SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

H-1B விசா புதிய கட்டுப்பாடு: தொடர்ந்து பேசுவோம் - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன?

ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்கள் சோதனையிடப்படும் என்பதுதான் ஹெச்-1பி விசாவிற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் லேட்டஸ்ட் நெருக்கடி. இதனால், இந்தியாவில் டிசம்பர் 15-ம் தேதி முதல் முடிவாகியிருந்த ஆயிரக்கணக்கான ஹெச்-1பி விசா நேர்காணல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஹெச்-1பி விசா பிரச்னை குறித்து அமெரிக்காவிடம் பேசியுள்ளோம். இந்தியர்களுக்கு இதில் ஏற்பட்டுள்ள பிரச்னையைச் சரிசெய்ய தொடர்ந்து அமெரிக்கா உடன் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார். ரந்தீர் ஜெய்ஸ்வால் ஏன் இது முக்கியம்? இந்திய அரசு ஹெச்-1பி விசா பிரச்னையில் தலையிட்டு முடிவெடுப்பது மிக மிக முக்கியம். அமெரிக்காவின் ஹெச்-1பி விசா பெறும் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தியர்களே. சமூக வலைத்தளச் சோதனை காரணத்தால் மே மாதம் வரையில் நேர்காணல்கள் தள்ளிப் போயிருக்கின்றன. அதுவரை இவர்களுக்கு வேலை இருக்காது; நிதி நெருக்கடி ஏற்படும். இவர்களின் குடும்பம் பாதிக்கப்படும். மே மாதம் வரையில் நேர்காணல் தள்ளிப்போனால், குடும்பத்துடன் அமெரிக்கா செல்லத் திட்டம் வைத்திருப்பவர்கள் பெரிய பிரச்னையைச் சந்திக்க நேரிடும். காரணம், மே மாதம் நேர்காணல் முடித்து அமெரிக்கா செல்லும்போது, குழந்தைகளுக்குப் பள்ளி, கல்லூரியில் அட்மிஷன் கிடைப்பது சிரமம். இதைச் சுற்றி இப்படி பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆக, இதில் இந்திய அரசு இன்னும் முனைப்பு காட்ட வேண்டும்.

விகடன் 27 Dec 2025 11:43 am

வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5'தான் காரணம் - மத்திய அமைச்சர்

இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளில் இருந்து 26,400 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை சொன்ன தகவல். இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியர்களை வெளியேற்றியது மிக முக்கியமாக பேசப்பட்டது... மிக அதிகமாக கவனிக்கவும் பட்டது. ஆனால், இந்த ஆண்டு இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சவுதி அரேபியா SIR: உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டதா? புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க எளிய வழி! ஆம்... 11,000 இந்தியர்களை வெளியேற்றி உள்ளது சவுதி அரேபியா. அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். ஒரு ஆண்டில் 26,400 இந்தியர்கள் வெளியேற்றம் என்பது கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கை. ஏன் அதிகளவில் வெளியேற்றம்? இதற்கான பதிலையும் வெளியுறவுத்துறை அமைச்சகமே வழங்கி உள்ளது. இதற்கு கூறப்படும் முக்கியமான காரணங்கள்... 1. விசா காலம் முடிந்தும் அங்கேயே தங்குவது 2. வேலை செய்வதற்கான தகுந்த பெர்மிட் இல்லாதது 3. அந்தந்த நாட்டின் தொழிலாளர் சட்டத்தை மீறுவது 4. முதலாளிகளிடம் இருந்து சென்று விடுவது 5. அங்கே ஏதேனும் குற்றங்களில் ஈடுபடுவது போன்ற காரணங்களுக்காக வெளியேற்றப்படுகிறார்கள் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!

விகடன் 27 Dec 2025 10:24 am

Nigeria: கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொல்கிறார்கள்; அதனால் ISIS தீவிரவாதிகளைத் தாக்கினோம் - ட்ரம்ப்

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந்து அவ்வப்போது நைஜீரியா குறித்து பேசிவரும் ட்ரம்ப், `` நைஜீரியாவில் கிறிஸ்தவ மதம் இருப்புக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. கிறிஸ்தவ சமூகங்களை இலக்காகக் கொண்ட வன்முறையைத் தடுக்கத் தவறிய மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ ரீதியாகத் தலையிட வேண்டும் எனக் கருதுகிறேன் என்றெல்லாம் அச்சுறுத்தி வந்தார். நைஜீரியா இந்த நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காக வைத்து நேற்று தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்திருக்கிறார். ட்ரம்ப், ``கிறிஸ்தவர்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டதற்குப் பதிலடியாகவே ராணுவம் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தலைமைத் தளபதி எனது உத்தரவின் பேரில், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கயவர்களுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளார். Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு அவர்கள் பல ஆண்டுகளாக அப்பாவி கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு கொடூரமாகக் கொன்று வருகின்றனர். கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நான் இதற்கு முன்பு அந்தப் பயங்கரவாதிகளுக்கு எச்சரித்திருந்தேன், இன்று இரவு அது நடந்தது. அமெரிக்காவால் மட்டுமே செய்யக்கூடிய வகையில், போர்த் துறை பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியது. எனது தலைமையின் கீழ், நமது நாடு தீவிரவாத இஸ்லாமியப் பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது. கடவுள் நமது ராணுவத்தை ஆசீர்வதிக்கட்டும். ட்ரம்ப் மேலும் இறந்த பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அவர்கள் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதைத் தொடர்ந்தால், இன்னும் பலர் கொல்லப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நைஜீரிய அரசு, ``ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருவரையும் குறிவைக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற ட்ரம்பின் கூற்றுகள் முழுமையானது அல்ல. மத சுதந்திரத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை ட்ரம்ப் புறக்கணிக்கிறார். ஆனால், போராளிக் குழுக்களுக்கு எதிராக எங்கள் படைகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது. 'பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை' - ட்ரம்ப் அரசு அறிவிப்பு

விகடன் 26 Dec 2025 9:43 am