WPP Media secures consolidated Henkel media mandate across 30 European markets
Mumbai: WPP has announced that WPP Media has been awarded the consolidated media business for Henkel Consumer Brands across Europe, marking a significant expansion of the long-standing partnership between the two companies.Under the expanded remit, WPP Media will manage media responsibilities for Henkel’s flagship brands — Persil, Perwoll, Bref, Schwarzkopf, and Syoss — across 30 markets in Europe. This development adds 13 new markets to the 17 European markets WPP Media won in late 2024, strengthening its role in Henkel’s largest geographic region.Henkel’s decision to consolidate with WPP Media was influenced by the agency’s proven ability to drive collaboration, efficiency, and scale through WPP Open, the company’s intelligent marketing platform. The platform will also support a seamless integration process as the newly added markets transition under the unified structure.The competitive review, initiated in June, focused on redefining the future of media and accelerating growth in an AI-powered environment. WPP Media’s winning strategy emphasized innovative operating models, redefined roles, and a strong commitment to delivering measurable value.As part of the mandate, WPP Media will lead digital media activation across all 30 European markets from Dsseldorf and London, supported by a dedicated team responsible for driving synergies, ensuring governance, and partnering closely with local markets to address regional nuances across all media touchpoints.This consolidation reinforces WPP Media’s position as a key strategic partner for Henkel as the company enhances its media operations and prepares for continued growth across Europe.
எது காதல்? Rameshwaram School Girl Murd*r Case | Advocate Sumathi Interview
The Age of Predictive Marketing: Anticipating Consumer Needs Before They’re Expressed
We are moving past the era when personalization alone could impress consumers. Marketing is no longer just “data-driven” — it is becoming predictive in a way that feels almost intuitive. This shift is reflected in the numbers: the global predictive analytics market is expected to cross US$100 billion by 2034, growing at over 21 percent. It’s clear that brands are now investing in understanding what comes next, not just what has already happened. Alongside this, the AI-in-marketing market is projected to reach US$217 billion, driven by models designed to anticipate and influence customer decisions with far greater accuracy.This is the age of Predictive Artificial Intelligence. It has evolved from simply recommending what a consumer might like (based on past behavior) to confidently anticipating what they will need next. This is the age of predictive marketing, and it represents a paradigm shift that demands a new level of strategic thinking from every brand leader. From Signals to Insight: Building Foresight Through Real-Time Patterns The leap from a smart system to a truly predictive one lies in its ability to read the micro-signals consumers leave behind. Today’s most advanced AI models aren’t satisfied with clicks or purchase histories, they dig into the subtle, often subconscious cues embedded in both digital and physical behavior. They can interpret behavioral nuances such as a split-second pause on a product page, the speed of a user’s scroll, or even the tone of voice during a customer service interaction to gauge intent with remarkable precision. At the same time, they layer in contextual mapping by blending social sentiment, weather patterns, calendar moments, and even local traffic conditions to build a dynamic “need-state” profile. This holistic understanding enables brands to anticipate what customers require before they ever articulate it. You can see this shift clearly in how leading brands are applying it today: Starbucks' Deep Brew AI system decodes micro-signals by combining a customer's purchase history with real-time contextual data like local weather, time of day, location, and store inventory. This is achieved using reinforcement learning, which continuously optimizes recommendations, be it a timely offer for an iced drink on a hot day or a new food item to pair with a regular coffee order, to anticipate the customer's immediate need. Essentially, it transforms fleeting data points into hyper-personalized, high-value offers, making the mobile app experience feel less like marketing and more like having a hyper-attentive digital barista.Claritas’ AI Creative Optimization is an advanced intelligence engine that redefines how digital advertising is delivered. Instead of relying on traditional rules-based personalization methods like Dynamic Creative Optimization, it uses unsupervised machine learning powered by the Claritas Identity Graph — a comprehensive, privacy-compliant dataset that links billions of behavioral, demographic, and device-level signals. This identity graph serves as the foundation for understanding audiences at a granular level, enabling the AI to predict which creative combinations will resonate most with specific consumers in real time. The AI's job is to decode these signals to predict not just who to target, but which exact version of an ad (headline, image, call-to-action) will maximize engagement and conversion for that individual, optimizing the creative elements in real-time across various digital channels. The Power of Timing: Winning Moments That Shape Decisions With attention more scarce than ever in a world saturated with messages, predictive engines give brands a decisive edge by ensuring every interaction happens when it's most likely to matter. They sense the “moment of need” — that subtle instant in someone’s day, shaped by mood, context, and intent, when a message feels naturally welcome. This hyper-precise timing is the difference between being helpful and being noisy.For instance, If you think about it, when a message arrives just before a user actively searches for a solution, it feels intuitive. However, the same message arriving moments after a purchase is done instantly reads like spam. The AI's purpose is to find and occupy that relevant sweet spot, ensuring every interaction is experienced as a helpful suggestion rather than an annoying intrusion. Beyond Metrics: Understanding Context, Motivation, and Intent When we look at it from measurements and tracking lenses, the old metrics focused on what people did (clicks, conversions). However, the new metric focuses on why they might do it next. This shift towards emotional and contextual mapping is the new frontier of marketing intelligence.Instead of depending on traditional measures like recency, frequency, or broad demographic groups, predictive systems now focus on signals that reveal real intent — such as likelihood to purchase or the customer’s immediate need-state, shaped by factors like emotion, time of day, or even local events. In this environment, A/B testing gives way to anticipated reaction modeling, where AI forecasts how content will perform long before it goes live. With this deeper level of understanding, brands can offer recommendations that feel genuinely meaningful, turning everyday customers into long-term advocates rather than brief transactional buyers. Predictive Creativity: Replacing Guesswork With Intelligent Precision The creative process has long relied on educated guesswork. Marketers would generate a few variants, run a lengthy A/B test, and then scale the winner. Predictive AI flips this script. Instead of producing a handful of ad variations and waiting weeks for results, AI now functions as a high-speed creative laboratory generating thousands of unique permutations by mixing and matching headlines, visuals, video clips, and calls-to-action (e.g., Shop Now, Learn More, Get 20% Off). Platforms across the ecosystem are already bringing this to life. -Meta’s Advantage+ Creative automatically adapts your core assets, adapting assets for placement and performance, enhancing images, refining text overlays, and customizing placements, to find the best-performing version for each user in real time.- Google Performance Max follows a similar intelligence-driven model, combining asset groups with Google’s deep intent signals to dynamically assemble headlines, descriptions, images, and videos, optimizing performance across Search, YouTube, Display, and more.- Meanwhile, Persado takes a language-first approach, using a specialized blend of large language models and a performance-trained language database to generate and score message variations. It evaluates emotional tone, structure, and calls-to-action, predicting which phrasing is most likely to motivate a specific audience. The result is messaging built on proven linguistic patterns rather than creative guesswork.The system learns instantly which creative elements work best for each consumer group and automatically deploys the top-performing versions turning a single concept into thousands of dynamic, real-time experiments. This precision dramatically reduces friction and creative waste, allowing marketers to scale proven, high-ROI content faster. The result is advertising that feels less intrusive and more relevant, because each message aligns seamlessly with the consumer’s current needs and context. Trust at the Core: Responsible Data Models for a Predictive World With great predictive power comes great responsibility. As systems become more powerful, predicting everything from a job change to a major life event, the ethical spotlight intensifies. For this technology to thrive, the industry standard demands responsible AI governance and transparency.Predictive models can’t function as black boxes. Brands must prioritize privacy through consent-based, anonymized data; routinely audit algorithms for bias to prevent unfair targeting; and maintain transparency so consumers clearly understand why they’re seeing a specific message. What Comes Next: The Path Forward for Predictive Marketing Attention is a finite resource in an infinite feed, and the great strategic challenge of our time is timing. This new mandate of predictive marketing requires forward-thinking brands to shift their focus from chasing mere impressions to building accountable, intent-led relationships with consumers.The three core takeaways define this new era: Timing is the New Targeting, which means predicting the exact Moment of Need to maximize engagement while minimizing intrusion; From Selling to Serving, where anticipating needs with tailored solutions proves more profitable than traditional broadcast methods; and Governance is Growth, demanding responsible AI and radical transparency to build consumer trust. This approach ensures that the predictive power of AI is used not just to sell, but to genuinely serve.(Views are personal)
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: 3 நாட்களுக்கு இங்கெல்லாம் கனமழை வாய்ப்பு!
சென்னை :வங்கக் கடலில் நாளை (நவம்பர் 22, 2025) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. முதலில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு-இலங்கை கடற்கரைப் பகுதியை நோக்கி வரும் […]
யாழில். 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட உறுதி பத்திரங்கள்
வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹவால்,குருநகர் பகுதியை சேர்ந்த 19 பேருக்கு வீட்டு உறுதிகள் வழங்கப்பட்டன. குருநகர் பகுதியில் 1983ஆம் ஆண்டு கால பகுதியில் வீடமைப்பு அமைச்சினால் , வீடற்ற மக்களுக்கு என கட்டி கையளிக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் , இது வரையில் வழங்கி வைக்கப்படாத நிலையில் , நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் , பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு அமைச்சரால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
``அம்மாவும் ஓவியமும் இருக்க எனக்கென்ன குறைச்சல்'' - அரியலூர் மாணவரின் தன்னம்பிக்கை கதை!
உடல் உறுப்புகள் எல்லாம் இயல்பாக இருந்தும், 'என் கிட்ட என்ன இருக்கு ஜெயிக்க' என்று தன்னம்பிக்கை இல்லாமல் பலபேர் நடமாடிக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், வாய் மற்றும் செவி சவால் கொண்ட பாலமுருகனின் கதை அத்தனை தன்னம்பிக்கை தருகிறது நமக்கு. வாருங்கள், அவருடன் உரையாடுவோம். குடும்பத்தினருடன் பாலமுருகன் ''பிறக்கும்போதே காது கேட்காது. வாயும் பேச வராது.'' ''பிறந்தது அரியலூர் மாவட்டத்துல இருக்கிற பெரிய திருக்கோணம் கிராமத்துல. அப்பா, பாண்டியன். அம்மா, மாலா. ஒரு தங்கச்சி இருக்காங்க. பேரு கிருஷ்ணவேணி. எனக்குப் பிறக்கும்போதே காது கேட்காது. வாயும் பேச வராது. என் தங்கச்சியும் என்னைப்போலவே தான். எங்க ஊர் ஸ்கூல்ல பத்தாவது வரைக்கும் படிச்சேன். பிளஸ் ஒன், பிளஸ் டூ சென்னையில படிச்சேன். அதுக்கப்புறம் என்ன படிக்கிறதுங்கிற ஐடியா எதுவுமே இல்ல எனக்கு. ''படம் வரைஞ்சா வேலை கிடைக்குமா; அது சோறு போடுமா?'' சின்ன வயசுல இருந்தே படம் வரைவேன். நான் வரையுறது நல்லா இருக்குன்னு நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. அதனால, ஓவியம் வரையுறதுக்கு கத்துக்கொடுக்கிற காலேஜ் இருக்கான்னு நானும் எங்கம்மாவும் தேட ஆரம்பிச்சோம். 'படம் வரைஞ்சா வேலை கிடைக்குமா; அது சோறு போடுமா; அதெல்லாம் ஒண்ணும் வேணா; இவனை வேற ஏதாவது படிக்க வையுங்க'ன்னு நிறைய பேர் எங்கம்மா கிட்ட சொன்னாங்க. ஆனா, எங்கம்மா அதையெல்லாம் பெருசா எடுத்துக்கல. என்னை கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில சேர்த்தாங்க. முதல்வரிடம் விருது பெறுகிறார் பாலமுருகன் ''ஒரு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டேன்!'' ஆரம்பத்துல, கூட படிக்கிறவங்க பேசுறதும், ஆசிரியர்கள் சொல்லித்தர்றதும் ஒண்ணுமே புரியாது. நான் ஏதாவது சைகை மொழியில கேட்டாலும், சொன்னாலும் அவங்களுக்கும் புரியாது. ஒரு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டேன். இந்த நேரத்துல என்னைப்போலவே இன்னொருத்தரும் எங்க காலேஜ்ல சேர்ந்தார். கொஞ்சம் தைரியம் வந்துச்சு. அதுக்கப்புறம், எங்களோட சைகை பாஷை மத்தவங்களுக்கும் மெள்ள மெள்ள புரிய ஆரம்பிச்சிது. ஆசிரியர்களோட கவனமும் அரவணைப்பும் கிடைச்சிது'' என்றவரிடம், 'பள்ளிக்கூடத்தில் வரைந்ததும் இங்கு வரைவதும் ஒன்றா' என்றோம். ''ஆரம்பத்துல நான்கூட அப்படித்தாண்ணே நினைச்சேன். ஆனா, அப்படி கிடையாது. எங்க காலேஜ்ல வண்ணக்கலை, சிற்பக்கலை, காட்சித்தொடர்பு கலைன்னு 3 பிரிவுகள் இருக்கு. எல்லாத்துக்கும் அடிப்படை ஓவியம். நான் இதுல சிற்பக்கலை படிச்சிட்டிருக்கேன்'' என்கிற பாலமுருகன், தற்போது சிற்பக்கலையில் மாஸ்டர் டிகிரி படித்துக்கொண்டிருக்கிறார். தன் திறமைக்காக பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார் பாலமுருகன். பாலமுருகன் ''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை முதல்வர் கையால் பரிசு பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் சென்னை கலை பண்பாட்டு துறையில் இவருடைய சிற்பம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக தமிழக முதல்வர் கையால் பரிசு வாங்கியிருக்கிறார். ஒரு போலீஸ்காரரின் கருணைக் கனவு... நிறைவேற்றி வரும் மகள் | Old Age Home | Human Story செம்பியன் மாதேவியின் சிற்பம் அதேபோல, இராஜரஜ சோழரின் பிறந்தநாளை ஒட்டி வருடாவருடம் நடத்தப்படும் போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளதாக சொல்கிறார். தான் வடித்த செம்பியன் மாதேவியின் சிற்பம் சென்னையில் நடத்தப்பட்ட கண்காட்சியில் வைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது என்கிறார் மகிழ்ச்சி முகமாக. ''எல்லாத்துக்கும் காரணம் எங்கம்மா தான்.'' ''எனக்கும் என் தங்கச்சிக்கும் நம்பிக்கை கொடுத்து வளர்த்ததுல அம்மாவுக்கு முக்கியமான பங்கிருக்கு. அவ இப்போ பி.ஏ படிக்கிறா. எங்க ரெண்டு பேருக்கும் எது சரியோ, எது தேவையோ அவற்றையெல்லாம் பார்த்து பார்த்து செஞ்சது, நான் இந்தளவுக்கு வளர்ந்ததுக்கு என எல்லாத்துக்கும் காரணம் எங்கம்மா தான். எங்கம்மாவும் ஓவியமும் இருக்க எனக்கென்ன குறைச்சல்... என்னோட நண்பர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் என் வாழ்க்கையோட ஒவ்வொரு ஸ்டேஜ்லேயும் நாங்க உன்கூடவே தான் இருக்கோம்னு தைரியம் கொடுத்திருக்காங்க. எங்கப்பா எனக்குக் கொடுத்தது உண்மையான கலப்படமில்லாத நம்பிக்கைன்னு சொல்வேன். '' என்று பாலமுருகன் தனக்கே உரிய சைகை மொழியில் நம்மிடம் பேச பேச, அவருடைய மகிழ்ச்சி நமக்கும் தொற்றிக்கொண்டது. வாழ்த்துகள் பாலமுருகன்.
திமுக, அதிமுக-வுக்கு பிடிகொடுக்காத பிரேமலதா - தேமுதிக-வின் அடுத்த அரசியல் நகர்வு என்ன?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற்றிருந்தது. விருதுநகரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனப் பெரிதும் நம்பிய பிரேமலதாவுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அ.தி.மு.க உதவியுடன் சகோதரர் சுதீஷை ராஜ்யசபா எம்.பி-யாக்கிவிடலாம், 2026 சட்டப்பேரவை தேர்தலையும் அ.தி.மு.க-வுடன் இணைந்து சந்திக்கலாமெனக் கணக்குப் போட்டிருந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆனால் இதையெல்லாம், 'தே.மு.தி.க-வுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை' எனக்கூறி தவிடுபொடியாக்கினார், எடப்பாடி. அதுவரை அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதாகப் பேசிவந்த பிரேமலதா, தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இப்போதே கூட்டணிபற்றி ஜோசியம் கூற முடியாது என அப்போது அறிவித்தார். பிறகு தி.மு.க ஆதரவு ரூட்டில் பயணிக்கத் தொடங்கினார், அவர். தி.மு.க-வின் கச்சிதமான நகர்வு! அ.தி.மு.க, தே.மு.தி.க இடையிலான அதிருப்தியை கச்சிதமாகத் தி.மு.க-வும் பயன்படுத்தியது. அதாவது அப்போது நடந்த தி.மு.க் பொதுக்குழுவில் விஜயகாந்த்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாகப் பிரேமலதாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார், முதலவர் ஸ்டாலின். பிறகு நடந்த மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தையில், 'தே.மு.தி.க-வுக்கு 5 சீட்டுதான்' என்றது அறிவாலயம். இதில் மீண்டும் கடுப்பானவர் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் என கட்சிக்குள் அதிரடி காட்டினார். அதன் ஒருபகுதியாகத் தமிழகம் முழுவதும் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு கூட்டத்திலும் மைக் பிடிக்கும் பிரேமலதா, 'விரைவில் கடலூரில் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த இருக்கிறோம். அதில்தான் கூட்டணிகுறித்து அறிவிக்கப்படும். நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம். அடுத்த ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்' எனப் பேசி வருகிறார். இதற்கிடையில் மதுரையில் கடந்த 17-ம் தேதி நடந்த தே.மு.தி.க வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த விஷயங்கள்தான் தே.மு.தி.க-வை மீண்டும் லைம்லைட்டுக்கு கொண்டுவந்திருக்கிறது . அன்றையதினம் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரேமலதாவும் மதுரைக்கு வந்திருந்தார். அவரை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்தித்து பேசினார். காக்கவைக்கப்பட்ட உதயகுமார்! பிரேலதாவை சந்திக்கும் முன்பாக, தே.மு.தி.கக்கூட்டம் நடந்த மண்டபத்தின் ஓர் அறையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக உதயகுமார் காக்கவைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தை முடித்துவிட்டு வந்து அவரைச் சந்தித்த பிரேமலதா, உதயகுமாரை உட்காரவைத்துக் கூடப் பேசாமல் நிற்க வைத்தே சுமார் 5 நிமிடங்கள் பேசிவிட்டு வழியனுப்பி வைத்தாராம். பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே எங்களுக்குத் தோழமைக் கட்சிகள்தான். அவர்கள் எல்லோருமே தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளனர். ஆர்.பி. உதயகுமார் ஆனால் மாவட்டச் செயலாளர்களையும், நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி மக்கள் மனநிலையையும் ஆராய்ந்து நாங்கள் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்போம். இவங்க கூடதான் கூட்டணி... அவங்ககூட தான் கூட்டணி என்று நாங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. எங்கம்மாவின் மறைவுக்கு அனைத்து தலைவர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். அந்த அடிப்படையில் தான் உதயகுமாரும் இன்று என்னைச் சந்தித்து துக்கம் விசாரித்தார்” என்றார் அதிரடியாக. ஆனால் இந்தச் சந்திப்புக்கு முன்னதாக உதயகுமார், பிரேமலதாவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கும்படி இ.பி.எஸ்தான் தன்னை அனுப்பி வைத்தார் எனக் கூறியிருந்தார். ஆனாலும் பிரேமலதா பிடி கொடுக்கவில்லை. ஏற்கெனவே தி.மு.க-வுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒர்கவுட் ஆகாத சூழலில் அ.தி.மு.க-வுக்கும் பிரேமலதா பிடிகொடுக்கவில்லை. இதையடுத்து அவரது திட்டம்தான் என்ன என விசாரித்தோம்? விஜய பிரபாகரன் இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவால் அனுதாப அலையில் எப்படியும் விஜயபிரபாகரன் வெற்றிபெற்றுவிடுவாரெனப் பிரேமலதா பெரிதும் நம்பினார். அது நடக்காததால் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என உறுதியாக இருந்தார். ஆனால் கடைசிநேரத்தில் அ.தி.மு.க கையைவிரித்துவிட்டது. இதில் பிரேமலதாவுக்கு ஏக மன வருத்தம். இதையடுத்துதான் தி.மு.க பக்கம் நகரத் தொடங்கினார். அமைச்சர் ஒருவர் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில், 'வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள். நல்ல எண்ணிக்கையில் உங்களுக்குச் சீட் தருகிறோம். தேர்தல் செலவையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டதாம். பிரேமலதாவின் டிமாண்ட் என்ன? ஆனால் தே.மு.தி.க தரப்பில் பேசியவர்கள், 'தி.மு.க எங்களுக்கு 15 சீட், 2 ராஜ்யசபா சீட், தேர்தல் செலவு' என டிமாண்ட் வைத்ததாக தகவல். ஆனால் இதற்குத் தி.மு.க-விலிருந்து கிரீன் சிக்னல் வரவில்லை. எனவேதான் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகவும் பிரேமலதா அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் 'அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற வேண்டும் என்றால் ஏற்கெனவே சொன்னதுபோல் ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும். அதைப் பொதுவெளியில் முன்னதாகவே அறிவிக்க வேண்டும். கூடவே 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' எனத் தே.மு.தி.க தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அ.தி.மு.க-வும் ஓகே சொல்லவில்லை. திமுக தே.ஜ கூட்டணிக்குப் பா.ம.க-வை கொண்டுசெல்ல பா.ஜ.கத்தீவிரமாக முயற்சி செய்கிறது. எனவே தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இருந்தால் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பெற முடியும் எனத் தி.மு.க கணக்கு போடுகிறது. அதேநேரத்தில் 5 முதல் 8 தொகுதிகள்வரை மட்டுமே தே.மு.தி.க-வுக்கு கொடுக்கத் தி.மு.க ரெடியாக இருக்கிறது. இதனால்தான் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக இருக்கிறது. மறுபக்கம் தே.மு.தி.க-வின் அனைத்து கோரிக்கையும் ஏற்பதற்கு அ.தி.மு.க-வும் தயாராக இல்லை. அதேநேரத்தில் தே.மு.தி.க-வை இழப்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை. ஏனெனில் ஏற்கெனவே அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் எக்கச்சக்க பஞ்சயத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் தே.மு.தி.க-வை இழக்க வேண்டாமென அ.தி.மு.க தலைமையும் நினைக்கிறது. மேலும் பிரேமலதாவுடன் தங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவே உதயகுமார் மூலமாகச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டது. ராமதாஸ் - அன்புமணி அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்! ஏனெனில் மதுரையில் பிரேமலதா தங்கியிருந்தபோது யாருக்கும் தெரியாமல் உதயகுமார் சந்தித்திருக்கலாம். ஆனால் பிற கட்சிகளிடத்தில் அ.தி.மு.க, தே.மு.தி.க இடையே நல்ல உறவு இருக்கிறது எனக் காட்டிக்கொளவதற்குத்தான் வெளிப்படையாக உதயகுமார் சந்திக்க சென்றிருந்தார். முன்னதாகக் கடந்த மக்களவை தேர்தலில் அவர் விஜயபிரபாகரனுக்காகப் பணியாற்றியிருந்தார். எனவேதான் எடப்பாடி அவரை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அ.தி.மு.க-வின் இந்த அரசியல் பிரேமலதாவும் நன்கு தெரியும். அவர் அ.தி.மு.க-வுடன் சுமுகமான உறவில் இல்லை. தி.மு.க-வுடனும் கூட்டணிக்குத் தயாராக இருக்கிறோம் என்பதை வெளியில் காட்டும் விதமாகச் சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு உதயகுமாரை அனுப்பி வைத்துவிட்டார். இதன் மூலம் அ.தி.மு.க தங்களது தயவை தேடுகிறது என வெளியில் தெரியவைத்துவிட்டார். மேலும் பலத்தை காட்டும் விதமாகக் கடலூரில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த பிரேமலதா தயாராகி வருகிறார். அவரது டிமாண்டை பூர்த்தி செய்யும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்பார். இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்றனர். பாஜக இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காகத் தே.மு.தி.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதியை பல வழிகளில் தொடர்பு கொண்டும் அவர் பதில் அளிக்கவில்லை. அவர் தனது கருத்தை தெரிவிக்கும் பட்சத்தில் அது உரிய பரிசீலனைக்கு பிறகு பிரசுரிக்கப்படும்! 'மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு' - ஓபிஎஸ்-ஸின் கருத்து வியூகமா? குழப்பமா?
அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் வீச்சு
இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில் பெண்ணொருவர் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நேற்று (20) இரவு அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகனை அயகம வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். பெண் உயிரிழப்பு வைத்தியசாலையில் 40 வயதான குறித்த பெண் உயிரிழந்துள்ளார். அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் காரணமாகவே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம் […]
261 கிலோ ஐஸ் போதைப்பொருள்; ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது
தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 261 கிலோ ஐஸ் போதைப்பொருள் இலங்கை கடற்படையினால் குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகும் அதில் இருந்த 6 மீனவர்களும் நேற்று (20) மாலை தங்காலை […]
ரயில்களில் மது பாட்டில்களை எடுத்துச் சென்றால் குற்றமா? புது ரூல்ஸ் வந்தாச்சு.. என்னனு பாருங்க!
ரயில்களில் பயணம் செய்யும் போது நீங்கள் மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி உள்ளதா? அப்படி எடுத்துச் சென்று பிடிபட்டால் என்ன நடக்கும்?
Scara Gaming has introduced Scara Live. This is a new vertical built to reimagine how live experiences come to life in India. At the crossroads of entertainment, sports, and culture, Scara Live helps brands move beyond screens and into the real world, where real connections happen. From original IPs to data-driven insights and creative storytelling, Scara Live crafts experiences that are bold, immersive, and built to spark conversation, emotion, and impact.Founded by industry veterans, Manoj George brings over 20 + years of experience in gaming, tech & culture domains; leading business/revenue functions for brands such as Nodwin Gaming, Cornerstone & UTV Disney. Mazher Ramzanali who previously worked with Budweiser, OML, MTV & Vice Media, comes onboard with 15+ years of experience in the branding, culture programming and sponsorship field.Finally, Santosh P, with 16+ years in marketing, has led live entertainment and business strategy at BookMyShow and OML, bringing deep expertise to Scara Live. Additionally, the leadership team will also include Vikas Chand who previously led venue/event operations for brands such as BCCI, Castrol, IMG Reliance, Hockey India & Delhi Capitals to name a few.As India’s live entertainment landscape evolves, Scara Live aims to become a strategic partner for brands seeking to build deeper cultural relevance. With two flagship IPs, Pixel Pulse and Beyond the Game, the brand will additionally collaborate with content creators and sports IP owners to transform digital-first brands into immersive real-world formats.Pixel Pulse is a cultural platform uniting music, comedy, fashion, and gaming to create large-scale cultural moments. Beyond the Game is a B2B knowledge and networking property that brings together leaders from sports, gaming, and innovation to inspire dialogue, collaboration, and future focused growth.With seasoned leaders across media, sports, tech & live experiences, the brand is pivoting on a creative strategy backed by data to deliver tangible impact in an increasingly crowded digital-first world.‘iPopstar’, the first event in Scara Live’s roster has been announced. A weekly music reality series featuring artists such as King, Astha Gill, Aditya Rikhari and Parmish Verma. The format has 12 contestants battle it out for 6 weeks, with the series being streamed on Amazon MX Player, with Spotify and Warner Music as music partners. Scara Live is the culture partner for the show, with the IP owned by Rusk Media. Medianews4u.com caught up with Manoj George Director Scara Q. What trends are expected to be seen in the live entertainment landscape in 2026? We’re going to see a stronger merger of influencers, content, and experiences driving the next wave of live entertainment. None of these pillars can thrive alone like they used to.The influencers bring reach, content brings consistency, and live experiences bring authenticity. The real impact will come when all three come together with a genuine insight or purpose that connects deeply with the communities they serve. Q. Scara Gaming has introduced Scara Live. How will this new vertical reimagine how live experiences come to life in India? Authenticity is one of the core beliefs on which Scara Live is founded. Our mission is to craft experiences that feel genuine, relevant, and truly impactful for both audiences and brands.We aim to move past fleeting online buzz and surface-level engagement, focussing instead on creating real-world excitement through a multi-vertical approach led by seasoned professionals from the worlds of entertainment, sports, and culture. Q. What goals have been set for the coming five years for Scara Gaming and Scara Live? Our focus is on building a strong foundation of people, IPs, and partnerships. That means attracting and nurturing top talent, developing long-term intellectual properties, strengthening our branded content and event solutions, and building out our sales, sponsorship, and talent representation arms.We want Scara Live to become a creative powerhouse that sits at the intersection of gaming, culture, and entertainment. Q. How can brands leverage entertainment, sports, and culture to go beyond the 30-second ad and move into the real world? The future lies in community and cultural immersion. Brands that can tap into real communities, what we call urban tribes and become part of their shared passions will naturally go beyond the 30-second format.Think of Royal Enfield’s Rider Mania or the ever-evolving sneaker culture or the cult following of certain games like Warcraft and Fortnite, they sell themselves because they have built genuine ecosystems over a period of time.For brands, it’s not about rushing the process but committing to the journey, to build, nurture, and co-own those communities at the detailed and experiential level with authenticity. Q. Are there learnings in this area from what is being seen in markets like the US, Japan, or the UK? Absolutely. Global markets are seeing the rise of cult collaborations, from luxury x streetwear tie-ups to wacky and unconventional sneaker collabs.These partnerships work because they borrow and blend cultural equity. Consumers today respond to niche, layered interests rather than mass trends. That’s a big learning for India, to go beyond broad appeal and tap into the subcultures that truly move people. Q. According to predictive analytics, where is the whitespace for growth for Scara Live in 2026? The whitespace lies in brand storytelling through events. We want to be at the cusp where advertising meets experience and helping brands move from traditional campaigns into immersive storytelling. This is where the next big growth will happen, both for Scara Live and the larger brand ecosystem. Q. Could you shed light on the R&D that went into the two flagship IPs — Pixel Pulse and Beyond the Game? What separates them from other existing IPs in the market? Both IPs were designed with a clear audience in mind, the lifestyle gamer. These are people in their mid-30s who game after work, who see gaming as a form of connection with friends and as part of a larger pop culture identity that includes music, fashion, and sneakers.Pixel Pulse builds a world around this community. It’s not just about the game, it’s about the culture that surrounds it. That’s what makes it different that it’s inclusive, relatable, and driven by real insights. Q. How are data-driven insights reshaping how brands engage with consumers? Have they become essential now? Completely. Data is no longer optional, it’s the foundation for everything from campaign design to measuring real impact. Especially with live events, we have tools that show us where people are spending their time and money.By triangulating that with secondary data like ticket sales, streaming metrics, or artist popularity, we can predict trends and design far more effective brand experiences. It’s about moving from guesswork to evidence-led storytelling.
விஜய் கூட்டணிக்கு 'NO'.. திமுக கூட்டணி தொடரும் - ராகுல் காந்தி போட்ட ஆர்டர்!
திமுக கூட்டணியில் தொடர்வோம் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேசிய தலைமை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
Gold Rate Today: 'கொஞ்சம் குறைந்த தங்கம் விலை'இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
நேற்றை விட... இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. மீண்டும் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை; இப்போது முதலீடு செய்ய ஏற்றது எது? தங்கமா, வெள்ளியா? |Q&A ஒரு கிராம் தங்கம்... இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,460 ஆகும். ஒரு பவுன் தங்கம்... இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.91,680 ஆகும். வெள்ளி விலை... இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.169 ஆக விற்பனை ஆகி வருகிறது. வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உடனே பேசி வட்டியைக் குறைக்கலாம்! - எப்படி தெரியுமா?
Re Release: 'புது படங்களைப் போல ரீரிலீஸுக்கும் இது முக்கியம்' - டல்லடிக்கும் ரீ ரிலீஸ்; காரணம் என்ன?
'3', 'புதுப்பேட்டை', 'கில்லி' போன்ற படங்கள் ரீ ரிலீஸ் என்கிற புதிய டிரெண்டை உருவாக்கியது. அப்படங்களுக்கு மக்கள் கொடுத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து, மக்கள் முன்பு கொண்டாடிய பல கல்ட் க்ளாசிக் படங்களையும் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்தார்கள். ஆனால், அதில் சில படங்கள் நினைத்ததுபோல பெரிதளவில் திரையரங்குகளில் சோபிக்கவில்லை. ஒரு படத்தை ரீ ரிலீஸுக்கு தயார் செய்யும் விநியோகஸ்தர், அப்படத்தைத் தற்போதைய தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்ற (ரீ மாஸ்டரிங்) அதற்கென குறிப்பிட்ட தொகையை செலவழிப்பார்கள். ஆனால், அதற்கு செலவழித்த பணத்தைக் கூட வசூலில் எடுக்க முடியவில்லை என்கிற பேச்சும் இப்போது எழுந்திருக்கின்றது. ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் இந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக நான்கு படங்களை ரீ ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். அதில் 'நாயகன்', 'ஆட்டோகிராப்' படங்கள் கடந்த வாரங்களில் வெளியாகின. இன்று விஜயின் 'ப்ரெண்ட்ஸ்' ரீ ரிலீஸ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் சூர்யாவின் 'அஞ்சான்' திரைப்படமும் ரீ எடிட் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது. இதுமட்டுமல்ல, அஜித்தின் 'அமர்களம்', 'அட்டகாசம்' போன்ற படங்களையும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். இப்படியான சூழலில் தற்போதைய ரீ ரிலீஸ் பிசினஸ் குறித்தும், முன்பு போல ரீ ரிலீஸில் படங்கள் பெரிதளவில் வரவேற்பு பெறாதது குறித்தும் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டறிந்தோம். நம்மிடையே பேசிய தனஞ்செயன், இந்த மாசம் மொத்தமாக நான்கு படங்கள் ரீ ரிலீஸ் ஆகுது. ரீ ரிலீஸ் என்பது தங்க முட்டை போடும் வாத்து மாதிரிதான்! ஒண்ணுதான் எடுக்கணும். மொத்தமாக எடுக்கணும்னு நினைச்சா முழுமையாகவே அது போயிடும். கல்ட் க்ளாசிக் படங்களை எப்போதாவது ரீ ரிலீஸ் செய்தால் மக்கள் கண்டிப்பா அதை விரும்பிப் பார்ப்பாங்க. ஆனா, ஒரே சமயத்துல மொத்தமாகப் பல படங்கள் ரீ ரிலீஸ் ஆகினா, மக்கள் எப்படிப் பார்ப்பாங்க? இப்போ புதுப் படங்களும் அடுத்தடுத்து வந்துட்டே இருக்கு. இங்க பெரிதளவுல புது படங்கள் ரிலீஸ் இல்லாத சமயத்துலதான் ரீ ரிலீஸ் செய்யணும். Dhananjeyan புது ரிலீஸ் எதுவுமில்லாமல் ஒரு இடைவெளி இருக்கிற சமயத்துலதான் ரீ ரிலீஸ் பண்ணனும். அப்போ மக்கள்கிட்ட எதிர்பார்க்கிற வரவேற்பும் கிடைக்கும். ஒரு சில புது படங்கள் வர்ற சமயத்துல ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தை ரீ ரிலீஸ் செய்யும்போது மக்கள் விரும்பிப் பார்ப்பாங்க. ஒரே மாசத்துல இத்தனை படங்கள் ரீ ரிலீஸ் ஆகினால், மக்களுக்கு அதனுடைய எக்சைட்மெண்ட் போயிடும். 'இத்தனை புது படங்கள் வந்திருக்கு, அதுல நான் எதைப் பார்க்கிறது'னு மக்களுக்கு ஒரு எண்ணம் இருக்கு. அப்படியான வேளையில, ரீ ரிலீஸ் படங்கள் கொண்டு வந்தால், அதுக்கு பெரிதளவுல வரவேற்பு இருக்காது. இந்த வாரம் ஏழு புதிய படங்கள் வந்திருக்கும்போது, எப்படி மக்கள் ரீ ரிலீஸ் படங்களைப் போய்ப் பார்ப்பாங்க. அந்தப் படத்தைப் பார்க்க ஆர்வத்தோட இருக்கிற குறைவான மக்கள்தான் போய் பார்ப்பாங்க. ரீ ரிலீஸுக்கு பெரியளவுல மக்கள் வரவேற்பு கிடைக்கணும்னா, ரிலீஸ்ல ஒரு இடைவெளி இருக்கணும். ரீ ரிலீஸுக்கான உரிமத்தை வாங்குற விநியோகஸ்தர்கள், அதனை சரியான நேரத்துல வெளியிடுறதுக்கு திட்டமிடணும். ஒவ்வொரு வகையான படங்களுக்கும், ஒவ்வொரு வகையிலான ஆடியன்ஸ் இருப்பாங்க. ஆனா, அதுக்கு சரியான ரிலீஸ் தேதியும் முக்கியமானது. என்றவரிடம் ரீ ரிலீஸ் படங்களின் வெளியீட்டில், ரீ மாஸ்டரிங்கிற்கு செலவழித்த பணத்தைகூட எடுக்க முடியவில்லை என்கிற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறதே! எனக் கேட்டோம். Anjaan Re Release பதில் தந்தவர், ரீ மாஸ்டரிங் செய்வதற்கு செலவு பண்றாங்க. ஆனா, மக்கள் கூட்டம் பெரிதளவுல வரணும்னா ரிலீஸ்ல சரியான திட்டமிடல் இருக்கணும். அதனால இப்போ ரீ ரிலீஸ் டிரெண்ட் குறைஞ்சிடுச்சுனு சொல்ல முடியாது. மக்களும் ரீ ரிலீஸ் படங்களைப் பார்க்க நிச்சயம் திரையரங்குகளுக்கு வருவாங்க. முதல் ரிலீஸ் சமயத்துல தியேட்டர்ல பார்க்காமல் மிஸ் பண்ணின ஆடியன்ஸ் நிச்சயமாக ரீ ரிலீஸை எதிர்பார்த்து வருவாங்க. புதிய படங்களுக்கு ரிலீஸ் தேதி எவ்வளவு முக்கியமோ, அதுபோல, ரீ ரிலீஸ் படங்களுக்கு சரியான ரிலீஸ் தேதி முக்கியம். வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் இந்தப் ப்ளான்ல கவனமாக செயல்படணும். என்றார்.
ஆஹா! வாரே வா..சவரனுக்கு ரூ.320 குறைந்த தங்கம் விலை!
சென்னை :சென்னையில் 22 காரட் ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 21, 2025) மேலும் குறைந்துள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.320 குறைந்து ரூ.91,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று (நவம்பர் 20) விலையான ரூ.92,000-இலிருந்து ஏற்பட்ட சரிவு. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460-க்கு விற்கப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கம் சர்வதேச சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச் சந்தை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது. கடந்த 14-ந்தேதி இருந்து தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில், […]
யாழில். தவறணையில் தகராறு - ஒருவர் அடித்துக்கொலை
யாழ்ப்பாணத்தில் தவறணையில் இளைஞர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யபப்ட்டுள்ளார். அச்செழு பகுதியை சேர்ந்த சுப்பையா யோகதாஸ் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி தவறணையில் கள்ளு அருந்தும் போது, இரு இளைஞர்களுக்கும் குறித்த நபருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன் போது இரு இளைஞர்களும் கடுமையாக தாக்கியதில் , படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில் , இருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள சுன்னாகம் பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தின ரவிகரன் எம்.பி
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல்நாளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார். மாவீரர் துயிலமில்லத்தினைத் தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேரற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளைச் செலுத்தினார். 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கென தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கொழும்பில் தங்கியுள்ள நிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mumbai: COLORS is turning up the heat and the humour this festive season with the return of its biggest homegrown franchise, Laughter Chefs Unlimited Entertainment. One of India’s most talked-about non-fiction shows of 2025, the culinary-comedy reality format is back with Season 3 — bigger, wilder, and packed with unmissable weekend “dinner-tainment”.Co-Powered by Envy Perfumes & Catch Masale, Pour Home Air Freshener, LuxInferno, along with Special Partners Caratlane and Pet Shuddhi, the new season premieres on 22nd November at 9:00 pm, airing every Saturday–Sunday only on COLORS.A massive favourite with audiences, Laughter Chefs Unlimited Entertainment reached 185 million* viewers on television and sparked heavy engagement online, with 1 in every 3 COLORS social conversations revolving around the show. Now, Season 3 returns with fresh chaos, a heightened competitive streak, and a brand-new mix of celebrity pairs divided into Team Kaantas and Team Chhuris — turning the kitchen into a full-blown comedy warzone.This season features an exciting lineup of returning favourites and new firecrackers:• Karan Kundrra–Tejasswi Prakash• Debinna Bonnerjee–Gurmeet Choudhary• Eisha Singh–Vivian Dsena• Abhishek Kumar–Samarth Jurel• Elvish Yadav–Isha Malviya• Kashmera Shah–Krushna Abhishek• Aly Goni–Jannat ZubairGuiding, roasting, and rescuing the contestants will be the beloved duo — host Bharti Singh and Chef Harpal Singh Sokhi — as they judge dishes, disasters, and everything in between. Produced by Optimystix Entertainment, the IP continues to strengthen COLORS’ position as a leader in original, audience-first non-fiction formats. Alok Jain, Jiostar, said, “We at JioStar consistently strive to deliver non-fiction IPs – whether original or adapted – that travel across seasons and demographics. Laughter Chefs Unlimited Entertainment’s success is a testament to that approach, proving how differentiated homegrown formats can scale into one of India’s most beloved and top-rated reality show. The sustained demand for the show even before a season concludes reaffirms our belief that when we anchor content in strong cultural insight – family fun and food – it naturally becomes a part of the country’s weekend routine. We are confident the season will build on that momentum as we continue our legacy of crafting successful homegrown shows and setting benchmarks in delivering formats that become household favorites. We are grateful to our sponsors for placing their trust in an IP that continues to deliver both reach and relevance.” Host Bharti Singh added, “Laughter Chefs Unlimited Entertainment is very close to my heart because it brings together the two things I love – cooking and comedy. In that sense, this show feels tailor-made for me! People keep asking me everywhere I go, ‘Bharti, yeh celebs sach mein khana banate hai kya?’ And I tell them – I wish you could see what I see in that kitchen! There are moments when these ‘non-chefs’ surprise us with brilliant dishes and moments when my stomach hurts from laughing. This season, I am excited to see what storm everyone cooks up! It is my absolute pleasure to welcome our old favourites and new members to the LC family!” Returning contestant Karan Kundrra shared, “Coming back to Laughter Chefs with Tejasswi feels like a full-circle moment for us. We’ve always had incredible chemistry, but this show brings out a different side of our partnership — we’re both super competitive, extremely driven, and honestly a little obsessed with winning! Last season, I won the trophy… and yes, I fully intend to bag those stars again. But this time, a victory would mean so much more because I’m competing with Teja by my side. We work well as a team, we push each other, and when we’re in competition mode, we are ready to turn the heat up.” Krushna Abhishek added, “I genuinely treasure the chance to strengthen my bond with this show because the love we get is unbelievable. Everywhere I go, people ask, ‘Season 3 kab aa raha hai?’ And that kind of anticipation is the biggest reward. This show has become a ritual for families, and being a part of something that people wait for so eagerly is very special. Toh bas dinner-tainment ke liye jo jaiye taiyaar!” Aly Goni said, “One of the biggest blessings for me on this show is the appreciation and encouragement I received for my cooking skills. It honestly made me fall even more in love with the art. What makes Laughter Chefs Unlimited Entertainment unique is that beneath the jokes, the banter, and the chaos, we’re reclaiming the kitchen as a space for everyone. In the most joyful and disarming way, the show breaks the old belief that cooking is a woman’s job. And doing just that, yours truly is all set to prepare some knockout dishes!” Season 3 promises high-voltage rivalries, unexpected alliances, and non-stop laughter — from Jannat vs. Isha’s playful takkar to Vivian Dsena’s silent intensity paired with Eisha Singh’s rapid-fire chatter. And in true LC style, the action begins right from the first episode with a massive takkar between the Season 2 winners and new challengers.
19 வயது மனைவி செய்த செயல்; ஆத்திரத்தில் கணவன் கொடூரம் –என்ன நடந்தது?
கோயிலுக்கு மனைவியை அழைத்துச் சென்று கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நடத்தை சந்தேகம் செங்கல்பட்டு சிலாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவரான இவரின் மகள் மதுமிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், வெங்கடேசனின் வீட்டுக்கு வந்த சரண், “உன் மகளை ஒரத்தி, சென்னேரி காளியம்மன் கோயில் அருகே வெட்டி கொன்னுட்டேன்” என்று கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார். உடனே தகவலின் பேரில் விரைந்த போலீஸார், மதுமிதாவின் சடலத்தைக் கைப்பற்றி […]
எம்எல்ஏ கே.சுதர்சனம் கொலை : தமிழ்நாட்டை உலுக்கிய கொள்ளை வழக்கில் இன்று தீர்ப்பு!
சென்னை : கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 21, 2025) அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. சுதர்சனம் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்குகிறது. 2005 ஜனவரி 30 அன்று சென்னை அடையாறு பகுதியில் உள்ள தனது வீட்டில் சுதர்சனம் (வயது 58) காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, பவாரியா கொள்ளையர் கும்பல் 5 பேர் கொண்ட குழு வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. வீட்டில் இருந்த தங்க நகைகள், […]
எம்எல்ஏ கே.சுதர்சனம் கொலை : தமிழ்நாட்டை உலுக்கிய கொள்ளை வழக்கில் இன்று தீர்ப்பு!
சென்னை : கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 21, 2025) அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. சுதர்சனம் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்குகிறது. 2005 ஜனவரி 30 அன்று சென்னை அடையாறு பகுதியில் உள்ள தனது வீட்டில் சுதர்சனம் (வயது 58) காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, பவாரியா கொள்ளையர் கும்பல் 5 பேர் கொண்ட குழு வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. வீட்டில் இருந்த தங்க நகைகள், […]
Durga Chakraborty joins Dainik Bhaskar Group as Corporate Sales Head – South India
Mumbai: Dainik Bhaskar Group, India’s largest newspaper group, has further strengthened its leadership presence in the southern market with the appointment of Durga Chakraborty as Corporate Sales Head – South India . The move underscores the organisation’s strategic focus on accelerating growth and deepening regional engagement. With over two decades of experience across broadcast, print, radio, and digital media in India and the United States, Durga brings a rich blend of domain expertise and proven leadership to DB Corp’s senior management. Her career spans key roles in business development, content strategy, client partnerships, and leading high-performing sales teams. Prior to joining DB Corp, Durga served as Associate Vice President at Sony Pictures Networks, where she helmed critical verticals including SAB TV, FTA, Kids, and the English Cluster. Her track record in driving revenue growth, expanding regional footprints, and building strong client relationships positions her well to steer DB Corp’s ambitions in South India. [caption id=attachment_2481574 align=alignright width=146] Mayar Penkar[/caption] Durga will report to Mayar Penkar, Chief Operating Officer – Corporate Sales , who said: “Durga’s appointment marks a transformative step for DB Corp’s expansion in South India. Her deep industry insight, strategic acumen, and client-first leadership approach will help us unlock new milestones in the region.” In her new role, Durga will lead strategic business initiatives, drive customer-centric solutions, foster high-performance teams, and further bolster DB Corp’s commitment to delivering impactful, value-led offerings. Her leadership is expected to play a pivotal role in advancing the organisation’s vision for sustained market leadership and innovation.
பொதுமக்கள் கவனத்திற்கு..சென்னை புறநகர் ரயில் சேவைகள் ரத்து - ரயில்வே முக்கிய அறிவிப்பு!
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகாராஷ்டிரா: மராத்தி பேசாதவருக்கு ரயிலில் அடி, உதை; உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவர்
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயிலில் சென்றபோது மொழி விவகாரத்தில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவர், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வியாழக்கிழமை (நவ. 20) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்யாண் ஈஸ்ட் பகுதியில் அப்பார்ட்மென்டில் வசிக்கும் அந்த முதலாம் ஆண்டு மாணவர் கடந்த செவ்வாய் (நவ. 18) அன்று தூக்கிட்டுள்ளார். அவர் தினமும் கல்யாணிலிருந்து முலுண்டில் இருந்த தனது கல்லூரிக்கு ரயிலில் சென்று வந்துள்ளார். செவ்வாய் காலை அதுபோல பயணிக்கும்போது சச்சரவு ஏற்பட்டுள்ளது. ரயில், நெருக்கடியான நிலை வாலிபரின் தந்தை கூறியதன்படி, நெருக்கடியான நிலையில், ஒருவர் அவரை தள்ளி நிற்க சொல்ல, அவர் மராத்தியில் பதில் அளிக்காததால் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். ஒரு பயணி, தனது ஐந்து தோழர்களுடன் சேர்ந்து, மாணவனை கொடூரமாகத் தாக்கி, அவரை எண்ணற்றமுறை குத்தியுள்ளனர். இதனால் அவருக்கு பயமும் குமட்டலும் ஏற்பட்டு தானே நிலையத்தில் இறங்கியுள்ளார் என காவல்துறை அதிகாரி விளக்கியுள்ளார். கல்லூரியில் முழு நேரமும் அமராத அந்த மாணவர் விரைவாக வீடுதிரும்பி அவரது தந்தையிடம் ஃபோனில் பேசியிருக்கிறார். Marathi அவர் தனது மொபைல் போனில் சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார், தந்தை அவரது குரலில் பயமும் பதற்றமும் இருப்பதை தந்தை உணர்ந்தார். அன்று மாலை வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டார். அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனது மகனைக் கண்டார், என்று அந்த காவல்துறை அதிகாரி கூறயுள்ளார். தாக்குதலால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, அவரது தந்தை புகார் அளித்துள்ளார். காவலர்கள் இதனை விபத்து மரணம் எனப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். `மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின்
செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்! - திருவள்ளூர் மற்றும் கல்பாக்கத்தில்...
திடீரென தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் ஏர்பஸ் விமானம்.. அவசர சிகிச்சை தேவையால் பரபரப்பு!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவ தேவைக்காக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ் ஏர்பஸ் விமானம் மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளது. துபாயிலிருந்து பிரிஸ்பேனுக்கு இயக்கப்படும் எமிரேட்ஸ் ஏர்பஸ் A380 விமானமானது, நேற்று மாலை (20) பயணி ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நிலை சிக்கலால் கொழும்பு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதன்படி, திடீரென பயணி ஒருவருக்கு மருத்துவ தேவை ஏற்பட்டதன் காரணமாக இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வைத்தியசாலையில் அனுமதி இந்நிலையில், குறித்த விமானம் பண்டாரநாயக்க […]
போர்நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்! காஸாவில் மீண்டும் தாக்குதல்; 33 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவின் கான் யூனிஸ் பகுதியில், கடந்த நவ.19 ஆம் தேதி முதல் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இதையடுத்து, நேற்று (நவ. 20) காலை இஸ்ரேலின் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதன்மூலம், கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாகவும் காஸா அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இது […]
சட்டசபை தேர்தலை முன்பாக இ-ஸ்கூட்டர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்!
புதுச்சேரியில் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்த அதாவது சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அனைத்தையும் செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .
தவெக: பிரசாரத்தை தொடங்கும் விஜய், அனுமதி மறுத்த காவல்துறை - காரணம் என்ன?
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சார பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசும்போது எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும் பேசினார். தவெக பிரசாரம் அப்பொழுது கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்துவிட்டதால், அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரச்சாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் தெரிவித்து கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் எப்பொழுது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். தவெக: விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க - பி.டி.செல்வகுமார் இந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் விஜய்யின் தேர்தல் பிரச்சார பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். குறிப்பாக சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய மூன்று இடங்களில் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபம் மற்றும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகிய இரண்டு தினங்களுக்கு இடையே டிசம்பர் 4ஆம் தேதியில் அனுமதி அளிக்கப்படாது. காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள். எனவே மாற்று தேதியை காவல்துறை தரப்பில் கேட்டனர். தவெக நிர்வாகிகள் மனு தமிழக வெற்றி கழகத்தின் தலைமையை கேட்டு தகவல் தெரிவிப்பதாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் கூறியுள்ளார். அந்த தேதியை தவிர்த்து மற்ற தேதிகளில் அனுமதி அளிக்கப்படும் எனவும் சேலம் மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக தற்பொழுது காவல்துறை முடிவு செய்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் அனுமதி அளிப்பதற்கு தயாராக உள்ளதாகவும், ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் உள்ளது. தேர்தல் பிரச்சார பரப்புரைக்கு, எவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என்று எண்ணிக்கை தெரிவித்தால் அதற்கு ஏற்றார் போல் இடம் முடிவு செய்வது குறித்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று சேலம் மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ``விஜய் முதல்வராக வருவதை தடுக்க SIR-ல் திமுக முறைகேடு செய்கிறது'' - தவெக நிர்மல்குமார் குற்றச்சாட்டு
பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோயில்: திருவண்ணாமலை போறீங்களா? அப்போ அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்!
திருவண்ணாமலையில் ஈசனே மலையாக எழுந்தருளியிருக்கிறார் என்பது ஐதிகம். நினைத்தாலே முக்தி தரும் தலம். இத்தலத்திற்கு வந்தாலும் கிரிவலம் செய்தாலும் பல ஜன்மப் பாவங்களும் போகும். அப்படிப்பட்ட திருவண்ணாமலைத் திருத்தலத்தில் பல்வேறு ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். திருவண்ணாமலை சின்னக்கடைத் தெருவில் இருக்க்கூடிய பவளக்குன்று மடம் வழியாகச் செல்லும் மலைப் படிக்கட்டுகளில் ஏறினால் இந்த ஆலயத்தை அடையலாம். இங்கே அண்ணாமலையார் சிவசக்தி சொரூபமாக – அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தருகிறார். பவளக்குன்று குடைவரை சிறு குன்றினைப்போல அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதியின் உச்சிக்கு செல்ல 150 படிகள் ஏற வேண்டும். செல்லும் வழியிலேயே சிறு குடைவரை சிற்பங்களைக் காணமுடியும். அவற்றில், விநாயகர், முருகன், பைரவர், வீரபத்திரர், எதிரே நந்தி பகவான் ஆகியோர் அற்புதமாகக் காட்சி அருள்கிறார்கள். மேலே ஏறியதும் வலதுபுறம் ஒரு சுனை உள்ளது. இது மிகவும் பழைமையான தீர்த்தம். இந்தத் தீர்த்தம் கொண்டுதான் சுவாமி அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் தவம் செய்த அம்பிகையை ஈசன் திருவண்ணாமலைக்கு வரச் சொன்னார். அப்படி வந்தபோது கௌதம மகரிஷி அம்பிகையை வரவேற்று இந்தப் பவளக் குன்றில் அமர்ந்து தவம் செய்யுமாறு வழிகாட்டினார். இந்தக் குன்றிலேயே தேவி பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். நான்கு திசையிலும் துர்கையை காவல் புரிய அம்பிகையின் தவம் நிகழ்ந்தது. அப்போது மகிஷாசுரன் தொல்லை கொடுத்தான். அம்பாள் துர்கையை அனுப்பி மகிஷாசுரனை வதம் செய்தாள் என்கிறது புராணம். அப்படி அவன் தலையை வெட்டியபோது அவன் தலைக்குள் ஒரு லிங்கம் இருந்ததாம். அம்பாள் அதைக் கையில் எடுத்தபோது அது அவளின் கையில் ஒட்டிக்கொண்டது. பவளக்குன்று கோயில் இதுகுறித்து கௌதம மகரிஷியிடம் அம்பிகை கேட்டபோது ஈசன் அசரீரியாக பதில் சொன்னார். “கத்தியினால தரையை பிளந்து கற்க தீர்த்தம் உண்டாக்கு. கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, கோதாவரி, சோன நதி எல்லாம் அதில் வந்து சேரும். 30 நாள்கள் அதில் நீராடி பூஜை செய்தால் லிங்கம் கையில் இருந்து விலகும்” என்றார். அம்பாளும் அப்படியே செய்ய 30 நாள் கழித்து லிங்கம் கையை விட்டு விலகியது என்கிறது புராணம். அந்த லிங்கத்தை 'பாவ விமோசன லிங்கேஸ்வரர்' என்று பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். இன்றும் துர்கையம்மன் கோயிலில் அந்த பாவ விமோசன லிங்கத்தை தரிசனம் பண்ணமுடியும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் : பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் சேர்வர் - ஓர் அற்புத சிவாலயம்! இப்படி எல்லாம் அம்பிகை கடும் தவம் புரிய ஈசன் மனம் மகிழ்ந்து இந்தப் பவளக்குன்றில் காட்சி அளித்து அம்பிகையைத் தன்னோடு சேர்த்து அர்த்தநாரீஸ்வரராக மாறினார். திருவண்ணாமலைத் தலத்தில் இரண்டு விசேஷம். ஒன்று ஈசன் மலையாக இருப்பது. மற்றொன்று அம்பிகைக்கு இடபாகம் அளித்தது. இரண்டாவது விசேஷம் நிகழ்ந்த தலம் இந்தப் பவளக் குன்று. இந்தக் குன்றின் மீது ஈசன் அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். கூடவே விநாயகர், முருகர், முக்தாம்பிகை ஆகியோரும் எழுந்தருளியிருக்கிறார்கள். கௌதம மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கமும் பவளகிரீஸ்வரர் என்கிற நாமத்தோடு இங்கே காட்சி அருள்கிறார். அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் அழகான கோபுரத்தின் நான்கு புறங்களில் தட்சிணாமூர்த்தி, சயன கோலத்தில் பெருமாள், மயில் மேல் முருகன், நந்தியில் சிவனும், பார்வதியும் ஆகியோர் காட்சி கொடுக்கின்றனர். பிராகாரத்தின் நான்கு மூலையிலும் நந்தி இருப்பதோடு நந்திக்கு கீழே முதலையின் சிற்பமும் அமைந்திருப்பது சிறப்பு. பிராகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதி உண்டு. ரமண மகரிஷி இங்கே தங்கியிருந்து தவம் செய்வார். ஒருமுறை அவரின் தாய் அழகம்மைக்கு உபதேசம் செய்த தலமும் இதுதான். திருவண்ணாமலை வரும் பக்தர்கள் பலரும் இந்தத் தலத்துக்கு வருவதில்லை. இங்கே ஆலயம் குறிப்பிட்ட வேளைகளில்தான் திறந்திருக்கும். ஆனால் பவளக்குன்றின் மீது ஏறி நின்று திருவண்ணாமலையையும் ஈசனின் ஆலய கோபுரதரிசனமும் கண்டாலே நமக்குப் புண்ணிய பலன் கிடைக்கும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!
வெளிநாடொன்றிலிருந்து யாழ். வந்தவருக்கு எமனான கிணறு!
யாழில் கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நோர்வேயில் வசித்து வந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ளார். இன்று காலை சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்றவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார். பின்னர் கிணற்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை […]
நெல்லை: `டீ குடிக்கச் சென்றவரை தாக்கிய கரடி' - குடியிருப்புக்குள் உலா வரும் கரடிகள்; மக்கள் அச்சம்
நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, மான், மிளா, பன்றி, உடும்பு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், இரை தேடலுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலையடிவாரப் பகுதிகளில் சுற்றி திரிகின்றன. அத்துடன், அவ்வப்போது மலையடிவாரப் பகுதிகளில் உள்ள பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், அருணாச்சலபுரம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றன. கோயிலுக்குள் புகுந்த கரடி பகல் நேரங்களில் புதர்களில் மண்டியிருக்கும் கரடிகள், மாலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. வீடுகள், டீக்கடைகள், உணவகங்களில் புகுந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால், ஆத்திரத்தில் அங்கிருக்கும் பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் செல்கிறது. ஒற்றை கரடியாக நடமாடிய நிலையில், சமீப காலமாக கரடிகள் கூட்டம், கூட்டமாக உலா வருகிறது. உணவு தேடி அலைவதால், ஆக்ரோஷத்தில் தனியாகச் செல்வோரை தாக்கி வருவதால், வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவோர் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். இந்த நிலையில், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான கணபதி என்பவர், வழக்கம் போல் டீ குடிப்பதற்காக ஆம்பூர் மெயின் ரோட்டில் இருந்து தாட்டன்பட்டிக்கு மாலை சுமார் 5 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அங்குள்ள டீக்கடை பின்புறம் பதுங்கியிருந்த இரண்டு கரடிகளில் ஒரு கரடி, கணபதி மீது பாய்ந்து நகங்களால் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர், சுதாரித்துக்கொண்டு ஓடிவிட்டார். இதில் இரண்டு கரடிகளும் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டன. இதனையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். குடியிருப்புக்குள் புகுந்த கரடி இது குறித்து, கரடியின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கணபதியிடம் பேசினோம். “தினமும் மாலையில் டீ குடிப்பதற்காக அந்த டீக்கடைக்கு செல்வேன். ஆனால், அன்று டீக்கடை பூட்டியிருந்தது. இதனால், அங்கிருந்து கிளம்ப முயற்சித்தேன். என்னைப் பார்த்த கரடிகள் உறுமல் சத்தம் எழுப்பியது. நான் ஓடுவதற்குள் என்னை தாக்கியது. கரடியால் எனக்கு நேர்ந்த துயரம் வேறு யாருக்கும் நிகழக்கூடாது” என்றார். தன்னந்தனியாக உலா வந்த கரடிகள், தற்போது கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தென்காசி: கரடி தாக்கி மூவர் காயம்; பணிக்குச் செல்ல விவசாயிகள் அச்சம்; பிடிக்கும் பணியில் வனத்துறை
IPL 2026: ‘பதிரனாவை வாங்கப் போகும் அணி இதுதான்’.. சிஎஸ்கேவுக்கு பின்னடைவு: பெரிய தொகையை பெறுவார்?
ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலத்தில், மதீச பதிரனாவை வாங்கப் போகும் அணி எது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பதிரனாவை பெரிய தொகை கொடுத்தாவது வாங்க வேண்டும் என்ற முடிவில் இந்த அணி இருக்கிறதாம்.
வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியினர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.சில விடயங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சிலவற்றுக்கு அவகாசம் வேண்டுமென சொல்லி இருப்பதாக தெரிகிறது. ஜனவரி […]
மதுரை: ``மெட்ரோவைத் தொடர்ந்து ஆசியான் ஒப்பந்தத்தில் விமான நிலையமும் புறக்கணிப்பா?'' - சு.வெங்கடேசன்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை விமான நிலையத்தை சிங்கப்பூர், மலேசியா உள்ளடக்கிய ஏழு ஆசியான் நாடுகளுடன் சுற்றுலா மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு இருதரப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்க்க வேண்டும் என ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுக்கு கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தேன். சு.வெங்கடேசன் இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், சுற்றுலா மற்றும் கலாசார மேம்பாட்டிற்காக 18 இந்திய விமான நிலையங்களை சுற்றுலா நகரமாக ஏழு ஆசியான் நாடுகளுக்கு அறிவித்து மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமானது ONE-TIME POLICY DECISION எனவும், தற்போது மதுரையை இந்த ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்ப்பதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனவும், இந்திய விமான நிறுவனங்கள் விரும்பினால் மதுரையிலிருந்து ஆசியான் நாடுகளுக்கு தங்கள் விமானங்களை இயக்க எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும், ஆனால் அந்த முடிவு இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் லாபம் மற்றும் வழித்தடத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு அவர்களே முடிவு செய்ய முடியும் என்றும் அரசு அவர்களின் விமான இயக்கத் திட்டங்களில் தலையிட முடியாது எனவும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மதுரை மண்டலம் இயற்கையாகவே தெற்காசிய நாடுகளுடன் கலாசார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது, அங்கு வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் தென் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலானோர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். மதுரைக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடையேயான சுற்றுலா வாய்ப்புகளும் ஏராளம். இத்தனை அம்சங்களையும் அறிந்துதான் மலேசியாவின் ஏர்ஆசியா 2003ஆம் ஆண்டிலிருந்தும், பாட்டிக்ஏர் (மலிண்டோ) 2014ஆம் ஆண்டிலிருந்தும் மதுரைக்கு நேரடி விமான சேவையை இயக்க முன்வந்தனர். மதுரை விமான நிலையம் மேலும் 2014-15 காலகட்டங்களில் ஏர் அரேபியா, ஃப்ளை துபை போன்ற சில வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களும் மதுரைக்கு தங்களது விமானங்களை இயக்க ஆர்வம் காட்டின. ஆனால் இவை அனைத்தும் இருதரப்பு ஒப்பந்தங்களில் மதுரை இடம் பெறாத ஒரே காரணத்தால் நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போனது. ஒருபக்கம் இந்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மதுரை விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு எதிராகவே உள்ளன. மறுபுறம் ஆசியான் சிறப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரங்கள் என சேர்க்கப்பட்டுள்ள 18 இந்திய நகரங்களை ஆராய்ந்தோமானால், கஜுராஹோ இன்றுவரை முழுமையான உள்நாட்டு விமான நிலையமாக உள்ளன, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தில் ஒரு உள்நாட்டு விமான நிலையத்தை POC ஆகச் சேர்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் சுங்க மற்றும் குடியேற்ற வசதிகள் இல்லாமல் சர்வதேச விமான நடவடிக்கைகளை அங்கு கையாள முடியாது. ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து, போர்ட்-பிளேர், அவுரங்காபாத் போன்ற சில விமான நிலையங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசியான் இருதரப்பு சலுகைகளைப் பயன்படுத்தவில்லை. ``எம்.பி-க்களுக்கு மட்டும் அலுவலகம் இல்லை; தமிழக அரசு மறுக்க காரணம் என்ன?'' - சு.வெங்கடேசன் கேள்வி இருதரப்பு ஒப்பந்தங்கள் ஒரு கொள்கை முடிவு என்று இந்திய அரசு கூறுகிறது, ஆனால் அந்த கொள்கையே நியாயமற்றதாக தெரிகிறது., அதுமட்டுமின்றி இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் போன்ற தங்கள் HUB வழியாக உலகம் முழுவதும் பயணத்திட்டங்களை மேற்கொள்கின்றன. அதிகளவில் லாபம் ஈட்டுகின்றன ஆனால், இந்திய விமான நிறுவனங்கள் பெரும்பாலும் O&D போக்குவரத்தையே சார்ந்துள்ளன. ஆர்வமுள்ள வெளிநாட்டு விமான நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதும், தயங்கும் இந்திய விமான நிறுவனங்கள் மதுரை விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதை எதிர்பார்ப்பதும்/அதற்காக காலவரையற்று காத்திருப்பதும், மதுரையை ஒவ்வொரு ஆண்டும் நஷ்டம் விளைவிக்கும் AAI விமான நிலையங்களின் பட்டியலில் வசதியாக சேர்க்கிறது. இது எந்த வகையில் நியாயம்? சு.வெங்கடேசன் இந்தக் கொள்கை முடிவு என்பது முற்றிலும் நியாயமற்றது. இது ஒரு முறை முடிவு செய்யப்படும் கொள்கை முடிவாக இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்குப் பிறகாவது இந்த சிறப்பு ஆசியான் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். சர்வதேச போக்குவரத்திற்கு பயன்படாத விமான நிலையங்களுக்கு பதிலாக தெற்காசிய நாடுகளுடனான நேரடி விமானங்களுக்காக பல வருடங்களாகக் காத்திருக்கும் மதுரை போன்ற தகுதியான விமான நிலையங்களை இந்த ஆசியான் ஒப்பந்தத்தில் POC-ஆக சேர்ப்பது தானே நியாயமாக இருக்க முடியும்? தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மதுரையை ஆசியான் சிறப்பு ஒப்பந்தத்தில் ஒரு சுற்றுலா நகரமாக சேர்க்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். மதுரைக்கு மெட்ரோ திட்டம் கிடையாது என ஒன்றிய அரசு மறுக்கிறது, பிற மாநிலங்களில் அடிப்படையாக இருக்கவேண்டிய வசதிகள் கூட இல்லாத சிறிய விமான நிலையங்களை ஊக்குவிக்கிறது, ஆனால், மதுரை விமான நிலையத்தைப் புறக்கணிக்கிறது. ஒன்றிய அரசின் வஞ்சகம் நிறைந்த இச்செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. என்று தெரிவித்துள்ளார். S.I.R. : தமிழ்நாடு மிக வலிமையாக இதை எதிர்க்க வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி
மின்சாரம் இல்லாமல் தவித்த பாரிஸ்: 112,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!
நேற்று வியாழக்கிழமை பாரிஸில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக பரவலான மின்வெட்டு ஏற்பட்டதால் 170,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவித்தன. உள்ளூர் நேரப்படி காலை 6.38 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டதால் மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் பாதைகள் நிறுத்தப்பட்டன. நகரத்தில் 112,000 வீடுகள் ஐந்து நிமிடங்களுக்குள் மீண்டும் மின்சாரம் இணைக்கப்பட்டதாக பிரான்சின் உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்றங்களை நிர்வகிக்கும் RTE எக்ஸ் தளத்தில் எழுதியது. பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வீடுகளும் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்குள் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டன. காலை 5.38 மணிக்கு நகரின் தென்மேற்கில் உள்ள இஸ்ஸி-லெஸ்-மவுலினாக்ஸில் உள்ள ஒரு மின் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மின்வெட்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Paris blackout in parts of Paris
கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? - மன நல மருத்துவர் ஆலோசனை
கோபம், நம் எல்லோருக்குமே வரும். எதிரில் இருப்பவரை மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தே காயப்படுத்தும் கோபத்தை எப்படி கட்டுக்குள் வைப்பது? சொல்லித் தருகிறார் மனநல ஆலோசகர் கவிதா சேகர் கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? கோபம் ஏற்படுத்துகிற நபர் பேசுகையில் ''உங்களுக்கு யாரால், எந்தச் சூழ்நிலையால் அதிகம் கோபம் ஏற்படுகிறது என்பதை ஒரு சுயபரிசோதனை செய்யுங்கள். அதை ஒரு பேப்பரில் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு நபர் பேசுவதைக் கேட்டாலே உங்கள் கோபம் வரும் அல்லது எரிச்சல் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால், அவரது குரலை ஒரு காமெடி நடிகர் அல்லது நடிகையின் குரலாகக் கற்பனைப் பண்ணிக்கொள்ளுங்கள். அந்த நபர் பேசும் விஷயங்களை காமெடி நடிகர் குரலோடு பொருத்திப்பார்த்து அதன்மூலம் சூழலை மாற்ற முயற்சி செய்யுங்கள். இது பலராலும் முயன்று வெற்றிபெற்ற ஒரு வழிமுறை. இதன்மூலம் கோபம் என்ற மனநிலையில் இருந்து நீங்கள் விடுபட முடியும். கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? உங்கள் சுவாசம் அசாதாரணம் ஆகும்! நீங்கள் கோபமாக இருக்கும்போது, கோபத்துக்கும் எரிச்சலுக்கும் இடையில் நீங்கள் உங்கள் சுவாசம் அசாதாரணமாவதை நீங்கள் உணரலாம். நீங்கள் கோபமாக உணரத் தொடங்கும்போது, ஆழ்ந்த சுவாசம், நேர்மறையான சுயபேச்சு அல்லது உங்கள் கோபமான எண்ணங்களை நிறுத்த முயலவும். உங்கள் அடிவயிற்றில் இருந்து ஆழமாக சுவாசிக்கவும். Parenting: இந்த வகை பெற்றோர்களின் குழந்தைகளே சமூகத்துக்கு வரம்! `நிதானமாக' அல்லது `எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்' போன்ற பாசிட்டிவ் வார்த்தைகளை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். கோபம் குறையும்வரை ஆழமாக சுவாசிக்கும்போது அதை நீங்களே செய்யவும். கோபத்தை வெளிப்படுத்துவது அதை அடக்குவதைவிட சிறந்தது என்றாலும், அதைச் செய்ய சரியான வழி இருக்கிறது. உங்களை தெளிவாக வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது? 3 டெக்னிக்ஸ் ஆங்கிலத்தில் CAR என்ற ஒரு பதம் இருக்கிறது. அதாவது, Change the Changeable, Accept the unchangeable and remove yourself from the unacceptable என்பார்கள். `உங்களால் மாற்ற முடிவதை மாற்றுங்கள், மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் அதேபோல், மாற்றவே முடியாத சூழலில் இருந்து நீங்கள் வெளியேறுங்கள்' என்பார்கள். இந்த எளிய வழியைப் பின்பற்றினால் எந்தச் சூழலையும் உங்களால் எதிர்கொள்ள முடியும்'' என்றார்.
நாணயம் விகடன் வழிகாட்டியதால் குவிந்த லட்சங்கள்... சாட்சி சொல்லும் கோவை லோகநாதன்!
சேமிப்பு, முதலீடு, காப்பீடு மற்றும் பிசினஸ் என அத்தனை விஷயங்களையும் எளிமையாகவும், சரியாகவும் தந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமையைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நாணயம் விகடன், 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள உதவும் முதலீட்டு வழிகாட்டியாக இருந்துவரும் நாணயம் விகடன், கடந்த 20 ஆண்டுகளில் சாதித்தது என்ன என்பதற்கு, வாசகர்களாகிய நீங்களெல்லாம்தான் சாட்சி. அந்தவகையில், நாணயம் விகடன் வழிகாட்டியதன் மூலம் பல லட்சங்களைக் குவித்த கோவை வாசகர் லோகநாதன், ‘நாணயம் விகடனும் நானும்’ என்ற தலைப்பில் இங்கே சாட்சி சொல்லியிருக்கிறார். எப்போதுமே வாசகர்கள் விரும்புவதைக் கொடுப்பதுதான் நாணயம் விகடனின் ஸ்பெஷல். அந்தவகையில், 21-ம் ஆண்டு சிறப்பிதழுக்கு நீங்கள் கொடுத்த யோசனைகளை ஆராய்ந்து, தொகுத்து அவற்றிலிருந்து புதிய தொடர்களையும், கட்டுரைகளையும் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறோம். வாழ்க்கையில் முதல் சம்பளம் என்பது எல்லோருக்குமே ஸ்பெஷல். அந்த முதல் சம்பளத்தில் வரவு செலவுகளை எப்படி நாம் திட்டமிடுகிறோம் என்பது தான் நம் எதிர்கால நிதிநிலை எப்படி இருக்கப் போகிறது என்று தீர்மானிக்கும். அந்தவகையில், பணம் சார்ந்து செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்களைச் சொல்லும் ‘பணம் பழகுவோம்... சம்பளம் முதல் உயில் வரை’ என்ற தொடர் உங்களுக்காக வருகிறது. எப்போதுமே மக்களின் விருப்பமாக இருந்துவரும் ரியல் எஸ்டேட் சொத்துகள் சார்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்களையும், சந்தையில் வரக்கூடிய மாற்றங்களையும் எடுத்துச்சொல்லும் விதமாக ‘வீடு, மனை, லாபம்... ரியல் எஸ்டேட் கள நிலவரம்’ தொடர் இடம்பெறுகிறது. பணம் சார்ந்து சின்னச் சின்ன விஷயங்களைச் செய்து பெரும் மாற்றத்தைத் தங்களின் குடும்பத்தின் நிதிநிலையில் ஏற்படுத்திய நிதி அமைச்சர்களை, ‘எங்க வீட்டு எஃப்.எம்’ தொடர் மூலம் அங்கீகரித்து, மற்றவர்களுக்கும் அறிமுகப் படுத்துவதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது. தொழிலில் சாதித்துக் கொண்டிருப்பவர்களின் வெற்றிக் கதைகள் ‘நம்ம ஊரு அம்பானி... அசத்தும் பிசினஸ் கில்லாடிகள்!’ என்ற தொடரில் இடம்பெற உள்ளன. ஏ.ஐ யுகத்தில் பிரவேசித்திருக்கும் நமக்கு ஏ.ஐ தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு குறித்து அறிவையும் தெளிவையும் ஏற்படுத்தும் வகையில், ‘ஏற்றம் தரும் AI ஏஜென்ட்’ என்ற தொடர், அதிரடியாக இங்கே இடம் பிடிக்கிறது. இப்படி, எப்போதும் உங்களின் நிதி வழிகாட்டியாகக் கூடவே வரும் நாணயம் விகடனுக்கு 20 ஆண்டுகள் என்பது பெருமைக்குரிய மைல்கல். இதற்குத் துணையாக நிற்கும் வாசகர்கள், விளம்பரதாரர்கள், விநியோகஸ்தர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. நாணயம் விகடனின் இந்தப் பயணத்தில் என்றென்றும் இணைந்திருப்போம்! - ஆசிரியர்
வியற்நாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 41 பேர் பலி!
வியட்நாமின் பல வாரங்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 41 பேர் உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய பகுதியில் மற்றும் தெற்குப் பகுகளில் மக்கள் வீடுகளின் கூரைகளில் தங்கியிருப்பவர்களை மீட்புப் பணியாளர் மீட்டு வருகின்றனர். ஹோய் ஆன் முதல் தெற்கே உள்ள சுற்றுலாத் தலமான நஹா ட்ராங் வரையிலான கடலோர நகரங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. நேற்று வியாழக்கிழமை சுற்றுச்சூழல் அமைச்சகம் ஐந்து பேரைக் காணவில்லை என்று கூறியது. இது வாரத்தின் தொடக்கத்தில் ஏழு பேரில் இருந்து இறப்பு எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தியது. பின்னர் வியாழக்கிழமை அது ஒரு தொடர் அறிக்கையை வெளியிட்டு, இறப்பு எண்ணிக்கையை 41 ஆக திருத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காக 62,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், நிலச்சரிவுகள் காரணமாக பல முக்கிய சாலைகள் தடைபட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது. டா லாட்டின் தெற்கு நுழைவுப் பாதையான மிமோசா பாஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. சாலையின் ஒரு பகுதி பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்தது. மேலும் ஒரு பேருந்து அந்த இடைவெளியில் விழுவதை மயிரிழையில் தவிர்த்தது. வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பல சேவைகளை அரசாங்கத்திற்குச் சொந்தமான ரயில் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மழை தொடர்ந்ததாலும், நீர் மட்டம் உயர்ந்ததாலும் புதன்கிழமை இரவு அவசரகால மீட்பு மையத்தில் அழைப்பு அளவு அதிகரித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. அரசாங்க அறிக்கையின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாகாணங்களான கான் ஹோவா, டக் லக் மற்றும் கியா லாய் ஆகிய நாடுகளின் தலைவர்களிடம், இராணுவம், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினரை உடனடியாக இடமாற்றம் செய்து மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற அணிதிரட்டுமாறு துணைப் பிரதமர் ஹோ குவோக் டங் கூறினார். வியாழக்கிழமை அதிகாலை இரண்டு இடங்களில் டக் லக் மாகாணத்தில் உள்ள பா நதியின் நீர்மட்டம் 1993 ஆம் ஆண்டு சாதனையை முறியடித்தது. அதே நேரத்தில் கான் ஹோவா மாகாணத்தில் உள்ள காய் நதியும் புதிய உச்சத்தை எட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்திய வாரங்களில் இடைவிடாத மழை மற்றும் பல பெரிய புயல்கள் வியட்நாமை மூழ்கடித்துள்ளன. மூன்று வாரங்களுக்குள் கல்மேகி மற்றும் புவாலோய் ஆகிய இரண்டு புயல்கள் தாக்கின, அதே நேரத்தில் கடலோர நாடு செப்டம்பர் மாத இறுதியில் வெப்பமண்டல புயல் ரகசாவின் பின்புறத்தையும் பிடித்தது. பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் மேலும் சூறாவளிகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளன. ஆண்டின் இந்த நேரம் பொதுவாக பலத்த மழையுடன் தொடர்புடையது. குறிப்பாக மத்திய வியட்நாமிலும், ஓரளவுக்கு தெற்கிலும். தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின்படி, ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இயற்கை பேரழிவுகள் 2 பில்லியன் டாலர்களுக்கும் (€1.7 பில்லியன்) அதிகமான சேதத்தை ஏற்படுத்தின. இதில் 279 பேர் இறந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர். சமீபத்திய உயிரிழப்புகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும்.
திருச்சியில் மினி கேரளா... குடும்பத்துடன் சுற்றுலா செல்ல சூப்பர் ஸ்பாட் சுடச்சுட ரெடி!
திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சமலையில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மக்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
கேட்டாலே புண்ணியம்... தீய சக்திகள் விலகும்... தினமும் அவசியம் கேட்க வேண்டிய லலிதா சகஸ்ரநாமம்!
ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட, வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலினீ, வஸீனி, விமலா, அருணா, ஜயினீ, காமேஸ்வரி போன்றோர் தொடர்ந்து பாட, அம்பிகையின் சகஸ்ரநாம துதிப்பாடல் வெளிப்பட்டது. அம்பிகையின் அனந்த கோடி திருநாமங்களில் ஶ்ரீலலிதா என்ற பெயரே அம்பிகைக்கு உவப்பானது என்பதால் அந்த பெயரிலேயே அவள் திருநாமங்கள் 1,000 கூறும் ஸ்தோத்திரமும் உருவானது. அற்புதமான இந்தத் துதிப்பாடல், ஹயக்ரீவரால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டு, அவர் மூலம் பூவுலகுக்கு வந்துசேர்ந்தது என்கிறது புராணம். இந்த அற்புதமான ஸ்தோத்திர பாராயணத்தை வேதம் கற்றுணர்ந்த இளைஞர்களான ஷ. ஸாம்பசிவம், சு.நாகேந்திரன் சிவம், க.கைலாஷ் சிவம் ஆகியோர் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இதைக் கேட்பதும் படிப்பதும் பார்ப்பதும் மிகுந்த புண்ணிய பலனைத் தரும். சக்தி விகடன் பார்வையாளர்கள் அனைவரும் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டுப் பார்த்துப் படித்துப் புண்ணிய பலன் அடையவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.
நட்சத்திரப் பலன்கள் நவம்பர் 21 முதல் 27 வரை #VikatanPhotoCards
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி ச
பெண் ஆட்டோ ஓட்டுனர்களின் பாதுகாப்பு மற்றும் உதவிகளுக்கு சங்கம்...!
சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் .
ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் முக்கிய திட்டம்...இளைஞர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!
ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் முக்கிய திட்டம் தொடர்பாக விரிவாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இதன் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வெள்ளை மாளிகையில் இன்று அதிபர் டிரம்ப் –மம்தானி சந்திப்பு!
நியூயார்க்கின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோரான் மம்தானியை இன்று (நவ. 21) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், நியூயார்க் நகரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஸோரன் மம்தானி புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், நியூயார்க்கின் முதல் இந்திய வம்சாவளி மற்றும் முதல் இஸ்லாமிய மேயராக வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி அவர் பதவியேற்கவுள்ளார். இந்தத் தேர்தலில், மம்தானிக்கு நியூயார்க் மக்கள் வாக்களிக்க […]
சென்னை விமான நிலையத்தில் புதிய பிக் பாயிண்ட் எப்போது திறக்கப்படும்?
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றி செல்ல புதிய பிக் பாயிண்ட் எப்போது திறக்கப்படும் ? என்பது தொடர்பாக அதிகாரிகள் கூறியுள்ள விளக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
பாம்புகளிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும் ; சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று(20) வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்ததாகக் கேள்விப்பட்டதாகவும், நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து சபாநாயகரையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகம் சுற்றுச்சூழல் உணர்திறன் வலயத்தில் அமைந்துள்ளதால், பாம்புகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைகின்றன என்றும் இதன் போது குறிப்பிட்டார். இந்நிலையில் நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் நாடாளுமன்ற […]
உக்ரைனில் ரஷியா தீவிர தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள தொ்னோபில் நகரில் ரஷியா புதன்கிழமை அதிகாலை நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொ்னோபில் நகரில் ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா். அவா்களில் 3 போ் சிறுவா்கள். இது தவிர, இந்தத் தாக்குதலில் 15 சிறுவா்கள் உள்பட 75 போ் காயமடைந்தனா். ரஷிய தாக்குதல் காரணமாக ஒரு குடியிருப்புக் […]
தெற்கு ரயில்வே சிறப்பு பார்சல் ரயில் சேவை: தென் மாநிலங்களுக்கு புதிய வர்த்தக வழி!
தெற்கு ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக, பார்சல்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் ரயில் சேவை ஆரம்பமாக உள்ளது. 12 பெட்டிகளுடன், வாரத்துக்கு ஒரு முறை மங்களூரு - சென்னை இடையே இயக்கப்படும்.
வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியினர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேசி இருக்கிறார்கள். சில விடயங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சிலவற்றுக்கு அவகாசம் வேண்டுமென சொல்லி இருப்பதாக தெரிகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு தீர்வு திட்டம் தொடர்பாக பேசலாம் எனக் கூறியிருக்கிறார். யுத்தம் நடந்த காலத்திலிருந்து யுத்தம் முடிந்ததற்கு பிற்பாடு வரை பல்வேறுபட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றிருக்கிறது. பல விடயங்கள் பேசிப்பேசி எதுவுமே நடைமுறைக்கு கொண்டுவரத சூழலே காணப்பட்டது. அரசாங்கம் திட்டவட்டமான முடிவுக்கு வரவேண்டும். மூன்று மாதம் நான்கு மாத காலத்திற்குள் பேசி அரசியல் யாப்புக்குள் அதை உள்ளடக்க முயல வேண்டும். தமிழர் தரப்புக்கு என்ன தேவை என்பதை தமிழ் கட்சிகளுக்குள் ஒருமித்த நிலைப்பாடு கொண்டு வரப்பட வேண்டும். இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை வெவ்வாறு நிலைப்பாடுகளை எடுக்க முடியாது. அரசாங்கத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பாக பேசப் போகின்றோமாக இருந்தால் தங்களை தாய் கட்சி என்று சொல்லும் தமிழ் அரசுக் கட்சி ஏனைய சகல கட்சிகளை அழைத்து அவர்களோடு ஒரு முடிவுக்கு வரவேண்டும் புதிய அரசியல் யாப்பு வருவதாக இருந்தால் தமிழ் மக்களைப் பொருத்தவரையில் என்னென்ன விடயங்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்று முடிவுக்கு நாங்கள் வந்து அந்த முடிவின் அடிப்படையில் தான் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை செய்ய வேண்டும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமிக்கப் போவதாக சொல்கிறார்கள். எல்லை நிர்ணயத்திற்கு இன்னும் மூன்று நான்கு வருடங்கள் ஆகலாம். சாணக்கியன் கொண்டு வந்த திருத்தச் சட்டத்தை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அது பாராளுமன்றத்தில் இருந்து குப்பையில் போடப்பட்டு விட்டது. பழைய முறையில் தேர்தல் நடத்தவும் அரசாங்கம் தயார் இல்லை. ஆனால் அவ்வாறு தயாராக இருந்தால் அடுத்த வருடமே தேர்தலை நடத்த முடியும். ஒரு பக்கத்தில் அரசாங்கம் விரும்பினால் எல்லை நிர்ணயக் குழு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து செய்யலாம். ஆனால் பழைய மாதிரியான சட்டங்களின் கீழ் தேர்தலை நடத்தி மாகாண சபையை கொண்டு வர வேண்டும். மாகாண சபை வராத பட்சத்தில் அரசாங்கம் தான் விரும்பிய அனைத்தையும் ஆளுநர் ஊடாக செய்யும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை இருக்கிற பொழுதே பௌத்த ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பலவற்றுக்கு எதிராக காத்திரமான செயற்பாடுகளை செய்யலாம். என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் இணைந்து அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டியது நம்மைப் பொறுத்தவரை மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்காகவே. குறைந்தபட்சம் வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் - என்றார்.
லெபனானில் பாலஸ்தீன அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 13 பேர் பலி!
லெபனான் நாட்டின் தெற்கு மாகாணத்தில், அமைந்திருந்த பாலஸ்தீன அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இடையில், கடந்த 2024 ஆம் ஆண்டு போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர், முதல்முறையாக லெபனான் மீது இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிடன் நகரத்தில் உள்ள எயின் எல்-ஹில்வே அகதிகள் முகாமின் மீது நேற்று முன்தினம் (நவ. 18) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 […]
மோடியின் அனுமன் சிராஜ் பாஸ்வான் சொத்து மதிப்பு எத்தனை கோடி? சிவில் என்ஜினீயர் டூ மத்திய அமைச்சர்...
சிவில் என்ஜினீயர் டூ மத்திய அமைச்சராகி உள்ள பிரதமர் மோடியின் அனுமன் என்று அழைக்கப்படும் சிராஜ் பாஸ்வான் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று (20) தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது . அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாப்பது வட்டை சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறி காட்டி போடப்பட்டதுடன் மற்றய அறிவித்தல் பலகை தாந்தாமலை முருகன் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள பொலிஷ் சாவடி நிலைய சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. திருகோணமலையில் அத்துமீறி புத்தர் சிலைவைக்கப்பட்டு சரியாக மூன்று தினங்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப்பெருநிலத்தில் இந்த விளம்பரப்பலகையிடப்பட்டு தாந்தாமலை தமிழரர்களின் பூர்வீக நிலத்தில் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் பௌத்த விகாரைகளை நிறுவும் திட்டமாக இந்த விளம்பர அறிவிப்பு இடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது..
இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன்!
சோலர் நிறுவனம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் மகன் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றதென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை சாரங்கன் மறுதலித்துள்ளார். அவ்வாறு ஒரு புதிய கட்டுக்கதையை கூறியிருப்பதாகவும் சிறீதரன் சாரங்கன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். நீங்கள் என்னை பற்றி சொன்ன விடயத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தால் பகிரங்கமாக வெளியிட முடியுமா? அல்லது உறுதிப்படுத்த முடியுமா? உங்களுக்கு திராணி இருந்தால் நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் பதுங்கியிருந்து நீங்கள் சொன்ன அதே கருத்தை பொதுவெளியில் பகிரங்கமாக சொல்லுங்கள், நான் சட்ட ரீதியாக அப்படி எந்த பணம் பெறவில்லை என்று அல்லது குறித்த நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நிரூபித்து காட்டுகிறேன் எனவும் சிறீதரன் சாரங்கன் சவால் விடுத்துள்ளார். உங்கள் கருத்தில் உண்மை இருந்தால் பொதுவெளியில் கருத்தையோ ஆதாரத்தையோ வெளியிட தயங்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் எனவும் சிறீதரன் சாரங்கன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா
`எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் வெட்டுவேன்...’ புதுச்சேரி, தமிழகத்தின் பிரபல தாதாவான `தட்டாஞ்சாவடி’ செந்தில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். அதேபோல 2011-ல் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். அதன்பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி காலாப்பட்டு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர்கள் இருவருமே தற்போது காலாப்பட்டு தொகுதியை குறி வைத்திருக்கின்றனர். கடந்த நவம்பர் 19-ம் தேதி ஆளுநர் மாளிகை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், ``புதுச்சேரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கொலைக் குற்றவாளி ரௌடிகள், காலாப்பட்டு பகுதியிலுள்ள மூன்று தொழிற்சாலைகளுக்குள் நுழைந்து வேலை கேட்கிறோம் என்ற பெயரில் மிரட்டியிருக்கிறார்கள். தொழிற்சங்கத்தின் சிறப்புத் தலைவர் என்ற முறையிலும், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ என்ற முறையிலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவம்பர் 13-ம் தேதி காவல்துறை உயரதிகாரிகளிடம் புகாரளித்திருக்கிறேன். பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் வெளியிட்ட வீடியோ காட்சி. மாஸ்க் அணிந்திருப்பவர் தட்டாஞ்சாவடி செந்தில் ஆனால் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யூனியன் தலைவர்கள் அனைவரும் ஹெச்.ஆர்-களுக்கு பெண்களை சப்ளை செய்வதாகக் கூறி, எங்கள் காலாப்பட்டு தொகுதிப் பெண் சகோதரிகளையும், தாய்மார்களையும் இழிவாகப் பேசியிருக்கிறார்கள். மேலும், `எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், ஜி.எம்-மாக இருந்தாலும் வெட்டுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். அந்தக் கொலைக் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று புகாரளித்தேன். காவல்துறை அதை செய்யாததால், தற்போது துணைநிலை ஆளுநரிடம் புகாரளித்திருக்கிறேன். 2011 முதல் 2016 வரை காலாப்பட்டு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தேன். அப்போது தொகுதியில் ஒரு கொலை கூட நடந்தது கிடையாது. `ஒன்பது கொலைகளை செய்தவர் செந்தில்’ அதற்கடுத்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசப், சந்திரசேகர் இருவரும் கொலை செய்யப்பட்டார்கள். தற்போது தொழிற்சாலைக்குச் சென்று மிரட்டிய, ஒன்பது கொலைகளை செய்த குற்றவாளி தட்டாஞ்சாவடி செந்தில் மீதுதான் புகாரளித்திருக்கிறேன். அவருடன் 50-க்கும் மேற்பட்ட கொலைக் குற்றவாளிகள் இருந்தனர். இரண்டு நாட்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதே ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார். செய்தியாளர் சந்திப்பில் பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் அதையடுத்து அன்றைய தினமே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தாதாவும், அர்ஜுனக்குமாரி அறக்கட்டளையின் தலைவருமான செந்தில், ``மக்களுடன் நான் அந்த தொழிற்சாலைக்குச் சென்றது உண்மைதான். காலாப்பட்டு தொகுதியில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுவிட்டு அங்கிருந்து வந்துவிட்டோம். அப்போது தொழிற்சாலை நிர்வாகிகளுடன் நாங்கள் நடத்திய பேச்சு வார்த்தையை, முத்து என்ற ஐ.ஆர்.பி.என் காவலர் சிவில் உடையில் வந்து வீடியோ எடுத்தார். அப்போது `ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்?’ என்று கேட்ட எங்கள் ஆதரவாளர்கள் இருவரை, முத்து தாக்கினார். அதுகுறித்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் நாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐ.ஆர்.பி.என் பிரிவிலும் முத்து மீது புகார் தெரிவித்திருக்கிறோம். இதுதான் தொழிற்சாலையில் நடந்த விவகாரம். `அமைச்சராக இருந்தபோதே தலைமறைவானவர் கல்யாணசுந்தரம்’ ஆனால் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் சொல்வது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் தோற்றுவிடுவார் என்ற பயத்தில்தான் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார். அதேபோல பெண்களைப் பற்றி நான் தவறாக பேசுவதாக கூறியிருக்கிறார். எந்த சூழலிலும் நான் அப்படிப் பேசியதில்லை. பிள்ளைச்சாவடி பகுதியில் கட்டப்பட்டு வரும் விநாயகர் கோயிலுக்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என்று நாங்கள் கேட்டதற்கு, `நாங்கள் ஏற்கெனவே எம்.எல்.ஏ-விடம் கொடுத்துவிட்டோம்’ என்றார்கள் தொழிற்சாலை தரப்பில். அந்தப் பணத்தை நேற்றுதான் கோயில் நிர்வாகிகளிடம் கொடுத்தார் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். நாங்கள் கேட்கவில்லை என்றால் அந்தப் பணமே வந்திருக்காது. நான் குற்றம் செய்தவன் என்று சொல்கிறார் கல்யாணசுந்தரம். செய்தியாளர் சந்திப்பில் தாதா தட்டாஞ்சாவடி செந்தில் ஆனால் என் மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இவர் அமைச்சராக இருக்கும்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர். ஒன்பது கொலை வழக்கு என் மீது இருப்பதாக இவர் சொல்வதெல்லாம், காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான். அதற்கு காரணம், காலாப்பட்டு மக்கள் தற்போது அவருடன் இல்லை. அந்த விரக்தியில்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு கல்யாணசுந்தரம் என்ன தொழில் செய்து கொண்டிருந்தார் என்பது ஒட்டுமொத்த புதுச்சேரிக்குமே தெரியும். இந்தியாவிலேயே அமைச்சராக இருக்கும்போது தலைமறைவான குற்றவாளி என்றால் அது இவர்தான். அதேபோல, `கருவடிக்குப்பம் உமா சங்கரை கொலை செய்தது போல உங்களையும் கொலை செய்துவிடுவேன். சி.பி.ஐ வந்து என்ன புடுங்கிவிட்டது?’ என்று என்னுடைய ஆதரவாளர்களை மிரட்டுகிறார். `ஜோசப், சந்திரசேகர் இருவரையும் கொலை செய்ததே எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்தான்’ மேலும் எனக்கு ஆதரவாக இருக்கும் மூன்று பேரில் ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறார். அதற்காக இவர் யாரிடம் பேசினாரோ, அதை அவர்களே என்னிடம் வந்து சொல்லிவிட்டார்கள். சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னையில், காலாப்பட்டு காவல் நிலையத்திற்கே சென்று போலீஸாரை மிரட்டியிருக்கிறார். அப்போது பெண்களை வைத்து தொழில் செய்த ஒருவரும் உடன் இருக்கிறார். பெண்களை வைத்து தொழில் செய்தவர்களைத்தான் தன்னுடன் வைத்திருக்கிறார் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். பெண்களைப் பற்றி நாங்கள் தவறாகப் பேசுவதாகக் கூறுகிறார். பெண்களை நீ என்னவெல்லாம் செய்தாய் என்று நான் சொல்லவா ? பெண்கள் தொடர்பான குற்றங்களில் அதிகம் தொடர்புடையவன் நீதான். தட்டாஞ்சாவடி செந்தில் இவர் ரௌடிகள் என்று சொல்பவர்கள் அனைவரும், அவருக்கு வாக்களித்த மக்கள்தான். அவர்களை ரௌடிகள் என்கிறாரா ? அவர் எந்தக் குற்றச் செயல்களையும் செய்தது இல்லையா ? எம்.எல்.ஏ ஆனபிறகு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேலைக்கு ஆள் வைக்கிறேன் என்று சொல்லி எத்தனை கோடி வாங்கியிருக்கிறாய் என்று மக்களுக்குத் தெரியும். என்னை கொலைக் குற்றவாளி என்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசப், சந்திரசேகர் இருவரையும் கொலை செய்ததே எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்தான். ஏனென்றால் அவர்கள் உயிரோடு இருந்தால் இவரால் அரசியல் செய்ய முடியாது. இது அனைவருக்கும் தெரியும். தற்போது சாதாரணமாகப் பேசுகிறேன். அடுத்த முறை போஸ்டர் அடித்து ஒட்டுவேன்” என்றார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்பதற்காக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்தை தொடர்புகொண்டோம். நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைகளுக்குப் பிறகு பிரசுரிக்கப்படும். புதுச்சேரி: பிரபல தாதா தெஸ்தான் மகன் உட்பட 3 பேர் வெட்டிப் படுகொலை! - பின்னணியை விவரிக்கும் போலீஸார்
AI கெட்டது என்கிறார்கள். ஆனால் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் - விஜய் ஆண்டனி
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'பிச்சைக்காரன்' படத்தை எடுத்த இயக்குநர் சசி இயக்கத்தில் 'நூறு சாமி' படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழு எதிர்பார்க்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பிச்சைக்காரன் 2 இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி சார், 'டிஷ்யூம்' படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது சினிமாவில் எனக்கு முதலில் வாய்ப்புக் கொடுத்து, தூக்கிவிட்டவர் அவர்தான். அதன்பிறகு 'பிச்சைக்காரன்' என்ற படம் மூலம் என்னை மீண்டும் பிரபலமாக்கினார். அந்தப் படத்தை மிஞ்சிய ஒரு படத்தை இன்னும் என்னால் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்போது மீண்டும் 'நூறு சாமி' கதையை என்னிடம் சொல்லி இருவரும் சேர்ந்து அப்படத்தைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம். இயக்குநர் சசி பிச்சைக்காரன் 2: படம் வெளியாவதைத் தடுக்க நினைக்கிறார்கள்!- விஜய் ஆண்டனி வருத்தம் 'பிச்சைக்காரன்' கதையைக் கேட்டுவிட்டு ரொம்ப உணர்ச்சிவசமாகிவிட்டேன். 'நூறு சாமி' கதையைக் கேட்கும்போதும் எனக்கு அப்படித்தான் இருந்தது. இதுவும் ஒரு அம்மாவைப் பற்றியக் கதைதான். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். என்று பேசியிருக்கிறார். AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் AI ஆபத்தாக இருக்கிறது என்று கூறியது பற்றிய கேள்விக்கு விஜய் ஆண்டனி, AI தொழில்நுட்பத்தில் நல்லது கெட்டது இரண்டுமே இருக்கிறது. அதை நாம் எப்படி கையாளுகிறோமோ அதைப் பொறுத்துதான் நல்லது கெட்டது என்று மாறுகிறது. எல்ல தொழில்நுட்பமும் நாம் கையாளுவதில்தான் நல்லது கெட்டது இருக்கிறது. விஜய்க்கு மட்டுமல்ல திருமாவளவன், ஸ்டாலின் என எல்லோருக்கும் குரல் கொடுப்பேன்! - விஜய் ஆண்டனி AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் நிறையபேர் பலனடைவார்கள் என்று நினைக்கிறேன். காலநிலை மாற்றம், வானிநிலை மாற்றம், என்ன பருவத்தில் என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, விவசாயத்தில் பெரும் மனித வேலைகளை எளிதாக்கும் இயந்திரம் வரையில் AI தொழில்நுட்பம் பரவி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி
தள்ளாட தொடங்கியது தேசிய மக்கள் சக்தி!
தேசிய மக்கள் சக்தி வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் தொடர் தோல்விகளை சந்திக்க தொடங்கியுள்ளன. அவ்வகையில் களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் வரவு -செலவுத் திட்டத்தை வாக்கெடுப்பிற்கு கோரிய போது ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தேசிய மக்கள் சக்தி கட்சியின் 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், சபையில் உள்ள மற்ற கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் அதற்கு எதிராக வாக்களித்தனர். அதேபோன்றே தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள தங்காலை மாநகர சபையின் முதலாவது வரவு செலவுத்திட்டமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் ஆதரவாக ஒன்பது உறுப்பினர்களும்,எதிராக பத்து உறுப்பினர்களும் வாக்களித்தனர். சர்வ ஜன பல கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்து, அவர்களுக்கு பெரும்பான்மையை வழங்கியதை அடுத்து தோல்வி உறுதிசெய்யப்பட்டது. இதற்கிடையில்,இதற்கு நேர்மாறாக, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி வெலிகம பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டை நிறைவேற்றியது. பட்ஜெட்டுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுதே - நடிகை கெளரி கிஷன் போட்டோ ஆல்பம்
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அவர் மீதான பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார்;. சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். வழக்கு தாக்கல் செய்வது தொடர்பிலான கோரிக்கை புதன்கிழமை (19) அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், செயலாளரின் சார்பாக பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை மீளப் பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். அதன்படி, பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க மருத்துவ காரணங்களை முன்னிறுத்தி பிணையில் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சபரிமலை கோயில் தங்கம் கொள்ளையில் பங்கு; சி.பி.எம் நிர்வாகியான தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது!
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க கவசம் மற்றும் திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தை மோசடி செய்து கொள்ளையடிக்கப்பட்டது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு விசாரணை குழு 2 வழக்குகள் பதிவுசெய்து, உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆப்பீசர் சுதீஸ், திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் ஆணையரும், தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான என்.வாசு உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமாருக்கும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை ஆஜராகும்படி சிறப்பு புலானாய்வு குழு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் சாக்குப்போக்குச் சொல்லி விசாரணைக்கு ஆஜராகாமல் காலம்தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். பத்மகுமாரிடம் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக்குழுவினர் இன்று மாலை பத்மகுமாரை கைது செய்தனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் 2019-ம் ஆண்டு வாசு தேவசம்போர்டு கமிஷனராக இருந்த சமயத்தில் பத்மகுமார் தேவசம்போர்டு தலைவராக இருந்தார். அந்த சமயத்தில்தான் தங்கம் மோசடியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருநடை கட்டளையில் தங்கம் பதிக்கப்பட்டிருந்த நிலையில், செம்பு கட்டளை என அன்றைய கமிஷனர் வாசு பதிவுசெய்திருந்தார். அது அன்றைய தேவசம்போர்டு தலைவர் பத்மகுமாருக்கும் தெரிந்தேதான் நடந்தது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடித்துள்ள உன்னி பத்மகுமாருக்கும் பிசினஸ் தொடர்பான பந்தம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கைதுசெய்யப்பட்ட பத்மகுமார் கேரளாவை ஆளும் சி.பி.எம். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார் பத்மகுமார். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை விவகாரத்தை எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய விவகாரமாக கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் பத்மகுமார் கைது செய்யப்பட்டுள்ளது முக்கிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. பத்மகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைது எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
உலகை மிரட்டும் இந்தியாவின் டாப் 10 மெகா திட்டங்கள்! சாகர் மாலா முதல் புல்லட் ரயில் வரை...
உலக நாடுகளை மிரட்டும் வகையில் உள்ள இந்தியாவின் டாப் 10 மெகா திட்டங்கள் குறித்து விரிவாக காண்போம். இதில் சாகர் மாலா முதல் புல்லட் ரயில் வரை அடங்கும்.
உத்கியாக்விக் நகருக்கு பாய் பாய் சொன்ன சூரியன்! இனி ஜன. 23-ல்தான்!
அமெரிக்காவின், அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள உத்கியாக்விக் நகருக்கு சூரியன் பிரியாவிடை கொடுத்துவிட்டது. இனி 65 நாள்கள் முழுவதும் இருள்தான், ஜன.23ஆம் தேதிதான் சூரிய உதயத்தைக் காண முடியுமாம். வட அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள உத்கியாக்விக் நகரம் தன்னுடைய துருவ இரவு காலத்துக்குள் நுழைந்திருக்கிறது. இங்கிருக்கும் மக்கள் 2026ஆம் ஆண்டு ஜனவரி 22 வரை சூரிய உதயத்தைக் காண முடியாது. பகல் நேரத்திலும் கடுமையான இருள் சூழ்ந்திருக்கும். இந்த ஆண்டில், உத்கியாத்கிக் நகரின் கடைசி சூரிய அஸ்தமனம் […]
உலகின் மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் –முதல் 10 இடங்களில் முதலிடம் பிடித்த இந்திய நகரம்
2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும்
பீகார் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து
பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜேடியு தலைவர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார். நடந்து
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் –மேலும் நான்கு பேரை கைது செய்த என்.ஐ.ஏ
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிப்பு –விசிக கண்டனம்
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை
இந்தியாவுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்த சீனா –அமெரிக்கா குற்றச்சாட்டு
கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே
இந்தியாவுக்கு ரூ.823 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் விற்பனை –அமெரிக்கா அறிவிப்பு
வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில்
வார இறுதி விடுமுறையையொட்டி நாளை முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வார இறுதி விடுமுறையையொட்டி, நாளை (21-ந்தேதி), நாளை மறுநாளும் (22-ந் தேதி) சென்னையில் இருந்து
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் சுமார் 85%-க்கும் மேற்பட்ட மக்கள் அசைவ உணவை விரும்பி உண்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. அப்படியிருக்க, எந்த மாநிலத்தில் அதிகமான அசைவ உணவு உண்பவர்கள் உள்ளனர் என்று தெரியுமா? அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
Value 360 Communications Receives In-Principle Approval from NSE for Proposed SME IPO
Value 360 Communications Limited announced today that it has received an in-principle approval from the National Stock Exchange of India
தென்காசியில் இருந்து சென்னைக்கு... மதுரை–திருச்சி தொடாமல் செல்லும் ஒரே ரயில்? வெளியான சுவாரசிய தகவல்
தென்காசியில் இருந்து சென்னைக்கு மதுரை, திருச்சி செல்லாமல் இயக்கப்படும் ரயில் என்ன? மற்றும் அது குறித்த சுவாரசிய தகவல்களை விரிவாக காண்போம்.
கடல் உணவுகளுக்கு மீண்டும் தடை ; தீவிரமடையும் சீனா –ஜப்பான் மோதல்
ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சி தைவான் குறித்து பேசிய கருத்துக்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனா மீண்டும் ஜப்பானிய கடல் உணவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது. சீனா தனது கடல் உணவு இறக்குமதி மீதான தடையை இந்த மாதத் ஆரம்பத்தில் நீக்கியிருந்தது. ஆனால், ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர், கடலில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 2023 இல் விதிக்கப்பட்டிருந்த அந்தத் […]
அவசரமாக தாந்தாமலையில் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் ; அடுத்த ஆக்கிரமிப்பா?
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று ( 20 ) பி.ப:1.30 மணிக்கு தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது . அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாப்பது வட்டை சந்தியில் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது . தாந்தாமலை முருகன் ஆலயத்தை காட்டி அம்புக்குறி தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறி […]
CBSE Single Girl Child Scholarship Deadline Today
CBSE Single Girl Child Scholarship Application Ends Today The Merit Scholarship Scheme for Single Girl Child will close today, November
கோவை மெட்ரோ திட்டம் ரத்து: தமிழக அரசு மீது குற்றம் சாட்டும் நயினார் நாகேந்திரன்
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்கவில்லை, தமிழக அரசுதான் திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
Kashmir Times: பத்திரிகை அலுவலகத்தில் ரெய்டு; துப்பாக்கி பறிமுதல்? - அரசை விமர்சிக்கும் ஆசிரியர்!
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) புதன்கிழமையன்று ஜம்முவில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் அலுவலகத்தை சோதனை செய்தது. காஷ்மீர் டைம்ஸ் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக ஏழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. அங்கே ஏ.கே ரக துப்பாக்கிகள், வெவ்வேறு வகை வெடிமருந்துகள், பிஸ்டல் ரவுண்ட்கள் மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அனுராதா பாசின் பத்திரிகையின் அலுவலகத்திலும் கனிணிகளிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர். விசாரணையின் அடுத்தகட்டமாக செய்தித்தாளுடன் தொடர்புடைய நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நடவடிகைக் குறித்து காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சிங் சவுத்ரி, அவர்கள் எதாவது தவறு செய்திருந்தால் மட்டுமே நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். வெறுமனே அழுத்தம் கொடுப்பதற்காக மட்டுமே நடந்திருந்தால், இது மிகவும் தவறான ஒன்று எனப் பேசியுள்ளார். SIA Kashmir Times 1954ம் ஆண்டு வேத் பாசின் என்ற பத்திரிகையாளரால் உருவாக்கப்பட்ட இந்த செய்தித்தாள் பிரிவினைவாத ஆதரவு பத்திரிகையாக கருதப்படுகிறது. காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராகச் செயல்பட்ட வேத் பாசின் மறைவுக்குப் பிறகு அவரது மகள் அனுராதா பாசின் ஜம்வால் மற்றும் பிரபோத் ஜாம்வால் பத்திரிகையை நடத்தி வருகின்றனர். பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதல் அனுராதா மற்றும் பிரபோத் ஆகியோர் நடைபெற்ற இந்தச் சோதனை, சுயாதீன பத்திரிகையை மௌனமாக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி எனக் கருதுகின்றனர். மேலும், அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஒரு வலுவான, கேள்வி கேட்கும் பத்திரிகை அவசியம். எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எனக் கூறியுள்ளனர். அத்துடன் பத்திரிகை நடத்துவது குற்றமல்ல என்றும் என்ன சோதனை நடந்தாலும் உண்மைகளை வெளிக்கொணருவதற்கான அர்ப்பணிப்பு தொடரும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
`மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்; ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம்!' - திமுக அறிவிப்பு
மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வருகின்ற 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மதுரை மாவட்ட திமுக அறிவித்துள்ளது. பி.மூர்த்தி, கோ.தளபதி மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் முயற்சியால் மதுரை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பெரும் எதிர்பார்ப்பான மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது ஆனால் தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் முடக்கி வஞ்சித்துள்ளது இப்படி தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதுரை மாவட்ட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகிற 21.11.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாவட்ட அவைத் தலைவர்கள் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியம், மா.ஒச்சுபாலு, நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது மெட்ரோ இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழகத்தினர், கூட்டணி கட்சியினர் என அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்குக் காெண்டுவர பென்டகன் அதிகாரிகள் கீயூவுக்குப் பயணம்!
ரஷ்யாவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க பென்டகனின் மூத்த அதிகாரிகள் உக்ரைனுக்கு வந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோல் தலைமையிலான இந்தக் குழு, வியாழக்கிழமை காலை உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்கள் அன்றைய தினம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை முதல் அமெரிக்காவும் ரஷ்யாவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பைத் தயாரித்துள்ளதாகவும், உக்ரைனிடமிருந்து பெரும் சலுகைகள் தேவைப்படுவதாகவும், பிரதேசத்தை விட்டுக்கொடுப்பது மற்றும் அதன் இராணுவத்தை வியத்தகு முறையில் குறைப்பது உள்ளிட்டவை தேவைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகத் தொடங்கின. இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்ய சிறப்பு தூதர் கிரில் டிமிட்ரிவ் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வாஷிங்டனோ அல்லது மாஸ்கோவோ இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, நீடித்த அமைதியை அடைவதற்கு இரு தரப்பினரும் கடினமான ஆனால் அவசியமான விட்டுக்கொடுப்புகளுக்கு உடன்பட வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் எழுதினார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான யோசனைகளின் பட்டியலை உருவாக்கஅமெரிக்கா மோதலின் இரு தரப்பினரையும் கலந்தாலோசித்து வருவதாக அவர் கூறினார். ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கியேவுக்குச் செல்லும் மிக மூத்த இராணுவக் குழு டிரிஸ்கோலின் குழுவாகும். அவருடன் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ், ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவத்தின் உயர் தளபதி ஜெனரல் கிறிஸ் டோனாஹூ மற்றும் இராணுவத்தின் சார்ஜென்ட் மேஜர் மைக்கேல் வீமர் ஆகியோர் இணைகின்றனர். புளோரிடாவின் மியாமியில் நடந்த கூட்டங்களில் இருவரும் மூன்று நாட்கள் செலவிட்டதாகக் கூறப்படும் மூன்று வாரங்களுக்கும் மேலாக விட்காஃப்-டிமிட்ரிவ் 28 திட்டத்தின் வரைவு விவரங்கள் வெளிவந்தன. இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி, ஆக்சியோஸ், பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவை, கிழக்கு உக்ரைனில் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸின் பகுதிகளை கியேவ் விட்டுக்கொடுக்கவும், அதன் ஆயுதப் படைகளின் அளவைக் கணிசமாகக் குறைக்கவும், அதன் பல ஆயுதங்களைத் துறக்கவும் திட்டங்கள் அழைப்பு விடுப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிற்கு எந்தவொரு பிராந்திய சலுகைகளையும் ஜெலென்ஸ்கி பலமுறை நிராகரித்துள்ளார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வியாழக்கிழமை அமெரிக்காவுடன் தொடர்புகள் நடந்ததாகவும், ஆனால் ஆலோசனைகளோ அல்லது பேச்சுவார்த்தைகளோ எதுவும் நடக்கவில்லை என்றும் கூறினார். புதிய திட்டத்தை வரைவதில் ஐரோப்பிய அதிகாரிகளோ அல்லது உக்ரேனிய அதிகாரிகளோ ஈடுபட்டதாக நம்பப்படவில்லை, இது ரஷ்யாவிற்கு மிகவும் சாதகமாக இருக்குமோ என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது. எந்தவொரு திட்டமும் செயல்பட, அதில் உக்ரேனியர்களும் ஐரோப்பியர்களும் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் வியாழக்கிழமை எச்சரித்தார். மேலும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், உக்ரேனியர்கள் எந்த விதமான சரணடைதலையும் விரும்பவில்லை என்றார்.
வால்பாறை அரசு பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியைகள் மன அழுத்தம் கொடுத்ததாக வாக்குமூலம்!
கோவை வால்பாறையில் 9ம் வகுப்பு மாணவி சஞ்சனா, ஆசிரியைகளின் மன அழுத்தத்தால் தற்கொலை முயற்சி செய்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியைகள் அவமானப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையின் நுழைவு வாயில்களில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையம் வேறலெவலில் மாற உள்ளது. ஒரே இடத்தில் இருந்து மெட்ரோ, பேருந்து என போர் இன் ஒன் போக்குவரத்து சேவையை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
NASA Confirms 3I/ATLAS as Interstellar Comet
NASA has released pictures of 3I/ATLAS, an object from outside our solar system passing through it. solar system. The space
மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசு பாரபட்சம்? திருமா. கண்டனம்!
மதுரை, கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக கண்டித்து உள்ளார்.
Jonny Kim Shows ISS Solar Panels Adjustment Video
NASA astronaut Jonny Kim recently posted a time-lapse video showing how the International Space Station’s (ISS) solar panels are adjusted
Mask: காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க! - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின்
கவின், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். Mask Movie திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கவின் டூர் சென்று வந்தார். மதுரை பாத்திமா கல்லூரியில் அவர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரையில் கவின் பேசுகையில், “நாளைக்கு 'மாஸ்க்' திரைப்படம் ரிலீஸ் ஆகுது. வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் காலேஜ் இருக்கும். சமத்தாக, நாளைக்கு காலேஜுக்கு வந்து உங்களுடைய கடமைகளை முடிச்சிட்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை படத்தை வந்து பாருங்க. எந்த பிரச்னையும் கிடையாது. அது வெறும் என்டர்டெயின்மென்ட்! தேவைப்படும்போது அதுல என்டர் ஆகுங்க. தேவை முடிஞ்சதும் அந்த என்டர்டெயின்மென்ட்ல இருந்து எக்சிட் ஆகி வந்துடுங்க. kiss movie press meet - kavin இந்தப் படத்தின் கதை இயக்குநரோட வாழ்க்கையில நிகழ்ந்த உண்மைச் சம்பவம். அந்த உண்மைச் சம்பவத்தை என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் கலந்து சொல்லியிருக்கோம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது அனைத்து மிடில் க்ளாஸ் குடும்பத்துக்கும் கனெக்ட் ஆகும். ஏன்னா, அப்படியான விஷயம் இந்தப் படத்துக்குள்ள இருக்கு.” எனப் பேசியிருக்கிறார்.
மதுரை விமான நிலையம்: ஆசியான் ஒப்பந்தத்தில் புறக்கணிப்பு - சு. வெங்கடேசன் கண்டனம்!
மதுரை விமான நிலையத்தை சிறப்பு ஆசியான் ஒப்பந்தத்தில் சேர்க்க ஒன்றிய அரசு மறுத்ததற்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக 18 விமான நிலையங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்ற கொள்கை முடிவு என்றும், தென் தமிழகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Anthropic Valued $350 Billion After $15 Billion Investment
Anthropic announced on Wednesday that it received up to $15 billion in new investments from Microsoft and Nvidia, raising its
அது ஏலியன்கள் அல்ல: அது ஒரு வால் நட்சத்திரம் - நாசா விளக்கம்
பிரபஞ்சத்தில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்க நாசா மிகவும் விரும்புகிறது,என்று இணை நிர்வாகி அமித் க்ஷத்ரியா கூறினார். ஆனால் 3I/ATLAS எனப்படும் விண்மீன்களுக்கு இடையேயான பொருள் அது அல்ல. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தை கடந்து சென்ற அந்தப் பொருளின் புதிய படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனம் நேற்றுப் புதன்கிழமை வெளியிட்டது. நாம் அதைப் பற்றிப் பேசுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இந்தப் பொருள் ஒரு வால் நட்சத்திரம் என்று க்ஷத்ரியா கூறினார். இது ஒரு வால் நட்சத்திரத்தைப் போலவே தோற்றமளிக்கிறது மற்றும் செயல்படுகிறது. மேலும் அனைத்து ஆதாரங்களும் இது ஒரு வால் நட்சத்திரம் என்பதைக் குறிக்கின்றன. அமெரிக்க அரசாங்கத்தின் பணிநிறுத்தத்தின் போது அது ஒரு வால் நட்சத்திரம் அல்ல என்ற ஊகம் வந்தது. இதனால் அந்த நேரத்தில் நாசா பதிலளிக்க முடியவில்லை. தெளிவற்ற படங்கள் இருந்தபோதிலும், ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிகள் மற்றும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் உட்பட ஒரு டஜன் அறிவியல் தளங்களைப் பயன்படுத்தி 3I/ATLAS ஐ ஆய்வு செய்ததாக நிறுவனம் கூறுகிறது. செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் இரண்டு செயற்கைக்கோள்களும் அவதானிப்புகளை மேற்கொண்டன. நாங்கள் விரைவாகச் சொல்ல முடிந்தது. ஆமாம், அது நிச்சயமாக ஒரு வால்மீனைப் போலவே செயல்படுகிறது. அது ஒரு வால்மீன் தவிர வேறு எதுவும் இல்லை என்று நம்புவதற்கு வழிவகுக்கும் எந்த தொழில்நுட்ப கையொப்பங்களையோ அல்லது எதையும் நாங்கள் நிச்சயமாகப் பார்த்ததில்லை என்று நாசாவின் அறிவியல் மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் கூறினார். உலகம் எங்களுடன் சேர்ந்து வியந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார். # 3I/ATLAS
டெல்லி குண்டு வெடிப்பு.. கைதான 4 பேருக்கு நீதிபதி விதித்த உத்தரவு!
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை மேலும் நான்கு முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் விரிவடைந்துள்ள இந்த விசாரணையில் இதுவரை மொத்தம் ஆறு பேர் சிக்கியுள்ளனர்.
WhatsApp Data of 3.5 Billion Users Exposed
Security researchers say they collected phone numbers from over 3.5 billion active WhatsApp accounts, including nearly 750 million users in

30 C