மெட்ரோ நிர்வாகம் பாதசாரிகளுக்காக அமைத்துள்ள தற்காலிக நடைபாதையால் சர்ச்சை!
மெட்ரோ நிர்வாகம் சார்பில் பாதசாரிகளுக்காக அமைத்துள்ள தற்காலிக நடைபாதையால் சர்ச்சை எழுந்து உள்ளது. இதனால் மக்கள் கடு
'10 ஆண்டுகளில் 106 வழக்குகள் மட்டுமே' - லஞ்ச ஒழிப்புத்துறை குறித்த RTI; வெளியான அதிர்ச்சி தகவல்
விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினரால் சுமார் 10 ஆண்டுகளில் வெறும் 106 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை) என்பது தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுத்திடவும், ஊழலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் உச்சபட்ச அமைப்பாகும் இது. மேலும், அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் லஞ்சம் மற்றும் ஊழல்கள் குறித்து புகார்கள் வந்தால், அதனை உரிய முறையில் விசாரணை செய்வதோடு, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ``நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்'' - குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள் RTI ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பத்திரப் பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வருமான வரித்துறை, வணிகவரித்துறை, காவல் நிலையங்கள் என அரசுத்துறை சார்ந்த பகுதிகளில் நீக்கமற லஞ்சம் பெருகியுள்ளதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ‘அரசு ஊழியர்களே லஞ்சம் வாங்குங்கள், பிடிபட்டால், வேலையே பார்க்காமல் சம்பளம்!’ - ஊக்குவிக்கும் அரசு! தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியான தகவல்கள் இந்தநிலையில், 10 ஆண்டுகளில் 106 வழக்குகள் மட்டுமே பதிவானதாக வந்த தகவலால் சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த உமாராணி என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களைக் கேட்டிருந்தார். அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து பதில் வந்துள்ளது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2014 முதல் தற்போது வரை எத்தனை லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு, 106 வழக்குகள் எனப் பதில் வழங்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் எனக் கேட்டதற்கு, 29 வழக்குகளில் 46 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. RTI 'விருதுநகர் நகராட்சியில் 2014-15 இல் சாலை அமைப்பதில் ஊழல் ஏதும் நடைபெற்றதா? அதில் யாருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?' என்ற கேள்விக்கு, 'குற்ற வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. முதல்நிலை விசாரணை பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளனர். எனவே, லஞ்சம், ஊழல் தடுப்பு தொடர்பாகப் போதிய விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு தரப்பில் ஏற்படுத்த வேண்டும். அரசுத் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். லஞ்சம் தொடர்பான புகார்களை அளிப்போருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!
ஜெயலலிதா 9-ம் ஆண்டு நினைவு தினம்.. அதிமுக எதிர்கொண்ட சவால்கள்- தற்போதைய நிலை?
ஜெயலலிதா காலமானது இன்று ஒன்பது ஆண்டுகளை கடந்துவிட்டது. அவர் இல்லாத ஒன்பது ஆண்டுகளில் அதிமுக எந்த நிலைக்கு வந்துள்ளது?
இஸ்ரேல் உங்களைப் பாதுகாக்காது.. காஸாவில் ஹமாஸ் எதிரிப் படையின் தலைவர் கொலை!
காஸாவில், இஸ்ரேல் ஆதரவு பெற்ற கிளர்ச்சிப்படையின் தலைவர் யாசர் அபு ஷபாப் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படையை எதிர்கொள்வதற்கு இஸ்ரேல் உருவாக்கியதாகக் கூறப்படும் ‘பாப்புலர் ஃபோர்ஸ்’ எனும் ஆயுதக்குழுவின் தலைவர் யாசர் அபு ஷபாப் (வயது 31). காஸாவில், பாலஸ்தீனர்களுக்கு வழங்குவதற்காக அனுமதிக்கப்பட்ட உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிப் பொருள்களைத் திருடியதாகவும், போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டதாகவும் இவரது ஆயுதக்குழுவினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஸாவில் இன்று (டிச. 4) ஆயுதக்குழுக்களுக்கு […]
துப்புரவு பணிகளை மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் ; பிரதமர் ஹரிணி அமரசூரிய
மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள கழிவுகளை முறையான வகையில் அகற்றி, துப்புரவு பணிகளை மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் சேரும் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்காக காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கெரவலப்பிட்டியவில் உள்ள காணியிலிருந்து ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமைய தற்போது சேரும் கழிவுகளை […]
முதல்வரின் மக்கள் செல்வாக்கை குறைக்க பல வழிகளில் நெருக்கடி தருகிறது ஒன்றிய அரசு - உதயநிதி
தி ருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கலைஞர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது, ``திருவண்ணாமலை மாவட்டத்தில், நான் திறந்து வைக்கின்ற மூன்றாவது கலைஞர் சிலை இது. இப்படி, தமிழ்நாடு முழுக்க கலைஞரின் சிலையைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றோம். இது வெறும் நிகழ்ச்சிக்காகவோ அல்லது கொண்டாட்டத்துக்காகவோ நடத்தப்படக்கூடியது அல்ல. கலைஞரின் கொள்கைகளை, அவரின் சாதனைகளை, புகழை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கின்ற நிகழ்ச்சியாகத்தான் பார்க்கின்றோம். நம் தலைவரின் தலைமையில், நாம் ஓரணியில் நிற்கிறோம். ஆனால், நம் எதிரே நிற்கின்ற `அ.தி.மு.க எத்தனை அணியில் நிற்கிறார்கள்’ என்று யாருக்குமே தெரியாது. `அந்த கட்சியை யார் கைப்பற்ற போகிறார்கள்’ என்கிற போட்டியில்தான் அத்தனை அணிகளாக அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். `எடப்பாடி பழனிசாமியை எப்படி தோற்கடிக்கலாம்’ என்று ஒவ்வொரு அணியும் அ.தி.மு.க-வில் போட்டி போட்டுக்கொண்டு வேலை பார்க்கிறது. ஏனெனில், அ.தி.மு.க தொண்டர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்திருக்கிறார். ஆரணியில், உதயநிதி ஸ்டாலின்... `அமித்ஷா-வின் காலடியில் யார் முதலில் விழுவது’ என்று அ.தி.மு.க அணிகளுக்கிடையே மிகப்பெரிய போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், பாசிச பா.ஜ.க-வையும், அதன் அடிமை அ.தி.மு.க-வையும் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் ஏற்றுக்கொள்ளப் போவது கிடையாது. வெறும் வெறுப்பு பிரசாரத்தை மட்டுமே செய்கிற ஒன்றிய பாசிச பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருக்கிறது. அந்தக் கூட்டணி அமைந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், அந்தக் கூட்டணியை நம்பி ஒரு இயக்கம்கூட போகவில்லை. அங்கு இருக்கிறவர்கள்தான் ஒவ்வொருத்தராகப் பிய்த்துக்கொண்டு போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எட்டு மாதங்களுக்கு முன்பு `பிரசாரத்துக்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு பஸ்சை எடுத்துக்கொண்டு கிளம்பினார். `அந்த பஸ்சில் போய் பிரசாரம் செய்வாரா?’ என்று பார்த்தால், ஒவ்வொரு தொகுதியாகப்போய் அ.தி.மு.க-வில் இருப்பவர்களையே திட்டிக்கொண்டு இருக்கிறார். திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்! உதாரணத்துக்கு, தேனி பக்கம் போனால் ஓ.பி.எஸ்-சை திட்டுவார். கோபிக்குப் போனால் செங்கோட்டையனைத் திட்டுவார். டெல்டா பகுதிக்குப் போனால் டி.டி.வி.தினகரனைத் திட்டுவார். இப்படித்தான் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், `அமித்ஷாவை யார் அதிகமாகப் பாராட்டி பேசுவது’ என்பதில் மட்டும் அ.தி.மு.க அணிகளுக்குள் ஒற்றுமை இருக்கிறது. சொந்தக் கட்சியினரைத் திட்டிவிட்டு அமித்ஷா-வின் காலை பிடித்துக்கொண்டு அவரைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, இந்தியாவில் அவர்களின் கொள்கை `ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி’ என்பதுதான். அப்பேர்ப்பட்ட ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து நிற்கக்கூடிய, கேள்வி கேட்கக்கூடிய ஒரே இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் தெம்பு தைரியத்துடன் நின்று கொண்டிருக்கிறது. மாநில உரிமை, மொழி உரிமை, சமூகநீதியைக் காக்க நம் கழகம் என்றைக்கும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும். அந்தப் போராட்ட உணர்ச்சியை நமக்கெல்லாம் ஊட்டிய தலைவர் தான் நமக்கு முன்பு சிலையாக நின்று கொண்டிருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில்தான் நம்முடைய கழகத் தலைவர் திராவிட மாடல் ஆட்சியையும் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார். ஆரணியில், உதயநிதி ஸ்டாலின்... இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக நம் தலைவரும், சிறந்த மாநிலமாக நம்முடைய தமிழ்நாடும் விளங்கியிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து, நம் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கிக் கொண்டு வருகிறார். முதலமைச்சருக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கைக் குறைக்கத்தான் ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் நெருக்கடியைக் கொடுக்கிறது. தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே நிதிச்சுமையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். நூறுநாள் வேலை வாய்ப்புக்கான நிதி கொடுப்பதில்லை; கல்விக்கான நிதியை பறிக்கிறார்கள்; புதிய ரயில்வே திட்டங்களைக் கேட்டால், அதையும் கொடுப்பதில்லை. நிதி ஒதுக்கீட்டில் பா.ஜ.க ஒன்றிய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்கிறது. `தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் பா.ஜ.க-வை ஏற்க மாட்டார்கள்’ என்று தெரிந்தேதான் பா.ஜ.க இன்றைக்கு தமிழ்நாட்டை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே தான் நம் முதலமைச்சர் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறார்’’ என்றார். பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி
திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!
'எல்லாம் என் தலையெழுத்து' என்று பலரும் கஷ்ட காலத்தில் புலம்புவதைக் கேட்டிருப்போம். பிரம்மன் எழுதிய எழுத்தின்படிதான் நம் வாழ்க்கை நடக்கிறது என்பதுதான் ஆழ்ந்த நம்பிக்கை. அந்தத் தலையெழுத்தை மாற்றவேமுடியாதா என்று தவிப்பவர்களுக்காகவே அமைந்திருக்கிறது ஓர் அற்புதத் தலம். திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ளது திருப்பட்டூர். இந்தத் தலத்தில்தான் தலையெழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் தன் ஆணவத்தால் பதவியை இழந்த பிரம்மன் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு மீண்டும் பதவியைப் பெற்ற தலம் என்கிறது தலபுராணம். இங்கே 12 சிவலிங்கங்கள் அமைத்து ஈசனை பூஜித்து பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களையும் தரிசனம் செய்கிறார்களோ அவர்களின் தலையெழுத்தை நல்லபடியாக மாற்றித் தருவதாக பிரம்மன் கூறியிருக்கிறார் என்கிறார்கள். ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. ஈசனும் கிழக்கு நோக்கியே தரிசனம் தருகிறார். சுவாமிக்கு இடப்பக்கத்தில் கிழக்குப் பார்த்தபடி அருள்புரிகிறாள் ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி. ஈசனுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளியதால், பிரம்ம சம்பத் கௌரி என்கிற திருநாமம் அம்பிகைக்கு உண்டானதாம். ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி, புடவை சாத்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும்; தாம்பத்திய வாழ்க்கை வளம் பெறும்! பங்குனி மாதத்தில் மூன்று நாள்கள், ஈசனின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப்பாதங்களிலும் விழுவது அதிசயம். காசிக்கு நிகரான திருக்கோயில் இது என்று போற்றப்படுகிறது. மேலும் பிரம்மபுரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திரநாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திருமேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரின் வலப்பக்கப் பிராகாரத்தில் அமைந்திருக்கிறது பிரம்மனின் சந்நிதி. மேலும் இங்கு பிரம்மாவின் சந்நிதிக்கு நேராக நின்று பிரம்மாவையும் தரிசிக்கலாம், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். ஈசனின் திருநடனத்தை தரிசிக்க விரும்பிய வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் ஈசனின் ஆணைப்படி நவபுலியூருக்கும் சென்று தாண்டவ தரிசனம் கொண்டார்களாம். இறுதியில் திருப்பட்டூருக்கு வந்து ஈசனைத் தியானித்து இங்கே ஜீவசமாதி அடைந்தனர். இன்றும் திருப்பட்டூர் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீவியாக்ரபாதர் திருச்சமாதியும், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியும் உள்ளதைக் காணலாம். இங்கு தியானித்தால் எண்ணியது கூடுமாம். திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தலையெழுத்தை மாற்றும் பிரம்ம வழிபாடு இந்தத் தலத்துக்கு வந்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்து, அம்பிகைக்குப் புடவை சாத்தி, பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பு செய்து, பிராகார வலம் வந்து மனமுருகி வேண்டிக்கொண்டால், நிச்சயம் நம் தலையெழுத்து மாறும் என்கின்றன புராணங்கள். தலையெழுத்தை மாற்ற பரிகாரம் செய்பவர்களிடம் அபிஷேகம் மற்றும் மஞ்சள் காப்பு சாத்த 3,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்வார்கள். தங்களால் இயன்ற பக்தர்கள் மஞ்சள் காப்பு சாத்தி வழிபடலாம். இயலாதவர்கள் மஞ்சள் வாங்கி கோயிலில் சமர்ப்பித்தால் அதை மஞ்சள் காப்பில் சேர்த்துவிடுவார்கள். இதற்கும் மிகுதியான பலன் உண்டு. திங்கள், வியாழக் கிழமைகளிலும் நட்சத்திரங்கள்: திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களும் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்துவது மிகவும் விசேஷம். திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்! இங்குள்ள முருகப்பெருமான் சந்நிதியில் முருகனின் வாகனம், அசுர மயிலாக இடம் மாறிக் காட்சி தருகிற கோலத்துடன் முருகப்பெருமானை தரிசிப்பது சிறப்பு. கந்தனின் பூஜையில் மகிழ்ந்த ஈசன், அவருக்குத் திருக்காட்சி தந்து, ‘வெற்றி உனக்கே!’ என அருளிய தலம் இது. இங்கே, ஸ்ரீசுப்ரமணியரின் சந்நிதிக்கு அருகில், ஸ்ரீகந்தபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார். பொதுவாக, கோயிலின் வடகிழக்கு மூலையில், தெற்கு நோக்கியபடி காட்சி தரும் ஸ்ரீகாலபைரவர், இங்கே மேற்கு நோக்கிய நிலையில் தரிசனம் தருகிறார். இவரின் வலது செவியும், அதில் இருக்கிற தாடங்கமும் சற்றே வித்தியாசமாக இருப்பதைக் காணலாம். தேய்பிறை அஷ்டமியின் ராகுகால வேளையில் வந்து, காலபைரவரை வணங்கி, அவரிடம் கோரிக்கைகளை வைத்தால், வழக்குகளில் இருந்தும் பிரச்னைகளில் இருந்தும் விரைவில் நிவாரணம் பெறலாம்; இழந்த பொருள், இழந்த பதவி, இழந்த செல்வம், இழந்த கௌரவம் ஆகியவற்றை மீட்டுத் தந்தருள்வார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அழகிய தீர்த்தத்தில் கூறும் நீர் நன்னீராக விளங்குகிறது. ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் சோலைகளுக்கு நடுவே பகுள தீர்த்தம் அமைந்துள்ளது. திருப்பட்டூருக்கு மற்றொரு பெருமை மாசாத்தனார் எனப்படும் ஸ்ரீஐயனார் கோயில். இங்குள்ளவர் அரங்கேற்ற ஐயனார் எனப்படுகிறார். ஐயனார் வடிவங்களில் இவர் மிக மிகத் தொன்மையானவர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சேரமான் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞான உலாவை திருப்பட்டூருக்குக் கொண்டு வந்து அரங்கேற்றியவர் இவர். இதனால் இங்கு சுந்தரருக்கும் சேரமான் நாயனாருக்கும் குருபூஜைத் திருவிழா ஆடி சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருத்தலத்துக்கு வந்தாலே வாழ்க்கை மாறும் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை திருப்பட்டூருக்கு வந்து செல்லுங்கள். வாழ்க்கை வளமாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள். திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!
Choking: தொடரும் சோக்கிங் மரணங்கள்; எப்படித் தவிர்ப்பது; எப்படி முதலுதவி செய்வது?
செவ்வாழைப்பழம் தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி, ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி, பரோட்டா தொண்டையில் சிக்கி ஆண் பலி என, ஏதோவொரு உணவுப்பொருள் தொண்டையில் சிக்கி இறப்பவர்களைப்பற்றிய செய்திகள் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதோ, இப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், தொண்டைக்குழியில் வாழைப்பழம் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறான். மனைவியிடம் போன் பேசியபடியே பரோட்டா சாப்பிட்டார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது! Choking First Aid இதில், குழந்தைகளுக்கு எதிர்பாராவிதமாக நடந்தது என்றால், பெரியவர்கள் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிடும்போதுதான் இப்படி நிகழ்ந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னால், சட்டக்கல்லூரி மாணவி ஒருவருக்கு வாழைப்பழம் சாப்பிடும்போது வலிப்பு வந்திருக்கிறது. விளைவு, தொண்டைக்குழியில் சிக்கி மரணம். பரோட்டா தொண்டையில் சிக்கி பலியானவர், மனைவியிடம் போன் பேசியபடியே பரோட்டா சாப்பிட்டார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. தொண்டையில் ஏதோவொரு உணவுப்பொருள் சிக்கிக்கொண்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா விளக்குகிறார். உணவுப்பொருள் தொண்டையில் சிக்காமல் இருக்க டாக்டர் ஃபரூக் அப்துல்லா ''நாம் சாப்பிடுகிற எந்த உணவுப்பொருளும் இப்படியோர் ஆபத்தை விளைவிக்கலாம். இதற்கு வயது வித்தியாசமும் கிடையாது. என்றாலும், சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு தொண்டையில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று, சாப்பிடும்போது பேசக்கூடாது. இரண்டு, அவசர அவசரமாக சாப்பிடவே கூடாது. இவையிரண்டும்தான் உணவுப்பொருள் தொண்டையில் சிக்கும் ஆபத்தை அதிகரிக்கும். உணவுப்பொருளோ அல்லது வேறு ஏதேனும் பொருளோ, தொண்டையை அடைத்துக்கொண்டு மூச்சுப் பாதையில் தடை ஏற்படுத்துவதை 'சோக்கிங்' (Choking) என்போம். இந்த மெடிக்கல் எமர்ஜென்சி யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், இதற்கான முதலுதவியை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம்'' என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார். இருமலும், முதுகுத்தட்டலும் இருமலும், முதுகுத்தட்டலும்... இருமும்போது சுவாசப்பாதையில் அடைத்துக்கொண்டிருக்கும் பொருள் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், பாதிக்கப்பட்டவர்களால் முடிந்தால் தொடர்ந்து இரும சொல்லலாம். ஒருவேளை அவர்களால் இருமவோ, பேசவோ, கத்தவோ முடியவில்லையென்றால், அவருக்கு பக்கவாட்டில் நின்றுகொண்டு, அவருடைய நெஞ்சுப்பகுதியை கைகளில் தாங்கிக்கொண்டு, அவரை இடுப்புப்பகுதி வரை குனிய வைக்க வேண்டும். பிறகு, அவருடைய முதுகுபக்கத்தில் இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில், உள்ளங்கையை வைத்து ஐந்து முறை நன்றாக அடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டையில் அடைத்துக்கொண்டிருக்கிற பொருள் வெளியேற வாய்ப்பு அதிகம். ஹெம்லிச் (Heimlich) Heimlich டூ-வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள்... கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? மேலே சொன்ன முதலுதவி பயன்கொடுக்கவில்லை என்றால், மூச்சுத்திணறல் ஏற்பட்டவரின் பின்புறம் நின்றுகொண்டு, அவரது இடுப்பை, பின்புறத்தில் இருந்து ஒரு கையால் அணைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இன்னொரு கையின் ஐந்து விரல்களையும் குத்துவதற்கு தயாராவதுபோல ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இணைத்த இந்தக் கையை சரியாக அவரின் மேல் வயிற்றுப்பகுதியில் இருக்குமாறு வைக்கவேண்டும். இந்தக் கையை அணைத்துள்ள கை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவரின் வயிற்றுப்பகுதியை அழுத்தியபடி, வேகமாக உங்கள் இரண்டு கைகளையும் மேல்நோக்கி தூக்க வேண்டும். இப்படி செய்யும்போது, பாதிக்கப்பட்டவரை சிறு உயரம் தூக்கி கீழே விடுவது போல இருக்கும். இதைத் தொடர்ந்து 5 முறை வேக வேகமாக செய்ய வேண்டும். நான் மேலே சொன்ன, இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில் தட்டுவதையும், ஹெம்லிச் செய்முறையையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். மூர்ச்சை நிலைக்கு சென்றால் சிபிஆர் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..! ஒருவேளை பாதிக்கப்பட்டவர் மூர்ச்சை நிலைக்கு சென்றுவிட்டால், அவரின் முதுகுப்பகுதி தரையில் இருக்குமாறு படுக்க வைத்து, அவருடைய வாயை கவனிக்க வேண்டும். மூச்சுத்திணறலை ஏற்படுத்திய பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், அதை லாகவமாக எடுத்துவிடலாம். கண்ணுக்குத் தெரியாத பொருளை எடுக்க வாய்க்குள் விரலைவிட்டால், அடைத்துக்கொண்டிருக்கிற பொருள் இன்னும் உள்ளே சென்று பிரச்னையை அதிகமாக்கி விடலாம். மூர்ச்சை நிலை தொடர்ந்தால், சிபிஆர் எனும் உயிர்காக்கும் முதலுதவியை செய்ய வேண்டும். நமக்கு நாமே எப்படி செய்துகொள்வது..? Choking ஒருவேளை யாருமே இல்லாத இடத்தில் நமக்கே இந்த நிலை ஏற்பட்டால், நம் கைகளை இணைத்து வயிற்றுப்பகுதியில் வைத்து, நாற்காலி அல்லது மேஜை போன்ற கடினமான சமதளத்தில் அழுத்த வேண்டும். குழந்தைகளுக்காக சில டிப்ஸ்..! பொதுவாக குழந்தைகள் கண்ணில்படுகிற சின்னச்சின்னப் பொருள்களை வாயிலோ அல்லது மூக்கிலோ போட்டுக்கொள்வார்கள் என்பதால், அப்படிப்பட்டப் பொருள்கள் வீட்டில் இல்லாமலோ அல்லது குழந்தைகள் கைக்கு எட்டாமலோ பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பட்டன் பேட்டரி, உடைந்த கிரையான்ஸ் துண்டுகள், உடைந்த பொம்மையின் பாகங்கள் போன்றவை குழந்தைகளின் கையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பட்டாணி, வேர்க்கடலை, ராஜ்மா போன்ற சுண்டல் வகைகளை குழந்தைகள் உங்கள் கண்முன்னால் சாப்பிட வையுங்கள். இவைகூட சிறு குழந்தைகளின் தொண்டையில் சிக்கலாம், கவனம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.
குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பொத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்தப் பெண் கோபித்துக்கொண்டு நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். டிசம்பர் 2ஆம் தேதி இரவு இசக்கிபாண்டி தனது நண்பருடன், நெட்டூரில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்று, தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே, மதுபோதையிலிருந்த இருவரும் ரகளையில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில், இரவுப் பணியிலிருந்த கடங்கநேரிப் பகுதியைச் சேர்ந்த தலைமைக் காவலர் முருகன், ஒரு பெண் காவலருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிபாண்டியைக் கண்டித்தார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து சென்றனர். காவலருக்கு அருவாள் வெட்டு எனினும், ஆத்திரத்திலிருந்த இசக்கிபாண்டி, தனது கூட்டாளிகள் நான்கு பேருடன் மீண்டும் நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் முருகனை, அந்தக் கும்பல் அரிவாளால் ஓட ஓட வெட்டியுள்ளது. உடனே அவர் துப்பாக்கியை எடுக்கவே, அந்தக் கும்பல் சுதாரித்துக்கொண்டு அவரைக் கீழே தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றது. இந்தச் சம்பவத்தை அறிந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலர் முருகனை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், துணைக் காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமைக் காவலர் முருகனை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற இசக்கிபாண்டி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நெல்லை: பிரமாண்டமாக உருவான `பொருநை' அருங்காட்சியகம் - இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்! | Photo album
இலங்கையை மீட்க துடிக்கும் பொதுமக்கள் ; சில அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் விசனம்
இலங்கை முழுவதும் தித்வா புயலால் நாடு முழுவதும் சின்னாபின்னமாகியிருக்கிறது. பெருமளவிலான உதவிகள் வெளிநாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் வந்து குவிகின்றன . உள்ளூர் அமைப்புகள் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் உதவிப் பொருட்களை சேகரித்து பாதிப்படைந்த இடங்களை நோக்கி செல்கின்றனர். அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் தீவிர அக்கறையுடன் செயல்படுகின்றனர்.தனிப்பட்டவர்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கின்றனர். அலட்சியப் போக்கு நாட்டில் பெருமளவிலான இளைஞர்கள் மிகுந்த கண்ணியத்துடன் மக்களுக்கான உதவியை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செய்கின்றனர். ஆனால் இன்னமும் மாறாத பல அரச […]
வெள்ளத்தில் சிக்கிய சிசுவை மீட்ட இந்திய மீட்பு குழு; குவியும் பாராட்டு
தித்வா புயல் இலங்கையில் மோசமான பேரழிவை ஏற்படு்த்தி சென்றுள்ள நிலையில் , வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்ததுடன் , நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு உடனயா வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) . தைரியமான கரங்களில் நம்பிக்கை வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஆயிரக்கணக்கா னோரை இந்திய படை மீட்ட நிலையில், MyGovIndia இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தைரியமான […]
கொழும்பில் இரவில் நேர்ந்த அனர்த்தம் ; உடனடியாக களத்தில் இறங்கிய மேயர் விராய் கெலி பல்சதார்
கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இன்று சற்று முன் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த நிலையில், அங்கு வசித்திருந்த குடும்பங்கள் முன்கூட்டியே இடைத் தங்கல் முகாம்களுக்கு மாற்றப்பட்டிருந்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வீடுகள் சேதம் வீடுகள் மட்டுமே முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்த அவசர நிலையைத் தொடர்ந்து, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஆனந்தக்குமார் வழங்கிய […]
பாமக: மாம்பழம் சின்னத்தை முடக்காமல் இருக்க, தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன - திலகபாமா
'பா.ம.க கட்சியையும், சின்னத்தையும் முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாஸுடன் உள்ள சிலர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலடியாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது' என்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநில பொருளாளர் திலகபாமா பேசியிருக்கிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா கூறுகையில், ஆவணங்களின் அடிப்படையில் பா.ம.க-வின் தலைவர் அன்புமணிதான் எனத் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இது பா.ம.க சொந்தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பா.ம.க கட்சியையும், சின்னத்தை முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாஸுடன் உள்ள சிலர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள் அவர்களுக்குப் பதிலடியாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பின்னரும் தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்துள்ளது மோசமான செயல் அறநிலையத்துறையை யார் இன்று முடுக்கி விட்டார்கள். திலகபாமா இதற்கு தமிழக மக்கள் சார்பில் வருத்தம் தெரிவிப்பதுடன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். பா.ம.க-வின் நிறுவனராக மருத்துவர் ராமதாஸை ஏற்றுக் கொள்கிறோம். 40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை, பாட்டாளி சொந்தங்கள் இணைந்து வளர்த்தெடுத்திருக்கிறார்கள். கட்சியை அடுத்த தலைமுறைக்குப் பத்திரப்படுத்தி கொடுப்பதற்கும், தமிழகத்தின் தலைமுறையைக் காப்பதற்கும் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் அன்புமணி இருக்கிறார். பாசப் போராட்டத்தையும் தாண்டி, தமிழக மக்களுக்காக உழைப்பதற்கு அவர் முறையான வழியில் சென்று கொண்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் வெறும் அதிகாரத்தைக் கைப்பற்ற போராடவில்லை, மக்களுடன் அவர் இருப்பதால் அதிகாரம் அவர் கையில் வந்து சேர்கிறது. சின்னத்தை முடக்காமல் இருப்பதற்கு தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது. சதிகாரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்” எனத் தெரிவித்தார். அன்புமணி கையில் பா.ம.க... கைவிரித்த தேர்தல் ஆணையம்... என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
நாகை காங்கேசன் துறை சர்வதேச கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!
நாகப்பட்டினம் மற்றும் இலங்கை இடையே இயக்கப்பட்டு வந்த கப்பல் சேவை தற்காலிகமாக வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
போரை நிறுத்த விரும்புகிறார் புதின்! டிரம்ப்
உக்ரைன் உடனான போரை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நிறுத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார். ரஷியா – உக்ரைன் இடையேயான போர் நான்காவது ஆண்டை எட்டவுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்துள்ளார். போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக 28 அம்ச வரைவு அறிக்கையையும் அதிபர் டிரம்ப் வெளியிட்டார். ஆனால், இந்த அறிக்கை ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய […]
நட்சத்திரப் பலன்கள் டிசம்பர் 5 முதல் 11 வரை #VikatanPhotoCards
இந்திய ரஷ்யா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் இரு நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.
19 நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்கத் தடை
அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு தடைவிதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈகுவடாரில் கினி, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புரூண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா குடியுரிமை பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
வாஷிங்டன்: 16 நாடுகளைச் சோ்ந்தவா்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடா்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் காா்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) […]
போரை தொடங்க நாங்கள் இப்போதே தயார் ; வெளிப்படையாக எச்சரித்த புதின்
போரை தொடங்கினால் நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம். அவர்கள் போரின் பக்கம் இருக்கிறார்கள் என ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார் ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அமைதி ஒப்பந்தம் இதற்காக ட்ரம்ப் 28 அம்சங்களை கொண்ட அமைதி ஒப்பந்தத்தை வெளியிட்டார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமைதி ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று […]
16 வயதுக்குட்பட்டோரின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் அபராதம்!
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை டிச. 10 முதல் நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வழிமுறைகளை வகுத்து சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டம் டிச. 10ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வருகிறது. இதனைப் பின்பற்றாத முகநூல், இன்ஸ்டாகிராம், கிக், ரெடிட், ஸ்நாப்சாட், த்ரெட், டிக்டாக், […]
யாழ் தையிட்டி போராட்டத்தில் குழப்பநிலை
பௌர்ணமி தினமான இன்று யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் பொலிஸார் குழப்பம் விளைவித்ததாக கூற்ப்படுகின்றது. போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை பொலிஸார் அகற்றியுள்ளனர். இதனால் இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இயற்கைப் பேரிடாின் போது அரசு மீது வழக்குத் தொடுப்பது தவறு
சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும், பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா … The post இயற்கைப் பேரிடாின் போது அரசு மீது வழக்குத் தொடுப்பது தவறு appeared first on Global Tamil News .
நயினார் நாகேந்திரன் – எச். ராஜா உள்ளிட்ட பல பாஜகவினா் கைது –காரணம் என்ன?
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன்மற்றும் மூத்த தலைவரானஎச். ராஜாஉள்ளிட்டோர் இன்று (டிசம்பர் 4, 2025)… The post நயினார் நாகேந்திரன் – எச். ராஜா உள்ளிட்ட பல பாஜகவினா் கைது – காரணம் என்ன? appeared first on Global Tamil News .
டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
நாட்டில் டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், டித்வா சூறாவளியால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும் (40) அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு, சேவைகள் மீட்டெடுக்கப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இலங்கை மீண்டெழுந்து வளர்ச்சியை நோக்கிய தனது பயணத்தைத் ஆரம்பிக்கத் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்பட்டுள்ளது.
புடினை கட்டிப்பிடித்து வரவேற்றார் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டெல்லி விமான நிலையத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வரவேற்றார். இருவரும் ஒரே காரில் புறப்படுவதற்கு முன்பு, இரு தலைவர்களும் கைகுலுக்கி, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புடின் இரண்டு நாட்கள் இந்தியாவில் இருப்பார், இதன் போது அவர் நாளை பிரதமர் மோடியுடன் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்பார். பிரதமர் மோடியும் புதினும் இன்றிரவு ஒரு தனிப்பட்ட இரவு உணவைப் பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப்பூர்வ விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், இந்த இரவு உணவை பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ வீட்டில் வழங்குகிறார். பிரதமர் மோடி பயன்படுத்தும் அதே காரில், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் இரு தலைவர்களும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர். செப்டம்பர் மாதம், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் போது, பிரதமர் மோடிக்கு தனது அதிகாரப்பூர்வ காரில் பயணம் செய்ய புடின் முன்வந்தார். மாஸ்கோவுடனான புது தில்லியின் எண்ணெய் வர்த்தகத்திற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரி தாக்குதலை அறிவித்த நேரத்தில், SCO இல் ஒன்றாகக் கார் பயணம் ஒரு காட்சி அறிக்கையாக இருந்தது. புதின் நாளை பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சமீபத்திய ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே பேச்சுவார்த்தைகளின் மையக் கவனம் என்று வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவும் ரஷ்யாவும் தற்போதுள்ள வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன, புது தில்லி கடல் பொருட்கள், உருளைக்கிழங்கு, மாதுளை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மருந்துகளின் ஏற்றுமதியை அதிகரிக்க வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், இந்தியா தொடர்ந்து ரஷ்ய உரங்களை பெரிதும் நம்பியுள்ளது. ஆண்டுதோறும் மூன்று முதல் ஐந்து மில்லியன் டன்கள் வரை இறக்குமதி செய்கிறது. மேலும் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த நம்புகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது –அமைச்சர் ரகுபதி விளக்கம்
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது
சீனாவில் நிலநடுக்கம் –ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் –நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது
திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். நேற்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில்
இந்தியா வந்தடைந்தார் ரஷிய அதிபர் புதின்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்தார். தலைநகர் டெல்லி
பிரித்தானியா டார்பியில் 200 வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்: இருவர் கைது!
டார்பியில் சுமார் 200 வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் வெடிபொருட்கள் வைத்திருந்தாகச் சநதேகத்தில் பேரில் இரண்டு பேரைக் காவல்துறையினரால் கைது செய்துள்ளனர். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் டார்பியின் வல்கன் வீதியில் கைது பிடியாணை வைத்திருந்து காவல்துறையினர் 40 வயதுடைய ஒருவரையும் 50 வயதுடைய மற்றொருவரும் கைது செய்தனர். வெடிச்சத்தம் கேட்கக்கூடும் என்ற பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக அப்பகுதியில் 200 வீடுகளில் இருந்த குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்வரும் முகவரிகள் வெளியேற்ற மண்டலத்திற்குள் இருப்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது: • வல்கன் தெரு - முழுமையாக • ரீவ்ஸ் சாலை - முழுமையாக • ஷாஃப்டஸ்பரி கிரசென்ட் - முழுமையாக • ஹாரிங்டன் தெரு - ஹோல்கோம்ப் தெருவிலிருந்து வல்கன் தெரு வரை • பேஸ்பால் டிரைவ் - கொழும்பு தெருவுக்கு • கேம்பிரிட்ஜ் தெரு - ரீவ்ஸ் சாலை மற்றும் ஷாஃப்ட்ஸ்பரி கிரசென்ட்டில் இது ஒரு பயங்கரவாதச் சம்பவமாக இல்லை என்றும் இது சமூகத்திற்கு பொிய ஆபத்து எதுவும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய நாமல் ராஜபக்ச
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தனது மாதாந்திர சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நன்கொடையாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட “ஆதரய” நலத்திட்டத்திற்கு அவர் தனது உதவியை வழங்கியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச , நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பையும் ஆதரவையும் வழங்க விரும்பும் எவருக்கும் இந்த திட்டம் திறந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 300,000 குழந்தைகள் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக […]
80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! குற்றவாளியைத் துப்பாக்கியால் சுட்ட சிறுவன்!
ஆப்கானிஸ்தானில் தன் குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த குற்றவாளியை அதே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்குள்ள சட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டன. அந்தவகையில் அங்கு மிகக் கொடூர குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் 9 குழந்தைகள், பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை மங்கள் கான் என்பவர் கொலை செய்துள்ளார். […]
Around 115 Awards Presented at the PRSI State Awards in Chennai
The Chennai Chapter of the Public Relations Society of India (PRSI) hosted the PRSI State Awards 2025, recognising excellence in
பூரணை தினமான இன்று யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போரட்ட களத்தில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைத்திருந்த கூடாரங்களை இலங்கை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் போராட்டம் நடைபெற்றிருந்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்றும் (03), இன்றும் (04) தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போரட்டத்தில் காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிட்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு சுமார் 1872 மில்லியன் ரூபாய் அனர்த்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள கட்டியமைப்பதற்கு அனத்த நிவாரண பணிக்காக சுமார் 10 ஆயிரத்து 290 மில்லியன் ரூபாக்களை முதற்கட்டமாக முழு நாட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தை பொருத்தவரையில் அதிக பாதிப்புக்கு உள்ளான மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக 954 மில்லியன் , யாழ் மாவட்டத்திற்கு 365 மில்லியன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 206 மில்லியன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 189 மில்லியன் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு 158 மில்லியன் ரூபாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதிகள் சகல மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பில் பாதிப்புக்கு உள்ளான தரவுகளின் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் நீதியாக பங்கீட்டு வழங்கப்படும். அது மட்டுமல்லாது மாகாண சபைகளுக்கும் விசேடமாக அனர்த்த நிவாரண நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் உயிரிழப்புக்கள் குறைவாக காணப்பட்டாலும் மக்களை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் இறந்திருக்கலாம் என எதிர்வு கூறப்படும் நிலையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் தரவுகள் இறுதி செய்யப்படவில்லையெனவும் அறிவிக்கப்பட்டு;ள்ளது.
நாட்டை விற்க போகிறோமா? இல்லை, நாட்டை வியக்க வைக்க போகிறோமா? #தேர்தல்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தேர்தல் ': உங்கள் பார்வை என்ன? படித்தவுடன் மனசு 36 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றது... வாக்காளர்கள்... வாக்காளராக நம் கடமை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா??? அரசியல்வாதியின் சூதாட்டத்தில் பகடைக்காய் இல்லை . நாட்டை விற்க போகிறோமா? இல்லை.. நாட்டை வியக்க வைக்க போகிறோமா? விடை, வினா.. இரண்டும் வாக்காளர் கையில். வாக்கு உரிமையாக! 'மான்டெஸ்க்யூ'என்ற அறிஞர் 'சட்டங்களின் ஆன்மா 'என்ற நூலில் தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்கள் என்று பெருமையாக குறிப்பிடுகிறார். உண்மை . பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல் நம் கையில் உள்ள வாக்கு என்ற மாபெரும் ஆயுதத்தைக் கொண்டு சாதி, மதம், இனம் பாராமல் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டைக் கட்டமைக்க நாம் உறுதி மேற்கொள்வது அவசியம். நம் உரிமை , நம் ஓட்டு என்பதற்கிணங்க நாட்டையும், நம்மையும் ஆளக்கூடிய நபரை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளரான நமக்கு உண்டு. அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான நல்ல பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது என்பதும் உறுதி. தேர்தல் நம் சிந்தனை 5 ஆண்டு காலம் நம்மை ஆளப்போகும் அரசியல் ஆளுமையை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டியது அவசியம். பணம் செலவழித்தால் போதும் தேர்தலையும், வாக்காளர்களையும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலையும், செலவழித்த பணத்தை திரும்பப் பெற பல மடங்கு ஊழல் என்ற நிலையும் இங்கு சர்வசாதரணமாக உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தல் துறைக்கு முன்னோடியாக இருந்த உத்திரமேரூர் கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா? போட்டியிடுபவருக்குரிய தகுதிகள் தேர்தல் விதிமுறைகளை மிகச்சரியாக பயன்படுத்துபவரை தேர்ந்தெடுப்பதே சரி என்று கூறுகிறது. உண்மையான ஜனநாயகத்திற்கு ஓட்டு போடுதல் அவசியம். வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது. நாடு முழுக்க பாட்டாளி மக்கள் பரந்துபட்டு இருக்கின்றனர். இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அவர்களுக்கான வாக்கு உரிமையை அறவழியில் பதிவிட்டு, தனி மனித உரிமைகளுக்கும், தரமான செயல் முறைகளுக்கும், வழிவகை செய்து எவர் ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கிறாரோ,அவரை தேர்ந்தெடுப்பது மிகவும் சாலச்சிறந்தது. அப்பொழுதுதான் எதிர்கால இந்தியா ஏற்றம் பெறும். வாக்களிப்பவர்கள் மேற்கொள்ளும் ஒருவிரல் புரட்சியினால் வாய்மை வலிமை பெறும். வாக்குரிமை மதிக்க பெறும். குடவோலை முறை வேட்பாளர்களின் வாய் வாக்குகளும் நிஜமாகும். ஊழலுக்கு கைகொடுக்காமல், கும்பிட்டு வாழாமல் நமது உரிமை காப்போம். சிந்தித்து வாக்களிப்போம். யார் வந்தால் நாடு செழிக்கும் என்பதை யோசித்து நம் வாக்குகளை செலுத்துவோம் வாக்குரிமையை தவறவிட்டால் வாழ்வுரிமை தவற நேரிடும். தயவுசெய்து தேர்தல் நாளன்று வீட்டில் உட்கார்ந்து தூங்கிப் பொழுதைக் கழிக்காமல் உங்களது உரிமையை கடமையை செய்து வா( பா)ருங்கள்... மனதிற்கு மகிழ்ச்சி வரும்.. எதையோ சாதித்தது போல் ஒரு பெருமிதமும் உடன் வரும்... அது மட்டுமல்ல உங்களுக்கே உங்களுக்கென்று இசைஞானி தன் ஹார்மோனியத்தால் இசையமைத்து பாடல்பாட அது உங்கள் காதுகளில் ரீங்காரமிடும் உங்களைத் தாலாட்டும். 'ஒற்றை விரல் நீலமையால்' நம் உரிமையை மீட்டு எடுப்போம். வாக்காளராக தமது பங்களிப்பை 100% செயலாற்றுவோம்.. 36 வருடங்களுக்கு முன்பு.. 'தேர்தல்' என்ற தலைப்பில் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசி முதல் பரிசு வாங்கியது நினைவுக்கு வருகிறது.. (வந்தது) கூடவே 1989 ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக வாக்களித்ததும் நினைவுக்கு வருகிறது! என்றென்றும் அன்புடன் ஆதிரை வேணுகோபால் தேர்தல்
ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேடி வனத்திலிருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் தென்னமரங்களை சேதப்படுத்தி சாப்பிட்டு வந்தன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் கூறியதால், விவசாய நிலத்துக்குள் நுழையும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க வனத்துறை அனுமதியுடன் ஒருசில விவசாயிகள் பேட்டரி மின்வேலி அமைத்துள்ளனர். ஆனால், அந்த பேட்டரி மின்வேலியையும் யானைகள் உடைத்து சேதப்படுத்துவதால், சிலர் சட்டவிரோதமாக வேலியில் நேரடியாக மின்சாரத்தை இணைக்கவும் செய்து வருகின்றனர். இதனால், உணவுதேடி விவசாய நிலத்துக்குள் நுழையும் வனவிலங்களுகள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது. யானை உயிரிழப்பு இந்நிலையில், புதன்கிழமை இரவு, ஈரட்டி வனப் பகுதியிலிருந்து வெளியேறிய சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று வைரவன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்துக்குள் நுழைந்துள்ளது. அப்போது, அந்த விவசாய தோட்டத்தைச் சுற்றி வைரவன் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி அந்த யானை உயிரிழந்தது. இத்தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, பர்கூர் வன அலுவலர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, அதே இடத்தில் யானையை பிரேதப் பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், உணவுதேடி வந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக விவசாய நிலத்தின் உரிமையாளர் வைரவனைப் பிடித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
காதலை கைவிட்ட ஆத்திரத்தில் மாடல் அழகியை கொன்று சூட்கேசில் அடைத்த காதலன்
ஆஸ்திரியாவில் மாடல் அழகியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தந்தை கைதாகியுள்ளனர். ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஸ்டெபானி பைபர். மாடல் அழகியான இவர் அழகுக்கலை நிபுணராகவும் இருந்தார். எனவே சமூகவலைதளங்களில் அவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். காதலன் மீது போலீசாருக்கு சந்தேகம் இந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி திடீரென அவர் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் […]
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி நேரில் சென்று அஞ்சலி
வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் விமானி உயிரிழந்தார். இந்நிலையில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ரத்மலானை, இல்லத்திற்கு இன்று (04) முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் , விமானியின் குடுபத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன்போது சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் […]
திருவையாறு சட்டமன்றத் தொகுதி.. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?
தஞ்சையில் உள்ள திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் நெல் கொள்முதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர்.
TN vs TRI: ‘டி நடராஜன் அபாரம்’.. தமிழக அணியை எதிர்த்து ஆடிய விஜய் சங்கர்: இறுதியில் மெகா வெற்றி!
திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி மெகா வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், டி நடராஜன் அபாரமாக பந்துவீசி அசத்தினார். தமிழக அணியை எதிர்த்து விளையாடிய விஜய் சங்கர் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்.
ஹாங்காங் தீவிபத்து: உயிரிழப்பு 159-ஆக உயா்வு
ஹாங்காங்: ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்துள்ளது. தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, 5 உடல்களை மீட்டதைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை உயா்ந்தது. இன்னும் 31 போ் காணாமல் போயுள்ள நிலையில், சில உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா். எட்டு குடியிருப்பு கோபுரங்களைக் கொண்ட அந்தக் குடியிருப்பு தளத்தில் கடந்த வாரம் (நவ. 26) […]
கையில் பென்சிலுடன் புதைந்துபோன சிறுவன்; பொலிஸ் அதிகாரியின் வேதனை பதிவு
நாட்டில் இயற்கை பேரழிவால் மலையக பகுதிகளில் பலர் மண்ணில் புதையுண்டு போயுள்ளனர். இந்நிலையில் வெலிமடை பிரதேசத்தில் மண்ணில் புதையுண்ட சிறுவனின் உடலை மீட்கையில் அவனது கையில் பென்சில் இருந்ததாக கூறப்படுகின்ற சம்பவம் கண்ணீரை வரவழைத்துள்ளது. இது தொடர்பில் ஆங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் (Sampath Abeywickrama) முகநூல் பதிவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மூன்று மகன்கள் வெலிமட, கெப்பிட்டிபோல, ரேந்தபோல பகுதி […]
இந்திய மீனவர்களால் நெடுந்தீவு மீனவர்களின் வலைகள் அறுப்பு
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு மீனவர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மீனவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை மீன்பிடிக்காக நெடுந்தீவு கடல் பகுதியில் தமது வலைகளை விரித்து காத்திருந்த போது, நெடுந்தீவு கடற்பரப்பினுள் பல படகுகளில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களால் வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. நாட்டில் கடந்த வாரம் நிலவி வந்த சீரற்ற காலநிலையால் கடலுக்கு தாம் செல்லாத நிலையில் வாழ்வாதரத்திற்காக பெரும் இடர்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது காலநிலை சீரடைந்ததால், தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் எமது பெறுமதியான வலைகளை அறுத்து நாசமாக்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக வருமானமின்றி பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டு வந்த நிலையில் தற்போது எமது வலைகளை அறுத்து சென்றமையால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம். இது தொடர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பதுடன், நெடுந்தீவுக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் அத்துமீறலகளை கட்டுப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.
'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி
திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்களை பேட்டிக்காக அணுகினோம். அவர் பேசியவை. பெ.சண்முகம் திருப்பரங்குன்றத்தில் மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசின் வாதங்கள் நீதிமன்றத்தில் எடுபடாமல் போயிருக்கிறதே? நீதிமன்றத்தின் உத்தரவை கடுகளவும் ஏற்க முடியாது. தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்கிற பிடிவாதத்தில் இயந்திரத்தனமாக நீதிபதிகள் இந்த வழக்கை அணுகுகின்றனர். வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டுவிட்டு, தர்காவுக்கு அருகே புதிய இடத்தில் தீபத்தை ஏற்ற இப்போது என்ன தேவை இருக்கிறது? அதை இந்த நீதிமன்றம் ஆய்ந்து பார்க்க வேண்டாமா? நீதிபதி தான் கூறிய உத்தரவை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டுமென மத்திய தொழில்பாதுகாப்பு படையையே அனுப்புகிறார். இப்படி ஒவ்வொரு நீதிபதியும் கிளம்பினால் இதற்கான எல்லைதான் என்ன? அரசியல் சாசனப்படி சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கையில் இருக்கிறது. பதட்டமான சூழல் ஏற்படும் போது இந்த அரசை கைக்கட்டி வேடிக்கைப் பார்க்க சொல்கிறீர்களா? இப்படி ஒவ்வொரு நீதிபதியும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து ஒரு படையை அனுப்பினால் அது மாநிலங்களின் அதிகாரத்துக்குதான் கேடு விளைவிக்கும். நீங்கள் அவர்கள் கூற்றுப்படியே யோசித்துப் பாருங்கள். திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு ஆகமவிதிப்படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பார்கள். அந்த நாள்தான் முடிந்துவிட்டதே. இன்று ஏற்றப்போவது சுவாமிநாதன் தீபம். தன்னுடைய உத்தரவை தமிழக அரசு பின்பற்றாதது அவருக்கு கோபம். அந்த நீதிபதியின் பிடிவாதக் குணத்துக்காக ஏற்றும் தீபம். நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. தமிழக அரசுக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை. அரசு நீதிமன்றத்தை பின்பற்றியிருந்தால் எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என வலதுசாரிகள் கூறுகிறார்களே? இதை எப்போது சொல்கிறார்கள்? இன்றைக்குதான் சொல்கிறார்கள். மதவாதிகள் எப்போதும் இப்படித்தான் தந்திரமாக சூட்சமமாக பேசுவார்கள். நேற்று அவர்களை மலைக்கு அனுமதித்திருந்தால், அயோத்தியில் நடந்ததுதான் இங்கேயும் நடந்திருக்கும். சிக்கந்தர் தர்காவின் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றிவிட்டு அந்த தர்காவையே இல்லாமல் ஆக்கியிருப்பார்கள். திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் உச்சநீதிமன்றத்தில் உறுதி கொடுத்துவிட்டுதான் பாபர் மசூதியை நோக்கியும் சென்றார்கள். ஆனால், எதையாவது மதித்தார்களா? ஒருவேளை அவர்களை மலைக்கு மேல் அனுமதித்திருந்தால் இன்று தமிழகம் எப்படியிருந்திருக்கும்? இவ்வளவு நாள் முஸ்லீமுக்கும் எங்களுக்கும் பிரச்னை என்றுதானே அவர்கள் பேசி வந்தார்கள்? அந்த விதத்தில் தமிழக அரசு நேற்றைய சூழலை திறம்பட சமாளித்து பதட்டத்தை தணித்தது. தொடர்ச்சியாக வலதுசாரி அமைப்புகள் மதுரையை தங்களின் இந்துத்துவா சோதனைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்களே. அதைப் பற்றிய உங்களின் எண்ணம் என்ன? பலவிதமான கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் பாஜகவால் தமிழகத்தில் அரசியல்ரீதியாக எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. அதனால்தான் அயோத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி பல மாநிலங்களில் அரசியல் லாபத்தை அறுவடை செய்ததைப் போல இங்கேயும் முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு கோவில். அந்த விதத்தில் திருப்பரங்குன்றத்தையும் அயோத்தியாக மாற்ற வேண்டும் என்கிற அவர்களின் தீய நோக்கம் என்றைக்கும் பலிக்காது. பெ.சண்முகம் திமுக அரசுதான் வலதுசாரிகளை இவ்வளவு பெரிதாக வளர இடம் கொடுக்கிறது. இது அவர்களும் அரசியல்ரீதியாக பலனை கொடுக்கிறது என ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறதே? இது மேம்போக்கான பார்வை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் அரசியலைத் தாண்டி நீண்ட கால நோக்கத்தோடு நுணுக்கமாக தீவிரமாக செயல்படுபவை. ஒரு ஊரில் 'வெறுங்கையோடு வாங்க வெள்ளிக்குடத்தோடு போங்க...' என ஒரு போஸ்டர் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். கோவிலில் கலசம் தூக்குவதற்காக அழைப்பு விடுக்கும் போஸ்டர் அது. வெள்ளிக்குடம் கிடைக்கும் என நூற்றுக்கணக்கான பெண்கள் செல்வார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கும் அரசியல் அவர்களுக்கு தெரியாது. இந்த மாதிரி தந்திரமாக நுணுக்கமாக ஏராளமான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். சாம, பேண, தான, தண்டம் என எல்லாவிதத்திலும் அவர்களுக்கு முயற்சிக்கிறார்கள். மத்திய அரசில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதிகாரம் கையில் இருக்கிறது. அளவுக்கதிகமான பணம் இருக்கிறது. அதனால் தமிழகத்தில் நுழைய கடுமையான முயற்சிகளை எடுக்கத்தான் செய்வார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். அடுத்தக்கட்டமாக இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய பல்வேறு தீர்ப்புகள் பாரபட்சமானதாகவும் ஒரு தரப்பாகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக,அவை மதவாத சக்திகளுக்கு ஆதரவானதாக இருந்திருக்கிறது. அது அரசியல் சாசனத்துக்கும் அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. அதனால் அவர் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவை. தலைமை நீதிபதியை சந்தித்து சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து வலியுறுத்துவோம். மதுரை மக்கள் இந்த விவகாரத்தை எப்படி அணுகுவதாக பார்க்கிறீர்கள்? நேற்று பதட்டத்தை ஏற்படுத்திய அந்த கும்பலில் பெரும்பாலானோர் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். பொதுமக்கள் வழக்கம்போல கோவிலுக்கு செல்லத்தான் வந்தார்கள். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். பாரத் மாதா கீ ஜே என கோஷம் போட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்துகையில் அங்கே எப்படியொரு கைத்தட்டல் கேட்டதென்று. மதுரையின் பொதுமக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்களின் வெறுப்பரசியலுக்கு அவர்கள் இரையாகமாட்டார்கள். பெ.சண்முகம் மதம் சார்ந்த இந்த மாதிரியான விவகாரங்கள் 2026 தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக ஏற்படுத்தாது. 2021 லும் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில்தான் இருந்தார்கள். என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேதான் இப்போதும். சேராத இடம்தனில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததை போல நிற்கிறது அதிமுக. மாநிலமே விவாதிக்கும் இந்த விவகாரத்தில் மக்கள் பக்கம் நின்று பேசாமல் இருக்கிறது அதிமுக. குறுகிய தேர்தல் லாபங்களுக்காக நீண்ட கால அடிப்படையில் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்காமல் இருப்பது மோசமான அணுகுமுறை.
மாவிலாறு அணை கடுவதற்கு காத்திருக்க வேண்டும்
சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க, வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மகாவலி கங்கை மூலம் வந்து சேர்ந்த வெள்ள நீர் ஏற்படுத்திய தாக்கத்தினால், மாவிலாறு அணைக்கட்டு கடந்த 30ஆம் திகதி உடைப்பெடுத்தது மாவிலாறு அணைக்கட்டுப் பகுதிக்கு செல்லும் வீதி இப்போதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பின்பே சேதமடைந்த அணைக்கட்டு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய முடியும். அதன் பின்னரே முழுமையான சேதத்தை மதிப்பிடப்பட முடியும். அதேநேரம், சேருநுவர வெள்ளப் பாதுகாப்பு அணையின் நீலபொல மற்றும் தெஹிவத்த பகுதிகளில் ஏற்பட்ட சேதம், கந்தளாய் சூரியபுர வெள்ளப் பாதுகாப்பு அணை உடைந்ததால் ஏற்பட்ட சேதம் ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப்!
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அச்சமயம், அதிபர் டிரம்ப் கண்களை மூடி தூங்கிக்கொண்டுள்ளார். டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவு செயலாளர் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார். Donald has fallen asleep in his own […]
தற்காலிக புனரமைப்பு: வட்டுவாகல் பாலம் பயன்பாட்டுக்கு வந்தது
வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்றிருந்தது. அண்மைய நாட்களாக பெய்த பலத்த மழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்திருந்தது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது. எனவே தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு - கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக இரவு பகலாக வேலைகள் இடம்பெற்று வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து நேற்று (03) இரவு 9.45 மணியளவில் இருந்து வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்தினை மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டு வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
பணி நிரந்தரம் கிடைக்குமா கிடைக்காதா? எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் முக்கிய முடிவு!
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அம்பாறை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் தரம் குறைந்துள்ளதுடன், பல வீதிகளும் வெள்ள நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் பெண்ணின் சடலம்
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்த சம்பவம் இன்று (04) பதிவாகியுள்ளது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நீதிவான் அனுமதியைப்பெற்று சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து.. அமைச்சர் சிவசங்கர் கொடுத்த முக்கிய தகவல்!
போக்குவரத்து துறையில் விரைவில் 3000 பணியிடங்கள் நிரப்பப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை; பொதுமக்கள் அவதானம்
பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தல் இன்று (04) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் நிலவுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். அதேவேளை பொது […]
Dream11 evolves beyond gaming with new sports entertainment platform
Mumbai: Dream11, India’s leading fantasy sports platform with over 250 million users, has announced a significant strategic pivot — transforming itself from a pure-play gaming platform into a global second-screen sports entertainment ecosystem. The evolved platform aims to deepen fan engagement by complementing live sports broadcasts with real-time interactive experiences.The new Dream11 experience places fans at the centre of sports viewing through creator-led live watch-along sessions, real-time reactions, community banter, and free-to-play fantasy formats, all designed to elevate engagement and enhance broadcast viewership. The shift aligns with Dream11’s mission to “Make Every Match More Exciting”, while opening new opportunities for sports creators to build content that is authentic, raw, and interactive.As part of this pivot, Dream11 will empower a growing creator community to host match rooms, facilitate live commentary, share reactions, and build fan communities around teams, leagues, and sports moments — redefining how audiences consume live sports beyond passive viewing.[caption id=attachment_2483240 align=alignleft width=158] Harsh Jain[/caption]Speaking on the announcement, Harsh Jain, Co-founder and CEO, Dream11 and Dream Sports, said, “No sports fan should ever watch a match alone. Now, our 250 million users can take their sports engagement to the next level with watch-alongs that enable sports creators and fans to share their raw and unfiltered emotions before, during and after every match. We want to give all sports fans an opportunity to be heard and seen by millions of others. And this time, we are making it from India, for the whole world.” With the global rollout, Dream11 aims to redefine second-screen sports engagement and expand its footprint across international markets. The platform’s evolution mirrors the rise of interactive fan-first ecosystems, where live content, community, and creator-powered storytelling increasingly shape digital sports consumption.
திருப்பரங்குன்றம் வழக்கு.. அநாகரிக அரசியல் நாடகங்கள்.. திமுக அரசு மீது அண்ணாமலை விமர்சனம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை அடுத்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசியக் குழு உறுப்பினருமான அண்ணாமலை, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
திரிபுரா அணிக்கு எதிரான லீக் போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக காட்டடி அடித்து, ரன் மழை பொழிந்தது. சாய் கிஷோர் 8 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். ஜெகதீசனும் அதிரடியாக விளையாடினார்.
சவக்கிடங்கில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண்: அடுத்து நிகழ்ந்த துயரம்
பிரித்தானியாவில், உயிரிழந்ததாக தவறாக ஒரு பெண் சவக்கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டார். சவக்கிடங்கில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண் இங்கிலாந்திலுள்ள Darlington என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த ஆலிவ் மார்ட்டின் (Olive Martin, 54) என்னும் பெண்மணி, திடீரென வலிப்பு வந்து தவித்ததுடன் நிலைகுலைந்து சரிந்துள்ளார். அவரை பரிசோதித்த அவசர உதவிக்குழுவினர், அவர் இறந்துவிட்டதாகக் கூறி அவரை சவக்கிடங்குக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சவக்கிடங்கில், அவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளன. சோகம் என்னவென்றால், அவர் எவ்வளவு நேரம் அப்படியே சவக்கிடங்கில் விடப்பட்டார் […]
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம்.. தனியார் மயமாக்கும் முயற்சி.. வீழ்ச்சிக்கான காரணம் என்ன?
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மறுபடியும் தனியார் மயமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருக்கின்றது. சில வருடங்களாக நீடிக்கும் நஷ்டங்களை கடக்க, PIA-ஐ வாங்குவதற்கு ஃபௌஜி ஃபவுண்டேஷன் போன்ற நிறுவனங்கள் முன்வருகின்றனர்.
Vipul Amrutlal Shah announces expansion with launch of Sunshine Pictures Digital and Sunshine Music
Mumbai: Renowned filmmaker Vipul Amrutlal Shah, celebrated for delivering some of India’s most impactful and commercially successful films under the Sunshine Pictures banner, has announced a major expansion of his entertainment business with the launch of Sunshine Pictures Digital and a dedicated music label, Sunshine Music.This strategic move marks Sunshine Pictures’ formal entry into the fast-growing digital content and music ecosystem, strengthening its presence across multiple verticals and aligning with evolving audience consumption patterns. With this expansion, Shah aims to position Sunshine Pictures as a multi-format entertainment powerhouse, shaping the future of storytelling across platforms.Known for backing meaningful cinema and delivering memorable soundtracks, Shah has now established a dedicated vertical to discover, nurture, and promote emerging musical talent. Sunshine Music was officially launched in a special ceremony at Mumbai’s iconic Siddhivinayak Temple. As part of the rollout strategy, the banner will release free-to-watch web series consistently via its official YouTube channel, expanding accessibility and audience reach.Sunshine Pictures Digital is designed to become a launching platform for new writers, actors, creators, and technical talent, offering opportunities backed by a reputable production ecosystem. The move reinforces Shah’s long-standing commitment to supporting and enabling emerging voices in Indian entertainment.With Sanjay Upadhyay heading Sunshine Pictures Digital, the platform will operate with a structured leadership approach to streamline creative opportunities and output. The expansion is further strengthened by Aashin A. Shah, who joins as co-producer across the new verticals, ensuring continuity in production excellence.Music veteran Suresh Thomas will oversee the creative strategy and launch of Sunshine Music’s first slate. Shah’s films are known for their celebrated tracks, with albums from Namastey London, London Dreams, Action Replayy, and Singh Is Kinng still regarded as some of the most iconic musical narratives in Bollywood.Vipul Amrutlal Shah remains one of India’s most respected storytellers, known for creating impactful cinema across genres. The launch of Sunshine Pictures Digital and Sunshine Music reinforces his commitment to innovation, talent development, and evolving with the future of the entertainment industry.
வலி.கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழப்பு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் அகி என அழைக்கப்படும் துஷ்யந்தன் இன்றைய தினம்… The post வலி.கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழப்பு appeared first on Global Tamil News .
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு மீனவர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளன.நெடுந்தீவு மீனவர்கள்… The post நெடுந்தீவு மீனவர்கள் பாதிப்பு appeared first on Global Tamil News .
Celebrities share their memories with AVM Saravanan at his funeral | Cinema Vikatan
திருப்பரங்குன்றம் வழக்கு.. 144 தடை உத்தரவு ரத்து.. தீபம் ஏற்றவும் உத்தரவு!
திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்றவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
AVM Saravanan: ``ஏவி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி நான் - கமல் இரங்கல்
தமிழ் சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் இன்று இயற்கை எய்தினார். ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் ஏவி.எம் சரவணன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஏவிஎம் சரவணன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோவில் கமல் ஹாசன் , ``திரு. ஏவி.எம் சரவணன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள உறவு என் அண்ணன் சந்திரஹாசன் அவர்களுக்கும், சாருஹாசன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள உறவு போன்றது. இந்த உறவுக்கு என்ன பொருள் சொல்வது? இவர்களுக்கு எந்த மாதிரியான மரியாதை தருவது? என்ற ஒரு குழப்பம் சிறுவயதில் ஏற்பட்டதுண்டு. நான் என் 20 வயதைத் தாண்டும்போது, இவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை என் அடிமனது முடிவு செய்துவிட்டது. AVM: ``என் கஷ்ட காலங்களில் - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி ஒரு தகப்பனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைத்தான் இவர்களுக்குத் தருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்படித்தான் என் மனதில் நினைத்துக் கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். திரு. குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாகவே நான் உரிமை கொண்டாடுகிறேன். இப்படி உரிமை கொண்டாடும் நான் தனி மரம் அல்ல. ஏ.வி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி. இன்று வளர்ந்து வந்திருக்கிறேன். கமல் ஹாசன் பெருங்கலைஞர்கள் விட்டுச் சென்ற அடிச்சுவட்டில் என் சிறு பாதத்தை எப்படிப் பதித்து நடக்க வேண்டும் என்று பல பெரிய ஆசான்கள் எனக்கு இந்த வளாகத்தில், இந்தத் தோப்பில் இன்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். பேர் சொல்லும் பிள்ளையாக சரவணன் ஐயா அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவரின் சகோதரர்களும்தான். அது போன்ற ஒரு பிள்ளையாக நானும் இருக்க ஆசைப்படுகிறேன். AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன் என் ஆசையெல்லாம் இந்தத் தோப்பின் மூன்றாம் தலைமுறை தோன்றியிருக்கிறது. அவர்களும் என்னைப் போன்ற பல செடிகளை நட்டு இந்தப் பெரும் பள்ளியின் பெயர் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். இதுதான் அண்ணாரின் மக்களாக நாம் செய்யும் கடமை என்று நான் நம்புகிறேன். மற்றபடி அந்த ஏவி.எம் வளாகமும், அங்கு வேலை செய்து ரிட்டையர் ஆனவர்களுக்கும், வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள் எல்லோருக்கும் இருக்கும் சோகம், அதில் நானும் பங்கு கொள்கிறேன். உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி : pic.twitter.com/XWNx731BJc — Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2025 வெளி உலகத்திற்கு இதுபோன்ற பின்னணி ஆளுமைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் அவரை வணங்குவதற்கான காரணம் எங்கள் வாழ்க்கையைப் பார்த்தாலே புரிந்துவிடும். முக்கியமாக எங்கள் கலை வாழ்க்கை. அவருக்கு நன்றி சொல்லும் ஒரே வழி அவர் கண்ட பாதையில் வீறுநடை போட்டு நடப்பதுதான். நன்றி ஐயா, அனைத்திற்கும் என்று தெரிவித்திருக்கிறார். AVM Saravanan: ``ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா... - நடிகை ராணி
OPS - TTV Dinakaran-ன் அடுத்த மூவ்? | Journalist SP Lakshmanan Interview
Mumbai: India’s entertainment and media (E&M) industry is poised for accelerated expansion, projected to grow at a 7.8% CAGR and reach USD47.2 billion by 2029, nearly double the global growth rate of 4.2%, according to the India findings of PwC’s Global Entertainment & Media Outlook 2025–29 released today.Driven by a young population, rising digital consumption, expanding broadband access, and the rapid adoption of generative AI, the sector is set to witness significant momentum across digital advertising, OTT, gaming, and content-led experiences.India’s digitally active and mobile-first population continues to reshape audience behaviour, fueling demand for immersive content formats, personalisation, and regional language content. Advertisers and platforms are responding with AI-enabled personalisation, scalable content ecosystems, and innovative monetisation models.The report also highlights India’s growing prominence as a hub for live entertainment, with increased investment and participation in large-scale events, festivals, and sports properties. Strong economic fundamentals and rising discretionary spending remain key catalysts for expansion. Rajesh Sethi, Partner and Leader – Media, Entertainment, and Sports, PwC India, said, “India’s E&M sector continues to outpace global growth, driven by the deepening of digital markets, the rapid expansion of advertising-led formats, and a new generation of creators shaping demand. The sector’s momentum is supported by rising consumer engagement, improving economic fundamentals, and the continued shift towards scalable, tech-enabled business models.” Key Growth Drivers and Segment Outlook: Internet Advertising Leads With Strong Growth:India’s internet advertising market is projected to rise from USD6.25 bn in 2024 to USD13.06 bn by 2029 at a 15.9% CAGR, making it the fastest-growing segment. Increased regional digital adoption, platform-led subscription advertising, and mobile-first usage will power the next scale-up phase. OTT Streaming Expands With Regional and Subscription Strength:OTT revenue is expected to grow from USD2.27 bn in 2024 to USD3.47 bn in 2029, driven by regional content investments, premium direct-to-consumer offerings, and platform consolidation. Gaming and E-Sports Maintain Strong Traction:Gaming revenues will rise from USD2.79 bn to USD3.96 bn by 2029, propelled by immersive gameplay formats, improved monetisation models, and growing participation from younger audiences. Traditional Media Remains Resilient:Television is expected to grow from USD13.97 bn to USD18.11 bn by 2029, while print will increase from USD3.5 bn to USD4.2 bn, supported by strong regional markets and advertiser confidence. Sports and Live Experiences Emerge as Premium Asset Classes:India's sports ecosystem is forecasted to expand from USD4.6–USD5.0 bn in 2024 to USD7.8 bn by 2029, driven by increased institutional investment and evolving fan experiences. AI Accelerates the Creator Economy Boom:AI-enabled localisation, automated editing, and personalisation are reshaping content development and monetisation. India’s creator economy now consists of over 4 million creators, influencing commerce, lifestyle, entertainment, and brand building. The report positions India’s E&M landscape as one of the most dynamic globally, backed by transformative technology adoption, vibrant content ecosystems, and a robust consumption base. With strategic investments and innovation-led models, India is expected to redefine the future of entertainment experiences.Speaking on the findings, Manpreet Singh Ahuja, Chief Clients and Alliances Officer, PwC India , said, “This is not a story of incremental upgrades. It's a story of business model rebirth. We are at an inflection point where technology—especially AI—is fundamentally redefining how content is created, discovered, monetised and experienced. AI-led production pipelines, precision personalisation and immersive formats are putting value in motion across the entire entertainment and media landscape. But no single player can unlock this future alone. The next era belongs to connected ecosystems—where cloud platforms, AI innovators, creative powerhouses and media enterprises collaborate to architect something bigger than the sum of their parts. When these forces align, they not only unlock new monetisation opportunities but also fundamentally reshape cost structures, allowing companies to scale faster while operating leaner.”
Rashmika: திருமணம் பற்றிய தகவலை நான் மறுக்கவில்லை, அதே சமயம்!- ராஷ்மிகா மந்தனா
2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் 'The Girlfriend' படம் வெளியாகியிருந்தது. இதனிடையே ‘கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா இருவரும் சில வருடங்களாக காதலித்து வருவதாகத் தகவல் வெளியானது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இதனை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை அதே சமயம் மறுக்கவும் இல்லை. சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் பிப்ரவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்திற்கு ராஷ்மிகா பேட்டி அளித்திருக்கிறார். அதில் விஜய் தேவரகொண்டா உடனான திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “திருமணம் பற்றிய தகவலை நான் இப்போது உறுதிப்படுத்தவும், மறுக்கவும் விரும்பவில்லை. அதை பற்றி பேச வேண்டிய நேரம் வந்தால் கண்டிப்பாக தெரிவிப்போம்” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், நான் விஜய் தேவரகொண்டாவிடம் வேலை விஷயமாக நிறைய பேசமாட்டேன். விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா 80 சதவிகித நேரம் வேலையைப் பற்றி நான் வீட்டில் பேச மாட்டேன். வேலை சார்ந்த ஏதாவது ஒரு விஷயம் எனக்கு மனதில் சுமையாக இருந்தால், மட்டும் ஆலோசனைக்காக விஜய் தேவரகொண்டாவிடம் கேட்பேன். நான் வேலைக்கு 100 சதவிகிதம் கொடுப்பவள், ஆனால் வீட்டில் இருக்கும்போது வேலையை பற்றி பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் : மதுரை காவல் ஆணையர் காணொலி வழியே ஆஜர்
சென்னை :திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி தொடர்பான சர்ச்சையில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, “நீதித்துறை சட்டம்-ஒழுங்கை கையில் எடுக்கக் கூடாது; நீதிமன்றத்தின் மாண்பை பின்பற்ற வேண்டும்” என்ற அரசு வாதத்தை ஏற்கவில்லை. இதன் மூலம் தனி […]
காங்கிரஸ் குறி வைக்கும் 40 தொகுதிகள்; திமுக கூட்டணியில் எந்தெந்த இடங்களை எதிர்பார்க்கிறது?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தரப்பு மீண்டும் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமென விரும்புகிறது. விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தலைமையிலான ஒரு பிரிவினர் த.வெ.க-வுடன் செல்லலாமெனக் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இப்படியான சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் சறுக்கலைக் கொடுத்தது. இதில், அகில இந்தியத் தலைமை அப்செட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ் இதற்கிடையில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காகக் குழு ஒன்றை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். அதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்தக் குழுவை மாணிக்கம் தாக்கூர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள், 'செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகக் குழுவை அறிவித்துவிட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர். TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்! இந்தச்சூழலில் காங்கிரஸின் ஐவர் குழு தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து பேசியது. அப்போது, வரும் தேர்தலில் 40 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் தொகுதிகளை மாற்றக் கூடாது. நம் கூட்டணி பலமாக இருந்தால்தான் பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கால் ஊன்ற விட முடியாது எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், தி.மு.க சார்பில் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கப்படும் குழுவுடன் பேசிக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்து அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டது. அண்ணா அறிவாலயம் இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், கடந்த தேர்தலில் பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கர், ஈரோடு (கிழக்கு), உதகமண்டலம், விருத்தாச்சலம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, கிள்ளியூர், தென்காசி, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றோம். இந்த முறை அந்தத் தொகுதிகளை வழங்க வேண்டும். செல்வப்பெருந்தகை மேலும் செய்யூர், மதுராந்தகம், கே.வி.குப்பம், ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஆத்துார், ஓமலுார், சேலம் தெற்கு, சங்ககிரி, நாமக்கல், கோபி, ஊட்டி, சூலுார், கோவை தெற்கு, உடுமலைபேட்டை, விருத்தாசலம், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, பாபநாசம், மேலுார், மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தத் தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் வெற்றிபெறுவதற்கு எளிதாக இருக்கும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். என்றனர். காங்கிரஸ்: ப. சிதம்பரத்தின் திட்டமும் ஐவர் குழு சந்திப்பும்; அறிவாலயத்தில் நடந்தது என்ன?!
யாழில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த – உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில்
யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா ரூபா 20,000 வீதம் புலமைப் பரிசில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் பின்வரும் தகைமையுடைய விண்ணப்பதாரிகள் தமக்குரிய கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, பெற்றோர் அங்கத்தவராகவுள்ள கமக்கார அமைப்பு, தங்களது பிரிவிற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் தாம் கல்வி கற்கும் பாடசாலை அதிபர் என்பவர்களது சிபாரிசுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை […]
Ashes 2025: ‘உடம்பில் துணியில்லாமல் ஓடுவேன்’.. அறிவித்த மேத்யூ ஹெய்டனை.. தடுத்து நிறுத்திய ஜோ ரூட்!
உடம்பில் ஒட்டு துணியில்லாமல் ஓடுவேன் என அறிவித்த மேத்யூ ஹெய்டனை ஜோ ரூட் காப்பாற்றிவிட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் சதம் அடித்து அசத்தியதால்தான், ஹெய்டன் காப்பற்றப்பட்டார்.
MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!
உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிகவும் புதிரான கதை மலேசியா ஏலைன்ஸின் MH370 விமானத்தினுடையது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்குவதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. MH370 விமானத்துக்கு என்ன ஆனது? 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, தோராயமாக 12.40 மணியளவில் (மலேசிய நேரப்படி) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு 227 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 239 பேருடன் புறப்பட்டது அந்த போயிங் 777 ரக விமானம். மலேசிய அரசு அறிக்கை ஆனால் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் புறப்பட்ட MH 370, பறக்கத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குள், அதாவது மலேசிய நேரப்படி காலை 1:20 மணிவாக்கில் கடைசியாக விமான போக்குவரத்து அதிகாரிகளோடு தொடர்பு கொண்டது. அப்போது MH 370 தென் சீனக் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தது. சில நிமிடங்களில் ராணுவ ரேடாரிலிருந்தும் மாயமானது. எவ்வித தடயமும் இல்லை. 21ஆம் நூற்றாண்டில் மனித வளர்ச்சியின் உச்சமாகக் கருதப்படும் செயற்கைக் கோள், தொழில்நுட்பம் என எல்லாவற்றையும் கேள்விக்கும் கேலிக்கும் உட்படுத்தியது ஒரு விமானம். இதுகுறித்து நெட்ஃப்ளிக்ஸில் ஆவணப்படம் கூட உருவாக்கப்பட்டது. இந்தப் பயணத்தில் மாயமானவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சீன நாட்டவர்கள். மற்றவர்கள் மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள். இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் விமானம் மாயமானதற்கான காரணம் தெரியவில்லை என்று 495 பக்க அறிக்கை சமர்பித்திருந்தனர். மேலும், விமானிகள் அல்லாத வேறு யாரேனும் திட்டமிட்டு விமானத்தை அதன் பாதையிலிருந்து திசை திருப்பி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் அப்போது எழுப்பியிருந்தனர். மலேசியா ஏர்லைன்ஸ் ஆனால், விமானம் திட்டமிட்ட பாதையில் இருந்து விலகி, தெற்கு நோக்கிப் பயணித்து, தொலைதூரத்தில் உள்ள தென்னிந்தியப் பெருங்கடலை நோக்கிச் சென்றதை செயற்கைக்கோள் தரவுகள் காட்டின. அங்கேயே எரிபொருள் தீர்ந்து விமானம் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. தேடுதல் பணிகள் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா தலைமையிலான தேடுதல் நடவடிக்கையில், மூன்று ஆண்டுகளில் 120,000 சதுர கிலோமீட்டர் (46,300 சதுர மைல்கள்) கடற்பகுதி ஜல்லடை போட்டு சலித்தது போல அலசி ஆராயப்பட்டது. மொசாம்பிக், மடகாஸ்கர், ரீயூனியன் தீவு போன்ற கிழக்கு ஆப்பிரிக்க மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளின் கடலோரப் பகுதிகளில் சில உடைந்த பாகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டன. மிக சமீபத்தில், கடல்சார் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி (Ocean Infinity) பல வாரங்கள் ஆழ்கடலில் தேடுதல் நடத்தியது. ஆனால் அதனால் பயன் ஒன்றும் இல்லை. மோசமான வானிலை காரணமாக கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் நிறுத்தப்பட்டது. கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம் முன்னதாக 2018-ம் ஆண்டிலும் தேடுதல் பணியை மேற்கொண்ட இந்த ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம், இப்போது டிசம்பர் 30-ம் தேதி முதல் மீண்டும் தேடலைத் தொடங்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்தியா மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம், கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம் (no-find, no-fee) என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பணிகளை தொடங்கவிருக்கிறது. இதன்படி, விமானத்தின் கணிசமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்துக்கு 70 மில்லியன் டாலர் கட்டணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக விபத்துக்கான காரணத்தைத் தெரிவிக்கும் கருப்பு பெட்டி போன்றவை. Nine years ago today, flight MH370 disappeared just 38 minutes after it took off. But how does a flight with 239 passengers just disappear? MH370: The Plane That Disappeared is now on Netflix pic.twitter.com/HS0MTIcs2G — Netflix (@netflix) March 8, 2023 இதற்காக ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம், இந்தியப் பெருங்கடலில் இதுவரை தேடப்படாத 15,000 சதுர கிலோமீட்டர் (5,800 சதுர மைல்கள்) பரப்பளவில் ஆழ்கடல் தேடுதல் பணிகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளதாக அசோசியேட் பிரஸ் செய்தி தளம் தெரிவிக்கிறது. விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக இந்தத் தேடுதல் பணி தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன், மலேசிய ஏர்லைன்ஸ், போயிங் நிறுவனம், என்ஜின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், அல்லியன்ஸ் காப்பீட்டுக் குழுமம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு கோரியும் வருகின்றன. இப்போது இந்த விமானம் கிடைக்க அதிகபட்ச வாய்ப்புள்ள பகுதிகளில் மீண்டும் தேடுதல் தொடங்குகிறது. விமானத்துடன் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஒரு முடிவை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது மலேசிய அரசு. ஜெய்பூரில் நின்ற உக்ரைன் அதிபர் மனைவியின் விமானம் - காரணம் தெரியுமா?
`இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு தங்கம் முக்கிய காரணமா?’ - விளக்கும் பொருளாதார நிபுணர் நாகப்பன்
இந்த ஆண்டில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது வரலாறு காணாத அளவிற்கு ஒரு அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட 90 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஏன் இந்த வீழ்ச்சி... இது நல்லதா, கெட்டதா என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன். ``இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம் டாலருக்கு ரூ.90 அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. அப்போது பொருளாதார வளர்ச்சிக்கும், இந்திய ரூபாயின் மதிப்பிற்கு சம்பந்தம் இல்லையா? இது சாத்தியமா? ``இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50, ரூ.70 என்று இருந்தபோதிலும் சரி... இப்போது ரூ.90 என வர்த்தகமாகி வரும் நிலையிலும் சரி... இந்திய பொருளாதாரம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது. உதாரணத்திற்கு, இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50 ஆக மாறிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமித வளர்ச்சி அடைந்துவிடுமா? அப்படியெல்லாம் 'ஆகாது'. நாகப்பன் புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained இந்த நிலை ஏற்பட்டால், ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிடுவார்கள். இது பொருளாதாரத்திற்கு பெரிய அடியாக வந்து விழுந்துவிடும். இதனால், இந்தியா பொருளாதாரத்திற்கும், இந்திய ரூபாயின் மதிப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதெல்லாம் இல்லை. ஆனால், இந்திய பொருளாதாரம் வளரும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறையாது என்று கூற முடியாது. இப்போது நாம் பார்க்க வேண்டியது இந்தியாவின் இந்தப் பொருளாதார வளர்ச்சி போதுமானதா... அடுத்து என்ன செய்யலாம் என்பதை தான். ``ஏன் இந்த இந்திய ரூபாய் வீழ்ச்சி? பிற ஆசிய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு சரியவில்லையே? ``அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள வரிகள் தான் இந்திய ரூபாயின் தற்போதைய வீழ்ச்சிக்கு காரணம். இந்த வரியினால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றுகின்றனர். இதுவும் இந்திய ரூபாயை இன்னும் சரிய செய்கிறது. இது மற்ற நாடுகளுக்கு நடக்கவில்லை. அதனால், அந்த நாடுகளின் நாணயங்கள் சரிவை சந்திக்கவில்லை. ஏற்றுமதி - இறக்குமதி Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா? இந்தியா ஏற்றுமதியை விட, அதிகமாக இறக்குமதியை தான் செய்கிறது. இதனால், இந்தியாவில் இருந்து டாலர்கள் அதிகம் வெளியே செல்கின்றன. ஆனால், வெளியே செல்லுமளவிற்கு, ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு டாலர்கள் வருவதில்லை. இதுவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ``சரி... அப்போது இறக்குமதி குறைக்கலாம் தானே? இதனால், சரிவை கட்டுப்படுத்த முடியுமல்லவா? ``இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில் இறக்குமதிகளை குறைக்க முடியாது. இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் தங்கமும், கச்சா எண்ணெயும். கடந்த ஆண்டை விட, சமீப மாதங்களில் இந்தியா தங்கத்தை மூன்று மடங்கு அதிகம் இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம், எவ்வளவு டாலர்கள் இந்தியாவில் இருந்து வெளியே சென்றிருக்கும்? கச்சா எண்ணெய் புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம் என்றால், அதை சுத்திகரிக்க ஆட்கள் தேவைப்படுவார்கள். அங்கே வேலைவாய்ப்பு உருவாகிறது. அடுத்ததாக, சுத்திகரித்து வந்த எண்ணெயை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்துவார்கள். வேலைக்கு செல்வார்கள். சம்பளம் வாங்குவார்கள்... செலவளிப்பார்கள்... உற்பத்தியும் அதிகரிக்கும். - இப்படி பொருளாதாரம் மேம்படும். ஆனால், தங்கத்தை மக்கள் வாங்கி வீட்டிலோ, லாக்கரிலோ வைத்து கொள்கிறார்கள். அது வேறு எங்கும் செல்லாது... எந்தப் பயனும் இல்லை. முன்பு 3,000 டாலருக்கு விற்பனையாகி வந்த தங்கம், இப்போது 4,000 டாலருக்கு விற்பனையாகிறது. கூடுதலாக, 1000 டாலர் வெளியே செல்கிறது. அப்போது தங்கம் இறக்குமதியில் மட்டும் எத்தனை ஆயிரம் டாலர்கள் அதிகம் வெளியே சென்றிருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். ``இந்திய ரூபாய் வீழ்ச்சி இந்தியாவை என்ன செய்யும்? ``இது ஏற்றுமதியாளர்களுக்கு குட் நியூஸ். இந்த மதிப்பு சரிவு அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை தரப்போகிறது. இவர்கள் டாலர்களில் தான் வர்த்தகம் செய்வார்கள். இவர்களுக்கு வரும் டாலரை இந்திய ரூபாயாக மாற்றும்போது, அதிக வருமானம் தானே. ஆனால், இறக்குமதியாளரை பெரிதும் இந்த வீழ்ச்சி பாதிக்கும். இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது என்று தரவு கூறுகின்றன. இறக்குமதியாளர்கள் அதிக பணம் கொடுத்து இறக்குமதி செய்யும்போது, அந்தப் பொருளை அதிக விலைக்கு தான் விற்பார்கள். இதனால், விலைவாசி உயரும். இன்னொரு பக்கம், உலக அளவில் இந்தியா கச்சா எண்ணெய்யின் டாப் இறக்குமதியாளர். இதன் இறக்குமதி செலவு அதிகரிக்கும்போது, போக்குவரத்து செலவு அதிகரிக்கும். இதுவும் விலைவாசியை கூட்டும். இந்திய ரிசர்வ் வங்கி 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க! ``இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது? அவர்கள் இப்போது என்ன செய்தால் நல்லது? ``இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலர்களை அடிக்கடி விற்று எங்களது வருமானத்தைப் பாதிக்கின்றனர் என்று ஏற்றுமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மற்றொரு பிரிவினரோ, இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்ய வேண்டுமென்றால், சரிவும் இல்லாமல், அதிக உயர்வும் இல்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒரேடியாக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.95-ஐ தொட்டால், அது பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதன் வேகத்தை மட்டுப்படுத்துவதை இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயம் செய்ய வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி எப்போதுமே இந்திய ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்துவது அவசியமில்லை. இதன் ஏற்ற, இறக்கங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படும் போது மட்டும், இதில் தலையிட வேண்டும். ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது?
வெளிநாடொன்றில் பயங்கரம் ; கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபரை துவம்சம் செய்த சிங்கம்
பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கெர்சன் டி மெலோ மச்சாடோ என்ற 19 வயது வாலிபர் சென்றார். அவர் திடீரென்று சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் வேலி மீது ஏறினார். பின்னர் அங்கிருந்த மரம் வழியாக கூண்டுக்குள் இறங்க முயற்சித்தார். இதை பார்த்த சிங்கம் மரத்தை நோக்கி சென்று அந்த வாலிபரை தாக்கி இழுத்து சென்றது. சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். […]
குழந்தைகள் காப்பகத்தில் வன்கொடுமை –குற்றத்தை ஒப்புக்கொண்ட வின்சென் சான்
இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகம் (Nursery) ஒன்றில் பணியாற்றி வந்த வின்சென் சான் (Vincent Chan) (வயது… The post குழந்தைகள் காப்பகத்தில் வன்கொடுமை – குற்றத்தை ஒப்புக்கொண்டவின்சென் சான் appeared first on Global Tamil News .
மதுரை மழை பாதிப்பு: சாலைகள், மேயர், மண்டல தலைவர்கள் எங்கே? கேள்வி எழுப்பும் ஆர்.பி.உதயகுமார்
மதுரை சாலைகள் மோசமடைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்ததால், மூன்றாவது போட்டியில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக, பந்துவீச்சு துறையில் மாற்றம் இருக்கும். அதுகுறித்து பார்க்கலாம்.
காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!
மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். தற்போது பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் முதல் கட்டமாக ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பிலான பில் நிலுவை தொகை ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள ரூ.19 லட்சம் பில் தொகை ஒப்பந்ததாரர் பழனி குமாருக்கு வழங்கப்படாமல் இருந்து வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இந்நிலையில் மீதமுள்ள இந்த பில் தொகை வழங்குவதற்கு காரியாபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் பொறியாளர் கணேசன் என்பவர் ரூ.3,50,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த லஞ்சப் பணத்தில் ரூ. 50,000 முன்பணமாக வழங்க வேண்டும் எனவும் பொறியாளர் கணேசன் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்தக்காரர் பழனி குமார், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடி உள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஒப்பந்தகாரர் பழனி குமார் பொறியாளர் கணேசனிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் ஜேஸ் மும்தாஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் லஞ்சம் வாங்கிய காரியாபட்டி பேரூராட்சி பொறியாளர் கணேசனை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மின்சாரம் பாய்ந்த பாம்பு; CPR கொடுத்து உயிரைக் காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ
குஜராத் மாநிலத்தின் வல்சாத் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்த பாம்பு ஒன்றுக்கு CPR செய்து உயிரைக் காப்பாற்றிய வனவிலங்கு மீட்பு நிபுணரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்கம்பியில் ஏறியதால் பாம்பிற்கு மின்சாரம் தாக்கியது. மின் இணைப்பு கொண்ட மின்கம்பியில் பாம்பு ஒன்று இரை தேடி ஊர்ந்து சென்றபோது, திடீரென மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்த பாம்பை பார்த்த உள்ளூர் மக்கள், அருகில் வசிக்கும் வனவிலங்கு மீட்பர் முகேஷ் வயாத்தை தொடர்புகொண்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முகேஷ் வயாத், பாம்பு முற்றிலும் அசைவின்றி கிடந்ததையும், எந்த எதிர்வினையும் இல்லை என்பதையும் கவனித்தார். snake அவர் கடந்த 10 ஆண்டுகளாக பாம்பு மீட்புப் பணிகளில் இருக்கும் அனுபவமும், உள்ளூர் பாம்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பெற்ற பயிற்சியும் காரணமாக, உடனே பாம்புக்கான CPR முறையைப் பயன்படுத்த முடிவு செய்தார். பாம்பின் வாயுக்குள் காற்றை ஊதியும், இடைவெளி விடாமல் அதன் மார்புப் பகுதியில் மெதுவாகத் தட்டி தூண்டியும், முகேஷ் வயாத் தொடர்ந்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை சிகிச்சை அளித்தார். நீண்ட நேர போராட்டத்தி பின்பு, பாம்பு மெல்ல சுவாசம் விடத் தொடங்கியது. அந்தப் பாம்பு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அதன் வாழ்விடம் நோக்கி விடுவிக்கப்பட்டது. இந்த மீட்பு காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. वलसाड में मानवता और जीवदया का एक बेहतरीन उदाहरण देखने को मिला जब बिजली के करंट से गिर पड़े एक सांप को CPR देकर रेस्क्यूअर ने नई ज़िंदगी दी #Gujarat | #ViralVideo pic.twitter.com/q4S7BWg0rT — NDTV India (@ndtvindia) December 4, 2025
திருப்பரங்குன்றம் வழக்கு –தமிழக அரசின் மனு தள்ளுபடி!
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, “வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் தீப விழா யாரையும் பாதிக்காது. மத நல்லிணக்கம் என்பது ஒரு சமூகத்தின் மதச் செயல்பாடுகளைத் தடுப்பதால் வருவதல்ல; […]
கார்த்திக்கின் வா வாத்தியாருக்கு இடைக்கால தடை
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்… The post கார்த்திக்கின் வா வாத்தியாருக்கு இடைக்கால தடை appeared first on Global Tamil News .
Print Advertising Grows 3% in Jan–Sep 2025; Education, Auto and Services Lead: TAM AdEx Report
Mumbai: India’s print advertising sector continued its upward trajectory, recording a 3% growth in ad space during January–September 2025 compared to the same period last year, according to the latest TAM AdEx Print Advertising Report.The Education sector led the market with a 17% share, followed closely by Auto (16%), Services (15%), and Banking/Finance/Investment (11%). The Cars category retained its top position with a 9% share, while Two Wheelers climbed to the third spot, reflecting strong demand momentum. The top 10 categories together contributed 46% of total print ad space.Among advertisers, Maruti Suzuki India and Hero Motocorp topped the charts, with the leading 10 advertisers collectively accounting for 13% of print ad volumes. The ecosystem remained highly fragmented with over 118,000 advertisers and 144,000 brands active during the period. Maruti Car Range emerged as the most advertised brand.More than 315 categories registered positive growth, led by Cars (+24%), Retail Outlets–Jewellers (+18%), Two Wheelers (+12%), and FMCG Products Range, which posted 2x growth.Promotional advertising remained a strong driver, contributing 31% of all print ad space, with Multiple Promotions (48%) and Discount-led promotions (40%) dominating.With sustained momentum across auto, education, retail, and FMCG categories, print continues to solidify its relevance as a high-impact medium for advertisers in India’s evolving media landscape.
திருப்பரங்குன்றம் வழக்கு.. அரசு மனு தள்ளுபடி.. கடமையைச் செய்யத் தவறிய அரசு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் அனுமதி தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உள்ளது.
Mumbai: Bastian Hospitality Group has announced its most ambitious expansion yet with the launch of Bastian Riviera, a 1.5-acre lifestyle destination set along the scenic Morjim backwaters in Goa. Marking the brand’s evolution from a celebrated restaurant chain to a holistic hospitality ecosystem, the unveiling is accompanied by a new brand film, “ Beira da Riviera”—Portuguese for “by the river”—which sets the creative and visual tone for the property.Bastian Riviera is designed to reimagine the Goan experience for the modern traveller—eschewing stereotypical coastal aesthetics for a refined, global sensibility. The property is anchored by a striking pyramid-inspired centrepiece and features cabanas on private decks, water-led courtyards, circular sunbeds, and an expansive outdoor bar overlooking the backwaters. Drawing from Egypt, Mykonos, Dubai and other international design cues, the destination promises a layered journey that reveals itself through architecture, food, culture and atmosphere.The culinary programme builds on Bastian’s established strengths, with a deeper emphasis on premium seafood and Goa-forward flavours. The cultural lineup features internationally acclaimed artists including Jimmy Jules and Bedouin, reinforcing the brand’s ambition to create a distinctive nightlife and experiential calendar for Goa.Sharing his vision, Ranjit Brinda, Founder & CEO of Bastian Hospitality, said, “Goa has long been close to my heart, with many of my childhood memories and holidays rooted here. I haven’t spent more time anywhere else in India, which is why it felt natural to bring my best work to this coastline, shaped by everything I’ve learnt through my travels. With Riviera, we wanted to honour the spirit of Goa while introducing a bold new design identity for Bastian. It is a meaningful milestone as it marks our first hotel, crafted with the care and intention that define all our spaces.” He added, “ My aim is to contribute to India’s tourism landscape while creating a destination that reflects both my personal connection to Goa and our broader vision for the future. As we move into our second phase with a dedicated wellness offering and full spa experience, Riviera becomes the starting point of a larger vision for leisure-led destinations under Bastian Hospitality Group.” The brand film “ Beira da Riviera” offers a cinematic first glimpse into this world—capturing the mood, texture and atmosphere of the property rather than simply showcasing its architecture. The visual narrative positions Bastian Riviera as a destination for travellers who seek to live spaces, not merely visit them. View this post on Instagram A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) Credits:Production – Run FrenzyPhotography – Samrat NagarVideo – Hitesh KalraBrand Head, Bastian – Shruti Venkatesh
திருப்பரங்குன்றம்: `மாநில அரசின் மனு தள்ளுபடி' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு விவரம்
திருக்கார்த்திகை தினமான நேற்று (டிசம்பர் 3) திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாததால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் நேற்றிரவு பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்பட்டது. திருப்பரங்குன்றம் முன்னதாக, மனுதாரருக்கு ஆதரவாக சி.ஐ.எஸ்.எஃப் (CISF) வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினருக்கும், அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கலவரம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது, மறுபக்கம், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிசம்பர் 4) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும். என்றார். அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. என வாதிடப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாநில அரசின் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்திருக்கிறார். தீபம் ஏற்ற அரசு முன்வராததால் மனுதாரரே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ``அரசு ஏதோவொரு நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே மனுதாரருக்கு உத்தரவு பிறக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. (More details will be added shortly) ``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?
உடல்நலக் கோளாறு! கோக கோலா, நெஸ்லேவுக்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ வழக்கு!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர அரசு, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகளை உருவாக்குவதாகக் கூறி கோக கோலா, நெஸ்லே நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. மக்களின் உடல் நலத்திற்கு கேடு விழைவிக்கும் உணவுப் பொருள்களைத் தயாரிப்பதாக, ஓரியோ, கிட் கேட் போன்ற பிரபல தின்பண்டங்களின் தயாரிப்பாளர்கள் உள்பட 10 நிறுவனங்களுக்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் […]
தையிட்டிப் போராட்டத்தில் பதற்றம்: கூடாரங்களை அகற்றியது காவல்துறை
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் குழப்பி வருகின்றனர். போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். இதனால் அங்கு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
விராட் -ரோஹித் 2027 உலகக்கோப்பை விளையாடினாள் வெற்றி இந்தியாவுக்கு தான்! டிம் சவுதி ஸ்பீச்!
டெல்லி : நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டிம் சவுதி, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இன்னும் தகுதியானவர்கள்தான் என்று திட்டவட்டமாக ஆதரவு தெரிவித்துள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட இந்த மூத்த ஜோடி, தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. “வயது வெறும் எண்ணிக்கைதான் (age is just a number)” என்று சவுதி வலியுறுத்தினார். […]
TNUSRB SI 2025 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு; 21-ம் தேதி தேர்வு - பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் எஸ்.ஐ பதவிகான தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

26 C