SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

கொலை ஒன்றுக்கு தயாராக இருந்த முன்னாள் புலி உறுப்பினர்

கொலை ஒன்றை செய்வதற்கு தயாராக இருந்த பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவாின் கூலிப்படை… The post கொலை ஒன்றுக்கு தயாராக இருந்த முன்னாள் புலி உறுப்பினர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 9:04 pm

யாழில். 7.9 வீதமான குடும்பங்கள் பாதிப்பு -வீடுகளை சுத்தம் செய்தவற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பங்களில் 7.9 வீதமான குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் , பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்தவற்காக… The post யாழில். 7.9 வீதமான குடும்பங்கள் பாதிப்பு -வீடுகளை சுத்தம் செய்தவற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 8:41 pm

ஆசியா: 1,350-ஐக் கடந்த கனமழை உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,350-ஐக் கடந்துள்ளது. இதில் இந்தோனேசியாவில் 600-க்கும் மேற்பட்டோா், இலங்கையில் 366 போ், தாய்லாந்தில் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். வியத்நாமில் 90 உயிரிழப்புகளும் மலேசியாவில் 3 உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தப் பேரிடரால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

அதிரடி 3 Dec 2025 8:30 pm

பல்கலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; மேலதிக மஹபொல கொடுப்பனவு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி மீண்டும் ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டு, மஹபொல தவணைக்கட்டணம் வழங்க்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 28 ஆம் திகதியும் மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள மஹபொல […]

அதிரடி 3 Dec 2025 8:30 pm

பல்கலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; மேலதிக மஹபொல கொடுப்பனவு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி மீண்டும் ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டு, மஹபொல தவணைக்கட்டணம் வழங்க்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 28 ஆம் திகதியும் மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள மஹபொல […]

அதிரடி 3 Dec 2025 8:30 pm

ஊடகங்களிற்கு அவசரகாலச் சட்டங்கள்?

புயலால் பாதிப்புற்ற இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பல அமைச்சர்களை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்வோருக்கு எதிராக அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறை ; அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசாங்கப் பிரமுகர்களுக்கு எதிராக தீவிரமான தாக்குதல்கள்இணையத்தில் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து வருவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளும், அவசரகாலச் சட்டங்களும் பிரயோகிகப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். இணையதளங்கள் மூலமாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியோ தவறான தகவல்களைப் பரப்புவதற்கோ, உண்மைகளைத் திரித்துக் கூறுவதற்கோ அல்லது தற்போதைய சூழ்நிலையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கோ யாருக்கும் அனுமதி இல்லை. அத்தகைய மீறல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும், சில குற்றங்களுக்கு பத்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதிவு 3 Dec 2025 8:23 pm

350 பேர் நிலை தெரியவரவில்லை!

இலங்கையில் மோசமான வானிலை காரணமாக இன்று புதன்கிழமை இரவு நிலவரப்படி 479 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதேவேளை காணாமல் போயுள்ள 350 பேரினை தேடும் பணிகள் தொடர்கின்றது. இதனிடையே இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறைந்தபட்சம் ஒரு தேசிய துக்க தினமாவது அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு கவனம் செலுத்தப்படாததற்கு நாங்கள் வருந்துகிறோம். நான்கு ஆண்டுகளில் நம் நாட்டில் ஏற்பட்ட நான்காவது துயரம் இதுவாகும். ஈஸ்டர் தாக்குதல், கொரோனா நெருக்கடி, நாட்டின் திவால்நிலை மற்றும் சூறாவளி போன்ற நெருக்கடிகளை நாம் கடந்து வந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விவாதம் நடத்த அரசாங்கம் தவறிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தேசிய துக்க நாளாவது அறிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பாகும், எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.

பதிவு 3 Dec 2025 8:10 pm

11 ஆண்டுகளுக்குப் பின்னர் விமானத்தை தேடவுள்ளது மலேசியா

உலகின் மிகப்பெரிய விமான மர்மங்களில் ஒன்றான பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 ஐ தேடும் பணி டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. போயிங் 777 விமானம் MH370 2014 இல் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் செல்லும் வழியில் காணாமல் போனது. அதன் பின்னர் விமானத்திற்கான பல தேடல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன, ஆனால் அனைத்தும் தோல்வியடைந்தன. தெற்கு இந்தியப் பெருங்கடலில் சமீபத்திய தேடல் ஏப்ரல் மாதத்தில் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது. ஒரு கணக்கெடுப்பு நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி, 55 நாட்களுக்கு கடல் அடிவார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது, இது அவ்வப்போது நடத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்ட இலக்கு பகுதியில் தேடல் நடத்தப்படும் என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேடல் பகுதியின் துல்லியமான இடம் எதுவும் வழங்கப்படவில்லை. விமானம் வேண்டுமென்றே திருப்பி விடப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளை மலேசிய புலனாய்வாளர்கள் ஆரம்பத்தில் நிராகரிக்கவில்லை. சில விமானத்தின் சிதைவுகள் ஆப்பிரிக்காவின் கடற்கரையிலும் இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் கரையொதுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் சில விமானத்தின் சிதைவுகள் என நம்பப்படுகிறது. MH370 சிதைவுகளைத் தேடுவதை மீண்டும் தொடங்க அரசாங்கத்திற்கும் ஓஷன் இன்ஃபினிட்டிக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி தேடுதல் மீண்டும் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு இந்தியப் பெருங்கடலில் 15,000 சதுர கிலோமீட்டர் (5,790 சதுர மைல்) கடற்பரப்பில் தேடும் போது குறிப்பிடத்தக்க சிதைவுகள் கண்டறியப்பட்டால் மலேசியா நிறுவனத்திற்கு 70 மில்லியன் டாலர்களை வழங்கும். ஓஷன் இன்ஃபினிட்டி 2018 வரை விமானத்தைத் தேடியது, ஆனால் குறிப்பிடத்தக்க சிதைவுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 2018 காணாமல் போனது குறித்த 495 பக்க அறிக்கையில், போயிங் 777 இன் கட்டுப்பாடுகள் வேண்டுமென்றே கையாளப்பட்டிருக்கலாம் என்று கூறியது, ஆனால் புலனாய்வாளர்களால் யார் பொறுப்பு என்பதை தீர்மானிக்க முடியவில்லை, மேலும் என்ன நடந்தது என்பதை முடிவுக்குக் கொண்டுவருவதை நிறுத்திவிட்டனர், அது இடிபாடுகளைக் கண்டுபிடிப்பதைப் பொறுத்தது என்று கூறினர். கேப்டன் மற்றும் துணை விமானியின் பின்னணி, நிதி, பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் குறித்து சந்தேகத்திற்குரிய எதுவும் இல்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். விமானத்தில் 150க்கும் மேற்பட்ட சீன பயணிகள் இருந்தனர். மற்றவர்களில் 50 மலேசியர்களும், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் கனடா குடிமக்களும் அடங்குவர். உறவினர்கள் மலேசியா ஏர்லைன்ஸ், போயிங், விமான எஞ்சின் தயாரிப்பாளர் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் காப்பீட்டுக் குழுவான அலையன்ஸ் ஆகியவற்றிடம் இழப்பீடு கோரியுள்ளனர்.

பதிவு 3 Dec 2025 7:58 pm

`தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக முதல்வர்; இதுவே திராவிட மாடல் ஆட்சி!' - அமைச்சர் ராமச்சந்திரன்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், யார் நமக்கு நல்லது செய்கிறார்கள், நம்மைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள், நம்மோடு யார் பயணிக்கிறார்கள் என்று சிந்தித்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மொத்தம் 286 பயனாளிகளுக்கு ₹25 லட்சத்து 4 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் சார்பில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 32 குழந்தைகளுக்கு ₹5 லட்சத்து 38 ஆயிரத்து 313 மதிப்பிலான உதவித்தொகை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 39 மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கினார். மேலும், சூலக்கரை, வெள்ளூர், காரியாபட்டி ஆகிய மூன்று பள்ளிகளுக்குச் சிறந்த பள்ளிகளுக்கான விருது மற்றும் கேடயங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் பேசியதாவது, சாதாரண மனிதர்களைவிட மாற்றுத்திறனாளிகள் அதிகமாகச் சிந்திக்கக்கூடியவர்கள், திறமையானவர்கள். எனவே தி.மு.க. ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நமது முதல்வர் ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கிவிட்டுத்தான் மற்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். மாற்றுத்திறனாளி மக்களுக்கு இந்த அரசு மிகவும் கருணையோடு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆண்டு மட்டும் 540 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஸ்கூட்டர் வழங்கவிருக்கிறோம். நம்முடைய முதல்வர் அள்ளிக் கொடுக்கக்கூடிய வள்ளலாக இருக்கிறார். நலத்திட்ட உதவிகள் பொதுவாக பட்டாசு வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவதோடு நாங்கள் கையைக் கழுவிவிட்டு வந்துவிடுவோம். நாங்கள் அந்தக் குடும்பம் எப்படி இருக்கிறது என்று பார்க்க மாட்டோம். ஆனால் நமது முதல்வர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குகிறார். திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் எல்லா மக்களும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். எல்லோரும் ஒன்றாக, ஒரே நேர்கோட்டில் மக்களும் அரசும் வசதிகளை எல்லோரும் பெற வேண்டும் என்ற தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக நம்முடைய முதல்வர் இருக்கிறார். திருநங்கைகள் ஒரு காலத்தில் கேலியாகப் பார்க்கப்பட்டனர். பெற்ற தாய், தந்தையரே திருநங்கைகளை ஒதுக்கி வைத்தனர். சமுதாயத்தில் அவர்களது பெயர்களைத் 'திருநங்கைகள்' என மாற்றியவர் கலைஞர்தான். திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்த பிறகு படிப்பு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, தற்போது எல்லாத் துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். திருநங்கைகள் வெட்கப்படாமல் 'நாங்களும் இச்சமுதாயத்தில் பிறந்தவர்கள்' என்று வேலைவாய்ப்பில் வருகிறார்கள் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் கலைஞர். தாயாக, தந்தையாக உங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் செய்ய முடியாது. அரசாங்கம் என்பது எங்களுடைய நிதிச்சுமைக்கு ஏற்றார் போல்தான் நாங்கள் செய்ய முடியும். எல்லோருக்கும் எங்களால் முடிந்ததை முதல்வர் செய்துகொண்டிருக்கிறார் என்றார்.

விகடன் 3 Dec 2025 7:55 pm

சற்றுமுன்.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னை ஆட்சியர் அறிவிப்பு!

தொடர் கனமழை காரணமாக, நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சமயம் 3 Dec 2025 7:55 pm

TNPSC ஆண்டு அட்டவணை 2026 வெளியீடு; குரூப் 1, 2, 4 இடம்பிடிப்பு - தேர்வு எப்போது? முழு விவரம்

2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. வரும் ஆண்டில் மொத்தம் 6 தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

சமயம் 3 Dec 2025 7:39 pm

இம்ரான் கான் தொடர்பில் அவரது சகோதரியின் அதிர்ச்சி பேட்டி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை சிறையில் சென்று பார்த்த சகோதரி அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். எதிர்க்கட்சிளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023 ஆகஸ்ட் 5ம் திகதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள […]

அதிரடி 3 Dec 2025 7:30 pm

இம்ரான் கான் தொடர்பில் அவரது சகோதரியின் அதிர்ச்சி பேட்டி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை சிறையில் சென்று பார்த்த சகோதரி அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். எதிர்க்கட்சிளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023 ஆகஸ்ட் 5ம் திகதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள […]

அதிரடி 3 Dec 2025 7:30 pm

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்.. உத்தரவு வாபஸ்…தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிக்கை…!

சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளது. உளவு பார்க்கும் செயலி என எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் செல்போன் உற்பத்தியாளர்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.

சமயம் 3 Dec 2025 7:07 pm

இலங்கை டிட்வா புயல்: உயிர்போகும் நேரத்திலும் தமிழில் அறிவிப்புகள் இல்லை - இக்கட்டிலும் இனவெறி?

அண்டை தீவு நாடான இலங்கையில் கடந்த வாரம் டிட்வா புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. 2003ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையைத் தாக்கிய மிக மோசமான புயலாக டிட்வா கருதப்படுகிறது. இந்தப் பேரழிவில் 410 பேர் உயிரிழந்துள்ளனர், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர், சுமார் 336 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். இந்த நெருக்கடியை இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு மோசமாக கையாண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலரும் தீவிர மழைப்பொழிவு குறித்து எச்சரிக்கப்படாத நிலையில், எச்சரிக்கப்பட்டவர்களுக்கும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே அறிவிப்புகள் வழங்கப்பட்டதால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு; சமூக வலைதளங்களில் பயனர்கள் இடையே இது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும் ஆராய்ச்சியாளர் சஞ்சனா ஹட்டோடுவா ஒரு சுருக்கமான ஆய்வை வெளியிட்டுள்ளார். நியூசிலாந்தில் The Disinformation Project திட்டத்தில் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றிய இவர், நவம்பர் 25 முதல் நவம்பர் 29 காலை வரை பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட 68 பதிவுகளை ஆராய்ந்து, முகப்புப் பக்கப் பதாகையில் உள்ள அனைத்து முக்கிய தகவல்களும் சிங்களத்தில் மட்டுமே இருப்பதைக் கண்டறிந்துள்ளார். புயல் உச்சக்கட்டத்தின் போது வெளியிடப்பட்ட 68 பதிவுகளில், வெறும் 12 பதிவுகளே தமிழ் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன என்றும், அவற்றில் இருந்தது அடிப்படை வெள்ள அறிவிப்புகளுக்கான தகவல்கள் மட்டுமே என்றும் கூறியுள்ளார். சமூக வலைதள விவாதங்கள் மலைநாட்டில் உள்ள தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சூழல் இருந்தபோதும் இப்படி நடந்திருக்கிறது. கடுகண்ணாவ மற்றும் மஹியங்கனை ஹேர்பின் பாதை போன்ற முக்கியமான சாலை மூடல்கள் சிங்களத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன, இதனால் தமிழ் மக்களுக்கு அடிப்படை வழிகாட்டுதல்கள் கூட கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருக்கும் ஜாஃப்னாவுக்கு விமானத்தில் வந்துசேரும் என்ற அறிவிப்பும் கூட சிங்களத்தில் மட்டுமே வந்துள்ளது. தெதுரு ஓயா படுகையில் நீர் வெளியேற்றத்துக்கான விகிதங்கள் பாதிக்கப்படும் பிரதேசங்களின் பெயர்களைக் கொண்ட அறிக்கையும் தமிழில் வெளியாகவில்லை என்கிறது அவரது ஆய்வு. கடல்சார் மற்றும் காற்று எச்சரிக்கைகள் சிங்களத்தில் மிக விரிவானதாகவும் தமிழில் தெளிவற்றதாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இணையதளத்திலும் இந்த பாகுபாடு நீடித்துள்ளது. DMC இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தமிழ் மொழி ஆப்ஷன் இருந்தாலும், மெனுக்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து உள்ளடக்கங்களும் சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் இருந்திருக்கின்றன. சமூக வலைதள பதிவுகள் நவம்பர் 25–29 தேதிகளுக்கான விரிவான வானிலை அறிக்கைகள் சிங்களத்தில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் தளத்தில் பதிவேற்றப்பட்ட 34 வானிலை அறிக்கைகளில், ஒன்றில் மட்டுமே தமிழ் இருந்தது. வானிலை ஆய்வுத் துறையின் பேஸ்புக் பக்கத்திலும் இந்த போக்கு நீடித்திருக்கிறது. முக்கியமான அறிக்கைகள் தமிழில் தாமதமாக வந்திருக்கின்றன அல்லது வரவேயில்லை. உயிருக்கு ஆபத்தான சூழலில் வெளியிடப்படும் எச்சரிக்கைகளில் கூட காலதாமதம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளார். நவம்பர் 25 ஆம் தேதி பிற்பகல் 3.51 மணிக்கு சிங்களத்தில் வெளியிடப்பட்ட ஒரு கடுமையான மழை எச்சரிக்கை, மாலை 6.41 மணி வரை தமிழில் தோன்றவில்லை, இது மூன்று மணி நேர இடைவெளியாகும். மக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா என்பதை தீர்மானிக்க முக்கியமான தருணங்கள் அவை. முனைவர் சஞ்சனா ஹட்டோடுவா இலங்கை அரசின் அமைப்பு ரீதியான இனவெறி, மொழிப் பாகுபாடு எப்படி நெருக்கடியான நேரத்தில் அதன் சொந்த குடிமக்களை ஆபத்தில் தள்ளுகிறது என்பதை ஹட்டோடுவாவின் ஆய்வு காட்டியிருக்கிறது. இதேபோல இலங்கை அரசின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிலும் தமிழ் ஒதுக்கப்படுவதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட ஆய்வில் அவர் எடுத்துக்கூறியிருந்தார். இந்த ஆய்வைத் தொடர்ந்து பலரும் விடுதலை புலிகள் காலத்தில் தமிழர்களுக்காக சொந்த வானிலை அவதானிப்பு மையம் செயல்பட்டு வந்ததை நினைவுகூர்ந்துள்ளனர். ``உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட, தமிழ் குடிமக்களுடன் அவர்களின் மொழியில் தொடர்பு கொள்ள முடியாத அரசுக் கட்டமைப்பு நிலவுகிறது என தனது ஆய்வை முடித்துள்ளார் சஞ்சனா ஹட்டோடுவா. இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!

விகடன் 3 Dec 2025 6:54 pm

தேசிய கல்விக் கொள்கை : மாணவர்களும் ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு மொழியை கற்க வேண்டும்… உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிஜி அறிவுறுத்தல்…!

மாணவர்களும், ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு மொழியை கற்க வேண்டும் என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிஜி அறிவுறுத்தி உள்ளது.

சமயம் 3 Dec 2025 6:46 pm

புயல் அனர்த்தம்: 1,500 பேருந்து பயணங்கள் இரத்து

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் ஏற்பட்ட சாலைத் தடைகள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) இயக்கப்படும் கிட்டத்தட்ட 1,500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், ரத்து செய்யப்பட்ட இந்த பேருந்துகளில் சுமார் 15,000 பயணிகள் முன்னதாகவே இருக்கைகளை முன்பதிவு செய்திருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான இருக்கை முன்பதிவுகளுக்குப் பொறுப்பான நிறுவனம் தெரிவித்துள்ளது. இருக்கை முன்பதிவு சேவையை கையாளும் நிறுவனம், இருக்கைகளை முன்பதிவு செய்த பயணிகள் வேறு எந்த விருப்பமான திகதிக்கும் தங்கள் முன்பதிவுகளை மீண்டும் திட்டமிட முடியும் என்பதை உறுதிப்படுத்தியது. மாற்றுத் தேதியைப் பெற பயணிகள் 1315 ஹாட்லைன் அல்லது 070 3110 506 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மறு அட்டவணைப்படுத்தலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. தற்போது, ​​நுவரெலியா, நாவலப்பிட்டி, யாழ்ப்பாணம், வலப்பனை, மூதூர் மற்றும் பைபிள் போன்ற இடங்களுக்கான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பிற இடங்களுக்கான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் அந்த வழித்தடங்களுக்கான இருக்கை முன்பதிவுகள் மீண்டும் கிடைக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

பதிவு 3 Dec 2025 6:44 pm

A320 ரக விமானத்தில் பிரச்சினை.. விமானங்களின் விநியோகம் குறைப்பு.. ஏர்பஸ்க்கு பின்னடைவு!

ஏர்பஸ் நிறுவனம், A320 ரக விமானங்களில் ஃபியூஸ்லேஜ் பேனல் தரப் பிரச்சனையால் 2025 விநியோக இலக்கை குறைத்து உள்ளது. இதனால் பல விமானங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

சமயம் 3 Dec 2025 6:40 pm

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மேலும் இரண்டு நிவாரண விமானங்கள் இலங்கைக்கு வந்தன

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற மேலும் இரண்டு விமானங்கள் இன்று (3) பிற்பகல் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையால் இயக்கப்படும் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானங்களில் இரண்டான சி-17 விமானம், அபுதாபியிலிருந்து பிஐஏவிற்கு வந்திருந்தது. இந்தப் பட்டியலில் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆகியவை அடங்கும். இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம், பேரிடர் மேலாண்மை மையம் (DMC) மற்றும் முப்படை வீரர்கள் உதவியைப் பெற விமான நிலையத்தில் இருந்தனர். செவ்வாய்க்கிழமை (02) காலை, டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையின் C‑17 விமானம் இலங்கையை வந்தடைந்தது. 76 உறுப்பினர்களைக் கொண்ட எமிராட்டி மனிதாபிமான நிவாரணக் குழுவால் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களில், உணவு, பாதுகாப்புப் பெட்டிகள் மற்றும் கூடாரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இருந்தன. பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த நன்கொடை இலங்கை அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கு இடையேயான வலுவான நட்புறவையும் ஒத்துழைப்பையும் உறுதிசெய்து, தற்போதைய நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.

பதிவு 3 Dec 2025 6:40 pm

சென்னை வெள்ளம் 2015: `துயரத்தில் பிறந்த மனிதநேயம்'– 10 ஆண்டு நினைவலைகள் சொல்லும் பாடம் என்ன?

டிசம்பர் என்றாலே இந்த டிசம்பர் அந்த டிசம்பராக இருக்கக் கூடாது என சென்னைவாசிகளின் மனங்களில் வடுவாக மாறிய ஆண்டு 2015. அந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த சென்னைப் பெருமழை, அப்படியான ஒரு சோக வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது. அப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் 'அடுத்த சில நாட்களுக்கு மிகப் பலத்த மழை பெய்யும்' என்று தெரிவித்தது. அரசுக்கும் எச்சரிக்கை செய்திகளை அனுப்பியது. எனினும் அரசு வழக்கம்போல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. சென்னை வெள்ளம் - 2015 வழக்கம்போல குடும்பங்கள் வீடுகளில் முடங்கின. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், நவம்பர் 30-ஆம் தேதி சில மணி நேரத்தில் 490 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டியதாகக் கூறினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. சென்னையின் தெருக்கள் எல்லாவற்றிலும் வெள்ளநீர் புகுந்த போதிலும், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஒரு வாரத்துக்கும் மேலாக மின்சாரமின்றித் தத்தளித்தனர். மொபைல் போன்கள் எல்லாம் டவர் இழந்து, சார்ஜ் இல்லாமல் சடலமாகக் கிடந்தன. சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்டது அந்த மழைதான். அதேநேரம், அதுவரை பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள்கூடப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தனர். சென்னை மக்களிடம் இருந்த மனிதநேயம் வெளிப்பட, ஒரு பெருமழை காரணமாக இருந்தது. பெரும் மழையும் பேராபத்தும் 2015-ம் ஆண்டின் சென்னை பெருவெள்ளம் ஏற்படக் காரணங்கள் பல இருந்தாலும், முக்கியக் காரணம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.ஏ. ராஜ். இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், 2015-ஆம் ஆண்டு அடையாற்றின் மேல் படுகையில்தான் அதிக மழை பெய்தது. சென்னை வெள்ளம் - 2015 அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே சென்னையை விட அதிக மழை பெய்தது. 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி 3.9 செ.மீ மழையும், அதிக மழை பெய்த டிசம்பர் 2-ஆம் தேதி சென்னையில் 29 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி 1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது. ஆனால், சென்னையின் தென் பகுதிகளில் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்தான் வெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்துவிட்டதே அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். தாமதம் எனும் அணுகுண்டு 2015 டிசம்பர் 1-ஆம் தேதி, 14 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருப்பதால் உடனே பெருமளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித் துறை செயலாளர், தலைமைச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடமிருந்து தலைமைச் செயலாளர் அனுமதி பெறுவதற்குத் தாமதமானதாகவும் கூறப்படுகிறது. சென்னை வெள்ளம் - 2015 அதைத் தொடர்ந்து முறையான முன்னறிவிப்பு இல்லாமல், செம்பரம்பாக்கம் ஏரியைப் பொதுப்பணித் துறையினர் திறந்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஏரி வேகமாக நிரம்பியதால் ஏரியின் பாதுகாப்புக் கருதி 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் வழியாக விநாடிக்கு ஒரே நேரத்தில் 33 ஆயிரத்து 400 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதற்கு முன்னர் செம்பரம்பாக்கத்திலிருந்து 900 கன அடி மட்டுமே நீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், மற்ற நேரங்களைப்போல, திறந்துவிடும் தண்ணீரின் அளவைப் படிப்படியாக உயர்த்த முடியவில்லை. அவ்வாறு செய்திருந்தால் ஏரி உடைந்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளில் பெய்த மழைநீரும், சென்னையில் உள்ள கால்வாய்களில் வந்த மழைநீரும் அடையாறில் கலந்ததால், அடையாறில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கும் மேல் வெள்ளநீர் சென்றது. அந்த நேரத்தில் கடலும் சீற்றமாக இருந்ததால் மழைநீர் கடலுக்குள் போகவில்லை. அதையடுத்து அடையாறில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அதனால், கூவம், பக்கிங்காம் கால்வாய் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. சென்னை வெள்ளக்காடானதற்குத் தாமதமாகச் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதே முக்கியக் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை வெள்ளம் - 2015 மேலும், நுங்கம்பாக்கம், மாம்பலம், முகப்பேர், உள்ளகரம், கொளத்தூர் ஏரிகள் முழுமையாகக் கட்டடங்களாக ஆகிவிட்டன. மேலும் ஆதம்பாக்கம் ஏரியில் 25 சதவீதம், வேளச்சேரி ஏரியில் 35 சதவீதம் தவிர மற்றவை அனைத்தும் கட்டுமானங்களாக ஆகிவிட்டதாலும் தண்ணீரின் போக்கு மாறிவிட்டது. இந்த ஏரிகளைச் சேர்ந்த விவசாய நிலங்களில் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் பெருகிவிட்டன. பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததற்கு இதுவும் முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. வாரி சுருட்டிக்கொண்ட வெள்ளம் 2015 நவம்பர் டிசம்பர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்யத் தொடங்கிய மழை இப்படிக் கோரத் தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சென்னை வெள்ளத்தால் சுமார் 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். பல லட்சம் மக்கள் தங்களது வீடு உட்பட எல்லா உடமைகளையும் இழந்தார்கள். 6,605 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். 1715 பேர் கொண்ட 50 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கின. 200-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. 10,000 டன் குப்பைகள் உருவானது. இவற்றை அகற்ற மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 2000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை வெள்ளம் - 2015 வெள்ளத்துக்கு மட்டும் சென்னையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 260-ஐ தாண்டியது. சாலை, ரயில், விமானம் என அனைத்துப் போக்குவரத்தும் முடங்கியது. சென்னை சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 6-ஆம் தேதி வரை மூடப்பட்டது. சென்னையிலிருந்து மேற்கே 70 கி.மீ தொலைவில் உள்ள அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான நிலையம் ஒரு தற்காலிக விமான நிலையமாகச் செயல்பட்டது. நீந்தி வந்த நேசக் கரங்கள் : சென்னை நகரமே தண்ணீரில் தத்தளிக்கும்போது, மாநகராட்சி மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் உச்சபட்ச அழுத்தத்திற்கு உள்ளாகின. இந்த நேரத்தில், அரசால் மட்டும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பது புறங்கைப் புண்ணாகத் தெளிவானது. மக்கள் செயலில் இறங்கினர். இளைஞர்கள் இதில் முன்னணியில் நின்றனர். மீட்பு முயற்சிகளில், மதம், இனம், பணக்காரன், ஏழை, நடிகன், ரசிகன் என எந்தப் பாகுபாடுமின்றி கரம் கோர்த்தனர். விலங்குகள் மீது அன்பு கொண்டவர்கள் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். கிடைக்கக்கூடிய எந்த இடமும் நிவாரண மையமாகவும், சமையலறையாகவும் ஆனது. செல்போன்களும் ஊடகங்களின் தொடர்பும் தேவைப்படும் இடங்களுக்கு உதவிகள் சரியான நேரத்தில் சென்று சேர்வதற்கு பாலமாகின. சென்னை வெள்ளம் - 2015 வழங்கப்பட்ட நிவாரணத்தில் பெரும்பாலானவை தனியார் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை. வலியால் துடித்த கர்ப்பிணி, பாலுக்கு அழுத குழந்தை, மருந்துக்குத் தவித்த முதியவர் என யாருக்கெல்லாம் உதவி தேவைப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் கழுத்தளவைக் கடந்த தண்ணீரில் நீந்தி நீண்டன உதவிக் கரங்கள். கர்ப்பிணி சித்ரா பெற்ற பெண் குழந்தைக்கு யூனுஸ் என்ற பெயரும், யூனுஸுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிய அண்ணா பதக்கமும் அதற்குச் சாட்சிகள். இளைஞர்களால் உற்சாகமடைந்து, மூத்தவர்களும் சேவைக்குத் தங்களை அர்ப்பணித்தனர். இசைக் கலைஞர்கள், கலைஞர்கள், நடிகர்கள், எல்லாரும் – அந்தஸ்து வேறுபாடின்றி தோளோடு தோள் நின்று அவர்கள் பணியாற்றியது பெரும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள். அப்போது உருவான பல நட்புகள் சேவை அமைப்புகளாக உருவாகின. மீனவர்களின் படகும், தன்னார்வலர்களின் உழைப்பும், அரசின் சில செயல்பாடுகளும்தான் 2015 வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைக் கரை சேர்த்தன. பறந்து வந்த மோடியும் ஜெயலலிதாவும் கனமழை, வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டப் பகுதிகளைப் பிரதமர் மோடியும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் தனித்தனியே ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை வெள்ளம் - 2015 மேலும், டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் பெய்த மழையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பேரிடரை 'தேசியப் பேரிடராக' அறிவிக்க வேண்டும் என்றும், மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.8,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசை ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரூ.1,000 கோடி நிவாரணத்தை அறிவித்து, தமிழ்நாடு மக்களின் தேவை நேரத்தில் இந்திய அரசு துணை நிற்கும் என ஆறுதல் கூறியது. இன்னொருபுறம், டிசம்பர் 4 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து வார்டுகளுக்குப் பிஸ்கட், மெழுகுவர்த்திகள், இன்ஸ்டான்ட் நூடுல்ஸ், சானிட்டரி நாப்கின்கள் போன்ற நிவாரணப் பொருட்கள் அடங்கியப் பை வழங்கப்பட்டது. அந்தப் பையில் முதல்வர் ஜெயலலிதாவின் முகப் போட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் ஸ்டிக்கர் தீர்ந்துபோகவே, அது வரும்வரை நிவாரணப் பொருள்கள் வழங்காமல் தாமதிக்கப்பட்டது. அப்போதுதான் அதிகாரிகள் இனி நேரத்தை வீணாக்காமல், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பைகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்திவிட்டு, மூன்றாம் நாளிலிருந்து சாதாரணப் பைகளைப் பயன்படுத்த முடிவு செய்தனர் அதிகாரிகள். சென்னை வெள்ளம் - 2015 அதே நேரம், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க பிரமுகர்கள் பொதுமக்கள் கொடுத்த உதவிப் பொருள்களிலும் ஸ்டிக்கர் ஒட்டியதாகவும், அதற்கு அப்போது இருந்த காவல்துறை ஒத்துழைப்புக் கொடுத்துப் பாதுகாத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதுமுதலே 'ஸ்டிக்கர் அரசு' என்ற விமர்சனமும் அதிமுக மீது விழுந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க, இந்த வெள்ளத்திற்குக் காரணம் அரசின் தவறான நீர்முகாமைத்துவம் எனக் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அப்போதைய ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ``செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதே அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து நகருக்குள் புகுந்ததற்குக் காரணம் எனப் புகார் தெரிவித்தார். பின்னர், CAG (Comptroller and Auditor General) அறிக்கையும் இதையே உறுதிப்படுத்தியதால், திமுகவின் குற்றச்சாட்டு வலுப்பெற்றது. இயற்கை எனும் பேராசான்! பரபரப்பான, குறைந்த சமூக ஈடுபாடு கொண்ட நகரமாக இருந்த சென்னை, தன்னை மறுவடிவமைத்துக்கொண்டது. அதற்கு உதாரணமாக 2016 வர்தா புயலையும், கொரோனா 19 பெருந்தொற்றையும், 2023 பெருமழை வெள்ளத்தையும் சமாளித்ததைக் கூறலாம். மேலும், இளைஞர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகமானது. முன்புபோல இப்போது ஏரிகளை ஆக்கிரமிப்பதும், அவற்றில் குப்பைகளைக் கொட்டுவதும், கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதும் அவ்வளவு எளிதல்ல. உதாரணமாகப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பெருஞ்சிரத்தையே சாட்சி. மக்கள் சிலர் மழைநீர் சேகரிப்பை ஒரு வாழ்க்கை முறையாகப் பின்பற்றுகிறார்கள். சென்னை வெள்ளம் - 2015 2015-ன் சென்னை பெருவெள்ளம், ஒரு இயற்கைப் பேரிடராகத் தொடங்கினாலும், அது நமக்குப் பேராசிரியராக மாறியது. அந்த வெள்ளம், நகரத்தின் பலவீனங்களை வெளிப்படுத்தியதோடு, மக்களின் மனிதநேயத்தையும், ஒற்றுமையையும் உலகிற்கு காட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி, அடையாறு, ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் – இவை அனைத்தும் எச்சரிக்கை மணி அடித்தன. ஆனால் அதே நேரத்தில், தன்னார்வலர்களின் கரங்கள், மீனவர்களின் படகுகள், இளைஞர்களின் உற்சாகம் – இவை தான் மக்களை கரை சேர்த்தன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, ஏரிகள் பாதுகாப்பு – இவை அனைத்தும் அந்த வெள்ளத்தின் பின் உருவான நல்ல மாற்றங்கள். இயற்கையை மதிக்காமல் நகர வளர்ச்சி சாத்தியமில்லை, மனிதநேயம் தான் எந்தப் பேரிடரையும் வெல்லும் மிகப் பெரிய ஆயுதம், ஒற்றுமை, தன்னார்வம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு – இவை தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் தர வேண்டிய மரபு. அதனால், 2015 வெள்ளம் ஒரு துயர நினைவாக மட்டும் அல்ல; அது நம்மை மறுவடிவமைத்த வரலாற்றுப் பாடமாகும். இன்றோடு சென்னை வெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. 2015-இன் சென்னை பெருவெள்ளம் துயரத்தில் தொடங்கினாலும் நம்மைப் பெரியளவில் வடிவமைத்திருக்கிறது. சென்னைப் பெருவெள்ளம் கொடுத்தப் பாடங்களை அடுத்த தலைமுறைக்கும் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. இரு புயல்கள்... நான்கு நாடுகள்... புரட்டிப்போட்ட மழை வெள்ளம்!

விகடன் 3 Dec 2025 6:38 pm

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெற்று வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், பதுளை, கண்டி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 48 பகுதிகளில் விநியோக வீதிகள் பாதிப்பு காரணமாக, எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் ஆணையர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி 3 Dec 2025 6:37 pm

விருதுநகரில் ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்!

விருதுநகரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 360 பேருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சமயம் 3 Dec 2025 6:35 pm

90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் ஒன்றைத் திருடிச் சென்ற திருடர்கள்

பிரான்சில், 90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் ஒன்றைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். 90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் வட பிரான்சிலுள்ள Bouzy என்னுமிடத்தில் உணவுக்காக பயன்படுத்தப்படும் நத்தைகளை வளர்க்கும் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பண்ணையில், உயர் தர உணவகங்களுக்கு விநியோகிப்பதற்காக உயிருள்ள மற்றும் பதப்படுத்தப்பட்ட நத்தைகளை வைத்திருந்திருக்கிறார்கள். கடந்த திங்கட்கிழமை இரவு பண்ணைக்குள் நுழைந்த திருடர்கள், நத்தைகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடங்களுக்குள் நுழைந்து மொத்த நத்தைகளையும் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட நத்தைகளின் மதிப்பு, 90,000 யூரோக்கள் ஆகும். […]

அதிரடி 3 Dec 2025 6:30 pm

மன்னாரில் மறு அறிவித்தல் வரை இறைச்சி விற்பனைக்கு தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வெள்ளத்தினால் உயிரிழந்த ஆடு, மாடு இந்நிலையில், வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிருக வைத்திய […]

அதிரடி 3 Dec 2025 6:29 pm

வடிகால் அமைக்கும் பணிகள் தாமதம்-வட சென்னை மக்கள் பாதிப்பு!

வடிகால் அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவதால் வட சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சமயம் 3 Dec 2025 6:17 pm

நபரொருவரை படுகொலை செய்ய தயாராகவிருந்த கருணா குழுவை சேர்ந்தவர் துப்பாக்கியுடன் கைது

நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதற்கு தயாராக இருந்த கருணா குழுவை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் வகை கைத்துப்பாக்கியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 36 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கருணா குழுவை சேர்ந்த குறித்த நபர் . கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி சுமார் 11 வருடங்கள் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார். அக்கால பகுதியில் பாதாள உலக குழுவொன்றின் உறுப்பினரான கரந்தெனிய சுத்தா என்பவருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரது வழி நடத்தலில் நபர் ஒருவரை சுட்டு படுகொலை செய்வதற்கு தயாராக இருந்த நிலையிலையே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 3 Dec 2025 6:12 pm

நிவாரணம் கொடுக்க சென்ற தயாசிறி ஜயசேகர மக்களால் விரட்டியடிப்பு!

டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் பேரனர்த்த்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பல தரப்பினரும் சென்று தற்போது உதவிகளை வழங்கி வரும் நிலையில் போட்டோ எடுத்து நிவாரணம் வழங்க முறப்பட்ட அரசியல்வாதிகளை மக்கள் விரட்டியடித்துள்ளனர். அந்தவகையில் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற அரசியல்வாதி தயாசிறி ஜயசேகரவும் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் முறைப்பாடுகள் இந் நிலையில் சில அரசியல்வாதிகள் தமது எதிர்கால அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளை […]

அதிரடி 3 Dec 2025 6:10 pm

இந்தியா, ரஷ்யா விண்வெளி கூட்டாண்மை.. விரைவில் நல்ல செய்தி.. விண்வெளி ஆய்வுத் தலைவர் தகவல்!

இந்தியாவும் ரஷ்யாவும் விண்வெளி துறையில் புதிய கூட்டாண்மைக்கு தயாராகி வருகின்றன. இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

சமயம் 3 Dec 2025 6:09 pm

ஜோதி வடிவில் தோன்றிய சிவன்…திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம்!

சென்னை : கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று உச்சகட்டத்தை எட்டியது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. “அண்ணாமலையாருக்கு அரோகரா… அருணாசலேஸ்வரருக்கு அரோகரா” என்ற பக்தர்களின் கோஷம் விண்ணதிர, பல்லாயிரக்கணக்கான கிலோ நெய், துணிகளால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட தீபம் பிரகாசித்து எழுந்தது. கனமழை, பனி மூட்டம், குளிர் காற்று என எதிர்பாராத […]

டினேசுவடு 3 Dec 2025 6:08 pm

வரும் காலங்களில் வலுவான கூட்டணி உருவாகும்-வானதி சீனிவாசன் பேட்டி!

தமிழகத்தில் வரும் காலங்களில் வலுவான கூட்டணி உருவாகும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.

சமயம் 3 Dec 2025 6:03 pm

மீண்டும் ஒரு சதம்…சச்சினின் அடுத்த சாதனையை சமன் செய்த கிங் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் (டிசம்பர் 3) அபாரமாக விளையாடி, சச்சின் டெண்டுல்கரின் இன்னொரு அழியாத சாதனையை சமன் செய்தார். ராப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கோலி 102 ரன்கள் (93 பந்துகள், 7 ஃபோர்கள், 2 சிக்ஸ்) அடித்து, தனது 53-ஆவது ODI சதத்தை அடைந்தார். இதன் மூலம் அவர் வெவ்வேறு ODI மைதானங்களில் அதிக சதங்கள் […]

டினேசுவடு 3 Dec 2025 6:02 pm

பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவை: எந்தவொரு உடன்பாடு எட்டப்படவில்லை

உக்ரைன் அமைதித் திட்டம் குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் ஒரு பிராந்திய உடன்பாட்டை எட்டவில்லை என்று ரஷ்யா கூறியது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தின. மாஸ்கோவில் நடந்த கலந்துரையாடல் கிட்டத்தட்ட 5 மணி நேரம் நீடித்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு 3 Dec 2025 5:59 pm

InCred Money partners with WPP Media to boost digital performance marketing

Mumbai: InCred Money, an investment platform, has appointed WPP Media as its performance marketing partner, marking a strategic collaboration to accelerate the platform’s next phase of digital growth. WPP Media will lead InCred Money’s full-funnel marketing strategy from Mumbai, leveraging data-led insights, technology, and creative execution to deliver measurable business impact.InCred Money is redefining India’s wealth-tech landscape by making alternative assets such as venture debt, high-yield debt, and unlisted equity accessible to everyday investors. The platform empowers users to diversify smarter and grow faster, backed by technology and trust. Vijay Kuppa, CEO, InCred Money, said, Investing should feel empowering, not overwhelming. At InCred Money, we’re reshaping the financial ecosystem by building a holistic platform that brings all major asset classes together—from Unlisted Shares and Digital Gold to Equity Broking, and soon, Mutual Funds and US Stocks. Our partnership with WPP Media strengthens this vision by making alternative and emerging investments simple, transparent, and accessible for every investor. We want people to make confident, informed, and meaningful financial choices, so we are committed to expanding the possibilities available to them. Priti Murthy, President Client Solutions, WPP Media South Asia, added, Performance marketing today goes beyond driving clicks; it’s about engineering sustainable growth. Fintech players like InCred Money are reshaping the rules of engagement, where intelligence, creativity, and agility work together to create lasting impact. This partnership reflects our shared vision to design performance strategies that drive both business results and brand momentum in the digital economy. The partnership underscores WPP Media’s commitment to integrating data, technology, and creativity to drive performance marketing outcomes and supports InCred Money’s mission to expand India’s fintech ecosystem in an experience-led and insight-driven manner.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 5:58 pm

22  குழந்தைகள் பலி –கோல்ட்ரிப் உரிமையாளாின் சொத்துகள் முடக்கம்

கோல்ட்ரிப்’ இருமல் மருந்து வழக்கு நிறுவன உரிமையாளாின் ரூ 2.04 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட… The post 22 குழந்தைகள் பலி – கோல்ட்ரிப் உரிமையாளாின் சொத்துகள் முடக்கம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 5:56 pm

சில்க் ஸ்மிதா பேருல மக்களுக்காக உதவுறேன், ஏன்னா.! - நெகிழும் டீக்கடை குமார்!

ஈரோடு அகில்மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் குமார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், கடந்த 20 வருடங்களாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் நேற்று (டிச.3) சில்க் ஸ்மிதாவின் 66-வது பிறந்தநாளைக் கொண்டாடிய குமார் கேக், வெட்டியதோடு மட்டுமல்லாமல் 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் புத்தாடைகளை வழங்கியிருக்கிறார். சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா சில்க் ஸ்மிதா பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்! கிட்டத்தட்ட 200 தூய்மை பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியிருக்கிறார். மேலும் சில்க் ஸ்மிதா புகைப்படம் பொருந்திய 2026 ஆம் ஆண்டிற்கான காலண்டரையும் மக்களுக்கு வழங்கியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம். மிகப்பெரிய ரசிகன் ஈரோட்டில 22 வருசமா டீ கடை நடத்தி வரேன். சில்க் ஸ்மிதாவின் மிகப்பெரிய ரசிகன் நான். வருஷம் வருஷம் அவுங்க பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவேன். சினிமாவில கவர்ச்சியா மட்டுமே காட்டின அவுங்களோட உண்மையான குணத்தையும் வாழ்க்கையில அவுங்க கஷ்டப்பட்ட சில விஷயங்களையும் கேள்விப்பட்ட பிறகு மிகப்பெரிய ரசிகராகிட்டேன். சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா சில்க் ஸ்மிதா பட்ட கஷ்டம் 1992-ல வெளியான பாக்யராஜ் சாரோட 'ராசுக்குட்டி' படம் ஈரோட்டில தான் எடுத்தாங்க. அப்போ அந்த சூட்டிங் ஸ்பாட்டில வேலை பார்த்தேன். அந்த சமயத்துல போண்டா மணி உள்ளிட்ட சிலர்கிட்ட சில்க் ஸ்மிதாவை பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டேன். நல்ல மனசு கொண்டவுங்க , நிறைய பேருக்கு உதவியிருக்காங்க, வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க அப்படி'ன்னு நிறைய சொன்னாங்க. இதெல்லாம் கேட்ட பிறகு அவுங்களுக்கு எதாச்சும் நம்ம பண்ணனும்னு நினைச்சுதான் அவுங்க பிறந்தநாளை கொண்டாடிட்டு வரேன். 20 வருசமாக அவுங்களோட போட்டோவை கடையில வச்சுருக்கேன். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவுங்க போட்டோ பொருந்திய காலண்டரை கொடுத்திட்டிருந்தேன். சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா ஒரு கட்டத்தில இல்லாதவுங்களுக்கு உதவலாம்'னு சொல்லி தூய்மைப் பணியாளர்கள், முதியவர்கள், சாலை ஓரத்தில் இருக்கிறவங்களுக்கு அன்னதானம் செய்யுறேன். இது எனக்கு மன திருப்தியைக் கொடுக்குது. சில்ஸ் ஸ்மிதா மேல மதிப்பும், மரியாதையும் வச்சுருக்கேன் என்று நம்மிடம் பகிர்ந்தார். ஈரோடு: சில்க் ஸ்மிதாவின் 66-வது பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர் | Photo Album

விகடன் 3 Dec 2025 5:54 pm

மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கிய சுமந்திரன் மற்றும் சாணக்கியன்

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இதன்முதல் கட்டமாக களுவாஞ்சிகுடி பகுதியில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சுமார் 1000 பேருக்கான நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலைமையில் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் போரதீவுப்பற்ற பிரதேசசiபின் தவிசாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். மலையகத்திற்கு விஜயம்செய்தபோது பல பரிதாபகரமான சம்பங்கள் தொடர்பில் அறிந்துகொண்டோம்.சில இடத்தில் முழு கிராமமுமே புதையுண்ட நிலை காணப்படுகின்றது. அந்தநேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பி பிழைத்துள்ளனர்.அங்கிருந்த ஒருவர் தனது முழுக்குடும்பமுமே புதையுண்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை, மூன்று நாட்களாக எப்படியாவது தமதுகுடும்பத்தினரின் உடல்களை மீட்கவேண்டும் என போராடிவருவதாக தெரிவித்தார். அங்கு சிலர் தமது பணத்தினைக்கொடுத்து டிசல்,இயந்திரங்களை எடுத்து தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரண பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது நாங்களும் கூறுகின்றோம் அனைவரும் கூறுகின்றார்கள். ஆனால் இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளை புறந்தள்ளிவைப்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்படுவது வெளிப்படையாக தெரிகின்றது. நேற்றை தினம் கண்டி அரசாங்க அதிபரை சந்தித்தபோது கம்பளை பகுதியில் 19பேர்தான் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றார்.நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழமுடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளது. நேற்று நாங்கள் சென்ற பதுளை மாவட்டம்,நுவரேலியா மாவட்டங்களில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.அங்குள்ள மக்கள் எங்களைக்கண்டதும் கண்ணீருடன் தமது கஸ்டங்களை கூறினார்கள். அப்பகுதியில் உடனடி நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படாதது மக்கள் மூலம் அறியமுடிந்தது.இதனை நாங்கள் கூறைகூறவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.அரசாங்கத்தினை குறைகூறுவதற்காக இதனை சொல்லவில்லை. மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் சென்றடையவேண்டும்,மக்களின் உயிரிழப்புகள் எத்தனையென்பது தெளிவாக தெரியவேண்டும்.உண்மையினை முழுப்புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கமுடியாது. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்றபோது முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு பத்து பதினைந்துபேர்தான் உயிரிழந்துள்ளார்கள் என அரசாங்கம் பதில் சொன்னால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தவேளையில் அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும். விசேடமாக ஊடகங்களை இதனை விமர்சிப்பதை பார்க்கமிகவும் அருவறுப்பாக இருக்கின்றது. செய்தியை பிரசுரிப்பதுதான் அவர்களின் வேலையாக இருக்கவேண்டுமே தவிர செய்திகளின் பின்பக்கமான கிரிக்கட் வர்ணணை போன்று தமது விமர்சனங்களை முன்வைப்பது அருவறுக்கத்தக்க செயலாகும். இந்த பேரிடர் எவ்வளவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியாமல் அவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது. இந்தநேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்துதான் மக்களை காப்பாற்றவேண்டும்.இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்று கூறுகின்றோம். சுனாமி அனர்த்தம் வந்தவேளையில் அன்றைய அரசாங்கமே வடகிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கட்டமைப்பினை ஏற்படுத்தியது. அந்த பிரதேசங்களிலே ஆளுகை செய்தவர்கள் அவர்கள். அந்தவேளையில் அதனை தடுப்பதற்கு நீதிமன்றபடியேறிய ஜேவிபியினருடன் இணைந்து வேலைசெய்வதற்கு நாங்கள் தாயராகயிருக்கின்றோம் என்றால் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து செயற்படமாட்டோம். அனைவருடமும் இணைந்து நாங்கள் செயற்படுவோம் என்றார்.

பதிவு 3 Dec 2025 5:54 pm

Finolex Industries appoints Udipt Agarwal and Rambabu Sanka in key roles

Pune: Finolex Industries Limited has announced key leadership appointments aimed at driving the company’s next phase of growth and transformation. Effective 1 November 2025, Udipt Agarwal assumed charge as Managing Director, while Rambabu Sanka took on the role of Director – Technical effective 2 August 2025.Udipt Agarwal, 56, brings over 30 years of experience across the chemicals, bio-industrial, and specialty materials sectors. A B.Tech. graduate from HBTI Kanpur and an INSEAD alumnus, he possesses extensive expertise in operations, business management, and market development across Asia. His leadership and sectoral experience are expected to drive Finolex’s next phase of expansion.Rambabu Sanka, 63, joins as Director – Technical with nearly four decades of experience in chemical manufacturing, including deep expertise in VCM/PVC operations. His strengths in plant management and process optimisation are expected to further enhance Finolex’s manufacturing excellence. Prakash P. Chhabria, Executive Chairman, Finolex Industries, said, We are delighted to welcome Udipt and Rambabu to Finolex. Udipt’s strategic vision, extensive industry experience, and strong leadership align closely with our long-term growth ambitions, while Rambabu’s vast technical expertise will further strengthen our manufacturing and process innovation capabilities. Together, they bring complementary strengths that will help us accelerate our journey of innovation, operational excellence, and market leadership. Under their guidance, we are confident of building a more agile, future-ready Finolex that continues to deliver exceptional value to our customers, partners, and shareholders. These transitions follow the retirement of Saurabh Dhanorkar (Managing Director) and Saumya Chakrabarti (Director – Technical). On behalf of the Board and the Finolex family, I extend our heartfelt gratitude to Saurabh and Saumya for their invaluable contributions, vision, and leadership over the years. Their efforts have laid a strong foundation for the next phase of Finolex’s growth. We remain deeply appreciative of their dedication to the company’s values and culture, and we wish them continued success and fulfilment in their future endeavours, added Chhabria.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 5:50 pm

திருப்பரங்குன்றம்: 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 2ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை இந்து அமைப்பினர், பாஜகவினர் வரவேற்றனர். கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறார்கள் இந்து அமைப்பினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அதுவும் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்றலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீபம் ஏற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்றாமல், மதநல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே உள்ள நில அளவை கல்லை இந்துத்துவா அமைப்புகள் தீபத்தூண் என்று கூறி அங்கே தீபம் ஏற்றுவாதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீட்டை நேற்றே தாக்கல் செய்திருந்தது. இன்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் இன்று மதியம் முதல் இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடந்தது. திருப்பரங்குன்றம் தற்போது இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து உரிய பாதுகாப்புடன் தீபம் ஏற்றும் கொப்பரை திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. சரியாக 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றபடவிருக்கிறது. திருப்பரங்குன்றம்: `மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

விகடன் 3 Dec 2025 5:50 pm

IND vs SA 2nd ODI: ‘சச்சினின் மெகா சாதனையை’.. சமன் செய்த கோலி: உலகில் எந்த வீரரும் செய்யாத ரெக்கார்ட்!

சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். உலகில் எந்த பேட்டரும் செய்யாத இந்த சாதனையை தற்போது சச்சின், கோலி ஆகியோர் மட்டுமே செய்துள்ளனர். அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

சமயம் 3 Dec 2025 5:49 pm

JioBLAST names Manish Patankar as VP – Commercial Partnerships

Mumbai: JioBLAST, the joint venture between Jio, RISE Worldwide, and BLAST focused on shaping India’s esports and competitive entertainment landscape, today announced the appointment of Manish Patankar as VP – Commercial Partnerships.Manish brings over 12 years of experience in sports business, commercial strategy, and IP monetisation across India’s leading sports and entertainment organisations. His career spans leadership roles at Collective Artists Network, ITW Consulting, IOS Sports & Entertainment, and entrepreneurial ventures like SahiCoin. He has successfully spearheaded commercial strategies for sports IPs, scaled partnership revenues, and executed marquee deals with leagues, broadcasters, athletes, and brands.At JioBLAST, Manish will lead commercial strategy across esports properties, IPs, partnerships, and monetisation initiatives, building scalable revenue engines for India’s rapidly expanding esports audience. Charlie Cowdrey, CEO of JioBLAST , said, Manish brings a rare blend of sports IP experience, brand solutions and dealmaking. His ability to build value with brands will be instrumental as we scale JioBLAST into India's largest multi-game esports platform. We're thrilled to have him onboard as we expand our ambitions across events, partnerships and the Jio ecosystem. Manish Patankar, VP – Commercial Partnerships, JioBLAST, added, Esports in India is at an inflection point, and JioBLAST is uniquely positioned to lead its next phase of growth. The vision to build marquee IPs, unlock mass participation, and create a commercially robust ecosystem is incredibly exciting. I'm looking forward to building long-term partnerships, elevating fan experiences, and contributing to a future where esports becomes a mainstream cultural force in the country. JioBLAST combines Jio’s 500+ million-strong digital ecosystem, BLAST’s global esports expertise, and RISE Worldwide’s leadership in sports and event management. Together, the JV aims to establish India’s most engaging and scalable esports IP ecosystem, spanning world-class tournaments and creator-driven entertainment formats.With India emerging as one of the world’s largest gaming markets and the Online Gaming Bill 2025 supporting industry growth, JioBLAST is positioned to accelerate the nation’s journey toward becoming a global esports powerhouse.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 5:48 pm

Tiruvannamalai 2025 Live | திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் 2025 | Karthika Deepam |

karthigai deepam tiruvannamalai live | tiruvannamalai karthigai deepam 2025 | Karthigai Maha Deepam | Karthika Deepam | Maha Deepam Live | திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025

விகடன் 3 Dec 2025 5:47 pm

59% of brand marketers expect business growth in 2026, but only 19% anticipate higher marketing budgets: WARC

Mumbai: Marketers are heading into 2026 with a cautious mindset, as new insights from WARC’s Voice of the Marketer report reveal a widening gap between business optimism and marketing budget expectations. While 59% of brand marketers believe business will improve next year, only 19% expect marketing budgets to rise, highlighting the continuing challenge of doing more with less.Part of WARC’s Evolution of Marketing programme, the report draws on a global survey of 1,000+ marketers conducted between September and October 2025 and explores the themes shaping the industry in the year ahead.Stephanie Siew, Senior Research Executive, WARC, said, “Despite the decline in marketer optimism, it’s worth pointing out that the majority of both brand and agency marketers (54%) still expect next year to be better than this one. However, budget expectations are a lot lower, which will heap more pressure on marketers in 2026.” Aditya Kishore, Insight Director, WARC, added, “A significant red flag for marketers is the tension between poor macroeconomic visibility and the need to plan for long-term business growth — which is why more than half see short-termism as a major industry concern.” Key Findings: Business vs Budget Optimism: 59% of brand marketers expect business growth in 2026, but only 19% anticipate higher marketing budgets. Those expecting tighter budgets are more likely to invest in performance marketing (42%) than brand marketing (29%). Short-termism Rising: Over half of marketers (55%) identify short-term focus as a key concern, up 30 percentage points from 25% in 2022. Economic Concerns: 61% of marketers cite economic conditions, including US trade policies and tariffs, as a key challenge for 2026. North American marketers feel the impact most acutely, with concerns over slowed investment, supply chain disruptions, and reduced margins. Scenario Planning and Agility: 40% of marketers are adopting scenario planning to model multiple economic outcomes and restructure teams to remain agile. AI Disruption: 59% of marketers express concern about AI disruption, more than double the 28% reported in 2023. Popular AI uses include summarizing large texts (76%), competitor analysis (74%), and customer insights (60%). Over a third (35%) fear AI could replace several human marketing functions within three years. Agencies (40%) feel the threat more acutely than brand marketers (30%), who are leveraging AI to scale more efficiently amid budget constraints. Alex Craddock, Chief Marketing and Content Officer, Citi, said, “We’ve had a lot of uncertainty this year, which has caused volatility... Markets have proven to be pretty resilient up until now; at some stage, that resilience will start to wane.” Lex Bradshaw-Zanger, Chief Marketing and Digital Officer, SAPMENA Zone for L’Oral Groupe, said, “The new rule of engagement is strategic orchestration: knowing when to deploy AI, how to combine it with human insight, and maintaining control over your data and brand integrity while scaling at unprecedented levels.” Digital-First Media Investment: 90.3% of advertising dollars are projected to go to online-only platforms, with marketers prioritizing online video, influencer/creator marketing, and social media. Paid search spend is expected to grow to $274bn in 2026 but at a slower pace due to platform fragmentation. Retail media is seeing rising interest, though 28–29% of marketers still do not invest in this channel. The Voice of the Marketer report complements WARC’s recently released Marketer’s Toolkit, which identifies five key trends set to disrupt global marketing strategies in 2026: the vanishing middle, the creator gamble, the great escape, the zero-click customer journey, and the reset of consumer milestones.Both reports are part of WARC Strategy’s Evolution of Marketing programme, aimed at helping marketers navigate industry shifts, optimize budgets, and drive effective marketing outcomes.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 5:31 pm

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி: சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு

தங்கள் நாடுகளில் வசதியாக வாழும் வெளிநாட்டவர்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் சில நாடுகளுக்கு, குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு உருவாகியுள்ளது. அதாவது, ஒரு நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வேறு நாடுகளில் சொத்து இருக்கும்பட்சத்தில், அதிலிருந்து கிடைக்கும் வருவாய்க்கும் அவர்கள் வாழும் நாட்டில் வரி செலுத்தவேண்டும் என்கின்றன சில நாடுகள். அது, சில நாடுகளில் Inheritance Tax என அழைக்கப்படுகிறது. ஆனால், வேறு நாடுகளிலிருந்து எங்களுக்கு வரும் வருவாய்க்கு, நாங்கள் ஏன் இந்த நாட்டில் வரி செலுத்தவேண்டும், உங்கள் […]

அதிரடி 3 Dec 2025 5:30 pm

முல்லைத்தீவு மழை: 64,098 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,312 குடும்பங்களை சேர்ந்த 4,124 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4,658 குடும்பங்களை சேர்ந்த 14,650 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5,443 குடும்பங்களை சேர்ந்த 17,132 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5,476 குடும்பங்களை சேர்ந்த 15,395 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 2,418 குடும்பங்களை சேர்ந்த 5,868 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 2,556 குடும்பங்களை சேர்ந்த 6,932 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் (03) காலை 8.30 மணிக்கு வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் உறவினர் வீடுகளில் 3,872 குடும்பங்களை சேர்ந்த 11,184 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 1,186 குடும்பங்களை சேர்ந்த 3,537 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதிவு 3 Dec 2025 5:25 pm

மன்னாரில் இறைச்சி விற்கத் தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (03) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டப் பட்டுள்மை தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். உத்தரவை மீறி ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் செயல்படு மாறும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பதிவு 3 Dec 2025 5:19 pm

Zomato marks International Day of Persons with Disabilities with campaign encouraging customers to say ‘Thank You’ in sign language

Mumbai: To commemorate the International Day of Persons with Disabilities (PwD), Zomato has launched a new campaign urging customers to express gratitude to hearing-impaired delivery partners using sign language. The initiative is anchored by a heartwarming film that spotlights the everyday resilience and dedication of these partners, while highlighting how small gestures of appreciation can make a meaningful difference.The film tells the story of Rakesh, one of over 1,000 hearing and speech-impaired delivery partners on the Zomato platform. It portrays his daily journey navigating the challenges of delivering with a hearing impairment and the disconnect that often exists between customer appreciation and his ability to receive it. The narrative culminates in a touching moment when a young customer uses sign language to thank him—guided by a simple tutorial now available on the Zomato customer app.Speaking about the initiative, Anjalli Ravi Kumar, Chief Sustainability Officer, Eternal, said, “This campaign puts a spotlight on our PwD delivery partners, who show incredible commitment while navigating challenges unique to them. We want to empower delivery partners with disabilities not just by supporting them as they access livelihood opportunities but also through everyday moments of empathy and understanding. Even a small gesture of appreciation can make them feel a little more seen and supported.” The campaign is part of Zomato’s ongoing mission to create dignified, accessible, and meaningful livelihood opportunities for persons with disabilities. The company continues to support partners with locomotor disabilities and hearing and speech impairments through targeted sensitization initiatives and enhancements in delivery-side technology.Current support measures for PwD delivery partners include higher earning potential per kilometer, specialized training for fleet coaches, and dedicated grievance-redressal channels tailored to their needs.As of October 2025, Zomato has onboarded 5,000+ PwD delivery partners, including 1,000+ partners with hearing and speech impairments, reflecting its commitment to building a more inclusive and empathetic delivery ecosystem.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 5:14 pm

Unitile appoints Aslam Hussain as Vice President – Global Sales & Strategic Alliances

Mumbai: Unitile has announced the appointment of Aslam Hussain as Vice President – Global Sales & Strategic Alliances, marking a pivotal step in its mission to scale globally and strengthen its leadership in high-performance workplace systems. Aslam’s induction into Unitile’s senior leadership team reinforces the company’s commitment to expanding international partnerships and deepening its presence across India and global markets.With nearly 18 years of experience across corporate interiors, integrated design-build, and workplace strategy, Aslam brings a strong track record in enterprise account development, global partnership management, and large-scale transformation programs. His expertise in cultivating high-value relationships and building enterprise channels will play a critical role in broadening Unitile’s access to multinational clients, driving revenue growth, and fortifying its industry leadership.Aslam champions a partnership-led approach focused on long-term value creation. His ability to balance disciplined execution with entrepreneurial thinking has enabled him to build platforms that align diverse stakeholders while maintaining consistent strategic momentum. By fostering deeper alliances with architects, consultants, developers, and project managers, he aims to elevate Unitile’s influence across the commercial real estate and workplace interiors ecosystem.A recognized thought leader in integrated workplace environments, Aslam has led major end-to-end transformation programs for global organizations such as Dow Chemicals, EY, Facebook, Adani Connex Data Centres, NatWest, HCL Technologies, GE, Airbus, Bank of America, Pfizer, Siemens, BASF, Bain & Co., Citibank, and Deutsche Bank. His understanding of enterprise complexities and expectations will be instrumental in sharpening Unitile’s market positioning and enhancing its solution strategy.Commenting on the appointment, Idris Rajkotwala, Executive Director at Unitile , said, “As India emerges as a global hub for innovation, technology, and enterprise growth, the demand for high-performance, agile workplaces has never been greater. Aslam’s industry insight, strategic mindset, and ability to open new market spaces will be central to strengthening Unitile’s presence across India and international markets.” Aslam holds an MBA in Marketing and International Business from Symbiosis International University and has undergone advanced training across consultative selling, solution selling, negotiation strategies, and sales EQ.Sharing his vision, Aslam Hussain said, “Growth is built on trust, clarity, and consistent value creation. I believe in listening deeply to understand what truly matters and in helping organizations build workplaces where people and businesses can thrive. Success is not defined by scale alone, but by purpose, direction, and meaningful impact.” Aslam’s appointment underscores Unitile’s long-term focus on becoming the partner of choice for sustainable, modern workplace performance solutions. His leadership is expected to accelerate global alliances, strengthen Unitile’s extensive enterprise customer base, support international expansion, and reinforce the company’s role as a pioneer shaping the future of workplace environments.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 5:10 pm

நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது –கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை

யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இருந்து வரும் வெள்ள நீர் தமது பிரதேச சபை எல்லைக்குள்… The post நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 5:02 pm

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

 சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மணலி போலீஸார் விசாரணை நடத்தியதில் பிரியங்காவை கொலை செய்தது நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன் எனத் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜனை கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள்  தெரியவந்தது.  இதுகுறித்து நம்மிடம் பேசிய மணலி போலீஸார், ``பிரியங்காவை அவரின் தாய்மாமா ராஜாவுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். தாய் மாமாவோடு வாழ பிடிக்காததால் அவரைப் பிரிந்து பிரியங்கா தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். அதன்பிறகு வேலைக்குச் சென்ற இடத்தில் கடலூரைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவரைக் காதலித்து பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். அவரோடு 14 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த பிரியங்காவுக்கு 13 வயதில் ஒரு மகளும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்தச் சமயத்தில்தான் நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜனின் ஆட்டோவில் செல்லும்போது பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன் பிரியங்காவும் கோவிந்தராஜனும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்ததை பிரியங்காவின் கணவர் செல்வேந்திரன் கண்டித்தார். அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிள்ளைகளையும் கணவனையும் விட்டு விட்டு கோவிந்தராஜனுடன் பிரியங்கா ஓடிவிட்டார்.பின்னர் இருவரும் வியாசர்பாடி ஹசிங்போர்டில் உள்ள ஒரு வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். அவர்களோடு பிரியங்காவின் அம்மா வசந்தகுமாரியும் சில மாதங்கள் தங்கியிருந்திருக்கிறார். அப்போது பிரியங்கா, போனில் நீண்ட நேரம் பேசியதை கவனித்த கோவிந்தராஜன், பிரியங்காவின் நடத்தையில் சந்தேகப்பட்டிருக்கிறார். அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடந்த வாரத்தில் வசந்தகுமாரியையும் பிரியங்காவையும் வீட்டை விட்டு துரத்தியிருக்கிறார் கோவிந்தராஜன். அதனால் வசந்தகுமாரி, ராயபுரத்தில் உள்ள தங்கை வீட்டுக்கு வந்துவிட்டார். பிரியங்கா அவரின் தோழி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கடந்த 30-ம் தேதி பிரியங்காவைத் தேடி ராயபுரத்துக்கு வந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன், வசந்தகுமாரியிடம் உன் மகள் சொன்னால் கேட்க மாட்டாளா, இப்போது யாருடன் இருக்கிறாள். அவளை கொலை செய்யவும் நான் தயங்க மாட்டேன் என்று மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார். அதன்பிறகு பிரியங்காவை போனில் தொடர்பு கொண்டு பேசிய கோவிந்தராஜன், இனிமேல் நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன் என கூறி வியாசர்பாடிக்கு அழைத்திருக்கிறார். அவரின் பேச்சை உண்மையென நம்பிய பிரியங்காவும் அங்கு சென்றார். பின்னர் பிரியங்காவை அழைத்துக் கொண்டு மணலிக்குச் சென்ற கோவிந்தராஜன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பிரியங்காவை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறார். இதுதொடர்பான புகாரில் கோவிந்தராஜனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம் என்றனர். கொலை இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மனைவி பிரியங்கா வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துவதை தெரிந்த செல்வேந்திரன், தன்னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான கடலூருக்குச் சென்றுவிட்டார். பிரியங்காவும் கோவிந்தராஜனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் பிரியாவின் நடத்தையில் கோவிந்தராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் 26.11.2025-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற பிரியங்கா, 30-ம் தேதி வீடு திரும்பியிருக்கிறார். அப்போது பிரியங்காவிடம் நீ வேறு ஒருத்தனுடன் செல்போனில் பேசி வருகிறாய். உன்னை நம்பி நான், என்னுடைய மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு உன்னிடம் வந்தேன் என கூறி அவரை அடித்து உதைத்திருக்கிறார் கோவிந்தராஜன். அதனால் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்காவை சமாதானப்படுத்தி வியாசர்பாடிக்கு வர வழைத்திருக்கிறார் கோவிந்தராஜன்.  பின்னர் 30-ம் தேதி இரவு பிரியாணி, மது வாங்கிக் கொண்டு பிரியங்காவை அழைத்துக் கொண்டு மணலியில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துக்கு கோவிந்தராஜன்  சென்றிருக்கிறார். அங்கு  மதுஅருந்தியபடி பிரியாணி சாப்பிட்ட கோவிந்தராஜன், பிரியங்காவுடன் அங்கேயே செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பிரியங்கா ஒத்துழைக்காததால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜன், பிரியங்காவை அசிங்கமாக திட்டியதோடு காலி மதுபாட்டிலை உடைத்து அவரின் கழுத்தில் குத்தி கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் பிரியங்காவின் அம்மா வசந்தகுமாரி கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம் என்றனர்.

விகடன் 3 Dec 2025 4:56 pm

புயலே போயிருச்சு.. காலையில் ஏன் அவ்வளவு மழை? இன்னும் மழை நீடிக்குமா?

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தாலும், காலையில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கான காரணம் என்னவென்று அனைவருக்குள்ளும் ஒரு சந்தேகம் எழுந்து உள்ளது.

சமயம் 3 Dec 2025 4:55 pm

மறு அறிவித்தல் வரை ஆடு –மாடு இறைச்சி விற்பனைக்கு தடை 

மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (3) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை… The post மறு அறிவித்தல் வரை ஆடு – மாடு இறைச்சி விற்பனைக்கு தடை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 4:51 pm

உள்ளாடை முதல் பைக் சீட் வரை; ஆண்களுக்கு சில அலர்ட் டிப்ஸ் - காமத்துக்கு மரியாதை 268

இளைஞர்கள், திருமணமாகாத ஆண்கள், இன்னும் குழந்தைப் பெறாத ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ் தருகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ்! லேப்டாப்..! லேப்டாப்பை மடியில் வைத்து வேலைபார்ப்பதால், ஆணுறுப்புக்கு நேரிடையாக மிகப்பெரிய பாதிப்பு வராது என்றாலும், விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். விந்துப்பைகள் உடம்பிலிருந்து கீழே தொங்குவதற்கு காரணம், அது 35 டிகிரி வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மடியில் லேப்டாப் வைத்து வேலைபார்க்கும்போதும், விந்துப்பையின் வெப்பநிலை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். செல்போன்..! செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதால், அதிலிருந்து வெளிப்படுகிற ரேடியேஷன் விந்தணுக்கள் உற்பத்தியைக் குறைக்கிறது என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதனால் விறைப்புத்தன்மையில் குறைபாடு வராது. இதுவரை குழந்தைப் பெறாதவர்கள், குழந்தையின்மை பிரச்னையுடன் இருப்பவர்கள், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்ப்பதே நல்லது. ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ்! ஜீன்ஸ் பேன்ட்..! இந்தியா போன்ற வெப்பம் அதிகமான நாடுகளில், வெப்பத்தை அதிகரிக்கிற மற்றும் வெப்பத்தை வெளியேற்றாமல் இருக்கிற உடைகளை அணிந்தால் விந்துப்பைகளின் வெப்பநிலைக்கு அதிகரித்துவிடும். விளைவு, விந்தணுக்கள் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும். தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264 உள்ளாடைகள்கூட விந்துப்பைகளை நசுக்காமல், அவற்றைத் தாங்கிப் பிடிக்கும்வண்ணம் இருப்பதே நல்லது. ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் Ball பட்டால் என்ன செய்ய வேண்டும்? காமத்துக்கு மரியாதை 267 சைக்கிளும் பைக்கும்..! நீண்ட தூரம் பைக் ஓட்டாதவர்கள் இன்றைக்கு இருக்கவே முடியாது. அதுவும் வேலை காரணமாக தொடர்ந்து பல வருடங்கள் ஓட்டிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஆணுறுப்பைச்சுற்றி மரத்துப்போகும். இதற்குக் காரணம், அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதுதான். இதனால், ஆண்மைக்குறைவும் வரும்; விந்தணுக்கள் குறைவும் ஏற்படும். நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் இது பொருந்தும். குழந்தையில்லாதவர்கள் இவற்றை தவிர்ப்பதே நல்லது.

விகடன் 3 Dec 2025 4:49 pm

Akhanda 2: ''தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது - சென்னையில் பாலைய்யா

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. 2021-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு. சம்யுக்தா மேனன், ஆதி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். Akhanda 2 இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 'அகண்டா 2: தாண்டவம்' படக்குழுவினர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். பிரசாத் லேபில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு, நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா உட்பட சிலர் வருகை தந்திருந்தார்கள். மேடையில் தமிழில் பேசிய பாலைய்யா, “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சொந்த வீட்டுக்கு வந்த மாதிரியான உணர்வு இப்போ எனக்கிருக்கு. நான் பொறந்தது இங்கதான். தமிழ்நாடு என்னுடைய ஜென்ம பூமி. தெலங்கானா என்னுடைய கர்ம பூமி. ஆந்திரா என்னுடைய ஆத்ம பூமி. என்னுடைய அப்பா என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையும் இங்கதான் வளர்ந்ததுனு உங்களுக்குத் தெரியும். Nandamuri Balakrishna மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் எங்க அப்பா மீது வைத்திருந்த அன்பு, பாசம் மறக்க முடியாதது. என்னுடைய அப்பாவும் தமிழ்நாட்டுக்கு அன்பு, பாசத்தைக் காட்டினார். அவர் எனக்கு குரு, தெய்வம் எல்லாமே. கோவிட் சமயத்துல 'அகண்டா' படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆச்சு. அந்த நேரத்துல இந்தப் படத்தை தியேட்டருக்கு வந்து மக்கள் பார்ப்பாங்களான்னு பயம் இருந்தது. ஆனா, மக்கள் வெளிவர்றதுக்கு இந்த மாதிரியான படம் வேணும்னு படக்குழுவினர் உணர்ந்தாங்க. அந்தப் படம் 2021-ல வெளியாகி பெரிய ஹிட் ஆச்சுனு சொல்லலாம். இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனுவுடனான என்னுடைய நான்காவது படம். ‘சிம்ஹா’, ‘லெஜெண்ட்’, ‘அகண்டா 1’ இப்போ ‘அகண்டா 2’ செய்திருக்கோம். இவை அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்கள். எனக்கும் அவருக்கும் இடையில நல்ல புரிதல் இருக்கு. அதனாலதான் பல்வேறு லொகேஷன்களில் இந்தப் படத்தை 130 நாள்ல எடுக்க முடிஞ்சது. Balaiyaa ஏதோ தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது. இந்த இரண்டாம் பாகத்தை சீக்வெல்னு சொல்ல முடியாது. இந்த ‘அகண்ட தாண்டவம்’ திரைப்படம் நம்முடைய கலாசாரத்தை உலகத்திற்கு எடுத்துரைக்கச் செய்யும் ஒரு யாகம். நம்முடைய சக்தியைத் தூண்டும் தாண்டவம். இந்தப் படத்தைப் பார்த்தால் எதிர்கால சந்ததியினருக்கு தெரிய வரும்.” என்று பேசினார்.

விகடன் 3 Dec 2025 4:46 pm

RepIndia appoints Yash Bhatt as Account Director – ORM

Mumbai: RepIndia, a digital communications agency, has announced the appointment of Yash Bhatt as Account Director – ORM, further bolstering its Online Reputation Management vertical. With over 14 years of experience across customer service, digital brand experience, and ORM, Yash’s leadership is set to enhance the agency’s growing capabilities in managing brand reputation in an increasingly complex digital ecosystem.Before joining RepIndia, Yash was associated with Games24x7, where he played a crucial role in shaping the organisation’s digital customer experience strategy, strengthening consumer engagement, and building long-term trust across platforms.In his new role, Yash will drive excellence across key client mandates by building advanced listening frameworks, strengthening RepIndia’s social intelligence practice, and elevating response management systems. He will also focus on crafting customer experience-led reputation strategies that align with the evolving expectations of digital-first consumers, further advancing RepIndia’s goal of becoming one of the most valued ORM and strategic communications partners in the industry.Speaking about his appointment, Yash Bhatt said, “RepIndia’s leadership in the market comes from its unmatched expertise and the sheer strength of its workforce. With one of India’s largest and most seasoned ORM teams—200+ specialists who understand the pulse of digital conversations—the agency has built its reputation on clarity, consistency, and a deep understanding of how brands truly live online. That’s what drew me in. RepIndia’s independence and its ability to mobilise talent at scale allow it to move fast, think boldly, and deliver solutions that genuinely shape consumer perception. Stepping into the ORM vertical here—with its robust 24x7 monitoring ecosystem, integrated search and social reputation management, and market-defining frameworks—feels like the ideal place to push the boundaries of customer experience. I’m excited to strengthen how brands listen, respond, and build trust in a digital world that evolves every single day.”[caption id=attachment_2482984 align=alignleft width=173] Archit Chenoy[/caption]Welcoming him to the team, Archit Chenoy, CEO, RepIndia, commented, “Yash joins RepIndia at an exciting moment in our ORM journey. His depth of experience in social intelligence and crisis + response management will be integral as we scale our capabilities and deliver greater value to our clients. We’re delighted to welcome him to the team.” RepIndia continues to build a future-ready, data-led, and experience-driven ORM practice. The appointment of Yash Bhatt underscores the agency’s commitment to strengthening digital reputation management and delivering end-to-end consumer experience solutions for brands navigating an evolving online landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 4:43 pm

TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ - விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாகச் சென்று மக்களைச் சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆனால் ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. அதையடுத்து நேற்று மீண்டும் புதுச்சேரிக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா நான்காவது முறையாக முதல்வர் ரங்கசாமி, காவல்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர்.   ஆனால் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டது காவல்துறை. அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், ``ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறோம். அதேசமயம் நேரம் குறைவாக இருப்பதால் வேறு தேதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறோம்” என்றார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி நடக்கவிருந்த விஜய்யின் ரோடு ஷோ பொதுக்கூட்டமாக மாறி, அதுவும் தள்ளிப்போகும் சூழல் நிலவியது. இந்த நிலையில்தான் இன்று காலை சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் ரங்கசாமியின் அறைக்கு டி.ஜி.பி ஷாலினி சிங், ஐ.ஜி அஜிஸ்குமார் சிங்ளா, டி.ஜ.ஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டவர்கள் வந்தனர். சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் அங்கு வந்த முதல்வர் ரங்கசாமி, ஊர்க்காவலர்களாக பயிற்சி பெற்ற 68 பேருக்கு பணி வாய்ப்பு இல்லாமல் போனது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் ரங்கசாமியை அவரது அறையில் சந்தித்தார். முதல்வர் ரங்கசாமியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்  அதன்பிறகு செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறினார் புஸ்ஸி ஆனந்த். முதல்வர் அலுவலகத்தில் அதுகுறித்து விசாரித்தபோது, ``ரோடு ஷோ நடத்த அவர்கள் கேட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்று ஏற்கெனவே காவல்துறை தெரிவித்துவிட்டது. இன்று புதுச்சேரி ஈ.சி.ஆர் சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை ஒன்றரை கிலோமீட்டருக்காவது அனுமதி கொடுங்கள் என்று முதல்வரிடம் கேட்டார் புஸ்ஸி ஆனந்த். ஆனால் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்துவிட்டதால் அதில் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார்” என்றனர். புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக; எதிர்ப்புகளை மீறி நண்பருக்கு கைகொடுப்பாரா ரங்கசாமி?

விகடன் 3 Dec 2025 4:42 pm

கிளம்பிய எதிர்ப்பு…”சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இல்லை”உத்தரவை திரும்பப்பெற்ற மத்திய அரசு!

டெல்லி : இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களிலும் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி (app) கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற மத்திய தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவு இன்று (டிசம்பர் 3, 2025) வாபஸ் பெறப்பட்டுள்ளது. டெபார்ட்மெண்ட் ஆஃப் டெலிகாம் (DoT) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த உத்தரவு “ஆப் பயனர்களிடம் அதிகரித்த ஏற்றத்தால்” ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1.4 கோடி பயனர்கள் ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், கடந்த நாளில் மட்டும் 6 […]

டினேசுவடு 3 Dec 2025 4:39 pm

கள்ளக்குறிச்சி அரசராம்பட்டு : கவலைக்கிடமான நிலையில் `நூறு நாள் வேலை திட்டம்’ - தீர்வு கிடைக்குமா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்து கிராமவாசிகளுக்கு குறைந்தபட்ச அளவிலான ஊதியத்தை இத்திட்டம் வகுக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமத்தில் வசிக்கும் குடும்ப பெண்கள், ஆண்கள், வயதானோர் என்று தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதி தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் விதமாக இந்த பணியில் சேர்ந்து வேலை செய்கிறார்கள். இப்படி இருக்க, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த அரசராம்பட்டு கிராம மக்களுக்கு இந்த நூறு நாள் வேலையானது முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊர் மக்களிடம் கேட்ட போது, “என்ன சொல்ல சொல்றிங்க! வெளியூருக்கு போய் வேல பாக்குற உடம்பா இது! ஏதோ இந்த ஊருலையே சொல்ற வேலைய பாத்துட்டு கொடுக்குற பணத்த வச்சி வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்க! இப்ப இந்த வேலையும் இல்லனு சொன்னா, எங்க கண்ணு போறத்து?” என்று கண்கலங்கினார் முதியவர். “சும்மா ஒன்னும் இந்த வேலை நடக்குறத்து இல்லைங்க, ஒவ்வொரு ஊருலையும் இருக்குற ஏரி, குளம், குட்டை, ஓடை, ரோடு அப்படி என்னென்ன இருக்கிறதோ அதெல்லாம் சுத்தமா இருக்குன்னா அதுக்கு காரணம் யாரு? நாங்கதான! இப்ப அது எதுவுமே யோசிக்காம வேலை இல்லனு சொன்னா என்ன பன்றத்து நாங்க! எங்களுக்கு ஒரு முடிவு தெரியனும் தம்பி” என்கிறார்கள். “நீயே யோசிச்சி பாருப்பா! நூறு நாள் வேலை அப்படின்றத்து வருசத்துக்கே மொத்தம் நூறு நாள்தான்! அதுல மாசத்துக்கு ஒரு ஏழு வாட்டி இல்லனா எட்டு வாட்டிதா வேலை செய்வோம். ஒரு நாளைக்கு 250 ரூவா தருவாங்க! மாசத்துக்கு 2000 ரூவா! இந்த பணம்தா இங்க இருக்குறவங்க சிலபேரு இன்னமும் உசுரோட இருக்காங்கனா அதுக்கு காரணம்! அதோ, அவருக்கு வயசு 56, இவுங்களுக்கு 60 தாண்டிடுச்சி, சிலபேரு 70 வயசு தாண்டியும் இருக்காங்க! இங்க இருக்குறவங்க சிலபேரு ஒன்டிகட்டதா! ஒரு வயசுக்கு மேல யார்கிட்டயும் போயி கையேந்த முடியாதுப்பா, ஏதோ இதுல வர பணத்த வச்சி பொழப்பு ஓடுதுனா, அதையும் இப்படி நிறுத்திட்டாங்கனா என்ன பண்ண முடியும்! நீயே சொல்லு” என்று அவர் பேசியது உண்மையின் வருத்தத்தை தெரிவித்தது. கடந்த நான்கு மாதங்களாக இவர்களது இந்த பிரச்னைக்கு செவி சாய்க்காத அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 27.11.2025 அன்று காலை 8 மணியளவில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டத்து குறிப்பிடத்தக்கது. “ எங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்” என்று ஊருக்குள் வரும் அரசு பேருந்தை முடக்கி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மறியல் மூன்று மணிநேரம் நீடித்தது. விரியூர் ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இது தொடர்பாக ஊர் தலைவரிடம் கேட்டபோது , ‘ எது கேட்டாலும் அரசாங்கத்திடம் இருந்து பணம் வரல, அதனாலத்தான் வேலை இல்லனு சொல்றாங்கப்பா’ என்றார். இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 450 கிராமவாசிகள் இந்த நூறுநாள் வேலையில் பணிபுரிகிறார்கள். இப்படியிருக்க ‘பக்கத்து கிராமங்களில் எல்லாம் வேலை நடந்துட்டுதாப்பா இருக்கு! இங்க மட்டும் தான் இப்படி பன்றாங்க’ என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, முந்தைய போராட்டத்தின் போது ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர், எல்லோருக்கும் வேலை தருவதாக கூறி கூட்டத்தை கலைத்தபின், மீண்டும் ‘ வேலையெல்லாம் ஏதும் இல்லை’ என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘நூறு நாள் வேலை’ பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராயினும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து கொண்டு பணிபுரியலாம். அப்படியிருக்க ‘தம் பிள்ளைகளை சேர்ப்போம் காசு வரும்’ என்று யாரும் யோசிக்கவில்லை. கணவர்களை இழந்த பெண்கள், வயதானவர், கேட்பார் இல்லாதவர்கள் தான் இதில் அதிகம் பணிபுரிகிறார்கள். அவர்களே இதில் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். கிராமப்புறங்களில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெரிய சம்பளம் என்று ஏதும் எதிர்பார்ப்பதில்லை. அதிகாரிகள் இதுதான், இவ்வளவுதான் என்று சொல்வதை கேட்டு தங்களின் வாழ்வை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அதிகாரிகளின் இந்த வேலை முடக்கமும், இத்தனை மாத கவன குறைவும் கிராமவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் கோரிக்கை எல்லாம் ஒன்று தான். “நாங்கள் ஒன்றும் சம்பளத்தையோ, வேலை நாட்களையோ சேர்த்து கேட்கவில்லை, எங்களுக்கென்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையைத்தான் கேட்கிறோம்! இதற்கு உடனடி தீர்வு வேண்டும்” என்பது தான் அது. இதுதொடர்ந்து ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் அவர்களிடம் பேசிய போது, ‘அந்த கிராமத்தில் நூறு நாட்களை தாண்டி 108 நாட்களாக வேலை நடந்துள்ளது. இதன் காரணமாகத்தான் வேலைகளை முடக்கினோம். தற்சயமயம் மீண்டும் அனைவருக்கும் முன்போல் வேலைய அமைத்து தர வேண்டிய ஏற்பாடுகள் முடிந்துவிட்டது. நாளை(4.12.2025) அனைவருக்கும் வேலைகள் வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

விகடன் 3 Dec 2025 4:39 pm

திருக்கார்த்திகை: நெல்லையப்பர் திருக்கோயிலில் பரணி தீபம்; அகல் விளக்கு ஏற்றி வழிபாடு | Photo Album

திருக்கார்த்திகை: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் விழா.! திருக்கார்த்திகை: வீட்டில் ஏற்றவேண்டிய 27 தீபங்கள் - வழிபாட்டு முறைகள்

விகடன் 3 Dec 2025 4:30 pm

உக்ரைனில் ரஷ்ய படைகளின் முக்கிய வெற்றி ; புதின் புதிய வீடியோ அறிவிப்பு

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விடியோ அறிக்கையில், ராணுவ சீருடை அணிந்தவாறு புதின் பேசியதாவது: போக்ரோவ்ஸ்க் மற்றும் காா்கிவ் பகுதியின் வோவ்சான்ஸ்க் நகரங்கள் உக்ரைனிடம் இருந்து முழுமையாக ‘விடுவிக்கப்பட்டன’. இது, நமது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கையின்’ (உக்ரைன் போா்) ஆரம்ப இலக்குகள் அடையப்படுவதை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்லும் என்றாா் அவா். உக்ரைன் போரை முடிவுக்குக் […]

அதிரடி 3 Dec 2025 4:30 pm

MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது. சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு, 2015, 2019 அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியோடு வெளியேறி ஏமாற்றம் தந்த இந்தியா, 2023-ல் சொந்த மண்ணில் இறுதிப்போட்டி வரை முன்னேறி மீண்டும் ஏமாற்றம் தந்தது. கபில் தேவ் - தோனி - ஹர்மன்பிரீத் கவுர் இதற்கு மத்தியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கடந்த மாதம் சொந்த மண்ணில் மகளிர் உலகக் கோப்பையை வென்று அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றியது. இந்த நிலையில், தான் கேப்டனாகப் பதவி வகித்த காலத்தில் இருந்த 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனான தோனி, இந்திய மகளிர் அணியும் ஆடவர் அணியும் இன்னும் 100 கோப்பைகளை வெல்ல ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியதோடு, தன் கிரிக்கெட் வாழ்வின் மிக நெகிழ்வான தருணம் குறித்து பேசியுள்ளார். 2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்? குஜராத்தின் பருல் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற மிஷன் பாசிபிள் (Mission Possible) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2011 உலகக் கோப்பையில் இறுதிபோட்டியின் கடைசி நிமிடங்களை நினைவுகூர்ந்த தோனி , ``மும்பை வான்கடே ஸ்டேடியம் அவ்வளவு பெரிய ஸ்டேடியம் இல்லை. எல்லா சத்தமும் உள்ளேயே இருக்கும். அன்று இறுதிப் போட்டியில் கடைசி பந்துக்கு 15 - 20 நிமிடங்களுக்கு முன்பு ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் `வந்தே மாதரம்' பாடல் பாடத் தொடங்கினர். தோனி ஸ்டேடியத்தில் ஒரு மூலையில் அந்தப் பாடல் தொடங்கி நிறைய குரல்களுடன் ஒரு மெக்சிகன் அலை போல நகர்ந்து வந்தது. அந்தச் சத்தத்துக்கு நடுவில் நிற்கும்போது அது நகர்வதை உங்களால் உணர முடியும். என் கிரிக்கெட் வாழ்வில் மிகச் சிறப்பான தருணம் அது. அந்த சமயத்தில் எனக்கு இருந்த மிகச் சிறந்த நெகிழ்வான உணர்வு என்று அதைக் கூறுவேன். 2011 ஒருநாள் உலகக் கோப்பை - தோனி எமோஷனலாக மிகவும் நெகிழ்ந்தேன். அந்த மாதிரியான தருணத்தை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம். இந்தியா மீண்டும் வெல்லும். மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியேயும் வெற்றி பெறுவார்கள். கடவுள் அவர்களை 100 முறை வெற்றிபெறச் செய்யட்டும் என்று கூறினார். 2011 CWC Final: யுவி-க்கு முன்னாடி தோனி இறங்கியதற்கு 2 காரணங்கள் இருக்கிறது - சச்சின் ஓபன் டாக்

விகடன் 3 Dec 2025 4:30 pm

ஈரோடு: மூச்சுக்குழாயில் சிக்கிய வாழைப்பழம்; 5 நிமிடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண் (5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தைச் சாப்பிடக் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட சிறுவன் விழுங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அப்போது, இருமல் வந்து புரையேறி வாழைப்பழம் உணவுக்குழாய்க்குப் பதிலாக மூச்சுக்குழாயில் போய் அடைத்துள்ளது. இதனால் சிறுவனுக்கு மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுவன் சாய்சரணை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சாய்சரணைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சாய் சரண் இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டபோது, அது உணவுக்குழாய்க்குப் பதிலாக மூச்சுக்குழாயில் போய் அடைத்ததால்தான் நுரையீரலுக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடைபட்டு, சிறுவன் உயிரிழந்துள்ளான். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே சிறுவனின் உயிர்போயிருந்தது. வாழைப்பழம் மூச்சுக்குழாயை அடைத்த 5 நிமிடத்துக்குள் உயிர் போயிருக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களைக் கொடுக்கும்போது அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொடுக்க வேண்டும். இதுபோன்று மூச்சுத்திணறல் ஏற்படும் சமயத்தில் நெஞ்சில் கை வைத்தபடி தலையை நன்கு தாழ்த்திப் பிடித்துக் கொண்டு முதுகில் வேகமாக தட்டினால் உணவுக்குழாயில் சிக்கிய பொருள் வெளியே வர வாய்ப்பு உள்ளது என்றனர். ஈரோடு: பழனிசாமியின் லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

விகடன் 3 Dec 2025 4:08 pm

மன்னாரில் வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான கால் நடைகள் உயிரிழப்பு

மன்னாரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரை யொதுங்கியது. மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இந் நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி கால்நடைகள் (மாடு) கடலில் விடப்பட்ட நிலையில் குறித்த கால்நடைகள் உயிரிழந்த […]

அதிரடி 3 Dec 2025 4:05 pm

தூத்துக்குடி வளர்ச்சி பணிகள்: பெண்களுக்கு தனியாக பிங்க் பூங்கா - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

தூத்துக்குடியில் முதல்வர் உத்தரவால் பல வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது. பூங்காக்கள் 3ல் இருந்து 53 ஆக உயர்ந்து, பெண்களுக்காக தனி பிங்க் பூங்காக்கள் மூன்று அமைக்கப்படுகிறது.

சமயம் 3 Dec 2025 4:02 pm

ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்

சாப்பாட்டில் எவ்வளவு உப்பு போட வேண்டும்... என்ன படிக்கலாம்... எங்கே டிரிப் போகலாம்... இந்த டிரெஸ்ஸிற்கு என்ன மேட்சாக போடலாம்... - இப்படி சின்ன, பெரிய சந்தேகங்கள் அனைத்திற்கும், இப்போது 'ChatGPT' தான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. இது இன்னும் ஒருபடி மேலே போய், நம் மக்கள் முதலீட்டு ஆலோசனைகளுக்கும் சாட் ஜிபிடியை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அது சரியா... தவறா என்பதை காரணத்துடன் விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் நாகராஜன். பங்குச்சந்தை நிபுணர் நாகராஜன் ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது? ஒரு நபர் ChatGPT-யிடம், 'இந்தப் பங்கில் முதலீடு செய்யலாமா?' எனக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அது அதற்கு, 'இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம்... ஆனால், நான் அதை பரிந்துரைக்கமாட்டேன். அந்தப் பங்கில் முதலீடு செய்யாமல் இருந்தாலும் நல்லது' என்பது போல நழுவலாக தான் பதில் சொல்லும். ஆனால், நம் மக்கள் இதை புரிந்துகொள்ளாமல் சாட் ஜிபிடி சொன்ன பங்கில் முதலீடு செய்வார்கள். உண்மையில், பங்குச்சந்தை தரவுகளை சாட் ஜிபிடி மாதிரியான ஏ.ஐ டூல்களில் ஆராய... பகுப்பாய்வு செய்யவே தனியாக படிக்க வேண்டும். அடுத்ததாக, ஏ.ஐயிடம் நமக்கு இருக்கும் சந்தேகத்தை எந்தக் கேள்வியாக கேட்க வேண்டும் என்கிற புரிதல் இருக்க வேண்டும். அது இருந்தால் தான், சாட் ஜிபிடியிடம் ஆலோசனை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். ஆனால், அதிலும் மிகுந்த கவனம் வேண்டும். முழுமையான தகவல் கீழே உள்ள வீடியோவில்...

விகடன் 3 Dec 2025 3:58 pm

இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு.. பணம் RETURN.. வெளியான அறிவிப்பு!

இண்டிகோ விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான சேவையில் தாமதம் மற்றும் ரத்து நடவடிக்கைகளை பயணிகள் சந்திக்க நேரிட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணத்தை திரும்ப பெறுவதாக உறுதி அளித்துள்ளது.

சமயம் 3 Dec 2025 3:53 pm

UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை

ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவைத் தொகையாக உள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டுக்கான 877 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்தப்படாமல் இருப்பதால், மொத்த நிலுவைத் தொகை சுமார் 1.586 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஐநா ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் வெறும் 145 நாடுகள் மட்டுமே 2025ஆம் ஆண்டுக்கான தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலுவைக் காரணமாக, ஐ.நா. தனது வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான குறைப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பட்ஜெட் குறைப்பு மற்றும் அதன் தாக்கங்கள் ஏற்கெனவே UN80 சீர்திருத்த முயற்சியின் கீழ் ஐ.நா. சபை செலவினங்களைக் குறைக்க முயலும் சூழலில், பெரும்பாலான பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைபடுவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்துமாறு நான் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று வருந்தியுள்ளார். ஐநா சபை திருத்தப்பட்ட திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் வழக்கமான பட்ஜெட் 3.238 பில்லியன் டாலராக இருக்கும். இது 2025 உடன் ஒப்பிடும்போது 577 மில்லியன் டாலர் (சுமார் 5,200 கோடி ரூபாய்) அல்லது 15.1% குறைவாகும். வேலை இழப்புகள் மற்றும் பணிகளில் தாக்கம் இந்த நிதி நெருக்கடியின் காரணமாக 2,681 வேலைகள் நீக்கப்படும். இது ஐ.நா. அதிகாரிகளில் சுமார் 18.8% ஆகும். சிறப்பு அரசியல் பணிகளில் 2025 உடன் ஒப்பிடுகையில் 21% குறைப்பு மேற்கொள்ளப்படும். இதன் விளைவாக, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடுகளில் ஐ.நா.வின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐ.நா.வின் முக்கிய நிலையங்களைச் செலவு குறைவான நகரங்களுக்கு மாற்றுவது, ஊழியர்களின் விருப்ப ஓய்வை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்த ஐ.நா. திட்டமிட்டுள்ளது. Gaza: ``உலகின் மௌனம் அச்சுறுத்துகிறது'' -இஸ்ரேலை எதிர்த்து காசாவுக்கு உதவ முயலும் கிரேட்டா தன்பெர்க்

விகடன் 3 Dec 2025 3:53 pm

தென்காசி: அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை! - பட்டப் பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தென்காசியின் மையப்பகுதியில் உள்ள நடுபல்க் அருகே அரசு வழக்கறிஞரின் அலுவலகம் உள்ளது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள், அவரது அலுவலகத்துக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகச் செயல்பட்டு வந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். அவரது அலுவலகம் தென்காசியின் மையப்பகுதியான நடுபல்க் அருகே அமைந்துள்ளது. இன்று மதியம் அவர் தனது அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அவருக்குப் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அதனால் நிலைகுலைந்த அவர் சேரிலேயே சரிந்து விழுந்தார். முத்துக்குமாரசாமி வழக்கறிஞர் அலுவலகத்தில் கேட்ட கூக்குரலால் அப்பகுதி மக்கள் அங்குச் சென்றனர். ஆள் வருவதைப் பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த வெட்டுக் காயங்களுடன் சிகிச்சை பெற்ற அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட தென்காசி வழக்கறிஞர்கள் முத்துக்குமாரசாமி அலுவலகத்துக்குத் திரண்டு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், சம்பவப் பகுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அத்துடன், சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கொலை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் உதவியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், வழக்கறிஞர் ஒருவரை அவரது அலுவலகத்திற்குள்ளேயே சென்று மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினரிடம் கேட்டதற்கு, கொலைக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். இரண்டு நபர்கள் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததாகத் தெரிகிறது. வழக்குத் தொடர்பான முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா, அல்லது குடும்பப் பிரச்சினையால் வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். அதனால் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றார்கள்.

விகடன் 3 Dec 2025 3:53 pm

முதல்வருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு –செல்வப்பெருந்தகை பேட்டி!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் மேல் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய தலைமை அமைத்த ஐவர் குழு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது. குழுவில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.என். ஹெக்டே உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். […]

டினேசுவடு 3 Dec 2025 3:51 pm

கற்சிலைமடு பேராறுப்பாலத்தில் உடைவு

கற்சிலைமடு பேராறுப்பாலத்தில் உடைவு ஏற்பட்டதன் காரணமாக கனரக வாகானம் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடு பேராறுப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் உடைவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக் காரணமாக இன்றைய தினம் புதன்கிழமை உடைவு ஏற்பட்டுள்ளது எனவும், அதனால் குறித்த வீதியால் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

பதிவு 3 Dec 2025 3:42 pm

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.50,000 ஊதியத்தில் பணி; சட்டம் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு, 15-ம் தேதி வரைதான் டைம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டம் படித்தவர்களுக்கான நல்ல வாய்ப்பு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. ஆய்வு சட்ட உதவியாளர் பிரிவில் உள்ள 28 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 3 Dec 2025 3:40 pm

சண்டையில் பார்வதி காலில் விழுந்த ரம்யா: இதெல்லாம் ஓவர் ஆக்டிங்னு சொல்லும் பிக் பாஸ் பார்வையாளர்கள்

இந்த வார வீட்டு தலயான ரம்யா ஒரு பிரச்சனையின்போது வி.ஜே. பார்வதி காலில் விழுந்ததை பார்த்தவர்கள் இது தேவையில்லாத விஷயம், ஓவராக பண்றார் என்று விமர்சிக்கிறார்கள்.

சமயம் 3 Dec 2025 3:38 pm

BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் பார்வதி, ரம்யா, கம்ருதீன் மூவருக்கும் சண்டை நடக்கிறது. நான் சொல்லும்போது ஏன் யாருமே கேட்கல என பார்வதி கேட்க, இந்த விஷயத்தை நீ தான் சொன்ன, நான் சொன்னேன்னு யார்கிட்டையும் சொல்லவே இல்லையே என ரம்யா சொல்கிறார். இதனிடையே பார்வதிக்கு ஆதரவாக கம்ருதீன் பேச கம்ருதீனுக்கும், ரம்யாவுக்கும் வாக்குவாதம் ஆகிறது. என் கிட்ட பேசாத உன் கால்-ல கூட விழுறேன் என ரம்யா பார்வதியின் காலில் விழுந்து அழுகிறார். BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

விகடன் 3 Dec 2025 3:36 pm

வெறும் 1000 ரூபாய்தான்.. அதுக்கு மேல இல்ல.. பென்சன் வாங்குவோரை ஏமாற்றிய மத்திய அரசு!

அரசின் பென்சன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பென்சன் தொகையை இப்போது உயர்த்தும் எண்ணமே இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

சமயம் 3 Dec 2025 3:35 pm

ரஷியா வசம் முக்கிய உக்ரைன் நகரம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விடியோ அறிக்கையில், ராணுவ சீருடை அணிந்தவாறு புதின் பேசியதாவது: போக்ரோவ்ஸ்க் மற்றும் காா்கிவ் பகுதியின் வோவ்சான்ஸ்க் நகரங்கள் உக்ரைனிடம் இருந்து முழுமையாக ‘விடுவிக்கப்பட்டன’. இது, நமது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கையின்’ (உக்ரைன் போா்) ஆரம்ப இலக்குகள் அடையப்படுவதை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்லும் என்றாா் அவா். உக்ரைன் போரை முடிவுக்குக் […]

அதிரடி 3 Dec 2025 3:30 pm

Sting Energy and Mercedes-AMG PETRONAS F1 Team announce landmark global partnership

Mumbai: Sting Energy, PepsiCo’s high-octane energy drink and an Official Team Partner of Formula 1, has announced a groundbreaking global partnership with the Mercedes-AMG PETRONAS F1 Team—unveiled in a way the sport has never seen before.In a bold creative move, the partnership was announced not by drivers, spokespeople, or executives—but by the Mercedes-AMG PETRONAS Formula 1 car itself. In a digital film that has already ignited conversation online, the car delivers the news with a precision-tuned lap, culminating in the engine’s roar transforming into an unmistakable: “STINGGGGGG.”This first-of-its-kind reveal sets the tone for the collaboration that officially begins in 2026.The announcement signals Sting Energy’s entry into global speed culture, promising “more energy, more speed, and a deeper connection between fans and the Mercedes-AMG PETRONAS F1 Team.” Within hours of release, leading creators across platforms shared their excitement, praising the innovative car-led reveal.“This partnership unites performance, energy, and flavour under one banner - connecting three of PepsiCo’s most iconic brands with the world’s most successful Formula 1 team, said Eugene Willemsen, Chief Executive Officer, International Beverages at PepsiCo. “Through Gatorade, Sting, and Doritos, we’re inside the culture of the sport, fueling both the athletes and the fans who live for the thrill of F1. Partnering with Mercedes-AMG PETRONAS Formula 1 Team reflects our shared commitment to performance, innovation, and excellence - values that define both our organizations.” Toto Wolff, Team Principal & Chief Executive Officer, Mercedes-AMG PETRONAS F1 Team, commented, “Welcoming a company with a portfolio as strong as PepsiCo’s into our partner ecosystem is another sign of the strength of our team and our sport. As a brand, they align perfectly with our ethos of chasing ultimate performance through innovation and excellence. Gatorade’s expertise in sports science, Sting’s youthful energy, and Doritos’ cultural relevance each bring something unique. Together, they create a partnership that not only supports our team’s performance but also enhances the experience for our fans around the world.” Richard Sanders, Chief Commercial Officer, Mercedes-AMG PETRONAS F1 Team, added, “We’re delighted to welcome PepsiCo to the team. Their expertise in this sector will help us deliver great experiences for our guests and fans at the track and beyond. It’s a partnership that adds real value to how we operate day-to-day and how we connect with people around the world.” https://www.instagram.com/reel/DRy3uu_j_SZ/?igsh=MTNlM3RwZmNsanphbw==

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 3:29 pm

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை :நேற்று (02-12-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் புதுவை வடதமிழகம் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (03-12-2025) காலை 0530 மணி அளவில், வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, காலை 0830 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

டினேசுவடு 3 Dec 2025 3:22 pm

Zee Entertainment UK and Samsung TV Plus partner to launch first single-IP Indian channel Jodha Akbar in France

Mumbai: Zee Entertainment UK has announced the launch of Jodha Akbar, the first-ever single IP Indian channel to debut in France, now available on Samsung TV Plus. The dedicated channel brings the iconic historical drama Jodha Akbar to French audiences, further strengthening Zee’s growing international footprint.The new channel serves as a natural extension of the already successful Zee One channel in France. With Jodha Akbar having earned immense popularity and admiration on Zee One, this launch represents a significant step toward deepening engagement with French viewers by offering a genre-defining historical and costume drama that has resonated globally.Samsung TV Plus, Samsung’s free ad-supported streaming TV (FAST) service, offers hundreds of live channels and on-demand entertainment options—without any subscription. The service is accessible across Samsung TVs, Galaxy devices, and Samsung Smart Monitors, ensuring wide reach for Zee’s new offering. Amit Goenka, President International and Digital Businesses, Zee Entertainment, said, “Jodha Akbar is one of the most acclaimed and watched show on Zee internationally. It has been dubbed and subtitled in multiple languages and has been watched for millions of hours by viewers across the world. To continue our legacy of building bridges between languages, cultures, and communities, we are bringing another partnership with Samsung TV Plus to experience the magic of Jodha Akbar as an exclusive single IP channel.” Commenting on the partnership, Antoine Chotard, Country Lead France & MENA, Samsung TV Plus, added, “Teaming up with Zee allows us to bring Jodha Akbar, a truly iconic and culturally rich series to Samsung TV Plus in France - we’re excited to launch this remarkable IP on the service and look forward to the channel’s success in the French market.”The launch underscores Zee’s strategic focus on expanding its premium content offering across global streaming and connected TV ecosystems. With Samsung TV Plus as a distribution partner, French audiences can now enjoy frictionless, subscription-free access to one of India’s most notable television epics.This marks Zee’s 8th channel launch in Europe, reaffirming its leadership in delivering culturally rich entertainment to international markets.Jodha Akbar is available now on Samsung TV Plus in France on channel number 4277.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 3:19 pm

Waves OTT premieres feature film honouring Freedom Fighter Khudiram Bose on December 3

Mumbai: Waves OTT, the official digital platform of Prasar Bharati, has announced the release of a special feature film commemorating the extraordinary life and sacrifice of Shaheed Khudiram Bose — one of India’s youngest and most fearless revolutionaries. The film will stream exclusively on Waves OTT beginning December 3, coinciding with the birth anniversary of the iconic freedom fighter.Born on December 3, 1889, Khudiram Bose remains an enduring symbol of youthful courage, patriotic zeal, and unwavering revolutionary spirit. At just 18 years old, he became one of the youngest martyrs of India’s independence movement, walking to the gallows with unmatched composure and fearlessness. The tribute also comes at a meaningful moment, as the nation marks 150 years of the historic call “Vande Mataram,” a slogan Bose passionately embraced to stir national consciousness.The feature film traces Khudiram’s journey from his early years in Medinipur district to his involvement in India’s revolutionary activities, shaped by powerful influences such as Sister Nivedita. It chronicles key events—including the attempted assassination of British magistrate Kingsford, his arrest, trial, and his resolute final moments leading to his martyrdom on August 11, 1908.The film features an acclaimed ensemble cast including Vivek Oberoi, Nasser, Atul Kulkarni, Rakesh, Maria Ravi Varma, Ravi Babu, Kasi Viswanath, and Abhiram. Directed by Vijay Jagarlamudi and produced by DVS Raju, the film includes music by Mani Sharma and production design by Thota Tharani. It will be available in four languages—Hindi, Tamil, Telugu, and Bengali—ensuring broad accessibility for audiences across the country.Speaking about the release, Gaurav Dwivedi, CEO, Prasar Bharati, said, Waves OTT stands out because we are not chasing trends, we are preserving India’s narrative. While most platforms prioritise commercial global content, our focus is exclusively on India: its history, its heroes, its languages, and its lived experiences. With an expanding catalogue of patriotic, cultural, and regionally rooted stories, we aim to revive narratives that deserve national attention. Presenting the story of Khudiram Bose and his valor is part of this conscious effort to bring meaningful, nation-building cinema to audiences across the country.” The special feature film will stream exclusively on Waves OTT starting December 3.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 3:16 pm

Green Gold Animation launches ‘Green Gold TV’, enters India’s FAST channel space

Mumbai: Green Gold Animation, a creator of original animated entertainment, has announced the launch of its dedicated Free Ad-Supported Streaming Television (FAST) channel, Green Gold TV. The 24x7 channel will be available across major connected TV and streaming platforms including TCL, Airtel Xstream, RunnTV, YuppTV, and Cloud TV, with additional distribution partners set to join soon.With this launch, Green Gold Animation becomes one of the first established Indian studios to foray into the rapidly expanding FAST ecosystem—an emerging format reshaping how audiences consume entertainment on connected TV. Green Gold TV will offer a diverse slate of full episodes and animated movies in Hindi, aimed at kids and family audiences nationwide. Viewers can access some of Green Gold’s most beloved titles such as Super Bheem, Mighty Raju, Chorr Police, Krishna Balram, Luv Kushh, Maha Ganesha, and Vikram Betal—all available free of cost and supported by advertisements.Rajiv Chilaka, Founder & CEO of Green Gold Animation, said, “The television landscape is at the brink of a major transformation, with FAST channels redefining how audiences experience content. We are excited to be among the first Indian studios to embrace this change. With Green Gold TV, we are excited to bring our catalogue of original Indian stories directly into living rooms across the country, expanding our reach to millions of households, offering stories that families can enjoy together — free, seamless, and in a format built for the future.”The FAST (Free Ad-Supported Streaming TV) segment has gained strong global momentum and is now rapidly growing in India, fueled by the adoption of connected TVs and rising demand for ad-supported streaming. Industry estimates suggest that connected TV households in India could exceed 150 million in the coming years, presenting a significant opportunity for both content creators and advertisers. Unlike subscription-driven OTT platforms, FAST channels provide a continuous, lean-back viewing experience similar to linear television, but delivered over the internet and supported by ads.The launch of Green Gold TV marks an important milestone in Green Gold’s digital evolution, underscoring its commitment to extending reach through new formats and technologies. The channel will operate independently from YouTube, offering long-form episodes and curated movies to ensure an uninterrupted, high-quality viewing experience. Programming includes 22-minute episodic content and 60-minute feature-length films, curated for younger audiences and family co-viewing.Launching this December, Green Gold TV will debut with six marquee titles, with plans to expand into new IPs and original programming over time. The channel also unlocks fresh monetization opportunities through advertising partnerships, while delivering premium, safe, and accessible entertainment to Indian households.As one of the first Indian animation studios to embrace the FAST model, Green Gold Animation is setting a new benchmark in how kids’ content is delivered, discovered, and enjoyed across digital-first ecosystems.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 3:13 pm

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு'அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதியில் தென்மேற்கு திசையில் மெல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்குள், இது இன்னமும் வலுவிழுந்து குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மழை வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி? எங்கெல்லாம் கனமழை? இன்று திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கே மிக கனமழை பெய்யலாம். வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் கனமழை பெய்யலாம். நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. HEAVY RAINFALL WARNINGS pic.twitter.com/CDEfJu1JXM — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 3, 2025 `டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன?

விகடன் 3 Dec 2025 3:00 pm

Wonderla: ``புயல், மின்தடை; 25 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி நடந்ததில்லை'' -மன்னிப்பு கேட்ட வொண்டர்லா

இந்த மாதம் டிசம்பர் 1-ம் தேதி, இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனைத் திறந்து வைத்தார். இதையடுத்து நேற்று டிசம்பர் 2-ம் தேதி முதல் வொண்டர்லா பயன்பாட்டிற்கு வந்தது. கடந்த ஒரு மாதமாகவே இதற்கான டிக்கெட்டுகள் பல விதமான சலுகைகளில் கூவி–கூவி சமூக வலைதளங்களில் விற்கப்பட்டன. வொண்டர்லாவைப் பற்றிய எதிர்பார்ப்பை உயர்த்த சமூக வலைதளப் பயனர்களை வைத்து ரீல்ஸ், வீடியோக்கள் என பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. பலரும் ஆர்வத்துடன் முதல்நாளே டிக்கெட்டுகளை புக்கிங் செய்து சென்றிருந்தனர். ஆனால் இதில் சோகமாக இருந்தது என்னவென்றால், சென்னை வொண்டர்லா முழுமையாக தயாராகவில்லை. பல விளையாட்டு எந்திரங்களின் பணிகள் முழுமையாக முடியாமல் இருந்துள்ளன. மிகச் சில விளையாட்டு எந்திரங்களே பயன்பாட்டில் இருந்துள்ளன. அதுவும் சில சமயங்களில் கோளாறு ஏற்பட்டதால், ஆர்வத்துடன் சென்றவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சென்னை வொண்டர்லா திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக! வொண்டர்லா நிர்வாகம், பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகே மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கலாம் - ஏன் இந்த அவசரம்? இல்லையென்றால் திறக்கும் முன்பே விளம்பரத்திற்காக சென்று வீடியோக்கள் பதிவிட்ட சமூக வலைதள இன்ப்ளூயன்சர்கள் கொஞ்சமேனும் அக்கறையுடன் அங்குள்ள நிலைமை, உண்மையை எடுத்துச் சொல்லியிருக்கலாம். வொண்டர்லாவின் எந்திரக் கோளாறுகள், முழுமையடையாத பணிகள், அங்கு சென்றவர்களின் ஏமாற்றங்கள் என நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் களேபரமாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில், இதுகுறித்து வொண்டர்லாவின் நிர்வாக இயக்குனர் அருண் கே. சிட்டிலப்பிள்ளி கூறியதாவது: நேற்றுதான் எங்கள் சென்னை வொண்டர்லா பார்க்கை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்த முதல் நாள். முதல் நாளான நேற்று கிட்டத்தட்ட 2,000 பேர் வந்திருந்தார்கள். புயலும் மழையும் இருக்கும் சமயத்திலும் இவ்வளவு பேர் வந்து வரவேற்பு கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. Thank you Chennai ❤️ for that overwhelming response on our first day! We had almost 2000 visitors yesterday! We did experience a lot of power outages due to the cyclone and sorry that caused delays for our guests. But I can assure you that our rides were safe and we will further… pic.twitter.com/F8UZtMC9Vy — Arun Chittilappilly (@arunpally) December 3, 2025 இருப்பினும், நேற்று புயல்-மழை மற்றும் அதனால் ஏற்பட்ட மின்தடை காரணமாக வொண்டர்லாவின் சில ரைடுகள் பாதியிலேயே நின்றுவிட்ட எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. எங்கள் நிர்வாகமும் முழு தீவிரத்துடன் பணியாற்றி அனைத்து தடைகளையும் சரிசெய்தது. எந்தவொரு பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை; அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்தோம். சிலருக்கு சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. எங்கள் தரப்பில் இருந்த பிரச்னைகளுக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இனி இப்படியானது நடைபெறாது. 25 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இந்த தொழிலை நடத்தி வருகிறோம். இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது, என்று அவர் கூறியுள்ளார். சிங்கக் கூண்டுக்குள் தானே நுழைந்த இளைஞர் - பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம் | வீடியோ

விகடன் 3 Dec 2025 3:00 pm

400 பேருக்கு மட்டும் அழைப்பு: சொந்த ஊரை தவிர்த்து பஹ்ரைனில் திருமணம் செய்துகொள்ளும் அஜித் பவார் மகன்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். அவரது மகன் ஜெய் பவாருக்கு வரும் 4ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை திருமணம் நடைபெறுகிறது. ஜெய் பவார் ருதுஜா பாட்டீலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இத்திருமணம் அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியிலோ அல்லது புனேயிலோ அல்லது மும்பையிலோ நடைபெறவில்லை. வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் நாட்டில் இத்திருமணம் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கு 400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பாட்டீல் மற்றும் பவார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இத்திருமண விழாவில் முதல் நாளில் மருதாணி வைக்கும் சடங்கு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 5ம் தேதி மஞ்சள் வைக்கும் நிகழ்ச்சியும், 6ம் தேதி சங்கீத நிகழ்ச்சியும், 7ம் தேதி திருமணமும் நடைபெறுகிறது. சுப்ரியாவுடன் ஜெய்பவார் விழா பஹ்ரைனில் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகள் இந்தியாவில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு பவார் குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டது. ஆனால் கடந்த 30ம் தேதி மும்பையில் நடந்த சரத்பவார் பேரன் யுகேந்திர பவார் திருமணத்தில் பவார் குடும்பம் மொத்தமும் கலந்து கொண்டது. இதில் அஜித் பவார், சுப்ரியா சுலே, சரத்பவார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இப்போது அஜித் பவார் மகன் திருமணம் நடைபெறுகிறது. இதில் சரத்பவார் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. ஆனால் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே இத்திருமணம் குறித்த தகவல்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனால் இரு குடும்பமும் சமாதானமாகிவிட்டதாகவே தெரிவிகிறது. முன்னதாக ஜெய் பவார் தனது வருங்கால மனைவியுடன் சென்று சரத்பவாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். மும்பையில் திருமணம் நடந்தால் அஜித் பவாரின் அரசியல் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். ஆனால் பஹ்ரைனில் திருமணம் நடப்பதால் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விகடன் 3 Dec 2025 2:57 pm

இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி ஸ்கைவாக் பாலம்… எங்க இருக்கு தெரியுமா?

மிக நீளமான கண்ணாடி ஸ்கைவாக் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது எங்கு இருக்கிறது, எப்படி செல்வது தொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

சமயம் 3 Dec 2025 2:56 pm

அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்! - 8 மணி நேர பணி குறித்து துல்கர் &ரானாவின் கருத்து என்ன?

சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்தார். இவருடைய கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் முக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் பேசி வருகிறார்கள். Deepika Padukone ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்காக அதன் ஆசிரியர் அனுபமா சோப்ரா, 2025-ம் ஆண்டின் முன்னணி தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ரவுண்ட் டேபிள் நேர்காணல் நடத்தியிருந்தார். அதில் நடிகர்கள் துல்கர் சல்மானும், ரானாவும் இந்த 8 மணி நேரப் பணி குறித்து அவர்களுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். அந்த நேர்காணலில் ரானா, சினிமா என்பது வேலை இல்லை. இது ஒரு லைஃப்ஸ்டைல். இதில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனித்தன்மைகளைக் கொண்டிருக்கும். அதைக் குறிப்பிட்ட நேர அட்டவணைக்குள் அடைக்க முடியாது. தொழிற்சாலையைப் போல அசெம்பிளி லைன் அணுகுமுறை கதை சொல்லலைப் பாழாக்கிவிடும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலையைச் செய்தால் தானாக சிறந்த காட்சி வந்துவிடும் என்று கிடையாது. தெலுங்கு சினிமாவில் இப்போது பல முன்னணி நடிகர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவதால் பட்ஜெட்டைக் கட்டுப்படுத்தவும், ஷூட்டிங்கை விரைவாக முடிக்கவும் முடிகிறது. பெரிய நட்சத்திரங்கள் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளையும் சொகுசையும் குறைப்பது அவர்களது பொறுப்பு என்றார். Rana Daggubati அவரைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான், மலையாள சினிமாவில் பட்ஜெட் சிறியதாக இருப்பதால் நீண்ட தொடர் ஷெட்யூல்களையே பின்பற்றியிருக்கிறோம். இடைவெளி அதிகம் இல்லாமல் விரைவாக ஷூட்டிங்கை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் தெலுங்கு படங்களில் பணிபுரியும் போது பெரிய பட்ஜெட், சிறந்த திட்டமிடல் இருப்பதால் பெரும்பாலும் மாலைக்குள்ளேயே பேக் அப் ஆகிவிடும். எல்லாம் ஒழுங்காக, கட்டமைக்கப்பட்ட விதத்தில் நடக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை என்பது எப்போதும் பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை. ஒரு நாளைக்கு சில மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்வது, மற்றொரு முழு நாள் ஷூட்டிங் செய்வதைவிட குறைவான பணமே செலவாகும். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:55 pm

Angammal: அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு! - கீதா கைலாசம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள 'அங்கம்மாள்' படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கீதா கைலாசம் - சரண் சக்தி தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். டிசம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கீதா கைலாசம், “'அங்கம்மாள்' கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது. அவளுடைய மௌனத்திற்கும், பெருமைக்கும், இதயத்துடிப்புக்கும் முழுமையாக சரணடைய வேண்டியிருந்தது. கிராமத்தில் படமாக்கியதால் ஒவ்வொரு ஃபிரேமிலும் நான் நடிக்கும் முறையே மாறியது. இந்தக் கதையை இவ்வளவு உணர்திறனுடன் வடிவமைத்த இயக்குநர் விபினுக்கு நன்றி. ரிகர்சல் மூலம் அல்லாமல் அந்த கதாபாத்திரத்தை நான் உணர்ந்து நடிக்க அனுமதித்தார். சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது. கீதா கைலாசம் - பரணி இந்தப் படம் வெளியானதும் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சின்சியராக நடித்தோம். இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் புது அனுபவத்தையும் ஒரு தலைமுறையின் வலிமையையும் எடுத்து சொல்லும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:49 pm

``ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்துக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது!'' - அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பா.ஜ.க மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதால், அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால், 'நானும் கட்சியில் இருக்கிறேன்' என்பதை காட்டிக் கொள்ள, என்னை 'பி டீம்' என்று கூறியுள்ளார். நாங்கள் எது பி டீம், எது சி டீம், எது ஸ்லீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்துவிட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றம் கிடையாது. ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அமைச்சர் ரகுபதி எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் தி.மு.க-விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே ஜெயக்குமார் பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை. எடப்பாடியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர். மாவட்டச் செயலாளர் தான். ஆனால், நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால், எடப்பாடியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார். சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ரகுபதி பதில்

விகடன் 3 Dec 2025 2:46 pm

கேரளா: உலகின் முதல் உளவியல் பூங்கா என அழைக்கப்படும் `சைக்கோ பார்க்'| ஸ்பாட் விசிட் போட்டோஸ்.!

கேரளா: உலகின் முதல் உளவியல் பூங்கா என அழைக்கப்படும் 'சைக்கோ பார்க்'

விகடன் 3 Dec 2025 2:32 pm

திருமணமாகாமல் பிறந்தவ நான் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்றை திருடிட்டாங்க: நடிகையின் மகள் கண்ணீர்

தன் பிறப்பு குறித்த விஷயத்தை வெளிப்படுத்த பிறப்பு சான்றிதழ் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான மசாபா குப்தா.

சமயம் 3 Dec 2025 2:13 pm