பிரித்தானியாவில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் ; வரவுள்ள புதிய தடை
பிரித்தானியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் செய்யும் புகைப் பழக்கத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாக்க நடவடிக்கை புதிய கட்டுப்பாடுகளின் படி, குழந்தைகளுடன் காருக்குள் பயணிக்கும் போது புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் கருவிகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் […]
இன்ஸ்டாகிராம் காதல்; பெண்ணை கொன்று உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து வீசிய கொடூரம்
சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஊடாக அறிமுகமான பெண்ணைக் கொலை செய்து, அவரது உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து கழிவுநீர் தொட்டியில் வீசிய சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சியா என்பவருக்கும், போபாலைச் சேர்ந்த சமீர் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமானதை மறைத்த காதலன் திருமணமானவரான சமீர், தனது திருமண விபரங்களை மறைத்து சியாவுடன் பழகி வந்துள்ளார். இதனை […]
புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்!
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும்… The post புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்! appeared first on Global Tamil News .
புங்குடுதீவு ஆலடியில் சிரமதான நிகழ்வு
புங்குடுதீவு ஆலடியில் சிரமதான நிகழ்வு 13-02 -2026 அன்று புங்குடுதீவு ஆலடி சந்தி மற்றும் புங்குடுதீவு வரசித்தி விநாயகர் ஆலயத்தின் முன்றல் , குழந்தை கடைச் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் புங்குடுதீவு உலக மையம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் 17 பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் நிரந்தர தர்மகர்த்தாவாக விளங்கிய உயர்திரு.சபாரெத்தினம் இராசரெத்தினம் அவர்களின் நினைவாகவும் அவரது துணைவியார் அமரர். இராசரெத்தினம் […]
மென்டல் மனதில்: செல்வராகவனுடன் மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷின் நெகிழ்ச்சியான பதிவு!
செல்வராகவன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு 'மென்டல் மனதில்' (Mental Manadhil) மூலம் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைத் தானே தோற்கடிப்பது? நிலாந்தன்.
தன்னைத் தானே தோற்கடிப்பது? நிலாந்தன். நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.அதை ஒரு… The post தன்னைத் தானே தோற்கடிப்பது? நிலாந்தன். appeared first on Global Tamil News .
வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இடையிடையே மழை மீண்டும் பெய்து வருவதனால் நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. இச்செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் ,சம்மாந்துறை, கல்முனை ,நாவிதன்வெளி , நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் இச்செயற்பாடு தொடர்கதையாகவே உள்ளது. அம்பாரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற […]
இப்போ நான் ரிலேஷன்ஷிப்ல இல்ல, நிச்சயம் கல்யாணம் செஞ்சுக்குவேன்: மிருணாள் தாகூர்
நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அப்படி நடக்கும் போது சமூக வலைதளங்களில் நானே அறிவிப்பு வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர். தனுஷுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்படும் நிலையில் இப்படி பேசியிருக்கிறார்.
கடலரிப்பு குறித்து ஆராய்ந்தார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து கண்டறியும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (14) நேரில் சென்றிருந்தார். அட்டப்பள்ளம் பிரதேசத்தின் கடலோர பகுதி மிக வேகமாக கடலினால் காவுகொள்ளப்பட்டு வருவதனால் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தீவிரிப்படுத்தப்பட்டு வருவதாகவும், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியாளரின் வழிகாட்டுதலின் கீழ், அவசரமாக கடலரிப்பை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.
சுனிலின் அதிரடி ஆட்டத்துடன் வெளியான ‘மஜக்கோ மல்லிகா’: காட்டாளன் படத்தின் மாஸ் ஓப்பனிங்!
அந்தோணி வர்கீஸ் நடிப்பில் உருவாகும் 'காட்டாளன்' படத்தின் முதல் பாடல் வெளியானது. நடிகர் சுனிலின் ஸ்டைலான நடனம் மற்றும் அஜனீஷ் லோக்நாத்தின் இசை கோலிவுட் விநியோகஸ்தர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
WI vs NEP: ‘46/5 என இருந்த நேபாள்’.. அடுத்து அதிரடி கம்பேக் கொடுத்து அசத்தல்: ஐரி வரலாற்று சாதனை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான லீக் போட்டியில், நேபாள் அணி துவக்கத்தில் சொதப்பி, பிறகு அதிரடி கம்பேக்கை கொடுத்து அசத்தியது. குறிப்பாக, திபேந்திர சிங் ஐரி அபாரமாக செயல்பட்டு அரை சதம் அடித்தார்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் நீண்ட கால முரண் இருந்துவருவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும் இரண்டு தரப்பின் மேலிட தலைவர்களும் கூட்டணி முரண்களை பேசி வருகின்றனர். இந்த சூழலில் வருகிற 22 -ஆம் தேதி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
Jana Nayagan: படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வெளியாகாதா?! என்ன சொல்கிறார் கனடா விநியோகஸ்தர்?
விஜய் நடித்திருக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தார்கள். படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. பிறகு சென்சார் சான்றிதழ் பிரச்னைக்காக நீதிமன்றத்தை நாடியது 'ஜன நாயகன்' படக்குழு. பிறகு, அந்த வழக்கையும் வாபஸ் பெற்றது. ஜனநாயகன் இப்போது படத்தை மீண்டும் மறுதணிக்கைக்கு படக்குழுவினர் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் கனடா நாட்டின் விநியோகஸ்தரான 'யோர்க் சினிமாஸ்', 'ஜனநாயகன்' திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பாக வெளியாகாது எனக் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை பதிவு இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த அறிக்கையில், 'ஜனநாயகன்' ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களிடம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் பணி இன்னும் முடியவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் திரையரங்குகளைத் தொடர்புகொண்டு விரைவில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் முன்னுரிமை பதிவு வசதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். York Cinemas Notice படக்குழுவிலிருந்து விநியோகஸ்தர்களுக்கு இப்படியான தகவல் சொல்லப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்த பிறகு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Jana Nayagan: மறு ஆய்வுக்கு அனுப்ப திட்டம்; வழக்கை வாபஸ் பெற 'ஜனநாயகன்' படக்குழு கடிதம்!
காஸா மருத்துவமனையில் ஆயுதக் கும்பல் ஊடுருவல்: பணிகளை நிறுத்திய மருத்துவா்கள்!
காஸாவில் மிகவும் முக்கியத்துவமான நாசா் மருத்துவமனையில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபா்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, அங்கு ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தனது பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி கொண்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே மருத்துவமனைக்குள் தன்னிச்சையாகச் சுற்றித் திரியும் ஆயுதமேந்திய நபா்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை மிரட்டும் வகையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில், இஸ்ரேல் படைகளின் தாக்குதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அவசர சிகிச்சை மற்றும் தீக்காயப் பிரிவுகளைத் தவிர மற்ற அனைத்து பணிகளையும் […]
சாதாரண தரப் பரீட்சை ; புவியியலாளர் விடுத்த மிக முக்கிய அறிவித்தல்
சாதாரண தரப் பரீட்சை காலத்தில் மழை பெய்யலாம் என்பதால், அபாய நிலையிலுள்ள பாடசாலைகள் குறித்த தகவல்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை காலத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாடசாலைகள் செயல்பட வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். அதன்படி, பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்து வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த […]
மலையாள படம் மூலம் நடிகையாகும் குஷ்பு மகள்: சொந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி
குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் தமிழ் திரையுலகில் அல்ல மாறாக மலையாக திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். படத்திற்கு ஆரம்பம் என பெயர் வைத்திருக்கிறார்கள்.
Ajith Kumar: அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது? - இயக்குநர் 'சிறுத்தை'சிவா கொடுத்த அப்டேட்
`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவில், 'பறக்கவைக்கும் ராஜாளி' விருதை வென்ற பைக் ரேசர் மாயாவைப் பாராட்டி இயக்குநர் சிவா பேசினார். Ananda Vikatan Nambikkai Awards மாயா ஒருமுறை சொன்னார்கள், 'எனக்கு என்ன நேர்ந்ததோ அது நான் அல்ல; நான் என்னவாக மாற விரும்புகிறேனோ அதுதான் நான்' (I am not what happened to me. I am what I choose to become). அந்த வைராக்கியம்தான் அவரை இன்று இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட அந்தத் தழும்பு இன்று ஒரு வீரத் தழும்பாக மாறியிருக்கிறது. இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்யும் மாயா இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்’’ என்றார் சிவா. அஜித் சார் மற்றும் டிரோன் குழுவினரோடு பணியாற்றுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. டோட்டலாக அது வேறோர் உலகமாக இருக்கிறது. அங்கே நிறைய சவால்கள் இருக்கின்றன, ஆனால் அதைவிட ஒரு மிகப்பெரிய பேஷன் (Passion) அந்த வேலையின் பின்னால் இருக்கிறது. அஜித் சார் அதை மிகச்சிறப்பாகக் கையாண்டு வருகிறார். Ananda Vikatan Nambikkai Awards `அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது?’ என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அனைத்தும் சரியாக அமையும்போது அதற்கான அறிவிப்பு வரும். அந்தப் படம் எத்தகைய ஜானராக (Genre) இருக்கும் என்பதைத் தற்போதைக்கு ரகசியமாகவே வைத்திருக்கிறோம். அஜித் சார் தனது பேஷனை (ரேஸிங் மற்றும் சினிமா) மிகவும் அழகாக பேலன்ஸ் செய்கிறார். அதேபோல் விஜய் சாரும் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இருவருமே மிகவும் இன்ஸ்பிரேஷனலான மனிதர்கள்’’ என்றார். நம்பிக்கை விருதுகள் 2025: நெகட்டிவா ஒரு பயங்கர வில்லனா... - மனம் திறந்த காளி வெங்கட்
“அறுவெறுக்கத்தக்க மனநிலையின் உச்சம்” விஜய் குறித்த நயினார் கருத்துக்கு ஜோதிமணி கண்டனம்!
தமிழகத்தில் வெகு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றன. தேர்தல் களம் சூடு பிடித்துவரக்கூடிய இந்த சூழலில் கட்சிகள் ஒவ்வொன்றும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றன.
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையைஅறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் […]
யேர்மனியில் வங்கிக் கொள்ளை: பெட்டகப் பெட்டிகளை கொள்ளையர்கள் சூறையாடினர்!
யேர்மனி லோயர் சாக்சனியில் உள்ள ஸ்டுர் நகரில் ஒரு வங்கியில் பல பாதுகாப்புப் பெட்டிகளை கொள்ளையர்கள் சூறையாடியதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். குற்றவாளிகளை இதுவரை அடையாளம் காணவில்லை. சம்பவம் குறித்து நாங்கள் எதுவும் கூறமுடியாது. வங்கி வாடிக்கையாளர்கள் அங்கு என்ன சேமித்து வைத்திருந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்று காவல்துறை அதிகாரி கூறினார். வங்கியில் மொத்தம் 728 பாதுகாப்புப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் 14 உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஏனைய பெட்டிகள் அப்படியே உள்ளன என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறித்த கொள்ளை உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை நடந்ததாக காவல்துறை கூறியது. கொள்ளையர்கள் நீல நிற சீருடை அணிந்த மூன்று ஆண்கள் நண்பகலில் வங்கிக்கு முன்னால் ஒரு காரை நோக்கி நடந்து செல்வதைக் காண முடிந்தது என முதலாவது சாட்சி தெரிவித்துள்ளது. மேற்கு யேர்மனியின் கெல்சென்கிர்ச்சனில் உள்ள ஒரு வங்கியின் பெட்டகத்தைத் துளையிட்டு, கொள்ளையர்கள் சுமார் €30 மில்லியன் பணத்தைத் திருடிச் சென்ற ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது .
கனடாவில் தீயில் கருகி பலியான தமிழ் பெண்: அம்மாவிடம் கூறிய கடைசி வார்த்தைகளால் கலங்கும் குடும்பம்
கனடா, ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் லக்ஷா எனும் இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, விசாரணை தீ விபத்தில் உயிரிழந்த பெண் தனது அம்மாவுக்கு அழைத்து, “அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, கதவையும் தீ சூழ்ந்துள்ளதால், வெளியே வர முடியவில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்” என கதறி உள்ளார். மகளின் பயங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் வீட்டிற்கு சென்ற போது மகள் உயிரழந்துள்ளமை […]
T20 World Cup: ‘லீக் சுற்றோடு வெளியேறப் போகும் ஆஸ்திரேலியா’.. காரணம் மழை தான்: பெரிய ட்விஸ்ட்!
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், லீக் சுற்றோடு ஆஸ்திரேலிய அணி வெளியேற வாய்ப்புள்ளது. இதற்கு காரணமாக, மழை தான் அமைய உள்ளது. ஆஸ்திரேலியா வெளியேறினால், மாற்றாக ஜிம்பாப்வே அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மம்தா மோகன்தாஸ் பகிர்ந்த ‘ஷாக்’செய்தி: நிச்சயதார்த்தத்தை மறைத்து டேட்டிங் கேட்ட நடிகர்!
நிச்சயதார்த்தத்தை மறைத்து டேட்டிங் கேட்ட நடிகர் குறித்து மம்தா மோகன்தாஸ் அதிரடித் தகவல். திரைத்துறையின் நிழல் பக்கங்கள் மற்றும் நடிகைகளின் பாதுகாப்பு குறித்த ஒரு விரிவான அலசல்.
சிறீதரன் விவகாரம் - எதிர்காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவோம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். சிறீதரன் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சித் தலைமையகத்தில் சுமந்திரனைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சுமந்திரன் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சிறீதரன் விவகாரம் என்பது ஓராண்டு காலமாக நீடித்து வரும் ஒரு விடயமாகும். கட்சி அவருக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனைகளை வழங்கியிருந்தது. இறுதியாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் அவர் பின்பற்றாத காரணத்தினாலேயே, அவரை நியமித்த அரசியல் குழு தற்போது அவரை அந்தப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக ஏற்பாட்டின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அந்தப் பதவியைப் பொறுப்பேற்பார். உண்மையில் அந்தப் பதவிக்குரிய பணிகளை இதுவரையில் அவரே முன்னெடுத்து வந்தார். இது ஏற்கனவே அரசியல் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளேன். இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க வெளியில் சொல்வதற்கு இது தருணமல்ல. தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார். இதேவேளை, சுமந்திரனுடனான சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியப் பிரதிநிதிகள், கட்சிக்குள் நிலவும் குழப்பங்கள் ஆரோக்கியமானவை அல்ல. சிறீதரன் எம்.பி. திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகின்றார். அவருக்கு எதிராகச் சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, கட்சி ஒருமித்த பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை சுமந்திரனிடம் வலியுறுத்தியுள்ளோம். - என்றனர்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக குறிப்பாக வட மாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டு ள்ளோம். வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது. அதேவேளை வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கூடியகவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும், நிலையில் வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு இறங்கு துறைகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் என்ற வகையில் மக்களின் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக பல்வேறு சவால்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.
இளைஞர்கள் ஓட்டு திமுகவிற்கு இல்லையா? அன்புமணி விட்ட சாபம்- 1.3 கோடி பேருக்கு வேலை இல்ல!
தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாக அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆளும் திமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக மாறப் போகிறது எனவும் சுட்டிக் காட்டியிருகிறார்.
PF பணத்தை இனி ஈசியாகவும், அதிகமாகவும் எடுக்கலாம்.. ரெடியாகும் புதிய ஆப்!
பிஎஃப் பணத்தை வேகமாகவும், மிக எளிதாகவும் எடுக்கும் வகையில் புதிய செயலி அறிமுகம் ஆகிறது. இதன் மூலம் UPI வசதியைப் பயன்படுத்தி எளிதாக அனுப்பலாம்.
சட்டத்தரணி கொலை சந்தேகநபர்கள் தப்பி சென்ற கார் கருகிய நிலையில் மீட்பு
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியையும், அவரின் மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் பயணித்தாக சந்தேகிக்கப்படும் கார் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. காலி - அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் காரொன்று தீ பற்றி எரிவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் கார் காணப்பட்டுள்ளது. குறித்த கார் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , கார் சட்டத்தரணியையும் அவர் மனைவியையும் சுட்டுக்கொன்ற சந்தேகநபர்கள் தப்பி சென்ற கார் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் –ஐ.நா நிபுணர்கள் கவலை
சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து ஐ.நாவின் சிறப்பு நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த சட்ட வரைவு அனைத்துலக சட்டத்துடன் இணங்குவதில் கணிசமான குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக அவர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர், தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான பணிக்குழு, கட்டாயமாக அல்லது தன்னிச்சையற்ற காணாமல் போதல்கள்
பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் –ஐ.நா நிபுணர்கள் கவலை
சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து ஐ.நாவின் சிறப்பு நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அனைத்துலக சட்டத்துடன் இணங்குவதில் கணிசமான குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக அவர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர், தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான பணிக்குழு, கட்டாயமாக அல்லது தன்னிச்சையற்ற காணாமல் போதல்கள் தொடர்பான பணிக்குழு மற்றும்
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் […]
பிஎம் கிசான் திட்டத்தில் அடுத்த 2000 ரூபாய் எப்போது கிடைக்கும்? முதலில் இதை முடிங்க!
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 22ஆவது தவணைத் தொகை உங்களுக்கு கிடைக்குமா இல்லையா என்பதை இப்படி நீங்கள் சரிபார்க்கலாம்.
உக்ரைன் - ரஷ்யா: 20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் வரும் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. Munich Security Conference 2026 இந்த நிலையில், ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference 2026) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``உக்ரைனின் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டப்பூர்வமாக வலுவான ஒப்பந்தங்கள் அவசியம். அமெரிக்கா தற்போது 15 ஆண்டுகாலப் பாதுகாப்பு ஏற்பாட்டை முன்மொழிந்துள்ள நிலையில், அதனை 20 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும். 2027-ம் ஆண்டிற்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உறுதியான தேதியை ஐரோப்பிய நாடுகள் அறிவிக்க வேண்டும். எங்கள் மக்கள் அங்கே வாழ்கிறார்கள். அதேநேரம், அமைதிக்காக டான்பாஸ் (Donbas) பிராந்தியத்திலிருந்து உக்ரைன் பின்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்க முடியாது. அமைதிக்கான சமரசங்கள் பெரும்பாலும் உக்ரைன் தரப்பிலிருந்தே எதிர்பார்க்கப்படுவது அதிருப்தியளிக்கிறது. ஜெலன்ஸ்கி மேலும், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களும் கவலையளிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த அழுத்தம் கொடுத்து வருகிறார். எப்போது போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே உக்ரைன் தேர்தல்களை நடத்த முடியும். எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார். ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம்
புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை(14.02.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குராற்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் […]
மகாசிவராத்திரிக்காக ரஜினி போட்டோவுக்கு பாலாபிஷேகம் செய்து வடை மாலை சாத்திய ரசிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனான கார்த்திக் என்பவர் மகாசிவராத்திரியை முன்னிட்டு தன் தலைவரின் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. பாலாபிஷேக வீடியோவுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
வாரிசு நடிகையின் மலையாள என்ட்ரி: அஜித்தின் படத்தலைப்பில் அவந்திகா சுந்தர் அறிமுகம்
சுந்தர் சி - குஷ்பு மகள் அவந்திகா (Avantika Sundar) அஜித்தின் 'ஆரம்பம்' தலைப்பில் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இந்தத் திடீர் முடிவு கோலிவுட் விநியோக சந்தையில் (Distribution Market) ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அலசல்.
கொழும்பு வரும் பிரித்தானிய துணைப் பிரதமர் –சிறிதரனையும் சந்திக்கிறார்
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி சிறிலங்காவுக்கு அவசர பயணம் மேற்கொள்ளவுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வரும் டேவிட் லாமி சிறிலங்கா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அவர் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் தங்கியிருக்கும் போது பிரித்தானிய துணைப் பிரதமர் தமிழ் அரசியல் தலைவர்களையும்
பரபரப்பாகும் கொழும்பு! முன்னெப்போதும் இல்லாத மிகப் பலத்த பாதுகாப்பு
கொழும்பில் இன்று நடைபெறவுள்ள இந்திய – பாகிஸ்தான் இடையிலான டி20உலகக்கிண்ணப் போட்டிக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தயார் நிலையில் படையினர் இதன்படி, கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2,800 பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) மற்றும் […]
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்ற நபர் , சில நாட்கள் காரினை செலுத்திய பின்னர் , அதன் தடம் அறி (GPS) கருவியை செயலிழக்க வைத்துள்ளார். அதனை அடுத்து , வாகனம் வாடகைக்கு கொடுத்தவர் நீர்கொழும்பு பொலிசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் பிரகாரம் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். அதே நேரம் , காரினை வாடகைக்கு பெற்றவர், யாழ்ப்பாணத்தில் ஒரு நபரிடம் காரினை அடமானமாக வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார். இந்நிலையில், அடமானம் வைத்த கார் , நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் எனவும் , கார் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதனையும் அறிந்த , காரினை அடமானமாக வைத்து பணம் கொடுத்த நபர் , பொலிஸ் விசாரணைகளுக்கு பயந்து காரினை வீதியில் அநாதரவாக விட்டு தப்பி சென்றுள்ளார். காரினை அடமானம் வைத்து பணத்தினை பெற்று சென்ற நபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மிலான் குளிர்கால ஒலிம்பிக்: 3 நாள்களில் 10,000 ஆணுறைகள் காலி; ஒலிம்பிக் கமிட்டி சொன்ன பதில் என்ன?
இத்தாலியின் மிலான்-கோர்டினா (Milan-Cortina) பகுதியில் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்காகப் பிரமாண்ட உடற்பயிற்சிக் கூடம், டேபிள் ஃபுட்பால், ஏர் ஹாக்கி, பியானோ மற்றும் இலவச குளிர்பான இயந்திரங்கள் எனப் பல வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளும் வழங்கப்படும். எனவே, விளையாட்டு வீரர்களுக்காக 10,000 இலவச ஆணுறைகள் வழங்கப்பட்டிருந்தன. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாள்களே ஆன நிலையில், வீரர்களுக்காக வழங்கப்பட்டிருந்த 10,000 இலவச ஆணுறைகள் மூன்றே நாள்களில் தீர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணுறை (Representational Image) இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் செய்தியாளர்களிடம் நகைச்சுவையாகப் பேசினார். அப்போது, ``ஒலிம்பிக் கிராமத்தில் காதலர் வாரக் கொண்டாட்டம் உச்சத்தில் உள்ளது என்பதை இது காட்டுகிறது. 2,800 வீரர்கள் உள்ளனர். 10,000 ஆணுறைகள் தீர்ந்துவிட்டன. கணக்கைப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒலிம்பிக் சாசனத்தின் விதி 62-ன் படி, கண்டிப்பாக ஆணுறை வழங்கப்பட வேண்டும். எதிர்பார்த்ததை விடத் தேவை அதிகமாக இருந்ததால், கூடுதல் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். திங்கள்கிழமைக்குள் அனைத்து கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படும். ஒலிம்பிக் முடியும் வரை தட்டுப்பாடு வராமல் தொடர்ந்து இருப்பு வைக்கப்படும் என்றார். ஆணுறைகள் தீர்ந்தன குறித்து மெக்சிகோவைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் டோனோவன் கரில்லோ, ``எல்லோரும் அதிர்ச்சியடைந்தது போல நானும் அதிர்ச்சியடைந்தேன் என்றார். ஒலிம்பிக் கமிட்டி (IOC) செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சுமார் 3 லட்சம் ஆணுறைகள் (ஒரு வீரருக்கு ஒரு நாளைக்கு இரண்டு என்ற கணக்கில்) வழங்கப்பட்டன. ஆனால், இந்த முறை 3,000-க்கும் குறைவான வீரர்களே பங்கேற்பதால், 10,000 உறைகளே போதுமானதாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் கணித்திருந்தனர். ஆனால், அவர்களின் கணிப்பை மீறி இவை தீர்ந்துபோனது அதிகாரிகளைத் திக்குமுக்காட வைத்துள்ளது. `ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?
இந்தியா- பாகிஸ்தான் மோதல் –கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நேற்று தேசிய பாதுகாப்புச் சபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், ,
கரீபியன் கடலில் படகு மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் ; மூவர் பலி
கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமெரிக்க தெற்கு கட்டளைப்பீடம் (SOUTHCOM), வெள்ளிக்கிழமை (13) அதிகாலை இந்த “உயிர்க்கொல்லி தாக்குதலை” (Lethal kinetic strike) நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது. நீதிக்கு புறம்பான கொலைகள் கொல்லப்பட்டவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் “நர்கோ-பயங்கரவாதிகள்” (Narco-terrorists) என அமெரிக்கா கூறியுள்ள போதிலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. சர்வதேச […]
நம்பிக்கை விருதுகள் 2025: நெகட்டிவா ஒரு பயங்கர வில்லனா... - மனம் திறந்த காளி வெங்கட்
`ஆனந்த விகடன் நம்பிக்கை விருது 2025’-ல் `யதார்த்த திரைக்கலைஞன் விருது’ பெற்ற நடிகர் காளி வெங்கட், விழா மேடையில் தொகுப்பாளர்களுடன் உரையாடியது கலகலப்பாக இருந்தது. விருது வழங்கிய விகடன் குழுமத்துக்கு நன்றி தெரிவித்து பேச ஆரம்பித்த காளி வெங்கட், ``என்னுடைய யதார்த்த திரைக்கலைஞன் விருதுக்குக் காரணமான நிறைய இயக்குநர்கள் இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் இந்த மேடை பத்தாதுன்னு நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு 150 கிட்ட வந்துரும். ஆனா, இப்போதைக்கு இங்க இரண்டு இயக்குநர்கள் வந்திருக்காங்க. இயக்குநர் பிரேம் - நடிகர் காளி வெங்கட் அவங்களோட இந்த விருதைப் பகிர்ந்துக்கணும்னு ஆசைப்படுறேன்’’ என்று சொன்ன காளி வெங்கட், `மெட்ராஸ் மேட்னி’ படத்தின் இயக்குநர் ராஜவேல், `ஹவுஸ் மேட்’ திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திகேயன் மணி ஆகிய இருவரையும் மேடைக்கு அழைத்துக் கொண்டார். ``என் கையில் இருக்கும் இந்த விருதுக்காக என்னைவிட என் அப்பாதான் ரொம்ப சந்தோஷப்படுவார். ஏன்னா, இந்த விருதுக்கு பெயரிலேயே நம்பிக்கை வருது. என்னைவிட என் மேல் அதிகமாக நம்பிக்கை வெச்சவர் எங்க அப்பாதான். எங்க அப்பா இப்போ இருந்திருந்தா, பூரிப்படைஞ்சிருப்பார். படத்தோட போஸ்டர்கள்ல என்னோட படம் வரும்போது அதுல நம்ம முகம் தெரிஞ்சிருந்தா, டீக்கடையில் எடுத்து வெச்சிருந்து அதை எல்லார்கிட்டயும் காமிச்சு பெருமைப்பட்டுக்கொண்டேயிருப்பார். எனக்கு கோபம் வருகிற அளவுக்கு என் மேல நம்பிக்கை வெச்சிருப்பார்’’ என்று தன் அப்பாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் தொடர்ந்து தொகுப்பாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த காளி வெங்கட்``வில்லனா, நெகட்டிவா ஒரு பயங்கர ஸ்ட்ராங்கான ரோல் நடிக்க ஆசை இருக்கு’’ என்றார். ``அதைப் பார்த்துட்டு அப்பா ஆனந்தக் கண்ணீர் வடித்தார்!’' - துருவ் | நம்பிக்கை விருதுகள் 2025 - Live
அமெரிக்கா: இந்திய மாணவர் கலிபோர்னியாவில் மர்ம மரணம்; தூதரகம் சொல்வது என்ன?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் பிரிவில் முதுகலைப் படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி முதல் இவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் உள்ள டில்டன் பிராந்திய பூங்கா (Tilden Regional Park) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே, சாகேத்தின் பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பையை போலீசார் கண்டெடுத்தனர். Consulate General of India in San Francisco is deeply concerned about the disappearance of Saketh Sreenivasaiah, an Indian post-graduate student of UC Berkeley, hailing from the State of Karnataka. The Consulate is in touch with the family and also is in contact with the… — India in San Francisco (@CGISFO) February 14, 2026 தொடர்ந்து, அன்சா ஏரி மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு சாகேத்தின் உடல் மீட்கப்பட்டதாகச் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சாகேத்தின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சாகேத், சென்னை ஐஐடி-யில் இளங்கலை முடித்தவர். Microchannel cooling system for hyperloop தொடர்பான காப்புரிமை பெற்ற ஆறு பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், ``இந்தியத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. அவர்களின் பாதுகாப்புக்காக அவ்வப்போது வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளது. வகுப்பறையில் சக மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட மாணவர்; பஞ்சாப்பில் அதிர்ச்சி!
பாம்பு சட்டை படத்திற்காக சிறந்த நடிகை விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்
பாம்பு சட்டை படத்திற்காகத் தமிழக அரசின் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். தனது முதல் மாநில அரசு விருது குறித்து அவர் பகிர்ந்த நெகிழ்ச்சியான தகவல் இதோ.
கோவையில் செந்தில் பாலாஜியை முந்திய வேலுமணி; ஹாட் பாக்ஸுடன் இறங்கிய அதிமுக; வீடு தேடி வரும் பரிசுகள்
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிடினும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகதான் வென்றது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் களப்பணியும் அவர்களுக்குப் பெரியளவுக்கு கைக்கொடுத்தது. செந்தில் பாலாஜி, வேலுமணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்ற வேலுமணி பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளார். மறுபக்கம் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளனர். 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை ஹாட்பாக்ஸ், கொலுசு ஆகியவற்றைக் கொடுத்து கோவை மாவட்டம் முழுவதையும் திமுக வசமாக்கினார் செந்தில் பாலாஜி. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் கோவையில் பணத்திற்கும், பரிசுப் பொருள்களுக்கும் பஞ்சமிருக்காது. வேலுமணி திமுக மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கினால், மறுபக்கம் கோவையில் செந்தில் பாலாஜியை ஓவர்டேக் செய்து வேலுமணி ஸ்கோர் செய்துள்ளார். அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள். ஆட்சி மாறியதால் கடந்த 4 ஆண்டுகளாக அது வழங்கப்படவில்லை. வருகிற பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இது தேர்தல் ஆண்டு என்பதால் அதிமுக சார்பில் 10 தொகுதிகளுக்கும் பரிசு வழங்க வேலுமணி முடிவு செய்தார். அதிமுக பரிசுப் பொருள்கள் கடந்த சில மாதங்களாகவே இதற்காக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் நிறைவடைந்து தற்போது பரிசுப் பொருள்கள் விநியோகம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஹாட்பாக்ஸ், பெரிய தட்டு, வேட்டி சட்டை மற்றும் சேலை கொடுக்கப்பட்டு வருகின்றன. வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் சற்று ஸ்பெஷல். அங்கு மேற்சொன்ன பரிசுப் பொருள்களுடன் ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் குடை வழங்கி வருகின்றனர். பரிசுப் பொருள் விநியோகம் அதிமுக தெருமுனைக் கூட்டங்களில் முதற்கட்டமாக பரிசுகளை வழங்கினார்கள். மேலும் பரிசுப் பொருள்களை வீடு வீடாகக் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்பு டீம்களையும் அமைத்துள்ளனர். ஒரு சில நாள்களில் இந்தப் பணிகளை முடிக்க வேலுமணி உத்தரவிட்டுள்ளார். ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000
தாயின் சூனியத்தால் தந்தை மரணம் –ஆன்லைன் ஜோதிடரின் பேச்சை நம்பி தாயை கொன்ற மகள்
தாயின் சூனியத்தால் தந்தை உயிரிழந்தார் என ஜோதிடரின் பேச்சை கேட்டு தாயை மகள் கொலை செய்துள்ளார். ஜோதிடரின் பேச்சை நம்பி கொலை கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் 33 வயதான சுசித்ரா தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் சுசித்ராவின் தந்தை திடீரென உயிரிழந்துள்ளார். இதனால், மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்த அவர் சமீபத்தில் ஆன்லைனில் ஜோதிடர் ஒருவரை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார். உனது தாய் புஷ்பவல்லி வைத்த சூனியத்தால் தான் […]
நொய்டா: காதலர் தினத்தில் முடிந்த 15 ஆண்டுக் காதல்; காதலியைச் சுட்டுக்கொன்று தற்கொலை செய்த காதலன்
நொய்டாவில் காதலர் தினத்திற்காகச் சந்தித்துக் கொண்ட ஜோடி காரில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் அந்தக் காரைத் திறந்து பார்த்தபோது உள்ளே ஒரு பெண் மற்றும் ஓர் ஆண் இறந்து கிடந்தனர். இறந்து கிடந்த வாலிபர் கையில் துப்பாக்கி இருந்தது. இறந்து கிடந்த பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருந்தார். இதே போன்று அந்த வாலிபரும் துப்பாக்கியால் சுட்டு இறந்திருந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் சுமித் (32) மற்றும் ரேகா (26) என்று தெரிய வந்தது. ரேகா நொய்டாவில் வசித்து வந்தார். கார் ஆனால் சுமித் டெல்லியில் வசித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் நேற்று முதல் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். அவர்களது உடல் கிடந்த கார் பதிவு எண் மூலம் அவர்களை போலீஸார் அடையாளம் கண்டனர். சுமித் தனது காதலியை காதலர் தினத்தில் சந்திப்பதற்காகத் தனது காரில் டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு வந்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, சுமித் தனது காதலியைச் சுட்டுக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். எனக்கு துரோகம் செய்துவிட்டாள் சுமித் மொபைல் போனைச் சோதித்துப் பார்த்தபோது, அதில் தற்கொலைக்கான காரணத்தை சுமித் குறிப்பிட்டு இருந்தார். சுமித்தின் போனில் ஒரு வாட்ஸ்அப் செய்தி காணப்பட்டது. அந்த செய்தியில், நானும், சுமித்தும் இறக்கப் போகிறோம். ரேகாதான் இதற்குப் பொறுப்பு. ஏனென்றால் அவள் என்னுடன் 15 ஆண்டுகள் வாழ்ந்து என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் இப்போது அவள் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார். அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சுமித் மேலும் கூறினார். இருவருமே தலையில் சுட்டு இறந்திருந்தனர். அவர்களது உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்
விஜய் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது: சிவகுமார் அதிரடி
மக்கள் நினைத்தால் நடிகர் விஜய் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராவதை எவராலும் தடுக்க முடியாது என்று மூத்த நடிகர் சிவகுமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
Doctor Vikatan: அதென்ன மேஜர் ஹார்ட் அட்டாக், மைனர் ஹார்ட் அட்டாக் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
Doctor Vikatan: திரைப்படங்களிலும் சரி, நமக்குத் தெரிந்தவர்கள் சொல்லும்போதும் சரி, மாரடைப்பு வந்தவர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது, 'மேஜர் அட்டாக்' என்றோ, 'நல்லவேளை மைனர் அட்டாக்...' என்றோ சொல்வதைக் கேள்விப்படுகிறோம். ஹார்ட் அட்டாக் என்றால் ஒன்றுதானே... அதென்ன மேஜர் அட்டாக், மைனர் அட்டாக்... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் மேஜர் ஹார்ட் அட்டாக்கில், இதயத்துக்குப் போகும் ரத்தக் குழாயில் முழுமையான அடைப்பு, அதாவது 100 சதவிகிதம் அடைப்பு இருக்கும். அதன் காரணமாக அந்த அடைப்பைத் தாண்டி ரத்தம் போகாது. மைனர் ஹார்ட் அட்டாக்கிலும் இதயத்துக்குப் போகும் ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கும். ஆனால், அது 100 சதவிகிதம் இருக்காது. ரத்தம் போவதை முழுமையாக அடைத்திருக்காது. மேஜர் ஹார்ட் அட்டாக்கின்போது இசிஜி எடுத்துப் பார்த்தால், இதயத்தின் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெளிவாகத் தெரியும். நெஞ்சுவலி எனச் சொல்வோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, இசிஜி எடுத்துப் பார்ப்பார்கள். அதில் தெரிகிற மாற்றங்களை வைத்து, 'இது பெரிய அட்டாக்... உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சையோ, அறுவை சிகிச்சையோ செய்ய வேண்டும்' என மருத்துவர்கள் அறிவுறுத்துவதைப் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள்... அதுதான் மேஜர் ஹார்ட் அட்டாக். அதுவே, மைனர் ஹார்ட் அட்டாக்கில், இசிஜியில் தெரியும் மாற்றங்கள் மிதமாக இருக்கலாம். அதனால் அவர்களுக்கு பயோ மார்க்கர்ஸ், ரத்தப் பரிசோதனை போன்வற்றைச் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ECG Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா? மேஜர் ஹார்ட் அட்டாக்கில் அதன் அறிகுறிகள் 'கிளாசிக் சிம்ப்டம்ஸ்' (classic symptoms) என்று சொல்லக்கூடிய வகையில் ரொம்பவே வெளிப்படையாக இருக்கும். உதாரணத்துக்கு, நெஞ்சில் அழுத்தம், இடது கையில் வலி, அதிகமான வியர்வை போன்ற அறிகுறிகள் இருக்கும். அதுவே, மைனர் ஹார்ட் அட்டாக்கில், அறிகுறிகள் ரொம்பவே மிதமாக இருக்கலாம். அதாவது நெஞ்செரிச்சல், மூச்சு வாங்குவதில் சிரமம் போன்ற மிதமான அறிகுறிகளே இருக்கலாம். மேஜரோ, மைனரோ... எந்த வகை ஹார்ட் அட்டாக்காக இருந்தாலும் நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து அதை அலட்சியம் செய்யக் கூடாது. புதிதாக ஏதேனும் அறிகுறி தோன்றினாலும், அதாவது தொப்புள் முதல் நாடி வரை ஏதேனும் அசௌகர்யத்தை உணர்ந்தால், அது இதற்கு முன் வந்ததில்லை என்கிற பட்சத்தில் உடனடியாக 325 மில்லிகிராம் ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டு, உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மனிதாபிமான வங்காளதேசத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்; தாரிக் ரகுமான்
வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கலீதா ஜியா அவர்களின் மகன் தாரிக் ரகுமான் விரைவில் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.இந்த நிலையில் தாரிக் ரகுமான் நிருபர்களிடம் பேசியதாவது:“பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான வங்காளதேசத்தை உருவாக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை. இந்த முறை நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அனைவரும் பொறுப்புடன் பங்களிக்க வேண்டும். எந்த விலையையும் கொடுத்தாவது வங்காளதேசத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறோம். எந்த காரணத்திற்காகவும் யாருக்கும் அநீதி […]
Vijay: அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுகவை ஆரம்பித்தார் - விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில்
கடந்த வாரம் விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதை நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், மகளிர் உதவித்தொகை கொடுக்கவே முடியாது எனச் சொன்னார்கள். அதையும் கொடுத்திருக்கிறோம். தற்போது மகளிர் உதவித் தொகையுடன் சிறப்பு தொகுப்பாக ரூ. 5000 கொடுத்திருப்பது பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது'' என்றார். சேலத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, யார் கூட்டத்தை நடத்தினார்களோ அவர்கள்தாம் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தாம் பதில் சொல்ல வேண்டும்'' என்றார். விஜய், உதயநிதி தன்னுடைய அரசியலின் தாக்கத்தால்தான் உரிமைத் தொகையை அரசு தருவதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுக கட்சியை ஆரம்பித்தார் தெரியுமா? எனத் துணை முதலமைச்சர் உதயநிதி கிண்டலாகப் பேசினார். நாகப்பட்டினம்: `ஸ்டாலின் பாராட்டிய ஒருவர் vs உதயநிதி பாராட்டிய ஒருவர்' - திமுகவில் சீட் யாருக்கு?
பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதே RSS, BJP-இன் சித்தாந்தம் - நயினார் மீது ஜோதிமணி காட்டம்
பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், பொதுவாழ்வில் ஒரு கட்சித் தலைவர் மீது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்தால் கருத்து ரீதியாக அவரை எதிர்கொள்ளுங்கள். விமர்சனம் செய்யுங்கள். அதைச் செய்ய முடியாமல் ஒரு பெண்ணை ஆபாசமாகப் பொதுவெளியில் பேசுவது பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், பார்க்கலாம், விமர்சிக்கலாம் என்கிற ஆபத்தான, அருவருக்கத்தக்க மனநிலையின் உச்சம். கடுமையான கண்டனத்துக்குரியது. கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 'நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்
மஹாசிவராத்திரி பேரொளி: நம் வினைகளைத் தீர்க்கும் 5 பஞ்சபூதங்கள் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனம்!
மஹாசிவராத்திரி 2026: பஞ்சபூத லிங்கங்கள் மற்றும் 12 ஜோதிர்லிங்கங்களின் ஆன்மீக ரகசியங்கள் இதோ! இந்த புனித இரவில் நம் பாவங்களை நீக்கி முக்தியை அள்ளித் தரும் 17 சிவ வடிவங்களை மனதால் தரிசித்து ஈசனின் அருளைப் பெறுவோம். முழுமையான ஆன்மீகத் தொகுப்பு!
கரூர்: ரூ.10,000 இல் ஒரு ரூபாய் குறைந்தாலும் வேலை நடக்காது - விவசாயியிடம் லஞ்சம் கேட்ட விஏஓ கைது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பாப்பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தை பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். அந்த வகையில், வடவம்பாடி கிராம நிர்வாக அலுவலரான அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விவசாயி சின்னதுரையிடம் லஞ்சமாக ரூ. 10,000 கேட்டுள்ளார். அதோடு, 'அதில் ஒத்த ரூபாய் குறைந்தாலும் வேலை நடக்காது' என்று கறாரும் காட்டியுள்ளார். ஆனால், பணம் கொடுக்க முன் வராத விவசாயி சின்னத்துரை, இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். லஞ்சம் அதனைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரிடம் நேரில் கொடுக்கும் போது மறைந்திருந்த கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரைக் கைது செய்தனர். அதோடு, அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?
கொழும்பில் நள்ளிரவில் தீப்பற்றிய கார் ; இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளின் சதி வெளிச்சமா?
தலங்கம, அகுரேகொட, குட்டியாவத்த துணை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் திரு. புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. பொலிஸ் தகவலின்படி, குறித்த கார் காலி அகலியா பகுதியில் கைவிடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது, அந்த வாகனம் தீப்பிடித்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டைக் கொலையில் வெளிநாட்டில் மறைந்து இருப்பதாகக் கூறப்படும் […]
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதில் சிக்கல்
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதில் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (14) அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சீனா நான்கு மாதங்களுக்கு முன்னர் 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை எடுத்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த காலப்பகுதிகளில் இலவச விசா வழங்க நாம் விரும்பினோம். இது குறித்து […]
யாழில் பாவனைக்கு உதவாத மிளகாய் தூள் தயாரிப்பு ; நீதிமன்றம் கடும் நடவடிக்கை
யாழில் பங்கசு தொற்றுடைய “மிளகாய் தூளை” உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளை குறித்த மிளகாய் தூளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டு, கடுமையான எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிகண்டி பொதுச்சுகாதாரப் பரிசோதகரான மதியானந்தகுரு நந்தகுமார் வியாபர நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது, பங்கஸ் தொற்றுடன் மிளகாய் தூளை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கும், குறித்த கட்டை தூளை உற்பத்தி செய்த […]
கடலரிப்பு குறித்து அஷ்ரப் தாஹிர் எம்.பி ஆய்வு!
அம்பாறை நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து கண்டறியும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேற்று (14) நேரில் சென்றிருந்தார். அட்டப்பள்ளம் பிரதேசத்தின் கடலோர பகுதி மிக வேகமாக கடலினால் காவுகொள்ளப்பட்டு வருவதனால் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியாளரின் வழிகாட்டுதலின் கீழ், அவசரமாக கடலரிப்பை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.
5,700 ஐஎஸ் பயங்கரவாதிகள் இராக் சிறைகளுக்கு மாற்றம்
சிரியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமாா் 5,700 ஐஎஸ் பயங்கரவாதிகள் இராக்கிற்கு பாதுகாப்பாக இடமாற்றப்பட்டுள்ளனா். கடந்த 2014-இல் இராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, அங்கிருந்து உலகெங்கிலும் பல்வேறு கொடூர தாக்குதல்களை நடத்தினா். பின்னா், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அவா்களை வீழ்த்தின. அப்போது பிடிபட்ட பயங்கரவாதிகள், வடகிழக்கு சிரியாவில் குா்து ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைகளில் அடைக்கப்பட்டனா். அண்மையில், குா்து ஆயுதக் குழுவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்த சிரிய அரசின் வசம் […]
பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 16 முதல் 22 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
5,700 ஐஎஸ் பயங்கரவாதிகள் இராக் சிறைகளுக்கு மாற்றம்
சிரியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமாா் 5,700 ஐஎஸ் பயங்கரவாதிகள் இராக்கிற்கு பாதுகாப்பாக இடமாற்றப்பட்டுள்ளனா். கடந்த 2014-இல் இராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, அங்கிருந்து உலகெங்கிலும் பல்வேறு கொடூர தாக்குதல்களை நடத்தினா். பின்னா், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அவா்களை வீழ்த்தின. அப்போது பிடிபட்ட பயங்கரவாதிகள், வடகிழக்கு சிரியாவில் குா்து ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைகளில் அடைக்கப்பட்டனா். அண்மையில், குா்து ஆயுதக் குழுவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்த சிரிய அரசின் வசம் […]
அடுத்த வாரம் ஜெனீவாவில் மீண்டும் ரஷியா –உக்ரைன் அமைதிப் பேச்சு
அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சியில் ரஷியா-உக்ரைன் இடையிலான அடுத்தகட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது. இத்தகவலை ரஷியா, உக்ரைன் ஆகிய இருதரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. அபுதாபியில் அண்மையில் நடைபெற்ற 2-ஆம் கட்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் எதிா்பாா்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்று உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தாா். சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மோதலுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் தீா்வு காண கெடு […]
காதல் என்னும் மகத்தான உணர்வை வார்த்தைகளால் வரைவிலக்கணப்படுத்துவது சற்று கடினமான ஒன்றுதான். காதலுக்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்கின்றனர் கவிஞர்கள் நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒவ்வொரு தருணத்திலும் காதலை உணர்ந்திருப்போம். ஒரு குழந்தை தன் தாயிடம் உணரும் முதல் விலை மதிப்பற்ற காதல், நடைப்பயில கற்று தரும் அந்த தகப்பனின் காதல், முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது அழுகையுடன் அமர்ந்திருக்கையில் கட்டி அனைத்து கதை கூறும் ஆசானின் காதல், உறவிலும், உணர்விலும், […]
'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் - 'பெருந்தமிழர் விருது' SVR
`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, ``எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்குவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. `தோழர்’ என்று நான் திருமாவளவனை அழைத்தாலும், அவர் எப்போதுமே எனக்குத் தலைவராகத்தான் தெரிகிறார். தமிழ்நாட்டைச் சூழும் இருளை அகற்றத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தலைவர் அவர். பெருந்தமிழர் விருது `இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' - இயக்குநர் ராம் அதேபோல சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் தமிழ்க் கலாசாரம் மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். எனக்கு இந்த விருதைக் கொடுத்து கௌரவித்த விகடனுக்கு நன்றி. என் உடல் ஒத்துழைக்காதபோதும், என் கண்களுக்குப் பார்வை மங்கியபோதும் என்னை வழிநடத்தியது வாசிப்பு மட்டும்தான். `மார்க்ஸ், கிராம்ஷி போன்றவர்கள் அனுபவிக்காத துன்பத்தையா நான் அனுபவித்துவிட்டேன்?’ என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். அந்த வைராக்கியம்தான் என்னை இப்போதும் எழுத வைக்கிறது. சாகும்வரை இந்த அறிவுப் போராட்டம் தொடரும்!’’ என்றார். `எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' - திருமாவளவன்
`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' - இயக்குநர் ராம்
பெருந்தமிழர் விருதை 'எஸ்.வி.ராஜதுரை'க்கு விருது வழங்கியவர்களில் இயக்குநர் ராமும் ஒருவர். விருது வழங்கியதற்குப் பின், இயக்குநர் ராம் பேசுகையில், எஸ்.வி.ஆர் சார் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய டீச்சர். உண்மையில் அவர் ஆசான்களுக்கெல்லாம் ஆசான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் 1995-ல் அவருடைய 'இருத்தலியலும் மார்க்சியமும்' என்கிற புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை எனக்குள் உருவாக்கத் தொடங்கினேன். இயக்குநர் ராம் `பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான் தமிழில் எத்தனையோ நாவல்கள், சிறுகதைகள் படித்துக்கொண்டிருந்தாலும், அவற்றை எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கான ஒரு பிளாட்ஃபார்மை எனக்கு வழங்கியது அந்தப் புத்தகம்தான். ஒரு தத்துவம் உருவாவதற்கு என்னவெல்லாம் தேவை என்பதை அந்தப் புத்தகம் எளிமையாகச் சொல்லிக்கொடுத்தது. சமீபத்தில் அவருடைய பேட்டி ஒன்றைப் படித்தேன். ' வீரம் விளைந்தது ' ரஷ்ய நாவலைப் படித்துதான் அவருக்கு கம்யூனிசத்தில் ஆர்வம் வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். எனக்கும் மிகவும் பிடித்த நாவல் அது. 80 வயதைக் கடந்தும் இன்றும் உலக நடப்புகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். தத்துவத்தை எளிமையாகத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய அந்த ஞானிக்கு விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார். ``'இதற்காக' சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை' அரசே எடுத்து செய்ய வேண்டும் - ஆதவ் அர்ஜுனா பேச்சு
விஜய் - திரிஷா குறித்து நயினார் சர்ச்சை பேச்சு.. வானதி சீனிவாசன் என்ன சொன்னார் தெரியுமா?
தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சையாக பேசிய கருத்துக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்து உள்ளார்.
மன்னாரில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகை ஆபத்தான பொருள்!
மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 50 கிலோவுக்கும் அதிகமான ‘ஹஷிஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த டிங்கி படகு ஒன்றை சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
கடலரிப்பு குறித்து ஆராய்ந்தார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து கண்டறியும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (14) நேரில் சென்றிருந்தார். அட்டப்பள்ளம் பிரதேசத்தின் கடலோர பகுதி மிக வேகமாக கடலினால் காவுகொள்ளப்பட்டு வருவதனால் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தீவிரிப்படுத்தப்பட்டு வருவதாகவும், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியாளரின் வழிகாட்டுதலின் கீழ், அவசரமாக கடலரிப்பை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.
சென்னை மெரினாவில் இதை கவனித்தீர்களா? நீலக்கொடி திட்டத்தின் கீழ் இறுதிக்கட்டத்தை நெருங்கிய பணிகள்!
நீலக்கொடி திட்டத்தின் கீழ் சென்னை மெரினா கடற்கரையில் 2 ஆம் கட்ட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.
திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது பாலியல் புகார்.. வழக்குப்பதிவு செய்யாமல் விசாரிக்கும் காவல்துறை!
தாராபுரத்தில் 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க போர்க்கப்பல் ; அதிகரிக்கும் ஈரானுடனான பதற்றம்
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததில் வன்முறை வெடித்தது. போராட்டம்-வன்முறையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அணுசக்தி ஒப்பந்தம் மேலும், ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டது. அதன்படி ஈரான் அருகே யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட […]
அடுத்த 36 மணித்தியாலம் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலத்தில் மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எள வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் வரையில் இலேசான மழையும் பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. மழை அல்லது இடியுடன் கூடிய மழை வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மதியம் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது […]
`தேர்தல் களம் சூடா இருக்கு; இந்த முறை மாற்றத்தை பார்ப்பீங்க!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் சீமான்
`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விழா மேடையில் கலகலப்பாகப் பேசிய சீமானிடம், சின்னச் சின்னதாக சில கேள்விகளை முன்வைத்தோம். `புதிய புதிய கூட்டணிகள் உருவாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் களம் எப்படி இருக்கப் போகுதுண்ணே?’ என்று கேட்டபோது, ``நான் வேட்பாளர்களைத் தேர்வு செய்யலை. ராணுவ வீரர்களைத் தேர்வு செஞ்சு வெச்சிருக்கேன். சீமான் எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கிய திருமா, ராம் | நம்பிக்கை விருதுகள் 2025 - Live களம் சூடாத்தான் இருக்கும். நிச்சயமா ஒரு மாற்றத்தை இந்தத் தேர்தல்ல நீங்க பார்ப்பீங்க’’ என்றார். `அரசியல் பரபரப்புகளுக்கிடையே சினிமா பார்க்க எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று கேட்டபோது... நமக்குன்னு இருக்குற ஒரு நேரம், உறங்குற நேரம். அந்த நேரத்தைப் பறிச்சுத்தான்... அந்த நேரத்துல படிக்கிறது, மற்ற விஷயங்களைச் செய்யிறது... நேரு நாடாளுமன்றத்துல பேச வர்றாருன்னா, எல்லா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் காத்திருப்பாங்களாம். ஏன்னா அவ்வளவு சிறப்பா அவர் உரை இருக்கும். அவர் எப்படித் தயாராகிறார்னு உங்களுக்குத் தெரியும்... அவர் சிறையில இருக்கும்போது, `இன்னும் எத்தனை ஆண்டுகள் வேணாலும் என்னைச் சிறையில வை, புத்தகங்களை மட்டும் அனுப்பிவை’ன்னு சொன்னார். அந்த அளவுக்கு அவர் படிக்கிறார். அந்த அளவுக்குத் தயாராகி வந்து நாடாளுமன்றத்துல பேசுவார். `இதுக்கான நேரத்தை எப்படி ஒதுக்குறீங்க?’ன்னு கேட்டதுக்கு, `என்னுடைய வேலையாட்கள், பணியாட்கள்... அவன் நேரத்தை நான் எடுத்துக்குவேன். அவன் நேரத்தை நீங்க எப்படி எடுப்பீங்க..’ என்னைச் சரியா 10 மணிக்குத் தூங்க அனுப்பிடுவான். 10 மணிக்கு நான் தூங்கிடணும். ஆனா நான் 12 மணிக்குத்தான் தூங்குவேன். அவனுடைய நேரம் 10-லிருந்து 12-ஐ நான் இழுத்து, அந்த ரெண்டு மணி நேரம் படிச்சுக்குவேன் அப்படிம்பார். சீமான் ``'இதற்காக' சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை' அரசே எடுத்து செய்ய வேண்டும் - ஆதவ் அர்ஜுனா பேச்சு அந்த நேரத்தை ஒதுக்கித்தான் நான் இந்தச் சினிமாக்களை, படங்களைப் பார்த்துக்கிறேன்’’ என்றவரிடம், `சினிமாவை மிஸ் பண்றீங்களா?’ என்று கேட்டபோது, ``தவறவிடாம எப்படி இருக்க முடியும் சொல்லுங்க... அதுல இருந்துதானே வந்தோம்... அதுதான் உயிர்மூச்சு’’ என்றார். ``அப்போ படம் எடுப்பீங்களா?’’ என்று கேட்டதற்கு, ``இப்ப படம் எடுக்க நிறைய ஆளுங்க இருக்காங்க. இந்த நாட்டு மக்களுக்காகப் படையெடுக்கத்தான் ஆள் இல்லை. அதுக்காகத்தான் நான் நிக்கிறேன்’’ என்று கலகலப்பாக அரங்கை ரசிக்கவைத்தார். சிறைப் படத்தில் வரும் 2 நீதிபதிகள் போல தான் உண்மையிலும்; இதை மாற்ற..! - அருணா ஜெகதீசன் நம்பிக்கை விருதுகள் 2025
``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு
தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், ``இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டுடைய நிரந்தர டிரெண்ட் கருப்பு - சிவப்பு தான். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான். ஏழாவது முறையும் தி.மு.க ஆட்சிதான். திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை; ரொம்ப அடக்கத்தோடு, மிகுந்த பணிவோடு நம் அரசு செய்திருக்கின்ற சாதனைகள்மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையில் சொல்கிறேன். எல்லாவற்றுக்கும்மேலாக உடன் பிறப்புகளாகிய உங்கள் மீதான நம்பிக்கையிலும் சொல்கிறேன். வெற்றியைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிக்கத் தேவையில்லை. உங்களை வழிநடத்தி உங்களுக்கான டாஸ்க்கை ஒப்படைத்தாலே போதும். மீண்டும் உதயச்சூரியன் ஆட்சி உறுதி. இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தொகுதியும் தி.மு.க கோட்டை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும். 2026-ல் தி.மு.க-வின் வெற்றி என்பது, இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி உறுப்பினர்களை நாம் நியமித்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் பூத்கள் இருக்கிறது. இப்படி, ஒவ்வொரு பூத்திலும் நாம் செட் செய்திருக்கக்கூடிய மினிமம் டார்கெட் 350 வாக்குகள். இந்த டார்கெட்டை நாம் அச்சிவ் செய்தாலே 2.60 கோடி வாக்குகளுக்குமேல் நாம் வாங்கிவிடுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தலில், 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் நாம் வாங்கியே ஆக வேண்டும். இதை நடத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு. உங்களுக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் செய்துகொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. 2 கோடியே 50 லட்சமா? என்று யாரும் மலைக்க வேண்டாம்; யோசிக்கவும் வேண்டாம். இங்கு வந்திருக்கின்ற ஒவ்வொருத்தவரும் தலா 40 அல்லது 50 வாக்குகள் பொறுப்பேற்றுக்கொண்டால் அவ்வளவுதான். சிம்பிள். ஒவ்வொருத்தவரும் அவர்களுக்கு அசைன் செய்திருக்கின்ற 50 வாக்குகளைப் பெற்று தந்தாலே போதும். 200 தொகுதிகள் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கிறது தான் நம்முடைய லட்சியம். அதற்காக, 2 மாதங்கள் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்குள் நீங்கள் ஒவ்வொருத்தரும் 100 வாக்காளர்களை குறைந்தது 5 முறையாவது சந்திக்க வேண்டும். என்னதான் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று புதுபுது ஊடகங்கள் வந்தாலும், மக்களை நேரில் சந்தித்து பணிவாக வாக்கு கேட்கின்ற பிரசாரத்துக்கு ஈடாகாது. அதனால்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். பரம்பரைப் பரம்பரையாக தி.மு.க-வுக்கு வாக்களிக்கின்ற குடும்பங்களாக இருந்தாலும் சரி. இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பங்களாக இருந்தாலும் சரி. பிரசாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்க வேண்டும். இதை நீங்கள் ரிப்பீட்மோடில் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ரிப்பீட் ஆகும். 2021-ல் இருந்ததைவிட நமக்கான வரவேற்பும், ஆதரவும் இப்போது கூடியிருக்கிறது. 2021 தேர்தலின்போது, இதையெல்லாம் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம். இப்போது, சொன்னதையும் தாண்டி செய்துகொண்டிருக்கிறோம். அதனால், கெத்தாக மக்கள் முன்னாடி வந்து நிற்கிறோம். எனவே, மெத்தனமாக இருக்காமல், களத்தில் தொடர்ந்து உழைத்தால் சென்ற முறையைவிட பெரிய வெற்றி 100 சதவிகிதம் சாத்தியம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாம் வாங்கிய வாக்குகளைச் சட்டமன்றத் தொகுதி வாரியாக பார்த்தாலே, மிகத்தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 200 தொகுதிகளுக்குமேல் நாம்தான் வெல்லப் போகிறோம். நேற்று காலை விடிந்ததும், 1.31 கோடி பெண்கள் முகத்திலும் புன்னகையைக் கொண்டுவந்திருக்கிறோம். அவர்கள் காலையில் கேட்ட முதல் ரிங்டோன், `5 ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அக்கௌண்ட்டில் வந்திருக்கிறதா?’ என்கிற மெசேஜ் டோன் தான். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, `தேர்தல் நெருக்கத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும்’ என்று திட்டம் போட்டார்கள். ஒன்றிய பா.ஜ.க-வைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள். நல்லது செய்பவர்களையும் செய்யவிடமாட்டார்கள். தமிழ்நாட்டு மகளிருக்காக நான் கொடுத்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. அதற்கு தடைப்போட நான் விட்டு விடுவேனா? அதனால்தான் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல். மாநாடு ஓரவஞ்சனைக்கும், வஞ்சகத்துக்கும் உருவகம் இருந்தால், அதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு. இதுவரை தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டம் ஏதாவது அறிவித்திருக்கிறார்களா? நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். முறையாக பதில் சொல்ல, இதுவரையில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வரவில்லை. அதற்குப் பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை. பா.ஜ.க-வின் தலைமையில் இருந்தும் பதில் வரவில்லை. பா.ஜ.க-வின் கிளைச் செயலாளராக இருக்கிற பழனிசாமியிடம் இருந்தும் பதில் வரவில்லை. ஆமாம், பா.ஜ.க-வின் கிளைக் கழகமாக மாறிவிட்டது அ.தி.மு.க. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் பேசுவதற்குத் துணிவில்லாமல், முதுகெலும்பு இல்லாமல், கொத்தடிமை சேவகம் செய்துகொண்டிருக்கிற பழனிசாமி எனக்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார். இன்றைக்கும் ஒரு அரசியல்வாதி எப்படி எல்லாம் இருக்கக்கூடாது? என்பதற்கு அடையாளமாக சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. மாண்புமிகு பழனிசாமி அவர்களே, தவழ்ந்து தவழ்ந்து ஊழல் குற்றவாளியான அம்மையார் சசிகலா காலில் விழுந்து பதவியைப் பெற்றுவிட்டு, காலை வாரிவிட்டுவிட்டு, `நீ எனக்குப் பதவி கொடுத்தியா?’ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்டீர்களே, மறுக்க முடியுமா? சட்டம் - ஒழுங்குப் பிரச்னைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்குத் தார்மீக உரிமையாவது இருக்கிறதா? உங்கள் கட்சியின் உண்மையான பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள்... இதையெல்லாம் மறக்கடித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? பொல்லாத ஆட்சி பழனிசாமியின் ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளே சாட்சியாக, ஆறாத வடுவாக இருக்கிறதே. ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அமைதியாக ஊர்வலம் சென்ற அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லிவிட்டு, `டி.வி-யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று நாடகம்போட்டது மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவும், மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்டபோது, `அவர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்ததாக’ கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் சொன்னீர்களே, உங்களின் கல் மனதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்தீர்களா? பா.ஜ.க-வின் டப்பா என்ஜின் முன்னாடி நம்முடைய திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது. அண்மையில், ஒன்றிய அரசின் பட்ஜெட் வெளியிட்டார்களே. அதில் தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் அறிவித்தார்களா? இதை தட்டிக்கேட்கிற துணிச்சலோ, தைரியமோ பழனிசாமிக்கு இருக்கிறதா? அவரைப் பொறுத்தவரைக்கும் `தோப்புக்கரணம் போடு’ என்று சொன்னால், `ஸ்டாப்’ சொல்கிற வரைக்கும் `நான் ஸ்டாப்’பாக பல்டி அடிப்பார். எல்லா துரோகத்தையும் செய்துவிட்டு, `கூட்டணி தர்மத்துக்காகத்தான் தமிழ்நாடு உரிமைகளை அடகு வைத்தேன்’ என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்வார். இதையெல்லாம் நன்றாக உணர்ந்துதான் அவரின் தலைமையை, அவரின் கூட்டணியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லோரும் ஒரிஜினல் ஓனரான பா.ஜ.க-விடம் நேரடியாக சரண்டராகிறார்கள். தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்று துடிக்கிறவர்கள், தமிழ்நாட்டுக்குள் வந்தால் அவர்களின் சதி திட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று மக்களிடம் நீங்கள் புரிய வைக்க வேண்டும்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் எச்சரிக்கை.. மீறினால் சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும்!
உரிய அங்கீகாரம் இல்லாமல் தலைமுடி சிகிச்சைகளை மருத்துவர்களோ அல்லது நிறுவனங்களோ செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் நாங்கள் அதைத் தடுத்தோமா. வானதி சீனிவாசன் திமுகவினர் மக்களின் காதில் பூ சுற்ற முயற்சி செய்கிறார்கள். முதலமைச்சர் மகளிரின் பாதுகாவலர் போன்று ஒரு டிராமா செய்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக கோடை காலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கூட தராதவர்கள், தற்போது கோடைகால சிறப்பு நிதியாக ரூ. 2,000 கொடுக்கிறார்கள். பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் உரிமைத் தொகை வெளியில் சென்ற பெண்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று குடும்ப உறவுகள் பதற்றமாக இருக்கிறார்கள். ரூ.5,000 கொடுத்தால் அனைத்தையும் மறப்பார்கள் என்று நினைக்கிறார்கள். மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். நயினார் நாகேந்திரன் பொதுவாக மிகவும் அமைதியானர். பண்பாக பேசக்கூடியவர். சட்டசபையில் கூட மிகவும் நாகரிகமாக பேசுவார். எதற்காக த்ரிஷா பற்றி அப்படி பேசினார் என தெரியவில்லை. அவர் பேசியது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னுடைய கருத்தை அவரிடம் கூறுவேன். நயினார் நாகேந்திரன் அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு, இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள்” என்றார்.
``'இதற்காக'சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை'அரசே எடுத்து செய்ய வேண்டும் - ஆதவ் அர்ஜுனா பேச்சு
2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் 'சாதனைத் தொழில்நுட்பன்' விருதை வழங்கிச் சிறப்பித்தார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது... ``கடந்த சில வருடங்களாக, கனிம வளக் கொள்ளை போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சிஸ்டத்தை மாற்றினால் மட்டுமே இந்த மாதிரியான விஷயங்கள் நிறுத்தப்படும். அருண் ராஜீவ் சங்கரன் - ஆதவ் அர்ஜுனா எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கிய திருமா, ராம் | நம்பிக்கை விருதுகள் 2025 - Live கனிம வளம் எடுக்கும் பணியை அரசே தனியாரிடமிருந்து எடுத்து நடத்த வேண்டும். அப்போதுதான் அதில் வெளிப்படைத்தன்மை இருக்கும். மேடையில் ஜகபர் அலியின் குடும்பத்தைப் பார்த்தபோது, நான் என் 5 வயதில் அம்மாவை இழந்து நின்றது ஞாபகத்துக்கு வருகிறது. மறைந்த ஜகபர் அலியின் குடும்பத்துக்கு எங்களுடைய 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' (Voice of Commons) சார்பாக 15 லட்சம் ரூபாய் வழங்குகிறோம். விளையாட்டும் படிப்பும் சமமானது. ஒரு மாணவர் எட்டு மணி நேரம் படிப்பதுபோல, விளையாட்டு வீரரும் ஒன்பது மணி நேரம் மைதானத்தில் உழைக்கிறார்கள் என்றார். சிறைப் படத்தில் வரும் 2 நீதிபதிகள் போல தான் உண்மையிலும்; இதை மாற்ற..! - அருணா ஜெகதீசன்
இலங்கை மக்களை சூழ்ந்துள்ள ஆபத்து; சுகாதாரத் துறை தகவல்!
இலங்கை மக்களில் 10 சதவீதமான சிறுநீரக நோயாளர்கள் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாத நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தேசிய சிறுநீரகவியல், ரத்த சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் விசேட நிபுணர் வைத்தியர் அர்ஜுன மாரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயைச் சரியாகக் கையாளத் தவறுபவர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். […]
மகுடம் சூடிய நம்பிக்கை மனிதர்கள்! - ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025 | Photo Album
கொழும்பு மற்றும் களுத்துறையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!
இன்று (14) இரவு நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 1.… The post கொழும்பு மற்றும் களுத்துறையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! appeared first on Global Tamil News .
NZ vs SA: ‘4 விக்கெட்களை எடுத்தும்’.. மோசமான சாதனை பட்டியலில் இணைந்த மார்கோ யான்சன்!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், மார்கோன், 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அப்படியிருந்தும், மோசமான வீரர்கள் பட்டியலில் யான்சன் இணைந்தார். இறுதியில், நியூசிலாந்து அணி 175 ரன்களை எடுத்தது.
உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு!
உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல்… The post உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு! appeared first on Global Tamil News .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் தான், திராவிட கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தது.
'துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்று 3 முறை மிரட்டல்; ஆனாலும், காவல்துறை..!' - சகாயம் IAS
மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி, மணல் மாஃபியாக்களால் கொல்லப்பட்டவர் ஜகபர் அலி. இவருக்கு இந்த ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் 'உயிர் கொடுத்து மலை காத்தவர்' விருதை வழங்கி சிறப்பித்தது ஆனந்த விகடன். இந்த விருதை அவரது குடும்பத்திற்கு வழங்கிய சகாயம் ஐ.ஏ.எஸ்., கலெக்டர்களாகிய நாங்கள் செய்யவேண்டிய கடமையைத் தனிமனிதனாக ஜகபர் அலி செய்திருக்கிறார். குடியால் உயிரிழந்தவர்களுக்குக்கூட ஆதரவு காட்டும் இந்த அரசு, 1,000 கோடி ரூபாய் இயற்கை வளங்களைக் காக்கத் துணிந்த ஒரு மனிதனைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பது வேதனைக்குரியது. சகாயம் ஐ.ஏ.எஸ் ‘ட்ரெண்டிங் மாஸ்டர்’ சாண்டிக்கு விருது வழங்கிய சீமான் | நம்பிக்கை விருதுகள் 2025 - Live ஒரு பொறுப்பற்ற சமூகத்தில் தனிமனிதனாகப் போராடி உயிர்நீத்த இவரை நான் 'மாமனிதர்' என்பேன். என் சொந்த ஊரான திருமயத்துக்கு அருகே நடந்த இந்த இழப்பு என் மனதைப் பிழிகிறது. இந்த வீரக் குடும்பத்துக்கு எங்களது இளைஞர் படை என்றும் துணையாக இருக்கும். எனக்கும், என் குடும்பத்திற்கும் 'துண்டு துண்டாக வெட்டி விடுவோம்' என்று மூன்று முறை மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. இதுவரை அனுப்பியவர்கள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதே காவல்துறைதான் இன்று ஜகபர் அலியின் கொலைக்கும் காரணம் என்று சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்றார். 'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ் நம்பிக்கை விருதுகள் 2025
ஊட்டி மக்களுக்கு நற்செய்தி.. பைகாரா ஏரியில் விரைவில் மின்சார படகுகள் சேவை.. சுற்றுலாத் துறை உறுதி!
ஊட்டி பைகாரா ஏரியில் விரைவில் மின்சார படகுகள் சேவை தொடங்க உள்ளதாக சுற்றுலாத் துறை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்து உள்ளது.
Epstein Files ஐ லீக் பண்ணதே டிரம்ப் தான் !
Epstein Files ஐ லீக் பண்ணதே டிரம்ப் தான் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எப்ஸ்டீன் பைல்ஸ் தொடர்பான செய்திகள் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் இரண்டு தனி தீவுகளையே விலைக்கு வாங்கி அங்கே இளம் பெண்களையும், குறிப்பாக சிறுமிகளையும் அங்கு கொண்டு சென்று மிகப்பெரும் பணக்காரர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் விருந்தாக்கினார் என செய்திகள் வெளியாகி வருகிறது. வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒருபக்கம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், […]
திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’கலாசார மண்டபம் திறந்து வைப்பு.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில்… The post திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் திறந்து வைப்பு. appeared first on Global Tamil News .
`அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும்' - நம்பிக்கை விருதுகள் விழாவில் ஜகபர் அலியின் மனைவி!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த ஜகபர் அலி. தனது பகுதியில் சட்டவிரோதமாக மலைகளைச் சிதைத்த குவாரி மாஃபியாக்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடியவர். இயற்கை வளங்களைக் காக்கப் போராடிய இவரை, 2025, ஜனவரி 17 அன்று மணல் மாஃபியாக்கள் கொடூரமாகக் கொலைசெய்தனர். 15 ஆண்டுக்கால சமூகப் போராட்டத்துக்குப் பிறகு தன் இன்னுயிரையே ஈந்த இந்த வீரத்தியாகியின் நினைவாக, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025-ன் `டாப் 10 மனிதர்’ பிரிவில், `உயிர் கொடுத்து மலை காத்தவர்’ விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட ஜகபர் அலியின் மனைவி கண்ணீர்மல்கப் பேசினார். அப்போது, சின்னச் சின்ன உதவிகளை மக்களுக்குச் செய்துகொண்டு, சாதாரண வருமானத்தில் எங்களை அவர் பார்த்துக்கொண்டார். ஆனால், மலைகளையும் ஆறுகளையும் திருடுபவர்களைப் பார்த்தால் அவரால் சகித்துக்கொள்ள முடியாது. 'நீங்க போனா ஆபத்து' என்று நான் தடுத்தபோதெல்லாம், 'இப்படித் திருட்டு நடந்தால் நாளைக்கு நம் பிள்ளைங்க எங்கே வாழும்?' என்று கேட்டுவிட்டுப் போவார். மிரட்டல் வந்தபோதுகூட அவர் பணியவில்லை. இன்று அவர் இல்லை என்றாலும், அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும் என்று நெகிழ்ந்தார். இந்த விருதை வழங்கிய சகாயம் ஐ.ஏ.எஸ்., கலெக்டர்களாகிய நாங்கள் செய்யவேண்டிய கடமையைத் தனிமனிதனாக ஜகபர் அலி செய்திருக்கிறார். குடியால் உயிரிழந்தவர்களுக்குக்கூட ஆதரவு காட்டும் இந்த அரசு, 1,000 கோடி ரூபாய் இயற்கை வளங்களைக் காக்கத் துணிந்த ஒரு மனிதனைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பது வேதனைக்குரியது. ஒரு பொறுப்பற்ற சமூகத்தில் தனிமனிதனாகப் போராடி உயிர்நீத்த இவரை நான் 'மாமனிதர்' என்பேன். என் சொந்த ஊரான திருமயத்துக்கு அருகே நடந்த இந்த இழப்பு என் மனதைப் பிழிகிறது. இந்த வீரக் குடும்பத்துக்கு எங்களது இளைஞர் படை என்றும் துணையாக இருக்கும் என்றார். நம்பிக்கை விருதுகள் 2025
இந்திய புறாக்கள் நெடுந்தீவில்!
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் மறைத்து வைத்திருந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இரு தினங்களிற்கு முன்னர் 144 புறாக்கள் கடல் வழியாக கடத்தி வரப்பட்டு நெடுந்தீவில் ஓர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. மறைத்து வைத்திருக்கும் புறாக்களை பகுதி பகுதியாக யாழ்ப்பாணம் கடத்த திட்டமிட்டனர். இதில் முதல் கட்டமாக நேற்றைய தினம் 44 புறாவை குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டபோது 44 புறாக்களுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மேலும் நூற்றிற்கும் மேற்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் மறைத்து வைத்திருக்கும் தகவலை உறுதி செய்தனர். மறைத்து வைத்திருக்கும் புறாக்களை மீட்பதற்காக பொலிஸார் வருவதனை அறிந்த வீட்டின் உரிமையாளர்கள் புறாக்கள் அடைத்து வைத்திருந்த இடத்திற்கு தீ வைத்துள்ளனர்.

30 C