அமெரிக்காவில் விசாவுக்காக 11 இந்தியர்கள் செய்த செயல் ; திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம்
அமெரிக்காவில் சிறப்பு குடியுரிமை பலன்களை பெறுவதற்காக விசா மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். யு விசா எனப்படும் இந்த சிறப்பு விசாவானது, சில வகை குற்றங்களில் பாதிக்கப்பட்டோ அல்லது மனம் அல்லது உடல் பாதிப்புகளை சந்தித்தவர்களுக்காக வழங்கப்படும். அவர்கள் பொலிஸ் விசாரணைக்கு உதவுவதற்காக, இந்த விசாக்களை பெற முடியும். கிரீன் கார்ட் இந்த யு விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் சட்டப்படி அமெரிக்காவில் பணியாற்ற முடியும். 5 முதல் 10 ஆண்டுகளில் அவர்கள் […]
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் Jaffna District மாவட்டத்தின் எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பாக… The post யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் appeared first on Global Tamil News .
ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?
ஈரான் போர் எதிரொலியாக பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடுவதாகவும் ஹவுதி அமைப்பினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி அளித்து வருகிறது. இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவிருப்பதாகவும் ஈரான் ஆதரவு யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போரிலிருந்து விலகியிருந்த ஹவுதி […]
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியமையே காரணம்
கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியமையால் , எரிபொருள் களஞ்சிய வசதிகள் கூட நாட்டில் இல்லை. அதனால் இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், உலகத்தில் தற்போது அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கின் போர் நிலைமை காரணமாக தற்போது ஈரான் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் குதங்கள் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன, இதனால் உலகில் எண்ணெய் விலை கடுகதி வேகத்தில் உயர்ந்து செல்கிறது. 68 டொலராக இருந்த எண்ணெய் விலை தற்போது 100 டொலருக்கும் அதிகமாகி உள்ளது. இதனால், சுவிஸ், அமெரிக்கா, கனடா பிரான்ஸ் என எல்லா நாடுகளிலும் எரிபொருள் விலையேற்றம் காணப்படுகிறது. இலங்கையை பொறுத்த வரைக்கும், மே மாதம் வரைக்கும் தேவையான எரிபொருளே உள்ளது. எரிவாயும் அப்படித்தான். எமது நாட்டை பொறுத்த வரைக்கும் எரிபொருளை களஞ்சியபடுத்த போதிய அளவு களஞ்சிய வசதிகள். இல்லை. 38 நாட்களுக்கு மேல் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது, கடத்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கி உள்ளனர். அவர்களால் எரிபொருள் உள்ளிட்டவற்றை களஞ்சிய படுத்தி வைக்க கூடிய பெரியளவிலான களஞ்சிய சாலைகளை கூட அமைக்க முடியவில்லை. அவர்களின் தோல்வியே இன்று நாட்டு மக்களை வாட்டுகின்றது. தற்போது மே மாதம் வரைக்குமான எரிபொருள் கையிருப்பில் உள்ளமையால் அவற்றை சிக்கனமாக பயன்படுத்தவே QR பொறிமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு, அவர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களுக்கும் தேவையான எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் தற்போதைய நாட்டின் நிலைமை இந்த அரசாங்கத்தால் ஏற்பட்டதில்லை. உலகளாவிய பிரச்சனை இதனை எமது நாட்டு மக்கள் பூரணமாக விளங்கிக்கொண்டுள்ளனர். இதனை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யலாம் என முனைகின்றார்கள்.அது அவர்களுக்கு தோல்வியே தரும் ஏனெனில் நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக வரிசைகள் ஏற்பட்டால் அதனை ஒழுங்கமைத்து குழப்பங்கள் இன்றி எரிபொருள் விநியோகிக்க அந்த அந்த பகுதி பிரதேச செயலர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகள் காணப்பட்டால் ,. வரிசையில் நிற்பவர்களுக்கான குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதற்கும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை வாரத்தில் 4 நாட்களே வேலை நாட்களாகவும் புதன்கிழமைகளில் விடுமுறை விடுவது தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகிறது. அத்துடன், பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள் தொடர்பில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. நாட்டு மக்கள் அநாவசிய போக்குவரத்துக்களை தவிர்த்து , இருக்கும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். எமது நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெறுவதற்காக சீனா , ரஷ்யா , இந்தியா போன்ற நாடுகளுடன் பேச்சுக்களை நடாத்தி வருகிறோம். தற்போது இந்தியாவில் இருந்து இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் வரவுள்ளன. அமெரிக்க - ஈரான் யுத்தம் இனியும் தொடர கூடாது. யுத்தத்தால் இரு நாடுகளும் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளன. இந்த யுத்தம் தொடருமானால் உலக நாடுகள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகும் எனவே இந்த யுத்தம் தொடர கூடாது. அதேநேரம் எமது நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொருளை மக்கள் எந்தவிதமான கலவரங்களும் இன்றி இருப்பதனை அனைவரும் பகிர்ந்து சிக்கனமாக எரிபொருளை பாவிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் எரிபொருள் தொடர்பில் சிக்கல் நிலைமைகள் எழுந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறை(QR Code) தீவகப்பகுதி மக்கள் பயன்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகள், நீண்ட தூரங்களுக்கு பயணிக்கும் பாரஊர்திகளுக்கான எரிபொருள் விநியோக பொறிமுறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம், கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவதுடன், எரிபொருளுக்காக நீண்ட வரிசை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை அந்தந்த பிரதேச செயலாளர்கள் மட்டத்தில் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் க.சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் G.H மாறப்பண, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் எஸ்.சிவகரன், பிரதேச செயலாளர்கள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஈரான்–இஸ்ரேல் மோதல்: பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து போப் ஆழ்ந்த கவலை
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்–இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும்… The post ஈரான்–இஸ்ரேல் மோதல்: பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து போப் ஆழ்ந்த கவலை appeared first on Global Tamil News .
ஈரானின் மணிமகுடத்தைத் தாக்கிய அமெரிக்கா ; முக்கிய ஸ்தலத்தை நோக்கி பறந்த ஏவுகணைகள்
ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில், 90 சதவீதம் நடக்கும் கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தது. ஈரான் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தை முடக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கார்க் தீவு ஈரானின் புஷேர் மாகாண கடற்கரையிலிருந்து 28 கி.மீ., துாரத்தில் பாரசீக வளைகுடாவில் கார்க் தீவு அமைந்துள்ளது. […]
QR எரிபொருள் முறைமைக்கு எதிர்ப்பு ; வைத்தியர்களின் கடும் குற்றச்சாட்டு
QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது வீடுகளில் இருந்து தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், தரநிலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாக வைத்தியர்கள், கடமைக்காக வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்குக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் சுகாதார சேவை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் […]
நீதிமன்றங்களுக்கு மாநில அரசு பெயர் சூட்ட முடியாது.. விஜய்யை கலாய்த்து தள்ளிய சாட்டை துரைமுருகன்!
நடிகர் செந்தில் கூறுவது போல் 'மலையைத் தூக்கி வைத்தால் தூக்குகிறேன்' என்பது போல ஓட்டு போடுங்கள், நான் முதலமைச்சராகி விடுகிறேன் என்று விஜய் காமெடி செய்வதாக சாட்டை துரைமுருகன் கிண்டல் அடித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க்கப்பலை அனுப்புங்கள்; சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை
வாஷிங்டன், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் அந்நாட்டில் உள்ள ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளது, இதனால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பலை அங்கு அனுப்ப வேண்டும் என அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக […]
மம்தாவின் மாஸ்டர் மூவ்.. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே மேற்கு வங்க அரசின் அதிரடி அறிவிப்பு!
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 29 ஆம் தேதி என்று இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஈரானின் வான் பாதுகாப்பு சாதன உற்பத்தி தளங்களை தாக்கிய இஸ்ரேல்
டெல் அவிவ் ஈரானின் விண்வெளி கழகம் மற்றும் அந்நாட்டின் பல்வேறு வான் பாதுகாப்பு சாதன உற்பத்தி தளங்களை இஸ்ரேல் விமான படை இன்று தாக்கியுள்ளது. இதுபற்றி இஸ்ரேல் விமான படை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரான் விண்வெளி கழகத்தின் முதன்மையான ஆய்வு மையம் ஒன்று மற்றும் ஒரு வான் பாதுகாப்பு சாதன தயாரிப்பு ஆலை ஒன்றை தாக்கினோம். அந்த ஆய்வு மையத்தில், ராணுவ செயற்கைக்கோள்களை உருவாக்குவது, நுண்ணறிவு தரவு உள்ளிட்ட ஆராய்ச்சி பணிகளுக்கான முக்கிய ஆய்வகங்கள் இருந்தன. […]
கரூர் விசாரணை நிறைவு.. விஜய்க்கு பாஜக மேலிடம் முக்கிய பதவி? ஆதவ் அர்ஜூனா போட்ட ட்வீட்!
டெல்லியில் கரூர் சிபிஐ வழக்கு நிறைவடைந்த பிறகு ஆதவ் அர்ஜூனா போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தே.ஜ. கூட்டணியில் தவெக இணைகிறதா? யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.. எடப்பாடி பதில்!
இதுவரை அதிமுக தரப்பில் இருந்தோ அல்லது அதிமுக கூட்டணி கட்சிகளிடமிருந்து தவெகவிடம் எந்தவித கூட்டணி பேச்சு வார்த்தைகளும் நடத்தப்படவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி உள்ளார்.
பல கோடி மதிப்புள்ள போர் விமானங்களை இழந்த அமெரிக்கா ; சத்தமில்லாமல் ஈரான் செய்த சம்பவம்
ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க விமானப்படையின் ஐந்து, ‘கே.சி., – 135’ ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளன. உலக அளவில் பல சக்தி வாய்ந்த போர் விமானங்களை கொண்ட நாடாக இருக்கிறது அமெரிக்கா. பல நாடுகளுக்கு போர் விமானங்களை ஏற்றுமதி செய்து வரும் அமெரிக்கா, ஈரான் போரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களை இழந்துள்ளது. போர் விமானங்கள் அதன்படி போர் தொடங்கியபோது குவைத்தில், மூன்று, ‘எப் – 15’ ரக விமானங்கள் தவறுதலாக சுட்டு […]
களுத்துறை மற்றும் காலி மக்களுக்கு அவசர அறிவிப்பு ; பல இடங்களில் நீர் விநியோகம் திடீர் தடை
களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி, களுத்துறை மாவட்டத்தில், வஸ்கடுவ, மொல்லிகொட, மொறந்துடுவ, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, கட்டுக்குருந்த மற்றும் பொம்புவெல பகுதிகளிலும், காலி மாவட்டத்தின் நாகொட பகுதியிலும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திருத்தப்பணிகளைத் தொடர்ந்து, நாளை (16) காலை 10 மணிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் […]
கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் - கோட்டாபயவும்!
கே.பி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கோட்டாபயவின் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் - கோட்டாபயவும் தான்என தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா. சிறையில் அடைத்து வைக்கப்பட்டவில்லை. பின்னர் அவர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.கே.பியிடம் இருந்த கப்பல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணம் போன்றவற்றுக்கு என்ன நடந்தது என்று கோட்டாபய தான் அறிவார். அதன் பின்னர் கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் - கோட்டாபயவும் தான். அவர்கள் என்ன செய்தார்கள் என எங்களுக்கு தெரியாது. கே.பிக்கு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மனசாட்சியை அடகு வைத்த பழனிசாமி.. ஈகை பெருவிழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு!
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க.தான் என்று சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற ஈகைப் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை- ஆராயுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவு
எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, அரச, தனியார் துறை பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயுமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களைத் தொடர்ந்து, அத்தியாவசிய சேவைகளைப் பராமரிப்பதில் உள்ள சவால்கள் குறித்து சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் உயர்மட்டக் கலந்துரையாடலை
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஸ்பிரிட் மீடியா இணைந்து தங்களது புதிய புராஜெக்டை (#StoneBench18) இன்று அறிவித்துள்ளன.
வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு?
போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையில் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார் . இந்தக் கலந்துரையாடலின் போது எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பிலும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக QR முறையை விரைவாக முறைப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன ஓட்டிகளுக்கு இனி அதிகம் செலவாகும்.. ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் கட்டணம் உயர்வு!
ஏப்ரல் 1ஆம் தேதி ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் வாங்குவதற்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன் பிறகு அதிக செலவு செய்து தான் வாங்க வேண்டும்.
அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்
2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடமாற்றங்கள் அமுலாகும் திகதி குறிப்பிடப்படாத அனைத்து இடமாற்ற உத்தரவுகளும், குறித்த திகதியிலிருந்தே நடைமுறைக்கு வர வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இடமாற்றங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீடுகள் மீதான தீர்மானங்கள் தற்போது அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்களை அரச சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட […]
பூங்காவில் குப்பைத் தொட்டிக்குள் இருந்து ஆண் உடல் மீட்பு
பிரித்தானியாவின் கோவென்ட்ரி (Coventry) பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில், குப்பைத் தொட்டிக்குள் இருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், கோவென்ட்ரி டெய்ம்லர் வீதிக்கு (Daimler Road) அருகிலுள்ள கேஷ் பூங்காவில் (Cash’s Park) சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர், அங்கிருந்த குப்பைத் தொட்டிக்குள் மனித உடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் உடனடியாக வழங்கிய தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலத்தை […]
மத்திய கிழக்கு போர் தாக்கம் ; அத்தியாவசிய சேவைகள் குறித்து ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது குறிப்பாக சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களால் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஷோபனா கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு 'தலைவர் 173' படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தியில் புதிய மைல்கல்: காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைப்பு ஆரம்பம்!
வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர… The post யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தியில் புதிய மைல்கல்: காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைப்பு ஆரம்பம்! appeared first on Global Tamil News .
தமிழ்நாடு & புதுச்சேரி தேர்தல் தேதி மாற்றம்.. 30 ஆண்டுகால மரபை உடைத்த தேர்தல் ஆணையம்- காரணம் ?
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில், இந்த 2026 தேர்தல் தேதியை மாற்றியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லியில் ஆஜராகி இருந்தார்.
“Operation True Promise IV” – நெதன்யாகுவை குறிவைத்து ஈரான் கடும் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், “Operation True Promise IV” என்ற பெயரில் 53-வது கட்ட… The post “Operation True Promise IV” – நெதன்யாகுவை குறிவைத்து ஈரான் கடும் எச்சரிக்கை! appeared first on Global Tamil News .
ஹைதராபாத்தின் கோகாபேட் பகுதியில் இந்தியாவின் மிகப்பெரிய 'டால்பி சினிமா' (Dolby Cinema) திரையுடன் கூடிய 'அல்லு சினிமாஸ்' மல்டிபிளக்ஸ் திரையரங்கம் மார்ச் 14 முதல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் மோதல் தீவிரம்: 3,138 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!
இஸ்ரேல் மற்றும் ஈரான்–லெபனான் இடையிலான சமீபத்திய போர்மூலம் இதுவரை 3,138 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலின்… The post மத்திய கிழக்குப் பகுதியில் மோதல் தீவிரம்: 3,138 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி! appeared first on Global Tamil News .
தேர்தல் நடத்தை விதிகள் அமல்- பணம், பரிசு கொடுத்தால் கடும் நடவடிக்கை
தேர்தல் அறிவிப்புடன் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியாவிலேயே எரிவாயு 70 சதவீதத்திற்கு மேல் அதிகமாக உற்பத்தி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
தேமுதிகவுக்கு அதிக இடங்கள்..கூட்டணியில் புகைச்சலை கிளப்பிய பிரேமலதா- சிக்கலில் திமுக
தவெக விஜயுடன் பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026 தேதி அறிவிப்பு… ஏப்ரல் 9 ஒரே கட்டம், மே 4 வாக்கு எண்ணிக்கை!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 126 தொகுதிகள் கொண்ட அசாம் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக நடத்தும் வகையில் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஹாரர் படமான 'தும்பட்'டை இயக்கிய ராஹி அனில் பார்வே, தற்போது வெறும் 33,000 ரூபாய் செலவில் 'மன் பிசாச்' என்ற புதிய பரிசோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
வைரமுத்துவை வாழ்த்தி ட்வீட் போட்ட ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு சின்மயி அளித்த பதிலை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் பவன் கல்யாண் ரசிகர்களும் சின்மயியை விமர்சிக்கிறார்கள்.
40 ஆண்டுகளின் பின்னர் காரைநகர் வீதிக்கு விடிவு
வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். […]
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: தேதி அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்- மக்களே நோட் பண்ணுங்க!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுகான வாக்குப்பதிவு ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரளா சட்டமன்றத் தேர்தல் தேதி வெளியீடு...140 தொகுதிகளில் வாக்குப்பதிவு
கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்பு
வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி […]
கருங்கடலில் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்
மாஸ்கோ, ரஷியா, உக்ரைன், துருக்கி, ருமேனியா, ஜார்ஜியா, பல்கேரியா ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்ட சிறிய கடல் கருங்கடல் ஆகும். ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியிலும், மேற்கு ஆசியாவிலும் அமைந்துள்ள இந்த கடல் 4 புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் கஜகஸ்தானில் கச்சா எண்ணெய் வாங்குவாகுவதற்காக கருங்கடலில் சென்றுகொண்டிருந்தது. ரஷியாவின் நொவொரோசிக் துறைமுகம் அருகே இன்று அதிகாலை சென்றபோது கச்சா எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த […]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. இனி இதுதான் ரூல்ஸ்.. விவரம் இதோ!
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
சுன்னாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூவர் கைது –போதைப்பொருட்கள் , வாள் என்பவை மீட்பு
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட கட்டுவான் பகுதியில் மூவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் , மற்றையவரிடமிருந்து2 கிராம் 220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மூன்றாவது நபரிடமிருந்து வாள் […]
யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்தி: காரைநகர் சுற்றுவட்ட வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் சுற்றுவட்ட வீதியைப் புனரமைக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.… The post யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்தி: காரைநகர் சுற்றுவட்ட வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
அமெரிக்காவின் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஜார்ஜ் காலவேயின் சர்ச்சை கருத்தும் விவாதமும்!
பிரித்தானிய அரசியல்வாதியான ஜார்ஜ் காலவே (George Galloway) வெளியிட்டுள்ள ஒரு கருத்து தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை… The post அமெரிக்காவின் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஜார்ஜ் காலவேயின் சர்ச்சை கருத்தும் விவாதமும்! appeared first on Global Tamil News .
காமுகர்களாக மாறிய காவலர்கள்.. கையாலாகாத திமுக ஆட்சி.. கோவை விவகாரத்துக்கு தலைவர்கள் கண்டனம்!
கோவையில் பாலியல் தொல்லை விவகாரத்தில் காவல் அதிகாரி கைது செய்யப்பட்டதில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக நயினார் நாகேந்திரன், அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பிரஸ் மீட்டில் டென்ஷனாகி 'ஏய்'னு கத்திய விஜய்: வீடியோவை ஷேர் செய்த ரஜினி ரசிகர்கள்
விஜய்க்கு அதிக மனவலிமை உள்ளது என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் கத்திய வீடியோவை ரஜினிகாந்த் ரசிகர்கள் ஷேர் செய்கிறார்கள்.
பண்டிகை கால எரிபொருள் நெருக்கடியை தவிர்க்கவே QR - யாழில் பிமல் தெரிவிப்பு
பண்டிகை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே 'கியூ.ஆர்'முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியனவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சில நிர்வாகச் சிக்கல்கள் வெகுவிரைவில் தீர்க்கப்படும். யாழ். மாவட்டத்தின் தீவுப் பகுதிகளிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறியுள்ளமையால் அப்பிரதேசங்கள் சோபையிழந்து காணப்படுகின்றன. நாம் தற்போது உட்கட்டமைப்பு அபிவிருத்திகளைச் செய்வதால் அப்பகுதி மக்கள் மீண்டும் தமது சொந்தப் பிரதேசங்களில் வந்து குடியமரலாம். மேலும், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே 'கியூ.ஆர்'முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போர்ப் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடருமாக இருந்தால், அது உள்நாட்டில் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை.. காவல் கண்காணிப்பாளர் கைது.. வலுக்கும் கண்டனங்கள்!
கோவையில் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கீவ் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 வருடங்களை கடந்து விட்டன. அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத சூழலில், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களை இலக்காக கொண்டு 430 டிரோன்கள் மற்றும் 68 ஏவுகணைகளை வீசி, ரஷியா நேற்றிரவு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சுமி, கார்கிவ், நிப்ரோ மற்றும் மிகோலைவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இதுபற்றி […]
'லப்பர் பந்து', 'லவ்வர்' போன்ற வெற்றிப் படங்களின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஏப்ரல் 4 அன்று மலேசியாவில் தனது பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதில் நடிகர் அர்ஜுன் தாஸ் சிறப்புத் தோற்றத்தில் பங்கேற்கிறார்.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மூன்றாவது வாரமாக நீடிப்பதால், பல வளைகுடா நாடுகள் தொடர்ந்து ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பதிவு செய்துள்ளன. பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நடத்தும் அல் கார்ஜ் கவர்னரேட்டின் மீது ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை சனிக்கிழமை இரவு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை வீசியதாகக் கூறியது. ஈரானிய தாக்குதல்கள் மிகவும் கடுமையாக இருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஃபுஜைரா எமிரேட்டில் உள்ள வான் பாதுகாப்புப் படையினர் ஒரு ட்ரோனை இடைமறித்து. அதன் இடிபாடுகள் விழுந்து தீப்பிடித்தன. ஃபுஜைரா துறைமுகம் ஒரு முக்கிய சேமிப்பு மற்றும் டிரான்ஷிப்மென்ட் மையமாகும், குறிப்பாக எண்ணெய்க்கு. குவைத் மற்றும் கத்தார் நாடுகளும் சனிக்கிழமை பிற்பகுதியில் வேலைநிறுத்தங்களைப் பதிவு செய்தன.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 20 பேரைக் கைது செய்தது ஈரான்!
இஸ்ரேலுக்கு தகவல்களை அனுப்ப முயன்றதற்காக வடமேற்கு ஈரானில் 20 பேரை ஈரான் கைது செய்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவ தளங்கள் பற்றிய விவரங்களை இஸ்ரேலுக்குப் பகிர்ந்து கொண்டதாக கைதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலின் புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளது. தரையில் தகவல் அளிப்பவர்களின் ரகசியத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டியது. மேற்கு அஜர்பைஜான் மாகாண வழக்கறிஞர் அலுவலகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி இச்செய்தி வெளிவந்துள்ளது.
கூடுதல் தொகுதிகள்.. இதுவரை திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை- வேல்முருகன் ஆதங்கம் !
கூடுதல் தொகுதிகள் கேட்டும் இதுவரை திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை எனத் தவாக வேல்முருகன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் சார், நான் திமுகவில் சேர்ந்து மக்கள் சேவை செய்ய ரெடி: நடிகை விஜயலட்சுமி
மீண்டும் தமிழ்நாட்டில் சந்தோஷமாக வாழ விரும்புவதாகவும் அதற்கு முதல்வர் ஸ்டாலின் சார் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார் நடிகை விஜயலட்சுமி. மேலும் அரசியலுக்கு வர தயாராகவும் இருக்கிறார்.
திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்- எப்படி சமாளிக்கும் திமுக..
தமிழக சட்டமன்றத் தேர்தல் வெகு விரைவில் நடைபெற உள்ளது இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படவிருக்கிறது இந்த சூழலில் திமுகவில் கூட்டணி கட்சிகள் விவகாரம் பூதாகரமாக வெடித்து இருக்கிறது.
சின்னத்திரை ராணி ஆல்யா மானசா தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் தற்போதைய மனநிலை குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கவித்துவமான பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜயிடம் ஒரு மணி நேரத்தை கடந்து விசாரணை.. நாளையும் விசாரணை தொடரும் - CBI தகவல்!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் ஒரு மணி நேரத்தை கடந்து விசாரணை நடந் துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரீல்ஸ் பாராட்டும் முதல்வர்.. மரணங்களைச் சுட்டிக்காட்டி ஸ்டாலினை டேட்டாவால் திணறடித்த ராமதாஸ்!
அண்மையில் கடலூரை சேர்ந்த இரு சிறுவர்களுடன் ரீல்ஸ் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்து உள்ளார்.
இன்று முதல் நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு மீண்டும் கியூ.ஆர். குறியீட்டு முறை
இலங்கை வலுசக்தி அமைச்சுஅறிவித்ததன்படி, நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூ.ஆர். (QR) குறியீட்டு முறைமையின் கீழ்… The post இன்று முதல் நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு மீண்டும் கியூ.ஆர். குறியீட்டு முறை appeared first on Global Tamil News .
என்னது, சிலிண்டருக்கு தட்டுப்பாடா? இல்லவே இல்லை.. அரசு முக்கிய நடவடிக்கை!
பொதுமக்களுக்கு போதிய அளவில் சமையல் சிலிண்டர் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
வார்த்தை வித்தகர் பார்த்திபன் காதல், கள்ளக்காதல் பற்றி கமெண்ட் செய்தது குறித்து சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். இந்நிலையில் ஹைதராபாத்துக்கு கிளம்பிச் சென்றிருக்கும் பார்த்திபன் வெளியிட்ட வீடியோ கவனம் ஈர்த்திருக்கிறது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டாரா? காயத்துடன் கிடக்கும் புகைப்படம் வைரல்
டெல் அவிவ் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் தகவல்கள் பரவி வருகின்றன. இதில், சமூக ஊடகத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் நெதன்யாகு போன்ற முகம் கொண்ட நபர் ஒருவர் காயத்துடன், இடிபாடுகளுக்கு இடையே காணப்படுகிறார். அவருக்கு வீரர்கள் உதவிடும் காட்சி […]
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர்க்கப்பல்கள் அனுப்புமாறு பிாித்தானியாவிடம் டிரம்ப் கோரிக்கை
அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கியமான கடல் வர்த்தக பாதையான ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை பாதுகாக்க… The post ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர்க்கப்பல்கள் அனுப்புமாறு பிாித்தானியாவிடம் டிரம்ப் கோரிக்கை appeared first on Global Tamil News .
காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது
பொத்துவில் பிரதேசத்தில் பானமை சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளை கடத்திய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பானமை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குமண தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், சாஸ்திரவேல விசேட அதிரடிப்படை ( அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (14) மேற்கொண்ட சோதனையின் போது, 70 கிலோ கிராம் காட்டெருமை (குளுமாடு) மற்றும் மான் இறைச்சிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். வெள்ளை நிற கார் ஒன்றில் இவ் இறைச்சியைக் […]
நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு
நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அரசடி நகர் வட்டாரத்திற்கு உட்பட்ட பிர்தௌஸ் ஜும்ஆ பள்ளிவாசல், மஸ்ஜிதுல் பிலால், மஸ்ஜிதுல் ஹிதாயா, மஸ்ஜிதுல் ஹைர், மஸ்ஜிதுல் ஜெமிலா, மஸ்ஜிதுல் நூர், மஸ்ஜிதுல் மர்ஜான் மற்றும் மஸ்ஜிதுல் அலியார் ஆகிய பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் பழுதடைந்திருந்த தெரு மின் விளக்குகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இவ்வேலைத்திட்டம் விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை […]
விராட் கர்ணா நடிப்பில் உருவாகி வரும் 'நாகபந்தம்' படத்தின் முதல் பாடலான 'நமோ ரே' இன்று மார்ச் 15-ம் தேதி தமிழில் வெளியானது. ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி கோயில் செட்டில் எடுக்கப்பட்ட இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வாளுடன் மூவர் கைது
யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் ஆயுதத்துடன் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுன்னாகம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கட்டுவான் பகுதியில்… The post யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வாளுடன் மூவர் கைது appeared first on Global Tamil News .
இபிஎஸ் முதலமைச்சர்? விஜய் எதிர்க்கட்சி தலைவர்? கேப்டன் ரூட்டை கையில் எடுக்கும் பாஜக...
டெல்லியில் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் உள்ள விஜயிடம், கேப்டன் விஜயகாந்த் பாணியை பாஜக கையில் எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் ராணுவம் மீது ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல்; 14 வீரர்கள் பலி
காபூல் ஆப்கானிஸ்தான் மீது கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த எல்லை கடந்த வன்முறையில், ஆப்கானிஸ்தானில், இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். 193 பேர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. தகவல் தெரிவிக்கின்றது. அவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 14 பேர் […]
சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியின் புகழ்பெற்ற 'இன்ஸ்டிங்க்ட்ஸ் 2026' கலை விழாவில் நடிகை ஆண்ட்ரியா ஜெரமையா தனது இசைக்குழுவினருடன் இணைந்து வழங்கிய அதிரடி இசை நிகழ்ச்சி வைரலாகி வருகிறது.
டெல்லி விசாரணை வளையத்தில் விஜய்.. அடுத்த டார்கெட் செந்தில் பாலாஜி- தீவிரம் காட்டும் CBI !
டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் விசாரணைக்காக மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகப்போவதாக செந்தில் பாலாஜி தரப்பு அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முன்னாள் எம்பி எச்.எம்.எம் ஹரீஸ்-ரவூப் ஹக்கீம் எம்.பி சந்திப்பு
25 ஆவது நோன்பை நோற்பதற்கான சஹர் உணவை உட்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்றில் முன்னாள் எம்பி எச்.எம்.எம் ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். குறித்த சந்திப்பு இன்று(15) அதிகாலை அம்பாறை மாவட்டம் மருதமுனை அக்பர் வீதியில் உள்ள முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம் .எஸ். எம் .ஹாரிஸ்( நவாஸ்)ஐனுல் முன்ஸிலா ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் […]
உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு
நோன்பு காலத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதாரமான உணவு அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே .மதன் தலைமையில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது. இந்த பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கடந்த காலங்களிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை […]
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி
அம்பாறையின் பணமை பகுதியில் உள்ள இலங்கை கடற்படை அப்பகுதியில் சுற்றித்திரிந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான சிகிச்சை அளிக்க அண்மையில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுக்கு உதவி செய்துள்ளனர். தென் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரகாரம் இலங்கை கடற்படை கப்பல் மகாநாக முகாம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை அவதானித்திருந்தது. இதற்கமைய அம்பாறை வனவிலங்கு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அம்பாறை வனவிலங்கு சுகாதாரப் பிரிவின் சிரேஷ்ட கால்நடை மருத்துவர் […]
தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு… SIR முதல் 4 முனைப் போட்டி வரை- கவனம் ஈர்த்த 3 விஷயங்கள்!
இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று மாலை அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் தமிழக அரசியலில் நிகழவிருக்கும் மாற்றங்கள் மற்றும் பின்னணி கணக்குகளை விரிவாக பார்க்கலாம்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முன்கூட்டியே கிடைக்கும் அரசி, கோதுமை.. அரசு உத்தரவு!
ஜூன் மாதம் வரையிலான அரிசி, கோதுமை கையிருப்பு அளவை மாநில அரசுகள் முன்கூட்டியே வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை வேடம் : ரஷிய எண்ணெய் விவகாரத்தில் ஈரான் கடும் விமர்சனம்
தெஹ்ரான், ரஷியா-உக்ரைன் பிரச்சினையை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை மேற்கத்திய நாடுகள் நிறுத்தின. ஆனால் ரஷியாவின் அதீத தள்ளுபடியை பயன்படுத்திய இந்தியா அதிக இறக்குமதியில் ஈடுபட்டன. இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா மீது 50 சதவீதம் வரிவிதித்தார். இதனை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக இந்திய பிரதமர் மோடி கூறியதாக டிரம்ப் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்தது. இந்நிலையில் […]
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்துத் தெரியாமலேயே, இயக்குனர் மீதுள்ள நம்பிக்கையில் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார்.
இடியுடன் கூடிய கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகரித்த வெப்பநிலை குறிப்பாக மத்திய, […]
எரிபொருள் நெருக்கடி –அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!
தெரிவு செய்யப்பட்ட சில அரச ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு தரப்பினரிடமிருந்து இது குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுமன ஆலோக்க பண்டார தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி இந்த நிலையிலேயே எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும் நோக்கில் இந்த திட்டம் குறித்து […]
QR குறியீடு சிக்கலா? ; புதிய வாகனப் பதிவு குறித்து அரசின் விசேட அறிவிப்பு
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். முன்னர் QR குறியீட்டைப் பெற்று, தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் எவ்விதத் தடையுமின்றி தமது புதிய QR குறியீட்டை இணையதளத்தின் ஊடாக உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் அல்லது தொலைபேசி […]
வடநாட்டு திருமணத்தில் த்ரிஷா: வீடியோவில் இருந்த பெண்ணை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
த்ரிஷா கிருஷ்ணன் தான் கலந்து கொண்ட வட நாட்டு திருமணத்தில் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டிருக்கிறார். மேலும் சில புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார் அவர்.
காத்தான்குடி பகுதியில் கரையொதுங்கிய மர்மப்பொருள் –கடற்படையினர் விசாரணை
video link- https://fromsmash.com/dKlH~2qMww-dt மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையில் பாரிய அளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த பொருள் கடந்த புதன்கிழமை (13) கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். சுமார் 25 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் ரெஜின் வகை பொருளால் செய்யப்பட்டதாக காணப்படுகிறது. கப்பல் தரைதட்டும் போது அதன் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் தடுப்பு அமைப்பாக இது இருக்கக்கூடும் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த […]
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11 குறித்து மகேந்திரசிங் தோனி தீர்மானித்துவிட்டதாகவும், அப்போது ஸ்டார் வீரரிடம் உனக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்காது என தோனி தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
“நாங்கள் வீரர்கள்… தனித்து நிற்கிறோம்” – விஜய் அரசியல் குறித்து சீமான் கருத்து
தேர்தலில் தவெக தலைவர் விஜய் தனித்து விடப்பட்டது குறித்து கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான கருத்து தெரிவித்துள்ளார்.
ஹார்மூஸ் ஜலசந்தியில் இந்திய கொடியுடன் கூடிய 2 சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
தெஹ்ரான் மேற்காசிய போரின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. […]

26 C