பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!
'அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்போ, தீர்ப்பில்லையோ... வரி ரத்தோ, வரி ரத்து இல்லையோ... நான் வரி போட்டே தீருவேன்' என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்கிறார் போலும். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20), 'அதிபர் அதிகாரத்தை மீறி சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், உலக நாடுகளின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது' என்று ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதம், IEEPA-ன் கீழ், உலக நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவித்த வரிகள் ரத்து செய்யப்படுகின்றன. ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? ஆனால், எப்படியாவது வரி போட்டே ஆக வேண்டும் என்று ட்ரம்ப் உறுதியாகி இருக்கிறார். இதற்காக, தற்போது புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க சாசனத்தின் படி, வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122 தான் அது. வர்த்தக பற்றாக்குறை எழும்போது, இந்தச் சட்டத்தின் கீழ், 15 சதவிகிதம் வரை வரி விதிக்க முடியும். தீர்ப்பு வந்த அன்று, வெள்ளிக்கிழமை இந்தச் சட்டத்தின் கீழ், உலக நாடுகளின் மீது 10 சதவிகித வரியை விதித்திருந்தார் ட்ரம்ப். நேற்று, அதை 15 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார். இந்த வரி விதிப்பு வரும் 24-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலே சொன்ன சட்டத்தின் கீழ், 150 நாள்கள் மட்டுமே வரி விதிக்க முடியும். அதற்குள் ட்ரம்ப் அரசாங்கம் வலுவாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் வரி விதிப்பைக் கொண்டு வரும். அது எப்படி இருக்கப் போகிறதோ? சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின் பிளான்
தள்ளிப்போகும் பேச்சுவார்த்தை; இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில் சுணக்கம்?
கடந்த 2-ம் தேதி, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிப்பை வெளியிட்டார்கள் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டு, வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது. தற்போது இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, அது 18 சதவிகிதம் ஆக குறையும். ஆக, இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மிகப் பெரிய ஹேப்பி நியூஸாக இருந்தது. ட்ரம்ப் Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? ஆனால், இந்த ஹேப்பி நியூஸ் தற்போது சுணங்கி உள்ளது. ஆம்... ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்த இந்திய அதிகாரிகள் நாளை அமெரிக்கா செல்ல இருந்தனர். இந்தச் சந்திப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்... ஒன்று, 'அதிகாரத்தை மீறி ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வரி விதித்துள்ளார்' என்று வரிகளை ரத்து செய்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். இன்னொன்று, ட்ரம்ப் வருகிற 24-ம் தேதி முதல், உலக நாடுகளின் மீது 15 சதவிகிதம் வரி விதித்துள்ளார். அடுத்த சில மாதங்களில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப சட்டத்திற்கு உட்பட்டு வரி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனால், இனி அனைத்து நாடுகளின் வரியின் அளவுகள் மாற உள்ளது. அதைப் பொறுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை எடுத்துச் செல்லலாம் என்று நாளைய சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளின் மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட' ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன?
உலக நாடுகளின் மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட'ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன?
நேற்று முன்தினம் (பிப்ரவரி 20), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்திருக்கும் வரிக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம். ஆனாலும், அந்த வரிகளை ரத்து செய்வதாக இல்லை ட்ரம்பும், அவரது அரசாங்கமும். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிருப்தியில் இருந்த ட்ரம்ப் இப்போது மேலும் வரியைக் கூட்டியுள்ளார். இது குறித்து தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அமெரிக்காவிற்கு எதிரான சமீபத்திய தீர்ப்பை நன்றாக ஆய்வு செய்து பார்த்ததில்... அமெரிக்க அதிபராகிய நான், உலக அளவிலான வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்துகிறேன். பல ஆண்டுகளாக பல நாடுகள் அமெரிக்காவைத் தொடர்ந்து சுரண்டி வந்திருக்கின்றன. இதனால், அடுத்த சில மாதங்களில் முழுவதும் அனுமதிக்கப்பட்ட, சட்டத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் புது வரிகள் விதிக்கப்படும். இது அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றும் (MAGA) - முன்னெப்போதும் இல்லாத வகையில். ஆக, ட்ரம்பின் ஆட்டம் இன்னும் முடியவில்லை! 'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' - ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்? https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328
Trump Tariff: வரியை ரத்து செய்த US Supreme Court - Indiaவுக்கு எவ்வளவு வரி? | Decode | Vikatan
ட்ரம்பின் கருத்து: `மீண்டும் ஒருமுறை சரணாகதிதான் - பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றம், ``வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார். எனக் குறிப்பிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து, ``எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது. எனத் தெரிவித்தார். ட்ரம்ப் இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் இந்தியா - அமெரிக்கா இடையே உருவான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசினார். அப்போது, ``இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முடிவு செய்யப்பட்ட வரிகளை இந்தியா தொடர்ந்து செலுத்தும். அமெரிக்கா எந்த வரிகளையும் செலுத்தாமல் வரத்தகம் செய்யும். பிரதமர் மோடி உண்மையில் சிறந்த மனிதர். எனப் பாராட்டியிருந்தார். சமீப சில நாள்களாக அடங்கிருந்த இந்தியா - அமெரிக்கா வர்த்தக விவகாரம் இப்போது மீண்டும் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், `` பிரதமர் அழுத்தங்களுக்குப் பணிந்துவிட்டார். அவரது துரோகம் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவரால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாது. அவர் மீண்டும் ஒருமுறை சரணாகதிதான் அடைவார். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ட்ரம்ப் - மோடி அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகள் குறித்து, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்காமல், மோடி அரசு ஏன் அவசரகால கதியில் இந்த 'ஒப்பந்தம் எனும் 'வரி' வலையில் விழுந்தது? இதன் மூலம் இந்தியா பல முக்கிய சலுகைகளை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது ஏன்? அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பல பொருட்களுக்கு 'பூஜ்ஜியம் வரி' (Zero Tariff) விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயச் சந்தையை அமெரிக்கப் பொருட்களுக்குத் திறந்துவிட்டு, உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் ஒரு முடிவாகும். டிஜிட்டல் துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பல வரிச்லுகைகள் வழங்கப்பட்டுள்ளன. Pahalgam தாக்குதல் விவகாரத்தில் மல்லிகார்ஜுன கார்கே இந்தியாவின் தேசிய நலன்களையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்கும்படி உங்களை நெருக்கியது யார் அல்லது எது? சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) தொடர்பான விவகாரங்கள் ஏதேனும் இந்த அழுத்தத்திற்குக் காரணமா? இந்திய மக்கள் முன் உண்மையைச் சொல்லுங்கள். இனிமேலாவது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, 140 கோடி இந்தியர்களின் சுயமரியாதையையும், நம் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையிலான ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை இந்த அரசு வழங்குமா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். Loading… ட்ரம்ப் வரிக்கு எதிரான தீர்ப்பு: `இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த நிலை?' - அதிபர் ட்ரம்ப் பதில்!
ட்ரம்ப் வரிக்கு எதிரான தீர்ப்பு: `இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த நிலை?' - அதிபர் ட்ரம்ப் பதில்!
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது வரிப்போர் நடத்திவந்தார். இதனால் உலக நாடுகளுக்கு மத்தியில் மட்டுமல்லாமல், தன் சொந்த நாட்டிலேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதன் வெளிப்பாடாக அமெரிக்க நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், ``மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார். எனக் குறிப்பிட்டிருந்தது. ட்ரம்ப் இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். ``எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது. எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து உலக நாடுகள் மீதான வரி குறைக்கப்படுமா அல்லது வேறு சட்டங்கள் மூலம் வரி விதிக்கும் வழமையை அதிபர் ட்ரம்ப் தொடரப்போகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும். இதற்கிடையில், சமீபத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே உருவான வர்த்தக ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களும் எழுந்தன. அதற்கு விளக்கமளிக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப், ``இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முடிவு செய்யப்பட்ட வரிகளை இந்தியா தொடர்ந்து செலுத்தும். அமெரிக்கா எந்த வரிகளையும் செலுத்தாமல் வரத்தகம் செய்யும். இது முன்பு இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியிருக்கிறது. ட்ரம்ப் - மோடி இந்தியா அமெரிக்காவை அதிக வரி விதித்து அமெரிக்காவை சுரண்டியது என்ற என் கருத்திலிருந்து, இப்போது அமெரிக்காவுக்கு சாதகமாகியிருக்கிறது. நாங்கள் ஒரு சிறிய திருப்பத்தை செய்தோம். பிரதமர் மோடி உண்மையில் சிறந்த மனிதர். அவர் அமெரிக்காவைப் பொறுத்தவரை, அவர் யாரை எதிர்த்தாரோ அவர்களைவிட மிகவும் புத்திசாலி. என்றார். Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?
US Iran மோதல் - வருகிறதா நீண்ட போர்? | Trump | Ali khamenei | Netanyahu | Decode | Vikatan
Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?
உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'பரஸ்பர வரி'. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)'-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார். இதில் உலக நாடுகளின் அதிருப்தியை தாண்டி, உள்நாட்டிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இது அமெரிக்க வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று நீதிமன்ற படிகளில் அவர்கள் ஏறினர். 'ட்ரம்ப் விதித்த வரி செல்லாது' என்று அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ட்ரம்ப் தரப்பு. அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு என்ன? அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதில் 6 - 3 என்கிற விகிதத்தில் 6 நீதிபதிகள் ட்ரம்பின் வரிக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதுவரை ட்ரம்பின் பரஸ்பர வரியால் அமெரிக்காவின் கருவூலத்தில் 133 பில்லியனுக்கும் மேற்பட்ட டாலர்கள் சேர்ந்திருக்கின்றன. இருந்தாலும் ஒரு 'செக்' இவை வசூலிக்கப்பட்ட நாடுகளிடையே திரும்பக் கொடுக்கப்பட்டு விடுமா என்றால் அங்கே தான் ஒரு செக் உள்ளது. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை யாரேனும் அமெரிக்காவிற்கு எதிராக பின்பற்றினால், வர்த்தக சட்டம், 1974-ன் கீழ், பிரிவு 301-ல் அதிபரால் வரி விதிக்க முடியும். நாட்டின் பாதுகாப்பு அடிப்படையில், வர்த்தக விரிவாக்குதல் சட்டம், பிரிவு 232-ன் கீழ் வரி விதிக்க முடியும். இந்த இரண்டு துருப்புச் சீட்டுகளையும் ட்ரம்பின் அரசு பயன்படுத்த உள்ளதாம். ட்ரம்ப் - வரி ஏற்கெனவே, உலக நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கின்றன... சில நாடுகள் அமெரிக்காவிற்குள் போதைப் பொருள்களை ஏற்றுமதி செய்கின்றன என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் ட்ரம்ப். அந்தத் துருப்புச் சீட்டுகளுக்கு இந்தக் காரணங்கள் கூட பயன்படுத்தப்படலாம். லாஸ்ட்... பட் நாட் லீஸ்ட்... அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ட்ரம்பின் ரியாக்ஷன்... இப்போது அமெரிக்க நேரப்படி, பிப்ரவரி 20-ம் தேதியின் காலை. சில ஆளுநர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை 'அவமானம்' என்று தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.. இனி ட்ரம்பின் அடுத்த நகர்வு என்னவாக இருக்குமோ?!
'டைம்'கொடுக்கும் ட்ரம்ப்; ஈரான் வழிக்கு வரவில்லையேல் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் என்ன? | Quick Read
'இன்னும் 10 - 15 நாள்கள்தான் டைம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு காலக்கெடு கொடுத்து அதிர வைத்திருக்கிறார். ட்ரம்ப் கூறுவது என்ன? 10 - 15 நாள்களுக்குள் ஈரான் தனது அணு ஆயுதக் கட்டமைப்பைக் கலைக்க வேண்டும்... அவர்கள் வைத்திருக்கும் யுரேனியத்தை ஏதேனும் ஓர் அணு ஆயுத நாட்டிற்கு வழங்க வேண்டும். இல்லையேல்... அடுத்தது கெட்ட விஷயங்கள்தான் நடக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார், ட்ரம்ப். ஒருவேளை ஈரான் இதைச் செய்யவில்லை என்றால், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம். ட்ரம்ப் ராஜ்ய சபாவிலும் ஓங்கும் பாஜக-வின் கை? - 37-ல் யாருக்கு எத்தனை? | Data Explains இது நடந்தால், ஈரான் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. உலக நாடுகளிலும் இதன் எதிரொலி இருக்கும். அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம். > ஹார்மூஸ் ஜலசந்தி ஈரானுக்கு மிக அருகில் உள்ளது. இதன் வழியாகத் தான் உலகத்தில் பயன்படுத்தப்படும் 20 - 25 சதவிகித எண்ணெய்களும், 20 சதவிகித எல்.என்.ஜிகளும் சென்று வருகின்றன. ஒருவேளை, ஈரானை அமெரிக்கா தாக்கினால், இந்தப் பாதை பிளாக் செய்யப்படும். இதனால், எண்ணெய் மற்றும் எரிவாயுக்களின் விலை தாறுமாறாக எகிறும். > உலகத்தில் பதற்றமான சூழல் நிலவும் போது, பங்குச்சந்தையிலும் தாக்கங்கள் எட்டிப்பார்க்கும். > இப்போது தங்கம், வெள்ளி விலை ஓரளவு நிதானத்திற்கு வந்துள்ளது. புதிய போர் ஒன்று தொடங்கும்போது, அதன் விலை தாறுமாறாக உயரலாம். > போக்குவரத்திற்கு எண்ணெய்கள் மிக முக்கியம். எண்ணெய் கிடைப்பதிலேயே சிக்கல் எழும்போது, அனைத்துப் பொருள்களின் விலையும் எகிறலாம். > ஒரு நாட்டில் போர் நடக்கும்போது, அந்த நாட்டு மக்கள் அங்கே இருந்து வெளியேறுவார்கள். இது அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால், பக்கத்து நாடுகள் பாதிக்கப்படும். இதை தாண்டியும் நிறைய நிறைய தாக்கங்கள் இருக்கும். 'தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து பொறுமையா.!' - வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு அமெரிக்காவிலிருந்து மிரட்டல் - அனுப்பியது பிஷ்னோய் கூட்டாளி!
சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த ஹாரி பாக்ஸர் என்பவன் பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருந்தான். ரன்வீர் சிங்கின் செயலாளருக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்டல் வந்திருந்தது. இது தவிர பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீதும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸார் ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல் வாய்ஸ் மெசேஜ் உண்மையிலேயே ஹாரி பாக்ஸருக்குரியதா அல்லது வேறு யாருடைய வாய்ஸா என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். ஹாரி பாக்ஸர் வாய்ஸ் மும்பை மட்டுமல்லாமல் இந்தியாவில் எந்த விசாரணை ஏஜென்சியிடமும் இல்லை. ஹாரி பாக்ஸர் அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல் வாய்ஸ் மெசேஜை அமெரிக்க விசாரணை ஏஜென்சிக்கு அனுப்பி அதனை ஹாரி பாக்ஸர் வாய்ஸோடு ஒத்துப்பார்க்கும்படி மும்பை போலீஸார் கேட்டுக்கொண்டனர். அமெரிக்க விசாரணை அதிகாரிகள் வந்த சத்தத்தை தங்களிடம் இருக்கும் ஹாரி பாக்ஸர் சத்தத்தோடு ஒப்பிட்டு பார்த்ததில் அது ஹாரி பாக்ஸர் சத்தம்தான் என்பது உறுதி செய்யப்பட்டதாக மும்பை குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர். அதோடு மேலும் சில இடங்களுக்கு ஹாரி பாக்ஸர் அனுப்பிய வாய்ஸ் மேசேஜை அனுப்பி அவர்களிடம் இருக்கும் சத்தத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் மிரட்டல் எங்கிருந்தது வந்தது என்பதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க நம்பரில் இருந்து ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் மெசெஜ் அனுப்பப்பட்டதாக குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரன்வீர் சிங்கிற்கு மும்பை போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். ரன்வீர் சிங் மேலாளரிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் ஹாரி பாக்ஸர் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
இரான் மீது எப்போது தாக்குதல்? - ட்ரம்ப் தலை அசைவிற்காக காத்திருக்கும் அமெரிக்கப் படைகள்!
2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின்... மீண்டுமா? - அமெரிக்கா - இரான் இடையே உருவாகி உள்ள இந்த மோதல்போக்கு இந்தக் கேள்வியை எழுப்புகிறது. இரான் மீது அமெரிக்கா தாக்குதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் இரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது. அது இரான் வைத்திருக்கும் அணு ஆயுதத்திற்கு எதிராகத்தான். அப்போது அமெரிக்காவும் அதே காரணத்தைக் கூறி இரான் மீது தாக்குதல் நடத்தியது. 'அது வெற்றிகரமான தாக்குதல்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பறைசாற்றினார். இரான் உள்நாட்டு போராட்டம் Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா? அதன் பின், அவ்வப்போது ட்ரம்ப் மற்றும் இரானின் உச்சத் தலைவர் இடையே வார்த்தைப்போர் நடந்து வந்தாலும், வேறொன்று பெரிதாக இல்லை. ஆனால், 2025-ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில், இரான் நாட்டிற்குள் உள்நாட்டுப் போராட்டம் தொடங்கியது. இதற்கு பணவீக்கம் மற்றும் ஊழல் அதிகரித்தது காரணம் ஆகும். அமெரிக்கா Vs இரான் இதைச் சொல்லி, 'போராட்டக்காரர்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், இதுவரை இல்லாத அளவிற்கான தாக்குதலைச் சந்திக்கும் இரான்' என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் ட்ரம்ப். இந்த எச்சரிக்கை வலுப்பதும்... பின் தணிவதுமாக இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா, இரானுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. நேற்று முன் தினம்கூட (பிப்ரவரி 17), அமெரிக்கா, இரான் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், இரான் 'சில கொள்கைகளை வகுக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது' என்று கூறியது... ஆனால், அமெரிக்காவோ முரணாக, 'இன்னும் நிறைய விஷயங்கள் கலந்தாலோசிக்க உள்ளது' என்று தெரிவித்தது. ட்ரம்ப் சென்னை: எக்மோர் ஸ்டேஷனில் இருந்து ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? - இதுவெல்லாம் மாறுகிறது கவனிங்க! வெளியான தகவல் இந்த நிலையில் தான் CNN செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த வாரத்தின் இறுதியில் அமெரிக்கா, இரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறதாம். ஆனால், இந்தத் தாக்குதலுக்கு ஒப்புதல் தருவதில் பெரும் யோசனையில் இருக்கிறாராம் ட்ரம்ப். ஏற்கெனவே, இரானை நோக்கி அமெரிக்க கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது என்று ட்ரம்ப் கடந்த மாதம் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, ட்ரம்ப் தலையசைத்தால் இரானை அமெரிக்கா தாக்கும். 'இப்போதைய சூழலில், ஒரு நாட்டின் மீது தாக்குதல் தேவையா?' என்பதுதான் ட்ரம்பின் யோசனையாக இருக்கிறதா என்று கூறுகிறார்கள். வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?
Lost 140,000 Followers: அம்பலமான உண்மை முகம்! - லட்சக்கணக்கான ஃபாலோயர்களை இழந்த சீன இன்ஃப்ளூயன்சர்?
ஒரு சீன இன்ஃப்ளூயன்சர் தனது ரசிகர்களுடன் நேரலையில் (Livestream) பேசிக்கொண்டிருக்கும் போது, இத்தனை நாளாக அவர் பயன்படுத்திய `பியூட்டி ஃபில்டர்' திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் சில வினாடிகளுக்கு அவரது உண்மையான முகம் பார்வையாளர்களுக்குத் தெரிந்தது. அடுத்த சில வினாடிகளில் மீண்டும் ஃபில்டர் வேலை செய்யத் தொடங்கி, அவரது முகத்தை மிகவும் வெள்ளையாகவும், பொம்மை போலவும் மாற்றியது. china influencer இந்த 4 வினாடி வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. ஃபில்டர் இல்லாமல் அவரது உண்மையான முகத்தைப் பார்த்ததால், சில நிமிடங்களிலேயே சுமார் 1,40,000 ஃபாலோயர்கள் அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். வீடியோ வைரலானாலும், உண்மையிலேயே 1,40,000 ஃபாலோயர்களை இழந்தாரா என்பதற்கோ அல்லது இந்தச் சம்பவம் முழுமையாக உண்மையானது தானா என்பதற்கோ எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. மேலும், வீடியோவில் இருக்கும் அந்தப் பெண் யார் என்பதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் `பியூட்டி ஃபில்டர்களின்' அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் எதிர்மறையான தாக்கங்கள் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிலர் அவர் பொய் முகத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி விட்டதாகக் குற்றம்சாட்டுகின்றனர். இன்னும் சிலர், ஃபில்டர் செய்யப்பட்ட செயற்கையான முகத்தை விட அவரது இயற்கையான முகம் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவர் ஃபில்டர்களைத் தவிர்க்கலாம் என்றும் ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இதே போன்று 2019-ஆம் ஆண்டில், கியாவோ பிலுவோ (Your Highness Qiao Biluo) என்ற பிரபலமான சீன இன்ஃப்ளூயன்சரின் நேரலையில் ஃபில்டர் கோளாறு ஏற்பட்டபோது, இளம்பெண் போல காட்சியளித்த அவர் உண்மையில் ஒரு 58 வயதுப் பெண்மணி என்ற உண்மை வெளிவந்த சம்பவத்தையும் இது பலருக்கு நினைவூட்டியுள்ளது. Qiao Biluo இது போன்ற சம்பவங்களில் மக்கள் கோபப்படுவது அந்தப் பெண்ணின் உண்மையான முகத்தைப் பார்த்து அல்ல; இத்தனை நாள்களாகத் தங்களை நம்பவைத்த அந்தப் போலித்தனத்தைப் பார்த்துதான். ஃபில்டர்கள் மூலம் உருவாக்கப்படும் முகம் ஒரு வெறும் மாயை. அந்த மாயையை நிஜம் என நம்பி அன்பைப் பொழிந்தவர்களுக்கு, அது வெறும் தொழில்நுட்பத்தின் மாயம் எனத் தெரியவரும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. உண்மையில், அந்தப் பெண்ணின் உண்மையான முகத்தைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஃபில்டரில் தெரிந்த உயிரற்ற வெளிறிய முகத்தை விட, முதிர்ச்சியும் கதகதப்பும் நிறைந்த அவரது இயற்கையான முகம் மிகவும் அழகாக இருக்கிறது என்றுதான் கருத்துத் தெரிவித்துள்ளனர். உண்மையான முகமே ஆகச்சிறந்த அழகு! அழகு என்பது கறையற்ற சருமத்திலோ, ஃபில்டர்கள் தரும் செயற்கையான பளபளப்பிலோ இல்லை. அது நம் உணர்வுகளைச் சுமந்து நிற்கும் நிஜ முகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் உள்ள சுருக்கங்களும், நிறமும், அடையாளங்களும் அவர்களது வாழ்க்கைப் பயணத்தின் சாட்சிகள். அதைப் மறைத்து ஒரு பிளாஸ்டிக் பொம்மையைப் போல மாறுவது அழகல்ல. filter ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களிடம் எதிர்பார்ப்பது, தங்களைப் போலவே குறைகள் இருந்தாலும் உண்மையாக இருக்கக்கூடிய ஒரு மனிதரைத்தான். அந்த சீன இன்ஃப்ளூயன்ஸர் எந்த ஃபில்டரின் உதவியும் இல்லாமல், ஆரம்பத்திலிருந்தே தன் உண்மையான முகத்துடனேயே வந்திருந்தால், அவர் இழந்த 1.4 லட்சம் பேரை விடப் பல மடங்கு உண்மையான அன்பான ஃபாலோயர்களைச் சம்பாதித்திருக்க முடியும்.
AI Summit - China Robodog - அம்பலமான Galgotias University மோசடி | Decode
Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா?
2025-ம் ஆண்டு தாறுமாறாக எகிறிக் கொண்டிருந்த தங்க விலை, கடந்த சில நாள்களாகப் பம்முகிறது. அதுவும் குறிப்பாக, இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து, தங்க விலை சிறிய ஏற்றங்கள், அதன் பின் தொடர் சரிவுகள் என ரிப்பீட் மோடில் இருந்து வருகிறது. ஏன் இந்த இறங்குமுகத்திற்குக் காரணம் என்று பார்த்தால்... இந்த மாதம் (பிப்ரவரி) தொடங்கியதில் இருந்து உலக அளவில் எந்தப் பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களும் நடக்கவில்லை. தங்கம் வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன? உலகளவில் மிக முக்கிய பிரச்னைகளாகப் பேசப்பட்டு வந்த ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கா - ஈரான் பிரச்னை என இரண்டும் இப்போது பேச்சுவார்த்தையில் இருந்து வருகின்றன. அதனால், இன்னும் சரியுமா என்று கேட்டால், அதற்கான பதில் Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் தந்ததுதான். அதாவது, கடும் ஏற்றங்களைச் சந்தித்த தங்கம், இப்போது 'கரெக்ஷன்' ஆகி வருகிறது. ஒருவேளை, தங்க விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,400 - 4,500 டாலர்களைத் தொட்டால்தான், அது சரிவைச் சந்திக்கும் என்று கூறியிருந்தார். ஏறும்... ஆனா ஏறாது 'அப்போ... இப்போ சர்வதேச சந்தையில் விலை என்ன?' என்ற உங்கள் மைண்ட் வாய்ஸிற்கான பதில் - சமீப நாள்களாக, தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,900 - 5,000 டாலர்களுக்குள் வர்த்தகம் ஆகி வருகிறது. இந்த ரேஞ்சுக்குள்ளேயே தொடர்ந்து வருகிறது. அதனால், இப்போதைக்குப் பயப்பட வேண்டாம். 'தங்கம் விலை இனி ஏறாதா?' என்று கேட்டால், 'ஏறும்... ஆனா, ஏறாது' என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்கா வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறீர்களா? - கடும் வீழ்ச்சியை சந்திக்குமா? - இப்போதே Alert ஆகுங்க! காரணம், 2025-ம் ஆண்டு தங்க விலை பெரும் ஏற்றத்தைச் சந்தித்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்தது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஜனவரி மாத மீட்டிங் மினிட்ஸ் (மீட்டிங் குறித்த அறிக்கை) நேற்று வெளியானது. அதில் அடுத்து வட்டி விகிதக் குறைப்பு இல்லை என்று தெரிகிறது. இந்தக் காரணத்தினால் தங்கம் விலையில் ஏற்றம் இருக்காது. இன்னொரு பக்கம், மேலே சொன்ன மாதிரி ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கா - ஈரான் பிரச்னைப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றனதான். ஆனால்... சமீபத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடந்தது. அது குறித்து அப்போது பாசிட்டிவாகச் சொன்னாலும், இப்போது அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், நேற்று ஜெனீவாவில் அமெரிக்கா - ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அதில் எதுவும் பாசிட்டிவான முடிவுகள் எட்டப்படவில்லை போலும். இதனால், ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சீனா ரஷ்யா எடுத்த 'ஒரு' முடிவு? தங்கம் விலையைக் கடும் வீழ்ச்சியில் தள்ளப் போகிறதா?|Gold அடுத்ததாக, சீனப் புத்தாண்டால், சீனாவின் சந்தை இப்போது விடுமுறையில் உள்ளது. இந்த விடுமுறை பிப்ரவரி 23 வரை இருக்கும். இது முடிந்து, சீனாவின் நகர்வுகள் என்னவாக இருக்கும்... சீனா, தங்கம் வாங்கிக் குவித்ததால்தான், தங்கம் விலை உயர்ந்தது. விடுமுறை முடிந்து அது என்ன செய்யும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆக, தங்க விலைக்கு அடுத்தடுத்து 3 செக்குகள் இருக்கின்றன. இவை அனைத்தும் பாசிட்டிவ் முடிவைக் கண்டால்தான், தங்க விலை ரேஞ்சிற்குள்ளேயே வர்த்தகம் ஆகும். இல்லையேல், மீண்டும் தங்க விலை ஒரு ஏற்றத்தைச் சந்திக்கலாம். தங்க விலை எப்போதும் சர்வதேச மாற்றங்களைக் கொண்டே மாறும் என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள். PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

29 C