SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

மொஜ்தபா, நெதன்யாகு நிலை என்ன? - காயமடைந்த ஈரான் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவில் சிகிச்சையா?!

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் எப்போது முடியும் என்று தெரியாமல் இருக்கிறது. இப்போர் காரணமாக உலக நாடுகளுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உலக நாடுகள் தங்களது கப்பல்களை அனுப்பவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இக்கோரிக்கைக்கு எந்த நாடும் சாதகமாக பதில் கொடுக்கவில்லை. இதற்கிடையே இப்போரில் ஈரானின் புதிய மத உச்ச தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெதன்யாகு இதனால்தான் அவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து இதுவரை வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவருக்கு இத்தாக்குதலில் காலில் மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவர் இப்போது படுகாயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின், ஈரான் ஜனாதிபதி மசூத்திடம் போனில் பேசியபோது தெரிவித்துள்ளார் என்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருந்தால் மொஜ்தபாவிற்கு ஈரானில் சிகிச்சை கொடுக்க சரியாக இருக்காது என்று கருதி, அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி சிகிச்சை கொடுக்க ஈரான் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவர் மிகவும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் ரஷ்ய ராணுவ விமானத்தில் ரஷ்யாவிற்கு அனுப்பி அவைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ரஷ்யாவில் புதின் வீட்டு வளாகத்திற்குள் இருக்கும் மருத்துவமனையில் மொஜ்தபாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கேயே அவர் தொடர்ந்து குணமடைந்து வருவதாகவும் அல் ஜெசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய மத உச்ச தலைவர் மொஜ்தபாவை இஸ்ரேல் குறிவைக்கும் அபாயம் இருக்கிறது. அதோடு அவர் ஈரானில் தொடர்ந்து சிகிச்சை பெற்றால், அவருக்கு சிகிச்சை கொடுக்கும் யாராவது அவர் தங்கி இருக்கும் இடம் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் இது குறித்து கருத்து தெரிவிக்க ரஷ்யா மறுத்துவிட்டது. மற்றொருபுறம் மொஜ்தபா ஈரானில்தான் சிகிச்சை எடுத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. மொஜ்தாபா கமேனி ஈரானுக்குள் சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஈரானின் சுகாதார அமைச்சர் முகமது ரேசா ஜாபர்காண்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும் ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்திப்படி, புதிய உச்ச தலைவரின் ஒன்று அல்லது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவரது கல்லீரல் அல்லது வயிற்றிலும் சிதைவு ஏற்பட்டுள்ளது. அவரும் கோமா நிலையில் இருப்பதாகத் அச்செய்தி கூறுகிறது. மற்றொரு செய்தியில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களின் போது கமேனிக்கு அருகில் கட்டடக் கழிவுகள் விழுந்ததால் அவரது உடலின் இடது பக்கத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில், ''மொஜ்தபா உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரை யாரும் உயிருடன் காட்டவில்லை. அவர் உயிரோடு இல்லை என்றுதான் எனக்கு செய்திகள் வருகிறது'' என்றார். இதே போன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அவர் சமீபத்தில் காபி குடித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு காணொலியை வெளியிட்டு இருந்தார். அதுவும் உண்மையானதா அல்லது ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் வழக்கமாக கைவிரலில் மோதிரம் அணிந்து இருப்பார். சமீபத்தில் வெளியான வீடியோவில் மோதிரம் இல்லை. அதோடு அவரது மகன் தினமும் எக்ஸ் தளத்தில் குறைந்தது 20 பதிவுகளையாவது வெளியிடுவார். ஆனால் அவரும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த பதிவையும் வெளியிடவில்லை. இதனால் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

விகடன் 17 Mar 2026 6:17 pm

அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று'நடந்தது என்ன? - வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை கடந்த மாதம் 28ம் தேதி காலை நேரத்தில் ஈரானில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் அலிகமேனி மற்றும் அவரது குடும்பத்தில் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டனர். அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்களை ஒரே தாக்குதலில் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. வெனிசுலாவில் அந்நாட்டு அதிபரை உயிரோடு பிடித்துச் சென்றது போன்று அலி கமேனியைப் பிடிக்க முடியாது என்பதாலும், ஈரானுக்குள் சென்று தாக்குதல் நடத்துவது முடியாத காரியம் என்பதாலும் அவர்கள் மீது குண்டு வீசி கொலை செய்து அழித்துவிட வேண்டும் என்று நினைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் இத்தாக்குதலை நடத்தின. ஆனால் இத்தாக்குதலில் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். அவரது காலில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து பேசப்பட்ட ஆடியோ ஒன்று இப்போது வெளியாகி இருக்கிறது. டெலிகிராப் இதழுக்குக் கிடைத்த ஆடியோவின் படி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சில வேலைகளுக்காக அவர் தங்கி இருந்த வளாகத்தை விட்டு வெளியே வந்ததால் உயிர் பிழைத்ததாக தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் அவரது தந்தை அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிற உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஈரானின் ராணுவத் தலைவர் உடல் சிதறி, வெறும் சில கிலோ சதைத்துண்டுகளே கிடைத்தது. அவர் உடல் உறுப்புகள் பல மீட்டர் தூரத்திற்கு சென்றுவிழுந்தது. அயதுல்லா அலி கமேனியின் மருமகனின் தலை இரண்டாக பிளந்து கிடந்ததாகவும், அந்த ஆடியோவில் கூறப்பட்டிருக்கிறது. மறைந்த அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் உயர் அதிகாரி அந்த ஆடியோவில் பேசி இருந்தார். பிப்ரவரி 28ம் தேதி அன்று நடந்த அந்தத் தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. அலி கமேனியின் அலுவலகத்தில் நெறிமுறைத் தலைவராக பணியாற்றும் மஸாஹர் ஹொசைனி சமீபத்தில் டெஹ்ரானில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அந்த ஆடியோ படி, பிப்ரவரி 28ம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 9.32 மணிக்கு கமேனியின் குடியிருப்பு வளாகம் தாக்கப்பட்டது. கமேனி குடும்பத்தினரையும், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களையும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்காக திட்டமிடப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து ஈரான் தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும், அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தோஹா, துபாய், அபுதாபியில் இத்தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 56 வயதான மொஜ்தபா கமேனி, தாக்குதலுக்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வெளியில் வந்து அங்குள்ள தோட்டத்திற்குச் சென்றிருந்தார். தோட்டத்தில் இருந்து மீண்டும் வீட்டிற்குச் செல்ல கட்டடத்தின் படிக்கட்டில் ஏறியபோதுதான் அக்கட்டடத்தில் குண்டு விழுந்தது. இந்தத் தாக்குதலில் அவரது காலில் மட்டும் சிறு காயம் ஏற்பட்டது. ஆனால், அவரது மனைவி ஜஹ்ரா மற்றும் மகன் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அலி கமேனியின் மற்றொரு மகனான முஸ்தபா கமேனி தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலேயே இருந்தார். இருப்பினும், அவரும் அவர் மனைவியும் காயமின்றி உயிர் தப்பினர்.

விகடன் 17 Mar 2026 2:29 pm

Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு'தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்!

2025-ம் ஆண்டு பாய்ச்சலில் சென்றுகொண்டிருந்த தங்கம் விலை, இப்போது பதுங்கி இருக்கிறது. கடந்த ஐந்து நாள்களாக, தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. இப்போது தங்கம் விலை பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.1.17 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. ஏன் தங்கம் விலை குறைகிறது? ஈரான் போர் தொடங்கியதும், தங்கம், வெள்ளி விலை பெரியளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக தொடங்கியது. ஈரான் போர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! ஈரான் போர் காரணமாக, விலைவாசி அதிகரிக்கும்... அதனால், தொடர்ந்து பொருள்களை வாங்கவும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கவும் அமெரிக்க டாலரைப் பாதுகாப்பான முதலீடாக உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் பார்த்தனர்... முதலீடு செய்தனர். இதனால், அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறவில்லை. அதனால், இந்தியாவிலும் தங்கம் விலை ஏறவில்லை. தங்கம் விலை 'இறங்குமுகமா'? இப்போது தங்கம் விலை 'இறங்குமுகத்தில்' உள்ளதா என்று பார்த்தால், அப்படி இல்லை. தற்போது தங்கம் விலை நிலையாக இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,100 டாலர்களுக்குக் கீழ் சென்றால் தான், அது இறங்குமுகத்தில் இருக்கிறது என்று பொருள் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கம் Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில் இப்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5,000 டாலருக்கு மேல் தான் வர்த்தகம் ஆகி வருகிறது. சரி... இப்போது தங்கம் விலை நிலையாக தானே இருக்கிறது. இந்த நேரத்தில் அதில் முதலீடு செய்யலாமா? இப்போது முதலீடு செய்து வைத்தால், போருக்குப் பின் அதன் விலை ஏறுமா ஆகிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். இந்தப் போர் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பல கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. இந்தப் போர் நிறைவு பெற்றதும், அந்தக் கட்டமைப்புகள் மீண்டும் சீரமைக்கப்படும்... மறுகட்டமைக்கப்படும். இதற்கு வெள்ளி, அலுமினியம், செம்பு (Copper) போன்ற உலோகங்கள் தேவைப்படும். ஆனால், இப்படி தங்கத்திற்குத் தேவை இருக்குமா என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை. இதனால், போர் முடிந்ததும் வெள்ளி, அலுமினியம், செம்பு ஆகியவற்றின் விலை உயரலாம். ஆனால், தங்கம் விலை நிலையாகவே தொடரும். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன? ஆபரேஷன் 'கியூபா' இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அடுத்த டார்க்கெட்டாக கியூபாவை அறிவித்துள்ளார். ஆனால், கியூபா மீதான தாக்குதல் உலக வர்த்தகத்தைப் பாதிக்குமா என்று கேட்டால், அது கிடையாது. அதனால், போருக்குப் பின் தங்கம் மற்றும் வெள்ளியில் சின்ன ஏற்றம் இருக்கலாம். ஆனால், அது குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்கும். ஏற்கெனவே தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், அது போதும். ஆனால், தற்போதைய சூழலில், சிறிய அளவிலான முதலீடு மட்டுமே போதுமானது. பெரிய எதிர்பார்ப்பில் முதலீடுகள் வேண்டாம். 'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 17 Mar 2026 2:22 pm

RSS, R&AW-ஐ தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை; 'முதலில் அமெரிக்கவைப் பாருங்கள்' - மத்திய அரசு

அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் சமீபத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் மத சுதந்திர அத்துமீறல்கள் நடக்கின்றன என்றும், இதனால் இந்தியாவின் R&AW மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவை, 'கவலைக்குரிய நாடு' பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. ரந்தீர் ஜெய்ஸ்வால் 'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு இந்த அறிக்கைக்குப் பதில் அளித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்... அமெரிக்காவின் USCIRF-ன் அறிக்கையை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்தியாவை உள்நோக்கத்துடனும், பாரபட்சத்துடனும் சித்தரிப்பதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். பல ஆண்டுகளாக, கேள்விக்குரிய ஆதாரங்கள் மற்றும் கருத்தியலை வைத்து USCIRF இந்தியாவை ஒருதலைப்பட்சமாகவும், தவறாகவும் சித்தரித்து வருகிறது. இப்படித் தொடர்ந்து தவறாகச் சித்தரிப்பது அந்த ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறி ஆக்குகிறது. இந்தியாவை இப்படி விமர்சிப்பதற்குப் பதிலாக, இந்த ஆணையம் அமெரிக்காவில் உள்ள இந்து கோயில்கள் மீது நடக்கும் தாக்குதல்களில் கவனம் செலுத்தலாம். மேலும், இந்தியப் புலம்பெயர்ந்தோர் மீது அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் அச்சுறுத்தல்களில் தீவிர கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளார். ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?

விகடன் 17 Mar 2026 10:18 am

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்' - அமெரிக்க USCIRF அறிக்கை; காங்கிரஸ் விமர்சனமும் அரசின் பதிலும்!

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF), ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (R&AW) ஆகியவற்றிற்கு எதிராகத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளே காரணம் என்று அந்த அமெரிக்க அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. USCIRF மேலும், இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் மற்றும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றையும் அந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியாவுடனான ஆயுத விற்பனை மற்றும் வர்த்தக உறவுகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த ஆணையம் கோரியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, அதன் மீது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஓர் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷம் போன்றது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதித்தார். ஆர்.எஸ்.எஸ் தற்போது அமெரிக்க ஆணையமும் இந்த அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ``அமெரிக்க ஆணையத்தின் மதிப்பீடுகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது. தேசிய கீதத்துக்கும் மேலாக வந்தே மாதரம்? ஆர்.எஸ்.எஸ், அமித் ஷா, மோடி அரசின் உள்நோக்கம் என்ன?

விகடன் 16 Mar 2026 7:16 pm

Battle of Galwan `டு'மாத்ருபூமி - சல்மான் கான் நடிக்கும் படத்தின் பெயர் திடீர் மாற்றம்!

நடிகர் சல்மான் கான் நடித்து வரும் படமான பேடில் ஆஃப் கல்வான் படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே நடந்த இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகள் முற்றிலும் முடங்கிப்போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் சீனாவின் முதலீட்டை மத்திய அரசு சமிபத்தில் அனுமதித்தது. இந்நிலையில் பேடில் ஆஃப் கல்வான் படத்தின் பெயரை திடீரென மாற்றி இருக்கின்றனர். புதிய படத்திற்கு 'மாத்ருபூமி May War Rest in Peace' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். புதிய தலைப்பை அறிவித்து வெளியிட்டு இருக்கும் போஸ்டரில் போர் அமைதியில் ஓய்வெடுக்கட்டும் என்ற செய்தியைக் கொண்டதாக இருக்கிறது. இந்தப் படம் வெறும் போர்க் கதையை தாண்டி போரின் மனிதப் பக்கத்தையும் அமைதியின் முக்கியத்துவத்தையும் மையமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்புவதாக போஸ்டர்கள் கூறுகின்றன. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் இப்போது திரைக்கு வரும் தேதியை சுதந்திர தினத்திற்கு தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகீறது. ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் பட்சத்தில் சன்னி தியோல் நடிக்கும் லாகூர் 1947 படத்துடன் இப்படம் மோதிக்கொள்ளும். ஆகஸ்ட் 13ம் தேதி லாகூர் 1947 படம் வெளி வருகிறது. கல்வான் மோதல் சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. சமீப ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்த மிக முக்கியமான ராணுவ மோதல்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இக்கதை நிஜ நிகழ்வுகளையும், இப்பிராந்திய அரசியல் பதற்றங்களையும் மையமாகக் கொண்டிருப்பதால், திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அது விவாதங்களை எழுப்பத் தொடங்கிவிட்டது. இந்த ராணுவ மோதலோடு தொடர்புடைய விஷயம் என்பதாலும், மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதாலும் திரைப்படத்தை உருவாக்கியவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பெயரை மாற்றிவிட்டனர் எனச் சொல்லப்படுகிறது.

விகடன் 16 Mar 2026 5:22 pm

Trump: ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும் - ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்

அமெரிக்கா - ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், ஈரானால் முடங்கியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க சீனா உதவ வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் கடந்த இரண்டு வாரங்களில் உலக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், பெட்ரோல் விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் அமெரிக்கப் போர் கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்று கூறிய ட்ரம்ப், தற்போது சுமார் ஏழு நாடுகளிடம் ராணுவ உதவி கோரியுள்ளார். ட்ரம்ப் ஒருபுறம் ட்ரம்ப் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கும் நிலையில், மறுபுறம் பாரிஸ் நகரில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹி லிஃபெங் ஆகியோர் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரம்ப்பின் சீனப் பயணத்திற்கு முன்கூட்டியே ஒரு சுமூகமான சூழலை உருவாக்கவே இந்தப் பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'பைனான்சியல் டைம்ஸ்' இதழுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்திருந்த பேட்டியில், ``மத்திய கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெய்யைச் சீனா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை உறுதி செய்ய நாங்கள் உருவாக்கும் புதிய கூட்டணியில் சீனா இணைய வேண்டும். எனது சீனப் பயணத்திற்கு முன்பாகவே அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய விரும்புகிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துழைக்காவிட்டால், எனது பயணம் தள்ளிவைக்கப்படலாம். அமெரிக்கா Vs சீனா ட்ரம்ப்பின் இந்தக் கோரிக்கை குறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ``ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமானது. இப்பகுதியை அமைதியாக வைத்திருப்பது சர்வதேச சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. அமைதியை நிலைநாட்ட தொடர்புடைய நாடுகளுடன் சீனா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் எனப் பொதுவாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே வர்த்தகப் போரினால் அமெரிக்கா - சீனா இடையே சுங்க வரி மோதல் நிலவி வருகிறது. 2026-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி இலக்கைச் சீனா 4.5% - 5% ஆகக் குறைத்துள்ள நிலையில், எண்ணெய் விநியோகத் தடை நீடித்தால் அது சீனாவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் மௌனம் ஏன்? பெய்ஜிங்கில் இயங்கும் அந்த ரகசிய வங்கி! அமெரிக்கா - ஈரான் போரில் ஒரு ட்விஸ்ட்!

விகடன் 16 Mar 2026 1:50 pm

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை விடவில்லை ஈரான். அதன் வழியாக தான் இந்தியா, சீனா என பல நாடுகளுக்கு எரிசக்தி கொண்டு செல்லப்படுகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பலை விடவில்லை என்றால் தொடர் தாக்குதல் என்று ட்ரம்ப் எவ்வளவு சொல்லியும், ஈரான் கேட்பதாக இல்லை. ஹார்முஸ் ஜலசந்தி ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில் ட்ரம்ப் பதிவு இந்த நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளை அழைத்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது... ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் அமெரிக்கா உடன் சேர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தும், பாதுகாப்பாகவும் வைக்கவும் போர் கப்பலை அனுப்பும். ஏற்கெனவே அமெரிக்கா ஈரானின் 100 சதவிகித ராணுவ சக்தியை அழித்துள்ளது. இருந்தும் ஈரான் டிரோன்களை அனுப்பியோ, ஏவுகணைகளை ஏவியும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதனால், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியைக் காக்க கப்பல்களை அனுப்பும். அப்போது தான் ஈரான் அச்சுறுத்தலாக இருக்காது. அதே சமயத்தில், ஹார்முஸ் ஜலசந்தி பாதை பாதுகாப்பாக மீண்டும் மாறும் வரை, அமெரிக்கா ஈரான் கடற்கரை ஓரத்திலும், ஈரான் கப்பல்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும். ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு எந்த நாடும் இன்னும் பதிலளிக்கவில்லை. ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

விகடன் 16 Mar 2026 1:10 pm

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில்

ஈரான் போரின் மையமாக 'ஹார்முஸ் ஜலசந்தி'யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் அனுமதிப்பதில்லை ஈரான். போரினால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறினாலும், இந்த ஒரு விஷயமும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி வருகிறது. இந்தச் சூழலில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்துள்ளது ஈரான். ஹார்முஸ் ஜலசந்தி ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான் ஜெய்சங்கர் பேச்சு இது குறித்து 'ஃபைனான்சியல் டைம்ஸ்'-க்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது... ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். என்னுடைய பேச்சுவார்த்தைக்கு சில நல்ல முடிவுகளும் கிடைத்துள்ளன. இன்னமும் பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கின்றன. அந்தப் பேச்சுவார்த்தை நல்ல முடிவை எட்டினால், அது தொடரும். ஈரான் இந்திய கப்பல்களை அனுமதித்ததற்கு எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. இன்னும் நிறைய இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் இருக்கிறது. அதனால், பேச்சுவார்த்தை இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. இந்தியா எல்.பி.ஜி சிக்கலால் கடுமையாக திண்டாடி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்களில் சில இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எல்.பி.ஜியைக் கொண்டு வருகிறது. ஆக, இந்தக் கப்பல்கள் இந்தியா வர அனுமதிக்கப்பட்டால், இந்தத் தட்டுப்பாடுகளை ஓரளவு நிச்சயம் குறைக்க முடியும். Oscar: Michael B.Jordan, Jessie Buckley: 98-வது ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் யார் யார்? முழு விவரம்

விகடன் 16 Mar 2026 12:36 pm

ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

ஈரான் போர் 17-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என எந்தப் பிரிவினரும் இந்தப் போரை முடிவை நோக்கி நகர்த்தவில்லை. ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் போரும், தாக்குதலும் தொடர கச்சா எண்ணெய் விலை கூடிக்கொண்டே வருகிறது. இன்னொரு பக்கம் எல்.பி.ஜி உள்ளிட்ட பல எரிசக்தி பிரச்னைகளை உலகம் சந்தித்து வருகிறது. நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் இந்த நிலையில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசியுள்ளனர். அவர்கள், ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டால், வரும் வாரங்களில் உலக எரிசக்தி சந்தைகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளனர். அப்பாஸ் அரக்சி கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான் தயாராக இல்லாத ஈரான் தற்போதைய சூழலில், ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறார். ஆனால், ஈரான் அதற்கு தயாராக இல்லை. பேச்சுவார்த்தை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காரணம் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்திய போது, நாங்கள் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு தான் இருந்தோம் என்று தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி

விகடன் 16 Mar 2026 11:11 am

Grandma Moses: நம்பிக்கை தந்த தூரிகை; 78 வயதில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த மூதாட்டியின் கதை!

ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது, நம் கனவுகளைத் துரத்த நமக்கு ஒரு சிறிய உத்வேகம் தேவைப்படும். எனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் என்னால் புதிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற எண்ணம் உங்கள் மனதில் ஒருபோதும் வரக்கூடாது என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணம் அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் (Anna Mary Robertson Moses). உலகமே இவரை அன்பாக `கிராண்ட்மா மோசஸ்' (Grandma Moses) என்று அழைத்தது. Grandma Moses 1860, செப்டம்பர் 7-ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கிரீன்விச் என்ற விவசாய கிராமத்தில் பிறந்தார் அன்னா மேரி ராபர்ட்சன். வறுமையான குடும்பம், பத்து பிள்ளைகள் கொண்ட பெரிய வீடு. இதனால், அன்னாவுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. தனது வாழ்நாளில் அவர் சில மாதங்கள் மட்டுமே ஒரு சிறிய பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். பன்னிரண்டு வயதிலேயே, குடும்ப வறுமையைப் போக்க பக்கத்து வீடுகளில் வேலைக்குச் சேர்ந்தார். தையல், சமையல், விவசாய வேலைகள் என அவர் இளமைக்காலம் முழுவதும் கடுமையான உழைப்பிலேயே கழிந்தது. கலை, ஓவியம் என்பதெல்லாம் அவர் கற்பனையிலும் எட்டாத ஆடம்பரங்களாக இருந்தன. Grandma Moses 1887-ஆம் ஆண்டு, தனது 27-வது வயதில் தாமஸ் சால்மன் மோசஸ் என்ற விவசாயியைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் வாழ்க்கை எளிதாகிவிடவில்லை. இருவரும் இணைந்து விவசாயம் செய்தனர். அன்னா மொத்தம் 10 குழந்தைகளுக்குத் தாயானார்; ஆனால், மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில், 5 குழந்தைகளைப் பறிகொடுத்தார். Motivation Story: `உங்கமேல உங்களுக்கு நம்பிக்கை வேணும் பாஸ்!’ - மாணவன் உணர்த்திய நம்பிக்கைப் பாடம் எத்தனையோ வலிகள், இழப்புகள், வறுமை இருந்தும், அவர் ஒருபோதும் முடங்கிப் போகவில்லை. 1927-ஆம் ஆண்டு, தனது கணவர் தாமஸையும் மாரடைப்பால் இழந்தார். அப்போது அன்னாவுக்கு வயது 67. கணவரின் மறைவிற்குப் பிறகு, அன்னாவால் தொடர்ந்து விவசாய வேலைகளைச் செய்ய முடியவில்லை. எனவே, ஓய்வு நேரத்தைக் கழிக்க கம்பளி நூல்களைக் கொண்டு எம்ப்ராய்டரி தையல் வேலைப்பாடுகளில் படங்களை உருவாக்கத் தொடங்கினார். ஆனால், விதி அங்கும் விளையாடியது. அவருக்குக் கடுமையான `கீல்வாதம்' (Arthritis) நோய் வந்து, விரல்கள் வளைந்து, ஊசியைக்கூடப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். Grandma Moses அப்போது அவருடைய தங்கை, நீ ஏன் எம்ப்ராய்டரிக்குப் பதிலாக, தூரிகையை (Brush) வைத்து ஓவியம் வரையக் கூடாது? என்று யோசனை கூறினார். வலியில் தவித்த அந்த மூதாட்டி, தனது 78-வது வயதில், எவ்வித ஓவியப் பயிற்சியும் இல்லாமல் முதல்முறையாக தூரிகையைக் கையில் எடுத்தார். அன்னா தனது கிராமத்து நினைவுகளை, விவசாய வாழ்க்கையை அழகிய ஓவியங்களாகத் தீட்டினார். 1938-ஆம் ஆண்டு, அவர் வசித்த ஹூசிக் ஃபால்ஸ் (Hoosick Falls) என்ற ஊரில் இருந்த ஒரு மருந்துக் கடையின் கண்ணாடியில், தனது ஓவியங்களை விற்பனைக்காக வைத்தார். ஒரு ஓவியத்தின் விலை வெறும் 3 முதல் 5 டாலர்கள் மட்டுமே. Motivation Story: நடுக்கடல்... 16 மணி நேரம் உயிருக்குப் போராட்டம்; 62 வயது முதியவர் மீண்ட கதை! அந்த வழியாக வந்த லூயிஸ் கேல்டார் (Louis J. Caldor) என்ற கலைப்பொருள் சேகரிப்பாளர், இந்த ஓவியங்களைப் பார்த்தார். அதிலிருந்த யதார்த்தமும், உயிரோட்டமும் அவரை ஈர்த்தன. உடனே அங்கிருந்த அனைத்து ஓவியங்களையும் வாங்கிய அவர், அன்னாவைத் தேடிச் சென்று அவரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். Grandma Moses ஓவியம் ஒரு சாதாரண விவசாய மூதாட்டியின் ஓவியங்கள் நியூயார்க் நகரப் கண்காட்சிகளில் இடம்பெறத் தொடங்கின. 1940, அவரது 80-வது வயதில் `ஒரு விவசாய மனைவியின் ஓவியங்கள்’ (What a Farm Wife Painted) என்ற பெயரில் அவரது முதல் தனிக் கண்காட்சி நடந்தது. 1949ல் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் (Harry S. Truman), அன்னாவின் கலையைப் பாராட்டி தேசிய விருதினை வழங்கினார். 1953ல் உலகப் புகழ் பெற்ற 'டைம்' (TIME) பத்திரிகையின் அட்டைப்படத்தில் அவரது புகைப்படம் வெளியாகி வரலாற்றில் இடம்பிடித்தது. அவர் தனது 78 வயதிற்குப் பிறகு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தார். அவரது ஓவியங்கள் பல லட்சங்களுக்கு ஏலம் போயின. Motivation Story: `சுரங்கத் தொழிலாளி டு சூப்பர் ஸ்டார்!' - சார்லஸ் பிரான்சன் சாதித்தது எப்படி? கிராண்ட்மா மோசஸுக்கு வண்ணங்களைக் கலக்கவோ, வரைவதற்கான மற்ற விதிகளோ தெரியாது. தன்னிடம் இருந்த பெயிண்ட்கள், சாதாரண பலகைகள், மற்றும் தீப்பெட்டிகளைக் கொண்டே ஆரம்பத்தில் ஓவியங்கள் வரைந்தார். அவர் நேரில் பார்த்து எதையும் வரையவில்லை. தனது இளமைக்கால நினைவுகளையும், பழைய கிராமத்து வாழ்க்கையையும் மட்டுமே கற்பனையாக வரைந்தார். அவரது 100-வது பிறந்தநாளை நியூயார்க் மாகாணம் `கிராண்ட்மா மோசஸ் தினம்’ (Grandma Moses Day) என்று அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டாடியது. 1961-ஆம் ஆண்டு, டிசம்பர் 13-ஆம் தேதி, தனது 101-வது வயதில் அவர் இயற்கை எய்தினார். Grandma Moses ஓவியம் தனது வாழ்க்கையின் வசந்த காலத்தை 78 வயதில்தான் மோசஸ் தொடங்கினார். வலிகளும், இழப்புகளும், தளர்ந்த உடலும் அவரது கற்பனைக்குத் தடையாக இருக்கவில்லை. எனவே, நாம் ஒரு புதிய தொழிலைத் தொடங்கவோ, படிக்கவோ, அல்லது கனவை நோக்கி ஓடவோ `காலம் கடந்துவிடவில்லை'. நம் வாழ்க்கையின் மிகச்சிறந்த அத்தியாயம் இனிமேல்தான் எழுதப்பட உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்றைய நாளைத் தொடங்குவோம்! Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்! 

விகடன் 16 Mar 2026 7:00 am

உயிருடன் இருந்தால் விடமாட்டோம் - நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் 14 மாதப் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர். 'இந்தக் கொடூரக் கொலைக்கு பழிவாங்குவோம்' எனக் குறிப்பிட்ட ஈரான், தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருக்கும் பகுதிகள் குறிவைத்து தாக்கப்பட்டது. இதற்கிடையில், 'ஈரான் தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டார்' என ஈரான் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. 6 விரலுடன் நெதன்யாகு இந்தக் கூற்றை முழுமையாக மறுத்த இஸ்ரேல், நெதன்யாகு உரையாற்றுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஈரான், ``இந்த வீடியோவில் நெதன்யாகுவுக்கு 6 விரல் இருப்பது போல காட்சிகள் வருகின்றன. இது ஏஐ வீடியோ எனக் குறிப்பிட்டது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ``பிரதமர் நெதன்யாகு நலமாக இருக்கிறார். இவை அனைத்தும் முற்றிலும் வதந்திகள் என விளக்கம் அளித்துள்ளது. இதற்கு பதிலளித்திருக்கும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை' (IRGC) ``நெதன்யாகு குழந்தைகளைக் கொல்லும் குற்றவாளி... எங்கள் தலைவரின் குடும்பத்தைச் சிதைத்த அவரை வேட்டையாடாமல் விடமாட்டோம். ஒருவேளை அவர் கொல்லப்படவில்லை என்றால். அவரை தேடி வேட்டையாடுவோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஈரானின் இந்த நேரடி கொலை மிரட்டல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் மேகங்களாகச் சூழ்ந்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ? - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

விகடன் 15 Mar 2026 1:54 pm

பாஜக-வின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் சூன்யமாகிவிடும் - திருமாவளவன் எச்சரிக்கை

எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்று மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும். காலியான காஸ் சிலிண்டர் குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்த மோடி அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கோரி, தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் ஒருங்கிணைப்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் பங்கேற்றேன். அதிமுக to தவெக.., மாநிலக் கட்சிகளை விழுங்குகிறதா பாஜக? | TN Election Updates 360 | Vikatan எரிவாயு தட்டுப்பாட்டால் வீடுகள் மட்டுமன்றி, உணவகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மின்சார அடுப்புகளை நோக்கிச் செல்லும் சூழலில், மின் கட்டணச் சுமையும் அதிகரிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில், மின்சார யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பதை விசிக வரவேற்றுப் பாராட்டுகிறது. ஈரான் அதிபர் கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கோ அல்லது ஈரான் மீது நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதலுக்கோ கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடி, ஈரான் பதிலடி கொடுக்கும்போது மட்டும் அதைக் கண்டிப்பது விந்தையாக இருக்கிறது. தவெக தலைவர் விஜய் பிரதமரின் இத்தகைய வெளியுறவுக் கொள்கை தேசப் பாதுகாப்புக்கும் மக்கள் நலனுக்கும் உகந்தது அல்ல. உலகப்போர் மூளாத வண்ணம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம். நாடாளுமன்றத்திலும் இது குறித்து விவாதிக்க விசிக வலியுறுத்தும். இறுதியான என்.ஆர் - பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! - புதுவையில் விசிலடிப்பாரா விஜய்? தமிழகத்தில் மட்டும்தான் இத்தகைய பதற்றமான சூழல் நிலவுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுவது, அவருக்கு உலக அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த புரிதல் இல்லை என்பதையே காட்டுகிறது. இது தேர்தலுக்கான போராட்டம் அல்ல. உலக அமைதிக்காகவும், அதன் மூலம் எரிவாயு தட்டுப்பாடு போன்ற மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் நடத்தப்படும் போராட்டம். திருமாவளவன் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிகள் இன்னும் அமையக் கூட இல்லை. பா.ஜ.க தனது கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இழுக்க நயவஞ்சகமான உத்திகளைக் கையாள்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அவர் அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். அவர் அதற்கு இணங்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன். கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது இடதுசாரிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது போன்ற முரண்பட்ட கருத்துக்கள் வருவது இயல்பானதுதான். இதனால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; இறுதியில் சுமுகமான தீர்வு எட்டப்படும். எங்களின் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்றார், ''காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதை தோழமைக்கட்சிகள் விவாதமாக்காதீர்கள்- செல்வப்பெருந்தகை

விகடன் 15 Mar 2026 1:29 pm

நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ? - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாக்குதலில் ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதும் தொடர்ந்து ஈரான் தாக்கி வருகிறது. இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள தீவிரவாத அமைப்புகளும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவர் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவர் வெளியில் வரவே இல்லை. நேற்று நெதன்யாகு அளித்திருந்த பேட்டி ஒன்றின் காணொலி வெளியாகி இருந்தது. அந்தக் காணொலியில் நெதன்யாகுவிற்கு கையில் 6 விரல் இருப்பது போன்று இருந்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு இதனால் அந்த வீடியோ ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், நெதன்யாகு போரில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பான செய்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. துருக்கியைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொலியின் பின்னணியில் உள்ள திரைச்சீலைகளின் நகர்வு உட்பட, இரண்டு இஸ்ரேலிய கொடிகள் பெரும்பாலும் அசையாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி அந்தக் காணொலி செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சமூக வலைத்தளப் பயனர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இச்செய்தியை இஸ்ரேல் வன்மையாக மறுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ''பிரதமர் நெதன்யாகு இறந்துவிட்டதாக வரும் செய்திகள் போலியானவை. அதில் உண்மையில்லை. பிரதமர் நலமோடு இருக்கிறார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காணொலியில் 6 விரல்கள் இருப்பது குறித்து விசாரித்தபோது, அந்தக் காணொலியில் தெரிந்த கூடுதல் விரல் என்பது கேமரா கோணம் மற்றும் ஒளியின் நிழலால் ஏற்பட்ட ஒரு மாயை ஆகும். அது AI வீடியோ அல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக பெரிய அளவில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் புகார்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. `ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

விகடன் 15 Mar 2026 11:40 am

Trump: பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம் - ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான். கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலியாகினர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரம்ப் இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``ஈரானின் கர்க் தீவில் (Kharg Island) உள்ள பெரும்பாலான ராணுவ இலக்குகள் ஏற்கனவே அமெரிக்கத் தாக்குதலில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. தேவைப்பட்டால் பொழுதுபோக்கிற்காக இன்னும் சில முறை அங்கு தாக்குதல் நடத்துவோம் ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை. ஈரானுடனான இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய சீனா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அந்தப் பகுதியின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும் எனக் குறிப்பிட்டார். ஈரான் போர் இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ஈரான், ``அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை. துபாய், அபுதாபி மற்றும் புஜைரா (Fujairah) போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய துறைமுகப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், ஈரானிலிருந்து அமீரகத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அங்குள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரான் யுத்தம்... அத்துமீறலுக்கு இன்னொரு பெயர் அமெரிக்கா!

விகடன் 15 Mar 2026 8:40 am

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்'ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார். இந்த நிலையில், ஜப்பான் மீது வட கொரியா தாக்குதல் நடத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சானே தகைச்சி கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான் இது குறித்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில், வட கொரியா சந்தேகப்படக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால், ஜப்பான் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளதாவது... இது குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்து மக்களுக்கு சரியான விதத்திலும், நேரத்திலும் தர‌ வேண்டும். விமானங்கள், கப்பல்கள் மற்றும் பிற சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்... அசாதாரண சூழலுக்கு தயாராக வேண்டும் என்று பதிவிட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி [Emergency alert] North Korea has launched a suspected ballistic missile. More updates to follow. — PM's Office of Japan (@JPN_PMO) March 14, 2026

விகடன் 14 Mar 2026 1:01 pm

`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' - ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது?

ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. போர் தொடங்கியவுடன் ஈரானின் தலைவர் அல் கமெனி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்ததால் அடுத்த சில நாட்களில் போரை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று அமெரிக்கா தப்புக்கணக்கு போட்டது. ஆனால் அமெரிக்கா நினைத்தது போன்று அவ்வளவு எளிதில் போர் முடியவில்லை. ஈரான் உச்ச தலைவர் அல் கமெனி இப்போரில் கொலை செய்யப்பட்ட பிறகு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்கா ஆதரவு நாடுகளான துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளில் ஈரான் ஏவுகனைகளை கொண்டும் ட்ரோன்களை கொண்டும் கடுமையாக தாக்கியது. அதோடு இஸ்ரேல் மீதும் மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு ஈரான் இத்தாக்குதல் நடத்தியது. இரண்டு வார போரில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் அடைந்துள்ளது. மொஜ்தபா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், ஆயில் நிலைகள் சேதம் அடைந்தாலும், அமெரிக்கா நினைத்த எதுவும் நடக்கவில்லை என்பது மட்டும் உண்மை. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்த அமெரிக்காவின் எண்ணம் ஈடேரவில்லை. `20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' இனியும் அது நடக்குமா என்பது சந்தேகம்தான் என்று அமெரிக்காவே தெரிவித்துவிட்டது. அதோடு ஈரான் சிறிதும் சளைக்காமல் உடனடியாக தங்களது உச்ச தலைவரையும் அறிவித்துவிட்டு எந்த வித தொய்வும் இல்லாமல் தொடர்ந்து போர் செய்து கொண்டிருக்கிறது. இப்போர் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி, ''கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் சந்தித்த தோல்விகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எனவே அதற்கு தக்கபடி ஈரானின் சிறிய ராணுவப் பிரிவுகள் தனித்து நின்று போரிடும் வகையில் எங்களது தற்காப்பு முறையை மாற்றியமைத்துள்ளோம். எனவே, எப்போது, எப்படி இந்தப் போர் முடிய வேண்டும் என்பதை நாங்களே தீர்மானிப்போம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து ஈரான் போரிட்டு வருவது குறித்து சர்வதேச நெருக்கடி குழுமத்தின் ஈரான் திட்ட இயக்குனர் அலி வேஸ் கூறுகையில், ''உயர் தலைமையை இழக்க நேரிட்டாலும், அதனால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பரவலாக்கப்பட்ட இராணுவக் கட்டளை அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். எனவேதான் சில மூத்த தலைவர்களை இழந்த போதிலும், ஆட்சி அப்படியே உள்ளது. 2005ம் ஆண்டு ஆப்கான் மற்றும் ஈராக்கில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இது போன்ற புதிய ராணுவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஈரான் இப்போது 3 குறிக்கோள்களை மையமாக வைத்து இப்போரில் ஈடுபட்டுள்ளது. முதலாவதாக, எதிரியின் ஆரம்பக்கட்டத் தாக்குதல்களில் இருந்து நாட்டின் தலைமை மற்றும் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, தங்களது இருப்பு அழியாமல் இருப்பதை உறுதி செய்வவது ஆகும். இரண்டாவதாக, போரில் தொடர்ந்து நீடிப்பதற்கும் எதிரிக்குத் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் தேவையான ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதத் திறனைத் தக்கவைத்துக் கொள்வது ஆகும். மூன்றாவதாக, போரை நீண்ட காலத்திற்கு இழுத்தடிப்பது. இதன் மூலம் எதிரி நாடு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சோர்வடையும் போது, ஈரானுக்குச் சாதகமான நிபந்தனைகளுடன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகும். அமெரிக்கா போன்ற ஒரு பெரிய வல்லரசுடன் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என்பதால், போரைத் தற்காப்பு ரீதியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் கொண்டு செல்வதே ஈரானின் திட்டம்''என்று தெரிவித்தார். இப்போரால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு உள்நாட்டிலும், நட்பு நாடுகளிடமிருந்தும் கடும் நெருக்கடி வந்து கொண்டிருக்கிறது. ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் மலிவான ட்ரோன் (Drone) படைகளைக் கொண்டு, துபாயில் உள்ள ஒரு சொகுசு படகுத் துறைமுகம் (Marina) மற்றும் கடலில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம், இந்தப் போரை வளைகுடா நாடுகள், துருக்கி, சைப்ரஸ் மற்றும் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் ஈரான் விரிவுபடுத்தியுள்ளது. அதே சமயம், லெபனானில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஈரானியப் படைகள் ஹார்முஸ் நீரிணையை கிட்டத்தட்ட மூடிவிட்டன. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய வழித்தடம் முடங்கியுள்ளதால் உலக அளவில் பெரும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த போர் வியூகம் குறித்து உலக அளவில் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இந்தப் போரின் உண்மையான நோக்கம் என்ன என்பதில் அமெரிக்க அரசு தெளிவான பதில்களைத் தவிர்க்கிறது. இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தைச் சேர்ந்த டேனி சிட்ரினோவிச் இது குறித்து கூறுகையில், ஈரானின் நீண்ட காலத் திட்டங்கள் மற்றும் அதன் உறுதித்தன்மை குறித்த புரிதல் எங்களிடம் இல்லை என்று அவர் எச்சரிக்கிறார். இந்தப் போரிலிருந்து சுலபமாக வெளியேற வழி இல்லாததால், அதிபர் ட்ரம்ப் தனது வெற்றி குறித்த இலக்கை  மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வு பேராசிரியர் ஜொனாதன் பாக்குயின் தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் கூறுகையில், ஈரான் சரணடைய வேண்டும் அல்லது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிட்டு, ஈரானிய மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் அரசை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறி அவர் விலகிக்கொள்ளப் பார்க்கலாம்''என்று தெரிவித்தார்.

விகடன் 14 Mar 2026 12:27 pm

கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்'பலமான பதிலடி கொடுக்கும் ஈரான்

ஈரான் எண்ணெய் ஏற்றுமதியின் முக்கியமான தளம், 'கார்க் தீவு'. இந்தத் தீவை குறி வைத்து தாக்கியுள்ளது அமெரிக்கா. ட்ரம்ப் என்ன சொல்கிறார்? இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் கூறுகையில், எனது வழிகாட்டுதலில் கார்க் தீவில் உள்ள ராணுவ தளவாடங்கள் தாக்கப்பட்டுள்ளன. எண்ணெய் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. ட்ரம்ப் ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கோ, பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் வந்தால், எதுவும் யோசிக்க‌மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அந்தப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின்‌ எரிசக்தி தளவாடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியிருந்தது ஈரான். இப்போது அமெரிக்கா கார்க் தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை என்றாலும், கார்க் தீவு மீதான தாக்குதலை ஈரான் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. ஈரான் பதிலடி இன்று காலை (இந்திய நேரப்படி) ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இனி ஏதேனும் ஈரான் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளில் அமெரிக்காவிற்கு சொந்தமாக இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கிய 5 அமெரிக்க விமானங்களை ஈரான் தாக்கியுள்ளது என்று 'The Wall Street' பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதல், மிரட்டல் அனைத்துமே கார்க் தீவிற்காக அமெரிக்காவைப் பழி வாங்கும் நடவடிக்கையே. முதலில் தந்தை; இப்போது மகன்: மொஜ்தபா காமேனிக்கும் குறி வைக்கும் அமெரிக்கா - என்ன சொல்கிறது?

விகடன் 14 Mar 2026 11:21 am

ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி

இந்தியாவை ரஷ்ய எண்ணெய் வாங்க அமெரிக்கா 'அனுமதி'த்தது குறித்து ஈரான் கேலி செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று தான் இந்தியாவிற்கு கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. இந்தியா உடனான ஒப்பந்தத்தையும் தாமதம் செய்தது. இப்போது ஈரான் போர் தொடங்கிய உடன் ரஷ்ய எண்ணெயை இந்தியா தற்காலிகமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... சையத் அப்பாஸ் அரக்ச்சி Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதால் அமெரிக்க பல மாதங்களாக இந்தியாவை மிரட்டியது. ஆனால், ஈரான் உடனான போர் தொடங்கிய இரண்டு வாரங்களில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் ரஷ்ய எண்ணெயை வாங்க சொல்லி அமெரிக்கா கெஞ்சுகிறது. ஈரான் மீதான சட்டத்திற்குப் புறம்பான அமெரிக்காவின் போருக்கு ஆதரவளித்தால் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என்று ஐரோப்ப நாடுகள் நினைத்தன. பாவம் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்? The U.S. spent months on bullying India into ending oil imports from Russia. After two weeks of war with Iran, White House is now begging the world—incl India—to buy Russian crude. Europe thought backing illegal war on Iran would win U.S. support against Russia. Pathetic. pic.twitter.com/fbkrXpXa9P — Seyed Abbas Araghchi (@araghchi) March 13, 2026

விகடன் 14 Mar 2026 10:24 am

முதலில் தந்தை; இப்போது மகன்: மொஜ்தபா காமேனிக்கும் குறி வைக்கும் அமெரிக்கா - என்ன சொல்கிறது?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீதான போரை தொடங்கியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். அந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் காமேனியை குறி வைத்தது இரு நாடுகளும். அவரும்‌ அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார். அவருக்குப் பின்னான உச்ச தலைவரை சமீபத்தில் தான் ஈரான் அறிவித்தது.‌ அவர் காமேனியின் இளைய மகனான மொஜ்தபா காமேனி. தற்போது இவருக்குக் குறி வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் சன்மானம் Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப் அமெரிக்காவின் சன்மானம் அதாவது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) சேர்ந்த முக்கிய தலைவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்க அரசு. இவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர்களை வரை சன்மானம் என்று அறிவித்துள்ளது. 10 மில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 92.47 கோடி. அமெரிக்கா வெளியிட்டுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் மொஜ்தபா காமேனியின் படம் தான் முதலில் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கெனவே ஈரானில் நடந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனிக்கு காயமடைந்திருந்தார். அவர் இறந்துவிட்டார் என்கிற செய்திகள் கூட பரவின. இப்போது அவர் குறித்த தகவல்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

விகடன் 14 Mar 2026 10:15 am

Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை'மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப்

ஈரானுக்கு மிக மிக முக்கியமானது, 'கார்க் தீவு'. இந்தத் தீவில் இருந்து தான் ஈரான் தன்னுடைய 90 சதவிகித எண்ணெய் ஏற்றுமதிகளைச் செய்கிறது. 90 சதவிகிதம் என்றால் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 950 மில்லியன் பேரல்கள். இந்தத் தீவை அமெரிக்கா தொட்டால் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றும் என்று இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்து வந்தனர். தற்போது அந்தத் தீவை தான் குறி வைத்து தாக்கியிருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதிசெய்துள்ளார். ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... என்னுடைய வழிகாட்டுதலின் படி, ஈரானின் மகுடக் கல்லான 'கார்க் தீவில்' உள்ள அனைத்து ராணுவ தளவாடங்களும் தகர்க்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ஆகும். நாகரிகம் காரணமாக, அந்தத் தீவில் இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகளை நாங்கள் தாக்கவில்லை. ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் எனது முடிவை மாற்ற வேண்டியதாக இருக்கும். இதற்கு ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ? https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328

விகடன் 14 Mar 2026 8:06 am