T20 World Cup 2026: ‘வங்கதேச போட்டிகள்’.. இலங்கைக்கு மாறுகிறதா? ஐசிசி எடுத்துள்ள முடிவு இதுதான்!
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி, தாங்கள் விளையாடும் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதுகுறித்து ஐசிசி முடிவினை எடுத்துள்ளது.
ADMK - BJP: `தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமை மாற்றம்?' - அமித் ஷா விசிட்டும் அதிமுக ஆப்சென்ட்டும்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக ஜனவரி 4-ம் தேதி தமிழ்நாடு வந்தார். புதுக்கோட்டையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் 'பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா'வில் பங்கேற்றுப் பேசியதும், அதையொட்டி நடந்த சம்பவங்களும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்த விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக திருச்சி விமான நிலையம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க, கூட்டணிக் கட்சித் தலைவரான அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்று வரவேற்றனர். அமித் ஷாவை வரவேற்கும் அதிமுக நயினார் நாகேந்திரன் 'பரப்புரை பிரசாரப் பயணம்' முதல் முறையாகத் தொடங்கியபோது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் அடிப்படையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற நயினார் நாகேந்திரனின் பரப்புரைப் பயண நிறைவு விழாவிலும் பங்கேற்க அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. மேலும், புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ``தமிழ்நாட்டில் கை உயர்கிறதோ இல்லையோ, இலை துளிர்க்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும் எனப் பேசியதும் சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து உரையாற்றிய நயினார் நாகேந்திரன், ``கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் எனக் குற்றம்சாட்டுகிறேன் எனப் பேசி, விஜய்க்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததும் விவாதமாகியிருக்கிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, 'அ.தி.மு.க கூட்டணியில் என்.டி.ஏ ஆட்சி அமையும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டுக்கு வரும்' என உரையாற்றிய அமித் ஷா, சம்பிரதாயத்துக்காக ஒருமுறைக்கூட எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கவில்லை என்பதும் புகைச்சலை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை கூட்டம் முடிந்து திருச்சி தனியார் விடுதியில் தங்கிய அமித் ஷா பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதையடுத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். புஸ்ஸான அமித் ஷா பிளான்... தண்ணி காட்டிய எடப்பாடி... குழப்பத்தில் தே.ஜ.கூட்டணி! எஸ்.பி. வேலுசாமி அப்போது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு எழுந்ததாகவும், 'பாஜகவிற்கு 50 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும்' என அமித் ஷா திட்டவட்டமாகக் கூறியதாகவும் தகவல் வெளியானது. அதற்கு அ.தி.மு.க தரப்பில் மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இரண்டாம் நாள் பயணமான நேற்று, திருச்சி மன்னார்புரம் பகுதியில் நடைபெற்ற 'மோடி பொங்கல் விழா'வில் பங்கேற்ற அமித் ஷா, விழா முடிந்தபிறகு நட்சத்திர விடுதிக்குத் திரும்பினார். இரண்டாவது நாளும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அமித் ஷாவைச் சந்திக்க 2 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அமித் ஷாவுடன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் பியூஷ் கோயல், இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். ஆனால், அ.தி.மு.க சார்பில் பெயர் சொல்லும்படியான நபராக எஸ்.பி. வேலுமணி மட்டுமே பங்கேற்றார். இந்தச் சந்திப்பின்போது, கூட்டணியில் இன்னும் சில கட்சிகளைச் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், பா.ம.க உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்க்க பா.ஜ.க முனைப்புக் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது! அதிமுக - பாஜக கூட்டணி முடிவு இந்தச் சந்திப்புக்குப் பிறகு அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி குறித்து அமித்ஷா அறிவித்ததிலிருந்து, கூட்டணியை விரிவுபடுத்த முடியாமல் இரு கட்சிகளும் திணறி வருகின்றன. கடந்த முறை என்.டி.ஏ கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., பா.ம.க., அ.மு.மு.க மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் நிலைப்பாடு தெரியாமல் என்.டி.ஏ கூட்டணி தவிக்கும் சூழலில் தொகுதிப் பங்கீடு, ஆட்சியில் பங்கு எனப் பா.ஜ.க-வின் அழுத்தமும் கூட்டணியில் சலசலப்பு ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது. அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவரை அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனென்றால், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, தனது பிரசாரப் பயணத்தைத் தள்ளிவைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி மோடியைச் சந்தித்தார். ஆனால் இப்போது அமித் ஷாவின் பயணத்தின்போது, பிரசாரம் எனக் காரணம் சொல்லி அவரைச் சந்திக்காமல் புறக்கணித்திருக்கிறார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்குள் சிக்கல் இருப்பது புலப்படுகிறது. அரசியல் விமர்சகர் ஜெகதீசன் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய அரசியல் விமர்சகர் ஜெகதீசன், ``அமித் ஷா இந்தக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, கூட்டணி உறுதி என்பதைக் கையை உயர்த்தி அறிவித்ததிலிருந்து எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டணியில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தார். இதை அப்போதே நம்மால் பார்க்க முடிந்தது. ஆரம்பத்திலிருந்தே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என அ.தி.மு.க தலைமைக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க முடிந்தது. 'திமுக, அதிமுக, தவெக' - யாருடன் கூட்டணி? பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய பிரேமலதா! களத்திலேயும் பா.ஜ.க - அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பெரிதாக ஒட்டு உரசல் இல்லாமல்தான் இருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் என்.டி.ஏ கூட்டணியை மெகா கூட்டணியாக்க வேண்டும் எனப் பா.ஜ.க பிடிவாதமாக இருக்கிறது. அதற்காக அ.மு.மு.க, ஓபிஎஸ் போன்ற கட்சிகளை உள்ளே இழுக்க வேண்டும் என்பதற்காகத் தீவிர முயற்சிகளையும் மேற்கொள்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரத்தில் த.வெ.க-வைத் தவிர வேறு யாருக்கும் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பா.ம.க எப்போதும் அ.தி.மு.க கூட்டணிக்கு வரத் தயாராக இருக்கும். இந்த முறை பா.ம.க-விலும் அப்பா - மகன் பிரச்னை இருப்பதால், இருவரும் சேர்ந்து வருவார்களா என்பதைத் தாண்டி, வருவார்களா என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. ஆனால், என்.டி.ஏ கூட்டணி என்கிற ரீதியில், பா.ம.க-வுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்? யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள்? என்ற தெளிவின்மையும் தொடர்கிறது. அன்புமணி, ராமதாஸ் நயினார் நாகேந்திரன் யாத்திரையைத் தொடங்கும்போது அதில் கலந்துகொண்டு பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருப்பதைப் போல காண்பித்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. எனவே அமித் ஷா வரும்போது கூட்டணியில் இருக்கும் சிக்கல்கள் எல்லாம் பேசி முடிக்கப்பட்டு, எல்லோரும் சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால், எந்தப் பிரச்னையும் தீர்ந்தபாடில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது. முன்பு கரூர் சம்பவத்துக்கு விஜய்தான் காரணம் என்ற ரீதியில் பேசிய பா.ஜ.க, இப்போது அந்தச் சம்பவம் மூலம் த.வெ.க-வை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவரும் வாய்ப்பு என்றே கருதுகிறது. அதனால்தான் கரூர் சம்பவம் நடந்ததிலிருந்து விஜய்யைக் காப்பாற்றும் வேலையை பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன், தமிழிசை எனத் தொடங்கி, சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசியதுவரை எல்லாவற்றையும் நாம் கவனித்து வருகிறோம். எப்படியாவது விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என எல்லா வேலைகளையும் செய்தார்கள். அது எதுவும் பலனளிக்கவில்லை என்பதால், இப்போது விஜய்க்கு கரூர் சம்பவம் தொடர்பாக 12-ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்புகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் மீண்டும் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவரும் வேலையைத் தொடங்கலாம். தவெக தலைவர் விஜய் அமித் ஷா - வேலுமணி சந்திப்பில் கண்டிப்பாக கூட்டணியை விரிவாக்கும் திட்டம் குறித்து பேசியிருப்பார்கள். செங்கோட்டையன் அ.தி.மு.க-வில் இருக்கும்போதே '6 அமைச்சர்கள் டிடிவி, ஓபிஎஸ்-ஸை உள்ளே கொண்டுவர வேண்டும் என விரும்புகிறார்கள். எடப்பாடிதான் பிடிவாதமாக இருக்கிறார்' என்றார். அவரை கட்சியிலிருந்து நீக்கும்போது அந்த 6 பேரும் குரல் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்த்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் கட்சிக்குள் 'கட்சிகள் இணைப்பு' பேச்சு இருந்துகொண்டேதான் இருக்கிறது. 'டிடிவி, ஓபிஎஸ் வாக்குகள் குறைவாக இருந்தாலும்கூட அதுவும் தேர்தலில் ஒரு ஆளுமை செலுத்துமே' என்பதுதான் பா.ஜ.க-வின் நிலைப்பாடு. அதனால் வேலுமணியிடம் 'எடப்பாடியை மெகா கூட்டணிக்குச் சம்மதிக்க வைக்க வேண்டும்' என ஆலோசனை வழங்கியிருக்கலாம். அண்ணாமலை பா.ஜ.க தலைவராக இருக்கும்போதே 18 சதவிகித வாக்கு வங்கி வைத்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு 20 சதவிகித தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை பா.ஜ.க-வை 30 சீட்டுக்குள் அடக்க வேண்டும் என்றே முயற்சி செய்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை வேலுமணி - அமித் ஷா சந்திப்பில் நடந்திருக்கும். ஆனால் இதில் எடப்பாடியின் கைதான் ஓங்கும் எனக் கருதுகிறேன். பா.ஜ.க நிற்கும் இடங்களில் தி.மு.க இறங்கி வேலை பார்த்தால் பா.ஜ.க-வைக் காலி செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. இது எடப்பாடிக்கும் தெரியும். அதே நேரம், பா.ஜ.க தனக்கான வாக்கு வங்கி தனித்துத் தெரியவேண்டும் என்பதையும் நோக்கமாக வைத்திருக்கிறது. மேலும், ஒருவேளை அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால், அதிக இடங்களைப் பெற்ற பா.ஜ.க ஆட்சியில் பங்கு கேட்கும் என்பதும் எடப்பாடிக்குத் தெரியும். அதனால் 'தனித்த மெஜாரிட்டியில் வெற்றிபெற வேண்டும்' என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பார். இந்தக் கணக்கெல்லாம் சேர்த்துதான் தொகுதிப் பங்கீடு நடக்கும். புதுக்கோட்டை மேடையில் 'அ.தி.மு.க கூட்டணியில் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும்' எனப் பேசிய அமித் ஷா ஒருமுறைகூட எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூறவில்லை. அதனால் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க தலைமையை மாற்றுவதற்கான திட்டம் அமித் ஷாவிடம் இருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. அப்படி ஒரு திட்டம் இருந்தாலும், அதை இப்போது வெளிப்படையாக பா.ஜ.க சொல்லாது. அப்படிக் கூறிவிட்டால், கூட்டணிச் சூழல் இன்னும் பாதகமாகத்தான் முடியும் என்பது பா.ஜ.க-வுக்கு நன்கு தெரியும். என்றார். ``ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள் - ஆதவ் அர்ஜுனா
2028-ம் ஆண்டில் நடைபெறும் மகாமக திருவிழா...கும்பகோணம் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு!
2028-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் மகாமக திருவிழாவையொட்டி கும்பகோணம் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு
தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்திக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஒ-வாகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அப்போது சண்முகசுந்தரம், தனக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைத் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் உங்களுடைய மகனுக்கும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் சாந்தியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய சாந்தி கடந்த 09.09.2021 முதல் 10.11.2021 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தவணைகளாக சண்முகசுந்தரம் தம்பதியிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதேபோல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி செல்லத்தம்பி என்பவரிடம் ரூ. 4 லட்சம், பவித்ராவிடம் ரூ. 4 லட்சம், பழனிக்குமாரிடம் ரூ. 12 லட்சம் மற்றும் முத்துப்பாண்டியிடம் ரூ. 4 லட்சம் வாங்கி மொத்தம் 74 லட்சம் ரூபாயை அந்தத் தம்பதி வசூலித்துள்ளனர். FRAUD பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராததால் இது குறித்து சண்முகசுந்தரத்திடம் கேட்டபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாந்தி, உடனே தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தம்பதியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்துக் கழக பி.ஆர்.ஒ-வாக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி: எம்பி தங்க தமிழ்ச்செல்வனின் காரை மறித்து பொதுமக்கள் வாக்குவாதம், தள்ளுமுள்ளு; காரணம் என்ன?
சென்னையில் நாளை குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!
சென்னையில் நாளை குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.
வெனிசுவேலா அதிபர் மாளிகையில் ட்ரோன் தாக்குதல்? கடும் துப்பாக்கிச் சூட்டால் மீண்டும் பதற்றம்!
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும், அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரும் கப்பல்களையும் தாக்கி அழிக்க உத்தரவிட்டிருந்தார். வெனிசுவேலாவுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு நுழைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க படையினர், கைது செய்த அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் […]
Hugo Chavez - Americaவை மிரட்டிய Venezuela அதிபரின் புரட்சிக் கதை | Decode
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய ஏற்பாடுகள்!
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் நிம்மதியாக பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்காளதேசம்: இந்து காவல் அதிகாரியை உயிரோடு எரித்து கொன்ற மாணவர் தலைவர் கைது
டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். அவரை தங்களிடம் ஒப்படைக்க கோரி வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது. இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு […]
“அப்பா…நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது!”–கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய மதுரோவின் மகன்!
“அப்பா… நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது!” – கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய மதுரோவின் மகன்! … The post “அப்பா… நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது!” – கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய மதுரோவின் மகன்! appeared first on Global Tamil News .
போலந்து விசா மோசடி –யாழ். கரவெட்டி நபர் உள்ளிட்ட நால்வர் கட்டுநாயக்கவில் கைது!
வெளிநாடு செல்லும் ஆசையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்ளும் மற்றுமொரு பரிதாப சம்பவம் இன்று அதிகாலை… The post போலந்து விசா மோசடி – யாழ். கரவெட்டி நபர் உள்ளிட்ட நால்வர் கட்டுநாயக்கவில் கைது! appeared first on Global Tamil News .
கட்டுநாயக்கவில் அதிரடி: 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’போதைப்பொருள் மீட்பு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில், வரலாற்றில் அதிகளவான போதைப்பொருள் தொகையுடன் மூன்று இந்திய பிரஜைகள்… The post கட்டுநாயக்கவில் அதிரடி: 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு! appeared first on Global Tamil News .
வெனிசுலா ஜனாதிபதியின் சொத்துகளை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசு
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்கி உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரின் மனைவி சிலியா புளோரஸ் சிறை பிடிக்கப்பட்டனர். சொத்துகள் முடக்கம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இந் நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்குவதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சுவிட்சர்லாந்து […]
வாகரையில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு:
மட்டக்களப்பு மாவட்டம், வாகரை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட அம்பந்தனாவெளி சம்பு களப்பு வயல் பிரதேசத்தில், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான… The post வாகரையில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு: appeared first on Global Tamil News .
நான் நிரபராதி.. அமெரிக்க நீதிமன்றில் உரத்த குரலில் சீறிய வெனிசுவேலா ஜனாதிபதி
அமெரிக்க விசேட படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (63), நேற்று (5) நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் ஊடாக தமது கருத்துகளை முன்வைத்த மதுரோ, “நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன். இப்போதும் நான் தான் எனது நாட்டின் ஜனாதிபதி,” என உரத்த குரலில் தெரிவித்தார். குற்றமற்றவர்கள் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கொக்கேய்ன் கடத்தல் சதி […]
கிரானைட் மாபியாக்கள் 10-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளை நரபலி கொடுத்திருக்காங்க! - U. Sagayam IAS
இலங்கையில் எகிறபோகும் பச்சை மிளகாய் விலை!
நாட்டில் பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் பச்சை மிளகாய் செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தற்போது பச்சை மிளகாய் சந்தையில் 700 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் வரும் காலத்தில் நாட்டில் பச்சைமிளகாய் விலை மேலும் அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் – 860 போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் இன்று (ஜனவரி 6, 2026) காவல்துறை விசேட அதிரடிப்படையினர் (STF) நடத்திய… The post யாழ்ப்பாணத்தில் – 860 போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது appeared first on Global Tamil News .
அடம்பனில் வாகன விபத்து –ஒருவர் காயம்
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் – ஆண்டாங்குளம் பிரதான வீதியில் இன்று (ஜனவரி 6,… The post அடம்பனில் வாகன விபத்து – ஒருவர் காயம் appeared first on Global Tamil News .
வெனிசுலா –அமெரிக்கா மோதல்; உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள்
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். இதன் காரணமாக, உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உள்நாட்டு எரிபொருள் விலை உலகளாவிய ரீதியில் நிலவும் இந்தப் பதற்ற நிலைமையால் உள்நாட்டு எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய துல்லியமான தாக்கத்தை அரசாங்கத்தினால் தற்போதைய நிலையில் கணிக்க முடியாதுள்ளது. சில குறிப்பிட்ட பொருட்கள் […]
7-ஆவது நாளில் ஈரான் போராட்டம்!
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெறும் தீவிர போராட்டம் ஏழாவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஈரான் முழுவதும் போராட்டங்கள் 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நடைபெற்றன. தலைநகா் டெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன. போலீஸாருக்கும் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீா்ப்புகை குண்டுகள், ரப்பா் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்தப் போராட்டம் காரணமாக இதுவரை 15 போ் உயிரிழந்துள்ளனா். 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா் […]
இந்திய அரசு தமது மீனவர்களை எல்லை தாண்டாது இருக்க எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றஞ்சாட்டியுள்ளார். “இந்திய மீனவர் விடையங்கள் தொடர்பாகவும் அவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாகவும், நீண்ட காலமாக நாங்கள் அவர்களின் அத்து மீறிய வருகை தடுப்பதற்காக போராட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றோம். பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறோம்.கட்டுப்பாட்டு விடயங்களில் அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளோம்.ஆனால் இன்று வரை அந்த செயல்பாடு தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நினைத்தாலும், மறு புறம் தமிழ்நாடு அரசானது ஒத்துழைப்பை வழங்குவதில்லை. அண்மையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது தமிழக முதலமைச்சர் மத்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்திருந்தார். ஆனால் ஒரு தரம் கூட அவர் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்வதை தடுப்பதற்கான எந்த அறிவிப்புகளையும் கொடுத்ததாக இல்லையெனவும் ஆலம் தெரிவித்துள்ளார்.
CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? - முழு விவரம்!
தற்போது, சென்சார் சான்றிதழ் பற்றிய பேச்சுதான் தீயாய் இருந்து வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகை ரிலீஸாக திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி 'ஜனநாயகன்' படக்குழு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. Jana Nayagan - Vijay தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக” கூறினார். இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில், ஒரு படத்திற்கு எப்படி சென்சார் வழங்கப்படும், எப்படியான சமயங்களில் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாகும், எப்படியான படங்களுக்கு சான்றிதழ் மறுக்கப்படும் என சென்சார் செயல்முறை தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள முன்னாள் தணிக்கைக் குழு அதிகாரியும், இயக்குநருமான ஞான ராஜசேகரனை அழைத்தோம். ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்த இயக்குநர் ஞான ராஜசேகரன், “திரையரங்குகளில் வெளியாகப்போகும் படத்தை தணிக்கைக்குழுவின் ரீஜினல் ஆபீசர் தலைமையில் ஐந்து பேர் பார்ப்பார்கள். இந்தக் குழுவில் ரீஜினல் ஆபீசர் உட்பட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் இருப்பார்கள். அவர்கள் வெளிவரவிருக்கும் படத்தைப் பார்த்து அப்படத்தில் நீக்க வேண்டிய காட்சிகளை, நீக்க வேண்டிய ஆடியோக்களைப் பட்டியலிடுவார்கள். பிறகு, தயாரிப்பாளர், இயக்குநர், தணிக்கைக் குழு அதிகாரி என அனைவரும் இணைந்து நீக்க வேண்டிய காட்சிகள் குறித்தும், படத்திற்கான சான்றிதழ் குறித்தும் டிஸ்கஸ் செய்வார்கள். Gnana Rajasekaran தணிக்கைக்குழு அதிகாரிகள் கட் செய்யச் சொன்னதற்கான காரணத்தை விளக்கும்போது, உங்களுடைய வாதத்தையும் முன்வைக்கலாம். அது ஏற்றுக்கொள்ளும்படியானதாக இருந்தால், உங்களுடைய முடிவையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதன் பிறகு தணிக்கைக்குழு பரிந்துரைத்த காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும். படக்குழுவினர் அதனை கட் செய்த பிறகு மற்றொரு உறுப்பினர், அந்தக் கட்களை சரிபார்க்க நியமிக்கப்படுவார். ஒரு காட்சியில் வன்முறை அதிகமாக இருக்கிறதென, 20 சதவீத வன்முறையைக் குறைக்கச் சொல்லியிருந்தால், அந்த அளவையும் இந்த புதிய உறுப்பினர் சரிபார்ப்பார். தணிக்கைக்குழு பரிந்துரைத்த அளவிற்கு நீங்கள் காட்சிகளை நீக்கவில்லை என்றால் மீண்டும் அதனை குறைக்கச் சொல்வார்கள்.” என்றார். மேலும் விளக்கியவர், “இப்போது தணிக்கைக்குழு நீக்கச் சொல்லும் கட்களில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால், நீங்கள் அதன் பிறகு ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லலாம். அங்கு 9 பேர் கொண்ட குழு படத்தை முழுமையாகப் பார்ப்பார்கள். இதில் ரீஜினல் ஆபீசரும் இருப்பார். படத்தை அவர்கள் முழுமையாகப் பார்த்த பிறகு, ரிஜினல் ஆபிசருடன் டிஸ்கஸ் செய்வார்கள். சில சமயங்களில் தணிக்கைக்குழு சொன்ன கட்களை நீக்கத் தேவையில்லை என்றுக்கூட சொல்லலாம். சில நேரங்களில், தணிக்கைக்குழு கொடுத்ததைவிட அதிகமான கட்களை ரிவைசிங் கமிட்டி பரிந்துரைக்கலாம். ரிவைசிங் கமிட்டி சொல்லும் கட்களிலும் படக்குழுவினருக்கு உடன்பாடில்லை என்றால் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லலாம். Gnana Rajasekaran மத்திய அரசு நியமிக்கும் ஆட்கள்தான் தணிக்கைக் குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு படத்தைப் பார்க்கும்போது எந்தச் சார்பும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதுதான் விதி. ஒரு சில கட்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய திரைப்படங்கள், அடுத்த நாளே வந்து தணிக்கைச் சான்றிதழை வாங்கிச் செல்வார்கள். நான் தணிக்கைக் குழுவில் இருந்தபோது, அப்படிப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அதிகமான கட்களைத் தணிக்கைக் குழு சொல்லும்போது, அதனை மேற்கொள்ள நேரமெடுக்கும். பரிந்துரைத்த கட்களை நீக்கிய பிறகு, மீண்டும் படத்தைச் சமர்ப்பித்து தணிக்கைச் சான்றிதழைப் பெறுவார்கள். நான் தணிக்கைக் குழுவில் இருக்கும்போது, சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது என்பது மிகக் குறைவு. இப்போது நடந்துகொண்டிருப்பதுபோல, அப்போது அரிதாகத்தான் நடக்கும். ஆனால், இப்போது 'ஜனநாயகன்' படத்திற்குச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமத்திற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், தணிக்கைக் குழு சொன்ன கட்களை நீங்கள் செய்த பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், அது தவறானதுதான். CBFC காட்சிகளை நீக்கி நீங்கள் மீண்டும் படத்தைச் சமர்ப்பித்த பிறகு தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. சில சமயங்களில், படக்குழுவினர் கட்களை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல் யோசித்துவிட்டு வருகிறோம் என்பார்கள். அப்படியான சமயங்களில் தாமதம் ஏற்படும். பட ஸ்கிரீனிங் முடிந்த 2 மணி நேரத்திற்குள்ளாகவே நீக்க வேண்டிய காட்சிகளைத் தணிக்கை குழு அதிகாரிகள் பரிந்துரைத்துவிடுவார்கள்.” எனத் தொடர்ந்து பேசியவர், “தணிக்கை குழுவிலிருப்பவர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருப்பதால், அவர்கள் சொல்லும் கட்களில் அரசியல் சார்ந்த காட்சிகள் இருக்கலாம். எப்போதுமே தணிக்கை குழுவினர் மூன்று வழிகளில் யோசிப்பார்கள். ஒரு படத்தை எடுத்தபடியே மக்களுக்குக் காட்டலாமா? சில விஷயங்களைக் கட் செய்து காட்டலாமா? மக்களுக்குக் காட்டுவதற்கு இது தகுதியான திரைப்படமா? என மூன்று வகைகளில் சிந்திப்பார்கள். சில படங்களுக்கு 100 கட்களுக்கு மேல் பரிந்துரைக்கும் சூழல் வரும். 100 கட்கள் செய்தால், அந்தப் படத்தில் எதுவும் இருக்காது. அதனால், அதற்குத் தணிக்கைச் சான்றிதழை மறுப்பார்கள். நான் 'பெரியார்' திரைப்படத்தை எடுக்கும்போது, தணிக்கை செய்யும் விதிகள் எனக்குத் தெரியும். Theatre அப்படத்தில் ஒரு கட் கூட அதிகாரிகள் செய்யச் சொல்லவில்லை. இன்று 'கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ்' எனப் பல படைப்புகள் வருகின்றன. அப்படைப்புகளை மத்திய அரசே ஊக்குவிக்கிறது. தணிக்கைக் குழுவிலிருக்கும் உறுப்பினர்கள் மூலம் அரசியல் வந்துவிடுகிறது. தணிக்கைக் குழுவில் தகுதியற்ற ஆட்களைச் சில சமயங்களில் உறுப்பினராக்கிவிடுகிறார்கள். அரசியல்வாதிகள் சிலர், அவர்களுக்கு ஆதரவான நபர்களை இங்குக் கொண்டுவந்து பதவியில் அமர்த்திவிடுகிறார்கள். அவர்களை வைத்து நாங்கள் அப்போது கஷ்டத்தை அனுபவித்திருக்கிறோம். முதிர்ச்சியடைந்த ஆட்கள் இதிலிருந்தால் நியாயமான விஷயங்கள் நடக்கும்.” எனக் கூறினார்.
ஏம்.ஏ.சுமந்திரனிடம் மாத்திரம் கொஞ்சம் கவனமாக இருங்கள் சிவஞானம் சிறீதரன் அவர்தான் இன்றைக்கு உங்கள் பின்னால் அடிக்கடி வந்துகொண்டிருக்கிறார் என இலங்கை நாடாளுமன்றில் அமைச்சர் சந்திரசேகர எச்சரித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி இன்று சீரழிவின் விளிம்பில் நிற்கிறது. கட்சியை எம்.ஏ.சுமந்திரனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் கட்சியிலிருந்து வெளியேற்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கும் சதிகள் உள்ளிருந்து உச்சமடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து சிவஞானம் சிறீதரன் மட்டுமே வெற்றியடைந்திருந்தார். இந்நிலையில் ஏனையோரது தேர்தல் வெற்றி பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டு;க்கள் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினால் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக தென்னிலங்கை அரசியல் சக்திகளது ஆதரவுடன் உள்வீட்டு மேற்பார்வையில் அவர் மீது சேறடிப்புக்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக சிவஞானம் சிறீதரன் ஆதரவு தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டேவருகின்றது.
அமெரிக்க துணை ஜனாதிபதி வீட்டின் மீது தாக்குதல்
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் வீட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க துணை ஜனாதிபதியாக ஜே.டி. வான்ஸ் இருக்கிறார். இவரது ஓஹியோ வீடு மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவம் நடந்தபோது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. இந்தச் செயல் ஜே.டி. வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிரான இலக்கு தாக்குதலா என்பதை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். துணை ஜனாதிபதி வீட்டின் வெளிப்புறத்தில் ஜன்னல்களை […]
மட்டக்களப்பு மாமாவின் பாலியல் சேட்டை! தலைமறைவான அரசியல்வாதி
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 வயது வயது மாமனார் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மாமனார் தலைமறைவாகி உள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் தந்தை மற்றும் தாயார் பிரிந்து வாழ்ந்து வருவதுடன் தந்தையார் வெளிநாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. சிறுவனிடம் பாலியல் சேஷ்டை இந் நிலையில் தந்தையாரின் உறவினரான மாமா வீட்டிற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறுவன் உட்பட அவரது சகோதரர்கள் […]
கிரீன்லாந்தை கைப்பற்ற கனவு காணாதீர்கள்; டிரம்ப் மீது டென்மார்க் பிரதமர் சீற்றம்!
கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள் என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் “அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை” என்றும் , டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை” என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் அதன் முக்கியமான புவியியல் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா அதன் மீது ஆர்வம் காட்டினாலும், அங்குள்ள மக்கள் […]
50-60 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிப்பு ; மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் இருப்பதோடு, அது மேற்கு, வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே காற்றின் வேகம் அதிகரிப்பதால் அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களும் அவதானமாயிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடற் பரப்புக்கு எச்சரிக்கை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து […]
கரூா் கூட்ட நெரிசல் விவகாரம்: நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை!
தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூா் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், தமிழக… The post கரூா் கூட்ட நெரிசல் விவகாரம்: நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை! appeared first on Global Tamil News .
India’s Automotive Power Shift: How Mahindra and Tata Redefined the Market in 2025
The Indian automotive landscape underwent a decisive shift in 2025 as Mahindra rose to the No. 2 position and Tata Motors secured No. 3, surpassing several long-established global manufacturers. This change reflects more than altered rankings — it signals a fundamental realignment in consumer expectations, product strategy, and market maturity.Indian manufacturers are no longer competing on value alone. They are shaping buyer behaviour through relevance, engineering confidence, and long-term product planning. A Market Driven by Informed Buyers Indian car buyers are now more analytical and informed than ever. Purchase decisions are increasingly influenced by safety performance, reliability, ownership value, and suitability for Indian conditions rather than brand legacy. Market indicators point to growing preference for products that offer real-world durability, consistent service experience, and strong resale value.This evolution has favoured manufacturers capable of designing vehicles specifically for Indian usage rather than adapting global platforms. As a result, domestic OEMs have gained measurable ground in both volume stability and consumer trust. Mahindra: Product Strength as a Market Driver Mahindra’s rise to second place reflects a focused, product-driven strategy built around capable SUVs such as the Scorpio-N, XUV700, Thar, and XUV3XO. These models have performed strongly across urban and semi-urban markets, supported by improved production stability and reduced waiting periods.The brand’s emphasis on mechanical strength, relevant technology, and performance reliability has translated into sustained demand. Rather than relying on pricing aggression, Mahindra has strengthened its position through engineering credibility, platform consistency, and strong value retention. Tata Motors: Stability Anchored in Safety and Trust Tata Motors’ climb to third position is the result of long-term consistency rather than rapid expansion. Its portfolio — including the Nexon, Punch, Harrier, and Safari — continues to perform steadily, supported by strong safety credentials and improved build quality.The brand’s ability to maintain volumes across segments reflects growing consumer confidence, particularly among family and first-time buyers. With a wide service network and controlled cost of ownership, Tata has reinforced its position as a dependable and scalable manufacturer. Electrification as a Strategic Lever Electrification has become a defining force in reshaping the market. Tata Motors’ early investments have positioned it as a leader in the passenger EV space, aided by increasing infrastructure readiness and rising consumer acceptance. Models such as the Nexon EV and Tiago EV have helped transition electric mobility from niche adoption to practical use.Mahindra’s newly launched BE6 and XEV9E and the latest kid on the block the XEV9S and its upcoming electric portfolio, built on the INGLO EV architectures, signals the next phase of competition. As regulatory direction and fuel economics evolve, electrification is no longer optional — it is central to long-term growth strategies. A Structural Shift in the Industry The rise of Mahindra and Tata represents a structural transformation rather than a cyclical shift. Indian manufacturers are now capable of developing scalable platforms, integrating advanced technologies, and responding quickly to market demands.The 2025 rankings reinforce a broader reality: Indian automobile brands has reached a stage where it can levaerage technology and engineering with confidence. As mobility evolves toward electrification and connectivity, domestic brands are no longer following global trends — they are increasingly shaping them.(Views are personal)
“Jana Nayagan Release Delayed Over Legal Hurdle”
The release of Vijay’s much-awaited film ‘Jana Nayagan’, scheduled for January 9, is facing a legal hurdle. On Monday, January
60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா!
வேலையின் நிமித்தமாகவும், வணிகத்தின் நிமித்தமாகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்து வருகிறார்கள், தமிழர்கள். ஒவ்வோர் ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அயலகத் தமிழர் மாநாடு இப்படி இடம் பெயர்ந்து செல்லும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னை, வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம்’ நடைபெற உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ம.வள்ளலார் ஐ.ஏ.எஸ்., “வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பது, துன்பத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுதல், அயல்நாடு முதலாளியிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதில் உதவுதல், வெளிநாடுகளில் இறக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிர்பாராத வகையில் நேரும் பிரச்னைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள அந்தந்த இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உதவுவது எனப் பல பணிகளை, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் சார்பில் மேற்கொண்டு வருகிறோம். அயலகத் தமிழர் மாநாடு புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனில் கவனம், அக்கறை கொண்டு, இத்துறையை உருவாக்கி, அதற்கு அமைச்சரையும் நியமித்துள்ளது, தமிழக அரசு. 2022-ம் ஆண்டு இத்துறை உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறையின் சார்பில் ‘அயலகத் தமிழர் தினம்’ வருகிற ஜனவரி 11, 12-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் தமிழர்கள் உயர் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். பல தொழில்களை கையில் எடுத்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். பல நாடுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஆலோசனைகளை கொடுத்து வழிநடத்தி வருகிறார்கள். மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்கள், அயலக அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்கிறார்கள். அயலகத் தமிழர் மாநாடு உணவு சார்ந்த அரங்குகள், கலாசாரம் சார்ந்த அரங்குகள், வணிகம் சார்ந்த அரங்குகள், கைவினைப் பொருள்கள், தமிழ் இலக்கியம் சார்ந்த அரங்குகள் என 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. தமிழ் உணவு சார்ந்தும், நம் தமிழ் கலாசார பண்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வு இருக்கும். பல்வேறு துறைகளில் கோலோச்சும் உலகத் தமிழர்களைச் சந்திக்கவும், இந்த விழா வாய்ப்பாக அமையும். இது உலகத் தமிழர்களுக்கான மேடை. மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் போன்ற தமிழ் கலைகள் மற்றும் கலாசாரம் குறித்த நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. உலகத் தமிழர்கள் ஓரிடத்தில் சங்கமிக்க இருக்கிறார்கள். தமிழால் இணைவோம், தமிழால் வளர்வோம். புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்ள மற்றும் அரங்குகள் அமைக்க விருப்பமுள்ளோர் https://nrtamils.tn.gov.in/nrtday/index என்ற தளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளவும். வள்ளலார் ஐ.ஏ.எஸ் அயலகத் தமிழர்கள் மட்டும் பங்குபெறும் இந்த விழாவில் தமிழ்நாட்டில் இருப்போர் தங்கள் தொழில், கலாசாரம், கைவினைபொருள்கள், உணவு உள்ளிட்டவற்றை வெளிநாடு வாழ் தமிழர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்நிகழ்வு வெளிநாடு மற்றும் வெளிமாநில தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். ஜனவரி 11 மற்றும் 12ம் தேதி(ஞாயிறு, திங்கள்) இரண்டு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வு காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அயலகத் தமிழர் தினத்தைக் கொண்டாட அனைவரையும் அழைக்கிறோம்” என்றார்.
‘சச்சினின் அதிக ரன்கள் சாதனை தகர்க்க’.. ரூட்டிற்கு நல்ல வாய்ப்பு: இன்னும் இத்தனை ரன்தான் தேவை!
சச்சினின் அதிக ரன்கள் சாதனையை தகர்க்க ஜோ ரூட்டிற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்னும் 2000 ரன்களுக்கு குறைவான ரன்களை அடித்தாலே போதும் என்ற நிலைமை இருக்கிறது. இதனால், ரூட் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“Hyderabad’s Aman Rao Hits Record Vijay Hazare Century”
Hyderabad’s Aman Rao made history on Tuesday by scoring a double century in just his third List A match. The
“Israel Strikes Hezbollah, Hamas Sites in Lebanon”
Israel has carried out airstrikes on several Hezbollah and Hamas sites in Lebanon. Videos shared online showed large areas of
கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணின் உடலில் ஆண் குரோமோசோம்கள்; மருத்துவர்கள் ஆச்சர்யம்!
பிரேசில் நாட்டில் பெண்ணொருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு கருச்சிதைவு ஏற்பட என்ன காரணம் என்பதை அறிவதற்காக மருத்துவர்கள் அவரது உடலிலுள்ள குரோமோசோம்களை சோதனை செய்தபோது, அவரது உடலில் ஆண் பெண் என இரண்டு வகை குரோமோசோம்களும் இருப்பது கண்டு மருத்துவர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள். பொதுவாக, பெண்கள் உடலில் பாலினத்தை நிர்ணயிக்கும் XX வகை குரோமோசோம்களும், ஆண் உடலில் XY வகை குரோமோசோம்களும் இருக்கும். ஆனால், இந்தப் பெண்ணின் இரத்தத்தில் XY வகை குரோமோசோம்கள் இருந்தன. வியப்பில் […]
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றதிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசவில்லை என்று கூறுகிறார். ஃபாக்ஸ் நியூஸின் ஹானிட்டியில் பேசிய அவர், அக்டோபர் 10 ஆம் திகதி ஜனாதிபதி டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வென்றதாக அறிவித்தபோது அவருடன் பேசியதாகவும், ஆனால் அதன் பின்னர் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார். சர்வாதிகாரத்திற்கு எதிரான அவரது போராட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக நோர்வே நோபல் குழு அவருக்கு இந்த மதிப்புமிக்க விருதை வழங்கியது. அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்காக அவர் நோர்வே சென்றிருந்தாலும், அவரது உறவினர் ஒருவர் விருதை ஏற்றுக்கொண்டார். அவர் தாமதமாக வந்ததால் தான் வந்ததாக அவர் கூறினார். இருப்பினும், இந்தப் பயணத்தை முடித்ததிலிருந்து அவர் வெனிசுலாவுக்குத் திரும்பவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மிகவும் கடுமையான எதிர்ப்பாளராக பரவலாகக் கருதப்படும் மச்சாடோ, தனது நாட்டிற்குத் திரும்புவதற்கான திட்டங்கள் குறித்து கேட்டபோது, நான் விரைவில் எனது நாட்டிற்குத் திரும்ப திட்டமிட்டுள்ளேன்என்று கூறினார். அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பு மற்றும் சனிக்கிழமை நாட்டின் அதிபர் கைது செய்யப்பட்ட பின்னர் மச்சாடோவின் முதல் நேர்காணல் இதுவாகும். அமெரிக்க தலையீட்டை மனிதநேயம், சுதந்திரம் மற்றும் மனித கண்ணியத்திற்கான மிகப்பெரிய படி என்று அவர் பாராட்டினார். இதற்கிடையில், வெனிசுலாவின் துணைத் தலைவரும் எண்ணெய் அமைச்சருமான டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, நாட்டின் எதிர்காலத் தலைமை குறித்து பலர் நிச்சயமற்றவர்களாகவும் ஆர்வமாகவும் இருந்தனர். இருப்பினும், சனிக்கிழமை, ஜனாதிபதி டிரம்ப் மச்சாடோவுடன் இணைந்து பணியாற்றுவதை நிராகரித்தார். அவருக்கு நாட்டில் போதுமான ஆதரவு அல்லது மரியாதை இல்லை என்று கூறினார்.
ஈரானை வெனிசுலாவாக மாற்ற டிரம்ப்-நெதன்யாகு சதி?
ஈரானிய ஆட்சியை மாற்றுவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் நேரடித் தலையீட்டைப் பரிசீலித்து வருவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் நடந்து வரும் போராட்டங்களை ஆதரிக்க அமெரிக்கா சில வகையான தலையீட்டைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அதிகாரத்தில் இருந்து நீக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராகவும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்க முடியுமா என்று இஸ்ரேல் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஜூன் மாத தொடக்கத்தில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் முக்கிய குறிக்கோள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இருந்த நிலையில், தற்போது அவர்கள் ஆட்சி மாற்ற விருப்பங்களில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசுலாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, பெரிய தரைப்படை படையெடுப்பு இல்லாமல் வரையறுக்கப்பட்ட இராணுவ பலத்தைப் பயன்படுத்தி அரசியல் மாற்றத்தை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது. இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட், ஈரானிய போராட்டக்காரர்களுக்கு களத்தில் உதவுவதாக ட்விட்டரில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. அத்தகைய ஒரு முகவரை கைது செய்ததாக ஈரான் கூறுகிறது. மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து வெனிசுலாவின் நிலைமை குறித்து ஜனாதிபதி டிரம்ப் இன்னும் முடிவுகளை எடுத்து வருவதால், ஈரான் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 35 ஆக உயர்ந்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்களில் 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 29 போராட்டக்காரர்கள், நான்கு குழந்தைகள் மற்றும் ஈரானிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு பேர் அடங்குவர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் 31 மாகாணங்களில் 27 மாகாணங்களில் 250க்கும் மேற்பட்ட இடங்களுக்கு போராட்டங்கள் இப்போது பரவியுள்ளன. ஈரானின் தோல்வியடைந்த பொருளாதாரத்தால் போராட்ட அலை தூண்டப்பட்டது. அமெரிக்க தலையீடு குறித்த தனது அச்சுறுத்தலை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் எழுப்பியுள்ளார். ஈரானின் துணை இராணுவப் புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமாகக் கருதப்படும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், போராட்டங்களில் 250 காவல்துறை அதிகாரிகளும், பாசிஜ் தன்னார்வப் படையைச் சேர்ந்த 45 உறுப்பினர்களும் காயமடைந்ததாகத் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை அமெரிக்க தலையீட்டிற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது. அமைதியான போராட்டக்காரர்களை ஈரானிய அதிகாரிகள் வன்முறையில் கொன்றால் அமெரிக்கா மீட்புக்கு வரும் என்று ஜனாதிபதி டிரம்ப் வெள்ளிக்கிழமை எச்சரித்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு, அதிகமான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் ஈரானிய அதிகாரிகளை மிகவும் கடுமையாக தாக்குவேன் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட 22 வயது பெண் மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பின்னர் ஈரானில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டங்கள் இவை. இருப்பினும், மஹ்சா அமினியின் மரணத்துடன் தொடர்புடைய போராட்டங்களைப் போல போராட்டங்கள் இன்னும் பரவலாகவோ அல்லது தீவிரமாகவோ இல்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன. ஜூன் மாதம் ஈரானும் இஸ்ரேலும் 12 நாள் போரை நடத்தின. அதில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஜெட் விமானங்கள் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கின. கிளர்ச்சியாளர்கள் நசுக்கப்பட வேண்டும் என்று உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சனிக்கிழமை கூறிய போதிலும், போராட்டங்கள் குறைவதற்கான அறிகுறியே இல்லை.
“Tamil Nadu Launches Free Laptop Scheme for Students”
Tamil Nadu Chief Minister M.K. Stalin announced the launch of the first phase of a free laptop scheme for students
நான் விடுதலையாகிவிடுவேன் - மதுரோ நம்பிக்கை
வெனிசுலாவிலிருந்து அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் நேற்று முதன்முதலில் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகி, தாங்கள் முற்றிலும் நிரபராதிகள் என்று வலியுறுத்தியதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரோவின் இராணுவக் கடத்தலின் சட்டபூர்வமான தன்மை குறித்து கேள்விகள் இருப்பதாக அவரது வழக்கறிஞர் பாரி பொல்லாக் கூறினார். ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவராக, வழக்குத் தொடரப்படுவதிலிருந்து பாதுகாக்க மதுரோவுக்கு உரிமை உண்டு என்பதை அவர் சுட்டிக்காட்ட முயற்சிப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். தற்போது புரூக்ளினில் உள்ள MDC தடுப்பு மையத்தில் கூட்டாட்சி காவலில் உள்ள மதுரோ மற்றும் புளோரஸ், மதியம் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீன் முன் ஆஜரானார்கள். நீதிமன்ற அறைக்குள் நுழைந்த மதுரோ, அங்கிருந்தவர்களை வரவேற்று, காலை வணக்கம் சொன்னதாக கூறப்படுகிறது. மதுரோ கைவிலங்குகளுடன், ஆரஞ்சு நிற கைதி செருப்புகளுடன் நீதிமன்ற அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார், அவரது மனைவி இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார். நீதிமன்றம் வழங்கிய மொழிபெயர்ப்பாளரின் குரலைக் கேட்க இருவரும் ஹெட்ஃபோன்களை அணிந்திருந்தனர். மதுரோ அமர்ந்தவுடன் உடனடியாக ஒரு குறிப்பேட்டில் எழுதத் தொடங்கினார், அதே நேரத்தில் புளோரஸ் தனது வழக்கறிஞர் மார்க் டோனெல்லிக்கு அருகில் அமர்ந்தார். மதுரோ நீதிபதி முன் நின்றார். நீங்கள் நிக்கோலஸ் மதுரோ மோரோஸா? என்று நீதிபதி கேட்டார். நான் வெனிசுலாவின் ஜனாதிபதி. நான் கராகஸில் உள்ள என் வீட்டில் கைது செய்யப்பட்டேன். தனது கைதுக்கு எதிராக பின்னர் வழக்குத் தொடர அவருக்கு நேரம் கிடைக்கும் என்று நீதிபதி கூறினார். பின்னர் மதுரோ தான் யார் என்பதை உறுதிப்படுத்தினார். இந்த உரிமைகள் பற்றி எனக்குத் தெரியாது. இப்போதுதான் அவை பற்றி எனக்குத் தெரிவிக்கப்பட்டது என்று மதுரோ கூறினார். நீங்கள் எப்படி மேல்முறையீடு செய்வீர்கள்? என்று நீதிபதி கேட்டார். நான் நிரபராதி. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் ஒரு மரியாதைக்குரிய மனிதன். நான் இன்னும் என் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறேன் என்று மதுரோ அறிவித்தார். இருப்பினும், மதுரோவை சட்டப்பூர்வமான ஜனாதிபதியாக அங்கீகரிக்கப் போவதில்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார், பைஜ்ன் பலானாவின் பதவிக் காலத்திலும் இதுவே நிலைப்பாடு என்பதை நினைவு கூர்ந்தார். மதுரோவின் கைதுக்கு வழிவகுத்த தகவல்களுக்கு 25 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படுவதாகவும் ரூபியோ கூறினார். நான் நிரபராதி. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்த விஷயத்திலும் நான் குற்றவாளி அல்ல என்று மதுரோ மீண்டும் வலியுறுத்தினார். நீதிபதி மதுரோவின் மனைவியை அழைத்து விசாரித்தார். நான் சிலியா புளோரஸ். நான் வெனிசுலா குடியரசின் முதல் பெண்மணி என்று அவர் கூறினார். ஆனால் நீதிபதி, இன்றைய நோக்கமே நீங்கள் யார் என்று கேட்பதுதான் என்றார். பின்னர் நீதிபதி அவளுடைய உரிமைகளை விளக்கி, அவள் மீதான மூன்று குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி. முற்றிலும் நிரபராதி என்று அறிவித்தார். வெனிசுலா குடிமக்களாக, தூதரக சேவைகளைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு என்று நீதிபதி தம்பதியினரிடம் தெரிவித்தார். நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த வழியில் தூதரக சேவைகளைப் பெற விரும்புகிறோம் என்று மதுரோ கூறினார். விசாரணையின் போது மதுரோ தனது குறிப்பேட்டில் குறிப்புகளை எடுத்து வைத்துக்கொள்ள அனுமதி கேட்டார். அவர்கள் ஜாமீன் கோரவில்லை, ஆனால் நீதிபதி அவர்களை தொடர்ந்து காவலில் வைக்க உத்தரவிட்டார், எதிர்காலத்தில் அவர்கள் ஜாமீன் கோரலாம் என்று கூறினார். புளோரஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டது, மேலும் அவரது வழக்கறிஞர், அவர் பலத்த காயமடைந்துள்ளார். அவரது விலா எலும்புகள் உடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றார். நீதிமன்ற அறையை விட்டு மதுரோ வெளியேறும்போது, வெனிசுலாவுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று ஒருவர் கூச்சலிட்டார், அதற்கு மதுரோ பதிலளித்து, நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி. நான் போர்க் கைதி. நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்றார். மதுரோ மற்றும் அவரது மனைவி உட்பட ஆறு பேர் மீது கடந்த 25 ஆண்டுகளாக வன்முறை போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இந்தக் குற்றச்சாட்டை மதுரோ தொடர்ந்து மறுத்து வருகிறார். இது வெனிசுலாவிற்கு எதிரான ஒரு பெரிய அளவிலான தாக்குதல் என்றும், இது அமெரிக்க சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் டெல்டா ஃபோர்ஸ் போன்ற உயரடுக்கு இராணுவ குழுக்களுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை என்றும் டொனால்ட் டிரம்ப் கூறினார். மேலும், வெனிசுலா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார். வெனிசுலா உச்ச நீதிமன்றம் மதுரோவின் கைது ஒரு கடத்தல் என்று கூறியது, துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்காலத் தலைவராகப் பதவியேற்றார். ஆரம்பத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுவதாகக் கூறினாலும், பின்னர் சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்தார். வெனிசுலாவுக்கு அமெரிக்கா தற்போது பொறுப்பு என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். மதுரோவின் அடுத்த விசாரணை மார்ச் 17 ஆம் திகதி திட்டமிடப்பட்டது.
ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? - வனத்துறை விளக்கம்!
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள போர்த்தியாடா பகுதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் புலி ஒன்று நடமாடி வருவதை உள்ளூர் மக்கள் கடந்த வாரம் பார்த்துள்ளனர். செல்போன்களில் பதிவு செய்து வனத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் டிரோன் கேமிராக்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தெர்மல் டிரோன் எனப்படும் இரவில் உயிரினங்களை அடையாளம் காணும் கேமிராக்கள் மூலம் புலியின் இருப்பிடத்தை கண்டறிந்து கண்காணிக்கத் தொடங்கினர். உயிரிழந்த இளம் ஆண் புலி அந்த புலியின் உடலில் காயங்கள் இருப்பதை உறுதி செய்ததுடன் வேட்டைத் திறனை இழந்து நடமாட முடியாமல் தவிப்பதையும் கண்டறிந்தனர். 5 நாள்களாக தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று காலை அந்த புலி இறந்ததையும் உறுதி செய்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் அந்த புலியின் உடலை கூறாய்வு செய்து உடல் பாகங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அதே இடத்தில் வைத்து அந்த புலியின் உடலை எரித்து சாம்பலாக்கியிருக்கிறார்கள். காயத்துடன் தவித்த அந்த புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்கவோ அல்லது இரை, தண்ணீர் போன்றவற்றை வழங்க வனத்துறை முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. ஆனால், அது போன்ற செயல்களில் ஏன் ஈடுபடவில்லை என்பது குறித்து நீலகிரி கோட்ட வனத்துறை தற்போது விளக்கமளித்திருக்கிறது. உயிரிழந்த இளம் ஆண் புலி இதன் பின்னணி குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர், புலிகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற முடியும். வாழிட எல்லைகளை தக்கவைத்துக் கொள்ள அல்லது புதிய எல்லைகளைப் கைப்பற்ற ஆண் புலிகளுக்கு இடையே மோதல்கள் நடப்பது இயல்பான ஒன்று. அந்த மோதலில் வலிமை வாய்ந்த புலி வெல்லும்... மற்ற புலி இறக்கும் அல்லது கடுமையான காயங்களுடன் உயிர் பிழைக்கும். அப்படி உயிர் பிழைக்கும் புலி அந்த எல்லையை விட்டு வெளியேறும். காயங்களுடன் அப்படி வெளியேறும் புலிக்கு சிகிச்சை அளிப்பது, உணவளிப்பது இயற்கைக்கு எதிரான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 6 வயதான இந்த இளம் ஆண் புலியும் எல்லை மோதலில் ஏற்பட்ட தோல்வியால் படுகாயங்களுடன் வனத்தை விட்டு வெளியேறியிருக்கிறது. உயிரிழந்த இளம் ஆண் புலி அதைப் பிடித்து சிகிச்சை அளிப்பது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறும் செயலாகும். அதன் காரணமாகவே இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தோம். கடுமையான காயங்கள் காரணமாகவே அந்தப் புலி உயிரிழந்தது என்றனர்.
பொங்கலுக்கு முன்னர் சிறிலங்கா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சிறிலங்காவுக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் நாள்களில் அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சிறிலங்கா வரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, முக்கிய கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், முக்கிய பொருளாதார முயற்சிகள் குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீன
56 ஆண்டுகளுக்கு பின் எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி பழனிசாமி-அன்று கேகேஷா இன்று ஆர் என் ரவி!
56 ஆண்டுகளுக்கு பின் எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டுள்ளார். அன்று கேகேஷா இன்று ஆர் என் ரவி. அதேபானியில் ஊழல் பட்டியலை தயாரித்து ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
“Indian Satellite Hits by Space Dust Every Minute”
India’s first homegrown cosmic dust detector, called the Dust EXperiment (DEX), has revealed that tiny particles from space are constantly
அமெரிக்காவில் இந்திய பெண் கொலை ; தமிழகத்திற்கு தப்பி வந்து பதுங்கிய முன்னாள் காதலன்
அமெரிக்காவில் இந்திய பெண் தனது முன்னாள் காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த பெண் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேரிலாந்தில் எலிகாட் சிட்டியில் டேட்டா அனலிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். கத்திக்குத்து காயங்கள் இந்நிலையில் நிகிதாவைத் தானே கொலை செய்துவிட்டு, டிசம்பர் 31 முதல் காணாமல் போய்விட்டதாக அவரது முன்னாள் காதலன் பொலிஸில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த உடனே சந்தேகம் வராத வகையில் அர்ஜுன் இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார். […]
ஒரு வார்த்தைக்காக பதவி விலக கோருவது நெறிமுறையற்றது- நளிந்த ஜயதிஸ்ஸ
ஒரு பாடத்தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையில் உள்ள குறைபாட்டிற்காக,கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவை, பதவி விலக நிர்பந்திப்பது நெறிமுறையற்றது என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். கல்வி சீர்திருத்தங்களில் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்
Eswaran Arasu joins Network18 Media & Investments as Brand Content Lead – South
Mumbai : Eswaran Arasu has joined Network18 Media & Investments Limited as Brand Content Lead – South, marking the next step in his extensive career in branded content and marketing. Prior to this, he was positioned as AGM – Branded Content Lead – South at HT Digital Media Streams.Announcing his new role on LinkedIn, Eswaran shared, “I’m happy to share that I’m starting a new position as Branded Content Lead – South at Network18 Media & Investments Limited!” Eswaran brings with him a wealth of experience, having previously worked with leading organisations including Bennett Coleman and Co. Ltd (Times Group), Writer Corporation, Crown Relocations, and Synergetic Inception Events. He began his career as Managing Partner at Synergetic Inception Events in 2008, gaining strong insights into event management, brand storytelling, and strategic marketing.With extensive expertise spanning product branding, sales, corporate branding, marketing strategy, business development, branded content, and B2B/B2C marketing, Eswaran is expected to drive impactful content initiatives and strengthen Network18’s brand engagement in the southern markets.
“Earthquakes Shake Antarctica’s Doomsday Glacier”
Deep under the ice of Antarctica, hundreds of unusual earthquakes have been quietly shaking one of the world’s most dangerous
சிறிலங்கா பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- ஐக்கிய மக்கள் சக்தி முடிவு
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நேற்று நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் இன்று இதுபற்றிக்
“Astronaut Captures Stunning Everest View from Space”
High above the Earth, as the International Space Station (ISS) passed over South Asia, NASA astronaut Zena Cardman took a
திருகோணமலையில் கடல் கடும் சீற்றம்; வீதிக்கு வரும் படகுகள்; மீனவர்கள் கவலை
திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள். திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளனர். படகுகளை அப்புறப்படுத்தும் மீனவர்கள் அதோடு தமது படகுகளை பாதுகாப்பு கருதி வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. தமது படகுகளை பாதுகாப்பா வைத்திருப்பதற்கு தமக்கு இடம் இல்லை எனவும் இதனால் வீதிக்கு கொண்டு வரவேண்டி இருப்பதாகவும், எதிர்வரும் 10ஆம் […]
“Hubble Reveals Hidden Star Behind Betelgeuse”
For many years, astronomers have been curious about Betelgeuse, a famous red supergiant star. Behind it, they noticed a strange
அவசரகாலச் சட்டம் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது –அரசாங்கம் அறிவிப்பு
அவசரகாலச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தை இன்னும்குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கும். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிலரை அரசாங்கம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியிருப்பதால் இது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து'படத்தின் பாடலை எடுத்தேன் - விக்ரமன் பகிர்ந்த வீடியோ
'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடலை எடுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். விஜய் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், சமீபத்தில் மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்டிருந்தேன். அப்போது விஜய் இதுதான் என்னுடைய கடைசி படம் என்று சொன்னார். அது உண்மையிலுமே வேதனையாக இருந்தது. அவரை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தை சூட் செய்தேன். அதில் இரண்டு பாடல்களையும் எடுத்திருந்தேன். மூணாறில் 'என்னை தாலாட்டும்' பாடலை சூட் செய்திருந்தேன். Exclusive Director Vikraman Shares The Exclusive Rare Unseen Video Of #ThalapathyVijay From #UnnaiNinaithu Song Shoot - Ennai Thalattum Sangeetham! Old Golden Days ♥️ @actorvijay #Laila pic.twitter.com/FSFTHYahO6 — Team Tamannaah ♥︎ (@TeamTamannaah) January 6, 2026 அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய video cassette ஒன்று கிடைத்தது. அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன் என்று வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
காலியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன
காலியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காலி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள காலி-வக்வெல்ல சாலையும் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன் காரணமாக காலி-வக்வெல்ல வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், காலியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
“Remote Sensing Helps Discover Hidden Treasures”
Imagine you’re on a desert island, searching for buried treasure. You’ve lost your map and don’t have any clues. You
திருப்பரங்குன்றம் : ``இரண்டு காரணங்களால் இந்த தீர்ப்பு செல்லாது - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள், ``திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு செல்லும். எனவே, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர். திருப்பரங்குன்றம் சர்வே தூண் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் வஞ்சிநாதன், ``தீர்ப்பின் முழுமையான நகல் இப்போதுவரை வரவில்லை. முதற்கட்டமாக நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட விஷயங்களிலிருந்து எனது முதற்கட்ட கருத்தை மட்டும் பகிர்கிறேன். முதலாவது: இன்று நீதிபதிகள் வாசித்த தீர்ப்பின்படி கவனித்தால்கூட, இந்த தீர்ப்பு செல்லத்தக்கதல்ல. சட்டப்படியான தீர்ப்பும் அல்ல. ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இரண்டு முறை வழங்கிய தீர்ப்பை, மீண்டும் இரண்டு நீதிபதிகள் பரிசீலிக்க முடியுமா என்றால் முடியவே முடியாது. இந்த வழக்கில் 100 சதவிகிதம் முன்தீர்ப்பு தடை என்பது பொருந்தும். தர்காவில் ஆடு,கோழி வெட்டக்கூடாது என அனுமன் சேனா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு நீதிபதிகள் நிசாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் நீதிபதி நிசாபான, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார். நீதிபதி ஸ்ரீமதி, ' தர்காவில் ஆடு, கோழி வெட்டும் பழக்கம் அங்கு பலகாலமாக இருக்கிறது என்றால், சிவில் நீதிமன்றத்தை அணுகி அந்த பழக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இரண்டு நீதிபதிகளுக்கிடையே முரண்பட்ட கருத்து இருந்ததால், மூன்றாவது நீதிபதியான விஜயகுமார் அவர்கள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவர், `172.2 ஏக்கர் திருப்பரங்குன்ற மாலை மொத்தமும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தொல்லியல் துறை அனுமதியோடு தான் அங்கு எந்த நிகழ்வையும் நிகழ்த்த முடியும். எனவே சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள்' என உத்தவிட்டார். மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பில், இரண்டு நீதிபதிகள் சொன்ன தீர்ப்பு, இந்த இரண்டு நீதிபதிகளை கட்டுப்படுத்தும். நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனும் கட்டுப்பட்டவர். தர்காவின் பழக்க வழக்கத்தை சிவில் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியப் பொறுப்பு தர்கா தரப்புக்கு இருக்கிறது என்றால், அந்த மூன்று நீதிபதிகள் தீர்ப்பின்படி தர்க்கா பக்கத்தில் இருக்கக்கூடிய தீபத்தூண் அல்லது சர்வே தூண் அல்லது வெறும் கிரானைட் தூண் என்று சொல்லக்கூடிய அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் இருந்தது என்பதை ராம ராமரவிகுமார் போன்ற இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் நிரூபிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. மத விவகாரத்தில் எல்லா மதத்துக்காரர்களுக்குமான உரிமையை அரசியல் சாசனம் வழங்குகிறது. உயர் நீதிமன்றம் மதுரை கிளை இரண்டாவது: இந்த கார்த்திகை தீப பிரச்னையில 5 தீர்ப்புகள் இருக்கிறது. அதில் இரண்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு. 1923-ல் மதுரை மூன்றாவது சார்பு நீதிமன்ற நீதிபதி ராமஐயரும் இந்த பிரச்னைக்கு தீர்ப்பளித்திருக்கிறார். அதை எதிர்த்து அன்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், அன்றைய ப்ரிவியூ கவுன்சில் இறுதியாக இந்த வழக்கை தீர்ப்பளித்து தீர்த்து வைத்தது. அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்னைக்கும் சட்டப்படி செல்லும். அந்த தீர்ப்பை ராமரவிகுமார் உள்ளிட்ட அந்த கும்பலும் மறுக்கவில்லை. அந்த தீர்ப்பில்,`` 1862, 1912 என இரண்டுமுறை மலை உச்சியில் தர்கா அருகே இருக்கக்கூடிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி அன்றைய அரசால் முறியடிக்கப்பட்டது. தர்கா அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடிய வழக்கம் கிடையாது. என அன்றைய உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த தீர்ப்புக்கு முரணாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இது செல்லாது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!
வாகரையில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி - சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் இன்று (06) மீட்டுள்ளனர். இதன்போது, 38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், வயலைச் சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது மர்மப் பொருட்கள் தென்படுவதைக் கண்டு வாகரை விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கு வெடிபொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று, பலத்த மழைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப்படை உதவி அத்தியட்சகர் ஏ.எம்.ஜி. சுஜீவ அத்தனாயக்க தலைமையில், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார, அம்பந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் சி. கஜேந்திரன் மற்றும் வாகரை விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி அமிலசிந்தக்க பிரேமரத்ன ஆகியோரின் முன்னிலையில் இவ்வெடிபொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டன. குறித்த வெடிபொருட்கள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு மிகவும் நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்தன. கடந்த யுத்த காலத்தில் இப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்ததாகவும், அவர்களாலேயே இவை புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் வாழ்வார வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அனர்த்த நிலைமை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. தமது அன்றாட ஜீவனோபாயத்தை பெற்றுக்கொள்ள எவ்வித வழிகளும் இல்லாத நிலையில் அல்லல்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர் மீண்டும் மாவட்டத்தில் பாரிய அளவிலான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர் புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பூனொச்சிமுனை உட்பட மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மீனவர்கள் கடும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள மீனவர்களுக்கு சொந்தமான மீன் வாடிகளும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் கடல் மீன்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்தும் பருவ மழை பெய்து வருவதால் பல இடங்களில் நீர் வழங்கி உள்ள அமையும் குறிப்பிடத்தக்கது.
“Mercedes-Benz Launches Advanced City Driving Technology”
Mercedes-Benz said on Monday that it will release a new driver-assistance system in the United States later this year. This
“Nvidia Shows New AI Platform at CES 2026”
AI giant Nvidia revealed its newest AI platform on Monday, showing its plans to stay a leader in the fast-growing
ஜேஇஇ மெயின் 2026 தேர்வு ஜனவரி 21 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த நகரம் ஒதுக்கப்பட்டது என்ற விவரத்தை அறிந்துகொள்ளும் வகையில், தேர்வு நகரத்திற்கான விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
“Intel Unveils Panther Lake AI Laptop Chip”
Intel introduced its new AI chip for laptops, called Panther Lake, on Monday at the CES trade show in Las
Bank of India appoints Concept Public Relations as Corporate Communications Partner
Mumbai: Bank of India (BoI), a public sector bank, has appointed Concept Public Relations (CPR) as its corporate communications partner, with immediate effect. The partnership will focus on strengthening the bank’s communications strategy, enhancing stakeholder engagement, and shaping a consistent and impactful narrative across platforms.Under the mandate, CPR will facilitate live and virtual interactions, press announcements, authored articles, and other communications related to the banking sector and the bank’s initiatives. The collaboration aims to create a financially astute society by sharing valuable insights with stakeholders.Bank of India, established on 7 September 1906 and nationalised in 1969, has grown into a trusted financial institution with a strong domestic and international presence. In India, BoI operates over 5,300 branches across all states and Union Territories, supported by 69 Zonal Offices and 13 Field General Manager Offices (FGMOs). Globally, the bank maintains 47 branches and offices, including 22 overseas branches, one representative office, four subsidiaries with 23 branches, and one joint venture.Rajneesh Karnatak, Managing Director & CEO of Bank of India since April 29, 2023, brings over 31 years of experience across branch and administrative banking, credit monitoring, digital banking, and corporate credit. He has also led credit review and corporate credit divisions at Punjab National Bank and is a Certified Associate from the Indian Institute of Bankers (CAIIB).CPR will work closely with BoI to highlight the bank’s initiatives, industry insights, and key developments, strengthening its engagement with customers, media, and stakeholders across India and internationally.
TVK Vijay கூட்டணியில் சேர்கிறாரா TTV Dinakaran? - SP Lakshmanan interview | Vikatan Tv
“Smart Glasses Transform Lives of Blind Users”
The usefulness of smart glasses is still being talked about. For people who can see, they might seem like a
குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்: இந்தூரில் புதிதாக 20 பேருக்கு வயிற்றுப்போக்கு
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், புதிதாக மேலும் 20 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தூர் மாநகரின் பகீரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த அதிகாரிகள், ‘‘பகீரத்புரா பகுதியில் அசுத்தமான குடிநீரை குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 398 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 256 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 142 பேர் […]
பேரிடரைக் காரணம் காட்டி பிற்போடப்படும் மாகாண சபைத் தேர்தல்கள்
சிறிலங்காவில் மாகாண சபை தேர்தல்கள் மேலும் பிற்போடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் கூறுகின்றன. பேரிடரின் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தாமதம் ஏற்படக் கூடுமெனவும் அவர் கூறியுள்ளார்.
Asianxt Digital Technologies names Samarth Sharma as Chief Operating Officer
Bengaluru: Asianxt Digital Technologies (“Asianxt”) has announced the appointment of Samarth Sharma as Chief Operating Officer (COO) to lead the next phase of the company’s strategic growth and D2C transformation. In his new role, Sharma will oversee the company’s expansion with a focus on content growth, consumer-facing products, and tech-driven platform innovation.This marks Sharma’s second tenure at Asianxt (formerly Asianet News Media & Entertainment Pvt. Ltd.). During his previous stint, he led the group’s digital business for nearly five years, first as Chief Business Officer and later as COO, contributing significantly to the growth of the company’s digital portfolio and revenue across platforms and markets.Sharma brings extensive experience in digital content, social media, and the content creator ecosystem, with prior entrepreneurial experience as co-founder of Sportskeeda and corporate roles with Deutsche Bank and TransUnion-CIBIL.Speaking on his appointment, Samarth Sharma said, “Asianxt is entering an important phase of growth. I look forward to leading a sharper transformation agenda focused on scale and innovation, building a stronger, more integrated digital ecosystem across languages and geographies.” Welcoming him back, Neeraj Kohli, CEO, Asianxt, added, “Samarth combines clarity of vision with strong execution. During his prior stint, he played a key role in scaling Asianetnews.com with Pan-India audiences coupled with rapid monetization growth. I am pleased to welcome him back to accelerate our D2C growth agenda.”
திருகோணமலையில் கரையொதுங்கிய உயிரிழந்த டொல்பின்
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் ஒன்று செவ்வாய்க்கிழமை (6) காலை கரையொதுங்கியுள்ளது. இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம் கொண்டதாகவும் சிறியதாகவும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் மற்றுமொரு டொல்பின் அதே இடத்தில் உயிருடன் கரையொதுங்கிய நிலையில் பின்னர் மீனவர்களால் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த இடத்திற்கு சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று இறந்த நிலையில் காணப்பட்ட டொல்பினை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள இந்தியர்கள்; ஷாக்கில் விமான நிலைய அதிகாரிகள்!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தி 50 கிலோ குக்ஷ் போதைப்பொருளை கடத்திய வந்த இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை விடவும் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள, பாரியளவான போதைப்பொருள், இன்று (06) அன்று கைப்பற்றப்பட்ட நிலையில் அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். முறியடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. […]
Gokul Jaykrishna appointed as Chairman of FICCI Gujarat
Ahmedabad: Noted industrialist Gokul Jaykrishna has taken over as the new Chairman of FICCI Gujarat, with a vision to strengthen the council as an action-oriented platform for industry, particularly in supporting the growth of micro, small, and medium enterprises (MSMEs).Jaykrishna, 57, is the CEO and Joint Managing Director of Asahi Songwon Colors Limited, a leading player in the chemicals and pigments sector. Under his leadership, FICCI Gujarat plans to prioritise enhancing productivity through the adoption of AI, while working closely with government agencies to deliver measurable outcomes for industry.Commenting on his priorities, Jaykrishna said, “The council will work towards building on Gujarat’s manufacturing strengths and positioning it as a global manufacturing hub, aligned with Prime Minister Narendra Modi’s ‘Make in India’ initiative and the broader national economic agenda. By leveraging AI and technology-led solutions, we can significantly enhance productivity, competitiveness and ease of doing business.” During his tenure, FICCI Gujarat will also focus on sustainability, encouraging both MSMEs and large corporates to adopt productivity-enhancing technologies. The council plans to organise a series of sector-specific manufacturing events over the year aimed at promoting knowledge exchange, attracting investment, and showcasing opportunities across key industries.On fostering industry-government collaboration, Jaykrishna added, “We will facilitate structured, closed-door roundtables to enable constructive dialogue, address policy challenges and strengthen collaboration between industry and government.” Jaykrishna holds a degree in Business and Economics from Lehigh University and serves on the boards of Asahi Tennants Colors, Atlas Life Sciences, The Anup Engineering, and Arvind Limited.
Can Skincare Really Change Your Skin Texture?
You have probably seen many ads and social media posts promoting products that claim to make your pores disappear, remove
Eurogrip Tyres introduces ‘Creator Circuit’ to empower India’s creator community
New Delhi: Eurogrip Tyres, a two- and three-wheeler tyre brand from TVS Srichakra Ltd., has announced the launch of Creator Circuit, a first-of-its-kind social media initiative aimed at nurturing and empowering India’s growing digital creator ecosystem.Positioned as a category-first digital property, Creator Circuit brings together a structured series of contests and masterclasses designed to inspire, educate, and elevate aspiring content creators. The initiative focuses on helping creators refine their storytelling abilities, strengthen technical skills, and build distinctive creative voices within the automotive and mobility space.As part of the program, Eurogrip Tyres has partnered with leading content creators and automotive personalities, including Sunny Gajjar, founder of XBHP, and Rajini Krishnan, an acclaimed motorcycle racer. A key highlight of the initiative is an exclusive masterclass curated by Sunny Gajjar in collaboration with Eurogrip, offering hands-on insights into effective creator techniques such as solo shooting, framing, visual storytelling, and audience engagement.Creator Circuit features three themed contests — #FrameTheGrip (Photography), Tyre Technology, and Women on Wheels. Each contest encourages participants to showcase their unique creative perspectives while competing for recognition, learning opportunities, and rewards. Through these themes, creators will gain access to industry expertise and practical guidance to help them stand out in the increasingly competitive digital landscape.The initiative will culminate in the selection of the Eurogrip Creator of the Year, who will receive a grand prize of ₹5,00,000, to be awarded by Eurogrip’s Brand Ambassador, MS Dhoni. Additionally, winners of each of the three themed contests will receive ₹50,000 each.Entries will be evaluated by an expert jury based on originality, content quality, craftsmanship, and audience engagement. Registrations for Creator Circuit are now open, inviting creators from across the country to showcase their talent and creativity while competing for industry recognition and rewards.For registration details visit the social media pages of Eurogrip:Instagram: https://www.instagram.com/tvseurogrip/?hl=en Facebook: https://www.facebook.com/EurogripTyres/
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் –மூன்றாவது அமர்வில் முக்கிய அறிவிப்புகள்!
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு… The post தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் – மூன்றாவது அமர்வில் முக்கிய அறிவிப்புகள்! appeared first on Global Tamil News .
Skipping Breakfast Can Harm Health and Metabolism
Breakfast is called the most important meal of the day, and for good reason. A healthy breakfast gives you energy,
Compass Communications appointed Strategic Communication Partner for Tellado Villas
Mumbai: Compass Communications has been appointed as the strategic communications and public relations partner for Tellado Villas, Goa’s premier ultra-luxury real estate developer. The mandate marks a significant step in strengthening Tellado Villas’ brand presence as it continues to expand its portfolio across North Goa and into southern Maharashtra.Known for its distinctive design language that blends ultra-modern aesthetics with heritage-inspired elements, Tellado Villas has established a reputation for boutique, high-end developments in some of North Goa’s most sought-after locations, including Siolim, Mandrem and Morjim. The developer is now expanding further into Tiracol and southern Maharashtra, reinforcing its vision of creating exclusive, design-led holiday homes.Under the partnership, Compass Communications will spearhead media relations, corporate reputation management and strategic thought leadership for Tellado Villas. The agency will focus on amplifying the brand’s philosophy of “Poetry in Stone”, highlighting its commitment to architectural excellence, transparency and the creation of soulful, designer residences that redefine luxury living in Goa.Commenting on the partnership, Rahul Agarwal, Founder & Managing Director of Tellado Villas, said, “At Tellado, we believe in building homes that evoke a sense of pride and belonging. Our homes are crafted for families who want more than a home — they want a legacy: a residence that becomes an heirloom — passed down, lived in, remembered. As we grow, we are pleased to partner with Compass Communications who have the expertise in luxury real estate to take our story to our potential customers.” Rafi Q Khan of Compass Communications, added, “Tellado is not just a real estate brand; it is a curator of luxury lifestyle. We are excited to leverage our expertise to strengthen Tellado’s brand narrative nationally.” Compass Communications currently works with over a dozen national and international clients across BFSI, automotive, technology, education, executive search, luxury, consumer tech, real estate and healthcare sectors. The agency has a strong presence across key Indian markets including Delhi NCR, Bengaluru, Kolkata and Chennai.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்!
Kalaignar All Village Integrated Agricultural Development Program: கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் அரசாங்க திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்!
உத்தரப் பிரதேசம் : இந்திய தேர்தல் ஆணையம் உத்தரப் பிரதேசத்தில் நடத்திய சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிக்குப் பிறகு, ஜனவரி 6, 2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. மாநிலத்தில் மொத்தம் 15.44 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், 2.89 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், வரைவு பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த நீக்கம் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், டூப்ளிகேட் பதிவுகள் உள்ளிட்ட காரணங்களால் […]
உத்தரபிரதேசத்தில் எஸ் ஐ ஆர்-2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்-வரைவுப்பட்டியல் வெளியீடு!
உத்தரபிரதேசத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து 2 . 89 கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வரைவுப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம்: `திமுக மற்றும் இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை' - பியூஷ் கோயல்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேட்டி அளித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தூண் அரசின் மேல் முறையீடு இந்த உத்தரவு பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் இன்று ( ஜன.6) திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீபம் ஏற்றலாம்! - நீதிமன்றம் உத்தரவு அதாவது, திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. பியூஷ் கோயல் பியூஷ் கோயல் இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேட்டி அளித்திருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின், அவர் மகன் உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பதும், கேலி செய்வதும், தாக்குவதும் ஒரு சாதாரண தற்செயல் நிகழ்வு அல்ல. திருப்தி அளிக்கிறது சனாதன தர்மத்தையே ஒழிக்க வேண்டும் என உதயநிதி கண்டிக்கத்தக்க கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு சில மாதங்களுக்கு பிறகு, முதன்முறையாக திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தடுக்கப்பட்டது. முருகன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழைமையான கோயிலின் பக்தர்களுக்கு இன்று தமிழக உயர் நீதிமன்றம் நீதி வழங்கி உள்ளது. இது திருப்தியை அளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக முருகனை வணங்கி விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. திமுக (ம) இண்டி கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை இன்று வெளியாகியிருக்கும் தீர்ப்பில் திமுக மற்றும் இண்டி கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை என்பது அம்பலமாகி உள்ளது. இது பழங்கால வழக்கம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. மாநில அரசின் சட்டம் ஒழுங்கு குறித்த வாதம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அது அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான பிரச்னை. கடந்த காலத்தில் எந்த பிரச்னையும் இருந்தது இல்லை. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்தும் நோக்கம் கொண்ட ஓட்டு வங்கி அரசியலைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று பியூஸ் கோயல் பேசியிருக்கிறார்.
Recode Studio files draft red herring prospectus with SEBI
New Delhi : Recode Studios Limited, a homegrown beauty & cosmetic brand that gained popularity after appearing on Shark Tank India Season 2, has definitely expanded to a whole new level by submitting their Draft Red Herring Prospectus (DRHP) with BSE SME Exchange to mark a new beginning in its well-organized growth.The Initial Public Offering (IPO) that has been proposed will facilitate the enhancement of working capital and the establishment of the new warehouse facility. The effort will enable the brand to improve efficiency and the supply chain to support the growth of Recode Studios.As digital engagement is a crucial aspect related to the beauty & personal care category, the brand is also looking to further improve visibility and awareness through continued focus on advertising, promotional, and other related marketing efforts. The growth trajectory that the brand has experienced from national visibility to the filing of the IPO is a testament to resilience, focus, and a well-thought-out growth plan.Speaking on this occasion, Narinder Singh, Chief Financial Officer, Recode Studios Limited, said, The submission of our DRHP with SEBI is a significant milestone in our journey. This proposed IPO would help us enhance our working capital base and establish a new warehouse facility, which would streamline our operations, improve scalability, and enhance service delivery. This move strengthens our commitment to financial prudence, transparency, and laying a solid foundation to ensure sustainable growth. The brand has reported that the announcement of the DRHP filing highlights the dedication to good governance, transparency, and delivering value to all stakeholders as the brand prepares to enter its next phase of growth.Recode Studios has also expressed gratitude to its advisors, partners, and team members, as well as to its customers who continue to encourage and support the brand as it evolves.As Recode Studios embarks on this bold step in the future, it remains committed to improving its operational structure and creating impact in the rapidly growing beauty and personal care products segment of the Indian market.-Based on Press Release
ஜனநாயகன் சென்சார் : `மறு தணிக்கை; நிர்பந்திக்க முடியாது' - நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?
அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நீதிபதி பி.டீ.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும் அதனை செய்ததாகவும் கூறினார். ஜனநாயகன் பட பர்ஸ்ட்லுக் இதனையடுத்து, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என தணிக்கை வாரியம் என தெரிவித்ததாகவும், ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டார். அனைத்து நடைமுறைகளையும் பினபற்றி இருப்பதாகவும் கண்காணிப்பு அதிகாரியும் இதனை உறுதி செய்த நிலையில் யாரோ புகாரளித்துள்ளதாக கூறி சான்றிதழ் வழங்கமால் இருப்பதாக கூறினார். யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் குறிப்பிடப்பட்டது. மேலும், ஜனநாயகன் படம் ஐந்நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், `படத்தில் மத உணர்வுகளை புண் படுத்தக்கூடிய காட்சிகள் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக' கூறினார். `குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென நிர்பந்திக்க முடியாது' எனவும் குறிப்பிட்டார். இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
Hindi ZEE5 expands true crime slate with ‘Honeymoon Se Hatya’
Mumbai: ZEE5 has announced the launch of its latest Hindi true crime docu-series, Honeymoon Se Hatya, set to premiere on 9 January 2026. The gripping series delves into real-life cases where marriages that began with promise descended into violence, exploring the disturbing reality of wives who killed their husbands.Positioned as a bold and unsettling exploration of crime and human psychology, Honeymoon Se Hatya goes beyond headlines to ask a haunting question — Why Women Kill. Without sensationalism or judgement, the docu-series presents facts as they unfolded, examining the emotional, social, and psychological pressures that culminated in crimes that shocked the nation, while encouraging viewers to reflect on the complex realities hidden behind closed doors.The series revisits some of India’s most widely discussed and disturbing cases, including the Meghalaya Sonam Raja Raghuvanshi Case, Meerut Blue Drum Case, Bhiwani Influencer Case, Mumbai Tile Case (Nalasopara Tile Case), and the Delhi Electric Shock Case. Through detailed factual narration, recreations, interviews, and archival material, the series offers a comprehensive account of each incident while highlighting recurring patterns of emotional trauma, control, suppression, and desperation that often remain invisible until tragedy strikes.[caption id=attachment_2473565 align=alignleft width=200] Kaveri Das [/caption]Speaking about the series, Kaveri Das, Chief Channel Officer & TV and Business Head Hindi Z5, said, “With Honeymoon Se Hatya, we are expanding our documentary slate into deeper, more emotionally charged stories. In today’s rapidly evolving social landscape, understanding the pressures within marriages, has never been more important. These stories highlight the fractures that often go unnoticed until it’s too late. Viewers can expect a gripping show marked by emotional depth, realism, and insights that linger long after the story ends. Honeymoon Se Hatya is meant to provoke conversations about relationships, power, and the silent battles fought within homes.” By combining investigative storytelling with emotional realism, Honeymoon Se Hatya aims to spark meaningful conversations around relationships, power dynamics, and the unseen struggles within domestic spaces.The true crime docu-series will stream exclusively on ZEE5 from 9 January 2026.https://www.youtube.com/watch?v=GK8U1HSyASQ&feature=youtu.be
தவெகவை பாஜக கூட்டணிக்குள் இழுக்க திட்டமா? விஜய் தரப்பில் கூறப்படுவது என்ன?
தவெகவை கூட்டணிக்குள் இழுக்க திட்டமா? சிபிஐயை வைத்து அழுத்தம் கொடுக்கிறதா பாஜக? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
Twinkle Khanna headlines Tata CLiQ Luxury’s End of Season Sale campaign on smart indulgence
Mumbai: Tata CLiQ Luxury, a luxury lifestyle platform, has unveiled its latest End of Season Sale (EOSS) campaign film featuring author, entrepreneur, and columnist Twinkle Khanna. The new campaign positions New Year shopping as a thoughtful ritual, redefining indulgence as a deliberate and discerning choice rather than impulse, with style ultimately delivering the final verdict.Titled “Twinkle’s New Year Verdicts”, the campaign film uses humour and wit to place Twinkle’s New Year shopping decisions on trial. Through a series of sharp, entertaining rulings across categories including fashion, fragrances, accessories, watches, footwear, and beauty, the film presents each purchase as a defining piece that refines, elevates, and anchors personal style for the year ahead.True to her signature poker-faced delivery, Twinkle transforms everyday shopping moments into insights on judgement and self-awareness. A wardrobe refresh becomes a “strong case”, a new fragrance signals a shift in persona, and a well-chosen timepiece serves as irrefutable proof of good judgement. The narrative reflects the mindset of today’s luxury consumer — confident, discerning, and intentional about investing in pieces that elevate everyday living. The film concludes with Twinkle inviting viewers to shop the Tata CLiQ Luxury End of Season Sale and begin the year with clarity and purpose.The Tata CLiQ Luxury End of Season Sale offers customers access to a carefully curated portfolio of leading global and Indian luxury brands across fashion, accessories, watches, jewellery, beauty, footwear, home, and more. With assured authenticity, handpicked assortments, and a seamless premium online experience, the platform enables consumers to make considered luxury choices.As part of the sale, customers can enjoy up to 50% off, making it an opportune moment to invest in timeless pieces designed to define the year ahead. View this post on Instagram A post shared by Twinkle Khanna (@twinklerkhanna) View this post on Instagram A post shared by Twinkle Khanna (@twinklerkhanna)
Bangkok Temple Hides Pop Culture Characters in Carvings
At first, Bangkok’s Wat Pariwat Temple looks like a normal Buddhist temple, but a closer look reveals a fun surprise.
படை ஒருங்கிணைப்பு: சிரியா அரசு, குா்து படையினா் பேச்சு
தங்களது படைகளை ஒருங்கிணைப்பது குறித்து சிரியா அரசு அதிகாரிகளும் குா்து இனத்தவா்களின் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படை (எஸ்டிஎஃப்) பிரதிநிதிகளும் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். இது குறித்து சிரியா அரசு ஊடகங்கள் தெரிவித்ததாவது: எஸ்டிஎஃப் படைகளை தேசிய ராணுவத்தில் இணைப்பது குறித்து இடைக்கால அதிபா் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால் இதில் ‘குறிப்பிடத்தக்க முடிவுகள்’ எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன. பேச்சுவாா்த்தை நிறைவடைந்துவிட்டதாகவும், அது தொடா்பான விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் என்று எஸ்டிஎஃப் […]
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் 2024ம் ஆண்டில் முதல்முதலாக கரம்கோர்த்து முதலாம் யாழ்ப்பாண சட்ட மாநாட்டை ஒழுங்கு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது, 2025ம் ஆண்டில் சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து அதனை யாழ்ப்பான சர்வதேச சட்ட மாநாடாக பரிணாமிப்பதில் வெற்றி […]
CPR Global bags Communications Mandate for Neo Kavach
New Delhi: Neo Kavach, India’s first rider wearable airbag technology brand redefining motorcycle safety through Indo-French innovation, has awarded its communications and public relations mandate to CPR Global.Under the partnership, CPR Global will lead media relations, strategic storytelling, and stakeholder engagement for Neo Kavach across India, supporting the brand’s mission to make advanced, CE-certified wearable airbag protection more visible and accessible to riders nationwide.Founded as an Indo-French joint venture between Helite (France) and India’s Aum Group, Neo Kavach combines globally patented airbag technology with advanced Indian manufacturing to deliver high-performance rider safety gear tailored for Indian riding conditions. The brand’s portfolio includes airbag-equipped vests and backpacks such as the Neo Kavach Air Vest and Tech Pack range, featuring sub-100 millisecond inflation, patented TURTLE technology offering best-in-class back protection, comprehensive upper-body coverage, and reusable cartridge-based deployment without the need for charging or subscriptions.Neo Kavach operates from a modern manufacturing and assembly facility in the Delhi NCR region, enabling efficient pan-India distribution and stringent quality control. Positioned as India’s most advanced rider safety companion, the brand aims to make next-generation airbag protection as essential and mainstream as helmets within India’s motorcycling and touring communities.[caption id=attachment_2486999 align=alignleft width=200] Rajat Bhandari [/caption]Commenting on the association, Rajat Bhandari, Managing Director, Neo Kavach, said, “Neo Kavach was created to address a critical gap in rider safety on Indian roads. As we build awareness around wearable airbag technology, we were looking for a communications partner that understands how to introduce a completely new category, educate audiences, and build long-term credibility. CPR Global’s experience in shaping narratives for innovation-led brands made them a natural choice as we enter our next phase of growth.” [caption id=attachment_2487000 align=alignright width=150] Chaitali Pishay Roy [/caption] Chaitali Pishay Roy, Founder of CPR Global, added, “We’re excited to partner with brands that are fundamentally rethinking how things are done. Neo Kavach is bringing a level of rider-safety innovation to India that has largely existed only in global markets until now. Representing India’s first and only wearable airbag technology brand for riders — and working with it from its launch phase through to scale — is a rare opportunity. We’re truly thrilled to be part of this journey and to help build a category-defining brand from India.” CPR Global is a strategic communications consultancy specialising in brand narratives, strategic storytelling, stakeholder engagement, media relations, influencer marketing, and personal branding. The firm works with leading brands across AI, technology, healthcare, healthcare technology, venture capital, retail, and D2C sectors, including KisanKraft and str8bat, helping organisations build visibility, credibility, and long-term reputation.

26 C