SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் - அடடே லவ் ஸ்டோரி

சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது 22 வயதான லியோங் என்பவர் அவசர மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சம்பவம் நடந்த இடத்தில் பத்து வயதான லியூ என்ற பெண் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். லியோங் மற்றும் அவரது மீட்பு குழுவினர்கள் அங்கு பலரையும் காப்பாற்றிய நிலையில் இடிபாடுக்குள் சிக்கியிருந்த லியூவையும் அவர் மீட்டுள்ளார். marriage சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, 2020 ஆண்டு தனது பெற்றோருடன் லியூ உணவருந்திக் கொண்டிருக்கும்போது ஒருவரை அவர் பார்த்திருக்கிறார். அவர் தன்னை காப்பாற்றிய மீட்பு வீரர் போன்று இருப்பதாக தனது தாயிடம் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அவரிடமே அவரது பெயரை கூறி நீங்களா? என்று கேட்டிருக்கிறார். அவர் ”ஆம் லியோங் தான்” என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு நடந்த சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அன்று இரவே இருவரும் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கி இருக்கின்றனர். அதன் பின்னர் தங்களது உணர்வுகளை பகிர தொடங்கி இருக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபரையே லியூ திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து லியூ கூறுகையில்அவரை நன்றி உணர்வுக்காக நேசிக்கவில்லை, ஒன்றாக நேரம் செலவழித்த பின்னர் மட்டுமே என் வாழ்க்கையை ஒப்படைக்க கூடிய நபர் இவர் தான் என்பதை உணர்ந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

விகடன் 8 Dec 2025 2:53 pm

US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. `இந்தக் கருத்து முரண்பாடானது (hypocritical), வெளிநாட்டவர்மீது வெறுப்பை கக்கும் (xenophobic) பேச்சு' என அரசியல் விமர்சகர்கள் சாடியுள்ளனர். பலர், வான்ஸின் மனைவி உஷா இந்தியக் குடியேறிகளின் மகள் என்பதைக் குறிப்பிட்டு, “அவரை (உஷா) இந்தியாவுக்கே திருப்பி அனுப்புங்கள்!” என்று வலியுறுத்தியுள்ளனர். trump - Vance அதிகப்படியான குடியேற்றத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பறிபோகின்றன என்று குற்றம் சாட்டி, வான்ஸ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அவர் கூறும் கருத்துக்கு எதிரான பொருளாதார ஆய்வுகள் அனைத்தும் ‘பழைய அமைப்பின் மூலம் பணக்காரர்களானவர்கள்’ நிதியில் நடத்தப்பட்டவை என்று குற்றம்சாட்டியிருந்தார். வான்ஸ் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான வஜாஹத் அலி, “நீங்கள் உஷாவையும், அவரது இந்தியக் குடும்பத்தையும், உங்கள் இரு இனக் குழந்தைகளையும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். Wajahat Ali Post இந்த கடுமையான தாக்குதலுக்கு முன்னதாக வான்ஸ் பேசிய சில கருத்துகளும் காரணமாக அமைந்தன. “அமெரிக்கர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒத்த இனம், மொழி அல்லது தோல் நிறத்தைப் கொண்டிருப்பதை விரும்புவது முற்றிலும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும்” என்று அவர் பேசியிருந்தார். உஷாவைக் குறிவைக்க என்ன காரணம்? சில நாட்களுக்கு முன்னர் டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய வான்ஸ், தனது மனைவி உஷா ஒருநாள் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொள்வார் என நம்புவதாகத் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜே.டி.வான்ஸ், உஷா வான்ஸ் பின்னர், உஷாவுக்கு “மதம் மாறும் திட்டம் இல்லை” என்றும், அவரது நம்பிக்கைகளை தான் மதிப்பதாகவும் தெளிவுபடுத்தி, சர்ச்சையை தவிர்க்க முயன்றார். ட்ரம்ப் நிர்வாகம் குடியேற்றவாதிகளுக்கு எதிரான சட்டங்களை பலமடங்கு கடுமையாக்கி வரும் சூழலில், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவியைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது. JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்

விகடன் 8 Dec 2025 2:09 pm

Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? - பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஐரோப்பாவுக்கு துரோகம் செய்கிறது என தனிப்பட்ட முறையில் பேசியதாக செய்திகள் பரவின. இதனை மறுத்த மாக்ரோன், “ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்தவிதமான அவநம்பிக்கையும் இல்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் - அமெரிக்க அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் சந்தேகமும் விளக்கமும்! சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம், “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு இடையே ஒற்றுமை மிக அவசியம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்களின் தேவை உள்ளது” எனப் பேசியுள்ளார். Modi - Macron பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் எடுத்த செல்ஃபி... ஜெய்ப்பூரில் ரோடு-ஷோ! கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 4, 2025), ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் (Der Spiegel) ஒரு ரகசிய தொலைபேசி உரையாடல் பற்றி செய்தி வெளியிட்டது. அதில், உக்ரைன்–ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை மாக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் சந்தேகிப்பதாகக் கூறப்பட்டது. அதில், “பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றித் தெளிவு இல்லாமல், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்குத் துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளது” என்று மாக்ரோன், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரித்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த பத்திரிகை செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் இம்மானுவேல் மாக்ரோன். புதின் - ட்ரம்ப் Ukraine-க்கு துரோகம் செய்கிறாரா ட்ரம்ப்? ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதித் திட்டத்தை வாஷிங்டன் முன்வைத்தது. அந்தத் திட்டம், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் உள்ளீடு இல்லாமல் தயாரிக்கப்பட்டது. மேலும், இது ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகளைப் பிரதிபலிப்பதாக விமர்சிக்கப்பட்டது. வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, டிரம்பின் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரம் மாஸ்கோவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. இருவரும் கிரெம்லினில் விளாடிமிர் புடினுடன் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, விட்காஃப் வியாழக்கிழமை மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துள்ளார். இந்த நடவடிக்கைகளின்போது, ஐரோப்பா பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபடுத்தப்படவில்லை. இது, ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டை டிரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை என்பதைப் பிரதிபலிக்கிறது; இதனால் இந்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பா சந்தேகிக்கிறது. USA: பிரான்ஸ் அதிபர் காரை தடுத்த அமெரிக்க போலீஸ்; நடந்தே தூதரகம் சென்ற மக்ரோன் - Viral Video

விகடன் 6 Dec 2025 1:39 pm