காவல்துறையினா் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!
கம்பஹா, நால்ல (Nalla) காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத… The post காவல்துறையினா் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்! appeared first on Global Tamil News .
ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அனுப் ஜலோட்டாவின் அதிரடி கருத்து!
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய நேர்காணல் மற்றும் அதற்குப் பதிலடியாக பாலிவுட் பாடகர் அனுப் ஜலோட்டா (Anup Jalota)… The post ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அனுப் ஜலோட்டாவின் அதிரடி கருத்து! appeared first on Global Tamil News .
சுயசார்பு கனடாவை உருவாக்குவோம் - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதமர்
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகள் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. ட்ரம்ப் அந்தவகையில் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் வேளாண் பொருட்கள், மின்சார வாகனங்கள் தொடர்பாக சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்நிலையில், சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா அமல்படுத்தினால் கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு பிறகு கனடா பிரதமர் மார்க் கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மார்க் கார்னி அதில் பேசியிருக்கும் அவர், வெளிநாட்டு அச்சுறுத்தலைச் சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம். கனடாவைக் கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுபடுத்த முடியாது. எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். சுயசார்பு கனடாவை உருவாக்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்.
திரௌபதி 2: மங்காத்தாவால் வந்த சோகமான சரிவு!
அஜித் நடித்த மங்காத்தா ரீ-ரிலீஸால் 'திரௌபதி 2' படத்திற்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை. மறைக்கப்பட்ட உண்மைகள் மக்களைச் சேரவில்லை என மோகன் ஜி ஆதங்கம்!
கனடா மீது 100% வரி விதித்த ட்ரம்ப் ?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இடையிலான வர்த்தகப் போர்… The post கனடா மீது 100% வரி விதித்த ட்ரம்ப் ? appeared first on Global Tamil News .
மாரத்தானில் ஓடிய ஆமீர் கான் மகளை பாடிஷேமிங் செய்த நெட்டிசன்ஸ்: ஆதரவாக ட்வீட் போட்ட நடிகர்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் மகள் ஐராவின் உடல்வாகு மற்றும் அவரின் உடையை வைத்து சமூக வலைதளங்களில் மோசமாக கிண்டல் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் அபினவ் சுக்லா.
'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!
தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை. விஜய் அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்தின் மிக முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன். எதாவது அழுத்தம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? அழுத்தத்துக்கெல்லாம் அடங்கி போற ஆளா நாம? அழுத்தம் மக்கள் மீதுதான் இருக்கிறது. தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் பாஜகவிடம் நேரடியாக சரண்டர் ஆகிவிட்டார்கள். திமுக மறைமுகமாக சரண்டர் ஆகியிருக்கிறது. அவர்களின் வேடம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக கலர் கலர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார் என்கிற அழுத்தத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்கள் நம் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். விஜய் கூட்டணியைப் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யை நம்பி யார் வருவார் என நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஆனால், மக்கள் நம்மை நம்புகிறார்கள். அதனால்தான் கரியரின் உச்சம் என்கிற இடத்தில் என்னை தூக்கி வைத்திருக்கிறார்கள். என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களாக உழைக்க வேண்டும். ஏற்கனவே ஆண்டவர்களை போலவும் ஆள்பவர்களை போலவும் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். தீய சக்தியும் வேண்டாம். ஊழல் சக்தியும் வேண்டாம். இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் சக்தியும் நமக்குதான் இருக்கிறது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அண்டி பிழைக்கவோ அடிமையாகவோ மாறும் எண்ணமே இங்கில்லை. Vijay யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்யக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள். அண்ணா ஆரம்பித்த கட்சியும் அண்ணா பெயர் கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அந்த இரண்டு கட்சிக்கும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம். நாம் அதை அனுமதிக்கக் கூடாது. நடக்கப்போறது ஜனநாயகப் போர். அதை லீட் செய்யப்போகும் தளபதிகள் நீங்கள்தான். உங்களுக்கு விஜய் பிடிக்கும்னா அதை உங்க உழைப்புல காட்டுங்க. நாம அறிவிக்கப்போற வேட்பாளர்களுக்கு உங்களோட முழு ஆதரவையும் கொடுங்க. நட்பு சக்தி இருந்தாலும் இல்லைன்னாலும் நம்மால ஜெயிக்க முடியும்.' என்றார்.
⚖️ இந்தியாவில் கைது செய்யப்பட்டகெசல்வத்த தினுஷா’விடம் 72 விசாரணை
இந்தியாவின் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Red Notice) அடிப்படையில் இலங்கைக்கு… The post ⚖️ இந்தியாவில் கைது செய்யப்பட்டகெசல்வத்த தினுஷா’விடம் 72 விசாரணை appeared first on Global Tamil News .
T20 World Cup: ‘பாகிஸ்தான் அணியால் புறக்கணிக்க முடியாது’.. ஜெய் ஜா வைத்த முரட்டு ஆப்பு: விபரம் இதோ!
டி20 உலகக் கோப்பை 2026 தொடரை, புறக்கணிக்க முடியாத கட்டாயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருக்கிறது. அதையும் மீறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புறக்கணித்தால், ஜெய் ஷா பெரிய ஆப்பை சொருக வாய்ப்புள்ளது.
150-க்கும் மேற்பட்ட குற்றங்களை புரிந்துள்ள மூதாட்டி மீண்டும் கைது!
பேர்மிங்காம் (Birmingham) மாநகர சபையினால் விதிக்கப்பட்ட தடையை மீறி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட டெப்ரா ஷா (Debra Shaw)… The post 150-க்கும் மேற்பட்ட குற்றங்களை புரிந்துள்ள மூதாட்டி மீண்டும் கைது! appeared first on Global Tamil News .
சிறை OTT விமர்சனம்: விக்ரம் பிரபுவின் மகிழ்ச்சியான வெற்றி!
டாணாக்காரன் படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபுவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகியுள்ள 'சிறை' படத்தின் OTT விமர்சனம் மற்றும் சுவாரசியமான தகவல்கள் உள்ளே!
சிறை OTT விமர்சனம்: விக்ரம் பிரபுவின் மகிழ்ச்சியான வெற்றி!
டாணாக்காரன் படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபுவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகியுள்ள 'சிறை' படத்தின் OTT விமர்சனம் மற்றும் சுவாரசியமான தகவல்கள் உள்ளே!
அமெரிக்காவில் பனிப்புயல்: 8,000 விமானங்கள் ரத்து!
அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமப்பட்டனர். மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்புயல் காரணமாக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் வசிக்கும் சுமார் 14 கோடி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெக்சாஸ், ஓக்லஹோமா, கேன்சாஸ் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை […]
திடீர்ரென பிரித்தானியப் படைகளைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப்
நேட்டோ (Nato) நட்பு நாடுகளின் படைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் பெரும்… The post திடீர்ரென பிரித்தானியப் படைகளைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப் appeared first on Global Tamil News .
பிரகாஷ் ராஜ் அதிரடி! பாலிவுட் குறித்து மோசமான விமர்சனம்!
ஹிந்தி சினிமா தனது வேர்களை இழந்துவிட்டது என்றும், அது வெறும் பணத்தால் மட்டுமே இயங்கும் போலியான இடமாக மாறிவிட்டது என்றும் பிரகாஷ் ராஜ் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
New World Order உருவாகிறதா? Canada PM Mark Carney கொடுத்த எச்சரிக்கை! | Davos | Trump | Decode
. யாழில் கண்ணம்மாவிற்கு பலத்த வரவேற்பு!
முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்களிப்பில் உருவான ‘கண்ணம்மா’ திரைப்படம், யாழ்ப்பாணத்தில் தனது முதல் பயணத்தை மிகச்சிறப்பாக ஆரம்பித்துள்ளது.… The post . யாழில் கண்ணம்மாவிற்கு பலத்த வரவேற்பு! appeared first on Global Tamil News .
சிறை: ``பெருமைபடுகிறேன்... அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் - நடிகை குஷ்பு சுந்தர்!
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2025-ம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியான படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் வெற்றிப் படமானது. குறைந்த பட்ஜெட் படங்களால் பெரிய வசூல் சாதனை படைக்க முடியுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலாக அமைந்த இந்தப் படம், பிரமாண்ட விளம்பரங்களும், மாஸ் ஓபனிங் கூட்டங்களும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி நடை போட்டு வருகிறது. சிறை படத்தில்... காதல் கதைக்குப் பின், காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம், ஜனவரி 23 அன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகி, அங்கும் தன் முத்திரையைப் பதித்து வருகிறது. இந்த நிலையில்,நடிகை குஷ்பு சிறைப் படம் பார்த்த தன் அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ``சமீபகாலமாகப் பலராலும் பேசப்பட்டு, அமைதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள சிறை திரைப்படத்தை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன். இது அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். ஒரு சாதாரண கதையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். அனைவருமே அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம் பிரபுவைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். Khushbu | குஷ்பு அந்த கதாபாத்திரத்தைப் புரிந்து கொண்டு, மிகக் கட்டுக்கோப்பான நடிப்பை நீ வழங்கியிருப்பது, புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபிக்கிறது. உன்னைப் பார்த்து மிகவும் பெருமையாக இருக்கிறது. சரியான நடிகர்களைத் தேர்வு செய்ததற்காக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி பாராட்டுக்குரியவர். உண்மையில் படத்தில் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. ஒரு தேவையில்லாத காட்சியோ, வேண்டாத பாடல்களோ எதுவுமே இல்லை. இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். சிறை: ``இப்படி ஒரு படத்தை மிகச் சரியாக உருவாக்க... - முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
❄️ கடுமையான பனிப்புயல் – 12,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
அமெரிக்காவைத் தாக்கியுள்ள மிகக் கடுமையான பனிப்புயல் (Winter Storm) காரணமாக, விமானப் போக்குவரத்து வரலாறு காணாத… The post ❄️ கடுமையான பனிப்புயல் – 12,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! appeared first on Global Tamil News .
ஐபோன் 18 ப்ரோ லீக்ஸ்! புதிய சிப் மற்றும் இந்திய விலை!
ஆப்பிளின் ஐபோன் 18 ப்ரோ 2026-ல் வெளியாகிறது. புதிய டிசைன், 2nm சிப் மற்றும் மிரட்டலான கேமரா அப்டேட்கள் குறித்த முழுமையான அலசல்!
அமெரிக்காவில் மனைவியைச் சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி கணவன் கைது!
அமெரிக்காவில் குடும்பத் தகராறில் மனைவியைச் சுட்டுக் கொன்றதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் குமார் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தமது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறும் அதனால் வீண் வாக்குவாதமும் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை(ஜன. 23) ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டிலிருந்த தமது மனைவியையும் உறவினர்களையும் விஜய் குமார் சுட்டுக் கொன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு […]
TOI சர்வேபடி சட்டசபை தேர்தலில் தவெகவுக்கே வெற்றினு வைரல் போஸ்ட்: அது போலி, நிஜம் இல்லை
நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தான் வெற்றி பெறும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளதாக ஒரு பதிவு வைரலானது. அந்த பதிவு குறித்த உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் 2026: பொங்கல் வின்னர் யார்?
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' முதல் கார்த்தியின் 'வா வாத்தியார்' வரை 2026 கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்த அலசல்.
'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்
தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கடைசி டிசம்பர் விழாவில் பேசிய விஜய். அதன்பிறகு கிட்டத்தட்ட 38 நாட்களுக்கு விஜய் மௌனமாக இருந்தார். விஜய் இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கியமான கட்டத்தில் நடக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் NDA கூட்டணியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் பேசியதாவது, 'இங்கே எல்லார் கையிலும் விசில் வைத்திருக்கிறீர்கள். நாளை காவலர்கள், நடத்துனர்கள் கூட விசில் வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள். இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு கூட்டம். தலைக்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டி வந்திருந்தார்கள். அவர்கள் திமுகவை வீழ்த்துவோம் என்றார்கள். ஒருவரும் கைத்தட்டவில்லை. திமுகவை வீழ்த்தும் சக்தி நம் தலைவருக்குதான் உண்டு. 10 கட்சி கூட்டணி 15 கூட்டணியையெல்லாம் முறியடிக்கும் சக்தி தலைவருக்குதான் உண்டு. செங்கோட்டையன் இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத புகழ் நம் தலைவருக்கு இருக்கிறது. 1000 கோடி வருவாயை வேண்டாமென்று கூறிவிட்டு அவர் மக்களுக்காக வந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஓட்டு இருக்கிறது. திமுகக்காரர்களின் வீட்டு ஓட்டு கூட நமக்குதான் இருக்கிறது.அந்த இரு கட்சிகளிலும் இருப்பவர்கள் தலைவர்களே அல்ல. நம்முடைய தலைவரை முதல்வராக்க வேண்டுமென மக்கள் சூளுரைத்திருக்கின்றனர். எந்த சக்தியாலும் நம்மை இனி தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய சின்னம் விசில் சின்னம். தூங்குகிறவர்களின் காதுகளில் விசில் அடித்து விடாதீர்கள். முதியவர்களின் முன்னால் விசில் அடித்துவிடாதீர்கள். வாக்கு கிடைக்காமல் போய்விடும்' என்றார்.
சிறை: ``இப்படி ஒரு படத்தை மிகச் சரியாக உருவாக்க... - முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2025-ம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியான படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் வெற்றிப் படமானது. குறைந்த பட்ஜெட் படங்களால் பெரிய வசூல் சாதனை படைக்க முடியுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலாக அமைந்த இந்தப் படம், பிரமாண்ட விளம்பரங்களும், மாஸ் ஓபனிங் கூட்டங்களும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி நடை போட்டு வருகிறது. சிறை படத்தில்... காதல் கதைக்குப் பின், காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம், ஜனவரி 23 அன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகி, அங்கும் தன் முத்திரையைப் பதித்து வருகிறது. இந்த நிலையில்,புகழ்பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் சிறைப் படம் பார்த்த தன் அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ``நேற்று சிறை படம் பார்த்தேன். மிகவும் அழகான திரைப்படம். காட்சிகள் மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. யதார்த்தமாகவும், நம்மோடு எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையிலும் ஒரு இதமான காதல் கதையை இப்படம் கொண்டுள்ளது. தினேஷ் கார்த்திக் இப்படி ஒரு படத்தை மிகச் சரியாக உருவாக்குவதற்கு, இயக்குநர் நிச்சயமாகப் பலத்த ஆராய்ச்சி செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன். விக்ரம் பிரபு மற்றும் அவருடன் நடித்தவர்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகள். எனக் குறிப்பிட்டிருக்கிறர். சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!
ஆப்கானிஸ்தானில் பனிப்பொழிவு: 61 பேர் உயிரிழப்பு!!
கடந்த சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் பனி மற்றும் மழையால் குறைந்தது 61 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 110 பேர் காயமடைந்துள்ளனர். இதை பேரிடர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவித்தனர். கூடுதலாக, புயல்கள் மூன்று நாட்களுக்குள் சுமார் 450 வீடுகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்துவிட்டன என்று அது மேலும் கூறியது. இவை முதற்கட்ட புள்ளிவிவரங்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர குழுக்கள் விரைந்துள்ளன, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பாதி மாகாணங்கள், குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்பொழிவு காரணமாக, தலைநகர் காபூலை வடக்கு மாகாணங்களுடன் இணைக்கும் ஒரு முக்கியமான போக்குவரத்து அச்சான சலாங் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மூடல் அமுலில் உள்ளது என்று பொறுப்பான அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பனி மற்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐ.நா.வின் அவசர உதவி அலுவலகமான OCHA-வின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி பகுதிகளில் ஒன்றாக உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் உதவியை நம்பியுள்ளனர். இதற்கான காரணங்களில் தீவிர வானிலை நிகழ்வுகள், வறட்சி, உணவு பற்றாக்குறை மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
போயா தினத்தில் சில் அனு~;டிப்பதற்கு யாழ்ப்பாணம் செல்ல வேண்டியதில்லை என்ற அநுர குமரவின் கூற்றை இனவாதிகள் ஆயுதமாக எடுத்துள்ளனர். சிறீதரன் மீது தமிழரசுக் கட்சி எடுத்திருக்கும் நடவடிக்கையை தங்களுக்கான பலமாக எடுத்து கட்சியை அழிக்க முயற்சிக்கின்றனர் இனபாசத்தால் உள்நுழைந்தவர்கள். ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்க யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய ஓர் உரையின் ஒரு சிதறலும், தமிழரசுக் கட்சியின் மூத்த எம்.பியான சிவஞானம் சிறீதரனின் நாடாளுமன்ற செயற்பாடுமே இப்போது பிரதான பேசுபொருட்களாகியுள்ளன. யாழ்ப்பாணத்தின் பொதுநிகழ்;ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமர பொதுநிகழ்வொன்றில் கலந்து கொள்ளும்போது யதார்த்தமான கருத்தொன்றை தெரிவித்தார். இது தமிழர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் சிங்கள தேசத்தின் பௌத்த பக்தர்கள் இதனை இப்போதைக்கான தங்கள் ஆயுதமாக எடுத்துள்ளனர். அநுர குமர சொன்னது இதுதான்: போயா நாட்களில் சிலர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றனர். ஜெயசிறீமகாபோதியை கடந்து இவர்கள் இங்கு செல்வது தங்கள் மதவழிபாட்டுக்காக அல்ல. மாறாக, வெறுப்பை பரப்புவதற்காகவே - என்பதுதான் அநுர குமர சொன்னது. தென்னிலங்கையின் பல பகுதிகளிலும், யாழ்ப்பாணம் செல்லும் பாதையிலும் பல பௌத்த விகாரைகள் உள்ளன. இவைகளுள் சில வரலாற்றுப் பெருமை பெற்றவையாக அறிவிக்கப்பட்டவை. போயா தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு இடம்பெறும். இப்படியிருக்க, எதற்காக தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமென்ற அநுர குமரவின் கேள்வி நியாயமானது. திஸ்ஸ விகாரையில் காணி பிரச்சனை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் போயா தின வழிபாட்டை காரணம் காட்டி தெற்கிலிருந்து செல்வதால் பிரச்சனை பூதாகரமாவதை கருத்தில் கொண்டே அநுர குமர தமது கருத்தை நாட்டின் தலைவர் என்ற வகையில் ஒருதலைப் பட்சமின்றி கூறியிருக்கலாம். இது மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய விரும்புவர்களுக்கு அவலாகக் கிடைத்துள்ளது. (1983 யூலை தமிழின அழிப்பு ஒரு போயா தினத்துக்கு மறுநாள் ஆரம்பிக்கப்பட்டது. தமிழரை கொலை செய்யவென திட்டமிடப்பட்ட நாள் இது. அப்போது அமைச்சராகவிருந்த சௌமிய தொண்டமான் இதுபற்றிக் குறிப்பிடுகையில் - போயா நாளில் சில், அடுத்த நாள் கொல் - என்று சொன்னது இவ்வேளையில் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.) இனப்பிரச்சனையை வளர்க்கும் இடமாக அநுர குமர சிங்கள மக்களைப் பார்த்துச் சொன்னதை இனவாதத்தை வளர்க்கும் தூபமாக சிங்கள அரசியல்வாதிகள் கையில் எடுத்துள்ளனர். சிங்கள - பௌத்த வாக்குகளால் பதவிக்கு வந்துவிட்டு வடக்குக்கு சென்று அந்த சிங்கள பௌத்த மக்களை ஜனாதிபதி காட்டிக்கொடுக்கிறார் என்று குரல் எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர. கடற்படையில் உயர் அதிகாரியாக முன்னர் கடமையாற்றிய இவர், கோதபாய ஜனாதிபதியாக இருந்தபோது அவரைச் சுற்றியிருந்த வியத்மக குழுவின் பிரதானியாகவிருந்து கோதபாயவின் அழிவுக்குக் காரணமாகவிருந்தவர்களில் முக்கியமானவர்;. விகாரை விடயங்களில் தலையிட முனைந்தால் என்ன நடைபெறும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டி வருமென்று எச்சரித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. கண்டியில் மகாநாயக்கர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த இவர் தாம் இப்போது அரசியலில் இல்லையென்று கூறியிருப்பது விநோதமானது. மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் பேபி கூறியுள்ள கருத்து அவரது வரலாற்று அறிவின்மையை காட்டுகிறது. தமிழ் மக்கள் கதிர்காமத்துக்குச் செல்ல உரிமை இருப்பதுபோல சிங்கள் மக்களுக்கு வடக்கிலுள்ள நாகதீப விகாரைக்குச் செல்ல உரிமை உள்ளது என்று எச்சரித்துள்ளார். கதிர்காமத்தின் மூலத்தில் வேல் இருப்பதையும், இது தமிழர்களின் வழிபாட்டுத் தலம் என்பதையும் மறைக்க எத்தனிக்கும் நாமல் இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாக வர கனவு காணும் ஓர் இனவாதி. இவ்வாறான இனவாதம் கக்குபவர்களுக்கு திஸ்ஸ விகாரை ஓர் ஆயுதமாக மாறாது பார்த்துக் கொள்ள வேண்டியது ஆட்சித் தலைவரான அநுர குமரவின் பாரிய பொறுப்பு. அவரின் ஒரு சொல்லே இனவாதத்தை கக்க ஆரம்பித்துள்ளது என்ற காரணத்தைக் கூறி திஸ்ஸ விகாரை விடயத்தில் நியாயமாகவும் நீதியாகவும் நடந்து கொள்வதை அவர் தவற விடக்கூடாது என தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். தெற்கின் இனவாதத்துக்கு நிகரான பதவிமோகப் போராட்டம் ஒன்று இனபாசம் என்ற பெயரில் இப்போது வேகம் கொண்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மூத்த எம்.பியும் நாடாளுமன்ற குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரனை மையப்படுத்தியதாக இந்த நடவடிக்கை பல கோணங்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. நாடாளுமன்ற அரசமைப்புச் சபையில் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதியாக இடம்பெற்றிருக்கும் சிறீதரன் அரச சார்பாளராக செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இதுவரை நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இவரை அப்பதவியிலிருந்து விலகுமாறு தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் கடிதம் மூலம் கேட்டுள்ளார். இவ்விடயம் பற்றி ஏற்கனவே இப்பத்தியில் குறிப்பிடப்பட்டது. தமக்குக் கிடைத்த இக்கடிதத்துக்கு பதில் எழுதும் கடப்பாடு சிறீதரனுக்கு இல்லை. அரசமைப்புச் சபைக்கு இவரை தமிழரசுக் கட்சி நியமிக்கவில்லை. நாடாளுமன்றத்திலுள்ள சிறுபான்மைக் கட்சிகளே இவரைத் தெரிவு செய்தன. எனவே இவர் கட்சியின் கடிதத்துக்கு பதில் அனுப்பாவிட்டால் இவர் மீது நடவடிக்கை எடுக்கும் தார்மிக உரிமை கட்சிக்கு இல்லையென்று கட்சியின் பிரமுகர்களே கூறுகின்றனர். தமிழரசின் பதில் தலைவரின் நிலைப்பாடும் இதுவே என்று நம்பிக்கையானவர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு, கட்சியின் தலைவர் பதவிப் போட்டியில் கட்சி உறுப்பினர்களாலேயே தூக்கி வீசப்பட்டு, வன்னி சத்தியலிங்கத்தின் கருணையால் பதில் செயலாளராகியுள்ள சுமந்திரன் எப்பாடுபட்டாவது சிறீதரனை பழிவாங்க எடுக்கும் முயற்சியில் இப்போது கையில் கிடைத்திருப்பது அரசமைப்புச் சபை விவகாரம் என்று மார்ட்டின் வீதி அலுவலகத்தின் மூத்தவர் ஒருவர் தமது சகபாடிகளிடம் தெரிவித்து வருகிறார். தமிழரசுக் கட்சியோடு மீண்டும் இணைய விரும்பியிருக்கும் ஜனநாயக தமிழர் கூட்டணியின் பேச்சாளரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிறீதரன் மீது குற்றப்பத்திரிகையை வாசித்துள்ளார். தெற்கில் பலவேறு கட்சிகளிலும் இணைந்து வெளியேறியும் - வெளியேற்றப்பட்டும் அலைந்து திரியும் மகிந்தவின் முன்னாள் சகபாடியான தயாசிறி ஜெயசேகரவும் சிறீதரன் மீது ஏறிப்பாய்ந்துள்ளார். சுமந்திரன் சிறீதரன் மீது வைத்த குற்றச்சாட்டையே இருவரும் பகிரங்கமாகக் கூறுகின்றனர். எதிரணியினர் சார்பில் தயாசிறி ஜெயசேகர தமது தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். இங்கு கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் முக்கியமானவை. சிறீதரனை விமர்சிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் பல தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அண்மையில் இடம்பெற்ற உள்ளாட்சிச் சபைத்தேர்தலில் தமிழரசுக் கட்சியை எதிர்த்து இன்னொரு கூட்டில் இணைந்து பரப்புரை மேற்கொண்டவர். கருணைக் கொலையில் அகப்பட்டிருக்கும் மாகாணசபைக்கான தேர்தலை நடத்தினால் அதனூடாக தமது ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு சில ஆசனங்களாவது பெறலாம் என்ற நப்பாசையில் இப்போது தமிழரசுடன் தற்காலிகமாக இணைந்திருப்பவர். தயாசிறி ஜெயசேகர எப்போதுமே சிங்கள கட்சிகளின் பிரதிநிதியாக இருந்தவர். மகிந்த ராஜபக்ச ஆட்சியிலும் மைத்திரிபால சிறிசேன ஆட்சியிலும் முக்கிய பங்காற்றியவர். சிங்கள ஆட்சிகள் தமிழின படுகொலைகளை மேற்கொண்டபோது இராணுவத்தின் பக்கமும் சிங்கள கட்சிகளின் பக்கமும் நின்றவர். இப்போது தமிழினத்தை இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதுபோல வேசம் காட்டி சிறீதரனை அரசமைப்புச் சபையிலிருந்து விலகுமாறு கோரி வருகிறார். இது தொடர்பான இவரது உரைகளை எழுதிக் கொடுப்பவர் யாராக இருக்கலாம் என்ற ஊகம் அண்மையில் தமிழ் ஊடகம் ஒன்றில் நாசூக்காக தெரிவிக்கப்பட்டது. இவ்விடத்தில் முக்கியமாக எழும் கேள்வியொன்று இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சனை பற்றி தமிழர் பகுதியிலுள்ள அநுர குமரவின் முக்கியஸ்தர் ஒருவர் பிரஸ்தாபித்திருந்தார். இது தொடர்பாக கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம் அவர்கள் அவசரமாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து மிகச்சூடான ஒரு கருத்தை நியாயமாக வெளியிட்டிருந்தார். தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட எவருக்கும் உரிமையில்லை. தமி;ழரசு குறித்த அநுர தரப்பு குத்தி முறியவும் தேவையில்லை என்று கட்சியின் நிலைப்பாட்டை எவரும் இலகுவாகப் புரியும் வகையில் தெரிவித்திருந்தார். இவர் இவ்வாறு கூறியதற்காக அநுர தரப்பினர் அமைதியாக இருந்துவிடப் போவதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக்கொண்டேயிருப்பார்கள். இங்கே நான் குறிப்பிட விரும்புவது இதுவல்ல. சிறீதரன் விடயமாக அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரே~; பிரேமச்சந்திரன் அநுர தரப்பினர் கூறிய அதே கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். தெற்கில் சிங்களக் கட்சிகளின் பிரதிநிதியாகவிருக்கும் தயாசிறி ஜெயசேகர தமிழரசுக் கட்சியின் ஆபத்பாந்தவனாகத் தம்மை காட்டி, சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியான சிறீதரன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி பதவி விலகுமாறு கோருவதற்கு யார் உரிமை அளித்தது? தமி;ழரசுக் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை எவருக்கும் கிடையாது என்று அடித்துக்கூறிய அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எந்தவகையில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தயாசிறி ஜெயசேகரவும் சிறீதரன் சம்பந்தமான தமி;ழரசுக் கட்சி விவகாரத்தில் தலையிடவும் பகிரங்கமாக கருத்துக் கூறவும் அனுமதித்தார் என்பதை அறிவதற்கு அக்கறையுள்ளவர்கள் ஆர்வமாகவுள்ளனர்.
அமெரிக்காவின் கிழக்குப் பகுதியின் பெரும்பகுதியில் வழக்கத்திற்கு மாறான பரந்த குளிர்கால புயல் வீசியதால் , நேற்று சனிக்கிழமை முதல் திங்கள் வரை 13,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன . ராக்கி மலைகள் மற்றும் நியூ இங்கிலாந்து இடையேயான பகுதியில் கடுமையான பனிப்பொழிவு, பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழையால் கிட்டத்தட்ட 180 மில்லியன் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய வானிலை சேவை (NWS) சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானது. சனிக்கிழமை நிலவரப்படி புயல் வீசும் பாதையில் 120,000க்கும் மேற்பட்ட மின்வெட்டுக்கள் பதிவாகியுள்ளன.லூசியானா மற்றும் டெக்சாஸில் மட்டும் தலா 50,000 மின்வெட்டுகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பல மாநிலங்களுக்கு மத்திய அவசரநிலை மேலாண்மை நிறுவனத்திடமிருந்து உதவி பெறுவதற்கான அவசரகால அறிவிப்புகளுக்கும் ஒப்புதல் அளித்தார்.
விஜய் முதலமைச்சராகனும்.. விசில் அடித்தபடி பழனிக்குத் பாதயாத்திரை - தவெக நிர்வாகி வைரல் வீடியோ!
விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற விருப்பத்துடன், விசில் அடித்தபடி பழனிக்குத் பாதயாத்திரை மேற்கொண்ட தவெக நிர்வாகி.இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
10 ரூபாய் உணவகம்: 1000 நாட்களைக் கடந்த மிரட்டல் சாதனை!
ஒரு டீ விலையில் முழுச் சாப்பாடு! 1000 நாட்களைக் கடந்த கார்த்தியின் 10 ரூபாய் உணவகம் இன்றும் ஏழைகளின் பசியைத் தீர்க்கும் ஆலயமாகத் திகழ்கிறது.
மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்: விஜய் என்ன பேசப்போவார்? அரசியல் வியூகம்!
மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு
மீண்டும் பணிநீக்கம் நடவடிக்கை –அமேசானின் 1600 ஊழியர்கள் நீக்கம்
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இயங்கி வரும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்த நிறுவனத்தில் உலக அளவில் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த
இந்தியா –நியூசிலாந்து இடையிலான 3 வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை
தமிழகத்தின் 23 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,
த.வெ.க செயல் வீரர்கள் கூட்டம் –விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார்
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி
சீனாவுடன் உறவு வைத்தால் 100 சதவீதம் வரி விதிப்பு –கனடாவை எச்சரித்த டிரம்ப்
சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா அதிபர் டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க
மதுரையில் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். பள்ளப்பட்டியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி
டி20 உலக கோப்பையில் விளையாடததால் வங்காள தேச அணிக்கு ரூ.360 கோடி இழப்பு!
வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20
வீட்டுக்கு வந்த பெண்ணால் வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தென்னிலங்கையில் நடந்த சம்பவம்
ஹம்பாந்தோட்ட, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் மருத்துவரின் வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண், வீட்டில் இருந்து சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லுணுகம்வெஹெர பிராந்திய மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரின் வீட்டில் நேற்று காலை இந்தத் திருட்டு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் மத்துகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். பெண்ணின் செயல் எனினும் குறித்த பெண்ணை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். […]
மொழிப்போர் தியாகிகள் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில […]
கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் –ஒருவர் பலி
கிளிநொச்சி – பரந்தன் ஏ35 பிரதான வீதியின் காளி கோயில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. விபத்து முல்லைத்தீவு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த பாராஊர்தி, பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மதுரையில் வடிவேலுவை வறுத்தெடுத்த கஞ்சா கருப்பு! அதிமுக மேடையில் அனல் பறந்த பேச்சு!
மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழாவில் நடிகர் கஞ்சா கருப்பு, வடிவேலுவின் அரசியல் கருத்துகளுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார். திமுக அரசின் வரி உயர்வு மற்றும் 2026 தேர்தல் குறித்து அவர் பேசிய முழு விவரம்
சம்பள உயர்வை வெளியிட்ட மத்திய அரசு.. இந்த ஊழியர்களுக்கு எல்லாம் இனி அதிக சம்பளம் கிடைக்கும்!
8ஆவது ஊதியக் குழுவின் கீழ் சம்பள உயர்வு வருவதற்கு முன்னரே இந்த ஊழியர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அட.. ஆதார் கார்டில் இத்தனை நன்மைகள் இருக்கா? ரேஷன் கடை முதல் பாஸ்போர்ட் வரை!
உங்களுடைய ஆதார் கார்டு ஒன்றை வைத்தே இந்த 5 வசதிகளையும் நீங்கள் பெறலாம். இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.
தவெக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்.. - 37 நாட்களுக்கு பிறகு பேசும் விஜய் - பிரம்மாண்ட ஏற்பாடு!
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது
எங்களுக்கு விசில் தேவையில்லை; குக்கர் விசில் இருக்கிறது- தமிழிசை சௌந்தரராஜன்
“எங்களுக்கு விசில் தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பல கட்சிகள் இணைய உள்ளன’’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் நேற்று ( ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம், தவெக என்டிஏ கூட்டணிக்கு வருமா? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதா? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் அதற்கு பதிலளித்த அவர், சி.பி.ஐ விஜய்யை டெல்லிக்கு வரவைத்தது விசாரணைக்காகத் தான். அவரை என்டிஏ கூட்டணிக்கு வர வைப்பதற்காக இல்லை. தேர்தலைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக எப்போது வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம். இப்போது எங்கள் கூட்டணிக்கு விசில் (தவெக) தேவையில்லை . எங்கள் கூட்டணியில் ஏற்கனவே விசில் (அமமுகவின் குக்கர் சின்னம்) இருக்கிறது. எங்கள் கூட்டணியில் அமமுக உள்ளது. அவர்களின் குக்கர் சின்னத்திலும் விசில் இருக்கிறது. விசில் சின்னம் அதுவே எங்கள் கூட்டணிக்கு போதும். அதனால், எங்களுக்கு விசில் சின்னம் தேவையில்லை. இனி மேலும் எங்கள் கூட்டணிக்கு பலக் கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் கூட்டணி உறுதியானக் கூட்டணியாகத் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
ஒரே நாளில் உலகளவில் ட்ரெண்டான ஒற்றை பென்குயின் ; வியப்பிலும் குழப்பத்திலும் இணையவாசிகள்
தன்னுடைய கூட்டத்தைவிட்டு தனியே சென்ற ஒரு பென்குயின் உலகளவில் பலருக்கும் ஊக்கமளிப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்சாக், கடந்த 2007 ஆம் ஆண்டில் பென்குயின்களை ஆவணப் படம் செய்வதற்காக அண்டார்டிகா சென்றார். இணையவாசிகளின் கருத்து அண்டார்டிகாவில் பென்குயின்களின் கூட்டத்தைக் கண்ட ஹெர்சாக், அவைகளின் கூட்டத்தில் இருந்து ஒரு பென்குயின் மட்டும் விலகிச் செல்வதைக் கண்டு வியப்புற்றார். மலையை நோக்கிச் செல்லும் பெங்குயின் மலையை நோக்கிச் செல்லும் பெங்குயின் தனது கூட்டத்தினை விட்டுவிட்டு, 70 […]
அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலக சிறிதரன் மறுப்பு
அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலகப் போவதில்லை என, இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அரசியல் குழுக் கூட்டத்தில் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழரசு கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 8.30 மணி வரை இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் இருந்து தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிதரனை அரசியல்
T 20 World Cup: வங்கதேச அணியைத் தொடர்ந்து பாகிஸ்தானும் விலகுகிறதா?- PCB தலைவர் அளித்த பதில் என்ன?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது. இப்போட்டிகளுக்கான அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேச அணி விலகியது. வங்கதேச அணி அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் அணி தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியது. அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக்கு குழு இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐசிசி இந்நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, வங்கதேசத்திற்கு ஐசிசி அநியாயம் செய்துள்ளது. ஐசிசி கூட்டத்திலும் நான் இதையேதான் சொன்னேன். ஒரு அணி எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள். ஆனால் மற்றொரு அணி அதைசெய்தால் அதற்கு அனுமதி கிடையாது. அதனால்தான் நாங்கள் வங்கதேச அணியின் பக்கம் நிற்கிறோம், அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் ஒரு முக்கியமான அணி, அவர்களுக்கு இப்படியான ஒரு அநீதியைச் செய்யக்கூடாது. வங்கதேசத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகுமா? என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கும்? முழு பட்டியல் இதோ!
தஞ்சாவூர் நீதிமன்ற சாலை டவுன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜனவரி 27 காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம் இங்கே.
சிவில் சமூக உறுப்பினர்கள் நியமனம் –நாடாளுமன்ற மரபை மீறிவிட்டது அரசாங்கம்
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை பெயரிடுவதற்கு முன்னர், நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தியதன் மூலம், நாடாளுமன்ற மரபு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல், நிலையியற் கட்டளைகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர், பிரதமர் ஹரிணி அமரசூரிய மூன்று பெயர்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றத்தில் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அவை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், மூன்று புதிய
பாகிஸ்தானில் பனிச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி!
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் புதைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பொழிவால் ஏற்பட்ட பனிச்சரிவுகள் கைபர், பக்துன்க்வா, பலுசிஸ்தான், கில்கிட்-பால்திஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. உறைபனிக்கு மத்தியில் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டன. கைபர் பக்துன்க்வாவில் உள்ள சித்ரால் மாவட்டத்தின் தெற்கே உள்ள செரிகல் கிராமத்தில் உள்ள டாமில் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் […]
தமிழர் பகுதியில் தையல் கடைகாரரின் மோசமான செயல் அம்பலம் ; மாறுவேடத்தில் மடக்கிப்பிடித்த அதிகாரிகள்
ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாாரங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸார் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஒரு குழுவும் காத்தான்குடி பகுதியில் ஒரு குழுவுமாக ஒரே நேரத்தில் வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். போதை வியாபாரம் இந்த நிலையில் காத்தான்குடி எப்.சி. வீதியில் வியாபாரத்துக்காக போதை பொருளை எடுத்துக் கொண்டு சென்ற 26 வயதுடைய வியாபாரியை சுற்றிவளைத்து 10 கிராம் ஜஸ் போதைப் […]
யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய் ; மகனுக்கு காத்திருந்த பேரிடி
யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி – கலாசாலை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய, 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணை சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த தாய் கழிப்பறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராத காரணத்தால் மகன் அவரை தேடிச்சென்று பார்த்தவேளை மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். […]
ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. ஹொரணையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றிருந்த போது, காரில் மோதி குறித்த உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதிச் சடங்கு இதனை தொடர்ந்து, இடம்பெற்ற மாணவனின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது, உயிருக்கு ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இறுதிச் சடங்கில் நடவடிக்கை கைது செய்யப்பட்டவர்கள், […]
Rain Update: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோரம் மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. Rain Alert - மழை சென்னையில் அண்ணாநகர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, பட்டினம்பக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு (ஜன.24) முதலே மிதமான மழை பெய்துவருகிறது. மழைத் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும். Rain Alert - மழை அதேபோல நாளை( ஜன.26) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம் - டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்
நீண்ட கால முதலீட்டில் தீமெட்டிக் மற்றும் செக்டார் மியூச்சுவல் ஃபண்டுகள் – சரியான தேர்வா?
பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் பெரும்பாலும் லார்ஜ் கேப், ஃப்ளெக்ஸி கேப், மல்டி கேப் போன்ற பரவலான அதிக ரிஸ்க் இல்லாத பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்வு செய்கிறார்கள். அதே நேரத்தில், சில முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெறும் நோக்கில் தீமெட்டிக் (Thematic) மற்றும் செக்டார் (Sector) மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். நீண்ட கால முதலீடு: ஆனால், நீண்ட கால முதலீட்டுக்கு இவை உண்மையில் ஏற்றதா? இதில் முதலீடு செய்வது சரியா, தவறா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீட்டுக்கு தீமெட்டிக் மற்றும் செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில், அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே சமயம், ரிஸ்க்கும் (Risk) அதிகமாக இருக்கும். அதனால், இது “சரியா” அல்லது “தவறா” என்பதை விட, உங்கள் ஒட்டுமொத்த முதலீட்டுத் திட்டத்தில் (Overall Portfolio) இந்த ஃபண்டுகள் எந்த அளவுக்கு பங்களிக்கின்றன? என்பதே முக்கியமான கேள்வியாகும். எஸ்.ஹரிகரன், நிறுவனர், www.sreyafinserv.com தீமெட்டிக் ஃபண்டுகள்: தீமெட்டிக் ஃபண்டுகள் ஒரு குறிப்பிட்ட “கருத்து” (Theme) அடிப்படையில் நிறுவனங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்கின்றன. இந்த தீம் பல துறைகளை (Sectors) உள்ளடக்கியதாக இருக்கும். உதாரணமாக: டிஜிட்டல் இந்தியா பசுமை ஆற்றல் (Green Energy) மின்சார வாகனங்கள் (Electric Vehicles) மூலதன கட்டமைப்பு (Infrastructure) இந்த தீம்களுடன் தொடர்புடைய பல துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் தீமெட்டிக் ஃபண்டுகளில் இடம் பெறும். அதனால், செக்டார் ஃபண்டுகளை விட, தீமெட்டிக் ஃபண்டுகளில் சிறிதளவு அதிக பரவல் (Diversification) இருக்கும் செக்டார் ஃபண்டுகள்: செக்டார் ஃபண்டுகள்: செக்டார் ஃபண்டுகள் ஒரு குறிப்பிட்ட துறையை மட்டும் மையமாகக் கொண்டு முதலீடு செய்கின்றன. உதாரணமாக: வங்கி & நிதி சேவை (Banking & Financial Services) ஐடி (IT) மருந்து & ஆரோக்கிய பராமரிப்பு (Pharma & Healthcare) எஃப்.எம்.சி.ஜி (FMCG) இந்த வகை ஃபண்டுகளில் அந்த ஒரே துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே இருக்கும். இதனால், அந்தத் துறை நன்றாக செயல்பட்டால் அதிக வருமானம் கிடைக்கும். ஆனால் அந்தத் துறை சரிவடைந்தால், உங்கள் முதலீட்டின் மதிப்பும் கடுமையாக குறையலாம். நீண்ட கால முதலீட்டுக்கு இவை ஏற்றதா? நீண்ட கால அடிப்படையில், நீங்கள் தேர்வு செய்யும் தீம் அல்லது துறை: எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும் என நீங்கள் நம்புகிறீர்களா? அரசின் கொள்கைகள், தொழில்நுட்ப மாற்றங்கள், உலக பொருளாதார போக்கு ஆகியவற்றால் அந்தத் துறை ஆதரிக்கப்படுமா? அந்த தீம் / துறை 10–15 ஆண்டுகள் தொடர்ந்து வளரக்கூடியதா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் “ஆம்” என்றால், தீமெட்டிக் அல்லது செக்டார் ஃபண்டுகளை உங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கலாம். ஆனால், இந்த ஃபண்டுகளில் அதிக அளவில் முதலீடு செய்வது சரியானது அல்ல. ஏனெனில்: இதில் பரவல் (Diversification) குறைவாக இருக்கும். ஒரு துறை அல்லது தீம் தோல்வியடைந்தால், முழு போர்ட்ஃபோலியோ வருமானம் பாதிக்கப்படும். சந்தை சுழற்சி (Market Cycles) காரணமாக, சில ஆண்டுகள் தொடர்ச்சியான மோசமான செயல்திறன் காணப்படலாம் எவ்வளவு ஒதுக்கீடு செய்யலாம்? பொதுவாக, போர்ட்ஃபோலியோவில் தீமெட்டிக் மற்றும் செக்டார் ஃபண்டுகளுக்கு 5% முதல் 20% வரை மட்டுமே ஒதுக்கீடு செய்வது நல்லது. அதுவும், அந்தத் துறை / தீம் குறித்து ஆழமான புரிதல் இருந்தால், நீண்ட கால நம்பிக்கை (Conviction) இருந்தால், அதிக ஏற்ற இறக்கங்களை (Volatility) தாங்கும் மனநிலை இருந்தால் மட்டுமே இதில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள தொகையை லார்ஜ் கேப், ஃப்ளெக்ஸி கேப், மல்டி கேப் போன்ற பரவலான ஈக்விட்டி ஃபண்டுகளில் வைத்திருப்பது பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும்.செக்டார் ஃபண்ட் vs தீமெட்டிக் ஃபண்ட் – வேறுபாடு செக்டார் ஃபண்ட் vs தீமெட்டிக் ஃபண்ட் – வேறுபாடு தீமெட்டிக் மற்றும் செக்டார் மியூச்சுவல் ஃபண்டுகள், நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய வாய்ப்பு கொண்டவை. ஆனால் அதே சமயம், ரிஸ்க்கும் அதிகம். அதனால்: இவற்றை “முக்கிய முதலீடு” (Core Investment) ஆக அல்ல; கூடுதல் வாய்ப்பு முதலீடு” (Satellite Investment) ஆக 10%–20% அளவிலேயே சேர்க்க வேண்டும். உங்கள் முழு போர்ட்ஃபோலியோவை சமநிலையுடன் அமைத்து, பரவலான ஈக்விட்டி ஃபண்டுகளுடன் இணைத்து பயன்படுத்தினால், தீமெட்டிக் மற்றும் செக்டார் ஃபண்டுகள் உங்கள் செல்வ வளர்ச்சிக்கு ஒரு நல்ல துணையாக அமையும் எனலாம்.
வெற்றிப் பயணத்தில் பங்கு கொண்டுள்ள அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
அனைவருக்கும் பசுமை வணக்கம்! வாசகர்களாகிய உங்களின் பேராதரவோடு, 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, பசுமை விகடன். இந்த வெற்றிப் பயணத்தில் பங்கு கொண்டுள்ள அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி சொல்ல வேண்டிய நெகிழ்வான தருணம் இது. மாற்றம் ஒன்றே மாறாதது. பசுமை விகடனின் வருகைக்குப் பிறகு, கடந்த 19 ஆண்டுகளில் தமிழக வேளாண்மையிலும் மக்களின் உணவுப் பழக்கத்திலும் ஏற்படத் தொடங்கியுள்ள மாற்றங்கள் ஆத்ம திருப்தியும் நம்பிக்கையும் அளிக்கின்றன. ‘ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் வெற்றிகரமாக விளைச்சல் எடுக்க வாய்ப்பே இல்லை’ எனச் சத்தியம் செய்தவர்களும்கூட, இன்று இயற்கை விவசாயத்தில் லாபம் பார்த்து, இயற்கை விவசாயத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார்கள். இயற்கை வேளாண் விளைபொருள்களின் அவசியம் குறித்து மக்களிடம் பேரலை வீசுகிறது. பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள், நாட்டுக் காய்கறிகள், மரச்செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால் ஆகியவற்றுக்கு மக்களிடம் அமோக ஆதரவு உருவாகியுள்ளது. இத்தனை மாற்றங்களுக்கும் பசுமை விகடன் அச்சாணியாகவும் சாரதியாகவும் இருந்து வருகிறது எனக் கூறும் பலரும், இன்னும் பயணிக்க ஊக்கம் கொடுக்கிறார்கள். தமிழக வேளாண்மையும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும் மேம்பட, பசுமை விகடன் எழுத்துப்பணியோடு மட்டும் நின்றுவிடவில்லை. இயற்கை வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, பண்ணைத் தொழில்கள், நீர் மேலாண்மை, மதிப்புக்கூட்டல், மாடித்தோட்டம் என அனைத்து தளங்களிலும் கொடுத்த பயிற்சிகள் ஏராளம். மேலும்,விவசாயிகளுக்கு எதிரான அநீதிகளைக் கண்டித்து ஓங்கிக் குரல் கொடுப்பதிலும் பசுமை விகடன் முன்களப் போராளியாக நிற்கிறது. தற்போது 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பசுமை விகடன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் விவசாயிகள், வாசகர்கள், இயற்கை வேளாண் செயற்பாட்டாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் மற்றும் கால்நடை கல்வி நிறுவனத்தினர், அரசாங்கத்தின் பல்வேறு துறையினர், விளம்பரதாரர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம். என்றென்றும் இணைந்திருப்போம்... ஒரு பசுமை இயக்கமாக!
Doctor Vikatan: நோய் எதிர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் மிளகு, பூண்டும் வயிற்றைப் புண்ணாக்குமா?
Doctor Vikatan: உணவில் இயல்பிலேயே உணவில் மிளகு, பூண்டு, கிராம்பு போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதனால் எங்கள் வீட்டில் இவற்றை தினமும் மூன்று வேளை சமையலிலும் தவறாமல் பயன்படுத்துகிறோம். தவிர, பனிக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக நிலவேம்புக் குடிநீர் எடுத்துக்கொள்கிறோம். இதனால் வயிற்றெரிச்சலும் தொண்டை எரிச்சலும் அதிகரித்திருக்கிறது. நோய் பரவும் காலத்தில் இவற்றை எடுத்துக்கொள்வது சரிதானே... வயிற்றெரிச்சல் பிரச்னைக்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் நோய் எதிர்ப்பு சக்திக்காக எடுத்துக்கொள்ளும் பல உணவுகளும் உணவுக்குழாய் பாதையை பாதிக்கின்றன. நோயைத் தடுத்துவிடும் என்ற எண்ணத்தில் இப்படிப்பட்ட இயற்கை மருத்துவ முறைகளை பலரும் அளவுக்கு மீறிப் பின்பற்றுகிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைத்தான் இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மிளகும் பூண்டும் நிலவேம்புக் குடிநீரும் நல்லதுதான் என்பதற்காக அளவுக்குமீறியும் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. எதையுமே அளவோடு சேர்த்துக்கொள்வது சிறந்தது. நிலவேம்புக் குடிநீரை தொடர்ந்து அருந்தக்கூடாது, அவ்வப்போது இடைவெளிவிட்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களும் எச்சரிக்கிறார்கள். அதைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். உணவுகளைப் பொறுத்தவரை இந்த நேரத்தில் அதிக காரம், மசாலா சேர்த்தவற்றைத் தவிர்த்துவிடுவதுதான் சிறந்தது. சமையலில் பச்சைமிளகாயைக் குறைவாக உபயோகிக்கவும். இட்லி, இடியாப்பம், பருப்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற மைல்டான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்ளவேண்டும். நிலவேம்புக் குடிநீரை தொடர்ந்து அருந்தக்கூடாது, அவ்வப்போது இடைவெளிவிட்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். Doctor Vikatan: 20 வயது மகனுக்கு வாரம்தோறும் ஜலதோஷம்... நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன வழி? அசைவம் சாப்பிடுவோர் அவற்றைத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால், அவற்றையும் அதிக காரம், மசாலா, எண்ணெய் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவும். பழங்கள் அவசியம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். சிலருக்கு சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை ஏற்றுக்கொள்ளாது. அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடலாம். புரோபயாடிக் இருப்பதால் தினமும் 2 ஆப்பிள்கூட சாப்பிடலாம்.அதேபோல இந்த சீசனில் ஆவி பறக்ககும் வெந்நீர் குடிக்க வேண்டியதில்லை. மிதமான சூடுள்ள நீரல் போதும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கலாம். அசைவ உணவுக்காரர்கள் முட்டையும் சைவ உணவுக்காரர்கள் தினமும் சுண்டலும் சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் தேவையைப் பூர்த்தி செய்யலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
புதுச்சேரியில் பி.எம். சூரிய கர் திட்டத்தின் கீழ் சோலார் அமைக்க ₹78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. லிங்காரெட்டிப்பாளையம் மற்றும் காரைக்காம்பத்தூரில் நடைபெறும் விழிப்புணர்வு முகாம் குறித்த விவரங்கள்
அமெரிக்காவில் அவசரநிலை! உறைபனி, பனிப்புயல்!! 15 கோடி மக்கள் பாதிப்பு
அமெரிக்காவில் ஏற்கனவே உறைபனி நிலை ஏற்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், அங்கு பனிப்புயல் வீசவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் நியு மெக்ஸிகோ பகுதியில் வாழும் 15 கோடி மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை முதல் பிலடெல்பியா, நியூ யார்க், பாஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் கடும் உறை பனி காரணமாக சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளாகக் காட்சியளிக்கிறது. இதனால் சாலைகள் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. பல இடங்களில் பனிமழை பெய்து வருகிறது. இதனுடன், அமெரிக்காவின் […]
பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன்: டிரம்ப் மிரட்டல்
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா அமல்படுத்தினால் கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலால் கனடா, அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷியா கைப்பற்றிவிடும் என அவர் கூறி வருகிறார். ஐரோப்பிய நாடுகள். அமெரிக்கா மற்றும் உலக அமைதிக்கு கிரீன்லாந்து தங்கள் வசம் இருப்பது முக்கியம் என்று டிரம்ப் கூறி வருகிறார். மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால் கூடுதல் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டி வருகிறார். டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள கனடா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் வேளாண் பொருட்கள், மின்சார வாகனங்கள் தொடர்பாக சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்தச் செயற்பாடு அமெரிக்காவை கடும் சினம் கொண்டது.
நிலவின் தென் துருவம் முதல் சூரியன் வரை! உலகின் டாப் 4 நாடுகளில் இந்தியா - இஸ்ரோ தலைவர் பெருமிதம்!
கோவையில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ இயக்குநர் வி. நாராயணன், ககன்யான் திட்டத்தின் நிலை மற்றும் இந்தியாவின் எதிர்கால விண்வெளித் திட்டங்கள் குறித்துப் பேசினார். PSLV-C62 கோளாறு திட்டத்தைப் பாதிக்காது என உறுதி அளித்துள்ளார்.
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி; ஜூனில் கோயம்பேடு - பட் ரோடு: சென்னை மெட்ரோவின் 2026 மெகா ப்ளான்!
சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் கோயம்பேடு முதல் பட் ரோடு வரையிலான 12 கி.மீ மெட்ரோ பாதை 2026 ஜூன் மாதத்திற்குள் திறக்கப்பட உள்ளது. 13 உயர்த்தப்பட்ட நிலையங்கள் மற்றும் முதல் கட்டத்துடன் இணைக்கும் ஸ்கைவாக் வசதி குறித்த முழு விவரம்.
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகிய அமெரிக்கா
அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு ‘சீனாவுக்கு ஆதரவாக’ செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். மிகப்பெரிய நன்கொடையாளர் இது ஒரு வருடத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அதற்கு இல்லை என்றும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது உட்பட்டுள்ளது […]
சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: ‘மேரிபுஷபராணி ஆபிரகாம்’குடும்பத்தின் ஏமாற்று அம்பலமானது!
சுவிட்சர்லாந்தின் யுவர்டன்-லெ-பெய்ன்ஸ் (Yverdon-les-Bains) பகுதியில் வசிக்கும் மேரிபுஷபராணி ஆபிரகாம் (மட்டக்களப்பு) மற்றும் ஆப்ரகாம் (மாத்தளை) அவரது மகள் குடும்பத்தினர்… The post சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: ‘மேரிபுஷபராணி ஆபிரகாம்’ குடும்பத்தின் ஏமாற்று அம்பலமானது! appeared first on Global Tamil News .
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாகும் நடவடிக்கையை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நண்பனை லண்டன் அனுப்பிய லணடன் வாழ் இலங்கையர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது!
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) தனது விசா மற்றும் போர்டிங் பாஸை நண்பருக்குக் கொடுத்து, அவரை… The post நண்பனை லண்டன் அனுப்பிய லணடன் வாழ் இலங்கையர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது! appeared first on Global Tamil News .
ட்ரம்ப் அடித்துவிட்ட பொய் ; முற்றாக மறுக்கும் ஈரான்
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக அதிகரித்தது. இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் பலர் உயிரிழந்தனர். மரண தண்டனை போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. இதற்கிடையே தன்னுடைய தலையீடு காரணமாக ஈரான் 800 பேரின் மரண தண்டனையை நிறுத்தியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த […]
மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரானை நோக்கி செல்லும் மிகப்பெரிய அமெரிக்க கடற்படை
வாஷிங்டன், அமெரிக்கா – ஈரான் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு அதிகரித்து உள்ளது. ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.போராட்டத்தை ஒடுக்க. அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இதில் வன்முறை வெடித்தது. போராட்டம்-வன்முறையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.இதற்கிடையே ஈரானில் போராட்டக்கா ரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி […]
இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் பகீர் தகவல்; 4,289 சம்பவங்கள்!
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் தலைவி ப்ரீத்தி இனோகா ரணசிங்க, 2026 ஜனவரி மாதம் வரையில் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் இந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள வழக்குகள் குறித்த விபரங்கள் இந்த அறிக்கையில் உள்ளதாகத் தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இதன்படி, 2026 ஆம் ஆண்டு வரையில், நாடு முழுவதும் […]
கடல்சார் பாதுகாப்பில் முன்னணியில் அமெரிக்கப் படைகள்!
கரீபியன் கடல் பகுதியில் சட்டவிரோத எண்ணெய் கடத்தலில் ஈடுபடும் கப்பல்களை இடைமறித்து, தாய்நாட்டைப் பாதுகாக்கும் பணியில் அமெரிக்க ராணுவப்… The post கடல்சார் பாதுகாப்பில் முன்னணியில் அமெரிக்கப் படைகள்! appeared first on Global Tamil News .
2026 சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை - டிடிவி தினகரன் பரபரப்பு தகவல்!
2026 சட்டமன்றத்தேர்தல் களம் நாளுக்கு நாள் புது புது அரசியல் நிகழ்வுகளை கண்டு வருகிறது. இந்த சூழலில்தான் நேற்றைய தினம் நாட்டின் பிரதமர் தமிழகம் வந்தார். அதிமுக தலைமையில் உருவாகியுள்ள என்.டி.ஏ கூட்டணியை இறுதி செய்யும் விதமாக நேற்றைய தினம் கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
பாகிஸ்தான்: திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் – 5 பேர் பலி
லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் குரேஷி மூர் கிராமத்தில் நேற்று இரவு திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கிராமத்தலைவர் நூர் அகமது மெஷல் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சிக்கு உடலில் வெடிகுண்டுகளை மறைத்துக்கட்டிக்கொண்டு மர்ம நபர் வந்துள்ளார். அந்த நபர் திருமண நிகழ்ச்சியின்போது பலரும் நடனமாடிக்கொண்டிருந்தபோது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் […]
தமிழக அரசியல் : –அதிகாரம் தன்னைத் தக்கவைக்க எந்த முகமூடியையும் அணியும்!
தமிழக அரசியல் இன்று ஒரு விசித்திரமான நாடக அரங்கமாக மாறியுள்ளது. மேடையில் மாற்றம் போலத் தோன்றுகிறது; ஆனால் திரைக்குப்… The post தமிழக அரசியல் : – அதிகாரம் தன்னைத் தக்கவைக்க எந்த முகமூடியையும் அணியும்! appeared first on Global Tamil News .
DMK -வில் OPS? | Vijay உடன் இணையும் MGR விசுவாசி? | ADMK -வில் OPS ஆதரவு MP | TVK | IPS Vikatan TV
BEST SEBI REGISTERED ஆலோசகரை கண்டுபிடிப்பது எப்படி? AI ஆலோசனை பெற்று முதலீடு செய்யலாமா? IPS Finance
தமிழ்நாட்டில் அதிக முறை வென்ற எம்.எல்.ஏக்கள் யார் தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ!
தமிழ்நாடு அதிக முறை வென்ற எம்.எல்.ஏக்கள் டாப் 10 குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால் நேர்ந்த விபத்து ; 3 பேர் பலி
ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும், பனிப்பொழிவு காரணமாக சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடும் பனிப்பொழிவின்போது அந்நாட்டின் பெடர்போர்ன் நகரில் பெலிபீல்ட் அருகே மார்ஷ்பெல் – லிட்ச்னா சாலை சந்திப்பில் நேற்று வாகன விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து கார்கள், பைக்குகள், லாரிகள் என பல்வேறு வாகனங்கள் மோதின. இந்த […]
800 கிலோ சுறா மீன்களுடன் 7 பேர் கைது!
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 நபர்களை, வென்னப்புவ பகுதியில் வைத்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 876 கிலோ 200 கிராம் நிறையுடைய சுறா மீன் தொகுதி, பலநாள் மீன்பிடிப் படகொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட […]
சவுதியில் இனி வெளிநாட்டினரும் நிலம், வீடு வாங்கலாம்!
சவுதி அரேபியாவின் ‘விஷன் 2030’ (Vision 2030) திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்… The post சவுதியில் இனி வெளிநாட்டினரும் நிலம், வீடு வாங்கலாம்! appeared first on Global Tamil News .
“கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது நாட்டின் கல்வித்துறையில் நிலவும் ஒரு பாரதூரமான மற்றும் அதிர்ச்சிகரமான விடயத்தை நான் இந்தச்… The post ஆளும் தரப்பு VS எதிர்தரப்பு – மைத்திரி-ரணில்-சஜித் ஆட்சியில் அச்சிடப்பட்ட புத்தகத்திலும் தவறான இணைப்பு! appeared first on Global Tamil News .
TRB ஆண்டு அட்டவணை 2026 வெளியீடு; 2 முறை TET, உதவிப் பேராசிரியர் தேர்வு இடம்பிடிப்பு - முழு விவரம்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணை டிஆர்பி வெளியிட்டுள்ளது.
'மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு' - சென்னை உயர் நீதிமன்றம்
மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, பேறுகால விடுப்பு தொடர்பான தமிழக அரசின் அடிப்படை விதியில் மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது எனக் கூறி, மனுதாரருக்கு உரிய பணப்பலன்களுடன் ஓராண்டுக்கு விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இனிமேல் பேறு கால விடுப்பு கோரி வழக்குகள் வராத வகையில் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் அறிவுறுத்தி இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.
திறந்த வேகத்தில் மூடப்பட்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்
ஜப்பானில் உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) நிலையத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின்னர், ஜப்பானின் அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன. கட்டுப்பாட்டு தண்டுகள் தொடர்பான எச்சரிக்கை மணி இந்நிலையில், நிகாட்டா மாகாணத்தில் உள்ள இந்த அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் புதன்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டன. எனினும், உலை செயல்பாட்டுக்கு […]
அல்லு அர்ஜுன் கோலிவுட் என்ட்ரி! உச்சத்தை தொடும் மாஸ் பிளான்!
கோலிவுட்டின் சிம்மாசனத்தைக் குறிவைக்கும் அல்லு அர்ஜுன், அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படங்களில் நடிக்கிறார். விரிவான தகவல்கள் உள்ளே!

27 C