Epstein Files: என் மிகப்பெரிய தவறு; அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன் - என்ன சொல்கிறார் பில் கேட்ஸ்?
அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. எப்ஸ்டீன் - ட்ரம்ப் இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி பேசுபொருளாகி இருந்தன. இந்நிலையில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பேட்டி ஒன்றில் பில் கேட்ஸ் பேசியிருக்கிறார். எப்ஸ்டீனுடன் நேரத்தைச் செலவிட்டதையும், எனது அறக்கட்டளையின் உயர் அதிகாரிகளை அந்தச் சந்திப்புக்கு அழைத்துச் சென்றதும் நான் செய்த மிகப்பெரிய தவறு. பில் கேட்ஸ் இது நன்கொடை அமைப்பிற்குக் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் எப்ஸ்டீனுடன் சேர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடவில்லை. அவருடன் சுற்றியிருந்த பெண்களுடன் நான் நேரம் செலவிடவில்லை என்று கூறியிருக்கிறார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் முதல் கமென்ட் பாக்ஸ் வரை... ஒழுக்கத்தின் எல்லைகள் ஆண்களுக்கு இல்லையா?
`'நான் மட்டும் தலையிடவில்லை என்றால் பாக். பிரதமர் இறந்திருப்பார்'என்றனர்' - மீண்டும் ட்ரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரைத் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரம்ப், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை நாங்கள் பெருமையுடன் மீட்டெடுத்து வருகிறோம். இந்திய பிரதமர் - பாகிஸ்தான் பிரதமர் எனது முதல் 10 மாத பதவிக்காலத்தில் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் என்னுடைய தலையீடு இல்லாமலிருந்திருந்தால் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என்று 35 மில்லியன் மக்கள் என்னிடம் சொன்னார்கள். இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும். அதை நான் தடுத்து நிறுத்தினேன். ஒன்பதாவது போரை முடிவுக்குக் கொண்டுவர எனது நிர்வாகம் மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. ரஷியா - உக்ரைன் இடையிலான படுகொலை, நான் அதிபராக இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது என்று கூறியிருக்கிறார். மோடி - ட்ரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இருநாடுகளிடையேயான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. Loading…
ஈரான் - இஸ்ரேல் போர்ப் பதற்றம்: இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி; காரணம் என்ன?
இந்தியப் பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (புதன்கிழமை) இஸ்ரேல் செல்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராயும் வகையிலும் இந்தப் பயணம் அமையும் என்று இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு வலிமையான ஜனநாயக நாடுகளுக்கு இடையே ஒரு வலுவான கூட்டணியை அடைவதற்கான முயற்சிகளை இந்தப் பயணம் மறுசீரமைப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றடையும் பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அவருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய நாடாளுமன்றமான 'நெசெட்' (Knesset) இல் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மாலையில் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியைப் பார்வையிடும் அவர், பின்னர் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு அளிக்கும் தனிப்பட்ட இரவு விருந்தில் கலந்துகொள்கிறார். வியாழக்கிழமை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. இந்தப் பயணத்தின் மிக முக்கிய முடிவுகளில் ஒன்றாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட இலக்கு வைத்துள்ளன. இந்தியா-இஸ்ரேல் இடையிலான அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், உலக ஹோலோகாஸ்ட் நினைவு மையமான 'யாத் வாஷேமைப்' பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார். நெதன்யாகு இஸ்ரேல்-அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல் பதட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் நடைபெறுவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார், ``உலகம் வேகமாக மாறிவரும் சூழலில், அச்சுறுத்தல்களும் பெருகி வருகின்றன. அவற்றைச் சந்திக்க பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதன் மூலம் இரு நாட்டு பாதுகாப்பு உறவை ஆழப்படுத்த ஆலோசிக்கப்படும். பொருளாதார ரீதியாக இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள நிலையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிய நகர்வு பொருளாதாரக் கூட்டாண்மைக்கு பெரும் வேகத்தைக் கொடுக்கும் என்றார். மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

30 C