SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

வெள்ளை மாளிகை வாசலில் துப்பாக்கிச் சூடு: பெண் காவலர் பலி; `பைடன்தான் காரணம்' -ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில், தேசிய காவல்படை உறுப்பினர்களான சிறப்பு நிபுணர் சாரா பெக்ஸ்ட்ரோம், ஸ்டாஃப் சார்ஜென்ட் ஆண்ட்ரூ வுல்ஃப் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இரு பாதுகாப்பு வீரர்களும் கடுமையாகக் காயமடைந்தனர். ட்ரம்ப் அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சாரா பெக்ஸ்ட்ரோம் உயிரிழந்தார். மற்றொரு காவல்துறை நிபுணர் சிகிச்சையில் இருக்கிறார். இந்த நிலையில், வெள்ளை மாளிகை அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான செய்தியில், இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா (29). இவர் 2021-ல் அமெரிக்காவில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் பயங்கரவாதச் செயல் குற்றச்சாட்டில் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) விசாரணையில் இருக்கிறார். பலியான சாரா பெக்ஸ்ட்ரோம் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம், அகதிகள் வருகையைக் காட்டும் ஒரு விமானப் படத்தைக் காட்டி, மிகவும் ஆபத்தான மற்றும் குற்றப் பின்னணி கொண்ட மக்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு வந்தார்கள். அமெரிக்கா விரும்பும் தகுதியான நல்லவர்கள் அல்ல. தற்போது இந்த நிலைமை குழப்பமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தேக நபர் ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டவர். அவரை ஜோ பைடன் அரசுதான் இங்குக் கொண்டு வந்தது. அமெரிக்காவுக்குள் வரும் மக்களைக் கட்டுப்படுத்துவதைவிடப் பெரிய பாதுகாப்புப் பிரச்னை எதுவும் இல்லை. உண்மையைச் சொன்னால், இப்படிப்பட்டவர்களை நாங்கள் இங்கு விரும்பவில்லை என்றார். மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?

விகடன் 28 Nov 2025 9:25 am

Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமைந்துள்ளது வாங் ஃபுக் நீதிமன்றம் (Wang Fuk Court) என்ற உயரமான குடியிருப்பு வளாகம். இந்த வளாகத்தில் 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள் இருக்கின்றன. அதனால் மிகுந்த அடர்த்தியான குடியிருப்பு வளாகம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்டு வந்தது. அதற்காக மூங்கில் சாரக்கட்டுகளால் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், சீன நேரத்தின்படி நேற்று பிற்பகல் 2:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. Hong Kong: தீ விபத்து பலத்த காற்று, எளிதில் தீபற்றும் மூங்கில் சாரக்கட்டுகள் போன்றவற்றால், தீ மளமளவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 44 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 279 பேர் காயமடைந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து 900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். மீட்புப் பணியைத் துரிதப்படுத்தி, இன்னும் கட்டிடத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்!

விகடன் 27 Nov 2025 10:23 am

மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?

வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் அதிகம் குடியேறுவதை தடுப்பதும், அமெரிக்கர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஃபுல் ஃபோக்கஸ். அவர் முன்னெடுத்த தேர்தல் பிராசாரமும் இது தான். அதற்கேற்ற மாதிரி அதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றினார். அடுத்ததாக விசா நடைமுறைகளை கெடுபிடிகளை அதிகரித்து வருகிறார். அதில் ஒன்று தான் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு. இது இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. காரணம், இந்த விசா வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. ஹெச்-1பி விசா H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு? 'பிராஜெக்ட் ஃபயர்வால்' திட்டம் இந்த சூழலில் தான், ஹெச்-1பி விசாவிற்கு மேலும் கெடுபிடியை கூட்டுவதை போல, 'பிராஜெக்ட் ஃபயர்வால் (Project Firewall)' என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது ட்ரம்பின் அரசாங்கம். இந்தக் குழு ஹெச்-1பி விசா விண்ணப்பத்தை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துகிறதா என்பதை கண்காணிக்கும். இந்தக் குழுவின் முக்கிய வேலை, வரும் விண்ணப்பங்களை, 'குறிப்பிட்ட வேலையை அமெரிக்கர்கள் செய்ய முடியுமா?' என்பதை ஆராய்வது தான். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம்... சம்பளத்தை உயர்த்தலாம் என்பதை ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டம் ஆகும். H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்

விகடன் 26 Nov 2025 1:40 pm

Fei-Fei Li: நிறுவனம் ஆரம்பித்த ஓரே ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்! - யார் இந்த AI உலகின் `ராஜமாதா'?

எங்கும் ஏஐ... எதிலும் ஏஐ... என தற்போது ஏஐ துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அந்தத் துறையில் முக்கியமான ஒருவர் தான் ஏஐ துறையின் 'ராஜமாதா' என்று அழைக்கப்படும் ஃபெய் - ஃபெய் லி. யார் இந்த ஃபெய் - ஃபெய் லி? சீனாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லி, பொருளாதார தேவைகளுக்காக தனது 15 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய இளம் வயதில் நியூ ஜெர்சியில் அவர்கள் குடும்பத்திற்கு இருந்த சொந்தமான சின்ன டிரைவாஷ் கடையில் உதவிகளை செய்து வந்தார். இங்கே வேலை செய்த நேரம் போக, மீதி நேரங்களில் அவர் இருப்பிடத்திற்கு அருகே இருந்த சீன உணவகங்களில் பணிபுரிந்துள்ளார். ஃபெய் - ஃபெய் லி Gold Rate: மீண்டும் உயரும் தங்கம் விலை; காரணம் என்ன? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? கல்லூரி படிப்பு வீட்டிற்கு உதவி, சின்ன சின்ன வேலைகள் என எது செய்து வந்தாலும், படிப்பை மட்டும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. லி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பையும், கலிஃபோர்னியாவில் உள்ள கால்டெக்கில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த பின், கூகுள் கிளவுட் நிறுவனத்தில் ஏஐ பிரிவில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். 2018-ம் ஆண்டு சில காரணங்களுக்காக அந்தப் பணியில் இருந்து விலக, ஏ.ஐ மீது அவருக்கு இருந்த பற்று கொஞ்சம் கூட குறையவில்லை. அதனால், அந்தத் துறையில் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். ஏ.ஐ-க்கே பயிற்சியளிக்கும் கருவி 2007-ம் ஆண்டு, லி தன்னுடன் வேலை பார்ப்பவர்களையும் சில மாணவர்களை இணைத்து 'இமேஜ்நெட்' என்கிற திட்டத்தை உருவாக்கினார். இது 14 மில்லியனுக்கும் அதிகமான லேபிள் இடப்பட்ட படங்களைக் கொண்டு மிகப்பெரிய தொகுப்பு ஆகும். இது தான் பின்னாளில் ஏ.ஐ-க்கே பயிற்சி அளிப்பதற்கான முக்கிய கருவியாக மாறியது. இமேஜ்நெட் வருவதற்கு முன், ஏஐ படங்களில் உள்ள பொருள்களை புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டது. ஆனால், இமேஜ்நெட்டிற்கு பின், ஆப்ஜெக்ட் டிடெக்‌ஷன், முகம் அடையாளம் காணுதல் போன்ற பல விஷயங்கள் ஏஐ-க்கு ஈசியாகின. 'குயின் எலிசபெத்' பட்டம் பெற்ற போது மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்! 'குயின் எலிசபெத்' ஃபெய் - ஃபெய் லி லியின் ஆர்வம் மற்றும் கடின முயற்சியால் கடந்த ஆண்டு 'World labs' என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஆரம்பித்த ஓராண்டிலேயே பெரிய பெரிய உயரங்களை தொட்டது இந்த நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே 1 பில்லியன் டாலர். நிறுவனத்தில் பணிபுரிவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இதுவரை சில பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள 'குயின் எலிசபெத்' பட்டத்தையும் பெற்றுள்ளார். வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி?

விகடன் 26 Nov 2025 11:07 am

சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்

சீனாவின் நடவடிக்கை நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறினார்கள். இதற்கு காரணமாக, அவர்கள் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் பிராந்தியம் என்று கூறுகிறார்கள் - இது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கின் சமீபத்திய பதிவு. ஷாங்காய் விமான நிலையம் Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? இந்தப் பதிவு இந்தியா - சீனா உறவில் சிக்கலை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் மாநிலமாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை, 2006-ம் ஆண்டு முதல் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை இந்தியா சற்றும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் பதில் 'பிரேமா வாங்ஜோம் தோங்டாக் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்' - இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும் காரணம் இது. இந்தியாவின் பதிலடி பிரேமா தடுக்கப்பட்டதற்கும், சீனாவின் பதிலுக்கும் கடுமையான பதிலடியை தந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். அவர், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி ஆகும். இது வெளிப்படையான உண்மை. இதை சீனா எவ்வளவு மறுத்தாலும், அது மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றாது. ரந்தீர் ஜெய்ஸ்வால் அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது? இந்தத் தடுப்பு விவகாரத்தை பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான பயண மரபுகளை மீறும் இந்த செயலுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. சீனாவின் இந்த செயல், அனைத்து தேசத்தினரும் அவர்களது நாட்டில் 24 மணி நேரம் எந்த விசாவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்கிற அவர்களது சொந்த விதிமுறையை மீறியது ஆகும் என்று பதிவிட்டுள்ளார். Our response to media queries on statements made by the Chinese Foreign Ministry⬇️ https://t.co/3JUnXjIBLc pic.twitter.com/DjEdy7TmTK — Randhir Jaiswal (@MEAIndia) November 25, 2025 `இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

விகடன் 26 Nov 2025 8:47 am

Yaodong: 4 கோடி சீனர்கள் வசிக்கும் 'ரகசிய'குகை வீடுகள் - வியக்க வைக்கும் பின்னணி

உலகம் முழுவதும் நவீன கட்டுமான முறைகளைத் தேடி வரும் நிலையில் சீனாவின் 4,000 ஆண்டுகள் பழைமையான 'யாவ்டோங்' (Yaodong) எனப்படும் குகை வீடுகளில் இன்றும் மக்கள் வசித்து வருவது பற்றித் தெரியுமா? தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும், சீனாவில் இன்றும் சுமார் 4 கோடி மக்கள் இந்தப் பாரம்பரிய மண் குகை வீடுகளில் வசித்து வருகின்றனர் 'யாவ்டோங்' என்பதற்கு சூளை குகைகள் என்று பொருளாம். இவை பார்ப்பதற்கு செங்கல் சூளைகளின் வளைவான உட்புறத்தைப்போலவே இருக்குமாம். ஷாங்சி, ஷான்சி, கான்சு மற்றும் ஹெனான் ஆகிய மாகாணங்களில் இதுபோன்ற குகை வீடுகள் அதிகம் காணப்படுகின்றன. yaodong இப்பகுதிகளில் காணப்படும் மண் வகையே, மலையைக் குடைந்து வீடு கட்டுவதற்கு வசதியாக அமைந்துள்ளது. கி.மு 2100–1600 காலத்திலேயே இந்த வீடுகள் தோன்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குகை வீடுகளின் மிகச்சிறந்த அம்சமே இவற்றின் இயற்கை வெப்பநிலை கட்டுப்பாட்டு முறை என்கின்றனர். வெளியில் வெயில் சுட்டெரித்தாலும், குகைக்குள் குளிர்ச்சியாக இருக்குமாம். அதேபோன்று கடும் குளிர் காலத்தில், இந்த மண் சுவர்கள் வெப்பத்தைத் தக்கவைத்து இதமான சூழலைத் தருமாம். மேலும் குளிர் காலத்தை சமாளிக்க இந்த வீடுகளில் 'காங்' (Kang) எனப்படும் ஒரு சிறப்பான அம்சம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட படுக்கை அமைப்பை வீட்டின் அடுப்பங்கரையுடன் இணைகின்றனர். சமைக்கும்போது ஏற்படும் வெப்பம் மற்றும் புகை, இந்தப் படுக்கைக்கு அடியில் உள்ள குழாய்கள் வழியாகச் சென்று, படுக்கையை சூடுபடுத்துகிறது. இதுவே அவர்களை குளிர்காலத்தில் இதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நவீன நகர வாழ்க்கையைவிட, இயற்கையோடு இணைந்த இந்தக் குகை வாழ்க்கை முறை ஆரோக்கியமானது என்கின்றனர் இதில் வசிப்பவர்கள். எவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்த வீடுகளில் சில ஆபத்துகளும் உள்ளன. குறிப்பாக நிலநடுக்கம் ஏற்படும்போது, மென்மையான மண் சரிந்து விழும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. View this post on Instagram

விகடன் 25 Nov 2025 3:01 pm