SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

டிரம்பின் மகனுக்கு வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனுக்கு வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது. டிரம்ப் இன் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். திருமண நிச்சயதார்த்தம் டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளநிலையில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக 2018 ஆம் ஆண்டு […]

அதிரடி 18 Dec 2025 12:30 am

பொருட்களின் விலை அதிகரிப்பும் அவலமும்

1970களின் நடுப்பகுதியில் பொருட்களின் விலையுயர்வு பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது. மிக முக்கியமான விலை உயர்வுகள் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே என்றாலும், ஆடை, எரிபொருள், மின் சாதனங்கள் ஆகியவற்றின் விலைகளும் கணிசமாக அதிகரித்தன. பெரும்பான்மையான மக்கள் ஆடை வாங்குவதைத் தள்ளிப்போட்டு, தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் உணவளிக்கப் பிற செலவினங்களைக் கடுமையாகக் குறைத்தனர். அரிசி, மா போன்றவற்றுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மக்களுக்குப் பாரிய நெருக்கடியானது. 1975ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தேசிய விலை நிர்ணய ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது, அது பின்வரும் […]

அதிரடி 18 Dec 2025 12:30 am

யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள மற்றும் சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றுவதற்கான கட்டண நடைமுறை எதிர்வரும்… The post யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 11:58 pm

 பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு அதிரடித் தடை: மாநகர சபையில் முக்கிய தீர்மானம்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான பழைய பூங்கா (Old Park) பகுதியில் இனி எந்தவிதமான புதிய கட்டுமானங்களுக்கும்… The post பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு அதிரடித் தடை: மாநகர சபையில் முக்கிய தீர்மானம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 11:47 pm

பியூமி ஹன்சமாலிக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

இலங்கை நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவானுக்கு திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளனர். வெண்மையாக்கும் கிறீம் 225 மில்லியன் ரூபா வரியை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய செலுத்தத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் ‘Lolia Skin Care ‘ என்ற சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக […]

அதிரடி 17 Dec 2025 11:30 pm

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி: தா.மோ.அன்பரசன் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? கள நிலவரம் என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? என்பது குறித்த களநிலவரத்தை விரிவாக காண்போம்.

சமயம் 17 Dec 2025 11:02 pm

கோர விபத்தில் தாயும் குழந்தையும் பரிதாப உயிரிழப்பு

அம்பாறை தெஹியத்தகண்டிய – முவகம்மன வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 33 வயதுடைய தாயும் 02 வயதுடைய குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 17 Dec 2025 10:30 pm

நன்றி மறந்த அதிகாரி!

இலங்கை முப்படைகளிற்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலர் முரளிதரன் பணியின் போது தாக்கப்பட்ட தனது கிராமசேவையாயர் பற்றி மூச்சுக்கூட விடமறந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது. குpளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் போவோர் வருவோர் எல்லோருக்கும் நன்றி மறவாது நன்றிகளை தெரிவித்த மாவட்ட செயலர் முரளிதரன் பணியின் போது இடைத்தங்கல் முகாமில் வைத்து தாக்கப்பட்ட கிராம அலுவலரை பற்றி வாயே திறக்க மறுத்துவிட்டார். ஆண்மைய புயல் அனர்த்தத்தின் போது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம அலுவரை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொது மக்கள் முன் தாக்கியமை தொடர்பில் கைது செய்யபப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் சமைத்த உணவு பொதிகளுடன் வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவற்றை மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் மாவட்ட செயலர் முரளிதரனின் பணிப்புக்கமைய வெளியிலிருந்து சமைத்த உணவுகள் கொண்டு வந்து வழங்குவதனை தவிர்க்குமாறும் அவ்வாறு வழங்குவதாக இருப்பினும் உரிய சுகாதார முறைப்படி இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் கிராம சேவையாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து கிளிநொச்சி காவல்; நிலையத்தில் கிராம அலுவலர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டிருந்த காவல்துறையால் இளங்குமரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய மாவட்ட செயலகத்தில் முப்படைகள் முதல் சிங்கள அதிகாரிகள் வரை நன்றி தெரிவித்திருந்த மாவட்ட செயலர் முரளிதரன் மூச்சுக்கூட தாக்கப்பட்ட கிராமசேவையாளர் பற்றி வாயே திறக்கவில்லை. ஆட்சியில் யார் இருந்தாலும் கூழைக்கும்பிடு போடும் அரச அதிகாரிகளிற்காகவா நாம் அடி வாங்கி பணியாற்றினோமென சீற்றத்துடன் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர் கிராமசேவையாளர்கள்.

பதிவு 17 Dec 2025 10:02 pm

Frame and Fame Awards Curtain Raiser: Honouring Cinema with Credibility

Veteran journalist, producer, director, and actor Mr. Chithra Lakshmanan, a stalwart of Tamil cinema with over five decades of experience,

சென்னைஓன்லைனி 17 Dec 2025 9:45 pm

கணக்காய்வாளர் நாயகமாக :கேணல் ராஜசிங்க!

அனுரகுமார திஸநாயக்க கேணல் ராஜசிங்க என்கிற இராணுவ அதிகாரியை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருக்கின்றார் . கோத்தபாயா ராஜபக்சே தொடர்ச்சியாக பொது நிருவாகத்தை தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்திய போதும் பாராளுமன்றத்திற்கு நேரடியாக அறிக்கையிடும் சுயாதீனமான நிறுவனமான கணக்காய்வாளர் திணைக்களத்தில் கைவைக்கவில்லை . ஆனால் பொதுத்துறை கணக்காய்வு தொடர்பான அனுபவம் (Public Sector Auditing), பொது நிதிச் சட்டம் குறித்த அறிவு (Public Financial Law), சுயாதீனமாக இயங்க கூடிய ஆற்றல் (Ability to Function Independently) என எந்த பின்னணியும் இல்லாத ஒரு இராணுவ அதிகாரியை தீவின் மிக பிரதான நிறுவனத்தின் தலைமை பதவிக்கு பரிந்துரைத்திருக்கின்றார் குறிப்பாக இலங்கை கணக்காய்வாளர் திணைக்களம் தொடர்ச்சியாக இலங்கை இராணுவ கட்டமைப்பின் நிதி விரயம், மோசமான நிதி முகாமைத்துவம், ஊழல் மோசடிகள் பற்றி அறிக்கையிட்டு வந்த நிலையில் குறித்த நிறுவனத்திற்கே இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரை தலைவராக நியமிக்க அனுரா குமார திஸநாயக்க முயற்சிக்கின்றார் விசேடமாக இலங்கை இராணுவத்தின் உள்ளக கணக்காய்வாளராக கேணல் O.R. ராஜசிங்கே பணியாற்றிய காலத்தில் அங்கிருந்த பலவீனமான சொத்து முகாமைத்துவம் (Poor Asset Management), அலட்சியமான நிதி கட்டுப்பாடுகள் (Weak Financial Controls), வேகமற்ற நடவடிக்கைகள் (Slow or Inadequate Action) என பல்வேறு விடயங்களை 2024 ஆம் ஆண்டு கணக்காய்வறிக்கை பதிவு செய்திருக்கின்றது

பதிவு 17 Dec 2025 9:41 pm

நன்றி…நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்; துப்பாக்கியை பறித்த அவுஸ்திரேலியருக்கு குவியும் வாழ்த்து

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பிரபலமான போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகச் சம்பவத்தின் போது, தாக்குதலாளிகளில் ஒருவரை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றிய அஹமட் அல் அஹமட் மீது பாராட்டுகளும் நன்றியும் குவிந்து வருகின்றன. இந்த வீரதீரச் செயலின் பின்னர், சதர்லாண்டில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள அவரது வர்த்தக நிலையத்தின் முன்பகுதி, ஒரு நினைவுச் சின்னம் போலவே மாறியுள்ளது. மக்களின் மனதில் உண்மையான தேசிய ஹீரோ பொதுமக்கள் தொடர்ந்து […]

அதிரடி 17 Dec 2025 9:30 pm

மண்டைதீவு புதைகுழி:மூன்று மாதம் கிடப்பில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் திகதியிடப்பட்டுள்ளது. வழக்கு செவ்வாய்க்கிழமை (16) அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து இன்று புதன்கிழமை சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீண்டும் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர். இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெற வேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிட்டுள்ளார். 1990 ம் ஆண்டில் தீவகப்பகுதிகளில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் இலங்கை படைகளால் படுகொலை செய்யப்பட்டு மண்டைதீவிலுள்ள கிணறுகளுள் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 17 Dec 2025 9:30 pm

Kauvery Hospital, Vadapalani launches Kauvery Institute of Digestive Sciences with Advanced Technology

Kauvery Hospital, Vadapalani, a leading multi-specialty hospital, has launched Kauvery Institute of Digestive Sciences, an exclusive clinical initiative focused on

சென்னைஓன்லைனி 17 Dec 2025 9:28 pm

சிங்கள வித்தியாலயம்:விளையாட நல்ல இடம்!

யாழ்.நகரிலுள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்குமாறு தீர்மானமொன்று இன்றைய யாழ் மாநகர அமர்வில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வர் தயாளனினால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே தீர்மானத்தின் பேர்து தேசிய மக்கள் சக்தியின் பத்து யாழ்.மாநகரசபை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருந்தனர். ஏற்கனவே உள்ளக விளையாட்டரங்கை பழைய பூங்காவில் நிறுவ முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிராக நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்விவகாரம் நீதிமன்றில் நிலுவையிலுள்ள நிலையில் நீதிமன்ற அவமதிப்பாக மாறலாமென்ற நிலையில் தாம் வெளியேறியதாக ஊடகங்களிடையே விளக்கமளித்துள்ளனர். எனினும் நகரப்பகுதியில் தேவைக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ள படையினர் வெளியேற்றப்படுவது தொடர்பிலான ஊடகவியலாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதியே வடகிழக்கில் தேவையற்ற படையினர் வெளியேற்றப்படுவரென உறுதியளித்துள்ளதாக யாழ்.மாநகரசபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபிலன் தெரிவித்துள்ளார். முன்னதாக யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம்இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், 12 பரப்பளவு காணி கையகப்படுத்தப்பட்டு, அதில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 17 Dec 2025 9:28 pm

நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விரைந்து முடிக்க வேண்டும் –ராமதாஸின் பா.ம.க நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பா.ம.க. கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக்கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால்

சென்னைஓன்லைனி 17 Dec 2025 9:18 pm

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி விடலாம் என்று தி.மு.க. நினைத்தால் அதில் தோல்விதான் கிடைக்கும் –முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி 11 மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து

சென்னைஓன்லைனி 17 Dec 2025 9:16 pm

ஜனாதிபதி திரவுபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் தரிசனம் செய்தார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் இன்று காலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து

சென்னைஓன்லைனி 17 Dec 2025 9:14 pm

தமிழ்நாடு அரசு மாநில வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது –அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக மாநில வளர்ச்சியில்

சென்னைஓன்லைனி 17 Dec 2025 9:12 pm

விஜயின் ஈரோடு பிரசாரத்திற்கு கியூ ஆர் கோர், பாஸ் தேவையில்லை –செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெறுகிறது.

சென்னைஓன்லைனி 17 Dec 2025 9:11 pm

குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்”என்ற பெயர் எதற்கு? –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? , கிராமப்புற

சென்னைஓன்லைனி 17 Dec 2025 9:09 pm

பயங்கரவாதத்தை எதிர்க்கும் எத்தியோப்பியா நாட்டிற்கு நன்றி –பிரதமர் மோடி பேச்சு

எத்தியோப்பியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது அற்புதமாக இருக்கிறது. நான் இங்கு

சென்னைஓன்லைனி 17 Dec 2025 9:07 pm

இன்று தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு

சென்னைஓன்லைனி 17 Dec 2025 9:05 pm

பேரிடர் சவால்களை சமாளிக்க முழு ஆதரவு –சீனா உறுதி

சிறிலங்கா மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், பேரிடர் சவால்களை சமாளிக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், சீனா முழு ஆதரவை வழங்கும் என அறிவித்துள்ளது. சீனாவின், தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் வாங் டோங்மிங், இன்று சிறிலங்கா அதிபர்அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சிறிலங்கா விரைவாக மீண்டெழும் என்று அவர் நம்பிக்கை

புதினப்பலகை 17 Dec 2025 8:53 pm

மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி கொடுத்த 'கிஃப்ட்' - விலை தெரியுமா?

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஜி.ஓ.ஏ.டி. (GOAT) இந்தியா டூர் என்ற பெயரில் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு இன்று சென்றிருந்தார். லியோனல் மெஸ்ஸியின் வருகையைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனந்த் அம்பானி - மெஸ்ஸி இந்த பயணத்தின் முக்கிய தருணமாக, ஆனந்த் அம்பானியை மெஸ்ஸி சந்தித்து உரையாற்றினார். அந்த சந்திப்பின்போது ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு USD 1.2 மில்லியன் (சுமார் ரூ.10.9 கோடி) மதிப்புள்ள மிக அரிய ரிச்சர்ட் மில்லே (Richard Mille) கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் வெறும் 12 வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த கை கடிகாரம், மிகவும் பிரபலமானது. Messi: உங்கள் அன்பை இங்கிருந்து நான் எடுத்துச் செல்கிறேன்- இந்திய வருகை குறித்து நெகிழும் மெஸ்ஸி

விகடன் 17 Dec 2025 8:53 pm

SYS vs ADS: ‘மேத்யூ ஷார்ட் அணி, த்ரில் வெற்றி’.. பாபர் அசால் மெகா சொதப்பல்: ஸ்கோர் விபரம் இதோ!

சிட்னி சிக்ஸர் அணிக்கு எதிராக போட்டியில், அடிலெய்ட் ஸ்ட்ரைகர்ஸ் அணி போராடி வென்றது. சிஎஸ்கேவால் ஏலம் எடுக்கப்பட்ட மேத்யூ ஷார்ட், கேப்டனாக செயல்பட்டு, அடிலெய்ட் அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

சமயம் 17 Dec 2025 8:51 pm

இலங்கையின் நிவாரணப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிப்பு!

இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35… The post இலங்கையின் நிவாரணப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 8:47 pm

இலங்கையின் அவசரத் தேவைகளுக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது ஜப்பான்!

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவாலான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க… The post இலங்கையின் அவசரத் தேவைகளுக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது ஜப்பான்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 8:38 pm

AUS vs ENG 3rd Test: ‘2013-க்கு பிறகு’.. சம்பவம் செய்த அலேக்ஸ் ஹேரி: வரலாற்று சாதனை: ஸ்கோர் விபரம்!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில், துவக்கத்தில் சொதப்பிய ஆஸ்திரேலிய அணி, அதன்பிறகு அதரடி கம்பேக்கை கொடுத்தது. குறிப்பாக, அலேக்ஸ் ஹேரி சதம் அடித்து, வரலாற்று சாதனையை படைத்தார்.

சமயம் 17 Dec 2025 8:33 pm

ஜனவரியில் அனைத்துலக கொடையாளர் மாநாடு –சிறிலங்கா அறிவிப்பு

டிட்வா பேரிடர் மீள்கட்டமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், சிறிலங்கா சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்தும் என, நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மீள்கட்டமைப்பு செலவு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் துல்லியமான மதிப்பீடு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. மீள்கட்டமைப்பு நிதியைத் திரட்டுவதற்காக ஜனவரியில் ஒரு கொடையாளர் மாநாட்டை

புதினப்பலகை 17 Dec 2025 8:33 pm

சத்துணவு திட்டத்தின் பெண்களுக்கு வேலை; 64 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்கள்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு. சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 64 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஜனவரி 1-ம் தேதி வரை பெறப்படுகிறது.

சமயம் 17 Dec 2025 8:31 pm

பணம் பறிக்கும் குழுவால் அச்சத்தில் மாணவர்கள்; நடப்பது என்ன?

குருநாகலில் மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களிடம் பணம் பறிக்கும் மாணவர் குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை பணம் பறிப்பு கைதானவர்கள் கல்கமுவ, தம்புள்ள, அலவ்வ, கிரியுல்ல மற்றும் குளியாபிட்டிய போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து குருநாகலுக்கு வரும் மாணவர்களை அச்சுறுத்தி மிரட்டி, அவர்களிடமிருந்து நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை பணம் […]

அதிரடி 17 Dec 2025 8:30 pm

இளங்குமரன் கைது!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம அலுவரை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொது மக்கள் முன் தாக்கியமை தொடர்பிலேயே கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் சமைத்த உணவு பொதிகளுடன் வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவற்றை மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் பிரதேச செயலாளர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பணிப்புக்கமைய வெளியிலிருந்து சமைத்த உணவுகள் கொண்டு வந்து வழங்குவதனை தவிர்க்குமாறும் அவ்வாறு வழங்குவதாக இருப்பினும் உரிய சுகாதார முறைப்படி இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் கிராம சேவையாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து கிளிநொச்சி காவல்; நிலையத்தில் கிராம அலுவலர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டிருந்த காவல்துறையால் இளங்குமரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதிவு 17 Dec 2025 8:27 pm

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மில்லியன் டொலர்களை வழங்கியது கனடா

சிறிலங்காவில் அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசரகால நிவாரண முயற்சிகளை ஆதரிப்பதற்காக, கனடா 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதாக அறிவித்துள்ளது. கனடாவின் அனைத்துலக அபிவிருத்திக்கானவெளியுறவுச் செயலர் ரன்தீப் சராய் இன்றுஇந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கனடிய மனிதாபிமான

புதினப்பலகை 17 Dec 2025 8:26 pm

SMAT Final 2025: ‘246 அடித்து’.. பைனலுக்கு முன்னேறிய அணி: கடைசி நேரத்தில், அடுத்தடுத்து 12 சிக்ஸர்கள்!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்பது இறுதியாகிவிட்டது. குறிப்பாக, ஒரு அணி, 246 ரன்களை குவித்து, மெகா வெற்றியைப் பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

சமயம் 17 Dec 2025 8:16 pm

இலங்கையின் மீண்டெழும் பயணத்திற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு உறுதி!

“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை இந்தச் சவால்களை வென்று மிக விரைவில் மீண்டெழும்” என சீன மக்கள்… The post இலங்கையின் மீண்டெழும் பயணத்திற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு உறுதி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 8:06 pm

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! 15 ஆண்டு பழைய வாகனங்களை பறிமுதல் செய்ய அரசு உத்தரவு

15 ஆண்டுகள் முடிந்த பழைய வாகனங்களை பறிமுதல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனா்.

சமயம் 17 Dec 2025 8:00 pm

தயார் நிலையில் பிரசார திடல்-தவெக-வில் அதிமுக நிர்வாகிகள்? - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

ஈரோடு அருகே விஜயமங்கலத்தை அடுத்த சாரளையில் தவெக சார்பில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசவுள்ளார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தவெக-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் முன்னின்று நடத்தி வருகிறார். குடிநீர், கழிப்பறை, இருக்கைகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பிரசார திடல் தயார் நிலையில் உள்ளது. செங்கோட்டையன் இதுகுறித்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல் துறையின் அனுமதி கிடைத்த நான்கே நாள்களில் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்ள பார்கோடு, கியூஆர்கோடு தேவையில்லை. நாளை காலை 8 மணி முதலே பொதுமக்கள் தாராளமாக வரலாம். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும் எல்இடி திரை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் கழிவறைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்துக்கு வருவோருக்கு உணவு வழங்கும் திட்டம் ஏதும் இல்லை. திருப்பரங்குன்றம் குறித்து அண்ணாமலை கருத்துக்கு பதில் சொல்ல எங்களுக்கு நேரமில்லை. என்றார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைய உள்ளனரா? என்ற கேள்விக்குப் பதில் அளித்த செங்கோட்டையன், ``பொறுத்திருந்து பாருங்கள். ஒருவரை கட்சியில் இணைக்க வேண்டுமென்றால், சில வழிமுறைகள் இருக்கிறது. தலைவர் விஜய் என்ன கட்டளை இடுகிறாரோ அதன்படி நடைபெறும்என்றார். மக்கள் சுற்றுலாத்தலமான திடல்...: அசம்பாவிதங்களைத் தவிர்க்க பள்ளிச் சிறுவர், சிறுமியர், கர்ப்பிணிகள், குழந்தைகள் நாளை நடைபெறும் கூட்டத்துக்கு அனுமதி இல்லை என தவெக தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில், பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்திருந்தனர். அங்கு விஜய் பேசும் இடத்துக்கு அருகில் சென்று செல்பி எடுத்துக் கொண்டனர். அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து சீருடையுடன் வந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிப் பார்த்ததுடன், செல்பி-யும் எடுத்துக் கொண்டனர். நாளை பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல வேண்டி இருப்பதால் கூட்டத்துக்கு வருகை தர முடியாது. அதனால், கூட்டத் திடலை பாரத்துச் செல்வதற்காக வந்துள்ளதாக தெரிவித்தனர்.

விகடன் 17 Dec 2025 7:56 pm

அணுசக்தித் துறை: `தனியாருக்கு அனுமதி' - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா!

இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு நிலையான மின்சாரத்தைப் உற்பத்திசெய்யும் வகையிலான சிறிய அணு உலைகளை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கௌதம் அதானியின் அதானி பவர், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் & பவர், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி போன்ற நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் இடங்களையும் தேர்வு செய்திருக்கின்றன. ஜிதேந்திர சிங் தற்போது, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. கடந்த 15-ம் தேதி 'அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் மசோதா 2025 (SHANTI)'-வை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். இந்த மசோதா மூலம், அணுசக்தி ஒத்துழைப்புக்காக இந்தியா வெளிநாடுகளை நாடும் என்பதும், அணுசக்தித் திறனை விரிவாக்குவதற்குத் தேவையான மூலதனத்தின் தேவைக்காக தனியாரை அனுமதிக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக இந்த மசோதா மீது விவாதம் நடந்து வந்தது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி இரண்டு முக்கியக் கேள்விகளை முன்வைத்து இந்த மசோதா மீதான விவாதத்தை தொடங்கினார், `` 1. 2010-ல் அணுசக்தி விபத்து நடந்தால் யார் பொறுப்பு என்பது குறித்து ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது, அணு உலை இயக்குபவர்கள் மீது பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொண்ட விதிமுறைகள் இருந்தன. இந்தப் புதிய மசோதா இந்த பொறுப்புக்கூறல் விதிகளை தளர்த்துகிறது. தனியார் நிறுவனங்களுக்கு அணு உலைகள் அனுமதிக்கும்போது, விபத்து நடந்தால் யார் பொறுப்பு என்பது தெளிவில்லை காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி 2. அணு உலைகள் பாதுகாப்பாக இயங்குகின்றனவா என்று கண்காணிக்கும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (Atomic Energy Regulatory Board), தனியார் நிறுவனங்கள் அணு உலைகளை இயக்கும்போது எவ்வளவு அதிகாரம் இருக்கும் என்பதும் தெளிவாக இல்லை. NPCIL மேற்பார்வை செய்யும் என்று சொல்லப்பட்டாலும், ஒழுங்குமுறை ஆணையத்தின் பங்கு குறித்து விளக்கம் இல்லை. 'ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா...'- நாடாளுமன்றம் வரை ஹிட்டான கேரள அரசியல் பகடி பாடல்! இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருந்ததால், 1974-க்குப் பிறகு வேறு எந்த நாடும் இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் அளிக்கவில்லை. இது அணுசக்தி பாகுபாடு என்று அழைக்கப்பட்டது. அதனால், இந்தியாவால் அணுமின் உற்பத்தியை விரிவுபடுத்த முடியவில்லை. 2008-ல் மன்மோகன் சிங்கின் முயற்சியால், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் (Indo-US Nuclear Deal) கையெழுத்தானது. மோடி இதன் மூலம் இந்தியா சர்வதேச அணுசக்தி சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும். அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் வாங்க முடியும். 34 ஆண்டுகால பாகுபாட்டை இந்த மசோதா மூலம் உடைக்கும் முயற்சி நடக்கிறது. மேலும், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க, 'இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும்' என்று வாதிட்டு, அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தது. UPA அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, அரசை கவிழ்க்க முயன்றது. 2008-ல் அணுசக்தி திட்டத்தை வளர்ப்பது தவறு என வாதிட்ட பா.ஜ.க இன்று, தனியார் நிறுவனங்களுக்கு அணு உலைகள் அனுமதி அளிக்கிறது. விதை மசோதா... இந்திய விவசாயிகள் அடமானத்தில்... பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தின கம்பளத்தில்! ஒரு சில தனியார் நிறுவனம் இந்தத் துறையில் நுழையத் திட்டமிட்டிருப்பதை அறிவித்த சில மாதங்களில், இந்த மசோதா நிறைவேற்றப்படுகிறது. இதுவும் தற்செயல் நிகழ்வுதானா? எனக் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட ​​இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்,``ஆதாரமற்ற மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கூற்றை நிராகரிக்க வேண்டும் என உரக்கப் பேசினார். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. Parliament: Mahatma Gandhi பெயர் நீக்கம்; சர்ச்சைக்குரிய SHANTI மசோதா | DMK TVK | Imperfect Show

விகடன் 17 Dec 2025 7:50 pm

போதைப்பொருள் கடத்தி வந்த 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்; 8 பேர் உயிரிழப்பு

கிழக்கு பசுபிக் பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 3 படகுகள் மீது அமெரிக்கா இன்று(16) தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் பசுபிக் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர் தொடுக்க […]

அதிரடி 17 Dec 2025 7:30 pm

30 ஆண்டு அமெரிக்க வதிவு: கிரீன் கார்ட் நேர்காணலில் இந்தியப் பெண் அதிரடி கைது!

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 60 வயதான இந்தியப் பெண்மணி, தனது கிரீன் கார்ட் நேர்காணலின்… The post 30 ஆண்டு அமெரிக்க வதிவு: கிரீன் கார்ட் நேர்காணலில் இந்தியப் பெண் அதிரடி கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 7:28 pm

தமிழகத்தில் இருந்து இண்டிகோ வெளியேறுகிறதா? சேவை குறைப்பு பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் இண்டிகோ விமான சேவை நிறுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 17 Dec 2025 7:00 pm

இலங்கை பேரிடரின் கோர முகம்; இறம்பொடை மண்சரிவில் மனித கால் மீட்பு ; இன்னும் 21 பேர் எங்கே?

டித்வா புயலால் ந்நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் உடல் பாகம் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார். காணாமல் போயுள்ள 21 பேர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணுக்குள் கால் ஒன்று புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் வழங்கிய […]

அதிரடி 17 Dec 2025 6:51 pm

இந்தியத் துணைத் தூதுவருக்கும் சாவகச்சேரி நகரசபையினருக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காலை யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது. இதன்போது நகராட்சி மன்றின் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நகராட்சி மன்றிற்கு இந்திய உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தினால் இந்திய கலைஞர்களைக் கொண்டு யாழில் கலை […]

அதிரடி 17 Dec 2025 6:46 pm

துருக்கிய விமானக் கோளாறு குறித்து பயணிகளுக்குத் தெரியாது

202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவசரமாக தரையிறக்கப்பட்டது. இஸ்தான்புல்லுக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர்பஸ் A330 விமானம் தொழில்நுட்பக் கோளாறை சந்தித்தது. இதனால் விமானி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எரிபொருளை எரித்து தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. TK-733 விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணிக்கு கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தரையிறங்கும் கியர் அமைப்பு சரியாக பின்வாங்கத் தவறியதை விமானி கண்டுபிடித்தார். சுற்றுச்சூழல் நெறிமுறைகளைப் பின்பற்றி, கடலில் எரிபொருளைக் கொட்ட வேண்டாம் என்று விமானி முடிவு செய்தார். அதற்கு பதிலாக, அதிகப்படியான எரிபொருளை உட்கொள்ள விமானம் சிலாபம் கடற்கரைப் பகுதியை சுமார் 30 முறை சுற்றி 4,000 அடி உயரத்தில் சுற்றி வந்தது. இன்று அதிகாலை 12:28 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. தரையிறங்கியதும், முன் சக்கர அமைப்பில் உள்ள ஒரு ஹைட்ராலிக் பம்ப் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓடுபாதையில் குறிப்பிடத்தக்க எண்ணெய் கசிவு ஏற்பட்டது. பீதியைத் தவிர்க்க, விமானத்தின் போது 202 பயணிகளுக்கு அவசரநிலை குறித்து தெரியாமல் வைத்திருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. சில பயணிகள் பாகிஸ்தானில் தரையிறங்கினீர்களா என்று கேட்டதாகவும், அவர்கள் பாதுகாப்பாக தரையில் விழுந்த பின்னர்தான் தொழில்நுட்பக் கோளாறு குறித்து அறிந்ததாகவும் கூறப்படுகிறது. எண்ணெய் கசிவு காரணமாக உயர் அழுத்த சுத்தம் மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்காக பிரதான ஓடுபாதையை உடனடியாக ஒரு மணி நேரம் மூட வேண்டியிருந்தது. சுத்தம் செய்யும் பணியின் போது, ​​பல உள்வரும் விமானங்கள் மாத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. அதன் பின்னர் ஓடுபாதை அகற்றப்பட்டு, BIA இல் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக கட்டுநாயக்கவில் உள்ள கடமை மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். விமானம் பழுதுபார்க்கப்பட்டபோது அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். நீர்கொழும்பு களப்பில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் கடற்படை மீட்புப் பிரிவுகள் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவம் நடந்த காலம் முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டிருந்தன.

பதிவு 17 Dec 2025 6:46 pm

போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

கிராம சேவகர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில் ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் துரித இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது. அனர்த்த நிவாரண கொடுப்பனவில் கிராமசேவையாளர்கள் பக்க சார்பாக செயல் படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 17 Dec 2025 6:41 pm

காணாமல் போன மஞ்சள் அனகொண்டா கண்டுபிடிக்கப்பட்டது

கடந்த சனிக்கிழமை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போன மஞ்சள் அனகொண்டா இன்று புதன்கிழமை (17) காலை அதன் அடைப்பிலிருந்து சில மீட்டர் தொலைவில் ஒரு அலுமாரி (drawer) கீழ் கண்டெடுக்கப்பட்டது. மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் தேடுதலுக்குப் பின்னர் அதிகாரிகள் அனகொண்டாவைக் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 05 பாம்புகளுடன், குஞ்சு பொரித்த குஞ்சு கண்டுபிடிக்கப்பட்டதால், சுங்கத்துறையினரால் மிருகக்காட்சிசாலையிடம் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. பாம்பு பராமரிப்பாளர் துறை இயக்குநரால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் மிருகக்காட்சிசாலையின் துணை இயக்குநர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். Dehiwala Zoo

பதிவு 17 Dec 2025 6:39 pm

சரணடைந்தார் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் இன்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார். அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு, ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார். இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கிய நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் தொடர்ந்து முன்னிலையாகத நிலையில் அவரை கைது செய்யுமாறு 15-12-2025 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதித்து மட்டு.மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேரருக்கு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தேரர் இன்று புதன்கிழமை 3 சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் சரணடைந்ததையடுத்து, நீதிபதி தேரை தலா ஒரு இலட்சம் ரூபாய் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதேவேளை பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் கொண்ட பெரும் படையுடன் நீதிமன்றத்துக்கு தேரர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 17 Dec 2025 6:24 pm

திருகோணமலை குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் வருகை: உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பு தொடர்பில் உப தவிசாளரால் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பபப்பட்ட நிலையில் இன்றைய தினம் சபை ஒன்று கூடியுள்ளது. இதன் போது முன்னர் தவிசாளராக செயற்பட்ட ஏ.முபாரக் இலஞ்ச ஊழல் ஆணைக்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நேற்று (16)பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சபைக்கு வருகை தந்தமையால் வரவு செலவு திட்டத்தை புறக்கணிக்கபட்டது. தேசிய மக்கள் சக்தி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளரால் குறித்த தவிசாளரின் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 17 Dec 2025 6:16 pm

முல்லைத்தீவில் 3 கோடி கஞ்சா மீட்பு

முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்த தயாராக இருந்த நிலையில் முல்லைத்தீவு கடற்படையினர், விஷேட அதிரடிபடையினரால் 3 கோடி பொறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்தப்பட இருப்பதாக முல்லைத்தீவு கடற்படைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு விஷேட அதிரடிபடையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சாலை கடற்கரை பகுதியில் மகேந்திரா கப் ரக வாகனத்தில் வைத்து 140 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் தப்பியோடியுள்ளார் இந்நிலையில், குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சா பொதி மற்றும் கப் ரக வாகனத்தையும் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

பதிவு 17 Dec 2025 6:05 pm

கிரீனை எடுத்திருக்கனும்…சிஎஸ்கே தவறு செஞ்சிட்டு! ஆதங்கப்பட்ட அஸ்வின்!

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ரூ.25.20 கோடிக்கு வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் (‘Ash Ki Baat’) பேசியது கவனம் பெற்றுள்ளது. “கிரீன் ஒரு ஜெனரேஷன் டாலண்ட் (தலைமுறைக்கு ஒருமுறை வரும் திறமை). கொல்கத்தாவுக்கு அவர் அற்புதமான கைப்பற்றல்” என்று அஸ்வின் பாராட்டினார். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் கிரீனுக்கு […]

டினேசுவடு 17 Dec 2025 6:02 pm

கட்டாகாலி மாடுகளால் வவுனியாவில் விபத்து

வவுனியாவில் உந்துருளியும் பாண் விற்பனையில் ஈடுபட்டுவந்த முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா நகரில் இருந்து நெளுக்குளம் நோக்கி சென்ற உந்துருளியும், நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்தின் பின் முச்சக்கரவண்டியில் இருந்த பாண்கள் வீதியில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவத்தில் உந்துருளி ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெளுக்குளம் காவல்துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. vavuniya vavuniya nedungulam

பதிவு 17 Dec 2025 5:51 pm

வாக்களித்த செய்தி வாசிப்பாளர்கள்; 'தேர்தல் செல்லாது'என சொல்லும் தலைவர் - என்ன பிரச்னை?

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வென்றவர்கள், `சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாங்கள்தான்' என்கின்றனர். அதேநேரம் 'இந்த தேர்தல் சட்டப்படி செல்லாது' எனத் தெரிவித்துள்ளார், சங்கத்தின் நிறுவனத் தலைவர் பிரபுதாசன். ஆக மொத்தத்தில் சங்கம் இரண்டாக உடைந்துள்ளது. என்ன பிரச்னை? - உறுப்பினர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு ''2015ம் ஆண்டு சங்கம் தொடங்கினாங்க. சங்கத்தை உருவாக்கினதுல பிரபுதாசனுக்கு முக்கியமான பங்கு இருந்தது. ஆரம்ப சில வருடங்கள் எந்தப் பிரச்னையுமில்லாம போயிட்டிருந்தது. மீட்டிங்குகள், நிகழ்ச்சிகள், செய்தி வாசிப்பு பயிற்சி என நிறைய விஷயங்களைச் செய்தாங்க.. ஆனா திடீர்னு என்ன காரணம்னு தெரியல, நிர்வாகத்திலிருந்தவங்களுக்கும் உறுப்பினர் சிலருக்கும் பிரச்னை உருவாகி... அப்ப இருந்தே சங்கத்துல களேபரம்தான். தனித் தனி கோஷ்டியா செயல்படத் தொடங்கிட்டாங்க. பிரபுதாசன் அணியில் சுஜாதா பாபு பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டார். பதவிக்காலம் முடிஞ்ச பிறகும் தேர்தல் நடத்தாம தலைவர் பொறுப்பில் தொடர்கிறார்னு பிரபுதாசன் மிது ஒரு சாரார் குற்றம் சுமத்தினாங்க. அவரோ தேர்தலை நடத்துங்கனு முதல்ல சொன்னர். ஆனா பிறகு ஒருகட்டத்துல இந்த தேர்தல் முறைப்படி நடக்கலைனு சொல்லி அதைப் புறக்கணிக்கச் சொன்னார். ஆனாலும் தேர்தல் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. உறுப்பினர்கள் வந்து ஓட்டுப் போட்டாங்க. தலைவராக சண்முகவேலுவும், பொதுச்செயலாளராக கிறிஸ்டோபர் தேவநேசனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிச்சிருக்காங்க' என்றார்கள் அவர்கள்.

விகடன் 17 Dec 2025 5:44 pm

``ஆப்ரேஷன் சிந்தூர்: முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம்? - காங்கிரஸ் தலைவரின் கருத்தும் பாஜக பதிலும்!

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக மே 7 அன்று இந்தியா 'ஆபரேஷன் சிந்துர்' என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்த நடவடிக்கை மூலம் நிர்மூலமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. பிருத்விராஜ் சவான் அதற்கு பதிலளித்த அவர், ``ஆபரேஷன் சிந்துரின் முதல் நாளில், நாம் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டோம். 7-ம் தேதி நடந்த அரை மணி நேர வான்வழி மோதலில், மக்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம். இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. விமானப்படை முற்றிலும் முடக்கப்பட்டிருந்தது. ஒரு விமானம் கூட பறக்கவில்லை. குவாலியர், பதிண்டா, சிர்சாவிலிருந்து ஏதேனும் விமானம் புறப்பட்டிருந்தால் அது பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருந்தது. அதனால்தான் விமானப்படை முழுமையாக முடக்கப்பட்டிருந்தது. மேலும் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையில் வான்வழி மற்றும் ஏவுகணைப் போர் மட்டுமே இடம்பெற்றது. ஆயுதப் படைகளின் தரைவழி நகர்வுகள் ஒரு கிலோமீட்டர்கூட இல்லை என்பதை நாம் கண்டோம்... இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடந்தவை அனைத்தும் வான்வழிப் போர் மற்றும் ஏவுகணைப் போர் மட்டுமே. எதிர்காலத்திலும் போர்கள் இதே வழியில்தான் நடத்தப்படும். இத்தகைய சூழ்நிலையில், 12 லட்சம் வீரர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை நாம் பராமரிக்க வேண்டுமா? அல்லது அவர்களை வேறு சில வேலைகளைச் செய்ய வைக்கலாமா? எனக் கேட்டார். ஷேசாத் பூனாவாலா காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, ``ராணுவத்தை அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் அடையாளமாகிவிட்டது... இது பிரித்விராஜ் சவானின் அறிக்கை மட்டுமல்ல. ராகுல் காந்தியும் இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கைகள் அனைத்தும் ராகுல் காந்தியின் மனநிலையை பிரதிபலிக்கின்றன, அதனால்தான் ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ இதுபோன்ற அறிக்கைவிடும் தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை... இந்த அறிக்கைகள் அவர்களின் ராணுவ எதிர்ப்பு மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன. ராணுவத்தை அவமதித்த அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிருத்விராஜ் சவான்,``ஆபரேஷன் சிந்துர்' குறித்த எனது கருத்துக்களுக்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? கேள்விகள் கேட்கும் உரிமையை எனக்கு அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. என் கேள்வியில் தவறு இருந்தால்தானே மன்னிப்பு கேட்க வேண்டும். என்றார். ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்

விகடன் 17 Dec 2025 5:38 pm

வைத்தியசாலையில் மருத்துவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்!

பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில், பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் காருக்கு பின்னார் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. முச்சக்கரவண்டியை எடுக்குமாறு கூறியதனால் கோபம் இதன்போது வைத்தியர், முச்சக்கரவண்டியை எடுக்குமாறு சாரதியிடம் கூறியதனால் கோபமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, வைத்தியரை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் பதுளை போதனா வைத்தியசாலையில் […]

அதிரடி 17 Dec 2025 5:19 pm

Serial Update: கம்ருதீனுக்குக் கதை ரெடி; 'சட்'டுன்னு காணாமப்போன சந்தோஷம், முடிவுக்கு வரும் சீரியல்

இவ்ளோ தூரம் ஓடியதே வெற்றிதான்! சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆனந்த ராகம்' தொடர் கிளைமேக்ஸை நெருங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. சன் டிவியில் பிற்பகலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'ஆனந்த ராகம்'. ஆரம்பத்தில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்து வந்த அழகப்பன் இந்தத் தொடர் மூலம் ஹீரோ ஆனார். சில தினங்களூக்கு முன் தொடர் ஆயிரமாவது எபிசோடைத் தொட்டது. அப்போது அழகப்பனிடம் பேசியிருந்தோம். 'ஆனந்த ராகம்' அழகப்பன் 'சின்னச் சின்னக் காமெடி கேரக்டர்கள்ல நடிச்சிட்டிருந்தவனுக்கு திடீர்னு ஹீரோ சான்ஸ் கிடைச்சிருக்குனு நினைச்சிட வேண்டாம். இந்த இடத்துக்கு வர்றதுக்கு பல கஷ்டங்களை அனுபவிச்சிருக்கேன். எப்படியோ மக்கள் என்னையும் ஏத்துக்கிட்டாங்க. முன்னணி சேனல்ல நடிச்ச முதல் சீரியலே ஆயிரம் எபிசோடைத் தாண்டியதே என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம்தான்' என அப்போது உற்சாகமாகப் பேசியிருந்தார். ஆனால் சட்டுனு அந்த சந்தோஷத்தை விரட்டுவது போலொரு தகவல் தற்போது வந்திருக்கிறது. தொடரை நிறைவு செய்திட முடிவெடுத்துள்ளார்களாம். வரும் ஜனவரி மாதம் தொடர் நிறைவடையுமெனத் தெரிய வருகிறது. கதை ரெடி, ஷூட்டிங் போகலாமா? பிக்பாஸ் சீசன் 9 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு எழுபது நாட்களைத் தாண்டி விளையாடி வருகிறார் கமருதீன். சக போட்டியாளர்களுடன் சண்டை, வாக்குவாதம் என நிகழ்ச்சிக்கு கன்டென்ட் தருபவராக இருக்கும் இவருக்கென ஒரு டீம் வெளியில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தாலும் ஒவ்வொரு வாரமும் தப்பித்து வருவதன் ரகசியம் இதுதான் என்கிறார்கள் அவர்கள். தற்போது சிலர் இவருக்காகவே சில கதைகளை எடுத்துக்கொண்டு திரைப்படத் தயாரிப்பாளர்களை அணுகி வ‌ருகிறார்களாம். கம்ருதீன் - வினோத் 'பிக்பாஸ்ல எப்படியும் டைட்டில் அடிப்பார். ஒருவேளை டைட்டில் இல்லாட்டி டாப் ஐந்து போட்டியாளர்கள்ல ஒருத்தரா நிச்சயம் வருவார். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததுமே ஷூட்டிங் போயிடலாம். எல்லாம் ரெடி' என்கிற அவர்கள் இதுவரை நான்கைந்து தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லிவிட்டார்களாம். சில சீரியல்கள்லதான் அதுவும் சப்போர்ட்டிங் கேரக்டர்கள்லதான் நடிச்சிருக்கார். ஆனாலும் ஹீரோ என்றால் லக்கி மேன் தான் என்கிறார்கள் இன்னும் சிலர்.

விகடன் 17 Dec 2025 4:52 pm

கிளிநொச்சியில் பரபரப்பு: அதிபரின் ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகம் வீதியில்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மாசார் அ.த.க பாடசாலை அதிபரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாடசாலை சமூகத்தினால் இன்று புதன்கிழமை… The post கிளிநொச்சியில் பரபரப்பு: அதிபரின் ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகம் வீதியில்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:51 pm

எச்சரிக்கை: சமூக வலைதளங்களில் பரவும் “கிராம சேவகர்”தொடர்பான செய்தி போலியானது!   

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கிராம சேவகர்கள் தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் ஒரு தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என… The post எச்சரிக்கை: சமூக வலைதளங்களில் பரவும் “கிராம சேவகர்” தொடர்பான செய்தி போலியானது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:44 pm

ரெட்டதல குறித்து அஜித் எதுவும் சொன்னாரா? அருண் விஜய் சொன்ன பதில்!

சென்னை : அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படம் வரும் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பட வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அருண் விஜய் அளித்த பேட்டியில் ரசிகர்களை கவரும் வகையில் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். படத்தின் தலைப்பு ‘ரெட்ட தல’ என்றதும் ரசிகர்கள் அஜித் குமாரை நினைவுகூர்ந்தனர். “தமிழ்நாட்டில் ‘தல’ என்றால் அஜித் சார்தான். […]

டினேசுவடு 17 Dec 2025 4:43 pm

காபி தோட்டத்தில் சுருக்கு வலை,‌ துடிதுடித்து உயிரிழந்த புலி; 6 மாதத்தில் 14 புலிகள் உயிரிழப்பு

வங்கப் புலிகளின் எண்ணிக்கை அழிவின் விளிம்பில் இருந்து மெல்ல மீண்டெழத் தொடங்கியிருக்கும் நிலையில் , கர்நாடகாவில் புலிகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிகழ்வு அனைவரையும் கவலையடையச் செய்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவின் மலை, மாதேஸ்வரா பகுதியில் தாய்ப் புலி மற்றும் அதன் குட்டிகள் என 5 புலிகளுக்கு ஒரே சமயத்தில் விஷம் வைத்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த புலி கடந்த மூன்று மாதங்களில் மூன்று விவசாயிகள் புலி தாக்குதலால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவில் புலி- மனித எதிர்கொள்ளல்கள்களைக் குறைக்கிறோம் என்ற பெயரில் பந்திப்பூர், நாஹரோலே உள்ளிட்ட புலிகள் காப்பக எல்லைப் பகுதிகளில் கண்ணில் தென்பட்ட புலிகளையெல்லாம் பிடித்திருக்கிறது கர்நாடக வனத்துறை. கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே 20 -க்கும் மேற்பட்ட புலிகளைப் பிடித்தனர். கர்நாடக வனத்துறையின் இந்த அணுகுமுறையால் அண்மையில் சில புலிக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. கடந்த 6 மாதங்களில் மட்டும் 13 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழந்த நிலையில், குடகு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்கலா பகுதி தனியார் காபித் தோட்டத்தில் நேற்று புலி ஒன்று சுருக்கு வைத்து கொல்லப்பட்ட நிகழ்வு கவலையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வந்த புலி குட்டி காட்டுப்பன்றியை வேட்டையாட சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த சுருக்கு வலை கம்பியில் புலி சிக்கித் துடிதுடித்து உயிரிழந்திருப்பதை உறுதி செயத வனத்துறையினர், புலியின் உடலைக் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புலிகள் காப்பக எல்லையோரப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி சுருக்கு வலைக் கம்பிகளை அகற்ற வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தொடரும் சோகம் குறித்து தெரிவித்த புலிகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள், கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை மொத்தம் 14 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்துள்ளன. சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த புலி இதில் வேதனை என்னவென்றால் தாயிடமிருந்து கர்நாடக வனத்துறையால் பிரிக்கப்பட்ட 7 புலிக்குட்டிகள் பசிக்கொடுமை, வைரஸ் தொற்று, தாயைப் பிரிந்ததால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு போன்ற காரணங்களால் இறந்திருப்பதுதான். புலிகள் பாதுகாப்பில் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன முறைகளை பின்பற்ற வேண்டும். வாழிடப் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றனர்.

விகடன் 17 Dec 2025 4:39 pm

இன்று 3 ப்ரொமோவிலும் சாண்ட்ரா தான், ஒரே அழுகை தான்: ஓட்டு போடுறோம்மானு சொல்லும் பார்வையாளர்கள்

பிக் பாஸ் வீட்டில் படுக்கை அறையில் இல்லாமல் வெளியே தூங்கிக் கொண்டிருக்கிறார் சாண்ட்ரா. இந்நிலையில் அது குறித்து ஹவுஸ்மேட்ஸ் பேச வந்ததும் அழ ஆரம்பித்துவிட்டார் அவர்.

சமயம் 17 Dec 2025 4:37 pm

சினிமா பாணியில் தப்பியோட முயற்சி: வானத்தை நோக்கி சுட்ட அதிகாரிகள் –இரு கைதிகள் காயம் !

காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள், சிறையிலிருந்து தப்பியோட முயன்றபோது நடந்த அதிரடிச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… The post சினிமா பாணியில் தப்பியோட முயற்சி: வானத்தை நோக்கி சுட்ட அதிகாரிகள் – இரு கைதிகள் காயம் ! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:35 pm

Sony Pictures Networks India Extends Exclusive Broadcast Partnership for Australian Open Across the Indian Subcontinent

Mumbai: Sony Pictures Networks India (SPNI), the premier broadcaster of the Australian Open in India since 2015, has strengthened its long-standing association with Tennis Australia by extending its exclusive broadcast partnership for another three seasons. Under the renewed agreement, SPNI retains exclusive television rights as well as complete digital rights across India and the Indian subcontinent, including Afghanistan, Bangladesh, Bhutan, Maldives, Nepal, Pakistan and Sri Lanka. The extension ensures that tennis fans across the region will continue to enjoy world-class action from Melbourne Park in multiple languages, reaffirming SPNI’s commitment to delivering premium live sports experiences.The Australian Open, which marks the start of the global tennis calendar, has long been celebrated for its high-intensity contests, iconic rivalries and career-defining victories. Over the years, legends such as Roger Federer, Serena Williams, Novak Djokovic and Rafael Nadal have lifted the coveted trophy, creating some of the sport’s most memorable moments. Through this renewed partnership, SPNI will continue to bring viewers every ace, rally and triumph from tennis’ biggest stars through its sports network and digital streaming platform, Sony LIV.Rajesh Kaul, Chief Revenue Officer for Distribution & International Business and Head of Sports Business at SPNI, said the Australian Open has become a marquee event for tennis fans across India and the subcontinent. He noted that extending the decade-long partnership reflects SPNI’s commitment to delivering the world’s most prestigious sporting events to its audiences, backed by a deep understanding of viewer preferences across platforms. With comprehensive coverage on television and digital, a live studio show featuring expert panelists, multi-language commentary and engaging highlights, he said the network aims to bring the energy and excitement of Melbourne Park closer to fans than ever before.Craig Tiley, CEO of Tennis Australia, expressed delight at extending the collaboration with SPNI, which he credited for playing a major role in bringing the excitement of the Australian Open to millions of passionate fans in the region. He said India and the subcontinent share a deep connection with tennis, and the renewed agreement ensures viewers will continue to enjoy the best of the tournament across every screen. Tiley added that Tennis Australia and SPNI remain committed to delivering world-class coverage, compelling stories and a viewing experience that captures everything that makes the Australian Open one of the world’s great sporting events.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 4:34 pm

மண்டைதீவு புதைகுழி வழக்கு: மார்ச் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

1990ஆம் ஆண்டு மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் மற்றும் புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மார்ச்… The post மண்டைதீவு புதைகுழி வழக்கு: மார்ச் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:32 pm

`சாலையில் உயிருக்குப் போராடிய கணவன்' - உதவிகேட்டு மன்றாடிய மனைவி; முன்வராத வாகன ஓட்டிகள்

பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடரமணன். இவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரின் மனைவி ரூபா அவரை இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அங்கு டாக்டர் இல்லை. இதையடுத்து வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கிருந்த மருத்துவர், வெங்கடரமணனுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி வேறு ஒரு மருத்துவமனைக்குச் செல்லும்படி தெரிவித்தார். இதையடுத்து ஆம்புலன்ஸில் செல்லமாம் என்று நினைத்தபோது ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். ஆனால் வழியில் வெங்கடரமணனுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களது வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் வெங்கடரமணன் மற்றும் அவரது மனைவி காயமடைந்தனர். வெங்கடரமணன் வெங்கடரமணன் மனைவி சாலையில் ரத்தக்காயத்துடன் நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் மருத்துவமனைக்குச் செல்ல உதவி கேட்டார். ஆனால் ஒரு வாகன ஓட்டியும் நிறுத்தவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு டாக்சி டிரைவர் வண்டியை நிறுத்தி வெங்கடரமணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மாரடைப்பு மற்றும் விபத்து போன்ற காரணத்தால் வெங்கடரமணன் இறந்து போனார். இதுகுறித்து வெங்கடரமணனின் மனைவி கூறுகையில்,''என் கணவனைக் காப்பாற்ற மனிதாபிமானம் தவறிவிட்டது. நான் சாலையில் ரத்தத்துடன் நின்று கொண்டு வாகானங்களை நிறுத்தும்படி கெஞ்சினேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. என் கணவர் சாலையில் பல நிமிடங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்'' என்று கண்ணீர்விட்டார். இந்த சோகமான சூழ்நிலையிலும் இறந்துபோன வெங்கடரமணன் கண்களை அவரின் குடும்பத்தினர் தானம் செய்தனர். பெங்களூருவில் ஏற்கெனவே மோசமான சாலை காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

விகடன் 17 Dec 2025 4:31 pm

பிரேசிலில் பலத்த காற்றில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை

பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பேரழிவை ஏற்படுத்திய புயல் பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர் வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள ‘ஹவன்’ சில்லறை விற்பனைக் கடையின் முன் […]

அதிரடி 17 Dec 2025 4:30 pm

பிரேசிலில் பலத்த காற்றில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை

பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பேரழிவை ஏற்படுத்திய புயல் பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர் வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள ‘ஹவன்’ சில்லறை விற்பனைக் கடையின் முன் […]

அதிரடி 17 Dec 2025 4:30 pm

Vadilal Industries names Ravi Makwana as Chief Marketing Officer

Mumbai: Ravi Makwana has joined Vadilal Industries as Chief Marketing Officer, a move he announced through a post on LinkedIn. Describing the appointment as a personal milestone, Makwana said he was “stoked” to take on the role at what he called a “very beloved brand” that he grew up with. He noted that working on a brand that shaped many of his childhood memories felt “surreal,” adding an emotional depth to the transition.Commenting on the broader market landscape, Makwana observed that India’s ice cream category is experiencing heightened competition. Established players are becoming increasingly aggressive, while emerging entrants are introducing innovative formats and sub-categories. He described the evolving industry environment as a particularly interesting and dynamic phase, offering opportunities for brands to differentiate and innovate.Makwana also expressed appreciation for the leadership at Vadilal Industries, saying he felt “privileged” to work alongside Managing Director Himanshu Kanwar and the company’s board members. He thanked the Vadilal leadership team for their trust and support and acknowledged the role of executive search firm Hunt Partners in guiding him through the transition process.Before joining Vadilal Industries, Makwana held senior roles across a range of consumer-facing organisations in the food, beverages, wellness, quick-service restaurant and home and personal care sectors. His experience spans brand portfolio management, category strategy and integrated marketing leadership across major national brands—expertise he now brings to one of India’s most iconic and enduring ice cream companies.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 4:29 pm

KKS கடற்கரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா! உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு! ️✨

யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஒரு சிறப்பான ஏற்பாட்டை… The post KKS கடற்கரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா! உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு! ️✨ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:23 pm

சென்னை: ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கும் நாணயம் விகடனின் `பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்'வகுப்பு!

‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்துகிறது நாணயம் விகடன். பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார். 2025 டிசம்பர் 20, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்டணம் ஒருவருக்கு ரூ.6,500 ஆகும். நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் சொந்தமாக லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும்.   காலை, மாலை தேநீர் –ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும், கற்றுத் தரப்படுபவை: இந்த நிகழ்ச்சியில் பங்கு முதலீடு, வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிமுகம்! டெக்னிக்கல் அனாலிசிஸ் ஏன் அவசியம்? சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் நிலைகளை தெரிந்து முதலீடு மற்றும் வர்த்தகம் எப்படி செய்வது? டெக்னிக்கல் அனாலிசிஸ் - ஷார்ட் - தேவை, வகைகள் மற்றும் விளக்கம், டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தும் லைன், கேண்டில் பேட்டர்ன்கள், எப்படி லாபகரமாக பங்கு வர்த்தகம் செய்வது பற்றி சொல்லிக் கொடுக்கப்படும். மேலும்., ஒரு நிறுவனப் பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது உதாரணங்களுடன் விளக்கப்படும்.  டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் பற்றி..! ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.  டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார். டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750 க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார்.  பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார்.   தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார். முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U

விகடன் 17 Dec 2025 4:13 pm

யாழ்ப்பாணத்தில் அதிர்வலைகள்: தையிட்டி விகாராதிபதிக்கு உயரிய பதவி!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர், அமரபுர… The post யாழ்ப்பாணத்தில் அதிர்வலைகள்: தையிட்டி விகாராதிபதிக்கு உயரிய பதவி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:13 pm

அரசின் பாரத் டாக்சி சேவை விரைவில் அறிமுகம்! சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

மத்திய அரசு சார்பில் பாரத் டாக்சி என்ற வாடகை டாக்சி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலியால் மக்களுக்கு கிடைக்கும் சிறப்புகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 17 Dec 2025 4:10 pm

வேலணை பிரதேச சபை 2026 பாதீடு நிறைவேறியது! சைக்கிள் கட்சி ஆதரவு, ஆசனப்பங்காளர் எதிர்ப்பு!

வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு, தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அவர்களால் இன்று (புதன்கிழமை)… The post வேலணை பிரதேச சபை 2026 பாதீடு நிறைவேறியது! சைக்கிள் கட்சி ஆதரவு, ஆசனப்பங்காளர் எதிர்ப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:03 pm

யாழில் வெடித்தது போராட்டம்: “பிரஜா சக்தி”திட்டத்திற்கு தவிசாளர்கள் கடும் எதிர்ப்பு! ⚖️

யாழ் குடாநாட்டில் யின் “பிரஜா சக்தி” திட்டத்திற்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு… The post யாழில் வெடித்தது போராட்டம்: “பிரஜா சக்தி” திட்டத்திற்கு தவிசாளர்கள் கடும் எதிர்ப்பு! ⚖️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 4:01 pm

`நிறைவேறிய கனவு; ராணுவத்திலிருந்து வந்த மின்னஞ்சல்...'- `அக்னி வீரராக'தேர்வான கரந்தை கல்லூரி மாணவர்

தஞ்சாவூர் மாவட்டம், கரந்தைத் தமிழ் சங்கம் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் ர.அபிஷேக் ராணுவத்தின் அக்னி வீரராக தேர்வாகியுள்ளார். அபிஷேக்கிற்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினோம். ``நான் லால்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு வரை படித்தேன். 11, 12ம் வகுப்பு அரியலூர் மாவட்டம், கருப்பூர் பொய்யூர்ல படிச்சு முடிச்சேன். கல்லூரி படிப்பை தஞ்சாவூர் கரந்தைத் தமிழ் சங்கத்தில் படிச்சுக்கிட்டு இருக்கேன். எல்லோருடைய வாழ்விலும் திருப்புமுனை ஒன்று இருக்கும். என் வாழ்க்கையில ஒரு திருப்புமுனை என்றால், அது என் காலேஜ் தான். ஸ்கூல் படிக்கிற வரைக்கும் என்ன ஆகப் போறேன்... எந்த வேலைக்குப் போகப் போறேன்னு தெரியாமத்தான் இருந்தேன். ஆனா கல்லூரி சேர்ந்ததும் NCC-ல சேர்ந்தேன். NCC மாஸ்டராக கரந்தைத் தமிழ் சங்கத்தின் பேராசிரியர் எம். வசந்த் சார் இருந்தாங்க. என்.சி.சி மாஸ்டர் அவருடைய வாழ்க்கை அனுபவத்தை கேட்டுக் கேட்டு எனக்கு ராணுவ வீரராக வேண்டும் என்று ஆசை வந்தது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். எங்க அப்பா ரமேஷ் கூலி வேலைதான் பார்க்குறாங்க. எங்க அப்பாவோட வருமானம் பத்தாம எங்க அம்மா காஞ்சனா தேவியும் கூலி வேலைக்குப் போய்தான் வீட்டைப் பார்த்துக்கிட்டாங்க. நான்தான் எங்க வீட்டுல மூத்த பிள்ளை. எனக்கு அப்புறம் ஒரு தம்பி இருக்காங்க. நான் யாருக்கும் கஷ்டத்தை தரக் கூடாதுன்னு நெனச்சு படித்துக் கொண்டே வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். என் படிப்புக்குத் தேவையான செலவை நானே பார்த்துக்கிட்டேன். பல கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு என்.சி.சி ல என்னுடைய முழு கவனத்தையும் வைத்தேன். ரொம்ப கஷ்டத்துக்கு அப்புறம் NCC சான்றிதழ் வாங்கினேன். இதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக இருந்தது. அப்புறம் அடுத்த படியை நோக்கி ஓட ஆரம்பித்தேன். `இந்திய ராணுவ அக்னி வீரர்' தேர்வுக்குப் படித்தேன். 3 மாசம் எதைப் பற்றியும் நினைக்காம தேர்வுக்குப் படித்து கடந்த ஜூலை மாதம் திருச்சியில் தேர்வு எழுதி முடித்தேன். தேர்வு எழுதி இரண்டே மாதங்களில் ரிசல்ட் வந்துவிட்டது. அதில் நான் தேர்வாகி விட்டேன். அப்போதிருந்து இருந்து தினமும் ஓட ஆரம்பித்தேன். ஓடி ஓடி வந்து வீட்டில் உட்கார்ந்து அழுதுகிட்டே இருப்பேன். கால் வலி, கஷ்டம், மழை... வெயில் பார்க்காமல் தினமும் 14 ரவுண்டு ஓடுவேன். உடல் சோதனை (physical test) வரைக்கும் தினமும் ஓடிக்கிட்டே இருப்பேன். பிறகு கடந்த செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் நடந்த உடல் சோதனை தேர்வில் செலக்ட் ஆனேன். அடுத்த நாளே பெங்களூர்ல மருத்துவ சோதனைக்குப் போனேன். சரியா சாப்பிடாம... தூங்காம.. தெரியாத ஊர்ல 4 நாள்கள் இருந்தேன். நான்கு நாள்களுக்குப் பிறகு மருத்துவ சோதனையில் செலக்ட் ஆனேன். அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. ரொம்ப நாள் மெரிட் ரிசல்ட்க்காக காத்திருந்தேன். எனக்குள் இருந்த நம்பிக்கை எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. உறவினர்கள் பலரும் ஒரு மாதிரி பேசினார்கள். ஆனால் நான் மனம் தளராமல் என்னுடைய இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டேயிருந்தேன். கடந்த 15ம் தேதி எனக்கு இந்திய இராணுவப் பணிக்குச் சேர சொல்லி மின்னஞ்சல் வந்தது. அந்த ஒரு செய்தி நான் பட்ட அனைத்து கஷ்டத்தையும் நொறுக்கி விட்டது. வருகின்ற டிசம்பர் 28-தேதி நான் இராணுவ வீரராகப் பணியில் சேர போறேன். என் பல நாள் கனவு இன்று நினைவாகி விட்டது. சாதாரண அபிஷேக்காக இந்தக் கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கு இராணுவ வீரர் என்று அடையாளத்தை கொடுத்த என் கல்லூரிக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விகடன் 17 Dec 2025 4:00 pm

மண்டைதீவு புதைகுழி வழக்கு - மார்ச் 31ஆம் திகதி

மண்டைதீவு புதைகுழி கிணறுகளை அகழ கோரிய வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட நிலையில் , கொல்லப்பட்டவர்களின் உடல்களை அங்குள்ள கிணறுகளில் போட்டு மூடியதாகவும் , குறித்த கிணறுகளை அகழ்ந்து சடலங்களை எடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி மகனை பறிகொடுத்த தாயொருவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு , விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், கடற்படையினர் , இராணுவத்தினர் , மற்றும் உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பிலான விசாரணை உள்ளடங்கலான விசாரணை அறிக்கையினை கையெழுத்து பிரதியாக மன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமைபொலிஸார் சமர்ப்பித்தனர். அதனை அடுத்து , விசாரணை அறிக்கையை தட்டச்சு பிரதியாக இன்றைய தினம் புதன்கிழமை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்ட நிலையில் பொலிஸார் அறிக்கையை தட்டச்சு பிரதியாக சமர்ப்பித்தனர். அதனை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

பதிவு 17 Dec 2025 3:59 pm

பேரிடர் நிதி:``நாம் கேட்டதில் 17 சதவிகிதம்தான் ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ``காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் வந்த டிட்வா புயலின் கோரத் தாண்டவத்தால், இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டதென பார்த்தோம். நம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படாமல் தமிழ்நாட்டைக் காப்பாற்றி இருக்கிறோம். எப்போதாவது ஒருமுறை புயல், வெள்ளத்தை எதிர்கொண்ட காலத்தை எல்லாம் நாம கடந்துவிட்டோம். அதை உணர்ந்துதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேரிடருக்கு ஏற்றத் தடுப்பு மற்றும் தகவமைப்பு உட்கட்டமைப்புகளை தொடங்கினோம். முதல்வர் ஸ்டாலின் காலநிலை மாற்ற ஆட்சிமன்றக் குழு, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநிலை இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என நிறைய முன்னெடுப்புகளையும் முயன்றுவருகிறோம். இதனால் இந்தியாவிற்கே வழிகாட்டுகிற நிலையில தமிழ்நாடு இருக்கிறது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ரூ.24 கோடி மதிப்பீட்டில 'காலநிலைக் கல்வி அறிவு' முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திறமைமிகு 4000 பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிக விரைவில காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு இரண்டு முறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மூலம் நடத்தப்படும் ஒரு நாள் கோடைக்கால மற்றும் குளிர்கால சிறப்பு முகாமங்களை இரண்டு நாள் முகாமங்களாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிச்சாவரம் மேலும் கூல் ரூபிங் திட்டத்தை தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025 26 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டத்தில சேர்த்திருக்கிறோம். இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் இருக்கும் 297 பசுமை பள்ளிகளிலும் செயல்படுத்தவிருக்கிறோம். கார்பன் சமநிலை மையங்கள், காலநிலை மீழ்த்திறன் மிகு கிராமங்கள், கடலோர பகுதிகளில் உயிர் கடையங்கள் அமைத்தல் போன்ற முக்கியமான காலநிலை மாற்று தடுப்பு மற்றும் தகவமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அருகே கிள்ளையில் காலநிலை மேல்திறன் அலுவலகம், சூரிய ஒளி மின்னாற்றல் உற்பத்தி, மக்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்கான பயிற்சிகள், வெள்ள அபாயகங்கள் ஏற்படாமல் இருக்க பக்கிங்காம் கால்வாய் துருவரப்பட்டு சீரமைத்தல், பிச்சாவரம் படகு குழாமுக்கு மின்னாற்றலில் இயங்கக்கூடிய படகு வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடலோர வாழ்விடங்களை இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மறுசீரமைப்புக்கும் திட்டத்தின் கீழ், அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன் பலனாக தமிழ்நாட்டில 4500 ஹக்டர் பரப்பளவுக்கு இருந்த அலையாத்தி காடுகள் 9000 ஹெக்டராக அதிகரித்திருக்கிறது. நீர்நிலைகளை பாதுகாக்க அர்ப்பணிப்போடு செயல்பட்டும் தனி நபர்களையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் பாராட்டுகிறோம். முதல்வர் ஸ்டாலின் கிளைமேட் வாரியர்ஸ் என்ற திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் நெகிழி ஒழிப்பு பரப்புறையும் மேற்கொள்ள 100 இ ஆட்டோக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 120 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறோம். மேலும் 600 மின்சாரப் பேருந்துகள் விரைவில பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். இதனால் டிராபிக்கும், பொல்யூஷனும் குறையும். எல்லாருடைய நேரமும் மிச்சமாகும். ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுருக்கும் எஸ்டிஜி ரேங்க்ல கிளைமேட் ஆக்ஷன் மற்றும் கிளீன் எனர்ஜி ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. நம் அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுசூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண். நம் அரசு வருவதற்கு முன்புவரை, இதரநிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகதான் இருந்தது. ஆனால் திராவிட மாடல் அரசு ரூ.500 கோடி வரை ஒதுக்கி இருக்கிறது. மோடி, அமித் ஷா, பா.ஜ.க Amit Shah, modi கடந்த நான்கு ஆண்டுகளில் நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்களுக்கான நிவரண நிதியாக ரூ 4136 கோடி மட்டும்தான் கேட்டோம். அதில் வெறும் 17 விழுக்காடுதான் ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது. எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாடு போராடி வென்றிருக்கிறது. நாட்டுக்கே வழிகாட்டியாக இருக்கிறது. அதுபோல இந்த காலிநிலை மாற்றம் சவால்களையும் எதிர்த்துத் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்றார். அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்! - அமைச்சர் ரகுபதி

விகடன் 17 Dec 2025 3:56 pm

ஜல்லிக்கட்டு போட்டிகள் : இதெல்லாம் கடைப்பிடிக்கனும்…தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாகவும், விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு முழுமையாக இணங்கி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று […]

டினேசுவடு 17 Dec 2025 3:50 pm

மாதம் ரூ.80,000 சம்பளம், அமலாக்க இயக்குநரகத்தில் 75 காலிப்பணியிடங்கள்; சட்டம் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

வருவாய் துறையின் கீழ் இயங்கும் அமலாக்க இயக்குநரகத்தில் சட்ட ஆலோசகர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 75 காலிப்பணியிடங்களுக்கு சட்டப் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

சமயம் 17 Dec 2025 3:43 pm

ரேஷன் கார்டே இருக்காது.. ரத்து செய்ய அரசு உத்தரவு.. கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் உங்களுடைய ரேஷன் கார்டில் இந்த அப்டேட்டை முடிக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

சமயம் 17 Dec 2025 3:36 pm

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: மதுரை ஆட்சியர், அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரி கேள்வி

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிமன் உத்தரவை அவமதிப்பு செய்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநான் சரமாரி கேள்வி எழுப்பினார்.

சமயம் 17 Dec 2025 3:34 pm

தையிட்டி விகாராதிபதிக்கு உயரிய பதவி - பதவி வழங்கும் நிகழ்வு புத்த சாசன அமைச்சரின் தலைமையில்

யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயகராக தெரிவாகியுள்ளார். சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொள்ளவுள்ளார். தையிட்டி விகாரையானது சட்ட விரோதமானது எனவும், தனியார் காணிகளை குறித்த விகாராதிபதி அடாத்தாக கையகப்படுத்தி, விகாரையை அமைத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,விகாரதிபதிக்கு வழங்கப்படும் கௌரவ நிகழ்வில் . அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை யாழ்ப்பாணத்தில் பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு 17 Dec 2025 3:34 pm

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு: கனிமொழி தலைமையில் 12 பேர் அறிவிப்பு!

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.

சமயம் 17 Dec 2025 3:31 pm

BB Tamil 9: Gameக்குத்தான் இப்படி பண்றேன்னு என்ன பத்தி - சபரி, சாண்ட்ரா வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 பிரஜின் வெளியே சென்றதிலிருந்து சாண்ட்ரா ஏதோ ஒரு காரணங்களைச் சொல்லி அழுதுகொண்டே இருக்கிறார். இன்று வெளியான முதல் இரண்டு புரொமோவிலும் அழுதுகொண்டுதான் இருந்தார். BB Tamil 9: என் குழந்தைங்க மேல சத்யமா சொல்றேன், அவர் அப்போ.! - அழும் சாண்ட்ரா தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் சபரிக்கும், சாண்ட்ராவுக்கும் வாங்குவாதம் நடக்கிறது. BB Tamil 9 நான் பயப்படுறேன், சிடு மூஞ்சி, கேம்முக்குத்தான் இப்படி பண்றேன்னு என்ன பத்தி எதுவேணாலும் சொல்லிக்கோங்க. உங்களுக்கு எதாச்சும் சொல்லணும்னு இருந்தா கேமரா கிட்ட சொல்லிக்கோங்க, இல்லனா குரூப்பா டிஸ்கஸ் பண்ணிக்கோங்க என சபரியிடம் சொல்லி அழுகிறார்.

விகடன் 17 Dec 2025 3:30 pm

சிட்னி துப்பாக்கிச்சூடு ; தாக்குதல்தாரியை தடுத்த நபருக்கு குவியும் நன்கொடை

சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த நபருக்காக அவுஸ்திரேலியா முழுவதிலும் இருந்து நன்கொடைகள் குவிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மொத்தத் தொகை தற்போது 1.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (744,000 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது. துப்பாக்கிக் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் அவர் குணமடைந்து வரும் நிலையில், இந்த நன்கொடை அதிகரித்துள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான 43 வயதான அஹ்மத் அல் அஹ்மத், […]

அதிரடி 17 Dec 2025 3:30 pm

`தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16% வளர்ச்சி; சிறப்பான ஒரு உச்சம்’ - தங்கம் தென்னரசு பேட்டி

தமிழ்நாட்டின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (17.12.2025) சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``வரக்கூடிய 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதாரத்தை நாம் எட்டுவோம் என்கின்ற மாபெரும் இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய நமது முன்னெடுப்புகளால், தமிழ்நாட்டில் பொருளாதா வளர்ச்சி இன்றைக்கு ஒரு மிகக் குறிப்பிடத்தக்க சிறப்பான ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு GSTP 2023-2024-ஆம் ஆண்டுகளில் 26.88 இலட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 31.19 இலட்சம் கோடிகளாக உயர்ந்து 16 சதவிகித வளர்ச்சியை நாம் இன்றைக்கு தொட்டிருக்கிறோம். தங்கம் தென்னரசு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் தரவுகளின் வாயிலாக கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய வளர்ச்சி விகிதம் முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாக மேம்பாட்டு குழு, தமிழ்நாடு அரசின் சிறப்பான கொள்கைகளுக்கும், எடுத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றியாக நாம் இதைச் சொல்லலாம். இத்தகைய உயர் வளர்ச்சி விகிதம் என்பது கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து இருக்கிறது. 2021-22-ஆம் ஆண்டுகளில் நாம் குறிப்பிட்ட காலத்தில் 15.91 சதவிகிதமாகவும், 2022-23-ஆம் ஆண்டுகளில் 14.47 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டுகளில் 13.34 சதவீதமாக தொடர்ச்சியாக, முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த வளர்ச்சி விகிதம் ஏற்பட்டு இன்றைக்கு அது 16 சதவீதத்தை தொட்டிருப்பது மிகப்பெரிய ஒரு வளர்ச்சியும், திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறது. குறிப்பாக, இந்த வளர்ச்சியில் உற்பத்தித்துறை மிகப்பெரிய பங்களிப்பினை செய்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டின் இந்த பொருளாதாரம் GSTP-யின் வளர்ச்சி என்பது இந்த உற்பத்தித் துறையின் பொறுத்தமட்டில், 1.46 இலட்சம் கோடியாக இருந்தது, இரண்டு மடங்காக இன்றைக்கு பெருகி இருக்கிறது. அதேபோல மகராஷ்டிராவில் ஒப்பிட்டு நோக்கினால், ஒரு வளர்ச்சி அடைந்த உற்பத்தித்துறை மாநிலமாக இருக்கக் கூடியதில், 0.71 இலட்சம் கோடியாக இருக்கக்கூடிய மகராஷ்டிராவை விட, தமிழ்நாடு உற்பத்தித் துறையில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை இன்றைக்கு கண்டிருக்கிறது. வளர்ச்சி அதற்குக் காரணம் தமிழ்நாட்டில், இன்றைக்கு, ஏறத்தாழ 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டிருக்கக்கூடிய தொழிற்சாலைகள் இருக்கிறது. அவற்றில் ஏறத்தாழ 27.7 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலைமை வந்திருக்கிறது. இந்த பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக கட்டுமானம் (Construction sectors) என்பது, இந்த வளர்ச்சிக்கு மிகுந்த அளவில் உதவி செய்யக்கூடிய வகையில், 2023-24-ஆம் ஆண்டுகளில் 15.93 சதவிகிதமும், அதேபோன்று 2024-25-ஆம் ஆண்டுகளில் 11 சதவிகிதம் என்று அதற்கான பங்களிப்பைத் தந்திருக்கிறது. அதுபோல, சேவைத் துறையை (Service Sector) எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியில் தலா 53% தன்னுடைய பங்களிப்பை செலுத்தி, real growth என்கின்ற வகையில் 2024-25-ஆம் ஆண்டுகளில் நம்முடைய சேவைத் துறை 11.3 சதவீத அளவிற்கு தன்னுடைய பங்களிப்பை தந்திருக்கிறது. குறிப்பாக, ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை நாம் நாம் எட்டவேண்டும் என்று சொன்னால், ஏற்றுமதியில் மிகப் பெரிய முன்னேற்றத்தை நாம் காண வேண்டும். முதலமைச்சரின் தொடர் முன்னெடுப்புகளால் பல்வேறு உலக நாடுகளில் அவர் பயணம் செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அதன் வாயிலாக முதலீட்டாளர்களின் சந்திப்பின் மூலமாக, 11 இலட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி முதலீடுகள் பெறப்பட்டு, 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 34 இலட்சத்து 8 ஆயிரத்து 522 இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நாம் வேலை வாய்ப்புகளை கொண்டு வந்திருக்கிறோம். ஏற்றுமதியை பொறுத்தவரையில், நாம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை பெறுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்ற தமிழ்நாட்டின் ஏற்றுமதியின் சாதனை ஒன்றிய அரசின் தரவுகளின்படி 2021-22-ஆம் நிதியாண்டில், 1.86 பில்லியன் டாலராக இருந்தது. 2022-23-ஆம் நிதியாண்டில் 5.37 பில்லியன் டாலராகவும், 2023-24-ஆம் நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலராகவும், 2024-25-ஆம் நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலராக மின்னணு பொருள்களின் ஏற்றுமதி மூன்று ஆண்டுகளில், ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 700 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்பதை நம்முடைய அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த மின்னணு பொருள்களின் ஏற்றுமதியில் நம்முடைய தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் தங்கம் தென்னரசு Welfare measures என்ற வகையில், தமிழ்நாடு வளர்ச்சி விகித குறியீடுகளில் அவர் கொண்டு வந்திருக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், காக்கும் கரங்கள் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டின் நலத் திட்டங்களிலும் தமிழ்நாடு அரசு ஒரு மாபெரும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறது. அதேபோல, GR (Gross Environment Ratio) இன்றைக்கு உயர் கல்வியில் 47 சதவிகிதம் அகில இந்திய சராசரி 28.4 சதவிகிதமாக இருக்கும்போது தமிழ்நாடு இன்றைக்கு 47 சதவிகிதம் வந்திருக்கிறது. அதேபோல உயர்கல்வி அதிகமாக பெற்றிருக்கக்கூடிய மாநிலமாக நாம் இன்றைக்கு வந்திருக்கிறோம். நான் சட்டமன்றத்தில் கூட சொன்னேன், நிதிப் பற்றாக்குறையை (fiscal deficit) நாம் எப்போதும் நிதி மேலாண்மைக்கு உட்பட்டுதான் கையாண்டிருக்கிறோம் என்பதையும், அது மாநில ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும், நம்முடைய நிதிப் பற்றாக்குறை என்பது 3 சதவிகிதத்திற்குள்ளாகவே வரக்கூடிய 2025-26-ஆம் நிதியாண்டில் அது கட்டுப்படுத்தப்படும் என்பதை நான் தெரிவித்திருக்கிறேன். அதேபோல, கடனுக்கும் (debt), மாநிலத்தின் உற்பத்தி மதிப்பீட்டிலான அந்த ratio-வில், அது கடந்த 2021-22-ஆம் ஆண்டில் 27 சதவிகிதமாக இருந்தது; 2024-25-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 26 சதவிகிதமாக குறைவாக வந்திருக்கிறது என்பதையும் நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழ்நாட்டின், நீடித்த, நிலையான வளர்ச்சி என்பது low inflation ஆக இருந்தாலும் சரி, அல்லது வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருவதாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கட்டத்திலும் நான் எடுத்துக் காட்டியிருக்கக்கூடிய தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதாக இருந்தாலும் சரி இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக நம்முடைய 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நாம் அடைவதற்கு முதலமைச்சர் அவர்களுடைய முன்னெடுப்பால், அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டிருக்கக்கூடிய பல்வேறு பணிகளால் இது சாத்தியமாகி இருக்கிறது. இன்றைக்கு ஒட்டுமொத்த குறியீடாக 16 சதவிகித வளர்ச்சியை நம்முடைய ரிசர்வ் பேங்க ஃஆப் இந்தியா வழங்கி இருப்பதும், நம்முடைய தமிழ்நாட்டின் நிதி மேலாண்மைக்கு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, தொழில் வளர்ச்சிக்கு, நம்முடைய சமூக வளர்ச்சிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு மாபெரும் நற்சான்று இந்த 16 சதவிகிதம் வளர்ச்சி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

விகடன் 17 Dec 2025 3:30 pm

தமிழகத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-12-2025: தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.19-12-2025 […]

டினேசுவடு 17 Dec 2025 3:27 pm

வேலணை பாதீடு - சைக்கிள் கட்சி ஒருவர் ஆதரவு ; இன்னுமொருவர் எதிர்ப்பு

வேலணை பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை சபையின் விவாதத்திற்கு விட்ட வேளை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர். அதனை தொடர்ந்து பாதீட்டின் மீதான வாக்கெடுப்பில் , சபையின் 22 உறுப்பினர்களில் , தமிழரசு கட்சியின் 08 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இரு உறுப்பினர்களில் ஒருவரும் , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினரும் , சுயேட்ச்சை குழுக்களின் 3 உறுப்பினர்களுமாக 17 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்களும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இரு உறுப்பினர்களில் ஒருவருமாக 05 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் 22 உறுப்பினர்களை கொண்ட சபையில் 17 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததன் அடிப்படையில் 12 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.

பதிவு 17 Dec 2025 3:23 pm

நொடிப்பொழுதில் அக்கவுண்டில் வரும் PF பணம்.. இனி ஈசியா எடுக்கலாம்!

பிஎஃப் பணத்தை ஏடிஎம் கார்டு மூலமாக எடுக்கும் வசதி இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

சமயம் 17 Dec 2025 3:17 pm

CSK : `அவர்கள் சொன்ன முதல் பெயரே பிரசாந்த் வீர் தான்; கேமரூன் கிரீன்.!' - CEO காசி விஸ்வநாதன் ஓப்பன்

19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது. எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் தேர்வு குறித்து பேசிய சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன், கேமரூன் கிரீனை எடுக்கலாம் என்றுதான் பார்த்தோம். பிரசாந்த் வீர் Talent Scout team ஆனால், எங்களிடம் இருந்த தொகையில் 50% செலவு செய்துவிட்டால், இளம் வீரர்களை எடுக்க முடியாமல் போய்விடுமோ என்று பயம் வந்துவிட்டது. ஏலத்தில் எடுக்க அதிக இளம் வீரர்களை அடையாளப்படுத்தி வைத்திருந்தோம். இளம் வீரர்களில் யாரெல்லாம் நன்றாக விளையாடுகிறார்கள் என்பதை எங்கள் Talent Scout team தெரிவித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் தெரிவித்த முதல் வீரர் பிரசாந்த் வீர் தான். ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு டிரேடிங் செய்துவிட்டோம். அதனால் அணியில் நம்பர் 7 க்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். அந்த வீரர் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் திறமை கொண்டவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். காசி விஸ்வநாதன்- தோனி அந்தவகையில் தான் பிரசாந்த் வீரை அணிக்கு தேர்வு செய்தோம். நாங்கள் நல்ல அணியை உருவாக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை செய்வார்கள். ரசிகர்களே, இந்த ஆண்டு சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கேவை பார்த்து சந்தோஷப்படுவீர்கள். நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன்” என்று பேசியிருக்கிறார். IPL: என்னுடைய அந்த கனவு நிஜமாகவில்லை; தோனி பாய்.! - சிஎஸ்கே குறித்து பதிரனா உருக்கம்

விகடன் 17 Dec 2025 3:15 pm

பிரஜா சக்திக்கு யாழில் வலுக்கும் எதிர்ப்பு - தவிசாளர்கள் போர்க்கொடி

அரசியல் நியமனங்களை அரச அதிகாரிகளை மேற்கொள்ளச் செய்யும் அடக்கு முறையான ஆட்சியின் கீழ் அரச அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர் இது தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றை நாடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பிரஜா சக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு , அதனூடாக கிராம மட்டத்தில் சமூக அபிவிருத்தி குழு என உருவாக்கி அதன் தலைவராக கட்சியின் உறுப்பினர் ஒருவரை பிரதேச செயலர் நியமித்து , அவருக்கான நியமன கடிதங்களையும் வழங்கி வருகின்றனர். அதனை தொடர்ந்து குறித்த குழுவின் தலைவராக செயற்படுபவர்கள் கிராம மட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் , பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் , மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை பின் தள்ளி , முன் வரிசைகளில் அமர்ந்திருந்து அரசாங்கத்தின் திட்டங்களை ஆமோதித்து நடைமுறைப்படுத்தும் போக்கினை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் குறித்த நியமனம் குறித்து பிரதேச சபை தவிசாளர்கள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்ற நாடுவோம் இது தொடர்பில் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற சட்டங்களின் பிரகாரம் தேர்தல் மூலம் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக அதிகாரம் வழங்கப்பட்ட கட்சி சார்பு கிராம மட்ட தலைவர் ஒருவரை நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் உள்ளூராட்சி மன்றங்களை மலினப்படுத்தி சர்வாதிகார ஆட்சியை கொண்டு பலப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியினர் போட்ட திட்டமே கிராம அபிவிருத்தி குழு. இதனூடாக தேசிய மக்கள் சக்தியினர் கிராமங்களில் தமது அரசியலை மேற்கொள்வதற்காக உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்த முயல்கின்றனர். குறித்த நியமனம் தொடர்பில் நாம் விரிவாக ஆராய்ந்து நீதிமன்றத்தை நாடுவதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றார். அரசியல் நியமனங்களை அதிகாரிகளை மேற்கொள்ளச் செய்யும் அடக்கு முறையான ஆட்சி வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரச அதிகாரிகளை தவறாக வழி நடத்தும் செயற்பாடு தான் இந்த கிராம அபிவிருத்திக் குழு தலைவர் நியமனம். ஒரு பிரதேச செயலாளர் ஊடாக அந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி குழு தலைவரை அமைப்பதற்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் குறித்த நியமானத்தை வழங்கும் அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது சவாலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயம். அரசியல் நியமனங்களை அதிகாரிகளை மேற்கொள்ளச் செய்யும் அடக்கு முறையான ஆட்சி காணப்படுகிறது ஆகவே குறித்த விடயம் தொடர்பில் ஏனைய தவிசாளர்களுடன் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எடுப்போம் என்றார். கடந்த கால ஆட்சிகளை விட மோசமான முறையில் பறிக்கப்படும் அதிகாரம் ஊர் காவற்துறை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா கடந்த கால ஆட்சிகளை விட மோசமான முறையில் மக்களை ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாடு கிராம மட்ட அபிவிருத்தி குழு தலைவர். இந்த நியமனம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் சிபாரிசின் பெயரில் நியமிக்கப்படுகிறார் அவரின் கீழ் கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி குழு உத்தியோத்தர் கடமையாற்ற வேண்டிய இக்கட்டான நிலையை பிரதேச செயலாளரின் கடிதம் பிரதிபலிக்கிறது. அது மட்டும் அல்லாது உள்ளூராட்சி மன்றங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் பங்கு பெற்றுவதற்கான மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சியின் சிபாரிசினால் பிரதேச செயலாளரால் நியமிக்கப்படுகின்ற கிராம அபிவிருத்தி குழு தலைவர் அபிவிருத்திக் குழு கூட்டங்களில் பங்குபடுத்துவதற்கான சந்தர்ப்பம் பிரதேச செயலாளரினால் வழங்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை புறம் தள்ளி ஒரு கட்சி சார்ந்த பிரதிநிதிக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் கிராம அபிவிருத்தி குழு தலைவரின் நியமன கடிதத்தில் நியமிக்கப்படுபவர் அரச உத்தியோகத்தராக கருதப்பட மாட்டார் என கூறிவிட்டு அடுத்த பந்தியில் சமூக அபிவிருத்திக் குழுக்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கிராம மட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட கிராம உத்தியோகத்தரை புறந்தள்ளி அரசியல் அதிகாரங்களை கிராம மட்டங்களில் பலப்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டமே இந்த கிராம அபிவிருத்தி குழு திட்டம் என தெரிவித்தார்.

பதிவு 17 Dec 2025 3:00 pm