SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

மின்னல் வேகத்தில் உயர்வு…ஒரு லட்சம் ரூபாயை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை :கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்க விலை, இன்று வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கும், சவரனுக்கு (8 கிராம்) ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நாள் ரூ.96,400-ஆக இருந்த சவரன் விலை, ஒரே நாளில் இந்த அதிரடி உயர்வு பெற்றுள்ளது. சர்வதேச சந்தையில் டாலர் வலுப்பெறுதல், அமெரிக்க வட்டி விகித மாற்றங்கள், இறக்குமதி செலவுகள் அதிகரித்ததே இதற்குக் காரணம் […]

டினேசுவடு 12 Dec 2025 9:27 am

கொழும்பு துறைமுகத்தில் அலிசன் ஹூக்கர்

சிறிலங்கா வந்துள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது அவர், சிறிலங்கா துறைமுக அதிகார சபைத் தலைவர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினார். அவருடன் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார். வர்த்தகம் மற்றும் துறைமுக மீள்தன்மையில் அமெரிக்க-சிறிலங்கா கூட்டாண்மை குறித்து இரு தரப்பினரும்

புதினப்பலகை 12 Dec 2025 9:03 am

ஹோட்டல்களில் இனி ஆதார் கார்டு நகல் கேட்கக்கூடாது.. வருகிறது புதிய விதிமுறை!

ஆதார் கார்டைப் பயன்படுத்துவதற்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இதனால் ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கும். ஆதார் சேவைகள் எளிதாகும்.

சமயம் 12 Dec 2025 9:01 am

Doctor Vikatan: குழந்தையின் இடது கைப்பழக்கம் அப்படியே விடலாமா, மாற்ற வேண்டுமா?

Doctor Vikatan:  என் குழந்தைக்கு 3 வயதாகிறது. அவளுக்கு இடதுகை பழக்கம் இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, வலக்கை பழக்கத்துக்கு மாற்ற வேண்டும் என்கிறார்கள். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ். மனநல மருத்துவர் சுபா சார்லஸ் குழந்தையின் இடது கைப்பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. மாறாக, குழந்தையிடம் இயற்கையாக அமைந்துள்ள அந்தத் திறமையை போற்றிப் பாதுகாப்பதுடன், வலது கைப்பழக்கத்தையும் இணைத்து, அவர்களை ஓர் அதிசயமான ஒருங்கிணைந்த திறமைசாலியாக (Ambidextrous) உருவாக்க முயற்சி செய்வதுதான் மிகவும் சிறந்த அணுகுமுறையாகும்.    நம்முடைய உடலின் இயக்கமும் திறமையும் பெரும்பாலும் மூளையின் எந்தப் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தது. பொதுவாக, வலது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடது மூளை ஆதிக்கம் செலுத்தும்  (Left Hemisphere). அதன் விளைவாக, லாஜிக்கல் சிந்தனை, கணிதம் மற்றும் பகுப்பாய்வுத் திறனுடன் வளர்வார்கள்.  அதுவே,  இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது மூளையின் (Right Hemisphere) ஆதிக்கத்தால், தனித்துவமான படைப்பாற்றல், கற்பனை, ஆக்கபூர்வமான மற்றும் பக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking) போன்ற திறமைகளுடன் வளர்கிறார்கள். இந்த வலது மூளைத் திறனை மாற்றுவதற்கு பதிலாக, இரண்டு கைகளையும் அழகாக, லாவகமாகப் பயன்படுத்தும் இருகைப்பழக்கம் (Ambidexterity) என்னும் நிலையை அடைய உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தலாம்.  இரண்டு கைகளையும் அழகாக லாவகமாகப் பயன்படுத்தும் இருகைப்பழக்கம் (Ambidexterity) என்னும் அதீத நிலையை அடைய உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தலாம். Doctor Vikatan: எழுதும்போது கைவலிப்பதாகச் சொல்லும் குழந்தை... சிகிச்சை அவசியமா? இந்தியாவில் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு குழந்தைகளைப் பயிற்றுவித்து,  அவர்கள் குறைந்த நேரத்தில் அதிகத் திறனுடன்  தேர்வுகளில் எழுதிச் சாதிக்க வைத்த செய்தி ஒன்று சமீபத்தில் தெரியவந்தது.  எனவே, உங்கள் குழந்தையின் இடது கைப்பழக்கம் அவர்களின் தனித்துவமான பலம். அதனுடன் வலது கைப்பழக்கத்தையும் இணைப்பது, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 12 Dec 2025 9:00 am

கும்பகோணம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்: அவப்பெயர் நீங்கும்... பிள்ளைகளின் கல்வி சிறக்கும்!

கல்வியே நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் மாபெரும் செல்வம். அந்தச் செல்வத்தைக் குறைவின்றிப் பெற்றிட இறையருள் நமக்குத் தேவை. அப்படிப்பட்ட அருளை அள்ளி அள்ளித் தரும் தலம்தான் இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில். கும்பகோணம் - சுவாமிமலை வழியில் புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இன்னம்பர் கோயில். இனன் என்றால் சூரியன். சூரியன் ஈசனை நம்பிச் சரண் அடைந்த ஊர் இது. தன் சாபம் தீர சூரியன், இத்தலத்துக்கு வழிபட வந்தபோது நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியவை ஈசனை மறைத்து நின்றன. சூரியன் மனமுருக வேண்டினான். தன் சாபம் தீர ஈசனை அடைய வழிகாட்டுமாறு பிரார்த்தித்தான். சூரியனின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியவை விலகி வழி கொடுத்தனர். இதனால் நந்தி விலகிய தலங்களில் இந்தத் தலமும் ஒன்று என்பது சிறப்பு. அதற்கு நன்றிக்கடனாக ஒவ்வோர் ஆண்டும் ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 ஆகிய நாள்களில் சூரியன் ஈசனின் லிங்கத் திருமேனியைத் தன் கிரணங்களால் தொட்டு வழிபாடு செய்கிறான் என்கிறது தலபுராணம். இந்திரனின் யானையானை ஐராவதமும் ஈசனை வணங்கி சாபம் தீர்ந்த தலமும் இதுதான். இன்னம்பூர் எழுத்தறிநாதர் அகத்தியர் தமிழ் கற்ற தலம் ஈசனின் ஆணைப்படி தென்னகம் வந்த அகத்திய மாமுனிக்கு ஈசன் இங்குதான் தமிழின் எண்ணையும் எழுத்தையும் இலக்கணத்தையும் அறிவித்தான் என்கிறது தலபுராணம். எனவேதான் இத்தல ஈசனுக்கு எழுத்தறிநாதர் என்கிற திருநாமம் ஏற்பட்டது. மேலும் இந்த ஈசன் சுயம்புலிங்கம் என்பதால் தான்தோன்றியீசர் என்றும், அட்சரபுரீஸ்வரர், ஐராவதேஸ்வரர் என்றும் திருநாமங்கள் உண்டு. இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் நமக்கு ஏற்பட்ட அவமானங்கள் நீங்கிப் புகழ் பெருகும் என்றும் சொல்கிறார்கள். இதற்குத் தலபுராணம் சொல்லும் சம்பவம் ஒன்று உண்டு. இந்த ஆலயத்தின் கணக்கரான சுதன்மன், இந்தக் கோயிலின் பராமரிப்புக் கணக்குகளை மன்னனிடம் ஒப்படைத்தான். மன்னனுக்கு அந்தக் கணக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. இதனால் கலங்கிய சுதன்மன் இவ்வூர் ஈசனிடம் முறையிட்டான். ஈசன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று கணக்குகளை விளக்கி சந்தேகம் தீர்த்தான். மன்னனும் தெளிந்து சுதன்மனை(ஈசனை) பாராட்டினான். அதுகேட்டு வியந்த சுதன்மன் ‘எனக்காக எம் வடிவில் வந்து வினை தீர்த்தனையோ!' என்று சொல்லி இந்தக் கோயிலை மேலும் கட்டி எழுப்பித் தொண்டு செய்தான் என்கிறது தலவரலாறு. இங்கு அம்பிகை, சுகந்த குந்தளாம்பிகை, நித்யகல்யாணி என்ற இரு தேவியர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். போக சக்தியான நித்யகல்யாணி, எப்போதும் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணம் வேண்டி இந்த தேவியை வழிபடுபவர்களுக்கு விரைவிலேயே திருமண பாக்கியம் கிடைக்கிறது என்கிறார்கள். யோகசக்தியான சுகந்த குந்தளாம்பிகை தவக் கோலத்தில் வீற்றிருக்கிறாள். இவளை வழிபட நிம்மதியும் ஞானமும் கிட்டும். இன்னம்பூர் சுகந்த குந்தளாம்பிகை கோயில் இத்தலம்அப்பர் சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டது. காவிரிக்கரையில் வடகரையில் அமைந்துள்ள 45 வது தலம் இது. கருவறை மூலவர் எழுத்தறிநாதர், பிரமாண்டத் திருமேனியராகக் காணக் காண இனிக்கும் கருணாமூர்த்தியாகத் திகழ்கிறார். கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை அருள் பாலிக்க, கணபதி, முருகப்பெருமான், நடராஜர், தட்சிண கயிலாய லிங்கம், காசி விஸ்வநாதர், நால்வர், விசாலாட்சி, ஸ்ரீமகாலட்சுமி, சண்டேஸ்வரர், சூரியன், சந்திரன், பைரவர், அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, காட்சி கொடுத்த நாதர், துர்க்கை ஆகியோர் தனிச்சந்நிதிகளில் அருள்கிறார்கள். பலா, செண்பகம் தல விருட்சங்கள். ஐராவதம் உண்டாக்கிய ஐராவத தீர்த்தம் சாபம் தீர்க்கும் சாப விமோசனியாக உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் ஐந்து கலசங்கள் கொண்டுள்ளது. இவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களைக் குறிக்கிறது. கிழக்கு நோக்கிய இக்கோயிலில் கொடிமரமில்லை, பலிபீடம், நந்தி உள்ளன. ஈசனின் கருவறை முன்புறம் உள்ள டிண்டி, முண்டி என்ற தூவரபாலகர்கள் வேறெங்கும் இல்லாத வடிவங்கள் கொண்டவர்கள். பேச்சுத் திறமையும் கல்வியும் பெருக... பேச்சில் வல்லமை பெறவும், நேர்முகத் தேர்வில் விளக்கவும் இங்கு வந்து ஈசனை வேண்டி அர்ச்சனை செய்து, தேனை வைத்து மந்திரத்தை எழுதி ‘ஓம் ஸ்ரீ அக்ஷரபுரீஸ்வராய நம: ஓம் ஸ்ரீ அகஸ்தியாய நம: ஓம் ஸ்ரீசரஸ்வதியே நம:' என்று பிரார்த்தனை செய்தால் பலன் பெறலாம் என்கிறார்கள். பிறந்த குழந்தை முதல் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் வரை இங்கு வந்து பலன் பெற்றோர் அநேகம் என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர். பள்ளியில் சேரும் முன்பாக குழந்தைகளை இங்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். முதன்முறையாக அவர்களுக்கு நெல்லில் எழுத இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குச் செம்பருத்திப்பூவைத் தட்டில் கொட்டி எழுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பேச்சுத்திறமை குறைந்தவர்கள், படிப்பறிவு மந்தமானவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக்கூர்மை பெறுவர் என்பது நம்பிக்கை. இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில் திருமண வரம் வேண்டும் ஆண்கள் 60 மஞ்சள் கிழங்குகளும், பெண்கள் 61 மஞ்சள் கிழங்குகளும் வாங்கி, அதோடு தேங்காய், பழம், எலுமிச்சை, மாலை எல்லாம் வாங்கிக் கொண்டு, ஒரு பௌர்ணமி நாளில் வரவேண்டும். நித்யகல்யாணி அம்மை சந்நிதியில் அர்ச்சனை செய்தபின், அவர்கள் வாங்கி வந்த மாலையைப் போடுவார்கள். ஆலயத்தை வலம் வந்து வணங்கிச் சென்றால், 60 நாள்களுக்குள் கல்யாணம் முடிந்துவிடும் என்பது ஐதிகம்.

விகடன் 12 Dec 2025 8:56 am

அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு.. புத்தாண்டுக்கு முன் வந்த ஹேப்பி நியூஸ்!

மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்துவதாக பீகார் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

சமயம் 12 Dec 2025 8:55 am

முள்ளிக்குளத்தில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அனுமதி

மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சிறிலங்காவின் 70% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 20 ஆண்டு கண்காணிப்பு காலத்துடன், கட்டமைத்தல்-சொந்தமாக்குதல்-செயல்படுத்துதல் மாதிரியின் கீழ் செயற்படுத்தப்படும் 100

புதினப்பலகை 12 Dec 2025 8:37 am

8ஆவது ஊதியக் குழுவில் நீடிக்கும் குழப்பம்.. ஜனவரி 1 முதல் நிலுவைத் தொகை கிடைக்குமா?

8ஆவது ஊதியக் குழுவின் அமலாக்கம் தொடர்பாக அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பங்களும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

சமயம் 12 Dec 2025 8:33 am

மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்! 34 பேர் பலி

மியான்மர் நாட்டில், நள்ளிரவில் மருத்துவமனையின் மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில், ராணுவ அரசுக்கு எதிராக அராக்கன் ஆயுதக்குழு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றது. இதையடுத்து, அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமைந்திருந்த பொது மருத்துவமனையின், ராணுவப் படைகள் நேற்று முன்தினம் (டிச. 10) இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையின் மீது போர் விமானங்கள் மூலம் 2 குண்டுகள் வீசப்பட்டதாக, உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில், […]

அதிரடி 12 Dec 2025 8:30 am

குடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ள பிளானா?- இனி 'நோ'விசா!

எந்த நாட்டினராக இருந்தாலும், அவர்களுக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை அமெரிக்க குடிமகனாகக் கருதப்படும் - இது அமெரிக்காவின் சட்டம். அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இதற்கு தற்போது செக் வைத்துள்ளது அமெரிக்க தூதரகம். நேற்று இந்திய அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... அமெரிக்க குடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ளப் பயணம் மேற்கொள்வது தெரிந்தால், அவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் படி, இனி அமெரிக்க குடியுரிமைக்காக அங்கே சென்று குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பது நடக்காது. அமெரிக்க தூதரக அதிகாரிக்கு பயணத்தில் இந்த மாதிரியான ஏதேனும் சந்தேகம் எழுந்தால் கூட, விசா ரத்து செய்யப்படலாம். அமெரிக்கா இப்படியெல்லாமா செய்வார்கள்? 'அமெரிக்க குடியுரிமைக்காக அங்கே சென்று குழந்தை பெற்றுக்கொள்வார்களா?' இந்த சந்தேகம் எழுவது நியாயம் தான். தரவுகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் 33,000 குழந்தைகள் இந்த மாதிரியான பயணங்கள் மூலம் பிறக்கிறார்கள். இந்தப் பயணத்தைப் 'பிறப்பு சுற்றுலா (Birth Tourism)' என்று கூறுகிறார்கள். U.S. consular officers will deny tourist visa applications if they believe the primary purpose of travel is to give birth in the United States to obtain U.S. citizenship for the child. This is not permitted. pic.twitter.com/Xyq4lkK6V8 — U.S. Embassy India (@USAndIndia) December 11, 2025

விகடன் 12 Dec 2025 8:14 am

நட்சத்திரப் பலன்கள் டிசம்பர் 12 முதல் 18 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

விகடன் 12 Dec 2025 8:00 am

IND vs SA T20: ‘தங்கத்தை தேடி’.. வைரத்தை இழக்கும் இந்திய அணி: இனியும் பாடம் கற்கலைனா அவ்வளவுதான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில், இந்திய அணியில் நடைபெற்றுள்ள சம்பவம், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கௌதம் கம்பீர்தான் இதற்கு முழு முக்கிய காரணம்!

சமயம் 12 Dec 2025 7:49 am

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் திறந்த பிடியாணை

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக மீண்டும் பகிரங்க பிடியாணை உத்தரவுகளை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) பிறப்பித்துள்ளது. பணமோசடி தொடர்பான விசாரணையில் பெயரிடப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை […]

அதிரடி 12 Dec 2025 7:47 am

கரையொதுங்கிய 2 டன் ராட்சத சுறா ; படையெடுக்கும் மக்கள்

தமிழகத்தின் கன்னியாகுமரி, கீழ் மிடாலம் கடற்கரை பகுதியில் 2 டன் எடை கொண்ட ராட்சத புள்ளி சுறா கரையொதுங்கியுள்ளது. குறித்த பகுதி மீனவர்கள் வீசிய கரைமடி வலையில் சிக்கி இறந்த நிலையில் குறித்த சுறா மீன் கரையொதுங்கியுள்ளது. ஆச்சரியம் குறித்த சுறா மீனை பார்வையிட்ட மீனவர்கள் அந்த மீனுடன் நின்று புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் சுறா மீனை அந்தப் பகுதி மக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் பார்த்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். 2 டன் எடை […]

அதிரடி 12 Dec 2025 7:41 am

நெடுந்தீவு டித்வா புயல் பாதிப்பு: 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கு 778 வீடுகள் தெரிவு

நெடுந்தீவு பிரதேசத்தில் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்காக 778 வீடுகள் தெரியப்பட்டதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்தார். நெடுந்தீவில் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களது எண்ணிக்கை 1410 எனவும் பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களது எண்ணிக்கை 4102 எனவும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1190 எனவும் டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 1216 எனவும் 25 ஆயிரம் கொடுப்பனவுக்காக தெரியப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 778 எனவும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்தார். டித்வா புயல் தொடர்பாக 2024/2025 ஆம் […]

அதிரடி 12 Dec 2025 7:38 am

பணத்தைப் பல மடங்காக்கும் 'அஸெட் அலொகேஷன்'சீக்ரெட்... கற்றுக்கொள்ள வேண்டுமா?

முதலீட்டில் பலரும் பல தவறுகளைச் செய்கிறோம். தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கத்தில் மட்டுமே பணத்தைப் போடுகிறார்கள்,  அதேபோலத்தான் சிலர் ரியல் எஸ்டேட் தாண்டி எந்த முதலீட்டையும் செய்வதில்லை. சிலரோ பங்குச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்கிறார்கள். ஒரே ஒரு சொத்து வகையில் மட்டும் பணத்தைப் போடுவது முதலீட்டுக்கு அதிக ரிஸ்க்கைக் கொண்டுவரும். ஏனெனில், தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை போன்ற ஒவ்வொரு வகை சொத்துகளும், பல்வேறு காரணிகளின் தாக்கத்தால் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாகச் செயலாற்றுகின்றன. எனவே, ஒரே ஒரு சொத்துப் பிரிவில் மட்டும் பணத்தைப் போட்டால் நம் முதலீடு நஷ்டத்தைத் தர வாய்ப்புள்ளது.  அஸெட் அலொகேஷன் அந்த நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காகவே, சொத்து ஒதுக்கீடு (Asset allocation) என்ற சிறந்த முதலீட்டு உத்தியைப் பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் லிக்விட் ஃபண்ட் போன்ற பல்வேறு சொத்துப் பிரிவுகளில் நம்முடைய பணத்தைப் பிரித்து முதலீடு செய்து கலவையான போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதுதான் நம் பணத்தைப் பல மடங்காக்கும் சீக்ரெட். அஸெட் அலொகேஷன் எப்படி இருக்க வேண்டும், யார் எந்த சொத்துப் பிரிவில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தர நாணயம் விகடன், இன்டக்ரேட்டட் நிறுவனத்துடன் இணைந்து வரும் டிசம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா… அஸெட் அலொகேஷன்!’ என்ற சிறப்பு நிகழ்ச்சியைத் கல்பாக்கத்தில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், பொருளாதாரம், முதலீடு போன்றவற்றில் நிபுணத்துவமும் அனுபவமும் உள்ள சோம வள்ளியப்பன் சிறப்புரை ஆற்றுகிறார். மேலும், இன்டக்ரேட்டட் நிறுவனத்தின் சார்பாக நிபுணர்கள் எல்.சுதாகர், ஆர்.குருராஜன் சிறப்புரை ஆற்றுகிறார்கள். இதில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம்..! குடும்பத்தோடு கலந்துகொண்டு நிதி அறிவையும், லாபகரமான முதலீட்டு வழிகளையும் தெரிந்துகொண்டு பயன் அடையலாம்.  நிகழ்ச்சி நடக்கும் நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் இதோ: நாள்: டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை.  நேரம்: காலை 10.30 AM முதல் 12.30 PM வரை  இடம்: ஸ்டார் மஹால் & ரெசிடன்சி A/c ECR ரோடு, புதுப்பட்டினம், (VAO அலுவலகம் எதிரில்), கல்பாக்கம் - 603 102. அனுமதி இலவசம். அனைவரும் வரலாம். பதிவு செய்ய:  https://events.vikatan.com/nanayam/integrated-iap-on-ground/

விகடன் 12 Dec 2025 7:35 am

புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் 2026-ல் பெரிய சூரியூரில் திறப்பு!

புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெரிய சூரியூரில் திறக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் திருச்சி உலக அளவில் கவனம் பெற இருக்கிறது .

சமயம் 12 Dec 2025 7:33 am

திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்டுப்பாட்டு கோபுரத்தின் உயரத்தை அதிகரிக்க முடிவு!

திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்டுப்பாட்டு கோபுரத்தின் உயரத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்து மார்ச் மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 12 Dec 2025 7:04 am

ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ் (25). பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அந்தியூர் மேல்தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரியவரவே, இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கடந்த 5-ஆம் வீட்டை விட்டு வெளியேறிய சேதுராஜ் மற்றும் மகாலட்சுமி, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சேதுராஜின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால், மாற்று சமூகம் என்பதால் மகாலட்சுமியின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, மகாலட்சுமி தனது கணவர் சேதுராஜுடன் சென்றார். கணவன்-மனைவி இருவரும் பெருந்துறையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், தனது தங்கை மகாலட்சுமியை பார்க்க பெருந்துறை வந்துள்ளதாக அவரது அக்கா கெளசல்யா கூறியுள்ளார். இதை நம்பி பெருந்துறை பேருந்து நிலையத்துக்கு சேதுராஜும், மகாலட்சுமியும் வந்துள்ளனர். அப்போது, அங்கு காரில் வந்த கெளசல்யா மற்றும் அவரது உறவினர்கள் சேதுராஜ் மற்றும் மகாலட்சுமியிடம் பேசியுள்ளனர். பின்னர் அவர்களுடன் அங்குள்ள உணவகத்தில் உணவு அருந்தினர். உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது திடீரென மகாலட்சுமியை கெளசல்யா மற்றும் அவரது உறவினர்கள் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் சேதுராஜ் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கைது அதன் பேரில் பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கடத்தப்பட்ட மகாலட்சுமி சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெருந்துறை போலீஸார் சத்தியமங்கலம் அன்னை இந்திரா நகருக்குச் சென்று, அங்கு லோகேஷ்வரன் என்பவரது வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகாலட்சுமியை மீட்டனர். மகாலட்சுமியை கடத்திச் சென்ற கோத்தகிரியைச் சேர்ந்த அவரது அக்கா கெளசல்யா (25), அவரது கணவர் சந்தோஷ் (26), கோத்தகிரியை அடுத்த தூக்கன்துறைச் சேர்ந்த சாதிக் (27), சத்தியமங்கலம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த லோகேஷ்வரன் (21), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் (45) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். சேதுராஜ் மாற்று சமூகம் என்பதால் உறவினர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், சேதுராஜிடம் இருந்து மகாலட்சுமியைப் பிரிப்பதற்காக அவரைக் கடத்திச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விகடன் 12 Dec 2025 6:58 am

வெனிசுலா ஜனாதிபதியின் மனைவி மற்றும மருமக்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் மனைவியின் மூன்று மருமகன்கள் மீது அமெரிக்க கருவூலத் துறை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஃபிராங்கி புளோரஸ் மற்றும் எஃப்ரைன் காம்போ ஆகியோர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரத்தில் கார்லோஸ் புளோரஸ் ஒரு அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றியதற்காக தண்டிக்கப்படுகிறார் என்று துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. மூவரும் இப்போது அமெரிக்காவில் அமைந்துள்ள சொத்து மற்றும் சொத்துக்களை அணுக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க நிறுவனங்கள் அவர்களுடன் எந்த வணிகத்தையும் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசாங்கம் கராகஸில் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.கடந்த புதன்கிழமை, அமெரிக்க கடலோர காவல்படை மற்றும் பிற பிரிவுகள் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றின. வெனிசுலாவில் ஏராளமான எண்ணெய் இருப்புக்கள் உள்ளன. எண்ணெய் ஏற்றுமதி வருவாயை வெனிசுலா பெரிதும் நம்பியுள்ளது. மேலும் முதன்மையாக அமெரிக்காவின் போட்டியாளரான சீனாவிற்கு அதன் எண்ணெயை வழங்குகிறது. மோதல் அதிகரிப்பதில் அமெரிக்கா முதன்மையாக இந்த எண்ணெயை குறிவைத்து வருவதாகவும், கராகஸில் அதிகார மாற்றத்தை கட்டாயப்படுத்த விரும்புவதாகவும் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ குற்றம் சாட்டுகிறார். வெனிசுலா அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை இறக்குமதி செய்வதாக அமெரிக்க கருவூல செயலாளர் குற்றம் சாட்டினார். டிசம்பர் 2017 நடுப்பகுதியில், தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெனிசுலா முதல் பெண்மணி சிலியா புளோரஸின் இரண்டு மருமகன்களான ஃபிராங்கி புளோரஸ் மற்றும் எஃப்ரைன் காம்போ ஆகியோர் ஏற்கனவே அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலுக்காக நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். முதலில் அவர்கள் தலா 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், அக்டோபர் 2022 இல், வெனிசுலாவில் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு அமெரிக்கர்களை விடுவிப்பதற்கு ஈடாக புளோரஸ் மற்றும் காம்போ விடுவிக்கப்பட்டனர்.

பதிவு 12 Dec 2025 6:53 am

'The Carrom Queen' - திரைப்படமாகும் காசிமாவின் கேரம் சாம்பியன் கதை! வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!

புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா (17), அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்து தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார். சமீபத்தில் நடந்த 7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025-ல் குழுப்போட்டியில் தங்கப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று மீண்டும் சாதனை படைத்தார். The Carrom Queen படம் ``மகளுக்கு 1 கோடி பரிசு; தமிழ்நாடு அரசுக்கு நன்றி- நெகிழும் காசிமாவின் அப்பா இதுகுறித்து நெகிழ்ச்சியாகப் பேசிய காசிமா, 6 வயது முதல் பயிற்சி எடுத்து வருகிறேன். 7 வயதில் தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். எனது அப்பாதான் கோச்சிங் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயமும் எனக்கு கோச்சிங் கொடுக்கிறார். என் வீட்டின் சுவர், கண்ணாடி என எல்லா இடத்திலும் ‘I’m a world champion one day’ என எழுதி வைத்திருப்பேன்.“ என்றார். தமிழகமே காசிமாவைப் பாராட்டி, கொண்டாடியது. இப்போது காசிமாவின் கேரம் வெற்றிப் பயணத்தை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாகவிருக்கிறது. அப்படத்திற்கு 'தி கேரம் குயின் (The Carrom Queen)' என்று பெயரிடப்பட்டுள்ளது. The Carrom Queen படம் The Carrom Queen படம் The Carrom Queen படம் The Carrom Queen படம் நானும், கீர்த்தனாவும் ஒரே கிளப்பில் தான் பயிற்சி பெற்றோம் - கேரம் வீராங்கனை காசிமா ராண்டிய பூமேஷ், காளிவெங்கட், ரிஷி பிரகாஷ், அப்துல்லா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். முரளி இப்படத்தை இயக்குகிறார். 'Nihan Entertainments' இப்படத்தைத் தயாரிக்கிறது.

விகடன் 12 Dec 2025 6:50 am

திருச்சி பஞ்சப்பூர் பன்முக பயன்பாட்டு மையம் ஜனவரி மாதம் திறப்பு!

திருச்சி பஞ்சப்பூர் பன்முக பயன்பாட்டு மையம் ஜனவரி மாதம் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திருச்சியின் பொருளாதாரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சமயம் 12 Dec 2025 6:50 am

72 மணிநேரம் மரத்தைக் கட்டிப்பிடித்து நின்ற காலநிலை ஆர்வலர்

தொடர்ச்சியாக 72 மணி நேரம் ஒரு மரத்தை கட்டிப்பிடித்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார் கென்ய காலநிலை ஆர்வலர் ட்ருபெனா முத்தோனி. முத்தோனியின் முன்னைய சாதனை 48 மணிநேரம் ஆகும். இந்த சவாலுக்காக, அவர் நியேரி நகரில் உள்ள அரசு வளாகத்தில் உள்ள ஒரு பூர்வீக மரத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒரு கட்டத்தில், அவள் கிட்டத்தட்ட தூங்கிவிட்டாள். ஆனால் அவளுடைய ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டாள் அவர்களில் சிலர் கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வ பார்வையாளர்களுக்கான கட்டணத்தை செலுத்த முன்வந்தனர். பருவநிலை மாற்றம் மற்றும் காடழிப்பால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புவதாக அவர் கூறினார். கறுப்பு என்பது ஆப்பிரிக்க சக்தி. எதிர்ப்பு மற்றும் மீள்தன்மையைக் குறிக்கிறது. பச்சை என்பது மறு காடழிப்பு, மீளுருவாக்கம் மற்றும் நம்பிக்கையைக் குறிக்கிறது. அதே நேரத்தில் சிவப்பு என்பது பூர்வீக எதிர்ப்பு மற்றும் முன்னணி தைரியத்தைக் குறிக்கிறது. மற்றும் நீலம் என்பது நீர் பாதுகாவலர்கள் மற்றும் கடல் பாதுகாவலர்களைக் குறிக்கிறது என்று முத்தோனி உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். ஆப்பிரிக்க நாடுகள் மிகக் குறைந்த அளவிலான கார்பன் வெளியேற்றத்தைக் கொண்டுள்ளன. ஆனால் காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளில் சிலவற்றைச் சுமக்கும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.

பதிவு 12 Dec 2025 6:26 am

அமெரிக்க குடியுரிமை ரூ.9 கோடி ‘தங்க அட்டை’ திட்டத்தை அறிமுகம் செய்தாா் டிரம்ப்

ஒரு மில்லியன் டாலா் (சுமாா் ரூ.9 கோடி) செலுத்தினால் அமெரிக்க குடியுரிமை பெற வகை செய்யும் ‘தங்க அட்டை’ (கோல்டு காா்டு) திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்தாா். ‘இந்த ‘தங்க அட்டை’, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வெளிநாட்டினா் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற வகை செய்யும் ‘பசுமை அட்டை (கிரீன் காா்டு)’ திட்டத்தைக் காட்டிலும் மிகச் சிறந்தது, சக்திவாய்ந்தது’ என்று டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றதுமுதல் பல அதிரடி நடவடிக்கைகளை […]

அதிரடி 12 Dec 2025 5:51 am

மத்திய கைலாஷ் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

மத்திய கைலாஷ் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் 3 நாட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமயம் 12 Dec 2025 5:49 am

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்-சென்னை புறநகர் ரயில் சேவையை கையகப்படுத்தும் ஒப்பந்தம் எப்போது?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்-சென்னை புறநகர் ரயில் சேவையை கையகப்படுத்தும் ஒப்பந்தம் எப்போது? நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது ஜனவரி மாதம் வரை தள்ளிப்போய் உள்ளது.

சமயம் 12 Dec 2025 5:36 am

4 விமான விபத்துகளில் உயிர் தப்பிய இரண்டாம் உலகப் போர் வீரர் 103ம் வயதில் காலமானார்

இரண்டாம் உலகப் போரில் 19 ஆபத்தான போர் பறப்புகளை (missions) மேமற்கொண்டு, நான்கு முறை விமான விபத்தில் சிக்கியும் உயிர் தப்பிய கனடிய விமானப்படையின் சிரேஸ்ட விமானி ரெஜினால்ட் “க்ராஷ்” ஹாரிசன் (Reginald “Crash” Harrison) தனது 103 வயதில் காலமானார். அவர் எப்போதும் பொறுமையும், பெருமிதமும், மற்றவர்களைப் பற்றிய அக்கறையும் கொண்டவராக இருந்தார். தன்னைப் பற்றி ஒருபோதும் பேசிக்கொள்ள மாட்டார்” என்று அவரது நண்பர் பிரையன் ஸ்விட்ரோவிச் (Brian Swidrovich) கண்ணீருடன் நினைவு கூர்ந்தார். கனடியன் […]

அதிரடி 12 Dec 2025 3:30 am

197 குழந்தைகளை அபாயத்தில் தள்ளிய விந்தணு தானமளிப்பவர்

புற்றுநோய் அபாயத்தை அதிகப்படுத்தும் அரிதான மரபணுப் பிறழ்வைக் கொண்டிருந்த ஒரு விந்தணு தானமளிப்பவர், ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பிறழ்வு கொண்ட விந்தணுவைப் பயன்படுத்திய குடும்பங்களுக்குச் சர்வதேச அளவில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், விந்தணு தானத்தில் உள்ள வரம்புகள் மற்றும் பரிசோதனை நடைமுறைகள் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விந்தணு தான நடைமுறைகள் இந்த அநாமதேய தானமளிப்பவர், தான் பிறப்பதற்கு முன்பே மரபணுவில் புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பிறழ்வைக் […]

அதிரடி 12 Dec 2025 1:30 am

அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை:

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்கில் முக்கியச் சந்தேக நபராகக் கருதப்படும் முன்னாள் ஆளுநர்அர்ஜுன் மகேந்திரனைக்… The post அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 1:28 am

மியான்மாில் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் – 34 பேர் பலி!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில், பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் கொடூரத் தாக்குதல்கள் தொடர்கின்ற நிலையில் மருத்துவமனை ஒன்றின் மீது… The post மியான்மாில் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் – 34 பேர் பலி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 1:17 am

நாட்டை கட்டியெழுப்புதல்; மீட்டெடுத்தல்

லக்ஸ்மன் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதிகளையும், உதவிகளையும் வழங்கி வருகின்றன. வெள்ளிக்கிழமை காலை கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க “ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை” என்று கூறியிருந்தார். அதே நாள் மாலையில் நடைபெற்ற பாராளுமன்ற வரவு-செலவுத் திட்ட விவாகத்தில், “ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பிளவுபடாமல் தேசிய சபையாகச் செயற்பட வாருங்கள்” என்று […]

அதிரடி 12 Dec 2025 12:30 am

சவுதி அரேபியா ஜித்தாவில் வெள்ளப்பெருக்கு

சவுதி அரேபியாவின் ஜித்தாவில் பெய்து வரும் கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவசர சேவைகள் நிலைமையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதால், குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இந்த நேரத்தில் அரிதான எதிர்பாராத விதமான மழை, அதிகாரிகளிடம் பாதுகாப்பு எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது. அநாவசிய பயணங்களைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிரடி 12 Dec 2025 12:30 am

IND vs SA 2nd T20: ‘தோல்விக்கு காரணம்’.. ஷுப்மன் கில்லுக்கு அடுத்து வாய்ப்பு வழங்கப்படுமா? சூர்யகுமார் பதில்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது போட்டியில், இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். மேலும், ஷுப்மன் கில்லின் பேட்டிங் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

சமயம் 11 Dec 2025 11:38 pm

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு; உயர் நீதிமன்றம் தடை –என்ன காரணம்?

மாதவிடாய் விடுப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மாதவிடாய் விடுப்பு கர்நாடகாவில் உள்ள தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என கடந்த நவம்பர் 20ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் 18 முதல் 52 வயதுடைய பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். இந்த விடுப்புக்கு ஊதியமும் வழங்கப்படும். வருடத்திற்கு மொத்தம் […]

அதிரடி 11 Dec 2025 11:30 pm

தவெகவின் ஈரோடு பிரச்சாரத்துக்கு புதிய சிக்கல்.. ஈரோடு ஆட்சியருக்கு பறந்த முக்கிய கடிதம்!

விஜய் கட்சியின் முன்னேற்றங்கள் வேகமாக நடைபெறும் போது, செங்கோட்டையனின் அணுகுமுறை கொங்கு மண்டலத்தில் ஆதரவை கூட்டி உள்ளது. ஈரோட்டில் நடைபெற உள்ள பிரச்சாரம், கோவில் நில விவகாரம் மற்றும் போலீசார்களின் விதிமுறைகளால் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

சமயம் 11 Dec 2025 11:09 pm

IND vs SA 2nd T20: ‘எப்படி வென்றது தென்னாப்பிரிக்கா?’.. இந்தியா செய்த மூன்று முக்கிய தவறுகள்!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி அபாரமாக செயல்பட்டு, அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போட்டியில், இந்திய அணி செய்த மூன்று முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம். ஒயிட்களை அதிகம் வீசினார்கள்.

சமயம் 11 Dec 2025 11:02 pm

மியன்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மியன்மாரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 138 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.44 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.95 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. மியன்மார் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி 7.7 ரிச்டர் மற்றும் 6.4 ரிக்டர் […]

அதிரடி 11 Dec 2025 10:30 pm

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் அவதானம்

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைக்கு மத்தியில் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு கூடியுள்ளது. வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் உணவுப் பாதுகாப்புக் குழு கூடியுள்ளது. உணவுப் பொருட்களின் விநியோகம் மற்றும் […]

அதிரடி 11 Dec 2025 10:30 pm

இந்திய படகுகளிற்கு மீண்டும் எதிர்ப்பு!

இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்களிற்கு தீர்வு வேண்டி போராட உள்ளுர் மீனவர்கள் முற்பட்டுள்ளனர். அப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடுவது தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்குரிய மனுவொன்றை உள்ளுர் மீனவ அமைப்புக்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளன. வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் நேற்று; புதன்கிழமை சந்தித்து;கோரிக்கைக் கடிதத்தைக் கையளித்திருந்தனர். பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி முறையால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல்வளம் என்பன் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன .அவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தமக்குச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்; கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

பதிவு 11 Dec 2025 9:52 pm

`ஏன் பாரதி, என் பாரதி..!' - மகாகவி குறித்து நெகிழ்ந்து பேசிய பாவலர் அறிவுமதி!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் மற்றும் இளம் பாரதி - 2025 விருது வழங்கும் விழா இன்று (11.12.2025) நடைபெற்றது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் இந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் இரா.இராஜவேல், துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் துர்கா சங்கர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர், பாவலர் அறிவுமதி முதலான அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். `ஏன் பாரதி... என் பாரதி' என்னும் தலைப்பில் உரையாற்றிய பாவலர் அறிவுமதி, ``நான் மட்டுமா பாடலாசிரியன்? பாரதியும் பாடலாசிரியன் தான்! அவனுக்கு இசையமைப்பாளர்கள் எல்லாம் யார் தெரியுமா? `ஏன் பாரதி, என் பாரதி' என்ற தலைப்பில் நான் ஏன் பேச எண்ணினேன் என்றால் அவனைப்போல் மொழிக்கு உயிர் ஊட்டவும் மொழிக்கு வெளிச்சம் தரவும் யாரும் கிடையாது. உலகிலேயே முதன்முதலாகத் தோன்றிய என் தாய்மொழி தமிழ் இருட்டில் முடங்கிக் கிடந்த அந்த வரலாற்றுச் சுரங்கத்தை உள்வாங்கித் தன் பாடலுக்கு நல்லகாலம் வருது... நல்லகாலம் வருது என்று சொன்ன குடுகுடுப்புக்காரர்களிடம் போய் உன் மெட்டுக்கு நான் பாட்டு எழுதுகிறேன் என்று சொன்னான் பாரதி. நெல்லு குத்தும் நாட்டுத் தாய்களை இசையமைப்பாளர்களாக வைத்துக் கொண்டு அதற்குத் தமிழ் செய்தவன், உழைக்கும் மக்களிடமே சந்தம் வாங்கிப் பாடினான் பாரதி. பெரியாரையும், பாரதியையும், பாரதிதாசனையும், வள்ளலாரையும் மறந்துவிட்டால் அது தமிழாகவும் இருக்காது, தமிழனாகவும் தமிழச்சியாகவும் வாழ முடியாது. பாரதி தன் 39 அகவை வரைதான் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறான், அதற்குள் நம் தமிழுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான் அவன்! தன் சுயசரிதையை எழுதுகிறான், என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் வெவ்வேறில்லை என்று கண்ணீரை சிந்தி சிந்தி பலமுறை படித்துக் கொண்டும், உயிருக்குள் இறக்கிக் கொண்டும் இருக்கிறேன், அந்த பாரதி என்னை வழி நடத்துகிற தாயாக மாறியது அந்தச் சுயசரிதையில் இருந்துதான் எனக் கூறி நெகிழந்தவர், மேலும் பாரதியின் வாழ்விலிருந்து குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் கூறி தன் உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து பல்கலைக்கழக அளவிலான கவிதை, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு இவ்விழாவில் `இளம் பாரதி விருது' வழங்கப்பட்டது. திருநெல்வேலி: பாரதியார் படித்த வகுப்பறையில் உறுதிமொழி எடுத்து கொண்ட பள்ளி மாணவிகள்! | Album

விகடன் 11 Dec 2025 9:51 pm

மலையக உறவுகளிற்கு சுமாவும் அழைப்பு!

வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் அழைப்புவிடுத்துள்ளார். கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம். ஆனால் மலையக உறவுகளும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம். இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள். அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம்.” எனவும் எம்.ஏ.சுமந்திரன் கருத்து பதிவிட்டுள்ளார். முன்னதாக ஆறு.திருமுருகன் உள்ளிட்ட வடக்கிலிருந்து பலரும் மலையக உறவுகளை நோக்கி அழைப்புக்களை விடுத்தே வருகின்றனர். இதனிடையே அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்

பதிவு 11 Dec 2025 9:38 pm

திருநெல்வேலி: பாரதியார் படித்த வகுப்பறையில் உறுதிமொழி எடுத்து கொண்ட பள்ளி மாணவிகள்! | Album

திருநெல்வேலி: மகாகவி பாரதியார் படித்த வகுப்பறையில் உறுதிமொழி எடுத்து கொண்ட பள்ளி மாணவிகள்.!

விகடன் 11 Dec 2025 9:31 pm

பெலாரஸில் இருந்து பலூன்கள்: லித்துவேனியாவில் அவசரநிலை

பெலாரஸில் இருந்து வரும் பலூன்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லித்துவேனியா தேசிய அவசரநிலைய அறிவித்துள்ளது. இது குறித்து லித்துவேனியா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்கள் லித்துவேனியாவுக்குள் நுழைந்ததால், வில்னியஸ் விமான நிலையம் மூடப்பட்டது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், அவசரநிலை அறிவிக்கப்படுகிறது. இந்த அவசரநிலை காரணமாக எல்லைப் பகுதிகளில் காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படையுடன் ராணுவம் இணைந்து செயல்பட அனுமதி கிடைக்கும். தேடுதல், கைது போன்ற நடவடிக்கைகளை […]

அதிரடி 11 Dec 2025 9:30 pm

ரூ.7,253 கோடி லாபம் ஈட்டிய இண்டிகோ நிறுவனம்.. அதெப்படி? உறைய வைக்கும் அதிர்ச்சித் தகவல்!

இந்திய விமான போக்குவரத்துத் துறை பெரும் நஷ்டத்தில் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஆனால் இண்டிகோ நிறுவனம் மட்டும் லாபம் ஈட்டி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சமயம் 11 Dec 2025 9:10 pm

பூங்கொத்தோடு காத்திருக்கிறேன்! - ரஜினி ரசிகர் மன்ற தலைவியாக இருந்த பெண் நெகிழ்ச்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே! சந்தர்ப்பங்கள் வரும்போது தடம் மாறாதே.!..  புரிய வைத்தத் திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறி'. ரஜினியின் ஆரம்ப காலப் படங்களில் மிகப்பெரிய ஆச்சரியக் குறியை உண்டாக்கிய படம். மௌன கவிதையான ரஜினியை ரசிக்கும் ரசிகையாக நான் மாறியது.. அப்போதிலிருந்துதான். ரஜினி தன் நீண்ட சினிமா கச்சேரிக்கான (அருமையான)  முன்னுரை எழுதிய படங்களில் மிக முக்கியமான படம் மனிதனிடம் நியாயமாக இருக்க வேண்டிய எந்தக் குணமும் இல்லாத ஒருவன் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற, எல்லா நல்ல குணங்களும் அமையப்பெற்ற ஒருவன் வாழ்க்கையில் வளர்ச்சி குறித்து பெரிதாக கவலைப்படாமலிருக்க... இப்படி இரு துருவமாய் விளங்கும் இருவரையும் நட்பு இணைக்க, சூழ்நிலை பிரித்துப் போடுவதுதான்  படத்தின் ஒன்லைன் . அறியாத வயசுல... நடிகர் ரஜினியை முதன்முதலாக படத்தில் பார்த்து பிரம்மித்தேன்.  கதாபாத்திரத்தை உள்வாங்கி மிக இயல்பா நடித்த அவர் மனதிற்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதை என்னன்னு சொல்றது!!? புவனா ஒரு கேள்விக்குறி இருப்பதிலேயே மிகவும் கஷ்டமான, சலிப்பான வேலைன்னா அது மனிதனாக இருப்பதுதான். ஆனா மனிதனாக மட்டுமல்ல, அழகான மனிதனாக அந்தப் படத்தில் வாழ்ந்து காட்டி  மனதை கொள்ளை கொண்டதால்... படத்தை இன்னிக்கு வரைக்கும் மறக்க முடியவில்லை. கல்லூரிக் காலக்கட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவியா ஆனதற்கு இந்தப் படம் தான் முழு முதற்காரணம் ன்னு சொல்வேன். எல்லாப் படத்திலும் நல்லவனா இருக்கிற சிவக்குமார் இதுல கெட்டவன் ... எல்லாப் படத்திலும் கெட்டவனாக இருக்கிற ரஜினி இதுல நல்லவன்.. என்பது படத்துக்கு மிகப்பெரிய பலம். எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாத மிக நேர்த்தியான திரைக்கதை .  படம் கருப்பு வெள்ளை தான் ஆனாலும் ஒளிப்பதிவு கொள்ளை அழகு . அப்பாவி காதலனாய் அன்பில் காதலிக்காக காத்து நின்று கனிவதாகட்டும் ... காதலியை இழந்து சிறகு உடைந்து நிற்கும் கையறு நிலை ஆகட்டும்... உயிர் காக்கும் நண்பனின் தவறுகளுக்கு தார்மீக துணையாக நின்றாலும் உள்ளே மனம் வெதும்புவதாகட்டும்... 'அண்ணே',' நாகராஜ் அண்ணே' என்று கரம் கூப்பி சிவக்குமாரிடம் தத்துவம் பேசுவதாகட்டும்.. (அண்ணே',' நாகராஜ் அண்ணே 'என்ற வசனம் பின்னாளில் கொடி கட்டி பறந்த ரஜினி யிசத்தின் துவக்கம் ன்னே சொல்லலாம்) சுமித்ராவிடம் ஏக்கமிகுந்த  குரலில் தன் தாபங்களை வெளிப்படுத்தி தவிப்பினை உணர்த்துவதாகட்டும்... படம் முழுக்க ரஜினி  'கதகளி' ஆடுவார். கை விரல்களை அப்படி இப்படின்னு சொடுக்கி வசனம் பேசற ஸ்டைல் 'ச்சோ ஸ்வீட்' ஆரம்பத்தில் அன்புக்காக உருகும் காதலனாய்... காதலியை காப்பாற்ற இயலாத சாதாரண மனிதனாய்... சிவக்குமாரிடம் ஏற்படும் பாசத்தினால் அவர் செய்யும் பாவக்காரியங்களை எடுத்து கூறும் நல்லவனாய்.. அவருக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யும் நண்பனாய்... நடிப்பின் வெவ்வேறு பரிமாணங்களில் வெளுத்து வாங்குவார் ரஜினி இப்படியாக அந்தப் படத்தில் ஆரம்பித்த  அவர் மீதான  காதல் இன்னமும் தொடர்கிறது ... இனியும் தொடரும்... அவரின் தாடி (வேற லெவல் ) பொருத்தம். தன்காதலியின் நினைவுகள் இளமையின் உணர்வுகளை ஒரளவு கட்டுப்படுத்திவைத்திருப்பதையும், ,காலம் அதனை மறக்கடித்து உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுவதையும் சுமித்ராவிடம் சொல்லும் போது, ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும். அண்ணே நாகராஜ் அண்ணே...கடப்பாரையவே முழுங்கிட்டியண்ணே... அண்ணே இதை ஏப்பம் விட்டுட முடியாது. புவனா ஒரு கேள்விக்குறி ஒருகட்டத்துல வயித்தையேகிழிச்சுப்புட்டு பதம் பார்த்துரும். என்று ரஜினி சொல்லும் போது எல்லாம்.... விசில் சத்தத்தால் காது கிழிந்ததை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. (எனக்கு தெரிஞ்சவங்க யாராவது யாருக்கும் தெரியாதுன்னு தவறு செஞ்சா... இந்த வசனம் தான் என் மனசுக்குள்ள வரும்) சுமித்ராவும் ரஜினியும்கோயிலிருந்து வெளியே வர ,சிவகுமாரும் ஜெயாவும் கோயிலுக்குள் நுழைய ,கோயில்ல என்ன வேண்டுதல்ன்னு சிவக்குமாரின் மனைவி ஜெயா ரஜினியிடம் கேட்க? ரஜினி வேணும்ன்னே ' ஒரு பையன் தான் இருக்கான் அடுத்து ஒரு பெண் குழந்தை கொடு'ன்னு வேண்டி கொள்வதற்காக வந்தோம் ன்னு சொல்வார். அதுமட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மகனைப் போல் வளர்க்கும் பையனிடம், டேய் பாபு அங்கிளுக்கு 'டாடா 'சொல்லுடான்னு சிவகுமாரை பார்த்து  சொல்லி நக்கல் அடிப்பார்பாருங்க சான்சே இல்லைங்க... அவருக்கே உரித்தான ஸ்டைல். இந்தக் காட்சிகளுக்கெல்லாம் தியேட்டரில் விசில் பறந்ததை மறக்க முடியாது.  விழியிலே மலர்ந்தது ராஜா என்பார் மந்திரி என்பார் இரண்டு பாடல்களையும் ரஜினிக்காக எஸ்பிபி உருகி உருகிப் பாடி இருப்பார். (நன்றி எஸ் பி பி சார்,) ஆரம்ப கால ரஜினியை ரசிக்க இரண்டு கண்கள் போதாது படம் வெளியாகி 48 வருடங்கள்... ஆனால் என்ன... இன்றைக்கும் என்றைக்கும்  ரஜினி தான் மாஸ். பக்கா மாஸ்.! அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா... உங்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதுதான் என் வாழ்வில் பொக்கிஷத் தருணம் . நிச்சயம் அந்த நாள் வரும்... பூங்கொத்தோடு காத்திருக்கிறேன் . பிரியமான ரசிகை ஆதிரை வேணுகோபால். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்! கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com

விகடன் 11 Dec 2025 9:02 pm

கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை - தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதையடுத்து பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், அடுத்த 3 மாதங்களுக்கான தேர்தல் பணிகள் குறித்தும் சவால்கள் குறித்தும் பேசினோம். திமுக என்ன மாதிரியான இடையூறுகளை கொடுக்கும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம். பனையூர் தவெக அலுவலகம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன் - தவெக நிர்மல் குமார் பதில் தலைவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வோருடன்தான் கூட்டணி. ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லாததால், கூட்டம் நடத்தவே அனுமதி கேட்கிறோம். ஆனால், காவல்துறை மூலம் மற்ற கட்சிகளுக்கு இல்லாதவாறு முட்டுக்கட்டை போடுகின்றனர். ஜனவரி, பிப்ரவரியில்தான் விருப்ப மனு விநியோகமெல்லாம் நடக்கும். கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை. இதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். செந்தில் பாலாஜி கைதின் போது தொட்டுப்பார் சீண்டிப்பார் என முதல்வர் வீடியோ வெளியிட்டார். நேரு விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை. பனையூரில் சி.டி.ஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் திமுகவின் தலைமையின் பெயரை சொல்லி 'Party Fund' எனக் கூறிதான் நேரு பணம் வாங்கியிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதில் என்ன பிரச்னை? பாமக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது பற்றி தலைவர் முடிவெடுப்பார். என்று பேசியிருக்கிறார்.

விகடன் 11 Dec 2025 8:57 pm

டான்ஸ் ஆடத் தெரியாதவர் என்று கிண்டல் செய்த நானே ரஜினி ரசிகை ஆன கதை! - பேரன்புக்கு சொந்தக்காரர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ரஜினிகாந்த் அவர்களின் அதிதீவிர, தீவிர, சாதாரண என்று அனைத்து விதமான ரசிகர்களும் என் உறவு, நட்பு வட்டங்களில் இருக்கிறார்கள். அதிதீவிர ரசிகர்கள், அதாவது ரசிகர் மன்றத்தில் இருப்பது, போஸ்டர் ஓட்டுவது, என்ற செயல்களில் ஈடுபடுபவர்கள். ரஜினியை விளையாட்டுக்கு கூட விட்டுக் கொடுக்காமல் அவரை ரசிப்பதும், நேசிப்பதும் என்றிருக்கும் தீவிர ரசிகர்கள். இதைத் தாண்டி ரஜினியின் நல்ல படங்களை, நகைச்சுவையை, ஸ்டைலை குறை நிறையுடன் ரசிப்பவர்கள். ரஜினிகாந்த் பள்ளி விடுமுறைக்கு துறையூரில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு செல்லும் போது தான் ரஜினி ரசிகர் மன்றம், தீவிர ரசிகர்கள், திரையரங்கு கொண்டாட்டங்கள், அவரின் பெயரைக் கூட உச்சரிக்காமல் எப்போதும் ‘தலைவர்’, ‘தலைவர்’ என்றே சொல்வது போன்றவை எல்லாம் எங்களுக்கு அறிமுகம். அண்ணன்களில் ஒருவர் வெகு தீவிரம். ரஜினியுடன் அவர் வெள்ளை உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் தான் சட்டமிட்டு வைத்திருப்பார்கள். துறையூரில் ரசிகர் மன்ற தலைவராகவும், மன்ற செயல்பாடுகளிலும் தீவிரமாக இருந்தவர். இன்னொரு அண்ணனும் தீவிரமான ரசிகர் தான். இவர்கள் மூலம்தான் ‘முதல் நாள் முதல் காட்சி’ கொண்டாட்டம் எல்லாம் தெரியவந்தது. அப்போது அவர்களை பெரியம்மாவுடன் சேர்ந்து நாங்களும் திட்டியதுண்டு. ‘படம் பார்ப்பதற்காக இப்படி போறீங்களே’, ‘ரசிகர் மன்ற வேலை தான் முக்கியமா’ என்றெல்லாம் பேசியிருக்கிறோம். ரஜினியின் நடிப்பு, நடனத்தை, ‘ரஜினிக்கு டான்ஸ் ஆடவே தெரியல’ அப்படினெல்லாம் விளையாட்டிற்கு கிண்டல் செய்தால், ‘எங்க தலைவர் கஷ்டப்பட்டு எதுவுமே செய்ய வேண்டாம். அவர் வந்து நின்னாலே போதும் எங்களுக்கு.. அவர் காலைக் காட்டும்போதே கைதட்டல் எப்படி இருக்கும்னு தெரியுமா உங்களுக்கு? தலைவரோட பவர் தெரியாம பேசுறீங்க… சின்ன பிள்ளைங்கன்றதனால சும்மா விடுறேன்… இல்லன்னா இப்படி பேசுறதுக்கு நடக்குறதே வேற’ என்றெல்லாம் வம்பு சண்டை நடந்திருக்கிறது. ரஜினிகாந்த் முதுநிலை படிப்பின் போது அறிமுகமான ஒரு தோழனும் அதிதீவிர ரஜினி ரசிகன். ‘எங்க ஊர்ல பட ரிலீஸின் போது தலைவருக்கு போஸ்டர் எல்லாம் ஒட்டுவேன் தெரியுமா?’ என்று சொல்லும் ரகம். இளநிலை படிப்பில் அறிமுகமான ஒரு உற்ற தோழியும் தீவிர ரஜினி ரசிகர். ரஜினியை எந்த நிமிடமும், எந்த விதத்திலும், விளையாட்டுக்கு கூட விட்டுக் கொடுக்காமல், மூச்சு விடாமல் பேசும் ரகம். கல்லூரி காலங்களில், அவ்வப்போது மற்ற தோழிகள் ரஜினியை கிண்டல் செய்து, அவரை லேசாகத் தூண்டி விட்டால் போதும், ரஜினியைப் பற்றிய தகவல்களும், பெருமையும் மழையென பொழியத் துவங்கிவிடும். வேலைப் பார்க்கும் நாட்களிலும் கூட, ஒரு முறை தொலைபேசியில் பேசும்பொழுது ஏதோ கிண்டல் செய்து விட்டேன். அவ்வளவுதான் ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்பது போல, ரஜினி சேனல் ஆன் ஆயிடுச்சு. இடைவெளியில்லாமல், ‘ஜப்பான்ல ரஜினி படம் எப்படி ஓடுச்சு தெரியுமா?’, ‘அந்த ஊர்ல எல்லாரும் எப்படி ரசிச்சாங்க தெரியுமா? மொழியே தெரியாம எப்படி அவரை கொண்டாடுறாங்க தெரியுமா?’ என்று அவ்வளவு புள்ளிவிவரங்கள். கூகுளுக்கே டேட்டா இங்கிருந்துதான் கொடுக்கணும் போலவே என்ற அளவிற்கு பேசியதை சிரித்துக் கொண்டே ரசித்திருக்கிறேன். அவரை ரசிப்பதும், ரசனை தாண்டிய நேசமும் என்று ஒரு தனி விதமான அன்பு, ஒரு உள்ளார்ந்த நேசம் அது.  முத்து படத்தில் ரஜினி இவர்களை எல்லாம் பார்த்தும், இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டதிலும், ரஜினி படத்தை ஒரு முறையாவது முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்ற ஆசை என்னுள் துளிர் விட்டது. ‘சந்திரமுகி’ பட ரிலீஸின் போது சென்னையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ஆசையை தெரிந்த அந்த நண்பன் ‘ஃபர்ஸ்ட் டேக்கு டிக்கெட் வாங்கித் தரவா?’ என்று கேட்ட பொழுது தனியாக, அந்தக் கூட்ட நெரிசலில் செல்ல பயந்து வேண்டாம் என்று விட்டேன்.  பின் திருமணம் முடிந்ததும், என்னுடைய இந்த ஆசையை அறிந்த கணவர் (அவரும் ரஜினி ரசிகர் தான்) 2014, டிசம்பர் 12 ரஜினியின் பிறந்த நாள் அன்று ரிலீஸ் ஆன “லிங்கா” படத்திற்கு அழைத்துச் சென்றார். தம்பி மற்றும் அவன் நண்பனிடம், அவர்களும் வருகிறார்களா என்று கேட்டதற்கு, “முதல் காட்சியில் படமே பார்க்க முடியாது. முழுக்க கரகோஷம் இருந்துகிட்டே இருக்கும். டயலாக் கூட காதுல விழாது. படத்த ரசிக்கவே முடியாது. அதனால நாங்க நைட் ஷோ போகிறோம்” என்று சொல்லிட்டாங்க. இப்படியும் சில ரசிகர்கள். நமக்கு அந்த உற்சாகத்தையும், ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் பார்ப்பது தான் பிரதானம்.  அதனால் உற்சாகமாக நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகும் ஆவலில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கணவருடன் திருச்சி ‘கலையரங்கம்’ திரையரங்கிற்கு சென்றேன். திரையரங்கின் முன் கூடியிருந்த கூட்டமும், மேள சத்தமும், ஆட்டமும், பாட்டமும் சற்று மிரளச் செய்தாலும் கணவருடன் இருக்கும் தைரியத்தில் அந்த கொண்டாட்டங்களை ரசிக்கத் தொடங்கினேன். லிங்கா அப்போது வரை பெண்கள் யாரும் கண்ணில் படவில்லை. திரையரங்கில் எங்களை அழைத்து உள்ளே உட்கார வைத்து விட்டார்கள். உள்ளிருந்து ரசிகர் கொண்டாட்டத்தை, கண்ணாடித் தடுப்பின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. என் தோழி அப்போது அங்கு தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தினமுமே அழைத்து விடும் வழக்கத்தில் அன்றும் அழைக்க ‘நான் எங்கிருக்கிறேன்’ என்று சொன்னதைக் கேட்டு, ஒரே பரவசம். ‘நிஜமாவா சொல்ற’ ன்னு திரும்பத் திரும்ப கேட்டு ஆனந்தப்பட்டு ஒரே உற்சாகம் தான்.  திரையரங்கின் கடைசி வரிசையில் எங்களை அமர வைத்ததால் என்னால் ரசிகர்களின் முழு கொண்டாட்டத்தையும் ஓரளவு காண முடிந்தது. ரஜினி அறிமுகமாகும் பாடல் முழுவதும் எழுந்து ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தார்கள். நிறைய வயதானவர்களையும், அவர்களின் உற்சாகமான ஆர்ப்பரிப்பையும் காணும் போது ஆச்சரியமாக இருந்தது. அமர்ந்த நிலையில் திரையே தெரியாததால் எழுந்து நின்று ரசிகர்களின் கொண்டாட்டத்தை தான் அதிகம் வேடிக்கை பார்த்தேன். இடைவேளையின்போது இன்னும் சில பெண்கள் கண்ணில் பட்டார்கள். ‘ஹப்பா நம்ம மட்டும் இல்லை’ என்று ஒரு நிம்மதி. படம் முடிந்து வெளியில் வந்தால், யாரோ மைக்கை முன்னாடி நீட்டி கருத்தெல்லாம் கேட்டாங்க. வண்டியில் வீடு வந்து சேரும் வரை கூட பொறுக்க முடியாமல், உடனே என் தங்கைக்கு அழைத்து (தங்கையின் கணவரும் ரஜினி ரசிகரே),  “ஹேய் நான் இப்போ எங்க போயிட்டு வரேன்னு சொல்லு பார்க்கலாம்”  என் குரலின் உற்சாகத்தை உணர்ந்து அதுவும் உற்சாகமாக, “சொல்லு… சொல்லு.. நீயே சொல்லிடு” “ ‘லிங்கா’ படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாத்துட்டு வரேன்”  “ஹேய்ய்ய்ய் நிஜமாவா? சூப்பர்.. ஹய்யோ.. இதுங்க(அண்ணன்கள்) கிட்ட சொன்னா திட்டுவாங்களே… நாங்க போனப்ப எங்களை எப்படி திட்டினீங்க… இப்ப நீங்களே போறீங்கன்னு பேசுவாங்களே.. (ஒரு காலத்தில், காலை வேளையிலேயே அண்ணன்கள் படம் பார்க்கப் போவதற்கு அவ்வளவு பேசியிருக்கிறோம்) சரி விடு பார்த்துக்கலாம்.. நீ சொல்லு எப்படி இருந்துச்சுனு” என்று சொல்ல அந்த உற்சாகத்தை விவரித்து கொண்டே வீடு போய் சேர்ந்தேன். லிங்கா மாலை நேர பத்திரிகையில் புகைப்படத்துடன், சொன்ன கருத்தும் வெளிவந்ததைப் பார்த்து என் தோழி, “பாத்தியா.. இதெல்லாம் உனக்கு யாரால கெடச்சது? எங்க தலைவரால.. இந்த பேப்பரைப்  பத்திரமா வச்சுக்கோ” என்று சொல்லி படத்தைப் பற்றி ரசிகர்களைப் பற்றி கேட்டு என்று ஒரே உற்சாகம்தான்.   மாலை எங்கள் ‘அதிதீவிர ரசிகர்’ அண்ணனுக்கு முதலில் அழைத்தேன். இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன் என்று சொன்னவுடன், ஆச்சரியப்பட்டு விவரம் எல்லாம் கேட்டுவிட்டு, இதை உங்க அக்காவுக்கு(பெரிய அக்கா) கூப்பிட்டு சொல்லு என்று சொல்லி வச்சிட்டாங்க. உடனே எங்க அக்காவிற்கு அழைத்து உற்சாகமாக சொன்னால், அது அதிர்ச்சியாகிவிட்டது.  “என்ன சொல்ற?? அந்த கூட்டத்துல எப்படி போயிட்டு வந்த? யாரு உனக்கு டிக்கட் வாங்கி குடுத்தா? உன் வீட்டுக்காரர் எப்படி உன்னை விட்டார்??” “ அவங்க தான் என்னை கூட்டிட்டு போனாங்க”  “ஹய்யோ இந்தப் புள்ள அங்க உக்காந்துகிட்டு என்னென்ன வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கு… அவங்க வீட்டுக்காரர சொல்லணும்” என்று தன் போக்கில் புலம்பி  “சாயந்திரம் தான் அண்ணன திட்டினேன்.. இப்ப நீயும் இந்த வேலை பார்த்து இருக்க..”  “ஏன்? அவங்க வழக்கமா போறது தானே” “நேத்து பைக்ல போகும்போது கீழே விழுந்து காலில் கட்டு போட்டு இருக்கு. அதோட இன்னைக்கு பசங்களோட படம் பாக்க போயிருக்கு.. அதான்… அப்படி என்ன அந்த படத்த இன்னிக்கே பாக்கணும்னு திட்டினேன்..”  ஓஹோ….. ‘உங்க அக்காவுக்கு கால் பண்ணு’ என்று சொன்னதன் பின்னணி இதுதானா என்று புரிந்து, மீண்டும் அவங்களுக்கு கால் செயதவுடனே,  “என்ன வாங்கி முடிச்சிட்டியா?? நான் மட்டும் திட்டு வாங்கினா எப்படி?”  என்று சொல்லி ஒரே சிரிப்பு. சந்தோஷமா திட்டு வாங்குறதுங்கறது இதுதான். ஆனால் அன்று என் அக்கா பயந்தது போல எந்த ஒரு கசப்பான அனுபவமும் ஏற்படவில்லை. பின், அடுத்த அண்ணனுக்கு அழைத்து  “படம் பாத்திட்டியா” என்று கேட்க  “இல்லப்பா.. நைட் ஷோ தான் போறேன்” என்று சோகமாக சொன்னது.  “என்னாது……. படம் பாக்கலையா?? ஹா ஹா ஹா.. ரஜினி ரசிகருக்கு வந்த சோதனை…. ஆனா நான் பாத்துட்டேனே”  “அடப்பாவி.. எப்படி?? எங்கள மட்டும் அப்படி திட்டுனீங்க” என்று தொடங்கி என் தங்கை சொன்ன அதே விதத்தில்… திட்டி முடித்தவுடன்,  “எப்படியோ உனக்கு முன்னாடி நான் பாத்துட்டனே” என்று சொல்லி அதை வம்பு இழுத்தது, என்று அந்த நாளின் நினைவுகள் மறக்க முடியாத சந்தோஷங்கள்.  பெரிய அண்ணன் அங்கு துறையூரில் மற்றவர்களிடமும் இதை சொல்லி, பேப்பரில் வந்த விஷயத்தையும் சொல்ல, அதில் வேறு ஒரு பஞ்சாயத்தாகிவிட்டது. அடுத்த சில தினங்களில் என் பெரியம்மாவை சந்தித்தபோது,  “நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா? தெரு சனமே எங்கிட்ட வந்து கேக்குது.. ஆனா எனக்குத் தெரியவேயில்ல.. ஒரு ஃபோன் பண்ணுனியா நீ படம் பார்த்தேன்னு?”   “அது பெரிம்மா… நான் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும்தான் கால் பண்ணினேன்” என்று சமாளித்ததெல்லாம் சந்தோஷ நினைவுகள்.  “கபாலி”, “காலா”, “எந்திரன் 2.0”, “ஜெயிலர்” போன்ற படங்களையும் முதல் காட்சி பார்த்தேன். ஒரு மாற்றம்.. இந்த படங்களுக்கு, என் மாமாப்பெண், அண்ணன் பெண், மாமாப்பையன்(தீவிர ரஜினி ரசிகர்), அவர் மனைவி என்று கூட்டமாக செல்லும் அளவிற்கு வந்து விட்டோம். ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்.. இப்போதெல்லாம் திரையரங்குகள் சில கண்டிப்பான விதிமுறைகளை பின்பற்றி (மது, புகையிலை, சிகரெட் தவிர்ப்பதை சோதனை செய்து அனுமதி அளிப்பது) பாதுகாப்பாக இருப்பதாலேயே பெண்களாலும் முதல் காட்சிக்கு செல்ல முடிகிறது. கபாலி முதல் முறை இவ்வாறு சேர்ந்து போக கிளம்பிய போது, என் மாமா அவர்கள், மாமாப்பெண்ணிடம்,  “யூ டூ (you too) பா” என்று சிறு அதிர்ச்சியுடன் கேட்டாங்களாம். (ஏன்னா…. எங்க மாமாப்பையன், காலையிலேயே படத்துக்கு போறதுக்கே திட்டுவாங்க..)  இதற்கு என்ன பதில் சொல்லணும்?  “எஸ் பா”, “நோ பா” இந்த மாதிரி ஏதோ ஒன்னு தான சொல்லணும். அதை விட்டுட்டு ஆப்ஷன்லயே இல்லாத பதிலான  “சியாமியும் வருதுப்பா” அப்படின்னு சொன்னுச்சாம்.  அதை என்னிடம் சொல்லி ஒரே சிரிப்பு..  “நானும் படத்துக்கு வர்றத பத்தி உன்னைய மாமா கேட்டாங்களாப்பா?” என்று நான் கேட்டேன். “அப்படி சொல்லவும் தான், வேற எதுவும் சொல்லாம போயிட்டாங்க” ன்னு சொல்லி சிரித்ததெல்லாம் நினைவில் நிற்கும் சந்தோஷச் சித்திரம்.  நான் இந்த முதல் காட்சிகளில், படம் பார்த்ததைவிட, ரஜினியின் ரசிகர்களையே அதிகம் வியந்து பார்த்திருக்கிறேன். படத்துக்கு நடுவில் வரும் கமெண்ட்டுகள், இடைவேளையின் போது காதில் விழும் சிலாகிப்புகள், வயது கருதாமல் எழுந்து நின்று நடனமாடி, ஆர்ப்பரித்து, உற்சாக கூச்சலிட்டு கொண்டாடும் சந்தோஷங்கள், உள்ளார்ந்த உணர்ச்சிவசங்கள், என்று அந்த சந்தோஷங்ளை சிரிப்புடன் வெகுவாக ரசித்தேன். இப்பவே இப்படி இருக்கே… 80, 90 களில் வந்த படங்கள், “பாட்ஷா” படத்திற்கெல்லாம் எவ்வளவு கொண்டாட்டங்கள் இருந்திருக்கும் என்று தோன்றுவதுண்டு.  எங்க பெரிய மாமா “நீயும் படம் பார்க்க போனியாமேப்பா?” என்று என்னிடம் கேட்ட போது, நான் இப்படித்தான் சொன்னேன்.. “அந்த கொண்டாட்டத்தை சந்தோஷ ஆர்ப்பரிப்பை நேர்ல பார்க்கணும் என்று எனக்கு ரொம்ப ஆசை மாமா.. அது ஒரு வித்தியாசமான அனுபவமா, நல்லா இருந்துச்சு.” அது வேற லெவல் வைப்ரேஷன் தான். இந்த ஆர்ப்பரிப்பிலிருந்தும், கொண்டாட்டங்களிலிருந்தும் ஒரு ஆற்றலை உருவாக்க முடியும் என்றால் அது மிகப் பெரிய சக்தியாக இருக்கும் என்று தோன்றியது. நடிகர் ரஜினிகாந்த் இன்றைய காலகட்டத்தில், வலிந்து உருவாக்கப்படும் கூட்டம், புகழ் மற்றும் கொண்டாட்டங்களை காணும் போது, தலைமுறைகள் தாண்டியும், எதிர்பார்ப்பில்லாத, யாரிடமும் நிரூபிக்கும் நிர்பந்தமில்லாத, பாசாங்கில்லாத, அரிதாரம் பூசாத, அலாதி அன்பு கொண்ட கோடானுகோடி ரசிகர்களைப் பெற, “என்ன தவம் செய்தாரோ? என்ன தவம் செய்தாரோ?” என்றே தோன்றுகிறது.  உலகில் எத்தனைப் பேருக்கு, இப்படி அறிமுகமற்ற மக்களிடமிருந்து இவ்வளவு மட்டற்ற அன்பும், மாறாத நேசமும் கிடைத்திருக்கும்?  “என்னோட ராசி நல்ல ராசி!! அது எப்போதும் பெரியவங்க ஆசி!!” ஆம்!! பெரியவர்களின் ஆசியும், எத்தனை உயரத்திற்கு சென்றாலும் மற்றவர்களிடம் நீங்கள் காட்டும் பணிவு கலந்த நேசத்திற்கும், முக்கியமாக, இந்தப் பேரன்பு மற்றும் புகழின் கணத்தை தலைக்கு ஏற்றாத தன்னடக்கத்திற்கும் “என்றுமே ராஜா நீ ரஜினி!!” தான். காலங்கள் தாண்டியும் நிலைக்கும் ரசிகர்களின் அன்பெனும் சாம்ராஜ்ஜியத்தின் “மன்னன்” தான்!! நீண்ட நீண்ட காலம் நீடு வாழ, வேண்டி, வாழ்த்தும் சாதாரண கடைக்கோடி ரசிகையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி சார்!! வாழ்க நலமுடன்!! வாழ்க வளமுடன்!! தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்! கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com

விகடன் 11 Dec 2025 8:52 pm

ராணுவத்தின் முப்படைகளில் சேர வாய்ப்பு; டிகிரி போதும், 451 இடங்கள் - UPSC CDS 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு

பட்டப்படிப்பு முடித்து இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்புகிறவர்களுக்கான வாய்ப்பாக ஒங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு (Combined Defence Services Exam) உள்ளது. யுபிஎஸ்சி மூலம் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான தேர்விற்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.

சமயம் 11 Dec 2025 8:44 pm

சூடான்: விபத்துக்குள்ளான ராணுவ விமானம்!

கிழக்கு சூடானில் தரையிறங்க முயன்றபோது ராணுவ சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இல்யுஷின் இல்-76 ரக சரக்கு விமானம் பாா்ட் சூடான் நகரில் உள்ள ஒஸ்மான் டிக்னா விமானத் தளத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இருந்தாலும், விபத்துக்குள்ளானபோது அந்த விமானத்தில் எத்தனை போ் இருந்தனா் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. சூடானில் […]

அதிரடி 11 Dec 2025 8:30 pm

கோவா தீ விபத்து.. தலைமறைவானவர்கள் தாய்லாந்தில் கைது.. முன்ஜாமின் நிராகரிப்பு!

கோவா தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததை அடுத்து, தாய்லாந்தில் தலைமறைவாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் முன்ஜாமின் கோரிய மனுவையும் டெல்லி நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

சமயம் 11 Dec 2025 8:15 pm

பல இடங்களில் வங்கி அட்டை மோசடி ; பொதுமக்களிடன் உதவி கோரும் பொலிஸார்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கி அட்டை மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக நம்பப்படும், சந்தேகநபரை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். 2 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, பொது மகன் ஒருவரால் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் வீசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு இலட்சம் ரூபா மோசடி பொலனறுவவையை சேர்ந்த பொதுமகன் ஒருவர், களுத்துறை நகரிலுள்ள வங்கி தானியங்கி பணப்பரிமாற்று இயந்திரம் மூலம் பணம் எடுக்கும் போது சந்தேகநபரின் […]

அதிரடி 11 Dec 2025 7:40 pm

சீனாவில் குடியிருப்புக் கட்டடத்தில் பயங்கர தீ! 12 பேர் பலி!

சீனாவில், குவாங்டாங் மாகாணத்தில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர். குவாங்டாங் மாகாணத்தின், சாவோனன் மாவட்டத்தில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டத்தில் நேற்று (டிச. 9) இரவு 9.20 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் ஏராளமான தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி அந்தக் […]

அதிரடி 11 Dec 2025 7:30 pm

அடோப் ஃபோட்டோஷாப், அக்ரோபேட் ChatGPT-யில் இணைக்கிறது

அடோப் ஃபோட்டோஷாப், அடோப் எக்ஸ்பிரஸ் மற்றும் அக்ரோபேட் பயன்பாடுகளை ChatGPT இல் ஒருங்கிணைக்கிறது என்று புதன்கிழமை கூறியது, இது பயனர்கள் படங்களைத் திருத்தவும், கிராபிக்ஸ் வடிவமைக்கவும் மற்றும் OpenAI-க்குச் சொந்தமான சாட்போட்டிற்குள் PDFகளை நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது. இந்த நடவடிக்கை, அன்றாட கருவிகளை உரையாடல் AI தளங்களில் இணைத்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்கு இடையில் மாற வேண்டிய தேவையைக் குறைக்கும் அதே வேளையில், அதிக பயனர்களைப் பயன்படுத்த மென்பொருள் தயாரிப்பாளர்களின் பரந்த உந்துதலை பிரதிபலிக்கிறது. OpenAI உடனான நிதி விதிமுறைகள் குறித்து கருத்து தெரிவிக்க அடோப் மறுத்து. ChatGPT இல் அவற்றைப் பயன்படுத்த Adobe இல் பதிவு செய்ய வேண்டிய புதிய பயனர்களுக்கு அதன் முதன்மையைக் காண்பிப்பதை இந்த ஒருங்கிணைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறியது. இந்த வெளியீடு Adobe இன் பயன்பாடுகளில் கிடைக்கும் பல பிரபலமான அம்சங்களை ChatGPT இன் 800 மில்லியனுக்கும் அதிகமான வாராந்திர செயலில் உள்ள பயனர்களுக்குக் கொண்டு வரும். இது தொழில்முறை வடிவமைப்பு சந்தைகளில் AI- இயக்கப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கான முயற்சிகளை அதிகரிக்கும் போது Adobe இன் வரம்பை விரிவுபடுத்துகிறது. தொடக்கநிலையாளர்கள் மற்றும் திறமையான படைப்பாளிகள் இருவரையும் ஈர்க்கும் வேகமான, அரட்டை அடிப்படையிலான தொடர்புகளுக்கான தேவை அதிகரிக்கும் நேரத்தில் இது Adobe க்கு ஒரு படியாகும். பொதுவான படைப்பு மற்றும் உற்பத்தித்திறன் பணிகளை எளிதாக்கும் நோக்கில், பயனர்கள் ChatGPT-யில் புகைப்படங்களை நன்றாகச் சரிசெய்தல், கிராஃபிக் உருவாக்குதல், வடிவமைப்புகளை அனிமேஷன் செய்தல் அல்லது PDF-ஐச் சுருக்குதல் போன்ற கோரிக்கையைத் தட்டச்சு செய்து, அரட்டை இடைமுகத்தை விட்டு வெளியேறாமல் தொடர்புடைய Adobe கருவியைத் தூண்டலாம் என்று Adobe தெரிவித்துள்ளது. புதன்கிழமை முதல் ChatGPT டெஸ்க்டாப், இணையம் மற்றும் iOS முழுவதும் ChatGPT-க்குள் Photoshop, Acrobat மற்றும் Adobe Express ஆகியவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம். ChatGPT-க்கான Adobe Express ஏற்கனவே Android-இல் நேரலையில் உள்ளது, Android-க்கான Photoshop மற்றும் Acrobat ஆதரவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அக்டோபர் மாத இறுதியில் Adobe நிறுவனம் அதன் வீடியோ மற்றும் பட எடிட்டிங் கருவிகளை மாற்றியமைத்தபோது, ​​பயனர்கள் உரையாடல் AI உதவியாளர்கள் மூலம் பணிகளைச் செய்ய அனுமதிக்கும் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டது.

பதிவு 11 Dec 2025 7:17 pm

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து –உயிரிழந்த யாழ். இளைஞனின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சம்பவத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார், அந்நிலையில் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் , முதல் கட்டமாக குறித்த இளைஞனின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அதிரடி 11 Dec 2025 7:11 pm

யாழில். நிலவும் சீரற்ற கால நிலை –சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தை அண்மித்த நிலையில் வானில் நிலவிய கடுமையான மோக மூட்டத்தால் , சென்னைக்கு மீள திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை , கொழும்பில் இருந்து வடமாகாணத்திற்கான நிவாரண பொதிகளை […]

அதிரடி 11 Dec 2025 7:08 pm

மியான்மாரில் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்: 34 பேர் பலி!

மியான்மாரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவனை மீது நேற்றுப் புதன்கிழமை இரவு மியான்மர் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் மற்றும் 76 பேர் காயமடைந்தனர். அவர்களில் 27 பேரின் நிலை கவலைகிடமாக உள்ளது. க இந்த மருத்துவமனை ரக்கைன் மாநிலத்தில் உள்ள மராக்-யு நகரில் அமைந்துள்ளது. இது அரக்கன் இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பகுதி. நாட்டின் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடும் வலிமையான இனப் படைகளில் ஒன்று அரக்கன் இராணுவம். 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றி உள்நாட்டுப் போரைத் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சமீபத்திய மாதங்களில், இனப் படைகளிடமிருந்து பிரதேசத்தை மீட்டெடுக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் எதிரிகள் மீது குண்டுகளை வீச பாராகிளைடர்களையும் பயன்படுத்தியுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் இந்த மாத இறுதியில் முதல் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில், மியான்மர் இராணுவம் இந்தத் தாக்குதல்கள் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், டெலிகிராமில் உள்ள இராணுவ சார்பு கணக்குகள், இந்த வாரம் நடந்த தாக்குதல்கள் பொதுமக்களை இலக்காகக் கொண்டவை அல்ல என்று கூறுகின்றன. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் என அரக்கன் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கைங் துகா கூறினார். இது பொதுமக்கள் இடங்களை குறிவைத்து பயங்கரவாத இராணுவம் நடத்திய சமீபத்திய கொடூரமான தாக்குதல் என்று அவர் கூறினார். மேலும் பொதுமக்களை குண்டுவீசித் தாக்கியதற்கு இராணுவம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். அரக்கன் இராணுவ சுகாதாரத் துறை, சுமார் 21:00 மணிக்கு (14:30 GMT) நடந்த இந்த தாக்குதலில் 10 நோயாளிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்டதாக நம்பப்படும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கட்டிட வளாகத்தின் சில பகுதிகளில் கூரைகள் காணாமல் போனது. உடைந்த மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தரையில் சிதறிக்கிடக்கும் குப்பைகள் ஆகியவற்றைக் காட்டுகின்றன. இனக்குழுக்களுடன் பல ஆண்டுகளாக நீடித்த இரத்தக்களரி மோதலில் இராணுவ ஆட்சிக்குழு சிக்கித் தவித்து வருகிறது, ஒரு கட்டத்தில் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால் சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து சமீபத்தில் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களின் வருகை நிலைமையை மாற்ற உதவியதாகத் தெரிகிறது. வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கடுமையான குண்டுவீச்சு பிரச்சாரத்தின் மூலம் இராணுவ ஆட்சிக்குழு குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு மத விழாவில் போராட்டம் நடத்திய கூட்டத்தின் மீது இராணுவ மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர் இரண்டு குண்டுகளை வீசியதில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இராணுவ ஆட்சிக்குழுவின் கீழ் சிவில் உரிமைகளும் வியத்தகு முறையில் சுருங்கிவிட்டன. பல்லாயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உரிமைக் குழுக்கள் மதிப்பிடுகின்றன. மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு டிசம்பர் 28 அன்று பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது, இது அரசியல் ஸ்திரத்தன்மைக்கான பாதையாகக் கூறப்படுகிறது. ஆனால் விமர்சகர்கள் இந்தத் தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இருக்காது, மாறாக இராணுவ ஆட்சிக்குழுவிற்கு சட்டபூர்வமான தன்மையின் போர்வையை வழங்கும் என்று கூறுகிறார்கள். மியான்மர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர் டாம் ஆண்ட்ரூஸ் இதை போலி தேர்தல் என்று அழைத்தார். சமீபத்திய வாரங்களில், வாக்களிப்பை சீர்குலைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பொதுமக்களை இராணுவ ஆட்சிக்குழு கைது செய்துள்ளது, இதில் பேஸ்புக்கில் தேர்தல் எதிர்ப்பு செய்திகளை அனுப்பியதாக அதிகாரிகள் கூறிய ஒருவர் உட்பட. தேர்தல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆர்வலர்களைத் தேடுவதாகவும் இராணுவ ஆட்சிக்குழு திங்களன்று கூறியது. இனப் படைகள் மற்றும் பிற எதிர்க்கட்சி குழுக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக உறுதியளித்துள்ளன. மத்திய மியான்மரின் மாக்வே பிராந்தியத்தில் குறைந்தது ஒரு தேர்தல் வேட்பாளரை இராணுவ ஆட்சி எதிர்ப்புக் குழு தடுத்து வைத்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பதிவு 11 Dec 2025 7:08 pm

பலாலிக்கு இன்று மீண்டும் பறந்தது அமெரிக்க விமானப்படை விமானம்

சிறிலங்காவின் வட பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முக்கியமான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக, அமெரிக்க விமானப்படையின் C-130J விமானம் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டது. பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்த விமானத்தில், அத்தியாவசிய உதவிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருந்தன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குஉதவுவதற்காக, சிறிலங்கா விமானப்படைக்கும் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவை சேர்ந்த பங்காளர்களுக்கும் உதவி செய்வதில்

புதினப்பலகை 11 Dec 2025 6:53 pm

டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன்.. இது தான் காரணமா? எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஏன்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் டிசம்பர் 14 ஆம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

சமயம் 11 Dec 2025 6:52 pm

An X First launch: Breaking Barriers, India Today’s 3C Project ushers in an Era of Empathy-Led Candid, Constructive Conversation

New Delhi: At a time of rising polarization and closed echo chambers, 3C aims to bring diverse viewpoints into the mainstream, deepen public understanding and host meaningful, solutions-driven dialogue.At its core, 3C is a platform where people with opposing lived experiences come together for empathy-led, issue-focused conversations. It is not a debate or a shouting match, but a space to listen, share, challenge and seek common ground. In today’s hyper-polarized climate, the goal is not just to amplify voices but to build understanding—bringing real people into discussions on caste, religion, youth crime, digital exposure and more. Disagreements here serve as starting points for synthesis, not division.The first episode premiered last week on X, focusing on one of India’s most debated subjects: Caste Reservation. It brought ground-level perspectives to a wider, younger, digitally active audience.To extend the dialogue, India Today hosted a dedicated X Space with Managing Editor Marya Shakil on 8th December at 9 PM. The session witnessed strong participation, with over 1,000 people tuning in live to share views and challenge assumptions. The recording continued to gain traction with 200+ replays within minutes.During the X Space, Marya said, “If you listen to disagree, not to dismiss, then this India Today Space can rise above noise and shape how India thinks about caste, opportunity and power.” Later that night, the conversation carried forward to her flagship show Newstrack at 10 PM, integrating insights from the digital community into the national broadcast.With The 3C Project, India Today strengthens its commitment to informed public discourse through a blend of broadcast, digital and community-driven formats. Each episode will take up a topic of national relevance, encouraging fact-based, constructive engagement.This is just the beginning—3C will continue to grow as a space where India talks, listens and thinks together.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 6:36 pm

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர்

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காகவே, இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, கடந்த வாரம் சிறிலங்காவுக்கு அமெரிக்கா ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை

புதினப்பலகை 11 Dec 2025 6:35 pm

இரவு பகல் பாராமல் டார்ச்சர்; அதிமுக பிரமுகர் மகள் கொலை –உடற்கூராய்வில் அதிர்ச்சி!

அதிமுக பிரமுகரின் மகள் கொலை சம்பவம் திருப்பம் கண்டுள்ளது. சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுகவை சேர்ந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். பி.இ பட்டதாரியான பாரதி, சங்கர் நகரில் டியூசன் சென்டரில் பணியாற்றி வந்ததால், அங்கேயே தங்கி வந்துள்ளார். அப்போது நாழிக்கல்பட்டியை சேர்ந்த உதயசரண் என்பவர் பாரதியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் […]

அதிரடி 11 Dec 2025 6:30 pm

Rohit Markan named Executive Vice President Asia Pacific for Continental’s Industrial Solutions Business

Mumbai: Continental’s group sector ContiTech has appointed Rohit Markan as the Executive Vice President Industrial Solutions for Asia Pacific (APAC), effective November 17, 2025. He reports directly to Philip Nelles, Executive Board member for ContiTech, and succeeds Hannes Friederichsen, who has retired after many years with the company.Based in Singapore, Markan will oversee industrial operations across key markets including India, China, Australia and New Zealand, Japan, Korea, and Southeast Asia. His mandate includes optimizing organizational structures and processes across product groups and customer industries, while contributing to ContiTech’s strategic direction as part of the newly formed Executive Management Committee, ahead of the group sector’s planned independence in 2026.The APAC business encompasses ContiTech’s industrial offerings made from rubber and plastics, including hoses, conveyor belts, drive belts, and air springs for a diverse range of industries.With over 28 years of leadership experience, Markan has held senior roles spanning Sales, Marketing, Finance, Manufacturing, Project Leadership, Innovation Management, Profit & Loss Management, and Country & Board Management. He has driven multiple transformation initiatives and achieved revenue and profitability growth across industries and geographies.His previous roles include Managing Director of Roquette India, Senior Vice President Sales for Roquette Asia Pacific, Global Marketing Manager for Solar Solutions at Dow Chemicals, and Global Head of Sales for the Pharma Business at Roquette Asia Pacific Pte Ltd.Commenting on the appointment, Philip Nelles said, “Rohit Markan brings a broad portfolio of experience and perspectives from different regions, multiple industries and diverse functions which he gained in various management roles. He is the right person to further develop our industrial business activities in this important region. Rohit has repeatedly demonstrated the ability to drive change while at the same time inspiring his teams. We are delighted to have him on board as we are working together to lead ContiTech into its next chapter as an independent company. I would like to thank Hannes Friedrichsen for all the fruitful years with the company and wish him all the best for the future.” Markan added, “I am delighted to become part of ContiTech, a company with such a long tradition and so much potential. I am eager to bring in my expertise and leadership from past experiences in Asia Pacific, thus making a contribution for harnessing the companies’ potential in one of the most important growth regions for Continental.” Continental, founded in 1871, is a global leader in tires and industrial solutions, generating €39.7 billion in sales in 2024 and employing around 95,000 people across 54 countries. ContiTech, the group’s industrial business sector, provides connected, environmentally friendly, safe, and cross-material solutions across industries including agriculture, rail, road, air, industrial, food, and furniture sectors. ContiTech employs nearly 42,000 people in over 40 countries and reported sales of €6.4 billion in 2024.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 6:27 pm

பாமக போராட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு.. பாமக போடும் கணக்கு என்ன?

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக போராட்டம் நடத்தவுள்ளது. இதில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது 2026 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமா என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

சமயம் 11 Dec 2025 6:17 pm

Mathrubhumi India VKC Kozhikode Half Marathon set to debut on 11th January 2026

Kochi: Mathrubhumi, in association with VKC, has announced the inaugural edition of the Mathrubhumi India VKC Kozhikode Half Marathon, scheduled for 11th January 2026 at the iconic Kozhikode Beach.The half marathon will span a 21.1 km route, showcasing the scenic coastline and vibrant urban charm of Kozhikode. Alongside the flagship race, the event will feature 10K and 5K (fun run) categories, creating opportunities for both professional runners and first-time participants.The marathon aims to foster fitness, unity, and community engagement, serving as a celebration to welcome the new year with endurance, discipline, and collective spirit.[caption id=attachment_2484407 align=alignleft width=195] MV Shreyams Kumar [/caption]Speaking about the event, MV Shreyams Kumar, Managing Director, Mathrubhumi Group, said, “The inaugural edition of the marathon represents a major milestone for the symbolic city. We are excited to create an event which brings together health, heritage, and community pride and celebrates the vibrant cultural energy of Kozhikode.” Registrations for the inaugural edition are now open. Participants can register through the official website: https://www.kozhikodemarathon.in/

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 6:16 pm

Rahul Dravid advocates ‘Pack Review System’ to ensure consumers get full value from edible oil purchases

Bengaluru: Freedom Sunflower Oil, an edible oil brand, has launched a nationwide consumer awareness campaign featuring cricket legend Rahul Dravid, aimed at empowering customers to verify the correct quantity of oil in 1 Litre pouches. The campaign highlights that each pouch should contain 910 gm of edible oil, as mandated by The Ministry of Consumer Affairs, Government of India.The initiative seeks to address ambiguous market practices, where some manufacturers provide pouches that appear to be 1 Litre but contain less oil. To demonstrate this, GEF India—the makers of Freedom Sunflower Oil—joined forces with Mr. Dependable, Rahul Dravid, to compare the weight of oil in various market pouches. Each pack was placed on a weighing scale, revealing that while some competitors’ pouches fell short of 910 gm, Freedom Sunflower Oil consistently met or exceeded the required standard. This effort underscores the importance of adopting the ‘Pack Review System’ (PRS), encouraging consumers to check the weight of oil every time they purchase a pouch.The campaign also promotes simple consumer habits such as reading labels carefully, comparing net quantity with price, and verifying products before purchase, reinforcing honesty and transparency in the market. Rahul Dravid said, “I congratulate GEF India for taking this important initiative to educate and empower consumers by introducing the concept of 'Pack Review System' (PRS) and making customers the third umpire to prevent them from being misled. As aptly put 'Oil should be less in the food and not in the pack'. Only an aware consumer can get it by adopting PRS. [caption id=attachment_2484402 align=alignleft width=200] P Chandra Shekhara [/caption] P Chandra Shekhara Reddy, Senior Vice President - Sales & Marketing, Gemini Edibles & Fats India Ltd, added, “Our aim is to give every family confidence that they are receiving exactly what they pay for. Consumers can confidently trust Freedom for the value they expect. By taking a moment to read the label, checking the quantity, and comparing it with the price, households can make informed decisions and protect their purchases. Simple habits like these encourage honesty in the market and strengthen trust between consumers and brands.” [caption id=attachment_2484403 align=alignright width=200] Chetan Pimpalkhute [/caption] Chetan Pimpalkhute, Marketing Head, Freedom Healthy Cooking Oils, said, “We have always believed that an informed consumer is a protected consumer. We are delighted to introduce the concept of Pack Review System and reach the users through comprehensive digital media, on-ground activities and traditional media advertisements. As a responsible corporate citizen, our objective is to ensure that every household in India adopts the habit to check the quantity of oil in every pack and not get deceived.”

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 6:12 pm

அவர் சொன்னது சரி என்று நினைத்தார்! கம்பீரை சீண்டிய ஷாஹித் அப்ரிடி!

டெல்லி : பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, இந்தியா-தென்னாப்பிரிக்கா T20I தொடருக்கு முன் தனது பழைய எதிரி கவுதம் கம்பீரை மீண்டும் சாடியுள்ளார். கம்பீரின் தலைமை பயிற்சியாளர் பணியை விமர்சித்து, “கவுதம் தனது பணியை தொடங்கியபோது, அவர் சொல்வது எல்லாம் சரி என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் சில நேரங்களுக்குப் பிறகு, நீங்கள் எப்போதும் சரி என்று நிரூபிக்கப்பட்டது இல்லை” என்று அப்ரிடி டெலிகாம் ஏசியா ஸ்போர்ட் நேர்காணலில் கூறினார். இது இருவருக்கும் இடையிலான நீண்டகால மோதலை […]

டினேசுவடு 11 Dec 2025 6:09 pm

ரீஃபண்ட் பணம் உங்களுக்கு வராது.. ஏன் தெரியுமா? இப்படி செஞ்சா உடனே கிடைக்கும்!

வருமான வரி ரீஃபண்ட் பணம் உங்களுக்கு இன்னும் வரவில்லையா? அதற்கான காரணம் இதுதான். உடனே சரிபண்ணுங்க.

சமயம் 11 Dec 2025 5:46 pm

BB Tamil 9 Day 66: ``என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு - முறையிட்ட ஆதிரை

ஆதிரை தொடுத்த வழக்கில் ‘குத்தத்தை ஒப்புக்கறேங்கய்யா’ என்று எஃப்ஜே சொன்னது ஒரு சாமர்த்தியமான டிஃபென்ஸிவ் ஆக்ட். இதன் மூலம் அதிக குப்பைகள் கிளறப்படாது. பெயர் டேமேஜ் ஆகாது. பாரு தொடர்ந்த வழக்கில், தன் பெயர் டேமேஜ் ஆகக்கூடாது என்பதை விடவும் எஃப்ஜேவை பொதுவில் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்கிற பழிவாங்கல் மட்டும்தான் தெரிந்தது. BB Tamil 9 - Day 65 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 65 ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்கிற பாடலைப் போல கம்முவும் பாருவும் அவர்களாக திருந்தினால்தான். இவர்கள் செய்யும் தவறால் மற்றவர்களுக்கு தண்டனை கிடைத்தும் கூட அது குறித்த வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இவர்களுக்கு இல்லை. ‘எக்சர்சைஸ் செய்யும் போது மைக்கை கழற்றி வைக்கலாம்’ என்பதை சாக்காகக் கொண்டு இருவரும் ஜாக்கிங் போகும் போது பேசிக்கொண்டிருக்க அமித் அதைக் கண்டித்து எச்சரிக்கை தந்தார். “டீ, காஃபி சாப்பிட முடியலைன்னு விக்ரம் ரொம்ப அனத்தறான்” என்று கம்மு சொல்ல “அவன் யார் கேக்கறதுக்கு. அவன் கெடக்கறான் கிறுக்குப் பய. வா.. அவன் முன்னாடியே கட்டிப்பிடிச்சு வெறுப்பேத்துவோம்” என்று கெட்ட காரியம் செய்தார் பாரு. வருத்தமும் குற்றவுணர்வும் செய்கிற விஷயமா இது?! “நீங்க நல்லா வருவீங்க” என்று சந்தோஷமாக சாபம் கொடுத்தார் விக்ரம். “மத்தவங்களுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு கதறிட்டுத்தான் இருக்கேன்” என்று பாரு சமாளிக்க “உங்களைப் பார்த்தா அப்படி தெரியலையே?” என்று கிண்டலடித்தார் வியானா. ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?’ - பாரு கம்மு பிடிவாதம் பாரு - கம்மு செய்த தவறால் மற்றவர்களுக்கும் சேர்த்து புரோட்டீன் உணவுகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக ஒரு மீட்டிங் ஆரம்பித்தது. “இவங்க கிட்ட எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் நான் பார்க்கலை” என்று அமித் ஆரம்பிக்க “அது இல்லைன்னு எப்படி சொல்ல முடியும், அழுது காட்டணுமா?” என்று அசட்டுத்தனமாக எதிர்வாதம் வைத்தார் பாரு. அழ வேண்டாம். இனி மேலாவது கம்முவிடம் ரொமான்ஸ் ரகசியம் பேசாமலிருக்கலாம் அல்லவா? தங்ககளின் கிளுகிளுப்பால் மற்றவர்களுக்கு உணவு பறிபோவதைக் குறித்து எந்தவொரு வருத்தமும் அல்லாமல், அதை சாமர்த்தியமாக மறைக்க நினைக்கும் பாருவின் குணாதிசயம் முறைகேடானது. “சரி.. தலயா நான் ஒரு தண்டனை தரேன். நான் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசப் போறதில்ல. மத்தவங்களுக்கும் இது சம்மதமான்னு தெரியணும்” என்று அமித் சொன்னார். “எங்களை ஒதுக்கி வைக்கணும்னு பார்க்கறீங்களா?” என்று முரண்டு பிடித்தார் பாரு. இருவரும் தொடர்ந்து செய்யும் ரொமான்ஸ் அலப்பறைகளுக்கு தண்டனையாக மற்றவர்கள் இவர்களை புறக்கணிப்பது, அறுவைசிகிச்சை போல ஒரு சிறந்த தண்டனையாகத் தெரிந்தாலும் தார்மீக அடிப்படையில் தவறானது. BB Tamil 9 - Day 65 “ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கணும்னு எங்களுக்கு ஆசையில்லை. அப்படியாவது ஏதாவது இம்பாக்ட் கிரியேட் ஆகும்ன்னு பார்க்கறோம்” என்றார் விக்ரம். இந்த ஐடியாவைத் தந்தவரே இவர்தான். “யார் கூடவும் பேசாம இருக்கணும்ன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்ல” என்றார் சுபிக்ஷா. மெஜாரிட்டியான கருத்து ‘இந்த தண்டனை வேண்டாம்’ என்பதாக இருந்ததால் “சரி… வேற தண்டனை தரேன். வீட்டு வேலையாவது செய்வீங்களா?” என்று அமித் கேட்க “அய்யோ.. பாருவை சமையல்ல மட்டும் விட்றாதீங்க” என்று மற்றவர்கள் அலறினார்கள். பாத்ரூம் பணியையே சரியாக செய்யாமல் டபாய்க்கும் பாரு, கூடுதல் பணியை ஏற்றுக் கொள்வாரா என்ன? “வேணுமின்னே நிறைய பாத்திரங்களைப் போடுவாங்க” என்று கம்முவின் சொல்வதின் மூலம் தன்னைப்போலவே மற்றவர்களும் வன்மம் மிக்கவர்கள் என்று நினைக்கிறார். “அப்படின்னா நான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்” என்று அமித் அஹிம்சா முறையை கையில் எடுக்க, ஒருவழியாக பணிந்த பாருவும் கம்முவும் சமையல் தவிர இதர வீட்டு வேலைகளை செய்வதாக அரைமனதாக ஒப்புக் கொண்டார்கள். “எனக்கும் முட்டை வேணும்” என்கிற சுயநல காரணத்தைச் சொன்னார் கம்மு. FJ மீது ஆதிரை தொடுத்த வழக்கு - யார் பக்கம் தவறு? வழக்காடு மன்றம். FJ மீது ஆதிரை தொடுத்த வழக்கு. “எனக்கும் FJ-க்கு லவ் எல்லாம் இல்லை. பிரெண்ட்ஷிப் மாதிரி ஒண்ணு இருந்தது. அவ்வளவுதான். ஆனா நான் வெளியே போயிட்ட பிறகு ‘ஆதிரை என்னை வெச்சு லவ் கன்டென்ட் பண்ண டிரை பண்ணா.. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்’ன்னு FJ சொல்றாரு. ‘மென் கார்டு’ வெச்சு பிளே பண்றாரு. என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு. இதே மாதிரி இன்னொரு பொண்ணு கிட்டயும் பண்ணாரு. என் மேல சொல்லப்பட்டது பொய்ன்னு ப்ரூவ் பண்ணணும்” என்பதுதான் ஆதிரை தந்த வழக்கின் உள்ளடக்கம். ஒரு பார்வையாளராக இந்த விஷயத்தை பிளாஷ்பேக்கில் பார்த்தால் FJ-வும் ஆதிரையும் காதலர்கள் போலத்தான் நடந்து கொண்டார்கள். அவர்களின் சேட்டைகள் அப்படித்தான் இருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் FJ விலகி விட்டார். தன்னால் ஆதிரையின் ஆட்டம் கெடக்கூடாது என்கிற நல்லெண்ணமா, அல்லது தன்னுடைய பெயர் டேமேஜ் ஆகக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வா என்று தெரியவில்லை. BB Tamil 9 - Day 65 இரண்டாவதுதான் காரணம் என்றால், ஆதிரைக்குப் பின்னால் வியானாவிடமும் ஏறத்தாழ அதையேதான் செய்தார் FJ. இந்த நோக்கில் ஆதிரையின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது. எனில் ஆதிரையின் தரப்பில் குற்றமே இல்லையா? ‘இங்க எல்லோருக்குமே சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. அப்படியாகத்தான் FJவுடன் நான் பழகினேன். அது பிரெண்ட்ஷிப்பிற்கு மேல ஒண்ணு” என்கிறார் ஆதிரை. FJ செய்தது குற்றம் என்றால் அதற்கு இடம் தந்த ஆதிரையின் மீது கொஞ்சம் தவறு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு பெண் இப்படி வெளிப்படையாக வழக்கு தொடர முடிவு செய்கிறார் என்றால் அவருடைய தரப்பில் உண்மை இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்த விசாரணையின் மூலம் அவருடைய பெயரும் டேமேஜ் ஆகலாம். விக்ரமின் சாமர்த்தியமான வாதம் - எஸ்கேப் ஆன FJ இந்த வழக்கில் தீவிரமான வாதப் பிரதிவாதங்கள் நடந்தால் அது FJவிற்கு மிகவும் டேமேஜாக அமையும் என்பதை உணர்ந்த வக்கீல் விக்ரம், “நீ மன்னிப்பு கேட்டுடு.. ஆனா ஒரு கண்டிஷன். இந்த விஷயத்தை இனி ஆதிரை பேசக்கூடாது” என்று சாமர்த்தியமான பாயிண்ட்டை ஆலோசனை சொல்ல, அதற்கு FJ-வும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார். ஆனால் நீதிமன்றத்தில் தனது ஓப்பனிங் ஆர்க்யூமென்ட்டை ஆரம்பித்த விக்ரம் “இது தவறான புரிதலில் தொடுக்கப்பட்ட வழக்கு” என்று துவங்கியது சரியானதாகத் தெரியவில்லை. ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’ என்று முடிவு செய்த பிறகு எதற்கு டிஃபென்ஸிவ்? தனது தரப்பை கால் மணி நேரத்திற்கு ஆதிரை நீட்டி முழக்க “என்னம்மா லென்த்தா போயிட்டே இருக்கு” என்று சலித்துக் கொண்டார் நீதிபதி. என்னதான் ஆதிரை தனது குற்றச்சாட்டை நீட்டி முழக்கினாலும் ‘மாஸ்டர் ஒரு ஊத்தப்பம்’ என்கிற காமெடியாக ‘ஒப்புக்கறேன் எஜமான்’ என்று FJ சரண் அடைந்து விட்டார். BB Tamil 9 - Day 65 FJவை வேண்டுமென்றே தப்பிக்கவிட்டாரா அமித்? FJ-வை குறுக்கு விசாரணை செய்ய விரும்பினார் அரேரா. “மன்னிப்பு கேக்கறவங்க எதுக்கு இது தவறான புரிதல்ன்னு ஆரம்பத்துல சொனனாங்க?” என்று அரோ சரியான பாயிண்ட்டை முன் வைத்தார். “அதான் குற்றத்தை ஒத்துக்கிட்டாங்களே.. அப்புறம் எதுக்கு விசாரணை” என்ற அமித் வழக்கை முடித்து வைத்து விட்டார். இன்னொரு நீதிபதியான சுபிக்ஷாவிற்கு இதில் உடன்பாடில்லை. அமித் செய்தது சரியா என்றால், நடைமுறை நோக்கில் சரி என்றுதான் தோன்றுகிறது. ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு விசாரணையை இழுப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். ஆனால் பிக் பாஸ் கோர்ட் என்பது வேறு. இந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் சாட்சியங்களோடு நிகழும் போது FJ-வின் முகமூடி அம்பலமாகும் என்று கணக்கு போட்டு வைத்திருந்த ஆதிரை இதனால் எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்தார். பாருவும் அமித்திடம் தனது ஆட்சேபத்தைச் சொன்னார். BB Tamil 9 - Day 65 இந்த வழக்கில் ஆதிரை வென்றாலும் கூட அவருக்கு திருப்தியில்லை. “எப்படி சிம்பதி கிரியேட் பண்ணி சிம்ப்பிளா தப்பிச்சிட்டான் பார்த்தியா?” என்று மனம் புழுங்கினார். “இந்தப் பிரச்னையை இத்தோட முடிச்சிடுங்க” என்று அரோ பஞ்சாயத்திற்கு வர பிறகு வேறு ஒரு டிராமா நடந்தது. “கோர்ட்ல நிரூபிக்கறதுதான் என் நோக்கம்” என்ற ஆதிரையிடம் “இங்க கூட காமிரா இருக்கு.. வா பேசலாம்” என்று நியாயஸ்தன் போல பேசினார் FJ. ரம்யா வந்து சாட்சியம் சொன்ன பிறகு தடாலென்று பல்டி அடித்து ‘அம்மா சத்தியமா நான் அப்படிப் பண்ணலை’ என்று கெஞ்சுவதுபோல் அனுதாபம் தேடி, மீண்டும் ஆதிரையின் மீது சாய்ந்து கொண்டதும், அதற்கு அவரும் அனுமதித்ததும் என்ன மாதிரியான வழக்கு இது என்று புரியவில்லை. ஆதிரைக்கு உண்மையிலேயே FJ மீது கோபமிருந்தால் இந்தச் சமயத்தில் விலகியிருக்க வேண்டும். அவருக்கு உண்மையிலேயே FJ மீது கோபமா, அல்லது தான் சென்ற பிறகு வியானாவுடன் பழகியதால் ஏற்பட்ட பொசசிவ் கோபமா என்பது புரியவில்லை. FJ மீது பாரு தொடுத்த வழக்கு - உண்மையா, பழிவாங்கலா? அடுத்த வழக்கும் FJ மீதுதான். வழக்கு தொடுத்தவர் பாரு. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அமித்தையும் பாருவையும் இணைத்து FJ தவறாகப் பேசி விட்டாராம். இரண்டு, பாரு இந்த வீட்டில் லவ் கன்டென்ட் மட்டுமே செய்து கொண்டிருக்கிறாராம். இது செல்லாத வழக்கு என்பது வெளிப்படை. எப்படி பிக் பாஸ் அனுமதித்தார் என்று தெரியவில்லை. பாரு சம்பந்தப்பட்டது என்பதால் கச்சா முச்சா நடந்து நிறைய சண்டை நிகழும் என்று எதிர்பார்த்திருக்கலாம். “அமித் கூட பாரு டேட்டிங் போறாங்கன்னு சொன்னது ஒரு நார்மல் ஜோக். அப்ப பாரு கூட சிரிச்சாங்க. அப்புறம் வந்து ‘அந்த மாதிரி பேசாதீங்கன்னு என் கிட்ட தனியா சொன்னாங்க. அப்பவே நான் ஸாரி கேட்டுட்டேன்” என்று FJ சொல்ல “அமித் கிட்ட மன்னிப்பு கேட்ட FJ என் கிட்ட ஸாரி கேட்கவேயில்லை…. என்ற பாரு, BB Tamil 9 - Day 65 இன்னொரு சமயத்தில் ‘FJ என் கிட்ட ஸாரி கேட்ட அப்புறம்’ என்று மாற்றி மாற்றி பேசினார். வக்கீல் சபரி இதை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார். பாரு வழக்கில் இரண்டாவது காரணமான ‘லவ் கன்டென்ட்’ என்பதை ‘ஆமாம்.. நீ அப்படித்தான் பண்றே’ என்று தீர்மானமாக சொன்னார் FJ. ‘அப்படி பண்றது அவங்க இஷ்டம்’என்று நீதிபதி சொல்ல, பாருவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததில் அம்மணிக்கு ஒரே குஷி. தீர்ப்பு முடிந்ததும் பாருவிற்கும் FJ-விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ‘8th std பய’ என்கிற மாதிரி கிண்டலாகப் பேசினார் பாரு. “அவ என் கிட்ட இருந்து வார்த்தைகளை பிடுங்க முயற்சி பண்ணான். நான் தப்பிச்சிட்டேன்” என்று பிறகு சபரியிடம் சொல்லி மகிழ்ந்தார் பாரு. “என் கேஸ்ல எப்படி பண்ணான்.. ஆனா பாரு கேஸ்ல எப்படி பண்ணான் பத்தியா?” என்று இரண்டு வழக்குகளிலும் FJ நடந்து கொண்ட விதத்தை சரியாக சுட்டிக் காட்டினார் ஆதிரை. “உன் வாயாலதாண்டா கெடற” என்று FJ-வை கனி கண்டிக்க “முதல் கேஸ் மாதிரி ரெண்டாவது சீரியஸ் கிடையாது. ஜாலியா பேசினத அந்தம்மா சீரியஸா காட்டறாங்க’ என்றார் FJ. வழக்கு முடிந்தும், தீர்ப்பு சாதகமாக வந்தும் கூட பாருவால் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியவில்லை. FJவிடம் ஒரண்டை இழுத்துக் கொண்டே இருந்தார். “நான் அப்பவே தனியா ஸாரி கேட்டுட்டேன். ஆனா அதை நீ மறைச்சு.. கோர்ட்ல ஸாரி கேட்கணும்ன்னு பிடிவாதம் பிடிச்சே. லவ் கன்டென்ட் பண்றேன்னுதான் சொன்னேன். அது தப்புன்னு சொன்னேனா?” என்று பாருவிடம் மல்லுக்கட்டினார் FJ. BB Tamil 9 - Day 65 FJ வும் பாருவிற்கு நிகராக வாய் பேசுபவர் என்றாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை FJ-வை அவமானப்படுத்தவே பாரு வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது வெளிப்படை. அடுத்த வழக்கு, பாரு அவமதிப்பாக பேசி விட்டார் என்று அரோரா வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில் என்ன நடக்கும் என்பதை இன்று பார்க்கலாம்.

விகடன் 11 Dec 2025 5:44 pm

AB InBev and International Cricket Council forge landmark partnership to elevate cricket fan experiences

Mumbai: The International Cricket Council (ICC) has announced a landmark global partnership with AB InBev (Euronext: ABI) (NYSE: BUD) (MEXBOL: ANB) (JSE: ANH), the world’s leading brewer, appointing the company as the Official Beer Partner for all major ICC tournaments starting in 2026. In India, the partnership will be led by Budweiser 0.0, Budweiser’s no-alcohol beer, while other AB InBev mega brands will activate across Europe and Africa.Through the collaboration, AB InBev aims to enhance fan experiences, offering responsible beer consumption options like Budweiser 0.0, whether attending matches live or enjoying cricket with friends at bars and pubs.[caption id=attachment_2484393 align=alignleft width=271] Sanjog Gupta [/caption] Sanjog Gupta, ICC CEO, said, “Cricket is one of the world’s most loved sports with more than two billion fans and ICC events are its largest platforms for passion, while AB InBev has been at the forefront of creating experiential activations to grow and deepen fandom. This partnership is a natural alliance between organizations striving to elevate moments, create memories and deliver experiences via innovation in avenues for fan engagement. We welcome AB InBev to the ICC’s august list of commercial partners and look forward to co-delivering multi-modal event experiences across our tournaments and amplifying excitement for the sport around the world.” [caption id=attachment_2484392 align=alignright width=183] Marcel Marcondes [/caption] Marcel Marcondes, Global Chief Marketing Officer of AB InBev, added, “Cricket is one of the world’s most popular and fastest-growing sports, and we are excited to connect with fans on this mega platform. Beer is the beverage for socialization and moderation, and our partnership with the ICC provides another occasion for our brands to create unforgettable experiences for consumers everywhere.” The partnership encompasses all major ICC men’s and women’s events through 2027, including the ICC Men’s T20 World Cup 2026 in India & Sri Lanka, ICC Women’s T20 World Cup 2026 in the UK, the inaugural ICC Women’s Champions Trophy 2027 in Sri Lanka, the ICC World Test Championship Final 2027 in England, and the ICC Men’s Cricket World Cup 2027 in South Africa, Zimbabwe, and Namibia.This collaboration represents a strategic alignment of two global leaders, combining cricket’s unparalleled fan engagement with AB InBev’s experiential activations to create memorable, responsible, and celebratory moments for fans worldwide.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 5:44 pm

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைப் போல ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர், கலைஞர் CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிட இயக்கத்தின் முக்கியமான தலைவர். திராவிட கொள்கையை முன்னெடுத்துச் சென்றவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, 'இவ்வுலகில் பல தலைமுறைகள் வந்துபோகும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மாகத்மா காந்தி போன்ற சிலர்தான்' என்று புகழ்ந்தார். அது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் பொருந்தும். தமிழச்சி தங்கபாண்டியன் SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்! கிராமத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றவர். 1957 - 2016 ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தான் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராத தலைவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், இலக்கியம் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றவர். அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல் தலைவர் நீண்ட காலம் ஆட்சியாளராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. என்றார்.

விகடன் 11 Dec 2025 5:37 pm

Private DTH revenue degrowth to moderate to 3–4% amid IPTV push and bundled offerings: Crisil Ratings

Mumbai: Private direct-to-home (DTH) television providers in India are expected to witness a moderated revenue decline of 3–4% in the current fiscal, compared with approximately 5% in the previous year, as operators expand into Internet Protocol television (IPTV) and promote bundled offerings. Rising marketing income and the scaling back of customer acquisition incentives, such as subsidized set-top boxes (STBs), by select players are also expected to support revenue and profitability.An analysis of all private DTH companies in the country, covering around 53 million subscribers as of September 30, 2025, reflects these trends. Subscriber churn continues as more affluent users migrate to over-the-top (OTT) media services, while budget-conscious viewers shift to DD Free Dish. The subscriber base of private DTH providers has declined from 7.2 crore in fiscal 2019 to 6.19 crore by fiscal 2024, slipped a further 9% in fiscal 2025, and is projected to drop below 5.1 crore by the end of the current fiscal.[caption id=attachment_2484387 align=alignleft width=200] Ankit Hakhu [/caption]Says Ankit Hakhu, Director, Crisil Ratings, “Although cord cutting has put pressure on DTH companies, leading to secular revenue degrowth over the past six years, operators are making inroads in new areas such as IPTV to drive bundled services (OTT, broadband, live TV). IPTV services have gained significant traction, with their customer base almost quadrupling to 21.3 lakh as of September 2025 from ~5.7 lakh in fiscal 2024. This has provided significant upselling opportunities to operators. By enabling delivery of both OTT and live TV through broadband without a dish, operators are likely to limit the subscriber churn.” There are pockets of resilience amid challenges to linear TV. In south India, the pace of cord cutting has been limited, with the leading DTH operator managing to increase market share by keeping subscriber numbers largely intact despite industry-wide declines.[caption id=attachment_2484388 align=alignright width=200] Gauri Gupta [/caption]Says Gauri Gupta, Team Leader, Crisil Ratings, “Though the revenue of private DTH players will be impacted by the reduction in subscriber base, this will be partially offset by income from marketing on the player’s own OTT aggregator platforms offered via hybrid boxes. Furthermore, reduction in customer acquisition incentives by select players, through elimination of discounts on STBs for new subscribers, will add to the support.” Margins, which fell from 48% in fiscal 2023 to 45% in fiscal 2025, are expected to remain stable at 44–45% this fiscal due to milder revenue degrowth. Greater consumer stickiness in certain regions, aided by stronger regional content and limited offerings from DD Free Dish, continues to benefit DTH players. Additionally, monthly OTT subscription charges bundled with broadband remain more than twice as expensive as DTH packs, limiting their adoption among value-conscious users.That said, tariff hikes by DTH operators and growing competition from digital alternatives could pose risks to overall TV viewership and will require careful monitoring.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 5:32 pm

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!

உத்தரப்பிரதேசத்தில் வயிற்றுவலி காரணமாக கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் அப்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், அந்த மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் என்றும், அது அங்கீகரிக்கப்படாத கிளினிக் என்றும் அதிர்ச்சிகர உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உயிரிழப்பு முன்னதாக ஃபதே பகதூர் என்பவரின் மனைவி முனிஷ்ரா ராவத்துக்கு டிசம்பர் 5-ம் தேதி கடும் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஃபதே பகதூர் தனது மனைவியை பாராபங்கியில் கியான் பிரகாஷ் மிஸ்ரா, விவேக் மிஸ்ரா ஆகியோரின் ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயா கிளினிக்குக்கு அழைத்துச் சென்றார். அப்போது, கியான் பிரகாஷ் அந்தப் பெண்ணின் வயிற்று வலிக்கு சிறுநீரகக் கற்கள்தான் காரணம் என்றும், அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000 ஆகும் என்றும் கணவரிடம் கூறினார். பின்னர், அதை ரூ.20,000-ஆகக் குறைத்தார். UP: உயர் அதிகாரியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல - பணியிலிருந்த அரசு டாக்டரை கடத்தி சென்ற போலீஸ் அடுத்தநாள் கியான் பிரகாஷ் போதையில் யூடியூப் வீடியோவைப் பார்த்துக்கொண்டே அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் பெண்ணின் வயிற்றில் பல நரம்புகள் வெட்டப்பட்டன. நிறைய காயங்களும் ஏற்பட்டன. இதனால் கடும் வலியால் துடித்த அப்பெண் மறுநாளே பரிதாபமாக உயிரிழந்தார். அதோடு, அந்த மருத்துவர்களும் அவரது குடும்பத்தினரும் அப்பெண்ணை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர், உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க போலீஸார் உடனடியாக அந்த கிளினிக்குக்கு சென்றனர். காவல்துறை கிளினிக்கை போலீஸார் ஆய்வு செய்ததில் அது அங்கீகரிக்கப்படாத கிளினிக் என்றும், அங்கிருந்தவர்கள் போலி மருத்துவர்கள் என்றும் தெரியவந்தது. மறுபக்கம் உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், அந்த போலி கிளினிக்கின் உரிமையாளர்கள் இருவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி அமித் சிங் பதூரியா, ``சம்பவம் பற்றி அறிந்ததும், அந்த அங்கீகாரம் இல்லாத அந்த கிளினிக்கை நாங்கள் ஆய்வு செய்தோம். அது மூடப்பட்டிருந்ததால் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாக இருக்கின்றனர். இருப்பினும், அவர்களை உடனடியாகக் கைது செய்வோம் என்று உறுதியளித்திருக்கிறார். UP: SIR பணிகளால் அழுத்தம்; உயிரை மாய்த்துக்கொண்ட BLO - நடந்தது என்ன?

விகடன் 11 Dec 2025 5:31 pm

விமானப் பயணிகளுக்கு 10,000 ரூபாய் வரை இழப்பீடு.. இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

விமானங்கள் ரத்து மற்றும் நீண்ட நேரம் காத்திருந்ததால் ஏற்பட்ட சிரமம் போன்றவற்று இழப்பீடாக பயணிகளுக்கு 10,000 ரூபாய் வரை வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சமயம் 11 Dec 2025 5:31 pm

அடுத்தடுத்து விவாகரத்து செய்யும் தம்பதிகள்.. கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சி காரணம்

அல்சூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு அலசூரில் வரலாற்று சிறப்புமிக்க சோமேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால் திடீரென்று இந்த கோவில் நிர்வாகம் இனி எங்கள் கோவிலில் திருமணம் நடத்திவைக்கப்படாது என அறிவிப்பு வெளியிட்டது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், எங்கள் கோவிலில் முகூர்த்த நாட்களில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீப […]

அதிரடி 11 Dec 2025 5:30 pm

Pratyush Chandramadhur joins BillCut as Senior Advisor

New Delhi: BillCut, a Loan Portfolio Management fintech platform, has announced the appointment of Pratyush Chandramadhur—Founder of Pranovate, former Chief Business Officer at AuthBridge, and a founding member of Experian India—as its Senior Advisor.BillCut enables consumers to understand and improve their credit health, reduce monthly EMIs, and make smarter borrowing decisions. Its flagship AI-powered debt analyser helps users review their entire debt profile in just three clicks. The platform identifies loans and credit cards carrying higher-than-required interest rates and instantly facilitates refinancing through trusted partners, including L&T Finance, Tata Capital, DMI Finance, and others.With more than 25 years of leadership experience across BFSI and fintech, Pratyush has built and scaled AI/ML-driven products, fraud and identity solutions, and large financial services operations. His work at AuthBridge, Experian, and other institutions has significantly contributed to the evolution of India’s credit, identity, and risk management landscape.[caption id=attachment_2484382 align=alignleft width=200] Tanish Sharma [/caption] “Pratyush joins us at a crucial moment as we build India’s most intelligent credit and loan portfolio management platform,” said Tanish Sharma, Co-founder, BillCut. “His guidance will accelerate our AI-led product roadmap and help us scale BillCut to millions of users with greater precision, speed, and trust.” Expressing his enthusiasm, Pratyush Chandramadhur, Senior Advisor, BillCut, said, “BillCut is addressing one of India’s most critical financial challenges. I’m excited to help shape the next phase of growth as we build smarter AI-driven tools that give users meaningful control over their credit, repayments, and loan portfolio.”

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 5:27 pm

Global ad market prospects upgraded to 8.9% (US$1.19trn) but growth concentrated in Big Tech platforms: WARC Report

Mumbai: The global advertising market is poised to close 2025 with 8.9% growth, reaching US$1.19 trillion, according to the latest WARC Global Advertising Trends: Media’s New Normal report. The revised outlook marks an upgrade of 1.5 percentage points from WARC’s September forecast, fueled by the continued dominance of Big Tech platforms and minimal disruption from global trade tariffs.WARC forecasts further acceleration in the coming years: 2026: Global ad spend expected to rise 9.1% to US$1.30 trillion 2027: A projected 7.9% increase will take total spend to US$1.40 trillion, double that of the pandemic-hit year 2020 and equivalent to US$150 per person globally The report notes that structural shifts, rather than macroeconomic indicators, are now driving global ad growth. [caption id=attachment_2484378 align=alignleft width=200] Alex Brownsell [/caption] Alex Brownsell, Head of Content, WARC Media, commented, “Advertising has broken away from the economic cycle, and behaves in a way that doesn’t feel reflective of the real economy. New money has arrived from digital-native categories, while commerce has redrawn the measured media map, and Big Tech’s self-reinforcing flywheel is harvesting almost all incremental dollars.” Big Tech Tightens Grip: Alphabet, Amazon & Meta to Hit 58.8% Share by 2027The report reveals that Alphabet, Amazon, and Meta will command 56.1% of global ad spend excluding China in 2025—equivalent to US$556.6 billion. Their share is expected to rise to 58.0% in 2026, and 58.8% by 2027, with these platforms absorbing the vast majority of incremental global spend.While emerging platforms such as TikTok and Reddit continue to grow, their scale remains significantly smaller. TikTok is projected to reach US$45.2 billion in ad revenue by 2027—still less than one-fifth of Meta’s projected revenues.The consolidation is driven by Big Tech’s ability to reinvest at unmatched scale, especially in AI-driven optimisation, creative automation and first-party data infrastructure. Meta alone reinvests nearly 30% of its quarterly earnings in R&D. Digital-Native Budgets Fuel Growth Despite Fragile Economic Indicators While real wages stagnate and inflation pressures consumers, digital-first sectors continue to pour billions into measurable media channels such as search, social, and retail media.Retail media now accounts for 14.7% of global ad spend.A WARC survey of 1,093 marketers found that 51% expect to increase brand-building investment next year, despite weak consumer demand. Global Market Outlook: US Leads, India Accelerates United States: Remains the world’s largest ad market with US$421.1bn in 2025 (35.3% of global share), projected to grow 7.0% in 2026 and 6.4% in 2027. China: Set for 6.9% growth in 2025 to US$200.1bn, accelerating to 8.9% in 2026. UK: Now the third-largest global market at US$58.1bn, growing 9.3% in 2025. India: Expected to rise 4.6% in 2025, accelerating to 8.0% in 2026 and 9.7% in 2027. Brazil, Germany, France, Spain, Italy, Japan also show stable multi-year growth driven by global sports events and rising digital investment. A Market Entering a New Era With ad spend increasingly decoupled from economic tides and consolidating within a handful of global platforms, WARC concludes that the industry is moving into a “new normal” defined by AI-enabled ecosystems, measurable media, and digital-native growth engines.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 5:14 pm

Valerie Madon exits McCann as APAC and Singapore Chief Creative amid agency merger

Mumbai: Valerie Madon has stepped down from her role as Chief Creative Officer for Asia Pacific and Singapore at McCann Worldgroup, effective immediately. Moving forward, creative leadership will be fully integrated under the Singapore model led by Daniel Kee, supported by additional Omnicom Advertising talent where appropriate, confirmed Sean Donovan, President, Omnicom Advertising Asia.Madon joined McCann from Meta, where she was Director of Creative Shop for SEA and emerging markets. During her time at McCann, she served as APAC Chief Creative Officer since August 2023, Chief Creative Officer for Southeast Asia from May 2023, and Singapore CCO from March 2025. She led creative campaigns for clients including Mastercard, Ferrero, L’Oral Thailand, and Chick-fil-A Singapore.She also launched several talent initiatives, including the ‘Ambition Collective’, an APAC programme to train and showcase emerging creative talent, and ‘Shape My Portfolio’, a mentorship platform offering one-on-one portfolio reviews from industry leaders.Madon’s departure coincides with the merger of McCann and MullenLowe Singapore under the leadership of Paul Soon, formerly CEO of MullenLowe Singapore, who will continue as the new CEO of McCann Singapore. Gonzalo Olivera will serve as the merged organisation’s president from 1 January, with Brandon Cheung, CEO of McCann Singapore and Southeast Asia, supporting the transition into early 2026.The changes come as Omnicom and IPG streamline their agency networks, consolidating several brands—including DDB, FCB, and MullenLowe—into three global creative networks: BBDO, McCann, and TBWA. Despite consolidation, TBWA’s leadership in Greater China, Singapore, and Malaysia remains unchanged.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 5:08 pm

Pocket FM expands Baahubali universe with original 250+ episode audio series in collaboration with Arka Mediaworks

Mumbai: Pocket FM, an audio series platform, has announced its collaboration with Arka Mediaworks, the creative studio behind S.S. Rajamouli’s iconic Baahubali films, to expand the Baahubali universe with an all-new original audio series. The ambitious project, marking the 10th anniversary of the Baahubali franchise, will feature a fresh storyline set within the epic world of Maahishmathi, spanning over 250 episodes in Hindi, Tamil, and Telugu.Designed to appeal to loyal fans and a new generation of listeners, the series blends cinematic scale with Pocket FM’s immersive audio storytelling, bringing untold stories, unseen conflicts, and the grandeur of Maahishmathi to life with high-quality voice performances, atmospheric sound design, and evocative music.[caption id=attachment_2484370 align=alignleft width=200] Rohan Nayak [/caption] “Baahubali is a cultural milestone that inspired an entire generation, and continues to do so even today. To bring that legacy into the world of audio storytelling is both an honour and a creative challenge we’ve embraced with heart,” said Rohan Nayak, Cofounder and CEO, Pocket FM. “At Pocket FM, we’ve always believed that imagination is the most powerful screen. With Arka Mediaworks, what makes this collaboration special is that we’re expanding the Baahubali universe with a new storyline crafted for this mega audio series where it is creating an experience where you don’t just hear Maahishmathi, you feel it. This partnership marks a defining moment for how India will experience storytelling in the years to come.” [caption id=attachment_2484369 align=alignright width=225] Shobu Yarlagadda [/caption] “Growing the Baahubali universe has always been a deliberate part of our journey, and this collaboration with Pocket FM is another step in that direction. The audio series comes from the same place as the films, a focus on rooted and engaging storytelling. It’s nice to see the world expand into new formats, and I hope listeners enjoy this new chapter,” said Shobu Yarlagadda, Co-founder, Arka Mediaworks. The partnership reinforces Pocket FM’s strategic vision to lead India’s audio entertainment revolution by adapting iconic IPs into large-scale audio experiences. Following the success of Shaktimaan Returns, the Baahubali audio series underscores Pocket FM’s ambition to redefine how India’s greatest fantasy universes are imagined, adapted, and experienced.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 4:53 pm

✈️   மோசமான காலநிலை: சென்னையில் இருந்து வந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது!

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 霧 மூட்டத்தால் திரும்பிய விமானம்: சம்பவம்:… The post ✈️ மோசமான காலநிலை: சென்னையில் இருந்து வந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 4:51 pm

எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை :தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) படிவங்களை சமர்ப்பிக்க இன்றுடன் (டிசம்பர் 11) முடிவடையும் என இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் 3 நாட்கள் அவகாசம் நீட்டித்துள்ளது. இதன்படி SIR படிவங்கள் டிசம்பர் 14 வரை சமர்ப்பிக்கலாம். இந்த நீட்டிப்பு தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிடரிகளுக்கு (அந்தமான், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்வீபம், மத்திய பிரதேசம், […]

டினேசுவடு 11 Dec 2025 4:49 pm

SIR Form பூர்த்தி செய்து கொடுத்து விட்டீர்களா? கூடுதல் அவகாசம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரத் திருத்த படிவத்தை விண்ணப்பித்து வழங்க, இன்றே கடைசி நாள் என்று காலக்கெடு விதித்திருந்த நிலையில், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

சமயம் 11 Dec 2025 4:48 pm

    தீ விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியை ஒருவர் சிகிச்சை பலனின்றி… The post தீ விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 4:45 pm

  வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் உயிரைக் காப்பாற்றிய யாழ் இளைஞனுக்கு நிதியுதவி!

சமீபத்தில் கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியபோது, தனது உயிரைப் பணயம் வைத்து… The post வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் உயிரைக் காப்பாற்றிய யாழ் இளைஞனுக்கு நிதியுதவி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 4:41 pm

SC Questions Parliament’s Power to Enact Online Gaming Ban; Three-Judge Bench to Hear Case in January

Mumbai: The Supreme Court on Thursday (December 11, 2025) briefly turned its attention to a foundational constitutional question: Was Parliament empowered to pass the Promotion and Regulation of Online Gaming Act, 2025, which imposes a sweeping ban on real-money online games, associated banking services, and advertising? Constitutional Competence at the Centre of Dispute The discussion unfolded when Chief Justice D.Y. Chandrachud raised whether online real-money gaming could legally be placed under the category of betting and gambling. If classified as such, the activity would fall under Entry 34 of the State List, placing exclusive legislative authority with the States—not the Union government.The Chief Justice said the matter warrants a full, detailed hearing before a three-judge Bench in January 2026 to determine whether Parliament had acted “beyond its competence” in enacting the 2025 law. Parallel Bench, Multiple Challenges Senior advocates C.A. Sundaram and Arvind Datar, along with advocate Rohini Musa—appearing for online gaming firms—pointed out that another Bench led by Justice J.B. Pardiwala is already scrutinising challenges to both the central law and similar legislations passed by Tamil Nadu, Karnataka and other States. They informed the CJI that the competence of Parliament is also under examination before Justice Pardiwala’s Bench.The gaming companies reiterated their request for an urgent stay on the implementation of the new Act. “People have lost jobs. There is complete uncertainty,” they told the court, highlighting the economic impact of the abrupt ban. Centre Urges Focus on Legislative Purpose, Not Just Power Solicitor General Tushar Mehta countered that the court must look beyond the question of which legislature holds the pen and instead examine the intent behind the Union’s intervention.The government argued that online real-money gaming presents a serious threat, asserting that platforms cannot claim a fundamental right to trade if the activity endangers human lives. According to the Centre, funds generated through such platforms have been linked to money laundering, terror financing vulnerabilities, addictive behaviour, tax evasion, and cross-border illicit flows.Government data shows a sharp rise in outward remittances tied to online gaming, with over ₹5,700 crore flowing out of India in 2023–24, accompanied by widespread violations across the industry. The Risk Framework Behind the 2025 Act Justifying the need for the law, the Centre said the proliferation of online money games has harmed an estimated 45 crore individuals, collectively incurring losses exceeding ₹2,000 crore. The Act, it stated, is designed to curb the “serious risks” posed by these platforms to users, families and national security. “There can be no right to profession or trade at the cost of human lives,” the government maintained, asserting that fatalities linked to online money gaming continue to rise across the country. What Comes Next The Supreme Court’s decision to escalate the matter to a three-judge Bench positions the case as a major constitutional test of federal powers and digital-economy regulation. With parallel challenges underway and businesses seeking urgent relief, the ruling will shape the future of India’s online gaming ecosystem, centre-state legislative boundaries, and the emerging framework governing digital financial risks.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 4:39 pm

Coca-Cola Names Henrique Braun as Next CEO; James Quincey to Become Executive Chairman

Mumbai: In a major leadership transition, The Coca-Cola Company has announced that Executive Vice President and Chief Operating Officer Henrique Braun will assume the role of Chief Executive Officer on March 31, 2026. Braun, 57, has also been nominated for a seat on the company’s board of directors, with his appointment expected to be confirmed at Coca-Cola’s 2026 annual shareholder meeting.The move marks the end of James Quincey’s nine-year tenure as CEO. Quincey, 60, will shift into the position of Executive Chairman, ensuring his continued involvement in shaping the company’s long-term strategy.David Weinberg, Coca-Cola’s lead independent director, praised Quincey’s impact, calling him “a transformative leader” who strengthened the company’s global standing and set a clear strategic course for growth.Weinberg added that Quincey’s new role will enable him to contribute meaningfully to Coca-Cola’s evolution, while expressing confidence in Braun’s ability to accelerate momentum. “Henrique Braun will build on the company’s strong foundation, unlock fresh growth avenues and further reinforce the Coca-Cola system,” he said.The leadership shift positions Coca-Cola for its next phase of expansion, with Braun set to guide the beverage giant through emerging market opportunities and evolving consumer trends.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 4:32 pm

யாழ்ப்பாணம், சங்கானைப் பகுதியில் வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 13 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய… The post appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 4:32 pm