அதிக வரிச்சுமையால் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைக்கு பிரித்தானிய இளைஞர்கள்
பிரித்தானியாவில், குறைந்த சம்பளம் மற்றும் அதிகரிக்கும் வரிச்சுமை காரணமாக இளம் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிய தலைமுறை அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளுக்காக கனடா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் எண்ணம் கொண்டுள்ளனர் என நிதி மேலாண்மை ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா, உயர்ந்த வரி விகிதங்கள் மற்றும் வீடு வாங்கும் சிரமங்கள் போன்ற காரணங்களால், இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, மத்திய வருமான வரி விகிதம் 40 சதவீதம் வரை […]
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் (1970-1977) கீழ் நில சீர்திருத்தங்களை செயல்படுத்தும் செயன்முறை இரண்டு முக்கிய கட்டங்களாக விரிவடைந்தது. இந்தக் கட்டங்கள் இலங்கையின் விவசாய, தோட்ட நிலப்பரப்பை கூட்டாக மாற்றியமைத்தன. ஆனால், சமத்துவம், உற்பத்தித்திறன், கிராமப்புற நலன் ஆகியன தொடர்பில் கலவையான முடிவுகளைத் தந்தன. முதற்கட்டத்தின் கீழ் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்களை மறுபகிர்வு செய்வது இதன் நோக்கமாகும். இரண்டாவது கட்டமாக, கொலனித்துவ காலத்திலிருந்து வெளிநாட்டு (முக்கியமாகப் பிரித்தானிய) உரிமையின் கீழ் இருந்த தோட்டப் பொருளாதாரத்தின் […]
விழிப்புணர்வு முக்கியம்! - இன்றைய பெற்றோர் தெரிந்துக் கொள்ள வேண்டிய வளர்ப்பு முறை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர். அதில் ஒன்றாக “விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறை” (Mindful Parenting) வேகமாக பிரபலமாகி வருகிறது. இது குழந்தையை புரிந்துகொண்டு, அமைதியாகவும் அன்புடனும் வளர்க்க உதவும் தற்கால வழிமுறை. பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவது ஏன்? இன்றைய குழந்தை வளர்ப்பு ஒரு போட்டியாக மாறிவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை புத்திசாலி, திறமையானவர், நல்லொழுக்கமுடையவர் என இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். “சிறந்த பெற்றோர்” ஆக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பலருக்கு மனஅழுத்தம், குற்ற உணர்வு, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிரமாண்ட பிறந்தநாள் விழாக்கள், பெரிய பள்ளியில் படிக்க வைப்பது, போட்டோஷூட்கள் நடத்துவது உள்ளிட்டவற்றை பார்க்கும்போது, நாமும் அதேபோல் செய்ய வேண்டும் என்ற மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனால் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வும் ஏற்பட்டு குழந்தையுடன் உள்ள பிணைப்பும் குறைகிறது. விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறை என்றால் என்ன? குழந்தையுடன் இருக்கும் போது முழு கவனத்துடனும், உணர்வோடும், பொறுமையோடும் நடந்துகொள்வதே Mindful Parenting. குழந்தையின் நடத்தையை கோபத்துடன் எதிர்கொள்ளாமல், அமைதியாக பதிலளிப்பதே இதன் அடிப்படை. எளிமையாகச் சொன்னால், குழந்தையுடன் பேசும் போது அல்லது விளையாடும் போது, நம் மனமும் கவனமும் முழுவதுமாக அவர்கள்மீது இருக்க வேண்டும். இந்த வழிமுறை பெற்றோர்களுக்கு பொறுமையையும் புரிதலையும், குழந்தைகளுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் கற்பிக்கிறது. விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறையின் பலன்கள் குடும்பத்தில் அமைதி, நம்பிக்கை, புரிதல் அதிகரிக்கும். குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்வார்கள். வீட்டில் மரியாதையும் பாசமும் நிறைந்த சூழல் உருவாகும். பெற்றோர்கள் சிந்தித்து பேசும் பழக்கத்திற்கு மாறுவார்கள். குழந்தைகளும் தங்கள் உணர்வுகளை அச்சமின்றி வெளிப்படுத்த கற்றுக்கொள்வார்கள். ஏன் இது முக்கியம்? முந்தைய தலைமுறைகளில், குழந்தை வளர்ப்பில் கட்டுப்பாட்டும் கட்டளைகளும் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைய குழந்தைகள் சுயமாக சிந்தித்தல், மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள். அவர்களுக்கு கண்டிப்பு மட்டுமல்ல, புரிதல், உரையாடல், மரியாதை தேவை. அதனால்தான் இன்றைய பெற்றோர்கள், அன்பும் அமைதியும் அடிப்படையாகக் கொண்ட வளர்ப்பு முறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு இடைவெளி விடுவது பெரிய மாற்றம் தரும் குழந்தை தவறு செய்தாலும், உடனே கோபப்படாமல் ஒரு நிமிடம் மூச்சு விட்டு ரிலாக்ஸ் ஆகுங்கள். அந்த சிறிய இடைவெளி நம்மை தெளிவாக யோசிக்கச் செய்து, சரியான பதிலைத் தர வழி காட்டும். இது குழந்தையையும் அதேபோல் அமைதியாகவும் பொறுமையுடனும் நடக்கச் செய்கிறது. நிஜ வாழ்க்கையில் எப்படி பின்பற்றலாம்? 1. சிறந்த முன்மாதிரியாக இருங்கள்: பெற்றோர் தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை குழந்தைகள் கவனிக்கிறார்கள். உங்கள் செயல் அவர்களுக்கு பாடமாகிறது. 2. முழு கவனம் செலுத்துங்கள்: குழந்தை பேசும் போது, அலைபேசி கீழே வைத்துவிட்டு. அந்த நேரத்தில் முழு கவனம் அவர்கள்மீது இருக்கட்டும். 3. பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்: குழந்தைகள் சிறிய முயற்சியைக் கூட பாராட்டுங்கள். அது அவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். 4. ஒப்பிடுவதை தவிர்க்குங்கள்: “அவன் பார்த்தியா?” என்ற வாக்கியம் குழந்தையின் மனத்தில் காயத்தை ஏற்படும். ஒப்பீடு அல்ல, ஊக்கத்தை கொடுங்கள். 5. கோபத்தை கட்டுப்படுத்துங்கள்: குழந்தைகளிடத்தில் கத்துவதற்கு முன் ஒரு நிமிடம் நின்று, ஆழமாய் மூச்சு விடுங்கள். 6. பொறுப்புகளை கொடுங்கள்: வயதுக்கு ஏற்ற சிறிய வேலைகளை ஒப்படையுங்கள் — அது பொறுப்புணர்ச்சியை வளர்க்கும். 7. உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: குழந்தை அழுதால் அல்லது கோபப்பட்டால், அதைத் தடுத்து நிறுத்தாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். 8. சுவாசப் பயிற்சி மற்றும் தியானம் செய்யுங்கள்: மனஅழுத்தத்தைக் குறைக்க இது உதவும். அமைதி பரவும். 9. அன்பும் இரக்கமும் வெளிப்படுத்துங்கள்: “நான் உன்னை நேசிக்கிறேன்” என்ற வார்த்தை குழந்தைக்கு பாதுகாப்பான உலகத்தை அளிக்கிறது. 10. அவர்களுடனான தருணங்களை ரசியுங்கள்: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
நீதவான் நியமனத்திற்கான தகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்
நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட வேண்டிய தகுதிகள் இதன்படி, குறித்த பதவிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய 4 தகுதிகளை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கு செயற்பாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபட்டிருக்கும் சட்டத்தரணியாக இருத்தல், சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்து 3 வருடங்களுக்குக் குறையாத […]
மேற்கு வங்கத்தில் தொடரும் அவலம்! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 4 வயது சிறுமி!
மேற்கு வங்கத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். மேற்கு வங்கத்தின் தாராகேஷ்வரர் ரயில் நிலையத்தின் அருகே, சனிக்கிழமை அதிகாலையில் சாலையோரத்தில் பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அருகில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என்று உடனிருந்தோர் தேடிய நிலையில், அருகேயிருந்த ஒரு வாய்க்காலில் இருந்து அழுகுரல் கேட்டு, சிறுமியை ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் மீட்டனர். […]
பீகார் தேர்தல்: வாக்குச்சாவடிகளில் 1 லட்சம் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிப்பு! உச்சகட்ட பரபரப்ப
பீகார் மாநிலத்துக்கான 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலை முன்னிட்டு 1 லட்சம் போலீசார், பாதுகாப்படை படையினர் குவிக்கப்பட்டுள்ளனா்.
SIR பணிகள்.. அவசரகதியில் வேண்டாம்.. கமல் வலியுறுத்தல்!
இந்திய தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டை, தனது அறிக்கையின் மூலமாக தெரிவித்து உள்ளார்.
காவிரி படுகையை திமுக அழித்துவிட்டது- அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் கடும் தாக்கு
தருமபுரியில் நடைபெற்ற நடைபயணத்தின் 100 வது நாள் நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக அரசு காவிரி படுகையை அழித்துவிட்டது என்றார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 69 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது, காஸாவில் இஸ்ரேல் படையினா் 2023.10.07-க்குப் பிறகு நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 69,169-ஆக உயா்ந்துள்ளது. போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டது, அடையாளம் தெரியாத உடல்கள் தற்போது அடையாளம் கண்டறியப்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் […]
வாட்ஸ்அப் மூலம் பரிசு தருவதாக பெருந்தொகை பணமோசடி
வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி 70,000 டொலர் மதிப்புள்ள பரிசு பொதிகளை தருவதாகக்கூறி ஏமாற்றி பணமோசடி செய்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனாவல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஈ.பி. தம்மிகா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், $70,000 மதிப்புள்ள பரிசு பொதிகளை தருவதாகக் கூறி ஏமாற்றி, அவரது வங்கிக் கணக்கில் ரூ.1,255,000/= பணத்தினை வைப்பு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம் இதனையடுத்து அந்த […]
தரவு, திரை, மனநிலை - நவீன தேர்தல் யுக்தியின் மூன்று முகங்கள் செயல்படுவது எப்படி?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்திய அரசியலில் தேர்தல் என்பது வெறும் வாக்குப்பதிவு நிகழ்ச்சி அல்ல; அது ஒரு ஜனநாயகப்பூர்வமான அறிவியல் போர் போல மாறிவிட்டது. ஒருகாலத்தில் மாநாடு, பொதுகூட்டங்கள், கைதட்டல்கள், சுவரில் போஸ்டர்கள், மற்றும் வாய்மொழி பிரசாரம் தான் தேர்தல் யுக்தியின் அடிப்படை கருவிகள். ஆனால் இன்று தேர்தல் என்பது தகவல், மனநிலை, மற்றும் தரவு எனும் மூன்று முகங்களால் இயக்கப்படும் புதிய அரசியல் நுணுக்க விளையாட்டு ஆகிவிட்டது. இந்த மூன்றும் , அடித்தள இயக்கம் (Grassroots Mobilization), தகவல் அரசியல் (Data Politics), வாக்காளர் மனநிலை பொறிமுறை (Voter Behaviour Engineering) நவீன தேர்தல் யுகத்தின் யுக்திகளின் மையக் கூறுகளாக விளங்குகின்றன. அடித்தள இயக்கம் (Grassroots Mobilization) அடித்தள இயக்கம் என்பது கட்சியின் வாக்காளர் அடிப்படைக்கு ஆதாரத்தை நிலைநிறுத்தி வளர்க்கும் உயிரணு ஆகும். தேர்தல் களப்பணிகள் முந்தைய தலைமுறையை விட பல மடங்கு நுட்பமானவை. ஒரு நல்ல அடித்தள அமைப்பு இல்லாமல் எந்த பிரமாண்ட தேர்தல் பிரசாரமும் வெற்றி பெறாது. இதன் நோக்கம் “ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு வாக்காளரிடமும்” கட்சியின் சிந்தனையை கொண்டு செல்வதாகும். இதில் முக்கிய பங்காற்றுவது வாக்குச்சாவடி அளவிலான நெட்வொர்க் அமைப்பு . ஒவ்வொரு தொகுதியும் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து, அதை அரசியல் மொழியாக மாற்றுகிறார்கள். இதைச் சில கட்சிகள் “பூத் கமிட்டி மாடல்” என அழைக்கின்றன. பல மாநில கட்சிகள் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகின்றன. சில தேசிய கட்சிகள் இதனை செயற்கை நுண்ணறிவு, ஆப் முறை இணைப்பு, டிஜிட்டல் பிரச்சாரம் ஆகியவற்றோடு கலந்துவிட்டன. இன்றைய அடித்தள இயக்கம் என்பது வெறும் வீடு வீடாகச் செல்வது அல்ல, முன்னர் வீடு வீடாகச் செல்வதே பிரசாரம் எனக் கருதப்பட்டது. இன்று மொபைல் திரைதான் புதிய வீடு. ஒரு சமூக வலைதள குழு கூட வாக்காளரின் மனதை மாற்றும் அளவுக்கு முக்கியமடைந்துள்ளது. அடித்தளம் இப்போது தெருவில் மட்டுமல்ல, திரையிலும் உள்ளது. தகவல் அரசியல் (Data Politics) இரண்டாவதாக, “யார் வாக்களிக்கிறார்?” என்பது இன்று மிகப் பெரிய கேள்வி அல்ல; “ஏன் அவர் வாக்களிக்கிறார்?” என்பதே முக்கியம். அதற்கான விடையை வழங்குவது தான் தகவல் அரசியல் . தேர்தல் காலத்தில் பெரிய தரவு (Big Data) மையங்கள் கட்சிகளின் ரகசிய ஆயுதமாக மாறியுள்ளன. வாக்காளர் பட்டியல்கள், சமூக ஊடகப் பழக்கங்கள், மதம், சாதி, வயது, கல்வி, பாலினம், வருமான நிலை போன்ற அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு வாக்காளருக்கும் தனிப்பட்ட அரசியல் செய்தி உருவாக்கப்படுகிறது. இது “மைக்ரோ டார்கெட்டிங்” என்று அழைக்கப்படும் முறை. உதாரணமாக, நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கிராமப்புற விவசாயிகளுக்கு மானியம், பெண்களுக்கு பாதுகாப்பு என தனித்தனி பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் முதல் இந்திய தேர்தல் வரை, தகவல் அரசியல் இன்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் கூட இப்போது சமூக ஊடக கண்காணிப்பை தனித்த பிரிவாக அமைத்துள்ளது என்பது இதன் ஆழத்தைக் காட்டுகிறது. தேர்தல் வாக்காளர் மனநிலை பொறிமுறை மூன்றாவது முகம் மிகவும் ஆபத்தானதுமான நுண்ணறிவு — மனநிலை பொறிமுறை . இதன் நோக்கம் நேரடி பிரச்சாரத்தை விட வாக்காளரின் மனதில் “உணர்ச்சிப் பதில்” உருவாக்குவது. இதற்காக மீம் கலாசாரம் , உணர்ச்சிப் பூர்வமான வீடியோ, பேச்சுகள் , அனுபவப் பிரச்சாரம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இளைஞர்களை ஈர்க்க சமூக ஊடகத்தில் ஹாஷ்டேக் இயக்கங்கள் நடத்தப்படுகின்றன; முதியோர்களை பாதிக்க உணர்ச்சிவசப்படுத்தும் கதைகள் பரப்பப்படுகின்றன. சில கட்சிகள் மனநிலை ஆராய்ச்சி நிபுணர்களின் ஆலோசனையுடன் பிரச்சார மொழியை உருவாக்குகின்றன. எந்த வார்த்தை அதிக தாக்கம் ஏற்படுத்தும், எந்த முகம் நம்பிக்கையளிக்கும் என்பதெல்லாம் ஆராயப்படுகிறது. இதுவே “வாக்காளர் பொறிமுறை” எனப்படும் புதிய அரசியல் மனவியல். இன்று ஒரு தலைவரின் சொல் மட்டும் போதாது; அவரது முகபாவனை, குரல், உடை, மற்றும் சமூக ஊடக ஆளுமை எல்லாம் வாக்கின் முடிவை தீர்மானிக்கிறது. பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 நவீன தேர்தல் யுக்தி என்பது வெறும் அரசியல் களமல்ல — அது அடித்தள இயக்கம், தரவு, மற்றும் மனநிலை எனும் மூன்று பரிமாணங்களின் இணைப்பு. இதன் மூலம் ஒரு கட்சி வெற்றி பெறுவது மட்டுமல்ல; சமூகத்தின் சிந்தனையும் மாறுகிறது. அதனால் தேர்தல் யுக்தி இன்று ஜனநாயகத்தின் “மூளை நரம்பு மையம்” (செயல்தளமாக உருமாற்றமடைந்துள்ளது” ஆகிவிட்டது. நாளைய தேர்தல்கள் வெல்லப் போவது பெரிய கூட்டங்கள் அல்ல — பெரிய தரவு, நுண்ணறிவு பிரச்சாரம், மற்றும் மனநிலை பொறிமுறை தான். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
பெரம்பலூர் தொகுதி: 2026 தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?
2024 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பகுதியின் வாக்குப்பதிவு, திமுகக்கு 1,23,000 வாக்குகளையும், அதிமுகக்கு வெறும் 39,000 வாக்குகளையும் பெற்றுத் தந்தது.
திமுக ஒன்றும் அதிமுக போல் பத்தோடு பதினொன்று இல்ல- எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமியை, அதிமுக போல் திமுக பத்தோடு பதினொன்று கட்சி கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு : எப்படி நாட்டினுள் வந்தது?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பொதுவாக, கொசுக்கள் வெப்பமான, ஈரப்பதம் கொண்ட இடங்களில் தான் வாழும். குளிர்ச்சியான சூழல், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சிக்கு பொருந்தாது. அதனால் தான், வட துருவம் போன்ற கடும் குளிர் நாடுகளில் கொசுக்கள் வாழ முடியாது என்பதே இதுவரை விஞ்ஞான உலகத்தின் நம்பிக்கை. ஆனால், கடந்த அக்டோபர் 23-ம் தேதி, ஒரு விஞ்ஞானி ஐஸ்லாந்தில் கொசுக்களை கண்டறிந்து, அதன் புகைப்படத்தையும் எடுத்துள்ளார். கொசுக்கள் அந்த நாட்டில் தோன்றுவது இதுவே முதல்முறை. இதனை அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக வெப்பமயமாதலின் விளைவுகளை வெளிப்படுத்தும் புதிய சுற்றுச்சூழல் எச்சரிக்கை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். “கொசுக்களால் இங்கு தகவமைத்துக் கொள்ள முடியுமா?” ஐஸ்லாந்தின் தேசிய அறிவியல் நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ஃபிரட்சன், இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்: “இந்த கொசுக்கள் இங்கு தங்கள் இனத்தை நீண்டகாலம் நிலைநிறுத்திக் கொள்ளுமா என்பதை கவனிக்க வேண்டும். இவை வெப்பநிலைக்கு தழுவி வாழக் கூடிய இனமாகக் கூட இருக்கலாம்.” அவர் கூறியதாவது, இந்த கொசுக்கள் “Culiseta annulata” எனப்படும் இனம் ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த இனம் குளிர்ச்சியான பகுதிகளிலும் தற்காலிகமாக வாழக்கூடிய திறன் கொண்டதாக உலகின் சில இடங்களில் காணப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதலின் தாக்கமா? காலநிலை மாற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. உலகம் முழுவதும் குளிர்ந்த நாடுகளும் வெப்பமாக சூழலை நோக்கி நகரும் நிலையில் உள்ளன. அதனால், இத்தகைய கொசு இனங்கள் தற்போது ஐஸ்லாந்து போன்ற இடங்களிலும் வாழும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என்று ஆல்ஃபிரட்சன் கூறியுள்ளார். இன்னொரு சாத்தியம் இந்த கொசுக்கள் வெப்பமான நாடுகளில் இருந்து கப்பல் கொள்கலன்கள் வழியாக வந்திருக்கலாம் என்பது மற்றொரு சாத்தியம் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஐஸ்லாந்தில் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே கப்பல் போக்குவரத்து வழியாக கொசுக்கள் வந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். அடுத்த கட்டம் என்ன ? அறிவியலாளர்கள் தற்போது அந்த பகுதிகளில் கொசு இனங்களால் தங்களை தகவமைத்துக் கொள்ள முடிகிறதா என்பதை ஆராயும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவை வெப்பமயமாதலின் ஒரு குறியீடா அல்லது மனிதச் செயல்பாடுகளின் விளைவா என்பதும் அடுத்த சில மாதங்களில் தெளிவாகும். இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. உலக காலநிலை மாற்றம் உலகின் எல்லா பகுதிகளிலும் கால் பதிக்கத் தொடங்கியிருப்பதற்கான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பின்குறிப்பு: இந்தக் கண்டுபிடிப்பை ஐஸ்லாந்தின் தேசிய அறிவியல் நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ஃபிரட்சன் (Matthías Alfriðsson) PTI செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சல் வழியாக உறுதிப்படுத்தியுள்ளார். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Mask: வெற்றி மாறன் சாரை ஏமாற்றியது பெரிய விஷயம் - நெல்சன் கலகல பேச்சு
கவின் நடிப்பில் விகர்னன் அசோக் இயக்கியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நடிகர் கவினை மனதார பராட்டிப் பேசினார். அவர், மாஸ்க் ஐடியா பேசும்போது ரொம்ப குதர்கமா இருக்கும், இந்த ஐடியா யார் யோசிச்சதுன்னு கேட்டபோது விகர்னன்னு சொன்னாங்க. அவர் ஆளே ஒரு மாதிரிதான் இருக்கார்னு கவின் சொன்னான். அவர் மூஞ்சிய பாக்கணும்னு ரொம்ப ஆர்வம். ஒரு நாள் வெற்றிமாறன் சார் ஆபிஸ்ல பாத்தேன். இந்த மூஞ்சிக்கு எல்லா க்ரைமும் பொருத்தமா இருந்துச்சு. மாஸ்க் படக்குழு விகர்னன் இந்தக் கதையை யோசிச்சது பெரிய விஷயம், அதை சொல்லி இவ்வளவு பெரிய டைரக்டர் (வெற்றி மாறன்) ஏமாத்தினது அதைவிட பெரிய விஷயம். என இயக்குநரை கலாய்த்துப் பேசினார். தொடர்ந்து படம் குறித்து, பொதுவா வெற்றிமாறன் சார் தயாரிக்கிற படங்கள் சமூக ரீதியிலானதாக இருக்கும். இந்த படத்தில் அது இருந்தாலும் ரொம்ப என்டெர்டெயினிங்கா இருந்தது. முதலில் இந்த கதையைக் கேட்கும்போது கவினின் கதாப்பாத்திரமே கிரேவாக இருந்தது. வெற்றிமாறன் சார் அதையெல்லாம் சரி பண்ணியிருக்கார்னு நினைக்கிறேன். 3வது முறை கதை கேட்கும்போது ரொம்ப நல்லா இருந்தது. இந்த படம் புது அனுபவமா இருக்கும். என்றார். kavin - vetri maran முன்னதாக நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் பிளடி பெக்கர் படத்தில் நடித்திருந்தார் கவின். கவின் குறித்து பேசிய நெல்சன், கவின் துணிச்சலா எக்ஸ்பெரிமென்டல் படங்களில் களமிறங்குகிறார். அடிவாங்கினாலும் வாங்குகிறார். சட்டையைத் திறந்துபார்த்தால் நிறைய காயங்கள் இருக்கும். இப்போது அவருக்கு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் 5, 10 வருஷம் கழிச்சு ரொம்ப நிலையான இடத்தில் இருப்பார்னு நினைக்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் அவரது நடிப்பும் மெச்சூரிட்டியும் நல்லா இருக்கு. என்றார். ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? - ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்
டாப் ஹீரோக்களுக்கு வருவாயில் பங்கு மட்டுமே; யூடியூப் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை - TFPC முடிவுகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (TFPC), பெரிய பட்ஜெட் படங்களில் நாயகன் மற்றும் முக்கிய படக்குழு உறுப்பினர்கள் வருவாய் பகிர்வு முறையில் மட்டுமே பணியாற்ற வேண்டுமென்றும் திரைப்படத்திலிருந்து வரும் லாபம் மற்றும் நஷ்டத்தை தயாரிப்பாளருடன் பகிர வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னை எழும்பூரில் ஞாயிறு அன்று (நவ. 7) நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று மொத்தமாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. TFPC தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குகளில் இருந்து வரும் வருமானம் குறைந்துள்ளதாகவும் ஓடிடி மற்றும் செயற்கைகோள் உரிமை வியாபாரமும் நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்யவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், ஓடிடி ரீலீஸ் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தெரிவுபடுத்தப்பட்டன. பெரிய நடிகர்களின் படங்கள் 8 வாரத்துக்குப் பிறகும் நடுத்தர நடிகர்களின் படங்கள் 6 வாரங்களுக்குப் பிறகும் சிறிய படங்கள் 4 வாரங்களுக்குப் பிறகும் ஓடிடியில் வெளியிடலாம் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. சிறிய படங்களுக்கு திரையரங்கங்கள் கிடைப்பதை உறுதி செய்ய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட திரைப்பட வெளியீட்டு ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க TFPC திட்டமிட்டுள்ளது. ஓ.டி.டி டிஜிட்டல் புராஜெக்ட்டுகளுக்கு அதிகப்படியான விளம்பரம் செய்யப்படுவது ரசிகர்களுக்கு சினிமாவின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடக் கூடும் எனக் கருதும் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்களும், இயக்குநர்களும், முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களும் வெப் சீரிஸ்களைவிட திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான் தொழில்துறை சூழலை ஆரோக்கியமானதாக வைத்திருக்கும் எனக் கோரியுள்ளது. தீர்மானங்களைப் பின்பற்றாதவர்களுடன் ஒத்துழைப்பதை சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் நிறுத்த வேண்டுமென்றும், திரையரங்க உரிமையாளர்கள் அவர்களின் படங்களைத் திரையிடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கோரியிருக்கிறது. TFPC உடன், தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை, திரைப்பட விமர்சனம் என்ற சாக்கில் எல்லை மீறும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாகவும் துறைரீதியிலாகவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளன. அத்துடன் விருது விழா மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் தனியார் அமைப்புகள் TFPC மற்றும் தென்னிந்திய திரைக்கலைஞர்கள் சங்கத்திடம் முன்னனுமதி பெற வேண்டும் என்றும் விதிமுறை வகுத்துள்ளது. அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தப்பட்டால் சட்டப்படியும் தொழில்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பைசன்: என் வாழ்க்கை வேறு; உங்க வாழ்க்கை வேறு - சினிமா பயணம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்
நேபாளத்தில் விமான சேவை பாதிப்பு ; அவதியடைந்த பயணிகள்
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில்விமான நிலைய ஓடுதளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ஓடுதளத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை. விமான நிலைய ஓடுதளம் வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், விமானங்கள் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், […]
பேஸ்மெண்ட் வீக்.. தவெக விஜய்யை விமர்சித்த துணை முதல்வர் உதயநிதி!
ஒவ்வொரு ஊரிலும் ஆண்டுக்கு ஒரு முறை கண்காட்சிகள் அமைக்கப்படும். அதில் தாஜ்மஹால், ஈபில் டவர் போன்ற மாதிரிகள் அமைக்கப்படும். அதைக் கண்டு புகைப்படம் எடுக்க இளைஞர் கூட்டம் அதிகமாக வரும் என்று உதயநிதி பேசினார்.
திடீரென்று வேலை போனால் PF பணம் கிடைக்காதா? புது ரூல்ஸ் என்ன சொல்லுது?
பிஎஃப் திட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் தங்களுடைய வேலையை இழந்துவிட்டால் அவர்களுடைய பிஎஃப் கணக்கும் அதில் உள்ள பணமும் என்ன ஆகும் தெரியுமா?
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்- ரெலோ- தலைமை பதவியிலிருந்து விலக, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை காலஅவகாசம் கோரியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். இன்று (9) வவுனியாவில் நடந்த தலைமைக்குழு கூட்டத்தில், அவர் உடனடியாக தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் கடுமையாக வலியுறுத்திய நிலையில், ஜனவரி மாதம் பதவிவிலகுவதாக அவகாசம் கோரினார். இன்றைய தலைமைக்குழு கூட்டம் வவுனியா நெல்லி ஹொட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதன் தலைமை தாங்க முயன்ற போது, […]
பொம்மை முதல்வர் தலைமையில் காவல்துறை சீர்கேடு! டிஜிபி நியமனத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு
தமிழ்நாட்டில் டிஜிபி நியமனத்தில் தாமதம் இருந்து வரும் நிலையில் பொம்மை முதல்வர் தலைமையில் காவல்துறையில் சீர்கெட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இந்தியாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்துமா? பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
எந்தவொரு சூழ்நிலைக்கும் இந்தியா தயாராக உள்ளது என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங்கின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கே செல்லும் அடுத்த புகையிரதம்? மாகாண தேர்தல் நடக்கும்! நடக்காது! பனங்காட்டான்
மாகாண சபைத் தேர்தலுக்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள ஜனாதிபதி அநுர குமர, எல்லை நிர்ணயம் முடிந்த பின்னரே தேர்தல் என்பதால் அது எப்போது என்று சொல்ல முடியாதென நேர்மையாகக் கூறியுள்ளார். ஷவடக்குக்கு அடுத்த புகையிரதம் விரைவில் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும்| என்று நீதிபதி இளஞ்செழியனுக்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டதன் மறைபொருள் என்ன? ஜனாதிபதி தோழர் அநுர குமர திஸ்ஸநாயக்க தமது அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டத்தை சில நாட்களுக்கு முன்னர் சமர்ப்பித்தார். தோழரின் அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் தத்தம் விருப்புக்கு ஏற்றவாறு தனித்தும் கூட்டாகவும் பிச்சுப் பிடுங்கும் வாய்ப்புக் காலம் இது. ஜனநாயக தமிழ் தேசிய மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக மீண்டும் இணைந்து இயங்க விரும்பினால் தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டுக்கு இணங்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'அடுத்த புகையிரதம் விரைவில் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும்என்ற கோட்டை புகையிரத நிலையத்தின் அறிவிப்பு, லண்டனில் இடம்பெற்ற முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் பாராட்டு விழா நிகழ்வில் தெரிவிக்கப்பட்டதன் மறைபொருள் அர்த்தப்படுத்தப்பட்டு பலராலும் பேசப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் வெளியான முக்கிய செய்திகளான இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவையாதலால் அவற்றை உள்ளீடு செய்து அலசுவது இந்த வாரத்துக்குப் பொருத்தமாக தெரிகிறது. ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு செலவுத் திட்டத்தை அதன் நிதியமைச்சர் என்ற நிலையில் அநுர குமர கடந்த வாரம் சமர்ப்பித்தார். இந்த மாதம் 21ம் திகதி நுகேகொடையில் சில எதிர்க்கட்சிகள் இணைந்து அரசுக்கு எதிராக நடத்தும் கூட்டத்தில் இந்த வரவு செலவுத் திட்டம் பேசுபொருளாக இருக்குமென எதிர்பார்க்கலாம். முன்னைய ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி இனி வராது என்ற உச்சத்தில் அச்சம் வேண்டாமென்று அநுர குமர உறுதியளித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போக்கவரத்துச் செலவு ஏற்றம், மின்கட்டண உயர்வு என்பவை ஏற்கனவே விசவாயுவாக ஏறியிருக்கையில், சர்வதேச நாணயத்துடனான இணக்கம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை தேசிய மக்கள் சக்திக்கு இருப்பதால் ஷஅச்சம் தவிர்ஷ வெளிவந்திருக்கிறது. ஆனால், இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியாது என்று தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் தமதுரையில் எச்சரிக்கை செய்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் இடையிலான அர்த்தம் இங்கு பிசுபிசுத்து காணப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வரவு செலவுத் திட்டத்தை மக்களுக்கு சலுகை வழங்காத ஒன்றாக விமர்சித்துள்ளார். வறுமையும் வேலையின்மையும் அதிகரிப்பதால் மக்களுக்கு சலுகைகள் வேண்டுமென்பது இவரது பார்வை. மக்களுக்கு வேலை வாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி ஆகியவைகளை வலியுறுத்த வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர், சலுகைகள் ஊடாக மக்களை வறுமைக்கோட்டின்கீழ் இருத்தி சலுகைகள் ஊடாக அவர்களை வாழவைக்க விரும்புவது அவரின் அடித்தட்ட அரசியல் பார்வையை பளிச்சிட்டுக் காட்டுகிறது. கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த இவர் அங்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு தரப்பின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடினார். இலங்கைக்கான பல தேவைகளை இங்கு பட்டியலிட்ட இவர், 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இந்தியாவிடம் கோரியிருந்தார். 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஜே.ஆரும் ராஜிவும் ஒப்பமிட்டவேளை அதனை எதிர்த்து நின்ற முதலாமவர் சஜித்தின் தந்தையான அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச. அப்போது ராஜிவ் காந்தியை ராஜரீக முறையில் சந்திப்பதைக்கூட இவர் நிராகரித்திருந்தார். 1990 மார்ச் மாதம் இந்திய இராணுவத்தை வெளியேற்றியதோடு அன்றைய வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையை கலைத்தவரும் இவரே. அதேசமயம் இரு நாட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் வன்செயலில் ஈடுபட்டவர்கள் இன்று ஆட்சி புரியும் ஜே.வி.பி.யினர். இப்போது, அநுர குமர அரசிடம் அதே ஒப்பந்தத்தில் பிரசவமான 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் நேரில் இந்தியாவிடம் கேட்கும் காட்சியும், அதனை இழுத்தடிக்கும் ஜே.வி.பி.யின் போக்கும், அரசியலில் எது ஆதாயமோ அதன் பக்கமே காற்று வீசுமென்பதை காட்டுகிறது. இதே போன்றதொரு காற்று வீச்சுடன் மாற்றுத் தமிழ் தேசிய கட்சிகளை நிபந்தனையுடன் தங்களுடன் இணைய வருமாறு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஓர் உள்;ராட்சித் தேர்தலை மையப்படுத்திப் பிளந்த சாதனை தமிழரசுக்கானது. இதனால் கூட்டமைப்பிலிருந்த மூன்று முன்னாள் ஆயுதக் குழுக்கள் தம்மை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என மாற்றிக் கொண்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலும் உள்;ராட்சி மன்றத் தேர்தலும் இரண்டு அணிகளுக்கும் எதிர்பாராத பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. இதனால் கிடைத்த இடைவெளியை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் எட்டு எம்.பிக்களைப் பெற்றதுடன் தமிழர் பிரதேசங்களில் எதிர்பார்க்காத எண்ணிக்கையில் உள்;ராட்சி மன்றத் தேர்தலிலும் வெற்றி கொண்டது. தமிழ்த் தேசிய கட்சிகளின் பலவீனம் தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியை பலமாக்கியது. வரப்போகிறதென எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து இவர்கள் மீண்டும் இணைய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. கடந்த புதன்கிழமை கூடிய தமிழரசு கட்சி நிர்வாகம், பகிரங்கமாக பொது அழைப்பொன்றை விடுத்துள்ளது. தங்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு இணங்கினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக மீண்டும் இயங்கலாமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இந்த அழைப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இந்த அழைப்பு என்று செய்திகள் கூறுகின்றன. இதற்கு பதிலளித்துள்ள ஜனநாயக கூட்டணியினர், தமிழரசு கட்சியின் நிபந்தனைகள் என்னவென்று தங்களுக்குத் தெரியாதென கைவிரித்துள்ளனர். பேசிய பின்னர் இணையலாமே தவிர, பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை வைக்கக்கூடாதென்றும் இவர்கள் சுட்டியுள்ளனர். இணைவதற்கு முன்னர் நிபந்தனைகளை விதிப்பதானது கொக்குக்கு தட்டில் பால் வார்த்த கதை போன்றது. மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறுமென்ற எதிர்பார்ப்புடன் தமிழரசின் முன்னாள் எம்.பி. சுமந்திரன் கட்சி சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவார் என்ற பரவலான செய்திகளின் பின்னணியில் பிரிந்தவர்கள் மீண்டும் கூடுவது அவசியமென்பது தெரிகிறது. ஆனால், மாகாண சபைத் தேர்தல் எப்போது என்பது - முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டதுபோல புரியாத புதிராக உள்ளது. மாகாண சபைத் தேர்தலை கோருபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமது வரவு செலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபாவை அநுர குமர அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், எல்லை நிர்ணயத்தின் பின்னரே தேர்தல் நடைபெறுமென்றும் அநுர குமர அறிவித்துள்ளார். இதுவும்கூட கொக்குக்கு தட்டில் பால் வார்த்த கதைதான். தேர்தல் நடக்கும், நடக்காது என்ற பட்டிமன்றத்தை தொடர்ச்சியாக்கியுள்ளது பத்து பில்லியன் ஒதுக்கீடு. இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கில் மட்டுமே இத்தேர்தல் விவகாரம் உசுப்பேறி நிற்கிறது. மாகாண சபை என்பது மக்களுக்கானதா அல்லது கதிரைகளுக்கானதா என்ற கேள்;வியும் இதனோடு எழுந்து வருகிறது. வடமாகாண முதலமைச்சர் பதவி போட்டியில் அண்மையில் ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் பெயர் ஆங்காங்கே பேசப்படுகிறது. இவரது தந்தை தீவுப்பகுதியின் தமிழரசுத் தூண்களில் முக்கியமானவராக இருந்தவர். இவரது இளைய சகோதரர் தமிழரசின் மத்திய குழுவில் ஒருவர். இவரது தாய்மாமன் ஒருவர் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவரின் மகளின் கணவர். இதற்கும் மேலாக நீதி தவறாத நேர்மையான, துணிச்சலான ஒரு நீதிபதி என்ற புகழ் பெயருடன் இன்றும் துலங்குபவர் திரு. இளஞ்செழியன். செம்மணி கிரு~hந்தி கொலை வழக்கிலிருந்து பல நீதித் தீர்ப்புகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அரசியலில் இவருக்கு நாட்டம் இல்லாதிருக்கலாம். ஆனால், இவர் அரசியலுக்கு பொருத்தமற்றவர் என்று கூற முடியாது. வடமாகாண முதலமைச்சராகவிருந்த நீதியரசர் விக்னேஸ்வரன் தன்முனைப்புடன் இயங்கியவர் என்பதற்காக, நீதிபதி இளஞ்செழியனை அவருடன் ஒப்பீடு செய்வது முற்றிலும் தவறானது. இங்கிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற நீதிபதி இளஞ்செழியன் பாராட்டு வைபவத்தில், 'அடுத்த புகையிரதம் விரைவில் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும்என்ற பிரபலமான கோட்டை புகையிரத நிலைய அறிவிப்பு, ஓரிரு தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டது. தமது பதிலுரையில் நீதிபதி இளஞ்செழியன் இதனைத் தொட்டுப் பேசியபோது திரண்டிருந்தவர்களின் கையொலி பலமாக எழுந்தது. வடமாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு புதியவர் ஒருவர் களமிறக்கப்படப் போகிறார் என்பதே புகையிரத சொற்றொடரின் மறைபொருள் என்று இந்நிகழ்வில் பங்குபற்றியவர்களின் விமர்சனங்க;டாக அறிய முடிந்தது. நல்லவர், வல்லவர், துணிச்சலானவர், நீதிக்கு மட்டுமே தலைவணங்குபவர், நீதித்துறையை நீதியால் அலங்கரித்தவர், சிங்கள ஆட்சித் தரப்பால் வஞ்சிக்கப்பட்டவர் என்ற அறிமுகத்துடன் முதலமைச்சராக ஒருவர் வரவேண்டுமென்பது காலத்தின் நியதியானால் அதனை யாரால் தடுக்க முடியும்?
கின்னஸ் சாதனை: இந்தியாவின் ‘புஷ்-அப் நாயகன்’ரோஹ்தாஷ் சௌத்ரி!
இந்தியாவின் உடற்தகுதி ஆர்வலரான ரோஹ்தாஷ் சௌத்ரி (Rohtash Choudhary), தனது உடல் வலிமை மற்றும் மன உறுதியால் உலக அளவில்
இஸ்ரேல் –காஸா போர்! நெதன்யாகு உள்பட 37 பேருக்கு கைது வாரண்ட்!
காஸாவில் இனப் படுகொலைக் குற்றங்களுக்கு எதிராக இஸ்ரேலின் பிரதமர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 37 பேரை கைது செய்ய துருக்கி அரசு ஆணை பிறப்பித்தது. காஸாவில் ராணுவம் இனப் படுகொலை செய்யப்படுவதாகவும், மனிதகுலத்துக்கு எதிராகச் செயல்படுவதாகவும் இஸ்ரேல் மீது துருக்கி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்பட 37 பேரை கைது செய்ய துருக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக துருக்கி […]
தவறுக்கு வருந்துகின்றேன்:செல்வம்!
தன் மீதான பெண் விவகார குற்றச்சாட்டை செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டார். “ஒரு தவறொன்று நடந்து விட்டது. நானும் அவசரப்பட்டு கதைத்து விட்டேன்“ என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று (9) வவுனியாவில் நடந்த தலைமைக்குழு கூட்டத்தில், அவர் உடனடியாக தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் கடுமையாக வலியுறுத்திய நிலையில், ஜனவரி மாதம் பதவிவிலகுவதாக அவகாசம் கோரினார். இன்றைய தலைமைக்குழு கூட்டம் வவுனியா நெல்லி ஹொட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதன் தலைமை தாங்க முயன்ற போது, உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இன்றைய நிகழ்ச்சி நிரலில், செல்வம் அடைக்கலநாதன் மீதான பெண் விவகார ஒலிப்பதிவு குற்றச்சாட்டு, குறித்து விவாதிப்பதாக இருந்தது. இதனால் சலசலப்பு ஏற்பட, கூட்டத்தை தலைமை தாங்குவதிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் விலகிக் கொண்டார். உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது.
அனுர அரசும் பௌத்த விசுவாத்தில்
இலங்கையில் தொல்பொருளியல் திணைக்கள சபைக்கு முற்றுமுழுதாக சிங்களவர்களை நியமித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது அனுர அரசு. மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்த்தெடுப்பது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் முதன்மை நோக்கம். இதனால், இலங்கையின் தொல்லியல் மரபுரிமையை முகாமைப்படுத்துவதையும் அது தொடர்பான செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதையும் இத்திணைக்களம் முக்கிய பணியாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாத்தல்; அவற்றைப் பதிவு செய்தல்; இம்மரபுரிமை தொடர்பாக மக்களிடையே அறிவை வளர்த்தல்; தொல்லியல் களங்களையும், நினைவுச்சின்னங்களையும், தொல்பொருட்களையும் பேணிப் பாதுகாத்தல்; தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுதல் என்பன இத்திணைக்களத்தின் செயற்பாட்டு வரம்புக்குள் அடங்குகின்றன. இந்நிலையிலேயே முன்னைய அரசு;களை போன்றே தற்போதைய அரசும் முற்றுமுழுதாக சிங்களவர்களை நியமித்து தனது பௌத்த விசுவாச நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளது அனுர அரசு.
மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்
மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இதை எவரும் மறுத்துரைக்க முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் நினைவேந்தல் இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “போர்க் காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகளைத் தற்போதைய அரசு விடுவித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, மாவீரர் துயிலும் […]
கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட , அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக ஊடகங்களில் பொய்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையிலே சில முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் நமது கட்சிக்கு எதிரான அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையில் சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அது தொடர்பில் இன்று ஆராய்ந்திருந்தோம். எங்கள் கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாக திட்டமிட்டு எங்கள் கட்சியின் மீது சேறு பூச வேண்டும் என்று அல்லது அரசியல் ரீதியாக எங்களை தாக்க வேண்டும் என திட்டமிட்டவர்கள் ஊடாகத்தான் இந்த விடயம் பிழையான ஒரு பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது உண்மை இல்லையா என்பதை ஆராய்வதற்காக தலைமைக்குழுவிலே ஒரு முக்கியமான குழு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் இந்த விடயங்களை ஆராய்ந்து பேராளர் மாநாட்டிலே இது சம்பந்தமான வெளிப்படுத்தலை மேற்கொள்வார்கள்.
சீனிகமவில் 6 கிலோகிராம் ஹெராயினுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், சீனிகமவில் நேற்று (08) 5 கிலோகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட ஆறு பேரை ஏழு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்ட விசாரணை நேற்று(9) பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் காலி, அஹங்கம, தெல்வத்த, வதுகெதர […]
வீதியில் முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா – வனராஜா பகுதியில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை காலை பைனஸ் மரமொன்று முறிந்து வீழ்ந்ததனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அட்டன் – பலாங்கொடை, பொகவந்தலாவை – ஹட்டன், சாமிமலை மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிப்பு இதன்காரணமாக குறித்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மின் கம்பமும் விழுந்து சேதமடைந்துள்ளது. சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீர்படுத்தும் பணிகள் மின்சாரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதியில் பலத்த காற்று காரணமாக […]
THAR கார் வைத்திருப்பவர்கள் பித்துப்பிடித்தவர்கள்- ஹரியானா DGP-யின் கருத்து வைரல்
ஹரியானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் சிங், மகிந்திராவின் தார் (THAR) காரை வைத்திருப்பவர்கள் எல்லாம் பித்துப்பிடித்தவர்கள் வெறிபிடித்தவர்களாக (Crazy) இருப்பார்கள் எனக் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று (நவ. 8) செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாகன சோதனைகளில் பின்பற்றப்படும் வழிமுறைகள் பற்றி விளக்கியதுடன், அதிகாரிகள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். அப்போது ஒரு வாகனம் என்பது வண்டி மட்டுமல்ல அது தன்னைப் பற்றிய அறிக்கை எனப் பேசியுள்ளார். mahindra thar எல்லா வாகனங்களையும் சோதிப்பது இல்லை என்ற அவர், தார் காரை சோதிக்காமல்விட முடியாது என லேசான சிரிப்புடன் கூறினார். அது ஒரு தார் என்றால், அதை எப்படி விட்டுவிடுவது? அல்லது அது ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளாக இருந்தால்... அனைத்து முரட்டுத்தனமான ஆட்களும் இந்த இரண்டையும் பயன்படுத்துகின்றனர். நீங்கள் தேர்வு செய்யும் வாகனம் உங்கள் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. என்றார். Thar Earth தொடர்ந்து, தார் ஓட்டுபவர்கள் சாலையில் ஸ்டண்ட் செய்கின்றனர். அசிஸ்டண்ட் கமிஷனரின் மகன் தார் ஓட்டிச் செல்லும்போது ஒருவரின் மீது மோதினார். காவலர் அவரின் மகனை விடுவிக்க விரும்புகிறார். நாங்கள் அவரிடம் கார் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கேட்டோம். அது அவரது (காவலர்) பெயரில் உள்ளது. எனில் அவர்தான் முரட்டுத்தனமான நபர். நாம் காவலர்களின் ஒரு பட்டியலை உருவாக்கினால், அதில் எத்தனை பேரிடம் தார் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் பித்துப்பிடித்தவர்கள் ( 'dimaag ghuma hua hoga uska...) . தார் என்பது ஒரு கார் இல்லை, தான் எப்படிப்பட்டவன் என்பதற்கான அறிக்கை. எனப் பேசியுள்ளார். சமீப காலமாக ஆன்லைனில் ஸ்டண்ட் செய்து வீடியோக்கள் போட தார் கார் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. அவை அனைத்தும் ரசிக்கும்படியானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்துகளும் அதிகரித்திருக்கின்றன. இவற்றைக் குறிப்பிட்டு சற்று நகைச்சுவையாகப் பேசியுள்ளார் டிஜிபி! GST 2.0: XUV கார் முதல் ஆக்டிவா ஸ்கூட்டர் வரை - என்ன என்ன வாகனங்களின் விலை குறைந்திருக்கிறது?
டெல்லியில் காற்று மாசுபாடு.. போராட்டத்தில் குதித்த மக்கள்.. போலீசார் கைது நடவடிக்கை!
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் உள்ள 39 கண்காணிப்பு நிலையங்களில் 22 நிலையங்கள் 400-க்கு மேல் காற்றின் தரக் குறியீடை பதிவு செய்துள்ளன.
திமுக அறிவும் உழைப்பும் மக்களுக்கா, வாரிசு அரசியலுக்கா? — ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!
திமுக அறிவும், உழைப்பும் மக்களை வாழவைக்க அல்ல வாரிசு அரசியலை ஊக்குவிக்க என ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மத்திய கிழக்கில் மறைந்திருக்கும் ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர்என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதனிடையே இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 6 இலங்கை மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இந்த போதைப்பொருள் தெஹிபாலே மல்லி என்ற நபருக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தான் –ஆப்கன் பேச்சு தோல்வி: போருக்குத் தயார் என தலிபான் அரசு எச்சரிக்கை
காபூல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டாத நிலையில், ‘போருக்கு தயார்’ என ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. “நட்பு நாடுகளான துருக்கியும், கத்தாரும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றது. நவ.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஆப்கன் தரப்பில் பங்கேற்றோம். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரமாக கவனம் செலுத்தும் என […]
கோவா அயர்ன்மேன் 70.3 ட்ரையத்லான்: அண்ணாமலை சாதனை!
கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அயர்ன்மேன் 70.3 (IRONMAN 70.3) ட்ரையத்லான் பந்தயம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும்
அதிரடி கைதான அரசாங்க உத்தியோகத்தர் ; கையொப்பத்தால் வந்த சிக்கல்
மொனராகலை,படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சொந்தமான காணி ஒன்றில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக குறித்த பெண்ணின் கையொப்பத்தை போலியாக இட்ட ஆவணத்தை உறுதிபடுத்திய குற்றச்சாட்டில் கிராம அலுவலர் ஒருவர் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளரான பெண் 2017 ஆம் ஆண்டில் குறித்த பிரதேசத்தில் இல்லாதபோது, மரக்கடத்தல்காரர் மரங்களை வெட்ட அனுமதி பெறுவதற்காக வழங்கிய கடிதத்தில் உள்ள போலி கையொப்பத்தை கிராம அலுவலர் உறுதிபடுத்தி சான்றளித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]
ஜப்பானில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. அச்சத்தில் மக்கள்!
வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இவாட் மாகாண கடற்கரையிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எந்த சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்டவரை நோக்கி விரல் நீட்டும் சமூகம் நீதியைக் கோரவில்லை; காரணங்களை தேடுகிறது #HerSafety
நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கணக்கிடவே முடியாத பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கோவையில் 20 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் இன்னொரு புதிய சேர்க்கை. அது ஒரு குற்றம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட பெண்களுக்கு எதிரான எல்லா குற்றங்களிலும் நிகழ்வதுபோல ஒரு பெண்ணின் உடல் எப்படி உடனடியாக பொதுவில் ஒரு போர்க்களமாக மாறிவிடுகிறது என்பதை கடுமையாக, எந்த மேற்பூச்சும் இல்லாமல் காட்டும் இன்னொரு அப்பட்டமான உண்மை. Sexual Harassment (Representational Image) பாதிக்கப்பட்டவரையே குற்றம்சாட்டுவது, காட்சிப்பொருளாக்குவது பிறகு திசைதிருப்புவது என்கிற வழக்கமான, நைந்துபோன உத்திகளை சமூகம் இந்த முறையும் கையிலெடுத்திருக்கிறது. ஒரு பெண்ணுக்கு எதிராக வன்முறை நடக்கும் போதெல்லாம் அந்தப் பெண்ணும் அவளுடன் நிற்பவர்களும் அந்த வன்முறைக்கு எதிராக மட்டுமல்லாமல் அவர்களைப் பற்றிய சமூகத்தின் மோசமான மதிப்பீடுகளுக்கும், கருத்தாக்கங்களுக்கும் எதிராகவும், கூடுதலாகவும் போராட வேண்டியிருக்கிறது. இதில் நமக்கெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போதிய அளவில் வழக்குகளாவதில்லை என்று அங்கலாய்ப்பு வேறு. கோவைக் குற்றத்தைப் பொறுத்தவரையில் அந்தப் பெண்ணை வன்கொடுமைக்கு ஆளாக்கிய மூவரில் இருவர், ஏற்கெனவே கொலைக்குற்றம் உள்பட பல குற்றங்களைச் செய்த குற்றவாளிகள். பாதிக்கப்பட்ட பெண் ஏன் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியவர்கள் யாரும் அந்த குற்றவாளிகள் எப்படி அங்கு உலவிக் கொண்டிருந்தார்கள் என்று கேட்கவில்லை. இந்த சமூகத்தில் ஒரு குற்றவாளிக்கு இருக்கும், வழங்கப்படும் சுதந்திரமும் சந்தேகத்தின் பலனும்கூட ஒரு நாளும் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கப்போவதில்லை. கோவை மாணவி பாலியல் வழக்கு இந்தக் கேள்விகளோடு அந்தப் பெண்ணின் உடைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளும் ஒரு விஷயத்தைத் தெளிவுப்படுத்துகின்றன. இந்தக் கேள்விகள் சமூகத்தின் மிக அப்பட்டமான வாக்குமூலமாக நம் முன் நிற்கின்றன. எதன் பக்கம் நிற்கிறோம் என்பதை சமூகம் இந்தக் கேள்விகள் மூலமாக நிறுவுகிறது. சமூகத்தின் பார்வையும், வாதமும் குற்றம் செய்தவர்களை நோக்கியோ, அல்லது அந்தக் குற்றங்களை சாத்தியப்படுத்திய அமைப்புகளை நோக்கியோ, குற்றவாளிகளைச் சுதந்திரமாக உலவவிட்டதோடு அல்லாமல், அவர்களை இன்னும் குற்றம்புரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த, அதன் தோல்விகளை நோக்கியோ இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கியதாக இருக்கிறது. அவரது உடல் சாட்சியாகிறது. அவரது இருப்பு சந்தேகத்திற்குரியதாகிறது. அவரது மாண்பு சமரசத்துக்குள்ளாக்கப்படுகிறது. அதற்கு முன்பும் அதற்கு பின்பும் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகள் நடந்திருந்தாலும் இந்தியாவின் ஆன்மாவை உலுக்கிய ஒரு வன்முறையாக இன்றளவும் நிர்பயா இருக்கிறது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டன. ஆணையங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தன. சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் பற்றிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அனுமதி (consent) பற்றிய உரையாடல்கள் இன்று பரவலாகிவிட்டன. ஆனால், நிர்பயாவுக்கு பிறகான இந்த பத்து, பதினைந்து வருடங்களில் பெரிதாக என்ன மாறிவிட்டது? சட்டங்களை மாற்ற முடிந்த நம்மால் குற்றங்களை அனுமதிக்கும், ஊக்குவிக்கும் அமைப்புகளை மாற்ற முடிந்திருக்கிறதா? நிர்பயா வழக்கு இந்த அமைப்புகளை மாற்றுவதற்கு தேவை அரசியல் உறுதி. குற்றங்கள் நடந்த பிறகு வினை புரியாமல் நடப்பதற்கு முன்பு தடுக்கத் தயாராக இருக்கும் ஒரு முறை. இவற்றுக்கு அடிப்படையாக, பாலின வன்முறையை அதன் வேர்களில் வெட்டிச் சாய்க்கும் சமூக மாற்றம். அதுஇல்லாமல் சட்டம் வெறும் அட்டைக் கத்தி மட்டுமே. இதை வெறும் காவல்துறையின் தோல்வி என்று மட்டும் சொல்லிவிட முடியுமா? இது சமூகத்தின் தோல்வி. ஒரு சமூகமாக நம்மை நோக்கி நாம் சில கேள்விகளை எழுப்பிக்கொள்வோம். சில வழக்குகள் மட்டும் ஏன் நம்மை உலுக்குகின்றன? பாதிக்கப்பட்ட பெண் சமூகத்தின் சோகால்ட் ‘நிர்ணயங்களுக்கு’ ஓரளவு ஒத்து வரும் பெண்களுக்காக, நகரங்களின் வெளிச்ச உமிழ்வுகளில் நிகழும் குற்றங்களுக்காக, அல்லது பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டால் மட்டுமே நம் தேசம் ஏன் கொந்தளித்து எழுகிறது? கிராமங்களில், தலித் பெண்கள் மீது, புலம்பெயர் பெண்கள் மீது தினந்தோறும் ஏவப்படும் சமூக வன்முறை ஏன் பொது மனநிலையை உலுக்கவில்லை? நமது கூட்டு மனநிலை அனுதாபம் (collective empathy) தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருப்பதால் அவர்களது வலி சிறியதாக இருக்கிறது. இந்தத் தேர்வு என்பதும் இயற்கையானது அல்ல. அது உருவாக்கப்பட்டது. சமாளிக்கக்கூடிய சில பிரச்னைகளை அரசுகள் பெரிதாக்கிக்காட்டுகின்றன. விரைவாக முடியக்கூடிய வழக்குகளை காவல்துறை முன்னிறுத்திக்காட்டுகிறது. பரபரப்பை கூட்டுமென்பதற்காகவே சில வழக்குகளை கையிலெடுக்கின்றன ஊடகங்கள். இங்கு உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நீதி மீது யாருக்கு அக்கறை இருக்கிறது? இதற்கிடையில் அமைப்பு ரீதியிலான அநீதிகள் – அது குற்றவாளிகள் உலவிக்கொண்டிருப்பதாகட்டும், பாதுகாப்பற்ற நகரங்களாகட்டும், போதுமான காவல்துறையினர் இல்லாதிருப்பதாகட்டும் – கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறது. பாலியல் வழக்கு உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டோமென்று தமிழ்நாடு அரசும் மார்தட்டிக்கொள்ள முடியாது. பாதுகாப்பை குற்றத்திற்குப் பிறகு அளவிடுவது சரியில்லை. குற்றப் பின்ணனி கொண்ட நபர்கள் எப்படி சுதந்திரமாக உலவ முடிகிறது? 2025லும் கூட பெண்களுக்கு தேவைப்படும்போது மட்டும் சிசி டிவிக்கள் எப்படி வேலை செய்யாமல் போகிறது? இப்படி எண்ணற்ற கேள்விகளை எழுப்ப முடியும். ஆனால் அரசைக் குற்றம் சொல்லி அல்லது இதை ஒரு அரசியல்ரீதியிலான திசைதிருப்பலாக மட்டும் அணுகி சரி செய்துவிடமுடியாது. கோவையும் கோவை சம்பவம் போன்ற எண்ணற்ற பெண்கள் மீதான வன்முறைகளும் ஏற்கெனவே சொன்னதுபோல ஒரு சமூகமாக நம் தோல்வி. வன்முறையை சாத்தியமாக்கும் பழக்கவழக்கங்களை விட்டொழிப்பதிலிருந்து இந்தத் தோல்வியை சரி செய்ய வேண்டியிருக்கிறது. துன்புறுத்தலை (harassment) இயல்பாக்கும் நகைச்சுவைகள், அக்கறை என்கிற பேரில் முன்வைக்கப்படும் தார்மீக காவல்ரீதியிலான கேள்விகள் (moral policing), பிறகு ஆண்களின் வன்முறையை விட்டுவிட்டு பெண்களின் உடல்களை பேசும் நம் அவ்வளவு எளிதான இயல்புகள். இதையெல்லாம் எங்கிருந்து மாற்றத் தொடங்குவது? பெண்ணின் இருப்பைப் பற்றியும் உடையைப் பற்றியும் கேள்வியெழுப்பும் ஒவ்வொருவரிடமும் நான் கேட்க விரும்புவது இதைத்தான். அந்தக் குற்றவாளிகளுக்கு பதிலாக நீங்கள் அங்கிருந்திருந்தால் அந்தக் குற்றத்தை செய்திருப்பீர்களா? Sexual harassment ஒரு குற்றத்தை நியாயப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுவதிலிருந்துதான் குற்றங்கள் தொடங்குகின்றன, தொடர்கின்றன, பாதுகாக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவரை நோக்கி விரல் நீட்டும் சமூகம் நீதியைக் கோரவில்லை; காரணங்களைத் தேடுகிறது. அது நிகழ்ந்து கொண்டிருக்கும்வரையில், இந்தச் சமூகத்தை எந்தச் சட்டமும், எந்த அரசு உத்தரவும், எந்த நீதிமன்றமும் பெண்களுக்கான பாதுகாப்பான ஒன்றாக மாற்ற முடியாது. கோவையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு மட்டுமல்ல, சமூகம் கண்டுகொள்ளாத வலிகளைச் சுமக்கும் எண்ணற்றப் பெண்களுக்கும் நாம் கண நேர கோபத்தைவிட, அடுத்த பிரச்னை வரும்வரையிலான கவனத்தைவிட அதிகம் தர வேண்டியிருக்கிறது. பாலியல் வழக்கு சந்தர்ப்பங்களை சார்ந்திருக்காத பாதுகாப்பைத் தர வேண்டியிருக்கிறது. சமூக மாற்றத்தைத் தர வேண்டியிருக்கிறது. அது முழுமையாக நிகழும்வரையில், நமது மௌனமும் அனைத்துக் குற்றங்களுக்கும் உடந்தையாக இருக்கும். நமது அறச்சீற்றம் அரங்கத்துக்கானதாக மட்டுமே நிற்கும். - கவிதா முரளிதரன்
⚠️ டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்க பத்திரங்களில் முதலீடு: செபியின் எச்சரிக்கை!
சமீபகாலமாக, தங்கத்தில் முதலீடு செய்யும் இந்தியர்களின் போக்கு டிஜிட்டல் வழியை நோக்கி மாறியுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் சிறிய தொகையில் கூட
Job Interview: என்னை நேர்காணல் செய்தவர் மனிதரே இல்லை - AI குழப்பத்தில் ரெட்டிட் பயனர்!
ரெட்டிட் வலைத்தளப் பயனாளர் ஒருவர் தன்னை வேலைக்காக ஒரு செயற்கை நுண்ணறிவு நேர்காணல் செய்ததாகவும், அது விசித்திரமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். r/interviews என்ற சப்ரெடிட்டில் நேர்காணல்கள் (Job Interview) குறித்தும் அதில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. அதில் ஒரு பயனர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். AI நேர்காணலுக்குச் சென்றுவந்த அவருக்கு நேர்காணல் செய்தது யார் என முழுதாகத் தெரியாத சூழலில், அது செயற்கை நுண்ணறிவாக இருக்கலாமோ எனத் தனது பதிவின் மூலம் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேர்காணல்களில் கலந்துகொள்ளும் பலர் தங்கள் டாஸ்குகளைச் செய்ய AI-யைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சில நிறுவனங்கள் புதிதாக வேலைக்குச் சேருபவர் துறைசார்ந்த செயற்கை நுண்ணறிவுகளைப் பயன்படுத்துகிறாரா என்பதைக் கேட்கின்றன. ஆனால் AI நேர்காணல் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது இதுவே முதன்முறை. My interviewer wasn't even human? by u/Most_Audience_8105 in interviews வீடியோ காலில் நடந்த அந்த நேர்காணலில் தோன்றிய நேர்காணல் செய்யும் பெண் வித்தியாசமான முறையில் ரிப்பீட்டிங்கில் இருப்பதுபோல தலை அசைத்ததாக அந்த ரெட்டிட் பயனர் எழுதியிருக்கிறார். சில நேரங்களில் அசைவுகள் நின்று இழுத்து (twitching) வருவதாகவும் உணர்ந்துள்ளார். முதலில் வித்தியாசமான நடவடிக்கைகளை இணையதள சிக்கலாக இருக்கும் என நினைத்தவர், கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது மிகவும் கச்சிதமாகப் பேசியதனால் அதன் மீது சந்தேகம் வந்ததாகக் கூறியுள்ளார். எந்தத் தயக்கமும் சந்தேகமும் இல்லாமல் சீராகப் பேசியது இவருக்கு விசித்திரமாக இருந்துள்ளது. தனது பதிவில், தான் AI பணிகளைச் செய்வதற்கு எதிரானவன் இல்லை என்றும் அதுதான் நேர்காணல் செய்கிறது என்றால் அதை முன்கூட்டியே தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கமெண்டில் மற்றொரு நபர் தானும் மொபைலில் AI-ஆல் நேர்காணல் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்!
ரூ.1000 கடனை 1 கோடியாக திருப்பியளித்த காய்கறி கடைக்காரர் –லொட்டரியால் மாறிய வாழ்க்கை
லொட்டரியால் பரிசு வென்ற காய்கறி கடைக்காரர் ரூ.1000 கடனை 1 கோடியாக திருப்பியளித்துள்ளார். ரூ.11 கோடி பரிசு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம், கோட்புட்லி நகரில், 32 வயதான அமித் செஹ்ரா காய்கறி கடை நடத்தி வருகிறார். சமீபத்தில், பஞ்சாப் மாநிலம், மோகாவிற்குச் சென்றபோது தனது நண்பரிடமிருந்து ரூ.1,000 கடன் வாங்கி, பஞ்சாப் மாநில லாட்டரியின் தீபாவளி பம்பர் 2025 இல் 2 லொட்டரிகளை வாங்கியுள்ளார். இதில் தனது மனைவி பெயரில் வாங்கிய லொட்டரியில் ரூ.1000 மட்டும் […]
விஜய் மனிதாபிமானம் உடையவர்.. நாங்கள் இல்லாதவர்களா.. துரைமுருகன் கேள்வி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய் மனிதாபிமானம் மிக்கவர் என்றால், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்பட நோயாளிகளுக்கு விசா பெறுவதில் புதிய ரூல்ஸை கொண்டு வந்துள்ளார். இதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்று விரிவாக காண்போம்.
கோவை லங்கா கார்னர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல்...ரவுண்டானாவை மாற்ற அதிகாரிகள் பரிந்துரை!
கோவை லங்கா கார்னரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானாவை திருச்சி ரோடு நோக்கி சற்று நகர்த்துவதற்கு அதிகாரிகள் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும்.
வெளிநாடொன்றில் மிக உயரிய விருதை வென்று வரலாறு படைத்த இலங்கைத் தமிழர் ; குவியும் வாழ்த்துக்கள்
உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் கனடாவின் பெற்றார் இலங்கையில் பிறந்த தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார். கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது. அகதியாக கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, […]
தென்னிலங்கையில் சினிமா பாணியில் கைதான யாழ் இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி
வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதன்போது அந்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி […]
பணி நிரந்தரம் என்ற திமுக வாக்குறுதி.. தமிழக முதல்வருக்கு மறந்து போச்சா?
திமுக வழங்கிய பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா என்று பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து
அம்பலாங்கொடை நகரில் இன்று (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி சாணக்கியனின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு அஞ்சலிக்காக வருகை தந்திருந்தனர். இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார குழு உறுப்பினர்களால் கட்சி கொடி போர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மக்கள் அஞ்சலி இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு […]
உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! இருளில் மூழ்கிய நகரங்கள்!
உக்ரைனின் மிகப் பெரிய எரிசக்தி மையங்களின் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களினால், அந்நாட்டின் ஏராளாமான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் மற்றும் தெற்கு ஒடெசா பகுதிகளில் உள்ள எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷியா மிகப் பெரியளவிலான தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்களினால் இயற்கை எரிவாயுவின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குளிரில் இருந்து தங்களை பாதுகாக்க மக்கள் பயன்படுத்தும் ஹீட்டர் உள்ளிட்ட சாதனங்களை எரிவாயு இன்றி இயக்க […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் மீதும், அவர்மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்கு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் ஜெயராம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும், இதுகுறித்து புகார் செய்தும் தலைமையாசிரியை பொற்செல்வி, உதவி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என 7 மாணவிகள் சைல்ட் லைனிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தனர். புகாரில், ஆசிரியர் ஜெயராம் மூலம் எங்களுக்கு பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை உடந்தையாக உள்ளனர். வகுப்பறையில் எந்நேரமும் ஆபாசமாகப் பேசுகிறார்கள். மாணவர்கள் வகுப்புக்கு மது அருந்திவிட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை, வகுப்பறையிலிருந்த கண்கானிப்பு கேமிராக்களை வெளியில் மாட்டினார்கள். மாணவிகளையும், பெற்றோர்களையும் ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இங்கே படியுஙகள் என்று சொல்கிறார்கள். ஆசிரியர் ஜெயராம் மாணவிகளைத் தொடுவது, மொபைலில் ஆபாச வீடியோக்களை காண்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளனர். போக்சோ இதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ஜெயராம், தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த மதுரை திலகர் திடல் மகளிர் காவல்துறையினர், இப்புகார் குறித்தும் இப்பள்ளி ஆசிரியர்கள் மீதான மேலும் சில புகார்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
'அதிபருக்கே நடக்குமென்றால், சாமானியப் பெண்ணின் நிலை?' - பாலின சமத்துவமும் அரசின் கடமையும் #Hersafety
பெண்களின் பாதுகாப்பு பற்றிய உரையாடல் நடக்க, ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சென்ற வாரம் கோவையில் நடந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு மீண்டும் தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு பற்றிய உரையாடலைத் துவக்கி இருக்கிறது. நவம்பர் 2 ஆம் தேதி கோவையில் ஒரு கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் காலியான சாலையோரத்தில் காரில் இருந்தபோது மூன்று நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கின்றனர். அவர்களைத் தடுக்கமுயன்ற ஆண் நண்பரை அடித்து போட்டு அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து, தூக்கி வீசிவிட்டு சென்றிருக்கின்றனர். 2012ம் ஆண்டு டெல்லியில், ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்தில்செல்கிறார். ஓட்டுநர், ஒரு மைனர் உட்பட பேருந்தில் இருந்த ஆறு ஆண்கள், அந்த ஆண் நண்பரை அடித்து போட்டு பெண்ணைக் கொடூரமான கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி இருவரையும் சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவத்தை எவராலும் மறந்துவிட முடியாது. நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பெண் வாடிக்கையாளர் மீது பாலியல் சீண்டல்; வைரல் வீடியோவால் பரபரப்பு நிர்பயா வழக்கு குறித்த ஆவணப்படத்தில், தான் செய்த பாலியல் வல்லுறவு அந்தப் பெண்ணுக்கும் அவரது ஆண் நபருக்கும் புகட்டப்பட்ட பாடம் என்றும், இரவு நேரத்தில் தனியாக பெண்கள் வெளியில் வந்தால் அவர்களுக்கு இதுதான் நடக்கும் என்றும் குற்றவாளி முகேஷ் சிங் பேசியிருந்தார். 2013-ல் குற்றம் நிரூபிக்கப்பட்ட நான்கு மேஜர் குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்தது. தண்டனையை 2017-ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 2020-ல் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கியபோது, மெக்ஸிகோ நாட்டின் 60 வயது பெண் அதிபர் கிளவுடியா ஷெயின்பம், மக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் போது, மதுபோதையில் ஒருவர் அவர் உடல் மீது தகாத முறையில் கைவைக்க முயற்சி செய்த செய்தி வந்துசேர்ந்தது. சம்பவத்திற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் கிளவுடியா அந்த நபர் மீதுதான் புகாரைப் பதிவு செய்திருப்பதாகக் கூறி, இது போன்ற ஒரு சம்பவம், ஒரு அதிபருக்கே நடக்கும் என்றால், நாட்டில் உள்ள சாமானிய பெண்களின் நிலை என்ன என்ற கேள்வியை வைத்தார். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 6 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் எனப் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. நிர்பயா மீது தொடுக்கப்பட்ட வன்முறை ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வந்தது. முகேஷ் சிங்கின் வார்த்தைகளில் கூறவேண்டும் என்றால், ஒரு பெண்ணின் இடம் சமயலறையில். ஒரு பெண் என்றும் ஒரு ஆணுக்குச் சமமானவள் அல்ல அதிபர் கிளவுடியாவுக்கு நேர்ந்த சம்பவம், அதிகாரம் கொண்டிருக்கும் பெண்ணுமே கூட ஆணுக்குச் சமமல்ல என்கிற சிந்தனையில் நிகழ்த்தப்பட்ட சம்பவம். பெண் எத்தனை உயர்வான இடத்துக்குச் சென்றாலும், அவளைச் சுற்றி பாதுகாவலர்கள் இருந்தாலும், தன்னால் அவளின் உடல் மீது கை வைக்க முடியும் என நினைக்கும் ஆண் மைய அதிகார சிந்தனையிலிருந்து விளைந்த சம்பவம்! நிர்பயா வழக்கை கிடப்பில் போட்டுவிட்டார்கள்; வருந்தும் தாய் நிர்பயா சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பிறகுதான் அரியலூர் நந்தினி கூட்டுப் பாலியல் வல்லுறவு, பொள்ளாச்சி சம்பவம், ஒரத்தநாடு கூட்டுப் பாலியல் வல்லுறவு, தற்போது கோவை கூட்டுப் பாலியல் வல்லுறவு எனப் பல சம்பவங்கள் நேர்ந்து கொண்டிருக்கின்றன. சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை நாம் இன்றும் தொடர்ந்து பார்க்கிறோம். தூக்குத் தண்டனை வரை கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பாலியல் கொடுமைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நிகழும் வன்முறை உலகளவில் மிகவும் பரவலாகவும் இடைவிடாமலும் காணப்படும் மனித உரிமை மீறல்களில் முக்கியமான ஒன்று. உலகளவில், மூன்று பெண்களில் கிட்டத்தட்ட ஒருவராவது தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு, நெருங்கிய துணையாலோ அல்லது துணையல்லாதவர்களின் மூலமாகவோ அல்லது இரண்டு தரப்பினாலுமோ ஏதோ ஒரு கட்டத்தில் ஆளாக்கப்படுகிறார். கோவை சம்பவம் : `பாலியல் வன்கொடுமையை கூட நார்மலைஸ் செஞ்சிடுவீங்களா?’ - பதறும் 2K கிட்ஸ் | #HerSafety 2023 ஆம் ஆண்டில் பாலின அடிப்படையிலான வன்முறை காரணமாகக் குறைந்தபட்சம் 51,100 பெண்கள், தங்களின் துணைவர் அல்லது குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்பட்டார் என்கிறது ஐநா பெண்கள் அமைப்பு. ஆண், பெண், மூன்றாம் பாலினம் என அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் உண்டு. எனினும் மக்கள்தொகையில் தனக்குச் சரிசமமான எண்ணிக்கையில் இருக்கும் பாலினத்தை இரண்டாம் தர குடிமக்களாகப் பார்க்கும் போக்கு காலங்காலமாக நிலவி வருகிறது. இந்த ஆணாதிக்க போக்கு பெண்களைத் தங்களுக்குக் கீழாகவும், தங்களின் இச்சைகளைப் போக்கும் போகப்பொருளாகவும் பார்க்க வைக்கிறது. உலகளவில் இந்தப் போக்கு இருந்தாலும், இந்தியா போன்ற சாதிய, மத, நவதாரளாதவாத நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கதன்மையுடன் இருக்கும் ஆண்களின் மனநிலை, இந்தியப் பெண்களை இனப்பெருக்கம் செய்யும் கருவிகளாக மட்டுமே பார்க்கிறது. குடும்பம் என்னும் நிறுவனம், பண்பாடு என்கிற போர்வையில் இந்தச் சிந்தனைப்போக்கை போதித்து வளர்த்தெடுக்கும் பயிற்சி மையமாகத் திகழ்கிறது. பாலியல் வன்கொடுமை கரூர்: ``என் குரல் பெண் குரல்போல இருப்பதால், பாலியல் சீண்டல் செய்கிறார் ஆசிரியர்'' - மாணவர் புகார் பணிவிடை செய்து, இனப்பெருக்கம் செய்து, சுயமாக முடிவுகள் எடுக்க அனுமதியில்லாத, பலவீனமானவர்களாக பெண்களைப் பார்க்க குடும்பங்கள் கற்றுக்கொடுக்கிறது. விளைவாக, பெண்களை உடல்ரீதியிலான போக இச்சை பொருட்களாகவும், தங்களுடைய உடைமைகளாகவும், அதிகாரம் செலுத்தப்படக் கூடிய அடிமைகளாகவும் பார்க்கும் வழக்கமே தொடர்ந்து தக்க வைக்கப்படுகிறது. பெண்கள் பற்றிய ஆண்களின் பார்வை, பாலியல் இச்சைகளாக பெண்களை அவதானிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் ஆதிக்கம், அதிகாரம், கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆண்களின் சிந்தனை அடித்தளத்தில் வேரூன்றி இருக்கிறது. இதனால் அவர்கள் பெண்ணின் உடலை தங்கள் பாலியல் தேவைகளுக்கு எடுத்துக்கொள்ளும் உரிமை இருப்பதாக நினைக்கின்றனர். இந்தச் சிந்தனைதான், ஆண்கள் செய்யும் பாலியல் குற்றத்தை நியாயப்படுத்தும் இடத்திற்கு அவர்களை எடுத்து செல்கிறது. பாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை போன்ற கடும்தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும், பாலியல் குற்றங்கள் தொடர்வதற்குக் காரணமும் இதுதான். `மகள்களுக்கு’ எதிரான வன்கொடுமைகளை தட்டிக் கேட்பது எப்போது? | #HerSafety “ஒரு பெண் ஏன் இரவு நேரத்தில் வெளியே வருகிறார்?” என முகேஷ் சிங் கூறியதுபோலவும், “ஏன் அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவில் செல்கிறார்?” என கோவை பாலியல் சம்பவத்துக்கு எதிர்வினையாகப் பலர் எழுதிவருவது போலவும் ஆண்களின் மனநிலை இருப்பதற்கு காரணம், அந்தச் சிந்தனை ஆண்களின் அதிகார உணர்வில் இருந்து வருகிறது என்பதுதான். இவர்களுக்கு தண்டனைகள் எந்த அச்சத்தையும் கொடுப்பதில்லை. மாறாக மேலும் பெண்கள் மீது தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக நினைக்கும் போக்குத்தான் தொடர்கிறது. சாதியும் மதமும் போதிக்கும் ஆணாதிக்க சிந்தனைகளை குடும்பக் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தி சமூகத்திலும் அரச நிறுவனங்களிலும் புகுத்துகிறது. இதனால் சமூகப்படிநிலையில் உள்ள அனைத்து மட்டங்களிலும், பெண்களை இரண்டாம்தர குடிமக்களாகப் பார்க்கும் போக்கு தொடர வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால், பெண்கள் மீதான வன்முறைக்கும், சுரண்டலுக்குமான வழிகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. பாலியல் தொல்லை தினசரி வாழ்வில் நீக்கமற கலந்திருக்கும் ஆணாதிக்க சிந்தனைப் போக்கிலிருந்து பாலின சமத்துவத்தை நோக்கிய மன மாற்றத்தைக் கொண்டுவர அரசுகள் முதலில் பாலின சமத்துவ அரசுகளாக இருக்க வேண்டும். எப்படி ஒரு கலைஞர் தனது கலைப்படைப்பில் தனது சிந்தனையைக் கொண்டு வருகிறார்களோ, எப்படி லட்சக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் 'app' -களை வடிவமைக்கும் ஒரு மென்பொருள் பொறியாளர் தனது சிந்தனையை அந்தச் செயலிகளுக்குள் கொண்டு வருகிறாரோ, அது போல கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டின் தலைமையும் பாலின சமத்துவம், பெண்கள் விடுதலை, பெண் உரிமை, பெண் பாதுகாப்பு முதலிய பார்வைகளைத் தனது நிர்வாகத்தில் முன்னெடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு என்பது வெறுமனே ஆபத்தைத் தடுப்பது என்பதாக மட்டும் கருதப்படாமல், வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் இடங்களிலும் வன்முறை, ஒடுக்குமுறை, சுரண்டலில் இருந்து விடுதலை பெற்று சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் பெண்கள் வாழ்வதுதான் எனக் கருதப்படும் சிந்தனை மாற்றம் ஏற்படவேண்டும். Sexual Abuse: `வழி நெடுக வலியின் சத்தமும்; அழுகுரலின் நடுக்கமும்' #Hersafety பெண்களுக்கான வாழ்க்கை, கல்வி மற்றும் உறவுக்கான தேர்வுகளில் தங்களுக்கான விருப்பத்துடன் வாழ்வதும் பொருளாதார சுதந்திரத்துடன் பெண்கள் வாழ்வதற்கான வழிகளை உறுதிப்படுத்துவதும்தான். உண்மையான பெண் பாதுகாப்பு ஆகும். அதுவே, பெண் விடுதலையை நோக்கி செல்வதற்கான உண்மையான வழியாகவும் இருக்க முடியும்! பாலியல் வன்கொடுமை வரலாறு நெடுக அரசுகள் போலியோ, காலரா, எய்ட்ஸ் போன்ற பல உயிர்க் கொல்லி நோய்களை அறிவியல்பூர்வமாகச் செயல்பட்டு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றன. சமீபமாகப் பரவிய கொரோனா நோய்த்தொற்றைக் கூட எதிர்ப்பு மருந்துகள் மூலம் கையாளமுடிந்திருக்கிறது. ஆனால் அதே கொரோனா காலத்தில் கொரோனோ போலவே அதிகரித்து, Shadow Pandemic என ஐநாவால் அழைக்கப்பட்ட குடும்ப வன்முறைக்கு இன்றுவரை தீர்வு இல்லை என்பதே யதார்த்தம். ஏனெனில் அதிகாரம் ஏறும் அரசுகளுக்கு, உழைப்பு சக்தியாகப் பயன்பட மக்கள் வேண்டும், அவ்வளவுதான். அந்த மக்கள் மத்தியில் நிலவும் ஆண்-பெண் பாகுபாட்டைக் களைந்து, பாலின சமத்துவம் கொண்டு வர வேண்டிய தேவையை அரசுகள் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில் அதிகாரக் கட்டமைப்பு ஆணாதிக்கத்துக்கு ஏதுவாகச் செயல்பட மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. - கவிதா ராஜேந்திரன் `இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety
'இந்த'தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள்; அதற்கு நாங்கள் பொறுப்பல்ல - எச்சரிக்கும் செபி
செய்கூலி, சேதாரம், நாளடைவில் மதிப்பு தேய்மானம் போன்ற காரணங்களால், தற்போது பலரும் பிசிக்கல் தங்கத்தைத் தாண்டி, டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த டிஜிட்டல் தங்கம் முதலீடுகள் குறித்து தற்போது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது செபி. செபி வெளியிட்டுள்ள அறிக்கையில், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எலெக்ட்ரானிக் தங்க ரசீதுகள் வழங்கும் கான்ட்ராக்ட்டுகள், தங்கம் இ.டி.எஃப்கள் ஆகியவை செபியால் அங்கீகரிக்கப்பட்ட தங்கம் முதலீடுகள். இவற்றில் செபியில் பதிவுசெய்த இடைத்தரகர்கள் மற்றும் செபியால் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மூலம் முதலீடு செய்யலாம். SEBI - செபி தங்கம் விலை உயரும்போது தங்க அடமானக் கடன் பெறுவது புத்திசாலித்தனமா? எச்சரிக்கை தற்போது டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்கப் பொருள்கள் விற்கப்படுவதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த டிஜிட்டல் தங்கங்கள் பிசிக்கல் தங்கத்திற்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படுகின்றன. இவை செபியால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. இவை செபி அங்கீகரித்த தங்க முதலீடுகளில் இருந்து முற்றிலும் மாறானது. இந்தத் தங்க முதலீடுகள் செபியின் கண்காணிப்பிற்கு உட்பட்டதில்லை. இந்த டிஜிட்டல் தங்க முதலீடுகளில் ரிஸ்க் உள்ளது என்று எச்சரித்துள்ளது. விலை ஏறும்போது தங்கம், வெள்ளி ETF வாங்கிவிட்டேன்; இப்போது குறைகிறதே, என்ன செய்வது? | Q&A
பீகார் இறுதிகட்ட பிரச்சாரம்: இந்தியா கூட்டணி மீது அமித் ஷா குற்றச்சாட்டு!
பீகாரின் சசாரம் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணிக்காக இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதில் இந்தியா கூட்டணியை விமர்சித்து பேசி உள்ளார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான தொடர்கள், 2019-ல் இருந்து இந்தியாவில் நடைபெற்றவை குறித்து பார்க்கலாம். தற்போது 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அட்டவணை குறித்த தொகுப்பு.
திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புதிய சாலை அமைக்கும் பணியின் தற்போதய நிலை?
திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புதிய சாலை அமைக்கும் பணியின் தற்போதய நிலை என்ன என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். மேலும் இந்த சாலை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பாகவும் இதில் கூறப்பட்டு உள்ளது.
15 பாலஸ்தீனர்கள் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 300 ஆக அதிகரிப்பு!
இஸ்ரேலில் இருந்து மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் காஸா அதிகாரிகளிடம் நேற்று (நவ. 8) ஒப்படைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த அக்.10 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் ஒப்படைக்கும் ஒவ்வொரு இஸ்ரேலியரின் உடலுக்கு நிகராக 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்து வருகின்றது. இந்த நிலையில், தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் உடலை ஹமாஸ் படைகள், நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர். இதையடுத்து, […]
8ஆவது ஊதியக் குழு இப்படித்தான் இருக்க வேண்டும்.. நிதியமைச்சருக்கு பறந்த கடிதம்!
8ஆவது ஊதியக் குழுவில் இந்த விஷயத்தை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
யாழ் இளைஞர்கள், கைத்துப்பாக்கியுடன் வத்தளையில் கைது!
வத்தளை பகுதியில் பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினரின் உத்தரவை மீறிச் சென்ற… The post யாழ் இளைஞர்கள், கைத்துப்பாக்கியுடன் வத்தளையில் கைது! appeared first on Global Tamil News .
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: SIR-ஐ எதிர்த்து 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின்
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட்டன என்பது குறித்து ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது... தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள #SIR ஆபத்து: கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் 11-ஆம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் SIR-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும், SIR SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன். சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதிவலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பைப் பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம்! என்றார். RUhttps://twitter.com/mkstalin/status/1987409097260433866S SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?
இளம்பெண்ணைக் கொன்று மூட்டைகட்டி வீசிய ஜோடி; சாலையோரம் தவித்த கைக்குழந்தை - பகீர் பின்னணி
தி ருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவ விவசாயி சக்திவேல். இவரின் மனைவி அம்சா (வயது 28). இவர்களுக்கு 4 வயதில் நிவிஸ்தா என்ற மகளும், ஒன்றரை வயதில் நிவிலன் என்ற ஆண் கைக்குழந்தையும் இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த மாதம் 15-ம் தேதி, கைக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்காக குழந்தையைத் தூக்கிக்கொண்டு அம்சா பேருந்தில் ஏறிப் புறப்பட்டு வந்திருக்கிறார். அதன் பிறகு, இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சிக்குள்ளான கணவர் சக்திவேல் மற்றும் உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடத் தொடங்கினர். இதனிடையே, அன்று இரவு 8 மணியளவில், எஸ்.கே.பி கல்லூரி அருகே சாலையோரமாக குழந்தை நிவிலன் தனியாக அழுதபடி நின்றுக்கொண்டிருந்தான். இதைக் கவனித்த பெண் ஒருவர், குழந்தையை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட இளம்பெண் அம்சா `குழந்தை யாருடையது, இங்கு எப்படி வந்தது?’ என்று போலீஸார் விசாரணையை முன்னெடுத்தபோது, கழிக்குளம் சக்திவேல் தன் மனைவி, குழந்தையை தேடிக்கொண்டிருப்பதாகத் தெரியவந்தது. கீழ்பென்னாத்தூர் காவல் நிலையப் போலீஸார், சக்திவேலை வரவழைத்து அவரிடம் குழந்தையை ஒப்படைத்து, விசாரணை நடத்தினர். அப்போது, `மருத்துவமனைக்கு குழந்தையுடன் சென்ற தன் மனைவி எங்கே போனாள் என்று தெரியவில்லை, சார்..?’ எனப் பதறியிருக்கிறார். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீஸார், அம்சாவைத் தேடத் தொடங்கினர். அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாமல் இருந்தது. இந்த நிலையில்தான், நேற்றைய தினம் கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள ஏந்தல் பைபாஸ் சாலையோரமாக... சம்மந்தனூர் கரும்புத் தோட்டத்துக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அங்கு கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த மக்கள், உடனடியாக கீழ்பென்னாத்தூர் போலீஸாருக்குத் தெரியப்படுத்தினர். போலீஸார் விரைந்து வந்து மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது, அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அனைவருமே திடுக்கிட்டுப் போயினர். உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சமீபத்தில் மாயமான இளம்பெண்களின் விவரங்களை சேகரித்து விசாரித்தபோது, கொலையான பெண் கடந்த மாதம் 15-ம் தேதி மாயமான கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அம்சா எனத் தெரியவந்தது. `அம்சாவுக்கு என்ன நேர்ந்தது? யார் அவரைக் கொலை செய்தது? கொலையாளிகள் தான் குழந்தையைக் கொண்டு சென்று எஸ்.கே.பி கல்லூரிக்கு அருகே விட்டுச் சென்றார்களா?’ என புலனாய்வைத் தொடங்கினர். சாக்குமூட்டையில் மீட்கப்பட்ட அம்சாவின் சடலம் கரும்புத் தோட்டம் இருக்கின்ற சுற்றுவட்டாரப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்தபோது, ஸ்கூட்டியில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சந்தேகத்திற்கிடமாக அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்ததும், கரும்புத் தோட்டப் பகுதிக்கு வந்துசெல்வதும் பதிவாகியிருந்தது. அந்தப் பெண்ணின் அடையாளத்தை கண்டபோது, அவர் கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான நேத்ரா எனத் தெரியவந்தது. கணவரைப் பிரிந்த நேத்ரா சில ஆண்டுகளாக வேங்கிக்கால் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறார். கீழ்பென்னாத்தூர் அருகிலுள்ள கொல்லக்கொட்டா பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவருடனும் நேத்ராவுக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அடிக்கடி வெளியே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். கொலை செய்யப்பட்ட அம்சாவும் கழிக்குளம், சந்தேக வலையில் சிக்கிய நேத்ராவின் சொந்த ஊரும் கழிக்குளம் என்பதால், போலீஸார் இருவரையும் பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, பகீர் தகவல்கள் வெளிவந்தன. அம்சாவை கொலை செய்ததை நேத்ரா ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று, மருத்துவமனைக்குச் செல்ல குழந்தையுடன் திருவண்ணாமலைக்கு வந்த அம்சாவை, தனது ஆண் நண்பனுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த நேத்ரா பார்த்துவிட்டு, வாகனத்தை நிறுத்தி பேச்சுக்கொடுத்திருக்கிறார். இருவரும் ஒரே கிராமம்; ஏற்கெனவே அறிமுகம் என்பதால், அம்சாவும் சகஜமாக நேத்ராவிடம் பேசியிருக்கிறார். அப்போது, அம்சாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயின் நேத்ராவின் கண்களை உறுதியிருக்கிறது. `அதை எப்படியாவது பறித்தாக வேண்டும்’ என்று திட்டமிட்ட நேத்ரா, கட்டாயப்படுத்தி அம்சாவைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். கைது செய்யப்பட்ட நேத்ரா, அவரின் ஆண் நண்பன் திருப்பதி வீட்டுக்குள் சென்றபிறகு அம்சாவைத் தாக்கி தங்கச் செயினை பறித்த நேத்ராவும், அவரின் ஆண் நண்பனும், `இப்படியே வெளியில்விட்டால் அவள் போலீஸுக்கு போவாள். நாம் மாட்டிக்கொள்வோம்’ என்று கருதி, அம்சாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கின்றனர். இதையடுத்து, சாக்கு மூட்டையில் உடலைக் கட்டி கரும்புத் தோட்டத்துக்குள் கொண்டு சென்று வீசியிருக்கின்றனர். பிறகு, யாருக்கும் சந்தேகம் வராதபடி அம்சாவின் கைக்குழந்தையையும் எஸ்.கே.பி கல்லூரிக்கு அருகே கொண்டுசென்று விட்டுவிட்டு தப்பிச் சென்றதும், விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, கொலை வழக்காக மாற்றிய போலீஸார், நேத்ராவையும், அவரின் ஆண் நண்பன் திருப்பதியையும் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடம், `வெறும் 4 பவுன் நகைக்காகத்தான் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றதா?’ எனவும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் ஏனைய தேசிய இனங்களின் பிரதிநிதிகள் இல்லை!
தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருளியல் லோசனைக் குழுவுக்கு 19 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 19… The post தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் ஏனைய தேசிய இனங்களின் பிரதிநிதிகள் இல்லை! appeared first on Global Tamil News .
Jason Sanjay 01: தயாரிப்பாளராகவும் மாறிய விஜய்யின் மகன்; வெளியாகும் அப்டேட்
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் மாநகரம், ராயன் படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 2026 தொடக்கத்தில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படபிடிப்பில் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார். இதுவரையிலான படத்தின் உருவாக்கம் அவருக்கு திருப்தி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்குவதாக 2023ம் ஆண்டே செய்தி வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் சந்தீப் கிஷன் இதில் இணைந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனியான தயாரிப்பு நிறுவனத்தையும் பதிவு செய்திருந்தார் ஜேசன் சஞ்சய். 'ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற அந்த நிறுவனம் JSJ 01 படத்தில் பங்குபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படம் நிறைவடையும் சூழலில் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. அப்டேட் போஸ்டர் இந்த சூழலில் தற்போது JSJ 01 எனக் குறிப்பிடப்பட்டு வரும் இந்த படத்தின் பெயர் நாளை வெளியாகும் என்ற அப்டேட்டைக் கொடுத்துள்ளது படக்குழு. விஜய் செய்தது, அஜித் கருத்து சரியானதா? - பார்த்திபன் பதில்!
சத்தீஷ்காரில் 7 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்
ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் நக்சல்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நக்சல் அமைப்பை சேர்ந்த பலர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சத்தீஷ்காரில் உள்ள கரியாபந்த் பகுதியில் 7 நக்சல்கள், தங்களது ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர். இவர்கள் குறித்து […]
Rukmini Vasanth: அந்த அழைப்பும் செய்திகளும் போலியானவை- ருக்மிணி வசந்த் எச்சரிக்கை
தமிழில், விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் கன்னட நடிகை ருக்மிணி வசந்த். அதைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ என தமிழில் நடித்தார். சமீபத்தில் வெளியான `காந்தாரா சாப்டர் 1' படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனைத்தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். ருக்மிணி வசந்த் இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், செல்போன் எண் ஒன்றைக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அதில், “அந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தும் ஒருவர், என்னைப்போல ஆள்மாறாட்டம் செய்து பல்வேறு நபர்களைத் தொடர்பு கொள்வது எனது கவனத்துக்கு வந்துள்ளது. அது என்னுடைய எண் இல்லை. அதிலிருந்து வரும் அழைப்பும் செய்திகளும் போலியானவை. தயவுசெய்து அதற்கு பதிலளிக்கவோ அவரைத் தொடர்புகொள்ளவோ வேண்டாம். இந்த ஆள்மாறாட்டம் சைபர் குற்றத்தின் கீழ் வருகிறது. எந்த விஷயத்துக்கும் நேரடியாக என்னை அல்லது எனது டீமைத் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்திருக்கிறார்.
அதிமுக: உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று (நவ. 9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, எனக்கு சங்கங்களிலிருந்து நிறைய கடிதங்கள் வந்தன. கண்ணீர் சிந்தும் அளவிற்கு அந்தக் கடிதங்கள் இருந்தன. உங்களுடைய தியாகத்தைப் பற்றி உழைப்பைப் பற்றி நீங்கள் செய்கின்ற சேவையைப் பற்றி யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்று கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது. செங்கோட்டையன் உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது. அப்படி இருந்ததனால்தான் புரட்சித் தலைவரை யாரும் வீழ்த்த முடியவில்லை. உழைப்பாலும், தியாகத்தாலும் உயர்ந்தவர். கருணை உள்ளம் கொண்டவர். மன்னிக்கும் தன்மை படைத்தவர். தொண்டர்களுக்காக முன்னின்று தியாகங்கள் செய்தவர். அதேபோலத்தான் அம்மாவும் (ஜெயலலிதா) செயல்பட்டார். இயக்கத்தைக் காப்பதற்கு 1989-ல் தனது நகைகளை வழங்கி இந்த இயக்கத்தை வலிமைப்படுத்தினார். அவர்கள் வழியில்தான் நாங்களும் செயல்படுகிறோம் என்று பேசியிருக்கிறார். ``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது - செங்கோட்டையன் ஓப்பன் டாக்
முதல்வர் ஸ்டாலின் திருச்சி மற்றும் புதுக்கோட்டை, சுற்றுபயணம் - முழுவிவரம் இதோ!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை மற்றும் திருச்சிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார்.
BB Tamil 9: நீங்க தாராளமா வெளிய வந்துரலாம் - அரோராவிடம் காட்டமான விஜய் சேதுபதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருந்தனர். BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருந்தனர். BB Tamil 9: எல்லாரும் சேர்ந்து என்னை அழ வச்சுட்டீங்க!- கலங்கிய விக்ரம் வழக்கம்போல இந்த டாஸ்க்கிலும் போட்டியாளர்களுக்குள் கலவரம் வெடித்தது. இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில், நாட்களைக் கடந்தா போதும் என் அக்கவுண்ட்ல பணம் ஏறிறும்னு இந்த வீட்டில செயல்படுறது யாரு? என விஜய் சேதுபதி கேட்க எல்லோரும் அரோராவைக் கைக்காட்டுகின்றனர். BB Tamil 9 எல்லா யுக்தியும் தெரியும். ஆனா விளையாட மாட்டிங்குறாங்க, யாரையும் காயப்படுத்திடக்கூடாது'னு பேசவே மாட்டிங்குறாங்க என அரோராவைச் சொல்கின்றனர். வெளிய போணும்னா சொல்லிடுங்க. நானே பிக் பாஸ் கிட்ட சொல்லிடுறேன். தாராளமா வெளிய வந்துரலாம் என்று விஜய் சேதுபதி அரோராவிடம் காட்டமாகப் பேசுகிறார்.
சோழிங்கநல்லூர் ஏரி புனரமைப்பு பணிகள் முடிவதற்கு முன்பே நடைபாதையை பயன்படுத்தும் மக்கள்!
சோழிங்கநல்லூர் ஏரி புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவதற்கு முன்பே நடைபாதையை பயன்படுத்தும் மக்கள். இதனால் வேலை மேலும் தாமதமாகி வருகிறது என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
A / L எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து பாடசாலை பரீட்சாத்திகளாக 14ஆயிரத்து 217 பேரும், தனியார் பரீட்சாத்திகளாக 3ஆயிரத்து 249 பேருமாக 17ஆயிரத்து 466 பேர் தோற்றவுள்ள நிலையில், இதற்காக 147 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்து தெரிவித்து, ஊடகங்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி வைத்துள்ளார். அதில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு நான் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது […]
9MM குறும்பட திரையிடல்: ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்தது போல இருந்தது - சினிமா பிரபலங்கள் பாராட்டு
'நோ ஃப்ரில்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், சந்தோஷ் மன்னராத் தயாரிப்பில் வெளியான '9 எம்எம்' என்னும் குறும்படம் ஹாரிஸ் வாணிதாசனால் இயக்கப்பட்டு பரணி ஸ்டுடியோவில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தில் அஜித் விக்னேஷ் ஹீரோவாகவும், பரோட்டா முருகேசன், பிரதீப் ராஜ், தாமோதரன், இளமாறன், பிரபாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘ஈன்ற பொழுதினில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் திருக்குறளைக் கூறி ஆர்வத்தில் ஏதோ பண்ணிருப்பாங்கனு நினைத்து நான் வந்தேன். சிறப்புக் காட்சி ஆனால் நான் அன்று பார்த்த ஊமை விழிகள் திரைப்படத்தில் இருந்த அந்த எதிர்பார்ப்புகளும், சத்தங்களும் அது போன்ற ஒரு உணர்வுகளை இப்படம் உருவாக்கியது. இப்போதெல்லாம் டைரக்டர் ஆவதற்கு எந்த டைரக்டருடன் அசிஸ்டெண்டாக இருந்தாய் என்ற கேள்வி போய் எத்தனை குறும்படங்கள் எடுத்திருக்கீங்க அப்படின்ற கேள்வி வந்திருக்கு. Bad Girl Review: புதுமையான திரைமொழியில் தனித்துவம் பெரும் படைப்பு; இந்த பேட் கேர்ள் சொல்வது என்ன? இரண்டாம் உலகப்போருக்குப் பிறகுதான் மனிதநேயப் படங்கள் உருவாக ஆரம்பித்தன. அந்த வகையில் இப்படியாக எடுக்கப்படும் குறும்படங்கள் பல புதிய விஷயங்களை உலகிற்குச் சொல்லவும், பயனுள்ளதாக அமைகின்றன. ஒரு படத்தின் படைப்பானது பார்ப்பவர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், படத்தில் ஏதோ ஒரு இடத்தில் ஆவது மக்களுடன் அது பிணைப்பை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும். மக்களிடையே அது விவாதத்தை உண்டு பண்ண வேண்டும் அந்த வகையில் இப்படத்தில் எடிட்டிங், கேமரா என எல்லாமே சிறப்பாக அமைந்து ஒரு முழுமையான படமாக இது இருக்கின்றது. மொத்தத்தில் ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்தது போல இத்திரைப்படம் இருந்தது என்றார். சிறப்புக் காட்சி இந்நிகழ்வில் கலந்து கொண்டு காளி வெங்கட் கூறியதாவது, இப்படத்தில் நடித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படம் முழுவதும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் அமைந்தது. இசை மிகவும் நன்றாகவும் பொருத்தமாகவும் இருந்தது. புதிய இளைஞர் அணிகள் இதுபோன்று நிறைய படங்களை எடுக்க வேண்டும். எந்தக் குறும்படமும் எப்பொழுது வேணுமானாலும் பாம் போல வெடித்து சிதறலாம், ரீச் ஆகலாம் எனவே நம்பிக்கையுடன் செயல்படுங்கள் என்றார். இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா? இந்நிகழ்வில் கலந்து கொண்ட 'கொடுவா' படத்தின் இயக்குநர் S.சுரேஷ் கூறியதாவது, என்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தவன் இப்போ டைரக்டராகவே வந்துட்டான். சிறப்புக் காட்சி எங்க இந்த சினிமா கத்துக்கிட்டானே தெரியல. எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டர்ல இருந்து டைரக்டர் ஆவதற்கு நாலு வருஷம் ஆச்சு. இத பொறாமைனு சொல்றதா பெருமைனு சொல்றதானு எனக்கு தெரியல. ஒரு படத்த ஸ்டார்ட் பண்றதும் முடிக்கிறதும் அவ்ளோ ஈஸி இல்ல. அதுதான் பெரிய இம்பேக்ட கிரியேட் பண்ணோ அது அவ்வளவு சுலபமானதும் இல்ல. அந்த வகையில பார்க்கும்போது இந்தப் படம் ஸ்டார்டிங் மற்றும் என்டிங் சூப்பர் என்றார். ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?!
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை காருடன் மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில், சந்தேகநபர்களுக்கு சொந்தமான இலட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு இன வளர்ப்பு நாய் ஒன்றும் காரினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்தனையும் கொழும்புக்கு அழைத்து செல்ல […]
நாளை முதல் 27ஆம் திகதி வரையில் வடக்கில் மழை பெய்யும் ?
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 25 – 27ஆம் திகதி வரையில் கனமழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் மேலும் தெரிவிக்கையில், புதிய காற்றுச் சுழற்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக, தென்கிழக்காக என அங்குமிங்கும் அலைந்து இலங்கைக்கு கீழாக […]
பாகிஸ்தானில் கையெறி வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், நடத்தப்பட்ட கையெறி வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவின், கைபர் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று முன்தினம் (நவ. 7) கையெறி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில், 3 பேர் பலியானதாகவும் ஒருவர் படுகாயமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் படுகாயமடைந்தவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சம்பவத்துக்கான காரணம் […]
கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் –யாழில் கைதானவர்கள் கொழும்புக்கு ;
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில்… The post கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்கள் கொழும்புக்கு ; appeared first on Global Tamil News .
நாளை முதல் 27ஆம் திகதி வரையில் வடக்கில் மழை பெய்யும் ?
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில்… The post நாளை முதல் 27ஆம் திகதி வரையில் வடக்கில் மழை பெய்யும் ? appeared first on Global Tamil News .
தமிழகத்தில் முதல் முறையாக மெட்ரோ ரயில் மூலம் காக்கப்பட்ட உயிர்கள்...இதுவரை நடந்தவை!
மெட்ரோ ரயில் மூலம் உடல் உறுப்புகளை விரைவாக கொண்டு சென்று ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. இது சென்னையில் நேற்று நடந்துள்ளது. இதுவரை மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி காக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
நான் பிக் பாஸ்ட சொல்லிடுறேன், தாராளமா வெளியே வரலாம் அரோரா: ஷாக் கொடுத்த விஜய் சேதுபதி
இன்று பிக் பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி பேசியதை பார்த்தவர்களோ அடுத்த வாரம் அரோராவை தான் வெளியேற்றுவார்கள் போலயே. அதற்கு இந்த வாரமே எவிக்ட் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.
'மிசா வரலாறு' Vijay-க்கு, M.K Stalin பதிலடி &சீமானின் 50 சீட் ஸ்கெட்ச்! | Elangovan Explains
Vaiko Vs OPS பாச யுத்தம் - பின்னணி என்ன? | Modi | Uthayanithi Stalin
What are the Documents required for SIR | How to find my EPIC No | Decode Vikatan
ஓசூர் அருகே சுட்டுப் பிடித்த கர்நாடகா போலீஸ்… தொழிலதிபரை கடத்தி கொலை செய்த வழக்கில் அதிரடி!
தொழிலதிபரை 2 கோடி ரூபாய் பணம் கேட்டு கடத்தி கொலை செய்த வழக்கில் துப்பாக்கியால் இரண்டு கால்களிலும் சுட்டு கர்நாடக போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்காவில் ஜி20 மாநாடு நடைபெறுவது மிகப் பெரிய அவமானம்: டிரம்ப்!
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்கமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா நாட்டில், ஆப்பிரிக்கானர்ஸ் எனும் சிறுபான்மை வெள்ளையினருக்கு எதிராக அந்நாட்டின் அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார். இந்தக் குற்றச்சாட்டுக்களை தென்னாப்பிரிக்க அரசு மறுத்துள்ளது. இருப்பினும், பல்வேறு முக்கிய பொருளாதார நாடுகள் இடம்பெற்ற அமைப்பில், தென்னாப்பிரிக்கா இடம்பெற்றுள்ளது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு கேள்வி எழுப்பிய […]
ஆந்திராவில் இருந்து இனி தண்ணீர் தேவையில்லை - தமிழக அரசு கோரிக்கை!
சென்னையின் நீர் ஆதாரங்கள் நிரம்பி இருப்பதால் தண்ணீர் வீனாவதை தடுக்க ஆந்திரா அரசிடம் இனி தண்ணீர் தேவையில்லை என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது .
அரசு பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு… அடுத்த 2 மாசத்துக்கு தினமும் எக்ஸ்ட்ரா கிளாஸ்!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நாள்தோறும் கூடுதல் நேரம் கல்வி கற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எத்தனை நாட்கள், எதற்காக இந்த ஏற்பாடு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு 'நோ'விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?
அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு. நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம் என்று உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசா H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு? என்னென்ன மருத்துவ உதவி அல்லது சிகிச்சை? இந்த மருத்துவ உதவி மற்றும் சிகிச்சைகளில் இதய நோய், சுவாச நோய், புற்றுநோய், சர்க்கரை நோய், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், உளவியல் ரீதியான பிரச்னைகளும் அடங்கும். உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட விசா தருவதில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, இவர்களுக்கு எதிர்காலத்தில் ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. நிதி பாதுகாப்பு இருக்கிறதா? இந்தக் கட்டுப்பாடுகளில் இது யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தெளிவாகக் கூறப்படவில்லை. இப்போதைக்கு விசா விண்ணப்பிப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கோளாறு இருப்பவர்களுக்கு ஒருவேளை விசா வழங்கப்பட்டால் அவர்களது மருத்துவச் செலவுகளைக் பார்த்துக்கொள்ள கூடிய அளவுக்கு, குறிப்பிட்ட நபருக்கு நிதி பாதுகாப்பு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பொறுத்தவரை, குடியேற்றங்களைக் குறைக்க வேண்டும். இதற்காகத்தான், விசா நடைமுறைகளில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அவரது அரசாங்கம். அமெரிக்கா செல்ல உங்களுக்கு ஐடியா இருக்கிறதா? - விசாவிற்கு 'இந்த' தகவல் கட்டாயம்! - புது ரூல்
இந்தியாவின் முதல் ஆழ்கடல் நுண்ணுயிர் சேமிப்பகம்!
இந்தியாவின் முதல் ஆழ்கடல் நுண்ணுயிர் சேமிப்பகம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் நெல்லூரில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது என்று NIOT இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்தான்-அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் எனவும் அனுபமா தெரிவித்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சில நாட்களுக்கு முன்பு, என்னைப் பற்றியும், என் குடும்பத்தாரைப் பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களையும் டேக் செய்தும், மிகவும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் இருப்பதை அறிந்தேன். அந்த பதிவுகளில் தரக்குறைவாக எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் இருப்பதையும் பார்த்தேன். இவ்வளவு குறிவைத்து செய்யப்படும் இணையத் தாக்குதலை வருத்தத்தைக் கொடுத்தது. மேலும் விசாரணையில், அதே நபர் பல போலி கணக்குகளை உருவாக்கி, என்னைச் சார்ந்த ஒவ்வொரு பதிவிலும் பிழையான கருத்துக்களை இடுவதன் மூலம் வெறுப்பை பரப்ப முயன்றது தெரியவந்தது. இதை அறிந்தவுடன், உடனே கேரள சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தேன். அவர்கள் விரைவாகவும் திறம்படவும் செயல்பட்டனர், அவர்களின் உதவியால், இந்தச் செயல்களின் பின்னால் இருந்த நபர் கண்டறியப்பட்டார். அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என்று தெரியவந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளின் வயதைக் கருத்தில்கொண்டும், அவளின் எதிர்காலம் மற்றும் மன அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அவளின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்க விரும்புகிறேன். ஆனால், இந்தச் சம்பவத்தைப் பகிர்வதன் மூலம் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல நினைக்கிறேன். அனுபமா பரமேஸ்வரன் ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அல்லது சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருப்பது என்பது யாருக்கும் மற்றவர்களை தொந்தரவு செய்ய, அவதூறு பரப்ப, அல்லது வெறுப்பை விதைக்க உரிமை கொடுப்பதாக ஆகாது. ஆன்லைனில் செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் தடயமுண்டு, அதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றே ஆக வேண்டும். நாங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அந்த நபர் தன் செயல்களுக்கு ஏற்ப விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு நடிகை அல்லது பொதுமக்கள் மத்தியில் அறியப்பட்ட நபராக இருப்பதால் அடிப்படை உரிமைகளை அற்று நிற்க முடியாது. இணைய தாக்குதல் ஒரு தண்டனைக்குரிய குற்றம். சமூகவலைதளங்களில் உங்களின் செயல்பாட்டுக்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுதான் ஆக வேண்டும். View this post on Instagram

27 C