`அமெரிக்காவின் ஒரு மெயில்'அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு! ரூ.1 லட்சம் கோடி இழப்பு?
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அதானி நிறுவனம் விளங்குகிறது. மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு பதவிக்கு வந்த பிறகு அதானி நிறுவனத்தின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருக்கிறது. இந்த நிலையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் அதிகாரிகள் மின்கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ள இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இது குறித்து அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தவறான தகவல் கொடுத்ததாகவும் அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் எழுப்பப்பட்ட இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே பலமுறை அதானி நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்து மீண்டு வந்தது. இவ்விவகாரத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானிக்கு சம்மன் அனுப்பியது. அந்த சம்மன் அவர்களை சென்றடையவில்லை. இந்த சம்மனை அனுப்ப பல வழிகளில் முயற்சி மேற்கொண்டும் பலனலிக்கவில்லை. இதற்காக மத்திய அரசின் உதவியையும் அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் நாடியது. ஆனால் மத்திய அரசும் இதற்கு உதவி செய்யவில்லை. இதையடுத்து இவ்விவகாரத்தில் சம்மனை இமெயில் மூலம் அனுப்ப முடிவு செய்து இருக்கிறது. இதற்கு அனுமதி வாங்க நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் மனுத்தாக்கல் செய்து இருக்கிறது. அதானி நிறுவன பங்குகள் சரிவு அமெரிக்க பங்குச்சந்தை கமிஷனின் இம்முடிவால் இந்திய பங்குச்ச ந்தையில் அதானி நிறுவனத்தில் பங்குகள் வெகுவாக சரிந்தது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு 11 சதவீதம் சரிந்தது. இதே போன்று அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் அதானி நிறுவனத்தின் பங்குகள் ரூ.1.1 லட்சம் கோடி அளவுக்கு சரிந்துள்ளது. இதன் மூலம் அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்து இருக்கிறது. அதானி அமெரிக்க பங்குச்சந்தை கமிஷனின் குற்றச்சாட்டுக்களை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. குற்றச்சாட்டில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் புதிதாக சம்மனை அனுப்ப அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அதானி நிறுவனமோ அல்லது மத்திய சட்ட அமைச்சகமோ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதற்கு முன்பு சட்ட அமைச்சகம் இப்பிரச்னை குறித்து வெளியிட்டு இருந்த செய்தியில், இது அதானி நிறுவனத்திற்கும், அமெரிக்காவுக்குமானது என்று சொல்லி நழுவிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஈரானை நோக்கி கப்பற்படையை அனுப்பியுள்ளேன் - 'மீண்டும்'ஈரான் குறித்து ட்ரம்ப்
பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஈரானில் உள்நாட்டுப் போராட்டம் பெரிதாக வெடித்துள்ளது. இது தொடங்கியதில் இருந்தே போராட்டக்காரர்களுக்கு தன்னுடைய முழு ஆதரவு இருப்பதாக தொடர்ந்து பதிவு செய்து வந்தார் ட்ரம்ப். ஈரான் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு அந்த நாட்டு ஏதாவது செய்தால், ‘இதுவரை இல்லாத தாக்குதல் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார். கடந்த வாரம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது ஈரான் அரசு. இதனால், அந்த ராணுவ மிரட்டலை கைவிட்டார் ட்ரம்ப். இப்போது மீண்டும் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறித்து பேசத் தொடங்கியுள்ளார். ஈரான் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained இது குறித்து அவர் கூறியுள்ளதாவது… “ஈரானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஈரானை நோக்கி அமெரிக்காவின் பெரும் கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக அதை பயன்படுத்துவது போல இருக்காது. ஆனால், தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன” என்று பேசியுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம், ஈரான் – இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருந்த போது, ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தது அமெரிக்கா. இப்போது என்ன நடக்க உள்ளதோ? Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?
Greenland அரசியல்: Trump போடும் Business கணக்கு; 3rd World war உருவாகுமா? | Bernard D' Sami
Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?
முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... ட்ரம்ப் 'அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்' என கடுமையாக அடம்பிடிக்கிறார். அமெரிக்காவின் 'பாதுகாப்பு' மட்டும் ட்ரம்பின் இந்த அடத்திற்கு காரணம் அல்ல. ட்ரம்பிற்கு ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்? கிரீன்லேண்டின் இருப்பிடமும்... கிரீன்லேண்டில் இருக்கும் இருப்பும் இதற்கு முக்கிய காரணம். புரியவில்லையா...? அதாவது கிரீன்லேண்ட் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு நடுவில் உள்ளது. கிரீன்லேண்ட் ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! அதனால், கிரீன்லேண்டைப் பிடித்தால், அமெரிக்காவில் இருந்து வெளியே செல்லும் வர்த்தக பொருள்கள், அமெரிக்காவிற்குள் வரும் வர்த்தக பொருள்கள் என அனைத்திற்கும் அந்த நாடு ஈசியான பாதையாக இருக்கும். இதன் மூலம் கால நேரத்தையும், செலவுகளையும் அதிகம் குறைக்கலாம். இன்னொன்று, அங்கு லித்தியம், நியோடைமியம் போன்ற கனிம பொருள்கள் கொட்டி கிடக்கின்றன. இவை ஸ்மார்ட் போன், எலெக்ட்ரிக் வாகனங்கள்... போன்ற இன்றைய அப்-டு-டேட் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்கா கைப்பற்றுவதால் உற்பத்தி மற்றும் வணிகத்தில் லாபம் பெறலாம். அடுத்தது, கிரீன்லேண்டில் எண்ணெய் வளம் உள்ளது. ஏற்கெனவே, வெனிசுலாவை ட்ரம்ப் எண்ணெய் வளத்திற்காக தான் பிடித்துள்ளார் என்பது உலகம் அறிந்த ரகசியம். அப்போது, அவர் கிரீன்லேண்டை விட்டு வைக்க வாய்ப்பே இல்லை. கடைசியாக... ஆனால், முக்கியமாக... ட்ரம்ப் அரசியல்வாதி என்பதை தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு பிசினஸ்மேன். கிரீன்லேண்டை அவர் ஒரு 'பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக' பார்க்கிறார். கிரீன்லேண்டை அடைவது மூலம் அமெரிக்காவை இன்னும் பெரிதாக்கலாம். அங்கேயும் முதலீடுகளைக் குவிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். இத்தனை ப்ளஸ்கள் கொட்டி உள்ள கிரீன்லேண்டை ட்ரம்ப் 'மிஸ்' செய்வாரா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. NATO ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth கிரீன்லேண்டை விட்டுத்தராத நாடுகள்..! தற்போது டென்மார்க்கிற்கு கீழ் உள்ளது கிரீன்லேண்ட். டென்மார்க் கிரீன்லேண்டை விட்டுத் தருவதாக இல்லை. கிரீன்லேண்ட் தாங்கள் தனி நாடாக இயங்கவே விரும்புகிறது. அதனால், நேட்டோ நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ட்ரம்பின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றனர். இவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் 1-ம் தேதியில் இருந்து, நேட்டோ நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளின் மீது 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார். வரும் ஜூனுக்கு பின்னும், இவர்கள் இழுத்தடித்து கொண்டிருந்தால், இந்த வரி 25 சதவிகிதமாக உயரும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால், இந்த நாடுகளும் விட்டுத் தருவதாக இல்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று, இந்த விஷயத்தைக் கையாள்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், நேட்டோ மற்றும் ஐரோப்ப நாடுகள் இணைந்து அமெரிக்காவின் மீது வரி விதிக்கவும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ட்ரம்ப் கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன? ட்ரம்ப் பகிர்ந்த புகைப்படம் இந்த நிலையில் தான், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், கிரீன்லேண்டில் ட்ரம்ப் அமெரிக்க கொடியை நடுவது போலவும். கிரீன்லேண்ட் - அமெரிக்காவின் பிராந்தியம், 2026 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில், ட்ரம்புடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க் ரூபியோவும் இருக்கிறார்கள். Davos அஜென்டா தற்போது டாவோஸில் உலக பொருளாதார மன்றம் நடைபெற்று வருகிறது. இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ட்ரம்பும் கலந்துகொள்ள இன்று சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை தாண்டி, அங்கு வந்துள்ள உலகத் தலைவர்களிடம் கிரீன்லேண்ட் குறித்து பேச வேண்டும் என்பது ட்ரம்பின் முக்கிய அஜென்டா என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். 'இது எதுவரை போகும்?' என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.! வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

24 C