கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய பெண்ணுக்கு ஒரு லட்சம் டொலர் பரிசு
கனடவில் கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய டொராண்டோவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் 1 இலட்சம் டொலர் பரிசு வென்றுள்ளார். எட்டோபிகோவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண்ணான மேரி ஸாமிட், ஓ.எல்.ஜீ நிறுவனத்தின் லொத்தர் சீ்டிடன் மூலம் அதீர்ஸ்டம் வென்றுள்ளார். என் கணவர் கடந்த செப்டம்பர் மாதம் இறந்துவிட்டார். அந்த வேதனையிலிருந்து என் மனதை ஓரளவு திசைதிருப்ப இந்த லாட்டரி டிக்கெட்டுகள் உதவியதாகத் தெரிவித்துள்ளார். நேரத்தை நல்ல முறையில் செலவிட இது ஒரு வழியாக இருந்தது,” என்று […]
லண்டன் ஹரோ , வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு -70 பேர் கைது
லண்டனின் ஹரோ (Harrow) மற்றும் வீல்ட்ஸ்டோன் (Wealdstone) ஆகிய தமிழா்கள் வாழும் பகுதிகளில் அண்மைய நாட்களில் பாரிய காவல்துறை… The post லண்டன் ஹரோ , வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு -70 பேர் கைது appeared first on Global Tamil News .
அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு!
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (ஜனவரி 10) ஒரு… The post அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு! appeared first on Global Tamil News .
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ரிக்டர் அளவில் அதிர்வு!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ரிக்டர் அளவில் அதிர்வு! இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள தலவுட்… The post இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ரிக்டர் அளவில் அதிர்வு! appeared first on Global Tamil News .
யேசு கிறிஸ்துவே ….தனது வழக்கறிஞர் என நீதிமன்றில் கூறிய பெண்ணால் எழுந்த சர்ச்சை
கனடாவில் பெண் ஓருவர் யேசு கிறிஸ்துவே தனது வழக்கறிஞர் என நீதிமன்றில் கூறிய விநோத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நீதிமன்றம் நியமித்த மனநல நிபுணரிடம் குறித்த பெண் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்து, குறித்த பெண் விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியானவராக உள்ளார் என பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. டெனிஸ் ஏஞ்சலா நொரிஸ் என்பவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் அகசிஸ் பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட சம்பவத்தின் […]
யேசு கிறிஸ்துவே ….தனது வழக்கறிஞர் என நீதிமன்றில் கூறிய பெண்ணால் எழுந்த சர்ச்சை
கனடாவில் பெண் ஓருவர் யேசு கிறிஸ்துவே தனது வழக்கறிஞர் என நீதிமன்றில் கூறிய விநோத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நீதிமன்றம் நியமித்த மனநல நிபுணரிடம் குறித்த பெண் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்து, குறித்த பெண் விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியானவராக உள்ளார் என பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. டெனிஸ் ஏஞ்சலா நொரிஸ் என்பவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் அகசிஸ் பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட சம்பவத்தின் […]
வரதட்சிணையாக கிரீன்லாந்து! டென்மார்க் இளவரசியை டிரம்ப் மகன் திருமணம் செய்தால்!!
டென்மார்க்கின் இளவரசியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் திருமணம் செய்துகொண்டால், வரதட்சிணையாக கிரீன்லாந்து கொடுக்கப்படுமா என்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், டென்மார்க்கின் இளவரசியான இசபெல்லாவை (18) டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் (19) மணமுடிக்க வேண்டும் என்று எக்ஸ் பயனர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இசபெல்லாவை திருமணம் செய்தால், அமெரிக்காவுக்கு வரதட்சிணையாக கிரீன்லாந்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இசபெல்லா – பாரன் டிரம்ப் இருவரின் படங்களையும் […]
மட்டக்களப்பு மரக்கறி வியாபாரிக்கு மர்ம நபர் செய்த சம்பவம் ; மக்களே அவதானம்
மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியின் ஓரத்தில் ‘பட்டா’ ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு மோசடிக்கு ஆளாகியுள்ளார். போலி நாணயத்தாள் இது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி இன்று காலை ஒருவர் வந்து தன்னிடம் மரக்கறி கொள்வனவு செய்து 5,000 ரூபா தாளைத் தந்துவிட்டு தான் சரியாகக் கவனிக்காததால் மிகுதிப் பணத்தையும் […]
இந்தியாவில் இனிப்புகளின் தலைநகரம் எது தெரியுமா? பொங்கல் பண்டிகைக்கு ஒரு விசிட் போடுவோமா!
கொல்கத்தாவின் இனிப்பு கலாச்சாரம் இந்தியாவின் செழுமையான உணவு மரபின் உயிருள்ள சான்றாக உள்ளது. இனிப்புகளை விரும்புபவர்களுக்கு, சுவையும் பாரம்பரியமும் ஒன்றாக கலந்த ஒரு அனுபவத்தை தரும் நகரம் கொல்கத்தாவே ஆகும்.
பாதுகாப்பற்ற புகையிரக்கடவையில் விபத்து –இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் ,பாதுகாப்பற்ற புகையிரத கடவை, கோர விபத்து – இளைஞன் படுகாயம் யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு… The post பாதுகாப்பற்ற புகையிரக்கடவையில் விபத்து – இளைஞன் படுகாயம் appeared first on Global Tamil News .
உக்ரைனில் ரஷியா மீண்டும் ஆரெஷ்னிக் ஏவுகணைத் தாக்குதல்
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஆரெஷ்னிக் ரக ஏவுகணை மூலம் உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: உக்ரைன் மீது ரஷியா சரமாரியான ஏவுகணைகளை வீசி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது. இதில் 4 போ் உயிரிழந்தனா். உக்ரைன் வீசிய ஏவுகணைகளில் ஆரெஷ்னிக் ஏவுகணையும் ஒன்று. நேட்டோ நாடான போலந்துக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் ஐரோப்பிய இறையாண்மையைக் குலைக்கும் நடவடிக்கை […]
மழையுடனான காலநிலையால் மின்சார வயர் மீது வீழ்ந்த பனை மரம்: கிளிநொச்சி பண்ணை பகுதியில் பதற்றம்
கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுகொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் ,கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றது. கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் வீதியின் விவசாய பண்ணைக்கு அருகில் பனை மரம் மின்சார வயரில் வீழ்ந்து காணப்படுகின்றது. அதனை அகற்றும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட பராசக்தி திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் கடைசி வார எவிக்ஷனில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர். கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். சாண்ட்ரா | BB Tamil 9 Day 93 கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் பணப்பெட்டி டாஸ்க்கில் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் வினோத். இந்நிலையில் அடுத்த வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என்ற பேச்சு முதலில் அடிபட்டது. தவிர போட்டியில் தற்போது ஐந்து பேர் மட்டுமே இருப்பதால் இவர்கள் டாப் ஐந்து பேராக இறுதிச் சுற்றுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கமருதீன் ஆனால் இந்த வாரமும் எவிக்ஷனை நிகழ்த்தியிருக்கிறார் பிக்பாஸ். வழக்கமான வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. எவிக்ட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் அவர்களிடமும் பணப்பெட்டி எடுத்துச் சென்ற கானா வினோத்திடமும் பேசிய விஜய் சேதுபதி பின் வழக்கமான விசாரிப்புகளுக்குச் சென்றார். பிறகு எவிக்ஷனுக்கான நேரம் எனச் சொல்லி இருந்த ஐந்து பேரில் சாண்ட்ராவை வெளியில் அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கணவர் பிரஜினுடன் தம்பதி சகிதமாக வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் வந்தது நினைவிருக்கலாம். பிரஜின், சாண்ட்ரா முந்தைய சில சீசன்களில் டாப் ஐந்து பேர் கடைசி நாள் வரை வந்த நிலையில் இந்த சீசனில் மட்டும் எப்படி கடைசி வாரத்தில் ஒருவர் அவுட் என தெரியவில்லை. கமருதீன் பார்வதிக்கு ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பெரிய அதிர்வை உண்டாக்கியதென்னவோ நிஜம்தான். ஒருவேளை அதைச் சமன் செய்ய பிக்பாஸ் சாண்ட்ராவை அனுப்பி விட்டாரோ என்னவோ?
அமெரிக்கா கைப்பற்றிய ஐந்தாவது எண்ணெய் கப்பல்
கரீபியன் கடலில் மேலும் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க இராணுவம் கைப்பற்றியுள்ளது. வெனிசுவேலாவுக்கு எதிரான அழுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் தடை விதித்துள்ள கப்பல்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஒலினா’ (Olina) எனப்படும் எண்ணெய் கப்பல் எவ்வித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது. மீண்டும் ஒருமுறை, எங்கள் பல்துறை இணைந்த படைகள் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளன – ‘குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான தஞ்சம் எங்கும் இல்லை’” என அமெரிக்கா தெரிவித்துள்ளது. […]
ஜிஎஸ்டி முதல் முதலீட்டாளர் பாதுகாப்பு வரை.. பிரதமர் மோடியின் 2025 சீர்திருத்த நடவடிக்கை!
2025 ஆம் ஆண்டு இந்தியாவின் சீர்திருத்த பயணத்தில் வரலாற்று மைல்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
அதிகாரத்தை எவ்வாறாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, ராஜபக்ஷர்கள் காலம் காலமாக முன்னெடுத்து வரும் “3-ம் தரப்பு அரசியலை” தற்போது… The post “அதிகாரப் பசிக்காக சஜித் கையில் எடுத்திருக்கும் ராஜபக்ஸர்களின் கீழ்த்தர அரசியல்!” – சம்பிக்க ரணவக்க கண்டனம். appeared first on Global Tamil News .
️ யாழ். பல்கலையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மலையக தியாகிகள் தினம்!
மலையகத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளை நினைவுகூரும் ‘மலையக தியாகிகள் தினம்’, இன்று… The post ️ யாழ். பல்கலையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மலையக தியாகிகள் தினம்! appeared first on Global Tamil News .
ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த கைதான ஜனாதிபதியின் டிராக் பேன்ட் மாடல்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த நைக்கி பிராண்டின் டெக் ஃப்ளீஸ் வகை டிராக்சூட் தற்போது விறுவிறுப்பான விற்பனையாகி வருகிறது. கடந்த 3 ஆம் தேதியன்று அமெரிக்கப் படைகளால் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டொனால்ட் ட;ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதில் மதுரோ கண்களில் கருப்புத் துணி கட்டப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் ஒரு சாம்பல் நிற நைக்கி டிராக்சூட் […]
வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய நபர் உள்ளிட்ட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் சொகுசு வீட்டினை கட்டி , அதனை கிளிநொச்சியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார். அந்நிலையில் குறித்த வீட்டிற்கு பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள் கார்களில் வந்து செல்வது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கோப்பாய் பொலிஸார் குறித்த வீட்டினை […]
யாழ். பல்கலை மாணவர்களினால் நினைவு கூரப்பட்ட மலையக தியாகிகள்
மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 1939 டிசம்பர் இறுதியில் ஆரம்பமாகி 1940 ஜனவரி வரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக ஜனவரி 10ஆம் திகதி உயிர்கொடை செய்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவு கூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரான்-சீனா-துருக்கி கூட்டு அமெரிக்க சண்டியருக்கு சாவால். 24 மணி நேரத்தில் அணு ஆயுதம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து வெளியாகியுள்ள அதிரடி… The post ஈரான்-சீனா-துருக்கி கூட்டு அமெரிக்க சண்டியருக்கு சாவால். 24 மணி நேரத்தில் அணு ஆயுதம்! appeared first on Global Tamil News .
கைத்தொலைபேசி களவாடிய பொழுதுகளில்!
கைத்தொலைபேசி களவாடி பிடிபட்டவனும் திருட்டு உறவிற்காக மதில் பாய்ந்தவர்களுமே தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன். இதனிடையே எவ்வாறு ஒழுக்கமாக செயற்பட வேண்டும் என்று அர்ச்சுனா இராமநாதன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். வடக்கு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இவரை தெரிவு செய்தார்கள் ஆனால் இன்று அந்த மக்களின் எதிர்பார்ப்பு வீண்டிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவதும்,சிற்றுண்டி சாலைக்கு சென்று சாப்பிடுவதும் மாத்திரம் பணி அல்ல என்பதை அர்ச்சுனா இராமநாதன் விளங்கிக் கொள்ள வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இதனிடையே கைத்தொலைபேசி களவாடி குற்றச்சாட்டினில் வழக்கினை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எதிர்கொண்டுள்ளார். அதேவேளை மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் திருட்டு உறவிற்காக மதில் பாய்ந்தவரென தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நாடாளுமன்றில் வைத்து குற்றஞ்சாட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன்.
Narendra Modi Attends Somnath Swabhiman Celebration
Prime Minister Narendra Modi, who is on a three-day visit to Gujarat, has arrived in Somnath. During his visit, he
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேணைக்கு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வஜனம் அதிகாரம் ஆகிய கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இதுவரை தமது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சி பிரதமருக்கு சேறுபூசும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காதென தெரிவித்துள்ளது. இதேவேளை, தமக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தவே எம்மை மக்கள் தெரிவுசெய்யதனர். அதன் பிரகாரம் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
New Arctic Ocean Ecosystem Found Beneath Sea
Scientists have discovered a hidden ecosystem deep beneath the Arctic Ocean, changing the way we understand life in the deep
Milky Way’s Black Hole Had Powerful Flares
The supermassive black hole at the center of our galaxy, known as Sagittarius A* or Sgr A*, is usually quiet
India’s Aditya-L1 Studies Powerful Solar Storm Effects
India’s Aditya-L1 solar observatory has given new and important insights into a powerful solar storm that hit Earth in October
டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான 500 சதவிகித வரிவிதிப்பு தொடர்பான வழக்கை அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது. உக்ரைன் மீது தொடர்ந்து போர்த் தொடுத்துவரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானால் இந்தியா, சீனாவுக்கு பெரும் பாதிப்பு நிலை உருவாகியுள்ளது. ‘ரஷியா பொருளாதார தடைச் சட்டம் 2025’ என்ற பெயரிலான […]
DRDL Advances India’s Hypersonic Missile Program
India’s Defence Research & Development Laboratory (DRDL) in Hyderabad, part of the Defence Research and Development Organisation (DRDO), has achieved
கர்நாடகத்தில் பொய்யான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்.. சர்வே முடிவுகள் கூறுவது என்ன?
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சர்வே, இந்திய ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இன்னும் வலுவாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. பாஜகவும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Google Photos Introduces AI Tools, Backup Control
Google Photos has introduced several new AI-powered features, making it even more useful for editing and managing photos and videos.
புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில் சந்திப்பு.. (வீடியோ படங்களுடன் விரிவான செய்தி) நேற்றைய தினம் புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில் ஏனைய அரச திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள் பலரும் சந்தித்து கலந்துரையாடினர். வெள்ள அனர்த்தத்தினால் இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அண்மையில் நிறைவடைந்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அப்பகுதி அதிகளவு வெள்ளம் தேங்கக்கூடிய இடம் என சுட்டிக் […]
Lava Launches New Blaze Phone With Dual Screen
India’s mobile phone maker Lava is planning to launch its new smartphone, the Lava Blaze Duo 3, which will feature
நாடுகடத்தப்பட்ட ஈரானின் பட்டத்து இளவரசர் போராட்டங்கள் தொடர அழைப்பு விடுத்தார்
ஈரானின் கடைசி ஷாவின் மகன் ரெசா பஹ்லவி, அரசாங்கத்திற்கும் மோசமான பொருளாதார நிலைமைக்கும் எதிராக கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நடந்த தெருப் போராட்டங்களுக்குப் பிறகு, வார இறுதியில் அதிக போராட்டங்களின் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வாரம் ஈரானியர்களை பெருமளவில் வீதிகளில் இறங்குமாறு அழைப்பு விடுத்து வரும் ஈரானின் கடைசி ஷாவின் மகன் ரெசா பஹ்லவி, நேற்று வெள்ளிக்கிழமை இரவு வலுவாகக் கூடிய போராட்டக்காரர்களைப் பாராட்டியுள்ளார். நமது தெரு இருப்பை மேலும் இலக்காகக் கொண்டு, அதே நேரத்தில், நிதி உயிர்நாடிகளை துண்டிப்பதன் மூலம், இஸ்லாமிய குடியரசையும் அதன் தேய்ந்துபோன மற்றும் பலவீனமான அடக்குமுறை எந்திரத்தையும் முற்றிலுமாக மண்டியிடச் செய்வோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று அவர் எக்ஸ் தளத்தில் கூறினார். ஈரானின் முக்கிய பொருளாதாரத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக போக்குவரத்து, எண்ணெய், எரிவாயு மற்றும் எரிசக்தித் துறைகளைச் சேர்ந்தவர்கள், ஈரானின் ஆளும் மதகுருமார்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்க நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு பஹ்லவி வலியுறுத்தினார். இன்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் மேலும் போராட்டங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஈரானியர்கள் பொது இடங்களை உங்களுடையது என்று உரிமை கோர வேண்டும் என்று வலியுறுத்தினார். எங்கள் குறிக்கோள் இனி வீதிகளுக்கு வருவது மட்டுமல்ல நகரங்களின் மையங்களைக் கைப்பற்றி அவற்றை வைத்திருப்பதற்குத் தயாராவதே குறிக்கோள் என்று பஹ்லவி கூறினார். பொது மக்களை தேவையான பொருட்களை சேகரிக்க வலியுறுத்தினார். நமது தேசியப் புரட்சியின் வெற்றியின் போது, ஈரான் என்ற மாபெரும் தேசமே, உங்களுடன் நான் இருக்க முடியும் என்பதற்காக, நாடுகடத்தலில் இருந்து நாட்டிற்குத் திரும்பத் தயாராகி வருவதாகக் கூறி அவர் தனது சமீபத்திய செய்தியை முடித்தார். அந்த நாள் மிக அருகில் உள்ளது என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.
Grok AI Restricts Image Creation Amid Controversy
Elon Musk’s AI chatbot Grok has stopped most users from creating or editing images after facing criticism worldwide. The problem
அமெரிக்கா வானில் Dooms Day விமானம்- டிரம்ப் கொடுத்த வார்னிங்... பதறிய உலக நாடுகள்!
அவரச காலங்களில், போர் பதற்றம் நிறைந்த சூழலில் மட்டுமே வானில் பறக்கும் ‘Doomsday பிளேன்’ என அழைக்கப்படும் போயிங் E-4B நைட்வாட்ச் விமானம் ஜனவரி 6 அன்று வாஷிங்க்டனில் பறந்தது. இந்த விமானம் பறந்ததற்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ காரணமும் சொல்லப்படாததால் உலக அரங்கில் பதற்றம் நிலவி வருகிறது.
போக்குவரத்து நெரிசலில் இருந்து விரைவில் விடுதலை.. முடிவுக்கு வரும் கணேசபுரம் சாலை மேம்பால பணிகள்!
சென்னை மாநகராட்சி தரப்பில், கணேசபுரம் சாலை மேம்பாலத் திட்டத்தின் சுமார் 60 சதவீத பணிகள் இதுவரை நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Preservatives Possibly Linked to Cancer and Diabetes
Eating some common food preservatives may be linked to a slightly higher risk of developing cancer and diabetes, according to
Weight-Loss Medication Effects Are Temporary, Study Finds
A large study has found that the benefits of weight-loss medications disappear within two years if patients stop taking them.
ஈரானில் 13 நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்: வீழப்போகிறதாக ஈரான் ஆட்சி?
தெஹ்ரானில் போராட்டங்கள் 13வது நாளை எட்டியுள்ளன, பல ஆண்டுகளில் மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாக மாறியுள்ள நிலையில், கடுமையான இணைய முடக்கம் தகவல்தொடர்புகளை மட்டுப்படுத்தியுள்ளது. அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதற்கான பல்வேறு சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரானில் தெருப் போராட்டங்கள் தொடர்ந்து 13வது நாளை எட்டியுள்ளன, அதே நேரத்தில் வியாழக்கிழமை இரவு முதல் பரவலாக - சில சந்தர்ப்பங்களில் கிட்டத்தட்ட மொத்தமாக - இணைய முடக்கம் ஈரானுக்குள் உள்ள தொடர்புகளை குறைந்தபட்சமாகக் குறைத்துள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் செயலிகள் மூலம் பரவும் வரையறுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், நாடு முழுவதும் பல நகரங்களுக்கு போராட்டங்கள் பரவி வருவதைக் குறிக்கின்றன. இருப்பினும், கடுமையான இணைப்பு கட்டுப்பாடுகள் காரணமாக, அனைத்து அறிக்கைகளையும் சுயாதீனமாக சரிபார்ப்பது சாத்தியமில்லை. ஈரானில் இருந்து நேற்றிரவு அனுப்பப்பட்ட படங்கள், பெர்லின் சுவர் வீழ்ச்சிக்கு முந்தைய நாட்களை ஜெர்மன் பார்வையாளர்களுக்கு நினைவூட்டக்கூடும், அதே நேரத்தில் பல ஈரானியர்களுக்கு அவை 1979 இல் ஷா ரெசா பஹ்லவியின் ஆட்சியின் இறுதி நாட்களின் நினைவுகளைத் தூண்டுகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நிகழ்வுகளை நான் பார்த்ததிலேயே மிகப்பெரிய போராட்டங்கள் என்று வர்ணித்துள்ளார். இந்தக் கருத்து சர்வதேச ஊடகங்களில் பரவலான செய்திகளைப் பெற்றுள்ளது. வளர்ச்சிகளின் வேகம், தகவல் தொடர்பு முடக்கம் மற்றும் நாட்டிற்குள் அதிகார சமநிலை பற்றிய தெளிவான படம் இல்லாதது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆய்வாளர்கள் எதிர்காலத்திற்கான பல முக்கிய சூழ்நிலைகளை கோடிட்டுக் காட்டுகிறார்கள். மிக முக்கியமான சூழ்நிலைகளில் ஒன்று அடக்குமுறையை அதிகரிப்பது ஆகும். வெள்ளிக்கிழமை, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் போராட்டங்களுக்கு மிகவும் தீர்க்கமான பதிலைஅறிவிக்கும் தீர்மானத்தை வெளியிட்டது. நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்பு முடிவெடுக்கும் அமைப்பான கவுன்சில், சமீபத்திய ஆர்ப்பாட்டங்கள் சட்டபூர்வமான பொது கோரிக்கைகளிலிருந்து விலகிச் சென்றுள்ளனஎன்றும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வழிகாட்டுதல் மற்றும் திட்டமிடல்மூலம் உறுதியற்ற தன்மையை நோக்கித் தள்ளப்படுகின்றன என்றும் கூறியது. இந்த அதிகாரப்பூர்வ விவரிப்பு களத்தில் உள்ள யதார்த்தங்களிலிருந்து கடுமையாக வேறுபடும் அதே வேளையில், அதிகாரிகள் இந்த சூழ்நிலையை ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக வடிவமைக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது. எதிர்ப்பாளர்கள் இனி அதிருப்தி அடைந்த குடிமக்களாகக் கருதப்படுவதில்லை, மாறாக ஒரு எதிரி திட்டத்தின் முகவர்களாகக் கருதப்படுவதால், இத்தகைய கட்டமைப்பு பரந்த அளவிலான பலத்தைப் பயன்படுத்துவதற்கு வழி வகுக்கும் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில், கடுமையான ஒடுக்குமுறைகள், பெருமளவிலான கைதுகள் மற்றும் கொடிய பலம் கூட ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் தெருக்களை அமைதிப்படுத்தக்கூடும் என்றாலும், பல ஆய்வாளர்கள் அவை ஆட்சியின் சட்டபூர்வமான நெருக்கடியை ஆழமாக்கும் மற்றும் குவிந்துள்ள குறைகளை தீவிரப்படுத்தும் என்று வாதிடுகின்றனர். வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட படங்கள், சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தானில் முன்னர் காணப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் நிகழக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இந்தப் படங்களின்படி, ஜஹேதானில் உள்ள மக்கி மசூதியைச் சுற்றி போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அரசாங்கக் கொள்கைகளை விமர்சிக்கும் ஜஹேதானைச் சேர்ந்த சுன்னி வெள்ளிக்கிழமை தொழுகைத் தலைவர், வன்முறையைத் தவிர்க்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் அழைப்பு விடுத்திருந்ததைத் தொடர்ந்து, இது நிகழ்ந்துள்ளது. பல பார்வையாளர்களுக்கு, இந்த எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பது மத்தியஸ்த வழிகளை மூடுவதையும், முற்றிலும் பாதுகாப்பு அடிப்படையிலான தீர்வுகளை நோக்கிய ஒரு தீர்க்கமான மாற்றத்தையும் குறிக்கிறது.
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக வடமராட்சி பகுதி கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. மூர்க்கம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன.
Toxic Almont-Kid Batch Pulled from Market
The Telangana Drug Control Administration (DCA) on Saturday, January 10, 2026, issued a stop-use notice for a batch of Almont-Kid
சாவகச்சேரி தனங்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு: 4 வாகனங்கள் பறிமுதல், இருவர் கைது!
யாழ்.சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(09) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி பொலிஸார் விரைந்தனர். இதன்போது இரு டிப்பர் வாகனங்கள், இரு உழவு இயந்திரங்கள், மண் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார் இருவரை கைது செய்தனர். கைதானவர்களையும், சான்றுப் பொருட்களையும் […]
யாழில். 10 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் […]
வானிலை காரணமாக சுவிஸ் மேலும் விமானங்களை இரத்து செய்கிறது
வானிலை காரணமாக சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் மேலும் விமானங்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது. சனிக்கிழமை மட்டும் பன்னிரண்டு தனிப்பட்ட விமானங்கள் சேர்க்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கீஸ்டோன்-எஸ்டிஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை சேர்க்கப்பட்ட புதிய விமானங்கள் சூரிச்சிலிருந்து நைஸ் (எஃப்), பிராங்பேர்ட் (டி), டுசெல்டார்ஃப் (டி), லண்டன் (யுகே), மிலன் (ஐ) மற்றும் லக்சம்பர்க் ஆகிய இடங்களுக்குத் திரும்பும் விமானங்கள் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார். இன்று சனிக்கிழமை குளோட்டன் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் சராசரியாக 1.5 மணிநேரம் தாமதமாக வரும் என்று விமான நிறுவனம் எதிர்பார்க்கிறது. தற்போதைய வானிலை நிலைமைகளில் விமானங்களின் பனிக்கட்டியை அகற்றுவது மிகவும் அவசியமானது. இது தாமதங்களுக்கு பங்களிக்கிறது என்று சுவிஸ் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை கீஸ்டோன்-எஸ்டிஏவிடம் தெரிவித்தார். நாளின் போது மேலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து இன்று சனிக்கிழமை காலை வரை வானிலை காரணமாக மொத்தம் 93 சுவிஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. லுஃப்தான்சா துணை நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 10,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணியில் கூடுதல் ஊழியர்கள் ஒரு விமானத்தை இயக்க முடியாவிட்டால், செயல்பாட்டு மையத்தால் பயணிகள் விரைவில் மீண்டும் முன்பதிவு செய்யப்படுவார்கள். வாடிக்கையாளர் சேவை மற்றும் சுவிஸ் செயலி மூலம் கோரிக்கையின் பேரில் சுவிஸ் விமான டிக்கெட்டுகளையும் திருப்பித் தரும். ஐரோப்பாவில் தற்போது நிலவும் வானிலை காரணமாக, வரும் நாட்களில் மேலும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாக விமான நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ஏற்கனவே அறிவித்திருந்தது. வானிலை சூழ்நிலைகள் எப்போதும் மாறும் தன்மை கொண்டவை, அதனால்தான் குறுகிய காலத்தில் ரத்து செய்வது சில நேரங்களில் தவிர்க்க முடியாதது. நாங்கள் MeteoSwiss உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம், மேலும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு இலக்கையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று விமான நிறுவனம் எழுதியது. கணிசமாக அதிகரித்த பணிச்சுமை காரணமாக, கூடுதல் ஊழியர்களும் பணியில் உள்ளனர். இதற்கிடையில், ஜெனீவாவின் கோயின்ட்ரின் விமான நிலையத்தில் சனிக்கிழமை காலை வரை எந்த விமான ரத்தும் ஏற்படவில்லை என்று கீஸ்டோன்-எஸ்டிஏவின் வேண்டுகோளின் பேரில் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கிரிக்கெட் விளையாடும் விரிப்புகள் தீக்கிரை -விசாரணை ஆரம்பம்
video link- https://fromsmash.com/0~S01PWwsP-dt அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தின் களஞ்சிய அறையினுள் வைக்கப்பட்டிருந்த மற்றின்கள் கடந்த திங்கட்கிழமை(5) தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இக்கிரிக்கெட் விளையாடும் விரிப்புகள் -மற்றின்கள் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் காரைதீவு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைதீவு விளையாட்டுக்கழகம், விவேகானந்தா விளையாட்டுக்கழகம் ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான கடின பந்து கிரிக்கெட் விளையாடும் விரிப்புக்களே (Matin) இவையாகும். […]
சென்னை ரயில்வே பிரிவின் அனைத்து முக்கிய நிலையங்களிலும் இந்த CCTV கேமராக்கள் நிறுவப்படுவதால், பயணிகள் பாதுகாப்பு, குற்றங்கள் தடுப்பு, அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை மற்றும் கூட்ட நிர்வாகம் ஆகியவை சீராக நடைபெறும்.
பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்
இரவு தூக்கத்திற்கு சென்ற நிலையில் பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் நேற்று (9) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சாய்ந்தமருது 16 கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த ஜௌபர் மொஹமட் விஸ்ருல் ஹாபிஸ் ( வயது-16 ) தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மரணமடைந்த சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய பாடசாலை மாணவன் 6 மாதங்களாக மன அழுத்தம் தொடர்பில் […]
பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?
1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய புறநானூற்றுப் படை களமிறங்கி, ரயிலைக் கொளுத்துகிறது. இந்த ரயிலெரிப்புப் போராட்டத்தில் நடந்த சண்டையில் தன் விரலை இழந்து, அரசாங்கத்திடம் கெட்ட பெயரையும் சம்பாதிக்கிறார் மத்திய அதிகாரியான திரு (ரவி மோகன்). எதிர்பாராத சம்பவத்தினால், தன் போராட்டப் பாதையிலிருந்து விலகி, தன் தம்பி சின்னதுரை (அதர்வா) மற்றும் பாட்டியுடன் (குலப்புள்ளி லீலா) அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார் செழியன். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இந்நிலையில், 1964-ம் ஆண்டு, மீண்டும் இந்தித் திணிப்பு தலையெடுக்க, அதற்கு எதிராகக் கல்லூரி மாணவர் சின்னதுரை தலைமையிலான மாணவர்கள் களமிறங்குகிறார்கள். மறுபுறம், திருவும் புறநானூறு படையை நெருங்கி, செழியனை நோக்கி வர, அதற்கடுத்து நடக்கும் அரசியல் சம்பவங்களையும், அதனால் செழியன் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளையும் பேசுகிறது சுதா கொங்கரா இயக்கியுள்ள 'பராசக்தி' திரைப்படம். பராசக்தி கதை: Pollachi-யில் சுடப்பட்ட சிறுவன்; பரவிய போராட்ட தீ | Parasakthi | Thozhar Thiyagu அதிகாரத்திற்கு எதிரான இளைஞனின் ஆக்ரோஷம், தம்பி மீதான மாசற்ற பாசம், அடக்குமுறைக்கு எதிரான நெஞ்சுரம் எனத் தன் கண்களில் தீயைப் பரவவிட்டு, செழியன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். புறநானூறு குழுவைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள், தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தம் என, எந்நேரமும் வெறியுடனேயே உலாவும் கதாபாத்திரத்தில் தன் வழக்கமான உடல்மொழியை விட்டு வில்லனிசம் காட்டியிருக்கிறார் ரவி மோகன். ஆனால் இந்த டெரர் முகம் சில இடங்களில் மட்டும் செயற்கையாகிப் போவது உறுத்தல். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review காதல், செல்லக் கோபம் என வழக்கமான கதாநாயகியாகத் தொடக்கத்தில் வலம் வந்தாலும், வெகுண்டெழும் கோபம், ஆக்ரோஷம் என இரண்டாம் பாதியில் எமோஷன் மீட்டரைப் பிடித்திருக்கிறார் ஸ்ரீலீலா. கோபக்கார மாணவனாகத் தேவையான இடங்களில் வெடித்துச் சிதறியிருக்கிறார் அதர்வா. பாட்டியாக குலப்புள்ளி லீலா, முதலமைச்சராக பிரகாஷ் பெலவாடி, பேரறிஞர் அண்ணாவாக சேத்தன், கௌரவத் தோற்றத்தில் சர்ப்ரைஸ் தரும் நடிகர்கள் ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் இரவு நேரப் போராட்டம், ரயில் சண்டைகள், போராட்டங்களுக்கு இடையிலான எமோஷன் என ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் ஒளித் தோரணை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. கட்-களை மீறியோடும் காதல் காட்சிகளையும், பாடல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. ஆனால் பதற்றம் ஏற்படுத்தும் இடங்களை இன்னும் கூராக்கியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், 'நமக்கான காலம்', 'ரதன்மாலா', 'சேனைக் கூட்டம்' பாடல்கள் உற்சாகமூட்டுகின்றன. பரபரக் காட்சிகளுக்கும், எமோஷன் காட்சிகளுக்கும் கரியை அள்ளிப் போட்டு, அனலைக் கூட்டியிருக்கிறது அவரின் பின்னணி இசை. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அக்கால ரயில் நிலையங்கள், ரயில்கள், அரசுக் கட்டடங்கள், மாப்பிள்ளை விநாயகர் சோடா, சினிமா போஸ்டர்கள் என எம். ஆர். கார்த்திக் ராஜ்குமாரின் கலை உழைப்பு கவனிக்க வைத்தாலும், சில காட்சிகளில் நாடகத்தனமும், ஆண்டு குழப்பத்தைத் தரும் விவரிப்புகளும் தொந்தரவாகவும் அமைந்திருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் வரும் மேம்போக்கான வரைகலையும் அக்காட்சிகளின் வீரியத்தைப் பின்னிழுக்கிறது. Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன் ரயில் எரிப்பு போராட்டத்தோடு தொடங்கும் திரைக்கதை, பரபரத் தீயைப் பற்ற வைக்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே காதல் அத்தியாயத்திற்குள் நுழைந்துவிடுகிறது படம். வழக்கமான காதல் சடுகுடு, முட்டல் மோதல், காதல் பாடல்கள் என நீட்டி முழக்குகிறது திரை நேரம். இடையிடையே அரசியல் வசனங்களும், ஆக்ரோஷமான காட்சிகளும் மையக்கதையை பேசினாலும், காதல் காற்று, அந்தப் பரபர தீயை அணைக்க முயல்கிறது. ஒருவழியாக, ஒரு மணி நேரம் கழித்து பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான திருப்பங்கள், மனமாற்றங்களைப் பேசத் தொடங்கும் படம், அட்டகாசமான ஆக்ஷன் காட்சியால் கச்சிதமான இடைவேளையையும் தருகிறது. அது இந்த முதல் பாதி அலுப்பைக் கொஞ்சம் சரி செய்ய முயன்றிருக்கிறது. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இரண்டாம் பாதி விறுவிறு ட்ராக்கிற்கு மாறும் திரைக்கதை, கூர்மையான வசனங்கள், நிஜ தலைவர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்களை ஒத்த காட்சிகள் எனத் தீவிரத்தன்மைக்கு மாறுகிறது. போராட்டங்களை வகுக்கும் முறை, அக்கால அரசின் திட்டங்கள் போன்றவை சுவாரஸ்யம் கூட்டி ரசிக்க வைக்கின்றன. இந்தி திணிக்கப்பட்டபோது பிராந்திய மொழி பேசியவர்கள் சந்தித்த இன்னல்கள், கல்லூரி மாணவர்களின் வீரியமான போராட்டங்கள் போன்றவை காட்சியோட்டத்தோடு வந்து போகின்றன. இதற்கு சுதா கொங்காரா, அர்ஜுன் நடேசன், கணேஷா, ஷான் கருப்புசாமி, மதன் கார்க்கி ஆகியோர் அடங்கிய எழுத்துக்கூட்டணி கைகொடுத்திருக்கிறது. ஆனால், யூகிக்கும் படியான திருப்பங்களும், கதாநாயகனின் நம்பகத்தன்மை இல்லாத ஹீரோயிஸமும் தீவிரத் திரியை இறக்கியே எரியவிடுகின்றன. Parasakthi: சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது! - சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு - இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள். ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன. அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்! இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், 'அண்ணா... அண்ணா..' என அவரை நினைவூட்டியபடியே பேசும் கதாபாத்திரம், அறிஞர் அண்ணாவின் அரசியலைப் பற்றி துளிகூட பேசாதது ஏனோ?! மொழி உரிமைக்காக நிகழ்ந்த மாபெரும் மாணவப் புரட்சிப் போராட்டத்தை 'ஹீரோ - வில்லன்' சண்டையாக மாற்றி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது உறுத்தலே! ஆக்ஷன், எமோஷன் என மாறி, மாறி இறுதிக்காட்சி நீண்டாலும், கமெர்ஷியலாக கச்சிதமாக முடிகிறது படம். கதாநாயகனின் அதீத ஹீரோயிஸம், லாஜிக்கில்லாத சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத இறுதித் திருப்பம் போன்றவை கச்சிதத்தைக் கலைக்க முயன்றாலும், கௌரவக் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் நடிகர்களின் ஆவேசம், மனதைக் கனக்க வைக்கும் எமோஷன் காட்சிகள், சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் என ஏனையவை கைகொடுக்க, கச்சிதமான க்ளைமேக்ஸாக க்ளாப்ஸ் வாங்குகிறது படம். நிஜ வரலாறும், புனைவும் ஒட்டாத உணர்வினைக் கொடுத்தாலும், ஆக்ரோஷமான மொழி அரசியல், ஆழமான குடும்ப எமோஷன் என இரண்டு பெட்டிகளையும் நேர்த்தியாக கமெர்ஷியல் ட்ராக்கில் ஓட்டி இலக்கை அடைந்திருக்கிறது இந்தப் `பராசக்தி'. Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன்
பெங்களூரு ஏர்போர்ட் பஸ்: KIA டெர்மினல் 1 நெருக்கடி… BMTC வாயு வஜ்ரா கணக்கு தப்பாயிடுச்சு!
பெங்களூரு விமான நிலையத்திற்கு புதிதாக பேருந்துகளை இயக்குவதற்கு மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ள நிலையில், டெர்மினல் 1ல் இட நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இது அடுத்தகட்ட நகர்வுகளுக்கு தடைக்கல்லாக அமைந்துவிட்டது.
`இது கடவுள் கொடுத்த பொறுப்பு' - யாசகம் பெற்று குளிரிலிருந்து ஏழைகளை பாதுகாக்கும் யாசகர் ராஜு
வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. காஷ்மீரில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் மக்கள் மாலை நேரத்திலேயே வீட்டிற்குள் சென்று முடங்கிவிடுகின்றனர். காலை 10 மணிக்கு பிறகுதான் வெளியில் வருகின்றனர். வீடு இல்லாத ஏழைகள் இந்த குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கடுமையாக போராடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் அது போன்று கஷ்டப்படும் ஏழைகளுக்கு யாசகம் பெற்று வாழ்பவர் உதவி செய்து வருகிறார். அங்குள்ள பதன்கோட் என்ற இடத்தில் யாசகம் பெற்று வாழ்பவர் ராஜு. இவர் தனது பகுதியில் வீடு இல்லாமல் தெருக்களில் வாழும் ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக போர்வை வழங்கி வருகிறார். பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.10 வாங்கி அதில் கிடைத்த பணத்தை கொண்டு 500 போர்வை வாங்கி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக கொடுத்து உதவி இருக்கிறார். இது குறித்து ராஜு கூறுகையில், ''தேவைப்படுபவர்களுக்கு உதவும் பொறுப்பை கடவுள் எனக்கு கொடுத்து இருக்கிறார். பொதுமக்கள் கொடுக்கும் சிறிய தொகையை கொண்டு இந்த போர்வையை வாங்கி கொடுக்கிறேன். கடவுள் தொடர்ந்து காரியங்களை நிகழ்த்துகிறார். நானும் என் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். தற்போது வசிப்பதற்கு இடமில்லாமல் இருக்கிறேன். எனவே அரசு எனக்கு நிரந்தர வீடு வழங்கி உதவி செய்யவேண்டும்''என்று குறிப்பிட்டார். ராஜுவின் முயற்சிகளைப் பாராட்டிய உள்ளூர்வாசிகள், சமுதாயம் அவரிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பின்தங்கிய மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கூறியுள்ளனர். ராஜுவின் செயல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. ராஜு சமூக வலைத்தளத்திற்கு புதிது கிடையாது. கொரோனா காலத்திலும் தேவைப்படுபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அவரது முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி கூட தனது மன்கிபாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு ராஜுவை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
`நீட்'எழுதி தேர்வான 50 மாணவர்கள்; கல்லூரிக்கு திடீர் அனுமதி ரத்து - கொண்டாடிய இந்துத்துவ அமைப்பினர்
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி (SMVDIME) செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 50 இடங்களுடன் எம்பிபிஎஸ் வகுப்பை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்புக்குத் தேர்வான 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 42 பேர் இஸ்லாமிய மாணவர்கள், ஒரு சீக்கி மாணவர், மீதமிருக்கும் 7 மாணவர்கள் இந்து மாணவர்கள். ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி இந்த நிலையில், `இந்தக் கல்லூரியை வைஷ்ணவ தேவி ஆலய வாரியம் நடத்துகிறது. எனவே, இந்து பக்தர்களின் காணிக்கைகளால் நிதியளிக்கப்படும் இந்தக் கல்லூரியில், இந்துக்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்க வேண்டும். முஸ்லிம் மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். அது முடியாதென்றால், மருத்துவக் கல்லூரியை மூட வேண்டும்' என வெவ்வேறு பெயர்களில் இருக்கும் 60 குழுக்கள் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி (SMVDSS) என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுத்தன. அதைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் நிபுணர் குழு ஒன்று ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ``கல்லூரியில் பேராசிரியர்கள் எண்ணிக்கையில் 39 சதவீதமும், மூத்த மருத்துவர்கள் மற்றும் பயிற்றுநர்கள் எண்ணிக்கையில் 65 சதவீதமும் பற்றாக்குறை இருக்கிறது. மேலும், நோயாளிகளின் வருகை (OPD) 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதோடு, மருத்துவமனை படுக்கைகளில் 45 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகங்களில் 50 சதவீதம் மட்டுமே இருந்தன. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி15 மருத்துவ இதழ்களுக்குப் பதிலாக இரண்டு இதழ்கள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தன. ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளும் தேசியத் தரத்திற்கு இணையாக இல்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் (MBBS) படிப்புக்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. மாணவர்களின் கல்வி நிலை: இந்த அங்கீகார ரத்து நடவடிக்கையால், 2025-26 கல்வியாண்டில் ஏற்கனவே கல்லூரியில் சேர்ந்த 50 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் அனைவரையும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்கள் மூலம் மாற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கல்லூரியில் எம்.பி.பி.எஸ் அனுமதி ரத்து கொண்டாட்டம். 'ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி' என்ற அமைப்பு மூலம் போராட்டங்களை முன்னெடுத்த ஓய்வுபெற்ற கர்னல் சுக்வீர் மன்கோட்டியா, ``ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவு பெற்ற 60 அமைப்புகளின் கூட்டமைப்பான ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி மூலமாகதான் இது சாத்தியமானது. இந்து யாத்ரீகர்கள் அளிக்கும் காணிக்கைப் பணத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தில் காஷ்மீர் முஸ்லிம் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. ஆரம்பத்திலிருந்தே அம்மாணவர்களை மற்ற கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரி வந்தோம் எனத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து கல்லூரியில் எம்.பி.பி.எஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதை மேளதாளத்துடன் இனிப்பு வழங்கியும், மாலை அணிவித்தும் கொண்டாடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்புக் கல்லூரி, `` எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. குளிர்கால விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் பலர் விடுப்பில் இருந்தபோது, முன்னறிவிப்பின்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக் குழு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புதான் எங்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள். அதற்குள் விடுப்பில் இருந்தவர்களை அழைக்க நேரமில்லை. தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை நிர்வாகக் குறைபாடுகளுக்கானதல்ல... அரசியல் அழுத்தத்துக்கானது. எனத் தெரிவித்திருக்கிறது. நீட் தேர்வில் மோசடி: '6 மாநிலங்கள்; ரூ.100 கோடி' - ஆள்மாறாட்டம் செய்த பொறியாளர் சிக்கியது எப்படி?
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் சனிக்கிழமை… The post உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்! appeared first on Global Tamil News .
இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகளை கைவிட்டபெண் - மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் ஆண்டு ராணி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. குந்தன் தினமும் வேலைக்கு சென்ற பிறகு ராணி எப்போதும் மொபைல் போனில் பிஸியாக இருப்பது வழக்கம். இதில் இன்ஸ்டாகிராம் மூலம் ராணிக்கு அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இக்காதல் அவர்களுக்குள் 5 ஆண்டுகளாக இருந்தது. இது வெளியில் தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டது. இதனால் ராணி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது வழக்கமாக நடந்து வந்தது. குந்தன் ஒவ்வொரு முறையும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சாட்சி கையெழுத்து போட்ட கணவன் ஆனால் அடிக்கடி ராணி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், காதலனுடன் வெளியேறுவதாகவும் இருந்தார். இதனால் இனியும் ராணியை வீட்டிற்கு அழைத்து வருவதில் எந்த வித பயனும் இல்லை என்பதை உணர்ந்த குந்தன் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். இது தொடர்பாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து வீட்டில் தெரிவித்துவிட்டு இருவரையும் கோர்ட்டிற்கு அழைத்து சென்ற குந்தன் அவர்களுக்கு கோர்டில் பதிவு திருமணம் செய்து வைத்தார். அவர்களது திருமணத்திற்கு குந்தன் தான் சாட்சிக்கையெழுத்து போட்டார். அவர்கள் திருமணமாகி சென்றபோது அவர்களுக்கு சிரித்த முகத்துடன் வழியனுப்பிவைத்தார். ஆனால் மூன்று குழந்தைகளையும் தானே வளர்த்துக்கொள்வதாக குந்தன் தெரிவித்துவிட்டார். இதனால் இப்போது மூன்று குழந்தைகளும் குந்தனுடன் இருக்கிறது.
யாழில். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பல் –இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களின் நான்கு வாகனங்கள் மணல் அகழ்வுக்கு… The post யாழில். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பல் – இருவர் கைது! appeared first on Global Tamil News .
Parasakthi Hits Theatres Ahead of Scheduled Release
Sivakarthikeyan’s new film Parasakthi released in theatres today, January 10, ahead of its original release date of January 14. The
VGRC கண்காட்சி.. நாளை பிரதமர் மோடி தொடங்கிவைப்பு.. விக்சித் குஜராத் முதல் விக்சித் பாரத் வரை!
VGRC கண்காட்சி 2026, குஜராத்தின் வளர்ச்சி பயணத்தை மேலும் வேகப்படுத்தி, “விக்சித் குஜராத்” இலிருந்து “விக்சித் பாரத்” நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய அடையாளமாக அமையும்.
யாழில். 10 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன்10 இலட்சத்து50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்… The post யாழில். 10 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது! appeared first on Global Tamil News .
Shanthanu Speaks Up for Father Bhagyaraj
Actor Shanthanu Bhagyaraj has spoken out in support of his father, legendary filmmaker and actor K. Bhagyaraj, after an old
Parasakthi Premieres to Packed Theatres, Star Attendance
The movie Parasakthi released in theatres today and is creating a lot of excitement, not just among audiences but also
யாழ் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வில்லை!
நிலவும் சீரற்ற கால நிலையால்கடற்தொழிலாளர்களைகடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் கடலுக்கு தொழிலுக்கு… The post யாழ் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வில்லை! appeared first on Global Tamil News .
யாழ். கடற்தொழிலாளர்கள் கடலுக்குள் செல்லவில்லை
நிலவும் சீரற்ற கால நிலையால் கடற்தொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்லாது தமது படகுகளை கரைகளில் அணைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் இன்றைய தினம் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை சில மணி நேரம் மாத்திரமே மழை பொழிந்துள்ளது. அதேநேரம் காலையில் இருந்து தூறலாக மழை பெய்வதுடன் குளிரான கால நிலை நிலவுகின்றது. காற்றும் வீசிய வண்ணமே காணப்படுகிறது.
யாழில். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பல் - இருவர் கைது ; நான்கு வாகனங்கள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களின் நான்கு வாகனங்கள் மணல் அகழ்வுக்கு பயன்படுத்திய சவல் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். தனங்கிளப்பு பகுதியில் கும்பல் ஒன்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். பொலிசாரை கண்டதும் , மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பியோடினர் , அவர்களில் இருவரை பொலிஸார் மடக்கி பிடித்தனர். அத்துடன் மணல் ஏற்றிய நிலையில் காணப்பட்ட இரண்டு டிப்பர் வாகனங்கள் , இரண்டு உழவு இயந்திரங்கள் , மற்றும் மண் அகழ்வுக்கு பயன்படுத்திய சவல் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தப்பியோடிய ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துளள்னர்.
Golden Globes Host Nikki Glaser Holds Back
The Golden Globes are back on January 11, 2026, and comedian Nikki Glaser will be hosting the show for the
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக வடமராட்சி பகுதி கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. மூர்க்கம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன
Paramount Wins Legal Battle Over Top Gun
The legal troubles surrounding Top Gun: Maverick have eased once again. A U.S. federal judge has dismissed another lawsuit against
ஈரானில் உச்சக்கட்ட பதற்றம்: கமேனியின் இல்லத்திற்கு தீ வைப்பு? ஜனாதிபதி ராஜினாமா என வதந்தி!
ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அமைதியின்மை காரணமாக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின்… The post ஈரானில் உச்சக்கட்ட பதற்றம்: கமேனியின் இல்லத்திற்கு தீ வைப்பு? ஜனாதிபதி ராஜினாமா என வதந்தி! appeared first on Global Tamil News .
பிரித்தானியாவில் சூறாவளியின் கோர தாண்டவம் ; மின்சாரம் இன்றி 55,000 வீடுகள் பாதிப்பு
பிரித்தானியாவின் கார்ன்வால் மற்றும் சிலி தீவுகளில் வீசிய கடும் சூறாவளி காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, தற்போது அங்கு விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சூறாவளியின் தாக்கத்தினால் செயின்ட் இவ்ஸ் பகுதியில் உள்ள ஒரு விருந்தகத்துக்குச் செல்லும் பிரதான வீதியை மறித்து இராட்சத மரம் ஒன்று வீழ்ந்திருந்தது. இதனால் அந்த விருந்தகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் இரவு வீட்டிற்குச் செல்ல முடியாமல் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகே […]
Tusshar Kapoor Posts Heartwarming Childhood Throwback Picture
A heartwarming old photograph shared by Tusshar Kapoor on social media on Saturday has left fans feeling nostalgic. The vintage
மார்ச் மாதம் 06 ஆந் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்ட வீரமுனை பிரதேசத்திற்கான வரவேற்பு வளைவு வழக்கு
இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வை மீண்டும் இணைந்து சாதகமான பல முடிவுகளை இவ்விடயத்தில் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆந் திகதி வரை குறித்த வழக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்திற்கான வரவேற்பு வளைவு பிரதேச சபையின் அனுமதி இன்றி அமைக்க ஆரம்பித்தமை தொடர்பிலான வழக்கு வெள்ளிக்கிழமை(9) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது […]
118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம்
வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை பழுது பார்க்கும் போது ஓடுகளின் கீழ் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் 5.56x 45mm பாணமை பொலிஸ் இன்று நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் வசிப்பதோடு தனது சகோதரரிடம் குறித்த வீட்டினை பழுதுபார்க்கும் பணியை ஒப்படைத்திருந்தார். குறித்த சம்பவம் […]
Rupee Falls 26 Paise Against Dollar
The Indian rupee weakened on Friday, January 9, 2026, falling by 26 paise to close at 90.16 against the U.S.
மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தவர் பலி ; குதித்தாரா…விழுந்தாரா
எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று (10) காலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கரந்தெனிய, கிரிபெட்டே பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக டிக்கெட் வாங்கிய ஒரு குடியிருப்பாளர் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். டிக்கெட் வாங்கிய நபர் வீட்டிற்குச் செல்லாமல் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பது குறித்து விசாரணைகள் […]
ஊட்டி: கழிவறை இல்லாத கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு; காட்டுமாடு முட்டி பெண் பலியான சோகம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொதுமுடி படுகர் கிராமம். மலை காய்கறி, தேயிலை சாகுபடி அதிகம் நடைபெறும் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கொதுமுடி தொழிலாளர்களைத் தங்கவைக்க தோட்ட உரிமையாளர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் பழங்கால கட்டடங்களில் தங்கியபடியே அந்தந்த உரிமையாளர்களின் தோட்டங்களில் கூலி வேலை செய்து வாழ்வைக் கழித்து வருகின்றனர். தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் கழிவறை இல்லை என்பதால் பெண்களும், ஆண்களும் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று வனத்தை ஒட்டியுள்ள மறைவிடத்தை திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடுமையான அவமானங்களைச் சந்தித்து வரும் இந்த மக்களுக்கு வனவிலங்குகளின் எதிர்கொள்ளல்களும் பெரும் பிரச்னையாக மாறியிருக்கின்றன. ஊட்டி: மூடப்பட்ட Hindustan Photo Films தொழிற்சாலையில் மண் திருட்டு; தொடரும் அத்துமீறல்; காரணம் என்ன? காட்டுமாடு பொதுக்கழிவறை, வீட்டுமனை பட்டா வேண்டி அந்த மக்கள் கடந்த 40 வருடங்களாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை அந்தப் பகுதிக்கு மலம் கழிக்கச் சென்ற 40 வயதுடைய மலர்க்கொடி என்கிற பெண் காட்டு மாடு தாக்கியதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்திருக்கிறார். இந்தத் துயரம் குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், கொதுமுடி ஹட்டி பகுதியில் படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாலம் பகுதியில் 40-க்கும் அதிகமான கூலித்தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சொந்தமாக வீடற்ற இந்த மக்களுக்கான பொதுக்கழிவறைகள் கூட கிடையாது. பிளாஸ்டிக் பாட்டில், கேன் போன்றவற்றில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு கூனிக்குறுகியபடியே நாள்தோறும் வனப்பகுதிக்குள் சென்று இயற்கை உபாதைகளைக் கழித்து வருவார்கள். உயிரிழந்த மலர்க்கொடி பெண்கள் பெரும்பாலும் காலை விடிவதற்கு முன்பும், மாலை இருட்டிய பிறகுமே செல்வார்கள். இன்று காலை விடிவதற்குள் மலம் கழிக்கச் சென்ற பெண்ணை காட்டுமாடு முட்டியதில் அங்கேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கூலித்தொழிலாளரான மலர்க்கொடியின் கணவர் மூட்டைச் சுமக்கும் வேலை செய்து வருகிறார். இரண்டு ஆண் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இனி யாருக்கும் இப்படி ஒரு துயரம் ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? - வனத்துறை விளக்கம்!
உருவகேலி பேசும் விரிவுரையாளர்; கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்து மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் சுகயீனமுற்ற நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (09) அனுமதிக்கப்பட்டனர். குறித்த கற்கை நிறுவகத்தில் நான்காம் வருடம் முதலாம் அரையாண்டில் நடன நாடகத்துறையல் கல்விகற்று வருகின்றனர். இதன் விரிவுரையாளர் ஒழுங்கு முறையாக […]
நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானம் மீட்பு!
நுவரெலியா கிரகரி வாவியில் விழுந்து விபத்துக்குள்ளான நீர் விமானம் (Sea Plane), நேற்று (09) மாலை 6 மணியளவில்… The post நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானம் மீட்பு! appeared first on Global Tamil News .
கொழும்பு –கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் காரணமாக கடவத்தை பகுதியிலிருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் கொழும்பு – கண்டி வீதியின் பண்டாரவத்தை – புவக்பிட்டிய பகுதியில் உள்ள வீதி எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி வரை மூடப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையில் மாற்றுவழி பாதையை அமைக்கும் பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடவத்தை […]
தற்காலிகமாக செயலிழந்த அரச இணையத்தளம் ; மக்களுக்கு வெளியான அறிவிப்பு
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் போது, அது தற்காலிகமாக செயலிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஏதேனும் விசாரணைகள் இருப்பின் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. இந்த நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சு, இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அவசர அறிவித்தல்: மடுல்சீமை போக்குவரத்து தடை –மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள்!
பசறை – மடுல்சீமை பிரதான வீதியைப் பயன்படுத்தும் பயணிகள் மற்றும் சாரதிகளின் கவனத்திற்கு! மடுல்சீமை பகுதியில் நிலவும்… The post அவசர அறிவித்தல்: மடுல்சீமை போக்குவரத்து தடை – மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள்! appeared first on Global Tamil News .
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.. 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அது ட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப் படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது
மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய நோயாளர் காவு வண்டி
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி , புதுக்குடியிருப்பு பகுதியில் நோயாளர் காவு வண்டி மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியது. விபத்தில் சாரதி உட்பட இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிந்நவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி வீதியை விட்டு விலகி மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளனதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் நோயாளர் காவு வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் […]
காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!
காஸாவில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 5 குழந்தைகள் உள்பட 13 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில் அக்.10 ஆம் தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், தெற்கு காஸாவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்துள்ள முகாம்களின் மீது வியாழக்கிழமை […]
யாழில். 10 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த நபரிடம் இருந்து போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மன்னாரில் ஊருக்குள் புகுந்த கடல் நீர்! –சீரற்ற காலநிலையால் மீனவர்கள் முடக்கம்!
மன்னார் மாவட்டத்தில் நிலவி வரும் அசாதாரண காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, கரையோரப் பகுதிகளில் கடல் நீர்… The post மன்னாரில் ஊருக்குள் புகுந்த கடல் நீர்! – சீரற்ற காலநிலையால் மீனவர்கள் முடக்கம்! appeared first on Global Tamil News .
Sikkim Plans Ice Hockey in Gnathang Valley
Sikkim is planning to introduce ice hockey as a new winter sport in the state. To support this plan, preparations
UP Warriorz Face Gujarat Giants in WPL
In women’s cricket, UP Warriorz are set to play against Gujarat Giants today in a Women’s Premier League match at
இனி பொது மரங்களை அப்புறப்படுத்த நம்ம சென்னை செயலி தான் ஒரே வழி - மாநகராட்சியின் புதிய முன்னெடுப்பு!
பொது இடங்களில் உள்ள மரங்களை உரிய அனுமதி பெறாமல் வெட்டினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள மரங்களை வெட்ட பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
Hubtown names Rupam Dey as Head – Marketing Communications & Branding
Mumbai: Hubtown Limited has announced the appointment of Rupam Dey as Head – Marketing Communications & Branding, marking a strategic move to strengthen the company’s focus on luxury and ultra-luxury real estate.Announcing the new role, Rupam shared, I’m happy to share that I’m starting a new position as Head - Marketing Communication & Brand at HUBTOWN! In his new role, Rupam will lead Hubtown’s brand strategy, marketing communications, and integrated outreach initiatives. A key part of his mandate will be to further enhance the brand presence of Hubtown’s premium and ultra-luxury portfolio, including 25 Residences, the company’s marquee residential offering. He will be responsible for shaping its brand narrative, consumer experience, and market positioning to appeal to discerning homebuyers.Rupam brings with him extensive experience in building iconic real estate brands and executing high-impact, integrated marketing strategies. His deep understanding of the real estate sector and proven leadership capabilities are expected to play a pivotal role in strengthening Hubtown’s brand equity across its premium developments.
PV Sindhu Loses Malaysia Open Semifinal
India’s top badminton player PV Sindhu saw her strong run come to an end after losing to China’s Wang Zhiyi

22 C