JioHotstar announces Malayalam long-form rom-com series Cousins & Kalyanam
Mumbai: Strengthening its regional content slate, JioHotstar is set to premiere Cousins & Kalyanam, an upcoming Malayalam rom-com web series poised to charm audiences across the country. Marking a significant milestone for Malayalam OTT entertainment, the series becomes the first long-form web series in the language, featuring more than fifty episodes.Produced under the IN10 Media banner, Cousins & Kalyanam is written and created by Praveen Balakrishnan and directed by Vishnu Chandran, with Anoop Chandrasekhar serving as production coordinator. The series brings together popular duo Priya Prakash Varrier and Roshan Abdul Rahoof, reuniting after their successful pairing in the film Oru Adaar Love. The cast also features Junais, Nandhana Varma, Subin Tarzan, Saniya Fathima, and Nanda Jayadev in pivotal roles.A lighthearted exploration of family, friendship, and relationships, the narrative spans 25 years and seven weddings, following the amusing and heartwarming journey of six cousins. Packed with relatable moments and unexpected twists, the series is designed to deliver wholesome entertainment to viewers of all ages.The visual storytelling is led by cinematographer Noushad Shereef, while editor Sooraj E. S. shapes the series’ pace and narrative flow.Expanding its accessibility and reach, Cousins & Kalyanam will stream in seven languages — Malayalam, Tamil, Telugu, Kannada, Marathi, Hindi, and Bengali — reinforcing JioHotstar’s commitment to multilingual content distribution.With a strong lineup of talent, an engaging storyline, and a first-of-its-kind long-form format in Malayalam, Cousins & Kalyanam is set to become a compelling new addition to the regional OTT landscape.
ஆட்சி மாற்றம் நடக்க விஜய்க்கு உதவுவேன்…த.வெ.க தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முக்கிய தகவல்!
சென்னை : நவம்பர் 28: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மாபெரும் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சிப் பீடத்தில் அமர்வார்” என்று திட்டவட்டமாக அறிவித்தார். “தமிழ்நாட்டு மக்களிடம் இப்போது ஒரு புதிய எண்ணம் எழுந்துள்ளது – புதியவர்கள் ஆள வேண்டும், தூய்மையான ஆட்சி வேண்டும் என்ற எண்ணம். அதற்கு இளவல் விஜய் தலைமையிலான தவெகவே […]
வெள்ளத்தில் மூழ்கிய வைத்தியசாலை ; மின்சாரம் துண்டிப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, வெள்ளம் சூழ்ந்த அந்த வாட்டுகளில் இருந்த நோயாளிகள் மேல் தளங்களில் உள்ள வாட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே நேரத்தில், பதுளை வைத்தியசாலையின் பல வாட்டுகளும் நேற்று மாலை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தற்போது வௌ்ளநீர் வடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
உடனடியாக வெளியேறுங்கள் ; ஒரு பகுதி மக்களுக்கு அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை
அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பகுதியில் இருபுறமும் வசிக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் இடத்தினைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோர தாண்டவம் ஆடும் தித்வா புயல் ; வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து
இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருக்கின்றது. அது வடக்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று நிலைமை இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமையும் கடும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் […]
COLORS launches a new drama ‘Seher Hone Ko Hai’
Mumbai: COLORS has announced the launch of its latest fiction drama, ‘Seher Hone Ko Hai’, a stirring, socially rooted narrative that brings to life a mother’s battle to protect her daughter from the same oppressive fate she once endured. Premiering on December 2 at 10:00 pm, the show will air every Monday to Friday on COLORS and JioHotstar.Anchored in the evocative backdrop of Lucknow, the show traces the journey of Kausar—played by Mahhi Vij—who was married off at a very young age. Determined that her daughter Seher must not inherit the same darkness, she fiercely protects her right to dream, learn, and build a career. The story follows Seher’s fight to pursue her goal of becoming a doctor, while her father Parvez (Vaquar Shaikh) plans her marriage into a powerful household headed by Osmaan (Deepak Qazir).Caught in this conflict is Mahid, the influential family’s heir, played by Parth Samthaan, whose own troubled past and moral awakening become central to the narrative. The cast also includes Apurva Agnihotri as Dr. Farid, a man of science who stands in contrast to deep-rooted traditional norms.Speaking about his return to television, Parth Samthaan shared, Mahid is a beautifully conflicted soul, torn between the expectations of a revered family and the unresolved wounds of his childhood. His encounter with Seher becomes the turning point in his life, pushing him to confront the man he truly is, rather than the one he was shaped to be. This is definitely not your boy-next-door character — in fact, it’s the most challenging role I’ve ever done so far. Mahid is wounded, scared, and emotionally unstable, yet he lives by a strong sense of justice, helping whoever is in need and punishing the culprit in his own way. He believes Allah has sent him into this world with a purpose of protecting the vulnerable and ensuring that justice is served. Returning to television with a character, this layered feels incredibly special, and I look forward to the audience embracing him with the same love and support they’ve always shown me. Mahhi Vij expressed her emotional connection to the character, saying, “Coming back to fiction with Kausar feels like coming home, both as an actor and as a mother. Kausar’s journey moved me the moment I heard it. I’ve worn many hats over the years: a performer, a reality-show winner, a woman who has learned to turn setbacks into strength—and this role asks for every one of those truths. What I love most is the quiet, unstoppable courage with which Kausar fights to give her daughter the life she never had. As a mother, that sentiment is so primal to me: wanting better, wanting brighter, wanting freedom for your child even if you never had it yourself. This role is my tribute to mothers everywhere and their infinite capacity to love, to fight, and to reshape the futures of the children they raise.” Rishita Kothari, who plays the titular character, added, “Playing Seher is an honour because she represents countless girls who dream with a silent fire. Her dream of becoming a doctor is a continuation of a dream Kausar never got to chase. Raised in a world where even wanting an education can be dangerous, Seher survives by staying gentle, observant, and deeply resilient, and what moved me most is how she learns to navigate life with both fear and hope. Transitioning from the digital world to this powerful television role has been overwhelming in the best way. Working with Mahhi ma’am is truly a blessing; every scene teaches me something new about this craft. I hope through this character I can inspire the courage to believe in your own light among girls.”
மும்பை மாநகராட்சி: ராஜ் தாக்கரே கறார், தீவிரம் காட்டும் உத்தவ் - ஆளும் கூட்டணியிலும் பஞ்சாயத்து?
மகாராஷ்டிராவில் வரும் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை தொடர்ந்து ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் நேரடியாகவே சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இருவரும் பல முறை சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய ராஜ் தாக்கரே வீட்டிற்கு உத்தவ் தாக்கரே மீண்டும் சென்றார். உத்தவ் தாக்கரே மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் உள்ள ராஜ் தாக்கரே இல்லத்திற்கு சென்றார். அங்கு இரு தலைவர்களும் பூட்டிய அறைக்குள் இரண்டு மணி நேரம் வார்டுகளை பங்கிட்டுக்கொள்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். உத்தவ் தாக்கரே கட்சிக்கு செல்வாக்கு இருக்கும் பகுதியில் ராஜ் தாக்கரே சில வார்டுகளை கறாராக கேட்கிறார். இதனால் வார்டுகளை பகிர்ந்து கொள்வதில் இரு தரப்பினருக்கும் தொடர்ந்து முட்டுக்கட்டை இருந்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் பொதுவான கோட்டைகளான கருதப்படும் சிவ்ரி, ஒர்லி, மாகிம், பாண்டூப், தீண்தோஷி, மகதானே, பைகுல்லா மற்றும் காட்கோபர் போன்றவை இருப்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே வார்டுகளை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் இருந்து வருவதாக இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன. முக்கிய ஆலோசனை இப்பகுதியில் தற்போது உத்தவ் தாக்கரே கட்சிக்கு கவுன்சிலர்கள் இருக்கின்றனர். தற்போது தேர்தலுக்கான வார்டு இட ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு வார்டு வாரியாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். உத்தவ் தாக்கரேயுடன் பேச்சுவார்த்தையில் அவரது உறவினர் வருண் சர்தேசாய் கலந்து கொண்டார். ராஜ் தாக்கரேயுடன் அவரது கட்சி நிர்வாகிகள் பாலா நந்த்காவ்கர் மற்றும் நிதின் சர்தேசாய் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு தாக்கரே சகோதரர்கள் தனியாக சந்தித்து இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். ராஜ் தாக்கரே தீவிரம் காட்டும் உத்தவ் தாக்கரே மொத்தமுள்ள 227 வார்டுகளில் ராஜ் தாக்கரே தங்களுக்கு 80 முதல் 90 வார்டுகள் வேண்டும் என்று கேட்கிறார். இது பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் இத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் இணைந்து எதிர்க்கட்சி கூட்டணியில் போட்டியிட்டால் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையை விரைவில் முடித்துவிட்டால் வேட்பாளர்களை இறுதி செய்ய வசதியாக இருக்கும் என்று கருதி உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இருக்கிறார். எப்படியும் மும்பை மாநகராட்சி தனது கையில் இருந்து சென்றுவிடக்கூடாது என்பதில் உத்தவ் தாக்கரே தீவிரமாக இருக்கிறார். ஆளும் கூட்டணியில் பஞ்சாயத்து ஆளும் பா.ஜ.க கூட்டணியிலும் வார்டு பங்கீடு மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் சில நகராட்சிகளில் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் அக்கட்சிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பதும், ஒரு கட்சி தலைவர்களை மற்ற கட்சி இழுப்பதுமாக இருக்கிறது. இந்த பஞ்சாயத்து டெல்லி வரை சென்றது. ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்தார். ஆனாலும் தலைவர்களை இழுப்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நகைப்பிரியர்களுக்கு அடுத்த ஷாக்..! 95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..!
சென்னை : இன்று (நவம்பர் 28, 2025) ஆபரணத் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.560 அதிகரித்து ரூ.94,720-ஆகியுள்ளது. இந்த உயர்வு, கடந்த நாட்களின் ஸ்டெடி டிரெண்ட்டைத் தொடர்ந்து, சர்வதேச சந்தை அழுத்தங்களால் ஏற்பட்டுள்ளது. தங்கம் வாங்க நினைக்கும் பொதுமக்கள், குறிப்பாக திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக நகை தேர்ந்தெடுக்கும் குடும்பங்கள் இப்போது அதிர்ச்சியடைந்துள்ளனர். […]
`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அதிரடி
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017 ஆம் ஆண்டில் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக நான் உட்பட 5 பேர் மீது மதுக்கூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பொய்யாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் 8 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளனர். இதனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை, வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சித்தபோது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. போலீஸார் புனைந்த பொய் வழக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கால் என் எதிர்காலம் பாதிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக விசாரணை நிலையிலேயே உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், இதற்காக எனக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து மதுக்கூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 10 இன்ஸ்பெக்டர்கள் மாறி விட்டனர். இவர்கள் யாரும் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 10 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இந்த வழக்கில் நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், குற்றம் புரியும் நோக்குடன் சிலர் கூடியிருந்தனர் என்று வழக்கு பதிவு செய்யும்போது அதை நிரூபிக்க ஆதாரங்கள் இருக்க வேண்டும். இந்த வழக்கில் இதுபோன்ற எந்த ஆதாரமும் இல்லை. போலீஸார் 8 ஆண்டுகளாக விசாரணை நடத்தவில்லை, 2017-ல் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை 24.6.2025-ல்தான் நீதிமன்றத்துக்கே அனுப்பியுள்ளனர். இது பொய் வழக்கு என்று தெரிவதால் வழக்கு ரத்து செய்யப்படுகிறது, ரத்து செய்வது மட்டும் மனுதாரருக்கு முழுமையான நீதியை வழங்காது. ஒருவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் நற்பெயருக்கு களங்கம், சமூக அந்தஸ்து, வேலை வாய்ப்பு இழப்பு, உறவுகளில் பிரச்சனை, உளவியல் சிக்கல் ஏற்படுகிறது. போலீஸாரின் அதிகார மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது என ஐநா அறிவித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 8 லட்சத்தை தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் வழங்க வேண்டும், இதை சம்பந்தப்பட்ட போலீஸாரிடமிருந்த வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Imran Khan:``இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா? - பாகிஸ்தான் அரசு கூறும் பதில் என்ன?
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ பரிசுப் பொருட்களை ஒப்படைக்காமை, நிலம் தொடர்பான ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த வாரம் இம்ரான் கானைச் சந்திக்க அவரது சகோதரிகள் அடியாலா சிறைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் காவல்துறையால் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும், இம்ரான் கானைச் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானின் சகோதரிகள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். இம்ரான் கானின் சகோதரிகள் அப்போது, இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா என்பதைக் எங்களுக்குத் தெரியவில்லை. அவரது உடல்நிலை குறித்தும் எங்களுக்கு அச்சம் உள்ளது. அவரைச் சந்திக்க முயன்றபோது எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் காவல்துறைக்கு எதிராகக் கோஷம் எழுப்பினோம். அப்போது தெருவில் விளக்குகள் அணைக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டோம், எனக் குறிப்பிட்டிருந்தனர். ` மின்சாரம் துண்டிப்பு; சூரிய ஒளி வராத தனிச்சிறை' - உருக்கமான கடிதம் எழுதிய இம்ரான் கான் அதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தொண்டர்கள் கடந்த ஒரு மாதமாக இம்ரான் கானைச் சந்திக்க முடியவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அடியாலா சிறை நிர்வாகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டி சிறைக்குள் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அடியாலா சிறையிலிருந்து அவர் மாற்றப்பட்டதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை, எனக் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் அதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், முன்னாள் பிரதமர் முந்தைய கைதிகள் எதிர்கொண்டதைவிட மிகவும் வசதியான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்படும் உணவின் மெனுவைப் பாருங்கள் – அது ஐந்து நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காது. அவருக்கு ஒரு தொலைக்காட்சி, உடற்பயிற்சி உபகரணங்கள், இரட்டைப் படுக்கை, வெல்வெட் மெத்தை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. நான் சிறையில் இருந்தபோது குளிர்ந்த தரையில் தூங்கினோம், சிறை உணவைச் சாப்பிட்டோம், சூடான நீரும் கொடுக்கப்படவில்லை. இரண்டு போர்வைகள் மட்டுமே இருந்தன, எனத் தெரிவித்திருக்கிறார். இஸ்லாமாபாத் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் - பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு!
Generali Central Insurance (GCI) and Generali Central Life Insurance (GCLI) earlier this year unveiled their first joint brand campaign, Here Now, marking a milestone following the company’s rebranding after Central Bank of India joined the Generali Group as a joint venture partner earlier this year.Here Now reflects the brand’s commitment to being a “Lifetime Partner,” standing with customers as they embark on new journeys with innovative insurance solutions backed by Generali’s global expertise and the trusted presence of Central Bank of India.Anchored in the belief that the future is created in the present, the campaign celebrates everyday acts of courage and transformation—from a family moving into their first home, a woman achieving personal fitness goals, a father teaching his son to drive, to an entrepreneur reigniting a dream. Medianews4u,.com caught up with Ruchika Malhan Varma, Chief Marketing, Customer & Impact Officer, Generali Central Insurance Q. How does the refreshed brand identity reflect the company’s commitment to protection, reliability, and digital innovation across its customer touchpoints? Two powerful legacies—the 194-year-old Generali Group and the century-old Central Bank of India—have come together to emerge as Generali Central Insurance. The refreshed brand identity symbolises this union.It also reflects Generali’s global expertise and the Central Bank of India’s deep-rooted trust. This partnership also brings the advantage of being able to access the vast distribution network of Central Bank of India, which has over 4700 branches across the country.Together, they embody a single, powerful promise: to protect what matters most—people, their health, their dreams, and their future.By aligning with the Generali Group’s ‘Lifetime Partner’ philosophy, we’ve infused our identity with a forward-looking spirit that leverages digital innovation and expanded reach to make insurance simpler, smarter, and more personal. Q. Could you talk about the brainstorming with the creative agency that led to the first brand campaign Here Now? Who is the TG and key markets being targetted? We sat down with our creative agency, VML India, with a shared vision—to tell a story of new beginnings that feels real, relevant, and deeply rooted in the India of today. The brief was simple: bring Generali’s global promise of being a Lifetime Partner to life in a way that connects emotionally with people and creates a sense of urgency that the right time to act, to protect, to dream, is now. That’s how ‘Here Now’ was born.The campaign celebrates everyday acts of courage and transformation, with authentic local storytelling. Such as a family moving into their first home, a woman setting new benchmarks in her health journey, a father teaching his son to drive, and an entrepreneur reigniting a dream.Our core audience comprises digitally engaged, family-oriented individuals across metros and emerging markets who value protection but are equally driven by progress. Q. Could you talk about the various legs of the campaign? What is the media mix between traditional and digital avenues? Today’s interconnected world calls for an integrated approach, which is why the Here Now was conceptualised as a multi-touchpoint, integrated campaign. It spans traditional as well as digital media.While TV and print drive scale and awareness, digital channels like YouTube, Meta, and Google Display enable precision targeting and interactivity. Further, we’ve also partnered with mobility platforms such as Uber, Mumbai Metro, and Swiggy. Here Now connects with audiences on the move, present across every touchpoint where India watches, scrolls, travels, or eats. Q. This is the first joint campaign post-rebranding — how does it mark a new chapter for Generali Central Insurance? This campaign marks a defining moment in our brand journey. This association reflects the strength of two institutions that are coming together:Generali, with its 194-year-old global heritage, and Central Bank of India, with its century-old, deep-rooted trust and reach. The two have joined forces to create an insurer that’s both globally experienced and locally grounded. Q. What is the core idea behind the “Here Now” campaign, and what message does it aim to convey to consumers? The core idea of the campaign is to highlight the importance of timely financial protection, especially in the current scenario when India’s insurance penetration (life and non-life put together) continues to be low, hovering at below four per cent of GDP.Here Now campaign aims to inspire people to take charge of their future today, reminding them that tomorrow’s security depends on the choices they make in the present. Additionally, it also is a reassurance to our customers that Generali Central Insurance remains committed to the promise of Lifetime Partnership. Q. What makes this campaign stand out from previous insurance campaigns in the market? Generali Central Insurance has always taken a unique, innovative approach to storytelling— one that blends emotion with purpose. The Here Now campaign stands out because it shifts the focus from traditional fear-based messaging in insurance to empowerment and optimism.Rather than talking about uncertainty, it celebrates everyday courage and the power of acting today to shape a better tomorrow. The campaign brings Generali’s global ‘Lifetime Partner’ philosophy to life through authentic Indian stories, using fresh relatable moments. Q. With consumer attention spans rapidly declining what tactics will the company adopt to ensure that the marketing message lands? Our focus is on delivering messages that are quick to grasp yet emotionally resonant. The Here Now campaign has been rolled out across digital platforms, and customer engagement channels, using data-led targeting to deliver hyper-personalised, relatable content.For younger audiences, we’re leveraging digital storytelling and relatable content to make it engaging. To connect meaningfully with them, we have rolled out the campaign in nine languages, ensuring that our message resonates across India’s diverse market. Q. Is the main goal of marketing about building awareness about insurance? Also is the line between performance marketing and brand building blurring? Building awareness about insurance is and will always remain an important larger goal for us at Generali Central Insurance. However, our marketing vision goes beyond that. Having embarked on a transformative journey with a JV with Central Bank of India, we are now driving two key strategic communication initiatives.First, to announce our partnership with the Central Bank of India, and second, to reinforce Generali’s global promise of being a Lifetime Partner to our customers.Today, the line between performance marketing and brand building is increasingly blurring. The most effective marketing is integrated, where brand storytelling and performance outcomes coexist across the same platforms. Q. Did marketing in the BFSI segment become more innovative and creative in 2025 as opposed to previous year when communication was a more formal tone? Yes. And this evolution will only accelerate in this digital age. In 2025, marketing in the BFSI segment has become far more innovative, creative, and emotionally engaging than before. Today, it’s no longer just about products and services; it’s about building communities, telling authentic stories, and creating meaningful experiences.Innovation now goes beyond technology — it’s about strengthening trust and forging genuine human connections with every stakeholder. You can see this change in our approach at Generali Central Insurance, where we use insight mining to seek a deeper understanding of consumers. Q. Has the role of the CMO today expanded to include driving business results through marketing innovations? Yes, the modern CMO is a growth architect. The role of the CMO today goes far beyond brand building—it’s about driving measurable business impact through marketing innovation. CMOs now sit at the intersection of data, technology, and creativity, using insights to shape strategy, enhance customer experience, and fuel growth.At Generali Central Insurance, for instance, the CMO leads the marketing department in making it a business enabler, be it through innovative products, leveraging technology, crafting campaigns and offering superior customer experience. Q. While hyper personalisation is important is too much use of it an issue in BFSI? Hyper-personalisation has become a powerful tool in the BFSI sector. It has helped us create more relevant and engaging experiences for customers. By leveraging data analytics and AI, we can tailor products and communication to individual needs, improving affordability, accessibility, and customer satisfaction.All of this is vital to deepening insurance penetration in India. However, too much personalisation can feel intrusive if not handled responsibly. The key is to focus on balancing data-driven intelligence with empathy.For instance, we gave the option of creating AI-driven customised digital ads featuring celebrities like Aparshakti Khurana and Masaba Gupta to agents. They could personalise the ads with their information, and connect with customers by addressing them directly. Q. Is AI now playing a role across the funnel? Which aspect of the funnel does the JV focus on the most and why? At Generali Central Insurance, we see AI not just as a tool—but as a strategic enabler of customer-centricity. AI is now playing a transformative role across the entire marketing and customer journey funnel at GCI, right from awareness to engagement, conversion, and retention.At the top of the funnel, Generative AI and machine learning tools help customers identify suitable coverage based on their lifestyle and financial profiles, with our Need Analysis Tools. We’ve also introduced an AI-powered Travel Journey that offers curated insights and recommendations, helping customers discover relevant products in context.At the engagement and conversion stages, our revolutionary AI-powered whatsapp chatbot LEO assists customers with queries, policy downloads, claims, and renewals. Towards the bottom of the funnel, AI-generated renewal videos create personalised reminders that have significantly improved engagement and renewal rates. We are also using AI in driving communication and distribution. Q. Could you shed light on the company's social media strategy to participate in the consumer conversation? Generali Central Insurance follows an always-on social media strategy designed to foster continuous engagement and authentic conversation with its audiences. The aim is to stay top-of-mind, relevant, and build trust.We leverage various platforms, from Facebook, which helps us reach a wider audience and foster community to Instagram, which connects us with younger, aspirational consumers through visual storytelling. We showcase brand films and products on YouTube, and build thought leadership and employee engagement on LinkedIn.Overall, our strategy has enabled us to successfully approach the younger, digital savvy demographic online, where they are most comfortable.
சென்னைக்கு அருகே டிட்வா புயல்….வானிலை மையம் முக்கிய தகவல்!
சென்னை :தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா (Ditwah) புயல் இப்போது வலுவான புயலாக மாறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இன்று மாலை 6 மணி நிலவரப்படி, புயலின் மையம் சென்னைக்கு தெற்கே 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இலங்கையின் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 220 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயல் தற்போது மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து, நாளை (நவம்பர் […]
டித்வா புயல்: பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை; ராமேஸ்வரத்தில் பலத்த காற்றுடன் தொடர் மழை
இலங்கை அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக உருவெடுத்துள்ளது. ‘டித்வா’ என அழைக்கப்படும் இந்த புயல், இலங்கையின் வட பகுதியில் இருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல், வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் ஆந்திரக் கடலோர பகுதிகளில் கரையை கடந்துசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இந்த புயலின் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. காற்றுடன் இடைவிடாத மழையும் பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. அதே போல் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த நீர் இவற்றை அகற்றும் பணிகளில் நகராட்சி தலைவர் நாசர்கான் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மழை நீரால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியாக மாறியுள்ளன. புயல் காற்றினை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தின் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் புகுந்த மழை நீர் மேலும் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்புடன் கட்டுப்படுத்து நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார். சாலையில் சாய்ந்த மரம் இதனிடையே பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 63 கி.மீ. வேகத்தில் காற்று பதிவானதை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து செல்ல வேண்டிய மதுரை பயணிகள் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டது. சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை ராமேஸ்வரம் வர வேண்டிய 3 ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பயணிகள் பேருந்து மூலம் ராமேஸ்வரம் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டை நோக்கி நகரும் `Ditwah' புயல்; எப்போது வருகிறது? 2 நாள்கள் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை!
காங்கிரஸ்: ஆட்சியில் பங்கு; தலைமை தான் முடிவெடுக்கும்! - காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாஹிர் சனதி
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக காங்கிரஸ் கட்சி செயலாளருமான சாஹிர் சனதி, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். அப்போது, அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ கார்த்திக் தங்கபாலு, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் விச்சு, கள்ளிக்குடி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், thahir sanathi தற்போது முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். தெற்கு மாவட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க வந்திருக்கிறேன். கட்சியில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பாகுபாடு இன்றி பொறுப்புகள் வழங்கப்படும். மேலும், கட்சியை வளப்படுத்துவதற்கு என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக செய்ய இருக்கிறோம். பீகார் தேர்தல் தோல்வி குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். வாக்கு திருட்டு மூலமாக பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், தமிழகத்தில் கூட்டணியில் ஆட்சியில் பங்கு குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். ஆனால், நான் பொறுப்பாளராக வந்திருப்பதால், இதுகுறித்து தலைமை மேலிடம் தான் கூற வேண்டும் என்றார்.
SIR: 2002/05 வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டறிய முடியாதவர்களுக்கு குட் நியூஸ்; அறிக்கை வெளியிட்ட SEC
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்பணிகள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், * சிறப்பு தீவிர திருத்தப் பணியினை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் களத்தில் உள்ளனர். * இந்த கணக்கெடுப்புக் கட்டத்தில், தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி வாக்காளர்களுக்குக் கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் * மாவட்ட தேர்தல் அலுவலர்களால் அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. * கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாகப் பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க 04.12.2025 வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். * கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 09.12.2025 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். SIR Q&A : மக்கள் கேட்கும் முக்கிய சந்தேகங்களும் முழுமையான விளக்கமும் | Decode | Part 9 * மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒரு நாளைக்கு 50 கணக்கீட்டுப் படிவங்களுக்கு மிகாமல் உறுதிமொழியுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். * வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் மீண்டும் சமர்ப்பிப்பதில் முழு ஒத்துழைப்பையும் வழங்கி இந்த ஜனநாயகச் செயல்பாட்டில் தங்கள் பங்களிப்பினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் * 2002/2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரைக் கண்டறிய இயலாத நிலையில் 04.12.2025-க்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அவ்வாக்காளரின் பெயர் 09.12.2025-ல் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். * 04.12.2025-க்குள் கணக்கீட்டுப் படிவத்தைச் சமர்ப்பிக்காத பட்சத்தில், அவ்வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. * மூன்று முறை வீடு தேடிச் சென்றும் கணக்கீட்டுப் படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. SIR FAQ : How to Fill Enumeration Form? - Full Details | Tamil | Decode * வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைகோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6 உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். * உரிமை கோரல் மற்றும் மறுப்புரை (Claims and Objections) காலம் 09.12.2025 முதல் 08.01.2026 வரை நடைபெற உள்ளது. இக்காலகட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக்குறித்து அந்த சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதிவு பெற்றவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம். SIR * அறிவிப்புக் கட்டம் (Notice Phase) 09.12.2025 முதல் 31.01.2026 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்த பிறகு தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் அவ்வகையான வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டு விசாரணை நடத்தப்படும். * வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பரிசீலிக்கப்பட்டபின், இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்படும். என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘SIR புயல்!’ - சொதப்பும் தேர்தல் ஆணையம்... யாருக்கு சேதாரம்?
ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!
ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. இத்துடன், இந்த விபத்தில் மாயமான 280 பேரைத் தேடும் பணிகளில் ஹாங்காங் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹாங்காங்கின், தாய்போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், நேற்று முன்தினம் (நவ. 26) மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அருகிலிருந்த கட்டடங்களுக்கும் பரவியதால் தீப்பிழம்புகளுடன் கரும்புகை வெளியேறும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹாங்காங் […]
47 பேரைப் பலியெடுத்த மோசமான காலநிலை ; அபாயத்தின் உச்சத்தில் பல பகுதிகள்
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று மற்றும் இன்று ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்த நிலைமையால் 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், மோசமான வானிலை காரணமாக 1,729 குடும்பங்களைச் சேர்ந்த 5,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் 23 […]
அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று(28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த 48 மணித்தியாலங்களில் இந்தியாவிற்குள் நுழைய போகும் தித்வா புயல்
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘டிட்வா புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் நுழையும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு துறைமுகங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பலத்த புயலாக மாறியுள்ள ”டிட்வா’ தற்போது இந்தியாவின் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கொரமண்டல் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (27) மாலை […]
``பவுமா, தோனியைப் போன்றவர்; இருவருக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!'' - ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம்
தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் உலகில் தோல்வியே காணாத கேப்டனாக ஜொலித்து வருகிறார் தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணி கேப்டன் டெம்பா பவுமா. 1998-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி வென்ற பிறகு, ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிரோபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாமல் ஏங்கிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்கா. அந்த 27 ஆண்டு ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்தார் டெம்பா பவுமா. Temba Bavuma - டெம்பா பவுமா IND vs SA: ``கடினமான நாள்களைக் கடந்து வந்துள்ளோம் - இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த டெம்பா பவுமா தற்போது இவரது தலைமையிலான தென்னாப்பிரிக்கா, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2–0 என ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்றிருக்கிறது. இதுவரை டெம்பா பவுமா தலைமையில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா, அவற்றில் ஒன்றிலும் தோல்வியடைந்ததே இல்லை. 11 போட்டிகளில் வெற்றி; ஒரு போட்டி மட்டும் மழையால் டிரா ஆனது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் ‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படுபவருமான ஏபி டி வில்லியர்ஸ், டெம்பா பவுமாவை தோனியுடன் (Dhoni) ஒப்பிட்டு பேசியுள்ளார். அஸ்வின் - டிவில்லியர்ஸ் இந்திய முன்னாள் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலில் அவருடனான உரையாடலில், டெம்பா பவுமாவின் கேப்டன்சி அணுகுமுறை பற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த டி வில்லியர்ஸ், “உங்களால் ஒரு புத்தகத்தை அதன் அட்டைப் பக்கத்தை வைத்து மதிப்பிட முடியாது. பவுமா மென்மையாகப் பேசக்கூடியவர்; பெரிதாக தனது குரலை உயர்த்திப் பேசியதில்லை. இது அப்படியே தோனியைப் போன்றது. அவர் (தோனி) மிகவும் அமைதியானவர்; அதிகம் பேசமாட்டார். ஆனால் அவர் பேசும்போது, அனைவரும் அவரைக் கவனிப்பார்கள். இது இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை,” என்று கூறினார். டெம்பா பவுமாவின் கேப்டன்சி அணுகுமுறை குறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள். 2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்?
வங்கக் கடலில் உருவானது ‘டித்வா’ புயல்! வட தமிழகம் நோக்கி நகர்கிறது!
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று “டித்வா’ புயலாக வியாழக்கிழமை உருவானது. இந்தப் புயல் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 28) அதி பலத்த மழைக்கான “சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பி. அமுதா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் […]
TVK Vijay: `அதிருப்தி அணி, பாஜக-வுக்கு நோ!' - தவெக-வில் ஐக்கியமான செங்கோட்டையன்; பின்னணி என்ன?
எடப்பாடி Vs செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் சக்திவாய்ந்த தலைவராகச் செங்கோட்டையன் இருந்து வந்தார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்தபிறகு செங்கோட்டையனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடியின் ஆதரவாளர்கள் பதவிகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். பிறகு நடந்த தேர்தலில் அந்தியூரில் அ.தி.மு.க-வுக்கு தோல்வி ஏற்பட்டது. அதற்குச் செங்கோட்டையன்தான் காரணம் எனச் சொல்லி, அவருக்குத் தெரியாமல் கட்சிக்குள் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன. எடப்பாடி பழனிசாமி இதில் செங்கோட்டையன் அப்செட்டானார். அப்போது கோவையில் எடப்பாடிக்கு நடந்த அத்திக்கடவு -அவிநாசி திட்டப் பாராட்டு விழாவைப் புறக்கணித்தார். அதற்கு அழைப்பிதழில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லையெனக் கூறினார். கூடவே டெல்லி பா.ஜ.க தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த தலைவர்களின் அறிவுறுத்தலால் அமைதியாக இருந்தார். இந்தச் சூழலில்தான், 'அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாள்களில் எடப்பாடி தொடங்க வேண்டும்' எனச் செங்கோட்டையன் கெடு விதித்தார். ``விஜய்யின் தவெக கட்சியில் நான் இணைந்தது ஏன்?'' - செங்கோட்டையன் விளக்கம் இதையடுத்து செங்கோட்டையனிடமிருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிகளைப் பறித்து அதிர்ச்சி கொடுத்தார், எடப்பாடி. இதையடுத்து டெல்லிக்குப் புறப்பட்டார், செங்கோட்டையன். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, 'ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல் வெளியானது. பிறகு முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில், ஓ.பி.எஸ், டிடிவி ஆகியோருடன் இணைந்து செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். அமித் ஷா இது அ.தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையனை நீக்கினார் எடப்பாடி. இதையடுத்து செங்கோட்டையன் த.வெ.க-வில் இணையப்போகிறார் என்று சில நாள்களாவே தகவல் பரவியது. இப்படியான சூழலில்தான் 26.11.2025 அன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததும் பரபரப்பு மேலும் எகிறியது. ஒரு வழியாக 27.11.2025 அன்று பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய்யின் முன்னிலையில் அக்கட்சியில் செங்கோட்டையன் இணைந்தார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!' பிறகு தனது ஆதரவாளர்களுடன் வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று விஜய் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவருக்குத் த.வெ.க-வின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அமைப்புச் செயலாளராகவும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. செங்கோட்டையன் - விஜய் முன்னதாக எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அது நடைபெறவில்லை. நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் பார்த்துக்கொள்வான். தி.மு.க வேறு, அ.தி.மு.க வேறு அல்ல. அவர்கள் ஒன்றாக இணைந்துதான் பயணம் செய்கிறார்கள். இளவல் விஜய் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். 2026-ல் மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை இளவல் விஜய் எட்டுவார். அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு நான் கெடு விதிக்கவில்லை. நீங்களாகவே செய்தி போட்டுவிட்டீர்கள். என்னை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் அவரும் காய் நகர்த்திவிட்டார் என்றார், செங்கோட்டையன். தவெக வந்தவுடன் அண்ணன் செங்கோட்டையன் சொன்ன தேர்தல் வியூகம் இதுதான் - ஆதவ் அர்ஜுனா நம்பிக்கைக்குரியவராக.. இ துகுறித்து தனது எகஸ் பக்கத்தில் விஜய், 20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்.ஜி.ஆர்-யை நம்பி அவரது மன்றத்தில் சேர்ந்தவர். அந்தச் சிறுவயதில் எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பின் அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்குப் பெரிய நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன், இன்று அவரது அரசியல் அனுபவமும், அவருடைய அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும்… நல்லதே நடக்கும்… நல்லது மட்டுமே நடக்கும் என்றார். செங்கோட்டையன் - ஜெயலலிதா 'கைவிட்ட பா.ஜ.க.. கடுப்பான செங்கோட்டையன்..' இதன் பின்னணி குறித்து பேசும் விவரப்புள்ளிகள், ஆரம்பத்தில் பா.ஜ.கதான் செங்கோட்டையனை இயக்கியது. ஆனால் டெல்லி தலைமை திட்டமிட்டதுபோல் அனைவரையும் ஒன்றிணைக்கும் முடிவுக்கு எடப்பாடி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அவரைப் பா.ஜ.க கைவிட்டுவிட்டது. இதனால் செங்கோட்டையன் அப்செட்டாகிவிட்டார். எடப்பாடி, பா.ஜ.க-வினரை எச்சரிக்கும் விதமாகவே வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எடப்பாடிக்கு கெடு விதித்தார். அப்போதும் இருதரப்பும் அவரை அழைத்துச் சமாதானம் செய்யவில்லை. அதேநேரத்தில் ஏற்கெனவே தனக்கு எதிராகக் குரல் கொடுத்த சசிகலா, ஓ.பி.எஸ், டி.டி.வியை நீக்கியதுபோலச் செங்கோட்டையனையும் நீக்கினார். மேலும் ஒருங்கிணைந்த அ.தி.மு.க உருவாக வேண்டும் என விரும்பும் சசிகலா, ஓ.பி.எஸ், டி.டி.வி, செங்கோட்டையன் இடையிலும் ஒற்றுமை இல்லை. இதையடுத்துதான் அவர் த.வெ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார் என்றனர். குபேந்திரன் இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்ததற்கு பின்னால் பா.ஜ.க இல்லை. ஏனெனில் தே.ஜ கூட்டணியில் அ.தி.மு.க இருக்கிறது. அந்தக் கட்சியிலிருந்துதான் செங்கோட்டையன் வெளியில் சென்றிருக்கிறார். தே.ஜ கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பா.ஜ.க-வே தங்கள் கூட்டணி பலவீனப்படும் வேலைகளைச் செய்யாது என நம்புகிறேன். அதேநேரத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து அ.தி.மு.கவை பலப்படுத்துவேன் என்றுதான் செங்கோட்டையன் சொல்லி வந்தார். பிறகு எப்படி இந்த முடிவை உடனடியாக எடுத்தாரென்று தெரியவில்லை. அவர் 50 ஆண்டுக்காலம் அரசியலில் அனுபவம் உள்ளவர். திடீரென உருவாகும் ஒரு கட்சி உடனடியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது என அவருக்கு நன்கு தெரியும். ஆக இந்த முடிவு எடப்பாடியை பழிவாங்கும் செங்கோட்டையனின் மனநிலையைத்தான் வெளிச்சம்போட்டு காட்டுகிறது. என்றார். 'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' - பரபர இந்திரா பவன்! | Karnataka Congress
‘ஓபனராக ஆடிய அர்ஜுன் டெண்டுல்கர்’.. அடித்த ரன் எத்தனை? இனி பேட்டிங் ஆல்ரவுண்டரா இருப்பாரு!
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், அர்ஜுன் டெண்டுல்கர் ஓபனராக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக, நல்ல முறையில் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தார். இனி, தொடர்ச்சியாக ஓபனராகதான் ஆடுவார்.
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை பலத்த காற்று கடல் கொந்தளிப்பு குடைசாயும் மரங்கள்
video link- https://fromsmash.com/vq8wtBfL0m-dt அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சேதங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர் , அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு,மாவடிப்பள்ளி சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை மல்வத்தை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் […]
``நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்'' - குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றபோது, விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெற்கதிர்கள் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும். மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுகிறது, கொள்முதல் நிலைய ஊழியர்கள் சில முகவர்களோடு சேர்ந்துகொண்டு ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் லஞ்சம் பெறுகிறார்கள். மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே 40-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்த நுகர்வோர் வாணிபக்கழக மண்டல மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் உரிய நேரத்தில் திறக்கவில்லை என்று குற்றம்சாட்டி வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். வெளி நடப்பு செய்த விவசாயிகள் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் சங்க மாநிலத் தலைவர் பார்த்தசாரதி, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை கூறிய தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மதுரை மண்டல மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து முறைகேடு நடைபெறுகிறது. ஒவ்வொரு நெல் மூட்டைகளுக்கும் லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்களைக் கண்டிக்கிறோம் என்றார்.
கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு
video link- https://fromsmash.com/6JPxlv_~3L-dt வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்றது. இதன் போது அனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் […]
நட்சத்திரப் பலன்கள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை #VikatanPhotoCards
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல்
video line- https://fromsmash.com/ky601Qzq6m-dt கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் குறித்த வீதியை மூடியுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாகவும் கடல் கொந்தளிப்பு காரணமாகவும் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள வள்ளங்கள் தோணிகள் படகுகளை கரையை நோக்கி மீனவர்கள் நகர்த்தி வருகின்றனர். […]
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை-கிட்டங்கியில் வெள்ளப்பெருக்கு
video link- https://fromsmash.com/nAin47exIZ-dt அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கமை நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை இலங்கை இராணுவம் கடற்படை கல்முனை பொலிஸார் சவளக்கடை பொலிஸார் தன்னார்வ ஆர்வலர்கள் இணைந்து இப்பொறிமுறையினை உருவாக்கியுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுப்போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய உழவு இயந்திரம் இயந்திர படகுகள் ஊடாக இரு கரையிலும் உள்ள பொதுமக்கள் அத்திய அவசிய தேவைகளுக்காக ஏற்றி […]
PAK vs SL: ‘இலங்கை த்ரில் வெற்றியால்’.. பைனல் வாய்ப்பை இழந்த ஜிம்பாப்வே: சமீரா மிரட்டல் பந்துவீச்சு!
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், இலங்கை அணி கடைசி வரை போராடி த்ரில் வெற்றியைப் பெற்றது. பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தபோதும், கடைசி நேரத்தில் அதிரடி கம்பேக்கை கொடுத்தது.
முள்ளியவளையில் கொட்டும் மழையிலும் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
ஆஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை ; அரசியல்வாதி ஒருவர் இடைநீக்கம்
அவுஸ்திரேலியாவில் திங்களன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது புர்கா அணிந்து போராட்டம் நடத்திய வலதுசாரி அரசியல்வாதி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக 71 வயதான பாலின் ஹேன்சன் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு நாடாளுமன்றமான செனட் சபையின் உறுப்பினரும் ஆவார். பொது இடங்களில் முகத்தையும் மூடும் வண்ணம் அணியும் ‘புர்கா’ மற்றும் பிற ஆடைகளை அணிவதைத் தடை செய்ய வேண்டும் என்ற சட்ட மூலத்தை பாலின் ஹேன்சன் […]
நியூசிலாந்து ஆக்லாண்ட் மாவீரர் நாள்
இன்று 27/11/2025 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள இல் வெளியக மைதான அரங்கில் மாலை 6.00 மணியளவில் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் பெரும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. இன் நிகழ்வுக்கு பல்வேறுபட்ட நியூசிலாந்து தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும். பொதுச்சுடரானது முன்னாள் மாவீரர் பணிமனை பொறுப்பாளர் திரு.அசோக் அவர்களால் ஏற்றப்பட்டது. நியூசிலாந்து தேசிய கொடியானது திரு.சுந்தர்ராஜன் அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழீழ தேசிய கொடியினை முல்லைத்தீவு சாலைப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குலில் வீரச்சாவடைந்த கேணல் சலீம் மற்றும் திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறாப்பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவடைந்த கப்டன் பூவேந்தன் ஆகிய இரு மாவீரர்களின் சகோதரி திருமதி.நடராசா விக்னேஸ்வரி அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழீழகொடி ஏற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது. மாவீரர் நாள் மரபின் படி மணியோசை இசைக்கப்பட்டது. பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஈகைச்சுடரனது வீரவேங்கை ஆர்த்தினியின் தாயார், பத்மலோஜினி ஏற்றிவைத்தார். பின்னர் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, மக்களால் எம் தமிழீழ மண்ணின் விதையாய் வீழ்ந்த மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தினர். மேலும் நியூஸிலாந்தில் வசித்துவரும் பெற்றோர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்த மாவீரர்களுக்கு, விதையுடல் தாங்கிய மாவீரர் தூபி அமைக்கப்பட்டு, உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்பம்சமாகும். தொடர்ந்து மாவீரர்களின் திருவுரு படங்களுக்கு அஞ்சலி செலுத்த நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது. பின்னர் தமிழீழ எழுச்சி பாடல்கள், எழுச்சி நடனம், நாடகம் என பல கலை நிகழ்வுகளோடு மாவீரர் நாள் சிறப்புற நிறைவுற்றது.
வவுனியா ஈச்சம்குளம் துயிலுமில்லம்
வவுனியா ஈச்சம்குளம் துயிலுமில்லத்தில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள்
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்
மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள்.
கனடாவில் 15 வாகனங்கள் தீக்கிரை: நாச வேலையா என விசாரணை
கனடாவின் மொண்டிரியல் நகரில் செயின்ட்-லாரன்ட் பகுதியில் உள்ள ஒரு வாகனத் தரிப்பிடத்தில் சுமார் 15 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. அதிகாலை வெடிப்புசார்ந்த தீவைத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மொண்டிரியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த same இடம் கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை இதே மாதிரியான தீவைத்தல் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. லெபோ தெருவிலும் ஜின்ஸ் தெருவின் அருகிலும் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 911 அழைப்புகளைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீயணைப்பு துறையினர் […]
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்
மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம்
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது . மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் மரணம் ; ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உக்ரைன் – ரஷியா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தாமதிக்காமல் உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உதாரணமாக வீரர்களின் மரணம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உக்ரைன் – ரஷியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ட்ரம்ப், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. […]
யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நவாலியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தினம்
நவாலி பிரசாத் சந்தியில் அமைத்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 1985ஆம் ஆண்டு வீரகாவியமான மாவீரர் குட்டியின் தாயார் சின்னத்தம்பி சிவபாக்கியம் பிரதான ஈகை சுடரினை ஏற்றினார்.
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி: திமுக ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?
சங்கராபுரம் தொகுதி விவசாயத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. 2026 தேர்தலின் சுற்றுப்பயணம், திமுக ஆட்சியின் செயல்திறன், எம்.எல்.ஏ.யின் தாக்கம், எதிர்க்கட்சிகளின் உத்திகள் ஆகிய அனைத்தும் தேர்தல் முடிவுகளை மாற்றும்.
ஆஸ்திரேலியா சிட்னி மாவீரர் நாள்
ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
All Time High-ல் Market: எந்த துறைகளில் லாபம் பார்க்கலாம்? IPS Finance | Gold | Nifty | Sensex
Tamil Selvan,?அப்பாவால் தான் இந்த Award கிடைச்சது |Tamil Tech |Vikatan Digital Awards 2025 UNCUT
``DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும் - உதயநிதி விழாவில் கமல்
தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டு தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அந்த ஒப்பந்தத்தின்படி தற்போது மாநிலங்களவையில் எம்.பி-யாக இருக்கிறார் கமல். ஸ்டாலின் - கமல் இவ்வாறிருக்க 10 நாள்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் கமல், ``எதுக்காக நீங்க தி.மு.க-வோடு சேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களேன்னு கேட்டீங்கனா... ஆமா ரிமோட் தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து ரிமோட்ட தூக்கிட்டு போயிட்றான்... அப்படின்னு எடுத்த முடிவு இது. இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க என்று தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து பேசியிருந்தார். அபாய கட்அவுட்கள்; நடைபாதை பேனர்கள்; உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்! - உதயநிதி பர்த்டே காட்சிகள் இந்த நிலையில் சென்னையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க-வுடன் சேர்ந்தது பற்றி கமல் மீண்டும் விளக்கியிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய கமல் , ``இது அரசியல் இக்கட்டுக்காகவோ சூழலுக்காகவோ நான் சேர்ந்த இடமல்ல. நான் சேரவேண்டிய இடம்தான் இது. எங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரேமாதிரியானது. நாங்கள் இதை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்று போர்க்குரல் கொடுப்பது இவர்களோடு அல்ல. இதனை நடத்த வேண்டும் என்று போட்டியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது நாங்கள் சொன்ன ஐடியாவாக இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு செயல்படுத்திக் காட்டியவர்கள் இவர்கள். இவர்களோடு சேர்வதா இல்லை யாரென்றே தெரியாதவர்களுடன் சேர்வதா... உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன் கலைஞருக்கு ஓய்வு கொடுத்தது சரிதான். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அந்த ஓய்வுகூட கொடுக்கலனா 90 வயதுக்கு மேல அவர் வாழ்ந்திருக்க மாட்டார். அந்த ஓய்வுக்கு நன்றி. அதேபோல் அவருடைய பேரனும் நீண்ட நாள் வாழ்ந்து இந்த அமைப்புக்கு நன்மை சேர்க்க வேண்டும். தி.மு.க என்பது ஒரு உணர்வு. என் வயது என்னவோ அதுதான் தி.மு.க-வைப் பற்றிய என் புரிதல். நான் கண்திறந்தபோது பார்த்த சூரியன் இதான். இருட்டு வரும், நாளை சூரியன் வரும். இருட்டைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் விடியும், உதயம் வரும். உதயநிதியும் வருவாரு, முதலமைச்சரும்... இன்னொரு பாராட்டு விழாவுக்கு இந்த அரங்கம் பத்தாது என்று சிரித்தவாறே கூறினார். ‘SIR புயல்!’ - சொதப்பும் தேர்தல் ஆணையம்... யாருக்கு சேதாரம்?
'செங்கோட்டையனின் இன்னிங்க்ஸ் II''எடப்பாடிக்கு, Vijay போட்ட ஸ்கெட்ச்! | Elangovan Explains
TVK -ல் Sengottaiyan - Vijay Happy - EPS Setback - DMK Reaction| ADMK Ditwah cyclone Imperfect Show
BAN vs IRE: ‘மாஸ் காட்டிய அயர்லாந்து’.. வங்கதேச அணி படுதோல்வி: டௌகித் க்ரிடோய் போராட்டம் வீண்!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், வங்கதேசம் அணி படுமோசமாக சொதப்பி படு தோல்வியை சந்தித்துள்ளது. வங்கதேச அணியில், டௌகித் க்ரிடோய் மட்டுமே அபாரமாக பேட்டிங் செய்தார்.
யாழ் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி
யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தின் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகைச்சுடர் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலத்தினால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
தாய்லாந்து கனமழையில் 33 போ் உயிரிழப்பு
பாங்காக்: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 33 போ் உயிரிழந்தனா். கனமழையால் 12 தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 10 லட்சம் குடும்பங்களையும் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் பாதித்துள்ளது என்று பேரிடா் தடுப்பு மற்றும் மேலாண்மை துறை புதன்கிழமை தெரிவித்தது. கடந்த வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய மழை நீரின் அளவு புதன்கிழமை குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். ஆனால் நாட்டின் தென் பகுதியில் புதன்கிழமையும் […]
யாழ். தொண்டமனாறு மக்களின் மாவீரர் நாள் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் தொண்டமனாறு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு.
இலங்கையில் பேரிடர் மீட்புப் பணிகளில் படையினர்
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களை பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலும் ஆயுதப்படைகள் மீட்புபணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி இலங்கை விமானப்படை அவசர மீட்புப் பணிகளுக்காக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஆறு ஹெலிகொப்டர்களை நிறுத்தியுள்ளது. இந்த ஹெலிகொப்டர்கள் ஹிங்குராங்கொட, அனுராதபுரம், இரத்மலானை மற்றும் வீரவில விமானப்படை தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 முகாம்களில் 1,600 விமானப்படை வீரர்கள் 24 முகாம்களில் 1,600 விமானப்படை வீரர்கள் விரைவான நடவடிக்கைக்காகத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியேற்றங்களுக்கு […]
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கொண்டும் மழையிலும் மக்கள் உணவுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.
கும்பகோணம் அருகே கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: 3 பேர் படுகாயம்!
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவில் திருப்பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் சிக்கினர். அக்கம் பக்கத்தினர் போராடி மீட்டனர். தரமற்ற கட்டுமானத்தால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசுவமடு தேராவில் துயிலுமில்லம்
விசுவமடு தேராவில் துயிலுமில்லத்தில் கொட்டும் மழை மற்றும் கண்ணீர் மழையில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்!
யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம்… The post யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! appeared first on Global Tamil News .
சீனா ரயில் விபத்து.. 11 பேர் பலி.. சோகத்தில் முடிந்த சோதனை ஓட்டம்!
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் சோதனை ரயில் ஒன்று ஊழியர்கள் மீது மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நில அதிர்வு உபகரணங்கள் சோதனை செய்யும் போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
மாவீரர் நாள் யாழ். பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!
ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 279 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. தாய்போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது அருகிலிருந்த கட்டடங்களுக்கு பரவியதால், தீப்பிழம்புகளுடன் கரும்புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்நாட்டின் தீயணைப்புப் படைக்கு தகவல் […]
ஒரே பார்வையில் –இலங்கையின் கோரமான காலநிலையும் தொடரும் சோகங்களும்!
பலபகுதிகளில் மின்சாரம் தடை! இலங்கையில் மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை… The post ஒரே பார்வையில் – இலங்கையின் கோரமான காலநிலையும் தொடரும் சோகங்களும்! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
பழனி கோயில் நிதி: நிலம் வாங்க தடை: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பழனி கோயிலுக்கு பக்தர்களுக்கு வசதி செய்ய 58.77 ஏக்கர் நிலம் வாங்க அறநிலையத்துறை நிர்வாக நிதியில் இருந்து 58.54 கோடி ரூபாய் செலவழிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இந்த நிதியை நிலம் வாங்க பயன்படுத்தக்கூடாது என மனுதாரர் கூறிய நிலையில், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்
பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள்
பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025ம் ஆண்டின் நிகழ்வுகள் Excel மண்டபத்தில் ஆரம்பமாகியது. மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை.. அவர்கள் காலத்தை உருவாக்கியவர்கள்.. ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதரண மரணம் அல்ல அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு.. ஒரு உன்னத இலட்ச்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு.. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை.. அவன் உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.. இந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களை பற்றிகொள்கிறது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வணக்கம் செலுத்த ஒன்று கூடியிருக்கிறார்கள். தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2025 ம் ஆண்டுக்கான பொதுச்சுடரினை கேணல் கிட்டு அவர்கள் பிரித்தானியாவில் பணியாற்றிய காலம் தொடக்கம் தேசிய செயற்பாடுகளோடு பயணித்துக்கொண்டு இருப்பவரும் அரசியல் ஆய்வாளருமான திரு சூ.யோ.பற்றிமாகரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து பிரித்தானிய தேசிய கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பளார் செல்வி யென்சியா நியூட்டன்அவர்கள் ஏற்றி வைத்தார்கள். தமிழீழ தேசியகொடியினை சிறுத்தை படையணியின் சிறப்புத் தளபதியும் அனைத்துலக மகளிர் அமைப்பின் பொறுப்பாளருமான ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து தணியாத தாகமும் தமிழீழ இலட்சியமும் கொண்ட மாவீரர்களின் கல்லறைகளுக்கு கொடிவணக்கம் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து உன்னதமான முதன்மைச் சுடரினை முன்னாள் மற்றும் தமிழீழ உள்ளகப் பலனாய்வுத்துறையின் பொறுப்பாளரும் இறுதிக்கள புலனாய்வுத்துறை பொறுப்பாளருமான மாணிக்கவாசகர் அருட்செல்வன் எனும் இயற்பெயர் கொண்ட வீரவேங்கை பிரதாப் அல்லது ஆதித்தன் அவர்களின் துணைவியரும் மதுசங்கர் ரங்கசாமி எனும் இயற்பெயர் கொண்ட மேஜர் இளநிலவன் அல்லது நிலவன் அவர்களின் சகோதரியுமான நிருபா அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
Revolver Rita Movie Pre Release Event Stills
Dhanush and Kriti Sanon Visit Varanasi Stills
Moss Spores Show Incredible Survival in Space
Scientists have made an exciting discovery: moss spores can survive long trips in space. The spores spent nine months outside
ரயில்களில் ஹலால் இறைச்சி? மௌனம் கலைத்த இந்திய ரயில்வே.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
ரயில்களில் ஹலால் இறைச்சி பரிமாறப்படுகிறதா என்ற சர்ச்சை குறித்து இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி மட்டுமே உணவு தயாரிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
BAN vs IRE: ‘மாஸ் காட்டிய ஹேரி டெக்டர்’.. சிக்ஸர் மழை பொழிந்து அசத்தல்: 181 ரன்கள் குவிப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில், அயர்லாந்து அணி பேட்டர் ஹேரி டெக்டர் தொடர்ச்சியாக காட்டடி அடித்து ரன்களை குவித்தார். டெக்டர் 45 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 69 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.
Qualcomm Launches Snapdragon 8 Gen 5 Chipset
Qualcomm has launched its new premium chipset, the Snapdragon 8 Gen 5 Mobile Platform, designed for the next generation of
Nothing Phone 3a Lite Launches in India
Nothing has launched its new mid-range smartphone, the Nothing Phone 3a Lite, in India on Thursday. This phone is a
High-Protein Pancakes: Healthy Breakfast Without Powder
These pancakes are packed with protein and will keep you full for longer — no protein powder needed. Nutrition per
Rajinikanth: ஆசிரியர்கள் தண்ணீர் போன்றவர்கள் - வைஜெயந்திமாலாவுக்கு ரஜினி கௌரவம்!
மறைந்த கல்வியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், அவரது மகனும் பிரபல நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ், லதா ரஜினிகாந்த் உடன் ரஜினிகாந்தும் கலந்துகொண்டுள்ளார். Vyjayanthimala Rajinikanth என்ன பேசினார்? இந்த விழாவில் இந்தியாவின் நடிப்புக்கலை வரலாற்றில் முக்கிய ஐகானாக விளங்கும் வைஜெயந்தி மாலாவுக்கு 'கலாசார விருது (Cultural Award)' வழங்கப்பட்டது. விருதை வழங்கிய ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஆழமான அதேசமயம் எளிமையான பாணியில் மேடையில் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார். ஒய்.ஜி. பார்த்தசாரதி, தனது பள்ளியில் பணியாற்றுவதற்கான ஆசிரியர்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தண்ணீர் தொட்டிகள் போன்றவர்கள்; அவர்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், மாணவர்களுக்கு அறிவின் தூய நீரை வழங்க முடியும் என்று பேசியிருக்கிறார். ரஜினிகாந்த் அத்துடன், கல்விச் சமூகத்தை உயர்த்தும் அடிப்படைக் காரணியாக ஆசிரியர்கள் விளங்குகிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். இந்த விழாவில் விருதைப் பெற்ற வைஜெயந்திமாலா, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கல்வி, கலை மற்றும் மனிதநேய விழுமியங்கள் அனைத்தையும் ஒருசேர இணைத்த இந்த விழா, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் இதயங்களை நெகிழச் செய்த ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் தெரிவிக்கிறது. ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் - யார் அவர்?
பெங்களூரு தமிழ் புத்தகத் திருவிழா! டிசம்பர் 5 முதல் 14 வரை... மிஸ் பண்ணிடாதீங்க
இந்த ஆண்டுக்கான பெங்களூரு தமிழ்ப் புத்தக திருவிழா வருகிற டிசம்பர் 5 முதல் 14ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவின் சிறப்புகள் குறித்து விரிவாக காண்போம்.
Sweet and Sticky Air Fryer Chicken Thighs
These chicken thighs are sweet, sticky, full of flavour, and easy to make. Plus, they don’t leave much washing up!
Leftover Coffee: A Natural Boost for Hair Growth
If you make a fresh cup of coffee every morning, you probably pour out the leftover coffee or throw away
பென்சன் வாங்குவோருக்கு கடைசி வாய்ப்பு.. நவம்பர் 30 கடைசி நாள்.. உடனே முடிக்கணும்!
பென்சன் வாங்கும் அனைவரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த அப்டேட்டை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பென்சன் கிடைக்காது.
Pomegranate Juice: Boost Hair Growth and Shine
Pomegranate, or anaar, juice is known for its tangy-sweet taste and many health benefits. It can purify the blood and
ஹாங்காங்கில் உயரமான கட்டிடங்கள் ஏன்? இதுதான் காரணமா! சுவாரஸ்யத் தகவல்கள்!
உலகின் மிகப் பெரிய நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் ஹாங்காங்கில் உயரமான கட்டிடங்கள் ஏன் கட்டப்படுகின்றன? உயரமான கட்டிடங்கள் தான், ஹாங்காங்கின் தனித்துவமான அடையாளமாகவும், நிதி மையமாகவும் திகழ்கிறது.
Holiday Eating Enjoy Food Without Feeling Guilty
For many people, holidays mean spending time with family and following traditions. Holidays often include lots of tasty food, and

28 C