SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
...

ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் மீது நேற்று ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தனர். இதில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் குறிவைத்து அழிக்கப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அறிவித்தனர். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் ஈரான் வெளியிடாத […]

அதிரடி 1 Mar 2026 5:30 pm

Bala: அவர்தான் என்னை தாயும் தகப்பனுமாய் பார்த்துக் கொள்கிறார் - இயக்குநர் பாலா நெகிழ்ச்சி

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kadhal Reset Repeat ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “விஜய் என்னை குரு என்று சொன்னார். விஜய்தான் எனக்கு குரு. எவ்வளவு கடுமையாக உழைக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்த குரு ஏ.எல். விஜய்தான். அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது, கெட்டதுக்கு பங்கெடுத்து தாயும் தகப்பனுமாய் என்னை அவர் பார்த்துக்கிறார். Director Bala தூங்காமலேயே ஏ.எல். விஜய் வேலை பார்த்துட்டு இருக்கார்” என்றவர், “‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தில் விஜி சந்திரசேகர் அவ்வளவு அற்புதமாக நடிச்சிருப்பாரு. அந்தப் படத்தோட கடைசிக் காட்சியில் இவர் ரத்தத்தைத் துடைச்சிட்டு இருப்பாரு. அந்தக் காட்சியில் கண்களால் அற்புதமாக நடிச்சிருப்பாங்க. எனக்குப் பிடித்த நடிகை ராதிகா மேடம்தான். அவங்களுக்குப் பிறகு எனக்குப் பிடிச்ச நடிகை விஜி சந்திரசேகர்” என்றார்.

விகடன் 1 Mar 2026 5:21 pm

‘டாக்ஸிக்’திரைப்படத்தின் பிரம்மாண்ட சாதனை: தமிழ்நாட்டில் 263 கோடிக்கு விற்பனையான திரையரங்க உரிமைகள்

'டாக்ஸிக்' (Toxic) திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமைகள் இதுவரை இல்லாத அளவாக 263 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ரிலீசுக்கு முன்பே இந்த வணிகம் சினிமா மார்க்கெட்டில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Mar 2026 5:10 pm

வீட்டில் நகை இருந்தாலே போதும்.. அடகு வைத்து பணம் வாங்கிடுவார்கள்.. ஏன் இந்த போக்கு?

நாடு முழுவதும் தங்க நகைகள் அதிகமான அளவில் அடமானம் வைக்கப்படுகின்றன. ஒரே மாதத்தில் ரூ. 24,061 கோடி மதிப்புக்கு தங்க நகைக் கடன்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சமயம் 1 Mar 2026 5:08 pm

SA vs ZIM: ‘வரலாறு படைத்தார் லுங்கு நெகிடி’.. அதிக விக்கெட்களை கைப்பற்றி அசத்தல்: ஜிம்பாப்வே திணறல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 154/7 ரன்களை எடுத்தது. லுங்கி நெகிடி, இப்போட்டியில் ஒரு விக்கெட்டை எடுத்ததன் மூலம், அதிக விக்கெட்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.

சமயம் 1 Mar 2026 4:54 pm

மதுரையில் பிரதமர் மோடி.. ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்.. மக்களுக்கான திட்டங்கள் என்னென்ன?

பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு பயணம் மேற்கொண்டு, இன்று (மார்ச் 1 ஆம் தேதி) ரூ. 4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.

சமயம் 1 Mar 2026 4:51 pm

சர்வதேசச் சந்தையில் அதிரடி ; மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 67.02 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.87 அமெரிக்க டொலராக நிலவுகிறது. மசகு எண்ணெயைத் தொடர்ந்து, இயற்கை எரிவாயுவின் (Natural […]

அதிரடி 1 Mar 2026 4:20 pm

யுத்தங்கள் தீர்வைத் தருவதில்லை.. யாதும் ஊரே யாவரும் கேளிர்.. மத்திய அரசுக்கு தவெக வேண்டுகோள்!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை மனதில் ஏந்துவோம். மனிதநேயம் காக்கப்படவும், வளைகுடா நாடுகளில் மீண்டும் அமைதிப் பூக்கள் மலரவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம் என்று தவெக தெரிவித்து உள்ளது

சமயம் 1 Mar 2026 4:19 pm

பரமக்குடி டூ ராமநாதபுரம் 4 வழிச் சாலை: மதுரை ரூட்டில் வெறும் 1.5 மணி நேரம்- NH 87ல் பெரிய கனெக்‌ஷன்!

தென் தமிழகத்தில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 4 வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் பயன்கள் என்னென்ன, எதிர்காலத்தில் எவ்வாறு விரிவாக்கம் செய்யப்படும் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 4:10 pm

திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்- NDA திட்டம் என்ன?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமரின் மதுரை வருகை தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த பின்னணி குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 3:54 pm

காங்கிரஸுக்கு 25 சீட்டு தான்.. கெடுபிடி காட்டும் திமுக.. தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது.. கிரிஷ் சோடங்கர் தகவல்!

தவெக புதிய கட்சி என்றாலும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞர்கள் மத்தியில் அந்த கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார்.

சமயம் 1 Mar 2026 3:51 pm

‘சூர்யகுமாருக்கு அடுத்து’..இந்திய டி20 அணி புது கேப்டன் யார்? 4ஆவது இடம் யாருக்கு? பிசிசிஐ முடிவு!

சூர்யகுமார் யாதவுக்கு அடுத்து, இந்திய டி20 அணிக்கு புதுக் கேப்டன் யார், 4ஆவது இடம் யாருக்கு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சூர்யகுமாரின் 4ஆவது இடத்தை அனுபவ வீரருக்கு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

சமயம் 1 Mar 2026 3:36 pm

தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல்

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக பதபெந்தி அவர்களின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலாளர் […]

அதிரடி 1 Mar 2026 3:36 pm

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து... நாளை தொடங்குகிறது பொதுத்தேர்வு

தமிழகத்தில் நாளை பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்

சமயம் 1 Mar 2026 3:31 pm

Harris Jeyaraj: நான் அறிமுகப்படுத்திய 64 பேரும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள் - ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kadhal Reset Repeat ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத் தேடி வந்தார். 2000-ல் ‘மின்னலே’ திரைப்படம் வெளிவந்தது. சமீபத்தில்கூட படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். ‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று அந்தப் படத்தில் நாயகன் புதியவர். நாயகி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அனைவரும் புதியவர்கள். Harris Jeyaraj இன்று இந்தப் படத்திற்கும் அப்படித்தான். நல்ல கதை மட்டும் இருந்தால், அது அனைவரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கிவிடும். விளம்பரங்கள், பப்ளிசிட்டி என எதுவும் தேவைப்படாது” என்றவர், “இதுவரை நான் 64 பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இன்று அத்தனை பாடகர்களும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். Harris Jayaraj: ``இரு தரப்பு பாடகர்களுக்கு அவமதிப்பு நடக்குது'' - ஹாரிஸ் ஜெயராஜ்

விகடன் 1 Mar 2026 2:56 pm

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து

வளைகுடா பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் துபாய், ரியாத், தம்மாம் மற்றும் குவைத் உள்ளிட்ட நகரங்களுக்கான 12… The post ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Mar 2026 2:53 pm

மூச்சு விட முடியவில்லை; உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் - 'காதல்'பட நடிகை

‘காதல்’, ‘வாத்தியார்’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை காதல் மல்லேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். ‘காதல்’ திரைப்படத்தில் சந்தியாவின் தாயாராக இவர் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துவந்த இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. Kadhal Movie கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கென யாரும் இல்லாததால், திரைத்துறையினரிடம் சிகிச்சைக்கு உதவி கோரி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் மல்லேஸ்வரி. அந்தக் காணொளியில் ‘காதல்’ மல்லேஸ்வரி பேசியதாவது: “என்னை ‘காதல்’ மல்லேஸ்வரி எனச் சினிமாவில் அழைப்பார்கள். 'காதல்' படத்தில் சந்தியா கதாபாத்திரத்தின் தாயாராக நான் நடித்திருந்தேன். இதுவரை நான் தமிழ், தெலுங்கு என 40 படங்களில் நடித்திருக்கிறேன். Kadhal Malleshwari கவுண்டமணி, செந்தில் சாருடனும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு இப்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாப்பாட்டிற்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறேன். அதனால் உங்களால் முடிந்த உதவியை எனக்காகச் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?

விகடன் 1 Mar 2026 2:39 pm

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை.. ரூ.2700 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் - முழு விவரம் இதோ!

புதுச்சேரிக்கு சென்றபிரதமர் நரேந்திர மோடி சுமார் ₹1,571 கோடி மதிப்பிலான 74 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சமயம் 1 Mar 2026 2:34 pm

அன்று சாய்ரா பானு, இன்று சங்கீதா விஜய்: கோலிவுட்டை அதிர வைத்த எதிர்பாரா விவாகரத்துகள்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மனைவியை அடுத்து விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்பாராத இடத்தில் இருந்து விவாகரத்து அறிவிப்பு வந்ததால் சினிமா ரசிகர்கள் ஆடிப் போனார்கள்.

சமயம் 1 Mar 2026 2:31 pm

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; பள்ளி குழந்தைகள் 51 பேர் பலி

தெஹ்ரான் தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஈரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் ஈரானை தாக்கியது. இதுபற்றி மாகாண கவர்னர் முதலில் கூறும்போது, பள்ளி குழந்தைகளின் பலி எண்ணிக்கை 24 என கூறினார். இந்த எண்ணிக்கை 51 ஆக உயர்ந்து உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று […]

அதிரடி 1 Mar 2026 2:30 pm

பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகங்கள்  –  தூதரகப் பணிமனைகள் முற்றுகை – 8போ் உயிாிழப்பு

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் தூதரகப்… The post பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகங்கள் – தூதரகப் பணிமனைகள் முற்றுகை –8போ் உயிாிழப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Mar 2026 2:26 pm

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்..

கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் அறநெறி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் மற்றும் நாகேஸ் என அன்புடன் அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரான கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் வவுனியாவில் உள்ள அறநெறி மண்டபத்தில் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.. வவுனியாவில் வசிக்கும் அறநெறி வகுப்பு […]

அதிரடி 1 Mar 2026 2:10 pm

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான 86 வயதான அலி… The post ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடுகிறது. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Mar 2026 2:04 pm

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்லவதற்கான உகந்த நேரத்தை அறிவித்த கோவில் நிர்வாகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை மாதம் தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள்

சென்னைஓன்லைனி 1 Mar 2026 2:03 pm

ஐபிஎல் கிரிக்கெட் 2026 –சி.எஸ்.கேவின் புதிய ஜெர்சி அறிமுகம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த உடன், மார்ச் 28-ந்தேதி ஐ.பி.எல். 2026 சீசன் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

சென்னைஓன்லைனி 1 Mar 2026 2:01 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகள்

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார்

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:57 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார்

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:55 pm

பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் உச்ச தலைவரான ஆயத்துல்லா அலி கமேனி , சனிக்கிழமை காலை தனது அலுவலகத்தில் கொல்லப்பட்டார். ஈரானிய தொலைக்காட்சி நாட்டின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. புரட்சிகர காவல்படையின் தளபதி ஜெனரல் முகமது பாக்பூரின் மரணத்தையும் தெஹ்ரான் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 40 ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஒரு உளவுத்துறை வட்டாரமும் இராணுவ வட்டாரமும் சிபிஎஸ் செய்திக்குத் தெரிவித்துள்ளன. ஈரானிய புரட்சிகர காவல்படை பழிவாங்குவதாக உறுதியளித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புக்களை வைத்திருக்கும் 27 தளங்கள் மற்றும் டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய இராணுவ வசதிகள் மீது தாக்குதல்களை நடத்தியதாகக் கூறுகிறது. கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெடிச்சத்தங்கள் தொடர்ந்து கேட்கின்றன.

பதிவு 1 Mar 2026 1:55 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார்

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:54 pm

73 வது பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் –அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:52 pm

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:49 pm

அலி காமேனி கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்கா, சீனா ரஸ்யா மற்றும் இந்தியாவின் நிலைப்பாடுகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி காமேனி கொல்லப்பட்டமை குறித்து… The post அலி காமேனி கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்கா, சீனா ரஸ்யா மற்றும் இந்தியாவின் நிலைப்பாடுகள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Mar 2026 1:48 pm

முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று காஷ்மீர் அணி சாதனை!

ரஞ்சி கோப்பை பைனல் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நேற்று நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:47 pm

துபாய் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் –ஒருவர் உயிரிழப்பு

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்

சென்னைஓன்லைனி 1 Mar 2026 1:45 pm

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; பலர் படுகாயம்

குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலின் காரணமாக பல ஊழியர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், விமான நிலையம் மற்றும் பயணிகளுக்கு சிறிய அளவிலான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் தெரிவித்துள்ளது. குவைத் சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அதிகாரிகள் உடனடியாக சம்பவம் கையாளப்பட்ட இடத்தில் அவசரகால […]

அதிரடி 1 Mar 2026 1:30 pm

⚖️ அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் நாட்டுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது –பழிவாங்கும் படலம்  ஆரம்பம்

நேற்று சனிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 86… The post ⚖️ அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் நாட்டுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது – பழிவாங்கும் படலம் ஆரம்பம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Mar 2026 1:21 pm

யாழில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட கரு தொடர்பில் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக நேற்று (1) பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணை அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6 – 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

அதிரடி 1 Mar 2026 1:06 pm

உக்கடம் பேருந்து நிலையத்தின் டெர்மினல் 1 ரெடி...கோவை மக்கள் ஹேப்பி!

உக்கடம் பேருந்து நிலையத்தின் டெர்மினல் 1 ரெடியாகி உள்ளது. இதன் காரணமாககோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சமயம் 1 Mar 2026 1:06 pm

விஜய், சங்கீதா விவாகரத்தால் இன்ஸ்டாகிராமில் அப்பாவை அன்ஃபாலோ செய்தாரா ஜேசன் சஞ்சய்?

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராமில் தன் அப்பாவை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் என்று பேசப்படுகிறது. மேலும் எக்ஸ் தளத்திலும் அப்பாவை ஜேசன் ஃபாலோ செய்யவில்லை என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

சமயம் 1 Mar 2026 12:55 pm

ஈரான் - இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குச் சொந்தமான துபாய் சொத்துகள் குறிவைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன. ட்ரம்ப் ஈரானின் ஏவுகணைகள் துபாயின் முக்கிய இடங்களான 'பாம் ஜுமேரா' (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற 'புர்ஜ் அல் அரப்' (Burj Al Arab) ஹோட்டலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், துபாயில் 'ட்ரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கிளப்' மற்றும் 'ட்ரம்ப் எஸ்டேட்ஸ்' போன்ற ஆடம்பரக் குடியிருப்புகள் உள்ளன. தற்போது 'ட்ரம்ப் டவர் துபாய்' கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன. இந்த நிலையில், ''ஈரான் தாக்குதலில் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ட்ரம்ப் குடும்பத்தின் முக்கிய முதலீட்டு மையங்கள் தகர்க்கப்பட்டன என்ற வாசகத்துடன் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் ஆனால் இதுவரை உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட இடங்கள் ட்ரம்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

விகடன் 1 Mar 2026 12:55 pm

டி20 உலகக் கோப்பை –இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு

சென்னைஓன்லைனி 1 Mar 2026 12:45 pm

கொல்லப்பட்டாரா ஈரான் உச்சதலைவர் கமேனி? வெளியான படத்தால் வலுக்கும் சந்தேகம்

அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 57 சிறுமிகள் கொல்லப்பட்டனர். கமேனி இன்னும் உயிருடன் இருக்கிறார்… தெஹ்ரானில் ஈரான் உச்சதலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. […]

அதிரடி 1 Mar 2026 12:30 pm

நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.. போரின் நடுவில் சிக்கிய இந்திய வீராங்கனை – பி.வி.சிந்துவின் உருக்கமான பதிவு

இஸ்ரேல் அமெரிக்கா ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவின் உருக்கமான பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.

சமயம் 1 Mar 2026 12:17 pm

ஈரான் போர் பதற்றம்... இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி!

ஈரான் போர் பதற்றத்தால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவுக்கு தள்ளப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமயம் 1 Mar 2026 11:57 am

மோடி மேடையில் கைகோர்க்கும் அன்புமணி ராமதாஸ்… மதுரை மாநாட்டில் பாஜக வியூகம் என்ன?

தமிழக அரசியல் சூழலில் 2026 தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தேர்தலாக மாறவிருக்கிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சொன்னபடி வருகிற தேர்தல் ஒரு வரலாற்று தேர்தல் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

சமயம் 1 Mar 2026 11:54 am

அன்பை லாரியில் அனுப்புகிறோம் - ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பும் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி

நடிகை ராஷ்மிகா மந்தன்னாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் தெலுங்கு மற்றும் கன்னட முறைப்படி நடந்தது. புதுமணத் தம்பதி தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களோடு சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுமணத் தம்பதி நாடு முழுவதும் 22 நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். அவர்கள் லாரிகளில் ஐதராபாத், மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் போன்ற 22 நகரங்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் பிரபலமான 16 கோயில்களில் அன்னதானம் போடவும் ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த நாட்டின் அழகான மக்களாகிய நீங்கள் எப்போதும் எங்கள் பயணங்களிலும், எங்கள் அன்பிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். எங்கள் திருமணத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவது எங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும். இந்தியா எதையுமே இனிப்புகளுடனும் உணவுடனும்தான் கொண்டாடும். எனவே, மார்ச் 1-ஆம் தேதி, எங்கள் வாழ்வின் இந்தப் பெரிய தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக, நாடு முழுவதும் அன்பு மற்றும் இனிப்புகள் நிறைந்த லாரிகளை நாங்கள் அனுப்பி வைக்கிறோம். மேலும், நாடு முழுவதும் உள்ள பல கோயில்களில் அன்னதானம் வழங்க உள்ளோம். உங்கள் அனைவரின் ஆசிகளையும் நாடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். சினிமா துறையைச் சேர்ந்த நண்பர்களுக்காக வரும் 4ம் தேதி ஐதராபாத்தில் இத்தம்பதி பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்து இருக்கின்றனர். இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே.!; விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

விகடன் 1 Mar 2026 11:46 am

பிரதமர் மோடி வருகை.. மதுரையில் போக்குவரத்து மாற்றம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வர உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 11:30 am

ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து...வாழ்த்து மழையில் அறிவாலயம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தள்ள நிகழ்வு அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

சமயம் 1 Mar 2026 11:22 am

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. இன்று முதல் அமல்.. பொதுமக்கள் கவலை!

மார்ச் 1ஆம் தேதி, இன்று சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பொதுமக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. விலை குறைக்கப்படவில்லை.

சமயம் 1 Mar 2026 11:22 am

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி… வளைகுடா நாடுகளை சிதைக்கும் 4 பிரச்சினைகள்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடர் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் ஈரானை சுற்றி வளைகுடாவில் என்ன நடக்கிறது என்ற பின்னணி குறித்து பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 11:16 am

காந்தக் கண்ணழகி தர்ஷா குப்தா: கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா (Dharsha Gupta) கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது சினிமா மார்க்கெட்டில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Mar 2026 11:12 am

ஓபிஎஸ் வீட்டின் கேட்டில் உள்ள இரட்டை இலை சின்னம்... வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரம்!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் உடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார். திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் உள்ள கேட்டில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது திமுகவில்  சேர்ந்ததையடுத்து கேட்டில் பொறிக்கபட்டிருந்த  இரட்டை இலை சின்னத்தை வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் கார் மேலும் வீட்டின் சுவர்களில் அதிமுகவின் சின்னம் வண்ணங்களில் உள்ள கருப்பு வெள்ளை சிகப்பு  வண்ணத்தில் உள்ள பெயிண்டுகள் அழிக்கப்பட்டு திமுகவின் சின்னத்தில் உள்ள கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களாக மாற்றப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் காரில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் 1 Mar 2026 11:09 am

Rishab Shetty: உன்னிடமுள்ள இவையே என்னை வியக்க வைக்கின்றன! - மனைவி குறித்து நெகிழும் ரிஷப் ஷெட்டி

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், 'காந்தாரா' திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் புகழ் பெற்றவருமான ரிஷப் ஷெட்டி, தனது மனைவி பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரகதியின் சிறுவயது புகைப்படங்கள் முதல், ஒரு தாயாக, ஒரு தொழில்முறை கலைஞராக அவர் பரிணமித்த தருணங்கள் வரை உள்ளடக்கிய ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரிஷப் ஷெட்டி - பிரகதி ஷெட்டி அதில் கன்னடத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ``உன்னிடமுள்ள அபூர்வமான மன உறுதி, தாய்மையின் அன்பு, தொழிலில் காட்டும் கவனம் மற்றும் அனைத்தையும் ஒரே நேரத்தில் கையாளும் விதம் என்னை எப்போதும் வியக்க வைக்கின்றன. இந்த வண்ணமயமான வாழ்க்கையில் ஒரு ஒளியாகத் திகழும் நீ, இன்னும் பல வெற்றிகளையும் புகழையும் பெற வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் பிரகதி! எனத் தெரிவித்துள்ளார். ரிஷப் ஷெட்டி மற்றும் பிரகதி ஷெட்டி இருவரும் ஒரு திரைப்பட விழாவில் சந்தித்து காதல் வயப்பட்டனர். இருப்பினும், அந்தச் சமயத்தில் ரிஷப் ஷெட்டியின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்தது. அதனால் பிரகதியின் குடும்பத்தினர் திருமணத்திற்குத் தயங்கினர். ஆனால், தங்களது காதலில் உறுதியாக இருந்த இந்த ஜோடி, 2017-ல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ரன்வித் என்ற மகனும், ராத்யா என்ற மகளும் உள்ளனர். View this post on Instagram A post shared by Rishab Shetty (@rishabshettyofficial) மென்பொருள் பொறியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரகதி, பின்னர் ஆடை வடிவமைப்பாளராக மாறி ரிஷப் ஷெட்டியின் படங்களுக்குப் பணியாற்றத் தொடங்கினார். சமீபத்தில் 2025-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'காந்தாரா சாப்டர் 1' (Kantara Chapter: 1) படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளுக்கு ரிஷப் ஷெட்டியின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். Rishab shetty: ராஷ்மிகா அறிமுகம்; தேசிய விருது வென்ற கிட்ஸ் படம்! - ரிஷப் ஷெட்டி, சில சம்பவங்கள்

விகடன் 1 Mar 2026 11:08 am

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மீட்பு

கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயாயவத்தை மயானத்திற்கு அருகிலுள்ள உட்பாதை ஒன்றில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான 4 தோட்டாக்களும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த ஆயுதம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கைத்துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயலை மேற்கொள்ளும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் கட்டானை பொலிஸாரும் நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக […]

அதிரடி 1 Mar 2026 11:02 am

யாழ். மாவட்ட எரிபொருள் நிலையங்களுக்கு இன்று பெற்றோல் விநியோகம்!

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருப்பதால் இன்றைய தினம் (01.03.2026) களஞ்சியத்தினைத் திறந்து எரிபொருள் நிலையங்களுக்குப் பெற்றோல் விநியோகத்தினை மேற்கொள்ளுமாறு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி. எஸ். ராஜகருணாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் இன்று யாழ்.மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிலையங்களுக்குப் பெற்றோல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி 1 Mar 2026 10:51 am

யார் இந்த சங்கீதா சொர்ணலிங்கம்?: லண்டன் பெண் விஜய் மனைவியானது எப்படி தெரியுமா?

விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் யார், அவர் வயது என்ன, படிப்பு என்ன, அப்பா யார் என்று கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். இந்நிலையில் சங்கீதா யாரென்று தெரிந்து கொள்ளுங்களேன்.

சமயம் 1 Mar 2026 10:33 am

புர்ஜ் கலீபா அருகே டிரோன் தாக்குதல் நடத்திய ஈரான்: வெளியான அதிர்ச்சி தகவல்

துபாய், இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை பெறுவது தங்கள் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதுகிறது. மேலும், அமெரிக்காவும் இதே நிலைப்பாட்டில் உள்ளது. அதேவேளை, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈடுபட அமெரிக்கா முயற்சித்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், ஈரான் மீது […]

அதிரடி 1 Mar 2026 10:30 am

முதல்வர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சி, மகளிர் நலன், மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சி, ஆதிதிராவிட பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு, மீனவர் நலன், தொழிலாளர் நலன், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், இந்து சமய அறநிலையத்துறை திருப்பணிகள், சிறுபான்மையினர் நலன், விவசாயிகள் நலன் போன்ற பல்வேறு துறைகளிலும் இதுவரை இல்லா ‘வகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ஈடிலா வளர்ச்சி ஒன்றிய அரசின் 65-க்கு மேலான விருதுகள் அனைத்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என ஊடகங்களும், பத்திரிகைகளும், சான்றோர்களும் பாராட்டுகின்றன ஒன்றிய அரசு 65-க்கு மேலான விருதுகள் வழங்கி பாராட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பன்முகத் திறன்கள் குறித்து கருதும் வேளையில் அவர் சென்னை மாநகராட்சி மேயராக தமிழ்நாட்டின் அமைச்சராக , துணை முதலமைச்சராக, முதலமைச்சராக அவர்கள் ஆற்றியுள்ள பணிகள் எல்லாம் தமிழ்நாட்டை வளர்த்து தலைநிமிரச் செய்து உயர்த்தியுள்ள சாதகனைகள் எல்லாம் மணிமாலைகள் போல் தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுக்கின்றன. மாநகராட்சி மேயராக நிர்வாகச் சிறப்பு சென்னைமாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்று மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தினார். மாநகராட்சித் தரத்தை மேம்படுத்தினார். போக்குவரத்து நெரிசல்கைளை போக்கிட இந்தியாவில் எந்தவொரு மாநகராட்சியும் செய்திடாத வகையில் 10 சாலை மேம்பாலங்களை அமைத்தார். உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என புகழ்பெற்ற சென்னை கடற்கரை அழகுப்படுத்தினார்.சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் பூங்காக்களை அமைத்தார் சிங்காரச் சென்னை முழக்கத்தை வைத்து சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை அமர்த்தி சென்னை மாநகரின் தூய்மையை மேம்படுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சராக 2006- 2011 ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ளாட்சி நிறுவனங்களின் சிறப்பான பணிகளை ஊக்கப்படுத்தினார். சாதி ஆதிக்கம் காரணமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதலிய கிராமங்களில் மக்களைச் சந்தித்து நல்லிணக்கத்தை உருவாக்கி உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி சிறப்பான ஜனநாயகவாதியாக உருவெடுத்தார். இராமநாதபுரம் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக திருச்சி அருகே காவிரி நீரை எடுத்து இராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் வகுத்து மூன்றாண்டுகளில் முடிய வேண்டிய பணிகளை இரண்டாண்டுகளில் முடித்து பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றார். அதுபோல ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பின் தலைவரை ஜப்பான் சென்று சந்தித்து கடன் பெற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை நிறைவேற செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக நிர்வாகத் திறன் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வருவாய் ஈட்டமுடியாத நிலையில் வாழ்ந்து குடும்ப கடமைகளே வாழ்வு என கொண்ட மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றி 1,30,69,000 மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். இன்ப அதிர்ச்சியாக 5000 ரூபாய் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க செய்துள்ளார். உயர்கல்வியைத் தொடர முடியாத ஏழை இளைஞர்களையும் மகளிர்களையும் ஊக்கப்படுத்தி கல்லூரி படிப்பை தொடர்ந்திட மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தையும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் செயல்படுத்தினார். பசியோடு பள்ளி வரும் குழந்தைகளின் பசிபோக்கி படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடச் செய்திட காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றி ஏறத்தாழ 20 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உட்கொள்ளச் செய்தார். இத்திட்டம் இங்கிலாந்து, கனடா நாடுகளிலும் இந்தியாவில் ஒடிசா, பஞ்சாப், பாண்டிச்சேரி, கர்நாடகா முதலிய மாநிலங்களிலும் பின்பற்றப்படுகின்றன. படிப்புக்கும் வேலையில் சேருவதற்கு ஏற்ற திறனுக்கும் இருந்த இடைவெளியை போக்கிட நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி திறன் பயிற்சிகள் வழங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க செய்தார். 49 இலட்சம் மாணவர்களுக்கும் 1.17 இலட்சம் கல்லூரி பேராசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2.55 கோடி பேருக்கு முதல்முறை மருத்துவச் சேவைகளும் 4.75 கோடி பேருக்கு தொடர் சேவைகளும் வழங்கி தொற்றா நோய்கள் பரவாமல் மக்கள் உயிர்களை காத்தார். இத்திட்டத்தை பாராட்டி ஜக்கிய நாடுகள் அவையே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டியது. தொழில் வளர்ச்சி 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சிக் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட வேண்டும் என்னும் உறுதியோடு பல தொழில் மேம்பாட்டாளர்கள் மாநாடு நடத்தி மேற்கொண்ட 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ 12.37 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு – 36 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு வகை செய்துள்ளார். 2021-க்கு பின் 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்களை உருவாக்கி தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மகத்தான சேவை செய்துள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 21 தளங்களுடன் டைடல் பூங்காவை உருவாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேலும் பல டைடல் பூங்காக்களை உருவாக்கியுள்ளார்.. புத்தாக்கத் தொழில்கள் 4 ஆண்டு காலத்தில் 10,630 புத்தாக்கத் தொழில்களை உருவாக்கி அவற்றுள் 50 சதவீதத்திற்கு மேலான தொழில்கள் மகளிரால் தொடங்கப்பட்டவை என்னும் வரலாற்று புதுமையை நிகழ்த்தியுள்ளார். சமூகநீதி நோக்குடன் காலம் காலமாக தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் குடும்ப வாழ்வு சிறக்கவும் செழிக்கவும் அவர்கள் சுயமாக தொழில் தொடங்கிட 35 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கி எந்திரங்கள் வாங்கி சுய தொழில் புரிந்திட வழி வகுத்தார். தாயுமானவர் திட்டம் முதியோர் நலன் காத்திட 28 அன்புச் சோலை மையங்களை அமைத்துள்ளார். 65 வயதுக்கு மேற்பட்ட 27,40,703 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். விளையாட்டுத்துறை வளர்ச்சி மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒரு திருவிழாவாக நடத்தி உலகப் புகழ் பெற்றது தமிழ்நாடு. 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 70 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 299 விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்பட 6,689 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.215.78 கோடி உயரிய ஊக்கத் தொகை. இந்தியாவிலேயே முதன்முதலாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைகள். இதுவரை வரலாற்றில் இல்லா வகையில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் இளைஞர்கள் இளநங்கையரிடம் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்காக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் | தாயுமானவர் திட்டம் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் 1000 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு த் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்தி சாலை வசதிகள் மின்சார வசதி முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு வீடுகள் சாலை வசதிகள் மின்வசதிகள் முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் தொல்குடித் திட்டம். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தொழில் தொடங்க முன்வரும் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 35 சதவீத மூலதன மானியத்துடன் வங்கிக்கடனுக்கு 6 சதவீத வட்டி மானியமும் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. தாயுமானவர் திட்டம் முதியோர் நலன் காத்திட 28 அன்புச் சோலை மையங்களை அமைத்துள்ளார். 65 வயதுக்கு மேற்பட்ட 27,40,703 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். விளையாட்டுத்துறை வளர்ச்சி மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒரு திருவிழாவாக நடத்தி உலகப் புகழ் பெற்றது தமிழ்நாடு. 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 70 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 299 விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்பட 6,689 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.215.78 கோடி உயரிய ஊக்கத் தொகை. இந்தியாவிலேயே முதன்முதலாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைகள். இதுவரை வரலாற்றில் இல்லா வகையில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் இளைஞர்கள் இளநங்கையரிடம் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்காக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. நேப்பியர் பாலம் செஸ் தீம் ஓவியம் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் 1000 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு த் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்தி சாலை வசதிகள் மின்சார வசதி முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு வீடுகள் சாலை வசதிகள் மின்வசதிகள் முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் தொல்குடித் திட்டம். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தொழில் தொடங்க முன்வரும் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 35 சதவீத மூலதன மானியத்துடன் வங்கிக்கடனுக்கு 6 சதவீத வட்டி மானியமும் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. தமிழ் வளர்ச்சி அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடி இந்தியாவிலேயே முதலாவதான அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை கடல் மீது 37 கோடி ரூபாய் செலவில் நிர்மாணித்தார். நாட்டு விடுதலைக்காகவும் மொழிக்காகவும் பாடுபட்ட தியாகிகளுக்கும் வீர வேந்தர்களுக்கும் வேலு நாச்சியார் உள்ளிட்ட பல வீரங்கனைகளுக்கும் சிலைகளையும் நினைவு மண்டபங்களையும் அமைத்தார். சங்க இலக்கியம் முதலான நூல்களை அயல் மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிடுதல் முதலான தமிழ் பரப்பும் பணிகளை மேற்கொள்கிறார். மு.க.ஸ்டாலின் விவசாயிகள் விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தந்துள்ளார். மழை வெள்ளக் காலங்களில் ஏற்பட்ட பயிச் சேதங்களுக்கு இழப்பீடு தந்துள்ளார். பாசன வசதிகள் சிறப்பாக நடைபெற 2 இலட்சம் விவசாய பம்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். பாசன வசதி தடையின்றி நடைபெற 121 தடுப்பணைகள் 101 அணைக்கட்டுகள் கட்டியுள்ளார். அரசு ஊழியர் – ஆசிரியர் நலன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றியுள்ளார். ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணமாக்கும் வசதியினை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார்,மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்கள் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார். அறநிலையத்துறை 4000-க்கு மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழக்கு விழாக்கள். 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு. சென்னையில் ஹஜ் இல்லம் தொன்மையான தேவாலயங்கள் புதுப்பிப்பு. உள்ளாட்சி அமைப்புகளில் 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமனம். நெடுஞ்சாலைத்துறை மூலம் 24,774 கிமீ நீளச் சாலைகள் 180 உயர்மட்ட பாலங்கள் இப்படி பல்வகையிலும் திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாடு இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக விளங்குகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவின் மிகச் சிறந்த முதலமைச்சர் என பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பல அரசியல் தலைவர்களும் போற்றுகின்றனர்.

விகடன் 1 Mar 2026 10:15 am

வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு சிறிலங்கா அனுமதியா?

சிறிலங்கா வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, சிறிலங்கா விமானப்படை நிராகரித்துள்ளது. ஈரானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையிலும், உள்ளூரில் வான்வழி நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையிலும், வெளிநாட்டு விமானங்கள் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின. இதனை நிராகரித்துள்ளசிறிலங்கா விமானப்படை , உள்ளூரில் விமான இயக்கங்களில்

புதினப்பலகை 1 Mar 2026 10:07 am

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்: மமிதா பைஜுவுடன் இணையும் புதிய புராஜெக்ட்?

நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது முதல் தயாரிப்பில் நடிகை மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Mar 2026 10:02 am

IND vs WI Preview: ‘இந்திய அணிக்கு’.. சவால்விடும் 3 மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள்: சாம்சனுக்கு காத்திருக்கும் ஆபத்து!

இந்திய அணி வீரர்களுக்கு, மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த மூன்று பௌலர்கள் சவால் அளிப்பார்கள் எனக் கருதப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு ஜேசன் கோல்டர் பெரிய சவாலாக இருப்பார் எனக் கருதப்படுகிறது.

சமயம் 1 Mar 2026 10:01 am

ட்ரம்பின் சிறப்பு தூதுவர் செர்ஜிஜோ கோர் விரைவில் சிறிலங்கா பயணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்பு பிரதிநிதி மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவர் செர்ஜிஜோ கோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியப் பயணத்தின் போது, ​​செர்ஜியோ கோரை சந்தித்திருந்தார். முன்னதாக, கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற நியூயோர்க்கிற்குச் சென்ற போது, ​​ சிறிலங்கா அதிபர் செர்ஜியோ கோரையும்

புதினப்பலகை 1 Mar 2026 9:54 am

IND vs WI: ‘மழையால் ஆட்டம் ரத்தாகுமா?’.. வானிலை நிலவரம் என்ன? ரத்தானால் என்ன நடக்கும்? விபரம் இதோ!

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சூப்பர் 8 ஆட்டம் மழை காரணமாக ரத்தானால், என்ன நடக்கும்? இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு எப்படி? அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 9:35 am

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா..? நெதன்யாகு வெளியிட்ட தகவலால் அதிகரிக்கும் பதற்றம்

தெஹ்ரான், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் […]

அதிரடி 1 Mar 2026 9:30 am

சுரேஷ் சாலே கைதும் ஆசாத் மௌலானாவின் குற்றச்சாட்டும்

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) தலைவரும், முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணியக தலைவருமான, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே 2026 பெப்ரவரி 25ஆம் நாள், புதன்கிழமை காலை 8.10 மணியளவில், பேலியகொடையில் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதத் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ், அவரை 72 மணி நேரம் விசாரணைக்காகத் தடுத்து வைக்க

புதினப்பலகை 1 Mar 2026 9:26 am

‘முத்து என்கிற காட்டான்’வெப் சீரிஸ் மார்ச் 27 முதல் ஒளிபரப்பு: ஜியோ ஹாட்ஸ்டாரின் புதிய அறிவிப்பு

இயக்குநர் எம். மணிகண்டன் உருவாக்கி இயக்கியுள்ள 'முத்து என்கிற காட்டான்' (Muthu Engira Kaattaan) வெப் சீரிஸ் மார்ச் 27 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Mar 2026 9:07 am

‘தொடர்ந்து டக்அவுட் ஆனாலும்’.. உங்களை நீக்க மாட்டேன்: இந்திய வீரருக்கு உறுதி கொடுத்த கம்பீர்?

எத்தனை முறை டக்அவுட் ஆனாலும், இந்திய அணியில் உங்களுக்கான இடம் உறுதியாக இருக்கும் என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், வீரருக்கு உறுதியளித்துள்ளாராம். அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

சமயம் 1 Mar 2026 8:45 am

மகாராஷ்டிரா அமைச்சர் கூட்டிய கூட்டம்; பங்கேற்க முடியாது - மெசேஜ் அனுப்பிய அதிகாரி சஸ்பெண்ட்

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவர் மறைந்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கோபினாத் முண்டேயின் மகள் ஆவார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்பு குறித்து பதிலளிக்கும்படி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு சட்டமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் பங்கஜா முண்டே, ''இப்பிரச்னை குறித்து தெரிந்துகொள்வதற்காக மாசு கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குனர் சதீஷ் பட்வெல், மாசு கட்டுப்பாட்டுத்துறை உறுப்பினர் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங் ஆகியோரை அழைத்திருந்தேன். ஆனால் இரண்டு பேரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் என்னால் சந்திராப்பூர் மாசு பாதிப்பு குறித்த தகவல்களை முழுமையாகத் தெரிவிக்க முடியவில்லை. இரண்டு பேரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்லாது தங்களால் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று கூறி மெசேஜ் அனுப்பி வைத்தனர். தேவேந்திர சிங் அதிகாரிகள் இது போன்று நடந்து கொள்வதால் அமைச்சர்களால் பொதுமக்களுக்குப் பதிலளிக்க முடியாமல் போய்விடுகிறது'' என்று குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் தற்காலிக சபாநாயகராக இருந்த திலீப் லாண்டே, அமைச்சரின் அறிக்கைகளைப் பார்க்கும்போது அதிகாரியின் செயல் மிகப்பெரிய அலட்சியம் மற்றும் சட்டமன்றத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில், மாநில அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவார், 'அதிகாரியின் நடத்தை ஜனநாயகத்தின் கொடூரமான படுகொலை என்றும், அரசியலமைப்புக்கு அவமதிப்பு செய்யும் செயல் என்றும் சாடினார். மக்கள் பிரதிநிதிகளுக்குத் தாங்கள் பதில் கூற வேண்டியவர்கள் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது இலாகா பூர்வ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாளில் அனுமதி இல்லாமல் மும்பையை விட்டு வெளியில் செல்லக்கூடாது. மும்பை: ரூ.80,000 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட்; வரவைவிட செலவு அதிகம்; என்ன செய்யப்போகிறது அரசு?

விகடன் 1 Mar 2026 8:38 am

ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைஅவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. அயதுல்லா அலி கமேனி இந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்துவந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். காமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!

விகடன் 1 Mar 2026 8:32 am

அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் கடந்த ஜனவரி 28ம் தேதி காலை பாராமதி விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த அஜித்பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் விபத்துக்கான காரணம், எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து விமானவிபத்து விசாரணை அமைப்பு விசாரித்து வந்தது. அந்த அமைப்பு தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் விமானம் தரையிறங்கும்போது விமான நிலையத்தில் வெளிச்சத்தின் அளவு 3 கிலோமீட்டராக இருந்தது. ஆனால் விமானம் தரையிறங்க வெளிச்சத்தின் அளவு குறைந்த பட்சம் 5 கிலோமீட்டராக இருக்கவேண்டும். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்தான் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. கீழே விழும்போது முதலில் ஒரு மரத்தில் மோதி அதன் பிறகுதான் கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. விமானத்தின் பைலட் காலை 8.19 மணிக்கு பாராமதி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார். ajith pawar தாங்கள் புனேயில் இருந்து வந்து கொண்டிருப்பதாக பைலட் தெரிவித்துள்ளார். 8.27 மணிக்கு விமானநிலையத்தில் ஓடுதளம் பயன்பாட்டில் இருப்பதாகவும், காற்று இல்லாமல் இருப்பதாகவும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. அதேநேரத்தில் ஓடுதளத்தில் தரையிறங்க அனுமதிக்கும்படி பைலட் கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு 8.29 மணிக்கு மீண்டும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இறங்க அனுமதிக்கும்படி பைலட் கேட்டுக்கொண்டார். அதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. காலை 8.31 மணிக்கு விமான நிலையத்தில் வெளிச்சத்தின் அளவு குறித்து பைலட் கட்டுப்பாட்டு அறையில் கேட்டார். அதற்கு வெளிச்சம் 3 கிலோமீட்டராக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்தும் விமானம் தொடர்ந்து தரையிறங்க வந்து கொண்டிருந்தது. 8.34 மணிக்கு பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நாங்கள் தரையிறங்கப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் விமானம் தரையிறங்கும் முதல் முயற்சி கைவிடப்பட்டு தொடர்ந்து வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. 8.40 மணிக்கு மீண்டும் பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நாங்கள் தரையிறங்கப்போகிறோம் என்றார். அதன் பிறகு 8.43 மணிக்கு மீண்டும் பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஓடுதளம் நன்றாக தெரிகிறது என்றார். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து 11வது நம்பர் ஓடுதளத்தில் தரையிறங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி கிடைத்த உடன் கடைசியாக விமானத்தில் இருந்து 8.44 மணிக்கு Oh S**t… Oh S**t… என்ற வார்த்தைதான் வந்தது. அதன் பிறகு விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் ஓடுபாதை 11 இன் இடதுபுறத்தில் சுமார் 50 மீட்டர் தொலைவில், வாசலுக்கு அப்பால் மோதி விபத்துக்குள்ளானது. அருகிலுள்ள கிராமத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் விமானம் வலதுபுறம் திரும்பி, நிலப்பரப்பில் மோதுவது பதிவாகி இருந்தது. விமானம் முதலில் மரங்களில் மோதியதாகவும், பின்னர் கீழே விழுந்து தீப்பிடித்ததாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராமதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மூடுபனி காணப்பட்டது செயற்கை கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. மேலும் விமானநிலையத்தில் விமானங்களுக்கு ஓடுதளம் குறித்தும், காற்றின் வேகம் குறித்தும் தகவல் கொடுக்க நவீன வசதிகள் இல்லை என்றும் விசாரணை அறிக்கை கூறுகிறது. விமான நிலைய ஓடுபாதையில் இருந்த அடையாளங்கள் மங்கிவிட்டதாகவும், ஓடுபாதை மேற்பரப்பில் சரளைக் கற்கள் இருந்ததாகவும், கடைசியாக ஓடுபாதை மறுசீரமைப்பு மார்ச் 2016 இல் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதன் பிறகு ஓடுபாதை மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் 1 Mar 2026 7:43 am

Doctor Vikatan: பீரியட்ஸின்போது சருமத்தில் மாற்றம்... கிராம்புத்தைலம், கற்றாழை தடவலாமா?

Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் பருக்கள் வருகின்றன.  இந்தப் பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது கிராம்புத் தைலம் வைத்தால் சரியாகி விடும் என்று ஒரு வீடியோ பார்த்தேன். இது எந்த அளவுக்கு உண்மை... பீரியட்ஸின் போது இப்படி சருமத்தில் மாற்றங்கள் வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா பீரியட்ஸுக்கு முன்பும் பிறகும் சருமத்தில் இப்படி மாற்றங்கள் வருவது இயல்புதான். பீரியட்ஸ் முடிந்த பத்து நாள்களில்  சருமம் வழக்கத்தைவிட பளபளப்பாக, பூரிப்பாக இருப்பதுபோல உணர்வார்கள். காரணம், ஹார்மோன்கள். அதுவே, பீரியட்ஸுக்கு ஒன்றிரண்டு நாள்கள் முன்பு முகம் முழுவதும் பருக்கள், பொலிவற்ற சருமம் என மாறிப்போயிருக்கும். அதற்கு காரணமும் ஹார்மோன்கள்தான். அவற்றின் ஏற்ற, இறக்கத்துக்கேற்பவும் சருமத்தின் தன்மை வேறுபடும். திடீரென முகத்தில் ஒரு பருவையோ, கரும்புள்ளியையோ பார்க்கும்போது நிச்சயம் கவலையாகத்தான் இருக்கும். அதை ஒரே இரவில் சரிசெய்ய நினைத்து, பருவின் மேல் டூத் பேஸ்ட்டை வைப்பது, புதினாவை அரைத்துத் தடவுவது, கிராம்புத் தைலம் உபயோகிப்பது, எலுமிச்சை சாறு தேய்ப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யவே கூடாது. அப்படியெல்லாம் செய்தால்  அந்த இடத்தில் தழும்பு ஏற்படும். உங்களுக்கு அடிக்கடி பருக்கள் வரும் என்ற நிலையில், மருத்துவரிடம் பேசி, ரெகுலராக உபயோகிக்கக்கூடிய க்ரீம், ஆயின்மென்ட் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்துவைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.  எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்... முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி?  அரிப்பு இருந்தால் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் தடவவும். ஒரு வாரம் பொறுத்திருந்து, அரிப்பு குறையாவிட்டாலோ, கூடவே வலியோ, வீக்கமோ இருந்தாலோ மருத்துவரை அணுகலாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. அதிலும் சிலர், சோற்றுக்கற்றாழை செடியிலிருந்து ஃப்ரெஷ்ஷாக பறித்து உள்ளே உள்ள ஜெல்லை அப்படியே சருமத்தில் தடவுவார்கள். அதுவே சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  எல்லா பிரச்னைகளுக்கும் இயற்கையான பொருள்கள் தீர்வாகாது. இன்ஃபெக்ஷனுக்கெல்லாம் சோற்றுக் கற்றாழை ஜெல் மருந்தாகாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

விகடன் 1 Mar 2026 7:34 am

இரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் ; வெளிநாட்டுப் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளின் நலன் கருதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது. விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, தங்களது விசா காலம் முடிவடைவதற்குள் இலங்கையிலிருந்து வெளியேற முடியாத பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அனுமதி இதனைக் கருத்திற்கொண்டு, குறித்த பயணிகள் சட்டரீதியாக இலங்கையில் தங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் 7 நாட்களுக்கு இலவச விசா நீடிப்பு வழங்கப்படவுள்ளது. […]

அதிரடி 1 Mar 2026 6:36 am

மத்திய கிழக்கிலுள்ள உறவினர்கள் தொடர்பில் தகவல்களை பெற விசேட தொலைபேசி இலக்கங்கள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்: WhatsApp / Imo: +94 71 980 2822 அவசர அழைப்பு (Hotline): 1989 இலங்கையர்களுக்கு பாதிப்பா? இந்நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என இலங்கை […]

அதிரடி 1 Mar 2026 6:32 am

ஈரான் காவல்துறையினர் மற்றும் புரட்சிகர படையினரை சரணடையுமாறு டிரம்ப் வலியுறுத்துகிறார்

ஈரான் மீது கடுமையான குண்டுவீச்சு தேவைப்படும் வரை தொடரும் என்று டிரம்ப் கூறுகிறார். ஈரானின் கமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் ட்ரூத் சோஷியல் பதிவிலிருந்து எங்களிடம் இன்னும் பல தகவல்கள் உள்ளன. அங்கு அரசாங்கத்தை மாற்றுவதில் ஈரானிய தேசபக்தர்களுடன் இணையுமாறு அவர் IRGC மற்றும் ஈரானிய காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்தார். மேலும் காமெனி கொல்லப்பட்டு ஒரே நாளில் நாடு அழிக்கப்பட்டுவிட்டது என்பதால் அந்த செயல்முறை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றார். எவ்வாறாயினும், கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு வாரம் முழுவதும் தடையின்றி தொடரும், அல்லது மத்திய கிழக்கு முழுவதும், உண்மையில், உலகம் முழுவதும் அமைதி என்ற நமது இலக்கை அடைய தேவையான வரை தொடரும் என்று அவர் மேலும் கூறினார். நாங்கள் தெரிவித்து வரும் செய்திகளின்படி, ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ தஸ்னிம் மற்றும் மெஹர் செய்தி நிறுவனங்கள், காமெனி களத்தை கட்டுப்படுத்துவதில் உறுதியாகவும் உறுதியாகவும் இருக்கிறார் என்று கூறுகின்றன.

பதிவு 1 Mar 2026 5:15 am

தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள்; நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

தெஹ்ரான், இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை பெறுவது தங்கள் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதுகிறது. மேலும், அமெரிக்காவும் இதே நிலைப்பாட்டில் உள்ளது. அதேவேளை, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈடுபட அமெரிக்கா முயற்சித்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, ஈரான் மீது […]

அதிரடி 1 Mar 2026 5:06 am

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம்-தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு-முக ஸ்டாலின்!

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

சமயம் 1 Mar 2026 4:50 am

அயதுல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக டிரம்ப் கூறுகிறார்

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக டிரம்ப் கூறுகிறார். ஈரான் மக்கள் அமெரிக்கர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இது நீதி என்று அமெரிக்க ஜனாதிபதி சமூக ஊடகங்களில் எழுதுகிறார். ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இதுஎன்று அவர் மேலும் கூறுகிறார், மேலும் பல ஈரானியப் படைகள் இனி சண்டையிட விரும்பவில்லை என்றும் கூறுகிறார்

பதிவு 1 Mar 2026 3:43 am

காமெனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது

ராய்ட்டர்ஸ் மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்ட இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர் . இந்தக் கொலையை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பதிவு 1 Mar 2026 2:24 am

போரை அறிவித்த ஆப்கானிஸ்தான் ; நாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் வெளிப்படையாக போர்ப் பிரகடனம் செய்து ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த எல்லை மோதலால இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. தலிபான் ஆட்சியின் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டது எனவும், இப்போது நேரடிப் போர் நடத்துவோம் எனவும் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் டிரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, […]

அதிரடி 1 Mar 2026 1:30 am

நாள் நெருங்கிவிட்டது …தயாராக இருங்கள்; ஈரான் எச்சரிக்கையால் பீதி!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் உகல நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாலஸ்தீனியர்களே தயாராக இருங்கள் நாள் நெருங்கிவிட்டது அதில் “இஸ்ரேலில் வசிப்பவர்களே, அங்கிருந்து வெளியேறுங்கள்” என்ற நேரடியான செய்தி இஸ்ரேலிய மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இரான், பாலஸ்தீனியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு செய்தியில், “அன்பிற்குரிய பாலஸ்தீனியர்களே, […]

அதிரடி 1 Mar 2026 1:30 am

அதிபர் டிரம்ப் –மேயர் மம்தானி சந்திப்பு! கைதான பல்கலைக்கழக மாணவி விடுதலை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் கடந்த வியாழக்கிழமை (பிப். 26) நியூயார்க் நகர மேயர் மம்தானி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், அதிபர் டிரம்ப்புடன் நியூயார்க் நகரத்தில் வீட்டுவசதிகளை மேம்படுத்தும் மாபெரும் திட்டங்கள் குறித்து மேயர் மம்தானி பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை கொலம்பியா பல்கலைக்கழக விடுதியில் சட்டவிரோதமான முறையில் அமெரிக்க […]

அதிரடி 1 Mar 2026 12:30 am

எம்.பிக்களின் ஓய்வூதிய விவகாரம் ;பாதிக்கப்படுவது யார்?

எம்.எஸ்.எம். ஐயூப் அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலமும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வரவு செலவு திட்ட ஆலோசனையும் எதிர்க்கட்சிகளுக்கு கையாள கஷ்டமான இரண்டு விடயாங்களாக இருந்தன. இந்த இரண்டும் ஆளும் கட்சிக்கான மக்கள் ஆதரவை பெருக்கும் விடயங்கள் என்பதால் அக்கட்சிகளுக்கு அவற்றுக்கு அதரவு வழங்கவும் முடியாது. அதேவேளை அவற்றை எதிர்த்தால் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் அவற்றை எதிர்க்கவும் முடியாது. மாற்றுக் கட்சியின் […]

அதிரடி 1 Mar 2026 12:30 am

வளைகுடாவில் போர் பதற்றம் ; சற்றுமுன் இலங்கையில் அதிகரிக்கப்பட்டது எரிபொருளின் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை ரூ. 281 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லங்கா சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேநேரம் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு […]

அதிரடி 28 Feb 2026 11:37 pm

Billroth Hospital Launches Advanced Cardiac & Pulmonary Specialty Services with New Heart Dysfunction Clinic and Pulmonary Embolism Referral Center

Billroth Hospitals, one of the city’s leading multispecialty centres and a pioneer in advanced laparoscopic and laser procedures, marked a

சென்னைஓன்லைனி 28 Feb 2026 11:36 pm

மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது. ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது. துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது. இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது.. ஈரான் மீதான தாக்குதல் காரணம், இங்கே தாக்குதல் ஏற்பட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். அதனால், முன்னரே அங்கே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை புர்ஜ் காலிஃபாவின் அருகில் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு புர்ஜ் காலிஃபா தான் இலக்கா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அக்கட்டடத்தின் அருகில் இருந்து கரும்புகை வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இந்தப் போர் இன்னும் பெரிதாகலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா முதல் கட்டப் போரை 4 நாள்கள் வரை தொடரலாம் என்று கூறப்படுகிறது.

விகடன் 28 Feb 2026 11:32 pm

பிரதமர் மோடி தமிழகம் வருகை.. புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு - கட்டுப்பாடுகள் தீவிரம்!

புதுச்சேரிக்கு பிரதமர் மோடி நாளை வருவதை முன்னிட்டு, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மதுபானக்கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது

சமயம் 28 Feb 2026 10:59 pm

PAK vs SL: ‘பாகிஸ்தான் வெளியேறியது’.. 16ஆவது ஓவரில் நடைபெற்ற சம்பவம்: அரையிறுதி அட்டவணை இதோ!

இலங்கையை 147 ரன்களில் சுருட்டினால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி 16ஆவது ஓவரிலேயே 147 ரன்களுக்கு மேல் அடித்து, பாகிஸ்தானை வெளியேற்றியது.

சமயம் 28 Feb 2026 10:46 pm

இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறான முடிவுகளை அமுல்ப்படுத்த உள்ளது- எம்.ஏ.சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அடம்பன் பகுதியில் பொதுமக்கள் சந்திப்பு இன்றைய தினம்… The post இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறான முடிவுகளை அமுல்ப்படுத்த உள்ளது- எம்.ஏ.சுமந்திரன் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Feb 2026 10:40 pm

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை என அரசாங்க அதிபர் அறிவிப்பு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும், செயற்கைத் தட்டுபாட்டை தவிர்க்கும்மாறும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். மேலும் காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதால் சகல எரிபொருள் நிலையங்களுக்கும் நாளை மறுதினம் திங்கட்கிழமையிலிருந்து பெற்றோல் விநியோகிக்கப்படு எனவும் தெரிவித்தார். மேலும், இலங்கை […]

அதிரடி 28 Feb 2026 10:37 pm

சென்னையில் 28 விமானங்கள் ரத்து.. நீடிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்.. மக்கள் தவிப்பு!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்தால், அடுத்த சில நாட்களிலும் சர்வதேச விமான சேவைகளில் கூடுதல் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமயம் 28 Feb 2026 10:34 pm