SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
...

கிரீஸ்: அகதிகள் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 20 பேர் மாயம்

ஏதென்ஸ் கிரீஸ் நாட்டில் இருந்து கடல் வழியாக அகதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வேலை, சிறந்த வாழ்வை தேடியும், பிற விசயங்களுக்காகவும் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். எனினும், சட்டவிரோத வகையிலான இந்த படகு பயணத்தில் ஆபத்தும் உள்ளது. இந்த நிலையில், கிரீட் தீவின் தெற்கு கடற்கரை பகுதியில், கடலில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 அகதிகள் பலியானார்கள். 20 பேர் காணாமல் போயுள்ளனர். சம்பவத்தின்போது, படகில் இருந்து வர்த்தக கப்பல் ஒன்றில் ஏணி வழியே அகதிகள் […]

அதிரடி 23 Feb 2026 3:30 am

லண்டனில் போதை கும்பல் அட்டகாசம் ; பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் அதிர்ச்சி குற்றச்சாட்டு

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சில கிரிமினல் கும்பல்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து செயல்படுகின்றன என ஆங்கில ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, குறிப்பாக 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் குறிவைக்கப்படுகின்றனர். பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்கி அவர்களை வலையில் இழுக்கும் கும்பல்கள், பின்னர் போதைப்பொருள் பழக்கத்திற்கும் அடிமையாக்குகின்றன என கூறப்படுகிறது. சிறுமிகள் முழுமையாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற […]

அதிரடி 23 Feb 2026 1:30 am

மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை –சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!

மெக்சிகோவின் (Mexico) மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடற்கரை சுற்றுலா நகரமான Puerto Vallartaவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ… The post மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை – சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Feb 2026 1:06 am

சோமாலியாவில் உணவு விநியோகம்: நிதிநெருக்கடியால் விரைவில் நிறுத்தம்? ஐ.நா. எச்சரிக்கை

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி மற்றும் உள்நாட்டுப் போா் காரணமாக, அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முழுமையாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது. சா்வதேச நாடுகளிடம் இருந்து போதிய நிதியுதவி கிடைக்கப் பெறாததே இந்த இக்கட்டான நிலைக்குக் காரணம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சோமாலியாவில் தொடா் வறட்சி மற்றும் அதிகரித்து வரும் மோதல்களால் சுமாா் 44 லட்சம் […]

அதிரடி 23 Feb 2026 12:30 am

இலங்கையில் பரீட்சை நிலையத்தில் அடிதடி ; காயத்துடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்

வலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்கமுவ மற்றும் பன்னல பிரதேச பாடசாலைகளைச சேர்ந்த, சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (21) அழகியல் பாடத்திற்கான இடைவேளையின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அறிந்த வலப்பனை காவல்துறையினர், உடனடியாக பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளருடன் கலந்துரையாடினர். விசேட ஏற்பாடுகள் இதன்போது காயமடைந்த 5 மாணவர்களும் அழகியல் பாடத்தின் இரண்டாம் பகுதி […]

அதிரடி 22 Feb 2026 11:30 pm

நைஜீரியா மோட்டார் பைக் கொள்ளையர்கள் சுட்டதில் 50 பேர் பலி

நைஜீரியாவில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிலில் வந்து கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 50 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில்,போகோ ஹராம், ஐ.எஸ்., போன்ற பயங்கரவாதிகளுடன், ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்களும் ஏராளமாக உள்ளன. அந்த கும்பல் கடத்தல், கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு கெப்பி மாகாணத்தில், லகுராவா என்ற ஆயுத கும்பல் கால்நடைகளுக்காக 33 பேரை சுட்டுக்கொன்றது. இந்நிலையில், மற்றொரு ஆயுத கும்பல், வடமேற்கு […]

அதிரடி 22 Feb 2026 10:30 pm

ஐரோப்பாவில் புதிய பதற்றம் ; ரஷிய எண்ணெய் விநியோகத் தடை

ரஷியாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் உடனடியாகச் சீரமைத்து தொடங்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி மற்றும் மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. உக்ரைன் போரை முன்னிட்டு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் தங்கள் எரிசக்தி தேவைக்காக இப்போதும் ரஷியாவையே நம்பியுள்ளன. எனவே, அந்நாட்டுடன் இணக்கமான உறவைப் பேணி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில், […]

அதிரடி 22 Feb 2026 9:30 pm

டித்வா புயலினால் மண்சரிவுக்குள்ளான பகுதியில் மீண்டும் ஆபத்து

டித்வா’ புயலினால் ஏற்கனவே மண்சரிவுக்குள்ளான அரநாயக்க பகுதியில் நேற்று மழை பெய்ததால் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளுக்கு இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அரநாயக்க நகரில் இருந்து தோதல்தோய வரை செல்லும் பிரதான வீதி நடுவே மிகவும் அபாயகரமான முறையில் வெடித்துத் தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தோதல்தோய கிராமத்திற்கு வாகனங்களில் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மாற்று வீதியான புவக்வத்த வீதியும் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளது.

அதிரடி 22 Feb 2026 9:30 pm

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க மறுத்ததால் பழிவாங்கினர்- தந்திரி வெளிப்படுத்திய தகவலால் விவாதம்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரக பலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முன்னாள் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைதுசெய்யப்பட்டிருந்தார். சுமார் 41 நாள்கள் சிறைவாசத்திற்குப் பின் அவருக்கு கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவால் வலுவான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. கூட்டுச்சதியில் அவர் ஈடுபட்டதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோயில் பூஜைகள் உள்ளிட்ட தாந்திரீக விஷயங்களுக்கு மட்டுமே தந்திரி பொறுப்பானவர் ஆவார் எனவும் கோர்ட் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தடையாக இருந்ததால் பழிவாங்கும் விதமாக அரசு இந்த வழக்கில் கைதுசெய்துள்ளதாக தந்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட்டில் தந்திரி கண்டரரு ராஜீவரரு சமர்ப்பித்த ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் தந்திரி கூறியுள்ளதாவது: ``சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பதை தடுத்ததைத் தொடர்ந்து பழிவாங்கும் விதமாக தங்கம் கொள்ளை வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்கவைத்துள்ளனர். சபரிமலை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை திருப்திபடுத்தும் விதமாக சில போலீஸ் அதிகாரிகள் இளம்பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க முயன்றனர். அதற்கான முயற்சிகள் நடந்தபோது பூஜைகளை நிறுத்தி வைப்பேன் என்றும், கோயிலை விட்டு வெளியேறிவிடுவேன் எனவும் நான் தெரிவித்தேன். கோயிலுக்குள் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டேன் என தீர்க்கமான முடிவை எடுத்தேன். சபரிமலை கோயிலை தினமும் திறக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டியதையும் எதிர்த்ததாலும், அரசுக்கு என்மீது கோபம் இருந்தது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றியை நான் சபரிமலைக்கு அழைத்துவந்தது போன்று சித்திரிக்கும் விதமாக சில விஷயங்களை  விசாரணைக்குழு மறைத்துவைத்தது. சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே சமர்பித்த இரண்டு அறிக்கைகளிலும் எனது பெயர் இல்லை. திடீரென எனது பெயரை சேர்த்துள்ளனர். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு சபரிமலை கோயில் ஆசாரங்கள், அனுஷ்டானங்கள், பூஜைகள் ஆகியவை மட்டுமே எனக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ, சொத்துக்களை பராமரிப்பதிலோ தந்திரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. தேவசம்போர்டு வழிகாட்டு நெறிமுறைகள்படி கோயிலில் விலைமதிப்புமிக்க பொருள்கள் மற்றும் திருவாபரணங்களை கணக்கெடுப்பது, பாதுகாப்பது போன்றவை தேவசம்போர்டுக்கு மட்டுமே உள்ள பொறுப்பு ஆகும். நிர்வாகத்தின் முறைகேடுகளை தடுக்க எனக்கு சட்டப்பூர்வமான பொறுப்பு இல்லை. அதனால், இதுபோன்ற விஷயங்களில் நான் பதில் கூறாமல் இருப்பதை குற்றத்துக்கு கூட்டாக நின்று சதிசெய்ததாக கருதமுடியாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவை ஆளும் சி.பி.எம் அரசு சபரிமலை விவகாரத்தில் தந்திரியை பழிவாங்கிவிட்டதாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

விகடன் 22 Feb 2026 8:47 pm

வேலூரில் விஜய் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்..- டாஸ்மாக்கை மூட உத்தரவு! ஏன்?

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சமயம் 22 Feb 2026 8:38 pm

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

பாகிஸ்தானையொட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சமீபத்திய காலமாகவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவத்தினர் பெஹ்ஷூத் மாவட்டத்தில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த […]

அதிரடி 22 Feb 2026 8:30 pm

மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டாலின் பேச்சு

fமதுரை உத்தங்குடியில் தென் மண்டல வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”வீரம் என்றால் மதுரை. பாசம் என்றால் மதுரை. கோவில் என்றால் மதுரை. சாப்பாடு என்றாலும் மதுரை. இங்கு எல்லாமே ஃபேமஸ் தான். இப்படிப்பட்ட மண்ணில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி மாநாடு நடைபெறுவது பெருமை. அமைச்சர் மூர்த்திக்கு ஒரு பழக்கம் உண்டு எதையும் சிறிதாகச் செய்ய தெரியாது  எல்லாமே பிரமாண்டம்தான். நாமதான் ஜெயிக்கிறோம் எப்பவுமே நாமதான் ஜெயிக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலின் போது BLA-2 உறுப்பினர்களுக்கான பயிற்சியை மண்டல வாரியாக நானே சென்று நடத்தினேன். அதனால்தான் 40க்கு 40 என்ற வெற்றியைப் பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முறையில் ஆப் மூலமாக 1 கோடியே 10 லட்சம் குடும்பங்களை இணைத்தோம். எஸ்ஐஆர் வாக்காளார் சிறப்பு சீர்திருத்தின் போது பலரிடm வாக்குகளும் நீக்கப்பட வாய்ப்பு இருந்த நிலையில்  அதை பாதுகாத்தது நமது இயக்கம் தான். மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் BLC 75,032 பேர், BDAவில்  5 லட்சத்து 50 ஆயிரம் பேர் என மொத்தம் சுமார் ஏழு லட்சம் பேர். வருகிற தேர்தலில் நமது வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த ஏழு லட்சம் பேர்தான். 2019 முதல் எல்லா தேர்தல்களிலும் வெற்றிமேல் வெற்றி தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை மக்கள் தந்தார்கள். இப்போது அதைவிட அதிக திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் 350 வாக்குகள் இலக்கு. அதை செய்தால் 2 கோடி 50 லட்சம் வாக்குகளை பெற முடியும். இந்த தேர்தலில் 2.5 கோடிக்கு குறையாத வாக்குகளை பெற வேண்டும். அதை வாங்கிக் கொடுப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு தேவையானதை செய்து தருவது என் பொறுப்பு. மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த இரண்டு மாதம் நமக்கு நோ ரெஸ்ட். ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது ஐந்து முறை நேரில் சந்திக்க வேண்டும். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் எல்லாம் இருக்கட்டும். ஆனால் வீட்டு வாசலில் சென்று கையெடுத்து கும்பிட்டு வாக்கு கேட்பதற்குச் சமம் எதுவும் இல்லை. வாக்குப்பதிவு முடிந்து சீல் வைத்து எடுத்துச் செல்லும் வரை கவனம். கடைசி வாக்கு எண்ணப்படும் வரை கவனம். தேர்தல் தேதி எப்போது வந்தாலும் பரப்புரை நம்மால் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை முடக்க முயன்றதை முறியடித்து முன்கூட்டியே வழங்கினோம். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதை 2000 ஆக கொடுப்போம். மக்களுக்காக கொடுத்தால் அது தமிழக அரசு. மக்களிடமிருந்து எடுத்தால் அது ஒன்றிய அரசு. எந்த தொகுதியில் யார் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்து கொள்கிறேன். கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன. மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகிறார். அவரிடம் மதுரை மெட்ரோ எங்கே?, கோவை மெட்ரோ எங்கே?, தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் எங்கே?, கீழடி அறிக்கை ஏன் வெளியிடவில்லை?, நீட் விலக்கு ஏன் தரவில்லை? என மக்கள் நீங்கள் கேட்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனுக்காக கேட்க வேண்டியதை எடப்பாடி கே. பழனிசாமி கேட்கவில்லை. அந்த பயந்தகோலி பழனிசாமி போல இருக்க மாட்டோம், நாங்கள் பயப்பட மாட்டோம். இந்தியாவிலேயே அதிக வழக்குகளை சந்தித்து வரும் கட்சி திமுக. மிசா, தடா, எமர்ஜென்சி பார்த்த இயக்கம் திமுக. சிபிஐ, இ.டி, ஐ.டி எதற்கும் அஞ்ச மாட்டோம். மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மாதங்களில் ஏழு மாநாடுகள். ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் பேரை சந்தித்துள்ளேன். இப்போது காட்டுவது ட்ரைலர் தான். திருச்சியில் மார்ச் 9ஆம் தேதி பத்து லட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடு பார்க்கப் போகிறது. மெயின் பிக்சர் திருச்சியில் உள்ளது. மக்களிடம் கேளுங்கள்  தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இந்தப் போரில் தமிழ்நாடு வெல்லும். ஒன்றாக இந்தி திணிப்பை எதிர்த்து வெல்வோம். ஒன்றாக மாநில சுயாட்சியை மீட்க வெல்வோம். உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக இருக்க வேண்டும்  இது என் வாக்குறுதி” என்றார்.

விகடன் 22 Feb 2026 7:48 pm

ரஜினிகாந்த் –கமல்ஹாசன் கூட்டணி: 47 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் இந்திய சினிமாவின் இரு துருவங்கள்

இந்தியத் திரையுலகின் இரு பெரும் ஆளுமைகளான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சினிமா துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 22 Feb 2026 7:42 pm

மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்!

அரை நூற்றாண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது! நாசா (NASA) தனது அதிரடித் திட்டமான ஆர்டெமிஸ் (Artemis) திட்டத்தின்… The post மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 7:39 pm

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் இன்று (22) கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை பிராந்திய உதவி […]

அதிரடி 22 Feb 2026 7:04 pm

பணம், போதை, பாலியல் துன்புறுத்தல்.. லண்டனில் சிறுமிகளுக்கு நிகழும் கொடுமை –திடுக்கிடும் தகவல்கள்

லண்டன், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், இந்த கும்பல்களால் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சூழலில், லண்டனில் போதைப்பொருள் கும்பல்களால் சிறுமிகளுக்கு நிகழும் கொடுமைகள் குறித்து ஆங்கில நாளிதழில் வெளியாகியிருக்கும் அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து […]

அதிரடி 22 Feb 2026 6:30 pm

விபத்துக்குள்ளான நண்பர்களை பார்க்கச்சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

காலி, தடல்ல மயானத்திற்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இளைஞர் பலி சம்பவத்தில் உயிரிழந்தவர் கிந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார். காயமடைந்த ஏனைய இரு இளைஞர்களும் கிந்தோட்டை மற்றும் தடல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை ரத்கம, பிந்தாலிய சந்தியில் விபத்துக்குள்ளான […]

அதிரடி 22 Feb 2026 6:21 pm

சிவனொளிபாதமலைக்கு சென்ற யாத்தீரிகருக்கு நேர்ந்த கதி

சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற 81 வயதுடைய ஆண் ஒருவர் திடீரென ஏற்பட்ட சுகவீனத்தால் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். உடற்கூற்று பரிசோதனை இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று காலை சிவனடிபாதமலைக்கு அவரது குடும்பத்தினருடன் செல்லும் போது கடும் சுகவீனம் காரணமாக மலை உச்சியில் இருந்து மிகவும் சிரமத்தின் மத்தியில் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து அவசர அம்பூலன்ஸ் மூலம் கிளங்கன் […]

அதிரடி 22 Feb 2026 6:16 pm

2 தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை-அம்பாறையில் முன்னெடுப்பு

நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கையெழுத்து சேகரிக்கின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (22) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாகவும் கையெழுத்து சேகரிக்கும் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இக்கையெழுத்து சேகரிக்கும் பணியானது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை […]

அதிரடி 22 Feb 2026 6:13 pm

எச். ராஜா உடல்நலம் குறித்து விசாரித்த துணை குடியரசுத் தலைவர்.. எச். ராஜாவின் பதில் என்னவாக இருந்தது?

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் விசாரித்தார்.

சமயம் 22 Feb 2026 5:38 pm

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

திருப்பூரில் பயங்கரவாதச் சதித் திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை கைது தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை தில்லி காவல் துறையினர் தமிழ்நாட்டின் திருப்பூரில் கைது செய்தனர்.

அதிரடி 22 Feb 2026 5:30 pm

36 ஆண்டு கால ஏக்கம் –மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?

மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி… The post 36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 5:15 pm

கும்பகோணம்: பாமக மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு! - பின்னணி என்ன?

கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி 3-ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு வயது 20. திருமங்கலக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவருக்கும் வயது 20. இருவரும் பள்ளி படிக்கும் போதிலிருந்தே பழகி வந்துள்ளனர். பாலகிருஷ்ணன் அந்த மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாணவிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயம் செய்திருந்தனர். ம.க.ஸ்டாலின் இதையடுத்து கடந்த 17-ம் தேதி கல்லூரிக்கு வந்த மாணவியிடம் பேச வேண்டும் என்ற பாலகிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயற்சி செய்ததாவும், இதற்கு மாணவி மறுத்ததால் அவரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் மாணவி மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். இதை தொடர்ந்து மாணவனை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வலுகட்டாயமாக தாலி கட்டுவதற்கு செய்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க-வினர் (ராமதாஸ் அணி) ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக அறிவித்ததுடன், கும்பகோணம் பகுதியில் போஸ்டரும் ஒட்டினர். இந்நிலையில் வருகிற 27ம் தேதிக்குள் மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் 28ம் தேதி அன்று ஆடுதுறையில் கடையடைப்பு செய்து, ஊர்வலம் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தங்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து மற்றும் பதிவுகளை பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணனின் அம்மா கும்பகோணம் மேற்கு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீஸார் ம.க.ஸ்டாலின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 22 Feb 2026 4:59 pm

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3: விறுவிறுப்பான LIVE COOKING! இறுதிச்சுற்றுக்கு சென்ற மூவர்!

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டி நேற்று திண்டுகல்லில்  சிறப்பாக நடைபெற்று முடிந்தது, போட்டியின் விதிமுறை படி வீட்டிலிருந்தே  சமைத்து எடுத்து வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த போட்டியில் மொத்தம் 125 போட்டியாளர்கள், தக்காளி அல்வா, நெல்லிக்காய் லேகியம், வெற்றிலை பாயசம் என பலவகையான உணவுகளை வைத்து திண்டுக்கல்லையே மணக்க வைத்தனர். முதல் சுற்றில், தரமான சுவை, ஆரோக்கியம், செய்முறை  போன்ற அடிப்படைகளை கொண்டு அடுத்த கட்ட சுற்றிற்கு 10 நபர்களை தேர்வு செய்தார் போட்டியின் நடுவர் செஃப் தீனா. முதல் சுற்று முடிந்து காத்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஜாலியான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.  சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3 சத்யா, சௌபாக்யா, நாகா, அஸ்வின் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட ஸ்பான்சர்கள்  மூலம், எந்த சீசனிலும்  இல்லாத அளவில் 25 பேருக்கு முதல் சுற்றில் வீட்டில் சமைத்து காட்சிப்படுத்திய உணவுகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது, இதில் நாகா சுவை சாம்பியன் பட்டத்தை  சுவாதி தட்டி சென்றார். இரண்டாவது சுற்றில் லைவ் குக்கிங் செய்யப்பட்டது, நாகா பிராண்ட், சக்தி மசாலா, கோல்ட் வின்னர், போன்ற பொருட்களை வைத்தும் அதனுடன் ஒரு இனிப்பு உணவையும் சேர்த்து சமைக்க வேண்டும் என்பதுதான் இரண்டாவது சுற்றின் விதிமுறை. ராகி அடை, முட்டை தொக்கு, சிக்கன் பெப்பர் ட்ரை, வெஜ் போண்டா, ரவா லட்டு, சிக்கன் சிப்ஸ், உப்பு கறி, கறிவேப்பிலை சிக்கன், பன்னீர் எக், ராகி ரொட்டி, ஜவ்வரிசி பாயசம், சிக்கன் கிரேவி, ரவா ஸ்வீட், கார்ன் ப்ஃளவர் ஸ்வீட், ராகி மாவு கைமா, கேசரி என பத்து போட்டியாளர்களும் பலவகையான ரெசிபிகளை  செய்து அசத்தினர். சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3 இதில் கடும் போட்டி நிலவியது. இதன் முடிவில் உமா மோகன், விஜய், துர்கா பாய் ஆகிய மூவரையும் தேர்வு செய்தார் செஃப் தீனா, இவர்களின் ரெசிபிகள் அனைத்தும் அனைவரது நாவையும் கட்டி இழுத்தது. இதில் ட்விஸ்ட் ஆக ஒரு போட்டியாளரை மட்டும் தேர்வு செய்து அறிவிக்காமல் அந்த ஒரு நபரை மட்டும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக சென்னைக்கு அழைக்க இருக்கின்றனர். இதனையடுத்து, சக்தி மசாலா, லலிதா ஜுவல்லரி, ஆர் கே ஜி நெய்,அஸ்வின் ஸ்வீட்,நாகா, கோல்ட் வின்னர், சௌபாக்யா, சுப்ரிம் ஃபர்னீசர், இந்தியன் ஆயில் போன்ற ஸ்பான்சர்கள் மூலம் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கபட்டது, லைவ் குக்கிங்கில் கலந்துகொண்ட மற்ற ஏழு நபர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3 இரண்டாவது சுற்றில் தகுதி பெற்ற மூவரும் சென்னையில் நடக்கவிருக்கும் இறுதி போட்டியில் பங்கேற்ப்பார்கள்.

விகடன் 22 Feb 2026 4:54 pm

காற்றில் பறக்க விடும் போலி திராவிட மாடல்.. விஷம பிரச்சாரம் செய்யும் திமுக கூட்டணி.. எல். முருகன் கண்டனம்!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு என்ன செய்தது? டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தனர்? என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சமயம் 22 Feb 2026 4:49 pm

எடப்பாடி தொகுதியில் 3வது இடம் பிடிச்ச பழனிசாமி… அதிமுக தோற்ற வரலாறு… எந்த தேர்தல், என்ன காரணம்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வரும் நிலையில், இவர் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வி அடைந்த வரலாறு தெரியுமா? அப்போதைய கள நிலவரம் குறித்து விரிவாக அலசலாம்.

சமயம் 22 Feb 2026 4:44 pm

முன்னாள் மனைவிக்கு 4 கோடி ரூபாய் காரை பரிசளித்த ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். ஹர்திக் பாண்டியா – நடாஷா கணவன், மனைவியாக இருவரும் பிரிந்தாலும், ஒரு பெற்றோராக தங்களது மகன் அகஸ்தியா வளர்ப்பிலும், நலனிலும் எந்த குறையும் இல்லாமல் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கிற்கும், தனது மகன் அகஸ்தியாவிற்கும் சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான கருப்பு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக கொடுத்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. Hardik Pandya gifted a 4 crore worth Black Defender to his son Agastya Pandya and ex-wife Natasa Stankovic ❤️ - Hardik Pandya taking care of his ex-wife even after the divorce. - Hardik Pandya is truly a gentleman pic.twitter.com/98bH1evA7H — Cricket Central (@CricketCentrl) February 22, 2026

விகடன் 22 Feb 2026 4:41 pm

யாழில். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மக்கள விளக்கு ஏற்றி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. இவ் பேராளர் மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதிரடி 22 Feb 2026 4:40 pm

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த போராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததாகவும் , அதன் போது வாகனத்தை நிறுத்தது சென்றமையால் , வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வாகன சாரதியான சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். நிற்காமல் சென்ற வாகனத்தினை பொலிஸார் […]

அதிரடி 22 Feb 2026 4:32 pm

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு செல்ல 36 வருடங்களாக அனுமதி கோரி காத்திருக்கும் மக்கள்

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் திருவிழா செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அப்பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதனால் கடந்த 36 வருடங்களாக அப்பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதியை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இம்முறை காணிக்கை மாத ஆலய திருவிழாவை ஆலயத்தில் செய்வதற்கு ஏதுவாக ஆலய சூழலை விடுவித்து தருமாறு, ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , இராணுவ தளபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் , எவ்விதமான சாதகமான பதில்களும் தமக்கு கிடைக்கவில்லை என மயிலிட்டி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மயிலிட்டி புனித காணிக்கை மாதா ஆலயமானது 1850 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த ஒரு கத்தோலிக்க ஆலயமாகும். இவ் ஆலயத்துடன் இணைந்ததாக மயிலிட்டி றோ.க பாடசாலை,கன்னியர் மடம்,குருவானவரின் பங்கு பணிமனை,கோயிலுக்கு சொந்தமான தோட்டக்காணி உள்ளடங்கலாக அண்ணளவாக 52 பரப்பு கொண்ட இடமாக காணப்படுகின்றது. எமது ஊரினை வரையறுக்கும் போது முழுவதுமே கடற்கரையை அண்டிய பிரதேசமாக காணப்படுகின்றது. அதாவது பருத்தித்துறை பொன்னாலை வீதிக்கு வடக்கு தெற்காக 300 தொடக்கம் 500 மீற்றர் நீளமான பிரதேசமாக காணப்படுகின்றது. இதிலும் எமது கோயில் காணியில் ஒரு பகுதியை மட்டுமாவது விடுவிப்பு செய்வதற்குரிய நடவடிக்கையினை செய்து தரும் பட்சத்தில் ஒரு ஆலயத்தினை கட்டி எமது மக்கள் அனைவரும் சேர்ந்து திருப்பலியில் பங்குபற்றி எமது ஆன்மீக தாகத்தினை தீர்த்துக்கொள்வதற்கு எமது ஆலய காணியினை விடுதலை செய்து தாருங்கள். ஆலய காணியினை பெற்றுக்கொள்வதற்காக யாழ்பாண ஆயர்,கொழும்பு கர்தினால் ஆயர்,பாதுகாப்பு அமைச்சு, கடற்தொழில் அமைச்சர், யாழ்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்கள், ஜனாதிபதி செயலாளர், இராணுவ அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் இதுவரைக்கும் எந்த ஒரு சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை. நாம் வன்முறையினை விரும்பாத மக்களாக எந்த ஒரு அரசியல் செல்வாக்கும் இல்லாதவர்களாக கடவுளின் கையில் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, எமது காணிக்கை மாதாவை வழிபட பலவேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

பதிவு 22 Feb 2026 4:32 pm

வரிகளை ரத்து செய்த அமெரிக்க உயர்நீதிமன்றம்; கனடா மீது நீடிக்கும் வரிகள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனினும் இது கனேடிய தொழிலாளர்களுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி அல்ல என கனடாவின் மிகப்பெரிய தனியார் துறை தொழிற்சங்கமான Unifor தெரிவித்துள்ளது. “இந்தத் தீர்ப்பு ட்ரம்ப்பின் வரிகள் சட்டவிரோதமானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், கனேடிய தொழிலாளர்கள் இதனை வெற்றியாகக் கருதக்கூடாது” என Unifor தேசியத் தலைவர் லானா பெய்ன் தெரிவித்துள்ளார். வரிகள் இப்போதும் அமுலில் உள்ளன கனடா மீது , வாகன உற்பத்தி, உருக்கு, அலுமினியம் […]

அதிரடி 22 Feb 2026 4:30 pm

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய பொதுப் பட்டமளிப்பு வைபவம் கடந்த நான்கு நாள்களில் 12 அமர்வுகளாக நடைபெற்று இன்று நிறைவடைந்தது. இம்முறை 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதிரடி 22 Feb 2026 4:17 pm

ஜெ. பிறந்த நாளில் தொண்டர்களுக்கு ஈபிஎஸ் தரும் கிஃப்ட்.. ராஜேந்திர பாலாஜியின் பங்கு என்ன?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி (நாளை மறுநாள்), அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.

சமயம் 22 Feb 2026 3:57 pm

13 வருடங்களுக்கு முன் தனுஷ் சாருடன் வந்தேன்; முதல் வரிசையில் உட்கார எனக்கு..! - சிவகார்த்திகேயன்

70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது. இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. சிவகார்த்திகேயன் - தனுஷ் விருது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், இந்த Filmfare விருது தான் எனது முதல் விருது. 13 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு தனுஷ் சாருடன் தான் வந்தேன். அவர் தான் 'சும்மா வா... ஜாலியாக போயிட்டு வரலாம்' என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது. இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகள் இருக்கிறது. 'அமரன்' படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது 'அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்' என்று சொன்னேன். அதேபோல இந்த படம் இன்னும் எனக்கு விருதுகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்தினருக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இந்த படத்திற்காக நான் கமல்ஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்த எக்கச்சக்கமான Filmfare விருதுகளை பார்த்தேன். அமரன் அப்போது 'அமரனுக்காக எனக்கும் கிடைக்கும்' என்று நினைத்தேன். இன்று அது கிடைத்திருக்கிறது. நான் மிகவும் சீரியஸான நபர் கிடையாது. ஜாலியான நபர் தான். ஆனால் அமரன் மாதிரி ஒரு சீரியஸான படத்தில் நடித்த பிறகு 'ஏன் இப்படிச் செய்தாய்?' என்று யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பாராட்டினார்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி. முக்கியமாக என் ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை அடித்து துவைத்தாலும், மிதித்தாலும் என்னை தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருப்பது நீங்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று Filmfare விருதுடன் மேடையில் நிற்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 22 Feb 2026 3:56 pm

அடுத்தடுத்து 2 திமுக அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதி- அமைச்சர்களுக்கு என்ன நடந்தது?

திமுகவின் முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமயம் 22 Feb 2026 3:53 pm

நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்!

யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவினார் மலாயாவின் முஸ்லிம் மன்னர்! 1927 இல், மலாயாவில் வெளியான புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்… The post நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 3:35 pm

️ சிலாபத்தில்  2 கோடி பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இருவா் கைது

சிலாபம், தொடுவாவ பகுதியில் சுமார் 20 மில்லியன் ரூபா (2 கோடி) பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இரண்டு சந்தேக… The post ️ சிலாபத்தில் 2 கோடி பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இருவா் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 3:30 pm

️ சிலாபத்தில்  2 கோடி பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இருவா் கைது

சிலாபம், தொடுவாவ பகுதியில் சுமார் 20 மில்லியன் ரூபா (2 கோடி) பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இரண்டு சந்தேக… The post ️ சிலாபத்தில் 2 கோடி பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இருவா் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 3:30 pm

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் அதிரடி வான்வழித் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் இன்று (பெப்ரவரி 22, 2026) அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நங்கர்ஹார்… The post ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் அதிரடி வான்வழித் தாக்குதல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 3:20 pm

  களுத்துறையில்   புகையிரத விபத்தில்  இரு இளைஞர்கள் பலி

இன்று காலை (பெப்ரவரி 22, 2026) களுத்துறை பகுதியில் இடம்பெற்ற கோர புகையிரத விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள்… The post களுத்துறையில் புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 3:14 pm

இந்த அரசாங்கம் எனது மகனுக்கு நீதியை பெற்று தர வேண்டும்

எனது மகனை சுட்டு படுகொலை செய்த காவல்துறையினரை பாதுகாக்காது மகனுக்கு நீதியை பெற்று தர இந்த அரசாங்கம்… The post இந்த அரசாங்கம் எனது மகனுக்கு நீதியை பெற்று தர வேண்டும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 2:56 pm

குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் - சுரேஷ் கோபி

கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், குருவாயூர் தேவசம் போர்டின் தலைவராகி குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. அதைத்தாண்டி நான் வேறு எதுவும் விரும்பவில்லை. இப்போது நான் இருக்கும் நிலை எனது ஆசை அல்ல. இதைச்சொல்வதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன். இல்லையென்றால், வட இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் 'சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குருவாயூர் தேவசம் போர்டு தலைவராகப் போய்விட்டார்' என்று கிளப்பிவிட்டுவிடுவார்கள். ஒருவிதத்திலும் வாழமுடியாத நிலை ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய பல பெண்கள் இருக்கிறார்கள். அது என் பாட்டியிடம் இருந்து தொடங்குகிறது. என் பாட்டி சுவையான மற்றும் சத்தான உணவை சமைத்துக் கொடுத்தார். பின்னர் அதை என் அம்மா ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு என் சக்தியாக மனைவி ராதிகா உள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி பிள்ளைகளை வளர்ப்பதில் என் மனைவி ராதிகா முக்கிய பங்குவகித்தார். அதை எல்லாம் நான் முக்கிய விஷயமாக பார்க்கிறேன். என் வருமான கணக்குகளை பார்த்தால் என் மனைவிக்கு நான் அளிக்கும் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியவரும். எனக்கு ஒரு பிளாட் இருக்கிறது என்றால், அதில் ஒரு தளம் என் பெயரிலும், அடுத்த தளம் என் மனைவி பெயரிலும் இருக்கும். எனது சொத்துக்களில் பாதி என் மனைவி பெயரில் இருக்கும். என் பெயரில் ஒரு சொத்து இருந்தால், என் மனைவி ராதிகா பெயரில் இரண்டு சொத்துக்கள் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். சுரேஷ்கோபி மத்திய அமைச்சர் பதவியைத் தவிர, மற்ற எல்லா ஆவணங்களிலும் என் மனைவிக்கு சமமான பங்கு அளிக்கும் வகையில் நான் ஒரு தெளிவான கோட்டை ஏற்படுத்தி உள்ளேன். அந்தக் கோடு என் இதயத்திலும் உள்ளது. அரசியல் ஆர்வலராக மாறுவதற்கான தகுதி நேர்மையாகும். இந்தத் தகுதி நமக்கு இருந்தால், நம் எதிரிகள் நம்மைப் பார்த்து பயப்படுவார்கள் என்றார்.

விகடன் 22 Feb 2026 2:47 pm

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.… The post யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 2:41 pm

நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேறுசில கட்சிகளை இணைக்க திட்டம் இருக்கிறது என்றும் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவால் தொகுதிகளை தியாகம் செய்ய வேண்டும் என்றும் திமுக கூறியது. ஸ்டாலின்- காதர் மொகிதீன் 5 தொகுதிகளை தராவிட்டால் 4 தொகுதிகளையாவது தர வேண்டுமென்று கேட்டுள்ளோம். கடந்த முறை 3 தொகுதிகளை தந்த திமுக இம்முறை 2 தொகுதிகளை அளிக்க முன்வந்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் அழைப்பு வரும். போட்டியிட சின்னம் சார்ந்து எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு ஏணி சின்னம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை சின்னம் பிரச்னை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 22 Feb 2026 2:34 pm

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி? தவெக கூட்டத்தில் ரகசியத்தை போட்டுடைத்த ஆதவ் அர்ஜூனா!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா முன்மொழிந்தார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 22 Feb 2026 2:33 pm

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம்

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி… The post தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 2:31 pm

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம்… The post ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 2:19 pm

இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை

இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம்… The post இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 2:07 pm

TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர். செயல்வீரர்கள் கூட்டம் ஆதவ் அர்ஜூன் பேசுகையில், 'பிகில் படத்தில் 'நம்ம ஆளுங்களை எல்லாம் அடிச்சிட்டாங்க' என ட்ரைவர் சொல்ல 'உடனே அந்த இடத்துக்கு வண்டியை விடு'னு தலைவர் சொல்வார். 'தொக்கா மாட்னானுக' என தலைவர் வசனம் பேசிவிட்டு கார் கதவை திறக்கையிலேயே 5 பேர் பறப்பார்கள். துறைமுகம் தொகுதியில் அமைதியாக பிரசாரம் செய்த எங்கள் நிர்வாகிகள் மீது கை வைத்ததால்தான் தலைவர் முதலில் வட சென்னையில் களமிறங்குகிறார். சென்னை எங்களின் கோட்டை என்கிறார்களே அதனால்தான் முதலில் சென்னைக்குள் இறங்குகிறோம். இனி சென்னைன்னா தவெகதான். வடசென்னையில் சேகர் பாபு என்றால் இங்கே அவரின் காட்பாதர் வி.எஸ்.பாபு இருக்கிறார். செயல்வீரர்கள் கூட்டம் வடசென்னை மக்கள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தை திமுக உருவாக்கிவிட்டது. இங்கே இருக்கும் அத்தனை மக்களும் உழைப்பாளிகள். இங்கே எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை. திமுகவுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்யவே வேண்டாம். திமுக பற்றி வைகோ பேசியவற்றை எடுத்து போட்டாலே போதும். தீயசக்தி திமுகவை வீழ்த்த கேப்டன் உருவாக்கிய கட்சி தேமுதிக. தண்ணி போட்றவன் எல்லாம் கேப்டன் இல்லனு திமுக பேசுனாங்க. ஸ்டாலின் அதை கேட்டு சிரிச்சிட்டு இருந்தாரு. கேப்டனின் ஆன்மா ஒரு போதும் இவர்களை மதிக்காது. எந்த இடத்துல அதிக வறுமை இருக்கிறதோ எந்த இடத்தில் மக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் போட்டியிட வேண்டுமென தலைவர் சொல்வார். தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பமாக இருக்கும்' என்றார். செயல் வீரர்கள் கூட்டம் ஆனந்த் பேசுகையில், 'ஆதவ் முன்வைத்த தீர்மானத்தை நாங்கள் எல்லாரும் மனதார ஏற்றுக்கொள்கிறோம். உங்களுடைய விருப்பத்தை தளபதியிடம் சொல்வோம்.' என்றார். -

விகடன் 22 Feb 2026 1:56 pm

மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை-ஒரு வாரத்தில் நான்கு உணவகங்கள் மீது நடவடிக்கை

மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள் தொடர்ச்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக பொது… The post மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை-ஒரு வாரத்தில் நான்கு உணவகங்கள் மீது நடவடிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 1:49 pm

முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம்

முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடித முகவரியை தமது முகநூலில் பகிர்ந்து , அலுவலகத்தில் வந்து கடிதத்தினை… The post முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Feb 2026 1:34 pm

திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி-இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்ப்பு!

திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்து உள்ளது. இந்த விலை இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 22 Feb 2026 1:30 pm

2030-க்குள் 28,000 கோடி டாலா் வருவாய்: ஓபன்ஏஐ இலக்கு

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனமான ஓபன்ஏஐ, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 28,000 கோடி டாலா் வருடாந்திர வருவாயை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளது. கடந்த 2024-இல் 600 கோடி டாலராக இருந்த நிறுவனத்தின் வருவாய், 2025-இல் 2,000 கோடி டாலராக மும்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் புதிய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இமாலய வளா்ச்சியை எட்ட, நிறுவனத்தின் சாட் ஜிபிடி போன்ற சேவைகளுக்காக பயனா்கள் செலுத்தும் சந்தா கட்டணங்கள் மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விளம்பர […]

அதிரடி 22 Feb 2026 1:30 pm

TVK : பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்!' - செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி செய்த நிர்வாகிகள்?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர். செயல் வீரர்கள் கூட்டம் பெரம்பூர் தொகுதியின் மாவட்டச் செயலாளரான சிவா பேசுகையில், 'தலைவருக்கு மிகவும் பிடித்த தொகுதியாக பெரம்பூர் தொகுதியை மாற்றிவிட்டேன். ஓராண்டில் 44000 பேரை தொகுதிக்குள் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறேன். இன்னும் 35 நாட்கள்தான் இருக்கிறது. ஒரு நாளும் தூங்காமல் உழைத்து தளபதியை வெல்ல வைத்து முதல்வராக்க வேண்டும்' என்றார். சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் மா.செ வி.எஸ் பாபு பேசுகையில், 'முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான். இந்தத் தொகுதியிலிருந்துதான் முதல்வர் வரப்போகிறார். திமுக, அதிமுகவில் வட்டச் செயலாளர் பதவி வாங்கவே 25 வருடம் குடும்பத்தை விட்டு விட்டு சாக வேண்டும். ஆனால், தவெகவில்தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளர் ஆக முடியும். செயல் வீரர்கள் கூட்டம் திமுக, அதிமுகவினர் என்ன செய்வார்கள் என எனக்கு தெரியும். பொதுச்செயலாளர் மட்டும் உத்தரவிட்டால் நான் அத்தனை பேரையும் ஓட விட்டு விடுவேன். திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதியெல்லாம் தவெகவுக்குதான். தலைவரை மட்டும் ஒரு நான்கைந்து முறை தொகுதிக்கு பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள்' என்றார். செயல் வீரர்கள் கூட்டம் 'பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் அத்தனை பேரும் டெபாசிட் இழப்பார்கள்' என்றார் செங்கோட்டையன்

விகடன் 22 Feb 2026 1:22 pm

திமுக தொகுதி பங்கீடு- ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திமுக தொகுதி பங்கீடு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

சமயம் 22 Feb 2026 12:53 pm

“மக்கள் போற்றும் மகத்தான தலைவர் அவர்.!- மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி

'ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர்' என பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசிய பிரதமர் மோடி, “மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதா - மோடி நான் தமிழ்நாட்டிற்கு எப்போது சென்றாலும் அந்த மாநில மக்கள் ஜெயலலிதா மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன். ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது. அந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அவரது தேசபக்தி மிகப்பெரியது. என்னுடைய முதல்வர் பதவியேற்பு விழா நடந்த பொழுதெல்லாம் அவர் நேரில் வந்து கலந்து கொண்டார். மக்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களி்ன் மனதில் என்றென்றும் இருப்பார்கள் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா. ஜெயலலிதா - மோடி ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது. ஜெயலலிதாவின் சிந்தனை மிகவும் தெளிவானது. நிர்வாகத்தை திறமையாக கையாள்வது குறித்து நாங்கள் அடிக்கடி ஆலோசித்துள்ளோம்” என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.

விகடன் 22 Feb 2026 12:53 pm

மாகாண சபைத் தேர்தல் உறுதி! வடக்கு, கிழக்கிலும் வெற்றிவாகை சூடும்: அருண் ஹேமச்சந்திரா அதிரடி

மாகாண சபைத் தேர்தலை, தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயமாக நடத்தும் என்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாம் பாரிய வெற்றியைப் பெறுவோம் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். உரிய காலத்தில் தேர்தல் நிச்சயம்அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசின் மீது […]

அதிரடி 22 Feb 2026 12:41 pm

நடு வீதியில் துடிதுடித்து பலியான இளம் யுவதி ; 24 வயது இளைஞனால் வந்த வினை

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணை அவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த […]

அதிரடி 22 Feb 2026 12:38 pm

பகவந்த் கேசரி இயக்குநர் படத்தில் 2வது ஹீரோவாக நடிக்கிறாரா கார்த்தி?: அனில் ரவிபுடி விளக்கம்

சங்கராந்தி வின்னரான மனசங்கர வரபிரசாத் காரு படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தன் அடுத்த படத்தின் ஹீரோ குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். கார்த்தியின் பெயர் அடிப்பட்ட நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 22 Feb 2026 12:35 pm

25 வயது யுவதியின் மோசமான செயல் ; இரகசிய தகவலால் பிடிபட்ட பெண்

கல்கிஸ்ஸ, வில்லியம் பிளேஸ் பகுதியில் 110 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணாவார். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 22 Feb 2026 12:33 pm

ENG vs SRI: ‘மழையால் ஆட்டம் ரத்தாக வாய்ப்பு’.. அப்படி நடந்தால்.. யாருக்கு சாதகம், பாதகம்? விபரம் இதோ!

இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதும் சூப்பர் 8 போட்டி மழை காரணமாக ரத்தாக அதிக வாய்ப்புள்ளது. இப்படி, ஆட்டம் ரத்தாகும் பட்சத்தில், யாருக்கு சாதகமாக இருக்கும், யாருக்கு பாதகமாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

சமயம் 22 Feb 2026 12:33 pm

மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவின் புதிய சிஇஓ ஆஷா சா்மா!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவான ‘எக்ஸ்பாக்ஸ்’ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஆஷா சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 38 ஆண்டுகளாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, எக்ஸ்பாக்ஸ் பிரிவின் முகமாகத் திகழ்ந்த ஃபில் ஸ்பென்சா் பணி ஓய்வு பெறுவதைத் தொடா்ந்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் கோடைக்காலம் வரை நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியைத் தொடா்ந்து, அதிகாரப் பகிா்வை சுமூகமாக முடித்துக் கொடுக்க ஃபில் ஸ்பென்சா் ஒப்புக்கொண்டுள்ளாா். புதிய சிஇஓ-ஆக பொறுப்பேற்றுள்ள ஆஷா சா்மா, […]

அதிரடி 22 Feb 2026 12:30 pm

பாலத்திலிருந்து கீழே பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்த கெப் ரக வாகனம் ; ஏற்பட்ட பாரிய சேதம்

மொனராகலை – பொத்துவில் பிரதான வீதியில், மொனராகலை நகருக்கு அண்மித்த பகுதியில் பாலமொன்றிலிருந்து கெப் வாகனம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மொனராகலை நகரை அண்டிய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த டபள் கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்திலிருந்து கீழே விழுந்து தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. மேலதிக விசாரணை எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் குறித்த வாகனத்திற்கும் பாலத்திற்கும் பலத்த சேதங்கள் […]

அதிரடி 22 Feb 2026 12:15 pm

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் - பவானந்தராஜா எம்.பி நம்பிக்கை

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான நிமலன் என்பவரை சிறையில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பிலான முக்கிய நகர்வுகளையும் எடுத்து வருகிறது. அந்நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருவதுடன் அவர்களது கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்து , உரிய தரப்புக்களுக்கு அவை தொடர்பில் அறிவித்துள்ளேன். கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலைக்கு சென்று . அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் மிக விரைவில் சாத்தியமாகும் என தான் நம்புவதாக மேலும் தெரிவித்தார் .

பதிவு 22 Feb 2026 11:57 am

அதிவேக ரயிலுடன் மோதிய கெப் வாகனம் ; மூவர் படுகாயம்

இன்று (22) காலை 7.30 மணியளவில் காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தின் சாரதி பலத்த காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், குறித்த ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நபர்கள் காயம் இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் […]

அதிரடி 22 Feb 2026 11:54 am

உடன் பிறந்த அண்ணனுக்கு தம்பி நிகழ்த்திய கொடூரம் ; இலங்கையில் அரங்கேறிய பயங்கரம்

நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய தாக்குதலில் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அண்ணன் உயிரிழந்துள்ளார். சம்பவம் கொழும்பு, ஹோமாகமை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, உயிரிழந்த நபருக்கும் அவரது 28 வயதுடைய தம்பிக்கும் இடையில் காணி விவகாரம் தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று இரவு இருவருக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த தம்பி, மறைத்து வைத்திருந்த வாளால் […]

அதிரடி 22 Feb 2026 11:52 am

தங்க நகை பூங்காவிற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல்!

தங்க நகை பூங்காவிற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 22 Feb 2026 11:41 am

இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை - குவியும் பாராட்டுக்கள்

இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இரு பார்வைகளையும் இழந்த வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக்கலைமாணிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுள் துரைராசா அருண்குமார் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர் தரத்தில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகம் சென்றவர் எ வாழ்வக வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதாரண மாணவர்களுக்கு இணையான புள்ளிகள் பெற்று சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இற்றைவரை இவருக்கே உரியதாகின்றது. இருபார்வையினையும் இழந்த இரண்டு மாணவர்களும் நீண்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பதிவு 22 Feb 2026 11:35 am

வங்காதேசம் –இந்தியா இடையிலான விசா சேவை மீண்டும் தொடங்கியது

வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர். இதில்

சென்னைஓன்லைனி 22 Feb 2026 11:34 am

KHxRK: நெல்சன் படத்தில் ரஜினி, கமல் இரண்டு பேருமே anti-ஹீரோவா?

நெல்சன் படத்தின் ஹீரோ கமல் ஹாசனா இல்லை ரஜினிகாந்தா என்பது தான் தற்போது பலரும் கேட்கும் கேள்வியாகும். இந்நிலையில் சினிமா ரசிகர்கள் மூன்று விதமான விளக்கங்கள் அளித்திருக்கிறார்கள்.

சமயம் 22 Feb 2026 11:33 am

சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின்‌ பிளான்

சென்னை சவுகார்பேட்டையில் கூரியர் நிறுவனம் ஒன்றை வைத்திருப்பவர் ராவல்சிங். சென்னை விமான நிலையத்திற்கு இவரது நிறுவனத்திற்கு 1.5 கிலோ‌ எடை கொண்ட தங்க நகைகளின் பார்சல்கள் வந்துள்ளன. அதை எடுத்து வர, தன் கடையில் வேலை பார்க்கும் கோவாராம் மற்றும் பக்கத்துக் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஜித்தேந்தர் குமாரையும் அனுப்பியிருக்கிறார் ராவல்சிங். பைக்கில் சென்ற இருவரும் நீண்ட நேரமாக கடைக்கு வரவில்லை. இருவரது போனுமே 'ஸ்விட்ச் ஆஃப்'. தங்கம் | நகைகள் கோவாராமின் போன்கால் கொஞ்ச நேரத்தில், கோவாராமிடம் இருந்து மற்றொரு எண்ணில் இருந்து கால் வந்திருக்கிறது. அருகில் இருந்த ஆட்டோகாரரிடம் இருந்து போன் வாங்கி பேசுவதாக கூறியிருக்கிறார். கோவாராமும், ஜித்தேந்தர் குமாரும் தங்க நகைகள் பார்சல்களை வாங்கி கொண்டு கிண்டி வழியே வந்துக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது, அவர்களை வழிமறித்த இருவர் தங்களை 'செங்கல்பட்டு ஜி.எஸ்.டி ஆபீசர்ஸ்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக, பார்சல் மற்றும் மொபைல் போன்களையும் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் அழைத்து சென்றிருக்கிறார்கள். பெருங்களத்தூர் அருகே அதிகாரிகளாக அறிமுகம் செய்து கொண்டவர்கள் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். அதன் பின் தான், ராவல்சிங்கிற்கு போன் செய்திருக்கிறார் கோவாராம். ராவல்சிங் போலீஸில் புகார் கொடுக்க விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணையில், இவை அனைத்தும் ஜித்தேந்தர் குமாரின் வேலை என்று தெரிய வந்திருக்கிறது. தங்க நகைகளைக் கொள்ளையடிப்பதற்காக தனது சொந்த ஊரான ராஜஸ்தானில் இருந்து இரு நண்பர்களை வரவழைத்திருக்கிறார் ஜித்தேந்தர் குமார். தற்போது ஜித்தேந்தர் குமார் மற்றும் அவருடைய ஒரு நண்பரை கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். இன்னொருவரை தேடி வருகிறார்கள் போலீஸார்.

விகடன் 22 Feb 2026 11:32 am

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக

சென்னைஓன்லைனி 22 Feb 2026 11:31 am

2000 ரூபாய் வரப் போகுது.. ரெடியா இருங்க.. அக்கவுண்ட் செக் பண்ணிங்க.. பிஎம் கிசான் அப்டேட்!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அடுத்த தவணைத் தொகை 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் தெரியுமா?

சமயம் 22 Feb 2026 11:31 am

அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்க ஆளுநர்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது

சென்னைஓன்லைனி 22 Feb 2026 11:29 am

SIR பணி நிறைவடைந்தது –இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள

சென்னைஓன்லைனி 22 Feb 2026 11:28 am

தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சி –முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:- தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுக தான்; எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம். அதிமுகவிற்கு

சென்னைஓன்லைனி 22 Feb 2026 11:26 am

எழும்பூரில் இருந்து புறப்பட்டுச் செல்லும் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று முதல் மாம்பலத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும்

சென்னைஓன்லைனி 22 Feb 2026 11:25 am

டி20 உலகக் கோப்பை தொடர் –சூப்பர் 8 சுற்றில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள்

சென்னைஓன்லைனி 22 Feb 2026 11:24 am

அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொலை - பொலிசாரை கைது செய்ய கோரி யாழில்.போராட்டம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த போராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததாகவும் , அதன் போது வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வாகன சாரதியான சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். நிற்காமல் சென்ற வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனவும் , அதொரு பொலிஸாரின் திட்டமிட்ட படுகொலை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழும்பி வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார். சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 22 Feb 2026 11:13 am

காங்கேசன்துறை துறைமுக புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு தயார்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆவணம் சட்டப்பூர்வ ஒப்புதலுக்காக, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாகதுறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக, இந்திய அரசு 63.5 மில்லியன் டொலர் நிதி உதவியை

புதினப்பலகை 22 Feb 2026 11:06 am

க்ளிங் ரேப் டயட்: பிளாஸ்டிக் போர்த்தி மெல்லும் சீன சமூக ஊடக ட்ரெண்ட் – உண்மை என்ன?

சீனாவில் சமூக ஊடகங்களில் பரவும் ‘க்ளிங் ரேப் டயட்’ முறையில் உணவை பிளாஸ்டிக் ரேப் போர்த்தி மென்று துப்பி எடை குறைக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது பல ஆரோக்கிய ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 22 Feb 2026 11:00 am

திமுகவுடன் தொகுதி பங்கீடு- கொ.ம.தே.க 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது

சமயம் 22 Feb 2026 10:56 am

சிபிஎம் கேட்கும் டபுள் டிஜிட்… பிப்ரவரி 26ல் திமுக எடுக்கும் முடிவு- மீண்டும் அதே 6 சீட்டா?

திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வரும் 26ஆம் தேதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற சிபிஎம் கட்சி திட்டமிட்டிருக்கிறது.

சமயம் 22 Feb 2026 10:56 am

தல பிரியாணி ரெசிபி என்ன மேடம்?: யாரும் எதிர்பாராத பதில் அளித்த ஷாலினி அஜித் குமார்

அஜித் குமார் சூப்பராக பிரியாணி சமைப்பார் என்று அவர் கையால் சாப்பிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த ரெசிபியை ஷாலினியிடம் கேட்டதற்கு எதிர்பாராத பதிலை அளித்திருக்கிறார்.

சமயம் 22 Feb 2026 10:45 am

Rain Alert: உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி; எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடலுக்கு நகர்ந்து வருவதால், சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருக்கிறது இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. Rain Alert - மழை இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வலுப்பெறக்கூடும். இதனால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். Rain Alert - மழை 23 முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

விகடன் 22 Feb 2026 10:45 am

'நோட்‌ பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு‌ ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold

ஜனவரி மாதத்தில் (2026) பவுனுக்கு ரூ.1.34 லட்சம் வரை சென்ற தங்கம் விலை, இப்போது ரூ.1.17 லட்சத்திற்கு கீழிறங்கி விற்பனையாகி வருகிறது. ஆனால், இனி தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில காரணங்களைப் பகிர்ந்து கொள்கிறது, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தரப்பு. தங்கம் உலக நாடுகளின்‌ மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட' ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன? > சமீப நாள்களாக குறைந்த தங்கம் விலை இறங்குமுகத்திற்கானது அல்ல.‌ அது கரெக்ஷன்‌ ஆகி வந்தது. இப்போது கிட்டத்தட்ட 20 சதவிகிதம் தங்கம் விலை கரெக்ஷன் ஆகிவிட்டது. அதனால், அது மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பலாம். > ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் சுமுகத் தீர்வை எட்டவில்லை. அதற்குள் அமெரிக்கா - இரான்‌ இடையே போர்‌ பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகரலாம். > அமெரிக்காவில் அடுத்த வாரம் வெளியாக‌ உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்க அறிக்கை மிக முக்கியமானது. காரணம், இதை வைத்தே, அடுத்து வட்டி விகிதம் குறைக்கலாமா... வேண்டாமா‌‌ என்று‌ முடிவு எடுக்க உள்ளது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி. ஒருவேளை, வட்டி குறைக்கப்பட்டால், தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். தங்கம் Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? இந்தச் சங்கம் கூறுவதைத் தாண்டி, அமெரிக்க அதிபர்‌‌ ட்ரம்பின்‌ வரிச் சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இதையடுத்து ட்ரம்ப் தற்போது உலகளவிலான வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார். இது உலக அளவில் மீண்டும் ஒரு பதற்றத்தை உண்டாக்கக் கூடும். இதனாலும், தங்கம் விலை அதிகரிக்கலாம். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால், அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதையும் கவனிங்க மக்களே. தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கியதா பாகிஸ்தான்? மறுக்கும் ஆப்கானிஸ்தான்! - தாக்குதல் பின்னணி?

விகடன் 22 Feb 2026 10:33 am

ரஷிய எண்ணெய் விநியோகத் தடை: உக்ரைனுக்கு ஹங்கேரி, ஸ்லோவாகியா நெருக்கடி!

ரஷியாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் உடனடியாகச் சீரமைத்து தொடங்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி மற்றும் மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. உக்ரைன் போரை முன்னிட்டு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் தங்கள் எரிசக்தி தேவைக்காக இப்போதும் ரஷியாவையே நம்பியுள்ளன. எனவே, அந்நாட்டுடன் இணக்கமான உறவைப் பேணி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில், […]

அதிரடி 22 Feb 2026 10:30 am