✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை கடமைகளை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு சிறப்பாக… The post ✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்! appeared first on Global Tamil News .
இன்று முதல் 8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வந்திருச்சா? அரசு ஊழியர்களின் சம்பளம் உயருதா? உண்மை என்ன?
7ஆவது ஊதியக் குழு முடிந்து 8வது ஊதியக் குழு இன்று முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதா? உண்மை என்ன?
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அயலவரை கத்தியால் குத்திய பெண் கைது!
யாழ்ப்பாணம், சுன்னாகம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட தகராறில், அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் நேற்றைய… The post யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அயலவரை கத்தியால் குத்திய பெண் கைது! appeared first on Global Tamil News .
Rishabam 2026 New Year Rasi Palan | ரிஷபம் ஆங்கிலப் புத்தாண்டு பலன் | திருமணம்,தொழில்,கல்வி எப்படி?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் ரிஷபம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு் ரிஷபம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் விளக்குகின்றனர்.
இந்தியாவின் பணக்கார மாநகராட்சி; மும்பையை ஆளப்போவது யார்? - 2516 வேட்பாளர்களுடன் பலமுனை போட்டி!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மற்றொரு சிவசேனா(உத்தவ்) மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சி உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறது. துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி மாநிலம் முழுவதும் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி என்ற கட்சியுடன் கூட்டணி வைத்து 62 வார்டுகளை அக்கட்சிக்கு ஒதுக்கி இருந்தது. ஆனால் வஞ்சித் பகுஜன் அகாடி 16 வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 2516 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பா.ஜ.க கூட்டணியில் கடைசிவரை நீடித்ததால் வேட்பாளர் யார் என்பது கடைசி வரை சஸ்பெண்ஸ்சாக இருந்தது. மனுத்தாக்கலுக்கு கடைசி நாளில் மட்டும் 84 சதவீதம் பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது மனைவிகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதில் தீவிர கவனம் செலுத்தினர். இட ஒதுக்கீடு முறையில் சில வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வார்டுகளில் அரசியல் தலைவர்கள் தங்களது மனைவிகளை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்றனர். பா.ஜ.கவில் தனது மனைவிக்காக சீட் பெற்றுள்ள முன்னாள் கவுன்சிலர் அபிஜித் சாவந்த் இது குறித்து கூறுகையில்,'' எனது மனைவி ஆரம்பத்தில் இருந்தே எனது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். நான் வேறு எங்காவது புதிதாக ஒரு இடத்தில் போட்டியிடுவதை விட, எனது மனைவி எனது வார்டில் போட்டியிடுவதுதான் மிகவும் பொருத்தமானது என்று நான் உணர்ந்தேன்,” என்றும் அவர் தெரிவித்தார். மும்பையில் மட்டும் 43 அரசியல் தலைவர்கள் தங்களது மனைவி, மகன், மருமகள், வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி இருக்கின்றனர். பாஜக எம்.எல்.ஏ ராகுல் நர்வேகர், காங்கிரஸ் எம்.எல்.ஏ அஸ்லாம் ஷேக் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ நவாப் மாலிக் ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா மூன்று டிக்கெட்டுகளைப் பெற்ற நிலையில், மற்றவர்கள் தங்கள் உறவினர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றனர். இது தவிர எம்.எல்.ஏ.க்கள் தங்களது பகுதியை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களது தூரத்து உறவினர்களுக்கு சீட் வாங்கிக்கொடுத்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பணக்கார மாநகராட்சியை கைப்பற்றுவது என்பது பா.ஜ.கவின் நீண்ட கால கனவாகும். கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனாவை விட சில வார்டுகள் குறைவாக பெற்றதால் அப்போது பதவியை பிடிக்க முடியவில்லை. எனவே இந்த முறை எப்படியும் மும்பையை பிடித்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் ஏறத்தாழ ரூ.75 ஆயிரம் கோடியாகும். 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த மாநகராட்சியை சிவசேனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் இம்முறை சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 90 வார்டுகளில் தான் போட்டியிடுகிறது. மும்பையை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். உண்மையான போட்டியென்றால் அது உத்தவ் தாக்கரேயிக்கும், ஏக்நாத் ஷிண்டேயிக்கும் தான் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி, மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத்… The post ⛪️மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி! ✨ appeared first on Global Tamil News .
பிரஜின், மீனு குட்டி அவ்ளோ சொல்லியும் புத்தாண்டும் அதுவுமா வேலையை காட்டிய சாண்ட்ரா: என்ன தாயி இது?
குடும்ப வாரத்தின்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிரஜின் மற்றும் மகள் மீனு குட்டி சொன்னதை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் சாண்ட்ரா. புத்தாண்டு அன்றே ஆரம்பித்துவிட்டாரே சேச்சி என்கிறார்கள் பார்வையாளர்கள்.
சென்னை கடற்கரை–எழும்பூர் இடையே கூடுதல் ரயில் பாதை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை நகரின் ரயில் போக்குவரத்தில் முக்கியமான மாற்றமாக, கடற்கரை (Beach) நோக்கி கூடுதல் ரயில் வழித்தடம் பயன்பாட்டிற்கு தயாராகியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2026 அறிவிப்பு… எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது…விஜய்யை சீண்டிய செல்லூர் ராஜு!
சென்னை :மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக கிண்டலடித்தார். “மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. உண்மையான வெளிச்சத்தை எடப்பாடி பழனிசாமிதான் தருவார். களத்தில் பணியாற்றும் எங்களுக்குதான் தெரியும் யாருக்கு யார் போட்டி என்று” என்று கூறினார். விஜய்யின் ரசிகர் செல்வாக்கை மின்மினி பூச்சியோடு ஒப்பிட்டு அவர் பேசினார்.“அமிதாப்பச்சன் வந்தால்கூட கூட்டம் கூடும். நம்மை ஆளக்கூடியவர் யார் என்பதை […]
சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. புத்தாண்டு அதுவுமாக மக்களுக்கு வந்த ஷாக் நியூஸ்!
2026ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சிலிண்டர் விலை பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் சிலிண்டர் விலை இதுதான்.
மேஷம் - புத்தாண்டு பலன்கள் 2026 | Mesham Rasi New Year Rasi Palan | நினைத்தது நடப்பது எப்போது?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் மேஷம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு மேஷம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றனர்.
நெல்லை, குமரி, விருதுநகரில் மினி டைடல் பூங்கா… தமிழக அரசு வெளியிட்ட டெண்டர்!
தமிழகத்தில் புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் மினி டைடல் பூங்கா அமைக்கும் பணிகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் மூன்று மாவட்டங்களில் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
கனிமொழியைத் தவிர்த்த பாலாஜி டு அப்செட்டில் நயினார்! | கழுகார் அப்டேட்ஸ்
குஷியில் தென்மாவட்ட சீனியர்கள்! பொடிவைத்த ஆர்.பி.உதயகுமார்... அ.தி.மு.க- விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தையும் டி.டி.வி தினகரனையும், ‘கூட்டணியில்கூட இணைத்துக்கொள்ள மாட்டேன்’ என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சொல்லிவந்தார். பியூஷ் கோயல் உடனான சந்திப்புக்குப் பிறகு, அவருடைய நிலைப்பாட்டில் மாற்றம் தென்பட்டிருக்கிறது. ஆனால், ‘எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலுள்ள அ.தி.மு.க-வில் சேரவே மாட்டோம்’ என்று தினகரனும் பன்னீரும் கூறிவருகிறார்கள். இப்படியான சூழலில், ‘இணைப்பு சாத்தியமில்லை என்றால், வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குப் பெரும் சவாலாக தென்மாவட்டங்கள் அமைந்துவிடும்’ என்று அச்சப்படுகிறார்கள் தென்மாவட்ட இலைக்கட்சி சீனியர்கள். ஆர்.பி. உதயகுமார் இந்தநிலையில்தான், ‘தி.மு.க-வை வீழ்த்த நினைக்கும் அனைவரும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று வரவேண்டும். இந்த அழைப்பு தேவையானவர்களுக்குப் புரியும்...’ என்று கூறியிருக்கிறார் எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். அவர் இப்படி பொடிவைத்துப் பேசியதன் பின்னணியில், ‘விரைவிலேயே இணைப்போ அல்லது கூட்டணியோ நிகழப்போகிறது...’ என்று குஷியாகியிருக்கிறார்கள் தென்மாவட்ட சீனியர்கள். ஆனாலும், ‘எடப்பாடிக்கு தெரிந்துதான் உதயகுமார் இப்படி சொன்னாரா... இல்லை, தெரியாமல் சொன்னாரா...’ என்ற விவாதமும் கட்சிக்குள் சூடாகியிருக்கிறது! பாராட்டிய தி.மு.க தலைமை! கனிமொழியைத் தவிர்த்த பாலாஜி... திருப்பூரில் நடந்த தி.மு.க மகளிர் மாநாடு, எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடந்து முடிந்திருப்பதால், தலைமை ரொம்பவே ஹேப்பியாக இருக்கிறதாம். குறிப்பாக, பாலாஜி செய்த மற்றொரு சம்பவம்தான் தலைமையின் மகிழ்ச்சிக்குக் காரணமாம். அதாவது, “மாநாட்டு மேடையிலும், முகப்பிலும் மட்டும் கனிமொழியின் படத்தை வைத்துவிட்டு, மாநாடு திடல் முழுக்க முதல்வர் ஸ்டாலினின் படத்தையும் உதயநிதியின் படத்தையுமே இடம்பெற வைத்திருக்கிறார் பாலாஜி. கனிமொழி அவர்களுக்கு இணையாக கனிமொழியின் படத்தையும் போட்டால், கனிமொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததுபோல் ஆகிவிடும். அதனால், தலைமையின் சங்கடத்துக்கு ஆளாக வேண்டாம் என்று யோசித்து, கனிமொழியின் படத்தை தவிர்த்து ஸ்கோர் செய்திருக்கிறார். ‘நாம் சொல்லாமலேயே நமது எண்ணத்தை பாலாஜி புரிந்துகொண்டுவிட்டாரே...’ என்று, தலைமையும் உற்சாகமாகி அவரை ஏகத்துக்கும் பாராட்டிவிட்டுச் சென்றிருக்கிறது” என்கிறார்கள் கரூர் விவரப் புள்ளிகள்! விலகும் எண்ணத்தில் மா.செ! நெருங்க முடியாத தலைமை... சமீபத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்வு ஒன்றுக்காக, கடைகோடி மாவட்டத்துக்கு விசிட் அடித்தார் சிறுத்தை கட்சித் தலைவர். அவர் வரும் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அந்தப் பகுதியிலுள்ள மூன்று மாவட்டச் செயலாளர்களில் ஒருவர், தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகள், தங்குமிடம், உணவு உபசரிப்பு என்று அட்வான்ஸாக சில லட்டுகளைச் செலவழித்திருக்கிறார். ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், சக மாவட்டப் புள்ளிகளும், சிறுத்தை தலைவரின் அருகிலேயே அந்த மாவட்டச் செயலாளரை நெருங்கவிடவில்லையாம். தலைவரும்கூட அது குறித்து கவலைப்படவில்லையாம். “பட்டியல் சமூகத்தினர் அல்லாதோருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கிவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள். மிஸ்டர் கழுகு: அதிர்ச்சி ஆடியோ... கொதித்த குடும்பம்... ‘டபுள் கேம்’ டெல்லி காங்.! ஆனால், பட்டியல் சமூகத்தினர் அல்லாத நிர்வாகிகளால், தலைவரைச் சந்திக்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு சக மாவட்டப் புள்ளிகள் அராஜகம் செய்கிறார்கள். கடைக்கோடி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த விவகாரத்தில், அப்செட்டாகியிருக்கும் அந்த மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்து விலகும் மனநிலைக்கு வந்துவிட்டார்” என்கின்றன சிறுத்தை கட்சி வட்டாரங்கள்! அப்செட்டில் நயினார்! காலை வாரிய நிர்வாகிகள்... பா.ஜ.க மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன், ‘தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், நீலகிரி மாவட்டத்துக்குச் சென்ற அவர், குன்னூரில் கிடைத்த வரவேற்பில் பூரித்துப்போயிருக்கிறார். ஆனால், அதை முடித்துவிட்டு ஊட்டிக்கு சென்ற அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஊட்டியில் கான்வாயை மறித்து கருப்புக்கொடி காட்டிய அண்ணாமலை ஆதரவாளரின் செயல், பேசத் தொடங்கியதும் மைக் சொதப்பல், பிரசார வாகனத்தில் நின்று ஓயாமல் எடப்பாடி புகழ்பாடிய அ.தி.மு.க நிர்வாகிகள் என்று, அடுத்தடுத்து நிகழ்ச்சி சொதப்பவும், கடுப்பாகிவிட்டாராம் நயினார். அதேசமயம், சொல்லிக்கொள்ளும் அளவுக்குகூட கூட்டத்தைக் கூட்டாமல் ஊட்டி பா.ஜ.க நிர்வாகிகளும் சொதப்பிவிட்டார்களாம். “லேட்டாக என்ட்ரி கொடுத்த அண்ணாமலை, கூடியிருந்த சொச்சக் கூட்டத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டார். நன்றியுரை போல கடைசியாக நாலு வார்த்தைகளை நயினார் பேச தொடங்கியதுமே, கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது. அப்செட்டான நயினார், ஊட்டி நிர்வாகிகளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்! கிடுக்கிப்பிடி சி.பி.ஐ! சிக்கிக்கொண்ட காக்கிகள்... கரூர் துயரச் சம்பவத்தை விசாரித்து வரும் சி.பி.ஐ., கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளையும்... த.வெ.க நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மதியழகன் ஆகியோரையும் டெல்லிக்கு அழைத்து விசாரித்து வருகிறது. கடந்த டிச.29-ம் தேதி நடந்த விசாரணையில், ‘விஜய் எப்போது சம்பவ இடத்துக்கு வந்தார். அதற்கு முன்னதாக என்ன மாதிரியான சூழல் சம்பவ இடத்தில் நிலவியது..?’ என்று சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். கரூர் விஜய் கூட்டம் அதற்கு, ‘இரவு ஏழு மணியளவில் வேலுசாமிபுரத்திற்கு விஜய் வந்துசேர்ந்தார். அதற்கு முன்னதாகவே கூட்டம் கூடிவிட்டது. மாலை 6 மணிக்கெல்லாம் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது...’ என்று பதிலளித்தார்களாம் காவல்துறை அதிகாரிகள். உடனே, ‘ஆறு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காத அளவுக்குக் கூட்டம் கூடிவிட்டது என்றால், பிறகு எதற்காக விஜய்யைக் கூட்டம் நடத்தும் இடத்திற்கு வர அனுமதித்தீர்கள்... நடுவழியிலேயே தடுத்துத் திரும்பிபோகச் சொல்லியிருக்கலாமே...’ என்று கிடுக்கிப்பிடி கேள்வியைக் கேட்டதாம் சி.பி.ஐ. தமிழகக் காவல்துறையினரிடமிருந்து ஏழு மணிக்கு முன்னதாக த.வெ.க நிர்வாகிகளுக்கு அழைப்பு ஏதும் சென்றதா என்று விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறதாம் சி.பி.ஐ.!
ஆண்டவன் மேல பாரத்த போட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான்: ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தலைவர் சோஷியல் மீடியாவில் நடப்பதை கவனிக்கிறாரே என்கிறார்கள்.
வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்…புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை :சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு முன்பு 2026 ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி அதிகாலை முதலே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்த ரசிகர்களின் உற்சாகத்தை அறிந்த ரஜினிகாந்த் வெளியே வந்து அவர்களைச் சந்தித்தார். கையசைத்து வாழ்த்து பெற்றுக்கொண்ட அவர், ரசிகர்களுக்கு உருக்கமான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரசிகர்கள் முன்பு கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த், 2026 புத்தாண்டு தின வாழ்த்துகளை மனமுருகத் தெரிவித்தார். ரசிகர்களின் ஆரவாரமும் உற்சாக கோஷங்களும் இல்லத்தைச் […]
உலகப் புகழ் பெற்ற நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து ; வெளியான காரணம்
தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உலகப் புகழ் பெற்ற முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட சதித்திட்டத்தை எப்.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் முறியடித்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், உலக நாடுகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல்கள் கடந்த காலங்களில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தற்போது எழுந்துள்ள தீவிரவாத அச்சுறுத்தல் […]
Gold Rate: ரூ.1 லட்சத்திற்கு கீழிறங்கிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 ஆகவும், பவுனுக்கு ரூ.320 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,440 ஆகும். Rewind 2025: ஒரே ஆண்டில் தங்கம் ரூ.47,000, வெள்ளி ரூ.183 உயர்வு - கடந்து வந்த பாதை தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,520 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.256 -க்கு விற்பனை ஆகி வருகிறது. உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!
ஆண்டின் முதல் நாளிலேயே ஷாக்! சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு!
சென்னை : வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (ஜனவரி 1, 2026) ரூ.110 உயர்ந்துள்ளது. 2026 ஆண்டின் முதல் நாளிலேயே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போதைய உயர்வு வணிகர்களுக்கு திடீர் அதிர்ச்சியை […]
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சமாக 10,000 ரூபாயைக் கோரி, அதனை வேறொருவர் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயன்ற போதே குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பொலிஸ் நிலையத்தினுள் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
திருகோணமலையில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெஹிவத்தை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களும் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானர்கள் . அதன் போது அப்பகுதியை சேர்ந்த எம், ஏ. சாமிக்க அசான் (வயது 21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இரு இளைஞர்களுடன் படுகாயமடைந்த நிலையில் , மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12 மாதங்களில் 114 துப்பாக்கி சூடு ; 60 பேர் படுகொலை
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில் பெரும்பாலானவை பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன?
இன்று - 2026-ம் ஆண்டின் முதல் நாளில் இருந்து சில நடைமுறைகள் மாறுகின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். 1. பான் - ஆதார் இணைப்பு நேற்று பான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி. இன்னமும், இந்த இரண்டையும் இணைக்கவில்லை என்றால், பான் கார்டு செல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதனால், வங்கி பரிவர்த்தனை தொடங்கி வருமான வரிக் கணக்குத் தாக்கல், வருமான வரி ரீஃபண்ட் அனைத்திலும் சிக்கல் ஏற்படலாம். ஆதார் - பான் கார்டு இணைப்பு மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026! 2. 8வது ஊதியக் குழு இன்றிலிருந்து 8வது ஊதியக் குழு அமலுக்கு வருகிறது. இதனால் மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு சம்பளம், பென்சன் தொகை மாறும். 3. கிரெடிட் ஸ்கோர் இதுவரை கிரெடிட் ஸ்கோர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இனி ஒவ்வொரு வாரமும் அப்டேட் செய்யப்பட உள்ளது. இதனால், இ.எம்.ஐ-யை மிஸ் செய்தாலோ, கடன் திரும்ப கட்டாவிட்டாலோ, உங்களது கிரெடிட் ஸ்கோரில் சீக்கிரம் பிரதிபலிக்கும். 4. கேஸ் சிலிண்டர் இன்று முதல் வீட்டுப் பயன்பாடு மற்றும் கமர்ஷியல் பயன்பாடு LPG சிலிண்டர்களின் விலை மாற உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். 5. புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவம் இந்த மாதம் முதல் புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த வருமான வரி படிவத்தில் ஏற்கெனவே வங்கி பரிவர்த்தனைகள், செலவுகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால், அதை நிரப்புவது மிகவும் எளிதாகும். உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!
2026இல் விமானப்படையை வலுப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம்
சிறிலங்கா விமானப்படை 2026 ஆம் ஆண்டில் விமானங்களில் பாரிய மேம்படுத்தல்கள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவிமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் நளின் வெவகும்புர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில்அமெரிக்கா பத்து TH-57 சீ ரேஞ்சர் (பெல் 206) உலங்குவானூர்திகளைஅமெரிக்கா கொடையாக வழங்கவுள்ளது. மேலதிகமாக, அமெரிக்கா இந்த ஆண்டிலும்,அவுஸ்ரேலியா 2027 ஆம் ஆண்டிலும், சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு C-130 போக்குவரத்து விமானங்களை வழங்கவுள்ளன. இவற்றைப் பொறுப்பேற்பதற்கான
இந்தியா –பாகிஸ்தான் சண்டையில் மத்தியஸ்தம்! அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா அறிவிப்பு!
சீனா மத்தியஸ்தம்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையை, வர்த்தகத்தை முன்வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை […]
கடலுக்கு செல்ல வேண்டாம் ; திருகோணமலை கடற்கரையில் சிவப்புக் கொடி எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பால் திருகோணமலை கடற்கரை மூடப்பட்டுள்ளது என்பதை எச்சரிக்கும் விதமாக இன்று சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. கடல் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் இவ்வாறு சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், இவ்வாறான தாக்கங்களை செலுத்தியுள்ளது. இன்று மாலை நேரம் திருகோணமலையில் மப்பும் மந்தாரமான காலநிலை நிலவியமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தீபங்கள் ஏற்றி ஆங்கிலப் புத்தாண்டு வரவேற்பு
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமனம்?
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எட்டுப்பேர் அடங்கிய தேசிய காவல்துறை ஆணைக்குழுவில், இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வெற்றிடங்களில் ஒன்றுக்கு, முன்னாள், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும், முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளருமான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியை நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க,
அவசரகாலச் சட்ட நீடிப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கரிசனை புறக்கணிப்பு
அவசரகாலச் சட்ட பிரகடனத்தில் திருத்தம் செய்யுமாறு தாங்கள் முன்மொழிந்த விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில், முன்னர் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டவிதிகளில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், உறுப்பினருமான, சட்டவாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவ, தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டத்தில் முறையற்ற குறிப்பு -பிரதமர் ஹரிணி பதவி விலக கோரிக்கை
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாகவே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற குறிப்புகள் பள்ளி மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும். பொருத்தமற்ற விடயங்களைப்
புத்தாண்டில் தமிழினம் தாண்ட வேண்டிய சவால்கள்
2009 ஆம் ஆண்டு மே மாதம் பேரூழியில் சிக்கிய ஈழத் தமிழினம், இப்போது மிகப்பெரிய, அபாயத்தில் சிக்கியிருக்கிறது. போருக்குப் பின்னரான காலகட்டத்தில், தமிழ் இனத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றவர்கள், அதனை சரியாக கையாளாமல் போனதால், அரசியல் போராட்டத்திற்காக இடப்பட்ட அத்திவாரம், ஆட்டம் கண்டது. அதன் மீது, கட்டி எழுப்பப்பட்ட கோட்டை இப்போது தகர்ந்து போய் கிடக்கிறது. தூர நோக்கற்ற அரசியல்
சென்னையில் குப்பை மேடாக காட்சி அளிக்கும் கோவளம் கடற்கரை!
சென்னையில் கோவளம் கடற்கரை குப்பை மேடாக காட்சி அளித்து வருகிறது. இதனால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். விரைவில் இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் எப்போது முடிக்கப்படும்?
திருச்சி மாநகராட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் எப்போது முடிக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்தை ஓரங்கட்டிவிட்டு, மாற்றாக இளம் பேட்டரை சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். அதற்கான காரணம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பந்த்தான் இதற்கு காரணம்!
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் : 5 ம் படை வீடு... ஆங்கிலப் புத்தாண்டு அன்று களைகட்டும் படிபூஜை!
முருகப்பெருமான் வள்ளலாகத் தன்னை நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வாரிவாரி வழங்கும் ஆறு தலங்களே அறுபடைவீடுகள் என்று போற்றப்ப்டுகின்றன. அவற்றுள் திருத்தணி 5 - ம் படை வீடு. சூரபத்மனை போரில் வென்றபின் இங்கு வந்து அமர சினம் தணிந்தது என்பதால் இதனைத் திருத்தணி என்று அழைக்கின்றன ஞான நூல்கள். சினம் தணிந்து வள்ளியோடு இங்கு வந்து அமர்ந்ததால் திருத்தணிகையில் சூரசம்ஹார விழா நடப்பதில்லை என்பது கூடுதல் தகவல். அன்றைய தினம் இத்தல முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மட்டுமே நடைபெறுகிறது. இங்கு மூலவராகத் திகழும் சுப்ரமணிய சுவாமியின் திருமார்பில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. இது சூரபத்மனோடு போர் செய்தபோது ஏற்பட்டது என்கிறார்கள். ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் உள்ளது. முருகப்பெருமானின் வாகனம் மயில் என்பதை அறிவோம். அதேவேளை சுவாமிமலையிலும் திருத்தணியிலும் யானைதான் முருகப்பெருமானின் வாகனமாக உள்ளது. இந்த யானை வாகனம் சந்நிதியின் வெளிப்புறத்தைப் பார்த்தவாறு உள்ளது. திருத்தணி முருகன் இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் முடித்து தந்தபோது, ஐராவதத்தை சீதனமாக கொடுத்தார். இந்திரலோக ஐஸ்வர்யங்களில் ஒன்று ஐராவதம். இதனால், தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்தது. ஆகவே, ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது. மேலும் திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். மாறாக சக்தி ஹஸ்தம் 9 (இதை வஜ்ரவேல் என்றும் சொல்வார்கள்) எனப்படும் இடி போன்ற ஓர் ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். நோய் தீர்க்கும் சந்தன பிரசாதம் இந்தத் தலத்தில்தான் சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இருந்து சக்கராயுதத்தை மகாவிஷ்ணு முருகப்பெருமானின் துணையோடுமீட்டார் என்கிறது தலபுராணம். இங்குள்ள தீர்த்தம் ஒன்றுக்கு விஷ்ணு தீர்த்தம் என்றே பெயர். பகவான் விஷ்ணுவே இதை உருவாக்கினார் என்பது ஐதிகம். இந்தப் புனித தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானி வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருத்தணியில் முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. எல்லா நாள்களும் இந்த சந்தனப் பிரசாதம் கிடைப்பதில்லை. மாறாக விழாக்காலங்களில் மட்டுமே கிடைக்கும். வள்ளிமலை சுவாமிகள் மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் ஆதி பாலசுப்பிரமணியர் அருள்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளிய மூர்த்தி என்கிறார்கள். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், குழந்தையான குமரனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள். இந்தத் தலத்தில் ஆங்கிலப்புத்தாண்டை மிகவும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருக்கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதற்கு விடையாக அமைகிறது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆண்டின் முதல் நாளில் படிபூஜை வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி முருகனின் தீவிர பக்தர். திருப்புகழை பரப்புவதையே தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்ட அவர் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தபோது அங்கே பக்தர் யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அங்குள்ளவர்களிடம் வள்ளிமலை சுவாமிகள் காரணம் கேட்டார். அதற்கு, 'இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். எனவே மக்கள் எல்லோரும் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் இங்கு வருவது இல்லை' என்று கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்ட வள்ளிமலை சுவாமிகள் வருத்தமடைந்தார். 'துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான முருகன் இருக்கும் இடத்துக்கு வராமல் யாரோ ஒரு மனிதரைத் துதித்து வழிபடுவதா' என்று வருந்தினார். மக்களை முருகனிடம் வரவேற்க ஒரு திருவிழா நடத்தலாம் என்று முடிவு செய்தார். அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதை நிகழ்த்த முடிவு செய்தார். படிபூஜை சுவாமி மலையில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பன்று படிபூஜை நடைபெறுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களாக இந்தப் படிகள் விளங்குவதாய் ஐதிகம். எனவே, அவற்றுக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் பூஜைகள் நடைபெறுகின்றன. அதைப்போலவே 365 படிகளைக் கொண்டிருக்கிற திருத்தணிகை முருகன் கோயில் படிபூஜை செய்தால் என்ன என்று யோசித்து அதையே விழாவாகக் கொண்டாட முடிவு செய்தார். மக்களிடம் முருகனே துரைகளுக்கெல்லாம் துரை. எனவே துரை முருகனைக் கொண்டாடுவோம் என்று அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற மக்கள் திருத்தணியில் குவிந்தனர். முதல் படிபூஜை 1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அன்று ஆரம்பமானது. அன்று முதல் இன்றுவரை இந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு படிக்கும் வெற்றிலை, பழம், சூடம் வைத்து இரண்டு நாள்களும் பூஜை செய்யப்படும். டிசம்பர் 31-ம் தேதி காலையில் தொடங்கி மறுநாள் விடிய விடிய நடைபெறுகின்ற இந்தப் படிபூஜை புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியன்று இரவு 10 மணிவரையிலும் நடைபெறும். பக்தர்களும் இதில் திரளாகக் கலந்துகொள்வார்கள். இந்த நாளில் திருத்தணியில் அன்னதானங்களும் பக்தர்களின் கூட்டமும் களைகட்டும். திருத்தணி தலத்தின் மகிமையும் பழைமையும் பெரியது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று சினம் தணிந்த அந்த சுப்ரமணிய சுவாமியை தரிசித்து வாருங்கள். வாழ்வில் சுகங்கள் அனைத்தும் தேடிவரும்.
பதிவு வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
புதிய நம்பிக்கைகள், புதிய கனவுகள், புதிய தொடக்கங்களுடன் 2026 ஆம் ஆண்டு நம் அனைவரையும் வரவேற்கிறது. கடந்த ஆண்டின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்தை நோக்கி உறுதியான அடிகளுடன் முன்னேற வேண்டிய தருணம் இது. உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செய்தி ஊடகங்கள், ஜனநாயகத்தின் தூண்களாக இருந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றன. நேர்மை, வெளிப்படைத் தன்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றுடன் செய்திகளை வாசிக்கும் வாசகர்களே ஊடகங்களின் உண்மையான பலம். 2026 ஆம் ஆண்டு அனைவருக்கும் ஆரோக்கியம், அமைதி, சமத்துவம், வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை கொண்டு வரட்டும். அறிவுச் சிந்தனையையும் வளர்க்கும் ஆண்டாக இது அமையட்டும். பதிவு வாசகர்களுக்கும், செய்தியாளர்களுக்கும், ஊடகப் பணியாளர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், பிரிடோரியா கேபிடல்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணியில் பேட்டர்கள் தொடர்ச்சியாக காட்டடி அடித்து 220 ரன்களை குவித்தனர். இறுதியில் மெகா வெற்றியையும் பெற்றனர்.
புத்தாண்டு உதயமானது ; உலகின் முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு
உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில்,பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி (Kiribati) குடியரசின் கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால், உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது. 2026 பிறந்தது இலங்கை நேரப்படி நேற்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு […]
2026 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி-எங்கனு தெரியுமா?
2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி-எங்கனு தெரியுமா? இதுதொடர்பாக வெளியான அறிவிப்பும், அரசு அனுமதி தொடர்பாகவும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
ஜோக்குகளை மின்னஞ்சலில் அனுப்ப jokes@vikatan.com ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ்
மறுசீரமைப்பின் சுமையுடன் 2026க்கு கால்பதிக்கும் நாடு ; ஜனாதிபதி புத்தாண்டு செய்தி
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது. 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் […]
அமீரக ஆதரவு படைகள் மீது யேமனில் சவூதி தாக்குதல்
ஐக்கிய அமீர ஆதரவுடன் செயல்பட்டுவரும் யேமன் பிரிவினைவாதப் படையினரைக் குறிவைத்து அந்த நாட்டின் முகல்லா துறைமுக நகரில் சவூதி அரேபிய செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்தில் இருந்து வந்த கப்பல்கள் மூலம் தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) பிரிவினைவாதப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் அனுப்பப்பட்டன. இந்த ஆயுதங்கள் யேமனின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உடனடி […]
பசிபிக்கில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு
பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் வழித்தடத்தில் இயங்கிய படகு ஒன்றை அமெரிக்க ராணுவம் தாக்கியது. அந்தப் படகு போதைப்பொருள் பயங்கரவாதிகளால் செலுத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடா்பான விடியோவை (படம்) வெளியிட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கொழும்பு மாநகர சபை: தார்மீக வெற்றியா? அல்லது திட்டமிட்ட சதியா?
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (31) இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்டு,… The post கொழும்பு மாநகர சபை: தார்மீக வெற்றியா? அல்லது திட்டமிட்ட சதியா? appeared first on Global Tamil News .
தர்பூசணி சாப்பிடும் போட்டியில் மனைவி கண்முன்னே கணவன் பலி ; துயரத்தில் முடிந்த சுற்றுலா பயணம்
சுற்றுலா சென்ற இடத்தில் தர்பூசணி சாப்பிடும் போட்டி ஒன்றில், போட்டியாளர் தனது மனைவி கண் முன்னே கணவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தில் முடிந்தது. 37 வயதான கார்லோஸ் செரசோமா, பிரேசிலின் சாவோ பெட்ரோவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார். கைகளைப் பயன்படுத்தாமல், ஒரு தாழ்வான மேசையிலிருந்து தர்பூசணித் துண்டை யார் வேகமாகச் சாப்பிடுகிறார்கள் என்பதைச் சோதிப்பதே அந்தப் போட்டியாகும். நான்கு குழந்தைகளின் தந்தை நான்கு குழந்தைகளின் தந்தையான அவர், ஒரு பரிசை வெல்லும் […]
முஸ்லிம்களுக்கு தூரநோக்குடனான அரசியலின் தேவை
மொஹமட் பாதுஷா மக்களை மையமாகக் கொண்ட நீண்டகால திட்டமும் தூரநோக்கும் இல்லாத அரசியலின் விளைவுகளை இலங்கை முஸ்லிம் சமூகம் அனுபவிப்பதாகவே தோன்றுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எப்படி, யார் முன்வைப்பது? அவற்றிற்கு எவ்வாறு தீர்வைப் பெறுவது என்பதெல்லாம் விடைதெரியாத கேள்விகளாகியுள்ளன. முன்னைய காலங்களில் எம்.பி.க்களாக இருந்தவர்கள் தமது பதவிக்காலம் முடிந்தவுடன், அரசியலை விட்டு தமது சொந்த வாழ்க்கைக்குள் ஒதுங்கிக் கொண்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும், பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க […]
புத்தாண்டு அதுவுமா இப்படியா..! ஜப்பானில் இப்படி ஆகிடுச்சே..! கொண்டாட்டத்துக்கு நடுவே சோகம்..!
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஜப்பான் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
வவுனியா விசேட நிருபர் வவுனியா, சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகம் உட்பட மக்கள் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளனர். எனவே எதிர்கால ஆபத்தை மக்கள் உணரவேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா, சமளங்கும் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றிருந்தோம். அங்கு தொல்லியல் […]
மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சுவிஸ் கிராம பகுதியில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை தொடர்ந்தே ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சுவிஸ் கிராம கொடூர தாக்குதல் தாக்குதல் சந்தேக நபர்கள் நேற்று முன் தினம் பொலிஸரால் கைது செய்யப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு 12 .30 மணியளவில் அவரது […]
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை: 15 நாள்களில் 8-ஆவது முறையாக வீடுகளுக்குத் தீவைப்பு
வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பிரோஜ்பூா் மாவட்டத்தில் ஐந்து வீடுகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் இதுபோன்ற 8 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பிரோஜ்பூா் மாவட்டத்தில் அண்மையில் இந்தத் தீவைப்பு சம்பவம் நடந்தது. பலாஷ் காந்தி சாஹா, ஷிப் சாஹா, தீபக் சாஹா, ஷியாமலேந்து சாஹா, அசோக் சாஹா ஆகியோருக்குச் சொந்தமான ஐந்து வீடுகளை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அதிகாலை […]
டென்மார்க்கில் 400 ஆண்டுகால அஞ்சல் சேவை முடிவுக்கு வருகிறது
டென்மார்க் 400 ஆண்டுகால அஞ்சல் சேவைக்கு விடைபெறுகிறது. கடிதம் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வேகமாக பரவி வருவதால், பாரம்பரிய அஞ்சல்களுக்கான தேவை குறைந்து வருவதால், டென்மார்க் தனது அரசுக்கு சொந்தமான அஞ்சல் விநியோக சேவையை முடிவுக்கு கொண்டு வருகிறது வந்துள்ளது. 1624 இல் தொடங்கிய இந்த சேவை, 401 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைகிறது. டென்மார்க் உலகின் மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும், வங்கி, சுகாதார பதிவுகள் மற்றும் அரசாங்க ஆவணங்கள் இப்போது கிட்டத்தட்ட முழுமையாக ஆன்லைனில் உள்ளன. 2024 வாக்கில், அஞ்சல் விநியோகம் 2000 உடன் ஒப்பிடும்போது 90% அதிகமாகக் குறைந்துள்ளது. கடிதம் விநியோகம் இனி லாபகரமானதாக இல்லாததால் சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டென்மார்க்கின் சின்னமான சிவப்பு அஞ்சல் பெட்டிகளில் சமீபத்திய மாதங்களில் சுமார் 1,500 அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அகற்றப்பட்ட பெட்டிகள் தொண்டுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டன, மேலும் பல டேனியர்கள் அவற்றை நினைவுப் பொருட்களாக வாங்க ஆர்வமாக உள்ளனர் உள்ளதாகவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் (1,500 - 2,000 டேனிஷ் குரோனர்) செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
️ பிரித்தானியாவில் குளிர்காலத்தில் 1.8 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு :
பிரித்தானியாவில் நிலவும் கடும் குளிர்காலத்திற்கு மத்தியில், சுமார் 1.8 மில்லியன் சிறுவர்கள் தத்தமது வீடுகளுக்குள் குடும்ப வன்முறையினால் (Domestic… The post ️ பிரித்தானியாவில் குளிர்காலத்தில் 1.8 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு : appeared first on Global Tamil News .
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் (TIDCO) உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 8ஆம் வகுப்பு தகுதிப் பெற்றிருந்தால் போதுமானது. ஆர்வமுள்ளவர்கள் உரிய விவரங்களுடன் ஜனவரி 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் மக்கள் வீதிக்கு இறங்கினர்
ஈரானில்ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் நாணயத்தின் வியத்தகு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்திய நாட்களில் போராட்டம் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை கடைக்காரர்கள் மற்றும் பஜார் வணிகர்களின் வேலைநிறுத்தமாகத் தொடங்கியது, அரசியல் கோபத்தின் கூச்சலாக மாறியுள்ளது, சிலர் சர்வாதிகாரிக்கு மரணம்!என்று கூட கோஷமிட்டனர். தன்னிச்சையான போராட்டங்கள் ஏற்கனவே தெஹ்ரானில் இருந்து இஸ்ஃபஹான் மற்றும் மஷாத் போன்ற பிற நகரங்களுக்கும் பரவியுள்ளன. ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் நாணயத்தின் வியத்தகு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்திய நாட்களில் போராட்டம் நடத்தினர்
இங்கிலாந்து அரசாங்க ரகசியத் தகவல்கள் தவறுதலாக வெளியீடு
இங்கிலாந்தில் அரசாங்க ஆவணங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட ஒரு நிர்வாகத் தவறு காரணமாக, ஆண்ட்ரூ இளவரசரின் பயணத் திட்டங்கள் குறித்த ரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்குத் தற்செயலாகக் கசிந்துள்ளன. பொதுவாக இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் இத்தகைய அரசு ஆவணங்களில், அரச குடும்பம் தொடர்பான விவரங்கள் மட்டும் ரகசியமாக வைக்கப்படுவதை எதிர்த்துப் பல போராட்டக்காரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஜிம்பாப்வே விவகாரங்கள், டோனி பிளேயரின் புதுப்பிப்புத் திட்டங்கள் இந்நிலையில் இந்தத் தவறுக்குப் பின்னர் குறித்த கோப்புகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு, […]
இலங்கை காவல்துறையில் பதவி வேண்டாம்!
சிவில் பாதுகாப்பு பிரிவில்( CSD) பணியாற்றுகின்றவர்களை பொலீஸ் திணைக்களங்களுடன் இணைதது குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதற்கான எழுத்து மூலமான உத்தரவு சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்துள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவித்து வருகின்றனர்.
புலிகளை திருப்திபடுத்தவே டக்ளஸ் கைது!
டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையானின் கைதுகள் முழுக்க முழுக்க அரசியல் ரீதியானவை என்றும், புலம்பெயர் புலிகளைத் திருப்திபடுத்தும் அரசின் செயல்பாடுகளின் ஒரு அங்கமாகவே இரண்டு கைதுகளும் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினால் இயக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படும்; சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கி, தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் காணாமல் ஆக்கப்படுத்தலுக்கும் வன்புணர்வுகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இலங்கையின் ஆகப் பெருங்குற்றவாளிகளில் முதன்மையானவராவார். அவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒருவரென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். எதிராக சூளைமேடு கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தின் பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையில் உள்ளது. அவரின் கைது வெறும் கண்துடைப்பாக மாத்திரமன்றி, அவர் ஆயுளுக்கும் வெளியே வராதபடி அமைந்தால் மட்டுமே சட்டவாட்சியின் பாற்பட்ட கைதாகக் கருதலாம். மாறாக ஒரு சில வாரங்களிலோ அல்லது ஒரு சில மாதங்களிலோ அவர் வெளியே வருவாரேயானால் பிள்ளையான், வியாழேந்திரன் வரிசையில் தமிழ்ப் புல்லுருவிகளைக் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு, அக்காலத்தினுள் அக்கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் ஜே.வி.பி. – என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பாகமாக மட்டுமே பார்க்க முடியுமெனவும் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை சுவீகரிக்க சதிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள யாழ்.மாவட்ட செயலர் பிரதீபன் காணி உரிமையாளர்களுடன் இன்று காலை தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் – ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்ததாக மாவட்ட செயலர் பின்னராக ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார். கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு மாவட்ட செயலர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே மிகுதிக் காணிகள் 4 கட்டங்களாக விடுவிப்பதற்கு யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விகாராதிபதி வாழிடம் உள்ளிட்ட ஏனைய பல கட்டடங்களை அகற்றி வேறிடத்துக்கு கொண்டு செல்லும் வகையிலான செயற்பாடுகளுக்க்கான அவகாசம் கருதியே இந்த 4 கட்டங்கள் வரையறை வகுக்கப்படுள்ளதென காணி உரிமையாளர்கள் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதேநேரம் விகாரை அமைந்துள்ள காணி மூன்று தரபினருக்குரியதாக இருக்கின்றது. ஆனாலும் அந்த காணிக்கான மாற்றுக் காணி குறித்தோ, நஸ்ட ஈடு தொடர்பிலும் எந்தவிதமான தீர்மானமோ யோசனையோ எடுக்கப்படவில்லை முயற்சி ஒரு யோசனையாகவே இன்று தீர்மானிக்கப்பட்டு துறைசார் தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. அது இறுதி முடிவாக அல்லாது யோசனையாகவே இருப்பதனால் நாம் எதிர்வரும் 3 ஆம் நாளன்று ஏற்கனவே தீர்மானித்திருந்த தையிட்டிப் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த தீர்மானித்துள்ளோமெனவும் அறிவித்துள்ளனர்.
சிறைத் தண்டனையால் தகுதி இழக்கிறாரா திமுக எம்.எல்.ஏ? - மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்வதென்ன?
கட்சி மதிமுக-தான், ஆனா சின்னம் உதயசூரியன்! தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனுக்காக இவர் தந்த காசோலைகள் பவுன்ஸ் ஆகி விட்டதையடுத்து, அவருக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது. அதேநேரம் தண்டனையை மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டிருப்பதால், அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டால் இந்தச் சட்டத்தின் கீழ் பதவி இழந்த மூன்றாவது திமுக எம்.எல்.ஏ-வாக இவர் இருப்பார். ஏனெனில் இவர் மதிமுக-வில் இருந்தாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் சட்டப் பேரவை ஆவணப்படி இவர் திமுக உறுப்பினரே. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8 (3)ன் படி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் இரண்டாண்டோ அல்லது அதற்கு மேலோ சிறைத் தண்டனை பெற்றால் உடனடியாக அவர்களது பதவி காலியாகி விடும். மேல்முறையீட்டுக்குச் சென்றால் தண்டனை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால் மட்டுமே திரும்பவும் அந்தப் பதவி கிடைக்கும். இதே சட்டப் பிரிவு 8 (1) ல் எந்தெந்த வகையான குற்றங்கள் என்பவையும் பட்டியலிடப் பட்டுள்ளன. சதன் திருமலைக்குமார் தண்டனை தந்ததும் இப்ப பதவி தந்ததும் ஒரே ஆள்! தமிழ்நாட்டில் முதன் முதலாக இந்தச் சட்டத்தின் படி பதவியை இழந்தவர் செல்வகணபதி. சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் வழக்கில் இவருக்கு தண்டனை கிடைத்தது. வேடிக்கை என்னவென்றால் இவர் ஊழல் செய்தார் என வழக்கு போட்டது திமுக. ஆனால் இவருக்குத் தண்டனை கிடைத்த போது அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இருந்தார். பிறகு அந்த தண்டனை மேல் முறையீட்டில் ரத்து செய்யப்பட தற்போது அதே திமுக-வின் சார்பாக மக்களவை உறுப்பினராக இருக்கிறார். செல்வகணபதி தொடரலாமா கூடாதா? இந்தச் சட்டத்தின் படி பதவி இழந்த திமுக-வின் இரண்டாவது ஆள் பொன்முடி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் மூன்றாண்டு தண்டனை கிடைக்க, பதவி இழந்தார். ஆனால் மேல்முறையீட்டில் அந்த தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டப்படி தண்டனை ரத்து செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் பதவி கிடைக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் பொன்முடி விவகாரத்தில் தண்டனை ரத்து செய்யப்பட்டதாக தெரியவில்லை. இருந்தாலும் தற்போது திருக்கோவிலுர் எம்.எல்.ஏ.வாகத் தொடர்கிறார். K. Ponmudy தலைவியும் தொண்டனும்! அதிமுகவை எடுத்துக் கொண்டால், அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே இந்தச் சட்டத்தின் கீழ் பதவியை இழந்தார். மேல் முறையீட்டுக்குச் சென்று தீர்ப்பை ரத்து செய்து மீண்டும் பதவி வகித்தார். எதிர் தரப்பில் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், அதன் தீர்ப்பு வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். அதிமுகவில் எல்.எல்.ஏ.வாக இருந்த பாலகிருஷ்ண ரெட்டியும் இதே போல் பதவி இழந்தவர்தான்.. திமுக அரசைக் கண்டிதது அதிமுக நடத்திய ஒரு போராட்டத்தின் போது கல்வீச்சில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு. வழக்கில இவருக்கு மூன்றாண்டு தண்டனை கிடைக்க பதவி இழந்தார். பல வருடம் கழித்து கடந்தாண்டு இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா இதே சட்டத்தின் கீழ் மோடியை அவதூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்தால் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் பதவி இழந்தார். ஆனால் அவர் வழக்கை நடத்தி தண்டனை ரத்தாகி விட்டது. ராகுல் காந்தி வெறும் அவதூறு குற்றச்சாட்டிலேயே பதவி இழந்ததைச் சுட்டிக்காட்டும் சட்ட நிபுணர்கள் சிலர், சதன் திருமலைக்குமார் மோசடி வழக்கு என்பதால் அவரது பதவி உடனடியாகக் காலியாகி விட்டது என்றுதான் அர்த்தம். அறிவித்து தெளிவுபடுத்த வேண்டியது சட்டப் பேரவைச் செயலகம்தான் என்கின்றனர்.
புத்தாண்டு அதுவுமா இப்படியா? யூரோஸ்டார் ரயில் சேவையில் பாதிப்பு.. பயணிகள் அவதி!
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கண்டத்தை இணைக்கும் முக்கிய ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக யூரோஸ்டார் ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாவலனின் கொடுப்பனவில் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் சிரமதானம்
புங்குடுதீவு -நயினாதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களின் நினைவு தினத்தை (30-12-2025) முன்னிட்டு தமிழ்த்தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சிகளிலொன்றான ஜனநாயக தமிழரசுக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு.கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியிலும் , ஏற்பாட்டிலும் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. கடந்த 2018 ம் ஆண்டு தொடக்கம் வேலணை பிரதேச சபை உறுப்பினராக செயற்படுகின்ற திரு . கருணாகரன் […]
டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேலின் அமைதி விருது: பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேலின் அமைதி விருது வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். டிரம்புக்கு அமைதி விருது இஸ்ரேல் நாட்டின் உயரிய குடிமகன் விருதான அமைதி விருது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு வழங்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது இரு நாட்டு தலைவர்கள் புளோரிடாவில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வெளியாகியுள்ளது. So well deserved! President Trump is honored with […]
மோடியின் கடிதத்தை தாரிக் ரஹ்மானிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கையளித்தார்!
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியா (Khaleda Zia) காலமானதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர… The post மோடியின் கடிதத்தை தாரிக் ரஹ்மானிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கையளித்தார்! appeared first on Global Tamil News .
முசலியில் கிராம உத்தியோகத்தர்கள் வீதியில் இறங்கி போராட்டம்:
முசலி: முசலி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களைக்… The post முசலியில் கிராம உத்தியோகத்தர்கள் வீதியில் இறங்கி போராட்டம்: appeared first on Global Tamil News .
அமைச்சருக்கு அறிவு இருக்கிறதா? சென்னை வந்ததும் காட்டமாக பேசிய ஆதவ் அர்ஜூனா!
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவது குறித்து சென்னை விமான நிலையத்தில் டிவிகே ஆதவ் அர்ஜூனா கருத்து தெரிவித்து உள்ளார். அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.
திருச்செந்தூர் கோயிலுக்குள் தவெக-விற்கு அரோகரா கோஷம் ; கோயிலா... பிரசார இடமா?- பக்தர்கள் ஆதங்கம்!
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேச மற்றும் திருவிழா நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். சமீப காலமாக திருச்செந்தூர் கோயில் பிரகாரம், கடற்கரை பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வந்தது. ஆன்மிகத் தலத்தில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் மோகமா? என, அதனை பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. விஜய் படத்தை காட்டிப் பேசும் ரசிகர் இது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. இது குறித்த செய்திகளும் பரவியது. இந்த நிலையில், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அதிகம் கூடும் இடமான திருக்கோயிலின் முன்புள்ள சண்முக விலாச மண்டபம், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், வசந்த மண்டபம், பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் வரிசை, அன்னதானக் கூடம் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டது. அந்த எச்சரிக்கை பதாகையில், “இத்திருக்கோயில் வளாகத்தில் திரைப்படப்பாடல்களை பாடி நடனம் ஆடுவது, அதை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம். தவறும்பட்சத்தில், காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள் பிரகாரத்தில் த.வெ.கவின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா என்ற கோஷத்துடன் தரிசனத்திற்காக காத்திருந்த சில பக்தர்களிடம், ”நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு செலுத்த வேண்டும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை இருக்காது” எனவும் கூறி சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். விஜய்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய பக்தர் தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்திய நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக், திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அப்புகாரில், கோயிலுக்குள் அரசியல் குறித்து பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “திருக்கோயில் வளாகம், கிரிப்பிரகாரம், உள் பிரகாரம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது என திருக்கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் இந்நிலையில், இதனை கண்காணிக்க வேண்டிய கோயில் செக்யூரிட்டிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். பாதுகாப்பு பணியில் யாரும் இல்லையா? இது செக்யூரிட்டிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது. இக்கோயில் வழிபாட்டு தலமா அல்லது கட்சிகளின் பிரசாரத்திற்கான இடமா?” என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்: தரையில் சுழன்றபடி விழுந்த காட்சி
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மாகாணத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை நியூ ஜெர்சி மாகாணத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். CrashVision: Tragic Helicopter Crash in New Jersey! What We Know: Two helicopters collided mid-air and crashed near Hammonton, New Jersey, leaving 1 dead and […]
நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாளை (01) சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யும் என கூறப்படுகிறது. பல இடங்களில் மழை பெய்யக்கூடும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் […]
ஒடிசா இளைஞர் மீதான தாக்குதல்; `இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான்'- பேரரசு
திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். க்ரைம் அந்த வகையில் இயக்குநர் பேரரசு இளைஞர்கள் தாக்கிய சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான். தற்போது உள்ள சில திரைப்படங்களில் வன்முறை...வன்முறை...வன்முறை மட்டும் தான் இருக்கிறது. சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறதோ அதே அளவு திரைப்பட இயக்குநர்களுக்கும், அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்களுக்கும் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
கோவை நிலவரம் இதுதான்: உளவுத்துறை ரிப்போர்ட்; உற்சாகத்தில் திமுக?
2026 ஆங்கில புத்தாண்டை பொது மக்களை விட, அரசியல் கட்சிகள் அதிக ஆர்வத்துடன் வரவேற்று வருகின்றன. சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சியினர் களத்தில் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். இதில் கொங்கு மண்டல அரசியல் களத்தின் சூடு சற்று அதிகமாகவே உள்ளது. திமுக மாநாடு அதிமுகவின் கோட்டையாக உள்ள அந்த பகுதியை கைப்பற்ற திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. புது வரவான தவெகவும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. திமுக மேற்கு மண்டல மகளிரணி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் இலக்கு.” என்றார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 1 தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. கோவை இந்தமுறை கோவையில் அதிமுகவுக்கு இணையாக அல்லது அவர்களை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற திமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. உளவுத்துறை ரிப்போர்ட்டில் கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் மற்றும் கோவை தெற்கு தொகுதி ஆகிய இரண்டும் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் திமுக அதிக உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தான் கோவை மாவட்டத்தில் முதலாவதாக சிங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து திமுக பணிகளை தொடங்கிவிட்டது. செந்தில் பாலாஜி இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், “2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கோவை தங்களின் கோட்டை என்று சொல்ல முடியாத நிலை உருவாகும். தொகுதிக்கு ஒரு தேர்தல் அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். சாதிய ரீதியான கணக்கீடுகளிலும் தெளிவாகவுள்ளோம். கோவையில் கவுண்டர், நாயுடு சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு ஜி.டி. நாயுடு பெயரும், உக்கடம் மேம்பாலத்துக்கு சி. சுப்பிரமணியம் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஒரு வாரத்தில் செம்மொழி பூங்கா, சர்வதேச ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டுள்ளன. செம்மொழிப் பூங்கா அடுத்தடுத்து பெரியார் நூலகம் திறப்பு, சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ளது. இந்தமுறை கோவையை அவ்வளவு எளிதில் விட்டு கொடுக்க மாட்டோம்.” என்றனர். இந்த தகவலால் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பில் அப்செட் ஆகியுள்ளனர்.
கொழும்பு மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது- 2 உறுப்பினர்கள் இடைநிறுத்தம்
கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதிகொழும்பு மாநகர சபையின் முதல்வர் வராய் கெலி பால்தசார் சமர்ப்பித்த 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் கிடைத்திருந்தன. இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டாவது
Year Ender 2025: இந்த வருசம் கம்மிதான்.. மழைப்பொழிவு இயல்பை விட எத்தனை சதவீதம் குறைவு தெரியுமா?
2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்துள்ளது. அக்டோபர் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
20 ரூபாய் தர மறுத்த மனைவி…கணவர் எடுத்த பயங்கர முடிவு
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில், தன் மனைவி தனக்கு 20 ரூபாய் தர மறுத்தததால் அவரையும் கொன்றுவிட்டு, தன் உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளார் ஒரு கூலித்தொழிலாளி. 20 ரூபாய் தர மறுத்த மனைவி… புதுடெல்லியிலுள்ள கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், தன் மனைவியிடம் செலவுக்காக 20 ரூபாய் கேட்டுள்ளார். அவர் அந்த பணத்தை மது குடிக்க செலவு செய்வார் என நினைத்த அந்தப் பெண் பணம் தர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர், அந்தப் பெண்ணின் […]
திருமணத்துக்கு மறுப்பு? - 'கௌரி'சீரியல் நடிகை நந்தினியின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?!
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கௌரி' சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினியின் தற்கொலைக்கான காரணமாக பெங்களூரு போலீசார் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கின்றனர். முன்னதாக இரு தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் தான் வசித்து வந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் நந்தினி. கௌரி தொடரில் கனகா, துர்கா என இரட்டை வேடங்களில் நடித்து வந்த நந்தினி, இதற்கு முன் கன்னட சீரியல்களில் நடித்திருந்தார். திடீரென உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அதற்கான காரணம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. கௌரி சீரியல் தொடரில் அவருடன் நடித்த சிலரிடம் நாம் பேசியபோது, ``தமிழுக்கு இப்பதான் வந்திருந்தாங்க. முதல் சீரியல்லயே இரட்டை வேடம் கிடைச்சதுல உற்சாகமாக இருந்தாங்க. அம்மன் வேடத்துல நடிக்கிறப்பெல்லாம் அவ்வளவு சின்சியரா நடிச்சாங்க. கல்யாணம் ஆகலை. அதேநேரம், காதலன்னு யாரையும் கூட்டி வந்து நாங்க பார்த்ததே இல்லை. அதனால காதல் தோல்வின்னெல்லாம் ஒரு விஷயத்தைச் சொல்லவே முடியாது.. பெரிய பிரச்னையா இருந்தா நிச்சயம் யூனிட்ல யார்கிட்டயாச்சும் சொல்லியிருப்பாங்க. அப்படி எதுவும் சொன்னதா தெரியலை என்றார்கள்.. பெங்களூரு சென்று வந்த சிலரிடம் பேசினோம். ''அவரின் உடலைக் கைப்பற்றி விசாரிச்சப்ப போலீஸ் அவர் எழுதி வச்சதா சில கடிதங்களை எடுத்ததாச் சொன்னாங்க. அதாவது அவங்க அப்பா கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டார். அவர் அரசு வேலையில இருந்தார். வேலையில இருந்த போதே இறந்ததால் கருணை அடிப்படையில் நந்தினிக்கு அரசு வேலை கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க. அதனால வீட்டுல நடிப்பை விட்டுட்டு அந்த வேலைக்குப் போக நந்தினியை வற்புறுத்தினதாகச் சொல்லப்படுது. ஆனா நடிப்புல ஆர்வம் இருக்கிறதால அந்த வேலையில சேர இவருக்கு ஆர்வம் இல்லை. இது தொடர்பா வீட்டுல இருக்கிற மத்தவங்களுக்கும் நந்தினிக்கும் இடையில் பிரச்னை உண்டாகியிருக்கு. 'சீக்கிரம் வேலைக்குப் போயிட்டா ஒரு கல்யாணத்தைச் செய்துடலாம்'ங்கிறதுதான் நந்தினியின் அம்மா உள்ளிட்ட வீட்டாரின் எண்ணம். அதுக்கு அவர் சம்மதம் சொல்லலை. இந்தப் பிரச்னையில கொஞ்சம் மன அழுத்தத்துல இருந்திருக்கிறார்னு போலீஸ் சொல்றாங்க என்கிறார்கள்.
புத்தாண்டு அதுவுமாக வேலைநிறுத்தம் செய்த ஸ்விகி, ஜொமாடோ ஊழியர்கள்!
ஸ்விகி, ஜொமாட்டோ ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்களுக்கான டெலிவரி சேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
முதல்வர் புத்தாண்டு பரிசாக இதைக் கொடுக்க வேண்டும்.. பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
புத்தாண்டு பிறக்கும் நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணி நிரந்தர வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பாதுகாப்பை சீர்குலைக்க வெளிப்புற சக்திகள் முயற்சி?- விசாரணை ஆரம்பம்
சிறிலங்காவின் பாதுகாப்பை சீர்குலைக்க வெளிப்புற சக்திகள் முயற்சிப்பது குறித்த விசாரணைக்கு அனைத்துலக புலனாய்வு அமைப்புகளின் உதவியை சிறிலங்கா பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் அரச பணியகங்களை குறிவைத்து விடுக்கப்பட்ட அடுத்தடுத்த குண்டு அச்சுறுத்தல்கள் தொடர்பாக,குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன, விசாரணையைத் தொடங்கியுள்ளன. டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் நாள்களில்,
சூப்பரா ஆடுறாரு…இடம் கொடுங்க! சர்பராஸுக்கு ஆதரவாக பேசிய அஸ்வின்!
விஜய் ஹசாரே டிராபி போட்டியில் கோவா அணிக்கு எதிராக சர்பராஸ் கான் வெறும் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 14 சிக்ஸர்கள் அடங்கும். இந்த அபார ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அடுத்த ஐபிஎல் சீசனில் சர்பராஸுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தினார். சையத் முஸ்தாக் அலி டிராபியில் சர்பராஸ் சிறப்பாக விளையாடி ஒரு சதம், […]
TN vs JHKD: ‘படுமோசமாக சொதப்பிய தமிழ்நாடு அணி’.. டாப் ஆர்டர் மிகவும் மோசம்: ஸ்கோர் விபரம்!
விஜய் ஹசாரே டிராபி 2025 - 2026 தொடரின் லீக் சுற்றில் தமிழ்நாடு, ஜார்கண்ட் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி படுமோசமாக சொதப்பியது. பந்துவீச்சும் மட்டமாக இருந்தது.
தையிட்டி விவகாரம் ; யாழ் அரசாங்க அதிபரின் தலைமையில் கிடைத்த முதல் வெற்றி
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை இன்று (31) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது. திஸ்ஸ விகாரை காணி இந்த சந்திப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று (31) மு.ப 10.00 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் […]
முக்கிய அறிவிப்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஸொஹாரா புஹாரி நீக்கம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஸொஹாரா புஹாரி நீக்கம்! கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஸொஹாரா புஹாரி… The post முக்கிய அறிவிப்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஸொஹாரா புஹாரி நீக்கம்! appeared first on Global Tamil News .
Mumbai: ITV Digital, the digital arm of ITV Network, has recorded exponential growth in 2025, driven by a focused transformation strategy led by Akshansh Yadav, CEO Digital. The network achieved record gains across revenue, traffic, and audience engagement, even as the wider media industry continued to face structural and monetisation challenges.Taking charge during a phase of organisational transition, Yadav implemented a sharp execution-led approach centred on financial discipline, scalable systems, and sustainable growth. Under his leadership, ITV Digital posted a 185% surge in digital revenue, underscoring a clear shift towards profit-led expansion.The network’s digital platforms witnessed rapid audience momentum, registering six-fold growth in site traffic within just three months. Digital properties continued to scale at nearly 100% month-on-month, while ITV Digital’s YouTube portfolio grew 130% as a group. Flagship video brands consistently delivered 35% MoM growth, establishing video as a core engine of digital expansion.A major industry milestone for the network was its debut in ComScore rankings, where ITV Digital entered ahead of established players such as DNA India, The Wire, WION News, Jio News, NDTV Profit, and Manorama News. The achievement reflects the network’s digital-first strategy and its ability to compete at scale through data-driven execution and audience-centric content.Reflecting on his transition from a Chief Product & Technology role to CEO Digital, Akshansh Yadav said, “The shift required a broader business mindset owning the P&L, leading revenue conversations, and aligning finance, HR, product, and distribution under a common growth vision. The focus has been on building strong fundamentals that enable sustainable scale.” Beyond performance metrics, Yadav has strengthened leadership depth at ITV Digital, with senior heads of Finance, HR, Product, SEO, and Editorial reporting directly to him. His leadership philosophy emphasises clarity, accountability, and empathy, enabling faster decision-making while preserving organisational culture.An active thought leader on LinkedIn, Yadav regularly shares insights on digital media, leadership, productivity, and business strategy, advocating transparent leadership and learning-driven growth.Looking ahead, ITV Digital’s 2026 roadmap includes deepening monetisation strategies, building differentiated digital IPs, and leveraging AI-led efficiencies to further strengthen audience engagement and operational scale. “Digital media today demands speed, discipline, and credibility,” Yadav added . “Our focus is to compound growth by building long-term value, not just short-term scale.” Summing up the network’s growth philosophy, Yadav stated, “Sustainable audience growth comes from strong fundamentals, not short term traffic spikes.” With strong fundamentals and accelerating momentum, ITV Digital continues to strengthen its position as one of India’s fastest-growing digital news networks under Akshansh Yadav’s leadership.
பிரியங்கா காந்தி மகனுக்கு நிச்சயதார்த்தம் –பொண்ணு யாரு பாருங்க..
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி வதேராவுக்கு ரெஹான் (24) என்ற மகனும், மிரய்யா என்ற மகளும் உள்ளனர். ரைஹான் வத்ரா இதில் ரைஹான் வத்ராவுக்கும், அவரது நீண்டகால தோழியான அவீவா பைக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவீவா பைக் ஒரு தொழில்முறை புகைப்பட கலைஞர் மற்றும் ‘அடெலியர் 11’ என்ற கலை நிறுவனத்தின் இணை நிறுவனர். ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத் தோழியான அவிவா பெய்கை மணக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த ஏழு […]
கிளிநொச்சியில் பரபரப்பு; மணல் கடத்தல்காரர் மீது துப்பாகிச்சூடு
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி மற்றும் சந்தேகநபர்கள் வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழிமறித்தவேளை குறித்த டிப்பரானது நிறுத்தாது தொடர்ந்து பயணித்துள்ளது. கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் வீதியூடாக செல்ல முற்பட்ட குறித்த டிப்பர் வாகனத்தை துரத்திச்சென்று பொலிஸாரால் ஐந்து தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டனர். இந்நிலையில் டிப்பர் […]
யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் முக்கிய சந்திப்பு!
இன்று காலை யாழ்ப்பாணத்தில், இலங்கையிலுள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான சபையின் (ICCR) பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரகு… The post யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் முக்கிய சந்திப்பு! appeared first on Global Tamil News .
தமிழ்நாடு இனி சகித்துக் கொள்ளாது.. சட்டம், ஒழுங்கு சீர்கேடு.. பாஜக அண்ணாமலை காட்டம்!
தமிழ்நாட்டில் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, பாஜக தேசியக்குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை திமுக அரசின் நிர்வாக செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
India Inc. 2025: A Year of Maturity, Momentum and Meaningful Growth
2025 marked a clear inflection point for Indian businesses. Across categories, the narrative shifted from rapid catch-up to confident leadership—where scale, sophistication, and consumer intent converged. Whether it was homes becoming smarter, food becoming more functional, insurance becoming more inclusive, or luxury becoming more experiential, the year reflected a deeper alignment between what Indian consumers want and how companies are choosing to grow. Furniture Moves from Aspiration to Identity For Royaloak Furniture, 2025 underlined the coming-of-age of India’s furniture sector. Chairman & Co-Founder Vijai Subramaniam points to an industry that is no longer imitative but influential. With the market nearing USD 30 billion and set for sustained growth, furniture has evolved into an expression of lifestyle rather than a one-time utility purchase.The year saw Indian consumers decisively move away from fast furniture toward durable, certified materials and design-led products that balance modern minimalism with Indian sensibilities. South India remained the anchor market, while East India emerged as a high-growth frontier. Looking to 2026, Royaloak sees smart living, sustainability, and Tier 2–3 city demand as the pillars that will define not just domestic expansion but also the global ambitions of Indian furniture brands. Dairy’s Shift from Single Product to Daily Portfolio In dairy, 2025 was about habit formation. Godrej Jersey, under the marketing leadership of Shantanu Raj, highlighted how value-added dairy—especially flavoured milk—has moved into everyday consumption. Once considered indulgent, these products are now positioned as routine, “good-for-me” refreshments.This behavioural shift reflects a larger transformation of dairy into a full-basket category spanning nutrition, convenience, and functionality. The momentum is being driven by health awareness, label scrutiny, and the search for accessible protein sources. As India looks ahead, value-added, protein-rich dairy is set to be one of the most resilient and scalable FMCG growth engines. Insurance Finds Its Voice with Bharat For the general insurance sector, 2025 was about relevance and reach. At HDFC ERGO General Insurance, Somesh Surana describes a year aligned closely with IRDAI’s 3A framework—Awareness, Accessibility, and Affordability.The industry’s first collaborative campaign, “Acha Kiya Insurance Liya,” marked a milestone in collective storytelling, while HDFC ERGO’s own initiatives—from metro branding to state-level awareness drives—deepened category recall. Digitally, performance marketing, insurtech partnerships, and the growth of the HERE app to 10 million installs reflected a move from transactional selling to mindshare building. Entering 2026, the sector’s focus is firmly on inclusion, especially addressing India’s “missing middle.” Dairy & FMCG: Nutrition Takes Centre Stage At Parag Milk Foods, Executive Director Kshali Shah describes 2025 as paradigm-shifting. Clean labels, high-protein formats, and functional nutrition moved from niche to mainstream, driven by preventive health thinking.The rollout of GST 2.0 further reshaped the category by improving affordability of essentials like UHT milk, cheese, and ghee—benefits that Parag passed directly to consumers. As 2026 approaches, the company sees protein-led innovation, stronger supply chains, and trust-driven branding as the defining forces for dairy and FMCG growth. Jewellery: Trust Over Transactions For the jewellery sector, volatility became a filter. Divine Solitaires Founder Jignesh Mehta notes that rising gold prices in 2025 sharpened consumer selectivity. While traditional jewellery faced pressure, trust-driven categories like solitaires held firm.The year pushed consumers toward purposeful buying—choices rooted in emotion, legacy, and long-term value. Heading into 2026, Divine Solitaires is doubling down on traceability, experiential retail, and digital education, positioning solitaires as symbols of enduring worth rather than commodity-linked purchases. Appliances & HVAC: Scale Meets Self-Reliance At Voltas Ltd., Managing Director Mukundan Menon frames 2025 as a year of mixed signals. Early monsoons led to temporary industry de-growth, but policy tailwinds—such as GST reduction on ACs and upcoming BEE rating revisions—revived momentum.With AC penetration still under 8%, infrastructure expansion and Tier 2–3 city demand continue to fuel long-term optimism. Backed by Atmanirbhar Bharat and PLI schemes, Voltas sees India not just as a consumption market but as a future global manufacturing hub for HVAC and appliances. New-Age Beverages Go Science-Led For Evocus, 2025 was a breakout year. Founder Aakash Vaghela highlights expansion into RTD hydration, the launch of Black Soda for HoReCa, and cultural partnerships as milestones that validated its science-first positioning.The road to 2026 is about scale—wider retail and HoReCa presence, deeper storytelling, and innovation-led launches aimed at making Evocus a global name in functional hydration. Luxury Hospitality Grows Up Luxury travel in India matured rapidly in 2025, according to Evolve Back Resorts. Executive Director Marketing Jose Ramapuram points to strong occupancies and rates, but more importantly, a qualitative shift in guest expectations.Travellers now seek immersion, sustainability, and a sense of place over conventional luxury markers. Technology has become invisible yet essential, while environmental stewardship is no longer optional. As 2026 unfolds, the opportunity lies in blending growth with authenticity and cultural depth. Beauty, Footwear & the Rise of Homegrown Premium In skincare, Fixderma marked 15 years with renewed purpose. Co-founder Shaily Mehrotra reflects on 2025 as a year of trust-building—through education-led initiatives, campus outreach, and science-backed formulations. The focus for 2026 is sharper targeting, wider reach, and continued transparency.Similarly, in footwear, Brune & Bareskin completed a decade by strengthening its craftsmanship-led positioning. Founder Tabby Bhatia notes growing demand in Tier 1 and Tier 2 cities for premium, long-lasting products over fast fashion—an opportunity the brand plans to scale responsibly into India and select global markets. Jewellery Retail: Steady Confidence, Planned Growth At PP Jewellers by Pawan Gupta, Director Piyush Gupta describes 2025 as a year of consistent consumer confidence despite price volatility. Transparency, certified purity, and planned purchases defined buyer behaviour.The roadmap for 2026 centres on enhancing in-store experiences, expanding digital touchpoints, and balancing contemporary design with legacy craftsmanship—reinforcing jewellery as both emotional milestone and long-term investment. The Big Picture Taken together, these perspectives reveal a unifying theme: Indian industries in 2025 chose depth over speed. Consumers became more discerning, regulation more enabling, and brands more accountable. As 2026 approaches, growth is expected to continue—but it will belong to those who combine scale with trust, innovation with responsibility, and ambition with relevance across Bharat.
மோகன்லாலின் தாயார் மறைவு: நாங்கள் பேசுவோம், சிரிப்போம்! - நினைவுகளைப் பகிரும் மோகன்லாலின் நண்பர்
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தாகுமாரி இயற்கை எய்தியிருக்கிறார். 90 வயதான இவர் வயது மூப்பு காரணமாக நேற்றைய தினம் கேரளா, கொச்சியிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். மோகன்லாலின் தாயாரின் மறைவுக்கு மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மோகன்லாலுக்கு நெருக்கமானவரும், இயக்குநருமான மேஜர் ரவி, மோகன்லாலின் தாயார் சாந்தா குறித்து மனோரமா ஊடகத்திடம் பேசியிருக்கிறார். Mohanlal with his mom அவர், லாலின் அம்மா இறந்த செய்தியைக் கேட்டதும் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுதுகொண்டே மோகன்லாலைப் பார்க்கப் போனேன். அவரும் உடைந்து போயிருந்தார். அவரது கண்களில் ஆழமான துக்கம் தெரிந்தது. ஆனால் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு எல்லோரையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார். Sreenivasan: ஸ்ரீனி மூலமாக மக்கள் அதை திரையில் கண்டார்கள்! - மோகன்லால் உருக்கம்! அவர் உள்ளே மறைத்து வைத்திருக்கும் வலியை என்னால் பார்க்க முடிந்தது. நான் எப்போது போன் செய்தாலும் மோகன்லால் ‘அண்ணா, அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறார்’ என வருத்தத்துடன் சொல்வார். அதைக் கேட்கும்போதே அவருக்குள் ஏற்பட்ட வலி எனக்குப் புரியும். அம்மா போய்விட்டால் உண்மையிலேயே ஒருவன் தனிமையாகிவிடுகிறான் என்ற பயம் அவருக்குள் இருந்தது. எத்தனை பேர் சுற்றிலும் இருந்தாலும், வேறு யாராலும் நிரப்ப முடியாத பாதுகாப்பின்மை உணர்வு தாயை இழந்த சமயத்தில் வரும். லால் இந்த வலியை வெளிக்காட்டவில்லை. Major Ravi New Film - Mohanlal 1994-ல் லாலை முதலில் சந்தித்தபோது அவர் என்னை முடவன்முகளில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவரது பெற்றோர் இருவரிடமும் நான் ஒரு ராணுவ வீரர் என அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து எங்கள் உறவு சினிமாவைத் தாண்டியதாக உருவெடுத்தது. லாலுக்கும் அவரது அம்மாவுக்கும் இடையிலான பாசத்தைப் பார்க்கும்போது, என் அம்மா உயிரோடு இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். நான் சாந்தாகுமாரியை அடிக்கடி போய்ப் பார்ப்பேன். சில சமயம் அவர் என்னைப் பார்த்து ‘எங்க போயிருந்த?’ என்று கேட்பது போலப் பார்ப்பார். பிறகு நாங்கள் பேசுவோம், தமாஷ் செய்வோம், சிரிப்போம்! நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் என்னை மிகுந்த அன்போடு வரவேற்றார்” எனக் கூறியிருக்கிறார். 'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் - மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்

27 C