வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம்
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில், கொல்லப்பட்ட இளைஞரின் தாய் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வருங்கால கணவனை கொலை செய்த பெண் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும், சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) […]
யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்!
யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பங்குபற்றுதலுடன், நேற்றைய தினம்(14.07.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று சுற்றுநிருபத்திற்கு அமைவாக திட்டமிடல், சுற்றுலா, உணவு பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் […]
செம்மணி அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , நாளைய தினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு […]
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (14.07.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இக் கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின்(Payments and Settlements Department)சிரேஸ்ட உதவிப் பணிப்பாளர் ஜி.கே. மொஹொட்டி மற்றும் ஏ.எஸ்.எம்.பி.எம்.பி. அகலவத்த ஆகியோருடன் பிராந்திய முகாமையாளர் எஸ்.பகீரதி ஆகியோர் பங்குபற்றினார்கள். இச் சந்திப்பின் போது, […]
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஈராண்டு சிறை!
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந் நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன் வோன் (1,79,800 டொலர்) மதிப்புள்ள கருத்துக்கணிப்புச் சேவைகளைச் சட்டவிரோதமாக இலவசமாகப் பெற்ற குற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பின்படி, அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 14 முறை இலவசமாக கருத்துக்கணிப்பு சேவைகளைப் பெற்றதன் மூலமும், அவருக்குப் பிரதிபலனாக முன்னாள் […]
தாக்குதல்களால் அதிரும் மத்தியக்கிழக்கு ; எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில், இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்த எண்மரில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களில் அறுவர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன் இருவர் உக்ரைன் பிரஜைகள் எனவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குறிப்பிட்டுள்ளது. ‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பஹியா’ (Al Bahia) ஆகிய இரு […]
ஈரான் விமானத்தை தடுக்க சொந்த நாட்டின் விமான நிலையத்தையே தாக்கிய ஏமன்
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சனா நகரில் அமைந்துள்ள சனா சர்வதேச விமான நிலைய ஓடுதளம் மீது ஏமன் ராணுவம் தாக்கியுள்ளது. ஏமன் அரசின் ராணுவம் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை கைப்பற்றுவதில் உள்நாட்டு போர் இருந்து வருகிறது. ஈரான் போர் நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஹவுதிக்கள் ஈரானுக்கு ஆதரவாகவும் ஏமன் அரசு எதிராகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற […]
யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி
யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர்சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவர் நேற்றையதினம் திங்கட்கிழமை நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்ற போது , குறித்தநபரின் விளக்கமறியலைநீதிமன்று நீடித்து உத்தரவிட்டது. அதனைஅடுத்து விளக்கமறியல் கைதியை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துசென்ற போது, குறித்த நபர் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்மீது தாக்குதலைமேற்கொண்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , […]
Averting the need for traditional open spine surgery, expert orthopaedic surgeons at SIMS Hospital successfully performed an advanced single-incision endoscopic
தமிழகத்தில் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கிய முதல்வர் ஜோசப் விஜய்
சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். இவ்விழாவில், தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள்
தமிழகத்தில் 16 ஆம் தேதி வரை வெயில் அதிகரிக்கும்!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்,
பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு பக்கவிளைவால் நடக்க முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்ட 84 வயது முதியவருக்கு, வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு
குதிரை பேரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல், மற்ற கட்சிகளில் உள்ளவர்கள் தாங்களாகவே தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)
மெக்சிகோ: நெடுஞ்சாலையில் கோர விபத்து – 10 பேர் பலி
மெக்சிகோ சிட்டி, வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டின் ஜலஸ்கோ மாகாணம் க்வாடலஜாரா நகருக்கும், டிபிக் நகருக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று ஏராளமான வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. ஹொஸ்டோடிபாக்யூவா நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி எதிரே வந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் கார்கள், சரக்கு லாரி என பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் 2 குழந்தைகள் […]
எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது
எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடதிறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரிடம் , தமிழ் முஸ்லீம்கட்சிகளின் புதிய கூட்டு தொடர்பில் கேட்ட போதே அவ்வாறுதெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ளகூட்டணி என்பது, அது வெறும் கூட்டு சாம்பாராகமாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இடமில்லை என்பது மக்களுக்கு தெரிந்த […]
வங்கதேசம் திரும்பினால் ஷேக் ஹசீனாவுக்கு சிறை! வெளியுறவு இணையமைச்சர் திட்டவட்டம்!
‘வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, மீண்டும் தாயகம் திரும்பினால் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படுவாா்’ என்று அந்நாட்டின் வெளியுறவு இணையமைச்சா் ஷாமா ஒபைத் இஸ்லாம் திங்கள்கிழமை தெரிவித்தாா். வரும் டிசம்பா் மாதம் தான் வங்கதேசம் திரும்பி, நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2024-இல் நடந்த மாணவா்கள் போராட்டத்தின்போது சுமாா் 1,400 போ் கொல்லப்பட்டதற்கு ஷேக் ஹசீனாவைக் குற்றஞ்சாட்டி, […]
முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்த நபர்; சம்பவத்தால் ஷாக்!
காலி கரந்தெனிய, தல்காவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், தனது முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்துக் செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் கரந்தெனியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் தினேஷ் விஜேவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அண்மையில் பல ஆண்டுகள் தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார். நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போது தற்கொலை பொலிஸாரின் தகவல்படி, இச்சம்பவம் ஜூலை 12 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. அந்த நபர் முகநூல் நேரலையில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த […]
அமெரிக்காவின் கடைசி போலியோ நோயாளி உயிரிழப்பு
வாஷிங்டன் அமெரிக்காவின் கடைசி போலியோ நோயாளி உயிரிழந்தார். அமெரிக்காவில் போலியோ நோய் பாதிப்பு காரணமாக கடந்த 73 ஆண்டுகளுக்கும் மேலாக ‘இரும்பு நுரையீரல்’ எனப்படும் மருத்துவ சாதனத்தின் உதவியுடன் சுவாசித்து வந்த மார்த்தா ஆன் லில்லார்ட்(வயது78) காலமானார். இவர்தான் அமெரிக்காவின் கடைசி போலியோ நோயாளி ஆவார். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்த மார்த்தா, கடந்த ஜூன் 26-ந் தேதி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1948-ம் ஆண்டு பிறந்த மார்த்தா லில்லார்டுக்கு. 5 வயதாக இருந்தபோது […]
‘ஹார்முஸ் ஜலசந்தியை காப்பாற்றியது அமெரிக்காதான்; அதற்கான பலன்கள் எங்களுக்கு வேண்டும்’ –டிரம்ப்
வாஷிங்டன், ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, சுமார் 3 மாதங்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகநாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பல நாடுகளில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பின்னர் அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்ட நிலையில், ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் மீண்டும் அதிகரித்தது. ஹார்மூஸ் ஜலசந்தி […]
சுமார் 28 கோடி ரூபாய் சொத்துக்களை நண்பனுக்கு உயில் எழுதிய 19 வயது இளைஞன்!
சீனாவில் 19 வயதுடைய ‘லி’ என்ற இளைஞன், தனது மறைவிற்குப் பிறகு சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனது உயிர் நண்பருக்கு வழங்குமாறு உயில் எழுதி வைத்திருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. குறித்த இளைஞனின் பெற்றோர் விவாகரத்து செய்து பின்னர் தனித்தனியாக மறுமணம் செய்துகொண்ட நிலையில், குடும்பச் சூழ்நிலையே இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் தான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவருக்கு தனது சொத்துகள் செல்ல வேண்டும் என்ற […]
அமெரிக்கா - ஈரான் பிரச்சினையால் அடி வாங்கிய இந்திய பங்குச் சந்தை: என்ன காரணம்?
இன்றைய பங்கு வர்த்தகத்தில் பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதற்கான காரணம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Kuku launches nationwide creator programmes across five languages to expand content ecosystem
Mumbai: Content platform Kuku has launched two nationwide creator partnership initiatives—the Kuku Kalakaar Program on Kuku FM and the Kuku TV Creators' Program on Kuku TV—to onboard writers, authors, actors, directors, reel creators, publishers and production houses across India.The year-round programmes are open to creators working in Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada, as the company looks to expand its creator ecosystem across audio, video and written storytelling formats.The launch marks Kuku's largest creator outreach initiative to date and aligns with its strategy of building a unified platform for Indian storytellers across multiple content formats. The company said the programmes are designed to support creators at different stages of their careers by providing monetisation opportunities, long-term partnerships and access to wider audiences.Under the Kuku Kalakaar Program, creators across audio, video and written formats can collaborate with Kuku FM and earn up to ₹10 lakh by producing audiobooks, original fiction and non-fiction audio content, vertical video series and marketing reels. The initiative is open to writers, authors, reel creators, production houses and publishers seeking to expand their content portfolios through audio and digital storytelling.The Kuku TV Creators' Program is aimed at scriptwriters, actors, directors and production houses interested in developing original premium microdrama content for mobile-first audiences. According to the company, the initiative seeks to strengthen India's creator economy by enabling creative professionals to collaborate directly with the platform on original productions.[caption id=attachment_2512301 align=alignleft width=134] Ankit Saraswat[/caption] Ankit Saraswat, Head of Kuku FM, said, “ India’s creator economy is booming, but the traditional chase for views and likes often leaves incredible talent behind. At Kuku FM, we are shifting the paradigm. The Kuku Kalakaar Program isn’t just about giving creators a platform; it’s about providing financial stability and a definitive career path from Day 1. We are building an ecosystem where writers, authors, and storytellers can bypass the algorithms, focus purely on their craft, earn a sustainable livelihood, and connect their stories with millions of listeners.” [caption id=attachment_2512302 align=alignright width=133] Sachin Singh[/caption] Sachin Singh, Head of Kuku TV, said, “ For too long, India’s most gifted storytellers have lived on the edge, chasing views, praying to algorithms, and wondering if their passion can sustain their livelihood. That uncertainty ends today. The Kuku TV Creators’ Program is our promise that no writer, actor, director, or storyteller should have to choose between their craft and their career. We offer creators what they have always deserved: financial stability, a real path forward, and the freedom to focus purely on their art. If you have a story inside you, Kuku TV is where it finds its audience and where you find your home.”
அன்னபூர்ணா யோஜனா திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிப்பு: பெண்களுக்கு இன்னொரு வாய்ப்பு
அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பெண்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது. விண்ணப்பத்தை திருத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Mumbai: SIMCA Advertising Ltd., a media technology and Digital Out-of-Home (DOOH) advertising company, has expanded its premium media portfolio through new asset acquisitions, accelerated the conversion of static hoardings into LED displays and secured a ₹10 crore work order from a leading BFSI client for July 2026.The company also reported revenue of approximately ₹42.64 crore for the quarter ended June 30, 2026, marking a 59% year-on-year increase over the corresponding period of the previous financial year, driven by growing demand from marquee clients, expansion of premium media inventory and higher digital advertising capabilities.As part of its post-listing expansion strategy, SIMCA has acquired three premium media sites, including a static hoarding at JVPD (40x40) and LED media assets at Lower Parel (40x40) and Infinity Mall (30x30), strengthening its presence across key commercial locations in Mumbai.The company is also converting three strategically located static hoardings at Agadi MT, Nagda Pump House and JP Road into LED assets, while completing the conversion of its Lower Parel (30x30) site into a digital display as part of its strategy to increase the share of high-value digital inventory.In addition, SIMCA has completed the transfer of two premium media assets under its listed entity, further strengthening its operating portfolio and long-term revenue-generating infrastructure.The ₹10 crore work order from a leading BFSI client adds to the company's recurring business pipeline and follows an earlier order worth approximately ₹15.26 crore secured from a financial services client at the beginning of FY27, enhancing revenue visibility for the current financial year.[caption id=attachment_2512289 align=alignright width=113] Fahim Batliwala [/caption]Commenting on the development, Fahim Batliwala, Chairman, Managing Director and Promoter of SIMCA Advertising Limited , said, “Our post-listing expansion reflects our commitment to building one of India’s strongest premium outdoor media networks. Alongside adding high-quality media assets and accelerating our transition towards Digital Out-of-Home, we are equally pleased with our strong financial performance during the first quarter of FY27, with revenue growing by approximately 59% year-on-year. This growth reflects the trust of our clients, the strength of our premium media portfolio and our ability to consistently execute at scale. The continued addition of strategic media assets, recurring business from marquee clients including the BFSI sector, and our growing digital footprint position us well for sustained long-term growth. We remain committed to creating a future-ready media platform that delivers value to advertisers, shareholders and all our stakeholders.” SIMCA currently serves 221 clients, including 217 private sector and four government clients, while maintaining relationships with 64 repeat customers. Its media portfolio comprises 216 assets, including 74 traditional static hoardings and 142 Digital Out-of-Home (DOOH) advertising slots.The company said it will continue investing in premium outdoor media infrastructure and digital innovation as it expands its DOOH footprint and strengthens long-term partnerships with advertisers across key urban markets.
நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் காவல் மரணமடைந்த விவகாரத்தில், காவல்துறையின் பாரபட்ச போக்கைக் கண்டித்து முதல்வர் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
திமுக - அதிமுக கூட்டு களவாணிகளா? முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு இபிஎஸ் கடுமையான பதிலடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கரூரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதோடு விஜய் தான் களவாணி எனவும் கடுமையாக விமர்சனம் செய்து இபிஎஸ் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Honasa Consumer elevates Shivang Jain as CEO of BTM Ventures
Gurugram: Honasa Consumer Ltd., the beauty and personal care company, has elevated Shivang Jain as Chief Executive Officer of BTM Ventures, the parent company of Reginald Men and Molecular Company, as it looks to accelerate the growth of the recently acquired businesses.The appointment follows Honasa Consumer's acquisition of a majority stake in BTM Ventures in December 2025 and reflects the company's strategy of strengthening leadership across its portfolio through internal talent development.In his new role, Jain will oversee the strategic direction, business operations and growth of BTM Ventures, leading the expansion of both Reginald Men and Molecular Company in India's fast-growing personal care market.Prior to his appointment, Jain served as Vice President, Corporate Strategy and Chief of Staff at Honasa Consumer, where he worked closely with the founders on corporate strategy, portfolio expansion, business planning and key strategic initiatives.[caption id=attachment_2512292 align=alignleft width=206] Varun Alagh [/caption]Commenting on the elevation, Varun Alagh, Co-founder and CEO, Honasa Consumer Limited, said, Shivang has been at the core of many of our strategic initiatives and has played an important role in shaping Honasa's growth journey. He understands our playbook for building and scaling consumer-first brands and has consistently demonstrated the ability to translate ideas into execution. We see a strong opportunity ahead for BTM Ventures, and I am confident Shivang will continue building the brands with agility, innovation, and a deep understanding of evolving consumer needs.” Speaking about his new role, Shivang Jain, CEO, BTM Ventures, said, I'm incredibly excited to take on this new role and lead the next phase of growth for BTM Ventures. Building brands has always been what energizes me, and this opportunity brings together two brands with strong foundations and immense potential. As consumers become increasingly conscious and discerning about the products they choose, there is a significant opportunity to build brands that truly resonate with their evolving needs. I look forward to working closely with our talented team to strengthen Reginald Men and Molecular Company, accelerate innovation, and create meaningful value for our consumers. Together, we'll focus on building category-defining brands that deliver superior products and long-term trust. Jain brings more than a decade of experience in corporate strategy, mergers and acquisitions, and business transformation. Before joining Honasa Consumer, he held roles at Avendus Capital, EY and JPMorgan Chase & Co. He is a postgraduate in business management from XLRI Jamshedpur.
பதவியேற்ற ஓராண்டுக்குள் உக்ரைன் பிரதமர் ராஜிநாமா!
உக்ரைன் பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ, பதவியேற்ற ஓராண்டுக்குள் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். ரஷியாவுடன் 4 ஆண்டுகளுக்கு மேல் போா் நீடித்து வரும் சூழலில், நாட்டின் ஆட்சி நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்ததைத் தொடா்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், உக்ரைனின் பொருளாதார அமைச்சராக இருந்த யூலியா ஸ்விரிடென்கோ, அமெரிக்காவுடனான முக்கியக் கனிம வள ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததைத் தொடா்ந்து நாட்டின் பிரதமராக […]
ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் மோதும் அமெரிக்க - ஈரான்! போருக்கு காரணமான அமைதி ஒப்பந்தம்?
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானின் முன்னெடுப்பில் கையெழுத்தான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம், மை காய்வதற்குள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஒப்பந்த விதிகளை மீறிவிட்டதாகப் பரஸ்பரம் அள்ளி வீசும் குற்றச்சாட்டுகளால், வளைகுடாப் பகுதியில் மீண்டும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதல், உலகளாவிய வர்த்தகத்தை முடக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், த்ற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று அறிவித்ததுதான் இந்தப் புதிய நெருக்கடியின் தொடக்கப்புள்ளி. ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி ஈரான் நடக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், ஒருபடி மேலே சென்று, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதன் பாதுகாவலனாகச் செயல்படும் என்று மிரட்டல் விடுத்தார். ட்ரம்ப்பின் இந்த ஆவேசப் பேச்சு, அமைதி முயற்சிகளுக்குச் சாவுமணி அடித்தது போல் ஒலித்தது. ட்ரம்ப் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காதான் ஒப்பந்தத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி திட்டவட்டமாகத் தெரிவித்தார். போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான 25 நாட்களுக்குள், அமெரிக்கா அதன் அத்தனை விதிகளையும் மீறிவிட்டது. ஈரானின் போக்குவரத்து உள்கட்டமைப்பு, மீன்பிடிக் கப்பல்கள், சரக்கு படகுகள் மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இவை போர்க்குற்றங்களுக்கு நிகரான கடுமையான மீறல்கள் என்று ஈரான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஆதிக்கப் போட்டி ஹார்முஸ் ஜலசந்தி இந்த மோதலின் மையப்புள்ளியாக இருப்பது 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' 5-வது பிரிவுதான். இதன்படி, ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்து உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்றும், அடுத்த 60 நாட்களுக்கு ஈரான் எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் இந்த முக்கிய நீர்வழியை ஈரான் முற்றிலுமாக மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தத்தின்படி, கட்டணம் வசூலிக்காமல் கப்பல் போக்குவரத்தை நிர்வகிக்கும் அதிகாரம் தங்களுக்கே உண்டு என்பது ஈரானின் வாதம். ஆனால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் இதை ஏற்கவில்லை. கடல் போக்குவரத்தை முடக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்தாமல், பாதுகாப்பான பயணத்திற்கு ஈரான் உதவ மட்டுமே வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம் என அவை வாதிடுகின்றன. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இந்த இழுபறிக்கு மத்தியில், ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும், ஈரானுடன் அல்லது ஈரான் இல்லாமல். நாங்கள் ஈரானிய முற்றுகையை மீண்டும் நிலைநிறுத்துகிறோம். இந்தப் பதற்றமான பகுதிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகும் செலவீனங்களை ஈடுகட்ட, அவ்வழியே செல்லும் அனைத்து சரக்குக் கப்பல்களிடமிருந்தும் 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரான் அங்கீகரிக்கப்படாத வழிகளில் செல்ல முயன்றதாகக் கூறி சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக அறிவித்துள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்கள்! மீறப்பட்ட வாக்குறுதிகள்... ஹார்முஸ் விவகாரம் ஒருபுறமிருக்க, பொருளாதார ரீதியான வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தின் 10-வது பிரிவின்படி, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி, அதனுடன் தொடர்புடைய வங்கி, காப்பீடு மற்றும் கப்பல் சேவைகளுக்கும் அமெரிக்கா விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது. இது, பல ஆண்டு காலத் தடைகளால் நலிவடைந்திருந்த ஈரான் பொருளாதாரத்திற்கு பெரும் ஆறுதலாகக் கருதப்பட்டது. ஆனால், ஜூலை 7 அன்று, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறி, எண்ணெய் விற்பனைக்கான உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்தது. இது ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என ஈரான் கொந்தளித்துள்ளது. ஈரான் கச்சா எண்ணெய் இதேபோல், ஒப்பந்தத்தின் 11-வது பிரிவின்படி, முடக்கப்பட்ட ஈரானின் நிதிய சொத்துக்களைப் பயன்படுத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டது. கத்தாரில் உள்ள வங்கிக் கணக்குகளில் இருக்கும் சுமார் 6 பில்லியன் டாலர் நிதியும் இதில் அடக்கம். ஆனால், ஜூன் 30 நிலவரப்படி, அந்த நிதி இன்னும் ஈரானுக்கு மாற்றப்படவில்லை என கத்தார் கூறியுள்ளது. இதனிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், விடுவிக்கப்படும் நிதி அமெரிக்கா மற்றும் கத்தாரின் மேற்பார்வையில் இருக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு சோளம், சோயாபீன்ஸ், கோதுமை போன்ற அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்கலாம் என்று கூறியது, ஈரானை மேலும் கோபமூட்டியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உண்டு என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. லெபனான் லெபனான் பதற்றமும் மறைமுகப் போரும் இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் குற்றம்சாட்டுகிறது. மார்ச் 2 அன்று ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது ஈரானின் வாதம். இந்த ஒப்பந்தம் அதன் தெளிவற்ற தன்மையால் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது. இதன் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டுமானால், ஒரு பின்தொடர் ஒப்பந்தம் அவசியம், என்கிறார்கள் சர்வதேச அரசியல் பாரவையாளர்கள். அதிகாரப் போட்டியும், முரட்டுப் பிடிவாதங்களும் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி அமைதிப் பாதை ஆகுமா அல்லது உலகப் பொருளாதாரத்தை மூழ்கடிக்கும் புதைகுழியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.! ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரண படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் (bridge tohumunity) எனும் அமைப்பினால் சுமார் 03 கோடி ரூபாய் நிதியில் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதியின் ஒரு பகுதியைஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் ,கடற்றொழில் அமைச்சர்இராமலிங்கம்சந்திரசேகர் ,யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா, அவுஸ்திரேலியா பாலம் அமைப்பின்பணிப்பாளர்கள்உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளனர். இறப்பிற்கு முன்தமதுஇறுதிக்காலத்தினைமருத்துவ […]
Arbour awards Media Mantra Group the PR mandate after multi-agency pitch
Mumbai: Real estate investment platform Arbour has appointed Media Mantra Group as its public relations and communications partner following a multi-agency pitch, as the company looks to strengthen its brand positioning and stakeholder engagement across India's alternative investment landscape.Under the mandate, Media Mantra Group will lead Arbour's strategic communications, media engagement and brand positioning efforts. The agency will also support the firm's leadership positioning in the areas of real estate private credit and private equity as Arbour expands its platform and distribution network.The appointment comes as Arbour continues to scale its presence in India's alternative investment market, with a focus on institutionalising real estate investment through private credit and private equity offerings.[caption id=attachment_2512268 align=alignright width=200] Chirag Mehta CFA MRICS [/caption] Chirag Mehta, Founder at Arbour, said, “We've been institutionalising real estate investment at scale across private credit and private equity. As our distribution network and deal pipeline grow, credible, consistent communication is what earns and keeps that trust. We put Media Mantra through a rigorous pitch process, and their command of finance and investment storytelling stood out. We look forward to a partnership that builds recognition for Arbour across our network and the wider industry.” [caption id=attachment_2495114 align=alignleft width=200] Puja Pathak [/caption]Commenting on the mandate, Puja Pathak, Founder & Director of Media Mantra, said, “We are delighted to partner with Arbour at a pivotal time for India's real estate investment management space. Arbour's approach, backed by rigorous screening, technology-led risk mitigation, and a strong track record, gives us a compelling story to tell. Our focus will be on building sustained visibility for the brand and establishing its leadership as a credible voice for sophisticated investors evaluating real estate as an asset class.” She further added, “By combining our deep understanding of the real estate, alternative investments, and wealth management sectors with our multi-platform communication capabilities, we are well-positioned to help Arbour build a stronger brand presence, manage reputation, and reach new audiences.” Beyond media relations, Media Mantra Group will work with Arbour on stakeholder engagement initiatives and ensure consistent external communication as the company expands its distribution network and strengthens relationships with institutional stakeholders.Media Mantra is a full-service public relations and digital communications agency with a client portfolio spanning finance, technology, gaming, automotive and education. The agency has also expanded its presence in the BFSI and alternative investments sectors through mandates with fund houses, fintech companies and investment platforms.
நீட் தேர்வு மோசடியின் பின்னணி: டெல்லியை உலுக்கும் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போர்!
சோனம் வாங்சுக்கின் நீட் தொடர்பான அறப்போராட்டம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது
சாவகச்சேரி நகர சபையின் புதிய உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்ட திகதி அறிவிப்பு
சாவகச்சேரி நகர சபைக்குப் புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளரின் உறுப்புரிமை கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வறிதாக்கப்பட்டது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வடக்கு […]
`440 பேரை ஒரே இரவில் பரிசீலனை செய்தது எப்படி?' - உச்ச நீதிமன்றம் காட்டம்; சிக்கலில் எஸ்.பி.வேலுமணி!
கடந்த 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்பொழுது உறுதி செய்துள்ளது. பணி இழந்தவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரே இரவில் 440 பேரை எப்படிப் பரிசீலனை செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பி, மனுக்களை அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் விரிவான பின்னணியைக் காணலாம். எஸ்.பி.வேலுமணி கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதில் 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, இறுதியில் 54 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நியமனங்கள் முறையான விளம்பரம் இன்றி, விதிமுறைகளை மீறி புறவாசல் வழியாக நடத்தப்பட்டவை என்று கூறி ஈஸ்வரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 2021 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு, டிஎன்பிஎஸ்சி அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட தேர்வு அமைப்புகள் மூலம் இந்த நியமனங்கள் நடத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. இந்த 54 நியமனங்களும் சட்டவிரோதமானவை என்று கூறி கடந்த ஜூன் 18-ம் தேதி அவற்றை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டது. உச்ச நீதிமன்றம் இதனால் வேலையை இழந்த நிவேதா, சக்தி கவிதா, வினோத் குமார் உள்ளிட்டோர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பாலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பைக் கடுமையாகச் சாடிய நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்: இளநிலை உதவியாளர்கள் பணிக்கு வந்த 654 விண்ணப்பங்களில் 440 விண்ணப்பங்களை ஒரே நாளில் இறுதி செய்து நியமன ஆணை வழங்கியது எப்படி? நீதிபதிகளாகிய எங்களுக்கே தினசரி பட்டியலிடப்படும் 65 வழக்குகளை முழுமையாகப் படிக்கப் போதிய நேரம் கிடைக்காத போது, 440 விண்ணப்பங்களை உங்களால் ஒரே இரவில் எப்படிப் பரிசீலனை செய்ய முடிந்தது? என்று கேள்வி எழுப்பினர். விஜய் - வேலுமணி விண்ணப்பங்கள் கோருவதற்குப் பொது நாளிதழ்களில் விளம்பரம் தராமல், ஈ-பேப்பரில் மட்டும் விளம்பரம் வெளியிட்டது ஏன்? எந்தத் தகுதியின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்? இவர்களது மதிப்பெண் பட்டியல் எங்கே? என்று நீதிபதிகள் சாடினர். இந்த நியமனங்களில் அப்பட்டமான சட்டவிரோதமும், விதிமுறை மீறல்களும் இருப்பது தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிப்பு: மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.வி.கிரி, தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். எனவே, மீண்டும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது இவர்களுக்குக் கருணை அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்கத் திட்டவட்டமாக மறுத்த நீதிபதிகள், முறைகேடாகப் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக உறுதி செய்தனர். இந்த விவகாரம் அரசியல் ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது. காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ள எஸ்.பி வேலுமணி தமிழக வெற்றிக் கழகத்துடன் நெருங்குவதற்கான தருணத்தை பார்த்து வருகின்றார் என்கிற தகவல் வெளியாகி வருகிறது. எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் வரிசையில் எஸ்.பி வேலுமணியையும் தங்கள் பக்கம் கொண்டு வருவதில் முதல்வர் விஜய்க்கும் விருப்பம் இருக்கத்தான் செய்கின்றது. இந்த சூழலில் தான் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இவர்களது இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக வந்துள்ளது. முந்தைய திமுக அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு முறைகேடு வழக்குகளை தூசி தட்டி லஞ்ச ஒழிப்பு துறையின் மூலமாக விசாரணைக்கு உத்தரவிட்டு வரும் முதல்வர் விஜய், அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளையும் ஊழல் வழக்குகளையும் கவனிப்பாரா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் எஸ்.பி வேலுமணி தொடர்பான விவகாரத்தில் கடுமையான முறைகேடுகள் நடந்திருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. முதல்வர் விஜய் தொடர்ந்து மௌனம் சாதித்தாலோ, அல்லது இவ்வளவு நடந்ததற்கு பிறகும் எஸ்.பி வேலுமணியை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டாலோ எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குதிரை பேர விமர்சனங்களுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்து விடும். முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறாரோ?
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, உரிமையாளர்களின் பங்களிப்புடன் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டன.குறித்த பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் இன்று இவ்விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது நீர் தேங்கக்கூடிய இடங்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் மற்றும் நுளம்பு பெருக்கத்துக்கு சாதகமான சூழல்கள் என்பன ஆய்வு செய்யப்பட்டன. நுளம்பு பெருக்கம் காணப்பட்ட மற்றும் […]
திடீரென்று பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது? இருக்கவே இருக்கு இத்தனை ஆப்சன்
உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால் இந்த வழிகளைப் பயன்படுத்தி நீங்கள் மிக எளிதாகக் கடன் பெறலாம்.
JioStar Entertainment releases episode 4 of ‘The Collective’, decoding Bigg Boss’ enduring legacy
Mumbai: JioStar Entertainment has released the fourth episode of its flagship thought leadership platform The Collective, exploring the factors behind the enduring success of Bigg Boss and its evolution into one of India's most influential entertainment properties.The latest episode examines how Bigg Boss has transformed beyond a reality television show into a cultural phenomenon that drives conversations, creates memorable moments and builds long-term audience engagement. Over the last two decades, the property has developed a strong fandom, with viewers not only watching the show but actively participating in its narratives and discussions.The episode brings together leaders from marketing, media and entertainment to discuss the role of Bigg Boss in shaping consumer behaviour, brand engagement and pop culture. Ajay Gupta, Founder - Capital Foods, describes Bigg Boss as a property that gives brands a seat inside the house, enabling them to become part of the narrative.Vijay Vikram Singh reflects on the show's emotional connect with audiences, saying that Bigg Boss is much more than a television show as “it mirrors life itself”, making viewers emotionally invested in every relationship, conflict and triumph.[caption id=attachment_2493176 align=alignright width=200] Shailesh Kapoor[/caption] Shailesh Kapoor, Founder & CEO - Ormax Media , highlights the importance of localisation in the show's success, explaining how its “ deeply localised approach has made every regional edition the biggest entertainment property in its market”. Shishir Mishra, Seasoned Automotive Leader, highlights the changing nature of audience engagement, noting that today's viewers no longer want to be passive consumers of content; “they want to participate, engage, debate, and influence the content they consume, something Bigg Boss has consistently enabled.” The discussion also explores how the show's audience engagement translates into business outcomes for brands. Beyond delivering scale, Bigg Boss creates sustained conversations over months, builds audience affinity and enables brands to remain part of discussions that continue beyond the screen.The episode highlights how the property's ability to become a viewing habit among audiences strengthens its role as a platform for long-term brand building. By creating emotional connections and encouraging active participation, Bigg Boss continues to remain a significant entertainment platform for advertisers seeking deeper consumer engagement.The Collective is JioStar Entertainment's thought leadership initiative that brings together influential voices from marketing, media, advertising and entertainment. Through industry-focused conversations, the platform aims to explore emerging trends, challenge conventional perspectives and examine the role of premium entertainment in driving business impact. Watch the episode
தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்; விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு
தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிவிரைவு சாலைகள் (Expressways) அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் தனி செயல் திட்டத்தை உருவாக்கவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்வர் விஜய் சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் இன்னும் அதிவிரைவு சாலைகள் போதுமான அளவில் உருவாக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள் மற்றும் நகரமயமாதலை கருத்தில் கொண்டு, அதிவிரைவு சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்டத்தை விரைந்து தயாரிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நடைபெற்று வருவதால், அவற்றை கணிசமாகக் குறைக்கும் நோக்கில் தனி செயல்திட்டம் ஒன்றை உருவாக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை அடையாளம் காணுதல், சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சாலை அதேபோல், நகர்புற வளர்ச்சி மற்றும் எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 10 ஆண்டுகால தொலைநோக்கு செயல்திட்டத்தையும் தயாரிக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய குடியிருப்பு மற்றும் தொழில் மையங்களின் உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாலை வசதிகளை திட்டமிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலைகள், நகர்ப்புற இணைப்புச் சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலை திட்டங்கள் மூலம் மாநிலத்தின் போக்குவரத்து திறனை மேம்படுத்தி, பயண நேரத்தைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் ஊக்கத்தை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடர்ந்தன. அன்றைய தினமே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து கமெனியின் மகன் மொஜ்தபா கமெனி ஈரானின் புதிய உச்சதலைவராக பொறுப்பேற்றார். எனினும் அவர் பல வாரங்களாக பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து வந்தார். பொதுவெளியில் தோன்றாமல் டெலிகிராம் மற்றும் அரசு ஊடகங்களில் எழுத்து பூர்வமான அறிக்கைகள் வாயிலாக மட்டுமே தனது உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார். சமீபத்தில் நடந்த […]
ஓடும் காரில் மேலாடையை கழற்றி இளம்பெண் சாகசம்; அடுத்து நடந்த திடுக் சம்பவம்
பொகோட்டா வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஓடும் காரில் மேலாடையை கழற்றி இளம்பெண் சாகசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கானா அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இளம் ரசிகைகள் சிலர் இரவில் மதுபானம் குடித்து விட்டு, போதையில் காரில் சென்றுள்ளனர். அப்போது, அந்த காரின் பின்பகுதியில் இருந்த இளம்பெண் காரின் ஜன்னல் […]
திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை –நாடு திரும்பிய கணவரும் உயிரை மாய்த்த சோகம்
திருவனந்தபுரம், திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த கணவர், வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பிய நிலையில் அவரும் உயிரை மாய்த்துக்கொண்டார். கேரளம் மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்துவா பகுதியை சேர்ந்தவர் சானு குட்டன் (30 வயது). இவருடைய மனைவி ஹரிஷ்மா (27 வயது). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் சானு குட்டன் 3 மாதமாக குடும்பம் நடத்திய […]
கதிர்காம பாதயாத்திரை ; ஒரே வாரத்தில் மூன்றாவது யாத்திரிகர் திடீர் மரணம்
கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்தச் சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட ‘கஜபா வெட்டை’ எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே. பாக்கியராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாகவே இவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவரது உடல் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை லாகுகலை […]
தலைமன்னாரில் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் பறிமுதல்
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட ‘தம்மென்னா’ கப்பலுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த சாம்பூ பக்கெட்டுகள் கண்டறியப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்கரையில் ஒதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்கள், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 5,386 சாம்பூ பக்கெட்டுகள் […]
நேபாளம்: போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் 5 பேர் கைது
காத்மண்டு, இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு காரில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக நேபாள போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேபாளத்தின் பொக்கரா நகரின் பஜுவா பகுதியில் உத்தரபிரதேச பதிவெண் கொண்ட காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். 5 பேர் கைது சோதனையில் காரில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்த உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிகஷ் குமார், பர்ஜில் பஸ்வான், அபே […]
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் பறந்த ட்ரோன் –ஒருவர் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் “ட்ரோன்” பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின்மேல் , நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை வேளை “ட்ரோன்” பறந்துள்ளது. அதனைஅவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் “ட்ரோனை” பறக்க விட்டஇளைஞனைகைது செய்ததுடன் , ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றி இருந்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை […]
விசேட டெங்கு ஒழிப்புச் சிரமதானம்
சம்மாந்துறைசபூர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்புச் சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் டெங்கு பரவல் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் இந்தச் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பாடசாலையின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழல்கள், நுளம்புகள் பெருக்கமடையாத வகையில் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டுத் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ் விசேட சமூகப் பணியானது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் […]
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்
சென்னை: தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக ஏ.லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சடித்து விநியோகிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியின் போது, ஆசிரியரும், பட்டிமன்றப்பேச்சாளரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, பாடநூல் கழகத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், புதிய தலைவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]
ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றி நிர்வகிப்போம்: டொனால்ட் டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் தெரிவித்த நிலையில் அதனைக் கைப்பற்றுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றி, அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்கு வரி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவன நேர்காணலில் பேசிய டிரம்ப், “நாங்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுகிறோம். நாங்கள் அதனை நிர்வகிக்கவுள்ளோம். அங்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நாங்கள் பணம் வசூலிப்போம். நாங்கள் ஹோர்முஸை நிர்வகித்தால், அமெரிக்காவிற்கு அந்தப் பணம் திரும்பச் செலுத்தப்படும்” […]
வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!
வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியா்களின் உடல்கள் விமானம் மூலம் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டதாக ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது. வியத்நாமின் ஹோசி மின் நகரிலிருந்து வியத்நாம் ஏா்லைன்ஸ் விமானம் மூலமாக உள்ளூா் நேரப்படி மாலை 6 மணிக்கு அவா்களின் உடல்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தைச் சென்றடைந்ததும், அங்கிருந்து அவா்களின் உடல்களை சொந்த ஊா்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் என்றும் ஹனோய் இந்திய தூதரகம் […]
பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; அதிகாலையில் நடந்தேறிய சம்பவம்
இப்பலோகம – கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்து இப்பலோகம நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. மேலதிக விசாரணை விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய பாடசாலை […]
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது. சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் […]
‘ஐஸ்’போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை –மன்னார் மேல் நீதிமன்றில் தீர்ப்பு
மன்னார் பிரதேசத்தில் பெருகிவரும் போதைப்பொருள் ஒடுக்கும் வகையில், மன்னார் மேல் நீதிமன்றம்தீர்ப்பு ஒன்றை வழங்கி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான உயிர்க்கொல்லி ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் இத்தகைய குற்றங்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்யும் […]
பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு –எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று
யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதிபேராசிரியர் சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின்அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் எனநீதிமன்றுஉத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை , அடுத்து , பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு […]
பாகிஸ்தானில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு!
இஸ்லாமாபாத்: உலகளாவிய பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வால் கடும் பொருளாதார சிக்கலில் உள்ள பாகிஸ்தான், எரிப்பொருள்கள் மீதான விலையை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் பொது போக்குவரத்திற்கான பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. எரிபொருள் செலவு அதிகரித்ததே இந்த கட்டண உயர்வுக்கு காரணம் என்று பேருந்து நடத்துநர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்ச பயணக் கட்டணம் (ஒரு நிறுத்தத்திலிருந்து அடுத்த நிறுத்தத்திற்கு) ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில் சரக்கு போக்குவரத்து கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன. கராச்சியில் இருந்து […]
வங்காளதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு – 44 பேர் பலி
டாக்கா, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் சிட்டகாங்க் மாகாணத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 44 பேர் பலி இந்நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும், கனமழை, வெள்ளத்தால் 2.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் […]
கனடாவில் துப்பாக்கிச்சூடு: 2 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்
கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்ற வீதித் திருவிழாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 போ் உயிரிழந்தனா். 5 போ் படுகாயமடைந்தனா். இதுகுறித்து டொராண்டோ காவல் துறை செய்தித் தொடா்பாளா் ஷானன் ஈம்ஸ் கூறுகையில், ‘செயிண்ட் கிளாா் மேற்கு வீதி மற்றும் ஆா்லிங்டன் வீதியில் நடைபெற்ற வீதித் திருவிழாவின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 போ் உயிரிழந்தனா். 5 போ் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் செல்வதைத் தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா். பின்னா், […]
பழிவாங்கவேண்டிய அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட ஈரான் செய்தி நிறுவனம்!
ஈரான் முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் படுகொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் குறிவைக்கப்பட வேண்டிய தலைவர்களின் பட்டியலை ஈரானின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கில் நடைபெற்ற போரில் அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து நடத்தியத் தாக்குதல்களில் முதல் நாளே உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அவரது மகனும், தற்போதைய ஈரானின் உச்சத் தலைவருமான மொஜ்தபா கமேனி தந்தை கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதாகத் […]
வலி.வடக்கில் விவசாயத்தில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை விற்பனை செய்யும் காட்சி
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாகஇராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாயநடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றி பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால்உயர் பாதுகாப்பு வலயமாகபிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 1661 ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு தேவை எனவும், அவற்றுக்கான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் , வலி. வடக்கில்இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தமதுசுய தேவைக்கு எனவும் தெரிவித்திருந்தார். […]
நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள் 44 பேர் மீட்பு
அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும், கொள்ளை கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, அந்நாட்டின் ஒயோ மாகாணம் ஒசிரி மாவட்டத்தில் உள்ள 3 பள்ளிகளுக்குள் கடந்த மே 15ம் தேதி புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் என மொத்தம் 44 பேரை கடத்தி சென்றனர். இதையடுத்து, கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர். […]
யாழில். “நீதியின் ஓலம் – 2”சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறுதெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம் முன்னெடுக்கப்படது. இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதிதொடங்கி 17ஆம் திகதி […]
தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மீண்டும் திட்டவட்டம்
தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது என அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின. தென் சீனக் கடலை சீனா உரிமை கோருவது சட்டவிரோதம் என நெதா்லாந்து தலைநகா் தி ஹேக்கில் ஐ.நா. கடல்சாா் சட்ட உடன்படிக்கையின்கீழ் அமைக்கப்பட்ட தீா்ப்பாயம் கடந்த 2016, ஜூலை 12-இல் தீா்ப்பளித்தது. இதுவே இறுதியான தீா்ப்பு என்றும், இது சட்ட அதிகாரத்தைக் கொண்டது எனவும் அந்தத் தீா்ப்பாயம் தெரிவித்தது. இந்தத் தீா்ப்பு […]
யாழில். “நீதியின் ஓலம் – 2”சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறுதெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம் முன்னெடுக்கப்படது. இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதிதொடங்கி 17ஆம் திகதி […]
Honda Cars Strengthens India Commitment with Ambitious Future Roadmap
Honda Cars India Ltd. (HCIL), a leading manufacturer of premium cars in India, today reaffirmed its long-term commitment to the
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுகிறது: டொனால்ட் டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது. பின்னர், ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க குற்றம் சாட்டிய நிலையில் 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, இரு நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இடைக்கால […]
புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் குறித்த நபர் சட்டவிரோதத் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை திங்கட்கிழமை(12) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகள் சந்தேக நபரை மேலதிக […]
இந்திய அமெரிக்கரான முன்னாள் கூகுள் நிர்வாகி சுட்டுக்கொலை: கணவர் கைது!
இந்திய அமெரிக்கரும் முன்னாள் கூகுள் நிர்வாகியுமான ஷீத்தல் தனது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்திய அமெரிக்கரும், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரியுமான ஷீத்தல் வெர்செசியன் (57) அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். குடும்பச் சண்டை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஜூலை 7 அன்று அவரின் வீட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஷீத்தல் பலியானார். இதில், அவர்களது மகன் ஜேசன் வெர்செசியனும் காயமடைந்துள்ளார். 56 வயதான ஷீத்தலின் கணவர் கிர்க் […]
இணையவழி குழந்தை பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு, திங்களன்று பிரஸ்ஸல்ஸில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை அவர்களின் பராமரிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழோ அல்லது பள்ளியிலோ மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். கோடைக்காலத்திற்குப் பிறகு குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான சட்ட முன்மொழிவுகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பு முன்வைக்கும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்த நிலையில், இந்தப் பரிந்துரை வந்துள்ளது. குழுவின் சமூக ஊடகப் பரிந்துரைகள் என்னென்ன? மருத்துவர்கள், கல்வியாளர்கள், இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்களை உள்ளடக்கிய அந்தக் குழு, தனது அறிக்கையில் வேறு பல பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது: கைக்குழந்தைகளையும் சிறு குழந்தைகளையும் எந்தவொரு திரைகளிலிருந்தும் விலக்கி வைக்க வேண்டும். மூன்று முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 'வயதுக்கு ஏற்ற சமூக ஊடகங்களையும்'சாதனங்களையும் மேற்பார்வையின் கீழ் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். 13 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர், 'முக்கிய பாதுகாப்பு அம்சங்களைக்'கொண்ட சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களை, 'வளர்ந்து வரும் தன்னாட்சிப் பயன்பாட்டிற்கு'அனுமதிக்கப்பட வேண்டும். நமது குழந்தைகளுக்கு நிஜ உலகில் நேரம் தேவை. விளையாட நேரம், நட்பை வளர்க்க நேரம், தவறுகள் செய்ய நேரம். ஒரு அல்காரிதம் அவர்களை வடிவமைப்பதற்கு முன்பு, தங்களின் சொந்த அடையாளத்தையும், சொந்த ஆளுமையையும் உருவாக்கிக் கொள்ள நேரம் தேவை,என்று வான் டெர் லேயன் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் கூறினார்.
Sneha Kanukolanu joins Mia by Tanishq as Marketing Lead
Mumbai: Sneha Kanukolanu has joined Mia by Tanishq as Marketing Lead. She joins the brand after serving as Head of Marketing at The Bear House.Announcing her new role on LinkedIn, Sneha shared, Excited to share that I've joined Mia by Tanishq as Marketing Lead. Every career move teaches you something, and as I get fully immersed in this new chapter, I want to take a moment to appreciate the one that's brought me here. She also added, My time at The Bear House reminded me why I love building brands. From The Young Gentlemen, The Beer House to launching retail stores with a unique brand signature, project Bear Care, Bear Cafe, and unforgettable Black Friday and so many more initiatives and ideas, I can go on and on! Every project challenged us to think beyond campaigns and build something people could genuinely connect with and enjoy. A sincere thank you to the founders, my team, partners and everyone who was a part of this journey. We built some really incredible things together, and I'm very proud to have been a part of it. Looking forward to this new chapter. Super duper excited for everything that's ahead. Kanukolanu brings extensive experience in brand building, marketing strategy, consumer engagement, and integrated campaigns. Before joining The Bear House, she held roles across multiple organisations, including Aditya Birla Fashion and Retail Ltd, Fossil Group, DDB Mudra Group, Leo Burnett, MICA, and Wipro.She began her professional journey in 2015 as a Presales Consultant at Wipro and has since built expertise across marketing, advertising, retail, and brand development. In her new role at Mia by Tanishq, she is expected to contribute towards strengthening the brand's marketing initiatives and enhancing consumer engagement.
யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை
அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை, உஹன பாலம் நெல் களஞ்சியசாலையில் இக்கொள்முதல் திட்டத் தொடக்க விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான அனுபமா மங்கள விக்ரமாராச்சி மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதித் தலைவர் சம்பத் தௌலகல ஆகியோர் கலந்துகொண்டு நெல் கொள்முதலை ஆரம்பித்து வைத்தனர். குறித்த பகுதியில் இரண்டு பிரதான நெல் களஞ்சியசாலைகள் அமைந்துள்ள போதிலும், […]
Adani One Reaches 5 million Members in 10 Months
Mumbai: Adani Airport Holdings Limited's (AAHL) consumer app, AdaniOne, has reached five million members within 10 months of launching Adani Rewards,among India's first integrated airport loyalty programmes. Available across all eightAAHL-managed airports in seven states, the app enables passengers to earn andredeem rewards on shopping, dining and other airport services.The rapid adoption reflects growing demand for digital services that simplify the airport journey while rewarding passengers for everyday purchases.Building on this momentum, AAHL will introduce a tier-based membership model later this year, offering frequent flyers additional benefits and more personalised privileges. Five million members in less than a year marks an important milestone for Adani Rewards. Soon, we will introduce new features, expand member benefits and create more opportunities for passengers to engage across all AAHL-managed airports, an AAHL spokesperson said.Passengers can join Adani Rewards instantly through their mobile number at the time of purchase. Reward points earned on subsequent transactions can be redeemed for benefits ranging from complimentary food and beverages to premium experiences through the Adani One app.Seasonal campaigns, including Diwali, Winterfest and the recently concluded Summer Carnival, have helped drive engagement with exclusive offers and curated experiences. Further enhancements planned over the coming months will broaden the programme's appeal across AAHL's airport network from Thiruvananthapuram inKerala to Guwahati in Assam.-Based on Press Release
அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள வளாகங்களில் சிலரால் தொடர்ச்சியாக அநாமதேயமாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு வருவதாக நிந்தவூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது. இவ்விடங்களில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில தனிநபர்களால் தொடர்ந்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடுவதுடன், பொதுச் சுகாதாரத்திற்கும், பிரதேசத்தின் அழகுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, […]
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைவு
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள், குறிப்பாக காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஒன்றிணைந்துள்ளோம் எனத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் காணி அபகரிப்பு இன்றளவிலும் தீவிரமடைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். அதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு குரலாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுகையில், இது இனவாத கூட்டணியல்ல, சட்டத்தின் பிரகாரம் மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணைக்கு அமைவாக, பொது கோட்பாட்டுக்கு அமைய அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒன்றிணைந்துள்ளோம் எனத் தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒன்றிணைந்துள்ளோம். இது அரசியல் தேர்தல் கூட்டணியல்ல என்றார். புதிய அரசியலமைப்பு, மாகாண சபைத் தேர்தல் மற்றும் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதை அடிப்படையாக கொண்டு இந்த பொதுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது என தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதன்போது கூட்டாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
IND vs ENG 1st ODI - இந்திய உத்தேச 11 அணி: இஷான் கிஷன் நீக்கம்: இளம் பௌலருக்கு வாய்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி பிளேயிங் 11-ல் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். இளம் பௌலருக்கு இப்போட்டியில் வாய்ப்பினை கொடுக்க உள்ளனர்.
பிஎஃப் தொகையை ஈசியா மாற்றலாம்: இந்த இரண்டு வழிகளை நீங்கள் யூஸ் பண்ணலாம்
பழைய நிறுவனத்தில் இருந்து வெளியேறி புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவுடன் உங்களுடைய பிஎஃப் பேலன்ஸ் தொகையை மிக எளிதாக இரண்டு முறைகளில் மாற்றலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் பணியிடமாற்றம்: மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு
தமிழக அரசில் மிக முக்கிய பிரிவாக இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக அருண் ஐபிஎஸ் பதவி வகித்து வந்த சூழலில், தற்போது பணியிடமாற்ற உத்தரவு வந்துள்ளது. அவருக்கு பதிலாக மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் விளக்கமறியலில் பிள்ளையான்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிமித்தம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், இன்று காணொளி இணைப்பின் ஊடாக (Video Conference) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே நீதிமன்றம் பிள்ளையானுக்கு விளக்கமறியலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் என 3 பேரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் காணொளி ஊடாக உத்தரவிட்டு இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ் பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார். கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு, ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி பிரிவினர் கைது செய்தனர். 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 17ஆம் திகதி சிஐடியினர் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து, அவர்களை ஜூன் 30ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் நீதிமன்றில் பிள்ளையான் உட்பட 3 பேரையும் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரும் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இவ்வழக்கினை, விசாரணைக்காக நீதவான் எடுத்துக்கொண்டார். அப்போது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளியான முகமட் சிபான், சிஐடியினர் ஆஜர்படுத்திய பிள்ளையான் மற்றும் சந்தேக நபர் ஆகிய இருவரையும் பாதுகாப்பு காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்துவர முடியாமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர். இதனை ஆராய்ந்த நீதவான் பிள்ளையான், மற்றைய சந்தேக நபர் ஆகிய இருவரையும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் (சூம்) இணையவழி காணொளி ஊடாக பார்வையிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ் பாய்ஸ்க்கு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இதேவேளை கடந்த 30ஆம் திகதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான் உட்பட 3 பேரையும் சிஐடியினர் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது
Gargi by PNGS launches Monsoon Collection 2026 with Mithila Palkar
Pune: Gargi by P N Gadgil and Sons (PNGS) has launched its Monsoon Collection 2026, a new range of contemporary silver and certified natural diamond jewellery inspired by the colours, textures, and moods of the rainy season. The campaign features actor and brand ambassador Mithila Palkar, who continues her association with the jewellery brand for a second consecutive year.The latest collection showcases jewellery crafted in 925 sterling silver and certified natural diamonds, drawing inspiration from rain-washed landscapes, misty mornings, and the understated charm of the monsoon. The range includes earrings, pendants, rings, and necklaces featuring raindrop silhouettes, leaf and vine motifs, and dewdrop-inspired settings. Green accents and the sheen of silver reflect the season's lush landscapes and rain-soaked ambience, while the diamond line adds a subtle sparkle designed for both everyday and occasion wear.Designed around Gargi's philosophy of affordable luxury, the collection aims to offer lightweight, versatile pieces that transition seamlessly from workdays to casual evening outings during the monsoon season.The accompanying campaign captures Mithila Palkar amidst lush greenery and rain-soaked settings, celebrating the simple pleasures of the season, from warm cups of chai to the beauty of slowing down. Rolling out across digital platforms, social media, and in-store touchpoints, the campaign encourages consumers to embrace the monsoon as a season of style rather than a pause in fashion.[caption id=attachment_2512150 align=alignleft width=133] Aditya Modak [/caption]Speaking on the launch, Aditya Modak, CEO and Co-Founder, Gargi by P N Gadgil and Sons said, “Monsoon is India’s most emotional season. It slows us down, brings us home, and makes us notice beauty in the everyday. We wanted jewellery that belongs to those moments with this collection: the green of the hills, the comfort of a cosy evening, the sparkle of rain on a window. Mithila effortlessly creates that feeling. In her second year with us, she has become the embodiment of what Gargi stands for – real, graceful and modern. We are inviting every woman, through this campaign, to romance the rains in her own way.” The launch marks Gargi's continued focus on seasonal collections and brand-led storytelling as it strengthens its presence in the contemporary jewellery segment through affordable luxury offerings and celebrity-led campaigns.https://www.youtube.com/watch?v=zO_UX7cIBrw
ஜூலை 16-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை! முதல்வர் விஜய் தலைமையில் கூடும் அமைச்சரவை - முழு விபரம் உள்ளே!
வருகின்ற ஜூலை 16-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.
Dr Subhash Chandra mourns the passing of father Nand Kishore Goenka at 96
Mumbai: Shri Nand Kishore Goenka, father of Essel Group Chairman and founder Dr. Subhash Chandra, passed away on Monday at the age of 96, leaving behind a legacy of social service, nation-building and unwavering commitment to community welfare.Born on September 28, 1930, and affectionately known to many as Shri Nand Kishore, he was widely respected for a life devoted to community service and the nation. A lifelong Rashtriya Swayamsevak Sangh (RSS) volunteer, he dedicated himself to social causes, Gau Seva (cow welfare), and community development. He also witnessed and supported the growth of the Essel Group across generations while choosing to remain focused on public service rather than business.Announcing the news through a heartfelt post on Social Media, Dr. Subhash Chandra paid tribute to his father, describing him as a guiding force whose values and principles shaped generations of the family. Salute to a life dedicated to service and service to the nation, Chandra wrote. This morning, our revered father, Shri Nand Kishore Goenka Ji breathed his last. The entire family is emotional at this moment, but more than grief, we have gratitude for his glorious life of 96 years, which he dedicated to the society and the nation. Remembering his father's lifelong commitment to public service, Chandra highlighted that Goenka's nation-first resolve, dedication to social service and selfless commitment to Gau Seva remained enduring sources of inspiration for the family. Babuji, your teachings and values will always be with us, he added.Beyond his service to society, Nand Kishore Goenka was known for his tireless efforts to unite the Vaishya community. He also played a significant role in the development of Agroha, the historic capital associated with Maharaja Agrasen, and contributed to strengthening the Agrasen merchant community through his social initiatives.The passing of Nand Kishore Goenka prompted condolences from political leaders across party lines, who acknowledged his contributions to society and community development.His mortal remains have been kept at A Road, Vasant Sagar, Marine Drive, Mumbai, to enable family members, friends and well-wishers to pay their final respects. The last rites will be performed on Wednesday morning at Goenka Udyan in Agroha.Shri Nand Kishore Goenka is survived by a large family and leaves behind a legacy built on service, tradition and quiet dedication to the values he upheld throughout his life. While Dr. Subhash Chandra went on to build one of India's most influential media and entertainment conglomerates through the Essel Group and Zee, he has often acknowledged that his father's principles of humility, discipline, social responsibility and nation-first thinking formed the foundation of his own journey.
Vanshika Khandelwal joins Ogilvy as Planning Director
Mumbai: Vanshika Khandelwal has joined Ogilvy as Planning Director. She joins the agency after serving as Senior Brand Planner at FCB Interface.Announcing her new role on LinkedIn, Khandelwal wrote, Excited to begin a new chapter as Planning Director at Ogilvy - looking forward to building meaningful brands, and great partnerships. Khandelwal brings extensive experience in brand strategy, advertising, and marketing, having worked across multiple agencies and consumer-focused organisations. Over the years, she has developed expertise in marketing strategy, advertising, social media marketing, and brand marketing.Before joining Ogilvy, she was associated with FCB Interface as Senior Brand Planner. Earlier in her career, she held roles at 82point5, Iffort, WeBeeSocial, and Swiss Military Lifestyle Products. She began her professional journey in 2018 as an Ecommerce Developer at Swiss Military Lifestyle Products.With experience spanning strategic planning and integrated marketing, Khandelwal is expected to contribute to Ogilvy's brand-building capabilities by driving consumer-centric strategies and fostering impactful client partnerships.
தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு!
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல், மனிதனின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பால்நிலைச் சமத்துவம் (Gender… The post தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு! appeared first on Global Tamil News .
விஜய்யை விமர்சனம் செய்ததற்காக மாற்றுத்திறனாளி கைது: அரசியல் அடக்குமுறை - மாரிதாஸ் வெளியிட்ட பதிவு
முதல்வர் ஜோசப் விஜய்யை விமர்சனம் செய்ததற்காக திமுகவின் வார்டு தொழில்நுட்ப அணி நிர்வாகியான மாற்றுத்திறனாளி வேலுப்பிள்ளை என்ற தங்கமணி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக யூடியூப்பர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
மீண்டும் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை
இந்த ஆண்டு ஏற்படக்கூடிய ‘சூப்பர்’ எல் நினோ வானிலைச் சுழற்சியானது, உலகளாவிய உணவு விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பேரழிவுகரமான வறட்சி இந்த விலை உயர்வு 2028-ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் போரினால் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய தீவிர வானிலைச் சூழலால் விநியோகம் ஒரே நேரத்தில் இரண்டு அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாகப் பொருளாதார […]
புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தில் காப்பாற்றப்பட்ட பசு
புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தில் காப்பாற்றப்பட்ட பச நேற்றைய தினம் புங்குடுதீவு பிரதான வீதியில் 11 ம் வட்டாரத்திலுள்ள மக்கிக்குண்டு குளத்தின் பின்பாக காணப்படுகின்ற பற்றைக்காட்டுக்குள் சட்டவிரோதமாக இறைச்சி ஆக்கும் நோக்கத்தில் பசு ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது. தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் உபதலைவர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சில இளைஞர்களின் துணையுடன் குறித்த பசு உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கயிறு மூலமாக தடம் வைத்து கால்நடைகளை பிடித்து இறைச்சியாக்கும் […]
IGP appoints Hetal Goyal as Vice President – Category
Mumbai: IGP, a global D2C multi-category gifting platform, has appointed retail and e-commerce veteran Hetal Goyal as Vice President – Category. In her new role, she will lead the company's category strategy, merchandising, sourcing, private label development, and business growth initiatives.Goyal brings more than two decades of experience across retail, e-commerce, and quick commerce, with expertise in category management, merchandising, strategic sourcing, private label development, and P&L management. Over the course of her career, she has built and scaled product categories, launched private labels, established domestic and international sourcing networks, and driven profitable growth across leading retail businesses.Prior to joining IGP, Goyal served as Senior Director at Zepto, where she led the company's Zepto Cafe and Private Labels businesses. She has also held leadership roles at Udaan, Primarc Pecan Retail Pvt. Ltd., Crossword Bookstores, Reliance Retail, and Future Group, spearheading category expansion, merchandising, sourcing, and customer-centric growth initiatives.[caption id=attachment_2512139 align=alignright width=200] Tarun Joshi [/caption]Commenting on the appointment, Tarun Joshi, Founder & CEO, IGP, said, As we continue to strengthen IGP's leadership team, we are delighted to welcome Hetal to the organization. Her extensive experience in retail, e-commerce and quick commerce, with a proven track record of building and scaling categories from the customers' perspective, will definitely add to our long-term growth goals and product portfolio. We are confident that her expertise will further strengthen our product portfolio and support IGP's long-term growth ambitions. At IGP, Goyal will focus on strengthening the company's product portfolio by enhancing category selection, expanding strategic vendor partnerships, driving sourcing excellence, and identifying opportunities to scale existing and new categories to deliver an enhanced customer experience.Speaking on her appointment, Hetal Goyal, Vice President, IGP, said, I am excited to join IGP at such an exciting phase of its growth journey. I look forward to working with the talented team to build customer-centric categories, strengthen innovation and enhance sourcing excellence, and create differentiated experiences that delight customers while driving sustainable business growth.”
பிரான்சில் அதி தீவிர எச்சரிக்கையின் கீழ் 22 மில்லியன் மக்கள்
பிரான்சில் மே மாதத்திற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மூன்றாவது வெப்ப அலையின் பிடியில் நாட்டின் கால் பகுதி மக்கள் தவிக்கும் நிலையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 24 நிர்வாகப் பிரிவுகள் இந்த வார இறுதியில் பிரான்சில், ஈபிள் கோபுரம் மற்றும் பாரிஸின் பிற முக்கிய இடங்கள் முன்கூட்டியே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், 22.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டின் இருபத்து நான்கு நிர்வாகப் பிரிவுகள், ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்ட உச்சகட்ட […]
வலி.வடக்கில் விவசாயத்தில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை விற்பனை செய்யும் காட்சி
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றி பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 1661 ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு தேவை எனவும் , அவற்றுக்கான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் , வலி. வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தமது சுய தேவைக்கு எனவும் தெரிவித்திருந்தார். பிரதி அமைச்சரின் இக் கூற்றினை முற்றாக நிராகரித்த வலி.வடக்கு மக்கள் , தாம் தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டு , 36 வருடங்கள் கடந்த நிலையிலும் , எமது காணிகளை பாதுகாப்பு காரணம் என கூறி அடாத்தாக கையகப்படுத்தி , அவற்றில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நாம் எமது காணிகளை இழந்து வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது, எமது காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவத்தினர் விவசாய உற்பத்தி பொருட்களை பெருமளவில் விற்று இலாபம் ஈட்டுகின்றனர். இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடானது, உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்றது. வலி.வடக்கில் இராணுவத்தினரின் விவசாய பண்ணைகளில் உற்பத்தியாகும் , விவசாய உற்பத்தி பொருட்களை பலாலி வீதியில் உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியின் மரக்கறி கொள்வனவு நிலையத்தில் இராணுவத்தினர் பெருமளவில் விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான ஆதாரமாக தம்மிடம் காணொளி பதிவுகள் உள்ளதாக கூறி அவற்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர் மக்களின் காணி மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , கடந்த ஆட்சியாளர்கள் போன்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றாது காணிகளை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
போதைப்பொருளுடன் அதிபர், மாணவன் கைது!
கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போதே, மேற்படி நபர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து 175 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஆவார். வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த மாணவன் இதேவேளை கம்பஹா – கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த […]
Zoom தொழில்நுட்பம் ஊடாக நீர்கொழும்பு கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் தேவைக்கேற்ப ‘சூம்’ (Zoom) தொழில்நுட்பம் ஊடாக இணையவழியில் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற விசாரணைகளை சூம்’ (Zoom) இணையவழியில் நடத்துவதற்கு உரிய நீதிமன்றங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றங்களின் உத்தரவுக்கமைய செயற்பட எதிர்பார்ப்பதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார். 29 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில், சிறைச்சாலை […]
தமிழ் மொழி பொலிஸாருக்கு செயலமர்வு
சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான முறைப்பாடுகளை கையாளுவது தொடர்பில் பொலிஸாருக்கான செயலமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. தமிழ் மொழி மூல பொலிஸாருக்காக தமிழ் மொழியில் குறித்த செயலமர்வு நடைபெற்றது. குறித்த செயலமர்வில் நிகழ்நிலை ஊடாக பொலிஸ்மா அதிபர், குற்றபுலனாய்வுதுறை பணிப்பாளர்ஆகியோரும் நேரடியாக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், சட்ட வைத்திய அதிகாரி , பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் , அரச சட்டவாதிகள் உள்ளிட்டோர் […]

31 C