Non Veg: வாரத்துக்கு எத்தனை முறை சாப்பிடலாம்? ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி விளக்கம்
'அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடலாமா?' விளக்கமளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன். Non Veg அசைவ உணவுகள் நல்லவையா? அசைவம் சாப்பிடுபவர்களில் ஒரு வகையினர், அசைவ உணவு பிரியர்கள். மற்றொரு தரப்பினர், புரோட்டீன் தேவைக்காக அடிக்கடி அசைவம் சாப்பிடுபவர்கள். தானியங்களைக் காட்டிலும் சில அசைவ உணவுகளில் புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பது உண்மைதான். அதேசமயம், அசைவ உணவுகளில் இயற்கையாகவே கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது. இருப்பினும், இறைச்சியில் சுவைக்காக அதிக அளவிலான எண்ணெய் சேர்த்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகிவிட்டது. மேலும், உப்பு, காரம், மசாலா பொருள்களையும் அசைவ உணவில் அதிகமாகச் சேர்க்கின்றனர். இவ்வாறு, அசைவ உணவுகளை கொழுப்புச்சத்து நிறைந்த உணவாக உட்கொள்ளும் ஆபத்தான போக்கையே பலரும் கடைப்பிடிக்கின்றனர். அசைவ உணவு நல்லதுதான். ஆனால், அதை உடலுக்குக் கெடுதலான வகையில் மாற்றி உட்கொள்வதுதான் ஆபத்தானது. Non Veg எப்படிச் சமைக்கலாம்? மீனில் உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புச்சத்து அதிகமுள்ளது. எனவே, மீன் சிறந்த உணவாகிறது. நீர்ச்சத்து அதிகமுள்ள எந்த உணவாக இருந்தாலும், அதை எண்ணெயில் பொரிக்கும்போது, நீர்ச்சத்துக்கு இணையான அளவு அந்த உணவில் எண்ணெய் சேகரமாகும். நீரிலேயே வாழ்வதால், மீனின் உடலில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது. அதை எண்ணெயில் பொரிக்கும்போது, அதன் உடலிலுள்ள ஒவ்வொரு சொட்டு நீருக்கும் ஒவ்வொரு சொட்டு எண்ணெய் அதனுள் சேர்ந்துதான் சாப்பிட ஏதுவாக மீன் தயாராகும். இதனால், மீனிலுள்ள நல்ல கொழுப்புச்சத்து, உடலுக்குத் தீமை பயக்கும் கெட்ட கொழுப்பாக மாற வாய்ப்புள்ளது. எனவே, பொரித்த மீனை அடிக்கடி அல்லது அதிகளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மாறாக, குழம்பாகச் செய்து சாப்பிடுவது நல்லது. சிக்கன், மட்டன், மீன் போன்ற பெரும்பாலான அசைவ உணவுகளையும் வெளிநாட்டினர் 'க்ரில்டு' (Grilled) எனும் எண்ணெய் சேர்க்காத குக்கிங் முறையில் தயாரிக்கின்றனர். இதன்மூலம், இறைச்சியானது, அதிலுள்ள கொழுப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து மூலமாகவே வேக வைக்கப்படுவதால், அந்த உணவிலுள்ள சத்துகள் நமக்குச் சரியாகக் கிடைக்கின்றன. இதுபோன்று க்ரில்டு உணவாகச் சாப்பிடலாம். அல்லது, இறைச்சி உணவுகள் எதுவானாலும் குழம்பாகச் செய்து சாப்பிடலாம். Non Veg வாரத்தில் எத்தனை முறை இறைச்சி சாப்பிடலாம்? ஞாயிற்றுக்கிழமை என்பது பெரும்பாலான வீடுகளில் 'மீட் டே'வாக (Meat Day) மாறிவிடுகிறது. குறிப்பாக, அன்றைய தினம் பலரும் 2 - 3 வேளைக்கு அசைவம் சாப்பிடுவதுண்டு. இதுவும் தவறான பழக்கம்தான். ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தில் எந்த நாளாக இருந்தாலும், காலை அல்லது மதியத்தில் மட்டும் அசைவம் சாப்பிடலாம். இரவில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு, வாரத்துக்கு தலா 100 கிராம் வீதம் 1 - 3 தடவை மட்டும் அசைவம் சாப்பிடுவதே சரியானது. அசைவ உணவுகள் செரிமானமாக அதிக நேரமெடுக்கும். இதுபோன்ற கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை ஒரே நாளில் பலமுறை உட்கொள்வது மிகவும் தவறு. நீண்ட, ஆரோக்கிய வாழ்வுக்கு ஒவ்வொரு நாளும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான வீடுகளில் அசைவம் தவிர, காய்கறிகள், தானியங்கள் சேர்த்த உணவுகள் சமைக்கப்படுவதில்லை. ஒருநேர உணவில் அசைவம், மற்ற இரண்டு வேளைகளில் காய்கறிகள், தானியங்கள் என நம் உணவுமுறை இருக்க வேண்டும். meat with vegetables pic அசைவ உணவுகளைச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா? இறைச்சி உணவுகளைத் திரும்பத் திரும்பச் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாது. குறிப்பாக, புளி அதிகம் சேர்த்துச் சமைக்கப்பட்ட மீன் குழம்பை பலரும் நாள் கணக்கில் வைத்திருந்து, திரும்பத் திரும்ப சூடுபடுத்திச் சாப்பிடுவார்கள். இது தவறு. Health: பூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! அதிகபட்சமாக ஒருமுறை மட்டுமே மீன் குழம்பைச் சூடுபடுத்திச் சாப்பிடலாம். மீனில் நல்ல கொழுப்புச்சத்து உள்ளது. மீன் உணவை அதிக தடவைச் சூடுபடுத்தும்போது, உடலுக்குக் கெடுதலான கொழுப்பு அமிலங்களாக (Trans fatty acids) மாறும். Fridge: ஃப்ரிட்ஜில் உணவுப் பொருள்கள்... தவிர்க்க வேண்டிய தவறுகள்; கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்..! வயதானவர்கள் இறைச்சி உணவுகள் சாப்பிடலாமா? உடலுழைப்பு குறையும்போது, நாம் செலவிடுகிற ஆற்றலுக்கு ஏற்ப உணவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அது, இறைச்சி உணவுகளுக்கும் பொருந்தும். '80 வயதிலும் நன்றாக வேலை செய்கிறேன். உடலுழைப்புடன், செரிமான பாதிப்புகளும் இல்லை' என்பவர்கள், அசைவ உணவுகளை வாரத்தில் ஓரிரு முறை (குறைவான அளவில்) சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவாக இல்லாமல், குழம்பு மற்றும் சூப் செய்து சாப்பிடலாம் என்று முடித்தார் தாரிணி கிருஷ்ணன்.
நியூஸிலாந்துடன் விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை
இந்தியா-நியூஸிலாந்து இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்துக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள பியூஷ் கோயல், அந்நாட்டு வா்த்தகத் துறை அமைச்சா் டாட் மெக்ளே உடன் இணைந்து இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் […]
K.P. Vidhyadharan | அமெரிக்கா உடனான இந்தியாவின் உறவுச்சிக்கல் எப்போது தீரும்? | Part - 3
கடந்த 28 ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் வீடுகளில் அதிகாலையில் ஒலிக்கும் இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன். எதையும் எதிர்மறைத் தன்மையோடு சொல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகும் ஜோதிடர்களுக்கு மத்தியில் மென்மையான குரலில் நம்பிக்கையூட்டும் விதத்தில் சொல்லி அனைவரையும் வழிநடத்துபவர். இவர் கூறும் வாழ்வியல் பரிகாரங்கள் பலரின் வாழ்வை மாற்றியிருக்கின்றன. பல ஆண்டுகளாக விகடனோடு இணைந்து பயணம் செய்யும் கே.பி. வித்யாதரன் அவர்களோடு ஜோதிடம் குறித்தும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஓர் அழகான உரையாடலை நிகழ்த்தினோம். இதோ அந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதி உங்களுக்காக.
``திருமணத்திற்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன - முன்னாள் சக வீரர் பகிர்வு
விராட் கோலி, கிரிக்கெட் உலகில் இந்தியாவைக் கடந்து உலக அளவில் பல தசாப்தங்களுக்கு ஒலிக்கும் பெயர். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களில் சதமடித்திருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்கும் ஒரே வீரராகப் பார்க்கப்பட்ட கோலி, சர்வதேச டி20-யிலும் டெஸ்ட்டிலும் ஓய்வுபெற்றுவிட்டதால் இப்போது அது கொஞ்சம் கடினம்தான். அது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் இப்போதைக்கு கோலியின் இலக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுப்பதாக மட்டும்தான் இருக்கிறது. விராட் கோலி அதற்கு அவரை அணியில் எடுப்பார்களா என்ற கேள்வி தேர்வுக்குழுவின் செயல்பாடுகளால் எழுந்தாலும், சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் பேக் டு பேக் டக் அவுட் ஆனாலும் கடைசிப் போட்டியில் ரோஹித்துடன் கடைசிவரை நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தது கிளாசிக். எனவே கோலியை அவ்வளவு சீக்கிரம் தேர்வுக்குழு புறக்கணிப்பதெல்லாம் கடினம். இவ்வாறிருக்க, மாடர்ன் டே கிரிக்கெட்டின் ரன் மெஷின் கோலி நேற்று முன்தினம் (நவம்பர் 5) தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில், திருமணத்துக்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசம் இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கூறியிருக்கிறார். சாதம் ரூ.318; சீஸ்கேக் ரூ.748 - விராட் கோலி உணவகத்தின் விலைப் பட்டியல் தனது யூடியூப் சேனலில் பேசிய கைஃப், `` விராட் கோலி இப்போது கொஞ்சம் அமைதியாகிவிட்டார். அவர் இப்போது ஒரு தந்தை. திருமணத்துக்கு முன்பு அவர் எப்படி இருந்ததற்கும், திருமணத்துக்குப் பிறகு அவர் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பஞ்சாப்புக்கெதிரான ஐ.பி.எல் ஆட்டத்தின்போது கோலியைப் பார்த்தேன். அப்போட்டியில் ரபாடா பந்தை தரையோடு தரையாக பவுண்டரி அடித்தார். விராட் கோலி அன்று நாங்கள் இருவரும் நல்ல உரையாடலை நடத்தினோம். அப்போது அவர், `ரபாடாவை நான் ஆரம்பத்திலேயே அடிக்காவிட்டால் பிறகு அவர் என்னை விளையாட விடமாட்டார். அதனால் முதல் பந்திலேயே அவரை அடிக்க விரும்பினேன்' என்று கூறினார். அதைத்தான் அபிஷேக் சர்மா செய்துகொண்டிருக்கிறார். கிரிக்கெட்டைப் பற்றிய அவரது புரிதலைப் பொறுத்தவரை அது அவரின் அமைதியுடனே முன்னேற்றமடைந்திருக்கிறது. இத்தனை வருடங்களாக விளையாடிய பிறகும் அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்த விரும்புகிறார். Kaif - Kohli முன்பு அவர் உங்களை சகோதரர் என்று அழைத்திருந்தால், இப்போதும் அவர் உங்களை சகோதரர் என்றுதான் அழைப்பார். அவரை நீங்கள் மைதானத்திற்கு வெளியே சந்திக்கும்போது, அவர் உங்களுடன் விளையாடியதை நினைவில் வைத்துக் கொண்டு, உங்களுக்கு அந்த மரியாதையை வழங்குவார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். கைஃப், கோலி ஆகிய இருவரும் இணைந்து சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்காவிட்டாலும், 2011 ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணியில் இணைந்து விளையாடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. `ஷமியின் கரியரை முடிக்கும் BCCI தேர்வுக் குழு’ - வெளிப்படையாக பேசிய பெர்சனல் கோச்!
பைசன்: ``பொழுதுபோக்கு படமல்ல; போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்தப் பாடம் - சீமான்
மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், அருவி மதன் உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 17-ம் தேதி பைசன் திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படக்குழுவினருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``பைசன் (எ) காளமாடன்! – பொழுதுபோக்கு படமல்ல; போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்தப் பாடம்! என்று பாராட்டி எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பைசன் காளமாடன் அந்த அறிக்கையில் சீமான், ``'பைசன்' (BISON) திரைப்படத்தைச் சிறப்புக்காட்சியில் கண்டு களித்தேன். கோயில் திருவிழாவிற்குச் சென்று வந்த குழந்தையின் உற்சாகம் படத்தைப் பார்த்து முடிக்கும்போதும் மனதில் தொற்றிக்கொண்டது. ஒரு திரைப்படம் நம் கண் முன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வே எனக்கு வரவில்லை. நம்முடன் வாழும் சக மனிதர்களின் வாழ்வியலாகவே கதைக்களம் முழுவதும் மனம் ஒன்றிப்போனது. அந்த அளவிற்கு ஆகச் சிறந்த திரைப்படைப்பை தம்பி மாரி செல்வராஜ் படைத்து அளித்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை எனத் தன்னுடைய ஒவ்வொரு திரைக்காவியங்களிலும் அடுத்தடுத்த எல்லையைத் தொடும் தம்பியின் கலைத்திறன் இப்படத்தில் மேலும் மெருகேறியுள்ளது. பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! மாரி செல்வராஜின் வலி தோய்ந்த வார்த்தைகள்தான் படத்தின் உரையாடல்களாக வெளிப்பட்டுள்ளது. “நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே என் மீது பழியும், பகையும் சுமத்தப்பட்டிருக்கிற இந்தச் சூழல எப்படி சார் புரிஞ்சிக்கறது? என்பதாகட்டும், வேலிய உடைக்கிறது மட்டுமல்ல, வேலியே போட முடியாத உயரத்திற்கு உயர்வதும் புரட்சிதான்! என்பதாகட்டும், “உங்களுக்கும் எனக்கும் பாகிஸ்தான ஜெயிக்கனும்கிறதுதான் சார் இலக்கு; அவனுக்கு மட்டும்தான் உங்களையும், என்னையும் நம்ம எல்லோரையும் சேர்த்து ஜெயிக்கனுங்கிற வெறி இருக்கு; அவன்தான் சார் விளையாடனும்” என்பதாகட்டும், சிந்திக்க வைக்கும் அழுத்தமான உரையாடல்கள் ஒவ்வொன்றுமே காலம் கடந்தும் நிற்கும் தத்துவங்களாக உள்ளத்தில் ஊடுருவி சிந்தனைப் புரட்சிக்கு வித்திடுகிறது. சீமான் கனமான கதாபாத்திரத்தை ஏற்று கதையின் நாயகனாக நடித்திருக்கும் துருவ் விக்ரம், நடித்துள்ளார் என்பதை விட வனத்தி கிட்டானாகவே வாழ்ந்துள்ளார். அந்த அளவிற்கு தம் முந்தைய படங்களை விடவும் பன்மடங்கு கூடுதல் ஒப்படைப்புடன் ஏற்ற பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் உடல் அளவிலும், உணர்வு அளவிலும் தந்தை விக்ரம் எந்த அளவிற்குக் கடினமான உழைப்பைச் செலுத்துவாரோ அதே அளவிற்குக் கடின உழைப்பை துருவின் நடிப்பில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது. `வெடிக்கும் பைசன்; துருவ்-ன் மறக்க முடியாத நடிப்பு' - பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன் சாதிய மோதல்கள் நடக்கும் சமூகத்தில் தான் பெற்ற பிள்ளைகளைக் காக்க துடிக்கும் ஒரு தந்தையின் வலி மிகுந்த வாழ்வினை தம் அசாத்திய நடிப்பால் நம் கண் முன்னே கொண்டுவந்து கலங்கச் செய்துள்ளார் அன்புச்சகோதரர் பசுபதி. அவரைப்போலவே படத்தின் முதன்மை கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்து, உயிரோட்டமாக நடித்திருக்கும் அன்புத்தம்பி அமீர் மற்றும் லால், படம் முழுதும் விளையாட்டு வாத்தியாராக வலம் வரும் அருவி மதன் உள்ளிட்ட அனைவருமே தங்களுடைய நடிப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். படத்தின் நாயகியாக காதலை வெல்ல வைக்கப் போராடும் அனுபமா பரமேஸ்வரனும், நாயகனின் அக்காவாக தம்பியை வெல்ல வைக்க வாதாடும் ரஜிஷா விஜயனும் போட்டிப்போட்டு சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களைப்போலவே உண்மையான கபடி வீரரான பிரபஞ்சன், அழகம் பெருமாள், ரேகா நாயர் உள்ளிட்ட அனைவருமே நடிப்புத்திறனால் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றனர். பைசன் காளமாடன் தீக்கொளுத்தி, இரெக்க இரெக்க, காளமாடன் கானம் உள்ளிட்ட மாரி செல்வராஜின் வலி தோய்ந்த பாடல் வரிகளுக்கும் தம் இசையால் உயிர் கொடுத்து உருக வைத்துள்ளார் நிவாஸ் பிரசன்னா. காட்சிக்குக் காட்சி பரபரப்பைக் கூட்டும் எழில் அரசுவின் ஒளிப்பதிவும், சக்தி திருவின் படத்தொகுப்பும், குமார் கங்கப்பனின் கலை இயக்கமும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மூலம் நம்மை ஒன்றச்செய்து இருக்கையோடு கட்டிப்போடுகின்றது. அதிரடி சண்டைக் காட்சிகள் அழகாகப் படமாக்கப்பட்டு படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. பைசன்: 'இயக்குநர் திலகம்' பட்டம் வழங்கிய வைகோ; `அன்புத் தம்பி மாரி செல்வராஜ்’ - பாராட்டிய துரை வைகோ அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் தம்முடைய வலி மிகுந்த வாழ்வியலைக் கலைப்படைப்பாகத் தரும் மாரிசெல்வராஜின் அளப்பரிய திரைக்கதை சொல்லும் திறன் வியக்க வைக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மனம் இருக்கிறது. அதில் சில நல்ல குணங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை பைசன் படத்தின் வழியே வெளிக்காட்டியதன் மூலம் தம் படைப்புக்கு மிகப்பெரிய நேர்மையைச் செய்துள்ளார். உலகில் உள்ள பல விளையாட்டுகள் ஒருவர் கை மற்றவர் மீது பட்டுவிட்டால் ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. பைசன் (எ) காளமாடன்! – பொழுதுபோக்கு படமல்ல; போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்தப் பாடம்! என்னுடைய அன்புத்தம்பி மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், அன்புத்தம்பி பா.இரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், அன்புமகன் துருவ் விக்ரம் அவர்களின் அசாத்திய நடிப்பில் வெளிவந்துள்ள 'பைசன்' (BISON)… pic.twitter.com/C7wjqE1aUS — செந்தமிழன் சீமான் (@Seeman4TN) November 7, 2025 ஆனால், எங்கள் தமிழின முன்னோர்கள் கண்டுபிடித்த கபடி விளையாட்டுதான் ஆகச்சிறந்த மூச்சுப் பயிற்சியாக உடலுக்குப் பெருநன்மை செய்வதோடு மட்டுமின்றி, எதிரணி வீரரைத் தொடுவதன் மூலமும், காலைப்பிடித்து, கட்டியணைத்து தடுப்பதன் மூலமும் வெற்றிக்கான புள்ளிகளைப் பெறமுடியும் என்ற விதிகளை வகுத்ததது, தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்ற சமூகச் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான புரட்சிகர சிந்தனைதான் என்பது தமிழர்கள் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய பண்பாட்டு விழுமியமாகும். அன்புமகன் துருவ் விக்ரம் உள்ளிட்ட பைசன் திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! என்று வாழ்த்தியிருக்கிறார். சீமானின் இந்தப் பாராட்டைத் தொடர்ந்து, ``என் எல்லா திரைப்படங்களையும் தொடர்ந்து கவனித்து என்னை ஊக்கப்படுத்தும் உங்களின் அத்தனை சொல்லிற்கும் அன்பிற்கும் என் நன்றியும் பிரியமும் அண்ணா என்று மாரி செல்வராஜ் ட்வீட் செய்திருக்கிறார். Bison: ``எனக்குள் ஏதோ ஒன்றை - பைசன் பட ஷூட்டிங்க் வீடியோவை பகிர்ந்து நெகிழும் நடிகை அனுபமா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்றாக யாரை விளையாட வைக்கப் போகிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வாஷிங்டன் சுந்தரை தர மறுக்கும் குஜராத் டைடன்ஸ்!
குப்பை அகற்றும் பணிகளை மேம்படுத்த கவுன்சிலர்களுக்கான நிதி அதிகரிப்பு!
சென்னையில் குப்பைகளை அகற்றும் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் கவுன்சிலர்களுக்கான நிதியானது 80 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மழை காலங்களில் பெரிதும் உதவும் .
‘வந்தே மாதரம்’காயத்தை மீண்டும் கிளறும் மோடி: வரலாற்றைத் தூண்டிவிடும் இன்றைய அரசியல்!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “வந்தே மாதரம்” பாடலில் 1937ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவால் சில
மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது அரசாங்கம்
மக்களுக்கு உறுதியான நிவாரணம் வழங்காத வரவுசெலவுத் திட்டம் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று சிறிலங்கா அதிபரால், தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவர், இது சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரி ஒருவரால் எழுதப்பட்டுள்ளது. அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத்
சிறிலங்கா- ரஷ்ய படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு
சிறிலங்கா இராணுவம் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு இடையிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயப் பயிற்சியான, “வூல்வரின் பாதை 2025” (Wolverine Path 2025) கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. மாதுருஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையில், இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெற்று வந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது களப் பயிற்சி ஒத்துழைப்பு இதுவாகும். இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.
ரில்வின் சில்வாவைச் சந்தித்தார் சுவிஸ் தூதுவர்
ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவை சிறிலங்காவுக்கான சுவிஸ் தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார். பத்தரமுல்ல,பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அண்மையில் சிறிலங்காவின் நாடாளுமன்றக் குழுவொன்று சுவிற்சர்லாந்திற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக முதல்நிலைச் செயலர் ஜஸ்டின் பொய்லெட்டும் கலந்து கொண்டுள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 வீத இலக்காக கொண்ட வரவுசெலவுத் திட்டம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீத வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்டத்தின்படி, 2025 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாக இருந்தது. 2025 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட வருமானம் 5,075 பில்லியன் ரூபாவுடன்
பலாலி உள்ளிட்ட விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு 1 பில்லியன் ரூபா
சிகிரியா மற்றும் திருகோணமலை உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிகிரியா மற்றும் திருகோணமலை உள்நாட்டு விமான நிலையங்களின் அபிவிருத்திக்காகவும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும்
AI: அடிமையா? எஜமானனா? மைக்ரோசாஃப்ட்டின் ‘மனித மையச் சூப்பர் இன்டலிஜென்ஸ்’ரகசியம்!
மைக்கோசாஃப்ட் நிறுவனம் ‘மனிதனை மையமாகக் கொண்ட சூப்பர் இன்டலிஜென்ஸ்’ (Human-Centered Superintelligence – HSI) உருவாக்குவது பற்றிய சமீபத்திய அறிவிப்பு,
உலக நகரத் திட்டமிடல் தினம்: சிறப்புப் பார்வை!
நவம்பர் 8, ‘உலக நகரத் திட்டமிடல் தினம்’ அல்லது ‘உலக நகர்ப்புற தினம்’ (World Urbanism Day / World
பிரித்தானியாவில் தவறுதலாக கைதிகள் விடுவிப்பு: அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள்
பிரித்தானியாவில் கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், பாலியல் குற்றவாளியான எத்தியோப்பிய அகதியான ஹடுஷ் கெர்பர்ஸ்லாசி கெபாட்டுவின் தவறான விடுதலை, அரசின் சிறை நிர்வாகம் மற்றும் குடிவரவு கொள்கைகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம், ஏற்கனவே இடம் பெற்றிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேலும் தீவிரமாக்கியது. அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டாலும், இந்த தவறான விடுதலை அரசுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 மாதங்களில் மட்டும் […]
32 வயதில் திடீர் மரணம்: இறப்பதற்கு முன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரல்
உலகெங்கும் சுற்றித்திரிந்து அழகான அற்புதமான சுற்றுலா தளங்களை படம்பிடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் Anunay Sood, தனது 32 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரபல புகைப்பட கலைஞரும் இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சருமான Anunay Soodக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். 1.4 மில்லியன் பாலோயர்ஸ் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கூட லாஸ் வேகாசில் இருந்தபடி வீடியோவை வெளியிட்டிருந்தார். உலகம் முழுவதும் சுற்றுலா செல்லும் […]
ரஷ்யாவை சூழ்ந்த 261 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்யா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
உக்ரைன் நடத்திய தீவிரமான ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் ட்ரோன் தாக்குதல் ரஷ்ய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 261 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தாக்குதலுக்கு ஏவப்பட்ட 261 ஆளில்லா விமானங்களையும், இரண்டு வழிகாட்டப்பட்ட வான் குண்டுகளையும் இடைமறித்து அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இராணுவ சேத விவரம் இதுவரையிலான போர் மோதலில் அழிக்கப்பட்டுள்ள […]
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972ஆம் ஆண்டு நில சீர்திருத்தச் சட்டத்தை இயற்றியது. ஒருவர் அல்லது ஒரு தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கக்கூடிய நிலத்தின் அளவுக்கு ஒரு புதிய உச்சவரம்பை (நெல் நிலத்திற்கு 25 ஏக்கர் மற்றும் பிற விவசாய நிலங்களுக்கு 50 ஏக்கர்) நிர்ணயிப்பதே இதன் நோக்கமாகும். இந்த அளவுகளுக்கு மேல் உள்ள அனைத்து நிலங்களும் தேசியமயமாக்கப்பட்டு நில சீர்திருத்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு (பௌத்த விகாரைகள், கோவில்கள், […]
யாழில். ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை , போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர் யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய பகுதியில் இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்து , போதைப்பொருளை நுகர்ந்துக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் , மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர். அதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் , நல்லூர் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 32 வயதான இருவரும் , 30 வயதான ஒருவரையுமே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோடி-அமித்ஷா போடும் கணக்கு! கோவில் தொகுதிகளுக்கு தூண்டில்? கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி...
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கோவில்களில் உள்ள தொகுதிகளை பாஜக குறிவைத்து கேட்பதாகவும், இதனால் எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை , போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர்… The post ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது appeared first on Global Tamil News .
எறும்புக்கு பயந்து இளம்பெண் தற்கொலை! தெலங்கானாவில் துயரம்-நடந்தது என்ன?
எறும்புக்கு பயந்து தெலங்கானாவை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் முதல் ராட்சத மேம்பாலம்.. 18.4 கி.மீ. மேம்பாலச் சாலை.. நடப்பு நிதியாண்டிலேயே தொடக்கம்!
கிளாம்பாக்கம் முதல் மஹிந்திரா சிட்டி வரையிலான மேம்பாலச் சாலையின் அகலம் 25 மீட்டராக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசின் மறுஆய்வுக்குப் பிறகு, இதன் அகலம் 29 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீ சரணிக்கு, தனது தாயகம் அளித்த வரவேற்பு மறக்க முடியாதது. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தன் மகளின் கனவுக்காகப் போராடிய அவரது குடும்பத்தின் உழைப்பை மதிக்கும் வகையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சரணியை நேரில் சந்தித்துப் பாராட்டினார். மேலும், அவருக்கு ரூ.2.5 கோடி ரொக்கப் பரிசு, மாநிலத்தில் ஒரு குரூப்-I அரசு வேலை, மற்றும் சொந்த மாவட்டமான கடப்பாவில் 1,000 சதுர கெஜம் வீட்டு மனை ஆகியவற்றை அளிப்பதாக அறிவித்தார். ஸ்ரீ சரணியின் இந்த வரலாற்று வெற்றிப் பயணம் மிகவும் குறிப்பிடத்தக்கது. 21 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர் இந்தியாவின் மிகவும் நம்பகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்தார். அவர் மொத்தம் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், அன்னேகே போஷ் விக்கெட்டை வீழ்த்தி, இந்தியாவுக்கு ஒரு முக்கியத் திருப்புமுனையை அளித்தார். கடப்பாவில் நிதி நெருக்கடிகளைச் சந்தித்த குடும்பத்தில் இருந்து வந்த சரணி, உள்ளூர் மற்றும் மாநில அணிகளில் கடுமையாக உழைத்து தேசிய அணியில் இடம்பிடித்தார். அவர் மாநிலம் திரும்பியபோது, கண்ணவரம் விமான நிலையத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல, உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த மகாராஷ்டிரா மற்றும் மும்பையைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனைகளுக்கும் மாநில அரசு சார்பாக உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது. அணியின் முக்கிய வீரர்களான ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மற்றும் ராதா யாதவ் ஆகியோரின் அபாரத் திறமையைப் பாராட்டி, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அவர்களுக்கு தலா ரூ.2.25 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். ஒரு கிரிக்கெட் வீரரின் வெற்றி, தனிநபர் சாதனையாக இல்லாமல், மாநிலத்தின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை இது உறுதிசெய்கிறது. இந்தக் கௌரவிப்பின் போது வீராங்கனைகள் வெளிப்படுத்திய கருத்துகள், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் உள்ள மனிதப் போராட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ், தங்கள் அணியின் மன உறுதியைப் பற்றிப் பேசுகையில், எங்களின் பலம், நாங்கள் எத்தனை வெற்றிகளைப் பெற்றோம் என்பதன் எண்ணிக்கையில் இல்லை. மாறாக, தோல்விக்குப் பிறகு நாங்கள் எப்படி எழுந்தோம் என்பதில்தான் உள்ளது என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டது, சவால்களை எதிர்கொண்ட வீரர்களின் வலிமையைக் காட்டியது. இந்த அரசுப் பரிசுகள், இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு, கடின உழைப்பும் கனவும் இருந்தால், நாடும் அரசுகளும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார். அவருக்கு […]
கழன்று விழுந்த என்ஜின், நொறுங்கிய விமானம் ; 12 பேர் பலி
அமெரிக்காவில் தனியாா் நிறுவன சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், தரையில் இருந்தவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: கென்டகி மாகாணம், லூயிஸ்வில் நகரிலுள்ள சா்வதேச விமானத்தில் இருந்து புறப்பட்ட யுபிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் புறப்பட்ட உடனேயே அருகில் உள்ள தொழிற்சாலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. கழன்று விழுந்த என்ஜின் மெக்டோனல் டக்ளஸ் எம்டி-11 ரகத்தைச் சோ்ந்த அந்த விமானம் புறப்படும்போது அதில் இருந்த ஒரு என்ஜின் கழன்று விழுந்தது. […]
இலங்கையிலிருந்து நண்டு இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க அமெரிக்கா 4 மாத அவகாசம்
இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்காக உரிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளது.… The post இலங்கையிலிருந்து நண்டு இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க அமெரிக்கா 4 மாத அவகாசம் appeared first on Global Tamil News .
விடுதலைப்போராட்ட அடையாளங்களை தமது பிழைப்பிற்காக பயன்படுத்த முற்பட்ட வர்த்தகர் ஒருவரது முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. தனது மகனை சினிமா துறைக்குள் புகுத்த முதற்கரும்புலி மில்லரின் பெயரில் இந்திய சினிமாக கலைஞர்கள் சகிதம் முன்னெடுக்கப்பட்ட நாடகமே தடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ் மக்களின் அடையாளங்களையும், எமக்காக அர்ப்பணித்தவர்களின் அடையாளங்களையும் பெருமைப்படுத்தும் முகமாக தமது நிறுவனத்தினால் வெளிவரவுள்ள மில்லர் திரைப்படத்தின் பெயரானது மாற்றப்பட்டுள்ளதாக தொடர்புடைய வர்த்தகர் இன்று அறிவித்துள்ளார். தமிழ் உணர்வாளர்கள் பலரும் திரைப்படத்திற்கு 'மில்லர்'என்ற பெயரை தவிர்க்குமாறு கோரியிருந்தனர். எங்களுடைய பயணத்தில் மிக நெருக்கமாகப் பயணித்து வருகின்ற பலர்கூட எம்மை நேரடியாகத் தொடர்புகொண்டு 'மில்லர்'என்ற பெயரைத் தவிர்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திரைப்படத்தின் பெயரை மாற்றுவதற்குத் தீர்மானித்து இருக்கின்றோம். திரைப்படத்தின் புதிய பெயராக போராட்டம்என்பதனை அறிவித்துக்கொள்கின்றோம்” என தமிழ் வர்த்தகர் அறிவித்துள்ளார்.
கரூரில் பாஜக ஆர்ப்பாட்டம்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ஸ்டாலின் பதவி விலக கோரிக்கை!
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக கூறி, திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செம்மணி:சட்டவைத்திய அதிகாரி வெளியே!
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் இழுபட்டு செல்லும் நிலையில் அகழ்வில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரியை நீக்கியமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையில் இருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். புதைகுழி அகழ்வுப் பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் ஒருவரை அதிலிருந்து நீக்கி உள்ளனர். நாடாளுமன்ற சுகாதார மேம்பாட்டு உயர்மட்ட குழுவில் நான் பங்குபற்றிய நிலையில் செம்மணி அகழ்வில் மாதிரிகளை சேகரிப்பது ஆராய்வது தொடர்பில் மேலும் ஒரு சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அதன் அடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு மேலதிகமாக யாழ். தீவகத்தில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி அகழ்வுப் பணிகளில் கடமையாற்றினார். அவ்வைத்தியர் மூன்று மாதங்கள் மட்டுமே கடமையாற்றியதாக அறியக் கிடைக்கும் நிலையில் தற்போது நீக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
455பில்லியன் மேலதிகமாக படைகளிற்கு!
அனுர அரசின் 2026ம் ஆண்டிற்கான பாதீட்டில் 455 பில்லியன்கள் பாதுகாப்புச் செலவீனதுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அது நடப்பாண்டுடன் ஒப்பிடும் போது 12 பில்லியன் ரூபாய்களால் அதிகரித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 3இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் படையினரையும் தேவையற்ற படைத்தளங்களையும் வடகிழக்கில் பேணிவருவதுடன் மொத்த பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பையும் மொத்த செலவீனத்தின் 10 விழுக்காட்டையும் அனுர அரசும் இராணுவ இயந்திரத்திற்கே பயன்படுத்திவருவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபாயாகும். மொத்த வருமானம் 5,300 பில்லியன் ரூபாயாகவும் மொத்த செலவினம் 7,057 பில்லியன் ரூபாயாகவும் அமைந்துள்ளது. இதனிடையே 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆற்றியிருந்தார். அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
சாலை விரிவாக்க பணி: இழப்பீடு வழங்க கோரி மனு தாக்கல் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு தராததால், திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளின் 20 நாள் வருமானமான ரூ.1.16 கோடி நீதிமன்றக் கணக்கில் செலுத்தப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தொடர்ந்து வருமானம் நீதிமன்றக் கணக்கில் செலுத்தப்படும்.
ஹிட்லர் என கூறியவர்களுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்த ஜனாதிபதி அனுர!
அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று (7) முன்வைக்கப்பட்டது. நிச்சயம் தண்டனை வழங்குவோம் இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார். […]
தாதியின் வெறிச் செயல் ; இரவு பணிச்சுமையால் நோயாளர்களுக்கு விஷ ஊசி ஏற்றி கொலை
ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண் தாதியாக 2020 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பணி காலத்தில், நோயாளிகளைப் பராமரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊசி போட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு மே வரையில் நடந்துள்ளது. 10 நோயாளிகள் கொலை அப்போது, இது போன்று 10 நோயாளிகளைக் கொலை செய்துள்ளார். 27 பேரைக் கொல்ல முயற்சியும் […]
டிரில்லியன் சம்பளம் :எலான் மஸ்க்க்கு டெஸ்லா கொடுத்த ஆர்டரின் பின்னணி
நாள்: நவம்பர் 7, 2025 | நிகழ்வு: டெஸ்லா ஆண்டு பங்குதாரர் கூட்டம் டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலோன்
கோவை - காரில் பெண் கடத்தலா? சாலையில் நடந்த குடும்ப சண்டை!
கோவை இருகூரில் காரில் பெண் கடத்தல் என பரபரப்பு கிளம்பிய நிலையில், சிசிடிவி காட்சிகளும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலமும் வெளியாகி உள்ளது. ஆனால், இது கடத்தல் அல்ல, குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட வாக்குவாதம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சற்றுமுன் கேரளா-தமிழ்நாடு இடையே ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்! உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
கேரளா தமிழ்நாடு இடையே தனியார் ஆம்னி பேருந்து சேவை இன்று இரவு முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க 4 மாத அவகாசம்
இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்காக உரிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் அமெரிக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடல் பாலூட்டிகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் பாலூட்டி இனங்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளிடமிருந்து பாலூட்டிகளை பாதுகாக்கும் சான்றிதழ்களை பெற்று வருகிறது. இதன் அடிப்படையில் இலங்கை குறித்த சான்றிதழை வழங்குவதற்கு தாமதித்ததன் காரணமாக இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதியை எதிர்வரும் தை மாதம் முதலாம் திகதி முதல் நிறுத்துவதற்கு அமெரிக்கா முன்னர் தீர்மானித்திருந்தது. அந்நிலையில், இலங்கை நண்டு ஏற்றுமதி தொடர்பில் அமெரிக்க மற்றும் இலங்கை இராஜதந்திர உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதை அடுத்து , சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையால் , எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் வழமை போன்று நண்டு ஏற்றுமதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு மாத கால பகுதிக்குள் தேவையான ஆவணங்களை வழங்க முடியும் என்பதனால் , தொடர்ந்தும் நண்டு ஏற்றுமதி தடையின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கான நீல நண்டு ஏற்றுமதியில் வட மாகாணம் முன்னிலை வகிக்கிறது. குறித்த ஏற்றுமதி மூலம் மாதம் 1 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை இலங்கை பெறுகிறது. வடக்கில் மன்னாரில் இருந்து நெடுந்தீவு வரையான கடற் பகுதி வருடம் முழுவதும் நண்டு தொழில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இங்கிருந்தே அதிகளவிலான நண்டுகள் அமெரிக்காவுக்கு ஆறு கிழமைகளுக்கு ஒரு தடவை ஏற்றுமதி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்'திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ
கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் அதிர்வலைகள் ஓய்வதற்குள் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில் வெள்ளை நிற காரில் ஒரு பெண், ஒரு ஆண், பின் இருக்கையில் ஒருவர் இருந்தனர். “டிரைவர் இருக்கையில் இருந்தவர், அருகில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து அடித்தபோது அவர் வலியால் கத்தினார். கோவை இருகூர் சம்பவம் அவருக்கு உதவி செய்வதற்காக சாலையில் கத்தி கூச்சலிட்டேன். அதற்குள் கார் சென்றுவிட்டது.” என்று சம்பவத்தை நேரில் பார்த்த பெண் காவல்துறையினரிடம் கூறிய ஆடியோ வெளியாகிருந்தது. இந்நிலையில் காவல்துறை விசாரணையில் அந்தப் பெண் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், தன் கணவர், மகனுடன் வெளியே சென்றபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் பேசும் வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது. கோவை இருகூர் பெண் அதில், “நாங்கள் வெளியில் சென்று வரும்போது கணவர் பழம் வாங்க இறங்க சொன்னார். நான் இறங்க மறுத்துவிட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் காரில் இருந்து இறங்கி செல்ல முயற்சித்தேன். என் கணவரும், மகனும் என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். ‘நான் வரமாட்டேன்’ என்று கூறியதற்கு கணவர் காருக்குள் இழுத்து என்னை அடித்தார். இருகூர் கார் பதிலுக்கு நானும் அவருக்கு ஒரு அடி கொடுத்தேன். மகன் சண்டை வேண்டாம் என்று சொன்னதால் காரில் புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். அவ்வளவுதான்.” என்று கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் வருவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. சாம்சனுக்காக பெரிய வீரரை விடுவிக்க முடிவு செய்துள்ளனர். அணியின் மதிப்பை காப்பாற்றதான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
கே.என்.நேரு வாக்குச்சாவடி முகவர்களுக்கு அட்வைஸ்: அடுத்த இரண்டு மாதம் ரொம்ப முக்கியம்!
இரண்டு மாதங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் கவனமா செயல்பட்டால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன் - அருச்சுனா எம்.பி
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டு இருந்த வேளை, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறங்கிக் கொண்டிருக்கும் காணாளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள நிலையில் இது தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், இந்த தடவை வடக்கு மாகாணத்துக்கு பிச்சை இல்லை! ஜனாதிபதி அவர்களின் பேச்சு புத்தகமாக தரப்பட்டிருக்கிறது. வடக்கு மாகாணத்துக்குரிய எந்த சிறப்பு நிதியும் எங்கேயும் இல்லை! வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை பாதீடில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை! போன முறை ஐயாயிரம் மில்லியன் பாதை, 1500 மில்லியன் வட்டு வாகல் பாலம் என்றெல்லாம் ஏமாற்றப்பட்டோம். நூலகத்துக்கு 200 மில்லியன் என்றார்கள். இந்தத் தடவை எதுவுமே இல்லை! போன தடவை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பது தசம் மூன்று மில்லியன் கூட பாவிக்கவில்லை. வடக்குக்காக ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் பாவிக்கப்படவுமில்லை. திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள். திருப்பி கிடைக்கப் போவதுமில்லை நித்திரை கொல்லாமல் வேறு என்ன செய்வது? ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன்! பெரிய ஆசையுடன் பாராளுமன்றத்திற்கு காலையிலேயே வந்திருந்தேன்! மிகப்பெரிய ஏமாற்றம்.. இடையில் எழும்பி போனால் சரியில்லை தானே! என பதிவிட்டுள்ளார்.
80,000 விசாக்கள் இரத்து செய்த ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கை காரணமாக இந்த பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரத்துச் செய்யப்பட்ட விசாக்கள் டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இதுவரை சுமார் 80,000 குடியேற்றமற்ற விசாக்களை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செல்லுபடியாகும் விசாக்கள் வைத்திருந்தவர்கள் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடுகடத்த வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
வெள்ளத்தில் மிதந்த பருத்தித்துறை மரக்கறி சந்தை ; தவிசாளருடன் முறுகல்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மரக்கறி சந்தை வெள்ளத்தில் மிதந்த நிலையில் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. இநிலையில் நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சந்தையை பார்வையிட வந்த போது வர்த்தகர்கள் தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமை தொடர்பில் தவிசாளரிடம் வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மரக்கறி சந்தை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக நவீன சந்தை கட்டடத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் உடனடி […]
முல்லைத்தீவில் மனைவியை கத்தியால் வெட்டி விட்டு உயிர்மாய்த்த கணவன்
முல்லைத்தீவில் மனைவி மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , கணவன் கிணற்றில் குத்தித்து உயிரிழந்துள்ளார். குமிழமுனை பகுதியை சேர்ந்த வீரசிங்கம் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மனைவியான வீ. அழகம்மா (வயது 73) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் , தம்பதியினர் இருவரும் , குமிழமுனையில் வசித்து வந்துள்ளார்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில தினங்களாக முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் ,நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இருவரும் உணவருந்திய பின்னர் தூங்க சென்ற, நிலையில் இன்றைய தினம் அதிகாலை தூக்கத்தில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு , கணவன் வீட்டு கிணற்றினுள் குதித்து உயிர்மாய்த்துள்ளார். அந்நிலையில் தனது தாயார் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் கிடைப்பதனை வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பார்வையிட்ட , மகன் சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அயலவர்கள் வீட்டுக்கு சென்று , இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை தாக்குதலை மேற்கொண்டவரை அயலவர்கள் தேடிய வேளை அவர் கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் முதியவரின் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கட்டமைப்பு இருப்பதாக மாய பிம்பம்: விஜய் மீது கே.பி.முனுசாமி விமர்சனம்!
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, மக்களை சந்திக்காமல் சினிமா புகழை வைத்து பெரிய கட்டமைப்பை உருவாக்கியதாக விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.
வங்கதேசத்தில் தீவிரமாகப் பரவும் டெங்கு! பலி எண்ணிக்கை 307 ஆக அதிகரிப்பு!
வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. வங்கதேச நாட்டில், நிகழாண்டு (2025) துவங்கியது முதல் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இதில், தலைநகர் டாக்கா மற்றும் மைமென்சிங் ஆகிய நகரங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், வங்கதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெங்குவுக்கு 5 பேர் பலியானதாகவும்; இதனால், 2025 ஆம் ஆண்டில் டெங்குவால் பலியானவர்களின் எண்ணிக்கை 307 […]
விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!
சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் வினோத் மற்றும் அலெக்ஸ் ஆகிய இருவரும் சிவகாசி அருகே உள்ள அச்சகத்தில் மரியராஜ் பணிபுரிந்து வருவதாக தகவல் அறிந்து, அவரை அழைத்து வருவதற்கு சென்றுள்ளனர். மரியராஜை காவலர் வினோத் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சிவகாசியிலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் அழைத்துச் சென்றுள்ளனர். ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்தபோது மரியராஜ் தான் வைத்திருந்த கத்தியால் வினோத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்து இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். காவல்துறையினர் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி மரியராஜ் அதே கத்தியை வைத்து தன்னை தாக்கி கொண்டுள்ளார். காயம் அடைந்த காவலர் மற்றும் மரியராஜ் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கண்டி –யாழ்ப்பாணம் வீதி விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு
கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர்உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறியும், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இதன்போது, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞனும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியின் பின்னால் […]
டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய பிளேயிங் 11 அணியை கௌதம் கம்பீர் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்கா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இடமிருக்கா? என்பது குறித்து பார்க்கலாம்.
வைகோ குற்றச்சாட்டுக்கு ஓ.பி.எஸ். பதில்.. இணைவதை தவிர வேறு வழியில்லை!
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தானும், செங்கோட்டையனும், மூத்த நிர்வாகிகளும் போராடுகிறோம். அதற்காகத்தான் தமிழக மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``என்னை அழைத்தது பாஜக தான். அங்கே என்ன நடந்தது என்பதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. கட்சி ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர்கள் கூறினார்கள். நானும் அதையேதான் சொன்னேன். பாஜகவை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை. செங்கோட்டையன் எங்களை விட்டால் பாஜகவுக்கு வேறு வழி இல்லை எனக் கூறினேன். ஆகவே, எங்களை தமிழ்நாட்டின் அரியணையில் அமரவைக்க தயாராக இருக்க வேண்டும் எனச் சொன்னேன். தன்னை முதல்வர் ஆக்கிய சசிகலாவை மிக அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசினார். என்றார். செங்கோட்டையனின் பேட்டியைத் தொடர்ந்து, இந்த விவகாரத்துக்குப் பின்னணியில் பா.ஜ.க செயல்படுவது உறுதியாகியிருக்கிறது எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. செங்கோட்டையனின் பேட்டி தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என பா.ஜ.க சொன்னதாக கேட்கிறீர்கள். அவர் அ.தி.மு.க-வில் தான் இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி அதிமுக-வை ஒருங்கிணைக்க யாரிடம் சொன்னார். அவர் கொடுத்தப் பேட்டியை முழுதாகப் பார்த்தேன். நயினார் நாகேந்திரன் 6 பேர் ஒன்றிணைக்கச் சென்றோம் என்கிறார். யாரிடம் ஒருங்கிணைக்கச் சொன்னோம் என்பதையும் அவர் தெளிவாகச் சொல்லவில்லை. நேற்று முன் தினம்தான் அ.தி.மு.க-வில் இருந்த மனோஜ் பாண்டியன் தி.மு.க-வில் இணைந்தார். அதற்குப் பின்னணியில் தி.மு.க இருக்கிறது. செங்கோட்டையன் விவகாரத்துக்குப் பின்னணியிலும் திமுக இருக்குமோ எனச் சந்தேகிக்கிறோம். எனப் பேசியிருக்கிறர். ``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது - செங்கோட்டையன் ஓப்பன் டாக்
``மரியாதை என்பது ஒருவழிப்பாதை இல்லை - கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பதிவிட்ட பிரபலங்கள்
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயனுடன் ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது. கௌரி கிஷன் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன? என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது. அப்போது நடிகை கௌரி கிஷன், ``இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்ய போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங். ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை. கௌரி கிஷன் இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார். இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். அதைத் தொடர்ந்து பாடகி சின்மயி தன் எக்ஸ் பக்கத்தில்,``கௌரி தனக்காகப் பேசத் துணிந்ததுக்கு பாராட்டுகள்! அவள் ஒரு ஜர்னலிச ஸ்டூடன்ட். மிகவும் புத்திசாலி. அவள் பிரபலமடைவதற்கு முன்பிருந்தே எனக்கு அவளைத் தெரியும். என் நினைவில் இருக்கும் அவள் எப்போதும் நல்லவளாகவும், அன்பானவளாகவும், உணர்வுள்ள மனுஷியாகவும் மட்டுமே. அந்த பத்திரிகையாளர் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்தது வெட்கக்கேடானது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் நடிகை குஷ்பு, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், ``பெண்களின் எடை குறித்து கேள்வி எழுப்புவது வெட்கக்கேடானது; பெண்களின் எடை குறித்து பேசுவது உங்களின் வேலையும் இல்லை. இப்படி பேசுபவர்களின் குடும்ப பெண்களிடம் நாங்களும் இதே கேள்வியை கேட்கலாமா?'' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். கௌரி கிஷன் தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில், ``பத்திரிகைத்துறை தனது தரத்தை இழந்துவிட்டது. சில பத்திரிகையாளர்கள் ஜர்னலிசத்தை சாக்கடைக்கு இழுத்துச் செல்கிறார்கள். ஒரு நடிகையின் எடை எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்வதா அவர்களின் வேலை? இந்த கேள்வியை கதாநாயகர்களிடம் கேட்பார்களா? இதெல்லாம் அவமானம். தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பதிலடி கொடுத்த கௌரி கிஷனுக்கு வாழ்த்துகள். மரியாதை என்பது ஒருவழிப்பாதை இல்லை, உங்களுக்கு மரியாதை தேவை என்றால் அதை கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``கௌரி கிஷன் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். உங்களிடம் கேள்வி கேட்ட நிருபரின் செயலும் கேள்வியும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, வெட்கக்கேடானது. நடிகைகள் இன்னும் இந்த அநாகரீகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். Gouri Kishan: ``96 மாதிரிப் படம் வரலையே? - நடிகை கௌரி கிஷனின் 'நச்' பதில்!
KH 237: மலையாள சினிமாவிலிருந்து களமிறங்கும் டீம் - வெளியான அப்டேட்
கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய `நாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸாகி இருக்கிறது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவருடைய அலுவலகத்திற்கு கமல்ஹாசனுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய 237-வது திரைப்படத்தின் படக்குழுவினரை அறிவித்திருக்கிறார்கள். KH 237 Film ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவ் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக களமிறங்குகிறார்கள். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்தாண்டே வெளியாகியிருந்தது. தற்போது படத்திற்கான முதற்கட்டப் பணிகளில் இயக்குநர்கள் அன்பறிவ் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். படத்தின் திரைக்கதை பணிகளை மலையாள சினிமாவின் திரைக்கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் கவனித்து வருகிறார். மலையாள இயக்குநர்களான ஆஷிக் அபு மற்றும் திலீஷ் போத்தனுடன் இணைந்து பல ஹிட் படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் ஷ்யாம் புஷ்கரன். மலையாள சினிமாவைத் தாண்டி மற்ற சினிமாக்களிலும் பெரியளவில் கவனம் ஈர்த்த `கும்பளங்கி நைட்ஸ்' படத்தின் கதையாசிரியரும் இவர்தான். மலையாள சினிமாவின் முக்கியமான திரைக்கதையாசிரியர் எனக் கொண்டாடப்படும் ஷ்யாம் புஷ்கரன் கமல்ஹாசனின் 237-வது படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி தருகிறார். KH 237 Film படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜோய் கமிட்டாகியிருக்கிறார். மலையாள, தமிழ், தெலுங்கு என சமீப நாட்களாக தூள் கிளப்பும் இசையைக் கொடுத்து வருகிறார் ஜேக்ஸ் பிஜோய். `லோகா', `துடரும்', `நரிவேட்டை' என ஜேக்ஸ் பிஜோய் இந்தாண்டில் மட்டும் மலையாள சினிமாவில் பல சார்ட் பல்ஸ்டர்களைக் கொடுத்திருக்கிறார். அதைத் தாண்டி தெலுங்கிலும் `சரிபோதா சனிவாரம்' படத்திற்கு இசையமைத்து தற்போதைய சென்சேஷனாக ஜேக்ஸ் பிஜோய்தான் இந்தப் படத்தின் மியூசிக் டைரக்டர். இதைத் தாண்டி ஒளிப்பதிவாளராக சுனில்.கே படத்திற்குள் வந்திருக்கிறார். `ஆடு ஜீவிதம்' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா எங்கும் கவனம் ஈர்த்தவர் இவர். படத்தொகுப்பாளராக ஷிமீர் என்பவரும், கலை இயக்குநராக வினேஷ் பங்லன் கமிட்டாகியிருக்கிறார்கள். KH 237 Film வினேஷ் பங்லன், `லக்கி பாஸ்கர்', `லோகா' உள்ளிட்ட பல படங்களுக்கு செட் அமைத்தவர். கிட்டத்தட்ட படத்தின் தொழில்நுட்ப குழுவிற்குள் மலையாள சினிமாவைச் சேர்ந்த பலரைதான் இப்படத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறையில் மருத்துவர், செவிலியர் வேலைவாய்ப்பு; ரூ.1.16 லட்சம் வரை சம்பளம்!
கோவை மாவட்டத்தில் கோயிலில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோவை மாவட்டத்தில் செயல்படும் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருகோயில் மருத்துவப் பிரிவில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்: திமுக மீது காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார்!
2026 தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் திமுகவினர் தலையிட்டு முறைகேடு செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
கௌரி கிஷன் விவகாரம்: ``நடிகர், இயக்குநரின் மௌனமும் வன்முறைதான் - இயக்குநர் பிரேம் குமார்
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயகனுடன் ‘OTHERS’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது. 96 நடிகை கெளரி கிஷன் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன? என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது. அப்போது நடிகை கௌரி கிஷன், ``இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங். ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை. கௌரி கிஷன் இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார். இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். அதைத் தொடர்ந்து 96, மெய்யழகன் போன்ற படங்களில் இயக்குநர் பிரேம்குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவரின் பதிவில், ``நடிகை கௌரி கிஷன் மீது ஏவப்பட்ட வன்மமும் வக்கிரமும் நிறைந்த கேள்விக்கு அவர் கொடுத்த சாட்டையடி பதில் சரியே. ஒரு பெண்ணாக தன்னந்தனியாக தன் தரப்பு நியாயத்தை தைரியமாக நிலைநாட்டியது பாராட்டுக்கு உரியது. OTHERS திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரின் வக்கிரமான பேச்சை அங்கிருந்த மற்ற யாரும் தடுக்கவில்லை. மாறாக அதற்கு கௌரி பதில் தரும்போது, கூட்டமாக கூச்சலிட்டு தடுத்தது கோழைத்தனமான இழிசெயல். செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும். அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன் இந்தச் செயலை செய்தவர்களை நான் பத்திரிகையாளர்களாகவே கருதமாட்டேன். வக்கிரமாக கேள்வி கேட்கும் நீங்களும் இனி கேள்விக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதனால் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆணவம் வேண்டாம். எல்லோரைப் போல நீங்களும் உங்கள் வருமானத்துக்கு ஒரு தொழில்தான் செய்கிறீர்கள். சினிமாவுக்கு இலவச சேவை ஒன்றும் செய்யவில்லை. அது தேவையும் இல்லை. இனியாவது ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உண்மையான அறம் சார்ந்த பத்திரிக்கையாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள். தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை. ஒருவேளை எதிர்த்துப் பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால், அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை. மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும். இயக்குநர் பிரேம் குமார் இந்த இழிசெயலை அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள் கருத்தில்கொண்டு கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நன்றி! இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், Youtubers மட்டும் வரக்கூடிய முறை மற்றும் நிலை வரவேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Gouri Kishan: ``96 மாதிரிப் படம் வரலையே? - நடிகை கௌரி கிஷனின் 'நச்' பதில்!
Others Review: திருநர் சமூகத்தினரைப் பொறுப்புணர்வுடன் காட்சிப்படுத்த வேண்டாமா? அதர்ஸ் அரசியல் சரியா?
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சாலையில் திட்டமிடப்பட்ட கொள்ளை முயற்சி, எதிர்பாராத விதமாகக் கோரமான வேன் விபத்தாக முடிகிறது. வேனிலிருந்த நான்கு பேர் உயிரிழக்கின்றனர். இந்த வழக்கை உதவி ஆணையர் மாதவ் (ஆதித்யா மாதவன்) விசாரிக்கத் தொடங்குகிறார். பிரேத பரிசோதனை அறிக்கையில், வேனை ஓட்டி வந்த டிரைவர் அங்கு இல்லை எனவும், இறந்தவர்களில் மூவர் பார்வையற்ற பெண்கள் எனவும், அவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. Others Review | அதர்ஸ் விமர்சனம் இது ஒருபுறம் இருக்க, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மூலம் குழந்தை பெற முயலும் மருத்துவமனைகளில் சதி நடப்பதாகவும் காட்டப்படுகிறது. இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியில் நடக்கும் குற்றம் என்ன என்பதற்கு விடை காண்பதே ‘அதர்ஸ்’ படத்தின் கதை. Aaromaley Review: 90ஸ் கிட்ஸின் காதலும், மேட்ரிமோனியின் மறுபக்கமும்! எமோஷன் எடுபடுகிறதா? போலீஸ்காரராக விசாரணைக் காட்சிகளில் உறுதி, மிகை நடிப்பில்லாத உடல்மொழி என பாஸாகிறார் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன். குறைந்த இடத்தில் வந்தாலும் தனக்கான பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் நாயகி கௌரி கிஷன். முக்கியமான கதாபாத்திரத்தில் சுமேஷ் மூர் மீமிகை நடிப்பை அள்ளித் தெளித்திருக்கிறார். அப்பாவி போலத் தோன்றும் முதல் காட்சியிலிருந்து இறுதிவரை அந்த மீட்டருக்கு அதிகமான நடிப்பு குறையவே இல்லை. இவர்கள் தவிர ஹரீஷ் பேரடி, நண்டு ஜெகன், அஞ்சு குரியன் ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள். Others Review | அதர்ஸ் விமர்சனம் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இரவு நேரக் காட்சிகளில் சிறப்பான ஒளியுணர்வுடன் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அறைக்குள்ளே கேமரா கோணங்கள் நுழைய, கலை இயக்கத்தில் இருக்கும் குளறுபடிகள் செயற்கையான உணர்வையே கொடுக்கின்றன. பிளாஷ்பேக்கில் பெண்ணாக வரும் வேதா கதாபாத்திரத்தின் மேக்கப், வையாபுரியின் கோட் சூட் என ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்புக் குழு பல இடங்களில் சறுக்கியிருக்கிறது. Bad Girl Review: புதுமையான திரைமொழியில் தனித்துவம் பெரும் படைப்பு; இந்த பேட் கேர்ள் சொல்வது என்ன? இயக்குநர் அபின் ஹரிஹரனின் இயக்கம், பல இடங்களில் சுமாரான திரைமொழியையே கொண்டிருக்கிறது. பின்னணி இசையைப் பொறுத்தவரை ஜிப்ரான், 'ராட்சசன்' பாணியிலான மிரட்டலான பாணியைத் தொடர்கிறார். ஆனால் பாடல்கள் மனதில் பதியவில்லை. படத்தொகுப்பாளர் ராமர் முதல் பாதியில் வேகமாகக் காட்சிகளை நகர்த்தி த்ரில்லர் பாணியைத் தக்க வைக்க முயல்கிறார். இருப்பினும் இரண்டாம் பாதியின் அவரது கத்திரியையே குழம்பிப் போக வைத்திருக்கிறது திரைக்கதை. அதுவும் அந்தக் காதல் பாடலெல்லாம் அநாவசியம் சாரே! பொதுவாக த்ரில்லர் படங்களில் நாம் ஒன்று நினைக்க, அது அப்படி கிடையாது என்று மற்றொரு கணிக்க முடியாத விஷயத்தை அதிர்ச்சி வைத்தியமாகச் சேர்ப்பது வழக்கம். அந்த பார்முலா வெற்றியும் அடைந்திருக்கிறது. ஆனால் இங்கே இயக்குநர் அப்படியான ‘ஷாக் வேல்யூ’வை மட்டுமே நம்பி, திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். Others Review | அதர்ஸ் விமர்சனம் சினிமா, சமூகத்தில் கருத்து வடிவமைப்பை உருவாக்கும் செல்வாக்கு மிகுந்த கருவி; அதைப் பொறுப்புடன் கையாளாமல் அபத்தங்களுக்கு மேல் அபத்தம் சேர்த்திருக்கிறது திரைக்கதை. படம் முழுவதும் “அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள்; சமூகம் அநீதி செய்தது” என்ற வசனங்களை இடைச்செருகி, திருநர் சமூகத்தின் துயரத்தை வெளிப்படுத்துவது போலத் தோன்றினாலும், அதே வலியை அச்சாணியாகக் கொண்டு ஆதரவற்ற பார்வையற்ற பெண்களை திருநம்பி கொல்வது போலக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா? விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவர் இன்னொரு பலவீனமானவரைக் கொல்கிறார்; அதை நியாயப்படுத்துகிறார் என்று வைக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் அடிப்படை நெறியிலேயே தவறல்லவா?! மேலும் விளிம்புநிலை சமூக மக்களை வெறும் ‘ஷாக் வேல்யூ’வுக்காக, அதிர்ச்சியூட்டும் விதமாக மட்டும் கதைக்களத்தில் பயன்படுத்திய விதம் கண்டிக்கத்தக்கது. ஒடுக்குமுறையையும் சமூக வன்முறையையும் சந்திக்கும் திருநர் போராட்டத்தைப் பதிவு செய்யாமல், அது குறித்து 'குற்றவியல் சித்திரம்' உருவாக்கும் அணுகுமுறை, அவர்கள் மீது அனுதாபத்தை உருவாக்காமல் ஆபத்தான பார்வையையே உருவாக்கும்! மேலும் திரைக்கதையில் பாலின அடையாளம், கருத்தரிப்பு தொழில்நுட்பம், மருத்துவ செயல்முறைகள் ஆகியவை சுவாரஸ்யத்துக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கரு முட்டைகளை வைத்து intersex குழந்தைகளை உருவாக்க “சதி” செய்வது போலக் காட்டுவது, அறிவியல் மற்றும் சமூக ரீதியாக மிகுந்த தவறான, பயமுறுத்தும் செயலாகும். Others Review | அதர்ஸ் விமர்சனம் திரையில் காட்டப்படும் இத்தகைய திரிப்புகள், உண்மையான மருத்துவ செயல்முறைகளின் மேலுள்ள நம்பிக்கையைப் பாதித்து, சதிகோட்பாடுகளுக்கு வழிவகுக்கும். சமூகத்தின் உண்மையான பிரச்னைகள், மருத்துவ அணுகல், கல்வி சமத்துவம், சட்டப் பாதுகாப்பு போன்ற விஷயங்களைக் கூடுதல் பொறுப்புடன் கையாளுவது ஒரு படைப்பாளியின் கடமை. இவை அனைத்தையுமே காற்றில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'அதர்ஸ்'. மொத்தத்தில் அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட திரைக்கதை, சுமாரான தொழில்நுட்பம் ஆகியவற்றால் உருவாகியிருக்கும் இந்தப் படம், நம் கண்டிப்பைச் சம்பாதிக்கும் படைப்பு! Kantara: Chapter 1 Review: அசரடிக்கும் மேக்கிங் - `காந்தாரா - 2' தனித்து நிற்பது எங்கே?
Mumbai: Surya Roshni, one of India’s most trusted and respected brands in Lighting, Fans, Home Appliances, Steel, and PVC pipes, has announced the elevation of Parul Phadke as the new Head of Marketing & Advertising for its Lighting & Consumer Durables business.Parul brings a dynamic and forward-looking marketing vision, backed by dual postgraduate degrees in Marketing, an MBA, and a recent certification in Digital Marketing from MICA. Her appointment reinforces Surya Roshni’s commitment to brand innovation, customer engagement, and sustained leadership in the consumer durables segment.Before this elevation, Parul Phadke served as AGM – Marketing Communication at Surya Roshni, where she played a key role in shaping the company’s brand and communication strategies. In her new role, she will lead the marketing and advertising functions, driving creative, data-led campaigns that resonate with Surya Roshni’s diverse customer base while strengthening its market presence across India.A seasoned professional with extensive experience in brand management, corporate communication, public relations, and event management, Parul has been instrumental in spearheading Surya Roshni’s digital marketing transformation. Her strategic use of data-driven insights, social media engagement, and integrated advertising has significantly enhanced the brand’s visibility and consumer connect.
JioStar’s MegaBlast lights up MyG’s 20th anniversary celebrations across Kerala
Mumbai: MyG, a retail electronics and mobile chain, celebrated its 20th anniversary with a state-wide Mega Sale that marked two decades of trust and service to consumers across the state. To amplify this milestone, MyG partnered with JioStar’s MegaBlast — India’s largest one-day advertising takeover across television — creating unparalleled excitement and engagement throughout Kerala.MegaBlast, an innovative ad property conceptualized by BMEG Pvt. Ltd. in collaboration with Asianet Network, went live across Asianet’s Movies and GEC channels, delivering a full-day brand takeover experience that dominated audience attention across households.The MegaBlast format represents a first-of-its-kind high-impact advertising innovation, enabling brands to command attention across television and digital within a single day. The property integrates multiple ad units — including Brand Bridges, Spotlight Frames, Pause Ads, Stings, and Mega Spots — to build an immersive storytelling experience and ensure 360-degree visibility.Through this association, MyG achieved exceptional statewide reach, capturing audience attention and reinforcing its brand leadership during its landmark 20-year celebration.Speaking about the partnership, A.K. Shaji, Chairman, MyG India Pvt. Ltd., said, “As part of our 20th anniversary celebrations, we are thrilled to partner with Asianet for a special property titled ‘MegaBlast.’ This is a truly unique and first-of-its-kind initiative, and I’m eager to see how it resonates with the viewers. Wishing the entire Asianet team the very best, and looking forward to many more creative collaborations in the future.” Lijo Thomas, Sr. VP & Business Head, BMEG Pvt. Ltd., added, “MegaBlast is among the most impactful advertising properties on a GEC, crafted to capture undivided consumer attention throughout the day through multiple ad units. We are proud that BMEG, in partnership with the Asianet team, transformed this concept into reality after several rounds of brainstorming and refinement. We’re now eagerly looking forward to seeing how this innovative property performs for our client, MyG India Private Limited.” As JioStar continues to push creative and technological boundaries within the regional entertainment landscape, MegaBlast stands as a testament to its commitment to delivering unmatched advertising impact for brands. With its powerful storytelling formats and expansive reach, JioStar is redefining how brands connect with consumers — one MegaBlast at a time.
India’s ‘Official Apology Statement’ Trend: When Brands Say Sorry for Being Too Good
Apologies are usually about admitting mistakes, but not this time. The internet is now flooded with mock apology statements from brands and influencers who are “sorry” for being too amazing. From Skoda and Haldiram’s to designers like Rina Dhaka and chefs Ranveer Brar and Rakhee Vaswani — everyone seems to be jumping on the bandwagon. The tone? Playful, self-aware, and dripping with irony. From remorse to mock remorse The tongue-in-cheek trend, which reportedly began in the Philippines last year, has now found a massive following in India. Each post imitates the tone and format of a formal corporate apology — complete with subject lines like “Re: Unintended Customer Delight” , structured paragraphs, and even letterhead-like visuals. The twist: instead of admitting a blunder, brands apologise for being too irresistible, too efficient, or simply too good. What started as a clever creative device has now turned into a full-blown social media moment. Electronics giants, snack makers, fashion designers, chefs, and even cement conglomerates are now posting mock letters expressing regret for “exceeding expectations” or “causing unintended cravings.” Brands join the “apology spree” In recent weeks, India’s social media feeds have seen an “apology spree” of sorts. Skoda, T-Series, Reliance Digital, Adani Ambuja Cement, Haldiram’s, Keventers, and Banana Leaf are among the brands that have issued their mock apologies. Even car dealerships such as Volkswagen Downtown Mumbai have joined in. Adani Ambuja Cement, for example, jokingly “apologised” to customers who are unable to drill holes or put nails in their walls after using its ultra-strong cement. But perhaps the most talked-about instance was Volkswagen Downtown Mumbai’s faux-apology, which went viral for all the right — and wrong — reasons. The dealership’s post addressed Volkswagen owners who were supposedly facing “unexpected side effects” after purchasing their cars. Among the listed “issues” were neighbours waving more often, family members borrowing the car for longer errands, and owners taking spontaneous road trips because the drive was too enjoyable to end. The statement concluded with a tongue-in-cheek apology for making Volkswagen ownership “irresistible.” While many praised the wit and creativity, some critics found the move tone-deaf — especially since it came from a dealership, not the official automaker, leading to confusion and criticism from actual customers. The psychology behind the “apology” So why is everyone suddenly saying sorry for being too good? Marketing experts say the trend works because it flips expectations. The serious tone of an apology letter immediately grabs attention, and when the punchline is revealed — that the “fault” is being too desirable — it sparks delight and engagement. “The format humanises brands,” said one social media strategist. “It shows self-awareness and humour — traits people relate to more than polished corporate messaging.” On LinkedIn, the trend has triggered debate. One user quipped, “It’s rarer than a sincere corporate mea culpa, yet infinitely more effective.” Another argued, “Apologies should mean something. They’re for when a brand messes up and owns it — not for when it wants attention.” Love it or hate it — it’s working Critics may find the gimmick overused, but there’s no denying its impact. The format’s formal-meets-funny tone cuts through cluttered social feeds, and its shareable nature helps brands trend overnight. Still, as some marketers point out, the joke works best when it feels authentic. For brands with real service issues or trust deficits, using the apology trope for humour could easily backfire. Whether it’s seen as clever creativity or superficial self-promotion, one thing’s clear: India’s social media is in full-blown apology mode — but this time, everyone’s saying sorry not for mistakes, but for being just too good at what they do.
இந்தோனேஷியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு – 54 பேர் காயம்
இந்தோனேஷியாவில் பாடசாலை வளாகம் ஒன்றில் அமைத்திருந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற… The post இந்தோனேஷியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு – 54 பேர் காயம் appeared first on Global Tamil News .
கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு: என்ன நடந்தது?
உத்தரப் பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த 30 வயது இளைஞர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் போது உயிரிழந்த இளைஞர் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரியும் 30 வயது இளைஞர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மைதானத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை காலை நடைபெற்ற இந்த சம்பத்தில் உயிரிழந்தவர் ரவீந்திர அஹிர்வார்(Ravindra Ahi) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. என்ன […]
ஆட்டோகிராப் படத்தை ஏன் ரீ ரிலீஸ் செய்கிறேன் –சேரன் விளக்கம்!
டைரக்டர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்
Rukmini Vasanth: 'மென் மயங்கிக் கிடந்தேனடி என் போதையே' - நடிகை ருக்மினி வசந்த் க்ளிக்ஸ் |Photo Album
Rukmini Vasanth: ``சிறு புன்னகை சிதறினாள் - ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album
Boost partners with Chennai Esports Global Championship to fuel gamer endurance and performance
Chennai: Boost, from Hindustan Unilever Limited (HUL), has joined the Chennai Esports Global Championship (CEGC) — India’s premier state-backed esports tournament — as the ‘Powered By’ Partner.The partnership was co-conceptualized by Boost Team and WPP Media’s Team Fulcrum, whose strategic vision identified esports as a high-impact avenue for purpose-led storytelling. The collaboration marks a pivotal step in connecting a legacy performance brand with an emerging digital culture that mirrors its core values of endurance, resilience, and determination.Organised by the Sports Development Authority of Tamil Nadu (SDAT) in collaboration with Skyesports, the CEGC represents a landmark moment for Indian esports as the first international tournament hosted under a state government initiative. Set to take place at the Jawaharlal Nehru Indoor Stadium, Chennai, the event will feature two marquee titles.The CEGC – Counter-Strike 2 (CS2) tournament will be held from November 7 to 9, bringing together top teams from India, Southeast Asia, and Europe competing for a share of the prize pool. This will be followed by the CEGC – Battlegrounds Mobile India (BGMI) championship from November 14 to 16, featuring India’s leading mobile esports teams vying for national glory. Together, the two tournaments boast a combined prize pool of ₹1 crore, making the Chennai Esports Global Championship one of the most prestigious and rewarding esports events ever hosted in India.[caption id=attachment_2479834 align=alignleft width=200] Zakir Karim[/caption] “Esports is not just about quick reflexes or winning a match. It is about consistency, preparation, and the ability to perform under pressure,” said Zakir Karim, VP of Lifestyle Nutrition at Hindustan Unilever Limited. “ These are the same qualities we have always celebrated with Boost Protein. The Chennai Esports Global Championship is the perfect platform to reflect that spirit, as it celebrates competitive excellence while showcasing the true potential of this growing industry.” Amin Lakhani, President - Client Solutions, WPP Media South Asia, said, “Esports represent a new frontier for youth engagement and brand-building in India. Boost Protein’s association with the Chennai Esports Global Championship brought to life by Team Fulcrum, exemplifies how purpose-led brands can lead culture through relevance and resilience. This partnership is not just a sponsorship; it’s the creation of an integrated media ecosystem where creativity and performance come together to strengthen brand presence, build affinity, and deliver measurable business growth in one of the world’s fastest-growing digital arenas.” “The Chennai Esports Global Championship is more than a tournament. It reflects how far Indian esports has come and where it is headed next,” said Shiva Nandy, Founder and CEO of Skyesports . “Partnering with Boost Protein strengthens that vision, as it brings together a legacy performance brand with one of the fastest-growing communities of young competitors. This collaboration represents the new intersection of sports, mainstream brands, and digital culture, and we are proud to lead that transformation from Chennai to the world.” As esports continues to gain global recognition through its inclusion in the Olympics, Asian Games, and Commonwealth Games, this partnership reinforces support for India’s next generation of esports athletes.Backed by the Government of Tamil Nadu and envisioned by the Hon’ble Deputy Chief Minister Thiru. Udhayanidhi Stalin, the Chennai Esports Global Championship aims to establish Chennai as a long-term global esports destination. Beyond competition, the event will drive community engagement, cultural exchange, and youth development, positioning Tamil Nadu as a leader in emerging sports and digital entertainment.
வேளச்சேரி- பரங்கி மலை ரூட்டில் LOCO ரயில் ஓட்டம் சக்ஸஸ்! ஹேப்பி மோடில் சென்னை வாசிகள்...
வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளந்து. விழுப்புரம் மாவட்டத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sahi urges traders to embrace speed and intelligence with its latest campaign
Mumbai: Sahi, a new age broker and high-performance trading platform, launched a new brand inspiring traders to upgrade from outdated technology and embrace a faster, smarter, and more powerful trading experience. With its 'fresh start' visual narrative, the latest campaign from Sahi invites India’s trading community to leave behind outdated, sluggish systems and step into a new era of speed and intelligence.The cinematic narrative captures the traders deleting the lagging applications, cleaning up cluttered setups, and embracing streamlined workflows that reflect the cultural moment of post-festive renewal. Sahi’ In-house Charts arms traders with real-time market insights, fast execution, and a clean interface that intuitively helps to make better decisions in the moment. Functional superiority blended with emotional resonance makes this campaign reinforce Sahi Charts' commitment to helping traders trade with clarity, confidence, power, and a competitive edge.With its pro-grade features, lightning-fast execution, and AI-driven infrastructure, adoption has accelerated with over 800,000 app downloads in ten months and a 50% month-over-month increase in active traders. Notably, within five months, 20% of users have traded 500+ times, and more than 50% have placed 100+ trades, underlining deep engagement and trading intensity on the platform. Sahi achieves this while offering up to 50% lower brokerage with just Rs. 10 per order. This is enabled by a lean operational model and extensive AI leverage across internal teams. “Too many traders today still rely on outdated tools that slow them down when it matters most. This campaign is our call to action to equip traders with the speed, intelligence, and power they need to compete in today’s markets. At Sahi, our mission is to build technology that amplifies their edge to level the playing field,” said Dale Vaz CEO Sahi. Reedhi Mukherjee, Head of Brand, Sahi, said, “We wanted the film to tap into a universal truth, that the tools you use define your performance. This campaign is a reminder to traders that it’s time to let go of what holds them back and embrace technology built for high performance. At its heart, Sahi isn’t just about charts; it’s about giving traders the power to trade on their own terms.” With this campaign, Sahi reinforces its position as India’s High-Performance Platform for active investors and traders, one that combines cutting-edge technology with human-centered design.https://youtu.be/58gxCbuAK1U?si=Yu5Ejo3cDA618TZn
ரூ.224 கோடியில் தமிழ்நாட்டில் புதிய நூலகங்கள்! அந்த 3 லக்கி மாவட்டங்கள் என்னென்ன?
தமிழ்நாட்டில் 3 முக்கிய மாவட்டங்களில் மெகா நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கும் திட்டத்திற்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளன. அது எந்தெந்த மாவட்டங்கள் என்று விரிவாக காண்போம்.
ஜப்பான் கடலை நோக்கி வட கொரியா ஏவுகணையை ஏவியது!
பியோங்காங் , சியோல் மற்றும் வாஷிங்டன் இடையேயான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், வட கொரியா வெள்ளிக்கிழமை கிழக்கு கடல் நோக்கி சந்தேகிக்கப்படும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது . தென் கொரியாவின் மேற்கு மாவட்டமான டேக்வானைச் சுற்றியுள்ள ஒரு உள்நாட்டுப் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 700 கிலோமீட்டர் (434 மைல்) குறுக்கு நாடு பறந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர். தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் ஏவுதல் தயாரிப்புகளை முன்கூட்டியே கண்காணித்ததாகவும், இப்போது விவரங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அவர்கள் கூறினர். ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள நீரில் ஒரு ஏவுகணை, ஒருவேளை பாலிஸ்டிக் ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி செய்தியாளர்களிடம் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பியோங்யாங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து இரண்டு வார ஏவுகணை ஏவுதல்களுக்குப் பிறகு, வட கொரியா இந்த ஏவுதலை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை . இந்த ஏவுகணை ஏவுதலை ஜெர்மனி உடனடியாகக் கண்டித்துள்ளது, இது பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ளது. பல ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களால் கோரப்பட்டபடி, சட்டவிரோதமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குதல், சோதனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு DPRK-ஐ நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் ஒரு சமூக ஊடகப் பதிவில் எழுதியது.
திருவாரூர்: ”அரசுப் பள்ளியை வீடாக நினைத்து வளர்ச்சிக்கு உதவனும்” - நெகிழும் சிங்கப்பூர் தொழிலதிபர்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகிறார். வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய காரணமான தான் படித்த அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கும், பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களின் கல்விக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார். கல்வி மட்டுமே வாழ்க்கையில் உயர்வதற்கான வழி, ஏழ்மையான நிலையில் இருந்த நான் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருப்பதற்குக் காரணம் கற்ற கல்வி மட்டும்தான் எனப் படிப்பை ஊக்குவிக்கும் விதமாக திருமக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்வி திருவிழா நடத்தி மாணவர்களுக்கு உதவி வருகிறார் பழனிச்சாமி. திருமக்கோட்டை அரசுப்பள்ளி விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்திருவிழா நடைபெற்றது. இதில் ஏழ்மையான பின்னணியில் இருந்தும், நன்றாகப் படித்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.50,000, ரூ.25,000, ரூ.15,000 வீதம் நிதி வழங்கினார். மேலும் விளையாட்டில் சிறந்து விளங்கும் 60 மாணவ, மாணவிகளுக்குத் தலா 1000 வீதம் ஊக்கத்தொகை வழங்கினர். ஊரே கூடி கோயில் திருவிழா போல் அரசுப் பள்ளியில் கல்வி திருவிழாவைக் கொண்டாடியுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பழனிசாமி, ஸ்ரீ விசாலாட்சி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் இதனைச் செய்து வருகிறார். புஷ்பக விமானம்... அனுமனின் நிலவுப் பயணம்... இனி நம் பிள்ளைகளின் கல்வி இதுதானா? இது குறித்து தலைமை ஆசிரியர் தங்கபாபு கூறியதாவது, ஏழ்மையான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த பழனிசாமி, சிறு வயதில் பசி கண்ட வயிற்றுடன் பள்ளி சென்று படித்துள்ளார். தன் வறுமையான சூழலை கல்வி மட்டும்தான் போக்கும் என உணர்ந்து நல்ல முறையில் படித்தவர் இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். வாழ்வில் எதை மறந்தாலும் நாம் படித்த பள்ளியை யாராலும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது. அந்த வகையில் படிப்பைக் கொடுத்து தன்னை உயர்த்திய திருமக்கோட்டை அரசுப்பள்ளிக்கு நன்றிக்கடனாக இருந்து பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறார். தன்னைப் போல் பின் தங்கிய சூழலில் இருக்கும் மாணவர்கள் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கல்வி உதவித்தொகை வழங்கி உற்சாகப்படுத்துகிறார். பள்ளி விழாவில் பழனிச்சாமி திருமக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மாணவர்கள் தேர்வுக் கூடம் மற்றும் உள் விளையாட்டரங்கம், வல்லூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு 5 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டிக் கொடுத்துள்ளார். பணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் அதனைக் கொடுக்கும் மனம் சிலரிடம்தான் இருக்கிறது. அதுவும் தான் படித்த பள்ளிக்காகக் கொடுப்பது பழனிச்சாமியிடம் நிறையவே இருக்கிறது. திருமக்கோட்டையில் வளர்ந்தவர் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருக்கிறார் என்றால் அதற்கு எங்கள் அரசுப் பள்ளிதான் காரணம். அதை மனதில் தாங்கியிருக்கும் பழனிச்சாமி அவர் படித்த திருமக்கோட்டை பள்ளிக்கும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் துணை நின்று முன்னுதாரணமாய் வாழ்கிறார் என்றார். துரத்திய வறுமை, தூக்கிவிட்ட கல்வி, தலைநிமிர்ந்த வாழ்க்கை... தன்னம்பிக்கை தீபா எம்.பழனிச்சாமியிடம் பேசினோம், சின்ன வயசுல கஷ்டத்தைத் தவிர வேற எதையும் பார்த்ததில்ல. வேலைக்காக சிங்கப்பூர் போன எங்க அப்பா திரும்பி வரவே இல்ல. இப்படியான சூழலில் வறுமையை வெல்ல போராடினார் எங்க அம்மா. அந்தச் சமயத்தில் எனக்கான வரமாக அமைந்தது நான் படித்த திருமக்கோட்டை அரசுப் பள்ளி. அங்குதான் எனக்கான வாசல் திறந்தது. நீ படிடா உன் தலையெழுத்து மாறும்னு ஆசிரியர் உரமூட்டினார். பசி, பட்டினிக்கு இடையே படிச்சேன், வளர்ந்தேன். நான் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்க காரணம் படிப்பும் அதைக் கொடுத்த பள்ளியும்தான். அந்தப் பள்ளிக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். சிங்கப்பூர் தொழிலதிபர் பழனிசாமி என்னை ரோல் மாடலாக எடுத்து கொண்டு படிச்சு பெரிய ஆளா வாங்கனு மாணவர்கள் மனதில் விதைக்கிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தூக்கி ஓரம் கட்டி வைத்து விட்டு ஒவ்வொரு ஆண்டும் மனைவி, பிள்ளைகளுடன் வந்து கல்வித் திருவிழாவில் பங்கேற்கிறேன். வறுமையை விரட்ட, மனிதன் நல்ல பண்புள்ளவனாக இருக்க படிப்பு அவசியம். எல்லோரும் அவரவர் படித்த அரசுப் பள்ளியை தன் வீடாக நினைத்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். படிப்பவர்களுக்கு உலக வாசம் எப்போதும் திறந்திருக்கும் என்றார். 59 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கே? அரை டஜன் கல்வி அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? | Long Read
2026 டி20 உலகக்கோப்பையில் இவுங்க ரெண்டு பேரும் வேணும்! அடம் பிடிக்கும் அஸ்வின்!
டெல்லி : இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், 2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய ஆயுதங்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரது யூடியூப் சேனலில் பகிர்ந்த வீடியோவில், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற நட்சத்திரங்களைத் தவிர்த்து இவர்களைப் பாராட்டியது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையை வெல்ல விரும்பும் எந்த அணையும் இரண்டு விஷயங்களை சமாளிக்க வேண்டும். […]
தொழில்நுட்பக் கோளாறு: டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் வெள்ளிக்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான பல விமானங்கள் பாதிக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் தாமதமாகின்றனஎன்று விமான நிலையம் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆலோசனைக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
பெண்களை இழிவுபடுத்தும் மனநிலை எப்போது ஒழியும்?
அண்மையில் கோடம்பாக்கத்தில் தன்னுடைய உடல் எடை குறித்து யூடியூபர் கேட்ட கேள்விக்கு, நடிகை கெளரி கிஷன் அளித்த பதிலைப் பார்த்தேன்.
1 லட்சம் சிலந்திகளுடன் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?
ருமேனிய விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ்-அல்பேனியா எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் இந்த ராட்சத வலையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குகையின் இருள் சூழ்ந்த பகுதியில், ஆயிரக்கணக்கான புனல் வடிவ வலைகள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு ஒரு பட்டு கூடாரம் போல பரந்து விரிந்திருக்கும் சிலந்தி வலையை கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்துள்ளனர். இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி வலைகளிலேயே இதுதான் மிகப்பெரியது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகளை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்த வலையில் வசிக்கும் சிலந்திகளின் வகைகள்தான். பொதுவாக தனித்து வாழும் குணம் கொண்ட, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு சிலந்தி இனங்கள் (பார்ன் ஃபனல் வீவர் மற்றும் ஷீட் வீவர்) இங்கு ஒரே வலையில் சமாதானமாக வாழ்ந்து வந்தது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. Scientists discover the world’s biggest spiderweb கிரீஸ் மற்றும் அல்பேனியா நாடுகளின் எல்லையில், 1,140 அடி உயரத்தில் இருக்கும் அந்த குகையை ஆய்வு செய்தபோது இந்த அதிசயத்தைக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் இஸ்த்வான் உராக் இது குறித்து கூறுகையில், அந்த வலையைக் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது, நேரில் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த சிலந்தி வலையின் பிரமாண்டத்தைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக அதிரடி கம்பேக்கை கொடுத்துள்ள இந்திய ஏ அணி, நல்ல முன்னிலையை பெற்றுள்ளது. இந்திய பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு, தென்னாப்பிரிக்க ஏ அணி பேட்டர்களை கட்டப்படுத்தினர்.
இந்தோனேசியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு: 54 பேர் காயம்!
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் கலபா கார்டிங் பகுதி உள்ளது. இங்கு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த மசூதியில் மதப்பள்ளியும் உள்ளது. இந்நிலையில், இந்த மத வழிபாட்டு தலத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது, மத வழிபாட்டு தலத்தில் திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு அங்கிருந்த பள்ளியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டு வெடிப்பில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள், மதப்பள்ளி மாணவர்கள் உள்பட 54 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
`Pandian Stores'கோமதியோட செல்ல மருமகள் யாரு?! - Nirosha | Hema Rajkumar |Sharanya Turadi | Shalini
EPS-க்கு எதிராக திரளும் முன்னாள் அமைச்சர்கள் | Pugazhenthi Interview | ADMK
️ பெங்களூரு: 5 ஆண்டுகாலத் தாமதம் – உள்ளாட்சித் தேர்தல் இல்லாததால் நகரின் வாழ்வாதாரம் சிதைவு!
இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரம் (Silicon Valley of India) என்று அழைக்கப்படும் பெங்களூரு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40% அதிகரித்துள்ளன. 7,500 எஸ்.சி/எஸ்.டி வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை, காவல்துறை காலதாமதம் செய்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எவிடென்ஸ் கதிர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங்கியதையடுத்து இவர் இணையதளத்தில் பார்த்து ஒரு கிரீமை வாங்கி உள்ளார். ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து வாங்கிய அந்த கிரீமை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த கிரீமை முழுமையாக நம்பியதால் சுமார் ஒரு லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் 12 லட்சம் வரை) செலவு செய்திருக்கிறார். எதற்காக இதனை தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார் என்றால், ஆரம்பத்தில் அந்த கிரீம் அரிப்பை கட்டுப்படுத்தி நல்ல பலனை அவருக்கு தந்திருக்கிறது. cream ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த தொற்று மோசமடைந்து சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் பாம்புகளில் இருக்கும் கோடுகள் போன்று தோன்றுகிறது. கால்களில் வீக்கம், தொடர் வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரை பரிசோதனை செய்த தோல் மருத்துவர், அந்தப் பெண்ணின் உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்து இருக்கின்றார். அவரது உடல் அத்தியாவசிய ஹார்மோன்களை போதுமான அளவு உற்பத்தி செய்யாததால் 'செகண்டரி அட்ரினோகார்டிகல் இன்சஃபிஷியன்சி' (Secondary Adrenocortical Insufficiency) என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவர் வாங் ஃபே கூறுகையில், ஆன்லைனில் ஸ்டீராய்டு இல்லாத, தூய மூலிகை என்று கூறி ஆன்லைனில் விற்கப்படும் பல க்ரீம்களில் சக்திவாய்ந்த ஸ்டீராய்டுகள் கலக்கப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் உடனடி நிவாரணம் அளித்தாலும் நீண்ட காலம் பயன்படுத்தினால், இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி அதற்கேற்ற சரியான மருந்துகளை பயன்படுத்துமாறும்” கூறியிருக்கிறார்.
தோண்ட தோண்ட தங்கம் –புதையலால் ஷாக் ஆன கிராம மக்கள்!
கோயிலில் கட்டுமானப் பணியின் போது, தங்க புதையல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை, கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள கோவிலூர் பகுதியில் ரூபாய் பல நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஆதி சிவன் கோயில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழர்கள் கட்டப்பட்ட இந்த ஆதிசிவன் கோயிலை புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புனரமைப்பின் போது மன்னர் காலத்து தங்க நாணயங்கள் 103 கண்டெடுக்கப்பட்டுள்ளது. தீவிர விசாரணை இதுகுறித்து காவல் துறையினர் […]
செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என சந்தேகம் –நயினார் நாகேந்திரன் ஸ்பீச்!
சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று காலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) கடுமையாக விமர்சித்தார். செங்கோட்டையன் இபிஎஸ்ஸை “கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர்” என்று காட்டமாக தாக்கினார். தான் போன்றவர்கள் முன்மொழிந்ததால்தான் இபிஎஸ் முதலமைச்சரானார் என்றும், கொடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கோராதது திமுகவின் பி-டீம் என்பதை காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். செங்கோட்டையன் மேலும், பாஜகவில் யாரை சந்தித்தார், என்ன பேசினார் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும், 6 […]
National Geographic brings back Explorer Film Festival with a bold new lineup of inspiring stories
Mumbai: National Geographic is set to bring back its much-loved Explorer Film Festival with an all-new season. Featuring groundbreaking films and bold voices, this year’s edition continues National Geographic’s legacy of storytelling that inspires curiosity and connects audiences to the world in new ways. With a powerful lineup of inspiring films from across the world, the Explorer Film Festival will premiere on Sunday, 9th November at 10 PM.This year’s festival highlights the work of National Geographic Explorers — scientists, conservationists, and adventurers whose extraordinary missions inspire global audiences. From remote wildernesses to historic shipwrecks, the films celebrate courage, innovation, and the relentless human spirit.This Season’s Lineup Includes: Love + War – Pulitzer Prize-winning Lynsey Addario has risked her life to capture the stark realities of war — from the Middle East and Afghanistan to Ukraine. The Last Rhinos: A New Hope – A team of scientists races to save the Northern White Rhino from extinction by attempting to create the world’s first surrogate rhino pregnancy. Secrets of the Penguins – From courageous risk-takers to ingenious innovators with enduring bonds, explore the secrets of the penguins. Titanic: The Digital Resurrection – A massive, cutting-edge undersea scanning project creates the first high-resolution 3D digital twin of the Titanic for an unprecedented immersive investigation. Explorer: Lake Of Fire – A team of explorers attempts to reach the top of a remote, unexplored volcano in search of answers to the mystery of when and why volcanoes erupt. Explorer: The Deepest Cave – World-class cavers navigate twisting tunnels and dead ends in search of a passage leading to the bottom of the deepest cave on Earth. A nationwide promo campaign will roll out two weeks before the premiere, building excitement for this much-anticipated celebration of exploration and adventure.https://www.youtube.com/watch?v=rv_tF1lYRW0&authuser=0
ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன் பார்த் பவார் பங்குதாரராக இருக்கும் அமேடியா எண்டர்பிரசைசஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலம் விற்பனை செய்யப்பட்டபோது அதற்கு முத்திரை தீர்வையாக ரூ.21 கோடி செலுத்தி இருக்க வேண்டும். அந்த 21 கோடியும் அஜித்பவார் மகனிடம் வாங்கவில்லை. அந்த தொகையை பதிவாளர் தள்ளுபடி செய்துள்ளார். 300 கோடிக்கு பதிவு செய்ததற்கு முத்திரை தீர்வையாக வெறும் ரூ.500 மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது போன்று சட்டவிரோதமாக நடந்து கொண்டதற்காகவும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதற்காகவும் பதிவாளர் ராஜேந்திரா பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக பதிவாளர் ராஜேந்திரா உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நில விற்பனை மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பிரச்னையை கிளப்பியதை தொடர்ந்து இந்த நில விற்பனை தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 5 பேர் கொண்ட கமிட்டி இது குறித்து விசாரணை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நில விற்பனை அஜித் பவாருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அஜித் பவார் கூறுகையில், ''இந்த நில விற்பனை விவகாரத்தில் நான் செய்வதற்கு எதுவும் இல்லை. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே இது குறித்து கேள்விப்பட்டேன். எந்த வித தவறும் செய்யக்கூடாது என்று எச்சரித்தேன். குழந்தைகள் வளர்ந்ததும், அவர்கள் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்குகிறார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகவரி என்னுடையது அல்ல. எனது மகன் பார்த்தின் முகவரி ஆகும். இதுவரை நான் எனது உறவினர்களுக்காக அரசு நிர்வாகத்தில் தலையிட்டது கிடையாது. அதோடு அதிகாரிகள் யாருக்கும் போன் பண்ணி பேசியது கிடையாது. எனது பெயரை சொல்லி யாராவது தவறு செய்தால் நான் அதற்கு ஆதரவு கொடுப்பதில்லை. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த முதல்வருக்கு உரிமை உண்டு, அவர் உண்மையை வெளிக்கொணர்வார் என்றும் அவர் கூறினார். அதேசமயம் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே இவ்விவகாரத்தில் பார்த் பவாருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். `பார்த் பவார் தவறு செய்து இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கௌரி கிஷன்: அதே நபரால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் - நடிகர் சங்கம் கண்டனம்
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று (நவ.7) வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.6) சென்னையில் நடைபெற்றது. அந்த செய்தியாளர் சந்திப்பில் சினிமா நிருபர் ஒருவருக்கும், கௌரி கிஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கனவே நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்த நிருபர் ஹீரோவிடம், கௌரி கிஷனின் வெயிட் (எடை) என்ன? என்று கேள்வி கேட்டிருக்கிறார். கௌரி கிஷன் இந்நிலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கௌரி கிஷன், நீங்கள் தானே அன்றைக்கு கேள்வி கேட்டது. எப்படி அதனைக் கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னவென்று கேட்குறீங்க. என்னோட எடை தெரிந்துகொண்டு என்ன செய்ய போகிறீர்கள்? இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங் என அந்த நிரூபருக்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பலரும் கௌரி கிஷனிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கமும், சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. `மகள்களுக்கு’ எதிரான வன்கொடுமைகளை தட்டிக் கேட்பது எப்போது? | #HerSafety தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திரைத்துறையும் பத்திரிகைத்துறையும் பிரிக்கவே முடியாத சகோதரர்கள். நல்ல திரைப்படங்களையும் திறமையான கலைஞர்களையும் உச்சி முகர்ந்து கடைக்கோடி மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நீங்கள், நாங்கள் தவறு செய்யும் போதும் சரியான விமர்சனங்களை மிகவும் நாகரிகமாக வெளிப்படுத்தி சரி செய்தும் வருகிறீர்கள். நேற்று நிகழ்ந்த இந்த நிகழ்வு மிகவும் விரும்பத்தகாதது. தமிழ் திரையுலகம் எப்போதுமே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகவே விளங்கி வருகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரையுலகில் பெண்கள் நடிகைகளாக மட்டும் அல்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் பிரகாசித்துள்ளனர். ஆனாலும் திரைத்துறையில் ஒரு பெண் நுழைந்து சாதிப்பது என்பது இன்னமும் பெரும் சவாலான ஒன்றுதான். அப்படி பெரும் சவாலை ஏற்று ஏதாவது ஒன்றைச் சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெண்கள் திரைத்துறைக்கு அடி எடுத்து வைக்கின்றனர். அப்படி திரைத்துறைக்கு வரும் பெண்களை அவர்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் பாதுகாப்பது என்பது நம் எல்லோரது கடமையும் கூட. View this post on Instagram ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிகையாளர்கள் போர்வையில் நடிகைகளைப் பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று எங்களது சகோதரி ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது. இன்றைய சூழலில் செல்போன் இருந்தால் ஒரு youtube சேனலை ஆரம்பித்து பத்திரிகையாளர் ஆகிவிடலாம், திரைத்துறையினர் பற்றி அவதூறுகளை ஆபாசமாகப் பரப்பி பார்வையாளர்களைப் பெற்று விடலாம் என்ற மோசமான நிலை நிலவுகிறது. இந்தச் சூழலில் எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிகை துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளைத் தொடங்குவோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோவை சம்பவம் : `பாலியல் வன்கொடுமையை கூட நார்மலைஸ் செஞ்சிடுவீங்களா?’ - பதறும் 2K கிட்ஸ் | #HerSafety சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'அதர்ஸ்' திரைப்படம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பு 6-11-2025 அன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் திரைப்படக் குழுவினருடன் பங்கு கொண்ட கொண்ட திரைக்கலைஞர் கௌரி கிஷன் அவர்களின் உடல் எடை குறித்து கேள்வி கேட்ட youtubeபரின் செயல்பாட்டை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. திரைப்படம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் அத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த பெண் கலைஞரின் உடல் எடை கேலிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு கேள்வி கேட்பது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கது. கௌரி கிஷன் குறிப்பாக இக்கேள்விக்கு திரைக்கலைஞர் கௌரி கிஷன் தனது எதிர்ப்பைத் தெரிவித்த பிறகும் உடல் எடை குறித்து கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக்கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய youtube-பரின் செயல்பாடுகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிப்பதோடு இதுபோன்று அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழியில் செயல்படுகிறவர்களை சக பத்திரிகையாளர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்த விரும்புகிறது. மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டாகப் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், திரைக்கலைஞர் கௌரி கிஷன் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'எனக்கு டிரெயின்ல நடந்த 'அந்த' சம்பவத்தை கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கலாம்; ஆனா..' | #HerSafety
தி கேர்ள் பிரண்ட்: ``பக்கபலமாக நின்ற அனைத்து ஆண்களுக்கும் - நடிகை ராஷ்மிகாவின் எமோஷனல் கடிதம்!
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்றப் படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாகவும், அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். நாயகியை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியிருக்கிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தப் படம் குறித்து நடிகை ராஷ்மிகா தன் எக்ஸ் பக்கத்தில், ``தனக்குப் பிடித்த பெண்ணாக மாறும் அத்தனை தோழிகளுக்கும் ஓர் காதல் கடிதம் உனக்கு என்ன தெரியும்? என்று கேள்வி கேட்கப்பட்டும், இன்று தனக்கு என்ன வேண்டும் என்று உறுதியாகத் தெரிந்த பெண்ணாக வளர்ந்த ஒவ்வொரு தோழிக்கும்... நீ பெரும் தூரத்தைக் கடந்து வந்துவிட்டாய், பெருமையோடு உன்னை நீயே இறுக்கமாக அணைத்துக்கொள்! அதே போல், வழிநடத்த நினைக்காமல், பக்கபலமாக நின்ற அனைத்து ஆண்களுக்கும்... உங்கள் அன்புதான் ஒவ்வொரு பெண்ணும் தன் குரலைக் கண்டுபிடிக்க தைரியம் கொடுத்தது. இந்தப் படம், சொல்லப்படாத அத்தனை உணர்ச்சிகளுக்காகவும் - கட்டுப்படுத்தாமல், சுதந்திரம் கொடுக்கும் அன்புக்காக, தன்னைத் தானே தேர்ந்தெடுக்கக் கற்றுக் கொண்டு, காயங்களை ஆற்றிக்கொள்ளும் இதயங்களுக்காகவும், உங்களுக்கு நீங்கள் உண்மையானவர்களாக மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான துணிச்சலுக்காகவும் எடுக்கப்பட்டது. நடிகை ராஷ்மிகா மந்தனா 'தி கேர்ள்ஃப்ரெண்ட்' பயணத்தில், நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள், புரிந்துகொள்ளப்படுகிறீர்கள் என்று உணர்வதற்கும், உங்கள் பலத்தை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்காகவும், என் மனதை, என் உணர்வுகளை, என் பலவீனங்களை எல்லாவற்றையும் இந்தப் படத்தில் கொட்டி இருக்கிறேன். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையை இன்னும் இறுகப் பிடித்துக்கொள்ளவும், உங்களை நீங்களே மீண்டும் காதலிக்கவும் செய்தால், இந்தப் படத்துக்கான வெற்றியே அதுதான். மௌனத்தில் இருந்து வலிமைக்கான ஒவ்வொரு பயணத்திற்கும்... அன்போடும் மரியாதையோடும் கூடவே நின்றவர்களுக்கும் இது ஓர் காதல் கடிதம். தி கேர்ள்ஃப்ரெண்ட் இப்போது திரையரங்குகளில். இது உங்களுக்காகவே! காதல், தைரியம் மற்றும் உருமாறும் இந்தப் பயணத்தை வந்து பாருங்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ''கன்னட திரைத்துறையில் எனக்கு தடையா?'' - நடிகை ரஷ்மிகா மந்தனாவின் 'பளிச்' பதில்

26 C