SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தன் மனைவியின் உயிரைக் காக்கப் போராடிய ஜா சாங்லாங் (Zha Changlong) என்பவருக்கு, 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் எப்படி வரப்பிரசாதமாக அமைந்தன என்பதைப் பார்ப்போம். சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜா சாங்லாங் மற்றும் யான் யிங் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், யான் யிங்கிற்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய் (Acute Leukemia) அவர்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது. அவரது முதற்கட்ட சிகிச்சைக்காக ஜா தன்னிடம் இருந்த அனைத்தையும் செலவு செய்தார். ஆனாலும், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அதிக அளவு பணம் தேவைப்பட்டது. கையில் பணமின்றி, செய்வதறியாது திகைத்த ஜா, என் மகளுக்குத் தன் தாயின் அன்பு கிடைக்க வேண்டும். அவளைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள் என்று கண்ணீருடன் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்! ஜாவின் நிலைமையை அறிந்த 'ஃபாங்' என்ற கொடையாளர், அவருக்கு உதவ முன்வந்தார். ஆனால் அவர் பணமாகத் தராமல், சுமார் 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை ஜாவிற்கு வழங்கினார். இதை விற்று உன் மனைவியின் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்திக்கொள் என்று அவர் கூறியபோது, 50,000 கிலோ கிழங்குகளை எப்படி விற்பது என்ற சவால் ஜா முன் எழுந்தது. இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதும், ஜினான் (Jinan) நகரின் மக்கள் மனிதாபிமானத்துடன் ஒன்று திரண்டனர். தன்னார்வலர்கள், மாணவர்கள் எனப் பலரும் ஜாவிற்கு உதவ முன்வந்தனர். வெறும் சில நாள்களில் 50 டன் கிழங்குகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் சந்தை விலையை விட அதிகப் பணம் கொடுத்து கிழங்குகளை வாங்கினர். இதன் மூலம் சுமார் 1.8 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) நிதி திரட்டப்பட்டது. இது அவரின் மனைவியின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான தொகையை விட அதிகமாக இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றிய ஜா, தன்னிடம் இருந்த உபரிப் பணத்தை, கஷ்டப்படும் மற்ற புற்றுநோய் நோயாளிகளுக்குத் தானமாக வழங்கினார். அன்பு என்பது பகிரப்படும்போது தான் முழுமையடைகிறது என்பதை நிரூபித்த இந்தச் சம்பவம், இன்றும் பலருக்கு நம்பிக்கையூட்டும் கதையாகத் திகழ்கிறது.

விகடன் 7 Jan 2026 7:21 pm

'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்?

'எண்ணெய்க்காகத் தான் எல்லாம்' - வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறைபிடித்த போது, அரசியல் பார்வையாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை. ட்ரம்ப் பதிவு இதை உறுதிப்படுத்தும் வகையில், ட்ரம்ப் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... 30 - 50 மில்லியன் பேரல்கள் உயர்தர எண்ணெய்களை வெனிசுலாவின் இடைக்கால அரசு அமெரிக்காவிடம் ஒப்படைக்கும். அந்த எண்ணெய் சந்தை விலைக்கு விற்கப்படும். அதில் வருகிற பணம் அமெரிக்க அதிபராகிய என்னால் நிர்வாகிக்கப்படும். இந்தப் பணம் வெனிசுலா மக்கள் மற்றும் அமெரிக்காவின் நலனுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதிச் செய்வேன். கச்சா எண்ணெய் முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' - 3 காரணங்கள் என்ன? இந்தத் திட்டத்தை உடனே நிறைவேற்றும் படி, எரிசக்தி செயலாளர் கிறிஸிற்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த எண்ணெய்களை அமெரிக்க சேமிப்பு கப்பல்கள் அமெரிக்காவிற்கு நேரடியாக கொண்டு வரும் என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்பின் இந்தப் பதிவு 'இது வெறும் ஆரம்பம்' என்பதை காட்டுகிறது. வெனிசுலா விஷயத்தில் இந்த மாதிரியான நிகழ்வுகளை இனி அடிக்கடி பார்க்கலாம். மிரட்டி சாதிக்கும் ட்ரம்ப்; வெனிசுலா வழியில் கொலம்பியா, கியூபா? இந்தியாவுக்கும் சிக்கல்? Explained

விகடன் 7 Jan 2026 11:38 am

e-B-4 Visa: ஆன்லைன் விசா கொடுத்து சீன வணிகர்களை அழைக்கும் மத்திய அரசு; இந்தியாவின் திட்டம் என்ன?

சீன பிசினஸ்மேன்களுக்கு e-b-4 விசா (e-Production Investment Business Visa) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்தியா. இந்தத் திட்டம் கடந்த 1-ம் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது? இது முழுக்க முழுக்க ஆன்லைன் விசா திட்டம் ஆகும். ஏஜென்டுகள் இல்லாமல், தூதரகத்திற்குச் செல்லாமல் இந்த விசாவிற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த விசா 45 - 50 நாள்களில் கிடைத்துவிடும். e-b-4 விசா பெற்றவர்கள் 6 மாதங்கள் வரையில் இந்தியாவில் தங்கலாம். https://www.nsws.gov.in/ - இதுதான் விண்ணப்பிப்பதற்கான லிங்க். மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கம், வெள்ளியுடன் இந்த 'இரு' உலோகங்களுக்கு 2026-ல் சூப்பர் வாய்ப்பு - உடனே கவனியுங்க! என்ன பயன்? இந்த விசா மூலம் இந்தியா வரும் சீன பிசினஸ்மேன்கள் இங்கே உபகரணங்களை நிறுவுதல், இயக்குதல், தரத்தை செக் செய்தல், மெயின்டனன்ஸ், உற்பத்தி, பயிற்சி போன்றவற்றை இங்கே செய்யலாம். இந்த விசா மூலம் இந்தியா - சீனா உறவை வலுப்படுத்த நினைக்கிறது இந்திய அரசு. மேலும், இது இந்தியாவிற்குள் முதலீடுகளைக் கொண்டுவரும். மேலும், இது இந்தியாவின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இந்தியாவின் இந்த முயற்சியை சீன அரசும் பாராட்டியுள்ளது. வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?

விகடன் 6 Jan 2026 3:11 pm

India - America:``என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம்- பிரதமர் மோடிக்கு 'செக்'வைக்கும் ட்ரம்ப்!

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா. அதன்பிறகும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததாகக் கூறி இந்திய பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை 2025-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார். தொடர்ந்து இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்தது. ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்க அனுமதிக்கும் தொடர்புடைய சட்டத்தையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. மோடி - புதின் இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக நேற்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``மோடி மிக நல்ல மனிதர். அவருக்கு நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம் என்பதையும் அவர் அறிவார். எனவே, இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதைத் தொடர்ந்தால், குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா மீது விதிக்கப்படும் வரிகளை இன்னும் வேகமாகவும், விரைவாகவும் என்னால் அதிகரிக்க முடியும். என்னுடைய இந்த நடவடிக்கை அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்... நான் இன்னொன்றையும் உங்களுக்கு சொல்கிறேன்... ரஷ்யப் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது என இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். மோடி, ட்ரம்ப் அமெரிக்கா இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி இலக்கு நாடாகும். ஏப்ரல் மற்றும் நவம்பர் 2025-க்கு இடையில், இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 50.8 பில்லியன் டாலராக இருந்தது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வர்த்தகப் புள்ளிவிவரங்களின்படி, வரிகள் விதிக்கப்பட்ட உடனேயே, அதாவது செப்டம்பரில் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்ட போதிலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி சமநிலை வகிக்கிறது. நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும் - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

விகடன் 5 Jan 2026 12:11 pm

வெனிசுலா: ``உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது - சீனாவின் விமர்சனமும் புதிய சிக்கலும்!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கடந்த 3-ம் தேதி அவரை அமெரிக்க அரசு சிறைப்பிடித்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றன. அமெரிக்காவிலிருந்தே அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனா, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. நேற்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ``எந்த நாடும் உலகின் காவலராகச் செயல்பட முடியாது. அதை நாங்கள் எப்போதும் நம்பியதுமில்லை. எந்த நாடும் தன்னை உலகின் நீதிபதி என்று கூறிக்கொள்வதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து நாடுகளின் இறையாண்மையும் பாதுகாப்பும் சர்வதேச சட்டத்தின் கீழ் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீப ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வெனிசுலா நாட்டுக்கான பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல தடைகளைத் தீவிரப்படுத்தின. அப்போது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2017-ம் ஆண்டிலிருந்து வெனிசுலாவிற்கு ஒரு பொருளாதார உயிர்நாடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் கிடைத்த தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட சுமார் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீன அரசு வெனிசுலாவிடமிருந்து வாங்கியுள்ளது. சீன வெளிநாட்டு நிறுவன முதலீடுகளைக் கண்காணிக்கும் அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் என்ற குழுவின் தரவுகளின்படி, சீன அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 2018-ஆம் ஆண்டுக்குள் வெனிசுலாவில் சுமார் 4.6 பில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தன. இந்த நிலையில்தான் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைது நடந்தேறியிருக்கிறது. வெனிசுலா அரசை தற்போதைக்கு அமெரிக்கா மேற்பார்வையிடும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார் என்பதால், வெனிசுலாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான சுமார் 50 ஆண்டுகால ராஜதந்திர உறவுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?

விகடன் 5 Jan 2026 11:14 am

Nicolas Maduro: `கிடாரிஸ்ட், பேருந்து ஓட்டுநர், வெனிசுலா அதிபர்' - யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதனால் 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது அமெரிக்கா. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான படை வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2020-ம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்ட வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரசும் நேற்று சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். நிக்கோலஸ் மதுரோ நிக்கோலஸ் மதுரோ கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கிறார். தற்போது நிக்கோலஸ் மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடைபெறும் என குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ யார் என்பது குறித்துத் தேடல் அதிகமாகியிருக்கிறது. நிக்கோலஸ் மதுரோ வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் பிறந்தவர் நிக்கோலஸ் மதுரோ. இவர் தன்னை மார்க்சிஸ்ட் என்று கூறிக்கொள்கிறார். மாணவப் பருவத்திலேயே சோசலிச லீக்கில் இணைந்தவர், இளமைப் பருவத்தில் 'எனிமா' என்ற ராக் இசைக்குழுவில் கிட்டார் வாசிப்பதையும், நடனமாடுவதிலும் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டார். அதற்குப் பிறகு பேருந்து ஓட்டுநராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தொழிற்சங்கத் தலைவரானார். அதுவே அவருக்கு அரசியலுக்குள் நுழைய வழிவகுத்தது. வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு ட்ரம்ப் - நிக்கோலஸ் மதுரோ பிரபலம் அடைந்து வந்த தொழிற்சங்கத் தலைவராக இருந்தபோது ​​நிக்கோலஸ் மதுரோ இளம் வழக்கறிஞரும், 1992 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி வழக்கில் ஹியூகோ சாவேஸின் சட்டப் பாதுகாவலர்களில் ஒருவராக இருந்த சிலியா ஃபுளோரஸ் என்பவரை சிறையில் சந்தித்தார். அரசியல் நுழைவு அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஹியூகோ சாவேஸால் தொடங்கப்பட்ட சோசலிச-மக்கள் நலவாத அரசியல் சித்தாந்தமான சாவேசிசத்தை பின்பற்றத் தொடங்கினார். 1999-ல் சாவேஸ் அதிபரானபோது, நிக்கோலஸ் மதுரோ, சட்டமன்றத்தில் நுழைந்து அரசியல் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். அவரின் கடின உழைப்பு, தெளிவான சிந்தனை போன்ற குணங்களால் அடுத்தடுத்த பதவிகள் தேடிவந்தன. சபாநாயகராகப் பணியாற்றிய நிக்கோலஸ் மதுரோ 2006-ல் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதற்குப் பிறகு துணை அதிபரானார். சாவேஸுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு வெனிசுலாவில் வாரிசுப் போட்டி தொடங்கியது. அப்போது நிக்கோலஸ் மதுரோவுக்கு அதிக ஆதரவாளர்கள் இல்லை. நிக்கோலஸ் மதுரோ அதிபர் நிக்கோலஸ் மதுரோ இந்த நிலையில், டிசம்பர் 2012-ல் சிகிச்சைக்காக கியூபா புறப்பட்ட சாவேஸ், ``எனக்கு ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் நிக்கோலஸ் மதுரோவை அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வெனிசுலா வந்த சாவேஸ், 2013-ல் மரணமடைந்தார். சாவேஸ் மரணத்துக்குப் பிறகு வெனிசுலாவின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்யப்பட்டார். சாவேஸின் இந்தத் தேர்வுக்கு, நிக்கோலஸ் மதுரோ கியூபாவுடன் வலுவான உறவைப் பேணியதும், ஃபிடல் மற்றும் ரவுல் காஸ்ட்ரோவுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டதும் முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வெனிசுலா VS ட்ரம்ப்: போதைப்பொருட்களுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்கள் மீதானா பசியா? சர்ச்சைகளும் நெருக்கடிகளும் 2013 முதல் நிக்கோலஸ் மதுரோ போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலும் சர்ச்சைகளால் களங்கப்படுத்தப்பட்டன. வெனிசுலா எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், சர்வதேச அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகளாலும் கூட கேள்விகள் எழுப்பப்பட்டன. வெனிசுலா 2018-ல் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதல் தோல்வியுற்றாலும் பல வீரர்கள் காயமடைந்தனர். 2018-ல் மீண்டும் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதை 10-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அதனால் பல தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால், அத்தனைத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். நீதித்துறை, சட்டமன்றம், ராணுவம் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது அதீத கட்டுப்பாட்டை வைத்திருந்தார் என அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. சர்வதேச உறவு பலம்! நிக்கோலஸ் மதுரோவின் சீனா, ரஷ்யா உள்ளிட்ட பிற சர்வதேச சக்திகளுடனான நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் வெனிசுலா அரசுக்கு அடிக்கடி உதவின. இந்த உறவுகளால்தான் அந்த நாடு பல இன்னல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து இயங்குகிறது. அதே நேரம் தன் அரசியல் கொள்கையான சாவேஸின் அமெரிக்க எதிர்ப்பு கோட்பாடுகளைத் தீவிரமாகப் பரப்புரை செய்துவந்தார். தன்னைக் கொல்ல அமெரிக்கா சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார். ட்ரம்ப் அமெரிக்காவும் நிகோலஸும்! இந்த நிலையில் கடந்த ஜனவரியிலிருந்துதான் அமெரிக்கா வெனிசுலா மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக வெனிசுலா மக்களை அமெரிக்காவிற்குக் குடியேற்றியதாக நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். ஜூலை மாதம், அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா அதிபரின் தலைக்கு 50 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்து, அவரை ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என்று குற்றம் சாட்டியது. மேலும் வெனிசுலாவைச் சேர்ந்த இரண்டு குற்றவியல் குழுக்களான ட்ரென் டி அராகுவா, கார்டெல் டி லாஸ் சோல்ஸ் ஆகியவற்றை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்த ட்ரம்ப், கார்டெல் டி லாஸ் குழுவுக்கு நிக்கோலஸ் மதுரோவே தலைமை தாங்குவதாகவும் குற்றம் சாட்டினார். கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் படகுகளையும் அமெரிக்கா தாக்கத் தொடங்கியது. ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலா எண்ணெய்க் கப்பல்களைக் கைப்பற்றியதுடன், தென் அமெரிக்க நாட்டிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் தனது ராணுவ இருப்பையும் உருவாக்கத் தொடங்கியது. வெனிசுலா அமெரிக்கா தப்பிச் செல்ல வாய்ப்பு! நவம்பர் மாத இறுதியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``நிக்கோலஸ் மதுரோ தன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது என அறிவித்தார். வெனிசுலாவில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய நிக்கோல்ஸ் மதுரோ, ``நான் பிறந்த மண்ணை விட்டு எங்கும் செல்லப்போவதில்லை. இங்குதான் இருப்பேன் எனத் தெரிவித்தார். அதன் பிறகு அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. ட்ரம்ப் ராணுவ நடவடிக்கைகளை நிலப்பரப்பிற்கும் விரிவுபடுத்துவதாக எச்சரித்தார். அப்போதே சிஐஏ வெனிசுலா மண்ணில் ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. அதன் உச்சகட்டமாகத்தான் சனிக்கிழமை (ஜனவரி 3) அதிகாலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவியையும் கைது செய்திருக்கிறது. வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: சர்வதேச சட்டமீறல் - ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

விகடன் 4 Jan 2026 1:30 pm

Nicolas Maduro: `கிடாரிஸ்ட், பேருந்து ஓட்டுநர், வெனிசுலா அதிபர்' - யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதனால் 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது அமெரிக்கா. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான படை வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2020-ம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்ட வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரசும் நேற்று சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். நிக்கோலஸ் மதுரோ நிக்கோலஸ் மதுரோ கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கிறார். தற்போது நிக்கோலஸ் மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடைபெறும் என குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ யார் என்பது குறித்துத் தேடல் அதிகமாகியிருக்கிறது. நிக்கோலஸ் மதுரோ வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் பிறந்தவர் நிக்கோலஸ் மதுரோ. இவர் தன்னை மார்க்சிஸ்ட் என்று கூறிக்கொள்கிறார். மாணவப் பருவத்திலேயே சோசலிச லீக்கில் இணைந்தவர், இளமைப் பருவத்தில் 'எனிமா' என்ற ராக் இசைக்குழுவில் கிட்டார் வாசிப்பதையும், நடனமாடுவதிலும் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டார். அதற்குப் பிறகு பேருந்து ஓட்டுநராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தொழிற்சங்கத் தலைவரானார். அதுவே அவருக்கு அரசியலுக்குள் நுழைய வழிவகுத்தது. வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு ட்ரம்ப் - நிக்கோலஸ் மதுரோ பிரபலம் அடைந்து வந்த தொழிற்சங்கத் தலைவராக இருந்தபோது ​​நிக்கோலஸ் மதுரோ இளம் வழக்கறிஞரும், 1992 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி வழக்கில் ஹியூகோ சாவேஸின் சட்டப் பாதுகாவலர்களில் ஒருவராக இருந்த சிலியா ஃபுளோரஸ் என்பவரை சிறையில் சந்தித்தார். அரசியல் நுழைவு அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஹியூகோ சாவேஸால் தொடங்கப்பட்ட சோசலிச-மக்கள் நலவாத அரசியல் சித்தாந்தமான சாவேசிசத்தை பின்பற்றத் தொடங்கினார். 1999-ல் சாவேஸ் அதிபரானபோது, நிக்கோலஸ் மதுரோ, சட்டமன்றத்தில் நுழைந்து அரசியல் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். அவரின் கடின உழைப்பு, தெளிவான சிந்தனை போன்ற குணங்களால் அடுத்தடுத்த பதவிகள் தேடிவந்தன. சபாநாயகராகப் பணியாற்றிய நிக்கோலஸ் மதுரோ 2006-ல் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதற்குப் பிறகு துணை அதிபரானார். சாவேஸுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு வெனிசுலாவில் வாரிசுப் போட்டி தொடங்கியது. அப்போது நிக்கோலஸ் மதுரோவுக்கு அதிக ஆதரவாளர்கள் இல்லை. நிக்கோலஸ் மதுரோ அதிபர் நிக்கோலஸ் மதுரோ இந்த நிலையில், டிசம்பர் 2012-ல் சிகிச்சைக்காக கியூபா புறப்பட்ட சாவேஸ், ``எனக்கு ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் நிக்கோலஸ் மதுரோவை அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வெனிசுலா வந்த சாவேஸ், 2013-ல் மரணமடைந்தார். சாவேஸ் மரணத்துக்குப் பிறகு வெனிசுலாவின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்யப்பட்டார். சாவேஸின் இந்தத் தேர்வுக்கு, நிக்கோலஸ் மதுரோ கியூபாவுடன் வலுவான உறவைப் பேணியதும், ஃபிடல் மற்றும் ரவுல் காஸ்ட்ரோவுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டதும் முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வெனிசுலா VS ட்ரம்ப்: போதைப்பொருட்களுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்கள் மீதானா பசியா? சர்ச்சைகளும் நெருக்கடிகளும் 2013 முதல் நிக்கோலஸ் மதுரோ போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலும் சர்ச்சைகளால் களங்கப்படுத்தப்பட்டன. வெனிசுலா எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், சர்வதேச அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகளாலும் கூட கேள்விகள் எழுப்பப்பட்டன. வெனிசுலா 2018-ல் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதல் தோல்வியுற்றாலும் பல வீரர்கள் காயமடைந்தனர். 2018-ல் மீண்டும் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதை 10-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அதனால் பல தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால், அத்தனைத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். நீதித்துறை, சட்டமன்றம், ராணுவம் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது அதீத கட்டுப்பாட்டை வைத்திருந்தார் என அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. சர்வதேச உறவு பலம்! நிக்கோலஸ் மதுரோவின் சீனா, ரஷ்யா உள்ளிட்ட பிற சர்வதேச சக்திகளுடனான நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் வெனிசுலா அரசுக்கு அடிக்கடி உதவின. இந்த உறவுகளால்தான் அந்த நாடு பல இன்னல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து இயங்குகிறது. அதே நேரம் தன் அரசியல் கொள்கையான சாவேஸின் அமெரிக்க எதிர்ப்பு கோட்பாடுகளைத் தீவிரமாகப் பரப்புரை செய்துவந்தார். தன்னைக் கொல்ல அமெரிக்கா சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார். ட்ரம்ப் அமெரிக்காவும் நிகோலஸும்! இந்த நிலையில் கடந்த ஜனவரியிலிருந்துதான் அமெரிக்கா வெனிசுலா மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக வெனிசுலா மக்களை அமெரிக்காவிற்குக் குடியேற்றியதாக நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். ஜூலை மாதம், அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா அதிபரின் தலைக்கு 50 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்து, அவரை ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என்று குற்றம் சாட்டியது. மேலும் வெனிசுலாவைச் சேர்ந்த இரண்டு குற்றவியல் குழுக்களான ட்ரென் டி அராகுவா, கார்டெல் டி லாஸ் சோல்ஸ் ஆகியவற்றை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்த ட்ரம்ப், கார்டெல் டி லாஸ் குழுவுக்கு நிக்கோலஸ் மதுரோவே தலைமை தாங்குவதாகவும் குற்றம் சாட்டினார். கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் படகுகளையும் அமெரிக்கா தாக்கத் தொடங்கியது. ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலா எண்ணெய்க் கப்பல்களைக் கைப்பற்றியதுடன், தென் அமெரிக்க நாட்டிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் தனது ராணுவ இருப்பையும் உருவாக்கத் தொடங்கியது. வெனிசுலா அமெரிக்கா தப்பிச் செல்ல வாய்ப்பு! நவம்பர் மாத இறுதியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``நிக்கோலஸ் மதுரோ தன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது என அறிவித்தார். வெனிசுலாவில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய நிக்கோல்ஸ் மதுரோ, ``நான் பிறந்த மண்ணை விட்டு எங்கும் செல்லப்போவதில்லை. இங்குதான் இருப்பேன் எனத் தெரிவித்தார். அதன் பிறகு அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. ட்ரம்ப் ராணுவ நடவடிக்கைகளை நிலப்பரப்பிற்கும் விரிவுபடுத்துவதாக எச்சரித்தார். அப்போதே சிஐஏ வெனிசுலா மண்ணில் ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. அதன் உச்சகட்டமாகத்தான் சனிக்கிழமை (ஜனவரி 3) அதிகாலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவியையும் கைது செய்திருக்கிறது. வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: சர்வதேச சட்டமீறல் - ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

விகடன் 4 Jan 2026 1:30 pm

வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: சர்வதேச சட்டமீறல் - ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதனால் 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் படை வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நேற்று அமெரிக்கப் படைகளால் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். நிக்கோலஸ் மதுரோ நிக்கோலஸ் மதுரோ கை விலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கிறார். தற்போது நிகோலஸ் மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன. நிகோலஸ் மதுரோவின் சிறைப்பிடிப்பிற்கு ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மேலும், இந்தத் தாக்குதல் கைது நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ், ``நிகோலஸ் மதுரோ கைது நடவடிக்கையானது, போதை மற்றும் ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டதல்ல. எண்ணெய் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் ட்ரம்ப்தான் வலுவான தலைமை என்பதைக் காட்ட நடத்தப்பட்டது எனக் குறிப்பிட்டிருக்கிறார். நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நேரடியாகப் பேசினேன். இது இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான ஒருதலைப்பட்சத் தாக்குதல் போர் நடவடிக்கை. இந்தச் செயலுக்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்ய நான் அதிபரை அழைத்து அவரிடம் நேரடியாகப் பேசினேன். ஜோஹ்ரான் மம்தானி எனது எதிர்ப்பைப் பதிவு செய்தேன். அதைத் தெளிவாகத் தெரிவித்தேன். அரசு மாற்றத்திற்கான அப்பட்டமான முயற்சி இது. இந்த நடவடிக்கை மத்திய மற்றும் சர்வதேச சட்ட மீறலாகும். இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் உள்ளவர்களை மட்டும் பாதிக்கவில்லை, இது இந்த நகரத்தைத் தங்கள் வீடாகக் கருதும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டினர் உட்பட நியூயார்க் நகர மக்களையும் நேரடியாகப் பாதிக்கிறது. அவர்களின் பாதுகாப்பிலும், ஒவ்வொரு நியூயார்க் நகரவாசியின் பாதுகாப்பிலும்தான் எனது கவனம் உள்ளது. எனது நிர்வாகம் இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி

விகடன் 4 Jan 2026 12:14 pm

Venezuela: ஒத்திகை முதல் Spy வரை; அதிபர் மதுரோவைச் சிறைப்பிடிக்க அமெரிக்கா எப்படித் திட்டமிட்டது?

வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு. அமெரிக்க நேரப்படி, நேற்று நள்ளிரவில், சிறைப்பிடிப்பு சம்பவம் நடந்துள்ளது. நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி எப்படி சிறைப்பிடிக்கப்பட்டனர் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கைது நடந்தது எப்படி? வெனிசுலாவின் தலைநகரம் கராகஸ். அங்கே உள்ள பலமான பாதுகாப்புகள் கொண்ட டியுனா கோட்டையில் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் உறங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு அப்போது டியுனா கோட்டையில் நுழைந்த அமெரிக்க ராணுவப்படை மதுரோ மற்றும் அவரது மனைவியை பெட் ரூமிலேயே சிறைப்பிடித்து உள்ளனர். மிகுந்த ராணுவ பாதுகாப்பு உள்ள டியுனா கோட்டையில் அமெரிக்க ராணுவம் நுழைந்தது. அதிபரையும், அவரது மனைவியையும் கைது செய்தது என அனைத்தும் அரை மணிநேரத்திற்குள் நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தகவலை CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உறுதி செய்த ட்ரம்ப் Fox News செய்தி நிறுவனத்தின் தொலைபேசி நேர்காணலில், இந்த விஷயத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்புமே கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப், மதுரோவைச் சிறைப்பிடிக்கும்போது, அவர் ஒரு கோட்டையில் இருந்தார். இந்த ஆபரேஷனில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். இரண்டு பேர் காயமடைந்தனர். ஆனால், அவர்களுமே இப்போது நன்றாக இருக்கின்றனர் என்று பேசியுள்ளார். ட்ரம்ப் OP Sindoor: நான்தான் நிறுத்தினேன் - ட்ரம்ப்புடன் மோதும் சீனா; பாகிஸ்தானுக்கு ப்ளஸ்; இந்தியாவுக்கு? பக்கா பிளான் தற்போது வெளியாகி வரும் தகவலின்படி, வெனிசுலா மீதான தாக்குதலோ, அதிபர் சிறைப்பிடிப்போ சட்டென நடந்த விஷயம் அல்ல. அனைத்தும் பக்காவாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் சிறிய குழு ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே வெனிசுலாவில் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் மதுரோவின் தினசரி நடவடிக்கைகளைத் தொடர்ந்து ரிப்போர்ட் செய்து வந்திருக்கிறது. அடுத்ததாக, மதுரோவின் டியுனா கோட்டை போன்ற செட் ஒன்றை அமைத்து, அவரைக் கைது செய்வதற்கான ஒத்திகைகளைப் பார்த்திருக்கிறது அமெரிக்க ராணுவப்படை. மதுரோவிற்கு மிக நெருக்கமான நபர் ஒருவர் அமெரிக்காவின் ஆளாம். அவர்தான் ஆபரேஷனின் போது, மதுரோ சரியாக எங்கிருக்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறார். நான்கு நாள்களுக்கு முன்பே ஒப்புதல் ட்ரம்ப் நான்கு நாள்களுக்கு முன்பே, இந்த ஆபரேஷனுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார். ஆனால், வெனிசுலாவில் காலநிலை சரியில்லாததால், ஆபரேஷன் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள மார்-எ-லாகோ கிளப்பில் இருந்துகொண்டே, மதுரோ சிறைப்பிடிப்பை ட்ரம்ப் லைவ்வாக பார்த்திருக்கிறார். டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguez உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்! மதுரோ முதலில் தப்பிக்கத்தான் முயன்றிருக்கிறார். ஆனால், அந்த ரூம் மூடப்பட்டிருந்ததால், அவரால் வெளியேற முடியவில்லை. தற்போது வெனிசுலாவின் இடைக்கால அதிபராக அந்த நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்திருக்கிறது அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம். இப்போது சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ நியூயார்க்கில் இருக்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்க உள்ளது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். TAPS: `கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்' - ஸ்டாலின் அதிரடி | முழு தகவல்

விகடன் 4 Jan 2026 10:47 am

வெனிசுவேலா மீது அமெரிக்காவின் தாக்குதல் — இலக்கு போதைப்பொருள் கடத்தலா, எண்ணெய் வளமா? | In-depth

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன் மணிவண்ணன் திருமலை (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) வெனிசுவேலாவின் மீது கடந்த ஆகஸ்டிலிருந்து அமெரிக்கா நடத்தி வந்த தாக்குதல்கள் வெள்ளிக்கிழமை(3ம் தேதி) நள்ளிரவுக்கு மேல் , சனிக்கிழமை அதிகாலை, அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மாளிகையிலேயே அதிரடியாகப் புகுந்து அவரையும், அவர் மனைவி சிலியா ஃப்லோரஸையும் கடத்திச் சென்ற காட்சிகளோடு கிளைமாக்ஸை எட்டியிருக்கின்றன. வெனிசுவேலா அதிபர் தலைநகர் கேரகாஸில் உள்ள வெனிசுவேலா அதிபர் மாளிகையில் புகுந்த அமெரிக்க அதிரடிப் படைகள், உறக்கத்தில் இருந்த மதுரோவையும், அவர் மனைவியையும், இழுத்துச் சென்று அமெரிக்கப் போர்க்கப்பல் யு.எஸ்.எஸ் ஐவோ ஜிமாவில் ஏற்றி நியுயார்க் கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நியுயார்க் நீதிமன்றத்தில் ஏற்கனவே மதுரோ மீது போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்காவுக்கு கடத்தியதாக வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும். அமெரிக்காவின் இந்தத் துணிகரச் செயல் சமீபகால சர்வதேச வரலாற்றில் ஒப்புமை இல்லாதது. இராக்கின் அதிபர் சதாம் ஹுசேன் , இராக்கில் 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் நடத்திய போரை அடுத்து பதவியிலிருந்து இறக்கப்பட்டு, பல மாதங்கள் தலைமறைவாக இருந்தார். பின்னர் அவர் தங்கியிருந்த பதுங்கிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு அமெரிக்கா ஆதரவு பெற்ற இராக்கிய இடைக்கால அரசால் தூக்கிலிடப்பட்டார். அதே போல இஸ்லாமாபாத் அருகே அபோதாபாத் என்ற ராணுவ தளங்கள் அமைந்திருந்த நகரில் பதுங்கியிருந்த அல் கயீதா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் 2011ல் அமெரிக்க சிறப்புப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆனால் நாட்டின் தலைமைப்  பதவியிலிருக்கும் ஒரு  அரசியல் தலைவரை,  அமெரிக்கா  இது போல  ராணுவ பலத்தைப் பிரயோகித்து சிறைப்பிடித்தது ,  மற்றொரு மத்திய  அமெரிக்கா நாட்டில்  நிகழ்ந்திருக்கிறது.  1989ல்   பனாமாவின் சர்வாதிகாரி  மேனுவெல் நொரிகாவை  இப்படித்தான் அமெரிக்கா  வீழ்த்தியது.   வரவேற்பும், எதிர்ப்பும் வெனிசுவெலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்ததை  கடுமையாக கண்டித்துள்ள வெனிசுவெலா அரசு ,   மதுரோவின் தற்போது  உயிருடன் இருக்கிறாரா  என்பதை அமெரிக்கா உறுதிசெய்யவேண்டும் என்று  கோரியிருக்கிறது.   ஐநா மன்ற பாதுகாப்புக்  கவுன்சிலையும் அது கூட்ட  வேண்டுகோள்  விடுத்திருக்கிறது.  பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவுக்கு உள்ள வெட்டு வாக்கு ( வீட்டோ) அதிகாரத்தை மீறி கவுன்சில்  என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை.  இதே போல , அமெரிக்காவின் இந்த தாக்குதலை,  தென் அமெரிக்காவின் இடது சாரி சார்புள்ள , பிரேசில்,  கொலம்பியா போன்ற நாடுகளும்,  ரஷ்யா,   சீனா போன்ற வழக்கமான  அமெரிக்க எதிர்ப்பு நிலை  எடுக்கும் வல்லரசுகளும்  கண்டித்திருக்கின்றன.  கியுபா கண்டனம் செய்திருக்கிறது.  இரான் கண்டித்திருக்கிறது.   ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும். அமைதி கோரி அறிக்கை விட்டிருக்கின்றன.   அதே சமயத்தில்  வலதுசாரித் தலைவர்களைக் கொண்ட அர்ஜெண்டினா,   இஸ்ரேல் போன்ற நாடுகள்  அமெரிக்காவின் இந்த  நடவடிக்கையை  வரவேற்றிருக்கின்றன.   வெனிசுவேலாவுக்குள்ளேயே இந்த நடவடிக்கையை  மதுரோவின் பிரதான  எதிர்க்கட்சித் தலைவரும்,   நோபல் அமைதிப் பரிசு பெற்றவருமான மரியா கொரினா  மச்சாதோ வரவேற்றிருக்கிறார்.  தாக்குதலுக்கு என்ன காரணங்கள் ? வெனிசுவேலாவின் மீது அமெரிக்கா தொடுத்த இந்தப் போருக்கு முக்கிய காரணமாக அமெரிக்கா கூறுவது அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு அமெரிக்கப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்குக் காரணமாக வெனிசுவேலா அதிபர் மதுரோ இருந்தார் என்பதுதான். இதைக் காரணம் காட்டி, டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் வெனிசுவேலாவுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்தார். அமெரிக்காவுக்குள் கொக்கெயின் போன்ற போதைப் பொருட்கள் தென் அமெரிக்காவிலிருந்தும், மெக்சிகோவிலிருந்தும் கடத்தப்பட்டுவருகின்றன என்பது பல ஆண்டுகளாகவே தெரிந்த விஷயம்தான். இதில் கொலம்பியா, மெக்சிகோ , வெனிசுவேலா போன்ற நாடுகளில் இருந்து இயங்கும் பல கிரிமினல் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன என்பதும் ஓரளவு ஒப்புக்கொள்ளப்படும் ஒரு உண்மை. ஆனால் இந்த போதைப் பொருள் கடத்தும் விஷயத்தில் நிக்கோலஸ் மதுரோவுக்கு நேரடி தொடர்பு இருந்ததா என்பது இன்னும் நிரூபணமாகவில்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். கண்ணை உறுத்தும் எண்ணெய் வளம் முதல் விஷயம், வெனிசுவெலா ஒரு எண்ணெய் வளமிக்க நாடு. உலகின் எண்ணெய் வளத்தில் சுமார் 17 - 20 சதவீதம் என்ற அளவில் வெனிசுவேலாவில் எண்ணெய் வளம் இருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவின் பொருளாதாரத்தடைகள் மற்றும் சாவேஸ் தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து வெனிசுவேலாவின் எண்ணெய்த் துறையில் முதலீடுகள் குறைந்தது போன்ற காரணங்களால் வெனிசுவேலா எண்ணெய் வளம் அதிகம் இருந்தாலும், எண்ணெய் உற்பத்தி என்பது குறைவாகவே இருந்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து , வெனிசுவேலாவின் எண்ணெய்த் தொழிலில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முதலீடு செய்து வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பை பலப்படுத்தும் என்று சனிக்கிழமை டிரம்ப் அறிவித்திருக்கிறார். இது அமெரிக்காவின் இந்த போருக்கான ஒரு பகுதி முக்கிய நோக்கத்தைத் தெளிவாக்குகிறது. இரண்டாவது, கேந்திர அரசியல் செல்வாக்குக்கான நகர்வுகள். வெனிசுவேலாவில் 1999ல் ஹுயுகோ சாவேஸ் தலைமையிலான இடது சாரி ஆட்சி அமைந்ததிலிருந்தே அமெரிக்காவுக்கு வெனிசுவேலா மீது ஒரு கண் விழுந்தது. சாவேஸ் 2013ல் இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது துணை அதிபர் நிக்கோலஸ் மதுரோ இடது சாரிக் கொள்கைகளை தொடர்ந்தது, அமெரிக்காவுக்கு எரிச்சலை ஊட்டியது. போதைப் பொருள் வர்த்தகம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், வெனிசுவேலா, அதன் எண்ணெய்த் துறையில் சீன முதலீடுகளை ஊக்குவித்ததும் அமெரிக்காவின் கோபத்தை அதிகப்படுத்தியது. மன்ரோ சித்தாந்தம் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களும் அமெரிக்காவின் கேந்திர அரசியல் கொல்லைப்புறம் என்பது நீண்ட காலமாக அமெரிக்க நிர்வாகங்கள் கடைப்பிடித்துவரும் கொள்கை. இது 19 ம் நூற்றாண்டின் மன்ரோ சித்தாந்தம் என்பதன் அடிப்படையில் அமைந்தது. இந்தப் பகுதிக்குள் அமெரிக்கக் கண்டங்களுக்கு வெளியே உள்ள பிற நாடுகள் செல்வாக்கு செலுத்துவதை அமெரிக்கா அனுமதிப்பதில்லை. இந்தக் கொள்கையைப் பின்பற்றித்தான், 1980களிலிருந்தே இப்பகுதிகளில் பல சர்ச்சைக்குரிய ஆட்சி மாற்றத்துக்கான தலையீடுகளை அமெரிக்கா நிகழ்த்தி வந்திருக்கிறது. வெனிசுவேலாவின் அதிபர் மதுரோவைக் குறிவைத்து அமெரிக்கா கடந்த பல ஆண்டுகளாகவே பல சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மதுரோவின் கைது செய்ய உதவும் தகவல் தருபவர்களுக்கு அமெரிக்கா 15 மிலியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தது. அது சமீபத்தில் 50 மிலியன் டாலர் என்று உயர்த்தப்பட்டது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கையின் பின்னால் மூன்றாவதாக ஒரு காரணமும் இருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. வெனிசுவேலாவின் அரசியல் சூழலால் நெருக்கடிக்குள்ளாகி ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக பிற அமெரிக்க நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 7 லட்சம் வெனிசுவேலா அகதிகள் இருப்பதாக சில கணிப்புகள் கூறுகின்றன. வெனிசுவேலாவில் அடுத்து என்ன நடக்கும் ? மதுரோவின் துணை அதிபராக இருக்கும் டெல்சி ரோடறிகஸ் அவருக்கு அடுத்து அதிபராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அவர் அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடிப்பாரா அல்லது எண்ணெய்த் துறையில் அமெரிக்க முதலீட்டை அனுமதித்து அமெரிக்காவுடன் சமாதானத்தை “வாங்குவாரா” என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். ஆனால் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், வெனிசுவேலாவில் நியாயமான மாற்றம் வரும் வரை, வெனிசுவேலாவை அமெரிக்காவே கட்டுப்பாட்டில் எடுத்து நடத்தும் என்று அறிவித்திருக்கிறார். இன்னொரு விஷயம், மதுரோவின் ஆதரவாளர்கள், மற்றும் வெனிசுவேலாவில் பிற கட்சி ஆதரவாளர்களின் நிலைப்பாட்டைத் தாண்டி, பொதுமக்கள் எப்படி இந்த அமெரிக்க ராணுவத் தலையீட்டைப் பார்க்கிறார்கள் என்பது முக்கியமானது. கடந்த ஆண்டு ( 2025) நடந்த தேர்தலில் மதுரோ மூன்றாவது முறையாக வென்றிருந்தாலும், அது எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தல் என்பதும், சுமார் 42% வாக்காளர்களே வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர் என்பதும், அவர் வெற்றியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருந்தன. ஆனால் அவருக்கு இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. அவரது விசுவாச ஆதரவாளர்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது கவனிக்கவேண்டிய விஷயம். வெனிசுவேலாவின் வீதிகளில் இறங்கி பொதுமக்கள் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அது அமெரிக்கா இராக்கில் எதிர்கொண்டது போன்ற எதிர்பாராத விளைவுகளை உருவாக்கலாம். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யா, சீனா போன்ற பிற வல்லரசுகளையும், தங்கள் பிராந்தியங்களில் இதே போல “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்ற போக்கை கடைப்பிடிக்க ஊக்குவிக்கலாம். குறிப்பாக ரஷ்யா தனது யுக்ரெயின் போர் பற்றி மேலை நாடுகள் கண்டனத்தை, அமெரிக்காவின் வெனிசுவேலா தாக்குதலை உதாரணம் காட்டியே நிராகரிலாம். அதே போல, சீனாவின் ஷி ஜின்பிங்கும், கடந்த வாரம்தான் தைவானைச்சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனாவின் படைகள் ஒத்திகை நடத்த உத்தரவிட்டிருந்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அடுத்து சீனாவும் இதே போல தைவானின் மீது படையெடுத்தால் எந்த அளவு அதை அமெரிக்காவால் எதிர்க்க முடியும் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

விகடன் 4 Jan 2026 10:24 am

வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை நேற்று கைப்பற்றியது அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு. அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படத்தை தனது ட்ரூத் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதில் மதுரோ கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டிருக்கிறார். அவரை அமெரிக்காவின் USS IWO Jima என்கிற போர்க்கப்பலில் வைத்திருப்பதாகவும் அந்தப் பதிவில் கூறியிருக்கிறார் ட்ரம்ப். வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட்டே அதிபரை சிறைப்பிடித்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது. Nicolas Maduro on board the USS Iwo Jima. pic.twitter.com/omF2UpDJhA — The White House (@WhiteHouse) January 3, 2026 'வெற்றிகரமான தாக்குதல்; அதிபரை வெளியேற்றிவிட்டோம்' - வெனிசுலாவை குறிவைத்த ட்ரம்ப் இனி வெனிசுலாவை யார் ஆட்சி செய்வார்கள்? இந்தச் சம்பவம் குறித்து பேச நேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார் ட்ரம்ப். அப்போது அவர் பேசியதாவது... வெனிசுலாவில் அடுத்து பாதுகாப்பான ஆட்சி மாற்றம் நடக்கும் வரையில், அந்த நாட்டில் அமெரிக்கா ஆட்சி நடத்தும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவிற்குச் சென்று அங்கு உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். வெனிசுலா மீது அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன? வெனிசுலா மிகுந்த எண்ணெய் வளம் உள்ள ஒரு நாடு ஆகும். அங்கே ஒவ்வொரு நாளும் மில்லியன் பேரல் கணக்கான எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ஆனால், 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது அமெரிக்கா. எண்ணெய் மூலம் பெறும் பணத்தை வெனிசுலா போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல் மற்றும் கடத்தல்களுக்குப் பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. நியூயார்க்கில் மதுரோ தற்போது மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன. மதுரோவின் சிறைப்பிடிப்பிற்கு அவரது நட்பு நாடுகளான ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. நிக்கோலஸ் மதுரோ ||Nicolas Maduro OP Sindoor: நான்தான் நிறுத்தினேன் - ட்ரம்ப்புடன் மோதும் சீனா; பாகிஸ்தானுக்கு ப்ளஸ்; இந்தியாவுக்கு? கமலா ஹாரிஸ் எதிர்ப்பு இதைத் தாண்டி, ட்ரம்பின் இந்தச் செய்கைக்கு அமெரிக்காவில் இருந்தே கடும் குரல் ஒன்று கிளம்பியுள்ளது. அது அதிபர் தேர்தலில் இவருடன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய கமலா ஹாரிஸ் உடையது ஆகும். அவர், மதுரோ கொடூர மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சர்வாதிகாரியாகவே இருக்கட்டும். ஆனால், அது ட்ரம்பின் நடவடிக்கையை நியாயப்படுத்தாது. இது அமெரிக்க குடும்பங்களைத்தான் சிக்கலில் தள்ளும். பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தச் செயலை ஆதரிக்கவில்லை. இந்தச் சம்பவம் போதை மற்றும் ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டது அல்ல. எண்ணெய் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் ட்ரம்ப்தான் வலுவான தலைமை என்பதைக் காட்ட நடத்தப்பட்டது ஆகும். ட்ரம்பின் இந்தச் செய்கை அமெரிக்க ராணுவ வீரர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது. அடுத்ததாக, பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் வீணாகி உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மை உருவாகி உள்ளது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Donald Trump’s actions in Venezuela do not make America safer, stronger, or more affordable. That Maduro is a brutal, illegitimate dictator does not change the fact that this action was both unlawful and unwise. We’ve seen this movie before. Wars for regime change or oil that… — Kamala Harris (@KamalaHarris) January 4, 2026 'இனி ஹேப்பி தான்' - Fastag-ல் 'இந்த' சிக்கல் கிடையாது; டோல்களில் சிரமப்பட வேண்டாம்!

விகடன் 4 Jan 2026 9:12 am