SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

32    C
...

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்'ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார். இந்த நிலையில், ஜப்பான் மீது வட கொரியா தாக்குதல் நடத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சானே தகைச்சி கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான் இது குறித்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில், வட கொரியா சந்தேகப்படக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால், ஜப்பான் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளதாவது... இது குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்து மக்களுக்கு சரியான விதத்திலும், நேரத்திலும் தர‌ வேண்டும். விமானங்கள், கப்பல்கள் மற்றும் பிற சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்... அசாதாரண சூழலுக்கு தயாராக வேண்டும் என்று பதிவிட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி [Emergency alert] North Korea has launched a suspected ballistic missile. More updates to follow. — PM's Office of Japan (@JPN_PMO) March 14, 2026

விகடன் 14 Mar 2026 1:01 pm

`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' - ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது?

ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. போர் தொடங்கியவுடன் ஈரானின் தலைவர் அல் கமெனி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்ததால் அடுத்த சில நாட்களில் போரை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று அமெரிக்கா தப்புக்கணக்கு போட்டது. ஆனால் அமெரிக்கா நினைத்தது போன்று அவ்வளவு எளிதில் போர் முடியவில்லை. ஈரான் உச்ச தலைவர் அல் கமெனி இப்போரில் கொலை செய்யப்பட்ட பிறகு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்கா ஆதரவு நாடுகளான துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளில் ஈரான் ஏவுகனைகளை கொண்டும் ட்ரோன்களை கொண்டும் கடுமையாக தாக்கியது. அதோடு இஸ்ரேல் மீதும் மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு ஈரான் இத்தாக்குதல் நடத்தியது. இரண்டு வார போரில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் அடைந்துள்ளது. மொஜ்தபா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், ஆயில் நிலைகள் சேதம் அடைந்தாலும், அமெரிக்கா நினைத்த எதுவும் நடக்கவில்லை என்பது மட்டும் உண்மை. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்த அமெரிக்காவின் எண்ணம் ஈடேரவில்லை. `20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' இனியும் அது நடக்குமா என்பது சந்தேகம்தான் என்று அமெரிக்காவே தெரிவித்துவிட்டது. அதோடு ஈரான் சிறிதும் சளைக்காமல் உடனடியாக தங்களது உச்ச தலைவரையும் அறிவித்துவிட்டு எந்த வித தொய்வும் இல்லாமல் தொடர்ந்து போர் செய்து கொண்டிருக்கிறது. இப்போர் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி, ''கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் சந்தித்த தோல்விகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எனவே அதற்கு தக்கபடி ஈரானின் சிறிய ராணுவப் பிரிவுகள் தனித்து நின்று போரிடும் வகையில் எங்களது தற்காப்பு முறையை மாற்றியமைத்துள்ளோம். எனவே, எப்போது, எப்படி இந்தப் போர் முடிய வேண்டும் என்பதை நாங்களே தீர்மானிப்போம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து ஈரான் போரிட்டு வருவது குறித்து சர்வதேச நெருக்கடி குழுமத்தின் ஈரான் திட்ட இயக்குனர் அலி வேஸ் கூறுகையில், ''உயர் தலைமையை இழக்க நேரிட்டாலும், அதனால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பரவலாக்கப்பட்ட இராணுவக் கட்டளை அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். எனவேதான் சில மூத்த தலைவர்களை இழந்த போதிலும், ஆட்சி அப்படியே உள்ளது. 2005ம் ஆண்டு ஆப்கான் மற்றும் ஈராக்கில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இது போன்ற புதிய ராணுவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஈரான் இப்போது 3 குறிக்கோள்களை மையமாக வைத்து இப்போரில் ஈடுபட்டுள்ளது. முதலாவதாக, எதிரியின் ஆரம்பக்கட்டத் தாக்குதல்களில் இருந்து நாட்டின் தலைமை மற்றும் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, தங்களது இருப்பு அழியாமல் இருப்பதை உறுதி செய்வவது ஆகும். இரண்டாவதாக, போரில் தொடர்ந்து நீடிப்பதற்கும் எதிரிக்குத் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் தேவையான ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதத் திறனைத் தக்கவைத்துக் கொள்வது ஆகும். மூன்றாவதாக, போரை நீண்ட காலத்திற்கு இழுத்தடிப்பது. இதன் மூலம் எதிரி நாடு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சோர்வடையும் போது, ஈரானுக்குச் சாதகமான நிபந்தனைகளுடன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகும். அமெரிக்கா போன்ற ஒரு பெரிய வல்லரசுடன் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என்பதால், போரைத் தற்காப்பு ரீதியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் கொண்டு செல்வதே ஈரானின் திட்டம்''என்று தெரிவித்தார். இப்போரால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு உள்நாட்டிலும், நட்பு நாடுகளிடமிருந்தும் கடும் நெருக்கடி வந்து கொண்டிருக்கிறது. ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் மலிவான ட்ரோன் (Drone) படைகளைக் கொண்டு, துபாயில் உள்ள ஒரு சொகுசு படகுத் துறைமுகம் (Marina) மற்றும் கடலில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம், இந்தப் போரை வளைகுடா நாடுகள், துருக்கி, சைப்ரஸ் மற்றும் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் ஈரான் விரிவுபடுத்தியுள்ளது. அதே சமயம், லெபனானில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஈரானியப் படைகள் ஹார்முஸ் நீரிணையை கிட்டத்தட்ட மூடிவிட்டன. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய வழித்தடம் முடங்கியுள்ளதால் உலக அளவில் பெரும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த போர் வியூகம் குறித்து உலக அளவில் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இந்தப் போரின் உண்மையான நோக்கம் என்ன என்பதில் அமெரிக்க அரசு தெளிவான பதில்களைத் தவிர்க்கிறது. இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தைச் சேர்ந்த டேனி சிட்ரினோவிச் இது குறித்து கூறுகையில், ஈரானின் நீண்ட காலத் திட்டங்கள் மற்றும் அதன் உறுதித்தன்மை குறித்த புரிதல் எங்களிடம் இல்லை என்று அவர் எச்சரிக்கிறார். இந்தப் போரிலிருந்து சுலபமாக வெளியேற வழி இல்லாததால், அதிபர் ட்ரம்ப் தனது வெற்றி குறித்த இலக்கை  மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வு பேராசிரியர் ஜொனாதன் பாக்குயின் தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் கூறுகையில், ஈரான் சரணடைய வேண்டும் அல்லது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிட்டு, ஈரானிய மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் அரசை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறி அவர் விலகிக்கொள்ளப் பார்க்கலாம்''என்று தெரிவித்தார்.

விகடன் 14 Mar 2026 12:27 pm

கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்'பலமான பதிலடி கொடுக்கும் ஈரான்

ஈரான் எண்ணெய் ஏற்றுமதியின் முக்கியமான தளம், 'கார்க் தீவு'. இந்தத் தீவை குறி வைத்து தாக்கியுள்ளது அமெரிக்கா. ட்ரம்ப் என்ன சொல்கிறார்? இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் கூறுகையில், எனது வழிகாட்டுதலில் கார்க் தீவில் உள்ள ராணுவ தளவாடங்கள் தாக்கப்பட்டுள்ளன. எண்ணெய் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. ட்ரம்ப் ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கோ, பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் வந்தால், எதுவும் யோசிக்க‌மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அந்தப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின்‌ எரிசக்தி தளவாடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியிருந்தது ஈரான். இப்போது அமெரிக்கா கார்க் தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை என்றாலும், கார்க் தீவு மீதான தாக்குதலை ஈரான் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. ஈரான் பதிலடி இன்று காலை (இந்திய நேரப்படி) ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இனி ஏதேனும் ஈரான் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளில் அமெரிக்காவிற்கு சொந்தமாக இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கிய 5 அமெரிக்க விமானங்களை ஈரான் தாக்கியுள்ளது என்று 'The Wall Street' பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதல், மிரட்டல் அனைத்துமே கார்க் தீவிற்காக அமெரிக்காவைப் பழி வாங்கும் நடவடிக்கையே. முதலில் தந்தை; இப்போது மகன்: மொஜ்தபா காமேனிக்கும் குறி வைக்கும் அமெரிக்கா - என்ன சொல்கிறது?

விகடன் 14 Mar 2026 11:21 am

ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி

இந்தியாவை ரஷ்ய எண்ணெய் வாங்க அமெரிக்கா 'அனுமதி'த்தது குறித்து ஈரான் கேலி செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று தான் இந்தியாவிற்கு கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. இந்தியா உடனான ஒப்பந்தத்தையும் தாமதம் செய்தது. இப்போது ஈரான் போர் தொடங்கிய உடன் ரஷ்ய எண்ணெயை இந்தியா தற்காலிகமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... சையத் அப்பாஸ் அரக்ச்சி Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதால் அமெரிக்க பல மாதங்களாக இந்தியாவை மிரட்டியது. ஆனால், ஈரான் உடனான போர் தொடங்கிய இரண்டு வாரங்களில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் ரஷ்ய எண்ணெயை வாங்க சொல்லி அமெரிக்கா கெஞ்சுகிறது. ஈரான் மீதான சட்டத்திற்குப் புறம்பான அமெரிக்காவின் போருக்கு ஆதரவளித்தால் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என்று ஐரோப்ப நாடுகள் நினைத்தன. பாவம் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்? The U.S. spent months on bullying India into ending oil imports from Russia. After two weeks of war with Iran, White House is now begging the world—incl India—to buy Russian crude. Europe thought backing illegal war on Iran would win U.S. support against Russia. Pathetic. pic.twitter.com/fbkrXpXa9P — Seyed Abbas Araghchi (@araghchi) March 13, 2026

விகடன் 14 Mar 2026 10:24 am

முதலில் தந்தை; இப்போது மகன்: மொஜ்தபா காமேனிக்கும் குறி வைக்கும் அமெரிக்கா - என்ன சொல்கிறது?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீதான போரை தொடங்கியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். அந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் காமேனியை குறி வைத்தது இரு நாடுகளும். அவரும்‌ அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார். அவருக்குப் பின்னான உச்ச தலைவரை சமீபத்தில் தான் ஈரான் அறிவித்தது.‌ அவர் காமேனியின் இளைய மகனான மொஜ்தபா காமேனி. தற்போது இவருக்குக் குறி வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் சன்மானம் Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப் அமெரிக்காவின் சன்மானம் அதாவது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) சேர்ந்த முக்கிய தலைவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்க அரசு. இவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர்களை வரை சன்மானம் என்று அறிவித்துள்ளது. 10 மில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 92.47 கோடி. அமெரிக்கா வெளியிட்டுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் மொஜ்தபா காமேனியின் படம் தான் முதலில் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கெனவே ஈரானில் நடந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனிக்கு காயமடைந்திருந்தார். அவர் இறந்துவிட்டார் என்கிற செய்திகள் கூட பரவின. இப்போது அவர் குறித்த தகவல்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

விகடன் 14 Mar 2026 10:15 am

Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை'மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப்

ஈரானுக்கு மிக மிக முக்கியமானது, 'கார்க் தீவு'. இந்தத் தீவில் இருந்து தான் ஈரான் தன்னுடைய 90 சதவிகித எண்ணெய் ஏற்றுமதிகளைச் செய்கிறது. 90 சதவிகிதம் என்றால் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 950 மில்லியன் பேரல்கள். இந்தத் தீவை அமெரிக்கா தொட்டால் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றும் என்று இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்து வந்தனர். தற்போது அந்தத் தீவை தான் குறி வைத்து தாக்கியிருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதிசெய்துள்ளார். ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... என்னுடைய வழிகாட்டுதலின் படி, ஈரானின் மகுடக் கல்லான 'கார்க் தீவில்' உள்ள அனைத்து ராணுவ தளவாடங்களும் தகர்க்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ஆகும். நாகரிகம் காரணமாக, அந்தத் தீவில் இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகளை நாங்கள் தாக்கவில்லை. ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் எனது முடிவை மாற்ற வேண்டியதாக இருக்கும். இதற்கு ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ? https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328

விகடன் 14 Mar 2026 8:06 am

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode'டெக்னிக்!

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல்கள் நின்று கொண்டிருக்கின்றன. இதற்கு ஈரான் போர் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் விடமாட்டேன் என்று நிற்கிறது ஈரான். போரும் முடிந்தபாடில்லை. ஏற்கெனவே இந்தியாவில் எல்.பி.ஜி தட்டுப்பாடு எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் ஈரான் போர்: அதிக Volatality-ல் இந்திய பங்குச்சந்தை; முதலீட்டாளர்கள் எதை வாங்கலாம், எதை விற்கலாம்? இந்தியா வந்த 'கச்சா எண்ணெய்' கப்பல் இந்த நேரத்தில், நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று மும்பை துறைமுகத்தை அடைந்திருக்கிறது. அந்தக் கப்பலின் பெயர் ஷென்லாங். இது லைபீரியா கொடியிட்ட கப்பல் என்றாலும், அந்தக் கப்பலை ஓட்டி வந்தது என்னவோ இந்திய மாலுமி. அவர் பெயர் சுக்ஷாந்த் சிங் சந்து. சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுராவில் தொடங்கியிருக்கிறது இந்தக் கப்பலின் பயணம். இந்தக் கப்பல் கடந்த மார்ச் 3-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. போரினால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதை மீறி, அதன் வழியாக எந்தக் கப்பல் வந்தாலும் வீழ்த்தப்படும் என்று எச்சரித்துள்ளது ஈரான். இதனால், ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளின் குறியில் இருந்து தப்பிக்க இந்தியா வந்த கப்பல் டிரிக்ஸ் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளது. AIS 'நண்பன்' ஈரானை தாக்கியும் சீனா அமைதி காப்பது ஏன்?! AIS பொதுவாக கப்பலில் 'Automatic Identification System (AIS)' என்கிற ஒன்று இருக்கும். இது கப்பலின் பாதுகாப்பிற்கும், கப்பலைக் கண்காணிப்பதற்கும் இருக்கும் சிஸ்டம் ஆகும். இதன் மூலம், தொடர்ந்து கப்பலைக் கண்காணிக்கலாம். எதிரில் என்ன கப்பல் வருகிறது, எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது, அதன் வகை, எடை என்ன என்பதை எல்லாம் காட்டும். இதன் மூலம், ஒரு கப்பலை இன்னொரு கப்பல் இடிப்பது தடுக்கப்படுகிறது. அடுத்ததாக, கப்பலுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எளிதாக இந்த சிஸ்டம் 'கப்பல் எங்கு இருக்கிறது' என்பதை கண்டுபிடிக்க முடியும். இது டிராபிக்குகளைக் குறைக்கவும் உதவும். 'ஸ்விட்ச் ஆஃப்' டெக்னிக் சவுதி அரேபியாவில் இருந்து கிளம்பிய கப்பல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும்போது மட்டும் ஏ.ஐ.எஸ் சிஸ்டத்தை 'ஆஃப்' செய்திருக்கிறது. இதனால், ஈரானால் இந்தக் கப்பலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெற்றிகரமாக அந்த ஜலசந்தியைக் கடந்த உடன் கப்பல் மீண்டும் ஏ.ஐ.எஸ் சிஸ்டத்தை 'ஆன்' செய்து பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்தக் கப்பலில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டினர் பயணித்திருக்கின்றனர். மொத்தம் 29 பேர். ஷென்லாங் கப்பல் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றி வந்திருக்கிறது. இந்தக் கச்சா எண்ணெயை தரையிறக்க கிட்டத்தட்ட 36 மணிநேரம் ஆகும். அதன் பின், மீண்டும் ஷென்லாங் ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு கிளம்ப உள்ளது. நீளும் போர்: கேஸ் சிலிண்டர் முதல் பெட்ரோல் வரை.! - என்ன பிரச்னை, எப்படி சமாளிக்கலாம்?

விகடன் 13 Mar 2026 3:17 pm

'வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாள்களில் சீராகும்' - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சொல்வது என்ன?

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்திருந்தது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டிருக்கிறது. சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவும் நிலையில், பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. வாகனங்களில் ஃபுல் டேங்க் நிரப்பியதோடு மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பாட்டில்களிலும், கேன்களிலும் பலர் பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் இன்று (மார்ச் 12) பேசியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இது போன்ற தருணத்தை எதிர்கொண்டதில்லை. உள்நாட்டு தேவைக்காக LPG விநியோகம் தடையின்றி தொடரும். ஹார்முஸ் நீரிணை வழியே வரும் கச்சா எண்ணெய்யை விட மாற்று வழிகளில் கூடுதல் எண்ணெய் வருகிறது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சீரான எரிப்பொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம். தடையின்றி கேஸ் கிடைக்க உறுதி செய்வோம். வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிப்பொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை. நாட்டிற்கு தேவையான அளவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

விகடன் 12 Mar 2026 7:28 pm

புதுச்சேரி: `வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு சீல்!’- மாவட்ட ஆட்சியர் அதிரடி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணியை மூடியது ஈரான். உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில் எரிவாயு தட்டுப்பாட்டை தவிர்க்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ், இயற்கை எரிவாயு விநியோக ஒழுங்குமுறை ஆணையை அமல்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.  ஆனாலும் தற்போது வரை சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் இந்த நிலையில் புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன், கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தகர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வீட்டு உபயோக சிலிண்டரை ஹோட்டல்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அப்படி பயன்படுத்துகிறதா என்பதை காவல்துறையினரும், குடிமைப் பொருள் வழங்கல் துறையினரும் இணைந்து உடனடியாக சோதனைகள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டது. மேலும் விதிமுறைகளை மீறி வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் ஹோட்டல்களை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார் ஆட்சியர் குலோத்துங்கன். ``வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் - அன்புமணி

விகடன் 12 Mar 2026 6:19 pm

'நண்பன்'ஈரானை தாக்கியும் சீனா அமைதி காப்பது ஏன்?!

ஈரான், சீனா - இரண்டும் மிக நல்ல நட்பு நாடுகள். எந்த அளவுக்கு நட்பு நாடுகள் என்றால், ஈரான் போர் தொடங்கி 13 நாள்கள் ஆகின்றன. இந்த 13 நாள்களில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் ஹார்மோஸ் ஜலசந்தியில் நிற்கின்றன. 'நிற்கின்றன' என்று சொல்வதை விட, ஈரானால் 'நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன' என்று சொல்லலாம். இதனால், பல நாடுகள் பிரச்னையில் சிக்கியுள்ளன. இதற்கு இந்தியாவே சிறந்த உதாரணம். கச்சா எண்ணெய் `என்னதிது.?' போரால் நேரடியாக பாதிக்கும் அபுதாபி, ஓமன், குவைத் நாடுகளின் சந்தை ஏற்றம் - அது எப்படி? ஆனால், போர் தொடங்கிய பின்னும்கூட, ஈரானில் இருந்து சீனாவிற்கு சரியாகக் கச்சா எண்ணெய் சென்று கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், அந்தக் கச்சா எண்ணெயின் அளவே அதிகரித்திருக்கிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன. வழக்கமாக, ஈரானில் இருந்து சீனாவிற்கு 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தினமும் செல்லும். இப்போது 2.1 மில்லியன் பேரல்கள் சென்று கொண்டிருக்கின்றனவாம். ஈரான் தன்னுடைய 80 சதவிகித கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளைச் சீனாவிற்கு தான் செய்கிறது. சீனா பயன்படுத்தும் 13 - 17 சதவிகித கச்சா எண்ணெய் ஈரானுடையது. இதுபோக, ஈரானில் சீனா எக்கச்சக்கமாக முதலீடு வேறு செய்திருக்கிறது. உலக நாடுகள் எல்லாம் ஈரான் மீது தடை விதித்த போது, சீனா தொடர்ந்து அங்கே இருந்து எண்ணெய் வாங்கி, அதன் பொருளாதாரத்திற்கு பெரும் உதவி செய்தது. அப்படி இருந்தும் ஈரான் மீதான போருக்குச் சீனா கண்டனங்களைக் கூட 'பெரியளவில்' பதிவு செய்யவில்லை. ட்ரம்ப் - ஜி ஜின்பிங் நீளும் போர்: கேஸ் சிலிண்டர் முதல் பெட்ரோல் வரை.! - என்ன பிரச்னை, எப்படி சமாளிக்கலாம்? சீனாவில் 'ஸ்ட்ரேட்டஜி' இவ்வளவு அமைதியாக சீனா ஏன் உள்ளது என்று பார்த்தால், இது ஒருவித 'ஸ்ட்ரேட்டஜி'. வளர்ச்சி... வளர்ச்சி... வளர்ச்சி - இது தான் சீனாவின் முழு மூச்சு. இந்த வளர்ச்சியில் சீனாவின் மிகப்பெரிய போட்டியாளர், 'அமெரிக்கா'. அமெரிக்கா இப்படியொரு போரில் இருக்கும் போது, அதற்கு அதனுடைய வளர்ச்சியின் மீதான கவனம் சற்றுப் பிசகும். அடுத்ததாக, தன்னுடைய போட்டியாளரை (சீனா) அதிகம் கவனிக்காது. போரினால் ராணுவ வீரர்கள் உயிரிழப்புகள் முதல் அதிகம் செலவாகும் தளவாடங்கள் வரை அனைத்துமே அமெரிக்காவிற்கு இழப்பு தான். இந்த நேரத்தில் சீனா எளிதாகத் தங்களது வளர்ச்சியில் ஃபோக்கஸ் செய்யலாம். சீனா எப்படி உதவி செய்கிறது? முக்கியமாக, சீனாவின் கொள்கைப்படி, அது எந்த நாட்டுப் பிரச்னையிலும் தலையிடாது. அடுத்ததாக, சீனா ஈரானிடம் இருந்து மட்டும் எண்ணெய் வாங்கவில்லை. அது ரஷ்யா, ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்தும் வாங்குகிறது. அதனால், ஈரானில் பிரச்னை ஏற்பட்டதும், சீனாவிற்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஆனால், சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அரசியல் ரீதியாகவும், வேறு வழிகளிலும் உதவி வருகிறது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டார். ஆனால், அது எந்த வழி என்பது அவர் விளக்கமளிக்கவில்லை. அந்த வேறு வழிகள் பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், இந்தச் சண்டையில் சீனா வெளிப்படையாகப் பங்கேற்காது. ஆக, சீனா ஈரான் போரில் இருக்கு... ஆனா இல்லை. நீளும் போர்: கேஸ் சிலிண்டர் முதல் பெட்ரோல் வரை.! - என்ன பிரச்னை, எப்படி சமாளிக்கலாம்?

விகடன் 12 Mar 2026 6:04 pm

Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!

அமெரிக்கா - ஈரான் போரால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று பல பெட்ரோல் பங்குகளில் 'ஸ்டாக் இல்லை' என்கிற பலகை தொங்கியதை பார்க்க முடிந்தது. சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கேஸ் நிலையம் ஈரான் உச்சத் தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதன் விளைவாக இந்தியாவுக்கு இறக்குமதியாக வேண்டிய எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் பேசி வருகின்றனர். அதேமாதிரி, தமிழகத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை எனவும் 21 நாடுகளுக்கு பெட்ரோல் கையிருப்பு இருப்பதாகவும் பெட்ரோல் விற்பனையாளர் சங்கத் தலைவர் கே.பி.முரளி பேட்டியளித்திருந்தார். ஆனால், இன்று சென்னை மவுண்ட் ரோட்டில் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலும் CNG கேஸூம் ஸ்டாக் இல்லை என அறிவிப்புப் பலகைகள் போடப்பட்டு பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருக்கிறது. தேனாம்பேட்டையில் ஒரு பெட்ரோல் பங்க் தேனாம்பேட்டை அருகே ஒரு பெட்ரோல் பங்கில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டும் பெட்ரோல் கிடைக்கும் என விநோதமாக ஒரு பலகை தொங்கவிடப்பட்டிருக்க, வாகன ஓட்டிகள் தங்களின் நண்பர்களுக்கு அந்த பெட்ரோல் பங்கின் லொகேஷனை பகிர்ந்து சென்ற சம்பவங்களையும் பார்க்க முடிந்தது. பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. மக்களே உஷாராக இருங்கள் என பதற்றமடையச் செய்யும் வகையில் நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் வீடியோக்களும் செய்திகளும் பரவி வந்தன. இதைத் தொடர்ந்து நேற்றிரவு முதல் மக்கள் பெட்ரோல் பங்குகளை மொய்க்கத் தொடங்கினர். தமிழகத்தின் பல ஊர்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் நிரப்பிச் சென்றதை பார்க்க முடிந்தது. இந்த 'Panic Buying' காரணமாகத்தான் பெட்ரோல் பங்குகளில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். தேனாம்பேட்டையில் ஒரு பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டிருக்கும் கேஸ் நிரப்பும் நிலையத்தில் வரிசைக்கட்டிய ஆட்டோக்கள் மூடப்பட்டிருக்கும் பெட்ரோல் பங்க் அலைமோதும் கூட்டம் மக்களின் அன்றாடத்தைப் பாதிக்கும் வகையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியிருக்கும் நிலையில், அரசுத் தரப்பில் முறையான விளக்கம் கொடுத்து பதற்றத்தைத் தணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்

விகடன் 12 Mar 2026 3:08 pm

`தாக்கக் கூடாது, எங்கள் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்'- போரை முடிக்க ஈரான் விதிக்கும் 3 நிபந்தனைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 12-வது நாளை எட்டி இருக்கிறது. தற்போது அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதல் வேகம் குறைந்து இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையில் அமெரிக்கா இருக்கிறது. ஆனால் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று கூறி வருகிறது. அதேசமயம் மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளன. இதையடுத்து ஈரானும் இறங்கி வந்திருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. இது தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மூன்று நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளமான X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஈரானின் மோதலை முடிவுக்குக் கொண்டு வர, அந்த நாட்டின் நியாயமான உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அத்துடன் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசியபோது, பிராந்திய அமைதிக்கான ஈரானின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். இஸ்ரேலும், அமெரிக்காவும் மூட்டிய இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பதும், இழப்பீடு வழங்குவதும் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை வழங்குவதுமே ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு முன்பாக அந்நாட்டு ஆயுதப்படையின் செய்தித் தொடர்பாளர் அபுல்ஃபசல் ஷெகர்ச்சி ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், வாஷிங்டன் ஈரானின் துறைமுகங்களைத் தாக்கினால், பாரசீக வளைகுடாவில் உள்ள எந்தவொரு துறைமுகமோ, பொருளாதார மையமோ அல்லது இடமோ ஈரானின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது. எங்களது துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களும் கப்பல்துறைகளும் எங்களின் நியாயமான இலக்குகளாக மாறும். ஈரானிய துறைமுகங்கள் தாக்கப்பட்டால் இதுவரை நாங்கள் செய்ததை விடவும் மிகவும் கடுமையான தாக்குதலை ஆயுதப்படைகள் நடத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு எதிரான போர் அந்நாட்டின் மதகுருமார்கள் நடத்தும் ஆட்சியை வீழ்த்தும் என்பதற்கு நிச்சயமில்லை என்றும், கடுமையான குண்டுவீச்சுக்கு மத்தியிலும் மக்கள் கிளர்ச்சிக்கான அறிகுறி இல்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் சூழலில் ஈராக் கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன. மால்டா நாட்டின் கொடியுடன் சென்ற ஒரு கப்பலும், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற ஒரு கப்பலும் தாக்கப்பட்டது. இதில் கப்பல் தீப்பற்றி எரிகிறது. இத்தாக்குதலில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார். மேலும் 38 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் அரசு ஊடகமான IRIB தெரிவித்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஈரானிய தற்கொலை படகு இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தாக்கப்பட்ட இரண்டு கப்பல்களில் ஒன்று அமெரிக்க கம்பெனிக்கும், மற்றொன்று கிரேக்க கம்பெனிக்கும் சொந்தமானது ஆகும். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈராக் தனது அனைத்து எண்ணெய் முனையங்களின் செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 

விகடன் 12 Mar 2026 2:44 pm

`என்னதிது.?'போரால் நேரடியாக பாதிக்கும் அபுதாபி, ஓமன், குவைத் நாடுகளின் சந்தை ஏற்றம் - அது எப்படி?

மேற்காசிய போர் தொடங்கியதில் இருந்து இந்தியப் பங்குச்சந்தை ஏற்றம், இறக்கம் என்று தான் இருந்து வருகிறது. ஆனால், அந்தப் போர் நடக்கும் பிராந்தியமான இஸ்ரேல், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளில் பங்குச்சந்தை எப்படி இருக்கிறது என்பதைக் கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் ஆட்டோவுக்கு பயன்படுத்தும் LPGயை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பலாமா? பிரச்னை இல்லையா? | Explains அபுதாபி, துபாய், ஓமன், குவைத் போன்ற நாடுகள் ஏதோ ஒரு வகையில் ஈரான் போரின் தாக்கத்தைச் சந்தித்து இருக்கின்றன. ஆனால், இந்த நாடுகளின் சந்தைகள் பெரியளவில் சரிவுகளைச் சந்திக்கவில்லை. நேற்றைய தின நிலவரத்தின் படி, அபுதாபி சந்தை (ADX General) வெறும் 133 புள்ளிகள் மட்டுமே இறங்கியுள்ளது. ஒரு மாதத் தரவுகளை எடுத்துப் பார்த்தாலும், 7 சதவிகிதம் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது. இஸ்ரேல் சந்தை (Tel Aviv 125 Index) நேற்று 9 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. ஓமன் (Muscat Stock Exchange (MSX)) சந்தையும் 9 புள்ளிகள் ஏற்றத்துடனேயே முடிந்திருக்கிறது. துபாய் (Dubai Financial Market (DFM)) சந்தை 140 புள்ளிகள் வீழ்ச்சியிலும், குவைத் (Boursa Kuwait) சந்தை 113 புள்ளிகள் ஏற்றத்துடனும் முடிந்திருக்கிறது. இந்தச் சந்தைகளின் முடிவு அனைத்துமே கலவையாக இருக்கின்றன... பெரியளவில் வீழ்ச்சியும் இல்லை. ஏன் அந்தச் சந்தைகள் வலுவாக உள்ளன? துபாய், அபுதாபி, குவைத் ஆகிய நாடுகளின் சந்தை, 'Shallow Market'. அதாவது இந்தச் சந்தைகளில் அவர்களுடைய சொந்த நாட்டு முதலீட்டாளர்களே குறைவாகத் தான் இருப்பார்கள். அப்போது அந்நிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கையைக் கேட்கவே வேண்டாம். ஈரான் போர் ஈரான் போருக்குப் பின், உலோகங்களில் நடக்க உள்ள மாற்றங்கள்; இப்போதே கவனிங்க முதலீட்டாளர்களே! மேலே சொன்ன நாடுகளில் உள்ள பெரிய முதலீட்டாளர்கள் கூட வெளிநாடுகளில் தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். மேலும், அங்கே அந்நிய முதலீட்டாளர்கள் குறைவு. ஆக, அங்கிருக்கும் சிறிய எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் மட்டுமே அங்கே முதலீடு செய்வதால், அந்த நாடுகளின் சந்தை பெரியளவில் வீழ்ச்சியைக் காணவில்லை. ஒருவேளை, அந்த நாடுகளில் முதலீடு செய்திருக்கும் பணத்தை வேறு எங்கு கொண்டு செல்வது என்று அந்தந்த நாட்டு முதலீட்டாளர்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். அதனால், அந்த சந்தைகள் பெரியளவில் வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருக்கலாம். என்றார். அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' - உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

விகடன் 12 Mar 2026 2:42 pm

ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! - என்ன நடந்தது!

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கி இன்று 13 நாள்கள் ஆகிவிட்டது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. பிப்ரவரி 28 முதல் ஆறு Gulf Cooperation Council (ஜிசிசி) நாடுகள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் வரலாற்றில் முதன் முறையாக முழு வளைகுடா பிராந்தியத்தையும் நேரடியாக குறிவைப்பது இதுவே முதல் முறை. இந்தியா - இஸ்ரேல் உறவு இந்த தாக்குதலின்போது விமான நிலையங்கள், அமெரிக்காவின் இராணுவ தளங்கள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், துறைமுகங்கள் என அமெரிக்காவுக்கு உதவிகள் செல்லும் அனைத்துத் வாய்ப்புகளையும் குறிவைத்தது. இந்த தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 122 பேர் காயமடைந்தனர். குவைத்தில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அலி அல் சேலம், கேம்ப் புஹ்ரிங் தளங்கள், குவைத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியவை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். மூன்று F-15 போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில், வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அந்த தீர்மானத்தில், ``ஈரானின் அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி அச்சுறுத்தல்களைக் கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்கா - சீனா தற்போது அமெரிக்காவின் தலைமையில் உள்ள 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பங்களாதேஷ், பூட்டான், கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், குவைத், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், நியூசிலாந்து, நோர்வே, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்பெயின், உக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஏமன், சாம்பியா இந்தியா உள்ளிட்ட 130 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. அதே நேரத்தில் ஐ.நா-வின் நிரந்தர உறுப்பினர்களான சீனாவும் ரஷ்யாவும் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தன. `கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' - ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

விகடன் 12 Mar 2026 12:11 pm

`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' - ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. ஈரானும் இருபெரும் வல்லரசு நாடுகளை எதிர்த்து நிற்கிறது. இந்த நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பை அமெரிக்கப் படைகள் முற்றிலுமாகச் சிதைத்துவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். திங்களன்று புளோரிடாவில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் பேசிய அவர், ``கடந்த ஒரு மாதத்தில் ஈரானில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்கா தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களால் அந்நாட்டின் ஏவுகணைத் திறன் 10 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ராணுவக் கட்டமைப்பு இடிக்கப்பட்டது. கடந்த மூன்றரை நாட்களில் மட்டும் ஈரானின் 46 அதிநவீனக் கடற்படைக் கப்பல்களை அமெரிக்க ராணுவம் கடலில் மூழ்கடித்திருக்கிறது. ட்ரம்ப் இது தொடர்பாக ராணுவ அதிகாரிகளிடம் பேசியபோது, 'ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் திறன் முற்றிலுமாக இடிக்கப்படுகிறது. கடற்படை போய்விட்டது. அவை அனைத்தும் கடலின் அடிப்பகுதியில் கிடக்கின்றன. 46 கப்பல்கள்... உயர் தரமான கப்பல்கள் அவை' என்றார். நான், `உயர்மட்ட கப்பல் என்றால் அவற்றைக் கைப்பற்றியிருக்கலாமே... ஏன் கைப்பற்றவில்லை' என்று கேட்டேன். அவர், 'அவற்றை மூழ்கடிப்பது மிகவும் வேடிக்கையாக சுவாரஸ்யமாக இருந்தது' என்றார். அமெரிக்க இராணுவம் எதிரி முழுமையாகவும், தீர்க்கமாகவும் தோற்கடிக்கப்படும் வரை பின்வாங்காது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்திற்கு ஈரான் முட்டுக்கட்டை போட்டால், இதுவரை நடத்தியதை விட 20 மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும். ஈரான் ஒரு தேசமாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு அதன் இலக்குகள் அழிக்கப்படும். இது நடக்கக்கூடாது என விரும்புகிறேன். ஈரான் போர்க்கப்பல் இது சீனாவிற்கும், ஹார்முஸ் ஜலசந்தியை அதிகமாகப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவின் பரிசு. எனது இந்த முடிவு பெரிதும் பாராட்டப்படும் எனவும் நம்புகிறேன். என்றார் ட்ரம்பின் இந்த உரைக்கு பதிலளித்த ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) செய்தித் தொடர்பாளர்,``அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் ஒரு லிட்டர் எண்ணெய் கூட இப்பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டோம். போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம் எனத் தெரிவித்திருக்கிறது. அம்மா, நான் திரும்பி வருவேனானு தெரியாது! - போர் பதற்றத்திற்கு இடையே 169 இந்தியர்களை மீட்ட விமானி!

விகடன் 12 Mar 2026 11:06 am

இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. 10 நாள்களைக் கடந்து போர் தொடர்ந்துவரும் நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியே சரக்கு கப்பல்கள் பயணிக்க வேண்டிய சூழலில், ஈரான் ஹார்முஸ் பகுதியை மூடுவதாக அறித்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் எரிவாயு உள்ளிட்ட எண்ணெய் பொருள்களின் தட்டுப்பாடுக்கு இதுவும் ஒரு காரணம். தாக்கப்பட்ட கப்பல் இதற்கிடையில், ஹார்மூஸ் பகுதியை மூடுவதாகவும், அந்தப் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து தாய்லாந்து கொடியுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தாக்கப்பட்டதாக ராயல் தாய் கடற்படை தெரிவித்துள்ளது. தாய்லாந்து நிறுவனமான பிரீசியஸ் ஷிப்பிங் பிஎல்சிக்குச் சொந்தமான மயூரி நரீ என்ற சரக்கு கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கலீஃபா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, இந்தியாவில் உள்ள கண்ட்லா துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்தது. அப்போது ​​ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும்போது அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலில் பயணித்த 20 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று பேரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. தாக்கப்பட்ட கப்பல் ராயல் தாய் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ``தாக்குதலுக்கான கப்பல் குறித்த குறிப்பிட்ட விவரங்கள் மற்றும் காரணம் தற்போது விசாரணையில் உள்ளது. ஓமானி கடற்படை 20 மாலுமிகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று பணியாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது. நேற்று வளைகுடாவில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது எனக் குறிப்பிட்டிருக்கிறது. `ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

விகடன் 11 Mar 2026 5:52 pm

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' - உக்ரைனுக்கு 'நோ'சொன்ன விளைவு இது!

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய நாடுகள். இந்த விஷயங்களில் ஈரானை ஒப்பிட்டால், அதற்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். ஆனாலும், 12 நாள்களாகப் போர் தொடர்ந்தும், ஈரானை இன்னமும் வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை. இந்தப் போரில் 'டிரோன்கள்' ஈரானுக்கு மிகப்பெரிய பக்க பலமாக இருந்து வருகிறது. போரின் தொடக்கத்தில் டிரோன்களை அமெரிக்கா பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது அது தான் அமெரிக்காவின் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ஈரானிய ஷாகேத் டிரோன் '300 பில்லியன் டாலர்கள்' அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது' ட்ரம்ப் ஹேப்பி விலை... இப்படி அமெரிக்காவிற்குத் தலைவலியாக ஈரான் பயன்படுத்தும் டிரோன் வகையின் பெயர், 'ஈரானிய ஷாகேத் டிரோன்'. ஒவ்வொரு ஷாகேத் டிரோனின் விலையும் 20,000 - 50,000 டாலர்கள். ஆனால், அதை தகர்க்கும் அமெரிக்காவின் இடைமறிப்பான்கள் (Interceptors) விலையோ மில்லியன் கணக்கில். மேலும், டிரோன்களை எளிதாகக் குறுகிய காலத்தில் ஈரான் தயாரித்துவிடலாம். ஆனால், இடைமறிப்பான்களைத் தயாரிக்க பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகும். இதனால், ஷாகேத் டிரோன்களைத் தடுக்க ஒரு சிஸ்டத்தை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கண்டே பிடிக்க முடியவில்லை டிரோன் விஷயத்தில் பணம் ஒரு பிரச்னை என்றால், அதை அமெரிக்கா இடைமறிப்பான்கள் கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது. ஆம்... அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பினால் அனைத்து ஷாகேத் டிரோன்களையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்த டிரோன்கள் மெதுவாகவும், குறைந்த உயரத்திலும் பறக்கக்கூடியது. இதனால், அமெரிக்க ரேடார்களால் இந்த டிரோன்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால், இவை பிற நாடுகளுக்குள் புகுந்து எளிதாகத் தாக்குதல் நடத்துகின்றன. இது குறித்து அந்த நாடுகள் அமெரிக்காவிடம் புகாரளிப்பது அதற்குப் பெரும் பிரச்னையாக இருக்கிறது. ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி 'ஈரான் ஏதாவது செய்தால்.! இது சீனாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் 'கிஃப்ட்'' - மிரட்டும் ட்ரம்ப் அமெரிக்கா செய்த 'தவறு' இந்த டிரோன் பிரச்னைகளை அமெரிக்கா எளிதாக தவிர்த்திருந்திருக்கலாம். ஆனால், அமெரிக்கா செய்த ஒரு 'தவறு' இப்போது பெரும் பிரச்னையாக இருக்கிறது. 2022-ம் ஆண்டில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா பொழிந்து வருவது இந்த வகையான டிரோன் தான். அதனால், அதை தடுக்கத் தேவையான அமைப்பை வைத்திருக்கிறது உக்ரைன். இதை இன்னமும் வலுப்படுத்த அமெரிக்காவிடம் நிதியுதவி கேட்டது உக்ரைன். பதிலுக்கு உக்ரைன் அமெரிக்காவிற்கு அந்த அமைப்பைத் தருவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், அதை அமெரிக்கா மறுத்துவிட்டது. அது தான் இப்போது அமெரிக்காவின் பூதாகரச் சிக்கலாக மாறி நிற்கிறது. ட்ரம்ப்-க்கு பயப்படும் 'அந்த' காரணம்; தெரிந்தால் மோடி ராஜினாமா? - சுப்ரமணியன் சுவாமி

விகடன் 11 Mar 2026 1:56 pm

ஈரான் போருக்குப் பின், உலோகங்களில் நடக்க உள்ள மாற்றங்கள்; இப்போதே கவனிங்க முதலீட்டாளர்களே!

ஈரான் போர் தொடங்கியதும், 'போச்சு போ... தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் தாறுமாறாக எகிறப்போகுது' என்று அனைவரும் நினைத்தோம். ஆனால், அந்த நினைப்பிற்கு மாறாக தங்கம், வெள்ளி விலையில் பெரிய ஏற்றம் நடக்கவில்லை. மாறாக, கச்சா எண்ணெய் தான் தாறுமாறாக எகிறியது. ஆனால், அதுவும் இப்போது கட்டுக்குள் வந்துவிட்டது. தங்கம், வெள்ளி விலை தற்போது நிலையாக இருப்பதற்குக் காரணம், 'அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாவது' ஆகும். ஆனால், ஈரான் போர் முடிந்ததும் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கும். அதனால், அதன் விலை நல்ல உயர்வைக் காணும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் '300 பில்லியன் டாலர்கள்' அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது' ட்ரம்ப் ஹேப்பி Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கூறியதாவது... போர் முடிந்ததுமே உலோகங்களின் விலையில் 'பவுன்ஸ்பேக்' நடக்கலாம். ஏனெனில், போருக்குப் பின், புனரமைப்பு, மறுகட்டமைப்பு போன்றவை நடக்கும். வியட்நாம் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை அனைத்துப் போரிலுமே உள்கட்டமைப்பை புனரமைப்பது செய்வதை பார்த்திருக்கிறோம். இந்தப் போருக்குப் பின்னும் பார்ப்போம். இந்தப் போரில் மேற்கு ஆசிய நாடுகளுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், அங்கேயும் மறுகட்டமைப்புகள் செய்யப்படும். இது நடக்கும் போது, தொழிற்சாலைகளில் வெள்ளி, காப்பர், அலுமினியம் போன்ற உலோகங்கள் தேவைப்படும். அதனால், இவைகளுக்கு அப்போது நிச்சயம் மவுசு கூடும். தங்கம் விலை போருக்குப் பின் நிலையாக இருக்கும். தங்கத்தை விற்க திண்டாடும் 'துபாய்': தள்ளுபடியில் விற்கிறோம் 'வாங்க' என்று அழைக்கும் வணிகர்கள்! Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 11 Mar 2026 12:48 pm

'300 பில்லியன் டாலர்கள்'அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது'ட்ரம்ப் ஹேப்பி

அமெரிக்கா டெக்சாஸில் வர உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக தனது இந்திய கூட்டாளிகளுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 'நன்றி' தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தத் திட்டம் குறித்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு குறித்தும் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... அமெரிக்கா உண்மையான ஆற்றல் ஆதிக்கத்திற்குத் திரும்புகிறது! கடந்த 50 ஆண்டுகளில், டெக்சாஸ் பிரவுன்ஸ்வில்லேயில் முதல்முறையாக முதல் அமெரிக்கா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட உள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க 300 பில்லியன் டாலர் ஒப்பந்தம் - அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம். இது அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும், ஆற்றலுக்கும், தெற்கு டெக்சாஸ் மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தங்கத்தை விற்க திண்டாடும் 'துபாய்': தள்ளுபடியில் விற்கிறோம் 'வாங்க' என்று அழைக்கும் வணிகர்கள்! ரிலையன்ஸிற்கு நன்றி இப்படியான மிகப்பெரிய முதலீட்டிற்கு இந்தியாவில் உள்ள கூட்டாளிகளுக்கும், இந்தியாவின் தனியார் ஆற்றல் நிறுவனமான ரிலையன்ஸிற்கும் நன்றி. 'அமெரிக்கா ஃப்ரஸ்ட்' என்கிற நம்முடைய கொள்கைகளாலும், அனுமதிகளை ஒழுங்குபடுத்துதல், வரிகளைக் குறைத்தல் போன்ற காரணங்களால், பில்லியன் கணக்கான டாலர்கள் ஒப்பந்தம் நமது நாட்டிற்கு மீண்டும் திரும்புகின்றன. இது தான் அமெரிக்காவின் ஆற்றல் ஆதிக்கம் இந்த நிலையம் அமெரிக்காவின் சந்தையை ஊக்குவிக்கும்... நமது தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தும், அமெரிக்காவின் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் நமது பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர்கள் வந்து சேரும். இது உலகிலேயே சுத்தமான சுத்திகரிப்பு நிலையமாக இருக்கும். மேலும், இது ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அந்தப் பகுதியில் வளர்ச்சி உண்டாகும். இப்படித் தான் அமெரிக்காவின் ஆற்றல் ஆதிக்கம் இருக்கும். எனக் குறிப்பிட்டுள்ளார். '25 நாள்கள் முன்பு சிலிண்டர் புக் செய்தவர்களுக்கே முன்னுரிமை!' நெருக்குகிறதா தட்டுப்பாடு?

விகடன் 11 Mar 2026 11:27 am

மதுரையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: 3 நாள்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம்! | கள நிலவரம் என்ன?

தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மதுரையில் உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் கூறியதாவது, “வணிக பயன்பாட்டிற்கான கமர்சியல் சிலிண்டர்கள் போதிய அளவில் விநியோகிக்கப்படாததால் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் டீலர்களுக்கு கமர்சியல் சிலிண்டர் வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், உணவகங்களுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 2,000க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர்கள் தற்போது கள்ளச் சந்தையில் 3,000 வரை விற்கப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தோசை, இட்லி போன்ற அத்தியாவசிய உணவுகளின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகும். இது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும். டெம்பிள் சிட்டி குமார் மதுரையில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல், மதுரையின் அடையாளமாக விளங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்காக மதுரையில் தங்கி இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கும் உணவு, காபி, டீ போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத அவல நிலை உருவாகும். உணவு கடைகள் பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே சில உணவகங்கள் மூடப்படத் தொடங்கியுள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு வணிக சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அதே போல டீ, காபி விலைகளும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இது குறித்து மதுரை காபி, டீ வர்த்த சங்கத்தினர் கூறுகையில், உணவுப் பொருட்களில் அடிப்படையானது டீ காபி தான். ஏனெனில் பொதுமக்கள் காலை எழுந்தவுடன் டீ காபி கடைகள் எல்லாம் தேடுவார்கள். குறிப்பாக மதுரையில் எல்லா தெருக்களிலும் டீ காபி கடைகள் தான் அதிகமாக இருக்கும். அவர்களின் வேலையே டீ காபி கடைகளில் இருந்து தான் துவங்கும். இந்த சூழ்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு டீக்கடை உரிமையாளர்களான எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கோப்பு படம் நேற்று வணிக சிலிண்டர் 1980 ரூபாய்க்கு தருவோம் என இருந்த நிலையில், இன்று சிலிண்டர் 2200 க்கு தான் தருவோம் என தெரிவித்ததாக சொல்கிறார்கள் சிலர். சரி கொடுங்கள் என கேட்டபோதும் கூட சிலிண்டர் கிடைக்கவில்லை. கூடுதல் விலைக்கு கூட சிலிண்டர் கிடைக்காததால் மிகவும் சிரமாக உள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் உடனடியாக சரி செய்து வணிகர்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் இதையினை சரி செய்யவில்லை என்றால் மிகப்பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும். நேரடியாக மறைமுகமாக பலரும் இதனால் பாதிப்படைவார்கள் எனவும் தெரிவித்தனர்.  வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தேனி மாவட்டத்தில் உள்ள டீ கடைகள், ஓட்டல்கள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளன குறிப்பிடதக்கது.!

விகடன் 11 Mar 2026 11:23 am

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? கவலை வேண்டாம்; சிலிண்டர் இல்லாமலும் சமைக்க சில ஐடியாக்கள்!

போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் எரிவாயு (LPG) விநியோகத்தில் சிக்கல்கள் வரலாம் என்ற செய்திகள் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இண்டக்‌ஷன் ஸ்டவ் ஒரு சிறந்த மாற்று என்றாலும், நடைமுறைக்கு ஒத்துவரும் வேறு சில மாற்று வழிகளையும் திட்டமிட்டு வைத்துக்கொள்ளலாம். electric appliances எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில், சாதம் மட்டுமன்றி, பருப்பு வேகவைக்க, குழம்பு வகைகளையும் தயாரிக்கலாம். சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்த மைக்ரோவேவ் ஓவனைப் பயன்படுத்தலாம். சுடுதண்ணீர் வைக்க, காபி/டீ போட எலக்ட்ரிக் கெட்டில் மிக வேகமாக இருக்கும். அடுக்குமாடி குடியிருப்புகளில் விறகு அடுப்பு சாத்தியமில்லை. ஆனால், பால்கனி அல்லது திறந்தவெளி இருந்தால், அவசரத் தேவைக்குச் சிறிய குமுட்டி அடுப்பு மற்றும் கரியை வாங்கி வைத்துக்கொள்ளலாம். ரேஷனில் மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என்றால் வெளியே கடைகளில் வாங்கி அவசர தேவைக்கு ஒரு சிறிய பம்ப் அடுப்பை (Pump Stove) வைத்திருக்கலாம். தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் கையிருப்பு நிலவரம்! எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன? இருக்கும் கேஸைச் சிக்கனமாக எப்படிப் பயன்படுத்தலாம்? சமைப்பதற்குத் தேவையான பருப்புகளை அரை மணி நேரம் முன்பு சுடுநீரில் ஊறவைத்தால், பாதி நேரத்திலேயே சீக்கிரமாக வெந்துவிடும். பாத்திரங்களில் திறந்தபடி சமைப்பதைத் தவிர்த்து, எல்லாவற்றிற்கும் பிரஷர் குக்கரைப் பயன்படுத்தலாம். ஒரே குக்கரில் சாதம், பருப்பு, காய்கறிகளைத் தனித்தனி பாத்திரங்களில் வைத்து ஒரே நேரத்தில் சமைக்கும் (Separators) முறையைப் பழகலாம். எந்த உணவாக இருந்தாலும் தட்டு போட்டு மூடிச் சமைத்தால், ஆவி வெளியேறாமல் உணவு சீக்கிரம் வேகும். கிச்சடி, தக்காளி சாதம், பொங்கல் எனக் காய்கறிகள் மற்றும் அரிசியை குக்கரில் ஒன்றாகச் சேர்த்து (One-Pot Meals) சமைக்கலாம். சமைத்த உணவை உடனே ஹாட்பாக்ஸில் மாற்றிவிடலாம். இதனால் மீண்டும் மீண்டும் சூடுபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதுபோலவே பிளாஸ்க்கில் சுடுநீர் வைத்துக்கொள்ளலாம். cooking gas எரிவாயு தட்டுப்பாடு என்பது தற்காலிகமான நெருக்கடிதான். ஆனால், எத்தகைய சூழலாக இருந்தாலும் சிக்கனமான, ஸ்மார்ட்டான சமையல் பழக்க வழக்கங்களை நம் கையில் எடுத்தால், எந்தவிதமான தட்டுப்பாட்டையும் பதற்றமின்றி கடந்து செல்லலாம். சிலிண்டர் தட்டுப்பாடு: உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமா? நான் தருகிறேன் - நயினார் நாகேந்திரன்

விகடன் 11 Mar 2026 10:45 am