SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?

தமிழகம், புதுச்சேரியில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், `அந்த திட்டமே சரியில்லாத திட்டம். சாலைகளை சீரமைத்தாலே பயனுள்ளதாக இருக்கும்’ என்றார். செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த சீமான் தொடர்ந்து, `அது வளர்ச்சித் திட்டம்தானே…’ என்று நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, `உனக்கு அந்த வளர்ச்சி வேண்டும் என்றால் நீ போய் போராடி வாங்கிக்க…’ என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார் சீமான். அதையடுத்து SIR குறித்து மற்றொரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு, `SIR-ஐ மம்தா எதிர்க்கிறார். ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? SIR-ஐ செயல்படுத்தும் கட்சி எது ? அங்கன்வாடியில் வேலை செய்பவர்களையும், சத்துணவுக் கூடத்தில் வேலை செய்பவர்களையும் BLO-வாக நியமித்தது கணக்கெடுக்க அனுப்பியது யார்... தி.மு.க தானே…?’ என்றார் சீமான். அப்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிருபர், `தேர்தல் ஆணையம் சொல்வதைத்தானே அரசு செய்கிறது? அதேசமயம் தி.மு.க SIR-ஐ எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறதே?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, `அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா ? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்க வேண்டுமா ?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்த சீமான், அந்த செய்தியாளரை ஒருமையிலும், அருவருக்கத்தக்க தகாத வார்த்தையிலும் திட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து, `ஒரு மைக்கையும், கேமராவையும் எடுத்துட்டு வந்துட்டா நீ வெங்காயமா ?’ என்று கேட்டவாரே அந்த செய்தியாளரை அடிக்கப் பாய்கிறார். பத்திரிகையாளர்கள் புகார் அதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அந்த நிருபரை சூழ்ந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்கள். அத்துடன், `எங்கள் தலைவரிடம் இப்படியான கேள்விகளைக் கேட்டால் தீர்த்துக் கட்டிவிடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தனர். அதையடுத்து தாக்குதலுக்குள்ளான அந்த நிருபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நிருபர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று, பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.   செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்தது?

விகடன் 23 Nov 2025 8:11 pm

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி; மதுரையில் மைதானத்தை திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். வீரர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையிலும் மதுரையிலும் நடத்தப்படவுள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 24 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரை விளையாட்டு மைதான வளாகத்தில் 20 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1500 பேர் அமரும் வகையில் தற்காலிக கேலரி, 500 பேர் அமரும் வகையில் நிரந்தர கேலரி அமைக்கப்பட்டுள்ளது, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை, ஜிம், அவசர மருத்தவ மையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மைதானங்களில் 72 போட்டிகள் நடைபெற உள்ளது. வீரர்களுடன் மதுரையில் நவம்பர் 28 ஆம் தேதி ஜெர்மனி - ரஷ்யாவிற்கு இடையே உலகக் கோப்பைக்கான முதல் போட்டி கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து மதுரை மாவட்ட நிர்வாகம் செய்து வரும் நிலையில், மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மைதானத்தை திறந்து வைத்தார்.

விகடன் 23 Nov 2025 8:05 pm

`மதுரைக்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனையெல்லாம் அதிமுக ஆட்சியில்தான் வரும்!'- ராஜன் செல்லப்பா

திமுக நிர்வாகி சுட்டுக் கொல்லப்படுகிறார், திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் வழக்கு என ஒரே நாளில் ஊடகங்களில் பல செய்திகள் வருகிறது என்று திமுக குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியுள்ளார். ராஜன் செல்லப்பா மதுரை அவனியாபுரத்தில் அதிமுக 54 ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பேசும்போது, திமுக செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டும், திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு என ஒரே நாளில் பல செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் ரோப் கார் அமைக்க கடந்த ஆண்டு 23 கோடி ஒதுக்கப்பட்டும் வேலைகள் இன்னும் நடைபெறவில்லை. மதுரை வரும் முதலமைச்சர், ஒரு லட்சம் பேருக்கு பட்டா கொடுக்கப் போகிறாராம், முதலில் நீண்டகாலமாக பட்டா இல்லாத இப்பகுதி மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுங்கள். மெட்ரோ ரயில் திட்டம் வராததற்கு யார் காரணம்? விரிவான திட்ட அறிக்கையில் சரியான தகவலை கொடுத்திருந்தால் மெட்ரோ திட்டம் மதுரைக்கு வந்திருக்கும், மத்திய அரசு கூடுதல் தகவல் கேட்டு அறிக்கையை திருப்பி அனுப்பி உள்ளது. அதிமுக ஆட்சி வந்த பின்னர் மதுரையில் மெட்ரோ திட்டம் வந்தே தீரும், சந்தேகம் வேண்டாம். எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில்தான் வருகிறது, மூன்றாண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னேன், ஆனால் ஆளுகின்ற வாய்ப்பு இழந்துவிட்டதால், அதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். எடப்பாடி முதலமைச்சராக வந்த பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும். இன்னும் இரண்டு மாதங்களில் விடுபட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க போகிறார்களா? இன்னும் சில மாதங்களில் ஆட்சி முடிவடையப் போகிறது, அப்புறம் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாது. காவல்துறையை மிரட்ட முடியாது, பொய் வழக்கு போட முடியாது, மோசமான திமுக அரசுக்கு முடிவு காலம் வந்துவிட்டது. திமுக ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி பீடத்தில் இருந்ததாக வரலாறு இல்லை ஆனால், அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்துள்ளது. திமுகவிடம் நிர்வாகத் திறமையில்லை, போட்டோ சூட் மட்டும் எடுக்கிறார்கள். முதல்வர் பாதுகாப்புடன் நடுரோட்டில் செல்கிறார், ரெடிமேடாக பத்து கல்லூரிப் பெண்களை வரவழைத்து வணக்கத்தை போட்டுக்கொண்டு செல்கிறார், மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதே அவருக்கு தெரியவில்லை. பெண்களுக்கு இலவச பேருந்து என்றார்கள், பல இடங்களில் பேருந்தே ஓடவில்லை, 10 பேருந்துதான் மதுரையில் ஓடுகிறது, அதுவும் ஓட்டை பேருந்தாக உள்ளது. தயவுசெய்து இந்த வாரத்திற்குள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து விடுங்கள், எங்கள் நிர்வாகிகள் அதற்கு உதவி பண்ணுவார்கள். சாதாரணமாகவே திமுக-காரர்கள் மக்களை மதிக்க மாட்டார்கள், அதிலும் ஓட்டு இல்லையென்றால் கொஞ்சமும் மதிக்க மாட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மாதம்தோறும் உதவித் தொகை கொடுப்போம் என்றார்கள், கொடுத்தார்களா? உள்ளூர் மாடுகளை மதிப்பதில்லை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது உள்ளூர்காரர்களுக்கு டோக்கன் கொடுப்பதில்லை. இதற்கெல்லாம் முடிவு கட்ட அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.

விகடன் 23 Nov 2025 8:00 pm

SIR என்பது திணிக்கப்பட்ட அடக்குமுறை.. ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

தேர்தல் ஆணையத்தின் SIR சீர்திருத்தம் அல்ல, மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறை என்றும், வாக்குத் திருட்டைத் தடுக்காமல், மக்களைச் சோர்வடையச் செய்யும் சதி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சமயம் 23 Nov 2025 7:50 pm

வெளியேறிய அமைச்சர்

நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற… The post வெளியேறிய அமைச்சர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 7:31 pm

ஒரே ஒரு மரணத்தால் அதிர்ந்து போன அமெரிக்கா ; விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இறந்தவர் வயதானவர் என்றும், அவருக்கு ஏற்கனவே பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. H5N5 பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு H5N5 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக இதுவரை அறிக்கைகள் எதுவும் இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதன்படி அமெரிக்காவில் 9 மாதங்களில் […]

அதிரடி 23 Nov 2025 7:30 pm

`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!' - பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தெளிவாக அறிவிக்கப்படும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று நான் பேசியதை தவெக தலைவர் விஜய்யை பற்றி பேசியதாக சிலர் திரித்து விட்டனர். அவர் மட்டும்தான் சமீபத்தில் கட்சி தொடஙகியுள்ளாரா? இன்னும் சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜய் எங்கள் வீட்டுப் பையன் என்று எல்லா இடஙகளிலும் கூறி வருகிறேன். தற்போது அவர் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். அவர் தன்னை நிரூபித்து சாதிக்க வேண்டும். கரூர் சம்பவம் எல்லோர் மனதிலும் நீங்காத சோக வடுவை ஏற்படுத்தி உள்ளது. இனி எப்படி அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்க உள்ளோம். வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் பிரதிபலிக்குமா என்று என்னால் சொல்ல முடியாது. பீகாரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக ப.சிதம்பரம் கூறுகிறார், தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெறுகிறீர்கள், அதை மறுக்க முடியுமா? இந்த தேர்தல் நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும், வாக்குத் திருட்டு நடக்கக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.

விகடன் 23 Nov 2025 7:30 pm

பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது!

பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெற்ற பார்வையற்றோருக்கான மகளிர்… The post பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 7:28 pm

சற்றுமுன் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் கனமழை கொட்டி வரும் நிலையில் நவம்பர் 24ந் தேதி நாளை சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 23 Nov 2025 7:19 pm

தவெக விஜய் மக்கள் சந்திப்பு பேச்சை எப்படி பார்ப்பது? தராசு ஷ்யாம் விளக்கம்

தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் இன்று நடத்திய மக்கள் சந்திப்பின்போது பேசிய பேச்சு குறித்து தராசு ஷ்யாம் கொடுத்த விளக்கத்தை விரிவாக காண்போம்.

சமயம் 23 Nov 2025 7:15 pm

பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம்.. குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்குமா?

பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டறியப்பட்டதாக வெளியான ஆய்வு முடிவுகள் கவலைக்குரியவை அல்ல என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் டாக்டர் தினேஷ் கே. அஸ்வால் தெரிவித்துள்ளார்.

சமயம் 23 Nov 2025 7:10 pm

மண்சரிவால் சிதைந்து போன தமிழ் வர்த்தகரின் குடும்பம் ; ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை

பஹல கடுகன்னாவ கனேதென்ன பகுதியில் 22ஆம் திகதி காலை ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான சிசிடிவி காணொளி வௌியாகியுள்ளதுடன் தமிழ் வர்த்தகரின் வர்த்தக நிலையம் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகரின் குடும்பத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம் மீது விழுந்ததில் 10 பேர் குறித்த இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் இதன்போது 6 […]

அதிரடி 23 Nov 2025 6:30 pm

யாழில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ; நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

அராலி மத்தி, வட்டுக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக ஒரு சிறிய பணி செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு அற்ற நிலையில் இருந்த நன்னீர் கிணறு ஒன்றினை புனரமைத்து, நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர்த் தாங்கி அமைத்து குடிநீர் வழங்கல் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீருக்கு தட்டுப்பாடு அராலி கந்தஞானியார் ஆலயத்திற்கு உரித்தான காணியில் உள்ள இந்த கிணற்றினை சிலர் இணைந்து ரூபா 150000/- வரையான செலவில் இவ்வாறு தயார் செய்துள்ளனர். உண்மையிலேயே யாழில் பல பகுதிகளில் குடிநீருக்கு […]

அதிரடி 23 Nov 2025 6:21 pm

பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ கைது!

ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ நேற்று சனிக்கிழமை… The post பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 5:58 pm

தவெக விஜய் தான் காரணம்.. டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்!

கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு விஜய்யின் தாமதமே காரணம் என திமுக மூத்த தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக மீது மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளை விஜய் முன்வைத்து உள்ளார்.

சமயம் 23 Nov 2025 5:56 pm

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்!

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்.!

விகடன் 23 Nov 2025 5:43 pm

9 வளைவு பாலத்தை ஒளிர வைப்பதில் சிக்கல்

தனியார் நிலம் வழியாக மின்சார கேபிள்களை நிறுவுவது தொடர்பான சிக்கல்கள் காரணமாக, பதுளை – தெமோதரை பகுதியிலுள்ள 9 வளைவு பாலத்தை மின் விளக்குகளால் ஒளிரச் செய்யும் திட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியம் அறிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பாலத்தையும் அதன் சுற்றுப்புறங்களை ஒளிரச் செய்வதற்காக கட்டப்பட்ட மின்மாற்றிக்கு, மின்சாரம் வழங்க தேவையான மின்சார கேபிள்களை இடுவதற்கு தனியார் நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த தாமதம் ஏற்பட்டதாக மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் […]

அதிரடி 23 Nov 2025 5:31 pm

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் தடவிய மருத்துவர் –அடுத்து நடந்தது என்ன?

காயத்தில் தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்கை மருத்துவர் தடவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபெவிக்விக் மருத்துவம் உத்தரப்பிரதேசம், மீரட்டில் உள்ள ஜக்ருதி விஹார் காலனியில் சர்தார் ஜஸ்பிந்தர் சிங்கின் குடும்பம் வசிக்கிறது. சம்பவத்தன்று அவரது இரண்டரை வயது மகன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் டேபிளின் விளிம்பில் மோதியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனையடுத்து குழந்தையை உடனடியாக அருகிலுள்ள பாக்யஸ்ரீ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது ​​பணியில் இருந்த மருத்துவர், […]

அதிரடி 23 Nov 2025 5:30 pm

யாழில் இரவோடிரவாக கைது செய்யப்பட்ட பெண் ; அதிர்ச்சி கொடுத்த நீண்ட கால பின்னணி

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் 10 லீற்றர் கசிப்புடன் 42 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றிரவு(22) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 23 Nov 2025 4:54 pm

The Ashes: முதல் டெஸ்டில் வெற்றிபெற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.17 கோடி நஷ்டம்; காரணம் என்ன?

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கியது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியை, ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய முக்கிய பவுலர்கள் இல்லாதபோதும் தனி ஒருவராக சாய்த்தார் மிட்செல் ஸ்டார்க். Australia vs English - Ashes 33 ஓவர்களில் வெறும் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து, வார்னர் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் யாரை ஓப்பனிங் இறக்கினாலும் கிளிக் ஆகாததால் ஓப்பனிங்கில் அவரையே ஒரங்கட்டிவிட்டு அறிமுக வீரர் நேதன் மெக்ஸ்வீனி மற்றும் மார்னஸ் லபுஷேனை இறக்கினார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். ஆனால், இந்த முறையும் ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமே, முதல் ஓவரிலேயே மெக்ஸ்வீனி டக் அவுட் ஆனார். அங்கிருந்து சரிவர ஆஸ்திரேலியா இங்கிலாந்தை விட மோசமாக ஆடி முதல் நாள் முடிவில் 39 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஷஸ் தொடரின் கடந்த 100 வருட வரலாற்றில் முதல் முறையாக முதல் நாளிலேயே 19 விக்கெட்டுகள் வீழ்ந்த போட்டியாக இது அமைந்தது. அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் 132 ரன்களில் 10-வது விக்கெட்டையும் ஆஸ்திரேலியா இழந்தது. அதைத்தொடர்ந்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸைப் போலவே அதிரடியாக ஆட முயன்று 35 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் ஓப்பனிங் செட் ஆகாததை உணர்ந்த ஸ்மித் லபுஷேனுக்குப் பதில் டிராவிஸ் ஹெட் டை ஓப்பனிங்கில் அனுப்பினார். Australia vs England - Ashes ஹெட் அதிரடியாக ஆடி 69 பந்துகளில் சதமடிக்க, ஒன் டவுனில் நிதானமாக லபுஷேன் அரைசதமடிக்க 28 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா. முழுமையாக இரண்டு நாள் கூட இல்லாமல் போட்டி முடிவுக்கு வந்தது. ஐந்து நாள் டெஸ்ட் போட்டி முழுமையாக இரண்டு நாள்களுக்குள் முடிந்தது விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குள் டெஸ்ட் போட்டி முடிந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு அந்நாட்டு டாலர் மதிப்பில் சுமார் 3 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17.35 கோடி ரூபாய் ஆகும்.

விகடன் 23 Nov 2025 4:53 pm

அதிமுக தனபாலுக்கு என்ன ஆச்சு? எடப்பாடி பழனிசாமி மீது கோபமா? காரணம் இதுதான்...

அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி மீது அக்கட்சியின் மூத்த தலைவர் தனபால் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 23 Nov 2025 4:51 pm

அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு!

தனது 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளாா். உக்ரைன் அரசு ஏற்கெனவே நிராகரித்திருந்த பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள கெடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டிரம்ப் கூறியதாவது: போா் நிறுத்தம் தொடா்பான வரைவு திட்டத்தை உக்ரைன் வரும் வியாழக்கிழமைக்குள் (நவ. 27) ஏற்க வேண்டும். அதுதான் சரியான நேரம். அந்த தேதிக்குள் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்காவிட்டால் அந்த […]

அதிரடி 23 Nov 2025 4:30 pm

சாண்ட்ராவை கதறவிட்ட பிக் பாஸ், கூலா வேடிக்கை பார்த்த விஜய் சேதுபதி: இதை சத்தியமா எதிர்பார்க்கலயே

பிக் பாஸ் 9 வீட்டில் இருக்கும் சாண்ட்ராவை கதற விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். சாண்ட்ரா அழுததை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களே அவார்டா கொடுக்கிறாங்க, இப்படி நடிக்கிறீங்க என கேட்டிருக்கிறார்கள்.

சமயம் 23 Nov 2025 3:53 pm

டெல்டாவெதர்மேன் மழை அப்டேட்: அடுத்த 30 மணி நேரம் வெளுக்க போகும் கனமழை- எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த 30 மணி நேரத்திற்கு தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என டெல்டாவெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்தெந்த மாவட்டங்கள் என்று விரிவாக காண்போம்.

சமயம் 23 Nov 2025 3:47 pm

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது.

சமயம் 23 Nov 2025 3:42 pm

பிரேஸில் முன்னாள் அதிபா் போல்சோனாரோ கைது!

ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இது குறித்து பிரேஸில் மத்திய காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஊழல், பணமதிப்பிழப்பு, சதி திட்டம் உள்ளிட்ட குற்றங்களுக்காக முன்னாள் அதிபா் பொல்சொனாரோவைக் கைது செய்தோம். 2022 தோ்தலில் தோல்வியடைந்த பிறகு அவா் அமைதியான ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை வரும் 25-ஆம் தேதி தொடங்கும். […]

அதிரடி 23 Nov 2025 3:30 pm

TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் தவெகவினரை திமுகவினர் மற்றும் சில கட்சிகள் 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு விமர்சிப்பது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் விஜய். இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், நம்ம தவெக இளம் தோழர்கள், GEN Z கிட்ஸ் தவெக தோழர்களை எல்லாம் ‘தற்குறிகள்’ என சொல்லி நல்லா வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் அவர்கள் தற்குறிகள் அல்ல, நம்ம பசங்க - திமுக எம்.எல்.ஏ எழிலன் சொல்லும் லாஜிக்! சமீபத்துல ‘அறிவுத் திருவிழா’னு ஒன்னு நடத்துனாங்க. சாரி, அது ‘அவதூறு திருவிழா’. அதுல இப்போ, ‘அவங்க தற்குறிகள் இல்லை. அவங்கள அப்படி சொல்லாதீங்க. அங்க ஒன்னும் சங்கிகள் கிடையாது’னு ஒரு குரல். அவங்க கட்சியோட அறிவுக் கண்ணை திறந்து வைக்கிற மாதிரி பேசியிருக்கிறார் அவங்களோட எம்.எல்.ஏ. யாருடா அதுனு பார்த்தா, அவர் நம்ம தவெக கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாள் அவர்களோட சொந்தக்காரராம். அவர் நமக்கு ஆதரவாகப் பேசுகிறார். அந்த ஆதரவுக் குரல் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுலையும் இனி எதிரொலிக்கும். சும்மா பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டுதான்.  ‘மர்மயோகி’ படத்துல எம்.ஜி.ஆர் ‘குறி வைத்தால் தவறவிடமாட்டேன். தவறு என்றால் குறியே வைக்க மாட்டேன்’ என்பார். அப்படித்தான் இந்த விஜய்யும். ‘ஏன்டா இந்த விஜய்யை தொட்டோம். ஏன்டா விஜய் கூட இருக்க அந்த மக்களை தொட்டோம்’ என நினைச்சு நினைச்சு வருத்தப்பட போறாங்க.  அரசியல் புரிதல் நமக்கு இல்லைனு சொல்றாங்க. நான் ஒன்னு கேட்குறேன், ‘மக்கள் எல்லாரும் உங்களுக்குத் தற்குறிகளா?’.  எங்களுக்கு ஓட்டு போடுகிற மக்கள் தற்குறிகள் என்றால், அதே மக்கள்தானே இவ்வளவுநாள் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. அவங்க தற்குறிகளா? மக்களுக்கு நீங்க கொடுக்கிற மரியாதை இதுதானா? `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்! இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்க அரசியலையே கேள்விக் குறியாக்க போறாங்க. இவங்க எல்லாம் தற்குறிகள் இல்லை, தமிழ்நாட்டின் ஆச்சர்யக் குறிகள். மாற்றத்திற்கான அறிகுறிகள்.  சும்மா லாஜிக்கே இல்லாம ‘தற்குறி தற்குறி’னு சொல்லிட்டு இருக்கக் கூடாது என்று 'தவெக' வினரை 'தற்குறிகள்' என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துப் பேசியிருக்கிறார் விஜய்.

விகடன் 23 Nov 2025 3:08 pm

பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப்படி பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆபாச வீடியோ இந்த நிலையில், வழக்கு தொடர்பாக வெளியூர் சென்று வந்த பெண் ஆய்வாளர் ஒருவர் பயணப்படிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முருகனிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அன்றைய தினம் இரவு புதிய செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆய்வாளர், சம்பந்தப்பட்ட எண் குறித்து புகார் அளித்திருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் பணியாற்றி வந்த முருகனின் எண் என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆபாச வீடியோக்களை முருகன் அனுப்பியதை உறுதி செய்த காவல்துறையினர், முருகன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். முருகன் பிண்ணனி குறித்து தெரிவித்த காவல்துறையினர், டிராவல் அலவன்ஸ் விண்ணப்பத்தில் சம்மந்தப்பட்ட லேடி இன்ஸ்பெக்டர் தன்னுடைய செல்போன் எண்ணை எழுதியிருக்கிறார். இதை கவனித்த முருகன், எண்ணை செல்போனில் ஏற்றி வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

விகடன் 23 Nov 2025 2:38 pm

ஆடையில்லா காட்சிக்காக நடிகை மீராவிடம் மன்னிப்பு கேட்ட மோகன்லால்: ஏன் தெரியுமா?

தன்மாத்ரா படத்தில் வந்த ஆடையில்லா காட்சியில் நடித்த மோகன்லால் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக நடிகை மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார். மோகன்லால் ஏன் மன்னிப்பு கேட்டார் என தெரிந்து கொள்ளுங்கள்.

சமயம் 23 Nov 2025 2:31 pm

விபத்தில் சிக்கிய மணமகள் –மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய மணமகன்

மணமகள் விபத்தில் சிக்கியதால், மருத்துவமனையில் வைத்து மணமகன் தாலி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய மணமகள் கேரள மாநிலம் ஆலப்புழாவின் கொம்முடியை சேர்ந்த ஆவணி(Aavani) என்பவருக்கும், தம்பொலியை சேர்ந்த ஷரோன்(Sharon) என்பவருக்கும், ஆலப்புழாவில் உள்ள சக்தி ஆடிட்டோரியத்தில் நேற்று முன்தினம் மதியம் 12.12 மணிக்கு திருமணம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலையில், மணப்பெண் அலங்காரத்திற்காக ஆவணி தனது குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தை […]

அதிரடி 23 Nov 2025 2:30 pm

புத்தர் சிலை படும்பாடு –நிலாந்தன்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மகாசங்கத்தின் பலத்தைக் காட்டியிருக்கிறது.தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நம்பமுடியாது என்பதை… The post புத்தர் சிலை படும்பாடு – நிலாந்தன். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 2:06 pm

ஹிங்குல கடுகண்ணாவ அனர்த்தத்தில் 6 பேர் மரணம்!

மாவனல்லை கடுகண்ணாவ பிரதேசத்தில் சனிக்கிழமை 22ஆம் திகதி காலை மண்சரிவு மற்றும் பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம்… The post ஹிங்குல கடுகண்ணாவ அனர்த்தத்தில் 6 பேர் மரணம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 2:05 pm

தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தையொட்டி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு… The post தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 2:02 pm

குடும்பபெண்ணின் உயிரை பறித்த பேருந்து

ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும், பஸ் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். ஹங்குரன்கெத்த – ஹலங்வங்குவ பகுதியில் நேற்று (22) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை விபத்தில் காயமடைந்தவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் உள்ளடங்குவதாகபபொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த 45 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக ஹங்குரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு […]

அதிரடி 23 Nov 2025 1:54 pm

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் ; CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன. இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான […]

அதிரடி 23 Nov 2025 1:52 pm

கிருஷ்ணகிரி: நடுராத்திரியில் நடுங்க வைத்த பெண் குரல்... வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த போலீஸ்!

கி ருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அர்ஜுனன் வீடு அமைந்திருக்கும் தெருவுக்குள் புகுந்து அவரின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, `சார்... சார்... நான் அடிப்பட்டு வந்துருக்கேன் சார். என் பேரு மீனாட்சி. காப்பாத்துங்க, ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்...’ என சத்தமாக பேசினார். அதைத்தொடர்ந்து, ஜெகதேவி சாலைப் பகுதிக்குச் சென்றவர் அங்கு இருந்த ஆண் நபரிடம் பேசுவதை போன்ற காட்சிகளும் அர்ஜுனன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குரல் பதிவுடன் தெளிவாக பதிவாகியிருந்தன. வைரல் வீடியோ காட்சி பெண்ணின் நடவடிக்கைகளைப் பார்த்து, அர்ஜுனனும், அவரின் மனைவியும் `கொள்ளையர்களாக இருப்பார்களோ...?’ என அச்சத்துக்குள்ளாகி, கதவைத் திறக்காமல் வீட்டுக்குள் இருந்தபடியே தங்கள் மகனுக்குப் போன் செய்திருக்கின்றனர். அவரும் தனது செல்போனில் சிசிடிவி காட்சிகளை பார்த்துவிட்டு, `கதவைத் திறக்க வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களின் வழியாக வேகமாக பரவியதால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள். உண்மைத்தன்மை அறியாமல், ஊடகங்களும் திரும்பத் திரும்ப அந்த வீடியோவை பகிர்ந்து, மக்களை பயத்திலேயே வைத்திருந்தது. இந்த நிலையில், வைரல் வீடியோ குறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``மேற்கண்ட பெண் மிட்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 20-ம் தேதி இரவு அந்தப் பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவரின் கணவரும், உறவினர்களும் சேர்ந்து அடித்ததில் அந்தப் பெண் உள்காயம் அடைந்தார். காவல்துறை விளக்க அறிக்கை பர்கூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தண்ணீர் தாகம் எடுத்த காரணத்தினால் எம்.ஜி.ஆர் நகர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்குள்ள வீடுகளின் கதவைத் தட்டி உதவி கேட்டிருக்கிறார். பின்னர் அவர் பர்கூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேற்கண்ட குற்றச் சம்பவம் தொடர்பாக, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, மேற்கண்ட செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். சமூக வலை தளங்களில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விகடன் 23 Nov 2025 1:47 pm

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அவர் கூறினார். இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

அதிரடி 23 Nov 2025 1:40 pm

Ajith: வெனிஸில் அஜித்துக்கு ஜெண்டில்மென் டிரைவர் விருது! - மேடையில் அஜித் வைத்த கோரிக்கை என்ன?

நடிகர் அஜித் குமார் தற்போது ரேசிங் களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றிருந்த அவருக்கு எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித். அஜித் குமார் அவர் விருது வென்றிருப்பது குறித்து அவருடைய மனைவி ஷாலினி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “வெனிஸில் என் கணவருக்கு ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்படும் போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமைகிடைக்கிறது. தொழிலதிபரும் ரேசிங் டிரைவருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அஜித் பேசுகையில், “இங்கு இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அன்பான நபர், அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022) என்னுடைய குடும்பத்திற்கும், என் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கும் மீடியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நானொரு கோரிக்கையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேசிங் சீரிஸ்களைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். இப்படியான சீரிஸ்களை நடத்துவதற்கு நாங்களும் விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவிற்குச் செல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.” எனக் கூறினார்.

விகடன் 23 Nov 2025 1:40 pm

ஊட்டச்சத்து பற்றாக்குறை: சூடானில் 23 குழந்தைகள் மரணம்

சூடானின் மத்திய கோா்டோஃபான் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்குள் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக 23 குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோா்டோஃபான் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடா்பான பாதிப்புகளால் உயிரிழந்தன. இந்தப் பகுதியில் ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மனிதாபிமான நிலைமை மோசமடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் […]

அதிரடி 23 Nov 2025 1:30 pm

Nigeria: நைஜிரியாவில் ஒரே பள்ளியில் 315 பேர் கடத்தல்! - பெரும் அச்சத்தில் மக்கள்

நைஜிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜிரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய கடத்தல் சம்பவம் இதுதான் எனவும் கூறப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நைஜிரிய கிறிஸ்துவ சங்கம் முதலில் 227 நபர்கள் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தது. Nigeria people பின்பு, எண்ணிக்கை சரிபார்க்கையில் மொத்தமாக 303 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருப்பதாக உறுதி செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட மாணவர்களுக்கு எட்டு முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை இப்படியான மூன்று கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை குறித்தான அச்சமும் எழுந்திருக்கிறது. நைஜிரியாவின் நைஜர் மாநிலத்திலுள்ள செயின்ட் ஆகஸ்டின் பள்ளியின் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அருகிலிருக்கும் மற்றொரு பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தி 25 மாணவிகளை கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து நைஜர் மாநில ஆளுநர் மொஹம்மது உமர் பாகோ, “போலீசார் எத்தனை பேர் மொத்தமாக கடத்தப்பட்டிருக்கிறார்கள் என சரிபார்த்து வருகிறார்கள். நைஜர் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டிருக்கிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தற்போது அரசின் முதன்மை நடவடிக்கையாக உள்ளது. அருகிலுள்ள பல மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதேபோன்ற உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளோம்.” என்று தெரிவித்தார். இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்த தனது வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்திருக்கிறார். நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் பணத்திற்காகத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் இந்தக் கடத்தல் கும்பல் தொடர்ந்து இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்போது நைஜர் மாநிலத்தில் நடந்திருக்கும் இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய நைஜர் மாநில காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நைஜிரியாவில் தொடர்ந்து கிறிஸ்துவர்கள் கொலைச் செய்யப்பட்டு வருவது குறித்து சமீபத்தில் பேசிய டிரம்ப், நைஜீரியா அரசு கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை தொடர்ந்து அனுமதித்தால், அமெரிக்கா தன்னுடைய அனைத்து உதவி, ஆதரவுகளையும் உடனடியாக நிறுத்தும். மேலும், தேவையானால், அமெரிக்கா அந்த நாட்டுக்குள் நுழைந்து, இந்த கொடூர தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகளை முற்றிலும் ஒழித்துவிடவும் செய்யும். என எச்சரித்து இருந்தார்.

விகடன் 23 Nov 2025 12:49 pm

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 48 மருத்துவ இடங்கள்; தேசிய மருத்துவ ஆணையத்திடம் நிரப்ப கோரிக்கை

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இடங்களை நிரப்ப 4 சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 48 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப அனுமதி கோரப்பட்டுள்ளது.

சமயம் 23 Nov 2025 12:44 pm

விஜய் சேதுபதியிடம் பார்வதியை மாட்டிவிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்: என்ன பஞ்சாயத்துனு தெரியுமா?

வார இறுதி நாட்கள் வந்தாலே போட்டியாளர்களை விட்டுவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பார்வையாளர்கள்.

சமயம் 23 Nov 2025 12:42 pm

தவெகவிற்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ? தற்குறி இல்ல, விஜய் சொன்ன பிளாஸ்ட் மூமண்ட்!

திமுகவின் அறிவுத் திருவிழாவில் அக்கட்சி எம்.எல்.ஏ எழிலன் பேசியது தொடர்பாக தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தவெகவிற்கு ஆதரவாக பேசியதால் திமுக தலைமையே குழம்பி போயிருப்பதாக விமர்சித்திருக்கிறார்.

சமயம் 23 Nov 2025 12:32 pm

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண பந்தத்தில் இன்று (23) இணைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளுடன் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ உட்பட இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

அதிரடி 23 Nov 2025 12:18 pm

புனே: தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளர்!

தெருவில் எதாவது பொருள் கிடந்தால் உடனே எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்வது வழக்கம். அதுவும் பணம் என்றால் ஒரு ரூபாய் கிடந்தால் கூட விடமாட்டார்கள். ஆனால் புனேயில் தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சத்தை தூய்மைப் பணியாளர் ஒருவர் கண்டுபிடித்து அதனை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். புனே சதாசிவ் பேட் பகுதியில், அஞ்சு மானே என்ற பெண் ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை சேகரிக்கும் வேலையை செய்து வருகிறார். அவர் வழக்கம்போல் ஒவ்வொரு வீட்டிலும் குப்பையை வாங்கிக்கொண்டு வந்தபோது சாலையில் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. உடனே அதில் எதாவது மருந்து இருக்கலாம் என்று கருதி அதனை எடுத்து தனது வண்டியில் தனியாக வைத்தார். சிறிது நேரம் கழித்து அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் மருந்தும், கட்டுக்கட்டாக பணமும் இருந்தது. உடனே அந்த பகுதியில் உள்ளவர்களிடம் யாராவது பணம் இருந்த பையை தவறவிட்டார்களா என்று அஞ்சு விசாரித்தார். அப்போது ஒருவர் மிகவும் பதட்டத்துடன எதையோ தேடிக்கொண்டு வந்தார். அவரது பதட்டத்தை பார்த்த அஞ்சு அவரிடம் என்னவென்று விசாரித்தார். உடனே அவர் தான் பேக்கை தவறவிட்டுவிட்டதையும், அதில் பணம் மற்றும் மருந்து இருந்ததை தெரிவித்தார். உடனே பணத்திற்கு சொந்தக்காரர் அவர்தான் என்பதை அறிந்து கொண்ட அஞ்சு அந்த பேக்கில் என்னவெல்லாம் இருந்தது என்பதை கேட்டு உறுதி செய்துகொண்டு அதனை அவரிடம் ஒப்படைத்தார். அவர் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுத்துக்கொள்ளவில்லை. பேக்கில் ரூ.10 லட்சம் இருந்தது. பணத்திற்கு சொந்தக்காரர் மிகவும் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார். அப்பெண்ணின் இந்த தன்னலமற்ற செயலை பாராட்டி உள்ளூர் மக்கள் சிறிய பாராட்டு விழா எடுத்தனர். அதில் அவருக்கு ஒரு சேலையும், சிறிது ஊக்கத்தொகையும் கொடுத்தனர். கடந்த 20 ஆண்டுகளாக அஞ்சு புனே மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை சேகரித்து வருகிறார்.

விகடன் 23 Nov 2025 11:52 am

தனுஷ் மூஞ்சி 'LF' மூஞ்சினு சொன்ன தேரே இஷ்க் மெய்ன் இயக்குநர், ஹீரோயின்: அவர் முகம் என்ன அப்படியா இருக்கு?

தன் முகத்தை பற்றி க்ரிட்டி சனோன், ஆனந்த் எல். ராய் சொன்ன விஷயத்தை தேரே இஷ்க் மெய்ன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து, என் முகம் என்ன அப்படியா இருக்கிறது என்று கண்ணாடியை பார்த்ததாக கூறினார் தனுஷ்.

சமயம் 23 Nov 2025 11:52 am

நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய்

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு என்பதால், பலத்த பாதுகாப்புடன் சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் தொழில்நுட்ப தனியார் கல்லூரி வளாகத்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பவுன்சர்கள் பணியில் நிறுத்தப்பட்டு இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட ஓய்வு பெற்ற காவல்துறையினர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சார்பில் கடந்த நான்கு நாட்களாக தவெகவின் தொண்டரணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அந்தத் தொண்டரணியினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியிருக்கும் விஜய், 'நாட்டுக்காக உழைக்கவே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில்தான் நாள் முழுக்க கண்ணா இருந்தார்' என்று எம்.ஜி.ஆர் அண்ணாவைப் பற்றி பாடலில் சொன்னார். அப்படிப்பட்ட அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். அறிஞர் அண்ணா ஆரம்பிச்ச கட்சியை, அவருக்குப் பிறகு கைப்பற்றி இப்போ என்னவெல்லாம் பண்றாங்கனு எல்லாரும் பார்த்துகிட்டுதான் இருக்காங்க. நான் எந்தக் கட்சியை சொல்றேனு எல்லாரும் தெரியும்னு நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவங்களுக்கும், எங்களுக்கும் எந்த சண்டையும், வன்மமும் இல்லை. ஆனால், மக்களை நம்பவச்சு நம்மள ஓட்டு போட வச்சு துரோகம் பண்றவங்கள, நாடகம் ஆடுறவங்கள எப்படி கேள்வி கேட்கமால் இருக்க முடியும். பேரறிஞர் அண்ணா, 'மக்களிடம் செல், மக்களுக்கு சேவை செய்' என்றார். அதை மறந்துவிட்டார்கள் அவர்கள். நாம்தான் அதைச் செய்கிறோம். கொள்கை இல்லைனு சொல்றாங்க. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ, சமூகநீதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எங்கள் தவெக கட்சி. CAA எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நிதிமன்றம்வரை நீதி கேட்டு போனோம், கல்விய மாநில பட்டியல்ல சேர்க்கனும்னு சொன்னோம், சமத்துவம், சமவாய்ப்பு என நீதிகேட்ட தவெக விற்கு கொள்கை இல்லையா? விஜய் கொள்கைய வெறும் பேச்சுல மட்டும் பேசிட்டு இருக்காங்க. இவங்க கொள்கையே கொள்ளைதானே. 'எங்க கட்சி சங்கர மடம் இல்லைனு' சொன்னது யாரு? யார் சொன்னாங்க, எதுக்கு சொன்னாங்க. இப்போ உங்க கட்சியில என்ன நடக்குதுனு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அதுனால 'பாப்பா பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாத பாப்பா. நீ நல்லவர்களைப் போல நடிப்பதைப் பார்த்து நாடே **** பாப்பா' னு சொன்னதையே இன்னும் சீர்யஸ எடுத்துகிட்டு இருக்கீங்க. நாங்க இன்னும் உங்கள விமர்சனம் பண்ணாவே ஆரம்பிக்கல. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே. அதுக்குல்ல அலறுனா எப்படி? என்று 'திமுக' வை தாக்கிப் பேசியிருக்கிறார் விஜய்.

விகடன் 23 Nov 2025 11:50 am

விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி.. அரங்கம் அதிர்ந்த விஜய் பேச்சு!

தனது கொள்கைகளை அடகு வைத்தது தான் திமுக.விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி தவெக தலைவர் விஜய் தெரிவிமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படிவித்துள்ளார்.

சமயம் 23 Nov 2025 11:46 am

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள்… அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், பட்டப்படிப்பு- விஜய் போட்ட லிஸ்ட்!

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சி தலைவர் விஜய் 2026 தேர்தல் வாக்குறுதிகளாக சிலவற்றை முன்வைத்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் மக்களின் நிலை குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.

சமயம் 23 Nov 2025 11:45 am

இனி இவர்களுக்கும் கிராஜுட்டி கிடைக்கும்.. ஒரு வருடம் வேலை செய்தாலே வரும்!

நிரந்தர ஊழியர்களுக்கு கிராஜுட்டி பணம் கிடைப்பதைப் போல இனி தற்காலிக ஊழியர்களுக்கும் கிராஜுட்டி பணம் வழங்கப்படும்.

சமயம் 23 Nov 2025 11:43 am

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண் –மிரண்ட பயணிகள்

எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பெண் பயணி ஒருவர் மேகி சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகி சமையல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பெண் பயணி ஒருவர் எலெக்ட்ரிக் கெட்டிலை பயன்படுத்தி மேகி சமைக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது. அதில் சமையலறை எங்கு வேண்டுமானாலும் உள்ளது” என்று மகிழ்ச்சியுடன் பேசிய அந்த பெண், ஒரே கெட்டிலில் 15 பேருக்கு டீ போடும் திட்டத்தையும் பகிர்ந்து கொண்டார். அத்துமீறிய பெண் இதனைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு விதிகள் […]

அதிரடி 23 Nov 2025 11:30 am

தமிழர் பகுதியொன்றை உலுக்கிய சம்பவம் ; குடும்ப பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட பெரும் கொடூரம்

பொத்துவில் பொலிஸ் பிரிவின் ஹுலன்னுகே 12வது தூண் பகுதியில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை நேற்று (22) நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஹுலன்னுகே பொத்துவில் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஆவார். நடந்து வரும் விசாரணையில், இந்தக் கொலை தனிப்பட்ட தகராறில் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக 59 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 23 Nov 2025 11:09 am

யாழில் நான்கு இளைஞர்கள் அதிரடி கைது

யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 4 பேர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். மேலதிக விசாரணை கைதானவர்கள் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 22,24 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதிரடி 23 Nov 2025 11:08 am

24 மணிநேரத்திற்குள்..! வங்கதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

வங்கதேச நாட்டில், 24 மணிநேரத்துக்குள் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் அருகிலுள்ள பைபைல் எனும் பகுதியை மையமாகக் கொண்டு நேற்று (நவ. 22) காலை 10.36 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பெரியளவில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, வங்கதேசத்தில் நேற்று முன்தினம் காலை […]

அதிரடி 23 Nov 2025 10:30 am

மகாராஷ்டிரா: `நீங்கள் ஓட்டை குறைத்தால், நான் நிதியை குறைத்துவிடுவேன்'- அஜித் பவார் எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு வரும் 2ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மாலேகாவ் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில துணை முதல்வர் அஜித் பவார்,''மத்தியிலும், மாநிலத்திலும் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. பிரதமர், முதல்வர் மற்றும் இரு துணை முதல்வர்கள் இணைந்து இதனை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நிச்சயம் வளர்ச்சி ஏற்படும். எங்களது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்தால் திட்டங்களை நிறைவேற்ற நிதிக்கு எந்த வித பற்றாக்குறையும் இருக்காது என்று உறுதியளிக்கிறேன். எங்களது வேட்பாளர்கள் அனைவரையும் நீங்கள் தேர்வு செய்தால் நான் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்றுவேன். நீங்கள் எங்களது வேட்பாளர்களுக்கு வாக்கை குறைத்தால் நானும் நிதியை குறைத்துவிடுவேன். நீங்கள் வாக்களிக்கும் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். நான் நிதி வழங்கும் அதிகாரத்தில் இருக்கிறேன். இப்போது என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்''என்றார். அஜித்பவாரின் இக்கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து சிவசேனா(உத்தவ்) சட்டமேலவை உறுப்பினர் அம்பாதாஸ் தன்வே கூறுகையில்,''மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்து திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அஜித்பவார் அவரது வீட்டில் இருந்த பணத்தையா கொடுக்கிறார். இது போன்று அஜித்பவார் போன்ற தலைவர்கள் மக்களை மிரட்டினால் தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். இதே போன்று ஜால்னாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, தனது கட்சி வேட்பாளர்களுக்கு முன் வரிசையில் இருக்கைகளை எடுத்து போடும்படி போலீஸாருக்கு அஜித்பவார் உத்தரவிட்ட வீடியோ ஒன்றும் வைரலாகி இருக்கிறது. அதில் யார் எங்களது வேட்பாளர்கள் என்று தெரியவில்லையா என்றும் அஜித்பவார் கேட்டுள்ளார். ஓட்டு போடவில்லையெனில் நிதி ஒதுக்கமாட்டேன் என்று கூறியது குறித்து அஜித்பவார் அளித்துள்ள விளக்கத்தில், தேர்தல் பிரசாரத்தில் இது போன்று கூறுவது ஒன்றும் புதிதல்ல, நான் வாக்காளர்களை மிரட்டவில்லை என்றும், ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவருக்கு தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதியளிக்க அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் வாக்குறுதியளிக்க அதிகாரம் இருந்தாலும், யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் அஜித்பவார் தெரிவித்துள்ளார். அஜித்பவார் இதற்கு முன்பு சட்டமன்ற தேர்தலில், நீங்கள் எனக்கு ஓட்டுப்போட்டுவிட்டதால் நான் உங்களுக்குறியவனாக மாறிவிடமாட்டேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

விகடன் 23 Nov 2025 10:26 am

அசைவ உணவோட தலைநகரம் சென்னை 'தாஷமக்கான்’ பகுதி; ராப் இசை கலைஞராக நடிச்சிருக்கேன் -ஹரிஷ் கல்யாண்

'லிஃப்ட்’ படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. டைட்டில் ஏதும் முடிவு செய்யப்படாமல் படப்பிடிப்புப் பணிகள் நடந்து வந்தன. இப்படத்தினை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க இடா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தாஷமக்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் இந்நிலையில் இப்படத்திற்கு 'தாஷமக்கான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் குறைந்த விலையில் நல்ல சுவையான அசைவ உணவுகளுக்குப் பெயர்போன ஏரியாதான் இந்த 'தாஷமக்கான்’. இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் ஹரிஷ் கல்யாண், என் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸுக்கு இப்படி தனியாக நிகழ்ச்சி நடத்துறது இதுதான் முதல்முறை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'தாஷமக்கான்’ ஏரியா பற்றி நிறையபேர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதோட உலகம்பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரியாது. அங்கிருந்துதான் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அசைவ உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அசைவ உணவு தலைநகரம் என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் நான் ராப் இசைப் பாடகராக நடிச்சிருக்கேன். பல இளம் ராப் இசைக் கலைஞர்களுடன் பழகி, அவர்களைப் பார்த்து அவர்களுடைய அசைவுகள், ஸ்டைல், ராப் பாடும் விதம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். யோகி பி, ஹிப் ஹாப், ரஹ்மான் சார் என எல்லோரும் ராப் இசையைக் கேட்டிருப்போம். இன்னைக்கு ராப் இசை நல்லா வளர்ந்திருக்கு. அறிவு, அசல் கோளாறு, பால் டப்பா எனப் பலர் உலகளவில் பிரபலமாகிட்டாங்க. ராப் இசை மூலமாக புரட்சியே பண்ணுறாங்க. அப்படியான ராப் இசை கலைஞராக நான் நடித்திருக்கிறேன். நிறையபேர் இந்தப் படத்தோட கதையக் கேட்டுட்டு நடிக்கல, ஒரு சவாலாக எடுத்து இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். வடசென்னை பற்றி நிறையபடம் வந்திருக்கு, ஆனால் இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வரும் என்று பேசியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

விகடன் 23 Nov 2025 9:35 am

பிக் பாஸ்ல இருந்து கெமி வெளியேற்றம்:தயவு செஞ்சு இனியும் 'அந்த வார்த்தையை' சொல்லாதீங்க விஜய் சேதுபதி

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் கெமியை வெளியேற்றியுள்ளனர். மேலும் திவ்யாவை விளாசும்போது விஜய் சேதுபதி பயன்படுத்திய வார்த்தை சரியில்லை என்று புகார் எழுந்திருக்கிறது.

சமயம் 23 Nov 2025 9:34 am

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு.. பவுன்சர்களுக்கு விஜய் போட்ட ஆர்டர் - பலத்த பாதுக்காப்பு

காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்திக்க உள்ளார். இதனால் பாதுக்காப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சமயம் 23 Nov 2025 9:31 am

பெங்களூரு ஏடிஎம் வாகன கொள்ளை சம்பவம்: 3 பேர் கைது –ரூ. 5.76 கோடி பறிமுதல்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜேபி நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப ரூ. 7.11 கோடி பணத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவன வானத்தில் கடந்த 19ம் தேதி ஊழியர்கள் சென்றனர். அந்த வாகனத்தில் டிரைவர், துப்பாக்கியுடன் கூடிய 2 பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர். இதனிடையே, ஜெயநகர் அருகே அசோக் பில்லர் பகுதியில் சென்றபோது அந்த வாகனத்தை சொகுசு காரில் வந்த சிலர் இடைமறித்தனர். ரிசர்வ் வங்கி, […]

அதிரடி 23 Nov 2025 9:30 am

நாவாந்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மண்ணுக்காய் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர், உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.நீக்கிளஸ் சனசமூக நிலையத்தில் கெளரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது. நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பதிவு 23 Nov 2025 9:02 am

Doctor Vikatan: குழந்தையின்மைக்கும் உணவுப்பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் கருத்தரிக்கவில்லை. பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டோம், பலனில்லை. என் தோழி, என் உணவுப்பழக்கத்தை மாற்றும்படி அறிவுறுத்துகிறாள். உணவுப்பழக்கத்துக்கும் கருத்தரித்தலுக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? கருத்தரிக்க விரும்புவோர், எப்படிப்பட்ட உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நீங்கள் உட்கொள்ளும் உணவுகளுக்கும் கருத்தரித்தல் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நீங்கள் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதாக நினைக்கலாம், ஆனால், சில உணவுகளும், அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களும் உங்கள் ஹார்மோன்களைக் குலைத்து, உடலில் அழற்சியை (Inflammation) ஏற்படுத்தி, முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை நாளடைவில் சேதப்படுத்தலாம். கருத்தரிக்கும் திட்டத்தில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உணவு விஷயத்தில் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.  வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை ரொட்டி, பேக்கரி பொருள்கள், சர்க்கரை பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை இன்சுலின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்து, இன்சுலின் எதிர்ப்புக்கு (Insulin Resistance) வழிவகுக்கும். இது பிசிஓஎஸ் (PCOS), கருமுட்டை வெளியேறுவதில் குறைபாடு மற்றும் விந்தணுவின் இயக்கக் குறைவு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.  இவற்றுக்குப் பதிலாக, பழங்கள், பேரீச்சம்பழம், பனை வெல்லம் (அளவோடு), மற்றும் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட இனிப்பு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். பாக்கெட் உணவு பொரித்த உணவுகள், பாக்கெட் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், வனஸ்பதி (Margarine) மற்றும் துரித உணவுகளில் டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு காணப்படும். அது கருப்பையை பாதித்து, ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தி, கருத்தரிக்கும் திறனையும் பாதிக்கும். எனவே, அத்தகைய உணவுகளையும் தவிர்க்க வேண்டும். செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது மிக நல்லது. சிலருக்கு, பால் பொருள்கள் அழற்சியை அதிகரிக்கலாம். பால் ஒவ்வாமை இருக்கலாம். பால் குடித்த பிறகு வயிறு உப்புசம், சோர்வு அல்லது முகப்பரு ஏற்பட்டால் பால் உணவுகளைத் தவிர்த்து, அவற்றுக்கு மாற்றாக, பாதாம் பால், தேங்காய்ப் பால் போன்றவற்றை பயன்படுத்தலாம்.  குளூட்டன் அதிகமுள்ள கோதுமை, மைதா, பார்லி ஆகியவை சிலருக்கு குடலில் அழற்சியை உண்டாக்கி ஹார்மோன் சமநிலையின்மையைத் தூண்டும். அவர்கள், சிறுதானியங்கள், சிவப்பு அரிசி, கினோவா, மற்றும் பயறு வகைகளைப் பயன்படுத்தலாம். மதுப் பழக்கமும் அதிக காபி குடிக்கும் பழக்கமும் ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கத்தை அதிகரிக்கும். விந்தணுவின் தரத்தையும் குறைக்கலாம். பாக்கெட் உணவு ப்ரிசர்வேட்டிவ் சேர்த்த உணவுகள், பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றில் Xenoestrogens எனப்படும் ரசாயனங்கள் இருக்கும். இவை ஈஸ்ட்ரோஜெனைப் போலச் செயல்பட்டு, உங்கள் நாளமில்லாச் சுரப்பி அமைப்பை (Endocrine System) சீர்குலைக்கும். எனவே, எப்போதும் வீட்டில் ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதே சிறந்தது. சமைத்த உணவுகளை கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கன்டெய்னர்களில் வைத்திருப்பது சிறந்தது. மேற்குறிப்பிட்ட விஷயங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய ஆபத்தில்லாதவை போலத் தெரியலாம். நீண்டகாலம் இவற்றுக்கு உட்படும்போது அவை நிச்சயம் உங்கள் கருத்தரித்தல் திறனை பாதிக்கலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட்? - இவை உடலில் செய்யும் மாற்றங்கள் என்ன?

விகடன் 23 Nov 2025 9:00 am

கடுகன்னாவ மண்சரிவின் உயிரிழப்பு அதிகரிப்பு ; பல்கலை விரிவுரையாளரும் சடலமாக மீட்பு

கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில், ஒருவர் முன்னதாகவே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் , மண்ணுக்குள் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் 10 மணி நேர மீட்புப் பணியின்போது மேலும் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இராணுவம், தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்தவர்களில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் எனத் தெரியவருகின்றது.

பதிவு 23 Nov 2025 8:50 am

தேசிய மற்றும் மத ஒற்றுமையைக் கட்டியெழுப்ப தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனையின்றி ஆதரவு

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் இலங்கை தினத்திற்காக தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தல் மற்றும் கருத்துகள், பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நேற்றைய தினம் சனிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து “இலங்கை தினம்” கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து இலங்கை தினக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றமை, இதில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் பிரதிநிதிகளாலும் பாராட்டப்பட்டதுடன், இது தொடர்பாக தமது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக'தேசிய செயற்பாடு மற்றும் நாட்டில் தேசிய மற்றும் மத ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு நிபந்தனையின்றி தாம் ஆதரவளிப்பதாகவும் பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் இலங்கை தின தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடு குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அரசியல், மத மற்றும் கலாசார பன்முகத்தன்மைக்கு அப்பால், அனைவரும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் உருவாக்குமாறு ஏற்பாட்டுக் குழுவிற்கு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதிர ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி மனோ கணேசன் மற்றும் பழனி திகம்பரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ரிஷாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம் காங்கிரஸைபிரதிநிதித்துவப்படுத்தி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, இலங்கை தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி காதர் மஸ்தான், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமிர்தநாதன் அடைக்கலநாதன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளையதம்பி ஸ்ரீநாத், கவிந்தரன் கோடீஸ்வரன், டி.ரவிஹரன் மற்றும் சுயாதீனக் குழுவின் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

பதிவு 23 Nov 2025 8:47 am

காஞ்சிபுரத்தில் தவெக விஜய் மக்கள் சந்திப்பு… கரூருக்கு பின் முதல் கூட்டம்- QR கோடு கட்டுப்பாடு!

கரூர் நிகழ்விற்கு பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் தவெக தலைவர் விஜய் வருகை புரிந்து மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

சமயம் 23 Nov 2025 8:44 am

நீங்கள் ‘ஆம்’என்று மட்டும் சொன்னால் போதும்; இந்திய வம்சாவளி மேயரிடம் சமாதானமான ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தானியை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப்-ஐ ‘பாசிஸ்ட்’ என மம்தானியும், மம்தானியை கம்யூனிஸ்ட் என ட்ரம்ப்பும் விமர்சித்தனர். மம்தானி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நியூயார்க்கிற்கான நிதி குறைக்கப்படும் என ட்ரம்ப் தேர்தலுக்கு ஒரு நாள் முன் மிரட்டினார். வெள்ளை மாளிகையில் சந்திப்பு இருப்பினும் நியூ யார்க் மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியராக மம்தானியை தங்கள் மேயராக தேர்ந்தெடுத்தனர். இந்த சூழலில் வெள்ளை […]

அதிரடி 23 Nov 2025 8:30 am

BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?

இந்த வார எவிக்ஷனுக்கான நேரம் வந்துவிட்டது. வார இறுதி எபிசோடுகளுக்கான ஷூட் நேற்று காலை தொடங்கியது. விஜய் சேதுபதியுடன் பிரஜின் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோவும் இணையத்தில் வைரலானது. பிக் பாஸ் சீசன் 9-ல் வி.ஜே. பார்வதி, பிரவீன் காந்தி, வாட்டர்மெலன் திவாகர், கனி, கெமி என மொத்தமாக 20 போட்டியாளர்கள் முதலில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். BB TAMIL 9 சோசியல் மீடியா பிரபலங்களே பிக் பாஸ் நிறைந்திருப்பதால் இந்த சீசன் கொஞ்சம் டல் அடிக்கிறது என்கிற பேச்சு எழுந்தது. அதைத் தொடர்ந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு நிகழ்ச்சிக்கு கொஞ்சம் பரபரப்பாகவே நகரத் தொடங்கியது. இந்த வார எவிக்ஷனுக்கான டிஸ்கஷன் வழக்கம் போல நடந்திருக்கிறது. இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்திருந்தது. அமித் பார்கவ், அரோரா, திவ்யா கணேஷ், கனி, கெமி, பிரஜின், ரம்யா ஜோ, சபரி, சாண்ட்ரா, சுபிக்ஷா, விக்ரம், வியானா, வி.ஜே. பார்வதி என 13 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் 13 பேர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதால் யார் வெளியேறுவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. BB Tamil 9 பார்வையாளர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இந்த வாரம் கெமி வெளியேறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ராஜ், திவாகர் என 7 பேர் எவிக்ட் ஆகியிருக்கிறார்கள். பிக் பாஸ் வீடு செட் ஆகாததால் நந்தினி முதல் வாரத்தில் அவராகவே வெளியேறினார். ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாக்குகளைப் பெற்ற கெமி இந்த வாரம் எவிக்ட் ஆகியிருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

விகடன் 23 Nov 2025 8:10 am

கோவை செம்மொழி பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எப்போது திறக்கப்படும்?

கோவை செம்மொழி பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எப்போது திறக்கப்படும்? என்பது தொடர்பாக அமைச்சர் கே என் நேரு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சமயம் 23 Nov 2025 8:08 am

Rain Alert: இந்த 16 மாவட்டங்களில் இன்று காலை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (நவ.22) காலை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. Rain Alert கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு; திமுக செய்த தவறு... - எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணிவரை இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று சென்னையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

விகடன் 23 Nov 2025 8:05 am

வெளிநாடொன்றில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வொண்டிப் பகுதியில், வவுனியாவைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவர் மற்றும் 36 வயதான பெண் ஒருவர் நள்ளிரவு வேளையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை குறித்த இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றிருந்தாலும், அவர்கள் மீண்டும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்துவந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதே நேரத்தில், பிரான்ஸ் அரசாங்கம் மனைவி மற்றும் அவளது இரு குழந்தைகளுக்காக வழங்கி வந்த சமூக நல உதவித் தொகைகளை மனைவி தொடர்ந்து பெற்றுவந்ததாகவும் பொலிசார் […]

அதிரடி 23 Nov 2025 8:03 am

IND vs SA ODI: ‘கில் நீக்கம்’.. கேப்டன் இடத்துக்கு 2 பேர் போட்டி: குட்டி கோலிக்கு அடித்த ஜாக்பாட்.. திடீர் சேர்ப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இருக்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், குட்டி கோலியை சேர்க்க வாய்ப்புள்ளதாம்.

சமயம் 23 Nov 2025 7:44 am

பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்ய முயன்ற நபர்; நரிக்குடியில் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன்‌ பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி‌ வருகிறார். இந்நிலையில் நரிக்குடி‌ பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அப்துல் அஜீஸிடம் மந்திரிக்க சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை அப்துல் அஜீஸ் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அப்துல் அஜீஸ் தான் வைத்திருந்த சிறிய கத்தியை வைத்து அந்த பெண்ணை கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். அப்துல் அஜீஸ் அந்த இளம் பெண் வலி தாங்க முடியாமல் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அப்துல் அஜீஸை பிடித்து நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த அந்த இளம் பெண் திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரிக்குடி காவல் நிலைய போலீசார் அப்துல் அஜீஸை‌ கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நரிக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விகடன் 23 Nov 2025 7:42 am

'மாஸ்க்', 'மிடில் க்ளாஸ்', எல்லோ' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்களின் விமர்சனங்கள் இங்கே!

இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் 'மாஸ்க்', அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'தீயவர் குலை நடுங்க', முனிஸ்காந்தின் 'மிடில் க்ளாஸ்', 'பிக் பாஸ்' பூர்ணிமா ரவியின் 'எல்லோ' ஆகியத் தமிழ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'சிசு' படத்தின் சீக்வெலான 'சிசு - ரோட் டு ரிவெஞ்ச்' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அப்படங்களின் விகடன் விமர்சனங்களை இங்கு பார்ப்போமா... MASK மாஸ்க்: அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது இப்படம். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று சென்னையிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறார்கள். டிடெக்டிவாக இருக்கும் வேலு (கவின்), என்.ஜி.ஓ வைத்திருக்கும் பூமி (ஆண்ட்ரியா), எம்.எல்.ஏ மணிவண்ணன் (பவன்) எப்படி இந்த கொள்ளைக்குச் சம்பந்தப்படுகிறார்கள், இந்த கொள்ளைச் சம்பவத்தை உண்மையாகவே நிகழ்த்தியது யார் என்பதுதான் இந்த 'மாஸ்க்' படத்தின் கதை. இயக்குநர் நெல்சனின் வாய்ஸ் ஓவர், ஐடியா என சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் திரைக்கதையில் இந்த 'மாஸ்க்' ஆங்காங்கே சறுக்கியிருக்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். தீயவர் குலை நடுங்க: எழுத்தாளராக இருப்பவரின் கொலை வழக்கை விசாரிக்க காவல் அதிகாரியான மகுடபதி (அர்ஜூன்) களத்தில் இறங்குகிறார். எழுத்தாளர் எழுதி வைத்த புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்களை கொலைக் காரணங்களாகக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் இவர். உண்மையான கொலையாளி யார், எதற்காக கொலை செய்தார் என்பதைச் சொல்கிறது இந்த 'தீயவர் குலை நடுங்க'. கணிக்கக்கூடிய திருப்பங்கள், டெம்ப்ளேட் திரைக்கதையாலும் பார்வையாளரை இப்படம் சோர்வடையச் செய்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review எல்லோ: தந்தையின் உடல்நிலை பிரச்னைகளால் குடும்பப் பொறுப்புகள் ஆதிரையை (பூர்ணிமா ரவி) சூழ்ந்துவிடுகின்றன. தந்தையின் பழைய ஆல்பத்தில் இருக்கும் புகைப்படம் இவரை கேரளத்துக்கு பயணப்பட வைக்கிறது. பயணத்தின் போது சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் இவருடைய ஆசைகளுக்கு உதவுகிறார். இவர்களின் பயணம் எங்கெல்லாம் இவர்களை அழைத்துச் செல்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. ஃபீல் குட் டிராமாவாக நகரும் இந்த 'எல்லோ' திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ஆழமிருந்திருந்தால் பலருக்கும் பேவரிட்டாகியிருக்கும். படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். மிடில் க்ளாஸ்: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காரல் மார்க்ஸ், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சொந்த ஊரில் செட்டிலாக வேண்டும் என்பதே இந்த மிடில் க்ளாஸ் குடும்பத் தலைவரின் கனவாக இருக்கிறது. அப்படியான வேளையில், இவருடைய தந்தையால் இவருக்கு ஜாக்பாட் அடிக்கிறது. ஆனால், அது கைகளுக்கு கிடைக்காமல் சில பிரச்னைகளையும் இழுத்து விடுகிறது. இறுதியில் அந்த ஜாக்பாட் இவர்களின் கைகளுக்கு கிடைத்ததா என்பதுதான் இதன் கதை. காமெடி, எமோஷனல் என குழம்பும் திரைக்கதையால் இந்த 'மிடில் க்ளாஸ்' ஓகே மட்டுமே சொல்ல வைக்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் சிசு ரோட் டு ரிவெஞ்ச் (SISU - Road To Revenge): கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'சிசு' படத்தின் சீக்வெல்தான் இத்திரைப்படம். இரண்டாம் உலகப் போரில் இறுதியில் இறந்துப் போன தனது குடும்பத்தின் நினைவாக கட்டைகளால் செய்யப்பட்ட அவருடைய வீட்டை தகர்த்துவிட்டு அதை வைத்து வேறொரு இடத்தில் வீடு கட்ட திட்டமிடுகிறார். கட்டைகளை எடுத்துச் செல்லும் வேளையில் அடாமி கார்பிக்கு (ஜால்மரி டாமிலா) பழைய எதிரிகளால் பல தடைகளும், பிரச்னைகளும் வருகின்றன. அதை கடந்து எப்படி மற்றொரு பகுதிக்கு சென்று வீட்டை எழுப்பினார் என்பதுதான் இதன் கதை. வழக்கமான ஆக்‌ஷன் படங்களின் கதை சொல்லலை தவிர்த்து புதிய திரைமொழிக் கொண்டு சொல்லும் இடத்தில் இந்த 'சிசு' தனித்து நிற்கிறது படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

விகடன் 23 Nov 2025 7:17 am

சிவகாசி: நடுரோட்டில் ரீல்ஸ் எடுத்து விபத்தை உண்டாக்கிய இருவர் கைது

சிவகாசி அருகே சாலையில் சண்டையிடுவது போல் நடித்து இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை பார்த்த பைக்கில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, ரீல்ஸ் வீடியோ எடுத்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி–ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இரு இளைஞர்கள் சண்டையிடுவது போல் நடித்து வீடியோ பதிவு செய்துள்ளனர். அப்போது அவ்வழியே டூ-வீலரில் சென்ற நபர் சண்டையை உண்மையென நினைத்து பார்த்தபோது, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த தனியார் பேருந்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. பைக் விபத்தில் சிக்கியதை பார்த்த இளைஞர்கள் இருவரும் சிரித்துக் கொண்டு வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். பைக் விபத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மல்லி போலீஸார், சிவகாசி அருகே அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜன் மற்றும் வடபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீடியோ எடுத்த நபரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சாலையில் சண்டை போட்டு ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்; விபத்தில் சிக்கிய பயணி - சிவகாசியில் சோகம்

விகடன் 23 Nov 2025 7:16 am

கடுகண்ணாவ அனர்த்தத்தில் பலியான பேராதனை பல்கலை விரிவுரையாளர்

நேற்றைய தினம், கடுகண்ணாவவில் ஏற்பட்ட பாறை சரிவில் உயிரழந்த 6 பேரில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு என்பவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடுகண்ணாவவில் இருந்த ரொட்டி கடை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் கடை மீது பாரிய பாறை ஒன்று விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த கார் அவர்களில், கண்டி தர்மராஜா வித்தியாலயத்தில் […]

அதிரடி 23 Nov 2025 7:14 am

கடுகண்ணாவ மண்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கியிருந்த மேலும் இருவர், சற்றுமுன்னர் உடலங்களாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

அதிரடி 23 Nov 2025 7:12 am

வடவள்ளி - மருதமலை வரை சாலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் எதிர்ப்பு!

கோவை மாவட்டம் வடவள்ளி - மருதமலை வரை அமைக்கப்படும் சாலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 23 Nov 2025 7:01 am

எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட்? - இவை உடலில் செய்யும் மாற்றங்கள் என்ன?

சாதம், பிரெட், காய்கறி, பழங்கள், குளிர்பானங்கள் என நாம் உட்கொள்ளும் எந்த ஓர் உணவிலும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கார்போஹைட்ரேட் என்றாலே உடலுக்குக் கெடுதி என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. கார்போஹைட்ரேட் என்றால் என்ன, எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட் என்று தெரிந்துகொண்டால், இந்த தவறான எண்ணம் மறையும்; உணவுப் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளலாம். எது நல்ல கார்போஹைட்ரேட்; எது கெட்ட கார்போஹைட்ரேட்? காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் - நல்லது நல்ல கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து எனப்படுவது, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட். இதன் ரசாயனக் கட்டமைப்பு மற்றும் நார்ச்சத்து போன்றவை காரணமாக, நம்முடைய செரிமான மண்டலமானது இதைச் செரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால், கலோரியானது நீண்ட நேரத்துக்கு வெளியாகிறது. இயற்கை வடிவில் உள்ள உணவுப் பொருட்களை நல்ல கார்போஹைட்ரேட் எனலாம். • முழு தானியங்கள் • பட்டைதீட்டப்படாத அரிசி • பச்சைக் காய்கறிகள் • பழங்கள் எது நல்ல கார்போஹைட்ரேட்; எது கெட்ட கார்போஹைட்ரேட்? நல்ல கார்போஹைட்ரேட் - என்ன பயன்? நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. மிகக் குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டது. மிகக் குறைவான கலோரியிலேயே உட்கொண்ட நிறைவு கிடைக்கும். இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. சிம்பிள் கார்போஹைட்ரேட் - கெட்டது எளிதில் செரிமானம் ஆகும் வகையில் உருமாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ‘எளிய கார்போஹைட்ரேட்’ எனப்படும். இவற்றை உட்கொண்டதுமே செரிமானம் ஆகி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். இப்படி கலக்கப்படும் சர்க்கரையை, நம் செல்கள் உடனடியாகப் பயன்படுத்தாவிடில், இவை கொழுப்பாக மாற்றப்படும். எது நல்ல கார்போஹைட்ரேட்; எது கெட்ட கார்போஹைட்ரேட்? பதப்படுத்தப்பட்ட, பட்டைதீட்டப்பட்ட, செயல்பாட்டுக்கு உள்ளான உணவுகள் (Processed food) அனைத்துமே சிம்பிள் கார்போஹைட்ரேட் உணவுகள்தான். Healthy Food: இதயம் தொடங்கி வயிறு வரைக்கும் நல்லதே செய்யும் பாசிப்பருப்பு! • சாக்லேட், இனிப்பு வகைகள் • மைதா பொருட்கள் • சர்க்கரை • கார்பனேட்டட் பானங்கள் Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? சிம்பிள் கார்போஹைட்ரேட் என்கிற கெட்ட கார்போஹைட்ரேட் ஏன் கெடுதல்? ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து இல்லை. கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம். பயன்படுத்தப்படாத கலோரிகள் கொழுப்பாக மாற்றப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.

விகடன் 23 Nov 2025 6:56 am

நாகூர் தர்கா கந்தூரி விழா- சிறப்பு ரயில்களை இயக்க நாகை எம்பி தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை!

நாகூர் தர்கா கந்தூரி விழா நடைபெற்று வருவதை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க நாகை எம்பி தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமயம் 23 Nov 2025 6:51 am

சென்னையில் ₹14.03 கோடி செலவில் புதிய பேருந்து நிறுத்தங்கள்- மாநகராட்சி ஏற்பாடு!

சென்னையில் பல்வேறு இடங்களில் 14. 03 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

சமயம் 23 Nov 2025 6:31 am

சென்னை மெட்ரோவுக்கு வரும் புதிய ரயில்கள்... டெண்டர் வெளியிட்ட நிர்வாகம்!

சென்னை மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ முடிவு செய்து உள்ளது. இதற்கான டெண்டரை சிஎம் ஆர் எல் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

சமயம் 23 Nov 2025 5:57 am

நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள் ; பயணிகள் பலர் படுகாயம்

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். செக் குடியரசின் பிளென் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு செஸ்கே புடெஜோவிஸ் (Česk Budějovice) நோக்கிப் பயணித்தது. பயணிகள் பலர் படுகாயம் அந்த ரயில் தனது இலக்குக்கு அருகில் சென்றபோது, அதே ரயில் மார்க்கத்தில் வந்த மற்றொரு ரயில் நேருக்கு நேர் மோதியது. இந்த திடீர் மோதலில் பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து […]

அதிரடி 23 Nov 2025 5:49 am

பிராட்வே-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் BRTS அமைப்பு- முன்னோட்ட பணிகள் தொடக்கம்!

சென்னையில் முக்கிய போக்குவரத்து வழித்தடமான பிராட்வே முதல் பூந்தமல்லி வரை விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் பிஆர்டிஎஸ் அமைப்பானது செயல்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு உள்ளது.

சமயம் 23 Nov 2025 5:32 am

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் தொடங்கிய ஸ்டார்ட்அப்

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்கியுள்ளார். விண்வெளி பயணங்களில் அதிகரித்து வரும் விண்வெளி குப்பைகள் (space debris) பிரச்சினையை தீர்க்க, ஜேர்மனியின் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் லியோனிடாஸ் அஸ்கியானாகிஸ் (Leonidas Askianakis) புதிய ஸ்டார்ட்அப் ஒன்றை தொடங்கியுள்ளார். அஸ்கியானாகிஸ் நிறுவிய Project-S நிறுவனம், பூமியைச் சுற்றி உள்ள 1 செ.மீ முதல் 10 செ.மீ அளவுள்ள சிறிய துண்டுகளை கண்டறிய உயர் உணர்திறன் கொண்ட ரேடார் மற்றும் தனித்துவமான அல்காரிதம் பயன்படுத்தும் […]

அதிரடி 23 Nov 2025 3:30 am

ஈரான் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரான் நாட்டு பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள், நபா்களின் நிதிச் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஈரான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது அந்நாட்டு பிராந்திய பயங்கரவாதத்தை ஊக்குவித்து அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘ஈரான் பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இந்தியா, பனாமா, செஷல்ஸ் போன்ற […]

அதிரடி 23 Nov 2025 1:30 am

ஹமாஸ் பயன்படுத்திய ரகசிய சுரங்கம் வெளிச்சம் ; இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியீடு

இஸ்ரேலியத் தற்காப்பு படைகள் காசா பகுதியில் ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சுரங்கத்தில் 2014 ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி ஒருவரின் உடல் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ரஃபா பகுதிக்கும், பள்ளிவாசல் ஒன்றுக்கும் கீழ் இந்தச் சுரங்கம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 7 கிலோமீற்றர் நீளமும் 25 மீற்றர் ஆழமும் கொண்ட இந்த சுரங்கம் 80 அறைகளையும் கொண்டது. ஹமாஸ் தளபதிகள் ஆயுதங்களை சேமிக்கவும், தாக்குதல்களை […]

அதிரடி 23 Nov 2025 12:30 am

எல்லை மீள் நிர்ணயமும் முஸ்லிம் பிரதேசங்களும்

மொஹமட் பாதுஷா மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பரவலாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலிலும் அரசாங்கம் இன்னும் தேர்தலை இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றது. அடுத்த வருடம் தேர்தலை நடத்த முடியும் என்பதுதான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகபட்ச அறிவிப்பாகும். அரசாங்கம் பல்வேறு காரணங்களினால் உடனடியாக மாகாண சபை தேர்தலுக்குச் செல்வதற்கு விரும்பவில்லை எனச் சொல்லப்படுகின்றது. சில ‘முக்கிய தரப்புக்களை’ வைத்துத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இராஜதந்திரிகளுக்கு அரச தரப்பில் தேர்தலுக்கான தாமதங்கள் பற்றி விளக்குவதற்கும் முயற்சிகள் […]

அதிரடி 23 Nov 2025 12:30 am

தமிழ்நாடு தேர்தலில் திமுகவிடம் விசிக கேட்கும் தொகுதிகள்? திருமாவளவன் போடும் கணக்கு இதுதான்...

எதிர்வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு திருமாவளவனின் விசிக கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து முக்கிய தகவலை விரிவாக காண்போம்.

சமயம் 23 Nov 2025 12:03 am