SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
...

ரூ.94-க்கு அருகில்: இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்'சரிவு; இனி ரிசர்வ் வங்கி கையில் தான் எல்லாமே!

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலேயே இருந்து வருகிறது. இன்று காலை சந்தை தொடங்கும்போதே, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.93.83 என வர்த்தகம் ஆனது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். என்ன காரணம்? இந்திய ரூபாயின் சரிவிற்கு மிக முக்கிய காரணம், கச்சா எண்ணெய் விலை ஏற்றமே. இந்தியா எரிசக்திகளுக்குப் பிற நாடுகளை நம்பி இருக்கிறது. அங்கே இருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டுமென்றால், இந்தியாவிற்கு அமெரிக்க டாலர் வேண்டும். அமெரிக்க டாலரை வாங்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது. ஈரான் போர் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'மாறும்' வருமான வரிக் கணக்குத் தாக்கல் தேதிகள்: நோட் பண்ணுங்க மேலும், எரிசக்தி போன்றவைகளுக்கு இந்தியா பிற நாடுகளை நம்பியிருப்பதால், ஈரான் போரின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கும் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய முதலீடுகளை விற்கின்றனர். இதுவும் இந்திய ரூபாய் சரிவிற்குக் காரணம். இது தொடர்ந்து கொண்டிருந்தால், இந்திய பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கும். அதனால், இந்திய ரிசர்வ் வங்கி இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். எப்படி? இந்திய ரிசர்வ் வங்கி தங்களிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களைக் கொஞ்சம் விற்கும். சந்தையில் டாலர்களின் புழக்கம் அதிகரிக்கும் போது, அதன் டிமாண்ட் குறையும்... இதனால், விலையும் குறையும். இந்திய ரூபாய் வலுபெறும். இந்திய ரிசர்வ் வங்கியின் இத்தகைய நடவடிக்கையைத் தான் சந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 'போர் செலவு இருக்கிறதே' - ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ரூ,18.8 கோடி வசூலிக்கும் ஈரான்

விகடன் 23 Mar 2026 10:12 am

'போர் செலவு இருக்கிறதே' - ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ரூ,18.8 கோடி வசூலிக்கும் ஈரான்

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி முக்கிய அரசியல் சென்றுகொண்டிருக்கிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் தங்கள் மீது போர் தொடங்கியதுமே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதன் மூலம், உலக நாடுகளுக்கு செல்லக் கூடிய எரிசக்திகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது ஈரான். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல மிரட்டல்களை விடுத்து வருகிறார். ஆனால், எதற்கும் ஈரான் அசைவதாக இல்லை. இந்த நிலையில், நேற்று, ஈரான் தரப்பு, 'எதிரி கப்பல்களைத் தவிர, அனைத்து கப்பல்களையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிக்க தயார்... பாதுகாப்பும் கொடுக்கிறோம்' என்று கூறியிருந்தது. ஈரான் Fastag: 72 மணி நேரத்திற்குள் 'இந்த' தொகையை கட்டவில்லையா? இரண்டு மடங்கு அபராதம் - புதிய செக் 2 மில்லியன் டாலர் ஆனால், தற்போது, ஈரானின் அரசு தொலைகாட்சி ஈரானிய சர்வதேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது... ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல சில கப்பல்களிடம் இருந்து 2 மில்லியன் டாலர்களை வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.18.8 கோடி. செலவு இருக்கிறதே இது குறித்து ஈரானிய தலைவரான அலாவுத்தீன் போரூஜெர்டி கூறுகையில், 'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல 2 மில்லியன் டாலர் வசூலிப்பது ஈரானின் வலிமையைக் காட்டும். மேலும், போர் என்கிற போது செலவுகள் ஆகும். அதற்காக நாங்கள் இதை செய்ய வேண்டியதாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!

விகடன் 23 Mar 2026 8:54 am

ஐடா கீலிங்: 100-வது வயதில் உலகை வென்ற பெண்ணின் கதை; துயரங்களை முறியடித்த தடகளத் தாரகையைத் தெரியுமா?

ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் நமக்குள் ஆயிரம் சோர்வுகள் இருக்கலாம். இந்த வயதுக்கு மேல் என்னால் புதிதாக எதையாவது சாதிக்க முடியுமா? என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அனைத்தையும் இழந்து, வாழவே வழியில்லை என நினைத்த ஒரு பெண்மணி, தனது 67-வது வயதில் தடகளப் பாதையில் ஓடத் தொடங்கி, 100 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த சாதனைப் பெண்மணி ஐடா கீலிங் (Ida Keeling). ida-keeling மே 15, 1915-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹார்லெம் பகுதியில் பிறந்தார் ஐடா ஒலிவியா பாட்டர் (Ida Olivia Potter). அமெரிக்காவின் பெரும் பொருளாதார மந்தநிலை காலத்தில் அவரது இளமைக் காலம் கழிந்தது. இளம் வயதிலேயே தன் தாயை இழந்தார். வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி வந்த அவருக்கு, 42 வயதில் மற்றொரு பேரிடி காத்திருந்தது. அவரது கணவர் மாரடைப்பால் திடீரென மரணமடைய, நான்கு குழந்தைகளைத் தனி ஒருத்தியாக வளர்க்கும் பொறுப்பு ஐடாவின் தோள்களில் விழுந்தது. Motivation Story: நடுக்கடல்... 16 மணி நேரம் உயிருக்குப் போராட்டம்; 62 வயது முதியவர் மீண்ட கதை! வாழ்க்கை அவருக்குத் தந்த வலிகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. 1978 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் அவரது இரண்டு மகன்களும் (சார்லஸ் மற்றும் டொனால்ட்) போதைப்பொருள் தொடர்பான வன்முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். பெற்ற பிள்ளைகளை அடுத்தடுத்து இழந்த துயரம் ஐடாவை மனதளவில் சுக்குநூறாக உடைத்தது. அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி, வீட்டிற்குள்ளேயே முடங்கினார். ida-keeling ஐடாவின் மகள் ஷெல்லி கீலிங் (Shelley Keeling) ஒரு வழக்கறிஞர் மற்றும் தடகளப் பயிற்சியாளர். தன் தாயின் இருண்ட மனநிலையைக் கண்டு துடித்த அவர், தாயை மீட்க ஒரு வித்தியாசமான வழியைக் கையாண்டார். 1982-ம் ஆண்டு, தனது 67-வது வயதில் இருந்த ஐடாவுக்கு ஒரு ஜோடி ரன்னிங் ஷூக்களை வாங்கிக் கொடுத்து, 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஒரு மினி மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கட்டாயப்படுத்திப் பங்குபெறச் செய்தார். ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி ஓடத்தொடங்கிய ஐடா, அந்தப் பந்தயத்தை ஓடி முடித்தபோது ஒரு புதிய உத்வேகத்தை உணர்ந்தார். ஓடும்போது என் கவலைகள் எல்லாம் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து காணாமல் போவது போல் உணர்ந்தேன், என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். அங்கிருந்துதான் அந்த இரும்புப் பெண்மணியின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியது. Motivation Story: `சுரங்கத் தொழிலாளி டு சூப்பர் ஸ்டார்!' - சார்லஸ் பிரான்சன் சாதித்தது எப்படி? 67 வயதில் ஓடத் தொடங்கிய ஐடா, வயதாக ஆக தனது வேகத்தையும் இலக்கையும் அதிகப்படுத்தினார். உலகம் வியந்த அவரது சாதனைகளின் பட்டியல் இதோ: 95 வயது: மன்ஹாட்டனில் நடந்த ஒரு தடகளப் போட்டியில் 60 மீட்டர் தூரத்தை 29.86 வினாடிகளில் கடந்து தனது வயதுப் பிரிவில் உலக சாதனை படைத்தார். 97 வயது: 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 51.85 வினாடிகளில் ஓடி அமெரிக்க சாதனை (W95 பிரிவு) படைத்தார். 99 வயது: 100 மீட்டர் தூரத்தை 59.80 வினாடிகளில் கடந்து, 99 வயதில் அதிவேகமாக ஓடிய பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். 100 வயது: ஏப்ரல் 30, 2016-ல் 'பென் ரிலேஸ்' (Penn Relays) தடகளப் போட்டியில் சுமார் 44,469 பார்வையாளர்கள் முன், 100 மீட்டர் ஓட்டத்தை (1 நிமிடம் 17.33 வினாடிகள்) முழுமையாக முடித்த வரலாற்றின் முதல் 100 வயது பெண்மணி என்ற மாபெரும் சாதனையைத் தன் வசமாக்கினார். 102 வயது: 100 முதல் 104 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 60 மீட்டர் தூரத்தை 58.34 வினாடிகளில் கடந்து மீண்டும் உலக சாதனை படைத்தார். ida-keeling book ஐடா தனது அனுபவங்களை `Can't Nothing Bring Me Down’ என்ற சுயசரிதை புத்தகமாக 2018-ல் வெளியிட்டார். அதில் அவர், உங்கள் பிரச்னைகளைச் சுமந்துகொண்டு முடங்கிவிடாதீர்கள். முன்னேறிச் செல்லுங்கள். உங்களை நீங்களே நேசியுங்கள் என்று ஒரு செய்தியை நமக்கு விட்டுச் சென்றார். தினமும் உடற்பயிற்சி செய்வது, அளவான உணவை உண்பது என மிக எளிமையான ஆனால் ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்த அவர், ஆகஸ்ட் 25, 2021 அன்று, தனது 106-வது வயதில் அமைதியாக இயற்கை எய்தினார். ஒரு பெண் தன் கணவரையும் இரண்டு மகன்களையும் இழந்து, 67 வயது வரை எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடாமல் முடங்கி இருந்து, அதன் பிறகு ஓடத் தொடங்கி 100 வயதில் உலக சாதனைகளை முறியடிக்க முடிகிறது என்றால்... நம் கனவுகளைத் துரத்தவோ, நம் இலக்கை அடையவோ `வயது' ஒருபோதும் தடையாக இருக்காது. Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்! 

விகடன் 23 Mar 2026 7:00 am

தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய'ஒன்று; 'செய்யக்கூடாத'ஒன்று!

ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தைகள் முதல் உலக பங்குச்சந்தைகள் வரை அனைத்தும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில், முதலீட்டாளர்கள் செய்ய வேண்டிய ஒன்றையும், செய்யக்கூடாத ஒன்றையும் குறிப்பிடுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் Fastag: 72 மணி நேரத்திற்குள் 'இந்த' தொகையை கட்டவில்லையா? இரண்டு மடங்கு அபராதம் - புதிய செக் போர் மாதிரியான பதற்றச் சூழல்களில் ரீடெயில் முதலீட்டாளர்கள் பயந்து பங்குகளை விற்று விடக் கூடாது. போர் தொடங்கியதும் சந்தைத் திணறுகிறது என்றால், அது உடனாடியான தாக்கம். எப்படியும் அந்தத் தாக்கத்தில் இருந்து சந்தை பவுன்ஸ்பேக் ஆகி வரும். அதனால், பயம் வேண்டாம். போர் குறித்த பல செய்திகளைக் கேட்கும்போது, பயம் வரும். ஆனால், பயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை நடந்த அனைத்து போர்களின் தாக்கத்தில் இருந்தும் சந்தை மீண்டு வந்துள்ளது. இது வரலாறு. அதனால், நிதானம் தேவை. இது பதற்றத்தில் சந்தையில் செய்யக்கூடாத தவறு. இப்போது செய்ய வேண்டிய‌ ஒன்று... பங்குச்சந்தையில் லாபம் தரக்கூடிய ஒரே ஃபார்முலா - 'இறக்கத்தில் பங்குகளை வாங்க வேண்டும்... ஏற்றத்தில் பங்குகளை விற்க வேண்டும்'. பங்குகளை வாங்க வேண்டும் என்றால், தரமான பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். முக்கியமாக, சந்தை இறங்கும் போது, நல்ல பங்குகள் பல குறைந்த விலைக்குக் கிடைக்கும் அவற்றை கவனத்தில் கொள்ளுங்கள். சரி... அது தான் சந்தை இறக்கத்தில் இருக்கிறதே என்று மொத்த பணத்தையும் இப்போதே முதலீடு செய்துவிடக் கூடாது. ஆரம்பத்தில் 15 சதவிகித தொகையை முதலீடு செய்யுங்கள். இன்னும் போர் தொடரும் என்கிற பேச்சுகள் உள்ளன. அப்போது சந்தை இறக்கத்திற்கு செல்லும் போது, அடுத்த 15 சதவிகிதத்தை முதலீடு செய்யுங்கள்.‌ இது தான் லாபம் பார்ப்பதற்கான சூப்பர் யுக்தி. ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை

விகடன் 22 Mar 2026 3:00 pm

ஈரானிய எண்ணெயை இந்தியா வாங்கப் போகிறதா? 'குறுக்கே'நிற்கும் இரண்டு காரணங்கள் என்ன?

கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நேற்று முன்தினம் (மார்ச் 20) அமெரிக்கா 'அனுமதி' அளித்துள்ளது. அந்தந்த நாடுகள் ஈரானிய எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை தான். ஆனாலும், அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது. இந்த அனுமதியும் வெறும் 30 நாள்களுக்குத் தான். ஈரான் போர் எரிபொருள் விலையேற்றம்: 'டிக்கெட் கட்டணங்களுக்கு லிமிட் இல்லை' - விமானப் பயணம் செய்பவர்கள் கவனம்! ஈரானிய‌ எண்ணெய் Kpler தரவுகளின் படி, மத்திய கிழக்கு கடற்பகுதியில் இருந்து சீனா கடற்பகுதிக்கு அருகே வரை, 170 மில்லியன் பேரல்கள் ஈரானிய எண்ணெய் கப்பல்களில் உள்ளன. அமெரிக்காவின் அறிக்கை படி, இந்த எண்ணெயை தான் உலக நாடுகள் வாங்க வேண்டும். புதிதாக தயாரிக்கப்படும் ஈரானிய எண்ணெய் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஈரானிய எண்ணெய் வாங்கப் போகிறதா? இந்தியாவில் இப்போதே எண்ணெய் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் உள்ளது. ஈரான் போர் நீடித்தால், இந்த நிலை இன்னும் மோசமாகும். அதனால், அமெரிக்காவின் அனுமதிக்குப் பிறகு, ஈரானிய எண்ணெயை வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரெடியாக உள்ளனவாம். ஆனால், அதை உடனே செய்யாமல் இந்திய நிறுவனங்கள் இரண்டு விஷயங்களுக்காக காத்திருக்கின்றன. ஒன்று, இந்திய அரசின் வழிகாட்டுதலுக்காக. மற்றொன்று, ஈரானுக்கு எப்படி கட்டணம் செலுத்துவது என்கிற அமெரிக்காவின் நெறிமுறைகளுக்காக. இந்தத் தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டணத்தில் என்ன பிரச்னை? ஈரான் பொதுவாக வர்த்தகங்களுக்கு அமெரிக்க டாலர்களை பெறுவதில்லை. அது தான் சிக்கல். ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை

விகடன் 22 Mar 2026 11:25 am

இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையம் இருக்கும் நகரில் ஈரான் ஏவுகணை தாக்குதல்; 47 பேர் காயம்!

ஈரானுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா இந்த போரில் முடிக்கவேண்டிய வேலைகளை முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் அமெரிக்கா இப்போரில் இருந்து வெளியேறும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் அமெரிக்கா கூடுதல் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானில் எந்த இடத்தை குறிவைத்து தாக்கினாலும் உடனே ஈரான் அது போன்ற இடங்களை இஸ்ரேலில் குறிவைத்து தாக்கி வருகிறது. கடந்த வாரம் ஈரானில் உலகின் மிகப்பெரிய எரிவாயு மண்டலங்களில் ஒன்றாக கருதப்படும் தெற்கு பார்ஸ் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள எரிவாயு மையங்களில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்கா தலையிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என்று இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது இஸ்ரேல் நேற்று ஈரானில் உள்ள நடன்ஸ் நகரில் இருக்கும் ஷாஹித் அஹ்மதி-ரோஷன் அணு ஆராய்ச்சி மையத்தில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் இஸ்ரேலில் உள்ள டிமோனா நகரில் ஈரான் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியது. இந்த நகரில் இஸ்ரேலின் அணு ஆராய்ச்சி மையம் இருக்கிறது. ஈரான் அனுப்பிய ஏவுகணையை இஸ்ரேல் வான் தடுப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்த தவறிவிட்டன. இதனால் ஏவுகணை குடியிருப்பு வளாகத்தில் விழுந்து கட்டடங்கள் இடிந்ததில் 47 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேலின் தேசிய அவசர மருத்துவச் சேவை பிரிவு அதிகாரி மேகன் டேவிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''தாக்குதலில் காயமடைந்த 36-க்கும் மேற்பட்டோருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏவுகணைத் துண்டுகள் விழுந்தும், பாதுகாப்பு அரண்களை நோக்கி ஓடும்போதும் இந்த காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர். குறிப்பாக 10 மற்றும் 12 வயது சிறார்கள் காயம் அடைந்துள்ளனர்''என்றார். வான் பாதுகாப்பு ஏவுகணையை தடுக்க தவறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு ஆராய்ச்சி மையங்கள் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. டிமோனா நகரம் குட்டி இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேலில் வாழும் இந்திய யூதர்களின் முக்கிய மையமாகும். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர்ந்த இந்திய யூதர்கள் ஆவர். சுமார் 7,500 இந்திய வம்சாவளியினர் இங்கு வாழ்கின்றனர். இது அந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும். கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை தாக்குவோம் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா (PBUH) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கையில், முந்தைய எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, ஒருவேளை எதிரிகளால் ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு சொந்தமான அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், மற்றும் கடல்நீரை சுத்திகரிக்கும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்''என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஜப்பான் கப்பல்களை அனுமதிக்க ஈரான் பரிசீலித்து வருகிறது.

விகடன் 22 Mar 2026 9:42 am

'48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை'மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?'சீறும் ஈரான்

ஈரான் போர் முடிவதாகவே தெரியவில்லை. அமெரிக்காவும், இஸ்ரேலும் மிரட்ட, பதிலுக்கு ஈரான் மிரட்ட என்று பிரச்னை பெரிதாகி கொண்டே போகிறது. நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு தனது ட்ரூத் பக்கத்தில் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரான் போர் 'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத' அமெரிக்கா? என்ன எச்சரிக்கை? எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக திறக்கவில்லை என்றால்... அமெரிக்கா ஈரானின் வெவ்வேறு எரிசக்தி கட்டமைப்புகளை அழிக்கும். இதில் ஈரானின் மிகப்பெரிய கட்டமைப்பே முதலில் அழிக்கப்படும் என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஈரான் பதிலடி ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி தராமல் இருக்குமா என்ன? Fars செய்தி நிறுவனத்தின் வழியாக, ஈரானின் இராணுவ செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி கதம் அல்-அன்பியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ஈரானின் எரிபெருள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் எதிரிகளால் தாக்கப்பட்டால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உப்புநீக்கம் ஆகிய கட்டமைப்புகள் குறி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தப் போரினால் உலகளவில் எரிசக்தி கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் கூறியுள்ளது எல்லாம் நடந்தால் நிலைமை மிகவும் மோசமடையும். 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு

விகடன் 22 Mar 2026 8:05 am

`இனி அமெரிக்கா அதை செய்யாது, இலக்கை நெருங்கி விட்டோம்' - ஈரான் போரிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானில் நடத்தி வரும் போர் மூன்றாவது வாரத்திற்கு வந்திருக்கிறது. இத்தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்கா 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களை கப்பல்களில் அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே வளைகுடாவில் 50 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். புதிதாக வரும் கப்பல் மத்திய கிழக்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இத்தாக்குதலை ஆரம்பத்தில் இருந்தே முன்னெடுத்தது இஸ்ரேல்தான். எனவேதான் இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ஈரான் தங்களது பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதால் அந்த வழியாக வர்த்தக கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நேட்டோ நாடுகளிடம் போர்க்கப்பல்களை அனுப்பும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் எந்த நாடும் போர்க்கப்பலை அனுப்ப மறுத்திவிட்டது. இதனால் நேட்டோ அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே இந்த போர் அமெரிக்காவிற்கு தேவையில்லாதது என்று அமெரிக்க மக்கள் நம்புகின்றனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மற்றொரு புறம் போரை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்காவிற்கு கடுமையான பொருட்செலவாகிறது. இதையடுத்து போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகிறது. இது தொடர்பாக அவர் தற்போது தனது சமூக தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய நெருங்கிவிட்டதாகவும், இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிரான ராணுவ முயற்சிகள் அதன் நோக்கத்தை எட்டிவிட்டன. ஈரானின் ஏவுகணைத் திறன், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில் கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. ஈரானின் கடற்படை மற்றும் வான்படை அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெறாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நட்பு நாடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மறுபுறம் இருப்பவர்களை நாம் முழுமையாக அழித்துக் கொண்டிருக்கும்போது போர்நிறுத்தம் செய்ய முடியாது என்று கூறி, உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த அவர் மறுத்துவிட்டார். ஹார்முஸை கைவிட்ட ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணை தொடர்பான தனது செய்தியில், `அந்தப் பாதையைச் சார்ந்துள்ள நாடுகள் அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் மற்ற நாடுகள், தேவைக்கேற்ப அதன் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா இனி அதைச் செய்யாது. அமெரிக்கா இதற்கு உதவ முடியும் என்றாலும், அது அவசியமற்றது. உதவி கேட்கப்பட்டால், ஹார்முஸ் தொடர்பான முயற்சிகளில் அந்த நாடுகளுக்கு நாங்கள் உதவுவோம். ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகு அது தேவையாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். இந்த பணி எளிதானது என்று விவரித்த ட்ரம்ப், அந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பாதுகாப்பது, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒரு எளிதான ராணுவ நடவடிக்கையாக இருக்கும் என்றும் கூறினார். ட்ரம்பின் இந்த கருத்துகள், மத்திய கிழக்கில் பதற்றங்கள் இன்னும் தணியாத நிலையிலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சூழலிலும், மூன்று வாரங்களாகத் தீவிரமாக நடத்தி வந்த தனது நேரடி ராணுவ தாக்குதலை அமெரிக்கா குறைக்கத் தயாராகி வருவதைக் காட்டுகின்றன. இது அமெரிக்காவின் உத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

விகடன் 21 Mar 2026 10:45 am

'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத'அமெரிக்கா?

ஈரான் போரும் முடிந்தபாடில்லை. ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்க நட்பு நாடுகள் கப்பல்களுக்கு திறப்பதில்லை. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகள் எரிப்பொருள் தட்டுப்பாடால் திணறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா. ஈரான் எண்ணெய்க்கு அனுமதி இது குறித்து அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கருவூலம் அனுமதி அளிக்கிறது. இது குறுகிய கால அனுமதி மட்டுமே. தற்போது, குறைந்த விலைக்கு தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்கி சீனா பதுக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்காட் பெசென்ட் `அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய Air India விமானம்! இப்படி ஏற்கெனவே கப்பலில் இருக்கும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதிப்பதன் மூலம், உலக சந்தைக்குள் கிட்டத்தட்ட 140 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அமெரிக்கா கொண்டு வருகிறது. சப்ளை மீது ஈரான் ஏற்படுத்தியுள்ள தற்காலிக அழுத்தத்தையும் குறைக்கிறது. ஈரான் எண்ணெயை அனுமதித்து உலக அளவில் எண்ணெய் விலையைக் குறைப்பதோடு, போரைத் தொடர்ந்தும் டெஹ்ரானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுப்போம். அமெரிக்காவின் செயல் ஈரான் எண்ணெய்க்கான தற்காலிக அனுமதி ஏற்கெனவே கப்பல்களில் உள்ள ஈரான் எண்ணெய்களுக்கு மட்டுமே... புதிதாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கோ, புதிதாக வாங்கவோ அல்ல. மேலும், ஈரான் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்த முடியாதப்படி, அமெரிக்கா அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும். இதுவரை, உலக சந்தைக்கு ட்ரம்ப் அரசாங்கம் 440 மில்லியன் கூடுதல் பேரல்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில் தடை விதித்திருந்த ரஷ்ய எண்ணெய்களுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா. இப்போது ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது. ஈரான் போரில் உலக அளவிலான எண்ணெய் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குக் கடும் நெருக்கடியாக உள்ளது. 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்

விகடன் 21 Mar 2026 10:31 am

'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத'அமெரிக்கா?

ஈரான் போரும் முடிந்தபாடில்லை. ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்க நட்பு நாடுகள் கப்பல்களுக்கு திறப்பதில்லை. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகள் எரிப்பொருள் தட்டுப்பாடால் திணறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா. ஈரான் எண்ணெய்க்கு அனுமதி இது குறித்து அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கருவூலம் அனுமதி அளிக்கிறது. இது குறுகிய கால அனுமதி மட்டுமே. தற்போது, குறைந்த விலைக்கு தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்கி சீனா பதுக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்காட் பெசென்ட் `அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய Air India விமானம்! இப்படி ஏற்கெனவே கப்பலில் இருக்கும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதிப்பதன் மூலம், உலக சந்தைக்குள் கிட்டத்தட்ட 140 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அமெரிக்கா கொண்டு வருகிறது. சப்ளை மீது ஈரான் ஏற்படுத்தியுள்ள தற்காலிக அழுத்தத்தையும் குறைக்கிறது. ஈரான் எண்ணெயை அனுமதித்து உலக அளவில் எண்ணெய் விலையைக் குறைப்பதோடு, போரைத் தொடர்ந்தும் டெஹ்ரானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுப்போம். அமெரிக்காவின் செயல் ஈரான் எண்ணெய்க்கான தற்காலிக அனுமதி ஏற்கெனவே கப்பல்களில் உள்ள ஈரான் எண்ணெய்களுக்கு மட்டுமே... புதிதாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கோ, புதிதாக வாங்கவோ அல்ல. மேலும், ஈரான் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்த முடியாதப்படி, அமெரிக்கா அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும். இதுவரை, உலக சந்தைக்கு ட்ரம்ப் அரசாங்கம் 440 மில்லியன் கூடுதல் பேரல்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில் தடை விதித்திருந்த ரஷ்ய எண்ணெய்களுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா. இப்போது ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது. ஈரான் போரில் உலக அளவிலான எண்ணெய் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குக் கடும் நெருக்கடியாக உள்ளது. 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்

விகடன் 21 Mar 2026 10:31 am

'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்

ஈரான் போர் தொடங்கி இன்றோடு நான்காவது வாரம் தொடங்குகிறது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் என எந்த நாடும் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இல்லை. போர் நிறுத்தம் வேண்டாம் 'விரைவில் போர் முடிவுக்கு வரும்' என்று நேற்று முன்தினம் (மார்ச் 19), அமெரிக்கா சொன்னதில், உலகம் கொஞ்சம் ஆசுவாசமாகியது. ஈரான் போர் தங்கம் விலை குறையுதுதான்; ஆனால், சரியவில்லை! - இப்போ 'இந்த' தப்பை மட்டும் பண்ணீடாதீங்க | Gold ஆனால், அதற்கும் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். எதிரியை நாம் அடியோடு அழிக்கும் போது, போர் நிறுத்தம் செய்யமாட்டோம் என்று உங்களுக்கு தெரியும் தானே' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கு ஈரான் போரில் உள்ள மிகப்பெரிய பிரச்னையே 'ஹார்முஸ் ஜலசந்தி மூடலே'. இதை சரிசெய்ய தங்களது போர்க்கப்பலை அனுப்ப சொல்லி சீனா, ஜப்பான், நேட்டோ நாடுகளிடம் ட்ரம்ப் கேட்டார். சிலர் மறுத்துவிட்டனர்... சிலர் வாயைக் கூட திறக்கவில்லை. நேட்டோ நாடுகள் - 'கோழைகளே' இதை தற்போது கடுமையாக சாடியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்கா இல்லையென்றால், NATO வெறும் காகிதப் புலிதான். அணு ஆயுதம் கொண்ட ஈரானுடன் சண்டையிட நேட்டோ நாடுகள் வரவில்லை. இந்த நாடுகளுக்குக் குறைந்த ஆபத்தோடு ராணுவ ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஈரான் உடனான போரில் உதவாத அவர்கள், எண்ணெய் விலை உயர்வை பற்றிப் புகார் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவ மறுக்கிறார்கள். கோழைகள்... உங்களை மறக்கமாட்டோம் என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். HDFC தலைவர் ராஜினாமா: சந்தை கடும் சரிவு; வங்கியின் 'இந்த' செயல் காரணமா? முதலீட்டாளர்கள் இனி?

விகடன் 21 Mar 2026 8:24 am

அமெரிக்க எங்களிடம் அனுமதி கோரியது, ஆனால் நாங்கள்.!- அநுர குமார திசாநாயக்க சொல்வது என்ன?

ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி கொண்டே இருக்கிறது. அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் விநியோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​ சில நாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். மார்ச் 4 ஆம் தேதி 8 கப்பல்கள் மற்றும் இரண்டு போர் விமானங்களை இலங்கையில் அனுமதிக்கக்கோரி அமெரிக்கா கேட்டது. ட்ரம்ப் ஆனால் அந்தக் கோரிக்கையை நாங்கள் நிராகரித்துவிட்டோம். எந்த அழுத்தமும் வந்தாலும், நம் நாடு நடுநிலை வகிக்கும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 21 Mar 2026 7:06 am

Share Market: 'நல்ல காலம் பொறக்குது?'இப்போவே 'இதை'நோட் பண்ணி வையுங்க முதலீட்டாளர்களே!

21 நாள்களாக ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை நடத்திகொண்டே தான் இருக்கிறது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலிலும், வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், 'சீக்கிரம் ஈரான் போர் முடியும்' என்று சிக்னல் கொடுத்துள்ளது அமெரிக்கா. இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கூறுகிறார். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் HDFC தலைவர் ராஜினாமா: சந்தை கடும் சரிவு; வங்கியின் 'இந்த' செயல் காரணமா? முதலீட்டாளர்கள் இனி? ஈரான் போர் சீக்கிரம் முடியும் என்று நேற்று முதல் அமெரிக்கா கூறி வருகிறது. இது விரைவில் நடக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்நோக்கலாம். போர் போன்ற பதற்ற காலங்களில் முதலீட்டாளர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது - போர் குறித்த செய்திகளைத் தினமும் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம், அதை வைத்துத் தான் சந்தையில் மாற்றங்கள் நடக்கும். இதை ஆராய்ந்தாலே, போர் முடிந்த பின், எந்தத் துறைகள் கம்பேக் கொடுக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம் அல்லது யூகிக்கலாம். முதலில் செய்ய வேண்டியது... இப்போது சந்தையில் டாக் - ஈரான் போர் முடிகிறது என்பது தான். அதனால், போருக்குப் பின் எந்தத் துறைகள் பவுன்ஸ்பேக் வரும் என்று பாருங்கள். அந்தத் துறைகளில் உலோகங்கள், கட்டமைப்பு, இன்ஜீனியரிங், சிமென்ட் போன்றவற்றில் ஏற்றம் இருக்கும். இப்படி எந்தெந்த துறைகளில் ஏற்றம் இருக்கும் என்று இப்போதே ஆராய்ந்து வைத்தால், பின்னால் செய்யப்போகும் முதலீட்டுக்கு உதவிகரமாக இருக்கும். இன்னொன்று, ஒரே நேரத்தில் இந்தத் துறைகளில் முதலீடு செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்ய இப்போதே வாய்ப்பு இருக்கிறது என்பதையும் கவனிக்கலாம். பங்குச்சந்தை 'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன? ம்ம்ம்... கிளப்புங்கள் எஸ்.ஐ.பி புதிதாக தொடங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல காலம். பொதுவாக சந்தையில் லாபம் பார்க்க இருக்கும் கோல்டன் ரூல் - சந்தை இறங்கினால் வாங்க வேண்டும்... ஏறினால் விற்க வேண்டும். அப்படி பார்த்தால், இப்போது சந்தையில் 10 - 12 சதவிகித கரெக்‌ஷன் நடந்திருக்கிறது. அதனால், முதலீட்டை தொடங்க இது நல்ல நேரமே. இப்போது போர் தொடர்ந்துகொண்டிருப்பதால், கச்சா எண்ணெயில் நல்ல டிரேடிங் வாய்ப்பு காத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 20 Mar 2026 3:59 pm

ஈரான் - இஸ்ரேல்: அமெரிக்காவை நாங்கள் போருக்குள் இழுக்கவில்லை - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுப் படை போர் தொடங்கி 20 நாள்கள் நெருங்கிவிட்டது. இன்றளவும் இருநாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அது வதந்தி என இஸ்ரேல் மறுத்தது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று ஊடகங்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது, ``ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் அணுசக்தித் திறன் பெரியளவில் சிதைத்திருக்கிறோம். ஈரானால் இனி யுரேனியத்தைச் செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ முடியாது. ஈரான் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. நெதன்யாகு - ட்ரம்ப் போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைக் கிடங்குகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படும். அமெரிக்காவை இந்தப் போருக்குள் இஸ்ரேல் கட்டாயப்படுத்தி இழுத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிபர் ட்ரம்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லிக் கொடுக்க முடியுமா? அவர் எப்போதும் அமெரிக்காவின் நலனுக்காகவே முடிவெடுப்பார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறை மற்றும் ராணுவங்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை எட்டி வருகின்றன. முழு மத்திய கிழக்கையும், ஏன் உலகத்தையே நாங்கள் பாதுகாத்து வருவதில் பெருமிதம் கொள்கிறோம். ஈரானின் முக்கிய எரிசக்தி வளமான South Pars எரிவாயு வயல் மீதான தாக்குதலில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்பட்டது. அதிபர் ட்ரம்பின் வேண்டுகோளை ஏற்று, அந்த எரிவாயு வயல்கள் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். ஈரான் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தில் இருக்கிறது. இதுவரை வான்வழித் தாக்குதலாக மட்டுமே நடந்து வரும் இந்தப் போர், அடுத்தகட்டமாகத் தரைவழித் தாக்குதலாக மாறக்கூடும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஈரானின் தற்போதைய தலைமைக்குள் கடும் குழப்பமும் பதற்றமும் நிலவுகிறது. இப்போது ஈரானை யார் வழிநடத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை. ஈரானிய மக்கள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி தங்கள் நாட்டின் எழுச்சிக்கு வழிவகுக்க வேண்டும். அந்த நாட்டின் எதிர்காலம் மக்கள் கையிலேயே இருக்கிறது என்றார். திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?

விகடன் 20 Mar 2026 10:27 am

மத்திய கிழக்கு போர் எதிரொலி: எரிசக்தித் தட்டுப்பாடைச் சமாளிக்க இந்தியாவின் திட்டம் என்ன?

அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹார்மூஸ் ஜலசந்தியும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், எரிசக்தித் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எரிசக்தி தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்துவந்த இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். ரந்தீர் ஜெய்ஸ்வால் அப்போது, ``இந்திய மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவிடமிருந்தும் எல்.பி.ஜி (LPG) வாங்க அரசு தயாராக இருக்கிறது. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், எரிசக்தி விநியோகத்திற்கான ஆதாரங்களை ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், பரவலான இடங்களிலிருந்து இறக்குமதி செய்ய விரும்புகிறோம். எங்கள் மக்களின் எரிபொருள் தேவையை உறுதி செய்வதுதான் எங்களின் முதன்மையான நோக்கம். எனவே, ரஷ்யாவிடம் எரிவாயு கிடைத்தால், அங்கிருந்தும் வாங்குவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுக்கு மத்தியில், அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிடமிருந்தும் எரிசக்தி உதவி கோரி கோரிக்கைகள் வந்திருக்கின்றன. 2007-ம் ஆண்டு முதல் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் வங்கதேசத்திற்கு இந்தியா டீசல் விநியோகம் செய்து வருகிறது. தற்போதைய நெருக்கடியிலும் அண்டை நாடுகளுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும். இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் மற்றும் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த உதவிகள் மேற்கொள்ளப்படும். அமெரிக்கா- ஈரான் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் சமையல் எரிவாயுவை (LPG) மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை மாற்றுச் சமையல் முறைகளை ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். எரிவாயுத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மாநில அரசுகள் அதிரடி சோதனைகளைத் தொடங்கியுள்ளன. அதேசமயம், எல்.பி.ஜி மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக உணவகங்கள் மற்றும் விடுதிகளில் நிலக்கரி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் தட்டுப்பாட்டை ஓரளவுக்குச் சமாளிக்க முடியும் என நம்புகிறோம் என்றார். காலியான காஸ் சிலிண்டர்... கோட்டைவிட்ட மத்திய அரசு... மாற்று வழிதான் என்ன?

விகடன் 20 Mar 2026 7:21 am