SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

அமெரிக்காவில் 300 நகரங்களில் 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம்

வாஷிங்டன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். உரிய ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டுகாரர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதற்காக குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம் (ஐஸ்) என்ற புதிய துறையை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

அதிரடி 2 Feb 2026 1:30 am

அதிர்ச்சித் தகவல்: இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் அதிகரிப்பு!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தரவு அறிக்கை, நம் சமூகத்தின்… The post அதிர்ச்சித் தகவல்: இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் அதிகரிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Feb 2026 1:21 am

விண்வெளியில் ‘சூப்பர் கம்ப்யூட்டர்’சாம்ராஜ்யம்: மஸ்க்கின் பிரம்மாண்ட திட்டம்! 

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு அமெரிக்க மத்திய… The post விண்வெளியில் ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ சாம்ராஜ்யம்: மஸ்க்கின் பிரம்மாண்ட திட்டம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Feb 2026 12:52 am

யாழில் உலக கிண்ணம்!

ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து… The post யாழில் உலக கிண்ணம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Feb 2026 12:31 am

ஒரே உத்தரவில் அரசியல் முடக்கம் ; மேற்கு ஆப்பிரிக்க இராணுவ அரசின் அதிரடி

மேற்கு ஆப்பிரிக்காவில் புர்க்கினா பெசோ நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அந்நாட்டு இராணுவ அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய கெப்டன் இப்ராகிம் ட்ராரோ தலைமையிலான அரசாங்கம், நாட்டில் நிலவும் பிரிவினைகளைத் தவிர்க்கவும், நாட்டை மறுசீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் எமில் ஜெர்போ கூறுகையில், “நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மக்களிடையே ஒற்றுமையின்மையை வளர்ப்பதுடன், நாட்டின் […]

அதிரடி 2 Feb 2026 12:30 am

கிழக்கும் கவனிக்கப்பட வேண்டும்

மொஹமட் பாதுஷா வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்களில் வெளிநாடுகள் கண்வைக்கத் தொடங்கி நெடுங்காலமாயிற்று. இதற்கிடையில் வடக்கில் இதற்கு மக்களின் எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. அல்லது மக்கள் மிகக் கவனமாக ஒவ்வொரு நகர்வையும் உற்றுநோக்கி வருகின்றனர். கிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகம், எண்ணெய்க் குதங்கள், சுற்றுலா சார் வளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் குறி மேலோங்கியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம் தான். ஆனால் மக்கள் பெரிதாக இதில் அக்கறை கொண்டாக தெரியவில்லை. இந்தப் பின்னணியில் வடக்கு போன்ற சில மாகாணங்களுக்கு […]

அதிரடி 2 Feb 2026 12:30 am

தவெக–காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிறதா? நிகழ்ச்சியில் வார்த்தையை விட்ட நாஞ்சில் - திமுகவுக்கு சிக்கல்!

தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சமயம் 1 Feb 2026 10:31 pm

காங்கோ சுரங்க விபத்து: 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு

ஆப்பிரிக்கா நாடான காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கோல்டன் தாது அகழ்ந்தெடுக்கப்படும் சுரங்கங்கள் இடிந்து விழுந்தன. வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள ருபாயா பகுதியில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இக்கோர விபத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உயிரிழந்ததாக அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘எம்23’ கிளா்ச்சிக் குழுவினா் தெரிவித்தனா். ‘தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்; பலா் மண்ணுக்குள் புதையுண்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று […]

அதிரடி 1 Feb 2026 10:30 pm

நேருக்கு நேர் மோதிய இரு கார்கள் ; கோர விபத்தில் ஐவர் காயம்

அநுராதபுரம் கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை அநுராதபுரம் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் நால்வர் பயணித்த காரும், களனியிலிருந்து அநுராதபுரத்திற்கு வழிபாட்டிற்காகச் ஒரே குடும்பத்தினர் பயணித்த கார் ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று […]

அதிரடி 1 Feb 2026 10:30 pm

மறவன்புல சச்சிதானந்தத்திற்கு பகிரங்க எச்சரிக்கை!

தமிழ் மக்களுக்குள் மதப்பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என சிவசேனை மறவன்புல சச்சிதானந்தத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் எம்.ஏ.சுமந்திரனின் உதவியாளருமான சுகிர்தன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்த மண்டப திறப்பு விழா நிகழ்வின் போதே அத்தகைய அறிவிப்பினை சுகிர்தன் வெளியிட்டுள்ளார்.

பதிவு 1 Feb 2026 10:24 pm

நல்லூர் : வெளியே கப்!

நல்லூர் ஆலய சூழலிற்கு எடுத்து வரப்பட்ட வெற்றிக்கிண்ணம் ஆலய நிர்வாக அறிவிப்பின் பிரகாரம் நகர்த்தப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தை குறிப்பாக முன் பக்கத்தை சுற்றியுள்ள வேலிக்குள் வாகனங்கள் கொண்டு செல்லவோ , செருப்புடன் செல்லவோ அனுமதியில்லை. விளம்பர நோக்கங்களுடன் , பாடல்கள் , திருமண சூட்டிங் என சூட்டிங்குகளுக்கு அனுமதியில்லை. ஆலயத்திற்கு முன்பாக நின்று படங்கள் எடுத்து கொள்ள முடியும். அதனை ஒரு சூட்டிங்கா நடத்த முடியாது. இன்றைக்கு தைப்பூசம் , முருகன் வெளிவீதியுலா வருவதற்கு தயார். உள்ளே வசந்தமண்டப பூஜை முடிந்து , முருகனை தூக்க ரெடி. அந்த நேரம் கப்புடன் , ஆலய வேலிக்குள் சென்று கப்பை வைத்து சூட்டிங் செய்ய தயார். உள்ளே படம் எடுக்க தொடங்க சிவப்பு சால்வைக்காரர்கள் பாய்ந்து வருவார்கள் என நல்லூரை பற்றி தெரிந்த கமரா டீம் முழுக்க வேலிக்கு வெளியே , எதிர்பார்த்தது போல நடந்தது. பிறகு கப்பை தூக்கி கொண்டு வேலிக்கு வெளியே வந்து வைத்து ஆறுதலாக படம் எடுத்தாங்க , யாழ்ப்பாணத்திற்கு கப்பை எடுத்து வந்த ஏற்பாட்டு குழு ஆலய நடைமுறைகள் குறித்து தெளிவு படுத்தி , அந்த குழப்பத்தை தவிர்த்து இருக்கலாம்என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பதிவு 1 Feb 2026 10:01 pm

யாருடன் கூட்டணி? ராமதாஸ் தனித்து போட்டியிட மாட்டார்.. - ரகசியத்தை போட்டுடைத்த ஜி.கே. மணி!

ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும், திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்ததால் கைவிட்டார். இதனால் ராமதாஸ் யாருடன் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக தனித்துப் போட்டியிடாது என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சமயம் 1 Feb 2026 9:37 pm

பாஜகவின் கிளைதான் அதிமுக.. கருப்பு, சிவப்பு, நீலம்தான் நிலைபெற வேண்டும்.. மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டில் எப்படியும் தோல்வி உறுதி என்பதால், பாஜக அரசு இந்த பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சமயம் 1 Feb 2026 9:32 pm

பாகிஸ்தானில் 12 இடங்களில் தாக்குதல் ; 70 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாதில் நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி அங்கு பல ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. பலுாச் விடுதலைப்படை என்ற பெயரில் பயங்கரவாதக் குழு அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டா, நுஷ்கி, மஸ்துங், மக்ரான், சமான், நசீராபாத் உட்பட 12 இடங்களில், பி.எல்.ஏ., பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். ‘ஆப்பரேஷன் ஹெரோப்’ என்ற பெயரில், போலீஸ் ஸ்டேஷன்கள், பொலிஸ் வாகனங்கள், சிறைகள் […]

அதிரடி 1 Feb 2026 9:30 pm

இலங்கைக்கு:2000 கோடி இலங்கை ரூபா!

சீனாவின் கரங்களில் வீழ்ந்துவரும் இலங்கைக்கு நிதிகளை அள்ளிவீசி தனது பக்கம் ஈர்க்க இந்தியா தொடர்ந்தும் முயன்றுவருகின்றது. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக்கு நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாயை இந்தியா ஒதுக்கியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயை விட அதிகமாகும்.

பதிவு 1 Feb 2026 8:56 pm

அமெரிக்காவில் தொழிலாளர் பற்றாக்குறை; 65,000 பேருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், பருவகால பணிகளுக்காக வழங்கப்படும் ‘H-2B’ விசாக்களின் எண்ணிக்கையை 65,000 இனால் அதிகரிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கட்டுமானம், விருந்தோம்பல் , நில அலங்காரம் மற்றும் கடல் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் போதிய அமெரிக்க பணியாளர்கள் கிடைக்காததால், பல நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. உத்தியோகபூர்வ அறிவிப்பு இதனைத் தவிர்ப்பதற்காகவே இந்த மேலதிக விசாக்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் வழங்கப்படும் 66,000 விசாக்களுடன், […]

அதிரடி 1 Feb 2026 8:30 pm

யாழில் ஸ்ரீதரன் எம்.பியின் வாகனத்தில் விபத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி ; நீதிமன்றின் உத்தரவு

யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல சாரதிக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வழக்கு விசாரணை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தநிலையில் விபத்தின் போது காயமடைந்த 44 வயது தந்தையும், அவரின் 10 வயது […]

அதிரடி 1 Feb 2026 8:30 pm

தவெக கொண்டாட்டம்.. நாளை என்ன நாள் தெரியுமா? கட்சி அலுவலகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்!

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நாளை (பிப்ரவரி 2 ஆம் தேதி) காலை 11 மணிக்கு மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது.

சமயம் 1 Feb 2026 7:57 pm

இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது! - பூவுலகின் நண்பர்கள்

2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முக்கிய அறிவுப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது எனவும் கனிமவளச் சுரண்டலுக்கு சலுகைகள் கொடுத்திருப்பதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையில், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முக்கிய அறிவுப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. “இந்தியாவில் காலநிலை மாற்றத் தாக்கங்களைத் தடுப்பதற்கான நிதியில் 83% மற்றும் தகவமைத்துக் கொள்வதற்கான நிதியில் 98% உள்நாட்டில் இருந்தே பெறப்படுவதாகவும் கிடைக்கக்கூடிய நிதி மற்றும் தேவைகளுக்கு இடையேயான இடைவெளிகள் நீடிக்கின்றன, உள்நாட்டு வளங்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது” எனப் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. காலநிலை நிதி குறித்துப் பொருளாதார ஆய்வறிக்கையில் சற்று விரிவாகப் பேசப்பட்டிருந்ததால் நிச்ச்யமாக நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்ச அளவில் ஏதாவது அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு அறிவிப்பும் வரவில்லை என்பது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை பா.ஜ.க. அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. மேலும் இந்நிதிநிலை அறிக்கையில் மிகவும் ஆபத்தான அம்சம் என்னவெனில் இந்தியாவின் இயற்கை வளங்களைப் பெரு நிறுவனங்கள் சுரண்டிக்கொள்ள பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதுதான். ஏற்கெனவே அணுக்கனிமம் முதல் அரியவகை முக்கியக் கனிமங்கள் வரை அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் அகழ்ந்தெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கனிமங்கள் கண்டறியப்பட்ட இடங்களை ஏலமிடும் உரிமையும் ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசிடம் சென்றுவிட்டது. தமிழ்நாடு அரசு இதனை ஏற்கெனவே எதிர்த்துள்ளது. அரியவகைக் கனிமங்களை அகழ்ந்தெடுப்பது, பிரித்தெடுத்தல், ஆய்வுகள், உற்பத்தி மற்றும் அதுசார்ந்த வேலைகளை ஊக்குவிக்கும் வகையில் தாதுக்கள் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் அரியவகைக் கனிமங்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அணுவுலை மின்சார உற்பத்திக்குத் தேவையான பொருட்கள், சில குறிப்பிட்ட அணுமின் நிலையங்களை நிறுவுவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்கையில் அவற்றுக்கான அடிப்படைச் சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசே நினைத்தாலும் கூட இதைவிட சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது. மொத்தத்தில் இந்நிதிநிலை அறிக்கை பொதுமக்கள் நலனையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் எவ்வகையிலும் மேம்படுத்துவதாக இல்லை. மாறாகப் பெரு நிறுவனங்கள் மட்டுமே பலனடையக்கூடிய வகையில் அமைந்துள்ளது. எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

விகடன் 1 Feb 2026 7:57 pm

டியர் ஸ்டூடண்ட்ஸ் ரிலீஸ் தேதி: நயன்தாரா –நிவின் பாலி அதிரடி! முக்கிய அப்டேட்!

நிவின் பாலி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி, OTT தளம் மற்றும் ட்ரைலர் குறித்த விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Feb 2026 7:55 pm

அனைத்து ஐரோப்பிய ஒன்றிய இராணுவங்களையும் பயங்கரவாதக் குழுக்களாக அறிவித்தது ஈரான்

ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய முடிவுக்கு தெஹ்ரான் ஒரு குறியீட்டு எதிர் நடவடிக்கையுடன் எதிர்வினையாற்றுகிறது, இதன் மூலம் ஈரானுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான அரசியல் மோதலை தீவிரப்படுத்துகிறது. நாடு தழுவிய போராட்டங்களை இரத்தக்களரியாக ஒடுக்கியதற்காக, நாட்டின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படையை பயங்கரவாதக் குழுவாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து இராணுவங்களையும் பயங்கரவாதக் குழுக்களாகக் கருதுவதாக ஈரான் கூறுகிறது. இஸ்லாமியக் குடியரசின் நாடாளுமன்ற சபாநாயகரும் முன்னாள் காவல்படைத் தளபதியுமான முகமது பாகர் கலிபாஃப் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதப் பெயர் அறிவிப்பை வெளியிட்டார். கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் படையை (IRGC) பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த பின்னர் இது வந்துள்ளது. தெஹ்ரானின் பதில், அடையாளமாக இருக்கும், 2019 சட்டத்தைப் பயன்படுத்தி, அந்த ஆண்டு அமெரிக்கா காவலரை பயங்கரவாதக் குழுவாக அறிவித்ததைத் தொடர்ந்து, மற்ற நாடுகளின் இராணுவ பயங்கரவாதக் குழுக்களை பரஸ்பரம் அறிவிக்கிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், அதன்படி IRGC-ஐ பட்டியலிட்ட உலகின் முதல் நாடு அமெரிக்காவாகும்.

பதிவு 1 Feb 2026 7:42 pm

ரஃபா கடவை பகுதியளவு மீண்டும் திறந்தது

காசா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லைக் கடவை சோதனை அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அந்தக் கடவை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டிருந்தது. மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பான இஸ்ரேலிய இராணுவப் பிரிவான COGAT, மக்களின் வரையறுக்கப்பட்ட நடமாட்டத்திற்கு மட்டுமேகடவை திறக்கப்படுவதாகக் கூறியது. பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், இது கடவையின் பைலட்ஓட்டம் என்றும், திங்கட்கிழமை பரந்த அளவில் மீண்டும் திறக்கப்படும் என்றும் அது தெளிவுபடுத்தியது. இரண்டு அறிக்கைகளிலும் சர்வதேச உதவி அதிகரிப்பதற்கான எந்த திட்டங்களும் குறிப்பிடப்படவில்லை. காசாவின் அன்றாட விவகாரங்களை நிர்வகிக்கும் புதிய பாலஸ்தீனக் குழுவின் தலைவரும், திங்கள்கிழமை முதல் இரு திசைகளிலும் கடக்கும் பாதை திறக்கப்படும் என்றார்.

பதிவு 1 Feb 2026 7:34 pm

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் காசாவில் 29 பேர் பலி

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சு நடந்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்டோபர் முதல் நடந்த போர், கடந்தாண்டு அக்ரோபர் 10ல், அமெரிக்கா முன்மொழிந்த சமாதான திட்டத்தின் வாயிலாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. முழுமையான போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரிடையே பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று, […]

அதிரடி 1 Feb 2026 7:30 pm

போகோ ஹராம் தளபதியைக் கொன்றதாக நைஜீரிய இராணுவம்

வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் இரவு நேர நடவடிக்கையின் போது போகோ ஹராம் இயக்கத்தின் உயர்மட்ட தளபதி மற்றும் 10 போராளிகளைக் கொன்றதாக நைஜீரிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட தலைவரை அபு காலித் என இராணுவம் அடையாளம் கண்டுள்ளது, மேலும் அவர் சம்பிசா காட்டில் போகோ ஹராமின் இரண்டாவது தளபதி என்றும் கூறினார். அபு காலித் பயங்கரவாத வரிசைமுறையில் ஒரு முக்கிய நபராக இருந்தார். சம்பிசா அச்சில் நடவடிக்கைகள் மற்றும் தளவாடங்களை ஒருங்கிணைத்தார் என்று இராணுவ அறிக்கை கூறியது. அதன் சொந்த துருப்புக்களிடையே எந்த உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை என்றும், வடகிழக்கு பிராந்தியத்தில் சம்பிசா காடு, மந்தாரா மலைகள், திம்பக்டு முக்கோணம் மற்றும் போகோ ஹராம் மற்றும் இஸ்லாமிய அரசு மேற்கு ஆப்பிரிக்கா மாகாணம் (ISWAP) ஆகியவற்றின் பிற அறியப்பட்ட மறைவிடங்கள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அது கூறியது. நைஜீரியா போகோ ஹராம் மற்றும் அதன் பிளவுபட்ட குழுவான ISWAP உடன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போராடி வருகிறது, இது பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று லேக் சாட் பகுதி முழுவதும் மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயர்ந்துள்ளது.

பதிவு 1 Feb 2026 7:16 pm

வலப்பனையில் பெரும் விபத்தைத் தவிர்ப்பதற்காக ஓட்டுநர்: 40 பயணிகள் உயிர் பிழைத்தனர்!!

வலப்பனை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவைச் சேர்ந்த பேருந்து ஒன்று, நில்தண்டாஹின்ன-தெரிபஹா சாலையில் உள்ள ராசிங்கொல்ல முதல் வளைவுக்கு அருகில் இன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. வாலப்பேன் டிப்போவின் செயல்பாட்டு மேலாளர், வாகனம் விளிம்பைத் தாண்டிச் செல்லவிருந்தபோது, ​​ஹேண்ட் பிரேக்கைப் பயன்படுத்தி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முடிந்தது என்பதை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம், டிட்வா சூறாவளியின் போது நிலச்சரிவுகளால் சேதமடைந்த ஒரு சாலையில் நிகழ்ந்தது, இது செங்குத்தான சரிவுகள் மற்றும் கூர்மையான திருப்பங்களால் வகைப்படுத்தப்படுகிறது. வாகனம் மின்சாரத்தை இழந்து பாறையை நோக்கிச் செல்லத் தொடங்குவதற்கு முன்பு, ஒரு பெரிய சத்தம் கேட்டதாக ஓட்டுநர், 48 வயதான சமன் திலகசிறி தெரிவித்தார். நான் உடனடியாக ஹேண்ட்பிரேக்கைப் பயன்படுத்தி பேருந்தை நிறுத்தினேன் என்று அவர் கூறினார். விபத்து நடந்த இடத்திலிருந்து 50 அடி கீழே ரூபாஹா சாலை தெரிந்தது. இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நேரத்தில் விமானத்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். பின்னர் அது உடைந்த உலகளாவிய இணைப்பு என அடையாளம் காணப்பட்டது. டிப்போவில் 15 ஆண்டுகள் சேவையாற்றிய அனுபவமிக்க ஓட்டுநரான திலகசிறி, பாதையின் ஆபத்தான நிலைமைகளை எடுத்துக்காட்டினார், சமீபத்திய இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகு சாலை மேற்பரப்புகள் மோசமாக சரிசெய்யப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டார். பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பிறகு, உடைந்த மூட்டை மாற்றவும், பேருந்தை மீட்கவும் டிப்போவிலிருந்து தொழில்நுட்பக் குழுக்கள் வந்தன. ஓட்டுநரின் தொழில்முறை திறமை மற்றும் அமைதியைப் பாராட்டிய செயல்பாட்டு மேலாளர், அவரது விரைவான நடவடிக்கைகள் ஒரு பெரிய அளவிலான உயிரிழப்பு நிகழ்வைத் தடுத்ததாகக் கூறினார்.

பதிவு 1 Feb 2026 7:09 pm

நயன்தாரா பாலகிருஷ்ணா NBK111: மீண்டும் இணையும் மாஸ் ஜோடி! அதிரடி அப்டேட்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவின் 111-வது படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களின் அதிரடி கூட்டணி குறித்த சமீபத்திய செய்திகள்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Feb 2026 7:05 pm

அமெரிக்கா ஒரு போரைத் தொடங்கினால்? அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும் - ஈரான்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ஏதேனும் இராணுவ நடவடிக்கை அல்லது போரை தொடங்கினால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலாக மட்டும் நின்றுவிடாது, மாறாக முழு பிராந்தியத்தையும் சூழ்ந்துள்ள பிராந்தியப் போராக பரவும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேற்கத்திய அழுத்தத்தின் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை எதிர்கொண்டு, ஈரான் தனது பாதுகாப்பிற்காக அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார் என்று வெளிநாட்டு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 1 Feb 2026 6:53 pm

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ; யாழ்.பல்கலை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட தகவல்

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் மழை மத்திய, வட மத்திய, வட மேல், ஊவா, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் எதிர்வரும் 04ஆம் திகதி […]

அதிரடி 1 Feb 2026 6:46 pm

தமிழர் பகுதியில் ஆசிரியரின் மரணத்தால் பெரும் சோகம் ; நடு வீதியில் துடிதுடித்து பிரிந்த உயிர்

திருகோணலை – கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சாரதி சரண் இன்று பகல் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில் வான் எல பகுதியில் இருந்து பெட்டியுடன் அதிவேகமாக வந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கிண்ணியா இடிமனைப் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பாடசாலை […]

அதிரடி 1 Feb 2026 6:34 pm

330 Young Minds Compete at National Finals of SIP Arithmetic Genius Contest 2025 in Chennai

TheNational Finals of the 10th SIP Arithmetic Genius Contest (AGC) 2025, organized by SIP Academy India Pvt. Ltd., concluded successfully

சென்னைஓன்லைனி 1 Feb 2026 6:31 pm

யஷ் டாக்ஸிக் டீசர் சாதனை: 300 மில்லியன் பார்வைகள்! ‘டாடி ஈஸ் ஹோம்’மாஸ்!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் டீசர் 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து உலகளவில் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Feb 2026 6:27 pm

மை லார்ட் ரிலீஸ் அப்டேட்: சசிகுமார் –ராஜு முருகன் கூட்டணியின் அதிரடி வருகை!

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள 'மை லார்ட்' திரைப்படம் பிப்ரவரி 13-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் நடிகர்கள், இசை மற்றும் கதைக்களம் குறித்த முழு விவரம் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Feb 2026 6:15 pm

மத்திய பட்ஜெட் 2026: பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டுவார்கள்.. திருமாவளவன் காட்டம்!

நமிழ்நாட்டை வஞ்சிக்கும் பட்ஜெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட் இது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

சமயம் 1 Feb 2026 5:53 pm

மீசைய முறுக்கு 2 அப்டேட்: ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மாஸ் அறிவிப்பு!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படமான 'மீசைய முறுக்கு' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 1 Feb 2026 5:45 pm

தேமுதிகவிற்கு இன்னும் செல்வாக்கு இருக்கா… 2026 தேர்தலில் கூட்டணி அமைக்க இழுபறியாவது ஏன்?

பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவின் வலிமை குறித்த கேள்வி பலரிடம் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த சூழலில் கூட்டணி அமைப்பதில் இன்னும் ஏன் இழுபறியாக செல்கிறது? தேமுதிக எதிர்பார்ப்பது என்ன? அதை திராவிட கட்சிகள் செய்து தருமா? என விரிவாக அலசலாம்.

சமயம் 1 Feb 2026 5:34 pm

லஞ்சம் வாங்கும்போது கைது…குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கே.பி.அக்ரஹாரா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜு. இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அக்பர் என்பவரை மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ரூ.5 லட்சம் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். இதன்படி கடந்த 24-ந்தேதி அக்பர் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை விரைவில் கொடுத்துவிடுவதாக கோவிந்தராஜுவிடம் கூறிய அக்பர், இது தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து லோக் ஆயுக்தா போலீசார், கோவிந்தராஜுவை கையும், களவுமாக பிடிக்க […]

அதிரடி 1 Feb 2026 5:30 pm

சென்னையை ஒன்றிணைத்த காவேரி மருத்துவமனை! –புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தில் 7050 பேர்பங்கேற்பு

காவேரி மருத்துவமனை, 4-வது பதிப்பாக நடத்திய ‘K10K’ புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சமூக நலன் மீதான தங்களது ஆதரவையும், அக்கறையையும் வெளிப்படுத்தினர். புற்றுநோய்

சென்னைஓன்லைனி 1 Feb 2026 5:07 pm

‘Aazhikondan’– Debut Book Release by 16-Year-Old Young Author

The English book launch of “Aazhikondan – The Conqueror of Oceans (Part 1)” was held at the Tamil Virtual Academy,

சென்னைஓன்லைனி 1 Feb 2026 5:04 pm

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் முன்னெடுக்கப்பட்டது. போராட்ட களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 1 Feb 2026 5:00 pm

இணுவை கந்தனுக்கு பால் அபிஷேகம் –மாலை உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளவுள்ள ஆறுமுகத்தான்!

தைப்பூச தினத்தினைமுன்னிட்டு , இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் பால் குட பவனி இடம்பெற்று ஆறுமுக பெருமானுக்கு பால்… The post இணுவை கந்தனுக்கு பால் அபிஷேகம் – மாலை உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளவுள்ள ஆறுமுகத்தான்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 4:59 pm

Kauvery Hospital Brings Chennai Together for the 4th Edition of K10K Cancer Awareness Run

Chennai witnessed a strong show of community participation as thousands of runners came together for the 4th Edition of the

சென்னைஓன்லைனி 1 Feb 2026 4:59 pm

கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். அந்தச் சமயத்தில் கோயில் வளாகத்தில் ஆண் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுகால் கோயிலில் கண்ணகி தேவிதான் பகவதி அம்மனாகக் காட்சி அளிக்கிறார். பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பைத் திருடியதாகப் பொய்யாகத் திருட்டுப்பட்டம் சூட்டி கோவலன் கொலை செய்யப்பட்டார். கண்ணகி அநீதி இழைத்து தன் கணவனைக் கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தேவி. பாண்டிய மன்னனை வதம் செய்துவிட்டு சினம் தணியாமல் மதுரையில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறினார் கண்ணகி தேவி. கண்ணகி தரிசனம்: தமிழர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டிய கண்ணகிக் கோட்டம்! அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வத்தை ஆற்றுப்படுத்திக் குடியமர்த்திய திருத்தலம் ஆற்றுகால். ஆற்றுகாலில் பகவதி அம்மனாக மக்களுக்கு அருள்பளித்து வருகிறார். கண்ணகி தேவியைச் சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுகிறார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. ஆற்றுகால் பகவதி அம்மன் இந்த நிலையில் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலின் முன் பகுதியில் உலகிலேயே உயரமான கண்ணகி சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒற்றைச் சிலம்பை கையில் ஏந்தி கோபம் கொப்பளிக்க ஆவேசமாக நிற்கும் வடிவில் கண்ணகி சிலை அமைக்கப்பட உள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த ஆழிமலை சிவன் கோயிலில் நாட்டில் உயரமான கங்காதரர் சிற்பம் அமைத்த சிற்பி தேவதத்தன் கண்ணகி சிலையை அமைக்க உள்ளார். கங்காதரர் சிற்பம் 58 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 60 அடி உயரத்தில் கண்ணகி சிலை அமைக்கப்பட உள்ளது. கண்ணகி சென்ற பாதையில்... பசுமை நடையுடன் ஓர் இலக்கியப் பயணம்!

விகடன் 1 Feb 2026 4:53 pm

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சீனா எடுத்த புதிய முயற்சி!

கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நேரங்களில், அதிகாரபூர்வமாக கூடுதல் நெடுஞ்சாலை வழித்தடங்களை (extra highway lanes) திறந்து வாகனங்களைச்… The post போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சீனா எடுத்த புதிய முயற்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 4:52 pm

மத்திய பட்ஜெட் 2026: மதுரை, கோவை மெட்ரோ திட்டம் இடம்பெறாதது ஏமாற்றம்.. டிடிவி தினகரன் அறிக்கை!

துரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள், ஐஐடி கல்வி நிறுவனங்கள் போன்ற தமிழகத்திற்கென முக்கிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாமல் போனது ஏமாற்றத்தை அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

சமயம் 1 Feb 2026 4:49 pm

பட்ஜெட் 2026: 1 மணி 25 நிமிட உரை.. நிர்மலா சீதாராமன் அதிகம் சொன்ன வார்த்தை - தமிழ்நாடு கிடையாது!

2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதா ராமன் தாக்கல் செய்தார். சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 1 Feb 2026 4:37 pm

மத்திய பட்ஜெட் 2026: வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும்.. எடப்பாடி பழனிசாமி கருத்து!

நிதிநிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

சமயம் 1 Feb 2026 4:32 pm

நெதர்லாந்தில் இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல்;வயிற்றில் உதைத்த அதிகாரி ; கடும் கண்டனம்

நெதர்லாந்தில் இரு முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம் அங்கு பெரும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ள நிலையில் அந்நாட்டில் இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில், ஒரு காவல்துறை அதிகாரி சமீபத்தில் இரண்டு முஸ்லிம் பெண்களைத் தாக்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதைக் கண்டித்து, வியாழக்கிழமை அன்று “இனவெறி வன்முறைக்கு” எதிராக ஒரு போராட்டம் நடைபெற்றது. பெண்ணின் வயிற்றில் உதைத்த அதிகாரி அந்த அதிகாரி ஒரு பெண்ணை தடியால் தாக்கியதுடன், மற்றொரு பெண்ணின் வயிற்றில் உதைத்துள்ளார். உட்ரெக்ட்டில் […]

அதிரடி 1 Feb 2026 4:30 pm

மத்திய பட்ஜெட் 2026: ஏமாற்றம் அளிக்கிறது.. அரசு முன்வர வேண்டும்.. அன்புமணி வேண்டுகோள்!

மத்திய அரசின் நேரடி வரிவருவாயில் 41% மட்டும் தான் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

சமயம் 1 Feb 2026 4:14 pm

நியூட்டனின் மூன்றாம் விதியை அன்றே சொன்ன வள்ளுவர்: வவுனியாவில் சர்வதேச திருக்குறள் மாநாடு!

நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்துக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பொக்கிஷமாக திருக்குறள் விளங்குகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், ‘மனித மாண்பு’ எனும் தொனிப்பொருளிலான […]

அதிரடி 1 Feb 2026 4:02 pm

Union Budget 2026 : கல்வி, வேலைவாய்ப்பிற்கு உயர் நிலைக்குழு அறிவிப்பு; AI தொழில்நுட்பம் மீது முக்கிய கவனம் - மாறப்போவது என்ன?

கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் நிறுவனத்திற்கான உயர் அதிகாரம் கொண்ட நிலைக்குழு உருவாக்கப்படும் என மத்திய பட்ஜெட் 2026 இல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 1 Feb 2026 3:58 pm

குடும்பத் தலைவர் முதல் குழந்தைகள் வரை.. மிடில் கிளாஸ் மக்களுக்கு பட்ஜெட்டில் என்ன கிடைத்தது?

குடும்பத் தலைவர்கள், இல்லத்தரசிகள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் என இந்த பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன கிடைத்தது?

சமயம் 1 Feb 2026 3:52 pm

மத்திய பட்ஜெட் 2026: ரூ.53.5 லட்சம் கோடி செலவினம்.. பாஜக அண்ணாமலை கருத்து!

சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த நிதிநிலை அறிக்கையாக இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அமைந்து உள்ளதாக பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை கருத்து தெரிவித்து உள்ளார்.

சமயம் 1 Feb 2026 3:50 pm

Budget 2026: இனி 'இதற்கு'வரி இல்லை, குறையும் TCS, புதிய சட்டம் அமல்; வரி அறிவிப்புகள் என்னென்ன?

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி குறித்து வெளியாகி உள்ள முக்கிய அறிவிப்புகள்... > வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. > எளிய வருமான வரி விதிகளும், வருமான வரிப் படிவம் குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும். > வாகன விபத்துக் காப்பீட்டிற்குக் கிடைக்கும் இழப்பீட்டிற்கு இனி வருமான வரி கிடையாது . > திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து மார்ச் 31-ம் தேதி கடைசி தேதியாக நீட்டிக்கப்படுகிறது . இந்தத் திருத்தத்திற்குப் பெயரளவே கட்டணம் வசூலிக்கப்படும். வரி Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் - தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன? > வருமான வரி விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. > பேமென்ட் பணமாக அல்லாமல் பொருளாகக் கொடுக்கப்பட்டதற்கு , கணக்குப் புத்தகங்கள் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பது... TDS செலுத்தாதது போன்றவை கிரிமினல் குற்றங்களில் இருந்து விலக்கப்படுகிறது. அதற்கு இனி அபராதம் மட்டுமே . > வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும்போது இனி 2 சதவிகிதம் TCS கட்டினால் போதும். > கல்வி மற்றும் மருத்துவத்திற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு TCS 2 சதவிகிதம் மட்டுமே. Budget 2026: `வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை.!' - பட்ஜெட் உரை நிறைவு; பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! | Live

விகடன் 1 Feb 2026 3:49 pm

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பால்குடபவனி

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பால்குடபவனி இன்று(01) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பால்குடபவனி கே.கே.எஸ் வீதி ஊடாக இணுவில் கந்தசுவாமி கோவிலை வந்தடைந்து முருகப்பெருமானுக்கு பாலாபிசேகம் நடைபெற்றது. பல்குடபவனியை தொடர்ந்து நூற்றுக்கணக்கில் காவடிகளும் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தது.

அதிரடி 1 Feb 2026 3:49 pm

மத்திய பட்ஜெட் 2026: கண்ணதாசன் பாடலை நினைவூட்டிய கமல்.. என்ன பாட்டு தெரியுமா?

நிர்மலா சீதாராமன், இன்று (பிப்ரவரி 1 ஆம் தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மநீம தலைவர் கமல்ஹாசன், அது குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

சமயம் 1 Feb 2026 3:36 pm

இப்போ பிக் பாஸ்ல ரியல் வின்னர்ஸ் யாரும் வின்னர் ஆவதில்ல, ரெட் கார்டு கொடுத்துடுறாங்க: மாயா

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இரண்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட நிலையில் அது குறித்து முன்னாள் போட்டியாளரான மாயா கிருஷ்ணன் தைரியமாக விமர்சித்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

சமயம் 1 Feb 2026 3:31 pm

ஈரானில் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

ஈரானில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடி விபத்தில் அக்கட்டடத்தின் இரண்டு தளங்கள் சேதமடைந்ததில், ஒருவர் பலியதோடு,14 பேர் காயமடைந்தனர். மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு துறைமுக நகரமான பந்தர் அப்பாசில் நேற்று எட்டு மாடி குடியிருப்பு ஒன்றில் சக்தி வாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அக்கட்டடத்தின் இரு தளங்கள் சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த வாகனங்கள், கடைகளும் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; 14 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு […]

அதிரடி 1 Feb 2026 3:30 pm

மத்திய பட்ஜெட் 2026- எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?... முழுமையான விவரம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சில பொருட்களின் விலை குறையும் என கூறப்படுகிறது. அந்த பொருட்களின் விவரங்களை இங்கே காணலாம்.

சமயம் 1 Feb 2026 3:17 pm

திருவொற்றியூர் நெடுஞ்சாலை பெயர் மாற்றம்.. இனி என்ன பெயர் தெரியுமா? மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

சமயம் 1 Feb 2026 3:04 pm

வருமான வரி முதல் TDS வரை.. மத்திய பட்ஜெட்டில் வந்த வரி சார்ந்த அறிவிப்புகள்!

மத்திய பட்ஜெட்டில் நுகர்வொருக்கு வரிச் சலுகை வழங்கும் சில முக்கியமான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

சமயம் 1 Feb 2026 2:56 pm

மதுரை: 'என்ன என்ன ஐட்டங்களோ...' - களைகட்டிய ஞாயிற்றுக்கிழமை சந்தை! | Photo Album

மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்! - தளபதியை சீண்டும் மாணிக்கம் தாகூர்

விகடன் 1 Feb 2026 2:55 pm

உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு!

தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க… The post உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 2:44 pm

All Top Streams across World – Network18 Leads across on Budget Day 2026

On the much-anticipated Union Budget Day 2026, Network18 platforms, CNBC-AWAAZ, CNBC-TV18, News18 India and CNN-News18, featured among the top-viewed news streams, reinforcing the network’s leadership across business and general news genres.CNBC-AWAAZ decisively led digital live streams, outpacing key competitors by a wide margin.During the peak live window between 11:00 am and 12:40 pm, CNBC-AWAAZ emerged as the clear leader in digital viewership, registering a peak concurrency of 765.1K, followed closely by News18 India at 667.1K. CNBC TV18 followed with 581.3K, while CNN-News18 recorded a strong 362.0K.The network’s lead channels continued to maintain a decisive edge over competitors during the key Budget Day window.Among rival channels, Zee Business recorded a peak concurrency of 211.5K, while Aaj Tak saw 153.1K, and NDTV Profit registered 137.3K, underscoring the Network’s dominant presence across business and general news genres (Source: Databeings).The data clearly reflects the Network’s sustained leadership, with News18 India delivering 4.3x higher concurrency than Aaj Tak, CNBC-AWAAZ recording 3.5x the viewership of Zee Business, and CNBCTV 18 achieving 4.24x higher concurrency than NDTV Profit. CNN-News18 further strengthened the Network’s lead, clocking 4.95x that of India Today, reaffirming its strong audience connect during critical news moments.The strong performance highlights Network18’s strength in delivering sharp, real-time economic coverage, expert-led analysis, and audience-first explainers.With seamless integration across TV, digital, and social platforms, Network18 once again demonstrated its ability to command audience attention during high-impact national moments, cementing its position as the go-to destination for credible, and timely news on India’s most important fiscal event.

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Feb 2026 2:42 pm

Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் - தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. 2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களுக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகி உள்ளன என்பதைப் பார்ப்போம். தமிழ்நாடு Budget 2026: `வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை.!' - பட்ஜெட் உரை நிறைவு; பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! | Live 1. தமிழ்நாடு > 2025-ம் ஆண்டு, அரிய பூமி நிரந்தர காந்தங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ், கனிம வளங்கள் மிகுந்த மாநிலங்களான ஒடிசா, கேரளா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாட்டில் 'அரிய கனிமவள வழித்தடங்கள்' நிறுவப்படும். > மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பொதிகை மலையில் மலைப்பாதைகள் அமைக்கப்படும். > தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளைப் பார்வையிடும் பாதைகள் அமைக்கப்படும். > ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் பகுதிகளில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும். > ஐதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும். 2. கேரளா > கேரளாவில் 'அரிய கனிமவள வழித்தடங்கள்' நிறுவப்படும். > அங்கு ஆமைப்பாதை அமைக்கப்படும். > தேங்காய் உற்பத்தியில் போட்டித்தன்மையை மேலும் அதிகரிக்க, பல்வேறு தலையீடுகள் மூலம் உற்பத்தியை அதிகரிக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் 'தேங்காய் ஊக்குவிப்புத் திட்டம்'. இதன் மூலம் பழைய, காய்க்காத மரங்கள் மாற்றப்படும். கேரளா Union Budget: 2019 டு 2026... நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த கால நேரம்! ஒரு டைம்லைன் 3. மேற்கு வங்கம் > மேற்கு வங்காளத்தின் டான்குனியிலிருந்து குஜராத்தின் சூரத் வரை புதிய பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். > பூர்வோதயாவின் கீழ், கிழக்கு கடற்கரைத் தொழில்துறை வழித்தடத்தின் கீழ் நன்கு இணைக்கப்பட்ட முனையாக துர்காபூர் அடையாளம் காணப்பட்டுள்ளது. > வாரணாசி - சிலிகுரி இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும். 4. அசாம் > புத்த மத சுற்றுலா மேம்பாட்டுக்கான ஒரு திட்டம். > அகர் மரங்களின் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும். > தேஜ்பூரில் மனநல நிறுவனம் நிறுவப்படும். > பூர்வோதாய திட்டத்தின் கீழ் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். 5. புதுச்சேரி புதுச்சேரிக்கு எனப் பிரத்யேக அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், பொதுவான திட்டத்தின் கீழ், புதுச்சேரி பலனடையும். தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! - அவரின் 6 சாதனைகள் இதோ!

விகடன் 1 Feb 2026 2:41 pm

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த… The post தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 2:39 pm

த.வெ.க. சார்பில் தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு அமைப்பு

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்ற தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு’, பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறது. 1. CTR.நிர்மல் குமார் B.E., […]

அதிரடி 1 Feb 2026 2:30 pm

வடக்கு கிழக்கில் 4ஆம் திகதி வரை மழை தொடரும்

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து… The post வடக்கு கிழக்கில் 4ஆம் திகதி வரை மழை தொடரும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 2:28 pm

வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை

மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல… The post வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 2:19 pm

அமெரிக்காவை விட 3 மடங்கு வேகம்: சீனாவின் மின் உற்பத்தியைக் கண்டு வியந்த எலோன் மஸ்க்!

சீனாவின் மின் உற்பத்தி திறன் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், குறிப்பாக சூரிய சக்தி (Solar Energy) உற்பத்தியில்… The post அமெரிக்காவை விட 3 மடங்கு வேகம்: சீனாவின் மின் உற்பத்தியைக் கண்டு வியந்த எலோன் மஸ்க்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 2:18 pm

10 ஆயிரம் கைடுகளுக்கு பயிற்சி.. சுற்றுலா துறையை மேம்படுத்தும் மத்திய பட்ஜெட்!

இந்தியாவின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் சில முக்கியமான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார்.

சமயம் 1 Feb 2026 2:17 pm

அநுராதபுரத்தில் சாதித்த புங்குடுதீவு மத்திய கல்லூரி உதைப்பந்தாட்ட அணிக்கு மாபெரும் வரவேற்பு

அநுராதபுரத்தில் சாதித்த புங்குடுதீவு மத்திய கல்லூரி உதைப்பந்தாட்ட அணிக்கு மாபெரும் வரவேற்பு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்திற்கு யாழ் .வசாவிளான் மகா வித்தியாலய அணியும் யாழ் . புங்குடுதீவு மத்திய கல்லூரி அணியும் தெரிவாகியிருந்தன . இலங்கையிலுள்ள மிக முக்கியமான பாடசாலை அணிகளை தோற்கடித்து யாழ் மாவட்டத்தின் இரு கிராமப்புற பாடசாலைகளின் அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருந்தன. கடந்த வருடமும் வசாவிளான் மகா […]

அதிரடி 1 Feb 2026 2:06 pm

16ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை தாக்கல்.. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு இதுதான்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான வரி வருவாய் பகிர்வு குறித்த 16ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கையை மக்களவையில் சமர்ப்பித்துள்ளார்.

சமயம் 1 Feb 2026 1:57 pm

நோர்வே நிதியத்தின் பிட்கொயின் பாய்ச்சல்: 9,573 BTC ஆக உயர்வு!

டிஜிட்டல் சொத்துச் சந்தையில் ஒரு முக்கிய நகர்வாக, நோர்வே நாட்டின் இறையாண்மை நிதியம் பிட்காயின் மீதான தனது பிடியை… The post நோர்வே நிதியத்தின் பிட்கொயின் பாய்ச்சல்: 9,573 BTC ஆக உயர்வு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 1:56 pm

பாலின மாற்ற சிகிச்சை  : இளம்பெண்ணுக்கு 2 மில்லியன் டொலர் இழப்பீடு!

அமெரிக்காவில் டீன் ஏஜ் பருவத்தில் மார்பக அகற்றும் அறுவை சிகிச்சைக்கு (Double Mastectomy) உட்படுத்தப்பட்ட 22 வயது இளம்பெண்… The post பாலின மாற்ற சிகிச்சை : இளம்பெண்ணுக்கு 2 மில்லியன் டொலர் இழப்பீடு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 1:53 pm

State Awards: எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை - 'கைதி'மோனிகா ஆதங்கம்

2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருது அறிவிக்கப்பட்டவர்கள் பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் விருது நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் இதனை விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், 'கனா', 'கைதி' உள்ளிட்ட படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் மோனிகா, இந்த விருது அறிவிப்பு குறித்து விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறார். Monica - Child Artist அந்தப் பதிவில் அவர், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்தேன். ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன. மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் என்னால் இயன்ற சிறந்த முயற்சியையும் நான் வழங்கியுள்ளேன். 'கைதி', 'ராட்சசன்', 'கனா', 'ஆண் தேவதை', 'சங்குசக்கரம்' போன்ற திரைப்படங்களில் பிரதானமும் முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இருப்பினும், தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அத்தகைய அங்கீகாரத்தை அளிக்கும் அளவிற்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. Tamil Nadu State Awards: வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்- சின்னத்திரையினர் கோரிக்கை இந்த விஷயத்தை நான் எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக முன்வைக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை என்றால், இதைப் பற்றி பேச வேண்டும் என்று நான் எண்ணியிருப்பேனா என்பது எனக்கே தெரியாது. அந்தக் காலகட்டத்தில் என்னைப் போலவே பல குழந்தை நடிகர்கள் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர். அவர்களில் யாருக்காவது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால், அது தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டதாக நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், தற்போதைய நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக, இது தனிநபர்கள் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் விருது அன்று. View this post on Instagram A post shared by monekha siva (@monicasiva_offl) யாரோ ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது செல்வாக்கினாலோ வழங்கப்படும் விருதாகவும் இல்லை. இது அரசால் வழங்கப்படும் மாநில விருது. உண்மையான திறமையைப் பாராட்டும், ஒவ்வொரு நடிகருக்கும் மிக முக்கியமான ஒரு பெருமைமிக்க அங்கீகாரம். அந்த அங்கீகாரம் பெற வேண்டியவர்களுக்குக் கிடைக்காமல் போகும்போது, அது மனதிற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்த விஷயத்தைக் கேள்வி எழுப்பிப் பேசுவது என் உரிமை என்றே நான் கருதுகிறேன். இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்போது, விருதுகளின் மீது உள்ள நம்பிக்கையும் மதிப்பும் மெதுவாகக் குறைந்துவிடுகிறது. இந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் இத்துறை சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்வுக்குழுவினர் கவனத்தில் கொண்டு, உரிய முறையில் பரிசீலிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். State Awards: ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில! - குழந்தை நட்சத்திரம் அஸ்வத்

விகடன் 1 Feb 2026 1:47 pm

மத்திய பட்ஜெட் 2026: மதுரை எய்ம்ஸ் டூ கோவை மெட்ரோ… ஏமாற்றம் அளித்த தமிழக திட்டங்கள்!

தமிழகத்திற்கு பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேறு சில அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி ஏமாற்றம் அளித்திருப்பதாக கூறுகின்றனர்.

சமயம் 1 Feb 2026 1:46 pm

சீன இராணுவம் அதியுயர் தயார் நிலையில்  -ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் 

சீன இராணுவம் ‘போருக்கு நெருக்கமான’ (Near-War Alert) அதியுயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள்… The post சீன இராணுவம் அதியுயர் தயார் நிலையில் -ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Feb 2026 1:37 pm

வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை

மாவை.சோ.சேனாதிராசாபதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது திருவுருவச் சிலை வடமாகாண ஆளுநரால் நேற்றைய தினம் சனிக்கிழமை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, […]

அதிரடி 1 Feb 2026 1:37 pm

அதிகாரம் யாரிடம்? 3-வது இடத்தில் அமெரிக்கா! எலான் மஸ்க் கருத்தால் குழப்பம்!

உலகளவில் அதிகாரத்தின் சமநிலை மாறிவருவதாக எலான் மஸ்க் கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுபவர்களாக சீனா (26.6%) முதலிடத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை (World of Stastics – வேர்ல்ட் ஆஃப் ஸ்டாஸ்டிக்ஸ்) கூறுகிறது. தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் இந்தியாவும் (17.0%), மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் (9.9%) உள்ளன. இவர்களுக்கு அடுத்தபடியாக, இந்தோனேசியா (3.8%), துருக்கி (2.2%), சௌதி அரேபியா (1.7%), வியத்நாம் (1.6%), நைஜீரியா (1.5%), பிரேசில் (1.5%), […]

அதிரடி 1 Feb 2026 1:30 pm

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் –அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு கடற்தொழில்நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்தியகடற்தொழிலாளர்களின் படகொன்று அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களைதமது கடற்பரப்பினுள் இருந்து வெளியேறுமாறு நயினாதீவு கடற்தொழிலாளர்கள் அறிவுறுத்தியும் , அதனையும் மீறியும் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களின் […]

அதிரடி 1 Feb 2026 1:28 pm

Union Budget 2026 : 3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் AVGC கன்டென்ட் கிரியேட்டர் லேப் - கல்வி மேம்பாட்டிற்கான சூப்பர் அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் 2026- 27இல் இடம்பெற்ற கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 1 Feb 2026 1:28 pm

Arvind Swamy: ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்தேன் - அரவிந்த் சுவாமி

விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடித்திருக்கும் 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு அரவிந்த் சுவாமி சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். Arvind Swami அப்போது இவருக்கு விபத்து ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாகத்தான் அவர் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். அந்த விபத்து குறித்தும், அதற்கு இவர் எடுத்துக்கொண்ட மருத்துவம் குறித்தும் மெல்போர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் பேசியிருக்கிறார் அரவிந்த் சுவாமி. Gandhi Talks Review: 'வழக்கமான கதைக்குள் ஒரு சோதனை முயற்சி' - திருவினையானதா இந்த 'மௌனப் படம்'? அவர் பேசுகையில், 2005-ல் எனக்கு ஏற்பட்ட காயத்தால் ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்தேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று நான் தேர்ந்தெடுத்ததால்தான் இவ்வளவு நாட்கள் வலியில் இருந்தேன். அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, அதற்கு ஒப்புக்கொண்ட நேரத்தில், கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரைச் சந்தித்தேன். என்னைச் சுற்றி எப்போதும் அலோபதி மருத்துவ நம்பிக்கையாளர்களே இருந்ததால், ஆயுர்வேதத்தை ஒருபோதும் விருப்பமாகக் கொள்ளவில்லை. அர்விந்த் சுவாமி ஆனால், அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே நான் நடக்கத் தொடங்கினேன். எனக்கு இது வேலை செய்தது. ஆனால், இதை எல்லோரும் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவம் மட்டுமே இது. உங்களுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையைப் பின்பற்றுங்கள். ஆயுர்வேதத்தில் பழங்கால ஞானம் இருக்கிறது. அது எனக்கு உதவியது. அதேபோல் அலோபதி மருத்துவத்திலும் பெரும் ஞானம் உள்ளது. அது எனக்கு பலமுறை உதவியிருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 1 Feb 2026 1:01 pm

Union Budget: 2019 டு 2026... நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த கால நேரம்! ஒரு டைம்லைன்

தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்று அவர் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை கிட்டத்தட்ட 1 மணிநேரம் 30 நிமிடங்களில் தாக்கல் செய்து முடித்திருக்கிறார். இதற்கு முன்பு நிர்மலா சீதாராமன் எத்தனை நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம். நிர்மலா சீதாராமன் - பட்ஜெட் Budget 2026: `வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை.!' - பட்ஜெட் உரை நிறைவு; பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! | Live 2019 -ம் ஆண்டு முதல்முறையாக நிதியமைச்சர் ஆனார் நிர்மலா சீதாராமன். அந்த ஆண்டு அவரின் பட்ஜெட் தாக்கல் நேரம் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் ஆகும். 2020 -ம் ஆண்டு 2 மணிநேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இவர். இதுவே இந்திய வரலாற்றில் அதிக நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். 2021 -ம் ஆண்டு ஒரு மணி 50 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். 2022 -ம் ஆண்டு ஒரு மணி நேரம் 32 நிமிடங்களிலும் , 2023 -ம் ஆண்டு 1 மணிநேரம் 27 நிமிடங்களிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இவர். 2024 -ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை 56 நிமிடங்கள் தாக்கல் செய்தார். இதுவே இவர் மிக குறைந்த நிமிடங்கள் வாசித்த பட்ஜெட் ஆகும். அதே ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தது. அதன் பின், அந்த ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசித்த நேரம் 1 மணிநேரம் 25 நிமிடங்கள் . 2025 -ம் ஆண்டு 1 மணிநேரம் 14 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். Epstein File-ல் மோடியின் பெயர்; பூகம்பம் கிளப்பும் அமெரிக்கா; மத்திய அரசின் பதில் என்ன?

விகடன் 1 Feb 2026 1:00 pm

பங்குச் சந்தையை புரட்டிப் போட்ட மத்திய பட்ஜெட்.. கடும் வீழ்ச்சியில் பங்குகள்.. முதலீட்டாளர்கள் அச்சம்!

மத்திய பட்ஜெட் தாக்கலான பிறகு இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2000 புள்ளிகள் வரை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

சமயம் 1 Feb 2026 12:58 pm

மத்திய பட்ஜெட் 2026- தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை… நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தனிநபர் வருபான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்

சமயம் 1 Feb 2026 12:56 pm

2026 மத்திய பட்ஜெட்: நாட்டில் புதிய ஆய்வு மையங்கள்.. சீனாவை நம்பியுள்ள நிலை மாறும்..

தமிழ்நாடு, ஒடிசா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சமயம் 1 Feb 2026 12:55 pm

Union Budget 2026 Live: தோழி விடுதிகள் பார்முலா : மத்திய அரசு பட்ஜெட்டில் வந்த பெண்களுக்கான அறிவிப்பு!

தோழி விடுதிகள் பார்முலா : மத்திய அரசு பட்ஜெட்டில் வந்த பெண்களுக்கான அறிவிப்பு வந்து உள்ளது.

சமயம் 1 Feb 2026 12:54 pm

பிரபல இயக்குநர் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: குவிந்த போலீசார், பரபரப்பு

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் தப்பியோடியவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சமயம் 1 Feb 2026 12:54 pm

தமிழகத்திற்கு ஏமாற்றம் - நிதிப்பகிர்வை உயர்த்தாமல் பட்ஜெட் வெளியீடு!

2026 -27 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். வளர்ச்சி, உற்பத்தி, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

சமயம் 1 Feb 2026 12:50 pm

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் முன்னெடுக்கப்பட்டது. போராட்ட களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 1 Feb 2026 12:43 pm