SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனவரி 9 வரை விளக்கமறியலில்!

“குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவால் தமக்கு வழங்கப்பட்டதாக, மறைந்த பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘மாகந்துரே மதுஷின்’ நெருங்கிய… The post முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனவரி 9 வரை விளக்கமறியலில்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Dec 2025 5:28 pm

டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டதுப்பாக்கிகளின் 19 துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

பதிவு 28 Dec 2025 4:59 pm

09ஆம் திகதி வரையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். அதனை அடுத்து டக்ளஸ் தேவானந்தவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார். அதனை அடுத்து அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாலை மீண்டும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

பதிவு 28 Dec 2025 4:56 pm

திமுக மாநில மகளிர் மாநாடு: திருப்பூரில் களைகட்டும் கருப்பு-சிவப்பு படை- ஏற்பாடுகள் என்னென்ன?

திருப்பூரில் நாளை திமுக மாநில மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கருப்பு-சிவப்பு மயமாக காணப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் என்னென்ன என்று காண்போம்.

சமயம் 28 Dec 2025 4:50 pm

யாழில் நீண்ட காலமாக பெண் அரங்கேற்றிய மோசமான செயல் அம்பலம் ; அதிர வைத்த பொலிஸார்

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் […]

அதிரடி 28 Dec 2025 4:38 pm

'நிறைவான படம், திரையரங்குகள் நிறையட்டும்!' - 'சிறை'படத்துக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த 'சிறை' திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சிறை படத்தில்... 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் 'சிறை' படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும். மாரி செல்வராஜ் அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது. தனது முதல் படத்திலேயே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்‌ஷய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன் . இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும் என்று பாராட்டியிருக்கிறார்.

விகடன் 28 Dec 2025 4:37 pm

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்! –வெனிசுவேலா அதிபர் அறிவிப்பு!

வெனிசுவேலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அமெரிக்காவுடன், பேச்சுவார்த்தைக்குத் தயார் என அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். போதைப் பொருள் பயங்கரவாதத்தைத் தடுப்பதாகக் குறிப்பிட்டு, கடந்த சில மாதங்களாக வெனிசுவேலா நாட்டுக்கு எதிராக கடல் மற்றும் வான்வழி ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகள் மூலம் கரீபியன் மற்றும் பசிபிக் கடல்பகுதியில், போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி இதுவரை 30-க்கும் அதிகமான கப்பல்களின் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளன. இதனால், […]

அதிரடி 28 Dec 2025 4:30 pm

ஜனவரி 9 வரை டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் கட்டளையிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு தனிப்பட்ட பாதுகாப்பிற்காக டக்ளஸ் தேவானந்தாவுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் வழங்கிய துப்பாக்கி ஒன்று மாகந்துர மதுஸ் என்ற பாதாள உலக குழு தலைவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, டக்ளஸ் தேவானந்தா கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு

புதினப்பலகை 28 Dec 2025 4:26 pm

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் […]

அதிரடி 28 Dec 2025 4:26 pm

விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்!

TN Virasat Craft Person Loan Scheme: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களின் தொழில் மேம்பாட்டுக்காக ரூ.10 லட்சம் குறைந்த வட்டி விகிதத்தில் தொழில் கடன் வழங்கும் தமிழக அரசின் விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 28 Dec 2025 4:06 pm

சம்ரித்தி லாட்டரியில் ரூ.1 கோடியை அள்ளிய லக்கி எண் இதுவா? வெளியான முழு பரிசுத்தொகை பட்டியல்

கேரளாவின் சம்ரித்தி லாட்டரி முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் ரூ.1 கோடியை தட்டி தூக்கிய லக்கி எண் என்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 28 Dec 2025 4:05 pm

மருத்துவமனையில் தவெக அஜிதாவுக்கு என்ன ஆனது? மீண்டும் ஐசியூவுக்கு மாற்றம் ஏன்? பதட்டத்தில் ஆதரவாளர்கள்!

தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

சமயம் 28 Dec 2025 3:55 pm

அதே பேட்டர்ன், அடுத்த வாரம் சபரி, அரோரா தான் வெளியேற்றம்: அடித்துச் சொல்லும் பார்வையாளர்கள்

பிக் பாஸ் போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி ஒரு கேள்வி கேட்க ஆளாளுக்கு தங்கள் மனதில் இருந்ததை தெரிவித்துள்ளனர். அதை பார்த்தவர்களோ சபரிக்கும், அரோராவுக்கும் ஆப்பு ரெடி என்கிறார்கள்.

சமயம் 28 Dec 2025 3:54 pm

சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️

தற்போதைய அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் உட்பட 6 பேருக்கு எதிராக,… The post சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Dec 2025 3:41 pm

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

தைவான் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் இரவு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. […]

அதிரடி 28 Dec 2025 3:30 pm

எஸ்ஐஆர் டூ காந்தி பெயர் மாற்றம் வரை... மதிமுக நிறைவேற்ற அந்த 7 தீர்மானங்கள் என்னென்ன?

மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், திமுக அரசுக்கு ஆதரவாகவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை என்னென்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 28 Dec 2025 3:16 pm

அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி

சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் நாளை ( டிச. 29) நடைபெறவுள்ளது. ராமதாஸ் இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே. மணி, 'அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியிருக்கிறார். அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் வலிமையான மற்றும் தவிர்க்க முடியாத கட்சியாகவும் இருந்த பாமகவை திட்டமிட்டு, சூழ்ச்சியால், அபகரிப்பதற்கும் பிளவுபடுத்துவதற்கும் அன்புமணி மேற்கொண்ட நடவடிக்கையால், ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் அடைந்தார். அன்புமணியின் தூண்டுதலால், சிலர் ராமதாஸின் மனம் புண்படும்படியாகப் பேசினர். தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரமில்லாத கட்சியாக மாறிவிட்டது. ஜி.கே.மணி (File Photo) இந்த நிலையில்தான், மீண்டும் அங்கீகாரமுள்ள கட்சியாக வளர்த்தெடுப்பேன் என்று புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான், ராமதாஸ் பின்னே வலிமையான கட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அன்புமணி பின்னால் விவரம் அறியாமல் சென்ற நிர்வாகிகள் மீண்டும் திரும்பி வருவார்கள். ராமதாஸ் தலைமையில் பாமக அமைக்கும் கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். பாமகவுக்கு அன்புமணி வர வேண்டுமென அனைவரும் விரும்பினோம். சூழ்ச்சியால் பிரிந்து சென்றனர் என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து பேசிய பாமக எம்.எல். ஏ அருள், ராமதாஸுடன் கூட்டணிக்காக 3 கட்சிகள் அழைப்பு விடுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 3 கூட்டணிகளுமே அன்புமணியை நம்பத் தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 28 Dec 2025 2:56 pm

விஜய் பற்றி அப்படி மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ், ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நாயகன் விஜய் பாட்டு பாடியதுடன், டான்ஸ் ஆடிய வீடியோவை ஷேர் செய்யும் ரசிகர்கள் எல்லாம் ஒரே விஷயத்தை சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது.

சமயம் 28 Dec 2025 2:55 pm

காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த'வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வைப் புகழ்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி பேசுபொருளாகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு அருகில் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ``பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அடிமட்டத் தொண்டர்களை முதலமைச்சர் மற்றும் பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு வளர அனுமதிக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார். திக்விஜய் சிங் அதற்கு அடுத்தப் பதிவுகளில், ``நான் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின் தீவிர எதிர்ப்பாளன் என விளக்கமளித்த போதிலும், அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டேக் செய்து, ``காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தங்களும் அதிகாரப் பரவலாக்கமும் தேவை என்றப் பதிவும் விவாதத்தை சூடுபடுத்தியது. இதற்கிடையில், திக்விஜய் சிங், ``காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நம்பவில்லை. காந்தியின் கொலையாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ள எங்களுக்கு எதுவும் இல்லை. நான் காங்கிரஸில் இருந்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடியுள்ளேன். நான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க சித்தாந்தத்தை எதிர்க்கிறேன். நான் அவர்களின் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானவன் எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவின் உறுப்பினரான பவன் கேரா, ``கோட்சேயின் ஆதரவாளர்கள் காந்தியின் ஆதரவாளர்களாக இருக்க முடியாது என்றார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,``ஆர்.எஸ்.எஸ் என்பது வெறுப்பால் ஆன ஒரு அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் வெறுப்பைப் பரப்புகிறது. அல்-கொய்தாவும் வெறுப்பால் ஆன ஒரு அமைப்புதான். அல்-கொய்தாவும் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. ஆர்.எஸ்.எஸ்-இடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை. அல்-கொய்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை என்றார். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டணியைப் போல காங்கிரஸ் ஒருபோதும் மத அரசியல் செய்வதில்லை. எங்களுக்கு அதிகாரம் குறைவாக இருக்கலாம், ஆனால் எங்கள் முதுகெலும்பு பலவீனமானதல்ல. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மதத்தின் பெயரால் வாக்குகள் கேட்பதில்லை. நாங்கள் மதத்தை நம்புகிறோம், ஆனால் சிலர் மதத்தை அரசியலாக மாற்றிவிட்டனர். பா.ஜ.க-விடம் அதிகாரம் இருக்கிறது, ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஒரு காலத்தில் மூவர்ணக் கொடியையும் வந்தே மாதரத்தையும் கூட ஏற்க மறுத்தவர்கள், இப்போது மக்களின் உரிமைகளை நசுக்குகிறார்கள். நாம் உறுதியாக நின்று இத்தகைய முயற்சிகளை எதிர்க்க வேண்டும், என்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் பைலட்,`` காங்கிரஸ் கட்சிக்குள் எந்த சிக்கலும் இல்லை. இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சியை வழங்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கிறது. நாட்டிற்கு ஒரு வலுவான எதிர்க்கட்சி தேவை. காங்கிரஸுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். அவர்கள் சொல்ல வேண்டியதைச் சொன்னார்கள். கார்கே மற்றும் ராகுலை வலுப்படுத்துவதே எங்கள் ஒரே குறிக்கோள், எனக் கூறினார். சச்சின் பைலட் மற்றொரு மூத்த தலைவரான சுப்ரியா ஸ்ரீநேட், ```ஆர்.எஸ்.எஸ்-ஸிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள்தான் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தியைக் கொன்ற நாதூராம் கோட்சேயின் அமைப்பிடமிருந்து நாங்கள் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றார். மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்

விகடன் 28 Dec 2025 2:54 pm

நெடுந்தீவு கடற்பரப்பில்   3 தமிழக மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை… The post நெடுந்தீவு கடற்பரப்பில் 3 தமிழக மீனவர்கள் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Dec 2025 2:33 pm

19-வயதில் 9 பேருக்கு டிமிக்கி…அத்தையுடன் சேர்ந்து மோசடி செய்த கல்யாண ராணி கைது

ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் நகர் கர்ஜி தெருவைச் சேர்ந்த இளம்பெண் முத்திரெட்டி வாணி (19). இவருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாகுளத்தில் உள்ள துர்கா தேவி கோவிலில் திருமணம் நடந்தது.பின்னர் மணமகன் வாணியை தன் சொந்த ஊருக்கு ரெயிலில் அழைத்துச் சென்றார். விசாகப்பட்டினம் ரெயில் நிலையம் வந்ததும், கழிவறைக்கு செல்வதாக கூறி ரெயிலில் இருந்து இறங்கிய வாணி மீண்டும் அந்த ரெயிலில் ஏறவில்லை. இதையடுத்து மனைவியை காணாததால் […]

அதிரடி 28 Dec 2025 2:30 pm

2025 : மாறியவை? மாறாதவை?நிலாந்தன்.

2025 : மாறியவை? மாறாதவை?நிலாந்தன். இந்த ஆண்டு பிறந்த போது ஒரு புதிய அரசாங்கம், புதிய வாக்குறுதிகளோடும் புதிய… The post 2025 : மாறியவை? மாறாதவை?நிலாந்தன். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Dec 2025 2:23 pm

   மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் –பெண் உட்பட நால்வர் கைது:

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஒரு பெண்ணையும், அவருடன் தொடர்புடைய… The post மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Dec 2025 2:04 pm

சொத்துப் பதிவில் வரும் பெரிய மாற்றம்.. தமிழக பதிவுத்துறை நடவடிக்கை!

சொத்து பரிவர்த்தனைகளில் மோசடிகள் நடப்பதைத் தடுக்க தமிழக பதிவுத் துறை முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

சமயம் 28 Dec 2025 1:57 pm

✈️ அமெரிக்காவில்  1,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் வீடு திரும்பும் இந்த முக்கியமான நேரத்தில், அமெரிக்காவின் வான்வழிப் போக்குவரத்து பெரும் சவால்களைச்… The post ✈️ அமெரிக்காவில் 1,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Dec 2025 1:55 pm

100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா? - கனிமொழி கேள்வி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கனிமொழி தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமை வகிக்க, கனிமொழி எம்.பி, அமைச்சர் பி.மூர்த்தி, தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, இப்பகுதியில் இருக்கும் பெண்கள், சகோதரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும் என அமைச்சர் மூர்த்தி சொன்னார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பெண்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது திமுக, பெண்களுக்கு சொத்துரிமை உள்ளது என்பதை செய்து காட்டியது திராவிட மாடல் அரசு, இன்று அதிகமான பெண்களுக்கு வேலை வாய்பு கிடைக்கிறது. ஒரு காலத்தில் பெண் குழந்தை வேண்டாம் என நினைத்தார்கள், பின்பு பெண்கள் படித்தால் என்ன ஆகப்போகிறது என வீட்டிலேயே வைத்திருந்தார்கள். 10 ஆம் வகுப்பு படித்தால் உதவித்தொகை என கலைஞர் அறிவித்தார். அதன் பின்பு பெண்கள் படித்தார்கள், கூடுதலாக 12 ஆம் வகுப்புக்கும் உதவிகள் அறிவிக்கப்பட்டது. நலத்திட்ட விழாவில் இன்று கல்லூரிக்கு சென்று படிக்கும் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், பேருந்திலும் இலவசப் பயணம் என திட்டங்களை கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி என்பது பெருமை. நாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது அன்றைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது 100 நாள் வேலை திட்டம். பாஜக ஆட்சிக்கு வந்த பின் பெண்களுக்கும் வேலை கொடுப்பதில்லை. இன்று மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் பெயரை எடுத்து விட்டார்கள். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வந்த திட்டத்தை இன்று அழிக்க நினைக்கிறார்கள். நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என கேட்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை அழிக்க கொண்டு வரப்பட்ட மசோதாவைப் பற்றி தெரிவாக பதில் சொல்லத் தெரியுமா? எல்லாவற்றையும் மாற்றிடுவவேன் என்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும் சொல்கிறார்கள். ஆனால், கிராமப்புற சகோதரிகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு திட்டத்தை நிறுத்தும் மசோதாவை பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை. இன்று மதக் கலவரத்தை தூண்டி வருகிறார்கள், 100 நாள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு வேலை இல்லாமல் போவதில் அதிகமாக இந்துக்கள்தான் பாதிக்கப்பட போகிறார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டும், அப்போதுதான் இனத்தின் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். 2026-ல் வெற்றியை நிலை நாட்டுவீர்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

விகடன் 28 Dec 2025 1:50 pm

விமான விபத்து! பலியான லிபியா தலைமைத் தளபதிக்கு துருக்கி ராணுவம் மரியாதை!

துருக்கியில், விமான விபத்தில் பலியான லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 5 அதிகாரிகளுக்கு துருக்கி அரசு ராணுவ மரியாதை அளித்துள்ளது. லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது அலி அஹமது அல்- ஹதாத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் துருக்கி அரசுடன் உயர்மட்ட பேச்சுவாரத்தை மேற்கொள்ள தலைநகர் அங்காராவுக்குச் சென்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, துருக்கி பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருடன் நடைபெற்ற பேச்சுவாரத்தைகளுக்குப் பிறகு அங்காராவில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த டிச.23 அன்று இரவு […]

அதிரடி 28 Dec 2025 1:30 pm

BB Tamil 9: எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா- ஆக்ரோசமான விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 83 நாள்களைக் கடந்துவிட்டது. நேற்று( டிச.27) நடந்த எவிக்ஷனில் அமித் வெளியேறிருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரமிற்கும், திவ்யாவிற்கும் சண்டை நடக்கிறது. திவ்யா விக்ரமுக்கு ஒரு விஷயம் நடந்தா அது ஹர்ட் ... ஆனால் எனக்கு நடந்தா அது எமோஷனல் இல்ல என திவ்யா சொல்ல உங்க கால்ல கூட விழுகிறேன் திவ்யா என விக்ரம் கூறுகிறார். அதற்கு திவ்யா இந்த டிராமாலாம் வேணாம் விக்ரம். நீங்க உங்க மனைவி பேசினதை இங்க பேசலாம். ஆனா நாங்க... என திவ்யா பேசி முடிப்பதற்குள் எதுக்கு ஏன் மனைவிய இங்க இழுக்குறீங்க என விக்ரம் ஆக்ரோசமாகிறார்.

விகடன் 28 Dec 2025 1:16 pm

'தாயுள்ளம் கொண்ட ஆண்மகன் கேப்டன்' - ஆர்.கே.செல்வமணி உருக்கம்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். செல்வமணி அந்தவகையில் விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். திரைப்பட தொழிலாளருக்கு வாழ்க்கை முழுக்க தொண்டாற்றியவர் விஜயகாந்த் சார். படப்பிடிப்பு தளங்களில் எல்லாருக்கும் என்ன உணவோ ...அதுதான் அங்கு வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரோட கிட்டத்தட்ட 30 வருடம் பயணம் செய்திருக்கிறோம். அவரை மாதிரி ஒரு சிறந்த மனிதரைப் பார்த்ததே இல்லை. அவர் தாயுள்ளம் கொண்ட ஒரு ஆண் மகன். ஆர்.கே.செல்வமணி பார்க்க கரடு முரடாகத் தான் தெரிவார். ஆனால் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் பழகக்கூடியவர். இன்று திரைப்படத் துறையில் 50 பேர் இயக்குநராகவும், 75 பேர் தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் சார் தான். 100 ஆண்டுகளைக் கடந்தும் கூட அவர் புகழ் நிலைத்து நிற்கும் என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 28 Dec 2025 12:58 pm

வெளிநாட்டு தம்பதிக்கு இலங்கையில் நேர்ந்த பெரும் அசம்பாவிதம்

ஹிக்கடுவை – நரிகமவில் நேற்று (27) கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த தம்பதியினரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 20 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று, அஹுங்கல்லவில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட ரரஷ்ய சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்க்கட்டுள்ளார். இந்த விபத்தில் சிக்கியவர் 39 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதிரடி 28 Dec 2025 12:15 pm

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

பதிவு 28 Dec 2025 12:08 pm

விஜயவாடா – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே: 6 வழிச் சாலையில் 6 மணி நேரம் கட்… 2026ல் பெரிய சர்ப்ரைஸ் வெயிட்டிங்!

ஆந்திரா – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் அதிவேக எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன் தற்போதைய நிலை, திறப்பு விழா உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சமயம் 28 Dec 2025 12:03 pm

Vijay: சினிமா அவரை மிஸ் பண்ணும்- ராஜபக்சே மகன் வாழ்த்து

விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். Vijay - Jana Nayagan Audio Launch விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'ஜனநாயகன்' படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (டிச. 27) மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். Vijay - Jana Nayagan Audio Launch அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், திரைத்துறையில் விஜயுடைய ஆற்றலை அனைவரும் அறிவோம். சினிமா பயணத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். சினிமா அவரை மிஸ் பண்ணும். எதிர்வரும் பயணத்தில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 28 Dec 2025 12:01 pm

விஜயகாந்த்: 2-ம் ஆண்டு நினைவுநாள்; தலைவர்களின் நினைவுக் குறிப்புகள்!

தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தே.மு.தி.க-வினர் குருபூஜையாக இந்த தினத்தை அனுசரித்து வருகின்றனர். தேமுதிக தொண்டர்கள் இருமுடி சுமந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதேபோல் கோடம்பாக்கத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பி-ரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ வேலு உள்ளிட்டோரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் அதைத் தொடர்ந்து, முதலவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து தங்கள் சமுக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். பாமக தலைவர் அன்புமணி,``விஜயகாந்த் நினைவு நாள்: ஆண்டுகள் கடந்தாலும் மனிதநேயத்திற்காக மக்களால் நினைவு கூறப்படுவார்! தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நான் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். தமிழக அரசியலில் மிகவும் வித்தியாசமான மனிதர். குறுகிய காலமே ஆனாலும் அவருடன் பழகிய நாள்கள் மறக்க முடியாதவை. மனித நேயத்தின் சிகரமாக திகழ்ந்தவர். ஆண்டுகள் கடந்தாலும் மனித நேயத்திற்காக என்றென்றும் தமிழ்நாட்டு மக்களால் அவர் நினைவுகூறப்படுவார். எனத் தெரிவித்திருக்கிறார். விஜயகாந்த் - ஸ்டாலின் அதைத் தொடர்ந்து, தவெக கொள்கைப்பரப்புச் செயலாளர் அருண்ராஜ்,``கருப்பு எம்.ஜி.ஆர் என்று மக்களால் கொண்டாடப்பட்டவர்... அரசியல் வியாபாரிகள் மத்தியில் 'அசல்' தங்கமாய் வாழ்ந்தவர்! தவறு கண்டால் பொங்கும் 'கோபம்'... பசி என்று வந்தால் கொடுக்கும் 'குணம்'... அது தான் அவரின் தனித்துவம்! தோழமைக்கு தோழமையாக... துணிச்சலுக்கு துணிச்சலாக... வாழ்ந்து மறைந்த மாமனிதர்!! கள்ளம் கபடமற்ற அந்த வெள்ளை உள்ளத்திற்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். எம்.பி. கனிமொழி, ``எளிமை குன்றாத மனிதராக, திரைத்துறையிலும் அரசியலிலும் துணிவோடு செயல்பட்டவர், தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் அன்பிற்கு பாத்திரமான அவர், எல்லோர் மீதும் அன்புகாட்டும் பண்பாளராக வாழ்ந்தவர். அவரது நினைவுநாளான இன்று, அவரது மக்கள் பணிகளை நினைவு கூர்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார். கனிமொழி எம்.பி பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ``இன்று மரியாதைக்குரிய அண்ணன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாள். அரசியல் நிகழ்வாக இருக்கட்டும் தனிப்பட்ட நிகழ்ச்சியாக இருக்கட்டும் எப்பொழுதும் என்னை வாய் நிறைய தங்கச்சி என்று அழைப்பார்... தன் கட்சி மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாரோ அதேபோல இந்த தங்கச்சி மீதும் பாசம் வைத்திருந்தார். அவர் நினைவு நாளில் அவர் நினைவை போற்றுகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அமமுக தலைவர் டிடிவி தினகரன், ``தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நினைவு தினமான இன்று அவர் ஆற்றிய நற்பணிகளை  நினைவில் வைத்துப் போற்றுவோம். எனத் தெரிவித்திருக்கிறார். Action sequence-ல Vijayakanth மாதிரி இருந்தாரு! - Ponram | Sarathkumar | Kombuseevi Interview

விகடன் 28 Dec 2025 11:58 am

BB Tamil 9 Day 83: அமித் எவிக்ஷன் - பாரு, சான்ட்ராவின் நட்புதான் காரணமா?

‘டேமேஜ் கண்ட்ரோல்’ செய்கிறேன் பேர்வழி என்று மேலும் தன்னை எக்ஸ்போஸ் செய்து கொள்வதில் பாரு திறமைசாலியாக இருக்கிறார். இந்த எபிசோடில் நிகழ்ந்ததும் அதுவே. பாரு வேலை செய்யாமல் டபாய்க்கிறார் என்பது ஐநா சபை வரைக்கும் தெரிந்த விஷயம். என்றாலும் அதை பூசி மெழுகி ஏன் இன்னமும் பெயரை கூடுதலாக கெடுத்துக் கொள்ள வேண்டும்?! BB Tamil 9 Day 83 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 83 ‘இந்தக் கட்டுரைத் தொடரில் பெரும்பாலும் பாருவைப் பற்றித்தான் இருக்கிறது. ஏன் தலைப்பிலும் கூட பாருவின் பெயர்தான் அதிகமாக வருகிறது, இப்போதாவது புரிகிறதா, அவர்தான் இந்த சீசனின் முக்கியமான போட்டியாளர்.. அவரை மையமாக வைத்துதான் இந்த சீசன் நடக்கிறது. அவரை வைத்துதான் பிக் பாஸ் விமர்சனங்களும் நடக்கின்றன என்பது தெரிகிறதா?’ என்று பாருவின் ரசிகர்கள் கேட்கிறார்கள். யெஸ். அது உண்மைதான். இந்த சீசனின் கன்டென்ட் அட்சயப்பாத்திரம் என்றால் அது பாருதான். அவரால்தான் வீட்டில் நிறைய கலகங்கள் நடக்கின்றன. காமிராக்களுக்கு வயிறார தீனி கிடைக்கிறது என்பதில் மறுப்பே இல்லை. ஆனால் பாருங்கள் நண்பர்களே.. என்னதான் ஒரு திரைப்படத்தில் வில்லனின் பாத்திரம் வலிமையாக இருந்தாலும், அந்த கேரக்டரை நாம் நிறைய ரசித்தாலும் இறுதியில் ஹீரோதான் வெல்வான். வில்லன் ஜெயிப்பதாக கதைகள் எழுதப்படாது. எழுதப்படவும் கூடாது. ‘பாருதான் டைட்டில் வின்னர்’ என்று ஒருவர் ஆசைப்படுகிறார் என்றால் உலகத்தில் அநீதி வெல்ல வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்றுதான் பொருள். பாருவின் நெகட்டிவ் ஸ்ட்ராட்டஜி ரசிக்குபடி இருக்கிறதா? பிக் பாஸ் ஆட்டம் என்பதின் அடிப்படையே, ஓர் அடைபட்ட சூழலில் அந்நிய மனிதர்களை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றி பெறுவதுதான். கோபம், ஆத்திரம், வன்மம், புறணி, பழிவாங்கல் போன்ற மனிதர்கள் வெற்றி பெற்றால் அவை தவறான முன்னுதாரணமாக ஆகி விடும். நெகட்டிவிட்டி என்பது தூர நின்று பார்ப்பதற்கு ஜாலியான வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நம் மீதே அது பாயும் போதுதான் வலியைத் தரும். தெருவில் சண்டை நடக்கும் போது ஆவலாகச் சென்று வேடிக்கை பார்ப்பது மனித இயல்பு. ஆனால் அத்தகைய தெருச்சண்டையிலேயே ஒருவர் காலத்தைக் கழிப்பார் என்றால் அத்தகைய பொறுக்கித்தனத்தை நாம் மதிப்போமா? BB Tamil 9 Day 83 பாருவிடம் அடிப்படையில் ஒரு திறமை இருக்கிறது. ஆனால் அதை அவர் பெரும்பாலும் கவன ஈர்ப்பிற்காகவும் கலகத்தை உருவாக்கி தன்னை முன்னிறுத்திக் கொள்வதிலும் புறணி பேசுவதிலும்தான் செலவழிக்கிறார். ஒரு நல்ல சமூகம் இத்தகைய மனிதர்களை ரசிப்பதில்லை. நெகட்டிவிட்டிதான் மனிதர்களை உடனே கவரும் விஷயம் என்பதால் பிக் பாஸ் டீமும் பாரு சம்பந்தப்பட்ட காட்சிகளையே மெயின் எபிசோடில் அதிகம் சேர்க்கிறது. பிக் பாஸ் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வெளியாகும் காட்சித் துண்டுகளைக் கவனித்தால் பாருவைத் தாண்டி அந்த வீட்டில் எத்தனையோ சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் அவையெல்லாம் மெயின் எபிசோடில் வருவதில்லை. அதனால்தான் பாருவே இந்த சீசன் முழுமையும் நிரம்பியிருப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. மட்டுமல்லாமல் எந்தவொரு உரையாடலிலும் தலையிட்டு உரத்த குரலில் கத்தி மற்றவர்களை விடவும் தன்னை முன்னே காட்டிக் கொள்வதில் பாரு விற்பன்னராக இருக்கிறார். ரகளையான எக்ஸ்பிரஷன்களை வாரி வழங்கும் பாரு பாருவின் வழக்கமான கல்யாணக்குணங்களைத் தாண்டி அவரிடம் தன்னிச்சையாக படிந்துள்ள ஒரு விசித்திரமான, சுவாரசியமான குணத்தைக் காணமுடிகிறது. அவரால் தன் உணர்ச்சிகளை மறைத்து வைத்துக்கொள்ளவே முடிவதில்லை. ஒரு குழந்தை மாதிரி தன் உணர்ச்சிகளை அப்படியே முகத்தில் வெளிப்படுத்திவிடுகிறார். குறிப்பாக வாரஇறுதி எபிசோடுகளில் நீங்கள் இதை நன்றாக கவனிக்க முடியும். தன்னைப் பற்றிய துளி விமர்சனம் வந்தாலும் பாருவின் முகம் கோணுகிறது. அப்படி சொல்பவரைப் பார்த்து முகம் சுளிக்கிறார். உதட்டைக் கோணுகிறார். கண்களால் வெறுப்பைக் காட்டுகிறார். இப்படியாக விதம் விதமான எக்ஸ்பிரஷன்களையும் உடல்மொழியையும் தந்து கொண்டேயிருக்கிறார். விஜய் சேதுபதி பல முறை கண்டித்தாலும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடிவதில்லை. இதை குழந்தைத்தனம் என்பதா, முதிர்ச்சியற்ற தன்மை என்பதா என்று தெரியவில்லை. ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்கிற பழமொழிக்கு சரியான உதாரணம் பாரு. ஆனால் இவரைப் போன்றவர்களை கையாள்வது எளிது. கண்ணாடி போல உடனுக்குடன் உள்ளிருக்கும் எண்ணங்கள் வெளியே பிரதிபலித்து விடுவதால் இவர் என்ன செய்வார் என்பது எதிராளிக்கு நன்றாக தெரிந்து விடும். விக்ரம் பாருவை அநாயசமாக கையாளும் ரகசியம் இதுதான். மாறாக இறுக்கமான முகத்துடன், உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் இருப்பவர்களைக் கையாள்வது சிரமம். இந்த நோக்கில் பாருவை விடவும் ரோபோ முகத்துடன் இருக்கும் சான்ட்ராவைக் கையாள்வது சிரமம். பாருவை விடவும் இவர்கள் ஆபத்தானவர்கள் என்று தோன்றுகிறது. BB Tamil 9 Day 83 பாரு - கம்மு சண்டை - தலைவன் தலைவி படத்தின் மினி வெர்ஷன்? மேடைக்கு வந்த விஜய் சேதுபதி, ‘உறவுகளின் அருமை பிரிவின் போதுதான் தெரிகிறது.. இல்லையா?” என்று ஃபேமிலி டாஸ்க்கைப் பற்றி சொல்லிவிட்டு “ஆனாலும் இவங்க மாறினதுபோல தெரியல. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்ப்போம்” என்றார். அந்த வெள்ளிக்கிழமை நிகழ்வு முழுக்க பாரு - கம்ருதீன் சண்டையாகவே இருந்தது. விசே, நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படத்தின் மினி வெர்ஷன் போலவே இருந்தது. அந்தப் படத்திலாவது அவர்களுக்குள் இருக்கும் ஆதாரமான அன்புதான், சண்டையாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால் பாரு -கம்மு ரொமான்ஸில் டாக்ஸிக்தனம்தான் வெளிப்படுகிறது. பாருவின் செயற்பாடுகளில்தான் நச்சுத்தன்மை இருக்கிறது என்றால், அவரது ரொமான்ஸிலும் டாக்ஸிக்த்தான் இருக்கிறது. புலி பாய்ந்து பதுங்குவது போல அடங்குவது போல பாவனை செய்யும் கம்ருதீன் மீண்டும் திடீரென பாயத் தொடங்குகிறார். மற்றவர்கள் அனைவரையும் தன் அடாவடித்தனத்தால் ஜெயிக்க முயலும் பாருவோ, கம்முவின் ரொமான்ஸ் முன்னால் அப்படியே பம்முகிறார். விடாக் கொண்டன், கொடாக் கொண்டன் மாதிரி இருவருமே தங்களின் அகங்காரமும் சுயநலமும் மட்டுமே முக்கியம் என்பது மாதிரி மோதுகிறார்கள். ஆனால் உண்மையான காதலின் அடையாளமே, விட்டுத்தருதல்தான். காதலையே இழந்தால் கூட தன்னால் நேசிக்கப்பட்டவளுக்கு சிறு துன்பம் கூட நிகழக்கூடாது என்று நினைப்பதுதான் உண்மையான காதல். மாறாக ஒரு சிறிய பிரேக் அப்பில் கூட “உன்னை செய்யறேன் பாரு.. “ என்று வன்மத்தைக் கக்குவதின் பெயர் நிச்சயம் காதல் அல்ல. பாரு -கம்மு - காதலா அல்லது சர்வைவல் நாடகமா? பாருவிற்கும் கம்முவிற்கும் இடையில் நடக்கும் காரசாரமான உரையாடல்களைப் பார்க்கும் போது ‘இது உருப்படாத ரொமான்ஸ்’ என்பது நமக்கே உறைக்கும்போது அவர்களுக்கு தெரியாதா என்ன? பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இந்த லவ் கன்டென்ட்டை அவர்கள் இழுபறியாகக்கொண்டு செல்கிறார்களா? இந்த ஷோ முடிந்தவுடன் பாரு - கம்மு ரொமான்ஸூம் புட்டுக் கொண்டு விடும் என்பது நம்மை விடவும் அவர்களுக்கு நன்றாக தெரியும். என்றாலும் ஏன் இந்த மோசமான டிராமா? பிக் பாஸ் டீமும் இதையே காட்டி வெறுப்பேற்றுகிறது. ஏற்கெனவே சொன்னது மாதிரி, உணர்ச்சிகளைக் கண்ணாடிபோல வெளிப்படுத்தும் பாருவை நம்பி விடலாம். ஆனால் திருந்தியது போல் நடித்து, கோபம் வந்து விட்டால் அனைத்து வன்மங்களையும் கக்கும் கம்ருதீன் ஆபத்தானவராக தெரிகிறார். அது பாருவாக இருந்தாலும் சரி, அரோராவாக இருந்தாலும் சரி, தக்க சமயத்தில் போட்டுக் கொடுத்து பழி தீர்த்துக் கொள்கிறார். இருவரையுமே அவர் நேசிக்கிறார் என்றால், இந்த வன்மமா அன்பின் அடையாளம்?! “நீ வேலையே பார்க்கறதில்லை. வில்லனிக் பெர்சன், அசிங்கமா கேப்பேன், பெரிய இவளா நீ.. என்னை மட்டும் தப்பா காட்ட கேம் ஆடறே.. நீ சேஃப் கேம் ஆட டிரை பண்றே.. இனிமே நாம தனியா ஆடலாம். உன் சகவாசமே வேணாம். மாத்தி மாத்தி பேசற. என்னை வெளியே அனுப்ப டிரை பண்றே.. உனக்காக யாரை வேண்டுமானலும் போட்டுத் தள்ள தயங்க மாட்டே” என்றெல்லாம் பாருவின் மீது கடுமையான புகார்களை துப்பிக் கொண்டேயிருந்தார் கம்ருதீன். BB Tamil 9 Day 83 ‘பாரு போகக்கூடாது’ - அந்தர் பல்டியத்த கம்ருதீன் இதே விஷயங்களை விசாரணை நாள் சபையிலும் திறமையாக பதிவு செய்தார் கம்ருதீன். ஆனால் எவிக்ஷன் சமயத்தில் “எந்த ரெண்டு பேரை நீங்க காப்பாத்தணும்ன்னு நெனக்கறீங்க?” என்று விசே கேட்ட போது ‘பாரு’ என்று என்று சொன்னதை எந்த விதத்தில் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. விக்ரம் உட்பட அனைவருமே சிரிப்புடன் தலையில் கை வைத்துக்கொண்டனர். போலவே பாருவும் கம்முவிற்கு தக்க பதிலடி தந்து புகார்களை சபையில் பதிவு செய்து விட்டு, கம்ருதீன் தன் பெயரைச் சொன்னவுடன் இளித்துக் கொண்டே பக்கத்தில் சென்று உரசி அமர்ந்து கொண்டார். இதையும் எப்படி புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. இருவருமே சிறந்த நடிகர்களாக வருவார்கள் என்பது மட்டும் தெரிகிறது. இந்த எபிசோடில் பாருவை பல முறை பங்கம் செய்து கொண்டேயிருந்தார் விசே. “ஒரு பைக்கை விக்க முடியலை. ஆனா என்னை கன்வின்ஸ் செய்ய டிரை பண்றீங்க. அது செல்லுபடியாகாது. அப்படியெல்லாம் முறைக்காதீங்க.. பாரு.. “ என்று ஆரம்பமே களைகட்டியது. வழக்கம் போல் ‘சார்.. என்ன சார்..நீங்க?” என்று சிணுங்கினார் பாரு. அவருடைய மைண்ட் வாய்ஸ் அப்போது ஸ்பீக்கரில் ஒலித்திருந்தால், விசே அதிர்ச்சியாகி இருப்பார். ‘எனக்கு யாரும் வரமாட்டாங்க’ என்று கலங்கிய அரோவிற்கு, இந்தச் சமயத்தில் விசே ஆறுதல் சொன்னது சிறப்பான விஷயம். அவருடைய குடும்பத்தில் இருந்து ஒருவராவது வந்திருக்கலாம். ‘போட்டியாளர்களுக்குப் பதிலாக அவர்களின் விருந்தினர்களே உள்ளே வந்திருக்கலாம்’ என்கிற கேள்விக்கு, “வினோத்திற்குப் பதில் பாக்யா வந்திருக்கலாம். அவ்ளோ தெளிவா இருக்காங்க” என்றார் சான்ட்ரா. “பாருவின் அம்மா வந்திருக்கலாம்” என்றார் சபரி. “ஸ்ரீரஞ்சனி வந்திருக்கலாம்” என்று திவ்யா சொன்னது உண்மை. டேமேஜ் கண்ட்ரோலில் ஈடுபட்டிருக்கிறாரா, பார்வதி? “அமித்தோட பொண்ணு வேதா வந்திருக்கலாம். குழந்தையா இருந்தாலும் பயங்கர மூளை” என்று பாராட்டினார் கம்மு. “அவங்க பார்வதிக்கு ஒரு பட்டம் கொடுத்தாங்களே.. அது என்ன?” என்று விசே குறும்பாக போட்டுக் கொடுக்க “சீட்டிங் பார்வதி” என்று பார்வையாளர்கள் உற்சாகமாக குரல் கொடுக்க எரிச்சலை சிரிப்பால் மூடிக் கொண்டார் பாரு. “குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்வாங்க பாரு” என்று பாருவை இன்னமும் புண்படுத்தினார் விசே. “விருந்தினர்கள் வந்து போனப்புறம் யார் கிட்ட மாற்றம் தெரியுது” என்கிற கேள்விக்கு சான்ட்ரா என்று பலரும் சொன்னது உண்மை. ஒப்பாரிப் பாடல் பாடிக் கொண்டிருந்த சான்ட்ரா, ஸ்விட்ச் போட்டது போல் மாறி இப்போதெல்லாம் புன்னகை அரசியாக வலம் வருகிறார். (எது உண்மை, எது நடிப்பு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை) “பாரு கிட்ட நிறைய மாற்றம் தெரியுது சார். இப்பல்லாம் சிஐடி, ஜேம்ஸ்பாண்ட் மாதிரி நிறைய கேள்வி கேக்கறாங்க. நான் இப்பத்தான் பெண்மையா உணர்றேன்னு சொல்றாங்க. அவங்க அலப்பறை தாங்காம நான்தான் இப்ப டவுன் ஆகிட்டேன்” என்கிற மாதிரி கம்ருதீன் போட்டுக் கொடுக்க பாருவின் முகம் அஷ்ட கோணலாகியது. “கம்மு இப்பல்லாம் உண்மையா ஸாரி கேட்கறார்” என்று சான்றிதழ் தந்தார் திவ்யா. BB Tamil 9 Day 83 கம்ருதீன், வினோத், பாரு .. மூணு பேருமே டேமேஜ் கண்ட்ரோல்ல ஈடுபட்டிருக்காங்கன்னு தோணுது. ஸ்விட்ச் போட்ட மாதிரி மார்றது செயற்கையா இருக்கு” என்று பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்தார் அரேரா. ‘சனியன் பிடிச்சவ. நாசமா போவ’ என்று பாருவின் மைண்ட்வாய்ஸை நம்மாலேயே கேட்க முடிந்தது. பாருவிடமிருந்து அப்படியொரு எக்ஸ்பிரஷன். பதிலுக்கு கம்ருதீனை போட்டுக்கொடுத்தார் பாரு. “தன் மேல தவறான பிம்பம் விழுந்துடக்கூடாதுன்னு ஜாக்கிரதையா இருக்கார். காமிரா கான்ஷியஸா இருக்கார். அதுக்காக சில விஷயங்களை பதிவு பண்றார். நீ வேலை செய்யலைன்னு சொல்றார்” என்பது பாருவின் பதில் மொய். பாரு பற்றிய அரோராவின் கருத்தை சுபிக்ஷாவும் வழிமொழிந்தார். “அவங்க வில்லன் குணம் திடீர்ன்னு மாறினது செயற்கையா இருக்கு” என்று சுபிக்ஷா சொல்ல, பாருவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தன்னை டிஃபெண்ட் செய்வதற்காக கம்மு கையை உயர்த்த ‘யப்பா சாமிகளா.. நீங்களே பேசிக்கங்க” என்று பிரேக்கில் சென்றார் விசே. பாருவிற்கு கம்முவிற்கும் நடந்த சண்டையைப் பார்த்து “ஒரு பிரேக் அப் பார்த்த மாதிரி இருக்குல்ல?” என்கிற கிண்டலுடன் உள்ளே வந்தார். “நான் வேலை செய்யறேன். அது இந்த உலகத்திற்கு தெரியல’ -பாருவின் அபாண்டமான புளுகல் “கம்முவோட கேப்டன்சி எப்படியிருந்தது?” என்பது அடுத்த கேள்வி. ஆனால் இதில் பாருதான் தொக்காக சிக்கிக் கொண்டார். “பாருவோட வேலையை தல செஞ்சாரு. பாரு கிட்ட வேலை வாங்கறது ரொம்ப கஷ்டம்” என்று போட்டுக் கொடுத்தார் வினோத். “ஆக்சுவலி.. காலை நேரத்துல பாத்திரம் துலக்கற வேலை என்னுது. அப்ப பாத்திரம் கம்மியா இருந்தது. பாரு அத பார்த்துட்டு ‘இப்ப நான் பண்ணிடறேன்’னு சொன்னாங்க. ஆனா அதுக்கு அப்புறம் பாத்திரம் நிறைய விழுந்தவுடனே எரிச்சல் ஆயிட்டாங்க. இப்படி கணக்கு பார்த்து வேலை செய்யறாங்க” என்று பாருவை போட்டுக் கொடுத்தார் சுபிக்ஷா. (பத்து பாத்திரம் தேய்த்தல் என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் பாரு புரிந்து கொண்டிருக்கிறார் போல!) “சார்.. நான் வேலை செய்யறேன் சார்.. நான் முரண்டு பிடிப்பவள்தான். ஆனாலும் செஞ்சிடறேன்.” என்று வீட்டு வேலை என்னும் கடமையை ஏதோ சலுகை செய்வது போல பாரு பேச, விசே வறுத்தெடுத்து விட்டார். BB Tamil 9 Day 83 “எப்படி இதை ஈஸியா கடந்து போறீங்க.. நீங்க அடம்பிடிக்கறத மத்தவங்க ஏன் பொறுத்துக்கணும். 12 வாரம் ஆயிடுச்சு.. ஒவ்வொரு வாரமும் இதையேதான் சொல்றீங்க. உங்க அம்மா கூட சொல்லிட்டுப் போயிருக்காங்க.. அப்பவும் செய்ய மாட்டேன்றீங்க.. மத்தவங்க வேலையை நீங்க செய்வீங்களா.. எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாம இதை கடக்கறீங்க..” என்று விசே கொதித்தெழ “நான் பேசறததான் இவங்க பார்க்கறாங்க.. வேலை செய்யறத பார்க்கலை” என்று மோசமாக சமாளித்தார் பாரு. “டேய்.. டேய்.. உன்னை எனக்குத் தெரியுண்டா.. எனக்கு மட்டுமில்ல.. ஊருக்கே தெரியும்.. மக்களுக்கே தெரியும்” என்கிற மாதிரி விசே கேள்விகளை வைக்க, விடாமல் பாரு சமாளிக்க “இதெல்லாம் உங்களுக்கே நியாயமா தெரியுதா.. இப்படி சமாளிக்கும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு வெற்றி கிடைக்கலை. இன்னும் மோசமா தோத்துதான் போறீங்க.. உக்காருங்க” என்று எரிச்சலானார் விசே. ஒரு சின்ன வேலையைக் கூட மனமார செய்யாமல் பாரு எப்படியெல்லாம் டபாயக்கிறார் என்பதை நாமே பலமுறை பார்க்கிறோம். இத்தனை காமிராக்கள் பதிவு செய்கின்றன. ஆனால் ஒரு முழு எபிசோடை ஒரேயொரு பிரேமில் மறைக்க முயல்வது மாதிரி பாருவால் எப்படி அப்பட்டமாக புளுக முடிகிறது என்பது ஆச்சரியம். “கம்மு.. இந்தக் கேள்வியெல்லாம் நீங்க கேட்டிருக்கணும்.. நான் கேட்க வேண்டியிருக்கு. நியாயமா பார்த்தா உங்க சம்பளத்தை எனக்கு தரணும்” என்கிற கிண்டலோடு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தார் விசே. அரோவை பழிவாங்க முயன்ற கம்முவிற்கு விசே வைத்த குட்டு “இவங்க ஆட்டம் முடிஞ்சிருச்சி. வெளியே போகலாம்’ என்கிற கேள்வியை அடுத்து விசே முன்வைக்க ‘சான்ட்ராவின் பெயர் பலமுறை சொல்லப்பட்டது சரியான விஷயம். அழுகையின் போதும் சரி, சிரிப்பின் போதும் சரி, அவரால் இந்த வீட்டுக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. விக்ரம் திவ்யாவின் பெயரைச் சொல்ல, பதிலுக்கு விக்ரமின் பெயரைச் சொன்ன திவ்யா, வழக்கம் போல் மூச்சு விடாமல் அதற்கு காரணங்களை அடுக்க ‘போதும்மா. காது ரொம்பிடுச்சு” என்று விசே சைகை காட்ட திவ்யாவே அடக்க முடியாமல் சிரித்து விட்டார். BB Tamil 9 Day 83 அரோவின் பெயரைச் சொன்ன கம்மு, சந்தடி சாக்கில் “துஷார் வெளியே போனதுக்கு அரோ காரணம்” என்கிற பழைய பழியை மீண்டும் தூக்கி வந்து போட்டார். “இந்தக் குற்றச்சாட்டை இன்னமும் எத்தனை நாளுக்கு சொல்லப் போறீங்க?” என்று விசே ஏற்கெனவே சொல்லியும் கம்மு மாறவில்லை. “துஷார் வெளியேற்றத்திற்கு அரோரா காரணம் கிடையாது” என்று தெள்ளத் தெளிவாக விசே சொல்ல, அரோவிற்கு கண்ணீர் பெருகியது. “இந்தக் காரணத்தைச் வெச்சு நீங்களும் அழுதுட்டே இருந்தா உங்க கேம் பாதிக்கும்” என்ற அரோவிற்கும் வார்னிங் தந்தார் விசே. எவிக்ஷன் நேரம். கம்முவைத் தவிர மற்ற அனைவரும் பலி பீடத்தில் இருந்தார்கள். “பாரு போகக்கூடாது’ என்று சொல்லி அனைவருக்கும் விசித்திர அதிர்ச்சியைத் தந்தார் கம்மு. அதுவரை கோபத்தைக் கொட்டிய பாருவும், சிரித்துக் கொண்டே வந்து பக்கத்தில் அமர்ந்தார். (என்ன கொடுமை சரவணன்?!) அமித் எவிக்ஷன் - பாரு, சான்ட்ராவின் சகவாசம் காரணமா? விசே எவிக்ஷன் கார்டை நீட்ட அதில் ‘அமித்’ என்று இருந்தது. ‘கிச்சன் ஏரியா ஏன் சுத்தமாக இல்லை?’ என்கிற விசாரணையில் “என் தப்புதான் சார்” என்று சரணாகதி அடைந்தார் அமித். “அப்படியா.. உக்காருங்க” என்று விசேவின் முகத்தில் அப்போதே ஒரு மாற்றம் தெரிந்தது. எவிக்ட் ஆகி போகப் போகிற ஆசாமியை ஏன் வறுத்தெடுக்க வேண்டும் என்று விட்டு விட்டார் போலிருக்கிறது. எதிர்மறை குணாதிசயம் இல்லாத நல்ல போட்டியாளர்களுள் ஒருவர் அமித். இனிமையாகப் பழகுபவர். பாட்டு பாடுபவர். ஆனால் எப்போது சான்ட்ரா மற்றும் பாரு பக்கத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தாரோ, அப்போது பிடித்தது சனி. தாமரை இலை நீர் மாதிரி பிக் பாஸ் வீட்டில் இருந்ததும், அவரது வெளியேற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். BB Tamil 9 Day 83 அமித்திற்கு சண்டையும் ஒழுங்காக போடத் தெரியாது. சற்று கோபப்பட்டு விட்டு சில நிமிடங்களுக்குள் தடாலென்று ‘ஸாரி’ சொல்லி விடுவார். அதை வைத்து மைலேஜ் தேற்றத் தெரியாது. பிறகென்ன? இவரிடம் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?! (பாரு ரசிகர்கள் இதை உடனே ஒப்புக் கொள்வார்கள்!) அமித் வெளியேற்றத்திற்கு சான்ட்ரா குலுங்கி குலுங்கி அழுததுதான் ஆச்சரியம். அமித்தை நாமினேட் செய்தவர்களில் ஒருவர் சான்ட்ரா. ஒருவேளை குற்றவுணர்வில் அழுதாரோ?! அமித் எவிக்ஷனுக்குப் பிறகு மீண்டும் பாருவும் கம்முவும் தங்களின் காரசார மோதலை ஆரம்பித்தார்கள். “ஏண்டா.. எல்லாத்தையும் வீக்கெண்ட் ஷோல சொல்றே?” என்று பாரு ஆரம்பிக்க மீண்டும் கம்மு கோபமாக.. அடப் போங்கப்பா.. போரடிக்குது! பாரு - கம்ருதீனுக்கு இடையில் நிகழும் இந்த டிராமா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விகடன் 28 Dec 2025 11:57 am

கொழும்பு மாநகர சபை தொடர்பில் கேலி பல்தசார் முக்கிய தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் பாதீட்டுத் திட்டம் தயாரிப்பதற்கான செயல்முறையை கொழும்பு முதல்வர் விராய் கேலி பல்தசார் அறிவித்துள்ளார். கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதி இரண்டாவது வாசிப்புக்கு மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சபையின் செயல்திறன் குறித்த பாதீடு வெறும் புள்ளிவிபரங்களின் தொகுப்பு மட்டுமல்ல, சபையின் செயல்திறனைப் பிரதிபலிக்கும் ஆவணம் மற்றும் வரவிருக்கும் ஆண்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் […]

அதிரடி 28 Dec 2025 11:49 am

காங்கேசன்துறை கடற்கரையில் ”அலையோடு உறவாடு …“

வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ” அலையோடு உறவாடு … ” என்ற தொனி பொருளில், உணவு திருவிழா ஆரம்பமாகியுள்ளது. காங்கேசன்துறை கடற்கரையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகி இரவு வரையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் , பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் உற்பத்தி.பொருள் விற்பனை, பண்பாட்டு நிகழ்வுகள், சிறுவர்களுக்கான்மகிழ்வூட்டும் விளையாட்டுக்கள் மற்றும் இன்னிசை இசைக்கச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

அதிரடி 28 Dec 2025 11:46 am

டிமார்ட், லுலுவை தொடர்ந்து தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும் பிரபல நிறுவனம்!

டிமார்ட், லுலுவை தொடர்ந்து சென்னையில் காலடி எடுத்து வைக்கும் மிகப்பிரபல நிறுவனம் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

சமயம் 28 Dec 2025 11:42 am

UGC NET 2025 அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வர்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி? நேரடி லிங்க்

யுஜிசி நெட் டிசம்பர் 2025 தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சமயம் 28 Dec 2025 11:39 am

புதுசா கார் வாங்கப் போறீங்களா? புத்தாண்டில் எகிறும் கார் விலை.. ரினால்ட் அறிவிப்பு!

ஜனவரி மாதம் முதல் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இனி கார் வாங்கும் மக்களுக்கு அதிகம் செலவாகும்.

சமயம் 28 Dec 2025 11:17 am

``ஸ்மார்ட் போன், ஆஃப் பேன்ட் அணியத் தடை; பைஜாமா அணிய வேண்டும் - உ.பி கிராமங்களின் முடிவு!

ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்கள் சிறுமிகளுக்கு ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்கள் தங்கள் தடை முடிவை திரும்பப் பெற்றன. மேலும் கிராமத் தலைவர்கள், தங்களின் இந்த முன்மொழிவு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட 'சீரான சமூக ஒழுக்கத்தை' மையமாகக் கொண்டது என விளக்கமளித்தனர். Smart phone இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பாக்வத் மாவட்டத்தில் உள்ள பல பஞ்சாயத்துகளின் தலைவர்கள், சிறுவர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கும், அரைக்கால் சட்டை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தொடர்பாக அவர்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தில், சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரே மாதிரியான சமூக விதிகள் பொருந்த வேண்டும். சிறுவர்கள் வீட்டிலும் பொது இடங்களிலும் அரைக்கால் சட்டை அணிவதற்குப் பதிலாக, கால்சட்டை அல்லது பாரம்பரிய குர்தா-பைஜாமா போன்ற சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும். அரைக்கால் சட்டை அணிவது உள்ளூர் மரபுகளுக்கு எதிரானது. மேலும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கைபேசிகள் வழங்கப்படக் கூடாது. பெரியவர்கள்கூட ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். கைபேசி சாதனங்களை தேவையற்ற முறையில் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒழுக்கத்தையும் சமூக சமநிலையையும் பராமரிக்க, சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் சமமான கட்டுப்பாடுகளைக் குடும்பங்கள் உறுதி செய்ய வேண்டும். சமூகப் பிணைப்புகளைப் பாதுகாப்பதற்காகத் திருமண விழாக்கள் வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ நடத்தப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் நடத்தப்படும் திருமணங்கள் எளிதில் முறிந்துவிடுகின்றன. பாரம்பரிய சமூகப் பிணைப்புகளையும் பலவீனப்படுத்துகின்றன. இருப்பினும், வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் திருமண அழைப்பிதழ்கள் செல்லுபடியாகும். திருமணம் இந்த முடிவுகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் ஒரு பரந்த சமூகப் பிரசாரமாக முன்னெடுத்துச் செல்லப்படும். மற்ற பஞ்சாயத்துகளையும் இதில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான்: `திருமணமான பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை' - கிராமப் பஞ்சாயத்தில் முடிவு!

விகடன் 28 Dec 2025 11:08 am

இது திராவிடர்கள் vs தமிழர்கள் சண்டை: ஆவேசமான சீமான்- திருமாவிற்கும், எனக்கும் என்ன பிரச்சினை!

விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட சீமான், திராவிடர்கள் மற்றும் தமிழர்கள் இடையிலான மோதல் போக்கு குறித்து சரமாரியாக பதிலளித்தார். மேலும் திருமாவளவனுக்கும் தனக்கும் பிரச்சினை இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

சமயம் 28 Dec 2025 11:07 am

உதவியாளரின் தூக்கம் கெட்டுடக் கூடாதுனு சுவர் ஏறிக் குதித்த தங்க மனசுக்காரர் கேப்டன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் நினைவுநாளான இன்று அவரின் சமாதிக்கு சென்று பலரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். மேலும் விஜயகாந்த் பற்றி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சமயம் 28 Dec 2025 10:47 am

தவெகவை புகழ்ந்து தள்ளும் காங்கிரஸ்...கடும் அதிருப்தியில் திமுக?

தவெகவை புகழ்ந்து தள்ளும் காங்கிரஸ். இதன் காரணமாக கடும் அதிருப்தியில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 28 Dec 2025 10:25 am

தாயிற்காக விமானி ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல்.. அதிகம் பகிரப்படும் காணொளி

விமானப் பயணத்தின் போது தனது தாய்க்கு இளம் விமானி ஒருவர் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான செயல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. விமானப் பயணம் என்பது பலருக்கு ஒரு சிறப்பு அனுபவம், அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளி பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது எனலாம். அஸ்வத் புஷ்பா என்ற விமானி, தனது தாயை விமானத்தில் முதல் முறையாக அழைத்து சென்ற விதமானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. முதல் பயணம் அஸ்வத் புஷ்பா, […]

அதிரடி 28 Dec 2025 10:07 am

அரச பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்.. பெற்றோர்கள் அவதானம்!

அரசப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து மதிப்புள்ள சிற்றுண்டிகளையே அதிகம் சாப்பிட விரும்புவதாக தெரியவந்துள்ளது. நிறுவனம் ஒன்று, இலங்கையில் நகர்ப்புற இளம் பருவத்தினரிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்குத் தேவையான உணவு நுகர்வு முறைகள், விருப்பங்கள், தடைகள் மற்றும் செயல்பாடுகள் என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளை சேர்ந்த 463 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் […]

அதிரடி 28 Dec 2025 10:05 am

அமித் வெளியேற்றம்: டைட்டில் வின்னர் ஆவார் என நம்பப்பட்ட பெண்ணும் வெளியேற்றம்

பிக் பாஸ் 9 வீட்டில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் வைத்து கனி அக்கா மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்களாம். இதையடுத்து கனியின் ஆதரவாளர்கள் பிக் பாஸை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமயம் 28 Dec 2025 9:40 am

குழந்தைகள் கண்முன் கணவன் செய்த கொடூர செயல் –துடிதுடித்த மனைவி

மனைவி மீது கணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்தையில் சந்தேகம் தெலங்கானா, ஹுஜூராபாத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் – திரிவேணி தம்பதி. 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு குழந்தைகளும் உள்ளனர். வெங்கடேஷ், தினமும் மது அருந்தி வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியும் இருக்கிறார். எனவே வறுமையால் மனைவி ஹோட்டல் மற்றும் வீடுகளுக்கு சென்று வேலை […]

அதிரடி 28 Dec 2025 9:30 am

டக்ளசை 90 நாள்கள் தடுத்து வைக்க அனுமதி கோரிய சிஐடி –நிராகரித்த அமைச்சர்

ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை 90 நாள்கள் தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்து விட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்90 நாள்கள் தடுப்புக்காவல் உத்தரவைக் கோரியிருந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

புதினப்பலகை 28 Dec 2025 9:22 am

இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுவே 450 மில்லியன் டொலர் நிதியை கையாளும்

பேரிடருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகளுக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியை கையாளுவதற்காக, சிறிலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த நிதியைக் கையாளும் பொறுப்பு இந்தக் குழுவிடமே ஒப்படைக்கப்படும் என்று சிறிலங்காவின் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு திட்டங்கள், இந்திய கடன் திட்டத்தின்

புதினப்பலகை 28 Dec 2025 9:12 am

யாழில். மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் , மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக இளைஞர்கள் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், குறித்த பெண்ணை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். அதேவேளை , போதை மாத்திரைகளுடன் இருவரும் , மாவா பாக்குடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு 28 Dec 2025 9:06 am

விஜயகாந்த் 2ஆம் ஆண்டு குருபூஜை… கேப்டன் இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆனது. இதையொட்டி பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமயம் 28 Dec 2025 8:54 am

சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாறும் காந்தி சந்தை...என்ஐடிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாறும் காந்தி சந்தை. இதற்காக என்ஐடிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 28 Dec 2025 8:40 am

மதுரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடியும்-அதிகாரிகள் தகவல்!

மதுரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடியும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

சமயம் 28 Dec 2025 8:33 am

பிணக் குவியலிலிருந்து மீட்கப்பட்ட தாய்க்குப் பிறந்தவரா விளாதிமீர் புதின்? வைரலாகும் கதை!

இரண்டாம் உலகப் போரின் போது பிணக் குவியலிலிருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்தவர்தான் தற்போதைய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் என்று ஒரு கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. இது கடந்த ஒரு சில ஆண்டுகளாக அவ்வப்போது வைரலாவதும், பிறகு மறந்து போவதுமாக உள்ளது. இந்தக் கதையின் உண்மை நிலவரம் பற்றி சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் எழுதியிருக்கும் நூலில், புதின் பற்றிய ஒரு […]

அதிரடி 28 Dec 2025 8:30 am

‘தன்னிச்சையாக முடிவு எடுத்து’.. கோலி உட்பட 3 ஸ்டார் வீரர்களை நீக்கிய கம்பீர்! கடும் அதிருப்தியில் பிசிசிஐ!

இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தன்னிச்சையாக முடிவு எடுத்து மூன்று ஸ்டார் வீரர்களை நீக்கியிருப்பது, பிசிசிஐ மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரை நீக்குவது குறித்து பரிசீலித்து வருகிறார்களாம்.

சமயம் 28 Dec 2025 8:01 am

இலங்கையின் மேலைத்தேய இசையை அலங்கரித்த மெக்சி ரொசைரோ காலமானார்

5 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் மேலைத்தேய இசைத்துறையை தனது தனித்துவமான குரலால் அலங்கரித்த மூத்த கலைஞர் மெக்சி ரொசைரோ (Maxi Rozairo), தனது 77ஆவது வயதில் காலமானார். ஐந்து தசாப்தங்களுக்கும் (50 ஆண்டுகள்) மேலாக இசைத்துறையில் ஈடு இணையற்ற பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். அவரது தனித்துவமான பாடும் பாணி மற்றும் மேடை ஆற்றுகை காரணமாக அவர் இலங்கையின் இசை ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார். இலங்கையில் மேலைத்தேய இசைக்கலையை வளர்ப்பதிலும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதிலும் அவர் ஒரு […]

அதிரடி 28 Dec 2025 7:58 am

கோவை வடக்கு ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்-வலுக்கும் கோரிக்கை!

கோவை வடக்கு ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

சமயம் 28 Dec 2025 7:39 am

வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக் கொலை ; விசாரணையில் வெளியான புதிய திருப்பம்

அம்பலாங்கொடை வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரியும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீட்டில் தங்கியிருந்து இக்கொலையைத் திட்டமிட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வீடு கண்டி, அன்கும்பர பகுதியில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் குழுவினர் அந்த வீட்டிற்குச் சென்றபோது சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த டிசம்பர் 22ஆம் திகதி அம்பலாங்கொட நகரில் உள்ள விற்பனை நிலையமொன்றின் முகாமையாளர் வர்த்தக நிலையத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் […]

அதிரடி 28 Dec 2025 7:34 am

மீண்டும் கொட்டி தீர்க்கப்போகும் கன மழை ; மக்களுக்கு விடுத்துள்ள அவசர முன்னெச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்களின்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட இது குறித்துக் கூறுகையில், முப்படைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டு, அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் […]

அதிரடி 28 Dec 2025 7:33 am

Doctor Vikatan: தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிற அளவுக்கு வலி! - காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என் வயது 28. சமீபத்தில்தான் திருமணமானது. எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த எனக்கு, அது கசப்பான அனுபவங்களையே கொடுத்திருக்கிறது. தாம்பத்திய உறவின்போது எனக்குக் கடுமையான வலி ஏற்படுகிறது. அது தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிறது. என்னால் உடலளவில் அதற்கு ஒத்துழைக்க முடியவில்லை. ஒருவேளை நான் இதில் விருப்பமின்றி, என் கணவரைத் தவிர்க்க இப்படிச் செய்கிறேனோ என அவருக்கு ஓர் எண்ணம் இருப்பதும் தெரிகிறது. இப்படிப்பட்ட வலிக்கு என்ன காரணம்... இதற்குத் தீர்வுகள், சிகிச்சைகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.   மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலிக்கு, 'டிஸ்பெரூனியா' (Dyspareunia ) என்று பெயர். அதாவது தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது ஏற்படுகிற ஒருவித வலி.  இந்த வலியின் பின்னணியில் உளவியல் மற்றும் உடலியல் காரணங்கள் எதுவும் இருக்கலாம். தாம்பத்திய உறவு குறித்து சிலருக்கு மனத்தடைகளும் தயக்கங்களும் இருக்கலாம்.  குழந்தைப்பருவத்தில் சந்தித்த பாலியல் வன்முறையால் ஏற்பட்ட நீங்கா நினைவுகளால் ஏற்பட்ட பயம் அல்லது முந்தைய உறவில் ஏற்பட்ட மோசமான பாலியல் உறவு அனுபவங்களால் ஏற்பட்ட வலி என ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம்.  அடுத்தது, அவர்களால் உடலியல் ரீதியாக தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலை இருக்கலாம். தாம்பத்திய உறவின் போது எதிர்கொள்கிற இத்தகைய வலிக்கு, வெஜைனல் வறட்சியே பரவலான காரணமாக இருக்கிறது. புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். அதேபோல மெனோபாஸ் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கும் வெஜைனாவில் வறட்சி ஏற்படுவது சகஜம். எண்டோமெட்ரியோசிஸ் என்கிற பிரச்னை உள்ள பெண்களுக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும். ஹார்மோனல் இம்பேலன்ஸ் எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மையும் இதற்கு முக்கியமான காரணம். சில பெண்களுக்கு வெஜைனாவில் கசிவு இல்லாததாலும் வறட்சியும் தாம்பத்திய உறவின்போதான வலியும் இருக்கும்.  வெஜைனாவில் ஏற்படுகிற தொற்று, இடுப்பெலும்பு பகுதியில் ஏற்படுகிற தொற்று போன்றவை இருந்தாலும், அந்தப் பெண்களுக்கு தாம்பத்திய உறவின்போது வலி இருக்கும்.  எண்டோமெட்ரியோசிஸ் என்கிற பிரச்னை உள்ள பெண்களுக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும். கர்ப்பப்பையின் லைனிங்கானது, கர்ப்பப்பையையும் தாண்டி சினைப்பை, சினைக்குழாய்கள், சிறுநீர்ப்பை, மலக்குடல் என உடலின் எந்தப் பகுதியிலும் படிவதையே 'எண்டோமெட்ரியோசிஸ்'  என்கிறோம். 20 முதல் 40 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது அடுத்தது வெஜைனிஸ்மஸ் (vaginismus) என்ற பாதிப்பு. முதல்முறை தாம்பத்திய உறவின்போது, உறவுக்கு  உடல் ஒத்துழைக்காது. வெஜைனா தசைகள் சுருங்கிக் கொள்ளும். இந்த விஷயத்தில் கணவரின் ஒத்துழைப்பும்,  அவர் தன் மனைவியைப் புரிந்துகொள்ள வேண்டியதும் மிக முக்கியம்.  'வெஜைனிஸ்மஸ்' பிரச்னையானது, தாம்பத்திய உறவின்போது மட்டும்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போது, மருத்துவர் அந்தரங்க உறுப்பை டெஸ்ட் செய்ய முனையும்போது சம்பந்தப்பட்ட பெண் அதற்கு ஒத்துழைக்க மாட்டார். தவிர, ஃபைப்ராய்டு, சினைப்பை கட்டிகள் உள்ள நிலையில், மிகவும் தீவிரமான தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி ஏற்படலாம்.  மன அழுத்தமும் முக்கிய காரணம்.  Doctor Vikatan: தாம்பத்திய உறவு, நீண்ட நேரம் ஈடுபடுவது பிரச்னையின் அறிகுறியா? இவை எல்லாவற்றுக்குமே தீர்வுகள் உண்டு. வெஜைனா வறட்சிக்கு, லூப்ரிகேஷன் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படும். மெனோபாஸ் காலத்து வறட்சியால் ஏற்பட்ட பிரச்னைக்கு, ஈஸ்ட்ரோஜென் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படும்.  வெஜைனிஸ்மஸ் பாதிப்புக்கும் பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. இதற்கெல்லாம் முன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். தாம்பத்திய உறவின் போது வலியை உணர்வதாகச் சொன்னால், அந்தப் பெண்கள் பொய் சொல்வதாக நினைக்கக்கூடாது. அதற்கு கவனம் கொடுத்து மருத்துவரை அணுகினால், சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 28 Dec 2025 7:30 am

இஸ்ரேல் சோமாலிலாந்தை அங்கீகரித்தது: ஐரோப்பிய ஒன்றியம் சோமாலியாவை ஆதரிக்கிறது!

சோமாலிலாந்தின் பிரிந்து சென்ற பகுதியை சுதந்திர நாடாக முறையாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் ஆனதை அடுத்து, சோமாலியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் சனிக்கிழமை அழைப்பு விடுத்தது. ஒரு நாள் முன்னதாக இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளானது, பல ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் சோமாலியாவின் எல்லைகளை ஒருதலைப்பட்சமாக மாற்ற முடியாது என்று வலியுறுத்தின. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனௌவர் எல் அனௌனி கூறுகையில், சோமாலியா கூட்டாட்சி குடியரசின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதன் முக்கியத்துவத்தை இந்த கூட்டமைப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறதுஎன்றார். இது முழு ஆப்பிரிக்காவின் கொம்பு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானதுஎன்று செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார் . நீண்டகால வேறுபாடுகளைத் தீர்க்க சோமாலிலாந்துக்கும் சோமாலியாவின் கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் இடையே அர்த்தமுள்ள உரையாடலை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கிறதுஎன்று எல் அனௌனி மேலும் கூறினார். இஸ்ரேலின் இந்த அறிவிப்பை சோமாலியா அரசாங்கம் கடுமையாக கண்டித்தது. இது அதன் இறையாண்மையின் மீதான நேரடித் தாக்குதல் என்று வர்ணித்தது. பிரிவினையை நியாயப்படுத்தும் சட்டவிரோதமான மற்றும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் முயற்சியை எதிர்கொள்ள இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடரப்போவதாக மொகடிஷுவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச விதிமுறைகளை இஸ்ரேல் மீறுவதாகக் குற்றம் சாட்டிய ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது, சோமாலிலாந்து சோமாலியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது என்று வலியுறுத்தினார்.

பதிவு 28 Dec 2025 6:36 am

100 குழந்தைகள் போதாது! பெண்களுக்கு டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் வெளியிட்ட அறிவிப்பு

விந்துணுவை தானம் பெற்று, ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றால், தன்னுடைய சொத்தில் சம பங்கு வழங்கப்படும் என்று டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் இளம் பெண்களுக்கு அதிர்ச்சிகரமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். விந்தணுவை தானமாகப் பெற்று ஐவிஎஃப் சிகிச்சை மூலம் கருவுற்றால் சிகிச்சை செலவையும் தானே ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ரூ.1.52 லட்சம் கோடி சொத்தில், பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமாக பங்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் 41 வயது பாவெல் அறிவித்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு, […]

அதிரடி 28 Dec 2025 6:30 am

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார்.

சமயம் 28 Dec 2025 6:01 am

சென்னையில் தெரு நாய்களுக்கு உணவு வழங்க இடம் ஒதுக்கீடு!

சென்னையில் தெரு நாய்களுக்கு உணவு வழங்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சமயம் 28 Dec 2025 5:38 am

2027-ல் IHRA தலைமை பொறுப்பை ஏற்கும் பிரான்ஸ்

உலகளாவிய அளவில் பெரும் இன அழிப்பு நினைவுகளைப் பாதுகாக்கும் International Holocaust Remembrance Alliance (IHRA) அமைப்பின் 2027 ஆண்டுக்கான தலைமை பொறுப்பை பிரான்ஸ் ஏற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் IHRA அமைப்பின் கூட்டம் ஜெருசலேமில் நடைபெற்றபோது, பிரான்ஸ் ஒருமனதாக தலைமைப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டது. இதன் மூலம், பிரான்ஸ், தற்போதைய தலைவர் அர்ஜென்டினாவை தொடர்ந்து, 2027-இல் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது. பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், “கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் அதிகரித்துவரும் […]

அதிரடி 28 Dec 2025 1:30 am

தான்சானியா: ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

டொடோமா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா. இந்நாட்டில் ஆப்பிரிக்காவின் மிகவும் உயரமான கிளிமஞ்சாரோ மலை உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் இந்த மலை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இந்த மலைக்கு சுற்றுலா சென்ற பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் அந்த சுற்றுலா பயணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடல்நலம் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணியை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் மருத்துவமனைகு […]

அதிரடி 28 Dec 2025 12:30 am

ரகசியம் காப்போம்!

முனைவர் பாலசாண்டில்யன் மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள். நாம் பார்ப்பதோ, ஒருவன் நினைப்பதோ அல்ல அவன். எதை மறைக்க முயல்கிறானோ அதுதான் அவன். நாம் மறக்க நினைக்கும் அல்லது மறைக்க நினைக்கும் ரகசியங்களைவிட நம்மை வேறெதுவும் தனிமைப் படுத்திவிடமுடியாது. ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. உலகத்தினருடன் நாம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை வைத்து நம்மைக் கண்டறிந்துவிட முடியாது. மக்கள் அந்த ரகசியத்தில் மூழ்கிப் போகும்போது […]

அதிரடி 28 Dec 2025 12:30 am

Jana Nayagan Audio Launch: 'ஆட்டோகாரரும் குடையும்!' - விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு போறார். அப்போ பெரிய மழை பெய்திட்டு இருக்கு. அந்த ஆட்டோக்காரர் அவர்கிட்ட இருந்து குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாரு. இதை நான் யார்கிட்ட திருப்பிக் கொடுக்கிறதுனு அந்தப் பெண் கேட்கிறாங்க. அதுக்கு அந்த ஆட்டோக்காரர் 'யாராவது தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுங்க'னு சொல்லிட்டு போயிடுறாரு. அந்த கர்ப்பிணி பெண், ஹாஸ்பிடல் வாசல்ல மழைக்கு பயந்து நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவருக்கு அந்த குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாங்க. Vijay - Jana Nayagan Audio Launch அதுக்கு அந்த பெரியவர் 'நீங்க யாருனு எனக்கு தெரியாது. இதை யார்கிட்ட திரும்ப கொடுக்கிறது'னு கேட்கிறாரு. 'தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுத்துட்டு போயிடுங்க'னு கர்ப்பிணி பெண் சொல்றாங்க. அந்த பெரியவர் குடையை வாங்கிட்டுப் பஸ் ஸ்டாப் பக்கம் போறாரு. அங்க பூ விக்கிற அம்மாகிட்ட அந்த குடையை அவர் கொடுக்கிறார். அந்த அம்மா மற்றொரு குழந்தைகிட்ட குடையை கொடுத்து 'மழையில நனையாத, குடையை வச்சுக்கோ'னு சொல்றாங்க. அந்த குழந்தை குடையோட வீட்டுக்குப் போறாங்க. வீட்ல அந்த குழந்தையோட அப்பா 'குடையில்லாமல் குழந்தை மழையில நனைஞ்சிட்டு வரும்'னு யோசிச்சுட்டு இருக்காரு. அந்த அப்பா வேற யாருமில்லை, அவர்தான் ஆட்டோக்காரர். அந்தக் குடை அவர் கொடுத்த குடைதான். முடிஞ்ச வரைக்கும் சின்ன சின்ன உதவிகள் செஞ்சு பாருங்க, லைஃப் சுவாரஸ்யமா இருக்கும்! என்றார்.

விகடன் 27 Dec 2025 11:43 pm

மத்தல ராஜபக்க்ஷ விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

மத்தல ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதேசமயம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத்தல விமான நிலையத்தைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். தனியார் மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது இந்த முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கான […]

அதிரடி 27 Dec 2025 11:30 pm

Jana Nayagan Audio Launch: அடுத்த 33 வருஷத்துக்கு நன்றிக்கடனை தீர்த்துட்டுதான் போவேன்! - விஜய்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். விஜய் பேசுகையில், இலங்கைக்குப் பிறகு மலேசியா தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்டதான் விரும்பினேன். ஆனா, என்னுடைய ரசிகர்கள் பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்திருக்காங்க. என்னுடைய கரியரின் முதல் நாளிலிருந்து பல அவமானங்களைச் சந்தித்திருக்கேன். என்னுடைய ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க. அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன். எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன்! எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். Jana Nayagan - Vijay அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்ல. நன்றிக் கடனை தீர்த்துட்டுத்தான் போவேன். மலேசியாவின் தமிழ் சினிமா மார்க்கெட்டில் மிக முக்கியமானது. நம்ம நண்பர் அஜித் நடிச்ச 'பில்லா' படம் இங்க ஷூட் செய்ததுதான். என்னுடைய 'காவலன்', 'குருவி' படங்களை ஷூட் செய்ததும் இங்குதான். நான் அனிருத்துக்கு 'MDS'னு பட்டம் கொடுக்கிறேன். அது 'மியூசிகல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்'. உள்ளப் போனா, உங்களுக்கு பல பாடல்களும், பின்னணி இசையும் கிடைக்கும். என்றவர், மமிதா பைஜூ 'க்யூட்' மட்டும் கிடையாது. இந்தப் படத்திலிருந்து அவங்க குடும்பங்கள் கொண்டாடும் சிஸ்டராகவும் மாறிடுவாங்க. எப்போதுமே, ஹீரோ - ஹீரோயினுக்கு இடையிலதான் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும். ஆனா, 'கில்லி' படத்துல இருந்து எனக்கும் பிரகாஷ் ராஜுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்திருக்கு. என்றார். மேலும் பேசிய விஜய், நீங்க உங்க வாழ்க்கையில ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனா, உங்களுக்கு வலுவான ஒரு எதிரி தேவை. சும்மா, வர்றவங்க போறவங்களை எதிர்த்துட்டு இருக்க முடியாது இல்லையா! வலுவான எதிரி இருந்தால் மட்டுமே நீங்கள் வலிமையானவராக மாற முடியும். 'விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரா'னு சமீபத்துல ஒரு பேச்சு வந்தது. நம்ம எப்போ தனியா இருந்திருக்கோம். Jana Nayagan Audio Launch - Vijay 33 வருஷமா மக்களோடதானே இருக்கேன். அது அணிதானே! இப்போ அணிங்கிறதை விளக்கமாகச் சொல்லமாட்டேங்குறார்னு தோணும். சஸ்பென்ஸ்னு ஒண்ணு இருந்தால்தானே கிக் இருக்கும். இதை மக்களுக்காகப் பேசுறேன். இதைவிட முக்கியம், செய்யுறதைதான் சொல்லணும். 2026, History Repeat Itself! எனப் பேசினார்.

விகடன் 27 Dec 2025 10:58 pm

கடைசி மூச்சு இருக்கும் வரை.. கட்சி எப்படி முன்னேறும்? ராமதாஸ் வெளியிட்ட திடீர் வீடியோ!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பதவியே சட்ட சிக்கலில் இருப்பது, கட்சியின் அஸ்திவாரத்தில் சந்தேகம் எழுந்திருப்பதைக் காட்டுகிறது என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

சமயம் 27 Dec 2025 10:57 pm

அயர்லாந்தை உலுக்கும் மரணக் காப்பகம் ; 11 குழந்தைகளின் உடலங்கள் மீட்பு

அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டின் இருண்ட வரலாற்றை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் இதே காப்பக வளாகத்திலிருந்த பழைய கழிவுநீர் தொட்டி ஒன்றிற்குள் இருந்து 796 குழந்தைகளின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களுக்கு முறையான இறுதிச் சடங்குகளோ அல்லது கல்லறை அடையாளங்களோ செய்யப்பட்டிருக்கவில்லை. தற்போது மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சியின் […]

அதிரடி 27 Dec 2025 10:30 pm

இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டில் உணவுப் பற்றாக்குறை; ஐ.நா கவலை

இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டில் உணவுப் பற்றாக்குறை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் வறுமை காரணமாக பல குடும்பங்கள் உணவைக் குறைப்பது போன்ற சூழ்நிலையை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிகாட்டியுள்ளது.

அதிரடி 27 Dec 2025 10:30 pm

தலைநகரை மூடிய புகைமூட்டம்.. டெல்லி காற்று மாசு எச்சரிக்கை.. டெல்லி அரசு கடும் நடவடிக்கை!

காற்றுத் தர மேலாண்மை ஆணையம், படிப்படியான பதிலடி செயல் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கட்டுமான பணிகள் மற்றும் சில தொழிற்சாலை செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சமயம் 27 Dec 2025 10:23 pm

JanaNayagan Audio Launch: 'ஜனநாயகன்'சம்பவமா இருக்கும்! - மேடையில் இசையமைப்பாளர் அனிருத்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். அனிருத் பேசுகையில், எனக்கு 21 வயதிருக்கும்போது நான் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தேன். அப்போது என்னை நம்பி விஜய் சார் 'கத்தி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்போதே அவர் பெரிய நடிகராக இருந்தார். அந்த வாய்ப்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். 'கத்தி', 'மாஸ்டர்', 'பீஸ்ட்', 'லியோ' என நாம் சேர்ந்து பணியாற்றிய படங்கள் அனைத்துப் படங்களின் பாடல்களும் ஹிட் அடித்திருக்கின்றன. Anirudh - JanaNayagan Audio Launch இப்போது 'ஜனநாயகன்' ஆல்பமும் ஹிட்டாகும். நான் பல கான்சர்ட்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், இது போல் ஒரு எனர்ஜி எங்கும் பார்த்ததில்லை. தளபதி ஒருவருக்காக மட்டுமே அது! என்றவர், ஜனநாயகன் சம்பவமாக இருக்கும்! எனப் பேசினார்.

விகடன் 27 Dec 2025 10:06 pm

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி.. 2026 தேர்தலுக்காக சூடு பிடித்த கள நிலவரம்.. போட்டி எப்படி இருக்கு?

2026 தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதி திமுக – அதிமுக இடையிலான பாரம்பரிய மோதலுடன், தவெக உருவாக்கும் புதிய அரசியல் சமநிலையால் மிகவும் சிக்கலான, கணிக்க முடியாத போட்டியாக மாறக் கூடும்.

சமயம் 27 Dec 2025 9:42 pm

தொழுகையில் ஈடுபட்டவர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், வீதியில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பலஸ்தீனியர் மீது இஸ்ரேலிய இராணுவத்தின் தயார்நிலை வீரர் ஒருவர் தனது வாகனத்தை ஏற்றித் தாக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த காணொளி காட்சிகளில், வழிபாட்டில் ஈடுபட்டவர் தரையில் வீழ்ந்ததும், சாதாரண உடையில் இருந்த அந்த வீரர் அவரை நோக்கிச் சத்தமிட்டு, அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு சைகை செய்வது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் பலஸ்தீனியர் […]

அதிரடி 27 Dec 2025 9:30 pm

பெக்கோ சமன் விளக்கமறியலில் இருந்து விடுவிப்பு!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” மனைவி ஷானிகா லக்ஷானி பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ , ‘பாணந்துறை நிலங்க’ மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் […]

அதிரடி 27 Dec 2025 9:30 pm

இலங்கையை அதிரவைக்கும் அம்பலாங்கொடை கொலை: பின்னணியில் முன்னாள் காவற்துறை அதிகாரி?

அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், திடுக்கிடும் பல உண்மைகள் காவற்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளன. இந்த கொலையை… The post இலங்கையை அதிரவைக்கும் அம்பலாங்கொடை கொலை: பின்னணியில் முன்னாள் காவற்துறை அதிகாரி? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Dec 2025 9:20 pm

திருப்பூரில் கண் கலங்கிய செங்கோட்டையன்! விஜய் பற்றி சொன்ன ஒற்றை வார்த்தை

திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் குறித்து கண் கலங்கியபடி பேசி உள்ளார். அவர் என்ன பேசினார் என்று பார்ப்போம்.

சமயம் 27 Dec 2025 9:00 pm

காவல்துறை அதிபர் விட்டில் பதுங்கிய கொலையாளிகள்

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அம்பலாங்கொடை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட தொழிலதிபரின் கொலையுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பதுங்கியிருந்த வீடு முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கரந்தெனிய சுத்தாவால் கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி, அம்பிட்டிய பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ள நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இவ்விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கரந்தெனிய சுத்தா மூலம் தனது மனைவியின் பெயரில் ஹசலக பகுதியில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தென் மாகாணத்தில் இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான நீண்டகால பகை காரணமாக கோசல டி சில்வா கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தொழிலதிபர் கோசல மீது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதியன்று ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்றதற்காக கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியன்று கூர்மையான ஆயுதங்களால் அடித்து மற்றொரு நபரைக் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பதிவு 27 Dec 2025 8:41 pm

பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு தலா ஐந்து இலட்சம் !

பேரிடரால் வீடுகளுக்கு ஏற்கட்ட சேதங்கள் குறித்து தனிப்பட்ட சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு தலா ஐந்து இலட்சம் ரூபா வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளி காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் முறையான சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவதற்கு முன்பே அரசாங்கம் ஆரம்பகட்ட நிதி உதவியை வழங்கியிருந்தது. ஒரு இலட்சத்து இருபதினாயிரம் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வீடுகள் குறித்து விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு ஒரு வருடமேனும் செல்லும். இதனால் நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, சரியான நேரத்தில் உதவியை உறுதி செய்வதற்காக மதிப்பீடு இல்லாமல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து இலட்சம் ரூபா வீதம் நிலையான தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பதிவு 27 Dec 2025 8:32 pm

குவாத்தமாலாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து – 15 பேர் பலி, 19 பேர் காயம்

குவாத்தமாலாவின் மேற்குப் பகுதியில் உள்ள இன்டர்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் (Inter-American Highway) இன்று சனிக்கிழமை (டிசம்பர் 27, 2025) அதிகாலை… The post குவாத்தமாலாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து – 15 பேர் பலி, 19 பேர் காயம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Dec 2025 8:30 pm

முறிகண்டி பிள்ளையார் அருகே தலைகீழாக கவிழ்ந்து கார் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்!

யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து குட்டிக்கரணம் அடித்து விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த விபத்து காலை இன்று( 27) இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது எனினும் காரில் பயணம் செய்தவர்கள் தெய்வாதீனமாக சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள். .

அதிரடி 27 Dec 2025 8:30 pm

வெறும் 2 டொலரில் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட்; அமெரிக்க லொத்தர் வரலாற்றில் அதிஸ்டம்!

அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு 2 டொலருக்கு வாங்கிய ‘பவர்போல்’ லொத்தரில் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் அடித்துள்ளது. கிருஸ்துமஸ் நாளில் குறித்த நபருக்கு அதிஸ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டியுள்ளது. அமெரிக்காவின் பிரபல ‘பவர்போல்’ லொத்தரின் நேற்று முன்தினம் (டிசம்பர் 25) குலுக்கலில், ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை தட்டிச் சென்றுள்ளார். அமெரிக்க லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை வெறும் 2 டொலர் விலையுள்ள இந்த லொத்தர் சீட்டில், […]

அதிரடி 27 Dec 2025 8:30 pm

டக்ளஸ் வெளியே வருவது கடினம்!

துணை இராணுவ குழுவாக செயற்பட்ட ஈபிடிபியின் பெரும்பாலானவர்களை இலங்கை புலனாய்வு துறை பயன்படுத்தியிருந்த நிலையில் இராணுவத்திடமிருந்து துப்பாக்கிகளை பொறுப்பு எடுத்தவர்கள் பலர் இறந்து விட்டார்கள் பலர் வெளிநாடு சென்று விட்டார்கள் அவை எங்கே இருக்கின்றன என்பது எனக்குத்தெரியாதென டக்ளஸ் குற்றப்புலனாய்வு பிரிவிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை டக்;ளசுக்கு 2000 ஆம் ஆண்டில் இராணுவத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் பட்டியலில் ரி -56 துப்பாக்கிகள் 13 மற்றும் 9மிமி கைத்துப்பாக்கிகள் 6 பற்றிய பதிவுகளே காணப்படுகின்றன. அவற்றை தனது சொந்த பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும் வேறு பயங்கரவாத மற்றும் கொலை கொள்ளை செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது இல்லை எனவும் கையொப்பமிட்டு இவற்றை டக்ளஸ் பெற்றுக் கொண்டுள்ளார். அவ்வாறு தனது சொந்த பொறுப்பில் இருக்க வேண்டிய தனது பாதுகாப்புக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆயுதங்கள் தற்போது எங்கே இருக்கின்றன என்பதை தான் அறியவில்லை என தற்போது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் அவர் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்கள் சில நாட்டின் பயங்கர குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாளத்திற்கு சென்று இருப்பது அவர் இந்த விடயத்தில் இருந்து தற்போது தப்புவது கடினம் என்ற விடயம் ஊடக பரப்பில் பரவலாக பேசப்படுகிறது இதனிடையே கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணி நேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க குற்றப்புலனாய்வு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழு தலைவனான 'மாகந்துரே மதுசிடம்'நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த விசாரணைகளுக்கு அமைய, அவர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டார்.

பதிவு 27 Dec 2025 8:06 pm

Jana Nayagan Audio Launch: விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! - நெல்சன்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். இயக்குநர் நெல்சன் மேடையில் பேசுகையில், ஆடியோ லாஞ்சுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. ஆனா, இங்க பார்த்தால் அர்ஜெண்டினா ஃபுட்பால் மேட்ச் மாதிரி இருக்கு. மலேசியாவுக்கு வந்தும் சாரைப் பார்க்க முடியல. Nelson | நெல்சன் இப்போகூட ஸ்டேஜ்ல அவரைப் பார்த்தா அவர் சிங்கப்பூர்ல இருக்கிற மாதிரி இருக்கு (நீளமான ராம்ப் வால் மேடையை சுட்டிக் காட்டி நகைச்சுவையாக பேசுகையில்...) . விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! என்றார்.

விகடன் 27 Dec 2025 7:56 pm