அரசாங்கம் தொலைக்காட்சி நிறுவனங்களை தடை செய்யுமா?
எம்.எஸ்.எம். ஐயூப் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அழித்துவிட முயல்வதாக எதிர்க் கட்சிகளும் சில ஊடக அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. அண்மையில் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு எதிராக பொலிசார் இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாடொன்றை அடுத்தே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஊடகங்களின் உள்ளடக்கத்தின் தகுதியை பற்றி தீர்மானிக்கும் அதிகாரம் பொலிசாருக்கு இல்லை என்றும் பொலிசாருக்கு அந்த அதிகாரத்தை வழங்குவதானது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றும் விமர்சகர்கள் கூறுகின்னர். ஆயினும் அந்தத் தொலைக்காட்சி சேவைக்கு எதிராக அரசாங்கம் […]
ரஷியாவுடன் அமைதி ஒப்பந்தம் 90% தயாா்
ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் தனது புத்தாண்டு உரையில் கூறியதாவது: ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம்தான் உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் விதியைத் தீா்மானிக்கும். உக்ரைனில் அமைதியை கொண்டு வருவதற்காக எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் போரின் முடிவை விரும்புகிறோம் – உக்ரைனின் முடிவை […]
இலங்கை மருந்துவத் துறையில் எழுச்சி ; அரச நிறுவனம் படைத்த வரலாற்று சாதனை
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தனது வரலாற்றில் அதிகூடிய மருந்து உற்பத்தியை 2025 ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டில் 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகளை உற்பத்தி செய்ய இக்கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஒரு மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய உற்பத்தியும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே பதிவாகியுள்ளது. அந்த மாதத்தில் மாத்திரம் 385 மில்லியன் மாத்திரைகள் மற்றும் […]
பசிபிக்கில் மேலும் இரு படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஐந்து போ் உயிரிழப்பு
பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்திவருவதாக குற்றஞ்சாட்டி, இரு படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 5 போ் உயிரிழந்தனா். இது குறித்து அமெரிக்க ராணுவ தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 போ் கொல்லப்பட்டனா். கடந்த மூன்று மாதங்களாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் படகுகளை அமெரிக்கப் படைகள் இலக்காகக் கொண்டு வருகின்றன என்று அறிக்கையில் […]
வவுனியா –கூமாங்குளம் கிராம அலுவலர் அலுவலகம் பிரதி அமைச்சரால் திறந்து வைப்பு
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வவுனியா, கூமாங்குளம் கிராம அலுவலர் அலுவலகம் இன்று கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, கூமாங்குளம் கிராம அலுவலர் அலுவலகமானது 15 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. புனர் நிர்மாண வேலைகள் நிறைவடைந்த நிலையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. கிராமசேவையாளர் என்.ஶ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கிராம மக்கள், முன்பள்ளி […]
மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமை கோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படை அற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. புதுவருட தினமான நேற்று (01.01) வவுனியாவில் அவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்களாகிய நாங்கள், வவுனியாவில் 3,237வது நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறோம். இந்தத் தியாகம் மற்றும் மனவுறுதி நிறைந்த இடத்திலிருந்து, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளைப் பற்றிய உண்மையை வெளிக்கொணர உதவுமாறும், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் இனப்படுகொலையை நிறுத்தி இறைமையை மீட்டெடுக்க ஆதரவளிக்குமாறு அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் அரசியல்வாதிகளாக அல்ல. மாறாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தாய்மார்களாகவே இந்த தார்மீக அடிப்படையில் பேசுகிறோம். தமிழ் வரலாறு காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசியலமைப்புகளுடனோ அல்லது திணிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்புக்களுடனோ தொடங்கவில்லை. நவீன எல்லைகளுக்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பே, இந்தத் தீவு தமிழ் பேசும் மக்களால் வசித்து ஆளப்பட்ட தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த பண்டைய காலங்கள் வரை அது நீண்டு செல்கிறது. இந்தத் தீவில் தமிழர்களின் இருப்பு, பிற்கால அனைத்து அரசியல் மற்றும் இனக் கட்டுமானங்களுக்கும் முந்தையது. ஆயினும் கூட, சமகால தமிழ் தலைவர்கள் பலர் இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, அதற்குப் பதிலாக தனிப்பட்ட வசதி, வெளி அழுத்தங்கள் அல்லது மேட்டுக்குடி நலன்களில் வேரூன்றிய அரசியல் சூத்திரங்களை ஊக்குவிக்கின்றனர். கடந்த மாதம், அமெரிக்கா யாழ்ப்பாண விமான நிலையத்தில் இரண்டு முறை பெரிய இராணுவ விமானங்களைத் தரையிறக்கி மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் மூலம் தமிழ் பொதுமக்களின் மீது உறுதியான அக்கறையை வெளிப்படுத்தியது. இருப்பினும், எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ அல்லது 'சிவில் சமூக அமைப்பு'என்று சொல்லிக்கொள்ளும் அமைப்போ இந்த ஆதரவை பகிரங்கமாக அங்கீகரிக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் ஆகிய நாங்கள் மட்டுமே நன்றியைத் தெரிவித்தோம். இது தமிழர் மத்தியில் உள்ள தார்மீக மற்றும் தலைமைத்துவத் தோல்வியை அம்பலப்படுத்தியது. தென்னிந்தியா மற்றும் தமிழ் தீவான இலங்கையை உள்ளடக்கிய தமிழகத்தில் ஒரு பழங்கால சிங்கள இனம் இருந்ததற்கான வரலாற்று அல்லது தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை. தமிழ் இனம் சைவ சமயத்தைப் பின்பற்றியது. அதைத் தொடர்ந்து தமிழ் பௌத்தத்தைப் பின்பற்றியது. பின்னர் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பியது. இந்த மாற்றங்கள் மணிமேகலை உட்பட தமிழ் இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமை கோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படை அற்றவை. சிங்கள மக்கள் தெற்கில் சுதந்திரமாக வாழலாம். ஆனால் வடக்கு-கிழக்கு வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அது தமிழ் தேசத்திற்கு சொந்தமானது எனத் தெரிவித்தனர். இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் அமரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தி இருந்ததுடன், காணாமல் ஆக்கபட்ட தமது உறவுகளின் புகைப்படங்களையும் தாங்கி இருந்தனர் .
Sandraவோட real face அப்பவே தெரிஞ்சிருக்கும்.! -`Biggboss' Amit Bhargav| BB Tamil | Paru | kamarudin
? ஆரவல்லி மலைதொடர் சர்ச்சை பிண்ணனி! | Seriously! | Episode - 07 | Vikatan | Aravalli hills
2025-ல் சௌதி அரேபியாவில் 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
சௌதி அரேபியா நாட்டில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 356 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில், பெரும்பாலானோர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர்கள் எனக் கூறப்படுகிறது. சௌதி அரேபியாவில், போதைப் பொருள் கடத்தல்களைத் தடுக்கும் விதமாக அந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் முறையை, கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டு […]
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க ஏதுவாக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய முற்பட்டுள்ளது. முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலக கும்பலிற்கு விற்பனை செய்த விடயத்தில் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை முன்னதாக பிணையில் விடுவிக்க அரசு உயர்மட்டத்துடன் நடாத்தப்பட்ட பேச்சுகளில் கைவிரிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் உள்ளே வைத்திருக்கும் வகையில் கடந்த கால மோசடிகள் தொடர்பில் வழக்குகளை தாக்கல் செய்ய அரச தரப்பு முற்பட்டுள்ளது. அவ்வகையில் யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளிலும் கிளிநொச்சியின் பூநகரியிலும் கடலட்டை பண்ணைகளிற்கு நிலங்களை ஓதுக்கியதில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி மோசடிகள் தொடர்பிலான கோவைகள் தூசு தட்டப்பட்டுவருகின்றது. அரசிற்கு சேர வேண்டிய நில வாடகைகள் ஏதும் செலுத்தப்படாது சுமார் நாலாயிரம் ஏக்கர் வரையிலான நிலம் அமைச்சரின் பணிப்பில் அவரது ஆதரவாளர்களிற்கு வடமாகாண காணித்திணைக்கள அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் வழங்கப்பட்டுள்ளது. முறையற்ற அரச காணிகள் ஆக்கிரமிப்பு தொடர்பில் கண்டுகொள்ளாதிருந்ததுடன் மாதாந்தம் சுமார் நூறு மில்லியன் வரையிலான நிதி துஸ்பிரயோகத்திற்கு வழிகோலியதாக காணித்திணைக்கள அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே தென்னிலங்கையில் கைதான முன்னாள் அரசியல்வாதிகள் மீது அத்தகைய குற்றச்சாட்டுக்களை வைத்திருந்த அரசு தற்போது அதே பாணியில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது விசுவாச அதிகாரிகளை வேட்டையாடத்தொடங்கியுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார். நயினாதீவில் உள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள் தையிட்டி விகாரை பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை (02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி இராணுவத்தினரால் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாராதிபதி அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். அதன் ஒரு கட்டமாக தையிட்டிக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாராதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பற்றை வளர்ந்திருந்த காணியை பார்வையிட்டு சென்றுள்ளார். இதனிடையே தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலர் கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைவாக, திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பது தொடர்பாக - விகாராதிபதியுடன் சந்தித்து தொடர் நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்தீர்மானத்திற்கமைய, இன்றைய தினம் (02.01.2025) மாவட்ட செயலர் விகாராதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
அமித் ஷா - ஈபிஎஸ் சந்திப்பு? சுவாரஸ்ய ஆலோசனை.. யாருடன் கூட்டணி தெரியுமா?
ஜனவரி 4 ஆம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
RBI-ல் வேலை; இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? ரூ.3 லட்சம் வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா இன்ஜினீயர், ஐ.டி. செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட் உள்ளிட்ட பல பணிகள். இது ஒப்பந்தப் பணி ஆகும். மொத்த காலிப்பணியிடங்கள்: 93 வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) கல்வித் தகுதி: B.E/B.Tech, BBA, Ca/ICWA, PG இந்திய ரிசர்வ் வங்கி | RBI Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா? BEL நிறுவனத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்? சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.3.10 லட்சம்; அதிகபட்சம் ரூ.4.8 லட்சம். எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? பிரிலிமினரி ஸ்கிரீனிங், ஆவண சரிபார்ப்பு, நேர்காணல். விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 6, 2026 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! Career: டிகிரி படித்திருந்தால் வங்கி வேலை; ரூ. 1.20 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிக்கலாம்?
தைவானை சீனாவுடன் இணைப்பது தடுத்து நிறுத்த முடியாதது: ஷி ஜின்பிங்
தைவானை சீனாவுடன் இணைப்பது ‘தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை‘ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது புத்தாண்டு உரையில் அவா் கூறியதாவது: சீனாவின் மறுமலா்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தாய்நாட்டுடன் தைவானை மீண்டும் இணைப்பது தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை. அமைதியான வழியில் இணைப்பையே விரும்புகிறோம். ஆனால் தைவானின் சுதந்திரவாதப் பிரிவினைவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். இந்த விவாகரத்தில் அந்நிய சக்திகளின் தலையீட்டை கடுமையாக எதிா்த்து நிற்போம் […]
சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – 2 தொழிலாளர்கள் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த இந்த வெடிவிபத்து, சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் அபாயத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு… The post சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – 2 தொழிலாளர்கள் பலி appeared first on Global Tamil News .
SSC CGL 2025 Tier II தேர்வில் திடீர் மாற்றம்; MTS, GD கான்ஸ்டபிள் தேர்வு தேதிகள் அறிவிப்பு
மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் நடத்தப்படும் பட்டப்படிப்பு தகுதிக்கான CGL இரண்டாம் கட்டத் தேர்விற்கான (SSC CGL 2025 Tier II) தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், SSC MTS 2025 மற்றும் மத்திய ஆயுத காவல்படை GD கான்ஸ்டபிள் தேர்வு 2026 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன்: தவெகவில் இணைந்த அதிமுக முக்கிய பிரமுகர்.. யார் இந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.?
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர், விஜய்யின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் சற்றுமுன் இணைந்து உள்ளார். இவர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார்.
`காங்கிரஸில் தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது!' - ஜோதிமணி
சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார். கரூர் காங்கிரஸ் கட்சி எம்.பி-யான ஜோதிமணி இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் செய்துள்ள பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்னைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது. தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத ஒரு பேராபத்தை, பிரிவினைவாத, மதவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது. தமிழ்நாடு காங்கிரஸில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. jothimani இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது. தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின் அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சொந்த கட்சியினர் செயல்பாட்டையே வெளிப்படையாக ஜோதிமணி விமரிசித்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை, கரூர் மாவட்ட காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் இருப்பது உண்மைதான். அதுபற்றி ஜோதிமணி குற்றம்சாட்டியபோது என்னாலான நடவடிக்கையை எடுத்தேன். ஆனால், ஜோதிமணி பொதுவெளியில் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. எனக்கு உட்பட்ட அதிகாரத்தின்படியே செயல்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
பிலிப்பின்ஸ்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் கையெறி குண்டு வீசிய மர்ம நபர்கள்! 22 பேர் படுகாயம்!
பிலிப்பின்ஸ் நாட்டில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் வீசிய கையெறி குண்டு வெடித்து 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு பிலிப்பின்ஸின் கோட்டாபாட்டோ மாகாணத்தின் மாத்தளம் நகரத்தில் உள்ள நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை (ஜன. 1) அதிகாலை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தினுள் கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சில நொடிகளில் அந்த வெடிகுண்டு […]
Jasjeet Kaur appointed CEO at Groupe SEB India
Mumbai: Groupe SEB India has announced the appointment of Jasjeet Kaur as its Chief Executive Officer, effective December 1, 2025, marking a significant milestone in both her leadership journey and the company’s growth trajectory in the Indian market.In her new role, Jasjeet will be responsible for driving Groupe SEB India’s overall business performance, strengthening market leadership across categories, and accelerating profitable and sustainable growth in the country.Jasjeet joined Groupe SEB India in 2020 as Marketing Director, where she played a pivotal role in enhancing the Group’s presence and competitiveness in India. A key highlight of her tenure has been the successful launch and expansion of Groupe SEB’s premium international brand, Tefal, which has strengthened the company’s position in the evolving Indian consumer market.Earlier in 2025, she expanded her mandate as Vice President – Sales (E-commerce, Modern Trade & Other Channels), focusing on creating stronger alignment between marketing and sales functions. In this role, she worked on improving execution at scale, sharpening commercial capabilities, and supporting Groupe SEB India’s omnichannel growth ambitions.With over two decades of experience across FMCD, automotive, and consumer businesses, Jasjeet brings deep expertise in business strategy, brand building, category development, and marketing transformation. Prior to Groupe SEB, she held leadership roles at reputed organisations such as Kohler, Volvo Eicher, and Assa Abloy.Her appointment comes at a time when Groupe SEB is accelerating its growth plans in India, leveraging its strong global scale and innovation capabilities. Globally, Groupe SEB operates in over 150 countries, with more than €8.26 billion in annual sales, a portfolio of 470+ patents worldwide, and 47+ industrial sites.
V.P. Nandakumar honoured at FICCI Kerala Policy Conclave
Kochi: V.P. Nandakumar, Chairman of FICCI Kerala and Chairman and Managing Director of Manappuram Finance, was honoured at the FICCI Kerala Policy Conclave, recognising his leadership and contributions to industry and academia. Nandakumar was recently elected as the Acting Chairman of the Indian Institute of Management Kozhikode (IIM Kozhikode).The conclave, held under the theme ‘Industry-Friendly Policy: Reforms and Achievements’, brought together key stakeholders from government, industry, and academia to discuss policy initiatives aimed at fostering economic growth in the state. Kerala Industries Minister P. Rajeev delivered the keynote address at the event.In addition to the felicitation, the conclave featured addresses by M.P.M. Muhammed Haneesh, Principal Secretary (Industries), Thomas John, Co-Chairman, FICCI Kerala, Cherian M. George, and Savio Mathew, Head of the FICCI Kerala State Council, who shared insights on policy reforms and the evolving industrial landscape in Kerala.The event underscored FICCI Kerala’s ongoing efforts to promote industry-friendly policies and strengthen collaboration between the government and the private sector, while acknowledging leadership that has played a pivotal role in advancing these objectives.
பாஜகவுடன் விஜய் இணைந்தால் நல்லது.. அறிவாலயத்தை நோக்கி தான் வைகோ செல்ல வேண்டும்.. தமிழிசை கருத்து!
பாஜகவுடன் விஜய் இணைந்தால் நல்லது என்றும் வைகோ அறிவாலயத்தை நோக்கித்தான் பாதயாத்திரை செல்ல வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்து உள்ளார்.
`ஆன்மிகத்தை வம்பு செய்ய பயன்படுத்துகிறார்கள்; மதவாத அரசியல் போதையைத் தடுக்க வேண்டும்!' - ஸ்டாலின்
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணத்தின் துவக்க விழா திருச்சி தென்னூர் புலவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.க பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகர், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஸ், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, வாழ்த்துரை வழங்கிய தொல்.திருமாவளவன், thirumavalavan வைகோ ஏற்றுக்கொண்ட கொள்கையில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் விதைத்த சமத்துவக் கொள்கையில் இன்னும் உறுதிப்பாட்டோடு விளங்குகிறார் என்பதற்கு சான்றாக இந்த சமத்துவ நடைபயணம் விளங்குகிறது. அவருடைய கொள்கை உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக இது அமைந்திருக்கிறது. அனைவரும் ஆதரிக்க வேண்டிய ஒரு நடைபயணமாக அமைந்திருப்பது போற்றுதலுக்குரியது, மகிழ்ச்சி அளிக்கிறது. சொல்லப்போனால் சமத்துவத்திற்காக போராடக்கூடிய நாம் அனைவரும் அவரோடு இந்த நடைபயணத்தில் இணைந்து நடக்க வேண்டும். அத்தனை சிறப்புக்குரிய ஒரு நடைபயணம் இது. பெரியார் இயக்கம் கண்டதும் சமத்துவத்திற்காகத்தான். பேரறிஞர் அண்ணா அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்ததும் சமத்துவத்திற்காகத்தான். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அரசியல் செய்ததும் சமத்துவத்திற்காகத்தான் . அவருடைய கருத்தியல் வாரிசாக நின்று களத்தில் இருக்கிற திராவிட மாடல் என்கிற சமத்துவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற ஸ்டாலினும் இங்கே போராடிக் கொண்டிருப்பது சமத்துவத்திற்காகத்தான். மேடையில் அமர்ந்திருக்கிற அத்தனை தலைவர்களின் நோக்கமும், கூடியிருக்கிற நம்முடைய அனைவரின் நோக்கமும் சமத்துவத்திற்காகத்தான். அம்பேத்கரும், தந்தை பெரியாரும் இந்த மண்ணில் தம் இறுதி மூச்சு வரையில் ஓடி ஆடி பணியாற்றியதும் தமது வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டதும் சமத்துவத்திற்காகக்தான். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு கூட்டணி அரசியலை ஸ்டாலின் இன்றைக்கு முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்கான தகுதியும், ஆற்றலும், வலிமையும் ஸ்டாலினுக்கு உண்டு. அந்த வகையிலே வைகோ தொடங்குகிற இந்த சமத்துவ நடைபயணத்தை அவர் தொடங்கியுள்ளது சால பொருத்தமானது. 2026 - ம் வருட தேர்தல் சராசரியான தேர்தல் இல்லை. தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் சனாதன சக்திகள் ஒரு புறம். அப்படி விட்டு விடமாட்டோம் நாங்கள் பெரியாரின் பிள்ளைகள் அண்ணாவின் தம்பிகள். அம்பேத்கரின் அரசியல் வாரிசுகளாகிய நாம் ஒருபோதும் விடமாட்டோம் என்கிற உறுதிபாட்டோடு ஸ்டாலின் தலைமையில் அணிதிரண்டு நிற்கிறோம். ஒரு சிலர் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பேசக்கூடியவர்களாகவும் இன்றைக்கு முகமூடிகளை அணிந்து கொண்டு நமக்கு எதிரான திரிபுவாத அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்பது தமிழ் தேசியத்திற்கு எதிரானது அல்ல. தமிழுக்கு எதிரானது அல்ல. தமிழனுக்கு எதிரானது அல்ல. தமிழ் மண்ணுக்கு எதிரானது அல்ல. அண்ணாவும், கலைஞரும் இந்தியை எதிர்க்காமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் இந்தி வாலாக்களாக மாறியிருப்போம். திராவிடத்தால் தான் தமிழ் உயிர்ப்போடு இருக்கிறது. திராவிடம் என்பது தமிழ் தேசியம், சமூகநீதி, சமத்துவம் தான். இந்த நடைபயணம் சமத்துவ நடைபயணம் என கூறினாலும் பொருந்தும் திராவிட நடைபயணம் எனக் கூறினாலும் பொருந்தும் என்றார். அடுத்து பேசிய காதர் மொய்தீன், இந்திய மாநிலங்களுக்கே முன்னுதாரணமான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதனால், மற்ற மாநில மக்கள் ஸ்டாலின் போல் ஒரு முதல்வர் நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்குகிறார்கள். மாசே துங்கின் பயணம் வரலாற்றில் முக்கியமாக உள்ளது. அது போல வைகோவின் பயணம் அமையும். 2026- ல் நடைபெறும் தேர்தல் புரட்சியாக இருக்கும். அதற்கு, வைகோ மேற்கொள்ளும் நடைபயணம் உதவும் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் என் இந்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டில் தன் காலடி படாத இடங்களே இல்லை என மக்கள் பிரச்னைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ. நெஞ்சுரத்தையும், ஸ்டாமினாவையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என ஆச்சர்யப்பட தோன்றுகிறது. இளைஞர்களுடைய வேகத்தையும், உத்வேகத்தையும் வைகோவிடம் காண முடிகிறது. இளைய தலைமுறையின் நலனுக்காகவும், எதிர்கால நன்மைக்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் செயலாற்றும் இயக்கம் தான் திராவிட இயக்கம். தன் தள்ளாத 95 வயதிலும் தவறாமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். தமிழர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும், அதற்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என தன் இறுதி மூச்சு வரை உழைத்தவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த கலைஞர் 80 ஆண்டு பொது வாழ்விற்கு சொந்தக்காரர். சக்கர நாற்காலியில் அமர்ந்தும் மக்களுக்காக உழைத்தவர். தன் முதுமை காலத்திலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களோடு அரசியல் செய்தவர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட திராவிட யூனிவர்சிட்டியில் படித்தவர் தான் வைகோ. நானும் அந்த யுனிவர்சிட்டி மாணவன் தான். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்குத் தேவையானவற்றை முன்னிறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம் நிச்சயம் வெற்றி பெறும். காந்தியின் நடைபயணமும், மாவோவின் நடைபயணமும் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியது. திராவிட இயக்க மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக கர்ஜித்த வைகோ முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்து விட்டு நடைபயணம் மேற்கொள்கிறார். இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பொருளை நிச்சயம் ஒழிக்க வேண்டும். போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதை ஒழிக்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனால், ஓரளவிற்கு பலனும் கிடைத்துள்ளது. போதைப்பொருள் மிகப்பெரிய நெட்வொர்க், அதை ஒழிக்க மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவிற்குள் போதைப்பொருள் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர் , ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்டவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்கள் தான். அந்த நெட்வொர்க் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதை பொருளை ஒழிக்க தமிழ்நாட்டின் துறைகள் ஒன்றிய அரசின் துறைகளோடும் பிற மாநில அரசு துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பது சமூகத்தின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத்துறையை சார்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்லும் போது வேடிக்கை பார்க்கக் கூடாது. mk stalin அவர்களை தீவிரமாக கண்காணித்து பொறுப்போடு வளர்க்க வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான். ஒன்றிய அமைச்சர் பதவியில் இருப்பவர்களே வெறுப்பு பேச்சுக்களை பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும் சீர்குலைக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் என எல்லோரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்த காலம் போய் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கக்கூடிய வேலையை பிளவுவாத சக்திகள் செய்து வருகிறார்கள் அன்பு செய்ய சொல்லி தர வேண்டிய ஆன்மிகத்தை சிலர் வம்பு செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். மது போதையும் அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க நாம் ஒன்று சேர வேண்டும். வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும் அதைவிட அவரின் உடல்நலம் பெரிது. எனவே, அவர் கவனத்துடன் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள வேண்டும். இனி, இதுபோல் கடுமையான நடைபயணங்களை மேற்கொள்ளக் கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
Director Vinoth Responds to ‘Jana Nayagan’ Remake Rumors
With the release of ‘Jana Nayagan’ coming soon, director H. Vinoth has finally addressed the viral rumors about the film.
இந்திய தொலைபேசி தொழில்கள் நிறுவனத்தில் (ITI Limited) உள்ள இளம் நிபுணர்கள் பதவிக்கான 215 காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்படும் இப்பதவிக்கு டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 12 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
VeCura ReSculpt Launched by Actress Alya Manasa & Praba Reddy, in Chennai
VeCura ReSculpt, a next-generation aesthetic and body sculpting clinic under the aegis of VeCura, officially marked its entry into India
AR Rahman to Make Acting Debut in ‘Moonwalk’
Composer AR Rahman, widely loved for his musical talent, has created some of the most beautiful and soulful music that
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்
சென்னை தலைமைச் செயலகத்தில் போட்டா ஜியோ, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினர். போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 6-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த
முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின் தாய் மொழியையே மறந்த சிறுவன்! என்ன நடந்தது?
நெதர்லாந்தில் 17 வயது சிறுவன் ஒருவன் வழக்கமான முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நடந்துக்கொண்ட விதம் மருத்துவ உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த சிறுவன் என்ன செய்தார் என்று சிந்திக்கிக்கின்றீர்ளா? கால்பந்து விளையாடும்போது கால் மூட்டுப்பகுதியில் அடிபட்டு, கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குறித்த சிறுவன் சிகிச்சைக்கு பின்னர் மயக்கநிலையிலிருந்து எழுந்ததும் தனக்கு கொஞ்சம் மட்டுமே தெரிந்த ஆங்கில மொழியில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவுக்கு மிகவும் சரளமாக பேசியுள்ளார். மாணவரின் இந்த நடத்தையால் […]
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 300 வீடுகள் மற்றும் அவற்றுக்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஒப்படைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி
கே.எஸ்.ஆரை தூக்கிலிட்டாலும் அது தவறில்லை –முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தாக்கு
தெலுங்கானா ஆந்திர மாநிலத்துடன் ஒன்றாக இருந்தபோதிலும் விட, கே. சந்திரசேகர ராவ் ஆட்சிச் காலத்தில் நீர்ப்பாசன திட்டத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இதற்காக பி.ஆர்.எஸ். ஆட்சியில் நீர்ப்பாசன
பழங்கால நாகரிகங்கள் கொண்ட மிகச் சில நாடுகளில் நாமும் ஒன்று –மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
சென்னை ஐஐடி மாணவர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடினார். அப்போது “உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதைத் தடுப்பதற்கான வழி, தொடர்புகொள்வதுதான். நீங்கள் சிறப்பாகவும், தெளிவாகவும்,
பொற்கால ஆட்சி தொடர் தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன் –வைகோ
சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:- பொங்கிவரும் பொன்னி ஆற்றங்கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி
இந்தூர் விவகாரத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும்
சிறுவன் உயிரிழப்புக்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும் –எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாநகராட்சியின் 4-வது வார்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, தண்ணீர் தேங்கிய 5 அடிக் குழியில் தவறி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 02, 2026) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 34.19 மில்லியன்… The post கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் appeared first on Global Tamil News .
ஜனவரி 19 ஆம் தேதி தஞ்சையில் திமுக மகளிரணி மாநாடு
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகிற 19-ந்தேதி தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் தஞ்சையில்
தமிழக காங்கிரஸ் அழிவை நோக்கி பயணிக்கிறது –காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி
மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல்
அப்படியே சச்சின் மாதிரி தான் அவரு பையன் விளையாடுறாரு! யுவராஜ் சிங் தந்தை புகழாரம்!
டெல்லி : முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் பயிற்சி முறை குறித்து கடுமையான விமர்சனம் வெளியிட்டுள்ளார். அர்ஜுன் அடிப்படையில் சிறந்த பேட்ஸ்மேன் என்றும், அவரது பந்துவீச்சுக்கு அதிக கவனம் செலுத்துவது தவறு என்றும் யோக்ராஜ் கூறினார். “அர்ஜுன் தனது தந்தை சச்சினைப் போல ஆடுகிறார். ஆனால் பயிற்சியாளர்கள் அவரது பேட்டிங் திறமையை சரியாகப் பயன்படுத்தவில்லை” என்று அவர் வேதனை தெரிவித்தார். யோக்ராஜ் சிங் ரவிஷ் […]
Trisha: 2026-லும் பிஸி; சிரஞ்சீவி, சூர்யா படங்கள், மீண்டும் போலீஸ் கதை - த்ரிஷாவின் அசத்தல் லைன்அப்
சினிமாவில் வெள்ளிவிழா ஆண்டை நெருங்குகிறார் த்ரிஷா. கடந்த 2025ல் 'விடா முயற்சி', 'குட்பேட் அக்லி', 'தக் லைஃப்', 'ஐடென்டிட்டி' என பல படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில் இப்போதும் பிஸியாக இருக்கிறார். சிரஞ்சீவியுடன் ஒரு படம், சூர்யாவுடன் 'கருப்பு' தவிர ஹீரோயின் சென்ட்ரிக் வெப்சிரீஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். த்ரிஷாவின் லைன் அப் குறித்து விசாரித்ததில் கிடைத்தவை. கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியின் 'விண்ணைத் தாண்டி வருவாயா' நிஜமாகவே ஒரு மேஜிக். 1000 நாள்களைக் கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. மறு வெளியீட்டிலும் சாதனை படைத்த படமாகி விட்டதால், த்ரிஷாவும் இந்தப் படத்தை உருவாக்கியது சிறப்பானது. நான் இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு படத்தை உருவாக்கும்போது நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அந்த திரைப்படம் எப்படியோ சிறந்ததாக உருவாகிவிடும். அதனால்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என் இதயத்துக்கு நெருக்கமான படம். இன்றளவும் ஜெஸ்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரசிகர்களுக்கும், சுற்றத்தவருக்கும் சிறப்பு நன்றிகள். இப்போதும் எனக்கு ஜெஸ்ஸி குறித்து மீம்களை அனுப்புகின்றனர். தனிப்பட்ட மெஸ்ஸேஜ்களை அனுப்புகின்றனர் என நெகிழ்ந்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியீட்டு பேசியிருந்தார். த்ரிஷா த்ரிஷா, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'ஸ்டாலின்' படத்திற்குப் பின் இப்போது 'விஸ்வம்பரா'வில் மீண்டும் இணைந்துள்ளார். ஃபேன்டஸி ஆக்ஷன் படமான இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டாலும், கிராபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. வரும் கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். இதில் த்ரிஷாவின் தோற்றம் பேசப்படும் என்கிறார்கள். தமிழில் சூர்யாவுடன் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார். 'மௌனம் பேசியதே', 'ஆயுத எழுத்து, 'ஆறு' படங்களுக்குப் பின் த்ரிஷா, சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். 'கருப்பு' படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. RJ பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷாவின் ரோல் பேசப்படும் என்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி ஏற்கெனவே த்ரிஷா நடிப்பில் 'மாசாணி அம்மன்' படத்தைத் தொடங்குவற்கான பேச்சு எழுந்த சூழலில், இந்த படத்திற்குள் த்ரிஷா வந்திருப்பதால் அவரது ரோலை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'கருப்பு' ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. இதனை அடுத்து 'பிருந்தா 2' வெப்சிரீஸில் நடிக்க உள்ளார். சோனி லிவ் தளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான வெப்சிரீஸ் 'பிருந்தா'. இதில் ஹைதராபாத் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக (எஸ்.ஐ) ஆகப் பணிபுரிகிறார் பிருந்தா. அங்கே அவரது திறமையை அனைவரும் நிராகரிக்கிறார்கள். அதன் பின் அவரது திறமையை எப்படி நிரூபிக்கிறார் என்பதை 8 எபிசோடுகளில் திக்...திக் அனுபவத்தோடு சொல்லியிருந்தார்கள். அந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பில் இப்போது 'பிருந்தா 2' உருவாகிறது. ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. பிருந்தா படப்பிடிப்பில் தமிழில் இரண்டு கதைகள் கேட்டு வைத்திருக்கிறார். 'கருப்பு' வெளியான பிறகு அடுத்த அதிரடி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள். தவிர, மோகன்லாலுடன் 'ராம்' என்ற படமும் கைவசம் வைத்துள்ளார். கடந்த 2020 லாக்டவுனுக்கு முன்னரே இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது. பல்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இன்னும் சில ஷெட்யூல்கள் படப்பிடிப்பு மீதமிருக்கின்றன என்பதால், 'ராம்' மீண்டும் எப்போது துவங்கினாலும் கால்ஷீட் கொடுப்பார் என்கிறார்கள்.
குடும்பஸ்தரின் உயிரை பறித்த கால்வாய் ; தமிழர் பகுதியில் சம்பவம்
புல்மோட்டை பொலிஸ் பிரிவின் மகாசேனபுர பகுதியில் கால்வாயில் விழுந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலொங்கொல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீதிபதியின் விசாரணைக்குப் பிறகு, சடலம் பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து புல்மோட்டை பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.
பாடப் புத்தக சர்ச்சை; பணிப்பாளர் நாயகம் விலகல்
தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட தரம் 6 ஆங்கிலக் கற்றல் தொகுதியில் இடம்பெற்ற சர்ச்சை விசாரணை முடியும் வரை, அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட மேலதிக கற்பித்தல் உள்ளடக்கங்களில், பொருத்தமற்ற இணையதளக் குறிப்பு சேர்க்கப்பட்டமை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக, சுயாதீன விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்பாலீர்ப்பாளர்களுக்கான இணையதளம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அடுத்தகட்ட விசாரணைகளின் […]
கல்முனையில் நாய் இறைச்சி விற்பனையா: அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்
கல்முனை – பெரியநீலாவணை நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் இந்நிலையில் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள […]
⛵ காம்பியா கடற்கரையில் படகு விபத்து – 7 பேர் பலி – பலரைக் காணவில்லை
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா (Gambia) கடற்கரையில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் அபாயகரமான… The post ⛵ காம்பியா கடற்கரையில் படகு விபத்து – 7 பேர் பலி – பலரைக் காணவில்லை appeared first on Global Tamil News .
தமிழ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து எம்ஜிஆர் பெயரும் புகைப்படமும் நீக்கப்பட்டதற்கு அவருடைய புகழுக்கும் பெருமைக்கும் இழுக்கு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து உள்ளார்.
நீ தினமும் எங்க போயிட்டு வர்றேன்னு - Emotional-ஆக பேசிய Actor Sivakarthikeyan Shock-ஆன அரங்கம்?
சென்னை: 'மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!' - குண்டுக்கட்டாக கைது
தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாள்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையரின் வீட்டை முற்றுகையிட்டு போராடிய தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 50 நாள்களுக்கு மேலாக உயர் நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தேனாம்பேட்டையில் உள்ள திமுக-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட முயன்று கைதாகினர். அறிவாலய முற்றுகையைத் தொடர்ந்து கலைஞர் நினைவிடம், ரிப்பன் பில்டிங் போன்ற இடங்களையும் முற்றுகையிட்டு கைதாகினர். இந்நிலையில், இன்று காலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் வீட்டை முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். 'நாங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக போராடவில்லை. எங்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக போராடுகிறோம். எங்களை சிறையில் அடைத்தாலும் போராடுவோம்' என்கிறார் போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி.
Lufthansa marks 100 years of aviation legacy in 2026
Mumbai: In 2026, Lufthansa reaches a historic milestone, celebrating 100 years since the founding of the first “Luft Hansa” on January 6, 1926. As one of the world’s most iconic aviation brands and Europe’s largest airline group, Lufthansa is commemorating a century defined by pioneering spirit, innovation, resilience, and global connectivity, while firmly setting its sights on the future.The airline’s journey began with the merger of Junkers Luftverkehr and Deutsche Aero Lloyd, culminating in the maiden flight of the first Lufthansa on April 6, 1926. Over the decades, Lufthansa’s story has been shaped by progress as well as profound challenges, including interruptions during the Second World War and its complex involvement during the Nazi era. As part of its centenary, Lufthansa is undertaking a critical reflection of this period, grounded in historical research, acknowledging all chapters of its past as an integral part of its identity.The legal foundation of today’s Deutsche Lufthansa AG was laid with the establishment of the “second Lufthansa” in 1953, followed by the resumption of flight operations in 1955. This post-war rebirth marked the beginning of a new era of growth, innovation, and international expansion that continues to this day.The 100th anniversary is being celebrated under the motto “We are the Journey,” symbolising the shared path of employees, passengers, and brand loyalists who have shaped Lufthansa’s evolution. The centenary is both a tribute to the trust of its customers and a recognition of the dedication of its people. Today, around 40,000 employees from 122 nations work under the Lufthansa brand, while the broader Lufthansa Group employs approximately 100,000 people from over 160 countries.Throughout 2026, Lufthansa will host a wide range of commemorative activities, including a permanent exhibition at Lufthansa Group Hangar One, special customer and employee events, a dedicated history book, film and video productions, and targeted marketing and product campaigns. The anniversary will also be visible across the customer journey, with a special “100 Years of Lufthansa” emblem featured on boarding passes, at airports, onboard aircraft, and through city-wide poster campaigns showcasing iconic moments from the airline’s history.A key highlight of the celebrations is the launch of the Lufthansa anniversary fleet. Six aircraft across major sub-fleets will feature special 100-year liveries, including an Airbus A380, Airbus A350-1000, Airbus A350-900, Airbus A320, and a Boeing 747-8. Leading the fleet is the Boeing 787-9 “Berlin,” recently delivered to Frankfurt and set to enter scheduled service as the first aircraft bearing the centenary livery. In addition, two retro liveries blending heritage and modernity will serve as flying ambassadors of the Lufthansa brand, proudly carrying the iconic crane symbol designed by Otto Firle in 1918.As Lufthansa celebrates its centenary, the milestone stands as both a moment of reflection and a bold declaration of intent—honouring a century of aviation leadership while embarking on the next chapter of innovation, sustainability, and global connection in its second hundred years.
“தனியார் காணிகளை அபகரித்தது மகா தவறு”–நயினாதீவு விகாராதிபதி
தனியார் காணிகளை அபகரித்தது , மகா தவறு, நயினாதீவு விகாராதிபதி ,தையிட்டி திஸ்ஸ விகாரை யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ… The post “தனியார் காணிகளை அபகரித்தது மகா தவறு” – நயினாதீவு விகாராதிபதி appeared first on Global Tamil News .
21 வயதில் ரூ.2.5 கோடி சம்பளம்; IIT ஹைதராபாத் மாணவனின் வரலாற்று சாதனை - சாத்தியமானது எப்படி?
கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்கள் வேலையை தேடி பயணத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வேலைக்கு சேரும்போதே அதிக சம்பளத்தில் பணியில் சேர வேண்டும் என விரும்புகிறார்கள். அப்படியானவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார் IIT ஹைதராபாத் மாணவர் எட்வர்ட் நாதன் வர்கீஸ். இறுதி ஆண்டு படிப்பை முடிப்பதற்கு முன்பே ரூ.2.5 கோடி சம்பளத்தில் வேலையை பெற்று அசத்தியுள்ளார்.
இன்னும் 10 சதவீதம் தான் மீதமுள்ளது; பெரும் நம்பிக்கையில் உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உக்ரைன் 10 சதவீத தொலைவில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அமைதி ஒப்பந்தம் இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை ட்ரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா-உக்ரைனுடன் அமெரிக்க […]
மன்னார் துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை, 90… The post மன்னார் துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! appeared first on Global Tamil News .
New Delhi: OPPO India has unveiled its new brand campaign, ‘Live it your way’, ahead of the much-anticipated launch of the OPPO Reno15 Series in India on January 8, 2026. The campaign brings back the popular trio of Pooja Hegde, Siddhant Chaturvedi and Ishaan Khatter, capturing the spirit of spontaneity, exploration and living in the moment.The campaign film follows the three actors on an unplanned journey across Kerala after a cancelled flight disrupts their original travel plans. What begins as a setback turns into an impulsive road trip, unfolding through forest trails, waterfalls, local art forms and backwater boat races. Through this unscripted adventure, OPPO positions the Reno15 Series as a creative travel companion that seamlessly captures life’s fleeting, authentic moments.[caption id=attachment_2486641 align=alignleft width=200] Sushant Vashistha [/caption]Commenting on the campaign, Sushant Vashistha, Head of Product and Digital Marketing, OPPO India, said, “Reno has always stood for embracing the present, moving fast, staying curious, and expressing yourself without overthinking. ‘Live it your way’ presents that mindset perfectly. It reflects how today’s youth navigate life—pursuing their passions, adapting on the go and enjoying the experience as it comes. The Reno15 Series is built for this rhythm, and this campaign gives a glimpse of how OPPO continues to design technology that fits naturally into the way people live today.” As the next evolution of the Reno portfolio, the Reno15 Series is designed for explorers and creators. It integrates OPPO’s advanced imaging system, immersive video capabilities, AI-led creative photo editing features, and a sturdy yet stylish design. Features such as the 3.5x Telephoto Portrait Camera, 200MP Main Camera, 4K 60fps HDR video, ultra-wide selfie camera, and AI Pop-Out functionality enable users to capture, edit and share dynamic visuals effortlessly.Sharing her experience, Pooja Hegde said, “Every Reno shoot feels different from a conventional shoot. There is a lot more room to be natural and responsive, which makes the process genuinely enjoyable. This time especially, the situations kept changing, and the Reno15 Series made it easy to capture details, expressions and emotions.” Reflecting on the collaboration, Siddhant Chaturvedi added, “This is my third campaign with OPPO, and what I have always enjoyed about the Reno films is that there is a lot of freedom built into the process, you are reacting to what is around you instead of following rigid setups. With the Reno15 Series, the shoot was highly dynamic and the smartphone handled everything with ease without slowing us down.” Ishaan Khatter shared, “Every collaboration with Reno has been an adventure and this third one was akin to the same feeling. We had a blast exploring Kerala in this new campaign and the Reno15 series captured its vibrant beauty coupled with our energy perfectly.” To maximise reach, OPPO India has rolled out the campaign film across its digital platforms, cinemas and OTT platforms nationwide. Introduced in 2019, the OPPO Reno Series has built a global community of over 130 million users by making advanced camera innovation intuitive and accessible. With the Reno15 Series, OPPO continues its focus on technology that evolves with modern lifestyles—supporting creativity, mobility and self-expression on the go. View this post on Instagram A post shared by Pooja Hegde (@hegdepooja)
நள்ளிரவு 12 மணி; 12 வினாடிகள்... 12 திராட்சைகள் - இந்தியாவில் கவனம் ஈர்த்த ஸ்பெயின் கலாசாரம்!
புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களைச் சாப்பிட்டு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் இந்த வினோதமான சடங்கு, தற்போது இளைஞர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் Las doce uvas de la suerte என்று அழைக்கப்படும் இந்தச் சடங்கு, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. நள்ளிரவு 12 மணி அடிக்கும்போது, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு திராட்சை வீதம் 12 திராட்சைகளைச் சாப்பிட வேண்டும் என்பது இதன் விதி. இவ்வாறு சரியாகச் சாப்பிட்டு முடித்தால், அந்த ஆண்டின் 12 மாதங்களும் அதிர்ஷ்டமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்பது மக்களின் ஆழமான நம்பிக்கை. இதனால், கடந்த புத்தாண்டு இரவில் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மேஜைக்கு அடியில் அமர்ந்து திராட்சை சாப்பிடும் வீடியோக்களைப் பகிர்ந்து, இந்தச் சடங்கை ஒரு சர்வதேச 'டிரெண்ட்' ஆக மாற்றினர். இந்த வினோதமான கலாசாரம் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில், புத்தாண்டு இரவில் திராட்சை பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நள்ளிரவு நெருங்கும் வேளையில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் திராட்சை வாங்கக் கடைகளில் குவிந்தனர். ஒரு குறிப்பிட்ட பழக்கடையில் மட்டும் சுமார் 200 முதல் 300 வாடிக்கையாளர்கள் திராட்சை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாகக் கடைக்காரர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் டெலிவரி தளங்களிலும் சில நிமிடங்களிலேயே திராட்சை இருப்பு தீர்ந்துபோனது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்தச் சடங்கின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவலும் உண்டு. 1900-களின் தொடக்கத்தில் ஸ்பெயினில் திராட்சை விளைச்சல் மிக அதிகமாக இருந்தபோது, தேங்கிப்போன பழங்களை விற்பனை செய்வதற்காகப் புத்திசாலி விவசாயிகள் உருவாக்கிய ஒரு 'மார்க்கெட்டிங் தந்திரம்' தான் இது என்றும் சொல்லப்படுகிறது. View this post on Instagram A post shared by anamika~ (@anam.lmao) அன்று லாபத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம், இன்று பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாகவும், ஒரு ஜாலியான சடங்காகவும் மாறியிருப்பது வியப்பிற்குரியது. இருப்பினும், இந்தச் சடங்கைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மிகக்குறுகிய நேரத்தில், அதாவது 12 வினாடிகளில் 12 திராட்சைகளை அவசரமாக விழுங்க முயற்சிக்கும்போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. ரெடியா இருங்க மக்களே.. தேதி இதுதான்!
ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
எம்.ஜி.ஆர். பெயர் நீக்கமா? மமதையின் உச்சத்தில் ஸ்டாலின்.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். பெயரை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
Karthikeyan Manickam named Chairman at ESAF Small Finance Bank
Thrissur: ESAF Small Finance Bank has announced the appointment of Karthikeyan Manickam as the Chairman of the Bank, marking a significant addition to its leadership at a time of continued focus on inclusive growth and governance excellence. A former Executive Director of Bank of India, Shri Manickam brings with him over 36 years of extensive experience in public sector banking.Karthikeyan is widely recognised for his deep domain expertise across banking operations, risk management, regulatory compliance, human resources, credit monitoring and recovery, financial inclusion, and customer-centric banking. His appointment is expected to further strengthen ESAF Bank’s corporate governance framework, enhance strategic oversight, and reinforce long-term institutional resilience, while supporting the Bank’s commitment to delivering superior customer service.In his role as Chairman, Karthikeyan will provide independent oversight and strategic guidance to the Board, supporting the Bank’s priorities around inclusive banking, asset quality improvement, regulatory adherence, sustainable growth, and high standards of service delivery. His leadership is expected to bolster stakeholder confidence in an increasingly dynamic and competitive financial environment.During his tenure as Executive Director at Bank of India, Karthikeyan was part of the top management team and played a key role in shaping policies and strategies across multiple portfolios, including risk management, inspection and audit, stressed asset resolution, retail banking, agriculture and MSME financing, government business, CSR, marketing, and financial inclusion.Earlier in his career, he held several senior leadership roles at Indian Bank. He has also served on the boards of Tamil Nadu Grama Bank and BOI STAR Investment Managers Pvt. Ltd., and was Chairman of Star Union Dai-ichi Life Insurance Company Limited (SUD Life).
Maruti Suzuki Achieves Record Production, Highest Sales
Maruti Suzuki India Limited achieved its highest-ever annual production in 2025, producing over 22.55 lakh vehicles. This is the second
தொழில் தொடங்க பணம் இல்லையா? அரசே கொடுக்கும் ஒரு கோடி.. உங்களுக்கும் வேண்டுமா?
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கலாம்.
Venus Williams Receives Wild Card for Australian Open
Seven-time Grand Slam singles champion Venus Williams has been given a wild card entry for the 2026 Australian Open, which
சித்தப்பாவுடன் தொடர்பு... கணவனைக் கொலைசெய்த மனைவி கைது - கோவையில் `பகீர்!'
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவா என்கிற ரதீஷ் (27). ரதீஷ் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் இந்திராணி (26) என்கிற பெண்ணுக்கும் சமூகவலைதளத்தில் பழக்கமாகி, காதல் திருமணம் செய்து கொண்டனர். ரதீஷ் இந்த தம்பதிக்கு 3 வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே கடந்த சில வாரங்களாக ரதீஷைக் காணவில்லை என்ற அவரின் தாயார் சுசீலா கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் ரதீஷின் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வந்து சென்றது கண்டறியப்பட்டது. இதனிடையே இந்திராணி காவல்துறையில் சரணடைந்து காவல்துறையிடம் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினோத் ``எனக்கும், கரூரில் பணியாற்றி வரும் என் சித்தப்பா வினோத்துக்கும் (35) பழக்கம் ஏற்பட்டது. இதற்கு ரதீஷ் தொந்தரவாக இருந்தார். எங்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. ரதீஷை தீர்த்துகட்ட முடிவு செய்தோம். இதற்காக வினோத் தன் நண்பர்கள் சுரேஷ் மற்றும் பாபு ஆகியோரை அழைத்து வந்தார். எங்கள் வீட்டில் வைத்து ரதீஷை கொலைசெய்து, பாபுவின் ஆம்புலன்ஸ் மூலம் உடலை கரூர் ரயில்வே தண்டவாளம் அருகே போட்டுவிட்டோம். ரதீஷ் ரயில் மோதி உயிரிழந்தது போல காட்ட திட்டமிட்டோம். அதற்குள் காவல்துறையினர் கண்டறிந்துவிட்டனர் என்றார். காவல்துறையினர் இந்திராணி, வினோத், சுரேஷ், பாபு ஆகிய 4 பேரைக் கைதுசெய்தனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது . தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார். நாக தீப விகாராதிபதி தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று , தையிட்டி விகாரைக்காக […]
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பழைய பென்சன் திட்டத்தில் முதல்வர் முக்கிய முடிவு!
பழைய பென்சன் திட்டம் குறித்த மிக முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு நாளை வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்.. வீட்டின் பூட்டை உடைக்காமலேயே கொள்ளை - சிக்கிய கோவை திருடன்!
கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஐயப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபா மார்டின். இவர் கடந்த வாரம் ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. திருடப்பட்ட நகை இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில் கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 பவுன் நகை, கொத்து சாவிகள், ரம்பம், குரடு, ராடு போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “வீட்டின் பூட்டு உடைக்கப்படாததால் முதலில் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தினோம். அதில் அவர்கள் ஈடுபடவில்லை என்று தெரியவந்தது. இதே பாணியில் குனியமுத்தூரில் கடந்த 2024-ம் ஆண்டு இரண்டு வழக்குகள் பதிவாகி கண்டறிய முடியவில்லை. கிருஷ்ணமூர்த்தி பழைய வழக்குகள், மற்றும் இந்த வழக்கின் சிசிடிவி அடிப்படையில் தான் கிருஷ்ணமுர்த்தியை கைது செய்தோம். அவர் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் கடந்த 1993-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர். கடந்த 2023-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் நகை கொள்ளையடித்து கைது செய்யப்பட்டுள்ளார். பொருள்கள் இவர் கையில் கொத்தாக பல்வேறு சாவிகளை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளில் ஒவ்வொரு சாவியாக திறந்து பார்த்து, ஆயுதங்களை வைத்து உடைக்காமல் திறந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.
Prasar Bharati Allocates MPEG-4 DD Free Dish Slots to Regional Channels in 93rd Allotment Round
New Delhi: Public broadcaster Prasar Bharati has announced the list of television channels selected under its 93rd allotment cycle for MPEG-4 slots on DD Free Dish, extending carriage to a range of regional language broadcasters on a pilot basis until March 31, 2026.The move follows Prasar Bharati’s decision to open up free MPEG-4 capacity on the free-to-air platform to address gaps in regional representation and improve visibility for channels operating in under-served linguistic markets. The pilot programme prioritises regional news and public-interest content, with eligibility linked to operational track record and programming credentials.According to the published allotment list, Kannada channels TV9 Kannada and Public TV have secured slots, alongside Malayalam broadcaster Mazhavil Manorama. Bengali language channels feature prominently, with ABP Ananda, R Bangla, TV9 Bangla, R Plus Gold, Kolkata TV, R Plus, Enterr 10 Bangla and Khushboo Bangla included in the successful bidders.The allotment also covers Odia channel Kanak News, Marathi broadcasters ABP Majha and 9X Jhakaas, Gujarati news channels ABP Asmita and Gujarat First, and News State Punjab-Haryana-Himachal representing the Punjabi language segment.Prasar Bharati had earlier clarified that the pilot-phase allotment is designed to strengthen linguistic diversity on DD Free Dish, particularly by enabling greater access for regional news channels that meet defined content and compliance norms. The current allocation will remain valid through the end of the financial year 2025-26, after which the initiative is expected to be reviewed.The latest round underscores DD Free Dish’s role as a key distribution platform for regional broadcasters seeking nationwide reach without carriage fees, even as Prasar Bharati continues to recalibrate the platform’s channel mix to reflect India’s evolving media consumption landscape.
தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி
நயினாதீவு விகாரை விகாராதிபதி தலைமையிலான பிக்குகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடினர். இதனொரு கட்டமாக தையிட்டிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாரதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரை ஏற்கனவே இருந்த காணியையும் பார்வையிட்டுச் சென்றனர்.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜேஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இவாடே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த மாகாணத்தின் ஸமியாகோ நகருக்கு அருகே கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது என்று அந்த மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஹொன்ஷு தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் […]
ஜோதிமணி குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது –செல்வப்பெருந்தகை ரியாக்சன்!
சென்னை : கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நடக்கும் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். “தமிழ்நாடு காங்கிரஸில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது. இதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.“எந்த அரசியல் கட்சியும் தனது நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில் […]
Cricket Fans Excited for T20 World Cup 2026
The final squads for the T20 World Cup 2026 are being confirmed as teams prepare for next month’s tournament. India,
Arsenal Extend Lead After Goalless Draws
Erling Haaland and Manchester City were held to a goalless draw by Sunderland on Thursday, a result that left Arsenal
'சோத்தைத் திங்கிரியா..!' - சுசீந்திரம் தேரோட்டத்தில் டென்ஷனாகிய சேகர் பாபு! - என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலைய சுவாமி திரும்கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைக்க இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்.பி விஜய்வசந்த் உள்ளிட்டோர் வந்திருந்தனர். தேரோட்டம் நிகழ்ச்சியின்போது அமைச்சர் சேகர் பாபுவை நோக்கி பக்தர்கள் கோஷம் எழுப்பினர். அதில் சிலர், 'பாரத்மாதாகீ ஜெய்' என்றும், 'வீரசிவாஜீக்கு ஜெய், வீரசவார்க்கருக்கு ஜெய்' எனவும் கோஷம் எழுப்பினர். சிலர் 'அல்லோலியா பாபு' என கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் டென்சனான அமைச்சர் சேகர் பாபு, சோத்தைத் திங்கிரியா இல்லை... திங்கிறியா எனக் கேட்டு கொந்தளித்தார். மேலும், 'ஆம்பளையாக இருந்தால் இங்க வந்து சொல்' என்றதுடன், கோஷமிட்டவர்களிடம் மேலும் சில வார்த்தைகளைப் பேசி ஆவேசமானார் சேகர்பாபு. கோஷம் எழுப்பியவர்கள் அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் சேகர் பாபு அங்கிருந்து சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, இறையன்பர்களின் வசதிக்காக எண்ணற்ற பல நலத்திட்டங்களை இந்துசமய அறநிலையத்துறை செய்துவருகின்ற பல காலங்களில் சிறந்த காலமாக இந்த ஆட்சியினுடைய காலத்தை எடுத்துக்கொள்ளலாம். எங்களின் இறைப்பணி தொடரும். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு இறைவனை வழிபடுகின்ற நேரத்தில் பிரிவினைகள் வேண்டாம். இறைவழிபாடில் தகாத கோஷங்கள் எழுப்ப வேண்டாம். இறைவழிபாட்டை அமைதியான முறையில் கடைபிடியுங்கள் என்று, தேவையற்ற கோஷங்களை எழுப்பிய நண்பர்களுக்கு என்னுடைய வேண்டுகோளாக கூறுகிறேன். துறை சார்ந்த அமைச்சர் என்பதால் இதை அவர்களுக்கு கனிவுடன் வேண்டுகோளாக வைக்கின்றேன் என்றார்.
தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி
நயினாதீவு விகாரை விகாராதிபதி தலைமையிலான பிக்குகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடினர். இதனொரு கட்டமாக தையிட்டிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாரதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரை ஏற்கனவே இருந்த காணியையும் பார்வையிட்டுச் சென்றனர்.
M3M Appoints Nitin Singh as Head of Marketing
Mumbai: Real estate major M3M has strengthened its leadership team with the appointment of Nitin Singh as Head of Marketing, as the group sharpens its focus on brand building and integrated marketing strategies.Singh brings with him over 16 years of experience across marketing, digital transformation, and brand communications, having worked across a wide spectrum of industries including FMCG, BFSI, education, technology, consumer electronics, luxury, and lifestyle brands.Prior to joining M3M, Singh was Head of Marketing Communications at SUSHMA Group. Before that, he led marketing at Absolute Nutrition, where he played a key role in driving brand visibility and consumer engagement. His corporate experience also includes a stint as General Manager – Marketing at Franklin Aviation Services.A significant part of Singh’s career has been rooted in advertising. He spent six years with DDB Mudra Group, where he handled large-scale client mandates and eventually served as National Client Servicing and Media Head. During this phase, he worked closely with marquee brands and developed expertise in integrated communication planning.At M3M, Singh will be responsible for overseeing the company’s marketing and communication initiatives, with a focus on strengthening brand equity, accelerating digital outreach, and supporting the group’s growth ambitions in India’s competitive real estate market.
Taiwan Vows to Defend Sovereignty Amid Tensions
Taiwan President Lai Ching-te has said that the island is determined to protect its sovereignty and strengthen its defence as
தனக்குப் போட்டியாக வந்த சொந்தக் கட்சி வேட்பாளர்; வேட்பு மனுவைக் கிழித்துத் தின்ற சிவசேனா வேட்பாளர்
புனே மாநகராட்சிக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது சிவசேனா சார்பாக 36ஏ வார்டில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த உத்தவ் காம்ப்ளே வந்திருந்தார். அங்கு வந்து பார்த்தபோது ஏற்கனவே அதே சிவசேனாவைச் சேர்ந்த மச்சேந்திர தேவாலேயும் சிவசேனா சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர்கள் இரண்டு பேருமே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்பதற்கான கடிதத்தை தங்களது வேட்பு மனுவோடு சேர்த்து தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையின்போது இது தெரிய வந்தது. இரண்டு பேரில் யாரோ ஒருவர் போலி கட்சி கடிதத்தை வேட்பு மனுவில் இணைத்திருந்தார். பூஜா மோரே தேர்தல் அதிகாரிகளிடமிருந்து மச்சேந்திர தேவாலேயின் வேட்பு மனு ஆவணங்களை வாங்கி உத்தவ் காம்ப்ளே பார்த்துக்கொண்டிருந்தார். அந்நேரம் யாரும் எதிர்பாராத வகையில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மச்சேந்திராவின் வேட்பு மனுவில் இருந்த சிவசேனா வேட்பாளர் என்பதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தைச் சுக்குநூறாகக் கிழித்து எறிந்தார் காம்ப்ளே. கிழித்து வாயில் போட்ட வேட்பாளர் அவரது செயலைப் பார்த்த தேர்தல் அதிகாரிகள் ஆடிப்போனார்கள். கிழித்த ஆவணத்தை அப்படியே வாயில் போட்டுவிட்டார். அதோடு நேராக பாத்ரூம் சென்றுவந்தார். அவர் பாத்ரூம்பில் துப்பினாரா அல்லது விழுங்கினாரா என்று தெரியவில்லை. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இப்புகாரை காம்ப்ளே மறுத்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், ''நான் வேட்பு மனுவைச் சாப்பிடவில்லை. எங்களது கட்சியில் யாரோ இதே வார்டில் போட்டியிடுவதாகக் கேள்விப்பட்டேன். தேவாலே என்ற பெயரை எனக்குத் தெரியாது. எங்கள் கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது. நான் சாப்பிட்டதாகச் சொல்கிறார்கள் என்றால் என்னை மருத்துவப் பரிசோதனை செய்யட்டும். வேட்பு மனு எனது வயிற்றில் இருந்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்'' என்றார். தேவாலேயிடம் ஏற்கனவே தாக்கல் செய்த வேட்பு மனுவின் நகலைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா: கர்ப்ப பரிசோதனைக்கு கட்டாயப்படுத்தப்படும் மாணவிகள்; அரசு பழங்குடி விடுதிகளில் அதிர்ச்சி பழைய வைரல் வீடியோவால் வேட்பாளர் பதவி பறிப்பு புனேயில் 2வது வார்டு சார்பாக பூஜாமோரே என்பவர் பா.ஜ.க சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் பூஜாமோரே கலந்து கொண்ட பழைய வீடியோ ஒன்று புதிதாக சோசியல் மீடியாவில் வைரலானது. அதில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது மனைவி குறித்து தனிப்பட்ட முறையில் பூஜா விசர்சனம் செய்திருப்பார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இவ்விவகாரம் பா.ஜ.கவின் கவனத்திற்குச் சென்றது. உடனே அவரை கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் இருந்து பா.ஜ.க நீக்கிவிட்டது. இதனை மத்திய அமைச்சர் முரளிதர் உறுதிப்படுத்தி இருக்கிறார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து பூஜா கூறுகையில், ''என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி, பாஜகவின் கொள்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சித்தரிக்க முயன்றனர். ட்ரோலிங்கைக் கருத்தில் கொண்டு, எனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவது என மனப்பூர்வமாக முடிவெடுத்தேன், என்று அவர் கூறினார். எப்போதோ பேசிய பேச்சு இப்போது பூஜாவின் அரசியல் எதிர்காலத்திற்கு வினையாக வந்து அமைந்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்
Tata Consumer Products leads outdoor innovation with immersive campaigns across India
Mumbai: Tata Consumer Products Limited (TCPL) continues to push the boundaries of outdoor advertising in the FMCG sector with a series of immersive, culturally rooted campaigns that blend digital innovation with experiential storytelling across key Indian markets.Reinforcing its focus on creating high-impact brand experiences, TCPL rolled out multiple large-format outdoor and on-ground activations for its flagship beverage brands, transforming public spaces into interactive storytelling platforms.One of the standout initiatives was Tata Tea Premium’s ‘Desh Ke Dhaage’ campaign, which celebrated India’s rich weaving heritage through one of the country’s largest 3D anamorphic installations at DLF CyberHub, Gurugram. The installation fused cutting-edge technology with traditional motifs, honouring iconic Indian handlooms while evoking national pride.During Durga Puja, Tata Tea Gold paid tribute to Bengal’s artistic legacy with visually striking 3D hoardings and festive archways across Kolkata. The installations showcased works by five local artists, turning city streets into vibrant expressions of culture, community, and craftsmanship.In South India, Tata Tea Chakra Gold CARE transformed Chennai Central Railway Station into an immersive wellness experience. Sequential lighting and a bold 3D hand-cup installation symbolised warmth and family protection during the monsoon season. Extending festive engagement, Tata Tea Chakra Gold’s Mysuru Dasara activation featured an interactive 20-foot drum installation, where LED waves responded to audience participation, rewarding engagement in real time.Tata Coffee Gold brought a multi-sensory dimension to outdoor advertising at Select CITYWALK, New Delhi, with a 3D aroma-anamorphic experience that traced the journey from bean to cup. Visitors engaged with AI-generated custom latte art alongside scent diffusion, seamlessly integrating technology into the coffee appreciation ritual.Marking Kerala Foundation Day, Tata Tea Kanan Devan launched the Kerala Piravi Campaign with immersive 3D anamorphic installations and innovative outdoor displays across Trivandrum, Kochi, Thrissur, and Kozhikode. The installations brought alive key elements from the brand film, capturing the unity, rhythm, strength, and heartbeat of Kerala in vivid 3D motion while amplifying regional pride across the state.Collectively, these campaigns underscore Tata Consumer Products’ commitment to reimagining outdoor advertising through innovation, cultural relevance, and experiential design. By creating memorable, high-engagement consumer touchpoints, TCPL continues to strengthen brand presence and set new benchmarks for outdoor storytelling in the FMCG landscape.
ரூ.41,863 கோடி திட்டங்களுக்கு அனுமதி.. மின்னணு துறையில் முன்னேற்றம் காணும் இந்தியா!
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மின்னணு உற்பத்தித் துறையை வளர்ப்பதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் எட்டு மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.
Migrant Boat Capsizes in Gambia, Seven Dead
In Gambia, seven people died after a migrant boat overturned during the night in the northwest of the country. At
தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது -ஜோதிமணி!
சென்னை :கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நடக்கும் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். “தமிழ்நாடு காங்கிரஸில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது. இதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். “எந்த அரசியல் கட்சியும் தனது நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில் […]
ஆப்கனில் தொடர் கனமழையால் 11 மாகாணங்களில் வெள்ளம்! 12 பேர் பலி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்த கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், கடந்த சில நாள்களாக, கனமழை மற்றும் பனிப்பொழிவு பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள அபிசா, பர்வான், டெகுண்டி, உருஸ்கான், காந்தஹார், ஹெல்மண்ட், பட்கிஸ், ஃபர்யாப், படக்ஷான், ஹெராத் மற்றும் ஃபரா ஆகிய மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பேரிடரில் சிக்கி இதுவரை 12 பேர் பலியானதாகவும், 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தானின் […]
New Year Tragedy at Switzerland Ski Resort
About 40 people were killed and 115 others were injured after a powerful explosion and fire broke out at the
4 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 02-01-2026: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கோயம்புத்தூர், தேனி, தென்காசி […]
IPL 2026: ‘திடீர் ட்விஸ்ட்’.. 9 கோடிக்கு வாங்கப்பட்ட வீரருக்கு.. தடை விதித்த நிர்வாகம்: என்ன காரணம்?
ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில், 9.20 கோடிக்கு ஏலம் போன வீரரை, நிர்வாகம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான காரணமும் இருக்கிறது. இவரை வாங்கிய அணியும், அந்த காரணத்தை ஏற்றுக்கொண்டார்களாம்.
நீதிமன்றத்தையே ஏமாற்றிய கும்பல்: கொலை, கொள்ளை, பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் - தரகர்கள் கைது!
உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில், தொழில்முறை `ஜாமீன் தரகர்களாக'ச் செயல்பட்ட ஒரு கும்பலை காவல்துறை கடந்த புதன்கிழமை கைதுசெய்திருக்கிறது. கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற்றுத் தருவதற்காக, போலி நில வருவாய் ஆவணங்கள், போலியான ஆதார் அட்டைகள் மற்றும் போலியான அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெறப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணை குறித்து தெரிவித்த காவல்துறை, ``இந்தக் கும்பல் குறைந்தபட்சம் 23 வழக்குகளில் மோசடியாகப் பிணை பெற்றுத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ராம் கிஷோர் 13 வழக்குகளில் போலியான நில வருவாய் ஆவணங்களை ஏற்பாடு செய்தது தெரியவந்திருக்கிறது. கைது அவரது கூட்டாளிகளான விஸ்வநாத் பாண்டே, பிரவீன் தீட்சித், தர்மேந்திரா மற்றொரு கூட்டாளியான அமித் மூன்று வழக்குகளிலும் ஜாமீன் தாரர்களாக வேலைபார்த்திருக்கிறார்கள். பிரவீன் தீட்சித் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கொலைக் குற்றவாளி. தற்போது உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனில் வெளியே இருந்தார். பிரேம் சங்கர் நீதிமன்ற வளாகத்தில், தொழில்முறை குற்றவாளிகளுக்கு ஜாமீன் தாரர்களையும், போலி ஆவணங்களையும் ஏற்பாடு செய்வதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். நீதிமன்றத்தையே ஏமாற்றி ஜாமீன் பெற்றவர்களில் ஒரு கொலைக் குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் கும்பல் ஒரு வழக்குக்கு சுமார் ரூ.20,000 வரை கட்டணமாக வசூலித்தாகக் கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றது. உத்தரப்பிரதேசம்: இரவானால் மனைவி பாம்பாக மாறி என்னைக் கடிக்கிறார் - வைரலான கணவனின் புகார்
Army Animal Contingent to Debut at R-Day 2026
For the first time, the Indian Army’s animal contingent will take part in the Republic Day Parade in 2026. The
Dense Fog Likely Across North India Today
The India Meteorological Department (IMD) has forecast dense to very dense fog in several parts of north India today. These
Irfan: 13 வருட இடைவெளி, 12 கிலோ எடை குறைப்பு - சீரியலுக்குத் திரும்பிய 'சரவணன் மீனாட்சி'இர்ஃபான்!
ஜி தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கிற 'வாகை சூட வா' சீரியல் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிவிக்குத் திரும்பியிருக்கிறார் நடிகர் இர்ஃபான். 'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் இர்ஃபான். அந்தச் சீரியலில் ஓரளவு அறிமுகம் கிடைத்ததும், தொடர்ந்து 'சரவணன் மீனாட்சி' தொடரில் கமிட் ஆனார். அந்தச் சீரியலின் இரண்டாவது சீசனில் ரச்சிதாவுடன் முதன் முதலில் ஜோடி சேர்ந்தது இவர்தான். இர்ஃபான் - ரச்சிதா காம்பினேஷனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் சினிமா ஆர்வத்தில் டிவியில் இருந்து இவர் ஒதுங்கிய பிறகே, அந்த இடத்துக்கு பிரேம், அவருக்குப் பிறகு ரியோ ஆகியோர் நடித்தனர். இர்ஃபான் சினிமாவில் 'சுண்டாட்டம்' என்ற படத்தில் நடித்தார். வணிக ரீதியாகப் பேசப்படாவிட்டாலும் படம் மோசமில்லை. அதன் பிறகு இயக்குநர் சேரனுக்கு வில்லனாக 'ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் நடித்தார். வில்லன் கேரக்டர் செட் ஆகிறது என மீடியாக்கள் எழுதின. ஆனாலும் அதன் பிறகு சினிமாவில் பார்க்க முடியவில்லை. நடிப்பை விட்டுட்டு சொந்த ஊருக்கே போயிட்டேனா? `சரவணன் மீனாட்சி' இர்ஃபான்|இப்ப என்ன பண்றாங்க பகுதி -1 பிக்பாஸ், குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு சீசனின் போதும் இவருக்கு அழைப்புச் செல்லும். இவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்தச் சூழலில்தான் தற்போது புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார். இது தொடர்பாக இர்ஃபானிடம் பேசினோம். irfan ''சீரியல்ல நடிக்க தொடர்ந்து கேட்டுட்டுதான் இருந்தாங்க. நான்தான் மறுத்து வந்தேன். இந்தக் கதை ரொம்ப பிடிச்சிருந்தது. பெரிய சேனல்ல பிரைம் டைம்ல ஒளிபரப்பாக இருக்கு. இடையில கொஞ்சம் வெயிட் போட்டுட்டதால இந்தச் சீரியலுக்காக 12 கிலோ குறைச்சிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் நான் நடிச்சிட்டிருந்தப்ப பார்த்த ஆடியன்ஸ் சட்டுனு அடையாளம் கண்டுட்டாங்க. புரொமோ வெளியானதும் ஏகப்பட்ட விசாரிப்புகள். 2கே கிட்ஸ்க்குத்தான் நான் கொஞ்சம் புது ஆளா தெரிவேன்னு நினைக்கிறேன். அவங்களை சீரியலுக்குள் இழுத்துட்டா போதும். அது பண்ணிடலாம். மத்தபடி தொடர்ல ஹீரோயினா பவித்ரா நடிக்கிறாங்க. 'சரவணன் மீனாட்சி'யில எனக்கு பாட்டியா நடிச்ச குயிலி மேடம் இதுலயும் பாட்டியாகவே வர்றாங்க. தவிர சீனியர் ஆர்ட்டிஸ்ட் 'மெட்டி ஒலி' காயத்ரி மேடம் நடிக்கிறாங்க. இன்னும் நிறையப் பேர் நடிக்கிறாங்க. ஷூட்டிங் தொடங்கி போயிட்டிருக்கு. இந்த மாதக் கடைசியில ஒளிபரப்பு தொடங்கும்னு நினைக்கிறேன் என்கிறார். பாகுபலி: நான்தான் பிரபாஸ்; ரச்சிதாதான் அனுஷ்கா - 'சரவணன் மீனாட்சி' நினைவுகளைப் பகிர்ந்த ரியோ ராஜ்
PTI appoints Amanpreet Singh as Managing Editor in Newsroom Restructuring Drive
Mumbai: Press Trust of India (PTI) has elevated Amanpreet Singh to the role of Managing Editor, effective January 1, 2026, marking a key move in the news agency’s ongoing efforts to strengthen editorial leadership across its operations.The appointment was communicated to employees by PTI’s Chief Executive Officer and Editor-in-Chief, Vijay Joshi, who said the leadership changes form part of a broader newsroom restructuring that has been under consideration for the past six months. The initiative aims to reinforce oversight across both PTI’s text and photo newsrooms amid a rapidly evolving media environment.Singh joins PTI from Hindustan Times, where he served as Deputy Executive Editor and was responsible for overseeing the daily edition. A recipient of the Ramnath Goenka Award, Singh brings wide-ranging editorial experience spanning macroeconomics, legal affairs, data-led journalism and long-form reporting. He is also trained as a lawyer, adding depth to his editorial portfolio.In his internal communication, Joshi also acknowledged the newsroom’s performance over the past year, noting that PTI continued to deliver accurate, balanced and credible journalism through a challenging 2025.The leadership transition coincides with the upcoming retirement of senior editor Sudhakar Nair, who is set to step down on March 31, 2026, after nearly five decades with the organisation. Joshi described Nair as a central pillar of PTI’s journalism and said he will remain in his role in the interim to ensure a smooth handover and to help Singh familiarise himself with PTI’s editorial processes and organisational culture.Nair began his career at PTI in 1979 as a trainee sub-editor in New Delhi. Over the course of 47 years, he has contributed to thousands of major stories across national and state politics and also served as PTI’s correspondent in Germany between 1998 and 2001.The changes underline PTI’s focus on continuity and leadership depth as it adapts its newsroom structure for the next phase of growth.
2025 in Advertising & Marketing: From Reach to Resonance – A Founder’s Perspective
2025 marked a decisive inflection point for advertising and marketing, especially across digital and OTT platforms, as the industry moved the conversation from sheer scale to genuine substance and cultural relevance. What we witnessed this year was less about chasing eyeballs and more about building meaningful attention that translates to long-term engagement as consumer media habits evolved rapidly.A look at the numbers shows this shift isn’t anecdotal it’s systemic. According to Ipsos report on digital marketing in India, digital advertising alone reached approximately ₹49,000 crore in FY25, commanding a 44% share of the total advertising market. This dominance reflects how brands are increasingly allocating budgets toward digital channels, recognising that audiences spend the majority of their media time online.Globally, digital ad revenue has continued its double-digit growth trend for the 16th consecutive year, again proving the resilience and vitality of digital channels even amid economic uncertainties. eMarketer’s mid-2025 forecast confirmed this continued expansion, signalling that advertisers are not retreating from digital but refining how they engage audiences on these platforms.One of the most transformational changes this year was how content consumption patterns and advertising investments realigned. According to Nielsen’s 2025 Annual Marketing Report, 56% of marketers reported plans to increase spend on OTT/Connected TV (CTV) year-on-year, while almost two-thirds believe that retail media networks will play a growing role in the media mix. These shifts underscore that marketers are no longer treating OTT as a niche channel it has become a core pillar of integrated media strategies.What’s driving these shifts is clear: consumers are increasingly selective in their content choices, favouring relatable, culturally grounded narratives. This trend has reshaped OTT advertising, where hybrid monetisation models combining subscription and ad support are gaining traction globally as platforms explore sustainable growth beyond traditional paywalls. Analysts estimate that global OTT advertising revenues could exceed $400 billion in 2025 a testament to the channel’s expanding influence on brand communications.In this evolving context, 2025 was also the year performance met brand building again. Marketers realised that short-term ROI must coexist with long-term trust building, and this recalibration was visible in emerging best practices: data-led creativity, community-first engagement, and content strategies that prioritise relevance over reach alone. Channels like social video, user-generated content, and creator collaborations increasingly became spaces where narrative depth and authenticity outperformed intrusive advertising. Deloitte’s Digital Media Trends report highlights how platforms are competing for a fixed amount of attention across video, social, gaming, and audio formats meaning brands that offer contextually relevant content are winning the limited attention economy.Looking ahead to 2026, the next phase will be defined by responsible personalisation. AI-driven targeting will continue to unlock precision, but with stronger emphasis on consent, privacy, and transparent data practices. Interactive formats will blur the lines between engagement and commerce, pushing content that is shoppable and actionable without disrupting the user experience. At the same time, cultural awareness not just visibility will become a core brand objective as audiences expect media to reflect their identities and aspirations.Ultimately, the winners in 2026 will be the brands that understand attention as a privilege, not an entitlement designing campaigns that respect how consumers choose to engage, using insights responsibly, and creating value that lasts beyond individual transactions.(Views are personal)

24 C