Doctor Vikatan: மார்பகங்களில் உருளும் கட்டிகள், கர்ப்ப காலத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்யலாமா?
Doctor Vikatan: என் தோழி இப்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறாள். திடீரென மார்பகங்களில் கட்டி மாதிரி உருள்வதாகச் சொல்கிறாள். அதே சமயம், கர்ப்ப காலத்தில் புற்றுநோய்க்கான டெஸ்ட் எடுப்பதே ஆபத்து என பயப்படுகிறாள். கர்ப்ப காலத்தில் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்வது பாதுகாப்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க சிகிச்சை மருத்துவர் எஸ்.பி. ராஜ்குமார் கர்ப்பகாலத்திலும் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்யலாம். ஆனால், தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் முக்கியமான சில அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில், கர்ப்பகாலத்தில் செய்யக்கூடிய பாதுகாப்பான புற்றுநோய்ப் பரிசோதனைகள் பற்றி தெரிந்துகொள்வோம். மார்பக மருத்துவ பரிசோதனை (Clinical Breast Exam) மார்பக மருத்துவ பரிசோதனை, இதில் மருத்துவர், மார்பகத்தில் கட்டிகள் உள்ளனவா என்று பரிசோதனை செய்வார். பெண்களும் தாங்களாகவே சுய மார்புப் பரிசோதனை (Self-Breast Exam) செய்து, கட்டிகள் உள்ளனவா என கண்டுபிடிக்கலாம். இந்தப் பரிசோதனைகள் கர்ப்ப காலத்தில் முற்றிலும் பாதுகாப்பானவை. அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) அடுத்தது மார்புப் பகுதிக்கான அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) சோதனை. இது கட்டிகளை மதிப்பீடு செய்யவதற்கான பரிசோதனை. ஒலியலைகளைப் பயன்படுத்துகிறது என்பதால், இந்தச் சோதனை பாதுகாப்பானது. இதில் கதிர்வீச்சு இல்லை. Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக மாறுமா? மேமோகிராம் (Mammogram) மூன்றாவதாக மேமோகிராம் (Mammogram) சோதனை. கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமென்றால் மட்டும் மேற்கொள்ளப்படும். இதில் கதிர்வீச்சு இருக்கும். கர்ப்பிணியின் வயிற்றுப் பகுதியில் 'லெட் ஷீல்டு' (lead shield) எனப்படும் கடினமான உலோக ஷீல்டை வைத்து பாதுகாப்பு அளிக்கப்படும். மிகமிக அவசியம் என்றால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிற இந்தச் சோதனை, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கப்படுகிறது. கடைசியாக பயாப்சி (Biopsy) பரிசோதனை. கட்டிகள் இருந்தால் பயாப்சி சோதனை செய்யப்படும். இதுவும் பாதுகாப்பானதுதான். CT scan, PET scan கர்ப்பகாலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய சோதனைகள்: அதிக கதிர்வீச்சு உள்ளதால் சிடி ஸ்கேன் (CT scan) மற்றும் பெட் ஸ்கேன் (PET scan) ஆகியவை கர்ப்பகாலத்தில் தவிர்க்கப்படுகின்றன. மிக மிக அவசர நிலைமையில் மட்டுமே செய்யப்படும். கர்ப்பத்தில் மார்பகங்கள் இயற்கையாகவே மாற்றமடையும் என்பதால், அந்தக் காலத்தில் கட்டிகளைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம். சி.டி ஸ்கேன் எப்படி இருப்பினும், மார்பகங்களில் கட்டி, வலி, வடிவம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் கர்ப்பத்துடன் தொடர்பில்லாத எந்தப் பரிசோதனைக்குச் சென்றாலும், முதலில் மருத்துவரிடம் நீங்கள் கர்ப்பமாக உள்ளதைச் சொல்ல மறக்காதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
வடதமிழகம் மற்றும் தென்தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குரலை மாற்றி பாடுவதில் வல்லவரான மலேசியா வாசுதேவன்
2010 ல் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மறைந்தார். மறைந்தும் நம் மனதில் பாடல்களின் மூலம் வாழ்கிறார். குறிப்பாக ரஜினிகாந்த், உடல் மொழிக்கு இவரின் குரல் தான் பொருந்தி போனது. பல படங்களில் ரஜினி, மலேசியா வாசுதேவன் காம்போதான் பொருந்தி போனது.… The post குரலை மாற்றி பாடுவதில் வல்லவரான மலேசியா வாசுதேவன் appeared first on Tamilnadu Flash News .
பாஜக கூட்டணி: “தி.மு.க-வைப் போல் பெரிய அண்ணன் மனப்பான்மையில் அதிமுக இருக்காது” - ஜி.கே. வாசன் பேட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிறுவனரான ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் அரசியல் நிகழ்வாக உருமாறியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை ஒரே மேடையில் பங்கேற்றதில் ஆரம்பித்து, ‘ஜி.கே. மூப்பனாரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்தது தமிழர்களுக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம்’ என்ற அரசியல் அட்டாக் வரையிலான பரபர பட்டாசுகளைக் கிளப்பியிருக்கிறது நிகழ்ச்சி. இந்த நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனைச் சந்தித்து கேள்விகளை முன்வைத்தேன்... “2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், ஜி.கே மூப்பனாரின் நினைவேந்தல் நிகழ்வையே தேசிய ஜனநாயகக் கூட்டணி மேடையாக மாற்றிவிட்டீர்களே?” “மக்கள் தலைவர் மூப்பனாரின் 24-வது நினைவேந்தல் நிகழ்வு, அரசியலைக் கடந்த நிகழ்வு. இந்த ஆண்டு எடப்பாடியாரும், நிர்மலா சீதாராமனும் பங்கேற்றதுபோல், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ஆக அதனை அரசியல் மேடையாக மாற்றிவிட்டோம் என்பதில் உண்மையல்ல.” மூப்பனார் நினைவு தின நிகழ்வு “‘தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள்தான் தமிழரான ஜி.கே மூப்பனாரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்தனர்’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாரைக் குறிப்பிடுகிறார்?” TTV Dinakaran: எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என நம்பினோம்; ஆனால் - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு “வரலாற்று உண்மைத் தகவல்களை மறைக்கவோ, மறக்கவோ முடியாது. அதற்குமேல் அந்த விவகாரத்தில் நான் ஏதும் பேச விரும்பவில்லை.” “த.மா.க மீது பா.ஜ.க-வினருக்கு உண்மையிலேயே பற்று இருந்தால் உங்களை மத்திய அமைச்சராக்கியிருப்பார்கள்தானே?” “`வளமான தமிழகம், வளமையான பாரதம்` அமைக்கும் நோக்கில்தான் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் உள்ளோம். மற்றபடி எந்தவொரு பதவியை மையப்படுத்தியும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவில்லை. தி.மு.க-வை வீழ்த்தி நாங்கள் வெல்ல வேண்டும். த.மா.க-வின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” ஜி.கே வாசன் “உங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்த அ.தி.மு.க-வை விட்டுவிட்டு எதுவுமே தராத பா.ஜ.க-வுடன் 2024-ல் ஏன் கூட்டணி வைத்தீர்கள்?” “2021 சட்டமன்றத் தேர்தலின்போது ‘எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும்’ என்பதே த.மா.கா-வின் விருப்பம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதில் மிக உறுதியாக இருக்கிறோம். ஆனால், 2024-ல் பிரதமர் மோடி தொடர வேண்டுமா... வேண்டாமா என்ற கேள்வி வரும்போது, ‘வலிமையான பாரதம்’ அமைத்த பா.ஜ.க ஆட்சியில் தொடர வேண்டும் என முடிவெடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்தோம். இன்றைக்கு முதல்நிலையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க-வும், மிகப்பெரும் கட்சியாக வளர்ந்துவரும் பா.ஜ.க-வும் கூட்டணியாக இணைந்திருக்கிறது. அதில் முக்கியக் கட்சியாக த.மா.கா-வும் பயணிக்கிறது” 'எடப்பாடி எடுப்பதே எங்கள் முடிவு'- செங்கோட்டையன் பேசியது குறித்து திண்டுக்கல் சீனிவாசன் “தமிழக அரசியலில், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை என்ற விமர்சனம் இருந்துவருகிற சூழலில், மீண்டும் அ.தி.மு.க-வை ஆளுங்கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் என எப்படிச் சொல்கிறீர்கள்?” “தி.மு.க ஆட்சிக்கு எதிரான மனநிலை தமிழகம் முழுக்க உருவாகியிருக்கிறது. அதைப் பிரதிபலிக்கும் விதமாகவே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ‘எதிர்க்கட்சித் தலைவராக அவர் முறையாகச் செயல்படவில்லை’ என்ற விமர்சனமெல்லாம் அவரது பிரசாரப் பயணத்துக்குப் பிறகு தவிடுபொடியாகிவிட்டது.” மோடி - அமித் ஷா “பா.ஜ.க தரப்பில் ‘கூட்டணி ஆட்சி அமைப்போம்’ என்கிறார்கள். அ.தி.மு.க தரப்பில் ‘தனித்தே ஆட்சி அமைப்போம்’ என்கிறார்கள். த.மா.கா-வின் விருப்பம் என்ன?” “2026 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி அறுதிப்பெரும்பான்மையில் வெல்லவேண்டும். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராவார். மற்ற விவகாரங்களில் அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்து எடுக்கும் முடிவுகளுக்குத் துணை நிற்போம்.” “2026 தேர்தலில், தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பு பா.ஜ.க-விடம் இருக்குமா அல்லது அ.தி.மு.க-விடம் இருக்குமா..?” (கோபத்துடன்) “‘கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டு, கூட்டணி உடைய வேண்டும்’ என வேண்டாதவர்கள் முயல்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. தொகுதிப் பங்கீடு என்றாலே எல்லோரும் கலந்துபேசித்தான் முடிவெடுப்போம். தி.மு.க-வைப் போல பெரிய அண்ணன் மனப்பான்மையில் அ.தி.மு.க கூட்டணி இருக்காது.” `இங்கு சாராய, கஞ்சா ஆட்சிதான் நடக்கிறது!’ - தமாக பொதுக்கூட்டத்தில் கொதித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் “என்.டி.ஏ கூட்டணியில் பெரிய கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வுக்குத்தான் தொகுதிகளைப் பங்கிட்டுத் தரும் உரிமை இருக்கிறது எனச் சொல்ல மறுப்பது ஏன்?” “கலந்துபேசி முடிவெடுப்போம். அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற பெரிய கட்சிகளுக்குக் கூட்டணி விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பிருக்கிறது.” எடப்பாடி பழனிசாமி “எடப்பாடி பழனிசாமியை நம்பகத்தன்மையற்ற தலைவர் என்கிறாரே தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா?” “தே.மு.தி.க எந்தக் கூட்டணியில் இடம்பெறப் போகிறதென இன்னும் அறிவிக்கவில்லை. ஆகையால் அவர்களைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது” “தி.மு.க கூட்டணி வலுவாக இருந்துவருகிறது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியவில்லையே?” “தி.மு.க கூட்டணிக் கட்சியினர் நியாயமான மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவர்களின் இந்தச் செயல்பாடுகள் எங்களுக்குச் சாதகமாக அமையும்” “மோடிக்கும் எடப்பாடிக்கும் நடுநிலையான இடத்தில் இருக்கிறோம்!” - ஜி.கே.வாசன் விளக்கம் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
கமலின் கலக்கலான பாடல்கள், இதை மறக்க முடியுமா
தெலுங்கில் 1989ல் வந்த இந்துருடு சந்துருடு, தமிழில் இந்திரன் சந்திரன் ஆக வந்தது. ஒரு மேயர் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை மையமாக வைத்து வந்த இந்த படம் தெலுங்கில் பெரிய ஹிட், தமிழில் சுமார்தான். ஆனால் பாடல்கள் தமிழ் தெலுங்கிலும்… The post கமலின் கலக்கலான பாடல்கள், இதை மறக்க முடியுமா appeared first on Tamilnadu Flash News .
Trump: மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது - பாச மழையைப் பொழியும் ட்ரம்ப்
'அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிக்கிறது. உலகிலேயே அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் டாப் நாடு இந்தியா', 'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால், அந்தப் பணத்தை உக்ரைன் உடனான போருக்கு ரஷ்யா செலவிடுகிறது' என்று இந்தியாவைப் பொரிந்து தள்ளி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது பேச்சை மாற்றியுள்ளார். ட்ரம்பின் பாசமழை நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், நான் எப்போதும் பிரதமர் மோடி உடன் நட்பாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ட்ரம்ப் நான் எப்போதுமே அவருக்கு நண்பர்தான். ஆனால், இப்போது என்ன நடக்கிறதோ, அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. எப்போதுமே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிகச் சிறப்பான உறவு இருக்கும். அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அவ்வப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும். அவ்வளவு தான் என்று பேசியுள்ளார். சீனா, ரஷ்யா உடன் இந்தியா நெருக்கமாகி வருவதும், ட்ரம்பின் இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
அமெரிக்க வரி விவகாரம்: ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் - நிர்மலா சீதாராமன் உறுதி
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால், அமெரிக்கா இந்தியாவிற்குக் கூடுதல் 25 சதவிகித வரி விதித்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது குறித்து, இந்திய நாட்டின் நலனுக்கும், இந்திய மக்களின் தேவைக்கும் எது நல்லதோ, அதை இந்தியா தொடர்ந்து செய்யும் என்று இந்தியா கூறியது. இதை மீண்டும் உறுதிசெய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மோடி - புதின் நிர்மலா சீதாராமன் கூறியது என்ன? நேற்று, தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன், ரஷ்ய எண்ணெய்யோ அல்லது எதுவாக இருந்தாலும், விலை, தளவாடங்கள் போன்றவற்றைப் பொறுத்து, நமக்கு எது பொருந்துமோ, அதைத்தான் நாம் செய்வோம். அதிக மதிப்புள்ள அந்நிய செலாவணி தொடர்பான பொருளாக இருப்பதால், நமக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதைப் பொறுத்து நாம் ஒரு முடிவை எடுப்போம். அதனால், சந்தேகமில்லாமல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்குவோம் என்று கூறியுள்ளார். வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி, அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவிக்கான நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதனின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் புதிய வேந்தராக வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் […]
பாதாளக் குழுவினரை கைது செய்தால் நாங்கள் கலங்கமாட்டோம் ; நாமல் ராஜபக்ஷ
ஊழல்வாதிகளையும் பாதாள குழுக்களையும் கைது செய்யும்போது நாங்கள் ஒன்றும் கலக்கமடையவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு அமைச்சரவை அமைச்சர்களுக்கு மாத்திரம் விதிவிலக்காக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் நேற்று (5) நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசியல் செய்யாதீர்கள்… அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுவினரை கைது செய்யும் போது நாங்கள் […]
பாமக: நூலிழையில் உயிர் தப்பிய ம.க.ஸ்டாலின்; காரில் தப்பிய 8 பேர்; 5 முறை போனில் பேசிய ராமதாஸ்
கும்பகோணம், ஆடுதுறை அருகே உள்ள மேலமருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருக்கும் இவர், பா.ம.க-வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ம.க.ஸ்டாலின் நேற்று மதியம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தனது அறையில் அமர்ந்திருந்தார். அலுவலக வளாகத்திற்குள் அவரது ஆதரவாளர்களான களம்பரத்தைச் சேர்ந்த இளையராஜா (44), மஞ்சமல்லியைச் சேர்ந்த அருண் (25) உள்ளிட்ட சிலரும் இருந்தனர். சாலை மறியல் போரட்டம் மதியம் சுமார் 12.30 மணியளவில் கார் ஒன்றில் 8 பேர் வந்துள்ளனர். இதில், டிரைவர் மட்டும் காரிலேயே அமர்ந்திருக்க மற்ற 7 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் முகமூடி அணிந்து அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர். கைகளில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து போர்டிகோவில் நாட்டு வெடிகுண்டை வீசியவர்கள், அதன் பின்னர் மற்றொரு வெடி குண்டை அலுவலகத்திற்குள் வீசினர். இதில் நாற்காலி மற்றும் கண்ணாடி சேதமடைந்தன. மேலும் வீசப்பட்ட 2 குண்டுகள் வெடிக்காமல் அந்த இடத்தில் கிடந்தன. பெட்ரோல் குண்டு வீச்சு, கடும் தாக்குதல்; பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயற்சியா? அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்களை இளையராஜா மற்றும் அருண் ஆகியோர் தடுத்துள்ளனர். அப்போது இரண்டு பேரையும் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு உள்ளே சென்றனர். இதற்கிடையில், விபரீதம் நடக்கிறது என்பதை அறிந்த ம.க.ஸ்டாலின் தனது அறையில் உள்ள கழிவறைக்குள் சென்று மறைந்து கொண்டார். கொலை செய்ய வந்தவர்கள், ம.க.ஸ்டாலின் சீட்டில் இல்லை என்றதும் பின்புறம் வரை சென்று தேடியுள்ளனர். அவர் இல்லை என அறிந்து அதே காரில் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டனர். ஐந்து நிமிடம் நடந்த இந்தச் சம்பவம் சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் இருந்ததாகச் சொல்கிறார்கள். சாலை நடுவே எரியும் டயர் இதையறிந்து, ம.க.ஸ்டாலின் ஆதவர்வாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டயர்களைக் கொளுத்தி சாலை நடுவே எரிய விட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ம.க.ஸ்டாலினைக் கொலை செய்ய முயன்றவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர். இதனால் ஆடுதுறை, கும்பகோணம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. இதையடுத்து எஸ்.பி., ராஜாராம் தலைமையில், ஆடுதுறை அலுவலகத்திற்குள் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பாமக: தைலாபுரத்தில் ராமதாஸ்- அன்புமணி சந்திப்பு; தாய் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அன்புமணி! தஞ்சாவூரிலிருந்து வரவழைக்கப்பட்ட வெடி குண்டு நிபுணரான எஸ்.ஐ., ராஜ்குமார் தலைமையிலான போலீஸார் வெடித்த மற்றும் வெடிக்காத குண்டுகளைக் கைப்பற்றி தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், தஞ்சாவூரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது சோதனை செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகள் மூலம் அந்தக் காரில் எந்தச் சாலையில் தப்பிச் சென்றனர் என்பதையும் ஆய்வு செய்தனர். தற்போது, ம.க.ஸ்டாலின் ராமதாஸ் அணியில் இருக்கிறார். நாளை, கும்பகோணத்தில் ராமதாஸ் மகள், பாமக நிர்வாகக் குழு உறுப்பினரான ப.ஸ்ரீகாந்தி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆடுதுறை பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை முயற்சி குறித்து போலீஸ் விசாரணை இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த ம.க.ஸ்டாலின் தம்பி ராஜா திருவிடைமருதூர் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். ராஜா, கொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப் பழியாகக் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோவை சிறையிலிருந்து வெளியே வந்த கொலையாளிகளைக் கொலை செய்வதற்கு அவரது ஆதரவாளர்கள் சென்றனர். இதையறிந்த கொலையாளிகள் தப்பித்து விட்டனர். அப்போது, கொலையில் தொடர்பு இல்லாத 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சூலூர் போலீஸார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. பாமக பொதுக்குழுவில் எழுந்த அதிமுக ஆதரவுக் குரல்கள்; உணர்ச்சிவசப்பட்ட ராமதாஸ் - என்ன நடந்தது? மேலும், ராஜா கொலையில் முக்கிய குற்றவாளியான லாலி மணிகண்டனை, ஜாமீனில் எடுப்பதற்காக அவரது சகோதரர் மகேஷ், பலரிடம் நிதி திரட்டினார். அப்போது, பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளராக இருந்த வெங்கட்ராமன் நிதி வழங்கியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில், ம.க.ஸ்டாலினுக்குக் கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக வெங்கடராமன் உட்படச் சிலர் கைது செய்யப்பட்டனர். ம.க.ஸ்டாலினுக்கும், பாமக மற்றும் அதே பகுதியில் உள்ள அவரது சமூகத்திற்குள் உள்ள சிலருக்கும் முன்விரோதம் இருக்கிறது. இதனால் யார் அவரைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டார்கள், எந்த குரூப் வந்தது என்பது விசாரணை முடிவில் தெரிய வரும் என்றனர். ம.க.ஸ்டாலின் இதைத்தொடர்ந்து தன் ஆதரவாளர்களைக் கலைந்து செல்ல வலியுறுத்தி ம.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, காவல்துறையினர் பாரபட்சமின்றி விசாரணை செய்து வருகின்றனர். டாக்டர் ராமதாஸ் அய்யா 5 முறை போனில் என்னிடம் பேசி விட்டார். காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் பேசியிருக்கிறார். இரவுக்குள் நல்ல முடிவு கிடைக்கும். நாம் போராட்டம் நடத்தும் போது யாரோ வீசுகிற கல் விழுந்து நமக்கு வழக்காகும். எனவே தயவு செய்து எல்லோரும் செல்லுங்கள் என்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனக்குப் பல்வேறு வகையில் கொலை மிரட்டல், அச்சுறுதல்கள் இருப்பது போலீஸார் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீஸார் எனது வீட்டிற்குப் பாதுகாப்பு வழங்கி வந்தனர். தனிப்பட்ட முறையில் எனக்குப் பாதுகாப்புக்கு போலீஸார் கிடையாது. மயிலாடுதுறை தொகுதியில் எம்.பி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட போது, ஏற்கெனவே வழங்கிய பாதுகாப்பை போலீஸார் திரும்பிப் பெற்று விட்டனர். எனவே, கடந்த ஆண்டு கலெக்டர் மற்றும் போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தேன். நீதிமன்றத்தில் மனு அளிக்கக் கூறினார்கள். இரண்டு முறை மனு அளித்தும் இன்னும் உத்தரவு வரவில்லை. திட்டமிட்டு நடந்த இந்தக் கொலை முயற்சியை போலீஸார் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். TNPSC: சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..? - பாமக அன்புமணி காட்டம்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
தந்தை செல்வா 127ஆம் ஆண்டு நினைவு தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு
இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் “தந்தை செல்வா” என மதிப்புடன் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளையும், 41ஆம் ஆண்டு நினைவு நாளையும் முன்னிட்டு, தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீட அரசியல் விஞ்ஞானத் துறை மற்றும் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை இணைந்து நாடாத்திய சிறப்பு நினைவு தின சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த புதன்கிழமை (3) பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில், […]
Seasonal Fevers: பரவிக் கொண்டிருக்கும் காய்ச்சல்கள்; வராமல் தடுக்க, வந்தால் மீள மருத்துவர் ஆலோசனை!
'திடீர் காய்ச்சல்; உடல் அனலாய் கொதிக்கிறதே' என பக்கத்தில் இருக்கிற கிளினிக் போனால், காய்ச்சல் வந்தவர்களால் கிளினிக் நிரம்பி வழிகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நள்ளிரவுகளில் 24 மணி நேர மருத்துவமனைகளுக்கு செல்வதையும் பார்க்க முடிகிறது. மழையும் வெயிலும் மாறி மாறி வந்தால் காய்ச்சலும் வந்துவிடும். வருடத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போதும் ஊரெங்கும் காய்ச்சல், இருமல், சளித்தொல்லை என ஆரம்பித்துவிடும். தற்போதும் காய்ச்சல் காலம் ஆரம்பித்துவிட்டது. தற்போது என்னென்ன காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன; வராமல் எப்படித் தடுப்பது; அறிகுறிகள்; தீர்வுகள் என்ன என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம். Seasonal Fever என்னென்ன காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன? ''தமிழ்நாட்டில் பருவநிலை மாறும்போது வைரஸ் தொற்றுப்பரவும். விளைவாக காய்ச்சலும் வரும். தற்போது இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸ், அடினோ வைரஸ், ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ் (Respiratory syncytial virus), கொரோனா வைரஸ், சின்னம்மை வைரஸ், மம்ப்ஸ் எனப்படும் கூகைக்கட்டு அம்மை வைரஸ், மீசில்ஸ் எனப்படும் தட்டம்மை வைரஸ் ஆகியவை சுவாசப்பாதை வழி எளிதாகப் பரவுகின்றன. கூடவே, ஆங்காங்கு பன்றிக்காய்ச்சலும், டெங்குவும்கூட இருக்கிறது. இன்ஃபளூயன்சா மற்றும் அடினோ வைரஸ்..! இதில் இன்ஃபளூயன்சா மற்றும் அடினோ வைரஸ் வகையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்டால், 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சலடிக்கும். இதனுடன் தசைவலி, கடுமையான உடல் சோர்வு, சுவாசத்தொற்றுகளான தொண்டை வலி, வறட்டு இருமல், சளியுடன் இருமல் வருவது, தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் ஆகிய பிரச்னைகளும் வரும். Seasonal Fever இன்ஃப்ளூயன்சா மற்றும் ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ்கள்! இன்ஃப்ளூயன்சா மற்றும் ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ்கள், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு, குறிப்பாக ஒரு வயதுக்கும் குறைவான சிசுக்களுக்கு தீவிர நுரையீரல் தொற்றாக வெளிப்படலாம், கவனம். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு அதீத காய்ச்சலுடன் தீவிர நுரையீரல் தொற்றும் ஏற்பட்டால், அது நிம்மோனியா. பொதுவாக மூச்சு விடும்போது வயிற்றுப்பகுதி தசைகள் மேலே இழுக்காது. ஆனால், நிம்மோனியா வந்த குழந்தைகளுக்கு நெஞ்சுப்பகுதி தசைகள் சோர்வடைந்துவிடுவதால், வயிற்றுப்பகுதி தசைகளும் சேர்ந்து வேலை செய்யும். இதனால், குழந்தை குழந்தை மூச்சு விடுவதற்கு திணறும். இழுத்து இழுத்து மூச்சு விடும். இந்த நிலையில், குழந்தையின் மேல் சட்டையை நீக்கி, ஒரு நிமிடத்துக்கு 20 முதல் 40 முறைக்கு மேல் மூச்சு விடுகிறதா என கவனியுங்கள். அப்படியிருந்தால் குழந்தைக்கு 'நிம்மோனியா தொற்று இருக்கிறது; மூச்சுத்திணறல் பிரச்னையும் இருக்கிறது' என்று அர்த்தம். உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மம்ப்ஸ் இந்த வைரஸும் இருமல், தும்மல் வழியாகவே பரவும். இந்தத் தொற்றில் காய்ச்சலுடன் கழுத்தின் இருபுறமும் காதுகளுக்குக் கீழ் நெறிகட்டிக் கொண்டு வீக்கம் ஏற்படும். இது பெரும்பாலும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படுகிறது. Seasonal Fever மீசில்ஸ் எனும் தட்டம்மை இது மிக மிக எளிதாக சுவாசப்பாதை வழியாக பரவும். இந்தத் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இருமல், சளி, சிவந்த கண்கள், உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும், வாயினுள் நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போல வரும். இந்த நோய் வராமல் தடுப்பதற்காகத்தான் 9 மாத முடிவிலும் 16 முதல் 24 மாதங்களிலும் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போட வேண்டும் என்கிறோம். பன்றிக் காய்ச்சல்! இந்த நேரத்தில் பன்றிக்காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சற்று தீவிரத்துடன் வரலாம். இதைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இதை போட்டுக்கொள்ளலாம். காய்ச்சல் டெங்கு காய்ச்சல்! பருவமழை பொழியும் காலங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். விளைவு டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, காய்ச்சல் ஆரம்பிக்கும்போதே 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கடும் உடல்வலி, சோர்வு, சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, கண்களுக்குள் வலி, மூட்டுகளில் வலி ஆகியன இருக்கும். காலதாமதம் செய்யாதீர்கள்! டெங்குவைப் பொறுத்தவரை முதல் மூன்று நாள்கள் காய்ச்சல் இருந்து சரியாகும். அதன்பிறகுதான் சோர்வு, தூக்கம், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் குளிர்ந்துபோதல் போன்ற அறிகுறிகளைக் காட்டும். உடனே மருத்துவமனை சென்றுவிட வேண்டும். இல்லையென்றால், தட்டணுக்கள் குறைந்து உடலெங்கும் சிவப்பு புள்ளிகள், பல் ஈறுகளில் ரத்தம் வருதல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல் என உயிராபத்து வரை ஏற்படலாம். இவையெல்லாம் என்பது கடந்த சில வருடங்களாக எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அதனால், டெங்கு காய்ச்சல் விஷயத்தில் சற்று காலதாமதம் செய்யாதீர்கள். டெங்கு டெங்கு வராமல் தடுக்க இது வராமல் தடுக்க, வீட்டைச்சுற்றி நன்னீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைங்களுக்கு உடல் முழுக்க மறைக்கிறபடி ஆடை அணிவியுங்கள். கொசுவலைக்குள் தூங்க வையுங்கள். பெரியவர்களும் இதையே ஃபாலோ செய்யுங்கள். டெங்குவும் சுவாசப்பாதைத் தொற்றும் டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு, சுவாசப்பாதை வழியாக பரவுகிற வைரஸ் தொற்றும் ஏற்பட்டால் தீவிரமான காய்ச்சல் ஏற்படும். இவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். Protein வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி..? இந்த சீசனில் பரவும் வைரஸ் தொற்றுகள் இருமுவது மற்றும் தும்முவது மூலமே பரவுகின்றன. அதனால், தொற்று ஏற்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிருங்கள். இதன் மூலம் தொற்று பிறருக்குப் பரவுவதைத் தடுக்கலாம். அப்படியே செல்ல வேண்டிய சூழல் வந்தால், மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். கொரோனா வுக்கு செய்ததைப்போலவே இந்த நேரத்திலும் கைகளை சோப் அல்லது சானிட்டைஸர் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்துகொள்ளுங்கள். குழந்தைகளுக்கு வருகிற மழைக்கால காய்ச்சல்... காரணங்களும் தீர்வுகளும்! என்ன சாப்பிட வேண்டும்? பருவ மழை பொழிய ஆரம்பித்தவுடனே புரதச்சத்து நிரம்பிய முட்டை, மாமிசம், மீன், நட்ஸ், பயறு, கடலை, சோயா போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தியை நமக்குத் தரும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Dengue: மீண்டும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்... Do's & Don'ts..! மருத்துவர்களின் வழிகாட்டல்! கட்டாயம் இதை பின்பற்றுங்கள் பொதுவாக சீசனல் வைரஸ் காய்ச்சல் என்பது ஒரு வார காலம் வரை இருந்து, பின்னர் தானாக குறையும். பெரும்பாலும் உயிர் ஆபத்து ஏற்படாது. அதற்காக, எந்த காய்ச்சலாக இருந்தாலும் கைவைத்தியம் செய்துகொண்டு வீட்டிலேயே இருக்காதீர்கள். உடனடியாக மருத்துவரை நாடுங்கள். காய்ச்சல் வந்தால், உடலில் நீர்ச்சத்துக் குறையும் என்பதால் நிறைய நீர் அருந்துங்கள். தேவையென்றால், கொதிக்க வைத்து ஆறிய நீரில் ஓ.ஆர்.எஸ் கலந்து அருந்துங்கள். முக்கியமாக ஓய்வெடுங்கள்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா. டேக் கேர் மக்களே..! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
உயிர்காப்புக்கு ரோன் தொழிநுட்பம் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு பயிற்சி
அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் நவீன தொழிநுட்பங்களை, குறிப்பாக ரோன் (Drone) தொழிநுட்பத்தை, உயிர்காப்பு நோக்கில் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நாள் செயல்விளக்கம் மற்றும் பயிற்சி நெறி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2025.09.04 ஆம் திகதி கலை கலாச்சார பீட உள்ளக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வை சம்மாந்துறை அல்-உஸ்வா உயிர்காப்பு நிலையம் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இது, அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவர் மற்றும் […]
அமெரிக்க அழுத்தங்களால் சீனாவின் அழைப்பை நிராகரித்த சிறிலங்கா
சீனாவின் தியான்ஜினில் (Tianjin) நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள, சீனா விடுத்த அழைப்பை சிறிலங்கா நிராகரித்ததாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகம் மற்றும் பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஆகியன, இந்த உச்சிமாநாட்டில், பங்கேற்க வலியுறுத்திய போதிலும், வெளிநாட்டு தூதரகத்தின் அழுத்தங்களால், அந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்காய் மாநாட்டில் சிறிலங்கா பங்கேற்காதது பெரும் தவறு
சீனாவில் நடந்தத ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், உச்சிமாநாட்டில் சிறிலங்கா பங்கேற்காதது ஒரு தவறான தீர்மானம் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தீர்மானம், பொருளாதார நன்மைகளை நிராகரிப்பதாக அமைந்திருப்பதுடன், அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட ஒரு நாடு என்ற அதன் விம்பத்தை சேதப்படுத்துவதாகவும்
ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு அழைப்பு –பதறும் போர்க்குற்றவாளிகள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கும் ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் விடுத்துள்ள அழைப்பு தொடர்பான நிலைப்பாட்டை, நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வெளிப்படுத்த வேண்டும் என, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் றியர் அட்மிரல் டிகேபி தசநாயக்க வலியுறுத்தியுள்ளார். “வரும் திங்கட்கிழமைதொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கையின், சர்ச்சைக்குரிய விடயங்களில் இதுவும்
What to watch - Theatre & OTT: மதராஸி, Bad Girl, Conjuring, காந்தி கண்ணாடி; இந்த வார ரிலீஸ் லிஸ்ட்
மதராஸி (தமிழ்) மதராஸி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மதராஸி'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? Bad Girl (தமிழ்) BAD GIRL படம் வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் அஞ்சலி சிவராமன், ஹிருது, டிஜே அருணாசம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bad Girl'. பெண்ணின் வாழ்க்கையை, சுதந்திரத்தை மையப்படுத்திய இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. காந்தி கண்ணாடி (தமிழ்) காந்தி கண்ணாடி ஷெரீஃப் இயக்கத்தில் KPY பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காந்தி கண்ணாடி'. 60வது வயது தம்பதியினரின் காதலை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா? Ghaati (தெலுங்கு) Ghaati கிர்ஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு, சைத்தன்யா ராவ், ஜபதி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ghaati'. மலைகளில் வசிக்கும் மக்களை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. The Bengal Files (இந்தி) The Bengal Files 'தி காஷ்மீர் பைல்ஸ்'ன் திரைப்படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Bengal Files'. இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Baaghi 4 (தமிழ்) ஹர்ஷா இயக்கத்தில் டைகர் ஷரோஃப், சஞ்சய் தத், ஹர்னாஸ், சோனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Baaghi 4'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. The Conjuring: Last Rites (ஆங்கிலம்) மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் வெரா பார்மிங், பாட்ரிக் வில்சன், பென் ஹார்ட்லி, எலியட் கோவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Conjuring: Last Rites'. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த வார ஓடிடி ரிலீஸ்கள் தமிழ் BunButterJam - Amazon Primevideo Surrender - Sunnxt Surrender Review: ஆக்ஷனுக்கு தர்ஷன், எமோஷனுக்கு லால்; இந்த க்ரைம் த்ரில்லரிடம் சரண்டர் ஆகிறோமா? மலையாளம் Flask - ManoramaMax Police Day - Sunnxt Kadhikan - ManoramaMax Footage - Sunnxt Raveendra Nee Evide - Sainaplay கன்னடம் Kothalavadi - Amazon Prime video தெலுங்கு Kannappa - Amazon Prime video ஆங்கிலம் Highest 2 Lowest - AppleTv+ Winter Spring Summer or Fall - Paramount Emmanuelle - HBOMax Ghost Cat Anzu - HBOMax Wednesday : Season 2 Part - 2 - Netflix Folktales - Primevideo Rent TheNakedGun - Primevideo Rent Nobody2 - Amazon Prime video Rent Lilo And Stitch - JioHotstar FallGuy - Netflix AMine Craft Movie - JioHotstar Friendship - HBOMax Queen Mantis [Series] - Netflix Shoshana (English) - Amazon Prime video Rent ShadowForce - Starz The Wedding Banquet- Paramount Lilo & Stitch Review: மழலை அன்புடன் சேரும் ஏலியன்! கோடைக் கால எண்டர்டெயினராக குழந்தைகளை ஈர்க்கிறதா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
ஐ.நாவின் பரிந்துரையை நிராகரித்தது சிறிலங்கா
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச தலையீடுகளுக்கான கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அனைத்து மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை வலுப்படுத்தும் சீர்திருத்தங்களை செயற்படுத்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளது. இருப்பினும், அத்தகைய முன்னேற்றத்திற்கு வெளியகத் தலையீடுகள் அவசியமில்லை
Shilpa Shetty: தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி; ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராகத் தேடுதல் நோட்டீஸ்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் எதாவது ஒரு சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். ஏற்கனவே ராஜ் குந்த்ரா ஆபாசப் படம் தயாரித்தது மற்றும் கிரிப்டோகரன்சி பிரச்னையில் சிக்கினார். இப்போது தம்பதியினர் ரூ.60 கோடி மோசடியில் சிக்கியிருக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவரிடம் ரூ.60 கோடியை 2015-23ம் ஆண்டுகளில் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் கடனாக வாங்கி இருக்கின்றனர். ஆனால் பின்னர் அந்தக் கடனை கம்பெனி முதலீடு என்று கூறிவிட்டனர். அதோடு ரூ.60 கோடிக்கு 12 சதவீத வட்டி கொடுப்பதாகத் தெரிவித்தனர். நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ரா அதனை கோதாரி நம்பினார். ஷில்பா ஷெட்டியே 2016ம் ஆண்டு அக்கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து பெஸ்ட் டீல் டிவி என்ற டெலிமார்க்கெட்டிங் கம்பெனியை ஆரம்பித்தனர். Shilpa Shetty: மதகுரு பிரேமானந்த்திற்கு சிறுநீரகத்தைத் தானம் தர விருப்பம் - ஷில்பா ஷெட்டி கணவர் இதன் தொடக்கவிழாவில் நடிகர் அக்ஷய் குமாரும் கலந்து கொண்டார். ஆனால் அந்தக் கம்பெனி சில மாதங்களில் மூடப்பட்டுள்ளது. தற்போது அக்கம்பெனி மத்திய தீர்ப்பாயத்தில் இருக்கிறது. ரூ.1.28 கோடி கடனைத் திரும்பச் செலுத்தாததால் கம்பெனி மத்திய தீர்ப்பாயத்தில் இருப்பது கோதாரிக்குத் தெரியாமல் இருந்தது. அவரிடம் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் சொல்லவில்லை. இது குறித்துத் தெரிய வந்த பிறகு இருவர் மீதும் கோதாரி போலீஸில் புகார் செய்துள்ளார். ஷில்பா ஷெட்டி அதன் அடிப்படையில் போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதைத் தடுக்கும் நோக்கில் இருவருக்கும் எதிராகத் தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில்தான் ஷில்பா ஷெட்டி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது ரெஸ்டாரண்டை மூடினார். ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர். Shilpa Shetty: தென்னிந்திய உணவுகளுக்காக புதிய உணவகம்; பழைய உணவகத்தை மூடும் ஷில்பா; பின்னணி என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
உலகின் முதல் சுயசேவை மளிகைக்கடையான பிக்ளி-விக்ளி மலர்ந்த நாள்!
வணிகத்தின் வரலாறு என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தற்போதைய துருக்கியான ஆசியா மைனரில்,
”மனைவியின் பேச்சைக் கேட்டும் ஆண்களே வெற்றிபெறுகிறார்கள்” - ஆய்வு கூறும் தகவல்கள் என்ன?
மனைவிகளின் பேச்சைக் கேட்கும் கணவர்கள் அந்தத் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், தங்களின் துறைகளிலும் வெற்றிகரமான நபராக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. திருமணம் என்றால் ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வதெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அந்த மண வாழ்வு சரியாக அமையவில்லை என்றால் விவாகரத்து செய்து கொள்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தி காட்மேன் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்கள் (the Gottman Institute) ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதன்படி தங்கள் மனைவிகளுக்குக் கீழ்ப்படியும் கணவர்கள் வெற்றிகரமான திருமணங்களை உருவாக்கி தங்கள் துறைகளிலும் வெற்றிகரமான நபராக மாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிழ்ச்சியான, விவாகரத்து இல்லாத திருமணங்களின் பண்புகளைப் பல வருடங்களாக ஆய்வு செய்த பிறகு டாக்டர் ஜான் காட்மேன் என்பவர் புதுமண தம்பதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார். அவரின் கூற்றுப்படி, ”மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்! தனது சமீபத்திய ஆராய்ச்சியில் ஆண்கள் தங்கள் மனைவிகளைக் கேட்டுச் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி காண்கிறார்கள். மனைவிகள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை ஆண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாரம்பர்ய விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால் கணவன்மார்கள் அதனை எதிர்க்கக் கூடாது” என்று அவர் தெரிவிக்கின்றார். மனைவிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் இதுபோன்று எதிர்ப்பதால் திருமணம் வாழ்வு முறிவு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. உறவுகள் மற்றும் வெற்றிகரமான திருமணத்தை வடிவமைப்பதில் பெண்களின் பங்கு குறித்த காட்மேன் ஆய்வு முடிவுகள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தினமும் கணவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் மனைவி - என்ன காரணம் கூறுகிறார் தெரியுமா? வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
செம்மணியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல்
1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செம்மணி வளைவில் நடைபெற உள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைத்து வருகிறது. நிகழ்ச்சி நிரல்: காலை 9.00 – நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் காலை 9.30 – நினைவுப் பகிர்வு காலை 10.00 – “வாசலிலே கிருசாந்தி” கவிதைத் தொகுப்பு வெளியீடு காலை 10.30 – ஆவண காட்சிப்படுத்தல் மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைக்கின்றார்கள்.
இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தினால் இந்தியா மீது அதிக வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தரப்பில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்கும் நடைமுறை ஆக.7-இல் அமலுக்கு வந்தது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி என […]
AFG vs UAE: ‘கடைசி பந்துவரை திக்திக்’.. ஆப்கானிஸ்தான் வீக்னஸ் வெளிப்பட்டது: பெரிய குறை இருக்கு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் அணி கடைசிவரை கடுமையாக போராடியது. இறுதியில், ஆசிப் கான் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட போதும், வெற்றி வாய்ப்பை கடை பந்தில் நழுவ விட்டனர்.
தமிழக அரசு TNPDCL-க்கு இலவச மற்றும் மானிய மின்சாரத்திற்காக ₹15,291 கோடி செலுத்தி உள்ளது!
தமிழக மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு சார்பில் இலவச மின்சாரத்திற்காகவும், மானியத்திற்காகவும், சுமார் 15 ஆயிரம் கோடி செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவசாமி… The post கொக்குவிலில் சடலம் மீட்பு appeared first on Global Tamil News .
பெண்களை பார்த்தால்., இல்லை நினைத்தாலே பயம்! 55 ஆண்டுகளாக தனிமையில் வாழும் நபர்
பெண்கள் மீது பயம் காரணமாக 71 வயது நபர் ஒருவர் 55 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்துள்ளார். ருவாண்டாவைச் சேர்ந்த 71 வயதுடைய கலிக்ஸ்ட் ந்சாம்விடா (Callixte Nzamwita) என்ற நபர், கடந்த 55 ஆண்டுகளாக பெண்கள் மீது உள்ள தீவிரமான பயம் காரணமாக தனிமையில் வாழ்ந்துள்ளார். 16 வயதில் இருந்தே அவர் தனிமையை தேர்ந்தெடுத்து, தனது வீட்டுக்குள் அடைந்து, சுவர் மற்றும் வேலியால் சுற்றி பெண்கள் அருகில் வர முடியாத வகையில் வாழ்ந்துள்ளார். இந்த மனநிலை Gynophobia […]
SSFB புதிய கிரெடிட் கார்டு அறிமுகம்.. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு இதுல?
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களுடன் இரண்டு புதிய கிரெடிட் கார்டுகளை சூர்யாதய் சிறு நிதி வங்கி அறிமுகம் செய்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் யானை-மனித மோதலைத் தடுக்க வனத்துறையினர் உருக்கு கம்பி வேலி அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர்.
கடைசி காலத்தில் பணத்துக்கு என்ன செய்வது? இப்போதே தயாராகுங்கள்.. சூப்பரான திட்டங்கள்!
இந்த இரண்டு திட்டங்களும் உங்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாப்பதோடு கை நிறைய வருமானமும் கொடுக்கும்.
லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்ரம்பர் மாத அமர்வு கடந்த பல அரசாங்கங்களினதும் ஜனாதிபதிகளதும் நகர்வுகளுக்கு பின்னர் இம்முறை சற்று எதிர்பார்ப்புடையதாகவேஇருக்கிறது. அதானது, தற்போது இலங்கையில் உருவாகியிருக்கின்ற இடது சாரி மரபில் வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினை அணுகும் வகையில் முற்று முழுதான மாற்றமுடையதாகவே இருக்கும் என்றே அனைவரும் நம்புகின்றனர். நாட்டில் ஊழலை ஒழித்து நீதியை நிலைநாட்டுவோம் என்று உறுதிமொழி கூறி மக்கள் ஆதரவு பெற்று ஆட்சிக்கு […]
எலி கடித்து இறந்த குழந்தைகள்: ``இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..! - அரசை விமர்சிக்கும் ராகுல்
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த MYH துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிதேந்திர வர்மா, ``பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை வெறும் 1.6 கிலோ மட்டுமே இருந்தது. எலி கடி பல பிறவி குறைபாடுகள் உட்பட குடல் பிரச்னைகளும் இருந்தன. அதற்காக கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் செப்டிசீமியா நோய் வந்து உயிரிழப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்தார். இதற்கிடையில், `இந்தூரின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் அரசு சுகாதார அமைப்பின் மோசமான நிலையை வெளிக்காட்டுகிறது' என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்தனர். அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரண்டு செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்து, உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தூரில் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் இரு புதிதாகப் பிறந்த குழந்தைகள் எலிகள் கடித்து இறந்தது - இது விபத்து அல்ல, இது நேரடியான கொலை. இந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் உணர்வற்றது, இதைக் கேட்டாலே உள்ளம் நடுங்குகிறது. ஒரு தாயின் மடியில் இருந்து அவளது குழந்தை பிரிக்கப்பட்டிருக்கிறது. அரசு தனது மிக அடிப்படையான பொறுப்பையே நிறைவேற்றவில்லை. எலி கடி சுகாதாரத் துறையை வேண்டுமென்றே தனியார் கைகளில் ஒப்படைத்துவிட்டனர் - அங்கு இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, ஏழைகளுக்கான அரசு மருத்துவமனைகள் உயிர் கொடுக்கும் இடங்கள் அல்ல, மரணத்தின் கூடாரங்களாக மாறிவிட்டன. நிர்வாகம் எப்போதும் போல் விசாரணை நடக்கும் எனச் சொல்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பைக் கூட நீங்கள் உறுதி செய்ய முடியவில்லை என்றால், அரசு நடத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது? பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் வெட்கத்தால் தலை குனிய வேண்டும். உங்கள் அரசு நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகளிடம் இருந்து சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது - இப்போது தாயின் மடியில் இருந்து குழந்தைகளையும் பறிக்கத் தொடங்கிவிட்டது. மோடி அவர்களே, இந்த குரல் இன்று அரசின் அலட்சியத்திற்கு பலியாகி வரும் லட்சக்கணக்கான தாய் தந்தையர்களின் சார்பாக எழுந்து வருகிறது. என்ன பதில் சொல்வீர்கள்? நாங்கள் மௌனமாக இருக்க மாட்டோம். இந்த போராட்டம் ஒவ்வொரு ஏழையின், ஒவ்வொரு குடும்பத்தின், ஒவ்வொரு குழந்தையின் உரிமைக்கானது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
செயற்கை இனிப்பு கொண்ட பானங்களை குடிப்பதால் மூளைக்கு வயதாகிறதா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பானங்களை உட்கொள்வது மூளையின் நினைவாற்றல் திறனை பாதிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லாவற்றுக்கும் செயற்கையான பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. அப்படி சந்தையில் கிடைக்கும் செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பொருள்களை உட்கொள்வதால் நினைவாற்றல் மற்றும் வார்த்தைகளை நினைவு கூறும் திறன்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக நியூராலஜி இதழில் வெளியாகியுள்ளது. beverages குறைந்த கலோரி சர்க்கரை ஒரு மாற்று வழியாக தற்போது பிரபலம் அடைந்தாலும், வழக்கமாக இதனை பயன்படுத்தும் போது ஆரோக்கியக் கேடுகள் விளைவிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆய்வின்படி அதிக அளவில் இதுபோன்று செயற்கையான இனிப்பூட்டிகள் உட்கொள்பவர்களில் 62 சதவிகிதம் பேருக்கு வேகமாக நினைவாற்றல் திறன் குறைவதாகவும், இது மூளையின் வயதை 1.6 ஆண்டுகள் அதிகரிப்பதற்கு சமம் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரேசிலில் சுமார் 13,000 பேர் கொண்ட குழுவிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அந்த தகவல் வெளியாகியுள்ளது. டயட் சோடா தவிர செயற்கை இனிப்பு கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் இது போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு குறிக்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு டீ குடிக்கலாமா? - இதனால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன? வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
BCCI: ரூ.3.17 கோடியிலிருந்து 3.50 கோடி - ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை உயர்த்திய பிசிசிஐ
டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது. மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. Dream 11 இணையவழி பண விளையாட்டு நிறுவனமான டிரீம் 11-ம் பிசிசிஐ நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து டிரீம் 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் பிற்காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என்றும் ANI செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இருதரப்பு போட்டிக்கான கட்டணம் தலா ரூ.3.17 கோடியிலிருந்து ரூ.3.50 கோடியாக அதிகரித்திருப்பதாகவும், ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளுக்கான கட்டணம் தலா ரூ.1.12 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக அதிகரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பிசிசிஐ ஸ்பான்சர்ஷிப் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.400 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
1,100 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது நேருவின் பங்களா - பின்னணி என்ன?
டெல்லியில் இருக்கும் நேருவின் லுட்யன்ஸ் பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவில், 24,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் முதல் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்துள்ளது. இந்த பங்களாவின் தற்போதைய உரிமையாளர்களான ராஜ்குமாரி கக்கர் மற்றும் பினா ராணி, ராஜஸ்தானின் முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசுகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் ₹1,400 கோடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தொழிலதிபர் ஒருவருக்கு ₹1,100 கோடிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் சர் எட்வின் லூட்டியன்ஸ் என்பவரால் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. இங்கு 3,000 பங்களாக்கள் உள்ளன, அதில் 600 மட்டுமே தனியார் உரிமையில் உள்ளன, மற்றவை அரசு இல்லங்கள் மற்றும் தூதரகங்களாக உள்ளன. இந்த விற்பனை இறுதியாகி விட்டால் இது இந்தியாவின் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய வரலாறு படைக்கும் என்று கூறப்படுகிறது. வெறும் 100 ரூபாய்க்கு பிரான்ஸில் வீடு விற்பனை; அரசின் இந்த திட்டத்தில் எப்படி வீடு வாங்கலாம்? வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
மதுரை: `காவல் நிலையம் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமாக செயல்பட்டுள்ளது' - நீதிபதி காட்டம்!
காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எப்படி கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இந்த காவல் நிலையம் ஒரு உதாரணம் என்று மதுரையிலுள்ள திலகர் திடல் காவல் நிலையத்தை குற்றம்சாட்டி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலீஸ் விஜயகுமார் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரையைச் சேர்ந்த சசிகுமார், ரம்யா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த முன் ஜாமீன் மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் மருந்து பொருட்களை வாங்கியதற்காக 15 லட்சம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த தொகையை செலுத்தாததால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை திலகர் திடல் காவல் நிலையம் இந்த வழக்கில் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாக மாறியுள்ளது. சுமார் 8 லட்சத்து 83 ஆயிரத்து 400 ரூபாயை மனுதாரர்கள் காவல் நிலையத்தில் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். இது அரசு வழக்கறிஞராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். கைது நடவடிக்கைக்கு பயந்து காவல் நிலையத்தில் மனுதாரர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். திலகர் திடல் காவல் நிலையம் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாக செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகவே இந்த வழக்கில் மதுரை மாநகர துணை காவல் ஆணையரை நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கில் சேர்க்கிறது. அவர் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளதா? திலகர் திடல் காவல் ஆய்வாளர் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து நடத்தி வருகிறாரா? என்பதை உறுதி செய்து சம்பந்தப்பட்ட திலகர் திடல் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இன்று நள்ளிரவு முதல் குறையும் விலைகள்
இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார். அத்தோடு, அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், இந்த விலைக் குறைப்பை […]
ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!
மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமையில் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெறும். இந்த நிலையில், நாளைய கொண்டாட்டத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு செய்தி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து, நகரம் முழுவதும் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள் இருப்பதாகவும், சுமார் 400 கிலோ […]
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியில், ஒரு வீரரை குறைத்து மதிப்பிடுவதாக அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். இவர் அணியில் இடம்பெறுவதால், கேப்டன் மகிழ்ச்சியாக இருப்பார் என ரஹானே தெரிவித்தார்.
50 அடி பள்ளத்தில் பாய்ந்த ஓட்டோ ; இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயம்
வட்டவளையில் இன்று முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த நேரத்தில் கம்பளையிலிருந்து ஹட்டன் நோக்கி வாகனம் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு தந்தை, தாய் மற்றும் நான்கு மற்றும் இரண்டு வயதுடைய அவர்களது இரண்டு குழந்தைகள் அதில் இருந்தனர். தாயும் குழந்தைகளும் காயமடைந்து வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!
நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத, இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆக.28 ஆம் தேதி, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காலக்கெடு முடிவடைந்தும் மெட்டா (முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸப்), ஆல்ஃபாபெட் (யூடியூப்), எக்ஸ், ரெட்டிட் மற்றும் லின்க்ட் இன் […]
நரி வேண்டாம்... நீங்கள் போதும்! ஓ.பன்னீர் செல்வம் கோட்டையில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
நரிகள் வேண்டாம்... நீங்கள் போதும் என ஓ.பன்னீர் செல்வம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
மதராஸி படம் எப்படி இருக்கு? நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் என்ன?
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் செப்டம்பர் 5, 2025 அன்று வெளியான ‘மதராஸி’ திரைப்படம், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த ஆக்ஷன் த்ரில்லர், சட்டவிரோத ஆயுதக் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.நெட்டிசன்களின் கருத்துகளின்படி, ‘மதராஸி’ படம் […]
சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய'பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்களுக்கு உதவுமா?!
சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா... ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்திக்க தோன்றுமே. ஆம்,2008 -ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2009 -ல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட சங்ககிரி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சங்ககிரி புதிய பேருந்து நிலையம் பற்றித்தான் இந்த கட்டுரை உங்களுடன் உரையாட போகிறது. சுமார் 15 ஆண்டுகளாக புதியதாகவே மக்கள் பயன்பாடு இல்லாமல் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் உள்ளது. ஏன் இந்த நிலை? அடிப்படை வசதிகள் இல்லையா? அல்லது அதிகாரிகளின் பொறுப்பின்மையா? நேரில் கள ஆய்வு செய்தபோது குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் இருபாலருக்குமான கழிவறை வசதி கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கும் கழிவறை என சுத்தமான பேருந்து நிலையம் மட்டுமல்ல... மக்கள் கூட்டம் சுத்தமாக இல்லாத பேருந்து நிலையமும்கூட... ஏன்? சுமார் 34 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பெண்கள் காத்திருக்கும் அறை என மக்கள் பயன்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது இந்த பேருந்து நிலையம். மொத்தமுள்ள 34 கடைகளில் வெறுமனே 5 கடைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ள நிலையில், அங்கு கடைகளை டெண்டர் எடுத்துள்ள கடைக்காரர்களைக் கேட்டபோது, ஆட்சியர், நகராட்சி ஆணையர் என அனைவரும் வந்து பார்த்தும் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட தீவிரமான செயல்பாடுகள் இல்லை எனவும், தங்களிடம் `கோரிக்கை நிறைவேற்றி தருகிறோம்' என வெறும் பதில்கள் மட்டுமே அதிகாரிகள் மந்திரமாக உள்ளது என்றனர். இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடு இல்லாத நிலையில், ``எங்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் இதை மட்டுமே நம்பி இருந்தால், அது கேள்விக்குறியாகும் அவலம் உள்ளது. மாதம் ₹5000 வாடகை மற்றும் மின் கட்டணம் தனியாக என வருமானம் காட்டிலும் செலவே அதிகமாக இருக்கிறது. மேலும் மூன்று ஆண்டு குத்தகைக்கு சுமார் 1 லட்சம் முன் பணமாக செலுத்தியுள்ளோம். இந்தப் பேருந்து நிலையத்தை யாராலும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது... ஏனென்றால், மக்களின் தேவைகள் அனைத்தும் சுமார் 1 கி.மீ தொலைவிலுள்ள சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தத்திலுள்ளது. இந்தப் புதிய பேருந்து நிலையத்தின் சாலை பாதிப்பு காரணமாக இந்தப் பேருந்து நிலையததிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் புதுப்பிப்பு அளிக்கவில்லை. மேலும் இது அன்றைய ஆளும் கட்சியான 2008-2009 தி.மு.க அரசின் ஆட்சியில் கட்டியது. ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆனபோதும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத சூழலில், இனி அது எப்படி சாத்தியமாகும்? அரசு நினைத்தால் முடியாதது இல்லை. ஆனால் அதை முழு முயற்சியுடன் செயல்படுத்த யாருமே தயாராக இல்லை என்பது நிதர்சனம் எனக் குமுறினர். தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் கேட்டபோது, ``சங்ககிரி புதிய பேருந்து நிலையம் உள்ளே சென்று வரும் அளவுக்கு நேரம் எங்களுக்கு ஒதுக்கி தரப்பட வில்லை. மேலும் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது, பாதிப்படைந்த சாலை உள்ளிட்ட காரணங்கள் இருக்கின்றன என்றனர் சுருக்கமாக. பொது மக்களிடம் கேட்கும்போது, ``பேருந்துகள் உள்ளே செல்வதில்லை. இந்த இடத்தில் எங்களுக்கான தேவைகள் பெரிய அளவில் இல்லை, எனவே இந்த பேருந்து நிலையம் இவ்வளவு செலவோடு கட்டியது எங்களுக்கு எந்த பயனையும் தரவில்லை என்று கூறுகின்றனர். இது குறித்து சங்ககிரி நகராட்சி ஆணையரிடம் பேசியபோது, ``சங்ககிரி நகராட்சியாக தரம் உயர்த்தி சுமார் 4 மாதங்களே ஆகின்றன. இந்தப் பிரச்னையை சரி செய்வது குறித்து சுமார் ₹50 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்திருக்கிறோம். கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனக் கூறினார். 15 ஆண்டுகளைக் கடந்து 16-வது ஆண்டை இந்தப் பேருந்து நிலையம் தொட்டிருக்கிறது. இப்போதாவது மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?! பொறுத்திருந்து பாப்போம்!
பிரச்னையின் தீவிரம் புரிகிறதா? - தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவரின் பகிர்வு #Straydogissue
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் நம் இந்திய நாட்டில் எல்லா ஊர்களிலும் தெருக்களிலும் பாகுபாடின்றி வசவசவென்று தெரு நாய்கள் பல்கிப் பெருகி வாழ்கின்றன. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு அவைகளைப்பிடித்துச்செல்ல நகராட்சி நாய் வண்டி வரும். பின்னர் அந்த நாய்களை திரும்பக் கொண்டுவந்து விடமாட்டார்கள். ஆகவே நாய்கள் இனப்பெருக்கம் குறைவாக இருந்தது. பின்னர் விலங்குகள் நல அமைப்புகளின் போராட்டம் காரணமாக கடந்த பல வருடங்களாக நாய்களைப் பிடித்துக்கொண்டு போனாலும் கருத்தடை செய்து பின்னர் எங்கே பிடித்தார்களோ அதே தெருவில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். அதனால் தெரு நாய்கள் அங்கேயே மீண்டும் திரிந்து கொண்டிருக்கின்றன. கருத்தடை செய்து கொண்டு வந்து விடுகிறார்கள் என்று சொன்னாலும் புதிதாக வரும் தெரு நாய்கள் குட்டிகளை ஈன்று கொண்டுதான் இருக்கின்றன. அப்படியே கருத்தடை செய்வதால் நாய்கள் இனப்பெருக்கம் செய்யாமல் தடுக்கலாமே தவிர அவை மனிதனைக்கோபமாக வெறிகொண்டு கடிப்பதையெல்லாம் தவிர்க்கவியலாது. எனவே கருத்தடை செய்து விடப்பட்ட தெரு நாய்களாலும் கண்டிப்பாக பொதுமக்கள் பாதிக்கப்படுவது என்பது மறுக்கமுடியாத உண்மை. நான் இருசக்கர வாகனத்தில் செல்கையில் திடீரென நாய் துரத்தும் சம்பவங்கள் நான்கைந்து முறை நடந்துவிட்டன. ஒரு முறை இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் என் மகளை அழைத்துச்செல்கையில் ஒரு தெருநாய் குரைத்துக் கொண்டே துரத்தியது. இருவரும் கீழே விழுந்து விட்டோம். ஆனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனே ஓடி வந்ததால் நாய் ஓடிவிட்டது. இதனால் தினமும் தெரு நாய்களுக்கு பயந்து பயந்தே திக் திக்கென இருசக்கர வாகனத்தில் செல்கிறோம். இது மட்டுமல்ல சிவனே என நடந்து செல்லும்போதும் என்னை ஒரு முறை திடீரென ஒரு தெருநாய் குரைத்துக்கொண்டே துரத்த திகைத்து பின் கீழே விழுந்துவிட்டேன். அதற்குள் யாரோ ஒருவர் அதட்ட அந்த நாய் அமைதியாகி விட்டது. தெரு நாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் மற்றும் வயதானவர்கள். அதுவும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை நாய் துரத்தி அவர்கள் விழுந்து அடிபடும் மற்றும் கடிபடும் கோர சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தெரு நாய்கள் கடித்து ரேபீஸ் நோய் தாக்கி உயிரிழந்த மனிதர்களின் கதைகளை தினம் தினம் நாம் கேட்டுக்கொண்டே கடந்து சென்று கொண்டிருக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் ஒரே மனிதனைக் கடிக்கும் நிலையும் இங்கே உண்டு. எப்போது தெரு நாய் கடித்து மனித உயிர் ஆபத்தில் சிக்கியதோ அப்போதே தெரு நாய்கள் தெருக்களில் இருக்கக்கூடாது என்ற முடிவை எட்டியிருக்க வேண்டும். இனியாவது விழித்துக்கொண்டு தெரு நாய்களை தனியாகக்கொண்டு சென்று உணவளித்து, மருத்துவ சிகிச்சை அளித்துப் பராமரிக்க வேண்டும். இந்தத்திட்டங்களை சரியாக நிறைவேற்ற ஏக்கர் கணக்கில் நிலமும் ஆள் பலமும் வழிகாட்டுதலும் கண்டிப்பாக அவசியம்! இதற்கு அரசாங்கத்தின் பல துறையினர், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தெரு நாய் என்பது பாவப்பட்ட பரிதாபமான ஒரு மிருகம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. அவை மனிதனையே சுற்றி வருவதும் சார்ந்து வாழ்வதும் உண்மைதான். ஆனால் அவைகளால் மனித உயிர் பறி போவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே தெரு நாய்களுக்கென தனியாக இடம் ஒதுக்கி மனிதனுக்கு பாதுகாப்பு கொடுப்பதே சிறந்த வழி. இனியும் விலைமதிக்கமுடியாத ஒரு மனித உயிர் கூட தெருநாய்களால் போகக்கூடாதெனில் இது போன்ற நடைமுறைகளை முறையாகக் கட்டாயமாக நிறைவேற்றியே தீர வேண்டும். பிரச்சினையின் தீவிரத்தைப்புரிந்து கொண்டு உடனே இப்போது செயல்படுதல் நலம். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் விட்டுவிட்டால் இது மிகவும் பூதாகரமாக உருவெடுக்கும். எனவே நாடு முழுவதும் இதற்கான விவாதங்கள் தீவிரமாக நடந்து வரும் இவ்வேளையில் நல்லதொரு தீர்வை எட்டி தெருநாய்களை தெருவை விட்டு தள்ளி வைத்தலே சிறந்த முடிவாகும். அப்போதுதான் மனிதன் தெருவில் பயமின்றி நடமாட முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை! புனைப்பெயர்:ரேவதி மகேஷ் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
ஜெர்மனியில் வேலை வேண்டுமா? மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளம்; தமிழக அரசு இலவசமாக வழங்கும் பயிற்சி!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஜெர்மனியில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற இவ்விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 19 பேர் காயமடைந்திருந்தனர்.
ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமா் ஆகும் ஹால்னஸ்
ஜமைக்காவில் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய பிரதமா் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாா். புதன்கிழமை நடந்த தோ்தலில் ஹால்னஸின் ஜமைக்கா தொழிலாளா் கட்சி 34 இடங்களையும், எதிா்க்கட்சியான மக்கள் தேசிய கட்சி 29 இடங்களையும் பெற்றன. எதிா்க்கட்சி தலைவா் மாா்க் கோல்டிங் தோல்வியை ஒப்புக்கொண்டு, வெற்றி பெற்ற ஹால்னஸை பாராட்டியைத் தொடா்ந்து, அவா் மூன்றாவது முறையாக பிரதமா் பதவியேற்பது உறுதியானது. தோ்தலில் வாக்குப்பதிவு விகிதம் 38.8 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய 2020 தோ்தலை […]
கூட்டணி ஆட்சிக்கு அடிப்பணிய வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக தலைவர்கள் போர்க்கொடி தூக்குவதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு –நாளையுடன் நிறைவு
செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள… The post கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு – நாளையுடன் நிறைவு appeared first on Global Tamil News .
மதுரை சம்பகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
மதுரை சம்பகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. நீர்நிலை புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாஸ்கோ வந்தால் நேரில் பேசலாம்; 100% பாதுகாப்பு உறுதி - புதினின் அழைப்பை நிராகரித்த ஜெலன்ஸ்கி!
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. பல தலைவர்கள் அமைதிக்காக குரல் கொடுத்துள்ளனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், ரஷ்யா அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு வரக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. புதின், ட்ரம்ப் பேச்சுவார்த்தை தொடர்ந்து புதினை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துவருகிறார் ஜெலன்ஸ்கி. அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப்பை சந்தித்த புதின், ஜெலன்ஸ்கி சந்திப்பை புறக்கணித்து வருகிறார். கடந்த புதன் கிழமை சீனாவில் பயணத்தை முடித்துக்கொண்ட புதின் இறுதியாக அங்கு பேசும்போது, பொது அறிவு மேலோங்கினால், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதுதான் எனது அனுமானம்... அமெரிக்கா வெறும் வார்த்தைக்காக இல்லாமல் நிஜமாகவே ஒரு முடிவை எட்ட தீவிரமாக செயல்படுகிறது. சுரங்கத்தின் முடிவில் ஒரு ஒளி இருக்கும் என நினைக்கிறேன். இது எப்படி செல்கிறது எனக் காணலாம். ஒருவேளை தீர்வு எட்டப்படாவிட்டால் நம் முன்னாள் இருக்கும் அனைத்து வேலைகளையும் ஆயுத பலத்தால் முடிக்க வேண்டியிருக்கும். எனப் பேசினார். ஜெலன்ஸ்கி மேலும், ஜெலன்ஸ்கி உடனான உரையாடலை தான் புறக்கணிக்கவில்லை என்றும், அதனால் என்ன பயன் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் மாஸ்கோவில் ஜெலன்ஸ்கியைச் சந்திக்கத் தயார் என்றும், அவருக்கு 100% பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால் புதினின் இந்த அழைப்பை ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார். ஐரோப்பாவின் coalition of the willing கூட்டணியின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, பாரிசில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெலன்ஸ்கி, மாஸ்கோவுக்கு அழைப்பது என்பது சந்திப்பை தவிர்ப்பதற்கான வழிமுறையே எனக் கூறியுள்ளார். அதாவது சாத்தியமே இல்லாத இடத்துக்கு அழைப்பதன் மூலம் பேச்சுவார்த்தையில் இருந்து புதின் தப்பிக்கிறார் எனக் கூறியுள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தில் புதின் மற்றும் ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்து உரையாடுவர் எனக் கூறுகிறது ரஷ்யா தரப்பு. ட்ரம்ப் - புதின் சந்திப்பு: உக்ரைன் நிலங்களை விட்டுக்கொடுக்க வேண்டுமா? - எதிர்க்கும் ஜெலன்ஸ்கி!
Irfan Pathan - Dhoni: நம் வீரர்கள் கேப்டன்களால் அழிக்கப்பட்டனர்; தோனி, கபில்தேவ்... - யோகராஜ் சிங்
இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென வைரலானது. தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் நன்றாக செயல்பட்டும் அணியில் இடமளிக்காதது குறித்து அந்த வீடியோவில், எனக்கு ஒருவரின் அறையில் ஹூக்கா (புகைப்பிடிக்க பயன்படுத்த பைப் வடிவிலான ஒரு பொருள்) வைக்கும் பழக்கம் இல்லை அல்லது தேவையில்லாமல் பேசும் பழக்கம் இல்லை. அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில், பேசாமல் இருப்பது நல்லது. ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதுதான், அதில்தான் நான் கவனம் செலுத்தினேன். என்று தோனியை நேரடியாகக் குறிப்பிடாமல் இர்ஃபான் பதான் கூறியிருந்தார். இர்ஃபான் பதான் - தோனி அந்த வீடியோ திடீரென வைரலாகவே, “அரை தசாப்தத்திற்கு முந்தைய வீடியோ தற்போது அதன் கருத்து திரிக்கப்பட்டு பரவுகிறது. இது ரசிகர் போராக? PR லாபியா?” என நேற்று முன்தினம் (செப்டம்பர் 3) ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இந்த விவகாரத்தை மேலும் பூதாகாரப்படுத்தியிருக்கிறார். இன்சைட் ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசியிருக்கும் யோகராஜ் சிங் , இது இர்ஃபான் பதான் பற்றியது மட்டுமல்ல. கம்பீர் இதுபற்றி பேசியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள். சேவாக் அதை வெளிப்படையாகவே சொன்னார். தான் எப்படி ஈயைப் போல அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார். தோனி ஏன் அப்படிச் செய்தார் என்பது குறித்து ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும். யோகராஜ் சிங் அதேசமயம், தோனி பதிலளிக்க விரும்பவில்லை. ஒருவர் பதிலளிக்க விரும்பவில்லை எனில் குற்ற உணர்ச்சி இருக்கிறது. பிஷன் சிங் பேடி, கபில்தேவ், தோனி ஆகியோரைப் பற்றி நான் பேசுகிறேன். வீரர்களை அவர்கள் முட்டாள்கள் போல நடத்தினார்கள். நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன், நம் கிரிக்கெட் வீரர்களும், அணியும் நம் கேப்டனால் அழிக்கப்பட்டன என்று குற்றம்சாட்டியிருக்கிறார். விக்கெட் எடுத்த பிறகும் தோனி என்னைத் திட்டிக் கொண்டே இருந்தார் - அனுபவம் பகிரும் மோஹித் சர்மா
Jana Nayagan: 'ஜன நாயகன்'படத்தின் BTS புகைப்படங்கள்!| Photo Album
தொழில்முனைவோராகும் மீனவப் பெண்கள் - டெல்டாவில் ஓர் அசாத்திய மாற்றம்!
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) டெல்டா மாவட்டத்தின் கடலோர கிராமங்களில், மீன்வளத் தொழில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகத் திகழ்கிறது. பெண்களும் மீன் விற்பனை மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களுக்கு தனிப்பட்ட பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும் சூழல் எளிதில் கிடைப்பதில்லை. காரணங்களில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மீன் வரத்து குறைவு, பெருவிசைப்படகுகளின் அதிகப்படியான மீன்பிடி, மற்றும் தொழில்முறை வழிகாட்டுதல் இல்லாமை முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால், பெண்களுக்கு நிலையான வருமானமும் சீரான வாழ்வாதாரமும் ஏற்படாமல் உள்ளது. இந்த நிலையில், “வெற்றிப்பாவை” என்னும் மீனவ உற்பத்தியாளர் நிறுவனம், டெல்டா மாவட்டத்தைச் சார்ந்த மீனவப் பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (MSSRF) வழங்கும் பயிற்சிகளின் மூலம், பெண்கள் மீன் மற்றும் கடல்சார் பொருட்களின் மதிப்புக்கூட்டுப் பொருட்களைத் தயாரிப்பது, அவற்றைச் சந்தைப்படுத்துவது, மற்றும் சுய தொழில்முனைவு மேற்கொள்வது போன்ற துறைகளில் அனுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த முயற்சி, பெண்களின் தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கும், அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்திற்கும் ஒரு நிலையான அடித்தளத்தை உருவாக்குகிறது. மீன்பிடித் தொழில் சவால்கள்: ஷர்மிளா, வாணகிரியை சார்ந்த மீனவப்பெண். அவரின் தலைமையில் அந்த பகுதி பெண்கள் ஒருங்கிணைந்து, சமுத்ரா என்ற பெயரில் சிறு அலுவலகம் அமைத்து, கருவாடு, மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், கூனிப்பொடி போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட கடல் சார் உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிக்க பயிற்சி பெற்று, இப்பொழுது தொழில் சார்ந்த விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஷர்மிளா, கூறுகையில்,“எங்கள் வாணகிரி கிராமத்தில் ஏறத்தாழ ஆயிரம் பெண்கள் உள்ளார்கள். இதில் 500 பெண்கள் மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி எங்கள் சுற்றுவட்டார கிராமங்களிலும்கூட பெரும்பான்மையான பெண்கள் இத்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நள்ளிரவு இரண்டு மணி அளவில் பயணம் செய்து, பூம்புகார், நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற ஹார்பர்களில் இருந்து மீன்களை வாங்கிக் கொண்டு, கூட்டம் கூட்டமாக டெம்போ ட்ராவல்களில் கூடைகளுடன் பயணித்து, அருகிலுள்ள ஊருக்குள் நடந்து சென்று விற்று வருகிறார்கள். “இது ஒரு சவாலான வேலை. இதில்நிறைய ஆபத்துகள் உள்ளன இவ்வளவு கடினமாக உழைத்தும் அவர்களுக்கான லாபத்தை அவர்கள் பெறுவதே இல்லை. இருந்தும் இந்த தொழிலை சார்ந்து தான் எங்கள் பெண்களின் பொருளாதாரம் அமைந்திருக்கிறது” என்று கூறுகிறார் ஷர்மிளா. வாணகிரியைச் சேர்ந்த சத்தியவாணி (49), கடந்த 15 ஆண்டுகளாக மீன் ஏலம் விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். காலநிலை மாற்றம் காரணமாக மீன் வரத்து குறைந்ததால், இந்தத் தொழிலும் லாபகரமாக இல்லை என்கிறார் அவர். இதுபோன்ற சூழலில், பெண்களுக்குப் பொருளாதார விடுதலை அளிக்கும் நோக்கத்துடன், வெற்றிப்பாவை நிறுவனம் கைகொடுக்கிறது. பெண்களுக்கு பொருளாதார விடுதலை தரும் “வெற்றிப்பாவை” MSSRF, பூம்புகார், வாணகிரி, மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம்போன்ற கடலோர கிராமங்களில் இருக்கும் வெற்றிப்பாவை என்னும் மீன் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து தொழில் முறை பயிற்சிகளை அளித்து வருகிறது. ஏறத்தாழ 150 பெண்களுக்கு தொழில் முனைவோராக ஆவதற்கு ஊக்கப்படுத்தி வருகிறது. மீனவ பெண்களின் குடும்ப பொருளாதார பங்கை பெருக்குவது மட்டுமின்றி அவர்கள் சார்ந்த சமூகத்திலும் பெண்களை தாக்கம் மிக்கவராக உருவாக்கி வருகிறது. சோலார் டிரையர் பயன்படுத்தி கருவாடு பதப்படுத்தவும், மீன் இறால் ஊறுகாய் செய்வதற்கும் தொழில் முறை பயிற்சிகள் அளித்து வருகிறது. மீன் கழிவுகளைக் கொண்டு உரம் செய்யும் முறையும் அந்த பயிற்சியில் ஒரு அங்கமாக இருக்கிறது. பத்து நாள் நடைபெறும் பயிற்சியில் அவர்களுக்கு கடல் சார்ந்த உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிப்பதற்கான செயலாக்கப் பயிற்சியும்,மற்றும் சோலார் ட்ரையர் (Solar Dryer) பயன்படுத்தி கருவாடு பதப்படுத்துதல், மீன் மற்றும் இறால் ஊறுகாய் தயாரித்தல், மற்றும் மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரித்தல் போன்ற மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான முறைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. மேலும், தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்துவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. சோலார் ட்ரையரின் முக்கியத்துவம் வாணகிரி என்னும் சிறு மீனவ கிராமத்தை சார்ந்த 52 வயதான சின்னபொண்ணு கூறுகிறார், “மீன்கள்தான் எங்கள் வாழ்வாதாரம். முன்னெல்லாம் மீன்களை கூடையில் எடுத்துச் சென்று ஊர், தெருக்களுக்குள் விற்று வருவேன். இப்பொழுது மீன் வரத்துகுறைந்துவிட்டதால் கருவாடு வியாபாரம் செய்து வருகிறேன்.எங்களுக்கு இந்த தொழில் மட்டுமே தெரியும். என் கணவரும் மீனவர்தான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருதய கோளாறு காரணத்தினால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின் அவர் தொழிலுக்கு செல்வதில்லை. எனக்கு சிலபொறுப்புகள் இருக்கின்றன, அதை நான் கடன் உதவிகளின் மூலமே நிறைவேற்றி வருகிரேன். எங்கள் தொழிலில் நிரந்தரமான பொருளாதார சூழல் நிலவுவதில்லை. இப்போது சில மாதங்களுக்கு முன்பு தான் ஷர்மிளாவின் மூலமாக வெற்றிப்பாவை மீன் உற்பத்தி நிறுவனத்தில் இணைந்தேன். அதன் வழியாக எங்களுக்கு தொழில்முறையில் சோலார் ட்ரையரை பயன்படுத்தி கருவாடு பதப்படுத்துவது மற்றும் மீன் ஊறுகாய் செய்வதை பற்றிய செயல்முறை வகுப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னிடமும் இப்பொழுது ஒரு சோலார் டிரையர் உள்ளது, அதை வைத்து தான் கருவாடு பதப்படுத்தி வருகிறோம். இதற்கு முன்பு வரை கடலோரங்களிலேயே கருவாடு பதப்படுத்துவதற்காக காய வைப்போம். காக்கை, நாய் போன்ற விலங்குகளினால் உற்பத்தி கெடும், இதன் வரையிலான பாரம்பரிய முறைப்படி கருவாடு பதப்படுத்தும் பொழுது கருவாடு சுகாதாரமான முறையில் கையாளப்படுவதில்லை. இது எங்களின் உற்பத்தியின் லாபத்தை குறைக்கிறது. MSSRF எனக்கு வழங்கப்பட்ட சோலார் டிரையரை பயன்படுத்தும்பொழுது மிக சுகாதாரமான முறையில் கருவாடு உற்பத்தி செய்யப்படுவதால், அந்த பொருளின் லாபம் பாரம்பரிய முறையில் செய்யப்படும் கருவாட்டை விட இரட்டிப்பாக கிடைக்கிறது. கருவாடு காய வைக்கும் தருணங்களில் எங்களால் வேற எந்த வேலையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் இப்போது இந்த சோலார் ட்ரையர் உபயோகிப்பதால் பாதுகாப்பாகவும் இருக்கிறது. இது எங்கள் உற்பத்தியை கூட்டி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் வழியாக எனக்கும் என் குடும்பத்திற்கும் ஸ்திரமான பொருளாதாரம் மற்றும் அரசாங்க உதவி கடன்கள் கிடைக்கின்றன. தேன் கலாவின் தொழில்முனைவு பயணம் பூம்புகார் துறைமுகத்தில் விசைப்படகுகளில் பணி புரியும் மீனவ தொழிலாளர்களுக்காக ஒரு சிறிய தேநீர் கடையை நடத்தி வருகிறார் 39 வயதான தேன் கலா. எட்டாம் வகுப்பு வரையிலே பள்ளி படிப்பு பெற்றிருக்கும் அவர் இப்பொழுது வெற்றிப்பாவை குழுவின் மதிப்பு கூட்டும் பொருள்களின் உற்பத்தி செய்யும் பயிற்சி பெற்று தொழில் முனைவோராக மாறி இருக்கிறார். தான் உற்பத்தி செய்த மதிப்பு கூட்டிய கடல்சார் உணவுகளை முகநூல் வாயிலாக விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, பழுதுபட்ட அல்லது பழைய மீன் பிடி வலைகளை கொண்டு மிதியடிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மறுசுழற்சி முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். தேன் கலா கூறுகையில், “எங்கள் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது, அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. வெற்றிப்பாவை போன்ற சில நிறுவனங்கள் எங்களுக்கு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகள் என்னைப் போன்ற என் கிராமத்து பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. என் கணவரும் என் குழந்தைகளும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்” என விவரிக்கிறார். “அம்மா உங்கள் தைரியத்தை பார்க்கும் போது எங்களுக்கு பெருமையா இருக்கு” என்று தன் குழந்தைகள் கூறியதாக பகிர்ந்து கொள்கிறார். “இனி என் தேவைகளுக்காக நான் யாரையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை என்பதே எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. எனக்கும் என் குடும்பத்திற்கும் உறுதியான எதிர்காலத்தை நோக்கி நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்”. புதிய எதிர்காலத்தை நோக்கும் மீனவப் பெண்கள் டெல்லியில் நடைபெற்ற World Food India 2024 கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்த அனுபவத்தை ரேணுகா பகிர்ந்துகொள்கிறார். “எங்கள் கிராமங்களிலிருந்து பெண்கள் இவ்வளவு தொலைவு பயணம் செய்வது சாதாரண விஷயம் அல்ல. நாங்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கும் பொருட்களை அனைவரும் விரும்புகிறார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். எம் எஸ் சுவாமிநாதன் போன்ற அமைப்புகள் இவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகள் மிகவும் முக்கியமானவை. அது அவர்கள் சார்ந்த சமூகத்தின் மாற்றத்துக்கான புதிய பாதையை கட்டமைக்கிறது, இவர்களைப் போன்ற கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றம் அவர்களின் வருங்கால சந்ததிகளுக்கான நம்பிக்கையான எதிர்காலத்தை கட்டமைப்பது மட்டுமின்றி இவர்களும் சுதந்திரமாக இயங்குவதற்கான தைரியத்தையும் அளிக்கின்றது. - அக்ஷரா சனால் மேற்கண்ட கட்டுரை 2025 ஆம் ஆண்டிற்கான MSSRF மினா சுவாமிநாதன் மீடியா பெல்லோஷிப் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வருக்கு விவசாயிகள் கஷ்டம் தெரியாது –எடப்பாடி பழனிசாமி சாடல்!
தேனி : மாவட்டத்தில், செப்டம்பர் 5, 2025 அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் பரப்புரை வாகனத்தை பெண்கள் குழு ஒன்று முற்றுகையிட்டு, “அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும்” என்று முழக்கமிட்டனர். “அதிமுக ஒருங்கிணைய வேண்டும்” என்ற பதாகைகளுடன் சாலையோரத்தில் கூடிய இந்தப் பெண்கள், கட்சியில் பிளவு முடிவுக்கு வந்து, முன்னாள் தலைவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினர். முன்னதாக, அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியை ஒருங்கிணைக்க முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் […]
சீனாவிற்கு நெருக்கடி அளிக்க ஐரோப்பிய நாடுகளைத் தூண்டி விடும் ட்ரம்ப்
உக்ரைன் மீதான படையெடுப்பை ஆதரிக்கும் சீனா மீது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகளிடம் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் பாரிஸ் நகரில் கூடியுள்ள ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடம் காணொளி ஊடாக உரையாடிய ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்றார், அது போருக்கான நிதியுதவி செய்வது போன்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் […]
எல்ல விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த துயரம்
எல்ல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்து பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 2ஆவது சிறப்புப் படையை சேர்ந்த பண்டார என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனையில் சிகிச்சை விடுமுறை தினத்தை முன்னிட்டு வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் […]
செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு
செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது , அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் […]
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 12ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் […]
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மற்றும் புதுவையிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 06-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மீது கொலை முயற்சி - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .
டெல்லியில் இருந்து இநதூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென பான், பான் அலர்ட் விடுக்கப்பட்டது. இதையடுத்து நடுவானில் 20 நிமிடங்கள் பறந்ததால் பயணிகள் பதறிய சம்பவம் நடந்துள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 12ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 44 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 53 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 17 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுவரையில் 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நாளைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கன் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்த உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,200-ஐக் கடந்துள்ளது. இது குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 2,205-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. வீடுகளை இழந்தவா்களுக்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, முதல் உதவி மற்றும் அவசரக்கால பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன என்றாா் அவா். ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவான இந்த […]
செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு
செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது , அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மதிக்கப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் தெளிவான விளக்கத்தினை பெற யாழ் . பல்கலைக்கழக இந்து நாகரிக துறை மூத்த விரிவுரையாளர் புதைகுழி பகுதிக்கு அழைக்கப்பட்டு , அது தொடர்பிலான அவரது அவதானிப்புகள் விளக்கங்கள் கோரப்பட்டன. அவரது தனது அவதானிப்பின் படி , இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்பு கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்பு கூடு இல்லை என தனது அவதானிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதனை அடுத்து அது தொடர்பிலான விபரமான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் செ. லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை , செம்மணி மனித புதைகுழிக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நாளைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் , அடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் நாளைய தினம் நீதவான் திகதியிடுவர் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
Ajay Devgn & Danish Devgn Unveil Lens Vault Studios to Drive Next-Gen Storytelling
Mumbai: Ajay Devgn along with Danish Devgn, has announced the launch of Lens Vault Studios (LVS), a new-age content venture designed to transform the future of storytelling in the digital era. Building on Ajay Devgn’s track record of investments in production, VFX, and AI-driven ventures such as Prismix, LVS will operate at the intersection of creativity and technology, producing films, OTT originals, branded content, gamified experiences, and global co-productions. Ajay Devgn, Chairman of LVS, shared his vision, “We are building a creative ecosystem within LVS where original ideas are nurtured and new forms of storytelling are realised using world-class technology. Our goal is to set a new benchmark for Indian media on the global stage, an environment that empowers creators and leverages next-generation tools to bring stories to life at a scale never seen before.” The studio will also serve as a centre of excellence for animation, VFX, and AI-powered content, aiming to position India as a hub for global-quality production and original intellectual properties. Danish Devgn, Founder & CEO, added, “At LVS, originality is our currency and intelligence is our engine. We build stories the way innovators build technology—scalable, adaptive, and timeless. From live-action and animation to immersive AR/VR worlds, our goal is to craft IP’s that resonate globally while staying deeply rooted and close to emotions.” Under his leadership, LVS plans to develop a selective yet forward-looking slate across fiction, non-fiction, lifestyle, branded content, interactive formats, and immersive storytelling.
Levi’s® Taps Alia Bhatt as Global Brand Ambassador to Lead Women’s Denim Revolution
Mumbai: Levi’s has announced Bollywood star Alia Bhatt as its new Global Brand Ambassador, marking a significant step in the evolution of women’s denim. The collaboration unites Levi’s, a brand synonymous with denim, with Alia Bhatt, whose influence in film and fashion resonates globally, to usher in a new era of style, fit, and fashion. Alia Bhatt shared, “For me, a pair of jeans is never just a pair of jeans - it’s something you live in and make your own. Our relationship with our denims is so personal, but in a way, it also connects us all. Across countries and across generations, denim is about celebrating who you really are. Levi’s has always been at the heart of this global movement, and I’m thrilled to now be a part of it as their brand ambassador.” The partnership comes at a time when women’s fashion is seeing a shift towards relaxed fits, wide-leg silhouettes, and looser styles, which are increasingly becoming everyday essentials rather than seasonal trends. Levi’s continues to innovate its women’s portfolio, moving beyond classic fits to style-first, trend-forward designs, with Alia Bhatt positioned as the catalyst for this transformation. Hiren Gor, Managing Director, South Asia-Middle East and Africa, Levi Strauss & Co., said, “Alia Bhatt’s influence transcends film and fashion, she shapes conversations. As we grow our women’s portfolio and lead the shift towards expressive, style-led, comfort-first fits, Alia brings cultural credibility and style authority. Together, we’re reinforcing Levi’s as the most relevant and desirable denim brand.” View this post on Instagram A post shared by Alia Bhatt (@aliaabhatt)
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தமிழ்நாட்டிலேயே பயிற்சி; 537 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம்
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சி பெற விருப்பமா? உங்களுக்கான சூப்பரான வாய்ப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 537 தொழிற்பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“அது பச்சைப் பொய் “…செங்கோட்டையன் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!
சென்னை : அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், செப்டம்பர் 5, 2025 அன்று கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, கட்சியை ஒருங்கிணைப்பது குறித்து மனம் திறந்து பேசினார். “நாங்கள் ஆறு முன்னாள் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து, கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று அவர்களை அரவணைத்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும்,” என்று அவர் கூறினார். ஆனால், இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை […]
WPP appoints Devika Bulchandani, Laurent Ezekiel, and Floriane Tripolino in leadership roles
Mumbai: WPP has announced a series of strategic global leadership appointments, highlighting its commitment to delivering enhanced client solutions and driving intelligent growth across its network. Devika Bulchandani has been appointed Chief Operating Officer of WPP, Laurent Ezekiel will serve as Global CEO of Ogilvy Group and Executive Sponsor for WPP Open X, and Floriane Tripolino has been named CEO of WPP Open X, WPP’s bespoke agency team dedicated to The Coca-Cola Company.As COO, Devika Bulchandani will commercialise WPP’s services and solutions globally, working closely with agencies, Country Managers, growth teams, and Global Client Leaders. Since taking the helm as Global CEO of Ogilvy, Devika has strengthened the agency’s capabilities, diversified its client roster, and helped Ogilvy become the first network named both Most Creative and Most Effective for three consecutive years (2023–2025) on WARC’s Creative 100 and Effective 100 rankings.Laurent Ezekiel, previously CEO of WPP Open X for The Coca-Cola Company, will lead Ogilvy’s integrated marketing operations, encompassing advertising, PR, social, influencer, customer engagement, consulting, and health. Under his leadership, WPP Open X developed solutions like Studio X and helped Coca-Cola win Brand of the Year at the 2024 Cannes Lions International Festival of Creativity.Floriane Tripolino, appointed CEO of WPP Open X, will build on the platform’s innovative model, leveraging AI and data to enhance consumer connections and strengthen the partnership with Coca-Cola. Having led WPP’s Nestl account for four years, she expanded the company’s media footprint and established WPP as Nestl’s largest marketing services partner. Cindy Rose, CEO of WPP, said, “These appointments underscore WPP’s commitment to delivering unparalleled value and innovation. Devika’s deep obsession with helping our clients grow and win will accelerate our growth. Laurent’s successful partnership with The Coca-Cola Company and creation of WPP Open X gives him valuable insight to navigate the needs of our largest clients. Their collective expertise will play a crucial part in helping WPP drive growth and ensure our clients continue to win in a rapidly evolving market.” Devika Bulchandani added, “I have been the luckiest person in the world, to have the best job in the world as Ogilvy’s CEO – and I’m immensely proud of what we’ve achieved together as a team. Having partnered closely with Laurent, I've seen firsthand his unparalleled ability to drive growth and champion creative excellence. I can’t think of a better leader to partner with Liz Taylor, our Chief Creative Officer, and our leadership team to guide Ogilvy to even greater heights. As we all begin this next chapter at WPP, I'm energised by the immense potential ahead. I truly believe that when we seamlessly bring together WPP’s world-class capabilities, we become an invincible force – one that unlocks unparalleled value for our clients. I look forward to collaborating with Cindy and leaders across WPP to amplify that impact and drive even greater success for our partners. Laurent Ezekiel commented, “It is an immense honour to lead the Ogilvy Group, an iconic network I deeply admire – one that was founded by a true pioneer in David Ogilvy, and that Devika has steered to unprecedented success with an exceptional leadership team that is leading the industry forward. I am eager to build on this incredible legacy – championing modern marketing and innovation to ensure Ogilvy continues to be the most creative and effective communications partner for brands worldwide. The future of Ogilvy is bright, and I’m thrilled to be a part of writing the next chapter of marketing history with our teams and clients.” Floriane Tripolino said, Stepping into the role as CEO of WPP Open X is an energising opportunity. The Coca-Cola Company is the house of multiple iconic brands and a cornerstone partner for WPP. I'm deeply honoured to join this talented team, ready to build on our strong foundation. I’m excited to work with Laurent in this next phase of our marketing transformation, ensuring our partnership continues to lead the industry and deliver truly impactful, future-forward work.”
'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்!
ஆக்ஸ்போர்டு டிக்ஷனரில கூட வருஷத்துக்கு நாலு முறை தான் வேர்ட்ஸ் சேக்குறாங்க... ஆனா நம்ம ஜென்சி கிட்ஸ் ஒவ்வொரு நாளும் தினுசு தினுசா வார்த்தைகளைக் கண்டுபிடிக்கிறாங்க.. இன்ஸ்டா, ஃபேஸ்புக், செலிபிரிட்டி இன்டர்வியூஸ்னு எங்க பார்த்தாலும் கோஷ்டிங் (ghosting ), பூக்கி (pookie), சுட்சுவேஷன்ஷிப் (situationship), சால்டி (salty ) போன்ற பல ஜென்சி வார்த்தைகள், சோசியல் மீடியாவிலும் அன்றாட வாழ்க்கையிலும் வளம் வருகின்றன. GenZ Words ஒவ்வொரு ஜென்சி வார்த்தைகளையும் கேட்கும் போது... என்ன இவன் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் யூஸ் பண்றான்... தப்பு தவறா ஏதும் பேசலையே.. இதுக்கு மீனிங் கேட்டா நம்மள ஒருவேளை பூமர்னு சொல்லிடுவானோ... எனத் தோணும். ஆனா மீனிங் தெரிஞ்சப்புறம் சிரிக்கிறதா அழுகுறதான்னு ஒரே கன்ஃபியூஷன்.... அப்படி என்னதான் பேசுறாங்க இந்த ஜென்சி கிட்ஸ்..! இன்ஸ்டா இம்சைகள் நினைச்ச நேரம் பிடிச்ச டிரஸ்ஸ மாத்தி மாத்தி போடுற மாதிரி, நினைச்ச நேரம் ஒவ்வொரு இன்ஸ்டா அக்கவுண்ட வச்சுக்கிட்டு பல ஸ்பை ஒர்க்க தீவிரமா பார்க்குற உங்க கில்லாடி ஃப்ரெண்ட் வச்சிருக்க ஒரு அக்கவுண்ட்தான் ரியல் ஐடியா இருக்கும். மத்ததெல்லாம் ஃபின்ஸ்டா (finsta )தான். அப்படின்னா ஃபேக் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்னு அர்த்தமாம். finsta அதே மாதிரி அதிகமா ஃபோன் யூஸ் பண்ணா பிரைன் ராட் (brain rot ) ஆகிடும்னு சொல்றாங்க. அது என்ன 'ராட் '..? பொதுவா அழுகி போனாலோ, மக்கி போனாலோ அததானே ராட்னு சொல்லுவோம். ஆமா.. பிரைன் ராட்டும் கிட்டத்தட்ட அப்படித்தான். ரீல்ஸ், ஷார்ட்சுனு அதிகமா ஆன்லைன் கன்டன்ட் கன்ஸ்யூம் பண்றதுனால நம்ம மூளை சோம்பேறியா மாறிடுமாம். இதைத்தான் பிரைன் ராட்னு சொல்றாங்க. கேக்குறதுக்கு இன்ட்ரஸ்டிங்கா இருந்தாலும் இது ரொம்ப ஆபத்தான டேர்ம் பிரண்ட்ஸ். வெளிய ஸ்வீட் ... உள்ள சால்ட் செய்றது எல்லாம் செஞ்சுட்டு.. எதுவுமே செய்யாத மாதிரி அவங்களோட பழிய உங்க மேல தூக்கி போட்டாங்கன்னா அதுக்கு பேரு தான் கேஸ் லைட்டிங் (gas lighting). நீங்க பண்ற ஒவ்வொரு விஷயத்தையும் பாராட்டுற மாதிரி பாராட்டிட்டு; மனசுக்குள்ள வன்மத்தையும் பொறாமையையும் வச்சுட்டு இருந்தாங்கன்னா அவங்க ரொம்ப சால்டியா (salty) இருக்காங்கன்னு அர்த்தமாம். அதாவது வெளியே ஸ்வீட்... உள்ள சால்ட்... அதே மாதிரி நீங்க கும்பலா பேசி சிரிச்சுட்டு இருக்கும்போது யாராச்சும் வந்து உங்க கிட்ட வாட் இஸ் த டீ..(what is the tea?)? னு கேட்டாங்கன்னா, நீங்க குடிக்கிறது பிளாக் டீயா... இல்ல மில்க் டீயானு அர்த்தம் கிடையாதாம்.. இன்னைக்கு என்ன காசிப் பேசுறீங்க..? வாட் இஸ் தி கிசுகிசுப்பு ..? அப்படின்னு கேட்கிறதா அர்த்தமாம். what is the tea? ரிலேஷன்ஷிப் கொடுமைகள் ஸ்கூல் லைஃப்ல நமக்கு தெரிஞ்சது ஃபிரண்ட்ஷிப்; காலேஜ் லைஃப்ல நமக்கு தெரிஞ்சது இன்டெர்ன்சிப்... அது என்னடா சுட்சுவேஷன்ஷிப்...? சுட்சுவேஷன்ஷிப் (situationship)னா டான் படத்துல நம்ம சிவாங்கி சொல்ற மாதிரி பிரண்ட்ஷிப்புக்கு மேல.. லவ்வருக்குக் கீழன்னு.. இருக்கு ஆனா இல்லன்னு இரண்டுக்கும் நடுவுல மெதக்குற ஷிப்பதா சுட்சுவேஷன்ஷிப்னு சொல்றாங்க. இது 2K தலைமுறையின் இணைய ரேடியோ! நல்ல பழகுற மாதிரி பழகுவாங்க.. திடீர்னு இன்ஸ்டா, வாட்சாப்னு எல்லாத்தையும் பிளாக் பண்ணிட்டு போயிருவாங்க. நம்ம தமிழ் சினிமால வர பேய் மாதிரி அப்பப்ப வந்துட்டு காணாம போனாங்கன்னா அவங்க கோஸ்டிங் (ghosting) பண்றாங்கன்னு அர்த்தம். நிமிந்தா குனிஞ்சா... எல்லாத்துக்கும் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் அப்படிங்கற வார்த்தைய யூஸ் பண்ற ஜென்சி கிட்ஸ், இப்போ புதுசா மென்டி- பீ (Menty - b) னு சொல்லிட்டு இருக்காங்களாம். அதாவது வொர்க், கரியர், குறிப்பா ரிலேஷன்ஷிப் மூலமா ஏதாவது மென்டல் பிரேக் டவுன் ஃபேஸ் பண்றாங்கன்னா, அதை தான் ஷார்ட்டா மென்டி - பீனு சொல்றாங்களாம். அதனால யாராவது உங்க கிட்ட வந்து மென்டி - பீயில் இருக்கேன்னு சொன்னாங்கனா மென்டி - பீக்கு அர்த்தம் என்னன்னு கேட்டு கேட்டு இன்னும் அவங்கள மென்டி - பீயில் தள்ளி விட வேண்டாம். ரிலேஷன்ஷிப் கொடுமைகள் பென்சிங்.. பிரட் கிரம்பிங்... என்னங்க ஒண்ணும் விளங்கலங்க பென்சிங் (Benching) அப்படிங்கிற வார்த்தையும் அதிகமா பயன்படுத்தப்படுது. பென்சிங்னா நீங்க நினைக்கிற மாதிரி அட்டனென்ஸ்காக காலேஜ்க்கு வந்து லாஸ்ட் பென்ஞ்சைத் தேய்க்கிறது இல்ல.. அதாவது உங்கள ஒரு பொண்ணுக்கோ அல்லது ஒரு பையனுக்கோ புடிச்சு, ஆனா உங்க கூட கமிட் ஆகாம.. உங்கள வெயிட்டிங் லிஸ்ட்-ல வச்சிருந்தாங்கன்னா உங்கள பென்ஷிங்ல வச்சிருக்காங்கன்னு அர்த்தமாம். சோ... உஷார் பிரெண்ட்ஸ்..! சரி, பிரட் கிரம்பிங்னா (bread crumbing)... அம்மா கிச்சன்ல பிரட் ரோஸ்ட் பண்ணிட்டு கிரம்ப்ஸ் எல்லாம் கிச்சன்ல கொட்டி கிடக்குமே. அதுவா இருக்குமோன்னு தோணுதா..? அதுதான் இல்ல... உங்கக் கூட கமிட்டாகவும் விருப்பம் இல்லாம.. ஆனா, உங்கள அப்படியே விட்டுட்டும் போகாம அப்பப்போ வந்து எமோஜி அனுப்புறது, ஹாய் சொல்றதுன்னு உங்கள இழுவைல வச்சிட்டு இருந்தாங்கன்னா அதுதான் பிரெட் கிரம்பிங்... 90's கிட்ஸைவிட 2k கிட்ஸ் வயசானவங்களா தெரியுறாங்க... வைரல் வீடியோ?! ஜென்சியின் காதல் வார்த்தைகள் ஒருத்தவங்கள ரொம்ப புடிச்சு, அவங்க கிட்ட அதைச் சொல்லாம, புத்தகம் மூடிய மயிலிறகாக யார்கிட்டயும் சொல்லாம, பாக்கெட்டில காச ஒளிச்சு வச்சிருக்க மாதிரி, காதல ஒழிச்சு வச்சாங்கன்னா அதுக்குப் பேருதான் பாக்கெட்டிங்காம் (pocketing). சரி... அப்ப சாஃப்ட் லாஞ்சிங்னா (soft launching)? நமக்கு தெரிஞ்சதெல்லாம் ராக்கெட் லாஞ்சிங் தான். அது என்ன சாஃப்ட் லாஞ்சிங்னு கேட்குறீங்களா...? ஒரு வழியா நீங்களும் ஒரு பொண்ணு கூட அல்லது பையன் கூட கமிட் ஆகிட்டீங்கன்னா, டைரக்டா சோசியல் மீடியால எல்லாருக்கும் ரிவீல் பண்ணாம, அவங்களோட கைகோர்த்து ஒரு ஃபோட்டோ, அவங்களும் நீங்களும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணிட்டு ட்வின்னிங்ல (twinning) ஒரு ஃபோட்டோ, அதுக்கப்புறம் அவங்களுடைய ஃபேஸ் ரிவீல் பண்றதுன்னு.... soft launching கொஞ்சம் கொஞ்சமா உங்களுடைய கேர்ள் ப்ரண்டையோ பாய் ப்ரண்டையோ மத்தவங்களுக்கு அறிமுகப்படுத்துனீங்கனா அதுதான் சாஃப்ட் லாஞ்சிங்காம்.. இந்த மாதிரி சாஃப்ட் லாஞ்சிங் பண்ணனும்னு உங்களுக்கும் ஆசையா இருக்கலாம்.. ஆனா அதுக்கு முதல்ல கமிட் ஆகணும் பிரண்ட்ஸ்.. அதை ஞாபகத்துல வச்சுக்கோங்க...! தளபதி : `ஏன்னா நீ என் நண்பன்..!’ - ஒரு 2K கிட்டின் `தளபதி' ரீ-ரிலீஸ் தியேட்டர் அனுபவம் ஜென்சியின் காம்ப்ளிமெண்ட்ஸ்கள்... ரொம்ப நாள் கழிச்சு உங்க ஃபிரண்டு உங்களைப் பார்க்கும் போது எப்படி க்லோவப் (glow up) ஆனன்னு கேக்குறாங்கன்னா ... ஒன்னும் இல்ல எப்படி இருந்த நீ இப்படி டிரான்ஸ்பார்ம் ஆயிட்டன்னு கேட்கிறதா அர்த்தமாம். பதிலுக்கு நீங்களும் இந்த ட்ரெஸ்ல நீ சூப்பரா இருக்க அப்படிங்கிறதை யூ ஏட் இட் . (You ate it ) னு சொல்லலாம். அதாவது தூக்கி சாப்பிட்ட போ... பின்னிட்ட போ அப்படிங்கற தான் இப்படிச் சொல்றாங்க... pookie ஹேர் கிளிப்ல இருந்து போடுற செருப்பு வரைக்கும் எல்லாத்துலையும் பிங்க் தான் சூஸ் பண்ணுவேன்னு ரொம்ப கேர்லியா இருந்தாங்கன்னா அவங்கள பிரெப்பி (preppy) ன்னு கூப்பிடலாம். இந்த ஃபீல்டுல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்லப்பா... அப்படின்னு யாருக்காவது ஸ்பெஷல் காம்ப்ளிமெண்ட் கொடுக்கணும்னா OGன்னு சொல்லலாம். OG ன்னா ஒரிஜினல் கேங்ஸ்டர்னு (original gangster) பயங்கரமான அர்த்தத்தை வச்சிருக்காங்க ஜென்சி கிட்ஸ். இந்த வேர்டு எல்லாருக்குமே தெரிஞ்சி இருக்கலாம். இதுதான் பூக்கி (pookie) அப்படிங்கிற இந்த வார்த்தை. சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர்ற ஹ ..ஹா..ஹாசினி மாதிரி உங்க லைஃப்ளையும் யாராச்சும் க்யூட்டா பண்றேன் பேருல அட்ராசிட்டிஸ் பண்ணா அவங்கள பூக்கின்னு செல்லமா கூப்பிடலாம். அதேபோல அன்பான நபர்களையோ அல்லது செல்லப் பிராணிகளையோ குறிக்கிற வார்த்தையாவும் இந்தப் பூக்கி (pookie) இருக்கு. இதுல எந்த ஜென்சி டர்ம்ஸ் கேட்கவே ரொம்ப இன்ட்ரஸ்டிங்காவும் யூனிக்காவும் இருந்ததுன்னு கமென்ட்ல சொல்லுங்க.. Vadivelu: 2k கிட்ஸ் மிஸ் செய்யக் கூடாத வடிவேலு படங்கள்! #BirthdaySpecial சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Story TV Aims for 100 Million Users with 800+ Microdramas by 2026
Bengaluru: Story TV, the micro drama streaming platform from Eloelo Group, is set to dramatically expand its footprint after a strong start. Having launched 200 micro dramas in just 60 days and crossed 5 million users, the platform now aims to release 800+ micro dramas and reach 100 million users within the next year. The micro dramas span genres such as romance, horror, and crime, featuring popular actors including Chetan Hansraj in Mafia Don, Kinshuk Vaidya in Death Clock, and Ayub Khan in Pyaar Ka Bharosa. Saurabh Pandey, Founder and CEO, Story TV, said, “Currently, the ecosystem is largely dependent on globally popular storylines, but this is changing fast. As a platform, we have seen firsthand how local themes and stories can scale massively, given our diverse population and interests. To achieve this, we are bringing on board some of the most talented actors and creative forces in the industry.” He added, “For us at Story TV, micro drama is all about bringing TV at the swipe of your fingertips - the same emotions, twists, and cliffhangers that people grew up watching on TV via soap operas or movies, but compressed into a vertical format that fits perfectly with today’s scrolling habits.” Targeting young adults aged 18–35, who spend around 75 minutes daily on the platform, Story TV has a strong female viewership of over 40%, with Uttar Pradesh, Kolkata, and Maharashtra among its key markets. To support this ambitious growth, Story TV is onboarding more production houses, building a team of storytellers and industry veterans, and expanding its workforce to produce high-quality, relatable micro dramas for Indian audiences.
Lokah: க்யூட்டான காதலி `டு'லேடி சூப்பர் ஹீரோ - யார் இந்த கல்யாணி பிரியதர்ஷன்?!
மலையாள திரைப்படங்கள் மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்குவது இது முதன்முறை அல்ல. ஆனால் அந்த வரிசையில் தனித்த இடத்தைப் பிடிக்கிறது லோகா சாப்டர் 1: சந்திரா. இந்த படத்தின் காட்சியமைப்பும், கதை சொல்லும் விதமும் தரமும் ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது. மின்னல் முரளி என்ற அட்டகாசமான சூப்பர் ஹீரோ படத்துக்குப் பிறகு, தங்கள் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகம் செய்துள்ளது மலையாளம் சினிமா. Lokah Chapter 1 லோகா 100 கோடி வசூல் செய்த முதல் தென்னிந்திய பெண் மையத் திரைப்படம். சந்திராவாக சாதித்து காட்டியிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்! கல்யாணி பிரியதர்ஷனை தெரியுமா? கேரளத்தில் பெருமளவில் கொண்டாடப்பட்ட சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவரது தந்தை பிரியதர்ஷன் மோகன்லால், மம்முட்டியை இயக்கி வெற்றிப்படங்கள் வழங்கியவர். தாய் லிஸ்ஸி லக்ஷ்மி தமிழ், மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகை. கல்யாணியின் சினிமா பாரம்பரியம் கொண்ட குடும்ப பின்னணியே அவருக்கு பல வசதிகளை வழங்கியிருக்கும் என்பதுடன் அதைக் காப்பாற்ற வேண்டிய அழுத்தத்தையும் கொடுத்திருக்கும். பிருத்விராஜ், ஃபஹத் பாசில் வரிசையில் இரண்டாம் தலைமுறை சினிமாக்காரராக கலக்கி வருகிறார் கல்யாணி. Kalyani Priyadharshan கல்யாணியின் பெற்றோர் அவரும் சினிமாவில் கால்பதிக்க வேண்டுமென நினைக்கவில்லை. சினிமாவில் ஜொலிக்க கடினமாகவும் அப்ரபணிப்புடனும் உழைக்க வேண்டியிருக்கும் என்பதனால் அவர்கள் தயங்கியதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். நியூயார்க்கில் உள்ள பர்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனிங்கில் கட்டடக்கலை வடிவமைப்பாளர் (architecture) பட்டம் பெற்றார். அது உலகிலேயே சிறந்த கட்டடக்கலை கல்லூரி எனப் போற்றப்படும் வளாகம். அமெரிக்காவில் இருக்கும்போதே டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் கல்யாணி. வித்தியாசமான கதைகள், விவேகமான நடிப்பு! 2017ம் ஆண்டு தனது 24 வயதில் ஹலோ என்ற தெலுங்கு படம் மூலம் நடிப்பில் காலடி எடுத்து வைத்தார் கல்யாணி. அகில் அக்கினேனியுடன் நடித்த அந்த படம் வணிக ரீதியில் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், கல்யாணியின் நடிப்பு பேசப்பட்டது. சிறந்த அறிமுகத்துக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். Kalyani Priyadharshan தமிழில் அவர் நடித்த ஹீரோ திரைப்படம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், மாநாடு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மெஹரசைலா பாடலுக்கு அவரது க்யூட்டான நடனம் ரசிகர்கள மெச்சப்பட்டது. மலையாளத்தில் கல்யாணியின் முதல் படம் வரனே அவஷ்யமுண்ட். துல்கர் சல்மான் தயாரிப்பில், துல்கர் உடன் இணைந்து நடித்தார் கல்யாணி. அதில் சுரேஷ் கோபியும் சோபனாவும் முதன்மைக் கதாபாத்திரங்கள். கல்யாணியை தங்கள் வீட்டு பெண்ணாக வரவேற்றது மல்லுவுட். Kantara A Legend: 250 நாள் படப்பிடிப்பு; இது வெறும் சினிமா அல்ல.. - காந்தாரா இயக்குநர் சொல்வதென்ன? திரைத்துறைகளைத் தாண்டி தென்னிந்தியா முழுவதும் கல்யாணியின் முகம் பரிட்சயமானதும் வால் பேப்பரானதும் ஹிருதயம் படத்தின் மூலம்தான். எல்லா ஆண்களும் தவமிருக்கும் ஒரு காதலி பாத்திரத்தை கட்சிதமாக கைப்பற்றியிருப்பார் கல்யாணி. பிறகு ஸ்டைலிஷான தல்லுமாலா! பெரிய மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் ஜோடி போடுவது மட்டுமே நடிகைகள் வளர வழி இல்லை என, இவரது கதைத் தேர்வுகள் நம்பிக்கை அளித்தன. புரோ டாடி, சித்ரலகரி படங்களில் வித்தியாசம் காட்டினார். Kalyani Priyadharshan மலையாள சினிமாவுக்கு இது மற்றொரு நன்னாள்! சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது லோகா ஒரு சுயாதீன படமாக தொடங்கப்பட்டது என்றார் தயாரிப்பாளர் துல்கர் சல்மான். இப்போது அக்ஷய் குமார், பிரியங்கா சோப்ரா வரை நாடு முழுவதும் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோவைக் கொண்டாடுகின்றனர். செய்தியாளர்கள் சந்திப்புகளில் பணிவுடன் அமர்ந்து ஒரு வரியில் பதில் சொல்லும் கல்யாணியின் நடிப்புதான் பேசுகிறது, பேச வைக்கிறது. மலையாள சினிமாவுக்கு லோகா, ககனாசாரி போல, ஜல்லிக்கட்டு போல மற்றுமொரு வித்தியாசமான சுவாரஸ்யமான திரைப்படம். கல்யாணிக்கு தள்ளுமலா போல, ப்ரோ டாடி போல அவர் நடித்த மற்றொரு பரிசாத்திய முயற்சி. கல்யாணிக்கு தள்ளுமலா போல, ப்ரோ டாடி போல அவர் நடித்த மற்றொரு பரிசாத்திய முயற்சி. ஜூனு முதல் சந்திரா வரை தன் தனி வழியில் பயணிக்கிறார் கல்யாணி! Lokah: வீடியோ காலில் வாழ்த்திய சூர்யா, ஜோதிகா - நஸ்லென் நெகிழ்ச்சி!
பண்டிகை சீசன் வந்தாச்சு.. ஆன்லைன் ஷாப்பிங் செய்வீங்களா? இதைக் கொஞ்சம் பாருங்க!
நோ காஸ்ட் EMI வசதியைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கலாமா வேண்டாமா? உண்மையில் அது ஒரு ஏமாற்று வேலையா?
Good Bad Ugly: `என் அனுமதியின்றி பயன்படுத்தியிருக்கிறார்கள்' - அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. இதில், சகலகலா வல்லவன் படத்தில் வரும் 'இளமை இதோ இதோ...’ பாடல் இடம்பெற்றிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாடல் மீண்டும் பரவலாகப் பேசப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் பாடலை தனது அனுமதியின்றி ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Good Bad Ugly முன்னதாக, ரூ.5 கோடி இழப்பீடு கோரி இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு, படக்குழு தரப்பில், “சட்டபூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றே பாடலைப் பயன்படுத்தியுள்ளோம்” என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே பல திரைப்படங்களில் தனது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதற்காக வழக்குகள் தொடர்ந்துள்ள இளையராஜா, இப்போது அஜித்தின் படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
எப்போதும் முதுகில் குத்துபவர்கள்…விராட் கோலியின் கேப்டன்சி குறித்து யுவராஜ் சிங் தந்தை பேச்சு!
டெல்லி : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், செப்டம்பர் 5, 2025 அன்று இன்சைட் ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், விராட் கோலியின் கேப்டன்ஷி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விராட் கோலியின் தலைமையில் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த யோக்ராஜ், “வெற்றி, பணம் மற்றும் புகழ் உள்ள இடத்தில் நண்பர்கள் இருக்க முடியாது என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எப்போதும் பின்னால் […]
காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா?
சென்னையில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவரும் காந்தி மகான் (பாலாஜி சக்திவேல்), தன் மனைவி கண்ணம்மாவுடன் (அர்ச்சனா) வசித்து வருகிறார். ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்வைப் பார்த்தவுடன் கண்ணம்மாவின் மனதிலும் அதே ஆசை எழ, அதைக் காந்தியிடம் சொல்கிறார். கண்ணாம்மாவின் ஏக்கத்தைப் பிரமாண்டமாக நிறைவேற்ற முடிவெடுக்கும் காந்தி, அதற்காக விழா ஏற்பாட்டு நிறுவனம் வைத்திருக்கும் கதிரை (கேபிஒய் பாலா) அணுகுகிறார். காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review பணத்தேவையிலிருக்கும் கதிரும், அவரிடம் கூடுதல் பணத்தைப் பிடுங்க, ரூ.50 லட்சம் செலவாகும் எனப் பொய் கணக்குக் காட்டுகிறார். பல தடைகளைத் தாண்டி பணத்தைப் புரட்டும் முயற்சியில் காந்தியும், அவரிடமிருந்து பணத்தைப் பிடுங்கும் முயற்சியில் கதிரும் களமிறங்குகிறார்கள். இறுதியில் திருமணம் நடந்ததா, கதிரின் வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் தாக்கம் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்லியிருக்கிறது செரிஃப் இயக்கியிருக்கும் 'காந்தி கண்ணாடி' திரைப்படம். Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? காதல், ஆக்ஷன், எமோஷன், காமெடி என விரியும் கதிர் கதாபாத்திரத்தில் காமெடிக்கும் மட்டும் பாதி பொருந்தியிருக்கிறார் பாலா. உருவக்கேலிகளைத் தவிருங்களேன் பாலா! முதுமையில் மனைவியிடம் பெருகும் காதல், மனைவியின் ஏக்கத்தைப் போக்கத் துடிக்கும் வைராக்கியம் எனப் படம் முழுவதும் எமோஷன் கண்ணாடியை மாட்டியிருக்கும் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் பொருந்திப் போனாலும், பல காட்சிகளில் அவரின் நடிப்பு ஓவர் டோஸ்! காதலனின் அக்கறைக்கு ஏங்கும் காதலியாக, நமீதா கிருஷ்ணமூர்த்தி கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். இறுதிக்காட்சிக்கு அர்ச்சனாவின் நடிப்பு வலுசேர்க்க முயல்கிறது. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review லாங்க் ஷாட் மற்றும் இரவுநேரக் காட்சிகளால் பலம் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா. துண்டு துண்டாகச் சிதறும் காட்சிகளை நேர்க்கோட்டில் கோர்க்கத் தவறுகிறார் படத்தொகுப்பாளர் சிவானந்தீஸ்வரன். விவேக் - மெர்வின் இசை கூட்டணியில், 'திமிருக்காரி' பாடல் ஓகே ரகம். விட்டுப்போன எமோஷன்களைத் தன் பின்னணி இசையால் கொண்டுவர முயன்றிருக்கும் இந்த இசைக் கூட்டணி, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறது. KPY Bala: ``நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'' - நடிகர் பாலா பணம் பெரிதில்லை; காதலும் காதல் மனைவியுமே முக்கியம் என வாழும் காந்தி, பணமே முக்கியமென ஓடிக்கொண்டிருக்கும் கதிர் என வெவ்வேறு குணங்களையும், புரிதல்களையும் கொண்ட இருவரின் பயணத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் செரிஃப். காந்தி தம்பதியின் அறிமுகம், அவர்களின் இளவயது காதல், கண்ணம்மாவின் ஏக்கம், கதிரின் அறிமுகம் என நேரடியாகக் கதைக்குள் நுழைந்தாலும், அதற்கான திரைக்கதை துண்டுதுண்டாக கோவையில்லாமல் மிதப்பதால் கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியவில்லை. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review கதாபாத்திரங்களும் போதுமான ஆழமும் தெளிவுமில்லாமல் பேசிக்கொண்டே இருப்பது பெரிய மைனஸ்! அதனால், திரைப்படத்தின் மையக்கதை அழுத்தம் பெறாமல், நாமே அதை யூகித்துக்கொள்ளும்படி அமைகிறது. பாலாவின் அபத்தமான உருவக்கேலிகளுக்கு இடையில், சில ஒன்லைன்கள் மட்டும் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. இடைவேளை ஓரளவிற்கு ஆறுதலான ட்விஸ்ட்டைத் தருகிறது. KPY Bala: படத்தில் கடைசி 5 நிமிடத்தைப் பார்த்து அழுதேன் - காந்தி கண்ணாடி படம் குறித்து மா கா பா இரண்டாம் பாதியிலும் முதல் பாதியின் பிரச்னைகளே வரிசை கட்டுகின்றன. பணத்தை மாற்றும் முயற்சியில் நடக்கும் காமெடி சம்பவங்களில் சில ஒர்க் அவுட் ஆக, மற்றவை திரை நேரத்தை நீட்டிக்க மட்டுமே உதவுகின்றன. பின்கதை, முன்கதை என மாறி மாறி பயணிக்கும் திரைக்கதையில், காலவரிசையில் சில இடங்களில் தெளிவில்லை. க்ளைமாக்ஸில் அதீத எமோஷன் காட்சிகள் வரிசைக்கட்டி வந்தாலும், அவற்றை முன்னமே யூகித்துவிட்டபடியால், தேவையான தாக்கத்தைத் தராமல் அவை திரையை மட்டுமே நிறைக்கின்றன. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review தெளிவில்லாத திரைக்கதை, குழப்பமான கதாபாத்திரங்கள், மேலோட்டமான தொழில்நுட்ப ஆக்கம் போன்ற பல தூசிகளால் குவியமில்லாமல் மங்கலாகவே தெரிகிறது இந்த 'காந்தி கண்ணாடி'. KPY Bala: இந்த படச் சம்பளத்தில் 2 குடும்பங்களுக்கு வீடு கட்டி தந்தேன் - கதாநாயகனான பாலா நெகிழ்ச்சி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Mumbai— Lighthouse Canton, a global investment institution, has announced the appointment of Pranob Gupta as Managing Director – Business Head, India Alternatives (Credit & Hybrid Strategies), as part of the continued expansion of its asset management business.With over 23 years of experience in alternative investments, Gupta will lead the growth of Lighthouse Canton’s India Alternatives funds platform, focusing on proprietary origination, investment management, and cross-border partnerships. His mandate includes scaling the firm’s credit and hybrid strategy offerings, a key focus area in India's rapidly expanding alternatives market.Prior to joining Lighthouse Canton, Gupta served as Managing Director and Chief Investment Officer at JM Financial Credit Alternatives platform. His career spans leadership roles at 360 One, KKR, and Kotak Alternates, with earlier positions at Deutsche Bank and Credit Suisse, building an impressive track record across the alternative investment spectrum.Welcoming the appointment, Sanket Sinha, Managing Director – Chief Executive Officer, Global Asset Management at Lighthouse Canton, stated, “We are pleased to welcome Pranob to Lighthouse Canton. India’s alternative assets market is estimated at around $400 billion AUM and projected to expand up to $2 trillion over the next decade, there’s a compelling opportunity to capture attractive risk-adjusted returns. Pranob’s appointment reinforces Lighthouse Canton’s conviction in India’s booming private credit market, a key driver for our Alternatives platform. His leadership will accelerate our India franchise growth and strengthen our Global Asset Management platform.” Commenting on his new role, Pranob Gupta added, “I am very excited to be a part of the tremendous growth journey of Lighthouse Canton. There is a huge scope for this platform to grow into a multi-billion-dollar Alternatives AUM franchise. The pan Asian and global nature of the firm opens up meaningful cross-border product and investor synergies. I look forward to this exciting journey.” Headquartered in Singapore, Lighthouse Canton operates across key financial hubs including India, the UAE, and the UK, managing over USD 4 billion in assets and advisory (as of December 31, 2024). The firm’s asset management division leverages proprietary platforms, advanced analytics, and integrated investment solutions to offer clients seamless access to global investment opportunities.The appointment further strengthens Lighthouse Canton’s momentum in India’s private credit market. Since entering the growth debt space in India, the firm has established significant institutional partnerships, including with NH ARP (Singapore entity of NH Securities, part of Korea’s NH Group) and Qatar Insurance Company (QIC), to co-invest in its private credit strategies.Lighthouse Canton’s asset management arm offers a wide array of strategies across hedge funds, private equity, real estate private equity, private credit, venture capital, growth debt, public equities, and global macros. Its expanding alternatives platform continues to play a vital role in fostering cross-border investment flows and supporting emerging sectors across Southeast Asia and India.
ஆசிரியர் தினத்தை பல்வேறு நாடுகள் எவ்வாறு கொண்டாடுகின்றன.. ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
ஆசிரியர் தினத்தை பல்வேறு நாடுகள் எவ்வாறு கொண்டாடுகின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Deva: 'மீசைய முறுக்கு 2'-வில் நடிக்காததற்குக் காரணம் இதுதான் - இசையமைப்பாளர் தேவா ஓப்பன் டாக்
இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் நாளை கொழும்பில் நடக்கவிருக்கிறது. இந்தக் கான்சர்ட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று கான்சர்ட் தொடர்பாகவும் இன்னும் சில விஷயங்களும் குறித்தும் பேசியிருக்கிறார். Deva Concert அதில் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவா பேசுகையில், 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள். அப்படத்தின் கதை ரொம்பவே அற்புதமான ஒன்று. நான் அப்படத்தில் நடிக்காமல் இருந்ததற்குக் காரணத்தையும் நான் அவர்களிடம் சொன்னேன். நான் இப்போது கான்சர்ட்களில் பிஸியாக இருக்கிறேன். சென்னை, பாரீஸ், ஜப்பான் என அடுத்தடுத்து பல இடங்களுக்கு நான் சென்று வருகிறேன். தேவா இந்தச் சமயத்தில் அவர்களுக்குச் சரியாக ஒத்துழைக்க முடியாது. நேரத்திற்கு என்னால் ஷூட்டிங்கிற்குப் போக முடியாது. நடிக்காமலிருந்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. ஆம், எனக்கு நடிக்கத் தெரியாது. வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து பேச வேண்டும். நான் மறந்திடுவேன் எனக் கூறியிருக்கிறார். Saregamapa: ``தேவா சார் கையெழுத்து என் தலையெழுத்தாக மாறும்னு நம்பி..!'' - `சரிகமப' அபினேஷ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
`StartUp'சாகசம் 39: Excavators பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா? - மாற்று யோசனையில் சாதித்த Tomgo
Tomgo Agro Machines `StartUp' சாகசம் 39 சமீபகாலமாக, இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களில், மினி அகழ்வாராய்ச்சி இயந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் இந்த இயந்திரங்களுக்குப் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை ஒரு வணிகமாக மாற்றியமைத்து, ஒரு புத்தாக்க நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்த வாரம் நாம் காணவிருக்கிறோம். ஜேசிபி வளரும் நாடுகளில் கட்டமைப்பு மேம்பாடு எப்போதும் அதிகமாக இருக்கும். இதில் பெரும்பாலானவை நகரங்களில் மெட்ரோ ரயில் அமைத்தல், சுரங்கம் மற்றும் குவாரிகளைச் சீரமைத்தல், கழிவு மேலாண்மை போன்ற பணிகளாகும். அதுவே கிராமங்களில், சாலை அமைத்தல், நீர் மேலாண்மை, ஆறு மேம்பாடு போன்ற விவசாயம் சார்ந்த பணிகளும் இருந்துகொண்டே இருக்கும். இதற்காக, பெரும்பாலும் ஜேசிபி இயந்திரங்களின் பயன்பாடு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், அதிக முதலீடு மற்றும் பெருகிவரும் போட்டி காரணமாக, Excavators சார்ந்த தொழில்களில் லாபம் ஈட்டுவது கடினமாகி வருகிறது. சாதாரணப் பார்வைக்கு இவற்றை நாம் படித்துக் கடந்துவிடுகிறோம். ஆனால் ஒரு தொழில்முனைவோருக்கு, இத்தகைய சிக்கல்களே வாய்ப்புகளாக அமைகின்றன. 'டாம்கோ அக்ரோ மெசின்ஸ்' (Tomgo Agro Machines) மர்பி விதிப்படி, ஒரு இடத்தில் சிக்கல் தீர்க்கப்படும்போது, அதே இடத்தில் இன்னொரு வாய்ப்பும் உருவாக்கப்படுகிறது. பெரிய மேலாண்மைப் பணிகளுக்கு ஜேசிபி போன்ற Excavators இயந்திரங்கள் தேவை என்றாலும், எல்லா இடங்களிலும் அதன் பயன்பாடும், செலவும் அதிகம். ஆகவே, Mini Excavators நிறைய தேவை இருக்கிறது என்பதை ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்டறிந்துள்ளது. தமிழ்நாட்டில், பெரிய இயந்திரங்களுக்குப் பதிலாகச் சிறிய இயந்திரங்களை உருவாக்கி, அவற்றைச் சிறப்பான முறையில் மேம்படுத்தி வருகிறது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இந்தத் துறையில் ஆபரேட்டராகத் தொடங்கி, பின்னர் உதிரி பாகங்கள் விற்கும் நிறுவனமாக மாறி, அதன் பின் சிறிய இயந்திரங்களை உருவாக்கியும், பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாக இயந்திரங்களை வடிவமைத்தும், தற்போது பெரிய நிறுவனங்களுக்காக ரோபோட்களையும் உருவாக்கி வரும் 'டாம்கோ அக்ரோ மெசின்ஸ்' (Tomgo Agro Machines) என்ற நிறுவனத்தின் சாகசக் கதையை அதன் நிறுவனர்களான தாமஸ் மற்றும் ரோணிக்கா மேரி அவர்களிடம் கேட்போம். `StartUp' சாகசம் 37 : `உணவு கலப்படம் என்ற பெரும் சவால்.!’ - அமெரிக்க ரிட்டர்னின் `AMMA GENOMICS’ கதை ``உங்கள் நிறுவனம் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்கு மலிவான, புத்திசாலித்தனமான மற்றும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களை வடிவமைப்பதன் முக்கிய நோக்கம் என்ன? ``என் கணவர் தாமஸ் 5 வருடங்கள் ஜேசிபி (JCB) ஆபரேட்டராகப் பணியாற்றினார். அதன் பிறகு, சொந்தமாக ஜேசிபி உதிரிபாகங்களை விற்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போது உதிரிபாகங்கள் வாங்க நிறைய பேர் வந்து போனதனால், அந்தத் தொழிலின் தேவை (demand) தெரியவந்தது. பழைய Excavators வைத்திருப்பவர்களும் எங்களைத் தேடி வந்து கொடுத்தனர். அது எங்களுக்கு ஒரு தொழிலாகவே மாறிப்போனது. நல்ல உதிரிபாகங்களை விற்பனை செய்துவிட்டு, தேவையில்லாத இரும்புகளை எடைக்கு போட்டு விடுவேன். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இவ்வாறு செய்து கொண்டிருந்தபோது, நிறைய பேர் நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தைக்கூட எங்களிடம் விற்பனை செய்ய முன்வந்தனர். ஏன் இவ்வாறு என்னிடம் கொடுக்கிறீர்கள்? என்று கேட்கும்போது, அவர்கள், எனக்கு என் தொழிலுக்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலையில் இதை வாங்கிப் பயன்படுத்தலாம் என்று வாங்கினேன். ஆனால், யானையைக் கட்டித் தீனி போடுவதுபோல் என்னால் அதைச் சமாளிக்க முடியவில்லை. விற்கவும் முடியவில்லை, என்று கூறினார்கள். அதனால், இதில் உள்ள பிரச்னையைப் புரிந்துகொண்டு, நாம் இதற்கு ஒரு தீர்வளித்தால் என்ன என்று யோசித்தேன். 'மாற்றம் ஒன்றே மாறாதது' அந்த மாற்றத்தை நமக்கானதாக எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான், பெரிய Excavator-களுக்குப் பதிலாக சிறிய அளவில் இயந்திரங்களைத் தயார் செய்யலாம் என்று தோன்றியது, ஏனெனில் பெரிய இயந்திரங்கள் செலவு மிக்கது, அதே சமயம் அது ஓடாமல் நின்றுவிட்டால் அதன் ஓனருக்கு செலவும் அதிகம். இதற்கு மாற்றாக ஏன் சிறிய இயந்திரங்களை உருவாக்கக்கூடாது என்று ஆரம்பித்து, ஒரு சிறிய இயந்திரத்தையும் தயார் செய்தேன். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனம் ஆரம்ப காலத்தில் சிறிய இயந்திரங்களை உருவாக்குவதன் மூலம் இந்தத் துறையில் காலடி பதித்தது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இதன் மூலம் முதல் ஆண்டில் நாங்கள் பெரிய அளவில் வருமானம் (revenue) எடுக்கவில்லை; மாறாக ₹8,000 நஷ்டத்தில் இருந்தோம். அடுத்தடுத்த தொடர்ந்த முயற்சிகளும், இயந்திரங்களில் அடுத்தடுத்த புதுப்பித்தல்களும் (updates) மூலமாக, இன்று மினி எக்ஸ்கவேட்டர் (Mini Excavator) என்ற இயந்திரம் வரை முழுமையாக்கி ஒரு முழுமையான மினி எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளோம். இன்று இந்த நான்கு வருடங்களில் மொத்த விற்பனையில் ₹4 கோடியைத் தாண்டி உள்ளோம். ஜான்யுடெக் (Johnyutech), பாப்கேட் (Bobcat), மற்றும் கோல்ட் மைன்ஸ் (Gold Mines) போன்ற பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு ரோபோக்களையும், அதை உருவாக்கும் இயந்திரங்களையும் உருவாக்கி வருகிறோம். `StartUp' சாகசம் 19 : `பெண் தொழில் முனைவோர்களுக்கு போதுமான நிதி’ - Pinke Capital நிறுவனத்தின் இலக்கு ``உங்கள் நிறுவனத்தின் இயந்திரங்கள் என்னென்ன துறைகளில் பயன்படுகின்றன? நீங்கள் தயாரிக்கும் இயந்திரங்களின் சிறப்பம்சங்கள் என்ன?” ``எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பான டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ரோவர் மற்றும் Standard Model Backhol மாடல்கள் நிறைய வேலைகளுக்குப் பயன்படுகின்றன. அவை விவசாயத்துறை, கட்டிடத்துறை, சுரங்கத் துறை, ரோபோட்டிக் மற்றும் உப்பளங்கள், சிறிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இத்துறைகளில் உள்ளவர்கள் அனைவரும் அவர்களுக்கான வேலைக்கு பெரிய ஜேசிபி வாங்குவது ரூ. 35 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். ஆனால், நம்மளுடைய இயந்திரம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு (budget-friendly) ரூ. 2 லட்சத்திலிருந்து ஆரம்பிப்பதால், அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு எட்டு பேரின் சம்பளத்தைக் குறைத்தாலும் ரூ. 4,000 மிச்சம். அதன்படி பார்த்தால், மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை அவர்களால் சேமிக்க முடிகிறது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நம்மளுடைய இயந்திரத்தின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், ஒரு டன் எடைதான் இருக்கும். ஒரு மூன்று அடி அகலத்திலேயே வந்து போய்க்க முடியும். இதே பெரிய இயந்திரங்கள் துறையில் இருப்பதைப் பார்த்தால், ஏழரை அடி அகலம், ஏழு டன் எடை இருக்கும். ஆயிரம் இணைப்பு கருவிகள் இருந்தால் தான் அது ஒரு இயந்திரம் என்று சொல்வார்கள். ஆனால், நம்மளுடைய இயந்திரம் ஒரு 150 பொருள்கள் இருந்தாலே போதும். நமது இயந்திரம் 1.10 டன் எடை என்பதால், சின்ன இடங்களிலும் சென்று வருவதற்கு எளிதாக இருக்கும். அதோடு, கிணற்றுக்குள் எளிதாக இறங்கி குழி தோண்டும். எல்லா வேலைகளுக்கும் இது சிறப்பான விதத்தில் பயன்படும். ``பெரிய இயந்திரங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் உங்கள் சிறிய இயந்திரங்கள் எவ்வாறு செய்கின்றன? இதை நீங்கள் எப்படி உறுதி செய்கிறீர்கள்?” ``எங்களுடைய இயந்திரங்கள் வடிவத்தில் சிறியதாக இருந்தாலும், பெரிய இயந்திரங்கள் செய்யக்கூடிய டிராக்டர் ஏற்றுதல் (tractor loading), இரண்டு யூனிட் டிப்பர் ஏற்றுதல் (tipper loading), 5 அடி ஆழமுள்ள குழி தோண்டுதல், பைப்லைன் அமைத்தல், மரம், செடி, கொடிகளைப் பிடுங்குதல், சொட்டுநீர் பாசனம் அமைக்க, கிணற்றுக்குள் இறங்கி கிணறு வெட்ட என்று பெரிய இயந்திரங்களால் செய்ய முடியாத வேலைகளைக்கூட நம்முடைய இயந்திரம் செய்ய முடியும். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ``உங்கள் நிறுவனம் உருவாக்கிய இயந்திரங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன?” ``எங்களுடைய இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதால், விவசாயிகளுக்கு அதிக ஆட்களை வைத்து வேலை செய்யும் கூலி மிச்சமாகிறது. உடல் உழைப்பு மிச்சமாகிறது. மேலும், விரைவாக அந்தக் கால சூழ்நிலைகளுக்குள்ளேயே வேலையை முடிக்க முடிகிறது. இதனால், அந்தந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பயிர் செய்யக்கூடிய நிலைமை விவசாயிகளுக்குச் சுலபமாக அமைகிறது. தினமும் வேலையாட்கள் வருகிறார்களா அல்லது வரமாட்டார்களா என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதனால், உற்பத்தியும் அவர்களுக்கு அதிகமாகிறது; வருமானம் இரட்டிப்பாகிறது. அவர்களுடைய வேலைகள் முடிந்த பின்பு, மற்ற தோட்டங்களுக்கும் அவர் வாடகைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பணியையும் இதன் மூலம் செய்யலாம். `StartUp' சாகசம் 23 : `50 லட்சத்திற்கும் மேல் பயனாளர்கள்..!’ - ஓம் தமிழ் காலண்டர் செயலியின் கதை ``இயந்திரங்கள் என்றாலே, விற்பனைக்கு பிந்தைய சேவைதான் (after-sales service) மிக முக்கியமானது. அதை நீங்கள் எவ்வாறு உறுதி செய்கிறீர்கள்?” ``நாங்கள் இயந்திரங்களை உற்பத்தி செய்கிறோம். ஆனால், எங்களிடம் போதுமான டீலர் (dealer) அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் (distributor) தற்போது இல்லை. எங்களை நம்பி வருகிறவர்கள் எல்லோரும் ஏற்கனவே வாங்கியவர்களின் பரிந்துரையின்படியே வருகிறார்கள். ஏனெனில், நாம் இயந்திரத்தைத் தயாரிப்பது முக்கியமல்ல. நாம் வாடிக்கையாளரிடம் அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்குத் தேவையானபடி இயந்திரத்தைத் தயாரித்துக் கொடுத்து, அவருக்கு அடுத்தபடியாகச் சேவை (service) கொடுத்து, அவரிடம் நெருக்கமாக உள்ளதாலேயே அடுத்தடுத்த ஆர்டர்கள் (orders) எங்களுக்கு வருகின்றன. அதனால், தற்போது வரை வாடிக்கையாளர்களிடம் நேரடியான தொடர்பு வைத்துள்ளோம். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் சேவைக்காகவே தனியாக ஒரு குழுவை (team) அமைத்துள்ளோம். சேவை சம்பந்தப்பட்ட தகவல்கள் வாடிக்கையாளரிடம் இருந்து வரும்போது, அதை சேவை குழு வந்து கவனித்து, உதாரணத்திற்கு, 7200001901-ல் இருந்து 7200001905 என்று முடியும் அந்த எண்ணிற்கு வாடிக்கையாளர் அழைப்பு (call) செய்து தகவலைத் தெரிவிப்பார். உடனே, அந்தக் குழு அதைக் கவனித்து, சரியான விதத்தில் பயன்படுத்தி, சேவை தந்து கொண்டு போவதால், மிகவும் நல்ல முறையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு நேர்மறையான கருத்துக்கள் (review) கிடைத்துள்ளன. ``இயந்திரங்களைத் தயாரிக்க பெரிய இடமும் முதலீடும் தேவை. உங்கள் ஆரம்பகால முதலீட்டை எவ்வாறு திரட்டினீர்கள்? உங்களுக்கு அரசின் ஆதரவு கிடைத்ததா?” ``இயந்திரங்களைத் தயாரிக்க பெரிய இடம் தேவைதான். ஆனால், நாங்கள் எங்களது பிறந்த ஊரிலேயே, சொந்த கிராமத்திலேயே குட்டத்துப்பட்டி, திண்டுக்கல்லிலேயே தொடங்கினோம். இது திண்டுக்கல்லில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எங்களது சொந்த இடத்தில் தொடங்கியதால், திண்டுக்கல் நகரத்திற்கு (city) வருவதற்குக்கூட 17 கிலோமீட்டர் ஆகும். எங்களுடைய சொந்த இடத்தையே முதலீடாகக் கருதி, அந்த இடத்திலேயே நிறுவனத்தைத் தொடங்கினோம். இன்று வரை அதே இடத்தில் இருக்கிறது. இந்த கிராமத்தில் இருந்தே எங்களால் 300 இயந்திரங்களை 15 மாநிலங்களில் இருந்து 35 மாவட்டங்கள் வரை சென்றடைய முடிந்திருக்கிறது. நாங்கள் ஒரு ஸ்டார்ட்அப் (Startup) என்பதால் நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ஆரம்ப காலத்தில் நாங்கள் கணவன் - மனைவி இருவரும் எந்தவித அனுபவமும் இல்லாமல், எங்களது சொந்த முதலீட்டை மட்டுமே நம்பித் தொடங்கியதால், நிறைய அரசு பற்றிய திட்டங்கள் எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. எனவே, எங்களுடைய முதலீட்டையே பெரிய முதலீடாகக் கருதி, உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் கடன் வாங்கி ஆரம்ப காலத்தில் செய்தோம். நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்களில், ஸ்டார்ட்அப் இந்தியா (Startup India), Forge, ஸ்டார்ட்அப் டி.என் (Startup TN) ஆகியவற்றின் உதவியால் நிறைய திட்டங்கள் பற்றி அறிய முடிந்தது. அவற்றில் ஒன்றான சிப்காட் (SIPCOT) திட்டத்தில் விண்ணப்பித்து, அதில் ரூ. 20 லட்சம் மானியம் (grant amount) Forge வழியே கிடைத்தது. அதன் மூலம் மினி எக்ஸ் கிரைண்டர் (Mini Ex Grinder) என்ற இயந்திரத்தை உருவாக்கினோம். `StartUp' சாகசம் 32: `அந்த தொழில்நுட்பத்தை Google ரொம்ப பாராட்டினாங்க’ - Save Mom சக்சஸ் ஸ்டோரி ``உங்கள் இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? குறிப்பாக, 30% வரை எரிபொருள் சேமிப்பு மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுகள் குறித்து விளக்க முடியுமா?” ``நடைமுறையில் உள்ள மற்ற இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஏழு லிட்டர் வரை டீசல் பயன்படுத்தும். எங்களது டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் மட்டுமே பயன்படுத்தும். இதன் மூலமாக எரிபொருள் சேமிப்பு நல்ல முறையில் நடக்கிறது. இதையே ஈ.வி பேட்டரி (EV battery) மூலமாகவும் இப்பொழுது தயாரித்து கொடுத்து வருகிறோம். இதன் மூலமாக அரசின் கிரீன் இந்தியா (Green India) திட்டத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் வகையில் எரிபொருள் சேமிப்புக்காகவும் பயன்படுத்த முடியும். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இயந்திரம் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு. ஏனென்றால், அவர்கள் போட்ட முதலீட்டை ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே வருமானமாக அவர்களால் எடுக்க முடியும். ஆகவே, இது சிறந்த முதலீடு. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ``எதிர்காலத்தில் டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை என்ன? நீடித்த இயந்திரங்களை உருவாக்குவதில் உலகளாவிய விற்பனையாளராக மாறுவதற்கான உங்கள் இலக்குகள் என்ன?” ``அடுத்த தலைமுறைக்கானதாக நாங்கள் இப்போது ஈ.வி (மின்சாத்தில் இயங்கும் இயந்திரங்கள்) துறையில் கால் பதித்திருக்கிறோம். இதனால், எங்களுக்கு இந்த கார்பன் வெளியேற்றத்தைக் (carbon emission) குறைப்பதில் ஈ.வி-யில் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த ஈ.வி-யுடன் சேர்ந்து நாங்கள் ஆட்டோமேஷன் (automation) மற்றும் ஏ.ஐ டெக்னாலஜியையும் (AI technology) பயன்படுத்தி, ரிமோட்டில் (remote) இயங்குவது, தானாக இயங்கக்கூடிய வகையிலெல்லாம், இப்போது ரோபோ (robot) முறையில் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். இதனால், எங்களுக்கு மிகப்பெரிய ஆர்டர்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக இந்தியச் சந்தைகளில் மட்டுமல்லாமல், வெளிநாட்டுச் சந்தைகளிலும் எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. எங்களுடைய தனித்துவமான கண்டுபிடிப்பினால், நாங்கள் உலகளாவிய சந்தைகளில் கால் பதிப்போம் என்பதுதான் எங்களது அடுத்த நிலைமைக்கான நோக்கமாக இருக்கிறது. தற்போது வரைக்கும் பார்த்தால், ஜே.எஸ்.டபிள்யூ (JSW), ஹிண்டால்கோ (Hindalco), ஆதித்யா பிர்லா (Aditya Birla) இவர்களுக்கெல்லாம் நாங்கள் ஆட்டோமேஷன் துறையில் உள்ளே போய், சில ரோபோக்கள் உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இதுதான் இந்தியாவில் முதன்முறையாக நாங்கள் கொடுத்திருக்கும் ரோபோ. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பார்த்தால் இதுதான் முதல்முறை. முதல்முறையான ஒரு இயந்திரத்தைக் கொடுத்திருப்பது உலக அளவில் முதன்மையானது. இது Janu u tech என்று ஒரு நிறுவனம் மூலமாக நாங்கள் இணைந்து இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இன்று வரைக்கும் எங்களுக்கு ஒரு ரூ. 16 கோடி அளவுக்கு ஆர்டர்-க்கான ஒப்பந்தம் (MoU) கையெழுத்து செய்யப்பட்டுள்ளது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் எதிர்காலம் என்பது நிலையான வளர்ச்சி இலக்குகளுக்குக் (Sustainable Development Goals - SDGs) கீழான 17 கோல்களுக்கு தீர்வு தருவதுதான் இந்தத் தலைமுறையை அடுத்த தலைமுறை பார்ப்பதற்குரிய வழிவகைகள் செய்ய முடியும். அதில், காலநிலை நடவடிக்கைக்கு (climate action) அந்த எஸ்.டி.ஜி. கோல்ஸுக்குக் கீழ்தான் நாம் மின்சார வாகனங்கள் உருவாக்குவது மூலமாக பசுமை சக்தி, பசுமை எரிபொருள், கார்பன் வெளியேற்றம், ஜீரோ கார்பன் வெளியேற்றம் ஆகியவற்றின் திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அடுத்தது, கிராமப்புறப் பகுதிகளிலிருந்து, நாம் பிறந்த இடம் அதே கிராமத்தில் குட்டத்துப்பட்டி என்ற அதே கிராமத்திலிருந்து நாம் செய்வது மூலமாக இந்த கிராமப்புறப் பகுதியில் இருப்பவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் (job employment) மற்றும் பெண்கள் மேம்பாட்டையும் (women empowerment) செய்து, நமது தயாரிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு வருமானத்தை உருவாக்கும் அந்த ஒரு செயலிலும் ஈடுபட்டு வருகிறோம். (சாகசம் தொடரும்) `StartUp' சாகசம் 28: ரூ.50 டு ரூ.10 லட்சம்; 150+ விவசாயத்துறை உபகரணங்கள்- கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ்
நெருங்கும் தேர்தல்…ஜேர்மனியில் ஒரே கட்சியில் 7 வேட்பாளர்கள் உட்பட 16 பேர்கள் மரணம்
ஜேர்மன் மாகாணம் ஒன்றில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தொடர்ச்சியாக வேட்பாளர்கள் மரணமடையும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பேசு பொருளாக ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலேயே உள்ளாட்சித் தேர்தல்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இதுவரை 16 வேட்பாளர்கள் திடீரென்று மரணமடைந்துள்ளனர். இதில் 7 வேட்பாளர்கள் AfD கட்சியை சேர்ந்தவர்கள். எஞ்சிய வேட்பாளர்கள் SPD, SDA, FDP, கிரீன்ஸ், விலங்கு நலக் கட்சி, UWG, Free Voters, வாக்கெடுப்பு கட்சி மற்றும் வாக்காளர் குழு உள்ளிட்ட கட்சியை […]
How Brands are Celebrating Kerala’s Festive Spirit: Onam 2025
Mumbai: As Kerala celebrates Onam, several brands have rolled out innovative campaigns that capture the festival’s spirit of togetherness, tradition, and joy. From Peps highlighting comfort with festive mattress offers, to Peter England engaging Kerala’s Gen Z through a modern musical anthem, and Casio India presenting watches as symbols of love and memories, the campaigns span diverse categories. Brands like Nutella, Zomato, GM Modular, Parle-G, JBL, Google, Wonderla, Duroflex, Chandrika Soap, and Tata Motors have all embraced creative storytelling—through digital films, immersive experiences, music, and special offers—bringing modern, culturally rooted celebrations to audiences across Kerala. GM Modular GM Modular, a home electrical brand in India, has launched a new Onam campaign showcasing how its products enhance festive celebrations. The film follows a family through their day, highlighting GM Modular’s innovations—from a wireless charger powering a phone and smartwatch, to an extension board running a water heating rod and hair dryer, and a Bluetooth speaker bringing music to the afternoon festivities. The family enjoys traditional rituals, creates a flower rangoli, clicks selfies, shares a meal, and ends the day with a GM fan, capturing the essence of Onam with the message “Yeh Onam Apno Ke Saath.” View this post on Instagram A post shared by GM MODULAR (@gmmodular) Peps Peps Industries, a spring mattress brand, has launched a special festive offer for Onam, bringing exciting discounts to enhance comfort and joy this season. Its Malayalam ad campaign on Instagram and YouTube beautifully blends cultural storytelling with festive visuals, highlighting family togetherness and celebrations while positioning Peps mattresses as an integral part of the festivities.https://www.youtube.com/watch?v=Do8-07Cp010 Peter England This Onam, Peter England launches a vibrant campaign to connect with Kerala’s Gen Z, featuring homegrown rapper The Imbachi. With a special anthem blending chendamelam and hip hop, the brand reimagines tradition in a fresh, modern style that resonates with youth. View this post on Instagram A post shared by THE IMBACHI (@im6achi) Deconstruct Skincare Deconstruct Skincare, India’s leading science-backed skincare brand, has launched its special Onam 2025 campaign titled “Kuda Mathram Mathiyavilla” (Umbrella alone is not enough). The digital campaign reimagines Kerala’s most loved festival by honoring tradition while introducing modern skincare as an everyday essential.https://www.youtube.com/shorts/3uVR22cg_gg Casio India This Onam, Casio India, a pioneer in timepieces, launches a heartfelt campaign that reimagines festive gifting by showcasing a Casio watch as a timeless symbol of love, memories, and togetherness. Centered around a model crafted in India for India, the campaign highlights designs tailored to Indian tastes, reinforcing Casio’s commitment to products that deeply connect with local consumers. View this post on Instagram A post shared by Casio Watches India (@casiowatchesindia) Dot Media Dot Media, a talent management agency, is celebrating Onam with a vibrant global creator-led campaign in partnership with Eastern Condiments & Spices, a renowned brand for authentic Kerala spices and mixes. The initiative brings together 11 Malayali creators across the UK, Canada, and the USA, showcasing how the sights, smells, and tastes of Kerala can be recreated anywhere in the world. View this post on Instagram A post shared by The Lal Family (@ponnu.j) View this post on Instagram A post shared by Dhiya Johnson | Content Creator (@dhiyajohnson_) View this post on Instagram A post shared by Aparna chaithanya (@_aparnah_) Social Panga and AMD Social Panga and AMD have come together yet again to release a heartfelt digital onam ad film. The DVC, inspired by the belief that King Mahabali visits his people each year, is a modern take on how AI can bridge the gap of language barrier.https://www.youtube.com/watch?v=jvbSKiVVAsU Nutella Nutella Hazelnut Cocoa Spread, one of India’s favourite breakfast accompaniments, celebrated Onam in Kochi with a unique ‘Experience Sadhya with Nutella’ event that brought together Kerala-based influencers for a fusion of tradition and taste. Guests, dressed in festive Onam attire, were welcomed by Nutella-branded torans and a vibrant Nutella pookalam, while the showcase blended Nutella with the flavours of Kerala’s iconic Sadhya. The gathering created countless shareable moments, highlighted by a Nutella-themed photo booth with fun jar props and standees, capturing the festive spirit with a modern twist.https://www.youtube.com/watch?v=CMaHc7cteY8https://www.youtube.com/watch?v=Apk6ggEDhVU Polycab Polycab India Ltd., one of India’s leading manufacturers of wires and cables and among the fastest growing FMEG companies, is celebrating Kerala’s grand festival of Onam with a campaign that beautifully blends cultural reverence with innovation. Honouring the return of the beloved King Maveli, the campaign brings alive Polycab’s brand promise of ‘Safe, Happy Connections’ through immersive experiences that light up hearts and homes across the state. Zomato This Onam, Zomato has launched a campaign reimagining the Kerala chant Arpo Irro Irro Irro as Arpo Hero Hero Hero, celebrating the power of unity and collective effort. The visuals highlight Kerala’s cultural icons, including Vallamkali (snake boat races), Vadamvali (tug-of-war), and Chendamelam (drumming), showcasing how teamwork and shared spirit define success. By blending these vibrant traditions with the campaign’s message, Zomato emphasizes that those who work, fight, and stand together achieve victory, capturing the essence of Onam’s communal celebrations in a fun and memorable way. View this post on Instagram A post shared by Zomato (@zomato) Parle-G Parle Products, India’s leading manufacturer of biscuits and confectionery, has launched its new Onam campaign under the tagline: Jo auron ki khushi mein paye apni khushi, Parle-G, G Maane Genius. The film takes a nostalgic look at the festival through the eyes of a family returning to their roots, offering a heartfelt reminder that the true spirit of Onam lies in collective joy, shared memories, and traditions passed down through generations.https://www.youtube.com/watch?v=zv1jxFFsxTs JBL This festive season, JBL India has released the Sound of Celebrations anthem, a digital campaign that captures the various sonic signatures of India's festivals. From the pulsating dhol of Ganesh Chaturthi and the rhythmic dhak of Durga Puja to the vibrant chenda of Onam, the anthem celebrates how each region's soundscape contributes to the spirit of unity. The track, produced by the acclaimed Sez on the Beat, features a line-up of artists from across the country—MC Couper (Kerala/Onam), MC Gawthi (Maharashtra/Ganesh Chaturthi), Sanjeeta Bhattacharya (West Bengal/Pujo), and Shreya Jain. The anthem has been released on YouTube and amplified across JBL’s social media channels.https://www.youtube.com/shorts/3Oua6wkQQY8 Google & Talented Google India celebrates the spirit of Onam with its latest film, “Onam is where you are,” conceptualised by Talented, directed by Devika Mahajan, and produced by Happy Crew Films. The narrative follows a young Malayali protagonist, taking viewers on a journey reminiscent of a traditional Onasadya, while subtly highlighting the role Google tools play in daily life. Dedicated to Malayalis worldwide, the film reinforces that tradition transcends location, emphasizing that the essence of Onam is not tied to a place but to the moments and connections shared with loved ones.http://youtube.com/watch?feature=shared&v=bf_FuF5HI3k Wonderla As part of its Onam campaign this year, Wonderla Holidays Ltd., India’s largest amusement park chain, took festive greetings a notch higher by integrating a unique Out-of-Home (OOH) and digital campaign across Kerala. Conceptualised and executed largely in-house, the brand’s Onam campaign transformedlarge-format tower hoardings and metro pillars into vibrant hyperlocal conversations, while simultaneously releasing a high-energy Onam Anthem and hook-step on Instagram and Spotify—turning Onam greetings into a state-wide cultural moment. Duroflex Duroflex, the sleep solutions brand, has launched a special Onam campaign in Kerala, delighting its dealer community with personalized AI-generated greetings from actress Amala Paul, while also allowing consumers to create their own greetings via [https://www.duroflexworld.com/pages/onam-wishes] (https://www.duroflexworld.com/pages/onam-wishes). As part of the celebrations, the brand introduced its limited-edition Energise mattress featuring Arctic Ice Fabric Technology for a three-times cooler sleep experience. The launch is complemented by a festive brand film that captures the spirit of Onam through a heartwarming mother-daughter story, where the daughter surprises her hardworking mother with the gift of rest through the Energise mattress.https://www.youtube.com/watch?v=w_scVyodfp8 Chandrika Soap Chandrika, the iconic Ayurvedic soap brand from Wipro Consumer Care and Lighting, has unveiled a special Onam TVC campaign that beautifully blends cultural heritage with heartfelt storytelling. With an illustrious legacy of over 80 years, Chandrika has been a household companion in Kerala, and the new campaign reinforces its deep-rooted connection with the state’s most cherished festival.https://youtu.be/oSn4HJeAsyM?si=6vdClwiAWPE7eZV_ Tata Motors Tata Motors has announced its special Onam campaign for Kerala, offering customers benefits of up to ₹2,00,000* on its passenger and electric vehicle range, along with priority deliveries for festival bookings. The offers, valid from July 25 to September 30, 2025, are complemented by attractive financing schemes designed to make vehicle ownership more accessible during the festive season.
உக்ரைனில் உள்ள மேற்கத்திய துருப்புக்கள் சட்டபூர்வமான இலக்குகள் என்கிறார் புடின்
உக்ரைனில் வெளிநாட்டுப் படைகள் வரவழைப்பது அச்சுறுத்தலாகவும் சட்டபூர்வமான இலக்குகளாகவும் இருக்கும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் மேற்கத்தியப் படைகள் இருப்பது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்குப் பிடிக்கவில்லை. மேலும் அவை அச்சுறுத்தலாகவும் சட்டபூர்வமான இலக்குகளாகவும் பார்க்கப்படும் கூறினார். சில படைகள் உக்ரைனில் தோன்றினால் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் போது, அவை அழிவுக்கான சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும் என்ற உண்மையிலிருந்து நாங்கள் தொடர்கிறோம் என்று விளாடிவோஸ்டோக்கில் நடந்த ஒரு பொருளாதார மன்றத்தில் புடின் கூறினார். நீண்டகால அமைதிக்கு வழிவகுக்கும் முடிவுகள் எட்டப்பட்டால், உக்ரைன் பிரதேசத்தில் அவர்கள் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் அங்கில்லை என்றால் அது அமைதிக்கு முற்றுப்புள்ளி என்று புடின் கூறினார். நேற்று வியாழக்கிழமை, 26 நாடுகள் போருக்குப் பின்னர் பாதுகாப்பு உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக, நிலம், கடல் மற்றும் வான்வழிப் படைகளை உள்ளடக்கிய படைகளை நிலைநிறுத்துவதாக உறுதியளித்தன. இதனையடுத்தே புடினின் பதில் வெளிவந்துள்ளது. நேட்டோவின் விரிவாக்கம் உக்ரைனை ஆக்கிரமித்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது என்று புடின் வாதிட்டார். கிழக்கு நோக்கி கூட்டணியின் விரிவாக்கம் ரஷ்ய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறார். உக்ரைனுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க நேட்டோவின் முயற்சி நமது நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது. அதனால்தான், நமது எல்லைகளுக்கு அருகில், உக்ரைன் மண்ணில் வெளிநாட்டு ஆயுதப் படைகள், நேட்டோ துருப்புக்கள் இருப்பதை அச்சுறுத்தலாக நாங்கள் கருதுகிறோம் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் அரசு நடத்தும் TASS செய்தி நிறுவனம் தெரிவித்த கருத்துக்களில் தெரிவித்தார். இது எங்களுக்கு ஒரு அச்சுறுத்தல், ஏனென்றால் நேட்டோ ரஷ்யாவை அதன் எதிரியாகக் கருதுகிறது. மேலும் இது அதன் ஆவணங்களில் பிரதிபலிக்கிறது. இது நடக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. மேலும் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அனைத்தையும் நாங்கள் செய்வோம் என்று பெஸ்கோவ் கூறினார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிறந்த சேவையை வழங்கக்கோரிப் போராட்டம்
சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த சேவையினை வழங்கக்கோரி இன்று வைத்தியசாலையின் முன்பாக பொது மக்களினால் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதன்போது “வைத்தியசாலையில் சிறந்த சேவையை உறுதிப்படுத்துங்கள்” “திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது” “எலும்பு முறிவுக்காக தனியான களம் வேண்டும்” “நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யுரூநு கட்டடம் திறக்கப்பட வேண்டும்” “வைத்தியர்களுக்கு விடுதி வேண்டும்” “சிற்றூழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுங்கள்” “பிரசவத்திற்காக வரும் தாய்மார்களை தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள்” நிலத்தில் காட்போட் அட்டையில் படுக்கும் நிலை வேண்டாம்” போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படடிருந்தது. குறித்த மகஜரில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் தரமானது குறித்த வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப இல்லை எனவும் இதனாலேயே பல சிரமங்களுக்கு நோயாளிகள் முகம் கொடுத்து வருவதாகவும் எனவே வைத்திசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தரமான சேவையை நோயாளிகள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
boAt and Zomato Amp Up Ganpati Celebrations with TRILOK’s Electric Take on “Sukhkarta Dukhharta”
Mumbai- In a bold celebration of Mumbai’s vibrant Ganesh Chaturthi festivities, TRILOK, the AI-led music collective known for fusing Indian roots with global sounds, has released a powerful reimagining of the iconic Ganpati aarti “Sukhkarta Dukhharta.” The track delivers a high-energy blend of rock, electronic beats, and desi percussion, creating a sound that is both deeply devotional and unmistakably street-ready.The launch is supported by boAt, India’s leading audio wearable brand, and Zomato, the country’s prominent food ordering and delivery platform. Together, they’ve amplified the reach and cultural impact of the campaign, turning it into one of the most anticipated content releases of this Ganpati season. The music video also features popular actor-creator Neel (@justneelthings), adding to its star appeal and visual dynamism. “Ganpati is all about music and devotion, the very spirit that our collaboration with Trilok has captured and celebrated over the past year. As we cherish these little moments of togetherness, boAt is happy to have always been able to provide a platform for local talent to truly shine, and we hope this initiative brings out the best of their potential this time as well,” said a boAt spokesperson. The video is a vibrant love letter to Mumbai, capturing the city in full festive mode — crowds dancing, dhols resonating through the streets, and bursts of color painting the air. Zomato Delivery Partners are seen celebrating the spirit of the festival, joining in the city’s iconic Visarjan processions. TRILOK rides through the streets on a decorated truck, jamming live with percussionists and connecting directly with the people.With its raw energy and innovative sound, the track offers a modern tribute to tradition, bridging the gap between the sacred and the contemporary.https://www.youtube.com/watch?v=vBYgQZa45kU
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் போராட்டம்!
பலஸ்தீனில் தற்போது இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற குற்றச்செயல்கள், இனப்படுகொலைகள் மற்றும் பசியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை எதிர்த்து, இன்று (05) வெள்ளிக்கிழமை மூதூரில் ஒரு பாரிய கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.இப்பேரணி மூதூர் அக்கரைச்சேனை ஜும்மா பள்ளிவாசல் முன்பாக ஆரம்பித்து, நடைப்பவனாக மூதூர் பிரதேச செயலாளர் அலுவலகம் வரை சென்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் நேரடியாக பிரதேச செயலாளரை சந்தித்து, பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட மனிதாபிமான சிக்கல்கள் குறித்து தங்களது கவலைக்குரிய கோரிக்கைகளை மகஜராக கையளித்தனர். பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பலஸ்தீன மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், பலஸ்தீனை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உறுதியான கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியில் பொதுமக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு, தங்களது இஸ்ரவேல் இராணுவத்திற்கு எதிர்ப்பு காண்பித்தனர்.இந்நிகழ்வானது மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அமைதியாக நடைபெற்றது.
எல்ல பேருந்து விபத்து தொடர்பில் சாரதியின் உதவியாளரின் வாக்குமூலம்
எல்ல பேருந்து விபத்தின் போது பேருந்திலிருந்த சாரதியின் உதவியாளர், விபத்து குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ”நான் எனது சகோதரருடன் உதவியாளராக வந்தேன். வழியில், வேகக் கட்டுப்பாடு தடையாளி (Brake) இயங்கவில்லை என்று அவர் கூறினார். நான் கீழே சென்றேன், அனைவரையும் கீழே இறங்கி இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என கூறினேன். எனக்கும் அதிகம் நினைவில் இல்லை. பேருந்து பலத்த சத்தத்துடன் இரண்டு முறை பாதுகாப்பு வேலியில் மோதி பள்ளத்தில் வீழ்ந்தது. மக்கள் பேசும் சத்தம் கேட்டு […]