SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் கொட்டும் பணம்.. வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டுமா?

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு வரி செலுத்த வேண்டுமா? வரி செலுத்தாமல் இருக்க ஏதேனும் நிபந்தனை உள்ளதா?

சமயம் 24 Nov 2025 9:15 am

Gouri Kishan: ``மஞ்சள் நிறமே... மஞ்சள் நிறமே - நடிகை கௌரி கிஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் |Photo Album

Rukmini Vasanth: அந்த அழைப்​பும் செய்​திகளும் போலி​யானவை- ருக்மிணி வசந்த் எச்சரிக்கை

விகடன் 24 Nov 2025 9:14 am

அரசு பள்ளி மாணவர்.. இன்று இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி - யார் இந்த சூர்யகாந்த் ?

ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பெட்வாட் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த சூர்யகாந்த், அரசுப் பள்ளியில் படித்து இப்போது நாட்டின் உச்ச நீதிமன்ற 53வது தலைமை நீதிபதியாக (CJI) பதவியேற்கவுள்ளார். அவர் பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 24 Nov 2025 9:08 am

`அன்று கோலி விக்கெட்; இன்று சதம்' - இந்தியாவுக்கெதிராக ஜொலிக்கும் தமிழன்! Senuran Muthusamy யார்?

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் ஆட இந்தியா வந்திருக்கிறது. நவம்பர் 14-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் கூட அடிக்காமல் படுதோல்வியடைந்தது. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி (நவம்பர் 22) கவுகாத்தியில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய தென்னாபிரிக்கா அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. சேனுரான் முத்துசாமி அந்த அணியின் ஆல்ரவுண்டர் சேனுரான் முத்துசாமி 25 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் கைல் வெர்ரெய்ன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இவ்வாறிருக்க, நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சேனுரான் முத்துசாமி சதம் அடித்து 206 பந்துகளில் 109 ரன்களுடன் அவுட்டானார். இதுதான் சேனுரான் முத்துசாமிக்கு சர்வதேச கரியரில் முதல் சதமாகும். யார் இந்த சேனுரான் முத்துசாமி? சேனுரான் முத்துசாமி 1994-ல் தென்னாப்பிரிக்காவில் நடால் மாகாணத்தில் உள்ள டர்பனில் இந்திய வம்சாவளி முத்துசாமிக்கும், வாணி மூடேலிக்கும் மகனாகப் பிறந்தார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் தாத்தா பாட்டி, இவர் பிறப்பதற்கு முன்பாகவே தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். சேனுரான் முத்துசாமியின் உறவினர்கள் இன்றும் நாகப்பட்டினத்தில் வசிக்கின்றனர். சேனுரான் முத்துசாமி சேனுரான் முத்துசாமி சிறுவயதாக இருக்கும்போதே அவரின் தந்தை இறந்ததால் தாய் வாணி ஒற்றை ஆளாகக் குடும்பச் சுமை மொத்தத்தையும் ஏற்றுக்கொண்டு அவரை ஆளாக்கினார். கிளிஃப்டன் கல்லூரியில் (Clifton College) படித்த சேனுரான் முத்துசாமி, குவாசுலு-நடால் பல்கலைக்கழகத்தில் (University of KwaZulu-Natal) சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து, மீடியா அண்ட் மார்கெட்டிங்கில் நிபுணத்துவமும் பெற்றார். கல்வியில் கவனம் செலுத்திய அதேவேளையில் பள்ளிப் பருவம் முதலே கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி உள்ளூர் போட்டிகளில் தனக்கான இடத்தை உருவாக்கினார் சேனுரான் முத்துசாமி. The Ashes: முதல் டெஸ்டில் வெற்றிபெற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.17 கோடி நஷ்டம்; காரணம் என்ன? உள்ளூர் போட்டிகளில் 11 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோர் வரை குவாசுலு-நடால் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனாலும் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்த சேனுரான் முத்துசாமிக்கு இறுதியாக 2013-ல் தென்னாப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியிலிருந்து அழைப்பு வந்தது. சேனுரான் முத்துசாமி அதையடுத்து, உள்ளூர் போட்டியில் 2015-16 சீசனில் டால்பின்ஸால் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக ஒப்பந்தம் ஆன சேனுரான் முத்துசாமி, 2016-17 சீசனில் நைட்ஸ் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டியில் டால்பின்ஸால் அணியில் 181 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்தார். ஆனால், அதன் பிறகு அவரின் பேட்டிங் சற்று குறைந்தது. அதேவேளையில் அவரின் சுழற்பந்துவீச்சு மேம்பட்டது. இந்த மாற்றம் அவரை ஆல்ரவுண்டராக வேறொரு கட்டத்துக்கு கொண்டு சென்றது. சேனுரான் முத்துசாமி இதுகுறித்து அவருடைய அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் 2019-ல், ``அவரது பேட்டிங் சற்று குறைந்திருக்கிறது. ஆனால், அவரின் பந்துவீச்சு அடுத்த நிலைக்கு உயர்ந்திருக்கிறது என்று கூறினார். அதே ஆண்டில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணியில் ஆல்ரவுண்டராக சேனுரான் முத்துசாமி இடம்பிடித்தார். World cup : வரலாறு படைத்துள்ளனர், பல தலைமுறை பெண்களை ஊக்குவிக்கும் வெற்றி - Virat Kohli வாழ்த்து சர்வதேச கரியரின் முதல் விக்கெட்டே கோலி! அந்தத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், தனது சர்வதேச கரியரின் விக்கெட் எண்ணிக்கையை கேப்டன் விராட் கோலியை அவுட்டாக்கித் தொடங்கினார். இந்தியாவுக்கெதிராக இந்திய மண்ணில் அதுவும் விராட் கோலியை அவுட்டாக்கியது அவரின் சர்வதேச கரியருக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது. Virat Kohli - விராட் கோலி ஆனாலும், தென்னாப்பிரிக்கா அணியில் கேஷவ் மகாராஜ், ஷம்ஸி ஆகியோரின் இருப்பால் தொடர்ச்சியாக அணியில் அவரால் இடம்பெற முடியவில்லை. 2019-ல் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியில் அறிமுகமானாலும் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டுதான் தென்னாப்பிரிக்கா அணியில் அறிமுகமானார். சேனுரான் முத்துசாமி எப்படி இவரின் சர்வதேச கரியர் இந்திய மண்ணில் பிரபலமாகத் தொடங்கியதோ, அதேபோல அவரின் சர்வதேச கரியரின் முதல் சதம் இந்தியாவில் வந்ததன் மூலம் தன் கரியரில் மேலும் ஒரு சிறப்பான தருணத்தை உருவாக்கியிருக்கிறார். ஓர் இந்திய வம்சாவளியாக, தமிழனாக தென்னாபிரிக்க அணியில் நீண்டகாலம் ஆடி உலக அரங்கில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்க சேனுரான் முத்துசாமிக்கு வாழ்த்துகள்! உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

விகடன் 24 Nov 2025 9:04 am

Doctor Vikatan: சில வகை இருமல் மருந்துகளைக் குடித்தால் கை, கால் நடுக்கம் ஏற்படுவது ஏன்?

Doctor Vikatan: என் வயது 45. சளி, இருமல் வரும்போது மருந்துக் கடைகளில் இருமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவது வழக்கம். சில வகை இருமல் மருந்துகள் எந்தப் பக்கவிளைவையும் ஏற்படுத்துவதில்லை. சில இருமல் மருந்துகளோ, கை, கால் நடுக்கம், படபடப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை சளி மற்றும் இருமல் மருந்துகள் பொதுவாகப் பல மருந்துகளின் கலவையாகவே இருக்கும். அவற்றில் உள்ள சில கூறுகள் கை, கால் நடுக்கம் (Tremors) மற்றும் இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இருமல் மருந்துகள் பல வகைப்படும். ஒருவரின் பிரச்னை மற்றும் உடல்நலம், இருமலின் தீவிரம் என பல விஷயங்களைப் பொறுத்தே அவை பரிந்துரைக்கப்படும். அந்த வகையில், 1. டீகன்ஜெஸ்டென்ட்ஸ் (Decongestants) ஃபினைல்எஃப்ரின் (Phenylephrine) அல்லது சூடோஎஃபெட்ரின் (Pseudoephedrine) போன்ற டீகன்ஜெஸ்டென்ட்ஸ், மூக்கடைப்பை நீக்க உதவுகின்றன. ஆனால், இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், இதயத் துடிப்பை வேகப்படுத்தலாம், மற்றும் சிலருக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (Arrhythmias) அல்லது நடுக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்னைகள் உள்ளவர்கள் இவற்றைக் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். 2. பிராங்கோடைலேட்டர்ஸ் (Bronchodilators) சில இருமல் சிரப்களில் டெர்புடலைன் (Terbutaline) அல்லது சல்புடமால் (Salbutamol) போன்றவை கலந்திருக்கலாம். இவை சுவாசக்குழாயைத் தளர்த்தி, சளியை வெளியேற்றவும் மூச்சு விடுவதை எளிதாக்கவும் உதவுகின்றன. இந்த மருந்துகள் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதால், இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் கை, கால்களில் நடுக்கத்தை (Tremor) பக்க விளைவாக உருவாக்கலாம். மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். 3. ஆன்டிஹிஸ்டமின்ஸ் (Antihistamines) சில ஆன்டிஹிஸ்டமின்களும் சில நேரங்களில் இதயத் துடிப்பை வேகமாக அதிகரிக்கச் செய்யலாம், சிலருக்கு நடுக்கத்தைக்கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, எப்போதுமே நீங்களாக மருந்துக் கடைகளில் இருமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்து குடித்த பிறகு உங்களுக்குத் தீவிரமான அல்லது தொடர்ச்சியான நடுக்கமோ, வேறு பக்க விளைவுகளோ ஏற்பட்டால், உடனடியாக மருந்தை நிறுத்திவிட்டு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம்

விகடன் 24 Nov 2025 9:00 am

Women's Blind T20 World Cup: உலகக்கோப்பை வென்ற பார்வைசவால் கொண்ட இந்தியப் பெண்கள்; ஸ்டாலின் பாராட்டு

நேற்று பார்வை சவால் கொண்ட பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி வாகையைச் சூடியுள்ளது. கொழும்பில் உள்ள பி சாரா ஓவலில் நடந்த இந்தப் போட்டியில் நேபாள அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. டாஸில் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. நேபாள அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 114 ரன் எடுத்து இந்திய அணிக்கு 115 ரன்கள் என இலக்கை நிர்ணயித்தது. வெறும் 12 ஓவர்களில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளுடன் 117 ரன்களைக் குவித்து வெற்றியை கைப்பற்றியது. ஸ்டாலின் வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி? ஸ்டாலின் பதிவு இந்தியப் பெண்கள் அணியின் வெற்றியைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... தைரியம் வழிநடத்தும்போது வரலாறு உருவாகும்! முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற நமது பார்வை சவால் கொண்ட பெண்கள் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு ஒரு ஊக்கமாகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்! என்று பதிவிட்டுள்ளார். இந்த அணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர். வாழ்த்துகள் டீம்! மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்! History rises when courage leads! Warm wishes to our phenomenal Women’s Blind Cricket Team on winning the inaugural T20 World Cup. You stand tall as India’s pride, and an inspiration to the world! https://t.co/n0kVXhZkn5 — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 23, 2025

விகடன் 24 Nov 2025 8:45 am

அவதானமாக இருங்கள்..! வடக்கு –கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 25.11. 2025 வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்கள் இலங்கையினுடைய வானிலையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாக கருதப்படுகின்றது. மிகக் கனமான மழையைப் பெறும் வாய்ப்பு தற்பொழுது இலங்கைக்கு தெற்காக குறிப்பாக இலங்கையிலிருந்து தென் மேற்காக 62 கிலோ மீட்டர் தொலைவில் […]

அதிரடி 24 Nov 2025 8:34 am

சரிகமப இறுதிச்சுற்று ; இலங்கை தமிழ் இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று (23) இடம்பெற்றது. இந்தநிலையில் இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர், போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இந்தநிலையில், அவருக்கு சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து இலங்கை வாழ் மக்களும் […]

அதிரடி 24 Nov 2025 8:31 am

நைஜீரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பினர்

நைஜீரியாவின் வட-மத்திய நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 303 பள்ளி மாணவர்களில் 50 பேர் தப்பித்து தங்கள் குடும்பங்களுடன் இருப்பதாக பள்ளி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. 10 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை தனித்தனியாக தப்பிச் சென்றதாக நைஜீரியாவின் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவரும் பள்ளியின் உரிமையாளருமான புனித புலஸ் தௌவா யோஹன்னா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 253 பள்ளி மாணவர்களும் 12 ஆசிரியர்களும் இன்னும் […]

அதிரடி 24 Nov 2025 8:30 am

மாவனெல்ல–ரம்புக்கனை வழிப்பாதை பாதிப்பு ; சாரதிகள் மாற்று வழிகள் பயன்படுத்துமாறு அறிவிப்பு

மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது பெரிய மரம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்குறித்த விபத்து காரணமாக மாவனெல்ல – ரம்புக்கனை வீதி தடைபட்டுள்ளது. எனவே, அனைத்து சாரதிகளும் அந்த வீதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 24 Nov 2025 8:30 am

Rain Alert: உருவாகும் சென்யார் புயல்; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இது வரும் புதன்கிழமை (26-ம் தேதி) அன்று புயலாக வலுப்பெறும் எனவும், இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள, 'சிங்கம்' எனப் பொருள்படும் ‘சென்யார்' எனப் பெயரிடப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், குமரிக்கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மழை. குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (24-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களின் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ``அரசின் முன்னேற்பாட்டால் மழை பாதிப்பு இல்லை, பாசன நீர் உறுதி'' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விகடன் 24 Nov 2025 8:30 am

திருகோணமலை சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் சஜித்

திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு தேவையில்லாத போதிலும் பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எதிர்க்கட்சியானாலும் அதை நிறைவேற்றி வைக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதோடு ஏனைய சமயத்தவர்களுக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும். இவற்றில் பிரச்சினை ஏற்படுமானால் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படலாம். அதனால் […]

அதிரடி 24 Nov 2025 8:28 am

கவிஞர் பொன்மணி | கொடைக்கானலில் சுவாமி நிகழ்த்திய அற்புதம் | Sathya Saibaba 100th BirthDay Special

சத்தியசாய்பாபாவின் அவதரித்த 100 தின விழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அவரின் பெருமைகளை நமக்கு எடுத்துச் சொல்கிறார் கவிஞர் பொன்மணி. 100th Day of Sathya Sai Baba’s Divine Advent | Special Discourse by Poet Ponmani The 100th Day Celebration of Bhagawan Sri Sathya Sai Baba’s Divine Advent is being observed with great devotion around the world. On this auspicious occasion, Poet Ponmani beautifully shares the greatness, compassion, and spiritual legacy of Sathya Sai Baba. This video highlights His divine teachings, miraculous deeds, message of universal love, and the timeless wisdom He gifted to humanity. ✨ Watch this insightful discourse and feel the presence, blessings, and grace of Sathya Sai Baba. Keywords: Sathya Sai Baba, Sathya Sai Baba 100th day celebration, Sai Baba miracles, Sathya Sai teachings, Poet Ponmani speech, Sai Baba discourse, spiritual talk Tamil, Sathya Sai Baba greatness, Baba blessings, Sai devotion, Sai movement, Sathya Sai global celebration, 100th day of Sai Baba advent

விகடன் 24 Nov 2025 8:00 am

IND vs SA: ‘489 அடித்த தென்னாப்பிரிக்கா’.. இனி இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி? பிட்ச் ரிப்போர்ட் இதோ!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் இருக்கிறது. முதலில் களமிறங்கி, கடைசி நேரத்தில், ஆல்ரவுண்டர்கள் பெரிய ஸ்கோர்களை அடித்து,489 ரன்களை எடுத்துள்ளனர்.

சமயம் 24 Nov 2025 7:49 am

திருவண்ணாமலை கிரிவலம்… பக்தர்களுக்கு உணவு பரிமாறும் ஓட்டல் ஊழியர்களுக்கு தடுப்பூசி- புதிய கட்டுப்பாடு!

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் திரும்பி வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சமயம் 24 Nov 2025 7:37 am

டெல்டா வெதர்மேன் மிக கனமழை எச்சரிக்கை… தெற்கில் காத்திருக்கும் பெரிய சம்பவம்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சமயம் 24 Nov 2025 7:02 am

திருகோணமலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் போராட்டம்!

தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு திருகோணமலையில் வலுவான போராட்டத்தை முன்னெடுத்தது. சிங்கள–பெளத்த பேரினவாதிகளால் முறையாக ஆக்கிரமிக்கப்பட்டு வரும் தமிழர் தாயகத் தலைநகரமான திருகோணமலையில் நடைபெற்ற இந்த போராட்டமானது பிரித்தானிய அல்பேட்டன் பாடசாலை முன்பாக நடைபெற்றது. பேரினவாத அரசியலின் முகமாகக் கருதப்படும் ரில்வின் சில்வாவின் (JVP–NPP) பிரித்தானிய வருகைக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இணைந்து பங்கேற்ற இந்த போராட்டத்தில், தமிழர் உரிமைகள், இனப் பாதுகாப்பு மற்றும் வரலாற்று நீதி குறித்து வலியுறுத்தும் கோஷங்கள் முழங்கப்பட்டன.

பதிவு 24 Nov 2025 7:02 am

அதிமுக ஒன்றிணைப்பு: செங்கோட்டையன், தினகரனுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன் - ஓ. பன்னீர்செல்வம்

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, அதிமுக தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கின்ற குழுவாகச் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது குழுவின் கருத்து, தமிழக மக்களின் கருத்து அதிமுக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். எஸ்ஐஆர் ஒவ்வொருவருக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனைப் பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்னை இல்லை. SIR ஆனால் எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. மத்திய அரசு கூர்ந்து கவனித்து பாமர மக்களும் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் அமைக்கப்பட வேண்டும். எஸ்ஐஆர் காலக்கெடு நீட்டிக்க வேண்டும். இது மக்களின் கோரிக்கை. கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பது எனது கருத்து என்றார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?' என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் எங்களுக்கும் தனிக் கொள்கை உள்ளது. அந்தக் கொள்கையின் வடிவில் எங்களுக்கு வாய்ப்பு தந்தால், இணைவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கோட்டையனுடனும், தினகரனுடனும் தினம்தோறும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைய அதிகமான வாய்ப்புள்ளது எனக் கூறினார். ``2011-ல் எங்களுக்கு செய்த தவறுக்காக தான் இப்போது அனுபவிக்கிறார்'' - ஓபிஎஸ் குறித்து வைகோ

விகடன் 24 Nov 2025 6:56 am

வீடு விரும்பிக் கேட்ட சந்திப்பு! அலட்டிக் கொள்ளாத அநுர! அடுத்த 'எபிசோட்'எப்போது? பனங்காட்டான்

என்னென்னவோ பேசலாமென்று பட்டியலிட்டுப்போன தமிழரசுக் கட்சியினர் சொன்னவைகளை மெல்லிய புன்னகையுடன் செவிமடுத்த ஜனாதிபதி அநுர குமர ஒன்றுக்குமே நம்பிக்கையான பதில் வழங்கவில்லை. மழுப்பலாக அமைந்;த இவரது சளாப்பல் காமராஜரின் 'ஆகட்டும் பார்க்கலாம்'பாணியை விஞ்சியது. இலங்கையின் கடந்த வார அரசியல் நகர்வு திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பமானது. இங்குள்ள கடற்கரைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நாட்ட சில பிக்குகள் முயற்சி மேற்கொண்டதுடன் விவகாரம் தொடங்கியது. ஆனால் அன்றிரவே காவற்துறையினர் அவ்விடம் சென்று புத்தர் சிலையை அகற்றிச் சென்றனர். உடனடியாக வெளிவந்த செய்திகள், புத்தர் சிலை வைப்பை தமிழரசுக் கட்சியினர் ஆட்சேபித்ததால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவையடுத்து அது அகற்றப்பட்டது என்பதாக இருந்தது. சிங்கள பௌத்த ஆட்சியில் அப்படியும் நடந்துள்ளதே என்ற அதிர்ச்சி மகிழ்ச்சியில் இரவைக் கழித்துவிட்டு எழுந்தபோது, மறுநாள் திங்கட்கிழமை எல்லாமே தலைகரணமாகியது. முதல் இரவு புத்தர் சிலையை தூக்கிச் சென்ற காவற்துறையினரே மீண்டும் அதனைக் கொண்டு சென்று அதேயிடத்தில் வைத்து காவல் புரிந்தனர். போன புத்தர் மீண்டு வந்தார்| என்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒரு புதுக்கதையைச் சொன்னார். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே முதல் இரவு சிலை அகற்றப்பட்டதாகவும், அதற்குரிய பாதுகாப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மீள அதனை வைப்பதற்கு உத்தரவிட்டதாகவும் இவரது அறிவிப்பு இருந்தது. ஒரு புத்தர் சிலையை வைத்து இடம்பெற்ற ஒரு குறுநாடகம் பல கேள்விகளை எழுப்புகிறது. நாட்டில் பாதுகாப்புக்கு அச்சமில்லை, எல்லா நடவடிக்கைகளும் கண்காணிப்பில் உள்ளன, சகல செயற்பாடுகளும் சட்டப்படியே இடம்பெறுகிறது என்று ஜனாதிபதியிலிருந்து கட்சியின் பின்வரிசை உறுப்பினர் வரை அனைவரும் கூறிக்கொண்டேயிருக்கிறார்கள். அப்படியென்றால் புத்தர் சிலையை அனுமதியின்றி நாட்ட எடு;த்த முயற்சியை பாதுகாப்புக்கு பொறுப்பான எவரும் அறிந்திருக்கவில்லையா? திருமலை என்பது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கும் தெரியாமலா இரவோடிரவாக இங்கே புத்தர் வந்தார்? அமைச்சரின் உத்தரவின்பேரில் காவற்துறையினர் சிலையை அகற்ற முற்பட்டபோது பிக்கு ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? ஆனால், இரண்டு பிக்குகள் சிறு காயமடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டவேளை சுகவீனமடைந்து(?) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போன்று இதுவும் ஒரு நாடகமா? புத்தர் சிலை விவகாரம் என்பது திருமலையை முழுமையாக சிங்கள பௌத்த மாவட்டம் ஆக்கும் முயற்சியின் இன்னொரு கட்டம் என்பதை நினைவூட்டுகிறது 1968ம் ஆண்டுச் சம்பவம். அப்போது டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் மு.திருச்செல்வம் உள்ளாட்சி அமைச்சராக இருந்தார். இவருக்கு எதையும் தெரிவிக்காது திருக்கோணேஸ்வரம் பகுதியை புனித நகரமாக பிரதமர் டட்லி சேனநாயக்க பிரகடனம் செய்தார். இதனால் அவமதிப்புக்குள்ளான அமைச்சர் திருச்செல்வம் தமது பதவியை விட்டு விலகினார். இது 1968 நவம்பரில் இடம்பெற்றது. இப்போது 57 ஆண்டுகளின் பின்னர் அதே நவம்பர் மாதத்திலேயே பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரத்துக்கு அருகாமையில் புத்தர் சிலையை முளைக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் என்பது திருமலையைப் பொறுத்தளவில் தமிழ் மக்களுக்கு ஒரு சோதனையான மாதம்போல் தெரிகிறது. இப்போது புத்தர் சிலை நடுவதை தமிழரசுக் கட்சியினர் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தியின் தமிழ் எம்.பிக்கள் அனைவரையும் (எண்மர்) பதவிகளைத் துறக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் அறிவிப்பு விடுத்தார். மட்டக்களப்பு எம்.பி. சாணக்கியன் ஒருபடி மேலேறி அநுர அரசாங்கத்தின் தமிழ் எம்.பிக்கள் அங்கிருந்து விலகி தமிழரசுக் கட்சியில் இணைய வேண்டுமென அழைப்பு விடுத்தார். இருவரது வேண்டுகோளுக்கும் இடையிலான வேறுபாடு மிக நீளமானது. அந்த எட்டு எம்.பி.க்களும் இதனை செவிசாய்க்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டும் விடுக்கப்பட்ட அர்த்தமற்ற கோரிக்கையுடன் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தாமும் சேர்ந்து கொள்ளாது தப்பியது புத்திசாலித்தனமானது. புத்தர் சிலை விவகாரம் இடம்பெற்ற மூன்றாம் நாள் - கடந்த புதன்கிழமை ஜனாதிபதி அநுர குமரவுடன் தமிழரசுக் கட்சியினரின் முதலாவது சந்திப்பு இடம்பெற்றது. இதற்கான வேண்டுகோளை தமிழரசுக் கட்சியினரே எழுத்து மூலம் விடுத்திருந்தபோதும் பல மாதங்களாக பதில் கிடைக்கவில்லை. அண்மையில் சானக்கியனின் குடும்ப உறவினரது இறுதிச் சடங்கில் ஜனாதிபதி பங்குபற்றியபோது அவருடன் உரையாடிய சுமந்திரன் தங்கள் கடித விவகாரத்தினை நினைவூட்டினார். அதன் பின்னரே சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப்பட்டது. கட்சியின் எட்டு எம்.பிக்களுடன் பதில் தலைவரும், பதில் செயலாளரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர். தமிழரசுக் கட்சயினர் என்னென்ன விடயங்களையிட்டு தம்முடன் உரையாடுவார்கள் என்பது அநுர குமரவுக்கு நன்கு தெரியும். அதற்காக அவர் தம்மை தயார்படுத்தியிருந்தார் என்பதை சந்திப்பின்போது அவர் கையாண்ட விதமும் முகபாவனையும் நன்றாகத் தெரியப்படுத்தியது. காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக ஓர் ஆணைக்குழுவை அமைக்கவுள்ள யோசனையை அவர் முன்வைத்தார். இந்த விடயத்தை இழுத்தடிக்கும் நோக்கம் இது என்பது நன்றாக விளங்கியது. தேர்தல் பரப்புரைக் காலத்தில் தமது குடும்பத்திலும் பலர் காணாமல்போனதால் இதன் பாதிப்பு தமக்குத் தெரியுமென்று கதை அளந்ததை அவர் ஒரு வருடத்தில் மறந்துவிட்டார் போலும். தனியார் காணிகளை ராணுவத்திடமிருந்து விடுவிப்பது தொடர்பில் மழுப்பல் பதிலை வழங்கினார். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளில் உரியவர்கள் இன்னமும் அக்காணிகளில் குடியேறவில்லை என்று கூறி, பந்தை திருப்பியடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். எனினும், தாம் சொன்னவாறு காணிகள் மீளளிக்கப்படும் எனச்சொல்லி சமாளித்துவிட்டார். அரசியல் கைதிகள் விடுதலைக்கு சரியான பதிலை அவரால் வழங்க முடியவில்லை. முன்னைய ஜனாதிபதிகள் பாணியில் வெவ்வேறு காரணங்களைக் கூறி விடயத்தைத் திசைதிருப்பிக் கொண்டிருந்தார். இதிலும் சமாளிப்புத்தான் இடம்பெற்றது. மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெற வேண்டுமென்பது இச்சந்திப்பின் மையப் புள்ளியாக இருந்தது. நிச்சயம் தேர்தல் நடைபெறுமென்று நம்பும் வகையில் பதிலளித்தார். ஆனால், எப்போது என்று கூற மறுத்துவிட்டார். வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கிய இவரால் தேர்தல் எப்போது என்று கூற முடியவில்லை. 1965 - 1970 ஆண்டுகளின் ஐந்து ஆண்டுகளிலும் வரவு செலவுத் திட்டங்களிலும் தமிழருக்கு ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசு நிதி ஒதுக்கியதாயினும் அந்த ஐந்து ஆண்டுகளில் அதற்கு அத்திவாரம்கூட போடவில்லை என்பது இவ்வேளையில் நினைத்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தாய்க்கட்சியான ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலை நடத்த பச்சைக்கொடி காட்டாதவரை இத்தேர்தல் நடப்பதற்கான சாத்தியமில்லை. அதுவரை அனைவரையும் ஏமாற்ற ஒவ்வொரு வருடமும் பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கிக் கொண்டு போகலாம் என்ற நிலைப்பாட்டில் அநுர இருக்கிறார். தமிழரசுக் கட்சிக்கு வடமாகாண சபையையும், முதலமைச்சர் பதவியையும் வழங்குவதற்கு தேர்தலை எதற்காக நடத்த வேண்டுமென்ற சிந்தனை ஜே.வி.பி.யிடம் இருக்கிறது. பேச்சுகளின் முக்கியமான அம்சமாக புதிய அரசியலமைப்பு இருந்தது. முன்னைய ஆட்சியில் தமிழரசுக் கட்சியின் பூரண ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆவணங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கி பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமென தேர்தல் பரப்புரை காலத்தில் அநுர குமர தெரிவித்திருந்தார். இதனை நம்ப வைக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றபோது கட்சியின் முதியோர் கிளப் பிரமுகர்கள் முண்டியடித்து அநுரவுடன் சுமந்திரனையும் இணைத்து படமெடுத்துக் கொண்டாடினர். புதிய அரசியலமைப்பு உருவாக்;கப்படும்போது சுமந்திரனின் ஆலோசனை பெறப்படும் என்று அவர் சொன்னது ஞாபகம் இருக்கிறது. அது சும்மா சொன்னது என்ற பாணியில் இச்சந்திப்பில் அநுர நடந்து கொண்டார். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென்பதை உறுதியாகக் கூறினார் - ஆனால் எப்போது என்று கூறவில்லை. இதற்கென ஒரு பொறிமுறையை உருவாக்குவது, வல்லுனர்கள் மூலம் வரைபைத் தயாரிப்பது, கட்சித் தலைவர்கள் அல்லது நாடாளுமன்ற குழுவின் ஊடாக அதனை நிறைவேற்றுவது என்று விளக்கம் கொடுத்தார். ஏற்கனவே டான் தொலைக்காட்சியில் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் செல்வா தெரிவித்த விடயங்களை கிளிப்பிள்ளைபோல தமிழரசுக் கட்சியிடம் ஒப்புவித்தார். புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை இருக்காது என்று ரில்வின் சில்வா தெரிவித்திருந்ததை சாதுரியமாக மறைத்துவிட்டார். இதற்கு மேல் இச்சந்திப்பில் பேச ஒன்றுமில்லை. தமிழரசுக் கட்சியிடமும் அவரிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை. இச்சந்திப்புக்கு மறுநாள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சாணக்கியனின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை ரத்துச் செய்யப்பட்டது முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டியது. திருமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் நீதிமன்றத்தில் தங்கியுள்ளது போலவே இதுவும். கஞ்சி ஆறும்போது சிங்கள பௌத்தம் புத்தர் சிலைக்கு சவாலாகாது போகும். இச்சந்திப்பின் இறுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் ருசிகரமானது. முல்லைத்தீவு மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியால் சந்திக்கும் இடர்கள் பற்றி வன்னி எம்.பி. ரவிகரன் சுட்டிக்காட்டியபோது தாம் நேரில் வந்து அவர்களுடன் பேசவிருப்பதாகப் பதிலளித்து ஒரேடியாக விடயத்தை மூடிவிட்டார் அநுர குமர. (அதனை நான் கவனிக்கிறேன், நீர் பேசாமல் இரும் என்ற பாணியில் இது அமைந்தது). ஆவலோடு எதிர்பார்த்த முதல் சந்திப்பு முடிந்துவிட்டது. இது தொடர்பாக ஷவீடு|க்கு எடுத்துச் செ(h)ல்ல ஒன்றுமேயில்லை. பத்துப்பேரை தனியனாக மடக்கிய அநுரவின் சாதுரியமான விடைகளுள் எல்லாமே முடக்கப்பட்டுவிட்டன. அடுத்த 'எபிசோட்'எப்போது?

பதிவு 24 Nov 2025 6:56 am

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

தாய்லாந்தில் கடந்த சில நாள்களாக தொடரும் கனமழையால் 3 நாள்களில் மட்டும் 59 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால், சோங்க்லா மாகாணத்திற்குட்பட்ட ஹாட் யாய் மாவட்டம் முழுவதுமே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திக் கடந்த வாரம் முழுக்க தொடர் மழை பெய்தது. தற்போதும் மழை நீடித்து வருவதால், தெற்கு தாய்லாந்தின் மிகப்பெரிய நகரமான ஹாட் யாய் முழுவதையுமே வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இணைய சேவை, குழாய் மூலம் குடிநீர் வழங்கும் சேவை போன்றவை […]

அதிரடி 24 Nov 2025 6:37 am

Gout: மூட்டு வாதம் வரக் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் &தீர்வுகள்

“சிலர் ‘காலில் வீக்கம், எரிச்சல்... நடக்க முடியவில்லை’ என்று வருகின்றனர். இந்த கால் வீக்கத்தை உற்றுப் பார்த்தால், ஏதோ நீர் கோத்துக் கொண்டது போல இருக்கும். சப்பாத்திக் கள்ளியை காலில் கட்டி வைத்தால் எப்படி குத்துமோ, வலிக்குமோ அதே வலியை உணர்வார்கள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு கவுட் பிரச்னை இருக்க வாய்ப்பு அதிகம்” என்கிற ஹோமியோபதி மருத்துவர் ராமகிருஷ்ணன், ‘கவுட்’ பற்றிய டவுட்களைக் களைகிறார். கவுட் என்றால் என்ன? gout கவுட்(Gout) என்பது ஒரு வகை மூட்டுவாதம். ரத்தத்தில் யூரிக் அமிலம் (Uric acid) அளவு அதிகரிக்கும்போது கவுட் ஏற்படும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 6-7 மி.லி கிராம் அளவுக்கு யூரிக் அமிலம் உடலில் இருப்பது இயல்புநிலை. இதற்கு மேல் சென்றால் கவுட் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள்? பெருவிரலில் வீக்கம், நீர் கோத்து வலியுடன் கூடிய எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். பெரும்பாலும் கால் பெருவிரலில் கவுட் வரும். சிலருக்கு கைவிரல், முழங்கால் முட்டி, முழுங்கை முட்டி போன்ற எந்த மூட்டுகளில் வேண்டுமானாலும் வலியும், வீக்கமும் வரலாம். இந்த வீக்கத்தில் நீர் கோத்துக் கொண்டு தாளாத வலி ஏற்படும். முள் குத்துவது போன்ற எரிச்சலையும், நெருப்பின் மேல் நடப்பது போன்ற எரிச்சலையும் சிலர் உணர்வதாகச் சொல்கின்றனர். ஒயின், பீர் அருந்து பவர்களுக்கு கவுட் வர வாய்ப்புகள் அதிகம். யாருக்கு கவுட் வரலாம்? பெரும்பாலும் ஆண்களுக்கு கவுட் அதிகமாக வரும். ஆனால், இப்போது பெண்களுக்கும் கூட வருகிறது. 35 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு கவுட் பிரச்னை வரலாம். குறிப்பாக ஒயின், பீர் அருந்து பவர்களுக்கு கவுட் வர வாய்ப்புகள் அதிகம். மற்றபடி மரபியல், உணவுப் பழக்கங்கள் போன்ற காரணங்களால் கவுட் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. Health: சைனஸ் முதல் மூட்டு வீக்கம் வரை... குளிர்கால ஹெல்த் பிரச்னைகள்; வராமல் தடுக்க டிப்ஸ்! தீர்வு என்ன? கவுட் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கலாம். ஆறு மாதங்களாக கவுட் பிரச்னை இருக்கிறது என்றால், நோய் குணமாக 3-4 மாதங்களாவது தேவைப்படும். ஐந்து ஆண்டுகளாக கவுட் பிரச்னை பாதித்திருந்தால், குணமாக குறைந்தது ஒர் ஆண்டு பிடிக்கும். இது அவரவர் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்தது. ரத்தத்தில் யூரிக் அமிலம் கலந்திருந்தால், இதற்கு மட்டும் மருந்து கொடுத்து சரி செய்ய முடியாது. இப்படி செய்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது. உடல் முழுவதற்கும் தேவைப்படுகிற ஆற்றலை தந்து, நோய் எதிர்ப்பு திறனை கூட்டி யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தி சிகிச்சை செய்வதே சரியான முறை. இந்த பிரச்னைக்கு ஹோமியோபதி சிகிச்சை முறையில் தீர்வு இருக்கிறது. தகுதியான மருத்துவரைச் சந்திந்து, சிகிச்சை பெறுவதன் மூலம் நிரந்தரத் தீர்வை காணலாம். கவுட் தவிர்க்க... * குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட திரவ உணவுகளைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய திரவ உணவுகளை உண்பதால் கவுட் பிரச்னையின் தாக்கம் குறையும். * பீர், ஒயின் மட்டுமல்ல, மதுவை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. * கொழுப்பு குறைந்த பால் பொருட்களைச் சாப்பிடலாம். காலை உணவில் அவசியம் புரதச் சத்துக்கள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும். * அசைவ உணவுகளால் கவுட் பிரச்னை வருகிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. எனினும் அசைவ உணவுகளை அளவாக உண்ணலாம். குறிப்பாக ஈரல், மண்ணீரல், குடல் போன்ற உறுப்புகள் சார்ந்த அசைவ உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். * உடல் எடை கூடாமல் பார்த்துக் கொண்டால் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் இருக்கும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். * இயற்கை முறையில் விளையும் ஆர்கானிக் உணவுகளையே பிரதான உணவாக மாற்றிக் கொள்வதன் மூலம் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். Palm Sugar: அது எலும்பை அரிக்கும்; இது எலும்பை வலுவாக்கும்! | health tips

விகடன் 24 Nov 2025 6:30 am

பிரித்தானியாவில் 13 வயது சிறுமியை கைது செய்த பொலிஸார்: பறிப்போன பெண் உயிரிழப்பு

பிரித்தானியாவின் ஸ்விண்டனில் நடந்த கொலைச் சம்பவத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 13 வயது சிறுமி கைது ஸ்விண்டனில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வில்ட்ஷயர் நகரிலுள்ள மோர்டன் பேடன் க்ளோஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த சலசலப்பு குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு […]

அதிரடி 24 Nov 2025 3:30 am

போர் அச்சுறுத்தல் விடுக்கும் ஜப்பான்…ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முறையிட்ட சீனா

தைவான் தொடர்பில் ஜப்பான் உடனான மோதலை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது சீனா. தற்காத்துக் கொள்ளும் தைவான் விவகாரத்தில் ஜப்பான் போர் அபாயத்தை ஏற்படுத்துவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இரண்டு வாரங்களாக நீடிக்கும் சர்ச்சையில், இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான மொழியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்றும் சீனா சபதம் செய்துள்ளது. சீனாவின் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான தூதர் ஃபூ காங் வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு எழுதிய கடிதத்தில், தைவான் மீதான […]

அதிரடி 24 Nov 2025 1:30 am

கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏழாலை பகுதியில் பெண்ணொருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற… The post கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 1:10 am

ஓய்வுபெற்ற அரச அதிகாரிக்கு இரவில் காத்திருந்த அதிர்ச்சி ; பறிபோன பல இலட்சங்கள்

ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொள்ளைச் சம்பவம் மொரந்துடுவ, மெலேகம பகுதியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு.. மனநல மறுவாழ்வு நிறுவனத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரச அதிகாரியின் மூன்று இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியே கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளைச் சம்பவம் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

அதிரடி 24 Nov 2025 12:30 am

இத்தாலியில் டெல் அவிவ் விளையாட எதிர்ப்பு: வெடித்த வன்முறை..ரொக்கெட்டுகளை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

இத்தாலியில் இஸ்ரேலிய கூடைப்பந்து அணி விளையாட கிளம்பிய எதிர்ப்பு வன்முறையாக மாறியது. இஸ்ரேலுக்கு எதிர்ப்பு காஸாவில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடுமையான இஸ்ரேல் கண்டனங்களை சந்தித்து வருகிறது. விமர்சகர்கள் பலரும் சர்வதேச கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து அந்நாட்டை விலக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்த நிலையில், இத்தாலி நாட்டிலும் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இஸ்ரேலின் டெல் அவிவ் கூடைப்பந்து அணி, யூரோ லீக் போட்டியில் விளையாட எதிர்ப்பு கிளம்பியது. ரொக்கெட் […]

அதிரடி 24 Nov 2025 12:30 am

யாழ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ; காலநிலை மாற்றத்தால் வேகமெடுக்கும் ஆபத்து

யாழ் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த டெங்கு தொற்று கடந்த இரு வாரங்களுக்குள் வேகமாக அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர்  எச்சரித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (21) பிற்பகல் இடம்பெற்றது. டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டத்தில், வடக்கு மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட செயலர் உள்ளிட்டோரின் பிரசன்னத்துடன் பொது […]

அதிரடி 23 Nov 2025 11:30 pm

கிளிநொச்சியில் தண்ணீர் பிரச்சினையாம்?

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் தடையாக உள்ளனர் இதனால் இம்மாவட்ட மக்கள் மிகவும் ஆபத்தான நோய் மற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதோடு, மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் தடை ஏற்பட்டுள்ளது எனமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (22) அவரது அலுவலகததில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்புச் சபை கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெற்று சுத்திகரித்து வழங்கி வருகிறது. ஆனால் கிளிநொச்சி குளமானது கிளிநொச்சிநகரின் அனைத்து கழிவுகளும் வந்து சேர்கின்ற குளமாக காணப்படுவதோடு, ரை ஆறு வழியாக இரத்தினபுரம் பாலம் ஊடமாக கிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகள் உட்பட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற பல கழிவுகள் கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. ஆத்தோடு கிளிநொச்சி குளம் மற்றும் அதன் நீரேந்து பகுதிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ளவர்களின் மலக்கழிவுகளும் கிளிநொச்சி குளத்திற்கு வருகிறது. இதன் காரணமாக கிளிநொச்சி குளம் கழிவுகள் நிறைந்த குளமாக காணப்படுகிறது. இந்த குளத்திலிருந்தே நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்கு விநியோகிப்படுகிறது. ஆனால் நீர் வழங்கல் வடிகாலமைப்புசபையினரிடம் காணப்படுகின்ற நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இக் கழிவுகள் அனைத்தையும் முழுமையாக சுத்திகரிக்கும் இயலுமை காணப்படவில்லை. அதனால் கடந்த சில வாரங்களாக கிளிநொச்சி மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரின் தரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நிலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளது. அதிகளவு விவசாய நடவடிக்கைகளில் அதிகளவு இராசயனங்களின் பயன்பாட்டால் இவ்வாறு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந் நீரை குடிநீராக பயன்படுத்துகின்ற மக்களில் பலர் நிரந்தர சிறுநீரக நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். முக்கியமாக கண்;டாவளை பிரதேசத்தில் மூன்று வீதமான மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு நோய் ஏற்பட்டுள்ளது இதற்கு பிரதான காரணம் குடிநீரை எனக் கூறப்படுகிறது. எனவே இந்த மக்களை பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும். இந்த பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவேண்டிய பொறுப்பு மாவட்டத்தின் உள்ள பொறுப்பு வாய்ந்த அனைவருக்கும் உண்டு ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக ஆயிரக்கணக்கான பொது மக்களின் சிறுநீரகங்களை அடைவு வைக்க முடியாது. எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 24 வீதமான மக்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதனை சுத்தமான பாதுகாப்பான நீராக விநியோகிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.இதற்கு முன் எவர் தடை ஏற்படுத்தினால் அவர்களை கருத்தில் எடுக்காது மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க பொறுப்பு வாய்ந்தவர்க்ள முன்வர வேண்டும். அத்தோடு பரந்தன் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் கௌதாரிமுனை சுற்றுலாத்தளம் என்பவற்றுக்கு நீர் வசதியினை வழங்கின்ற போதே மாவட்டம் அபிவிருத்தியை நோக்கி செல்லும் அறிவியல் நகர் பல்லைகழகம், இரண்டு பெரிய ஆடைத்தொழிற்சாலைகள், ஆனையிறவு உப்பளம் போன்றவற்றுக்கும் தடையின்றிய நீர் விநியோகம் அவசியம் இவை மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயம். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சுத்தமான குடிநீர் விநியோகத்தை சம்மந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும். கிளிநொச்சி கழிவுகள் தேங்கி நிற்கின்ற குளமான கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெறுவதனை நிறுத்தி இரணைமடுவிலிருந்து நீரை பெற்று சுத்திகரித்து கிளிநொச்சி மக்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு கோருகின்றேன். இரணைமடு குளத்தை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் ஏக போக உரிமை கோர அனுமதிக்க முடியாது அவர்களின் நலன்களுக்காக மாவட்ட மக்களின் நலன்களை பகடையாக்க முடியாது இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளம் என்பது சட்டரீதியான பதிவுக்குட்பட்ட ஒரு அமைப்பு அல்ல என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக ஊடகவியலாளர் ஒரு தகவலை பெற்று வெளிப்படுத்தியிருகின்றார். எனவே சட்டரீதியற்ற ஒரு அமைப்பின் கருத்துக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற குடிநீரை விநியோகிக்க அனுமதிக்க முடியர்து. எனவே இதற்கு விரைவில் உரிய தீர்வு காணப்படவில்லை எனின் பாதிக்கப்பட்ட மக்களுடன் வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பதிவு 23 Nov 2025 11:30 pm

துரத்தியடிப்பு:நடவடிக்கையென்கிறார் அமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம், வைக்கல கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக அங்கிகரித்து பெயர் பலகை நட வருகை தந்த தொல்லியல் திணைக்களத்தினரை தவிசாளர் துரத்தியடித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்கள பெயர் பலகைகளை அகற்றிய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி அறிவித்துள்ளார்.

பதிவு 23 Nov 2025 10:49 pm

தகர்ந்த காசா போர் நிறுத்தம்: இஸ்ரேலிய வான் வழித் தாக்குதலில் 9 பேர் பலி

காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையில் நீடித்த 5 வார போர் நிறுத்தம் தற்போது தகர்ந்துள்ளது. காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 9 பேர் வரை கொல்லப்பட்டதாக காசாவின் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. நிலைமை மோசமடைந்ததே காசாவில் நடந்த மூன்று வான்வழித் […]

அதிரடி 23 Nov 2025 10:30 pm

குரல் இனிது... ஆனால் குணம்? - ராஜதந்திரிகளான குயில்களின் மறுபக்கம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் குக்கூ... என்ற அந்த ஒற்றைக் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. பாவியங்கள் தொடங்கி நவீன கவிதைகள் வரை இனிமைக்கு இலக்கணமாகச் சுட்டப்படுவது குயிலின் குரல் தான். ஆனால், அந்த இனிமையான குரலுக்குப் பின்னே மறைந்திருக்கும் தந்திரமும், சுவாரஸ்யமான வாழ்வியலும் பலரும் அறியாதது. அவற்றைப் பற்றிய ஒரு ருசிகரப் பயணம் இதோ!  பாவியங்களும் , காவியங்களும் , பாடல்களும் , கவிதைகளும் இனிமைக்கு உதாரணமாய் குயில்களின் குரலையே எடுத்துக்காட்டாய் ,  உவமையாய் சொல்கின்றன .  மிக இனிமையான சத்தத்தை எழுப்புவதில் குயில்கள் கைதேர்ந்தவை என்பதை நாம் அறிவோம் . ஆச்சரியம் என்னவென்றால், பெண் குயிலைக் காட்டிலும் ஆண் குயிலின் குரலில்தான் இனிமை அதிகம்.  கேட்பதற்கும் , ரசிப்பதற்கும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரவல்லது .  Common cuckoo (Cuculus canorus) குயில்களின் சத்தத்தை அதிகாலையிலும் , அந்தி மாலை பொழுதிலும் நாம் கேட்டிருப்போம் . ஆனால் அவற்றை கண்களால் பார்த்திருப்போமா என்றால் அதிக பதில்கள், `இல்லை’ என்று தான் வருகின்றன . ஆண்குயில்களில் உடல் முழுக்க கருநிறமாகவும் , கண்கள் அடர் சிவப்பாகவும் காட்சியளிக்கும் . பெண்குயில்கள் பழுப்பு நிறமாகவும் , உடல் முழுக்க வெண்ணிற புள்ளிகளாலும் காட்சியளிக்கும் . மரக்கிளைகளின் இலைகளுக்கு உள்ளாகவும் , கிளைகளின் நடுப்புறத்திலும் ஒளிந்து கொண்டு அதிகம் மனித கண்களுக்கு புலப்படாமல் , கிளைக்கு கிளை தாவி கூவும் தன்மையுடையது இந்த குயில்கள் . தனிமை விரும்பிகள்! காகங்கள், மைனாக்கள், குருவிகள் போல குயில்கள் கூட்டாஞ்சோறு சாப்பிடும் ரகம் அல்ல. இவை சமூகப் பறவைகள் (Social birds) இல்லை. இனப்பெருக்க காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆணும் பெண்ணும் தனித்தனியாகவே வலம் வரும் 'தனிமை விரும்பிகள்'. பழஉண்ணிகளான (Frugivorous) இவை, அவ்வப்போது பூச்சிகளையும் ருசி பார்க்கும். இயற்கையின் 'மாஸ்டர் பிளான்' - கூட்டுக் கொள்ளை! குயில்களின் வாழ்வியலில் மிகவும் திகைக்க வைக்கும் விஷயம், அவை கூடுகட்டுவதே இல்லை என்பதுதான் (Brood Parasitism). தனக்கென ஒரு வீடு இல்லை, முட்டையை அடைகாக்க நேரமும் இல்லை. இதற்காக அவை கையாளும் உத்திதான் 'நவீன கால செவிலித்தாய்' (Surrogacy) முறை. ஆனால், இதை அவை அரங்கேற்றும் விதம் ஒரு திரில்லர் சினிமாவுக்கு இணையானது! 1. திசை திருப்புதல்: காகம் அல்லது மற்ற பறவைகளின் கூட்டை நோட்டமிடும் ஆண் குயில், முதலில் அந்தக் கூட்டின் அருகே சென்று சத்தமிட்டு வம்பிழுக்கும். 2. துரத்தல்: கோபமடைந்த ஆண் காகம், குயிலைத் துரத்திக் கொண்டு ஓடும். இதைப் பார்த்து பெண் காகமும் துரத்தச் செல்லும். 3. ஊடுருவல்: கூடு காலியான அந்தச் சில நொடிகள் போதும்... மரக்கிளையில் மறைந்திருக்கும் பெண் குயில், மின்னல் வேகத்தில் காகத்தின் கூட்டுக்குள் சென்று முட்டையிட்டுப் பறந்துவிடும். பரிணாமத்தின் பரிசு (Egg Mimicry) காகம் ஏன் இதைக் கண்டுபிடிப்பதில்லை? இங்குதான் இயற்கை குயில்களுக்கு ஒரு வரத்தை அளித்துள்ளது. தான் எந்தப் பறவையின் கூட்டில் (காகம், மைனா, தவிட்டுக்குருவி) முட்டையிடுகிறதோ, அந்தப் பறவையின் முட்டை போலவே நிறத்தையும் வடிவத்தையும் மாற்றிக்கொள்ளும் 'மிமிக்ரி' வித்தை குயில்களுக்கு உண்டு. ஏமாறும் தாய்மை திரும்பி வரும் காகமோ அல்லது குருவியோ, குயிலின் முட்டையைத் தன்னுடையது என்றே நினைத்து அடைகாக்கும். குஞ்சு பொரித்ததும், தாய்மை உணர்வைத் தூண்டும் 'ஆக்ஸிடாசின்' (Oxytocin) ஹார்மோன் சுரப்பால், வேற்று இனக் குஞ்சு என்று தெரியாமலே உணவு ஊட்டி வளர்க்கும். சில நேரங்களில் குயில் குஞ்சு வளர்ந்து நிறம் மாறும்போது, காகங்கள் உஷாராகி அதைத் துரத்திவிடுவதுண்டு. ஆனால் மைனாக்களும், குருவிகளும் கடைசி வரை ஏமாந்து, குயிலைத் தன் பிள்ளையாகவே வளர்த்தெடுக்கும். இன்னும் கொடுமை என்னவென்றால், முட்டையிலிருந்து முதலில் வெளிவரும் குயில் குஞ்சு, போட்டியைக் குறைக்க அந்தக் கூட்டில் உள்ள மற்ற முட்டைகளை கீழே தள்ளிவிடும் கொடூரமும் நிகழ்வதுண்டு. Grey-bellied Cuckoo ராஜதந்திரிகளா... வல்லுனர்களா? தன்னால் கூடு கட்ட இயலவில்லை என்பதற்காகத் துவண்டு விடாமல், மற்ற பறவைகளின் உழைப்பையும், தாய்மை உணர்வையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குயில்களை என்னவென்று சொல்வது? பறவை இனத்தின் 'ராஜதந்திரிகள்' என்பதா? அல்லது வாரிசுகளை வளர்க்க வியூகம் வகுக்கும் 'வல்லுனர்கள்' என்பதா? எது எப்படியோ, 90 சதவீத குயில் இனங்கள் இந்த முறையையே பின்பற்றுகின்றன. ஆனால், இன்று நகரமயமாதலால் மரங்களும், தோப்புகளும் அழிந்து வருவதால், இந்த தந்திரக்காரப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இனிய குரல் மட்டுமல்ல, இயற்கையின் விசித்திரமான படைப்புக்களில் ஒன்றான குயில்களையும் காக்க வேண்டியது அவசியம். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... நிறைய மரங்களை வளர்ப்போம்! தேர்தல்

விகடன் 23 Nov 2025 10:09 pm

'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' - கு.பாரதி குற்றச்சாட்டு!

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இன்று இரவோடு இரவாக கைது செய்ய காவல்துறை முயற்சிப்பதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி குற்றஞ்சாட்டியிருக்கிறார். போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் போராடி கைதாகியிருந்தனர். போராட்டம் நூறாவது நாளை நெருங்குகையில் மெரினா கடலில் இறங்கியும் கூட போராடியிருந்தனர். இதன்பிறகுதான் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மைப் பணியாளர்கள் அமைதியான முறையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து வசந்தி, ஜெனோவா, கீதா, பாரதி என 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர் கு.பாரதி உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டம் 7 வது நாளை எட்டியிருக்கிறது. இந்நிலையில், சில நிமிடங்களுக்கு முன் போராட்டம் நடக்கும் இடத்திலிருந்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், 'எங்களின் பெண் தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற நிபந்தனைகள் அத்தனையையும் கடைபிடித்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! 7 நாட்களாக எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இன்று போராடும் பெண்களை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர்கள் நால்வரையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்கின்றனர். உடனே அம்பத்தூர் காவல் ஆய்வாளர் மருத்துவர்களின் அறுவுறுத்தல்படி அவர்களை மருத்துவமனையில் சேருங்கள் என நோட்டீஸ் அனுப்புகிறார். நீதிமன்றம் மருத்துவர்களை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றெல்லாம் உத்தரவில் இல்லை. மேலும், ஒருவர் பலவீனமாகி மருத்துவமனையில் சேர்ந்தால் அவருக்கு பதில் இன்னொருவரை போராட்டத்தில் பங்கேற்க செய்யலாம். அதுவும் தீர்ப்பில் இருக்கிறது. ஜெனோவா, பாரதி, வசந்தி, கீதா ஆனால், நாளை அம்பத்தூர் தொழிற்பேட்டை நிகழ்ச்சிக்கு உதயநிதி வருவதால், அதற்குள் எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்களோ எனும் அச்சம் எழுகிறது. அலுவலக கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளே போராடிக் கொண்டிருக்கிறோம். நள்ளிரவில் இந்தப் பெண்கள் கைது செய்யப்படலாம். அப்படி எதுவும் நடந்தால் நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வோம்.' எனக் கூறியிருக்கிறார். https://www.facebook.com/share/v/17oecW6wyg/

விகடன் 23 Nov 2025 10:08 pm

திமுகவுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு எப்படி? நாங்க பேசி தீர்த்துக்கொள்வோம்-செல்வப்பெருந்தகை விளக்கம்

திமுகவுடன் எத்தனை தொகுதிகள் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கூட்டணி வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 23 Nov 2025 10:02 pm

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத்… The post சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 10:02 pm

செங்கோட்டையன் நீக்கம்.. கோபிசெட்டிபாளையம் செல்லும் EPS - வெளியான முக்கிய தகவல்!

செங்கோட்டையன் பதவி விலகியதன் பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் பகுதியில் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.

சமயம் 23 Nov 2025 9:57 pm

கடுகன்னாவ மண்சரிவு ; உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

ஏற்பட்டுள்ள அவசர அனர்த்த நிலைமை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதால் நாளை (24) குறித்த வீதி ஊடாக உயர்தரப் பரீட்சைக்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அது தொடர்பான கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான மாற்று வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நாளை பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்: மாற்று வழிகள் இதன்படி மாற்று வழிகள்: கணேதென்ன – […]

அதிரடி 23 Nov 2025 9:55 pm

இலங்கையர் தினத்தில் ஆனந்தசுதாகரன் உள்ளிட்டோருக்கு விடுதலை ?

ஆனந்தசுதாகர் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடைய வலியுறுத்தலையடுத்து, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்புச் செய்வது தொடர்பில் தாம் பரிசீலணை செய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கையர்தினம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் மற்றும் கருத்தறியும் கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இக்கலந்துரையாடலின்போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ரவிகரன் தெரிவிக்கையில், ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, எனக்குரிய கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கூடுதல் கவனம்செலுத்தி அவர்களை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்தேன். குறிப்பாக கடந்த 19.11.2025அன்று இலங்கைத் தமிழ் அரசுக்கட்சிக்கும், ஜனாதிபதிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் தமிழ் அரசுக்கட்சியின் தலைமைகள் கோரிக்கை முன்வைத்திருந்தமையினையும் இதன்போது ஜனாதிபதிக்கு நினைவூட்டியிருந்தேன். அத்தோடு தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான கிளிநொச்சி மருதநகரைச்சேர்ந்த ஆனந்தசுதாகருடைய மனைவி ஏற்கனவே இறந்துள்ள நிலையில், அவருடைய இரண்டு பிள்ளைகளையும் பராமரித்துவந்த அந்த பிள்ளைகளின் அம்மம்மாவும் உயிரிழந்துள்ளார் என்பதையும், ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினேன். எனவே இதேபோலவே ஒவ்வாரு தமிழ் அரசியல் கைதிகளுடைய குடும்பங்களும் ஏதோ ஒருவிதத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர் என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். எனவே இந்த விடயத்தில் மனிதாபிமானத்துடன் அணுகி, எதிர்வரும் டிசெம்பர்மாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிசெய்து நல்லிணக்கத்தினை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தியிருந்தேன். இந்நிலையில் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களதும் கருத்துக்களைச் செவிமடுத்த பிற்பாடு ஜனாதிபதி பதிலளிக்கும்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தாம் பிரிசீலணை செய்வதாக தெரிவித்தார் என ரவிகரன் மேலும் தெரிவித்தார்

பதிவு 23 Nov 2025 9:54 pm

கோவை வந்த பிரதமர்.. ஸ்டாலின் ஏன் சென்று சந்திக்காத காரணம் இதுதான் -ஆர்.பி.உதயகுமார்!

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பிரதமர் சந்திக்க தயார் என கூறும் ஸ்டாலின், பிரதமர் கோவை வந்தபோது ஏன் சென்று சந்திக்கவில்லை லண்டன் சென்று விட்டார? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமயம் 23 Nov 2025 9:33 pm

உலகின் முதல் செயற்கை தீவு ; சீனாவின் அதிநவீன ரகசிய திட்டம்

சீனா உலகை அதிர்வடைக்கும் வகையில், அணு ஆயுத வெடிப்பான தாக்குதல்களை கூட எதிர்கொள்ளக் கூடிய தொழில் நுட்பமாக மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு செயற்கை தீவுப் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த தீவு நகர்த்தக்கூடிய வகைப்படுத்தப்பட்டு, பாதி அளவு நீரில் மூழ்கிய நிலையில் கட்டப்பட உள்ளது. இந்த தீவுக்கு சுமார் 238 பேர் வரை வாழ்ந்து கொள்ள முடியும். மேலும், வெளியில் இருந்து எந்தவொரு சப்ளையும் இல்லாத சூழ்நிலையிலும் 4 மாதங்கள் வாழும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் […]

அதிரடி 23 Nov 2025 9:30 pm

நெல்லை: கனமழையுடன் வீசிய சூறைக்காற்று; முறிந்து விழுந்த 2 லட்சம் வாழைகள் - கண்ணீரில் விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட மேலச்செவல், சொக்கலிங்கபுரம், பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய நிலையில் இன்னும் ஓரு மாதத்தில் அறுவடைக்கு வரும் நிலையில் உள்ளன. சேதமடைந்த வாழையை ஆய்வு செய்த அதிகாரிகள் அறுவடை நிலையில் உள்ளதால் மாடுகளிடமிருந்து பாதுகாக்க விவசாயிகள் இரவு, பகலாக பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கனமழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்றால் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் எண்ணிக்கையிலான வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இந்த வாழைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வாழை ஒன்றிற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை செலவு செய்து குலை தள்ளிய நிலையில் சூறைக்காற்றில் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சேரன்மகாதேவி வேளாண்துறையினரும், வருவாய்த்துறையினரும் சேத கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். முறிந்து விழுந்த வாழைகள் இது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசினோம், “நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு கார், பிசானம் என இரண்டு முறை நெல் பயிரிடுகிறோம். அதுவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டால் மட்டுமே பயிரிட முடியும். ஆனால், வாழை அப்படியில்லை ஒரு முறை பயிரிட்டாலே 10 முதல் 12 மாதங்களில் அறுவடை செய்துவிட முடியும். நெல்லை விட வாழை கூடுதல் வருமானம் தருகிறது. அதனாலேயே சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை சாகுபடிக்கு முக்கியத்தும் தருகிறோம். கடந்த ஆண்டு ஏத்தன் ரக வாழை சாகுபடி செய்ததில் நல்ல வருமானம் கிடைத்தது. இந்தாண்டும் அதைப் போலவே வருமானம் பார்த்திடலாம் என நினைத்துதான் சாகுபடி செய்தோம். ஆனால், கனமழை, சூறைக்காற்றால் வாழைகள் முறிந்து விழுந்துள்ளது. சேதமடைந்த வாழையை ஆய்வு செய்த அதிகாரிகள் ஏத்தன் ரகத்திற்கு அடுத்தபடியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்த மொந்தன், பூவன், கற்பூரவல்லி, நாட்டு ரக வாழையும் முறிந்து விழுந்துள்ளது. மொத்தம் சுமார் 2 லட்சம் வாழைகள் வரை முறிந்து விழுந்துள்ளது. கடன் வாங்கி செலவு செய்துள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோனது” என்றனர், கண்ணீருடன். இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆய்வு மேற்கொண்டதுடன் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட ஆவண செய்வதாக உறுதியளித்தார்.     

விகடன் 23 Nov 2025 9:18 pm

யாழில். உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கினை பழைய பூங்கப் பகுதியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்லினை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்தனர். அதனை தொடர்ந்து நடைபெற நிகழ்வில் நிகழ்வில் தெற்காசிய ரீதியில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கு விருந்தினர்களால் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்வில் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு 23 Nov 2025 9:15 pm

யாழ் . மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தை புனரமைப்பதில் குழப்பம் - நிகழ்வின் இடையில் வெளியேறிய அமைச்சர்

நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2012ம் ஆண்டு ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. தற்போதைய அரசாங்கம் மீளவும் குறித்த நீச்சல் தடாகத்தை புனரமைக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த கல்லூரிக்கு விஜயம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் நீச்சல் தடாகத்தை பார்வையிட்டதுடன் டைவிங் நீச்சல் தடாகம் எனும் போது ஒரு குறிப்பிட்டளவானவர்களே பயன்படுத்துவார்கள் என்றும் அதே நேரம் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக இதை மாற்றினால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவார்கள். பொது நிதியில் செய்யும் போது அதிகளவிலானோருக்கு அது நன்மை அளிக்கும் என்று முடிவு எடுத்து அவ்வாறு செய்யலாம் என யோசனையை முன் வைத்தார். குறித்த முயற்சிக்கு யாழ் மத்திய கல்லூரி மட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மத்திய கல்லூரிக்கு சென்ற அமைச்சர் தனது நிலைப்பாட்டை அங்கு தெரிவித்தபோது உள்ளவாறே புனரமைத்து தருமாறு ஒரு தரப்பும் சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றி புனரமைத்தாலும் பிரச்சினை இல்லை என கூறி அமைச்சரின் கருத்தையும் ஏற்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. குறித்த புனரமைப்புக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்ய வைக்கப்பட்டிருந்த நிலையில் நீச்சல் தடாகம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றி விட்டு, திரை நீக்கம் செய்யமாலே விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். பாடசாலை அதிபர் உள்ளிட்ட சிலர் அமைச்சரை திரை நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கேட்ட போதும் அமைச்சர் அதனை மறுத்தார். பாடசாலை மட்டத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டிய பின்னர் அதற்கேற்றவாறு புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்து அமைச்சர் வெளியேறினார். இதன்போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிஙக்ம் பிரதீபன், யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி என பலரும் கலந்து கொண்டனர்.

பதிவு 23 Nov 2025 9:14 pm

தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால் தாக்கிய நடத்துனர்!

தென்காசி, கடையநல்லூர் அருகே நயினாரகரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (50). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நயினாரகரம் செல்வதற்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் நயினாரகரத்திற்கு ரூ.10 கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் பஸ் நயினாரகரத்தில் நிற்காமல் அடுத்த ஸ்டாப்பான இடைகாலில் நின்றது. இது குறித்து சுப்பையா, கண்டக்டர் நாகேந்திரனிடம் கேட்டிருக்கிறார். கண்டக்டர் நாகேந்திரன் கண்டக்டர் ஆத்திரத்தில் அவரை இடைகால் ஸ்டாப்பில் பஸ்ஸிலிருந்து கீழே தள்ளி பேருந்தில் இருந்த கம்பியால் அவரை முதுகில் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமுற்ற சுப்பையா பேருந்து முன்பாக உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஆத்திரமுற்ற கண்டக்டர் அங்கு காலணியை எடுத்து சுப்பையாவை கன்னத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து கிளப்பிச் சென்றனர். சுப்பையா தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொடுத்து புகார் செய்தார். இதனையடுத்து இலத்துார் போலீஸார் கண்டக்டர் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விகடன் 23 Nov 2025 8:59 pm

2026ல் தளபதி விஜய் ஆட்சி தான்! அடித்து சொல்லும் தவெக ஆதரவாளர் கந்தசாமி...

2026 தமிழ்நாடு தேர்தலில் தளபதி விஜய் ஆட்சி தான் அமையும் என்று தவெக ஆதரவாளர் கந்தசாமி அதிரடியாக கூறி உள்ளார்.

சமயம் 23 Nov 2025 8:55 pm

மதுரையில் சர்வதேச ஹாக்கி மைதானம்; திறந்துவைத்த துணை முதலமைச்சர் | Photo Album

மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்

விகடன் 23 Nov 2025 8:54 pm

`மெல்ல நிறைவேறும் கபடிக் கனவு' - சாதிக்கத் துடிக்கும் திருவாரூர் இளைஞர்!

திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தில் AMC கபடி கழகத்தின் சிறந்த ஆல்ரவுண்டராக லோகநாதன் மிக இளையோர் (Sub junior) பிரிவில் தமிழக அணிக்காக தேர்வாகி இருக்கிறார். லோகநாதனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு அவரிடம் பேசத் தொடங்கினோம். ``நான் வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு சிறு வயதிலேயே கபடி விளையாடனும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் என் கனவே கபடி தான். எங்கள் பள்ளியில் எனக்கு பயிற்சியாளராக சுகன் சார் இருந்தார். கபடி மேல எனக்கு இருக்கிற ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக அவர் எனக்கு பல கோணங்களில் உதவினார். எங்களது குடும்பம் ரொம்ப ஏழ்மையானது. எங்க அப்பா ராமநாதன் ஒரு விவசாயி. எங்க அப்பா ஒருவருடைய வருமானம் குடும்பத்திற்கு பத்தாம இருக்கிறதுனால என் அம்மா நிர்மலாவும் கூலி வேலைக்கு போய் தான் என்ன படிக்க வச்சாங்க. என் அண்ணன் ஒரு SDAT வாலிபால் விளையாட்டு வீரர். என் அண்ணனை முன்னோடியாக வைத்தும் எனக்கு விளையாட்டு மேல ஆர்வம் வந்தது. லோகநாதன் என் ஊர் வடுவூர்'ல AMC கபடி கழகம், மேல்பாதி இளைஞர்கள் கபடி விளையாட பயிற்சி கொடுத்தாங்க. அவங்களோட பயிற்சி மூலமா எனக்கு கபடி மேல பெரிய மதிப்பும், மரியாதையும் வந்தது. என் குடும்ப நிலைமையை புரிந்து கொண்ட AMC டீம், என்னை மயிலாடுதுறையில் இருக்கிற SAI விளையாட்டு விடுதியில் சேர்த்து விட்டாங்க. இப்போ அங்கதான் 11ஆம் வகுப்பு படிக்கிறேன். இங்க எனக்கு கோச்சாக R. அரவிந்த் ராஜா அவர்கள் பயிற்சி தர்றாங்க. இவரு மட்டும் இல்லனா நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. நான் செய்கின்ற சிறு தவறையும் அன்பாகச் சொல்லி புரியவச்சு, நான் முன்னேற உதவியா இருக்காங்க. சேலத்தில் நடந்த மாநில அளவிலான கபடி தேர்ச்சி போட்டியில் பங்குபெற்ற, 300 பேரில் 32 பேர் தேர்வாகிருக்காங்க. அதுல நானும் ஒருத்தன், இதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றின்னு நினைக்கிறேன். பிறகு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தில் என்னை செலக்ட் பண்ணாங்க. சேலம் வாலப்பாடியில் 10 நாள்களுக்கு மேல் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழக அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேர்ல நானும் ஒருத்தன். 'நான் ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - இந்திய U18 அணியில் தஞ்சை இளைஞர் அபினேஷ் தமிழ்நாடு சார்பாக ஹரியானால நவம்பர் 27 முதல் 30 வரை நடக்க உள்ள கபடி போட்டியில் விளையாட உள்ளேன். கண்டிப்பாக அங்க நல்லா விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் தமிழக அணிக்கு தேர்வானதற்கு எனக்கு முக்கிய உறுதுணையாக இருந்தது, திருவாரூர் மாவட்டக் கபடி கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்கள். ராஜேந்திரன் ஐயா மட்டும் இல்லை என்றால் நான் கண்டிப்பாக இவ்வளவு உயரத்தை தொட்டிருக்க முடியாது. நான் கஷ்டத்தில் இருக்கும்போது எனக்கு தோள் கொடுத்த தோழமை அவர். இந்த நேரத்தில் ராஜேந்திரன் ஐயாவுக்கு எனது நன்றியைக் கூறுகிறேன். கண்டிப்பாக தமிழக அணியில் வெற்றி பெற்று எங்களது ஊருக்கு மென்மேலும் பெருமை சேர்ப்பேன் எனக் கூறி, மனம் நெகிழ்கிறார்... இன்னும் பல உயரங்களைத் தொட, வாழ்த்துகள் லோகநாதன்!!!

விகடன் 23 Nov 2025 8:37 pm

நோபல் பரிசு வென்ற மரியாவுக்கு வெனிசுலா அரசு மிரட்டல்

நோபல் பரிசு வென்ற எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு வெனிசுலா அரசு மிரட்டல் விடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நோபால் பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், நோபல் பரிசை பெற மரியா நாட்டைவிட்டு சென்றால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார் என்று வெனிசுலா […]

அதிரடி 23 Nov 2025 8:30 pm

யாழ் நீச்சல் தடாகம் புனரமைப்பு: குழப்பம் காரணமாக அமைச்சர் வெளியேற்றம்!

நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. முன்னாள் […]

அதிரடி 23 Nov 2025 8:30 pm

புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?

தமிழகம், புதுச்சேரியில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், `அந்த திட்டமே சரியில்லாத திட்டம். சாலைகளை சீரமைத்தாலே பயனுள்ளதாக இருக்கும்’ என்றார். செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த சீமான் தொடர்ந்து, `அது வளர்ச்சித் திட்டம்தானே…’ என்று நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, `உனக்கு அந்த வளர்ச்சி வேண்டும் என்றால் நீ போய் போராடி வாங்கிக்க…’ என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார் சீமான். அதையடுத்து SIR குறித்து மற்றொரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு, `SIR-ஐ மம்தா எதிர்க்கிறார். ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? SIR-ஐ செயல்படுத்தும் கட்சி எது ? அங்கன்வாடியில் வேலை செய்பவர்களையும், சத்துணவுக் கூடத்தில் வேலை செய்பவர்களையும் BLO-வாக நியமித்தது கணக்கெடுக்க அனுப்பியது யார்... தி.மு.க தானே…?’ என்றார் சீமான். அப்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிருபர், `தேர்தல் ஆணையம் சொல்வதைத்தானே அரசு செய்கிறது? அதேசமயம் தி.மு.க SIR-ஐ எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறதே?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, `அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா ? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்க வேண்டுமா ?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்த சீமான், அந்த செய்தியாளரை ஒருமையிலும், அருவருக்கத்தக்க தகாத வார்த்தையிலும் திட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து, `ஒரு மைக்கையும், கேமராவையும் எடுத்துட்டு வந்துட்டா நீ வெங்காயமா ?’ என்று கேட்டவாரே அந்த செய்தியாளரை அடிக்கப் பாய்கிறார். பத்திரிகையாளர்கள் புகார் அதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அந்த நிருபரை சூழ்ந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்கள். அத்துடன், `எங்கள் தலைவரிடம் இப்படியான கேள்விகளைக் கேட்டால் தீர்த்துக் கட்டிவிடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தனர். அதையடுத்து தாக்குதலுக்குள்ளான அந்த நிருபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நிருபர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று, பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.   செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்தது?

விகடன் 23 Nov 2025 8:11 pm

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி; மதுரையில் மைதானத்தை திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். வீரர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையிலும் மதுரையிலும் நடத்தப்படவுள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 24 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரை விளையாட்டு மைதான வளாகத்தில் 20 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1500 பேர் அமரும் வகையில் தற்காலிக கேலரி, 500 பேர் அமரும் வகையில் நிரந்தர கேலரி அமைக்கப்பட்டுள்ளது, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை, ஜிம், அவசர மருத்தவ மையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மைதானங்களில் 72 போட்டிகள் நடைபெற உள்ளது. வீரர்களுடன் மதுரையில் நவம்பர் 28 ஆம் தேதி ஜெர்மனி - ரஷ்யாவிற்கு இடையே உலகக் கோப்பைக்கான முதல் போட்டி கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து மதுரை மாவட்ட நிர்வாகம் செய்து வரும் நிலையில், மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மைதானத்தை திறந்து வைத்தார்.

விகடன் 23 Nov 2025 8:05 pm

`மதுரைக்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனையெல்லாம் அதிமுக ஆட்சியில்தான் வரும்!'- ராஜன் செல்லப்பா

திமுக நிர்வாகி சுட்டுக் கொல்லப்படுகிறார், திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் வழக்கு என ஒரே நாளில் ஊடகங்களில் பல செய்திகள் வருகிறது என்று திமுக குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியுள்ளார். ராஜன் செல்லப்பா மதுரை அவனியாபுரத்தில் அதிமுக 54 ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பேசும்போது, திமுக செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டும், திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு என ஒரே நாளில் பல செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் ரோப் கார் அமைக்க கடந்த ஆண்டு 23 கோடி ஒதுக்கப்பட்டும் வேலைகள் இன்னும் நடைபெறவில்லை. மதுரை வரும் முதலமைச்சர், ஒரு லட்சம் பேருக்கு பட்டா கொடுக்கப் போகிறாராம், முதலில் நீண்டகாலமாக பட்டா இல்லாத இப்பகுதி மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுங்கள். மெட்ரோ ரயில் திட்டம் வராததற்கு யார் காரணம்? விரிவான திட்ட அறிக்கையில் சரியான தகவலை கொடுத்திருந்தால் மெட்ரோ திட்டம் மதுரைக்கு வந்திருக்கும், மத்திய அரசு கூடுதல் தகவல் கேட்டு அறிக்கையை திருப்பி அனுப்பி உள்ளது. அதிமுக ஆட்சி வந்த பின்னர் மதுரையில் மெட்ரோ திட்டம் வந்தே தீரும், சந்தேகம் வேண்டாம். எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில்தான் வருகிறது, மூன்றாண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னேன், ஆனால் ஆளுகின்ற வாய்ப்பு இழந்துவிட்டதால், அதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். எடப்பாடி முதலமைச்சராக வந்த பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும். இன்னும் இரண்டு மாதங்களில் விடுபட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க போகிறார்களா? இன்னும் சில மாதங்களில் ஆட்சி முடிவடையப் போகிறது, அப்புறம் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாது. காவல்துறையை மிரட்ட முடியாது, பொய் வழக்கு போட முடியாது, மோசமான திமுக அரசுக்கு முடிவு காலம் வந்துவிட்டது. திமுக ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி பீடத்தில் இருந்ததாக வரலாறு இல்லை ஆனால், அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்துள்ளது. திமுகவிடம் நிர்வாகத் திறமையில்லை, போட்டோ சூட் மட்டும் எடுக்கிறார்கள். முதல்வர் பாதுகாப்புடன் நடுரோட்டில் செல்கிறார், ரெடிமேடாக பத்து கல்லூரிப் பெண்களை வரவழைத்து வணக்கத்தை போட்டுக்கொண்டு செல்கிறார், மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதே அவருக்கு தெரியவில்லை. பெண்களுக்கு இலவச பேருந்து என்றார்கள், பல இடங்களில் பேருந்தே ஓடவில்லை, 10 பேருந்துதான் மதுரையில் ஓடுகிறது, அதுவும் ஓட்டை பேருந்தாக உள்ளது. தயவுசெய்து இந்த வாரத்திற்குள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து விடுங்கள், எங்கள் நிர்வாகிகள் அதற்கு உதவி பண்ணுவார்கள். சாதாரணமாகவே திமுக-காரர்கள் மக்களை மதிக்க மாட்டார்கள், அதிலும் ஓட்டு இல்லையென்றால் கொஞ்சமும் மதிக்க மாட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மாதம்தோறும் உதவித் தொகை கொடுப்போம் என்றார்கள், கொடுத்தார்களா? உள்ளூர் மாடுகளை மதிப்பதில்லை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது உள்ளூர்காரர்களுக்கு டோக்கன் கொடுப்பதில்லை. இதற்கெல்லாம் முடிவு கட்ட அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.

விகடன் 23 Nov 2025 8:00 pm

காரைக்குடி: போராட்டத்தால் பூட்டப்பட்ட மதுக்கடை - மீண்டும் திறக்கப்படலாமென மக்கள் அச்சம்!

கடந்த 14 ஆம் தேதி காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் 'டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் துயரம் அடைகிறார்கள்' என்று பள்ளி மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்த, துணை முதல்வரோ அம்மாணவியை பாராட்டி பரிசளித்தார். பூட்டப்பட்ட கடை இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி காரைக்குடி பர்மா காலனி பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து வருவதாக அரசு கூறினாலும் இன்னொருபுறம் புதிதாக மதுக்கடைகளைத் திறந்து கொண்டிருக்கிறார்கள். மதுக்கடை அமைப்பதற்கான விதிகளும் பல இடங்களில் மீறப்படுகிறது. கல்வியிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்கும் காரைக்குடியில், சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு நகரில் அதிகரித்து வரும் மதுக்கடைகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் அடர்த்தியாக வாழும் பர்மா காலனிப் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி புதிய மதுக்கடை திறக்கப்பட்டதை பார்த்து பொதுமக்கள் பொங்கி எழுந்தனர். அவர்களுடன் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய மக்கள் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்விக்கூடங்கள், குடியிருப்புகள் அதிகமுள்ள அப்பகுதியில் மதுக்கடையை திறக்கக் கூடாது என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு வந்த அதிகாரிகள் கடையை மூட உத்தரவிட்டனர். ஆனால் அதை மதிக்காமல் அன்று மாலையே கடைக்காரர் மது விற்பனை செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமன்றி இலவசமாகவும் மது விநியோகம் செய்தார். இதனால் கோபமான மக்கள் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி, ரேசன் அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைப்போம் என்று அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து சப் கலெக்டர், டி.எஸ்.பி ஆகியோர் வந்து நிலைமையை புரிந்துகொண்டு மதுக்கடைக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றனர். இதில் நம்பிக்கை இல்லாத மக்கள் தங்கள் பங்குக்கு ஒரு பூட்டை போட்டுள்ளனர். நிரந்தரமாக மதுக்கடையை அங்கிருந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிடாததாலும், கடை உரிமையாளர் ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிகளுடன் செல்வாக்குள்ள நபர் என்பதாலும் எப்போதும் வேண்டுமானலும் மதுக்கடை திறக்கப்படலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள்.

விகடன் 23 Nov 2025 7:37 pm

வெளியேறிய அமைச்சர்

நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற… The post வெளியேறிய அமைச்சர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 7:31 pm

ஒரே ஒரு மரணத்தால் அதிர்ந்து போன அமெரிக்கா ; விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இறந்தவர் வயதானவர் என்றும், அவருக்கு ஏற்கனவே பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. H5N5 பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு H5N5 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக இதுவரை அறிக்கைகள் எதுவும் இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதன்படி அமெரிக்காவில் 9 மாதங்களில் […]

அதிரடி 23 Nov 2025 7:30 pm

`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!' - பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தெளிவாக அறிவிக்கப்படும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று நான் பேசியதை தவெக தலைவர் விஜய்யை பற்றி பேசியதாக சிலர் திரித்து விட்டனர். அவர் மட்டும்தான் சமீபத்தில் கட்சி தொடஙகியுள்ளாரா? இன்னும் சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜய் எங்கள் வீட்டுப் பையன் என்று எல்லா இடஙகளிலும் கூறி வருகிறேன். தற்போது அவர் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். அவர் தன்னை நிரூபித்து சாதிக்க வேண்டும். கரூர் சம்பவம் எல்லோர் மனதிலும் நீங்காத சோக வடுவை ஏற்படுத்தி உள்ளது. இனி எப்படி அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்க உள்ளோம். வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் பிரதிபலிக்குமா என்று என்னால் சொல்ல முடியாது. பீகாரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக ப.சிதம்பரம் கூறுகிறார், தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெறுகிறீர்கள், அதை மறுக்க முடியுமா? இந்த தேர்தல் நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும், வாக்குத் திருட்டு நடக்கக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.

விகடன் 23 Nov 2025 7:30 pm

பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது!

பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெற்ற பார்வையற்றோருக்கான மகளிர்… The post பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 7:28 pm

சற்றுமுன் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் கனமழை கொட்டி வரும் நிலையில் நவம்பர் 24ந் தேதி நாளை சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 23 Nov 2025 7:19 pm

தவெக விஜய் மக்கள் சந்திப்பு பேச்சை எப்படி பார்ப்பது? தராசு ஷ்யாம் விளக்கம்

தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் இன்று நடத்திய மக்கள் சந்திப்பின்போது பேசிய பேச்சு குறித்து தராசு ஷ்யாம் கொடுத்த விளக்கத்தை விரிவாக காண்போம்.

சமயம் 23 Nov 2025 7:15 pm

பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம்.. குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்குமா?

பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டறியப்பட்டதாக வெளியான ஆய்வு முடிவுகள் கவலைக்குரியவை அல்ல என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் டாக்டர் தினேஷ் கே. அஸ்வால் தெரிவித்துள்ளார்.

சமயம் 23 Nov 2025 7:10 pm

விபத்தில் சிக்கி தான் யார் என்பதையே மறந்த நபர்: மீண்டும் விபத்தில் சிக்கியபோது…

இந்தியாவின் ஹிமாச்சலைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுவன் விபத்தொன்றில் சிக்கி தான் யார் என்பதையே மறந்துபோனான். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் அந்த நபர் ஒரு விபத்தில் சிக்கி தலையில் அடிபட, 45 ஆண்டுகளுக்குப் பின் தான் யார் என்பது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது! விபத்தில் சிக்கிய சிறுவன் ஹிமாச்சலிலுள்ள Naddi என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரிக்கி என்னும் 16 வயது சிறுவன், 1980ஆம் ஆண்டு, ஹரியானாவிலுள்ள அம்பாலா என்னுமிடத்துக்கு வேலைக்குச் சென்றிருந்தபோது ஒரு பெரிய விபத்தில் […]

அதிரடி 23 Nov 2025 6:30 pm

யாழில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ; நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

அராலி மத்தி, வட்டுக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக ஒரு சிறிய பணி செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு அற்ற நிலையில் இருந்த நன்னீர் கிணறு ஒன்றினை புனரமைத்து, நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர்த் தாங்கி அமைத்து குடிநீர் வழங்கல் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீருக்கு தட்டுப்பாடு அராலி கந்தஞானியார் ஆலயத்திற்கு உரித்தான காணியில் உள்ள இந்த கிணற்றினை சிலர் இணைந்து ரூபா 150000/- வரையான செலவில் இவ்வாறு தயார் செய்துள்ளனர். உண்மையிலேயே யாழில் பல பகுதிகளில் குடிநீருக்கு […]

அதிரடி 23 Nov 2025 6:21 pm

பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ கைது!

ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ நேற்று சனிக்கிழமை… The post பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 5:58 pm

தவெக விஜய் தான் காரணம்.. டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்!

கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு விஜய்யின் தாமதமே காரணம் என திமுக மூத்த தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக மீது மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளை விஜய் முன்வைத்து உள்ளார்.

சமயம் 23 Nov 2025 5:56 pm

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்!

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்.!

விகடன் 23 Nov 2025 5:43 pm

9 வளைவு பாலத்தை ஒளிர வைப்பதில் சிக்கல்

தனியார் நிலம் வழியாக மின்சார கேபிள்களை நிறுவுவது தொடர்பான சிக்கல்கள் காரணமாக, பதுளை – தெமோதரை பகுதியிலுள்ள 9 வளைவு பாலத்தை மின் விளக்குகளால் ஒளிரச் செய்யும் திட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியம் அறிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பாலத்தையும் அதன் சுற்றுப்புறங்களை ஒளிரச் செய்வதற்காக கட்டப்பட்ட மின்மாற்றிக்கு, மின்சாரம் வழங்க தேவையான மின்சார கேபிள்களை இடுவதற்கு தனியார் நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த தாமதம் ஏற்பட்டதாக மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் […]

அதிரடி 23 Nov 2025 5:31 pm

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் தடவிய மருத்துவர் –அடுத்து நடந்தது என்ன?

காயத்தில் தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்கை மருத்துவர் தடவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபெவிக்விக் மருத்துவம் உத்தரப்பிரதேசம், மீரட்டில் உள்ள ஜக்ருதி விஹார் காலனியில் சர்தார் ஜஸ்பிந்தர் சிங்கின் குடும்பம் வசிக்கிறது. சம்பவத்தன்று அவரது இரண்டரை வயது மகன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் டேபிளின் விளிம்பில் மோதியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனையடுத்து குழந்தையை உடனடியாக அருகிலுள்ள பாக்யஸ்ரீ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது ​​பணியில் இருந்த மருத்துவர், […]

அதிரடி 23 Nov 2025 5:30 pm

யாழில் இரவோடிரவாக கைது செய்யப்பட்ட பெண் ; அதிர்ச்சி கொடுத்த நீண்ட கால பின்னணி

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் 10 லீற்றர் கசிப்புடன் 42 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றிரவு(22) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 23 Nov 2025 4:54 pm

யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா

வடக்கின் அபிவிருத்தி சார்ந்து எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகிறது. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாட்டுத் துறைக்குத் தேவையான வளங்களைப் பெற்று, எமது வீரர்கள் சர்வதேச அரங்கில் மிளிர வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) யாழ்ப்பாணம் […]

அதிரடி 23 Nov 2025 4:51 pm

அதிமுக தனபாலுக்கு என்ன ஆச்சு? எடப்பாடி பழனிசாமி மீது கோபமா? காரணம் இதுதான்...

அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி மீது அக்கட்சியின் மூத்த தலைவர் தனபால் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 23 Nov 2025 4:51 pm

அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு!

தனது 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளாா். உக்ரைன் அரசு ஏற்கெனவே நிராகரித்திருந்த பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள கெடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டிரம்ப் கூறியதாவது: போா் நிறுத்தம் தொடா்பான வரைவு திட்டத்தை உக்ரைன் வரும் வியாழக்கிழமைக்குள் (நவ. 27) ஏற்க வேண்டும். அதுதான் சரியான நேரம். அந்த தேதிக்குள் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்காவிட்டால் அந்த […]

அதிரடி 23 Nov 2025 4:30 pm

சாண்ட்ராவை கதறவிட்ட பிக் பாஸ், கூலா வேடிக்கை பார்த்த விஜய் சேதுபதி: இதை சத்தியமா எதிர்பார்க்கலயே

பிக் பாஸ் 9 வீட்டில் இருக்கும் சாண்ட்ராவை கதற விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். சாண்ட்ரா அழுததை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களே அவார்டா கொடுக்கிறாங்க, இப்படி நடிக்கிறீங்க என கேட்டிருக்கிறார்கள்.

சமயம் 23 Nov 2025 3:53 pm

டெல்டாவெதர்மேன் மழை அப்டேட்: அடுத்த 30 மணி நேரம் வெளுக்க போகும் கனமழை- எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த 30 மணி நேரத்திற்கு தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என டெல்டாவெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்தெந்த மாவட்டங்கள் என்று விரிவாக காண்போம்.

சமயம் 23 Nov 2025 3:47 pm

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது.

சமயம் 23 Nov 2025 3:42 pm

பிரேஸில் முன்னாள் அதிபா் போல்சோனாரோ கைது!

ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இது குறித்து பிரேஸில் மத்திய காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஊழல், பணமதிப்பிழப்பு, சதி திட்டம் உள்ளிட்ட குற்றங்களுக்காக முன்னாள் அதிபா் பொல்சொனாரோவைக் கைது செய்தோம். 2022 தோ்தலில் தோல்வியடைந்த பிறகு அவா் அமைதியான ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை வரும் 25-ஆம் தேதி தொடங்கும். […]

அதிரடி 23 Nov 2025 3:30 pm

TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் தவெகவினரை திமுகவினர் மற்றும் சில கட்சிகள் 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு விமர்சிப்பது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் விஜய். இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், நம்ம தவெக இளம் தோழர்கள், GEN Z கிட்ஸ் தவெக தோழர்களை எல்லாம் ‘தற்குறிகள்’ என சொல்லி நல்லா வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் அவர்கள் தற்குறிகள் அல்ல, நம்ம பசங்க - திமுக எம்.எல்.ஏ எழிலன் சொல்லும் லாஜிக்! சமீபத்துல ‘அறிவுத் திருவிழா’னு ஒன்னு நடத்துனாங்க. சாரி, அது ‘அவதூறு திருவிழா’. அதுல இப்போ, ‘அவங்க தற்குறிகள் இல்லை. அவங்கள அப்படி சொல்லாதீங்க. அங்க ஒன்னும் சங்கிகள் கிடையாது’னு ஒரு குரல். அவங்க கட்சியோட அறிவுக் கண்ணை திறந்து வைக்கிற மாதிரி பேசியிருக்கிறார் அவங்களோட எம்.எல்.ஏ. யாருடா அதுனு பார்த்தா, அவர் நம்ம தவெக கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாள் அவர்களோட சொந்தக்காரராம். அவர் நமக்கு ஆதரவாகப் பேசுகிறார். அந்த ஆதரவுக் குரல் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுலையும் இனி எதிரொலிக்கும். சும்மா பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டுதான்.  ‘மர்மயோகி’ படத்துல எம்.ஜி.ஆர் ‘குறி வைத்தால் தவறவிடமாட்டேன். தவறு என்றால் குறியே வைக்க மாட்டேன்’ என்பார். அப்படித்தான் இந்த விஜய்யும். ‘ஏன்டா இந்த விஜய்யை தொட்டோம். ஏன்டா விஜய் கூட இருக்க அந்த மக்களை தொட்டோம்’ என நினைச்சு நினைச்சு வருத்தப்பட போறாங்க.  அரசியல் புரிதல் நமக்கு இல்லைனு சொல்றாங்க. நான் ஒன்னு கேட்குறேன், ‘மக்கள் எல்லாரும் உங்களுக்குத் தற்குறிகளா?’.  எங்களுக்கு ஓட்டு போடுகிற மக்கள் தற்குறிகள் என்றால், அதே மக்கள்தானே இவ்வளவுநாள் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. அவங்க தற்குறிகளா? மக்களுக்கு நீங்க கொடுக்கிற மரியாதை இதுதானா? `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்! இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்க அரசியலையே கேள்விக் குறியாக்க போறாங்க. இவங்க எல்லாம் தற்குறிகள் இல்லை, தமிழ்நாட்டின் ஆச்சர்யக் குறிகள். மாற்றத்திற்கான அறிகுறிகள்.  சும்மா லாஜிக்கே இல்லாம ‘தற்குறி தற்குறி’னு சொல்லிட்டு இருக்கக் கூடாது என்று 'தவெக' வினரை 'தற்குறிகள்' என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துப் பேசியிருக்கிறார் விஜய்.

விகடன் 23 Nov 2025 3:08 pm

`எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் 2026ம் ஆண்டு தேர்தலில் வென்றால் தவெக என்னென்ன செய்யும் என்றும் அதன் வாக்குறுதிகள் குறித்தும் பேசியிருக்கிறார் விஜய். இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், நம்ம ஆட்சிக்கு வந்தால்…. அதென்ன வந்தால். நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி ‘தவெக; வை ஆட்சி அமைக்க வைப்பாங்க. அப்படி மக்கள் அமைக்கும் நம்ம ஆட்சியில மக்களுக்கான நல்லது மட்டுமே செய்வோம். தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் எங்களுடைய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படை இவைதான் எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கணும். கார் இருக்கணும் என்பது எதிர்கால லட்சியம். அதுக்கான வசதி வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் உண்டாக்கணும். ஒவ்வொரு வீட்ல இருக்குறவங்களும் குறைந்தபட்சம் டிகிரி படிச்சிருக்கிறத உறுதி செய்வோம். ஒவ்வொரு வீட்டுலையும் குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது நிரந்தர வருமானம் இருக்கணும். அதுக்கான வேலைவாய்ப்பு, கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். எந்த பயமுமின்றி மக்கள் அரசு மருத்துவமனைக்குப் போகிற மாதிரி மாற்ற வேண்டும். பருவமழை காலத்துல மக்களும், விவசாயமும் பாதுகாக்கப்படனும். அதுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான பாதுகாப்புத் திட்டத்த உருவாக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சட்ட ஒழுங்கை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்; எல்லாருக்கும் பவர் ஃபுல்லான பாதுகாப்பை உண்டாக்க வேண்டும்.  நம்ம வீட்டு பெண்கள் பயமே இல்லாமல் சமூகத்தில் வாழ வேண்டும். தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்! இவையெல்லாம் எப்படி செயல்படுத்த போறோம் என்கிற விவரத்தை தவெக தேர்தல் வாக்குறுதியில் விரிவாக, தெளிவாகச் சொல்வோம். நல்லது செய்வது மட்டும்தான் தவெகவின் அஜெண்டா. வேறெந்த அஜெண்டாவுமில்லை எங்களுக்கு. இந்த விஜய் ஒன்னு சொன்னா அதைச் செய்யாமல் விடமாட்டான். அது மக்களுக்கும் நல்லா தெரியும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Nov 2025 2:49 pm

பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப்படி பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆபாச வீடியோ இந்த நிலையில், வழக்கு தொடர்பாக வெளியூர் சென்று வந்த பெண் ஆய்வாளர் ஒருவர் பயணப்படிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முருகனிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அன்றைய தினம் இரவு புதிய செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆய்வாளர், சம்பந்தப்பட்ட எண் குறித்து புகார் அளித்திருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் பணியாற்றி வந்த முருகனின் எண் என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆபாச வீடியோக்களை முருகன் அனுப்பியதை உறுதி செய்த காவல்துறையினர், முருகன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். முருகன் பிண்ணனி குறித்து தெரிவித்த காவல்துறையினர், டிராவல் அலவன்ஸ் விண்ணப்பத்தில் சம்மந்தப்பட்ட லேடி இன்ஸ்பெக்டர் தன்னுடைய செல்போன் எண்ணை எழுதியிருக்கிறார். இதை கவனித்த முருகன், எண்ணை செல்போனில் ஏற்றி வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

விகடன் 23 Nov 2025 2:38 pm

ஆடையில்லா காட்சிக்காக நடிகை மீராவிடம் மன்னிப்பு கேட்ட மோகன்லால்: ஏன் தெரியுமா?

தன்மாத்ரா படத்தில் வந்த ஆடையில்லா காட்சியில் நடித்த மோகன்லால் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக நடிகை மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார். மோகன்லால் ஏன் மன்னிப்பு கேட்டார் என தெரிந்து கொள்ளுங்கள்.

சமயம் 23 Nov 2025 2:31 pm

விபத்தில் சிக்கிய மணமகள் –மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய மணமகன்

மணமகள் விபத்தில் சிக்கியதால், மருத்துவமனையில் வைத்து மணமகன் தாலி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய மணமகள் கேரள மாநிலம் ஆலப்புழாவின் கொம்முடியை சேர்ந்த ஆவணி(Aavani) என்பவருக்கும், தம்பொலியை சேர்ந்த ஷரோன்(Sharon) என்பவருக்கும், ஆலப்புழாவில் உள்ள சக்தி ஆடிட்டோரியத்தில் நேற்று முன்தினம் மதியம் 12.12 மணிக்கு திருமணம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலையில், மணப்பெண் அலங்காரத்திற்காக ஆவணி தனது குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தை […]

அதிரடி 23 Nov 2025 2:30 pm

புத்தர் சிலை படும்பாடு –நிலாந்தன்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மகாசங்கத்தின் பலத்தைக் காட்டியிருக்கிறது.தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நம்பமுடியாது என்பதை… The post புத்தர் சிலை படும்பாடு – நிலாந்தன். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 2:06 pm

ஹிங்குல கடுகண்ணாவ அனர்த்தத்தில் 6 பேர் மரணம்!

மாவனல்லை கடுகண்ணாவ பிரதேசத்தில் சனிக்கிழமை 22ஆம் திகதி காலை மண்சரிவு மற்றும் பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம்… The post ஹிங்குல கடுகண்ணாவ அனர்த்தத்தில் 6 பேர் மரணம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 2:05 pm

தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தையொட்டி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு… The post தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 2:02 pm

குடும்பபெண்ணின் உயிரை பறித்த பேருந்து

ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும், பஸ் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். ஹங்குரன்கெத்த – ஹலங்வங்குவ பகுதியில் நேற்று (22) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை விபத்தில் காயமடைந்தவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் உள்ளடங்குவதாகபபொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த 45 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக ஹங்குரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு […]

அதிரடி 23 Nov 2025 1:54 pm

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் ; CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன. இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான […]

அதிரடி 23 Nov 2025 1:52 pm

BB Tamil 9 Day 48: சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள்; பந்தா காட்டிய பிரஜின்; எரிச்சலான விசே!

வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எபிசோடில் கச்சிதமாகப் பொருந்தியது. ஏனெனில் சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் செய்த அநியாயமான சேட்டைகள் அப்படி. இந்த மூவர் மட்டுமே இந்த எபிசோடை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டார்கள். க்ரைம் ரெக்கார்ட் அப்படி.  மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 48 “இன்னிக்கு நீங்க பார்க்காத படத்தை காட்டறோம். முன்ன எல்லாம் பொிய மனுஷங்க போராட்டம் பண்ணி ஜெயிலுக்குப் போவாங்க. ஆனா இவங்களை ஜெயிலுக்கு அனுப்பறதே போராட்டமா ஆயிடுச்சு. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம்” என்றார் விசே. வழக்கமாக இந்த போர்ஷன் சுருக்கமாக முடிந்து விடும். ஆனால் இன்று சாண்ட்ரா+திவ்யா கூட்டணியின் அலப்பறை காரணமாக நீண்ட நேரத்திற்கு காட்டப்பட்டது.  BB TAMIL 9: DAY 48 ஏற்கெனவே சொன்னது போல, சாண்ட்ரா + திவ்யாவை வேலை பார்க்க வைக்கும் சூப்பர்வைசர் பணி விக்ரமிற்கு தரப்பட்ட தண்டனையாக அமைந்தது. “என்னங்க செய்றீங்களா…?” என்று கேட்டே சோர்ந்து போனார். ஒருவர் படுத்தபடி வீட்டைப் பெருக்குவதை எங்குமே பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ‘பெருக்காசனம்’ செய்து உலக சாதனை செய்தார் திவ்யா.  ‘வேலை செய்யறீங்களா?” என்று விக்ரம் மீண்டும் கேட்க “எனக்கு தலை வலிக்குது. டீ வேணும். பிளாக் டீல்லாம் வேணாம்.. பால் டீதான் வேணும்” என்று அடம்பிடித்தார் திவ்யா. புத்திசாலித்தனமான குற்றவாளிகள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்களுக்கான தண்டனையை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுப்பார்கள். சாண்ட்ராவும் திவ்யாவும் அப்படியாக நேரத்தை இழுத்துக் கொண்டே போனார்கள்.  “இது பிக் பாஸ் ஆர்டருங்க. உங்களை ஜெயில்ல அடைக்கச் சொல்லியிருக்காங்க” என்று விக்ரமும் எஃப்ஜேவும் கெஞ்ச “எங்க வேலை முடியலை. முடிஞ்சவுடன்தான் வருவோம்” என்று அழிச்சாட்டியம் செய்தார்கள்.  நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள் காலை, மாலை மட்டும் பால் தரவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருப்பதால் அந்த நோக்கில் பால் தர முடியாது என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தார் எஃப்ஜே. “மெடிக்கல் எமர்ஜென்சின்னா கூடவா தர மாட்டீங்க?” என்றார் திவ்யா. தலைவலி எப்போது மெடிக்கல் எமர்ஜென்சியில் சேர்ந்தது என்று தெரியவில்லை.  “இவன் பாலை எங்கதான் போய் ஊத்துவான்.. அவன் ஃபேமிலிக்கா?” என்று பிரஜின் வார்த்தைகளை விட்டது அநியாயம். “உன் வொய்ஃபை கூட்டிட்டு வாங்க” என்று இந்தப் போட்டிக்கு சம்பந்தமில்லாத குடும்ப உறுப்பினர்களை அநாவசியமாக இழுப்பதை பிரஜின் வழக்கமாக வைத்திருக்கிறார்.  தனக்கு பால் தராமல் போன அநீதியை எண்ணி பாத்ரூமில் சென்று திருட்டு அழுகை அழுதார் திவ்யா. “போங்க.. இப்ப போய் அவ கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து ஜெயில்ல தள்ளுங்க” என்று விக்ரமிடம் சொல்லி ஓவராக சீன் போட்டார் சாண்ட்ரா. “நான் ஏங்க ..கழுத்தையெல்லாம் பிடிக்கப் போறேன்” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம்.  “அப்ப மூடிட்டு போங்க” என்கிற மாதிரி சைகை காட்டினார் சாண்ட்ரா. விக்ரம் பாடிய பாடல் வரிகளை வைத்து ‘லைஃப்ல நீ மறக்க மாட்டே’ என்று சாபம் விட்டுக் கொண்டே போனார்.  BB TAMIL 9: DAY 48 “இது பிக் பாஸ் ஆர்டர். ஜெயில்ல போடணும்” என்று விக்ரமும் எஃப்ஜேவும் மறுபடி வந்து கெஞ்ச “சாவிய வெச்சிட்டு போங்க.. வரேன்.. வர முடியாது’ என்றெல்லாம் சொன்னார் திவ்யா. விக்ரம் அகன்ற பிறகு “என்ன திமிர் பாரேன்.. இவனுக்கு?” என்றார்.  தண்டனையிலிருந்து தப்பிக்க எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ, அவ்வளவு நேரத்தை இழுத்த கிரிமினல்களான சாண்ட்ராவும் திவ்யாவும் இரவு முழுவதும் வீட்டை தூங்க விடாமல் அதிகாலை மூன்று மணிக்குத்தான் ஒருவழியாக சிறைக்குள் சென்றார்கள். அதுவரை கார்டன் ஏரியாவில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உள்ளே செல்ல “பாம்புங்கள்லாம் உள்ளே போகுது” என்று கனியை டார்கெட் செய்து வசைபாடினார் சாண்ட்ரா.  பாருவின் நெகட்டிவிட்டி பற்றி குறை சொன்னவர்கள், பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்ளும் மர்மம் ஒரு விஷயம்தான் புரியவில்லை. வைல்ட் கார்ட் எண்ட்ரிகளாக சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் உள்ளே நுழையும் போது பாரு செய்து கொண்டிருந்த அடாவடிகளை கண்டித்தார்கள். ‘இது வெளில எப்படி தெரியும் தெரியுமா’ என்று எச்சரித்தார்கள். எனில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவர் மோசமாக நடந்து கொண்டால் அது பல மடங்கு வெறுப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் என்பது ஷோவைப் பார்த்து விட்டு வந்திருக்கும் இவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் இவர்கள் அனைவருமே மீடியாவில் இருப்பதால் அதன் பவரை நன்கு உணர்ந்திருப்பார்கள்.  எனில், பாருவிற்கு பாடம் சொன்ன இவர்கள் பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? இவர்கள் அட்வைஸ் வேடம் கலைந்து அசல் நிறம் வெளிப்படுகிறதா? அல்லது பெயர் கெட்டாலும் பரவாயில்லை, கன்டென்ட் தந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்கிற டிராமாவா? BB TAMIL 9: DAY 48 மேடைக்கு வந்த விசே “தன்னை புத்திசாலின்னு நம்பற முட்டாள்களும், வீரன்னு நெனச்சிக்கிற கோழைகளும் வீட்டுக்குள்ள இருக்கறாங்க.. அவங்களை முதல்ல பாராட்டுவோம். ஸோ… நீங்க நல்லா கைத்தட்டுங்க.. அவங்க கன்ஃப்யூஸ் ஆகட்டும்”என்கிற வேடிக்கையுடன் உள்ளே சென்றார்.  திரை விலகியதும் பார்வையாளர்கள் மிகையாக கைத்தட்ட, தங்களுக்கு கிடைத்த பாராட்டாக போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். “பிரஜின்.. எப்பவும் ஒரு போஸ்லதான் உக்காந்திருக்கீங்க?” என்று கிண்டலடித்தார் விசே. (பின்னே.. ஹீரோ மெட்டீரியல் ஆச்சே?!) “திவ்யா.. சாண்ட்ரா.. நல்லாயிருக்கீங்களா.. இவர்கள் இருவரும் வீரமங்கையர்கள்.. பிக் பாஸையே எதிர்த்து பேசுவாங்க.. நடப்பாங்க” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் விசே.  பதில் சொல்லாமல் அடம்பிடித்த திவ்யா “ஏன் ஜெயிலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடிச்சீங்க. என்னதான் வேலை செஞ்சீங்க?” என்று விசே விசாரிக்கும் போது அவர்கள் தூங்கும் சூப்பர் டீலக்ஸ் வீட்டை மட்டும் நன்றாக பெருக்கியுள்ளது தெரியவந்தது. “எனக்கு தலைவலி சார்” என்று ஸ்கூலுக்கு மட்டம் போட்ட மாணவன் மாதிரி ஆரம்பித்தார் திவ்யா. சாண்ட்ரா இடையில் சிரிக்க “அப்படி சிரிக்காதீங்க.. எரிச்சலாகுது” என்று வெளிப்படையாகவே கோபப்பட்டார் விசே.  திவ்யாவின் டிராமாவை ஏற்காத விசே ‘என்னவொரு ஆட்டிடியூட்.. பிக் பாஸ் கண்ணை திறந்து வெச்சிருக்கணுமா.. மூடணுமான்னுல்லாம் சொல்லத் தெரியுது. இந்த ஷோ உங்களால மட்டும் நடக்கலை. சாண்ட்ரா.. உங்க பேரு ஸ்பாயில் ஆகும்ன்னு திவ்யாவிற்கு நல்லா தெரியும். நோயாளின்ற லேபிள்ல தப்பிச்சுடுவாங்க.” என்று வெடித்தார் விசே.  அதாவது இந்த அலப்பறைகளுக்கு திவ்யாதான் மாஸ்டர் மைண்ட் என்கிற மாதிரியும் சாண்ட்ரா பேபிக்கு எதுவுமே தெரியாது என்கிற மாதிரியும் திவ்யாவினால்தான் அவர் மோசமாக நடந்து கொண்டார் என்கிற மாதிரியும் ஒரு சித்திரத்தை விசே எழுப்ப முயன்றாரா? உண்மையில் சாம்பார் அணி, டாக்ஸிக் அணியாக மாறியதற்கு சாண்ட்ராவின் துர்உபதேசங்கள்தான் காரணம். கைகேயி மாதிரி கூடவே உதவியாக இருந்தார் பாரு.  “திவ்யாவிற்குத்தான் தலைவலி.. நீங்க ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்கப்பட “செஞ்சேன் சார்.. அப்புறமா திவ்யாவிற்கு தலைவலி வந்துடுச்சா.. அதான் கூடவே உதவிக்கு நின்னேன்” என்று சாண்ட்ரா மழுப்ப, திவ்யா எதையோ சொல்வதற்கு கை காட்ட “உக்காருங்க. வேலை செய்ய வக்கில்லை” என்று ஆத்திரமானார் விசே.  BB TAMIL 9: DAY 48 “அவங்களுக்கு தலைவலி.. நீங்கதான் தனியா ஆடறவங்களாச்சே. ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்க ‘திவாகர் பாணியில்’ தலையைக் குனிந்தபடி நின்றார் அப்பாவி சாண்ட்ரா.  படுத்துக் கொண்டே வீடு பெருக்கிய லட்சணத்தை விசே விசாரிக்க “அது சும்மா ஜாலிக்காக பண்ணினது” என்றார் திவ்யா. “நீங்க உங்க வீ்ட்டுல எப்படி வேணா பெருக்குங்க. யார் கேட்கப் போறா.. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதை மதிக்கணும். நீங்க உங்க ஜாலிக்கு பண்ணக்கூடாது. பார்க்கற எங்களுக்குத்தான் ஜாலியா இருக்கணும்.” என்றெல்லாம் விசே காட்டமானார். திவ்யாவின் திமிர் காரணமாக எரிச்சலான விசே விசேவின் கோபத்தைக் கண்டு திவ்யா முகம் சுளிக்க “என்ன டயர்ட்டா இருக்கா.. வேணுமின்னா வெளிய வந்துடறீங்களா… உடம்பு சரியில்லைன்னா உக்காருங்க” என்று விசே சொல்ல ‘பரவாயில்ல நிக்கறேன்’ என்று கெத்து காட்டினார் திவ்யா. “ஹலோ.. உக்காருன்னா உக்காரணும்.. என்ன பழக்கம் இது?” என்று கோபமானார் விசே.  “நீங்க சொல்லுங்க. சாண்ட்ரா.. கோபம் வந்தா எது பேசணும்ன்னு இல்லையா.. பிக் பாஸிற்கே அட்வைஸ் பண்ணுவீங்களா.. அதையெல்லாம் நீங்க யாருங்க சொல்றதுக்கு?” என்று சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விசே, சட்டென்று திரும்பி “நீங்க டென்ஷன் ஆகாதீங்க பிரஜின்” என்று சொன்னது டைமிங் நகைச்சுவை. மீசையை முறுக்கிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பிரஜின்.  BB TAMIL 9: DAY 48 “விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” - வாக்குமூலம் தந்த திவ்யா “போன வாரம்தான் சொல்லிட்டுப் போனேன். பிக் பாஸ் சொல்றதை மதிங்கன்னு.. தீபக் கூட வந்து கண்கலங்கிட்டுப் போனார். உங்களுக்குள்ள சண்டை போடுங்க.. ஆனா பிக் பாஸ் சொல்றத மதிங்க.. பாவம் அவரும் ஒண்டியா என்னதான் பண்ணுவாரு” என்று விசே சொன்னதைக் கேட்டு பிக் பாஸிற்கே கண்கலங்கியிருக்க வேண்டும்.  மறுபடியும் திவ்யாவிடம் “ஏன் வேலை செய்யலை?” என்று விசே கேட்க திவாகர் பாணியை இப்போது திவ்யாவும் பின்பற்றினார். பாரு வழக்கம் போல் தனது சேஷ்டையான சிரிப்பை வைக்க “பாரு.. உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எது எதுக்கு எப்படி சிரிப்பீங்கன்னு தெரியும்” என்று விசே நையாண்டி செய்ய அதற்கும் அசட்டுச்  சிரிப்பை வைத்தார் பாரு. (இவன் இன்னும் திருந்தல மாமா மோமெண்ட்!). “நீங்க உங்க வீட்டுல மகாராணியாவே இருந்துட்டுப் போங்க. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதுதான் ரூல். நீங்க தப்பிக்கவே முடியாது. பதில் சொல்லாம இருக்க முடியாது” என்று கேட்டு சலித்துப் போன விசே ‘நான் பிரேக்ல போறேன்” என்று கிளம்பினார். (திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ!) விசே பிரேக்கில் சென்றதும் “என்ன பதில் சொல்லணும்.. விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” என்று தன்னிச்சையாக உண்மை திவ்யாவிடம் வாயில் இருந்து விட்டது. பிரேக்கில் இருந்து திரும்பிய விசே “திவ்யா.. இதை அப்பவே சொல்லியிருக்கலாமே.. விக்ரமை வெறுப்பேத்த செஞ்சீங்களா.. உக்காருங்க” என்று சொல்லி “சாண்ட்ரா.. அவங்க கூட கூட்டு சோ்ந்தா உங்க கேம் பாதிக்கும். எடுப்பார் கைப்பிள்ளையா மாறிடாதீங்க” என்று சாண்ட்ராவிற்கு அட்வைஸ் செய்தது ஓவர். பாருவிற்குப் பிறகு இந்த சீசன் அதிகமாக டாக்ஸிக் ஆனதற்கு காரணமே சாண்ட்ராதான். அவரையே ஏதோ ஒரு குழந்தை போல சித்தரிப்பதை விசே தவிர்த்திருக்க வேண்டும்.  BB TAMIL 9: DAY 48 சாண்ட்ரா பேபி  - செல்லம் கொஞ்சிய பாருவின் பச்சோந்தித்தனம் ஒருவழியாக இந்த ‘மிட்நைட் பஞ்சாயத்து’ முடிந்ததும் அடுத்ததாக ‘சோறு - சோப்பு - மாப்பு’ டாஸ்க்கிற்கு வந்த விசே “டாஸ்க் ரொம்ப நல்லா பண்ணீங்க”என்று பாராட்டினார். (சர்காஸமோ?!) “எல்லோரும் டீமா பிரிஞ்சு உக்காருங்க. டீம்ல இருக்கறவங்க உங்க கேப்டனைப் பத்தி சொல்லுங்க” என்று விசாரணையை ஆரம்பித்தார்.  விக்ரம் டீமில் இருந்த சுபிக்ஷா தன் லீடரைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொன்னார். ஆனால் சாம்பார் டீமில் இருந்தவர்களே சாண்ட்ராவை குத்தினார்கள். “எங்க டீம் டாக்ஸிக் தன்மையோட ஆனதுக்கு சாண்ட்ராவோட தப்பான டைரக்ஷன்தான் காரணம்” என்றார் வியானா.  அடுத்ததாக பாரு எழுந்தார். அவர் சாண்ட்ராவை காட்டித் தர மாட்டார் என்பது வெளிப்படை. கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் “திவாகர் போனதுல இருந்து ஒரு மாதிரியா இருந்தது. அதான் சமையல் டீம்ல ஒட்டிக்கிட்டேன். சமையல்ன்றது இங்க பிரம்மாஸ்திரம். அத வெச்சு எதையாவது பண்ணலாம்னு .. ‘“ என்று பாரு இழுக்க “கனியை இத  வெச்சுதானே ராஜமாதான்னு கிண்டல் பண்ணுவீங்க. இப்ப நீங்க ராஜமாதாவா மாற டிரை பண்றீங்களா?” என்று விசே மடக்க ‘இதை நாம எதிர்பார்க்கலையே’ என்கிற மாதிரி திகைத்து நின்றார் பாரு.  BB TAMIL 9: DAY 48 “சாண்ட்ரா பேபி என்ன பண்ணாலும் மன்னிச்சு விட்ற மாதிரி க்யூட்னஸ் இருக்கும்” என்று பாரு அள்ளி விட “இப்படி ஏத்தி விட்டுத்தான் அவங்க இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. இது அந்தப் பய புள்ளைகளுக்கு புரியல.” என்று விசே ஜாலியாக கொளுத்திப் போட “சலங்கையைக் கட்டியாச்சு.. நடிச்சுதானே ஆகணும்” என்றார் பாரு. ‘இது அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே” என்று பாருவின் பச்சோந்தித்தனத்தை நகைச்சுவை மோடில் சுடடிக் காட்டினார் விசே. “சார். வேணாம்..சார்.. அப்புறம் டிரையின் இந்தப் பக்கம் திரும்பிடும்” என்று பாரு நடுங்க “அடடா.. பயப்படற மாதிரி கூட நடிக்கறாங்கப்பா.. என்னால முடியல. நான் போறேன்” என்று விசே சொல்ல சபை கலகலத்தது.  ஹீரோ மாதிரி பந்தா காட்டி ஜீரோவான பிரஜின் பிரேக் முடிந்து வந்து மீண்டும் பாருவிடம் விசாரணையைத் தொடர்ந்தார் விசே. “அதாவதுங்க சார்.. சாண்ட்ரா இன்னும் கொஞ்சம் எண்டர்டெயின்மென்ட் தந்திருக்கலாம். கனியும் சாண்ட்ராவும் ஒத்துப் போயிருக்கலாம்” என்று ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் பேச “டீம் கேப்டன் யாரு.. சாண்ட்ராதானே.. அவங்கதானே கோஆர்டினேட் பண்ணியிருக்கணும். உங்களுக்குப் பிடிச்சவங்கறதுக்காக பார்ஷியாலிட்டி காட்டாதீங்க. பார்க்க நல்லாயில்ல. ஒவ்வொரு முறையும் சொல்றேன். அதையே பண்றீங்க. உக்காருங்க” என்று பாருவை அமர வைத்தார் விசே.  அடுத்ததாக பிரஜின் பஞ்சாயத்து. ஹீரோ பேசிய பன்ச் வசனங்களை பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டு வரிசையாக சொன்ன விசே “விக்ரம் சொன்னது கப்புளா இருக்கும் போது எமோஷனல் சப்போர்ட் கிடைக்குன்ற பத்தி. இந்த அபிப்ராயம் எல்லோருக்குமே இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள் யார் வரலாம்ன்ற முடிவை நாங்கதான் எடுப்போம். பிக் பாஸ் கிட்ட சொல்றேன். சேது கிட்ட பேசறேன்னு நீங்க எப்படி சொல்லலாம்.. அதை சொல்ல நீங்க யாரு. நீங்க சொன்னா கதவைத் திறக்கணும். நீங்க சொன்னா கண்ணை மூடிக்கணுமா.. வண்டி என் பக்கம் வந்தா கண்டம் பண்ணிடுவேன்னு சொல்றீங்க..  BB TAMIL 9: DAY 48 … ஐ எம் எ ஃபாதர் ஐ எம் எ ஹஸ்பண்ட்.. ஐ எம் எ ஹீரோன்னு சொல்றீங்க. இதையெல்லாம் மத்தவங்க சொல்லணும் சார். வியானாவையும் சுபிக்ஷாவையும் ‘காலி பண்ணிடுவேன்’ன்னு மிரட்றீங்க. இதுதான் ‘சரியா வளர்க்கப்பட்டவன்’ற அடையாளமா.. பாலை யாருக்கு ஊத்தப் போறான்.. அப்பாவுக்கா.. அம்மாவுக்கா..ன்னு கேக்கறீங்க.. இதெல்லாம் நியாயமா.. உங்க குழந்தைங்க இதை பார்க்க மாட்டாங்களா.? என்று பிரஜினை நிற்க வைத்து கேள்வி மழை பொழிந்தார் விசே. ஆனால் பிரஜினோ முறைப்பான போஸில் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்.  ‘பால் ஊத்தும் வசனம் எனக்கு கேட்கவேயில்லை. கேட்டிருந்தா தடுத்திருப்பேன்’ என்று அபாண்டமாக புளுகினார் சாண்ட்ரா. “நான் சொன்ன எதையும் மறுக்கல. நான் இப்படித்தான். ஒருத்தருக்கு தலைவலின்னா பால் தர மாட்றாங்க. நான் கேப்டனா இருந்தா தந்திருப்பேன்” என்று பிரஜின் சமாளிக்க “ஒரு சோ் கொடுங்கப்பா.. உக்காருவோம். இது ரொம்ப நேரம் போவும் போலிருக்கு” என்று சேரை வரவழைத்த விசே, பிரஜின் அலட்டல் மாதிரியே கால் மேல் கால் போட்டு உட்கார, பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்தார்கள்.  தக்காளி சட்னி - ரத்தம் ஃபார்முலாவைப் பின்பற்றும் பாரு “நான் தனியாத்தான் ஆடறேன். நாமினேஷன் ப்ரீபாஸ் எனக்கு தரப்பட்ட போது வேணாமின்னு மறுத்தேன்” என்று பிரஜின் சொல்ல கூட்டம் சிரித்தது. “பால் வேணுமின்னா சண்டை போட்டு கூட வாங்கியிருக்கலாம். அது உங்க கேம். ஆனா இப்படியா அநாகரிகமா வார்த்தைகளை விடறது?” என்று பொங்கினார் விசே.  தன் குடும்பத்தினரைப் பற்றி பிரஜின் அவதூறாக பேசியதை இப்போதுதான் எஃப்ஜே அறிகிறார். எனவே அவருக்கு கோபம் வந்தது நியாயம். பொறுக்க முடியாமல் அவர் பொங்க “இந்த எஃப்ஜே ரொம்ப துள்றான்” என்று போட்டுக் கொடுத்தார் பாரு. இந்த சமயத்தில் பாருவின் பச்சோந்தித்தனம் மேலும் அம்பலமானது.  திவ்யா வைல்ட் கார்டாக வந்த சமயத்தில் ‘என்னைப் பத்தி எப்படி வெளிய தெரியுது?” என்று கேட்டு போட்டு வாங்க முயன்றார் பாரு. கம்ருதீன் விவகாரம் பற்றி சொன்ன திவ்யா “வீட்ல உங்க அம்மா பார்த்தா என்ன நெனப்பாங்க?” என்று ஓர் அக்கறையில் சொல்லி விட அப்போதைக்கு மண்டையை ஆட்டினாலும் பிறகு “அதெப்படி எங்க வீட்டைப் பத்தி நீ பேசலாம்?” என்று திவ்யாவை நாள் முழுவதும் திட்டிக் கொண்டிருந்தார் பாரு.  BB TAMIL 9: DAY 48 பிரஜினும் சாண்ட்ராவும் - ஜாடிக்கேற்ற வன்ம மூடிகள் ஆனால் அதே பாருதான், இப்போது எஃப்ஜேவின் கோபத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார். தனக்கு வந்தால் ரத்தம். மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி பாலிசி.  “ண்ணா.. உங்களுக்காகத்தான் இப்ப கம்முன்னு இருக்கேன்” என்று எஃப்ஜே சொல்ல “குட் மாறிட்டே வர்றீங்க இல்லையா..அதுதான் முதிர்ச்சி” என்று சமாதானப்படுத்தினார் விசே.  “நீங்களே சண்டை போடுங்கன்னு சொல்றீங்க.. நீங்களே சண்டை வேணாம்ன்னு சொல்றீங்க. ஒண்ணும் புரியலை” என்று பிரஜின் விதாண்டாவாதம் பேச “சண்டை போடுங்க. அது உங்க கேம். ஆனா அது ஒரு எல்லைக்குள்ள நாகரிகமா இருக்கணும். கம்முவைப் பாருங்க.. இப்ப கம்முன்னு ஆயிட்டாரு. அவர் ஆடாத ஆட்டமா.. உங்களுக்கும் புரியும்” என்று பிரஜினுடன் மல்லுக்கட்டிய விசே, கோட்டை கழட்டிய படியே எரிச்சலுடன் சென்றார்.  “பர்சனல் வேற.. கேம் வேற” என்று என்னதான் விசே சொல்லி அனுப்பினாலும் பிரஜின் அதை வைத்து அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது போல் தெரிகிறது. வீறாப்பாக நிற்பதும், முறைப்பதும் என்று ஹோஸ்ட்டிற்கு மரியாதை தரவில்லை. விசேவும் கூட பிரஜினுடன் விவாதிக்கும் போது வார்த்தைகள் வராமல் திண்டாடினார். இனியாவது சேனலுக்கு நெருக்கமானவர்களை போட்டிக்கு தோ்வு செய்யக்கூடாது என்பது இதன் மூலம் தெரிய வரும் பாடம். ஆனால் பின்பற்ற மாட்டார்கள்.  விசே சென்றதும் எஃப்ஜேவிற்கும் பாருவிற்கும் சண்டை நிகழ்ந்தது. “உங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி பேசினா உனக்கு கோபம் வரும்தானே. கோள் மூட்டி வேலையை வெச்சுக்காதீங்க” என்று பொங்கினார் எஃப்ஜே.  “அப்பவே சொன்னேன். நம்ம குழந்தைகள் பார்ப்பாங்க.. வார்த்தைகளை விடாதீங்கன்னு” என்று பிரஜின் குறித்து புலம்பினார் சாண்ட்ரா. ஆனால் இவரும் அதையேதான் செய்கிறார் என்பது இவருக்குப் புரியவில்லையா?  BB TAMIL 9: DAY 48 இப்படி ஆயிடுச்சே. என்று சாண்ட்ரா அழுது  புலம்பியது கூட ஓகே. ஆனால் ‘அவர் அக்கா.. தங்கச்சின்னு சொன்னது.. கனியைப் பத்திதான்’ என்று சமாளித்த விதம் இருக்கிறதே.. அநியாயம். எனில் கனியைப் பற்றி தவறாக சொன்னால் மட்டும் ஓகேவா?... முன்னரே சொன்ன மாதிரி பாருவின் நச்சுத்தன்மையால் கெட்டுப் போயிருந்த இந்த ஷோ, சாண்ட்ரா, திவ்யா, பிரஜினின் வருகைக்குப் பிறகு கூடுதல் நச்சாக மாறியிருக்கிறது. சண்டை, வன்மம், பழிவாங்கல், கோள் மூட்டுதல், பச்சோந்தித்தனம் என்று பல நெகட்டிவிட்டிகள். சுவாரசியம் என்பதின் சதவீதம் மிகவும் குறைவு.  இந்த வாரத்தில் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டால் நன்றாக இருக்கும் ஆனால் அது நடக்காது. வேறு பலியாட்டை தோ்வு செய்வார்கள். பார்ப்போம். 

விகடன் 23 Nov 2025 1:50 pm

கிருஷ்ணகிரி: நடுராத்திரியில் நடுங்க வைத்த பெண் குரல்... வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த போலீஸ்!

கி ருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அர்ஜுனன் வீடு அமைந்திருக்கும் தெருவுக்குள் புகுந்து அவரின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, `சார்... சார்... நான் அடிப்பட்டு வந்துருக்கேன் சார். என் பேரு மீனாட்சி. காப்பாத்துங்க, ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்...’ என சத்தமாக பேசினார். அதைத்தொடர்ந்து, ஜெகதேவி சாலைப் பகுதிக்குச் சென்றவர் அங்கு இருந்த ஆண் நபரிடம் பேசுவதை போன்ற காட்சிகளும் அர்ஜுனன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குரல் பதிவுடன் தெளிவாக பதிவாகியிருந்தன. வைரல் வீடியோ காட்சி பெண்ணின் நடவடிக்கைகளைப் பார்த்து, அர்ஜுனனும், அவரின் மனைவியும் `கொள்ளையர்களாக இருப்பார்களோ...?’ என அச்சத்துக்குள்ளாகி, கதவைத் திறக்காமல் வீட்டுக்குள் இருந்தபடியே தங்கள் மகனுக்குப் போன் செய்திருக்கின்றனர். அவரும் தனது செல்போனில் சிசிடிவி காட்சிகளை பார்த்துவிட்டு, `கதவைத் திறக்க வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களின் வழியாக வேகமாக பரவியதால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள். உண்மைத்தன்மை அறியாமல், ஊடகங்களும் திரும்பத் திரும்ப அந்த வீடியோவை பகிர்ந்து, மக்களை பயத்திலேயே வைத்திருந்தது. இந்த நிலையில், வைரல் வீடியோ குறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``மேற்கண்ட பெண் மிட்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 20-ம் தேதி இரவு அந்தப் பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவரின் கணவரும், உறவினர்களும் சேர்ந்து அடித்ததில் அந்தப் பெண் உள்காயம் அடைந்தார். காவல்துறை விளக்க அறிக்கை பர்கூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தண்ணீர் தாகம் எடுத்த காரணத்தினால் எம்.ஜி.ஆர் நகர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்குள்ள வீடுகளின் கதவைத் தட்டி உதவி கேட்டிருக்கிறார். பின்னர் அவர் பர்கூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேற்கண்ட குற்றச் சம்பவம் தொடர்பாக, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, மேற்கண்ட செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். சமூக வலை தளங்களில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விகடன் 23 Nov 2025 1:47 pm

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அவர் கூறினார். இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

அதிரடி 23 Nov 2025 1:40 pm