‘ஓய்வு அறிவித்தார் உஸ்மான் கவாஜா’.. ஆரம்பித்த இடத்திலேயே முடிவு: கவாஜாவின் சுவாரசிய பயணம்!
ஆஸ்திரேலிய அணியில், நீண்ட காலமாக துவக்க வீரராக இருந்த உஸ்மான் கவாஜா, ஓய்வு அறிவித்துள்ளார். ஆரம்பித்த இடத்திலேயே தனது கிரிக்கெட் கரியரை முடித்துக் கொள்ள உள்ளார். இவரது சாதனை பயணம் குறித்து பார்க்கலாம்.
யாழில் பரபரப்பு சம்பவம் ; கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (1.1.2026) பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 40 வயதுடைய தவனேசன் என்பவர் என்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றாவின் கணவர் என்றும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் வீட்டுக்கு முன்னாள் நின்று ஒருவர் மது போதையில் கூச்சலிட்டுள்ளார். அந்த சமயத்தில், மது போதையில் கூச்சலிட்டவர் வெளியேறி விட்டார் எனக் […]
ஜீ தமிழின் பதிலைப் பொறுத்தே அடுத்த மூவ் - தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புக் கோரும் டிவி நடிகர் சங்கம்
தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டி ஜீ தமிழ் சேனலுக்குக் கடிதம் தந்துள்ளது சின்னத்திரை நடிகர் சங்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் 100 சதவிகித வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த பரத் தலைமையிலான அணி தேர்தலின்போதே இது தொடர்பான ஒரு வாக்குறுதியைத் தந்திருந்தது. தற்போது ஜீ தமிழ் சேனலுக்குச் சங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பி, இது தொடர்பாகப் பேச நேரம் கேட்டிருக்கிறார்களாம். சங்கத் தலைவர் பரத்திடம் பேசினோம். பரத் ''தமிழ் சீரீயல்களை நம்பி ஆயிரக்கணக்கான ஆர்ட்டிஸ்டுகள் இங்க இருக்காங்க. ஒவ்வொரு சேனலையும் எடுத்துகிட்டா தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை எவ்வளவு சீரியல்கள் ஒளிபரப்பாகுதுங்கிறது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் இன்னைக்கு தேதியில ஒளிபரப்பாகுற முக்கிய சீரியல்களை எடுத்துப் பாருங்க, ஹீரோ ஹீரோயின் எல்லாருமே கேரளா, கர்நாடகான்னு பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்தவங்களாகவே இருக்காங்க. இங்க ஹீரோ ஹீரோயினா நடிக்க ஆளுங்களே இல்லையா? கேட்டா, சீரியல் தயாரிப்பு பெரிய பிசினஸ், அதுல யாரை நடிக்க வைக்கணும்னு எங்களுக்குத் தெரியும்னு சொல்வாங்க. நாங்க என்ன சொல்றோம்னா, ஹீரோ, ஹீரோயின் கூட நீங்க வெளியில இருந்து கூட்டி வந்துக்கோங்க, அவங்களைத் தவிர சீரியல்ல மத்த கேரக்டர்கள் இருப்பாங்களே, அந்தக் கேரக்டர்களையாச்சும் இங்க இருக்கிறவங்களுக்குக் கொடுங்கனுதான். Zee television கர்நாடகாவுல எல்லாம் மத்த மாநிலங்கள்ல இருந்து குறைந்த எண்ணிக்கையில வேணும்னா மத்த மாநிலங்கள்ல இருந்து ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்ய அனுமதிக்கறாங்க. அப்படி நடிக்கிறவங்களும் கன்னட மொழியைக் கண்டிப்பா கத்துக்கணும். இங்க அந்த மாதிரி எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால்தான், தமிழ் சீரியல் நடிகர் நடிகைகள் வாய்ப்பு இல்லாம கஷ்டப் படுறாங்க என்றவரிடம், ஜீ தமிழை மட்டும் குறி வைத்து கேட்பது ஏன் எனவும் கேட்டோம். சன், விஜய் டிவிக்கள்ல ஜீ தமிழ்ல இருக்கிற அளவக்கு அதிகமான ஆர்ட்டிஸ்டுகள் கிடையாது. ஜீ தமிழ் சேனலில் இன்னைக்கு ஒளிபரப்பாகிற சீரியல்களில் அதிக எண்ணிக்கையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆர்ட்டிஸ்டுகள் இருக்காங்க. அதனாலதான் இப்படியொரு கடிதம் எழுத வேண்டி வந்தது முதல்கட்டமா கடிதம் தந்திருக்கோம். அவங்களுடைய பதில் நடவடிக்கையைப் பொறுத்து எங்களுடைய அடுத்த மூவ் இருக்கும் என்கிறார். தொகுத்து வழங்க அம்முவை அழைத்தற்கு எதிர்ப்பு? டிவி நடிகர் சங்க பதவி ஏற்பு விழாவில் நடந்தது என்ன?
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை நேரம் குறித்து கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!
பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, *2026 ஆம் ஆண்டில் 5 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் மு.ப 7.30 முதல் […]
தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள பத்திரிகைகளில் சிங்கள மொழியில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நேற்று(31) நடைபெற்றபோதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது. தையிட்டி விகாரை காணி வரைபடங்களை தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை போட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தையிட்டி விகாரையை உடைக்கப்போவதாக […]
தையிட்டி விகாரை போராட்டம்: வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை
தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 21ம் திகதி தையிட்டி விகாரையின் […]
திருச்சியில் வைகோவின் சமத்துவ நடைபயணம்-முதலமைச்சர் முகஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
திருச்சியில் வைகோவின் சமத்துவ நடைபயணம் இன்று தொடங்கி நடைபெறுகிறது. முதலமைச்சர் முகஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனை தொடங்கி வைத்து விட்டு மீண்டும் சென்னை செல்ல இருக்கிறார் .
GST Collection Data | ITC Fall Why? | Vodafone Idea Up - Why? | IPS Finance - 400
Vijay-க்கு மறைமுக பதில் சொன்ன Udhayanidhi | தூய்மைப் பணியாளர்களுக்கு New Year இரவில் நடந்த கொடுமை?
தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட Odisha இளைஞர்; பின்னணி இதுதான் | Thirumurugan Gandhi Interview | Vikatan
நியூயாா்க் மேயராக மம்தானி பொறுப்பேற்பு! குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்!
அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயாா்க்கின் 112-ஆவது மேயராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸோரான் மம்தானி பொறுப்பேற்றுள்ளாா். புது ஆண்டு தொடங்கிய சில நிமிஷங்களில் நகரின் பழைய சிட்டி ஹால் சப்வே நிலையத்தில் நடந்த விழாவில் அவா் குா்ஆன் என் மீது சத்தியம் செய்து பதவியேற்றுக்கொண்டாா். நியூயாா்க் மாகாண அட்டா்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். இதன் முலம் நியுயாா்க் நகரை ஆளும் முதல் தெற்காசிய வம்சாவளியினா் மற்றும் முஸ்லிம் என்ற சாதனையை அவா் […]
நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 2 முதல் 8 வரை #VikatanPhotoCards
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
சென்னை விக்டோரியா ஹாலை பார்வையிட மக்கள் இடையே நல்ல வரவேற்பு!
சென்னை விக்டோரியா ஹாலை பார்வையிடுவதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் இதனை பார்வையிட காத்துக் கொண்டுள்ளனர். இதற்கான முன்பதிவு வேகமாக இருந்து வருகிறது.
2025 தந்த பாடம், 2026 தரவிருக்கும் வாய்ப்பு... புத்தாண்டில் சீரான முதலீட்டுப் பாதையில் பயணிப்போம்!
2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். புத்தாண்டு என்றாலே பலரும் பலவித சபதங்களை எடுப்போம். கடந்த வருடம் நாம் கற்ற பொருளாதாரப் பாடங்களின் அடிப்படையில், இந்தப் புதிய ஆண்டில் நமது நிதிப்பழக்கங்களை சீர்ப்படுத்திக்கொள்ளும் சபதத்தை எடுத்துக்கொள்ளலாம். அதற்கு, முதலில் நம்மை சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். நம் நிதி நிலையைப் பலப்படுத்த நாம் செய்யும் விஷயங்கள் என்னென்ன, செய்யாமல் விட்டவை என்னென்ன, நமது சேமிப்பு மற்றும் முதலீடுகளில் எவை லாபம் தந்துள்ளன, எவை நஷ்டத்தில் உள்ளன... இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும். பதில்களின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ‘சம்பளத்தைவிட அதிகமாகச் செலவு செய்கிறேன்’ என்பவர்கள் புதிய ஆண்டில் செலவுகளைக் குறைக்கலாம். ‘கிரெடிட் கார்டில் தேவையில்லாத பொருள்கள் வாங்குகிறேன்’ என்பவர்கள் கிரெடிட் கார்டு செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். ‘கடன் வாங்கி சுற்றுலா செல்கிறேன்’ என்பவர்கள் இனி அந்தத் தவறைச் செய்யாமல் இருக்கலாம். ‘இதுவரை காப்பீடு எடுக்கவே இல்லை’ என்று சொல்பவர்கள் இந்த ஆண்டிலாவது காப்பீடு எடுக்கலாம். எதிர்பாராத நிகழ்வுகளும், திருப்பங்களும் அதிகமாக நடக்கக்கூடிய காலகட்டத்தில் இருக்கிறோம். நிச்சயமற்ற நிதிச் சூழல்களைச் சமாளிக்க எப்போதுமே நாம் தயாராக இருக்க வேண்டும். எனவே, இதுவரை சேமிப்பு, முதலீடுகளைத் தொடங்காதவர்கள் நிச்சயம் இந்த ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும். ஏற்கெனவே முதலீடுகளைச் செய்பவர்கள், இன்னும் கூடுதல் கவனத்துடன் அவற்றைக் கையாள வேண்டும். முடிந்த 2025-ம் ஆண்டு, பொருளாதார ரீதியாக கவனம் குவித்த ஆண்டு. பங்குச் சந்தை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பலர் அதில் நேரடியாகவும், மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாகவும் முதலீடு செய்வது அதிகரித்தது. அந்நிய முதலீடுகள் வெளியேறிய நிலையிலும், 2025-ல் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.67 லட்சம் கோடியிலிருந்து ரூ.81 லட்சம் கோடியாக உயர்ந்தது. இன்னொரு பக்கம், பங்குச் சந்தையை விட தங்கம், வெள்ளி விலையேற்றம் சக்கை போடு போட்டது. பலரும் இந்த உலோகங்களில் முதலீட்டை குவிக்க ஆரம்பித்தார்கள். நிபுணர்கள், ‘தினசரி செய்திகளையும், திடீர் ஏற்றங்களையும் நம்பி, உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு முதலீட்டில் இறங்கிவிட வேண்டாம். ஒருவரது போர்ட்ஃபோலியோ, கலவையாக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்கள். புத்தாண்டில், செலவுகளைக் குறைப்பதன் மூலம் கடனைக் குறைப்போம். வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைத் தேடுவோம். உடனடி லாபத்துக்கு ஆசைப்படாமல், நீண்டகால வளர்ச்சியை அடையும் நோக்கில் முதலீடுகளைத் திட்டமிடுவோம். வங்கிகள், நுகர்வுப் பொருள்கள், தொழில்நுட்பம் போன்ற எதிர்கால வளர்ச்சிக்கான துறைகளில் கவனம் செலுத்தி புதிய முதலீட்டுப் பாதையை வகுத்துக்கொள்வோம். 2026-ம் ஆண்டு வளமாக அமையும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! - ஆசிரியர்
தெற்கு ரயில்வேயின் தெற்கு மண்டலத்திற்கான புதிய அட்டவணை-புதிய ரயில் சேவைகள் சேர்ப்பு!
தெற்கு ரயில்வேயின் தெற்கு மண்டலத்திற்கான புதிய அட்டவணையின் படி புதிய ரயில் சேவைகள் சேர்க்கப்பட்டு உள்ளது . மேலும் பல்வேறு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது .
புத்தாண்டு தீ விபத்தில் ஆம்ஸ்டர்டாம் தேவாலயம் எரிந்து நாசமானது
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தபோது, நகரத்தின் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள ஆம்ஸ்டர்டாமின் வோண்டெல் தேவாலயம் தீ விபத்தில் பெருமளவில் எரிந்து நாசமானதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன. முன்னாள் கத்தோலிக்க தேவாலயத்தின் சுமார் 50 மீட்டர் உயர (164 அடி) கோபுரமும் கூரையும் தீயில் இடிந்து விழுந்தன. இது 154 ஆண்டுகள் பழமையான கட்டமைப்பை இனி மீட்க முடியாததாக மாற்றியதாக அவசர சேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த நினைவுச்சின்ன தேவாலயத்தில் இது மிகவும் கடுமையான மற்றும் பயங்கரமான தீ விபத்து என்று ஆம்ஸ்டர்டாம் மேயர் ஃபெம்கே ஹால்செமா புலம்பினார். நள்ளிரவுக்குப் பின்னர் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அது விரைவாக ஒரு பெரிய சம்பவமாக மாறியது. தீயணைப்பு வீரர்கள் நெதர்லாந்தின் பிற பகுதிகளிலிருந்து உதவிக்கு அழைத்தனர். தீயை அணைக்க டச்சு கடற்படை அதன் 60 மீட்டர் உயர வான்வழி பணி தளத்தை பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வியாழக்கிழமை காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, பலத்த காற்று தீயை எவ்வாறு தூண்டியது என்பதை உள்ளூர் ஊடகங்கள் விவரித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள ஏராளமான குடியிருப்புகள் வெளியேற்றப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வாணவேடிக்கை வெடித்த பின்னர், நள்ளிரவுக்கு மிக அருகில் தீப்பிடித்ததால், நகரின் புத்தாண்டு தின வாணவேடிக்கைகளும் இதில் பங்கு வகித்திருக்கலாம் என்ற ஊகம் எழுந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் பொதுமக்களுக்கு பட்டாசு விற்பனையைத் தடை செய்தது. ஆனால் பல சட்டவிரோதமானவை இன்னும் நகரம் முழுவதும் குடியிருப்பாளர்களால் வெடிக்கப்பட்டன. வோண்டல் தேவாலயம் ஒரு நியோ-கோதிக் கட்டிடமாகும், இது புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பியர் குய்பர்ஸால் வடிவமைக்கப்பட்டது, அவர் ரிஜ்க்ஸ்மியூசியம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் மத்திய நிலையத்திற்கும் பொறுப்பானவர். 1977 ஆம் ஆண்டு முதல் அந்தக் கட்டிடம் வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தப்படவில்லை, மேலும் அது ஒரு நிகழ்வு இடமாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது. நெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைத்த பல சம்பவங்களில் தேவாலய தீ விபத்தும் ஒன்றாகும். இதற்கிடையில், நெதர்லாந்தில் பட்டாசு விபத்துகளில் 17 வயது சிறுவன் ஒருவனும் 38 வயது ஆண் ஒருவனும் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். ரோட்டர்டாமில் உள்ள கண் மருத்துவமனை, கண் காயங்களுக்கு 10 சிறார்கள் உட்பட 14 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறியது.
சுவிஸில் 5 நாட்கள் துக்கம் அறிவிப்பு
கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள லு கான்ஸ்டெல்லேஷன் பார் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வியாழக்கிழமை தொடங்கி ஐந்து நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக நாடு முழுவதும் உள்ள பொதுக் கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. சுற்றி வளைக்கப்பட்ட பார் தளத்திற்கு வெளியே திடீர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, குடியிருப்பாளர்களும் நண்பர்களும் பூக்களை வைத்தும் மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். மொன்டானா தேவாலய நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு புத்தாண்டு திருப்பலியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஜனாதிபதி கை பர்மெலின் தனது புத்தாண்டு உரையை ரத்து செய்தார். குடும்பங்களை ஆதரித்தல், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தல் போன்ற செயல்முறைகள் பல நாட்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நெரிசலான கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது நினைவூட்டத்தக்கது.
சரியும் மக்கள் தொகை; ஜனவரி 1 முதல் கருத்தடை சாதனங்கள் மீது கூடுதல் வரி
சீனா ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் கருத்தடை சாதனங்கள் மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது. சீனாவில் உள்ள நுகர்வோர் ஆணுறைகள் உள்ளிட்ட கருத்தடை மருந்துகள் மற்றும் பொருட்களுக்கு 13% கூடுதல் வரியை செலுத்த வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது சீனாவின் புதிதாக திருத்தப்பட்ட கூடுதல் வரிச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். சீனாவில் பிறப்பு விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் குறைந்து வருவதால், அரசாங்கம் பல்வேறு சலுகைகள் மற்றும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முயற்சித்து […]
உலகச் செய்திகளின் சுருக்கம் –ஒரே பார்வையில்!
• புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் (சுவிட்சர்லாந்து): சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) பகுதியில் உள்ள ஒரு பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்… The post உலகச் செய்திகளின் சுருக்கம் – ஒரே பார்வையில்! appeared first on Global Tamil News .
கனடாவில் 80 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி
கனடாவில் கடந்த 30ம் திகதி நடைபெற்ற லாட்டோ மேக்ஸ் சீட்டிழுப்பில் 80 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. அந்த டிக்கெட் ஒன்டாரியோவின் லண்டன் நகரில் விற்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதம் லாட்டோ மேக்ஸ் ஜாக்பாட் 80 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்ட பிறகு, ஒன்டாரியோவில் இந்த ஜாக்பாட் முதல்முறையாக வென்றுள்ளது. மேலும், ஒரே ஒரு டிக்கெட் மட்டுமே ஜாக்பாட்டை வென்ற இரண்டாவது முறையும் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்பாட் வெற்றியாளர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. […]
புத்தாண்டில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; இரண்டு பெண்கள் உட்பட மூவருக்கு நடத்தப்பட்ட பெரும் கொடூரம்
மாவனெல்ல – தனகம பகுதியில் இன்று (01) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் கைது ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சம்பவம் […]
உக்ரைனை வெல்வோம்! புதின் சூளுரை
உக்ரைன் போரில் ரஷியா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார். ரஷிய அதிபர் புதினின் உரையை விமர்சித்துள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, எந்த விலை கொடுத்தும் அவர்கள் அமைதியை ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஷிய மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை இரவு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் போரில், ரஷியா தனது […]
“40 கோடி வேண்டாம்!”– கொள்கையில் உறுதியாக நிற்கும் சுனில் ஷெட்டி!
பிரபல பொலிவுட் நடிகர் சுனில் செட்டி அண்மையில் வெளியிட்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தடை செய்யப்பட்ட… The post “40 கோடி வேண்டாம்!” – கொள்கையில் உறுதியாக நிற்கும் சுனில் ஷெட்டி! appeared first on Global Tamil News .
சர்ச்சைக்குரிய பாடப்புத்தகம் –பேராசிரியர் திடீர் பதவி விலகல்!
சர்ச்சைக்குரிய பாடப்புத்தகம் – பேராசிரியர் திடீர் பதவி விலகல்! தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய… The post சர்ச்சைக்குரிய பாடப்புத்தகம் – பேராசிரியர் திடீர் பதவி விலகல்! appeared first on Global Tamil News .
தலதா மாளிகையில் புத்தாண்டு வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர
புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி தலதா மாளிகை வளகாத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றதோடு, புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையை தரிசிக்க வந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார். புத்தாண்டு வாழ்த்து அதனைத் தொடர்ந்து, […]
கஞ்சா ஹீரோக்கள் உலா வரும் தமிழ்நாடு.. யாரைக் காப்பாற்ற முயற்சி? தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
சடுதியாக உயர்ந்த தேங்காய் விலை ; எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளபோதும், சந்தையில் தேங்காய் விலை சடுதியாக உயர்ந்துள்ளமையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடித் தலையீட்டை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய் 122 – 124 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. அதிக விலை இருப்பினும், வெளிச்சந்தையில் அதே தேங்காய் 180 – 200 ரூபாய் வரையிலான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் பணிப்பாளர் சுனிமல் ஜயகொடி கவலை வெளியிட்டுள்ளார். ஏலத்தில் குறைந்த […]
போா் நிறுத்தம்: 18 கம்போடிய வீரா்களை விடுவித்தது தாய்லாந்து
தாய்லாந்து-கம்போடியா இடையிலான புதிய போா் நிறுத்த ஒப்பந்தம் 72 மணி நேரத்துக்கு மேல் நீடித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து புதன்கிழமை விடுவித்தது. இது குறித்து கம்போடிய தகவல்துறை அமைச்சா் நெத் பியாக்ட்ரா கூறுகையில், தங்கள் நாட்டின் 18 வீரா்கள் பாதுகாப்பாக கம்போடியாவுக்கு உள்ளூா் நேரப்படி காலை 10 மணிக்கு வந்து சோ்ந்தனா் என்றாா். இந்தத் தகவலை உறுதி செய்த தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம், நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் […]
பொங்கல் பரிசுத் தொகுப்பு நடைமுறைக்கு வர யார் காரணம் தெரியுமா? அந்த முக்கியத் தலைவர்கள் யார் யார்?
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பல்வேறு பரிணாமங்களை கடந்து இருந்தாலும், 2026 ஆம் ஆண்டின் பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்து வருகிறது.
நீருக்கு அடியில் சதுரங்கப் போட்டி ; உலக செம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது நெதர்லாந்து
நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டி வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி, இது நீச்சல் தடாகத்தின் அடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடப்படும் ஒரு வினோதமான மற்றும் சவாலான விளையாட்டாகும். இம்முறை நடைபெற்ற உலக செம்பியன்ஷிப் போட்டியில் 40 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தப் போட்டியில் சதுரங்கப் பலகைகள் காந்தத் தன்மையுடனும் (Magnetic boards), காய்கள் […]
உலகம் அழியப்போகிறது”என பீதியை ஏற்படுத்திய எபோ நோவா கைது
“டிசம்பர் 25, 2025 அன்று உலகம் அழியப்போகிறது” என்று பீதியை ஏற்படுத்திய கானா நாட்டுச் சாமியார் எபோ நோவா… The post உலகம் அழியப்போகிறது” என பீதியை ஏற்படுத்திய எபோ நோவா கைது appeared first on Global Tamil News .
கே.ஜி கணக்கில் உயர்தர “ஓ.ஜி” வகை கஞ்சா..முதல்வரை சரமாரியாக விமர்சித்த கஸ்தூரி - காரணம் என்ன?
புத்தாண்டின் போது கே.ஜி கணக்கில் உயர்தர “ஓ.ஜி” வகை கஞ்சாவை காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார்.
Jana Nayagan: 'தங்கமே தளபதி!' - 'ஜனநாயகன்'படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் |Photo Album
வவுனியாவில் சின்ன கதிர்காமம்:அமைச்சர் ஆலோசனை!
கதிர்காமத்தில் மூன்று இனத்தவர்களும் வழிபடுகிறார்கள். கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமாணத்திற்கும் நிதியைப் பெற்றுக் கொடுக்கலாம் என கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா, சமனங்குளம், கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தர்ல் பௌ;த விகாரை கட்டப்படுவதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் அதனை தெரிவித்துள்ளார். கதிர்காமம் எல்லா மதத்தவர்களும் வழிபடும் தளம். தென் பகுதியில் எல்லோரும் அங்கு சென்று வழிபடுகிறார்கள். மதம் என்பதை வைத்து சிலர் அரசியல் செய்ய முற்படுகிறார்கள். ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு அரசியல் தேவைப்படாது. சமயம் என்பது ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு பின்பற்றுகின்ற ஒரு விடயம். இன, மதங்களை கொண்டு செய்யப்பட்ட அரசியல் தோற்கடிக்கப்பட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்யும் ஆட்சியே உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சில இடங்களில் மதவாதம் உருவாக்கப்பெறுகிறது. தொல்பொருள் திணைக்களத்தில் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்து மத தொல்லியல் சின்னங்களையும் பாதுகாக்கிறார்கள். ஆட்சியாளர்கள் என்ற அடிப்படையில், இன, மத வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழக் கூடிய ஒரு ஆட்சியை உருவாக்க விரும்புகின்றோமெனவும் அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நிமலராஜன் கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும்!
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை தொடர்பான விடயம் உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளுக்கு ஈ.பி.டி.பி யினர் காரணமாக இருப்பது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் வடக்கு - கிழக்கில் பல்வேறுபட்ட ஆயுத குழுக்களின் தாக்கங்களினால் பல்வேறுபட்ட அப்பாவி மக்கள் கடத்தப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள். வடக்கில் கடத்தல்கள் பல காணாமல்போன சம்பவங்களுக்கு பொறுப்பாக ஈ.பி.டி.பி கட்சி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை தொடர்பான விடயத்திலும்சரி, பல்வேறு கடத்தல்களோடு சம்பந்தப்பட்ட கொலை செய்யப்பட்ட விடயங்களிலும்சரி, பத்திரிகை ஆசிரியர் அற்புதனின் படுகொலையாக இருக்கலாம், கே எஸ் ராஜாவின் படுகொலை, இன்னும் பல படுகொலைகளுக்கு காரணமாக ஈ.பி.டி.பியினர் இருந்ததாக மக்கள் பலர் குற்றச்சாட்டுகின்றார்கள். அதாவது ராஜபக்சவின் ஆட்சிக்காலம் சந்திரிகாவின் ஆட்சிக் காலங்களில் ஈ.பி.டி.பியினர் அவ்வாறு செயற்பட்டதாக குற்றச்சாட்டுகின்றார்கள். எனவே அவை இதுவரையில் வெளிக்கொண்டுவரப்படவில்லை. கைது செய்யப்படுகின்றவர்கள் அப்பாவிகளாக இருந்ததால் தப்பிக் கொண்டனர். ஆனால் அந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் சார்பாக சொல்லிக் கொள்வது யாதெனில் உண்மையான குற்றவாளிகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே. ஆகவே கிழக்கில் இருந்து யார் கைது செய்யப்பட்டாலும், வடக்கிலிருந்து யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்ட ரீதியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம் எனவும் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு கடமைகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (JIA) 2026-ஆம் புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1, வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக… The post யாழ். சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு கடமைகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு கடமைகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (JIA) 2026-ஆம் புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1, வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக… The post யாழ். சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு கடமைகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
டென்மார்க்கில் கடித விநியோகம் இனி இல்லை ; அஞ்சல் சேவை முழுமையாக நிறுத்தம்
அஞ்சல் கடிதங்களின் தேவை மிகக் குறைந்ததைத் தொடர்ந்து, டென்மார்க்கின் அரசுக்குச் சொந்தமான அஞ்சல் நிறுவனமான PostNord, கடித விநியோக சேவையில் இருந்து முழுமையாக விலகத் தீர்மானித்துள்ளது. 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து டென்மார்க்கில் கடிதங்களின் பயன்பாடு 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது. கடிதங்களின் எண்ணிக்கை குறைந்ததால், நாடு முழுவதும் இந்த சேவையைத் தொடர்வது நிதி ரீதியாக நட்டத்தை ஏற்படுத்துவதாக PostNord தெரிவித்துள்ளது. டென்மார்க் முழுவதும் உள்ள சுமார் 1,500 புகழ்பெற்ற சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் […]
த.வெ.க கூட்டணிக்கு வருகிறதா வி.சி.க? செங்கோட்டையன் கொடுத்த விளக்கம் - திமுகவில் சலசலப்பு!
த.வெ.க கூட்டணிக்கு வருகிறதா வி.சி.க? என்ற கேள்விக்கு செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாகாணசபை தேர்தல் தொடர்பில் அனுர அரசு கண்டுக்கொள்ளாதிருக்கின்ற நிலையில் புத்தாண்டில் மாகாண சபைத் தேர்தலை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி இன்று அழைப்பு விடுத்துள்ளது. நடப்பாண்டில் மாகாண சபைத் தேர்தலுக்கு தனது கட்சி தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், 2026 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை நிலைநாட்டப்படும் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே ஜனாதிபதி அநுர பதவிக்கு வருவதற்கு முன்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறுபட்ட உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய அரசு பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், இழுபறிகளில் காலம் கடத்தப்படுகின்றதே தவிர, தேர்தல் வைப்பதற்கான எந்த உத்தேசமும் இருப்பதாகத் தெரியவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், குறைந்த பட்சம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதனூடாக மாத்திரமே அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கையிலெடுத்து, இயலக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு – கிழக்கில் உருவாக்க முடியுமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் கத்திக் குத்து: பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கொடூரமாகக் கொலை!
யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியில் புத்தாண்டு தினமான இன்று இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின்… The post புத்தாண்டில் கத்திக் குத்து: பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கொடூரமாகக் கொலை! appeared first on Global Tamil News .
கனடாவின் கடற்படையை தீவிரவாத இயக்கமாக அறிவித்த ஈரான்
கனடாவின் கடற்படையை தீவிரவாத அமைப்பாக ஈரான் அறிவித்துள்ளது. கனடிய அரசு, ஈரானின் இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சி காவல் படை (IRGC)யை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்ததற்குப் பதிலடியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா 2024 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி காவல் படை தீவிரவாத அமைப்பாகப் பட்டியலிட்டது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என ஈரான் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா இஸ்லாமிய புரட்சி காவல் படை […]
புத்தாண்டில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் புத்தாண்டு தினமான இன்றைய தினம் கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மருதங்கேணி வீரபத்திரர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மருதங்கேணியில் உள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரின் வீட்டிற்கு முன்பாக நின்று போதையில் ஒருவர் கூச்சலிட்டு , வீட்டில் இருப்போரை வெளியே வருமாறு அட்டகாசம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து சென்ற பின்னர் , பிரதேச சபை உறுப்பினரின் கணவர் , வீட்டில் இருந்து வெளியேறி மருதங்கேணியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , வீரபத்திரர் ஆலயத்திற்கு அருகில் போதையில் வீட்டின் முன் நின்று கத்திய நபர் வழிமறித்து சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். கத்திக்குத்தில் காயமடைந்தவரை மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினர்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு விமான நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டியிருந்த நிலையில் , மைதானத்தில் நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பமாகி , எதிர்வரும் 14ஆம் திகதி(14.01.2026) சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பணிகள் கால தாமதமாகிய […]
கேரள இலக்கிய விழா 2026.. விண்வெளியில் தடம் பதித்த சுனிதா வில்லியம்ஸ் கேரளா வருகை!
2026 ஆம் ஆண்டிற்கான கேரள இலக்கிய விழாவானது ஜனவரி 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்கிறார்.
இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாக்யரபுரா என்ற இடத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மற்றவர்கள் அங்குள்ள 27 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்ததுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. உயிரிழப்புகள் 14 இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதனை மறுத்துள்ள இந்தூர் மேயர் புஷ்யமித்ரா, 7 பேர் தான் இறந்துள்ளனர் என்று தெரிவித்தார். அதேசமயம் முதல்வர் மோகன் யாதவ், நான்குபேர் தான் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் கைலாஷ் மேற்கொண்டு முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ``பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கிடைத்த பிறகு தான் இறப்பு குறித்த தகவல் தெரியும் என்றார். இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்று 8வது முறையாக விருது பெற்றுள்ள இந்தூரில் அசுத்தமான தண்ணீரை குடித்து பொதுமக்கள் உயிரிழந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு உண்மையிலேயே இந்தூர் சுத்தமான நகரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்துள்ளது. மேலும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க தவறிய பொறியாளர்கள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இப்பிரச்னை குறித்து பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேட்டியளித்த போது, ஒரு நிருபர் `சம்பவத்திற்கு ஏன் ஜூனியர் அதிகாரிகளை மட்டும் குறை சொல்கிறீர்கள், மேல் மட்டத் தலைவர்களை பற்றி இதில் விவாதிப்பதில்லை' என்று கேட்டார். உடனே அமைச்சர் கைலாஷ், ''அதை விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்விகளை கேட்க வேண்டாம்'' என்று எரிச்சலுடன் தெரிவித்தார். இது தவிர மேலும் சில வார்த்தைகள் பேசினார். அவரது பேச்சு வைலரானது. இதையடுத்து அமைச்சர் கைலாஷ் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார். தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை கொடுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சம்பவ பகுதியில் டேங்கர் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
Switzerland: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தீ விபத்து; 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகமெங்கும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி வரவேற்று வருகின்றனர். அப்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Crans Montona - Fire Accident சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் மோன்டோனா நகரத்திலுள்ள ஒரு பாரில் டூரிஸ்ட் பலரும் நேற்று இரவு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர். அப்படியான நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளியூரிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் எனவும் போலீசார் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இச்சம்பவம் நேற்று இரவு 1.30 மணிக்கு நடைபெற்றிருக்கிறது. இச்சம்பவம் தீவிரவாத தாக்குதலால் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இது எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்து என்றே காவலர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். கொண்டாட்டத்தின்போது பயன்படுத்திய வாணவெடிகள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. Crans Montona - Fire Accident மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடம் முழுவதுமாக மூடிபட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கிரான்ஸ் மோன்டோனா நகரம் முழுவதும் விமானங்கள் எதுவும் பறக்கக் கூடாத 'நோ - ஃப்ளை' அமல்படுத்தப்பட்டு உள்ளது.
️யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகள் தீவிரம்: ️
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணிப்பு பணிகளை, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள்… The post ️யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகள் தீவிரம்: ️ appeared first on Global Tamil News .
கவலைப்படாதீங்க இது முழுக்க தளபதி படம்…ஜனநாயகன் குறித்து பேசிய ஹெச்.வினோத்!
சென்னை : தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது. அரசியல் அவதாரம் எடுத்துள்ள விஜய்யை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மூழ்கியிருக்கும் இயக்குநர் ஹெச். வினோத், படம் குறித்தும் விஜய்யுடனான அனுபவம் குறித்தும் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார்.“முதன்முதலாக விஜய் சாரை இயக்கியது சந்தோஷமான அனுபவம். ‘ஜன நாயகன்’ அவரது கடைசிப் படம் என்று அறிவித்த பிறகுதான் படப்பிடிப்பு […]
புத்தாண்டில் மக்களுடன் ஜனாதிபதி!
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள மக்களை ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க (ADK) அவர்கள்… The post புத்தாண்டில் மக்களுடன் ஜனாதிபதி! appeared first on Global Tamil News .
சுவிட்சர்லாந்தில் பெரும் சோகம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து – 40 பேர் பலி!
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.… The post சுவிட்சர்லாந்தில் பெரும் சோகம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து – 40 பேர் பலி! appeared first on Global Tamil News .
புதுச்சேரி: களைகட்டிய புத்தாண்டு... கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! - Photo Album
புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு போக்குவரத்து சீரமைப்பு செய்யும் காவலர்கள் சோதனைக்கு பின் கடற்கரை சாலைக்கு அனுமதிக்கும் போலிசார் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்
உலகம் அழியும் என கூறிய ‘எபோ நோவா’…அதிரடியாக கைது செய்த காவல்துறை!
கானா : சேர்ந்த இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதி கிளப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். கானா போலீசின் சைபர் கிரைம் பிரிவு டிசம்பர் 31 அன்று அவரை கைது செய்தது. இவர் தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியதே கைதுக்கு காரணம் என்று தெரிகிறது.எபோ நோவா கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய மரப் பேழையை (ஆர்க்) […]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம் இன்று முதலாம் திகதி, வியாழக்கிழமை காலை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள கொடிக் கம்பத்துக்கு அருகில் இடம்பெற்ற அரச சேவையின் முதல் நாள் உறுதியுரையேற்பு நிகழ்வைத் தொடர்ந்து பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 2025 ஆம் ஆண்டு 25 வருடகால சேவையைப் பூர்த்தி செய்த விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களும், கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற […]
2026 முதல் பிரித்தானியாவில் புதிய குடிவரவு விதிகள்:
பிரித்தானியாவின் குடிவரவு அமைப்பில் 2026-ஆம் ஆண்டு முதல் அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வேலை… The post 2026 முதல் பிரித்தானியாவில் புதிய குடிவரவு விதிகள்: appeared first on Global Tamil News .
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2027 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பொதுச் சேவையைத் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்து உள்ளார்.
சுவிட்சர்லாந்து புத்தாண்டு கொண்டாட்டம்: பலர் உயிரிழப்பு: பலர் காயம்!
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நெரிசலான கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிகாலை 01:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டபோது, 100க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த லீ கான்ஸ்டெல்லேஷன் பாரில் அதிகாலை 01:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது என்று வாலைஸ் கன்டோனல் போலீசார் தெரிவித்தனர். இந்த அரங்கம் 400 பேர் அமரக்கூடியது. பலர் உயிரிழந்தனர், மற்றவர்கள் காயமடைந்தனர் என்று காவல்துறை முதலில் கூறியது. இது ஒரு தீவிரமான சம்பவம் என்று அவர்கள் விவரித்தனர். பின்னர் எண்ணிக்கை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை. சுவிஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி, சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காவல்துறை செய்தித் தொடர்பாளர் கெய்டன் லாதியோன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிகாரிகள் பலர் உயிரிழப்புகளைக் காண்கிறார்கள். கட்டிடத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர், மேலும் பலர் காயமடைந்ததையும் பலர் இறந்ததையும் நாங்கள் காண்கிறோம் என்று அவர் கூறினார். முந்தைய அறிக்கைகள் ஒரு வெடிப்பு என்று விவரித்தன, ஆனால் பின்னர் போலீசார் இந்த நிகழ்வை தீர்மானிக்கப்படாத தீ விபத்து என்று வகைப்படுத்தினர். கிரான்ஸ்-மொன்டானா என்பது சுவிட்சர்லாந்தின் வாலிஸ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஆல்பைன் ரிசார்ட் ஆகும், இது ஒரு உயர்மட்ட விடுமுறை இடமாகக் கருதப்படுகிறது. இது நீண்ட காலமாக சர்வதேச பார்வையாளர்களையும், மறைந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் உட்பட பொது நபர்களையும் ஈர்த்துள்ளது. இந்த ரிசார்ட் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் (சுமார் 5,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் ஒரு பெரிய ஸ்கை பகுதியை வழங்குகிறது. ஜனவரி மாத இறுதியில் நடைபெறும் ஸ்கை உலகக் கோப்பை பந்தயங்கள் உட்பட முக்கிய விளையாட்டு நிகழ்வுகளையும் இது தொடர்ந்து நடத்துகிறது. விடுமுறை நாட்களில், கிரான்ஸ்-மொன்டானா பொதுவாக முழுமையாக முன்பதிவு செய்யப்படும். நகராட்சியில் சுமார் 10,000 குடியிருப்பாளர்களும், எட்டு சொகுசு ஹோட்டல்கள் உட்பட சுமார் 2,600 ஹோட்டல் படுக்கைகளும், நூற்றுக்கணக்கான விடுமுறை அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. உள்ளூர் பொருளாதாரத்தின் மையமாக சுற்றுலா உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் இரவு தங்கல்கள் இங்கு வருகின்றன. உள்ளூர் சுற்றுலா ஆணையத்தின் கூற்றுப்படி, சுமார் 20% பார்வையாளர்கள் சுவிட்சர்லாந்திற்கு வெளியில் இருந்து வருகிறார்கள்.
Vedan: இரா.முத்தரசன் நடிக்கும் படம்; இளையராஜா இசையில் பாடும் ராப் பாடகர் வேடன்! - வெளியான அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிக்கும் 'அரிசி' படத்தின் அறிவிப்பு முன்பே வெளியாகி இருந்தது. இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Vedan in Ilaiyaraja Music இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இப்படத்தை இயக்கியுள்ள இப்படம் உணவுக்குப் பின்னுள்ள அரசியல் குறித்தும், விவசாயிகள் சந்திக்கும் போராட்டங்களை இத்திரைப்படம் மையப்படுத்துகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில்தான் வேடன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். சமீப நாட்களாக மலையாள சுயாதீன இசைத்துறையின் சென்ஷேஷனாக இருந்து வருகிறார் வேடன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பைசன்' படத்தின் மூலம் தமிழில் அவரின் முதல் பாடலைப் பாடினார். Vedan in Ilaiyaraja Music தற்போது இளையராஜா இசையிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் வேடன். பாடலாசிரியர் மற்றும் ராப் பாடகர் அறிவுடன் இணைந்து இப்பாடலை அவர் பாடவிருப்பதாகவும் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்துதான் 'பைசன்' படத்தின் 'ரெக்க ரெக்க' பாடலைப் பாடியிருந்தனர்.
புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர் நிகழ்வினை தொடர்ந்து வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் சத்திய பிரமாணம் எடுத்து தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
பணவீக்க நெருக்கடி ; ஈரான் முழுவதும் தீவிரமடைந்த போராட்டங்கள்
பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, ஈரானில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானிய ரியால் (Rial) மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளமையினால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளன. இதனால், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. முன்னதாக, வர்த்தகர்கள் இடையே ஆரம்பமான குறித்தப் போராட்டம், தற்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் பரவியுள்ளது. இந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி […]
ரோஹித் –கோலியை தொடர்ந்து விளையாட வைக்கணும் –இர்ஃபான் பதான் ஸ்பீச்!
டெல்லி : விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தற்போது T20I மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் (ODI) கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதனால் அவர்கள் விளையாடும் ஒவ்வொரு ODI போட்டியும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்வாக மாறியுள்ளது. அவர்களை நேரில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய ODI தொடர்கள், 2023 உலகக் கோப்பை காலத்தில் இருந்த அதே உற்சாகத்தை […]
கூட்டணி விவகாரம்.. லக்ஷ்மண ரேகையை மீற மாட்டோம்.. வைகோ கருத்து!
திமுக காங்கிரஸ் கூட்டணி உட்கட்சி பூசல் விவகாரத்தில் லக்ஷ்மண ரேகையை மீற மாட்டோம் என்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்து உள்ளார்.
நயன்தாரா வாயால் 'அந்த வார்த்தை'யை கேட்டதும் மயங்கி விழுந்த பிரபல இயக்குநர்: நீங்களே வீடியோவ பாருங்க
மன சங்கரவரபிரசாத் காரு படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடியை மயங்கி விழ வைத்துவிட்டார் நயன்தாரா. அவர் வாயில் இருந்து அப்படியொரு வார்த்தை வரும் என எதிர்பார்க்காததால் அனிலுக்கு மயக்கம் வந்துவிட்டது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்…சுவிட்சர்லாந்து தீ விபத்தில் 40 பேர் பலி!
சுவிட்சர்லாந்து :கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள Le Constellation என்ற பாரில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. வெடிப்பு ஒன்றுக்குமேல் ஏற்பட்டதாக தகவல்கள் கூறும் நிலையில், அதன் பின் தீ வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் (GMT 00:30) நிகழ்ந்ததாக RTS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்க சுமார் 100 பேர் பாரில் கூடியிருந்த […]
மக்களுடன் மக்களாக, தலாதா மாளிகையில் ஜனாதிபதி AKD!
வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையில் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் வழிபாடுகளில்… The post மக்களுடன் மக்களாக, தலாதா மாளிகையில் ஜனாதிபதி AKD! appeared first on Global Tamil News .
த.வெ.க கூட்டணிக்கு வருகிறதா வி.சி.க? செங்கோட்டையைன் ஓபன் டாக்.!
சென்னை :திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் முக்கியமாக, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) வருகிறதா என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார். வி.சி.க கூட்டணிக்கு வருமா, இல்லையா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் வி.சி.க தொண்டர்கள் பலர் த.வெ.கவில் இணைந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், எல்லோருடைய எண்ணங்களும் ஒரே திசையில் தான் இருப்பதாக […]
யாழ். சுற்றுலாத்துறையின் மையமாக மாறும் வலி வடக்கு: தவிசாளர் சுகிர்தன் பெருமிதம்
வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் 2026ம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள வலி வடக்கு தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. வலி வடக்கு பிரதேசசபை செயலாளர் சிவகுமார் சிவானந்தனால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், இப்புதிய வருடத்தில் வலி வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேலும் துரிதகதியில் மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக யாழ் நகரத்தை […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஜப்பானின் நில அதிர்வு
ஜப்பானின் கிழக்கு நோடா (Noda) பகுதிக்கு அருகில் நேற்று 6.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஜப்பானின் கிழக்கு நோடா கடற்பரப்புக்கு அப்பால் சற்று முன்னர் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது நிலப்பரப்பில் இருந்து சுமார் 19.3 கிலோமீட்டர் (சுமார் 12 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் இந்த நில […]
புதுக்கோட்டையில் பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஜன.4ல் அமித் ஷா வருகை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ள நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்திற்கு தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
புதிய விடியல் – 2026! பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான பணிகள் ஆரம்பம்!
2026 புத்தாண்டுக்கான பணிகளைப் பிரதமர் அலுவலகத்தில் (Prime Minister’s Office) இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்… The post புதிய விடியல் – 2026! பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான பணிகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
Dharmendra: இது கோடிக்கணக்கான மக்களுக்கு தர்மேந்திரா விட்டுச் சென்ற பொக்கிஷம்! - அமிதாப் பச்சன்
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா கடந்தாண்டு இயற்கை எய்தினார். இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்திருந்த 'இக்கிஸ்' திரைப்படம் புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று திரைக்கு வந்திருக்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் இப்படத்தின் ரிலீஸை ஒட்டி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra நடிகர் அமிதாப் பச்சன் 'க்ரோர்பதி' நிகழ்ச்சியில் தர்மேந்திராவை நினைவு கூர்ந்தார். அதைத் தொடர்ந்து அவருடனான நினைவுகள் குறித்தும், 'ஷோலே' படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விஷயங்கள் குறித்தும் அந்த நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்திருக்கிறார். அமிதாப் பச்சன், 'இக்கிஸ்' திரைப்படம் நமக்கு கிடைத்த கடைசி நினைவுச் சின்னம். கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் விட்டுச் சென்ற பொக்கிஷம். ஒரு கலைஞன் தன் உயிரின் கடைசி மூச்சு வரை கலையைத் தொடர விரும்புவான். அதைத்தான் என் நண்பர் தர்மேந்திரா தியோலும் செய்தார். அவர் சாதாரண மனிதர் மட்டுமல்ல. அவர் ஒரு உணர்வு! என்றவர், நாங்கள் பெங்களூரில் 'ஷோலே' படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தோம். அமிதாப்பச்சன் அப்போது அவர் மல்யுத்த வீரரைப் போன்ற ஒரு ஹீரோவாக இருந்தார். அப்படத்தின் என்னுடைய கதாபாத்திரத்தின் இறப்புக் காட்சியில் நீங்கள் என்னிடத்தில் பார்த்த நடிப்பைக் கொண்டு வர அவர் உதவினார். ஏனெனில் அந்தக் காட்சியில் அவர் என்னை அவ்வளவு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். அந்தக் காட்சி கோரும் எமோஷனை இயல்பான நடிப்பின் மூலம் அவர் வெளிப்படுத்தினார். எனக் கூறியிருக்கிறார்.
பர்னி தெலோங் எரிமலை சீற்றம் : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்!
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் அமைந்துள்ள பர்னி தெலோங் (Bur Ni Telong) எரிமலை தற்போது அதிகப்படியான சீற்றத்துடன் காணப்படுவதால்,… The post பர்னி தெலோங் எரிமலை சீற்றம் : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்! appeared first on Global Tamil News .
சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி!
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கிராஸ்-மொன்டானா (Crans-Montana) பனிச்சறுக்கு விடுதியில் (Ski Resort) இன்று (ஜனவரி 1, 2026) அதிகாலை நடந்த… The post சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி! appeared first on Global Tamil News .
விஜய்யை அரசியல் களத்தில் இறக்கிவிட்டது யார்?: மன்சூர் அலி கானால் ஆராய்ச்சி செய்யும் ரசிகர்கள்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பற்றி மன்சூர் அலி கான் தெரிவித்த ஒரு விஷயம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். மேலும் மன்சூர் அலி கானிடமே பதில் கேட்கிறார்கள்.
நீருக்கு அடியில் சதுரங்கப் போட்டி ; உலக செம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது நெதர்லாந்து
நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டி வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி, இது நீச்சல் தடாகத்தின் அடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடப்படும் ஒரு வினோதமான மற்றும் சவாலான விளையாட்டாகும். இம்முறை நடைபெற்ற உலக செம்பியன்ஷிப் போட்டியில் 40 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தப் போட்டியில் சதுரங்கப் பலகைகள் காந்தத் தன்மையுடனும் (Magnetic boards), காய்கள் […]
தூத்துக்குடி ,நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை :வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்பு […]
2026: ட்ரம்ப் டு கிம் வரை; ரஷ்யா டு சுவிட்சர்லாந்து.. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் - Album
மொசாட் பெண் உளவாளி கூறும் புதிய தகவல்
நாளொன்றிற்கு சராசரியாக 9 மில்லியன் தகவல்கள் இஸ்ரேலிய அமைப்புகளால் திரட்டப்படுவதாக இஸ்ரேலிய மொசாட் உளவாளி பெண் டனா ரசண்டல் தெரிவித்தார். இந்த தகவல்கள் தான் இஸ்ரேலின் தற்போதை அளப்பரிய சாதனைகளுக்கு உதவியுள்ளது. இஸ்ரேல் என்றதும் மொசாட் உளவுத்துறை பெரிதாக பேசப்பட்டாலும், அங்கு 3 உளவுத்துறைகள் செயற்பட்டு வருகின்றன. 15ற்கும் மேற்பட்ட உப பிரிவுகள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு பிரிவில் செயற்பட்டு வருகின்றன. மொசாட்டின் சாதனை என்று பல புலனாய்வு பெறுபேறுகளை செய்தது இஸ்ரேலின் ஷின்பெத் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டவை.
2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா?
2025-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலையின் வளர்ச்சி வழக்கத்தை விட மிக மிக அதிகமாக இருந்தது. சென்னையில் தங்கம் விலை 2025-ம் ஆண்டு கிட்டத்தட்ட ரூ.47,000-க்கு உயர்ந்திருந்தது. வெள்ளி விலை ரூ.183-க்கு உயர்ந்திருந்தது. இந்த ஆண்டு (2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை எப்படி இருக்கும்? இந்த ஆண்டும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு மவுசு குறையாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால், இந்த ஆண்டும், இந்த உலோகங்களின் மதிப்பு உயரும். தங்கம், வெள்ளி மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026! காரணம் என்ன? உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. உலகளவிலும் அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மைகள் நிலவுகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து வருகின்றனர். 2025-ம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி நல்ல வருமானத்தைத் தந்ததால் ரீடெயில் முதலீட்டாளர்கள் தொடங்கி பெரிய முதலீட்டாளர்கள் வரை தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர். வெள்ளியை எடுத்துக்கொண்டால், தொழிற்சாலைகளில் அதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. இப்போது ஏன் தங்கம், வெள்ளி விலை குறைகிறது? கடந்த நான்கு தினங்களாக தங்கம், வெள்ளி விலை குறைந்து வருகிறது. இதற்கு சந்தையில் நடக்கும் கரெக்ஷன் தான் மிக முக்கிய காரணம். பங்குகள் தொடங்கி உலோகங்கள் வரை சந்தையில் எது தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தாலும், அது ஒருகட்டத்தில் கரெக்ஷனைச் சந்திக்கும். இது இயல்பான ஒன்று தான்... இயற்கை தான். அதனால், தங்கம், வெள்ளி விலை குறைகிறதே... முதலீடு என்ன ஆகும் என்கிற பயம் வேண்டாம். இனி என்ன செய்யலாம்? 2025-ம் ஆண்டின் ஆரம்பத்தில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள், இப்போது அவர்களுக்கு வேண்டுமானால், தாராளமாக பிராஃபிட் டேக்கிங் செய்யலாம். 2025-ம் ஆண்டின் இறுதியில் முதலீடு செய்தவர்கள் சற்று பொறுப்பது நல்லது. தங்கம், வெள்ளி Rewind 2025: ஒரே ஆண்டில் தங்கம் ரூ.47,000, வெள்ளி ரூ.183 உயர்வு - கடந்து வந்த பாதை தங்கம், வெள்ளி முதலீட்டில் ரிஸ்க் உள்ளதா? அமெரிக்காவில் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதத்தைக் குறைத்தது... அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது... முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கம், வெள்ளியில் முதலீடு செய்து வந்தது... போன்றவை தான் 2025-ம் ஆண்டில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததற்கான காரணம். இதற்கெல்லாம் நேர்மாறாக இந்த ஆண்டு நடந்தால், தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்கலாம். அதனால், மொத்தமாக தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. நீண்ட கால முதலீட்டிற்கு எப்போதுமே தங்கம், வெள்ளி நல்ல ஆப்ஷன். லம்சம் முதலீடு என்று வந்துவிட்டால், சற்று யோசிக்க வேண்டும். டிரேடிங் செய்பவர்கள் வேண்டுமானால் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். ஆனால், மிக மிக கவனம் தேவை. தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா... வேண்டாமா? முதலீடு செய்பவர்கள் மிக கவனமாக செய்வது நல்லது. தங்கம், வெள்ளியை விட, இப்போது காப்பரில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று பொருளாதார நிபுணர் ரெஜி தாமஸ் தொடர்ந்து கூறி வருகிறார். அதனால், அதில் கவனம் செலுத்துவது மிக நல்லது. கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன? Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
இறையருளுடன் இனிதே தொடங்கிய 2026: பாஷையூர் அந்தோனியார் ஆலய நள்ளிரவு நற்செய்தி திருப்பலி
யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று(01) நள்ளிரவு புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீரும் வழங்கப்பட்டது.
✨ புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2026 புத்தாண்டை முன்னிட்டு, கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (வியாழக்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற்றது.… The post ✨ புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்! appeared first on Global Tamil News .
பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு புதுவருட திருப்பலி!
யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில்… The post பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு புதுவருட திருப்பலி! appeared first on Global Tamil News .
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பரிசு அறிவித்த அரசு!
சென்னை :தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் மிகை ஊதியம் அறிவித்துள்ளது. சி, டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.183.86 கோடி […]
2025-ம் ஆண்டில் ஆசிய அளவில் மிகவும் வீழ்ந்த இந்திய ரூபாய்; 2026-ல் மீளுமா? - RBI அறிக்கை
2025-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.91 வரை கூட சென்றது. இது ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி தான். ஆனால், இது இறக்குமதியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைத் தந்தது. விலைவாசி உயர்வு அச்சம் இந்தியாவின் பக்கம் எட்டிப்பார்த்தது. ஆனால், சில நாள்களிலேயே, இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்தது. 2026-ம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, 2025-ம் ஆண்டில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 5 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. 2022-ம் ஆண்டில் இருந்து இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சியைக் கண்டது கடந்த ஆண்டு தான். கடந்த ஆண்டு, ஆசியாவிலேயே மிக வீழ்ச்சியைக் கண்ட நாணயம் இந்திய ரூபாய். இந்திய ரூபாய் கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன? ஏன் இந்த வீழ்ச்சி? அமெரிக்கா இந்திய பொருள்களின் மீது 50 சதவிகித வரி விதித்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும். அடுத்ததாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பெருமளவு தங்களது முதலீடுகளை வெளியேற்றினர். இன்னொன்று, உலக அளவிலான நிலையற்ற தன்மை, நாணய சந்தையைப் பாதித்தது. 2026-ம் ஆண்டு எப்படி இருக்கும்? இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதனால், இந்திய ரூபாயின் மதிப்பு நிலையற்று இருக்கும். இப்போது சந்தையைக் கணிக்கும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு கரடியின் பிடியில் இருக்கலாம். ஆனால்... இந்த இறங்குமுகத்தைத் தாண்டி, இந்திய பொருளாதாரம் வலுவாக இருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி நன்கு இருக்கிறது. பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருக்கும். மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!
வலி. வடக்கு பிரதேச சபையின் 2026 புத்தாண்டு சத்தியப்பிரமாண நிகழ்வு!
வலி. வடக்கு பிரதேச சபையின் 2026-ஆம் ஆண்டிற்கான பணிகள் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. முக்கிய நிகழ்வுகள்:… The post வலி. வடக்கு பிரதேச சபையின் 2026 புத்தாண்டு சத்தியப்பிரமாண நிகழ்வு! appeared first on Global Tamil News .
பார்வதியும், கம்ருதீனும் சண்டை போட்டுக் கொண்ட விதத்தை பார்த்தால் கண்டிப்பாக பிரேக்கப் தான் என்று பலரும் முடிவே செய்த நிலையில் உல்ட்டாவாக ஆகிவிட்டது. இதை சத்தியமாக எதிர்பார்க்கல பாரு என்கிறார்கள் பார்வையாளர்கள்.
விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் –சென்னை மாநகர காவல் அறிவிப்பு
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ‘ஹாட் ஸ்பாட்’டான மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே
`வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி; ரூ.2.2 லட்சம் கோடி மாயமானது எங்கே?'- திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!
`திமுக அரசு வாங்கிய கடனில், ரூ.2.2 லட்சம் கோடி யாருக்கும் பயனில்லாமல் மாயமானது எங்கே?' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025&ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. அதே நேரத்தில் மூலதனச் செலவாக ரூ. 1 லட்சத்து 66,754 கோடியை மட்டுமே செய்திருக்கிறது. இதன் மூலம் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக திமுக அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்தது திமுக அரசு தான். இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தப்பட்ட 1952&ஆம் ஆண்டிலிருந்து திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முந்தைய 2020&21ஆம் நிதியாண்டின் இறுதி வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால், அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் மட்டும் ரூ.4.73 லட்சம் கோடி ஆகும். இதற்கு காரணம் திமுக அரசின் திறனற்ற நிதி நிர்வாகம் தான். இதை கடந்த காலங்களில் பலமுறை புள்ளி விவரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. ஸ்டாலின் ஆனால், திமுக அரசு வீணாக கடன் வாங்கவில்லை என்றும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன்களை வாங்கியதாகவும் விளக்கமளித்த ஆட்சியாளர்கள், வாங்கிய கடன் முழுவதும் முதலீடுகளாக மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறி வந்தனர். அது அப்பட்டமான பொய் என்பது இப்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. 2021&ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற திமுக அரசு 2025&ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.3.86 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. இந்தத் தொகையை மூலதன செலவுகளுக்காக மட்டுமே திமுக அரசு பயன்படுத்தியிருந்தால், ரூ.3.86 லட்சம் கோடி மதிப்புள்ள கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2021&22ஆம் ஆண்டில் ரூ.37,011 கோடி, 2022&23ஆம் ஆண்டில் ரூ.39,530 கோடி, 2023&24ஆம் ஆண்டில் ரூ.42,532 கோடி, 2024&25ஆம் ஆண்டில் ரூ.47,681 கோடி என மொத்தம் ரூ.1.66 லட்சம் கோடி மட்டுமே மூலதன செலவுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த நிதி நிர்வாகத்தின் அடையாளம் என்னவென்றால், அரசின் வருவாய் செலவுகள் அனைத்தையும் வருவாய் வரவுகளுக்குள் கட்டுப்படுத்தி, மூலதன செலவுகளுக்கு மட்டும் கடன் வாங்குவது தான். அப்படியானால் மூலதன செலவுகளுக்கான ரூ.1.66 லட்சம் கோடிக்கும் கூடுதலாக வாங்கப்பட்ட ரூ.2.20 லட்சம் கோடி கடன் என்ன ஆனது? இந்த புள்ளிவிவரங்களையெல்லாம் நான் தயாரிக்கவில்லை. எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு 15.90% வளர்ச்சி அடைந்து விட்டது என்று திமுகவினர் மார்தட்டுகிறார்களோ, அதே ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தான் திமுகவின் இந்த அவலத்தையும் காட்டுகின்றன. தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், வரும் மார்ச் 31&ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள ஐந்தாண்டுகளில் திமுக அரசு ரூ. 4 லட்சத்து 73,299 கோடி கடன் வாங்கியுள்ளது. இதே காலத்தில் திமுக அரசு செய்த மூலதன செலவுகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 23,984 கோடி மட்டுமே. மீதமுள்ள ரூ.2.49 லட்சம் கோடி எங்கே போனது? என்ற வினா இயல்பாகவே எழுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கடனாக வாங்கியத் தொகையில் 43.11% தொகையை மட்டும் தான் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக செலவிட்டிருக்கிறது. மீதமுள்ள ரூ.2.20 லட்சம் கோடி கடன் தொகையை யாருக்கும் பயனளிக்காத வகையில் வீணாக திமுக செலவிட்டுள்ளது. கடன் கடனாக வாங்கியத் தொகை மூலதன செலவுகளுக்காக பயன்படுத்தப்படாததற்கு காரணம் திமுக அரசின் நிதிநிர்வாகத் தோல்வி தான். ஆட்சிக்கு வந்தால் வருவாய்ப் பற்றாக்குறையை முற்றிலுமாக ஒழித்து, வருவாய் உபரி ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதை சாதிப்பதில் படுதோல்வி அடைந்து விட்டது. கடந்த ஆண்டில் கூட ரூ.49,279 கோடி வருவாய்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1.77 லட்சம் கோடி வருவாய்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், இலவசங்களை வழங்குதல் போன்ற வழக்கமான வருவாய் செலவுகளுக்குக் கூட பொருளீட்ட முடியாத திமுக அரசு, அவற்றையெல்லாம் கடன் வாங்கித் தான் செய்திருக்கிறது. அதனால் தான் வாங்கிய கடனை திமுக அரசால் சொத்துகளாக மாற்ற முடியவில்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட வளர்ந்து விட்டோம் என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, நிதி நிர்வாகத்தில் உத்தரப்பிரதேச அரசிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று விமர்சிக்கப்படும் உத்தரப்பிரதேச அரசு, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2.57 லட்சம் கோடி மட்டுமே கடனாக வாங்கியுள்ளது. இதை விட 50% அதிகமாக தமிழகம் கடன் வாங்கியுள்ளது. ஆனால், உத்தரப்பிரதேசம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4.65 லட்சம் கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய கடனை விட ரூ.2.08 லட்சம் கோடி அதிகமாக உத்தரப்பிரதேசம் மூலதன செலவு செய்துள்ளது. அதற்கு காரணம் கடந்த 4 ஆண்டுகளில் வருவாய் வரவுகளுக்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, ரூ.2.15 லட்சம் கோடியை மிச்சப்படுத்தி வருவாய் உபரியை ஏற்படுத்தியது தான். உத்தரப் பிரதேசத்திடம் நிதிநிர்வாகம் குறித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய திமுக அரசு, தமிழகத்தின் வரிப் பணம் உத்தரப்பிரதேசத்திற்கு செல்வது தான் இதற்கு காரணம் என அடிமுட்டாள்தனமான பொய்யை கூறுகிறது. அன்புமணி ராமதாஸ் திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களின் விளைவாக நடப்பாண்டில் வட்டியாக மட்டும் ரூ.70,754 கோடி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை திமுக அரசு வாங்கி வைத்திருக்கிறது. மோசமான நிதி நிர்வாகத்தால் தங்களை அடகு வைத்திருக்கும் திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

25 C