உங்கள் உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா? எலான் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ் ஆப் மறுப்பு!
பயனர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாக எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்துக்கு வாட்ஸ் ஆப் செயலியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப்-க்கு மாற்றாக பல செயலிகள் இருந்தாலும், வாட்ஸ் ஆப் தான் முன்னணி செயலியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ் ஆப் பயனர்களின் உரையாடல்களை அந்நிறுவன ஊழியர்களால் படிக்க முடியும் என்று நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்கள் சமீபத்தில் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியது. இதனிடையே, வாட்ஸ் ஆப் மீதான […]
NASA Selects Axiom Space for Ax-5 Mission
NASA has officially chosen Axiom Space to conduct its fifth private astronaut mission to the International Space Station (ISS). The
தனுஷ் D55 பட அப்டேட்: ஸ்ரீலீலா மற்றும் சாய் அபயங்கர் வருகை! மாஸ் தகவல்!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'D55' படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு- ஆசிரியர்களின் கனவு நினைவாகுமா?
இடைநிலை ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னைக்கு தீர்வு காண மூவர் குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதனால், 37 நாட்களாக நடந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு மீது நம்பிக்கை வைத்து, மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திட்டமிட்டு ஏமாற்றிய திமுக அரசு.. மறக்க முடியாத பாடம் புகட்டப்படும்.. அன்புமணி ராமதாஸ் விளாசல்
ஜனவரி 1 முதல் திட்டம் செயல்பாட்டில் இருப்பது போல அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எந்தப் பயனும் வழங்கப்படாததன் மூலம் அந்த மோசடி அம்பலமாகிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மொத்தம் மூன்று மாற்றங்களை செய்துள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு 5ஆவது போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய வியூகத்தைக் கையிலெடுக்கும் திமுக - திருப்போரூர் திட்டம் என்ன?
ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற வேகத்தில் அடுத்தடுத்த செயல்பாடுகளில் தீவிரம் காட்டிவருகிறது ஆளும் தரப்பான தி.மு.க. தேர்தலுக்கு முன்பான தேர்தல் பணிகளில் அந்தக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாட்டை நடத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே இளைஞர் அணியின் மண்டல மாநாடு, மண்டல பெண்கள் மாநாடு என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி வரும் தி.மு.க, இப்போது வாக்குச்சாவடி முகவர்களுக்குத் தேர்தல் வியூகங்களைப் பற்றி விளக்கம் அளிக்க அடுத்த மாநாட்டினை நடத்த உள்ளது. அதில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான புதிய யுக்தியையும் தி.மு.க கையில் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்கும் வாக்குமுகவர்களே தேர்தல் களத்தின் அடிப்படை பணியாளர்கள். அவர்களை சரியான விதத்தில் பணியமர்த்தும் கட்சிகளே தேர்தல் நாள் அன்று தங்கள் தரப்பு வாக்குகளை முழுமையாகக் கைப்பற்ற முடியும் என்பதால் அனைத்து கட்சிகளுமே, வாக்குச்சாவடி முகவர்கள் விஷயத்தில் உஷாராக இருப்பது வழக்கம். எனவேதான் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள், பாக முகவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்த உள்ளது. திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் இது குறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, “தேர்தல் வேலைகளை தி.மு.க இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. மாநாடுகள் எல்லாம் ஒருபுறம் என்றாலும், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாக முகவர்களை சரி செய்யும் வேலைகளைத்தான் தற்போது தலைமை மேற்கொண்டுவகிறது. இந்த முறை த.வெ.க வேறு களத்தில் இருப்பதால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகளை குறிவைத்து தி.மு.க வேலை செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நுாறு வாக்குகளுக்கு ஒரு பாக முகவர் என்கிற கணக்கில் ஆட்களை நியமனம் செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து நுாறு வாக்காளர்களை ஒரு பாகவர் முகவர் கண்காணித்து அவர்களை தி.மு.க-வுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வைக்கும் வேலையை இந்த பாக முகவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வாக்காளர்கள் விவரங்களை வைத்து பாக முகவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின் இந்த பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடுதான் திருப்போரூரில் நடக்க உள்ளது. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களை இந்த மாநாட்டிற்கு அழைக்க உள்ளனர். இதன் தொடர்ச்சியாக திருப்பத்துார், மதுரை, கோவை என அடுத்த நான்கு இடங்களுக்கான மாநாடுகள் பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளது, தி.மு.க தலைமை. இந்த மாநாடுகள் நிறைவடைந்த பிறகே திருச்சியில் மாநில மாநாடு மார்ச்-8ம் தேதி அன்று நடக்க உள்ளது என்றனர். தி.மு.க-வின் இந்த வியூகங்கள் குறித்து மண்டல வாரியாக தி.மு.க வில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். திருப்போரூர் மாநாடு முடியும் முன்பே அடுத்த மூன்று மாநாடுகளுக்கான இடங்களையும் தேர்வு செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்கு இடையில் மகளிர் மாநாடு தென் மண்டலத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. அந்த மாநாடு முடிந்த கையோடு பாக முகவர்கள்,வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு, அடுத்து மாநில மாநாடு என வரிசையாக மாநாடுகள் நடக்க இருப்பதால், நிர்வாகிகளுக்குப் பெரும் பணிச்சுமையும் ஏற்படுகிறது என்கிற புலம்பலும் தி.மு.க நிர்வாகிள் மத்தியில் உள்ளது.
Meta Faces Trial Over Child Exploitation Claims
Meta Platforms, the parent company of Facebook, Instagram, and WhatsApp, will go to trial next week in a lawsuit filed
900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி: மருத்துவர்கள் தெரிவித்துள்ள நல்ல செய்தி
அபூர்வ நரம்புமண்டல நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு, 900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி ஒருத்தியால் தற்போது வாயை மூட முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி கொல்கத்தாவில் அபூர்வ நரம்புமண்டல நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு, 912 நாட்களாக வாயை மூட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறாள் 10 வயது சிறுமி ஒருத்தி. பல்வேறு மருத்துவமனைகளில் அவளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடைசியாக R Ahmed Dental […]
Delicious Malabar Fish Biryani for Any Occasion
Malabar Fish Biryani is a classic, flavorful dish you can enjoy anytime. Serve it with raita or mint chutney for
விராட் கோலி விக்கெட்டை எடுத்தால் காலில் விழுந்திடுவேன்-விஷால் நிஷாத் ஓபன் டாக்!
டெல்லி : பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய வீரர் விஷால் நிஷாத், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை தனது ஐடலாகக் கொண்டுள்ளார். கோலியின் ஆளுமை, ஆர்வம், வெற்றி மீதான தாகம் ஆகியவை தன்னை கிரிக்கெட் விளையாடத் தூண்டியதாக அவர் தெரிவித்தார். “விராட் கோலி எனது ஐடல். அவரது அணுகுமுறையும், டிரைவும் என்னை மிகவும் ஈர்க்கிறது. அவர் எனக்கு மிகவும் பிடித்தவர்” என்று விஷால் நிஷாத் கூறினார். ஐபிஎல் போட்டிகளில் கோலியை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் […]
விஜய்யை விமர்சித்த செந்தில் பாலாஜி.. என்ன சொன்னார் தெரியுமா? முழு விவரம் இதோ!
கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தவெக தலைவர் விஜய்யைப் பற்றி கேட்டு ஏன் நேரத்தை வீண்டிக்கிறீர்கள் என்று விமர்சித்து உள்ளார்.
Delicious Peshawari Chicken Biryani for Special Occasions
If you like biryani, you will love this Peshawari Chicken Biryani. It is great for family meals and special occasions.
பிரீஃப் கேஸ் முதல் டேப்லெட் வரை.. பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வரும் முறையில் வந்த மாற்றங்கள்!
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சர்கள் கையில் கொண்டுவரும் பெட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். பேராடு முறை ஏன் வந்தது? ஃப்ரீப் கேஸ் முறை ஏன் கைவிடப்பட்டது?
`ஜெயலலிதா விஜய்யைக் கைதுசெய்திருப்பார்; ஸ்டாலின் கரிசனம் காட்டியிருக்கிறார்!' - பி.டி.செல்வகுமார்
தூத்துக்குடியில் த.வெ.க தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.செல்வகுமார் தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகர் விஜய்க்கும், அவர் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை. தந்தை சந்திரசேகர்தான் சினிமாவில் விஜய்யின் வளர்ச்சிக்கு முழுக் காரணம், முக்கியக் காரணம். ஆனால், சந்திரசேகருக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் இல்லை. ஜனநாயகன் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. சென்சார் பிரச்னையைத் தீர்க்க வேண்டியது படக்குழுதான். த.வெ.க விஜய் சென்சார் பிரச்னையில் ஒரே ஒரு உறுப்பினருக்கு மட்டுமே மாறுபட்ட கருத்து இருந்திருக்கிறது. இதனை படக்குழுதான் சரி செய்திருக்க வேண்டும். மாநில அரசுக்கும், சென்சாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தி.மு.க, பா.ஜ.க யாரும் படம் வெளியிடுவதை தடுக்கவில்லை. ஆர்.கே.செல்வமணியின் விஸ்வரூபம் போன்ற பல படங்கள் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்துள்ளது. அதே போன்றுதான் ஜனநாயகன் படமும். இந்த பிரச்னையை தீர்த்த பின்புதான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்க வேண்டும். உங்கள் கடமையிலிருந்து நீங்கள் தவறி விட்டு பிறர் மேல் பழி போடுவது தவறு. ஒரு படம் வெற்றி பெற்றால், புகழ் வந்தால், கைதட்டல் வந்தால், ரசிகர்கள் விசில் அடித்தால் எல்லாப் புகழும் உங்களுக்கு. ஆனால், பிரச்னை என்று வந்தால் மட்டும் நீங்கள் காரணம் இல்லையா? இதுதொடர்பான பிரச்னையை சரி செய்ய வேண்டியது யார்? சென்சார் வரவில்லை என்றவுடன் மத்தியரசுதான் பிரச்னை என்று கூறுகிறீர்கள். முழுக்க, முழுக்க இது விஜய்யின் தவறுதான். கரூரில் மாநாடு போட வேண்டும் என்று கேட்டது யார்? அப்பாவி மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. 41 பேர் இறந்ததற்கு விஜய்தான் பொறுப்பு. ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது விஜய்யை கைது செய்து இருப்பார். விஜய் ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் விஜய் மீது கரிசனம் காட்டி இருக்கிறார். அ.தி.மு.க, பா.ஜ.கவினர் கரூரில் நடந்த சம்பவத்திற்கு அப்போது விஜய்க்கு ஆதரவாகப் பேசினார்கள். தற்போது விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன் எதிராகப் பேசி ஒரு சுயநல அரசியலை செய்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போது அங்கு சென்ற விஜய், ஏன் மதுரை மாநாட்டில் இறந்தவர் வீட்டிற்கு செல்லவில்லை? பப்ளிசிட்டி வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானலும் விஜய் செல்வார். வரும் சட்டமன்றத் தோ்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜய், திரைப்படத்தில் பேசும் பஞ்ச் டயலாக் அரசியலில் எடுபடாது.” என்றார்.
வேலூரில் தவெக பொதுக்கூட்டம்- என்னென்ன பேச போகிறார் விஜய்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேலூரில் அடுத்தகட்ட பிரச்சாரத்தை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?
வே லூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்டமான வெளிப்புற மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் விசாலமான, பாதுகாப்பான இடமாகவும், அவைக் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறையினரின் மேற்பார்வையில் 7 ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மைதானத்தைச் சமன்படுத்தும் பணியில் த.வெ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர். இடம் சீரமைக்கும் பணி இது பற்றி, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் கேட்டபோது, ``த.வெ.க தலைமை அலுவலகத்தில் இருந்து ஓரிரு நாளில், தளபதி வருகைக் குறித்த தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு, காவல்துறையினரிடம் அனுமதி கேட்போம். அதற்கு முன்னதாக, இடத்தை சமன்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் 26 ஏக்கரில் இருந்து 30 ஏக்கர் வரையிலான விசாலமான இடத்தைத் தான் தேர்வு செய்திருக்கிறோம். வாகனங்களை பார்க்கிங் செய்யவும் 50 ஏக்கர் இடத்தை பார்வையிட்டு வருகிறோம்’’ என்றார்.
Eyelid Twitching? Try Simple Eye Yoga Exercises
It’s 4 PM, your coffee is cold, your posture is slouched, and your laptop screen is starting to blur into
'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' - விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் இன்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த சிலரது ஆசைகள், எண்ணங்களை என்னிடம் கேள்வியாக கேட்கிறீர்கள். அவர்களின் ஆசைகளும், எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. 2021 தேர்தலில் எப்படி எங்களை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தார்களோ, அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை தருவதற்கு வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள். நாங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம். ஊடகத்தினர் யாரும் தவெகவிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. செய்தி வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் ஒரு புறம் மட்டுமே கேள்வியை கேட்கிறார்கள். இருபுறமும் கேள்வியை கேட்டீர்கள் என்றால் அந்த கேள்வி நியாயமானதாக இருக்கும். சந்திக்கவே முடியாமல் எல்லைக்கு அப்பாற்பட்டு நாட் ரீச்சபிளில் இருப்பவர்களை பற்றி கேள்வி கேட்டு எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்” என்றார்.
Kajal Remains Timeless Eye Makeup Essential
For centuries, women have used kajal on their eyes, not only to enhance their beauty but also as a cultural
Supreme Court Bans Stem Cell Therapy for Autism
The Supreme Court of India has ruled that stem cell therapies cannot be offered as a medical treatment for Autism
Government Sets Minimum Import Price for Antibiotic Ingredients
The government has imposed a minimum import price on three important ingredients used in making penicillin-class antibiotics. These ingredients are
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் டீ. எம். எம் அன்ஸார் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமான்லெப்பை, எம்.எஸ்.அப்துல் வாஸித் மற்றும் அக்கரைப்பற்று […]
️ யுக்ரைன் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ரஷ்யா இணக்கம்!
யுக்ரைன் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த (Ceasefire) ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, சர்வதேச அளவில் பெரும்… The post ️ யுக்ரைன் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ரஷ்யா இணக்கம்! appeared first on Global Tamil News .
இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்னைக்கு மூவர் குழு அறிக்கை அடிப்படையில் தீர்வு காணப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Actor-Politician Vijay Speaks on Jana Nayagan Delay
During a major political and media event in Chennai, actor-turned-politician Vijay held a 45-minute interview with a media team, which
அஜித் என்னிடம் சொன்ன அந்த 6 மாதங்களில் உருவானப் படம்தான் அது! - ரவி கே சந்திரன் ஷேரிங்க்ஸ்
இந்திய சினிமாவின் சீனியர் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர் ரவி கே. சந்திரன். 'கண்ணத்தில் முத்தமிட்டாள்', 'ஆய்த எழுத்து', 'தில் ஜாதா ஹை', 'கஜினி (இந்தி ரீமேக்)' உள்ளிட்ட பல ஹிட் படைப்புகளின் ஃபிலிம்களோடு உறவாடியவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த 'பராசக்தி' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். நம் சினிமா விகடன் யூட்யூப் சேனலின் 'பாயின்ட் ஆஃப் வியூ' தொடருக்காக அவரைச் சந்தித்து உரையாடினோம். Ravi K Chandran நம்மிடையே பேசிய ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களுக்கும் நான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். மும்பையில் எனக்கு வீடு இருந்தது, அதனால் பாலிவுட்டில் நீண்ட வருடங்கள் பணி புரிந்தேன். அங்கிருக்கும் அத்தனை பெரிய இயக்குநர்களுடனும் நான் பணிபுரிந்துவிட்டேன். இப்போது அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிற 'துரந்தர்' பட இயக்குநர் ஆதித்ய தர் இயக்கவிருந்த முதல் படத்திற்கு நான்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டியது. ஆனால், அப்போது மிஸ் ஆகிவிட்டது. என்றவர், நானும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஒன்றாக இங்கு சென்னையில் வாக்கிங் போவோம். அப்போதே நாங்கள் இணைந்து பணிபுரியும் திட்டங்கள் குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். ஒரு நாள் ஆமீர் கானின் 'ஃபனா' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது அவர் என்னிடம், 'கஜினி' திரைப்படத்தை என்னை இந்தியில் ரீமேக் செய்யச் சொல்கிறார்கள் என்றார். தமிழ் பதிப்பை எடுத்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸே இப்படத்தை இயக்குகிறார். நீங்கள்தான் அதற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும்' என்றார். அப்போது நான் ரீமேக் அதிகமாக செய்துவிட்டேன். மீண்டும் ரீமேக் செய்ய வேண்டாம் என்கிற முடிவில் இருந்தேன். அமீர் கான் என்னை சமாதானம் செய்து என்னை பணிபுரியச் சொன்னார். அப்படிதான் முருகதாஸுடன் பயணம் அமைந்தது. அவர் இயக்குநராக இருந்தது எனக்கு வேலைகளையும் எளிதாக்கியது. பிறகு நானும் முருகதாஸும் 'ஏழாம் அறிவு' படத்தில் இணைந்தோம். சொல்லப்போனால் எங்கள் மூவருக்குள் ஒரு ட்ரிவியா இருக்கிறது. நான் 'சிட்டிசன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கமிட்டானேன். அப்படியான வேளையில், அமீர் கான் நடிக்கும் மற்றொரு படத்திற்கும் நான் ஒளிப்பதிவு செய்ய கமிட்டாகி இருந்தேன். அஜித்திடம் 6 மாதங்களுக்கு நானிங்கு இருக்கமாட்டேன் எனவும் சொல்லிவிட்டேன். அவர் 'நீங்கள் சென்று வாருங்கள். வந்த பிறகு நாம் படப்பிடிப்பு வைத்துக் கொள்வோம். அதற்கிடையில் நான் மற்றொரு இயக்குநருக்கு தேதி கொடுத்துவிடுகிறேன்.' என்றார். அப்படி அந்த 6 மாதங்களில் உருவான படம்தான் முருகதாஸ் இயக்கிய 'தீனா' திரைப்படம். 'ஆய்த எழுத்து' படத்திற்குப் பிறகு முழுமையாக இந்தியில் பணிபுரிந்து வந்தேன். என்னுடைய மூத்த மகனை கண்டித்து படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சென்னை வர முடிவு செய்தேன். அப்படியான நேரத்தில்தான் 'ஏழாம் அறிவு' பட வாய்ப்பு வந்தது. பாலிவுட்டில் 'டான்' படத்திற்காக வாங்கிய அட்வான்ஸைக் கொடுத்துவிட்டு, சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டேன். என்றார். அப்படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடித்திருந்த 'ஆதித்ய வர்மா' படத்திற்குதான் வந்திருந்தீர்களே... என எழுப்பிய கேள்விக்கு, முதலில் என்னை அந்தப் படத்தை டைரக்ட் செய்ய சொல்லியிருந்தார்கள். பாலா சார் ஏற்கெனவே அப்படத்தை எடுத்து முடித்துவிட்டார். மீண்டும் நான் வந்து இயக்குவது சரியாக இருக்காது எனக் கூறி மறுத்துவிட்டேன். நான் பாலா சார் மீது பெரும் மதிப்பும் வைத்திருக்கிறேன். எனப் பேசினார். முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Prabhu Deva, Vadivelu Reunite for Bang Bang
Fans are thrilled as Prabhu Deva and Vadivelu are teaming up once again on the big screen after many years
கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு தண்டப்பணம் அறவீடு
video link- https://fromsmash.com/lMU4VAm9oc-dt கல்முனை மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகள் மாநகர சபையினால் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள் மற்றும் பிரதான வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளைக் கைப்பற்றும் நடவடிக்கை கடந்த சில நாட்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாடுகளுக்கு தலா 5000 ரூபா வீதம் தண்டப் […]
பட்ஜெட்டில் இருக்கும் முக்கியமான வார்த்தைகள்.. அர்த்தம் என்ன தெரியுமா?
மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் வாசிக்கும் இந்த ஆங்கில பொருளாதார வார்த்தைகளுக்கான அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? ஈசியா கத்துக்கலாம் வாங்க..!
4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது
video link- https://fromsmash.com/sSR9BcO9xF-dtசுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில் […]
திருகோணமலை –முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்:
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான… The post திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: appeared first on Global Tamil News .
ஈபிஎஸ்ஸின் ஆசை நடக்காது.. முகத்தை மூடிக் கொண்டு செல்லவில்லையே.. அமைச்சர் கீதா ஜீவன் கருத்து!
திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு குறித்து விமர்சித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி கொடுத்து உள்ளார்.
Autumn Arkapaw’s Cinematography Shines in ‘Sinners’
The film ‘Sinners’ has created a big buzz, not only for its gripping story but also for the talented team
திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?!
தமிழ் மன்னர்கள் தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியது, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அண்ணாமலை திருமாவளவன் தமிழ் மன்னர்கள் தொடர்பாக என்ன பேசினார்? ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சம்ஸ்கிருத மயமானது, இந்துத்துவமயமானது. ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் காலத்தில்தான். வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ் பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக்கொண்டார்கள். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை என்று விமர்சித்திருந்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு… The post யாழில். மாவைக்கு சிலை திறப்பு appeared first on Global Tamil News .
Orlando Bloom Stars in Jungle Thriller ‘The Last’
Hollywood star Orlando Bloom, best known for his roles in ‘Pirates of the Caribbean’ and ‘The Lord of the Rings’,
2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் மாமா , மருமகன் கைது
video link- https://fromsmash.com/UwEkWUDvu5-dt 2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில் கைதான 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரது வாக்குமூலம் […]
‘தலைகுனிந்து நிற்கும் தமிழகம்’…முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு.!
சென்னை :தமிழகத்தில் திமுக ஆட்சியின் 56 மாத காலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் ஆட்சியாளர்களை மக்கள் அறிந்திருப்பார்கள் என்று கூறிய அவர், இந்த சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.மகாத்மா காந்தி கூறியபடி, நடு இரவில் […]
லண்டனில் மாயமாகியுள்ள சிறார்கள்: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
தென் லண்டனில் கடந்த இரண்டு வாரங்களாக மாயமாகியுள்ள இரு சிறார்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். லண்டன் நகரைச் சேர்ந்த 15 வயதான மியா கூப்பர்-லெரூ மற்றும் 14 வயதான ஆய்டன் கூப்பர்-லெரூ ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயுள்ளனர். இவர்களின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினரும் பொலிஸாரும் கவலை வெளியிட்டுள்ளனர். மியா வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண். நீண்ட கருமேகப் பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு கண்கள் கொண்டவர். கடைசியாக நீல நிற […]
Alia Bhatt Shares Fun Behind-the-Scenes Photoshoot
Actress Alia Bhatt gave her fans a fun glimpse into the chaos behind one of her latest photoshoots. She shared
Ahan Shetty’s ‘Border 2’ Soars at Box Office
Ahan Shetty’s latest movie, ‘Border 2’, is doing very well at the box office. The film has been receiving a
காங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 200 பேர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் கிழக்கு கிழக்கு பகுதியில் ‘ருபாயா’ எனும் இடத்தில் Coltan என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை
சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)############################## யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப் மாநிலத்தில் வசிப்பவரும், சிறந்த சமய, சமூகப் பற்றாளருமான சுதா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு சீவரெத்தினம் சுதாகரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இன்றைய தினம் முன்பள்ளி மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் […]
பிப்ரவரி 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சத்தீவு – கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வெள்ளியங்கிரி மலை மீது செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இதன் அருகே 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இது
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் - காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
மோடி–வெனிசுலா அதிபர் பேச்சு எதிரொலி – எண்ணெய் வாங்க அமெரிக்கா சிக்னல்!
வாஷிங்டன் :அமெரிக்கா, ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மாற்றாக வெனிசுலா நாட்டின் எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையேயான எண்ணெய் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது நலன்களை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. வெனிசுலா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது ரஷ்யாவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று அமெரிக்க தரப்பு கருதுகிறது. நேற்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியிருந்தார். […]
நான் 'crippling anxiety'-யால் அவதிப்பட்டேன்- இடைவெளி எடுத்துக்கொண்டது குறித்து ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் 'ஆகாசம்லோ ஒக தாரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சாதினேனி இயக்குகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். 'ஆகாசம்லோ ஒக தாரா' அந்த நேர்காணலில் 2018-ல் நடிப்பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டது குறித்து ஸ்ருதி ஹாசன் பகிர்ந்திருக்கிறார். அந்த இடைவெளியில் என்னை நானே மறுமதிப்பீடு செய்துகொண்டேன். சில மனநலப் பிரச்னைகளுக்காக நான் அந்த இடைவெளியை எடுத்துகொண்டேன். கடுமையானப் பதற்றத்தால் அவதிப்பட்டேன்! நான் பல ஆண்டுகளாகக் கடுமையானப் பதற்றத்தால் (crippling anxiety) அவதிப்பட்டேன். அந்த பதற்றத்தால் என்னுடைய அன்றாட வேலைகளை செய்ய முடியவில்லை. நான் எதைத் தேடுகிறேன், நான் யார் என்பதில் எனக்குத் தெளிவில்லை. அந்த இடைவெளியில், லண்டனில் இருந்தேன். அங்கு இசையின் மூலம் என்னை நான் மீண்டும் கண்டறிந்தேன். ஸ்ருதி ஹாசன் என்னை நானே மீட்டெடுத்தேன்... தினமும் என் உடைகளை நானே துவைப்பது, எனக்கான உணவை நானே சமைப்பது, மெட்ரோ ரயிலில் பயணிப்பது, திரும்பி வந்து புதிதாக எழுதப் பயிற்சி செய்வது, புதிய புதிய இசைகளை உருவாக்குவது என என்னை நானே மீட்டெடுத்தேன். எப்போதும் ஒரு கலைஞராக இருப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வழக்கமான கதாபாத்திரங்களை விடுத்து சவாலான வேடங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
போதை, மோகம், தறிகெட்டு போகும் தமிழகம்! | Ex.ACP Rajaram Interview | Vikatan TV
Silver Crash Raises Fears of Next Market Correction
A historic drop in silver prices has sparked a renewed debate about market bubbles, high leverage, and which investments could
“ஓய்வு பெறச் சொன்னவர்களுக்கு நன்றி!”
அவுஸ்திரேலிய ஓபன் (Australian Open) டென்னிஸ் தொடரில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நோவாக் ஜோகோவிச் (Novak… The post “ஓய்வு பெறச் சொன்னவர்களுக்கு நன்றி!” appeared first on Global Tamil News .
இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் –ஜி.கே.மணி பேட்டி
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம். அந்த கட்சியை
தீயசக்தி திமுக அடக்கி ஒடுக்கி வைக்கப்படும்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
போராடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதில், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு உள்ளார்.
மத்திய அரசு தனது கடமையில் இருந்து நழுவி ஓடுகிறது –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து
சீனாவுடன் வர்த்தகம் செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் ஆபத்தானது –டிரம்ப்
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜிஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள்
திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்து; அனல் தகிக்கும் மதுரை வடக்குத் தொகுதி - என்னதான் நடக்கிறது அங்கே?
திமுக, காங்கிரஸ் இடையேயான உறவில் ஏற்கெனவே புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இருதரப்பினரும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஒரு கூட்டத்தில் எம்.எல்.ஏ கோ.தளபதி காங்கிரஸின் மாணிக்கம் தாகூரையும், ஜோதிமணியையும் கன்னாபின்னாவென பேசியிருந்தார். திமுக எம்எல்ஏ கோ. தளபதி மதுரை வடக்குத் தொகுதியில் யாருக்குத்தான் பலம் அதிகம்? பதிலுக்கு 'காங்கிரஸுக்கும் தன்மானம் இருக்கிறது. மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டுமென கார்கேவிடமே பேசுவேன்' என மாணிக்கம் தாகூர் கொந்தளித்திருக்கிறார். திமுக - காங் மோதலால் மதுரை வடக்கு தொகுதியில் அனல் பறக்கிறது. மதுரை வடக்கில் என்ன நடந்தது? அந்தத் தொகுதியில் யாருக்குத்தான் பலம் அதிகம்? ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாதக் கட்சி காங்கிரஸ் மதுரையில் கடந்த 25 ஆம் தேதி திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்டச் செயலாளரும், வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, காங்கிரஸை விமர்சித்துப் பேசியிருந்தார். அதாவது, “காங்கிரஸைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி எல்லாம் எம்.பி ஆகிவிட்டனர். இனி மற்றவர்கள் எம்.எல்.ஏ ஆனால் என்ன ஆகவில்லை என்றால் என்ன என்று சொல்லி அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என பேசிக்கொண்டிருக்கிறார்கள். திமுக எம்எல்ஏ கோ. தளபதி இதையெல்லாம் தலைமை புரிந்துகொண்டு அடுத்து இவர்களுக்கு எல்லாம் சீட் கொடுக்கவே கூடாது. நாம் இல்லையென்றால் இந்திய கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 2 ஆயிரம் 3 ஆயிரம் ஓட்டுகள் தான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாதக் கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது” என்று விமர்சித்திருந்தார். Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது! இதற்கு பதிலளிக்கும் வகையில் எம்.பி மாணிக்கம் தாக்கூர், “ இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது. Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது என்று பதிவிட்டிருந்தார். காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் திமுக எம்எல்ஏ-வின் கருத்திற்கு காங் எம்.பி. ஜோதிமணி, தமிழக காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போன்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் மதுரை வடக்குச் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் வடக்குத் தொகுதியில் போட்டியிடுவதாகவும் கைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறிக் காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. இப்படி மதுரை வடக்குச் சட்டமன்ற தொகுதியைப் பெறுவதில் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் உண்மையில் மதுரை வடக்குத் தொகுதியின் நிலவரம் என்ன? என்பதைப் பார்ப்போம். மதுரை வடக்குத் தொகுதி 2011 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் உருவானதுதான் இந்த மதுரை வடக்குத் தொகுதி. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, காந்தி மியூசியம், உலகத் தமிழ்ச்சங்கம், அரசு சட்டக்கல்லூரி, மாவட்ட நீதிமன்றம் என மதுரையின் முக்கிய அடையாளங்கள் மதுரையின் வடக்குத் தொகுதியில் தான் அமைந்திருக்கின்றன. 2011, 2016, 2021 என மூன்று முறை இந்தத் தொகுதி சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருக்கிறது. அதிமுக - ஏ.கே போஸ் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே. போஸ் 1,12,691 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ராஜேந்திரனைத் தோற்கடித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.வி. ராஜன் செல்லப்பா 70,460 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி. கார்த்திகேயனைத் தோற்கடித்திருக்கிறார். இரண்டு முறை வென்ற அதிமுக 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கோ. தளபதி 73,010 வாக்குகளைப் பெற்று பாஜக சார்பில் போட்டியிட்ட பி.சரவணனை தோற்கடித்திருக்கிறார். ஆக, மதுரை வடக்குத்தொகுதியைப் பொறுத்தவரை இரண்டு முறை அதிமுகவே இந்தத் தொகுதியில் வெற்றிப்பெற்றிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் காங்கிரஸின் தோல்வி இரண்டு முறை போட்டியிட்டிருக்கும் காங்கிரஸ் தோல்வியையே சந்தித்திருக்கிறது. ஒருமுறை திமுக வென்றிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.ராஜேந்திரன் மாணிக்கம் தாகூரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மாமனாருக்காகத் தான் மதுரை வடக்குத் தொகுதியை முன்வைத்து மாணிக்கம் தாகூர் கலகம் செய்கிறார் என உடன்பிறப்புகள் கொதிக்கின்றனர். தொகுதியைத் தக்கவைப்பதில் உள்ளூர் திமுக தரப்பிலும் மிகவும் உறுதியாகவே இருக்கிறார்கள். ஆனால் மதுரை வடக்கு தொகுதியைப் போலவே தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளில் திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவிக் கொண்டிருப்பது ஊர் அறிந்ததே! எனவே கட்சிகளின் தொகுதி டக் ஆஃப் வாரின் முடிவிலேயே... எந்தெந்த தொகுதிகள் கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு என்பது வெட்டவெளிச்சமாகும்.
கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன் ; ட்ரம்ப்
கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். கரீபியனில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. அந்நாட்டின் அதிபராக மிகுல் டியாஸ் கனெல் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசுலா தாக்குதல்அதேவேளை, கியூபாவுக்கு வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தன. சமீபத்தில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா […]
காலையிலிருந்து தொடரும் சரிவு – வெள்ளி விலை கடும் வீழ்ச்சி!!
சென்னை :சென்னையில் வெள்ளி விலை இன்று காலை முதலே பெரும் சரிவை சந்தித்துள்ளது. காலையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.55,000 குறைந்த நிலையில், மதிய நேரத்தில் மேலும் ரூ.30,000 சரிந்து தற்போது ரூ.3.2 லட்சத்திற்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரே நாளில் கிலோவுக்கு மொத்தம் ரூ.85,000 வரை குறைந்துள்ளது. இந்த அதிரடி சரிவு விலைமதிப்பற்ற உலோக சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை வரை ஒரு கிலோ வெள்ளி ரூ.4.05 லட்சத்திற்கு மேல் வர்த்தகமான நிலையில், இன்று […]
விஜய் கரூர் சம்பவம் பேட்டி: சிபிஐ விசாரணைக்கு பின் அதிரடி விளக்கம்! பரபரப்பு பின்னணி!
கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சமீபத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த முழு விவரம் இதோ.
8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், நிர்வாகத் தேவைகளைக் கருத்திற்கொண்டு 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும்… The post 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்! appeared first on Global Tamil News .
India vs New Zealand: Samson Faces Crucial Match
NEW DELHI: All eyes will be on Sanju Samson when India play New Zealand in the fifth and final T20
Aurenor Salon Brings a New Era of Premium Grooming to Anna Nagar, Chennai
Luxury grooming meets expert care as Aurenor Salon, a premium segment salon, launches its state-of-the-art space at 6th Avenue, Anna
பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்:
இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பின்றி முன்னெடுப்பதற்காக, மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளை… The post பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்: appeared first on Global Tamil News .
`நீங்கள் வரத்தான் போகிறீர்கள்' - ப.சிதம்பரத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்!
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்திருந்தார். நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாகரிகம் ஓங்கியிருந்ததற்கு தடயங்கள் கிடைத்த மண், கீழடி. கழனிவாசலில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைக்க உள்ளேன். மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் நான் காரைக்குடியில் ரூ.100.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரியை திறந்து வைத்துள்ளேன். சிதம்பரம் பேசும்போது அடுத்தும் வருவேன் என்றார்... நீங்கள் வரத்தான் போகிறீர்கள் அதில் என்ன சந்தேகம். தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்வதல்ல... மத்திய அரசினுடைய புள்ளி விவரங்கள்தான் சொல்கிறது. புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி என தமிழ்நாட்டை மத்திய அரசு பாராட்டுகிறது. இதையெல்லாம் ஆளுநரும், பிரதமரும் படிக்க வேண்டும், படிக்காமல் போய் விடாதீர்கள். சிவகங்கை கிராமங்கள் நிறைந்த மாநிலம். கிராமத்தின் முதுகெலும்பாக இருந்த மகாத்மா காந்தி நூறு நாள் திட்டத்தை காலி செய்து விட்டு வேறு பெயரில் வேறு வடிவில் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைமுறையிலிருக்கிற 100 நாள் திட்டத்தையே 50 நாள்கள்கூட கொடுப்பதில்லை, மாநிலங்களுக்கான நிதியை விடுவிப்பதில்லை. இதில் தற்போது 125 நாள்கள் வேலை கொடுப்போம் என்கிறார்கள். அதற்காக தற்போதுள்ளதை விட இரண்டரை மடங்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், மத்திய அரசு அதற்கு தயாராக இருக்கிறதா? இவர்கள் சொல்வதெல்லாம் மாயைதான். சொல்வது தான் சொல்கிறீர்கள் 325 நாள்கள் என்று சொல்லுங்கள். மாகத்மா காந்தி நூறு நாள் திட்டத்தினால் தமிழ்நாட்டில் கடந்தாண்டு 65 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள், 15 ஆயிரம் கோடி வரை ஊதியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தில் பாதி பேருக்கு வேலை கொடுப்பதே சிரமம்தான். மாநில அரசு வேலை நாள்களையும் முடிவு செய்ய முடியாது, மத்திய அரசு தான் முடிவு செய்வார்கள். போதாக்குறைக்கு மாநிலங்கள் 40 சதவிகிதம் நிதியைக் கொடுக்க வேண்டும் என்கிற பெரிய தாக்குதலை நம்மீது தொடுக்கிறார்கள். மத்திய அரசு தன் கடமையிலிருந்து ஓடுகிறது, கிராமங்களை கைகழுவி விடுகிறது. இதை எதிர்த்து நாம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். இந்த திட்டத்தை அவர்கள் திரும்பப் பெற வேண்டும். மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் துணையோடு வாபஸ் பெற வைப்போம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு குரல் கொடுக்க முடியாத பழனிசாமி நம்முடைய திட்டங்களை காப்பி அடித்து அவர் புதிய வாக்குறுதிகள் எனச் சொல்லி வருகிறார். ஏற்கெனவே அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன எதையும் அவர்கள் செய்யவில்லை. 2011 தேர்தல் அறிக்கையில் சென்னை முதல் குமரி வரை கனரக சாலை திட்டம், தென் தமிழகத்தில் ஏரோ பார்க், 58 வயது மேற்பட்டவர்களுக்கு பஸ் பாஸ் எனச் சொன்னார்கள்... அவற்றையெல்லாம் செய்யவில்லை. 2016 தேர்தல் வாக்குறுதியில் இலவச வைபை, ரேசன் கார்டுகளுக்கு இலவச போன், அம்மா பழுது பார்க்கும் மையம் என சொன்னார்கள் அதை அவர்களே மறந்து விட்டார்கள். நாங்கள் சொன்னவற்றை எல்லாம் செய்திருக்கிறோம்” என்றார்.
Devika Sihag Reaches Thailand Masters 2026 Semifinals
In badminton, India’s Devika Sihag will play against fifth seed Huang Yu Hsun of Chinese Taipei in the semi-finals of
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்! - இத்தனை சம்பவங்கள் இந்த ஒரே நாளில் நடந்தவையா?
தமிழ் கடவுளான, வெற்றி வேலவன் முருகனுக்குக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான ஒன்று. தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகப்பெருமானின் அருள் பெற விரதமிருந்து வழிபடும் விழாவாகும். இந்த நன்னாளில் வெற்றிப் பொருநனை வழிபடும் பக்தர்கள் கல்வி, செல்வம், ஞானம் என்ற மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதிகம். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இந்த தைப் பூச திருநாளில் முருகர்கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வது, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்வது வழக்கம். ‘பூசம் புண்ணியம் தரும்!’ இந்தியா மட்டுமின்றி உலகில் தென்னிந்தியர்கள் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்ஆப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் போன்றே மலேசியாவிலும் தைப்பூசதினத்தன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தைப்பூச தின வரலாற்று சிறப்புகள் சிலவற்றைக் காண்போம். தைப்பூச நன்னாளில்தான் உலகில் முதன்முதலில் நீரும், நீரிலிருந்து உலக உயிரினமும் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அதனாலேயே இந்நாளில் பல்வேறு ஆலயங்களில் தெப்ப திருவிழாக்கள் நடைபெறுகின்றன. முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய பார்வதி தேவி தன் சக்தி முழுவதையும் கொண்டு உருவாக்கிய பிரம்ம வித்யா என்ற வேல்-ஐ வழங்கி அருளிய நாள் இது. முருகப்பெருமான் வள்ளி பிராட்டியை தைப்பூச நன்னாளில்தான் மணந்து கொண்டார் என்பது நம்பிக்கை. தைப்பூச தினத்தன்று விரதம் இருப்பது வழக்கம். அன்று புதிதாகச் சமைத்த உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். பூசத்தன்று பூனைக் கூட பழையதை உண்ணாது என்ற பழமொழியும் உள்ளது. தைப்பூசக் கோயில்கள் தைப்பூச தினத்தன்று நடைப்பயணமாக பழனி முருகனுக்கு காவடி எடுத்துவந்த பக்தர்கள் பாடிய பாடல்களே பிரபலமான காவடி சிந்து பாடல்களாகும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாத பெருமாள் தன் தங்கையான சமயபுரத்து அம்மனுக்கு தைப்பூச நன்னாளில் காவிரி கரையில் சீர்வரிசைகள் கொடுப்பார். இதை ஒட்டி சமயபுரத்தில் பத்து நாள்கள் திருவிழா நடைபெறும். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார், தைப்பூச நாளில்தான் ஜோதியாக மாறி இறைவனடி சேர்ந்தார். வழக்கமாக ஆறு திரைகளை நீக்கிக் காண்பிக்கப்படும் ஜோதி தரிசனம், தைப்பூச தினத்தன்று ஏழு திரைகளையும் அகற்றி முழுமையான ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்வார்கள். வஜன், வருகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் தோஷங்கள் தீர திருவிடைமருதூர் கோயிலில் உள்ள புனித தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலிலுள்ள அசுவமேதப் பிரகாரத்தை சுற்றி வந்தால் பரமஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. நெல்லையில் உள்ள தாமிரபரணி நதிக்கரையோரத்தில் நெல்லையப்பரை நினைத்து தவமிருந்த காந்திமதியம்மன், தைப்பூச நாளில்தான் நெல்லையப்பரின் அருளைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. காவடி பக்தர்கள் திருச்சேறை திருத்தலத்தில் காவிரி ஆனவள் ஸ்ரீமன் நாராயண பெருமாளை நோக்கி தவம் இருந்தார். அவளது தவத்தால் மகிழ்ந்த நாராயண பெருமாள் அவருக்கு தைப்பூச நன்னாளில்தான் காட்சியளித்து அருளியதாக புராணங்கள் கூறுகின்றன. மயிலம் கோயிலில் தைப்பூச தினத்தன்று முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி மலைமீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியை காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது. திருவிடைமருதூர் காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை, கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசதில் ஈசனும், சக்தியும் ரிஷப வாகனத்தில் இந்தப் படித்துறைக்கு வந்து, தீர்த்தவாரி செய்து வீதி வழி உலா வந்து ஆலயம் செல்வார்கள். இந்தக் காட்சியை காண்பவர்க்கு கல்யாண வரம் உடனே கிட்டும் என்பார்கள். தைப்பூச நன்னாளில்தான் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணை அவரது அஸ்தி கலத்திலிருந்து பதிகம் பாடி திருஞானசம்பர் உயிர்ப்பித்தார் என்று புராணம் கூறுகிறது. முருகப் பெருமான், வள்ளி பிராட்டியை திருமணம் செய்துக் கொண்டதால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் முருகப்பெருமான் காட்சியளித்தாராம். முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் தைப்பூசத்தன்று பழனியில் கொண்டாடப்படுகிறது. குளித்தலை கடம்பவன நாதர் தலத்தில் தைப்பூச நாளில்தான் சப்த கன்னியருக்கு ஈசன் காட்சி அளித்து வரங்கள் அளித்தார் எனக் புராணங்கள் கூறுகின்றன. தைப்பூச தரிசனம் இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்திற்கு வந்து தங்கி, அலாதி திருப்பணிகளை மேற்கொண்டு வந்தான். தைப்பூச திருநாளில்தான் இரணியன் நடராஜ பெருமானை நேருக்கு நேர் சந்தித்து அருள் பெற்றதாக தில்லை புராணம் குறிப்பிடுகின்றது. தில்லையில் நடராஜர் நடனமாடி காட்சியருள வேண்டுமென தவமிருந்து வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி போன்ற முனிவர்களின் தவத்தை ஏற்று தைப்பூச தினத்தன்றுதான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்வித்தார் என்று வரலாறு குறிப்பிடுகிறது. இந்த நாளில் கொங்கு மண்டலத்தில் உள்ள மக்கள் பலரும் கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றின் தீர்த்தத்தை எடுத்துத் தீர்த்தக்காவடியாக முருக ஆலயங்களுக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் வைத்துள்ளனர்.
கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பலி!
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில், 200-க்கும் மேற்பட்டோர்… The post கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பலி! appeared first on Global Tamil News .
`ரூ.6 லட்சம் கோடி ஊழல்; விசாரணைக்கு உத்தரவிட தயாரா?' - திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!
``திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட தயாரா? எனக் கேள்வியெழுப்பி, திமுக அரசைச் சாடியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையானவை என்றும், அவற்றை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுகவின் ஊழல்களுக்கான ஆதாரங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டு அவற்றின் மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவரது அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கற்பனை என்று கூறுவது நகைமுரணின் உச்சம் ஆகும். என்.டி.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் சென்னையில் நேற்று நடத்திய தமிழ்நாடு உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும் போதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். அகராதியில் ஊழல் என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமான இன்னொரு சொல்லை சேர்க்க வேண்டும் என்றால் அது திமுக என்பதாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு ஊழலுக்கும், திமுகவுக்கும் பிரிக்க முடியாத பந்தம். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழல்கள் அம்பலமாகி வருகின்றன. ஸ்டாலின் திமுக ஆட்சியின் மீது பாட்டாளி மக்கள் கட்சி கீழ்க்கண்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது; இவற்றின் மூலம் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கக்கூடும் என்றும் கூறி இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1. ரூ.888 கோடி பணி நியமன ஊழல் 2. ரூ. 4730 கோடி மணல் கொள்ளை. கடந்த நான்கரை ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையின் மொத்த மதிப்பு ரூ.1.80 கட்சம் கோடி 3. ரூ.1020 கோடி ஒப்பந்த ஊழல் 4. ரூ.366 கோடி பணியிட மாற்ற ஊழல் 5. ரூ.1240 கோடி நெல் கொள்முதல் ஊழல் 6. ரூ. 165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல் 7. பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி ஊழல் 8. மது வரி ஏய்ப்பு & ரூ.1.82 லட்சம் கோடி ஊழல் 9. ஆண்டுக்கு ரூ.5400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல் 10. ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல் மேற்கண்ட 10 ஊழல்களுக்குமான ஆதாரங்கள் பொதுவெளியிலேயே உள்ளன. இவற்றில் முதல் நான்கு ஊழல்களுக்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை வினா எழுப்பியது. ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், நேரடியாக வழக்குப் பதிவு செய்வதற்கு பதிலாக, தொடக்கக்கட்ட விசாரணை 180 நாள்களுக்கு நடத்தப்படும் என்றும், அதன் பிறகு தான் வழக்குப் பதிவு செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் கூறி வழக்குப் பதிவு செய்யாமல் திமுக அரசு தாமதித்து வருகிறது. இப்படியாக ஊழலை போற்றிப் பாதுகாக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என்று கூறி தப்பிக்கப் பார்க்கிறார். அன்புமணி ராமதாஸ் ரூ. 1.82 லட்சம் கோடி மது வரி ஏய்ப்பு ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் எதுவும் எழுப்பவில்லை. மாறாக திமுக ஆட்சியில் முதலில் நிதியமைச்சராக பணியாற்றிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தான் 15.03.2022ஆம் நாள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கலால் வரி ஏய்ப்பு குறித்து குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் குற்றஞ்சாட்டி நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை கலால் வரி ஏய்ப்பைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வில்லை. அப்படிப்பட்டவர் ஊழலுக்கும், தமக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறுவது வினோதமாக உள்ளது. ஊழல் செய்வதில் மட்டுமின்றி, ஊழல் செய்தவர்களை சட்டவிரோதமாக காப்பாற்றுவதிலும் திமுக அரசு தான் முன்னணியில் உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்தூர் இராமச்சந்திரன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் சட்டவிரோதமாக விசாரணை நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து தீர்ப்பளித்தது. திமுகவினர் ஊழல் செய்வதிலும், அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்புவதிலும் வல்லவர்கள் என்பதற்கு இதுவே சான்று. திமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்களை மட்டுமின்றி, பிற கட்சிகளில் ஊழல் செய்தவர்களையும் சலவை செய்து காப்பாற்றுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்பதற்கு அந்தக் கட்சியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜிக்கும், வைத்திலிங்கத்திற்கும் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரம் தான் சான்று ஆகும். ED இன்றளவும் விஞ்ஞான ஊழலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கும் திமுக, தங்களுக்கும் ஊழலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவது அவல நகைச்சுவையாகும். திமுக ஊழலே செய்யவில்லை என்றால், அதன் மீதான ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அதன் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். இதைச் செய்ய திமுக அரசு தயாரா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். `ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற நாடகங்கள்; திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?'- அன்புமணி
ஜனநாயகன், கரூர் சம்பவம்! முதன்முறையாக விஜய்யின் பேட்டி
NDTV ஊடகத்தின் Tamilnadu Summit நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஜனநாயகன் சென்சார் பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய். அவர்களுடன் 1 மணிநேர உரையாடலில் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியுள்ளார். நீங்க கிங்மேக்கரா? இந்த சந்திப்பின் போது விஜய்யிடம், நீங்கள் ஒரு கிங்மேக்கரா என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு நான் போராடி வெற்றி பெறுவேன், தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா கலைஞர் கருணாநிதி என்னுடைய ரோல் மொடல்கள் என தெரிவித்தார். 33 […]
️ மியன்மா் தோ்தல் –மீண்டும் இராணுவம் ஆட்சி அதிகாரத்தில்
மியன்மரில் கடந்த ஒரு மாத காலமாக மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத்தேர்தலில், இராணுவத்தின் ஆதரவு பெற்ற ஒன்றிணைந்த ஒற்றுமை… The post ️ மியன்மா் தோ்தல் – மீண்டும் இராணுவம் ஆட்சி அதிகாரத்தில் appeared first on Global Tamil News .
Mohammad Wasim Jnr Dropped, World Cup Plans Leaked
Pakistan’s preparations for the T20 World Cup 2026 were accidentally leaked after a message was shared in a private WhatsApp
தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா?
பழநிக்கு வரும் பக்தர்கள் சண்முகநதியில் நீராடி, பெரியாவுடையார் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஈசனை வழிபட வேண்டும். பிறகு ஊர் தெய்வமான பெரியநாயகி அம்மனை வணங்கி, மற்றொரு ஆதிகோவிலான திருஆவினன்குடி முருகனை வணங்கவேண்டும். பிறகு மலை அடிவாரம் சுற்றி, மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வதே சரியான முறை. தை மாத அறுவடைக்குப் பிறகு தைப்பூச நாளன்று விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு பகுதியை முருகனுக்கு வழங்குவர். 400 ஆண்டுகளுக்கு மேலாக எடப்பாடியில் இருந்து வரும் பக்தர்கள், பழநி முருகனை தங்களுடைய மருமகனாக பாவிப்பர். அதனால் மருமகனுக்கு செய்யும் அத்தனை சடங்குகளையும் அன்று முழுக்கச் செய்வர். தைப்பூசம் பெருவிழாவின் 10 நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி வைப்பார்கள். அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ முத்துக்குமார சுவாமி அந்தந்த சமூகத்தினரின் மண்டகப்படியில் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் கண்டு தினம் ஒரு வாகனத்தில் ரதவீதி சுற்றுவார். பழநி முருகன் தைப்பூசத்தில் முதல்நாள் (கொடியேற்றம்):- புதுச்சேரி சப்பரம் 2ம் நாள்:- வெள்ளி ஆட்டுகிடா வாகனம் 3 மற்றும் 4ம் நாள்:- வெள்ளி காமதேனு வாகனம் 5ம் நாள்:- வெள்ளி யானை 6ம் நாள் (திருக்கல்யாணம்):- வெள்ளி ரதம் 7ம் நாள் (தைப்பூசம்):- தைப்பூசம் திருத்தேரோட்டம் 8ம் நாள்:- தங்கக்குதிரை வாகனம் 9ம் நாள்:- பெரிய தங்கமயில் வாகனம் 10ம் நாள் (கொடியிறக்கம்):- தெப்பத்தேர். ஆரம்ப காலங்களில் தைப்பூசம் 10 நாள் விழா பழநி முருகன் கோயிலில் நடைபெறவில்லை. தைப்பூச விழாக்கள் எல்லாம் பழநி ஊர் கோயிலான ஶ்ரீ பெரிய நாயகி அம்மன் கோயிலில்தான் நடைபெறும். தைப்பூச விழாவில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து ஶ்ரீமுத்துக்குமார சுவாமி எழுந்தருளி 10 நாள் உலா வருவார். முருகப்பெருமான் திருக்கல்யாணம் கூட பழநிக்குப் பதிலாக பெரியநாயகி அம்மன் கோயிலில்தான் நடைபெறும். ஆனால் தற்போது பக்தர்கள் யாரும் ஆதிகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலுக்குச் செல்வது கிடையாது. பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் அலகு குத்தி, பறவைக்காவடி, சர்க்கரைக் காவடி, இளநீர் காவடி, பால் காவடி, தீர்த்தக்காவடி, மயில் காவடி எடுத்தும் மண்ணியிட்டு படியேறி சுவாமியை தரிசனம் செய்ய வருவர். பாத யாத்திரையாக வருபவர்களில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காரைக்குடி நகரத்தார் காவடி பெரும் சிறப்பு வாய்ந்தது. பழநி கோயில் தைப்பூசம் நாளில் காலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சன்யாசி (ஆண்டி) அலங்காரத்தில் முருகன் காட்சி தருவார். 8.00 மணிக்கு சிறு காலசந்தியில் பாலசுப்பிரமணியராகவும், 12.00 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரத்திலும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்திலும், இரவு 8.00 மணிக்கு அர்த்தஜாம பூஜையில் புஷ்ப அலங்காரத்திலும் காட்சி தருவார். மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள அமைந்துள்ளது பழநி. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தனது பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு பழம் வேண்டி நின்றதால், முருகன் நின்ற இடம் 'பழம் நீ' என அழைக்கப்படுகிறது. பழனம் என்றால் விளைச்சலைத் தருகின்ற நிலம் எனப்படும். நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் இவ்வூர் பழனி என்ற பெயர் உருவானது என்றும் கூறுவார். பொதினி என்பது மருவி பழனி ஆயிற்று என்றும் சொல்வதுண்டு. பழநி முருகன் பழநி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சக்திகிரி என கயிலாயத்தில் இருந்ததாகவும் ஈசன், அவற்றை அகத்திய முனிவருக்குக் கொடுக்க, அவரும் அவற்றை பொதிகைக்குக் கொண்டு போக நினைத்து, இடும்பாசூரனுக்கு ஆணையிட்டார். அவற்றைக் கொண்டுபோகும் வழியில் களைப்படைந்து இப்போதிருக்கும் இடத்தில் இடும்பன் இறக்கி வைத்து பழநி மலை உருவானதாக தலவரலாறு கூறுகிறது. காலையில் விஸ்வரூப தரிசனம் செய்யும் எல்லா பக்தர்களுக்கும் சிறு வில்லை சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. பழநி முருகனை நினைத்தாலும் நேரே வணங்கினாலும் அவன் ஏழேழ் தலைமுறைக்கும் பாதுகாப்பான் என்பது நம்பிக்கை. பழநியில் நிலைத்திருக்கும் தண்டபாணி தெய்வம் எல்லோருக்கும் நலங்கள் அருளட்டும்! முருகா சரணம்!
Iran Plans Live Fire Drill in Hormuz
The Strait of Hormuz, a narrow sea route at the entrance of the Persian Gulf, is again seeing rising tension.
Dindigul மாவட்ட தொகுதிகள்: பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டையில் யார் யார் போட்டி? | TN Elections 2026
Sri Lanka Raises Wages for Plantation Workers
Sri Lanka has announced a major wage increase for plantation workers, giving them a significant rise in their daily pay.
NASA Delays Artemis II Launch Due Weather
NASA has delayed the launch of its Artemis II mission to the Moon because of bad weather in Florida. The
இந்திய தபால் துறையின் கீழ் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு இன்று (ஜனவரி 31) முதல் விண்னப்பம் தொடங்கியுள்ளது. https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற இணையதளம் வழியாக இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
ராஜராஜன் தமிழ்ப் பெயரா? திருமாவளவனுக்கு டிடிவி கண்டனம்!
சென்னை :திருமாவளவன் சமீபத்தில் தமிழ் நில மன்னர்களை (சேர, சோழ, பாண்டிய, பல்லவர்) தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரமும் அழிவதற்கு காரணமாக சுட்டிக்காட்டிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முதலில் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்த நிலையில், இப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த பேச்சை “கடும் கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார். டிடிவி தினகரன் தனது பதிவில், “தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் […]
EC Warns Officials Against Referendum Campaigning
Bangladesh is witnessing a growing conflict between the Election Commission (EC) and the government as the country prepares for its
`கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?' - திருமாவளவன் பேச்சுக்கு நயினார், டிடிவி கண்டனம்!
விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் நாடு குட்டிச்சுவர் ஆனது. சம்ஸ்கிருத மயமானது. கோயிலின் கருவறைக்குள் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டது. தொல். திருமாவளவன் ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை என்று விமர்சித்துப் பேசியிருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. மிகுந்த கண்டனத்திற்குரியது!- நயினார் நாகேந்திரன் தொல்.திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். தமிழ் அழிவதற்கும் தமிழ்க் கலாச்சாரம் அழிவதற்கும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் காரணமானவர்கள் என விசிக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், அவர்கள் கொச்சையாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. கடல் கடந்து சென்று ஸ்ரீவிஜயத்தையும் கங்கையையும் தமிழரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து தமிழ்க் கலாச்சாரத்தை நிலைநாட்டிய தமிழ் மன்னர்களைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் போல சித்தரிப்பதை என்றும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. நயினார் நாகேந்திரன் யார் தமிழின விரோதிகள் என்று தெரியவில்லையா ? ஒருபுறம் சோழப் பேரரசர் இராஜராஜனுக்கும், மாமன்னர் இராஜேந்திரனுக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிலையெழுப்பி, அவர்களது புகழை மேன்மேலும் பரவச் செய்கிறது. மறுபுறம் இண்டி கூட்டணியினரோ அம்மாமன்னர்களைத் தமிழின எதிரிகளைப் போல சித்தரிக்கின்றனர். இதிலிருந்தே தெரியவில்லையா, யார் தமிழின விரோதிகள் என்று? தேர்தல் சீட்டு கணக்குகளுக்காகச் சேரக்கூடாத இடம் சென்று சேர்ந்து, தான் கெடுவதோடு நில்லாமல், பழம்பெருமைமிக்க மன்னர்களின் புகழையும் கெடுத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் கொடிய முயற்சியை சகோதரர் திரு. திருமாவளவன் அவர்கள் இத்தோடு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? இந்நிலையில் தற்போது அமமுக தலைவர் டிடிவி தினகரனும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிற்கும் பதிவில், தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா? ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது. எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
Bengaluru: Artificial intelligence is no longer a peripheral tool in media workflows but is increasingly becoming the operating layer across the entire content value chain, said Prashant Khanna, Head - Sports & Live Experiences, Production Technology & Services, JioStar, while speaking at a panel discussion on AI in Production & Distribution: Automating the Content Value Chain at the India Digital Summit 2026, organised by IAMAI.Khanna noted that live sports, in particular, demands a level of certainty and precision that few other forms of entertainment require. With tens of millions of concurrent viewers, every frame, graphic and data point has to be accurate in real time. In this environment, AI and automation are not replacing creative talent but augmenting it, enabling teams to prepare better, anticipate outcomes and execute with greater confidence.He explained that AI is fundamentally changing live production from being reactive to predictive. By processing multiple layers of data, context and historical patterns, automated systems are now able to suggest what information, visuals or storytelling elements are likely to be required next, rather than simply responding to what has already happened. This shift, he said, allows commentators, designers and production teams to focus more on storytelling and less on manual execution.Beyond production, automation is transforming distribution by allowing the same live content to be delivered in multiple formats and frames like horizontal, vertical, short highlights or extended viewing depending on how different audiences choose to consume it. Viewers may experience the same match as a three-minute highlight, a 20-minute recap or a full-length live broadcast, all powered by the same underlying production pipeline.According to Khanna, owning the fan relationship increasingly depends on how seamlessly this end-to-end value chain operates. “The ability to automate across production and distribution is what allows platforms to acquire new viewers, deepen engagement and offer differentiated experiences around the same core event,” he said.On personalisation, Khanna highlighted how AI is helping democratise premium live production at scale. What was once available to a limited audience such as high-quality language commentary or advanced camera work can now be extended to many more viewers. Innovations such as vertical live sports broadcasts, auto-framing of play and real-time language adaptation are enabling fans to experience events in ways that feel personal without compromising broadcast quality.He also addressed the growing conversation around AI-generated content and creators. While acknowledging that AI has significantly lowered barriers to entry, Khanna emphasised that quality storytelling remains the deciding factor. AI, he said, is most powerful when it expands creative possibilities, enabling richer environments, faster iterations and new formats, rather than when it attempts to replace narrative depth or craft.Looking ahead, Khanna described a future where live entertainment becomes increasingly immersive, interactive and user-controlled. From virtual reality broadcasts and metaverse experiments to second-screen experiences and personalised data layers, audiences will have more agency in how they watch, hear and engage with live events. He envisaged a world where fans can effectively “produce” their own version of a live game at home, choosing perspectives, information and formats that suit their preferences.Despite rapid technological change, Khanna stressed that the fundamentals of content remain unchanged. Audiences have finite attention, and only high-quality experiences endure. “It’s not about fighting for eyeballs,” he said. “It’s about delivering exceptional content that people across ages, languages and geographies want to come back to.” In Khanna’s view, AI’s true impact on media will be measured not by novelty, but by how seamlessly it integrates creativity, certainty and scale, turning the entire content lifecycle into a more intelligent, responsive and inclusive system.
பேங் பேங் டைட்டில் டீசர்: 25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மாஸ் கூட்டணி!
திரையுலகின் ஆல்-டைம் ஃபேவரைட் ஜோடியான பிரபு தேவா மற்றும் வடிவேலு மீண்டும் இணைந்துள்ள 'பேங் பேங்' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fresh Israeli Airstrikes Claim 12 Lives in Gaza
Hospitals in Gaza said that at least 12 Palestinians were killed in Israeli airstrikes early on Saturday, January 31, 2026.
இந்தோனேசியாவில் பரபரப்பு ; திருமணத்திற்கு புறம்பான உறவு மற்றும் மதுபாவனைக்காக 140 கசையடிகள்
இந்தோனேசியாவின் மிகவும் பழமைவாத மாகாணமான அச்சேவில், இஸ்லாமிய சரியா சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு புறம்பான உடலுறவு மற்றும் மது அருந்துதல் ஆகிய குற்றங்களுக்காக 21 வயதுடைய ஒரு தம்பதியினருக்கு நேற்று (வியாழக்கிழமை) பகிரங்கமாக கசையடி தண்டனை வழங்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 21 வயதுடைய அந்தப் பெண்ணுக்கு மூன்று பெண் அதிகாரிகள் மாறி மாறி பிரம்பு மூலம் கசையடி வழங்கினர். வலியால் கதறி அழுத அந்தப் பெண், தண்டனையின் ஒரு கட்டத்தில் மூர்ச்சையடைந்து கீழே விழுந்தார். […]
Rajnigandha unveils new ingredient-focused TVC highlighting craftsmanship behind its iconic taste
Mumbai: Rajnigandha, one of the flagship brands of Dharampal Satyapal Group (DS Group), has launched its latest ingredient-focused video commercial, reinforcing the brand’s legacy of quality, craftsmanship, and consistency while adding a rich multisensory dimension to its premium expression.Directed by globally acclaimed French filmmaker Bruno Aveillan, the film, titled “Yun Hi Nahin Main Rajnigandha Ban Jaata Hun”, is a cinematic storytelling experience marked by striking visuals and refined aesthetics. It showcases the meticulous journey behind creating Rajnigandha, from selecting and evaluating ingredients to the master blender’s precision in crafting a consistent, premium taste. Conceptualized by McCann Advertising, the campaign brings to life the artistry and expertise that defines the iconic brand.Commenting on the launch, Sushaant, Sr. General Manager, Marketing, Mouth Freshener, DS Group , said, “With this new ingredient TVC, Rajnigandha reaffirms its commitment to authenticity, excellence and quality reminding consumers that the legacy of premium great taste is never accidental, but the result of years of experience and uncompromising standards. This new TVC campaign stands as a proud reflection of the DS Group’s legacy and the artistry that defines Rajnigandha.” The campaign will be rolled out across television, digital platforms including YouTube, Instagram, and Facebook, as well as OTT platforms, ensuring wide visibility and engagement across both traditional and digital audiences.This initiative underscores Rajnigandha’s dedication to maintaining its premium positioning, highlighting not only its rich taste but also the craftsmanship, skill, and precision that go into every piece of the brand’s iconic offering.https://youtu.be/YU0COqQ9W-A
UAE Minister Visits Delhi for India-Arab Talks
The Minister of State for Foreign Affairs of the United Arab Emirates (UAE), Khalifa Shaheen Al Marar, reached New Delhi
Archies & Sudathi team up for Valentine’s Campaign ‘TereSangForever’ celebrating timeless love
New Delhi: Archies, a gifting brand renowned for helping people express emotions and celebrate relationships, has partnered with Sudathi, one of India’s most affordable saree brands, to launch a special Valentine’s Day cross-collaboration campaign titled “TereSangForever.” Rooted in nostalgia and the warmth of cherished memories, the campaign brings together Archies’ legacy of heartfelt gifting and Sudathi’s elegant ethnic fashion to celebrate renewed love, enduring companionship, and meaningful connections that stand the test of time.The “TereSangForever” campaign is rooted in emotional storytelling and nostalgia, focusing on relationships that grow stronger over time. Through co-created digital content, curated gifting moments, and interactive giveaways, the collaboration positions the saree as a renewed symbol of love and commitment, paired with Archies’ timeless expressions of affection.Sudathi will spotlight a thoughtfully curated range of sarees—from Banarasi, Kanchipuram, and Paithani silks to cotton, chiffon, and georgette—crafted for celebrations, festive occasions, and everyday elegance. Complementing this, Archies will showcase its signature gifting portfolio, reinforcing how thoughtful gestures continue to play a meaningful role in modern relationships. A key highlight of the collaboration is a co-branded Valentine’s Day giveaway, offering prizes that pair a Sudathi saree with an Archies gift, encouraging deeper engagement and cross-brand discovery. Exclusive discount codes from both brands further enhance consumer participation.Commenting on the collaboration, Hanisha Gandhi and Varun Moolchandani, Executive Directors, Archies, said, At Archies, love and emotions have always been at the core of our brand. With TereSangForever, we wanted to move beyond fleeting celebrations and bring the focus back to relationships that truly last. Partnering with Sudathi allows us to blend thoughtful gifting with timeless ethnic fashion, creating a Valentine’s Day narrative rooted in nostalgia, commitment, and meaningful expression. [caption id=attachment_2490043 align=alignleft width=200] Viren Lathiya [/caption]Sharing his thoughts, Viren Lathiya, Co-Founder, Sudathi, said, Sarees have always symbolised grace, emotion, and enduring bonds. Through TereSangForever, we are delighted to collaborate with Archies to reimagine the saree as a renewed expression of love this Valentine’s Day. This partnership beautifully blends tradition with modern relevance, making high-quality sarees more accessible and meaningful for today’s evolving relationships. Through this collaboration, Archies and Sudathi aim to redefine Valentine’s Day celebrations by blending gifting and fashion into a powerful expression of love that truly stands the test of time.https://www.youtube.com/shorts/IhmiCgZuz_k
தவெக தேர்தல் பிரச்சார மாநில சட்ட பாதுகாப்பு குழு அறிவிப்பு- விஜய் அறிக்கை
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகம் சட்டப் பாதுகாப்பு குழுவை நியமித்துள்ளது. தேர்தல் கால சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள 25 பேர் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
292ஆவது ஆண்டாக தொடரும் நல்லூரானின் மரபு!
நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல்… The post 292ஆவது ஆண்டாக தொடரும் நல்லூரானின் மரபு! appeared first on Global Tamil News .

26 C