Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமைந்துள்ளது வாங் ஃபுக் நீதிமன்றம் (Wang Fuk Court) என்ற உயரமான குடியிருப்பு வளாகம். இந்த வளாகத்தில் 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள் இருக்கின்றன. அதனால் மிகுந்த அடர்த்தியான குடியிருப்பு வளாகம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்டு வந்தது. அதற்காக மூங்கில் சாரக்கட்டுகளால் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், சீன நேரத்தின்படி நேற்று பிற்பகல் 2:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. Hong Kong: தீ விபத்து பலத்த காற்று, எளிதில் தீபற்றும் மூங்கில் சாரக்கட்டுகள் போன்றவற்றால், தீ மளமளவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 44 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 279 பேர் காயமடைந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து 900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். மீட்புப் பணியைத் துரிதப்படுத்தி, இன்னும் கட்டிடத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்!
IN10 Media Network becomes The EPIC Company, unveils future-ready content engine
Mumbai: IN10 Media Network has officially rebranded as The EPIC Company, marking a major milestone in its decade-long journey of crafting culturally rooted and globally appealing content. The transformation signals the organisation’s evolution into a future-facing, tech-enabled storytelling powerhouse.The new identity was unveiled in the presence of industry stalwarts including Anand Mahindra, Chairman, Mahindra Group; Krishna Kumar Pittie, Founder & Chairman, Pittie Group; Prasanth Kumar, CEO – South Asia, WPP Media; Shashi Sinha, Executive Chairman, IPG Mediabrands India; and Ajit Varghese, Partner & Group CEO – Media & OOH, Madison World.What began a decade ago as EPIC Channel, focused on bringing Indian stories to every home, has now grown into a multi-format, multi-platform powerhouse comprising 14 diverse brands. The rebrand reflects the company’s ambition to operate as a platform-agnostic content engine, creating and distributing films, series, documentaries, shorts, audio formats, and digital-native storytelling at scale.Speaking on the transition, Aditya Pittie, Managing Director, The EPIC Company, said, “We have always believed that great stories can come from anywhere and belong everywhere. This transformation is not just a visual refresh; it is a mindset shift: from being platform-led to creation-led, and from being a platform network to becoming a storytelling universe.” The newly launched logo visually represents this shift, with a three-dimensional frame around the word EPIC, symbolising a creative window into the stories the company aims to deliver across screens and platforms.At the event, the company also introduced its unified content philosophy—its blueprint for a storytelling ecosystem designed to adapt to personal tastes, reach audiences everywhere, and operate through an integrated creative-and-technology engine described as a “24/7 story factory with zero downtime.” As Pittie encapsulated, “This is not a pipeline. It’s a power plant.” The EPIC AI Lab: A New Era of Co-Creation In line with its innovation-first approach, The EPIC Company also unveiled The EPIC AI Lab, a dedicated co-creation space blending human creativity with intelligent tools. A key highlight of the initiative is:The EPIC Co-Director: An AI-enabled creative companion supporting the entire content lifecycle—from ideation, scripting, and world-building to post-production—powered by real-time audience insights.Concluding the announcement on a visionary note, The EPIC Company reiterated its mission to shape the future of storytelling, echoing Plato’s timeless words: “Those who tell stories rule the world.”
கோவை செம்மொழி பூங்கா கட்டணம் எவ்வளவு? பார்க்கிங் கட்டணம் உண்டா?
கோவை செம்மொழி பூங்காவை பார்வையிட பொதுமக்களுக்கு கட்டணம் எவ்வளவு? அங்கு வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் உண்டா? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக கூறப்பட்டு உள்ளது.
தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!
சென்னை : நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் முன்னிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று (27-11-2025) தவெகவில் இணைந்தார். நேற்று கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஒரே நாளில் தவெகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பனையூர் தவெக தலைமையகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் விஜய் நேரில் வரவேற்று, செங்கோட்டையனுக்கு கட்சிக் கொடியை அணிவித்தார். செங்கோட்டையனுடன் அவரது நெருக்கமான ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்யபாமா, […]
பனையூர் தவெக அலுவலகத்தில் செங்கோட்டையன்… விஜய் கொடுத்த ஸ்பெஷல் கவனிப்பு!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தவெகவில் இணையவுள்ளார். இதையொட்டி பனையூர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
TVK: பனையூரில் செங்கோட்டையன் &கோ - த.வெ.க வில் இணைபவர்கள் யார் யார்?
தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று (26-11-2025) ராஜினாமா செய்த செங்கோட்டையன், பனையூர் அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவிலிருந்து பிரிந்திருப்பவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் எனப் பேசி எடப்பாடியுடன் முரண் ஏற்பட்டு செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கும் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்யப் போகிறார் எனும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. செங்கோட்டையன் இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக செங்கோட்டையன் தவெகவில் இணையப் போகிறார் எனும் தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் நேற்று சபாநாயகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியையும் செங்கோட்டையன் ராஜினாமா செய்திருந்தார். பின்னர் நேற்று மாலையே பட்டினப்பாக்க வீட்டில் விஜய்யை சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசியிருந்தார். இந்நிலையில், இன்று காலை 9 மணி முதல் முன்னாள் எம்.பி சத்தியபாமா உட்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தவெக அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். முன்னாள் எம்.பி. சத்தியபாமா மற்றும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் செங்கைட்டையனுடன் தவெக-வில் இணைகின்றனர். மேலும் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதனும் தவெக வில் இணைகிறார். அவருடன் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் பாஜக-வில் இணைகிறார். விஜய்யும் 9.15 மணிக்கு பனையூர் அலுவலகம் வந்து சேர, இப்போது அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன். இன்னும் சில நிமிடங்களில் அவர் பத்திரிகையாளர்களையும் சந்திக்கவிருக்கிறார். காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! - பரபர அப்டேஸ்!
Gold Rate: கொஞ்சம் குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,770 ஆகும். தங்கம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.94,160 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.180 ஆக விற்பனை ஆகி வருகிறது.
Ria Diamonds, a lab-grown diamond brand, conducted a Red Rose Campaign this year. This initiative looked to transform ordinary days into moments of happiness. Over 10,000 roses were distributed across Bangalore and Coimbatore, creating smiles, surprises, and what it calls instant joy for countless people many of whom had never experienced such a gesture before. Medianews4u.com caught up with Prapanjj S. K. Kota, Founder, CEO, Ria Diamonds Q. From the outset Ria Diamonds was clear that it couldn't be like any other jewellery brand. What tactics were adopted in areas like designs, customisation and pricing to differentiate itself and standout? We have ensured that we don't do the conventional stock up and sell, rather we follow the route of listening to our consumers by keeping an in house jewellery designer at each of our outlets and ensure we provide the best design to our customer either through customisation or by giving an in stock product.In terms of price a different methodology that we had adopted from Costco is to give maximum value to our consumer by keeping a membership called the carat club where they can avail a zero making charges for any diamond jewellery either through customisation or in-stock pickup. Q. Which are the TGs and key markets that it is focussing on for growth? What trends are being seen in the rising demand for accessible, ethical, and contemporary diamond jewellery? Our target audience is the corporate women and we focus on engagement rings as we know the milestone is important for every women. The key market we are dominating is in the lab grown diamond engagement rings category as we believe, being able to integrate ourselves in a critical decision like the engagement ring is something that we are proud of.The trends for accessible luxury has been growing on a quarter on quarter basis as many individuals are conscious about budgets but do not want to compromise as well, thus enabling us to be in the sweet spot of accessible luxury. Q. This year Ria Diamonds raised Rs. 2 crore in a pre-seed funding round to expand its engagement ring and everyday jewellery collections. What are the investors expectations? What goals have been set in the coming three to five years? The investor expectations for us is to make Reia diamonds a household name in terms of engagement rings and we are striving to be the pioneers of the space, we have strategically kept a combination of both flagship stores as well as Aisle Stores - Reia Exclusive Engagement Ring stores where people can browse through either a specific engagement ring or if they are looking for everyday wear jewellery they can come to our flagship stores.The goal for us in the next three years, is to become an engagement ring leader and not shy away from being able to take the commitment of creating the perfect engagement ring in just 7 days irrespective of the complexity of the design. Q. How the festive season been this year compared with last year? The festive season has been generous in terms of the acceptance of lab grown diamonds as a gifting opportunity for many people. However due to the spike in gold prices, heavier purchases have slowed down. Q. The Red Rose Campaign is very novel. Other companies mainly do traditional marketing like an online video campaign. Could you talk about the brainstorming with the creative agency that led to the Red Rose Campaign? Reia is proudly an in-house creative team where we pride ourselves in the ideation as well as our execution.The brainstorming behind the Red Rose Campaign was very simple: How do we make everyone smile without any reason since we wanted to promote the concept of Just Because. Since sometimes things come with no strings attached and that was the ideation behind our red rose. Q. Could you talk about the increase in store footfall around activation zones that happened as a result? We saw significant traction in terms of store footfall as people were happy to have a conversation with us, and this is just the start as we know that every idea has a creative fatigue attached to it, and the creative team at Reia is brainstorming on more ideas on how to make us stand out in a sea of jewellers. Q. What other marketing innovations can one expect? The innovations while they are at a novel stage, one can expect a lot more physical activites being endorsed by the brand and we are looking forward to creating a buzz in the market of not just being another jeweller, but a name where people recall it with a smile. Q. How does the company balance performance marketing with brand building? Is it possible to achieve these goals simultaneously? It is a fine line to balance as performance marketing has a immediate tangible output that can be expected whereas brand building as the earned media that one cannot really measure until time passes by.At Reia, we have kept both of them at a equal weightage as we are competing against giants like Caratlane, Bluestone where jewellery is synonomous with them, and just sales will not bring in the desired results we require. Hence our performance marketing is based on two major metrics - The CPM and the ROAS and our brand building is based on the NPS score that we track on an internal basis. Q. Could you talk about the effort that goes into the in-store experience? Could you shd light on the expansion plans into 12 cities? The in-store experience is handled by our merchandising team and we get into the details of the smell of the store, the lighting of the store to even the thank you-cards which the consumer receives.We want to make the engagement ring purchase as intimate as possible and we have our customers to thank as they are also the biggest critics that we are grateful for, they vehemently help us understand how to improve.We want to expand to cities where lab grown diamonds are not nascent, rather they are accepted along with cities where engagement rings are a concept that people adorn towards. Q. Is e-commerce a very small part of the business because consumers would want to try on jewellery first? Yes, currently at Reia, e-commerce is a small part of business, but that does not mean we have ignored it, as we can see that our consumers take screenshots of our designs and come to our store for the design.Further we did not just build a e-commerce off the shelf as a lot of jewellers just purchase ready made designs, rather at Reia, each page has been carefully created by the Visual team at Reia as every touch point is special for us and we want each consumer to see the thought behind each button placed. Q. How does the company use advances in AR, VR, MR to build a strong narrative online? We currently have not explored the angle as we are building on fundamentals before diving into innovativeness such as the AR,VR and MR. Q. Other brands in the category use celebrities. Will Reia Diamonds also go down that route at some point? We are exploring opportunites and we are keeping open ears for the same. We are looking for a celebrity who wants to make a difference in the market and not just a celebrity who wants to be a brand ambassador, we want to tie up with someone who understands the business and understands how engagement rings are sentimental and how they can help us reach wider audiences. Q. Could you shed light on Reia Diamonds' social media strategy to participate in the consumer conversation online? We are looking to have more endoresements through the affiliate influencer marketing route as we can see how the word-of-mouth of many consumers are growing in nature and we want to be able to ride the wave accordingly.Further with our exclusive engagement rings collections being launched in the coming months, we're looking forward to conversations that can revolve into more of a design nature than a price point nature, since we can see many consumers willing to pay a premium if the design justifies the same. Q. How does Reia Diamonds approach B2B marketing through things like workshops, seminars? We currently have not explored the B2B marketing route as we have a single focus - How do we get more eyeballs on Reia and that is something that the team critically thinks about on a daily basis since we want to be the leaders in the market and that is our focus.
ஆதரவாளர்களுடன் இன்று தவெகவில் இணையும் செங்கோட்டையன்! பனையூர் புறப்பட்ட விஜய்!
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) சென்னைபனையூர் தலைமையகத்தில் இன்று பரபரப்பான அரசியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் செல்வாக்கு மிக்க தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று தவெகவில் இணையவுள்ளார். நேற்று தனது கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்த செங்கோட்டையன், இன்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் கட்சியில் இணையவுள்ளார். இவருடன் அவரது நீண்டகால ஆதரவாளர்களும் தவெகவில் இணையவுள்ளனர். கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட ஈரோடுகொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செங்கோட்டையன் ஆதரவாளர்கள் […]
கோவை பெரிய குளத்தில் திறக்கப்பட்ட மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்!
கோவை மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படும். ஒரு நாளைக்கு சுமார் 600 யூனிட் மின்சாரம் சேமிக்க இருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 தொடரில், இந்திய அணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுவரை விளையாடிய போட்டிகளில், அதிக தோல்விகளை சந்தித்து, 48 சதவீத புள்ளிகளை மட்டும் பெற்று, கடும் பின்னடைவில் இருக்கிறது.
Doctor Vikatan: `நீரிழிவு'தாம்பத்திய வாழ்க்கை, குழந்தைப் பேற்றை பாதிக்குமா?
Doctor Vikatan: என் வயது 34. இன்னும் திருமணமாகவில்லை. ஆனால், கடந்த ஒரு வருடமாக சர்க்கரைநோய் இருக்கிறது. நீரிழிவு இருப்பவர்கள் திருமணம் செய்துகொண்டால், இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது சிரமமாகும், குழந்தைப் பேறு பிரச்னையாகும் என்றெல்லாம் சொல்கிறார்களே, எந்த அளவுக்கு உண்மை. நான் என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி சர்க்கரை நோய் என்பதை முன்பு வயதானவர்களிடம் பார்த்தோம். தற்போது இளம்வயதினரிடமே பார்க்கிறோம். அதிலும் 20, 25 வயதுள்ள ஆண்களிடமே சர்க்கரை நோய் வருவது சாதாரணமாக மாறிவிட்டது. அதனால் இப்படி ஒரு கேள்வி எழுகிறது என்று நினைக்கிறேன். சர்க்கரை நோய் ஒன்றும் தடை செய்யப்பட்ட நோயல்ல. அதனாலேயே திருமணம் செய்யக் கூடாது என்றும் அர்த்தமில்லை. நீரிழிவு என்பது நாம் கையாளக் கூடியது; கட்டுப்படுத்தக் கூடியது. டயாபட்டீஸால் திருமணம் செய்துகொள்ளக் கூடிய பெண்ணின் நிலைமை பாதிக்கப்படும் என்றும் மேலோட்டமாகச் சொல்லக் கூடாது. எனவே, நீரிழிவு நோயாளிகளும் திருமணம் செய்துகொள்ளலாம். நீரிழிவு நீரிழிவு நோயாளியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்கவும் முடியும். நீரிழிவைக் கட்டுப்படுத்தாமல் மோசமாக வளர விட்டால்தான் அதன் பாதிப்புகள் பலவிதங்களிலும் எதிரொலிக்கும். மற்றபடி நீரிழிவைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால் அவருக்கு மேற்கொண்டு எந்த பாதிப்புகளும் வராமல் தவிர்க்க முடியும். எனவே, இந்த அச்சம் தேவையில்லை. கட்டுப்பாடில்லாமல் நீரிழிவை உதாசீனப்படுத்துகிறவர்களுக்கும், அலட்சியப்படுத்துகிறவர்களுக்கும் அடுத்து வேறு பாதிப்பு வர சாத்தியம் மிக மிக அதிகம். எனவே, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். நீரிழிவு நோயாளிகளிடம் அதிகம் பார்க்கக் கூடிய பிரச்னை Erectile dysfunction என்கிற விறைப்புத்தன்மை கோளாறு. நீரிழிவாளர்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை அதிகமாக இருக்கும். அதிலும் இளவயதில் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடம் மிக அதிகமாக இருப்பதை மருத்துவர்கள் கவனிக்கிறோம். அந்த வகையில் இதன் அடுத்தநிலையாக குழந்தையின்மை பாதிப்பு (Infertility) உண்டாக்கலாம். அதாவது விறைப்புத்தன்மைக் கோளாறை அலட்சியப்படுத்தினால் மலட்டுத்தன்மை சாத்தியம் உண்டு. எந்த நோயாக இருந்தாலும் இதுபோல் உதாசீனப்படுத்தினால் அதற்கென பின்விளைவுகள் வரவே செய்யும். நீரிழிவு... இல்லற வாழ்க்கையைக் கசக்கச் செய்யுமா? நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் விறைப்புத்தன்மை கோளாறும் வராது. அதன் அடுத்தகட்டமாக மலட்டுத்தன்மை சாத்தியமும் அதிகரிக்காது. இதன் பின்விளைவுகளும் கூட உடனே நிகழ்வதில்லை. பல நாள் அலட்சியத்தின் தொடர்ச்சியாகவே நிகழும். நீரீழிவு என்று இல்லை; எந்த நோயாக இருந்தாலும் அதை சரியாகக் கண்டறிந்து, சரியான மருத்துவரின் வழிகாட்டுதலுடன் இருந்தால், அந்த நோய் கட்டுப்பாட்டில் இருந்தால், முறையாக அந்த நோயின் பாதிப்பைக் குறைப்பதாக இருந்தால், நோய் மேலும் மோசமாகாமல் இருந்தால், உரிய இடைவெளியில் பரிசோதனைகள் செய்துகொண்டால், பல பிரச்னைகளை வருமுன் தடுக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?
யாழ் மருத்துவ பீடத்தில் பரீட்சை மோசடி ; மாணவிக்கு ஒரு வருட தடை
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீட பரீட்சையில் மோசடி செய்த மாணவி ஒருவருக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதள பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சையில் தோற்றிய மாணவி தான் அணிந்திருந்த பரிதா ஆடையின் உள்ளே மறைத்து வைத்திருந்த கைத் தொலைபேசியின் ஊடாக பரீட்சை மோசடி செய்த குற்றத்திற்காகவே மாணவிக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட ஒரு வருட காலத்தினுள் மாணவி பல்கலைக் கழக பரீட்சைகள் […]
வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமனம்!
வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் திணைக்களத்தின் வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் நேற்றைய தினம் ( நவம்பர் 26 ) யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண தொழில் அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் கடந்த ஒக்ரோபர் 16 தொடக்கம் யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளராக பணியாற்றி இன்று வட மாகாண பிரதி […]
இலங்கையில் பாரிய மண்சரிவு 04பேர் பலி ; பலர் மாயம்
பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். தேடுதல் பணி நேற்று (26) சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஒன்பது பேர் வரை காணாமல் […]
இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிர்ப் பலிகள் 17 ஆக அதிகரிப்பு; 6 பேர் மாயம்!
இந்தோனேசியா நாட்டில், ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் பருவமழை தீவிரமடைந்து சுமத்ரா தீவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 25) வடக்கு சுமத்ரா பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்த வெள்ளத்தில் சுமத்ராவின் சிபோல்கா நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிபோல்கா […]
வெள்ளை மாளிகைக்கு அருகே இரண்டு தேசிய காவல்படையினர் சுட்டுக்கொலை!
நேற்று புதன்கிழமை வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகை அருகே இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:15 மணியளவில் (1915 GMT) துப்பாக்கிச் சூடு நடந்ததாக எவ்பிஜ இயக்குநர் காஸ் பட்டேல் கூறினார். வெள்ளை மாளிகையிலிருந்து அருகே அமைந்த ஃபராகுட் மெட்ரோ நிலையம் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. சந்தேக நபரை மத்திய நிறுவனங்கள் இன்னும் பகிரங்கமாக அடையாளம் காணவில்லை. சந்தேக நபரின் பெயர் ரஹ்மானுல்லா எல் என்றும், வாஷிங்டன் மாநிலத்தில் வசித்து வந்த 29 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டவர் என்றும் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, போரின் போது அமெரிக்காவிற்கு உதவிய பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்களுக்கு உதவுவதற்காக ஒரு சிறப்பு விசா திட்டத்தின் கீழ் அவர் 2021 இல் அமெரிக்காவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. சந்தேக நபர் தனது விசா காலாவதியானதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும், தாக்குதல் நடந்த நேரத்தில் அவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத நீதித்துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயலாகக் கருதி, மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) விசாரித்து வருவதாக NBC செய்தி வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடியாக அமெரிக்க தலைநகருக்கு கூடுதலாக 500 துருப்புக்களை அனுப்பப்போவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
IND vs SA Test: ‘தோல்விக்கு காரணமே’.. நீங்க 2 பேருதான்: அணி மீட்டிங்கில் கொந்தளித்த கௌதம் கம்பீர்?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தோல்வியை சந்தித்தப் பிறகு அணி மீட்டிங்கில் பேசிய கௌதம் கம்பீர், வீரர்களிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹாங்காங் தீ விபத்து : 44 பேர் பலி! 279 பேரைக் காணவில்லை!
ஹாங்காங்கில் குடியிருப்பு உயரமான கட்டிடங்களின் வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 279 பேர் காணாமல் போயுள்ளதாக நகரத் தலைவர் ஜான் லீ வியாழக்கிழமை தெரிவித்தார். 45 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர். புதன்கிழமை பிற்பகல் 2:51 மணியளவில் வடகிழக்கில் உள்ள நகரின் தாய் போ மாவட்டத்தில் எட்டு தொகுதிகளைக் கொண்ட ஒரு வீட்டு வளாகமான வாங் ஃபுக் கோர்ட்டில் தீயை பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் குழுக்கள் முயற்சித்து வருகின்றனர். வியாழக்கிழமை அதிகாலை வரை தீ இன்னும் எரிந்து கொண்டிருந்தது.
``செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும்'' - அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 'மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி!’ என்ற இலக்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சொந்த முன்னெடுப்பில் நடத்தி வரும் மூன்று நாள் இலவச மகளிர் தொழிற்பயிற்சி முகாமில் 15 வயது முதல் 70 வயது வரையுள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். இதில் சிறு தொழில், உணவுப் பொருள் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு, அழகுக் கலை உள்ளிட்ட பல்வேறு திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. `மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி' பயிற்சி முகாமில் இந்நிலையில் இன்று மகளிர் சுயத்தொழில் முகாமை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர், செயற்கை நுண்ணறிவு மூலம் தனது கனவிற்கு உயிர் கொடுத்த பெண்ணை பாராட்டினார். நேற்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு பயிற்சி வகுப்பில் கே.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி பங்கேற்றார். இவர் சிறு வயது முதலே காவல்துறை அதிகாரியாக ஆகவேண்டும் என்ற இலக்குடன் முயற்சி செய்து வந்துள்ளார். இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்- தங்கம் தென்னரசு ஆனால் உயரக் குறைபாடு காரணமாக காவல்துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணியில் சேர முடியவில்லை. மேலும் வறுமையால் படிப்பும் தடைபட்ட நிலையில், தற்போது TNPSC குரூப்-4 தேர்வு எழுதி அரசு பணி பெற முயற்சித்து வருகிறார். தனது பழைய கனவை நினைவுகூர்ந்த முத்துலட்சுமி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தானே காவல்துறை சீருடையில் இருப்பது போலவும், “என் பெயர் முத்துலட்சுமி, நான் காவல்துறை அதிகாரி” என்று பேசுவது போல ஒரு சிறிய வீடியோவை உருவாக்கினார். இந்த வீடியோவைப் பார்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு மிகுந்த மகிழ்ச்சியுடன் கைதட்டி உற்சாகப்படுத்தினார். உடனடியாக முத்துலட்சுமியை மேடைக்கு அழைத்து பாராட்டிய அமைச்சர், கண்ணீருடன் வந்த முத்துலட்சுமியை பாராட்டி, விரைவில் அரசு பணியை பெறுங்கள் என்று சல்யூட் அடித்து வாழ்த்து தெரிவித்தார். `மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி' பயிற்சி முகாமில் அதன் பின் பேசிய தங்கம் தென்னரசு, “நகரங்களில் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கும் வரவேண்டும். தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மகளிர் தங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும். நமக்கான வேலை முன்னேற்றம் நமக்கான தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது ஆரம்பகால பயிற்சி அடுத்தகட்ட பயிற்சிகள் விரைவில் தொடங்கும். இப்பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் மகளிர் பொருளாதாரத்தில் உயரமுடியும் எனத் தெரிவித்தார். ``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு
உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: 17 பதக்கங்களை வென்று விருதுநகர் மாணவர்கள் சாதனை; உற்சாக வரவேற்பு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது கடந்த நவம்பர் 22, 23ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியா, பங்களாதேஷ், கென்யா, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து 1400 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் தமிழ்நாடு, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சி.எஸ்.ஏ கிளப் சார்பில் நோபல் அரினா மைதானத்தில் பயிற்சி பெறும் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 9 மாணவர்கள் கலந்து கொண்டனர். தங்கம் வென்ற மாணவர்கள் வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப் போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 4 மாணவர்கள் தங்கப்பதக்கமும், 4 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும் 9 பேர் வெண்கலப்பதக்கமும் என மொத்தம் 17 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் இரயில் மூலம் விருதுநகர் சந்திப்பு நிலையத்திற்கு வந்தனர். இவர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்களே உங்கள் உணவில் வைட்டமின் `கே' இருக்கிறதா?
திநகர் பகுதியில் சுற்றி திரியும் மாடுகளால் மக்கள் கடும் அவதி!
திநகர் பகுதி முழுவதும் சுற்றி திரியும் மாடுகளால் பொது மக்கள் அனைவரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர்: சுயம்புமூர்த்தி, நோய் தீர்க்கும் பஞ்சாம்ருதம்!
ஆலயம் சென்று வழிபடுவது அருள் சேர மட்டுமல்ல. பொருள் பெறவும் வாழும் இந்த வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்ளவும்தான். ஒவ்வொரு ஆலயமும் தனித்துவமான நலன்களை வழங்கும் சிறப்பைக் கொண்டே அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஓர் ஆலயத்தை இன்று தரிசிக்கலாம். அந்த ஆலயம் கண் பிணிகளைப் போக்குவதோடு நோய்நொடிகளையும் நீக்கும் சிறப்பினைக்கொண்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகே அமைந்துள்ள திருக்களம்பூர் கதலிவனநாதர் ஆலயமே அது. சுமார் ஆயிரம் ஆண்டுப் பழைமை கொண்ட ஆலயத்தின் தலபுராணம் மிகவும் சுவாரஸ்யமானது. திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் தலபுராணம் பாண்டிய மன்னர் ஒருவன் போர் செய்யத் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு காட்டுப்பகுதி வழியாகச் சென்றான். மன்னன் பயணித்த குதிரை புயல்போல் பாய்ந்து சென்றது. அப்போது வாழைத்தோப்புகள் அடந்த ஒரு பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போதும் மன்னனின் குதிரையின் வேகம் குறையவில்லை. குதிரையின் பாய்ச்சலில் நிலத்தில் இருந்த ஏதோ ஒன்றின் மீது அதன் குளம்பு பட்டது. அதனால் குதிரைக்கும் காலி வலி ஏற்படநின்றுவிட்டது. மன்னன் எது குதிரையைத் தடுக்கியது என்று பார்க்க அங்கே ரத்தம் பெருகிக்கொண்டிருப்பதைக் கண்டு திகைத்தான். எதிலிருந்து ரத்தம் பெருகுகிறது என்று மண் விலக்கிப் பார்க்க அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதையும் அந்த லிங்கத்தில் இருந்து ரத்தம் பீறிடுவதையும் கண்டு அதிர்ந்துபோனான். குதிரையில் குளம்பு பட்டத்தில் லிங்கம் சிதைவுற்றிருப்பதையும் கண்டான். அந்தக் கணத்தில் மன்னனின் கண்பார்வையும் பறிபோனது. மன்னன் அழுது புலம்பினான். ஈசனிடம் தன் பிழைபொறுக்குமாறு வேண்டினான். ஈசன் மனம் உருகினார். இங்கே ஓர் ஆலயம் எழுப்பு. உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும்’’ என்று அருளினார். மன்னன் அவ்வாறே செய்கிறேன் என்று வாக்குக் கொடுக்க அடுத்த கணம் அவரின் பார்வை மீண்டது. சொன்னபடியே மன்னன் அழகிய ஆலயம் ஒன்றை அங்கே எழுப்பினான். அந்த நிகழ்வுக்கு சாட்சியாக இன்றும் லிங்கத்தின் மேல் குதிரையின் குளம்படிபட்ட வடுக்களை தரிசிக்கலாம். இந்தக் கோயிலின் மூலவர், தீராத நோய்களையும் தீர்த்துவைப்பவர் என்பதால் இவருக்கு ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்கிற திருநாமம் உண்டாயிற்று. கதலி என்றால் வாழை. வாழை மரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டதால், 'கதலிவனேஸ்வரர்' என்ற திருப்பெயரும் இங்குள்ள இறைவனுக்கு உண்டு. வால்மீகி முனிவர் இங்கே தபோவனம் அமைத்து இருந்ததாகவும் தாயார் சீதாதேவி கர்ப்பிணியாக இருந்த காலத்தில் இங்கு வந்து தங்கியதாகவும் சொல்கிறார்கள். ஆதிசங்கரரும் திருக்களம்பூர்த் திருத்தலத்துக்கு வந்து வழிபட்டுள்ளார். இங்கே அம்பாள் சந்நிதி இல்லை என்பதை அறிந்தவர், ஆலயத்துக்கு எதிரிலேயே ஸ்ரீதிருவளர் ஒளி ஈஸ்வரர், ஸ்ரீசௌந்தரநாயகி திருக்கோயிலை எழுப்பினாராம். தொடர்ந்து ஸ்ரீகதலிவனேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த அம்பாளுக்கு, 'ஸ்ரீகாமகோடீஸ்வரி' என்ற திருப்பெயரும் உண்டு. திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர் ஸ்ரீராமரின் பிள்ளைகளான லவகுசர் இங்கேயே அவதரித்தனர் என்றும் ஸ்ரீராமர் நடத்திய அசுவமேத யாகத்துக்காக அனுப்பிய குதிரையை லவனும் குசனும் இங்கேதான் கட்டிப்போட்டனர் என்றும் தலபுராணம் சொல்கிறது. மேலும் ராம - லவ குச யுத்தமும் இங்கே நடைபெற்ற இறுதியில் தன்னோடு போரிடுபவர் யார் என்பதை அறிந்த குழந்தைகள் யுத்தத்தை நிறுத்தி அவரைப்பணிந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது நிறைவில் வால்மீகி மூலம் லவனும் குசனும் தன் மைந்தர்கள் என்பதை அறிந்தார் ராமன். இருவரும் இணைந்து அங்கே ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இன்று அந்த விநாயகர் இந்த ஆலயத்தில் கன்னிமூல கணபதியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சென்னை கந்தகோட்டம்: கனவில் வந்து காட்சிதந்தார்; வள்ளலார் முதல் பாம்பன் சுவாமிகள்வரை வழிபட்ட முருகன்! மருந்தாகும் பஞ்சாம்ருதம் இங்கே பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்புதான் என்கிறார்கள். இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. ஆனாலும் அவை நன்கு வளர்கின்றன. அதேபோல வெளியில் இருந்து வாழைக்கன்றுகளை கொண்டு வந்து வளர்க்கும் வழக்கமும் இல்லை. அப்படியே வைத்தாலும் அவை வளராது என்கிறார்கள். இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் அனைத்தும் சிவார்ப்பணமே என்றும் பிறர் அதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இங்கு விளையும் பழங்களைக் கொண்டு செய்யப்படும் பஞ்சாமிர்தம் நோய் தீர்க்கும் மாமருந்து என்பது பக்தர்கள் கருத்து. திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் பிரார்த்தனை விசேஷங்கள் திருமணம் ஆகாத ஆண்களோ பெண்களோ, வியாழக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பாயசம் நிவேதனம் செய்து வழிபடவேண்டும். பின்னர் இறைப் பிரசாதமாகத் தரப்படும் பாயசத்தைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இந்தப் பிரார்த்தனையின் பலனாக விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கருத்துவேற்றுமையால் பிரிந்துபோன தம்பதியர் மீண்டும் வாழ்க்கைத் துணைவருடன் இணையவேண்டி, இந்த ஆலயத்தை 108 முறை வலம் வந்து, நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்து வழிபடுவதோடு, குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கவேண்டும். இந்த வழிபாட்டின் பலனாக தம்பதியருக்குள் ஒற்றுமை உண்டாகும். பிரிந்த தம்பதியர் மனம் ஒருமித்து வாழ்வார்கள் என்பது ஐதிகம். திருமணம் முடிந்து வெகுகாலம் ஆகியும் குழந்தை இல்லாமல் தவிக்கும் அன்பர்கள் அவசியம் வழிபடவேண்டிய ஆலயம் இது. குழந்தை வரம் வேண்டுவோர் தம்பதி சமேதராக இங்கு வந்து வாழைக்காய்களைப் பலியாகச் சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிணிகளால் அவதிப்படும் அன்பர்கள், வைத்தியநாத சுவாமிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் ஆகிய பொருள்களை அபிஷேகம் செய்து, பின்னர் அந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, நோய்கள் தீரும் என்பதும் நம்பிக்கை. திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்!
கரூர் சம்பவம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரிடம் சி.பி.ஐ விசாரணை
கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் உள்ளிட்டோர் சி.பி.ஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார்கள். இந் நிலையில், நேற்று கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஆஜராகினார். கடந்த இரண்டு நாள் விசாரணையில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவர்கள் அளித்த ஆவணங்கள் மற்றும் வாக்குமூலம் அடிப்படையில் தான், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் நேற்று சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜரானார் என்று சொல்லப்படுகிறது. கரூர் விசாரணை இந்த விசாரணையின் போது, த.வெ.க தலைவர் விஜய் வருகைக்கு முன்னர், கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் எவ்வளவு மக்கள் கூடியிருந்தனர், த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் எவ்வளவு பேர் வருகை தந்தனர், கூட்டம் அதிகமாக இருப்பதால் விஜயை காவல்துறை ஏன் நிறுத்தவில்லை?, கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர என்ன நடவடிக்கை காவல்துறை மேற்கொண்டது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் என்ன உத்தரவு பிறப்பித்தார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சி.பி.ஐ அதிகாரிகள் கரூர் நகர காவல் ஆய்வாளரிடம் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. கரூர் சம்பவம் : இரண்டாம் நாளாக சி.பி.ஐ முன்பு ஆஜரான த.வெ.க நிர்வாகிகள்! நடந்தது என்ன? அதேபோல், கரூர் வேலுசாமிபுரம் பகுதிக்கு த.வெ.க தலைவர் விஜய் வருகைக்கு முன்னர் தடியடி நடத்தப்பட்டது, முதல் தகவல் காவல்துறை பதிந்த உடன் ஏன் பிரேத பரிசோதனை அவசர அவசரமாக நடத்தப்பட்டது ஏன் என நேற்றைய சி.பி.ஐ விசாரணையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் எழுப்பிய சந்தேகங்கள் அடிப்படையிலும், இன்று கரூர் நகர காவல் ஆய்வாளரிடம் சி.பி.ஐ விசாரணையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தன்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட சிலரையும் விசாரணைக்காக சி.பி.ஐ அதிகாரிகள் இன்று ஆஜராக சமன் அனுப்பியதன் அடிப்படையில், 4 பேர் விசாரணைக்கு ஆஜராகினர். கரூர் துயர சம்பவம் இவர்களில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி, த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் சமன் அளித்து விசாரணைக்கு இன்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதோடு, கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோகுல கண்ணன் என்பவர் முகநூல் பக்கத்தில் த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கருத்து பதிவிட்டதாகவும், அதன் அடிப்படையில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியதாக, இன்று விசாரணைக்காக ஆஜராகினார். இதே போல, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஓடுவாந்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் நவலடி என்பவர், த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற அன்று தமிழக காவல்துறையின் அவசர உதவி எண் 100 எண்ணுக்கு அழைத்து, சம்பவம் குறித்து விசாரணை செய்ததாக, சி.பி.ஐ சம்மன் அளித்து இன்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். சி.பி.ஐ விசாரணை இது தவிர, கரூரை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழில் அதிபர் ஒருவர் சி.பி.ஐ விசாரணைக்காக ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஒரே நாளில் சி.பி.ஐ விசாரணைக்கு கரூர் நகர காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேர் சி.பி.ஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேரில் ஆஜராகினர். இதில், கரூர் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் இரண்டாவது முறையாக சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கரூர் நெரிசல் பலி சம்பவ சி.பி.ஐ விசாரணைக்காக அடுத்தடுத்து பலரும் ஆஜராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் : சம்பவ இடத்தில் வீடியோ ஆதாரங்கள், நவீன கேமராக்களுடன் சி.பி.ஐ விசாரணை!
லண்டன் எக்ஷல் மண்டபத்தில் தேசியத் தலைவரின் 71வது அகவை நாள் கொண்டாடப்பட்டது
அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரம் என்றது. பிரபாகரம் என்பது சூரியப்பிளம்பு கிழக்கில் காலிக்கும் சுட்டெரிக்கும் கதிரவன். தமிழர் இனத்தின் அறன் தமிழர் அறத்தின் முழக்கம் எங்கள் அண்ணன் தானை தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 அகவை நாளை லண்டன் எக்ஷல் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
பஞ்சப்பூர் இணைப்பு சாலை மூன்றாம் கட்ட பணிகள் தொடக்கம்- விரைவில் டெண்டர் வெளியீடு!
திருச்சியில் பஞ்சப்பூர் இணைப்பு சாலையின் மூன்றாம் கட்ட பணிகள் தொடங்க இருக்கிறது . இதன் மூலம் விரைவில் டெண்டர் வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
கார்ட்டூன்: பாவம், அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு..!
``செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா?'' - டிடிவி தினகரன் சொன்ன பதில்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேராக பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 'செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார்' என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து நடந்திருக்கும் இந்தச் சந்திப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு; விவரம் என்ன? இதுகுறித்து பேசியிருக்கும் அமுமுக டிடிவி தினகரன், நாங்கள் எல்லாம் பள்ளி சென்றுகொண்டிருந்தபோது அரசியலில் இருந்தவர் அண்ணன் செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆர் உடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவிற்குப் பக்கபலமாக நின்றவர். இன்றைக்கு அவர் அரசியலில் எடுத்திருப்பது அவருடைய சொந்த முடிவு. அரசியலில் அதிக அனுபவம் பெற்ற அண்ணன் செங்கோட்டையன் எந்தவொரு முடிவையும் சரியாக யோசித்துதான் எடுப்பார். கடந்த இரண்டு நாள்களாக அவரிடம் பேசவில்லை. அவர் நிச்சயம் என்னிடம் பேசுவார். அப்படி பேசினால் இதுகுறித்து அவரிடம் நிச்சயம் பேசுவேன். நாங்கள் மதிக்கும் மூத்த தலைவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார், ஏன் எடுத்தார் என்பதை அவரே நிச்சயம் செய்தியாளர் சந்திப்பில் விரைவில் விளக்கிப் பேசுவார். டிடிவி தினகரன் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் விரைவில் எங்களின் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் எங்களின் அமுமுக கட்சி உடன் கூட்டணி வைக்க நிறையபேர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அது யார் யார் என்று இப்போதைக்கு எங்களால் சொல்ல முடியாது. விரைவில் எங்களின் கூட்டணி யாருடன் என்று முடிவெடுப்போம் என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.
'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' - பரபர இந்திரா பவன்! | Karnataka Congress
2.5 ஆண்டுகள் சுழற்சி ஒப்பந்தம்? கர்நாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்வர் பதவியைப் பிடிக்கச் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரிடமும் தலைமை பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அப்போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராகவும் பதவியைப் பகிர்ந்து கொள்ள 'ஒரு ரகசிய ஒப்பந்தம்' போடப்பட்டதாகச் செய்திகள் பரவின. ஆனால், காங்கிரஸ் மேலிடம் இதை வெளிப்படையாக ஒருபோதும் அறிவிக்கவில்லை. இந்தசூழலில் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுக் காலம் நவம்பரில் முடிவடைகிறது. கர்நாடக சட்டப்பேரவை இதையடுத்து, 'ரகசிய ஒப்பந்தத்தை மதித்து, டி.கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும்' என அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களில் தினேஷ் கூலிகவுடா, ரவி கனிஹா, குப்பி வாசு உள்ளிட்ட சில எம்.எல்.ஏ-க்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்ததாக வெளியான தகவல்கள் கர்நாடக காங்கிரஸில் பெரும் பரபரப்பை கிளப்பியது. அப்போது அவர்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததற்குக் கடுமையாக உழைத்த டி.கே. சிவக்குமாருக்கு, ரகசிய ஒப்பந்தத்தின்படி முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். தற்போதைய முதல்வர் பதவிக் குழப்பத்துக்குக் கட்சித் தலைமை விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. '200% டி.கே. சிவக்குமார்தான் முதல்வர்!' இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்நகராவின் எம்.எல்.ஏ-வும், டி.கே. சிவக்குமாரின் தீவிர ஆதரவாளருமான இக்பால் ஹுசைன், நான் எப்போதும் அந்த அறிக்கைக்கு 200% உறுதியாக இருக்கிறேன். விரைவில் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராவார். எல்லோரும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவோம். ஆனால், சிவக்குமார் முதலமைச்சராக வருவது நிச்சயம். அவர் கட்சிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். 2028-ல் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த, சிவக்குமார் தலைமைக்கு வர வேண்டும். எனப் பேட்டி கொடுத்துச் சித்தராமையா தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ், நான் அவர்களை (ஆதரவு எம்.எல்.ஏக்களை) டெல்லிக்கு அழைக்கவும் இல்லை, பேசவும் இல்லை. அவர்கள் ஏன் சென்றார்கள் என்று நான் கேட்கப் போவதில்லை. அமைச்சரவை மாற்றத்தில் அவர்களுக்கு அமைச்சர் பதவி தேவைப்பட்டிருக்கலாம், என்று கூறி, தனது ஆதரவாளர்களின் வெளிப்படையான முயற்சிக்கும் தனக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று அவர் காட்டிக் கொண்டார். தொடர்ந்து பேசியவர், எனக்கு முதல்வர் பதவி தொடர்பாகப் பதவியின் முதல் நாட்களிலேயே ஒரு உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் நான் மற்றும் சித்தராமையாவுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல. ஐந்து முதல் ஆறு கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையே ஆன ஒரு ரகசிய ஒப்பந்தம் அது, 'பொதுவெளியில் பேச விரும்பவில்லை…' அந்த ஒப்பந்தம்பற்றிப் பொதுவெளியில் பேச நான் விரும்பவில்லை. அது மிகவும் ரகசியமானது. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவும், இந்த அரசு ஸ்திரமாக இருக்கவும், எனக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று நான் துணை முதல்வராகப் பதவியேற்றேன். இப்போதுகூட, இந்த விவகாரம் குறித்துப் பொதுவெளியில் பேசி நான் மேலும் சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை. என்னிடமும் சித்தராமையாவிடமும் தலைமை பேசியுள்ளது. கட்சித் தலைமை எடுத்த முடிவுகுறித்து எனக்குத் தெரியும். ராகுல் காந்தி அவர்களுக்கு அனைத்தும் தெரியும். இப்போது அந்த முடிவை அவர்கள் தான் செயல்படுத்த வேண்டும். நாங்கள் அனைவரும் கட்சியின் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள். டெல்லி தலைமை என்ன முடிவெடுத்தாலும், அதற்கு நான் கட்டுப்படுவேன். பொறுத்திருந்து பாருங்கள். டெல்லி தலைமையின் முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்வோம். காத்திருங்கள், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள் எனத் தெரிவித்து ரகசிய ஒப்பந்தம்குறித்து வெளிப்படையாகப் போட்டுடைத்தார். 'டி.கே.எஸ் சொல்வது எனக்குப் புரியவில்லை' - சித்தராமையா! இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, முதல்வர் பதவிக் காலம்குறித்து எந்த ரகசிய ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. நான் ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதலமைச்சராக இருப்பேன். அதிலென்ன சந்தேகம்? எங்கள் ஆட்சி எந்தப் பதவிக் காலப் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் செயல்படவில்லை. கட்சித் தலைமை எடுத்த முடிவின்படி நான் முதல்வராக இருக்கிறேன். டி.கே. சிவக்குமார் கூறும் ரகசிய ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரியாது. அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இருப்பதை நான் அறியேன், என்றார். இதனால் டி.கே.எஸ் ஆதரவாளர்கள் கொதி நிலையின் உச்சத்துக்கு சென்றனர். இதையடுத்து டெல்லிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். சோனியா காந்தி பிறகு பேசிய சித்தராமையா, முதல்வர் பதவிக் குழப்பத்துக்குக் காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க சித்தராமையா முயற்சித்து வருகிறார். அதாவது தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அமைச்சர்களாக நியமித்து, தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்தவும், கட்சிக்குள் தனது நிலையை உறுதிப்படுத்தவும் முயல்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். புதிதாக அமைச்சர்கள் பதவியேற்றால், உடனடியாக முதல்வரை மாற்றுவது கட்சி மேலிடத்திற்குச் சிரமமாக இருக்கும் என்று அவர் நம்புவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 'காமராஜ் திட்டம்' என்ற பெயரில் சில மூத்த அமைச்சர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குக் கட்சிப் பணிகளை ஒதுக்கவும், அதற்குப் பதிலாக 10 முதல் 12 புதிய முகங்களை அமைச்சரவையில் சேர்க்கவும் சித்தராமையா திட்டமிட்டிருகிறார். அமைச்சரவை மாற்றம்; தயாராகும் சித்தராமையா! இதற்கு டெல்லி தலைமையிடம், 'சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதிலிருந்து, பல எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இடம் பிடிக்கத் தீவிரமாக லாபி செய்து வருகின்றனர். இந்த மாற்றம்மூலம் நீண்டகாலமாக அமைச்சரவை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கோரிக்கையைச் சமாதானப்படுத்த முடியும். சில அமைச்சர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுவதால், அரசின் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், 2028 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டும் திறமையற்றவர்களை நீக்கிவிட்டுப் புதியவர்களை நியமிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்' எனச் சித்தராமையா காரணம் சொல்வதாகக் கூறப்படுகிறது. சித்தராமையாவின் கணக்கு டெல்லிக்கு தெரியும் என்பதால் அவர்கள் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவில் தற்போது நிலவும் அதிகாரப் போராட்டம் குறித்துப் பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரம் குறித்துச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கூற விரும்பினாலும், அவர்கள் அதைக் கட்சித் தலைமையிடம் தான் தெரிவிக்க வேண்டும். இறுதியில், இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கட்சி மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் இந்தச் சிக்கலைத் தீர்ப்போம். நானும், சோனியா காந்தி மற்றும் ராகுலும் காந்தி இணைந்து இதைச் சரிசெய்வோம் எனத் தெரிவித்திருக்கிறார். கார்கே.. சோனியா.. ராகுல்.. பரபர இந்திரா பவன்! இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய மிக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், டிசம்பர் 1-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்குள் இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் கார்கே-ராகுல் காந்தி சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதன் பிறகு சித்தராமையாவும், டி.கே.எஸ்ஸும் டெல்லிக்கு வரவழைக்கப்படுவார்கள். தற்போதைய நிலவரப்படி டி.கே. சிவக்குமாரை சமாதானப்படுத்தவே டெல்லி தலைமை முயற்சி செய்கிறது. காங்கிரஸ் (Congress) ஏனெனில் சித்தராமையவிடமிருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டால் அவர் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு எடுக்கக்கூடும் எனத் தலைமை அஞ்சுகிறது. இவர்கள் இருவரும் சமாதானம் அடையவில்லை என்றால் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவை முதல்வராக்கலாமெனச் சில தலைவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அவரும் தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். இதை, நான் எப்போதும் முதல்வர் பதவிக்கான போட்டியில் தான் இருக்கிறேன். இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. நான் ஒருபோதும் போட்டியிலிருந்து விலகியதில்லை. எனக்கூறி பரமேஸ்வரா உறுதிப்படுத்திருக்கிறார். ஆனால் இதை டெல்லி தலைமை விரும்பவில்லை. எனவே என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பாப்போம் என்றனர் விரிவாக. `திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!
பெண்களே உங்கள் உணவில் வைட்டமின் `கே'இருக்கிறதா?
''கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் கே-வும் ஒன்று. ரத்த உறைதலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து இது. வெளிநாடுகளில், வைட்டமின் கே குறைபாட்டால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், நம் உணவுப்பழக்கம் காரணமாக வைட்டமின் கே தேவையான அளவு கிடைத்துவிடுகிறது. தற்போது, வெளிநாட்டு நுகர்வுக் கலாசாரம் காரணமாக உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்தியர்களுக்கும் வைட்டமின் கே பற்றாக்குறையை அதிக அளவில் ஏற்படுத்திவருகிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். வைட்டமின் கே வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 ''வைட்டமின் 'கே' இயற்கையாகவே தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கிறது. இதை, வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 என இரு வகைப்படுத்தலாம். தாவரங்களில் இருந்து கிடைக்கும் பைலோகுயினோன் (Phylloquinone) ‘வைட்டமின் கே 1’ என்றும், விலங்கினங்களில் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கும் மெனாகுயினோன் (Menaquinone) ‘வைட்டமின் கே 2’ என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. நமது வயிற்றில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. இவை, மெனாகுயினோன் எனும் வைட்டமின் கே 2-வை உற்பத்தி செய்கின்றன. வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 இரண்டுமே மனிதர்களுக்கு அவசியம் தேவையான வைட்டமின்களே. என்னென்ன செய்கிறது வைட்டமின் கே? உடலில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் ஆகியவற்றை எலும்புகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. பெண்களுக்கு மெனோபாஸ் நிலையில் எலும்பு அடர்த்தி குறைந்து, எலும்பு பலவீனமடையத் தொடங்கும். வைட்டமின் கே ஆஸ்டியோபொரோசிஸ் வருவதைத் தடுக்கிறது. மெனோபாஸ் வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். தேவையான நேரத்தில் ரத்தத்தை உறைய வைப்பதற்கும் வைட்டமின் கே-தான் உதவுகிறது. ரத்தம், உடலின் தேவைக்கு ஏற்ப பாய்வதற்கு உதவுகிறது. பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா? வைட்டமின் கே உள்ள உணவுகள் பால், உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, ஆரஞ்சு, முட்டை, வெண்ணெய், சீஸ், சூரியகாந்தி எண்ணெய், ஓட்ஸ், பட்டாணி, காலிஃபிளவர், புரொக்கோலி, முட்டைகோஸ், கீரைகள்... வைட்டமின் கே அதிகமானால்... தாவரத்தில் இருந்து கிடைக்கும் வைட்டமின் கே 1 அதிகமானால், நஞ்சாகிவிடும். இதனால், ஹைப்பர்பிலிரூபினிமியா (Hyperbilirubinemia) எனும் பிரச்னை ஏற்பட்டு தீவிர மஞ்சள் காமாலை நோய் வரலாம்'' என்கிறார் ஷைனி சுரேந்திரன். Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள்
460 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது ஒரே இரவில் குறைந்தது 460 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பல மால்டோவா அல்லது ருமேனியாவிற்குள் பறந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி நேற்று (25) அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை அனைத்து கூட்டாளிகளும் மறந்துவிடக் கூடாது எனவும் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஆக்கிரமிப்பாளர் மீதான தடை அழுத்தம் எவ்வளவு முக்கியமோ, அதே […]
ஹாங்காங்கில் குடியிருப்பில் தீ விபத்து – 37 பேர் உயிரிழப்பு – 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை
இன்று காலை ஹாங்காங்கில் (Hong Kong) உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில், 37… The post ஹாங்காங்கில் குடியிருப்பில் தீ விபத்து – 37 பேர் உயிரிழப்பு – 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை appeared first on Global Tamil News .
இளைஞர் ஒருவர் தாயாரிடம் சொன்ன அந்த விடயம்…அதன் பின்னர் நடந்த கோர சம்பவம்
ஸ்பெயினில் கத்தியால் மூவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். தமது தாயாரிடம் மாட்ரிட் நகரில் நடந்த இச்சம்பவத்தில் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த அந்த 18 வயது இளைஞர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். மூவரை கத்தியால் தாக்கிவிட்டு, கைது நடவடிக்கையின் போது முரட்டுத்தனமாக நடந்துகொண்டதை அடுத்தே பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சனிக்கிழமை பிற்பகல் நடந்த சம்பவங்களை சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய பயங்கரவாத குற்றங்களாக குறிப்பிட்டு ஸ்பெயினின் மத்திய குற்றவியல் நீதிமன்ற நீதிபதி […]
Navin’s Bags “Innovative Marketing Concept of the Year” for 3BHLK Concept
Navin Housing & Properties Pvt. Ltd. has been honoured with the Innovative Marketing Concept of the Year award at the
Jos Alukkas brand Ambassador Keerthy Suresh Unveils Shubha Mangalyam Wedding Collection
Jos Alukkas, a trusted name in quality, innovation, and trendy jewellery in India, unveiled Shubha Mangalyam line of traditional and
219 குடும்பங்களைச் சேர்ந்த 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு இன்று மாலை 4.30 மணி வரை கிடைத்த சேத விபரங்களின் நிலவரமே இதுவாகும். இதன்போது ஒரு வீடு முழுவதுமாக சேதமடைந்ததுடன் 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தது என அறிக்கையிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி: மக்களின் தேர்தல் வியூகம்!
சென்னை புறநகர் பகுதியான மதுரவாயல், விவசாய நிலங்களிலிருந்து தொழிற்சாலைகள் நிறைந்த நகர்ப்புறமாக மாறிய கதை இது. இந்தத் தொகுதியின் அரசியல், பல அடுக்குகளைக் கொண்டது, கணிக்க முடியாதது!
விடுபட்ட தொழிலாளர்களுக்கு PF சிறப்பு முகாம்: மதுரை மண்டல ஆணையர் அறிவிப்பு!
மதுரை பிஎஃப் அலுவலகத்தில், விடுபட்ட தொழிலாளர்களை சேர்க்க சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் 2026 ஏப்ரல் 30 வரை நடக்கும் இந்த முகாமில், தகுதியான தொழிலாளர்களை எளிதாக சேர்க்கலாம். நிறுவனங்கள் குறைந்த அபராதத்துடன் முறைப்படுத்தலாம். ஊழியர்களின் பங்களிப்பு பிடித்தம் செய்யப்படாவிட்டால் தள்ளுபடி செய்யப்படும். இது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே.
அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து கிழக்கு கரையோரமாக நகர்ந்து எதிர்வரும் 28ம் திகதி மட்டக்களப்புக்கு மிக அண்மையாகவும், 29ம் திகதி திருகோணமலைக்கு அண்மையாகவும், பின்னர் முல்லைத்தீவுக்கு அண்மையாகவும் நிலை கொள்ளும் வாய்ப்புள்ளது. இது நாளை (27.11.2025) அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று எதிர்வரும் 29.11.2025 அல்லது 30.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மலாக்கா நீரிணைக்கு அருகில் தொன்றியுள்ள புயலுக்கு சென்யார் எனப் பெயரிடப்பட்டுள்ளமையால், இந்த தாழமுக்கம் புயலானால் அதற்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டித்வா( Ditwah)- இயற்கையால் அமைந்த ஏரி- எனப் பெயரிடப்படும். இந்த தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக மழை பெற்று வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் இந்த மழை எதிர்வரும் 30.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை முதல் கிழக்கு மாகாணத்தில் மிகக் கனமழை கிடைக்க தொடங்கும். கிழக்கு மாகாணத்திற்கு 27,28,29 ம் திகதிகள் மிக முக்கியமான நாட்களாகும். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்று மழை கிடைத்துள்ளது. இன்று இரவு முதல் வடக்கு மாகாணத்தில் மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். வடக்கு மாகாணத்தில் 28 ,29, 30 ம் திகதிகளில் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிக வேகமான காற்று வீசுகை ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இது எதிர்வரும் 30ம் திகதி வரை தொடரும். வடக்கு மாகாணத்தில் தற்போது வீசத் தொடங்கியுள்ளது. இது எதிர்வரும் 01.12.2025 வரை தொடரும். கிழக்கு மாகாணத்தில் பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. ஆறுகள் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளன. பல இடங்களில் வெள்ள நிகழ்வுகள் பதிவாக தொடங்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் மூன்று நாட்களும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப்பகுதி மற்றும் வெள்ள அனர்த்த வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம். மிக வேகமான காற்றோடு மழை கிடைக்கும் என்பதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. கிழக்கு மாகாண மக்கள் தயவு செய்து உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 28 தொடக்கம் மிகக் கனமழை கிடைக்க தொடங்கும். ஏற்கெனவே வடக்கு மாகாணத்தில் சில சிறிய குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. கடநீரேரிகள் நீர் நிறைந்து முகத்துவாரங்கள் வெட்டி விடப்பட்டுள்ளன. ஆகவே வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்வரும் 28,29ம் திகதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மிக வேகமான காற்று வீசுகையும் மிகக் கன மழையும் கிடைக்கும் என்பதனால் வடக்கு மாகாண மக்கள் இந்நாட்களில் மிக அவதானமாக இருப்பது சிறந்தது. அதேவேளை மத்திய, தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் எதிர்வரும் 29.11.2025 வரை கனமழை தொடரும் வாய்ப்புள்ளது. இதனோடு இணைந்த நிலச்சரிவு நிகழ்வுகளும் ஏற்படும் வாயப்புள்ளது. இப்பிரதேசங்களின் பல நதிகள் ஏற்கெனவே தமது கொள்ளளவைத் தாண்டி பாய்ந்து கொண்டிருக்கின்றன. பல பிரதேசங்களில் வெள்ள நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. எனவே இப்பகுதி மக்களும் அடுத்த மூன்று தினங்களுக்கும் மிக அவதானமாக இருப்பது அவசியம். இந்த முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் மக்களை அச்சமூட்டுவதற்கானவை அல்ல. மாறாக மக்களை விழிப்பூட்டவும், தயார்ப்படுத்தவுமே. தமிழில் ஒரு பழமொழி உண்டு. சிறிய பாம்பானாலும் பெரிய தடி கொண்டு அடிக்க வேண்டும். அது போன்றே காலநிலை சார் அனர்த்தங்களை போதுமான தயார்ப்படுத்தல் மூலம் இலகுவாக வெற்றி கொள்ளலாம். ஆகவே நாம் விழிப்படைந்து எம்மை பாதுகாத்துக் கொள்வோம். குறிப்பு: தற்போதைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முன்னறிவிப்பு வழங்கப்படுகின்றது. இதில் மாற்றங்கள் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வர்த்தக நிலையங்களை மூடுமாறு கோரிக்கை!
மாவீர செல்வங்களிற்கு மதிப்பளிக்கும் வகையில் எதிர்வரும் 27ம் திகதி வியாழக்கிழமை வடகிழக்கில் வர்த்தக நிலையங்களை பிற்பகல் மூடுமாறு தமிழ் பல தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன. அதேவேளை, வடக்கு கிழக்கில் நாளைய தினம் (27.11.2025) அனுஸ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு மஞ்சள் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டும் புரட்சி கானங்கள் ஒலிக்கப்பட்டும் வருகின்றது. இதனிடையே நாளைய தினம் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் இடைநிறுத்தி நினைவேந்தலில் பங்கெடுக்க அனைவரிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் சந்தைகள் இயங்காதெனவும் இறைச்சிக்கடைகளும் முடங்கியிருக்குமென தெரிவித்துள்ளார். அதேவேளை அன்றைய தினம் மதுச்சாலைகள் மற்றும் தவறணைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களும் மூடி ஒத்துழைப்பு வழங்குவதுடன் பணியாளர்கள் துயிலுமில்லங்களிற்கு செல்ல ஒத்துழைப்பு வழங்க கோரியுள்ளார். குறிப்பாக களியாட்ட நிகழ்வுகள் அனைத்தையும் நிறுத்தி பொது மைதானங்களில் போட்டிநிகழ்வுகளை தவிர்க்கவும் கோரப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணிக்கு, கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தப் பிறகு, 3 முக்கியதான டெஸ்ட் தொடர்களில், 8 தோல்விகளை இந்திய அணி சந்தித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி: குடும்பத் தகராறு; டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம். இவர்கள் 2 பேரும் தளவாய்புரம் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இவர்களது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கோமு என்பவர், “என்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள்தான் காரணம்” எனக்கூறி இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கொலையாளி கோமு- கொலை செய்யப்பட்ட மந்திரம் & முருகன் அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகன் மற்றும் மந்திரத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மதுபானக்கூடத்தில் இருந்தவர்கள், பலத்த காயம் அடைந்த இருரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், முருகன் இறந்து விட்டதாக கூறினார். மந்திரம் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மந்திரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் கொலை செய்த கோமுவை தேடி வருகின்றனர். போலீஸாரிடம் பேசினோம், “முருகனின் அக்கா தங்கத்தாய். தங்கத்தாயைத்தான் கொலையாளியான கோமு திருமணம் செய்துள்ளார். முருகனின் தங்கை மாரியம்மாளை திருமணம் செய்தவர்தான் மந்திரம். மூவருமே நெருங்கிய உறவினர்கள்தான். கயத்தார் காவல் நிலையம் போலீஸாரால் தேடப்பட்டு வரும் கோமு, ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். சிறையை விட்டு வெளியே வந்தபிறகு விவசாயம் செய்து வந்துள்ளார். அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவி மற்றும் மகன் மாடசாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அத்துடன் அவரது மனைவியும் தாக்கியுள்ளார். இதனால், அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அவரது மனைவி தங்கத்தாய் ஊரைவிட்டு வெளியேறி வெளியூரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய மனைவி கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றதற்கு முருகன் மற்றும் மந்திரம் ஆகிய இருவரும்தான் காரணம் என்று கூறி அடிக்கடி கோமு, தகராறு செய்து வந்துள்ளார். அது மட்டுமின்றி தன்னுடைய மனைவி இருக்கும் இடத்தை கூறும்படி இருவரிடமும் கேட்டு வந்துள்ளார். இதற்கிடையில் முருகன், மந்திரம் ஆகிய இருவரும் மதுபானக்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்த்துள்ளார் கோமு. கயத்தார் காவல் நிலையம் அப்போது, ”என்னுடன் என் மனைவியை வாழ விடாமல் கெடுத்து விட்டு நீங்கள் மட்டும் சரக்கடித்து சந்தோசமாக இருக்கலாமா?” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில் கோமு, முருகன் மற்றும் மந்திரத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டும் பதபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொல்லியல்:நல்லிணக்கமில்லையாம்!
வடகிழக்கில் நாட்டப்படும் தொல்லியல் சின்னங்களை அகற்றி இன நல்லுறவை சிதைக்க முற்படுவதாக அரச அமை;சசர்கள் புதிய விளக்கத்தையளித்துள்ளனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் மூவர் நேற்று செவ்வாய்கிழமை இரவு கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர் எனும் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கைதான பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர் உள்ளிட்ட மூவர் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டிருந்தனர்.. இதனிடையே தொல்லியல் பலகை அகற்றல் விவகாரம் பிரதேச சபையின் அதிகாரவரம்பு தொடர்பான பிரச்சினையாகும் . தொல்லியல் எனும் பெயரில் வடகிழக்கில் நிகழ்த்தப்பட்ட மோசமான ஆக்கிரமிப்புக்களை முழுமையாக ஆவணப்படுத்த சிவில் அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளன.
விகாரைக்கு அருகில் முறிந்து விழுந்த பாரிய மரம் ; போக்குவரத்து தடை
கம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதையில் ரந்தேட்டிய விகாரைக்கு அருகில் பாரிய பலா மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையால் அப் பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். மின்சாரம் தடை மேலும் மின்சார வயர்களும் அறுந்த நிலையில் காணப்பட்டமையால் உனம்புவ பகுதிக்கு மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது இந்நிலையில் மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, […]
‘இந்திய டெஸ்ட் அணியின்’.. வெற்றிகரமான & மோசமான பயிற்சியாளர்கள் லிஸ்ட்: கம்பீருக்கு எந்த இடம்?
இந்திய டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக யார் சிறப்பாக செயல்பட்டனர், யார் மோசமாக செயல்பட்டனர் என்பது குறித்து பார்க்கலாம். இதில், கௌதம் கம்பீர் எந்த இடத்தில் இருக்கிறார்? சிறந்த பயிற்சியாளர் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் மேக்ரானின் திட்டம்: சர்ச்சையும் விளக்கமும்
ராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பது குறித்த பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தைத் தொடர்ந்து சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் மேக்ரானின் திட்டம் ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. பிரான்சும் அதேபோல ராணுவத்தை பலப்படுத்தவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் விரும்புகிறார். சமீபத்தில் அவர் ராணுவத்தில் இளைஞர்கள் தானே முன்வந்து சேரும் திட்டம் குறித்து பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து, ராணுவ ஜெனரலான ஃபேபியன் (Fabien Mandon) என்பவர், […]
CSK: ‘தோனிக்கான மாற்று வீரர்’.. 31பந்தில் சதம் அடித்து அசத்தல்: ஐபிஎல் 2026-ல சம்பவம் இருக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் தோனிக்கான மாற்று வீரர் 31 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதனால், இவருக்கு பிளேயிங் 11-ல் பினிஷர் இடத்தை கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
Panjab University Closes After Students’ Protest Demands
Panjab University (PU) has closed all teaching, office, and other activities on Wednesday following a full shutdown called by protesting
Gautam Gambhir: அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும் - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!
இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. இதன்மூலம் 0-2 என்ற கணக்கில் தொடரிலும் வொயிட்வாஷ் ஆகியிருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிடம் இப்படி ஒரு தோல்வியை எதிர்கொண்டுள்ளது இந்திய அணி. கேள்விகளை எதிர்கொண்ட Gautam Gambhir இந்த தோல்வியின் விளைவாக பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர். அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு பயிற்சியாளரான ஒரு ஆண்டில் நியூசிலாந்திடம் 0-3, தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என உள்நாட்டில் நடந்த இரண்டு தொடர்களில் வொயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது இந்திய அணி. உள்நாட்டில் இரண்டு வொயிட்வாஷ் தோல்விகளை சந்தித்த ஒரே பயிற்சியாளர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. Gautam Gambhir உள்நாட்டில் நடந்த கடந்த 7 போட்டிகளில் 5ல் இந்தியா தோல்வியைத் தழுவியிருக்கிறது. சொல்லப்போனால் கௌதம் கம்பீர் பொறுப்பேற்றது முதலான 19 போட்டிகளில் 10ல் இந்தியா தோல்வியைச் சந்தித்திருக்கிறது. புதன்கிழமை (நவ. 26) தோல்விக்குப் பிறகு பேசிய கம்பீரிடம் பயிற்சியாளராக அவரது எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதனை பிசிசிஐ-யிடம் தான் கேட்க வேண்டும். நான் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்கும்போது, 'இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை' என்று சொன்னேன். அதையேதான் இன்றும் சொல்கிறேன் எனக் கூறியிருக்கிறார். ஊடகங்கள் தோல்விகளை பெரிதுபடுத்துகின்றனர் ஈடன் கார்டனில் நடந்த முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 124 ரன்களைத் துரத்த முடியாமல் 30 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோது, சுழற்பந்துக்கு சாதகமான பிட்ச் சூழல் காரணமாக கூறப்பட்டது. ஆனால் கவுகாத்தியில் நல்ல பிட்சில் விளையாடியபோதும் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஷாட் தேர்வும், நீண்ட நேரம் விளையாடுவதற்கான பொறுமையின்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேலும் கௌதம் கம்பீர் டெஸ்ட் போட்டிகளுக்காக அறியப்படும் வீரர்களைப் பொருட்படுத்தாமல் ஆல்-ரவுண்டர்களை முன்னிறுத்தியது மோசமான விளைவைக் கொடுத்திருக்கிறது. Team India தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த கம்பீர், ஊடகங்கள் தனது வெற்றிகளைப் புறந்தள்ளிவிட்டு டெஸ்ட் தோல்விகளை மட்டுமே பெரிதுபடுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் ஒருவிஷயத்தை மறந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கிலாந்தில் இளம் அணியுடன் நல்ல முடிவுகளைப் பெற்றுக்கொடுத்த அதே கம்பீர்தான் நான். நீங்கள் மிக விரைவில் மறந்துவிடுவீர்கள். நிறைய பேர் நியூசிலாந்து பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்ற அதே நபர் நான். இது அனுபவம் குறைந்த அணி. நான் முன்பே சொன்னேன்: அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். எனப் பேசியிருக்கிறார். இளம் வீரர்களுக்கு நேரம் தேவை இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 0–3 என்ற கணக்கில் தோல்வியடைவதற்குக் காரணமான பிரச்னைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லையா என்று கேட்கப்பட்டபோது, முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் அதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஆர்.அஷ்வின் ஆகியோர் அணியில் இருந்தும் நியூசிலாந்துக்கு எதிரான அந்தத் தொடரில் இந்தியா தோற்றது. இதில், இந்த மூவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. Rishab Pant சுப்மன் கில் தலைமையில் சென்ற இளம் இந்திய அணி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து தொடரைச் சமன் செய்ததோடு, கடந்த மாதம் சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளை 2–0 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆனால், தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்களான தென் ஆப்பிரிக்காவிடம் மிகவும் சோகமான தோல்வியைச் சந்தித்துள்ளது. கம்பீர், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடியது வேறு ஒரு அணி, இந்தக் குழு முற்றிலும் வேறுபட்டது. நீங்கள் அனைவரும் நிறைய கிரிக்கெட்டைப் பற்றி எழுதுகிறீர்கள் – அந்த பேட்டிங் வரிசையில் இருந்த அனுபவத்திற்கும், இந்த வரிசையில் உள்ள அனுபவத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது என அழுத்தமாகக் குறிப்பிட்டார். மேலும், நான் சாக்குபோக்குச் சொல்ல மாட்டேன், சொன்னதும் இல்லை. ஆனால், எங்களது டாப் எட்டு வீரர்களில் நான்கு அல்லது ஐந்து பேர் 15-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியவர்கள். அவர்கள் களத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள், அதுவும் உயர்தரமான அணிக்கு எதிராக விளையாடும்போது அது எளிதான காரியம் இல்லை. அவர்கள் அழுத்தத்தைச் சமாளிக்கவும், தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் நேரம் தேவை என்று வெளிப்படையாகப் பேசினார். டெஸ்ட் போட்டிகளை விளையாடுவது கூட்டுமுயற்சி சுப்மன் கில் கழுத்துவலியால் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அணியை வழிநடத்த நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட், இரண்டு இன்னிங்கிஸிலும் பேட்டிங்கில் சொதப்பியதால் அவரால் திறமையாக கேப்டன் பொறுப்பை கையாளமுடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து கேட்கப்பட்டபோது தனிமனிதர்கள் மீது குற்றம்சுமத்த முடியாது என மறுத்துவிட்டார் கம்பீர். என்னையும் சேர்த்து, எல்லோரிடமிருந்தும் நான் சிறந்ததையே எதிர்பார்க்கிறேன். நான் இங்கே உட்கார்ந்து கொண்டு ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லப் போவதில்லை. நீங்கள் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளை வெல்ல விரும்பினால், ஒவ்வொரு வீரரிடமிருந்தும் உயர்ந்த தரத்தை எதிர்பார்க்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளை வெல்வது என்பது கூட்டு முயற்சி என அறிவுறுத்தினார். சுப்மன் கில்லுக்கு கொடுக்கும் 'அதீத' அங்கீகாரம் - சில கேள்விகள்
சவப்பெட்டிக்குள்ளிருந்து வந்த சத்தம்: தாய்லாந்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
தாய்லாந்தின் பாங்கொக்கின் புறநகர் பகுதியில் உயிரிழந்த பெண் ஒருவர் தகனம் செய்யப்படவிருந்த தருணத்தில் உயிர் பிழைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பாங்கொக்கின் நொந்தபுரியில் உள்ள வாட் ராட் பார்கொங் தாம் பௌத்த ஆலயத்தில் இறந்ததாக நினைக்கப்பட்ட 65 வயது பெண், தகனம் செய்ய சில நிமிடங்களுக்கு முன் பெட்டிக்குள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பெட்டியிலிருந்து மெல்ல ஒரு தட்டும் சத்தம் கேட்டதாகவும் பெட்டியை திறந்து பார்த்த போது உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் இருந்தார் எனவும் […]
Mars Crater and Features Named After Kerala Places
A 3.5 billion-year-old crater on Mars will now be named after M.S. Krishnan, a famous Indian geologist. The International Astronomical
Mars South Pole Feature Likely Rock, Not Lake
NASA’s Mars Reconnaissance Orbiter (MRO) studied a feature under the ice at Mars’s south pole, raising new questions about what
Notepad Update Adds Table Feature for Windows Users
Microsoft has started releasing new Notepad updates for Windows Insiders in the Canary and Dev Channels. The latest version, 11.2510.6.0,
iQoo 15 Launched with Powerful Display, Processor
iQoo has officially launched its new premium smartphone, the iQoo 15. This flagship phone is designed for young professionals and
Creamy Beetroot Pasta with Feta and Dill
Here’s a simple version of the beetroot pasta recipe: Ingredients 500g pasta 200g feta cheese 20g fresh dill, chopped 1
கோவை நல்லம்பாளையம் சாலை சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு!
கோவை நல்லம்பாளையம் சாலை சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். சாலைகள் சீரமைக்கப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கும்பகோணம் தான் - நடிகர் ஜெயராம் நெகிழ்ச்சி!
ஜெயராம் மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் வலம் வருபவர். மலையாளத்தில் 1986-ல் அபரன் என்ற படத்துடன் ஆரம்பித்த அவரது திரைப்பயணம். தமிழ் திரையுலகிற்கு 1992-ஆம் ஆண்டு 'கோகுலம்' படம் மூலம் பிரபலமானார். தமிழில் 'தெனாலி', 'துப்பாக்கி', 'உத்தம வில்லன்', 'பஞ்சதந்திரம்', 'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா' உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம் தூய்மைப் பணியாளர் பிரச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும் - ஆதவ் அர்ஜுனா மலையாளம், தெலுங்குத் திரையுலகில் பிஸியாக இருக்கும் இவர், இன்று கும்பகோணத்திற்கு வந்து, அங்கிருக்கும் கோவில்களில் தரிசனம் செய்து தனது அம்மாவின் சொந்தங்களை நலம் விசாரித்தார். மேலும் மனைவியுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், என்னுடைய அம்மா கும்பகோணம், அப்பா பாலக்காடு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கும்பகோணத்தில்தான். சிதம்பரம் கோவிலுக்கு 30 வருஷத்துக்கு முன்னாடி வந்தது. அதன் பிறகு இங்கு வருவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் இப்போது மீண்டும் அதே கோவிலுக்குச் சென்று நான் சாமி தரிசனம் செய்தேன். மனதிற்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு. கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம் Kalidas Jayaram: 'ஸ்டாலின் முதல் தமிழிசை வரை...' காளிதாஸ் - தாரிணி திருமண வரவேற்பு | Photo Album கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில் வாசலில்தான் என்னுடைய சின்ன வயசு நாள்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். இப்போ மீண்டும் அங்கெல்லாம் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேசியவர், தனுஷ் சார் கூட ஒரு படத்தில் நடிக்கிறேன். நானும் ஊர்வசியும் ரொம்ப வருஷத்துக்குப் பிறகு பாண்டிராஜ் படத்தில் சேர்ந்து நடிக்கிறோம். தெலுங்கில் 2,3 படங்களில் நடிக்கிறேன். கன்னடத்தில் சிவராஜ் குமார் சார் படத்தில் நடிக்கிறேன். மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று கூறுகிறார் ஜெயராம்.
Baked Sweet Potato with Black Beans and Slaw
Here’s a simple version of your baked sweet potato with black beans and slaw recipe: Ingredients For the sweet potato:
Mumbai: Gowardhan Ghee, the flagship brand of Parag Milk Foods and one of India’s most trusted dairy names, has joined hands with Sony Entertainment Television’s iconic quiz show Kaun Banega Crorepati Season 17 as a co-powered by partner, marking a collaboration that celebrates legacy, trust, and shared values.Rooted in purity, authenticity, and Indian tradition, Gowardhan Ghee perfectly mirrors KBC’s enduring ethos — one that empowers dreams, celebrates intellect, and inspires millions across the country. Now in its 17th season, Kaun Banega Crorepati continues to go beyond entertainment, evolving into a cultural movement that transforms lives through knowledge and opportunity. With Amitabh Bachchan’s legendary presence and the show’s remarkable ability to spotlight stories of determination from across India, KBC stands as a symbol of collective ambition and hope.As part of this association, Gowardhan Ghee has extended its partnership beyond the screen — contributing over 1,500 litres of Gowardhan Ghee, 1,500 kg of Atta, and 1,500 kg of Rice to support families and communities across India. The initiative reflects Gowardhan’s belief that true nourishment extends beyond food — it’s about enriching the body, mind, and spirit of the nation.[caption id=attachment_2482282 align=alignleft width=200] Akshali Shah [/caption]Commenting on the collaboration, Akshali Shah, Executive Director, Parag Milk Foods , said, “At Parag Milk Foods, we believe in enriching the lives of Indians not only through the purity of our dairy products but also through the values we uphold. Kaun Banega Crorepati represents intellect, integrity, and inspiration, qualities that strongly resonate with Gowardhan Ghee’s philosophy of purity and trust. Through this association, we are proud to express our gratitude to the millions of households that have made both Gowardhan and KBC a part of their everyday lives. This partnership is a celebration of the real heroes of India, the dreamers, the doers, and the believers who make our nation shine.” A Sony Entertainment Television spokesperson added: “Kaun Banega Crorepati has always stood for more than just questions and answers, it’s about the power of knowledge to uplift lives. Our continuing association with Gowardhan Ghee reflects that same philosophy of giving back. Both brands share deep roots in Indian households and values built on trust, purity, and purpose. Together, we’re not only entertaining millions but also inspiring small acts of goodness that create lasting impact.” Through this collaboration, Gowardhan Ghee celebrates not just its role as a kitchen staple but as a symbol of purity, pride, and purpose — a brand that continues to nourish the nation in spirit and in soul.About Sony Entertainment Television:Sony Entertainment Television (SET), one of India's leading Hindi general entertainment television channels, is a part of Sony Pictures Networks India (SPN). Since its launch in October 1995, SET has created a unique space of being the ‘Thought Leader’ in the Indian Television industry with path-breaking content and innovation in the entertainment business.Over the years, SET has continued to bring forth an impressive array of impactful urban stories delivering on the promise of novelty, variety, and quality with finite shows like Jassi Jaisi Koi Nahin, Heena, Bade Acche Lagte Hain, Kuch Rang Pyaar Ke Aise Bhi, Patiala Babes, Beyhadh, Ek Duje Ke Vaste, Mere Dad Ki Dulhan, Kathaa Ankahee and several others. Apart from these, socio-mytho and historical shows like Shrimad Ramayan, Mere Sai, Vighnaharta Shree Ganesh, Porus, Chandragupta Maurya, and Punyashlok Ahilyabai amongst others have also enjoyed positive viewership.SET pioneered new waves in television programming with home-grown formats like Super Dancer, Superstar Singer, and India’s Best Dancer. Furthermore, SET revived Kaun Banega Crorepati, which redefined its weekday appointment viewership and introduced viewers to a globally acclaimed business reality show with the launch of SharkTank India. Shows like Indian Idol, Jhalak Dikhhla Jaa, The Kapil Sharma Show, Comedy Circus, and Dus Ka Dum have further strengthened its weekend leadership.SET’s international feed is available across the US, UK, Africa, Europe, Canada, Australia, New Zealand, Singapore, Nepal, Bangladesh, Maldives, Malaysia, Indonesia, Fiji Islands, and Seychelles.-Based on Press Release
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி
காந்தி நகர், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்திய எல்லையோரம் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் போபட் குமார் (வயது 24). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கவுரியும் (வயது 24) காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனிடையே, இருவரின் காதலுக்கும், இருவரும் திருமணம் செய்யவும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று இரவு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருவரும் சர்வதேச எல்லை வழியாக […]
மாதம் ரூ.1 - ரூ.3 லட்சம் பெறுவது எப்படி? - வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அசத்தல் Financial Planning!
துபாய், குவைத், ஓமன், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து என உலகம் முழுக்க பல நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். பல்வேறு நாடுகளில் பல்வேறு வேலைப் பார்த்து, கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் இவர்களில் பலர், தாய் நாடான இந்தியாவில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். காரணம், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலரும் 15, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். வாங்கிய இடம் பத்திரமாக இருக்கும், விலையும் அதிகமாகும் என அவர்கள் நம்புவதால், ரியல் எஸ்டேட்டிலேயே அவர்கள் அதிகம் முதலீடு செய்கின்றனர். ஆனால், இந்தியா முழுக்கவுமே ரியல் எஸ்டேட் முதலீடு தொடர்பான சிந்தனை மிகவும் மாறிவிட்டது என்பதை இந்தியாவில் வசிக்கும் மக்களும் புரிந்துகொள்வதில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும் புரிந்துகொள்வதில்லை. முதலீடு | Investment இன்றைக்கு ஒருவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனில், குறைந்தபட்சம் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்ய வேண்டி இருக்கும். இந்த முதலீட்டை செய்து வீடாக வாங்கி இருக்கும்பட்சத்தில் அதற்கு வாடகையாகக் கிடைப்பது என்னவோ அதிகபட்சம் ரூ.50,000-தான். விலை ஏறும் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ரியல் எஸ்டேட் விலை முன்பு உயர்ந்தது போல இனியும் உயரும் என்று சொல்லும் நிலை இப்போது இல்லை. தவிர, ரியல் எஸ்டேட்டுகளின் விலையேற்றம் என்பது ஓவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதால், நாம் எதிர்பார்க்கும் வருமானம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்கிற கேள்வி வருகிறது. Swaminathan இந்த நிலையில், வெளிநாடு வாழ் தமிழர்கள் எந்த வகையில் தங்கள் முதலீடுகளை அமைத்துக்கொண்டால், ஓய்வுக் காலத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வகை வருமானம் பெற முடியும் என்பதை எடுத்துச் சொல்ல ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூஷன் நிறுவனம் ஆன்லைன் மூலம் ஒரு சிறப்புக் கூட்டத்தை வருகிற ஏற்பாடு செய்கிறது. இந்தக் கூட்டத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை எப்படிச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்ல விருக்கிறார் ஆதித்யா பிர்லா சன்லைன் லைப் ஏ.எம்.சி லிமிடெட் நிறுவனத்தின் ரீடெய்ல் சேல்ஸின் ரீஜினல் ஹெட் கே.சுவாமிநாதன். Online registration இந்தக் கூட்டமானது வருகிற 29-ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை நடத்தப்பட விருக்கிறது. இந்த ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழகர்கள் பின்வரும் லிங்கினை சொடுக்கி, https://labham.money/webinar-nov-29-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov29_2025 தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம். உங்கள் கவனத்துக்கு : ‘லாபம்’ என்பது ரெகுலர் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் நிறுவனம் ஆகும். எனவே, டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்! ஆனால், ரெகுலர் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொண்டு, நல்ல லாபம் தரும் முதலீட்டு ஆலோசனைகளைப் பெறலாமே…!
Amla: Natural Remedy for Strong and Healthy Hair
Amla, also called Indian gooseberry, has been used for a long time in hair care because of its natural benefits.
Honey Singh – Unfiltered. Unscripted. Unseen. NDTV Good Times Announces ‘My Story’ Tour
Mumbai: Before an artist becomes a phenomenon, a star - he becomes a witness to his own life - to its detours, its revelations, its unexpected twists and turns. Honey Singh has lived it all, not in anonymity, but in the glare of a nation watching. And now, for the first time, he steps forward not as the musical sensation the world admires, but to open a chapter - his own.NDTV Good Times has announced Honey Singh’s 'My Story' Tour - a rare opportunity to meet the person behind the performer. For years, Honey Singh’s music has travelled across the country and beyond - shaping moods, influencing popular culture, crafting soundtracks and memories. His hits are known everywhere. But the journey that shaped them unfolded away from the spotlight, in moments of learning, pause, rediscovery, and renewed purpose. This tour invites the audience into that world.The familiar tracks return, but they arrive as pieces of a life lived intensely, and sometimes unpredictably. Honey Singh will use his music to guide listeners through the chapters of his story, moving through its highs, its challenges, and the moments that helped him find clarity again. He tells this story the only way he knows best - with honesty, with passion.The 'My Story' Tour will travel across 11 cities, with Honey Singh bringing a distinctive act and a different experience to each one. And fittingly, the journey begins in Delhi, the city where Honey Singh’s own story began. As a boy from Karampura in West Delhi, he wanted the tour to start ‘from where it all started.’The ‘My Story’ Tour was announced recently, at the NDTV Studios, set against the pulse of drums and an atmosphere charged with celebration. ‘People have heard my music for years, but very few have heard the story that shaped it. The ‘My Story’ Tour is my chance to share that journey — the moments, the lessons, and the turning points that made me who I am. It feels like the right time to tell it, and the right moment to do it with NDTV Good Times,’ said Honey Singh. Rahul Kanwal, CEO and Editor-in-Chief, NDTV, said: ‘Honey Singh’s journey is one of the most compelling chapters in contemporary Indian music. The ‘My Story’ Tour draws from that journey — its fire, its fragility, and its fearless honesty. At NDTV, we are proud to partner with an artist who is willing to share not just his hits, but his life story.’ Rahul Shaw, Chief Experiences Officer, NDTV, added – ‘At NDTV Good Times, we believe in creating moments that feel personal, powerful, and unforgettable. With the ‘My Story’ Tour, every city will witness a different energy, a different rhythm, and a different window into Honey Singh’s life.’ In taking this tour across India, NDTV Good Times wants audiences to experience Honey Singh’s journey in a direct, honest, and memorable way. The 'My Story' Tour brings together the energy of live music and the warmth of personal storytelling. With this tour, audiences get to step into his world for an evening — to get a flavour of the music they know, understand the person behind it, and walk away with a connection that feels real and personal.-Based on Press Release
உலகின் நம்பர் 1 மகிழ்ச்சி நாடு.. ஆனால் மக்கள் வாழ்வில் வறுமை - எந்த நாடு தெரியுமா?
நம்பர் 1 மகிழ்ச்சி நாடு என்ற பட்டத்தின் பின்னால் மறைந்துள்ள வேதனை குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
Hungama OTT strengthens its content slate in 2025 with a diverse lineup of originals across genres
Mumbai: Hungama OTT, a digital entertainment platform, strengthened its position in 2025 as one of the fastest-growing Hindi-speaking OTT platforms. The year saw the platform deliver a strong lineup of thrillers, crime dramas, psychological sagas, and bold narratives. With stories ranging from small-town mysteries to high-society mind games, Hungama OTT continued to build on its reputation for diverse storytelling and introducing fresh faces, compelling performances, and uniquely Indian narratives.Below is an overview of the Hungama OTT Originals that defined 2025: Personal Trainer – January 2025 Set in Mumbai’s elite gym culture, Personal Trainer is a dark and gripping thriller led by Tinaa Dattaa. The series follows Neha, a married woman whose affair with her trainer spirals into a shocking web of deception after his mysterious death. With themes of desire, betrayal, and hidden motives, the show keeps viewers hooked with every twist. Gulshan Nain and Sahib Tagra deliver strong performances in this fast-paced thriller. Pati Patni Aur Padosan – February 2025 A psychological crime drama set in a small town, the series follows Pratibha, played by Yukti Kapoor, whose obsession with her mysterious new neighbour, Sagarika, unravels a dangerous past. As secrets unfold, she must protect her husband before he becomes the next target. With a suspense-heavy narrative and compelling performances by Muohit Joushi and Charu Mehra, the series explores obsession, deception, and human complexity. Kab Kyun Aur Kahan (Evaru Eppudu Ekkada) – March 2025 This gripping investigative thriller follows a series of brutal murders that trigger a deep probe by the CBI. As suspicion falls on influential businessman Vikram Verma, new revelations complicate the truth. With powerful performances by Dhanya Balakrishnan, Ashu Reddy, and Kaushal Manda, the series stands out for its layered storytelling, deception, blackmail, and unpredictable twists. Khadaan – March 2025 A haunting thriller set in a mining village, Khadaan stars Aly Goni as Inspector Veer Pratap Singh, who uncovers a chilling series of murders tied to folklore, curses, and buried secrets. With unexpected discoveries and a sinister family mystery, the show blurs the lines between myth and reality. Karanvir Bohra and Rebecca Anand add further depth to this atmospheric narrative. Hasratein 2 – April 2025 After the resounding success of Season 1, Hungama’s most-watched original returned with more bold, emotional, and thought-provoking stories. Season 2 deepens its exploration of women’s desires, identities, and hidden inner worlds through six powerful narratives. Featuring a sweeping ensemble cast including Gulki Joshi, Vivek Dahiya, Nyrraa M Banerji, Puja Banerjee, Akanksha Puri, Param Singh, Dolly Chawla, Sanam Johar, Vishal Chaudary, Vinit Kakar, Amika Shail, Saisha Sehgal, Zuber K. Khan, Karan Sharma, Aarush Shrivastav, Sandeep Kumaar, Rishaab Chauhaan, and Navveen Sharrma, the anthology continues to challenge norms and spark conversation. Mona Ki Manohar Kahaniyan – May 2025 Set inside an interrogation room, this psychological thriller revolves around Mona, played by Srishty Rode, a prime suspect in multiple murders. As she narrates chilling stories, Inspector Pawan, essayed by Ankur Nayyar is drawn into a dangerous psychological game. Daisy Bopanna completes the lead cast in a gripping tale where truth and manipulation collide. Judwaa Jaal – June 2025 A tight, six-episode whodunit, Judwaa Jaal stars Monalisa in a striking dual role as twin sisters entangled in a murder investigation. As Inspector Kunal dives into the suspicious death of Anamika, each revelation brings new complexities. With deception at every corner, the series keeps viewers guessing until the final moment. Badass Begum – June 2025 A gritty crime drama set in Mumbai’s underworld, the series explores the rise of Urvashi Raje played by Divyaa Agarwal, a woman who carved her own throne amid crime and chaos. With Ankit Gera and Akkshay Dogra in key roles, Badass Begum is a story of survival, power, and ambition that redefines the classic gangster arc with a female-led lens. Rose Garden – July 2025 Set in a serene Punjabi village, Rose Garden follows two sisters and their enigmatic mother, whose past casts a shadow over their carefully built lives. Mystery, romance, and crime intertwine when a missing-person case brings hidden truths to light. The series features Akanksha Puri, Niyatii Fatnani, Maninee De and Neel Samarthh in striking performances. Let’s Play Blind – August 2025 A psychological thriller set in the world of elite gambling, the series follows three influential women whose high-stakes games take a deadly turn with the arrival of two mysterious newcomers. Featuring Yukti Kapoor, Akkshith Sukhija, Dolly Chawla, Kangna Sharma, Amy Aela, and Ribbhu Mehra, the show explores power, revenge, seduction, and the deadly price of ambition. Rishton Ka Chakravyuh – September 2025 A story of resilience and transformation, the series stars Gulki Joshi as Malti, a timid housewife whose journey to save her husband forces her into a dangerous double life. With its mix of emotional depth and suspense, the show features strong performances from Navina Bole, Saqib Ayub, Rrahul Sudhir, and Rahhat Shah Kazmi. Yeh Hai Sanak – October 2025 A twisted tale of desire and betrayal, the series stars Sharad Malhotra, Shivangi Verma, Ankit Raj, and Simran Sachdeva. When forbidden attraction threatens to tear a family apart, buried secrets return with devastating consequences. With high emotional stakes and sharp writing, the series offers an edge-of-the-seat experience. Dirty Scams – November 2025 An anthology of five standalone scam stories led by bold female protagonists, Dirty Scams blends tension, deception, and smart storytelling. Featuring an ensemble cast including Pavitra Punia, Puja Banerjee, Alisha Panwar, Ishita Ganguly, Dipankana Das, Rushad Rana, Imran Nazir Khan, Ankit Raj, and Akshaya Shetty, the series explores the thrill of perfectly executed cons and the courage behind calculated risks. Vinny Ki Kitaab – December 2025 A small-town story of betrayal, passion, and reinvention, the series follows Vinny, whose fantasies become a published magazine without her knowledge. When the truth comes out, she transforms from a bored housewife into a bold writer reclaiming her voice. Yogendra Vikram Singh and Mansi Jain round out the cast in this empowering drama of identity and self-discovery.-Based on Press Release
தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அரசு வேலை!
தென்காசியில் கடந்த 24ம் தேதி இடைகால் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். அன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த எம்.ஆர். கோபாலன் ஆகிய இரண்டு தனியார் பேருந்துகள் இடைகால் அருகிலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் பேருந்திற்குள் இருந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கிருத்திகா மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விபத்து ஏற்படுத்திய பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். பணி ஆணை வழங்கிய ஆட்சியர் உயிரிழந்தவர்களில் பார்வை மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் தாயும் ஒருவர். அந்த பெண்ணிடம் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். சிறுவயதிலேயே தந்தையையும் இழந்த நிலையில், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பெண் கிருத்திகாவுக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையினை அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.
Apple Cider Vinegar: Winter Skin Care Tonic
Winter in India has its own special charm – warm sweaters, lots of tea, and cozy long evenings. But winter
சாம்பியன்ஸ் டிராபி வெல்ல காரணமா இருந்தது நான் தான்..கொஞ்சம் நினைத்து பாருங்க –கெளதம் கம்பீர்!
டெல்லி : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 என்று ஒயிட்வாஷ் ஆனது இந்திய கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்சூரியனில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 32 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வெல்ல முடியாத மோசமான சாதனை தொடர்கிறது. போட்டி முடிந்த பின் இந்திய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியுடன் பேசினார். “நான் பயிற்சியாளராக இருந்தபோதுதான் […]
ரூ.1.17 கோடி.. இந்தியாவின் விலை உயர்ந்த கார் பதிவு எண் எது தெரியுமா?
ஹரியானாவில் 'HR88B8888' என்ற கார் பதிவு எண் 1.17 கோடிக்கு ஏலம் போய், இந்தியாவில் புதிய சாதனை படைத்துள்ளது. VIP எண்களுக்கு அரசு நடத்தும் ஆன்லைன் ஏலங்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
West Bengal Trains Doctors for Gender-Sensitive Healthcare
West Bengal will hold workshops in December to train healthcare workers from government hospitals to be more sensitive and gender-friendly.
விருதுநகர் காரியாபட்டியில் நடந்த மகளிர் தொழிற்பயிற்சி முகாமில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், நகர வாய்ப்புகள் கிராமங்களுக்கும் வர வேண்டும் என்றார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெண்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றும், இது பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அடுத்தகட்ட பயிற்சிகள் விரைவில் தொடங்கும் என அறிவித்தார்.
MLA Sudharsanam Case: Bawaria கொள்ளையர்களைப் பிடிச்சது எப்படி? | Jangid Interview
Nayanthara மேம் மாதிரி மச்சம் இருக்குன்னு அவங்ககூட! - `Annamalai kudumbam' Deepika & Yuktha Shares
செங்கோட்டையன் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது - திருமாவளவன்
செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி, செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். செங்கோட்டையன் அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் இன்று (நவ.26) செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன் - விஜய் தற்போது தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் செங்கோட்டையன். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், செங்கோட்டையன் தவெக-வில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தன்னை பாஜக அழைத்து பேசியிருக்கிறது என ஏற்கனேவே செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவிற்கு பின்னடைவாக இருக்கும். அதேபோல நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமாவளவன் தவெகவில் பாஜக மற்றும் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஊடுருவல் நிகழ்ந்தால், அவருடைய அரசியல் கேள்விக்குறியாக மாறும் என்று பேசியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!
India Misquotes WHO Doctor-to-Population Guideline Records
The Indian government often refers to the World Health Organization (WHO) guideline of having one doctor for every 1,000 people.
Ironwood names Balaji Raghavan to Lead Affordable Housing Portfolio
Mumbai: Ironwood has appointed Balaji Raghavan to spearhead its affordable housing and real estate development initiatives, reinforcing its presence in one of India’s most resilient residential segments.This announcement follows Ironwood Education Limited’s acquisition of 100% of Trio Infrastructure Private Limited (TIPL) through a share swap, making TIPL a wholly owned subsidiary of Ironwood, as disclosed in its BSE filing dated 26 February 2025. In a recent board meeting on 25 November 2025, the company also approved raising funds through a preferential issue or private placement and appointed Raghavan as Additional Director and Managing Director. The preferential issue is set to include marquee investors such as Capri Global Capital, Darius Pandole, former MD & CEO of JM Financial Private Equity, and Sanjiv Rastogi.Balaji Raghavan brings over 20 years of experience across mortgage finance, real estate investments, and development. He played a pivotal role in building India’s modern mortgage business at ICICI Bank, managing a ₹60,000 crore home-loan portfolio, and later established a leading real estate investment platform at IIFL, deploying over ₹12,000 crore across 100+ transactions with major developers and global investors. Since 2021, Raghavan has focused on affordable housing development in Mumbai, gaining deep insight into homebuyer needs, credit gaps, and India’s urban housing deficit.Under his leadership, TIPL is currently developing the first phase of a 2,52,000 sq. ft. residential project in Madhuban Township, Gokhivare, Vasai East, offering 1 BHK and 2 BHK homes. A second phase spanning 1,50,000 sq. ft. is planned for the next financial year. The project is progressing on schedule, supported by strong sales traction, stable financial backing from SBI, and customer collections.Ironwood is also advancing approvals for two additional affordable housing projects, expected to launch within the next six months, further strengthening its footprint in India’s growing affordable housing sector.
Škoda Auto India and BBH India launch ‘Mind Drive’ hypnosis experience for Octavia RS fans
Mumbai: Škoda Auto India, in collaboration with BBH India, has unveiled ‘Mind Drive’, a pioneering hypnosis experience that allows fans to feel the thrill of the Škoda Octavia RS without actually driving it. The initiative is part of the brand’s ongoing ‘Heartbreak’ campaign, designed to deepen the emotional connection enthusiasts share with the iconic Octavia RS.‘Mind Drive’ was inspired by a moment of collective disappointment when the Octavia RS sold out within just 20 minutes of its launch. To transform that absence into an opportunity, Škoda and BBH India invited fans to experience a guided hypnosis session, letting them imagine the roar of the engine, the surge of acceleration, and the rhythm of the road.[caption id=attachment_2482259 align=alignleft width=200] Ashish Gupta [/caption]Speaking on the campaign, Ashish Gupta, Brand Director, Škoda Auto India , said, “The Octavia RS has always been an iconic nameplate for us, one that has created a special cult of enthusiasts over the years. The overwhelming response to its return once again demonstrated the strength of this fandom and the emotional bond they share with the RS. With ‘Mind Drive’, we wanted to recognise that passion and offer fans a unique way to experience the RS spirit, even without being behind the wheel. At Škoda, we remain committed to creating thoughtful, engaging, and innovative experiences that strengthen our connection with the community, and ‘Mind Drive’ is a natural extension of that approach, celebrating the enduring love and passion the Octavia RS continues to inspire.” [caption id=attachment_2482260 align=alignright width=200] Parikshit Bhattaccharya [/caption] Parikshit Bhattaccharya, Chief Creative Officer, BBH India, added, “Škoda has earned tremendous brand love in India, and our ‘Heartbreak’ campaign for the Octavia RS unlocked a new dimension of engagement. With ‘Mind Drive,’ we bring the Octavia RS experience to countless enthusiasts who couldn’t secure a test drive, let alone a booking. Experiences are the future, and with ‘Heartbreak’ that integrates storytelling with sensory engagement, we believe we’ve set a new benchmark for emotional and experiential brand storytelling.” ‘Mind Drive’ follows other category-first innovations in the ‘Heartbreak’ campaign, including the Octavia RS Non-Owner’s Manual and Driver’s Seat Perfume, all created to keep the RS spirit alive for those who never had the chance to own or drive the vehicle.https://youtu.be/ui-Jo_h1MIk?si=xJkmDLPR8c8rY8gM
ரூ.7,280 கோடி.. அரிய பூமி காந்தங்கள் உற்பத்தி.. மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் அரிய பூமி நிரந்தர காந்தங்கள் (REPMs) உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு 7,280 கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் உருவாக்கப்படும்.
ஆஸ்ரேலியாவில் பர்தா அணிந்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு வாரம் தடை!
ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி செனட்டர் பவுலின் ஹான்சன் இன்றிலிருந்து கூடிய செனட்டால் ஏழு நாட்கள் அமர்விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் கருவியாக நாடாளுமன்றத்தில் பர்தா அணிந்ததற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது. பொது இடங்களில் பர்தாக்கள் மற்றும் பிற முகத்தை மூடுவதை தடை செய்யும் மசோதாவை அறிமுகப்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மேல் சபையில் ஹான்சன் பர்தா அணிந்திருந்தார். அவரது நடவடிக்கை சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அவரது நடவடிக்கைகள் உடனடியாக முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து இனவெறி குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தன. ஹான்சன் நாடாளுமன்றத்தில் பர்தா அணிவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2017 ஆம் ஆண்டு நாடு தழுவிய அளவில் இந்த ஆடையைத் தடை செய்யக் கோரி இதே தந்திரத்தை அவர் பயன்படுத்தினார். வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்தார். செனட்டர் ஹான்சனின் வெறுக்கத்தக்க மற்றும் மேலோட்டமான காட்சி நமது சமூகத்தின் கட்டமைப்பை கிழித்து எறிவதாக நான் நம்புகிறேன். இது ஆஸ்திரேலியாவை பலவீனப்படுத்துகிறது மற்றும் நமது மிகவும் பாதிக்கப்படக்கூடிய பலருக்கு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களால் பின்பற்றப்படும் ஒரு மதத்தை அவர் கேலி செய்து அவமதித்தார் என்று வோங் மேலும் கூறினார். இதற்கு முன்பு பாராளுமன்றத்திற்கு இவ்வளவு அவமரியாதையை தான் பார்த்ததில்லை என்று அவர் கூறினார். ஒன் நேஷன் கட்சியின் தலைவரான ஹான்சனுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் 55-5 என்ற வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது. குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த செனட்டரான ஹான்சன், ஆசியாவிலிருந்து குடியேற்றம் மற்றும் அகதிகளுக்கு எதிரான அவரது கடுமையான எதிர்ப்பு ஆகியவற்றால் 1990 களில் முக்கியத்துவம் பெற்றார். அவர் நீண்ட காலமாக இஸ்லாமிய உடைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். பர்தா குறித்த தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார், பாராளுமன்றத்திற்கு ஆடைக் கட்டுப்பாடு இல்லை என்று வாதிட்டார். ஹான்சன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார், தான் நம்புவதைத் தொடர்ந்து செய்வார், மக்கள் தன்னைத் தீர்ப்பார்கள் என்று கூறினார். அதிகரித்து வரும் தேசியவாத உணர்வு மற்றும் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்ட ஒன் நேஷன், மே பொதுத் தேர்தலில் தனது செனட்டை இரண்டு இடங்களால் நான்காக விரிவுபடுத்தியுள்ளது. சமீபத்திய பொதுக் கருத்துக் கணிப்புகள் ஹான்சனுக்கும் ஒன் நேஷன் கட்சிக்கும் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் காட்டுகின்றன.
Ritz Media World launches AI-powered pre-viz studio, ‘Contenaissance’
New Delhi: Ritz Media World (RMW), one of North India’s leading creative agencies for over 17 years, has announced the launch of Contenaissance—its AI-enabled creative and pre-visualisation studio designed to help brands cut campaign turnaround times and bring ideas to life with greater accuracy and clarity.Contenaissance has been developed to meet the demands of today’s fast-paced marketing environment, where brands require multiple content formats, localized versions, and quicker creative optioneering. Using advanced AI tools, the studio produces on-brand copy, visual concepts, and 3D previews in hours instead of weeks, maintaining the brand’s voice, tone, and strategic integrity. “Brands today need more ideas, more versions, and more localisation—delivered faster than ever,” said Ritz Malik, Co-founder, Ritz Media World . “Contenaissance gives us a decisive creative advantage by allowing our teams to explore multiple directions rapidly, while giving clients early clarity on the visual and strategic path forward. AI works best when it is guided with intent, and Contenaissance has been built with that philosophy at its core—powered by brand tone rails, approved claims, and verified first-party intelligence to ensure every output remains creative, accurate, consistent, and fully compliant. It’s not just a tool; it’s a smarter, more reliable way for brands to build campaigns at the pace the market now demands.” Why Contenaissance Matters — The Market Reality Campaign timelines across industries have shrunk by 40–60% in recent years due to faster digital cycles, placing higher demands on creative teams. Marketers now expect five to ten variations of a single campaign, often across multiple languages and platforms. Pre-visualisation has become crucial to ensure ATL ideas translate effectively into digital, retail, and on-ground executions.Contenaissance addresses this challenge by helping brands move faster with clarity, sharper alignment, and reduced production risks. How Contenaissance Helps Brands The studio brings speed and structure to early creative processes, allowing clients to explore multiple scripts, hooks, visual territories, and storylines simultaneously. It strengthens pre-viz with mood boards, 3D previews, storyboards, and visual territories, ensuring a smooth transition from concept to execution across films, OOH, digital, and retail channels.Additionally, the platform supports high-pressure timelines by enabling multiple rounds of testing, localization, and format development without inflating production budgets. Editorial and compliance reviews remain integrated throughout, keeping workflows reliable and precise. Early Work Example For a North India real estate launch, Contenaissance delivered 3D amenity visualisations, reel-first script routes, and platform-specific adaptations in the first sprint. This early clarity helped the brand finalize a unified key visual and multi-platform creatives ahead of schedule, keeping production and media timelines firmly on track.
Action King Arjun: Versatile Actor, Director, Producer
Actor Arjun, popularly known as **Action King Arjun**, is a versatile talent in the Tamil film industry. He is not
Mumbai: DoubleVerify, a software platform for verifying media quality and optimizing ad performance, has released new research highlighting growing confidence in news advertising. Surveying 1,970 marketers globally, DV found that 60% of respondents reported advertising in news environments outperforms campaign baselines.The research underscores the potential of news as a high-performing, cost-effective media channel and aligns with previous DV studies showing that consumers actively value brands that support news content by advertising alongside it. News inventory outperforms other environments Sixty percent of marketer respondents said advertising in news environments performs better than campaign baselines, while 27% reported performance on par with baselines. Only 11% felt news inventory performed below average compared with other media. News environments are widely considered suitable for advertising Just 1% of marketers said all types of news content are unsuitable for advertising. Perspectives on suitability varied slightly depending on adjacency with different content types. 95% said “soft” news topics like sports and entertainment are suitable. 93% said the same for news homepages. Slightly lower percentages viewed current events (88%) and breaking news (84%) as suitable for advertising. These findings highlight the need for a nuanced approach, enabling advertisers to capitalize on the opportunity while maintaining brand suitability. Most marketers invest in news — or plan to Fifty-three percent of marketers currently invest in news content, with an additional 28% intending to do so. Those already investing allocate significant budget portions, averaging 28%.DV data also shows growing engagement, with impression volume for DV advertisers increasing 58% across major news publishers’ sites in the first half of 2025 compared with the same period last year.Certain sectors, including automotive and healthcare & pharmaceuticals, are more likely to advertise alongside news than others. Agencies are more sensitive to controversial topics than brands Agency respondents were 20% more likely to cite controversial topics as a barrier to investing in news, and 16% more likely to express concern over negative news compared with brand respondents. Concern about “negative” news remains the biggest barrier for investment For marketers not currently investing in news, the main barrier was concern about appearing alongside negative news content. Even active investors cited negative or controversial content as the primary factor limiting additional budget allocation.To address these concerns, DV introduced three news-related suitability categories — Sensitive Breaking News, Current Events, and Opinion & Editorial — applying advanced AI-classification models to provide advertisers with granular control, enabling confident investment in news while maintaining suitability standards.DoubleVerify’s News Accelerator™ continues to encourage advertiser investment in news content and journalism, providing research and insights that help brands unlock the full potential of advertising in news environments.
வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் 5,800 யூதா்களை இஸ்ரேலுக்கு திரும்ப அழைத்துச் செல்ல சிறப்புத்திட்டம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் சுமாா் 5,800 யூதா்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இஸ்ரேலுக்கு திரும்ப அழைத்துச் செல்லும் திட்டத்துக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை இஸ்ரேலின் குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சா் ஓஃபிா் ஸோஃபா் அமைச்சரவையில் சமா்ப்பித்து, ஒப்புதல் பெற்றுள்ளாா். இத்திட்டத்துக்காக இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.230 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தப் பணம், புலம்பெயரும் மக்களின் விமானச் செலவுகள், மத மாற்றப் பயிற்சிகள், வீட்டு வசதி, ஹீப்ரு மொழிப் பாடங்கள் […]
12,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடித்த எரிமலை!
வடகிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை சுமா ர் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்துள்ளது. இந்த வெடிப்பினால் வெளியாகும் சாம்பல் மேகங்கள் செங்கடலைக் கடந்து ஏமன் மற்றும் ஓமன் நோக்கி நகர்ந்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு அறிக்கையின்படி, இது இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தான் முழுவதும் பரவியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பல மணி நேரம் வெடித்த எரிமலை, இன்னும் வானத்தில் சாம்பலைக் கக்கிக் கொண்டிருக்கிறது. ஹெய்லி குப்பி எரிமலை எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில், அடிஸ் அபாபாவிலிருந்து வடகிழக்கே 500 மைல் தொலைவில், எரித்திரியா எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த எரிமலை சுமார் 500 மீட்டர் உயரம் கொண்டது. இது இரண்டு டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் புவியியல் ரீதியாக செயல்படும் பகுதியான பிளவு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த வெடிப்பு 9 மைல் (14 கிலோமீட்டர்) உயரத்திற்கு அடர்ந்த புகையை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுவரை மனித அல்லது விலங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று உள்ளூர் அதிகாரி முகமது சையத் தெரிவித்தார். இருப்பினும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள உள்ளூர்வாசிகளுக்கு பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறுகிறார். பல கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் விலங்குகளுக்கு உணவளிக்கும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார். அஃபார் பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாகும். உள்ளூர்வாசி அகமது அப்தேலா கூறுகையில், ஒரு பெரிய சத்தத்தையும் அதிர்ச்சி அலையையும் கேட்டேன். அது திடீரென்று புகை மற்றும் சாம்பலுடன் வெடிக்கும் குண்டு போல் உணர்ந்தேன் என்றார். மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் எரிமலை நிபுணரும் பேராசிரியருமான சைமன் கான், கடந்த பனி யுகம் முடிந்த பிறகு, சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சகாப்தத்திலிருந்து ஹேலி குப்பி எரிமலையில் எந்த வெடிப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் உலகளாவிய எரிமலையியல் திட்டமும் அந்தக் கருத்தை உறுதிப்படுத்தியது.
Thalapathy Vijay’s Janyayan Shooting Completed, Fans Excited
The shooting of Thalapathy Vijay’s latest film, Janyayan, is now complete, and post-production work is in progress. Director H. Vinoth
Citi names Manoj Goel as Head of Corporate FX Sales for India and the Indian Subcontinent
Mumbai: Citi has announced the appointment of Manoj Goel as Head of Corporate FX Sales for India and the Indian Subcontinent, effective immediately.Manoj joins Citi from HSBC, where he served as Head of Global Markets Corporate Sales. With over 23 years of experience in Indian financial markets, he has led some of the country’s largest cross-border FX transactions and played a key role in establishing corridor connects across major international markets. His extensive expertise spans client advisory, structured FX solutions, and strategic risk management.In his new role at Citi, Manoj will report to Vandana Bhatter, Head of Corporate FX Sales for Japan, Asia North & Australia (JANA) and Asia South, and Aditya Bagree, Head of Markets for India. He will be responsible for strengthening Citi’s Corporate FX franchise across the region, deepening client engagement, and enhancing the delivery of innovative FX and risk management solutions to corporates with cross-border requirements.Speaking on the appointment, Vandana Bhatter said, “Manoj’s appointment is aligned with our strategy to reinforce our position as the market-leading corporate FX franchise in India. His deep expertise will further strengthen our position locally and our ability to deliver for our clients.” Aditya Bagree added, “We welcome Manoj to the Citi India Markets team. It has never been more imperative for corporates with cross-border trade and investment flows to manage risk and operate efficiently across international markets. Our market-leading Corporate FX franchise is key to supporting our clients’ requirements, and we look forward to Manoj helping us enhance our value proposition.” Manoj holds a degree in Electronics Engineering from BITS Pilani and is a silver medalist from the Indian Institute of Management Calcutta (MBA, Class of 2002).
விஜய் வீட்டில் செங்கோட்டையன்! த.வெ.கவில் இணைவது உறுதி?
சென்னை : தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று காலை திடீரென தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோஷத்துடன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுத்ததால், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் எம்எல்ஏ பதவி விலகல் பல்வேறு யூகங்களை எழுப்பியது. ராஜினாமா செய்த சில […]
Josh Safdie Returns to Campus for Masterclass
Award-winning filmmaker Josh Safdie (COM’07) returned to campus on November 21 to hold a master class for College of Communication
PRCI Delhi appoints Baldev Raj as Vice Chairman amidst India’s evolving communication landscape
New Delhi: The Public Relations Council of India (PRCI), one of the country’s leading platforms for communications and reputation management professionals, has appointed Baldev Raj, Founder & CEO of Prius Communications, as the Vice Chairman of its Delhi Chapter.The appointment comes at a time when the communication function in India is undergoing a profound shift. Institutions today operate in an environment defined by hyper-accelerated information flow, increasing public scrutiny, and rising demands for clarity, accountability, and trust. In response, PRCI is strengthening its leadership bench to guide the profession through this transition, ensuring communicators are equipped to navigate complexity with both skill and responsibility.Under its renewed strategic direction, PRCI aims to reinforce linkages between communication professionals, public institutions, industry leaders, and academic ecosystems. The Delhi Chapter, owing to the city’s policy influence and institutional density, is being positioned as a centre for knowledge leadership and research, ethical and transparent reputation management, technology-enabled communication practices, AI-driven capacity building, and talent development for the next generation of communicators.Baldev Raj’s appointment aligns with this broader mandate, bringing industry experience, sectoral diversity, and a practitioner’s understanding of how communication shapes public trust and organizational reputation. M. B. Jayaram, Chief Mentor & Chairman Emeritus, PRCI, said, As communication moves closer to the centre of decision-making — whether in governance, healthcare, business, or public life — PRCI needs leaders who understand the full arc of this responsibility. Baldev has worked at the intersection of these spaces for more than two decades. He has built teams, institutions, and systems that place credibility and strategic rigour at the forefront. What stood out for us is not just the scale of his experience, but the consistency with which he has contributed to the profession — mentoring young professionals, guiding organisations through complex communication challenges, and advocating for higher standards of practice. We see his appointment as an important step in strengthening PRCI’s Delhi Chapter and accelerating our mission to develop communicators who can operate confidently in an increasingly complex communication environment.” Baldev Raj’s career spans over 25 years across healthcare, finance & banking, startups, technology, education, infrastructure, public policy communication, and development sectors. As Founder & CEO of Prius Communications, he has built one of India’s most respected integrated communication firms, with 12+ offices, 80+ partner networks, and 2,000+ campaigns across industries.In addition to his entrepreneurial role, Baldev has been an active contributor to India’s communication discourse. He has spoken at 2,000+ platforms, authored over 1,800 thought pieces, and mentored 5,000+ professionals and students, making his presence felt across both industry and academia. Baldev Raj, Vice Chairman, PRCI Delhi Chapter, said, I am pleased to take on this responsibility and grateful for the trust PRCI has placed in me. This is an important moment for our profession. The expectations from communication — whether from the public, from institutions, or from industry — have grown significantly. I look forward to working with the Delhi Chapter to build programmes that strengthen professional capability, deepen cross-sector dialogue, and prepare young communicators for a landscape that demands both precision and purpose. I am committed to contributing meaningfully to PRCI’s growth and to the development of a more responsible communication ecosystem.” With this leadership transition, PRCI Delhi is positioned to play a defining role in shaping India’s communication priorities — strengthening collaboration across stakeholders, advancing ethical communication practices, and supporting the country’s readiness for an information environment where credibility is the foundation of trust.
Ranbir Kapoor Faces Online Trolls Over Family Feast
Ranbir Kapoor, last seen in Animal (2023), has spent the past year working on two big projects: Nitesh Tiwari’s Ramayana

29 C