2026 தேர்தலில் தனித்து விடப்படும் விஜய்! முடிவான கூட்டணிகள்- அடுத்து என்ன நடக்கும்?
2026 தமிழக தேர்தலில் விஜய் தனித்து விடப்பட்ட சூழல் உருவாகி உள்ளது. பிற கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது எதிர்ப்பார்ப்பை கிளப்பி உள்ளது.
நிலவில் நிலநடுக்கம் ஏற்படுமா? நாசா ஆய்வுகள் கூறுவது என்ன?
நிலவிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. நிலவில் நிகழும் நிலநடுக்கங்கள் பூமியில் ஏற்படுபவைகளைவிட முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையவை.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர், அவரது மனைவி கத்தியால் குத்திக்கொலை
லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரென்ட்வுட் வீட்டில் 78 வயது மற்றும் 68 வயதுடைய தம்பதி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாக நேற்று பொலிஸார் தகவல் தெரிவித்தனர். திரையுலகினர் அதிர்ச்சி உயிரிழந்த நபர்கள் குறித்து ஆரம்பத்தில் விபரம் வெளியாகாத நிலையில், பின்னர் அது ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் […]
மண்டைதீவு புதைகுழி அகழ்வு எப்போது?
மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்திறுத்துள்ளார் இன்று (16) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அறிக்கையை உத்தியோக பூர்வ வடிவத்தில் நாளையதினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக இன்றையதினம் (16) திகதியிடப்பட்டிருந்தது. மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் குறித்த வழக்கு தொடர்பாக அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடரான கிடைக்கப்பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின் அறிக்கையை எழுத்து மூலமாக நிதிமன்றில் சமர்ப்பித்தனர். கையால் எழுதிய குறித்த அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி சமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சில் பிரதியாக்கம் செய்து நாளையதினம் (17.12.2025) மீண்டும் அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். முன்பதாக மண்டைதீவு புதைகுழி தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.அத்துடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு கடந்த செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவராலும் வேலணை பிரதேசசபை உறுப்பினர்களாலும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகாப்பு குழு புகார்!
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை கதவுகள் ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை கோயில் முன்னாள் அதிகாரிகள், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது தங்கம் கொள்ளைக்கு எதிராக சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசை கிண்டலடித்து ஒரு பாடல் வெளியானது. பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை... என்ற பிரபல ஐயப்ப சுவாமி பாடல் மெட்டுக்கு ஏற்ப பாடப்பட்ட அந்த பாடலில், உன்னிகிருஷ்ணன் போற்றியை சபரிமலைக்கு அனுப்பி தங்க தகடுகளை கொள்ளையடித்தவர்கள் சகாவுகள் என்பதை குறிக்கும் வகையில் அந்த பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. அந்த பாடலில், 'போற்றியே கேற்றியே சொர்ணம் செம்பாய் மாற்றியே சொர்ணப் பாளிகள் மாற்றியே சாஸ்த்தாவின் தனம் ஊற்றியே ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா...' என பாடல் வரிகளில் இடம்பெற்றிருந்தன. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகும் அந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோழிக்கோடு நாதாபுரத்தைச் சேர்ந்த குஞ்ஞப்துல்லா என்பவர் எழுதிய அந்த பாடலை டேனிஷ் கூட்டிலங்காடி என்ற மேடைப்பாடகர் பாடலாகப் பாடி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினார். அந்த பாடலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க-வும் கேரள உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியதால் மாநிலம் முழுவதும் ஒலித்தது. இதற்கிடையே, சபரிமலையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி டீன் குரியகோஸ் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கேரள மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது 'ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா' என்ற பாடலை பாடி கவனம் ஈர்த்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் பாடல் பாடி போராடிய காங்கிரஸ் எம்.பி-க்கள் இந்த நிலையில் அந்த பாடலை தடைச் செய்ய வேண்டும் என சபரிமலை திருவாபரண பாதை கமிட்டி பொதுச்செயலாளர் பிரசாந்த் குழிக்கால என்பவர் கேரள போலீஸ் டி.ஜி.பி-க்கு புகார் அளித்துள்ளார். அவரது மனுவில் கூறுகையில், பக்தி பாடலை திரித்து தவறாக பயன்படுத்துகிறார்கள். அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமியின் பெயரை பயன்படுத்துவது பக்தர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த பாடல் அய்யப்ப சுவாமியை நிந்தனை செய்யும் விதமாகவும், அவமதிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. எனவே அந்த பாடலை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
விராலிமலை சட்டமன்ற தொகுதி: வெற்றி பெறுவாரா சி.விஜயபாஸ்கர்? கள நிலவரம் இதுதான்
தமிழ்நாடு தேர்தலில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மீண்டும் அதிமுக வெல்லுமா? அல்லது திமுகவின் வசம் செல்லுமா? என்ற களநிலவரத்தை காண்போம்.
கரூர்: '1000 ஆண்டுகள் பழமையான கோயில் கலசங்கள் திருட்டு' - குற்றவாளிகளை தேடும் போலீஸ்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் ஸ்ரீசௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ,அதேபோல், இந்தக் கோயில் பொன்னர், சங்கர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகள் கோவில் மலை பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் அறநிலையத்துறை பணியை துவங்கி உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் கோயில் கோபுரத்தில் உள்ள விலை உயர்ந்த கலசம் நேற்று இரவு திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீசப்பட்ட கலசங்கள் மேலும், பழமையான கோயில் மலை உச்சியில் கலசம் இருந்ததால், சுற்றுவட்டாரப் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இதுவரை இடி, மின்னல் தாக்கியது இல்லை. எந்த ஒரு பாதிப்பும் நடக்கவில்லை என ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று, பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள 1946 - ம் வருஷம் கும்பாபிஷேகம், செய்யப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயிலிலும் 3 கலசத்தை திருடிய திருடர்கள், அவர்கள் எதிர்பார்த்தது போல் கலசம் விலை உயர்ந்த்தாக இல்லை என்பதால் அவற்றை கோயில் அருகிலேயே போட்டு விட்டுச் தப்பி ஒடிவிட்டனர். இது குறித்து, லாலாபேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் அருகே பகுதியில் அடுத்தடுத்து இரு கோயில் கோபுர கலசங்கள் திருட்டு சம்பவம் குறித்து கரூர் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து பழமையான பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ள கோபுர கலசங்களை திருடும் மர்ம கும்ப கும்பல் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.
கன்னியாவிற்கும் புத்தர் வந்தார்!
திருகோணமலை கடற்கரையில் புத்தர்சிலை முளைத்துள்ள நிலையில் அடுத்து கன்னியா வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்ரகு தயார் படுத்தப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது. பாரம்பரிய சிவன் கோவில் 180 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவிலுடன் இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்யும் இடமாகவும் கன்னியா உள்ளது. கோவில் இடம் முழுமையாக தனியாருக்கு சொந்தமாக இருந்திருந்த நிலையில் காணி உரிமையாளர்; தனது காணியை பிள்ளையார் கோவில் கட்ட வழங்கியிருந்தார். யுத்தம் முடிந்த பின் படிப்படியாக இடங்களை கொள்ளையடிகும் நோக்குடனும் பௌத்த மயப்படுத்தும் நோக்குடனும் தொல்பொருள் திணைக்களம் ஊடாக தமிழர் காலாகாலமாக இருந்த இடங்களை வழிப்பாட்டுத்தலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் தொடர்கின்றது. எனினும் தற்போது வெந்நீர் ஊற்று பகுதியிலிருந்த சிவன் கோவிலும் பூட்டப்பட்டுள்ளது. பிதிர்கடன் செய்ய வருபவர்களுக்கு அதற்கு முன் பல அனுமதிகள் எடுக்க வேண்டியிருக்கின்றது. இராணவன் வரலாற்றுப் பதாகை உடைக்கப்பட்டு, புது அனுராதபுர வரலாறு எழுதப்பட்டுள்ளது. விகாரை உருவாக்கப்பட்டுள்ளது. உப்புவெளி பிரதேச சபையிடம் இருந்த இடம் தொல்பொருள் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கன்னியா வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்ரகு தயார் படுத்தப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.
நெல்லை 'பொருநை'அருங்காட்சியகம் திறப்பு விழா; வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் | ஏற்பாடு பணிகள் தீவிரம்
நெல்லை 'பொருநை' அருங்காட்சியம் திறப்பு விழா|முதல்வர் ஸ்டாலின் வருகை| ஏற்பாடு பணிகள் துரிதம்.!
செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம்? | தன்னிலை இழந்த Nitish Kumar? | Delhi AQI DMK | Imperfect Show
வீதிப் புனரமைப்பு பணிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்.
சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட நகர் வட்டாரத்தில் டச் வீதி புளியடிச் சந்தியில் வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்று போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவுள்ள பகுதி நகரசபையினால் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. குறித்த வீதியின் புனரமைப்பு பணிகளை நகராட்சி மன்றின் உபதவிசாளர் ஞா.கிஷோர், உறுப்பினர் மு.கோகுல்றாஜ் உட்பட வீதியில் வசிப்பவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர். உபதவிசாளர் ஞா.கிஷோர் அவர்களின் முயற்சியின் பயனாக அனர்த்த புனரமைப்பு நிதியில் இருந்து உடனடியாக குறித்த வீதி புனரமைப்பு பணிகள் […]
2026 முதல் சவுதியில் சொத்து வாங்கலாம்! ஆனால்... 4 நகரங்களில் முடியாது- ஏன் தெரியுமா?
சவுதி அரேபியாவில் இனி வெளிநாட்டினர் சொத்துக்களை வாங்கும் வகையில் புதிய சட்டம் அமலாகி உள்ளது. ஆனால் 4 முக்கிய நகரங்களில் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதற்கான காரணம் குறித்து காண்போம்.
பாசுமதி அரிசியாக மாறிய கீரி சம்பா? 110,000 ரூபா அபராதம்
கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’ எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. மாத்தளை, நாலந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்தது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நாவுல […]
கனடாவில் சளிக்காய்ச்சலினால் 3 குழந்தைகள் மரணம்
கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்டாரியோ பகுதிகளில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இன்ஃப்ளூயன்சா A (Influenza A) தொடர்பான சிக்கல்களால் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என ஒட்டாவா பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், 5 முதல் 9 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகள் ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்றாரியோ நிர்வாகப் பகுதிகளில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பூசி மேலும், இன்ஃப்ளூயன்சா […]
ஜனவரி 9 முதல் 12 தேதி வரை தேசிய ஆரோக்கியா கண்காட்சி &ஆயுஷ் மாநாடு நடைபெறுகிறது
இந்திய அரசின் AYUSH அமைச்சகம் (Ministry of AYUSH, Government of India) மற்றும் Heartfulness Institute இணைந்து, NASYA, VIBA & Dr. SHREEVARMA’s Wellness
National Arogya Expo & Ayush Conclave 2026
As a significant prelude to the upcoming National Arogya Expo & AYUSH Conclave 2026, a high-level preview and interaction meeting
நாளை பாஜக உயர்மட்ட குழு கூட்டம்! நயினார் நாகேந்திரன் டெல்லி ரிட்டனை அடுத்து ஏற்பாடு
பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை சென்னை கிண்டியில் நடைபெற உள்ளது. நயினார் நாகேந்திரனின் டெல்லி ரிட்டனை தொடர்ந்து இந்த கூட்டம் நடக்க உள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.
சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த பழ வியாபாரி: குவியும் பாராட்டு
சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தன் உயிரைப் பணயம் வைத்து மடக்கிப் பிடித்த பழ வியாபாரிக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் ‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில், நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்தனா். அப்போது, கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த 2 பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்களைக் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனா். இதனால், பொதுமக்கள் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓடினா். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் சுமாா் 5 […]
மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்ததில் 13 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் 7 பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதனால், ஒரு பெரிய தீ விபத்து நேரிட்டு, பேருந்துகள் மற்றும் கார்கள் சில நிமிடங்களில் எரிந்தன. தகவல் […]
Stanley Lifestyles names Venkataramana Seshagirirao Gorti as Joint Managing Director
Bengaluru: Stanley Lifestyles Limited, an integrated super-premium and luxury furniture manufacturer and retailers, has announced the appointment of Venkataramana Seshagirirao Gorti (Venkat) as its Joint Managing Director. With an accomplished professional career spanning more than 34 years, Venkat brings extensive global leadership experience and a proven track record of transforming organisations across diverse industries.Recognised for his strategic acumen and execution excellence, Venkat has consistently driven sustainable and profitable growth in every organisation he has led. His expertise spans business transformation, supply chain optimisation, operational excellence, product innovation, and managing complex global product transfers. He is equally well-regarded for his people-centric leadership style, his ability to build future-ready teams as well as renowned for his thought leadership.Sharing his excitement on the new role, Venkataramana Seshagirirao Gorti, Joint Managing Director, Stanley Lifestyles Limited, said, “I would be focusing on realising Stanley’s vision through both short- and long-term strategies and pristine execution in this VUCA environment. Focus will also be to continue to invest in manufacturing excellence to make high-quality products that reflect the brand’s heritage, securing the supply chain through vertical integration, retaining top talent, and fostering a high-performance culture. Digitalisation, simplification, and standardisation to be nimble and agile to deliver consistent customer delight would be another area of focus. Along with my key leadership team, the emphasis will be to evaluate the brand’s market position and explore strategic expansion into related areas, potentially through mergers and acquisitions or divestitures, to build resilience. Most importantly, we will aim to balance the long-term vision of building a luxury brand with the public market’s expectations for consistent financial performance, and communicate the value of long-term investments to our investors.” Expressing confidence in the appointment, Sunil Suresh, Founder, Stanley Lifestyles Limited, said, “Venkat’s deep global expertise and strong leadership credentials make him the ideal choice to guide Stanley Lifestyles into its next chapter. His people-first approach, strategic vision and proven ability to scale businesses align perfectly with our long-term growth aspirations. We look forward to working closely with him as we continue building a world-class luxury brand.” A Mechanical Engineering graduate and EGMP alumnus from IIM Bangalore, Venkat has held senior leadership positions at globally respected companies including ABB, Oracle, GE, Flextronics, Wipro Hydraulics, Honeywell and Homag. His rich cross-industry exposure covers electrical, electronics, hydraulics, aerospace, and wood-working industries, giving him a holistic understanding of technology-driven businesses. His international experience includes significant assignments across the Middle East, Malaysia, the United States, Brazil, Sweden, Finland, Romania and other key markets. He has successfully led multicultural teams across China, the USA, Mexico and Europe. Venkat is also CPSCM-certified (Certified Purchasing and Supply Chain Management) from Competitors View, Lean & Six Sigma Green Belt certified from GE and Honeywell. Venkat is also a certified Independent Director from IICA. Outside work, he is an avid sports enthusiast and passionate music lover.Venkat was recognised as one of the Top 100 Inspirational Leaders of Asia in 2022. He was also the Chairperson of FFSC (Furniture Fittings Skill Council) in FY24. With this appointment, Stanley Lifestyles further strengthens its leadership team as it continues to expand its portfolio, enhance operational and manufacturing excellence, and deepen its commitment to delivering credible and consistent luxury experiences to customers.
இந்திய ரூபாய் நோட்டுகளுக்குத் தடையா? எந்த நாட்டில் தெரியுமா? இப்போது மட்டும் தளர்வு ஏன்?
நேபாள அரசு இந்திய ரூபாய் நோட்டுகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இனி 25,000 ரூபாய் வரை இந்திய நோட்டுகளை வைத்திருக்கலாம் என நேபாள அரசு தெரிவித்து உள்ளது.
பிரேசிலில் சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது
நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் பிரேசிலின் குவைபா நகரை கடுமையான புயல் தாக்கியதில், 40 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது. சிலை சரிந்து விழுந்ததில் எவருக்கும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தெற்கு பிரேசிலில் புயல்கள் வரிசையாக நகர்ந்ததால், ஒரு துரித உணவு விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள ஹவான் சில்லறை விற்பனை மெகாஸ்டோரின் கார் பார்க்கிங்கில் நிறுவப்பட்ட சிலையை பலத்த காற்று தாக்கியது. சிலை சரிந்து விழுந்த போது சிலையின் தலை துண்டு துண்டாக நொறுங்கியது. குவைபாவில் உள்ள ஒரு ஹவானின் வாகன நிறுத்துமிடத்திற்குள் ஒரு மெக்டொனால்டுக்கு எதிரே அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையின் நாற்பது மீட்டர் உயரம் கொண்டது. உள்ளூர் அறிக்கைகளின்படி, சுமார் 24 மீட்டர் (78 அடி) உயரமுள்ள மேல் பகுதி மட்டுமே இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் 11 மீட்டர் (36 அடி) பீடம் அப்படியே இருந்தது. 2020 ஆம் ஆண்டு கடை திறக்கப்பட்டதிலிருந்து சிலை இடத்தில் இருப்பதாகவும், அதற்கு தேவையான தொழில்நுட்ப சான்றிதழ் இருப்பதாகவும் ஹவான் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினார். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாக்க அந்தப் பகுதி உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்குள் குப்பைகளை அகற்ற சிறப்பு குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. குவைபா மேயர் மார்செலோ மரனாட்டா, எந்த உயிரிழப்பும் இல்லை என்றும், தளத்தில் விரைவான நடவடிக்கையைப் பாராட்டினார். உள்ளூர் குழுக்கள் மாநில சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து சுற்றளவைப் பாதுகாக்கவும், அருகிலுள்ள கூடுதல் சேதங்களைச் சரிபார்க்கவும் பணியாற்றியதாக அவர் மேலும் கூறினார். புயலின் உச்சத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. வானிலை அதிகாரிகள் இப்பகுதியில் மணிக்கு 90 கி.மீ வேகத்திற்கு மேல் காற்று வீசும் என்று பதிவு செய்துள்ளனர். விழுந்த சிலையைச் சுற்றியுள்ள பகுதிக்கு அணுகல் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படாத பகுதிகளில் பல்பொருள் அங்காடி தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இடிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தைக் கண்டறியவும், தீவிர வானிலையைத் தவிர வேறு ஏதேனும் காரணிகள் இதில் பங்களித்ததா என்பதை மதிப்பிடவும் தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ஹவான் கூறினார். குவைபாவில் ஏற்பட்ட புயல் ரியோ கிராண்டே டோ சுலின் பெரும்பகுதியையும் பாதித்தது. மற்ற பகுதிகளில் ஆலங்கட்டி மழை விழுந்தது. இதனால் வீடுகளின் கூரைகள் தேசமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழை காரணமாக சில தெருக்களும் ஓரளவு வெள்ளத்தில் மூழ்கின. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தேசிய வானிலை ஆய்வு நிறுவனம் புயல் எச்சரிக்கைகளை வைத்திருந்தது. குளிர் காற்று பலத்த மற்றும் திடீர் காற்றை ஏற்படுத்தியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை முதல் வானிலை நிலை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம்: மத்திய அரசுக்கு திருமாவளவன் அறைகூவல்! எதிர்ப்பது ஏன்?
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்றி புதிய மசோதா நிறைவேற்ற நினைக்கும் பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இளம் வயதினரிடையே ஏற்படும் திடீர் மரணம் –கொரோனா தடுப்பூசிக்கு தொடர்பா?
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயறிதல் மற்றும் தடயவியல் துறைகள் மூலம் செய்யப்பட்ட ஆய்வொன்றின் முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வுகள் இதழில் வெளியாகியுள்ளது. திடீர் மரணம் ஐ.சி.எம்.ஆர் மூலம் மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை செய்யப்பட்ட அந்த ஆய்வில், 2,214 பிரேத பரிசோதனைகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன. அதில் 8.1% பேருக்கு திடீர் மரணம் ஏற்பட்டிருந்தது. இதில் சுமார் 57.2% பேர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்துள்ளனர். சராசரி வயது 33.6 என்றும், திடீர் மரணம் […]
டெங்கு அபாயம்: 30 வீடுகளுக்கு ₹3 இலட்சம் தண்டப்பணம் –பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அதிரடி!
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபை, அல்வாய், பொலிகண்டி பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 30 வீட்டின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் […]
யேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது!
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக யேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, முள்ளங்காவிலில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளைஞன் இன்று அதிகாலை 05.20 மணியளவில் ஓமன், மஸ்கட் நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் தனது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். இளைஞன் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அனைத்து ஆவணங்களையும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி பரிசோதித்ததில் கடவுச்சீட்டு போலியானது என்றும் தெரியவந்துள்ளது. விசாரணைகளில், குறித்த இளைஞன் ஒரு தரகருக்கு ரூ. 3 மில்லியன் கொடுத்து போலியான பிரான்ஸ் கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குருணாகல் மாவட்டத்தில் மஹவ காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சந்தேக நபர் மஹவ பகுதியில் உள்ள நான்கு பிற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து திருடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். திருட்டு சம்பவம் இடம்பெற்ற விற்பனை நிலையத்தின் சிசிரிவி கமராவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் காவல்துறைக் குற்றப் புலனாய்வு பிரிவின் 037 - 2260008 அல்லது 071 - 8596411 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மார்க்கெட்டிங், சேல்ஸ், விளம்பரம் - ஆன்லைன் வழியாக IIM பெங்களூரு வழங்கும் 8 இலவச படிப்புகள்
நீங்கள் மார்க்கெட்டிங், மக்கள் தொடர்பு, விளம்பரம் ஆகியவற்றில் ஆர்வமாக உள்ளவரா? வீட்டில் இருந்தபடியே முதன்மையான கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகளை ஸ்வயம் இணையதளம் மூலம் படிக்கலாம். ஐஐஎம் பெங்களூரூ ஏராளமான படிப்புகளை ஸ்வயம் மூலம் வழங்குகிறது. ஆன்லைன் வழியாக வகுப்புகள் ஜனவரி 12-ம் தேதி முதல் தொடங்கப்படும் நிலையில், மார்க்கெட்டிங்க், விளம்பரம் சாரந்த 8 படிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காயமடைந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு , வைத்தியசாலைக்குள் உள்ள அவசர சிகிசிச்சை பிரிவு வரையில் அத்துமீறி நுழைந்த நபர் , அங்கு கடமையில் இருந்த உத்தியோகஸ்தர்களுடன் தர்க்கம் புரிந்து , மேசையில் இருந்த பிரிண்டர் ஒன்றினை உடைந்து சேதமாக்கியும் […]
ஈரோட்டில் தவெக பிரச்சாரம்.. பள்ளிக்கு விடுமுறையா? குஷியில் மாணவர்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கிறது. அதற்காக அந்த இடத்திற்கு அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு, அந்நாளில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
Rodic Digital & Advisory names Varun Mundra as Chief Executive Officer – Technology
New Delhi: Rodic Digital & Advisory, the strategic advisory and digital transformation arm of Rodic Group, has announced the appointment of Varun Mundra as Chief Executive Officer – Technology. In his new role, Mundra will lead the company’s technology strategy, product roadmap, and AI-led solutions portfolio, focusing on building scalable digital businesses for infrastructure and public-systems transformation. Nagendra Nath Sinha, Managing Director, Rodic Digital & Advisory, commented on the appointment, “Varun joins us at an exciting inflection point. His experience in building AI-first businesses, coupled with his work in government partnerships and enterprise sales, will help us deepen our sectoral presence and deliver more intelligent, sustainable, and resilient infrastructure solutions at scale.” On his appointment, Varun Mundra said, “Rodic Digital & Advisory sits at a powerful intersection of domain knowledge, data, and technology. I am excited to work with the team to build AI-led digital solutions that are practical, scalable, and tailored to real-world challenges. The opportunity to reimagine how India plans, builds, and manages infrastructure is massive, and I look forward to contributing to that journey with this exceptional team.” Varun brings over 13 years of expertise in scaling AI-first businesses across health tech, voice AI, fintech, and enterprise SaaS. Most recently, he served as Managing Director & Country Manager for Vara (Germany), a medical AI company focused on early cancer detection, where he established Indian operations from scratch with full P&L ownership. He has also held senior roles at Skit (formerly Vernacular.ai) and TOPXIGHT Research Labs, leading growth across AI SaaS ventures in capital markets, cybersecurity, and deep-tech domains.He holds an International MBA from SPJIMR (India) and IESEG (France) and a B.Tech in Computer Science from Nirma University, with expertise spanning go-to-market strategy, strategic planning, team building, consultative sales, government business, and product management.
கார்த்திக் சர்மாவை ரூ.14.20 கோடிக்கு வாங்கிய சென்னை! யார் இவர்?
சென்னை : IPL 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் ஷர்மாவை ரூ.14.20 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அடிப்படை விலை வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே இருந்த இவரை CSK இறுதியில் தட்டித்தூக்கியது ஏலத்தின் பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. பிரசாந்த் வீருக்கு அடுத்தபடியாக CSK எடுத்த இரண்டாவது மிகப்பெரிய ‘அன்கேப்ட்’ (uncapped) வீரர் இவர்தான். […]
IPL 2026 Auction: '14 கோடிக்கு சென்னை வாங்கிய 19 வயது இளம் வீரர்!' - யார் இந்த கார்த்திக் சர்மா?
அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் சென்னை அணி சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸாக கொடுத்து வருகிறது. வழக்கமாக இளம் வீரர்களை நோக்கி பார்வையைத் திருப்பாத சென்னை அணி, இந்த முறை பிரஷாந்த் வீர் என்ற வீரரை ரூ. 14.20 கோடிக்கு வாங்கியிருந்தது. உடனடியாக கார்த்திக் சர்மா என்கிற வீரரையும் போட்டி போட்டு 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. யார் இந்த கார்த்திக் சர்மா? Karthik Sharma ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவுக்கு 19 வயதே ஆகிறது. அதிரடி பேட்டராக அறியப்பட்ட இவர் ஃபினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக தன்னை பொசிஷன் செய்து வருகிறார். கடந்த ரஞ்சி சீசனில் உத்ரகாண்ட்டுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார். அதேமாதிரி, கடந்த விஜய் ஹசாரே தொடரிலும் 400+ ரன்களைச் சேர்த்து ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக வந்தார். 19 வயதுக்குட்பட்ட ராஜஸ்தானின் இளையோர் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். Karthik Sharmax தோனிக்கு வயதாகிவிட்டது. முன்பைப் போல போட்டிகளை முடித்துக் கொடுக்கும் நிலையில் அவர் இல்லை. அதனால் அவருக்கு உதவியாக கீழ் வரிசையில் கார்த்திக்கை இறக்கி முயற்சி செய்து பார்க்கலாம் என்பது சென்னை அணியின் திட்டமாக இருக்கலாம். நீண்டகால அடிப்படையில் நல்ல தேர்வாகவும் இருப்பார். IPL 2026 Auction live: இளம் வீரர் கார்த்திக் ஷர்மாவை ரூ.14.20 கோடிக்கு தட்டி தூக்கிய சிஎஸ்கே!
`கேரள உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும்!'- நீதிபதி நிஷாபானுவுக்கு குடியரசு தலைவர் உத்தரவு!
நீதிபதி ஜெ.நிஷாபானு டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பணியில் சேரவேண்டும் என்று குடியரசு தலைவர் கெடு விதித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்கனவே, திருப்பரங்குன்றம் தீபத்தூண் சம்பந்தப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும், இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.நிஷாபானு கேரளா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றப்பட்டும் அவர் பொறுப்பு ஏற்காத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இடமாற்றத்தை ஆதரித்தும், எதிர்த்தும் வழக்கறிஞர்கள் கருத்துகள் கூறி வருவதும் நீதித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்தான் ''விடுப்பில் உள்ள நீதிபதி ஜெ.நிஷாபானு, டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்ற பணியில் சேர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்தபோது, 'சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது இடத்தில் பொறுப்பு வகித்து வந்த நீதிபதி ஜெ.நிஷாபானுவை, நிர்வாக காரணங்களுக்காக உச்ச நீதிமன்ற கொலிஜியம், கேரள உயர் நீதிமன்றத்திற்கு இடமாறுதல் செய்ய கடந்த ஆக்ஸ்ட் மாதம் மத்திய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நீதிபதி ஜெ.நிஷா பானுவை கேரளாவுக்கு இடுமாறுதல் செய்து கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி ஜெ.நிஷாபானுவோ, அக்டோபர் 14 ஆம் தேதியிலிருந்து நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இந்த நிலையில் இடமாறுதல் செய்யப்பட்ட கேரள உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்காமல் காலம் தாழ்த்துவது உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதித்துறையின் மாண்பை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு தரப்பினர் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னொருபுறம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ஜெ.நிஷாபானுவை வேண்டுமென்றே கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து அவரை 9 வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர்' என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் மற்றொரு தரப்பினர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கிடையே காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில்தான், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய குடியரசு தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஜெ.நிஷாபானு, டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவர் உத்தரவுப்படி நீதிபதி ஜெ.நிஷாபானு கேரள உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்பாரா? மாட்டாரா? என்பது அனைவராலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Michael Bay collaborates with Bhanushali Studios for Anthony D’Souza film with music by A.R. Rahman
Mumbai: Bhanushali Studios Limited has announced a creative collaboration with Hollywood filmmaker Michael Bay for an upcoming Anthony D’Souza directorial, with music composed by legendary maestro A.R. Rahman. This marks Michael Bay’s first-ever partnership with an Indian studio. Michael Bay, responsible for over $10 billion at the global box office with franchises like Transformers, Bad Boys, and A Quiet Place, shared his excitement, “It will be an exciting chance to mix Hollywood's action style with the heart and emotion of Indian storytelling. Working with Rahman, Vinod, and Tony is a chance to create a new kind of cinematic experience—one with power, rhythm, and incredible visuals. Tony’s vision, especially how he handles scale and emotion in his movies, will make this collaboration really fulfilling.” A.R. Rahman added, “When different worlds of cinema come together, it opens up a beautiful space for music. For me, composing is about finding the film’s soul and giving the score its own unique personality, a voice for the unsaid. I try to let the music carry the emotion.” Vinod Bhanushali, Chairman & Managing Director of Bhanushali Studios Limited, emphasized the significance of the collaboration, “Cinema is global, stories are universal, and collaborations like these remind us that scale has no borders. To create a film where Michael Bay’s kinetic mastery meets the poetic musical universe of A.R. Rahman is nothing short of a dream forged in ambition. As our team comes together across continents, we are hopeful that an Indian story can find its voice on a truly global stage.” Director Anthony D’Souza, known for high-scale entertainers like Boss, Blue, and Azhar, commented on the project, “By bringing together both the incendiary ingenuity and the visionary ethos of Michael Bay, the ethereal musical genius of Rahman sir with the support and cinematic narrative of Bhanushali Studios, it is both an honour and a privilege to collaborate with the true legends of cinema, whose mastery continues to inspire and humble me. With this cinematic endeavour we aspire to harmonize the cadence of relentless velocity and to conjure a spectacle so grand yet resonant with soul.” Currently in early development, the project promises to bring together Hollywood action expertise, Indian storytelling, and world-class music, signaling a new era of international collaboration and boundary-breaking filmmaking for Bhanushali Studios. View this post on Instagram A post shared by Michael Bay (@michaelbay)
`உயர்ரக போதை, உச்சக்கட்ட உறவு; சர்வதேச கும்பல்' - குமரி ரிசார்ட்டில் போதை ஆட்டம்; பகீர் தகவல்கள்
கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூரில் செயல்பட்டுவரும் தனியார் ரிசார்டில் தடைச் செய்யப்பட்ட உயர் ரக போதை விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி தலைமையிலான டீம் அங்குசென்று உயர்ரக போதைபொருட்களை பறிமுதல் செய்தனர். அங்கு குழுமியிருந்த 46 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கேரள மாநிலம் கோவளத்தைச் சேர்ந்த பிதுன்(30), பெங்களூரைச் சேர்ந்த வேலன்ஸ் பால் (36), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த கோவிந்த கிருஷ்ணா (27), கோகுல் கிருஷ்ணன் (34), இவரது மனைவி செளமி(33), மருங்கூரைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் ராஜூ(64), கோவாவைச் சேர்ந்த ஜெயராஜ் சிங் சவ்டா (35), பெங்களூரைச் சேர்ந்த சையத் பர்ஷான் (35) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பலரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக வந்ததால் அவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவில்லை. மேலும், விசா காலாவதி முடிந்த பின்னரும் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த பேவாஹ் அன்சாரி (30) என்ற பெண் மீதும் தனியாக வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார். இரவில் ஆட்டம்போட்ட கும்பல் இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம், கோகுல் கிருஷ்ணன் என்பவர் கோவா-வை மையமாகக்கொண்டு டூரிஸ்ட் ஏஜென்சி ஒன்று நடத்திவந்தார். அவருக்கு பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் நட்பு கிடைத்தது. அந்த குழுவினர் இணைந்து ஒவ்வொரு நாட்டுகளிலும் போதை கூடுகையை அவ்வப்போது நடத்தி வந்தனர். கன்னியாகுமரியில் நடைபெற்ற போதை கூடுகைக்காக கோகுல கிருஷ்ணனின் குழந்தைக்கு பிறந்தநாள் எனக்கூறி ரிசாட் புக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு புரியும் வகையில் அழைப்பிதழ்கள் பதிவு செய்துள்ளார். டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை அந்த கூடுகை நடந்தது. 9-ம் தேதி இரவு அவர்கள் சிக்கினர். இதுவரை உள்ள போதை கும்பலில் இவர்கள் புதுவிதமாக உள்ளனர். இவர்கள் இதனை 'ஹிப்பி' கலாச்சாரம் என பெயரில் அழைக்கிறார்கள். சுமார் 30 வயதுக்குள், தேவைக்கும் அதிகமான பணம் சம்பாதித்துவிட்டு ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று விதவிதமான போதைப்பொருள்களை அனுபவித்துவிட்டு, விரும்பிய விதத்தில் பாலியல் உறவு வைத்துக்கொண்டு உலகம் சுற்றுவது இவர்களின் நோக்கம். பெரும்பாலும் திருமணம் ஆகாதவர்கள்தான் அதில் இருப்பார்கள். போதையும், பாலியல் உறவும் மட்டுமே அவர்களுக்கு பிரதானமாக இருக்கும். இந்த குழுவினர் கோவா-வை மையமாகக்கொண்டு சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள். கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் பகலில் அமைதியாக இருப்பார்கள். சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் அவர்களின் ஆட்டம் தொடங்கும். தொடக்கத்தில் ட்ரம்ஸ் இசையுடன் ஆட்டத்தை தொடங்குவார்கள். மதுவில் தொடங்கி உயர்ரக போதைப்பொருட்களை பயன்படுத்தி உற்சாகத்தை அதிகரிப்பார்கள். அதற்கு ஏற்ப இசையின் வேகமும் அதிகரிக்கும். அதற்கு 'ட்ரிப் மியூசிக்' (Trip music) எனப்பெயர். வழக்கமான இசை என்றால் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால் இவர்களது இசையின் வேகமும், சத்தமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். போதை பார்ட்டி நடக்கும் இடத்தில் பல வண்ண லைட்டுகளை இசைக்கு ஏற்ப ஒளிரவிடுவார்கள். ட்ரக்ஸ், உச்சகட்ட இசையும், மின்னும் விளக்குகளும் சேர்ந்து அவர்களுக்கு புதுவித போதையை கொடுக்கும். அதேசமயம், அவர்கள் விரும்பிய நபர்களுடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். ஒருநாள் நெருக்கமாக இருந்தவர்கள், மறுநாள் இணையை மாற்றிக்கொள்வார்கள். ஒரே இரவில் பலருடன் உறவு வைத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கிறது. இந்த குழுவில் நீண்டநேரம் 'ஆட்டம்போடுபவர்கள்' யார் என போட்டிகளும் நடக்குமாம். இதற்கு முன்பு தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட இடங்களில் இந்த கூடுகையை நடத்தியுள்ளனர். கன்னியாகுமரியில்தான் அவர்கள் சிக்கியுள்ளர் என்றனர். மீட்கப்பட்ட உயர்ரக போதை பொருட்கள் இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலினிடம் பேசினோம், அந்த கும்பல் உயர்ரக போதைபொருட்கள் பயன்படுத்தி உள்ளனர். ஈரான், ஜப்பான், இங்கிலாந்து, போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இதற்காகவே சமூக வலைதள பக்கம் வைத்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்து எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்குமுன்பு இதுபோன்ற கூடுகை நடத்தியிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். கைது செய்யப்பட்டவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால்தான் கூடுதல் விபரங்கள் தெரியவரும் என்றார்.
Dharma Productions buys out Cornerstone stake, rebrands DCA as Dharma Collab Artists Agency
Mumbai: Dharma Productions, a film production and distribution company jointly owned by Karan Johar and Adar Poonawalla, has acquired Cornerstone’s stake in the talent management company Dharma Cornerstone Agency. The company is now expanding the venture under a new identity, Dharma Collab Artists Agency (DCAA), which will serve as Dharma Productions’ exclusive platform for artist representation across film, music, sports, live experiences, and culture.Uday Singh Gauri continues as CEO, with Rajeev Masand as COO, ensuring leadership continuity as the agency enters its next phase of growth. Gauri brings over two decades of experience in talent management, music, live entertainment, and strategic partnerships. Under his leadership, DCAA will focus on expanding its reach, building new verticals, unlocking cross-platform opportunities, and shaping a long-term home for culturally influential talent. Apoorva Mehta, CEO of Dharma Productions, said, “Talent has always shaped Dharma’s identity, influencing both our creative choices and how we build for the future. With DCAA, we are creating a structured platform that supports artists across disciplines. This is a deliberate and long-term step toward deepening our role in the creative economy.” Uday Singh Gauri, CEO of DCAA, added, “With DCAA, we’re building a platform that reflects the way artists work, express, and grow today. Representation now goes far beyond negotiation and visibility. It requires cultural understanding, business instinct, and the ability to move with — and ahead of — the industry. Our focus is on developing long-term careers across multiple formats, while creating meaningful pathways between talent and opportunity. This is about scale, yes, but it’s also about care, clarity, and collaboration.” DCAA represents a curated roster of artists shaping the future of entertainment across film, music, and digital culture, including Janhvi Kapoor, Ananya Panday, Sara Ali Khan, Disha Patani, Rasha Thadani, Aditya Roy Kapur, Harshvardhan Rane, Lakshya, Rohit Saraf, Neeti Mohan, Jonita Gandhi, Orry, Sumukhi Suresh, Anahita Shroff, Kareema Barry, and Erika Packard among others.
Malaysia Airlines extends India Mall Activation Tour to Bengaluru
Mumbai: Malaysia Airlines strengthened its presence in South India with a vibrant three-day showcase at Phoenix Mall of Asia, Bangalore, held from 5 to 7 December 2025. Part of its multi-city India Mall Activation Tour, the Bangalore leg followed successful engagements in Mumbai and Hyderabad, reaffirming India as one of Malaysia Airlines’ fastest-growing international markets.The tour is designed to bring Malaysian Hospitality directly to Indian travellers while highlighting the airline’s expanding connectivity, diverse destinations, and collaborations with tourism partners. The Bangalore showcase drew families, young travellers, aviation enthusiasts, and key travel partners such as Akbar Holidays, Riya Tours & Travels, SOTC, and Thomas Cook, creating a rich ecosystem of curated holiday packages and travel solutions.[caption id=attachment_2484978 align=alignright width=181] Dersenish Aresandiran[/caption] Dersenish Aresandiran, Chief Commercial Officer of Airline Business, Malaysia Aviation Group (MAG), said, “The continued enthusiasm we have seen across the tour reflects the growing appetite among Indian travellers for international experiences and seamless connectivity. Bangalore is a key market for us, and through this activation, we connected directly with travellers and shared what makes Malaysia and Malaysia Airlines truly special. We look forward to welcoming more guests on board and providing them with our signature Malaysian Hospitality.” The Bangalore edition introduced refreshed programme elements tailored to the city’s family-driven audience. Children enthusiastically participated in the LEGOLAND Malaysia Speed Building Challenge, assembling festive LEGO Santas in timed sessions. Football fans engaged with the Manchester United zone, featuring interactive challenges and exclusive photo opportunities that underscored Malaysia Airlines’ role as the Official Commercial Airline Partner of the club.The activation also highlighted Malaysia Airlines’ growing network collaborations. Taiwan Tourism joined the event to promote Taiwan as a vibrant, culturally rich, and accessible destination for Indian travellers. With Malaysia Airlines’ existing route to Taiwan, visitors explored cultural, culinary, and experiential travel opportunities, positioning the destination as an exciting choice for upcoming holidays.The final chapters of the India Mall Activation Tour will take place in: Ambience Mall, Gurugram, Delhi (12–14 December 2025) South City Mall, Kolkata (19–21 December 2025) Across both cities, visitors can expect thoughtfully curated experiences designed to spark wanderlust—making it the perfect moment to plan meaningful journeys with Malaysia Airlines as the new year approaches.
நேட்டோ கனவை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! ️
பல ஆண்டுகளாக உக்ரைனின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய இலக்காக இருந்த நேட்டோ அமைப்பில் (NATO) இணைவது என்ற இலக்கை… The post நேட்டோ கனவை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! ️ appeared first on Global Tamil News .
மெஸ்ஸியால் பதவியை இழந்த அமைச்சர்! கொல்கத்தா வன்முறைக்கு பொறுப்பேற்று அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா
உலக கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியா வருகையின்போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ கார் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே விவசாயி பலியான சோகம்!
திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன். இவர் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு சென்று விட்டு மீண்டு தஞ்சாவூர் திரும்பினார். காரை டிரவைர் ஓட்டியுள்ளார். அப்போது தென்னமநாடு, நடுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ்(50) காருக்கு முன்னே சென்றுள்ளார். கார் வேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது. விபத்தில் பலியான கோவிந்தராஜ் இந்நிலையில் தென்னமநாட்டில் கோவிந்தராஜ் சென்ற டூவீலர் மீது கார் வேகமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து கோவிந்தராஜ்க்கு முதலுதவி செய்வதற்கு ஓடினர். துரை.சந்திரசேகரனும் காரை விட்டு இறங்கி சென்று பார்த்தார். ஆனால் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். அங்கிருந்த திமுகவினர் சிலர் உயிர் இருப்பதாக சொல்லி சந்திரசேகரனை மற்றொரு காரில் அனுப்பி வைத்து விட்டனர். இதையறிந்த கோவிந்தராஜனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய உறவினர்கள் சிலர், வயலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது டூவீலரில் கோவிந்தராஜ் சென்றார். கார் அப்போது அதிவேகமாக வந்த திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் கார், டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் பலியாகி விட்டார். இதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது. தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் கார் மெதுவாக வந்திருக்கலாம். வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்கிறார்கள். இறந்த கோவிந்தராஜின் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இரண்டு மகள்கள் உள்ளனர் என்றனர்.
Famo Media unveils new brand identity to strengthen strategic PR & advertising focus
New Delhi: Famo Media, a PR and advertising agency, has announced a refreshed brand identity as part of its long-term growth roadmap, signalling its evolution into a more strategy-led and data-driven communications partner. With over eight years of industry experience and more than 2,800 successful campaigns, the rebranding reflects the agency’s sharpened focus on delivering measurable business impact for brands.The new brand identity marks a key milestone as Famo Media continues to scale its offerings across brand PR, founder profiling, integrated advertising, digital visibility, and reputation management. Designed to represent clarity, agility, and strategic depth, the rebrand aligns with the agency’s expanding role in shaping purposeful and performance-oriented communication strategies.[caption id=attachment_2484968 align=alignleft width=200] Anish Gupta [/caption]Commenting on the development, Anish Gupta, Founder, Famo Media, said, “When we started Famo Media, our focus was largely on visibility. Over the years, as brands and the media ecosystem evolved, so did we. Today, PR is not just about coverage; it’s about strategy, credibility, and business impact. This rebrand reflects who we’ve become and the kind of value we want to create for brands going forward.” Famo Media works across both B2B and B2C sectors, serving clients in industries including startups, fintech, healthcare, lifestyle, fashion, FMCG, and technology. The agency has increasingly emphasised integrated communication solutions, blending PR, digital, and advertising capabilities to ensure brand storytelling is closely aligned with performance outcomes.While the visual identity and positioning have evolved, Famo Media reiterated that its core philosophy remains unchanged—enabling brands to build trust, authority, and sustained visibility across digital and mainstream media platforms.With the refreshed identity, Famo Media aims to strengthen its presence in India’s rapidly evolving communications ecosystem and position itself as a strategic partner for brands seeking impact-led PR and advertising solutions.
இறந்த மகனின் உடைக்கு பதிலாக மூளையை கொடுத்த பெண் –உறைந்த பெற்றோர்
தந்தையிடம் இறந்த மகனின் துணிகளுக்கு பதிலாக மூளையை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் மூளை கலிபோர்னியாவில் வசித்து வரும் 27 வயதான அலெக்சாண்டர் பினோன் என்ற இளைஞர் காலமாகியுள்ளார். அவரது பெற்றோர்கள் சான் ஜோசில் உள்ள தேவாலயம் ஒன்றில் அலெக்சாண்டரின் இறுதி சடங்கை நடத்தியுள்ளனர். மேலும் இறுதி சடங்கு நடத்தும் குழுவிடம் தன் மகன் இறந்தபோது போட்டிருந்த உடைகளை மாற்றிவிட்டு புதிய உடைகளை போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த உடையை தங்களிடம் தரும்படியும் கேட்டுள்ளனர். இதையடுத்து, இறுதி […]
கொல்கத்தா மெஸ்ஸி நிகழ்வு எதிரொலி! விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி விலகினாா்
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பொறுப்பேற்று, மேற்கு வங்க மாநில விளையாட்டுத்… The post கொல்கத்தா மெஸ்ஸி நிகழ்வு எதிரொலி! விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி விலகினாா் appeared first on Global Tamil News .
ஈரோட்டில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பிரசாரம்! பள்ளிக்கு விடுமுறை!
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், டிசம்பர் 18 அன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை இடத்தில் மக்கள் சந்திப்பு பரப்புரை கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்திற்கு பெரும் திரளான ரசிகர்கள், தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. பள்ளியில் டிசம்பர் 18 அன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக தரமான வீரரை வாங்கி அசத்தியது. அந்த வீரருக்கு 32 வயதானாலும், அவரான் இன்னமும் 4 வருடங்கள் வரை விளையாட முடியும் என்பதால்தான், அவரை வாங்கியிருப்பதாக கருதப்படுகிறது.
Auqib Dar : 'ரூ.30 லட்சம் டு 8 கோடி!' - வியக்க வைத்த காஷ்மீர் வீரர்! - யார் இவர்?
அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் தர் ஏல அரங்கையே வியக்க வைத்திருக்கிறார். அடிப்படை விலையாக 30 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த இவரை டெல்லி அணி 8.40 கோடிக்கு வாங்கியிருக்கிறது. யார் இவர்? Aquib Dar ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆகிப் தர்ருக்கு 29 வயது. வேகப்பந்து வீச்சாளரான இவர் டேல் ஸ்டெய்னை போல வீசுவதால் லோக்கல் டேல் ஸ்டெய்ன் என்றும் அந்த வட்டாரத்தில் பெயர் பெற்றிருக்கிறார். நியூ பாலில் ஸ்விங்க் செய்வது இவரின் சிறப்பம்சமாக இருந்தாலும், சமீபமாக டெத் ஓவர்களிலும் கலக்கி வருகிறார். சையத் முஷ்தாக் அலி தொடரில் 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமியும் 8 க்கு கீழ்தான் இருக்கிறது. Aquib Dar முன்னதாக கொல்கத்தா மற்றும் சன்ரைசரஸ் அணிகளில் நெட் பௌலராகவும் இருந்திருக்கிறார். ஏல அரங்கில் இவரை வாங்க சன்ரைசர்ஸூக்கு ம் டெல்லிக்கும் இடையே கடும் போட்டியே நிலவியது. இறுதியில் டெல்லி அணி 8.40 கோடிக்கு இவரை வாங்கியது. IPL 2026 Auction : ரூ.25 கோடிக்கு ஏலம் போன க்ரீன்; சர்பரைஸ் கொடுத்த பதிரானா! - யார் எந்த அணியில்?
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுண்டல் வியாபாரி : ரூ.30.000 அபராதம்
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் உணவு கையாண்ட சுண்டல் வியாபாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய சூழலில் உடல்நலத் தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவு கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, திண்மக் கழிவுகளை ஆலய சுற்றாடலில் கொட்டியமை போன்ற சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிகாதது தொடர்பாக காரம் சுண்டல் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டவர் தொடர்பாக வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ப. […]
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உணவகங்கள், மண்டபங்களுக்கான புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டடுள்ளது உணவகங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த அறிவித்தல்கள் வெளியி;டப்பட்டுள்ளன அதன் பிரகாரம் 1. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் லஞ்சீற் முற்றாக தடை செய்யப்படுகின்றது. அதன் பிரகாரம் […]
தவெக விஜய் ஈரோடு பரப்புரை: 11 பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு- என்னென்ன?
தவெக தலைவர் விஜய்யின் ஈரோடு பரப்புரையை முன்னிட்டு கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள், மக்களுக்கு அக்கட்சி வழிகாட்டு நெரிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்று விரிவாக காண்போம்.
IPL 2026 Auction : ரூ.25 கோடிக்கு ஏலம் போன க்ரீன்; சர்பரைஸ் கொடுத்த பதிரானா! - யார் எந்த அணியில்?
IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates
கோவா தீ விபத்து வழக்கு.. டெல்லியில் கைதான லூத்ரா பிரதர்ஸ்.. சிக்கியது எப்படி?
கோவா நைட் கிளப் தீ விபத்தில் 25 பேர் பலியான நிலையில், தாய்லாந்துக்கு தப்பியோடிய உரிமையாளர்கள் கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா இன்று இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
பூகோள அரசியல்: ‘இந்தியாவே எமது முதல் தெரிவு’– யாழ். இந்திய துணைத் தூதரிடம் ஈ.பி.டி.பி. உறுதி
கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் மனவருத்தத்தினை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடிய போதே ஈ.பி.டி.பி. கட்சியின் பிரதிநிதிகளினால் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியத் துணைத் தூதராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு தமது கட்சி கரிசனையுடன் அக்காலப் பகுதியில் […]
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துடையாடலில் உப தவிசாளர் ஜெயகரன், சபையின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள், இறைவரி பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அடுத்த ஆண்டு முதல் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
SalarySe appoints Indranil Guha as Vice President – Marketing
Mumbai: SalarySe, a Credit-on-UPI-powered platform focused on empowering over 100 million salaried individuals through employer integration, has announced the appointment of Indranil Guha as its new Vice President – Marketing. The appointment comes as the company strengthens its senior leadership team to support its rapid growth and expanding footprint in India’s fintech ecosystem.At SalarySe, Guha will work closely with the founding team to drive marketing operations and oversee brand communications, advancing the platform’s mission to enable responsible credit access while systematically managing credit risk.Bringing over 18 years of multi-industry experience across BFSI and SaaS, Guha has held senior leadership roles at organisations including Kotak Mahindra Bank, Ujjivan Small Finance Bank, ING Vysya Life Insurance, AKAI, and greytHR. Over the course of his career, he has built and scaled brands, created award-winning IPs, and led high-impact ATL, BTL, digital, brand, and field marketing campaigns across India and the Middle East.In his new role, Guha will lead marketing transformation initiatives at SalarySe, with a focus on strengthening brand relevance, deepening digital engagement, and developing customer-centric communication strategies aligned with the company’s vision of improving financial wellness for India’s salaried workforce.With this appointment, SalarySe reinforces its commitment to innovation-led, customer-first growth as it continues to scale its Credit-on-UPI offering and expand access to structured, responsible credit solutions across the country.
''அறியாமையில் செய்கிறார்கள் - படங்களுக்கு அனுமதி மறுத்த மத்திய அமைச்சகம்; கண்டனம் தெரிவிக்கும் IFFK
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) குறிப்பிட்ட 14 படங்களை திரையிடுவதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம். இதனால் திரைப்பட இயக்குநர்களும், கேரள திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர்களும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இத்திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தைப் பற்றி எடுக்கப்பட்ட சில திரைப்படங்களையும் இங்கு திரையிட அனுமதி மறுத்திருக்கிறார்கள். பாலஸ்தீன் 36 'பாலஸ்தீன் 36', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் காஸா', 'வஜிப்' ஆகிய திரைப்படங்களுடன் 1925-ம் ஆண்டு வெளியான 'பேட்டில்ஷிப் போடெம்கின்' திரைப்படத்தையும் இந்த நிகழ்வில் திரையிட அனுமதி மறுத்திருக்கிறார்கள். அத்தோடு 'சந்தோஷ்', 'பீஃப் (ஸ்பானிஷ் திரைப்படம்)' உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கும் அனுமதி மறுத்திருக்கிறார்கள். இப்படியான திரைப்பட விழாக்களில் படங்களைத் திரையிட தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை என்றாலும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். இத்தனை படங்களுக்கு அனுமதி தர மறுப்பு தெரிவித்திருப்பதால் விழாவின் அட்டவணை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்பட விழாக் குழுவின் துணைத் தலைவர், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு 187 திரைப்படங்கள் அனுப்பப்பட்டன. இன்னும் 14 திரைப்படங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. விழாவிற்கு வருவதற்காக விமான டிக்கெட் எடுத்து, பதிவு செய்து வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். இது பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது. என வருத்தங்களைத் தெரிவித்திருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் இவரைத் தொடர்ந்து இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், இவை அனைத்தும் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான படைப்புகள். இவற்றை திரையிட முடியாது என அறியாமையில் சொல்கிறார்கள். 'பேட்டில்ஷிப் போடெம்கின்' திரைப்படத்தை, சினிமா பயில்வதற்கான பாடப்புத்தகமாகக் கருதலாம். அதிகாரிகள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்தவருக்கு நஷ்ட ஈடு! ⚖️
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு, வைத்தியசாலைக்கு ரூபா 55,000 நஷ்ட ஈடு… The post யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்தவருக்கு நஷ்ட ஈடு! ⚖️ appeared first on Global Tamil News .
IPL 2026 Auction: ‘தண்ணி கேன் போட சென்ற’.. சிஎஸ்கே நிர்வாகம்: ஏலத்தை ஓரமாக நின்று கண்டுகளித்தனர்!
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, படுமோசமாக சொதப்பி வருகிறது. முக்கியமான வீரர்கள் ஏலத்திற்கு வந்த நிலையில், அவர்களை வாங்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றனர். அதுகுறித்து பார்க்கலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்புப் பூஜை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப் பிறப்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா மற்றும் மார்கழி மாத விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீஆண்டாள் மானிடப் பெண்ணாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். ஸ்ரீரங்கநாதருக்குப் பூமாலை சூட்டிய பின், திருப்பாவை பாடி அரங்கனை அடைந்தார். அரங்கனை அடைய 30 நாட்கள் மார்கழி மாதம் நோன்பிருந்து திருப்பாவை பாடிய ஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். மார்கழி பூஜை அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு மார்கழி மாத முதல் நாள் பிறப்பையொட்டி ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 30 திருப்பாவைகளும் பொறிக்கப்பட்ட தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீஆண்டாளுக்குச் சாற்றப்பட்டது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் ஸ்ரீஆண்டாளுக்கு 30 நாட்களும் திருப்பாவைப் பாடல் பாடப்பட்டு பூஜைகள் நடைபெறும். மார்கழி மாதம் பூஜை இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சுவாமிகள் முன்னிலையில் முதல் திருப்பாவை பாடப் பட்டது. மார்கழி மாதம் மீதமுள்ள மற்ற நாட்களில் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் வைத்து திருப்பாவைகள் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஸ்ரீஆண்டாளை தரிசித்து வழிபட்டனர். குறிப்பாக கன்னிப் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து திருப்பாவை பாடி வழிபட்டுச் சென்றனர். ஸ்ரீஆண்டாள் இயற்றிய திருப்பாவை 30 பாசுரங்களைக் கொண்டது. இது வைணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் இந்தப் பாசுரங்களைப் பாடி வழிபடுவது சிறப்பான பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை.
IPL 2026 ஏலம் –இலங்கை வீரர்களுக்கு ஜாக்பாட்!
IPL 2026 ஏலம் – இலங்கை வீரர்களுக்கு ஜாக்பாட்! கெமரூன் கிரீனுக்கு சாதனை விலை! அபுதாபியில் நடைபெற்று வரும்… The post IPL 2026 ஏலம் – இலங்கை வீரர்களுக்கு ஜாக்பாட்! appeared first on Global Tamil News .
தமிழகத்தின் இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை :கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,16-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]
பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!
தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துண்க்வா மாகாணத்தில் இயங்கி வரும் ஒரு பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) பயங்கரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மாணவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் வடமேற்கு பாகிஸ்தான் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் […]
வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து
வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப்பெறுவதாக கல்வி திணைக்களம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது.
Mumbai: As part of the Elections Mahacoverage with Maharashtra’s No. 1 Election Team, ZEE 24 Taas is airing a special election coverage, “Mahanagarpalikacha Ranasangram,” delivering continuous updates from various districts, towns, and villages. The Mahanagar Palika elections are widely seen as a Mini-Vidhan Sabha elections, as they reflect voter sentiment and political momentum ahead of larger state-level contests. Through Mumbai Kunachi - A focused show tracking the political battle for Mumbai, Jahir Sabha, and Nivadnuk Yatra, ZEE 24 Taas shall deliver comprehensive election coverage with sharp analysis, insights, and strong on-ground reporting from across Maharashtra.ZEE 24 Taas has built a strong reputation for fast, reliable information grounded in on-ground reporting. With reporters positioned across Maharashtra, the channel keeps its focus on issues that shape daily life giving it a clear hyperlocal pulse. This connection with viewers is evident from the recently concluded Bihar elections, where 28% of households in Maharashtra tuned in to Zee 24 Taas during prime time, significantly outperforming competing Marathi news channels.Mahanagarpalikacha Ranasangram brings this strength together, offering real-time updates, constituency-level tracking, and authentic stories captured directly from the field. Mahanagarpalikacha Ranasangram Kamlesh Sutar, Editor, ZEE 24 Taas, added: “Our strength lies in our presence on the ground and viewers rely on us for clear, insightful analysis. ZEE 24 Taas reporters are out there from the polling booths to the narrow lanes of Maharashtra’s remotest districts capturing real voices and real stories. The trust viewers place in us comes from this commitment. ‘Mahanagarpalikacha Ranasangram’ continues our tradition of deep, district-level engagement, ensuring that the public receives news that reflects their everyday realities.” ZEE 24 Taas will maintain its comprehensive coverage, providing verified updates, constituency insights, candidate profiles, and result analyses with unmatched speed and accuracy.Through Mahanagarpalikacha Ranasangram, ZEE 24 Taas reinforces its promise of news that comes straight from the communities that define Maharashtra’s story.-Based on Press Release
வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து!
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘சேவையின் தேவை கருதிய இடமாற்றங்கள் – 2026’ அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வித்… The post வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து! appeared first on Global Tamil News .
தருமபுரி மாணவி வழக்கில் ரூ.10 லட்சம் பேரம்! திமுக கட்டப்பஞ்சாயத்துக்கும் அன்புமணி கண்டனம்
தருமபுரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் வழங்குவதாக கூறி திமுக கட்டப்பஞ்சாயத்து செய்ததாக அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
Naturals Salons appoints Sreeleela as Brand Ambassador
Chennai: Naturals Salons, an entrepreneurship-led salon brand, has announced actor Sreeleela as its new brand ambassador as it moves closer to its vision of enabling 1,000 entrepreneurs and generating employment for over 15,000 stylists by the end of calendar year 2026.Built on a single-brand, franchise-driven model, Naturals has played a pivotal role in transforming India’s largely unorganised salon industry into a more structured and professionally managed ecosystem. The brand is nearing a four-figure milestone in its national network, reflecting its evolution from a strong regional presence to a pan-India salon brand focused on business ownership, skill development, and employment creation.Founded by K Veena, Naturals has scaled steadily by combining outlet expansion with a sustainable support system for franchise partners, including centralised training, technology, and quality standards. Its franchise-led approach has enabled local entrepreneurship across metros and emerging markets, while contributing to the formalisation of India’s beauty and wellness workforce through structured skilling and long-term career pathways.The association with Sreeleela aligns with Naturals’ strategy to deepen its relevance among Gen Z and millennial consumers, who are increasingly shaping beauty and personal care consumption trends. Known for her youthful energy and growing national appeal, Sreeleela represents the brand’s ambition to remain contemporary while expanding responsibly across India’s under-penetrated salon market.Alongside the announcement, Naturals also introduced the Customer First Card, its flagship loyalty programme aimed at making professional beauty services more accessible. The initiative allows members to avail services worth ₹30,000 over a year by paying ₹20,000, with flexible EMI options, across more than 900 Naturals salons nationwide for the entire family.Commenting on the appointment, K Veena, Founder of Naturals Salons, said, “Our earlier brand faces - Genelia D’Souza, Kareena Kapoor and Dipika Pallikal - have each represented important phases of our purpose-driven journey. As we look ahead, we wanted someone young, energetic and aspirational who resonates strongly with Gen Zs and millennials. Sreeleela perfectly fits this vision. Her growing popularity in the PAN India movies and her foray into Hindi films will help us connect with a wider audience across India as we scale aggressively.” Highlighting the brand’s long-term growth opportunity, Veena added, “Our focus is on building depth and scale within India. The vision of creating 1,000 entrepreneurs and thousands of skilled jobs is rooted in the belief that the country itself offers immense growth potential for structured, high-quality service brands.” Expressing her excitement, Sreeleela, Brand Ambassador of Naturals Salon, said, “Naturals represents a brand with a purpose beyond beauty. It stands for opportunity, aspiration and livelihoods. Being part of a brand that is enabling opportunities for hundreds of entrepreneurs, creating employment for thousands of stylists, and serving millions of customers is truly meaningful.” As it prepares to cross the milestone of 1,000 entrepreneurs, Naturals continues to invest in training academies, digital platforms, and operational excellence to support its expanding network. With a clear focus on scale, sustainability, and accessibility, the brand is strengthening its position in India’s organised beauty and wellness services sector.
வெங்கடேஷ் ஐயரை கழட்டிவிட்ட கொல்கத்தா..கை கொடுத்து பிரமாண்ட விலைக்கு தூக்கிய பெங்களூர்!
பெங்களூர் :IPL 2026 மினி ஏலத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ரூ.7 கோடி என்ற தொகைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த 2025 மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அவரை ரூ.23.75 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் அவரது ஃபார்ம் சரியாக இல்லை என்ற விமர்சனங்கள் அதிகமாக எழுந்த நிலையில், இந்த விலை குறைவு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேஷ் […]
வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காயமடைந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு , வைத்தியசாலைக்குள் உள்ள அவசர சிகிசிச்சை பிரிவு வரையில் அத்துமீறி நுழைந்த நபர் , அங்கு கடமையில் இருந்த உத்தியோகஸ்தர்களுடன் தர்க்கம் புரிந்து , மேசையில் இருந்த பிரிண்டர் ஒன்றினை உடைந்து சேதமாக்கியும் இருந்தார். இது தொடர்பிலான கண்காணிப்பு கேமராக்களின் காணொளிகளும் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி இருந்து. சம்பவம் தொடர்பில் . வைத்தியசாலை நிர்வாகத்தினரால் ,யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று , தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் . குறித்த வழக்கில் அவரை குற்றவாளியாக கண்ட மன்று , வைத்தியசாலை உபகரணங்களுக்கு சேதமேற்படுத்தியமைக்காக வைத்தியசாலைக்கு 55 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மன்று உத்தரவிட்டது.
சென்னையில் ஏர் இந்தியா சேவை பாதிப்பு.. தொடர் தாமதத்தால் விமான நிலையத்தில் பயணிகள் அவதி!
சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதிப்பட்டனர். துபாய், சிங்கப்பூர், மும்பை, டெல்லி செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
Tenable names Microsoft Security Leader Vlad Korsunsky as Chief Technology Officer
Bangalore: Tenable Holdings, Inc., the exposure management company, has announced the appointment of Vlad Korsunsky as Chief Technology Officer and Managing Director of Tenable Israel. The appointment marks a key milestone as Tenable accelerates its exposure management vision to secure the modern attack surface.In his new role, Korsunsky will lead Tenable’s long-term technology strategy, overseeing technical vision, platform innovation, and AI-led initiatives. He will be responsible for scaling the Tenable One Exposure Management Platform and advancing the company’s artificial intelligence strategy. Based at the Tenable Israel Innovation Center in Tel Aviv, he will report to Tenable co-CEO Steve Vintz.Korsunsky joins Tenable following more than a decade at Microsoft, where he most recently served as Corporate Vice President of Cloud and Enterprise Security. During his tenure, he built and led Microsoft’s global multi-cloud security, enterprise AI security, and exposure management businesses, playing a pivotal role in shaping the company’s AI security strategy and launching new growth-driving business lines. He brings over 25 years of leadership experience across software engineering and cybersecurity. “Vlad is a visionary technology leader who has operated and succeeded at the highest levels of the industry,” said Vintz . “As we boldly advance our exposure management vision, he is exactly the leader we need to accelerate our platform leadership, especially with rising demand for AI risk management. We’re fortunate to have him driving our technology strategy so we can deliver even greater value to our customers.” Commenting on his appointment, Korsunsky said , “Tenable is the defining leader in exposure management, with unmatched breadth and depth of coverage, analytics and expertise. We are uniquely positioned for this moment, where AI is not only reshaping how we work, but also the attack landscape and how it is defended. I’m energized by the opportunity ahead, and I look forward to working with this talented team to deliver solutions and a future that makes a real difference for our customers.” Korsunsky holds a Bachelor of Science degree in Computer Science and Applied Mathematics from Bar-Ilan University and a Master of Science degree in Computer Science from Reichman University.
⚖️ நீதிமன்ற உத்தரவு: மண்டைதீவு புதைகுழி விசாரணை அறிக்கை தட்டச்சுப் பிரதியாக தேவை!
மண்டைதீவுப் புதைகுழி தொடர்பிலான விசாரணை அறிக்கையை கையெழுத்துப் பிரதியாக அல்லாமல், தட்டச்சுப் பிரதியாக (Typed Copy) சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை… The post ⚖️ நீதிமன்ற உத்தரவு: மண்டைதீவு புதைகுழி விசாரணை அறிக்கை தட்டச்சுப் பிரதியாக தேவை! appeared first on Global Tamil News .
Titan launches ‘Wear Your Story’ campaign featuring PV Sindhu and Vikrant Massey
Mumbai: Titan has unveiled its new brand campaign, Wear Your Story, inviting a new generation to embrace authenticity, intention, and quiet confidence through personal style. Rooted in the belief that substance creates style, the campaign celebrates individuality shaped by lived experiences, choices, and values rather than surface spectacle.Fronting the campaign are Double Olympic medallist PV Sindhu and National Award-winning actor Vikrant Massey—two personalities whose journeys embody depth, courage, and authenticity. Their stories reflect the mindset of today’s consumers who prioritise identity over imitation and meaning over flamboyance.The campaign stems from the insight that contemporary audiences increasingly seek real, relatable narratives. Through films featuring Sindhu and Massey, Titan brings alive the idea that modern style is defined by purpose, resilience, and sincerity.[caption id=attachment_2484945 align=alignright width=200] Ranjani Krishnaswamy [/caption] Ranjani Krishnaswamy, CMO, Analog Watches at Titan Company Limited, said, “At Titan, we’ve always believed that a watch is more than an accessory, it is a quiet marker of who you are and the journeys that have shaped you. In a world where authenticity has become truly aspirational, people want their style to reflect their lived truth. PV Sindhu and Vikrant bring this spirit alive with remarkable honesty. Their stories flow seamlessly into what we stand for as a brand. They celebrate the strive and courage that Titan embodies as it continues its journey into horological artistry.” PV Sindhu’s campaign film captures her resilience, discipline, and deep connection with sport, portraying grit as a powerful form of self-expression. Her story is designed to resonate with young Indians who value perseverance and growth.Reflecting on her association with the campaign, PV Sindhu stated, “This film took me back to the moments that have shaped me, both on and off the court. This campaign reflects the belief that determination and purpose create a style of its own. The collaboration felt special because the brand understood the emotion behind my journey and translated it into something authentic.” The film featuring Vikrant Massey mirrors his philosophy of purposeful work and creative sincerity, highlighting a journey driven by passion rather than scale. His narrative speaks to individuals who choose to move forward with intention and remain true to themselves. “My journey has never been about moving fast but moving with honesty and my style has always come from simplicity and sincerity. That’s why Titan’s ‘Wear Your Story’ feels personal to me. A timepiece always reminds me of where I’ve been and where I choose to go,” shared Vikrant Massey. [caption id=attachment_2481835 align=alignleft width=200] Puneet Kapoor [/caption] Puneet Kapoor, Chief Creative Officer, Ogilvy South, added, “The idea springs from a simple truth: great brands authentically mirror people, their inspiration and their mettle. The choices we make in life are reflected in every small detail, including what we adorn ourselves with. In India, a million authentic stories await. We began with PV Sindhu and Vikrant Massey, honoring the trials and tribulations that shaped their pursuit of dreams. What’s true for them is true for us. So, with Titan, India’s OG watch brand, and its design philosophy of artistry nestled into engineering, our aim is to reflects a story that draws from the lives and aspirations of Indians.” Together, the films showcase Titan’s evolving design language, contemporary storytelling, and craftsmanship, positioning the watch as a subtle yet powerful marker of personal journeys.The Wear Your Story campaign is now live across digital platforms, inviting audiences across India to reflect on what shapes their story—and wear it with pride.youtube.com/watch?v=pTgCCnCMb8w&feature=youtu.behttps://www.youtube.com/watch?v=q7LqIyJorM0
படபடவென பெய்த திடீர் மழை! - குளு குளு சென்னை!
நல்லூர் பிரதேச சபையின் புதிய விதிகள் அமுல்!
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கான அதிரடி அறிவிப்பை சபை தவிசாளர்… The post நல்லூர் பிரதேச சபையின் புதிய விதிகள் அமுல்! appeared first on Global Tamil News .
இந்திய துணைத்தூதரகத்தை அகற்றுவோம் என கூறிய விடயம் - ஈ.பி.டி.பி கடும் மனவருத்ததிலாம்
கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் மனவருத்தத்தினை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடிய போதே ஈ.பி.டி.பி. கட்சியின் பிரதிநிதிகளினால் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியத் துணைத் தூதராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு தமது கட்சி கரிசனையுடன் அக்காலப் பகுதியில் செயற்பட்டிருந்ததுடன், இந்தியாவிடம் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பெற்று, போரினால் அழிவடைந்த பிரதேசங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் கட்டியெழுப்பியமையை சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறான பின்னணியில், எமது வளங்களை அழிக்கின்ற இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட நியாயமான போராட்டத்தினுள் நுழைந்த சிலர், இந்தியத் துணைத் தூதராலயத்தினை மூடுவது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என ஈ.பி.டி.பி. தரப்பினரால் வலியுறுத்தப்பட்டது. பூகோள அரசியல் விவகாரத்தில் இந்தியாவே எமது முதல் தெரிவு என்று கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா வெளிப்படையாக தெரிவித்து வந்ததுடன், செயற்பாடுகளிலும் அந்த நிலைப்பாட்டினை இறுக்கமாக பின்பற்றி வருவதாகவும், குறிப்பாக தம்மால் முன்னெடுக்கப்பட்ட கடலட்டை பண்ணை விஸ்தரிப்பின் போதும் இந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கரிசனையுடன் செயற்பட்டதாகவும் தெரிவித்தனர். நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ள அண்மைய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக இந்தியாவின் விரைவான மீட்புச் செயற்பாடுகளே, குறித்த விவகாரம் சர்வதேச ரீதியான பேசுபொருளாக மாறி பல்வேறு நாடுகளின் உதவிகளும் கிடைப்பதற்கு மூலகாரணமாக இருக்கின்றது என்ற விடயமும் இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டது. இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி. சார்பில், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகரும் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவருமான எஸ்.தவராசா, கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளரும் பேச்சாளருமான சிறீரங்கேஸ்ரன் முன்னாள் யாழ்.மாநகர முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பத்மநாதன் சிறிகாந்த் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்
Mark: வளர்ச்சி அடைந்தால் சில பிரச்னைகள் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்; இப்போ.! - யோகி பாபு
கிச்சா சுதீப்பின் 'மார்க்' திரைப்படம் இம்மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வருகிறது. இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படம் குறித்தான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்வில் யோகி பாபு ப்ரோமோஷன்களில் பங்கேற்பது குறித்தும், அவர் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். Mark - Kiccha Sudeep யோகி பாபு குறித்து நடிகர் கிச்சா சுதீப், யோகி பாபு சாருக்கு ஒரு கால் இங்க இருக்கு. இன்னொரு கால் வேற செட்ல இருக்கும். எங்க படப்பிடிப்பு தளத்தில ரொம்ப பிஸியான நடிகர் அவர்தான். அவர் இன்ஸ்டால்மெண்ட்ல படப்பிடிப்பு தளத்துக்கு வருவாரு. நீங்க ஒரு வண்டி வாங்கினால், அதற்கான பணத்தைத்தான் நீங்க இன்ஸ்டால்மெண்ட்லதானே கட்டணும். ஆனா, யோகி பாபு இன்ஸ்டால்மெண்ட் முறையிலதான் படப்பிடிப்பு தளத்துக்கு வர்றாரு. நாங்க ஷூட் முடிச்சிட்டு கிளம்பினதுக்குப் பிறகு இயக்குநர் யோகி சார் வந்திருக்கார்னு நடிக்கக் கூப்பிடுவார்கள். நான் காத்திருந்தாலும், அதற்கான விஷயங்கள் அவர்கிட்ட இருக்கு. என்றார். யோகி பாபுவிடம் செய்தியாளர் ஒருவர், படங்களின் ப்ரோமோஷனுக்கு நீங்க சரியாக வருவதில்லைனு சொல்றாங்களே.. எனக் கேள்வி எழுப்பினார். பதில் தந்த யோகி பாபு, அந்தப் படக்குழுவினரைக் கூட்டிட்டு வாங்க நான் உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன். Mark - Kiccha Sudeep இந்த 'மார்க்' படத்துல என்ன விஷயங்கள் செய்திருக்கோம் என்பதைப் பத்தி இங்க நம்ம பேசுவோம். சத்யஜோதி நிறுவனத்திடம் நான் ஆரம்பத்துல இருந்து வாய்ப்புகள் கேட்டிருக்கேன். அவங்க குடும்பத்துல ஒருவனாகத்தான் நான் இருக்கேன். அவங்க சொல்ற நேரத்துக்கு நாங்களும் வந்திடுவோம். இது மாதிரி தயாரிப்பாளர்களுக்கு நாங்க சப்போர்ட்தான் பண்ணிட்டு இருக்கோம். என்றவர், சினிமாவுக்கு வந்து 22 வருடங்கள் ஆகிடுச்சு. வளர்ச்சி அடைந்தால் சில பிரச்னைகள் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். அந்தப் பிரச்னைகள் என்னுடைய லைஃப்ல வரும்போது நான் கொஞ்சம் வளர்ச்சி அடைந்திருக்கேன்னு நினைக்கிறேன். எனப் பேசினார்.
ஒரே ஒரு முறை பணம் போட்டால் போதும்.. ஒவ்வொரு மாதம் வட்டி வந்துகொண்டே இருக்கும்!
இந்த தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரே முறை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் பெறலாம்.
Just In Time launches ‘Samay Samay Ki Baat Hai’, celebrating timeless wedding moments
Mumbai: Just In Time, a retailer of global premium watch brands, has unveiled its latest wedding-focused campaign, Samay Samay Ki Baat Hai, celebrating love, time, and the moments that define lifelong bonds. The campaign features digital creator Sanchi Rai alongside actor Rohan Mehra and presents a poignant narrative centred on the quiet, emotional pauses that make weddings deeply personal.Set against the calm anticipation of a wedding day, the film explores how the perception of time shifts during life’s most meaningful milestones. Through gentle visuals and evocative storytelling, it captures intimate exchanges between a bride and groom—shared glances, fleeting smiles, and moments that feel suspended in time—highlighting memories that endure well beyond the ceremony.The campaign seamlessly integrates timepieces from Just In Time’s premium portfolio, including Rado, Versace, Longines, Tissot, Ferragamo, Adriatica, Movado, Mont Neo, Seiko, Briston, and Philipp Plein. Select accessories such as watch winders and signature watch cases also feature in the narrative, reinforcing the thoughtfulness behind wedding gifting and symbolising intention, care, and new beginnings.[caption id=attachment_2484940 align=alignleft width=200] Ronak Shah [/caption]Commenting on the launch, Ronak Shah, CEO of Just In Time, said, “Weddings are imbued with profound emotional resonance and stand as pivotal moments for our business. Families turn to us for gifts that convey love and meaning, and watches represent an everlasting choice. With ‘Samay Samay Ki Baat Hai,’ we aim to showcase how a watch becomes intricately woven into a couple’s journey, both emotionally and practically. This campaign encapsulates the evolving wedding market, more personal, more meaningful, and focused on enduring pieces.” With Samay Samay Ki Baat Hai, Just In Time reinforces its deep association with the wedding season, positioning itself as a preferred destination for meaningful gifting, couple watches, curated trousseau essentials, and timeless timepieces that mark the beginning of new chapters.https://www.youtube.com/watch?v=eFgpI0QVijE&feature=youtu.be
பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு! வரும் 29ம் தேதி கனிமொழி தலைமையில் ஏற்பாடு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 29ந் தேதி கனிமொழி தலைமையில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவு புதைகுழி வழக்கு - விசாரணை அறிக்கையை கையால் எழுதி மன்றில் சமர்ப்பித்த பொலிஸார்
மண்டைதீவு புதைகுழி தொடர்பிலான விசாரணை அறிக்கையை கையெழுத்து பிரதியாக வழங்காது , தட்டச்சு பிரதியாக வழங்குமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அறிவுறுத்தியுள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த செப்டெம்பர் மாதம் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் ஊர்காவத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து சான்று ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கையில் மன்றில் சமர்ப்பிக்குமாறு , நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, பொலிஸாரினால் , அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், கடற்படையினர் , இராணுவத்தினர் , மற்றும் உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பிலான விசாரணை உள்ளடங்கலான விசாரணை அறிக்கையினை கையெழுத்து பிரதியாக மன்றில் பொலிஸார் சமர்ப்பித்தனர். அதனை அடுத்து , விசாரணை அறிக்கையை தட்டச்சு பிரதியாக நாளைய தினம் புதன்கிழமை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி வருகிறது. வாங்க வேண்டிய மூன்று முக்கிய வீரர்களை கோட்டைவிட்டது. வேறு யாரை வாங்க இத்தனை கோடியுடன் சென்றது?
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு.. வேற லெவல் ரீசார்ஜ் திட்டங்கள்!
புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கான சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சிட்னி போண்டி தாக்குதலில் லண்டன் பிரஜை உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த நபர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துனர். இந்த தாக்குதலில் லண்டனைச் சேர்ந்த 41 வயதான, ரப்பி எலி ஸ்க்லாங்கர் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான 50 வயதுடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் […]
டேவிட் மில்லரை தட்டி தூக்கிய டெல்லி கேபிடல்ஸ்!
டெல்லி : IPL 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனுக்கு முன்னதாக மினி ஏலம் துபாயில் இன்று தொடங்கியது. 350 வீரர்கள் ஏல பட்டியலில் உள்ள நிலையில், ஏலம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏலம் அணிகளின் உத்தியை தீர்மானிக்கும் முக்கியமானது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏலத்தின் தொடக்கத்தில் முதல் வீரராக வந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கை எந்த […]
பிரமாண்ட விலைக்கு ஏலம் போன கேமரூன் கிரீன்! கொல்கத்தா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா?
துபாய் : IPL 2026 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் க்ரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ரூ.25.2 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இது ஏலத்தின் மிக உயர்ந்த தொகையாக அமைந்துள்ளது. KKR-ன் இந்த முடிவு அணியின் வேகப்பந்து ஆல்-ரவுண்டர் தேவையை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ரீன் IPL-ல் 29 போட்டிகளில் 707 ரன்கள், 16 விக்கெட்டுகள் எடுத்த அனுபவம் கொண்டவர். இந்த ஏல தொகையில் ரூ.18 கோடி மட்டுமே க்ரீனுக்கு […]
ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில், கெமிரான் கிரானை வாங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசிவரை போராடியது. இறுதியில், 25.20 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தட்டித்தூக்கியது.
Sony YAY! adds Holiday Magic to December with new episodes of Shinchan
Mumbai: As the year draws to a close and the holiday spirit begins to fill the air, Sony YAY! is all set to make this season of joy even more exciting. The year-end fun amplifies as Sony YAY! brings all-new, never seen before episodes of Shin chan, starting today, arriving just in time for the holiday break and giving kids the perfect reason to enjoy their festive holidays.With 15% slot share, the show is already a slot leader as its new season brings Shin chan’s trademark humor, fresh adventures, and family-friendly fun. With Winter vacations being a peak viewing period, the channel aims to deepen engagement with one of its most loved and high-performing franchises.Shin chan continues to be a standout favorite across TV and digital, and the new Season further strengthens Sony YAY!’s commitment to curating globally acclaimed content for Indian audiences during this celebratory time of year. Ronojoy Chakraborty, Head Programming, Sony YAY! shared “Shin chan is the most endearing character for kids and this being the jolliest time for them, it was only natural for us to give kids more of what they love. This festive season, our programming slate reflects kids’ evolving appetite for fun, fast-paced, and emotionally warm stories. With this brand new 2025 produced season, we are bringing to the kids a fun-filled watch to light up their festive moments and elevate the Shin chan experience for year-end viewing.” “Stay tuned to watch Shin chan’s freshly baked episodes only on Sony YAY!”-Based on Press Release
IND vs NZ : ‘ஒருநாள், டி20 தொடர்’.. எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? தேதி, அட்டவணை இதோ!
தென்னாப்பிரிக்க டி20 தொடர் முடிந்தப் பிறகு இந்தியா வரும் நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்க உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
'ஊரூரா கும்மிப்பாடிட்டு அலையிதன்னு கேவலமா பேசுனாங்க' - கலக்கும் வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு குழு!
'வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு' ங்கிறது தென் மாவட்டப் பகுதிகளில் மிகப் பிரபலமான, மக்களால் விரும்பப்படுகிற கும்மிப்பாட்டு குழுவாக இருந்து வருகிறது. கும்மிப்பாட்டு என்றாலே பெண்கள் கும்மியடிப்பதை தான் பார்த்திருக்கிறோம். கவிஞர் பாரதியே 'கும்மியடி பெண்ணே கும்மியடி...' என்று தான் பாடியிருக்கிறார். அப்படியிருக்க, ஆண்கள் குழுவாக இணைந்து 30 வருடமாக இந்த கும்மிப்பாட்டுக் குழுவை நடத்தி வருகின்றனர். இக்குழுவின் தலைமைப் பாடகரிடம் 'எந்த கோவில் கொடைனாலும் உங்க கும்மிப்பாட்டைத்தான் கூப்பிடுறாங்களாமே!' என்று கேட்டதற்கு ஆமா என்று சிரித்துக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார். தலைமைப் பாடகர் அண்ணாத்துரை என் பேரு அண்ணாத்துரை. தென்காசி மாவட்டம் சிவகிரி பக்கத்துல உள்ள வாசுதேவநல்லூர் தான் எங்க ஊரு. நாங்க ஒரு முப்பது வருசமா இந்த கும்மிப்பாட்டுக் குழுவை தொடர்ந்து நடத்திட்டு வர்றோம். நான் கும்மிப் பாடும்போது எனக்கு பக்கத்தில் உறுமி ஒருத்தரும், தாளம் ஒருத்தரும் அடிப்பாங்க. 15 பசங்க சுத்தி கோலாட்டத்தை வச்சி கும்மியடிப்பாங்க. நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கயில எங்க ஊர் கோவில் கொடைக்கு பூக்குழியைச் சுத்தி எங்க ஊருல உள்ள ஆண்களும் பெண்களும் 11 நாட்கள் வரை தினமும் கும்மியடிப்பாங்க. அதை பாத்து தான் ஏன் நம்மளும் கும்மியடிக்க கூடாதுன்னு ஆரம்பிச்சது தான் வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு. கும்மியை பெண்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் கும்மியடிப்பாங்க. நாங்க ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு மாதிரி அடிப்போம். அம்மனுக்கு ஒரு மாதிரியும் சுடலை, சப்பாணி மாடன்னு ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரி கும்மியடிப்போம். அது எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருச்சு. முத ஆரம்பிக்கும் போது நாங்களே தான் ஒவ்வொரு அடியையும் உருவாக்கி கத்துக்கிட்டோம். இப்போ அடுத்தடுத்து வர்றவங்க அதை அப்படியே கத்துக்கிடுறாங்க' என்று நெகிழ்ந்து பேசிக்கொண்டிருந்த தலைமைப்பாடகரை ஆசுவாசப்படுத்தி அக்குழுவைச் சேர்ந்த இளைஞர் ராம் நம்மிடம் பேச்சைத் தொடர்ந்தார். ராம் எங்களுக்கான சீசன்ங்கிறது 10 மாசம் வரைக்கும் இருக்கும். வருசத்துல 100 நிகழ்ச்சிக்காவது போயிருவோம். கார்த்திகை, மார்கழி மாசத்துல அய்யப்பன் சீசன்ங்கிறதுனால அந்த மாசத்துல மட்டும் எங்களை கூப்பிட மாட்டாங்க. நாங்க கும்மயடிக்கப் போகும்போது மொத்தமா எல்லாரையும் சேர்த்து 20 பேர் வரைக்கும் போவோம். நாங்க தொடர்ந்து ஒரு மூணு மணி நேரம் இடைவிடாம கும்மியடிக்கணும. பெரும்பாலும் இரவுல தான் கும்மியடிக்கணுங்கிறதால பசங்க நாங்க வேலைக்கு போயிட்டு வந்து நிகழ்ச்சிக்களுக்கு போகுறதுக்கு சரியா இருக்கு. இதுல இருந்து வருகிற வருமானமும் எங்களோட சில பொருளாதார செலவுக்கு பயன்படுது. எங்கப்பா தலைமுறைக்கு அடுத்த ரெண்டாவது தலைமுறையா நாங்க இன்ட்ரஸ்ட்னால தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கோம். இன்னும் நிறைய பேர் எங்களுக்கு ஆதரவு கொடுக்கணும் என்று கோரிக்கை வைக்கிறார். வாசுதேவ நல்லூர் கும்மிப்பாட்டு குழு ஒரு கேசட் தான் உங்களை எல்லார்கிட்டையும் சேர்த்துச்சாமே அந்த கேசட் சீக்ரெட் என்ன என்று கேட்டதற்கு, இந்தக் குழுவை நாங்க ஆரம்பிக்கும் போது நிறைய கோயில் கொடைகளில் நடக்கிற வில்லுப்பாட்டுக் கதைகளை கேட்டு தான் சாமிக் கதைகளை தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். அந்த வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் கிட்டயும் பேசி ஒவ்வொரு சாமிக்கதைகளும் கும்மிப்பாட்டுக்கு ஏத்தப்புல எழுதி படிக்க ஆரம்பிச்சோம். எங்கயும் போகாம எங்க ஊர்களுக்குள்ளயே தான் கும்மியடிச்சிட்டிருந்தோம். வெளிய ஒரு சில ஊர்களுக்கு தான் போயிட்டு வந்தோம். நாங்க எங்களோட கும்மிப்பாட்டை பாடி கேசட் போட்டோம். அதுக்கப்புறம் தான் அதைப்பாத்துட்டு நிறைய ஊர்கள்ல இருந்து எங்களை தேடி வந்தாங்க. இன்னைக்கு அதுதான் எங்களை இங்க வரைக்கும் கொண்டு வந்திருக்கு. அந்தப் பாட்டை பாடுறேன் கேக்குறீங்களான்னு பேசிக் கொண்டிருந்த தலைமைப் பாடகர் கனத்த குரலில் நம்மிடம் பாடத் தொடங்கினார். தன் குழுவினருடன் தலைமைப்பாடகர் அண்ணாத்துரை அம்மா வருவதை பாருங்கம்மா அவ ஆடி வருவதை பாருங்கம்மா ஆடி வரும் முப்புடாதிக்கு ஆனந்த கும்மி அடிங்களம்மா வாராளங் கிளி வாராளாம் தாயி வடக்கேயிருந்துமே வாராளாம் இந்த நிலவுக்கும் சந்தனப் பொட்டுக்கும் இப்போ வருவாளாம் உச்சிமகாளி முன்னாடி 50 ரூபாய்க்கு கும்மியடிச்சோம். இப்போ 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுக்குறாங்க. திருநெல்வேலி வானொலில வருசா வருசம் கும்மிப்பாட்டுக்கு எங்களை கூப்பிடுவாங்க. நிறைய பள்ளிக்கூடங்களிலும் தலைவர்கள் பத்தி பாடுறதுக்கும் போயிட்டு வர்றோம். இப்போ மலேசியா போன்ற வெளிநாடுகளிலயும் கூப்பிடுறாங்க. ஆரம்பத்துல நிறைய பேரு என்னப்பா இப்படி கும்மியடிச்சிட்டு ஊரூரா அலையிதன்னு நிறைய பேசுனாங்க. என்னோட கலையை விடாம என்னைக்கும் விடக் கூடாதுன்னு நினைச்சி அதுக்குள்ளவே இருந்ததனால தான் இன்னைக்கும் இந்தக் கும்மி எங்களை விடாம பெரிய பெரிய இடங்களுக்கு எங்களை கொண்டு போய் சேர்க்குது. எனக் கூறி சந்தோசக் கண்ணீரோடு மனம் நிறைகிறார், தலைமை பாடகர் அண்ணாத்துரை.

26 C