SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

அபுதாபியில் இருந்த உதவிப் பொருட்களுடன் வந்தது 9வது விமானம்

சிறிலங்காவுக்கானபேரிடர் நிவாரணப் பொருட்களுடன், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒன்பதாவது விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அபுதாபியிலிருந்து வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படைக்குச் சொந்தமானIL-76 போக்குவரத்து விமானம், நேற்று மாலை 4:47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான13,482 கிலோ கூடாரங்கள் மற்றும் பயண பாய்களுடன் இந்த விமானம் சிறிலங்கா வந்துள்ளது. இந்த உதவிப் பொருட்களை

புதினப்பலகை 8 Dec 2025 9:29 am

Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது?

கோவாவின் ஆர்போராவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேனில்' நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், நடனக் கலைஞரின் பின்னால் உள்ள கன்சோலில் தீ எரிவது பதிவாகியிருந்தது. கிளப்பின் ஊழியர்கள் சிலர் கன்சோலை நோக்கி விரைந்து சென்று தீ பரவும் இடத்திலிருந்து கம்ப்யூட்டர்களை எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் யாரும் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. गोवा के नाइट क्लब में लगी आग से जुड़े जो वीडियो सामने आ रहे हैं, वो किसी फिल्मी सेट जैसे लग रहे हैं। ये सब देखना बहुत भयावह है, जिन्होंने इस घटना का दंभ झेला है, उन पर क्या बीती होगी #Goa pic.twitter.com/342wugAxOg — Dhyanendra Singh (@dhyanendraj) December 8, 2025 திடீரென தீ மளமளவெனப் பரவியது. அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு விபத்தின் தீவிரத் தன்மை புரிந்திருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லோரும் தப்பிக்க ஓடியதில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டதில், ``தீ விபத்து ஏற்பட்ட பிறகு, குறுகிய வாசல்தான் இருந்ததால் பதற்றம் அதிகரித்தது. பலர் தப்பியோடிய நிலையில், சில சுற்றுலாப் பயணிகள் கீழே உள்ள சமையலறைக்கு ஓடி, அங்கு ஊழியர்களுடன் சிக்கிக் கொண்டனர். குறுகிய வாசல் மீட்பு பணியை மேலும் சவாலாக மாற்றியது. என்றார். இது தொடர்பாக தீயணைப்பு வீரர் ஒருவர் அளித்த பேட்டியில், ``பார்ட்டி நடந்த இடத்துக்குச் செல்லும் பாதைகள் தீயணைப்பு வாகனங்கள் செல்லும் அளவுக்கு அகலமாக இல்லை. இதனால் 400 மீட்டர் தொலைவில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. பலர் மூச்சுத் திணறலால் இறந்தனர். சிலர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகினர். என்றார். இந்த விபத்து குறித்து பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ``இது ஒரு துரதிர்ஷ்டவசமான நாள். கோவாவின் சுற்றுலா வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 25 பேர் பலியாகினர். அதிகாலை 1.30-2 மணிக்கு விபத்து நடந்த இடத்தை அடைந்தேன். எனது முதற்கட்ட விசாரணையில், மேல் தளத்தில் தீப்பிடித்ததாகத் தெரிகிறது. தீ விபத்து ஏற்பட்ட கிளப் கதவுகள் மிகவும் நெரிசலாக இருந்ததால், ஒரே நேரத்தில் எல்லோராலும் தப்பிக்க முடியவில்லை. நிலத்தடி பகுதிக்கு சென்ற பலர் சரியான காற்றோட்டம் இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தனர். ஹோட்டலின் பொது மேலாளர்கள் மற்றும் உரிமையாளர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகள் இந்த விடுதியில் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணையில் முழுமையாக ஆய்வு செய்யப்படும். எங்கள் மொத்தக் குழுவும் இதற்காகத் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் - அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும். மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். முதற்கட்ட தகவலில் இதுவரை 25 பேர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பிரபல சுற்றுலா தளத்தில் நடந்த இந்த சோகம், சுற்றுலா பயணிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Goa: அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா; கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

விகடன் 8 Dec 2025 9:19 am

தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?

ஈரோட்டில் த.வெ.க தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு நேற்று காலை (டிச.7) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரிய இடம் போதுமானதாக இல்லை என காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``த.வெ.க தலைவர், இளைஞரின் எழுச்சி நாயகன், எதிர்கால தமிழகம், மக்கள் எழுச்சியோடு எதிர்கால தமிழகத்தை உருவாக்க இருக்கிற விஜய், ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 16-ம் தேதி சுற்று பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வாரிமகாலுக்கு அருகாமையில் இருக்கிற தனியார் இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விஜய் மாவட்ட ஆட்சி தலைவரிடத்திலும் காவல்துறை கண்காணிப்பாளரிடத்திலும் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய அனுமதியை பெற்றவுடன், அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்களோ அதை நிறைவு செய்து, வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி நடத்த தனியார் இடம்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ரோட் ஷோ இப்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். குழந்தைகள் சாப்பிடுகிற போதும் தாய் தந்தை இடத்திலே என்ன சொல்கிறார் என்பதை நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள். விஜய், செங்கோட்டையன் காங்கிரஸ் - தா.வெ.க கூட்டணி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் தன்னுடைய கொள்கை ரீதியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல இயக்கத்தோடு, அதுவும் புதிதாக உருவான த.வெ.க கட்சி தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு இருக்கிறது. என்னை யாரும் கட்டாயப்படுத்தியெல்லாம் இதில் இணைய வைக்கவில்லை. எந்த நிபந்தனையும் நான் வைக்கவில்லை. நிபந்தனை வைத்து ஒரு இயக்கத்திலே யாரும் இணைந்து விட முடியாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதிமுக: இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன் - செல்லூர் ராஜு சாடல்!

விகடன் 8 Dec 2025 9:13 am

Doctor Vikatan: சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் புளிப்பான உணவுகளை அறவே தவிர்க்கவேண்டுமா?

Doctor Vikatan: என் உறவினருக்கு நீண்டகாலமாக சைனஸ் பிரச்னை உள்ளது. குளிர்காலத்தில் அது இன்னும் தீவிரமாகும். அவர் உணவில் புளிப்புச்சுவையை அறவே சேர்த்துக்கொள்வதில்லை. புளி உள்ளிட்ட அனைத்து புளிப்பு உணவுகளும் சைனஸ் பாதிப்பை அதிகப்படுத்தும் என்கிறார், அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு, சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சைனஸ் மாதிரி பிரச்னைக்கும் சரி, மற்ற எந்த விஷயத்துக்குமே பத்தியம் என்பதை  இரண்டு விதங்களாகப் பார்க்கலாம். ஒன்று நோய்க்கு ஏற்ற பத்தியம், இன்னொன்று மருந்துகள் சார்ந்த பத்தியம்.   பெருமருந்துகள்  கொடுக்கும்போது, சித்த மருத்துவத்தில் சில பத்தியங்கள் அறிவுறுத்தப்படும். அதில் புளிப்புச்சுவையை குறைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம்.   எல்லா நோய்களுக்கும் புளிப்பை முழுவதுமாக நீக்க வேண்டியதில்லை, ஆனால், கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய் என்பதால், புளிப்புச் சுவை அதிகமாகும் போது கபம் அதிகரிக்கலாம். சுவை தத்துவத்தின்படி, புளியைக் குறைப்பது சைனஸ் சிகிச்சைக்கு உதவும்.   புளியை முற்றிலுமாக நீக்குவது பெரிய மருந்துகள் எடுக்கும்போதும், புற்றுநோய் போன்ற தீவிர சிகிச்சை எடுக்கும்போதும் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய் மற்ற நேரங்களில், புளியை முழுமையாக நீக்காமல் கொஞ்சம் குறைத்து எடுக்கலாம். சுவையே இல்லாமல் உண்பதும் தவறு.   புளிப்புத் தன்மை குறைவாக உள்ள, ஆனால் புளியின் பலன்களைக் கொடுக்கக்கூடிய கேரளத்துக் குடம் புளியை   பயன்படுத்தலாம்.   சைனஸ் ஏற்படும் சீசனிலும், சைனஸ் தீவிரமாக இருக்கும்போதும் நல்ல உணவியல் முறைகளைப் பின்பற்றவது,  ஆவி பிடிப்பது, ஃப்ரெஷ்ஷாக சமைத்த சூடான உணவுகளைச் சாப்பிடுவது,  கார்ப்புத்தன்மை உடைய, வெப்ப வீரியம் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்வது (உதாரணத்துக்கு, தூதுவளைத் துவையல், கொள்ளுத்துவையல், கொள்ளு ரசம் போன்றவை)   போன்றவற்றைப் பின்பற்றினாலே ஆரோக்கியமாக இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Myths and Facts: புளி சேர்த்துக்கொண்டால் ரத்தம் சுண்டிப்போகுமா?

விகடன் 8 Dec 2025 9:00 am

காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது - தருமபுரியில் நடந்தது என்ன?

தருமபுரியில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 8 Dec 2025 8:54 am

Havas Media Network India Wins Integrated Mandate for Tata 1mg After Multi-Agency Pitch

New Delhi: Havas Media Network India has secured the integrated media mandate for Tata 1mg, one of India’s most trusted digital healthcare platforms, following a highly contested multi-agency pitch. The win further strengthens Havas’ relationship with the Tata Group and underscores the network’s ability to deliver full-funnel marketing solutions at scale. Under the new mandate, PivotRoots , the digital-first agency within Havas Media Network India, will spearhead Tata 1mg’s digital brand marketing initiatives, while Havas Media India will take charge of traditional media planning and buying across Print, TV, Radio, Cinema, and other offline channels. Together, the agencies will also manage OOH, influencer, experiential and other BTL activities — reflecting Havas’ integrated ecosystem approach that unifies strategy, creative, data, and media. [caption id=attachment_2355147 align=alignleft width=133] Gaurav Agarwal[/caption] Gaurav Agarwal, Co-founder of Tata 1mg , said the brand’s next phase of growth demanded a partner capable of bridging digital depth with media scale. “At Tata 1mg, our mission has always been to make healthcare accessible, affordable, and trusted for every Indian. As we scale, we were looking for a partner who could combine digital depth with media scale. Havas Media Network India, through the strength of PivotRoots and Havas Media, brings exactly that — a blend of innovation, agility, and deep consumer understanding.” [caption id=attachment_2304016 align=alignright width=150] Mohit Joshi[/caption] Positioning the win as a milestone moment, Mohit Joshi, CEO, Havas Media Network India , highlighted the brand’s purpose-led ethos and its impact on India’s healthcare landscape. “Tata 1mg is a purpose-driven brand that has transformed healthcare access in India, and we are excited to power its next growth journey. With the combined expertise of Havas Media India and PivotRoots, we will bring data-led strategy, advanced digital capabilities, and our Meaningful Media philosophy to deliver measurable brand impact.” [caption id=attachment_2483550 align=alignleft width=171] Shibu Shivanandan[/caption] Reinforcing the digital-heavy nature of the mandate, Shibu Shivanandan, CEO, PivotRoots , said the agency will deploy a mix of martech, data-driven creativity, and precision targeting to elevate consumer engagement. “Digital is at the core of Tata 1mg’s business model, and we are thrilled to lead its digital brand marketing journey. By leveraging advanced martech, data-driven creativity, and precision targeting, we aim to deepen consumer engagement and strengthen Tata 1mg’s leadership in India’s healthcare ecosystem.” Havas Media Network India has steadily expanded its presence across Tata Group brands in recent years. The Tata 1mg mandate further solidifies the network’s partnership with the conglomerate and underscores its commitment to delivering integrated media experiences that translate into measurable business outcomes.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 8:53 am

நாகர்கோவில்: வடமாநில குழந்தையை காட்டுக்குள் கடத்திய ஆட்டோ டிரைவர்; 4 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

மத்தியபிரதேச மாநிலம் போபால் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவருடைய மனைவி முஸ்கா. இவர்களுக்கு 3 வயது சாரா என்ற குழந்தை உள்ளது. இவர்கள் நாகர்கோவில் கோட்டார் சவேரியார் தேவாலய திருவிழாவிற்கு பலூன் விற்பனை செய்ய குடும்பத்துடன் வந்துள்ளனர். திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல, நேற்று மாலை குடும்பத்துடன் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றனர். ரயில் நிலையத்துக்குச் சென்றதும் ஆட்டோ டிரைவர் மூன்று வயது குழந்தை சாராவுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதாக கூறி, குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சன் கோட்டார் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார். மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த எஸ்.பி ஸ்டாலின் இதையடுத்து, மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ டிரைவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, குழந்தையை ஆட்டோ டிரைவர் தூக்கிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சியை மையமாகக் கொண்டு விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், குழந்தையை நாகர்கோவில் அருகே உள்ள இறச்சக்குளம் காட்டுப் பகுதிக்குள் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் குழந்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெற்றோருக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தையை கடத்திய நாகர்கோவிலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் யோகேஷ் குமார் என்பவர் கள்ளியங்காடு பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரது ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி ஸ்டாலின் பாராட்டினார். இந்த நிலையில், விசாரணைக்கிடையே கழிவறையில் வழுக்கி விழுந்து ஆட்டோ டிரைவர் யோகேஷின் கால் உடைந்தது. காலில் மாவுகட்டு போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுகிறார். கால் உடைந்த நிலையில் யோகேஷ் குமார் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், குழந்தையை தவறான எண்ணத்துடன் கடத்திய ஆட்டோ டிரைவர் யோகேஷ் குமாரை கண்காணிப்பு கேமரா காட்சியுடன் பின் தொடர்ந்தோம். குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பே குழந்தை மீட்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் மொபைல் லொக்கேஷன் மூலம் யோகேஷ் குமாரை கண்டுபிடித்து கைது செய்யப்பட்டார் என்றனர். கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது

விகடன் 8 Dec 2025 8:35 am

தவெக சின்னம் விரைவில் வெளியாகும்.. செங்கோட்டையன் கொடுத்த சஸ்பென்ஸ்!

மிக விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப் போகிறது என செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 8 Dec 2025 8:32 am

பெத்லஹேமில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லஹேம் நகரில், காஸா போரின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியுள்ளன. இயேசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதப்படும் இந்தத் தொன்மையான நகரில், ஒரு குகைக்கு மேலே அமைந்துள்ள தேவாலயம், கிறிஸ்தவா்களின் மிகவும் புனிதமான மற்றும் பழைமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். காஸா பகுதியில் தற்போது தற்காலிக போா்நிறுத்தம் நிலவுவதால், பெத்லஹேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகமாக மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. தேவாலயத்துக்கு […]

அதிரடி 8 Dec 2025 8:30 am

போா் விமானங்களுக்கு குறி: சீனாவுக்கு ஜப்பான் கண்டனம்!

தங்களது போா் விமானங்கள் மீது தாக்குதல் நடத்த சீனா ரேடாா் மூலம் குறிவைத்து பின்தொடா்வதாக ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்தது. தைவான் தங்களது பிராந்தியம் என சீனா கூறி வருகிறது. தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் தலையிடும் என அந்நாட்டு பிரதமா் சனே தகாய்ச்சி கடந்த மாதம் தெரிவித்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஷின்ஜிரோ ஹொய்ஸுமி கூறுகையில், ‘ஒக்கினவா தீவுக்கு அருகே அமைந்துள்ள சீன […]

அதிரடி 8 Dec 2025 8:30 am

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்: பஞ்சபூதத்தலங்களில் மண் தலம்; 3,500 ஆண்டுகள் பழைமையான மாமரம்!

புண்ணியம் தரும் ஏழு நகரங்களில் காஞ்சிபுரமும் உண்டு. கோயில் நகரம் என்று போற்றப்படும் காஞ்சி நகரத்தில் திரும்பிய திசை எங்கும் கோயில்களைக் காணலாம். தராசில் உலகத்தின் புண்ணிய க்ஷேத்ரங்களை எல்லாம் ஒரு தட்டில் வைத்து, காஞ்சியை மறு தட்டில் வைத்தால் காஞ்சியே சிறந்து விளங்கும் என்பதும் ஞானியர் வாக்கு. அப்படிபப்ட்ட காஞ்சிபுரத்தில் மையமாகத் திகழ்கிறது அருள்மிகு ஏலவார்குழலி அம்மை சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில், கச்சபேஸ்வரர் கோயிலுக்கு எதிரே அமைந்திருக்கிறது ஸ்ரீஏகாம்பரநாதர் ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களுள் இது மண்ணுக்குரிய (ப்ருத்வி) தலம். அன்னை பார்வதி மண்ணுலகுக்கு வந்து ஈசனை அடையும் வழியை பூமியில் உள்ள உயிர்களுக்கு உணர்த்தத் தவம் செய்தாள். அன்னையின் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், அவரைப் பல்வேறு தலங்களுக்கு வரச்சொல்லிக் காட்சி கொடுத்து அருள்பாலித்தாள். அவ்வாறு அன்னை தவம் செய்த இடங்களில் ஒன்று காஞ்சிபுரம். கம்பா நதிக்கரையில் ஒற்றை மாமரத்தின் கீழ் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டாள். ஒருநாள் கம்பா நதி வெள்ளம் திரண்டு வந்து மணல் லிங்கத்தை அழிக்க வந்தது. இதனால் அஞ்சிய அன்னை மணல் லிங்கத்தைத் தழுவிக்கொண்டார். இதனால் மகிழ்ந்த ஈசன் அன்னையை ஏற்றுக்கொண்டார். இங்கு ஈசனுக்கு, 'கச்சி ஏகம்பன்' என்றே திருநாமம். ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர் ஆகிய திருப்பெயர்களும் சுவாமிக்கு உண்டு. இங்குதான் காமாட்சி அன்னை 32 அறங்கள் செய்தார். கச்சியன், ஏலவார்குழலி, காமாட்சி என்பது அன்னையின் திருநாமம். கம்பா நதி, சிவகங்கை மற்றும் சர்வ தீர்த்தம் போன்றவை இத்தலத்தின் தீர்த்தங்கள் ஆகும். ஆன்மிக வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் புகைப்படத் | தொகுப்பு-1 சக்தி, பிரம்மா, திருமால், திருமகள், கலைமகள், ருத்திரர்கள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், ஐயடிகள் காடவர்கோன், பரணதேவர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் போன்றவர்களால் வணங்கப்பட்டவர் கச்சி ஏகம்பன். 'திருவொற்றியூரை விட்டு நீங்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து திருமணம் செய்த சுந்தரர், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் தனது கண்ணை இழந்தார். இதனால் தன் தவற்றுக்கு வருந்திய சுந்தரர், இங்கு வந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி, ‘ஆலம்தான் உகந்து அமுது செய்தானை’ என்ற பதிகத்தைப் பாடினார். அதன் பயனாக, ஒரு கண் பெற்றார். எனவே, இங்கு வந்து வணங்கினால் கண் சம்பந்தமான அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும் என்பதும் ஐதிகம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரம்மா, திருமால், ருத்திரர்களால் பூசிக்கப்பட்ட ஈசனுக்கு இங்கே தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அவர்கள், முறையே வெள்ளக் கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்று தனிச் சந்நிதிகளில் வணங்கப்படுகிறார்கள். இந்த ஆலய தலவிநாயகர், 'விகடசக்கர விநாயகர்.' இவர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக வீற்றிருக்கிறார். பெருமாளின் சக்கரத்தை விழுங்கி லீலை புரிந்து விகடக் கூத்தாடியவர். பெருமாள் வணங்கிக் கேட்டுக்கொள்ள அந்த சக்கரத்தை அருளியவர். ஒன்பது நிலைகள் கொண்ட ராஜகோபுரம் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509-ம் ஆண்டு கட்டப்பட்டது. கருவறையில் லிங்க வடிவில் காட்சி தரும் ஈசன் மணலால் ஆனவர். சுயம்புமூர்த்தி. எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. பதிலாகப் புனுகுச் சட்டமே சாத்தப்படுகிறது. இங்கு ஈசன் மீது ரதசப்தமி நாளில் சூரியனின் ஒளிக்கதிர்கள்பட்டு அவை வணங்கி வழிபடும் அதிசயம் நடைபெறும். எனவே இது சூரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்தின் தலவிருட்சம் மாமரம். இந்த மாமரம் சுமார் 3500 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். இந்த மாமரம் நான்கு கிளைகளாகப் பிரிந்திருக்கின்றன. இந்த நான்கு கிளைகளும் நான்கு வேதங்கள் என்கிறார்கள். இந்த மாமரத்தில் நான்கு விதமான சுவைகளில் கனிகள் வளர்கின்றன. இதை உண்டால் பிள்ளைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. வருடம்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாவது நாள், `மாவடி சேவை’ வைபவம் இங்கு சிறப்பாக நடைபெறும். இதை தரிசனம் செய்தால் இல்லறம் செழிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பதும் நம்பிக்கை. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஐயடிகள் காடவர்கோன், திருகுறிப்புத் தொண்டர், கழற்சிங்க நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரோடு தொடர்பு கொண்ட ஆலயமிது. இங்கு பல்வேறு காலத்தைய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு அவை படியெடுக்கப்பட்டுள்ளன. உத்தமச் சோழன், ராஜராஜன் தொடங்கி முதலாம் குலோத்துங்கன், விஜயகண்ட கோபாலன், விஜயநகர சதாசிவன் ஆகியோர்களின் கல்வெட்டுகள் வரை இருக்கின்றன. அதில் சொல்லப்பட்டு இருக்கும் தகவல்களும் சுவாரஸ்யமானவை. பல்லவர்கள் காலத்துக் கோயில் இது எனப்படுகிறது. திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!

விகடன் 8 Dec 2025 7:53 am

``எனக்கு சரியான வீடு கூட இல்லை'' - கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா நெகிழ்ச்சி பேட்டி

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர் இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம் பெற்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று, உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார். கேரம் வீராங்கனை மகளிர் ஒற்றையர் பிரிவில் கீர்த்தனா, இந்தியாவின் மற்றொரு வீரங்கனையான காஜல் குமாரியை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் கீர்த்தனா - காஜல் குமாரி ஜோடி, மற்றொரு இந்திய ஜோடியான மித்ரா - காசிமாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோல கீர்த்தனா உட்பட 4 பேர் கொண்ட மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி மாலத்தீவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களும், காசிமா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களும், மித்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களும், அப்துல் ஆசிக் ஒரு தங்கப் பதக்கமும் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். நேற்று பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆஷிக் அகிய சென்னை திரும்பினர். சாதனை படைத்துத் திரும்பிய அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரம் வீரர், வீராங்கனைகள் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கேரம் வீராங்கனை கீர்த்தனா, தமிழ்நாடு மற்றும் சென்னை கேரம் விளையாட்டு சங்கங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த உலகக் கோப்பையில் எப்படி கலந்து கொண்டு விளையாடப் போகிறேன் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்னை நேரில் அழைத்து ரூ.1.50 லட்சம் வழங்கினார். இதன் மூலமே நான் இந்த உலக கோப்பையில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். முதல் முறையாக இந்திய நாட்டிற்காக விளையாடியது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது பெற்றோர், குடும்பத்தார் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். தமிழ்நாட்டில் கேரம் விளையாட்டு முன்பை விட அதிகம் வளர்ந்துள்ளது. மூன்று தங்க பதக்கங்களை தற்போது வென்றுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேரம் வீராங்கனை கீர்த்தனா நாங்கள் வெற்றி பெற்றதையடுத்து பல்வேறு தரப்பினர் எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் எங்களது நன்றிகள் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எனக்கு சரியான வீடு கூட இல்லை, அரசு அதையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.'' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். உலகக் கோப்பை வென்ற பெண்கள் அணி - இந்தியாவின் வெற்றி கற்றுத்தரும் 2 முதலீட்டுப் பாடங்கள்!

விகடன் 8 Dec 2025 7:34 am

‘இந்திய ODI, டெஸ்ட் அணிகளில்’.. கோலிக்கு மாற்று இவர்தான்? பிசிசிஐ மீட்டிங்கில் அறிவித்த கௌதம் கம்பீர்!

இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இனி விராட் கோலிக்கு மாற்றாக இந்த வீரரைதான் ஆட வைக்க வேண்டும் என பிசிசிஐ மீட்டிங்கில் கௌதம் கம்பீர் தெரிவித்ததகாவும், இதற்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சமயம் 8 Dec 2025 7:31 am

நெற்செய்கையை தயார்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

தேசியத் தேவையாகக் கருதி, அநுராதபுரம் மாவட்டத்தில் உடனடியாகப் பெரும்போக நெற்செய்கையைத் தொடங்குவதற்கு தயாராகுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து நேற்று நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், பயிர்ச் சேதங்களுக்காக நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த இழப்பீட்டை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இதனை உரியவர்களுக்கு மட்டுமே வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் […]

அதிரடி 8 Dec 2025 7:21 am

வங்காள விரிகுடாவில் புதிதாக உருவான காற்றுச் சுழற்சி ; யாழ் பல்கலைக்கழக நிபுணர் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வானிலை எதிர்வுகூறலொன்றை விடுத்து, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் […]

அதிரடி 8 Dec 2025 7:17 am

லண்டனில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழன்

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நபர் ஒருவரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். லண்டனிலுள்ள உணவகம் ஒன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த 32 வயதான ஜெயந்தன் இராமச்சந்திரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 25 வயதான Dequarn Williams என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி […]

அதிரடி 8 Dec 2025 7:15 am

கேட்டி பெர்ரி ஜஸ்டின் ட்ரூடோவுடன் இன்ஸ்டாகிராமில் இணைந்தனர்

பாடகி கேட்டி பெர்ரி மற்றும் முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜப்பான் பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதை அடுத்து, இருவரும் அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளனர். ஒரே படத்தில் பெர்ரியும் ட்ரூடோவும் செல்ஃபி எடுக்க சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கன்னங்கள் தொடுகின்றன. மற்றொரு படத்தில்இந்த ஜோடி சுஷியை (உணவு) பார்ப்பதைக் காட்டுகிறது. பெர்ரி அல்லது ட்ரூடோ இருவருமே தங்கள் உறவு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் இருவரும் ஒன்றாக இருக்கும் பல படங்கள் பல மாதங்களாக ஊகங்களாக வளர்ந்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெர்ரியின் இசை நிகழ்ச்சியில் ட்ரூடோ கலந்து கொண்டது, பாப் நட்சத்திரத்துடனான காதல் பற்றிய வதந்திகளைத் தூண்டியது.

பதிவு 8 Dec 2025 7:14 am

ஆபிரிக்க நாடான பெனினில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முறியடிப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான பெனின் குடியரசில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஈகோவாஸ் படைகள் நிறுத்தப்பட்டன. தேசிய தொலைக்காட்சியில் படையினர் குழு ஒன்று ஆட்சியைக் கைப்பற்றுவதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஆட்சிக் கவிழ்ப்பை முறியடித்ததாக அரசாங்கம் கூறியது. நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஜனாதிபதி பேட்ரிஸ் டாலோன் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். விசுவாசமான படைகள் கலகக்காரர்கள் வத்திருந்த கடைசி எதிர்ப்பின் பகுதிகளையும் அகற்றிவிட்டதாக பெனின் ஜனாதிபதி கூறினார். தற்போது அந்நாட்டில் ECOWAS இப்போது படையினரை நிறுத்தியுள்ளது. கானா, ஐவரி கோஸ்ட், நைஜீரியா மற்றும் சியரா லியோனில் இருந்து ECOWAS துருப்புக்கள் பெனினுக்கு அனுப்பப்படும். பெனின் குடியரசின் அரசியலமைப்பு ஒழுங்கையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க, ECOWAS இன் வீரர்கள் பெனின் அரசாங்கத்தையும் குடியரசுக் கட்சி இராணுவத்தையும் ஆதரிப்பார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பிற்பகலில், பெனினின் மிகப்பெரிய நகரமும் அரசாங்கத் தலைமையிடமுமான கோட்டோனோவில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன. அவை வான்வழித் தாக்குதலின் விளைவாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. வெடிச் சத்தங்களுக்கு முன்னர், விமான கண்காணிப்பு தரவுகளின்படி, அண்டை நாடான நைஜீரியாவிலிருந்து மூன்று விமானங்கள் பெனின் வான்வெளிக்குள் நுழைந்து திரும்பியதாகக் காட்டியது. முன்னாள் பிரெஞ்சு காலனியான பெனின், ஆப்பிரிக்காவின் மிகவும் நிலையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் டாலோன் தனது கொள்கைகள் மீதான விமர்சனங்களை அடக்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்த நாடு கண்டத்தின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும், ஆனால் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது.

பதிவு 8 Dec 2025 7:00 am

பாரிஸ் லூவ்ரே நீர் கசிவு நூற்றுக்கணக்கான வரலாற்று புத்தகங்களை சேதப்படுத்தியது

பிரான்சின் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களின் ஒரு பெரிய தொகுப்பு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட நீர் கசிவின் விளைவாக சேதமடைந்ததை உறுதிப்படுத்தினர். இந்தக் கசிவு எகிப்திய தொல்பொருள் துறை அமைந்துள்ள அருங்காட்சியகத்தின் மோலியன் பிரிவைப் பாதித்தது. நவம்பர் 26 அன்று கண்டுபிடிக்கப்பட்ட கசிவினால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 300 முதல் 400 படைப்புகள் சேதமடைந்துள்ளதாக துணை நிர்வாகி பிரான்சிஸ் ஸ்டீன்பாக் கூறினார். வரலாற்று புத்தகங்களை மிகவும் பயனுள்ளவை ஆனால் எந்த வகையிலும் தனித்துவமானவை அல்ல என்று ஸ்டீன்பாக் விவரித்தார். இந்த சேதத்தால் எந்த பாரம்பரிய கலைப்பொருட்களும் பாதிக்கப்படவில்லை என்று ஸ்டீன்பாக் கூறினார். இந்த கட்டத்தில் இந்த சேகரிப்புகளில் ஈடுசெய்ய முடியாத மற்றும் உறுதியான இழப்புகள் எதுவும் இல்லை என்று மேலும் கூறினார். சேதமடைந்த புத்தகங்கள் உலர்த்தப்பட்டு, மீட்டெடுக்க ஒரு புத்தகக் கட்டுபவரிடம் அனுப்பப்பட்டு, பின்னர் அலமாரிகளுக்குத் திரும்ப அனுப்பப்படும் என்று ஸ்டெய்ன்பாக் கூறினார். சனிக்கிழமை சிறப்பு ஆன்லைன் இதழான La Tribune de l'Art இல் வெளியிடப்பட்ட சம்பவம் குறித்த ஒரு கட்டுரையில் அந்தக் கூற்றுக்கள் நேரடியாக மறுக்கப்பட்டன . சில புத்தகப் பிணைப்புகள் சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும், கட்டிட மேம்பாடுகள் மற்றும் சேகரிப்பைப் பாதுகாப்பதற்கான பிற நடவடிக்கைகளுக்காக எகிப்தியத் துறையின் பலமுறை கோரிக்கைகளை அருங்காட்சியக நிர்வாகிகள் புறக்கணித்ததாகவும் அந்தக் கட்டுரை மேலும் குற்றம் சாட்டியது.

பதிவு 8 Dec 2025 6:46 am

கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சதீஷ் (வயது: 36). இவரது தாயார் வீரம்மாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது தொடர்பாக, தனது தாய் இறந்த நிலையில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலக சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இது குறித்து, மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு (வயது: 46) என்பவரிடம் சதீஷ் பலமுறை கேட்டும், அவர் இழுத்தடித்து வாரிசு சான்றிதழ் வழங்காமல் இருந்து வந்துள்ளார். லஞ்சம் வாங்கி கைதான பிரபு ( 46) சதீஷ் காரணம் கேட்டபோது, சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.3000 லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் வழங்கப்படும் என நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சதீஷ் இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய மூவாயிரம் ரூபாய் நோட்டுகளை சதீஷிடம் கொடுத்தனர். அதை அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் சதீஷ் வழங்கினார். அப்போது, மூவாயிரம் ரூபாய் லஞ்சம் பெறும் தருணத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பிரபுவை கையும் களவுமாக பிடித்தனர். வாரிசு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஒருவர் ரூ.3000 லஞ்சம் கேட்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 8 Dec 2025 6:43 am

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவர்கள் விடுதலை

நைஜீரியாவில் கடந்த மாதம் ஒரு கத்தோலிக்கப் பள்ளியிலிருந்து கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவர்களை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். வட-மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் இணை கல்வி உறைவிடப் பள்ளியில் இருந்து நவம்பர் 21 அன்று துப்பாக்கி ஏந்தியவர்களால் 315 மாணவர்களும் ஊழியர்களும் கடத்தப்பட்டதாக நைஜீரியா கிறிஸ்தவ சங்கம் (CAN) தெரிவித்துள்ளது . அடுத்த சில மணிநேரங்களில் ஐம்பது மாணவர்கள் தப்பித்து வந்தனர். இன்னும் சிறைபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் 165 மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் கதி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. விடுவிக்கப்பட்ட 100 பள்ளி மாணவர்களும் தலைநகர் அபுஜாவை அடைந்துவிட்டதாக ஐ.நா. வட்டாரம் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. அவர்கள் திங்கட்கிழமை நைஜர் மாநிலத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் திருப்பி அனுப்பப்பட்டதை ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் சண்டே டேர் AFP இடம் உறுதிப்படுத்தினார். 100 குழந்தைகளின் விடுதலை குறித்து ஒளிபரப்பாளர் சேனல்ஸ் டெலிவிஷன் உட்பட உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்த விடுதலை இராணுவ பலத்தின் விளைவாக ஏற்பட்டதா அல்லது பேச்சுவார்த்தையின் விளைவாக ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எந்தக் குழு பொறுப்பு என்பதும் தெரியவில்லை. குழந்தைகள் விடுதலை குறித்து தங்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என்று நைஜர் மாநில அதிகாரிகளும், கேன்சஸ் தேசிய பாதுகாப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன. நைஜீரிய அரசாங்கமும் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

பதிவு 8 Dec 2025 6:36 am

அட்டைப்படம்

அட்டைப்படம்

விகடன் 8 Dec 2025 6:01 am

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை முறியடித்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசிராபாத் பகுதியில் தண்டவாளத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை (ஐஇடி) அடையாளம் தெரியாதவர்கள் வைத்ததாக டான் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த சட்ட அமலாக்க முகமைகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் வெடிக்கும் சாதனத்தை அவர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இதற்கிடையில், பெஷாவரில் இருந்து குவெட்டா செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் […]

அதிரடி 8 Dec 2025 5:57 am

பிரித்தானியாவின் புதிய EVisa: புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

பிரித்தானியா தனது புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. அவ்வகையில், பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள், தங்கள் அடையாளம் மற்றும் புலம்பெயர்தல் நிலைப்பாட்டை டிஜிட்டல் மயமாக்கவேண்டும். இப்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் அடையாளம் மற்றும் புலம்பெயர்தல் நிலைப்பாடு, eVisa என அழைக்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோருக்கு உருவாகியுள்ள அச்சம் பிரித்தானியாவில் சட்டப்படி வாழும் புலம்பெயர்ந்தோர், வேலை செய்ய, பயணிக்க, வீடு வாடகைக்கு பிடிக்க மற்றும் படிப்பதற்காக, தங்கள் அடையாளமாக இந்த eVisaவை பயன்படுத்தவேண்டும். காகித வடிவில் வழங்கப்படும் […]

அதிரடி 8 Dec 2025 3:30 am

38 நோயாளிகளிடம் அத்துமீறிய பிரித்தானிய மருத்துவர்; அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்

பிரித்தானியாவில் மருத்துவராக பணியாற்றிவந்த ஒருவர், 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமைச் சேர்ந்த நத்தானியேல் ஸ்பென்சர் (38) என்னும் மருத்துவர், 2017 முதல் 2021வரையிலான காலகட்டத்தில், 13 வயதுக்கு குறைவான பிள்ளைகள் முதல் 38 நோயாளிகளிடம் அத்துமீறியுள்ளார். அவர் மீது, பாலியல் தாக்குதல், வன்புணர்வுக் குற்றச்சாட்டுகள், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகளிடம் அத்துமீறியது உட்பட 45 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் மருத்துவராக பணி புரிய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள […]

அதிரடி 8 Dec 2025 1:30 am

வெள்ளத்தால் சிதைந்து போன குடும்பத்துக்கு எருமைமாட்டால் வந்த மற்றுமொரு பேரிடி

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டில் இருந்து பொருட்களை சேகரிக்க முயன்றபோது நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை எருமை மாடு தாக்கியதில் உயிரிழதுள்ளார். 30 ஆம் திகதி, தனது வீட்டிற்கு அருகில் எருமைமாடு தாக்கியதில் தெஹியட்டகண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மனம்பிடிய மகந்தோட்டையைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். சமீபத்தில் தனது வீடு […]

அதிரடி 8 Dec 2025 12:30 am

டொலருக்கு பை-பை –மீண்டும் BRICS நாணய வதந்தி., கியோசாக்கி எச்சரிக்கை

அமெரிக்க எழுத்தாளர் மற்றும் முதலீட்டாளர் ராபர்ட் கியோசாக்கி (Robert Kiyosaki) மீண்டும் அமெரிக்க டொலர் குறித்து அபாய மணி அடித்துள்ளார். BRICS நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) தங்கத்தை ஆதாரமாகக் கொண்டு புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தும் என்கிற வதந்தி மீண்டும் கிளம்பியுள்ள நிலையில், டொலர் வைத்திருப்பவர்கள் மிகப்பெரிய இழப்பை சந்திப்பார்கள் என அவர் எச்சரித்துள்ளார். BRICS நாணய வதந்தி கியோசாக்கி, “BRICS நாடுகள் ‘Unit’ எனப்படும் தங்க ஆதார நாணயத்தை அறிவித்துள்ளன. இதனால் […]

அதிரடி 8 Dec 2025 12:30 am

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

கொல்லத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசமாகின. கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள அஷ்டமுடி ஏரியில் நங்கூரமிட்டிருந்த மீன்பிடி படகுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மேலும் பரவாமல் இருக்க உள்ளூர் மக்களும் தீயணைப்புப் படையினரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதற்கட்ட தகவலின்படி, சுமார் 10 படகுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று […]

அதிரடி 7 Dec 2025 11:30 pm

வங்கி அதிகாரிக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; உயிரை பறித்த உலக்கை

பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வசித்து வந்தார். குடும்ப தகராறு குடும்ப தகராறு அதிகரித்தபோது, ​​மனைவி வீட்டிற்குள் இருந்த உலக்கையால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், அவரது குடும்பத்தினரால் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் […]

அதிரடி 7 Dec 2025 11:30 pm

யார் இந்த பீட்டர் எல்பெர்ஸ்? இண்டிகோ ஏர்லைன்ஸில் இவருடைய பங்களிப்பு என்ன?

தற்போது இண்டிகோ சந்திக்கும் வரலாறு காணாத விமான ரத்து மற்றும் தாமத நெருக்கடிக்கு, விமானிகள் பற்றாக்குறையை முன்கூட்டியே திட்டமிடாததே காரணம். இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 7 Dec 2025 11:18 pm

இந்தியாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் சாலை! எந்த மாநிலத்தில் தெரியுமா?

இந்தியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் சாலை பெயரிடப்பட உள்ளது. இது எந்த மாநிலத்தில் என்று விரிவாக காண்போம்.

சமயம் 7 Dec 2025 11:10 pm

வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை –து.கௌரீஸ்வரன்

வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை ==================================================================================== இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் கிழக்கிலிருந்து பிரகாசித்த ஒரு மூத்த அரசியல்வாதியான… The post வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை – து.கௌரீஸ்வரன் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 10:59 pm

நாடு கடத்தல் சட்டம் என்றால் என்ன? சட்டவிரோதமான குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன?

இந்த மசோதாவின் கீழ், விதிகளை மீறி இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டினரை உடனடியாக நாடு கடத்த குடியேற்ற பணியகத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் இருக்கும், மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்

சமயம் 7 Dec 2025 10:54 pm

16+ வயதினர் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த தடை! ஆஸ்திரேலியாவில் அமலான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதித்து புதிய சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை விரிவாக காண்போம்.

சமயம் 7 Dec 2025 10:46 pm

மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!

மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில், வரவேற்பு வளைவுக்கு… The post மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 10:42 pm

ராணுவ தளபதி குறித்து விமர்சனம்: இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம்

இஸ்லமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால், இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர் சிறைக்குள் சென்று இம்ரான்கானை சந்தித்தார். அதன்பிறகு, சிறையில் இருந்தபடியே வெளியிட்ட அறிக்கையில் ராணுவ தளபதி அசிம் முனீரை இம்ரான்கான் கடுமையாக விமர்சித்திருந்தார். அசிம் […]

அதிரடி 7 Dec 2025 10:30 pm

நுவரெலியாவை சுத்தப்படுத்த வந்த குழுவிற்கு இரவில் நேர்ந்த அசம்பாவிதம்

நுவரெலியா நகரத்தை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட குழுவினரை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிதீவிர வானிலை காரணமாக சேதமடைந்த நுவரெலியா நகரிலுள்ள பொது இடங்களையும், நகரத்தையும் சுத்தப்படுத்துவதற்காக களுத்துறை பிரதேசத்திலிருந்து வந்த குழுவினர் பயணித்த பேருந்தே நேற்று (06) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து களுத்துறை பகுதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்னர் இவர்கள் நுவரெலியாவுக்கு சென்று சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். தமது பணி நிறைவடைந்த பிறகு, நுவரெலியாவிலிருந்து ரதெல்ல குறுக்குப்பாதை வழியாக களுத்துறை நோக்கிப் பேருந்து […]

அதிரடி 7 Dec 2025 10:30 pm

உதவிப்பொருட்களுடன் 2 விமானங்களில் அமெரிக்க படையினர் சிறிலங்கா வருகை

சிறிலங்காவில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, உதவிப் பொருட்களுடன், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளன. இந்த விமானங்களில், அமெரிக்க விமானப்படையின் 36வது அவசரகால மீட்புக் குழுவைச் சேர்ந்த விமானப்படை வீரர்களும், சிறிலங்கா வந்துள்ளனர். பேரிடர் முகாமைத்துவ மையத்தால் அடையாளம் காணப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு – தங்குமிடப் பொருட்கள், தண்ணீர்,

புதினப்பலகை 7 Dec 2025 9:44 pm

சென்னையில் மாடுகள் அட்டகாசம்.. கட்டுப்படுத்த மாநகராட்சியின் புதிய திட்டம்!

சென்னை மாநகராட்சி, சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக, புதிய கால்நடை வளர்ப்பு மையங்களில் மாடுகளைப் பராமரிக்க தன்னார்வலர்களையும் தொண்டு நிறுவனங்களையும் அழைத்துள்ளது.

சமயம் 7 Dec 2025 9:42 pm

2026 தேர்தல்: திருமயம் தொகுதியில் திமுக ரகுபதி கை ஓங்குமா? களநிலவரம் இதுதான்...

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் 2026ல் மீண்டும் திமுக அமைச்சர் ரகுபதிக்கு ராசி உள்ளதா? என்பது குறித்த கள நிலவரத்தை விரிவாக காண்போம்.

சமயம் 7 Dec 2025 9:35 pm

பிரித்தானியாவில் வாடகைக்கு கணவர்கள்? எழுந்த சர்ச்சை.. உண்மை இதுதான்

பிரித்தானியாவில் Husband 4 Hire என்ற சேவை வாடகைக்கு கணவர்கள் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வைரலாகியுள்ளது. தனிப்பட்ட உறவுக்காக வாடகைக்கு உலகின் சில நாடுகளில் பலதார மணம் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், லாட்வியா மற்றும் பிரித்தானியாவில் வாடகைக்கு விடப்படும் கணவன் என்ற சேவை உள்ளது. உண்மையில் இது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகும். தனிப்பட்ட உறவுக்காக துணையை வாடகைக்கு எடுப்பதாக இந்த சேவையை பிற நாடுகளில் தவறாக புரிந்துகொள்கின்றனர். அதாவது, வீட்டுப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைக்குதான் […]

அதிரடி 7 Dec 2025 9:30 pm

மலையக தமிழ் உறவுகளிற்கு நிதி உதவ புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் ஆள்ளிவீசிவருகின்றன.ஆனால் நிஜயத்தில் உண்மை எவ்வாறு இருக்கின்றது. இந்த 2 ரூபாய் நாணயத்தின் கீழ் ஒரு மலையக தமிழ் பெண்ணின் உடல் புதைக்கப்பட்டுள்ளது, அவளை தோண்டி எடுத்து ஒரு கண்ணியமான அடக்கம் செய்ய யாரும் இல்லை. அவளுடைய குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் வந்து அவளைப் பார்க்கிறார்கள். நவலப்பிட்டியில் உள்ள அதே பகுதியில் ஒரு குழந்தை மற்றும் ஒரு கர்ப்பிணித் தாய் உட்பட 13 உயிர்கள் பலியாகின. தோண்டி எடுக்கப்பட்ட சில உடல்கள் துணியால் சுற்றப்பட்டு ஆழமற்ற கல்லறைகளில் புதைக்கப்பட்டன. 200 ஆண்டுகளாக நமது பொருளாதாரத்தை தங்கள் கைகளால் பிடித்துக் கொண்ட மக்களின் நிலை இதுதான். மலையக சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நிலமற்ற நபருக்கும் பாதுகாப்பான இடங்களில் நிலம் மற்றும் வீட்டுவசதி வழங்கப்படும் வரை நாம் இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடாதுஎன பதிவிட்டுள்ளார் களப்போராளியொருவர்.

பதிவு 7 Dec 2025 8:59 pm

கோவா தீ விபத்தில் 25 பேர் பலி.. இதுவரை 4 ஊழியர்கள் கைது.. கோவா முதல்வர் தகவல்!

கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மூச்சுத்திணறல் காரணமாகவே பெரும்பாலானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சமயம் 7 Dec 2025 8:58 pm

அமெரிக்க விமானப்படை மீண்டும் இலங்கையில்?

இறுதி யுத்தகாலத்தில் இலங்கைக்கு உதவிய இமொரிக்க விமானப்படை மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளது. இலங்கையில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசரகால பொருட்களை - தங்குமிடம் பொருட்கள், தண்ணீர், சுகாதார உதவி, உணவு மற்றும் மருத்துவ உதவி - கொண்டு செல்வதற்கு உதவியாக அமெரிக்கா விமானப்படையின் C-130J Super Hercules விமானங்கள் மற்றும் விமானப்படை குழுவினர் இன்று (07) இலங்கை வருகை தந்துள்ளனர். இவர்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து செயற்படவுள்ளனர்என தெரிவித்துள்ளார் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜுலி சங்.

பதிவு 7 Dec 2025 8:33 pm

யாழில் திடீர் பணக்காரர் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த விசேட அதிரடிப் படை

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். தேடுதல் அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனொரு கட்டமாக குறித்த நபரின் […]

அதிரடி 7 Dec 2025 8:30 pm

வெளிநாட்டில் ஜெலென்ஸ்கிக்கு உயிர் பயம் காட்டிய ட்ரோன்கள்: தீவிர விசாரணை முன்னெடுப்பு

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானம் டப்ளினில் தரையிறங்கியதும், திடீரென்று ட்ரோன்கள் வட்டமிட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கை சமீபத்திய மாதங்களில் விமான நிலையங்கள் மற்றும் மிக முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது மர்ம ட்ரோன்கள் திடீரென்று வட்டமிடுவது ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. இந்த ட்ரோன் செயல்பாடுகளுக்கு பின்னால் ரஷ்யாவின் நடவடிக்கை இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளும், ஜோ பைடன் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் […]

அதிரடி 7 Dec 2025 8:30 pm

ஆசியாவில் கண்டத்தில் மிகச்சிறிய நாடு.. அதுவும் இந்தியாவில் - எங்கு இருக்கு தெரியுமா?

ஆசியாவில் பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் மிகச்சிறிய நாடு எது தெரியுமா? அந்த குட்டி எங்குள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 7 Dec 2025 8:10 pm

அழகு கிறீம் பிடிக்கும் இலங்கை கடற்படை!

நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படை நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றியுள்ளது.. சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற வெளிநாட்டு சிகரெட்டுகள்,150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாததால், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகள்,அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் அடங்கிய தொகுதியை கடற்படை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 7 Dec 2025 8:06 pm

இண்டிகோ சேவை பாதிப்பு.. இதுவரை ரூ.610 கோடி REFUND.. விரைவில் சீராகும் சேவை!

இண்டிகோ விமான நிறுவனம், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பயணிகளின் உடமைகளை ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சமயம் 7 Dec 2025 7:58 pm

ராமர் கோவிலுக்கு மார்க்கெட் இல்ல..’’ இப்போது முருகனை பயன்படுத்தி அரசியல் - பாஜகவை சாடிய சீமான்!

ராமர் தொடர்பான விவாதங்கள் குறைந்து வரும் நிலையில், இப்போது முருகன் வழிபாட்டை அரசியல் நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சமயம் 7 Dec 2025 7:51 pm

NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்

NATO நீர்பரப்பில் புடினின் கோஸ்ட் கப்பல் நுழைந்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான “shadow fleet” எனப்படும் மறைமுக எண்ணெய் கப்பல்களில் ஒன்றான Kairos என்ற மிகப்பெரிய டாங்கர், கருங்கடலில் கட்டுப்பாடின்றி மிதந்து, NATO நீர்பரப்பில் நுழைந்தது. இந்த கப்பல், கடந்த நவம்பர் 29-ஆம் திகதி துருக்கி கடற்கரைக்கு அருகில், உக்ரைன் பயன்படுத்திய Sea Baby drone தாக்குதலுக்கு உள்ளானது. 1,49,000 டன் எடையுடைய, 899 அடி நீளமுள்ள இந்த கப்பல், ரஷ்யா எண்ணெய் தடைகளை […]

அதிரடி 7 Dec 2025 7:30 pm

இலங்கையில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்ப்பார்ப்பு

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (7) காலை பல சந்தர்ப்பங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பிற இடங்களில், பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று திணைக்களம் கணித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும். இடியுடன் கூடிய மழையுடன் தொடர்புடைய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

பதிவு 7 Dec 2025 7:20 pm

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கைவரிசையை காட்டிய இளைஞன் கைது

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இந்தச் சந்தேகநபர் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, நெதிமால, டி.பி. ஜயதிலக்க மாவத்தையில் வசிக்கும் 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த 32 வெளிநாட்டுப் புறாக்கள் கடந்த ஒக்டோபர் […]

அதிரடி 7 Dec 2025 7:15 pm

அணையா விளக்கும் மீட்டும் உடைப்பு

யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது. இந்நிலையில், குறித்த அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதன்பின் அணையா விளக்கு தூபியின் புனரமைப்புப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு புதிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைதினம் மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது. இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு 7 Dec 2025 7:15 pm

மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார்

முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார். தலைசிறந்த சிறந்த பேச்சாளராக திகழ்ந்த அவர் 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமைச்சர் பதவி இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ,ஊடகவியலாளராகவும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும்பணியாற்றினார். இராசதுரை […]

அதிரடி 7 Dec 2025 7:13 pm

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு –இருவர் ஆபத்தான நிலையில்

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகொன்றில் பண்ணை கடற்பகுதிக்கு சென்று , படகில் இருந்து குதித்து கடலில் நீச்சல் அடித்த போது அவர்கள் சுழிக்குள் அகப்பட்டு , கடல் நீரில் தத்தளித்த வேளை பண்ணை பகுதியில் நின்றவர்கள் அதனை அவதானித்து , […]

அதிரடி 7 Dec 2025 7:10 pm

தீடீரென சந்தித்த சங்கும் வீடும்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், சி.ரவீந்திரா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

பதிவு 7 Dec 2025 7:07 pm

இலங்கையில் டிட்வா புயல் பாதிப்பு.. ஆபரேஷன் சாகர் பந்து.. இந்திய ராணுவத்தில் 1,250 பேருக்கு சிகிச்சை!

இலங்கையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சாகர் பந்து' மூலம் உதவி செய்து வருகிறது. கள மருத்துவமனை ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்து உள்ளது.

சமயம் 7 Dec 2025 6:58 pm

அணையா விளக்கு மீண்டும் உடைத்தெறியப்பட்டது

யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் நடைபெற்ற வேளை அணையா விளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது. குறித்த அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதன்பின் அணையா விளக்கு தூபி அன்றைய தினமே மீண்டும் நிறுவப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி விஷமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது.

பதிவு 7 Dec 2025 6:53 pm

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு - இருவர் ஆபத்தான நிலையில்

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகொன்றில் பண்ணை கடற்பகுதிக்கு சென்று , படகில் இருந்து குதித்து கடலில் நீச்சல் அடித்த போது அவர்கள் சுழிக்குள் அகப்பட்டு , கடல் நீரில் தத்தளித்த வேளை பண்ணை பகுதியில் நின்றவர்கள் அதனை அவதானித்து , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் , மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். நான்கு இளைஞர்களையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் நிலையில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 7 Dec 2025 6:40 pm

பள்ளி,கல்லூரி மாணவிகளை ஏமாற்றிய கொடூரன்; போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்த காவல்துறை

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் 22 வயதான பிரவீன். கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்த இவன் , நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்திருக்கிறான். Rep image இந்த நிலையில், 18 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாகச் சொல்லி கர்ப்பமடையச்செய்திருக்கிறான். 5 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணின் வற்புறுத்தலின் பேரில் வீட்டிற்குத் தெரியாமல் கல்லூரி மாணவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறான். இந்தநிலையில் தான் இவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் பரிசோதனை மேற்கொள்ள செய்ததில் பள்ளி சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். கைதான பிரவீன் ஊட்டியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அன்றைய தினமே சிறுமிக்கு பிரசவமும் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரவீனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விகடன் 7 Dec 2025 6:34 pm

சென்னை ஏர்போர்ட்-கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் என்ன ஆச்சு? ஒப்புதல் கிடைக்க காத்திருப்பா?

சென்னை விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் நிலை என்ன என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. அதை விரிவாக காண்போம்.

சமயம் 7 Dec 2025 6:31 pm

வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.1,120 கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்​பானிக்கு சொந்​த​மான நிறு​வனங்​களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்​தது. பின்​னர் இந்த முதலீடு வாராக் கடன்​களாக மாறின. இதுகுறித்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் ரூ.11,000 கோடி பொது நிதி, யெஸ் வங்கி மூல​மாக அனில் அம்​பானி குழு​மத்​தின் நிதி நிறு​வனங்​களுக்கு வந்​துள்​ளது தெரிய​வந்​தது. இதையடுத்து அனில் அம்​பானி​யின் 18 சொத்​துக்​களை அமலாக்​கத் துறை தற்போது முடக்​கியது. இவற்​றின் மதிப்பு ரூ.1,120 கோடி ஆகும். […]

அதிரடி 7 Dec 2025 6:30 pm

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிரடி 7 Dec 2025 6:12 pm

AUS vs ENG 2nd Test: ‘5ஆவது வெற்றியைப் பெற்ற ஆஸி’.. ஆனா WTC பைனலுக்கு முன்னேறுவது கஷ்டம்? காரணம் இதுதான்!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான பைனல் வாய்ப்பு மிகவும் கடினமாக இருக்கும்.

சமயம் 7 Dec 2025 6:04 pm

‘டித்வா’புயல் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்காவின் உடனடி உதவி: C-130J விமானங்கள் வருகை! !

‘டித்வா’ புயல் அனர்த்தத்தின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக, அமெரிக்காவின் வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J… The post ‘டித்வா’ புயல் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்காவின் உடனடி உதவி: C-130J விமானங்கள் வருகை! ! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 6:02 pm

``அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' - தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது கம்பீர் தாக்கு

இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அதிலும், நியூசிலாந்திடம் 3-0 எனவும், தென்னாப்பிரிக்காவிடம் 2-0 எனவும் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. அணித் தேர்வில் கம்பீர் அதிகமாக தலையிடுவதாலும், ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஐ.பி.எல் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்வதாலும், பேட்டிங்கோ பவுலிங்கோ அந்தந்தப் பிரிவின் நிபுணர்களைக் (ஸ்பெஷலிஸ்ட் ப்ளேயர்களை) தேர்வு செய்யாமல் ஆல்-ரௌண்டர்களைத் தேர்வு செய்வதாலும்தான் சொந்த மண்ணில் இவ்வாறு மோசமாக டெஸ்ட் தொடர்களை இழக்க நேர்கிறது என கம்பீருக்கு மீது விமர்சனங்கள் குவிந்தன. கவுதம் கம்பீர் - அஜித் அகர்கார் இத்தகைய விமர்சனங்களுக்கிடையிலும் டெஸ்ட் தோல்விகளுக்கு, “சாம்பியன்ஸ் டிரோபியும், ஆசியக் கோப்பையும் வென்றதும் இதே கம்பீர்தான்” என சம்பந்தமே இல்லாமல் வைட் பால் தொடர்களை ஒப்பிட்டார் கம்பீர். அவர் சொன்னதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அந்த இரண்டு தொடர்களும் துபாயில் நடந்தவை. இவ்வாறான சூழலில்தான் ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், “சொந்த மண்ணில் நமது டெஸ்ட் அணி இவ்வளவு பலவீனமாக இருப்பதை நான் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ரெட் பால் (Red Ball) ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்படாவிட்டால் இதுதான் நடக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா ஒரு ரெட் பால் ஃபார்மட் ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய நேரம் இது” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பார்த் ஜிண்டால் இந்த நிலையில், நேற்று தென்னாப்பிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்ற கையோடு, டெல்லி அணியின் இணை உரிமையாளரைப் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருக்கிறார் கம்பீர். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், “முடிவுகள் (டெஸ்ட் தொடரில்) எங்களுக்கு சாதகமாக வராததால் நிறைய பேச்சுகள் வந்தன. ஆனால் இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் இல்லை (கில்); இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் பேட்டிங் செய்யவில்லை. இதைப் பற்றி யாரும் பேசவில்லை.” `என்னை டார்கெட் பண்ணுங்க, ஆனா அந்த 23 வயது குழந்தையை விட்ருங்க’- ஹர்ஷித் ராணாவுக்காக கொதித்த கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் எந்த சாக்குபோக்கும் கூறாததால், உண்மையை யாரும் பேசக்கூடாது என்று அர்த்தமல்ல. அணி ஒரு மாற்றத்தில் (Transition) இருக்கும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஃபார்ம் பேட்ஸ்மேனான, 7 போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தவரான கேப்டனை இழந்தால் முடிவுகள் கடினமாத்தான் இருக்கும். India Cricket Team Captain Shubman Gill ஏனெனில் ரெட் பால் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லை. யாரும் அதைப் பற்றி பேசவில்லை. பிட்ச் பற்றி என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், கிரிக்கெட்டுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களெல்லாம் சில விஷயங்களைச் சொன்னார்கள். IND vs SA: கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல - ஏபிடி சொல்லும் காரணம் என்ன? ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் (பார்த் ஜிண்டால்) பயிற்சியாளர் பொறுப்பை பிரித்துக் கொடுப்பது பற்றிக் கூறினார். இது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரவர் தங்கள் வரம்புக்குள் இருப்பது நல்லது. நாம் ஒருவரின் வரம்புக்குள் செல்லாதபோது, அவர்களும் நம் வரம்புக்குள் வர எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கம்பீர் - Gautam Gambhir கம்பீரின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, `தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்டில் வெறும் 124 ரன்கள் டார்கெட்டை அடிக்கக் கூட 7 போட்டிகளில் 1,000 ரன்கள் அடித்த கேப்டன்தான் வேண்டுமா? அவர் மட்டும் இந்திய அணியில் வீரரா மற்றவர்கள் எல்லாம் வெறுமனே அணியில் இருக்கிறார்களா?' என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. முன்னதாக, 2018-ல் கொல்கத்தா அணி கம்பீரை ஏலத்தில் விட்டபோது பார்த் ஜிண்டாலின் டெல்லி அணி ரூ. 2.80 கோடிக்கு எடுத்து அணியின் கேப்டனாக்கியது. ஆனால், கம்பீர் தலைமையில் டெல்லி அணி மோசமாக ஆடியதால் பாதியிலேயே தொடரிலிருந்து விலகியதோடு தனது சம்பளத்தையும் கம்பீர் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியா இவ்வாறு மோசமாகத் தோல்வியடையும்போது கேள்வியே எழுப்பக்கூடாது என்பது என்று கம்பீர் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்?

விகடன் 7 Dec 2025 5:53 pm

லோக்சபா கேள்வி: தமிழகத்தில் இருந்து வெளிநாடு சென்றோர் விவரம்! மத்திய அரசு விளக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றவர்கள் விபரம் குறித்து தமிழக எம்.பி. மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

சமயம் 7 Dec 2025 5:50 pm

``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண்; திருச்செந்தூர் முருகனின் வேலுக்காக கலைஞர் நீதி கேட்டு நெடும்பயணம் தொடங்கிய மண். மு.க.ஸ்டாலின் பாசக்காரர்களான மதுரைக்காரர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாமதுரைக்கு வளர்ச்சி என்றாலே அது தி.மு.க. ஆட்சியில்தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், கடந்த கால தி.மு.க. ஆட்சிகளில் மதுரைக்காக நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். தி.மு.க. அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மதுரையை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் நிகழ்ச்சிதான் இது. ஒரு லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கியும், 2 இலட்சத்து 58 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். இதுவரை நாம் நடத்தி இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அரசு விழா இந்த விழாதான். அமைச்சர் மூர்த்தியின் பிரம்மாண்ட ஏற்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்; வியக்கிறேன். இந்த அரசு விருது விழாவை சித்திரை திருவிழாபோல் ஆக்கியுள்ளார். தன் துறைகள் மூலம் தமிழ்நாட்டு கருவூலத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தந்து நல்ல பெயர் பெற்ற மூர்த்தி, இன்றைக்கு இது அரசு விழாவா அல்லது மாநாடா என்று சொல்லக்கூடிய வகையில் மதுரை மக்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அதேபோல், இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆற்றலும், அறிவும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்; சிறந்த இறைப்பற்றாளர். அதே நேரத்தில், கடவுளின் பெயரில் வெறுப்பை விதைக்கக் கூடியவர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் சரியாகப் பயன்படுத்தி பதிலடி கொடுப்பவர். அவருக்கும் பாராட்டுக்கள். மதுரை விழாவில் கடந்த கால அவல ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஒட்டுமொத்த இந்தியாவும் - ஏன், உலக நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முற்போக்கான, முன்னோடியான மக்கள் நலத் திட்டங்களை கடந்த நான்கு ஆண்டு காலங்களில் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ``மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது..? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி அதிக பயனாளிகளைக் கொண்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். புதுமைப்பெண் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 63 ஆயிரத்து 400 பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். அதேபோல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் 31 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை விழாவில் நலத்திட்ட உதவி காலை உணவுத் திட்டத்தில் 59 ஆயிரத்து 394 பள்ளிக் குழந்தைகளும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 8 இலட்சத்து 60 ஆயிரம் நபர்களும் பயனடைந்துள்ளனர். “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் நபர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டங்களில் மூன்று இலட்சம் மாணவ–மாணவிகளும், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 75 ஆயிரத்து 597 பேரும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 22 ஆயிரத்து 766 நபர்களும், ‘தாயுமானவர்’ திட்டத்தில் 86 ஆயிரத்து 130 பேரும் பயனடைந்துள்ளார்கள். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 3 இலட்சத்து 75 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு கண்டிருக்கின்றோம். ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் 341 குழந்தைகளை பாதுகாத்துள்ளோம். மேலும், 4 ஆயிரத்து 196 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனை பயனாளிகள் உள்ளார்கள் என்று பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தால், இந்த ஒரு நிகழ்ச்சி போதாது. ஒவ்வொரு நாளும் இத்தனை லட்சம் மக்கள் பயனடைவது போல, நாம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். வயிற்றெரிச்சலிலும் ஆற்றாமையிலும் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையையும் நாங்கள் முறியடிப்போம், சிதைப்போம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த பாச்சா எதுவும் பலிக்காது. மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நான் ஒரு ட்வீட் செய்திருந்தேன். மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல். அதை நிரூபிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு முன்பு 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 56 ஆயிரத்து 766 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்து கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதுதான் எங்கள் அரசியல். மதுரையையும் அதைச் சுற்றி இருக்கின்ற பகுதிகளையும் நல்ல தரமான, உயர்தர வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களாக உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு ஓயாமல் பாடுபடும், என்றார். முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்

விகடன் 7 Dec 2025 5:42 pm

திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் பயன்படுத்திக் கொள்கிறார்.. நயினார் குற்றச்சாட்டு!

வடபழனியில் தமிழக பாஜக சார்பில் சம்பந்தி போஜனம் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சு குறித்தும், தீபம் ஏற்றும் விவகாரம் குறித்தும் விமர்சித்தார்.

சமயம் 7 Dec 2025 5:42 pm

வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதிவு 7 Dec 2025 5:41 pm

இயற்கையின் இடர் தடகளத்தில் நல்லது கெடுவதும், நன்மையாவதும்! பனங்காட்டான

2004ம் ஆண்டு சுனாமி நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகளையும் இணைத்து செயற்பட சந்திரிகா அரசு முனைந்தபோது அதனை ஆட்சேபித்து அமைச்சர் பதவிகளையும் துறந்து ஆட்சியிலிருந்து வெளியேறியது ஜே.வி.பி. இருபது ஆண்டுகளின் பின்னர் பேரிடர்ப் பணிபுரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களிடம் (தமிழர்களே அதிகம்) உதவியை நாடுகிறது அதே ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி. இதுவும் இயற்கையின் நியதி போலும். இயற்கையின் பெருஞ்சீற்றம் இரத்தினதுவீபம் என அழைக்கப்பட்டு வந்த இலங்கை எனும் குட்டித்தீவை முற்றுமுழுதாக சீரழித்துள்ளது. 75 வருட அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக ஓர் அணி - புரட்சிகர சிந்தனையாளர்களின் ஆட்சி ஆரம்பமாகி ஒரு வருட முடிவு காலத்தில் இவ்வாறான ஒரு பேரழிவை கையாளக்கூடியதாக திட்டமிடவில்லையென்பதை உள்நாட்டில் பலரும் கூறுமளவுக்கு நிலைமை உள்ளது. அரச நிர்வாகத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஒன்று உள்ளது. இது நேரடியாக ஜனாதிபதி அநுர குமரவின் தலைமையில் இயங்குகிறது. இந்த அமைச்சின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளது. இதற்கான சட்டம் 2005ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் பிரகாரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பூகம்பம், சுனாமி உட்பட்ட பதினேழு வகையான அனர்த்த வேளைகளில் உடனடிப் பணிகளை நிறைவேற்றுவதே இந்த நிலையத்தின் பிரதான பணி. 1913, 1940, 1947, 1950ம் ஆண்டுகளில் களனி, கல, ஜின், மகாவலி கங்கைகள் பெருக்கெடுத்து பாரிய அழிவை ஏற்படுத்தின. பின் நவீனத்துவ காலத்தில் 2003ம் ஆண்டில் தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 260 பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், ஆயிரமாயிரம் பேர் இடம்பெயர்ந்ததையும் அரசாங்கத் தகவல் பதிவு செய்துள்ளது. 1978ம் ஆண்டு சூறாவளி இலங்கை மக்களை வேறுபாடின்றி எதிர்பாராத அழிவுக்குள்ளாக்கியது. இதன் பின்னரான பேரழிவை ஏற்படுத்தியது நேற்றுப்போல் இடம்பெற்ற சுனாமி. 2004 டிசம்பர் 26ம் திகதியான கிறிஸ்மஸ் நாளன்று இது இடம்பெற்றது. மின்னாமல் முழங்காமல் என்று கூறுவதுபோன்று இலங்கை வரலாற்றில் எதிர்பார்த்திராத அனர்த்தத்தை இது ஏற்படுத்தியது. வடக்கின் கரையோரத்திலிருந்து இலங்கை வரைபடத்தின் கீழ்மூலையிலுள்ள அம்பாந்தோட்டை வரையான கரையோர பிரதேசங்களில் ஆறு மணித்தியாலத்தில் பல்லாயிரம் பேரை கொன்றொழித்த பேரலை இது. மக்களின் இருப்பிடங்கள், தொழிலகங்கள், வணக்கத் தலங்கள், வாழ்வாதார மூலங்கள், பாடசாலைகள், விவசாயப் பண்ணைகள் என்று எதனையுமே இது விட்டுவைக்கவில்லை. இலங்கை அரசியலில் இதே சுனாமி சிலரை அடையாளம் காட்டவும் வைத்தது. அப்போது சந்திரிகா குமாரதுங்க தலைமையில் மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தது. ஜே.வி.பி. இதில் பங்காளராக அமைச்சுப் பதவிகளிலும் அமர்ந்திருந்தது. அநுர குமர, விஜித ஹேரத் போன்றவர்கள் அமைச்சர்களாக இருந்தனர். சுனாமி நிவாரணத்துக்காக பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நிதி வழங்கிய நாடுகள் சந்திரிகாவுக்கு ஏற்படுத்தின. அவரும் அதனை ஏற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளுடன் இணைந்து கட்டமைப்பை உருவாக்க முனைந்த வேளை அதனை ஆட்சேபித்த ஜே.வி.பி. தங்கள் அமைச்சுப் பதவிகளையும் துறந்து ஆட்சிக் கூட்டிலிருந்து வெளியேறியது. பொதுக்கட்டமைப்பில் விடுதலைப் புலிகளையும் இணைப்பதால் அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பதே ஜே.வி.பி.யின் எதிர்ப்புக்கு காரணமாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக இலங்கையிலிருக்கும் அமெரிக்க தூதரகம் தனது அரசுக்கு அனுப்பி வைத்த தகவல் விக்கி லீக்சில் இடம்பெற்றுள்ளது. அப்போது சந்திரிகா அரசில் கலாசார மற்றும் மரபுரிமை அமைச்சராகவிருந்த விஜித ஹேரத் (தற்போதைய வெளிவிவகார அமைச்சர்) இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், ஆட்சியின் பங்காளர்களான தங்களின் ஆட்சேபணையை பொருட்படுத்தாது சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளை பொதுக்கட்டமைப்பில் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தார் என்று குறிப்பிட்டதாக விக்கி லீக்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. விதிப்பயனோ அல்லது இயற்கையின் நியதியோ சுனாமியிலும் பார்க்க மிகமிக மோசமான பேரழிவை ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி புரியும் காலத்தில் ஏற்பட்டுள்ளது. தமது வல்லமைக்கு உட்பட்ட வகையிலும் கிடைக்கும் சர்வதேச உதவிகளைப் பயன்படுத்தியும் நாட்டை மீளெழுப்ப அரசு செயற்களத்தில் இறங்கியுள்ளது. அதேசமயம். புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் உதவியை இது பகிரங்கமாகக் கோரியுள்ளது. புலம்பெயர் இலங்கையர்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே. தமிழ் மக்களினுடைய உரிமைப் போராட்டத்தை நசுக்க போர் வெறி கொண்ட மகிந்த அரசுக்கு பக்கபலமாக அப்போது நின்றது ஜே.வி.பி. சுனாமிக் கட்டமைப்பில் விடுதலைப் புலிகளை சந்திரிகா இணைத்துக் கொள்ள முயன்றபோது அதனை எதிர்த்து முறித்தழித்ததும் இதே ஜே.வி.பி. இப்போது, போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகப் புறப்பட்ட தமிழர்களின் உதவியை இது நாடி நிற்கிறது. இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் உள்நாட்டில் அநுர அரசு மேற்கொள்ளும் பணிகள் வெளிநாடுகளில் இதன் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த நம்பிக்கையின் பயனாகவே உலகநாடுகள் அனைத்தும் கிள்ளிக்கொடு;க்காமல் இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் வேறொரு கட்சியின் ஆட்சி இலங்கையில் இருந்திருக்குமாயின் இந்தளவுக்கு சர்வதேச ஆதரவு கிடைத்திருக்காது என்று சொல்லலாம். இதற்குக் காரணம் ஊழல் ஒழிப்பில் முழுமையாக இறங்கி ஊழலற்ற அரசாட்சி ஒன்றை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசு பயணிப்பதே என்று துணிந்து சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஒரு வருட ஆட்சிக்குள் அநுர குமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன, மத பேதமற்ற நிர்வாகமாக முழுமையாக மாறவில்லை. பொதுமக்கள் நம்பக்கூடிய வகையில் தனது பாதையை இவ்வழியில் அது அமைத்து வருவது மட்டும் தெரிகிறது. இந்த நம்பிக்கையே சர்வதேசத்தின் பங்களிப்புக்கு அடிப்படைக் காரணம். அனைத்து மக்களையும் இணைத்தவாறு நாட்டை இழுத்துச் செல்ல முயற்சித்த வேளையில் புயலும், வெள்ளமும், நிலச்சரிவும் ஒன்றுசேர்ந்து அனைத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. மரணித்தோர் தொகை அடுத்த சில நாட்களில் ஆயிரத்தைத் தாண்டலாம் என எதிர்வு கூறப்படுகிறது. காணாமல் போனோர் தொகை பற்றி இப்போது எதுவும் கூறமுடியாத நிலை காணப்படுகிறது. மலையகமே கூடுதலான பாதிப்பைக் கண்டுள்ளது. சில கிராமங்கள் அடியோது காணாமல் போயுள்ளன. துயில் கொண்டிருந்த பல குடும்பங்கள் புதையுண்டு போயுள்ளன. உடனடியாக தங்கள் தொகுதிகளுக்குச் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற வரவு செலவு விவாதத்தை முக்கியப்படுத்தி கொழும்பில் தங்கி விட்டனர். அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளை குறை கூறி ஊடகங்கள் ஊடாக தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முற்பட்டனர். தமிழ் அரசியல்வாதிகளும் இதில் வேறுபடவில்லை. இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் தாராளமாக உதவி வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இருபத்தையாயிரம் முதல் ஐம்பதினாயிரம் ரூபா வரையான நிவாரணம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிவாரணம் உடனடித் தேவைகளுக்கு மட்டுமே. பிரதேச வேறுபாடின்றி சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படுவதை காணமுடிகிறது. எனினும், எதிர்க்கட்சிகள் தாங்கள் நல்லவற்றுக்கும் எதிரானவர்களே என்பதைக் காட்டும் பாணியில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆக்கபூர்வமான பணிகள் எதனையும் இவர்கள் செய்வதாகத் தெரியவில்லை. பேரிடரைப் பயன்படுத்தி தங்கள் வாக்கு வங்கியை நிரப்பலாமென எண்ணிச் செயற்படும் இவர்களை சர்வதேசம் கேள்விக்குறியாக்கியுள்ளது. நித்தம் நித்தம் கிடைத்துவரும் நிவாரண உதவிகள் எதிரணிகளை நிலைகுலைய வைக்கிறது. அதனால் ஏதாவது குற்றங்களை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடிகளுடன் இவர்கள் திரிகிறார்கள். நிவாரண திட்டமிடலின்மை, தாமதமான நிவாரணப்பணி என்பவைகளை முன்னிறுத்தி ஆட்சித் தரப்பை மக்கள் செல்வாக்கிலிருந்து இறக்கி விடலாமென இவர்கள் எண்ணியது தலைகரணமாக்கியுள்ளது, சர்வதேச நிவாரணமும் அரசாங்கத்தின் வீச்சான செயற்பாடும். மறுபுறத்தில், ஆட்சி புரியும் தேசிய மக்கள் சக்தி அனைத்து மக்களையும் ஒரே நோக்கில் இருத்தி தனது பணிகளை மேற்கொள்கிறது. அரசியல் ஆதாயம் தேடப்படுவதாக இதனை எவரும் பார்க்கவில்லை. பேரிடரிலிருந்து நாட்டை மீட்டு அதனை நவீன இலங்கையாக கட்டியெழுப்ப காலம் தேவையென்று கூறி பொதுத்தேர்தலை குறைந்தது பத்தாண்டுகளுக்காவது பின்போட (ரில்வின் சில்வாவின் ஆசையும் இதுதான்) தேசிய மக்கள் சக்திக்கு இதன் நிவாரணப்பணி வரப்பிரசாதமாக அமையலாம். மாகாண சபைத் தேர்தல் பற்றி இப்போதைக்கு எவரும் வாய் திறக்க முடியாத நிலைமை வந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி பேரிடர் காலத்தில் மேற்கொள்ளும் சாதகமான செயற்பாடுகளும், எதிர்க்கட்சிகளின் இயக்கமற்ற குற்றக் கூச்சல்களும் நாட்டின் எதிர்காலம் எதுவாகும் என்பதை தீர்மானிக்கப்போகும் சக்திகள். இதில் சர்வதேசத்தின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கும் - புலம்பெயர்ந்தவர்களின் பங்கும்கூட.

பதிவு 7 Dec 2025 5:32 pm

பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை ஊக்குவிக்கும் அரசு! –எதிர்க்கட்சித் தலைவர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை அரசு ஊக்குவிப்பதாக பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அப்துல் சமாத் யாகூப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் பாதுகாப்பு முப்படைகளின் தலைவர் (சிடிஎஃப்) பதவி வகிக்கும் ஜெனரல் சையத் ஆசிம் முனீரின் பதவிக் காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளது அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ). பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் நிறுவனத் தலைவருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் […]

அதிரடி 7 Dec 2025 5:30 pm

அன்புமணி ராமதாஸ் எடுத்த முடிவு! மாவட்ட பொறுப்புகளுக்கு 12 முக்கிய நிர்வாகிகள் நியமனம்

அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமகவில் மாவட்ட பொறுப்பாளர்களாக 12 முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன் பின்னணி குறித்து விரிவாக காண்போம்.

சமயம் 7 Dec 2025 5:08 pm

வீடு முற்றுகை!

வீடு முற்றுகை யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்றைய… The post வீடு முற்றுகை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 5:02 pm

தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்!

TWEES Scheme: பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கும் தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 7 Dec 2025 4:53 pm

வீட்டில் சங்கு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.12.25)… The post வீட்டில் சங்கு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 4:51 pm

புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி

video link- https://fromsmash.com/Gm1ujAO_G~-dt நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் அணுசரனையுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக முதற்கட்டமாக அத்தியவசிய உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த உலருணவுப் பொருட்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை மருதமுனை சவளக்கடை சாய்ந்தமருது சம்மாந்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்குபற்றலுடன் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கல்முனை மாநகர சபையின் […]

அதிரடி 7 Dec 2025 4:48 pm

வெள்ளை நுரை கரையொதுங்கியதால் வடமராட்சியில் பரபரப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய… The post வெள்ளை நுரை கரையொதுங்கியதால் வடமராட்சியில் பரபரப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 4:36 pm

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் குமுறல்! இண்டிகோ நிறுவனத்திடம் சிக்கிய லக்கேஜ்- எப்போது கிடைக்கும்?

இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் உடைமைகளை பெற முடியாமல் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

சமயம் 7 Dec 2025 4:32 pm

உயிரைப் பறித்த உடற்பயிற்சி ; அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

பிரேசில் நாட்டின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் 55 வயதான நபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்ற நபர் கடந்த மாதம் 1 ஆம் திகதி பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்து கொண்டிருந்தார். […]

அதிரடி 7 Dec 2025 4:30 pm

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை!

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரின் பூதவுடல் தீயுடன் சங்கமாகியது.… The post வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 4:21 pm

பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் கைப்பற்றப்பட்ட பழைய பொருட்கள் அழிப்பு

பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு இன்று (6) நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரபலமான ஒரு உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட பழுதடைந்த 144 சம்சா, 4 kg பிசைந்த மாவு, 8 kg சோறு உட்பட பல பழைய பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன. குறித்த உணவகத்தில் உணவைப் பெற்றுக் கொண்ட தாய் மற்றும் மகள் […]

அதிரடி 7 Dec 2025 4:03 pm

சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. பாதுகாப்பு இல்லாத ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி வேதனை!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்திய குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

சமயம் 7 Dec 2025 4:03 pm

தமிழகத்தில் அடுத்த மழை எப்போது ?டிசம்பரில் மீண்டும் புயல் உருவாகிறதா? – ஹேமச்சந்தர் முக்கிய தகவல்

தமிழகத்தில் அடுத்ததாக எப்போது மழை பொழியும்? எந்த எந்த மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும்? அடுத்த வாரம் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதா? — இவை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

சமயம் 7 Dec 2025 3:59 pm

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பியது மின்சாரம்

video link- https://fromsmash.com/0spo3OdntH-dt அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மின் விநியோகம் 10 நாட்களின் பின்னர் வழமைக்குத் திரும்பியது . மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தினால் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பத்தை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பின் மீள் நிர்மாணத்தை தொடர்ந்து இன்று (06)பிற்பகல் அப்பகுதிகளுக்கான மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது. மின்சார […]

அதிரடி 7 Dec 2025 3:57 pm

‘அ’– அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி!

‘அ’ – அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி! மலையக அரங்க வரலாற்றில் ஒரு… The post ‘அ’ – அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 3:57 pm