“ஊரோரம் புளியமரம்”பாடல் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்!
சென்னை :விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமிய வாழ்வின் உணர்வுகளை தனது குரலால் உயிர்ப்பித்த லட்சுமி அம்மாள், தமிழ் இசை உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். 2007-ஆம் ஆண்டு வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ உள்ளிட்ட கிராமிய பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர் லட்சுமி அம்மாள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் […]
692 கோடி ரூபாய் செலவில் புத்துயிர் பெறும் கோவை ரயில் நிலையம்!
692 கோடி ரூபாய் செலவில் புத்துயிர் பெறும் கோவை ரயில் நிலையம். முக்கிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்ப பக்தர்களே..மகர விளக்கு பூஜைகள் தொடக்கம்!
கேரளா : சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜனவரி 14, 2026) அதிகாலை 3 மணி அளவில் மகரஜோதி தரிசனத்துக்கான மகரவிளக்கு பூஜைகள் தொடங்கின. சன்னிதானத்தில் ஆழி பற்ற வைக்கப்பட்டது மகரவிளக்கு பூஜையின் முக்கிய அங்கமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மாலை வரை தரிசனம் தொடரும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளனர். பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட […]
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றவந்த சிறைக்கைதி மீது வைத்திய சாலைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு
களுத்துறை - நாகொடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி மீது இன்றைய தினம் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த கைதிக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Thought Blurb Communications, an independent advertising and design agency based in Mumbai, was founded in 2007 by Vinod and Razia Kunj. The agency provides a comprehensive approach to brand strategy, identity design, packaging, marketing, and advertising, focusing on design and digitalization.As the marketing and advertising landscape continues to evolve at breakneck speed, Thought Blurb Communications reflects on a year of meaningful progress while laying out a clear-eyed vision for the future. From expanding into purpose-led communication and crafting culturally rooted regional storytelling for legacy brands, to embracing AI-driven intelligence and redefining how brands connect with audiences across platforms, the agency’s leadership shares its perspective on 2025 learnings, 2026 ambitions, and the shifts reshaping creativity, media, and impact in a rapidly changing digital-first world. Medianews4u.com caught up with Vinod Kunj, Founder & CCO, Thought Blurb Communications 1. How would you describe the progress that Thought Blurb Communications made in 2025? Thought Blurb has made a few significant leaps in 2025. One remarkable point of note is Keystone Foundation, a key organization involved in the health, welfare and economic advancement of indigenous communities in India. Their work is concentrated in the Nilgiris, but have expanded to other parts of the country. This is Thought Blurb's thrust into social marketing in ecological and environmental communication.Over this year, we have created a number of regional and local language based films for Parle-G that mainly center around local festivals. With a legacy brand as deeply rooted as Parle-G, it is necessary to speak to the customer in their own language and in their own community's idiom. Thought Blurb has internalised this strategy and created various digital films that went viral in spectacular fashion. 2. In 2026 what goals have been set and what is the game plan to get there? Technical innovation cannot be side-stepped. What data-linked targeting has done for advertising in the past is just a beginning. The next step in intelligence. And by this, we mean both human and artificial. Thought Blurb is readying itself for this new evolution. We have set down a roadmap to achieve excellence in this regard. 3. What key trends do you think we will see in 2026 in the marketing and advertising world? There is a sea change coming. AI will change the face of creativity as well as strategy going forward. Data assimilation and analysis will be in overdrive. There are already systems falling in place for this. Of course, there will be trial and error for a while, but standard operating procedures (SOP) will gradually change. 4. Will campaigns have to drive business results in 2026? Will vanity metrics become unimportant? Advertising is always going to be a prime driver of business. But the age of virality may be coming into maturity. It is no longer a game of opportunity to see (OTS). It is impact per opportunity (IPO) that will become key. Metrics will take on a whole new meaning. Numbers eventually mean nothing if it doesn't drive business. 5. How will Thought Blurb Communications leverage hybrid ad formats to reach consumers wherever they are? The old adage holds. Communication will always follow strategy. The individual formats don't matter. Today, in the digital space, formats tend to overlap. A social media post is not disconnected from proximity advertising on mobile phones. Experiential marketing, content and influencer marketing will all be layered over conventional advertising to promote brands and products. These will all come from the single fount of intelligence-based strategy. 6. Has digital made the concept of primetime irrelevant for advertisers? Or has it redefined the concept of primetime? This has been happening for a long time. Direct-to-home broadcast has changed the face of that, along with digital video recording (DVR). Customers are already used to watching their programs at their pleasure, when they want. They can watch a program. re-watch it, play, pause or rewind at will. There is no concept of primetime is an anachronistic concept in this day and age. And that is not a bad thing. It throws up more opportunities than issues. This means that advertisers can target more meaningfully without resorting to peak-time traffic dynamics.OTT has muddled the waters further. Now it is a matter of placing advertising in the content that our audience watches, rather than the time-slot at which they watch. This is the next evolution of media targeting. It is no longer about prime-time. It's prime-content. 7. How will AI enable Thought Blurb Communications to ensure that the message lands in an era where attention spans are rapidly declining? I wouldn't say attention-span is a myth, but it may have been overstated. While our audience is no longer willing to passively absorb content, they are also willing to binge- watch a complete TV series for hours on end. Advertising will do well to learn a trick here. The customer will always prioritise content and entertainment over advertising messaging. Advertising has to morph into the content that they want rather than a one-directional message.AI can do a lot more than landing the message in the right spot. It can analyse in granular detail the reach, demographic work-up, and the cultural context, global and ambient flavour of content. It helps us mirror the space the content viewer's mind inhabits. Which is invaluable for advertising creatives. 8. Different ad formats and platforms serve different need states. How challenging is it for Thought Blurb communications and for the industry to understand the various formats like memes and platforms like Reels and how they are evolving? Unlike conventional advertising with its shape, geography and time limitations, digital can be extremely flexible. The audience can be served as they receive. The viewer can be at a desk, on the road, on a variety of devices from a small handheld smartphone to a wall-sized CTV. Like websites, advertising can be made responsive to sizing and projection opportunities.The important thing is, the message goes to the consumer at their choosing, not the other way around. Permission marketing is still at the base of this. We can knock on the door, but the customer has to let us in.New ad formats keep coming along. But as technology advances, the execution becomes less complex than the last one. That is the good news. For Thought Blurb, the challenge is to push the technology to its limits and wring every drop of advantage out of it. 9. For brands who are savvy when they do a campaign does each platform serve as a chapter in the larger brand narrative? It is always about the brand narrative. In the conventional advertising past, it was extremely expensive to maintain a constant brand presence. Here, however behavioral tracking and retargeting can maintain a steady pace of messaging at a level that is as subtle or as strident as required. 10. People might see an ad on social media before seeing it on traditional media like TV, print. Is this completely disrupting brand storytelling by making it non-linear? This begs the question, would the first piece of communication in any medium or format begin the process of wearying you out? This is the creative challenge. An advertiser could either intrigue the consumer or confuse him. However small the format, it has to keep the customer interested.Look at the other side of the conundrum. If the consumer sees an ad on social media, it makes sense to link it to a YouTube video, a website for more information, a WhatsApp link to the brand for an AI chatbot, demonstration videos, substacks, or whatever the brand requires. To reach the digital-native consumer, circumventing broadcast and print media may just be the astute choice. 11. WhatsApp has in the recent past introduced new tools for businesses. Has the role of this platform grown a lot as a result in the digital media mix? WhatsApp has grown far beyond its role as a receptacle of OTPs and notifications. It is a very capable platform for product catalogues, e-com, customer service, AI-backed query systems and so on. Being part of the Meta landscape also allows it to link up with Facebook, Instagram and their subsidiary platforms.With its Business Suite, WhatsApp could very well become a consequential player in the digital mix. 12. Since they are different from millennials are Gen Z and Gen Alpha forcing brands like Parle G to rethink marketing and communication? Parle-G is a visionary brand with deep roots in the Indian firmament. However, they realize that every new customer has to be befriended. Any brand can endure as long as it re-invents itself for the next generation. It should be easier for all legacy brands to do this.Going back to my point. The medium carries the message and the message alone. The message comes from the brand and the marketing strategy behind it. Technologies can change, platforms may come and go, but the basic human traits that the brand embodies remain unchanged. 13. Could you talk about work that Thought Blurb Communications has done with legacy brands to reinvent themselves using digital as a tool like Parle-G? Parle-G is the best example of Thought Blurb's work with legacy brands. But it is a testbed and a schoolroom for us to learn from and expand our understanding of digital propagation of branding. 14. In a changing landscape TV ad revenue struggled badly in 2025. Is this platform still going to be very important for categories like FMCG, BFSI in 2026? I wouldn't write off TV yet. But then, as you see, TV has itself changed. Appointment-watching is long dead. Linear timelines are a thing of the past. As stated, there is no primetime any more. CTV may be the latest iteration of the format, with OTT interwoven into it. DTH penetration had reached a peak in 2015, but has steadily lost ground to CTV/OTT.Traditional TV ad revenue may struggle for a bit. But it is simply a matter of porting the business model into subscriptions, pay-for-play, and targeted advertising. As far as sectors are concerned, media managers may just have to re-think their calculus.
நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்குஅனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் அமர்வு நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ப. மயூரன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது யாழ்ப்பாணத்தின் நுளைவு வாசலாக இருக்கின்ற செம்மணி வளைவு பகுதியில் எமது சமய காலசாரங்களை பிரதிபலிக்கின்ற நல்லூரான் செம்மணி வளைவு, சிவலிங்கம் மற்றும் கோவில்கள் ஆகியன காணப்படுவதன் அடிப்படையில் அச் சூழலில் அசைவ உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் போன்ற அச்சூழலுக்கு பொருத்தமில்லாத வியாபார நிலையங்களினை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் அமைப்பற்குரிய அனுமதியினை நல்லூர் பிரதேச சபை வழங்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Gold Rate: இன்றும் குறைந்த தங்கம்; மாறாத வெள்ளி; இன்றைய தங்கம் விலை என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 வும், பவுனுக்கு ரூ.400 வும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,550 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,00,400 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.258 -க்கு விற்பனை ஆகி வருகிறது. உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!
சைவா சாதனையாளர் விருது: பெண் தொழிலதிபர் மீனலோஷினி ராஜா தேர்வு!
திருச்சியைச் சேர்ந்தவர் மீனலோஷினி ராஜா. இவர் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜோராமி சன் பைபர் ஷீட் ஏஜென்சிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் அந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. இதற்கிடையே தென்னிந்திய மகளிர் சாதனையாளர்களுக்கு சைவா விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. பெண் தொழிலதிபர் மீனலோஷினி ராஜா தொழில் முறையிலான ஆர்வம், கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்துறை விநியோகத்தில் உயர் தரமான எண்ணங்களை நிர்ணயித்து, அதன் மூலம் தரமான தீர்வுகளை வழங்கி, தான் சார்ந்த நிறுவனத்தையும், பிறரையும் ஊக்கப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் தென்னிந்திய அளவில் 2025-ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட பெண் தொழிலதிபராக சைவா சாதனையாளர் விருதினைப் பெற திருச்சி மீனலோஷினி ராஜா போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனலோஷினி ராஜாவுக்கு சைவா சாதனையாளர் விருது பெற தேர்வு செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
Arohan Financial Services names Arvind Murarka as Chief Information Officer
Mumbai: Arohan Financial Services Limited, a NBFC–Microfinance Institution (NBFC-MFI), has announced the re-joining of Arvind Murarka as its Chief Information Officer (CIO). In his new role, Murarka will head the organisation’s IT function and lead its technology and digital transformation agenda.Murarka brings over 25 years of leadership experience in enterprise-scale digital transformation, technology modernisation, and enabling business growth across financial services and allied industries. A seasoned CXO-level technology leader, he is recognised for aligning IT strategy with business objectives while ensuring strong governance, regulatory compliance, and operational excellence.During his earlier tenure at Arohan Financial Services Limited, Murarka played a key role in driving the company’s end-to-end digital transformation initiatives. His contributions included the establishment of IT governance frameworks aligned with RBI standards, implementation of core technology systems, strengthening of cybersecurity and risk management frameworks, and the rollout of automation initiatives that delivered significant efficiency gains and cost optimisation.Prior to re-joining Arohan, Murarka served as Chief Information Officer at Spandana Sphoorty Financial Limited, where he led enterprise-wide IT transformation for the listed microfinance NBFC.Welcoming him back, Arohan’s leadership expressed confidence that Murarka’s deep institutional knowledge, strategic vision, and proven execution capabilities will further strengthen the company’s technology foundation and support its long-term growth and digital innovation objectives.
தாய் மொழிக்கு பதிலாக ஹிந்தி பேசிய 6 வயது மகள் –ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த தாய்
6 வயது மகள் ஹிந்தி பேசியதால் ஆத்திரமடைந்த தாய் மூச்சுத்திணறடித்து குழந்தையை கொலை செய்துள்ளார். மாரடைப்பு என கூறிய தாய் மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையை சேர்ந்த சுப்ரியா மஹாமுன்கர் என்ற பட்டதாரி பெண்ணுக்கும், பிரமோத் என்ற ஐடி பொறியாளருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு, 6 வயதில் ஒரு மகள்உள்ளது. இந்த குடும்பம், கலம்போலியின் செக்டார்-1 இல் உள்ள குருசங்கல்ப் வீட்டுவசதி சங்கத்தில் வசித்து வருகிறது. கடந்த டிசம்பர் 23 […]
பேரிடர் நிவாரணமாக 142,930 டொலர்களை வழங்குகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி
சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகஒரு மில்லியன்ரென்மின்பி (RMB)யை நிவாரண உதவியை சீன கம்யூனிஸ்ட் கட்சி வழங்கவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது. இந்த உதவியைசீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச பிரிவு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண உதவியின் அமெரிக்க டொலர் மதிப்பு சுமார் 142,930 டொலர்கள் ஆகும்.
நாகர்கோவிலில் ₹63 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம்!
நாகர்கோவிலில் ₹63 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தெரிவித்து உள்ளார்.
டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும், யாழ் . மாநகர சபா உறுப்பினருமான சுவீகரன் நிசாந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதாள குழுக்களின் கைகளில் சென்றது தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது கைது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட கைதாக இருந்தாலும் இலங்கை பொலிஸார் இராணுவத்தை காட்டிக்கொடுத்த சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில இடம் பெற்ற இராணுவத்தின் போர் குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை தமிழர் தரப்பு எதிர்பார்த்து இருக்கின்ற வேளையில் முன்னாள் அமைச்சரின் வாக்குமூலங்கள் இராணுவ குற்றங்களுக்கு ஆதாரமாக கொள்ளலாம். கைது செய்யப்பட்ட அமைச்சருக்கு உத்தியோபூர்வமாக பாதுகாப்பு அமைச்சு ஆயுதம் வழங்கியது இதன் மூலம் அம்பலமாக உள்ள நிலையில் குறித்த ஆயுதங்கள் யாருடைய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும். அதேபோல் ஒரு கட்சியினுடைய தலைவருக்கு அதிகளவிலான ஆயுதங்களை வழங்கிய கடந்த கால பாதுகாப்பு அமைச்சர்கள் ,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள், மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பிலும் இலங்கையில் விசாரணை மேற்கொள்வது மட்டுமல்லாது சர்வதேச நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை சாதாரண ஒரு விடயமாக நோக்காமல் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதியாக கையாள வேண்டுமென மேலும் தெரிவித்தார்
சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் டக்ளஸ்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈபிடிபி செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அளித்த பரிந்துரையை அடுத்து அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரால் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, பாதாள உலக குழுவிடம் இருந்து கைப்பற்றப்பட்டதை அடுத்து, டக்ளஸ் தேவானந்தாடிசம்பர் 26 ஆம் திகதி குற்றப்
‘கம்பீரின் அதிகாரத்தை’.. குறைத்த பிசிசிஐ: இனி இந்த விஷயங்களில் தலையிட முடியாது: தரமான ஆப்பு!
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அதிகாரங்களை பிசிசிஐ குறைத்துள்ளது. இனி அவர், எந்தெந்த விஷயங்களில் தலையிட முடியாது என்பது குறித்தும் அவரிடம் பிசிசிஐ தெளிவாக தெரிவித்துவிட்டதாம்.
செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம்: 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்த பலன் தரும் அபூர்வ தலம்!
நம் தேசத்தில் கலியுகத்திலும் அற்புதங்கள் நிகழும் அநேக தலங்கள் உள்ளன. அப்படி ஒரு தலம்தான் திருக்கழுக்குன்றம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நன்னீர்க்குளம் ஒன்றில் சங்கு தோன்றும் அதிசயம் நிகழும் தலம் அது. வாருங்கள் அந்த அற்புதத் தலத்தின் தலபுராணத்தையும் அங்கு அருளின் ஈசனின் மகிமைகளையும் அறிந்துகொள்வோம். செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். நான்கு யுகங்களாகத் தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் இந்தத் தலத்தை சைவக் குரவர்கள் நால்வரும் பாடியிருக்கிறார்கள். திருக்கழுகுன்றம் முன்னொரு காலத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் தங்களுக்குள், ஈசனை அடைய உலக உயிர்களுக்கு அதிகம் உதவுவது 'யார் பெரியவர்' விவாதம் செய்யத் தொடங்கின. ஈசனோ அடிமுடி காணமுடியாத பெரியோன். அவன் அருள் இல்லாமல் யார் அவன் குறித்த ரகசியங்களை உணரமுடியும்... வேதங்கள் நான்கும் ஈசனை நோக்கித் தவம் செய்தன. இத்தலத்தில் ஈசன் கோயில்கொண்டு இருப்பதை அறிந்து தேடிவந்து வணங்கின. வேதமூர்த்தியான ஈசனும் மனம் மகிழ்ந்து அவற்றின் ஐயத்தைத் தீர்த்து தரிசனமும் தந்து அருளினார். மெய்ப்பொருளான சிவபெருமானைத் தரிசித்ததன் மூலம் தங்கள் ஐயம் நீங்க பெற்ற வேதங்கள் இத்தலத்திலேயே மலையாக நிலைபெற்று அருளின. அவற்றின் மீது ஈசனும் வேத கிரீஸ்வரராக எழுந்தருளினார். இன்றும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் அதர்வண வேதப் பாறையில் ஈசன் வீற்றிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்: பொன்னும் பொருளும் பதவியும் அருளும் தாயார் சந்நிதி! இத்தலத்திற்கு வேதகிரி, பட்சி தீர்த்தம், ருத்ரகோடி, கழுகாசலம், கதலிவனம், சங்குபுரம் எனப் பல பெயர்கள் உண்டு. கல்வெட்டுகளின்படி இது 'உலகளந்த சோழபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. திருக்கயிலையிலிருந்து நந்திதேவரால் கொண்டு வரப்பட்ட மூன்று சிகரங்களில் ஒன்று இங்குள்ளதால், இது 'தென் கயிலாயம்' என்றும் போற்றப்படுகிறது. இத்தலம் யுகங்களாக கழுகுகளால் வழிபடப்பட்ட தலம். எனவேதான் திருக்கழுக்குன்றம் என்ற பெயரையும் பெற்றது. கிருத யுகத்தில் சண்டன், பிரசண்டன்; திரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு; துவாபர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன்; கலியுகத்தில் சம்பு, ஆதி ஆகிய கழுகுகள் வந்து ஈசனை தினமும் வழிபட்டன என்கிறது தலபுராணம். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட தினமும் உச்சிப் பொழுதில் கழுகுகள் இந்த ஆலயத்துக்கு வருவது வழக்கமாக இருந்தது. இன்றும் அபூர்வமாக கழுகுகள் வந்து செல்வதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். திருக்கழுகுன்றம் சுமார் 500 அடி உயர மலையில் ஈசன் வாழைப் பூங்குருத்து வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். அம்பிகை 'சொக்கநாயகி' மற்றும் 'பெண்ணின் நல்லாளம்மை' என அழைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் உள்ள பெரிய கோயிலில் ஈசன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள அம்பிகை திரிபுரசுந்தரி. இவரின் திருமேனி அபூர்வ மானது. எனவே வருடத்தில் மூன்று நாள்கள் தவிர மற்ற நாள்களில் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. அதேபோன்று மலையிலிருந்து இறங்கும் வழியில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டிய அழகிய குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது. அதில் சிவலிங்கத் திருமேனி ஒன்றையும் தரிசனம் செய்யலாம். கடலூர் வளையன்மாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோயில்: காதல், திருமணமாக முடிய அருளும் தலம்! இங்குள்ள 12 தீர்த்தங்களில் சங்கு தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்க்கண்டேய ரிஷிக்காக ஈசன் சங்கைத் தோற்றுவித்த தலம் இது. இன்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பது உலகப் புகழ்பெற்ற அதிசயம். குரு பகவான் கன்னி ராசியில் பிரவேசிக்கும்போது இங்கு 'சங்கு புஷ்கர மகாமேளா' சிறப்பாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையைப் போன்றே இங்கும் கிரிவலம் வரும் வழக்கம் உள்ளது. இத்தலத்துக்குத் தொடர்ந்து 12 பௌர்ணமிகள் வந்து கிரிவலம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் அமைந்துள்ள மூன்று சிவமூர்த்தங்களையும் தரிசிப்பது, 12 ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்த புண்ணியத்தைத் தரும் என்பதால் இத்தலம் பெரும் பழைமையும் மகிமையும் உடையதாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்திரன் மின்னல் வடிவில் ஈசனைப் பூஜிப்பதாகவும் ஐதிகம். திருக்கழுகுன்றம் இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடி, மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வணங்குவோருக்குத் தீராத நோய்கள் நீங்கி, ஜன்ம வினைகள் யாவும் அகலும் என்பது தலபுராணம் சொல்லும் செய்தி. வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை திருக்கழுக்குன்றம் வந்து வேதகிரீஸ்வரரையும் பக்தவத்சலேஸ்வரரையும் தரிசனம் செய்து பல்வேறு நற்பலன்களையும் அடையுங்கள். இந்த கோயிலில் பிரார்த்தனை காசு வாங்கி வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும்! படிக்காசுநாதர் பரிகாரம்!
அமெரிக்காவின் தாக்குதலில் வெனிசுவேலா துறைமுகம் தகர்ப்பு –அதிபர் டிரம்ப் தகவல்!
வெனிசுவேலா நாட்டில், போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த துறைமுகப் பகுதியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி தகர்த்ததாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் கலாசாரத்திற்கு, வெனிசுவேலாதான் காரணம் எனக் கூறி அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது. வெனிசுவேலாவைச் சேர்ந்த டிரென் டே அராகுவா எனும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்திய மிகப் பெரிய துறைமுகப் பகுதியை, கடந்த […]
Cinema Roundup 2025: இந்தாண்டு கவனம் பெற்ற வெப் சீரிஸ்கள் என்னென்ன? | எங்கு பார்க்கலாம்?
2025-ம் ஆண்டு முடிவை எட்டிவிட்டது. இந்த ஆண்டு வெளியாகி பெரிதளவில் பேசப்பட்ட, பலராலும் பின்ச் வாட்ச் செய்யப்பட்ட வெப் சீரிஸ்களை இங்கு பார்ப்போமா... கோலிவுட்: * குற்றம் புரிந்தவன் (Kuttram Purindhavan) இயக்குநர் செல்வமணி முனியப்பன் இயக்கத்தில் பசுபதி, விதார்த் ஆகியோரின் நடிப்பில் சோனி லிவ் தளத்தில் வெளியான இந்த சீரிஸ் இந்த ஆண்டு தமிழ் ரசிகர்களை பெரிதளவில் கவனம் ஈர்த்தது. * சுழல் 2 (Suzhal – The Vortex) முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு, இரண்டாம் சீசன் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த சீரிஸ் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. KUTTRAM PURINDHAVAN - Web Series * ஹார்ட் பீட் (Heart Beat): மருத்துவமனை வாழ்க்கையை மையமாகக் கொண்டு, காதல், நட்பு, பணிச்சூழல் சிக்கல்களை எளிமையாகச் சொன்ன 100 எபிசோடுகளைக் கொண்ட தொடர் இந்த 'ஹார்ட் பீட்'. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸை இணையவாசிகள் கொண்டாடித் தீர்த்தனர். பாலிவுட்: * The Ba***ds of Bollywood நடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான் இயக்கத்தில் எக்கச்சக்க பாலிவுட் நட்சத்திரங்களின் கேமியோவில் உருவான இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. * பாதாள் லோக் – சீசன் 2 (Paatal Lok – Season 2) முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. இயக்குநர் சுதீப் சர்மா இயக்கத்தில் வெளியான பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. * டெல்லி கிரைம் – சீசன் 3 (Delhi Crime – Season 3) முதல் இரண்டு சீசன்களின் வெற்றியை அடுத்து டெல்லி கிரைம் சீரிஸின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. ஷெஃபாலி ஷா, ஹூமா குரேஷி ஆகியோர் நடிப்பில் உருவான இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. PANCHAYAT - Web Series * பஞ்சாயத் – சீசன் 4 (Panchayat – Season 4) 'பஞ்சாயத்' வெப் சீரிஸின் முதல் மூன்று சீசன்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நான்காவது சீசன் இந்த ஆண்டு பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. * தி ஃபேமிலி மேன் – சீசன் 3 (The Family Man – Season 3) இயக்குநர்கள் ராஜ் & டிகே கூட்டணியில் வெளிவந்த 'ஃபேமிலி மேன்' வெப் சீரிஸின் முந்தைய சீசன்களுக்கு ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அந்த சீரிஸின் மூன்றாவது சீசன் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. ஹாலிவுட்: ஹாலிவுட்டைப் பொறுத்தமட்டில் இந்தாண்டு நெட்பிளிக்ஸ் சீரிஸ்களே பார்வையாளர்களின் லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. அடலசென்ஸ் வெப் சீரிஸ் இந்தாண்டு பெரியவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ, ஸ்க்விட் கேம், வெட்னெஸ்டே ஆகிய வெப் சீரிஸ்களின் அடுத்த சீசன்கள் இந்தாண்டு வெளியாகி பார்வையாளர்களால் பின்ச் வாட்ச் செய்யப்பட்டது. STRANGER THINGS SEASON 5 - Web Series அடலசென்ஸ் (Adolescence) - நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் – பருவம் 5 (Stranger Things – Season 5) - நெட்பிளிக்ஸ் ஸ்க்விட் கேம் – பருவம் 3 (Squid Game – Season 3) - நெட்பிளிக்ஸ் வென்ஸ்டே (Wednesday) - நெட்பிளிக்ஸ்
Serial Rewind 2025: தீராத ரங்கராஜ் - ஜாய் பஞ்சாயத்து; கைமாறிய பிக்பாஸ் வீடு!
சமையலை ஓவர்டேக் செய்த பர்சனல்! மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் எவ்வளவு பேசப்படுமோ அதை விட அதிகமாக இந்தாண்டு பேசுபொருளானது, அவரது பர்சனல் விவகாரம். ரங்கராஜிடம் ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் ஜாய் கிறிசில்டா. இவர் திடீரென ஒரு நாள் ரங்கராஜுடன் மணக்கோலத்திலிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்குத் திருமணமாகிவிட்டதாக அறிவித்தார். அத்துடன் ரங்கராஜின் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாகவும் குறிப்பிட்டார். ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை மணம் முடித்து இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இந்தத் தகவல் மீடியாக்களின் பரபரப்புச் செய்தி ஆனது. மாதம்பட்டி ரங்கராஜ் இவரது இந்த அறிவிப்புக்கு அடுத்த சில தினங்களில் ரங்கராஜ் ஜாய் உடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ள விவகாரம் பரஸ்பர அறிக்கைகள், போலீஸ் புகார், மகளிர் ஆணையத் தலையீடு என விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. மகளிர் ஆணையம் ரங்கராஜ் மீது தவறு இருப்பதாகக் கூறியது. தொடர்ந்து சில மாதங்களில் குழந்தையைப் பெற்றெடுத்த ஜாய், ரங்கராஜை டி.என்.ஏ. டெஸ்டுக்கு அழைத்தார். தற்போது விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. Rewind 2025: கண்ணகி நகர் கார்த்திகா டு திவ்யா தேஷ்முக் வரை - ஸ்போர்ட்ஸில் சாதித்த வீராங்கனைகள் Bigg Boss House கை மாறிய பிக்பாஸ் வீடு! சென்னை பூந்தமல்லியில் இயங்கி வந்த 'ஈவிபி' பொழுதுபோக்கு பூங்காவில் அடுத்தடுத்து சில விபத்துகள் நடக்க, அதை மூட உத்தரவிட்டது அரசு. தொடர்ந்து அது தொடர்பாக வழக்குகள் நடந்து வந்த நிலையில், பொழுதுபோக்கு பூங்காவுக்குப் பதில் அந்த இடத்தை சீரியல், சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டனர், அதன் உரிமையாளர்கள். முக்கிய சேனல்களில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களின் ஷூட்டிங் இன்றும் இங்கு நடந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென இங்குதான் வீடு செட் அப் அமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காவாக இருந்தபோது இடத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் ஈ.வி. பெருமாள் சாமி மற்றும் சந்தோஷ். சில மாதங்களுக்கு முன் இவர்கள் இந்த இடத்தை திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் குழுமத்திற்கு விற்பனை செய்தனர். இடத்தை வாங்கிய வேல்ஸ் குழுமம், வளாகத்தின் பெயரை வேல்ஸ் ஃபிலிம் சிட்டி என மாற்றி, புதுப் பொலிவு பெற்ற சில தினங்களுக்கு முன் திறந்தது. 2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை - எதற்கு போராட்டங்கள் நடந்தன?|Gen Z போராட்டங்கள்
93 ஆண்டு கால வரலாற்றில் புதிய சாதனை ; உள்நாட்டு இறைவரி வசூலில் உச்சம்
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது 93 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 2025 ஆம் ஆண்டில் 2,203 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிப் பெரும் சாதனை படைத்துள்ளது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை விட 33 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீத அதிகரிப்பாகும் என உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக் தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று […]
புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு நடந்த சோகம்
புத்தளம், நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்மிஸ்ஸர மத்திய கல்லூரியின் உயர்தர கணிதப் பிரிவு மாணவனான 18 வயதுடைய சவிது சிஹார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவயது முதலே மோட்டார் சைக்கிள் மீது அதீத ஆர்வம் கொண்ட சவிது, சமீபத்தில் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். விபத்து நடந்த அன்று, மோட்டார் சைக்கிளில் சென்றவாறே வீடியோ பதிவு செய்ய முயன்றபோது, நிலைதடுமாறி வீதியோர தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளார். […]
பாடப்புத்தகத் தயாரிப்பில் அலட்சியம் ; 6ஆம் தர ஆங்கிலப் பாடத்தில் சர்ச்சை
தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்ட 6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடத்திற்கான கற்றல் தொகுதியில் (Module), பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறித்த தகவல் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கற்றல் தொகுதியை விநியோகிக்கும் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த தவறு எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து தேசிய கல்வி நிறுவனம் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இன்று (31) […]
பால்பண்ணை சந்திப்பில் புதிய அறிவிப்பு பலகை-தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பாடு!
பால்பண்ணை சந்திப்பில் புதிய அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
JACTO-GEO: பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம் - பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை
திமுக அளித்த வாக்குறுதியின்படி வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்துகொள்வோம் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. திமுக வாக்குறுதி தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியைக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் ஆட்சியில் கண்ணீரோடு போராடி வருகின்றார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்மொழி தெரிவித்துள்ளார். செந்தில்குமார் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை திமுக அளித்த வாக்குறுதியின்படி முதல்வர் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்து கொள்வோம். பகுதிநேர ஆசிரியர்கள் இந்த 15 ஆண்டுகளாகத் தற்காலிகமாக வேலை செய்கின்ற நிலையில் மே மாத ஊதியம், பொங்கல் போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, பணிக்காலத்தில் இறந்த ஆசிரியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கவில்லை. இந்த நிலையில் இந்தக் கால விலைவாசி உயர்வில் தற்போதைய ரூபாய் 12,500 சம்பளத்தில் குடும்பங்களின் அடிப்படை தேவைகளைச் செய்துகொள்ள முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். காலமுறை சம்பளம் வழங்கினால் அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். எஞ்சிய காலத்தில் நல்லபடியாக வாழ முடியும். எனவே முதல்வர் ஸ்டாலின் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களின் கஷ்டங்களைப் பார்த்து திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதை புத்தாண்டு அறிவிப்பாக இனிப்பு செய்தியாக ஒரு விடியலாக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வாக்கு தவறிய தி.மு.க... மூலை முடுக்கெல்லாம் போராட்டம்... அடக்குமுறை செய்யும் காவல்துறை...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள்.. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான ரூட்டில் ப.சிதம்பரம்; முட்டுக்கட்டை போடும் திமுகவினர் - காரைக்குடி தொகுதி யாருக்கு?
தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மற்ற கட்சிகளைவிட ஆளும்கட்சியான திமுக-வினர் ஆர்வமாகத் தயாராகி வருவதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்தியும் வருகிறார்கள். தேர்தல் அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தின் முதன்மைத் தொகுதியான காரைக்குடியில் இம்முறை திமுக போட்டியிட்டே ஆக வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் தலைமைக்கு வலியுறுத்தி வருவதோடு, தொகுதி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக முக்கியப் புள்ளிகள் முதலமைச்சரின் குடும்பத்தினரையும், அறிவாலய பவர் செண்டர்களையும் சுற்றி சுற்றி வருகிறார்கள். தற்போது காரைக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரசைச் சேர்ந்த மாங்குடி உள்ளார். இந்நிலையில்தான் திமுகவினர் தொகுதியை தங்களுக்கு கேட்டு வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய காரைக்குடி திமுக நிர்வாகிகள், திமுக ஆதரவாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் அதிகம் நிறைந்த காரைக்குடித் தொகுதியை 1996 முதல் 2021 வரை கூட்டணிக் கட்சிகளுக்கே திமுக ஒதுக்கி வருகிறது. இதில், 2011 தேர்தலைத் தவிர மற்ற 5 தேர்தலிலும் திமுகவினரின் கடுமையான உழைப்பால் கூட்டணி கட்சியினரே வெற்றி பெற்று வருகின்றனர். 2001-ல் பாஜக ஹெச்.ராஜாவே திமுக கூட்டணியால்தான் வெற்றி பெற்றார். காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி திமுக போட்டியிட்டால் இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறக் கூடிய தொகுதி இது. அப்படி இருக்கையில், எங்கள் தலைமை தொடர்ந்து காங்கிரசுக்கு ஒதுக்கி வருவது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே சிவகங்கை எம்.பி தொகுதியை தங்களுக்கென்றே வைத்திருக்கும் ப.சிதம்பரம் குடும்பத்தினர், கூடவே காரைக்குடி சட்டமன்றத் தொகுதியையும் தங்கள் ஆதரவாளருக்காக பெற்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தொகுதியில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாத, அதே நேரம் கோஷ்டிகள் மட்டும் அதிகமுள்ள காங்கிரஸ், திமுகவினரின் கடும் உழைப்பால் நோகாமல் வெற்றி பெற்று வருகிறது. ஆனால், அப்படி வெற்றி பெற்றவர்கள் திமுகவுக்கு விசுவாசமாக இருப்பதில்லை. கார்த்தி சிதம்பரம் அவ்வப்போது மீடியாவில் திமுகவுக்கு எதிராகப் பேசி எதிர்க்கட்சியினருக்கு கண்டெண்ட் கொடுக்கிறார். தற்போது காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடியும், காரைக்குடி மாநகராட்சிக்கு எதிராக பிரச்சனைகளை தூண்டி வருகிறார். இதனால், திமுக அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் ப.சிதம்பரம், திமுக தலைமையிடம் நைசாகப் பேசி இத்தொகுதியை காங்கிரசிலுள்ள தன் ஆதரவாளருக்கு ஒதுக்க வைத்து விடுகிறார், இனி அப்படி விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிறோம். திமுக ஆட்சியில்தான் காரைக்குடியை மாநகரட்சியாக்கி, தொகுதிக்கும் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியறிவும், உலக அறிவும், திராவிட சிந்தனையும் கொண்டோர் அதிகமுள்ள இத்தொகுதியில் திமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், இதை மாவட்டச் செயலாளர், துணை முதலமைச்சர், முதலைமைச்சர் ஆகியோரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றனர். திமுகவில் தொகுதியை குறி வைத்து ஜோன்ஸ் ரூசோ, காரைக்குடி மேயர் முத்துதுரை, நகர்ச் செயலாளரும் துணை மேயருமான குணசேகரன் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகிறார்கள். குணசேகரன் - முத்துதுரை தொகுதியை கேட்டு திமுகவினர் குரல் எழுப்பி வரும் நிலையில் ப.சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்து மீண்டும் காரைக்குடியை தங்களுக்கே ஒதுக்கும்படி வலியுறுத்திவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்தமுறை திமுக-வுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது என்ற முடிவில் திமுக தலைமையும் தீவிரமாக இருப்பதாக காரைக்குடி திமுக-வினர் மகிழ்ச்சியுடன் பேசி வருகிறார்கள். முடிவு தொகுதி உடன் படிக்கையின் இறுதியில் தான் தெரிய வரும். அதுவரை பொறுத்திருப்போம்!
என்னோடு நின்ற தம்பி இளமகிழன் - உசிலம்பட்டி விழாவில் வேட்பாளரை அடையாளம் காட்டினாரா கனிமொழி?
வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன் என்று, கனிமொழி எம்.பி பேசியதன் மூலம் உசிலம்பட்டி வேட்பாளரை அடையாளம் காட்டியுள்ளார் என்று திமுகவினர் பேசி வருகிறார்கள். நலத்திட்ட விழா மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உசிலம்பட்டி வித்தியாசமான தொகுதி. இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பார்வர்ட் பிளாக் கட்சி 9 முறையும், அ.தி.மு.க 4 முறையும், தி.மு.க 1 முறையும், சுயேட்சைகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது ஓபிஎஸ் ஆதரவாளரான அய்யப்பன் அதிமுக எம்.எல்.ஏ-வாக உள்ளார். திமுகவுக்கு நீண்டகாலமாக சவாலாக இருக்கும் இத்தொகுதியில் பெரும்பாலான தேர்தல்களில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டணி வைத்து திமுக போட்டியிட்டாலும், திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டாலும் வெற்றி எட்டாக்கனியாகவே உள்ளது. அதே நேரம், அதிமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கூட்டணி வைத்தால் முடிவுகள் இரண்டு கட்சிகளுக்குமே சாதகமாக அமைந்திருக்கிறது. நலத்திட்ட விழாவில் கனிமொழி கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பார்வர்ட் பிளாக் தலைவர் பி.வி.கதிரவன் அதிமுக வேட்பாளர் அய்யப்பனிடம் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளவர் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார். அதேநேரம் கடந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு மூன்றாம் இடம் வந்த மகேந்திரனும் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளதால் அவரும் போட்டியிட விரும்புகிறார். இது ஒருபக்கமென்றால், இந்த முறை எப்படியும் உசிலம்பட்டியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தியின் வழிகாட்டலில் திமுகவினர் சுற்றி சுழன்று பணியாற்றி வருகிறார்கள். அந்த அடிப்படையில் தொகுதியை குறிவைத்து திமுக புள்ளிகள் காய் நகர்த்தி வரும் நிலையில் கனிமொழியின் தீவிர ஆதரவாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் இளமகிழன் தொடர்ந்து பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். இவர் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு உட்கட்சியினரின் உள்ளடியால் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனாலும் துவண்டு விடாமல் ஒரு நாள் விடாமல் தொகுதியில் கட்சி சார்பில் ஏதாவதொரு நலத்திட்ட விழாவை நடத்தி வருகிறார். கனிமொழி - இளமகிழன் இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை கடந்த 27 ஆம் தேதி பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் இளமகிழன். அமைச்சர் பி.மூர்த்தி, தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி, மதுரை தெற்கு மாவட்டச்செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பேசும்போதுதான், வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன் என்பதை இந்த மேடையிலே நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியோடு பேச கூட்டம் ஆர்ப்பரித்தது. இளமகிழன் மகிழ்ச்சி அடைய, மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் ஆச்சரியப்பட்டார்கள். திமுக-வில் கனிமொழிக்கு என ஆதரவாளர்கள் குறைவு, அது மட்டுமின்றி அவர் ஆதரவைப் பெறும் திமுக நிர்வாகிகளும் அரிதானவர்கள். அதேநேரம் தேர்தல் நேரத்தில் தலைமையிடம் அவர் பரிந்துரைக்கும் ஒருசில நபர்களுக்கு சீட் கிடைத்துவிடும் என்பதால், உசிலம்பட்டி கூட்டத்தில் இளமகிழனை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து பேசியதன் மூலம் உசிலம்பட்டிக்கான திமுக வேட்பாளரை அடையாளம் காட்டி விட்டார் என்று திமுக-வினர் பேசி வருகிறார்கள்.
பூர்ணசந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் - எல்.முருகன்
பூர்ணசந்திரனின் இறப்பிற்கு திமுக அரசாங்கமும் ஸ்டாலினும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்... என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அஞ்சலி செலுத்தும் முருகன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல மதுரை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூர்ணசந்திரன் தியாகம் செய்திருக்கிறார், தீக்குளிப்பை யாரும் செய்யக்கூடாது. தர்மத்தை காக்க வேண்டுமென்றால் உயிரோடு இருந்து அதற்காக போராடி தர்மத்தை வெல்ல வேண்டும். ஆனால், பூர்ணசந்திரன் தியாகம் செய்திருக்கிறார் அவருடைய தியாகம் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் வரை எல்லோரும் போராடுவோம், அதுதான் பூர்ண சந்திரனுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும், அவருடைய குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும். பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது, கார்த்திகை தீபம் ஏற்றுவதாக இருக்க வேண்டும். பூர்ணசந்திரனின் இழப்பிற்கு காரணம் திமுக அரசுதான், இதற்கு திமுக அரசாங்கம்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும், ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும். பூர்ண சந்திரனின் குடும்பத்திற்கு தமிழக அரசு தரப்பிலிருந்து ஆறுதல் சொல்லவோ, எந்த முன்னெடுப்பும் செய்யாதது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது. எல்.முருகன் திமுக அரசு, உயிர்தியாகம் செய்த பூர்ணசந்திரன் வீட்டுக்கு கூட வரவில்லை, 3 அமைச்சர்கள் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் வந்து பார்க்கவில்லை. பூர்ணசந்திரனின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை ஆறுதல் கூறவில்லை என்பது அந்த குடும்பத்தினருக்கு செய்கின்ற அவமரியாதையாக பார்க்கிறோம். கடவுளுக்காக உயிரை தியாகம் செய்த பூர்ணசந்திரன் திமுக குடும்பத்தை சார்ந்தவராக இருந்தபோதிலும் அமைச்சரோ, அரசோ மரியாதை செய்யாததை பூரண சந்திரனின் இழப்புக்கான அவமரியாதையாக பார்க்கிறோம், அவரது தியாகம் நிச்சயமாக வெல்லும். தீபம் நிச்சயம் ஒரு நாள் ஏற்றப்படும். நிச்சயமாக திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள், பூர்ணசந்திரன் பாஜக-விலும் இல்லை, எந்த அமைப்பிலும் இல்லை. அவர் ஒரு இந்துவாக முருக பக்தராக அவருடைய உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார், கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதிலும் இருக்கின்ற முருக பக்தர்களுடைய எண்ணமாக, கோரிக்கையாக இருக்கிறது. அந்த கோரிக்கையைத்தான் பூர்ணசந்திரன் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். அதை திமுக அரசு கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வேண்டும் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கை, இதற்காக ஒவ்வொரு வருடமும் கைது செய்வது திருப்பி அனுப்புவது என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நியாயமாக பக்தர்கள் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு, ஓட்டு அரசியலுக்காக திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனை பக்தர்கள் உணர்வாக பார்க்க வேண்டும். கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஒவ்வொருவரின் லட்சியம், எண்ணம், முருக பக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. அதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் சாமி கும்பிடுவது அடிப்படை உரிமை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வழிபாட்டு உரிமையை கொடுத்திருக்கிறது, அந்த உரிமையை, சட்டத்தை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காத அரசாங்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தமிழக மக்களுக்கும், முருக பக்தர்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
திருநெல்வேலி: பெருமாள் திருக்கோயில்களில் நடைபெற்ற ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி – பெருமாள் அலங்கார காட்சிகள்.!
திருநெல்வேலி: பெருமாள் திருக்கோயில்களில் நடைபெற்ற ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருமாள் அலங்கார காட்சிகள்.!
புத்தாண்டு கொண்டாட்டம்: கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்பாக நடத்த கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருகிறது.
'கதறிய பெண் தூய்மைப் பணியாளர்கள்; நள்ளிரவில் கைது செய்த போலீஸ்!'- ரிப்பன் பில்டிங்கில் என்ன நடந்தது?
சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு திரண்டு போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்திருக்கின்றனர். சென்னையில் மண்டலங்கள் 5, 6 இல் குப்பை அள்ளும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தமாக கொடுத்திருக்கிறது மாநகராட்சி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மண்டலங்களை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்குள் 150 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு திரும்பக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக அமர்ந்துவிட்டனர். இரவு 9:45 மணிக்கு மேல் ரிப்பன் பில்டிங் வெளியே அமர்ந்தவர்கள், ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டு கொண்டிருந்தனர். 'நாங்க யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம். பதினைஞ்சு இருபது வருசமா இந்த ஊருக்காக வேலை பார்த்த எங்களை குப்பை மாதிரி தனியார்க்கிட்ட தூக்கி போடுறீங்களே இது நியாயமா? நாங்க எங்க வேலையைத்தானே கேட்குறோம். யாருக்கும் தொந்தரவா செய்யுறோம்? அப்புறம் ஏன் எங்களை திருடனை பிடிக்கிற மாதிரி பிடிக்கிறீங்க? அஞ்சு மாசமா வேலை இல்லாம இருக்குறோம். இங்க இருக்க நிறைய பொம்பளைங்களுக்கு புருஷன் கிடையாது. நாங்க வேலைக்கு போனாதான் சோறு. எங்க புள்ளைங்க எல்லாம் பட்டினியா கெடக்கு. நாங்க எதுவும் தப்பா பேசியிருந்தா கூட மன்னிச்சிடுங்க. முதல்வர் அய்யா எங்களுக்கு நல்லது பண்ணுங்க. எங்க வேலையை கொடுங்க. இல்ல எங்கள ஜெயில்ல போடுங்க. இல்ல போராட விடுங்க. இந்த ரிப்பன் பில்டிங் முன்னாடியே எங்க உசுரு போகட்டும்..' என பெண் தூய்மைப் பணியாளர்கள் கதறினர். இரவு 11:15 மணிக்கு மேல் கூடியிருந்த 1000 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். கோரிக்கை நிறைவேறாமல் நகரமாட்டோம் என உறுதியாக நின்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை வெவ்வேறு இடங்களில் மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். ரிப்பன் பில்டிங் போராடிய தூய்மைப் பணியாளர்களை கைது செய்த பின் முன்னெச்சரிக்கையாக ரிப்பன் பில்டிங்கின் கேட்டுகளை மூடி பூட்டு போட்டு தடுப்புகளை அமைத்து பாதுகாப்புக்கு காவலர்களையும் நிறுத்தியிருக்கின்றனர்.
விக்டோரியா ஹாலை பார்வையிட பொதுமக்களுக்கு தற்காலிக தடை!
சென்னையில் சமீபத்தில் முக ஸ்டாலின் திறந்து வைத்த விக்டோரியா ஹாலை பார்வையிட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
பேருந்துக்காக 10 முதல் 13 நாட்கள் காத்திருக்க வேண்டும்! ஷாக் கொடுத்த சென்னை ஒன் செயலி!
பேருந்துக்காக 10 முதல் 13 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சென்னை ஒன் செயலி! காண்பித்ததால் பயணிகள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!
வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியா செவ்வாய்க்கிழமை (டிச. 30) காலமானாா். 80 வயதான இவா், வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமா் என்ற பெருமைக்குரியவா்; மூன்றுமுறை பிரதமா் பதவி வகித்தவா். நீண்டகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கலீதா ஜியா, டாக்கா மருத்துவமனையில் உள்ளூா் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் காலமானதாக அவரது மூத்த மகனும், கட்சியின் பொறுப்புத் தலைவருமான தாரிக் ரஹ்மான் தெரிவித்தாா். கல்லீரல், சிறுநீரகம், இதய நோய்களுடன் உயா் […]
ஃப்ளோரிடா கடற்கரையில் ஏற்பட்ட விபத்தில் க்யூபெக் நபர் பலி
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், ஆர்லாண்டோ நகரத்திற்கு வடகிழக்கே உள்ள ஒரு கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 44 வயதான கனடாவின் க்யூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். உள்ளூர் கடற்கரை பாதுகாப்பு மற்றும் மீட்பு சேவையான Volusia County Beach Safety வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில், கரையிலிருந்து சுமார் 130–180 மீட்டர் தொலைவில் ஏற்பட்ட கடல் அலையில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீரில் மிதந்த நிலையில் இருந்த குறித்த நபரை மீட்ட உயிர்காப்பு […]
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? தேடுதலில் 5 காவற்துறைக் குழுக்கள்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக 5 விசேட காவற்துறை குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.… The post ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? தேடுதலில் 5 காவற்துறைக் குழுக்கள்! appeared first on Global Tamil News .
கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை; Miracle Baby ….கொண்டாடும் மக்கள்
இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ளமை அந்த கிராமம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்லியாரா டெய் மார்சி கிராமத்தில் வசிக்கும் மரியா மற்றும் ஆன்டோனியோ ஆகியோருக்கு பிறந்த இந்த பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. Miracle Baby… இத்தாலிய ஊடகங்கள் கடந்த 1990 களின் நடுப்பகுதிக்குப்பிறகு (சுமார் 30 ஆண்டுகளாக) இந்தக் கிராமத்தில் எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை. […]
சிட்னி வர்த்தக நிலையத்திற்குள் கத்தியுடன் ஓடிய நபரால் பரபரப்பு!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1 மணியளவில் வர்த்தக நிலையத்திற்குள் ஆயுதம் ஏந்திய ஒருவர் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து வர்த்தக நிலையத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் 21 வயதான சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். உணவு விடுதியில் இருந்து பெறப்பட்ட காட்சிகளில், தரையில் இருந்த ஒரு சந்தேக […]
தென்னிலங்கையில் திடீர் துப்பாக்கிச் தாக்குதல் ; சிறுமி ஒருவர் காயம்
கொழும்பு கொஹுவலை, போதியவத்தை பகுதியில் உள்ள சரணங்கர வீதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டையே இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது அருகிலுள்ள வீட்டில் இருந்த 16 வயது சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
IIP Data Mass காட்டினாலும் சந்தை ஏமாற்றியது ஏன்? | Gold Silver | IPS Finance - 398
கொதிப்பில் தொழிலாளர்கள் - வாக்குறுதிகள் என்னவானது முதல்வரே?| DMK MK STALIN TVK ADMK| Imperfect Show
From Digital to Cinema: How the Industry Perceives Creators | Vikatan Roundtable
நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாங்களோன்னு...! - Biggboss Kani Shares | Vikram | Divya | BB Tamil 9
Tiruttani கொடூரம்: காரணம் என்ன? | Decode | Vikatan
IAS அதிகாரியான என்னால ஒரு குற்றவாளி மேல FIR கூட போடமுடியல U.Sagayam IAS| Uncut உரையாடல் With Sumathi
`குழாய் மட்டுமிருந்து என்ன செய்வது?' - அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் இறையான்மங்கலம் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், இறையான்மங்கலம் கிராமத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் போராடி வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குழாய்கள் வைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழாயிலும் தண்ணீர் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து இறையான்மங்கலம் ஊர் தலைவர் ரமேஷிடம் கேட்டபோது, எங்க ஊர் பொன்பேத்தி பஞ்சாயத்தின் கீழ் வரக்கூடிய ஒரு கிராமம். ஊரில் 97 சதவிகிதம் பட்டியலின சமூக மக்களும், மூன்று சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்களும் வசித்து வருகிறோம். எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடைக்காது. நிதி ஒதுக்கும் போதுகூட பிற கிராமங்களுக்கு கிடைக்கும் எந்தச் சலுகையும் எங்கள் இறையான்மங்கலம் கிராமத்திற்கு கிடைப்பதில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த காலனி வீடுகள் மட்டுமே இப்போது இருக்கிறது. அதற்குப் பின்பு ஒரு வீடுகூட எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. தண்ணீர் வசதி இல்லாமல் 18 வருடங்கள் போராடிய போராட்டத்திற்கு பிறகு, ஆறு மாதங்களுக்கு முன்பு தான் குழாய்கள் வைத்தார்கள். ஆனாலும் அதில் நீர் வரவில்லை. நீர் இல்லாததால் கழிவறைகளையும் எங்களால் கட்ட முடியாமல், தினமும் காடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். இங்கு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கக்கூடிய ஈழக்காளி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வாரம் ஐம்பதில் இருந்து 100 பக்தர்கள் வரை வழிபாட்டிற்காக வெளியூர்களில் இருந்து வருகிறார்கள். அப்படி வருபவர்கள் செல்வதற்குக்கூட கழிவறை இல்லை. அதனால் கோயிலுக்கு வந்து செல்பவர்களும் எங்களைப்போல அவதிப்படுகிறார்கள். ஆகவே அரசு எங்கள் ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமாவது இன்னமும் காலம் தாழ்த்தாமல் உடனே செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என்றார்.
இங்கிலாந்தில் இலங்கை தமிழருக்கு உயரிய கெளரவ பட்டம்! பலரும் வாழ்த்து
இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்வியை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது. கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பேராசிரியர் கனகராஜா தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க […]
பியூஷ் கோயல் ஜனவரி 4, 5ல் தமிழகம் வருகை… NDA பலம் பெறுமா, தொகுதி பங்கீடு முடிவாகுமா?
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.
நியூஜெர்சியில் நடுவானில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள்
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். நடுவானில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
விஜய்யை சீண்டிய எடப்பாடி… 1999 திமுக பிளாஷ்பேக்- 2026 தேர்தலில் பாடம் எடுக்கும் அதிமுக!
கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தவெகவை லேசாக சீண்டும் வகையில் பேசியிருக்கிறார்.
பல்வலிக்கு சிகிச்சை பெற்ற இளம் யுவதி மரணம்
பல்வலிக்கு சிகிச்சை பெற்ற 20 வயதுடைய யுவதி ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 28 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பொகுணுவிட்ட, பண்டாரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாந்தி மற்றும் வயிற்று வலி மேல் தாடையின் நுனியில் உள்ள பல்லில் வலி ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி குறித்த யுவதி தனியார் மருத்துவ இடத்தில் பல்லை பிடுங்கிய பிறகு அவருக்குத் தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று வலி […]
பிரதீபன் தரகர் வேலைக்கு வேண்டாம்!
யாழ்.மாவட்ட செயலர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் சென்று புத்தபிக்குவுடன் இரகசியமாக பேசுகிறார் என தையிட்டியில் காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தையிட்டி காணி உரிமையாளர்கள் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் தையிட்டியில் காணியை பிக்கு விட்டுத் தருவதாக சொல்கிறார்கள். நீங்கள் காணிகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை.நீங்கள் எங்கள் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்து உள்ளீர்கள். உங்கள் தேவையை எம்மிடம் கூறுங்கள். எவ்வளவு தேவை என்பதை நம்மிடமே கதைக்க முடியும். சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். ஆளுநர், அரச அதிபர், பிரதேச செயலாளர்களிடம் காணி உறுதி வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு அவை மக்களின் காணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட செயலர் தனது புரோக்கர் வேலையை கைவிட்டு மக்கள் காணிகளை மீட்டுத்தர செயற்படட்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் ‘கிங்’மலிங்கா!
டி20 உலககோப்பை 2026 -இலங்கை அணியின் பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளாா். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து… The post இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் ‘கிங்’ மலிங்கா! appeared first on Global Tamil News .
காரணமென்ன? : முன்னாள் போராளி மரணம்!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் மீதான தாக்குதலில் கைதாகி சிறையிலிருந்த சபாரட்ணம் நகுலேஸ்வரன் மரணம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் பல வருட சிறை வாழ்க்கையின் பின்னராக 2002ம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் விடுதலையானார். அதே சமயம் 2009ம் ஆண்டு அவருக்கு எதிராக புதிதாக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு செல்லாத காரணத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. டக்களஸ் தேவானந்தாவை களுத்துறை சிறைச்சாலையில் தாக்கியமை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரின் ஆறு பேர் தவிர்ந்த ஏனையோர் விடுதலையாகி இருந்தனர். அதேவேளை ஆறு பேருக்கும் தண்டனையும் முடிந்து விட்டது. இந்நிலையில் சபாரட்ணம் நகுலேஸ்வரன் அவர்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கொழும்பில் கணக்காளராக பணி புரிந்துவருகின்றார். இந்நிலையில் அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்நாட்டுப் போர்ச் சூழலில் வளர்ந்த ஒரு தமிழ் மாணவர், இன்று உலகத்தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்,… The post யுத்த பூமியில் இருந்து பிரித்தானியாவின் ‘நைட்’ பட்டம் வரை: பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் வியக்கத்தக்க பயணம்! appeared first on Global Tamil News .
தையிட்டி விகாரையில் கட்டுமானம் கட்ட மாட்டோம்
தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார். தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03ஆம் திகதி பௌர்னமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் […]
15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்: உக்ரைனிடம் அமெரிக்கா உறுதி
கீவ்: உக்ரைனுக்கு 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். இது குறித்து வாட்ஸ்ஆப் செயலி மூலம் அவா் செய்தியாளா்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு அமெரிக்கா 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முன்வந்துள்ளது. இருந்தாலும், உக்ரைன் மீது ரஷியா மேலும் தாக்குதல் நடத்துவதை இன்னும் 50 ஆண்டுகள் வரை தடுப்பதற்கான பாதுகாப்பு […]
️ பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!
கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த கலீதா ஜியா, டாக்காவில் உள்ள எவர்கேர் (Evercare)… The post ️ பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்! appeared first on Global Tamil News .
இலங்கையர் மீது நேரடி அன்பையும் கரிசனையையும் வெளிப்படுத்திய சீன கம்யூனிசக் கட்சி!
இலங்கைக்கு ஒரு மில்லியன் யுவான் நிவாரண உதவியை வழங்குவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கையிலுள்ள சீனத்… The post இலங்கையர் மீது நேரடி அன்பையும் கரிசனையையும் வெளிப்படுத்திய சீன கம்யூனிசக் கட்சி! appeared first on Global Tamil News .
சஜித் –ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இடையே விசேட சந்திப்பு: அரசியல் களத்தில் முக்கிய நகர்வு!
சஜித் – ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இடையே விசேட சந்திப்பு: அரசியல் களத்தில் முக்கிய நகர்வு! ஐக்கிய மக்கள்… The post சஜித் – ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இடையே விசேட சந்திப்பு: அரசியல் களத்தில் முக்கிய நகர்வு! appeared first on Global Tamil News .
பணப் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! - சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன?
'என்னிடம் பத்து லட்சம் ஏமாற்றியதுடன் எனக்குச் சொந்தமான விலையுயர்ந்த காரையும் பறித்துக் கொண்டு மோசடி செய்து விட்டார்' பல ஹிட் சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராணி மற்றும் அவரது கணவர் மீது இப்படியொரு புகாரைக் கொடுத்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவர். இவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது காவல் துறை. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தின் சுருக்கம் இதுதான். தினேஷ் என்பவர் கரூரில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்திருக்கிறார். ஹோட்டலில் நஷ்டம் உண்டாக தனக்குத் தெரிந்த அரசியல்வாதியான ஜான் பாண்டியனைத் தொடர்பு கொண்டு, ஹோட்டலை யாருக்காவது குத்தகைக்கு விடுவது குறித்துப் பேசியிருக்கிறார். பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன் ஜான் பாண்டியன் சென்னையில் வசிக்கும் பாலாஜியை தினேஷுக்கு அறிமுகப் படுத்தி விட்டிருக்கிறார். பாலாஜி நடிகை ராணியின் கணவர். பாலாஜி கரூரில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேச அந்த நண்பர் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார். அப்போது அந்த நண்பர் பத்து லட்சம் ரூபாயை பாலாஜியிடமே தந்ததாகவும், ஆனால் பாலாஜி பணத்தை தினேஷிடம் தராமல் தான் எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் புகாரில் கூறியிருக்கிறார் தினேஷ். பணத்தை எடுத்துச் சென்ற போது தன்னுடைய விலையுர்ந்த காரையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் தினேஷ். பிறகு பாலாஜியைச் சந்தித்து தன்னுடைய பணத்தைக் கேட்டபோது, தினேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம் பாலாஜி. 'என்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது, உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ' என்றும் விரட்டி விட்டாராம். தினேஷ் ஜான் பாண்டியனிடம் முறையிட, அவருமே 'சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்'எனச் சொல்லி விட்டாராம். ராணி இந்த விவகாரத்தில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால் ராணி, அவரது கணவர் பாலாஜி ஆகியோர் தலைமறைவு ஆகி விட்டதாகக் கூறப்படுகிறது. ராணியிடம் இது தொடர்பாகப் பேச தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் பேசுகிறபட்சத்தில் அவரது விளக்கத்தை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.
பெலாரஸில் அணுசக்தி திறன் கொண்ட ஓரெஷ்னிக் ஏவுகணை அமைப்பை ரஷ்யா காட்டியது
ரஷ்யா தனது இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பான ஓரெஷ்னிக்-ஐ பெலாரஸில் நிலைநிறுத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாயன்று அறிவித்தது, அணுசக்தி திறன் கொண்ட ஆயுத அமைப்பின் முதல் படங்களை வெளியிட்டது. ஏவுகணை அமைப்பைச் சுமந்து செல்லும் நடமாடும் போர் வாகனங்கள் போர் பயிற்சிப் பயிற்சிகளின் போது ஒரு காட்டின் வழியாகச் செல்வதைக் காட்டும் காட்சிகளை அமைச்சகம் வெளியிட்டது. டிசம்பர் 18 அன்று பெலாரஷ்ய ஜனாதிபதி அலியாக்சாண்டர் லுகாஷென்கோ, ஓரெஷ்னிக் முந்தைய நாள் நாட்டிற்கு வந்து சேர்ந்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபோன்ற 10 ஏவுகணை அமைப்புகள் பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று லுகாஷென்கோ கூறினார். சமீபத்திய வாரங்களில் அதன் அணுசக்தி திறன் கொண்ட ஆயுதக் கிடங்கு குறித்த தொடர்ச்சியான புதுப்பிப்புகளில், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் 17 அன்று, ஓரேஷ்னிக் ஆண்டு இறுதிக்குள் போர் கடமையில் ஈடுபடும் என்று கூறினார். அவரது அறிக்கை, 2025 ஆம் ஆண்டிலேயே மாஸ்கோ ஏற்கனவே ஏவுகணைகளுடன் கூடிய ஒரு படைப்பிரிவை பொருத்தியதாகக் கூறிய ரஷ்ய பொதுப் பணியாளர்களின் தலைவர் வலேரி ஜெராசிமோவின் கூற்றுக்கு முரணானது. அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் படைப் பிரயோகம் வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது புளோரிடா ரிசார்ட்டில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்றார், கியேவ் மற்றும் மாஸ்கோ ஆகியவை ஒரு அமைதித் தீர்வுக்கு முன்பை விட நெருக்கமாக இருப்பதாகக் கூறினார். இருப்பினும், உக்ரைனின் கிழக்குப் பகுதியான டான்பாஸ் மீதான ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகள் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா அணுமின் நிலையத்தின் தலைவிதி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மாஸ்கோவும் கியேவும் ஆழமாகப் பிரிந்துள்ளன.
Roasted Winter Vegetable Salad with Kale and Apples
This healthy winter salad uses roasted root vegetables with warm spices, paired with nutrient-rich greens. It’s delicious on its own
நீண்ட தொலைவு ஏவுகணை சோதனை: வட கொரியா அறிவிப்பு
நீண்ட தொலைவு பாயும் குரூஸ் வகை ஏவுகணைகளை சோதித்துப் பாா்த்ததாக வட கொரியா திங்கள்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளதாவது: நீண்ட தொலைவு பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட குரூஸ் வகை ஏவுகணைகள் நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து சோதனை செய்யப்பட்டன. இந்தச் சோதனைகள் திருப்திகரமாக இருந்ததாக அதிபா் கிம் ஜாங்-உன் பாராட்டினாா். பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது நாட்டின் அணு ஆயுத தற்காப்புத் […]
கல்லுமலையும் வெடுக்குநாறியும் எங்கள் சொத்து: பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள்! வவுனியாவில் போராட்டம்
கி.வசந்தன் கல்லுமலையும் வெடுக்குநாறியும் எங்கள் சொத்து. பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம் ஒன்று இன்று (30.12) முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மதகுரு […]
2026 பிறக்கப் போகுது... இன்னும் எத்தனை வருஷம் இதே பயத்தோட ஓடப் போறீங்க?
2025 முடியப் போகுது. ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசிங்க. நான் சம்பாதிக்கிறேன், உழைக்கிறேன். ஆனா, விலைவாசி ஏறுகிற வேகத்துக்கு என் சேமிப்பு ஏறமாட்டேங்குதே! என் பிள்ளைகளோட எதிர்காலம் என்னாகும்? – இந்தக் கேள்வி உங்களுக்குள்ள குடைஞ்சுக்கிட்டே இருக்கா? நீங்க மட்டும் இல்ல. இந்தியா முழுக்க 60% நடுத்தர வர்க்கத்தினர் இதே பயத்துலதான் இருக்காங்க. சேமிப்பு கரையுது... செலவு பெருகுது! ஏன் இந்த அழுத்தம்? ஓர் அதிர்ச்சியான உண்மை! உங்க பயத்துக்குக் காரணம், நீங்க இன்னும் பழைய காலத்து முதலீட்டு முறையிலேயே (வெறும் பேங்க் அக்கவுண்ட், நகை, பாலிசி) சிக்கிக்கிட்டு இருக்கிறதுதான். ஒரு சின்ன கணக்கைப் பாருங்க... இதயமே நின்றுவிடும்! சும்மா ₹10,000 போட வேண்டிய இடத்துல போடாம விட்டா என்ன ஆகும்? ராஜா (வயது 30): இன்னைக்கே ஆரம்பிப்போம்னு முடிவு எடுத்து, மாதம் ₹10,000 SIP போடுறார். (12% வளர்ச்சி). 60 வயசுல அவருக்குக் கிடைப்பது: ₹3.0 கோடி. விமல் (வயது 40): இன்னும் டைம் இருக்கு, அப்புறம் பார்த்துக்கலாம்னு 10 வருஷம் தள்ளிப்போட்டு, அதே ₹10,000 போடுறார். 60 வயசுல அவருக்குக் கிடைப்பது: வெறும் ₹91 லட்சம். இழப்பு: வெறும் 10 வருஷத் தாமதத்துக்கு, விமல் இழந்தது கிட்டத்தட்ட ₹2.1 கோடி! யோசிச்சுப் பாருங்க... அந்த ₹2.1 கோடி இருந்திருந்தா, விமலோட ஓய்வுக்காலம் எவ்வளவு சொகுசா, யாரு கையையும் எதிர்பார்க்காம இருந்திருக்கும்? Investment (Representational Image) ஆனா, பயப்பட வேண்டாம்! இன்னும் வாய்ப்பு இருக்கு. AMFI-ன் லேட்டஸ்ட் டிசம்பர் 2025 கணக்குப்படி, இந்தியாவில் SIP முதலீடு மாதம் ₹2.4 லட்சம் கோடியைத் தாண்டிருச்சு. மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க, பணவீக்கத்தை ஜெயிக்க மியூச்சுவல் ஃபண்ட் ஒண்ணுதான் சரியான வழி! உங்களுக்கான ஒரு குட்டி டிப்ஸ் (இப்போவே செய்யுங்க): எவ்வளவு முதலீடு செய்வது?னு குழப்பமா இருக்கா? சிம்பிளா ஒரு ஃபார்முலா இருக்கு: 50-30-20 விதி. சம்பளத்துல 50% - வீட்டுச் செலவு, வாடகைக்கு. 30% - உங்க ஆசைகளுக்கு (டூர், புது போன்). 20% - கண்ணை மூடிக்கிட்டு முதலீட்டுக்கு. இன்னைக்கே உங்க பேங்க் ஆப்ல ஒரு 'ஆட்டோ டெபிட்' செட் பண்ணுங்க. அந்த 20% பணம், 2030-ல் உங்களைக் காப்பாத்தும். ஏற்கனவே முதலீடு பண்றவரா நீங்க? (கொஞ்சம் உஷார்!) நான் தான் SIP போடுறேனேனு நிம்மதியாக இருக்காதீங்க. போன வருஷம் மார்க்கெட் உச்சத்தில இருந்தப்போ, உங்க முதலீட்டை 'மறுசமன்பாடு' பண்ணீங்களா? செய்யலைன்னா, சந்தை கொஞ்சம் சறுக்கினாலும் உங்க லாபம் கரைஞ்சு போயிடும். இதைத் தவிர்க்க, 'ஹைபிரிட் ஃபண்ட்ஸ்' அல்லது 'அசெட் அலோகேஷன்' உத்திகளைப் பயன்படுத்தணும். 2026-ல் உங்களுக்கான முழுமையான தீர்வு! இந்த டிப்ஸ் எல்லாம் ஆரம்பம்தான். உங்க பயத்தைப் போக்கி, முழுமையான நிம்மதியைத் தேட ஒரே வழி 'திட்டமிட்ட முதலீடு'. எஸ்.ஐ.பி டாப் அப்: ஒவ்வொரு வருஷமும் முதலீட்டை 10% ஏத்துனா, கோடீஸ்வரன் ஆவது ஈசி... அது எப்படி? டாக்ஸ் ஹார்வெஸ்ட்டிங்: வரி போக மீதமுள்ள லாபத்தை எப்படி அதிகரிக்கிறது? இலக்கு சார்ந்த முதலீடு: இது பிள்ளையின் படிப்புக்கு... இது என் ஓய்வுக்குனு பிரிச்சு முதலீடு பண்றது எப்படி? இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு ஒரு தெளிவு வேணுமா? வர்ற ஜனவரி 1, 2026 அன்னைக்கு விடை தெரிஞ்சிரும்! Investment Workshop சிறப்புப் பயிற்சிப் பட்டறை: உங்கள் நிதி இலக்குகளை அடையும் ஆண்டு - 2026! இது சும்மா ஒரு கிளாஸ் இல்ல. உங்க பயத்தைப் போக்கி, ஒரு தெளிவான பாதையைக் காட்டுற 'Action Plan'. மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம் வழங்கும் இந்த ஆன்லைன் ஒர்க் ஷாப்பில் என்ன கிடைக்கும்? 2026-க்கான பிரத்யேக முதலீட்டு வரைபடம் (Roadmap). உங்க பழைய போர்ட்ஃபோலியோவை எப்படிச் சீரமைப்பது? திரு. A. R. குமார் (முன்னாள் நாணயம் விகடன் ஆசிரியர்) அவர்களின் நேரடி வழிகாட்டல். தேதி: ஜனவரி 01, 2026 (வியாழக்கிழமை) நேரம்: காலை 11:00 – 12:30 மணி (Zoom Online) இடங்கள் குறைவு (இன்னும் 45 இடங்கள் மட்டுமே உள்ளன)! இன்னும் யோசிச்சுக்கிட்டே இருந்தா, காலமும் போயிடும்... காசும் கரைஞ்சுடும். 2026-ஐ உங்க ஆண்டாக மாத்துங்க! பெயரை முன்பதிவு செய்ய: https://forms.gle/eKWymqsTmFzoSyLY6
️ “பிரச்சனை தீரும் வரை புதிய கட்டுமானங்கள் இல்லை”–தையிட்டி விகாராதிபதி உறுதி!
காணி உரிமையாளர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் ஜனவரி 3-ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை அடுத்து, விகாராதிபதி இன்று ஊடகங்களைச்… The post ️ “பிரச்சனை தீரும் வரை புதிய கட்டுமானங்கள் இல்லை” – தையிட்டி விகாராதிபதி உறுதி! appeared first on Global Tamil News .
சிபிஎஸ்இ 2026-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் வெளியானது. இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா 80 வயதில் காலமானார்
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் 80 வயதில் காலமானதாக அவரது வங்கதேச தேசியவாதக் கட்சி திங்கள்கிழமை அறிவித்தது. பிஎன்பி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேசியத் தலைவர் பேகம் கலீதா ஜியா இன்று காலை 6:00 மணிக்கு ஃபஜ்ர் (விடியல்) தொழுகைக்குப் பின்னர் காலமானார் என்று கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். மேலும் அவரது மறைந்த ஆன்மாவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளது. 1991 முதல் 1996 வரை பதவியிலும், 2001 முதல் 2009 வரை இரண்டாவது முறையாகவும் பதவி வகித்த ஜியா, பங்களாதேஷின் முதல் பெண் பிரதமராகவும், முஸ்லிம் உலகில் இரண்டாவது பெண் பிரதமராகவும் இருந்தார். இருப்பினும், பின்னர் அவர் தனது அரசியல் எதிரியான ஷேக் ஹசீனாவால் சிறையில் அடைக்கப்பட்டார் , அவர் பங்களாதேஷை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆட்சி செய்தார், பின்னர் 2024 இல் மாணவர்கள் தலைமையிலான எழுச்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிப்ரவரி 2026 இல் நடைபெறவிருக்கும் வங்காளதேசத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை ஜியா அறிவித்திருந்தார். அவரது மகன் தாரிக் ரஹ்மான் தற்போது முன்னணியில் இருக்கும் வங்காளதேச தேசியவாதக் கட்சியின் தலைவராகப் பணியாற்றுகிறார். 2018 ஆம் ஆண்டில், ஜியா அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஹசீனாவை பதவி நீக்கம் செய்த மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களுக்குப் பிறகு 2024 இல் அவர் விடுவிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில், ஜியா அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஹசீனாவை பதவி நீக்கம் செய்த மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களுக்குப் பிறகு 2024 இல் அவர் விடுவிக்கப்பட்டார். வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், ஜியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது மறைவால் நாடு ஒரு சிறந்த பாதுகாவலரை இழந்துவிட்டதுஎன்று கூறினார். அவரது சமரசமற்ற தலைமையின் மூலம், தேசம் மீண்டும் மீண்டும் ஜனநாயக விரோத நிலைமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, சுதந்திரத்தை மீண்டும் பெற உத்வேகம் பெற்றது என்று அவர் கூறினார். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக நவம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இந்தியாவில் தலைமறைவாக இருக்கும் அவரது பரம எதிரி ஹசீனா, ஜியாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக அவரது தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் சமூக ஊடகங்களில் தெரிவித்தார். ஜியாவின் தொலைநோக்கு மற்றும் மரபு எங்கள் கூட்டாண்மையை தொடர்ந்து வழிநடத்தும்என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நம்புவதாகக் கூறினார். ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மோசமாகி வரும் நிலையில் மோடியின் செய்தி வந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஜியாவை இஸ்லாமாபாத்தின் உறுதியான நண்பர் என்று அழைத்தார். அவர் பாகிஸ்தானின் மீது மென்மையான போக்கைக் கொண்டவராக அறியப்பட்டார். இதற்கிடையில், டாக்காவில் உள்ள சீனத் தூதர் யாவ் வென், சீனா தனது நீண்டகால மற்றும் நட்புறவை BNP உடனான தனது உறவுகளைத் தொடர்ந்து பராமரிக்கும்என்று தனது இரங்கலைத் தெரிவித்தார் .
Determine Skin Type for Healthy Skin Routine
Do you find your skin extremely dry or oily sometimes, even when you use different skincare products? This may mean
Cinnamon Benefits Skin and Boosts Collagen Naturally
Cinnamon is a well-known fragrant spice used in many dishes and homemade skincare remedies around the world. It has multiple
யேமன் துறைமுகம் மீது தாக்குதலை நடத்தியது சவுதி
ஏமனில் முகல்லா துறைமுகத்தில் சவுதி தலைமையிலான கூட்டணி நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஏமன் ஜனாதிபதி கவுன்சிலின் தலைவர் ரஷாத் அல்-அலிமி நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்ததை ஆதரிப்பதாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் கூடிய ஏமனின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏமனின் முடிவுகள் மற்றும் இறையாண்மையை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஏமனின் உள் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஏமனில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட ஹத்ரமவுட் மாவட்டங்களில் உள்ள STC-யின் தலைவர், தனது படைகள் அப்பகுதியில் இருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை என்று சமிக்ஞை செய்துள்ளார். ஏமனின் ஜனாதிபதி தலைமைத்துவக் குழுவின் தலைவரான ரஷாத் அல்-அலிமி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். ஏமனில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் படைகள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அல்-அலிமி கூறுகிறார், அனைத்து துறைமுகங்கள் மற்றும் கடவைகளிலும் 72 மணி நேரம் வான், நிலம் மற்றும் கடல் முற்றுகையை அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, வடக்கு மற்றும் தெற்கு ஏமனை இரண்டு நாடுகளாகப் பிரிக்க விரும்பும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற தெற்கு இடைக்கால கவுன்சில் (STC), ஒரு குறிப்பிடத்தக்க புதிய தாக்குதலை நடத்தியது. அதன் நன்கு ஆயுதம் ஏந்திய படைகள், ஹத்ரமவுட் மற்றும் அல்-மஹ்ராவின் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளைத் தாக்கி, கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளையும் பழங்குடிப் படைகளையும் கொன்று பின்னுக்குத் தள்ளின. இந்த விரைவான தாக்குதல் பல முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் கட்டுப்பாட்டையும் அவர்களுக்கு வழங்கியது. டிசம்பர் மாத நடுப்பகுதியில், தெற்கு அப்யான் மாகாணத்தில் ஒரு புதிய இராணுவ நடவடிக்கையை அந்தக் குழு அறிவித்தது, நாட்டின் தெற்குப் பகுதிகளின் பரந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறியது. கடந்த வாரம், சவுதி அரேபியா ஹத்ரமவுட்டில் உள்ள வாடி நஹாப்பில் அதன் படைகளின் நிலைக்கு அருகில் எச்சரிக்கை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக STC செய்தி வெளியிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து STC பின்வாங்கவில்லை என்றால் மேலும் இராணுவ நடவடிக்கைகள் வரவிருக்கும் என்று ரியாத் அப்போது எச்சரித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நகரமான புஜைராவிலிருந்து ஏமனுக்கு வந்த ஒரு கப்பலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி இராணுவம் அரசு நடத்தும் சவுதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, கப்பல்களின் குழுவினர் கண்காணிப்பு சாதனங்களை முடக்கி, STCயின் ஆயுதப் படைகளுக்கு பெரிய அளவிலானஆயுதங்கள் மற்றும் வாகனங்களை இறக்கினர். பிரிவினைவாத குழுவான தெற்கு இடைக்கால கவுன்சில் (STC) ஐக்கிய அரபு எமிரேட்ஸால் ஆதரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஏமனின் ஜனாதிபதி கவுன்சிலுக்கு ரியாத் ஆதரவு அளிக்கிறது.
Kimchi Boosts Immune Health, Study Finds
A recent clinical trial suggests that eating kimchi may help control an overactive immune system and improve overall immunity. This
வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்: ``யாருக்காக இந்த ஆட்சி? - தவெக தலைவர் விஜய் கேள்வி!
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரீல்ஸ் எடுக்க அந்த சிறுவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கும் காட்சி இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் பல்வேறு கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. தவெக விஜய் புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். `உயர்ரக போதை, உச்சக்கட்ட உறவு; சர்வதேச கும்பல்' - குமரி ரிசார்ட்டில் போதை ஆட்டம்; பகீர் தகவல்கள்
Orange Juice Boosts Heart Health, Study Shows
Orange juice has several benefits for heart health, according to a new study that looked at how it affects genes.
SIT Intensifies Probe into Sabarimala Gold Theft
A Special Investigation Team (SIT) set up by the Kerala High Court is stepping up its investigation into the Sabarimala
கில் தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் என்பதை மறக்கக் கூடாது….ஹர்பஜன் சிங் பேச்சு!
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது குறித்து முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சுப்மன் கில் சமீப கால டி20 போட்டிகளில் ரன்கள் குவிக்க தவறியதே இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார். “சுப்மன் கில் தற்போது ரன்கள் குறைவாக அடித்துள்ளார். இது அவருக்கு ஒரு சிக்னல் அல்ல, ஆனால் போட்டி அதிகம் உள்ளது. அவரது இடத்தை […]
யூரோஸ்டார் பயணங்களை ஒத்திக்குமாறு பயணிகளிடம் வலியுறுத்தல்!
சேனல் டன்னலில் மேல்நிலை மின்சாரம் வழங்குவதில் உள்ள சிக்கல் காரணமாக, குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் கடைசி நிமிட ரத்துகளை எதிர்பார்க்கலாம் என்று யூரோஸ்டார் பயணிகளை எச்சரித்தது. சேனல் டன்னலில் பெரிய இடையூறு இருப்பதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை பயணத் திட்டங்களை ஒத்திவைக்குமாறு யூரோஸ்டார் பயணிகளுக்கு அறிவுறுத்தியது. பிரிட்டனுக்கும் கண்ட ஐரோப்பாவிற்கும் இடையே சேவைகளை இயக்கும் நிறுவனம் , சுரங்கப்பாதையில் மேல்நிலை மின்சாரம் வழங்கல் பிரச்சினை காரணமாக குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் கடைசி நிமிட ரத்துகளை எதிர்பார்க்கலாம் என்று பயணிகளை எச்சரித்தது. இயங்கக்கூடிய ரயில்கள் கடுமையான தாமதங்களுக்கும் கடைசி நிமிட ரத்துகளுக்கும் ஆளாகின்றன என்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது என்று நிறுவனம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
Vidya Kailasam Hangal steps into Senior Customer Marketing role at Mondelēz International
Mumbai: Mondelēz International has elevated Vidya Kailasam Hangal to the position of Director – Category Planning & Activation (Head – Customer Marketing), reinforcing the company’s focus on strengthening category-led growth and customer-centric execution across channels.Hangal confirmed the move in a LinkedIn post, stating that she is “happy to share” that she has begun her new role at the global snacking major.The promotion marks another milestone in Hangal’s long association with Mondelēz International, where she has spent over 11 years in leadership roles. Most recently, she served as Director – Omnichannel, leading the Organised Trade vertical at Mondelez India Foods. In that capacity, she was responsible for driving the Modern Trade business across B2C and B2B, as well as scaling the company’s e-commerce ecosystem, including quick commerce, e-grocery and online marketplaces in India.With more than two decades of experience in the FMCG sector, Hangal has built and scaled high-growth businesses across some of the country’s most prominent CPG organisations. Her career spans leadership roles at Mondelēz, Britannia and Coca-Cola, giving her deep exposure to brand building, go-to-market strategy and customer marketing.Before joining Mondelēz, Hangal held roles at Britannia Industries Limited, Novartis Consumer Health, and The Coca-Cola Company, among others, contributing to her broad-based expertise across categories and channels.In her new role, Hangal is expected to focus on strengthening category planning and activation strategies, aligning customer marketing initiatives with evolving retail and digital consumption trends.
Vaikunta Ekadashi Celebrated at Hare Krishna Temple
The Hare Krishna Golden Temple in Banjara Hills was filled with devotion and joy as Vaikunta Ekadashi was celebrated in
ஜெகநாத்மிஸ்ரா: NMMK நிறுவனத் தலைவரின் பிறந்தநாள்; 10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா ( PLA . Jeganath Mishra ) பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ( NMMK ) நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா 50 -வது பிறந்தநாளையொட்டி டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் காலை அங்குள்ள கம்பராய பெருமாள் கோவிலில் ஜெகநாத் மிஸ்ரா குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கப்பாண்டி மற்றும் ஏராளமான இளைஞர் அணி நிர்வாகிகள் ஊர்வலமாக கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா பிறந்தநாள் கொண்டாட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பார்மா கணேசன் தலைமை தாங்கினார்.துணை பொதுச்செயலாளர் கூடல் செல்வேந்திரன்,வியாபாரிகள் நலப்பிரிவு மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 50-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 50 கிலோ எடை கொண்ட பெரிய அளவில் வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினார்கள். விழாவில்,மாநில இளைஞரணி செயலாளர் மணி,கம்பம் தொகுதி செயலாளர் அபுதாகிர்,நகரச் செயலாளர்கள் சுப்பிரமணி, அய்யர், இளைஞர் அணி துணைச் செயலாளர் அருண்குமார்,மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் லதா,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருஷ்ணவேணி,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதைதொடர்ந்து மதுரை மீனாட்சி மிஷன் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 50 இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் உத்தமபாளையம் ,தேவாரம், , அனுமந்தன்பட்டி, உள்ளிட்ட இடங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் கிட் வழங்கப்பட்டது. ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச வேட்டி சேலை ,வழங்கப்பட்டது. சாலை விபத்தில் மரணம் அடைந்த வீரபுத்திரன் குடும்பத்தாருக்கு ரூ.1.லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து இலவச மரக் கன்றுகளும், 500க்கும் மேற்பட்டோருக்கு விதைப் பந்துகளும் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பைகள்,ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 5 ஆயிரத்து மேற்பட்டோருக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.
Jana Nayagan: 'ஜனநாயகன்'படத்தை டிரிப்யூட் போல வடிவமைத்திருக்கிறோம் - தயாரிப்பாளர் கே.வி.என்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27-ம் தேதி பிரமாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்றது. Jana Nayagan - Vijay அந்த இசை வெளியீட்டு விழாவின் காணொளிகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக இருக்கின்றன. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.வி. நாராயணன் NDTV ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழா சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்திருக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடிய நிகழ்வு இதுதான் எனவும் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இது விஜய் சாரின் கடைசி படம் என்று அவர் கூறிவிட்டார். திரையில் அவரை நாம் அனைவரும் உண்மையிலேயே மிஸ் செய்யப்போகிறோம். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக விஜய் சார் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அங்கமாக இருந்திருக்கிறார். அவரது வசனங்கள், நடனங்கள், பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் நமக்கு கொண்டாட்டமாக இருந்தது. இனி ஒரு வெற்றிடம் ஏற்படும். KV Narayanan - Jana Nayagan Producer அதை நிரப்ப முடியாது என்றே நினைக்கிறேன். விஜய் சாருடன் பணியாற்றிய அனுபவம் உண்மையிலேயே அழகானது. விஜய் சார் ஒரு கடின உழைப்பாளி. வேலையில் அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தொழில்முறை மற்றும் நெறிமுறைகள் அசாதாரணமானவை என்று நினைக்கிறேன். 'ஜன நாயகன்' படம் விஜய் சாரின் திரைத்துறை லெகசிக்கு ஒரு டிரிப்யூட்போல வடிவமைத்திருக்கிறோம். விஜய் சார் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் உள்ளன. எனக் கூறியிருக்கிறார்.
பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி: போராட்டத்தில் குதித்த கிராம அலுவலர்கள்
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை (30) காலை முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் மறு அறிவித்தல் வரை சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். திங்கட்கிழமை (29) காலை மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் தனது அரச கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த கும்பல் குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட தோடு அவரை தகாத வார்த்தைகளால் பேசி, அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அவர் ஒரு பெண் கிராம அலுவலர் என்பதால் அவரது கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். குறித்த சம்பவத்திற்கு கிராம அலுவலர்கள் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டித்ததோடு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு முன்னாள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஒன்று கூடி கருப்பு பட்டி அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை தெரிவித்தனர். குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட குறித்த நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாதிக்கப் படாதவர்களும் தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு தொடர்ந்து பல்வேறு விதங்களில் தம்மை அச்சுறுத்தி வருவதாகவும்,தாங்கள் அரச சுற்று நிருபங்களுக்கு அமையவே தமது கடமைகளை பல்வேறு இடர்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருவதாகவுதம் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்தனர். எனவே, குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும்,கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி படுத்துமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப் பட்டதோடு, தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக சிறிலங்கா ஐக்கிய கிராம அலுவலகர் சங்கத்தின் மன்னார் நகர பிரதேச கிளையின் தலைவர் கமலேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Mask Starring Kavin, Andrea Jeremiah Releases on ZEE5
The film Mask, starring Kavin and Andrea Jeremiah, has been officially announced for digital release. ZEE5 has set the streaming
பெங்களூரு வானில் முதல்முறை… சிறகை விரித்த HAL நவீன துருவ் என்.ஜி ஹெலிகாப்டர்- சிறப்புகள் என்னென்ன?
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் ஹெச்.ஏ.எல் நிறுவனம் தயாரித்த புதிய ஹெலிகாப்டர் ஒன்று சோதனை ஓட்டம் விடப்பட்டுள்ளது. இது நவீன சிவில் ஹெலிகாப்டராக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
Vetri Maaran and Kamal Haasan Rumored Collaboration
Right now, the big topic in Tamil cinema is the possible collaboration between the highly talented director Vetri Maaran and
James Cameron Criticizes Alien 3 Opening Scene
Filmmaker James Cameron has strongly criticized the 1992 sci-fi movie Alien 3, saying that its opening ruined much of the
Fans Rally for Steve in Stranger Things Finale
As fans wait for the final season of Stranger Things, social media is buzzing with opinions. Over the past five
CoinSwitch brings a rare 3D anamorphic billboard experience to Bengaluru this New Year
Bengaluru: CoinSwitch, India’s largest crypto trading platform, has unveiled a striking new brand initiative with one of India’s rare 3D anamorphic billboard executions at Nexus Mall, Koramangala, Bengaluru. Timed around the New Year celebrations, the campaign transforms a familiar urban screen into an immersive visual spectacle, blending pop culture with cutting-edge technology.Inspired by Japan’s iconic 3D anamorphic billboards, the CoinSwitch installation delivers a futuristic viewing experience that appears to leap out of the screen. The creative draws heavily from internet-led crypto culture, featuring playful, meme-inspired characters such as Dogecoin and TopCat, brought to life through eye-catching 3D animation.Designed to surprise and delight rather than promote specific cryptocurrencies, the film focuses on curiosity and cultural relevance. The visuals create a fun, unexpected moment for passersby, encouraging them to pause and engage with the experience. The campaign runs through January 2, strategically aligned with high footfall during the New Year period.While 3D anamorphic billboards have gained popularity in global markets, they remain a rarity in India. CoinSwitch’s execution therefore stands out in an increasingly cluttered outdoor advertising landscape, reinforcing the brand’s emphasis on innovation and differentiated storytelling.Rooted in creativity and responsible engagement, the campaign reflects CoinSwitch’s broader philosophy of building awareness around the digital asset ecosystem through culturally resonant and informed communication, while continuing to encourage thoughtful participation rather than hype-driven adoption.
பிக் பாஷ் லீக் தொடரில், சிட்னி தண்டர் அணிக்கு எதிராக பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது. டேவிட் வார்னர் அணி, மெகா தோல்வியை சந்தித்தது. பெர்த் அணிக் கேப்டன் 99 ரன்களை குவித்தார்.

26 C