SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம். அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை 'ஜீவன் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். View this post on Instagram A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy) எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 2 Dec 2025 1:59 pm

Elon Musk:``என் மகன்களில் ஒருவரின் பெயரில் 'சேகர்'எனச் சேர்த்திருக்கிறேன் - எலான் மஸ்க்

WTF is பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன் உரையாற்றினார். அதில் எலான் மஸ்க் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடலில், எலான் மஸ்க்,`` உங்களுக்குத் தெரியுமா என் மனைவி ஷிவோன் ஜிலிஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். அவளுக்கும் எனக்கும் பிறந்த என் மகன்களில் ஒருவருக்கு, இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமண்யன் சந்திரசேகரின் பெயரில் வரும் சேகர் என்பதை இணைத்திருப்போம். Shivon Zilis என் மனைவி கனடாவில் வளர்ந்தாள். அவள் குழந்தையாக இருந்தபோது தத்துகொடுக்கப்பட்டாள். அவளுடைய இந்திய தந்தை கனடாவின் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக இருக்கலாம் எனக் கருதுகிறேன். சரியான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது. ஆனால் அது இப்போது மாறி வருவதாகத் தெரிகிறது என்றார். ஷிவோன் ஜிலிஸ் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷிவோன் ஜிலிஸ், 2017-ல் எலான் மஸ்க்கின் AI நிறுவனமான நியூராலிங்கில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சிறப்பு திட்டங்களின் இயக்குநராக உள்ளார். ஜிலிஸ் - எலான் மஸ்க் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். Elon Musk: விநாயகர் சிலை குறித்து AI-ல் தேடிய எலான் - பதிலால் வியந்த நெட்டிசன்கள்!

விகடன் 1 Dec 2025 12:49 pm

H-1B Visa திட்டத்தை நிறுத்த வேண்டுமா? இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யும் எலான் மஸ்க்

ஜெரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத்தின் 'பீப்பிள் பை WTF' என்கிற பாட்காஸ்டில் கலந்துகொண்டிருக்கிறார் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அந்தப் பாட்காஸ்ட்டில் எலான் மஸ்க் இந்தியர்கள் குறித்தும், ஹெச்-1பி விசா குறித்தும் பேசியுள்ளார். திறமையான இந்தியர்களால் அமெரிக்கா நிறைய பலனடைந்திருக்கிறது. தற்போதைய ஹெச்-1பி விசா கெடுபிடி நடைமுறைக்கு, அதில் செய்யப்பட்ட மோசடிகளே காரணம். முந்தைய அரசாங்கம் எந்தவொரு கெடுபிடியும் இல்லாமல், ஹெச்-1பி விசாவை மிகவும் எளிதாகக் கொடுத்தது. அதுவும் ஒரு காரணம். People by WTF - பாட்காஸ்ட் 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க! திறமையான மக்கள் பற்றாக்குறை... அமெரிக்காவிற்கு வரும் பிற நாட்டினரால், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது என்று கூறுவது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. நான் நேரடியாகப் பார்த்தவரையில் இங்கே எப்போதும் திறனுள்ள மக்கள் பற்றாக்குறை இருக்கிறது. கடினமான பணிகளைச் செய்துமுடிக்கும் திறமையான ஆட்களை இங்கே கண்டுபிடிப்பது மிகவும் சிரமமானது. அதனால், இன்னும் நிறைய திறமையான மக்கள் இங்கே இருந்தால் நல்லது. ஹெச்-1பி விசா திட்டத்தை நிறுத்த வேண்டுமா? என்னுடைய நிறுவனம் எப்போதும் திறமையான மக்களை பணியமர்த்துவதில் தான் கவனமாக இருக்கும். ஆனால், சில நிறுவனங்கள் ஹெச்-1பி விசாவில் மோசடி செய்கின்றனர். ஆனால், அதற்காக ஹெச்-1பி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அந்த மோசடியை தான் சரிசெய்ய வேண்டும் என்றார். `மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம்' - வழக்கில் மன்னிப்பு கோரும் நெதன்யாகு; இஸ்ரேல் அதிபர் பதில் என்ன?

விகடன் 1 Dec 2025 11:47 am

``உலகப் பொருளாதாரத்தை அரசியல் வென்றது- அமைச்சர் ஜெய்சங்கரின் 'அபாய குறியீடு'உரை

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் உலகளாவிய அபாயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். கொல்கத்தா ஐஐஎம் வெளிவுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், ``நாம் வாழும் இந்தக் காலம் பொருளாதாரத்தை மிஞ்சும் அரசியல் நிகழக்கூடிய காலம். இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல... அமைச்சர் ஜெய்சங்கர் சமகால வர்த்தக அமைப்பின் நீண்டகால உத்தரவாத நாடான அமெரிக்கா, தீவிரமாகப் புதிய ஈடுபாட்டு விதிமுறைகளை அமைத்து வருகிறது. ஒவ்வொரு நாட்டையும் பொதுவான விதிகளின் கீழ் கையாளாமல், தனித்தனியாகக் கையாள்வதன் மூலம் இதை நிறைவேற்றி வருகிறது. உதாரணமாக, சீனா நீண்ட காலமாக அதன் சொந்த விதிகளின்படி அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. இப்போதும் அதைத் தொடர்ந்து செய்கிறது. ஆனால், இரு நாடுகளின் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த வர்த்தகத்தில் பல சிக்கல்கள் திட்டமிட்டு (வரிகளின் மூலம்) எழுப்பப்படுகின்றன. உலகமயமாக்கல் மற்றும் விநியோகப் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் பிற நாடுகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்காக, எதிர்பாராத அனைத்து சிக்கல்களுக்கும் எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் பதிலளிக்கின்றன. உலகளாவிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவில் நடைபெறுகிறது. இது, விநியோகச் சங்கிலிகளின் 'மீள்தன்மை (Resilience)' மற்றும் 'நம்பகத்தன்மை' ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. உலகளவில் நடந்துவரும் மோதல்கள் மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகள் போன்றவை விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்படும் சாத்தியத்தை அதிகரித்திருக்கின்றன. அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா தற்போது நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், எரிசக்தி மற்றும் மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புகளின் அடிப்படையில் சில வெற்றிகரமான ஆசிய பொருளாதாரங்களுடனான இடைவெளியை வேகமாகக் குறைத்துவருகிறது. எந்தத் தரநிலைகளின்படி பார்த்தாலும் நாம் இப்போது முன்னேறி வருகிறோம். இந்தியாவால் ஏற்படும் முன்னேற்றங்களை உலகம் கவனித்து வருகிறது. எனவே, இதைக் கருத்தில்கொண்டு, இன்று நாம் புதிய வர்த்தக ஏற்பாடுகளை உருவாக்கவும் மற்றும் புதிய இணைப்பு முயற்சிகளை ஊக்குவிக்கவும் ஆலோசித்து வருகிறோம். எனத் தனது உரையை நிறைவு செய்தார். மலேசியாவில் மார்கோ ரூபியோவை சந்தித்த ஜெய்சங்கர்; வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பாசிட்டிவ் சிக்னல்?

விகடன் 30 Nov 2025 10:17 pm

வெனிசுலா VS ட்ரம்ப்: போதைப்பொருட்களுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்கள் மீதானா பசியா?

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வான்வெளிகள் மூடப்பட்டதாகக் கருத வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பதை, காலனித்துவ அச்சுறுத்தல் எனக் கடுமையாக எதிர்த்துள்ளது வெனிசுலா அரசு. சட்டப்படி, ஒரு நாட்டின் வான்வெளியை மூடுவதற்கு அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், டிரம்ப்பின் சமூக வலைதளப் பதிவு, அந்தப் பகுதிக்கு விமானப் பயணம் மேற்கொள்வோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, விமான நிறுவனங்கள் அங்கு சேவை செய்வதைத் தவிர்க்க வழிவகுக்கிறது. அமெரிக்காவின் ராணுவ அணிவகுப்பு கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, கரீபியன் பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு (USS Gerald Ford) மற்றும் சுமார் 15,000 துருப்புக்களை வெனிசுலாவைத் தாக்கும் தொலைவில் நிலைநிறுத்தியுள்ளது. USS Gerald R. Ford (CVN 78) 1989-ல் பனாமாவை ஆக்கிரமித்ததிலிருந்து அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் மேற்கொண்டதிலேயே இதுதான் மிகப்பெரிய படை அணிவகுப்பாகும். இது போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காகத்தான் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ, போதைப்பொருள் கடத்தலை காரணமாகக் காட்டி, தன்னை வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி வருகிறார். விமான சேவைகளுக்கு மிரட்டல்? ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில், அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மனிதர்களைக் கடத்துபவர்களும், 'வெனிசுலாவுக்கு மேலேயும் அதைச் சுற்றியுள்ள முழு வான்வெளியும் மூடப்பட்டதாகக் கருதவும்'. என்று எழுதியிருந்தார். அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சில நாட்களுக்கு முன்னரே, வெனிசுலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்து விமான நிறுவனங்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. Venezuela in Map கடந்த திங்கள் அன்று, சர்வதேச விமான சேவைகள் வெனிசுலாவில் சேவையைத் தொடரவேண்டும் என அந்த நாட்டு அரசு 48 மணி நேரம் காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் ஸ்பெயினின் இபேரியா (Iberia), டாபி போர்ச்சுகல் (TAP Portugal), கோல் (Gol), லேடம் (Latam), ஏவியன்கா (Avianca) மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines) ஆகிய ஆறு பெரிய சர்வதேச விமான நிறுவனங்கள், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு அளிக்கப்பட்ட 48 மணி நேர காலக்கெடுவைத் தவறவிட்டதால், அவை வெனிசுலாவில் தரையிறங்க வெனிசுலா அரசு புதன்கிழமை தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகள் தரை மார்க்கமாக மிக விரைவில் தொடங்கும் என்று டிரம்ப் கடந்த வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். போதைப்பொருளுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்களுக்கான பசியா? வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா வாராந்திர குடியேற்றவாசிகள் திரும்பும் விமானச் சேவையை 'தன்னிச்சையாக நிறுத்திவிட்டது' என்று குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் அநாகரீகமான ஆக்கிரமிப்புச் செயலை உறுதியாக நிராகரிக்க சர்வதேச சமூகம், உலகின் இறையாண்மை கொண்ட அரசாங்கங்கள், ஐ.நா. மற்றும் அது தொடர்புடைய பன்னாட்டு அமைப்புகளுக்கு நாங்கள் நேரடியாக அழைப்பு விடுக்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Nicolás Maduro போதைப்பொருள் ஏற்றிச் சென்றதாக அமெரிக்கப் படைகள் குறைந்தது 21 படகுகளின் மீது தாக்குதல் நடத்தி, 80-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது. இருப்பினும், அந்தப் படகுகளில் போதைப்பொருள் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வழங்கவில்லை. மடுரோவின் 2018 மறுதேர்தல் முறைகேடானது என்று வெனிசுலா எதிர்க்கட்சிகள் மற்றும் பல வெளிநாடுகள் குற்றம் சாட்டின. ஆனால் அமெரிக்கா, எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவே ஆட்சிக் கவிழ்ப்பு (Regime Change) நடத்த சதி செய்வதாக வெனிசுலா அதிபர் குற்றம் சாட்டுகிறார். அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையின் நோக்கம் மடுரோவைத் பதவி நீக்கம் செய்வதே என்று வெனிசுலா அரசாங்கம் நம்புகிறது. நீண்ட காலமாக அமெரிக்க அரசு வெனிசுலா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவு இறக்குமதியை கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. தனது வழிகாட்டி ஹியூகோ சாவேஸ் போலவே, மடுரோவும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அமெரிக்கா ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அதன் எண்ணெய் வளத்தை சுரண்ட ஆட்சிக்கவிழ்ப்பு முதல் கொலை வரை பலவேறு சதிகளில் ஈடுபடுவதாக இவர்கள் தரப்பு குற்றம்சாட்டுகிறது. மடுரோ மீது பல்வேறு குற்றவியல் புகார்களை முன்வைத்துள்ள அமெரிக்க அரசு, மடுரோவைக் கைது செய்ய உதவும் தகவல்களுக்கு அமெரிக்கா பெரும் தொகையைச் சன்மானமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. US vs Nenezuela வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கூட்டத்தின் தலைவரா? அத்துடன், அமெரிக்கா, 'கார்டெல் டி லாஸ் சோல்ஸ்' (Cartel de los Soles) என்ற குழுவை ஒரு வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்தக் குழுவுக்கு மடுரோதான் தலைமை தாங்குகிறார் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஒரு அமைப்பைத் தீவிரவாதக் குழு என்று முத்திரை குத்துவது, அதை இலக்கு வைத்து அழிப்பதற்கான பரந்த அதிகாரங்களை அமெரிக்கச் சட்டம் அமலாக்கம் மற்றும் ராணுவ முகமைகளுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு குறித்து வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக, உறுதியாக, மற்றும் முற்றிலும் நிராகரிக்கிறோம் எனக் கூறியுள்ளது. இந்தக் கார்டெல்லின் உயர் பதவியில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வெனிசுலாவின் உள்நாட்டு மற்றும் நீதித்துறை அமைச்சர் டியோஸ்டாடோ காபெல்லோ (Diosdado Cabello), நீண்ட காலமாகவே இது ஒரு கற்பனைக் கதை என்று கூறி வருகிறார். ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை, கார்டெல் டி லாஸ் சோல்ஸ் இருப்பது மட்டுமல்லாமல், அது வெனிசுலாவின் ராணுவம், உளவுத்துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை ஊழல் நிறைந்ததாக மாற்றியுள்ளது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலைப் படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

விகடன் 30 Nov 2025 7:02 pm