசாய பொருட்களுக்கு அமெரிக்காவில் 0% வரி விதிக்கப்படும். அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இந்தியா அனுமதிக்கவில்லை. அமெரிக்க அரிசி, கோதுமை, சர்க்கரை, தினை, வாழைப்பழம், சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்களுக்கு வரிவிலக்கு இல்லை” என்று அவர் கூறினார். இதனால் இந்திய விவசாயிகளின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன […]

டினேசுவடு 7 Feb 2026 4:45 pm

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: $80 பில்லியன் மதிப்பிலான போயிங் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: $80 பில்லியன் மதிப்பிலான போயிங் விமானங்களை வாங்குகிறது இந்தியா! இந்திய வான்வழிப் போக்குவரத்துத் துறையில்… The post அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: $80 பில்லியன் மதிப்பிலான போயிங் விமானங்களை வாங்குகிறது இந்தியா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 4:44 pm

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

நாட்டில் 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி 04ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 317,381 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது. அதிகளவானோர் இந்தியப் பிரஜைகள் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன், அவர்களின் எண்ணிக்கை 57,348 எனப் பதிவாகியுள்ளது. […]

அதிரடி 7 Feb 2026 4:41 pm

எச்.ராஜாவை சந்தித்ததும் மனம் கலங்கிய தமிழிசை.. வீடியோவில் எச்.ராஜா எப்படி இருக்கிறார் பாருங்க!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை நேரில் சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் நலம் விசாரித்தார்.

சமயம் 7 Feb 2026 4:40 pm

அமெரிக்கா, இந்தியா இடைக்கால வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை வெளியிட்டன

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து , அமெரிக்காவும் இந்தியாவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டன. இந்த கட்டமைப்பு பரந்த அமெரிக்க-இந்தியா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) பேச்சுவார்த்தைகளுக்கான நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா அனைத்து அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான அமெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான கட்டணங்களை நீக்கும் அல்லது குறைக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், பிற கொள்முதல்களுடன், சுமார் 500 பில்லியன் டாலர் (€423 பில்லியன்) மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி பொருட்கள் மற்றும் விமானங்களை வாங்கவும் புது தில்லி திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 2025 இல், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு புது தில்லியை அழுத்தம் கொடுக்க டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கினார். 25% பரஸ்பர வரிக்கு மேல் கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது. இந்த கூடுதல் வரி தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் வாஷிங்டனும் புது தில்லியும் ஒரு முறையான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பதிவு 7 Feb 2026 4:40 pm

இடி மின்னல்…மழை ;வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை!

நாட்டில் இன்று (07) நண்பகல் 12.00 மணியளவில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பான ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கையைவளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் […]

அதிரடி 7 Feb 2026 4:38 pm

ஈரானின் வர்த்தக கூட்டாளிகள் மீது வரிகளை விதிக்க அங்கீகாரம் அளித்தார் டிரம்ப்

ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25% வரி விதிக்கக்கூடிய நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார் . ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் இஸ்லாமிய குடியரசின் ஆட்சி எதிர்ப்பு போராட்டங்கள் மீது இரத்தக்களரியான ஒடுக்குமுறை தொடர்பாக வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், டிரம்ப் கடந்த மாதம் இந்த நடவடிக்கையை முதலில் அச்சுறுத்தினார். சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் இந்த நிர்வாக உத்தரவு, ஈரானுடன் இன்னும் வணிகம் செய்யும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்க நிர்வாகத்தை வழிநடத்துகிறது. ஈரானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு பொருட்களையும் அல்லது சேவைகளையும் வாங்கும், இறக்குமதி செய்யும் அல்லது வேறுவிதமாகப் பெறும் எந்தவொரு நாட்டின் தயாரிப்புகளாக இருக்கும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படலாம் என்று அது கூறுகிறது. இந்த உத்தரவு அந்தக் கடமைகளைத் தீர்மானிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையை அமைக்கிறது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விகிதத்தை நிர்ணயிக்கும் பணியை மேற்கொள்கிறார். ஜனவரி நடுப்பகுதியில் டிரம்ப் முதன்முதலில் முன்வைத்த எண்ணிக்கையை எதிரொலிக்கும் வகையில், வரி 25% வரை அதிகமாக இருக்கலாம் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் ஈரானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியும் ஈரானிய எண்ணெயை அதிகம் வாங்குபவருமான சீனாவுடனான வர்த்தகத்தையும், ரஷ்யா, ஜெர்மனி, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளையும் பாதிக்கும். அணுசக்தி திறன்களைப் பின்தொடர்வது, பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பது, பாலிஸ்டிக் ஏவுகணை மேம்பாடு மற்றும் அமெரிக்க பாதுகாப்பு, நட்பு நாடுகள் மற்றும் நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பிராந்திய ஸ்திரமின்மைக்கு ஈரானை பொறுப்பேற்க வைப்பதேஇந்த வரிவிதிப்பு நோக்கமாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சமீபத்திய வெகுஜன போராட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஈரானின் மிருகத்தனமான அடக்குமுறை மற்றும் அதன் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தை மேற்கோள் காட்டி, டிரம்ப் பலமுறை ஈரானின் தலைமையை அச்சுறுத்தியுள்ளார்.

பதிவு 7 Feb 2026 4:31 pm

பஃபேஜிபிடி ஏஐ கருவி: கல்யாண சாப்பாட்டில் எது பெஸ்ட்? –பெங்களூரு இளைஞரின் அதிரடி கண்டுபிடிப்பு!

பஃபேஜிபிடி ஏஐ கருவி (BuffetGPT AI Tool) தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வரும் ஒரு சுவாரசியமான கண்டுபிடிப்பாகும். இந்தியத் திருமணங்களில் பஃபே முறையில்

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Feb 2026 4:30 pm

கனடாவில் ஜனவரியில் 25,000 வேலைகள் இழப்பு

ஜனவரி மாதத்தில் கனடா பொருளாதாரம் 25,000 வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக, வேலைவாய்ப்பில்லா விகிதம் 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரியில் ஏற்பட்ட வேலை இழப்புகள் பெரும்பாலும் தனியார் துறையிலும், பகுதி நேர வேலைகளிலும் பதிவாகியுள்ளன. குறிப்பாக 25 முதல் 54 வயதுக்குட்பட்ட பெண்களிடையே இந்த இழப்புகள் அதிகமாக இருந்ததாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வேலை இழப்புகளின் மிகப்பெரிய தாக்கத்தை […]

அதிரடி 7 Feb 2026 4:30 pm

AI யுகத்தில் கோடிங்கை விட இயற்பியலும் கணிதமுமே முக்கியம்! – எலான் மஸ்க் &ஜென்சன் ஹுவாங் அறிவுரை!

செயற்கை நுண்ணறிவு (AI) அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், வருங்கால மாணவர்கள் எதைக் கற்க வேண்டும் என்பதில்… The post AI யுகத்தில் கோடிங்கை விட இயற்பியலும் கணிதமுமே முக்கியம்! – எலான் மஸ்க் & ஜென்சன் ஹுவாங் அறிவுரை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 4:18 pm

Trump Renews Iran Emergency, Imposes New Tariffs

US President Donald Trump has signed an executive order renewing the national emergency against Iran and introducing a new tariff

சென்னைஓன்லைனி 7 Feb 2026 4:17 pm

ஒரு மில்லியன் பெறுமதியான அந்தூரியச் செடிகளுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அந்தூரியம் செடிகளுடன் இரண்டுஇலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த அவர்கள், 436 அந்தூரியம் செடிகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விவசாயத் துறையின் இறக்குமதி அனுமதி இல்லாமல் அவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. அதன்படி, அவர்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இரண்டு பெண்களும் முறையே 40 மற்றும் 45 வயதுடையவர்கள், கொழும்பு மற்றும் அவிசாவளையை வசிப்பவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. Anthurium plant

பதிவு 7 Feb 2026 4:16 pm

U19 World Cup : தீபேஷ், அம்ப்ரிஷ்!உலகக்கோப்பை அணியில் ஜொலித்த தமிழ்நாட்டு தங்கங்கள்! - யார் இவர்கள்?

தமிழ்நாட்டில் இருந்தும் இந்திய அணிக்குத் தொடர்ந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சர்வதேச அளவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் தங்களின் முக்கியமான பங்களிப்பை அளித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ் மற்றும் ஆல்ரவுண்டர் R.S. அம்ப்ரிஷ். தீபேஷ் தேவேந்திரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன், தனது அசத்தலான பந்துவீச்சுத் திறமையால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். அதன் பலனாக, தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வாய்ப்பே அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. தீபேஷ் தேவேந்திரன் அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக, இந்திய U-19 அணியின் கதவு திறந்தது. 2025 ஆம் ஆண்டு U-19 ஆசியக் கோப்பை தொடரில் தீபேஷ் விளையாடிய 5 போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தி, தனது பந்துவீச்சுத் திறமையை சர்வதேச அளவிலும் நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து U-19 உலகக்கோப்பை தொடரில் தேர்வான தீபேஷ், தொடர் முழுவதும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 15 விக்கெட்களை கைப்பற்றினார். முக்கிய தருணங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்திய அவரது பந்துவீச்சு, இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றியது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. R.S. அம்ப்ரிஷ் தமிழ்நாட்டின் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் R.S. அம்ப்ரிஷ். 2026 ஆம் ஆண்டுக்கான U-19 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட இவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் அணிக்கு மதிப்பான பங்களிப்பை அளித்தார். இடதுகை பேட்ஸ்மேனாகவும், வலதுகை மிதவேக பந்துவீச்சாளராகவும் விளங்கும் அம்ப்ரிஷ், டாப் மற்றும் நடுவரிசையில் அணியின் தேவைக்கேற்ப விளையாடும் திறன் கொண்டவர். ‘ஹார்ட் லெந்த்’ பந்துகளின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தும் அவரது பந்துவீச்சு, அவரது முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. R.S. அம்ப்ரிஷ் ரஞ்சி டிராபி, TNPL, U-19 இங்கிலாந்து சுற்றுப்பயணம் என தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அம்ப்ரிஷ், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் 12 விக்கெட்களும், 157 ரன்களும் எடுத்தார். குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி, இந்திய வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். இதன் மூலம், தனது திறமையை உலக கிரிக்கெட் அரங்கில் பறைசாற்றினார். இந்த இரு வீரர்களும், தமிழ்நாடு கிரிக்கெட்டின் நாளைய முகங்களாகவும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கைகளாகவும் இருக்க வாழ்த்துகள்.! T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? - ஓர் அலசல்!

விகடன் 7 Feb 2026 4:06 pm

திமுகவை வீழ்த்த பாஜக எடுக்கும் ஆயுதம்.. திமுகவை அனுப்புவதுதான் ஒரே கனவு.. வானதி சீனிவாசன் பேட்டி!

தமிழக மக்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் என்று பாஜக கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வானதி சீனிவாசன் தற்போது தெரிவித்து உள்ளார்.

சமயம் 7 Feb 2026 4:04 pm

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: இந்திய விவசாயிகளுக்கு என்னென்ன நன்மைகள்?

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதனால் இந்திய விவசாயிகளுக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 7 Feb 2026 4:04 pm

ஓபிஎஸ், சசிகலா இருவரும் அந்த முடிவை எடுக்க மாட்டார்கள்.. அடித்து சொன்ன டிடிவி தினகரன்

சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் டிடிவி தினகரன், அதிமுக தலையிலான கூட்டணியில் இணைந்து விட்டார். அதே நேரம் ஓபிஎஸ், சசிகலா இருவரும் தனித்து விடப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து வரவிருக்கு சட்டசபை தேர்தலுக்காக இவர்கள் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சமயம் 7 Feb 2026 3:52 pm

குடும்பிமலைப் பகுதியில் 3 கவச எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 84 மில்லி மீற்றர் விட்டம் கொண்ட லோஞ்சர் ரக வகையைச் சேர்ந்து கவச எதிர்ப்பு ஆயுதங்களை (Carl Gustaf 3) நேற்று வெள்ளிக்கிழமை (06) விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர். பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குடும்பிமலை பகுதியில் அரங்கலாவ இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வாழைச்சேனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு 7 Feb 2026 3:52 pm

Islamic State Claims Deadly Mosque Blast in Islamabad

The Islamic State (IS) militant group has claimed responsibility for a suicide bomb attack at a mosque in Islamabad, Pakistan,

சென்னைஓன்லைனி 7 Feb 2026 3:48 pm

வேலைக்கு சென்ற 24 வயது இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம்

இரண்டு மாடிக் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது கொங்க்ரீட் கலவை இயந்திரத்தின் கீழ் சிக்கி 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார். களுத்துறையில் பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சக பணியாளர்கள் அவரை பலத்த காயங்களுடன் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் , இளைஞன் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 7 Feb 2026 3:47 pm

பெங்களூரு மெட்ரோ: இன்னும் 2 நாட்கள் தான்… டிக்கெட் விலை ரூ.5 எக்ஸ்ட்ரா- ஸ்டேட், சென்ட்ரல் மோதல்!

பெங்களூரு மெட்ரோ ரயிலில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதன் பின்னணியில் மாநில அரசும், மத்திய அரசும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன. உங்களால் தான் உயர்த்த வேண்டி வந்தது? நீங்கள் தான் கட்டணத்தை உயர்த்தினீர்கள் என்று காரசாரமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

சமயம் 7 Feb 2026 3:45 pm

கருவேப்பிலை பறித்த தாயும் மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) காலை 10.00 மணியளவில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆரம்பக்கட்ட விசாரணை கருவேப்பிலை மரத்தில் கருவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த போது, தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி மரணங்கள் சம்பவித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் […]

அதிரடி 7 Feb 2026 3:45 pm

US Envoys Applaud India-US Trade Cooperation Pact

The United States Ambassador Sergio Gor has praised President Donald Trump and Prime Minister Narendra Modi for the recent India–US

சென்னைஓன்லைனி 7 Feb 2026 3:39 pm

வான்கோழி மயிலாக முடியாது.. இப்போ எதுக்கு பாராட்டு விழா? ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

பயனற்ற ஓய்வூதியத் திட்டமும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை: பாராட்டு விழா நாடகங்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்களை திமுக ஏமாற்ற முடியாது என்று பாமவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

சமயம் 7 Feb 2026 3:35 pm

தி 4 விண்டோஸ் டீசர்: சத்யராஜ் –வெற்றி மிரட்டும் டார்க் காமெடி! –அதிரடி அப்டேட்

தி 4 விண்டோஸ் டீசர் (4 Windows Teaser) பிப்ரவரி 6, 2026 அன்று வெளியாகி இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘8 தோட்டாக்கள்’ வெற்றி

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Feb 2026 3:30 pm

தி 4 விண்டோஸ் டீசர்: சத்யராஜ் –வெற்றி மிரட்டும் டார்க் காமெடி! –அதிரடி அப்டேட்

தி 4 விண்டோஸ் டீசர் (4 Windows Teaser) பிப்ரவரி 6, 2026 அன்று வெளியாகி இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘8 தோட்டாக்கள்’ வெற்றி

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 7 Feb 2026 3:30 pm

மருத்துவ உலகில் புதிய புரட்சி; மாதவிடாய் இரத்தத்தில் புற்றுநோய் பரிசோதனை!

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய மாதவிடாய் இரத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய முறை, மிகவும் துல்லியமான மற்றும் எளிதான வழியாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீன ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் இது கண்டரியப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ‘பாப் ஸ்மியர்’ (Pap smear) அல்லது என்.எச்.எஸ் (NHS) சோதனையில், மருத்துவர் அல்லது தாதியர் மூலம் கருப்பை வாயிலிருந்து செல்கள் சேகரிக்கப்படுகின்றன. 3,000 க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆய்வு ஆனால், வலி, கூச்சம் மற்றும் அசௌகரியம் காரணமாக […]

அதிரடி 7 Feb 2026 3:30 pm

ரசிகர் ஆதரவு மட்டும் போதாது – தவெக மீது விசிக தலைவர் திருமாவளவன் தாக்கு!

சென்னை :விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளார். தவெக கட்சிக்கு இன்னும் உறுதியான அடித்தளம் மற்றும் கட்டமைப்பு இல்லை என்றும், அதனால் விஜய்யால் ஆட்சியை அமைப்பது சாத்தியமில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். திரைத்துறையில் புகழ்பெற்றவராக இருந்தாலும், அரசியலில் உடனடியாக வெற்றி பெற முடியாது என்று அவர் வலியுறுத்தினார். திருமாவளவன் மேலும் கூறுகையில், திரைப்பட ரசிகர்களின் […]

டினேசுவடு 7 Feb 2026 3:26 pm

Takaichi Campaigns Hard Ahead of Japan Snap Poll

Japan’s Prime Minister Sanae Takaichi is using her growing popularity to help her party win the snap election on Sunday

சென்னைஓன்லைனி 7 Feb 2026 3:17 pm

கோவை: 24 மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டல்; கல்லூரி மாணவர் கைதான பின்னணி என்ன?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் தனியார் கல்லூரி உள்ளது. அங்கு அண்மைக்காலமாக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டராகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதாக காவல்துறைக்குப் புகார் வந்தது. கோவை மொத்தம் 24 மாணவிகளிடமிருந்து புகார் வந்ததால், பெண் காவல் அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கல்லூரியில் படிக்கும் 24 மாணவிகளின் புகைப்படங்களை, ஏஐ தொழில்நுட்பத்தில் அரை குறை ஆடைகளுடன் சித்தரித்துள்ளனர். பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களின் பெயர்களில் போலியான கணக்குகளை உருவாக்கி அதில் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். மணமான பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை; 'செல்லாது' - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு இன்ஸ்டாகிராம் மேலும் கல்லூரியின் சில வாட்ஸ்அப் குழுக்களிலும் அந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்களை நீக்க இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டது. காவல்துறை விசாரணையில் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் திருச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இதைச் செய்தது தெரியவந்தது. அந்த மாணவனுக்கு அதே கல்லூரியில் காதலி ஒருவர் உள்ளார். அவர் மூலம் மற்ற மாணவிகளின் புகைப்படங்களைப் பெற்றுத் தவறாகச் சித்தரித்து, மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். கைது இந்தச் சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரைக் கைது செய்தனர். மேலும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டன. திருச்சி: 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்; 58 வயது முதியவர் சிக்கியது எப்படி?

விகடன் 7 Feb 2026 3:16 pm

கந்தளாயில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் : 

திருகோணமலை, கந்தளாய் அக்போபுர (Agbopura) காவல்துறைப் பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்… The post கந்தளாயில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் : appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Feb 2026 3:10 pm

பஞ்சாப் நேஷனல் வங்கி 5,138 காலிப்பணியிடங்கள்; தமிழ்நாட்டில் பயிற்சி வாய்ப்பு - உடனே விண்ணப்பிக்க்க விவரங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 இடங்களுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 121 இடங்களுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.

சமயம் 7 Feb 2026 3:09 pm

தவெக கொங்கு மண்டல கூட்டம்: செங்கோட்டையன் ஆப்சென்ட்; டென்ஷனான அருண்ராஜ்!

தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒவ்வொரு மண்டலமாக பயணித்து மக்களின் கருத்துகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் மேற்கு மண்டல மக்களின் கருத்து கேட்பு கூட்டம் கோவை கணியூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டலத்தின் தவெக முக்கிய முகமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. செங்கோட்டையன் படம் செங்கோட்டையன் படம் மேலும் இந்நிகழ்வுக்காக தவெக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் செங்கோட்டையன்  படமும் இடம்பெறவில்லை. இந்தக் கூட்டத்தில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம், ``தவெக சார்பில் தேர்தலுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கோட்டையன் தவெக பிரசார குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். செங்கோட்டையன் இது தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள குழு. இப்படி தேவையில்லாமல் பிரச்னை செய்வீர்கள் என்று தெரியும். ஆனால் அப்படி எந்த பிரச்னையும் இல்லை என்றார். மற்றொரு நிர்வாகியான ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம், “தவெகவின் அனைத்து நிர்வாகிகளையும் பல்வேறு குழுக்களில் பயன்படுத்த தலைவர் நினைக்கிறார். அனைவருக்கும் சம வாய்ப்பும், உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்றார். அருண்ராஜ் மேலும் பொதுக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை கொண்டு வந்து தவெக  பொதுக் கூட்டங்கள் மற்றும் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை முட்டுக்கட்டை போடுவதாகவும் அருண்ராஜ் குற்றம்சாட்டினார்.

விகடன் 7 Feb 2026 3:04 pm

இந்தவாரம் Vikatan.com ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா? அப்போ பதில் சொல்லுங்க... பரிசை அள்ளுங்க!

விகடன் இணையதளத்தில் வெளியான தொடர்களை ஏற்கனவே படிச்சிட்டீங்கனா, கீழே உள்ள லின்ங்கை கிளிக் செய்து க்விஸ் போட்டியில் உடனே பங்குபெறுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு பரிசு இருக்கு... https://forms.gle/1emoFME678KM8km77?appredirect=website விஜயகாந்தின் முதல் தேர்தல் முதல் களம் விஜயகாந்த் |முதல் களம் 4 விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி, தமிழக அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது, தன்னுடைய முதல் தேர்தலிலேயே பாமக வலுவாக இருந்த விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் தீர்மானித்தது ஏன்? விரிவாக படிக்க CLICK HERE கூட்டணி சர்க்கஸ் காங்கிரஸின் 50 ஆண்டு கூட்டணி சர்க்கஸ் கூட்டணி சர்க்கஸ்! திமுகவுக்கு காங்கிரஸ் பலம். காங்கிரஸூக்கு திமுக பலம். கூட்டணி உடைந்தால் இருதரப்புக்குமே பின்னடைவு உண்டு என்பதே யதார்த்தம். இது வேறு யாரையும் விட சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கும் நன்றாகவே தெரியும். விரிவாக படிக்க CLICK HERE ஆங்காரிகளின் கதை `ஒத்த தங்கைய ஈட்டியால கொல்லுறீங்களே...' பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை உங்க ஊருக்கு அடைக்கலம் வந்த பிள்ளைகளை காட்டிக்குடுத்து கொன்னுருக்கீங்க. அந்தப்பாவம் தான் உங்களைச் சுத்தி சுத்தி வருது. அவங்களுக்கு கோவில் கட்டி கும்பிடுதேன்னு சொல்லுங்கன்னு கோடாங்கி சொல்லிருக்காரு. விரிவாக படிக்க CLICK HERE ‘வாவ்’ வியூகம் இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம் 1962-ல் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். 1965 நெருங்க நெருங்க இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்து மாநிலங்களவையில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்தது. ஒரு கட்டத்தில் அவரது வாதங்களுக்கு அப்போதைய பிரதமர் நேரு சமாதானம் செய்யும் விளக்கங்களையும் அளித்த சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன, விரிவாக படிக்க CLICK HERE அணை ஓசை 02 மேட்டூர் அணை: திட்டத்துக்கே பல தடங்கல்கள்! அணை ஓசை - 4 கர்னல் ஸ்மார்ட், “காவிரியின் குறுக்கே பெரிய அணை கட்டினால் தஞ்சாவூர் டெல்டா முழுவதும் நன்கு பாசன வசதி பெறும்” என்று வலியுறுத்தினார். விரிவாக படிக்க CLICK HERE நினைவுச் சுவடுகள் திமுக, அதிமுக அரசியல் கட்சிகளை வளர்த்த தேநீர் கடைகள் அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்திரிகைகளும்! காலையில் வீடுகளில் தேநீர் தயாரிக்கப்பட்டாலும், செய்தித்தாள் படிப்பதற்காகவும், அதில் வரும் செய்திகள் குறித்து நண்பர்கள் அல்லது மாற்றுக் கட்சியினருடன் விவாதிப்பதற்காகவும் என்றே, ஆண்கள் பலரும் டீ கடைகளைத் தேடி வருவதுண்டு. விரிவாக படிக்க - Click here அரசியல் ஆடுபுலி சர்க்காரியா போய் ரே வந்தது; அதிமுக காங்கிரஸ் சேர்ந்தது! - அதிமுக காங்கிரஸ் | அரசியல் ஆடுபுலி 04 சர்க்காரியா கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி சேர்ந்தது என்று விமர்சித்த எம்ஜிஆரை, இந்த முறை ரே கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் அதிமுக கூட்டணி அமைத்தது என்று விமர்சனம் செய்தார் கருணாநிதி.! விரிவாக படிக்க... Click here Loading…

விகடன் 7 Feb 2026 3:00 pm

Indian Coast Guard Foils International Oil Smuggling Racket

The Indian Coast Guard (ICG) has uncovered and stopped an international oil smuggling racket through a special sea-and-air surveillance operation.

சென்னைஓன்லைனி 7 Feb 2026 2:58 pm

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் குண்டுவெடிப்பு: தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெடிவிபத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

சமயம் 7 Feb 2026 2:58 pm