SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்!

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமயம் 4 Jan 2026 9:31 am

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தை! மூத்த மகனின் கொடூரச் செயல்

குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை, பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் 25 வயதுடைய அவரின் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணை இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மேற்படி இளைஞர், யுவதி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலுக்குத் தந்தை […]

அதிரடி 4 Jan 2026 9:31 am

இனி வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் ; டிரம்ப் அறிவிப்பு

வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க நேரப்படி தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதியின் ‘நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்’ போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். தனது வழிகாட்டலின் கீழ், வெனிசுலா தலைநகரில் இரவு முதல் காலை வரை வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக “அசாதாரணமான இராணுவ நடவடிக்கை” முன்னெடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். பாதுகாப்பான […]

அதிரடி 4 Jan 2026 9:30 am

24 மணிநேரத்திற்குள் நாட்டில் ஐந்து உயிர்களை பறித்த விபத்துக்கள்

கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த பல வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (03) மாரவில, மீகஹதென்ன, நொச்சியாகம, கெஸ்பேவ மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திசேராபுரவிலிருந்து அட்டப்ப சந்தி வரையிலான வீதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி தூண் ஒன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பல விபத்துக்கள்.. […]

அதிரடி 4 Jan 2026 9:27 am

இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா: புதுக்கோட்டையில் பாதுக்காப்பு ஏற்பாடு தீவிரம் -பாஜக வியூகம்!

புதுக்கோட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டு உள்ளது.

சமயம் 4 Jan 2026 8:59 am

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு ; பிரித்தானியாவில் தமிழ் மக்கள் வலிமை காட்டிய போராட்டம்

கடந்த டிசம்பர் 21ம் திகதியன்று இடம்பெற்ற தையிட்டி போராட்டத்தின் போது தவதிரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டமானது பிரித்தானியா பிரதமர் அலுவலகத்தின் முன்பாக இன்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது. தாயகத்தில் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தில் கடந்த டிசம்பர் 21ம் திகதி அன்று மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அதனை […]

அதிரடி 4 Jan 2026 8:41 am

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 8 இலட்சம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அட்டை விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 240,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு, அவற்றை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் அனைவருக்கும், எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் நிரந்தர அட்டைகளை அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் 4.5 இலட்சம் பேருக்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டிருந்தன. […]

அதிரடி 4 Jan 2026 8:32 am

வெனிசுவேலா அதிபரை சிறைப்பிடித்த அமெரிக்கா! டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலா நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், வெனிசுவேலா மீது அமெரிக்க படை தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அமெரிக்க வெளியுறவு […]

அதிரடி 4 Jan 2026 8:30 am

சுசீந்திரம் தேர்த்திருவிழா: அமைச்சர் காலதாமதமாக வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம் - தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பக்தர்கள் தரப்பில் சில கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது தேர்வடம் இழுக்கச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆவேசமாகி சில வார்த்தைகளைப் பேசியது சர்ச்சையானது. பா.ஜ.க அமைப்பினர்தான் அப்படி கோஷம் போட்டதாக தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு தாமதமாக வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்துக் கோயில்களிலும் நடைபெறுகின்ற திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், தேரோட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்தும் மக்களின் பங்களிப்பு மூலம்தான் நடைபெற்று வருகின்றன. இது அமைச்சருக்குத் தெரியுமா, அல்லது மறந்து விட்டாரா? சுசீந்திரம் தேரோட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் பத்து நாட்கள் மார்கழி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது. சுவாமிக்குக் குறித்த நேரத்தில் பூஜைகள் நடத்தப்பட்டு தேர்த்திருவிழா தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் காலதாமதமாக வந்ததன் காரணமாகத் தேரோட்ட நிகழ்வு தொடங்குவது காலதாமதமானது. 'சோத்தைத் திங்கிரியா..!' - சுசீந்திரம் தேரோட்டத்தில் டென்ஷனாகிய சேகர் பாபு! - என்ன நடந்தது? இது தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களின் மனதையும் புண்படச்செய்துள்ளது. இந்தக் காலதாமதத்தை அமைச்சர் தவிர்த்து இருக்க வேண்டும். மேலும் திருவிழா காலங்களில் பக்தர்கள் அந்தந்தத் தெய்வங்களை நினைத்துப் பக்திக் கோஷங்கள் போடுவது எல்லா திருக்கோவில்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. அது போன்றுதான் சுசீந்திரத்திலும் தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் காலதாமதமாக வந்த அமைச்சர் பக்தர்கள் எழுப்பிய கோஷத்தைப் பொறுக்க முடியாமல் பக்தர்களைத் தகாத வார்த்தையால் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் சுசீந்திரம் தெப்பக்குளத்தின் ஒரு பகுதியானது இடிந்து விழுந்த நிலையில் இதுவரை சரிசெய்யப்படாமல் இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல குளங்களுக்குத் தூர் வாருவதற்காக நிதிகள் ஒதுக்கியும் இதுவரை வேலை நடைபெறவில்லை. சுசீந்திரம் கோயில் 10 நாள் திருவிழாவிற்கு அரசு மூலம் ஒதுக்கிய தொகை வெறும் இரண்டு லட்சம் ரூபாய்தான். ஆனால் பக்தர்களின் பங்களிப்பு 20 லட்சம் ரூபாய் ஆகும். மக்களின் பங்களிப்பு மூலம் செயல்படுகின்ற ஒரே துறை இந்து சமய அறநிலையத்துறை மட்டும்தான். இதனை அமைச்சர் உணர்ந்து செயல்பட வேண்டும். இந்நிலையில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழாவில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என்றார். சுசீந்திரம்: ஆலயத்தையும், பக்தர்களையும் அவமானப்படுத்திவிட்டார் - சேகர் பாபு மீது காட்டமான பொன்னார்

விகடன் 4 Jan 2026 8:00 am

சென்னையில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்-சிஎம்ஆர்எல் அறிவிப்பு!

சென்னையில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சிஎம்ஆர்எல் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமயம் 4 Jan 2026 7:56 am

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 4 Jan 2026 7:01 am

Doctor Vikatan: சராசரிக்கு முன்பே பூப்படைவது, வயதைத் தாண்டியும் தள்ளிப்போவது; இயற்கை தீர்வு உண்டா?

Doctor Vikatan: இந்தக் காலத்துப் பெண் குழந்தைகளில் சிலர் சராசரி வயதுக்கு முன்பே பூப்படைகிறார்கள். இன்னும் சிலரோ, சராசரி வயதைக் கடந்தும் பூப்பெய்தாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆங்கில மருந்துகள், ஹார்மோன் மருந்துகள் கொடுப்பதுதான் ஒரே தீர்வா... உணவின் மூலமோ, இயற்கையான வழிகளிலோ பிரச்னையைச் சரி செய்ய ஏதேனும் வாய்ப்புகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி பெண் குழந்தைகளின் மாதவிடாய் பிரச்னைகளைச் சமாளிக்க அவர்களுக்குச் சிறு வயது முதல் உணவுப் பழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே வெந்தயமும் உளுந்தும் கொடுத்துப் பழக்க வேண்டும். இவற்றில் உள்ள புரதச்சத்து அவர்களது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. சருமத்தின் அடியிலுள்ள 'சப்கியூட்டேனியஸ்' லேயரில் கொழுப்பு படிவதைக் குறைக்கும். ரத்தச் சர்க்கரை அளவையும் குறைக்கும்.  இரும்புச்சத்தும் கால்சியமும் நிறைந்த வெந்தயத்தை களியாகவோ, பொடியாகவோ கொடுத்துப் பழக்கலாம். கறுப்பு உளுந்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, புரதம் போன்றவை எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். கறுப்பு உளுந்தில் கருப்பட்டி சேர்த்து களியாகவோ, கஞ்சியாகவோ செய்து கொடுக்கலாம். இந்த இரண்டும் சராசரி வயதுக்கு முன்பே மாதவிடாய் வருவதைத் தடுக்கும். எந்நேரமும் மாதவிடாய் வரலாம் என்ற அளவுக்கு உடல் வளர்ச்சி சந்தேகத்தைக் கிளப்பினால், அந்தப் பெண் குழந்தைகளுக்குத் தினமும் பொட்டுக்கடலைக் கொடுக்கலாம். அது மாதவிடாயைத் தள்ளிப்போட உதவும். கறுப்பு எள் Doctor Vikatan: டீன் ஏஜ் பெண்கள் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிப்பது சரியா? சராசரி வயதைத் தாண்டியும் மாதவிடாய் வராத பெண்களுக்கு கறுப்பு எள் ஆகச் சிறந்த மருந்து. இதிலுள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்னும் இரும்புச்சத்தும் ஹார்மோன் குறைபாடுகளைச் சரியாக்கும். கறுப்பு எள்ளை ஊறவைத்த நீரைக் குடிக்கலாம், கறுப்பு எள்ளுடன் வெல்லம் சேர்த்து உருண்டையாகச் சாப்பிடலாம். அதே போல கருஞ்சீரகமும், மாதவிடாய் தாமதமாவதைச் சரியாக்கும். கருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். கருஞ்சீரகத்தைப் பொடித்து வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். துவர்ப்புச் சுவை உள்ள வாழைப்பூவை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். தென்னம்பாளையின் பூ, செம்பருத்திப்பூ போன்றவற்றை ஜூஸாகச் செய்து குடிக்கலாம். இதையெல்லாம் திடீரென செய்யாமல், ஆரம்பத்திலிருந்தே வாழ்வியல் மாற்றமாகப் பின்பற்றினால், பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகும் ஆரோக்கியமாக இருப்பார்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

விகடன் 4 Jan 2026 7:00 am

Parasakthi: திருச்சில இருந்து ஒரு தியேட்டர் ஓனர் அழைத்து, உங்க படம் வரணும்னு.! - சுதா கொங்கரா

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். சுதா கொங்கரா பேசுகையில், மணி சார் எனக்கு கத்துக்கொடுத்த முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்னு ஆசைப்படுகிறேன். இது நடக்காது, முடியாது, வராதுனு சொல்றதெல்லாம் நடத்தி காட்டணும்னுதான் என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்துருக்காரு. அதுதான் 'பராசக்தி'. எனக்கு இன்னைக்கு பேச பெருசா எதுவும் இல்ல. 'பராசக்தி' பேசும், படத்த பாத்துட்டு நீங்க பேசுங்க. அதுதான் படத்துக்கு தேவை! Sudha Kongara ஒரு தியேட்டர் ஓனர் திருச்சில இருந்து கூப்பிட்டு உங்க படத்துமேல இருந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சதா?ன்னு கேட்டாரு. அவர்கிட்ட முடிஞ்சதுனு சொன்னேன். அதுக்கு அவர், ‘ஒரு விஷயம் சுயநலமா சொல்றேன் மா. உங்க படம் ரிலீஸ் ஆகணும். அப்போதான் தியேட்டருக்கு மக்கள் வருவாங்க. அப்போதான் எல்லாரும் லாபம் அடைவாங்க. அப்போதான் எங்களுக்கும் நல்லது’னு சொன்னாரு. இந்தப் பொங்கலுக்கு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகுது. இரண்டு படமும் நல்லா ஓடணும். தியேட்டருக்கு மக்கள் நிறைய வரணும். அப்போதான் சினிமா வாழும். எல்லாரும் தியேட்டருக்கு போய் படம் பாருங்க! எனப் கூறினார்.

விகடன் 4 Jan 2026 6:06 am

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள்: பூந்தமல்லி-வடபழனி பிப்ரவரி மாதம் முதல் ரயில்கள் இயக்கப்படும்?

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பூந்தமல்லி-வடபழனி பிப்ரவரி மாதம் முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 4 Jan 2026 6:03 am

Parasakthi Audio Launch: டைட்டில் மாதிரியே படமும் பவர்புல்தான்! - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன் விழாவில் சிவகார்த்திகியன் முதல்ல 'பராசக்தி' பெயரே பவர்ஃபுலான பெயர். அது எப்படி பவர்ஃபுலாக இருக்கோ, அதே மாதிரி படமும் பவர்ஃபுல் தான். உங்க எல்லாரையும் 1960களுக்கு டைம் டிராவல் பண்ணி கூட்டிட்டு போறது தான் இந்த படம். மாணவர்களும், இளைஞர்களும் எப்போதும் பவர்ஃபுல்னு காட்டுற படம்தான் பராசக்தி. இது யாருக்கும் எதிரான படமோ, யாரையோ தப்பா காட்டுற படம் இல்ல. ஆனா இந்த மண்ணுக்காக போராடிய தியாக செம்மல்கள் பற்றின படம். Sivakarthikeyan இதுக்கு மேல படம் பேசும்! அருண் விஷ்வா ப்ரோவுக்கு ஸ்கிரிப்ட் படிக்குறதுக்கு முன்னாடியே போன் பண்ணி ‘இந்த படம் பண்ணுறதுக்கு ஒரே காரணம் சுதா மேடம் தான்’னு சொன்னேன். அவங்களோட எனக்கு பழக்கம் இல்ல. ஆனா, அவங்க எப்படி வொர்க் பண்ணுவாங்கன்னு தெரியும். ஸ்கிரிப்ட் படிச்சு முடிச்சதும் கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. சுதா மேடம் ஷூட்டிங்லையும் இங்கிலீஷ்லதான் எக்ஸ்ப்ளெயின் பண்ணுவாங்க. இங்கிலீஷ்னா சாதாரண இங்கிலீஷ் இல்ல, அது ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ்! நான் கௌதம் மேனன் சார்கூட படம் பண்ணிருந்தா எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருக்கும். அதுனால எனக்கு அவங்க பேசுறது புரியல. இந்த படம் நிச்சயமா வெற்றி பெறும்னு நம்பிக்கை இருக்கு. ஆனா உங்க (சுதா கொங்கரா) உழைப்புக்காக கண்டிப்பா இது ஓடும் மேம். காலேஜ்ல சில டீச்சர்கள் ஸ்ட்ரிக்ட்னு சொல்வாங்க. ஆனா, காலேஜ் முடியும்போது ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. அப்படிதான் இப்ப மேடமும் எனக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப். காலேஜ் படிக்கும்போது ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படம் பார்த்துட்டு, படத்துல ரவி மோகன் சார் போட்டிருந்த காஸ்ட்யூம்ஸ் எல்லாம் தேடித் தேடி போய் வாங்கி போட்டிருக்கோம். ஸ்க்ரீன்ல உங்கள ரொம்ப ரசிச்சிருக்கேன். கூட வொர்க் பண்ணும்போது ரொம்ப ரசிச்சேன் சார். தேங்க் யூ சார்! அதர்வா ப்ரதருடைய கதாபாத்திரத்தைப் பற்றி நான் படிக்கும் போது ‘இந்த கேரக்டர் யாருக்கு கிடைக்குதோ, அவங்க ரொம்ப லக்கி’னு நினைச்சேன். அது அதர்வா ப்ரதருக்கு கிடைச்சது ரொம்ப சந்தோஷம். இந்த இண்டஸ்ட்ரில எனக்கு கொஞ்சம் நண்பர்கள் தான் இருக்காங்க. பராசக்தி டீம் அதர்வா ப்ரதர் எனக்கு ஒரு பிரதர். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஜாலியா ஒரு படம் பண்ணுவோம். இந்த படத்துல உங்க ரோல் எல்லாருக்கும் பிடிக்கும். உங்க அப்பாவ ரொம்ப பெருமைப்படுத்தும்! ஸ்ரீலீலாவோட டான்ஸ் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். அவங்க டான்ஸ் எப்படி பிடிச்சதோ, அதே மாதிரி உங்க ரோல் இந்த படத்துல எல்லாருக்கும் பிடிக்கும். சுதா மேடம் படத்துல எல்லா ஹீரோயின் ரோலும் பவர்ஃபுலாக இருக்கும். ஆல் தி பெஸ்ட் உங்களுக்கும்! எனப் பேசினார்.

விகடன் 4 Jan 2026 5:56 am

2026 ஜல்லிக்கட்டு போட்டி: காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்!

2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தேதிகளை அறிவித்த பிறகு இந்த பனிகள் அனைத்தும் தொடங்கப்பட்டன .

சமயம் 4 Jan 2026 5:47 am

பிராட்வே பேருந்து முனையத்துக்கு மாற்றாக ராயபுரம், தீவத்திடலில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு!

பிராட்வே பேருந்து முனையத்துக்கு மாற்றாக ராயபுரம், தீவத்திடலில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 4 Jan 2026 5:33 am

புத்தாண்டு தின தாக்குதல் திட்டம் முறியடிப்பு ; அமெரிக்க அதிகாரிகள் அறிவிப்பு

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று “ஐஎஸ்ஐஎஸ்” அமைப்பினால் நடத்தப்படவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, 18 வயது இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை (FBI) தெரிவித்தது. இந்தத் தாக்குதல் முயற்சியானது நேரடியாக “ஐஎஸ்ஐஎஸ்” பயங்கரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு திட்டமிடப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. “எமது சிறந்த பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் […]

அதிரடி 4 Jan 2026 3:30 am

✈️ கரீபியன் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து

வெனிசுலாவில் இன்று (ஜனவரி 3, 2026) அதிகாலை நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின்… The post ✈️ கரீபியன் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 2:11 am

சுவிட்சர்லாந்தில் பலரின் உயிரை பறித்த தீப்பரவல் ; மெழுகுவர்த்தி ,ஷாம்பெயின் போத்தல்கள் காரணம்

2026 புத்தாண்டு நாளில் சுவிட்சர்லாந்தில் பாரிய தீப்பரவலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்துக்கு மெழுகுவர்த்தி மற்றும் ஷாம்பெயின் போத்தல்கள் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ புத்தாண்டு கொண்டாத்தில் மக்கள் ஈடுபட்ட நிலையில் சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவிலுள்ள உணவகத்துடன் இணைந்த மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் பலியானதுடன் , 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதேசமயம் விபத்து நடந்த நேரத்தில் 400க்கும் மேற்பட்டோர் அங்கு […]

அதிரடி 4 Jan 2026 1:30 am

நேபாளத்தில் ஓடுதளத்தை விட்டு விலகி பாய்ந்த விமானம் ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

நேபாளத்தின் பத்ராப்பூர் (Bhadrapur) விமான நிலையத்தில் இன்று தரையிறங்கிய புத்தா ஏர் (Buddha Air) நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமானத்தில் 51 பயணிகளும் நான்கு பணியாளர்களும் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான கண்காணிப்புத் தரவுகளின்படி , இந்த விபத்துக்குள்ளான விமானம் 9N-AMF இலக்கத்தைக் கொண்ட ATR 72-500 ரக டர்போபிராப் பயணிகள் […]

அதிரடி 4 Jan 2026 12:30 am

 பாரதிராஜா  அவசர சிகிச்சைப் பிரிவில்  ) அனுமதிக்கப்பட்டுள்ளார்

இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்… The post பாரதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் ) அனுமதிக்கப்பட்டுள்ளார் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 12:18 am

வெனிசுலா அரசை அமேரிக்கா நடத்தும் - டிரம்ப்

பாதுகாப்பான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்கா வெனிசுலாவை நடத்தும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா மிகவும் வலுவாக ஈடுபட்டுள்ளது என்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட'பின்னர டிரம்ப் கூறுகிறார். அவர்கள் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்கள் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள நேரிடும்.

பதிவு 4 Jan 2026 12:06 am

வெனிசுலாவிலுள்ள  அமெரிக்கப் பிரஜைகளுக்கு   பாதுகாப்பு எச்சரிக்கை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) இன்று (ஜனவரி 3, 2026) வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக்… The post வெனிசுலாவிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Jan 2026 11:56 pm

அமெரிக்கக் காவலில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ!

வெனிசுலா அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் அதிரடியான மாற்றமாக, அந்த நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicols… The post அமெரிக்கக் காவலில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Jan 2026 11:11 pm

கைவிலங்குடன் வெனிசுலா அதிபர்.. அந்நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைதாகி கைவிலங்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இனி வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

சமயம் 3 Jan 2026 11:09 pm

Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். ரவி மோகன் பேசுகையில், ஹாப்பி நியூ இயர் எல்லாருக்கும். ஹாப்பியா சொல்லுங்க! ஏன்னா நான் படம் பார்த்துட்டேன். இந்த ஆண்டின் தலைசிறந்த படமா இது மாறும்னு கண்டிப்பா எங்களுக்கு தெரியும். எஸ்.கே எவ்வளவு கடின உழைப்பு போட்டிருக்காரு. இங்க இருந்து அங்க வரைக்கும் வந்துருக்காருனா அது சாதாரண விஷயமில்லை. அவரோட ரசிகர்கள் இதே மாதிரி அவர்கூட ஓடிக்கிட்டே இருங்க. ஜி.வி இது நூறு னு நினைக்காதீங்க. இதை முதல் படம் னு நினைச்சுக்கோங்க. இன்னும் 100 படம் நீங்க பண்ணனும்! Parasakthi - Ravi Mohan இந்த படத்துல ஒரு தீயை அழிக்கணும்னு நான் முயற்சி பண்றேன். ஆனா இந்த தீயை வெளிய சில பேர் அழிக்க பார்க்கிறாங்க. இந்த படம் பண்ணதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. ஒன்னே ஒன்னுதான். இந்த படம் சுயமரியாதையை காப்பாத்துறதைப் பற்றின படம். என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன். எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன். சுயமரியாதைய மட்டும் விட்டறாதீங்க! எனப் பேசினார்.

விகடன் 3 Jan 2026 10:59 pm

அமெரிக்கரை திருமணம் செய்தாலும் கிரீன் கார்ட் கிடைக்காது ; ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடு

குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தற்போது கிரீன் கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளது. அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்காக பல்வேறு விசாக்களில் செல்கிறார்கள். இவர்களில் ஏராளமானோர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இந்த கிரீன் கார்டு ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது. அமெரிக்கக் குடியுரிமை இதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற […]

அதிரடி 3 Jan 2026 10:30 pm

கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்பு!

வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் புதுவருடதினத்தன்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த கணவன் மனைவி ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இருவரும் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் நீரில் மூழ்கி இருவரும் சாவடைந்துள்ளனர். சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த கிருசாந்தன் (வயது 22), நிசாந்தினி (வயது 19) ஆகிய இளம் தம்பதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 3 Jan 2026 10:25 pm

Parasakthi Audio Launch: சுதாகிட்ட இருந்து ஒரு நடிகரும் தப்பிக்க முடியாது - மணிரத்னம்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் மணி ரத்னம், சுதா என்கிட்ட 'ஆயுத எழுத்து', 'யுவா' என ரெண்டு படங்களிலும் வேலை செஞ்சாங்க. அந்தப் படங்கள்ல அவங்க கண்டினியூட்டி இன்சார்ஜ். எப்போதும் கையில ஒரு கேமரா இருக்கும். நிறைய ஆர்ட்டிஸ்ட், நிறைய ஹீரோக்கள், நிறைய ஹீரோயின்கள்கூட வேலை பார்த்தாங்க. ஆனால் ஒரு ஆர்ட்டிஸ்ட் கூட சுதாகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. ஷூட்டிங் முடிஞ்சு வெளிய போனால்கூட சுதாவைத் தாண்டித்தான் போக முடியும். Mani Ratnam கண்டினியூட்டி தவறுகளைப் பார்த்துவிட்டுத்தான் விடுவாங்க. அப்போதே சுதாவைப் பார்த்து பயப்படாத ஆர்ட்டிஸ்ட்டே கிடையாது. அப்போவே அப்படின்னா, இப்போ சொல்லவே வேண்டாம். சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்ஸ்லாம் ரொம்ப சரியாகத் தேர்ந்தெடுக்கிறார். Wishing you a very very best! என்றதும் சிவகார்த்திகேயன் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்.

விகடன் 3 Jan 2026 9:58 pm

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கோர்ட் கஸ்டடியிலிருந்த ஆதாரம் அழிப்பு; கேரள முன்னாள் அமைச்சருக்கு சிறை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ளார். பினராயி விஜயன் கேரள மாநில முதல்வராக இரண்டாவது முறை பதவியேற்றபோது கூட்டணி ஒப்பந்தத்தின்படி முதல் இரண்டரை ஆண்டுகள் அமைச்சராக இருந்தார் ஆண்டனி ராஜூ. சாலைப் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். ஆண்டனி ராஜூ வழக்கறிஞராக இருந்த சமயத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கோர்ட் கஸ்டடியில் இருந்த ஆதாரத்தை அழித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இப்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸால்வதோர் என்பவர் 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி விமானம் மூலம் கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரைப் பரிசோதித்தபோது உள்ளாடையில் மறைத்து வைத்து 2 பாக்கெட் போதைப்பொருட்கள் கடத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கு திருவனந்தபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது, ஆண்ட்ரூ ஸால்வதோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் ஜூனியர் வழக்கறிஞராக ஆண்டனி ராஜூ இருந்தார். அப்போது கோர்ட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த ஜோஸ் என்பவரின் உதவியுடன் கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெளியே எடுத்துவந்து, அதை வெட்டி சின்ன அளவில் தைத்து மறுபடியும் வைத்துவிட்டார். அந்த வழக்கில் உள்ளாடையின் அளவில் வித்தியாசம் இருந்ததாகக் கூறி ஆண்ட்ரூ ஸால்வதோர் விடுவிக்கப்பட்டார். பின்னர் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்ட்ரூ ஸால்வதோர், அவருடன் சிறையில் இருந்த சக கைதியிடம் கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெட்டி சிறிதாக்கி தண்டனையில் இருந்து தப்பித்த விவரத்தைத் தெரிவித்தார். கோர்ட் கஸ்டடியிலிருந்த உள்ளாடையின் அளவு குறைக்கப்பட்ட விவரம் அதன்பின்னர் மெல்ல வெளியே கசிந்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் 1994-ம் ஆண்டு வழக்குப் பதியப்பட்டது. குற்றம் செய்தவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட உள்ளாடையின் அளவை மாற்றி ஆதாரங்களை அழித்ததாக விசாரணை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் கோர்ட் ஊழியரான ஜோஸ் மற்றும் ஆண்டனி ராஜூ ஆகியோர் மீது 1994-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நெடுமங்காடு ஜூடீசியல் ஃபஸ்ட் கிளாஸ் கோர்ட்டில் நடந்துவந்தது. ``கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும் - பினராயி விஜயன் இந்த வழக்கை ரத்துச் செய்ய வேண்டும் எனக்கோரி ஆண்டனி ராஜூ சுப்ரீம் கோர்ட் வரை மனு அளித்திருந்தார். விசாரணை நடவடிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனச் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 29 சாட்சிகளில் 19 பேர் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நெடுமங்காடு ஃபஸ்ட் கிளாஸ் கோர்ட் ஆதாரங்களை அழித்ததாக முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூ மற்றும் ஜோஸ் ஆகியோருக்குத் தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூ 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றுள்ளதால் ஆண்டனி ராஜூ-வின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆண்டனி ராஜூ இனி ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டனி ராஜூ மற்றும் ஜோஸ் ஆகியோருக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்துகொள்ளலாம். மேல்முறையீட்டில் அவர்களது தண்டனையை கோர்ட் நிறுத்திவைத்தால் ஆண்டனி ராஜூ தேர்தலில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

விகடன் 3 Jan 2026 9:12 pm

Decode Jana Nayagan Trailer: 'பகவந்த் கேசரி'ரீமேக்கா? டிரெய்லரில் ஒத்துப்போகும் காட்சிகள் என்னென்ன?

விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் தொடங்கப்பட்ட நாள் முதல், இது பாலய்யா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் எனத் தகவலாகப் பேசப்பட்டது. Jana Nayagan Trailer - Vijay இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இயக்குநர் அ.வினோத் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், இந்தக் கதை ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக்கோ, அதிலிருந்து லைட்டா சில சீன்களை எடுத்து ரீமேக் செய்திருக்காங்களோ, அல்லது அதில் உள்ள ஒரு சீனை மட்டும் எடுத்து ரீமேக் செய்திருப்பாங்களோ... இப்படி எதுவாக வேணா இருக்கட்டும். இதைப் பத்தி படம் பார்க்க வர்றவங்க கவலைப்பட வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா, இது ஒரு தளபதி படம். Jana Nayagan Trailer: மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க - வெளியான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர்! ‘இது ரீமேக் படம்... நான் ஏற்கெனவே அந்தப் படத்தைப் பார்த்துட்டேன். அப்புறம் ஏன் இதைப் பார்க்கணும்’ என்கிற எண்ணம் சில பேருக்கு இருக்கும். இல்ல, சிலருக்குக் கோபம்கூட இருக்கும். அவங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். நீங்க ஒரு ஷோ மட்டும் காத்திருங்க. அந்த ஷோவில் உங்களுக்கு விடை தெரிஞ்சிடும். அடுத்தடுத்து டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளிவரும். அதில் ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிய வரும். இந்த விஷயத்தில் என்னால ‘ஆமாம்’னும் சொல்ல முடியாது. ‘இல்லை’னும் சொல்ல முடியாது என்றே கூறியிருந்தார். Jana Nayagan Trailer - Vijay இந்த டிரெய்லரில் அமைக்கப்பட்டிருக்கும் சில காட்சிகள் 'பகவந்த் கேசரி' படத்துடன் ஒத்துப்போவதாக இருக்கின்றன. 'பகவந்த் கேசரி' படத்தில் பாலகிருஷ்ணாவின் கதாபாத்திரத்தின் பெயர், NBK என்ற விரிவாக்கமாக 'நீலகொண்டா பகவந்த் கேசரி' என வைத்திருப்பார்கள். அதுபோல, இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயரை 'தளபதி வெற்றிக் கொண்டான்' என மூன்று பெயர்கள் கொண்டதாக அமைத்திருக்கிறார்கள். அப்படத்தின் முதல் காட்சியில் பாலய்யா ஜெயிலில் இருப்பார். அதுபோன்றதொரு ஜெயில் காட்சிகள் இந்த டிரெய்லரிலும் இடம்பெற்றிருக்கின்றன. அப்படத்தில் பாலையாவின் வளர்ப்பு மகளாக வரும் ஶ்ரீலீலாவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி. Jana Nayagan: 'தங்கமே தளபதி!' - 'ஜனநாயகன்' படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் |Photo Album அதுபோல, இப்படத்திலும் விஜய்யின் மகள் வேடத்தில் வரும் மமிதா பைஜுவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி என்பதையும் இந்த டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படத்தில் அவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என பாலையா ஆசைப்படுவார். ஆனால், ஶ்ரீலீலாவுக்கு அதன் மீது பெரியளவில் நாட்டம் இருக்காது. அதுபோல, 'ஜனநாயகன்' பட டிரெய்லரிலும் மமிதா பைஜுவை ராணுவத்திற்கு அனுப்ப விஜய் ஆசைப்படுகிறார். ஆனால், அதன் மீது மமிதா பயம் கொண்டிருப்பதாக இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 'பகவந்த் கேசரி' படத்தில் பாலையா பிளேஷ்பேக் காட்சியில் போலீஸாக இருப்பார். அங்கிருந்துதான் வில்லனுடனான மோதல் தொடங்கும், அதுபோல இதிலும் பிளாஷ்பேக் காட்சியில் விஜய் போலீஸாக இருப்பதாக டிரெய்லரில் சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். Jana Nayagan Trailer - Mamitha Baiju இதனைத் தாண்டி, 'பகவந்த் கேசரி' படத்தில் வரும் தொழிற்சாலை சண்டைக் காட்சி, கிராமப் பகுதி காட்சிகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதாக டிரெய்லரில் சில காட்சிகள் இருக்கின்றன. அத்துடன், அப்படத்தில் இல்லாத அரசியல் சார்ந்த விஷயங்கள், ரோபோ சண்டைக் காட்சிகள் இப்படத்தில் புதிதாகச் சேர்த்திருப்பதாக டிரெய்லரின் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. இரண்டு படங்களையும் ஒப்பிட்டு, 'ஜனநாயகன்', 'பகவந்த் கேசரி' படத்தின் பாதி ரீமேக்தான் என ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். டிரெய்லர் பற்றிய உங்களுடைய கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள். Jana Nayagan: 'ஜனநாயகன்' ரீமேக்கா? - சொல்கிறார் 'பகவந்த் கேசரி' பட இயக்குநர் அனில் ரவிபுடி

விகடன் 3 Jan 2026 8:45 pm

உலகம் அழியப்போவதாக மக்களிடையே பீதியை ஏற்படுத்திய தீர்க்கதரிசி கைது!

2025 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி உலகம் அழியப்போவதாக தெரிவித்த கானா நாட்டை தீர்க்கதரிசி என கூறிக்கொண்ட எபோ நோவா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான குறித்த நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொள்கிறார். அவர் சாக்கு உடை அணிந்து கொண்டு மக்களுக்காக உண்ணாவிரதம், பிரார்த்தனை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு வரவிருக்கும் பேரழிவு குறித்து எச்சரிப்பதாக இணையத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். டிசம்பர் 25 ஆம் திகதி உலகம் அழியப்போவதாக காணொளி அந்த […]

அதிரடி 3 Jan 2026 8:30 pm

அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார் - நயினார் நாகேந்திரன்

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தி.மு.க அரசின் ஆயுட்காலம் முடிவடையக் கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன்? செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கை என்ன ஆனது? ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா அல்லது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா? தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை. ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு தி.மு.க-வின் வாடிக்கையான ஏமாற்று வேலை. நாளை புதுக்கோட்டையில் பா.ஜ.க யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வைக்கும் கட்சிகளும், கூட்டணியில் சேரப் போகும் கட்சிகளும் கலந்து கொள்வார்கள். nayinar nagenthiran அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார். என்ன மாதிரியான மாற்றங்கள் என்பது அவர் வந்து சென்ற பின்புதான் தெரியும். யார் முதலமைச்சராக வரவேண்டும் என்பதைக் காட்டிலும் யார் முதலமைச்சராகத் தொடரக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். தி.மு.க ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி. போலி மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடிய ஆட்சி. உண்மையான மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. நாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றார். 'நானும் அண்ணாமலையும் ஆடப் போகும் ஆட்டம் இனி ஆரம்பம்' - கோவையில் நயினார் நாகேந்திரன் அதிரடி

விகடன் 3 Jan 2026 8:16 pm

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரின் கைதும் உலக எதிர்வினையும்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicols Maduro) மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் ஜனவரி 3,… The post வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரின் கைதும் உலக எதிர்வினையும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Jan 2026 8:08 pm

வாக்காளர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அழைப்பு.. வாக்காளர் உதவி முதல் தேர்தல் தகவல் வரை!

ECINet செயலி Google Play Store மற்றும் Apple App Store ஆகிய இரண்டிலும் பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு தரப்பினரும் எளிதாக இந்த செயலியை அணுக முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமயம் 3 Jan 2026 7:55 pm

தையிட்டி விகாரைக்கு எதிரான பெரும் போராட்டம்- பெருமளவில் காவல்துறையினர் குவிப்பு.

தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத விகாரையை அகற்றி பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க கோரி பௌர்ணமி தோறும், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பௌர்ணமி நாளான இன்று, காலை 8 மணி தொடக்கம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், காணி உரிமையாளர்களுடன், அரசியல்

புதினப்பலகை 3 Jan 2026 7:47 pm

கண்டா வரச்சொல்லுங்க - அமைச்சர் கே.என். நேருவைத் தேடும் தூய்மைப் பணியாளர்கள்; பின்னணி என்ன?

அரசு ஊழியர்களின் கோரிக்கையையும் போராட்டத்தையும் ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்களோடு கூடிய டேப்ஸ் என்ற ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர். செவிலியர்களின் போராட்டத்துக்குச் செவி சாய்த்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், போராடும் ஆசிரியர்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள் என அக்கறைக் காட்டுகிறார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். கே.என்.நேரு எல்லா அமைச்சர்களும் தங்களின் துறைசார்ந்த ஊழியர்களின் போராட்டத்தைச் செவிமடுக்கையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மட்டும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார். சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை அள்ளும் பணிகளைத் தனியாருக்கு ஒதுக்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. இதை எதிர்த்து 1900 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிப்பன் பில்டிங் முன்பு அமர்ந்து போராடத் தொடங்கினர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறை அவர்களை குண்டுக்கட்டாகக் கைது செய்தது. அதன்பிறகும் தூய்மைப் பணியாளர்கள் பின்வாங்கவில்லை. சென்னை மாநகர் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகினர். அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டுவிட்டனர். மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தையும் முற்றுகையிட்டனர். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் வீட்டை முற்றுகையிட்டனர். சென்னை: 'மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!' - குண்டுக்கட்டாக கைது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் அம்பத்தூரில் 50 நாட்களுக்கு மேலாக உயர் நீதிமன்ற அனுமதியோடு சுழற்சி முறையில் நான்கு பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். உச்சக்கட்டமாக இன்று சுடுகாட்டில் குடியேறி தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அவர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்யும் காவல்துறை, பேருந்தில் அடைத்து பல மணி நேரம் ஊரைச் சுற்றி எங்காவது ஒரு மண்டபத்தில் கொண்டுபோய் அடைக்கிறார்கள். மாலைக்கு மேல் விடுவிக்கிறார்கள். மறுநாள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். எந்த இடத்தில் எந்த நேரத்தில் அமர்ந்து போராடுவார்கள் எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் காவல்துறையினர். நாளுக்கு நாள் இவர்களின் போராட்டம் வீரியமாகிக்கொண்டே போகிறது. சென்னை மாநகருக்குள் இப்படியொரு போராட்டம் 150 நாட்களுக்கு மேல் நடந்தும் துறை அமைச்சர் கே.என்.நேரு மட்டும் வாய் மூடி மௌனியாகவே நிற்கிறார் என நொந்துபோய் சொல்கின்றனர் போராடுபவர்களின் பிரதிநிதிகள். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ரிப்பன் பில்டிங் முன்பு 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடியிருந்தனர். அப்போது 7-8 சுற்று பேச்சுவார்த்தை நடந்திருந்தன. எல்லாவற்றிலும் துறைக்குச் சம்பந்தமே இல்லாத அமைச்சர் சேகர் பாபுதான் தலைமை. அவரின் தடாலடியான பேச்சால் எகிறும் தொனியாலும், அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட அந்தக் கடைசி நாளில்தான் அமைச்சர் நேரு பேச்சுவார்த்தைக்கே வந்தார். அப்போதும் 'கோர்ட் உத்தரவு போட்டிருச்சு கலைஞ்சு போய்டுங்க...' என அமைச்சர் சேகர்பாபு கையை விரிக்க, நேரு வாயையே திறக்கவில்லை என்கின்றனர் அந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிலர். “140 நாட்களாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்..!” - ஓடி ஒளியும் மேயர் பிரியா... ரிப்பன் பில்டிங் கைதின் போது எழுந்த விமர்சனங்களால் அமைச்சர் சேகர் பாபு இப்போதெல்லாம் போராட்டத்தின் பக்கம் வெளிப்படையாகத் தலையிடுவதில்லை. பத்திரிகையாளர் சந்திப்புகளில் இது சம்பந்தமான கேள்விகளின்போது, 'காது கேட்காது...' என எஸ்கேப் ஆகத்தான் செய்தார். அவருக்கும் தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறைக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவருக்குக் கையை விரிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவும் போராட்டத்தைக் கண்டும் காணாமல் இருப்பதுதான் பிரச்னை என்கின்றனர் போராடுகிறவர்கள். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் சென்னையின் துணை மேயர் மகேஷ் குமார் இந்த விவகாரத்தைத் தீர்த்து வைப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார். கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதியை, மகேஷ்குமார் அமைச்சர் நேருவின் வீட்டிற்கே அழைத்துச் சென்றிருக்கிறார். நம்பிக்கையோடு கோரிக்கை மனுவைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் போராடும் தூய்மைப் பணியாளர்கள். ஆனால், இவர்களைச் சந்திக்க வெறும் இரண்டே இரண்டு நிமிடங்களை மட்டுமே செலவழித்திருக்கிறார் அமைச்சர் நேரு. 'துணை முதல்வரைச் சந்திக்க அவசரமா போறேன். 21 ஆம் தேதிக்கு மேல என்னனு பார்க்குறேன்' என்றவர் கோரிக்கை மனுவை வாங்கிக் கொள்வதைப் போல ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்துவிட்டு அனுப்பிவிட்டிருக்கிறார். துணை முதல்வருக்குக் கோரிக்கை வைத்து இன்னொரு காப்பி கொடுங்க எனக் கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார் மகேஷ் குமார். 21 ஆம் தேதிக்கு மேல் நேருவிடமிருந்தும் அழைப்பில்லை. துணை முதல்வருக்குக் கொடுத்த மனுவுக்கும் பதிலில்லை. பிரச்னையைத் தீர்த்து வைக்கிறேன் என வந்த மகேஷ் குமாரும் அதன்பிறகு லைனுக்கே வராமல் கமுக்கமாகிவிட்டதில் குழம்பிப் போய் நிற்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள். K.N.Nehru - Ku.Bharathi அதிகாரிகளும் தங்களின் பிரச்னையில் அக்கறை காட்டுவதில்லை என்கின்றனர் போராட்டக்காரர்கள். மாநகராட்சி ஆணையரின் வீட்டையே முற்றுகையிட்டுவிட்ட போதும் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளர் கார்த்திகேயனும் சந்திப்புக்கு நேரம் ஒதுக்காமல் வெறுமனே மனுவை மட்டும் சம்பிரதாயத்துக்கு வாங்கிவிட்டு அனுப்பிவிட்டார் என்கின்றனர் உழைப்போர் உரிமை இயக்கத்தின் நிர்வாகிகள். தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங்கில் போராட்டத்தைத் தொடங்கிய சமயத்திலேயே அரசுக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே பாலமாகச் செயல்படத் தொடங்கினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். வெளியே காட்டிக்கொள்ளாமல் ஆப் தி ரெக்கார்டாக இருதரப்புக்கும் பாலமாகச் செயல்பட்டவர், சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அதையும் போட்டுடைத்தார். தூய்மைப் பணியாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லையே என ஒரு பத்திரிகையாளர் கேட்க, பேச்சுவார்த்தை நடத்தலன்னு உங்களுக்குத் தெரியுமா, நாங்கெல்லாம் பேசிக்கிட்டுதான் இருக்கோம் எனக் கொதித்தார் சண்முகம். டிசம்பர் 30 ஆம் தேதி இரவு மீண்டும் ரிப்பன் பில்டிங்கின் வெளியே அமர்ந்து போராட முயன்றனர் தூய்மைப் பணியாளர்கள். அவர்களைக் கைது செய்து பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைத்திருந்தனர். கண்ணப்பர் திடலில் அவர்களைச் சந்திக்க செல்வப்பெருந்தகை வந்தார். நான் போய் சி.எம்-கிட்ட பேசுறேன். உங்க கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி டெல்லியில இருந்தே அறிக்கை விட சொல்றேன் என நம்பிக்கையாகப் பேசிச் சென்றிருக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் இவ்வளவு நடந்தும் ஆகஸ்ட் 1 க்குப் பிறகு துறைசார்ந்த அமைச்சர் கே.என்.நேரு இன்னும் ஒரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைக்கூட தூய்மைப் பணியாளர்களோடு நடத்தவில்லை. இதுசம்பந்தமாகப் போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதியிடம் பேசினோம். நாங்கள் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலும் போராடவில்லை. எங்கள் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவே போராடுகிறோம். நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், அமைச்சர் தரப்போ அதிகாரிகள் தரப்போ இன்னும் எங்களுடன் உட்கார்ந்து பேசவில்லை. பேசாத வரைக்கும் இந்தப் போராட்டம் வீரியமாகத் தொடரவே செய்யும் என்றார் உறுதியாக. சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: முதல்வர் செய்வது டிராமா - கு.பாரதி பேட்டி

விகடன் 3 Jan 2026 7:30 pm

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாங்களில், 1,173 வாகனங்கள் தீக்கிரை

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாங்களில், 1,173 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 984-ஐ விட அதிகமாகும். புத்தாண்டு கொண்டாங்களில் 505 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 403 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 403 பேர் காவலில்… பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த சம்பவங்கள் நடந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் நிலைமை அதிகமாக அமைதியாக இருந்ததாகவும், வன்முறை சம்பவங்கள் […]

அதிரடி 3 Jan 2026 7:30 pm

India Advances Education Reforms with National Education Policy

India has entered an important stage in its education system with the National Education Policy (NEP), which was announced on

சென்னைஓன்லைனி 3 Jan 2026 7:23 pm

தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தக விவகாரம் ; பிரதமருக்கு நாமல் கூறிய விடயம்

தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட தவறுகள் தொடர்பில் அமைச்சு அதிகாரி ஒருவர் பதவி விலகுவதை விட, பிரதமர் ஹரிணி அமரசூரியவே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாடப்புத்தக விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். வேடிக்கையான முறைப்பாடு மேலும், அமைச்சிற்கு வெளியே உள்ள ஒருவரால் இந்தப் புத்தகத்தை அச்சிட முடியாது […]

அதிரடி 3 Jan 2026 7:21 pm

மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் சடலமாக மீட்பு

நுவரெலியா – அக்கரப்பத்தனை, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அக்கரப்பத்தனை ஆக்ரா தோட்டப் பகுதியில் பாயும் ஆற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 85 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதை, அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். மரண விசாரணைகளின் பின்னர், […]

அதிரடி 3 Jan 2026 7:19 pm

Earth Closest to Sun on January 3, 2026

On January 3, 2026, the sun will appear larger in the sky than on any other day of the year.

சென்னைஓன்லைனி 3 Jan 2026 7:18 pm

ஒருபக்கம் போராடும் தையிட்டி மக்கள்; மறுபக்கம் Nolimit இல் குவிந்த கூட்டம்; யாழின் இன்றைய பரிதாப நிலை!

யாழ்ப்பாணத்தில் தமது நிலங்களை மீட்க தையிட்டி மக்கள் இன்றும் போராட்டம் நடத்திவரும் நிலையில் மறுபக்கம் Nolimit இல் குவிந்த மக்கள் கூட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தமது பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கபட்டமை தொடர்பில் தையிட்டு மக்கள் ஒவ்வொரு பௌணமி தினத்திலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிளவுபட்டு நிற்கும் மக்கள் கூட்டம் அந்தவகையில் இன்றும் தையிட்டியில் மக்கள் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பெருமளவு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி மக்கள் போராட்டத்திற்கு […]

அதிரடி 3 Jan 2026 7:16 pm

வேலூர்: கல்லூரி மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்; மஃப்ளர் மாட்டி பைக்கில் தூக்கிச் செல்லப்பட்ட சடலம்

தி ருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பத்தியாவரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரின் மகன் டேனியல் வல்லரசு (19), வேலூர் ஊரீஸ் கல்லூரியில் பி.ஏ பாதுகாப்புத்துறைப் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வகுப்புப் பிரதிநிதியாகவும் (Class Representative), ஆசிரியர்களிடம் நற்பெயருடன் இருந்து வந்திருக்கிறார் மாணவன் டேனியல் வல்லரசு. கல்லூரி படிப்பிற்காக, வேலூர் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த டேனியல் வல்லரசு, ஊரீஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் ஜூனியர் மாணவன் ஒருவரையும் தன்னுடன் தங்க அனுமதித்திருக்கிறார். அதேபோல, ஆரணி இந்திரா நகரைச் சேர்ந்த கிஷோர் கண்ணன் (19) மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி (19) ஆகிய 2 மாணவர்களும்கூட ஊரீஸ் கல்லூரியில் பி.ஏ பாதுகாப்புத்துறை இரண்டாம் ஆண்டில்தான், டேனியல் வல்லரசுடன் பயில்கின்றனர். இதில், கிஷோர் கண்ணன் சிறு வயதில் இருந்தே டேனியல் வல்லரசுடன் நெருங்கிப் பழகும் நண்பர் ஆவார். கல்லூரி வகுப்பிலும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. வகுப்பில் ஏற்பட்ட பழக்கத்தில் பார்த்தசாரதியும் இவர்களுடன் நெருக்கம் ஆனார். கிஷோர் கண்ணன், பார்த்தசாரதி இருவரும் தங்குவதற்காக வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவிலுள்ள மாடி வீட்டில் வாடகைக்கு அறை எடுத்துக்கொடுத்திருக்கிறார் டேனியல் வல்லரசு. மாணவன் டேனியல் வல்லரசு இந்த நிலையில், டேனியல் வல்லரசுடன் தங்கியிருந்த ஜூனியர் மாணவர் கடந்த டிசம்பர் 25-ம் தேதி சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, டேனியல் வல்லரசும், தனது நண்பன் கிஷோர் கண்ணனுடன் ஆரணியில் உள்ள அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவன் பார்த்தசாரதி மட்டும் தனது வீட்டுக்குச் செல்லாமல், வேலூரிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு அன்று, பார்த்தசாரதி போன் செய்து இருவரையும் வேலூருக்கு வருமாறு அழைத்திருக்கிறார். டேனியல் வல்லரசும், கிஷோர் கண்ணனுடன் புறப்பட்டு வேலூர் வந்திருக்கிறார். அன்று நள்ளிரவில், டேனியல் வல்லரசை நண்பர்கள் இருவருமே சேர்ந்து இரும்பு ராடால் தாக்கி படுகொலை செய்திருக்கின்றனர். வேலூர்: 15 வயது சிறுமி வன்கொடுமை; கடமைத் தவறிய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் - அதிர்ச்சி பின்னணி! இதையடுத்து, டேனியல் வல்லரசுவின் உடல்மீது படிந்திருந்த ரத்தத்தைக் கழுவி சுத்தப்படுத்திய நண்பர்கள் இருவரும், வேறு பேண்ட், சர்ட் எடுத்து உடலுக்கு அணிவித்திருக்கின்றனர். பிறகு, முகத்தை மஃப்ளர் மாட்டி மறைத்து, பைக்கில் நடுவில் அமரவைத்து தூக்கிச் சென்றிருக்கின்றனர். ` பார்ப்பவர்களுக்கு மது மயக்கத்தில் இருப்பதைப்போலத் தெரியவேண்டும் என்பதற்காக, இப்படிச் செய்திருக்கின்றனர். பைக்கில், ஆந்திர மாநில எல்லையோரமிருக்கும் சித்தப்பாறை கிராமத்தின் மலை அடிவாரம் வரை கொண்டுசென்று உடலை வீசிவிட்டு, டேனியல் வல்லரசுவின் செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து தூக்கியெறிந்துவிட்டு, அவரவர் வீடுகளுக்கு இருவரும் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், டேனியல் வல்லரசுக்கு அவரின் பெற்றோர் நேற்று காலை முதலே போன் செய்திருக்கின்றனர். `அரியலூரில் நடைபெறும் என்.சி.சி கேம்ப்பில் கலந்துகொள்வதற்காக மகன் சென்றிருக்கலாம்’ என்று பெற்றோர் நினைத்திருக்கின்றனர். மாலை தொடர்புகொண்டபோதும், போன் சுவிட்ச் ஆஃப்பிலேயே இருந்ததால், கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு விசாரித்திருக்கின்றனர். `என்.சி.சி கேம்ப் 3-ம் தேதியான சனிக்கிழமைதான் நடக்கிறது’ என்று தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. மாணவன் டேனியல் வல்லரசு இதையடுத்து, மகனின் நண்பர்களில் ஒருவரான ஆரணி பகுதியைச் சேர்ந்த கிஷோர் கண்ணனுக்குப் போன் செய்து பெற்றோர் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, நேற்று இரவு 8 மணியளவில், பாகாயம் காவல் நிலையம் விரைந்து வந்த பெற்றோர், மகனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி புகார் மனு அளித்தனர். முதற்கட்டமாகச் சந்தேக கோணத்தில், நண்பன் கிஷோர் கண்ணனைப் பிடித்து விசாரித்தபோது, டேனியல் வல்லரசு கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதைக் கேட்டு, பெற்றோரும், போலீஸாரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடலை வீசிய இடத்துக்கு நண்பனை அழைத்துச் சென்ற போலீஸார், டேனியல் வல்லரசுவின் உடலை இன்று அதிகாலை 3 மணிக்கு மீட்டனர். விடியற்காலை 5.30 மணியளவில், உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்து, இன்று மாலை 3 மணியளவில், பெற்றோரிடம் மாணவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கிஷோர் கண்ணனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. முதற்கட்ட விசாரணையில், மாணவன் டேனியல் வல்லரசு திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ``தங்களுக்கு விருப்பமான ஒரு மாணவியை `கரெக்ட்’ செய்வதாக டேனியல் வல்லரசு `சேலஞ்சு’ செய்தான். அந்த ஆத்திரத்தில்தான் அவனைக் கொலை செய்தோம்’’ எனக் கிஷோர் கண்ணன் வாக்குமூலம் அளித்திருப்பதாக, முதற்கட்ட தகவல்கள் வருகின்றன. இதைத்தொடர்ந்து, புதுச்சேரிக்குத் தப்பி ஓடிய மற்றொரு மாணவனான பார்த்தசாரதியைப் பிடிக்கவும் போலீஸார் அங்கு விரைந்திருக்கின்றனர். இந்தக் கொடூரச் சம்பவம், வேலூரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்

விகடன் 3 Jan 2026 7:03 pm

Jana Nayagan Trailer: மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க - வெளியான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர்!

விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்; படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸிக்குத் தயாராகி வருகிறது. அ.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் நான்கு பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது. Jana Nayagan - Stills - Vijay கூடிய விரைவில் படத்தின் மொத்த மியூசிக் ஆல்பமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. நாளை அந்த இசை வெளியீட்டு விழா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ், இந்த டிரெய்லரை எடிட் செய்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தளபதி வெற்றிக் கொண்டான் என இந்த டிரெய்லரின் மூலம் அறிவித்திருக்கிறார்கள். Jana Nayagan - Vijay 'மக்களுக்கு நல்லது பண்ண, அரசியலுக்கு வாங்கடானு சொன்ன, கொள்ளையடிக்க வர்றீங்க', 'மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க. இப்போ கொன்னா கடவுள் ஆக்கிடுவாங்க', 'திரும்பி போகிற ஐடியாவே இல்ல!' என்பது போன்ற வசனங்கள் ஹைலைட்டாக இந்த டிரெய்லரில் அமைத்திருக்கிறார்கள்

விகடன் 3 Jan 2026 6:58 pm

Big Boss Fame Vikraman’s Movie Shoot Wrapped Celebration Stills

சென்னைஓன்லைனி 3 Jan 2026 6:53 pm

Once Upon A Time in Kayamkulam Web Series Pooja Stills

சென்னைஓன்லைனி 3 Jan 2026 6:51 pm

Train Movie On location Stills

சென்னைஓன்லைனி 3 Jan 2026 6:37 pm

Kiki & Koko Animation Movie Teaser Launch Stills

சென்னைஓன்லைனி 3 Jan 2026 6:35 pm

Raajasaab Movie Audio Launch Event Stills

சென்னைஓன்லைனி 3 Jan 2026 6:33 pm

2026-ன் முதல் சூப்பர் மூன்.. வுல்ஃப் மூனாக பிரகாசிப்பு.. ஆர்வத்துடன் ரசிக்கும் பார்வையாளர்கள்!

ஜனவரி மாத பூரண சந்திரன் பழமையான கதைகளில் ‘வுல்ஃப் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. பனிக்கால இரவுகளில் ஓநாய்கள் ஊளையிடுதல் கேட்கப்பட்டதாக நம்பப்பட்ட கால நினைவுகளிலிருந்து இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

சமயம் 3 Jan 2026 6:32 pm

சென்னை: தனியார் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி; மாணவர்கள் பங்கேற்பு | Photos

தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது - சொல்கிறார் வைகோ

விகடன் 3 Jan 2026 6:02 pm

மீண்டும் களமிறங்கிய சுப்மன் கில்…நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் அணியை அறிவித்த பிசிசிஐ!

டெல்லி :நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயஸ் ஐயர் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரேயஸ் ஐயரின் பங்கேற்பு உடற்தகுதி சான்றிதழுக்கு உட்பட்டது என்று BCCI தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 11 முதல் 18 வரை வடோதரா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகிய மூத்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் விஜய் […]

டினேசுவடு 3 Jan 2026 6:01 pm

வீட்டுக்கு போங்க பாராட்டு விழா எடுப்பாங்க.. ரெட் கார்டு கொடுத்து பார்வதி, கம்ருதீனை விளாசிய விஜய் சேதுபதி

பிக்பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் போய் கொண்டிருக்கிறது. இதில் நடந்த கார் டாஸ்க்கில் பார்வதி, கம்ருதீன் இருவரும் செய்த காரியங்கள் கடுமையான எதிர்ப்பு குரல்களை கிளப்பியுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்ப வேண்டுமென பார்வையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமயம் 3 Jan 2026 5:57 pm

பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் (PMGY)!

PM Gramodaya Yojana (PMGY): கிராமப்புறங்களில் கல்வி, வறுமை, சுகாதாரம், மின்சாரம், வீட்டுவசதி, சாலைவசதி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 3 Jan 2026 5:54 pm

பிரதமர் மோடிக்கு PETA கடிதம்.. தெருநாய் வாழ்நாள் அடைப்புக்கு எதிர்ப்பு.. மனிதநேய தீர்வு தேவை!

தெருநாய்கள் தொடர்பான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி அலுவலகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கும் பீட்டா இந்தியா கடிதம் எழுதி உள்ளது.

சமயம் 3 Jan 2026 5:54 pm

BB Tamil 9: ஒருதர மட்டும்னா 'Unfair Red Card’ங்கிற பேச்சு வரும் - எவிக்‌ஷனில் நீண்ட விவாதம்?

அடுத்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். கமருதீன் முன்னதாக இந்தச் சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் சென்றவர்களிலும் பிரஜின், அமித் பார்கவ் இருவரும் வெளியில் வந்து விட்டனர். இந்நிலையில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. நேற்று நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சாண்ட்ராவை பார்வதியும் கமருதீனும் சேர்ந்து தள்ளி விட்டது பெரிய பிரச்னை ஆகி விட்டதால் இன்று இவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படலாமென்கிற எதிர்பார்ப்பு இருந்தது. BB Tamil 9: நீங்க ரெண்டு பேரும்.!- பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி விஜய் சேதுபதி அதேபோல ஷூட்டிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டது. இருவருமே முதல் நாளில் இருந்து நிகழ்ச்சியில் தொடர்ந்து டாப் 5 பேரில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தச் சம்பவத்தை வைத்து, அதுவும் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே இருக்கிற சூழலில் ரெட் கார்டு தருவதா என்கிற ஒரு விவாதம் சேனல் மட்டத்தில் நடந்ததாகச் சொல்கிறார்கள். அப்படி ஒருவேளை ரெட் கார்டு என்கிற முடிவுக்குப் போனால் கமருதீனை மட்டும் அனுப்பலாமென நினைத்தார்களாம். அவருக்குப் பலமுறை எச்சரிக்கை தரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய சிலர், எனவே அவரை மட்டும் அனுப்பி விடலாம். பார்வதிக்கு எச்சரிக்கை தந்து தொடர அனுமதிக்கலாம் என வாதிட்டிருக்கின்றனர். BB Tamil 9 ஆனால் விஜய் சேதுபதிதான், நடந்த அந்தச் சம்பவத்தின்போது பார்வதி கமருதீனைத் தூண்டியது பளிச்செனத் தெரிவதால், அவரையும் அனுப்புவதே சரியானதாக இருக்கும். ஒருவரை மட்டும் அனுப்பினால், ’அன்ஃபேர் எவிக்‌ஷன்'னு சொல்றாங்களே, அந்த மாதிரி ’அன்ஃபேர் ரெட் கார்டு’ங்கிற பேச்சு கிளம்ப வழி வகுக்கும் எனச் சொன்னதாகத் தெரிகிறது. எனவே நீண்ட விவாதத்திற்குப் பிறகே டபுள் ரெட் கார்டு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்.. BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன?

விகடன் 3 Jan 2026 5:52 pm

IND vs NZ ODI: ‘இந்திய அணி அறிவிப்பு’.. ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு: 15 பேர் பட்டியல் இதோ!

இந்தியா, நியூசிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 பேர் பட்டியலில், துணைக் கேப்டனுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

சமயம் 3 Jan 2026 5:50 pm

 இலங்கைத் தமிழருக்கு  லண்டனில் 67,000 £கள் அபராதம்

பிரித்தானியாவில் தமிழ் இளைஞன் ஒருவரை வேலைத்தலத்தில் மிக மோசமான முறையில் துன்புறுத்தியமை மற்றும் உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டமைக்காக, லண்டனைச்… The post இலங்கைத் தமிழருக்கு லண்டனில் 67,000 கள் அபராதம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Jan 2026 5:48 pm

வெனிசுலாவின் அனைத்து ஆயுதப் படைகளும் களமிறக்கப்படும் - வெனிசுலாப் பாதுகாப்பு அமைச்சர்

வெனிசுலாவின் அனைத்து ஆயுதப் படைகளும் களமிறக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். விரிவான பாதுகாப்பிற்காக, வெனிசுலா அனைத்து நிலம், வான், கடற்படை, நதி மற்றும் ஏவுகணை திறன்களின் பாரிய நிலைநிறுத்தலைத் தொடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ லோபஸ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ அறிக்கையில் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை அதிகாலையில் அமெரிக்கா அலை அலையாக குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதாகவும் லோபஸ் குற்றம் சாட்டினார். படையெடுக்கும் அமெரிக்கப் படைகள் நமது மண்ணை நாசமாக்கியுள்ளன. தாக்குதல் நடத்தும் அளவிற்குச் சென்று, தங்கள் போர் ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை அழித்துவிட்டன என்று அவர் கூறினார்.

பதிவு 3 Jan 2026 5:34 pm

BB Tamil 9: தப்பு பண்ணிட்டேன்.!- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 கார் டாஸ்க் சர்ச்சை அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார். BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன? வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். BB Tamil 9 ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், கம்ருதீனுக்கு பலமுறை சொல்லிருக்கேன். நீங்க இப்படி பேசுறீங்களே அது பார்க்கிறவுங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா? உங்க அக்கா இதை பார்த்தாங்கன்னா தம்பி நீ நல்லா பண்ண அப்படின்னு சொல்லுவாங்களா?... நீ ஒரு பொண்ண கோவத்துல எட்டி உதைச்சதை பார்த்து நான் ரசிச்சேன் அப்படின்னு பாரு அம்மா பாராட்டுவாங்க. உங்க அக்கா பாராட்டுவாங்க. ரொம்ப சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும்... என்று சொல்லி இருவருக்கும் ரெட் கார்ட்டை எடுத்து காண்பித்தார் விஜய் சேதுபதி. காலில் விழுந்த கம்ருதீன் இந்நிலையில் தற்போது மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. உனக்கு எத்தனை டைம் சொன்னே... பாரு உன்னை ட்ரிகர் பண்ணிவிடுறதுனாலத் தான் நீ வார்த்தைய தேவையில்லாம பயன்படுத்துற, உனக்கு கரியர் முக்கியம் பார்த்துக்கோ'ன்னு சொல்லிருக்கேன் என திவ்யா கம்ருதீனிடம் சொல்கிறார். BB Tamil 9 அதற்கு பார்வதி தயவு செஞ்சு நீ பேசாத என சொல்ல திவ்யா நீ முதல்ல வெளியே போ என்று கோபப்படுகிறார். உன்னைய இந்தளவுக்கு நிக்க வச்சதே பார்வதி தான் என வினோத் கம்ருதீனிடம் சொல்கிறார். இதனைத்தொடர்ந்து நான் பண்ணது ரொம்ப பெரிய தவறு சாண்ட்ரா, வாழ்க்கையில மறக்க முடியாத அளவுக்கு தப்பு பண்ணிட்டேன் என பார்வதி கேட்க கம்ருதீன் சாண்ட்ரா காலில் விழுகிறார்.

விகடன் 3 Jan 2026 5:30 pm

தையிட்டியில் போராட்டம்

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 3 Jan 2026 5:30 pm

Happy Raj Movie Stills

சென்னைஓன்லைனி 3 Jan 2026 5:30 pm

Happy Raj Movie Stills

சென்னைஓன்லைனி 3 Jan 2026 5:30 pm

மதுரோ அமெரிக்காவில் விசாரணைக்கு வருவார்: இராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டது!

நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றிய பிறகு, வெனிசுலாவில் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கையை முடித்துவிட்டது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை மேற்கோள் காட்டி அமெரிக்க செனட்டர் ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். மதுரோ அமெரிக்காவில் விசாரணைக்கு வருவார் என்று செனட்டர் கூறுகிறார் அமெரிக்க காவலில் மதுரோ இருப்பதால் வெனிசுலாவில் இனி எந்த நடவடிக்கையும் இருக்காது என்று அவர் எதிர்பார்க்கிறார் என்று ஆரம்பத்தில் இந்த நடவடிக்கையை விமர்சித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் மைக் லீ, ரூபியோவுடன் தொலைபேசி அழைப்புச் செய்த பின்னர் எக்ஸ் தளத்தில் எழுதினார். அமெரிக்காவில் குற்றவியல் குற்றச்சாட்டுகளின் விசாரணைக்காக அமெரிக்க அதிகாரிகளால் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார். வெனிசுலா தலைவர் மார்ச் 2020 இல் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் போதைப்பொருள் பயங்கரவாதம் சதி குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டார். கைது வாரண்டை நிறைவேற்றுபவர்களைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் இந்த வேலைநிறுத்தங்கள் பயன்படுத்தப்பட்டன என்று லீ விளக்கினார்.

பதிவு 3 Jan 2026 5:24 pm

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்! ரஷ்யா முதல் ஈரான் வரை கண்டனம்!

வெனிசுலா :தலைநகர் கராகஸ் உட்பட பல மாநிலங்களில் அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலையில் தொடங்கிய இந்தத் தாக்குதல்களில் ராணுவ நிறுவனங்கள், விமான தளங்கள் குறிவைக்கப்பட்டன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனால் வெனிசுலாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. “வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு. இது மீண்டும் இடதுசாரி – […]

டினேசுவடு 3 Jan 2026 5:23 pm

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு வெனிசுலா கோருகிறது

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு வெனிசுலா கோருகிறது. அமெரிக்கத் தாக்குதல்கள் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் இருப்பிடம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கராகஸ் கோரியது. எங்கள் தாயகத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட குற்றவியல் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு, சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை நாங்கள் கோரியுள்ளோம்என்று வெனிசுலா வெளியுறவு அமைச்சர் யுவான் கில் டெலிகிராமில் எழுதினார்.

பதிவு 3 Jan 2026 5:17 pm

Korean Skincare Tips for Healthy, Glowing Indian Skin

If Korean skincare has taught us anything, it’s this: healthy, glowing skin doesn’t happen overnight. There is no magic cream

சென்னைஓன்லைனி 3 Jan 2026 5:15 pm

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மாலை ஆருத்ரா தரிசனம்

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று

சென்னைஓன்லைனி 3 Jan 2026 5:09 pm

இரு நிமிடங்களுக்கு ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழக்கிறார்

ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள இந்தத் தகவல் உலகெங்கிலும் உள்ள… The post இரு நிமிடங்களுக்கு ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழக்கிறார் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Jan 2026 5:09 pm

எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போட முயன்ற செங்கோட்டையனுக்கு அதிமுக-வினர் எதிர்ப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்குமண்டல அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர்

சென்னைஓன்லைனி 3 Jan 2026 5:07 pm

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள

சென்னைஓன்லைனி 3 Jan 2026 5:06 pm

Nilgiris Bans Poultry Entry Amid Kerala Avian Flu

The Nilgiris district administration has started monitoring the movement of poultry and poultry products into the district. Entry from Kerala

சென்னைஓன்லைனி 3 Jan 2026 5:05 pm

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு

சென்னைஓன்லைனி 3 Jan 2026 5:04 pm

ஒன்றுபட்டாலே அதிமுக வெற்றி பெற்றுவிடும் –ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்

சென்னைஓன்லைனி 3 Jan 2026 4:57 pm

அமெரிக்கப் பிடியில் மதுரோ..? டிரம்பின் அறிவிப்பால் வெனிசுலாவில் பரபரப்பு!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் பிடிபட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 3 Jan 2026 4:43 pm

பொரள்ளையில் மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு

கொழும்பு – பொரள்ளை சஹஸ்புர பகுதியில் காவல்துறையினா் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை… The post பொரள்ளையில் மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Jan 2026 4:39 pm

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்!

கின்னஸ் சாதனையாளர் காலமானார்: உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிகோ மருத்துவமனையில் கடுமையான சிறுநீரகத் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிராங்கோ, சிகிச்சைப் பலனின்றி கடந்த டிச. 24 ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்று கின்னல் சாதனை புத்தகத்தில் பிராங்கோ இடம்பிடித்தார். […]

அதிரடி 3 Jan 2026 4:30 pm

Cibi Chakravarti to Direct Rajinikanth’s Thalaivar 173

Superstar Rajinikanth’s next film, tentatively titled ‘Thalaivar 173’ and backed by Kamala Haasan, has been making headlines as fans and

சென்னைஓன்லைனி 3 Jan 2026 4:27 pm

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்திய US! அதிபர் டிரம்ப் அதிரடி!

வாஷிங்டன் :வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல மாநிலங்களில் அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய இந்தத் தாக்குதல்களில் ராணுவ நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிராண்டா, அரகுவா, லா குய்ரா மாநிலங்களிலும் வெடிப்புகள் கேட்டதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது. இதனால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “வெனிசுலா மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளோம். […]

டினேசுவடு 3 Jan 2026 4:26 pm

வெனிசுலா மீது அமேரிக்கா தாக்குதல்: அதிபர் மதுரோ கைது!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு வெனிசுலாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா அந்நாட்டின் மீது 'பெரிய அளவிலான தாக்குதலை'நடத்தியதாக அவர் மேலும் கூறினார். வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் 'ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது'என்று ரஷ்யா கூறுகிறது. வெனிசுலா எல்லையில் கொலம்பியா படைகளை நிறுத்துகிறது. வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத்p la தாக்குதல்கள் 'ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது'என்று ரஷ்யா கூறுகிறது.வெனிசுலா எல்லையில் கொலம்பியா படைகளை நிறுத்துகிறது

பதிவு 3 Jan 2026 4:24 pm

Rajinikanth Meet Fans in Out Side of Home in New Year 2026

சென்னைஓன்லைனி 3 Jan 2026 4:21 pm

Bollywood Fans Compare Stranger Things Scene to Adipurush

Bollywood fans who are watching the latest season of ‘Stranger Things’ have shared many reactions on social media. While some

சென்னைஓன்லைனி 3 Jan 2026 4:07 pm

'வெற்றிகரமான தாக்குதல்; அதிபரை வெளியேற்றிவிட்டோம்' - வெனிசுலாவை குறிவைத்த ட்ரம்ப்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக பதவியேற்றதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், இன்று வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதையடுத்து வெனிசுலாவில் 'தேசிய அவசரநிலை' அமல்படுத்தப்பட்டது. தற்போது நிக்கோலஸ் மதுரோ நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தனது ட்ரூத் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருப்பதாவது... வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி முடித்துள்ளது. வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் OP Sindoor: நான்தான் நிறுத்தினேன் - ட்ரம்ப்புடன் மோதும் சீனா; பாகிஸ்தானுக்கு ப்ளஸ்; இந்தியாவுக்கு? வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் இன்று காலை (அமெரிக்க நேரப்படி) 11 மணிக்கு நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் தரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை பல நாடுகளில் அமைதியை நிலைநாட்டினேன் என்று கூறி வந்த ட்ரம்ப், தற்போது வெனிசுலா மீது அவரே தாக்குதலை நடத்தி உள்ளார். TAPS: `கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்' - ஸ்டாலின் அதிரடி | முழு தகவல்

விகடன் 3 Jan 2026 4:07 pm

BB Tamil 9: டபுள் எவிக்ஷன் இல்லை, முதல்முறையாக டபுள் ரெட் கார்டு! - கம்ருதீன், பார்வதி அவுட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். தற்போது ஒன்பது பேர் அந்த வீட்டில் இருக்கின்றனர். வைல்டு கார்டு மூலம் சென்ற அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோரில் சாண்ட்ரா, திவ்யா கணேஷ் இருவரும் உள்ளனர். கமருதீன் இந்தச் சூழலில் நேற்று நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின் போது சாண்ட்ராவை கமருதீன் பார்வதி இருவரும் தள்ளி விட்ட சம்பவம் வெளியில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது. முன்னாள் போட்டியாளர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகிற சூழலில் இன்றைய ஷூட்டிங் விஜய் சேதுபதி கலந்து கொள்ள காலையில் பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. BB Tamil 9 தற்போது ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து வரும் தகவல்கள் பார்வதி, கம்ருதீன் இருவருக்குமே ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவும் அதனை உறுதி செய்திருக்கிறது. இது வரையில் டபுள் எவிக்ஷன் தான் பிக் பாஸ் வீட்டில் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது முதல் முறையாக டபுள் ரெட் கார்டு காட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 3 Jan 2026 4:02 pm

Vijay Sethupathi Stars in Silent Film Gandhi Talks

Actors Vijay Sethupathi, Arvind Swamy and Aditi Rao Hydari will soon be seen in a silent film titled ‘Gandhi Talks’.

சென்னைஓன்லைனி 3 Jan 2026 3:59 pm