வரிகள் ரத்து! அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவமானத்துக்குரியது: டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அரசு பிறப்பித்த வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அவமானத்துக்குரியது, அபத்தமானது என்று மாகாண ஆளுநா்கள் கூட்டத்தில் பேசியபோது டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான சற்று நேரத்தில் தனது முதல் பதிலில் டிரம்ப் உச்ச நீதிமன்றத்தை, குறிப்பாக பெரும்பான்மை நீதிபதிகளை, “நமது தேசத்திற்கு அவமானம்” என்று கடுமையாகத்தாக்கிப் பேசியிருந்தார். அதேவேளையில, அமெரிக்க அரசு, நாட்டின் வரி விதிப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு மாற்று முறைகளைப் பின்பற்றும் […]
நாட்டை உலுக்கும் போதைப்பொருள் அபாயம் ; வெளியான திடுக்கிடும் தகவல்
கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 110 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தல்காரர்களால் நாட்டுக்குப் பெருமளவு பணம் இழக்கப்படுகிறது. இந்த சட்ட விரோத வருமானம் நாட்டின் அபிவிருத்திக்கோ அல்லது எதிர்காலப் பயணத்துக்கோ எந்தவிதத்திலும் பங்களிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டைச் சூழ்ந்துள்ள இந்தப் பயங்கரமான போதைப்பொருள் ஆபத்திலிருந்து, […]
`2016-ல் வெறும் 1.1% ; இப்போ 8.5%... தனித்தே போராடுகிறோம்!' - சீமான் பேச்சு
'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற பெயரில் திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே, பல தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தமாக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை அவரது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தார். candidaters மேலும், இந்த வேட்பாளர் பட்டியில் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில், 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், 70-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் சிறப்பான ஏற்பாடுகளாக 234 பேரும் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு, விழா மேடை முழுவதும் தமிழ் அறிஞர்கள், சங்க கால புலவர்கள், தமிழுக்காக போராடியவர்களுடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தது. தவிர விழா மேடை அரங்கு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாய சின்னம் மற்றும் நாம் தமிழர் கொடி மற்றும் மூவேந்தர்களின் கொடிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், மாவட்ட வாரியாக தொண்டர்கள் அமர்வதற்காக தனி தனி கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. candidaters அதோடு, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து மணிக்கு விழா மேடைக்கு வந்த சீமான் ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியாக அறிமுகம் செய்தார். அதோடு, தான் காரைக்குடியில் போட்டியிடப் போவதாகவும் கூறினார். அதனைத்தொடர்ந்து, இந்த மாநாட்டில் பேசிய சீமான், “எங்களின் அரசியல் இதுவரை இந்த நிலத்தில் இருக்கின்ற அரசியலிலிருந்து முற்று முழுதாக மாறுபட்டது. அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்ற புரிதலோடு வந்த பிள்ளைகள் நாங்கள். ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல். எமக்கான மூச்சுக்காற்றை நாங்களே சுவாசிப்பது போல, உணவை நாங்களே உண்பது போல, எமது உரிமையை எமது விடுதலையை நாங்களே போராடிப் பெறுவது என்ற நோக்கோடு வந்தவர்கள். seeman எங்களுடைய கனவு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல; ஆட்சி முறை மாற்றம். அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றமே எங்கள் இலக்கு. கட்டிய கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்ல நாங்கள். அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டுப் புத்தம் புதிதாகப் புதிய ஒரு கட்டடத்தைக் கட்ட வந்த புரட்சிவாதிகள். இங்கே மக்களுக்கான அரசியல் இல்லை. செய்தி மற்றும் விளம்பர அரசியல் மட்டுமே இருக்கிறது. சேவை மற்றும் செயல் அரசியல் இல்லை. ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நிற்கிறது என்றால், அது இந்திய துணைக் கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும்தான். பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, வனக்கொள்ளை, மது-மத போதை என்று இது ஏதுமற்ற புதிய ஒரு தேசத்தைச் செய்வோம். கடந்த 2016-ல் வெறும் 1.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். மற்ற கட்சிகளாக இருந்தால் தடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால், கொண்ட உறுதி மற்றும் லட்சியச் சுமையால் தொடர்ந்து எவரோடும் சமரசம் செய்யாமல் தனித்துப் போராடுகிறோம். crowd 5 -வது முறையாக சீட்டுக்கும், நோட்டுக்கும் போகாமல் தனித்து நிற்கின்றது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். நாங்கள் கூட்டணி என்ற வியாபாரம் செய்ய வரவில்லை. அரசியல் சுதந்திரத்திற்காக தனித்து நிற்கின்றோம். மக்களை நம்பியே தனித்து நிற்கின்றோம். இது, ரசிகர் கூட்டம் இல்லை. லட்சிய கூட்டம். திரை கவர்ச்சியா, இன எழுச்சியா என்று நிரூபிக்க வந்த கூட்டம். மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும்?. கருத்தியல் புரச்சியாளர்கள் இங்கு வந்திருக்கின்றார்கள். அரசியல் பெரும் படையை கட்டி எழுப்பி வருகின்றோம். எங்களுக்கான வரலாற்றை எழுத கூடியுள்ளோம் திருச்சியில். இலவசத்தில் 15,000 கோடி. அந்த இலவசத்தில் இழக்கின்ற பணத்தை எங்கிருந்து பெறுவார்கள்?. படிக்கும் போது பணம். படித்து முடித்தால் பணம் வராது. அவர்களுக்கு வேலையை ஏற்படுத்த வேண்டும். அது தான் ஆட்சி முறை. ஆணுக்கும், பெண்ணுக்கும் இலவசம். ஓட்டுநருக்கும், நடத்துநருக்கு சம்பளம் எப்படி?. இலவசம் வாங்கும் அம்மா கையிலே இரண்டு லட்சம் கடன் உள்ளது. இதை உணரவேண்டும். தனியார் மருத்துவமனைகள் தான் சிறந்த மருத்துவத்தை கொடுக்க முடியும் என்றால் அரசால் ஏன் முடியாது? தனியாரிடம் தோல்வியடைந்ததா அரசு? கடன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக எப்படி பார்க்க முடியும்? தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஒரே கட்சி. seeman இரண்டும் ஒரே இடத்தில் எப்படி கொள்ளை அடிக்க முடியும் என்று பயிற்சி எடுத்த கட்சி. இரண்டும் ஊழல் கட்சி. இது, திருடர்கள் முன்னேற்றம். அது, அனைத்துலக திருடர்கள் முன்னேற்றம். பா.ஜ.க, காங்கிரஸூக்கு என்ன மாற்றம் இருக்கின்றது?. எந்த இடத்தில் தி.மு.க-விற்கும், அ.தி.மு.க-விற்கும் மாற்றம் இருக்கின்றது. இவர்கள் யாரோடும் சேராமல் நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி. மனசாட்சி வழிநடத்த செல்கின்றோம். அதனால் தான் தனியாக செல்கின்றோம். அடுத்தவன் தோள் மேல் நின்று உயரத்தை காட்டுவதை விட தனித்து நிற்கின்றோம் என்றார். அதனைத்தொடர்ந்து, மேடைக்கு முன் கூடியிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களை பார்த்து, இது, ரசிகர்கள் கூட்டம் இல்லை.. லட்சிய கூட்டம் என்று கூறிய சீமான், ”8.5 விழுக்காடு வாக்கு வைத்திருக்கிறோம். பணமும் பதவியும் சீட்டும் நோட்டும் தான் என்றால்… நாம் தமிழர் கட்சி பணத்திற்காக இல்லை. என் இனத்திற்காக. இந்தித் திணிப்புக்கு எதிராகத் தன் உயிரைத் தந்த பாட்டன் நடராஜன் மற்றும் தாளமுத்து தொடங்கிய மொழிப் புரட்சி இன்னும் தொடர்கிறது. இனம் செத்துவிடக் கூடாது என்று செத்தார்கள் நமது முன்னவர்கள். வீழ்ந்த தமிழினம் எழுந்தது மறுபடியும் போரிட்டு வென்றது என்ற வரலாற்றைப் படைக்க வேண்டும். crowd விழுவோம் விதையாய், எழுவோம் விடுதலையாய் என்ற லட்சிய முழக்கத்தை முன்வைத்து, அடுத்த ஆண்டு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்” என்று உணர்ச்சி பொங்க பேசினார். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேல் பேசிய சீமான், ”என்னம்மா தேவி ஜக்கம்மா.. நாடு நாசமா போகுதே நியாயமா?. கண்ண தொறந்து பார்ரம்மா.. எங்க கவலைய கொஞ்சம் தீரம்மா… 10 லட்சம் கோடி கடனுல நாடு… இதுல இலவசங்கள் பெரு வெட்க கேடு… பாக்க சகிக்கல சனம் படும் பாடு… இதை வளர்ச்சினு போடுறான் போடு” என்று பாடலை பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
'கருவூர் சித்தரை தரிசிக்க வந்தோம்!' - பக்தி மார்க்கமாக கரூர் வருகைதந்த 50 ஜப்பானியர்கள்
கரூர் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களில் முதன்மையான திருத்தலம் இது. கருவூர் சித்தர் அவதரித்த ஊர் என்பதால் இங்கு கருவூராருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த திருத்தலம் என்பதால், இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதோடு, தமிழகத்தில் உள்ள 2000 ஆண்டுகால பழமையான ஆலயங்களில் ஒன்றான இத்திருத்தலம், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் என்பதும் இந்த கோயில் சம்மந்தப்பட்ட சிறப்பாகும். தற்போது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தை சேர்ந்த 50 பேர், தமிழ்நாடு முழுவதும் கடந்த 30 நாட்களாக ஆன்மிக தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கும் அவர்கள் வருகை தந்தனர், குறிப்பாக, கருவூரார் சித்தர் சன்னிதியை பார்ப்பதற்காகவே வருகை தந்து சித்தர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோயிலில் உள்ள அனைத்து சன்னிதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுமார் 20 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். japan paktharkal அதன்பிறகு, கோயிலின் முன்புற கோபுரம் முன்பு குழுவாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கோபால் பிள்ளை சுப்பிரமணியம் குழுவினர் சார்பில் அழைத்து வரப்பட்ட இவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு ஆன்மிக தலங்களை தரிசித்து வருவதாக கூறினர். மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் திருக்கோயில் மற்றும் குளித்தலை கடம்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக சுற்றுலாத்தலங்களையும் பார்வையிட்டு தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கரூரில் பிரசித்திப் பெற்ற சிவன் கோயிலுக்கு ஜப்பான் நாட்டில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை பார்த்து, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக செயல்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, திலக் வர்மா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் அபாரமாக செயல்பட்டு மேட்ச் வின்னர்களாக இருக்க வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
வடக்கு பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. வடக்கு மற்றும் வடமேற்கு பாகிஸ்தானின் சில பகுதிகளில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக இஸ்லாமாபாத்தின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை. உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது, அட்டோக்கின் புர்ஹானுக்கு வடகிழக்கே 11 கிமீ தொலைவிலும் 14 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. மேலும் கைபர் […]
ஜப்பானில் பொம்மையைத் தாயாகக் கருதிய குரங்குக்குட்டி ; இணையத்தை உருக்கிய காட்சி
ஜப்பானில் உள்ள பூங்காவில் குரங்குக்குட்டு ஒன்று குரங்கு பொம்மையுடன் உலா வரும் காட்சி இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 2025 ஜூலை மாதம் பிறந்த குரங்கு, பிறந்த சில நாட்களிலேயே அதன் தாயால் நிராகரிக்கப்பட்டது. தனிமையால் வாடிய இந்தக் குட்டிக்கு பூங்கா ஊழியர்கள் ஒரு மென்மையான ஒராங்குட்டான் பொம்மையை வழங்கினர். அதையே தனது தாயாகக் கருதிய குரங்குக்குட்டி எங்கு சென்றாலும் அந்தப் பொம்மையைத் தூக்கிக்கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. பூங்கா ஊழியர்களின் தொடர் முயற்சியால், பஞ்ச் […]
புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது!
புங்குடுதீவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பேருந்து உரிமையாளர் அகிலனின் கொடூரப் படுகொலை தொடர்பான விசாரணைகளில், முக்கிய முன்னேற்றமாக இரண்டாவது… The post புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது! appeared first on Global Tamil News .
தலிபான்களின் மற்றுமொரு பெண்களுக்கு எதிரான வில்லங்கமான சட்டம்
ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு கொண்டுள்ள புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலிபான்களின் புதிய சட்டத்தின்படி கணவர் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும் உடல் ரீதியாக தண்டிக்கலாம் என கூறியுளளது. ஆப்கானிஸ்தானில் பின்பற்றப்படும் சட்டங்கள் மிகவும் கடுமையானது. அதுவும் பெண்களுக்கு எதிரான அங்கு கடுமையான சட்டங்கள் இருக்கிறது. பெண்கள் முகத்தை காட்டக்கூடாது கல்வி கற்கக் கூடாது என்றெல்லாம் அங்கே சட்டம் இருக்கிறது. தாலிபன் அரசு கொண்டுள்ள புதிய சட்டம் ஏனெனில் அங்கு தாலிபான் ஆட்சி நடந்து […]
தருமபுரம் பொலிஸாரின் அவசர அறிவுறுத்தல்!
வளிமண்டலத் திணைக்களத்தின் அறிவுறுத்தலின்படி, தருமபுரம் பொலிஸார் இன்று( 21.02.2026) கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தருமபுரம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு இது தொடர்பாக, தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு.. தவெக பெரிய கட்சியெல்லாம் இல்ல - ராஜேந்திர பாலாஜி!
மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு பெரிய கட்சியெல்லாம் தவெக இல்லை என்று கூறி அருண்ராஜ் குற்றச்சாட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடிக் கொடுத்துள்ளார்.
பிலிப்பின்ஸ்: நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழப்பு
தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடா் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மாட்டி நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில், பெரிய பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த ஒரு வீடு முழுமையாக புதைந்தது. அந்த வீட்டில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனா். இதேபோல், டாவோ டீ ஓரோ மாகாணத்தில் உள்ள மொன்காயோ நகரிலும் நிலச்சரிவால் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 போ் உயிரிழந்தனா். தொடா் மழையினால் இந்தப் […]
யாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு சட்ட சிக்கல்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மைதான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கட்டாய சுற்றுச்சூழல் அனுமதிகள் இன்றி இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அங்கீகரிக்கப்பட இல்லை இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் […]
NTK: 234 வேட்பாளர்கள் அறிமுகம்; காரைக்குடியில் போட்டியிடும் சீமான்!
'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெறுகிறது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியில் பட்டியலில் 117 ஆண்கள் 117 பெண்கள் என ஆண் பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் அனைவரும் பட்டப் படிப்பை முடித்தவர்கள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை அவரது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். பர்ஹானா பாத்திமா நாகப்பட்டிணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்களை தாண்டி, நடிகர் திருமுருகன் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
அக்குரேகொட இரட்டைக்கொலை – துப்பாக்கிதாரி கைது; சூத்திரதாரி வெளிநாட்டுக்குத் தப்பி ஓட்டம்!
அக்குரேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் முக்கிய முன்னேற்றங்களை… The post அக்குரேகொட இரட்டைக்கொலை – துப்பாக்கிதாரி கைது; சூத்திரதாரி வெளிநாட்டுக்குத் தப்பி ஓட்டம்! appeared first on Global Tamil News .
திருச்சி நாதக மாநில மாநாடு.. 234 வேட்பாளர் அறிமுகம் - களத்தில் அதிரடி காட்டிய சீமான்!
திருச்சி நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாட்டில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
NTK: தேர்தல் அரசியலில்... இரண்டு கட்சிகளும் வெவ்வேறு அல்ல - திருச்சி மாநாட்டில் சீமான் உரை
'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெறுகிறது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் - பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் பெரும்பாலானோர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வேட்பாளர்கள் அறிமுக மாநாட்டில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``சாதிக்காக, சாமிக்காக, மதத்துக்காக கூடிய தமிழன் தன் மொழிக்காகக் கூடியிருப்பது இங்குதான். நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசைத் தீர்மானிப்பதுதான் அரசியல். அது ஒரு வாழ்வியல். ஆள்மாற்றம், ஆட்சி மாற்றமல்ல, ஆட்சி முறை மாற்றம் எங்கள் இலக்கு. அரசியல் என்பது இங்கு கட்சி அரசியல், தேர்தல் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. விளம்பர அரசியல் இருக்கிறதே தவிர மக்களுக்கான அரசியல் இல்லை. பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, அடக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, மது, மதப் போதை, இயற்கை வளக் கொள்ளை இல்லா நல்லாட்சி கொடுப்பதே எங்கள் கனவு. கல்வி, கல்விக்கேற்ற வேலை, அதற்கேற்ற ஊதியம் என்ற பெருமை மிகு வாழ்வை வழங்கும் ஆட்சியே எங்கள் இலக்கு. மொழி வளம், கலை, பண்பாடு ஆகிய எல்லாவற்றையும் காப்பது இது எல்லாம் சேர்ந்ததுதான் தமிழ்த் தேசிய அரசியல். TTT: ``என்னைதான் எல்லாரும் தலைவர் தம்பினு சொல்வாங்க.! - வெற்றி விழாவில் சீமான் ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து தனித்து நின்று, தோற்றும் வளர்ந்து வருகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இல்லை. இங்கு கூட்டணி என்பது சீட்டணி, நோட்டணியாக மாறிவிட்டது. ஒரு மொழி சிதைந்து அழிந்தால் அந்த இனத்தை எளிதாக அழித்துவிட முடியும். பயிற்று மொழி, பாட மொழியாகி, விருப்ப மொழியாகி சிதைந்துவிட்டது. தமிழன் ஆளும்போதுதான் தமிழ் மீட்சி ஏற்படும். அதற்காகத்தான் தொடர்ந்து பேசி வருகிறோம். அடுத்தவன் மொழி எப்படி அறிவாகும் என்ற கேள்வி ஏன் நமக்கு எழவில்லை... நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு - சீமான் நாம் இவர்களைப் பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. நாம் செத்தாலும் பரவாயில்லை நம் இனம் வாழ வேண்டும் என்ற பிரபாகரனைப் பார்த்து அரசியல் செய்ய வந்தவர்கள். அதற்காகதான் அறிவாயுதம் ஏந்திக் களத்துக்கு வந்திருக்கிறோம். இந்தித் திணிப்பால் நம் பாட்டன்கள் உயிர் கொடுத்தார்கள். இன்றும் அந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, வரலாறு தெரியாதவன் எழ வாய்ப்பில்லை. வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது. வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் தங்களின் வரலாற்றை எழுதுவார்கள். நம்முடைய 5,000 ஆயிரம் ஆண்டின் அரசியல் வரலாறு என்ன... நமக்குத் தெரியுமா? ஆனால், திராவிட இனத்தின், ஈ.வெ.ரா தொடங்கி உதயநிதி வரைக்குமான 100 ஆண்டு அரசியல் வரலாறுதான் நம் வரலாறு எனக் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். விழிப்புணர்வுதான் விடுதலையின் முதல் படி. அரிசி, பருப்பு, வேட்டி, சேலை எல்லாம் இலவசம். இலவசத்தில் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பார்கள் என்பதுதான் கேள்வி. தனியார் பள்ளி, கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனத் தனி தங்கும் விடுதி இல்லை. ஆனால், அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தனித் தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது என்றால் இதில் யார் சமூக நீதியைக் காப்பது? நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு - சீமான் இந்தக் கடன் வாங்கி செய்யப்படும் செலவுக்கு மக்கள் வரியும், மண் வளமும்தான் அடகு வைக்கப்படுகிறது. அதிமுக - திமுக இரண்டும் தனித்தனிக் கட்சி என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படி திருடுவது என்பதை ஒரே இடத்தில் கற்ற இரண்டும் ஒரே கட்சிதான். இந்த இரண்டு கட்சிக்கும் எந்த இடத்தில் வித்தியாசம் இருக்கிறது? அதே போலதான், பா.ஜ.க - காங்கிரஸ் கட்சிகளும். இரண்டின் பொருளாதாரக் கொள்கை, பாதுகாப்புக்கொள்கை என எல்லாமே ஒன்றுதான். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் இந்த இரண்டு கட்சிகளும் அந்தக் கட்சிகளுக்குப் பின்னால் நிற்கும். சட்டமன்றத் தேர்தல் என்றால் அந்த இரண்டு கட்சிகளும் இந்த இரண்டுக் கட்சிகளுக்குப் பின்னால் வரும். அவ்வளவுதான் இவர்களின் அரசியல். எனப் பேசிக்கொண்டிருக்கிறார்... மேலதிக தகவல்கள் இங்கு பதிவேற்றப்படும்... திருச்சி: நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின்' மாநாடு; குவிந்த தொண்டர்கள் | Photos
20 களிலேயே ஓய்வுக்காலத்தை திட்டமிடும் கனடியர்கள்; காரணம் இதுதான்!
கனடா மக்கள் தமது 20 களிலேயே ஓய்வுக்காலத் திட்டமிடலை ஏன் ஆரம்பிக்கிறார்கள் என்பது குறித்த காரணங்களை CIBCவங்கி வெளியிட்டுள்ளது. CIBCவங்கி வெளியிட்ட புதிய ஆய்வின்படி, சராசரியாக கனடா மக்கள் தமது 30 வயதில் ஓய்வுக்காலத் திட்டமிடலைத் தொடங்குகின்றனர். எனினும் இன்றைய இளைஞர்கள், சராசரியாக 24 வயதிலேயே சேமிக்கத் தொடங்குகின்றனர் என கூறப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பணவீக்கம் இந்த நிலையில், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக எதிர்காலப் பாதுகாப்பு […]
திருச்சி: நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின்'மாநாடு; குவிந்த தொண்டர்கள் | Photos
`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான்
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தகவல்களை வெளிப்படுத்தக் கோாி போராட்டம்
இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம்… The post காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தகவல்களை வெளிப்படுத்தக் கோாி போராட்டம் appeared first on Global Tamil News .
”ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார்” - டிடிவி தினகரன் காட்டம்
அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, எம்.எல்.ஏ. ஐயப்பன் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திப் பேசியது, தி.மு.க.வில் இணைவது அவரது தனிப்பட்ட விருப்பம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழுக்குக் கலங்கம் ஏற்படுத்தும் விதமாகப் பேசியதை கோடானுகோடி தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓ.பி.எஸ் மக்கள் பணியாற்ற வேண்டும் என இன்னொரு கட்சிக்குக் கூட செல்லலாம். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பரதனாக நடித்துவிட்டு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக்கிய கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக, 2017ல் தி.மு.க கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர் நண்பர் ஓ.பி.எஸ். டி.டி.வி.தினகரன் இருப்பினும், ஓ.பி.எஸ்ஸைப் பெருந்தன்மையாக பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டு, அண்ணன் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி துணை முதல்வராகக் கொண்டு வந்தார். இன்றைக்கு பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என்கிறார். ஓ.பி.எஸ்ஸை ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யும் போது கட்சியின் சட்டத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஓ.பி.எஸ், தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார். அவர் தி.மு.க-வில் சேரட்டும், பதவிக்கு வரட்டும், வராமலும் போகலாம். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்குக் களங்கம் விளைவிப்பதை மன்னிக்க முடியாது. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். ஓ.பி.எஸ், ஐயப்பன் இருவரும் பேசியதை, துரியோதன கும்பல், முதல்வர் கைத்தட்டி ரசித்து புன்முறுவலாக இருந்தார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருக்கும் இதைவிட தீங்கை யாரும் இழைக்க முடியாது. `டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' - சசிகலாவின் `திடீர்' ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றி, பணநாயகத்தால் எப்படியாவது வென்றுவிடலாம் என நினைத்தவர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமை பெற்று, ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்ட பிறகு தி.மு.க அச்சமடைந்து அவசரக் கதியில் ரூ.5,000 கொடுத்துள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வளர்ச்சி நிதி ரூ. 11,000 கோடியை மாற்றியுள்ளனர். 50 ஆயிரம் அல்ல, வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. உறுதியாக தமிழக மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள். ஓபிஎஸ் இந்தப் பயத்தினால்தான் கேச்சர்ஸ் போல பல கட்சிகளில் இருந்து தி.மு.க-வுக்குப் பிடித்து வருகின்றனர். இதை அரசியல் ராஜதந்திரம் எனப் பலரும் பேசுகிறார்கள். பணநாயகத்திற்கான வெற்றியே தவிர பொதுநலனுக்கான வெற்றி அல்ல. ஓ.பி.எஸ் தன்னை தர்மராக நினைத்து 1.0 எனத் தர்மயுத்தம் நடத்தினார். இதை குருமூர்த்தி சொன்னதால்தான் செய்தேன் என்றார். இதில், சுயபுத்தி இல்லை எனத் தெரிகிறது, தர்மயுத்தம் 2.0-வை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் தங்கபாண்டியன் சொன்னதால் தொடங்கியதாக ஓ.பி.எஸ். கூறினார். தற்போது 3.0-வை யார் சொல்லித் தொடங்கினார் என்பது தெரியவில்லை. இது ஓ.பி.எஸ்-க்கு நல்ல பாடமாகும். தர்மயுத்தம் தர்மர் நடத்த வேண்டும்; அதர்மவாதி நடத்தினால் அதர்மத்தில்தான் முடியும். துரியோதரன் கூட்டத்தில், ஓ.பி.எஸ் சென்று சேர்கிறார்கள். ``ஸ்டாலின் எவ்வளவு இடம் கொடுத்தாலும் அது நமக்குப் போதும்; ஏன்னா.!’’ - மணி சங்கர் அய்யர் அதிரடி சட்டமன்ற, ராஜ்யசபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் ஒரணியில் இணைந்து, எங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் அனைத்தையும் மறந்து, ஜெயலலிதாவின் ஆட்சியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என உள்ளோம். தங்களுக்கு பதவி இல்லை என்பதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் ஜெயலலிதாவின் கட்சியை ஒன்றிணைப்பேன், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வருவேன் எனச் சொன்னவர்கள் எல்லாம் திடீரெனக் கிளம்பி டம்மி வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். இன்னும் டம்மியாக சிலர் தி.மு.க-வுக்குச் சேவை செய்யவும் கிளம்பிவிட்டனர். டி.டி.வி.தினகரன் ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதாதான் தெய்வம்; ஆட்சி வேண்டும், கட்சியை ஒன்றிணைப்போம் எனக் கூறியவர்கள் எல்லோரும் தி.மு.க.வின் ஏஜென்ட்களாகச் செயல்படுவது வெட்டவெளிச்சமாகி வருகிறது. ஒரு கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய ஆறு மாதங்கள் ஆகும்; மூன்று மாதங்களில் முடியாது. எனவே யாராவது கட்சி ஆரம்பிப்பேன் என்றால் யாரும் ஏமாற வேண்டாம். இன்னொரு கட்சியில் இருந்து ஆட்களைப் பிடித்து வேட்பாளராக தேர்தலில் நிறுத்துவது விந்தையாகும். ஓ.பி.எஸ். பரதனாகக் காட்டினார்; இன்னும் சிலரின் சுயரூபம் விரைவில் வெளிப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை பேசவில்லை. எங்கள் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்குச் செல்வார்கள். கஞ்சா, ஊழல் புகழ் தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் முடிவுக்குக் கொண்டு வர அமித்ஷா முயற்சி செய்து வருகிறார். போலீஸார் கஞ்சா விற்கிறார்கள், வெளிநாட்டிலிருந்து குண்டு வைப்பது போல ஆட்சியாளர்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் தி.மு.க-வின் முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வழக்கில் வரும் என்பதால் அமைச்சர் நேருவைப் பாதுகாக்க நினைக்கிறார்கள் என்றார். ”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின்
அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டங்களும் வேண்டாம் -பருத்தித்துறையில் கையெழுத்துப் போராட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் புதிய அனர்த்த முகாமைத்துவச் சட்டங்களுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்… The post அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டங்களும் வேண்டாம் -பருத்தித்துறையில் கையெழுத்துப் போராட்டம் appeared first on Global Tamil News .
சென்னை: தனியாக வசித்த முதியவர் கொலை; துணிக்கடை ஊழியரிடம் விசாரணை; என்ன நடந்தது?
சென்னை புரசைவாக்கம், அரசப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர், அண்ணாநகரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி உஷா. 2024-ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் உஷா இறந்துவிட்டார். இந்தத் தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் பாலகிருஷ்ணன், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில்தான் இவரைப் பார்க்க அவரின் அண்ணன் மகன் விக்னேஷ் என்பவர் வந்திருக்கிறார். அப்போது பாலகிருஷ்ணனின் பெட்ரூம் வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்ட நிலையில் கதவுக்குக் கீழே ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ், வேப்பேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். கொலை சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அக்கம்பக்கத்தினரின் உதவியோடு பெட்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பாலகிருஷ்ணன், ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். உடனே அவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து பாலகிருஷ்ணனின் அண்ணன் மகன் விக்னேஷிடம் விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய பெரியப்பா, செல்போனுக்கு கவர் வாங்கி வரும்படி கூறியிருந்தார். அதை வாங்கிவிட்டு பெரியப்பாவுக்கு போன் செய்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதனால்தான் நேரில் சென்று பார்க்க வந்தேன். அப்போதுதான் அவரின் அறையிலிருந்து ரத்தம் கதவுக்குக் கீழ் வழியாக வடிந்திருந்ததைப் பார்த்தேன் என்று கூறினார். இதையடுத்து போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பாலகிருஷ்ணன் வேலை செய்யும் துணிக்கடையில் வேலை செய்யும் மாததேவ் என்பவர் வந்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. உடனே மாததேவ்வைப் பிடித்து விசாரித்தபோது பாலகிருஷ்ணனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். எதற்காக கொலை செய்தார் என்று மாததேவ்விடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து வேப்பேரி போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட முதியவர் பாலகிருஷ்ணன், கடந்த மூன்றாண்டுகளாக துணிக்கடையில் வேலை செய்து வந்திருக்கிறார். அதே கடையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்திருக்கிறார் மாததேவ். அதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாலகிருஷ்ணன், தனியாக வசித்து வந்ததைத் தெரிந்துக்கொண்ட மாததேவ், அவரைக் கொலை செய்து பொருள்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்திருக்கிறார். அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றனர். சென்னை: பார்சலுக்குள் மண்டை ஓடு, எலும்புகள், விபூதி; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்; களமிறங்கிய போலீஸ்
Easy Lamb Shank Rogan Josh Recipe
Rogan Josh is a popular dish made with pieces of lamb or mutton cooked in a rich, flavorful gravy. This
வங்கதேசத்தின் 43 புதிய எம்.பி.க்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு!
வங்கதேசத்தில் நடைபெற்ற 13 ஆவது பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச நாட்டில், நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. இதன்மூலம், முதல்முறையாக தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தின் 297 உறுப்பினர்களில் 43 பேரின் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளதாக, உள்நாட்டு செய்தித்தாளில் வெள்ளிக்கிழமை […]
சமோச -சாயா கூட்டத்திற்கு நான்கு நிழல் அமைச்சர்கள்?
அடைந்தால் தமிழீழம் என்ற நிலைப்பாட்டுமூலைக்குள் போட்டுள்ள தமிழ் தேசிய மக்கள்ள் முன்னணி இந்திய தூதரக சமோச -சாயா கூட்டங்களை தற்போது தவறவிடாது பங்கெடுத்துவருகின்றது. எனினும் சந்திப்பின் பின்னர் சப்பை கட்டு அறிக்கைகள் மட்டும் தவறாது வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புதிய அறிக்கையில் :இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயரஸ்தானிகர் சத்தியஞ்சல் பான்டே மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி ஆகியோருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது – அனுர அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் கொண்டுவரவுள்ள புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு தொடர்பிலும் மற்றும் இந்த அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள், ஒருகட்சி ஆட்சி முறையை நோக்கியதான ஜனநாயக விரோத போக்குகள் குறித்தும் இந்திய தூதரக பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தெளிவுபடுத்தப்பட்டது. இனப் பிரச்சினைக்கு தீர்வு என்னும் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அனுர அரசாங்கம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 2015 - 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கியராஜய’ அரசியலமைப்பு வரைபையை அரசியலமைப்பாக கொண்டு வருவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்த வரைபானது இதுவரை இருந்து வருகின்ற அரசியலமைப்பில் உள்ளதைப் போன்ற ஒற்றையாஆட்சி முறையாகும். அந்த வரைவு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானதாகும். இவ்வாறான தமிழ்மக்களது அபிலாசைகளைப் புறக்கணிக்கும். அரசியலமைப்பை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டது. மேலும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வு எட்டும் வகையில் ‘சமஸ்டி’ அரசியலமைப்பு கொண்டுவரப்படல் வேண்டும் அதன் மூலமே தமிழ் பகுதிகளில் பௌத்த சிங்கள மயமாக்கல், ஆக்கிரமிப்புக்கள், இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாக்க முடியும் என்றும் அதற்கான அழுத்தங்களை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அனுர அரசின் ஆட்சியிலும் தமிழர் தாயகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பௌத்த சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த இந்திய அரசு இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிரால் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக ‘கிபுல் ஓயா’ திட்டம் தமிழர் தாயகத்தின் இன பரம்பலை மாற்றியமைக்கும் குறிக்கோளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 1985 ஆம் ஆண்டில் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்குப் பிராந்தியங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களை மீளக்கூடியமர அனுமதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஒற்றையாட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளி மாகாணங்களை சேர்ந்த சிங்கள மக்களை சட்டவிரோதமாக குடியேற்றினார்கள். அவ்வாறு சட்ட விரோதமாக குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயத்திற்கான மேலதிகமான நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கே இத்திட்டம் 2013-ல் ராஜபக்சாக்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதே திட்டத்ததிற்கே 2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2000 கோடி நிதியை தற்போதைய அரசாங்கம் ஒதுக்கீடு செய்ததுடன், கடந்த ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் விரோத இனவாத திட்டத்தையே இந்த அரசாங்கமும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றது என்பதனைச் சுட்டிக்காட்டினர். மேலும் சிறிலங்கா பொருளாதாரத்தில் விழுந்திருக்கும் தற்போதய சூழலில், நாடு பொருளாதார ரீதியாக மீண்டெழுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவிலேயே முழுவதுமாக தங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஆதரவை நாடி நிற்கின்றது. இவ்வாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச தரப்புக்களது உதவிகளை பெற்று பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடும் அதேவேளை, மறுபுறமாக தனது திறைசேரி மூலம் நிதி ஒதுக்கீடுகளை செய்து சிங்கள பௌத்தமயமாக்கலையும், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளையும் தமிழர் தேசத்தின் இருப்புக்கு எதிராக மேற்கொண்டுவருகின்றது. கடந்து வந்த அரசாங்கங்கள் தொடந்த அதே இனவாத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் செய்து வருகிறது. ‘கிபுல் ஓயா’ திட்டம் தமிழர்களின் இருப்புக்கு எதிரானது என்ற வகையில் இந்திய அரசு தலையீடு செய்து இத்திட்டத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற விடயமும் முன்னணியினரால் வலியுறுத்தப்பட்டது. அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு நான்கு நிழல் அமைச்சர்களை அரசு நியமித்துள்ளது. இதன் மூலம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை புறக்கணிப்பதன் மூலம் என்பிபி கட்சியின் ஆதிக்கததை மறைமுகமாக ஏற்படுத்துகின்றது. அத்துடன் ‘பிரஜா சக்தி’ என்கின்ற திட்டம் ஊடாக கடசி உறுப்பினர்களை நியமித்து அதிகாரத்தை வழங்கி அரச நிர்வாக கட்டமைப்பை கேலிக்குள்ளாக்கும் வகையிலும் உள்ளுராடசி மன்றங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை புறக்கணித்து அரச நிர்வாகத்தை அரசியல் மயமாக்கி சர்வாதகாரம் நோக்கியும் ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் ஒரு கட்சி ஆட்சி முறையை நோக்கியும் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது வுலிகாமம் வடக்கில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு காணிகள் விடுவிக்கப்படல் வேண்டுமென மக்கள் கோரிவரும் நிலையில் இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் வலி வடக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு இரண்டு கட்டங்களாக புத்தசாசன அமைச்சில் இடம்பெற்றுள்ளது இந்தக் கலந்துரையாடலுக்கு காணி உரிமையாளர்கள் அழைக்கப்படாமல் புத்தசாசன அமைச்சினால் அழைக்கப்படாத நிலையில், சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் ஈடுபட்டதன் மூலம் இனக்குரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் குற்றத்தைப் புரிந்த குறித்த சட்டவிரோத விகாரையில் தங்கியுள்ள பிக்குவை அழைத்து பௌத்த சாசன அமைச்சர் உரையாடியது இந்த அரசாங்கத்தின் இனவாத செயற்பாடேயாகும். இவ்விடயத்தில் இந்திய அரசு தலையிட்டு காணிகளை விடுவிக்க உதவ வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மேலும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக தற்போதும் உள்ள வசாவிளானில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக இராணுவ வைத்தியசாலை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோகும் அனுர அரசாங்கத்தின் நடிவடிக்கைகளை தடுத்து, காணி உரிமையாளர்களுக்கு சொந்தமான காணிகள் உரிமையாளர்களுக்கு கிடைக்க இந்திய அரசு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் சந்திப்பின்போது முன்னணியினரால் வலியுறுத்தப்பட்டது. அத்துடன். பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளையும் அரசாங்கம் தாமதப்படுத்தி வருகின்ற தற்போதைய சூழலில், அந்த அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த இந்தியா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது
Celery Juice: Hype or Hair Growth Miracle?
Open Instagram on any morning, and you’ll likely see someone holding a glass of bright green juice. Celery juice has
புலிகள் பலமாகவே உள்ளனர்:நாமல்!
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களது கொள்கைகள் இன்றும் பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர் வலைப்பின்னல்கள் ஊடாகச் செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்த மாத இறுதியில் அவர் உரையாற்ற இருந்த நிலையில் விரிவுரை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிரித்தானியா முழுவதும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் எதிர்ப்பு தெரிவித்தமையே உரை இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் என அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிலுள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளைஞர் அமைப்பு உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் அவரது வருகைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை முன்னெடுத்தன. இந்த அழுத்தங்களின் காரணமாகவே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விரிவுரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா? திருப்பூரில் சிக்கிய 6 வங்கதேசத்தினர்; பின்னணி என்ன?
நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், சமூக வலைத்தளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துகள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீஸார் கண்டறிந்தனர். அவர்கள் யாரென்று ஆய்வுசெய்தபோது, திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க திருப்பூர் வந்த டெல்லி கியூ பிராஞ்ச் போலீஸார், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸாரின் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 6 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்த மிஜானுர் ரகுமான் (33) , முகமது சபாத் (34), உமர் (29), முகமது லிடான் (30), முகமது ஜாகித் (28), முகமது உஜ்ஜால் (29) என்பது தெரியவந்தது. போலீஸ் தொழிலாளர்கள் என்ற போர்வையில் திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த டெல்லி போலீஸார் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லி அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் உள்ளனரா?, வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? போன்றவை குறித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். திருப்பூரில் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. `8'-இல் `2' தொகுதிகள்; உதயநிதியின் டார்கெட் - களமிறக்கப்படும் இளைஞரணி?பரபரக்கும் திருப்பூர் திமுக!
IIT Madras Develops Blood Clot Detection Technique
Researchers at IIT Madras have developed and secured a patent for a new technique that can detect blood clot formation
சென்னை: பார்சலுக்குள் மண்டை ஓடு, எலும்புகள், விபூதி; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்; களமிறங்கிய போலீஸ்
சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கடைக்கு 20-ம் தேதி ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் ஒருவர், பார்சல் ஒன்றை வாட்ச்மேன் கிருஷ்ணா லால் என்பவரிடம் கொடுத்து, இது உங்கள் கடையில் வேலை செய்யும் ஸ்ருதி என்பவருக்கு வந்த பார்சல். அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். பார்சலை வாங்கிய வாட்ச்மேன், கடையில் அக்கவுண்ட்டாக வேலை செய்யும் ஸ்ருதிக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். உடனே ஸ்ருதி, இது எனக்கு வந்த பார்சல் இல்லை எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து கடையின் உரிமையாளர் ஜித்தேந்தருக்கு வாட்ச்மேன் கிருஷ்ணலால் விவரத்தைக் கூறியிருக்கிறார். அதன்பிறகு கடையில் உள்ள ஊழியர்கள் அந்தப் பார்சலைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். அதில், மனித மண்டை ஓடு, 3 மனித எலும்புகள், விபூதி ஆகியவை இருந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் யானைகவுனி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். மனித மண்டை ஓடு உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பார்சலைக் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று ஸ்ருதியிடம் விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய கணவர் தினேஷ்குமார், மெடிக்கல் சர்ஜிக்கல் ரெப்ரன்சிட்டிவ்வாக வேலை செய்து வருகிறார். ஆனால் இந்தப் பார்சலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனக் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பார்சலைக் கொண்டு வந்த இளைஞர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது பைக்கில் வந்த இளைஞர், கடையிலிருந்து 50 மீட்டர் தூரத்திலேயே பைக்கை நிறுத்திவிட்டு முகம் தெரியாத வகையில் ஹெல்மெட் அணிந்து வந்திருக்கிறார். பைக்கின் பதிவு நம்பரைக் கொண்டு போலீஸார் விசாரித்து வருகிறார். பார்சல் கொண்டு வந்த இளைஞர் பிடிபட்டால் மட்டுமே முழு விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். ஆவியிடம் மன்னிப்பு; காதலியை கொலை செய்து பிணத்துடன் உறவு - மும்பையில் பதுங்கி இருந்த காதலன்
Rajinikanth Kamal Film Teaser Sparks Buzz
The excitement around the upcoming film starring Rajinikanth and Kamal Haasan has grown even stronger after the release of its
Thanos Return Rumours Spark MCU Buzz
Fresh rumours about the Marvel Cinematic Universe (MCU) have once again sparked excitement among fans. A new online roundup suggests
‘டிராகன் 2’ தயார்: பிரதீப் ரங்கநாதன் –அஷ்வத் மாரிமுத்து கூட்டணியின் அதிரடி அறிவிப்பு
சூர்யாவின் 'மௌனம் பேசியதே' படத்தைப் போலவே, 2025-ன் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘டிராகன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Lucky The Superstar Review: கலகல வசனம் பேசும் நாய்கள்; படத்தின் பரீட்சார்த்த முயற்சி கைகூடுகிறதா?
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் தேங்காய் ஸ்ரீனிவாசன் (சுப்பு பஞ்சு) மனைவி (தேவதர்ஷினி), குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய குழந்தை அம்மு (மேக்னா சுமேஷ்) ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பிடித்த விஷயங்களுடன் நெருங்கி வளர்வதே அக்குழந்தைக்கான மருந்து என மருத்துவர்கள் கூறிவிட, மாமா லக்ஷ்மணன் (ஜி.வி. பிரகாஷ்) அவரைப் பாசமாகக் கவனித்துக் கொள்கிறார். ஒரு நாள் அவருக்கென லக்ஷ்மணன் ஒரு நாய்க்குட்டியையும் வீட்டிற்குக் கொண்டு வருகிறார். அதனுடன் மிகவும் இணக்கமாகிறார் அம்மு. ஆனால், திடீரென ஒரு நாள் அந்த நாயைச் சிலர் கடத்திச் சென்று விடுகிறார்கள். Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம் பெரும் அற்புதங்களை நிகழ்த்தும் அந்த 'லக்கி' நாய்க்குட்டி, பலரின் கைகளுக்கும் செல்கிறது. இடையே லக்கியின் தாய் நாயும் குட்டியைத் தேடி அலைகிறது. மற்றொரு பக்கம், நாய் காணாமல் போனதால் மிகவும் வருத்த நிலையில் இருக்கிறார் அம்மு. அம்முவின் சந்தோஷத்திற்காக அந்த நாய்க்குட்டியை மாமா மீட்டுக்கொண்டு வரும் பாசப் போராட்டமே இந்த 'லக்கி தி சூப்பர்ஸ்டார்'. My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்? சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்ற வழக்கமான பாதையில் நமக்கு நன்கு பரிச்சயமான ஜி.வி.பிரகாஷே வந்து போகிறார். ஓரிரு இடங்களில் கட்டுப்பாட்டை மீறி அவிழ்த்துக் கொண்டு ஓடும் செயற்கைத்தனங்களைத் தவிர்த்திருக்கலாம். நாயகி அனஸ்வரா ராஜனுக்கு நடிப்பில் குறிப்பிடும்படியான வேலை தரப்படாததால், நம் மனதில் இடம் பிடிக்காமலேயே தப்பி ஓடிவிடுகிறார். சுப்பு பஞ்சு அவருக்கெனத் தைக்கப்பட்ட காமெடி அளவுச்சட்டையை அணிந்திருக்கிறார். ஆனால், சட்டையில் ஜொலிப்பு இல்லை! கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தேவதர்ஷினி பொறுப்பாகக் கரைசேர்க்க, குழந்தை நட்சத்திரம் மேக்னா சுமேஷும் நடிப்பில் நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார். Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம் மேலும், டேனியல் ஆனி போப், ஆடுகளம் நரேன், இளங்கோ குமரவேல், மதுசூதன் ராவ், நமோ நாராயணா ஆகியோருக்கு ஓரிரு காமெடிகளை நிகழ்த்தும் வேலை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களைத் தாண்டி நாய்களுக்குப் பின்னணி குரல் தந்திருக்கும் கோவை சரளா, ‘மொட்டை’ ராஜேந்திரன், தம்பி ராமையா ஆகியோரின் பணி காமெடி என்றாலும் சோதிக்கவே செய்திருக்கிறது. Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா? UK செந்தில்குமார் கேமரா 'டீசன்ட்' சொல்ல வைத்தாலும், இக்காமெடி படைப்பிற்கேற்ற கலர்ஃபுல் டோன் ஒளிப்பதிவில் இல்லாமல் போயிருக்கிறது. ஓர் இடத்திற்குள்ளேயே மீண்டும் மீண்டும் 'ரிங்கா ரிங்கா ரோஸஸ்' விளையாடும் காட்சிகளைக் கூர்மைப்படுத்தாமல் அப்படியே படத்திற்குள் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர். சீரான டி.ஐ. கலரிங் இல்லாததும் படத்தின் விஷுவல்களை 'டல்'லாக்கியிருக்கிறது. பாடல் இசையில் ஹேஷம் அப்துல் வஹாப்பும், பின்னணி இசையில் நவ்நீத் சுந்தரும் இந்த டிராமாவிற்குத் தேவையான டச் தராதது மைனஸ். Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம் ஆங்கிலப் படங்களைப் போல மிருகங்களுக்கு வாயசைவுடன் டப்பிங் செய்திருப்பது கிராபிக்ஸ் ரீதியாக ஓகே என்றாலும், சில காட்சிகளில் இயல்புத்தன்மை மிஸ்ஸிங்! லக்கி என்ற குட்டி நாயுடன் நெருக்கமாகும் குழந்தை, பெயரைப் போலவே அந்த நாயும் லக்கி என அதனைப் பலரும் சொந்தம் கொண்டாடுவது, அரவணைப்பிலிருந்து நாய் காணாமல் போனதால் கவலை கொள்ளும் அம்மா நாய் எனச் சுவாரஸ்யமான முடிச்சுகளுடனே படத்தைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் உதய் மகேஷ். நாய்களுக்கு குரல் கொடுத்து கதாபாத்திரங்களாகத் திரைக்கதைக்குள் கொண்டு வரும் ஐடியா பழசு என்றாலும் அதற்கான அனிமேஷனுக்கு மெனக்கெட்டதற்குப் பாரட்டுகள். ஆனால், அந்தப் பின்னணி குரல்கள் நிகழ்த்தும் காமெடி வசனங்கள் ரொம்ப சுமார் என்பதைத் தாண்டி அதிலும் உருவக் கேலிகளைச் சேர்த்திருப்பது மிகத் தவறு ப்ரோ! 'லக்கி'யான நாயால் நல்லது நடக்க, அதற்காக அனைவரும் அதை வைத்துக்கொள்ளத் துடிக்க... இது ஒரு சிறுவர் சினிமா என்று நாம் நம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டாலும் கதாபாத்திர வடிவமைப்பில் அழுத்தமில்லாதது, நம்பகத்தன்மையற்ற வகையில் காட்சிகளை அமைத்திருப்பது ஏமாற்றமே! அதுவும் மாநிலத்தின் முதல்வரை, கவுன்சிலர் ரேஞ்ச் கெடுபிடிகளுடன் காட்டியதெல்லாம் லாஜிக்கே இல்லை பாஸ். Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம் அதுவும் நாயகன் நாயை மீட்டுக்கொண்டு வரும் படலத்தில் மீண்டும் மீண்டும் ஒரு வட்ட வடிவத்திற்குள்ளாகவே கதை வாக்கிங் செல்வது நம்மை அதீத சோர்வாக்கி பூஸ்ட் கேட்க வைக்கிறது! தொடக்கப் புள்ளியைச் சுவாரஸ்யமாகப் போடப்பட்டிருந்தாலும், சிறுவர் சினிமாவுக்குத் தேவையான அம்சங்களை லாகவமாகப் பிடிக்கத் தவறியதால், சுமாரான புள்ளிக் கோலமாகவே முடிந்திருக்கிறது இந்த 'லக்கி தி சூப்பர் ஸ்டார்'.
Akshay Oberoi’s New Courtroom Thriller Begins Shoot
Actors Akshay Oberoi and Heli Daruwala are all set to start shooting for their upcoming Bollywood suspense thriller on February
தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை; கைது செய்ய உத்தவு!
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதள முகவரி சேர்க்கப்பட்டமை தொடர்பில் சர்தேக நபர்களை கைது செய்ய உத்தவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. சர்ச்சையான பாடப்புத்தம் தொடர்பான வழக்கை விசாரித்த கங்கொடவில நீதவான் நீதிமன்றம், இது குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு பணிப்புரை கங்கொடவில நீதவான் ருவன்திகா மாரசிங்க நேற்று (20) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் […]
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களைகட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல்தான் பயங்கரவாதத்தில் இருந்துஅரசை பாதுகாக்கும் சட்டத்தில்… The post அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே “பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்” appeared first on Global Tamil News .
மீண்டும் நாட்டில் எரிவாயு வரிசை; வெட்கம் என்கிறார் பெரமுன முன்னாள் எம்பி!
மீண்டும் எரிவாயு வரிசை ஏற்பட்டுள்ளமையை இட்டு அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். “அந்தக் காலத்திலும் எரிவாயு (Gas) வரிசையில் நின்றோம், அப்போது ஒரு வாரம் வரை நின்றோம். ஒரு நிமிடம் கூட வரிசையில் நிற்க வைக்க மாட்டோம் இன்று இரண்டு மூன்று மணிநேரம் தான் நிற்கிறோம். இரண்டு மூன்று மணிநேரம் நிற்பது கடினமா […]
டெல்லியில் தாக்குதல் நடத்த லஷ்கர் குழு திட்டம் –பஞ்சாப், காஷ்மீரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
தலைநகர் டெல்லியில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை, பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரித்த நிலையில் பாதுகாப்பு
பருத்தித்துறையில் கையெழுத்து போராட்டம்
வடக்கு கிழக்கு பொது அமைப்புக்களால் பயங்கரவாத தடை சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என வலியுறுத்தி இன்றைய தினம் சனிக்கிழமை பருத்தித்துறை பகுதியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை கோவையில் திமுக இளைஞரணி மாநாடு
தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்தநிலையில் தி.மு.க. இளைஞர்
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 3 வது டி20 போட்டி –இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போடடி இன்று
வலி தாங்க முடியல…வயிற்றை கிழித்துக்கொண்ட கர்ப்பிணி
உத்தரபிரதேசத்தில் பிரசவ வலியை தாங்க முடியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், காய்கறி வெட்டும் கத்தியால் வயிற்றை கிழித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் Nandwal கிராமத்தை சேர்ந்த பெண் Nankai(வயது 35), கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவரது கணவர் இறந்துவிட தனியாக வசித்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த Nankai-க்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது, வலி அதிகமாகவே தாங்கிக்கொள்ள முடியாத Nankai, சமையலில் காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டு […]
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு –இந்திய வர்த்தக அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வரி விதிப்பை அமல்படுத்தினார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 18 சதவீதம் வரி
Mounam Pesiyathey Movie Team Visit Kamala Theatre Stills
டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே உள்ள குடிகளை அகற்ற உத்தரவு
டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள குடிசை வாசிகள் மார்ச் 6ம் தேதிக்குள் அங்கிருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் –பா.ஜ.க வலியுறுத்தல்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தந்திரி கண்டவரரு ராஜீவரு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.
Maragadha Naanayam 2 Movie Launch Stills
சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அவ்வாறாக அடையாறு மண்டலத்தில்
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு –வானிலை ஆய்வு மைதம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு
தமிழ்நாடு அணியா.. டெல்லி அணியா..? நாங்கள் பார்க்காத மிசாவா.. தடாவா..? மு.க. ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்றால் திமுக ஜெயிக்க வேண்டும். அதிமுகவும் பாஜகவும் டெபாசிட் இழக்க வேண்டும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
Nambikkai Global Launch Stills
விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனால்.. திமுக அமைச்சர் கொடுத்த ட்விஸ்ட்
தமிழக வெற்றி கழகம் சார்பில் கடைசியாக சேலத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அடுத்ததாக வேலூர் நிர்வாகிகள் சந்திப்பை கூடுதல் பாதுகாப்புடன் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்வுக்காக விஜய் வேலூர் வருவது தொடர்பாக திமுக அமைச்சர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
இது சும்மா டிரெய்லர் தான்.. மெயின் பிக்சர் எங்கு தெரியுமா? மதுரையில் மு.க. ஸ்டாலின் உரை!
200 தொகுதிகள் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு கூடுதலாக வெற்றி பெறுவதுதான் லட்சியம். அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் எனக்கும் நோ ரெஸ்ட் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி
டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஸ்டால்களை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. அதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு ஸ்டால் அமைத்து, தங்கள் தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது. இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், `ஓரியன் என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மிகவும் குறும்புத்தனம் மிக்கது' என்றார். அந்தப் பேட்டி வைரலான நிலையில், அது தங்கள் நாட்டின் தயாரிப்பு என்றும் சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்றும் சீன ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. அதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உலக அரங்கில் நாட்டை அவமானப்படுத்திவிட்டதாக தெரிவித்திருந்தார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அதன் தொடர்ச்சியாக ஏ.ஐ மாநாடு நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கில் சட்டையைக் கழற்றிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள். அந்த செயலை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி பா.ஜ.க சார்பில், நேற்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று பா.ஜ.க அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்தவர்களை கைது செய்யுமாறு கோஷமிட்டனர். அதேபோல பா.ஜ.க-வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பா.ஜ.க.வின் அலுவலகத்தையும் முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் போலீஸார் பேரிகார்டுகள் மூலம் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பா.ஜ.க அலுவலக வாசலில் உருட்டுக்கட்டை, தடியுடன் நின்றிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள், காங்கிரஸ்காரர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். ஒருகட்டத்தில் போலீஸாரின் தடுப்பை மீறிச் சென்ற காங்கிரஸ்காரர்கள், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது இருதரப்பினரும் கல் மற்றும் செருப்புகளை வீசித் தாக்கிக் கொண்டனர். அதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி உள்ளிட்ட போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம், எம்.எல்.ஏ வைத்தியநாதன் உள்ளிட்டவர்கள், தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க-வினரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது. 'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா
Trump Tariff: வரியை ரத்து செய்த US Supreme Court - Indiaவுக்கு எவ்வளவு வரி? | Decode | Vikatan
தாய்மொழி தினம்: வநக்கம் டமில் மக்களே! - அரசியல் மேடைகளில் அரங்கேறும் 'மொழியியல்'கொலைகள்!
இன்று பிப்.21 - சர்வதேச தாய்மொழி தினம். மொழியின் சிறப்பைப் போற்றுவதற்கான நாள். ஆனால், தேர்தல் காலம் வந்துவிட்டால் போதும், நம் அரசியல்வாதிகள் மொழியை வைத்து நடத்தும் வித்தைகளைப் பார்த்தால், மொழிப்பற்று உள்ள எவருக்கும் ரத்தக் கண்ணீர் வந்துவிடும். ஓட்டுக்காக வேற்று மொழிகளைத் தப்புத் தப்பாக உச்சரிப்பது, திருக்குறளைத் 'திருத்தி' வாசிப்பது, மொழிபெயர்ப்பு என்ற பெயரில் மேடைகளில் காமெடி செய்வது எனச் சமகால அரசியல் மேடைகள் ஒரு மாபெரும் 'மொழி வதை' முகாமாகவே மாறிவிட்டன. amit sha வநக்கம் டமில் மக்களே தட்டுத்தடுமாறும் டெலிப்ராம்ப்டர் தலைவர்கள் தேர்தல் வந்துவிட்டால், பல தேசியத் தலைவர்களுக்குத் திடீரெனத் தமிழ் மீது தீராத காதல் வந்துவிடும். விமானத்தில் வரும்போதே, ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ தமிழை 'transliterate' செய்து பேப்பரில் எழுதிக்கொண்டு வருவார்கள். அல்லது எதிரே இருக்கும் 'டெலிப்ராம்ப்டர்' (Teleprompter) திரையைப் பார்த்து வாசிப்பார்கள். தமிழ் என்பதை டமில் என்றும், கழகம் என்பதை கலகம் என்றும் உச்சரிக்கும்போதே கூட்டத்தில் உள்ளவர்களுக்கு பாதி உயிர் போய்விடும். உள்ளூர் வட்டார வழக்குகளைப் பயன்படுத்த நினைத்து, எப்புடி இருக்கீங்க? என்று கேட்பதற்குப் பதிலாக, ஏதோ ரோபோ பேசுவது போல் என் அன்பார்ந்த... தமிழ்... நெஞ்சங்களே... என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் ஒரு மைல் இடைவெளி விட்டு அவர்கள் படும் பாடு இருக்கிறதே... அடடா! திருக்குறள் பாவம் தமிழ்நாட்டில் ஓட்டு கேட்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு திருக்குறளாவது மேடையில் சொல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால், இங்குதான் மிகப்பெரிய ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது. முதல் அடியை ஒரு குறளில் இருந்தும், இரண்டாவது அடியை சம்பந்தமே இல்லாத வேறொரு குறளில் இருந்தும் எடுத்து ரீமிக்ஸ் செய்வார்கள். சில உள்ளூர் அரசியல்வாதிகள் குறளை சரியாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால், அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கிறதே! அதாவது வள்ளுவர் என்ன சொல்றாருன்னா... என்று ஆரம்பித்து, கட்சித் தலைமையைப் புகழ்வதற்கும், எதிர்க்கட்சியைத் திட்டுவதற்கும் திருக்குறளை வளைத்து நெளித்து முறுக்குவார்கள். இதைக் கேட்கும்போதெல்லாம், கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி வள்ளுவர் சிலை, கடலுக்குள் குதித்துவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்குக் கொடூரமாக இருக்கும். rahul மொழிபெயர்ப்பாளர்களின் கிரியேட்டிவிட்டி சமகால அரசியலில் மிகவும் ரசிக்கக்கூடிய ஒரு விஷயம், மேடை மொழிபெயர்ப்புகள்தான். தேசியத் தலைவர் ஒன்று பேச, உள்ளூர் மொழிபெயர்ப்பாளர் முற்றிலும் சம்பந்தமில்லாமல் இன்னொன்றை மொழிபெயர்த்துத் தள்ளுவார். தலைவர் மைக் வேலை செய்கிறதா என்று பார்க்க Hello, Check என்பார். நம்மவர் உடனே, இந்தியா எங்களை உற்று நோக்குகிறது என்று மொழிபெயர்ப்பார். சில நேரங்களில் தலைவரின் ஆங்கிலமோ, இந்தியோ மொழிபெயர்ப்பாளருக்குப் புரியாது. உடனே அவர் மனம் தளராமல், தலைவர் பேசுவதை அப்படியே நிறுத்திவிட்டு, தமக்குத் தெரிந்த கட்சிப் பிரசாரத்தை எல்லாம் தலைவர் சொல்கிறார்... என்ற பெயரில் அடித்து விடுவார். தலைவர் உணர்ச்சிவசப்பட்டு கை நீட்டிப் பேச, மொழிபெயர்ப்பாளரோ செத்த வீட்டில் இரங்கல் உரை வாசிப்பது போல் பேசுவதும் அரங்கேறும். பாரதியாரா.... அல்லதுபாகுபலியா? இலக்கியம் பேசுகிறேன் பேர்வழி என்று சில மேடைப் பேச்சாளர்கள் செய்யும் அலப்பறைகள் தனிரகம். சங்க இலக்கியப் பாடல்களை சினிமா பாட்டு மெட்டில் பாடுவது. சினிமா வசனங்களை எல்லாம் அன்றே பாரதியார் பாடினார், ``பாகுபலியில் வந்தது,’’ புறநானூறு சொல்கிறது என்று அடித்து விடுவது. எதுகை மோனைக்காக, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டு, இதுதான் சிலப்பதிகாரத்தின் சாரம் என்று சாமர்த்தியமாக முடிப்பது. modi ஆக அரசியல்வாதிகளே... ஒரு மொழியை பற்றுடன் கற்றுக்கொண்டு அரைகுறையாகப் பேசுவது வேறு, ஓட்டுக்காக அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, 'குண்டக்க மண்டக்க' என்று பேசி மொழியைக் கொலை செய்வதுதான் கூடாது. ஒரு மொழியை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து சிதைக்காமல் இருங்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்வதைத் தவிர இந்த நாளில் நமக்கு வேறு வழியில்லை.
டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில், அபிஷேக் சர்மா அடுத்தடுத்து மூன்று முறை டக்அவுட் ஆகியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி, ஆட்டத்தில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து அபிஷேக் சர்மா பேசியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் ஏற்பாடுகளுடன் அதனை கொண்டுவர முயல்கின்றனர் என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் பயங்கரவாத தடை சட்டத்திற்க்குஎதிராக மக்கள் போராடிய போதும் , […]
அர்ச்சுனா எம்.பியை வறுத்தெடுக்கும் மானிப்பாய் தவிசாளர்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (20) பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தவிசாளர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், காலை ஒன்று பேசுவார், மாலை ஒன்று பேசுவார், அடுத்தநாள் ஒன்று பேசுவார்கடந்த, சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் ஆசனத்துக்கு சண்டையிட்டதாக கூறுகின்றார். ஆனால் எனக்கு […]
Sensex, Nifty Set for Strong Opening
India’s main stock market indices, the Sensex and Nifty, are expected to open higher on Monday. This positive trend comes
Brand Bengaluru: சர்வதேச SWAN அமைப்பில் இந்தியாவின் ஒரே பிரதிநிதி; வாழ்த்திய முதல்வர் சித்தராமையா!
SWAN (Smart Water Networks Forum) என்ற அமைப்பு உலகெங்கிலும் உள்ள குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் அமைப்புகளை ஸ்மார்ட் (Smart) ஆக மாற்றும் ஒரு சர்வதேச லாப நோக்கற்ற அமைப்பாகும். இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், பாரம்பரிய நீர் மேலாண்மை முறைகளை மாற்றி, தரவு (Data) மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீரைச் சிக்கனமாகவும் திறம்படவும் கையாள்வதாகும். இந்த அமைப்பில் அரசு நீர் வாரியங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் உறுப்பினராக இணையமுடியும். அதன் அடிப்படையில், 5-வது மூத்த நீர் பயன்பாட்டு ஆலோசனைக் குழுவில் பெங்களூரு நீர் வாரியத் தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். டாக்டர் ராம் பிரசாத் மனோகர் பெங்களூரு நகரின் குடிநீர் மேலாண்மையில் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் புகுத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்த (Data-driven) நவீனத் தொழில்நுட்ப முயற்சிகளுக்காக இந்த உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேசக் குழுவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல், பிரேசில், இந்தியா என 6 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மட்டுமே இருக்கின்றனர். மேலும், இந்த அமைப்பின் உயர்மட்டக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே இந்திய அதிகாரி என்ற சிறப்பையும் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் பெற்றிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கும், 'பிராண்ட் பெங்களூரு' (Brand Bengaluru) தொலைநோக்குத் திட்டத்திற்கும் எனது நன்றி. மேலும், பெங்களூருவின் தொழில்நுட்பக் குழுவின் கடின உழைப்பிற்கே இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற ராம் பிரசாத் மனோகருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, ``ஸ்மார்ட் வாட்டர் நெட்வொர்க்ஸ் ஃபோரம் (SWAN) அமைப்பின் 5-வது மூத்த நீர் பயன்பாட்டு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள BWSSB தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல், பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள இத்தருணம், கர்நாடக மாநிலத்திற்குப் பெருமிதமான ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு அடிப்படையிலான நீர் மேலாண்மையில் பெங்களூருவின் முன்னோடி முயற்சிகளுக்கும், நிலையான நகர்ப்புற நிர்வாகத்திற்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. உலகளாவிய நீர் மேலாண்மைப் புதுமைகளில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றி பெற வாழ்த்துகிறேன். எனக் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார். துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ``ஸ்மார்ட் வாட்டர் நெட்வொர்க்ஸ் ஃபோரம் (SWAN) அமைப்பின் சர்வதேச மூத்த நீர் பயன்பாட்டு ஆலோசனைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெங்களூரு நீர் வாரியத் (BWSSB) தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் @PrasathIas அவர்களுக்கு வாழ்த்துகள். தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுடன் நமது நீர் மேலாண்மை முறைகளை நவீனப்படுத்தி வரும் 'பிராண்ட் பெங்களூரு' (Brand Bengaluru) திட்டத்திற்கு இது ஒரு பெருமிதமான தருணம். 'ஸ்மார்ட்' நீர் மேலாண்மையின் உலகளாவிய சிறந்த நடைமுறைகளில் இப்போது நமது நகரமும் தனது பங்களிப்பை வழங்குகிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். `ஊக்கத்தொகை நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதிகாரியானால்' - தன் புத்தகம் குறித்து ராம் பிரசாத் மனோகர் IAS
கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்தம்! - முதல்வர் ஸ்டாலினின் அமிர்தம் மாமா இல்ல விழா!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் மாமாவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரியின் மகனுமான அமிர்தத்தின் பேத்தி இலக்கியா - டாக்டர். கிரிதரா திருமண நிச்சயதார்த்தம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. முதல்வர் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்து உறவுகள் அனைவரும் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. கருணாநிதியின் மருமகனும் கலைஞர் தொலைக்காட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவருமான அமிர்தம் - வசந்தா தம்பதியின் மகள் வழிப் பேத்தி இலக்கியா. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையில் உயரதிகாரியாக இருக்கும் சதீஷ்குமாரின் மகள். இவருக்கு டாக்டர் கிரிதரா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. இருவருக்கிடையிலும் காதல் மலர்ந்து அது இரு வீட்டுத் தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட, பெரியவர்கள் சம்மதத்துடன் நாளை நடக்கவிருக்கிறது நிச்சயதார்த்த நிகழ்ச்சி. ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நாளை மாலை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட கலைஞர் கருணாநிதி குடும்ப உறவுகள் எல்லோரும் கலந்து கொள்ள இருப்பதாக தெரியவருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமிர்தம் மீது எப்போதுமே தனிப் பிரியம் உண்டு. 'அப்பாவிடம் கூட அடி வாங்கியது கிடையாது, ஆனால் அமிர்தம் மாமாவிடம் அடி வாங்கியிருக்கிறேன். அதனால் எப்போதும் அவரிடம் ஒரு பயம் உண்டு. அந்தளவுக்கு கண்டிப்போடு வளர்த்தவர்' என அமிர்தம் குறித்து அவர் முன்பொருமுறை அவர் பேசியது நினைவிருக்கலாம். இலக்கியா - கிரிதரா ஜோடியின் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படுமென்கிறார்கள்.
India’s Pro League Hopes Hit by Spain
India’s hopes of making a comeback in the FIH Men’s Pro League ended after they lost 0–2 to Spain in
அதிமுக மெல்ல மெல்ல காவிமயமாகி வருகிறது –திருமாவளவன்!
சென்னை :இன்று (பிப்ரவரி 21) சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழ் மொழியின் சிறப்பைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பதிவில் தாய்மொழி தின வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை இணைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது பெரும் […]
Floyd Mayweather Announces Professional Boxing Comeback
Floyd Mayweather Jr. has announced that he is coming out of retirement and will return to professional boxing. The 48-year-old
'நான் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்'.. நாகரிகத்தை பின்பற்றுகிறேன்.. வைகோ பேட்டி!
இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்றவும், தலைநகரை டெல்லியிருந்து வாரணாசிக்கு மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உடையவா்கள் முழு மூச்சாக எதிர்க்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.
India Face South Africa in Super Eight Clash
Much has changed since India men’s national cricket team and South Africa national cricket team last faced each other at
நிவேதா பெத்துராஜின் ‘டாட்ஜ் சேலஞ்சர்’: மசில் காரைச் சொந்தமாக்கிய ஒரே இந்திய நடிகை
நடிகை நிவேதா பெத்துராஜ் ஐக்கிய அரபு அமீரகத்தில் 'டாட்ஜ் சேலஞ்சர்' (Dodge Challenger) காரைச் சொந்தமாக வைத்துள்ள ஒரே இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தனது சிறுவயது கனவான இந்த மசில் காரை அவர் 2014-லேயே வாங்கியுள்ளார்.
நிவேதா பெத்துராஜின் ‘டாட்ஜ் சேலஞ்சர்’: மசில் காரைச் சொந்தமாக்கிய ஒரே இந்திய நடிகை
நடிகை நிவேதா பெத்துராஜ் ஐக்கிய அரபு அமீரகத்தில் 'டாட்ஜ் சேலஞ்சர்' (Dodge Challenger) காரைச் சொந்தமாக வைத்துள்ள ஒரே இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தனது சிறுவயது கனவான இந்த மசில் காரை அவர் 2014-லேயே வாங்கியுள்ளார்.
வடகொரியா ஆளுங்கட்சி மாநாடு தொடக்கம்
வடகொரியாவில் மிக முக்கிய அரசியல் நிகழ்வான ஆளும் தொழிலாளா் கட்சியின் 9-ஆவது மாநாடு, அந்நாட்டுத் தலைநகா் பியாங்யாங்கில் பெரும் எதிா்பாா்ப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில், வடகொரியாவின் ராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சுமாா் 5,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, தனது 13 வயது மகள் கிம் ஜு ஏவை எதிா்கால அதிபராக கிம் ஜோங் உன் அதிகாரபூா்வமாக அறிவிக்கக்கூடும் என […]
India Women Face Australia in T20 Decider
In Women’s Cricket, the India women’s national cricket team will take on the Australia women’s national cricket team in the
NASA Schedules Crewed Lunar Mission Next Month
The United States space agency NASA has announced that its crewed lunar mission is scheduled to launch on the 6th
Kuwait Considers New Regulated Freelance Visa
Kuwait is planning to introduce a new regulated freelance visa as part of efforts to reform its labour market. The
'டார்கெட் சவுத்' - ஆதவ்க்கு சென்னை; கொங்குக்கு செங்கோட்டையன்! - தேர்தல் பொறுப்பை ஒப்படைத்த விஜய்!
சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகள் பரபரக்க தொடங்கியிருக்கும் நிலையில், தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் விஜய். TVK Vijay - தவெக விஜய் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவற்றுக்கு முதன்மை தேர்தல் கண்காணிப்பாளர்களையும் இணை கண்காணிப்பாளர்களையும் நியமித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான பொறுப்பு அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் அல்லது பெரம்பூரில் போட்டியிடலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் விஜய்யை தவிர்த்து கட்சியின் முக்கிய முகங்கள் சிலரும் சென்னையில் களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் முக்கியஸ்தர்கள் களமிறங்கப்போகும் ஏரியா என்பதால் இந்தத் தொகுதிகளுக்கான பொறுப்பு ஆதவ் அர்ஜூனுக்கு வழங்கப்படுவதாக கூறுகின்றனர். தேர்தல் பொறுப்பு அதேமாதிரி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் என கொங்கில் ஒரு பகுதியும் அதனுடன் தர்மபுரி, கிருஷ்ணகிரி சேர்த்து செங்கோட்டையனின் ஆதரவாளரான சத்யபாமாபுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேர்தல் பொறுப்பாளராக ஆனந்த் மற்றும் ஆதவோடு இணைந்து செங்கோட்டையன் செயல்படுவாராயினும், கொங்கு மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் இங்கே செங்கோட்டையன் அதிக கவனம் செலுத்துவார் என்கின்றனர். சேலம் அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜின் சொந்த ஊர். கடந்த வாரத்தில் விஜய் சேலம் சென்றிருந்த போது ஆனந்த், செங்கோட்டையன் உட்பட முக்கிய நிர்வாகிகளுக்கு அருண் ராஜ் தன்னுடைய வீட்டில் விருந்து கொடுத்திருந்தார். செங்கோட்டையன் கட்சியில் இணைந்த போதும் கொங்கு மண்டலத்தோடு சேர்த்து சேலம் பொறுப்பையும் அவருக்கு கொடுக்காமல் வைத்திருந்தனர். காரணம் அருண் ராஜ். அவர் கொங்கில் தனக்கும் ஒரு பிடி வேண்டுமென எதிர்பார்த்தார். விஜய்க்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு வேண்டியதும் இப்போது கிடைத்திருக்கிறது. சேலம் + நாமக்கல் இரண்டு மாவட்டங்களும் அருண் ராஜூக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாமக்கலில் உள்ள திருச்செங்கோட்டில் அருண் ராஜ் போட்டியிடப் போவதும் குறிப்பிடத்தக்கது. TVK Vijay சத்யபாமாவுக்கு 6 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அடுத்தப்படியாக அதிகமாக 5 மாவட்டங்களை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்கள் இவரின் கீழ் வருகிறது. முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், டெல்டாவில் கணிசமாக இருக்கும் அந்த சமூகத்தினரை கவரும் வகையில் கு.ப.கிருஷ்ணனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் வழங்கப்படுகிறது. சி.டி.ஆர் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடலாமா எனும் ஐடியாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தும் வகையில் கண்காணிப்பாளர்களை நியமித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. தென் மாவட்டங்கள் தவிர்த்து 28 மாவட்டங்களுக்கு 9 கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கும் விஜய், 10 தென்மாவட்டங்களுக்கு 5 கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியதை தாண்டி தென் மாவட்டங்களில் கட்சியின் செயல்பாடு பெரிதாக இல்லை என்பதால் அதிகமான பொறுப்பாளர்களை நியமித்திருப்பதாக கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர். Aadhav Arjuna இந்தப் பட்டியல் தயாரானவுடனேயே கட்சிக்குள் ஒருவித புகைச்சலும் எழுந்திருக்கிறது. முதன்மைப் பொறுப்பாளர் பட்டியலிலும் தன்னை வைத்து வட மாவட்டங்களையும் கையில் கொடுத்திருப்பதால் ஆதவ் அர்ஜூனா தரப்பு செம குஷியாம். ஆனால் பொருளாளர் வெங்கட்ராமனுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கப்படவில்லை. அதேமாதிரி, கட்சிக்காக ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் அருண் ராஜூக்கு முதன்மைப் பொறுப்பு வழங்கப்படாமல் இரண்டு மாவட்டங்களில் அடக்கியதில் அவரும் கொஞ்சம் அப்செட் என்கின்றனர். மேலும், தென் மாவட்டங்களில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பொறுப்பை வழங்காமல் திடீரென கட்சிக்குள் வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக சில மா.செக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். Loading…
Trump Plans to Remove Vietnam Tech Curbs
U.S. President Donald Trump has told Vietnam’s top leader that he will “instruct the relevant agencies” to remove Vietnam from
US Enforces 10% Tariff on Trading Partners
The White House has announced that all U.S. trading partners who had signed tariff agreements with President Donald Trump’s administration
`சங்குப்பூ இட்லி, வாழைப்பூ அதிரசம், இன்னும் பல...!' - திண்டுக்கலை மணக்கவைத்த சமையல் சூப்பர் ஸ்டார்
சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார். விழுப்புரம், புதுச்சேரி, வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தை தொடர்ந்து இன்றைய தினம் இப்போட்டி திண்டுக்கலில் நாகல் நகர், NVGB ஹால் ரோடு பகுதியில் உள்ள தி ஸ்வாகத் கிராண்ட் பை ஜூவட் ரீஜென்சி மஹாலில் காலை 10 மணி அளவில் தொடங்கியது. இந்நிகழ்வை நடுவர் தீனா குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் போட்டிக்கான விதிமுறைகளையும், போட்டியின் நோக்கத்தையும் பற்றி பேசினார். சமையல் சூப்பர் ஸ்டார் தம்ஸ் அஃப் காட்டி களத்தில் இறங்கிய போட்டியாளர்கள்! இந்த நிகழ்வில் வேடசந்தூர், செம்பட்டி, நத்தம், கொசவப்பட்டி, மேட்டுப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, வெள்ளோடு ஆகிய திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மொத்தம் 125 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என எல்லா வயதினரும் வருகை புரிந்திருந்தனர். விதிமுறைப்படி முதல் சுற்றுக்கு வீட்டிலிருந்தே பல்வேறு வகையான உணவுபொருட்களை போட்டியாளர்கள் சமைத்து எடுத்து வந்திருந்தனர். தக்காளி அல்வா, நெல்லிக்காய் லேகியம், வெற்றிலை பாயசம், பீட்ரூட் அல்வா, வாழை பூ பிரியாணி, சிவப்பரிசி புட்டு, பூவாழை புட்டு, சங்குப்பூ தேங்காய் பால் இட்லி, சைவ ஈரல் குழம்பு, பனங்கிலங்கு பொரியல், நெல்லிக்காய் மோர், வெற்றிலை லட்டு, கவுனி அரிசி கொழுக்கட்டை, சைவ மீன் குழம்பு, சிறு கீரை சாதம், ஓமவள்ளி பக்கோடா, வரகு நேச்சோள், ராகி சிமிலி, கம்பு டேக்கோள், சங்குப்பூ சர்பத், கவுனி லட்டு, பலாக்காய் பிரியாணி, முருங்கைக் கீரை வெஜ் ஆம்லெட். சமையல் சூப்பர் ஸ்டார் கதம்பம் புட்டு, சங்குப்பூ சர்பத், கம்பு ரவை பாயாசம், முளைக்கட்டிய தானிய பர்கர், எள்ளு உருண்டை, சுக்கு களி, கருப்பட்டி ஆப்பம், சுரக்காய் அடை, வரகு பொங்கல், சொதி, வாழைப்பூ வடை, இளநீர் பாயாசம், கருப்பு கவுனி அக்காரவடிசல், மட்டன் மந்தி மீன் தித்திப்பு, சிக்கன் கொண்டாட்டம், மட்டன் கோதுமை நோன்பு கஞ்சி, இரத்தசாலி முறுக்கு, வாழைப்பூ அதிரசம், கருங்குறுவை பணியாரம், பூங்கார் சந்தகை, மாப்பிள்ளை சம்பா புட்டு, காட்டுயானம் கஞ்சி, தூய மல்லி சாதம் என மணமும் சுவையும் நிறைந்து காணப்பட்டது திண்டுக்கல்லை சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஆதீஷ் போட்டியில் கலந்துகொண்டு அவன் செய்த பனானா பாப் (banana pop) ரெசிபியை மழலை மொழியில் சொல்ல நடுவர் தீனா அவர்களும் ஆர்வமுடன் கேட்டு ரசித்தார். சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக இடையிடையே ஸ்பான்சர்களால் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. ரெசிபியோடு சேர்த்து உணவுப் பொருட்களின் நன்மைகளையும் விளக்கிய போட்டியாளர்களின் ஒவ்வொரு உணவையும் ருசித்து பார்த்து மதிப்பெண்களை வழங்கினார் செஃப் தீனா. முதல் போட்டியில் தேர்வான போட்டியாளர்கள் இரண்டாவது சுற்று லைவ் குக்கிங் போட்டிக்கு தகுதியானார்கள். புதிய சிந்தனைகளும் புதுமையான சமையல் முறைகளும் கலந்து, இப்போட்டி அனைவருக்கும் ஒரு இனிய அனுபவமாக அமைந்தது.
Sri Lankan Monks Issue Ultimatum to Government
A group of influential Buddhist monks in Sri Lanka has strongly criticised the government, alleging that an “organised campaign” is
NLC: விதிமீறல்களின் 'சுரங்கம்'என்.எல்.சி? சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்; ஓர் அலசல்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd), கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக 2017-18 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்தியத் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் (CAG) ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவை இந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஆதாரங்களுடன் சமர்ப்பித்திருக்கிறது. அந்த அறிக்கையில், `தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலும், ராஜஸ்தானிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களை இயக்கி வரும் என்.எல்.சி நிறுவனம், உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றிச் செயல்பட்டது முதல், அனல்மின் நிலையங்களை முறையாகப் பராமரிக்கத் தவறியது வரை பல விதிமீறல்களைச் செய்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. என்.எல்.சி 'சிஏஜி அறிக்கையில் என்னென்ன விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன' என்ற கேள்வியுடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர ராஜனைத் தொடர்புகொண்டோம். இந்தப் பிரச்னையின் தீவிரத்தன்மையை விரிவாகப் பேசத் தொடங்கிய சுந்தர ராஜன், ``நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலியிலும், ராஜஸ்தான் மாநிலத்தின் பார்சிங்கரிலும் இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 2017 -18 முதல் 2022 -23 ஆண்டுகளுக்கு இடையேயான செயல்பாடுகளை சிஏஜி ஆய்வு செய்து, அந்த அறிக்கையை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது சிஏஜி. 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், `1994-ம் ஆண்டு வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ், சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற அனைத்துத் திட்டங்களுக்கும், 2006இல் வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ் மீண்டும் அனுமதி பெற வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. NLC: வாரக்கணக்கில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டம் - ஜீவா தொழிற்சங்கக்கோரிக்கைகள் நிறைவேறுமா?! என்.எல்.சி என்.எல்.சி-யின் சுரங்கம்-II 1994-ம் ஆண்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் (EIA) கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தது. அதனால், மீண்டும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், என்.எல்.சி. நிறுவனம் அந்த அனுமதியைப் பெறவில்லை. இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தீர்க்கப்பட்டு, 2023 செப்டம்பர் மாதம்தான் என்.எல்.சி-யின் விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது. 2006-2016 வரை அனுமதி பெறாமலே இந்த நிறுவனம் இயங்கியிருக்கிறது. சுரங்கம்-I-க்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் நிபந்தனைகள்படி, சுரங்கம் தோண்டும்போது எடுக்கப்படும் மண், பாறை உள்ளிட்டவற்றை 20 மீட்டர் உயரத்திற்கு 28 டிகிரி சரிவு இருக்கும்படியாகத்தான் கொட்ட வேண்டும். ஆனால், விதிகளுக்குப் புறம்பாக 50 மீட்டர் உயரத்துக்கு மண் கொட்டப்பட்டிருக்கிறது. அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டால் அந்த மண் குவியல் சரிந்து விழும் அபாயமிருப்பதாக சிஏஜி குறிப்பிட்டிருக்கிறது. அதே போல, சுரங்கம் II-க்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின்படி கொட்டப்படும் மண் மற்றும் பாறைகளின் உயரம் 65 மீட்டர் மற்றும் 28 டிகிரி சரிவு என்கிற அளவைத் தாண்டக்கூடாது. ஆனால், இந்நிபந்தனைக்கு மாறாக 120 மீட்டர் உயரத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக மண் சரிந்து அருகிலுள்ள கால்வாய் மற்றும் விவசாய நிலங்களை மூடியிருக்கிறது. என்.எல்.சி NLC விவகாரம்: வேதனை தெரிவித்த நீதிபதி... விளைநிலங்களில் தொடரும் விரிவாக்கப் பணிகள் - நடப்பது என்ன?! 2012, 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் என்.எல்.சி நிறுவனத்தின் அலட்சியத்தால் தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்துள்ளன. விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு ரூ. 2.18 கோடி அளவிலான இழப்பீட்டை என்.எல்.சி நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. சுரங்கங்களில் நிலத்தைத் தோண்டவும், நிலக்கரியை அள்ளவும், கொண்டு செல்லவும் பெரிய அளவிலான சிறப்புச் சுரங்க இயந்திரங்கள் (Specialised Mining Equipment – SME) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 1,00,000 முதல் 1,37,500 மணி வேலை நேரங்கள்தான். காலாவதியான இயந்திரங்களைப் புத்துயிராக்கம் செய்து, கூடுதலாக 15 ஆண்டுகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என என்.எல்.சி நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. ஆனால், மொத்தமுள்ள 72 SME இயந்திரங்களில் 26 SME இயந்திரங்கள் எவ்வளவு மணிநேரம் பயன்படுத்தப்பட்டன என்கிற கணக்கே பராமரிக்கப்படவில்லை. என்.எல்.சி மேலும் கணக்குகள் பராமரிக்கப்பட்ட 46 SME இயந்திரங்களில் 15 SME இயந்திரங்கள் காலாவதியான பின்பும் புத்துயிராக்கம் செய்யப்படாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன. 8 SME இயந்திரங்கள் காலாவதியான பின்பு 11 ஆண்டுகள் கழித்தே புத்துயிராக்கம் செய்யப்பட்டுள்ளன. 4 SME இயந்திரங்கள் காலாவதியான பின்னர் புத்துயிராக்கம் செய்யப்பட்டு அதன் பின்னர் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1961 மற்றும் 1966 இடைப்பட்ட காலத்தில் 2 SME இயந்திரங்களுக்குப் பதிலாக மாற்று இயந்திரங்கள் வாங்கப்பட்ட பின்னரும் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. காலாவதியான இயந்திரங்களால் என்.எல்.சி சுரங்கங்களில் பலமுறை விபத்துகள் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக 2009 ஆம் ஆண்டு சுரங்கப் பாதுகாப்புத் தலைவர் நடத்திய ஆய்வில் 'முறையாகப் பராமரிக்கப்படாத இயந்திரங்களால்தான் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்தன' எனத் தெரியவந்தது. 12 காலாவதியான இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு ஆய்வே நடத்தப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், என்.எல்.சி. நிறுவனத்தால் சுரங்கம் தோண்டுவதற்காக அடையாளம் காணப்பட்ட 12,835 ஹெக்டரில் 9,180 ஹெக்டர் நிலத்தை மட்டுமே என்.எல்.சி. கையகப்படுத்தியுள்ளது. மார்ச் 2023 நிலவரப்படி இதில் 5,880.34 ஹெக்டர் நிலத்தைத் தோண்டிவிட்டது. 3,253.47 ஹெக்டர் நிலம் மண் கொட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 46.19 ஹெக்டர் நிலம் மட்டுமே இன்னும் தோண்டப்படாமல் உள்ளது. NLC: 25,000 ஏக்கர் கையகம்: என்.எல்.சி-யால் என்னென்ன பிரச்னைகள்? - போராடும் மக்கள் சொல்வதென்ன?! பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் இன்னும் நிலம் கையகப்படுத்த என்.எல்.சி. முயற்சிகள் மேற்கொள்வதாக தகவல் கிடைக்கின்றன. ஏற்கெனவே இந்த நிறுவனத்துக்கு நிலம் வழங்க சுற்று வட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நெய்வேலியில் செயல்படும் மூன்று அனல்மின் நிலையங்களிலும் உள்ள குறைபாடுகளால் அவற்றை முழு உற்பத்தித் திறனுக்கு இயக்க முடியவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக ரூ. 2,353.99 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மூன்று அனல்மின் நிலையங்களிலும் ஏற்பட்ட கோளாறுகளின் காரணமாக மட்டும் 6 ஆண்டுகளில் 742 முறை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 14,538.66 MU மின்சார உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி. அனல்மின் நிலையங்களில் 2001, 2016, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 4 தீ விபத்துகள் நடந்தன. 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரு விபத்துகளில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 'அதிக வெப்பமான லிக்னைட் தூசுகளை உரிய முறையில் அகற்றாமல் விட்டதுதான் தீ விபத்துக்குக் காரணம்' என சி.ஏ.ஜி குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியாக லிக்னைட் தூசுகளை அகற்றி வந்திருந்தால் இவ்விபத்துகளைத் தடுத்திருக்கலாம். இது முழுக்க முழுக்க என்.எல்.சி. நிர்வாகத்தின் அலட்சியத்தால் மட்டுமே நிகழ்ந்த விபத்துகள். என்.எல்.சி ஒரு பொதுத்துறை நிறுவனம் எப்படியெல்லாம் பொறுப்பற்ற முறையில் அலட்சியத்துடன் செயல்படக் கூடாதோ அப்படியெல்லாம் செயல்பட்டு வந்துள்ளது என்.எல்.சி. நிறுவனம். இந்த நிறுவனத்துக்குத் தங்கள் நிலங்களை வழங்கிய விவசாயிகள், எண்ணற்ற துன்பங்களைச் சந்தித்து நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். விதிமீறல் செயல்பாடுகளால் சுற்றியுள்ள கிராமங்களின் மண்வளத்தையும் நீர்வளத்தையும் கெடுத்து மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் என்.எல்.சி. மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ``உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது!’’ - ஸ்டாலின் பெருமிதம்
`தனியாக கட்சி துவக்கலாமா?'ஆலோசனை நடத்திய எம்.பி - அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!
“காங்கிரஸ் டெல்லி தலைமை அறிவிக்கும் வரை யாரும் கூட்டணி குறித்து ஏதும் பேசக்கூடாது” என காங்கிரஸ் மேலிட எச்சரிக்கைக்கு பிறகு, கூட்டணி குறித்த சர்ச்சை ஒய்ந்து, இப்போது தனிகட்சி சர்ச்சை ஆரம்பித்துள்ளது என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள். மூத்த நிர்வாகிகள் சிலர் தனி கட்சி யோசனையில் இருப்பதாக செய்திகள் கசிய காங்கிரஸ் கட்சிக்குள் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் கடந்த 17-ம் தேதி அன்று நடந்த காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், “தி.மு.க -வுடன் காங்கிரஸ் கட்சி நீண்ட கூட்டணி உறவை கொண்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லி தலைமைக்கு மட்டுமே உள்ளது. இங்கிருக்கும் நபர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் கருத்துகளாக எடுத்துக்கொள்ள முடியாது” எச்சரித்தார் காங்.பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால். கே.சி.வேணுகோபால் இந்த நிகழ்வுக்கு பிறகு தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்காக எதிர்ப்பு மனநிலையில் உள்ளார்கள். வேறு சிலர் இந்த கூட்டணிக்கு ஆதரவாகவும் உள்ளனர். இதனால் பிப்ரவரி 22-ம் தேதி தி.மு.க குழு அமைத்தபிறகு அந்த கட்சியுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர் த.வெ.க வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், வியூக வகுப்பாளர்கள் என பலரையும் சந்தித்து பேசி வருகிறார்கள். த.வெ.க வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி மும்பையை சேர்ந்த மூத்த தொழில் அதிபர் ஒருவர் மூலம் ராகுலிடமே பேசியிருக்கிறார். தி.மு.க கூடுதல் இடங்களை தராவிட்டால் த.வெ.க பக்கம் வரும் எண்ணத்தில் டெல்லி மேலிடம் உள்ளது. காங்கிரஸ் டெல்லி மேலிடத்திடம் தனித்த செல்வாக்கு படைத்த ப.சிதம்பரமே இந்த முறை டெல்லியின் நடவடிக்கை வேறு விதமாக இருப்பதாக புலம்பியுள்ளார். சமீபத்தில் காரைக்குடியில் மூத்த நிர்வாகிகளிடம் ப.சி பேசிக்கொண்டிருந்த போது, “அரை மணிநேரத்திற்கும் அதிகமாக நான் ராகுலிடம் தி.மு.க கூட்டணி ஏன் வேண்டும் என்று விளக்கிவிட்டேன். நான் என்ன சொன்னாலும் உடனே ரியாக்சன் செய்யும் ராகுல், தி.மு.க கூட்டணி விசயத்தில் நான் கூறிய கருத்துக்களுக்கு ரியாக்ஷன் செய்யாமல் அமைதியாக இருந்ததே எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று சொல்லியுள்ளார். ப. சிதம்பரம் மற்றொருபுறம் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், “கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் தான் கூட்டணி வைக்கும்” என்று தனது நண்பர்களிடம் சொல்லியுள்ளார். அப்படி த.வெ.க பக்கம் காங்கிரஸ் கட்சி சென்றால், தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பத்து பேர் தி.மு.க பக்கம் நிற்கும் மூடில் உள்ளார்கள். ஏன்? மாநில தலைவர் செல்வபெருந்தகையே தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். சிதம்பரம் தலைமையில் ஒரு டீம் தி.மு.க ஆதரவு காங்கிரஸ் கட்சியாக களம் இறங்கும் என்கிறார்கள் இவர்களின் ஆதரவாளர்கள். இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் அழைத்து, “நாம் மீண்டும் தனியாக கட்சி துவங்கினால் ஜெயிக்க முடியுமா?” என்று கருத்து கேட்டுள்ளார் கார்த்திக் சிதம்பரம். அப்பா, மகன் என இருவரும் அடுத்தடுத்து நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையை பார்த்தால், “சட்டமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் உடையாமல் தப்பிக்குமா ?” என்று கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். 25 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க முடியாது என தி.மு.க தரப்பில் முடிவாகியுள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. 40 தொகுதிகளை எதிர்பார்க்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த எண்ணிக்கை குறைவு என்பதால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியுமா? என்கிற கேள்விக்கு பதில் வரும் வாரத்தில் தெரியும்.! Loading…
தேமுதிகவுக்கு 6 சீட்டுகள் ஒதுக்க திமுக முடிவு - அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்?
தேமுதிக கட்சி துவங்கியதிலிருந்து முதல் முறையாக திமுக உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த சூழலில்தான் 13 தொகுதிகள் அடங்கிய உத்தேசப்பட்டியலை தேமுதிக திமுகவிடம் கொடுத்துள்ளது.
Navy Chief Highlights Maritime Cooperation at Goa Conclave
Chief of the Naval Staff Admiral Dinesh K. Tripathi stressed the importance of strong maritime cooperation while inaugurating the fifth
40 ரயில்கள் ரத்து.. புறநகர் ரயில் சேவையில் குளறுபடி ஏதுமில்லை - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க மக்களுக்கு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிரம்ப் வரி விதிப்பு செல்லாது: அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பு
உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் பரஸ்பர வரி விதித்தாா். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாவதால் ஏற்படும் வா்த்தகப் பற்றாக்குறையைக் கையாளும் வகையில், இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். இந்த நடவடிக்கையின் […]
“பரிதாப நிலையில் தவெக” – ராஜேந்திர பாலாஜி சாடல்!
சென்னை :தமிழக வெற்றிக் கழகம் (தவெக) களத்திலேயே இல்லை என்றும், அது பரிதாப நிலையில் உள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். “2026 தேர்தலோடு தவெக எனும் கட்சி முடிந்துவிடும்” என்று அவர் கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய் அரசியலில் புதியவராக இருப்பதால் கட்சி வலுவின்றி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். திமுக – தேமுதிக கூட்டணியை கடுமையாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜி, “இது கொள்கை ரீதியிலான கூட்டணி அல்ல, கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி” […]
NDMA Signs MoU to Boost Disaster Research
The National Disaster Management Authority (NDMA), the Academy of Scientific and Innovative Research (AcSIR), and the CSIR–National Institute of Science
இந்தியா –இலங்கைக்கிடையிலான உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம்
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று ( 21 ) கொழும்பில் நடைபெற்றது.… The post இந்தியா – இலங்கைக்கிடையிலான உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் appeared first on Global Tamil News .

25 C