தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வேண்டாம் என இளம் வீரர் ஓபனாக பிசிசிஐயிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. காரணம், தனக்கு பிடித்த வீரர்களுக்கு மட்டுமே கம்பீர் முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளாராம்.
கீழே விழுந்த விஜய்… யார் அந்த ப்ளூ சட்டை? சென்னை விமான நிலைய கூட்ட நெரிசலில் அதிர்ச்சி!
மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய தவெக தலைவர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார்.
பெரு நாட்டில் பாரிய நிலநடுக்கம்
பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
ஆங்கிலப் புத்தாண்டு 2026 தினத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? சென்னை வானிலை ஆய்வு மையம்!
புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், ஒருபுறம் பனி வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் மழைக்கான வாய்ப்புகள் ஏதும் உள்ளதா? என்பதை பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
Doctor Vikatan: ஜெல் டூத்பேஸ்ட் ஆரோக்கியமானதா: இனிப்பான டூத்பேஸ்ட் சர்க்கரையை அதிகரிக்குமா?
Doctor Vikatan: டூத் பேஸ்ட்டில் ஜெல் வடிவ டியூப்கள் நிறைய வருகின்றன. கண்களைப் பறிக்கும் நிறத்தில் அவற்றைப் பார்த்ததுமே உபயோகிக்கத் தோன்றுகிறது. வழக்கமான வெள்ளை நிற பேஸ்ட் அல்லது கலர்கலரான ஜெல்... இரண்டில் பற்களுக்கு ஆரோக்கியமானது எது... சில டூத் பேஸ்ட், ஜெல்களில் இனிப்புச்சுவை அதிகமாக இருக்கிறதே... நீரிழிவு உள்ளவர்களுக்கு அது ரத்தச் சர்க்கரை அளவை அதிகப்படுத்துமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி பல் மருத்துவர் மரியம் சஃபி டூத் பேஸ்ட்டா, டூத் ஜெல்லா என்று கேட்டால், பேஸ்ட்தான் சிறந்தது. அதன் சுத்தப்படுத்தும் திறன் ஜெல்லைவிட சிறந்ததாக இருக்கும். பேஸ்ட் வைத்துப் பல் துலக்கும்போது வாயும் பற்களும் சுத்தமான உணர்வு கிடைக்கும். பளபளப்பான கிரிஸ்டல் துகள்கள் சேர்த்தாலும், மின்ட் போன்ற ஃப்ளேவர்கள் சேர்க்கப்படுவதாலும் டூத் ஜெல் என்பது சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது. ஒருவரின் பல் ஆரோக்கியம், வாய் சுகாதாரம் மற்றும் பல் பிரச்னைகளைப் பொறுத்து அ வருக்கு எந்த மாதிரியான டூத் பேஸ்ட் சரியாக இருக்கும் என்பதை பல் மருத்துவர் பரிந்துரைப்பார். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு எளிதில் சொத்தைப் பல் பிரச்னை வரும் என்பதால் அதைத் தவிர்ப்பதற்கு ஃப்ளூரைடு கலந்த டூத் பேஸ்ட்டை பரிந்துரைப்பார். அதுவே வயதானவர்களுக்கும், நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கும், பல் கூச்சம் பிரச்னை உள்ளவர்களுக்கும் பொட்டாசியம் நைட்ரேட் (Potassium nitrate) அல்லது ஸ்ட்ரான்ஷியம் குளோரைடு (Strontium Chloride) உள்ள டூத் பேஸ்ட்டுகளை பரிந்துரைப்பார். எனவே ஒரு டூத் பேஸ்ட் எல்லோருக்கும் ஏற்றதாக இருக்காது. தினமும் இருவேளை பல் துலக்குவதை வழக்கமாக்குவது அதில் அடிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள். Doctor Vikatan: கூர்மையான பற்கள்... வாய்ப்புண், வாய்ப் புற்றுநோய்க்குக் காரணமாகுமா? பொதுவாக டூத் பேஸ்ட்டுகளில் மற்ற சேர்க்கைகளின் வீரியத்தை மட்டுப்படுத்துமபடிதான் சார்பிட்டால் (Sorbitol) என்பதைச் சேர்ப்பார்கள். இது டூத் பேஸ்ட்டுகளில் ப்ரிசர்வேட்டிவ்வாகவும் இனிப்பூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சேர்க்கப்பட்ட பேஸ்ட்டை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடாது. டூத் பேஸ்ட்டோ, மவுத் வாஷோ உபயோகித்ததும் வாய்க் கொப்பளித்துத் துப்பிவிடுவோம். எனவே. அது உடலுக்குள் போக வாய்ப்பில்லை. ரத்தச் சர்க்கரை அளவையும் அதிகரிக்க வாய்ப்பில்லை. எந்த பேஸ்ட் சிறந்தது என்பதைவிட முக்கியமானது நீங்கள் எப்படி உங்கள் வாய் சுகாதாரத்தைப் பராமரிக்கிறீர்கள் என்பது. தினமும் இருவேளை பல் துலக்குவதை வழக்கமாக்குவது அதில் அடிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
தென்கொரியா புதிய சட்டம் ; பொய் செய்தி வெளியிட்டால் கடும் தண்டனை
தென்கொரியாவில் பொய் தகவல்களை பரப்பும் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் சட்டமூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கொரியாவில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லீ ஜே மியுங் தலைமையிலான அரசு சர்ச்சைக்குரிய இச்சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. செய்தி நிறுவனங்களும், யூடியூப் சேனல்களும், சட்டவிரோதமானதும், பொய்யானதுமான தகவல்களை, தீங்கு விளைவிக்கும் அல்லது இலாப நோக்கத்துடன் பரப்பினால், நீதிமன்றங்கள் ஐந்து மடங்கு வரை அபராதம் விதிக்கும் வகையிலான விதிகள் அச்சட்ட ஏற்பாட்டில் உள்ளக்கட்டப்பட்டுள்ளது. இதன்படி குற்றம் […]
மனிதாபிமான உதவி பெயரில் பயங்கரவாத நிதி ; இத்தாலியில் அதிரடி கைது
இத்தாலியில் பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவி என்ற பெயரில் ஹமாஸ் அமைப்புக்கு சுமார் 7 மில்லியன் யூரோக்கள் நிதி திரட்டி அனுப்பியதாக ஒன்பது பேரை இத்தாலியத் காவல்துறை கைது செய்துள்ளது. இத்தாலியின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு மற்றும் நிதிப் பிரிவு காவல்துறை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2023 ஆம ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்த புலனாய்வு விசாரணைகள் […]
உயர்தர வகுப்பு மாணவனின் உயிரை பறித்த தொலைபேசி கம்பம்
லுணுவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்மோதர – போலவத்த பிரதான வீதியில் பெஸ்டஸ் பெரேரா மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாவெவ, கொஸ்வாடிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த மாணவன் சம்பவ தினத்தன்று லுணுவில பகுதியில் இருந்து பெஸ்டஸ் பெரேரா மாவத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை […]
சோமாலிலாந்தை அங்கீகரித்த இஸ்ரேல்! ஆப்பிரிக்க ஒன்றியம் கண்டனம்!
சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் அரசு அங்கீகரித்ததற்கு, பல்வேறு ஆப்பிரிக்க அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து பிரிவிணைவாதக் குழுவினரால் பிரிக்கப்பட்ட சிறிய நிலப்பகுதி கடந்த 1991 ஆம் ஆண்டு, சோமாலிலாந்து எனும் சுதந்திரம் பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த நாட்டை மற்ற சர்வதேச நாடுகள் இறையாண்மை பெற்ற தனிநாடாக அங்கீகரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சோமாலிலாந்தை முதல்முறையாக, கடந்த டிச.26 ஆம் தேதி இஸ்ரேல் அரசு தனிநாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தது. இதனால், […]
டார்க் மேட்டர் மர்மத்தை விளக்கும் ஆய்வு.. விண்மீன் பரிணாம வளர்ச்சி.. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
விண்மீன் திரள்களைச் சுற்றியுள்ள டார்க் மேட்டர் ஹாலோக்களின் நிறையை கணக்கிடுவதில் புதிய அணுகுமுறை வந்துள்ளது. இதுவரை ஆக்சிஜனை வைத்து கணக்கிட்டது தவறு என்று ராமன் ஆய்வு மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கட்டுநாயக்காவில் ரூ. 1.5 கோடி பெறுமதியான பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது!
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகள் மற்றும் நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற இரண்டு இந்திய இளைஞர்கள்… The post கட்டுநாயக்காவில் ரூ. 1.5 கோடி பெறுமதியான பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது! appeared first on Global Tamil News .
ஆந்திரா –ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்: அம்பலம்!
ஆந்திரா – ஒடிசா எல்லைப் பகுதியைப் பயன்படுத்தி இலங்கைக்கு முன்னெடுக்கப்படும் பாரிய கஞ்சா கடத்தல் வலைப்பின்னல் ஒன்றை இந்தியப்… The post ஆந்திரா – ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்: அம்பலம்! appeared first on Global Tamil News .
அவசரகால நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது
பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்காக இந்த பொது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 17 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலூசிஸ்தானின் கோலு, கலாட் மற்றும் பஞ்ச்கூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த டிச.24 மற்றும் டிச.26 ஆகிய நாள்களில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையில், அப்பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பஞ்ச்கூர் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளும், கோலுவில் 5 பயங்கரவாதிகளும், கலாட் மாவட்டத்தில் 8 […]
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆப்கானிஸ்தான் சிறுவர்கள்
இங்கிலாந்தின் மேற்கு மிட்லேண்ட்ஸ் மாகாணத்தில் உள்ள வார்விக்ஷெரி பகுதியில் கடந்த மே மாதம் 15 வயது சிறுமி ஒருவர் அருகிலுள்ள பூங்காவுக்கு சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த அந்த சிறுமியை இரண்டு சிறுவர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளின் முடிவில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜன் ஜஹன்பெஸ் (17) மற்றும் நைசல் (17) எனும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். […]
நிவாரணப் பொருட்கள் திருட்டு ; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவிருந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய 55 பொதிகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் – கற்பிட்டி மண்டலகுடா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விசாரணைகள் ஆரம்பம் இந்த விடயம் தொடர்பில், மண்டலகுடா கிராம உத்தியோகத்தர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அனர்த்தங்களினால் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விநியோகிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய 181 பொதிகள் அந்த பகுதியிலுள்ள […]
`மலையில் தஞ்சம்' - பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது
தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் வைத்து தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக தென்காசிக்கு கொண்டு வரப்பட்ட பாலமுருகனை காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மீது நெல்லை, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. கடையம் காவல் நிலையத்தில் மட்டும் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பாலமுருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து திருச்சூர் சிறையில் இருந்த பாலமுருகனை கடந்த நவம்பர் மாதம் அருப்புக்கோட்டை காவல்துறையினர் அழைத்துச் சென்று, விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் திருச்சூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறை வளாகத்தில் இருந்து பாலமுருகன் தப்பிச் சென்றார். இதையடுத்து பாலமுருகனை பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடையம் ராமநதி அணை அருகே மலைப்பொத்தை பகுதியில் பாலமுருகன் பதுங்கியிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மலையில் ஏறி தேட முயன்றனர். தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அப்போது அவர்கள் மலையின் செங்குத்தான பகுதியில் சிக்கித் தவித்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால் பாலமுருகன் அங்கிருந்து தப்பிச் சென்று சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கடந்த வாரம் பதுங்கியிருந்தார். அங்கும் அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், பாலமுருகனின் மனைவி ஜோஸ்ஃபினா மகள்கள் இருவருடன் விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஜோஸ்ஃபினா உயிரிழந்தார். மகள்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இறந்த ஜோஸ்ஃபினாவின் உடலையும் இதுவரை அவரது உறவினர்கள் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாலமுருகன் மற்றும் அவரது தம்பி மகேஷ் ஆகியோர் திருச்சியில் பதுங்கியிருப்பதாக தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தென்காசி மாவட்ட நீதிமன்றம் உடனடியாக அங்கு விரைந்த நான்கு தனிப்படை காவலர்கள், பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி பாலமுருகன் மற்றும் அவரது தம்பி மகேஷ் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து இரவோடு இரவாக இருவரையும் தென்காசிக்கு அழைத்து வந்த காவல்துறையினர், தென்காசி நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் நீதி விசாரணை வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். பல மாதங்களாக தேடப்பட்டு வந்த இந்த பிரபல ரவுடியின் கைது, தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
2026-இல் ஆசியாவின் சிறந்த 5 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கைத் தெரிவு!
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மற்றுமொரு மகுடம்! புகழ்பெற்ற U.S. News & World Report வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின்… The post 2026-இல் ஆசியாவின் சிறந்த 5 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கைத் தெரிவு! appeared first on Global Tamil News .
Year Ender 2025: இந்திய விமானத் துறையின் கரும்புள்ளி.. அகமதாபாத் விமான விபத்து!
2025 ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துக்கு ஒரு கனமான சோதனை ஆண்டு என்று கூறலாம். குஜராத்தில் நடந்த விமான விபத்து, விமானத் துறையில் கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.
தமிழர் பகுதியின் பல கிராமங்களை அச்சுறுத்தும் காட்டு யானை கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம், போன்ற பல பிரதேசங்களில் நீண்ட நாட்களாக காட்டு யானைகள் தொல்லைகளும் அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியிலுள்ள மக்களின் பயன்தரும் தென்னை, வாழை, உள்ளிட்ட பயிரினங்களையும் காட்டுயானைகள் துவம்சம் செய்து வருவதாகவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மக்களின் கோரிக்கை இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை (27) அப்பகுதியைச் சூழ சுமார் இருபதிற்கு மேற்பட்ட காட்டுயானைகள் உலாவித்திரிந்ததனால் […]
மூடப்படுகின்றது அமெரிக்காவின் நீண்ட கால ஆலை; பெருமளவானோர் வேலை இழப்பு
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில், சுமார் 35 ஆண்டுகாலமாக இயங்கி வந்த டைசன் ஃபுட்ஸ் (Tyson Foods) மாட்டிறைச்சி ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி முடிவினால் சுமார் 3,200 தொழிலாளர்கள் நேரடியாக வேலை இழக்கவுள்ளனர், இது அந்தச் சிறிய நகரத்தின் பொருளாதாரத்தை அடியோடு பாதித்துள்ளது. பெருமளவானோர் வேலை இழப்பு சுமார் 11,000 மக்கள் வசிக்கும் இந்த நகரில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்த ஆலையை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளனர். கால்நடைத் […]
உலகிலேயே குடிநீரை விட பீர் விலை எந்த நாட்டில் குறைவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்த செய்தியில் காண்போம்
மொற்பர்த்: தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பர்ய திருவிழா: சிறப்பு புகைப்படத் தொகுப்பு!
கண்டி மேயரின் அதிரடி ; புதிய வருடத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
கண்டி பெருநகர எல்லைக்குள் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத தெரு வியாபாரிகளையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பிறகு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டி மேயர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மாநகர சபையில் கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், தெரு வியாபாரிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, அவர்களின் கோரிக்கையின் பேரில் கருணை அடிப்படையில் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அவர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். தெரு வியாபாரிகள நகரத்தில் […]
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கான ஆங்கில ஆய்வு மாநாடு
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவினரால் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள ஆங்கில ஆசிரியர் மாநாடு – 2025 எதிர்வரும் 31ஆம் திகதி, புதன்கிழமை காலை 8.00 மணி முதல் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் சி. கமலராஜன் மற்றும் ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகள் பிரிவின் இயக்குநரும், பிரதிக்கல்விப் பணிப்பாளருமான பி. என். சுதர்சன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் முதன்மை […]
தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி.. விஜயகாந்த் நினைவு நாளில் பிரமேலதா தகவல்!
தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று விஜயகாந்த் நினைவு நாளில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
கட்டுநாயக்க வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி, இன்று (28) தோஹாவிலிருந்து விமான நிலைய முகாமையாளருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முழுமையான சோதனைகளில் விமானத்தில் எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார். கத்தார், தோஹாவிலிருந்து வந்த கத்தார் ஏர்வேஸ் Q.R.-664 விமானம் இன்று காலை 08.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. போயிங் 787 ட்ரீம்லைனர் வகையைச் […]
சிஐடியின் கிடுக்குப் பிடியில் டக்ளஸ் தேவானந்தா ; தீவிரமாகும் விசாரணை
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. தடுப்புக்காவல் உத்தரவு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர […]
தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்! திருப்பரங்குன்றம் வழக்கு பற்றி ஜிஆர் சுவாமிநாதன் சூசக பேச்சு
தீபம் ஏற்றும் நாள் கூடிய விரைவில் வரும் என நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மறைமுகமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொங்கலுக்கு ரூ.5,000 கொடுங்கள்.. திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு: எட்டுப் பேர் கைது!
யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விபச்சார விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்தவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் கைதான இந்தியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நேற்று (27) இரவு 9:45 மணியளவில் நெடுந்தீவு கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர். சட்ட நடவடிக்கை அதனைத் தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் பாரப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட […]
இந்தியா பெயர் கொண்ட அணியில் ஆடிய கபடி வீரருக்கு பாகிஸ்தான் தடை! - என்ன நடந்தது?
பஹ்ரைனில் தனியார் போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை காலவரையின்றி தடைசெய்து பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தான் வீரர் பஹ்ரைனில் 'ஜிசிசி கோப்பை' (GCC Cup) என்ற பெயரில் தனியார் கபடி தொடர் (டிச.16)நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் பெயரில் தனியார் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஒரு அணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த அணிக்காக பாகிஸ்தான் வீரர் உபைதுல்லா ராஜ்புத் களமிறங்கினார். அவர் இந்திய ஜெர்சி அணிந்து விளையாடிய புகைப்படங்களும், இந்தியக் கொடியை அசைப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு தடை செய்திருக்கிறது. பாகிஸ்தான் வீரர் தான் விளையாடப் போகும் அணி இந்திய அணி என்பது தனக்குத் தெரியாது என்றும், இது ஒரு தவறான புரிதல் என்றும் உபைதுல்லா ராஜ்புத் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியிருக்கும் உபைதுல்லா ராஜ்புத்,கடைசிவரை அவர்கள் அணிக்கு இந்திய அணியின் பெயர் சூட்டியது எனக்குத் தெரியாது, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன். கடந்த காலங்களில் தனியார் போட்டிகளில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு தனியார் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.
புதிய அரசமைப்பு உருவாக்கமும் மாகாண சபைக்கான தேர்தலும்காணாமலாக்கப்படும் தீர்வுகள்! பனங்காட்டான்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி 13ம் திருத்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமையை உருவாக்கிய இந்தியா இது விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்குமாயின், இவர்களுடன் தமி;ழர் தரப்பு பேச்சு நடத்துவதால் என்ன பயன்? பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வரையினானே என்று ஒவ்வோர் ஆண்டு நிறைவிலும், புத்தாண்டு பிறப்பிலும் நாம் கூறுவது வழமை. அரசியல் கருத்தாடல்கள், பத்தி எழுத்தாளர்கள் மறவாது இதனைச் சுட்டி விமர்சிப்பது ஆண்டாண்டுதோறும் இடம்பெறும். இதனை ஒரு முதுமொழியென்றும் கூறுவதுண்டு. பவுணந்தி முனிவர் கூறிய இந்த வாக்கியத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் வாழ்வில் எதனைத் தவிர்ப்பது, எது பொருந்திப் போகாதது, எதனை மேம்படுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற நியாயத்தை தெரிந்து கொள்ளலாம். இதில் முக்கியமானது அரசியல். அரசியலை ஆங்கிலத்தில் பொலிரிக்ஸ் என்பர். இது பொலிறிக்ஸ் என்ற பெயரிலிருந்து பெயர்ந்ததாகக் கூறுவர். பொலி என்றால் பல என்றும் றிக்ஸ் என்றால் தநதிரம், வஞ்சகம் என்றும் அகராதி அர்த்தம் சொல்கிறது. ஆக, ஏமாற்றுத்தனம், தந்திரப் போக்கு என்பவைகள் பொலிறிக்ஸின் ஆதாரங்கள் என்று கொள்ளப்படுகிறது. இதனை தங்கள் வாழ்வாகக் கொள்ளும் அரசியல்வாதிகள் யார் என்பதை இதனூடாக அறிந்து கொள்ளலாம். அரசியலும், அரசியல்வாதிகளும் பொதுவாழ்வில் பிரிக்க முடியாதவர்கள். இவர்களைப் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் மக்கள் வாழப் பழக வேண்டுமென்பதை, நம்ப நட நம்பி நடவாதே எனக் கொள்ளலாம். புதுவருடத்தில் எதிர்பார்ப்பவைகளை எழுத முனையும்போது ஒன்றே ஒன்று முதலில் வரும். அது கடந்தாண்டின் கடைசி வாரத்தில் அல்லது இந்த ஆண்டின் முதல்வாரத்தில் எழுதப்பட்ட விடயமாக இது இருக்கும். கடந்த வருட கடைசியில் இப்பத்தியை எழுதும்போது அநுர குமர திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் நூறு நாட்களின் மீள்பார்வையாக இருந்தது. ஆட்சித் தலைவர் ஒருவரின் ஆளுமையைத் தரிசிப்பதற்கு அவரது பதவிக்கால முதல் நூறு நாட்கள் போதாது. இருப்பினும், அவரது பாதை எதை நோக்கியதாக உள்ளதென்பதை ஓரளவு கண்டுகொள்ள இக்காலம் பயன்பட்டது. இவரது தேர்தல் கால மகுட வாசகமாக ஊழல் ஒழிப்பும், வறுமை ஒழிப்பும் அமைந்திருந்தன. இவரது தேசிய கொள்கையாக, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசியல் அமைப்பு, விரைவான மாகாண சபைத் தேர்தல் என்பவை இடம்பெற்றன. முன்னைய இரண்டும் நாடு முழுவதுக்குமானதாகவும், பின்னைய இரண்டும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகளாகவும் தோற்றம் காட்டின. முன்னைய ஆட்சிக் காலங்களில், முக்கியமாக ராஜபக்ச குடும்ப ஆட்சியின்போது உச்சத்தைத் தொட்ட ஊழலை ஒழிப்பதும், ஊழல்வாதிகளை அடையாளம் காண்பதுமாகக் காட்டி சட்டத்தின் முன் நிறுத்துவதே அநுர குமரவின் தலையாய செயற்பாடாக நம்பிக்கை தரப்பட்டது. ஊழல்வாதிகளால் முடக்கப்பட்ட கோடானுகோடி பணம் நாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் மேடைகளில் கூவிக்கூவி சொல்லப்பட்டது. கடந்த பதினைந்து மாத ஆட்சியில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காட்சி ஏற்படுத்தப்பட்டது. முன்னைய ஆட்சிக் காலங்களில் ஊழல், மோசடி, லஞ்சம் தொடர்பாக பலர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால், எவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட பணத்தில் ஒரு ரூபா கூட இன்னமும் மீட்கப்படவில்லை. இது தொடர்பாக எவர்மீதும் குற்றப்பத்திரிகையும் தாக்கலாகவில்லை. கொழும்பு சொகுசு வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்கு தமது மூட்டை முடிச்சுகளுடன் சென்ற மகிந்த ராஜபக்ச, நோயாளி என்ற பெயரில் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொழும்பு திரும்பி, இ;ப்போது கொழும்பில் குடியேறியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மகன் நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியலுக்கு இது தேவையாக உள்ளது. அதேசமயம், உகண்டாவில் பதுக்கப்பட்டதாக தேர்தல் காலங்களில் கூறிய பணத்தை மீட்டு வாருங்கள் என ஆட்சித் தரப்பைப் பார்த்து நாமல் நையாண்டிச் சவால் விடும் நிலைமை இன்று உருவாகியுள்ளது. அதேசமயம், அரசாங்க தரப்பிலும் பலர் மீது பல்வகையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் ஆதாரங்களோடும், அது இன்றியும் சுமத்தி வருகின்றனர். அநுர குமர அரசின் முதலாவது சபாநாயகரான அசோக ரண்வெல தேர்தல் காலத்தில் தமது கலாநிதி பட்டங்கள் பற்றி கூறியதை நிரூபிக்க முடியாததால் பதவி துறக்க நேர்ந்தது. வருமானத்துக்கு மேலதிகமாக சொத்துச் சேர்த்ததாக வணிகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரதியமைச்சர் அநுர ஜெயசேகர போர்க்காலக் குற்றங்களிலும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலிலும் சம்பந்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. எரிசக்தி அமைச்சர் குமர ஜெயக்கொடி முன்னர் உரக்கூட்டுத்தாபன தலைவராக இருந்தபோது அரசாங்கத்துக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீதும் எதிரணியினர் நாடாளுமன்றத்தில் குற்றங்களை முன்வைத்துள்ளனர். இவைகள் எதற்கும் ஆட்சித் தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை. நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவைகளை ஜனாதிபதி அநுர குமர கண்டுகொள்ளவும் இல்லை. மிக முக்கியமானதாக அறிவிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு பற்ற நம்பகமான பதில் அரச தரப்பில் காணப்படவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளின் பின்னரே புதிய அரசியலமைப்பு பற்றி நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேசிய மக்கள் சக்தியின் தாய்க் கட்சியான ஜே.வி.பி. இந்த வருட முற்பகுதியில் தெரிவித்திருந்தது. அப்படியானால் அந்த அறிவிப்பு வரவே இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கும் விடயத்தில் தமிழரசு கட்சி உட்பட அனேகமான எதிர்கட்சிகளும் குரலளவில் முனைப்புக் காட்டுகின்றன. ஆனால் இவர்களால் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாதுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்க அநுர அரசுக்கு வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இதற்கு ஏற்றதாக உள்ளது என்றும் சர்வதேச சிறுபான்மையினர் குழு வலியுறுத்தியுள்ளதாக இதனை எழுதும்போது ஒரு செய்தி வந்துள்ளது. வரவேற்க வேண்டிய அறிக்கை இது. ஆனால், யார் காதில் விழப்போகிறது? 1972ம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோதபாய ஆகிய அனைவருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தது. அநுர குமர மட்டும்தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றியதாக சொல்ல முடியாது. சிங்களத் தரப்பில் துணிச்சல் இருந்திருந்தால் 1972, 1978 ஆண்டுகளில் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டபோது இதனைச் செய்திருக்க முடியும். ஆனால், எல்லோருமே சிங்களத் தலைமைகளாகவும், சிங்களவர்களே ஆளும் இனமாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் ஆட்சி புரிந்ததால் இனப்பிரச்சனைக்கு தீர்வு இல்லாததாகவே போய்விட்டது. இறுதியாக, மாகாண சபைத் தேர்தலை பார்க்கலாம். இத்தேர்தலுக்கு நிதி ஒதுக்கிவிட்டு பின்னர் நிதி இல்லையென்று காரணம் கூறி தேர்தலை நடத்தாது விட்டவர் ரணில் விக்கிரமசிங்க. இப்போதைய ஆட்சியாளர்களுக்கும் நல்லதொரு வசதியான உதாரணம் கிடைத்துள்ளது. நாட்டை மீழெழுப்புவதற்கு மட்டுமே முக்கியத்துவம் என்று கூறி தேர்தலை காலவரையறையின்ற ஒத்தி வைக்கலாம். தேர்தல் நிச்சயம் நடைபெறுமென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கிளிப்பிள்ளைபோல சொல்லி வருகிறார்கள். 2026ல் இது நிச்சயம் நடைபெறுமென சில மாதங்களுக்கு முன்னர் சொல்லப்பட்டது.. டித்வா புயல் பேரிடரிலிருந்து நாட்டை மீழெழுப்ப வேண்டுமெனும் முக்கியத்துவம் இன்று முதன்மை பெற்றுள்ளது. இப்போதைக்கு மாகாண சபை தேர்தல் நடத்த முடியாதென்று கூறுவதற்கு ஆட்சித் தரப்புக்கு இது ஒரு நல்வாய்ப்பு. மக்கள் வாழ்வை புனரமைக்க சர்வதேசம் வழங்கும் நிதியுதவியை தேர்தல் நடத்துவதற்கு பயன்படுத்த முடியாதென ஒரேயடியாக தள்ளிவிடவும் ஆட்சியினர் முன்வரலாம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை தங்கள் இஷ்டப்படி முடிவு செய்து, அதனடிப்படையில் 13ம் திருத்தத்தை ஏற்படுத்தி, அதனூடாக மாகாண சபை முறைமையை அறிமுகம் செய்த இந்தியா இப்போது அதனை ஓரம் தள்ளிவிட்டதுபோல செயற்படுகிறது. தமி;ழர் தரப்பினரை சந்திக்கும்போது மட்டும் இது விடயத்தில் தாம் அக்கறை உள்ளவர்கள்போல காட்டிக்கொள்ளப்படுகிறது. அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய கூட்டணியும் சந்தித்த போது இவ்விடயத்தில் இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டுமென வாய் மூலமும் எழுத்து மூலமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் ஜெய்சங்கர் சரியான பதில் எதுவுமே கூறாது மழுப்பிவிட்டார். 2024ம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சந்திப்பில் தமி;ழர் பிரதிநிதிகளைப் பார்த்து இல்லாததை கேட்பதைவிட இருப்பவைகளை முழுமையாக பயன்படுத்துங்கள் என்று புரியும்படியான ஆலோசனையைக் கொடுத்தவர் இதே ஜெய்சங்கர். ஜனாதிபதி அநுரவைச் சந்தித்த இவர் இந்தியா இருக்க பயமேன் என்று கூறி 450 மில்லியனையும் இந்திய உதவியாக வழங்கிவிட்டு, தமிழர் பிரதிநிதிகளுக்கு பெப்பே காட்டிச் சென்றுவிட்டார். இவரைச் சநதித்த தமிழர் பிரதிநிதிகள், யாவும் அக்களத்தே விட்டு வெறுங்கையோடு ஷவீடு| திரும்பினர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்துக் களமாடிய ஜே.வி.பி.யின் பிரதிநிதியான அநுர குமர திஸ்ஸநாயக்க ஜனாதிபதியானதும் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியாவுக்கானது என்பதை நினைவில் கொண்டால் - பழையன கழிந்ததும் புதியன புகுந்ததும் புரியும்.
மும்பையில் புறாக்களுக்கு உணவளித்த தொழிலதிபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
மும்பை, மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் இயற்கையாகவே புறாக்கள் அதிகம் வசிக்கின்றன. இதனால் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு அருகே குவியும் நுாற்றுக்கணக்கான புறாக்களுக்கு அப்பகுதி மக்கள் உணவு வழங்குகின்றனர். இதனால், அப்பகுதியை சுற்றி வசிப்போருக்கு நுரையீரலை பாதிக்கும், ‘ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா’ தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதிகள், மும்பையில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்து உத்தரவிட்டனர். தடையை மீறி புறாக்களுக்கு உணவு […]
பிரித்தானியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட நபர்: கிடைத்த ஏமாற்றம்
பிரித்தானியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட ஒருவரை வசமாக ஏமாற்றியுள்ளார் ஒரு நபர். பிரித்தானியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட நபர் இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த பலிந்தர் சிங் (34), பிரித்தானியாவுக்கு பயணிக்க ஆசைப்பட்டுள்ளார். அவரை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்த கௌரவ் என்னும் நபர், அவரிடம் 2.4 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். சொன்னதுபோலவே இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, பிரித்தானியா செல்வதற்கான விமான டிக்கெட்கள் மற்றும் அமெரிக்க டொலர்களையும் சிங்கிடம் கொடுத்துள்ளார் கௌரவ். ஆனால், விமானம் ஏற செல்லும்போதுதான் சிங்குக்கு […]
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனவரி 9 வரை விளக்கமறியலில்!
“குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவால் தமக்கு வழங்கப்பட்டதாக, மறைந்த பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘மாகந்துரே மதுஷின்’ நெருங்கிய… The post முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனவரி 9 வரை விளக்கமறியலில்! appeared first on Global Tamil News .
டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டதுப்பாக்கிகளின் 19 துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணை
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
திமுக மாநில மகளிர் மாநாடு: திருப்பூரில் களைகட்டும் கருப்பு-சிவப்பு படை- ஏற்பாடுகள் என்னென்ன?
திருப்பூரில் நாளை திமுக மாநில மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கருப்பு-சிவப்பு மயமாக காணப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் என்னென்ன என்று காண்போம்.
யாழில் நீண்ட காலமாக பெண் அரங்கேற்றிய மோசமான செயல் அம்பலம் ; அதிர வைத்த பொலிஸார்
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் […]
'நிறைவான படம், திரையரங்குகள் நிறையட்டும்!' - 'சிறை'படத்துக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!
விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த 'சிறை' திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சிறை படத்தில்... 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் 'சிறை' படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும். மாரி செல்வராஜ் அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது. தனது முதல் படத்திலேயே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்ஷய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன் . இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும் என்று பாராட்டியிருக்கிறார்.
டிச.31-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. தலைமை அறிவிப்பு.. முடக்கப்படும் தேர்தல் பணிகள்!
வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்து உள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்! –வெனிசுவேலா அதிபர் அறிவிப்பு!
வெனிசுவேலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அமெரிக்காவுடன், பேச்சுவார்த்தைக்குத் தயார் என அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். போதைப் பொருள் பயங்கரவாதத்தைத் தடுப்பதாகக் குறிப்பிட்டு, கடந்த சில மாதங்களாக வெனிசுவேலா நாட்டுக்கு எதிராக கடல் மற்றும் வான்வழி ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகள் மூலம் கரீபியன் மற்றும் பசிபிக் கடல்பகுதியில், போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி இதுவரை 30-க்கும் அதிகமான கப்பல்களின் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளன. இதனால், […]
ஜனவரி 9 வரை டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்
ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் கட்டளையிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு தனிப்பட்ட பாதுகாப்பிற்காக டக்ளஸ் தேவானந்தாவுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் வழங்கிய துப்பாக்கி ஒன்று மாகந்துர மதுஸ் என்ற பாதாள உலக குழு தலைவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, டக்ளஸ் தேவானந்தா கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் […]
விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்!
TN Virasat Craft Person Loan Scheme: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களின் தொழில் மேம்பாட்டுக்காக ரூ.10 லட்சம் குறைந்த வட்டி விகிதத்தில் தொழில் கடன் வழங்கும் தமிழக அரசின் விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
அதே பேட்டர்ன், அடுத்த வாரம் சபரி, அரோரா தான் வெளியேற்றம்: அடித்துச் சொல்லும் பார்வையாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி ஒரு கேள்வி கேட்க ஆளாளுக்கு தங்கள் மனதில் இருந்ததை தெரிவித்துள்ளனர். அதை பார்த்தவர்களோ சபரிக்கும், அரோராவுக்கும் ஆப்பு ரெடி என்கிறார்கள்.
சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️
தற்போதைய அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் உட்பட 6 பேருக்கு எதிராக,… The post சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️ appeared first on Global Tamil News .
சேலம் பாமக பொதுக்குழு…ராமதாஸ் நடத்தும் கடைசி யுத்தம்- நாளைக்கு பாருங்க சஸ்பென்ஸ்!
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வரும் சூழலில், நாளைய தினம் முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனை ராமதாஸ் தரப்பு கூட்டியுள்ள நிலையில், என்ன பேசப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
தைவான் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் இரவு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. […]
எஸ்ஐஆர் டூ காந்தி பெயர் மாற்றம் வரை... மதிமுக நிறைவேற்ற அந்த 7 தீர்மானங்கள் என்னென்ன?
மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், திமுக அரசுக்கு ஆதரவாகவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை என்னென்ன என்று விரிவாக காண்போம்.
அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி
சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் நாளை ( டிச. 29) நடைபெறவுள்ளது. ராமதாஸ் இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே. மணி, 'அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியிருக்கிறார். அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் வலிமையான மற்றும் தவிர்க்க முடியாத கட்சியாகவும் இருந்த பாமகவை திட்டமிட்டு, சூழ்ச்சியால், அபகரிப்பதற்கும் பிளவுபடுத்துவதற்கும் அன்புமணி மேற்கொண்ட நடவடிக்கையால், ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் அடைந்தார். அன்புமணியின் தூண்டுதலால், சிலர் ராமதாஸின் மனம் புண்படும்படியாகப் பேசினர். தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரமில்லாத கட்சியாக மாறிவிட்டது. ஜி.கே.மணி (File Photo) இந்த நிலையில்தான், மீண்டும் அங்கீகாரமுள்ள கட்சியாக வளர்த்தெடுப்பேன் என்று புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான், ராமதாஸ் பின்னே வலிமையான கட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அன்புமணி பின்னால் விவரம் அறியாமல் சென்ற நிர்வாகிகள் மீண்டும் திரும்பி வருவார்கள். ராமதாஸ் தலைமையில் பாமக அமைக்கும் கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். பாமகவுக்கு அன்புமணி வர வேண்டுமென அனைவரும் விரும்பினோம். சூழ்ச்சியால் பிரிந்து சென்றனர் என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து பேசிய பாமக எம்.எல். ஏ அருள், ராமதாஸுடன் கூட்டணிக்காக 3 கட்சிகள் அழைப்பு விடுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 3 கூட்டணிகளுமே அன்புமணியை நம்பத் தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
விஜய் பற்றி அப்படி மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ், ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நாயகன் விஜய் பாட்டு பாடியதுடன், டான்ஸ் ஆடிய வீடியோவை ஷேர் செய்யும் ரசிகர்கள் எல்லாம் ஒரே விஷயத்தை சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது.
நெடுந்தீவு கடற்பரப்பில் 3 தமிழக மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை… The post நெடுந்தீவு கடற்பரப்பில் 3 தமிழக மீனவர்கள் கைது! appeared first on Global Tamil News .
19-வயதில் 9 பேருக்கு டிமிக்கி…அத்தையுடன் சேர்ந்து மோசடி செய்த கல்யாண ராணி கைது
ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் நகர் கர்ஜி தெருவைச் சேர்ந்த இளம்பெண் முத்திரெட்டி வாணி (19). இவருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாகுளத்தில் உள்ள துர்கா தேவி கோவிலில் திருமணம் நடந்தது.பின்னர் மணமகன் வாணியை தன் சொந்த ஊருக்கு ரெயிலில் அழைத்துச் சென்றார். விசாகப்பட்டினம் ரெயில் நிலையம் வந்ததும், கழிவறைக்கு செல்வதாக கூறி ரெயிலில் இருந்து இறங்கிய வாணி மீண்டும் அந்த ரெயிலில் ஏறவில்லை. இதையடுத்து மனைவியை காணாததால் […]
2025 : மாறியவை? மாறாதவை?நிலாந்தன்.
2025 : மாறியவை? மாறாதவை?நிலாந்தன். இந்த ஆண்டு பிறந்த போது ஒரு புதிய அரசாங்கம், புதிய வாக்குறுதிகளோடும் புதிய… The post 2025 : மாறியவை? மாறாதவை?நிலாந்தன். appeared first on Global Tamil News .
அலையோடு உறவாடு…உணவுத் திருவிழா கோலாகலம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) கடற்கரையில், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த… The post அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம் appeared first on Global Tamil News .
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் –பெண் உட்பட நால்வர் கைது:
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஒரு பெண்ணையும், அவருடன் தொடர்புடைய… The post மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது: appeared first on Global Tamil News .
சொத்துப் பதிவில் வரும் பெரிய மாற்றம்.. தமிழக பதிவுத்துறை நடவடிக்கை!
சொத்து பரிவர்த்தனைகளில் மோசடிகள் நடப்பதைத் தடுக்க தமிழக பதிவுத் துறை முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
✈️ அமெரிக்காவில் 1,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் வீடு திரும்பும் இந்த முக்கியமான நேரத்தில், அமெரிக்காவின் வான்வழிப் போக்குவரத்து பெரும் சவால்களைச்… The post ✈️ அமெரிக்காவில் 1,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! appeared first on Global Tamil News .
100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா? - கனிமொழி கேள்வி!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கனிமொழி தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமை வகிக்க, கனிமொழி எம்.பி, அமைச்சர் பி.மூர்த்தி, தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, இப்பகுதியில் இருக்கும் பெண்கள், சகோதரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும் என அமைச்சர் மூர்த்தி சொன்னார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பெண்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது திமுக, பெண்களுக்கு சொத்துரிமை உள்ளது என்பதை செய்து காட்டியது திராவிட மாடல் அரசு, இன்று அதிகமான பெண்களுக்கு வேலை வாய்பு கிடைக்கிறது. ஒரு காலத்தில் பெண் குழந்தை வேண்டாம் என நினைத்தார்கள், பின்பு பெண்கள் படித்தால் என்ன ஆகப்போகிறது என வீட்டிலேயே வைத்திருந்தார்கள். 10 ஆம் வகுப்பு படித்தால் உதவித்தொகை என கலைஞர் அறிவித்தார். அதன் பின்பு பெண்கள் படித்தார்கள், கூடுதலாக 12 ஆம் வகுப்புக்கும் உதவிகள் அறிவிக்கப்பட்டது. நலத்திட்ட விழாவில் இன்று கல்லூரிக்கு சென்று படிக்கும் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், பேருந்திலும் இலவசப் பயணம் என திட்டங்களை கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி என்பது பெருமை. நாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது அன்றைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது 100 நாள் வேலை திட்டம். பாஜக ஆட்சிக்கு வந்த பின் பெண்களுக்கும் வேலை கொடுப்பதில்லை. இன்று மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் பெயரை எடுத்து விட்டார்கள். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வந்த திட்டத்தை இன்று அழிக்க நினைக்கிறார்கள். நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என கேட்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை அழிக்க கொண்டு வரப்பட்ட மசோதாவைப் பற்றி தெரிவாக பதில் சொல்லத் தெரியுமா? எல்லாவற்றையும் மாற்றிடுவவேன் என்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும் சொல்கிறார்கள். ஆனால், கிராமப்புற சகோதரிகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு திட்டத்தை நிறுத்தும் மசோதாவை பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை. இன்று மதக் கலவரத்தை தூண்டி வருகிறார்கள், 100 நாள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு வேலை இல்லாமல் போவதில் அதிகமாக இந்துக்கள்தான் பாதிக்கப்பட போகிறார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டும், அப்போதுதான் இனத்தின் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். 2026-ல் வெற்றியை நிலை நாட்டுவீர்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.
BB Tamil 9: எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா- ஆக்ரோசமான விக்ரம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 83 நாள்களைக் கடந்துவிட்டது. நேற்று( டிச.27) நடந்த எவிக்ஷனில் அமித் வெளியேறிருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரமிற்கும், திவ்யாவிற்கும் சண்டை நடக்கிறது. திவ்யா விக்ரமுக்கு ஒரு விஷயம் நடந்தா அது ஹர்ட் ... ஆனால் எனக்கு நடந்தா அது எமோஷனல் இல்ல என திவ்யா சொல்ல உங்க கால்ல கூட விழுகிறேன் திவ்யா என விக்ரம் கூறுகிறார். அதற்கு திவ்யா இந்த டிராமாலாம் வேணாம் விக்ரம். நீங்க உங்க மனைவி பேசினதை இங்க பேசலாம். ஆனா நாங்க... என திவ்யா பேசி முடிப்பதற்குள் எதுக்கு ஏன் மனைவிய இங்க இழுக்குறீங்க என விக்ரம் ஆக்ரோசமாகிறார்.
'தாயுள்ளம் கொண்ட ஆண்மகன் கேப்டன்' - ஆர்.கே.செல்வமணி உருக்கம்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். செல்வமணி அந்தவகையில் விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். திரைப்பட தொழிலாளருக்கு வாழ்க்கை முழுக்க தொண்டாற்றியவர் விஜயகாந்த் சார். படப்பிடிப்பு தளங்களில் எல்லாருக்கும் என்ன உணவோ ...அதுதான் அங்கு வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரோட கிட்டத்தட்ட 30 வருடம் பயணம் செய்திருக்கிறோம். அவரை மாதிரி ஒரு சிறந்த மனிதரைப் பார்த்ததே இல்லை. அவர் தாயுள்ளம் கொண்ட ஒரு ஆண் மகன். ஆர்.கே.செல்வமணி பார்க்க கரடு முரடாகத் தான் தெரிவார். ஆனால் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் பழகக்கூடியவர். இன்று திரைப்படத் துறையில் 50 பேர் இயக்குநராகவும், 75 பேர் தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் சார் தான். 100 ஆண்டுகளைக் கடந்தும் கூட அவர் புகழ் நிலைத்து நிற்கும் என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
TVK: கரூர் விவகாரம், தேர்தலுக்கு முன் அறிக்கை தயாராகும் CBI? | Jana Nayagan | Vijay | Stalin | IPS
கம்போடியா –தாய்லாந்து இடையே புதிய அமைதி ஒப்பந்தம்! மீண்டும் போர்நிறுத்தம் அமல்!
கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளிடையே நடைபெற்று வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையில், நீண்டகாலமான எல்லைப் பிரச்னை நிலவி வருகின்றது. இதையடுத்து, இருநாடுகளின் எல்லையில் கடந்த ஜூலை மாதம் கன்னிவெடித் தாக்குதலில் 5 வீரர்கள் படுகாயமடைந்ததால் கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் 5 நாள்களுக்கு மோதல் வெடித்தது. பின்னர், மலேசியா அரசின் முயற்சியால் கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையில் […]
வெளிநாட்டு தம்பதிக்கு இலங்கையில் நேர்ந்த பெரும் அசம்பாவிதம்
ஹிக்கடுவை – நரிகமவில் நேற்று (27) கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த தம்பதியினரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 20 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று, அஹுங்கல்லவில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட ரரஷ்ய சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்க்கட்டுள்ளார். இந்த விபத்தில் சிக்கியவர் 39 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்
ஆந்திரா – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் அதிவேக எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன் தற்போதைய நிலை, திறப்பு விழா உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
Vijay: சினிமா அவரை மிஸ் பண்ணும்- ராஜபக்சே மகன் வாழ்த்து
விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். Vijay - Jana Nayagan Audio Launch விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'ஜனநாயகன்' படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (டிச. 27) மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். Vijay - Jana Nayagan Audio Launch அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், திரைத்துறையில் விஜயுடைய ஆற்றலை அனைவரும் அறிவோம். சினிமா பயணத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். சினிமா அவரை மிஸ் பண்ணும். எதிர்வரும் பயணத்தில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பதிவிட்டிருக்கிறார்.
BB Tamil 9 Day 83: அமித் எவிக்ஷன் - பாரு, சான்ட்ராவின் நட்புதான் காரணமா?
‘டேமேஜ் கண்ட்ரோல்’ செய்கிறேன் பேர்வழி என்று மேலும் தன்னை எக்ஸ்போஸ் செய்து கொள்வதில் பாரு திறமைசாலியாக இருக்கிறார். இந்த எபிசோடில் நிகழ்ந்ததும் அதுவே. பாரு வேலை செய்யாமல் டபாய்க்கிறார் என்பது ஐநா சபை வரைக்கும் தெரிந்த விஷயம். என்றாலும் அதை பூசி மெழுகி ஏன் இன்னமும் பெயரை கூடுதலாக கெடுத்துக் கொள்ள வேண்டும்?! BB Tamil 9 Day 83 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 83 ‘இந்தக் கட்டுரைத் தொடரில் பெரும்பாலும் பாருவைப் பற்றித்தான் இருக்கிறது. ஏன் தலைப்பிலும் கூட பாருவின் பெயர்தான் அதிகமாக வருகிறது, இப்போதாவது புரிகிறதா, அவர்தான் இந்த சீசனின் முக்கியமான போட்டியாளர்.. அவரை மையமாக வைத்துதான் இந்த சீசன் நடக்கிறது. அவரை வைத்துதான் பிக் பாஸ் விமர்சனங்களும் நடக்கின்றன என்பது தெரிகிறதா?’ என்று பாருவின் ரசிகர்கள் கேட்கிறார்கள். யெஸ். அது உண்மைதான். இந்த சீசனின் கன்டென்ட் அட்சயப்பாத்திரம் என்றால் அது பாருதான். அவரால்தான் வீட்டில் நிறைய கலகங்கள் நடக்கின்றன. காமிராக்களுக்கு வயிறார தீனி கிடைக்கிறது என்பதில் மறுப்பே இல்லை. ஆனால் பாருங்கள் நண்பர்களே.. என்னதான் ஒரு திரைப்படத்தில் வில்லனின் பாத்திரம் வலிமையாக இருந்தாலும், அந்த கேரக்டரை நாம் நிறைய ரசித்தாலும் இறுதியில் ஹீரோதான் வெல்வான். வில்லன் ஜெயிப்பதாக கதைகள் எழுதப்படாது. எழுதப்படவும் கூடாது. ‘பாருதான் டைட்டில் வின்னர்’ என்று ஒருவர் ஆசைப்படுகிறார் என்றால் உலகத்தில் அநீதி வெல்ல வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்றுதான் பொருள். பாருவின் நெகட்டிவ் ஸ்ட்ராட்டஜி ரசிக்குபடி இருக்கிறதா? பிக் பாஸ் ஆட்டம் என்பதின் அடிப்படையே, ஓர் அடைபட்ட சூழலில் அந்நிய மனிதர்களை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றி பெறுவதுதான். கோபம், ஆத்திரம், வன்மம், புறணி, பழிவாங்கல் போன்ற மனிதர்கள் வெற்றி பெற்றால் அவை தவறான முன்னுதாரணமாக ஆகி விடும். நெகட்டிவிட்டி என்பது தூர நின்று பார்ப்பதற்கு ஜாலியான வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நம் மீதே அது பாயும் போதுதான் வலியைத் தரும். தெருவில் சண்டை நடக்கும் போது ஆவலாகச் சென்று வேடிக்கை பார்ப்பது மனித இயல்பு. ஆனால் அத்தகைய தெருச்சண்டையிலேயே ஒருவர் காலத்தைக் கழிப்பார் என்றால் அத்தகைய பொறுக்கித்தனத்தை நாம் மதிப்போமா? BB Tamil 9 Day 83 பாருவிடம் அடிப்படையில் ஒரு திறமை இருக்கிறது. ஆனால் அதை அவர் பெரும்பாலும் கவன ஈர்ப்பிற்காகவும் கலகத்தை உருவாக்கி தன்னை முன்னிறுத்திக் கொள்வதிலும் புறணி பேசுவதிலும்தான் செலவழிக்கிறார். ஒரு நல்ல சமூகம் இத்தகைய மனிதர்களை ரசிப்பதில்லை. நெகட்டிவிட்டிதான் மனிதர்களை உடனே கவரும் விஷயம் என்பதால் பிக் பாஸ் டீமும் பாரு சம்பந்தப்பட்ட காட்சிகளையே மெயின் எபிசோடில் அதிகம் சேர்க்கிறது. பிக் பாஸ் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வெளியாகும் காட்சித் துண்டுகளைக் கவனித்தால் பாருவைத் தாண்டி அந்த வீட்டில் எத்தனையோ சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் அவையெல்லாம் மெயின் எபிசோடில் வருவதில்லை. அதனால்தான் பாருவே இந்த சீசன் முழுமையும் நிரம்பியிருப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. மட்டுமல்லாமல் எந்தவொரு உரையாடலிலும் தலையிட்டு உரத்த குரலில் கத்தி மற்றவர்களை விடவும் தன்னை முன்னே காட்டிக் கொள்வதில் பாரு விற்பன்னராக இருக்கிறார். ரகளையான எக்ஸ்பிரஷன்களை வாரி வழங்கும் பாரு பாருவின் வழக்கமான கல்யாணக்குணங்களைத் தாண்டி அவரிடம் தன்னிச்சையாக படிந்துள்ள ஒரு விசித்திரமான, சுவாரசியமான குணத்தைக் காணமுடிகிறது. அவரால் தன் உணர்ச்சிகளை மறைத்து வைத்துக்கொள்ளவே முடிவதில்லை. ஒரு குழந்தை மாதிரி தன் உணர்ச்சிகளை அப்படியே முகத்தில் வெளிப்படுத்திவிடுகிறார். குறிப்பாக வாரஇறுதி எபிசோடுகளில் நீங்கள் இதை நன்றாக கவனிக்க முடியும். தன்னைப் பற்றிய துளி விமர்சனம் வந்தாலும் பாருவின் முகம் கோணுகிறது. அப்படி சொல்பவரைப் பார்த்து முகம் சுளிக்கிறார். உதட்டைக் கோணுகிறார். கண்களால் வெறுப்பைக் காட்டுகிறார். இப்படியாக விதம் விதமான எக்ஸ்பிரஷன்களையும் உடல்மொழியையும் தந்து கொண்டேயிருக்கிறார். விஜய் சேதுபதி பல முறை கண்டித்தாலும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடிவதில்லை. இதை குழந்தைத்தனம் என்பதா, முதிர்ச்சியற்ற தன்மை என்பதா என்று தெரியவில்லை. ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்கிற பழமொழிக்கு சரியான உதாரணம் பாரு. ஆனால் இவரைப் போன்றவர்களை கையாள்வது எளிது. கண்ணாடி போல உடனுக்குடன் உள்ளிருக்கும் எண்ணங்கள் வெளியே பிரதிபலித்து விடுவதால் இவர் என்ன செய்வார் என்பது எதிராளிக்கு நன்றாக தெரிந்து விடும். விக்ரம் பாருவை அநாயசமாக கையாளும் ரகசியம் இதுதான். மாறாக இறுக்கமான முகத்துடன், உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் இருப்பவர்களைக் கையாள்வது சிரமம். இந்த நோக்கில் பாருவை விடவும் ரோபோ முகத்துடன் இருக்கும் சான்ட்ராவைக் கையாள்வது சிரமம். பாருவை விடவும் இவர்கள் ஆபத்தானவர்கள் என்று தோன்றுகிறது. BB Tamil 9 Day 83 பாரு - கம்மு சண்டை - தலைவன் தலைவி படத்தின் மினி வெர்ஷன்? மேடைக்கு வந்த விஜய் சேதுபதி, ‘உறவுகளின் அருமை பிரிவின் போதுதான் தெரிகிறது.. இல்லையா?” என்று ஃபேமிலி டாஸ்க்கைப் பற்றி சொல்லிவிட்டு “ஆனாலும் இவங்க மாறினதுபோல தெரியல. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்ப்போம்” என்றார். அந்த வெள்ளிக்கிழமை நிகழ்வு முழுக்க பாரு - கம்ருதீன் சண்டையாகவே இருந்தது. விசே, நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படத்தின் மினி வெர்ஷன் போலவே இருந்தது. அந்தப் படத்திலாவது அவர்களுக்குள் இருக்கும் ஆதாரமான அன்புதான், சண்டையாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால் பாரு -கம்மு ரொமான்ஸில் டாக்ஸிக்தனம்தான் வெளிப்படுகிறது. பாருவின் செயற்பாடுகளில்தான் நச்சுத்தன்மை இருக்கிறது என்றால், அவரது ரொமான்ஸிலும் டாக்ஸிக்த்தான் இருக்கிறது. புலி பாய்ந்து பதுங்குவது போல அடங்குவது போல பாவனை செய்யும் கம்ருதீன் மீண்டும் திடீரென பாயத் தொடங்குகிறார். மற்றவர்கள் அனைவரையும் தன் அடாவடித்தனத்தால் ஜெயிக்க முயலும் பாருவோ, கம்முவின் ரொமான்ஸ் முன்னால் அப்படியே பம்முகிறார். விடாக் கொண்டன், கொடாக் கொண்டன் மாதிரி இருவருமே தங்களின் அகங்காரமும் சுயநலமும் மட்டுமே முக்கியம் என்பது மாதிரி மோதுகிறார்கள். ஆனால் உண்மையான காதலின் அடையாளமே, விட்டுத்தருதல்தான். காதலையே இழந்தால் கூட தன்னால் நேசிக்கப்பட்டவளுக்கு சிறு துன்பம் கூட நிகழக்கூடாது என்று நினைப்பதுதான் உண்மையான காதல். மாறாக ஒரு சிறிய பிரேக் அப்பில் கூட “உன்னை செய்யறேன் பாரு.. “ என்று வன்மத்தைக் கக்குவதின் பெயர் நிச்சயம் காதல் அல்ல. பாரு -கம்மு - காதலா அல்லது சர்வைவல் நாடகமா? பாருவிற்கும் கம்முவிற்கும் இடையில் நடக்கும் காரசாரமான உரையாடல்களைப் பார்க்கும் போது ‘இது உருப்படாத ரொமான்ஸ்’ என்பது நமக்கே உறைக்கும்போது அவர்களுக்கு தெரியாதா என்ன? பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இந்த லவ் கன்டென்ட்டை அவர்கள் இழுபறியாகக்கொண்டு செல்கிறார்களா? இந்த ஷோ முடிந்தவுடன் பாரு - கம்மு ரொமான்ஸூம் புட்டுக் கொண்டு விடும் என்பது நம்மை விடவும் அவர்களுக்கு நன்றாக தெரியும். என்றாலும் ஏன் இந்த மோசமான டிராமா? பிக் பாஸ் டீமும் இதையே காட்டி வெறுப்பேற்றுகிறது. ஏற்கெனவே சொன்னது மாதிரி, உணர்ச்சிகளைக் கண்ணாடிபோல வெளிப்படுத்தும் பாருவை நம்பி விடலாம். ஆனால் திருந்தியது போல் நடித்து, கோபம் வந்து விட்டால் அனைத்து வன்மங்களையும் கக்கும் கம்ருதீன் ஆபத்தானவராக தெரிகிறார். அது பாருவாக இருந்தாலும் சரி, அரோராவாக இருந்தாலும் சரி, தக்க சமயத்தில் போட்டுக் கொடுத்து பழி தீர்த்துக் கொள்கிறார். இருவரையுமே அவர் நேசிக்கிறார் என்றால், இந்த வன்மமா அன்பின் அடையாளம்?! “நீ வேலையே பார்க்கறதில்லை. வில்லனிக் பெர்சன், அசிங்கமா கேப்பேன், பெரிய இவளா நீ.. என்னை மட்டும் தப்பா காட்ட கேம் ஆடறே.. நீ சேஃப் கேம் ஆட டிரை பண்றே.. இனிமே நாம தனியா ஆடலாம். உன் சகவாசமே வேணாம். மாத்தி மாத்தி பேசற. என்னை வெளியே அனுப்ப டிரை பண்றே.. உனக்காக யாரை வேண்டுமானலும் போட்டுத் தள்ள தயங்க மாட்டே” என்றெல்லாம் பாருவின் மீது கடுமையான புகார்களை துப்பிக் கொண்டேயிருந்தார் கம்ருதீன். BB Tamil 9 Day 83 ‘பாரு போகக்கூடாது’ - அந்தர் பல்டியத்த கம்ருதீன் இதே விஷயங்களை விசாரணை நாள் சபையிலும் திறமையாக பதிவு செய்தார் கம்ருதீன். ஆனால் எவிக்ஷன் சமயத்தில் “எந்த ரெண்டு பேரை நீங்க காப்பாத்தணும்ன்னு நெனக்கறீங்க?” என்று விசே கேட்ட போது ‘பாரு’ என்று என்று சொன்னதை எந்த விதத்தில் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. விக்ரம் உட்பட அனைவருமே சிரிப்புடன் தலையில் கை வைத்துக்கொண்டனர். போலவே பாருவும் கம்முவிற்கு தக்க பதிலடி தந்து புகார்களை சபையில் பதிவு செய்து விட்டு, கம்ருதீன் தன் பெயரைச் சொன்னவுடன் இளித்துக் கொண்டே பக்கத்தில் சென்று உரசி அமர்ந்து கொண்டார். இதையும் எப்படி புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. இருவருமே சிறந்த நடிகர்களாக வருவார்கள் என்பது மட்டும் தெரிகிறது. இந்த எபிசோடில் பாருவை பல முறை பங்கம் செய்து கொண்டேயிருந்தார் விசே. “ஒரு பைக்கை விக்க முடியலை. ஆனா என்னை கன்வின்ஸ் செய்ய டிரை பண்றீங்க. அது செல்லுபடியாகாது. அப்படியெல்லாம் முறைக்காதீங்க.. பாரு.. “ என்று ஆரம்பமே களைகட்டியது. வழக்கம் போல் ‘சார்.. என்ன சார்..நீங்க?” என்று சிணுங்கினார் பாரு. அவருடைய மைண்ட் வாய்ஸ் அப்போது ஸ்பீக்கரில் ஒலித்திருந்தால், விசே அதிர்ச்சியாகி இருப்பார். ‘எனக்கு யாரும் வரமாட்டாங்க’ என்று கலங்கிய அரோவிற்கு, இந்தச் சமயத்தில் விசே ஆறுதல் சொன்னது சிறப்பான விஷயம். அவருடைய குடும்பத்தில் இருந்து ஒருவராவது வந்திருக்கலாம். ‘போட்டியாளர்களுக்குப் பதிலாக அவர்களின் விருந்தினர்களே உள்ளே வந்திருக்கலாம்’ என்கிற கேள்விக்கு, “வினோத்திற்குப் பதில் பாக்யா வந்திருக்கலாம். அவ்ளோ தெளிவா இருக்காங்க” என்றார் சான்ட்ரா. “பாருவின் அம்மா வந்திருக்கலாம்” என்றார் சபரி. “ஸ்ரீரஞ்சனி வந்திருக்கலாம்” என்று திவ்யா சொன்னது உண்மை. டேமேஜ் கண்ட்ரோலில் ஈடுபட்டிருக்கிறாரா, பார்வதி? “அமித்தோட பொண்ணு வேதா வந்திருக்கலாம். குழந்தையா இருந்தாலும் பயங்கர மூளை” என்று பாராட்டினார் கம்மு. “அவங்க பார்வதிக்கு ஒரு பட்டம் கொடுத்தாங்களே.. அது என்ன?” என்று விசே குறும்பாக போட்டுக் கொடுக்க “சீட்டிங் பார்வதி” என்று பார்வையாளர்கள் உற்சாகமாக குரல் கொடுக்க எரிச்சலை சிரிப்பால் மூடிக் கொண்டார் பாரு. “குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்வாங்க பாரு” என்று பாருவை இன்னமும் புண்படுத்தினார் விசே. “விருந்தினர்கள் வந்து போனப்புறம் யார் கிட்ட மாற்றம் தெரியுது” என்கிற கேள்விக்கு சான்ட்ரா என்று பலரும் சொன்னது உண்மை. ஒப்பாரிப் பாடல் பாடிக் கொண்டிருந்த சான்ட்ரா, ஸ்விட்ச் போட்டது போல் மாறி இப்போதெல்லாம் புன்னகை அரசியாக வலம் வருகிறார். (எது உண்மை, எது நடிப்பு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை) “பாரு கிட்ட நிறைய மாற்றம் தெரியுது சார். இப்பல்லாம் சிஐடி, ஜேம்ஸ்பாண்ட் மாதிரி நிறைய கேள்வி கேக்கறாங்க. நான் இப்பத்தான் பெண்மையா உணர்றேன்னு சொல்றாங்க. அவங்க அலப்பறை தாங்காம நான்தான் இப்ப டவுன் ஆகிட்டேன்” என்கிற மாதிரி கம்ருதீன் போட்டுக் கொடுக்க பாருவின் முகம் அஷ்ட கோணலாகியது. “கம்மு இப்பல்லாம் உண்மையா ஸாரி கேட்கறார்” என்று சான்றிதழ் தந்தார் திவ்யா. BB Tamil 9 Day 83 கம்ருதீன், வினோத், பாரு .. மூணு பேருமே டேமேஜ் கண்ட்ரோல்ல ஈடுபட்டிருக்காங்கன்னு தோணுது. ஸ்விட்ச் போட்ட மாதிரி மார்றது செயற்கையா இருக்கு” என்று பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்தார் அரேரா. ‘சனியன் பிடிச்சவ. நாசமா போவ’ என்று பாருவின் மைண்ட்வாய்ஸை நம்மாலேயே கேட்க முடிந்தது. பாருவிடமிருந்து அப்படியொரு எக்ஸ்பிரஷன். பதிலுக்கு கம்ருதீனை போட்டுக்கொடுத்தார் பாரு. “தன் மேல தவறான பிம்பம் விழுந்துடக்கூடாதுன்னு ஜாக்கிரதையா இருக்கார். காமிரா கான்ஷியஸா இருக்கார். அதுக்காக சில விஷயங்களை பதிவு பண்றார். நீ வேலை செய்யலைன்னு சொல்றார்” என்பது பாருவின் பதில் மொய். பாரு பற்றிய அரோராவின் கருத்தை சுபிக்ஷாவும் வழிமொழிந்தார். “அவங்க வில்லன் குணம் திடீர்ன்னு மாறினது செயற்கையா இருக்கு” என்று சுபிக்ஷா சொல்ல, பாருவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தன்னை டிஃபெண்ட் செய்வதற்காக கம்மு கையை உயர்த்த ‘யப்பா சாமிகளா.. நீங்களே பேசிக்கங்க” என்று பிரேக்கில் சென்றார் விசே. பாருவிற்கு கம்முவிற்கும் நடந்த சண்டையைப் பார்த்து “ஒரு பிரேக் அப் பார்த்த மாதிரி இருக்குல்ல?” என்கிற கிண்டலுடன் உள்ளே வந்தார். “நான் வேலை செய்யறேன். அது இந்த உலகத்திற்கு தெரியல’ -பாருவின் அபாண்டமான புளுகல் “கம்முவோட கேப்டன்சி எப்படியிருந்தது?” என்பது அடுத்த கேள்வி. ஆனால் இதில் பாருதான் தொக்காக சிக்கிக் கொண்டார். “பாருவோட வேலையை தல செஞ்சாரு. பாரு கிட்ட வேலை வாங்கறது ரொம்ப கஷ்டம்” என்று போட்டுக் கொடுத்தார் வினோத். “ஆக்சுவலி.. காலை நேரத்துல பாத்திரம் துலக்கற வேலை என்னுது. அப்ப பாத்திரம் கம்மியா இருந்தது. பாரு அத பார்த்துட்டு ‘இப்ப நான் பண்ணிடறேன்’னு சொன்னாங்க. ஆனா அதுக்கு அப்புறம் பாத்திரம் நிறைய விழுந்தவுடனே எரிச்சல் ஆயிட்டாங்க. இப்படி கணக்கு பார்த்து வேலை செய்யறாங்க” என்று பாருவை போட்டுக் கொடுத்தார் சுபிக்ஷா. (பத்து பாத்திரம் தேய்த்தல் என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் பாரு புரிந்து கொண்டிருக்கிறார் போல!) “சார்.. நான் வேலை செய்யறேன் சார்.. நான் முரண்டு பிடிப்பவள்தான். ஆனாலும் செஞ்சிடறேன்.” என்று வீட்டு வேலை என்னும் கடமையை ஏதோ சலுகை செய்வது போல பாரு பேச, விசே வறுத்தெடுத்து விட்டார். BB Tamil 9 Day 83 “எப்படி இதை ஈஸியா கடந்து போறீங்க.. நீங்க அடம்பிடிக்கறத மத்தவங்க ஏன் பொறுத்துக்கணும். 12 வாரம் ஆயிடுச்சு.. ஒவ்வொரு வாரமும் இதையேதான் சொல்றீங்க. உங்க அம்மா கூட சொல்லிட்டுப் போயிருக்காங்க.. அப்பவும் செய்ய மாட்டேன்றீங்க.. மத்தவங்க வேலையை நீங்க செய்வீங்களா.. எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாம இதை கடக்கறீங்க..” என்று விசே கொதித்தெழ “நான் பேசறததான் இவங்க பார்க்கறாங்க.. வேலை செய்யறத பார்க்கலை” என்று மோசமாக சமாளித்தார் பாரு. “டேய்.. டேய்.. உன்னை எனக்குத் தெரியுண்டா.. எனக்கு மட்டுமில்ல.. ஊருக்கே தெரியும்.. மக்களுக்கே தெரியும்” என்கிற மாதிரி விசே கேள்விகளை வைக்க, விடாமல் பாரு சமாளிக்க “இதெல்லாம் உங்களுக்கே நியாயமா தெரியுதா.. இப்படி சமாளிக்கும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு வெற்றி கிடைக்கலை. இன்னும் மோசமா தோத்துதான் போறீங்க.. உக்காருங்க” என்று எரிச்சலானார் விசே. ஒரு சின்ன வேலையைக் கூட மனமார செய்யாமல் பாரு எப்படியெல்லாம் டபாயக்கிறார் என்பதை நாமே பலமுறை பார்க்கிறோம். இத்தனை காமிராக்கள் பதிவு செய்கின்றன. ஆனால் ஒரு முழு எபிசோடை ஒரேயொரு பிரேமில் மறைக்க முயல்வது மாதிரி பாருவால் எப்படி அப்பட்டமாக புளுக முடிகிறது என்பது ஆச்சரியம். “கம்மு.. இந்தக் கேள்வியெல்லாம் நீங்க கேட்டிருக்கணும்.. நான் கேட்க வேண்டியிருக்கு. நியாயமா பார்த்தா உங்க சம்பளத்தை எனக்கு தரணும்” என்கிற கிண்டலோடு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தார் விசே. அரோவை பழிவாங்க முயன்ற கம்முவிற்கு விசே வைத்த குட்டு “இவங்க ஆட்டம் முடிஞ்சிருச்சி. வெளியே போகலாம்’ என்கிற கேள்வியை அடுத்து விசே முன்வைக்க ‘சான்ட்ராவின் பெயர் பலமுறை சொல்லப்பட்டது சரியான விஷயம். அழுகையின் போதும் சரி, சிரிப்பின் போதும் சரி, அவரால் இந்த வீட்டுக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. விக்ரம் திவ்யாவின் பெயரைச் சொல்ல, பதிலுக்கு விக்ரமின் பெயரைச் சொன்ன திவ்யா, வழக்கம் போல் மூச்சு விடாமல் அதற்கு காரணங்களை அடுக்க ‘போதும்மா. காது ரொம்பிடுச்சு” என்று விசே சைகை காட்ட திவ்யாவே அடக்க முடியாமல் சிரித்து விட்டார். BB Tamil 9 Day 83 அரோவின் பெயரைச் சொன்ன கம்மு, சந்தடி சாக்கில் “துஷார் வெளியே போனதுக்கு அரோ காரணம்” என்கிற பழைய பழியை மீண்டும் தூக்கி வந்து போட்டார். “இந்தக் குற்றச்சாட்டை இன்னமும் எத்தனை நாளுக்கு சொல்லப் போறீங்க?” என்று விசே ஏற்கெனவே சொல்லியும் கம்மு மாறவில்லை. “துஷார் வெளியேற்றத்திற்கு அரோரா காரணம் கிடையாது” என்று தெள்ளத் தெளிவாக விசே சொல்ல, அரோவிற்கு கண்ணீர் பெருகியது. “இந்தக் காரணத்தைச் வெச்சு நீங்களும் அழுதுட்டே இருந்தா உங்க கேம் பாதிக்கும்” என்ற அரோவிற்கும் வார்னிங் தந்தார் விசே. எவிக்ஷன் நேரம். கம்முவைத் தவிர மற்ற அனைவரும் பலி பீடத்தில் இருந்தார்கள். “பாரு போகக்கூடாது’ என்று சொல்லி அனைவருக்கும் விசித்திர அதிர்ச்சியைத் தந்தார் கம்மு. அதுவரை கோபத்தைக் கொட்டிய பாருவும், சிரித்துக் கொண்டே வந்து பக்கத்தில் அமர்ந்தார். (என்ன கொடுமை சரவணன்?!) அமித் எவிக்ஷன் - பாரு, சான்ட்ராவின் சகவாசம் காரணமா? விசே எவிக்ஷன் கார்டை நீட்ட அதில் ‘அமித்’ என்று இருந்தது. ‘கிச்சன் ஏரியா ஏன் சுத்தமாக இல்லை?’ என்கிற விசாரணையில் “என் தப்புதான் சார்” என்று சரணாகதி அடைந்தார் அமித். “அப்படியா.. உக்காருங்க” என்று விசேவின் முகத்தில் அப்போதே ஒரு மாற்றம் தெரிந்தது. எவிக்ட் ஆகி போகப் போகிற ஆசாமியை ஏன் வறுத்தெடுக்க வேண்டும் என்று விட்டு விட்டார் போலிருக்கிறது. எதிர்மறை குணாதிசயம் இல்லாத நல்ல போட்டியாளர்களுள் ஒருவர் அமித். இனிமையாகப் பழகுபவர். பாட்டு பாடுபவர். ஆனால் எப்போது சான்ட்ரா மற்றும் பாரு பக்கத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தாரோ, அப்போது பிடித்தது சனி. தாமரை இலை நீர் மாதிரி பிக் பாஸ் வீட்டில் இருந்ததும், அவரது வெளியேற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். BB Tamil 9 Day 83 அமித்திற்கு சண்டையும் ஒழுங்காக போடத் தெரியாது. சற்று கோபப்பட்டு விட்டு சில நிமிடங்களுக்குள் தடாலென்று ‘ஸாரி’ சொல்லி விடுவார். அதை வைத்து மைலேஜ் தேற்றத் தெரியாது. பிறகென்ன? இவரிடம் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?! (பாரு ரசிகர்கள் இதை உடனே ஒப்புக் கொள்வார்கள்!) அமித் வெளியேற்றத்திற்கு சான்ட்ரா குலுங்கி குலுங்கி அழுததுதான் ஆச்சரியம். அமித்தை நாமினேட் செய்தவர்களில் ஒருவர் சான்ட்ரா. ஒருவேளை குற்றவுணர்வில் அழுதாரோ?! அமித் எவிக்ஷனுக்குப் பிறகு மீண்டும் பாருவும் கம்முவும் தங்களின் காரசார மோதலை ஆரம்பித்தார்கள். “ஏண்டா.. எல்லாத்தையும் வீக்கெண்ட் ஷோல சொல்றே?” என்று பாரு ஆரம்பிக்க மீண்டும் கம்மு கோபமாக.. அடப் போங்கப்பா.. போரடிக்குது! பாரு - கம்ருதீனுக்கு இடையில் நிகழும் இந்த டிராமா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கொழும்பு மாநகர சபை தொடர்பில் கேலி பல்தசார் முக்கிய தீர்மானம்
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் பாதீட்டுத் திட்டம் தயாரிப்பதற்கான செயல்முறையை கொழும்பு முதல்வர் விராய் கேலி பல்தசார் அறிவித்துள்ளார். கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதி இரண்டாவது வாசிப்புக்கு மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சபையின் செயல்திறன் குறித்த பாதீடு வெறும் புள்ளிவிபரங்களின் தொகுப்பு மட்டுமல்ல, சபையின் செயல்திறனைப் பிரதிபலிக்கும் ஆவணம் மற்றும் வரவிருக்கும் ஆண்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் […]
காங்கேசன்துறை கடற்கரையில் ”அலையோடு உறவாடு …“
வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ” அலையோடு உறவாடு … ” என்ற தொனி பொருளில், உணவு திருவிழா ஆரம்பமாகியுள்ளது. காங்கேசன்துறை கடற்கரையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகி இரவு வரையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் , பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் உற்பத்தி.பொருள் விற்பனை, பண்பாட்டு நிகழ்வுகள், சிறுவர்களுக்கான்மகிழ்வூட்டும் விளையாட்டுக்கள் மற்றும் இன்னிசை இசைக்கச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
Financial New year resolution: இந்த ஆண்டு நீங்கள் எடுக்க வேண்டிய நிதி முடிவுகள்? IPS Finance - 396
டிமார்ட், லுலுவை தொடர்ந்து தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும் பிரபல நிறுவனம்!
டிமார்ட், லுலுவை தொடர்ந்து சென்னையில் காலடி எடுத்து வைக்கும் மிகப்பிரபல நிறுவனம் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
UGC NET 2025 அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வர்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி? நேரடி லிங்க்
யுஜிசி நெட் டிசம்பர் 2025 தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
புதுசா கார் வாங்கப் போறீங்களா? புத்தாண்டில் எகிறும் கார் விலை.. ரினால்ட் அறிவிப்பு!
ஜனவரி மாதம் முதல் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இனி கார் வாங்கும் மக்களுக்கு அதிகம் செலவாகும்.
பாட்டால் அதிரவைத்த பால் டப்பா; பா.ரஞ்சித்தின் ஆட்டம் | மார்கழியில் மக்களிசை 2-ம் நாள் | Album
இது திராவிடர்கள் vs தமிழர்கள் சண்டை: ஆவேசமான சீமான்- திருமாவிற்கும், எனக்கும் என்ன பிரச்சினை!
விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட சீமான், திராவிடர்கள் மற்றும் தமிழர்கள் இடையிலான மோதல் போக்கு குறித்து சரமாரியாக பதிலளித்தார். மேலும் திருமாவளவனுக்கும் தனக்கும் பிரச்சினை இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
உதவியாளரின் தூக்கம் கெட்டுடக் கூடாதுனு சுவர் ஏறிக் குதித்த தங்க மனசுக்காரர் கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் நினைவுநாளான இன்று அவரின் சமாதிக்கு சென்று பலரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். மேலும் விஜயகாந்த் பற்றி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தவெகவை புகழ்ந்து தள்ளும் காங்கிரஸ்...கடும் அதிருப்தியில் திமுக?
தவெகவை புகழ்ந்து தள்ளும் காங்கிரஸ். இதன் காரணமாக கடும் அதிருப்தியில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள்.. அரச அச்சுத் துறை வெளியிட்ட தகவல்
2026ஆம் ஆண்டு ஆரம்பமாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், அந்த ஆண்டிற்கான நாட்காட்டி அரச அச்சுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டில் 26 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகபட்ச விடுமுறை நாட்கள், அதாவது 4 விடுமுறை நாட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முக்கிய விடுமுறைகள்.. அதேவேளை, 2026 ஆம் ஆண்டின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகும். மேலும், வெசாக் பௌர்ணமி […]
தாயிற்காக விமானி ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல்.. அதிகம் பகிரப்படும் காணொளி
விமானப் பயணத்தின் போது தனது தாய்க்கு இளம் விமானி ஒருவர் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான செயல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. விமானப் பயணம் என்பது பலருக்கு ஒரு சிறப்பு அனுபவம், அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளி பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது எனலாம். அஸ்வத் புஷ்பா என்ற விமானி, தனது தாயை விமானத்தில் முதல் முறையாக அழைத்து சென்ற விதமானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. முதல் பயணம் அஸ்வத் புஷ்பா, […]
அரச பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்.. பெற்றோர்கள் அவதானம்!
அரசப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து மதிப்புள்ள சிற்றுண்டிகளையே அதிகம் சாப்பிட விரும்புவதாக தெரியவந்துள்ளது. நிறுவனம் ஒன்று, இலங்கையில் நகர்ப்புற இளம் பருவத்தினரிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்குத் தேவையான உணவு நுகர்வு முறைகள், விருப்பங்கள், தடைகள் மற்றும் செயல்பாடுகள் என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளை சேர்ந்த 463 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் […]
அமித் வெளியேற்றம்: டைட்டில் வின்னர் ஆவார் என நம்பப்பட்ட பெண்ணும் வெளியேற்றம்
பிக் பாஸ் 9 வீட்டில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் வைத்து கனி அக்கா மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்களாம். இதையடுத்து கனியின் ஆதரவாளர்கள் பிக் பாஸை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் கண்முன் கணவன் செய்த கொடூர செயல் –துடிதுடித்த மனைவி
மனைவி மீது கணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்தையில் சந்தேகம் தெலங்கானா, ஹுஜூராபாத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் – திரிவேணி தம்பதி. 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு குழந்தைகளும் உள்ளனர். வெங்கடேஷ், தினமும் மது அருந்தி வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியும் இருக்கிறார். எனவே வறுமையால் மனைவி ஹோட்டல் மற்றும் வீடுகளுக்கு சென்று வேலை […]
டக்ளசை 90 நாள்கள் தடுத்து வைக்க அனுமதி கோரிய சிஐடி –நிராகரித்த அமைச்சர்
ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை 90 நாள்கள் தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்து விட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்90 நாள்கள் தடுப்புக்காவல் உத்தரவைக் கோரியிருந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுவே 450 மில்லியன் டொலர் நிதியை கையாளும்
பேரிடருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகளுக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியை கையாளுவதற்காக, சிறிலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த நிதியைக் கையாளும் பொறுப்பு இந்தக் குழுவிடமே ஒப்படைக்கப்படும் என்று சிறிலங்காவின் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு திட்டங்கள், இந்திய கடன் திட்டத்தின்
யாழில். மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் , மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக இளைஞர்கள் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், குறித்த பெண்ணை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். அதேவேளை , போதை மாத்திரைகளுடன் இருவரும் , மாவா பாக்குடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த் 2ஆம் ஆண்டு குருபூஜை… கேப்டன் இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆனது. இதையொட்டி பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

22 C