SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத பரஸ்பர வரி, 25 சதவீத கூடுதல் வரி என மொத்தம் 50 சதவீத வரியும் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்படி இந்தியா மீது மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகள் மீது வரி விதித்துள்ளார். இந்த வரிக்கு எதிராக தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது. வரி என்ன குரல்? டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரம்ப் அவசர சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ள வரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த வரிகளால் அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்க நுகர்வோர்கள், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏன்? இந்த மசோதாவில் குறிப்பாக இந்தியா குறித்து பேசியுள்ளனர். வட கரோலினா, வட டெக்ஸான் போன்ற மாகாணங்கள் இந்தியாவுடன் கலாசார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தொடர்பு உடையவை. இந்த வரியினால் அந்த மாகாண மக்கள் விலைவாசி உயர்வு தொடங்கி பலவற்றில் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது. Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு

விகடன் 13 Dec 2025 8:29 am

Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு

நேற்று முன்தினம் (டிசம்பர் 10) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'கோல்டு கார்டு' விசா திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இது முன்னரே அறிவித்த திட்டம் தான். ஆனால், நேற்று முன்தினம் முதல் அமலாகியுள்ளது. 'ட்ரம்ப் கோல்டு கார்டு' என்றால் என்ன? ட்ரம்ப் கோல்டு கார்டு - இதை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான சட்டரீதியான பாஸ் என்றே கூறலாம். இந்தக் கோல்டு கார்டு மூலம் தனிநபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்தக் கோல்டு கார்டு 1990-களில் இருந்த EB-5 விசா திட்டத்திற்கு மாற்றாகும். ட்ரம்ப் கோல்டு கார்டு |Trump Gold Card US: `H-1B visa' மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி EB-5 விசா திட்டம் என்றால் என்ன? EB-5 திட்டம் என்பது 1990-களில் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும். இந்த முதலீடுகள் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நினைத்தது அமெரிக்க அரசு. அதை செய்தும் காட்டியது. இந்தத் திட்டத்தின் 2.o தற்போதைய 'ட்ரம்ப் கோல்டு கார்டு' திட்டம். இந்தக் கார்டிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? அமெரிக்காவிற்குள் செல்ல தகுதியான மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுள்ள தனிநபர்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். ட்ரம்ப் கோல்டு கார்டிற்கு விண்ணப்பித்திருப்பவர்களின் இணையர்கள், அவர்களுடைய 21 வயது நிரம்பாத குழந்தைகளும் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். ட்ரம்ப் கோல்டு கார்டு குடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ள பிளானா?- இனி 'நோ' விசா! விலை என்ன? இந்தக் கார்டிற்கான பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும். இதை ரீஃபண்ட் பெற முடியாது. அடுத்ததாக தனிநபர்கள் ஒரு விண்ணப்பத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் கட்ட வேண்டும். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.9 கோடி. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும் 2 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும். மேலே குறிப்பிட்ட தனிநபர் அல்லது ஊழியர்களின் இணையர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். இது போக, விசாவிற்கான செலவு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள் தனியாக இருக்கும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? trumpcard.gov இணையதளத்திற்கு சென்று, தனிநபர், கார்ப்பரேட், பிளாட்டினம் வெயிட்லிஸ்ட் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். உங்களது தகவல்களை பதிவிட வேண்டும். அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள myUSCIS.gov கணக்கை உருவாக்கிவிட வேண்டும். இப்போது பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும். அடுத்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு துறை உங்களைப் பற்றி ஆய்வு செய்யும். அது 'ஓகே' ஆனதும், விண்ணப்பித்திற்கேற்ப 1 மில்லியன் டாலர், 2 மில்லியன் டாலர்கள் கட்டினால், நீங்கள் செய்ய வேண்டிய பிராசஸ் முடிந்தது. அமெரிக்க டாலர்கள் உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா? இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? செக் செய்வது எப்படி? சிக்கலும்... இந்தக் கோல்டு கார்டு பெற்ற பின் சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது. கோல்டு கார்டு பெற்றவர்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டாலோ, அங்கே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ, கோல்டு கார்டு திரும்ப பெறப்படும். ஒரு கண்டிஷன் இந்தக் கார்டை பெறும் நபர் அவருக்கு வரும் எந்தவொரு வருமானமாக இருந்தாலும் (உலகளாவிய வருமானம் உட்பட), அதற்கு அமெரிக்க வருமான வரியையே பின்பற்ற வேண்டும். `போருக்கு பின் பைக் சாகசங்கள்' - பாலஸ்தீன இளைஞர்களின் தொடக்கம்

விகடன் 12 Dec 2025 11:59 am

குடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ள பிளானா?- இனி 'நோ'விசா!

எந்த நாட்டினராக இருந்தாலும், அவர்களுக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை அமெரிக்க குடிமகனாகக் கருதப்படும் - இது அமெரிக்காவின் சட்டம். அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இதற்கு தற்போது செக் வைத்துள்ளது அமெரிக்க தூதரகம். நேற்று இந்திய அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... அமெரிக்க குடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ளப் பயணம் மேற்கொள்வது தெரிந்தால், அவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் படி, இனி அமெரிக்க குடியுரிமைக்காக அங்கே சென்று குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பது நடக்காது. அமெரிக்க தூதரக அதிகாரிக்கு பயணத்தில் இந்த மாதிரியான ஏதேனும் சந்தேகம் எழுந்தால் கூட, விசா ரத்து செய்யப்படலாம். அமெரிக்கா இப்படியெல்லாமா செய்வார்கள்? 'அமெரிக்க குடியுரிமைக்காக அங்கே சென்று குழந்தை பெற்றுக்கொள்வார்களா?' இந்த சந்தேகம் எழுவது நியாயம் தான். தரவுகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் 33,000 குழந்தைகள் இந்த மாதிரியான பயணங்கள் மூலம் பிறக்கிறார்கள். இந்தப் பயணத்தைப் 'பிறப்பு சுற்றுலா (Birth Tourism)' என்று கூறுகிறார்கள். U.S. consular officers will deny tourist visa applications if they believe the primary purpose of travel is to give birth in the United States to obtain U.S. citizenship for the child. This is not permitted. pic.twitter.com/Xyq4lkK6V8 — U.S. Embassy India (@USAndIndia) December 11, 2025

விகடன் 12 Dec 2025 8:14 am