30 நாட்களுக்கு ஈரான் மீதான தடை நீக்கம்; பின்வாங்கும் அமெரிக்கா ;அதிரடி முடிவு
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், ஈரான் மீதான எண்ணெய் விற்பனைத் தடையை அமெரிக்கா 30 நாட்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது. அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இது குறித்த அறிவிப்பை நேற்று (20) வெளியிட்டார். எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க அதிரடி முடிவு அமெரிக்க – இஸ்ரேலிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் […]
பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியான முக்கிய தகவல்
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டபடி முதலாம் பாடசாலை தவணை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதுவரை புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சாதாரண தரம் மற்றும் […]
பனையூரில் தயாராகும் 115 தளபதிகள்- வேட்பாளர் பட்டியலில் வேகம் காட்டும் விஜய்
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தேர்வு செய்யப்பட்ட 115 வேட்பாளர்களை நாளை (மார்ச் 23) பனையூர் அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்
60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி –வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்
பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக பயிற்சியை நிறைவு செய்ய முடிகின்றது. அத்துடன் பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது எனவே வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி […]
யாழில். படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் இறுதி நிகழ்வை படமாக்க சுமந்திரன் தடை விதிப்பு
யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் நல்லடக்கம் உள்ளிட்ட இறுதி நிகழ்வுகளை ஊடகவியலாளர்கள் , இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுக்க ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தடை விதித்திருந்தார். படுகொலை செய்யப்பட்ட சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான தயாளினி திலீபனின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று , பூதவுடல் நல்லடக்கத்திற்காக கோம்பயன்மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அதன் போது விரிவுரையாளரின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள அவரது மகளை தாயாரின் இறுதி நிகழ்வுக்காக நீதிமன்ற அனுமதியுடன் யாழ்ப்பாண பொலிஸார் மயானத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அதன் போது, குறித்த பகுதியில் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுக்க வேண்டாம் எனவும் அதனை மீறி எடுப்பவர்களை பொலிஸார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து இருந்தார். மகள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் மயானத்தில் இருந்து பொலிஸார் அழைத்து சென்ற பின்னர் ஊடகவியலாளர்கள் பூதவுடல் நல்லடக்கம் மற்றும் இறுதி நிகழ்வை பதிவு செய்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணியிடம் அனுமதி கோரிய போதிலும் ,, காணொளி புகைப்படம் எடுக்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் விரிவுரையாளரின் குடும்ப நண்பர் மற்றும் அவர்களின் சட்ட ஆலோசகர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பஹ்ரைனில் மக்கள் குடியிருப்பின் மீது வீழ்ந்து வெடித்த அமெரிக்க ஏவுகணை:
கடந்த 2026 மார்ச் 09 அன்று பஹ்ரைனின் சித்ரா தீவில் (Sitra Island) உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது… The post பஹ்ரைனில் மக்கள் குடியிருப்பின் மீது வீழ்ந்து வெடித்த அமெரிக்க ஏவுகணை: appeared first on Global Tamil News .
அரசியல் புரிதலற்ற இளைஞர்கள்- விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை கடுமையாகச் சாடிய வேல்முருகன்
திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன், அரசியல் புரிதலற்ற இளைஞர்களைக் கொண்ட விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
யாழில். விரிவுரையாளர் கொலை - மகள் கூறிய வாக்குமூலம் ; பொலிஸ் விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள்
எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருவதாவது, மூன்று மாதங்களில் முறிந்த திருமண வாழ்க்கை. கொலையின் பிரதான சந்தேகநபரான அரியாலை பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 20) எனும் இளைஞன் விரிவுரையாளரின் மகளான சுவித்தியா (வயது 19) என்பவரை காதலித்து வந்த நிலையில் , கடந்த வருடம் (18 வயது திருமண வயதை எட்டியதும்) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்துள்ளனர். பதிவு திருமணம் செய்து சுமார் 3 மாத காலம் வாழ்ந்த நிலையில் , சுவித்தியா , கணவருடன் வாழ முடியாது. கொடுமைகளுக்கு தான் உள்ளாவதாக கூறி தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதனை அடுத்து ஓரிரு மாதங்களில் தனக்கு விவாகரத்து கோரி யாழ். மாவட்ட நீதிமன்றில் தாயரின் அறிவுறுத்தலில் பிரபல மூத்த சட்டத்தரணி ஊடாக வழக்கு தொடர்ந்துள்ளார். குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை பெண்ணின் கணவன் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது இருந்துள்ளார். இரு தவணைகளுக்கு மேல் சமூகமளிக்காத நிலையில் , வழக்கினை ஒரு முக விளக்கத்திற்கு எடுக்குமாறு சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்த நிலையில் வழக்கு அடுத்த தவணைக்கு திகதியிடப்பட்டது. நள்ளிரவு ஓடு பிரித்து வீட்டிற்குள் இறங்கிய கணவன். வழக்கு தவணைக்கு தான் செல்லாததும் , வழக்கு ஒரு முக விளக்கத்திற்கு சென்று தமக்கு விவாகரத்து கிடைத்து விடும் என அறிந்த கணவனான திவாகர் கடந்த 17ஆம் திகதி பாண்டியன் தாழ்வு பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திய பின்னர் , வீட்டின் ஓட்டை கழட்டி கயிறு மூலம் மனைவியின் அறைக்குள் இறங்கியுள்ளார். அங்கு நித்திரையாக இருந்த மனைவியை எழுப்பி , தனது செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோரி , சமாதானமாகி மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என கோரியுள்ளார். தாயை கொலை செய்த கணவனுடன் கைகோர்த்த மனைவி அதற்கு மனைவி தாம் இருவரும் சேர்ந்து வாழ அம்மா அனுமதிக்க மாட்டார் என கூறியதை அடுத்து , அவர் உயிருடன் இருந்தால் தானே அனுமதிக்க மாட்டார். அவரை கொலை செய்வோம் என கூறி , தாயாரின் அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு தூக்கத்தில் இருந்த தாயின் கால்களை மகள் அழுத்தி பிடிக்க , மகளின் கணவன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார் உயிரிழந்த தாயின் சடலத்தை படுக்கை விரிப்பினால் (பெட் சீட்) சுற்றி கட்டி , தாயின் காரின் பின் பகுதியில் சடலத்தை மறைத்து வைத்த பின்னர் , கணவன் மனைவியான இருவரும் வீட்டை விட்டு வெளியேறி , கணவனின் மோட்டார் சைக்கிளில் கணவனின் வீட்டிற்கு சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , வாடகை வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி மீண்டும் தனது வீட்டிற்கு கணவனுடன் வந்துள்ளார். காரில் சடலத்துடன் தப்பியோட்டம் பின்னர் விரிவுரையாளரான தனது தாயின் வங்கி அட்டையையும் நகைகள் சிலவற்றையும் எடுத்து கொண்டு தாயின் காரில் தாயின் சடலத்துடன் பயணித்து , தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றை காட்டில் சடலத்தை வீசி விட்டு காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர். பரந்தன் பகுதியில் தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தினை பெற்று காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர். பின்னர் திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் காருக்கு QR பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து தாயின் ஒரு ஜோடி காப்பை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் திருகோணமலையில் வாடகைக்கு வீடொன்றினை பெற்று வாழ்ந்துள்ளார். தாயை காணவில்லை என மகன் முறைப்பாடு அதேவேளை கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் , சகோதரியின் கணவன் மீது சந்தேகம் நிலவுவதாகவும் குறிப்பிட்டு இருந்துள்ளார். ஆனாலும் பொலிஸார் ஆரம்பத்தில் இதனை ஒரு குடும்ப பிரச்சனையாக கருத்தி விசாரணைகளில் தீவிரம் காட்டாத நிலைமை காணப்பட்டதாகவும் , அதனை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் வடமாகாண மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை தீவிர படுத்தினர் மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்கள் அதேவேளை , தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பரந்தனில் பணம் பெறப்பட்டமை , தாயின் காருக்கு QR மூலம் திருகோணமலையில் எரிபொருள் நிரப்பியமை உள்ளிட்ட தகவல்களை மகன் பொலிஸாருக்கு வழங்கி இருந்தார். அவற்றின் அடிப்படையில் திருகோணமலைக்கு சென்ற விசேட பொலிஸ் குழு , காருக்கு எரிபொருள் நிரப்பிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுத்து , கணவன் - மனைவி இருவரும் திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததனை அறிந்து , அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் மீட்டு ,யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். திருகோணமலையில் மீட்கப்பட்ட கணவன் - மனைவி வெள்ளிக்கிழமை இருவரையும் மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வரும் போது இருவரிடமும் விரிவுரையாளர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இருவரும் அது தொடர்பில் முன்னுக்கு பின் முரணான தகவல்களையே வழங்கி வந்துள்ளனர். யாழ்ப்பாணம் அழைத்து வந்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , நேற்றைய தினம் சனிக்கிழமையும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளையே விரிவுரையாளரை கொலை செய்த சம்பவத்தை கூறி தனது வாக்கு மூலத்தை பொலிஸாருக்கு மருமகன் கூறியுள்ளார். தாயின் கொலைக்கு நான் உடந்தை இல்லை - மகள் வாக்குமூலம் அதேவேளை , தான் கொலைக்கு எந்தவகையிலும் உடந்தையாக இருக்கவில்லை எனவும் , கணவன் மீதான பயத்தின் காரணமாக அவரது செயற்பாடு குறித்து வெளியில் கூறவில்லை என விரிவுரையாளரின் மகள் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு. மருமகனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூன்று நாட்களின் பின் சடலத்தை மீட்டமையால் , சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். கழுத்து நெரித்தே கொலை. போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் உடலில் காயங்கள் எதுவும் இன்றிய நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. இறுதி கிரியைகள் அதனை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சசிகலா ஆதரவாளர்களுக்கு ஒரு நற்செய்தி- நாளை மாலை 7 மணி வரை வேட்பாளர் விருப்பமனு நீட்டிப்பு
சசிகலா ஆதரவு APTMK கட்சியின் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய, நாளை மாலை 7 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக …
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் […]
உலகிலேயே பெரிய நடிகரான சிவாஜி அரசியலுக்கு வந்து தோத்துட்டார்: சிவகுமார்
நடிகன் நாடாளுவது குறித்து சீனியர் நடிகரான சிவகுமார் தெரிவித்த கருத்துக்கு ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை விளாசுகிறார்கள். மற்றவர்களோ சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
திமுகவிற்கு தவெகஒரு அச்சுறுத்தல்..த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது - கடம்பூர் ராஜீ!
திமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகம் ஒரு அச்சுறுத்தலாக நினைக்கின்றார்கள். அதன் விளைவு தான் த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ விமர்சித்துள்ளார்.
யாழில். புகையிரத கடவைக்காக நீண்ட காலமாக தொடரும் போராட்டம் - இன்றும் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட புகையிரத கடவையை மீள திறக்க கோரி அப்பகுதியில் வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும் வீதியில் புகையிரத கடவை ஒன்று அமைந்திருந்தது. குறித்த கடவை 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக புகையிரத பாதையில் காணப்பட்டமைக்கான குறிப்புக்கள் , வரைபடங்கள் இல்லாத காரணத்தால் , புகையிரத பாதையில் அப்பகுதியில் கடவை அமைக்க முடியாது என புகையிரத திணைக்களம் மறுத்து வந்தது. இருந்த போதிலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குறித்த இடத்தில் புகையிரத கடவை முன்னர் இருந்ததாகவும் , அதன் அடிப்படையில் கடவை அமைக்கப்பட வேண்டும் என கோரி கடவை அமைத்து பயணித்து வந்தனர். அந்நிலையில் குறித்த கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்பட்டமையால் , 2018ஆம் ஆண்டு பாதுகாப்பு கடவையாக மாற்ற அப்பகுதி மக்கள் சிலர் இணைந்து முயற்சித்தனர். அதேநேரம் குறித்த பகுதியில் புகையிரத கடவை அமைக்க வேண்டும் என கோரி யாழ். மாநகர சபையில் 2018ஆம் ஆண்டு பிரேரணை கொண்டு வரப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பில் புகையிரத திணைக்களத்துடன் நேரில் சென்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். அதேநேரம் கடவைக்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாட்டையும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் , பொலிசார் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் அவை அகற்றப்பட்டன. இவ்வாறாக தொடர்ந்து பல வருடங்களாக குறித்த பகுதியில் கடவை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைத்து வரப்பட்ட நிலையில் , அண்மையில் புகையிரத திணைக்கள அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் புகையிரத பாதையில் அமைக்கப்பட்டிருந்த கடவை முற்றாக அகற்றப்பட்டு , குறித்த பகுதி ஊடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடவை அகற்றப்பட்ட பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் , புகையிரத திணைக்களத்துடன் பேசி பாதுகாப்பான நிரந்தர கடவை அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் , தமக்கு அப்பகுதியில் பாதுகாப்பான நிரந்தர புகையிரத கடவை அமைத்து தர வேண்டும் என கோரி ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக அப்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
4 ஆயிரம் கி.மீ. தொலைவை தாக்கும் ஏவுகணை: அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை மிரள விட்ட ஈரான்
தெஹ்ரான் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவ தளம் மீது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை ஈரான் இன்று ஏவியது. அவற்றில் ஒரு முயற்சி தோல்வியடைந்தது. மற்றொரு ஏவுகணை இடைமறிக்கப்பட்டது. ஈரானில் இருந்து 4 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இந்த இலக்கை குறிவைத்து ஈரான் தாக்க முயன்றது அமெரிக்கா மற்றும் […]
சிலிண்டர் பிரச்சினை எப்போது சரியாகும்? ஹேப்பி நியூஸ்.. மத்திய அரசின் முக்கிய நடவடிக்கை!
சமையல் எரிவாயு விநியோகத்தை மேம்படுத்த மத்திய அரசு மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.
உலகத்தின் தேநீர் பிரியர்கள் அனைவருக்கும், மலையகப் பெண்களின் நலவாழ்வுக்கான பிரபஞ்சப் பிரார்த்தனை!
நீங்கள் மிகவும் விரும்பும் தேயிலை வகைகளில் ஒன்றான சிலோன் தேயிலையை உற்பத்தி செய்யும் இலங்கையிலிருந்து, பெண்கள் உரிமைச்செயற்பாட்டாளர்களான… The post உலகத்தின் தேநீர் பிரியர்கள் அனைவருக்கும், மலையகப் பெண்களின் நலவாழ்வுக்கான பிரபஞ்சப் பிரார்த்தனை! appeared first on Global Tamil News .
தேனிலவுக்கு தாய்லாந்து சென்ற விஜய், ரஷ்மிகா: குட்டி ரசிகைக்கு ஸ்பெஷல் ட்ரீட்
விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தன்னாவும் தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. மேலும் அவர்கள் தங்களின் ரசிகைக்கு கொடுத்த விருந்து வீடியோ வைரலாகியிருக்கிறது.
உங்க கிட்ட எத்தனை வங்கிக் கணக்கு இருக்கு? நிறைய இருந்தால் ஆபத்து.. உடனே குளோஸ் பண்ணுங்க!
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் நீங்கள் உடனே செய்ய வேண்டியது இதுதான். செயல்படாமல் இருக்கும் கணக்குகள் உங்களுக்கே ஆபத்தாக முடியும்.
ஹோர்முஸ் நீரிணை: ஜப்பானிய கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி?
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை (Strait… The post ஹோர்முஸ் நீரிணை: ஜப்பானிய கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி? appeared first on Global Tamil News .
பாஜக கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை..- தேர்தல் நெருங்கும் நேரத்தில் சரத்குமார் ஆவேசப் பேச்சு!
எனக்கு பொறுப்பு வழங்கவில்லை என ஆதரவாளர்கள் ஆதங்கம்படுவதாக பாஜக நிர்வாகி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
4000 கி.மீ.-க்கு அப்பால்…அமெரிக்க –பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்கிய ஈரான்!
அமெரிக்க – பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து இரு ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியா என்கிற தீவு அமைந்துள்ளது. பிரிட்டன் வசம் உள்ள இந்தத் தீவில் ஈரானுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவப் படையை நிலைநிறுத்த பிரிட்டன் அனுமதித்தது. இங்குள்ள அமெரிக்க – பிரிட்டன் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியதாக நேற்று முன்தினம் (மார்ச் 20) செய்திகள் வெளியாகின. ஈரான் எல்லையில் இருந்து […]
மட்டக்களப்பு மறக்கவியலாத பேராசான் : பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை து.கௌரீஸ்வரன்
ஈழத்துத் தமிழர்தம் வரலாற்றில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செழுமையான தமிழ்ப் ‘பண்டிதர்’ மரபு தழைத்தோங்கி வந்துள்ளமை பற்றி… The post மட்டக்களப்பு மறக்கவியலாத பேராசான் : பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை து.கௌரீஸ்வரன் appeared first on Global Tamil News .
60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி –வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்
பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள்… The post 60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி – வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும் appeared first on Global Tamil News .
ஈரானா இஸ்ரேலா? தமிழ் மக்கள் யாரோடு? –நிலாந்தன்!
1991ஆம் ஆண்டு,”ஓபரேஷன் டிசேர்ட் ஸ்ட்ரோம்”- “பாலைவனப் புயல்” என்ற பெயரில் ஒரு படை நடவடிக்கையை, அமெரிக்கா தலைமையிலான… The post ஈரானா இஸ்ரேலா? தமிழ் மக்கள் யாரோடு? – நிலாந்தன்! appeared first on Global Tamil News .
படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளா் தயாளினி திலீபனின் இறுதி கிரியைகள் இன்றைய தினம்… The post படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக appeared first on Global Tamil News .
மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் மூன்று(3)… The post மன்னாரில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான வெளிநாட்டுப் பறவைகள். appeared first on Global Tamil News .
ஈரானுக்கு 48 மணி நேர உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் ட்ரம்ப், ஈ ரானுக்கு 48 மணி நேர அவகாசம் வழங்கி புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஹோர்முஸ்… The post ஈரானுக்கு 48 மணி நேர உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை appeared first on Global Tamil News .
ஈரான் போர்: சவூதி அரேபியாவின் முக்கிய இராணுவ நகர்வு!
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்கப் படைகள் தாயிஃப் (Taif) நகரில் உள்ள மன்னர் ஃபஹத் விமானப் படையதளத்தை… The post ஈரான் போர்: சவூதி அரேபியாவின் முக்கிய இராணுவ நகர்வு! appeared first on Global Tamil News .
ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
ரஷியாவில் ஒரே இரவில் 280 டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷியா – உக்ரைன் போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இதனை முடிவுக்குக் கொண்டுவர முடங்கியிருந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் விதமாக அமெரிக்காவில் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இணைந்து நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 20) ஒரே இரவில் 280 டிரோன்கள் […]
பொதுமக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும், அது குறித்த இறுதி முடிவை ஏப்ரல் முதலாம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவிக்கையில்: எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எதிர்வரும் ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும். பொதுமக்கள் இதில் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளதுஎன அவர் தெரிவித்தார்.
தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, பொன்மாரி தலைமையிலான தேர்தல் பறக்கும்
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய்’மியூசிக் வீடியோ ஆல்பம்
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த ஆல்பத்தில்
ஈரானுக்கு மிக அருகில் நீர்மூழ்கி போர் கப்பலை நிலைநிறுத்திய பிரிட்டன்!
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக
அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி ஏற்றி வந்த இந்திய கப்பல் மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்தது!
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி வர்த்தகனத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ்
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் இன்றுடன் 23 வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக உலகின்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி!
திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக கூட்டணியில் 10
தூத்துக்குடியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்!
தூத்துக்குடி அன்னை ஜூவல்லர்ஸ் ஏற்பாட்டில் பிரையன்ட் நகர் காமராஜர் மண்டபத்தில் அமெரிக்கன் ஆஸ்பத்திரி இணைந்து மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஏராளமான மக்கள்
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் –ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 22 நாடுகளின் தலைவர்கள்
ஈரான் மற்றும் இஸ்ரே, அமெரிக்கா இடையிலான போரினால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேல் நகரங்கள் பாதிப்பு!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள
1வது முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 1வது முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2025-2026 கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் மற்றும் சட்டமன்றத்
இயக்குனர் சுரேஷ் சங்கையா மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் உருவாகியுள்ள 'கேணத்த காணோம்' படத்தின் வைரல் ராப் பாடல் வீடியோவை இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிட்டார்.
இயக்குனர் சுரேஷ் சங்கையா மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் உருவாகியுள்ள 'கேணத்த காணோம்' படத்தின் வைரல் ராப் பாடல் வீடியோவை இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிட்டார்.
படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த மூத்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் இணைந்து அவரை கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்து சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் வீசிய நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அக்கவுண்டில் ஒரு ரூபாய் கூட இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம்.. அது எப்படி?
உங்களுடைய வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாவிட்டாலும் அவசர காலத்தில் அதிலிருந்து நீங்கள் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
சேவையிலிருந்து விலகிய 90 சதவீத தனியார் பேருந்துகள் ; எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி
இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (21) அதிக அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். இதன் காரணமாகவே இன்றைய தினம் பேருந்துகளை இயக்காதிருக்க பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பேருந்து சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கக் கோரிக்கை ; அடுத்தடுத்து உயரப்போகும் விலைகள்
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இன்று (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்தார். எரிபொருள் விலை “இன்று முதல் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு எமது சேவைக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. எமது சேவையை முன்னெடுக்க எரிபொருள் […]
90 சதவீத தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து அதிரடியாக விலகியது
நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் சடுதியாக பெரும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இதன் காரணமாகவே இன்றைய தினம் பேருந்துகளை இயக்காதிருக்க பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார். புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பேருந்து சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை முழுவதும் திறக்க வேண்டும் ..- ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த ட்ரம்ப் !
48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி வாழை சாகுபடி பாதிப்பு: கோடை மழையால் விலை வீழ்ச்சி!
திருச்சி வாழை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. கோடை மழையால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நடிகர் மற்றும் இயக்குனர் கென் கருணாஸ் தனது 'யூத்' பட விளம்பரத்தின் போது அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறிய கருத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் கலாய்த்துள்ளார்.
மின்சாரம், எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
மின்சாரத்தையும் எரிபொருளையும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு போரினால் உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக சிறிலங்கா நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நேற்றிரவு எரிபொருள் விலைகளைக் கடுமையாக உயர்த்தியது. இதையடுத்து, இன்று காலை ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பொதுமக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். “மின்சாரத்தையும் எரிபொருளையும் கவனமாக பயன்படுத்துமாறும்,
திமுக கூட்டணியில் இருந்து விலகினார் வேல்முருகன்… தவாக இனி யாருடன் கைகோர்க்கும்?
கூட்டணி தொடர்பான இழுபறி நீடித்து வந்த நிலையில், சற்றுமுன் திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறியுள்ளார். அடுத்ததாக தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகள் உடன் கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிநவீன எப்-35 விமானத்தை தாக்கிய ஈரான்: திகைத்த உலக நாடுகள்
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் நேற்று 21-வது நாளை எட்டியது. ஈரான் மக்கள் பாரசீக புத்தாண்டான (நவ்ருஸ்) நேற்று கொண்டாடினர். ஆனால் இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது.தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் போர் விமானங்களும் குண்டுவீசியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் இதில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதற்கு பதிலடியாக, நவ்ருஸ் தினத்திலும் இஸ்ரேல் […]
மத்திய கிழக்கு போர் பதற்றம் ; மத்தள வானூர்தி நிலையம் மீண்டும் உயிர்பெறுகிறதா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வான்பரப்பு முடக்கம் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, நட்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச வானுர்தி நிலையத்தை (MRIA) ஒரு தற்காலிக மையமாகப் பயன்படுத்துவது குறித்து ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விரிவான பேச்சுவார்த்தை நாளை (23) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் ஓமான் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கைக்குக் கூடுதல் வானூர்திகளை இயக்கக் கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச […]
நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'கருப்பு' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அந்த ஸ்கிரிப்ட் முதலில் விஜய்யிடம் சென்றது குறித்த பின்னணியும் வெளியாகியுள்ளது.
பெருமளவு உயரபோகும் பேருந்து கட்டணம் ; திடீர் எரிபொருள் விலை அதிகரிப்பால் சிக்கல்
இன்றைய தினம் (22) பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான கணக்கீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் பல தடவைகள் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. இதேவேளை, பேருந்து கட்டணங்களை குறைந்தபட்சம் 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (21) நள்ளிரவு […]
தலைக்கு மேல தேர்தல் வேலை இருக்கும்போது விஜய் ஏன் வளைகாப்புக்கு மும்பை போனார் தெரியுமா?: ரசிகர்கள்
தேர்தல் நேரத்தில் அட்லி மனைவியின் வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ள விஜய் ஏன் மும்பை வரை சென்றார் என்று அவரின் ரசிகர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். மும்பையில் விஜய் தங்கியிருந்த தாஜ் ஹோட்டலுக்கு முன்பு ரசிகர்கள் கூடிவிட்டார்கள்.
புதுச்சேரியில் ரூ. 1,250 கோடியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம்: மத்திய அரசு ஒப்புதல்!
புதுச்சேரியில் ரூ. 1,250 கோடியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தியைக் மற்ற நாடுகளும் கண்காணிக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை ட்ரூத் சமூக வலைத்தளத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில், ஈரான் போரின் முக்கிய கட்டத்தை அமெரிக்கா நெருங்கிவிட்டது. எனவே, எப்போது வேண்டுமானாலும் ஈரான் போர் முடிவுக்கு வரலாம் என்று தெரிவித்திருந்தார். அதாவது, ஈரானுடனான போரின் முக்கிய இலக்கை அடைந்துவிட்டோம், எனவே, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது […]
விசிக கேட்கும் பொதுத் தொகுதிகள்… 12 இல்ல, 8 தான்- திருமாவிற்கு இறங்கி வருமா திமுக?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதிகப்படியான கட்சிகள் கூட்டணியில் இருப்பதை சுட்டிக் காட்டி திமுக தலைமை கறார் காட்டி வருகிறது.
கூட்டாட்சி, சுயநிர்ணய உரிமை கருத்துக்களால் தமிழ்க் கட்சிகள் தோல்வி- சுமந்திரன் சர்ச்சை கருத்து
சிறிலங்காவை ஆளும் மார்க்சியக் கட்சி, நாட்டை ஒருகட்சி அரசை நோக்கி வழிநடத்தும் அபாயம் உள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார். இந்திய சட்டவாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தின் குழுவில் இடம்பெற்றிருந்த எம்.ஏ.சுமந்திரன், இந்தப் பயணத்தின் போது இந்திய ஊடகவியலாளர் எம்.ஆர்.நாராயணசாமிக்கு அளித்துள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல் ஹாசன் அளித்த பதில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் விஜய் ரசிகர்களோ கமலை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய சினிமாவின் தரமான தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ், தனது அடுத்த படைப்பிற்காகப் புதிய திறமைகளை வரவேற்கிறது. இதற்கான தகுதிகள் மற்றும் கடைசித் தேதி குறித்த விவரங்கள் இதோ.
கச்சா எண்ணெய் மீதான தடை நீக்கம்.. அமெரிக்காவின் சலுகையை நிராகரித்த ஈரான்..!
டெஹ்ரான், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் உயர்ந்துள்ள எண்ணெய் விலைகளைக் குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கடல் வழியாக ஈரானின் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வதற்கான தடைகளை 30 நாட்களுக்கு தளர்த்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க கருவூல செயலாளர் பெசென்ட் வெளியிட்டிருந்த பதிவில், “உலகளாவிய பயங்கரவாதத்தின் தலையாக ஈரான் விளங்குகிறது. ஜனாதிபதி டிரம்பின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ நடவடிக்கை மூலம், நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமாக இந்த முக்கியமான போராட்டத்தில் வெற்றி […]
வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் தொடர்பான செயற்பாட்டு வழிமுறைகள் வரைவு தயார்
சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கான, புதிய நிலையான செயற்பாட்டு வழிமுறைகளை அரசாங்கம் வரைவு செய்து முடித்து விட்டதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வரைவு, அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்ன்னர், சட்டரீதியான ஆய்வுக்காக சட்ட வரைவாளர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சுமார் ஓராண்டு கால விவாதங்களுக்குப்
எரிபொருள் விலைகள் நள்ளிரவில் கடுமையாக அதிகரிப்பு
அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகளை சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. 2022/23 காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய விலைத் திருத்தமாகவும் இந்த விலை உயர்வு அமைந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை
விமான எரிபொருள் விலை அதிகரிப்பு ; இரு மடங்காக உயரும் வானூர்தி கட்டணங்கள்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் வானூர்தி எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், வானூர்தி கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு கருத்து வெளியிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு கலன் வானூர்தி எரிபொருளின் விலை 2.25 டொலரிலிருந்து சுமார் 4 டொலராக உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (16) நிலவரப்படி, இலங்கையிடம் […]
பெரிய பட்ஜெட் தேவையில்லை, உண்மையான உழைப்பு போதும் என காளிதாஸ் 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித் பேசிய உருக்கமான பேச்சு வைரலாகி வருகிறது.
பெரிய பட்ஜெட் தேவையில்லை, உண்மையான உழைப்பு போதும் என காளிதாஸ் 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித் பேசிய உருக்கமான பேச்சு வைரலாகி வருகிறது.
உலகில் எந்த இடத்திலும் எதிரிகளுக்கு பாதுகாப்பு இருக்காது-ஈரான் பகிரங்க எச்சரிக்கை
டெஹ்ரான் ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல் 21 நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், போரை நிறுத்தும் தந்திரமாக மத்திய கிழக்கை தாண்டியும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் போவதை ஈரான் சூசகமாக தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவ மூத்த செய்தித்தொடர்பாளர் ஜெனரல் அபோல்பாஸ்ல் ஷெகார்ச்சி, இதுதொடர்பாக பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஈரான் எதிரிகளை பற்றி எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, பூங்காக்கள், பொழுதுபோக்கு […]
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சி ஆட்டத்தின்போது, புதுமுக வீரர் அபாரமாக செயல்பட்டு அசத்தினார். மேலும், டி20 உலகக் கோப்பையில் பார்ம் அவுட்டில் இருந்த அபிஷேக் சர்மாவும் அதிரடி காட்டினார்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சீரமைப்புப் பணி: காலதாமதத்தால் பயணிகள் மற்றும் வியாபாரிகள் அவதி!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள் காலதாமதத்தால் பயணிகள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
வடக்கில் நெருக்கடி ; கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் முடங்கியது
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாராந்தம் வழங்கப்படும் மிகக் குறைந்தளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு காரணமாக, ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபட முடியாமல் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 30 லீட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுவதால், அவர்களால் கரைக்கடல் பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்க முடிகிறது. கரைக்கடல் பகுதிகளில் மீன் வளம் குறைந்துள்ளதால், சிறந்த அறுவடைக்கு ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு […]
லங்கா ஐஓசி எரிபொருள் விலைகளிலும் மாற்றம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அண்மைய விலைத்திருத்தத்திற்கு இணையாக, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி, சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டு எரிபொருட்களின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் விலையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு நிகராக மாற்றியமைக்கப்படவுள்ளது. ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்வது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என லங்கா […]
கேள்விப்பட்டது பொய்யாக இருக்கலாம், ஆனால் பார்த்தது? - ஒரு சராசரி மனிதனின் அசாதாரணமான தத்துவத் தேடலைச் சொல்லும் 'ஆன்கோ தேகி' படத்தின் விரிவான அலசல்.
கேள்விப்பட்டது பொய்யாக இருக்கலாம், ஆனால் பார்த்தது? - ஒரு சராசரி மனிதனின் அசாதாரணமான தத்துவத் தேடலைச் சொல்லும் 'ஆன்கோ தேகி' படத்தின் விரிவான அலசல்.
டியாகோ கார்சியாவில் ஈரான் ஏவுகணை தாக்குதல்! இந்தியப் பெருங்கடலில் ஆட்டம்
இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் தளத்தின் மீது ஈரான் இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியதாக அறிவிக்கப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஈரானிலிருந்து இரண்டு இடைநிலைத் தொலைவு ஏவுகணைகள்,டியேகோ கார்சியாவை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளன. எனினும் இந்த இரண்டு ஏவுகணைகளும் இலக்கை எட்டவில்லை. டியேகோ கார்சியா தளம் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நடுவானிலேயே செயலிழந்து வீழ்ந்துள்ளதாகவும், மற்றொன்றை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று AM-3 […]
ஈரானியத் தூதர்களை வெளியேற்றும் சவுதி
சவூதி அரேபியா ஈரானிய இராணுவத் தூதரை விரும்பத்தகாத நபராக அறிவித்துள்ளது. ஈரானின் இராணுவத் தூதர் மற்றும் தூதரகத்தின் மேலும் நான்கு பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியாத் அந்தத் தூதர்களை விரும்பத்தகாத நபர்களாக அறிவித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது. சவூதி அரேபியா மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள பிற நாடுகள் மீதான ஈரான் தாக்குதல்களை அந்த அமைச்சகம் மீண்டும் கண்டனம் செய்தது.
ஈரானுக்கு 48 மணி நேரக் காலக்கெடு: இல்லையேல் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம்!
48 மணி நேரத்திற்குள் ஈரான் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிடும் என்று அமெரிக்க அதிபர் 'ட்ரூத் சோஷியல்'தளத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள அணுசக்தி நிலையம் அருகே ஈரான் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர்
தெற்கு இஸ்ரேலிய நகரமான அராத் மீது இன்று மாலை நடத்தப்பட்ட புதிய ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 59 பேர் காயமடைந்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். டிமோனாவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் (15 மைல்) வடகிழக்கில் உள்ள அந்த நகரில், மோசமாக சேதமடைந்த கட்டிடங்களை இஸ்ரேலிய ஊடகங்கள் காட்டின. முன்னதாக இன்று, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா மீது ஈரான் நடத்திய மற்றொரு ஏவுகணைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டிமோனா மற்றும் அராட் ஆகிய இரு இடங்களிலும், அச்சுறுத்தல்களைத் தாக்கத் தவறிய இடைமறிப்பு ஏவுகணைகளின் விளைவாக, நூற்றுக்கணக்கான கிலோகிராம் எடை கொண்ட வெடிமுனைகளைக் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இரண்டு இடங்களையும் நேரடியாகத் தாக்கின என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இரு நகரங்களும் இஸ்ரேலின் பிரதான அணு ஆராய்ச்சி மையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. தெற்கு இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தில் உள்ள திமோனா நகரின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அசாதாரண கதிர்வீச்சு அளவுகள் கண்டறியப்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. சுமார் 37,000 மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில் ஒரு அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. ஈரானின் நடன்ஸ் அணு ஆயுத செறிவூட்டும் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
டியாகோ கார்சியா மீது ஏவுகணைகள் வீசியது ஈரான்: பொறுப்பற்ற செயல் என்கிறது பிரித்தானியா
ஈரானிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இங்கிலாந்து தொடர்ந்து தற்காப்பு ஆதரவை வழங்கும் என்று வெளியுறவுச் செயலாளர் கூறியுள்ளார். ஆனால் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலில் அது ஈடுபடுத்தப்படாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சாகோஸ் தீவுகளில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு இராணுவத் தளத்தை தெஹ்ரான் குறிவைத்ததாகவும், டியாகோ கார்சியா தீவை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இவெட் கூப்பர் பேசினார். பிரித்தானியாவின் நலன்களை ஆதரிப்பதில், பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார். சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களையும், நமது வளைகுடா கூட்டாளிகளுக்கு ஈரானால் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை புரிந்துகொண்ட பிரித்தானரியா இந்த மோதலுக்கு விரைவான முடிவு காண விரும்புவதாகவும் கூப்பர் மீண்டும் வலியுறுத்தினார். பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, டியாகோ கார்சியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலும் சிஎன்என்-னும் செய்தி வெளியிட்டன , ஆனால் அந்த இரண்டு ஆயுதங்களும் தங்கள் இலக்கை அடையவில்லை என்றும் கூறின. அவை எப்போது ஏவப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தைக் குறிவைக்கும் ஈரானிய தளங்களைத் தாக்க, அமெரிக்கா தனது பிரிட்டிஷ் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புக்கொள்வதற்கு முன்பே இது நடந்ததாக நம்பப்படுகிறது. ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று பறக்கும்போதே செயலிழந்ததாகவும், மற்றொன்று அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றால் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரானிலிருந்து சுமார் 2,350 மைல் தொலைவில் உள்ள டியாகோ கார்சியாவைச் சென்றடையும் திறன் கொண்ட ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
தென் மாவட்டங்களில் பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்பட இருப்பதால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ரஷ்யாவின் எரிசக்தி தடைகளை தளர்த்திய அமெரிக்கா: “ஆபத்தானது” என ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துவது என்பது மிகவும் ஆபத்தானது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெலென்ஸ்கி எச்சரிக்கை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக உலகளாவிய அளவில் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதை சரிக்கட்டும் விதமாக ரஷ்யாவின் மீதான பொருளாதார தடைகளை(குறிப்பாக எரிசக்தி ஏற்றுமதி) தளர்த்துவதற்கு அமெரிக்கா முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், […]
தென்கொரிய வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் தீ விபத்து
தென்கொரியாவின் டேஜியோன் நகரில் அமைந்த வாகன உதிரிபாகத் தொழிற்சாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 53 போ் காயமடைந்தனா். அவா்களில் 24 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்திலிருந்து தப்பிக்க முயன்று மேல் தளங்களிலிருந்து கீழே குதித்ததில் சிலருக்கும், நச்சுப்புகையை சுவாசித்ததில் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தின்போது, தொழிற்சாலையிலிருந்து கரும்புகை பல கி.மீ. தூரத்துக்கு வானில் எழுந்தது; தொழிற்சாலையின் உள்ளே பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் […]
நேரடிச் செய்தி: டிமோனா நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – 23 பேர் காயம்!
திகதி: மார்ச் 21, 2026 இஸ்ரேலின் தெற்குப் பகுதியிலுள்ள டிமோனா (Dimona) நகர் (அணு உலை நிலையத்திற்கு அருகில்)… The post நேரடிச் செய்தி: டிமோனா நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – 23 பேர் காயம்! appeared first on Global Tamil News .
மத்திய கிழக்கில் பதற்றம்: 16.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்!
ஈரானுடனான மோதல் மற்றும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், தனது நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத்… The post மத்திய கிழக்கில் பதற்றம்: 16.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்! appeared first on Global Tamil News .
‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக போராட்டம் தொடரும் ’: ஈரானின் மோஜ்தபா கமேனி எச்சரிக்கை
‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக ஈரான் இடைவிடாத போராட்டத்தைத் தொடரும்’ என்று அந்நாட்டின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி தெரிவித்தாா். ஈரான் புத்தாண்டு (நவ்ரூஸ்) மற்றும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘அமெரிக்கா, இஸ்ரேலுடனான போா் என்பது வெறும் ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது போா்க்களத்தோடு முடிந்துவிடக்கூடியது அல்ல; இது அதற்கும் அப்பாற்பட்டது’ என்றும் குறிப்பிட்டாா். அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி […]
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ.. உறுதித்தன்மையை ஆய்வு செய்ய CSIR உத்தரவு!
தூண்கள் இல்லாத பாதையில் ரயில் போக்குவரத்தின்போது, ஒரு சிறிய அளவிலான நெகிழ்வு ஏற்படலாம் என்பதால் அதன் உறுதி மற்றும் நெகிழ்வுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹோா்முஸ் நீரிணைப் பாதுகாப்புக்கு பங்களிக்கத் தயாா்: 7 நாடுகள் கூட்டறிக்கை
ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிக்கத் தயாா் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, நெதா்லாந்து, ஜப்பான், கனடா ஆகிய 7 நாடுகள் தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக அந்த நாடுகளின் தலைவா்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள், ஆயுதங்கள் எதுவும் வைத்திராத சரக்குக் கப்பல்கள் மீது ஈரானின் தாக்குதல், ஹோா்முஸ் நீரிைணையை அந்நாடு மூடியது ஆகியவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். சரக்குக் கப்பல்களின் […]
யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்
யாழ்ப்பாணம் அச்சுவேலி, நிலாவரை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

29 C