இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷனில் பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த அரோரா மற்றும் ஆதிரை ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டு காதல் பற்றி பேச்சு கிளம்பியிருக்கிறது.
சென்னையில் ஐந்து நாள்கள் தொடர் கனமழை: தீபாவளி முடிந்தாலும் கொண்டாட்டம் குறையாது!
இன்று முதல் ஐந்து நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
``18 வயதில் ரூ.55000 கிடைக்கும்'' - பெண் குழந்தைகள் பிறந்தால் டெபாசிட் செய்யும் தொழிலதிபர்
தீபாவளி என்றால் நாம் ஒரே நாளில் கொண்டாடி முடித்து விடுவோம். ஆனால் வட இந்தியாவில் ஒரு வாரம் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். அதில் ஒரு நாள் லட்சுமி பூஜை கொண்டாடுகிறார்கள். பெண்களை தெய்வமாக மதிக்கும் மனிதர்கள் பெண் குழந்தைகள் பிறந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதனால் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் போன்ற மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் ஆண், பெண் விகிதாச்சாரம் சீர்குலைய ஆரம்பித்து இருக்கிறது. இதையடுத்து பெண் குழந்தைகள் பிறப்பதை ஊக்கப்படுத்தும் நோக்கில் குஜராத் தொழிலதிபர் ஒருவர் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி பெற்றோரிடம் நன்மதிப்பை பெற்று இருக்கிறார். பெண் குழந்தைகள் நலம் குஜராத் மாநிலத்தில் உள்ள உள்ள கேடா என்ற மாவட்டத்தில் இருக்கும் உத்தர்சண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மோகன் பட்டேல். மும்பையில் தொழில் செய்து வரும் மோகன் எப்போதும் தனது கிராமத்தின் மீது அதிக அக்கறை காட்டுபவர். இவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் முறையாக தனது கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் அதன் பெற்றோருக்கு ரூ.1000 கொடுக்கும் திட்டத்தை தொடங்கினார். பெண் குழந்தை அன்றிலிருந்து இருந்து அந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். தனது கிராமம் மட்டுமல்லாது பக்கத்து கிராமத்து குழந்தைகளுக்கும் கூட ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். மோகன் தனது பிறந்தநாளான ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். அதோடு இப்போது தனது கிராமத்தை சேர்ந்த 3 முதல் 6 வயது வரையிலான 400 பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.11 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அந்த பணத்தை அக்குழந்தைகளின் படிப்பு செலவு அல்லது திருமணத்திற்கு மட்டுமே எடுப்போம் என்று பெற்றோரிடம் ஒப்பந்தமும் செய்து கொள்கிறார். அந்த பணம் பெண் குழந்தைகள் 18 வயதாகும் போது ரூ.55 ஆயிரமாக கிடைக்கும். இது குறித்து மோகன் கூறுகையில்,''நான் கொடுக்கும் தொகை மிகப்பெரியது கிடையாது. அதேசமயம் மிகவும் சிறியதும் கிடையாது. இது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக இருக்கும் என்று நம்புகிறேன். பாலின விகிதாச்சாரத்தை சரி செய்யும் நோக்கில் லட்சுமியாக பிறக்கும் பெண் குழந்தைகளுக்காக இதை செய்கிறேன். மேலும், ஈஸ்வர்பாய் ஜீவாபாய் படேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கல்வி, சீருடை, பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகள் விவகாரத்தில் நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வது காலத்தின் தேவை. பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுக்கு சமமாகக் கருதும் வரை, நமது முயற்சிகள் தொடரும், என்றார். பெண் குழந்தை இவர் சொந்தமாக டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் மருத்துவமனையில் ஆண்டுக்கு 150 பெண் குழந்தைகள் பிறக்கிறது. அந்த குழந்தைகளும் இந்த பண உதவியை பெறுகின்றன. இது வரை 11500 குழந்தைகளுக்கு ரூ.2.6 கோடியை வழங்கி இருக்கிறார். மும்பையின் முன்னாள் ஷெரீப்பான மோகனுக்கு இப்போது 90 வயதை கடந்துவிட்டது. ஆனாலும் தனது பணி தொடர வேண்டும் என்பதற்காக 'சந்தா மோகன் படேல் ஸ்த்ரீப்ருன் ஹத்ய நிவாரண நிதி' என்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறார். குஜராத்தில் இப்போது ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 883 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். மோகனின் சொந்த மாவட்டமான கேடாவில் இது ஆயிரத்திற்கு 876 ஆக இருக்கிறார்கள். அதுவும் பட்டேல் சமுதாயம் இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. Doctor Vikatan: `தீபாவளி லேகியம்' எல்லா நாள்களிலும் சாப்பிடலாமா, குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?
பீகாரில் நெருங்கியது தேர்தல்... இந்தியா கூட்டணியில் இன்னும் நீடிக்கும் குழப்பம்
பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையிலும், எதிர்க் கட்சியான இந்தியா கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. ஒரே தொகுதியில் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதால் குழப்பம் தொடர்கிறது.
ஹமாஸிடமிருந்து 11-வது பிணைக் கைதி உடலை பெற்றது இஸ்ரேல் ராணுவம்!
டெல் அவிவ்: இஸ்ரேலில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹமாஸ் படையால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட 11 ஆவது பிணைக்கைதியைப் பெற்றது இஸ்ரேல் ராணுவம். இறந்த பிணைக்கைதி ரோனன் டாமி ஏங்கல் என அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து அவரது உடலை நல்லடக்கம் செய்யவதற்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அனுப்பப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை […]
BB Tamil 9 Day 14: `பர்சனல் விஷயங்களை வச்சு...'வறுத்தெடுத்த வி.சே - ரணகள வீக்கெண்ட்
அப்சரா வெளியேற்றப்பட்டார் என்பதில் சிறிது கூட ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை. அந்த அளவிற்கு அவரது பங்களிப்பு மிகக் குறைவானதாக இருந்தது. ஏறத்தாழ இல்லை எனலாம். பின்பெஞ்சு மாணவர்களை வெளுத்து வாங்கும் கறாரான ஸ்கூல் வாத்தியார் பாணியிலேயே விசே விசாரணை நாட்களை நடத்திச் செல்வதால் பார்வையாளர்களுக்கு பெரிதும் சுவாரசியம் இருப்பதில்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 14 BB Tamil 9 Day 14 “வீட்டுக்குள்ள பிரச்சினைகள் மட்டுமே இல்ல. நிறைய க்யூட்டான விஷயங்களும் இருக்கு. அதைப் பார்ப்போமோ?” என்றபடி வேட்டி சட்டை அணிந்திருந்த விசே வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். குருவி கத்தும் காலிங் பெல் மாதிரி வினோத் எழுப்பிய ஒலியுடன் கலை நிகழ்ச்சி துவங்கியது. “இந்த வீட்லயே தர்பீஸோட மட்டும்தான் எனக்கு தினமும் பிரச்சினை” என்ற வினோத், திவாகர் செய்யும் அலப்பறைகளை விவரிக்க சபை கலகலத்தது. “மத்த சீசன்கள்ல பையனும் பொண்ணும் பார்த்துக்கற வீடியோதான் வைரல் ஆகும். இங்க மட்டும்தான் நீங்க ரெண்டு பேரும் பார்க்கற வீடியோ வைரல் ஆகுது” என்று கிண்டலடித்தார் விசே. கவுண்டமணி - செந்தில் ஜோடி மாதிரி திவாகரும் வினோத்தும் இணைந்து நடத்தும் காமெடி அலப்பறைதான் சற்று ஆறுதலைத் தருகிறது. சபரி, பிரவீன், விக்ரம் ஆகிய மூவரும் இணைந்து எலிகள் போல ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றி கிண்டலடித்துப் பேசியது சுவாரசியமான பகுதி. குறிப்பாக வியன்னா போல கொஞ்சி கொஞ்சி பிரவீன் பேசியது அட்டகாசம். இனிப்பு தந்து விட்டு பட்டாசை கையில் எடுத்த விசே “ஓகே.. தீபாவளி கொண்டாட்டம் முடிஞ்சது. அடுத்தது சீரியஸான பகுதிக்கு போகலாமா?” என்று விசே கையில் பிரம்பை எடுத்ததும் மக்களின் முகங்களில் மெல்ல பீதி பரவ ஆரம்பித்தது. “என்னென்ன தவுசண்ட் வாலா பட்டாசை கொளுத்தப் போறாரோ?” என்று கடவுளை வேண்டிக்கொண்டார்கள். முதலில் துஷாரை எழுப்பிய விசே “ஒரு கேப்டனா, இந்த வீட்ல யார் நல்லா வேலை செஞ்சாங்க.. சொல்லுங்க.” என்று வலையை விரிக்க ஆரம்பித்தார். சிறப்பாக வேலை செய்தவர்களின் பெயர்களை துஷார் சொல்ல “அப்ப நீ என்ன செஞ்சே மேன்?” என்கிற மாதிரி பார்த்தார் விசே. “சமையல் செய்யறது முழுக்க நானு. ஆனா கரண்டியை தூக்கி போஸ் கொடுக்கறது மட்டும் சபரி. என்னை முழுக்க மறைச்சிட்டாங்க” என்று புகார் கொடுத்தார் கலையரசன். “அப்ப ஏன் சைலன்ட்டா உக்காந்திருந்தீங்க.. உங்க உரிமையை தட்டிக் கேட்டிருக்கலாமில்ல?” என்று கலையரசனுக்கு காட்டமாக அட்வைஸ் செய்தார் விசே. “வீக்கெண்ட்ல நான் பேசறதுக்கு ஏதாவது கன்டென்ட் கொடுங்கடா. நீங்க சும்மா உக்காந்திருந்தா நான் எதைத்தான் பேசறது?” என்று விசேவின் மைண்ட் வாய்ஸ் அலறியதோ, என்னமோ. BB Tamil 9 Day 14 “துஷாரோட கேப்டன்சி எப்படியிருந்தது?” என்று விசே கேட்டதும்தான் தாமதம், நன்றாகப் படிக்கிற பையன், அடிஷனல் ஷீட் வாங்குகிற உற்சாகத்துடன் உடனே கையைத் தூக்கினார் பாரு. “மெஜாரிட்டியா என்ன சொல்றாங்களோ.. அதைத்தான் துஷார் கேப்பான்” என்று போட்டுக் கொடுக்க “இதை நான் ஏத்துக்க மாட்டேன் சார். எனக்கு எது சரின்னு படுதோ, அதைத்தான் செய்வேன்” என்று கெத்தாக சொல்லி மாட்டிக் கொண்டார் துஷார். “அப்ப எது உனக்கு சரின்னு படுது.. அரோரா கிட்ட உக்காந்து பொழுதன்னிக்கும் கடலை வறுக்கறதா?” என்று மட்டும்தான் நேரடியாக விசே கேட்கவில்லை. மத்த அனைத்தையும் கேட்டு துஷாரை பிறகு வறுத்தெடுத்தார் விசே. “வீட்டின் முதல் கேப்டன்றது எவ்வளவு பெரிய பொறுப்பு. அதை நல்லாப் பண்ணுவீங்கன்னு நெனச்சேன். இப்படி தவற விட்டுட்டிங்களே.. வாய் மூடி பேசாமலேயே சிறந்த கேப்டனா இருப்பேன்னு சொல்லி போட்டில ஜெயிச்சீங்க.. ஆனா சுற்றி என்ன தவறுகள் நடந்தாலும் வாயைத் திறக்காமலேயே இருந்துட்டீங்க.. அந்தச் சவாலை இப்படி நிரூபிப்பீங்கன்னு எதிர்பார்க்கல” என்று விசே செய்த ரோஸ்ட்டிற்கு எந்த வித பதிலும் இல்லாமல் தலைகுனிந்தார் துஷார். உப்பு போட்ட பிரச்னைக்கு உப்பு பெறாத பஞ்சாயத்து “கிச்சன் மேடைல உக்காந்தது ஒரு குத்தமா சார்?” என்று பாரு உற்சாகமாக தன் புகார்களை தொடர “அதெல்லாம் உங்க வீட்டு பழக்கமா இருக்கலாம். ஆனா இங்க மத்தவங்களோட அனுசரிச்சுதான் போகணும். அவங்களுக்கு அது அசௌகரியமா இருக்கலாமில்லையா?” என்று விசே குட்டு வைக்க பாருவின் முகம் இருண்டது. அடுத்ததாக உப்பு பெறாத பிரச்சினை என்றாலும் அதை வைத்து கால் மணி நேரத்திற்கு இழுத்தார் விசே. “சாப்பாட்ல உப்பு போடறது சரியா.. துஷார் நீங்க ரெண்டு வீட்டுக்கும்தானே தல.. இதைத் தட்டிக் கேட்டிருக்கணுமா. இல்லையா.. கனி.. நீங்க பயங்கரமான ஆளுதான் போல” என்று விசே சொல்ல நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்தார் கனியக்கா. “பசியோட கொடுமையை அவங்க உணரணும். சீக்கிரம் எழுந்து வெளியே வரணும்… என்பதற்காகவே இந்த நாடகத்தை யாம் நிகழ்த்தினோம்” என்பது கனியின் விளக்கம். BB Tamil 9 Day 14 இதற்கிடையில் திவாகர் எழுந்து “சார்.. நான் பிக் பாஸ் வீட்ல இருக்கறப்போ” என்று சம்பந்தமில்லாமல் உற்சாகமாக விளக்கம் அளிக்க ஆரம்பிக்க “ஹலோ மிஸ்டர் திவாகர்.. இங்க என்ன நடந்துட்டு இருக்கு.. நீங்க என்ன பேசறீங்க.. இப்படி சம்பந்தமில்லாமல் பேசறதை நிப்பாட்டுங்க” என்று விசே பாய்ந்தவுடன் அப்படியே பம்மி அமர்ந்தார் திவாகர். திவாகரிடம் உள்ள ப்ளஸ் என்னவென்றால் அது எந்தவொரு கண்டனமாக இருந்தாலும் சண்டையாக இருந்தாலும் அடுத்த கணமே துடைத்துப் போட்டு விட்டு இயல்பாக மாறி விடுகிறார். முதுகில் குத்துவதில் சிறந்த வீராங்கனை - பாரு விசே பிரேக்கில் சென்றவுடன் “சபரியோட மூஞ்சே செத்துடுச்சு” என்று சொல்லி மகிழ்ந்தார் பாரு. தண்ணீர் குடிக்கச் சென்ற திவாகர், அங்கிருந்த கிளாஸை தவறுதலாக உடைத்து விட்டு “யார்.. இதை இங்க வெச்சது?” என்று சமாளிக்க வினோத்தும் கம்ருதீனும் அவரைக் கலாய்த்தார்கள். பிரேக் முடிந்து திரும்பிய விசே இதைப் பற்றி சிரித்துக் கொண்டே விசாரிக்க “கிளாஸ் பீஸ் துடைக்கப் போன என் கைல ரத்தம் வருது. அதைப் பத்தி கேக்கலை சார்.. கிளாஸ் உடைச்ச காசை சம்பளத்துல பிடிச்சிடுவாங்களான்னு கேக்கறார் சார்” என்று வினோத் சொல்ல சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார் விசே. துஷாரை வறுத்தெடுத்தல், சாப்பாட்டில் உப்பு, கிச்சன் மேடையில் பாரு குத்த வைத்து அமர்ந்தது போன்ற உப்புச் சப்பில்லாத விசாரணைக்குப் பிறகு அடுத்த டாப்பிக்கை கையில் எடுத்தார் விசே. “இவங்களால என்னை முகத்திற்கு முன்னாடி குத்த முடியாது. முதுகிற்குப் பின்னாலதான் குத்த முடியும்.. அது யாருன்னு சொல்லுங்க?” என்று அடுத்த அயிட்டத்தை விசே இறக்க, நம் மனதிலேயே பாருதான் சட்டென்று நினைவிற்கு வந்தார் என்னும் போது மற்ற போட்டியாளர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்? எனவே முதுகில் குத்தும் வீராங்கனையாக பாருவின் பெயரை பலரும் சொன்னார்கள். BB Tamil 9 Day 14 “முகத்திற்கு நேரா ஒண்ணு சொல்றாங்க.. பின்னாடி வேற ஒண்ணு பேசறாங்க” என்று அராரோவின் பெயரை வியன்னா சொல்ல, அரோரா அப்செட் ஆகி கண் கலங்கினார். “பிரவீன் பெயருக்கு பதிலா என் பெயரைச் சொல்லி எல்லா இடத்துலயும் மாட்டி விட்றாரு” என்று திவாகர் குறித்து வினோத் சொல்ல சிரிப்பலை பரவியது. ஆதிரை பற்றி சொல்ல ஆரம்பித்த கம்ருதீன் ‘டிவி சீரியல் காலத்தில்’ நடந்த பிளாஷ்பேக்கை’ எல்லாம் சொல்ல ஆரம்பிக்க “உங்க பர்சனல் விஷயங்கள்லாம் எங்களுக்கு வேணாம்” என்று இடைமறித்தார் விசே. ஒருவரின் பர்சனல் விஷயங்கள் எல்லாம் தேவையில்லை என்றால் பிக் பாஸ் ஒளிபரப்பில் அவற்றை எடிட் செய்து விடலாமே? ஏன் அதையும் இணைத்து ஒளிபரப்புகிறார்கள்?! “நான் பாத்ரூம் போனப்ப குத்திட்டாங்க” என்று பழைய கதையை மீண்டும் கம்ரூதீன் ஆரம்பிக்க “நீ கம்முன்னு உக்காருய்யா.. அதுதான் கேமே.. இன்னுமா புரியலை” என்கிற மாதிரி கடுகடுத்தார் விசே. “இந்த டாஸ்க் நடத்தினதுக்கு காரணமே.. உங்க சக போட்டியாளரைப் புரிஞ்சிப்பீங்கன்னுதான். இந்த அண்ணன், அக்கா பிஸ்னஸ் எல்லாம் டாஸ்க்ல வெச்சுக்காதீங்க. ஒழுங்கா கேம் ஆடுங்க” என்கிற உபதேசத்தோடு பிரேக்கில் சென்றார் விசே. கன்னா பின்னாவென்று வார்த்தைகளை விட்ட கம்ருதீன் கூடவே திரிந்த வியன்னா, தன்னைப் பற்றி சபையில் புகார் சொன்னதால் அழுது கொண்டிருந்த அரோராவிடம், ஆதிரை பிரச்சினையைப் பற்றி சொல்லி ‘பாருடா செல்லம்’ என்று தவறான டைமிங்கில் ஆஜரானார் கம்ருதீன். “டேய் கம்முனு இருடா.. நான் இங்க எதுக்கு அழுதுக்கிட்டு இருக்கேன்.. நீ குறுக்கால புகுந்து எதைப் பத்தி பேசறே?” என்று அரோரா எகிற ‘என்னடா.. இது… கம்ருதீன்னு பேரு வெச்சிருக்கிறதால.. ஆளாளுக்கு கம்முன்னு இரு’ன்னு சொல்றாங்க’ என்று ஜெர்க் ஆனார் கம்மு. ‘யாரு முதுகுல குத்துவாங்கன்னு கேட்டா, கேம் தொடர்பா பேசாம.. ஏன் என்னை இழுக்கணும்?” என்று ஆதிரை ஆட்சேபம் எழுப்ப, கம்ருதீனுக்கும் இவருக்கும் பலத்த வாக்குவாதம் எழுந்தது. “உனக்கெல்லாம் என்னைப் பத்தி பேச தகுதியே இல்ல. யாரு நீ.. கேவலமான பிறவி” என்று சைக்கோ போல பல வார்த்தைகளை கன்னா பின்னாவென்று இறைத்தார் கம்ருதீன். வினோத் ஒரு கட்டத்தில் ஆதிரை அமைதியாக முறைத்த படி நிற்க அதற்கும் டென்ஷன் ஆனார் கம்ருதீன். “ஒருத்தரைப் பத்தி இப்படி தப்பா பேசாத” என்று ஆதிரைக்கு சப்போர்ட்டாக வந்து நின்றார் அரோரா. கம்ருதீன் - ஆதிரை - அரோரா விவகாரம் என்னவென்று ஒரு மாதிரியாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. தொலைக்காட்சி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆதிரைக்கும் கம்ருதீனுக்கும் இடையே ஒரு ரிலேஷன்ஷிப் இருந்திருக்கிறது. பிறகு மனக்கசப்புடன் பிரேக் அப் ஆகி இருவரும் பிரிந்து எதிரிகளாகி இருக்கிறார்கள். ‘அவன் பார்க்கற பொண்ணையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டு ஏமாத்துவான்’ என்று அரோராவிடம் ஆதிரை சொல்ல, அவர் அதை ‘யார் கிட்டயும் சொல்லாத’ என்று கம்ருதீனிடம் சொல்ல “என்னைப் பத்தி எப்பவும் தப்பா பேசறா” என்று கம்ருதீன் கோபம் அடைந்து கடுமையான வசவுகளை இறைக்கிறார். இதுதான் இந்த விவகாரத்தின் சித்திரமா? ‘பர்சனல் விஷயங்களை வெச்சு பஞ்சாயத்து செய்யாதீங்க’ பிரேக் சமயத்தில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விசே “வெளியே நடந்த விஷயங்களை, கேமிற்குள் பேசுவது நாகரிகமில்லை. அப்படியெல்லாம் பேசி ‘நான் இந்த மாதிரியான ஆள்’ன்னு காட்டிக்கறதுல என்ன பெருமை’ என்று பொதுவாகச் சொன்னதெல்லாம் கம்ருதீன் குறித்து என்று தெரிகிறது. “டாஸ்க்ல சண்டை போடுங்க. அது கேம். மத்த நேரத்துல வேணாம். மக்களை எண்டர்டெயின் பண்ணுங்க.. உங்க மரியாதையை நீங்கதான் சம்பாதிக்கணும்” என்று அட்வைஸ் செய்தார் விசே. அரோரா, ஆதிரை எவிக்ஷன் சடங்கு. “நாமினேஷன்ல இருக்கறவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க’ என்ற விசே, ரம்யா, பாரு, திவாகர், சபரி ஆகிய நால்வரையும் காப்பாற்றப்பட்டவர்களாக சொன்னார். மீதமிருந்த நபர்களில் “யார் வெளியே போவாங்க?” என்று கேட்க பெரும்பாலும் கம்ருதீன் என்ற பெயரே சொல்லப்பட்டது. அது கம்ருதீன் மீது அந்தச் சமயத்தில் இருந்த கோபம் போலிருக்கிறது. அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் எவிக்ஷன் கார்டை விசே காட்ட, அப்சராவின் பெயர் இருந்தது. முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் சமாளித்துக் கொண்டு எழுந்தார் அப்சரா. “நீங்க சொல்ல வேண்டிய செய்திகளை எல்லாம் இந்த ஃபிளாட்பார்மில் நல்லா சொல்லிட்டீங்க..” என்று ஆறுதல் கூறி விடைதந்தார் பாரு. கம்ருதீன் x ஆதிரை - தொடரும் சண்டை விசே அட்வைஸ் செய்த பிறகும் கூட “இவளுக்கு அறிவி்ல்ல. எவ்வளவு வன்மம்.. என்னைப் பத்தி என்னவெல்லாம் பேசியிருக்கா. என் வாழ்கை என்னவாகிறது?” என்று கோபத்துடன் கம்ருதீன் அனத்திக் கொண்டிருக்க “பாரு.. இத்தோட விட மாட்டான்.. இன்னும் பேசுவான்” என்று இன்னொரு புறம் அராரோவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆதிரை. மேடைக்கு வந்த அப்சராவிடம் பயண வீடியோ காண்பித்து ‘டாட்டா’ காண்பித்த விசே “பழைய கோபத்தை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு பண்டிகையை சிறப்பா கொண்டாடுங்க” என்று வாழ்த்து சொல்லி விடைபெற்றார். கம்ருதீன் அதன் பிறகும் கம்ருதீனின் கோபம் அடங்கவில்லை. அரேராவை வம்படியாக கூப்பிட்டு அனத்தினார். கம்ருதீனுக்கு சப்போர்ட் பாரு. இவர்களின் பேச்சை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாருவிற்கும் துஷாருக்கும் இடையில் சண்டை நடந்தது. அடுத்த எபிஸோடில் எல்லாப் பகையையும் உள்ளே ஒளித்து விட்டு ‘தீபாவளி கொண்டாட்டத்தில்’ மகிழ்ச்சியாக இருப்பதாக அனைத்துப் போட்டியாளர்களும் பாவனை செய்வார்கள். இது பிக் பாஸ் வீட்டில் மட்டுமா நடக்கிறது?!
கேரளா: `பூம்பாவாய் ஆம்பல், ஆம்பல்' - மனதை மயக்கும் மலரிக்கல் கிராமம் | Photo Album
மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல்
சென்னையை காலி செய்த 20 லட்சம் பேர்: பரபரப்பை தொலைத்து அமைதியான மாநகரம்!
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையே வெறிச்சோடிப் போனது. லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சாலைகளும், கடை வீதிகளும் அமைதியாகின.
வைகை அணை முழுவதுமாக நிரம்பியது... 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தேனியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகை அணை முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. இதன் காரணமாக இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்.! ‘அரசர்’ டிரம்ப் வெளியிட்ட விடியோ!
அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யறிவு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக மியாமி, லாஸ் ஏஞ்சலீஸ், நியூயார்க், வாஷிங்டன், சிகாக்கோ உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, இது மன்னராட்சி அல்ல, அரசர் யாரும் இல்லை […]
மேட்டூர் அணை 7வது முறை நிரம்பியது… காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 7வது முறையாக நிரம்பியுள்ளது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் நீர்வரத்து அப்படியே தொடர்ந்து வெளியேற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் குஷ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த சோதனை நடத்தப்பட்டது. சந்தேகநபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 27 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
தென் மாகாணத்தில் GovPay மூலம் அபராதம் செலுத்தும் வசதி ஆரம்பம்
தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
``ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்தால் கூடுதல் வரி விதிப்போம் - மீண்டும் முருங்க மரம் ஏறும் ட்ரம்ப்
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியில் அதிபர் ட்ரம்ப் ரஷ்யா மீது சிலப் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தார். அதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் வியாபார லாபம்தான் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு பெரும் துணையாக இருக்கிறது எனக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மறைமுகமாக இந்தியாவை எச்சரித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிவருகிறது. எனவே, கடந்த மாதம் இந்தியப் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரியும், 25 சதவிகிதம் அபராதமும் விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து காசா - இஸ்ரேல் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் செயல்பாடுகளை பிரதமர் மோடி பாராட்டினார். அதைத் தொடர்ந்து இரு நாட்டின் தலைவர்களும் தங்கள் நட்பைப் புதுப்பித்துக்கொண்டனர். இதற்கிடையில், பிரதமர் மோடியுடன் தொலை பேசியில் பேசியதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப், ``இந்தியவுடன் பேசியிருக்கிறேன். இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் என்று பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்திருக்கிறார் என்றார். ஆனால், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அந்தக் கூற்றை நிராகரித்து, ``அன்று தலைவர்களுக்கு இடையேயான எந்த தொலைபேசி உரையாடலும் நடந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. பிரதமர் மோடி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், 'இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை பாதியாகக் குறைத்துள்ளதாகக் கூறினார். அப்படி எதுவும் இந்தியா குறைக்கவில்லை' எனக் கூறியது. இந்த நிலையிதான் அதிபர் ட்ரம்ப் ,`` இந்தியா தனது விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு அதன் கொள்முதலை நிறுத்தாவிட்டால் இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பேம் என பகிரங்கமாக மீண்டும் மிரட்டியிருக்கிறார். Modi: நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன் - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?
தனிமையைத் தீர்க்குமா $129 கழுத்தணி? – AI ‘நண்பன்’பரிசோதனையில் புதிய சர்ச்சை!
அமெரிக்காவின் ‘ஃபிரெண்ட்’ (Friend) என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனம், தனிமை நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்குடன், எங்கும் உடன் வரும்
காங்கேசன்துறை ஐயனார் ஆலய சிவன் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு
யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை ஐயனார் ஆலய வடக்கு வீதியில் பொது வழிபாட்டிற்கான சிவனின் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சன்னிதானத்தில் சனிக்கிழமை சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு , எண்ணெய் காப்பு நடைபெற்று , நேற்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, தொடர்ந்து குடமுழுக்கு இடம்பெற்றதுடன் , தொடர்ந்து சிவலிங்கத்திற்கான அபிஷேக ஆராதனையும் இடம்பெற்றது.
ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு
சென்னை சென்னையை அடுத்த ஆவடி அருகே தண்டுரை விவசாயி தெருவில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் இன்று வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்தது. இந்த வெடிவிபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வீட்டில் பற்றிய தீயை அணைத்து உயிரிழந்த 4 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளியை முன்னிட்டு வீட்டிலேயே பட்டாசுகளை சேமித்து […]
ரேடியோ மின்டானாவ் நெட்வொர்க் (RMN): பிலிப்பைன்ஸின் ஒலிபரப்பு வரலாற்றில் ஒரு சகாப்தம்
பிலிப்பைன்ஸில் உள்ள மிகப் பெரிய வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்றான ரேடியோ மின்டானாவ் நெட்வொர்க், இன்க். (RMN), Makati-யை தலைமையிடமாகக்
நல்லூரில் தீபாவளி சிறப்பு வழிபாடு
தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் நடைபெற்றது. The post நல்லூரில் தீபாவளி சிறப்பு வழிபாடு appeared first on Global Tamil News .
தீபாவளியும் அதுவுமா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 3 பேர்: ஆனால் அந்த 2 பேர் எப்போ வருவாங்க பிக் பாஸ்?
பிக் பாஸ் 9 வீட்டிற்குள் லிஸ்ட்லயே இல்லாத மூன்று பேர் சென்றிருக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. அதை பார்த்தவர்களோ நாங்கள் வேறு இரண்டு பேரை தானே எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
``பிரிய முடியாது'' - காதல், நட்புக்காக தோழிகள் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்
இப்போதெல்லாம் நெருங்கிய இரண்டு நண்பர்கள் அல்லது தோழிகள் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க மனமில்லாமல் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நீண்ட நாள்களாக பழகிய இரண்டு தோழிகளை பிரிய மனமில்லாமல் அவர்கள் இரண்டு பேரையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டார். ஒரு மனைவி தன் கணவனுக்காக எதையும் தாங்கிக் கொள்வார். ஆனால், அவனை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ள மாட்டார் என்பது இந்திய சமூகத்தில் பொதுவாகக் காணப்படும் ஒரு நடைமுறை. ஆனால் வாசிம், ஷிஃபா மற்றும் ஜன்னத் ஆகியோர் பாரம்பரியத்தை விட நம்பிக்கை, புரிதல் மற்றும் நீண்டகால நட்பின் அடிப்படையில் வெளிப்படையாக புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். தோழிகள் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர் அங்குள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் இருக்கும் ஹோராபேட் என்ற இடத்தை சேர்ந்த வாசிம் ஷேக்(25) என்ற வாலிபர் தான் இக்காரியத்தை செய்து இருக்கிறார். இவருக்கு நீண்ட நாட்களாக ஷிஃபா ஷேக் மற்றும் ஜன்னத் ஆகிய இரண்டு பேரும் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் இருவர் மீதும் வாசிம் காதல் வயப்பட்டார். இரண்டு பெண்களும் வாசிம் மீது காயல் வயப்பட்டனர். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டனர். மூவரும் தங்களுக்குள் காதல் உணர்வு இருப்பதை பகிர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் திருமணம் குறித்து மூவரும் பேசினர். அப்போது உன்னை பிரிய முடியாது என்று இரண்டு தோழிகளும் தெரிவித்தனர். இதையடுத்து இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள தயார் என்று வாசிம் தெரிவித்தார். இதை இரண்டு தோழிகளும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். தோழிகள் இரண்டு பேரும் இது குறித்து தங்களது பெற்றோரிடம் பேசினர். பெற்றோர் ஆரம்பத்தில் எதிர்த்தனர். ஆனால் இரண்டு பேரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் அவர்களது திருமணத்திற்கு இரண்டு பேர் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து எம்.கே.பேலஸ் திருமண மண்டத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு மணமகள்கள், ஒரு மணமகன் என மூன்று பேரும் திருமணத்திற்கு மாலையுடன் வந்தனர். தோழிகள் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர் மணப்பெண்கள் இரண்டு பேரையும் இரண்டு கைகளில் பிடித்தபடி வாசிம் திருமண சடங்குகளில் பங்கேற்றார். இதில் இரண்டு பெண்களின் குடும்பத்தினரும் மனப்பூர்வமாக உறவினர்களுடன் கலந்து கொண்டனர். திருமணம் பாரம்பரிய முறைப்படியும், நவீன முறையிலும் நடந்தது. ஷிஃபா மற்றும் ஜன்னத் இருவருடன் வாசிம் சபதம் எடுத்துக் கொண்டார். ஒவ்வொருவருக்கும் சமமான மரியாதை மற்றும் அர்ப்பணிப்பை கொடுப்பதாக உறுதியளித்தார், அதே நேரத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில் சடங்குகள் செய்யப்பட்டன. தோழிகள் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர் தங்கள் புதிய வாழ்க்கை சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதலில் அச்சாணியாக இருக்கும் என்று தம்பதியினர் நம்பிக்கை தெரிவித்தனர். வாசிம் இரு மணப்பெண்களின் கைகளைப் பிடித்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். நெட்டிசன்களில் சிலர் அவர்களின் அன்பு மற்றும் நட்பை பாராட்டியுள்ளனர். வேறு சிலர் அவர்களின் திருமணத்தை சமூகம் ஏற்றுக்கொள்வது குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். ``என் மனைவி கடவுள் கொடுத்த கிஃப்ட்!'' - நடிகராக அறிமுகமாகும் `ஜேசுரதி' மகன் பிரகன் பேட்டி
வழிபாட்டிற்கு சென்றவர் ஆலயத்தினுள் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – அராலி வீரபத்திரர் கோவில் மண்டபத்திலிருந்து முதியவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அராலி… The post வழிபாட்டிற்கு சென்றவர் ஆலயத்தினுள் உயிரிழப்பு appeared first on Global Tamil News .
``என் மனைவி கடவுள் கொடுத்த கிஃப்ட்!'' - நடிகராக அறிமுகமாகும் `ஜேசுரதி'மகன் பிரகன் பேட்டி
குடும்பத்துக்கு ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிடுவதையெல்லாம் ஓவர்டேக் செய்து, குடும்பமே சேர்ந்து டான்ஸ், காமெடி ரீல்ஸ்களால் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருப்பவர்கள்தான் தாய் ஜேசுரதி, மகள் பிரக்யா, மகன் பிரகன், மருமகள் சினேகா உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஜேசுரதி குடும்பத்தார்’. அதுவும், திடீரென ‘விக்ரமன்’ பட சென்டிமென்ட்களையே ஓரங்கட்டிவிட்டு ‘எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை...’ ரேஞ்சுக்கு பாச முத்தமழையைப் பொழிவார்கள். Jesurathi Family இந்த இன்ஸ்டா குடும்பத்திலிருந்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார், ஜேசுரதி மகன் பிரகன். இன்ஸ்டாவில் 8 லட்சம் ஃபாலோவர்ஸைக் கொண்ட பிரகனின் டான்ஸ் வீடியோக்கள் செம வைப். இவரது மனைவி சினேகாவின் ரீல்ஸ்களுக்கும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்தக் குடும்பத்திலிருந்து, முதல் ஆளாக சினிமாவில் என்ட்ரியாகியுள்ள பிரகனிடம் பேசினோம். “சினிமாவில் என்னோட ஃபேவரைட், இன்ஸ்பிரேஷன் விஜய் சார்தான். அவரோட ஆக்டிங், டான்ஸ், காமெடி சென்ஸ் எல்லாமே பார்த்து பிரமிச்சிருக்கேன். அதைப் பார்த்துதான் டான்ஸ், நடிப்பு மேல் இன்ட்ரஸ்ட் வந்துச்சு. காலேஜில் பி.எஸ்.சி. பிசிக்ஸ் படிச்சிக்கிட்டிருக்கும்போது, டிக்டாக்ல நிறைய வீடியோக்கள் போடுவேன். அதுக்கெல்லாம், நல்ல ரீச் கிடைச்சது. அதுக்கப்புறம், டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டோம். எங்கம்மா ஜேசுரதி, தங்கச்சி பிரக்யா உங்களுக்கெல்லாம் தெரியும். அம்மா டீச்சரா ஒர்க் பண்றதால என்னோட படிப்பு, கரியர் விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க. ஆனா, எனக்கு நடிப்பு மேலதான் இன்ட்ரஸ்ட். அதனாலதான், எப்பவும் டிக்டாக், டப்ஸ்மாஷ், ரீல்ஸ்னு இருந்தேன். 2019-ஆம் ஆண்டு, நண்பர்களின் உதவியோடு ’தமயன்’ குறும்படத்தில் நடிச்சேன். இப்போ, விஜய் டிவி சித்து தயாரிப்பில் ’தி டார்க் ஹெவன்’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறேன்” என்பவரிடம் அவரது அம்மா, தங்கை குறித்து கேட்டோம். ”எல்லா குடும்பத்திலேயுமே பிரச்னை இருக்கத்தான் செய்யுது. என்னோட வளர்ச்சியில் மட்டுமே இப்போ கவனம் செலுத்த விரும்புறேன். என் குடும்பத்தில் இருக்கிறவங்களே என்னைப் புரிஞ்சுக்காதப்போ, என் மனைவி சினேகாதான் என்னை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போறாங்க. ’வருத்தப்படாதே, நான் இருக்கேன். உடம்பை ஃபிட்டா வெச்சுக்கோ, விமர்சனங்களைக் காதில் வாங்கிக்காத’ன்னு ரொம்ப கேரிங்கா பார்த்துக்கிறாங்க. ரொம்ப அன்பான மனைவி. சினேகா கடவுள் கொடுத்த கிஃப்ட்ன்னுதான் சொல்லணும். இப்போ, லேப் டெக்னீஷியனா ஒர்க் பண்ணிக்கிட்டிருக்காங்க. ஃப்ரீ டைமில் அவங்களும் என்கூட ரீல்ஸ் பண்ணுவாங்க. அவங்களுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கு. Pragan Family எனக்கு 8 லட்சம் ஃபாலோவர்ஸும், மனைவிக்கு 2 லட்சம் ஃபாலோவர்ஸும் இருக்காங்க. லவ் பண்ணும்போது காதலிச்சதைவிட இப்போ இன்னும் காதல் அதிகரிச்சிருக்கு. எங்களைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வருது. அதைப் பற்றி கவலைப்படுவது கிடையாது. இதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் வேலை. ஆரம்பத்தில் ஏன் இப்படி விமர்சனம் பண்றாங்கன்னு கவலையா இருந்தது. ஆனா, இப்போல்லாம் அதைப் பற்றி யோசிப்பதே கிடையாது. என் முழு கவனம் எல்லாம் மக்களை சந்தோஷப்படுத்த ஃபேமிலி எண்டர்டெய்ன்மென்ட், ஃபேமிலி ஃபீல் குட் வீடியோக்கள் பண்ணணும். சொந்தமா தொழில் தொடங்குவதோடு, சினிமாவில் சாதிக்கணும். அதுதான் என் கனவு, லட்சியம் எல்லாமே!” என்கிறார் உறுதியாக. `பொல்லாதவன்' முதல் `பைசன்' வரை - 20 ஆண்டுகளில் தீபாவளியை திருவிழா ஆக்கிய படங்கள்!
உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம்
உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்ன குறித்த இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கட்டார் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான மோதல் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த வாரத்தில் அது மேலும் மோசமடைந்தது. இந்த புதிய மோதலில் பல உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். […]
தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீ வைப்பு
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினரின் வீட்டிற்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர். இதன்காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று–செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சி. சர்வானந்தனின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த வீட்டிலிருந்த பொருட்கள், கதவு, ஜன்னல், கூரை என்பனவற்றில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் தற்செயலாக ஏற்பட்டதில்லையெனவும் தீவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் வீட்டு உரிமையாளரான சி. சிவானந்தன் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில். ஆலய வழிபாட்டிற்கு சென்றவர் , ஆலயத்தினுள் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - அராலி வீரபத்திரர் கோவில் மண்டபத்திலிருந்து முதியவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அராலி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் (வயது 81) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று மதியம் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்ற நிலையில், ஆலய மண்டபத்தினுள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
`பொல்லாதவன்'முதல் `பைசன்'வரை - 20 ஆண்டுகளில் தீபாவளியை திருவிழா ஆக்கிய படங்கள்!
தீபாவளி என்றில்லை எந்தவொரு கொண்டட்டத்தையும் சினிமா இல்லாமல் கடக்க முடியாது. குடும்பமாக அமர்ந்து தொலைக்காட்சியில் திரைப்படம் பார்ப்பதிலிருந்து திரையரங்கில் ஆட்டம்போதுவது வரை ஏதோ ஒரு வகையில் திரைப்படங்கள் நம் திட்டத்தில் இடம்பெறும். பட்டாசு, இனிப்பு, புத்தாடை இல்லாவிட்டாலும் சாதாரண நாட்களையும் தீபாவளி ஆக்கிவிடும் உற்சாகத்தை சினிமாக்கள் வழங்கும். கடந்த 20 ஆண்டுகளில் தீபாவளியைத் திருவிழா ஆக்கிய படங்கள் பற்றி பார்க்கலாம். சிவகாசி 2005: அது ஒரு கனா காலம், சிவகாசி, மஜா கில்லி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருந்த விஜய், ஓராண்டுக்குப் பிறகு பேரரசுவின் மாஸான பொழுதுபோக்கு படத்தின் மூலம் திரையரங்குக்கு திரும்பியிருந்தார். புயலடித்ததுபோல ரசிகர்களை திரையரங்குக்கு வாரிக்கொண்டது சிவகாசி. தனுஷ் நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கியிருந்த அது ஒரு கனா காலம் விமர்சன ரீதியாக வெற்றியையும் சிறிய அளவில் ரசிகர்களின் அன்பையும் பெற்றது. விக்ரம், அசின் நடிப்பில் வெளியான பக்கா மசாலா படமான மாஜா ஓரளவுக்கான வெற்றியைப் பெற்றது. 2006: வரலாறு, ஈ, வட்டாரம், வல்லவன் அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு திரைப்படம் வெளியான அன்றே கவனம் பெற்றது. கே.எஸ் ரவிக்குமாரின் கமர்ஷியல் ஹிட் வரிசையில் இடம்பிடித்தது வரலாறு திரைப்படம். சிம்பு எழுதி, இயக்கி, நடித்திருந்த வல்லவன் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றது. நயன்தாரா, சந்தியா, ரீமா சென், சந்தானம் ஆகியோரும் கவனம் பெற்றனர். முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாகியிருந்தாலும், ஆர்யாவின் வட்டாரம் ரிலீஸ் தாமத்தால் பாதிக்கப்பட்டது. எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா, பசுபதி நடித்திருந்த மருத்துவ குற்றங்கள் பற்றிய ஈ திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை எனினும் வட்டாரத்தை விட நல்ல வரவேற்பை பெற்றது. பொல்லாதவன் படத்தில் 2007: பொல்லாதவன், வேல், அழகிய தமிழ் மகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதால் அழகிய தமிழ் மகன் மிகப் பெரிய வரவேற்புடன் வெளியானது. ஆனால் ஹரியின் குடும்ப உணர்வுகள் பற்றி பேசிய ஆக்ஷன் என்டர்டெயினர் வேல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆனது. சிறிய படமாக பார்க்கப்பட்ட பொல்லாதவன் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 2008: சேவல், ஏகன் பில்லா என்ற ப்ளாக்பஸ்டருக்குப் பின் அஜித் நடிக்கும் படம், ராஜுசுந்தரம் இயக்கும் படம் என ஏக எதிர்பார்ப்புகள் பெற்றது ஏகன். ஆனால் இப்போது வரை இயக்குநருக்கு இதுவே கடைசி படமாகவும் அமைந்தது பட ரிசல்ட்டின் எதிரொலி. இந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டரான 'மெய்ன் ஹூ நா' படத்தின் ரீமேக் தான் ஏகன். சென்ற தீபாவளில் எகிறி அடித்த ஹரியும் இந்த தீபாவளியில் சேவல் மூலம் பல்ப் வாங்கினார். ஆனால் படித்தவுடன் கிழித்துவிடவும் காமெடி மட்டும் சேனல்களில் ரிப்பிட் அடித்தது வடிவேலுவின் மேஜிக். ஏகன் 2009: ஆதவன், பேராண்மை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் இசை என பக்காவான பாக்கேஜ் உடன் களமிறங்கினார் சூர்யா. அயன் படத்தின் வெற்றி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் ரசிகர்களும் விமர்சகர்களும் கலவையான விமர்சனத்தையேக் கொடுத்தனர். இருவரும் கொண்டாடும் படமாக அமைந்தது எஸ்.பி ஜனநாதனின் பேராண்மை! பேராண்மை 2010: உத்தமபுத்திரன், மைனா தனுஷின் காமடி என்டெர்டெயினர் உத்தமபுத்தினரன் ரசிகர்களை திரையங்கில் மகிழ்வித்தது. விவேக், ஆர்த்தி காமடியும் கலைகட்டியது, விஜய் ஆண்டனியும் பாடல்களும் கவனம் பெற்றது. மறுபக்கம் எமோஷனல் டிராமாவான மைனா, இமானின் வருடும் இசையால் மக்களை நெகிழ்வித்தது. மாஸ் திரைப்படங்கள் இல்லாவிட்டாலும் தீபாவளியில் நல்ல சினிமா கொண்டாடப்படும் என்பதற்கு உதாரணமாக அந்த படங்கள் அமைந்தன. 2011: வேலாயுதம், ஏழாம் அறிவு விஜய் ரசிகர்களுக்காக பாட்டு, ஃபைட்டு, காமடி, சென்டிமென்ட், க்ளாமர் என கலந்து உருவாக்கப்பட்ட படம் வேலாயுதம். மக்களைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக விஜய் அமர்கலம் செய்ய ரசிகர்கள் ஆர்பரித்தனர். ஏழாம் அறிவு, போதி தர்மர் வரலாறு, ஸ்ருதி ஹாசனின் சயின்ஸ் எக்ஸ்பிரிமன்ட், சீனாவிலிருந்து டாங்லீ பரப்பும் வைரஸ், நோக்கு வர்மம் என வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியானது. சூர்யாவுக்கு நல்ல மைலேஜையும் பெற்றுத்தந்தது. இன்றும் விஜய்-சூர்யா ரசிகர்களிடையே இதில் எது அதிக வெற்றி பெற்றது என்பதில் தகராறு நிலவுகிறது. 7 ஆம் அறிவு 2012: துப்பாக்கி, போடா போடி 100 கோடி க்ளப்பிள் இணைந்த முதல் தமிழ் படம், விஜய்யின் கெரியரிலேயே மிகப்பெரிய ஹிட், வேற லெவல் இயக்குநராக கோலிவுட்டையே கலக்கினார் முருகதாஸ். துப்பாக்கி சத்தத்துக்க்கு நடுவில் வந்த சுவடே இல்லாமல் பிறகு லேட் பிக்கப்பாகி ஆவரேஜாக ஓடியது போடா போடி. துப்பாக்கி 2013: ஆரம்பம், பாண்டிய நாடு, ஆல் இன் ஆல் அழகுராஜா மாஸ் படம் ஆரம்பம், காமெடி படம் அழகுராஜா என இரண்டுக்கும் டிக்கெட் புக்கிங்கில் பிஸியாக இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால், ஆச்சர்யப்படும்படி கவனம் கவர்ந்தது சுசீந்திரனின் வித்தியாச ட்ரீட்மெண்டில் வெளியான பாண்டியநாடு. இறுதியில் பாண்டியநாடு ஹிட்டாக ரசிகர்களை சோதித்த அழகுராஜா திரைகளில் இருந்து வெளியேறியது. ஆரம்பம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 2014: கத்தி, பூஜை துப்பாக்கிக்கு பிறகு விஜய் - முருகதாஸ் காம்போ, அனிரூத் இசையில் ஹிட்டான பாடல்கள், மாஸான பிஜிஎம் என வெளியான கத்தி, மாஸ் படமாக இல்லாமல் விஜய் பேசிய கருத்துக்களுக்காக கொண்டாடப்பட்டது. சமந்தா க்யூட்டான வரவேற்பைப் பெற்றார். கத்தின் வெற்றியால் ஹரி போட்ட கமர்ஷியல் பூஜை, தடுமாறியது. ஆனாலும் பஞ்சமில்லாமல் கலக்ஷன் பார்த்து வெற்றிகண்டது. கத்தி 2015: தூங்காவனம், வேதாளம் ஸ்லீப்லெஸ் நைட்ஸ் படத்தின் அதிகாரப் பூர்வ ரீமேக் என்ற தகவலுடனே 'தூங்காவனம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்டார் கமல். மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே படத்தை எடுத்தும் முடித்தார்கள். ஆனால் வீரத்திற்குப் பின் அ ஜித்தை வைத்து சிவா இயக்கிய 'வேதாளம்' ஆலுமா டோலுமா என பாக்ஸ் ஆஃபீசில் கெட்ட ஆட்டம் போட்டது. நல்ல மேக்கிங் என்ற பெயரை மட்டும் வாங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொண்டது தூங்காவனம் வேதாளம் படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா பாஸ்..? 2016: கொடி, காஷ்மோரா சந்தோஷ் நாராயணனின் சில்லான இசையையும், த்ரிஷா கொடுத்த ட்விஸ்டையும் தீபாவளி பேச்சுபொருளாக்கியது கொடி. டபுள் ஆக்ஷனில் தனுஷ் கலக்க கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது. மறுக்கம் பெரிய புரமோஷனுடன் வெளியான காஷ்மோரா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது. 2017: மெர்சல், மேயாத மான் ஆட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது படம் மெர்சல், விஜய், வடிவேலு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடித்த இந்த படத்திற்கு ஏ அர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் விஜய் மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம். பாக்ஸ் ஆஃபீஸில் 260 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது மெர்சல். ரத்னகுமார் இயக்கிய மேயாத மான், புதுமையான மேக்கிங், மென்மையான இசை, சுவாரஸ்யமான பாத்திரபடைப்புகளுக்காக கவனம் பெற்றது. அறிமுக நடிகை பிரியா பவானி சங்கர் கொண்டாடப்பட்டார். மேயாத மான் 2018: சர்கார் ஆப்பனட்டில் ஆளே இல்லாமல் விஜய் படம் களமிறங்கினால் திரை தீப்பிடிப்பது நிச்சயம் என்ற எதிர்பார்ப்போடு வந்தது சர்கார். விஜய் - முருகதாஸ் கூட்டணியின் மூன்றாவது திரைப்படம். அரசியல் கருத்துகள், ரஹ்மானின் இசைக்காக கவனம் பெற்றாலும் எதிர்பார்த்ததை விட குறைவான வெற்றியைப் பெற்றது. சர்கார் படத்தில் 2019: பிகில், கைதி திரைப்பட நாயகர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரைத்துறையும் கொண்டாடிய தீபாவளி அது. விஜய் ரசிகர்கள் கொண்டாடும் அட்லீயின் விருந்து, சினிமா ரசிகர்களுக்காக லோகேஷின் ஆக்ஷன் - சென்டிமென்ட் படையல் என கலைகட்டியது. Diwali Release Movies Review: `பைசன்', ̀டியூட்', ̀டீசல்' - தீபாவளி ரிலீஸ் படங்களின் விகடன் விமர்சனம் 2020: சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் இரண்டு திரைப்படங்களும் அமெசான் பிரைம், ஹாட் ஸ்டார் ஓடிடிகளில் ரிலீஸ் ஆகின. திரையரங்கில் கொண்டாடவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இரண்டு படங்களுக்கும் அன்பைக் கொட்டித் தீர்த்தனர் சினிமா ரசிகர்கள். சுதா கொங்காரா பெரிய ஹீரோக்களை இயக்கவும், ஆர்.ஜே பாலாஜி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை கொடுக்கவும் லேபிள் ஒட்டப்பட்ட தீபாவளியாக அமைந்தது. மூக்குத்தி அம்மன் 2021: அண்ணாத்த கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான முதல் தீபாவளி கொண்டாட்டம் சூப்பர் ஸ்டாரின் தௌசண்ட் வாலாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஷ்வானமானதாக ரசிகர்கள் நினைத்தாலும், ஓரளவு வெற்றியைப் பெற்று சில ரசிகர்களை திருப்திபடுத்தியது சிவாவின் அண்ணாத்த. ஆர்யா - விஷால் நடித்த எனிமி படமும் சரியாக பிக்-அப் ஆகவில்லை. ஆனால் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் நாடுமுழுவதும் பேச்சுபொருளானது. ஜெய் பீம் 2022: பிரின்ஸ், சர்தார் சிவ கார்த்திகேயன் முழுமையான காமடி படத்தில் தோன்றுவது எதிர்பார்ப்பை கிளப்பினாலும் ரசிகர்களுக்கு ஒட்டாமல் போனதால் பெரிய வெற்றியைப் பெற தவறியது பிரின்ஸ். மறுபக்கம் கார்த்தி - ராஷி கண்ணா - ரஜிஷா விஜயன் நடித்த சர்தார் திரைப்படம் வெற்றிபெற்றது. 2023: ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கிய ஜப்பான் திரைப்படம் ரசிகர்களைக் கவரத் தவறியது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யாவின் அபாரமான நடிப்பினாலும் கார்த்திக் சுப்புராஜின் மேக்கிங்காலும் வரவேற்பைப் பெற்றது. எஸ்.ஜே.சூர்யா -லாரன்ஸ் 2024: அமரன், பிரதர், பிளடி பெக்கர் டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் நடித்திருந்த பிளடி பெக்கர் திரைப்படம் சில இடங்களில் காமடிகள் கைகூடாததாலும் எமோஷன்கள் எலிவேட் ஆகாததாலும் போதுமான வரவேற்பைப் பெறத் தவறியது. பிரதர் படம் ரசிகர்களைக் கவரத் தவறியது. ராணுவ வீரரின் வாழ்க்கைக் கதையாக வந்த அமரன் அமோகமான வெற்றியைப் பெற்று சிவகார்த்திக்கேயனை அடுத்த லெவலுக்குக் கொண்டு சென்றது. தீபாவளி ரிலீஸ் 2025 2025: பைசன், டியூட், டீசல் என மூன்று வளர்ந்துவரும் ஹீரோக்களின் படங்கள் வெளியாகியுள்ளனர். பைசன், டியூட் படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளன. டீசல் ஸ்லோ பிக்அப் ஆகிறதா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். Lokah: க்யூட்டான காதலி `டு' லேடி சூப்பர் ஹீரோ - யார் இந்த கல்யாணி பிரியதர்ஷன்?!
கிளிநொச்சியில் ஒருவர் படுகொலை - முன்பகை காரணம் என தெரிவிப்பு
கிளிநொச்சியில் தீபாவளி தினமான இன்றைய தினம் முற்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த கௌரிராஜன் கஜன் (வயது 24) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன் பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
சென்னையில் கனமழை… தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியாமல் தவிப்பு- வெள்ளக் காடான சாலைகள்!
தலைநகரில் இன்று காலை பெய்த மழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத நிலை காணப்படுகிறது.
தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு!
தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய 2,000 வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார் வழக்குத் தொடரப்பட்டவர்களில், 2024 ஆம் ஆண்டும் செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 13 பேரும், நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 1,700 இற்கும் மேற்பட்டோரும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ஒரு தொகுதியினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத பெருமளவிலான வேட்பாளர்கள் மீதான வழக்கு தொடரும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் பொலிஸார் தகவல் அளித்துள்ளதாகத் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார். 2023ஆம் ஆண்டின் இலக்கம் 3 தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தமது செலவு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சட்டத்தின்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் நிறைவடைந்த 21 நாட்களுக்குள் தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு, ஒரு வாக்காளருக்காக ஒவ்வொரு வேட்பாளரும் செலவிடக்கூடிய அதிகபட்ச செலவு வரம்பை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறால் பண்ணையில் இளைஞர் ஒருவர் பலி ; விசாரணையில் வெளியான தகவல்
வவுனியா முந்தல் பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் இறால் பண்ணை ஒன்றின் தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலதிக விசாரணை உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் வலிப்பு நோயால் தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Madhumitha: ``தீபாவளினாலே ரொம்ப ஸ்பெஷல் புது டிரஸ்தான்'' - நினைவுகளைப் பகிரும் நடிகை மதுமிதா
தமிழ் தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல். இந்தத் தொடரின் முதல் பாகத்தில் ஜனனி என்ற கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை தொடரில் நடித்து வருகிறார். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த மதுமிதாவை தொடர்புகொண்டு சிறுவயது தீபாவளி அனுபவங்கள் குறித்துப் பேசினோம். நடிகை மதுமிதா ``நான் ஸ்கூல் படிக்கும்போதெல்லாம் எந்த சோஷியல் மீடியாவுலயும் இல்லை. அதனால், எந்த அலட்டலும் இல்லாமல் புது டெரஸ் போட்டுட்டு, பட்டாசு வெடிச்சிட்டு, அப்பா அம்மா, சிஸ்டர்ஸ்னு ரொம்ப ஹாப்பியா இருந்தது. அந்த தீபாவளி. எந்தக் கவலையும் இல்லாம காலையிலிருந்து நைட் வரைக்கும் பட்டாசு வெடிச்சிட்டே இருப்போம். இப்போ நான் சென்னையில் இருக்கேன். அப்பா அம்மா எல்லோரும் பெங்களூர்ல இருக்காங்க. இப்போ குடும்பப் பொறுப்பு, வேலையில் கவனம்னு பிசியாகிட்டோம். அதனால் முன்னமாதிரி இந்த தீபாவளியைக் கொண்டாட முடியல. நாங்க லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலி. அதனால் சின்னவயசுல தீபாவளிக்கு மட்டும்தான் புது டிரஸ் வாங்கி கொடுப்பாங்க. அதனால எங்களுக்கு தீபாவளினாலே ரொம்ப ஸ்பெஷல் புது டிரஸ்தான். அடுத்து எங்க வீட்ல இனிப்பு பலகாரமும், சாப்பாடும் ஸ்பெஷல். இயல்பாவே எங்க வீட்ல சாப்பாடு அல்டிமேட்டா இருக்கும். தீபாவளிக்கு சொல்லவே தேவையில்ல. எனக்கு கர்நாடக மாநிலம் சிக்மங்ளூர்தான் சொந்த ஊர். எங்க பாட்டி இருந்த வரைக்கும் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஊருக்கு போயிடுவோம். நடிகை மதுமிதா நானும் அப்பா அம்மா என்னோட ரெண்டு சிஸ்டர்ஸ்னு 5 பேரும் ஒரே பைக்ல ஊருக்குப் போவோம். நம்ம சிட்டில இருக்குறமாதிரி இருக்காது. அங்க இருக்குற லைப் வேறமாதிரி இருக்கும். சித்தப்பா, பாட்டினு ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவோம். தீபாவளி அன்னைக்கு வீட்டுல சாமி கும்பிடுறது, வீட்டுல வளர்க்குற மாட்டுக்கு பூஜை செய்றது, எல்லோரும் சேர்ந்து சாப்பிடுறதுனு ஒட்டுமொத்தமா கோல்டன் பீரியட் அது. அதெல்லாம் இப்போ நினைச்சாலும் சந்தோஷமா இருக்கும். இது எல்லாத்தைவிட ஹைலைட்டு எங்க பாட்டி கொடுக்குற பட்டர் (வெண்ணெய்). வீட்டுலேயே பால் கறந்து, தயிராக்கி மோர் கடைந்து, வெண்ணெய் எடுத்து கொடுப்பாங்க. எங்க பாட்டிகூட எனக்கு மறக்க முடியாத மெமொரினு சொல்லலாம். இப்போ பாட்டி இல்லை. அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன். நடிகை மதுமிதா பாட்டி இறந்ததுக்குப் பின்னாடி கிராமத்துக்குப் போறதே கம்மியாகிடுச்சு. இப்போ நான் சென்னைல இருக்கேன். ஒருவேளை இந்த தீபாவளிக்கு ஊர்ல இருந்திருந்தா அம்மா கையால நல்லா சாப்பிட்டு தூங்கி எழுந்திருப்பேன். என் சின்ன வயசு தீபாவளியை என் வாழ்க்கையில எப்போவும் மறக்கவே முடியாது. என்று தன்னுடைய நினைவுகளைப் பட்டாசாக பேசி முடித்தார் மதுமிதா. Haripriya: பாட்டி, பட்டுப்பாவாடை, தஞ்சை சமையல்... இதான் எங்க தீபாவளி - 'எதிர்நீச்சல்' ஹரிப்பிரியா
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை அமுல்
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (21) முதல் அமுலாகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என சர்வதேச வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. லிபியாவின் மறைந்த தலைவர் கர்னல் முயம்மர் கடாபியிடமிருந்து சட்டவிரோதமாக மில்லியன் கணக்கான யூரோக்களைப் பெற்றுக் கொண்டு, அதனை 2007ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியதாக சர்கோசிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் […]
தீபாவளியன்று குறைந்த தங்கம் விலை –சவரன் ரூ.95,360க்கு விற்பனை
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது. தங்கம் விலை ஒவ்வொருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தீபாவளி தினமான இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், தாம்பரம்,
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறோம் –இராணுவ தளபதி தகவல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, மே 7-ம்
நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது. புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
Actress Krithi Shetty Inaugurated AZORTE New Store at PHOENIX MARKETCITY CHENNAI
Reliance Retail’s premium fashion and lifestyle brand AZORTE made waves in the South with the opening of its all-new store
போதை மாத்திரைகளுடன் சிறுவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் சிறுவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , 16… The post போதை மாத்திரைகளுடன் சிறுவர்கள் கைது appeared first on Global Tamil News .
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட நீர்மூழ்கியை அமெரிக்கா அழித்துள்ளது!
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட நீர்மூழ்கியை அமெரிக்கா அழித்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக… The post போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட நீர்மூழ்கியை அமெரிக்கா அழித்துள்ளது! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ். யாழ்பாணத்திற்கு,சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வருவோர்… The post யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ் appeared first on Global Tamil News .
இஷாரா செவ்வந்தியின் நிழலில் சிக்கிய தக்ஷி
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், சஞ்சீவ கொலைக்குப் பிறகு அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய ஒரு […]
எரிபொருள் கொடுப்பனவு வேண்டாம் ; பிரதமர் உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உதவிப் பொதுச் செயலாளரும் தகவல் அதிகாரியுமான ஹன்ச அபேரத்ன இந்த விபரங்களை வழங்கியுள்ளார். எரிபொருள் கொடுப்பனவு அதன்படி, இந்த 48 பேரில், 13 பேர் கடந்த மார்ச் மாதம் முதல் தமது கொடுப்பனவை நிறுத்துமாறும் 16 பேர் ஏப்ரல் மாதம் முதல் நிறுத்துமாறும் கோரியுள்ளனர், மீதமுள்ளோர் […]
BB Tamil 9: ``திருமண நாள்தான் பெரிய பண்டிகை; அவர் இல்லாதது கஷ்டமா இருக்கு!'' - வினோத் மனைவி பாக்யா
விஜய் டிவீயில் இரண்டு வாரங்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜெ. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர். நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் வெளியேறி விட்டதாக தெரிகிறது. பிரவீன் காந்தியும் அப்சரவாவும் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் வெளியேறியுள்ளனர். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் மத்தியில் ஆட்டம் இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதுவரையிலான நிலவரப்படி இப்போது பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களிலேயே அதிகம் பேசப்படுகிறவர்களாக இருப்பவர்கள் வாட்டர்மெலன் திவாகரும் கானா வினோத்தும்தான். இத்தனைக்கும் கானா வினோத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு பின்னணியில் பணி புரிந்திருந்தாலும் இப்போதுதான் ஆன் ஸ்க்ரீனில் முகம் காட்டுகிறார். வாட்டர்மெலன் திவாகருக்கோ பிக்பாஸ் செல்லும் முன் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானவர். Bigg Boss Tamil 9 இந்தச் சூழலில் கானா வினோத்துக்கு நேற்று முன் தினம் திருமண நாள். வினோத்தின் மனைவி பாக்யாவிடம் பேசினோம். ’’அவருக்கு பூர்வீகம் ராயபுரம். எனக்கு வியாசர்பாடி. எங்க ஏரியாவுல கானா பிரபலம். அந்த கானாதான் என்னை அவருடைய ரசிகையாக்குச்சு. ஏதாவதொரு விஷயத்தைச் சொல்லி பாட்டு வேணும்னா அவ்வளவு சீக்கிரத்துல பாட்டு எழுதி பாடி பாட்டாக் கொடுத்துடுவார். BB Tamil 9 Day 13: கம்ருதீனை விளாசிய விஜய் சேதுபதி; மாஸ்டர் மைண்ட்டாக இருந்த சபரி, கனி! அதுலயும் அவருடைய வரிகள் நக்கல், நையாண்டி, கூடவே கருத்துன்னு செமயா இருக்கும். அதுல மயங்கிதான் காதலைச் சொன்னேன். அவருக்கும் என்னைப் பிடிச்சிருந்ததால் சில வருடங்கள் காதலிச்சோம். பிறகு ரெண்டு பேர் வீட்டுலயும் பெரியவங்க கிட்ட சம்மதம் வாங்கி கோவிட் சமயத்துல எங்க கல்யாணம் நடந்திச்சு. இப்ப பிரக்யா, ஸ்ரேயாஸ்னு ரெண்டு குழந்தைக. கடவுள் ஆசீர்வாதத்துல வாழ்க்கை நல்லபடியா போயிட்டிருக்கு’’ என்றவரிடம் ’பிக்பாஸ்’ குறித்துக் கேட்டோம். biggboss vinoth family ‘’விஜய் டிவி நிகழ்ச்சிகள்ல ஏற்கனவே ஒர்க் பண்ணிட்டிருந்தார். சினிமாவுல கூட மெரினா, கெத்து முதலான சில படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கார். கானா பாட்டு மட்டும்னு இல்லாம சாதாரண பாடலக்ளையும் எழுதுவார். விஜய் டிவியுடன் ஏற்கனவே இருந்த தொடர்புலதான் பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. குழந்தைக ரெண்டு பேரும் சின்னவங்களா இருக்கறதால விட்டுட்டு இருக்க முடியுமானு யோச்சார். நாந்தான் ‘பாத்துக்கறேன், நீங்க போயிட்டு வாங்க’னு சொன்னேன். கொஞ்சம் குழப்பத்தோடதான் போனார். ஆனா இப்ப அங்க நல்ல பேர் எடுத்துட்டு வர்றார்னு நினைக்கிறேன். இப்ப வீட்டுல தினமும் பிக்பாஸ் பார்த்துட்டு வர்றோம். அவரு எந்த இடத்துக்கு போனாலும் தன்னுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் தராம அந்த இடத்து சூழலுகு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கிடுவார். Bigg Boss Tamil 9 அதேநேரம் இயல்பான கேரக்டருக்கு எதிரா கேமராவுக்காக எதையும் செய்ய விரும்ப மாட்டார். அதனால நீங்க பார்க்கற வினோத்தான் என்னுடைய நிஜமான வினோத்தும் கூட. அதனாலயே பிக்பாஸ் ரசிகர்களுக்கு அவரைப் பிடிக்கும்னு நினைக்கிறேன். நூறு நாளும் அந்த வீட்டுல இருந்துடுவார்னு எனக்குத் தோணுது. மத்தபடி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு’’ என்றார். பாக்யா வினோத்துடன் திருமண நாள் வந்ததாமே, வாழ்த்துக்கள்’ என்றோம். ‘ஆமா அவர் பக்கத்துல இல்லாததுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. ஒவ்வொரு திருமண நாளும் ஏதாவது பரிசு வாங்கி வந்து சர்ப்ரைஸ் பண்ணுவார். பிக்பாஸ் வீட்டுல அவர் எடுத்துட்டு வர்ற நல்ல பெயரையே இந்த வருஷ திருமண நாள் பரிசா நினைச்சுக்கப் போறேன்’ என முடித்தார் பாக்யா வினோத். BB Tamil 9 Day 8: ‘நடிப்பு அரக்கன்’ டாஸ்க்; கனி அக்காவிற்கு ஸ்கெட்ச் போடும் பாரு - பரபரக்கும் வீடு
ஆன்லைன் பரிவர்த்தனை தோல்வி…ரூ.20-க்காக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் –சமோசா வியாபாரி அடாவடி
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரெயில் நிலையத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை தோல்வியடைந்ததால் வாடிக்கையாளரை சட்டையை பிடித்து ரூ.20 சமோசாவுக்காக, ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்சை சமோசா வியாபாரி ஒருவர் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் ஜபல்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் சமோசா விற்றுக் கொண்டிருந்த வியாபாரியிடம், பயணி ஒருவர் ரூ.20-க்கு சமோசா வாங்கினார். அவர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முயன்றார். […]
டெல்லியின் பெயரை மாற்றுங்கள்; அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கு விஸ்வ இந்து பரிஷத் கடிதம்
தலைநகர் டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என மறுபெயரிட வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் (VHP) வலியுறுத்தியுள்ளது. சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களின் பெயரை மாற்றவும் கோரிக்கை.
Louvre Museum: `விலைமதிப்பற்ற'நெப்போலியன் நகைகள் திருட்டு; உச்ச பாதுகாப்பை தாண்டி எப்படி நடந்தது?
உலகிலேயே மதிப்புமிக்க வரலாற்றுக் கலைப்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம் பாரிஸில் உள்ள லூவர். மோனா லிசா போன்ற அதீத முக்கியத்துவம் கொண்ட பொருட்கள் இங்கு உயர் தொழில்நுட்ப கண்காணிப்பில் உள்ளன. இங்கிருந்து நெப்போலியனின் நகை திருடப்பட்டுள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது. Louvre Museum கொள்ளை - எப்படி நடந்தது? பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் இது 'மிகப் பெரிய கொள்ளை' எனத் தெரிவித்துள்ளார். விலை மதிப்பில்லாத நகை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) காலை 9:30 மணியளவில் திருடப்பட்டுள்ளது. சரியாக 7 நிமிடத்துக்குள் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லூவர் திருட்டு கொள்ளையர்கள் கட்டுமானத்தில் உள்ள சீன் ஆற்றை நோக்கியிருக்கும் முகப்பு வழியாக அருங்காட்சியக வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர். டிஸ்க் கட்டர் (மரம் வெட்டும் கருவி) மூலம் ஜன்னலின் நிலைகளை வெட்டி உள்ளே சென்றுள்ளனர். ஒருவகையான ஹைட்ராலிக் ஏணியைப் பயன்படுத்தி அப்பல்லோ கேலரிக்குள் சென்றுள்ளனர். நெப்போலியனின் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 9 நகைகளை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், அதில் ஒன்று அருங்காட்சியகத்துக்கு வெளியே கண்டறியப்பட்டதாகவும் Le Parisien செய்தி தளம் கூறுகிறது. வெளியில் கண்டறியப்பட்ட நகை பேரரசி யூஜெனியின் கிரீடம் என்றும் அது உடைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. கொள்ளைக் கும்பலில் குறைந்தபட்சம் 4 பேர் இருந்ததாகவும், நன்கு திட்டமிட்டு வேவு பார்த்து இந்தக் கொள்ளையை நடத்தியிருப்பதாகவும் அமைச்சர் நுனேஸ் தெரிவித்திருக்கிறார். Louvre Robbery ஒட்டுமொத்த கொள்ளையும் 7 நிமிடங்களில் நடந்து முடிந்திருக்கிறது. புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகம் இதுவரையில் கொள்ளை குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை. உலகிலேயே அதிகமாக பயணிகள் வந்து செல்லும் அருங்காட்சியகம் இதுதான். தினமும் 30,000 பேர் வந்துசெல்லும் அருங்காட்சியகம் கொள்ளை காரணமாக ஞாயிறு முழுவதும் மூடப்பட்டுள்ளது. 'Louvre Museum கொள்ளை - சினிமாவில் மட்டுமே சாத்தியம்' இதுநாள் வரையில் திரைப்படங்களில் கதையாக மட்டுமே சொல்லப்பட்டு வந்த லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிப்பது நடந்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது எனக் கூறியுள்ளார் பாரிஸின் மேயர். 1793ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த லூவர் அருங்காட்சியகத்தில் பழங்காலப் பொருட்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் என 33,000 கலைப்பொருட்கள் உள்ளன. இதுவரை இங்கு பல திருட்டு முயற்சிகள் நடந்துள்ளன. 1911ஆம் ஆண்டு இங்கு பணியாற்றிய ஊழியர் மோனலிசா ஓவியத்தைத் திருடினார். 2 ஆண்டுகள் கழித்து அது மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1983ஆம் ஆண்டு மறுமலர்ச்சிக் கால கவசங்கள் 2 திருடப்பட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு அவை மீட்கப்பட்டன. Ajith Kumar Racing: 24H சீசனில் 3வது இடம் - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
பிரேசிலில் சுற்றுலா பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்து ; 17 பேர் பலி
பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரம் சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் 30 பேர் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். சலோவா நகர் அருகே சென்றபோது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த மணல்மேட்டில் மோதி பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து […]
பிரேசிலில் சுற்றுலா பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்து ; 17 பேர் பலி
பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரம் சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் 30 பேர் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். சலோவா நகர் அருகே சென்றபோது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த மணல்மேட்டில் மோதி பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து […]
சிறகடிக்க ஆசை சீரியலில் ஏற்கனவே சந்திராவின் கடை விஷயத்தில் நடந்த சம்பவங்களால் முத்து மீது அப்செட்டில் இருக்கிறான் அருண். இந்த மாதிரியான சமயத்தில் முத்துவால் அருணுடைய வேலைக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் மீனா, சீதா இடையில் சண்டை வெடிக்கிறது. இது தொடர்பான பரபரப்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
10, 20 வருடங்கள் தீபாவளி ஃப்ளாஷ்பேக்: சினிமா கொட்டகை, கோழிச் சோறு, மருதாணி, மாட்டுவண்டி அனுபவங்கள்!
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். கொண்டாட்டம் என்றாலே சந்தோஷம்தான். கொஞ்சம் ரீவைண்ட் செய்தால்... கடந்த 10, 20 வருடங்களுக்கு முன் இருந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் எப்படி இருந்தன என்பதைச் சொல்கிறார்கள் இவர்கள்... தீபாவளி பலகாரங்கள் ஜெயலட்சுமி, தங்கச்சிமடம் ‘‘பாட்டி, தாத்தா, சித்தப்பா, பெரியப்பானு எல்லாரும் வீடு நிறைஞ்சு இருப்போம். தீபாவளிக்கு ஒரு 15 நாளைக்கு முன்னாடியே அதிரசத்துக்கு உரல்ல மாவிடுச்சு, பலகாரம் சுட்டுடுவோம். தீபாவளிக்கு முதல் நாள் அக்கா, நான், தம்பினு மூணு பேரும் ஆட்டுக்கல்ல மாவு அரைப்போம். அந்தக் காலத்துல இட்லி, தோசையெல்லாம் தீபாவளிக்கு மட்டும்தான். வயசுப் பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து தோட்டத்துக்கு போய் மருதாணி பறிச்சிட்டு வருவோம். அந்த மருதாணியோட ஏழு வீட்டுக் கூரை எடுத்து, புளி, கிராம்பு சேர்த்து அம்மியில அரைச்சா... நல்லா செவக்கும்னு நம்பி அப்டி செய்வோம். நைட்டு எல்லாரும் ரவுண்டா உக்காந்து மருதாணி வெச்சிக்குவோம். காலையில் நாலு மணிக்கு எழுந்திரிச்சு, சாணி தெளிச்சு, பெரிய கோலமா போடுவோம். யார் கோலம் நல்லா இருக்குனு, தெருவுல ஒவ்வொரு வீடா போயிப் பார்ப்போம். வயசுப் புள்ளைங்க, வெளிச்சம் வர்றதுக்கு முன்னால வீட்டுக்குள்ள போயிடணும். நல்லா எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சிட்டு, புது டிரெஸ், செஞ்ச பலகாரத்தை எல்லாம் சாமி முன்னாடி வைப்பாங்க. வெள்ளமும் வேப்பிலையும் நச்சு, அதைத்தான் முதல்ல தருவாங்க. ஏன்னு கேட்டா, வாழ்க்கையில வர்ற இன்பத்தையும் துன்பத்தையும் சேர்த்தே ஏத்துக்குற பக்குவம் இப்போல இருந்தே வரணும்னு சொல்லுவாங்க. ஜெயலட்சுமி மதிய சாப்பாட்டுக்குச் சமைக்க, வீட்டுல நிக்குற ஒரு கோழியை விரட்டிப் பிடிக்கணும். அதுக்குள்ள நாங்க ஒரு வழி ஆகிடுவோம். அப்புறம் கோழியை உரிச்சு, அம்மியில மசாலா அரைச்சு, சமைச்சு, சாப்பிட்டுனு.... அவ்ளோ சந்தோஷமா இருக்கும். சாயங்கால நேரத்துல பக்கத்து வீடுகளோட, ‘நீங்க என்ன சமைச்சீங்க? என்னென்ன பலகாரம் சுட்டீங்க?’னு கதை பேசுவோம். டிடி சேனல்ல போடுற தீபாவளி சிறப்புத் திரைப்படத்தை பார்த்துட்டு, அடுத்த நாள் ஸ்கூல்ல அந்தப் படத்தை பத்தி கதை கதையா பேசுவோம்!” Deepavali: பலகாரங்களோடு சாப்பிட வேண்டிய தீபாவளி லேகியம் - வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்! விஜயா, சேலம் ’’தீபாவளினாலே... கடைக்குப் போற சந்தோஷம்தான். குடும்பத்துல எல்லாருமா சேர்ந்து கடைக்குப் போயி புது டிரெஸ் வாங்குற சந்தோஷமே தனிதான். வருஷத்துல ஒரு தடவை, தீபாவளிக்கு மட்டும்தான் புது டிரெஸ் எடுப்போம். அப்புறம், வருஷம் முழுக்க ஏதாச்சும் விசேஷத்துக்கு அதைப் போடும்போது எல்லாம் ‘தீபாவளி டிரெஸ் போடப்போறேன்’, ‘தீபாவளி டிரெஸ் போட்டிருக்கேன்’னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டுக்குவோம். விஜயா ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கும்போது, ரொம்ப திருப்தியா இருக்கும். ஆடைகள், பட்டாசு, பரிசு, பலகாரம், போனஸ்னு எல்லா செலவுகளும் சேர்ந்து பெருமூச்சுவிட விட்டாலும், யாருக்கும் அது பத்தின் குறையோ, கோபமோ இருக்காது. வருஷம் முழுக்க உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். வருஷத்துல ஒரு நாள் செலவழிச்சிட்டுப் போவோம்னுதான் நெனைப்பாங்க!” விஜயஸ், திருச்செங்கோடு ‘‘தீபாவளி வரப்போகுதுனா அம்மா, யார் யாருக்கு இனிப்புக் கொடுக்கணும்னு லிஸ்ட் எழுத ஆரம்பிச்சிடுவாங்க. எங்க குடும்பத்துல எல்லாருக்கும், அவங்களுக்கு வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள் பத்தி ஒரு லிஸ்ட் இருக்கும். அதுல சில விஷயங்கள் தீபாவளிக்கு நிறைவேறும். விஜயஸ், திருச்செங்கோடு தீபாவளி அன்னைக்கு நைட் குடும்பத்தோட ஹோட்டலுக்குப் போவோம். அது அவ்ளோ மகிழ்ச்சியா இருக்கும். கூடவே, தீபாவளி மாசத்துல குடும்பத்தோட ஒரு சின்ன டிரிப்பும் போவோம். தீபாவளி மாச செலவுகளுக்காக சில மாசங்கள் முன்பிருந்தே பணத்தை சேர்த்துவைக்க ஆரம்பிசிடுவோம்!” பேபி, சேலம் ’’லட்டு, மைசூர்பாக், காரம்னு ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு நானே வீட்டுல எல்லாம் பண்ணுவேன். அதோட, தீபாவளி மாசத்துல வீட்டுத் தேவையான சில பாத்திரங்கள் எல்லாம் வாங்குவேன். கடைக்குப் போய், கூட்டத்துல முண்டியடிச்சு வாங்குற சந்தோஷமே தனி. பேபி, சேலம் தீபாவளிக்கு சினிமா பார்க்கப் போறது ரொம்ப பரவசமா இருக்கும். ஒவ்வொரு வருஷமும் தீபாவளி ரிலீஸ் படங்கள் ஒரு தனி கொண்டாட்டம்தான். அடுத்த ஆறு மாசத்துக்கு அந்தப் படப் பாடல்கள்தான் விசேஷ வீட்டு ஸ்பீக்கர்ல இருந்து டீக்கடை வரை எங்கயும் ஒலிச்சுட்டே இருக்கும். சிவா செல்வ மாரிமுத்து ‘’அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி... மேல்தட்டு மக்களுக்குத்தான் தீபாவளி முழுமையான கொண்டாட்டம். நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு திண்டாட்டத்துடன் கூடிய கொண்டாட்டம்தான் தீபாவளி. சிலரை கடன்லயும் தள்ளிடும். சிவா செல்வமாரிமுத்து என்னதான் செலவுகள் போட்டுப் புரட்டினாலும், நல்ல நாள்ல பிடிச்சதை சாப்பிடுறது, புது டிரெஸ் போடுறது, பட்டாசு வெடிக்கிறது, உறவுகளோட கூடுறதுனு பண்டிகைகள் நம்ம வாழ்க்கைக்கு ஒரு ரீஸ்டார்ட் பட்டன்தான் எப்பவும்!” பாண்டியன், திருப்பத்தூர் “அப்போவெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சோறு, மத்த ரெண்டு வேளைக்குக் கூழுக் கஞ்சினுதான் குடிப்போம். இட்லி, தோசை, கறிச் சோறு எல்லாம் தீபாவளிக்குத்தான். தீபாவளிக்கு பத்து நாளுக்கு முன்னால நெல்லுக் குத்த ஆரம்பிச்சிடுவோம். அதிரசம், முறுக்கு செய்யுற அந்த வாசனையிலேயே தீபாவளி ஆரம்பிச்சிடும். எடுத்த புதுத்துணியை டெய்லர் கடையில கொடுத்துட்டு, ‘எப்போ தருவீங்க?’னு காத்துக்கிறக்குற சுகமே தனிதான். அப்போ எங்கப்பா வெளியூர்ல வேலை பார்த்தாரு. ஊர்ல ஒரே ஒரு டெலிபோன் தான் இருக்கும். அந்த வீட்டுக்கு எங்கப்பா போன் பண்ணுவாரு. ‘பாண்டியா, உனக்கு உங்க அப்பன் தீபாவளிக்கு ஊசி பட்டாசு வாங்குறதா... இல்ல பொம்மை துப்பாக்கி வாங்கறதானு கேட்க போன் பண்ணி இருக்கான்டா...’ அப்படீனு அந்த வீட்டுக்காரங்க கூப்பிடும்போது... துள்ளிக் குதிச்சு ஓடுவேன். பாண்டியன் புதுப்படம் பார்க்க மாட்டுவண்டியில ‘சினிமா கொட்டகை’க்குப் போவோம். அங்க சேர் எல்லாம் இருக்காது. மண் தரையில உக்காந்துதான் படம் பார்ப்போம். அவ்ளோ பரவசமா இருக்கும். இப்படி, தீபாவளிக்கு அந்தக் காலத்துல எல்லாரும் காத்துக் கிடந்ததுக்குக் காரணம்... பல நாள் ஏக்கங்களுக்கு விடியுற பண்டிகையா அது இருக்கும்!” ஆம், காத்திருந்து கிடைக்கும் மகிழ்ச்சிக்கு... தித்திப்பு அதிகம்! - கி.மெராக் ரியா, மிருதுளா, சி.த.இஷா, தி.ஜெகதீஸ்வரி Diwali 2025: கீர்த்தி சுரேஷ் முதல் ரம்யா பாண்டியன் வரை! - தலை தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்
திம்பம் மலைப்பாதை மண் சரிவு… சத்தியமங்கலம் – மைசூரு சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதி வழியே செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
``வெள்ளை முடி அஜித் நடித்தபோது ஃபேஷன் ஆகிவிட்டது, அதனாலேயே'' - இலக்கிய மன்றம் தொடங்கிய மாணவர்கள்
சமூகத்தில் நடக்கக்கூடிய பிரச்னைகளை கலை, இலக்கியம் வழியாக மக்களுக்கு கொண்டுசேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது, பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம். நகுல் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம் இன்று 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தொடர்ந்துகொண்டிருக்கிறது. பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம். உசிலம்பட்டி, விளாம்பட்டி ஊரில் இருக்கும் நகுல் என்பவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. விஸ்காம் படித்து வருகிறார். படிக்கும்போதே ஒரு மன்றத்தை உருவாக்கி அதை சிறப்பாகவும், புதுமையாகவும் வழிநடத்தி இரண்டு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமூகத்திற்கான ஆவணப்படங்கள், குறும்படங்கள், போட்டோ வாக், கவிதைகள் என கலை, இலக்கியத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். அவர் உருவாக்கிய இந்த மன்றத்தின் நோக்கத்தை, அவரும் அவர் மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் தேவ அமிர்த பிரியா மற்றும் சாய் விக்னேஷ் ஆகியோர் விகடனுடன் பகிர்கிறார்கள். ஒருங்கிணைப்பாளரான நகுலிடம் முதலில் ஆரம்பித்தோம். ஒருங்கிணைப்பாளரான நகுல் பகிர்வு பென்னி குயிக் மன்றம் மக்களுக்கானது! “நான் அருளா ஆனந்தர் கல்லூரியில் இளநிலை மூன்றாம் வருடம் படிக்கும்போதுதான் நான் இந்த மன்றத்தை ஆரம்பித்தேன். சினிமா, இலக்கியங்கள் மீதுள்ள ஆர்வமும், சமூக ரீதியான படைப்புகளை உருவாக்கும் ஆட்களோடு இருந்ததே இந்த மன்றத்தை உருவாக்குவதற்கு தூண்டுகோலாக இருந்தது. ஆரம்பிக்கும்போது 6 பேர் கொண்ட இந்த மன்றத்தை ஆரம்பித்தோம். இதன் நோக்கமே கலையும் இலக்கியமும் தான் சமூக மாற்றத்திற்கு ஒரு ஆயுதமாக செயல்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் இங்கு நடக்கக்கூடிய பிரச்னைகளை பார்க்கிறோம். அதற்கான தீர்வை காணமுடியவில்லை. மற்றவர்கள் போல் தெருவில் இறங்கி போராட்டம் செய்ய முடியுமா என்பதில் சாத்தியமும் இல்லை. ஆனால் ஒரு கருத்தியல் தளத்தின் மூலமாக வெளியே கொண்டுவரும்போது அது பெரிதும் மக்களிடம் சேர்கிறது. பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம். வெள்ளை முடியை பிரச்னையாகப் பார்த்த ஒரு விஷயத்தை அஜித் எடுத்து நடிக்கும்போது அது ஒரு ஃபேஷன் ஆக மாறிவிட்டது. இப்படி இங்கே இருக்கும் ஸ்டீரியோடைப்பிற்கு மாற்றாக ஒன்று வைக்கும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட தளத்தில் தனியாகத் தொடங்குவது சாத்தியம் இல்லை. அதனாலேயே இதை ஒரு மன்றமாக ஆரம்பித்தோம். அந்த மன்றம் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். யாருக்கெல்லாம் கலையின் மீதும் இலக்கியத்தின் மீதும் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி 50-க்கும் மேற்பட்டோர் இந்த மன்றத்தில் இருக்கிறார்கள். அதில் ஒவ்வொருவருடைய சிந்தனையையும், முயற்சியையும் ஒரு ஆவணப்படமாகவோ, கவிதையாகவோ, குறும்படமாகவோ எடுத்து மக்களுக்கான தேவைகளையும், இந்த சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளையும், அவர்களுக்கான உரிமைகளையும் கலையின் மூலம் வெளிப்படுத்துகிறோம். அப்படி 2024-ல் தென்மாவட்ட இயற்கை விவசாய கூட்டமைப்பு, பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம் மற்றும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் விஸ்காம் துறை சேர்ந்து விதைத்திருவிழா என்ற பெயரில் காமராஜ் பல்கலைக்கழகத்தில் நடத்தினோம். இதன் நோக்கமே, இன்று மரபணு மாற்றப்பட்ட பல விதைகள் வந்துவிட்டன. அவை நம் உணவுடன் கலந்து விஷமாக மாறி வருகின்றன. ஆனால் இன்றும் சில இடங்களில் பாரம்பரிய விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி நாங்கள் தேர்ந்தெடுத்த திருமங்கலத்திற்கு அருகில் உள்ள நான்கு ஊர்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவதற்காக திருவிழாவை நடத்தினோம். செங்கப்படை வரகு, காரைக்கேணி கத்திரிக்காய், எட்டுநாழி கத்திரிக்காய், சென்னைம்பட்டி பாவற்காய் என்ற விதைகளை வைத்து ஆவணப்படம் எடுத்து அந்த ஊர் மக்கள் முன்னே திரையில் வெளியிட்டோம். பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம். அந்த விதைகளை பாதுகாத்து வந்த விவசாயிகளையும் கௌரவித்தோம். மேலும் விதை திருவிழாவில் வீதி நாடகமும் செய்தோம். இதன் தொடர்ச்சியாக மதுரை, மேலூர் போகும் வழியில் இருக்கக்கூடிய வேளாண்மை கல்லூரியில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் நாங்கள் புவிசார் குறியீடு வாங்கித் தருகிறோம் என்று முன்வந்தனர். அப்படியே குறியீடு கொடுப்பவர்களின் கமிட்டியில் இருந்தும் வந்து இரண்டு நாள் நிகழ்ச்சிகள் நடத்தினர். அதனால் அந்த விதைகள் பாதுகாத்து வருகிறது. இந்த வருடமும் விதைத் திருவிழா நடத்த உள்ளோம்.” என தெளிவான பார்வையுடன் விளக்கியவரைத் தொடர்ந்து தேவ அமிர்த பிரியவும், சாய் விக்னேஷும் பேச ஆரம்பித்தனர். தேவ அமிர்த பிரியா `கலை இலக்கியத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கான சிறந்த இடம்' தேவ அமிர்த பிரியா பேசத் தொடங்கினார். “போன வருடம் இதே நேரத்தில்தான் நான் மன்றத்தில் சேர்ந்தேன். நகுலிடம் பேசும்போது அவருக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து வியந்தேன். அவர் கூறும் ஒவ்வொரு கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் நான் செய்து வருகிறேன். மன்றத்தின் முக்கிய வலுவே உறுப்பினர்கள் தான். ஆர்வம் இருப்பவர்கள் பல இடங்களிலிருந்து கவிதைகள், கட்டுரைகள் எழுதிக்கொடுக்கின்றனர். அதுவே மன்றத்தின் வலுவாகப் பார்க்கப்படுகிறது”, என்றார். பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம். இவரைத் தொடர்ந்து சாய் கணேஷ், மன்றத்தின் மூலம் நடந்த சிறப்பான விஷயங்களை கூறினார். “2025-ல் முதன்முதலில் குறும்படத் திருவிழாவை நடத்தினோம். ஒரே வாரத்தில் அந்த நிகழ்வை நடத்த முடிவெடுத்தோம். அதுதான் எங்கள் மன்றத்தின் முதல் பெரிய சாதனையாகப் பார்த்தோம். கலை இலக்கியம் அல்லாத இடத்தில் இருப்பவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.” மொத்தம் 9 குறும்படங்களை வெளியிட்டோம். அதனால் வெளியில் தெரியாத பல கலைஞர்களின் படைப்புகளை எங்களால் வெளியில் கொண்டுவர முடிந்தது. இந்த நிகழ்வை நடத்துவதற்கு எங்களுக்கு ஆசிரியர்களிடமிருந்து பொருளாதார ரீதியான உதவி கிடைத்தது. அடுத்த கட்டமாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி என்ற ஊருக்கு சென்றோம். அங்கே பென்னிகுயிக் உருவச்சிலையை வைத்திருந்தனர். அங்கு முல்லைப்பெரியாறு அணையை கட்டி, அங்குள்ள மக்களையும் விவசாயம் செய்ய வைத்தார். பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம். இப்போது அவர்களின் விவசாயம் எப்படி செய்கிறார்கள், முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது, என்பதை வீதி நாடகமாக அந்த ஊர் மக்களுக்கு நடத்தினோம். 3 நாட்கள் அங்கேயே தங்கி அங்குள்ள குழந்தைகளிடம் பேசியது என சிறப்பான அனுபவமாக அது அமைந்தது. மேலும் அங்கே ஒரு நூலகம் அமைக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது. எதிர்காலத்தில் பல இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு கலை இலக்கியத்தைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும். கலையும், இலக்கியமும் மக்களிடம்தான் உருவானது. அதை மக்களிடமே கொடுப்பதுதான் எங்களது நோக்கம்” என்றார். Diwali Release Movies Review: `பைசன்', ̀டியூட்', ̀டீசல்' - தீபாவளி ரிலீஸ் படங்களின் விகடன் விமர்சனம் `பென்னி குயிக்' பெயர் மட்டுமே இந்த மன்றத்திற்கு பொருந்தும்! பென்னிகுயிக் என்ற பெயர் வைப்பதற்கான காரணம் நகுலிடம் கேட்டபோது அவர், “மன்றத்தை அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுவானதாகவே ஆரம்பித்தோம். அதனால் பெயரும் பொதுவானதாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இங்குள்ள பிரச்னைகளைப் பேசுகிறோம் அப்படியென்றால் இவர்களுக்குப் பொதுவான ஒருவராக இருக்க வேண்டும். அப்படி எடுத்ததுதான் அவர் பெயர். ஏனெனில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என இந்த ஐந்து மாவட்டங்களும் ஆங்கிலேயர் காலத்தில் பெரும் வறட்சியில் பாதித்தபோது அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து முல்லைப் பெரியார் அணையை கட்டி இன்று வரை அங்கு வாழும் பல மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைத்தவர் பென்னிகுயிக். பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம். அவருக்கு எந்த சாதி மதமும் கிடையாது. இன்றும் பல ஊர்களில் அவரது பிறந்த நாளை பொங்கலாக கொண்டாடுகின்றனர். மொத்த இந்தியாவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இருக்கும்போது இவரை மட்டும் இன்றளவும் போற்றும் வகையில், பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அவர் பெயரை வைப்பது என்று, இங்குள்ள மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். அவரின் பெயர் மட்டுமே இந்த மன்றத்திற்கு பொருந்தும்.“ என்றபடி முடித்துக் கொண்டார். Diwali Releases: `தீபாவளி டிரீட்' - இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படைப்புகள்
26 லட்சம் அகல்விளக்கு தீபங்கள்; ஆரத்தி வழிபாடு: அயோத்தியில் 2 கின்னஸ் சாதனைகள்
தீபாவளி பண்டிகையையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் தீபோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 26.17 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டதுடன், ஒரே நேரத்தில் 2,128 போ் ஆரத்தி வழிபாடு மேற்கொண்டனா். இவ்விரு நிகழ்வுகளும் கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடித்தன. புண்ணியத் தலமான அயோத்தியில் மாநில அரசு சாா்பில் கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து தீபோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தீபோற்சவ விழாவில், சரயு நதியின் 56 படித்துறைகளில் பல்வேறு வடிவங்களில் 26.17 லட்சம் […]
தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம் ; இரு ஆசிரியர்கள் வைத்தியசாலையில்
பதவியா – ஹெப்பட்டிபொலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியா ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இரு ஆசிரியர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொலிஸ் விசாரணை பதவியா பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றிற்கு சென்று விட்டு கார் வாகனத்தில் திரும்பிய ஆசிரியர்கள் பதவியா – ஹெப்பட்டிக்கொல வீதியில் உள்ள மகாநெட்டியாவ பகுதியில் பயணித்த போது எதிரே வந்த பிக்கப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. வவவுனியாவை சேர்ந்த ஆசிரியர் […]
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துக்கள்..
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தீபாவளி நாளில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பண்டிகையின் ஒளி குறித்த பதிவில், “ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்படும் போது, இந்த பண்டிகையின் ஒளி நம் இதயங்களில் உள்ள இருளை அகற்றி, நமது கூட்டுப்பாதையை ஒளிரச் செய்ய பிரார்த்திக்கிறோம். தீமைக்கு எதிரான நன்மையின் இந்த கொண்டாட்டம், போதைப்பொருள் […]
தமிழகத்தில் இன்று காய்கறி நிலவரம் (அக்டோபர் 20, 2025)… தீபாவளிக்கு எகிறிய பீன்ஸ், கேரட் விலை!
இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், காய்கறிகளின் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை என்று தெரிகிறது. குறிப்பாக சென்னையில் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிவியில் இன்று (அக்டோபர் 20) தீபாவளி தின சிறப்பு திரைப்படங்கள் என்ன... அட்டகாசமான லிஸ்ட் இதோ!
சின்னத்திரையில் இன்று (20/10/2025) தீபாவளியை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசான 'கூலி' முதன்முறையாக டிவியில் ஒளிப்பரப்பாகிறது. மேலும், இன்றைய தினம் என்னனென்ன படங்கள் போடப்படுகிறது என்பதை குறித்து தற்போது பார்க்கலாம்.
சர்வதேச செஃப் தினம்: விருந்தோம்பலை வளர்க்கும் சமையல் வித்தகர்களுக்கான நாள்
இன்று (அக்டோபர் 20) உலக சமையல்காரர்கள் தினம் (International Chefs Day). சமையலறையின் வெப்பத்தை ஏற்று, தங்கள் கலைத்திறனால் உலக
ஏர் சீனா விமானத்தின் கேபினில் திடீர் தீ விபத்து
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஏர் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர். சீனாவின் ஹாங்சோவிலிருந்து தென் கொரியாவின் சியோலுக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏர் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமானத்தின் கைபைகள் வைக்கும் கேபினில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. பயணி ஒருவரின் பையில் இருந்த லித்தியம் பேட்டரியால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனே விமானம், ஷாங்காயில் உள்ள புடாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது […]
Diwali Release Movies Review: `பைசன்', ̀டியூட்', ̀டீசல்' - தீபாவளி ரிலீஸ் படங்களின் விகடன் விமர்சனம்
பண்டிகை தினங்களில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான்! அப்படி இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக மாரி செல்வராஜின் 'பைசன்', பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்', ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' என மூன்று தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. தீபாவளி ரிலீஸ் இந்த மூன்று திரைப்படங்களின் விகடன் விமர்சனத்தையும் இங்கு மொத்தமாகப் பார்ப்போமா... பைசன்: மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'பைசன்' திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. வனத்தி கிராமத்திலிருக்கும் கிட்டானுக்கு கபடி மீது அளப்பரிய பிரியம். ஆனால், ஊரில் நடக்கும் யுத்தங்கள், தன்னுடைய அனுபவம் என கிட்டானின் கபடி ஆசைக்கு அவரின் தந்தை தடையாக இருக்கிறார். பைசன் படத்தில்... பிறகு, தனக்குப் போடப்பட்ட தடைகளை உடைத்து எப்படி கிட்டான் முன்னேறினார் என்பதுதான் துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தின் கதை. 'பைசன்' படத்தின் முழுமையான விமர்சனத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும். டியூட்: அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' ஆணவக் கொலை, ஆணாதிக்க சிந்தனை என்பது போன்ற சோசியல் மெசேஜ் சொல்லும் திரைப்படமாக திரைக்கு வந்திருக்கிறது. சென்னையில், ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வரும் அகனுக்கு அவருடைய மாமா மகள் குறள் ப்ரொபோஸ் செய்கிறார். Dude Review | டியூட் விமர்சனம் தொடக்கத்தில் குறளின் காதலை மறுக்கும் அகன், பின்பு, குறள் மீதான காதலைப் புரிந்துகொண்டு அவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். பிறகு, அகன் மற்றும் குறள் வாழ்க்கையில் நிகழும் விஷயங்களே படத்தின் கதை. 'டியூட்' விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். டீசல்: அறிமுக இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் திரைக்கு வந்திருக்கிறது 'டீசல்' திரைப்படம். டீசல் மாஃபியா செய்யும் மனோகர், பெற்றோரை இழந்த வாசுவை வளர்ப்பு மகனாக வளர்க்கிறார். தந்தையைத் தொடர்ந்து வாசுவும் டீசல் மாஃபியா களத்தில் குதிக்கிறார். டீசல் விமர்சனம் | Diesel Review இவர்களுக்கு எதிரில் இதே தொழிலில் பாலமுருகன் களமிறங்குகிறார். இதற்குப் பிறகு இவர்களுக்கு இடையில் நிகழும் மோதலே இந்த 'டீசல்' படத்தின் கதை. 'டீசல்' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
`அழகுக்கு அரோமா ஆயில்' - எந்தப் பிரச்னைக்கு எந்த ஆயில்? சொல்கிறார் நிபுணர்!
’சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது அரோமா ஆயில்’ என்கிற அரோமா தெரப்பிஸ்ட் கீதா அஷோக், அரோமா ஆயில்களின் உதவியுடன் வீட்டிலேயே அழகாகும் வழிகளைச் சொல்கிறார். அழகுக்கு அரோமா ஆயில் சரும துவாரங்கள் சுத்தமாகும்..! தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும். பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், அரோமா ஆயிலின் வாசனையானது, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும். எண்ணெய் வடியும் சருமத்துக்கு எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கான குறிப்பு இது. ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் பெப்பர் மின்ட் ஆயில், லாவெண்டர் ஆயில், மின்ட் ஆயில் தலா இரண்டு சொட்டுகள் விட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் ஏற்றி கொதிக்கவிடவும். இதில் முகத்துக்கு நீராவி எடுக்கவும். பலன்: முகத்தில் சுரக்கும் அதிக எண்ணெய்ப் பசையை மட்டுப்படுத்துவதுடன், சருமத்தில் படிந்துள்ள அழுக்கை வெளியேற்றி பொலிவாக்கும். அழகுக்கு அரோமா ஆயில் வறண்ட சருமத்தினருக்கு... வறண்ட சருமத்தினருக்கும் இருக்கிறது அழகுக் குறிப்பு. ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் ஜெரேனியம் ஆயில் (geranium oil), லாவெண்டர் ஆயில், யலாங் யலாங் ஆயில் (ylang ylang oil) தலா இரண்டு சொட்டுகள் விட்டு, மூடிக் கொதிக்க விடவும். கொதித்த பின் நீராவி பிடிக்கவும். பலன்: முகத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! சரும அடுக்குகளில் ஊடுருவி இளமையாக்கும்! பொதுவாக பொலிவிழந்த சருமத்தை உடனடியாகப் பளிச்சென காட்டவும், அந்தப் பொலிவு அதிகபட்சம் மூன்று நாட்கள் நிலைக்கவும் ஃபேஸ்பேக் உதவி செய்யும். ஆனால் கரும்புள்ளி, பரு, மங்கு போன்ற சருமத்தின் இரண்டாவது அடுக்கின் பிரச்னைகளையும், சுருக்கம், கோடுகள், வயதான தோற்றம், சருமத் தளர்வு போன்ற சருமத்தின் மூன்றாவது அடுக்கின் பிரச்னைகளையும் சரிசெய்வது, அரோமா ஆயிலின் தனிச்சிறப்பு. இதற்கு, லாவெண்டர் ஆயில், லைம் ஆயில், பச்சோலி ஆயில், சீடர் வுட் ஆயில், யலாங் ஆயில் இவற்றில் ஏதாவது இரண்டு ஆயில்களில் தலா இரண்டு சொட்டுகளை, ஃபேஸ்பேக் போடும் முன் அதில் கலந்து முகத்துக்கு அப்ளை செய்யவும். அரிசி களைந்த தண்ணீர், பாதாம் ஆயில்... முகத்தை பளிச் என்று மினுங்கவைக்கும் கொரியன் பியூட்டி டிப்ஸ்! பலன்: அரோமா ஆயிலின் மூலக்கூறுகள் சருமத்தின் துவாரங்களைவிட மிகச்சிறியது. அதனால் ஃபேஸ்பேக் போட்ட 2 முதல் 20 விநாடிகளுக்குள் இந்த ஆயில் சருமத்தின் மூன்றாவது அடுக்குவரை ஊடுருவி சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும். அரோமா ஆயில்களும் இனி இருக்கட்டும் உங்கள் அலமாரியில்!
தீபாவளி ஸ்வீட் சாப்பிட ரெடியா… 2025ல் இப்படி ஒரு சோதனை- ஒரு கிலோ எவ்வளவு ரூபாய்?
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்வீட் விலை சற்றே உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக எலும்புப்புரை தினம்: மெளன நோய்க்கு எதிரான போர்ப் பிரகடனம்!
இன்று உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day, அக்டோபர் 20). எலும்புகளைப் பலவீனப்படுத்தி, முறிவை ஏற்படுத்தும் இந்த ‘மெளன
மீண்டும் நெதன்யாகு ; இஸ்ரேல் பிரதமர் வேட்பாளராக 2026 தேர்தலிலும் போட்டி
இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக். 18) இஸ்ரேலிய தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மேற்கண்ட தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலின் பிரதமர் பதவி 76 வயதை நெருங்கிவிட்ட நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராக கடந்த 1996 – 1999, 2009 – 2021, 2022 முதல் இன்றுவரை பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் பிரதமர் பதவி வகிக்கும் நெதன்யாகு பதவிக் […]
‘ஹேப்பி லைஃப் ஃபார்முலா இதுதான்’: 43 வயதில் ரூ. 6 கோடி சேமிப்புடன் ஓய்வு பெற்ற தீபன்!
“என்னைவிட அதிகம் சம்பாதித்தவர்கள் கூட இந்த வயதில் ஓய்வுபெறவில்லை” என்று பெருமிதத்துடன் சொல்லும் தீபனின் ‘FIRE’ பயணம், அனைவருக்கும் ஒரு
சென்னை டூ குன்னூர்… இந்த தீபாவளி மழையோ மழை- தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!
தமிழகத்தில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், எங்கெங்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குன்னூரில் மழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
நிமோனியாவுக்கு புதிய ஆண்டிபயாடிக் : ‘நஃபித்ரோமைசின்’–இந்தியா சாதனை~
இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே முழுமையாக உருவாக்கப்பட்ட ‘நஃபித்ரோமைசின்’ (Nafithromycin) என்ற புதிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தை (ஆன்டிபயாடிக்) மத்திய அறிவியல்
மகள் இனிப்பு வாங்கிவருமாறு அடம்பிடித்ததால் கடைக்குச் சென்ற தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்
இங்கிலாந்தில், தன் மகள் இனிப்பு வாங்கிவருமாறு அடம்பிடித்ததால் கடைக்குச் சென்றுள்ளார் ஒரு தந்தை. தற்செயலாக ஒரு லொட்டரிச்சீட்டையும் வாங்கினார் அவர். இன்று, அவர் ஒரு கோடீஸ்வரர்! மகளால் கோடீஸ்வரரான தந்தை இங்கிலாந்திலுள்ள Cumbria என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Valdet Bujupi (44). Bujupiயின் மகள் இனிப்பு வாங்கிவருமாறு மூன்று முறை வற்புறுத்தியதால் கடைக்குச் சென்ற அவர் ஒரு லொட்டரிச்சீட்டையும் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 524,043 பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. இலங்கை மதிப்பில் அது 21,35,91,751.73 ரூபாய் ஆகும். […]
ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியவர் அமெரிக்காவில் கைது!
இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸை வழிநடத்தியவர் என்று அமெரிக்காவில் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்பவர் கைது செய்யப்பட்டார். ஹமாஸ் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மஹ்மூத் அமீன் என்பவர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக அவரை அமெரிக்க விசாரணைக் குழு கைது செய்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலின்போது, அமெரிக்கர்கள் மீதான கொலை மற்றும் கடத்தலை விசாரிக்க அலெக்ஸாண்ட்ரியா எம். தோமன் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், 2023 அக்டோபர் 7 ஆம் தேதியில் இஸ்ரேல் […]
தங்கமே “தங்கம்” எப்போது விலை குறையும்
– ச.சேகர் தங்கம், தங்க ஆபரணங்கள் என்பது தமிழர்களின் பாரம்பரிய முதலீடுகளில் ஒன்றாக அமைந்திருப்பதுடன், தமிழர் திருமணங்களில் தாலியில் சேர்க்கும் மாங்கல்யம் அடங்கலாக, வளையல்கள், தோடுகள், மோதிரங்கள், கைச் சங்கிலிகள், கழுத்துச் சங்கிலிகள் என பல ஆபரணங்களில் தங்கம் பிரதான அங்கம். அதன் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் என்னவோ, நம்மவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களை செல்லமாக அழைக்கும் போது, “என் தங்கமே, என் செல்லமே” எனக் குறிப்பிடுவதுமுண்டு. அண்மையில் கூட அவ்வாறு அரசியலில் பிரவேசித்த ஒருவரால் அவருக்கு […]
டெல்லியில் காற்று மாசு.. தீபாவளி என்பதால் மேலும் மோசமடைய வாய்ப்பு!
டெல்லி என்.சி.ஆரில் காற்றின் மாசு தரக்குறியீடு 302 ஐ எட்டி உள்ளது. நாளை தீபாவளி பண்டிகை என்பதால், காற்றின் மாசு தரக்குறியீடு மேலும் மோசமடையும் என்று கூறப்படுகிறது.
தீபாவளிக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு.. அகவிலைப்படி 3% உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்துவதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
கரூர் : களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் - பண்டிகைக்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள்!
கரூரில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. மேஎலும் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து
ஆந்திரப் பிரதேசத்தில் தண்டவாளத்தில் பாறை உருண்டு விழுந்ததில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோத்தவலசா-கிரண்டுல் ரயில் பாதையின் தியாடா மற்றும் சிமிடிபள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பாறை ஞாயிற்றுக்கிழமை உருண்டு விழுந்தது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டதாக கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலை 4 மணியளவில் விசாகப்பட்டினம் செல்லும் சரக்கு ரயில் பச்சேலியில் இருந்து வந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் […]
இஷாரா செவ்வந்தி விசாரணையில் அம்பலமான மற்றொரு இரகசியம்
இஷாரா செவ்வந்தி தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். கமாண்டோ சலிந்த என்பவர் கமாண்டோ இராணுவ முகாம்களில் உள்ள வீரர்களை துப்பாக்கித்தாரிகளாக பயன்படுத்தியுள்ளமை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கமாண்டோ சலிந்த, கமாண்டோ இராணுவ முகாம்களில் பொருளாதார கஷ்டங்களில் வாழும் வீரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை வட்சப் குழுவொன்றின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி, துப்பாக்கிதாரிகளாக பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஒருவரே கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கித்தாரியாக […]
உலகில் அதிக தொழிலாளர்கள் கொண்ட நாடு இதுவா? வெளியான சுவாரசிய லிஸ்ட்... இந்தியா எந்த இடம்?
உலக அளவில் அதிக தொழிலாளர்கள் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா? . இதுகுறித்து விரிவாக காண்போம்.
ஆர்ஜே தீபக்கின் தொப்பி பட்டாசு, அனிதா சம்பத்தின் ஆடம்பர ஆட்டோ, தீபாவின் குவா குவா - தீபாவளி மெமரீஸ்!
பண்டிகைகளோட ஹைலைட்ஸ்ல ஒண்ணு, சந்தோஷ நினைவுகளை உருவாக்குறது. அப்படி, சில செலிப்ரிட்டீஸ்கிட்ட அவங்களோட ஹேப்பி தீபாவளி மெமரீஸ் கேட்டோம்... ஆர். ஜே தீபக் எனக்குப் பட்டாசு போட ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க வீட்ல ஒரு ரூல் இருக்கும். பட்டாசு பாக்ஸை தீபாவளி அன்னைக்குத்தான் பிரிக்கணும்னு சொல்லுவாங்க. ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தீபாவளிக்கு நாலு, அஞ்சு நாள் முன்னாடியே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிருவாங்க. நானும் அவங்களோட சேர்ந்து, அவங்களோட பட்டாசை வெடிப்பேன். RJ Deepak ஒரு தடவை, 'டேய் கவனிச்சீங்களா..? இவன் பட்டாசு கொண்டு வராம நம்ம பட்டாசையே காலி பண்றான்'னு ஒருத்தன் என்னை ஓசிப் பட்டாசு ஆக்கிப் பேசிட்டான். ’ஆமாடா...’னு சொல்லி, யாரும் எனக்குப் பட்டாசு தரல. அந்த அவமானத்தோட நேரா எங்க வீட்டுக்குப் போனேன். யாருக்கும் தெரியாம பட்டாசை ஒரு தொப்பிக்குள்ள வெச்சு, அதை தலையில மாட்டிக்கிட்டு வெளிய ஓடிட்டேன். ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்டித்தான் தொப்பி பட்டாசு வெடிச்சிட்டு இருந்தேன். ஒரு முறை போட்டி போட்டு வெடி வெடிச்சப்போ, என் ஃப்ரெண்ட் கையில பட்டாசு வெடிச்சுடுச்சு. எங்க வீட்டுல எனக்கு முதுகுல பட்டாசு போட்டுட்டாங்க. கொடுமை என்னனா... இதை மெமரீஸ்னு மட்டும் சொல்லிட முடியாது. இப்பவும் எங்கம்மா, பட்டாசை பதுக்கித்தான் வெச்சிருக்காங்க!” நான் வளர்ந்துட்டேனே மம்மி! அனிதா சம்பத் மீடியாவுக்கு வந்த பிறகு தினம் தினம்கூட புது டிரெஸ் போட வாய்ப்புக் கிடைச்சது. ஆனா, சின்ன வயசுல எல்லாம் தீபாவளிக்குத்தான் புது டிரெஸ். அது எடுக்கணும், இது எடுக்கணும்னு முன்னாடியே டிசைன், கலர் எல்லாம் யோசிச்சு வெச்சுக்குவேன். தீபாவளி நெருக்கத்துலதான் கடைக்குப் போவோம். அவ்ளோ கூட்டத்துல, எனக்குப் பிடிச்ச ஒரு டிரெஸ்ஸை எடுத்துப் பில் போடுறது ரொம்ப ஹேப்பியா இருக்கும். தீபாவளி ஷாப்பிங் முடிச்சுத் திரும்பி வரும்போது, ஆட்டோல கூட்டிட்டு வருவாங்க. Anitha sambath 20 வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் ஆட்டோல போறது எங்களுக்கு ரொம்ப ஆடம்பரமான விஷயமா இருந்தது. வருஷத்துக்கு ஒரு முறைதான் ஆட்டோ பயணம் கிடைக்கும், ஜாலியா இருக்கும். எடுத்துட்டு வந்த டிரெஸ்ஸை சித்தி, பெரியம்மானு எல்லார்கிட்டயும் ஆசையா காட்டுவேன். இப்போ எத்தனையோ புது டிரெஸ் போட்டாலும், கார்ல, ஃப்ளைட்லனு போனாலும் சின்ன வயசு தீபாவளி ஷாப்பிங் ஸ்பெஷல்தான்!’’ நினைவோ பல பறவைகள்! அனிதா சந்தோக் தீபாவளிக்கு புது டிரெஸ் மட்டுமில்லாம ஹேண்ட்பேக், அக்சஸரீஸ்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து வாங்குவேன். எழுந்ததும் குளிட்டுச்சு, டிவி பார்க்க உட்கார்ந்துருவேன். கே.டிவி, சன் டிவி-யில மாத்தி மாத்திப் படம் பார்ப்பேன். இன்னைக்கு எஃப்.டி.எஃப்.எஸ் தியேட்டர்ல போய்ப் பார்த்தாலும், அப்போ சேனல்ஸ்ல ’தீபாவளி சிறப்புத் திரைப்படம்’னு என்ன படம் போட்டாலும் மாய்ஞ்சு மாய்ஞ்சு பார்க்குற சுகம் தனி. எங்க அம்மா ஒவ்வொரு தீபாவளிக்கும் 'ஆலு பூரி' பண்ணுவாங்க. அது தீபாவளியை இன்னும் ஸ்பெஷல் ஆக்கும்!” ரெட்ரோ ரெட்ரோ... டிஸ்கோ டிஸ்கோ! வி.ஜே தீபிகா ஃப்ளாஷ்பேக் போட்டு அப்படியே 1996-ல போய் லேண்ட் ஆனோம்னா... அந்த வருஷ தீபாவளிக்குத்தான் நான் பிறந்தேன். அப்போ, எங்கப்பா வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு இருந்தார். அதனால எங்கம்மா நான் பிறந்ததும், ‘பொண்ணு பிறந்திருக்கு’னு அவருக்கு லெட்டர் எழுதியிருக்காங்க. 'தீபாவளி அன்னைக்கு பொறந்ததால நம்ம பிள்ளைக்குத் தீபிகானு பேர் வை’னு எங்க அப்பா பதில் லெட்டர் போட்ருக்காரு. vj deepika இதுதான் நான் ’தீபிகா’வான வரலாறு. அதனால, தீபாவளி மெமரீஸ் என் பேருலேயே இருக்கு. வேலைக்காகச் சென்னைக்கு வந்த பிறகு, பிறந்தநாளுக்கு ஊருக்குப் போறது குறைஞ்சு போச்சு. ஆனா, தீபாவளிக்குக் கண்டிப்பா ஊருக்குப் போயிடுவேன். ரெண்டும் முன்னப் பின்னதான் வரும்ங்கிறதால... பிறந்தநாள் கேக்கை தீபாவளி அன்னிக்கு வெட்டிக்குவேன்! டபுள் டிலைட்!
ஆப்கனில் பாகிஸ்தான் மீண்டும் வான்வழித் தாக்குதல்! இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றம்!
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளிடையே இரண்டு நாள்களாக போா் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், போா் விமானங்கள் மூலம் இந்தப் புதிய தாக்குதலை பாகிஸ்தான் நிகழ்த்தியது. ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியதற்குப் பதிலடியாக இத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதல் காரணமாக, இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றமான சூழல் […]
வெளிநாட்டவர்களால் இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடத்திலேயே மலேரியா நோய் அடையாளம் காணப்படுவதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 071 284 1767 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதன் மூலம் மலேரியா தொடர்பான தகவல்களைப் பெற […]
இஸ்லாமிய நாடுகளில் தீபாவளிக்கு பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான தகவல்
இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்
வடகிழக்கு பருவமழை.. மின்தடையா? இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகள் குறித்து மின்சாதன சேமிப்பு கிடங்கில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் மின் வாரியத் தலைவர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர்.
நினைவழியா நிமல் 25 கனடாவிலும்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட 39 தமிழ் ஊடகவியலாளர்களிற்கும் நீதி கோரி நிமலராஜனின் மகள்மார் மற்றும் மாமனிதர் தராகி சிவராமின் மகள்மார் இணைந்து விசாரணை அறிக்கைகளை கனடாவில் வெளியிட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கனடாவிலும் யாழ்.ஊடக அமையத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர். தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். கனடாவில் நடைபெற்ற நினைவேந்தலில் நிமலரா ஜனை ஊடகத்துறை க்கு அறிமுகம் செய்த மூத்த ஊடக ஆசிரியர் திருச்செல்வம்,நிமலராஜனோடு நெருங்கிப்பழகிய மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர் வாசகன் இரட்ணதுரை ,சமகாலத்தில் பணியாற்றிய முன்னாள் வீரகேசரி மூத்த ஆசிரியர் வீ.தேவராஜ் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் உதயன் எஸ்.பிள்ளை,நிமலராஜனின் சகோதரி செல்வராணி நிரஞ்சன் ஆகியோர் நேரடி உரைகளை ஆற்றியிருந்தனர். அதேவேளை நிமலராஜனது நண்பரும் ஊடகவியலாளரும், யாழ்.ஊடக அமைய நிறுவகருமான இரத்தினம் தயாபரன் ,நிமலராஜனுடன் நெருங்கிப் பணியாற்றிய முன்னாள் பிபிசி சந்தேசிய மூத்த தயாரிப்பாளர் சந்தன கீர்த்தி பண்டார மற்றும் முன்னாள் பிபிசி சர்வதேச நிருபரும் தற்போது மனித உரிமைச்செயற்பாட்டாளருமான பிரான்சிஸ் ஹரிசன் உள்ளிட்டோர் காணொளி வழியேயும் உரைகளை ஆற்றியிருந்தனர். நிகழ்வில், இலங்கைத்தீவில் மறுக்கப்பட்ட உள்ளக நீதி பற்றியும், கொலையா ளிகளைப்பாதுகாத்த அரசு தொடர்பாகவும், சர்வதேச நீதியின் முக்கியத்துவம் குறித்தும், நிமலராஜனின் கொலையைத் தொடர்ந்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கியதுமாக, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் - இலங்கை என்ற அமைப்பு வெளியிட்டுள்ள நூல் வடிவிலான அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. கனடா நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட 39தமிழ் ஊடகவியலாளர்களிற்கும் நீதி கோரி நிமலராஜனின் மகள்மார் மற்றும் மாமனிதர் தராகி சிவராமின் மகள்மார் இணைந்து விசாரணை அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய , ஜபிசி வானொலி சூரியன் உள்ளிட்ட பல ஊடகங்களில்; பணியாற்றி இருந்தார். அந்நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுததாரிகள், அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் , இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேனி: வரலாறு காணாத கனமழை... வெள்ளக்காடான பகுதிகள்! | Photo Album
வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்நிலையில், நாளை தீபாவளி பண்டிகை கொண்டப்பட உள்ள நிலையில் நாளைய மழை நிலவரம் குறித்த தகவலை டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சங்குப்பிட்டி கொலை : போராடத்தடை
சங்குப்பிட்டி பாலத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ் காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான, சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ண் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உறவினர்களும் பிரதேச மக்களும் கணடன போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்திருந்தனர். கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்டனப் பேரணி நடைபெற்றால், அது விசாரணைக்கு இடையூறாக அமையும் என்றும், தேவையற்ற பிரச்சினைகள் எழும் எனவும் காரணம் கூறி, போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில்.. நீதிமன்றத்தில் தடையாணை வாங்க முயற்சி.. செந்தில் பாலாஜி கூறும் தகவல்!
12.14 ஏக்கர் பரப்பளவில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கரூர் புதிய பேருந்து நிலையத்தில் 5 புதிய தாழ்தள நகர பேருந்துகளை, மக்கள் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
தீபாவளியை முன்னிட்டு பெங்களூரு- ஜோலார்பேட்டை இடையே மெமு ரயில்கள்! கூட்டநெரிசல் தடுக்க ஏற்பாடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டநெரிசல் தவிர்க்க பெங்களூரு ஜோலார்பேட்டை இடையே மெமு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் , அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர் , தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார். அந்நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் , இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.