ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேலின் ‘ப்ளூ ஸ்பாரோ’ ஏவுகணை! - முழு விவரம்!
ஈரானின் உச்ச தலைவராக கடந்த 37 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு ‘ப்ளூ ஸ்பாரோ’ (Blue Sparrow) எனப்படும் நவீன ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலை ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) என்று அழைக்கிறது. அதே சமயம், அமெரிக்க பென்டகன் இதனை ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) எனக் குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 28 அதிகாலை ஈரானின் தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் உள்ள காமேனியின் குடியிருப்பு வளாகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ப்ளூ ஸ்பாரோ மார்ச் 1 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ‘ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ்’ (Rafael Advanced Defense Systems) தயாரிப்பான ப்ளூ ஸ்பாரோ, மற்ற ஏவுகணைகளை விட மிகவும் ஆபத்தானது. 6.51 மீட்டர் நீளமும், 1,900 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை, வான்வெளியில் இருந்து ஏவப்படக்கூடிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இந்த ஏவுகணையின் தனிச்சிறப்பு அதன் செங்குத்தான பயணப்பாதைதான். பொதுவாக வான் பாதுகாப்பு அமைப்புகள் அடிவானத்தில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையே கண்காணிக்கும். ஆனால், ப்ளூ ஸ்பாரோ விண்வெளியின் விளிம்பு வரை சென்று, அங்கிருந்து கிட்டத்தட்ட நேர் செங்குத்தாக இலக்கை நோக்கி விழும். ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் வானிலிருந்து கீழே பாயும் இந்த ஏவுகணையை ரேடார்களால் கண்டறிவதற்குள், அது இலக்கைத் தாக்கி அழித்திருக்கும். அயதுல்லா அலி கமேனி தொடக்கத்தில், இஸ்ரேலின் ‘ஆரோ’ வான் பாதுகாப்பு அமைப்பைச் சோதிப்பதற்காக ஒரு ‘டம்மி’ ஏவுகணையாகவே ப்ளூ ஸ்பாரோ உருவாக்கப்பட்டது. ஈரான் போன்ற நாடுகளின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்த பயிற்சி பெறவே இது பயன்பட்டது. ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தையே அடிப்படையாகக் கொண்டு ‘ராக்ஸ்’ என்ற அதிநவீன போர் ஏவுகணையை இஸ்ரேல் உருவாக்கியது. இந்த ஏவுகணை ஜிபிஎஸ் (GPS) சிக்னல்கள் முடக்கப்பட்ட சூழலிலும், ‘இனர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம்’ (INS) மூலம் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. 500 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் இது, தரைக்கு அடியில் உள்ள இலக்குகளையும் ஊடுருவி அழிக்கக்கூடியது. 1989-ம் ஆண்டு முதல் ஈரானின் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருந்த காமேனியின் மறைவு, அந்த நாட்டின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் முழுமையாக ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்
போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, எல்பிஜி (LPG) உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் எல்பிஜி உற்பத்திக்குத் தேவையான புரொப்பைன், பியூட்டேன் வாயுக்களை பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு கொடுக்கவும் தடை விதித்திருக்கிறது. சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், எரிவாயுவை அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவையில், சுமார் 90% மத்திய கிழக்கு நாடுகளே பூர்த்தி செய்துவந்த நிலையில், அது தற்போது தடைபட்டுள்ளதால் மத்திய அரசு அவசரக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்
ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வணிகப் போக்குவரத்துப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துதான் வர்த்தகம் ஆகி வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர்களைக்கூட எட்டலாம் என்கிற அச்சம்கூட இருந்து வருகிறது. இந்த நிலையில், கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி கச்சா எண்ணெய் விலை குறித்துப் பேசியுள்ளார். கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! அவர் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்... அவர் சொல்வது ஏன் முக்கியம் என்று தெரிந்துகொள்ளலாம். உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் டாப் 15 நாடுகளில் கத்தாரும் ஒன்று. உலக அளவில் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் டாப் மூன்றாவது நாடு கத்தார். இந்த இடத்தில் இருக்கும் கத்தார், கத்தாரின் அமைச்சர் சொல்வது கச்சா எண்ணெய் வணிகத்தில் மிக முக்கியமானது. அப்படி கத்தார் எரிசக்தி அமைச்சர் என்ன கூறியிருக்கிறார்? இப்போது ஈரானில் நடந்து வரும் போர் தொடர்ந்தால், வளைகுடா நாடுகள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் எரிசக்திகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். இது உலகின் எரிசக்திச் சந்தையைப் பெரிதும் பாதிக்கலாம். உலகப் பொருளாதாரங்களைக் கீழே தள்ளலாம். ஒருவேளை இந்தப் போர் இப்போதே நிறுத்தப்பட்டாலும், வழக்கம் போல, கத்தார் தங்களது டெலிவரிகளை ஆரம்பிக்க வாரங்கள் அல்லது மாதங்கள் கணக்கில் ஆகும். மேலும், இந்தப் போர் ஒரு பேரல் எண்ணெயின் விலை 150 டாலருக்குக்கூட தள்ளலாம் என்று ஃபைனான்சியல் டைம்ஸிற்குத் தந்த பேட்டியில் கூறியுள்ளார். ஈரான்: `இந்திய விருந்தாளி மீது தாக்குதல்; இருந்தும் மோடி மௌனம்' - கார்கேயின் `3' கேள்விகள்!
இந்தியா எங்களது சந்தையை 'இப்படி'பிடிக்க முடியாது; சீனாவிடம் செய்த தவறு இனி இல்லை - அமெரிக்கா
இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ். அவர் டெல்லியில் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பேசியுள்ளதாவது... 20 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் சீனாவிடம் செய்த அதே தவறை இந்தியாவிடம் செய்யமாட்டோம். அதாவது எங்களது சந்தையில் எளிதாக உள்நுழைந்து, வலுவான போட்டியாளராக மாற விடமாட்டோம். நாங்கள் எது செய்தாலும் அது எங்கள் மக்களுக்கு நியாயமானதாக இருப்பதாக பார்க்க்கப் போகிறோம். இந்தியா இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! காரணம், இந்தியா எப்படி இந்திய மக்களுக்குப் பொறுப்பாக இருக்கிறதோ, அதே மாதிரி, நாங்களும் எங்களது சொந்த மக்களுக்குப் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்றால் அது அமெரிக்கா மட்டுமல்ல. இதை அடையப் பிற நாடுகளுடனும் அமெரிக்காவும் ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்படி அமெரிக்காவை மீண்டும் சிறந்தது ஆக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ... அதே மாதிரிதான் இந்திய பிரதமர் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும், அவர்களது நாட்டைச் சிறந்தது ஆக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்தியா இந்த நூற்றாண்டில் நல்ல வளர்ச்சியை அடையும் என்பது மறுக்க முடியாத ஒரு விஷயம். 'ஒன்றாக இணைந்து' பணிபுரிவது என்பது எங்களது விருப்பமாக உள்ளது. இதை இந்தியாவும் விரும்பும் என்று நினைக்கிறோம். இந்தியாவிடம் அனைத்துச் சக்திகளும் உள்ளது. இப்போது இந்தியா தான் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இந்தியா ஈரான்: `இந்திய விருந்தாளி மீது தாக்குதல்; இருந்தும் மோடி மௌனம்' - கார்கேயின் `3' கேள்விகள்! இங்கே பொருளாதாரம், மனிதவளம் உள்ளிட்ட பல வளங்கள் இருக்கின்றன. இந்த நூற்றாண்டில் இந்தியா மிக முக்கியமான நாடு. அத்துடன் நாங்கள் வலுவான உறவை உருவாக்க விரும்புகிறோம். இந்த உறவு சமூகப் பணியோ, தொண்டோ அல்ல. எங்களது நாட்டின் நலனுக்காகத் தான் நான் இங்கே இருக்கிறேன். இந்தியா உடன் இணக்கமாக இருப்பது எங்களது நாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சிங்கம் கூட சாதுதான்; 'இந்த 4' விலங்குகள் கிட்ட மனிதர்கள் மாட்டுனா அவ்வளவுதான்!
பெட்ரோல் விலை உயர்வைப் பற்றிக் கவலையில்லை; ஈரானை வீழ்த்துவதே இலக்கு! - அதிபர் ட்ரம்ப் உறுதி
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் (AAA) தரவுகளின்படி, அமெரிக்காவில் பெட்ரோலின் சராசரி விலை கடந்த வாரத்தில் 27 காசுகள் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கேலன் பெட்ரோல் சுமார் $3.25 (சுமார் ரூ.270) ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 காசுகள் அதிகமாகும். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``பெட்ரோல் நிலையங்களில் விலை உயர்வது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. போர் முடிந்ததும் விலைகள் தானாகவே மிக விரைவாகக் குறைந்துவிடும். பெட்ரோல் விலைகள் ஒன்றும் அந்த அளவிற்கு அதிகமாக உயரவில்லை. ட்ரம்ப் மேலும், பெட்ரோல் விலை சிறிது உயருவதை விட, இந்த ராணுவ மோதலில் நாம் எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானது. விலை உயர்வைக் குறைக்க அமெரிக்கா வசம் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பான மூலோபாய பெட்ரோலிய ரிசர்வ்லிருந்து (Strategic Petroleum Reserve) எண்ணெயை வழங்கும் திட்டம் எதுவுமில்லை. ஈரான் முற்றுகையையும் மீறி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்துத் தொடரும் என்றார். எண்ணெய் விலை உயர்வு குறித்து அதிபர் ட்ரம்ப் கவலைப்படவில்லை என்று கூறினாலும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், தலைமை அதிகாரி சூசி வைல்ஸ், எரிசக்திச் செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் பெரிய எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விலை உயர்வு கட்டுக்கடங்காமல் போனால், அரசு தலையிட்டு விலையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஈரான் போர்; வெள்ளை மாளிகையில் சிறப்பு பிரார்த்தனை செய்த அதிபர் ட்ரம்ப் - புகைப்படங்கள் வைரல்!
இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி!
'உலகச் சந்தைகளில் எண்ணெய் இருப்பு தொடர்ந்து இருக்க வேண்டும்' என்பதற்காக இந்திய ரீஃபைனர்கள் தற்காலிகமாக 30 நாள்களுக்கு ரஷ்யா எண்ணெயை வாங்க அமெரிக்க கருவூலத் துறை அனுமதிக்கிறது'. இது அமெரிக்கக் கருவூல செயலர் ஸ்காட் பெசன்டின் பதிவு. இந்தப் பதிவில், 'அனுமதி' என்கிற ஒற்றைச் சொல்லைக் கடந்து செல்ல முடியவில்லை... அப்படி சென்றுவிடவும் கூடாது. அமெரிக்கா இந்தியாவிற்கு யார்? நல்ல நண்பன்... வர்த்தகக் கூட்டாளி... அவ்வளவு தான். ஸ்காட் பெசன்ட் பதிவு ஆனால், ஸ்காட் பெசன்ட்டின் பதிவு என்னவோ, அமெரிக்காவின் காலனித்துவத்தின் கீழ் இந்தியா இருப்பதுபோல, அதிகாரத் தோரணையுடன் இருக்கிறது. இந்தப் பதிவு வெளியாகி கிட்டத்தட்ட 8 மணிநேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இந்தியாவின் ரியக்ஷனோ வழக்கம்போல, 'மௌனம்' தான். இனியும் இந்தியா வாயைத் திறக்கும் என்கிற நம்பிக்கை இல்லை. இங்கே 'வழக்கம் போல' என்கிற வார்த்தையை உற்றுக் கவனிக்க வேண்டும். காரணம், இந்தியாவின் மௌனம் இது முதன்முறை அல்ல. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல முறை இந்தியாவின் பதில் மௌனமாக மட்டுமே இருந்திருக்கிறது. ட்ரம்ப் பதவியேற்றதும் கொண்டு வந்த அதிரடிகளில் முதன்மையானது, 'அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவது' ஆகும். ட்ரம்பின் செயல் தவறானது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர் அதை எப்படிச் செய்தார் என்பது தான் தவறானது. சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கைவிலங்கிட்டும்... கால் விலங்கிட்டும்... ராணுவ விமானத்தில் அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பினர். ராணுவ விமானம் என்பது போர்க் கைதிகளுக்கு பயன்படுத்தும் ஒன்றாகும். பிழைப்புத் தேடி, பஞ்சம் பிழைக்கச் சென்ற மக்கள் சட்டத்தை ஏமாற்றி... சட்டத்திற்கு புறம்பாக குடியேறியது தவறு தான். ஆனால், அவர்களை போர் கைதிகளுக்கு இணையாக 'அடிப்படை' கண்ணியம் கூட இல்லாமல் வெளியேற்றியது அமெரிக்கா. இந்தக் கண்ணியக் குறைப்பாட்டிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன மெக்சிகோ, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகள். டொனால்டு ட்ரம்ப் கொலம்பியா, வெனிசுலா, மெக்சிகோ... கொலம்பியா மற்றும் வெனிசுலா தங்களது நாட்டிற்குள் அமெரிக்காவின் ராணுவ விமானம் தரையிறங்கவே அனுமதிக்கவில்லை. அவர்கள் தங்களது விமானத்தை அனுப்பி அவரவர் நாட்டு மக்களைக் கண்ணியமாக அழைத்து வந்தனர். மெக்சிகோ அமெரிக்க ராணுவ விமானத்தை நாட்டிற்குள் அனுமதிக்காமல், அமெரிக்காவின் வணிக விமானங்களில் மக்களை அழைத்து வந்த போது ஒத்துக்கொண்டது. இந்த நாடுகள் அவர்களது மக்களையும், அவர்களது மரியாதையையும் எப்படி பாதுகாத்திருக்கின்றனர்? ஆனால், இந்தியா செய்தது என்ன? விளக்கமளித்த இந்தியா 2025-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி ராஜ்ய சபாவில் அமெரிக்காவின் செயலுக்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். என்ன அது? 'ஒரு நாட்டில் சட்டத்திற்குப் புறம்பாக நம் மக்கள் குடியேறியிருக்கிறார்கள் என்று தெரிந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வது நம்முடைய கடமை. அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறையின் கொள்கைப் படி, தங்களது நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய மக்களை அப்படித் தான் வெளியேற்றுவார்கள்' என்று எங்கோ இருக்கும் அமெரிக்காவிற்கு சாதகமாக விளக்கமளித்தார் ஜெய்சங்கர். இந்த விளக்கமும் 'டக்'கென வந்துவிடவில்லை. 'மத்திய அரசு அமெரிக்காவின் செயலுக்கு வாயை திறக்கவில்லை' என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும், கண்டனங்களும் எழுந்த பின் தான், இந்தப் பதில் வந்தது. வெளியேற்றம் அமெரிக்கா குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை கொள்கை என்றாலும், அதற்கு கொலம்பியா, மெக்சிகோ, வெனிசுலா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்... அவர்களது எதிர்ப்பை கேட்டு அமெரிக்கா அடிப்பணிந்தது எப்படி? இதை ஏன் இந்தியா செய்யவில்லை? தொடர்ந்து பல ஆண்டுகளாக, சட்டத்திற்குப் புறம்பாக வெளியேறிய இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்றி கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அது எதுவும் சத்தமில்லாமல், கண்ணியமான முறையில் நடந்தது. ஆனால், திடீரென்று ட்ரம்ப் தனது வெளிச்சத்திற்காக செய்த ஒன்றை கண்டும் காணாமல் இந்தியா கடந்தது. அடுத்தது, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம். 2025-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி இந்தியா பாகிஸ்தானில் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியது. அதன் பிறகு, அது விஸ்வரூபம் எடுத்து... பின் சமாதானம் என மே 10-ம் தேதியே அதற்கொரு என்ட் கார்டு வந்துவிட்டது. 'இந்தச் சமாதானம் பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுகொண்டதால்' என்று இந்தியா கூறியது... இன்று வரை கூறுகிறது. ஆனால், ட்ரம்போ, 'நான் வரியைக் காட்டி பயமுறுத்தினேன்... ஒப்பந்தத்தைக் காட்டி பயமுறுத்தினேன்' என்று இந்த நொடி வரை திரும்பத் திரும்ப கூறி வருகிறார். அதற்கு தான் இந்திய பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்து விட்டாரே என்பது உங்களது மைன்ட் வாய்ஸா? இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் முடிந்த அன்றே, இந்தியா தெரிவிக்கும் முன்பே, 'நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்று பறைசாற்றி விட்டார். Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர் ஆனால், இதை இந்தியாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மூன்று நாள்கள் கழித்து மே 13-ம் தேதி மறுத்தார். இதன் பின், கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, ஜூன் 17-ம் தேதி, ட்ரம்ப் உடனான போன்காலில் மோடி இந்த விஷயத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று, 'இறையாண்மை'. அதற்கே ஒரு பாதிப்பு வரும் போது, இந்தியா உடனே எதிர்வினையாற்றாமல் மூன்று நாள்கள் கழித்து காலம்... நேரம் பார்த்து மறுப்பு தெரிவித்தது! இந்தியாவிற்கு அமெரிக்கா எப்படி நண்பரோ, வர்த்தகக் கூட்டாளியோ... அப்படித்தான் ரஷ்யாவும். சொல்லப்போனால், இந்தியா - அமெரிக்காவின் நட்பு வயதை விட, இந்தியா - ரஷ்யாவின் நட்பிற்கு வயது அதிகம். அப்படியான நண்பரிடம் தான் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கூறியது. இந்தியா உடன் வர்த்தகம் செய்யும் பணத்தை ரஷ்யா உக்ரைன் போருக்குப் பயன்படுத்துகிறது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால், இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா கட்டளையிடுவதெல்லாம் 'டூ...டூ...டூ... மச்'. ஆனால், அதையும் இந்தியா கேட்டது என்பதுதான் ஹைலைட். கடந்த மாதம் இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்காக டிசம்பர் மாதத்தில் இருந்தே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைப் படிப்படியாகக் குறைத்தது இந்தியா. மோடி - புதின் 'வர்த்தக ஒப்பந்தம்' என்பது இரு நாடுகளுக்கு இடையிலானது. ஆனால், இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து 'இதோ பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது... அதோ பேச்சுவார்த்தை முடியப்போகிறது' என ட்ரம்ப் அவ்வப்போது கமென்ட்ரி கொடுத்து வந்தார். இது அடிப்படையில் தவறு. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றாகத்தான் தெரிவிக்க வேண்டும். ஒருவர் மட்டும் முந்திக்கொண்டு சொல்வது முற்றிலும் தவறு. இந்த அடிப்படை நாகரிகமற்ற செயலுக்குக்கூட இந்தியா எதும் சொல்லவில்லை. போனது போகட்டும்... இப்போது இந்த மாதத்திற்கு வருவோம். ஈரான் போர் - உலக நாடுகளை ஏதோ ஒருவிதத்தில் பாதித்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொலை செய்யப்பட்டார். அவரது இறப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது கூட பரவாயில்லை. ஆனால், அவரது இறப்பிற்கு ஐந்து நாள்களுக்குப் பிறகு இந்தியா இரங்கல் தெரிவித்திருக்கிறது. மேலும், கடந்த மாதம் இந்தியா விசாகப்பட்டினத்தில் நடந்த கடற்பயிற்சிக்கு வந்த ஈரானின் போர்க்கப்பல் IRIS தேனா மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலைக் மீட்க இந்தியா உதவியதாக இப்போது இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. என்ன நடக்கும்... ஏது நடக்கும் என்று யோசித்து தான் அறிக்கை வெளியிடுகிறது. அதுவும் மூன்று நாள்கள் கழித்து. IRIS Dena உலக அளவில் இந்தியா வளரும் நாடாக நிலைநிறுத்தி உள்ளது. இந்த நேரத்தில் இத்தனை மௌனங்கள் இந்தியாவை பலவீனமாகக் காட்டாதா... இந்திய பிரதமர் மோடி எங்கே... வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எங்கே... அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இதே நிலை தொடருமா? அமெரிக்காவின் கைப்பாவையாக இந்தியா மாறுகிறதா? இந்தியாவை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டார் மோடி போன்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்தான் என்ன?
கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' - காங்கிரஸ் கேள்வி
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்கா நிர்பந்தித்ததின் அடிப்படையில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்தது. இந்த நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கியப் போர் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானின் தாக்குதலால் சவுதி அரம்கோவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையமும், ஈராக்கின் ருமைலா எண்ணெய் வயல்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போரின் எதிர்வினையாக வர்த்தகத்தின் முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியிருக்கிறது. மோடி - புதின் அதனால் அங்கு கச்சா எண்ணெய் கொண்டுவரும் இந்தியக் கப்பல்கள் சிக்கியிருக்கின்றன. எனவே, இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய எரிசக்தி சந்தைக்கு நிம்மதியளிக்கும் வகையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC), மார்ச் 5, 2026 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா வாங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 3, 2026 வரை இந்தச் சலுகை நடைமுறையில் இருக்கும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மோடி - ட்ரம்ப் இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் விவாதமாகியிருக்கிருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ட்ரம்பின் புதிய விளையாட்டு இது... தன் டெல்லி நண்பரிடம் புதினிடமிருந்து எண்ணெய் பெறலாம் என அனுமதி அளித்திருக்கிறார். இந்த அமெரிக்க மிரட்டல் இன்னும் எவ்வளவு காலம் தொடரும்? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் மத்திய அரசும் விவசாயம், இந்தியர்களின் தரவுகள், ஜவுளித் துறை என அமெரிக்க ஒப்பந்தம் என இந்தியாவை விற்றுவிட்டீர்கள் எனக் குறிபிட்டிருந்தார். மதுரை எம்.பி.சு வெகங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு. நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது. தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு. என விமர்சித்திருக்கிறார். Tax War: ரஷ்யாவின் 'வீட்டோ' முதல் ட்ரம்ப்பின் 'சந்தை' வரை... விடையின்றி நிற்கும் கேள்விகள்?!
`அடுத்து கியூபாதான்' - ஈரான் போரை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என கூறும் டொனால்டு ட்ரம்ப்
ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் 5 வாரங்கள் வரை போர் தொடரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்காவிடம் இருக்கும் ஆயுதங்களின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது. போர் எப்போது முடியும் என்பது குறித்து டொனால்டு ட்ரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. ஈரானை முடிக்க வேண்டும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. இது தவிர ஈரானை வழிநடத்துவதற்கு பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறினார். தாக்குதலுக்குள்ளான அமெரிக்க ரேடார் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவது குறித்தும் அமெரிக்கா பயப்படுகிறதா என நிருபர்கள் கேட்டதற்கு, அவர்கள் எப்போதும் அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எப்போதும் அதைப் பற்றி சிந்திக்கிறோம். நாங்கள் அதற்காகத் திட்டமிடுகிறோம். ஆனால் நாங்கள் சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். நான் சொன்னது போல், சிலர் இறந்துவிடுவார்கள். போருக்குச் செல்லும்போது, சிலர் இறக்கத்தான் செய்வார்கள். தாக்குதல்களுக்கு மத்தியில் டெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து அமெரிக்காவை அணுகுகிறது. ஆனால் அவர்கள் கோரிக்கை தாமதமாக வந்தது. அமெரிக்கா இப்போது அவர்கள் செய்வதை விட அதிகமாக போராட விரும்புகிறது. அமெரிக்க ராணுவம், இஸ்ரேல் படையுடன் இணைந்து ஈரானின் ஏவுகனை மற்றும் ட்ரோன்களை அழிக்க எந்நேரமும் பணியாற்றி வருகிறது. முதலில் ஈரானை முடிக்க விரும்புகிறோம். அதனை முடித்துவிட்டு கியூபா மீது கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்தார். கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை காரணமாக அந்நாட்டிற்குள் எரிபொருள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மேற்கு ஆசியாவில், குறிப்பாக ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அமெரிக்கா வழங்கிய ஏவுகணை பாதுகாப்பு நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட ரேடார் அமைப்புகள், ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ரேடார்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இது பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Iran War: US Israel-ஐ கண்டிக்க மறுக்கும் Modi - Indiaவை நெருங்கியதா போர்? IRIS Dena Warship
ஈரான் மீதான போர்: கச்சா எண்ணெய்; `இந்தியாவுக்கு 30 நாளுக்கு மட்டும் அனுமதி' - அமெரிக்கா| முழு விவரம்
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்கா நிர்பந்தித்ததின் அடிப்படையில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்தது. இந்த நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கியப் போர் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானின் தாக்குதலால் சவுதி அரம்கோவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையமும், ஈராக்கின் ருமைலா எண்ணெய் வயல்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போரின் எதிர்வினையாக வர்த்தகத்தின் முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியிருக்கிறது. மோடி - புதின் அதனால் அங்கு கச்சா எண்ணெய் கொண்டுவரும் இந்தியக் கப்பல்கள் சிக்கியிருக்கின்றன. எனவே, இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய எரிசக்தி சந்தைக்கு நிம்மதியளிக்கும் வகையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC), மார்ச் 5, 2026 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா வாங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 3, 2026 வரை இந்தச் சலுகை நடைமுறையில் இருக்கும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தியா அமெரிக்காவின் ஓர் அத்தியாவசியப் பங்காளியாகும். உலகச் சந்தையில் எண்ணெய் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய இந்தத் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மோடி - ட்ரம்ப் அதே சமயம், இனிவரும் காலங்களில் இந்தியா அமெரிக்க எண்ணெயை அதிக அளவில் வாங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனத் தெரிவித்துள்ளார். உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்தாலும், அமெரிக்காவின் இந்தத் தற்காலிக சலுகை மற்றும் இந்தியாவின் கையிருப்பு காரணமாக, தற்போதைக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் vs அமெரிக்கா: ஈரானின் ரஷ்யப் போர் உத்தியால் அமெரிக்காவுக்கு என்ன சிக்கல்? | Analysis
ஈரான்-அமெரிக்கா போர்; 23,000 இந்திய மாலுமிகள் சிக்கித் தவிப்பு; ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது?
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் நடவடிக்கைகளால், கடல் வழி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பாரசீக வளைகுடா பகுதியில் சுமார் 23,000 இந்திய மாலுமிகள் சிக்கித் தவிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கிய வழித்தடமான 'ஹார்முஸ் ஜலசந்தி'யை ஈரான் தற்போது முடக்கியுள்ளது. சரக்கு கப்பல் மார்ச் 5-ம் தேதி நிலவரப்படி, இந்தியக் கொடி ஏந்திய 36 கப்பல்கள் இந்தப் பகுதியில் சிக்கியுள்ளன. இதில் 7 கப்பல்கள் அரசுக்குச் சொந்தமான இந்தியக் கப்பல் கழகத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் உள்ள இந்தியக் கப்பல்களைக் கண்காணிக்கும் கால இடைவெளியை, ஒவ்வொரு 6 மணி நேரத்திலிருந்து தற்போது ஒவ்வொரு ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது. சிக்கியுள்ள கப்பல் ஊழியர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். ஈரான் vs அமெரிக்கா: ஈரானின் ரஷ்யப் போர் உத்தியால் அமெரிக்காவுக்கு என்ன சிக்கல்? | Analysis 36 இந்திய கப்பல்களில் 1,074 பணியாளர்கள் பாரசீக வளைகுடாவின் நேரடிப் பாதிப்புப் பகுதியில் உள்ளனர். இதில் 24 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு மேற்கேயும், 12 கப்பல்கள் ஓமன் வளைகுடாப் பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளன. ஏடன் வளைகுடாவில் 2 இந்தியக் கப்பல்கள் பயணம் செய்கின்றன. அதே சமயம், மிகவும் பதற்றமான செங்கடல் பகுதியில் தற்போது இந்தியக் கப்பல்கள் எதுவும் இயக்கப்படவில்லை. ஈரான் போர்க்கப்பல் இந்தக் கப்பல்கள் பெரும்பாலும் கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) மற்றும் முக்கிய வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்பவை. இந்த முடக்கத்தால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இறக்குமதி செலவுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மாலுமிகளின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத் துறை அமைச்சகமும், கப்பல் போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஈரான்: ``இந்தியாவின் விருந்தாளி - அமெரிக்காவால் தாக்கப்பட்ட கப்பல் குறித்து ஈரான்!
US ராணுவத்தை Iran திணறடிப்பது எப்படி? விளக்கும் UN Ex Officer R Kannan | Trump Nethanyahu Israel
போர்ச் சூழல்... முதலீட்டைப் பத்திரப்படுத்த இவற்றைச் செய்யுங்கள்!
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் நடத்தும் போர் தீவிரம் அடைந்து, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் போர்ச் சூழல் சூடுபிடித்துவருகிறது. அதன் விளைவாக பங்குச் சந்தை, தங்கம், வெள்ளி என எல்லாவற்றிலும் அதிரடியான ஏற்ற, இறக்கத்தைப் பார்க்க முடிகிறது. இவற்றின் போக்கைக் கணிக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெள்ளி விலை குறித்து பெரும் எதிர்பார்ப்பு சந்தையில் இருந்தது. ‘வெள்ளி ஒரு கிலோ ரூ.5 லட்சம் வரை போகும்’ எனச் சொல்லப்பட்டது. தற்போதோ, வெள்ளி விலை அதன் சமீபத்திய உச்சத்தில் இருந்து சுமார் 44% சரிந்து, ரூ.2.85 லட்சத்தில் வர்த்தகமாகிறது. இன்னும் இறங்கி ரூ.1.5 லட்சத்துக்குப் போகும் எனச் சொல்லப்படுகிறது. போர் போன்ற நெருக்கடியான காலங்களில் தங்கம் பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும். ஆனால், இந்தப் போர்ச் சூழலிலும் டாலர் வலுப்பெறுவதால் தங்கத்தின் விலையேற்றம் தடைபட்டுள்ளது. இப்படி, தங்கம், வெள்ளி சார்ந்த கணிப்புகள் எல்லாம் பொய்யாகி இருக்கின்றன. பங்குச் சந்தையில், போர் காரணமாக சில தினங்களில் காணப்பட்ட தொடர் சரிவு பல லட்சம் கோடி இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இடையிடையே சிறிதளவு ஏற்றத்தையும் சந்தை பதிவு செய்கிறது. மொத்தத்தில், பங்கு முதல் தங்கம் வரை எந்த வகையான முதலீடுகளிலும் இதுதான் போக்கு என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் கூறியுள்ள வார்த்தைகள், இதுபோன்ற நிச்சயமற்ற சூழல்களில் மிக முக்கியமானவை: முதலீட்டுச் சந்தையில் பயம், பேராசை இரண்டையும் தவிர்த்து, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காத நிதானமான அணுகுமுறையே வெற்றி தரும். நாம் மற்றவர்களைவிட புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை; மற்றவர்களைவிட ஒழுக்கமுடன் இருந்தாலே போதும். முதலீட்டில் எப்போதும் நீண்டகாலப் பார்வை அவசியம். கமாடிட்டி, டெரிவேட்டிவ்ஸ் போன்ற புரிந்துகொள்ள முடியாத சொத்துகளில் அதிகமான பணத்தை முதலீடு செய்வது கூடாது. முதலீட்டைப் பல்வகைப்படுத்தி, அடிப்படைகளில் வலுவாக உள்ள நிறுவனங்கள், பங்குகள், செலவு குறைந்த இண்டெக்ஸ் ஃபண்டுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பதற்றம், அவசரத்தில் விற்கக்கூடாது. சந்தையில் பயம் வரும்போது முதலீடு செய்யும் வாய்ப்புகளைத் தேட வேண்டும். ஆனால், கடன் வாங்கி முதலீடு கூடவே கூடாது. போர், எரிசக்தி நெருக்கடி, வலுவான டாலர், ரூபாய் சரிவு, வர்த்தக பாதிப்பு என இவை எல்லாமே மாறலாம். எனவே, கணிப்புகளை நம்பாமல் ஒருவர் தனது இலக்குகள், ரிஸ்க்கை தாங்கும் திறன், முதலீட்டுக் காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப முதலீட்டு உத்தியை வகுத்துக்கொள்ள வேண்டும். தொழில்முறை நிதி ஆலோசகரை அணுகுவது மிகவும் நல்லது. முதலீட்டை பாதுகாத்துக்கொள்வோம்! - ஆசிரியர்
மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!
மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய நிலை குறித்து இரு தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொண்டனர். இது குறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ``எனது நண்பர் அதிபர் மேக்ரானுடன் இன்று பேசினேன். மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் குறித்து எங்களின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டோம். மீண்டும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான தீர்வுகளுக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம். இப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கத் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி இதற்கிடையில், போர் தீவிரமடைவது, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட வாய்ப்புள்ள தட்டுப்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர 'பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம்' மட்டுமே வழி என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அங்குள்ள நாடுகள் மற்றும் முக்கிய சர்வதேச நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் மேற்கு ஆசியாவிற்கு முக்கியப் பங்கு இருப்பதால், தற்போதைய நிலவரம் மிகுந்த கவலையை அளிப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு ஆசியாவின் நிலையை இந்தியா மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பையும், தேசிய நலனையும் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு
ஈரான் - இஸ்ரேல் போர்: 'நான் வீட்டுக்கு போகணும்'- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் டேரன் சமி
'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் - இஸ்ரேல் போர் இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக, முக்கிய வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. டேரன் சமி விமானப் போக்குவரத்து பாதிப்பால் டி20 உலகக்கோப்பைக்காக இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியினரும், ஜிம்பாப்வே அணியினரும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் 'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி பதிவிட்டிருக்கிறார்.
ஈரான்: ``இந்தியாவின் விருந்தாளி - அமெரிக்காவால் தாக்கப்பட்ட கப்பல் குறித்து ஈரான்!
கடந்த மாதம், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில், 'MILAN 2026' என்கிற மிகப்பெரிய கப்பற்படைப் பயிற்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட பல நாடுகளில் ஈரானும் ஒன்று. இந்தப் பயிற்சியில் பங்குகொண்ட ஈரானிய கடற்படை போர்க்கப்பலான IRIS தேனா நேற்று ஈரான் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, இலங்கை கடற்பரப்பிலிருந்து 40 கடல் மைல் தூரத்தில் அந்தக் கப்பல் சென்றுகொண்டிருக்கும்போது, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் தாக்கும் ஏவுகணையான டார்பிடோவை ஏவி மூழ்கடித்துள்ளது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 87 பேரின் உடல்களை இலங்கைக் கடற்படை மீட்டுள்ளனர். 32 பேர் இலங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். அவர் எக்ஸ் பக்கத்தில், ``இந்தியாவின் விருந்தினர் கப்பலான IRIS தேனாவை அமெரிக்கா தாக்கியிருக்கிறது. ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் ஓர் அட்டூழியத்தை அமெரிக்கா செய்திருக்கிறது. 130 மாலுமிகள் கப்பலில் இருந்தனர். அது அமைத்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டியிருக்கும் என எச்சரித்திருக்கிறார். IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை' இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா
Spain: ஈரான் போரில் அமெரிக்காவிற்கு 'நோ'சொல்லும் ஒரே ஐரோப்ப நாடு - காரணமோ 'சூப்பர்'
'நாங்கள்... நாங்கள்' என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்ப நாடுகள் ஈரான் போரில் அமெரிக்கா உடன் இணைய ரெடியாக இருக்கின்றன. ஆனால், இதில் ஸ்பெயின் மட்டும் விதிவிலக்காக அமெரிக்காவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. என்ன பிரச்னை? ஆறாவது நாளாக ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் ஸ்பெயினின் ரோட்டா கடற்படைத் தளம் மற்றும் மோரோன் விமானத் தளத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்டது. ஆனால், அதை ஸ்பெயின் அரசு அதிகாரப்பூர்வமாகவே மறுத்துள்ளது. ஸ்பெயினின் இந்தப் பதில் நிச்சயம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பிடிக்காது என்பது நம் அனைவருக்கு தெரிந்தது தான். அதனால் தான், இப்போது ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே விரிசல் உண்டாகி உள்ளது. ட்ரம்ப் IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை' இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா ஏன் ஸ்பெயின் மறுத்தது? ஸ்பெயினின் அடிப்படைக் கொள்கையே போருக்கு 'நோ'. இதை மீறுவதற்கு ஸ்பெயின் தயாராக இல்லை. அதனால், ஸ்பெயின் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. ட்ரம்ப் மிரட்டல் ஸ்பெயின் 'நோ' சொல்லிவிட்டால், ட்ரம்ப் சும்மா இருப்பாரா என்ன... அவர் அவரது வேலையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். ஸ்பெயின் உடன் இருக்கும் அனைத்து வர்த்தகங்களையும் ரத்து செய்யப்படும் என்று மிரட்டியிருக்கிறார் ட்ரம்ப். ஒருவேளை, இதை ட்ரம்ப் செய்தால் ஸ்பெயினுக்குப் பெரிய அடியாக இருக்கும். காரணம், ஸ்பெயினின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவிகிதம் அமெரிக்காவிற்குச் செல்கிறது. ஆக, ஸ்பெயின் ட்ரம்பின் வழிக்கு வருமா... ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதலுக்கு வேறு வழியைப் பார்ப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 'இந்த' முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்
ஈரான் மீதான தாக்குதல்: இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துகிறதா அமெரிக்கா? - உண்மை என்ன?
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு எதிர்த்தாக்குதல்களும் நடந்துவருகின்றன. அதனால் மத்தியக் கிழக்கு நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா தக்குதல் நடத்தியதும் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் முன்னாள் கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் அமெரிக்கா செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``எங்கள் தளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எங்கள் துறைமுக நிறுவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியா: அமெரிக்க வெளியுறவுத்துறை நாங்கள் உண்மையில் இந்தியா மற்றும் இந்திய துறைமுகங்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இது சிறந்த முன்னெடுப்பல்ல எனக் கடற்படை சொல்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். ராணுவ கர்னலின் இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்திருக்கிறது. வெளியுறவு அமைச்சக உண்மை சரிபார்ப்பு பக்கம், ``அமெரிக்க கடற்படையால் இந்திய துறைமுகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சேனலான OAN இல் கூறப்படும் கூற்றுக்கள் போலியானவை, தவறானவை. இது போன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துகளுக்கு எதிராக எச்சரிக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அணு ஆயுதமா... ஆட்சி மாற்றமா... ஈரான் போர்... இந்தியாவுக்கு என்னவாகும்?
ஈரான் vs அமெரிக்கா: ஈரானின் ரஷ்யப் போர் உத்தியால் அமெரிக்காவுக்கு என்ன சிக்கல்? | Analysis
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சனிக்கிழமையன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் துல்லியமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பதிலடியாக ஈரான் ஏவி வரும் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தற்காப்பு அரண்களைப் பலவீனப்படுத்தி வருகின்றன என்ற செய்தியும் வெளியாகி வருகிறது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஈரானின் உத்தி ஈரானின் ‘ஷாஹித்-136’ (Shahed-136) ரக தற்கொலை படை ட்ரோன்கள், சிறிய ரக க்ரூஸ் ஏவுகணைகளுடன் இணைந்து சவூதி அரேபியா முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரையிலான அமெரிக்கத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி வருகின்றன. அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள் இந்த ட்ரோன்களை 90% வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தினாலும், இதில் ஒரு பாரிய பொருளாதாரச் சிக்கல் இருக்கிறது. ஈரான் பயன்படுத்தும் ஷாஹித் ட்ரோன்கள் மிகவும் எளிமையானவை. அவற்றின் ஒரு யூனிட் விலை சுமார் $20,000 (சுமார் ₹17 லட்சம்) மட்டுமே. ஆனால், அமெரிக்கா இதைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தும் பேட்ரியாட் ஏவுகணையின் விலை $4,000,000. ஈரானின் ஒரு மலிவான ட்ரோனை அழிக்க, அமெரிக்கா 200 மடங்கு அதிகப் பணத்தைச் செலவிடுகிறது. இதை 'செலவு-பயன் முரண்பாடு' (Cost-Benefit Asymmetry) என்று ராணுவ ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, எதிராளியை வீழ்த்த நீங்கள் செலவிடும் தொகையை விட, அந்தத் தாக்குதலைத் தடுக்க எதிராளி செலவிடும் தொகை பல மடங்கு அதிகமாக இருக்கும்படி செய்வதுதான் இந்த உத்தி. உழைப்புச் சுரண்டல் இன்னொருபக்கம் இந்த அதிநவீன ஏவுகணைகளைத் தயாரிப்பது மிகவும் கடினம். அமெரிக்காவால் ஒரு ஆண்டில் சில நூறு பேட்ரியாட் ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்க முடியும். ஆனால், ஈரான் அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் மிக எளிமையான பாகங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான ட்ரோன்களைத் தொழிற்சாலைகளில் வேகமாகத் தயாரிக்க முடியும். ஈரான் மீதான தாக்குதல் எனவே, மலிவான ட்ரோன்களை அழிக்க, விலை உயர்ந்த ஏவுகணைகள் தீர்ந்துபோகும். ஒரு கட்டத்தில் அமெரிக்க, இஸ்ரேல் படைகள் ஏவுகணைகளை குறைந்த அளவில் தான் பயன்படுத்த முடியும் என்ற நிலை வரும் போது, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தலாம். அப்போது அதைத் தடுக்க தற்காப்பு ஏவுகணைகள் கையிருப்பு குறைவாக இருக்கலாம். எனவே, புதிய தற்காப்பு ஏவுகணைகளை உருவாக்க நேரமும், உழைப்பும், பொருளாதாரமும் செலவாகும். உக்ரைன் போரில் ரஷ்யா இந்த உத்தியைத்தான் பயன்படுத்தியது. ரஷ்யா நூற்றுக்கணக்கான ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை உக்ரைன் நகரங்கள் மீது ஏவியது. உக்ரைன் தனது விலை உயர்ந்த மேலைநாட்டு ஏவுகணைகளைப் பயன்படுத்தி அவற்றைத் தடுத்தது. ஒரு கட்டத்தில் உக்ரைனிடம் ஏவுகணைகள் தீரத் தொடங்கியதால், ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனின் மின் நிலையங்களை எளிதாகத் தாக்க முடிந்தது. இதையேதான் இப்போது ஈரானும் அமெரிக்காவிற்கு எதிராகச் செய்ய முயல்கிறது. ஆயுத பலத்தில் உக்ரேனையும் அமெரிக்காவையும் ஒரே தட்டில் வைத்து எடைபோட முடியாது தான் என்றாலும், அமெரிக்காவுக்கு இதா மாதிரி தாக்குதல் தொடரும் பட்சத்தில் அது நிச்சயம் பொருளாதாக சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது,. தவிக்கும் அமெரிக்க நட்பு நாடுகள் இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் ஈரானின் இந்தத் தீவிர மோதலால் வளைகுடா நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட உள்நாட்டு ஆய்வின்படி, `கத்தார் நாட்டின் வசம் உள்ள பேட்ரியாட் ஏவுகணைகளின் இருப்பு, தற்போதைய தாக்குதல் வேகத்தில் போனால் இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்' எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கத்தார் சர்வதேச ஊடக தொடர்பு நிறுவனம் இதை மறுத்துள்ளதுடன், தங்கள் வசம் போதுமான ஏவுகணைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதே நேரம் கத்தார் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது. தலைமை இல்லாத ஈரான் ராணுவம் சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது ஈரான் ராணுவத்தின் செயல்பாடுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், ``எங்கள் ராணுவப் பிரிவுகள் இப்போது தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. முன்னரே வழங்கப்பட்ட பொதுவான வழிகாட்டுதல்களின்படி அவர்கள் சுயாதீனமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் எனத் தெரித்திருக்கிறார். இது போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ட்ரம்ப் இஸ்ரேலின் நிலைப்பாடு ஈரானின் தாக்குதல் குறித்து பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையின் அமைச்சர் ஏலி கோஹன், ``இதுவரை ஈரானின் 150 ஏவுகணை ஏவுதளங்களை அழித்துள்ளோம். இனியும் ஈரானின் தாக்குதலை மட்டுப்படுத்த ஏவுகணைகள் வெளியே வரும் சுரங்கப் பாதைகளை மூடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. என்றார். அமெரிக்கத் தரப்பில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் எனக் கணித்திருந்தாலும், `அவ்வளவு காலத்திற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா இன்னும் போர் நடக்கும் பகுதிக்குக் கொண்டு வரவில்லை என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான கேள்விக்கு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், ``ஈரானுடன் நடந்துவரும் போர், இது ஈராக் போர் போன்ற முடிவில்லாத போர் அல்ல என்று கூறியதன் மூலம் போர் விரைவான முடிவைத் தேடுவதைச் சூசகமாக உணர்த்தியுள்ளார். ஈரானைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு மோதலுக்குப் பிறகு அதன் வசம் 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா தினமும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்து வருவதால், ஈரானிடம் ட்ரோன்களின் இருப்பு மிக அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நெதன்யாகு தொழில்நுட்பத் தீர்வும் தற்போதைய நிலையும் விலை உயர்ந்த ஏவுகணைகளைச் சேமிக்க, அமெரிக்கா தனது போர் விமானங்களைக் கொண்டு ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தி வருகிறது. இஸ்ரேலின் லேசர் தற்காப்பு அமைப்பு இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும் எனக் கருதப்பட்டாலும், அது இன்னும் போர்க்களத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஈரானின் நவீன ரஷ்யத் தயாரிப்பு S-300 ஏவுகணைத் தளங்கள் ஏற்கனவே அமெரிக்காவால் அழிக்கப்பட்டுவிட்டதால், ஈரானால் தன் நாட்டை தற்காத்துக்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. தற்போதைய சூழலில், ஈரான் தனது ட்ரோன் தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் காலி செய்ய முயல்கிறது. இந்த தேய்மான உத்தி வெற்றி பெற்றால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்கும் என கருதுகிறார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் இரு தரப்பிலும் ஆயுதங்கள் குறையும் போது போர் ஒரு தேக்க நிலையை அடையக்கூடும் என கார்னகி சர்வதேச அமைதி அறக்கட்டளையின் ஆய்வாளர் அங்கித் பாண்டா தெரிவித்துள்ளார்.! ஈரான் போருக்கு அமெரிக்கா செலவு செய்யும் பெருந்தொகை; சிதையும் ஏழை மக்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்!
IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை'இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் வளைகுடா நாடுகளைத் தாண்டி இலங்கைக்கு அருகே வரை வந்துள்ளது. என்ன நடந்தது? ``நேற்று (மார்ச் 4) இலங்கையின் தெற்குக் கடற்கரை பகுதியில் இருந்துள்ளது ஈரானிய கடற்படை போர்க்கப்பலான IRIS தேனா. இந்தக் கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் தாக்கும் ஏவுகணையான டார்பிடோவை ஏவி மூழ்கடித்துள்ளது. இந்தக் கப்பலில் எத்தனை பேர் இருந்தனர்? IRIS தேனா போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 180 பேர் இருந்துள்ளனர். இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 87 பேரின் உடலை இலங்கைக் கடற்படை மீட்டுள்ளனர். 32 பேர் இலங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். IRIS Dena 'இந்த' முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர் ஈரான் போர்க்கப்பல் இலங்கை கடற்பகுதிக்கு எப்படி வந்தது? ``கடந்த மாதம், இந்தியா விசாகப்பட்டினத்தில், 'MILAN 2026' என்கிற மிகப்பெரிய கப்பற்படைப் பயிற்சி ஒன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பல நாடுகளில் ஈரானும் ஒன்று. ஈரான் சார்பாகக் கலந்துகொண்ட போர்க்கப்பல் தான் IRIS தேனா. இலங்கையில் இந்தத் தாக்குதலா? ``IRIS தேனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது இலங்கை கடற்பகுதிக்கு அருகே தானே தவிர, இலங்கைக் கடற்பகுதியில் இல்லை. அமெரிக்கா இந்தக் கப்பலை இலங்கை அருகே இருக்கும் சர்வதேசக் கடற்பகுதியில் தான் தாக்கியிருக்கிறது. ஆனால், மீட்புப்பணிகளை இலங்கை கடற்படை பார்த்து வருகிறது. இந்தக் கப்பல் தாக்குதல் குறித்த அமெரிக்கா சொல்வதென்ன? அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் தலைமையகம் 'பென்டகன்'. ஈரானின் போர்க்கப்பலை மூழ்கடித்துள்ளதைக் குறித்து பென்டகன் கூறியுள்ளதாவது... 'இரண்டாம் உலகப் போருக்குப் பின், எதிரி மீது இந்த மாதிரியான தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை'. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஈரான் போர்: ட்ரம்ப்பிற்கு எதிராக செனட் சபையில் தீர்மானம்; அமெரிக்க அரசியலமைப்பு சொல்வது என்ன? ஈரானின் பதிலடி என்ன? ``ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் உள்ள கடலில் அமெரிக்கா அட்டூழியத்தைச் செய்துள்ளது. கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஃபிரிகேட் தேனா, சர்வதேச நீரில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது. எனது வார்த்தைகளைக் கவனியுங்கள் - அமெரிக்கா தான் அமைத்த முன்னுதாரணத்திற்காகக் கடுமையாக வருத்தப்பட வேண்டியிருக்கும். ஈரான் போர் நீடித்தால் இந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன?!
ஈரான் போர்: ட்ரம்ப்பிற்கு எதிராக செனட் சபையில் தீர்மானம்; அமெரிக்க அரசியலமைப்பு சொல்வது என்ன?
அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தின் படி, அதிபரால் ஒரு போரைத் தொடங்க முடியாது. அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை. ஆனால், ஈரான் போரைத் தொடங்கி வைத்தது என்னவோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். இதற்கு அவர் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸிடம் ஒப்புதல் வாங்கவில்லை. தீர்மானம் இதனால், ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமெரிக்க செனட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டிம் கைன் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்திற்கு 47 பேர் சாதகமாகவும், 53 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத்தான் பெரும்பாலும் வாக்களிக்கப்பட்டுள்ளதால், ட்ரம்ப், ஈரான் போரைத் தொடர்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. அமெரிக்க நாடாளுமன்றம் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold 8 வாரங்களுக்கு... இந்த இடத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத், 'ஈரான் போர் இன்னும் 8 வாரங்கள் வரை தொடரலாம்' என்று கூறியது நினைவுக்கூரத்தக்கது. ட்ரம்பிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த ராண்ட் பால் ஆவார். ஒருவேளை, இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்திருந்தால் ட்ரம்பால் காங்கிரஸின் அனுமதி இல்லாமல் போரைத் தொடர்ந்திருக்க முடியாது. 'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?
Iran war: புதிய திட்டம் போடும் US Israel - தாக்குதலைத் தொடரும் ஈரான் | Decode
Iran War : Trump-க்கு பயம் காட்டும் ஈரான் - Prof Gladston Xavior Interview | Israel | Nethanyahu
மும்பை: வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஈரானில் இருக்கும் ஹார்முஸ் நீர்வழித்தடம் வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல வேண்டும். அந்த வழித்தடத்தை ஈரான் மூடிவிட்டது. தடையை மீறி அந்த வழித்தடத்தில் பயணம் செய்ய முயன்ற 6 கப்பல்களை ஈரான் தாக்கி மூழ்கடித்துள்ளது. இத்தடையால் இந்தியாவும், சீனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் விவசாயம் குறைவு என்பதால் உணவு பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படும். ஆனால் இப்போது அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைத்து வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் துபாய், பஹ்ரைன் உட்பட வளைகுடா நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய கப்பல்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறது. இதனால் உலகின் பல நாடுகளில் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய கன்டெய்னர்கள் துறைமுகங்களில் முடங்கி கிடக்கிறது. இந்தியாவிலும் மும்பை துறைமுகத்தில் 1000 கன்டெய்னர்கள் முடங்கி கிடக்கிறது. நவிமும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்துதான் அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது மகாராஷ்டிராவில் திராட்சை மற்றும் மாம்பழ சீசன் ஆகும். இந்த இரண்டு பழங்களும் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். தற்போது வளைகுடா நாடுகளுக்கு அனுப்புவதற்காக திராட்சை, வாழைப்பழம், வெங்காயம் போன்றவை ஏற்றப்பட்ட கன்டெய்னர்கள் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அதனை கப்பல்களில் ஏற்றுவதற்கு அனுமதி கிடைக்காமல் இருக்கிறது. இதனால் கன்டெனர்கள் துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கிறது. இது இந்தியப் பழங்கள் மற்றும் காய்கறி ஏற்றுமதியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் வெங்காயம், திராட்சை, வாழைப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற அழுகும் பொருட்கள் இருப்பதால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில கன்டெய்னர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு கப்பல் புறப்பட்டு செல்ல அனுமதி கிடைக்காமல் காத்து நிற்கின்றன. மகாராஷ்டிராவில் இருந்து 150 கன்டெய்னர் திராட்சைகள் மும்பை துறைமுகத்தில் இருந்து துபாய் துறைமுகத்திற்கு வந்த பிறகு அவை இறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் 200க்கும் மேற்பட்ட வாழைப்பழக் கண்டெய்னர்கள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சிக்கித் தவிப்பதால் நிதி நெருக்கடி அதிகரித்து வருவதாகவும் சந்த் ப்ரூட்ஸ் நிறுவனத்தின் பழ ஏற்றுமதியாளர் யூனுஸ் பக்வான் கூறினார். ஏற்றுமதியாளர்கள் ஒரு கண்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8,500 தினசரி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் தேங்கிக்கிடக்கிறது என்றும் பக்வான் கூறினார். வாழைப்பழ கண்டெய்னர்கள் குவிந்து கிடப்பதாலும் ஏற்றுமதி குறைந்து வருவதாலும் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 25 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக சரிந்துள்ளது. போர் காரணமாக விலை மேலும் சரியக்கூடும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு கண்டெய்னர்களுடன் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான மின்சாரம் மற்றும் பிற செலவுகளுக்காக ஒரு கன்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8500 வரை ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் அங்கு செல்ல முடியாததால், அவை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விடப்படுகின்றன. இதனால் உள்ளூர் சந்தையில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. ரம்சான் பண்டிகையையொட்டி வளைகுடா நாடுகளில் நிலவும் அதிக தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும், வரவிருக்கும் அல்போன்சா மாம்பழ சீசனும் இப்போரால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
'இந்த'முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்
ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கான பதிலைப் பல செய்தி அறிக்கைகள் தருகின்றன. அதன் தொகுப்பு இதோ... Financial Times - பல ஆண்டுகளாகவே, ஈரான் முக்கிய தலைவர்களைக் கண்காணிக்கத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிசிடிவி டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அந்த கேமராக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. ஈரான் போர் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold British Daily - அப்படி ஹேக் செய்யப்பட்ட கேமராக்களில் ஒன்று - டெஹ்ரானின் முக்கிய வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கிறது. அந்த டிராபிக் கேமரா வழியாக தான், காமேனி சம்பவம் நடந்த அன்று 'எங்கே இருந்தார்?' என்பதை இஸ்ரேலும், மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA) சரியாக கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. Reuters அறிக்கை படி, இஸ்ரேலின் உளவுத் துறை, சனிக்கிழமை காலை, டெஹ்ரானில் முக்கிய வளாகத்தில் மீட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு தான், அங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, சி.ஐ.ஏ காமேனி அந்தச் சந்திப்பில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது என்று சொல்கிறார்கள். ஆக, சிசிடிவி கேமரா தான் காமேனியின் கொலையில் முக்கிய உளவாளியாக இருந்துள்ளது. 'ஹீரோ' Crude Oil: 'காலத்தே பயிர் செய்' - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே!
ஈரான் போர் நீடித்தால் இந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன?!
ஐந்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் மேலும் நீடித்தால் இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்று Quick Points ஆக பார்ப்போம்... வாங்க... > சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 75 டாலர் அளவிற்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இப்போதைக்கு இந்தியாவிடம் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. இந்தப் போர் நீடித்து இந்தியாவில் கச்சா எண்ணெய் குறைபாட்டை எட்டினால், இங்கே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கலாம். ஏற்றுமதி-இறக்குமதி 'ஹீரோ' Crude Oil: 'காலத்தே பயிர் செய்' - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே! > எண்ணெயைத் தவிர்த்து, பிற ஏற்றுமதி, இறக்குமதிகளை இந்தியா ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகத் தான் செய்து வருகிறது. இப்போது அது மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் வணிகம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது நீடித்தால், வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படலாம். > ஈரானில் தான் போர் என்றாலும், வளைகுடா நாடுகளிலும் தாக்குதல் மற்றும் பதற்றம் பரவியுள்ளது. ஆகையால், அங்கே முழுவதுமாகவும், பாதியாகவும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இது இந்திய விமான போக்குவரத்தை பாதித்து வருகிறது. > எண்ணெய் விலை உயர்வு, வணிக பாதிப்பு போன்றவை இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இது சாமானியர்களையும் பாதிக்கும். > இந்தப் பதற்றத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், ஏற்கெனவே இந்திய முதலீட்டுகளை விற்றுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மேலும் தங்களது முதலீடுகளை விற்கலாம். > முக்கியமாக, இந்திய பங்குச்சந்தை பெருமளவு வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி இந்தப் போரை சுற்றி இருப்பதால், இந்த வீழ்ச்சி தொடரலாம். சாபஹார் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold > இந்தியாவின் நிதியுதவி உடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள துறைமுகம் 'சாபஹார் துறைமுகம்'. இந்தத் துறைமுகம் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியைத் தவிர்த்து பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யலாம் என்பது தான் இந்தியாவின் பிளான். ஈரானில் நடந்து வரும் இந்தத் தாக்குதலில் இந்தத் துறைமுகம் பாதிக்கப்பட்டால், நிச்சயம் அது இந்தியாவிற்கு இன்னொரு பெரிய அடியாக இருக்கும். > வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். போர் தொடர்ந்தால் இவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். > மேலும், இவர்களிடம் இருந்து இந்தியாவிற்கு வரும் பணத்திலும் சிக்கல் ஏற்படலாம். 'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?
மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! - மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி?
ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி அவரது பதவியை ஏற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை மொஜ்தபாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.1969-இல் ஈரானின் மஷாத் நகரில் பிறந்த முஜ்தபா, தனது ஆரம்ப காலத்தை ஈரானின் கடைசி ஷாவான முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராக போராடி வந்த தனது தந்தையின் எழுச்சிக்கு மத்தியில் கழித்தார். 1979-ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியின் மூலம் நாட்டின் தலையெழுத்து மாறியதுடன் புதிய ஆட்சி அதிகாரத்தில் காமேனி குடும்பம் முக்கிய அங்கம் வகித்தது. மொஜ்தபா பின்னர் ஈரானின் மிக முக்கியமான ஷியா ஆன்மீக மையமான கோம் நகரில் உள்ள மதப் பள்ளிகளில் தனது ஆன்மீகப் படிப்பைத் தொடர்ந்தார். இறுதியில் அவர் ஹோஜத்துல் இஸ்லாம் என்ற மதகுரு பதவியை அடைந்தார். அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள 'அயதுல்லா'க்களில் ஒருவராகக் கருதப்படாவிட்டாலும், ஈரானில் தனது தந்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரின் அலுவலகத்தில் படிப்படியாக தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார். தனது இளமைக் காலத்தில், மொஜ்தபா ஈரான் மற்றும் ஈராக் இடையே நடந்த போரில் முக்கிய பங்காற்றினார். இந்த அனுபவம், ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாப்பு படையான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப்படையில் அவருக்கு மிகுந்த தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. மொஜ்தபா நீண்டகாலமாக பழமைவாத பிரிவுகளுடனும், இஸ்லாமியக் குடியரசின் அரசியல் பாதுகாப்புப் படையுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு போரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இருந்த ராணுவத் தொடர்புகளே அவர் ஈரானின் புதிய உயர்ந்த பட்ச தலைவராக வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிலர். பொது மேடைகளில் பேசுவதையோ அல்லது அதிகாரப்பூர்வ பதவிகள் வகிப்பதையோ அவர் தவிர்த்து வந்தாலும், அரசியல் நியமனங்கள், வியூகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அவர் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஈரானின் அரசியலமைப்பின்படி மதகுருமார்கள் அடங்கிய அமைப்பே உயர்ந்த பட்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, இந்த அமைப்பு உடனடியாகக் கூடி மொஜ்தபாவை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரது இந்த நியமனம் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மன்னராட்சிக்கு எதிரான அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு குடியரசு நாட்டில், முன்னாள் உயர்ந்த பட்ச தலைவரின் மகனுக்கே மீண்டும் அந்தப் பதவியை வழங்குவது ஒரு வாரிசு அரசியலாக அமைந்துள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆயதுல்லா அலி காமேனி Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! | In-depth அதேபோல், ஈரானின் மிக உயர்ந்த மத அதிகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான பாரம்பரிய தகுதிகள் மற்றும் மத அறிஞருக்கான அந்தஸ்து அவரிடம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையில், மொஜ்தபா ஒரு முன்னணி பழமைவாத அரசியல்வாதியின் மகளான சஹ்ரா ஹத்தாத் என்பவரை திருமணம் செய்துள்ளார். இது ஈரானின் உயர்மட்ட அதிகார வர்க்கத்தினருடன் அவருக்குள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையிலிருந்து விலக்கியே வைத்துள்ளனர். மொஜ்தபா உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது துல்லியமான சொத்து மதிப்பு குறித்து தெரியவில்லை. அவர் உலகளாவிய ரீதியில் ஒரு சொத்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளதாகவும், பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான நிதியை மேலைநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்
தொடரும் போர் பதற்றம்: ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு?
ஈரான் மீதான போர் உச்சகட்டத்தில் நீடிக்கும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் - அமெரிக்கா ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 36 ஆண்டுகள் நாட்டை ஆண்ட அயதுல்லா கமேனியுடன் அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்தியும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். அயதுல்லா அலி கமேனியின் உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும், அடக்கம் செய்வதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகான நியமிக்கப்பட்ட வாரிசு இல்லை என்பதால், அயதுல்லா அலிரேசா அராஃபி, ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன், தலைமை நீதிபதி கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் ஆகியோர் அடங்கிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஈரானின் இடைக்கால தலைமைத்துவக் குழு, அடுத்த உச்சத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டது. மொஜ்தபா ஹொசைனி கமேனி இஸ்ரேல் - அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் பல துபாய், அபுதாபி, கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளைத் தாக்கின. ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அயதுல்ல அலி கமேனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்க அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் நிபுணர்கள் சபையால் அவர் கமேனியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி?
'சரியும்'தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா'தான்; ஆனால், போர் அல்ல 'வேற'காரணம்|Gold
ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நிலவி வரும் இந்த வேளையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை 'கிடுகிடு' உயர்வைக் காணும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறக்கத்தைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர்களுக்கு கீழேயும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 85 டாலர்களுக்கு கீழேயும் வர்த்தகம் ஆகி வருகிறது. இந்தத் திடீர் சரிவிற்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானதே காரணம் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். மேலும், 'தங்கம் மற்றும் வெள்ளியை முதலீட்டாளர்கள் விற்கவில்லை... இப்போதைய சரிவிற்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானது மட்டுமே காரணம்' என்று கூறுகிறார் அவர். தங்கம் Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஏன் இப்போது அமெரிக்க டாலர் வலுவாகிறது? போர் நீடித்து வரும் இந்த வேளையில், 'அமெரிக்க டாலர்' பாதுகாப்பான முதலீடாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். மேலும், தற்போது பணவீக்கம் அதிகரிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்க கருவூல பத்திரத்திற்கு முதலீட்டாளர்களைத் திருப்புகிறார்கள். அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவானால் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்னும் சரியலாம். Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

32 C