SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

கொல்லப்பட்டதாக இஸ்ரேலும் அமெரிக்காவும்…கவனம் ஈர்க்கும் அலி காமெனியின் புதிய பதிவு

இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்னெடுத்த தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அலி காமெனியின் டுவிட்டர் பதிவு கவனம் ஈர்த்து வருகிறது. போதிய ஆதாரம்ஈரானின் உயர் தலைவர் அலி காமெனியின் குடியிருப்பு வளாகம் மீது 30 குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் அலி காமெனியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் அமைந்துள்ள அவரது குடியிருப்பில் இருந்து இஸ்ரேல் அதிகாரிகள் எப்படி அலி காமெனியின் சடலத்தை மீட்டார்கள் என்பது குறித்த […]

அதிரடி 1 Mar 2026 10:30 pm

மத்திய கிழக்கில் தாக்குதல்கள் ; எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிப்பு

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 20% இற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுமாறு ஈரான் விடுத்த அறிவிப்பால், நேற்றையதினம் (28) முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மோதல் தீவிரமடைந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை மசகு எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 73 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது (இது ஜூலை மாதத்திற்குப் […]

அதிரடி 1 Mar 2026 10:30 pm

ஈரானின் இடைக்காலத் தலைவராக ஆயதுல்லா அலிரேசா அராஃபி

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, நாட்டின் இடைக்காலத் தலைமைப் பொறுப்புகளைக் கவனிக்கும் இடைக்காலத்… The post ஈரானின் இடைக்காலத் தலைவராக ஆயதுல்லா அலிரேசா அராஃபி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Mar 2026 10:24 pm

திருப்பரங்குன்ற விவகாரம்.. பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல்!

திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற வேண்டும் என‌ வலியுறுத்தி உயிரை மாய்த்துக் கொண்ட பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.

சமயம் 1 Mar 2026 9:42 pm

காணாமல் போன மீனவர் சடலமாக!

வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றித் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற தொழிலாளி படகின் இயந்திரத்தில் தூண்டிக் கயிறு சிக்கியுள்ளது. அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளி தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடாத்தி, அவர் தொழிலில் ஈடுபட்ட இடத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் (நடுக்கடலில்) சடலத்தை கண்டுபிடித்து இன்று காலை 10 மணியளவில் கரை சேர்ந்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (23) என்ற ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பதிவு 1 Mar 2026 9:35 pm

இஸ்ரேல் –அமெரிக்கா தாக்குதல்…ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், Hormuz நீரிணை ஊடாக இனி கப்பல்களை அனுமதிப்பதில்லை என ஈரான் அறிவித்துள்ளது. ஏற்றுமதி நிறுத்தம் ஈரானின் இந்த அதிரடி முடிவால் தற்போது பல எண்ணெய் கப்பல் உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் விமானப் படை வரலாற்றிலேயே மிகப்பெரிய தாக்குதல் என குறிப்பிடும் இராணுவ […]

அதிரடி 1 Mar 2026 9:30 pm

பிரிக்கப்படவுள்ள வவுனியாவின் பிரிவுகள்!

வவுனியா மாவட்டத்தில் கிராமஅலுவலர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்ப்படுத்த எல்லை நிர்ணயகுழு பரிந்துரை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அந்தவகையில் பிரதேசசெயலக வாரியாக பிரிக்க ப்படவுள்ள கிராமஅலுவலர் பிரிவுகளின் விபரம். வவுனியா பிரதேசசெயலகம்.. தோணிக்கல் கிராமஅலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (தோணிக்கல் வடக்கு/தெற்கு) பண்டாரிக்குளம் மற்றும் கூமாங்குளம் ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகளை ஒன்றிணைத்து மூன்று கிராம அலுவலர் பிரிவுகள் உருவாக்குதல் (பண்டாரிக்குளம்,கூமாங்குளம்,உக்கிளாங்குளம்) ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல்(ஆசிகுளம் கிழக்கு, ஆசிகுளம் மேற்கு) மகாறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (மகாறம்பைக்குளம்கிழக்கு, மகாறம்பைக்குளம் மேற்கு) பட்டாணிச்சூர் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (வேப்பங்குளம், பட்டாணிச்சூர் புளியங்குளம். செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவு. சூடுவெந்தபிலவு கிராம அலுவலர் பிரிவில் பாவற்குளம் யுனிட்-1 கிராமத்தை பாவற்குளம் யுனிட்-2 கிராம அலுவலர் பிரிவுடன் இணைத்தல் கிறிஸ்தவகுளம் கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள அருவித்தோட்டம்,முசல்குத்தி ஆகிய கிராமங்களினை முகத்தான்குளம் கிராம அலுவலர் பிரிவுடன் இணைத்தல் ஆண்டியா புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் ( ஆண்டியாபுளியங்குளம், மாணிக்கம்பண்ணை) தெற்கு சிங்கள பிரதேச செயலகம் பூமடுவ மற்றும் ஆவாரந்துலாவ கிராம அலுவலர் பிரிவுகளை ஒண்றிணைத்தல். றெக்7 மற்றும் ஏக்கர்400 கிராம அலுவலர் பிரிவுகளை ஒன்றிணைத்தல் ஏக்கர் 20,40,60 மற்றும் பெரிய உலுக்குளம் கிராம அலுவலர் பிரிவுகளை ஒண்றிணைத்தல்.

பதிவு 1 Mar 2026 9:27 pm

மாலைகள் முக்கியம்!

இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கு மட்டுமே மேலதிகசெயலாளர் மற்றும் மாவட்டசெயலாளர் போன்ற 381 உயர்மட்ட முகாமைத்துவ பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென்ற நடைமுறைக்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஆப்படித்துள்ளது. இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த பதவிகளிற்கே இனிமேல் அகில இலங்கை சேவைகளில் பணிபுரியும் எந்த தகுதியுள்ள அதிகாரிகளும் இப்பதவிகள் வகிக்க முடியும் என 2026 பெப்ரவரி 25 ம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுவரை காலமும் தமக்கு தாமே மாவட்ட செயலர் என மாலைகளை அணிவித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட அதிகாரிகளிற்கு ஆப்பாக இச்செய்தி மாறியுள்ளது.

பதிவு 1 Mar 2026 9:10 pm

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எப்போது? எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை!

சென்னையில் வரும் மார்ச் 4 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

சமயம் 1 Mar 2026 8:59 pm

சாவகச்சேரி நகரசபைக்கு பாராட்டு!

அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக சாவகச்சேரி நகர சபையினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்திற்கு யாழ்.ஊடக அமையத்தை முன்னுரிமையாக கொண்ட இலங்கை ஊடக அமைப்புக்கள் பாராட்டுத்தெரிவித்துள்ளன. ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காகவும் அடக்குமுறை சட்டங்களை எதிர்ப்பதற்காகவும் சாவகச்சேரி நகர சபை எடுத்த தைரியமான நடவடிக்கையானது இலங்கையின் ஜனநாயக பெறுமதிகள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான மைல்கல்லை சுட்டிக் காட்டுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை மீளப் பெறவும் வலியுறுத்தி சாவகச்சேரி நகர சபை நிறைவேற்றிய தீர்மானத்தை 'சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு'ஆகிய நாங்கள் மிகுந்த மரியாதையுடன் பாராட்டுகிறோம். கடுமையான அரசியல் அழுத்தங்கள் மற்றும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்க நகர சபை எடுத்த இந்த தீர்மானம் நவீன அரசியல் கலாசாரத்திற்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க முன்மாதிரியாகும். இந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு சில கருத்துக்களை வலியுறுத்த விரும்புகிறது. அடக்குமுறைக்கு எதிரான நிலைப்பாடு: பல தசாப்தங்களாக இலங்கை மக்களை கடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்திய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (Pவுயு) எதிராக சட்டரீதியான மற்றும் நெறிமுறையான நிலைப்பாட்டை எடுப்பது நீதியான சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். ஜனநாயக பொறுப்புணர்வு: மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பவர்களே தவிர, அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்குபவர்கள் அல்ல என்பதை வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தேசிய ஒற்றுமைக்கான செய்தி: வடக்கின் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எடுத்த இந்த நடவடிக்கையானது இலங்கையின் சகல மக்களதும் சுதந்திரம் மற்றும் நீதிக்காக மேற்கொள்ளப்படும் ஒரு வலுவான குரலாகவே நாங்கள் காண்கிறோம். சாவகச்சேரி நகர சபையின் கௌரவ தவிசாளர் உள்ளிட்ட அனைத்து பிரதிநிதிகளும் வெளிப்படுத்திய இந்த துணிச்சலான செயற்பாடு நாட்டின் எதிர்கால ஜனநாயக பயணத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது. அநீதியான, அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக இத்தகைய குரல்கள் எழுப்பப்படுவது, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் சமூகத்திற்கு இன்றியமையாத காரணியென்பதனை நாங்கள் நம்புகிறோம். இந்த பெருமைமிக்க தீர்மானத்திற்கு எமது முழுமையான ஆதரவையும் கௌரவத்தையும்; தெரிவித்துக் கொள்கிறோமென சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பதிவு 1 Mar 2026 8:58 pm

கமேனி படுகொலை...அமெரிக்கா–இஸ்ரேலை மறைமுகமாக சாடிய ரஷ்ய அதிபர் புதின்

ஈரான் தலைவர் கமேனி கொலைக்கு புதின் கடும் கண்டனம் தெரிவித்து, உலக அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

சமயம் 1 Mar 2026 8:41 pm

அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் ; கொல்லப்பட்ட வீரர்கள், ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதலால் […]

அதிரடி 1 Mar 2026 8:30 pm

மத்திய கிழக்கில் போர் பதற்றம் ;அபுதாபியில் விழுந்த ஏவுகணை சிதறல்கள்; ஒருவர் பலி

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அபுதாபியில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றின் மீது ஏவுகணைச் சிதறல்கள் விழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை ஒரு “கோழைத்தனமான செயல்” எனக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு, இதற்குப் பதிலடி கொடுப்பதற்கான முழு உரிமையும் தமக்கு இருப்பதாக எச்சரித்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய வான்படைகள் இணைந்து இயங்கும் ‘அல் […]

அதிரடி 1 Mar 2026 7:30 pm

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் நேற்று(28) யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ் நகரில் மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையடித்த ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடு உடைத்து நான்கரை இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கொள்ளைச் சம்பவம் […]

அதிரடி 1 Mar 2026 7:04 pm

தாக்குதல்களில் கொல்லப்பட்ட அலி கமெனியின் குடும்ப உறுப்பினர்கள்! வெளியான தகவலால் பதற்றம்..

ஈரான் உச்ச தலைவர் அலி கமெனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை தாக்குதல்களில் உயிரிழந்ததாக, இஸ்லாமிய புரட்சிகர காப்பாளர் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் (Fars News Agency) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உச்ச தலைவரின் அலுவலகத்தில் உள்ள “தகவலறிந்த வட்டாரங்கள்” மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஈரான் உச்ச தலைவர் கமெனி மேலும், கமெனியின் மருமகள்களில் ஒருவரும் தாக்குதல்களில் உயிரிழந்ததாகவும் ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கமெனியின் மருமகள் மற்றும் மருமகன் உயிரிழந்ததாக சில […]

அதிரடி 1 Mar 2026 6:30 pm

‘குக்கூ’படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியதா? –காஸ்டிங் ரகசியம் பகிர்ந்த ராஜூ முருகன்

குக்கூ' (Cuckoo) திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது சிவகார்த்திகேயனை நாயகனாகத் தேர்வு செய்ய இயக்குநர் ராஜூ முருகன் முதலில் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அட்டகத்தி தினேஷ் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் பின்னணியை அவர் விளக்கியுள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Mar 2026 6:17 pm

காற்றில் ஊழல் செய்த கட்சி.. எய்ம்ஸ் போன்ற திட்டங்களை முடக்கும் திமுக.. எடப்பாடி பழனிசாமி பேச்சு!

மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் இன்று (மார்ச் 1 ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்தக் கூட்டணியில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இடம்பெற்றனர்.

சமயம் 1 Mar 2026 6:07 pm

கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்

ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஈரான் ராணுவம் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் தலைநகர் டெக்ரான் மீது இன்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருவான கமேனி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிகத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமையில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். கப்பல் மீது தாக்குதல் இத்தலைமைக்கு மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி தலைவராகச் செயல்படுவார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் தலைவராக இருப்பார். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நாட்டை வழிநடத்துவார். 1959 இல் பிறந்த 67 வயதான அயதுல்லா அலிரேசா அராபி ஈரானின் மதகுருக்களில் மூத்த நபராவார். இவர் இடைக்கால தலைமை ஏற்பதற்கு முன்பு, ஒரே நேரத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அவர் ஈரானின் தேசிய இஸ்லாமிய செமினரிகளின் நெட்வொர்க்கிற்குத் தலைமை தாங்குகிறார். கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார் மற்றும் நிபுணர்களின் சபையில் அமர்ந்துள்ளார். இது தவிர ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRGC) தளபதி ஜெனரல் முகமது பக்பூர் சனிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தளபதி ஜெனரலாக அஹ்மத் வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி?

விகடன் 1 Mar 2026 6:06 pm

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-இருவர் கைது

நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக தனியார் அனல் மின் நிலையத்தில் இடம்பெற்று வந்ததாக கூறப்படும் இத்திருட்டு தொடர்பில் உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை அண்மையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி இருந்தார். இதற்கமைய செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை(28) அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸாரை மேலதிக விசாரணைக்கு அழைத்திருந்தனர்.அத்துடன் இச்சம்பவத்துடன் […]

அதிரடி 1 Mar 2026 5:39 pm

மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் டெட்டனேட்டர், துப்பாக்கி பவுடர் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு நாக்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வெடிவிபத்து டெட்டனேட்டர் தயாரிப்பு பிரிவில் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட சத்தம் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்து இருந்தது. விபத்து நடந்தபோது 25 முதல் 30 தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கிக்கொண்டனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் பல மணிநேரமாக மீட்டனர். இது குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ''நாக்பூர் அருகில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் துரதிஷ்டவசமானது. சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரும் நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

விகடன் 1 Mar 2026 5:39 pm

தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே போட்டி.. கடுங்கோன் பாண்டியனாக மோடி.. தே.ஜ. கூட்டணி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு!

மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் இன்று (மார்ச் 1 ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்தக் கூட்டணியில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இடம்பெற்றனர்.

சமயம் 1 Mar 2026 5:35 pm

O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.!-கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்

தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.! -கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல். பாறுக் ஷிஹான் இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கல்முனையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. […]

அதிரடி 1 Mar 2026 5:32 pm

ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் மீது நேற்று ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தனர். இதில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் குறிவைத்து அழிக்கப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அறிவித்தனர். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் ஈரான் வெளியிடாத […]

அதிரடி 1 Mar 2026 5:30 pm

Bala: அவர்தான் என்னை தாயும் தகப்பனுமாய் பார்த்துக் கொள்கிறார் - இயக்குநர் பாலா நெகிழ்ச்சி

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kadhal Reset Repeat ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “விஜய் என்னை குரு என்று சொன்னார். விஜய்தான் எனக்கு குரு. எவ்வளவு கடுமையாக உழைக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்த குரு ஏ.எல். விஜய்தான். அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது, கெட்டதுக்கு பங்கெடுத்து தாயும் தகப்பனுமாய் என்னை அவர் பார்த்துக்கிறார். Director Bala தூங்காமலேயே ஏ.எல். விஜய் வேலை பார்த்துட்டு இருக்கார்” என்றவர், “‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தில் விஜி சந்திரசேகர் அவ்வளவு அற்புதமாக நடிச்சிருப்பாரு. அந்தப் படத்தோட கடைசிக் காட்சியில் இவர் ரத்தத்தைத் துடைச்சிட்டு இருப்பாரு. அந்தக் காட்சியில் கண்களால் அற்புதமாக நடிச்சிருப்பாங்க. எனக்குப் பிடித்த நடிகை ராதிகா மேடம்தான். அவங்களுக்குப் பிறகு எனக்குப் பிடிச்ச நடிகை விஜி சந்திரசேகர்” என்றார்.

விகடன் 1 Mar 2026 5:21 pm

‘டாக்ஸிக்’திரைப்படத்தின் பிரம்மாண்ட சாதனை: தமிழ்நாட்டில் 263 கோடிக்கு விற்பனையான திரையரங்க உரிமைகள்

'டாக்ஸிக்' (Toxic) திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமைகள் இதுவரை இல்லாத அளவாக 263 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ரிலீசுக்கு முன்பே இந்த வணிகம் சினிமா மார்க்கெட்டில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Mar 2026 5:10 pm

வீட்டில் நகை இருந்தாலே போதும்.. அடகு வைத்து பணம் வாங்கிடுவார்கள்.. ஏன் இந்த போக்கு?

நாடு முழுவதும் தங்க நகைகள் அதிகமான அளவில் அடமானம் வைக்கப்படுகின்றன. ஒரே மாதத்தில் ரூ. 24,061 கோடி மதிப்புக்கு தங்க நகைக் கடன்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சமயம் 1 Mar 2026 5:08 pm

SA vs ZIM: ‘வரலாறு படைத்தார் லுங்கு நெகிடி’.. அதிக விக்கெட்களை கைப்பற்றி அசத்தல்: ஜிம்பாப்வே திணறல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 154/7 ரன்களை எடுத்தது. லுங்கி நெகிடி, இப்போட்டியில் ஒரு விக்கெட்டை எடுத்ததன் மூலம், அதிக விக்கெட்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.

சமயம் 1 Mar 2026 4:54 pm

மதுரையில் பிரதமர் மோடி.. ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்.. மக்களுக்கான திட்டங்கள் என்னென்ன?

பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு பயணம் மேற்கொண்டு, இன்று (மார்ச் 1 ஆம் தேதி) ரூ. 4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.

சமயம் 1 Mar 2026 4:51 pm

அலி கமேனியின் இறப்பை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் ஈரானிய மக்கள்

நேற்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, இன்றிரவு ஈரானின் தெஹ்ரான் நகரங்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. பெரும் கொண்டாட்டம்நகருக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் கார் ஹாரன்களை ஒலித்தும், ​​தெருவில் குடியிருப்பாளர்கள் நடனமாடி ஆரவாரம் செய்யும் காட்சிகளும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளன. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் […]

அதிரடி 1 Mar 2026 4:30 pm

சர்வதேசச் சந்தையில் அதிரடி ; மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 67.02 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.87 அமெரிக்க டொலராக நிலவுகிறது. மசகு எண்ணெயைத் தொடர்ந்து, இயற்கை எரிவாயுவின் (Natural […]

அதிரடி 1 Mar 2026 4:20 pm

பரமக்குடி டூ ராமநாதபுரம் 4 வழிச் சாலை: மதுரை ரூட்டில் வெறும் 1.5 மணி நேரம்- NH 87ல் பெரிய கனெக்‌ஷன்!

தென் தமிழகத்தில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 4 வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் பயன்கள் என்னென்ன, எதிர்காலத்தில் எவ்வாறு விரிவாக்கம் செய்யப்படும் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 4:10 pm

திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்- NDA திட்டம் என்ன?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமரின் மதுரை வருகை தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த பின்னணி குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 3:54 pm

காங்கிரஸுக்கு 25 சீட்டு தான்.. கெடுபிடி காட்டும் திமுக.. தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது.. கிரிஷ் சோடங்கர் தகவல்!

தவெக புதிய கட்சி என்றாலும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞர்கள் மத்தியில் அந்த கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார்.

சமயம் 1 Mar 2026 3:51 pm

‘சூர்யகுமாருக்கு அடுத்து’..இந்திய டி20 அணி புது கேப்டன் யார்? 4ஆவது இடம் யாருக்கு? பிசிசிஐ முடிவு!

சூர்யகுமார் யாதவுக்கு அடுத்து, இந்திய டி20 அணிக்கு புதுக் கேப்டன் யார், 4ஆவது இடம் யாருக்கு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சூர்யகுமாரின் 4ஆவது இடத்தை அனுபவ வீரருக்கு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

சமயம் 1 Mar 2026 3:36 pm

தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல்

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக பதபெந்தி அவர்களின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலாளர் […]

அதிரடி 1 Mar 2026 3:36 pm

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து... நாளை தொடங்குகிறது பொதுத்தேர்வு

தமிழகத்தில் நாளை பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்

சமயம் 1 Mar 2026 3:31 pm

மத்திய கிழக்கில் பாதுகாப்பு பதற்றம்; வான்வெளியை மூடிய இஸ்ரேல் மற்றும் ஈரான்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை (28) அதிகாலை ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது வான்வெளியை பொதுமக்கள் விமானப் போக்குவரத்துக்காக மூடியுள்ளது. மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதேவேளை, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், ஈரானும் தனது வான்வெளியை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. வான்வெளி […]

அதிரடி 1 Mar 2026 3:30 pm

Harris Jeyaraj: நான் அறிமுகப்படுத்திய 64 பேரும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள் - ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kadhal Reset Repeat ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத் தேடி வந்தார். 2000-ல் ‘மின்னலே’ திரைப்படம் வெளிவந்தது. சமீபத்தில்கூட படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். ‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று அந்தப் படத்தில் நாயகன் புதியவர். நாயகி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அனைவரும் புதியவர்கள். Harris Jeyaraj இன்று இந்தப் படத்திற்கும் அப்படித்தான். நல்ல கதை மட்டும் இருந்தால், அது அனைவரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கிவிடும். விளம்பரங்கள், பப்ளிசிட்டி என எதுவும் தேவைப்படாது” என்றவர், “இதுவரை நான் 64 பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இன்று அத்தனை பாடகர்களும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். Harris Jayaraj: ``இரு தரப்பு பாடகர்களுக்கு அவமதிப்பு நடக்குது'' - ஹாரிஸ் ஜெயராஜ்

விகடன் 1 Mar 2026 2:56 pm

மூச்சு விட முடியவில்லை; உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் - 'காதல்'பட நடிகை

‘காதல்’, ‘வாத்தியார்’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை காதல் மல்லேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். ‘காதல்’ திரைப்படத்தில் சந்தியாவின் தாயாராக இவர் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துவந்த இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. Kadhal Movie கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கென யாரும் இல்லாததால், திரைத்துறையினரிடம் சிகிச்சைக்கு உதவி கோரி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் மல்லேஸ்வரி. அந்தக் காணொளியில் ‘காதல்’ மல்லேஸ்வரி பேசியதாவது: “என்னை ‘காதல்’ மல்லேஸ்வரி எனச் சினிமாவில் அழைப்பார்கள். 'காதல்' படத்தில் சந்தியா கதாபாத்திரத்தின் தாயாராக நான் நடித்திருந்தேன். இதுவரை நான் தமிழ், தெலுங்கு என 40 படங்களில் நடித்திருக்கிறேன். Kadhal Malleshwari கவுண்டமணி, செந்தில் சாருடனும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு இப்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாப்பாட்டிற்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறேன். அதனால் உங்களால் முடிந்த உதவியை எனக்காகச் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?

விகடன் 1 Mar 2026 2:39 pm

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை.. ரூ.2700 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் - முழு விவரம் இதோ!

புதுச்சேரிக்கு சென்றபிரதமர் நரேந்திர மோடி சுமார் ₹1,571 கோடி மதிப்பிலான 74 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சமயம் 1 Mar 2026 2:34 pm

அன்று சாய்ரா பானு, இன்று சங்கீதா விஜய்: கோலிவுட்டை அதிர வைத்த எதிர்பாரா விவாகரத்துகள்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மனைவியை அடுத்து விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்பாராத இடத்தில் இருந்து விவாகரத்து அறிவிப்பு வந்ததால் சினிமா ரசிகர்கள் ஆடிப் போனார்கள்.

சமயம் 1 Mar 2026 2:31 pm

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; பள்ளி குழந்தைகள் 51 பேர் பலி

தெஹ்ரான் தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஈரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் ஈரானை தாக்கியது. இதுபற்றி மாகாண கவர்னர் முதலில் கூறும்போது, பள்ளி குழந்தைகளின் பலி எண்ணிக்கை 24 என கூறினார். இந்த எண்ணிக்கை 51 ஆக உயர்ந்து உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று […]

அதிரடி 1 Mar 2026 2:30 pm

பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகங்கள்  –  தூதரகப் பணிமனைகள் முற்றுகை – 8போ் உயிாிழப்பு

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் தூதரகப்… The post பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகங்கள் – தூதரகப் பணிமனைகள் முற்றுகை –8போ் உயிாிழப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Mar 2026 2:26 pm

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்..

கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் அறநெறி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் மற்றும் நாகேஸ் என அன்புடன் அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரான கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் வவுனியாவில் உள்ள அறநெறி மண்டபத்தில் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.. வவுனியாவில் வசிக்கும் அறநெறி வகுப்பு […]

அதிரடி 1 Mar 2026 2:10 pm

அயதுல்லா அலி காமேனி உயிரிழப்பை உறுதி செய்த ஈரான் – 40 நாட்கள் துக்கம் அணுசரிப்பு

ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA, கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை

சென்னைஓன்லைனி 1 Mar 2026 2:05 pm

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான 86 வயதான அலி… The post ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடுகிறது. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Mar 2026 2:04 pm

ஐபிஎல் கிரிக்கெட் 2026 –சி.எஸ்.கேவின் புதிய ஜெர்சி அறிமுகம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த உடன், மார்ச் 28-ந்தேதி ஐ.பி.எல். 2026 சீசன் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

சென்னைஓன்லைனி 1 Mar 2026 2:01 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகள்

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார்

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:57 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார்

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:55 pm

பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் உச்ச தலைவரான ஆயத்துல்லா அலி கமேனி , சனிக்கிழமை காலை தனது அலுவலகத்தில் கொல்லப்பட்டார். ஈரானிய தொலைக்காட்சி நாட்டின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. புரட்சிகர காவல்படையின் தளபதி ஜெனரல் முகமது பாக்பூரின் மரணத்தையும் தெஹ்ரான் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 40 ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஒரு உளவுத்துறை வட்டாரமும் இராணுவ வட்டாரமும் சிபிஎஸ் செய்திக்குத் தெரிவித்துள்ளன. ஈரானிய புரட்சிகர காவல்படை பழிவாங்குவதாக உறுதியளித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புக்களை வைத்திருக்கும் 27 தளங்கள் மற்றும் டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய இராணுவ வசதிகள் மீது தாக்குதல்களை நடத்தியதாகக் கூறுகிறது. கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெடிச்சத்தங்கள் தொடர்ந்து கேட்கின்றன.

பதிவு 1 Mar 2026 1:55 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார்

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:54 pm

73 வது பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் –அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:52 pm

நெல்லை சாம்பார்... ஒவ்வொரு வீட்டிலும் தனிச்சுவை - சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் செஃப் தீனா

சமையல் திறனை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான களத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது அவள் விகடன். சக்தி மசாலா வழங்கும் 'சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3' தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார் விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோவை மற்றும் மதுரையைத் தொடர்ந்து திருநெல்வேலியில் இன்று நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்புக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஆர்யாஸில் போட்டி தொடங்கி, நடைபெற்று வருகிறது. போட்டியின் நடுவரான செஃப் தீனா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய தீனா, திருநெல்வேலி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இன்னைக்கு இந்த நிகழ்ச்சிக்குப் புதுசு புதுசா மக்கள் வந்திருக்கீங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கைப்பக்குவம் உண்டு. ஒவ்வொருத்தர் வீட்டிலும் சாம்பார் ஒவ்வொரு கைப்பக்குவத்துல இருக்கும் என்று சிலாகித்துப் பேசினார். திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார் தூத்துக்குடி, கடலூர், சாந்தி நகர், குலவணிகர்புரம், பாளையங்கோட்டை, வி.எம். சத்திரம், செய்துங்கநல்லூர், நரசிங்கநல்லூர், உடையார்பட்டி, சுத்தமல்லி, ரெட்டியார்பட்டி, ஆழ்வார்குளம், ராமையன்பட்டி, குறிச்சி போன்ற திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்ற ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர். பீட்ரூட் பச்சடி, மாங்காய் மோர், சங்குப்பூ சாதம், அன்னாசிப் பழ பச்சடி, கேரட் புட்டிங், கேரட் அமலா பாத், மட்டன் தக்கடி, சுக்கு களி, மூங்கில் அரிசிக் கஞ்சி போன்ற பல்வேறு வகையான உணவுகளை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார் உணவுகளை ருசி பார்த்து செஃப் தீனா மதிப்பெண் வழங்கி வருகிறார். முதல் சுற்றில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள், நேரடி குக்கிங்கில் பங்கேற்பார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?

விகடன் 1 Mar 2026 1:50 pm

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:49 pm

முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று காஷ்மீர் அணி சாதனை!

ரஞ்சி கோப்பை பைனல் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நேற்று நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:47 pm

துபாய் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் –ஒருவர் உயிரிழப்பு

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:45 pm

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; பலர் படுகாயம்

குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலின் காரணமாக பல ஊழியர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், விமான நிலையம் மற்றும் பயணிகளுக்கு சிறிய அளவிலான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் தெரிவித்துள்ளது. குவைத் சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அதிகாரிகள் உடனடியாக சம்பவம் கையாளப்பட்ட இடத்தில் அவசரகால […]

அதிரடி 1 Mar 2026 1:30 pm

⚖️ அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் நாட்டுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது –பழிவாங்கும் படலம்  ஆரம்பம்

நேற்று சனிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 86… The post ⚖️ அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் நாட்டுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது – பழிவாங்கும் படலம் ஆரம்பம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Mar 2026 1:21 pm

யாழில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட கரு தொடர்பில் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக நேற்று (1) பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணை அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6 – 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

அதிரடி 1 Mar 2026 1:06 pm

உக்கடம் பேருந்து நிலையத்தின் டெர்மினல் 1 ரெடி...கோவை மக்கள் ஹேப்பி!

உக்கடம் பேருந்து நிலையத்தின் டெர்மினல் 1 ரெடியாகி உள்ளது. இதன் காரணமாககோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சமயம் 1 Mar 2026 1:06 pm

மத்திய கிழக்குக்கான கட்டுநாயக்க விமான சேவையில் மாற்றம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கி பயணிக்கவிருந்த வானூர்திகள் இன்று (01) மாலை வரை இடைநிறுத்தம்.

அதிரடி 1 Mar 2026 1:05 pm

விஜய், சங்கீதா விவாகரத்தால் இன்ஸ்டாகிராமில் அப்பாவை அன்ஃபாலோ செய்தாரா ஜேசன் சஞ்சய்?

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராமில் தன் அப்பாவை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் என்று பேசப்படுகிறது. மேலும் எக்ஸ் தளத்திலும் அப்பாவை ஜேசன் ஃபாலோ செய்யவில்லை என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

சமயம் 1 Mar 2026 12:55 pm

டி20 உலகக் கோப்பை –இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு

சென்னைஓன்லைனி 1 Mar 2026 12:45 pm

கொல்லப்பட்டாரா ஈரான் உச்சதலைவர் கமேனி? வெளியான படத்தால் வலுக்கும் சந்தேகம்

அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 57 சிறுமிகள் கொல்லப்பட்டனர். கமேனி இன்னும் உயிருடன் இருக்கிறார்… தெஹ்ரானில் ஈரான் உச்சதலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. […]

அதிரடி 1 Mar 2026 12:30 pm

நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.. போரின் நடுவில் சிக்கிய இந்திய வீராங்கனை – பி.வி.சிந்துவின் உருக்கமான பதிவு

இஸ்ரேல் அமெரிக்கா ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவின் உருக்கமான பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.

சமயம் 1 Mar 2026 12:17 pm

ஈரான் போர் பதற்றம்... இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி!

ஈரான் போர் பதற்றத்தால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவுக்கு தள்ளப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமயம் 1 Mar 2026 11:57 am

மோடி மேடையில் கைகோர்க்கும் அன்புமணி ராமதாஸ்… மதுரை மாநாட்டில் பாஜக வியூகம் என்ன?

தமிழக அரசியல் சூழலில் 2026 தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தேர்தலாக மாறவிருக்கிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சொன்னபடி வருகிற தேர்தல் ஒரு வரலாற்று தேர்தல் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

சமயம் 1 Mar 2026 11:54 am

அன்பை லாரியில் அனுப்புகிறோம் - ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பும் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி

நடிகை ராஷ்மிகா மந்தன்னாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் தெலுங்கு மற்றும் கன்னட முறைப்படி நடந்தது. புதுமணத் தம்பதி தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களோடு சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுமணத் தம்பதி நாடு முழுவதும் 22 நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். அவர்கள் லாரிகளில் ஐதராபாத், மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் போன்ற 22 நகரங்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் பிரபலமான 16 கோயில்களில் அன்னதானம் போடவும் ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த நாட்டின் அழகான மக்களாகிய நீங்கள் எப்போதும் எங்கள் பயணங்களிலும், எங்கள் அன்பிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். எங்கள் திருமணத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவது எங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும். இந்தியா எதையுமே இனிப்புகளுடனும் உணவுடனும்தான் கொண்டாடும். எனவே, மார்ச் 1-ஆம் தேதி, எங்கள் வாழ்வின் இந்தப் பெரிய தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக, நாடு முழுவதும் அன்பு மற்றும் இனிப்புகள் நிறைந்த லாரிகளை நாங்கள் அனுப்பி வைக்கிறோம். மேலும், நாடு முழுவதும் உள்ள பல கோயில்களில் அன்னதானம் வழங்க உள்ளோம். உங்கள் அனைவரின் ஆசிகளையும் நாடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். சினிமா துறையைச் சேர்ந்த நண்பர்களுக்காக வரும் 4ம் தேதி ஐதராபாத்தில் இத்தம்பதி பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்து இருக்கின்றனர். இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே.!; விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

விகடன் 1 Mar 2026 11:46 am

த்ரிஷா ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல: அவர் சம்பளம், சொத்துமதிப்பு என்ன?

சுமார் 24 ஆண்டுகளாக ஹீரோயினாக இருந்து வரும் த்ரிஷா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் பற்றி பலரும் கூகுளில் தேடி வருகிறார்கள். த்ரிஷாவின் சம்பளம் எத்தனை கோடி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமயம் 1 Mar 2026 11:45 am

பிரதமர் மோடி வருகை.. மதுரையில் போக்குவரத்து மாற்றம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வர உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 11:30 am

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. இன்று முதல் அமல்.. பொதுமக்கள் கவலை!

மார்ச் 1ஆம் தேதி, இன்று சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பொதுமக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. விலை குறைக்கப்படவில்லை.

சமயம் 1 Mar 2026 11:22 am

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி… வளைகுடா நாடுகளை சிதைக்கும் 4 பிரச்சினைகள்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடர் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் ஈரானை சுற்றி வளைகுடாவில் என்ன நடக்கிறது என்ற பின்னணி குறித்து பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 11:16 am

காந்தக் கண்ணழகி தர்ஷா குப்தா: கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா (Dharsha Gupta) கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது சினிமா மார்க்கெட்டில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Mar 2026 11:12 am

ஓபிஎஸ் வீட்டின் கேட்டில் உள்ள இரட்டை இலை சின்னம்... வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரம்!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் உடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார். திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் உள்ள கேட்டில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது திமுகவில்  சேர்ந்ததையடுத்து கேட்டில் பொறிக்கபட்டிருந்த  இரட்டை இலை சின்னத்தை வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் கார் மேலும் வீட்டின் சுவர்களில் அதிமுகவின் சின்னம் வண்ணங்களில் உள்ள கருப்பு வெள்ளை சிகப்பு  வண்ணத்தில் உள்ள பெயிண்டுகள் அழிக்கப்பட்டு திமுகவின் சின்னத்தில் உள்ள கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களாக மாற்றப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் காரில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் 1 Mar 2026 11:09 am

Rishab Shetty: உன்னிடமுள்ள இவையே என்னை வியக்க வைக்கின்றன! - மனைவி குறித்து நெகிழும் ரிஷப் ஷெட்டி

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், 'காந்தாரா' திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் புகழ் பெற்றவருமான ரிஷப் ஷெட்டி, தனது மனைவி பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரகதியின் சிறுவயது புகைப்படங்கள் முதல், ஒரு தாயாக, ஒரு தொழில்முறை கலைஞராக அவர் பரிணமித்த தருணங்கள் வரை உள்ளடக்கிய ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரிஷப் ஷெட்டி - பிரகதி ஷெட்டி அதில் கன்னடத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ``உன்னிடமுள்ள அபூர்வமான மன உறுதி, தாய்மையின் அன்பு, தொழிலில் காட்டும் கவனம் மற்றும் அனைத்தையும் ஒரே நேரத்தில் கையாளும் விதம் என்னை எப்போதும் வியக்க வைக்கின்றன. இந்த வண்ணமயமான வாழ்க்கையில் ஒரு ஒளியாகத் திகழும் நீ, இன்னும் பல வெற்றிகளையும் புகழையும் பெற வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் பிரகதி! எனத் தெரிவித்துள்ளார். ரிஷப் ஷெட்டி மற்றும் பிரகதி ஷெட்டி இருவரும் ஒரு திரைப்பட விழாவில் சந்தித்து காதல் வயப்பட்டனர். இருப்பினும், அந்தச் சமயத்தில் ரிஷப் ஷெட்டியின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்தது. அதனால் பிரகதியின் குடும்பத்தினர் திருமணத்திற்குத் தயங்கினர். ஆனால், தங்களது காதலில் உறுதியாக இருந்த இந்த ஜோடி, 2017-ல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ரன்வித் என்ற மகனும், ராத்யா என்ற மகளும் உள்ளனர். View this post on Instagram A post shared by Rishab Shetty (@rishabshettyofficial) மென்பொருள் பொறியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரகதி, பின்னர் ஆடை வடிவமைப்பாளராக மாறி ரிஷப் ஷெட்டியின் படங்களுக்குப் பணியாற்றத் தொடங்கினார். சமீபத்தில் 2025-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'காந்தாரா சாப்டர் 1' (Kantara Chapter: 1) படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளுக்கு ரிஷப் ஷெட்டியின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். Rishab shetty: ராஷ்மிகா அறிமுகம்; தேசிய விருது வென்ற கிட்ஸ் படம்! - ரிஷப் ஷெட்டி, சில சம்பவங்கள்

விகடன் 1 Mar 2026 11:08 am

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மீட்பு

கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயாயவத்தை மயானத்திற்கு அருகிலுள்ள உட்பாதை ஒன்றில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான 4 தோட்டாக்களும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த ஆயுதம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கைத்துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயலை மேற்கொள்ளும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் கட்டானை பொலிஸாரும் நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக […]

அதிரடி 1 Mar 2026 11:02 am

கமேனி கொடூர கொலை… காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த இஸ்லாமியர்களால் பரபரப்பு

ஈரான் நாட்டின் உச்ச அரசியல் அதிகாரி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சமயம் 1 Mar 2026 10:52 am

யாழ். மாவட்ட எரிபொருள் நிலையங்களுக்கு இன்று பெற்றோல் விநியோகம்!

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருப்பதால் இன்றைய தினம் (01.03.2026) களஞ்சியத்தினைத் திறந்து எரிபொருள் நிலையங்களுக்குப் பெற்றோல் விநியோகத்தினை மேற்கொள்ளுமாறு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி. எஸ். ராஜகருணாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் இன்று யாழ்.மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிலையங்களுக்குப் பெற்றோல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி 1 Mar 2026 10:51 am

புர்ஜ் கலீபா அருகே டிரோன் தாக்குதல் நடத்திய ஈரான்: வெளியான அதிர்ச்சி தகவல்

துபாய், இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை பெறுவது தங்கள் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதுகிறது. மேலும், அமெரிக்காவும் இதே நிலைப்பாட்டில் உள்ளது. அதேவேளை, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈடுபட அமெரிக்கா முயற்சித்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், ஈரான் மீது […]

அதிரடி 1 Mar 2026 10:30 am

முதல்வர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சி, மகளிர் நலன், மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சி, ஆதிதிராவிட பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு, மீனவர் நலன், தொழிலாளர் நலன், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், இந்து சமய அறநிலையத்துறை திருப்பணிகள், சிறுபான்மையினர் நலன், விவசாயிகள் நலன் போன்ற பல்வேறு துறைகளிலும் இதுவரை இல்லா ‘வகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ஈடிலா வளர்ச்சி ஒன்றிய அரசின் 65-க்கு மேலான விருதுகள் அனைத்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என ஊடகங்களும், பத்திரிகைகளும், சான்றோர்களும் பாராட்டுகின்றன ஒன்றிய அரசு 65-க்கு மேலான விருதுகள் வழங்கி பாராட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பன்முகத் திறன்கள் குறித்து கருதும் வேளையில் அவர் சென்னை மாநகராட்சி மேயராக தமிழ்நாட்டின் அமைச்சராக , துணை முதலமைச்சராக, முதலமைச்சராக அவர்கள் ஆற்றியுள்ள பணிகள் எல்லாம் தமிழ்நாட்டை வளர்த்து தலைநிமிரச் செய்து உயர்த்தியுள்ள சாதகனைகள் எல்லாம் மணிமாலைகள் போல் தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுக்கின்றன. மாநகராட்சி மேயராக நிர்வாகச் சிறப்பு சென்னைமாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்று மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தினார். மாநகராட்சித் தரத்தை மேம்படுத்தினார். போக்குவரத்து நெரிசல்கைளை போக்கிட இந்தியாவில் எந்தவொரு மாநகராட்சியும் செய்திடாத வகையில் 10 சாலை மேம்பாலங்களை அமைத்தார். உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என புகழ்பெற்ற சென்னை கடற்கரை அழகுப்படுத்தினார்.சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் பூங்காக்களை அமைத்தார் சிங்காரச் சென்னை முழக்கத்தை வைத்து சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை அமர்த்தி சென்னை மாநகரின் தூய்மையை மேம்படுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சராக 2006- 2011 ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ளாட்சி நிறுவனங்களின் சிறப்பான பணிகளை ஊக்கப்படுத்தினார். சாதி ஆதிக்கம் காரணமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதலிய கிராமங்களில் மக்களைச் சந்தித்து நல்லிணக்கத்தை உருவாக்கி உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி சிறப்பான ஜனநாயகவாதியாக உருவெடுத்தார். இராமநாதபுரம் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக திருச்சி அருகே காவிரி நீரை எடுத்து இராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் வகுத்து மூன்றாண்டுகளில் முடிய வேண்டிய பணிகளை இரண்டாண்டுகளில் முடித்து பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றார். அதுபோல ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பின் தலைவரை ஜப்பான் சென்று சந்தித்து கடன் பெற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை நிறைவேற செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக நிர்வாகத் திறன் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வருவாய் ஈட்டமுடியாத நிலையில் வாழ்ந்து குடும்ப கடமைகளே வாழ்வு என கொண்ட மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றி 1,30,69,000 மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். இன்ப அதிர்ச்சியாக 5000 ரூபாய் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க செய்துள்ளார். உயர்கல்வியைத் தொடர முடியாத ஏழை இளைஞர்களையும் மகளிர்களையும் ஊக்கப்படுத்தி கல்லூரி படிப்பை தொடர்ந்திட மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தையும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் செயல்படுத்தினார். பசியோடு பள்ளி வரும் குழந்தைகளின் பசிபோக்கி படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடச் செய்திட காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றி ஏறத்தாழ 20 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உட்கொள்ளச் செய்தார். இத்திட்டம் இங்கிலாந்து, கனடா நாடுகளிலும் இந்தியாவில் ஒடிசா, பஞ்சாப், பாண்டிச்சேரி, கர்நாடகா முதலிய மாநிலங்களிலும் பின்பற்றப்படுகின்றன. படிப்புக்கும் வேலையில் சேருவதற்கு ஏற்ற திறனுக்கும் இருந்த இடைவெளியை போக்கிட நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி திறன் பயிற்சிகள் வழங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க செய்தார். 49 இலட்சம் மாணவர்களுக்கும் 1.17 இலட்சம் கல்லூரி பேராசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2.55 கோடி பேருக்கு முதல்முறை மருத்துவச் சேவைகளும் 4.75 கோடி பேருக்கு தொடர் சேவைகளும் வழங்கி தொற்றா நோய்கள் பரவாமல் மக்கள் உயிர்களை காத்தார். இத்திட்டத்தை பாராட்டி ஜக்கிய நாடுகள் அவையே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டியது. தொழில் வளர்ச்சி 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சிக் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட வேண்டும் என்னும் உறுதியோடு பல தொழில் மேம்பாட்டாளர்கள் மாநாடு நடத்தி மேற்கொண்ட 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ 12.37 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு – 36 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு வகை செய்துள்ளார். 2021-க்கு பின் 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்களை உருவாக்கி தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மகத்தான சேவை செய்துள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 21 தளங்களுடன் டைடல் பூங்காவை உருவாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேலும் பல டைடல் பூங்காக்களை உருவாக்கியுள்ளார்.. புத்தாக்கத் தொழில்கள் 4 ஆண்டு காலத்தில் 10,630 புத்தாக்கத் தொழில்களை உருவாக்கி அவற்றுள் 50 சதவீதத்திற்கு மேலான தொழில்கள் மகளிரால் தொடங்கப்பட்டவை என்னும் வரலாற்று புதுமையை நிகழ்த்தியுள்ளார். சமூகநீதி நோக்குடன் காலம் காலமாக தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் குடும்ப வாழ்வு சிறக்கவும் செழிக்கவும் அவர்கள் சுயமாக தொழில் தொடங்கிட 35 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கி எந்திரங்கள் வாங்கி சுய தொழில் புரிந்திட வழி வகுத்தார். தாயுமானவர் திட்டம் முதியோர் நலன் காத்திட 28 அன்புச் சோலை மையங்களை அமைத்துள்ளார். 65 வயதுக்கு மேற்பட்ட 27,40,703 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். விளையாட்டுத்துறை வளர்ச்சி மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒரு திருவிழாவாக நடத்தி உலகப் புகழ் பெற்றது தமிழ்நாடு. 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 70 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 299 விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்பட 6,689 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.215.78 கோடி உயரிய ஊக்கத் தொகை. இந்தியாவிலேயே முதன்முதலாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைகள். இதுவரை வரலாற்றில் இல்லா வகையில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் இளைஞர்கள் இளநங்கையரிடம் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்காக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் | தாயுமானவர் திட்டம் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் 1000 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு த் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்தி சாலை வசதிகள் மின்சார வசதி முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு வீடுகள் சாலை வசதிகள் மின்வசதிகள் முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் தொல்குடித் திட்டம். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தொழில் தொடங்க முன்வரும் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 35 சதவீத மூலதன மானியத்துடன் வங்கிக்கடனுக்கு 6 சதவீத வட்டி மானியமும் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. தாயுமானவர் திட்டம் முதியோர் நலன் காத்திட 28 அன்புச் சோலை மையங்களை அமைத்துள்ளார். 65 வயதுக்கு மேற்பட்ட 27,40,703 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். விளையாட்டுத்துறை வளர்ச்சி மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒரு திருவிழாவாக நடத்தி உலகப் புகழ் பெற்றது தமிழ்நாடு. 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 70 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 299 விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்பட 6,689 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.215.78 கோடி உயரிய ஊக்கத் தொகை. இந்தியாவிலேயே முதன்முதலாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைகள். இதுவரை வரலாற்றில் இல்லா வகையில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் இளைஞர்கள் இளநங்கையரிடம் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்காக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. நேப்பியர் பாலம் செஸ் தீம் ஓவியம் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் 1000 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு த் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்தி சாலை வசதிகள் மின்சார வசதி முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு வீடுகள் சாலை வசதிகள் மின்வசதிகள் முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் தொல்குடித் திட்டம். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தொழில் தொடங்க முன்வரும் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 35 சதவீத மூலதன மானியத்துடன் வங்கிக்கடனுக்கு 6 சதவீத வட்டி மானியமும் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. தமிழ் வளர்ச்சி அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடி இந்தியாவிலேயே முதலாவதான அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை கடல் மீது 37 கோடி ரூபாய் செலவில் நிர்மாணித்தார். நாட்டு விடுதலைக்காகவும் மொழிக்காகவும் பாடுபட்ட தியாகிகளுக்கும் வீர வேந்தர்களுக்கும் வேலு நாச்சியார் உள்ளிட்ட பல வீரங்கனைகளுக்கும் சிலைகளையும் நினைவு மண்டபங்களையும் அமைத்தார். சங்க இலக்கியம் முதலான நூல்களை அயல் மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிடுதல் முதலான தமிழ் பரப்பும் பணிகளை மேற்கொள்கிறார். மு.க.ஸ்டாலின் விவசாயிகள் விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தந்துள்ளார். மழை வெள்ளக் காலங்களில் ஏற்பட்ட பயிச் சேதங்களுக்கு இழப்பீடு தந்துள்ளார். பாசன வசதிகள் சிறப்பாக நடைபெற 2 இலட்சம் விவசாய பம்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். பாசன வசதி தடையின்றி நடைபெற 121 தடுப்பணைகள் 101 அணைக்கட்டுகள் கட்டியுள்ளார். அரசு ஊழியர் – ஆசிரியர் நலன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றியுள்ளார். ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணமாக்கும் வசதியினை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார்,மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்கள் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார். அறநிலையத்துறை 4000-க்கு மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழக்கு விழாக்கள். 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு. சென்னையில் ஹஜ் இல்லம் தொன்மையான தேவாலயங்கள் புதுப்பிப்பு. உள்ளாட்சி அமைப்புகளில் 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமனம். நெடுஞ்சாலைத்துறை மூலம் 24,774 கிமீ நீளச் சாலைகள் 180 உயர்மட்ட பாலங்கள் இப்படி பல்வகையிலும் திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாடு இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக விளங்குகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவின் மிகச் சிறந்த முதலமைச்சர் என பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பல அரசியல் தலைவர்களும் போற்றுகின்றனர்.

விகடன் 1 Mar 2026 10:15 am

வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு சிறிலங்கா அனுமதியா?

சிறிலங்கா வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, சிறிலங்கா விமானப்படை நிராகரித்துள்ளது. ஈரானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையிலும், உள்ளூரில் வான்வழி நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையிலும், வெளிநாட்டு விமானங்கள் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின. இதனை நிராகரித்துள்ளசிறிலங்கா விமானப்படை , உள்ளூரில் விமான இயக்கங்களில்

புதினப்பலகை 1 Mar 2026 10:07 am

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்: மமிதா பைஜுவுடன் இணையும் புதிய புராஜெக்ட்?

நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது முதல் தயாரிப்பில் நடிகை மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Mar 2026 10:02 am

IND vs WI Preview: ‘இந்திய அணிக்கு’.. சவால்விடும் 3 மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள்: சாம்சனுக்கு காத்திருக்கும் ஆபத்து!

இந்திய அணி வீரர்களுக்கு, மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த மூன்று பௌலர்கள் சவால் அளிப்பார்கள் எனக் கருதப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு ஜேசன் கோல்டர் பெரிய சவாலாக இருப்பார் எனக் கருதப்படுகிறது.

சமயம் 1 Mar 2026 10:01 am

ட்ரம்பின் சிறப்பு தூதுவர் செர்ஜிஜோ கோர் விரைவில் சிறிலங்கா பயணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்பு பிரதிநிதி மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவர் செர்ஜிஜோ கோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியப் பயணத்தின் போது, ​​செர்ஜியோ கோரை சந்தித்திருந்தார். முன்னதாக, கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற நியூயோர்க்கிற்குச் சென்ற போது, ​​ சிறிலங்கா அதிபர் செர்ஜியோ கோரையும்

புதினப்பலகை 1 Mar 2026 9:54 am

குமார ஜெயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தயாரிக்க உத்தரவு

சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பத்திரங்களைத் தயாரிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. குமார ஜெயக்கொடி 2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது, ​​நிதி முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதுதொடர்பாகஅமைச்சர்குமார ஜெயக்கொடி தனது சட்டவாளர் மூலம் எழுத்துபூர்வ சமர்ப்பணங்களை சமர்ப்பிக்க அனுமதி கோரியிருந்தார். அதற்கு ஆணைக்குழு

புதினப்பலகை 1 Mar 2026 9:39 am

IND vs WI: ‘மழையால் ஆட்டம் ரத்தாகுமா?’.. வானிலை நிலவரம் என்ன? ரத்தானால் என்ன நடக்கும்? விபரம் இதோ!

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சூப்பர் 8 ஆட்டம் மழை காரணமாக ரத்தானால், என்ன நடக்கும்? இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு எப்படி? அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 9:35 am

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா..? நெதன்யாகு வெளியிட்ட தகவலால் அதிகரிக்கும் பதற்றம்

தெஹ்ரான், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் […]

அதிரடி 1 Mar 2026 9:30 am

சுரேஷ் சாலே கைதும் ஆசாத் மௌலானாவின் குற்றச்சாட்டும்

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) தலைவரும், முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணியக தலைவருமான, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே 2026 பெப்ரவரி 25ஆம் நாள், புதன்கிழமை காலை 8.10 மணியளவில், பேலியகொடையில் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதத் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ், அவரை 72 மணி நேரம் விசாரணைக்காகத் தடுத்து வைக்க

புதினப்பலகை 1 Mar 2026 9:26 am

‘முத்து என்கிற காட்டான்’வெப் சீரிஸ் மார்ச் 27 முதல் ஒளிபரப்பு: ஜியோ ஹாட்ஸ்டாரின் புதிய அறிவிப்பு

இயக்குநர் எம். மணிகண்டன் உருவாக்கி இயக்கியுள்ள 'முத்து என்கிற காட்டான்' (Muthu Engira Kaattaan) வெப் சீரிஸ் மார்ச் 27 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Mar 2026 9:07 am

‘தொடர்ந்து டக்அவுட் ஆனாலும்’.. உங்களை நீக்க மாட்டேன்: இந்திய வீரருக்கு உறுதி கொடுத்த கம்பீர்?

எத்தனை முறை டக்அவுட் ஆனாலும், இந்திய அணியில் உங்களுக்கான இடம் உறுதியாக இருக்கும் என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், வீரருக்கு உறுதியளித்துள்ளாராம். அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 8:45 am