SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

Revanth Reddy Announces Kodangal Development Plans

Telangana Chief Minister Revanth Reddy on Wednesday announced big development plans for Kodangal and special funds for gram panchayats. He

சென்னைஓன்லைனி 25 Dec 2025 2:20 pm

Christmas Carol Clash Injures Several in Kerala

Several people were injured after a fight broke out between two Christmas carol groups in the Charummoodu–Nooranad area of Kerala’s

சென்னைஓன்லைனி 25 Dec 2025 2:12 pm

சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!

2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது. இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், அவர் குற்றவாளியானது எப்படி, இறுதியில் இருவருக்கும் என்ன நேர்கிறது என்பதே அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் 'சிறை' படத்தின் கதை. சிறை விமர்சனம் | Sirai Review தன் திறன் மீதான தன்னம்பிக்கை, சட்டத்தின் முன் நேர்மை, கோபத்தை அடக்கி வைக்கும் தருணம், பிறருக்காக மனமிறங்கும் தருணம் என முழுக்க முழுக்க முதிர்ச்சியான அணுகுமுறையைக் கோரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. படம் முழுவதும் பரிதாபத்தைக் கோரும் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார். Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி துயரம் தோய்ந்த முகம், மெல்லிய குரல் என ஒரே மாதிரியான உடல்மொழிதான் என்றாலும், அவற்றுக்குள் குற்றவுணர்வு, காதல், ஆற்றாமை, ஆக்ரோஷம் என அழுத்தமான பங்களிப்பைச் செய்து, தன் அறிமுகத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் அக்ஷய். வெல்கம் அக்ஷய்! பெரும்பாலும் கண்ணீரும் கம்பலையுமாகவே வந்தாலும், காதல், பிடிவாதம், மனவுறுதி, ஆக்ரோஷம் என உருமாறும் அக்கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து, தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் அனிஷ்மா அனில்குமார். ஆங்காங்கே அவர் பேச்சில் எட்டிப் பார்க்கும் மலையாள வாடையைத் தவிர்த்திருக்கலாம். சிறை விமர்சனம் | Sirai Review அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ், அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு, இஸ்மத் பானுவின் கணவராக நடித்தவர், காவலராக ஹரிஷங்கர் நாராயணன் எனத் துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் கதையின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் துணை நின்றிருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் வரும் மூணாறு ரமேஷ் தன் வசனத்தால் கிளாப்ஸ் அள்ளுகிறார். Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும் பாதி இரவு நேரக் காட்சிகள், பயணங்கள், துரத்தல்கள் என நகர்ந்தாலும், நேர்த்தியான ஒளியமைப்பால் உணர்வுகளையும், பதற்றத்தையும் ஒரு சேரக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். குறிப்பாக, தொடக்கத்தில் பேருந்துக்குள் நிகழும் சண்டையைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி! விறுவிறுப்பையும், பதைபதைப்பையும் நழுவவிடாமல், இழுத்துக் கட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். கதாபாத்திரங்களின் உணர்வுகளை மென்மையாகப் பேசுகின்றன ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள். பரபரப்பிற்கான வேகத்தையும், உணர்வுகளுக்கான இறுக்கத்தையும் கொண்டுவந்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. 2000களின் தொடக்கக் கால பேருந்துகள், அக்கால நீதிமன்றம், ஆயுதப்படை பயிற்சித்தளம் எனக் கதையுலகின் எதார்த்தத்திற்குக் கைகொடுத்திருக்கிறது வர்ஷினி சங்கரின் தயாரிப்பு வடிவமைப்பு. சிறை விமர்சனம் | Sirai Review முதல் ஒரு சில காட்சிகளிலேயே பரபரப்பைப் பற்ற வைத்து, திரைக்கதையின் விறுவிறு தன்மைக்கு தயார்ப்படுத்தி, பிரதான கதாபாத்திரத்தின் அகத்தையும் அறிமுகம் செய்கிறது படம். அதைத் தொடர்ந்து, யூகிக்கும்படியான பாதையிலேயே நகர்கிறது திரைக்கதை. எதிர்பார்த்த திருப்பங்களும், காட்சிகளும் அடுத்தடுத்து வந்தாலும், அக்காட்சிகளில் விரியும் கதாபாத்திரங்களும், அதன் வழியாகப் பின்னப்படும் பின்கதைகளும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு உணர்வுபூர்வமான கதைக்குள் காவல்துறையின் கட்டமைப்பு, அதன் படிநிலை, நீதித்துறையின் செயல்பாடுகள் போன்றவற்றையும் தெளிவாகவும், காட்சிகளோடு இயைந்த படியும் பேசுகிறது சுரேஷ் ராஜகுமாரி, தமிழ் ஆகியோரின் திரைக்கதை. இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாகி, வெவ்வேறு மனமாற்றங்களை அடையும் கதாபாத்திரங்கள், திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கின்றன. சிறை விமர்சனம் | Sirai Review முதல் காட்சியிலிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து இறுதிக்காட்சியில் வேறு நிலைப்பாட்டிற்கு மாறும் காவலர் கதிரவன், தன் நோக்கத்திற்காக மூர்க்கமான மனநிலையிலிருக்கும் அனிஷ்மா, அதே நோக்கத்திற்காகச் சாந்தமான மனநிலையிலிருக்கும் அக்ஷய் எனக் கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட விதம் பெரும் பலம். அதேநேரம், சில காட்சிகள் பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுகளிலும், பேசும் வசனங்களிலும் நம்பகத்தன்மை இல்லை. அதனால், அதுவரை எதார்த்த ரோட்டில் ஓடிய திரைக்கதை, அவ்விடங்களில் நாடகத்தன்மைக்கு வழிமாறுகின்றன. அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! இந்தியா முழுவதும் துன்பப்படும் விசாரணைக் கைதிகளின் நிலை, சமூகத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகும் சிறுபான்மையினர், காவல்துறையாலும் நீதித்துறையாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை ஏழைகள் எனப் பல அரசியல் அடுக்குகளை அழுத்தமாகப் பேசுகிறது படம். ஈழத்தமிழர்களுக்காகத் தன்னை மாய்த்துக்கொண்ட தமிழகத் தமிழர் அப்துல் ராவூஃப் பற்றிய மேற்கொள், சிறுபான்மையினரின் அன்றாட வழிப்பாட்டு முறைகளைக் கூட அந்நியமாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலையை விளக்கும் காட்சிகள் போன்றவை துருத்திக்கொண்டு நின்றாலும், அவை கதைக்கருவின் ஆன்மாவை அழுத்தமாகப் பேசுகின்றன. பிரதான கதாபாத்திரங்களின் மனவோட்டத்தின் வழியாக, பார்வையாளர்களையும் பதற வைக்கிறது இறுதிக்காட்சி. காவலர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை வைத்து, எளியவர்களுக்கு உதவச் சொல்லுகிறது இறுதிக்காட்சி. சிறை விமர்சனம் | Sirai Review ஆயுதப்படைகளின் அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது, அது எளிதில் சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றினாலும், காவல்துறைக்குள் ஏற்பட வேண்டிய சீர்திருத்தமாகவும், எளிய மக்களுக்கான நம்பிக்கை கீற்றாகவும் கவனிக்க வைக்கிறது. பரபரப்பு, எமோஷன் என இரண்டையும் கச்சிதமாகக் கொண்டுவந்து, திரையனுபவமாகவும், சமூக கருத்தாகவும் கவர்ந்து, நம் மனதைச் சிறைபிடிக்கிறது இந்த 'சிறை'. ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்: சாதிய பாகுபாட்டினைப் பேசும் நல்லதொரு எழுத்து; ஆனால், திரைமொழி?!

விகடன் 25 Dec 2025 2:02 pm

கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!

நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, 'மதி' என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவார். அப்படிப்பட்டவர்கள் சந்திர பரிகாரத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நல்ல மனநலமும் வாழ்வில் செழிப்பும் பெறலாம். அப்படிப்பட்ட ஒருதலம்தான் கரூர் அருகில் இருக்கும் சோமூர். கரூர் மாவட்டத்தில், கரூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில்-காவிரிக்கும், அமராவதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது சோமூர். இங்குள்ள சோமேஸ்வரர் ஆலயம் 1,100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். இங்கே அருள்பாலிக்கும் சோமேஸ்வரர், மனம் மற்றும் மூளை தொடர்பான பிணிகள் நீங்கிட வரம் தரும் அருள்கிறார் என்கிறார்கள். சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில் ஒருமுறை குரு அபவாதத்துக்கு ஆளாகி சாபம் பெற்ற சந்திரன் தேவகுருவின் சாபம் பெற்றான். அதனால் அவன் அழகு தேயத் தொடங்கியது. சந்திரன் தன் ஆணவம் நீங்கினான். தன் தவற்றுக்குப் பரிகாரம் தேடினான். தவற்றை உணர்ந்ததால் மனம் இறங்கிய குருபகவான் அப்போது அவன் முன் தோன்றி பூ உலகில் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்று புனித நீராடி, மலர்களால் பகவானை அர்ச்சித்து வழிபட்டால் சாபம் நீங்கும்’’ என்று எடுத்துரைத்தார். சந்திரனும் பூலோகம் வந்து அமராவதி ஆற்றின் கரையில் கோயில் கொண்டிருந்த ஈசனை வழிபட்டான். பூரண பக்தி காரணமாகக் காட்சிகொடுத்த ஈசன் சந்திரனின் சாபம் நீக்கி அருள்புரிந்தார். சந்திரனுக்கு சோமன் என்கிற பெயரும் உண்டு. எனவே சந்திரனின் சாபம் தீர்ந்த தலம் என்பதால் சோமூர் என்று இந்தத் தலத்துக்கும் சந்திரனுக்கு அருள் செய்த ஈசன் என்பதால் சோமேஸ்வரர் என்று ஈசனுக்கும் திருநாமம் உண்டாயிற்று. அன்றுமுதல் இந்த ஈசனை வழிபடுபவர்களுக்கு சந்திர தோஷங்கள் தீர்வது சத்தியமாயிற்று என்கிறது தலபுராணம். இந்த சோமேஸ்வரர் ஆலயம் சோழர் காலத்தில் கட்டப் பட்டது. பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் கருவறை சிறியதாகவும், அதையடுத்து அமைந்துள்ள அர்த்த மண்டபம் பெரியதாகவும் இருக்கும். ஆனால், இங்கே அர்த்தமண்டபம் சிறியதாகவும், கருவறை மண்டபம் பெரியதாகவும் அமைந்துள்ளது. சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்க ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது இந்த ஆலயம். சந்திரன் வழிபட்டு அருள்பெற்றதால் சந்திர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வந்து ஸ்வாமியை மனதார வழிபட்டால், மனநிலை பாதிப்புகள், மூளை தொடர்பான பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மட்டுமன்றி திருமணத் தடை நீங்கவும் குழந்தை வரம் கிடைக்கவும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். சோமேஸ்வரர் அருளால் அவர்களின் வேண்டுதல்கள் விரைவில் பலிக்கின்றன. பரணர் எழுதிய 'பரணர் காட்டிய பாதை’ என்ற கருவூர் புராணத்தில் இக்கோயிலைப் பற்றியும் பாடப்பட்டுள்ளது. முற்காலத்தில் மனோன்மணி அம்பிகைக்குத் தனிச் சந்நிதி இருந்திருக்கவேண்டும். காலப் போக்கில் அது சிதிலமுற்றிருக்கலாம் என்கிறார்கள் பக்தர்கள். கோயிலுக்கு அருகில், மண்ணில் புதைந்திருந்த சப்தமாதர் சிலைகள் சிதிலமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மூல ஸ்தானத்தின் தெற்குப்புறத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலையும் சிதிலமடைந்துள்ளது. தண்டாயுதபாணி மூர்த்தத்தையும் இங்கே தரிசிக்கலாம். திருக்கோயிலுக்கு முன்பு நந்திசிலை-பலிபீடம் உள்ளன. அர்த்தமண்டபத்தில் ஜய-விஜயர்கள் துவார பாலகர்களாகக் காட்சி தருகிறார்கள். இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் `இந்தக் கோயில் மதுரை கொண்ட கோபரகேசரி முதலாம் பராந்தகச் சோழனின் ஆறாவது ஆட்சியாண்டுக்கு முந்தையது’ என்ற தகவலை அறிய முடிகிறது. ஆக, தஞ்சை பெரியகோயில் அமைவதற்கு முன்னதாக... அதாவது சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று புலனாகிறது. சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில் விநாயகர் கோயிலின் தோற்ற அமைப்பும் கட்டட பாணியும் இக்கோயில் பிற்காலச் சோழர்களின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. அற்புதமான இந்தச் சோழர் காலத்துச் சிவாலயத்தை நீங்களும் குடும்பத்துடன் சென்று தரிசித்து வாருங்கள். மனநிறைவும் மகிழ்ச்சியும் பெருகும். சந்திரனுக்கு அருள்பாலித்த சோமேஸ்வரர், உங்களுக்கும் சந்தோஷ வரங்களை வாரி வழங்குவார்.

விகடன் 25 Dec 2025 1:48 pm

சினிமாவில் சாதியரீதியான படங்களும் தேவை –சண்முகபாண்டியன் ஸ்பீச்!

சென்னை :சென்னையில் நடைபெற்ற ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் திரையரங்க வருகை நிகழ்ச்சியில் நடிகர் சண்முகபாண்டியன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கிராமிய பின்னணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் சாதி பாகுபாடு பார்த்து நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த சண்முகபாண்டியன், தனது அனுபவத்தின் அடிப்படையில் அத்தகைய பாகுபாடு […]

டினேசுவடு 25 Dec 2025 1:44 pm

Two Panchayat Secretaries Killed in Road Accident

Charles Martin, leader of the Latchiya Jananayaga Katchi (LJK) and brother-in-law of TVK leader Aadhav Arjuna, on Thursday said he

சென்னைஓன்லைனி 25 Dec 2025 1:44 pm

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி: வன்னியர் வாக்கு வங்கி வியூகம்… அதிமுக, திமுக போடும் 2026 தேர்தல் கணக்கு!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் யார் வெற்றி வாகை சூடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு வன்னியர்களின் வாக்குகள் கணிசமாக இருப்பதால் திராவிட கட்சிகள் வியூகங்கள் வகுத்து வருகின்றன.

சமயம் 25 Dec 2025 1:41 pm

நல்லூர் சிவன் கோவில் மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – நல்லூர், ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தானத்தின் (சிவன் கோவில்) வருடாந்த மஹோற்சவ பெருவிழா,… The post நல்லூர் சிவன் கோவில் மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 1:31 pm

தைவானைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்

தென்கிழக்கு தைவானில் உள்ள கடலோர மாவட்டமான தைடுங்கில் 24ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்களும் அதிர்ந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 11.9 கிலோமீட்டர் (7.39 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தைவான் அதிகாரிகள் தெரிவித்தனர். 2016 ஆம் ஆண்டு தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்தனர், 1999 […]

அதிரடி 25 Dec 2025 1:30 pm

Student Bus Accident in Telangana, Nine Dead in Tamil Nadu

A bus carrying about 60 students overturned after an accident in Telangana’s Rangareddy district, police said. Several students were injured

சென்னைஓன்லைனி 25 Dec 2025 1:28 pm

யாழ். மரியன்னை பேராலயத்தில் எளிமையான முறையில் நத்தார் நள்ளிரவு திருப்பலி! ✨

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி, யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் (St. Mary’s Cathedral) மிகவும்… The post யாழ். மரியன்னை பேராலயத்தில் எளிமையான முறையில் நத்தார் நள்ளிரவு திருப்பலி! ✨ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 1:19 pm

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: காவற்துறையினர் துரத்திய கார் கடைக்குள் புகுந்து விபத்து –மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் காவற்துறையினரின் கட்டளையை மீறி அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று தையல் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில்… The post யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: காவற்துறையினர் துரத்திய கார் கடைக்குள் புகுந்து விபத்து – மூவர் படுகாயம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 1:11 pm

ஜோ ரூட்டை போல ஆடு – ப்ரூக்குக்கு அட்வைஸ் கொடுத்த பாண்டிங்!

டெல்லி : ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் தனது திறமைக்கு தானே குறைவாக மதிப்பிட்டு (selling himself short) ஆடுவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். ப்ரூக்கை நீண்டகாலமாக ரசித்து வரும் பாண்டிங், ஆஸ்திரேலிய மண்ணில் அவர் தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.இங்கிலாந்தின் ஆஷஸ் தொடர் ஆட்டம் போலவே ப்ரூக்கின் தொடக்கமும் இருந்ததாக பாண்டிங் குறிப்பிட்டார். சில தருணங்களில் உயர்தரமான […]

டினேசுவடு 25 Dec 2025 1:02 pm

BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது அரோராவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். துஷாரை நீ லவ் பண்றீயா, அப்புறம் ஏன் துஷார் துஷார்ன்னு பேசிட்டு இருக்க. ஒரே ஒரு கேள்வி தான். இருக்கா? இல்லையா?... இனிமேல் இந்த விஷயத்தை பத்தி வெளிய வந்து பேசிப்போம். இப்போதைக்கு மனசுல இருந்து இதை அழிச்சிரு என்று அரோராவின் நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்

விகடன் 25 Dec 2025 1:00 pm

யாழில் அதிரடி: நத்தார் கொண்டாட்டத்திற்காக சட்டவிரோதமாக பலியாக்க இருந்த 15 மாடுகள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு, சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படவிருந்த கன்றுகள் உட்பட 15 மாடுகளை யாழ்ப்பாண மாநகர… The post யாழில் அதிரடி: நத்தார் கொண்டாட்டத்திற்காக சட்டவிரோதமாக பலியாக்க இருந்த 15 மாடுகள் மீட்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 12:50 pm

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு நள்ளிரவுத் திருப்பலி! ✨

மனிதநேயத்தை உலகிற்கு பறைசாற்றிய இயேசு பிரானின் பிறப்பை சிறப்பிக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா இன்று மன்னார் மண்ணில் மிகுந்த… The post மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு நள்ளிரவுத் திருப்பலி! ✨ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 12:40 pm

CUMTA Proposes Unified Road Design Code

What makes an ideal road? Can one road design code be followed across the entire Chennai metropolitan area? The Chennai

சென்னைஓன்லைனி 25 Dec 2025 12:35 pm

திருகோணமலை சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து; பலர் காயம்

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (25) காலை 7.15 மணியளவில் சேருநுவர, மகிந்தபுர சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற சமயத்தில் பேருந்தில் சுமார் 21 பயணிகள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலை மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 25 Dec 2025 12:30 pm

ஒரே நாளில் 3000 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்! ஈரான், பாக். அரசுகள் நடவடிக்கை!

பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து ஒரே நாளில் 3,000-க்கும் அதிகமான ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான் அரசுகள் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து நேற்று முன்தினம் (டிச. 23) ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட சுமார் 693 குடும்பங்களைச் சேர்ந்த […]

அதிரடி 25 Dec 2025 12:30 pm

யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற கார் விபத்து –மூவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி சென்ற கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் , ஆபத்தான முறையில் காரினை செலுத்தி வந்த நபரை வழிமறித்துள்ளனர். பொலிசாரின் கட்டளையை மீறி காரினை சாரதி தொடர்ந்து செலுத்தி சென்றமையால் , குறித்த காரை பொலிஸார் துரத்தி சென்றனர். அதன் போது கார் கட்டுப்பாட்டை இழந்து நவாலி […]

அதிரடி 25 Dec 2025 12:28 pm

நல்லூர் சிவன் கோவில் மகோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பம்!

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (25) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 03ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். படங்கள் – ஐ. சிவசாந்தன்

அதிரடி 25 Dec 2025 12:23 pm

`உன் சிரிப்பை காணமுடியவில்லை' - ஜாக்குலினுக்கு 'லவ்நெஸ்ட்'அமெரிக்க சொகுசு பங்களா பரிசளித்த சுகேஷ்?

டெல்லி தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.100 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது சிறையில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார். அதோடு சிறைக்கு மாடல் அழகிகள், நடிகைகளை வரவைத்து பரிசுப்பொருள்களை வழங்கினார். பரிசுப்பொருள்களை பெற்றதில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலினுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக கொடுத்துள்ளார். இதனால் ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு குற்றவாளியாக சேர்த்திருக்கிறது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், டெல்லி போலீஸார் ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் பல முறை விசாரணை நடத்தி இருக்கின்றனர். சிறையில் இருந்தாலும் சுகேஷ் அடிக்கடி ஜாக்குலினுக்கு எதாவது பரிசு கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அதோடு சிறையில் இருந்தவாறு ஜாக்குலினுக்கு கடிதமும் எழுதிக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு சொகுசு படகு போன்ற பல பரிசுபொருள்களை ஜாக்குலினுக்கு சுகேஷ் கொடுத்துள்ளார். அதோடு சுகேஷ் பரோலில் வந்திருந்தபோது அவரை தனி விமானத்தில் சென்னை சென்று பார்த்துவிட்டு வந்தார் ஜாக்குலின். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு சிறப்பு பரிசு ஒன்றை சுகேஷ் வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக சுகேஷ் ஜாக்குலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ''கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பேபி. இது எப்போதும் உன்னுடனான விசேஷமான தருணங்கள் மற்றும் அனுபவங்களை மட்டுமே எனக்கு நினைவூட்டும் பண்டிகையாகும். இது எப்போதும் நிஜமாகவே மறக்க முடியாதது. இந்த சிறப்பான நாளில் உனது சிரிப்பை என்னால் காண முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பேபி, இந்த அழகான, புகழ்பெற்ற நாளில், பெவர்லி ஹில்ஸில் உனது புதிய, நமது புதிய வீடான தி லவ் நெஸ்ட் ஐ உனக்கு பரிசளிக்கிறேன். ஆமாம் அன்பே, உனக்காகவும், நமக்காகவும் நான் கட்டிக் கொடுத்த அதே வீடு. பேபி, நான் உனக்காக வீட்டைக் கட்டி முடித்தேன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். இன்று கிறிஸ்துமஸ் தினத்தன்று தருகிறேன். பேபி, நாம் முன்பு திட்டமிட்டதை விட இது பெரியது மற்றும் சிறந்தது. வீட்டிற்கு வெளியில் கோல்ப் மைதானம் ஒன்றும் இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். பெவர்லி ஹில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் ஆடம்பர நகரமாகும். சுகேஷ் இது போன்று கடிதம் எழுதுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று ஜாக்குலின் டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

விகடன் 25 Dec 2025 12:15 pm

யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற கார் விபத்து - மூவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி சென்ற கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் , ஆபத்தான முறையில் காரினை செலுத்தி வந்த நபரை வழிமறித்துள்ளனர். பொலிசாரின் கட்டளையை மீறி காரினை சாரதி தொடர்ந்து செலுத்தி சென்றமையால் , குறித்த காரை பொலிஸார் துரத்தி சென்றனர். அதன் போது கார் கட்டுப்பாட்டை இழந்து நவாலி மூத்தநயினர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடை தொகுதி ஒன்றிற்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானது. அதில் தையல் கடை ஒன்றினுள் நின்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் , அங்கிருந்தவர்களால் அவர்கள் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூவரில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து சம்பவம் தொடர்பில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பதிவு 25 Dec 2025 11:57 am

விரைவில் அ.தி.மு.கவில் இருந்து முக்கிய புள்ளிகள் த.வெ.கவிற்கு வருவார்கள் –செங்கோட்டையன்!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உயர்நிலை குழு ஒருங்கிணைப்பாளரும் அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலு நாச்சியார் நினைவு தினத்தை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தமிழக அரசியலில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று கணித்து பேசினார். அதிமுகவில் அதிருப்தியில் […]

டினேசுவடு 25 Dec 2025 11:54 am

திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து - இமைக்கும் நொடியில் அரங்கேறிய அசம்பாவிதம்!

மரண ஓலங்களால் அதிர்ந்த எழுத்தூர் திருச்சியில் இருந்து 24.12.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து (SETC), திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.30 மணியளவில் ராமநத்தம் அடுத்திருக்கும் எழுத்தூரைக் கடந்து கொண்டிருந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடியது. அதற்கடுத்த விநாடி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையைத் தாண்டி, சென்னை – திருச்சி சாலையில் பாய்ந்தது. விபத்து ஏற்படுத்திய அரசுப்பேருந்து அதே நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு கார்களில் மோதிய பேருந்து, சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது. அப்போது பேருந்தில் இருந்தவர்கள் மரண ஓலத்துடன் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியேற ஆரம்பித்தனர். நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தில், இரண்டு கார்களும் அப்பளமாக நொறுங்கின. விபத்தில் சிக்கியவர்கள் எழுப்பிய மரண ஓலங்களால் எழுத்தூர் பகுதியே அதிர்ந்தது. அதைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பேருந்தில் இருந்தவர்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்ததே தவிர, நொறுங்கிக் கிடந்த காருக்குள் இருந்தவர்களை மீட்க முடியவில்லை. குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழப்பு அதனால் போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கார்களுக்குள் இருந்தவர்களில் ஏழு பேர், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். அதையடுத்து மிக மோசமான காயங்களுடன் உயிருடன் இருந்த 5 பேர் மீட்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் ஒரு முதியவரும், குழந்தையும் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது. மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இரண்டு கார்களில் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். அதில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், மற்ற மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.   விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்த மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதுடன், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். கார்களின் பதிவெண்களை வைத்து உயிரிழந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முன்பக்க டயர் வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அதற்கான காரணம்தான் தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. அரசு, ஓட்டுநர்களின் அலட்சியமே காரணம் ``பேருந்தோ அல்லது காரோ அந்த டயர்களின் அளவுக்கு அனுமதிக்கப்பட்ட வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஆனால் எந்த அரசுப் பேருந்து ஓட்டுநரும் அதுகுறித்துக் கவலைப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக இந்த அரசு விரைவுப் பேருந்துகள் (SETC), இரவு நேரங்களில் ரேஸில் செல்வதைப் போல பறக்கின்றன. மேலும் பேருந்துகளின் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதற்காக புதிய டயர்களைப் போடாமல், மறுசுழற்சி செய்யப்பட்ட டயர்களை (Retreaded Tyres) போடுவதும் இப்படியான விபத்துக்கு காரணம். இப்படியான தொழில்நுட்பக் காரணங்களுடன், அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களின் அலட்சியம்தான் அனைத்தையும் விட முக்கியமான காரணம் என்று குற்றம் சுமத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள். மருத்துவமனயில் அமைச்சர்கள் சி.வெ.கணேசன், சிவசங்கரன் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற அமைச்சர்கள் சிவசங்கரன் மற்றும் சி.வெ.கணேசன், விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டனர். அப்போது விபத்து குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட அவர்கள், மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்த முழு அறிக்கையையும் கேட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரன் கூறியிருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

விகடன் 25 Dec 2025 11:50 am

Chennai Police Deploy 8,000 for Christmas Security

The Greater Chennai City Police have made special security arrangements by deploying 8,000 police officers and personnel to ensure people

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:46 am

ராகுல் காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து

இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்களவை எதிர்க்கட்சி

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:36 am

விபத்தில் 9 பேர் உயிரிழந்ததற்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும் –அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:35 am

பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து

இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:33 am

நெல்லை: பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு 14 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி கடந்த 8-ம் வகுப்பு படித்த போது நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். நெல்லை நீதிமன்றம் அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அச்சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது தாயார், அவரை உள்ளூரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அச்சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மருத்துவமனையில் இருந்து நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் தந்தையே சிறுமியை சீரழித்தது தெரியவந்தது. தந்தை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுமியின் தந்தை மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சிறுமிக்கு குறை மாதத்தில் பச்சிளம் குழந்தை பிறந்தது. மறுநாளே அக்குழந்தை உயிரிழந்தது. நெல்லை நீதிமன்ற வளாகம் இந்த வழக்கில் அறிவியல் பூர்வ ஆதாரத்தை திரட்ட குழந்தையின் உடலில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. கடந்த அக்டோபர் 30-ம் தேதி வெளியான முடிவில் சிறுமியின் கர்பத்திற்கு தந்தைதான் காரணம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. முதலில் குற்றத்தை மறைத்த தந்தை டி.என்.ஏ பரிசோதனை மூலம் சிக்கினார். நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் சிறுமியின் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். நீதிபதி சுரேஷ் குமார் தனது 76 பக்க தீர்ப்பில், “இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு. தந்தை என்பவர் குழந்தைக்குப் பாதுகாப்பாக அரணாக இருக்கக்கூடியவர். இந்த வழக்கில் டி.என்.ஏ பரிசோதனை முடிவு மிக முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. சிறுமி அளித்த வாக்குமூலம் வேதனைக்குரியது. நெல்லை நீதிமன்ற வளாகம் இது போன்ற கொடூர குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு எச்சரிக்கை அளிக்க முடியும். குழந்தை பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தீர்ப்பு அவசியமாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள முதல் தூக்கு தண்டனை தீர்ப்பு இதுதான். அதே நேரத்தில் நீதிபதி சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்புகளில் இது மூன்றாவது தூக்கு தண்டனை தீர்ப்பாகும்.

விகடன் 25 Dec 2025 11:32 am

கனடாவில் இந்திய பெண் படுகொலை; காதலனுக்கு பிடியாணை!

கனடாவின் டொரண்டோ நகரில் வசித்து வந்த ஹிமான்ஷி குரானா என்ற 30 வயதுடைய இந்தியப் பெண், கடந்த சனிக்கிழமை உடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது காதலரான 32 வயதுடைய அப்துல் கபூரி என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கனடா முழுவதும் பிடியாணை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:40 அளவில், ஹிமான்ஷி குரானா காணாமல் போயுள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சனிக்கிழமை காலை 6:30 அளவில் ஸ்ட்ராச்சன் […]

அதிரடி 25 Dec 2025 11:30 am

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் ஜனவரி 18 ஆம் தேதி வரை நடைபெறும்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:29 am

யாழில். நத்தார் கொண்டாட்டத்திற்காக பலியாக்க இருந்த மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் நத்தார் கொண்டாட்டத்திற்காக இறைச்சியாக்கும் நோக்குடன் கொல்களத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகள் யாழ்ப்பாண மாநகர சபையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள கொல்களத்தில் காது பட்டிகள் இன்றியும், பொது சுகாதார பரிசோதகர்களின் அனுமதியின்றியும் இறைச்சியாக்கும் நோக்குடன் மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கொல்களத்தினை முற்றுகையிட்டு , கன்றுகள் மற்றும் மாடுகளை மீட்டனர். அனுமதியின்றி மாடுகளை […]

அதிரடி 25 Dec 2025 11:28 am

விழுப்புரத்தில் அரசு பேருந்து, கார் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாயார் பவுனு அம்மாளுக்கு (வயது 70) உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:28 am

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து

நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:25 am

சென்னையில் பனிமூட்டம் அதிகரிப்பு –மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:24 am

யாழில். நத்தார் ஆராதனை

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இம்முறை நத்தார் கொண்டாட்டங்களை தவிர்த்து , அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு திருச்சபைகள் கேட்டு கொண்டதற்கு இணங்க மிக எளிமையாக ஆராதனைகள் நடைபெற்று, மக்கள் எளிமையாக நத்தாரை கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் மரியன்னை தேவாலய நள்ளிரவு வழிபாட்டில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோரும் பங்கேற்றி இருந்தனர்.

அதிரடி 25 Dec 2025 11:22 am

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி கட்டாயம் –தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:21 am

லக்னோவில் ரூ.230 கோடி செலவில் அமைக்கப்பட்ட தேசிய நினைவிடம், அருங்காட்சியகம் –பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் ஒரு

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:18 am

கர்நாடகா பேருந்து விபத்து : இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!

கர்நாடகா :மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே இன்று (டிசம்பர் 25, 2025) அதிகாலை 3 மணியளவில் பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது மோதியதில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து நிகழ்ந்ததும் அப்பகுதி மக்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை […]

டினேசுவடு 25 Dec 2025 11:11 am

தமிழக சட்டமன்ற தேர்தல்...காங்கிரஸுடன் கூட்டணி முயற்சியில் இறங்கியுள்ளதா தவெக?

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முயற்சியை வைக்க தவெக இறங்கிஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 25 Dec 2025 10:56 am

அசாமில் வன்முறை பதற்றம் : ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கம்.. கிறிஸ்துமஸ் பொருட்களை தீ வைத்ததால் பரபரப்பு!

நல்பாரி மாவட்டத்தில் கடைகளில் இருந்த கிறிஸ்துமஸ் பொருட்களை அடித்து நொறுக்கி, தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 25 Dec 2025 10:53 am

BB Tamil 9 Day 80: “கேமைவிட கேரக்டர் முக்கியம்-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு - நடந்தது என்ன?

வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா. “இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந்தன.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 80 சான்ட்ராவும் அமித்தும் பேசிக் கொண்டிருக்க “பாருவை நம்பாதீங்க.. மாத்தி மாத்தி பேசறா” என்று சூசக குறிப்பு தந்தார் சான்ட்ரா. “அப்ப.. யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. பயமா இருக்கு” என்று அமித் சொல்ல “எனக்கும் அதே பிரச்சினைதான்” என்றார் சான்ட்ரா.  BB Tamil 9 நாள் 80. சான்ட்ராவும் பாருவும் கிச்சன் ஏரியாவில் சர்காஸமான சண்டையை புன்னகைத்துக் கொண்டே போட்டார்கள். “பூரிய ஒழுங்கா சுடுங்க” என்று அமித்தை வினோத் நோண்டப் போக, கடைசியில் ஸாரி கேட்கும் அளவிற்கு பூரி பிரச்சினை பெரிதாகியது.  “இந்தப் பக்கம் நான் வந்தாலே டென்ஷன் ஆகறாரு..” என்று வினோத் புகார் செய்ய “நானா நாக்கை மடிச்சு அடிக்க வந்தேன்?” என்று அமித் மல்லுக்கட்ட, கம்ரூதீன் வந்து சமாதானப்படுத்தினார். வினோத் இன்னமும் புலம்பிக் கொண்டேயிருக்க அந்த திசையை நோக்கி வேகமாக வந்தார் அமித். என்னவோ ஏதோ என்று பார்த்தால் சட்டென்று வினோத்தை கட்டிப்பிடித்து ‘ஸாரி.. நீ என் நண்பன்டா. உன்னைப் பத்தி தப்பா பேசுவனா,?” என்று ‘தேவா - சூர்யா’ வெள்ளைக் கொடியை பறக்க விட்ட அமித்தின் பெருந்தன்மைக்குப் பாராட்டு.  “ஒவ்வொருவருத்தருக்கு ஒரு மேனரிஸம் இருக்குமில்ல. அது மாதிரி நாக்கை மடிக்கறது என் பழக்கம்” என்று வினோத் சொல்ல “அதே மாதிரி அது பார்க்கறவங்களுக்கு ஒரு மாதிரி தெரியறதும் ஒரு பழக்கம்தானே” என்று சரியாக பாயிண்ட் பிடித்தார் பாரு.  BB Tamil 9 ‘சான்ட்ரா அப்பாவி இல்ல. பயங்கரமா கேம் ஆடறாங்க” - அமித் மனைவி அட்வைஸ் பாடல் ஒலிக்க அமித் குடும்பத்தினர் வருகை. “என்ன வளர்ந்துட்ட?” என்று மகளைப் பார்த்து ரசித்தார் அமித். வினோத்தைப் பார்த்த அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி, “ரொம்ப நன்றி. அமித்திற்கு அதிகம் பிரெண்ட்ஸ் கிடையாது. நீங்க நல்ல நண்பனா இருக்கீங்க” என்று உணர்ச்சிவசப்பட “இப்போதான் பயங்கரமா  சண்டை போட்டோம்” என்று உண்மையை உடைத்தார் வினோத்.  Soft sabari, daring divya, Vibrant vikram என்று ஒவ்வொரு போட்டியாளருக்கும் அடைமொழியை சூட்டினார் அமித்தின் மகள் வேதா (வீட்ல ஹோம் ஒர்க் பண்ண வெச்சு கூட்டி வந்திருப்பாங்க போல). பாருவிற்கு playful paaru-வாம். (ஆமாம். பாரு ரொம்பவே பிளேஃபுல்தான்!) BB Tamil 9 தன் கணவரை ஓரங்கட்டி அழைத்துச் சென்ற ஸ்ரீரஞ்சனி, பல உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த காட்சி சுவாரசியமானது.  “வந்த புதுசுல எல்லோர் கூடயும் பேசிட்டு இருந்தே. ஆனா இப்ப சிலர் கூட மட்டும் பேசற. எல்லோர் கூடயும் பழகு. அப்பத்தான் முழுசா ஒரு பார்வை கிடைக்கும். மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ல நீ இங்க வரலை. பாரு சாப்பாட்டை ஃபுல்லா கட்டிட்டு ‘எனக்கு சாப்பாடே இறங்கலை’ன்னு சொல்றா. “தப்பு செஞ்சா அப்படித்தான். சாப்பிடாதன்னு சொன்னே பார்த்தியா’.. அப்படி பேசு”... “இப்ப மைக் நழுவறது எனக்கே தெரியுது. அவங்களுக்குத் தெரியாதா.. நல்லாவே தெரியும். நீ ஏன் போய் ஸாப்ட்டா பேசற.. உன்னைப் பத்தி பின்னாடி பேசாதது வியானா மட்டும்” என்று ஸ்ரீரஞ்சனி சொல்ல “பாரு கூடவா என்னைப் பத்தி பேசறா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் அமித். “கோர்ட் டாஸ்க் பத்தி பேசினாங்க. பாருவிற்கு கேம் முக்கியம். அதுக்காக என்ன வேணா பண்ணுவா. சான்ட்ராவும் சும்மா இல்ல. அவங்க கேம் வேற. ஒரே வாரத்துல திரும்பி வந்துட்டாங்க. பிக் பாஸை கரைச்சுக் குடிச்சி வந்திருக்காங்க. சேச்சி வேற லெவல்.. பார்வதியையே கையாளத் தெரிஞ்சவ”  என்று படபடவென பொரிந்து தள்ளினார் ஸ்ரீரஞ்சனி. BB Tamil 9 ‘சீட்டிங் பார்வதி’ - அமித் மகளால் பட்டம் பெற்ற பாரு “பாரு எவ்விடம் அமித் அவ்விடம்ன்னு கனி சொல்றாங்க” என்று அமித் சந்தேகம் கேட்க, “நீ பண்றது அப்படித்தான் இருக்கு. பாரு கூடத்தான் உக்காந்து பேசிட்டிருக்க. அரோரா பயங்கர ஷார்ப். பாயிண்ட் பாயிண்ட்டா பேசுது. ‘என் ஃபேமிலி என்ன நெனப்பாங்க’-ன்றதையல்லாம் தூக்கிப் போட்டுட்டு கேம்ல ஃபோகஸ் பண்ணு” என்று உபதேசித்தார் ஸ்ரீரஞ்சனி. உள்ளே குழந்தையோடு போட்டியாளர்கள் விளையாட, அங்கும் தன் கோளாறை பாரு காட்ட ‘சீட்டிங் பாரு’ என்று அமித்தின் மகள் கிண்டலடிக்க, அந்தப் பட்டப் பெயரையே மற்றவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லி மகிழ்ந்ததில் பாரு காண்டானார். (இந்த அவமானம் உனக்குத் தேவையா?!) உள்ளே வந்த ஸ்ரீரஞ்சனி, ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றிய சுருக்கமான ரிப்போர்ட்டை தந்தார். சபரி ஜென்டில்மேனாம். சுபிக்ஷா தன் சமூகத்தைப் பற்றி பேசற விஷயம் நல்லா இருக்காம். விக்ரம் கேமை நல்லா ஆடறாராம். அரோரா பாயிண்ட்டா பேசறாங்களாம். திவ்யா ஆண் - பெண் சமத்துவ விஷயத்தை சரியா ஹாண்டில் பண்றாங்களாம். கனி ரொம்ப கனிவா இருக்காங்களாம். கம்மு கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்காம். நல்ல நட்பிற்கு அடையாளம் வினோத்தாம். சான்ட்ரா பொறுப்பா ஆடணுமாம். எந்தவொரு வெளியாள் வந்தாலும் தன்னைப் பற்றி வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை அறிய பாருவிற்கு ஆவல் பீறிட்டுக் கொண்டு வரும். இந்த முறையும் அதே போல் ஆவலாக காத்திருக்க “கேமிற்காக நீ எது வேணா பண்ற.. ஓகே… ஆனா அதையும் மீறி உன்னோட அடையாளமும் முக்கியம்” என்கிற மாதிரி ஸ்ரீரஞ்சனி சொல்ல பாருவின் மண்டைக்குள் நண்டு பிறாண்டத் துவங்கி விட்டது. இதைப் பற்றியே ஒவ்வொருவரிடமும் பிறகு விசாரித்து புலம்பிக் கொண்டிருந்தார்.  BB Tamil 9 “கேமை விட கேரக்டர் முக்கியம்’ - ஸ்ரீரஞ்சனி அட்வைஸால் அவஸ்தைப்பட்ட பாரு அமித்தின் குடும்பம் சென்ற பிறகு அவரிடம் வாயைப் பிடுங்குவதற்காக வந்து அமர்ந்தார் பாரு. “என்னைப் பத்தி ஸ்ரீரஞ்சனி ஒண்ணு சொன்னாங்க.. என் கேரக்டரும் முக்கியம்ன்னு. அது பத்தி ஏதாவது சொன்னாங்களா?” என்று போட்டு வாங்க முயல “அது பத்தி பேசல. என் கேம் பத்திதான் பேசினாங்க” என்று எஸ்கேப் ஆனார் அமித்.  அடுத்ததாக திவ்யாவின் குடும்பம் வந்தது. மற்றவர்களைப் போல உணர்ச்சிவசப்பட்டு அழுது தீர்க்காமல் மிக இயல்பாக அவர்களை வரவேற்று, பதட்டப்படாமல் டாஸ்க் முடித்து வந்து சந்தித்தார் திவ்யா. சைடு கேப்பில் லாரி ஓட்ட நினைத்த கம்மு “ஸாரி.. திவ்யாவைப் பத்தி தப்பா பேசியிருக்கேன்” என்று சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து எஸ்கேப் ஆக முயல “இருங்க ப்ரோ..அடுத்த ரவுண்டு வருவோம்” என்று ஜெர்க் தந்தார், திவ்யாவின் சகோ.  “நல்லா விளையாடற.. அப்படியே மெயின்டெயின் பண்ணு. மத்தவங்க டிரிக்கர் பண்ணத்தான் செய்வாங்க. அதுதான் கேம். தனியாவே இரு. வில்லங்கமான ஆட்கள் கூட சேராத” என்று திவ்யாவின் குடும்பம் உபதேசம் செய்ய “யார் அந்த வில்லங்கம்?” என்று திவ்யா சந்தேகமாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது.  திவ்யாவின் குடும்பம் உள்ளே வந்தது. திவ்யாவின் தந்தை நல்ல தமிழில் பேசி பாருவை அடிக்கடி வாரிக் கொண்டிருந்தார். “நம்ம ஊரு பக்கம்ல” என்று பாரு ஊர்ப்பாசத்தை காட்டினாலும் அவர் விடவில்லை. மறைமுக ஊமைக்குத்துக்கள் விழுந்தன. “மத்தவங்களை ஏத்தி விட்டுட்டு பின்னாடி நின்னு வேடிக்கை பார்க்கறது. பத்த வெச்சிட்டு தூரமா நின்று புகையுதான்னு பார்க்கறது” என்று திவ்யாவின் பெற்றோர் பாருவை சரமாரியாக கலாய்த்தார்கள். திகைப்பை மறைத்துக் கொண்டு சிரித்து சமாளித்தார் பாரு.  BB Tamil 9 திவ்யாவை மிக அவமதிப்பாக பேசியிருந்தாலும் கம்ருதீனை அவர்கள் அதிகம் கண்டிக்கவில்லை. “எங்க பொண்ணுன்னு மட்டுமில்ல. பொதுவாவே பெண்களை அவமரியாதையா பேசாதீங்க” என்று திவ்யாவின் தந்தை அறிவுறுத்த பணிவுடன் கேட்டுக் கொண்டார் கம்மு.  ‘சான்ட்ராவிடம் ஜாக்கிரதையா இரு’ - திவ்யா அம்மா அட்வைஸ் அவர்கள் சென்றதும் “எங்கப்பா துறுதுறுன்னு பேசுவார். எனக்கே ஜெர்க் ஆச்சு. அவர் ஏதாவது தப்பா பேசியிருந்தா ஸாரி” என்று பாருவிடம் மன்னிப்பு கேட்டார் திவ்யா. “எனக்கும் லைட்டா ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு.. ஆனா ஃபேமிலி..” என்று சமாளித்தார் பாரு. “அதெல்லாம் ஒண்ணும் தப்பா பேசல. கள்ளங்கபடம் இல்லாத மனுசன்” என்றார் வினோத்.  ‘கேமிற்காக என்ன வேணா பண்ணாலும் கேரக்டர் முக்கியம்’ என்று ஸ்ரீரஞ்சனி சொல்லிச் சென்றது, பாருவின் மண்டைக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது போல. அதைப் பற்றி சுபிக்ஷாவிடம் விசாரிக்க “முன்ன விட இப்ப மாறியிருக்கே” என்று அவர் சான்றிதழ் தந்தார். சுபிக்ஷாவும் இனிமே தனியாகத்தான் ஆடப் போகிறாராம். கப்பு முக்கியமாம்.  ‘வாள மீனக்கும் வெலாங்கு மீனுக்கும்’ பாட்டை வினோத் பாட, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்தார். பிரஜினின் உபதேசத்திற்குப் பின்னால் சான்ட்ராவிடம் மாற்றம் தெரிறது. மற்றவர்களுடன் பழகத் துவங்கியிருக்கிறார். இதை முன்பே செய்திருக்கலாம். முன்னது நடிப்பா அல்லது பின்னதா என்று தெரியவில்லை. BB Tamil 9 “ஒருத்தர் கிட்ட ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி மம்மி சொன்னாங்க” என்று அரோவிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் திவ்யா. “யாரது?” என்று அரோ ஆவலாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது. “இங்க எல்லோர்கிட்டயும்தான் ஜாக்கிரதையா இருக்கணும்.. இது ஒரு போட்டி” என்று தத்துவம் உதிர்த்தார் அரோ.  விருந்தினர்களின் உபதேசங்களும் ஏற்றி விடுதல்களும் போட்டியாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

விகடன் 25 Dec 2025 10:51 am

சவூதி தீவில் சொகுசு வில்லாக்களை வாங்கிய ரொனால்டோ - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கிய ரொனால்டோ, ரியல் மேட்ரிட் போன்ற அணிகளில் விளையாடி தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் நடைபெற்ற சவூதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கிக் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. மிகவும் கடினமான இந்த கிக்கை, 40 வயதில் சுலபமாக செய்து கால்பந்தின் ஜாம்பவான் என்பதை ரொனால்டோ நிரூபித்திருந்தார். இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள தீவு ஒன்றில் ரொனால்டோவும், அவரின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் இணைந்து இரண்டு வில்லாக்களை வாங்கியிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சவூதி அரேபியாவின் கடற்கரையிலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, நுஜுமா என்ற தீவு. ரொனால்டோ- ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இந்த தீவில் தான் இரண்டு சொகுசு வில்லாக்களை வாக்கியிருக்கின்றனர். சுற்றி கடல் நீர், பிரகாசமான பவளப் பாறைகள் மற்றும் பரந்து விரிந்த வெண்மையான மணல்கள் இந்தத் தீவின் முக்கிய அடையாளங்களாக உள்ளன. இந்த நுஜுமா தீவில் மொத்தம் 19 வில்லாக்கள் உள்ளன. கடற்கரை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகள் முதல் உள்ளூர் கைவினைப் பொருள்களை வரை எல்லாம் இந்த தீவில் இருக்கின்றன.

விகடன் 25 Dec 2025 10:49 am

யாழில். நத்தார் ஆராதனை

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இம்முறை நத்தார் கொண்டாட்டங்களை தவிர்த்து , அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு திருச்சபைகள் கேட்டு கொண்டதற்கு இணங்க மிக எளிமையாக ஆராதனைகள் நடைபெற்று, மக்கள் எளிமையாக நத்தாரை கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் மரியன்னை தேவாலய நள்ளிரவு வழிபாட்டில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோரும் பங்கேற்றி இருந்தனர்.

பதிவு 25 Dec 2025 10:49 am

ரூ.200 கோடியை விட்டுவிட்டு ரூ.2 லட்சம் கோடி சம்பாதிக்க வருகிறார்- விஜயை சீண்டும் கருணாஸ்!

திருவள்ளூர் : மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேசினார். அங்கு அவர் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். விஜய் சினிமாவில் ரூ.200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து ரூ.2 லட்சம் கோடி சம்பாதிக்க வருவதாக சாடினார். இது விஜய்யின் அரசியல் நுழைவுக்கு எதிரான மறைமுக விமர்சனமாக பார்க்கப்படுகிறது. விஜய் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்தார். மேலும் கருணாஸ், “மக்களுக்கு ஒரு […]

டினேசுவடு 25 Dec 2025 10:33 am

யாழில். நத்தார் கொண்டாட்டத்திற்காக பலியாக்க இருந்த மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் நத்தார் கொண்டாட்டத்திற்காக இறைச்சியாக்கும் நோக்குடன் கொல்களத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகள் யாழ்ப்பாண மாநகர சபையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள கொல்களத்தில் காது பட்டிகள் இன்றியும், பொது சுகாதார பரிசோதகர்களின் அனுமதியின்றியும் இறைச்சியாக்கும் நோக்குடன் மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கொல்களத்தினை முற்றுகையிட்டு , கன்றுகள் மற்றும் மாடுகளை மீட்டனர். அனுமதியின்றி மாடுகளை இறைச்சியாக்க முற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபையினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு 25 Dec 2025 10:30 am

பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை… டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் பங்கேற்பு!

டெல்லியில் உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றது கவனம் பெற்றிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சமயம் 25 Dec 2025 10:20 am

செம்மொழி பூங்கா செல்ல இனி கியூவில் நிற்க வேண்டாம்...வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்யலாம்!

செம்மொழி பூங்கா செல்ல இனி கியூவில் நிற்க வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

சமயம் 25 Dec 2025 10:16 am

மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்…பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு!

டெல்லி :உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25, 2025) கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, பிரார்த்தனைகளில் ஈடுபட்டு, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “அனைவருக்கும் அமைதி, கருணை மற்றும் […]

டினேசுவடு 25 Dec 2025 10:10 am

கிறிஸ்துமஸ் அன்றும் அதிர்ச்சி…அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 25, 2025) மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.12,820-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.1,02,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாறு காணாத உச்ச விலையாகும்.கடந்த 15-ஆம் தேதி தங்கம் விலை முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை தொடும் என […]

டினேசுவடு 25 Dec 2025 9:58 am

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்…அந்தர் பல்டி அடித்த நபர்!

கானா :கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்ற நபர் தன்னைத் தானே தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, 2025 டிசம்பர் 25-ஆம் தேதி (கிறிஸ்துமஸ் தினம்) முதல் கடும் மழை மற்றும் ராட்சத வெள்ளத்தால் உலகம் அழிந்துவிடும் என்று கணித்து அறிவித்தார். இந்த அறிவிப்பு டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று, உலகளவில் பெரும் பரபரப்பையும் கேலியையும் ஏற்படுத்தியது. எபோ நோவா கூறியதாவது, கடவுள் தனக்கு தோன்றி […]

டினேசுவடு 25 Dec 2025 9:44 am

ஜேவிபி தலைமையகத்தில் சீனாவின் உயர்மட்டக் குழு- டில்வினுடன் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் நேற்று ஜே.வி.பி பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட ஜேவிபி தலைவர்களைச் சந்தித்துள்ளனர். பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீனத் தரப்பில் இந்தச் சந்திப்பில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சிப் பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான வாங் ஜூன்ஷெங், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கீ

புதினப்பலகை 25 Dec 2025 9:35 am

விவாகரத்து கேட்ட மனைவியை சாலையில் சுட்டுக்கொன்ற கணவன்! அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் கர்நாடகாவில் விவாகரத்து கேட்ட மனைவியை, சாலையில் வைத்து கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த 39 வயதான புவனேஷ்வரி என்பவர் பெங்களுருவில் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பாலமுருகன் (சேலம் மாவட்டம்) ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். புவனேஷ்வரி கணவர் பாலமுருகனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாலமுருகன் வேலை முடிந்து வீடு திரும்பிய மனைவி […]

அதிரடி 25 Dec 2025 9:30 am

கடும் பாதுகாப்புடன் காலி கோட்டையை ஆய்வு செய்த சீனக் குழுவினர்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng) காலி கோட்டையில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். வாங் ஜூன்ஷெங் தலைமையிலான சீனக் குழுவினர், நேற்றுக்காலை காலி கோட்டைக்குச் சென்று கோட்டைச் சுவர்களை ஆய்வு செய்தனர். பிரதி அமைச்சர் நளின் ஹேவகே மற்றும் பலர் இந்த பயணத்தின் போது

புதினப்பலகை 25 Dec 2025 8:47 am

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சமயம் 25 Dec 2025 8:37 am

துருக்கியில் விமான விபத்து! லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலி!

துருக்கியில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் விபத்தில் சிக்கியதில், லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். துருக்கி அரசுடன் உயர்மட்ட பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள லிபியா ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது அலி அஹமது அல்- ஹதாத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், தலைநகர் அங்காராவுக்குச் சென்றிருந்தனர். துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தவுடன், லிபியா அதிகாரிகள் அனைவரும் தனியார் விமானம் மூலம் அங்காராவில் இருந்து […]

அதிரடி 25 Dec 2025 8:30 am

யாழில் இரவில் நடந்த பயங்கரம் ; யாழில் பொலிஸார் துரத்தி சென்ற கார் கோர விபத்து

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 8.15 மணியளவில் நவாலி, மூத்த நயினார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினைத் துரத்தி வந்த நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், வீதியோரத்தில் இருந்த தையல் கடை மற்றும் மற்றுமொரு கடைக்குள் புகுந்து மோதியுள்ளது. விபத்து நடந்த […]

அதிரடி 25 Dec 2025 7:55 am

26 ஆண்டுகளின் பின் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட 15 பேர் கொண்ட ஆசிய ரக்பி தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக ஆசிய ரக்பி சம்மேளனம் நேற்று (24) மாலை அறிவித்துள்ளது. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆசிய இளையோர் ரக்பி தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு மீண்டும் கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்கை இத்தொடரை நடத்தியிருந்தது. அன்று ஜீவன் குணதிலக்கவின் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி, மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. […]

அதிரடி 25 Dec 2025 7:53 am

பதுளை மாவட்டத்தில் 68% நிலப்பகுதி மண்சரிவு ஏற்படும் அபாயத்தில்

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி ஏதோ ஒரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை நிலவிய காலப்பகுதியில், பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார். இந்த மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை சுமார் 650 வீடுகள் அதி உயர் அபாய நிலைக்குள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி 25 Dec 2025 7:52 am

சென்னையில் இரண்டு மண்டலங்களில் குப்பை தனியார்மயமாக்கல் ரத்து-டெண்டர் விட மாநகராட்சி மீண்டும் முடிவு!

சென்னையில் குப்பை தனியார்மயமாக்கும் பணிகள் ரத்து செய்ப்பட்டதால் இந்த இரண்டு மண்டலங்களில் மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 25 Dec 2025 7:47 am

‘விஜய் ஹசாரேவில்’.. 9 ஓவர்களை ஒயிட்களாக வீசிய அணிகள்: இறுதியில் 413 ரன்னை சேஸ் செய்து அசத்தல்!

விஜய் ஹசாரே டிராபி தொடரில், 413 ரன்களையும் சேஸ் செய்து ஒரு அணி வெற்றியைப் பெற்று, வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த அணி இருக்கும் பார்மை பார்த்தால், கோப்பை இவர்களுக்குதான் என பலரும் கூறி வருகிறார்கள்.

சமயம் 25 Dec 2025 7:30 am

ஊட்டி தலக்குந்தா பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை...பனியை காண படையெடுக்கும் மக்கள்!

ஊட்டி தலக்குந்தா பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கிருக்கும் உறை பனியை காண படையெடுக்கும் மக்களால் வனத்துறை இந்த முடிவை எடுத்து உள்ளது .

சமயம் 25 Dec 2025 7:18 am

வனத்துறை சார்பில் நாகம் செயலி விரைவில் அறிமுகம்...பாம்புகள் தொடர்பாக புகார் அளிக்கலாம்!

வனத்துறை சார்பில் நாகம் செயலி விரைவில் அறிமுகம்...பாம்புகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பயிற்சிஅளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 25 Dec 2025 7:01 am

ஹாதியை கொன்றது யூனுஸ் அரசு! சகோதரர் குற்றச்சாட்டால் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்!!

வங்கதேச தேர்தலை சீர்குலைக்க இடைக்கால பிரதமர் யூனுஸ் தலைமை மாணவர் தலைவர் ஹாதியை கொடூரமாகக் கொன்றதாக அவரது சகோரதர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சுடப்பட்டு, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18 ஆம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், வங்கதேசத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. அவரைத் தொடர்ந்து அந்தப் […]

அதிரடி 25 Dec 2025 6:57 am

மதுரை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு வழிபாடு | Photo Album

மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Vijay full speech: 'அரசன் வருவான் நாட்டைக் காப்பாற்றுவான்!'| Christmas சமத்துவ கிறிஸ்துமஸ் விழா TVK

விகடன் 25 Dec 2025 6:55 am

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக் 10 சதவீதம் குறைவு!

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது .

சமயம் 25 Dec 2025 6:12 am

வேளச்சேரியில் மினி பஸ் சேவையை இயக்க பயணிகள் கோரிக்கை!

வேளச்சேரியில் மினி பஸ் சேவையை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர் . இது தொடர்பாக பரிசீலனை செய்ய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

சமயம் 25 Dec 2025 5:32 am

கார்ட்டூன்: காந்திய சி(நி)ந்தனை..!

கார்ட்டூன்

விகடன் 25 Dec 2025 5:31 am

இங்கிலாந்தில் சக மாணவிகள் நால்வரை பாலியல் வன்கொடுமை; மாணவருக்கு 25 ஆண்டுகள் சிறை

இங்கிலாந்தின் பிரைட்டன் (Brighton) பகுதியில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) பயின்று வந்த 26 வயது மாணவர் அலெக்ஸ் படேல்-வில்ஸ் (Alex Patel-Wills), தனது சக மாணவிகள் நால்வரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தால் (Lewes Crown Court) 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில், பல்கலைக்கழக வளாகம், லண்டன் மற்றும் பிரைட்டன் நகரங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இவர் இந்த கொடூரமான […]

அதிரடி 25 Dec 2025 3:30 am

87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர் ; சர்ச்சையை கிளப்பிய அறிவிப்பு

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கும் 37 வயதான சூ மெங் என்ற பெண்ணுக்கும் தற்போது குழந்தை பிறந்துள்ளது. சர்ச்சையை கிளப்பிய அறிவிப்பு தற்போது பிறந்துள்ள குழந்தையை அவர் தனது ஒரே மகன் என்றும் அறிவித்துள்ளார் இதுவே பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த குழந்தை பிறந்துள்ளதையடுத்து பேன் செங், […]

அதிரடி 25 Dec 2025 1:30 am

தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்

லக்ஸ்மன் ‘டிட்வா’ சூறாவளி மிகப் பெரிய அனர்த்தமொன்றை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்த வரலாறு மற்றொரு ஆறா ரணத்தை உருவாக்கியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் இதனை யாரும் மறக்கமாட்டார்கள். சூறாவளி என்றால் 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியை எமக்கு முந்திய சந்த்கள் ஞாபகப்படுத்துவதுண்டு. ஆனால், ஒரு சூறாவளி எப்படியிருக்கும், அதன் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போதைய சந்ததியும் ‘டிட்வா’ மூலமாக உணர்ந்திருக்கிறது. ஆழிப்பேரலையான சுனாமியினுடைய தாக்கம் இலங்கையின் கரையோரங்களை இலக்கு வைத்தது. ‘டிட்வா’ சூறாவளியானது மத்திய பகுதியை […]

அதிரடி 25 Dec 2025 12:30 am

கனடாவில் செல்போன் கோபுரத்தை சேதப்படுத்திய நபர்கள்

கனடாவின் அல்பெர்டா மாகாணம், டேஸ்லாந்து நகருக்கு அருகே அமைந்துள்ள டெலஸ் (Telus) செல்போன் கோபுரம் வார இறுதியில் கடுமையாக சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரேஞ்ச் ரோடு 161 பகுதியில் உள்ள டெலஸ் கோபுரம் அருகே சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. டிசம்பர் 21 அன்று டேஸ்லாந்தில் உள்ள எங்கள் செல்போன் கோபுரம் கடுமையாக சேதப்படுத்தப்பட்டு இடிந்து விழுந்தது என டெலஸ் நிறுவனத்தின் பிரதிநிதி மார்டின் நுயென் தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் உள்ள சில […]

அதிரடி 25 Dec 2025 12:30 am

பசிபிக் பெருங்டல் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்

கிழக்கு பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்தியது. இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தத் தாக்குதல் தொடா்பான விடியோ காட்சியும் இடம் பெற்றுள்ளது. இத்துடன், கடந்த செப்டம்பா் முதல் 29 படகுகள் மீது அமெரிக்கா இதே போன்று நடத்திய தாக்குதல்களில் 105 போ் கொல்லப்பட்டுள்ளனா். இது சட்டவிரோத படுகொலை என்று குற்றஞ்சாட்ப்படுகிறது.

அதிரடி 24 Dec 2025 11:30 pm

கந்தர படகில் இருந்த 200 கோடி ரூபா போதைப்பொருள்

டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 200 கோடி ரூபா எனப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். கடந்த 9 ஆம் திகதி கந்தர பிரதேசத்திலிருந்து 5 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற குறித்த மீன்பிடிப் படகு, போதைப்பொருளைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த போதே நேற்று (23) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இன்று […]

அதிரடி 24 Dec 2025 11:30 pm

தனியார் பஸ் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து; பலர் காயம்

மாத்தறை – ஹக்மனை வீதியில் கொன்கல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (24) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தினையடுத்து பஸ் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் மேலதிக […]

அதிரடி 24 Dec 2025 10:30 pm

வவுனியாவில் கஞ்சா செடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மடுகந்த பகுதியில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரகீத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே கஞ்சா செடி வளர்த்தமை கண்டு பிடிக்கப்பட்டது. இதில் மடுகந்த பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் […]

அதிரடி 24 Dec 2025 10:30 pm

சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை; வெளியேறினால் 3,000 டொலர்

அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி வசிக்கும் குடியேறிகள் இவ்வருட இறுதிக்குள் நாட்டை விட்டுத் தாமாகவே வெளியேறினால், அவர்களுக்கு 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஏற்கனவே 1,000 டொலராக இருந்த இந்தத் தொகை, தற்போது கிறிஸ்துமஸ் கால விசேட சலுகையாக 3,000 டொலராக மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவார்கள் CBP Home’ (முன்னர் CBP One) எனும் செயலி மூலம் இதற்காகப் பதிவு செய்ய […]

அதிரடி 24 Dec 2025 10:30 pm

வவுனியாவில் கொட்டும் மழையிலும் களைகட்டும் நத்தார் வியாபாரம்!

வவுனியாவில் கொட்டும் மழையிலும் நத்தார் பண்டிகை வியாபாரம் களை கட்டியுள்ளது. உலகம் பூராவும் இயேசுவின் பிறந்தநாளை கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள், கிறிஸ்மஸ் மரங்களையும் மக்கள் வேண்டிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதிரடி 24 Dec 2025 10:24 pm

கார்களே இல்லாத தீவு எது தெரியுமா? மோட்டார் வாகனங்களே இல்லாமல் போக என்ன காரணம்? சுவாரஸ்ய தகவல்!

வெறும் 3.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மெகினாக் தீவில் சுமார் 600 பேர் மட்டுமே நிரந்தரமாக வசிக்கின்றனர். ஆனால், மனிதர்களுக்கு இணையாகவே குதிரைகளும் இங்கே முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

சமயம் 24 Dec 2025 9:40 pm

உலக சந்தையில் தங்கத்தின் விலை எகிறிய தங்கம் விலை; வரலாறு காணாதளவு உயர்வு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்றையதினம்(24) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு அவுன்ஸ் 4,500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெனிசுலாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் இந்த அதிரடி விலையேற்றத்திற்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு சிறந்த சேமிப்பு உலகளாவிய ரீதியில் நிலவும் இத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழலால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் […]

அதிரடி 24 Dec 2025 9:30 pm

2027-இல் தைவானை ஆக்கிரமிக்க சீனா திட்டம்

வரும் 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் தைவானை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தனது படைத் திறனை சீனா மேம்படுத்திவருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2027 இறுதிக்குள் தைவான் மீது போா் தொடுத்து, அந்தத் தீவைக் கைப்பற்றும் திறன் கொண்ட ராணுவத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுவருகிறது. இதற்காக ஈவிரக்கமற்ற அதிரடி தாக்குதல் (ப்ரூட் ஃபோா்ஸ்) முறையில் தைவானை ஆக்கிரமிக்கும் போா் உத்திகளை சீனா செம்மைப்படுத்தி வருகிறது. இதற்காக, மூன்று […]

அதிரடி 24 Dec 2025 9:30 pm

தையிட்டி:சிங்களவர்களிற்கு உண்மை தெரியவேண்டும்!

தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தற்போது அமைந்துள்ள காணியானது காங்கேசன்துறையிலுள்ள பொதுமக்களின் காணிகள் என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை தென்னிலங்கையில் தோற்றுவித்துள்ளது. அந்த உண்மையினை நாட்டிலுள்ள பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “போர் காhலத்தில் சிவில் மக்களுக்கு சொந்தமான நிலங்களை கைப்பற்றி, அனுமதியின்றி கட்டப்பட்ட இடமே திஸ்ஸ விகாரை எனப்படும் போலி திஸ்ஸ விகாரையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான விடயங்களை ஆராய்ந்து நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனவே, அந்த விடயத்தில் யாரும் கலவரமடைய வேண்டாம். தமிழ் மக்கள் இதுவரை அமைதியாகவே நான் பார்த்திருக்கிறேன். எனவே, அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் அவமதிப்பாகவே நான் பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்; இதனிடையே திஸ்ஸ விகாரைக்கெதிரான போராட்டத்தில் தாக்கப்பட்ட தவத்திரு வேலன்சுவாமிகளை மதத்தலைவர்கள் பலரும் வைத்தியசாலையில் பார்வையிட்டு வருகின்றனர். .

பதிவு 24 Dec 2025 9:24 pm

பருத்தித்துறையில் இந்திய மீனவர் உடலம்?

பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. எனினும் உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே கரை ஒதுங்கிய உடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ஒருவரது உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அதேவேளை தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் (23) அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் 23-ம் திகதி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு ஃ மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்டுவதற்கு, மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் (இலங்கை அரசின் வசம் காவலில் உள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதிவு 24 Dec 2025 9:22 pm

சற்று முன்: திட்டக்குடியில் பயங்கரம்.. சாலை விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!

திட்டக்குடியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து எதிரே வந்த கார்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் கார்களில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சமயம் 24 Dec 2025 9:00 pm

`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!' - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனையோ, ஓ.பி.எஸ்-ஸையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா என்பதை அவர் கொடுத்துள்ள பேட்டியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்தக் கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ் கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டுடைய அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால், நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. எத்தனை முனை போட்டிகள் நடந்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. சாக்குப் போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இரு முனைப் போட்டி என்பதை முன்வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து, முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை, தி.மு.க தலைவரை முதலமைச்சராக ஆக்குவதற்கு தான் அவர் தேர்தல் களத்தில் மும்முரமாக பணிபுரிகிறார். ragupathi எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஐயாயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கை. எங்களின் கொள்கை அல்ல. திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்கா இருக்கிறது. தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா தான். அதற்கு வழிபாடு செய்ய அனுமதி கொடுப்பது தவறில்லை. திருப்பரங்குன்றம் பிரச்னையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக, எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-ஸோடு சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். அவர்களுக்கு எது சரி எது தவறு என்பது தெரியும். இ ஃபைலிங் முறை என்பது விரைந்து அந்த பணியை செய்வதற்காகவும், இருந்த இடத்திலிருந்து வழக்கை ஃபைல் செய்ய முடியும் என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. தற்போது, அனைத்து இடத்திலேயுமே ஆன்லைன் இ-ஃபைலிங் தான் இருக்கிறது. நீதிமன்ற விசாரணை கூட காணொளி காட்சி மூலமாக நடக்கிறது. இ ஃபைலிங் முறையில் தாமதம் ஏதும் இருப்பது தெரிய வந்தால் அது கண்டறியப்பட்டு அந்த தாமதத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை அரசு செய்யும். இ ஃபைலிங் முறையை நீதிமன்றம் வழக்கறிகளுக்காக கொண்டுவந்துள்ளது. நீதிமன்றம் இ ஃபைலிங் முறையை கொண்டு வந்துள்ளதால் அதில் அரசு கருத்து சொல்ல இயலாது. செவிலியர் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களால் எந்த நெருக்கடியும் வராது. எல்லா நெருக்கடியும் சுலபமாக தீர்க்கப்படும். நிச்சயமாக அனைவரின் ஆதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பார்ட் -2 தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் தொடரும். அ.தி.மு.க-வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது. அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. பழுத்த மரம் தான் கல்லடிப்படும். அதனால்தான், அனைவரும் தி.மு.க-வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க-வை சொல்லித்தான் வர முடியும் பேச முடியும். தி.மு.க எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான், தி.மு.க-வை சொல்லி வருகின்றனர். ragupathi இதிலிருந்தே தி.மு.க என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம். நயினார் நாகேந்திரனுக்கு நாடக கம்பெனி எல்லாம் பழைய காலத்தில்தான் இருந்தது. தற்போது, வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் போட்டால் யாரும் போய் பார்ப்பதில்லை. அதனால், அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார். தலைவர் பதவி கிடைத்தவுடன் தூக்கத்தில் இருந்து விழித்தவர், தான் பார்த்த வள்ளி திருமண நாடகங்களையும் மற்ற நாடகங்களையும் நினைத்துக் கொண்டு விடிய விடிய நடக்கும் என்று நினைத்து சொல்லி வருகிறார். நிச்சயமாக இது நாடக கம்பெனி அல்ல. நல்ல அறிக்கைகளையும், நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தருகின்ற தேர்தல் அறிக்கைக் குழுதான், தி.மு.க தேர்தல் அறிக்கை குழு என்றார்.

விகடன் 24 Dec 2025 8:59 pm