போர் அச்சுறுத்தல் விடுக்கும் ஜப்பான்…ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முறையிட்ட சீனா
தைவான் தொடர்பில் ஜப்பான் உடனான மோதலை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது சீனா. தற்காத்துக் கொள்ளும் தைவான் விவகாரத்தில் ஜப்பான் போர் அபாயத்தை ஏற்படுத்துவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இரண்டு வாரங்களாக நீடிக்கும் சர்ச்சையில், இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான மொழியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்றும் சீனா சபதம் செய்துள்ளது. சீனாவின் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான தூதர் ஃபூ காங் வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு எழுதிய கடிதத்தில், தைவான் மீதான […]
கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது
யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏழாலை பகுதியில் பெண்ணொருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற… The post கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது appeared first on Global Tamil News .
ஓய்வுபெற்ற அரச அதிகாரிக்கு இரவில் காத்திருந்த அதிர்ச்சி ; பறிபோன பல இலட்சங்கள்
ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொள்ளைச் சம்பவம் மொரந்துடுவ, மெலேகம பகுதியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு.. மனநல மறுவாழ்வு நிறுவனத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரச அதிகாரியின் மூன்று இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியே கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளைச் சம்பவம் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாலியில் டெல் அவிவ் விளையாட எதிர்ப்பு: வெடித்த வன்முறை..ரொக்கெட்டுகளை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
இத்தாலியில் இஸ்ரேலிய கூடைப்பந்து அணி விளையாட கிளம்பிய எதிர்ப்பு வன்முறையாக மாறியது. இஸ்ரேலுக்கு எதிர்ப்பு காஸாவில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடுமையான இஸ்ரேல் கண்டனங்களை சந்தித்து வருகிறது. விமர்சகர்கள் பலரும் சர்வதேச கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து அந்நாட்டை விலக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்த நிலையில், இத்தாலி நாட்டிலும் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இஸ்ரேலின் டெல் அவிவ் கூடைப்பந்து அணி, யூரோ லீக் போட்டியில் விளையாட எதிர்ப்பு கிளம்பியது. ரொக்கெட் […]
யாழ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ; காலநிலை மாற்றத்தால் வேகமெடுக்கும் ஆபத்து
யாழ் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த டெங்கு தொற்று கடந்த இரு வாரங்களுக்குள் வேகமாக அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர் எச்சரித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (21) பிற்பகல் இடம்பெற்றது. டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டத்தில், வடக்கு மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட செயலர் உள்ளிட்டோரின் பிரசன்னத்துடன் பொது […]
கிளிநொச்சியில் தண்ணீர் பிரச்சினையாம்?
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் தடையாக உள்ளனர் இதனால் இம்மாவட்ட மக்கள் மிகவும் ஆபத்தான நோய் மற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதோடு, மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் தடை ஏற்பட்டுள்ளது எனமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (22) அவரது அலுவலகததில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்புச் சபை கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெற்று சுத்திகரித்து வழங்கி வருகிறது. ஆனால் கிளிநொச்சி குளமானது கிளிநொச்சிநகரின் அனைத்து கழிவுகளும் வந்து சேர்கின்ற குளமாக காணப்படுவதோடு, ரை ஆறு வழியாக இரத்தினபுரம் பாலம் ஊடமாக கிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகள் உட்பட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற பல கழிவுகள் கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. ஆத்தோடு கிளிநொச்சி குளம் மற்றும் அதன் நீரேந்து பகுதிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ளவர்களின் மலக்கழிவுகளும் கிளிநொச்சி குளத்திற்கு வருகிறது. இதன் காரணமாக கிளிநொச்சி குளம் கழிவுகள் நிறைந்த குளமாக காணப்படுகிறது. இந்த குளத்திலிருந்தே நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்கு விநியோகிப்படுகிறது. ஆனால் நீர் வழங்கல் வடிகாலமைப்புசபையினரிடம் காணப்படுகின்ற நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இக் கழிவுகள் அனைத்தையும் முழுமையாக சுத்திகரிக்கும் இயலுமை காணப்படவில்லை. அதனால் கடந்த சில வாரங்களாக கிளிநொச்சி மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரின் தரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நிலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளது. அதிகளவு விவசாய நடவடிக்கைகளில் அதிகளவு இராசயனங்களின் பயன்பாட்டால் இவ்வாறு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந் நீரை குடிநீராக பயன்படுத்துகின்ற மக்களில் பலர் நிரந்தர சிறுநீரக நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். முக்கியமாக கண்;டாவளை பிரதேசத்தில் மூன்று வீதமான மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு நோய் ஏற்பட்டுள்ளது இதற்கு பிரதான காரணம் குடிநீரை எனக் கூறப்படுகிறது. எனவே இந்த மக்களை பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும். இந்த பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவேண்டிய பொறுப்பு மாவட்டத்தின் உள்ள பொறுப்பு வாய்ந்த அனைவருக்கும் உண்டு ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக ஆயிரக்கணக்கான பொது மக்களின் சிறுநீரகங்களை அடைவு வைக்க முடியாது. எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 24 வீதமான மக்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதனை சுத்தமான பாதுகாப்பான நீராக விநியோகிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.இதற்கு முன் எவர் தடை ஏற்படுத்தினால் அவர்களை கருத்தில் எடுக்காது மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க பொறுப்பு வாய்ந்தவர்க்ள முன்வர வேண்டும். அத்தோடு பரந்தன் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் கௌதாரிமுனை சுற்றுலாத்தளம் என்பவற்றுக்கு நீர் வசதியினை வழங்கின்ற போதே மாவட்டம் அபிவிருத்தியை நோக்கி செல்லும் அறிவியல் நகர் பல்லைகழகம், இரண்டு பெரிய ஆடைத்தொழிற்சாலைகள், ஆனையிறவு உப்பளம் போன்றவற்றுக்கும் தடையின்றிய நீர் விநியோகம் அவசியம் இவை மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயம். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சுத்தமான குடிநீர் விநியோகத்தை சம்மந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும். கிளிநொச்சி கழிவுகள் தேங்கி நிற்கின்ற குளமான கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெறுவதனை நிறுத்தி இரணைமடுவிலிருந்து நீரை பெற்று சுத்திகரித்து கிளிநொச்சி மக்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு கோருகின்றேன். இரணைமடு குளத்தை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் ஏக போக உரிமை கோர அனுமதிக்க முடியாது அவர்களின் நலன்களுக்காக மாவட்ட மக்களின் நலன்களை பகடையாக்க முடியாது இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளம் என்பது சட்டரீதியான பதிவுக்குட்பட்ட ஒரு அமைப்பு அல்ல என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக ஊடகவியலாளர் ஒரு தகவலை பெற்று வெளிப்படுத்தியிருகின்றார். எனவே சட்டரீதியற்ற ஒரு அமைப்பின் கருத்துக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற குடிநீரை விநியோகிக்க அனுமதிக்க முடியர்து. எனவே இதற்கு விரைவில் உரிய தீர்வு காணப்படவில்லை எனின் பாதிக்கப்பட்ட மக்களுடன் வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
22 வயதில் ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிய யூடியூபர் இஷார் சர்மா வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தகர்ந்த காசா போர் நிறுத்தம்: இஸ்ரேலிய வான் வழித் தாக்குதலில் 9 பேர் பலி
காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையில் நீடித்த 5 வார போர் நிறுத்தம் தற்போது தகர்ந்துள்ளது. காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 9 பேர் வரை கொல்லப்பட்டதாக காசாவின் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. நிலைமை மோசமடைந்ததே காசாவில் நடந்த மூன்று வான்வழித் […]
குரல் இனிது... ஆனால் குணம்? - ராஜதந்திரிகளான குயில்களின் மறுபக்கம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் குக்கூ... என்ற அந்த ஒற்றைக் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. பாவியங்கள் தொடங்கி நவீன கவிதைகள் வரை இனிமைக்கு இலக்கணமாகச் சுட்டப்படுவது குயிலின் குரல் தான். ஆனால், அந்த இனிமையான குரலுக்குப் பின்னே மறைந்திருக்கும் தந்திரமும், சுவாரஸ்யமான வாழ்வியலும் பலரும் அறியாதது. அவற்றைப் பற்றிய ஒரு ருசிகரப் பயணம் இதோ! பாவியங்களும் , காவியங்களும் , பாடல்களும் , கவிதைகளும் இனிமைக்கு உதாரணமாய் குயில்களின் குரலையே எடுத்துக்காட்டாய் , உவமையாய் சொல்கின்றன . மிக இனிமையான சத்தத்தை எழுப்புவதில் குயில்கள் கைதேர்ந்தவை என்பதை நாம் அறிவோம் . ஆச்சரியம் என்னவென்றால், பெண் குயிலைக் காட்டிலும் ஆண் குயிலின் குரலில்தான் இனிமை அதிகம். கேட்பதற்கும் , ரசிப்பதற்கும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரவல்லது . Common cuckoo (Cuculus canorus) குயில்களின் சத்தத்தை அதிகாலையிலும் , அந்தி மாலை பொழுதிலும் நாம் கேட்டிருப்போம் . ஆனால் அவற்றை கண்களால் பார்த்திருப்போமா என்றால் அதிக பதில்கள், `இல்லை’ என்று தான் வருகின்றன . ஆண்குயில்களில் உடல் முழுக்க கருநிறமாகவும் , கண்கள் அடர் சிவப்பாகவும் காட்சியளிக்கும் . பெண்குயில்கள் பழுப்பு நிறமாகவும் , உடல் முழுக்க வெண்ணிற புள்ளிகளாலும் காட்சியளிக்கும் . மரக்கிளைகளின் இலைகளுக்கு உள்ளாகவும் , கிளைகளின் நடுப்புறத்திலும் ஒளிந்து கொண்டு அதிகம் மனித கண்களுக்கு புலப்படாமல் , கிளைக்கு கிளை தாவி கூவும் தன்மையுடையது இந்த குயில்கள் . தனிமை விரும்பிகள்! காகங்கள், மைனாக்கள், குருவிகள் போல குயில்கள் கூட்டாஞ்சோறு சாப்பிடும் ரகம் அல்ல. இவை சமூகப் பறவைகள் (Social birds) இல்லை. இனப்பெருக்க காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆணும் பெண்ணும் தனித்தனியாகவே வலம் வரும் 'தனிமை விரும்பிகள்'. பழஉண்ணிகளான (Frugivorous) இவை, அவ்வப்போது பூச்சிகளையும் ருசி பார்க்கும். இயற்கையின் 'மாஸ்டர் பிளான்' - கூட்டுக் கொள்ளை! குயில்களின் வாழ்வியலில் மிகவும் திகைக்க வைக்கும் விஷயம், அவை கூடுகட்டுவதே இல்லை என்பதுதான் (Brood Parasitism). தனக்கென ஒரு வீடு இல்லை, முட்டையை அடைகாக்க நேரமும் இல்லை. இதற்காக அவை கையாளும் உத்திதான் 'நவீன கால செவிலித்தாய்' (Surrogacy) முறை. ஆனால், இதை அவை அரங்கேற்றும் விதம் ஒரு திரில்லர் சினிமாவுக்கு இணையானது! 1. திசை திருப்புதல்: காகம் அல்லது மற்ற பறவைகளின் கூட்டை நோட்டமிடும் ஆண் குயில், முதலில் அந்தக் கூட்டின் அருகே சென்று சத்தமிட்டு வம்பிழுக்கும். 2. துரத்தல்: கோபமடைந்த ஆண் காகம், குயிலைத் துரத்திக் கொண்டு ஓடும். இதைப் பார்த்து பெண் காகமும் துரத்தச் செல்லும். 3. ஊடுருவல்: கூடு காலியான அந்தச் சில நொடிகள் போதும்... மரக்கிளையில் மறைந்திருக்கும் பெண் குயில், மின்னல் வேகத்தில் காகத்தின் கூட்டுக்குள் சென்று முட்டையிட்டுப் பறந்துவிடும். பரிணாமத்தின் பரிசு (Egg Mimicry) காகம் ஏன் இதைக் கண்டுபிடிப்பதில்லை? இங்குதான் இயற்கை குயில்களுக்கு ஒரு வரத்தை அளித்துள்ளது. தான் எந்தப் பறவையின் கூட்டில் (காகம், மைனா, தவிட்டுக்குருவி) முட்டையிடுகிறதோ, அந்தப் பறவையின் முட்டை போலவே நிறத்தையும் வடிவத்தையும் மாற்றிக்கொள்ளும் 'மிமிக்ரி' வித்தை குயில்களுக்கு உண்டு. ஏமாறும் தாய்மை திரும்பி வரும் காகமோ அல்லது குருவியோ, குயிலின் முட்டையைத் தன்னுடையது என்றே நினைத்து அடைகாக்கும். குஞ்சு பொரித்ததும், தாய்மை உணர்வைத் தூண்டும் 'ஆக்ஸிடாசின்' (Oxytocin) ஹார்மோன் சுரப்பால், வேற்று இனக் குஞ்சு என்று தெரியாமலே உணவு ஊட்டி வளர்க்கும். சில நேரங்களில் குயில் குஞ்சு வளர்ந்து நிறம் மாறும்போது, காகங்கள் உஷாராகி அதைத் துரத்திவிடுவதுண்டு. ஆனால் மைனாக்களும், குருவிகளும் கடைசி வரை ஏமாந்து, குயிலைத் தன் பிள்ளையாகவே வளர்த்தெடுக்கும். இன்னும் கொடுமை என்னவென்றால், முட்டையிலிருந்து முதலில் வெளிவரும் குயில் குஞ்சு, போட்டியைக் குறைக்க அந்தக் கூட்டில் உள்ள மற்ற முட்டைகளை கீழே தள்ளிவிடும் கொடூரமும் நிகழ்வதுண்டு. Grey-bellied Cuckoo ராஜதந்திரிகளா... வல்லுனர்களா? தன்னால் கூடு கட்ட இயலவில்லை என்பதற்காகத் துவண்டு விடாமல், மற்ற பறவைகளின் உழைப்பையும், தாய்மை உணர்வையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குயில்களை என்னவென்று சொல்வது? பறவை இனத்தின் 'ராஜதந்திரிகள்' என்பதா? அல்லது வாரிசுகளை வளர்க்க வியூகம் வகுக்கும் 'வல்லுனர்கள்' என்பதா? எது எப்படியோ, 90 சதவீத குயில் இனங்கள் இந்த முறையையே பின்பற்றுகின்றன. ஆனால், இன்று நகரமயமாதலால் மரங்களும், தோப்புகளும் அழிந்து வருவதால், இந்த தந்திரக்காரப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இனிய குரல் மட்டுமல்ல, இயற்கையின் விசித்திரமான படைப்புக்களில் ஒன்றான குயில்களையும் காக்க வேண்டியது அவசியம். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... நிறைய மரங்களை வளர்ப்போம்! தேர்தல்
'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' - கு.பாரதி குற்றச்சாட்டு!
பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இன்று இரவோடு இரவாக கைது செய்ய காவல்துறை முயற்சிப்பதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி குற்றஞ்சாட்டியிருக்கிறார். போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் போராடி கைதாகியிருந்தனர். போராட்டம் நூறாவது நாளை நெருங்குகையில் மெரினா கடலில் இறங்கியும் கூட போராடியிருந்தனர். இதன்பிறகுதான் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மைப் பணியாளர்கள் அமைதியான முறையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து வசந்தி, ஜெனோவா, கீதா, பாரதி என 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர் கு.பாரதி உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டம் 7 வது நாளை எட்டியிருக்கிறது. இந்நிலையில், சில நிமிடங்களுக்கு முன் போராட்டம் நடக்கும் இடத்திலிருந்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், 'எங்களின் பெண் தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற நிபந்தனைகள் அத்தனையையும் கடைபிடித்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! 7 நாட்களாக எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இன்று போராடும் பெண்களை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர்கள் நால்வரையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்கின்றனர். உடனே அம்பத்தூர் காவல் ஆய்வாளர் மருத்துவர்களின் அறுவுறுத்தல்படி அவர்களை மருத்துவமனையில் சேருங்கள் என நோட்டீஸ் அனுப்புகிறார். நீதிமன்றம் மருத்துவர்களை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றெல்லாம் உத்தரவில் இல்லை. மேலும், ஒருவர் பலவீனமாகி மருத்துவமனையில் சேர்ந்தால் அவருக்கு பதில் இன்னொருவரை போராட்டத்தில் பங்கேற்க செய்யலாம். அதுவும் தீர்ப்பில் இருக்கிறது. ஜெனோவா, பாரதி, வசந்தி, கீதா ஆனால், நாளை அம்பத்தூர் தொழிற்பேட்டை நிகழ்ச்சிக்கு உதயநிதி வருவதால், அதற்குள் எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்களோ எனும் அச்சம் எழுகிறது. அலுவலக கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளே போராடிக் கொண்டிருக்கிறோம். நள்ளிரவில் இந்தப் பெண்கள் கைது செய்யப்படலாம். அப்படி எதுவும் நடந்தால் நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வோம்.' எனக் கூறியிருக்கிறார். https://www.facebook.com/share/v/17oecW6wyg/
திமுகவுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு எப்படி? நாங்க பேசி தீர்த்துக்கொள்வோம்-செல்வப்பெருந்தகை விளக்கம்
திமுகவுடன் எத்தனை தொகுதிகள் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கூட்டணி வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத்… The post சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்? appeared first on Global Tamil News .
செங்கோட்டையன் நீக்கம்.. கோபிசெட்டிபாளையம் செல்லும் EPS - வெளியான முக்கிய தகவல்!
செங்கோட்டையன் பதவி விலகியதன் பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் பகுதியில் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.
கடுகன்னாவ மண்சரிவு ; உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
ஏற்பட்டுள்ள அவசர அனர்த்த நிலைமை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதால் நாளை (24) குறித்த வீதி ஊடாக உயர்தரப் பரீட்சைக்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அது தொடர்பான கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான மாற்று வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நாளை பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்: மாற்று வழிகள் இதன்படி மாற்று வழிகள்: கணேதென்ன – […]
உலகளவில் டாப் 5 நாடுகள்.. அதிவேக மொபைல் இணைய சேவைகள் கொண்ட நாடுகள்!
உலகளவில் அதிவேக மொபைல் இணையத்தில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தின் அதிரடி வளர்ச்சியால், வளைகுடா நாடுகள் பலவும் முன்னிலை வகிக்கின்றன.
கோவை வந்த பிரதமர்.. ஸ்டாலின் ஏன் சென்று சந்திக்காத காரணம் இதுதான் -ஆர்.பி.உதயகுமார்!
மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பிரதமர் சந்திக்க தயார் என கூறும் ஸ்டாலின், பிரதமர் கோவை வந்தபோது ஏன் சென்று சந்திக்கவில்லை லண்டன் சென்று விட்டார? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகின் முதல் செயற்கை தீவு ; சீனாவின் அதிநவீன ரகசிய திட்டம்
சீனா உலகை அதிர்வடைக்கும் வகையில், அணு ஆயுத வெடிப்பான தாக்குதல்களை கூட எதிர்கொள்ளக் கூடிய தொழில் நுட்பமாக மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு செயற்கை தீவுப் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த தீவு நகர்த்தக்கூடிய வகைப்படுத்தப்பட்டு, பாதி அளவு நீரில் மூழ்கிய நிலையில் கட்டப்பட உள்ளது. இந்த தீவுக்கு சுமார் 238 பேர் வரை வாழ்ந்து கொள்ள முடியும். மேலும், வெளியில் இருந்து எந்தவொரு சப்ளையும் இல்லாத சூழ்நிலையிலும் 4 மாதங்கள் வாழும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் […]
நெல்லை: கனமழையுடன் வீசிய சூறைக்காற்று; முறிந்து விழுந்த 2 லட்சம் வாழைகள் - கண்ணீரில் விவசாயிகள்!
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட மேலச்செவல், சொக்கலிங்கபுரம், பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய நிலையில் இன்னும் ஓரு மாதத்தில் அறுவடைக்கு வரும் நிலையில் உள்ளன. சேதமடைந்த வாழையை ஆய்வு செய்த அதிகாரிகள் அறுவடை நிலையில் உள்ளதால் மாடுகளிடமிருந்து பாதுகாக்க விவசாயிகள் இரவு, பகலாக பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கனமழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்றால் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் எண்ணிக்கையிலான வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இந்த வாழைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வாழை ஒன்றிற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை செலவு செய்து குலை தள்ளிய நிலையில் சூறைக்காற்றில் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சேரன்மகாதேவி வேளாண்துறையினரும், வருவாய்த்துறையினரும் சேத கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். முறிந்து விழுந்த வாழைகள் இது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசினோம், “நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு கார், பிசானம் என இரண்டு முறை நெல் பயிரிடுகிறோம். அதுவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டால் மட்டுமே பயிரிட முடியும். ஆனால், வாழை அப்படியில்லை ஒரு முறை பயிரிட்டாலே 10 முதல் 12 மாதங்களில் அறுவடை செய்துவிட முடியும். நெல்லை விட வாழை கூடுதல் வருமானம் தருகிறது. அதனாலேயே சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை சாகுபடிக்கு முக்கியத்தும் தருகிறோம். கடந்த ஆண்டு ஏத்தன் ரக வாழை சாகுபடி செய்ததில் நல்ல வருமானம் கிடைத்தது. இந்தாண்டும் அதைப் போலவே வருமானம் பார்த்திடலாம் என நினைத்துதான் சாகுபடி செய்தோம். ஆனால், கனமழை, சூறைக்காற்றால் வாழைகள் முறிந்து விழுந்துள்ளது. சேதமடைந்த வாழையை ஆய்வு செய்த அதிகாரிகள் ஏத்தன் ரகத்திற்கு அடுத்தபடியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்த மொந்தன், பூவன், கற்பூரவல்லி, நாட்டு ரக வாழையும் முறிந்து விழுந்துள்ளது. மொத்தம் சுமார் 2 லட்சம் வாழைகள் வரை முறிந்து விழுந்துள்ளது. கடன் வாங்கி செலவு செய்துள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோனது” என்றனர், கண்ணீருடன். இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆய்வு மேற்கொண்டதுடன் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
யாழில். உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கினை பழைய பூங்கப் பகுதியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்லினை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்தனர். அதனை தொடர்ந்து நடைபெற நிகழ்வில் நிகழ்வில் தெற்காசிய ரீதியில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கு விருந்தினர்களால் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்வில் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
யாழ் . மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தை புனரமைப்பதில் குழப்பம் - நிகழ்வின் இடையில் வெளியேறிய அமைச்சர்
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2012ம் ஆண்டு ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. தற்போதைய அரசாங்கம் மீளவும் குறித்த நீச்சல் தடாகத்தை புனரமைக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த கல்லூரிக்கு விஜயம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் நீச்சல் தடாகத்தை பார்வையிட்டதுடன் டைவிங் நீச்சல் தடாகம் எனும் போது ஒரு குறிப்பிட்டளவானவர்களே பயன்படுத்துவார்கள் என்றும் அதே நேரம் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக இதை மாற்றினால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவார்கள். பொது நிதியில் செய்யும் போது அதிகளவிலானோருக்கு அது நன்மை அளிக்கும் என்று முடிவு எடுத்து அவ்வாறு செய்யலாம் என யோசனையை முன் வைத்தார். குறித்த முயற்சிக்கு யாழ் மத்திய கல்லூரி மட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மத்திய கல்லூரிக்கு சென்ற அமைச்சர் தனது நிலைப்பாட்டை அங்கு தெரிவித்தபோது உள்ளவாறே புனரமைத்து தருமாறு ஒரு தரப்பும் சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றி புனரமைத்தாலும் பிரச்சினை இல்லை என கூறி அமைச்சரின் கருத்தையும் ஏற்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. குறித்த புனரமைப்புக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்ய வைக்கப்பட்டிருந்த நிலையில் நீச்சல் தடாகம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றி விட்டு, திரை நீக்கம் செய்யமாலே விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். பாடசாலை அதிபர் உள்ளிட்ட சிலர் அமைச்சரை திரை நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கேட்ட போதும் அமைச்சர் அதனை மறுத்தார். பாடசாலை மட்டத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டிய பின்னர் அதற்கேற்றவாறு புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்து அமைச்சர் வெளியேறினார். இதன்போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிஙக்ம் பிரதீபன், யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி என பலரும் கலந்து கொண்டனர்.
தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால் தாக்கிய நடத்துனர்!
தென்காசி, கடையநல்லூர் அருகே நயினாரகரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (50). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நயினாரகரம் செல்வதற்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் நயினாரகரத்திற்கு ரூ.10 கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் பஸ் நயினாரகரத்தில் நிற்காமல் அடுத்த ஸ்டாப்பான இடைகாலில் நின்றது. இது குறித்து சுப்பையா, கண்டக்டர் நாகேந்திரனிடம் கேட்டிருக்கிறார். கண்டக்டர் நாகேந்திரன் கண்டக்டர் ஆத்திரத்தில் அவரை இடைகால் ஸ்டாப்பில் பஸ்ஸிலிருந்து கீழே தள்ளி பேருந்தில் இருந்த கம்பியால் அவரை முதுகில் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமுற்ற சுப்பையா பேருந்து முன்பாக உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஆத்திரமுற்ற கண்டக்டர் அங்கு காலணியை எடுத்து சுப்பையாவை கன்னத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து கிளப்பிச் சென்றனர். சுப்பையா தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொடுத்து புகார் செய்தார். இதனையடுத்து இலத்துார் போலீஸார் கண்டக்டர் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2026ல் தளபதி விஜய் ஆட்சி தான்! அடித்து சொல்லும் தவெக ஆதரவாளர் கந்தசாமி...
2026 தமிழ்நாடு தேர்தலில் தளபதி விஜய் ஆட்சி தான் அமையும் என்று தவெக ஆதரவாளர் கந்தசாமி அதிரடியாக கூறி உள்ளார்.
புதிய தொழிலாளர் சட்டம்.. தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 மாற்றங்கள்!
இந்தியாவில் நவம்பர் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய தொழிலாளர் சட்டங்கள், சம்பளம், வேலைவாய்ப்பு, சலுகைகள் என பலவற்றில் 12 முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
`மெல்ல நிறைவேறும் கபடிக் கனவு' - சாதிக்கத் துடிக்கும் திருவாரூர் இளைஞர்!
திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தில் AMC கபடி கழகத்தின் சிறந்த ஆல்ரவுண்டராக லோகநாதன் மிக இளையோர் (Sub junior) பிரிவில் தமிழக அணிக்காக தேர்வாகி இருக்கிறார். லோகநாதனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு அவரிடம் பேசத் தொடங்கினோம். ``நான் வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு சிறு வயதிலேயே கபடி விளையாடனும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் என் கனவே கபடி தான். எங்கள் பள்ளியில் எனக்கு பயிற்சியாளராக சுகன் சார் இருந்தார். கபடி மேல எனக்கு இருக்கிற ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக அவர் எனக்கு பல கோணங்களில் உதவினார். எங்களது குடும்பம் ரொம்ப ஏழ்மையானது. எங்க அப்பா ராமநாதன் ஒரு விவசாயி. எங்க அப்பா ஒருவருடைய வருமானம் குடும்பத்திற்கு பத்தாம இருக்கிறதுனால என் அம்மா நிர்மலாவும் கூலி வேலைக்கு போய் தான் என்ன படிக்க வச்சாங்க. என் அண்ணன் ஒரு SDAT வாலிபால் விளையாட்டு வீரர். என் அண்ணனை முன்னோடியாக வைத்தும் எனக்கு விளையாட்டு மேல ஆர்வம் வந்தது. லோகநாதன் என் ஊர் வடுவூர்'ல AMC கபடி கழகம், மேல்பாதி இளைஞர்கள் கபடி விளையாட பயிற்சி கொடுத்தாங்க. அவங்களோட பயிற்சி மூலமா எனக்கு கபடி மேல பெரிய மதிப்பும், மரியாதையும் வந்தது. என் குடும்ப நிலைமையை புரிந்து கொண்ட AMC டீம், என்னை மயிலாடுதுறையில் இருக்கிற SAI விளையாட்டு விடுதியில் சேர்த்து விட்டாங்க. இப்போ அங்கதான் 11ஆம் வகுப்பு படிக்கிறேன். இங்க எனக்கு கோச்சாக R. அரவிந்த் ராஜா அவர்கள் பயிற்சி தர்றாங்க. இவரு மட்டும் இல்லனா நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. நான் செய்கின்ற சிறு தவறையும் அன்பாகச் சொல்லி புரியவச்சு, நான் முன்னேற உதவியா இருக்காங்க. சேலத்தில் நடந்த மாநில அளவிலான கபடி தேர்ச்சி போட்டியில் பங்குபெற்ற, 300 பேரில் 32 பேர் தேர்வாகிருக்காங்க. அதுல நானும் ஒருத்தன், இதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றின்னு நினைக்கிறேன். பிறகு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தில் என்னை செலக்ட் பண்ணாங்க. சேலம் வாலப்பாடியில் 10 நாள்களுக்கு மேல் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழக அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேர்ல நானும் ஒருத்தன். 'நான் ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - இந்திய U18 அணியில் தஞ்சை இளைஞர் அபினேஷ் தமிழ்நாடு சார்பாக ஹரியானால நவம்பர் 27 முதல் 30 வரை நடக்க உள்ள கபடி போட்டியில் விளையாட உள்ளேன். கண்டிப்பாக அங்க நல்லா விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் தமிழக அணிக்கு தேர்வானதற்கு எனக்கு முக்கிய உறுதுணையாக இருந்தது, திருவாரூர் மாவட்டக் கபடி கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்கள். ராஜேந்திரன் ஐயா மட்டும் இல்லை என்றால் நான் கண்டிப்பாக இவ்வளவு உயரத்தை தொட்டிருக்க முடியாது. நான் கஷ்டத்தில் இருக்கும்போது எனக்கு தோள் கொடுத்த தோழமை அவர். இந்த நேரத்தில் ராஜேந்திரன் ஐயாவுக்கு எனது நன்றியைக் கூறுகிறேன். கண்டிப்பாக தமிழக அணியில் வெற்றி பெற்று எங்களது ஊருக்கு மென்மேலும் பெருமை சேர்ப்பேன் எனக் கூறி, மனம் நெகிழ்கிறார்... இன்னும் பல உயரங்களைத் தொட, வாழ்த்துகள் லோகநாதன்!!!
நோபல் பரிசு வென்ற மரியாவுக்கு வெனிசுலா அரசு மிரட்டல்
நோபல் பரிசு வென்ற எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு வெனிசுலா அரசு மிரட்டல் விடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நோபால் பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், நோபல் பரிசை பெற மரியா நாட்டைவிட்டு சென்றால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார் என்று வெனிசுலா […]
யாழ் நீச்சல் தடாகம் புனரமைப்பு: குழப்பம் காரணமாக அமைச்சர் வெளியேற்றம்!
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. முன்னாள் […]
புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?
தமிழகம், புதுச்சேரியில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், `அந்த திட்டமே சரியில்லாத திட்டம். சாலைகளை சீரமைத்தாலே பயனுள்ளதாக இருக்கும்’ என்றார். செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த சீமான் தொடர்ந்து, `அது வளர்ச்சித் திட்டம்தானே…’ என்று நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, `உனக்கு அந்த வளர்ச்சி வேண்டும் என்றால் நீ போய் போராடி வாங்கிக்க…’ என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார் சீமான். அதையடுத்து SIR குறித்து மற்றொரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு, `SIR-ஐ மம்தா எதிர்க்கிறார். ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? SIR-ஐ செயல்படுத்தும் கட்சி எது ? அங்கன்வாடியில் வேலை செய்பவர்களையும், சத்துணவுக் கூடத்தில் வேலை செய்பவர்களையும் BLO-வாக நியமித்தது கணக்கெடுக்க அனுப்பியது யார்... தி.மு.க தானே…?’ என்றார் சீமான். அப்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிருபர், `தேர்தல் ஆணையம் சொல்வதைத்தானே அரசு செய்கிறது? அதேசமயம் தி.மு.க SIR-ஐ எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறதே?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, `அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா ? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்க வேண்டுமா ?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்த சீமான், அந்த செய்தியாளரை ஒருமையிலும், அருவருக்கத்தக்க தகாத வார்த்தையிலும் திட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து, `ஒரு மைக்கையும், கேமராவையும் எடுத்துட்டு வந்துட்டா நீ வெங்காயமா ?’ என்று கேட்டவாரே அந்த செய்தியாளரை அடிக்கப் பாய்கிறார். பத்திரிகையாளர்கள் புகார் அதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அந்த நிருபரை சூழ்ந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்கள். அத்துடன், `எங்கள் தலைவரிடம் இப்படியான கேள்விகளைக் கேட்டால் தீர்த்துக் கட்டிவிடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தனர். அதையடுத்து தாக்குதலுக்குள்ளான அந்த நிருபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நிருபர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று, பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்தது?
Kanchipuram Vijay full speech | விஜய் சொன்னா அத செய்யாம விடமாட்டான் | காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு
சிறைக் கைதிகளுக்கு Salary எவ்வளவு?, Ammapattinam வீடுகள் இடிப்பு! | Maithili Thakur Imperfect show
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி; மதுரையில் மைதானத்தை திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். வீரர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையிலும் மதுரையிலும் நடத்தப்படவுள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 24 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரை விளையாட்டு மைதான வளாகத்தில் 20 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1500 பேர் அமரும் வகையில் தற்காலிக கேலரி, 500 பேர் அமரும் வகையில் நிரந்தர கேலரி அமைக்கப்பட்டுள்ளது, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை, ஜிம், அவசர மருத்தவ மையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மைதானங்களில் 72 போட்டிகள் நடைபெற உள்ளது. வீரர்களுடன் மதுரையில் நவம்பர் 28 ஆம் தேதி ஜெர்மனி - ரஷ்யாவிற்கு இடையே உலகக் கோப்பைக்கான முதல் போட்டி கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து மதுரை மாவட்ட நிர்வாகம் செய்து வரும் நிலையில், மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மைதானத்தை திறந்து வைத்தார்.
SIR என்பது திணிக்கப்பட்ட அடக்குமுறை.. ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
தேர்தல் ஆணையத்தின் SIR சீர்திருத்தம் அல்ல, மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறை என்றும், வாக்குத் திருட்டைத் தடுக்காமல், மக்களைச் சோர்வடையச் செய்யும் சதி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காரைக்குடி: போராட்டத்தால் பூட்டப்பட்ட மதுக்கடை - மீண்டும் திறக்கப்படலாமென மக்கள் அச்சம்!
கடந்த 14 ஆம் தேதி காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் 'டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் துயரம் அடைகிறார்கள்' என்று பள்ளி மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்த, துணை முதல்வரோ அம்மாணவியை பாராட்டி பரிசளித்தார். பூட்டப்பட்ட கடை இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி காரைக்குடி பர்மா காலனி பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து வருவதாக அரசு கூறினாலும் இன்னொருபுறம் புதிதாக மதுக்கடைகளைத் திறந்து கொண்டிருக்கிறார்கள். மதுக்கடை அமைப்பதற்கான விதிகளும் பல இடங்களில் மீறப்படுகிறது. கல்வியிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்கும் காரைக்குடியில், சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு நகரில் அதிகரித்து வரும் மதுக்கடைகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் அடர்த்தியாக வாழும் பர்மா காலனிப் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி புதிய மதுக்கடை திறக்கப்பட்டதை பார்த்து பொதுமக்கள் பொங்கி எழுந்தனர். அவர்களுடன் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய மக்கள் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்விக்கூடங்கள், குடியிருப்புகள் அதிகமுள்ள அப்பகுதியில் மதுக்கடையை திறக்கக் கூடாது என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு வந்த அதிகாரிகள் கடையை மூட உத்தரவிட்டனர். ஆனால் அதை மதிக்காமல் அன்று மாலையே கடைக்காரர் மது விற்பனை செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமன்றி இலவசமாகவும் மது விநியோகம் செய்தார். இதனால் கோபமான மக்கள் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி, ரேசன் அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைப்போம் என்று அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து சப் கலெக்டர், டி.எஸ்.பி ஆகியோர் வந்து நிலைமையை புரிந்துகொண்டு மதுக்கடைக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றனர். இதில் நம்பிக்கை இல்லாத மக்கள் தங்கள் பங்குக்கு ஒரு பூட்டை போட்டுள்ளனர். நிரந்தரமாக மதுக்கடையை அங்கிருந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிடாததாலும், கடை உரிமையாளர் ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிகளுடன் செல்வாக்குள்ள நபர் என்பதாலும் எப்போதும் வேண்டுமானலும் மதுக்கடை திறக்கப்படலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள்.
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற… The post வெளியேறிய அமைச்சர் appeared first on Global Tamil News .
ஒரே ஒரு மரணத்தால் அதிர்ந்து போன அமெரிக்கா ; விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இறந்தவர் வயதானவர் என்றும், அவருக்கு ஏற்கனவே பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. H5N5 பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு H5N5 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக இதுவரை அறிக்கைகள் எதுவும் இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதன்படி அமெரிக்காவில் 9 மாதங்களில் […]
`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!' - பிரேமலதா சொல்லும் புது விளக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தெளிவாக அறிவிக்கப்படும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று நான் பேசியதை தவெக தலைவர் விஜய்யை பற்றி பேசியதாக சிலர் திரித்து விட்டனர். அவர் மட்டும்தான் சமீபத்தில் கட்சி தொடஙகியுள்ளாரா? இன்னும் சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜய் எங்கள் வீட்டுப் பையன் என்று எல்லா இடஙகளிலும் கூறி வருகிறேன். தற்போது அவர் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். அவர் தன்னை நிரூபித்து சாதிக்க வேண்டும். கரூர் சம்பவம் எல்லோர் மனதிலும் நீங்காத சோக வடுவை ஏற்படுத்தி உள்ளது. இனி எப்படி அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்க உள்ளோம். வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் பிரதிபலிக்குமா என்று என்னால் சொல்ல முடியாது. பீகாரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக ப.சிதம்பரம் கூறுகிறார், தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெறுகிறீர்கள், அதை மறுக்க முடியுமா? இந்த தேர்தல் நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும், வாக்குத் திருட்டு நடக்கக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.
பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது!
பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெற்ற பார்வையற்றோருக்கான மகளிர்… The post பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது! appeared first on Global Tamil News .
சற்றுமுன் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழ்நாட்டில் கனமழை கொட்டி வரும் நிலையில் நவம்பர் 24ந் தேதி நாளை சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக விஜய் மக்கள் சந்திப்பு பேச்சை எப்படி பார்ப்பது? தராசு ஷ்யாம் விளக்கம்
தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் இன்று நடத்திய மக்கள் சந்திப்பின்போது பேசிய பேச்சு குறித்து தராசு ஷ்யாம் கொடுத்த விளக்கத்தை விரிவாக காண்போம்.
மண்சரிவால் சிதைந்து போன தமிழ் வர்த்தகரின் குடும்பம் ; ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை
பஹல கடுகன்னாவ கனேதென்ன பகுதியில் 22ஆம் திகதி காலை ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான சிசிடிவி காணொளி வௌியாகியுள்ளதுடன் தமிழ் வர்த்தகரின் வர்த்தக நிலையம் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகரின் குடும்பத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம் மீது விழுந்ததில் 10 பேர் குறித்த இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் இதன்போது 6 […]
விபத்தில் சிக்கி தான் யார் என்பதையே மறந்த நபர்: மீண்டும் விபத்தில் சிக்கியபோது…
இந்தியாவின் ஹிமாச்சலைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுவன் விபத்தொன்றில் சிக்கி தான் யார் என்பதையே மறந்துபோனான். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் அந்த நபர் ஒரு விபத்தில் சிக்கி தலையில் அடிபட, 45 ஆண்டுகளுக்குப் பின் தான் யார் என்பது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது! விபத்தில் சிக்கிய சிறுவன் ஹிமாச்சலிலுள்ள Naddi என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரிக்கி என்னும் 16 வயது சிறுவன், 1980ஆம் ஆண்டு, ஹரியானாவிலுள்ள அம்பாலா என்னுமிடத்துக்கு வேலைக்குச் சென்றிருந்தபோது ஒரு பெரிய விபத்தில் […]
யாழில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ; நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு
அராலி மத்தி, வட்டுக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக ஒரு சிறிய பணி செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு அற்ற நிலையில் இருந்த நன்னீர் கிணறு ஒன்றினை புனரமைத்து, நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர்த் தாங்கி அமைத்து குடிநீர் வழங்கல் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீருக்கு தட்டுப்பாடு அராலி கந்தஞானியார் ஆலயத்திற்கு உரித்தான காணியில் உள்ள இந்த கிணற்றினை சிலர் இணைந்து ரூபா 150000/- வரையான செலவில் இவ்வாறு தயார் செய்துள்ளனர். உண்மையிலேயே யாழில் பல பகுதிகளில் குடிநீருக்கு […]
பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ கைது!
ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ நேற்று சனிக்கிழமை… The post பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ கைது! appeared first on Global Tamil News .
தவெக விஜய் தான் காரணம்.. டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்!
கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு விஜய்யின் தாமதமே காரணம் என திமுக மூத்த தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக மீது மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளை விஜய் முன்வைத்து உள்ளார்.
நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்!
நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்.!
9 வளைவு பாலத்தை ஒளிர வைப்பதில் சிக்கல்
தனியார் நிலம் வழியாக மின்சார கேபிள்களை நிறுவுவது தொடர்பான சிக்கல்கள் காரணமாக, பதுளை – தெமோதரை பகுதியிலுள்ள 9 வளைவு பாலத்தை மின் விளக்குகளால் ஒளிரச் செய்யும் திட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியம் அறிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பாலத்தையும் அதன் சுற்றுப்புறங்களை ஒளிரச் செய்வதற்காக கட்டப்பட்ட மின்மாற்றிக்கு, மின்சாரம் வழங்க தேவையான மின்சார கேபிள்களை இடுவதற்கு தனியார் நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த தாமதம் ஏற்பட்டதாக மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் […]
தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் தடவிய மருத்துவர் –அடுத்து நடந்தது என்ன?
காயத்தில் தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்கை மருத்துவர் தடவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபெவிக்விக் மருத்துவம் உத்தரப்பிரதேசம், மீரட்டில் உள்ள ஜக்ருதி விஹார் காலனியில் சர்தார் ஜஸ்பிந்தர் சிங்கின் குடும்பம் வசிக்கிறது. சம்பவத்தன்று அவரது இரண்டரை வயது மகன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் டேபிளின் விளிம்பில் மோதியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனையடுத்து குழந்தையை உடனடியாக அருகிலுள்ள பாக்யஸ்ரீ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர், […]
The Ashes: முதல் டெஸ்டில் வெற்றிபெற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.17 கோடி நஷ்டம்; காரணம் என்ன?
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கியது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியை, ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய முக்கிய பவுலர்கள் இல்லாதபோதும் தனி ஒருவராக சாய்த்தார் மிட்செல் ஸ்டார்க். Australia vs English - Ashes 33 ஓவர்களில் வெறும் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து, வார்னர் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் யாரை ஓப்பனிங் இறக்கினாலும் கிளிக் ஆகாததால் ஓப்பனிங்கில் அவரையே ஒரங்கட்டிவிட்டு அறிமுக வீரர் நேதன் மெக்ஸ்வீனி மற்றும் மார்னஸ் லபுஷேனை இறக்கினார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். ஆனால், இந்த முறையும் ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமே, முதல் ஓவரிலேயே மெக்ஸ்வீனி டக் அவுட் ஆனார். அங்கிருந்து சரிவர ஆஸ்திரேலியா இங்கிலாந்தை விட மோசமாக ஆடி முதல் நாள் முடிவில் 39 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஷஸ் தொடரின் கடந்த 100 வருட வரலாற்றில் முதல் முறையாக முதல் நாளிலேயே 19 விக்கெட்டுகள் வீழ்ந்த போட்டியாக இது அமைந்தது. அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் 132 ரன்களில் 10-வது விக்கெட்டையும் ஆஸ்திரேலியா இழந்தது. அதைத்தொடர்ந்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸைப் போலவே அதிரடியாக ஆட முயன்று 35 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் ஓப்பனிங் செட் ஆகாததை உணர்ந்த ஸ்மித் லபுஷேனுக்குப் பதில் டிராவிஸ் ஹெட் டை ஓப்பனிங்கில் அனுப்பினார். Australia vs England - Ashes ஹெட் அதிரடியாக ஆடி 69 பந்துகளில் சதமடிக்க, ஒன் டவுனில் நிதானமாக லபுஷேன் அரைசதமடிக்க 28 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா. முழுமையாக இரண்டு நாள் கூட இல்லாமல் போட்டி முடிவுக்கு வந்தது. ஐந்து நாள் டெஸ்ட் போட்டி முழுமையாக இரண்டு நாள்களுக்குள் முடிந்தது விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குள் டெஸ்ட் போட்டி முடிந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு அந்நாட்டு டாலர் மதிப்பில் சுமார் 3 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17.35 கோடி ரூபாய் ஆகும்.
யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா
வடக்கின் அபிவிருத்தி சார்ந்து எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகிறது. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாட்டுத் துறைக்குத் தேவையான வளங்களைப் பெற்று, எமது வீரர்கள் சர்வதேச அரங்கில் மிளிர வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) யாழ்ப்பாணம் […]
அதிமுக தனபாலுக்கு என்ன ஆச்சு? எடப்பாடி பழனிசாமி மீது கோபமா? காரணம் இதுதான்...
அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி மீது அக்கட்சியின் மூத்த தலைவர் தனபால் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்று விரிவாக காண்போம்.
அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு!
தனது 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளாா். உக்ரைன் அரசு ஏற்கெனவே நிராகரித்திருந்த பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள கெடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டிரம்ப் கூறியதாவது: போா் நிறுத்தம் தொடா்பான வரைவு திட்டத்தை உக்ரைன் வரும் வியாழக்கிழமைக்குள் (நவ. 27) ஏற்க வேண்டும். அதுதான் சரியான நேரம். அந்த தேதிக்குள் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்காவிட்டால் அந்த […]
சாண்ட்ராவை கதறவிட்ட பிக் பாஸ், கூலா வேடிக்கை பார்த்த விஜய் சேதுபதி: இதை சத்தியமா எதிர்பார்க்கலயே
பிக் பாஸ் 9 வீட்டில் இருக்கும் சாண்ட்ராவை கதற விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். சாண்ட்ரா அழுததை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களே அவார்டா கொடுக்கிறாங்க, இப்படி நடிக்கிறீங்க என கேட்டிருக்கிறார்கள்.
டெல்டாவெதர்மேன் மழை அப்டேட்: அடுத்த 30 மணி நேரம் வெளுக்க போகும் கனமழை- எந்தெந்த மாவட்டங்களில்?
அடுத்த 30 மணி நேரத்திற்கு தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என டெல்டாவெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்தெந்த மாவட்டங்கள் என்று விரிவாக காண்போம்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது.
பிரேஸில் முன்னாள் அதிபா் போல்சோனாரோ கைது!
ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இது குறித்து பிரேஸில் மத்திய காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஊழல், பணமதிப்பிழப்பு, சதி திட்டம் உள்ளிட்ட குற்றங்களுக்காக முன்னாள் அதிபா் பொல்சொனாரோவைக் கைது செய்தோம். 2022 தோ்தலில் தோல்வியடைந்த பிறகு அவா் அமைதியான ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை வரும் 25-ஆம் தேதி தொடங்கும். […]
TVK: விஜய்யின் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் | Photo Album
`எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்!
இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் 2026ம் ஆண்டு தேர்தலில் வென்றால் தவெக என்னென்ன செய்யும் என்றும் அதன் வாக்குறுதிகள் குறித்தும் பேசியிருக்கிறார் விஜய். இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், நம்ம ஆட்சிக்கு வந்தால்…. அதென்ன வந்தால். நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி ‘தவெக; வை ஆட்சி அமைக்க வைப்பாங்க. அப்படி மக்கள் அமைக்கும் நம்ம ஆட்சியில மக்களுக்கான நல்லது மட்டுமே செய்வோம். தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் எங்களுடைய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படை இவைதான் எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கணும். கார் இருக்கணும் என்பது எதிர்கால லட்சியம். அதுக்கான வசதி வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் உண்டாக்கணும். ஒவ்வொரு வீட்ல இருக்குறவங்களும் குறைந்தபட்சம் டிகிரி படிச்சிருக்கிறத உறுதி செய்வோம். ஒவ்வொரு வீட்டுலையும் குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது நிரந்தர வருமானம் இருக்கணும். அதுக்கான வேலைவாய்ப்பு, கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். எந்த பயமுமின்றி மக்கள் அரசு மருத்துவமனைக்குப் போகிற மாதிரி மாற்ற வேண்டும். பருவமழை காலத்துல மக்களும், விவசாயமும் பாதுகாக்கப்படனும். அதுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான பாதுகாப்புத் திட்டத்த உருவாக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சட்ட ஒழுங்கை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்; எல்லாருக்கும் பவர் ஃபுல்லான பாதுகாப்பை உண்டாக்க வேண்டும். நம்ம வீட்டு பெண்கள் பயமே இல்லாமல் சமூகத்தில் வாழ வேண்டும். தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்! இவையெல்லாம் எப்படி செயல்படுத்த போறோம் என்கிற விவரத்தை தவெக தேர்தல் வாக்குறுதியில் விரிவாக, தெளிவாகச் சொல்வோம். நல்லது செய்வது மட்டும்தான் தவெகவின் அஜெண்டா. வேறெந்த அஜெண்டாவுமில்லை எங்களுக்கு. இந்த விஜய் ஒன்னு சொன்னா அதைச் செய்யாமல் விடமாட்டான். அது மக்களுக்கும் நல்லா தெரியும் என்று பேசியிருக்கிறார்.
பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப்படி பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆபாச வீடியோ இந்த நிலையில், வழக்கு தொடர்பாக வெளியூர் சென்று வந்த பெண் ஆய்வாளர் ஒருவர் பயணப்படிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முருகனிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அன்றைய தினம் இரவு புதிய செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆய்வாளர், சம்பந்தப்பட்ட எண் குறித்து புகார் அளித்திருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் பணியாற்றி வந்த முருகனின் எண் என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆபாச வீடியோக்களை முருகன் அனுப்பியதை உறுதி செய்த காவல்துறையினர், முருகன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். முருகன் பிண்ணனி குறித்து தெரிவித்த காவல்துறையினர், டிராவல் அலவன்ஸ் விண்ணப்பத்தில் சம்மந்தப்பட்ட லேடி இன்ஸ்பெக்டர் தன்னுடைய செல்போன் எண்ணை எழுதியிருக்கிறார். இதை கவனித்த முருகன், எண்ணை செல்போனில் ஏற்றி வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
ஆடையில்லா காட்சிக்காக நடிகை மீராவிடம் மன்னிப்பு கேட்ட மோகன்லால்: ஏன் தெரியுமா?
தன்மாத்ரா படத்தில் வந்த ஆடையில்லா காட்சியில் நடித்த மோகன்லால் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக நடிகை மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார். மோகன்லால் ஏன் மன்னிப்பு கேட்டார் என தெரிந்து கொள்ளுங்கள்.
விபத்தில் சிக்கிய மணமகள் –மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய மணமகன்
மணமகள் விபத்தில் சிக்கியதால், மருத்துவமனையில் வைத்து மணமகன் தாலி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய மணமகள் கேரள மாநிலம் ஆலப்புழாவின் கொம்முடியை சேர்ந்த ஆவணி(Aavani) என்பவருக்கும், தம்பொலியை சேர்ந்த ஷரோன்(Sharon) என்பவருக்கும், ஆலப்புழாவில் உள்ள சக்தி ஆடிட்டோரியத்தில் நேற்று முன்தினம் மதியம் 12.12 மணிக்கு திருமணம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலையில், மணப்பெண் அலங்காரத்திற்காக ஆவணி தனது குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தை […]
புத்தர் சிலை படும்பாடு –நிலாந்தன்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மகாசங்கத்தின் பலத்தைக் காட்டியிருக்கிறது.தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நம்பமுடியாது என்பதை… The post புத்தர் சிலை படும்பாடு – நிலாந்தன். appeared first on Global Tamil News .
ஹிங்குல கடுகண்ணாவ அனர்த்தத்தில் 6 பேர் மரணம்!
மாவனல்லை கடுகண்ணாவ பிரதேசத்தில் சனிக்கிழமை 22ஆம் திகதி காலை மண்சரிவு மற்றும் பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம்… The post ஹிங்குல கடுகண்ணாவ அனர்த்தத்தில் 6 பேர் மரணம்! appeared first on Global Tamil News .
தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு.
மாவீரர் நினைவேந்தல் வாரத்தையொட்டி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு… The post தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு. appeared first on Global Tamil News .
உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் ; CIDஇல் முறைப்பாடு
இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன. இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான […]
BB Tamil 9 Day 48: சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள்; பந்தா காட்டிய பிரஜின்; எரிச்சலான விசே!
வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எபிசோடில் கச்சிதமாகப் பொருந்தியது. ஏனெனில் சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் செய்த அநியாயமான சேட்டைகள் அப்படி. இந்த மூவர் மட்டுமே இந்த எபிசோடை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டார்கள். க்ரைம் ரெக்கார்ட் அப்படி. மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 48 “இன்னிக்கு நீங்க பார்க்காத படத்தை காட்டறோம். முன்ன எல்லாம் பொிய மனுஷங்க போராட்டம் பண்ணி ஜெயிலுக்குப் போவாங்க. ஆனா இவங்களை ஜெயிலுக்கு அனுப்பறதே போராட்டமா ஆயிடுச்சு. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம்” என்றார் விசே. வழக்கமாக இந்த போர்ஷன் சுருக்கமாக முடிந்து விடும். ஆனால் இன்று சாண்ட்ரா+திவ்யா கூட்டணியின் அலப்பறை காரணமாக நீண்ட நேரத்திற்கு காட்டப்பட்டது. BB TAMIL 9: DAY 48 ஏற்கெனவே சொன்னது போல, சாண்ட்ரா + திவ்யாவை வேலை பார்க்க வைக்கும் சூப்பர்வைசர் பணி விக்ரமிற்கு தரப்பட்ட தண்டனையாக அமைந்தது. “என்னங்க செய்றீங்களா…?” என்று கேட்டே சோர்ந்து போனார். ஒருவர் படுத்தபடி வீட்டைப் பெருக்குவதை எங்குமே பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ‘பெருக்காசனம்’ செய்து உலக சாதனை செய்தார் திவ்யா. ‘வேலை செய்யறீங்களா?” என்று விக்ரம் மீண்டும் கேட்க “எனக்கு தலை வலிக்குது. டீ வேணும். பிளாக் டீல்லாம் வேணாம்.. பால் டீதான் வேணும்” என்று அடம்பிடித்தார் திவ்யா. புத்திசாலித்தனமான குற்றவாளிகள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்களுக்கான தண்டனையை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுப்பார்கள். சாண்ட்ராவும் திவ்யாவும் அப்படியாக நேரத்தை இழுத்துக் கொண்டே போனார்கள். “இது பிக் பாஸ் ஆர்டருங்க. உங்களை ஜெயில்ல அடைக்கச் சொல்லியிருக்காங்க” என்று விக்ரமும் எஃப்ஜேவும் கெஞ்ச “எங்க வேலை முடியலை. முடிஞ்சவுடன்தான் வருவோம்” என்று அழிச்சாட்டியம் செய்தார்கள். நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள் காலை, மாலை மட்டும் பால் தரவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருப்பதால் அந்த நோக்கில் பால் தர முடியாது என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தார் எஃப்ஜே. “மெடிக்கல் எமர்ஜென்சின்னா கூடவா தர மாட்டீங்க?” என்றார் திவ்யா. தலைவலி எப்போது மெடிக்கல் எமர்ஜென்சியில் சேர்ந்தது என்று தெரியவில்லை. “இவன் பாலை எங்கதான் போய் ஊத்துவான்.. அவன் ஃபேமிலிக்கா?” என்று பிரஜின் வார்த்தைகளை விட்டது அநியாயம். “உன் வொய்ஃபை கூட்டிட்டு வாங்க” என்று இந்தப் போட்டிக்கு சம்பந்தமில்லாத குடும்ப உறுப்பினர்களை அநாவசியமாக இழுப்பதை பிரஜின் வழக்கமாக வைத்திருக்கிறார். தனக்கு பால் தராமல் போன அநீதியை எண்ணி பாத்ரூமில் சென்று திருட்டு அழுகை அழுதார் திவ்யா. “போங்க.. இப்ப போய் அவ கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து ஜெயில்ல தள்ளுங்க” என்று விக்ரமிடம் சொல்லி ஓவராக சீன் போட்டார் சாண்ட்ரா. “நான் ஏங்க ..கழுத்தையெல்லாம் பிடிக்கப் போறேன்” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம். “அப்ப மூடிட்டு போங்க” என்கிற மாதிரி சைகை காட்டினார் சாண்ட்ரா. விக்ரம் பாடிய பாடல் வரிகளை வைத்து ‘லைஃப்ல நீ மறக்க மாட்டே’ என்று சாபம் விட்டுக் கொண்டே போனார். BB TAMIL 9: DAY 48 “இது பிக் பாஸ் ஆர்டர். ஜெயில்ல போடணும்” என்று விக்ரமும் எஃப்ஜேவும் மறுபடி வந்து கெஞ்ச “சாவிய வெச்சிட்டு போங்க.. வரேன்.. வர முடியாது’ என்றெல்லாம் சொன்னார் திவ்யா. விக்ரம் அகன்ற பிறகு “என்ன திமிர் பாரேன்.. இவனுக்கு?” என்றார். தண்டனையிலிருந்து தப்பிக்க எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ, அவ்வளவு நேரத்தை இழுத்த கிரிமினல்களான சாண்ட்ராவும் திவ்யாவும் இரவு முழுவதும் வீட்டை தூங்க விடாமல் அதிகாலை மூன்று மணிக்குத்தான் ஒருவழியாக சிறைக்குள் சென்றார்கள். அதுவரை கார்டன் ஏரியாவில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உள்ளே செல்ல “பாம்புங்கள்லாம் உள்ளே போகுது” என்று கனியை டார்கெட் செய்து வசைபாடினார் சாண்ட்ரா. பாருவின் நெகட்டிவிட்டி பற்றி குறை சொன்னவர்கள், பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்ளும் மர்மம் ஒரு விஷயம்தான் புரியவில்லை. வைல்ட் கார்ட் எண்ட்ரிகளாக சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் உள்ளே நுழையும் போது பாரு செய்து கொண்டிருந்த அடாவடிகளை கண்டித்தார்கள். ‘இது வெளில எப்படி தெரியும் தெரியுமா’ என்று எச்சரித்தார்கள். எனில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவர் மோசமாக நடந்து கொண்டால் அது பல மடங்கு வெறுப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் என்பது ஷோவைப் பார்த்து விட்டு வந்திருக்கும் இவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் இவர்கள் அனைவருமே மீடியாவில் இருப்பதால் அதன் பவரை நன்கு உணர்ந்திருப்பார்கள். எனில், பாருவிற்கு பாடம் சொன்ன இவர்கள் பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? இவர்கள் அட்வைஸ் வேடம் கலைந்து அசல் நிறம் வெளிப்படுகிறதா? அல்லது பெயர் கெட்டாலும் பரவாயில்லை, கன்டென்ட் தந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்கிற டிராமாவா? BB TAMIL 9: DAY 48 மேடைக்கு வந்த விசே “தன்னை புத்திசாலின்னு நம்பற முட்டாள்களும், வீரன்னு நெனச்சிக்கிற கோழைகளும் வீட்டுக்குள்ள இருக்கறாங்க.. அவங்களை முதல்ல பாராட்டுவோம். ஸோ… நீங்க நல்லா கைத்தட்டுங்க.. அவங்க கன்ஃப்யூஸ் ஆகட்டும்”என்கிற வேடிக்கையுடன் உள்ளே சென்றார். திரை விலகியதும் பார்வையாளர்கள் மிகையாக கைத்தட்ட, தங்களுக்கு கிடைத்த பாராட்டாக போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். “பிரஜின்.. எப்பவும் ஒரு போஸ்லதான் உக்காந்திருக்கீங்க?” என்று கிண்டலடித்தார் விசே. (பின்னே.. ஹீரோ மெட்டீரியல் ஆச்சே?!) “திவ்யா.. சாண்ட்ரா.. நல்லாயிருக்கீங்களா.. இவர்கள் இருவரும் வீரமங்கையர்கள்.. பிக் பாஸையே எதிர்த்து பேசுவாங்க.. நடப்பாங்க” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் விசே. பதில் சொல்லாமல் அடம்பிடித்த திவ்யா “ஏன் ஜெயிலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடிச்சீங்க. என்னதான் வேலை செஞ்சீங்க?” என்று விசே விசாரிக்கும் போது அவர்கள் தூங்கும் சூப்பர் டீலக்ஸ் வீட்டை மட்டும் நன்றாக பெருக்கியுள்ளது தெரியவந்தது. “எனக்கு தலைவலி சார்” என்று ஸ்கூலுக்கு மட்டம் போட்ட மாணவன் மாதிரி ஆரம்பித்தார் திவ்யா. சாண்ட்ரா இடையில் சிரிக்க “அப்படி சிரிக்காதீங்க.. எரிச்சலாகுது” என்று வெளிப்படையாகவே கோபப்பட்டார் விசே. திவ்யாவின் டிராமாவை ஏற்காத விசே ‘என்னவொரு ஆட்டிடியூட்.. பிக் பாஸ் கண்ணை திறந்து வெச்சிருக்கணுமா.. மூடணுமான்னுல்லாம் சொல்லத் தெரியுது. இந்த ஷோ உங்களால மட்டும் நடக்கலை. சாண்ட்ரா.. உங்க பேரு ஸ்பாயில் ஆகும்ன்னு திவ்யாவிற்கு நல்லா தெரியும். நோயாளின்ற லேபிள்ல தப்பிச்சுடுவாங்க.” என்று வெடித்தார் விசே. அதாவது இந்த அலப்பறைகளுக்கு திவ்யாதான் மாஸ்டர் மைண்ட் என்கிற மாதிரியும் சாண்ட்ரா பேபிக்கு எதுவுமே தெரியாது என்கிற மாதிரியும் திவ்யாவினால்தான் அவர் மோசமாக நடந்து கொண்டார் என்கிற மாதிரியும் ஒரு சித்திரத்தை விசே எழுப்ப முயன்றாரா? உண்மையில் சாம்பார் அணி, டாக்ஸிக் அணியாக மாறியதற்கு சாண்ட்ராவின் துர்உபதேசங்கள்தான் காரணம். கைகேயி மாதிரி கூடவே உதவியாக இருந்தார் பாரு. “திவ்யாவிற்குத்தான் தலைவலி.. நீங்க ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்கப்பட “செஞ்சேன் சார்.. அப்புறமா திவ்யாவிற்கு தலைவலி வந்துடுச்சா.. அதான் கூடவே உதவிக்கு நின்னேன்” என்று சாண்ட்ரா மழுப்ப, திவ்யா எதையோ சொல்வதற்கு கை காட்ட “உக்காருங்க. வேலை செய்ய வக்கில்லை” என்று ஆத்திரமானார் விசே. BB TAMIL 9: DAY 48 “அவங்களுக்கு தலைவலி.. நீங்கதான் தனியா ஆடறவங்களாச்சே. ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்க ‘திவாகர் பாணியில்’ தலையைக் குனிந்தபடி நின்றார் அப்பாவி சாண்ட்ரா. படுத்துக் கொண்டே வீடு பெருக்கிய லட்சணத்தை விசே விசாரிக்க “அது சும்மா ஜாலிக்காக பண்ணினது” என்றார் திவ்யா. “நீங்க உங்க வீ்ட்டுல எப்படி வேணா பெருக்குங்க. யார் கேட்கப் போறா.. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதை மதிக்கணும். நீங்க உங்க ஜாலிக்கு பண்ணக்கூடாது. பார்க்கற எங்களுக்குத்தான் ஜாலியா இருக்கணும்.” என்றெல்லாம் விசே காட்டமானார். திவ்யாவின் திமிர் காரணமாக எரிச்சலான விசே விசேவின் கோபத்தைக் கண்டு திவ்யா முகம் சுளிக்க “என்ன டயர்ட்டா இருக்கா.. வேணுமின்னா வெளிய வந்துடறீங்களா… உடம்பு சரியில்லைன்னா உக்காருங்க” என்று விசே சொல்ல ‘பரவாயில்ல நிக்கறேன்’ என்று கெத்து காட்டினார் திவ்யா. “ஹலோ.. உக்காருன்னா உக்காரணும்.. என்ன பழக்கம் இது?” என்று கோபமானார் விசே. “நீங்க சொல்லுங்க. சாண்ட்ரா.. கோபம் வந்தா எது பேசணும்ன்னு இல்லையா.. பிக் பாஸிற்கே அட்வைஸ் பண்ணுவீங்களா.. அதையெல்லாம் நீங்க யாருங்க சொல்றதுக்கு?” என்று சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விசே, சட்டென்று திரும்பி “நீங்க டென்ஷன் ஆகாதீங்க பிரஜின்” என்று சொன்னது டைமிங் நகைச்சுவை. மீசையை முறுக்கிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பிரஜின். BB TAMIL 9: DAY 48 “விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” - வாக்குமூலம் தந்த திவ்யா “போன வாரம்தான் சொல்லிட்டுப் போனேன். பிக் பாஸ் சொல்றதை மதிங்கன்னு.. தீபக் கூட வந்து கண்கலங்கிட்டுப் போனார். உங்களுக்குள்ள சண்டை போடுங்க.. ஆனா பிக் பாஸ் சொல்றத மதிங்க.. பாவம் அவரும் ஒண்டியா என்னதான் பண்ணுவாரு” என்று விசே சொன்னதைக் கேட்டு பிக் பாஸிற்கே கண்கலங்கியிருக்க வேண்டும். மறுபடியும் திவ்யாவிடம் “ஏன் வேலை செய்யலை?” என்று விசே கேட்க திவாகர் பாணியை இப்போது திவ்யாவும் பின்பற்றினார். பாரு வழக்கம் போல் தனது சேஷ்டையான சிரிப்பை வைக்க “பாரு.. உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எது எதுக்கு எப்படி சிரிப்பீங்கன்னு தெரியும்” என்று விசே நையாண்டி செய்ய அதற்கும் அசட்டுச் சிரிப்பை வைத்தார் பாரு. (இவன் இன்னும் திருந்தல மாமா மோமெண்ட்!). “நீங்க உங்க வீட்டுல மகாராணியாவே இருந்துட்டுப் போங்க. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதுதான் ரூல். நீங்க தப்பிக்கவே முடியாது. பதில் சொல்லாம இருக்க முடியாது” என்று கேட்டு சலித்துப் போன விசே ‘நான் பிரேக்ல போறேன்” என்று கிளம்பினார். (திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ!) விசே பிரேக்கில் சென்றதும் “என்ன பதில் சொல்லணும்.. விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” என்று தன்னிச்சையாக உண்மை திவ்யாவிடம் வாயில் இருந்து விட்டது. பிரேக்கில் இருந்து திரும்பிய விசே “திவ்யா.. இதை அப்பவே சொல்லியிருக்கலாமே.. விக்ரமை வெறுப்பேத்த செஞ்சீங்களா.. உக்காருங்க” என்று சொல்லி “சாண்ட்ரா.. அவங்க கூட கூட்டு சோ்ந்தா உங்க கேம் பாதிக்கும். எடுப்பார் கைப்பிள்ளையா மாறிடாதீங்க” என்று சாண்ட்ராவிற்கு அட்வைஸ் செய்தது ஓவர். பாருவிற்குப் பிறகு இந்த சீசன் அதிகமாக டாக்ஸிக் ஆனதற்கு காரணமே சாண்ட்ராதான். அவரையே ஏதோ ஒரு குழந்தை போல சித்தரிப்பதை விசே தவிர்த்திருக்க வேண்டும். BB TAMIL 9: DAY 48 சாண்ட்ரா பேபி - செல்லம் கொஞ்சிய பாருவின் பச்சோந்தித்தனம் ஒருவழியாக இந்த ‘மிட்நைட் பஞ்சாயத்து’ முடிந்ததும் அடுத்ததாக ‘சோறு - சோப்பு - மாப்பு’ டாஸ்க்கிற்கு வந்த விசே “டாஸ்க் ரொம்ப நல்லா பண்ணீங்க”என்று பாராட்டினார். (சர்காஸமோ?!) “எல்லோரும் டீமா பிரிஞ்சு உக்காருங்க. டீம்ல இருக்கறவங்க உங்க கேப்டனைப் பத்தி சொல்லுங்க” என்று விசாரணையை ஆரம்பித்தார். விக்ரம் டீமில் இருந்த சுபிக்ஷா தன் லீடரைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொன்னார். ஆனால் சாம்பார் டீமில் இருந்தவர்களே சாண்ட்ராவை குத்தினார்கள். “எங்க டீம் டாக்ஸிக் தன்மையோட ஆனதுக்கு சாண்ட்ராவோட தப்பான டைரக்ஷன்தான் காரணம்” என்றார் வியானா. அடுத்ததாக பாரு எழுந்தார். அவர் சாண்ட்ராவை காட்டித் தர மாட்டார் என்பது வெளிப்படை. கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் “திவாகர் போனதுல இருந்து ஒரு மாதிரியா இருந்தது. அதான் சமையல் டீம்ல ஒட்டிக்கிட்டேன். சமையல்ன்றது இங்க பிரம்மாஸ்திரம். அத வெச்சு எதையாவது பண்ணலாம்னு .. ‘“ என்று பாரு இழுக்க “கனியை இத வெச்சுதானே ராஜமாதான்னு கிண்டல் பண்ணுவீங்க. இப்ப நீங்க ராஜமாதாவா மாற டிரை பண்றீங்களா?” என்று விசே மடக்க ‘இதை நாம எதிர்பார்க்கலையே’ என்கிற மாதிரி திகைத்து நின்றார் பாரு. BB TAMIL 9: DAY 48 “சாண்ட்ரா பேபி என்ன பண்ணாலும் மன்னிச்சு விட்ற மாதிரி க்யூட்னஸ் இருக்கும்” என்று பாரு அள்ளி விட “இப்படி ஏத்தி விட்டுத்தான் அவங்க இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. இது அந்தப் பய புள்ளைகளுக்கு புரியல.” என்று விசே ஜாலியாக கொளுத்திப் போட “சலங்கையைக் கட்டியாச்சு.. நடிச்சுதானே ஆகணும்” என்றார் பாரு. ‘இது அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே” என்று பாருவின் பச்சோந்தித்தனத்தை நகைச்சுவை மோடில் சுடடிக் காட்டினார் விசே. “சார். வேணாம்..சார்.. அப்புறம் டிரையின் இந்தப் பக்கம் திரும்பிடும்” என்று பாரு நடுங்க “அடடா.. பயப்படற மாதிரி கூட நடிக்கறாங்கப்பா.. என்னால முடியல. நான் போறேன்” என்று விசே சொல்ல சபை கலகலத்தது. ஹீரோ மாதிரி பந்தா காட்டி ஜீரோவான பிரஜின் பிரேக் முடிந்து வந்து மீண்டும் பாருவிடம் விசாரணையைத் தொடர்ந்தார் விசே. “அதாவதுங்க சார்.. சாண்ட்ரா இன்னும் கொஞ்சம் எண்டர்டெயின்மென்ட் தந்திருக்கலாம். கனியும் சாண்ட்ராவும் ஒத்துப் போயிருக்கலாம்” என்று ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் பேச “டீம் கேப்டன் யாரு.. சாண்ட்ராதானே.. அவங்கதானே கோஆர்டினேட் பண்ணியிருக்கணும். உங்களுக்குப் பிடிச்சவங்கறதுக்காக பார்ஷியாலிட்டி காட்டாதீங்க. பார்க்க நல்லாயில்ல. ஒவ்வொரு முறையும் சொல்றேன். அதையே பண்றீங்க. உக்காருங்க” என்று பாருவை அமர வைத்தார் விசே. அடுத்ததாக பிரஜின் பஞ்சாயத்து. ஹீரோ பேசிய பன்ச் வசனங்களை பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டு வரிசையாக சொன்ன விசே “விக்ரம் சொன்னது கப்புளா இருக்கும் போது எமோஷனல் சப்போர்ட் கிடைக்குன்ற பத்தி. இந்த அபிப்ராயம் எல்லோருக்குமே இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள் யார் வரலாம்ன்ற முடிவை நாங்கதான் எடுப்போம். பிக் பாஸ் கிட்ட சொல்றேன். சேது கிட்ட பேசறேன்னு நீங்க எப்படி சொல்லலாம்.. அதை சொல்ல நீங்க யாரு. நீங்க சொன்னா கதவைத் திறக்கணும். நீங்க சொன்னா கண்ணை மூடிக்கணுமா.. வண்டி என் பக்கம் வந்தா கண்டம் பண்ணிடுவேன்னு சொல்றீங்க.. BB TAMIL 9: DAY 48 … ஐ எம் எ ஃபாதர் ஐ எம் எ ஹஸ்பண்ட்.. ஐ எம் எ ஹீரோன்னு சொல்றீங்க. இதையெல்லாம் மத்தவங்க சொல்லணும் சார். வியானாவையும் சுபிக்ஷாவையும் ‘காலி பண்ணிடுவேன்’ன்னு மிரட்றீங்க. இதுதான் ‘சரியா வளர்க்கப்பட்டவன்’ற அடையாளமா.. பாலை யாருக்கு ஊத்தப் போறான்.. அப்பாவுக்கா.. அம்மாவுக்கா..ன்னு கேக்கறீங்க.. இதெல்லாம் நியாயமா.. உங்க குழந்தைங்க இதை பார்க்க மாட்டாங்களா.? என்று பிரஜினை நிற்க வைத்து கேள்வி மழை பொழிந்தார் விசே. ஆனால் பிரஜினோ முறைப்பான போஸில் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார். ‘பால் ஊத்தும் வசனம் எனக்கு கேட்கவேயில்லை. கேட்டிருந்தா தடுத்திருப்பேன்’ என்று அபாண்டமாக புளுகினார் சாண்ட்ரா. “நான் சொன்ன எதையும் மறுக்கல. நான் இப்படித்தான். ஒருத்தருக்கு தலைவலின்னா பால் தர மாட்றாங்க. நான் கேப்டனா இருந்தா தந்திருப்பேன்” என்று பிரஜின் சமாளிக்க “ஒரு சோ் கொடுங்கப்பா.. உக்காருவோம். இது ரொம்ப நேரம் போவும் போலிருக்கு” என்று சேரை வரவழைத்த விசே, பிரஜின் அலட்டல் மாதிரியே கால் மேல் கால் போட்டு உட்கார, பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்தார்கள். தக்காளி சட்னி - ரத்தம் ஃபார்முலாவைப் பின்பற்றும் பாரு “நான் தனியாத்தான் ஆடறேன். நாமினேஷன் ப்ரீபாஸ் எனக்கு தரப்பட்ட போது வேணாமின்னு மறுத்தேன்” என்று பிரஜின் சொல்ல கூட்டம் சிரித்தது. “பால் வேணுமின்னா சண்டை போட்டு கூட வாங்கியிருக்கலாம். அது உங்க கேம். ஆனா இப்படியா அநாகரிகமா வார்த்தைகளை விடறது?” என்று பொங்கினார் விசே. தன் குடும்பத்தினரைப் பற்றி பிரஜின் அவதூறாக பேசியதை இப்போதுதான் எஃப்ஜே அறிகிறார். எனவே அவருக்கு கோபம் வந்தது நியாயம். பொறுக்க முடியாமல் அவர் பொங்க “இந்த எஃப்ஜே ரொம்ப துள்றான்” என்று போட்டுக் கொடுத்தார் பாரு. இந்த சமயத்தில் பாருவின் பச்சோந்தித்தனம் மேலும் அம்பலமானது. திவ்யா வைல்ட் கார்டாக வந்த சமயத்தில் ‘என்னைப் பத்தி எப்படி வெளிய தெரியுது?” என்று கேட்டு போட்டு வாங்க முயன்றார் பாரு. கம்ருதீன் விவகாரம் பற்றி சொன்ன திவ்யா “வீட்ல உங்க அம்மா பார்த்தா என்ன நெனப்பாங்க?” என்று ஓர் அக்கறையில் சொல்லி விட அப்போதைக்கு மண்டையை ஆட்டினாலும் பிறகு “அதெப்படி எங்க வீட்டைப் பத்தி நீ பேசலாம்?” என்று திவ்யாவை நாள் முழுவதும் திட்டிக் கொண்டிருந்தார் பாரு. BB TAMIL 9: DAY 48 பிரஜினும் சாண்ட்ராவும் - ஜாடிக்கேற்ற வன்ம மூடிகள் ஆனால் அதே பாருதான், இப்போது எஃப்ஜேவின் கோபத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார். தனக்கு வந்தால் ரத்தம். மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி பாலிசி. “ண்ணா.. உங்களுக்காகத்தான் இப்ப கம்முன்னு இருக்கேன்” என்று எஃப்ஜே சொல்ல “குட் மாறிட்டே வர்றீங்க இல்லையா..அதுதான் முதிர்ச்சி” என்று சமாதானப்படுத்தினார் விசே. “நீங்களே சண்டை போடுங்கன்னு சொல்றீங்க.. நீங்களே சண்டை வேணாம்ன்னு சொல்றீங்க. ஒண்ணும் புரியலை” என்று பிரஜின் விதாண்டாவாதம் பேச “சண்டை போடுங்க. அது உங்க கேம். ஆனா அது ஒரு எல்லைக்குள்ள நாகரிகமா இருக்கணும். கம்முவைப் பாருங்க.. இப்ப கம்முன்னு ஆயிட்டாரு. அவர் ஆடாத ஆட்டமா.. உங்களுக்கும் புரியும்” என்று பிரஜினுடன் மல்லுக்கட்டிய விசே, கோட்டை கழட்டிய படியே எரிச்சலுடன் சென்றார். “பர்சனல் வேற.. கேம் வேற” என்று என்னதான் விசே சொல்லி அனுப்பினாலும் பிரஜின் அதை வைத்து அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது போல் தெரிகிறது. வீறாப்பாக நிற்பதும், முறைப்பதும் என்று ஹோஸ்ட்டிற்கு மரியாதை தரவில்லை. விசேவும் கூட பிரஜினுடன் விவாதிக்கும் போது வார்த்தைகள் வராமல் திண்டாடினார். இனியாவது சேனலுக்கு நெருக்கமானவர்களை போட்டிக்கு தோ்வு செய்யக்கூடாது என்பது இதன் மூலம் தெரிய வரும் பாடம். ஆனால் பின்பற்ற மாட்டார்கள். விசே சென்றதும் எஃப்ஜேவிற்கும் பாருவிற்கும் சண்டை நிகழ்ந்தது. “உங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி பேசினா உனக்கு கோபம் வரும்தானே. கோள் மூட்டி வேலையை வெச்சுக்காதீங்க” என்று பொங்கினார் எஃப்ஜே. “அப்பவே சொன்னேன். நம்ம குழந்தைகள் பார்ப்பாங்க.. வார்த்தைகளை விடாதீங்கன்னு” என்று பிரஜின் குறித்து புலம்பினார் சாண்ட்ரா. ஆனால் இவரும் அதையேதான் செய்கிறார் என்பது இவருக்குப் புரியவில்லையா? BB TAMIL 9: DAY 48 இப்படி ஆயிடுச்சே. என்று சாண்ட்ரா அழுது புலம்பியது கூட ஓகே. ஆனால் ‘அவர் அக்கா.. தங்கச்சின்னு சொன்னது.. கனியைப் பத்திதான்’ என்று சமாளித்த விதம் இருக்கிறதே.. அநியாயம். எனில் கனியைப் பற்றி தவறாக சொன்னால் மட்டும் ஓகேவா?... முன்னரே சொன்ன மாதிரி பாருவின் நச்சுத்தன்மையால் கெட்டுப் போயிருந்த இந்த ஷோ, சாண்ட்ரா, திவ்யா, பிரஜினின் வருகைக்குப் பிறகு கூடுதல் நச்சாக மாறியிருக்கிறது. சண்டை, வன்மம், பழிவாங்கல், கோள் மூட்டுதல், பச்சோந்தித்தனம் என்று பல நெகட்டிவிட்டிகள். சுவாரசியம் என்பதின் சதவீதம் மிகவும் குறைவு. இந்த வாரத்தில் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டால் நன்றாக இருக்கும் ஆனால் அது நடக்காது. வேறு பலியாட்டை தோ்வு செய்வார்கள். பார்ப்போம்.
கிருஷ்ணகிரி: நடுராத்திரியில் நடுங்க வைத்த பெண் குரல்... வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த போலீஸ்!
கி ருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அர்ஜுனன் வீடு அமைந்திருக்கும் தெருவுக்குள் புகுந்து அவரின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, `சார்... சார்... நான் அடிப்பட்டு வந்துருக்கேன் சார். என் பேரு மீனாட்சி. காப்பாத்துங்க, ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்...’ என சத்தமாக பேசினார். அதைத்தொடர்ந்து, ஜெகதேவி சாலைப் பகுதிக்குச் சென்றவர் அங்கு இருந்த ஆண் நபரிடம் பேசுவதை போன்ற காட்சிகளும் அர்ஜுனன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குரல் பதிவுடன் தெளிவாக பதிவாகியிருந்தன. வைரல் வீடியோ காட்சி பெண்ணின் நடவடிக்கைகளைப் பார்த்து, அர்ஜுனனும், அவரின் மனைவியும் `கொள்ளையர்களாக இருப்பார்களோ...?’ என அச்சத்துக்குள்ளாகி, கதவைத் திறக்காமல் வீட்டுக்குள் இருந்தபடியே தங்கள் மகனுக்குப் போன் செய்திருக்கின்றனர். அவரும் தனது செல்போனில் சிசிடிவி காட்சிகளை பார்த்துவிட்டு, `கதவைத் திறக்க வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களின் வழியாக வேகமாக பரவியதால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள். உண்மைத்தன்மை அறியாமல், ஊடகங்களும் திரும்பத் திரும்ப அந்த வீடியோவை பகிர்ந்து, மக்களை பயத்திலேயே வைத்திருந்தது. இந்த நிலையில், வைரல் வீடியோ குறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``மேற்கண்ட பெண் மிட்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 20-ம் தேதி இரவு அந்தப் பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவரின் கணவரும், உறவினர்களும் சேர்ந்து அடித்ததில் அந்தப் பெண் உள்காயம் அடைந்தார். காவல்துறை விளக்க அறிக்கை பர்கூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தண்ணீர் தாகம் எடுத்த காரணத்தினால் எம்.ஜி.ஆர் நகர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்குள்ள வீடுகளின் கதவைத் தட்டி உதவி கேட்டிருக்கிறார். பின்னர் அவர் பர்கூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேற்கண்ட குற்றச் சம்பவம் தொடர்பாக, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, மேற்கண்ட செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். சமூக வலை தளங்களில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அவர் கூறினார். இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. […]
Ajith: வெனிஸில் அஜித்துக்கு ஜெண்டில்மென் டிரைவர் விருது! - மேடையில் அஜித் வைத்த கோரிக்கை என்ன?
நடிகர் அஜித் குமார் தற்போது ரேசிங் களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றிருந்த அவருக்கு எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித். அஜித் குமார் அவர் விருது வென்றிருப்பது குறித்து அவருடைய மனைவி ஷாலினி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “வெனிஸில் என் கணவருக்கு ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்படும் போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமைகிடைக்கிறது. தொழிலதிபரும் ரேசிங் டிரைவருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அஜித் பேசுகையில், “இங்கு இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அன்பான நபர், அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022) என்னுடைய குடும்பத்திற்கும், என் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கும் மீடியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நானொரு கோரிக்கையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேசிங் சீரிஸ்களைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். இப்படியான சீரிஸ்களை நடத்துவதற்கு நாங்களும் விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவிற்குச் செல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.” எனக் கூறினார்.
ஊட்டச்சத்து பற்றாக்குறை: சூடானில் 23 குழந்தைகள் மரணம்
சூடானின் மத்திய கோா்டோஃபான் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்குள் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக 23 குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோா்டோஃபான் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடா்பான பாதிப்புகளால் உயிரிழந்தன. இந்தப் பகுதியில் ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மனிதாபிமான நிலைமை மோசமடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் […]
Nigeria: நைஜிரியாவில் ஒரே பள்ளியில் 315 பேர் கடத்தல்! - பெரும் அச்சத்தில் மக்கள்
நைஜிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜிரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய கடத்தல் சம்பவம் இதுதான் எனவும் கூறப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நைஜிரிய கிறிஸ்துவ சங்கம் முதலில் 227 நபர்கள் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தது. Nigeria people பின்பு, எண்ணிக்கை சரிபார்க்கையில் மொத்தமாக 303 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருப்பதாக உறுதி செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட மாணவர்களுக்கு எட்டு முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை இப்படியான மூன்று கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை குறித்தான அச்சமும் எழுந்திருக்கிறது. நைஜிரியாவின் நைஜர் மாநிலத்திலுள்ள செயின்ட் ஆகஸ்டின் பள்ளியின் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அருகிலிருக்கும் மற்றொரு பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தி 25 மாணவிகளை கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து நைஜர் மாநில ஆளுநர் மொஹம்மது உமர் பாகோ, “போலீசார் எத்தனை பேர் மொத்தமாக கடத்தப்பட்டிருக்கிறார்கள் என சரிபார்த்து வருகிறார்கள். நைஜர் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டிருக்கிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தற்போது அரசின் முதன்மை நடவடிக்கையாக உள்ளது. அருகிலுள்ள பல மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதேபோன்ற உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளோம்.” என்று தெரிவித்தார். இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்த தனது வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்திருக்கிறார். நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் பணத்திற்காகத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் இந்தக் கடத்தல் கும்பல் தொடர்ந்து இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்போது நைஜர் மாநிலத்தில் நடந்திருக்கும் இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய நைஜர் மாநில காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நைஜிரியாவில் தொடர்ந்து கிறிஸ்துவர்கள் கொலைச் செய்யப்பட்டு வருவது குறித்து சமீபத்தில் பேசிய டிரம்ப், நைஜீரியா அரசு கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை தொடர்ந்து அனுமதித்தால், அமெரிக்கா தன்னுடைய அனைத்து உதவி, ஆதரவுகளையும் உடனடியாக நிறுத்தும். மேலும், தேவையானால், அமெரிக்கா அந்த நாட்டுக்குள் நுழைந்து, இந்த கொடூர தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகளை முற்றிலும் ஒழித்துவிடவும் செய்யும். என எச்சரித்து இருந்தார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 48 மருத்துவ இடங்கள்; தேசிய மருத்துவ ஆணையத்திடம் நிரப்ப கோரிக்கை
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இடங்களை நிரப்ப 4 சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 48 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப அனுமதி கோரப்பட்டுள்ளது.
தவெகவிற்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ? தற்குறி இல்ல, விஜய் சொன்ன பிளாஸ்ட் மூமண்ட்!
திமுகவின் அறிவுத் திருவிழாவில் அக்கட்சி எம்.எல்.ஏ எழிலன் பேசியது தொடர்பாக தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தவெகவிற்கு ஆதரவாக பேசியதால் திமுக தலைமையே குழம்பி போயிருப்பதாக விமர்சித்திருக்கிறார்.
வியத்நாம் வெள்ளம்! பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு!
வியத்நாம் நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. வியத்நாமில் பெய்த கனமழையால், மத்திய மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 28,400-க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், 80,000 ஹெக்டேர் அளவிலான விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதாக, வியத்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 13 பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகளில் அரசுப்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. […]
திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண பந்தத்தில் இன்று (23) இணைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளுடன் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ உட்பட இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
புனே: தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளர்!
தெருவில் எதாவது பொருள் கிடந்தால் உடனே எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்வது வழக்கம். அதுவும் பணம் என்றால் ஒரு ரூபாய் கிடந்தால் கூட விடமாட்டார்கள். ஆனால் புனேயில் தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சத்தை தூய்மைப் பணியாளர் ஒருவர் கண்டுபிடித்து அதனை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். புனே சதாசிவ் பேட் பகுதியில், அஞ்சு மானே என்ற பெண் ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை சேகரிக்கும் வேலையை செய்து வருகிறார். அவர் வழக்கம்போல் ஒவ்வொரு வீட்டிலும் குப்பையை வாங்கிக்கொண்டு வந்தபோது சாலையில் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. உடனே அதில் எதாவது மருந்து இருக்கலாம் என்று கருதி அதனை எடுத்து தனது வண்டியில் தனியாக வைத்தார். சிறிது நேரம் கழித்து அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் மருந்தும், கட்டுக்கட்டாக பணமும் இருந்தது. உடனே அந்த பகுதியில் உள்ளவர்களிடம் யாராவது பணம் இருந்த பையை தவறவிட்டார்களா என்று அஞ்சு விசாரித்தார். அப்போது ஒருவர் மிகவும் பதட்டத்துடன எதையோ தேடிக்கொண்டு வந்தார். அவரது பதட்டத்தை பார்த்த அஞ்சு அவரிடம் என்னவென்று விசாரித்தார். உடனே அவர் தான் பேக்கை தவறவிட்டுவிட்டதையும், அதில் பணம் மற்றும் மருந்து இருந்ததை தெரிவித்தார். உடனே பணத்திற்கு சொந்தக்காரர் அவர்தான் என்பதை அறிந்து கொண்ட அஞ்சு அந்த பேக்கில் என்னவெல்லாம் இருந்தது என்பதை கேட்டு உறுதி செய்துகொண்டு அதனை அவரிடம் ஒப்படைத்தார். அவர் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுத்துக்கொள்ளவில்லை. பேக்கில் ரூ.10 லட்சம் இருந்தது. பணத்திற்கு சொந்தக்காரர் மிகவும் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார். அப்பெண்ணின் இந்த தன்னலமற்ற செயலை பாராட்டி உள்ளூர் மக்கள் சிறிய பாராட்டு விழா எடுத்தனர். அதில் அவருக்கு ஒரு சேலையும், சிறிது ஊக்கத்தொகையும் கொடுத்தனர். கடந்த 20 ஆண்டுகளாக அஞ்சு புனே மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை சேகரித்து வருகிறார்.
தன் முகத்தை பற்றி க்ரிட்டி சனோன், ஆனந்த் எல். ராய் சொன்ன விஷயத்தை தேரே இஷ்க் மெய்ன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து, என் முகம் என்ன அப்படியா இருக்கிறது என்று கண்ணாடியை பார்த்ததாக கூறினார் தனுஷ்.
நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய்
இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு என்பதால், பலத்த பாதுகாப்புடன் சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் தொழில்நுட்ப தனியார் கல்லூரி வளாகத்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பவுன்சர்கள் பணியில் நிறுத்தப்பட்டு இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட ஓய்வு பெற்ற காவல்துறையினர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சார்பில் கடந்த நான்கு நாட்களாக தவெகவின் தொண்டரணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அந்தத் தொண்டரணியினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியிருக்கும் விஜய், 'நாட்டுக்காக உழைக்கவே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில்தான் நாள் முழுக்க கண்ணா இருந்தார்' என்று எம்.ஜி.ஆர் அண்ணாவைப் பற்றி பாடலில் சொன்னார். அப்படிப்பட்ட அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். அறிஞர் அண்ணா ஆரம்பிச்ச கட்சியை, அவருக்குப் பிறகு கைப்பற்றி இப்போ என்னவெல்லாம் பண்றாங்கனு எல்லாரும் பார்த்துகிட்டுதான் இருக்காங்க. நான் எந்தக் கட்சியை சொல்றேனு எல்லாரும் தெரியும்னு நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவங்களுக்கும், எங்களுக்கும் எந்த சண்டையும், வன்மமும் இல்லை. ஆனால், மக்களை நம்பவச்சு நம்மள ஓட்டு போட வச்சு துரோகம் பண்றவங்கள, நாடகம் ஆடுறவங்கள எப்படி கேள்வி கேட்கமால் இருக்க முடியும். பேரறிஞர் அண்ணா, 'மக்களிடம் செல், மக்களுக்கு சேவை செய்' என்றார். அதை மறந்துவிட்டார்கள் அவர்கள். நாம்தான் அதைச் செய்கிறோம். கொள்கை இல்லைனு சொல்றாங்க. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ, சமூகநீதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எங்கள் தவெக கட்சி. CAA எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நிதிமன்றம்வரை நீதி கேட்டு போனோம், கல்விய மாநில பட்டியல்ல சேர்க்கனும்னு சொன்னோம், சமத்துவம், சமவாய்ப்பு என நீதிகேட்ட தவெக விற்கு கொள்கை இல்லையா? விஜய் கொள்கைய வெறும் பேச்சுல மட்டும் பேசிட்டு இருக்காங்க. இவங்க கொள்கையே கொள்ளைதானே. 'எங்க கட்சி சங்கர மடம் இல்லைனு' சொன்னது யாரு? யார் சொன்னாங்க, எதுக்கு சொன்னாங்க. இப்போ உங்க கட்சியில என்ன நடக்குதுனு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அதுனால 'பாப்பா பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாத பாப்பா. நீ நல்லவர்களைப் போல நடிப்பதைப் பார்த்து நாடே **** பாப்பா' னு சொன்னதையே இன்னும் சீர்யஸ எடுத்துகிட்டு இருக்கீங்க. நாங்க இன்னும் உங்கள விமர்சனம் பண்ணாவே ஆரம்பிக்கல. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே. அதுக்குல்ல அலறுனா எப்படி? என்று 'திமுக' வை தாக்கிப் பேசியிருக்கிறார் விஜய்.
விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி.. அரங்கம் அதிர்ந்த விஜய் பேச்சு!
தனது கொள்கைகளை அடகு வைத்தது தான் திமுக.விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி தவெக தலைவர் விஜய் தெரிவிமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சி தலைவர் விஜய் 2026 தேர்தல் வாக்குறுதிகளாக சிலவற்றை முன்வைத்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் மக்களின் நிலை குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.
எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண் –மிரண்ட பயணிகள்
எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பெண் பயணி ஒருவர் மேகி சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகி சமையல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பெண் பயணி ஒருவர் எலெக்ட்ரிக் கெட்டிலை பயன்படுத்தி மேகி சமைக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது. அதில் சமையலறை எங்கு வேண்டுமானாலும் உள்ளது” என்று மகிழ்ச்சியுடன் பேசிய அந்த பெண், ஒரே கெட்டிலில் 15 பேருக்கு டீ போடும் திட்டத்தையும் பகிர்ந்து கொண்டார். அத்துமீறிய பெண் இதனைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு விதிகள் […]
அலிபாபாவும் 40 திருடர்களும் பங்குபற்றிய நுகேகொடை பேரணி
அண்மையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றிய கூட்டணி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தரப்பு “அலிபாபாவும் 40 திருடர்களும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்த விமர்சனத்தை முன்வைத்தார். எல்லா திருடர்களும் ஒரே மேடையில்… இந்த நாடு வங்குரோத்து நிலை அடைந்ததற்கு மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பமே பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திய அவர், […]
தமிழர் பகுதியொன்றை உலுக்கிய சம்பவம் ; குடும்ப பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட பெரும் கொடூரம்
பொத்துவில் பொலிஸ் பிரிவின் ஹுலன்னுகே 12வது தூண் பகுதியில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை நேற்று (22) நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஹுலன்னுகே பொத்துவில் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஆவார். நடந்து வரும் விசாரணையில், இந்தக் கொலை தனிப்பட்ட தகராறில் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக 59 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் நான்கு இளைஞர்கள் அதிரடி கைது
யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 4 பேர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். மேலதிக விசாரணை கைதானவர்கள் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 22,24 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
24 மணிநேரத்திற்குள்..! வங்கதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்!
வங்கதேச நாட்டில், 24 மணிநேரத்துக்குள் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் அருகிலுள்ள பைபைல் எனும் பகுதியை மையமாகக் கொண்டு நேற்று (நவ. 22) காலை 10.36 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பெரியளவில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, வங்கதேசத்தில் நேற்று முன்தினம் காலை […]
மகாராஷ்டிரா: `நீங்கள் ஓட்டை குறைத்தால், நான் நிதியை குறைத்துவிடுவேன்'- அஜித் பவார் எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு வரும் 2ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மாலேகாவ் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில துணை முதல்வர் அஜித் பவார்,''மத்தியிலும், மாநிலத்திலும் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. பிரதமர், முதல்வர் மற்றும் இரு துணை முதல்வர்கள் இணைந்து இதனை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நிச்சயம் வளர்ச்சி ஏற்படும். எங்களது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்தால் திட்டங்களை நிறைவேற்ற நிதிக்கு எந்த வித பற்றாக்குறையும் இருக்காது என்று உறுதியளிக்கிறேன். எங்களது வேட்பாளர்கள் அனைவரையும் நீங்கள் தேர்வு செய்தால் நான் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்றுவேன். நீங்கள் எங்களது வேட்பாளர்களுக்கு வாக்கை குறைத்தால் நானும் நிதியை குறைத்துவிடுவேன். நீங்கள் வாக்களிக்கும் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். நான் நிதி வழங்கும் அதிகாரத்தில் இருக்கிறேன். இப்போது என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்''என்றார். அஜித்பவாரின் இக்கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து சிவசேனா(உத்தவ்) சட்டமேலவை உறுப்பினர் அம்பாதாஸ் தன்வே கூறுகையில்,''மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்து திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அஜித்பவார் அவரது வீட்டில் இருந்த பணத்தையா கொடுக்கிறார். இது போன்று அஜித்பவார் போன்ற தலைவர்கள் மக்களை மிரட்டினால் தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். இதே போன்று ஜால்னாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, தனது கட்சி வேட்பாளர்களுக்கு முன் வரிசையில் இருக்கைகளை எடுத்து போடும்படி போலீஸாருக்கு அஜித்பவார் உத்தரவிட்ட வீடியோ ஒன்றும் வைரலாகி இருக்கிறது. அதில் யார் எங்களது வேட்பாளர்கள் என்று தெரியவில்லையா என்றும் அஜித்பவார் கேட்டுள்ளார். ஓட்டு போடவில்லையெனில் நிதி ஒதுக்கமாட்டேன் என்று கூறியது குறித்து அஜித்பவார் அளித்துள்ள விளக்கத்தில், தேர்தல் பிரசாரத்தில் இது போன்று கூறுவது ஒன்றும் புதிதல்ல, நான் வாக்காளர்களை மிரட்டவில்லை என்றும், ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவருக்கு தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதியளிக்க அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் வாக்குறுதியளிக்க அதிகாரம் இருந்தாலும், யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் அஜித்பவார் தெரிவித்துள்ளார். அஜித்பவார் இதற்கு முன்பு சட்டமன்ற தேர்தலில், நீங்கள் எனக்கு ஓட்டுப்போட்டுவிட்டதால் நான் உங்களுக்குறியவனாக மாறிவிடமாட்டேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
அசைவ உணவோட தலைநகரம் சென்னை 'தாஷமக்கான்’ பகுதி; ராப் இசை கலைஞராக நடிச்சிருக்கேன் -ஹரிஷ் கல்யாண்
'லிஃப்ட்’ படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. டைட்டில் ஏதும் முடிவு செய்யப்படாமல் படப்பிடிப்புப் பணிகள் நடந்து வந்தன. இப்படத்தினை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க இடா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தாஷமக்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் இந்நிலையில் இப்படத்திற்கு 'தாஷமக்கான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் குறைந்த விலையில் நல்ல சுவையான அசைவ உணவுகளுக்குப் பெயர்போன ஏரியாதான் இந்த 'தாஷமக்கான்’. இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் ஹரிஷ் கல்யாண், என் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸுக்கு இப்படி தனியாக நிகழ்ச்சி நடத்துறது இதுதான் முதல்முறை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'தாஷமக்கான்’ ஏரியா பற்றி நிறையபேர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதோட உலகம்பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரியாது. அங்கிருந்துதான் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அசைவ உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அசைவ உணவு தலைநகரம் என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் நான் ராப் இசைப் பாடகராக நடிச்சிருக்கேன். பல இளம் ராப் இசைக் கலைஞர்களுடன் பழகி, அவர்களைப் பார்த்து அவர்களுடைய அசைவுகள், ஸ்டைல், ராப் பாடும் விதம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். யோகி பி, ஹிப் ஹாப், ரஹ்மான் சார் என எல்லோரும் ராப் இசையைக் கேட்டிருப்போம். இன்னைக்கு ராப் இசை நல்லா வளர்ந்திருக்கு. அறிவு, அசல் கோளாறு, பால் டப்பா எனப் பலர் உலகளவில் பிரபலமாகிட்டாங்க. ராப் இசை மூலமாக புரட்சியே பண்ணுறாங்க. அப்படியான ராப் இசை கலைஞராக நான் நடித்திருக்கிறேன். நிறையபேர் இந்தப் படத்தோட கதையக் கேட்டுட்டு நடிக்கல, ஒரு சவாலாக எடுத்து இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். வடசென்னை பற்றி நிறையபடம் வந்திருக்கு, ஆனால் இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வரும் என்று பேசியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
பிக் பாஸ்ல இருந்து கெமி வெளியேற்றம்:தயவு செஞ்சு இனியும் 'அந்த வார்த்தையை' சொல்லாதீங்க விஜய் சேதுபதி
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் கெமியை வெளியேற்றியுள்ளனர். மேலும் திவ்யாவை விளாசும்போது விஜய் சேதுபதி பயன்படுத்திய வார்த்தை சரியில்லை என்று புகார் எழுந்திருக்கிறது.
காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு.. பவுன்சர்களுக்கு விஜய் போட்ட ஆர்டர் - பலத்த பாதுக்காப்பு
காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்திக்க உள்ளார். இதனால் பாதுக்காப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு ஏடிஎம் வாகன கொள்ளை சம்பவம்: 3 பேர் கைது –ரூ. 5.76 கோடி பறிமுதல்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜேபி நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப ரூ. 7.11 கோடி பணத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவன வானத்தில் கடந்த 19ம் தேதி ஊழியர்கள் சென்றனர். அந்த வாகனத்தில் டிரைவர், துப்பாக்கியுடன் கூடிய 2 பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர். இதனிடையே, ஜெயநகர் அருகே அசோக் பில்லர் பகுதியில் சென்றபோது அந்த வாகனத்தை சொகுசு காரில் வந்த சிலர் இடைமறித்தனர். ரிசர்வ் வங்கி, […]
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசை அமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமண கொண்டாட்டம் | Photo Album
நாவாந்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
மண்ணுக்காய் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர், உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.நீக்கிளஸ் சனசமூக நிலையத்தில் கெளரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது. நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

27 C