SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

தேவைப்பட்டால் அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும்! ட்ரம்ப் பகிரங்கம்

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர், பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் செல்லும் கடல் பாதை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி இது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் ஒன்றாகும், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கடந்து செல்கிறது. வளைகுடா […]

அதிரடி 4 Mar 2026 8:30 am

யாழில் ஈழத்தமிழர் மகளிர் – சிறுவர் உரிமைக்காக புதிய அமைப்பு

சர்வதேச மகளிர் தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு அறிவித்துள்ளது. எதிர்வரும் 08ஆம் திகதியன்று இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். தாம் கடந்த 9 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டபோதும், தமிழின அழிப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களை ஒருங்கிணைத்து செயற்ப முடியாத அளவுக்கு […]

அதிரடி 4 Mar 2026 7:56 am

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்.. முட்டை விலை சரிய வாய்ப்பு.. நாமக்கல்லில் 1 கோடி முட்டைகள் தேக்கம்!

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிப்பால் நாமக்கல்லில் 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்து உள்ளன.

சமயம் 4 Mar 2026 7:53 am

பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்ட விடே அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக விமான பயணங்கள் குறித்து விசாரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற இலங்கைக்குள் 1979 என்ற சிறப்பு இலக்கத்தின் ஊடாகவும் +94 11 777 1979 என்ற தொலைபேசி எண்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அழைப்புகளுக்கு, வட்ஸ்அப் வழியாக மட்டுமே தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக +94 74 444 1979 என்ற […]

அதிரடி 4 Mar 2026 7:53 am

யாழ். கச்சதீவில் அந்தோனியார் திருவிழாவில் பதற்ற நிலை ; தமிழக இளைஞர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் சே. நல்லதம்பி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது, திருவிழாவிற்காக கச்சதீவிற்குள் நுழைந்தபோது அங்கிருந்த கடற்படையினரும் பொலிஸாரும் வரம்பு மீறிச் செயல்பட்டதாக கூறினார். பக்தர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் தன்னுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள […]

அதிரடி 4 Mar 2026 7:50 am

இன்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 Ceypetco )எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம் –அரசாங்க அதிபர் நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி. எஸ். ராஜகருணா அவர்களுடன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொலைபேசி ஊடாக நேற்றைய தினம் (03.03.2026) கலந்துரையாடினார். இதன் போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 Ceypetco ) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் இன்று (04.03.2026) பெற்றோல் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இதன் மூலம் வரிசையினை கட்டுப்படுத்தலாம் எனவும் அரசாங்க அதிபர் யோசனை தெரிவித்திருந்தார். அரசாங்க […]

அதிரடி 4 Mar 2026 7:46 am

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் பாதையின் முக்கிய கட்டம்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்? சோதனை ஓட்டம் குறித்த முக்கிய அப்டேட்!

சென்னை வேளச்சேரி - பரங்கிமலை ரயில் பாதை இடையேயான அதிவேக சோதனை ஓட்டம் நாளை நடைபெற இருக்கிறது. திட்டமிட்டபடி நிறைவேறினால், மார்ச் 10 முதல் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 4 Mar 2026 6:59 am

இன்னொரு காசாவாக மாறுகின்றதா ஈரான்; சிறுவர்கள் உட்பட 787 பேர் பலி

அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஈரான் முழுவதும் 153 நகரங்கள் பாதிப்பு சமீபத்திய தாக்குதல்களால் ஈரான் முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை […]

அதிரடி 4 Mar 2026 6:32 am

கோவை: ஹோட்டல் உரிமையாளர் கொலை; ஆட்டோ ஓட்டுநர் வெறிச்செயல்; அதிர்ச்சி பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீபன். இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது ஹோட்டலில் அன்பு எஸ்தர் என்பவர் பணியாற்றி வந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்கிற ஆட்டோ ஓட்டுநர் அடிக்கடி அவர்களின் ஹோட்டலுக்குச் சென்று வந்துள்ளார். திலீபன் பிரேமுக்கு ஏற்கனவே மூன்று திருமணங்களாகியுள்ளன. இந்நிலையில் அவர் எஸ்தரை நான்காவது திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - விஜய் கேள்வி! இதற்கு எஸ்தர் மறுத்துள்ளார். மேலும் அவர் உரிமையாளர் திலீபனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். ​இதனால் பிரேம் கோபமடைந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அவர் ஹோட்டலுக்குச் சென்று எஸ்தரையும், திலீபனையும் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்தார். எஸ்தர் இதுதொடர்பாக சூலூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். 17 நாட்கள் சிறையில் இருந்த பிரேம், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். நேற்று அதிகாலை 5:30 மணியளவில் எஸ்தர் வீட்டுக்குச் சென்று கதவு தட்டியுள்ளார் பிரேம். கதவு திறக்கப்பட்டபோது அங்கு திலீபன் இருப்பதைப் பார்த்து பிரேம் ஆனந்த் கடும் கோபமடைந்துள்ளார். கத்தியால் திலீபனைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். மேலும், வீட்டின் சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு தீ வைத்து எரிக்கவும் முயற்சித்தார். பிரேம் ஆனந்த் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பிரேமைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் பிரேமைக் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; அவர் ஒரு சூப்பர் ஸ்டார் - இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?

விகடன் 4 Mar 2026 6:31 am

சோழ தேசத்தில் விஜய்.. படைகளை பலப்படுத்தும் தவெக.. இன்றைய கூட்டத்தில் என்ன பேசப் போகிறார் விஜய்?

தஞ்சாவூரில் நடைபெறும் இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தலைவர் விஜய் நேரில் பங்கேற்கும் இந்த கூட்டம் கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

சமயம் 4 Mar 2026 5:50 am

நான்கு நாடுகளுக்கு மாணவர் விசா வழங்குவதை இங்கிலாந்து நிறுத்துகிறது

ஆப்கானிஸ்தான், கேமரூன் , மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மாணவர் விசா வழங்குவதை நிறுத்துவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு திறமையான வேலை விசாக்களை நிறுத்தி வைக்கும். சட்டப்பூர்வ வழிகளில் இருந்து புகலிடம் கோரும் கோரிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நான்கு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசாக்களில் அவசரகால தடை முதல் முறையாக விதிக்கப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து உள்துறை அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2021 முதல், கிட்டத்தட்ட 135,000 பேர் சட்டப்பூர்வமாக விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்து பின்னர் புகலிடக் கோரிக்கைகளை தாக்கல் செய்துள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. 2021 மற்றும் 2025 க்கு இடையில் ஆப்கானிஸ்தான், கேமரூன், சூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் புகலிட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 470% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று அது தெரிவித்துள்ளது. எங்கள் தாராள மனப்பான்மையை சுரண்ட முயலும் நாட்டினருக்கு விசாக்களை மறுக்கும் முன்னோடியில்லாத முடிவை எடுப்பதாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் கூறினார்.

பதிவு 4 Mar 2026 5:25 am

ஹோா்முஸ் நீரிணையில் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை கடும் உயா்வு!

துபை: மத்திய கிழக்கில் நிலவும் போா் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை அதிரடியாக உயா்ந்தது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது. சவூதி அரேபியாவின் தம்மாம் பகுதியில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி ஈரான் ஏவிய […]

அதிரடி 4 Mar 2026 3:30 am

டெஹ்ரானில் காந்தி மருத்துவமனையில் தாக்குதல்

டெஹ்ரான்: ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டின் தலைநகா் டெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனையை இலக்கு வைத்து ஞாயிற்றுக்கிழமை குண்டுவீச்சை நடத்தியது. அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் இந்த ராணுவ நடவடிக்கையில், ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்களை மட்டுமே தாக்கி வருவதாக கூறி வந்த நிலையில், பொதுமக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை மீதான இத்தாக்குதல் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தியின் அமைதிக் கொள்கை மீது கொண்ட ஈா்ப்பால், […]

அதிரடி 4 Mar 2026 1:30 am

மத்திய கிழக்கில் போர் பதற்றம் ; இலங்கையில் 205 விமான சேவைகள் ரத்து!

இலங்கையில் 205 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையால் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து இன்று (03) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்தாலோசனையின் பின்னரே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கட்டணமில்லா விசா நீடிப்பு மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் நாட்டுக்கு வரவிருந்த 107 விமானங்களும், […]

அதிரடி 4 Mar 2026 1:30 am

யாழுக்கு எடுத்து வரப்படும் 3 இலட்ம் லீட்டருக்கும் அதிகமான பெட்ரோல்

யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 Ceypetco ) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் நாளை புதன்கிழமை பெற்றோல் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். கொலன்னாவையிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும். நாளை புதன்கிழமை மட்டும் 3 இலட்சத்து 10ஆயிரத்து 200 லீற்றர் பெற்றோல் கொலன்னாவை மற்றும் காங்கேசன்துறை களஞ்சியங்களிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பதிவு 3 Mar 2026 11:23 pm

இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் -அழகு சாதன பொருட்கள் பறிமுதல்:

மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே உள்எ தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில்… The post இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் -அழகு சாதன பொருட்கள் பறிமுதல்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Mar 2026 10:51 pm

MGM Group Hospitals Pioneer Next-gen Cell-based Immunotherapy, Offer New Hope in Advanced Cancer Care

Strengthening their position as Centres of Excellence in Precision Oncology in the city, MGM Cancer Institute and MGM Healthcare Malar,

சென்னைஓன்லைனி 3 Mar 2026 10:44 pm

அதிமுக –பா.ஜ.க கூட்டணியில் ராமதாஸ் இணைய 3 கட்டுப்பாடுகள் விதித்த அன்புமணி!

சட்டமன்ற தேர்தலை சந்திக்க பெரும்பாலான முன்னணி கட்சிகள் ஒவ்வொரு அணியில் சென்று இடம் பிடித்து விட்டன. ஆனால் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. எந்த பக்கம் செல்வது

சென்னைஓன்லைனி 3 Mar 2026 10:43 pm

காமேனி கொலைக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்

அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது

சென்னைஓன்லைனி 3 Mar 2026 10:41 pm

தமிழ்நாட்டுக்கு ஆதரவு அளித்த கர்நாடகா –சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய, மாநில உறவுகள் குறித்து அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆய்வின் முதல்

சென்னைஓன்லைனி 3 Mar 2026 10:40 pm

ஈரான் மீதான தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த இஸ்ரேல் பிரதமர்

ஈரான் அணுசக்தி நாடாகிவிட்டால், அது கடும் ஆபத்தாகிவிடும் என்று அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனால் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஈரானுக்கு

சென்னைஓன்லைனி 3 Mar 2026 10:38 pm

தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் –சீமான் வலியுறுத்தல்

தி கேரளா ஸ்டோரி 2 படத்தின் ரிலீஸுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்

சென்னைஓன்லைனி 3 Mar 2026 10:37 pm

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்ததற்கான எந்த ஆதரமும் இல்லை –ரஷ்யா

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை தாங்கள் பார்க்கவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஈரான்மீது தாக்குதல் நடத்த பல்வேறு காரணங்களை அமெரிக்க அதிபர்

சென்னைஓன்லைனி 3 Mar 2026 10:34 pm

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தேசிய முற்போக்கு திராவிட கழகம், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் தந்துள்ளது திமுக. முதலமைச்சர்

சென்னைஓன்லைனி 3 Mar 2026 10:32 pm

ஜேட்டா, துபாய்க்கு சிறப்பு விமானங்கள் இயக்கும் ஏர் இந்தியா

மத்திய கிழக்கு பகுதி மோதல் காரணமாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இந்தியர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களை அழைத்து

சென்னைஓன்லைனி 3 Mar 2026 10:31 pm

முற்றிய புற்றுநோய்க்கு செல் அடிப்படையிலான நவீன நோய் எதிர்ப்பு சிகிச்சையை அறிமுகம் செய்த எம்ஜிஎம் மருத்துவமனை!

துல்லியமான புற்றுநோய் சிகிச்சையில் தங்களது சிறப்பான நிலையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர், அடையார் மருத்துவமனை ஆகியவை ‘CAR-T

சென்னைஓன்லைனி 3 Mar 2026 10:30 pm

ஈரான் மீது தரைவழி தாக்குதலுக்கும் நாங்க ரெடி; டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் – ஈரான் மோதலால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேவைப்பட்டால் அமெரிக்கத் தரைப்படையை (Boots on the ground) ஈரானுக்குள் அனுப்பத் தயங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஈரானில் , அமெரிக்கா தற்போது வான்வழித் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், அடுத்து வரவிருக்கும் தாக்குதல்கள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், அது ஒரு ‘பெரிய அலையாக’ (Big wave) அமையும் […]

அதிரடி 3 Mar 2026 10:30 pm

வலிகாமம் கிழக்கு தவிசாளரின் கடமைக்கு இடையூறு: சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டப்பிராயில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அனுமதியற்ற சட்டவிரோத கட்டிடம் ஒன்றை இடித்து அழிக்கும் செயற்பாட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸை வேறு பிரதேசத்தில் இருந்து அவ்விடத்திற்கு வருகை தந்த ஒருவர் தான் கூட்டிவந்த சகாவிடம் தொலைபேசியை வழங்கி தான் தவிசாளருடன் பாதை பிரச்சினை ஒன்று தொடர்பாக […]

அதிரடி 3 Mar 2026 10:30 pm

கை கொடுக்கும் அழுத்தம்? கழற்றிவிடும் முடிவு? - அறிவாலயத்தில் வெடித்த 'சீட்' மோதல்... முதல்வரிடம் திமுக நிர்வாகிகள் அதிருப்தி

2026 தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் அழுத்தத்துக்கு எதிராக திமுக நிர்வாகிகள், சீட் பங்கீட்டில் தலைமைக்கு நிபந்தனை விடுத்துள்ளனர்.

சமயம் 3 Mar 2026 9:43 pm

உச்ச தலைவர் உட்பட ஈரானின் 49 உயர்மட்ட தலைவர்கள் உயிரிழப்பு –வெள்ளை மாளிகை

வாஷிங்டன் டி.சி. ஈரான் மீதான தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் உட்பட 49 உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஜனாதிபதி டிரம்ப், ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ தொடர்பாக அமெரிக்க மக்களுக்கு அதன் தெளிவான நோக்கங்களை முன்வைக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். நான் அவற்றை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஈரானின் ஏவுகணை திறன்களை முற்றிலும் அழித்து, அதன் ஏவுகணை தொழில்துறையை தரைமட்டமாக்குவது. அந்த நாட்டின் […]

அதிரடி 3 Mar 2026 9:30 pm

பெய்ரூட்டில் மொசாட் அதிரடி: ஹெஸ்புல்லாவின் இரு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்

லெபனான், மொசாட் , ஹெஸ்புல்லா, முக்கிய தளபதிகள் மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானின் பெய்ரூட் (Beirut)… The post பெய்ரூட்டில் மொசாட் அதிரடி: ஹெஸ்புல்லாவின் இரு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Mar 2026 9:23 pm

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை(video/photoes)

video link- https://fromsmash.com/FR7Df4L8z6-dt அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது. அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன பங்குபற்றலுடன் அம்பாறை பிரிவுக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் […]

அதிரடி 3 Mar 2026 9:23 pm

அமெரிக்கா செய்தால் சரி!

ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சர்வதேச நடவடிக்கைகளில் ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் எடுத்த நிலைப்பாட்டை வாழ்த்துவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் எனும அமைப்பு தெரிவித்துள்ளது. “1950களிலிருந்து ஈரானில் நடந்துவருவதாக கூறப்படும் அரசியல் அடக்குமுறைகள், 1948 சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையிலும் நடைபெற்று வருகின்றன. காலனித்துவத்திற்கு முன் எங்களிடம் இருந்த அரசியல் உரிமைகள் மற்றும் இறையாண்மை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் மறுபரிசீலிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.” பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தாய்மார்கள் “காணாமல் போனோர் அலுவலகம்” (OMP) போன்ற உள்ளூர் ஆணையங்களை பயனற்றவை என நிராகரித்துள்ளனர். ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட உறவினர்கள் உண்மையை அறியாமல் உயிரிழந்துள்ளனர். இவ்வழைப்பு, தமிழ் மக்களின் வாழ்வும் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசர கோரிக்கையாகும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.என்றார்.

பதிவு 3 Mar 2026 9:12 pm

யுத்தம் கடுமையானது:அனுர!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கட்டுப்படுத்த, அமைதியான உலகத்தை உருவாக்குவதற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டுதலையும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எந்தவொரு போரும் எந்த சமூகத்திற்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்காது. தொழில்நுட்ப ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், மிகப் பெரிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கும் உலகிற்கு அது எவ்வளவு அழிவுகரமானது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.எனவே, இலங்கை என்ற வகையில் எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதியான உலகத்திற்குத் தேவையான உறுதிமொழிகளையும் வழிகாட்டுதல்களையும் விரைவில் விடுக்க வேண்டும். போர் நிலைமை இலங்கை மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இலங்கை மட்டும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. போரினால் பாதிக்கப்படும் பல முக்கிய துறைகள் உள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு நேரடியாகப் பாதிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இலங்கையர்கள் வசிக்கின்றனர். அவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். பணம் அனுப்புவதும் பெரிதும் பாதிக்கப்படும். சுற்றுலாத் துறை, வெளிநாட்டு பணம் அனுப்புதல், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் கூறினார். போர் சூழ்நிலையால் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, கடந்த காலத்தின் விரும்பத்தகாத அனுபவங்களால் சூழ்நிலையில் மக்கள் பதட்டமடைவது இயல்பானது என்றும் கூறினார். தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து இதேபோன்ற பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் முந்தைய சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை என்றும் கூறிய ஜனாதிபதி, தற்போதைய போர் நிலைமையை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் கூறினார். ஒரு அரசாங்கமாக, இந்த நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மத்திய வங்கி தற்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்து, இன்று அல்லது நாளை மாலைக்குள் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த அறிக்கையை வழங்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பதிவு 3 Mar 2026 9:09 pm

மௌனச்சாமியானார் அனுர!

ஜனாதிபதி அனுரவுக்கு இருந்த தீவிரமான கொள்கைப் பிடிப்பை அமெரிக்காவின் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் நாட்டை விட்டுச் செல்லும் போது எடுத்து சென்றுவிட்டாராவென கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் . ஈரானை முழுமையாக அழிப்பதற்கும், மத்திய கிழக்கில் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் டிரம்ப் நிர்வாகமும் இஸ்ரேலிய நிர்வாகமும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. அவர்கள் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளனர். இதனால் இன்று உலகம் முழுவதும் அச்சமடைந்துள்ளது. ஒரு நாடாக இது எமக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எமது நாட்டைச் சேர்ந்த சுமார் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்னவென்று உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தவறு என்று ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்து அறிவிப்பார் என்று நாம் நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. அன்று ஜனாதிபதிக்கு இருந்த அந்தத் தீவிரமான அரசியல் நிலைப்பாடு இன்று எங்கே போனது? அந்த வீரியத்தை ஜூலி சாங் போகும்போது தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டாரா என்று தெரியவில்லைஎன முஜிபூர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு 3 Mar 2026 9:01 pm

மன்னாரிற்கு  சென்ற பிரதம நீதியரசர்   நீதிமன்ற செயற்பாடுகளை  பார்வையிட்டார்

இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை… The post மன்னாரிற்கு சென்ற பிரதம நீதியரசர் நீதிமன்ற செயற்பாடுகளை பார்வையிட்டார் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Mar 2026 8:34 pm

இஸ்ரேலின் தாக்குதலுக்கான அடுத்த இலக்கு எது? தகவல் வெளியீடு

டெல் அவிவ் மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்குதல் நடத்தியதில், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதேபோன்று 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ […]

அதிரடி 3 Mar 2026 8:30 pm

119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 5ம் திகதி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி 6ம்,7ம் திகதி என மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது. வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியின் பத்திரிகையாளர் சந்திப்பு யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை அதிபர்களால் குறித்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 23வது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் கொண்ட ஒரு […]

அதிரடி 3 Mar 2026 8:30 pm

மாதவனின் ‘லெகஸி’டீசர் அப்டேட்: கேங்ஸ்டர் ரோலில் மிரட்டும் ‘பெரியவர்’–நெட்ஃபிலிக்ஸின் அதிரடி சரவெடி!

நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'லெகஸி' வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ டீசரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா 2026-ன் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 3 Mar 2026 8:05 pm

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; அவர் ஒரு சூப்பர் ஸ்டார் - இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?

நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவி. இந்தத் துப்பாக்கிச் சூடு தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவியின் பெயர் சவிதா ஷான். இவர் இன்னும் சில மாதங்களில் படிப்பை முடிக்க உள்ளார். சவிதா ஷானை 'சூப்பர் ஸ்டார் மாணவர்' என்று அவரது பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் சவிதா ஷான் படித்து வந்த பல்கலைக்கழகம் அருகே தான் நடந்துள்ளது. சவிதா ஷானுடன் சில மாணவர்களும் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் இப்போது சிகிச்சையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் 3 Mar 2026 8:04 pm

Indian Engineers Key To Samsung Smartphone Integration

JB Park, President and CEO of Samsung Southwest Asia, explained how important India is for making Samsung smartphones. He said

சென்னைஓன்லைனி 3 Mar 2026 8:02 pm

Dhaba Raan Recipe – Tender Spiced Mutton Delight

This dish comes from royal camp food and is perfect for mutton lovers. A lamb leg is cooked, skewered on

சென்னைஓன்லைனி 3 Mar 2026 7:51 pm

How To Reduce Trapped Pores At Home

Trapped pores occur when oil, dead skin cells, dirt, pollution, or makeup collects on your skin. This buildup can cause

சென்னைஓன்லைனி 3 Mar 2026 7:44 pm

நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? - கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி என்ன?

காந்தாரா திரைப்படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கௌடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைராலாகி வருகிறது. அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது... திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம். பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது, அவர்களின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்படுக்கின்றன... மேலும், எங்களது உடல் ஜூம் செய்யப்படுகின்றன. ஒரு சிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்ஸ்டா ஸ்டோரி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! நாங்கள் இங்கே கலைக்காகவும், சினிமாவிற்காகவும் இருக்கிறோம். வேண்டுமென்றே இப்படிப் பரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டிக்கிறோம். அவைக் கண்ணியத்தை மீறுவதாகும். இதைப் பொறுத்துக்கொள்ளவோ முடியாது. இந்த மாதிரியான நிகழ்வுகள் தொழில்முறை சார்ந்தும், அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியம் சார்ந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இந்தப் பிரச்னை நடந்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்.

விகடன் 3 Mar 2026 7:42 pm

வேலூரைத் தொடர்ந்து தஞ்சையில் தவெக கூட்டம்... திமுகவிற்கு செக் வைப்பாரா விஜய்? என்ன பேசுவார்?

நாளை தஞ்சையில் நடைபெறும் கூட்டத்தில் விஜய் பேசும் முக்கிய பிரச்சினைகளை இந்த கட்டுரையில் காணலாம்

சமயம் 3 Mar 2026 7:36 pm

Immunity Boosters: Myths Versus Scientific Facts

If you search for “immunity boosters” online, you will find many tips, from traditional home remedies to vitamin supplements and

சென்னைஓன்லைனி 3 Mar 2026 7:34 pm

முற்றிலும் தரைமட்டமான ஈரானின் 47 ஆண்டு கால பாதுகாப்பு கோட்டை

வாஷிங்டன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஈரானின் தலைநகர் மற்றும் அதன் முக்கிய தலைவர்களின் அலுவலகங்கள், வீடுகளின் மீது தீவிர வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர தலைமைத் தளபதி முகமது பாக்பூர் உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நேச நாடுகளாக உள்ள பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணை […]

அதிரடி 3 Mar 2026 7:30 pm

Anirudh Ravichander Confirms Focus Solely On Music

Anirudh Ravichander, the popular music composer and singer, has clarified that he has no plans to act as a hero

சென்னைஓன்லைனி 3 Mar 2026 7:23 pm

RJ Balaji Oversees Karuppu, Engages College Audiences

RJ Balaji, the director of the upcoming film Karuppu, starring Suriya, is closely overseeing the production of the movie. He

சென்னைஓன்லைனி 3 Mar 2026 7:19 pm

A Knight of Seven Kingdoms Wins Fan Praise

The debut season of HBO’s A Knight of the Seven Kingdoms has been met with mostly positive reactions from fans.

சென்னைஓன்லைனி 3 Mar 2026 7:09 pm

Aamir Khan Celebrates 60th Birthday With Humor

Last year, Aamir Khan, the actor celebrated for blockbuster films like Qayamat Se Qayamat Tak and Lagaan, marked his 60th

சென்னைஓன்லைனி 3 Mar 2026 7:04 pm

IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?

உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன? தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சி.எஸ்.கே. அணியின் திட்டம் என்ன? தோனி 2019க்கு முன்பு வரைக்கும் தோனி இந்திய அணியின் போட்டி அட்டவணைகளைப் பொறுத்து இந்திய அணிக்காக ஆடிவிட்டு ஐ.பி.எல்லுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வருவார். 2019க்குப் பிறகு தோனி சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை. Dhoni : '38 வயசுல மேன் ஆப் தி சீரிஸ்...' - தோனியின் அந்த ஆஸ்திரேலிய ருத்ரதாண்டவம் நியாபகமிருக்கிறதா? சென்னை வந்த தோனி அதன்பிறகு எப்போதுமே ஒவ்வொரு சீசனின் போதுமே சரியாக ஒரு மாதம் முன்பாகவே தோனி சென்னைக்கு வந்துவிடுவார். அவரின் வருகையைப் பொறுத்துதான் சென்னை அணியின் பயிற்சி செஷன்களும் திட்டமிடப்படும். ராஞ்சியில் முதற்கட்டமாக சில நாட்கள் பயிற்சி எடுக்கும் தோனி, சென்னையிலும் வந்திறங்கியவுடன் முதல் நாளின் பயிற்சி செஷனிலிருந்தே பயிற்சியையும் தொடங்கிவிடுவார். அதே டெம்ப்ளேட்தான் இந்த முறையும். ருத்துராஜ் கெய்க்வாட் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே மூன்று நாட்களுக்கு முன்பாக தோனி சென்னைக்கு வந்திறங்கிவிட்டார். தோனியை வரவேற்கும் விதத்தில் சென்னை அணியும் ஒரு மாஸான வீடியோவை வெளியிட்டிருந்தது. தோனியுடன் ருத்துராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் உட்பட 10க்கும் மேற்பட்ட வீரர்களும் சென்னை அணியின் முகாமில் இணைந்துவிட்டனர். `தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி ஷூட்டிங் சஞ்சு சாம்சன் போல சர்வதேச அணிகளுக்காக ஆடி வரும் வீரர்களும் உலகக்கோப்பை முடிந்தவுடன் பயிற்சி முகாமில் இணைந்து விடுவார்கள். நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் தோனி சில நாள்களை போட்டோஷூட்டுக்கும் சில நாள்களை விளம்பரப் படங்களின் ஷூட்டுக்கும் எஞ்சியிருக்கும் நாள்களில் ஸ்பான்சர்களுக்காக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் எனத் தகவல் சொல்கின்றனர் சிஎஸ்கே வட்டாரத்தினர். தோனி இம்பாக்ட் ப்ளேயராக தோனி பகல் நேரங்களில் மற்ற கமிட்மெண்ட்களை முடிக்கும் தோனி, மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் நாவலூரில் உள்ள சிஎஸ்கேவின் இன்னொரு மைதானத்தில் முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வரவிருக்கும் சீசனில் தோனி முழுமையாக ஆடமாட்டார். இம்பாக்ட் ப்ளேயராக வேண்டுமானால் வருவார் எனத் தகவல்கள் வருகின்றன. ஆனால், நாவலூர் மைதானத்தில் தோனி மிகத் தீவிரமாக வழக்கம் போல பேட்டிங் பயிற்சியில்தான் ஈடுபட்டு வருகிறார். தோனி எப்படியும் ஒரு நாள் விலகுவார், அதனால்.!- CSK வீரர்கள் தேர்வு குறித்து பயிற்சியாளர் பிளெமிங் ஆக, தோனி என்ன ரோலில் ஆடப் போகிறார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எதுவாக இருந்தாலும் முடிவு தோனி எடுப்பதுதான். சென்னை அணியின் முன்னாள் வீரர்களான அஷ்வினையும் ரெய்னாவையும் பயிற்சியாளர் குழுவில் இணைக்கும் மனநிலையிலும் சென்னை அணியின் நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஷ்வின் புது ஜெர்சியோடு, புது எனர்ஜியோடு கலக்க சென்னை வீரர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை முகாமிலிருந்து அடுத்தடுத்து என்னென்ன அப்டேட்கள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில் என்ன?

விகடன் 3 Mar 2026 6:59 pm

கை நழுவுகிறதா காங்கிரஸ்? ஐதராபாத் ரகசியச் சந்திப்பும், தமிழக காங்கிரஸில் வெடித்த 13 எம்.எல்.ஏ-க்களின் போர்க்கொடியும்

ஐதராபாத் ரகசியச் சந்திப்பால் தமிழக காங்கிரஸில் கலகம் வெடித்து, 13 எம்.எல்.ஏ-க்கள் தலைமையை எதிர்த்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 3 Mar 2026 6:55 pm

விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை

திமுக - காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். பதைபதைத்துப் போய் ப.சிதம்பரம், சித்தரஞ்சன் சாலையைச் சுற்றிவர சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மகிழ்வைக் கொடுத்த ஒரு அறிவிப்புதான் காரணமென்பதே இந்த அரசியலாட்டத்தின் பெரும் சுவாரஸ்யம். சித்தரஞ்சன் சாலையில் ப.சிதம்பரம் திமுக - காங்கிரஸ் இடையேயான பஞ்சாயத்து கடந்த அக்டோபர் - நவம்பரிலேயே புகைய ஆரம்பித்துவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி மேல் பேட்டியாகக் கொடுத்து கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மாணிக்கம் தாகூரும் கோதாவில் இறங்கத் தயாராகியிருந்தார். காங்கிரஸ், விஜய்யுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் தீயாகப் பரவி வந்தது. அந்தச் சமயத்தில்தான் நவம்பர் 22 ஆம் தேதி ஒரு சனிக்கிழமையில் காலை 7:43 க்கு ப.சி ஒரு ட்வீட்டைப் பதிவிட்டிருந்தார். 'தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் 'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்' என்பதுதான் அந்த ட்வீட். சிதம்பரம் ட்வீட் அடுத்த சில மணி நேரங்களில் டெல்லியிலிருந்து அறிவிப்பு வந்தது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அறிவிக்கப்பட்டது. எந்தப் புகைச்சல் முடிவுக்கு வரும் எனப் ப.சி மனப்பூர்வமாக நம்பினாரோ அந்தப் புகைச்சலை மேலும் கொளுந்து விட்டு எரிய வைத்தார் கிரிஷ் சோடங்கர். அமைச்சரவையில் பங்கு, அதிக சீட்டுகள் என மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் பேசியதற்குத் துணையாக நின்றார் சோடங்கர். அறிவாலயத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு டெல்லி போய் 'திமுக கொடுக்கும் 25 சீட்டுகளுக்கெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது' என்றார். ஸ்டாலின், சோடங்கர் என்கிற பெயரைக் கேட்டாலே எரிச்சலடையும் நிலையை ஏற்படுத்தினார். திமுக - காங். இடையிலான விரிசலை இன்னும் அதிகப்படுத்தினார். அரசல் புரசல் வதந்திக்கெல்லாம் முடிவுகட்டி கூட்டணியைச் சுமுகமாகக் கொண்டு செல்ல உதவுமெனப் ப.சி நினைத்த அதே குழுதான், இன்றைக்கு அவரை சித்தரஞ்சன் சாலையை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓட வைத்திருக்கிறது. அரசியல் கற்பனைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை ப.சி இன்னொரு முறை உணர்ந்திருப்பார். CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?

விகடன் 3 Mar 2026 6:51 pm

Iran Conflict Blocks Strait, Indian Rice Shipments

About 400,000 metric tons of Indian basmati rice are currently stuck in transit because the conflict in Iran has disrupted

சென்னைஓன்லைனி 3 Mar 2026 6:44 pm

சாரா ஜெஸ்மினின் மரபணுவை மாற்ற முயற்சித்த சரத்வீரசேகர! பரபரப்பாகும் தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்து விட்டதாக இரு சந்தர்ப்பங்களில் மரபணு பரிசோதனை (DNA) செய்து சாரா ஜெஸ்மினின் மரபணுவுடன் ஒத்து போவதாக தெரியப்படுத்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் இணையத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்க அதன் தலைவர் அஜித் தர்மபால […]

அதிரடி 3 Mar 2026 6:42 pm

கமல் –ரஜினி இணையும் KH x RK படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: அனிருத் ரவிச்சந்தர் தகவல்

நடிகர் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் KH x RK படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என அனிருத் ரவிச்சந்தர் தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரோமோ மற்றும் தயாரிப்பு நிலை குறித்த விவரங்கள் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 3 Mar 2026 6:39 pm

மத்திய கிழக்கின் போர் நிலைமை ; கடும் சிக்கலுக்குள் வெளிநாடுகளுக்கான தபால் சேவை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச தபால் சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கப்பட்ட சில பொருட்களை இதுவரை அனுப்ப முடியவில்லை என குறிப்பிட்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக சில பகுதிகளுக்கு பொருட்களை அனுப்புவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை அனுப்புவதில் தடங்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறினார். […]

அதிரடி 3 Mar 2026 6:39 pm

Middle East Tensions Hit India’s Airlines Hard

Escalating tensions in the Middle East are creating problems for India’s aviation sector, with flight cancellations and rising fuel costs

சென்னைஓன்லைனி 3 Mar 2026 6:31 pm

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் –ஈரானில் 150 மாணவிகள் உள்பட 555 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட மறுத்தது. இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் […]

அதிரடி 3 Mar 2026 6:30 pm

RCB Returns to Chinnaswamy Stadium for 2026

Defending champions Royal Challengers Bengaluru (RCB) will play five of their seven home matches in the 2026 Indian Premier League

சென்னைஓன்லைனி 3 Mar 2026 6:22 pm

Rapido unveils Food Delivery Platform ‘Ownly’ in Bengaluru

Bengaluru: Rapido has announced the official launch of its standalone food delivery app, Ownly, across Bengaluru, marking its entry into India’s competitive online food delivery market with a zero-commission, price-honest model.Positioned as a transparent alternative in a sector often criticised for inflated menu pricing and layered platform charges, Ownly does not levy commission on restaurants. Instead, it applies a straightforward delivery fee to consumers, designed to reflect the actual cost of logistics. The company said the model enables restaurants to maintain everyday low prices without depending on deep discounting or hidden mark-ups.Central to the launch is a high-decibel Digital Video Commercial set in a courtroom, using satire to spotlight industry concerns such as hidden fees, misleading discounts and price inflation. The film presents Ownly’s “Food promise” as a commitment to transparency and trust, and is currently live on Ownly’s YouTube channel.[caption id=attachment_2493961 align=alignleft width=200] Aravind Sanka[/caption]Commenting on the city-wide launch, Aravind Sanka, Founder - Rapido and Ownly said, “Indian consumer habits are changing rapidly. Food ordering has become an integral part of everyday life across India, not just in metros but in Tier 2 and Tier 3 cities as well. At Ownly, we see a strong opportunity to build a restaurant-first model that supports small and big partners to cater to the evolving needs of their customers. We believe that transparency, honesty and fairness are key drivers of long term growth for the sector and hope that Ownly can enable more people to enjoy the convenience of ordering in.” The Bengaluru rollout follows a pilot phase across Koramangala, HSR Layout and BTM Layout, where the company conducted extensive consumer research and worked closely with restaurant partners to refine the offering.As a new service under the Rapido umbrella, Ownly builds on the parent brand’s focus on affordability, convenience and transparency. The platform also plans to leverage Rapido’s hyperlocal logistics network to scale operations and drive increased competition within the food delivery ecosystem.https://www.youtube.com/watch?v=WF0wIsfvckw

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Mar 2026 6:12 pm

India Withdraws From 2022 Women’s Asian Cup

In 2022, India was selected to host the AFC Women’s Asian Cup for the first time since 1980. There was

சென்னைஓன்லைனி 3 Mar 2026 6:11 pm

Gukesh Returns Top 10 After FIDE Correction

Gukesh Dommaraju, the current world chess champion, has returned to the top 10 in the March 2026 FIDE rankings after

சென்னைஓன்லைனி 3 Mar 2026 6:08 pm

மத்திய கிழக்கு பதற்றம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

டெல்லி :மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தற்போது முழு அளவிலான போராக மாறியுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரான் மீது தொடர் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவம் இந்த மோதலை மேலும் கொடூரமாக்கியுள்ளது. ஈரானின் பதிலடி – ஹார்முஸ் நீரிணை மூடல் ஈரான் தனது பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணை […]

டினேசுவடு 3 Mar 2026 6:03 pm

எகிறும் விமானக் கட்டணம்: டெல்லி - லண்டன் டிக்கெட் ரூ. 9 லட்சம்! ஈரான்-இஸ்ரேல் போரால் பயணிகள் அவதி

ஈரான்-இஸ்ரேல் போரால் விமான கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது

சமயம் 3 Mar 2026 5:59 pm

எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் இந்தியா மற்றும் ஐரோப்பா

போரின் போது வளைகுடா எரிவாயு விநியோகம் தடைபட்டதால் இந்தியா, ஐரோப்பா எரிபொருள் பற்றாக்குறையை சந்திக்கின்றன. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய எரிவாயு விலைகள் 30 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதால், முன்னணி உலகளாவிய உற்பத்தியாளரான கத்தார் எல்என்ஜி உற்பத்தியை நிறுத்திய பின்னர், மத்திய கிழக்கிலிருந்து கடுமையான விநியோகத்தை எதிர்பார்த்து இந்திய நிறுவனங்கள் தொழில்துறைகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தைக் குறைத்துள்ளன. இந்த விஷயத்தை அறிந்த தொழில்துறை வட்டாரங்கள் செவ்வாயன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், முன்னணி எரிவாயு இறக்குமதியாளரான பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட், அரசுக்குச் சொந்தமான முன்னணி எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான கெயில் (இந்தியா) மற்றும் பிற நிறுவனங்களுக்கு குறைந்த விநியோகம் குறித்து தகவல் தெரிவித்ததாகத் தெரிவித்தன. இந்தியா உலகின் நான்காவது பெரிய திரவ இயற்கை எரிவாயு வாங்குபவராகவும், அதன் இறக்குமதிக்கு மத்திய கிழக்கை பெரிதும் நம்பியுள்ளதாகவும் உள்ளது. தெற்காசிய நாடான இந்த தெற்காசிய நாடு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் முதன்மையான திரவ இயற்கை எரிவாயு வாடிக்கையாளராகவும், கத்தார் திரவ இயற்கை எரிவாயு வாங்குபவராகவும் உள்ளது.

பதிவு 3 Mar 2026 5:53 pm

Gavaskar Praises Bumrah Ahead T20 Semifinal

Sunil Gavaskar, the first batter to score over 10,000 runs in Test cricket, has praised Jasprit Bumrah for his exceptional

சென்னைஓன்லைனி 3 Mar 2026 5:51 pm

Melania Trump Presides Historic UN Security Meeting

United States First Lady Melania Trump presided over a United Nations Security Council (UNSC) meeting on children and education in

சென்னைஓன்லைனி 3 Mar 2026 5:45 pm

முக்கோண காதலில் மோதல்: மதுவிருந்து... காதலன் துணையோடு லிவ்இன் பார்ட்னரை கொன்ற கன்னட துணை நடிகை

கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் பிந்து என்ற ஊர்மிளா. இவர் மோகன்ராவ் என்பவருடன் லின் இன் முறையில் வசித்து வந்தார். இதில் பிந்து மற்றும் மோகன்ராவ் ஆகிய இருவரும் ஏற்கனவே திருமணமாகி தங்களது துணையை பிரிந்தவர்கள் ஆவர். அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் தங்களை கணவன் மனைவி என்று வீட்டு உரிமையாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். சமீபத்தில் வினய் என்பவரை பிந்து சந்தித்தார். அவர்கள் இரண்டு பேரும் காதலிக்க ஆரம்பித்ததாக தெரிகிறது. இதனால் பிந்து வினயை திருமணம் செய்ய திட்டமிட்டார். இது குறித்து பிந்து மோகன்ராவிடம் தெரிவித்தார். ஆனால் அவர்களது திருமணத்திற்கு மோகன்ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பிந்து தான் வினயை திருமணம் பிடிவாதமாக இருந்தார். காவல்துறை இதனால் வினயும், பிந்துவும் சேர்ந்து மோகன்ராவை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக வினய் தனது நண்பர் தனுஷ் என்பவரின் உதவியை நாடினார். தனுஷ் ஏற்கனவே ஹோட்டல் தொழில் ஆரம்பித்து நஷ்டப்பட்டு இருந்தார். எனவே இக்கொலைக்கு உதவி செய்தால் பணம் கொடுப்பதாக வினய் தெரிவித்தார். பணத்திற்கு ஆசைப்பட்டு தனுஷ் இக்கொலைக்கு உதவி செய்வதாக தெரிவித்தார். அவர்கள் மோகன்ராவிற்கு மது பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். பிந்துவும், மோகன்ராவும் வசித்து வந்த வீட்டில் இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வாயில் டேப் ஒட்டிய நடிகை இதில் மோகன்ராவ் அளவுக்கு அதிகமாக குடித்தவுடன் வினயும், அவரது நண்பர் தனுஷும் சேர்ந்து மோகன்ராவை கத்தியால் குத்தினர். இதில் மோகன் ராவ் கத்தினார். உடனே அருகில் இருந்த பிந்து மோகன்ராவ் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டினார். கத்திக்குத்து காயம் மற்றும் மூச்சுவிட முடியாமை போன்ற காரணங்களால் மோகன்ராவ் இறந்துவிட்டார். அவரை அப்படியே போட்டுவிட்டு பிந்துவும் மற்றவர்களும் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துவிட்டனர். கொலை நடந்து 10 நாட்களுக்கும் மேலான நிலையில் அந்த வீட்டில் இருந்து வந்த கெட்ட வாசனையை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது மோகன்ராவ் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி பிந்து, வினய், தனுஷ் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில் எப்படி கொலை செய்தோம் என்ற விபரத்தை பிந்து விரிவாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விகடன் 3 Mar 2026 5:40 pm

Oil Prices Steady Amid West Asia Tensions

Crude oil prices remained steady today after rising sharply in the previous trading session due to growing tensions in West

சென்னைஓன்லைனி 3 Mar 2026 5:36 pm

தென் தமிழகத்தில் விஜயின் அரசியல் ஆட்டம்... நெல்லை, தூத்துக்குடியில் சுற்றுப்பயணமா?

தென் தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 3 Mar 2026 5:34 pm

சென்னையில் வேலை; எந்த டிகிரி என்றாலும் 'OK'; ரூ.50,000 வரை சம்பளம்; விண்ணப்பிக்கலாங்களா?

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்டண்ட். மொத்த காலிப்பணியிடங்கள்: 14 வயது வரம்பு: அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உள்ளன) சம்பளம்: ரூ.25,250 - 50,500 கல்வித் தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். ஜூனியர் அக்கவுண்டண்ட் பணிக்கு B.Com படித்திருக்க வேண்டும். குறிப்பு: இந்தப் பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. காமராஜர் துறைமுகம் போர் எதிரொலி: துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய சிக்கல்! அப்போ தங்கம் விலை? எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல். தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே? சென்னை, கோவை, திருநெல்வேலி. விண்ணப்பிக்கும் இணையதளம்: kpl.cbtexam.in விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 28, 2026. மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! மீண்டும் 'டாப்' கியரில் வெள்ளி விலை; 'அடுத்தடுத்து?' கவனிங்க மக்களே!

விகடன் 3 Mar 2026 5:33 pm

‘திடீரென்று சொதப்பும் வருண் சக்ரவர்த்தி’.. சூப்பர் 8 சுற்றில் செயல்பாடு எப்படி? புள்ளி விபரம் இதோ!

இந்திய அணி மர்ம சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, சூப்பர் 8 சுற்றில் தொடர்ந்து சொதப்பினார். இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரது செயல்பாடு குறித்து பார்க்கலாம்.

சமயம் 3 Mar 2026 5:32 pm

West Asia Conflict Escalates With Fresh Strikes

The conflict in West Asia has become more serious as Iran and joint Israeli-US forces have launched fresh waves of

சென்னைஓன்லைனி 3 Mar 2026 5:31 pm

விஜய்க்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்.. பயப்படுவார்.. டிகேஎஸ் இளங்கோவன் சவால்

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நிலவி வரும் சிக்கல்களை தீர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் பா. சிதம்பரம், செல்வப்பெருந்தகை இருவரும் நேரில் சந்தித்து பேசினார்கள். இந்நிலையில் கூட்டணி விவகாரத்தை சுமூகமாக தீர்க்கவே முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புவதாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சமயம் 3 Mar 2026 5:31 pm

Pakistan Forces Kill 67 in Border Clashes

Pakistan security forces said they killed 67 Afghan Taliban fighters during overnight operations along the southwestern border early Tuesday (March

சென்னைஓன்லைனி 3 Mar 2026 5:23 pm

தஞ்சையை தொடர்ந்து நெல்லையில் விஜயின் அடுத்த நிர்வாகிகள் சந்திப்பு!

நெல்லை :தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மார்ச் 4-ஆம் தேதி தஞ்சையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. நெல்லை நிர்வாகிகள் சந்திப்பு மார்ச் 2-ஆம் வாரத்தில் (மார்ச் 8 முதல் 14 வரை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் […]

டினேசுவடு 3 Mar 2026 5:20 pm

Over 780 Killed as West Asia War Escalates

As the war in West Asia grows more serious, more than 780 people have been killed in Iran since the

சென்னைஓன்லைனி 3 Mar 2026 5:17 pm

எரிவாயு நெருக்கடிக்கு இதுதான் காரணம் ; ஜனாதிபதி அநுர குமார வெளியிட்ட தகவல்

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டிற்கான தீர்வுகளை முன்வைத்து இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தீர்வுகள் எரிவாயுவைச் சேமித்து வைப்பதில் நெருக்கடி காணப்படுவதால் அதற்கான தேவையான தீர்வுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். நாட்டில் அதிகபட்சமாக ஒரு வார காலத்திற்கு மாத்திரமே எரிவாயுவைச் சேமித்து வைக்க முடியும் என்பதையும் ஜனாதிபதி இங்கு […]

அதிரடி 3 Mar 2026 5:10 pm

கச்சதீவிற்கு வந்த இந்தியர்களிடம் இலங்கை கடற்படையினர் செய்த முகம்சுழிக்கும் செயல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கச்சதீவு திருவிழா “திருவிழாவிற்காக நாங்கள் கச்சதீவிற்குள் நுழைந்த போது, அங்கிருந்த கடற்படையினரும் பொலிஸாரும் வரம்பு மீறிச் செயற்பட்டனர். பக்தர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர். இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும், அங்கிருந்த பக்தர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அமைதியாக உள்ளே சென்றோம். […]

அதிரடி 3 Mar 2026 5:04 pm

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது... இந்தப் போர் நான்கு - ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார். ட்ரம்ப் - நெதன்யாகு Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தந்துள்ள பேட்டியில், இதே கேள்விக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளதாவது... இது எல்லையில்லாத போராகச் செல்லாது. இது மிக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இந்தப் போர் சில நாள்கள் எடுக்கலாம்... ஆனால், ஆண்டுகளுக்கு தொடராது. ஆனால், இப்போது ஈரான் தீவிரமாக அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலையும் பதிலடியாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான' காமேனியின் மரணம்!

விகடன் 3 Mar 2026 5:02 pm

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்காக அவசர உதவிப் பிரிவு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவை அமைத்துள்ளது. இந்த அவசர உதவி பிரிவு வார இறுதி நாட்கள் உட்பட தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்கள் தொலைபேசி எண்கள்: +94 117 445641 / +94 112 207250 வட்ஸ்அப் (WhatsApp) […]

அதிரடி 3 Mar 2026 5:01 pm

iD Fresh Food promotes Co-Founders Jafar TK and Shamshudeen TK to Board

Bengaluru: iD Fresh Food today announced the elevation of its Co-founders, Jafar TK and Shamshudeen TK, as Members of the Board, marking the next phase of the company’s growth journey. The move reinforces iD’s focus on scaling operations, strengthening governance, and sharpening its long-term strategic direction as it prepares for expansion across markets and categories, along with its journey towards IPO readiness.[caption id=attachment_2454487 align=alignleft width=193] PC Musthafa [/caption]Speaking on the announcement, P.C. Musthafa, Global CEO and Chairman, iD Fresh Food, said, “Jafar and Shamshudeen have been integral to iD’s journey from the very beginning, contributing significantly to building both our market presence and operational backbone. Their elevation to the Board is a recognition of their deep commitment, entrepreneurial spirit, and leadership. As we enter the next phase of growth, their perspective and experience will be invaluable in shaping iD’s long-term strategy, while staying true to our core values of freshness, quality, and trust.” Jafar TK has played a key role in shaping and scaling iD’s sales function, expanding the brand’s regional footprint, strengthening distributor networks, driving retail expansion, and building trade relationships that have supported growth across markets. Commenting on his elevation, Jafar TK, Co-founder and Board Member, iD Fresh Food, said, “iD has always been about building something meaningful and long-term. From expanding our presence across markets to strengthening our relationships with partners and customers, it has been an enriching journey. As a Board Member, I look forward to contributing more strategically to the company’s growth and continuing to build a brand that consumers trust every day.” Shamshudeen TK has been instrumental in strengthening the company’s manufacturing and production capabilities, establishing robust plant operations, driving process standardisation, and expanding capacity to support the brand’s growing footprint. Shamshudeen TK, Co-founder and Board Member, iD Fresh Food, added, “Our focus at iD has always been on delivering fresh, high-quality products at scale. Building strong manufacturing and operational capabilities has been central to this journey. As we step into this next phase, I look forward to strengthening our processes, driving efficiency, and supporting iD’s continued growth while maintaining the highest standards of quality and consistency.” Both leaders have been central to building iD from its early days into one of India’s most trusted fresh food brands. Their elevation to the Board reflects a natural progression in their leadership roles and positions them to contribute more actively to the company’s long-term strategy and governance.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Mar 2026 5:01 pm

பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம் ; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) உயிரிழந்த யுவதியின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதான யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார். யுவதியின் சடலம் அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் யுவதியின் சடலம் மீது […]

அதிரடி 3 Mar 2026 4:57 pm

'வன்முறையற்ற, சமூக பிளவுகளற்ற தமிழகத்தை உருவாக்குங்கள்' - தமிழக அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நாங்குநேரி கொலைகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மாரி செல்வராஜ் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் டேக் செய்திருக்கிறார். Loading…

விகடன் 3 Mar 2026 4:54 pm

UPSC / TNPSC: 'வேலை பார்த்துக்கொண்டே போட்டித் தேர்வுக்கு தயாராகுவது எப்படி?' - இராம் பிரசாத் அறிவுரை

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. 'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் இந்த நிகழ்வில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்), டாக்டர். V. இராம் பிரசாத் மனோகர் (இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்) திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார். ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் டாக்டர். V. இராம் பிரசாத் மனோகரைத்(இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்) தொடர்பு கொண்டு பேசினோம். ``போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முதலில் சுயஒழுக்கம் (Self Displine) தேவை. ஏனென்றால் நாம் ஒரு விஷயத்தை செய்ய நினைக்கும்போது பல விஷயங்கள் அதற்கு தடையாக இருக்கும். அந்த இடையூறுகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கு சுய ஒழுக்கம் தேவை. டாக்டர். V. இராம் பிரசாத் இரண்டாவது டைம் மேனேஜ்மென்ட். போட்டித் தேர்வுகளில் தயாராகும் மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளும்போதும் சரி, தேர்வுகளை எழுதும்போதும் சரி டைம் மேனேஜ்மென்ட்டை கடைப்பிடிக்க வேண்டும். மூன்றாவது...பொதுவாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிலர் நிறைய விஷயங்களை படிப்பார்கள். எதற்காக படிக்கிறோம்? என்ன படிக்கிறோம்? என்ற ஒரு தெளிவு இல்லாமல் படிப்பார்கள். ஆனால் அதற்கான சிலபஸ் என்ன? கடந்த வருடங்களில் என்ன மாதிரியான கேள்விகள் வந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டு படிக்க வேண்டும். கிராமப்புற / தமிழ்வழி கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ முடியாது என்ற தாழ்வுமனப்பான்மை இருக்கும். அந்த மாணவர்கள் முதலில் எளிமையான முறையில் ஆங்கிலத்தை பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவதும், எழுதுவதும் ஒரு திறன் (skill) தான். அதனைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது அந்தத் திறன் வளரும். நானும் கிராமத்தில் தமிழ் வழியில் படித்த ஒரு மாணவன் தான். இந்த அணுகுமுறை மூலம் என்னுடைய ஆங்கிலத் திறனை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் தவிர போட்டித் தேர்வுக்கு தயாராகும் சிலர் வேலைப் பார்த்துகொண்டே படிப்பார்கள். அப்படி தேர்வுக்கு தயாராகுபவர்கள் டைம் மேனேஜ்மென்ட் செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். அவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. அந்த நேரத்தில் வேலை அழுத்தாமல் இல்லாமல் படிக்க முடியும். மாலை வந்தப் பிறகு படித்த விஷயங்களை ரிவிஷன் செய்துகொள்ளலாம். கடினமான அழுத்தமான வேலைகளைத் தேர்ந்தெடுக்காமல் எளிமையான வேலைகளை செய்துகொண்டு தேர்வுக்கு தயாராகலாம் என்று தெரிவித்தார். ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

விகடன் 3 Mar 2026 4:51 pm

‘இந்திய அணி கோப்பை வெல்லுமா?’.. அரையிறுதிக்கு கூட போகாதுனு சொன்ன முகமது அமீர்.. தற்போது புது கணிப்பு!

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற கேள்விக்கு முகமது அமீர் பதில் அளித்துள்ளார். இந்திய அணி, அரையிறுதிக்கு கூட போகாது என முன்பு முகமது அமீர் பேசியிருந்தார்.

சமயம் 3 Mar 2026 4:49 pm