SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
...

போரை நிறுத்த வேண்டும் என்றால் இதுதான் வழி: 3 நிபந்தனைகளை விதித்த ஈரான்

தெஹ்ரான், ஈரானை கடந்த 28-ந்தேதி முதல் தாக்கி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் 13-வது நாளாக இன்றும் அந்த நாட்டின் பல பகுதிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி தாக்கி வருகின்றன. போரின் தொடக்கத்தில் இருந்து இதுவரை கண்டிராத மிகவும் வலிமையான தாக்குதல்கள் தலைநகர் டெஹ்ரானில் நடந்ததாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். அங்கு இடைவிடாமல் நடந்து வரும் தாக்குதல்களால் தலைநகரில் வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாக அங்கிருந்து […]

அதிரடி 13 Mar 2026 8:30 am

Made in Korea Review: “பிரியங்கா மோகனின் அசத்தல் கம்பேக்!”– கொரியாவில் ஒரு தமிழ் பெண்ணின் தேடல் எப்படி இருக்கு?

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை செல்லும் ஒரு பெண்ணின் அழகான பயணமே 'மேட் இன் கொரியா'. பிரியங்கா மோகனின் இந்த புதிய ஓடிடி படம் ரசிகர்களை கவர்ந்ததா? இதோ விமர்சனம்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 13 Mar 2026 8:15 am

ஜனாதிபதியின் கடமைகளை 'அதிகாரபூர்வமானவை', 'தனிப்பட்டவை'என வகைப்படுத்த முடியாது

ஜனாதிபதி ஒருவரின் கடமைகளை 'அதிகாரபூர்வமானவை'மற்றும் 'தனிப்பட்டவை'என வகைப்படுத்த முடியாது எனவும், அவர் பதவி வகிக்கும் காலம் முழுவதும் 24 மணிநேரமும் ஜனாதிபதியாகவே கருதப்படுவார் எனவும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி ஒருவரின் பணிகள் மற்றும் அவரது தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு இடையே வேறுபாடு உள்ளதா என்பது குறித்து இன்று நாட்டில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. இது முற்றிலும் ஒரு மாயையாகும். அத்தகைய வேறுபாடு எப்போதுமே கிடையாது. இது நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட ஒரு பிம்பமாகும். ஒருவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல், அந்தப் பதவியில் இருக்கும் வரை வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் அவர் ஜனாதிபதியே. அவர் எங்கு சென்றாலும், எத்தகைய செயலில் ஈடுபட்டாலும் அது உள்நாடாகவோ அல்லது வெளிநாடாகவோ இருந்தாலும் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவது அரசின் கட்டாயப் பொறுப்பாகும். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் முதல் தடவை பதவி வகித்தபோது கோல்ஃப் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்து சென்றபோது, அது அவரது தனிப்பட்ட வேலை எனக்கூறி பாதுகாப்பு மறுக்கப்படவில்லை. அவருக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டது, அது வழங்கப்படவும் வேண்டும். பாதுகாப்புடன் தொடர்புடைய மேலும் சில விடயங்கள் உள்ளன. குறிப்பாகப் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள். ஒரு ஜனாதிபதி பாதுகாப்பு காரணங்களுக்காகச் சாதாரண வாடகை வாகனங்களில் பயணம் செய்ய முடியாது. எனவே, முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதி கடற்கரையில் உடற்பயிற்சி செய்தாலும், மத வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அல்லது உறவினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றாலும் அவர் ஜனாதிபதியாகவே கருதப்படுவார். அதேபோல, ஒரு பல்கலைக்கழகம் அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றின் அழைப்பை ஏற்றுச் சென்றாலும், அவர் அங்கு ஜனாதிபதியாகவே முன்னிலையாவார். சர்வதேச சட்டம் மற்றும் மரபுகளின்படி இத்தகைய பிரிவினை கிடையாது என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாமல், இந்த விடயத்தை தர்க்கரீதியான அடிப்படையில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்எனப் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

பதிவு 13 Mar 2026 8:02 am

சுரேஷ் சலே மீது 3 பாரிய குற்றச்சாட்டுகள் - 25 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மூன்று பிரதான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இது தொடர்பான 25 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்துள்ள பிரதான குற்றச்சாட்டுகள் வருமாறு:- 1. விசாரணைகளை தவறாக வழிநடத்தியமை மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டுத் தவறாக வழிநடத்தியதாக சுரேஷ் சலே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபராகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2. தீவிரவாதிகளுக்கு தகவல் வழங்கியமை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு முன்னர், கட்டுவாபிட்டிய தேவாலயத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடையாளம் காட்டிக் கொடுப்பதற்காகப் புலனாய்வுத் தகவல் வழங்குநர் ஒருவரை சுரேஷ் சலே பயன்படுத்தியதாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது. 3. மரபணுப் பரிசோதனையில் அழுத்தம் கொடுத்தமை சாய்ந்தமருது குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, 'சாரா ஜஸ்மின்'மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டு மரபணுப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன. இந்நிலையில், மூன்றாவது பரிசோதனையை முன்னெடுக்குமாறு புலனாய்வாளர்களுக்கு சுரேஷ் சலே தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்ததாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டத்தரணியின் வாதம் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முற்றாக நிராகரித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை என்றும், அவர் மலேசியாவில் இராஜதந்திரப் பணியில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவர் வாதிட்டார். இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார, இது தொடர்பான மேலதிக அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பதிவு 13 Mar 2026 7:59 am

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் சாத்திப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

சமகால நெருக்கடியை எதிர்கொண்டு உலகின் பல நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நாடியுள்ளன. இந்நிலையில் அதனை இலங்கையில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வணிக மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் தேவைப்பட்டால், அது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். எண்ணெய் தொட்டி எரிசக்தியைப் பாதுகாத்து மக்கள் முன்னேறக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் பாடுபடும் என அவர் கூறினார். சப்புகஸ்கந்த மற்றும் முதுராஜவெலவில் எரிவாயு கிடங்கு […]

அதிரடி 13 Mar 2026 7:57 am

ரூ.2,000 கோடி டீல்… கடலில் தவிக்கும் 800 டன் மாம்பழக் கூழ்- சிக்கலில் கிருஷ்ணகிரி பிஸினஸ்!

ஈரான் போர் காரணமாக கிருஷ்ணகிரி மாம்பழக் கூழ் பிஸினஸ் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு விரைவாக தீர்வு காணாவிடில் சம்பந்தப்பட்ட மக்கள் நெருக்கடிக்கு ஆளாக வேண்டி வரும். அதுமட்டுமின்றி நஷ்டத்தை சந்திக்க வேண்டும்.

சமயம் 13 Mar 2026 7:37 am

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் 47 சதவீத பணிகள் மட்டும் முடிந்துள்ளது - ஆர்டிஐயில்வெளியான தகவல்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு 3 வருடங்கள் கழித்து மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்து மத்திய அமைச்சரவையிடம் அனுமதியும் பெறப்பட்டது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்துதல், நிர்வாக குழு அமைத்தல் போன்ற வேலைகள் முடிந்து கிட்டதட்ட 10 வருடங்கள் கழித்து கடந்த வருடத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தொடரப்பட்டு இன்று வரை நடைப்பெற்று வருகிறது. இதனிடையே தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் மதுரை எய்ம்ஸ் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அலுவலர் தர்ம்பீர் குமார் சிங் அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 47 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது எனவும், மதுரை எய்ம்ஸ் மொத்த திட்ட மதிப்பீடு 2021.51 கோடி எனவும், 471.02 கோடி மத்திய  பட்ஜெட்டில் இருந்து மதுரை எய்ம்ஸ் க்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 2026 இல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆர்டிஐ ஆர்வலர் பாண்டியராஜா இது தகவல்கள் குறித்து  ஆர்டிஐ ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 ல் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து தான் 22 மே 2024 அன்று கட்டுமான பணிகள் தொடங்கியது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் 47 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து உள்ளது. மீதமுள்ள 53 சதவீத பணிகளை முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே அவசரக் கதியில் மதுரையையும் மருத்துவமனையை திறக்கக் கூடாது. கட்டுமான பணிகளை முடிப்பதற்கு போதுமான அவகாசம் வழங்க வேண்டும். அப்போதுதான் கட்டுமானம் தரமானதாக அமையும். மதுரை எய்ம்ஸ் பணிகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயிலாமலேயே ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்து  வெளியே செல்லும் நிலை உள்ளது. எனவே வரும் நாட்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி உதவி வழங்கும் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து நிதி கிடைப்பதற்கு மத்திய அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விகடன் 13 Mar 2026 7:23 am

அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பிலியந்தலை – கொரகபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மிலிந்த மதுசங்க விஜேசிங்க என்ற திருமணமான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் மனைவியும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நேற்றுமுன்தினம்(11), உயிரிழந்த இளைஞர் மற்றொரு […]

அதிரடி 13 Mar 2026 7:16 am

'6 தொகுதிகள் கொடுத்தே ஆகணும்' - கறார் காட்டும் கம்யூனிஸ்டுகள்; கைவிரித்த திமுக!

கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தி.மு.க-வின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடிக்கிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக செல்லவில்லை எனவும் தி.மு.க இறங்கி வர மறுக்கிறது என குமுறுகிறார்கள் தோழர்கள். இதுகுறித்து விரிவாக விசாரித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காங்கிரஸுடனான கடும் இழுபறிக்கு பிறகு 28 தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா சீட்டையும் ஒதுக்கியது தி.மு.க. அதைதொடர்ந்து 'எங்களுக்குள் கூடுதல் தொகுதிகள் வேண்டும்' என கச்சைக்கட்டத் தொடங்கினார்கள் இதர கூட்டணிக் கட்சிகள். ஸ்டாலின் - பெ.சண்முகம் தொகுதி பங்கீடு குறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ, சி.பி.எம் நிர்வாகிகள், இந்த தேர்தலில் எப்படியாவது கூடுதல் தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம். ஆனால், முதற்கட்ட பேச்சுவார்த்தையின்போதே தொகுதிகள் குறைக்கப்படும் என்பதை நாசுக்காக சொல்லிவிட்டது தி.மு.க பேச்சுவார்த்தை குழு. ஆரம்பத்தில் இப்படித்தான் பேசுவார்கள், எப்படியும் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தி.மு.க தனது கறார் தன்மையிலிருந்து இறங்கிவரவில்லை என்றனர். 'கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?' என சில விவரப்புள்ளிகளிடம் கேட்டோம் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால் 4 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்றது தி.மு.க-வின் பேச்சுவார்த்தை குழு, ஆனால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 8 இடங்கள் எதிர்பார்த்தன. சி.பி.ஐ-யின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் அவர் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படாததால் சி.பி.ஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் முதல்வர் சந்தித்தும் முறையிட்டனர். அதன்பின்னர் 4 தொகுதியிலிருந்து 5 தொகுதிகள் தர முன்வந்திருக்கிறது தி.மு.க தலைமை. பாலன் இல்லம் கூடுதல் தொகுதிகள் தராவிட்டாலும் பரவாயில்லை, கடந்தமுறை பெற்ற 6 தொகுதிகளை தாருங்கள் என்றிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட். ஆனால் கடைசிவரை 5 தொகுதிகளை தி.மு.க தாண்டவில்லை. ஆகையால் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைகிறார்கள் சி.பி.ஐ கட்சியினர். அதேபோல் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், 6 தொகுதிகளை போராடியாவது பெற்றாக வேண்டும் என்றிருக்கிறார். ஆனால் கம்யூனிஸ்ட் எவ்வளவு போராடினும் 5 தொகுதிகள்தான் என்பதில் ரொம்ப உறுதியாக இருக்கிறார்கள் என்றனர் இந்த ரேஸில் யார் வெல்கிறார்கள் எனப் பார்ப்போம்!

விகடன் 13 Mar 2026 7:15 am

OTT Releases Today: “வீக் எண்ட் பிளான் ரெடியா?”– மார்ச் 13 இன்று ஓடிடியில் வெளியாகும் டாப் படங்கள் இதோ!

இன்று (மார்ச் 13, 2026) ஓடிடி தளங்களில் ஒரு பெரும் அதிரடி காத்திருக்கிறது. தெலுங்கு ஹிட் படமான 'ஃபங்கி' முதல் அனிமேஷன் ஜாம்பவான் 'ஜூடோபியா 2' வரை பல்வேறு மொழிகளில் வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 13 Mar 2026 7:15 am

யாழில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு

யாழில் இன்றையதினம் இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டன.இது குறித்து மேலும் தெரியவருகையில், இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்கின்ற, யாழ்ப்பாணத்தில் உள்ள 4 கடைகளும், ஊரெழு பகுதியில் உள்ள ஒரு கடையிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியின்றி 2 கடைகளில் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டன. தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட […]

அதிரடி 13 Mar 2026 7:11 am

Doctor Vikatan: தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை... மருத்துவ குணம் மிக்கதா?

Doctor Vikatan: எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தானாகவே முளைத்திருந்தது ஒரு செடி.  குப்பைச்செடி என பிடுங்க நினைத்தபோது, அது கல்யாண முருங்கை செடி என்றும், அற்புதமான மருத்துவ பலன்கள் கொண்டது என்றும் சொன்னது கூகுள்.  கல்யாண முருங்கையை யார், எப்படி, எந்தப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளலாம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.   சித்த மருத்துவர் அபிராமி நீங்கள் குறிப்பிடுகிற கல்யாண முருங்கை மரம் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலம். இதன் கிளைகளில் முட்கள் இருப்பதால் இது 'முள் முருங்கை' என்றும், 'முருக்க மரம்' என்றும்கூட அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் விதையைத் தரையில் தேய்த்து உடலில் வைத்தால் சூடாக இருக்கும். கிராமங்களில் இதை 'நெருப்புக்கொட்டை' அல்லது 'சூட்டுக்கொட்டை' என்று விளையாட்டாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். சாதாரண முருங்கைக்கீரை அனைவருக்கும் நல்லது என்பதை எல்லோரும் அறிவோம். அதை உலகமே 'சூப்பர் ஃபுட்'  என்று கொண்டாடுகிறது. கல்யாண முருங்கை அதற்குச் சற்றும் சளைத்ததில்லை. குறிப்பாக,  பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இன்று பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் தொடர்பான வலிகள், எண்டோமெட்ரியோசிஸ்  (Endometriosis), உடல் பருமன் என பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல  முக்கியப் பிரச்னைகளுக்கு  கல்யாண முருங்கைக் கீரை அற்புதமான தீர்வுகளைத் தருகிறது. முருங்கைக்கீரை பெண் உடல், உணர்வு, உணவு - 13: தொடர்ந்து மாறும் பீரியட்ஸ் சுழற்சி; மருந்துகள் இல்லாமலே சரி செய்யலாம்! கல்யாண முருங்கை இலைகளைச் சேகரித்து, நிழலில் உலர்த்திப் பொடிசெய்து கொள்ளவும். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு பொடியை சாதாரண நீரில் கலந்து 2 முதல் 3 மாதங்கள் குடித்து வந்தால், பிசிஓடி, முறைதவறிய மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், எண்டோமெட்ரியோசிஸ், சினைப்பைக் கட்டிகள் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.  ஃப்ரெஷ்ஷான கல்யாண முருங்கை இலைகள் கிடைக்கும் என்பவர்கள், 5 முதல் 10 இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதில் 20 மில்லி (சுமார் கால் டம்ளர்) அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். குறிப்பாக, எடைக்குறைப்புக்கு மிகச் சிறப்பாக உதவும். கல்யாண முருங்கைக்கீரை மதுரையில்  மிகவும் பிரபலம். அங்குள்ள சௌராஷ்டிர இன மக்கள் இந்த இலையை அரிசிமாவுடன் கலந்து  'கல்யாண முருங்கை வடை' அல்லது 'முள் முருங்கை வடை'  செய்து மாலையில் சிற்றுண்டியாகச் சாப்பிடுவார்கள். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். Doctor Vikatan: முருங்கைக்கீரை கிடைக்காதபோது, அதை கேப்ஸ்யூல் வடிவில் எடுத்துக்கொள்ளலாமா? கல்யாண முருங்கை இலைகளை குளிர்காலத்தில் சாப்பிடுவது சளித் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கும் கல்யாண முருங்கை இலை மிகவும் நல்லது. இந்த மரம் வீட்டில் இருந்தால் அதை வெட்ட வேண்டாம் என்பதே என் அறிவுரை. ஏனெனில் எல்லா வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு நிச்சயம் இந்த இலைகள் தேவைப்படும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்... உங்கள் வீட்டில்  தானாக வளர்வதாகச் சொல்கிற இந்தச் செடி, உண்மையிலேயே கல்யாண முருங்கைதானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதில் பிரகாசமான சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். இந்த மரம் குறித்து தெரிந்தவர்களிடமோ, மருத்துவர்களிடமோ, தோட்டக்கலை நிபுணர்களிடமோ அதை உறுதிசெய்து கொண்டு பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

விகடன் 13 Mar 2026 7:06 am

தூத்துக்குடி, துரைச்சாமிபுரம் மாடசாமி கோயில் : மணிகட்டி வேண்டிக்கொண்டால் மங்கலம் உண்டாகும்!

தென் மாவட்டங்களில் பரவலாக மாடசாமி கோயில்களைக் காணலாம். ஊரைக்காக்க, துடியான தெய்வமாகக் கோயில்கொண்டிருக்கும் மாடசாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். அவரை வேண்டிக்கொண்டால் தீய சக்திகள் அண்டாது. அதேவேளை ஒரு தகப்பனைப்போலத் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைப் பரிவோடு தீர்த்துவைப்பார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அப்படி ஒரு கோயில்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணிகட்டி மாடசாமி கோயில். தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது மேல அரசரடி. இந்தக் கிராமத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தூரம் பயணித்தால் துரைச்சாமிபுரம் மணிகட்டி மாடசாமி ஆலயத்தை அடையலாம். ஊரின் தொடக்கத்திலேயே ஆலயம் அமைந்துள்ளது. துரைச்சாமிபுரம் மாடசாமி கோயில் இங்கே கருவேல மரம் ஒன்றே மக்களின் கண்கண்ட தெய்வமாக, அருள் நிறைந்த மாடசாமியாகப் போற்றப்படுகிறது. இந்தத் தெய்வ மரத்தில் பித்தளை மணியைக் கட்டி வேண்டிக்கொண்டால், அந்த வேண்டுதல்கள் விரைவில் பலிக்கும் என்கிறார்கள் பக்தர்கள். சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் கடும் பஞ்சம் நிலவியது. எனவே ஊரில் மேய்ச்சலைத் தொழிலாகக்கொண்ட சிலர், ஆடு-மாடுகளை ஏரல் அருகில் உள்ள வாழ்வல்லான் பகுதிக்கு - தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே பல மாதங்கள் தங்கிவிட்டார்கள். புரட்டாசி மாதம் வந்தது. கூடவே பெருமழையும் வந்தது. துரைச்சாமிபுரத்தின் கண்மாய்கள், குளங்கள் எல்லாம் நிரம்பின. இந்தத் தகவலை அறிந்த மேய்ச்சல்காரர்கள் ஆடுமாடுகளுடன் ஊர் திரும்பினார்கள். ஊரின் கண்மாயில் மாடுகளுக்குத் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த தருணத்தில் இடியுடன் பெருமழை பிடித்துக்கொண்டது. எனவே, அனைவரும் அவசர அவசரமாக கால்நடைகளை ஊருக்குள் அழைத்துச் சென்றார்கள். மழை ஓய்ந்ததும், ஒவ்வொருவரும் தங்களின் கால்நடைகளின் எண்ணிக்கையைச் சரிபார்த்தார்கள். அப்போது, ஒருவரின் மந்தையில் ஒரு காளையை மட்டும் காணவில்லை. ஊர் முழுக்க தேடி அலைந்தார் அவர். கண்மாயின் அருகில் வந்தபோது, திடுமென தண்ணீருக்குள் இருந்து துள்ளியெழுந்து வந்தது அந்தக் காளை மாடு. கரைக்கு வந்து கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியை ஆட்டி ஒலி எழுப்பியது. துரைச்சாமிபுரம் மாடசாமி கோயில் மாட்டுக்காரருக்கு ஏக சந்தோஷம். காளையை நெருங்கி, அதன் கழுத்தைச் சேர்த்து அணைத்துக்கொண்டவர், அதை வீட்டுக்கு ஓட்டிச்செல்ல முனைந்தார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ``என்னைத் தேடாதே.. நான் மக்களைக் காக்கும் மாடசாமி. நான் ஊருக்குள் வர மாட்டேன். இதுதான் என் கோட்டை. என்னை நாடி வந்து வழிபடும் மக்களின் குறைகளைத் தீர்ப்பேன்; ஊரைக் காப்பேன்” என்று வாய் திறந்து பேசிய அந்தக் காளை, கண்மாயின் கரையில் இருந்த ஒரு கருவேல மரத்தின் அடியில் சென்று மாயமாக மறைந்து போனது. மாட்டுக்காரர் பதைபதைப்புடன் ஓடிச்சென்று மரத்தை நெருங்கியபோது, மரத்தின் அடியில் காளை மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி மட்டுமே கிடந்தது. இந்த அதிசயத்தை அறிந்து ஊரே வியந்தது. காளை மாட்டின் மணியை அந்த மரத்தில் கட்டி, மரத்தையே மாடசாமியாக வழிபட ஆரம்பித்தார்கள். மாலை சாற்றுவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்புதான் மரத்தின் அடியில் கல் பீடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சொத்துப் பிரச்னை, நீதிமன்ற வழக்கில் இழுபறி, திருமணத்தடை, குழந்தைப் பாக்கியம் தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேற, மாடசாமியை மனமுருக வேண்டிக்கொண்டு, மாலை சாற்றி, பன்னீர் தெளித்து, கற்பூரம் ஏற்றி, பித்தளை மணியை மரத்தில் கட்டி வழிபடுகிறார்கள். வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது அவர்கள் நம்பிக்கை. இங்கே மாடசாமிக்கு உடைக்கப்படும் தேங்காய், பழம் எதையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. தேங்காய், வாழைப்பழம் ஆகியவை கோயிலின் ஒரு பகுதியில் தனித்தனியே குவித்து வைக்கப் படுகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காயைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்துச் சாப்பிடுகிறார்கள். துரைச்சாமிபுரம் மாடசாமி கோயில் வெள்ளிக்கிழமைதோறும் மாடசாமி கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டால் மாடசாமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்கள். நிலம், வீடு வாங்குதல், திருமணம் ஆகியவற்றிற்கு மாடசாமியிடம் பூ கட்டிப் போட்டு அனுமதி கேட்கிறார்கள், பக்தர்கள். மாடசாமியின் அனுமதி கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தில் இறங்குகிறார்கள். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று கொடைவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து கோயிலில் குவிந்துவிடுவார்களாம். அன்று உச்சிக்கால பூஜைக்கு மட்டுமே பெண்களுக்கு அனுமதி. மாலை 6 மணிக்கு மேல் பெண்களுக்கு அனுமதி கிடையாது. மறுநாள் நடைபெறும் படைப்புப் பிரசாதத்தையும் ஆண்கள் மட்டுமே சாப்பிடவேண்டும் என்பது நியதி. அதையும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. அதேபோல் இங்கே நடைபெறும் பூஜை, கொடை விழாவில் மேளம் எதுவும் கிடையாது. மணிச்சத்தத்தில் மட்டுமே பூஜை நடைபெறுகிறது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மாடசாமிக்குக் காணிக்கையாக ஆடு, சேவல்களை கோயிலில் விட்டுச் செல்கிறார்கள். இப்படியான நேர்த்திக்கடன் கோழிகளும் ஆடுகளும் ஊருக்குள் சுற்றித் திரிந்தாலும், மாலையில் அனைத்தும் கோயில் எல்லைக்குள் வந்து சேர்ந்து விடுகின்றன. அவை மாடசாமிக்குச் சொந்தமானவை என்பதால், எவரும் அவற்றைச் சீண்டுவதில்லை. அதேபோல் எவருக்கேனும் பொருள் ஏதேனும் திருடு போய்விட்டால், அதன் பொருட்டும் மாடசாமியின் சந்நிதியில் அருள்வாக்கு கேட்கிறார்கள். மாடசாமியின் அருளால் திருடுபோன பொருள்கள் 8 நாள்களுக்குள் மீண்டும் கிடைக்கும் என்பது, இப்பகுதி மக்களின் தீவிர நம்பிக்கை. மட்டுமன்றி நிலம் குத்தகை, நில விற்பனை ஆகியவை குறித்த ஒப்பந்தங்களையும் மாடசாமியின் முன்பு வாய்வழி ஒப்பந்தமாகச் செய்துகொள்கிறார்கள். சாமியின் முன் செய்யப்படும் ஒப்பந்தம் என்பதால், அதன் விதிமுறைகளை மீறாமல் மாடசாமிக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். இப்படி கலியுகத்தில் காக்கும் கடவுளாக நின்று காக்கும் மணிகட்டி மாடசாமி கோயிலுக்கு வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை போய்வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

விகடன் 13 Mar 2026 7:01 am

3வது நாளாக பெட்ரோல் பங்க் கூட்டம்… மத்திய, மாநில அரசுகள் அட்வைஸ் செஞ்சும் கேட்காத மக்கள்!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என அஞ்சி வாகன ஓட்டிகள், தொடர்ந்து பங்குகளில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

சமயம் 13 Mar 2026 6:54 am

எங்கோ நடக்கும் போர் நம் சமையலறையை பாதிக்கிறது, அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது இந்தியா?

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடங்கிய போர் இரண்டு வாரங் களைக் கடந்துள்ளது. பெரும் உயிரிழப்புகள், பொருள் சேதம் என மேற்காசிய மக்கள் நிம்மதியிழந்துள்ளனர். கூடவே இப்போர், எண்ணெய், எரிவாயு வர்த்தகத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி, கச்சா எண்ணெய் விலையை ஏற்றி, இறக்கி சர்வதேச சந்தைகளையும், மக்களையும் கலங்கடித்து வருகிறது. குண்டுவெடிப்பின் சத்தம்கூட கேட்காத இந்தியாவிலும், தடைபடும் எரிபொருள் விநியோகத்தின் தாக்கம் பரவியிருக்கிறது. பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. வணிக சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டதால் பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அச்சத்தால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு காஸ் சிலிண்டர் புக் செய்கின்றனர்; மின்சார அடுப்பு, விறகு அடுப்புகளை வாங்கக் குவிகின்றனர். மக்களைச் சூழ்ந்துள்ள இந்தப் பதற்றத்துக்குக் காரணம் போர் அல்ல, மத்திய, மாநில அரசுகளே. போரினால் வரும் எண்ணெய், எரிவாயு தட்டுப்பாட்டை அரசுகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது இரண்டாவது கேள்வி. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்பதுதான் முதல் கேள்வி. ‘இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88%, எரிவாயு தேவையில் 60% என இறக்குமதியைச் சார்ந்திருக்கிறது’ என்கிறார்கள். ஆனால், சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளும்கூட இறக்குமதியைச் சார்ந்துதான் உள்ளன. அவை இதுபோன்ற சமயங்களில் நெருக்கடிக்குள்ளாகாத வகையில் முன்னேற் பாடாகச் செயல்படுகின்றன. உதாரணத்துக்கு, சீனா தனது எண்ணெய் கையிருப்பை தீவிரமாகக் கட்டமைத்து, தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. இப்போதைய நிலவரப்படி அதன் கையிருப்பு மூன்று மாதங்கள் வரை வரும் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் பல்வேறு நாடுகளிலிருந்து (ரஷ்யா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா) எண்ணெய் வாங்கி, பற்றாக்குறை ஆபத்துகளையும் குறைத்துக்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து, எண்ணெய் சார்பைக் குறைத்துள்ளது.ஆனால், இந்தியாவின் எண்ணெய்க் கையிருப்பு 20 நாள்களுக்கு மட்டுமே உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனம் போன்றவற்றிலும்கூட நாம் பெரிதாக முன்னேறவில்லை. அதுமட்டுமா? நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும், வாங்கக் கூடாது என்று அமெரிக்காதான் தீர்மானிக்கிறது. இது யாருடைய தோல்வி? போரை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், எங்கோ நடக்கும் போர் நெருக்கடிகள் நம் சமையலறையில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்குப் பலவீனமாக இருக்கக் கூடாது. பொருளாதாரத்தை இயக்குவதே எரிசக்திதான் எனும்போது, அதில் தற்சார்பு அடையாமல், வளர்ச்சி சாத்தியமாகாது. இந்தியா இனியாவது விழித்து, எரிசக்திக் கொள்கையை வகுத்து, உண்மையான தற்சார்பை நோக்கி முன்னேற வேண்டும். இல்லையெனில், அடுத்த போர், அடுத்த நெருக்கடி என இந்தியா பாதிப்புக்குள்ளாவது தொடரவே செய்யும்! - ஆசிரியர்

விகடன் 13 Mar 2026 6:36 am

ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி: எரிபொருள் தட்டுப்பாடு நீங்குமா?

தெஹ்ரான், அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.இதனால் கோபம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் […]

அதிரடி 13 Mar 2026 4:54 am

தனியார் வைத்தியசாலையில் கலாவதியான மருந்துப் பொருட்கள்- 100,000 ரூபா அபராதம்

கலாவதியான மருந்துப் பொருட்களை பாவனைக்கு வைத்திருந்த கல்முனை தனியார் வைத்தியசாலைக்கு 100,000/= ரூபாய் அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த வைத்திசாலையில் பாவனைக்கு வைத்திருந்த காலாவதியான மருந்துப் பொருட்களை கைப்பற்றியதுடன் குறித்த வைத்திய சாலைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு […]

அதிரடி 13 Mar 2026 4:46 am

உலக அழிவின் அறிகுறியா…மூன்றாம் உலகப் போரா… Oarfish மீன்களால் பீதியில் உலக நாடுகள்!

மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் ‘உலக அழிவின் அறிகுறி’ எனக் கருதப்படும் இரண்டு ‘ஓர்பிஷ்’ (Oarfish) மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது. புராதன நம்பிக்கைகளின்படி, ஆழ்கடலில் வாழும் ஓர்பிஷ்’ (Oarfish) மீன்கள் நீரின் மேற்பரப்பிற்கு வருவது என்பது ஒரு பெரும் இயற்கைப்பேரழிவு அல்லது உலகளாவிய மாற்றங்கள் நிகழப்போவதற்கான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது. பெரும் இயற்கைப்பேரழிவு அல்லது உலகளாவிய மாற்றங்கள் சமிக்ஞை இதனாலேயே இவை ஓர்பிஷ்’ (Oarfish) ‘உலக அழிவு மீன்கள்’ […]

அதிரடி 13 Mar 2026 3:30 am

அமெரிக்காவை நிராயுதபாணியாக்க மொஜ்தபா கமேனி அழைப்பு: சர்வதேச அரசியலில் அதிரடித் திருப்பம்!

ஈரான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மொஜ்தபா கமேனி, சர்வதேச சமூகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை… The post அமெரிக்காவை நிராயுதபாணியாக்க மொஜ்தபா கமேனி அழைப்பு: சர்வதேச அரசியலில் அதிரடித் திருப்பம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Mar 2026 2:21 am

இந்தியாவில் முதல்முறை: கருணைக்கொலைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஹரிஷ் ராணா என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது 20-வது வயதில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் சண்டிகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த போது அங்கு 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.சுயநினைவை இழந்த ஹரிஷ் ராணா கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு 13 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது அவருக்கு 32 வயதாகிறது. ஹரிஷின் வயதான […]

அதிரடி 13 Mar 2026 1:30 am

ஹார்முஸ் நீரிணையில் பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல்

ஹார்முஸ் நீரிணையில் பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் பயணித்த ஒரு பிரித்தானிய சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதனால் தீப்பற்றி எரிந்ததாகவும் பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் (UKMTO) அறிவித்துள்ளது. கப்பல் மீது ஏவப்பட்ட ஒரு எறிகணை (unknown projectile) தாக்கியதால், கப்பலில் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ras Al Khaimah (UAE) கடற்கரையிலிருந்து சுமார் 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கப்பலில் இருந்த குழுவினர் பாதுகாப்பாக […]

அதிரடி 13 Mar 2026 12:30 am

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ஆம் திகதி

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க… The post செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ஆம் திகதி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Mar 2026 11:45 pm

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த ஐந்து இந்தியர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடற்படையினரின் சோதனைக்கு உள்ளாகியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது ஐந்து மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர், அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னாரிலுள்ள கடற்படை முகாம் ஒன்றிற்கு […]

அதிரடி 12 Mar 2026 11:30 pm

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ஆம் திகதி

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்றையதினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளைவாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவுபணிகளை முன்னெடுக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டுள்ளது. அத்துடன் புதைகுழி பகுதியில் அகழ்வு பணிகளில்ஈடுபடுவர்களுக்காகமற்றும் பொருட்களை வைப்பதற்காகஅமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் டித்வாபுயல் , அதனை தொடர்ந்து யாழில் பெய்த பருவ மழைகாரணமாக சேதமடைந்துள்ளன. அவற்றினை அங்கிருந்து அகற்றி , புதிய கொட்டகைகளை அமைக்கவும் , அகழ்வு பணிகளுக்கான தளபாடங்களை கடந்த அகழ்வு பணிகளுக்கு ஏற்பாடு செய்தது போன்றுநல்லூர் பிரதேச சபை இம்முறையும் தளபாட வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய மன்று கட்டளையிட்டது. புதைக்குழி பகுதிக்கு நேரில் சென்று கள தரிசிப்பைமேற்கொள்வது என்றும் மன்றில் தீர்மானிக்கப்பட்டதற்குஅமைய நீதவான் எஸ்.லெனின்குமார் , சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன் , ரணித்தா, நல்லூர் பிரதே சபை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று புதைகுழியை பார்வையிட்டனர். அதன் போது புதைகுழிக்குள் தற்போதும்நீர் தேங்கி நிற்பதனால்எதிர்வரும் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுஎன்றும் ,ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றில் எடுக்கப்படும் எனவும் , ஏப்ரல் 20ஆம் திகதிமூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதுஎனவும் திகதிகள் இடப்பட்டன.

பதிவு 12 Mar 2026 11:17 pm

நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 10-வது பதிப்பாக சென்னையில் நடைபெறும் CAHOCON 2026 மாநாடு

மருத்துவ பராமரிப்பு தரத்தில் இந்தியாவின் முன்னணி மாநாடான CAHOCON 2026-ன் 10-வது மாநாடு, 2026 ஏப்ரல் 10 முதல் 12 வரை சென்னையில் நடைபெறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட சுகாதார

சென்னைஓன்லைனி 12 Mar 2026 11:02 pm

சென்னை ஐ.சி.எஃப் மைதானத்தில் நடைபெறும் IRCE 2026 கண்காட்சியில் ஹார்டிங் இந்தியா பங்கேற்பு

2026 மார்ச் 12 முதல் மார்ச் 14 வரை நடைபெறும் IRCE 2026 கண்காட்சியில், ஹார்டிங் இந்தியா நிறுவனம் அதிநவீன ரயில்வே இணைப்பு வசதிக்கானதனது தீர்வுகளைக் காட்சிப்படுத்துகிறது.

சென்னைஓன்லைனி 12 Mar 2026 11:00 pm

10th Edition of CAHOCON 2026 to Bring 2,500 Healthcare Leaders to Chennai to Advance Patient Safety

The 10th edition of CAHOCON 2026, India’s premier healthcare quality conference organised by the Consortium of Accredited Healthcare Organizations (CAHO),

சென்னைஓன்லைனி 12 Mar 2026 10:55 pm

HARTING India showcasesRailway connectivity Solutions & Innovations at IRCE Expo 2026 at ICF Grounds Integral Coach Factory, Chennai

HARTING India is showcasing its cutting-edge railway connectivity solutions at IRCE 2026 taking place from 12th March 2026 to 14thMarch

சென்னைஓன்லைனி 12 Mar 2026 10:53 pm

ஈரான் பாடசாலை மீதான தாக்குதல் ; 46 செனட் உறுப்பினர்கள் அவசரக் கடிதம்

ஈரானின் மினாப் நகரில் உள்ள சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் குறித்து முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்க செனட் சபையின் 46 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு (Pete Hegseth) அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ‘ஷஜாரே தய்யிபா’ (Shajareh Tayyiba) சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் உட்பட சுமார் 170 பேர் […]

அதிரடி 12 Mar 2026 10:30 pm

நாட்டில் தட்டுப்பாடு ; இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிரடி 12 Mar 2026 10:30 pm

இந்திய டீசல் : இந்தியக் கொடிக்கு அனுமதியாம்!

இலங்கை, பங்களாதேஸ் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட அண்டை நாடுகளின் டீசல் விநியோக கோரிக்கைகளை இந்தியா பரிசீலித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது, குறிப்பாக அதன் அண்டை நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது .ஏற்கனவே பங்களாதேஸ்; டீசல் விநியோகத்தைக் கோரியுள்ளதாகவும், கூறப்படுகின்றது. இதனிடையே இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகமும், டில்லியில் உள்ள ஈரானிய தூதரகமும் விடயம் தொடர்பில் மௌனம் காத்துவருகின்றன. ஏற்கனவே மேற்கு இந்தியாவில் உள்ள காண்ட்லா துறைமுகத்திற்குச் சென்ற தாய்லாந்து கப்பல் நேற்று புதன்கிழமை ஹர்முஸ் நீரிணைப் பகுதியில் தாக்கப்பட்டது.தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டம் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு 12 Mar 2026 10:01 pm

கதை கதையாம்:காணி விடுவிப்பாம்!

சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை விடுவிப்பதாக உறுதி தெரிவித்திருந்த நிலையில் தற்போது மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் - சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மயிலிட்டி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக கடற்றொழில் அமைச்சர் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார். இந்நிலையில் அங்கு மக்களோடு உரையாடிய போது பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணிகள் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேவேளை பலாலியில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தை கிளிநொச்சிக்கு நகர்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ராஜபக்ச தரப்பு அனுர அரசின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றது. எனினும் அதனை அரசு மறுதலித்து வருகின்ற நிலையில் தையிட்டி திஸ்ஸ விகாரை காணியில் ஒரு அங்குலத்தினை தானும் விடுவிக்க தயாராகவில்லையென விகாராதிபதி மறுதலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 12 Mar 2026 9:58 pm

வடகொரியா –ஏவுகணைச் சோதனையை மகளுடன் பாா்வையிட்டாா் கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டுப் போா்ப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தனது இளம் மகளுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையை நேரில் ஆய்வு செய்தாா். கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகொரிய கடற்படையில் இணைக்கப்பட்ட ‘சோய் ஹியோன்’ போா்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளில் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ஏவுகணைச் சோதனையை தனது 13 வயது மகள் கிம் […]

அதிரடி 12 Mar 2026 9:30 pm

உடன் நடவடிக்கை எடுக்கவும்: இலங்கை மத்திய வங்கிக்கு கொழும்பு தலைமை நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

வெளிநாட்டு நாணய மாற்றுச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாக கிரிப்டோகரன்சிகள் மூலம் இலங்கையின் பணம் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை இன்று (12) இலங்கை மத்திய வங்கிக்கு பிறப்பித்துள்ளார். மத்திய வங்கியைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த கிரிப்டோகரன்சி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எந்த புரிதலும் இல்லை, இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் நீதிமன்றத்திற்குத் […]

அதிரடி 12 Mar 2026 9:30 pm

400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விடுவிப்புக்கு IEA அனுமதி

ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க சர்வதேச எரிசக்தி முகவரகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ் பிரோல் அறிவித்துள்ளார். சர்வதேச எரிசக்தி முகவரகம், தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான மூலோபாய எண்ணெய் இருப்புக்களை சந்தைக்கு விடுவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மொத்தம் 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கும், எரிபொருள் விலையேற்றத்தைக் […]

அதிரடி 12 Mar 2026 8:30 pm

அல்லைப்பிட்டியில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் –கொழும்பு சி.ஐ.டி க்கு மாற்றப்பட்ட வழக்கு

அல்லைப்பிட்டியில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு… The post அல்லைப்பிட்டியில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் – கொழும்பு சி.ஐ.டி க்கு மாற்றப்பட்ட வழக்கு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Mar 2026 8:17 pm

உங்க மச்சான் விவாதத்துக்கு அழைக்கிறாரு.. வக்கில்ல.. ஆதவ் அர்ஜுனாவை விளாசிய சாட்டை துரைமுருகன்

சென்னையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவருடைய பேச்சுக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நாதக சாட்டை துரைமுருகன், ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சமயம் 12 Mar 2026 8:04 pm

ஈரானிய அணுசக்தி தளம் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது

அணு ஆயுதங்களை உருவாக்குவதில் முக்கியமான திறன்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஒரு தளத்தை இஸ்ரேலிய இராணுவம் (IDF) வியாழக்கிழமை தாக்கியதாகக் கூறியது.

பதிவு 12 Mar 2026 7:57 pm

மத்திய கிழக்கு எண்ணெய் விநியோக இடையூறு வரலாற்றில் மிகப்பெரியது - ஐ.ஈ.ஏ

மத்திய கிழக்கு எண்ணெய் விநியோக இடையூறு வரலாற்றில் மிகப்பெரியது என்று IEA கூறுகிறது. மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் உலக எண்ணெய் சந்தையின் வரலாற்றில் மிகப்பெரிய விநியோக இடையூறை உருவாக்குகிறது என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) இன்று வியாழக்கிழமை கூறியது. ஏனெனில் அந்த நிறுவனம் அதன் எண்ணெய் விநியோக வளர்ச்சி கணிப்பை பாதிக்கும் மேலாகக் குறைத்துள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட 32 நாடுகளைக் கொண்ட குழுவான IEA, அதன் சமீபத்திய சந்தை அறிக்கையில், 2026 எண்ணெய் விநியோக மதிப்பீட்டை ஒரு நாளைக்கு 2.4 மில்லியன் பீப்பாய்களிலிருந்து 1.1 மில்லியன் பீப்பாய்களாகக் குறைத்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி தற்போது ஒரு நாளைக்கு குறைந்தது 8.0 மில்லியன் பீப்பாய்கள் குறைந்துள்ளதாக அது மேலும் கூறியது. 13 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்கியதிலிருந்து, குறுகிய ஹார்முஸ் ஜலசந்தி உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% க்கு ஒரு தடையாக மாறியுள்ளது. முக்கிய வளைகுடா உற்பத்தியாளர்களின் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் குறிவைக்கப்படுகின்றன. மேலும் ஏற்றுமதிகள் துறைமுகங்களை விட்டு வெளியேற முடியாததால் உற்பத்தி மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. போர் தொடர்வதால், ஹார்முஸ் வழியாக ஒரு லிட்டர்எண்ணெய் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் அச்சுறுத்தியுள்ளது. போருக்கு முந்தைய அளவை விட தற்போதைய ஏற்றுமதி 10% க்கும் குறைவாக இருப்பதாக IEA தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில், இவை ஒரு நாளைக்கு 15 மில்லியன் பீப்பாய்களாக இருந்தன. வியாழக்கிழமை எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 ஆக இருந்தது.

பதிவு 12 Mar 2026 7:54 pm

ஈரானின் புதிய தலைவரின் முல் அறிவிப்பு: பழிவாங்குவோம் என்றும் சபதம்

பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தனது தந்தை அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்லாமியக் குடியரசின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் இன்ற வியாழக்கிழமை தனது முதல் பொது அறிக்கையை வெளியிட்டார். ஈரானின் உச்ச தலைவர், ஈரானின் வளைகுடா அண்டை நாடுகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருக்கவும், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை முடக்கவும் அழைப்பு விடுத்தார். காமெனி கேமராவில் தோன்றவில்லை. மேலும் அவரது அறிக்கையை அரசு தொலைக்காட்சியில் ஒரு செய்தி தொகுப்பாளர் வாசித்தார். இஸ்ரேலிய உளவுத்துறை, காமெனியின் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற தாக்குதலில் அவர் காயமடைந்ததாக மதிப்பிட்டுள்ளது. நேற்றுப் புதன்கிழமை அவர் ஏன் இன்னும் பொதுவில் தோன்றவில்லை அல்லது அறிக்கை வெளியிடவில்லை என்ற ஊகங்களுக்கு மத்தியில் இது பரவலாகப் பேசப்பட்டது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய 13 நாள் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு பழிவாங்குவோம் என்றும் காமெனி சபதம் செய்தார்.

பதிவு 12 Mar 2026 7:50 pm

“ஹார்முஸ் நீரிணையில் பரபரப்பு: அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!”

சர்வதேச சந்தைக்கு எண்ணெய் விநியோகம் செய்யப்படும் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்க எண்ணெய் தாங்கி… The post “ஹார்முஸ் நீரிணையில் பரபரப்பு: அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Mar 2026 7:43 pm

‘ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும்’ –டிரம்ப்

வாஷிங்டன், ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. […]

அதிரடி 12 Mar 2026 7:30 pm

பணிப்பாளரின் வாகனத்தில் மோதி பலியான 7 வயது மாணவன் ; பாடசாலைக்குள் சம்பவம்

கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று (12) காலை 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகிறது. பிரேக் பகுதியில் கோளாறு குறித்த பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்றதன் பின்னர், வாகனத்தின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனம் திடீரென நகரத் தொடங்கியுள்ளது. இதன்போது பாடசாலையில் நீர் […]

அதிரடி 12 Mar 2026 7:26 pm

மின் கட்டண திருத்தம் குறித்து வெளியான முக்கிய தகவல்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு 13.56% மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி கோரி, இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்திருந்தது. இது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திடட்த்தின் மூன்றாம் நாளாக இன்று மாத்தளை மாவட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கள் […]

அதிரடி 12 Mar 2026 7:24 pm

Elon Musk Unveils Tesla-xAI “Macrohard” AI System

On Wednesday, Elon Musk announced an exciting new project that combines the capabilities of his companies Tesla and xAI. He

சென்னைஓன்லைனி 12 Mar 2026 7:23 pm

Yashika Aannand’s Bold Message: “அவங்களால என்னைப் பார்த்துட்டு இருக்க முடியாது..”– யாஷிகா ஆனந்தின் அதிரடிப் பதிவு!

தமிழ் சினிமாவின் கவர்ச்சிப் புயல் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு அதிரடியான கேப்ஷனைப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Mar 2026 7:15 pm

Heartin Teaser Out: “காதல் + இசை + எமோஷன்”– இதயங்களை வருடும் சனந்தின் ‘ஹார்ட்டின்’பட டீசர்!

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹார்ட்டின்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Mar 2026 6:57 pm

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் - கொழும்பு சி.ஐ.டி க்கு மாற்றப்பட்ட வழக்கு

அல்லைப்பிட்டியில் பொலிசரின்துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலானவிசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறைநீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரிமாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார்வழிமறித்தபோது பொலிசாரின்கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் தொடர்பிலானவழக்கு விசாரணை ஊர்காவற்துறைநீதவான் நீதிமன்றில் இன்றையதினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதன் போது , உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர்சார்பாக ஊர்காவற்துறைநீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னியாகி, சிறுவனின்கொலை தொடர்பில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி , வழக்கு விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என மன்றில் சமர்ப்பணங்களைமுன் வைத்தனர். அதற்கு பொலிஸ்தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அதனால் கடுமையான வாத பிரதிவாதங்களை அடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிட்டது. அதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின்போது, பொலிஸ் உயர் அதிகாரிகள் , பொலிஸ்திணைக்களசட்டத்தரணிகள் , என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர். அத்துடன் இன்றைய வழக்கு விசாரணையின் போது , சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின்வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரினால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின்வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுசந்தேகத்திற்கு உரியது என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னியான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 12 Mar 2026 6:54 pm

boAt and GIVA celebrate women’s resilience with Chrome Ivory campaign

MUMBAI: Every woman faces her own set of challenges, whether in her profession or in the everyday chaos of life. In the latest ‘Wear Your Charm’ campaign, boAt, India’s number 1 audio and wearable brand, and GIVA, leading D2C fine jewellery brand come together to celebrate women who continue to show up with confidence and individuality, with Chrome Ivory as a companion that reflects the charm they carry with them.Staying synonymous with boAt and GIVA’s philosophy of authenticity, the Wear Your Charm campaign features Chetna Pande, Bhavika Sharma, Sanjana Ganesan, Aisha Ahmed, and Cipia Artul, women who represent different professions and journeys. Through their stories of navigating everyday chaos and challenges, the campaign subtly highlights confidence and individuality as defining traits. At the heart of it is Chrome Ivory, with its bright AMOLED display and GIVA crafted elegant pure silver charm accessory, reinforcing that the smartwatch is not just a gadget but a statement of style and personality.Commenting on the first of its kind collaboration with GIVA, a jewelry brand, a boAt spokesperson shares, ‘Charm is not just about what you wear, it is also about the confidence you bring to it. With boAt’s premium technology and GIVA’s expertise in thoughtful design and understanding of what women love, we wanted Chrome Ivory to be more than just a gadget, something women would genuinely enjoy wearing every day as part of their personal style’. Resha Jain, Chief Brand Officer, GIVA, spoke about the blend of jewellery design and technology, saying, “At GIVA, jewellery has always been about storytelling and self-expression. With Wear Your Charm, we wanted to celebrate the idea that every woman carries her own individuality and charm. Partnering with boAt brings that sentiment into an everyday accessory, where the addition of a 925 silver charm turns Chrome Ivory into something more personal, an expression of individuality that can be worn every day or gifted with meaning.Blending boAt’s premium technology with GIVA’s refined design sensibility, Chrome Ivory offers a seamless balance of style, functionality, and wellness. Thoughtful design paired with practical features and health tracking makes it the perfect companion for women who carry their charm effortlessly across work, leisure, and personal moments, reflecting modern living at its finest.Available in three colour options and four variants featuring silicone and metallic straps, the boAt Chrome Ivory Premium Smartwatch is now available across Amazon, Flipkart, boAt-lifestyle.com, and select retail stores across India.Campaign with Chetna Pande: View this post on Instagram A post shared by CHETNA PANDE (@iamchetnapande) Campaign with Bhavika Sharma: View this post on Instagram A post shared by Bhavika sharma (@bhavikasharma53) Campaign with Sanjana Ganesan: View this post on Instagram A post shared by S A N J A N A G A N E S A N (@sanjanaganesan) Campaign with Aisha Ahmed: View this post on Instagram A post shared by Aisha Ahmed (@aisharahmed) Campaign with Cipia Artul: View this post on Instagram A post shared by Cipia Artul (@cipiaartul)

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Mar 2026 6:38 pm

இன்று திருமணம்…மாப்பிள்ளையை கொலை செய்த நண்பர்கள் ; கொழும்பில் சிக்கிய சந்தேக நபர்கள்

இன்று (12) திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி மணமகன் கொல்லை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்கள் மூவை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ‘குடு ஷம்மி’, ‘டுடூ’ […]

அதிரடி 12 Mar 2026 6:30 pm

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் டிரோன் தாக்குதல் –இந்தியர் உள்பட 4 பேர் காயம்

துபாய், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதோடு, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை […]

அதிரடி 12 Mar 2026 6:30 pm

Lakmē launches ‘I Earned It’ campaign for 9to5 Hya Beach Edit featuring Aneet Padda

Mumbai: Lakmē has unveiled its latest campaign ‘I Earned It’ to introduce the Lakmē 9to5 Hya Beach Edit, the brand’s first SPF-infused makeup range, celebrating the spirit and confidence of the modern Indian woman. The campaign features brand ambassador Aneet Padda in a sun-soaked narrative that highlights effortless summer beauty and self-confidence.With the new campaign, Lakmē builds on the legacy of its 9to5 portfolio, which has long celebrated the ambition and independence of the working Indian woman. The new narrative expands that lens, focusing not just on her professional drive but also on her right to pause, unwind and enjoy the moments she has worked hard for. Anchored in the thought ‘I Earned It’, the campaign reflects a generation that balances work and downtime with equal confidence.The story centres on the modern Lakmē 9to5 woman who moves seamlessly through her day — from meetings and coffee runs to vacations and sunset plans — with beauty solutions that keep pace with her lifestyle. Designed for Indian summers, the Lakmē 9to5 Hya Beach Edit combines skincare and makeup, delivering lightweight finishes while offering sun protection and hydration.Speaking on the launch, Sunanda Khaitan, CMO, Beauty & Wellbeing at Hindustan Unilever Limited, said, “The Lakmē woman has always been the working Indian woman who is independent, confident and constantly on the move. Living in a country with high sun exposure made us rethink what long-wear beauty should truly deliver. At Lakmē we are constantly innovating to create beauty solutions that respond to the realities of Indian consumers and their lifestyles. With the Lakmē 9to5 Hya Beach Edit, we are introducing our first SPF-infused makeup range powered by Hyaluronic Acid, bringing together sun protection, hydration and high-performance colour in one effortless step. Through Aneet Padda, we wanted to bring together the spirit of Lakmē’s long-standing audience with a new generation of working women who approach beauty with the same confidence and individuality.” The Lakmē 9to5 Hya Beach Edit range is designed to withstand heat and humidity, featuring sweat-proof, transfer-proof and water-proof formulas infused with SPF and powered by Hyaluronic Acid for lasting hydration. Created specifically for Indian skin and climate conditions, the products aim to deliver breathable, lightweight coverage while blending skincare and colour seamlessly.Brand ambassador Aneet Padda added, “As someone constantly balancing the demands of work and life, this campaign felt deeply personal to me. ‘I Earned It’ is more than a line; it’s a reminder to celebrate yourself without guilt and to own your moments of joy unapologetically. The Lakm Beach Edit campaign reflects that spirit beautifully. It’s makeup that is fresh, effortless, and designed for real life whether you’re powering through your day or finally stepping away for that well-deserved break. It moves with you, just like you move through it all.” The campaign was conceptualised by the beauty and luxury team at Ogilvy. Mihir Chanchani, Sr. Executive Creative Director & Creative Head – Beauty & Luxury, Ogilvy West, and Zenobia Pithawalla, Sr. Executive Creative Director & Creative Head – Beauty & Luxury, Ogilvy West, explained:“This campaign has given us an opportunity to unabashedly bring alive Gen Z’s attitude towards work – work so that you can play the way you want. They don’t shy away from the hustle and own their time off via beach selfies and the latest vacay looks. The vibe is self-assured, fun and effortlessly cool and the message clear – I earned it!”The Lakmē 9to5 Hya Beach Edit collection is now available on Lakmē’s official website, across leading online marketplaces and at retail stores across India.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Mar 2026 6:27 pm

யாழில். டிஸ் அன்ரனா விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் , இந்திய செய்மதி தொலைக்காட்சி சேவைகளின் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் , விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமையவேபொலிசார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்தியாவின் செய்மதி தொலைக்காட்சி சேவைகளைபெற்று கொள்வதற்கான , சன் டிராக்ட், வீடியோ கோன், டாட்டா ஸ்கை , டிஸ் ரிவி போன்ற டிஸ் அன்ரனாக்களைவிற்பனை செய்யும் நிலையங்கள், மற்றும் அவற்றுக்கான தொலைக்காட்சி சேனல்களுக்கான […]

அதிரடி 12 Mar 2026 6:18 pm

Varalaxmi’s Emotional Gratitude: “வார்த்தைகளால் விவரிக்க முடியாது..”– சரஸ்வதி படத்தின் வெற்றியை கொண்டாடும் வரலட்சுமி!

நடிகை மற்றும் இயக்குநர் வரலட்சுமி சரத்குமார் தனது 'S. சரஸ்வதி' திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் பேராதரவை அடுத்து, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Mar 2026 6:10 pm

ஆகாஷ் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது-உள்துறை செயலர் தீரஜ்குமார்!

ஆகாஷ் மரண வழக்கில் தவறு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை செயலற் தீரஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 12 Mar 2026 5:57 pm

திருச்சியில் முதன்முறையாக ஒருங்கிணைந்த விளையாட்டு மையம்: அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்

திருச்சியில் முதன்முறையாக ஒருங்கிணைந்த விளையாட்டு மையத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

சமயம் 12 Mar 2026 5:41 pm

Shruti Haasan’s Studio Diaries: “கலைஞனாக இந்தப் பசி தீராது..”– இசைப் பணிகள் குறித்து ஸ்ருதி ஹாசன் உருக்கமான பதிவு!

இசை மீது தீராத காதல் கொண்ட ஸ்ருதி ஹாசன், தனது ஸ்டுடியோ அனுபவங்களை ஒரு அழகான 'ரெசிபி' (Recipe) என வர்ணித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Mar 2026 5:39 pm

KONAMI launches a campaign for eFootball in India featuring cricketers Rinku Singh and Varun Chakravarthy, Malayalam stars Naslen Gafoor and Chandu Salim Kumar

MUMBAI: Konami Digital Entertainment (KONAMI) today announced the launch of a campaign for eFootball in India. Commemorating this special campaign, eFootball brings together cricketers Rinku Singh and Varun Chakravarthy, Malayalam stars Naslen Gafoor and Chandu Salim Kumar alongside football icons like Sahal Abdul Samad and Shubhasish Bose to produce exciting content for social media. Launching alongside the campaign, eFootball fans can gain a Lionel Messi card from 12 March – 2 April.With a particular emphasis on Kerala and West Bengal, the campaign partners with fan communities, lifestyle creators, and competitive eFootball influencers. These include Mohammad Rizwan, RJ Praveen, Black Mamba Gaming, Mallu PES Master, LiarsFC, and Manjappada. The campaign also introduces in‑game challenges that offer users exclusive rewards.Alongside this campaign, a limited-time card of football icon Lionel Messi is available for global users from 12 March – 2 April. The Messi card and related campaign events are now live across India on mobile, console, and PC.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Mar 2026 5:37 pm

CSK: ‘விக்கெட் கீப்பர் யார்?’.. சாம்சனுக்கு என்ன ரோல்? தோனி இம்பாக்ட் வீரராக ஆடுவாரா? சிஎஸ்கே CEO பதில்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பராக யார் இருப்பார்? மகேந்திரசிங் தோனி இம்பாக்ட் வீரராக இருப்பாரா என்ற கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

சமயம் 12 Mar 2026 5:36 pm

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பலியானோருக்கு இறுதி ஊர்வலம்; ஈரானில் திரண்ட மக்கள்

தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. […]

அதிரடி 12 Mar 2026 5:30 pm

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. அதிகரிக்கும் பென்சம்.. 8ஆவது ஊதியக் குழுவில் என்ன கிடைக்கும்?

8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கு அதிக பென்சனும் கிடைக்கும்.

சமயம் 12 Mar 2026 5:11 pm

பெட்ரோல் பங்குகளில் நிரம்பி வழியும் கூட்டம்-தமிழக அரசு அதிகாரிகள் கொடுத்த விளக்கம்!

பெட்ரோல் பங்குகளில் நிரம்பி வழியும் கூட்டம் காரணமாகவும், பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு கொடுத்த விளக்கம் அளித்துள்ளது.

சமயம் 12 Mar 2026 5:06 pm

விஜய்க்கு எதிராக நிற்கும் திமுக வேட்பாளர்… பெரம்பூரில் உதயநிதி ஸ்டாலின் போடும் தேர்தல் கணக்கு!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட போவதாக தகவல் வெளியான நிலையில், திமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் சில வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

சமயம் 12 Mar 2026 4:59 pm

Raj Cooling Systems appoints Emraan Hashmi as Brand Ambassador; launches ‘AGREYAS’

Mumbai: Raj Cooling Systems Pvt. Ltd. has announced the launch of AGREYAS, a new consumer appliances brand, marking its entry into India’s rapidly expanding home appliances market.With the new brand, the company aims to tap into the Indian consumer appliances sector valued at over ₹1.5 lakh crore, while diversifying beyond its traditional cooling solutions portfolio across residential, commercial and industrial applications.As part of its national expansion strategy, the company has appointed Bollywood actor Emraan Hashmi as the brand ambassador for AGREYAS, aiming to enhance brand visibility and strengthen consumer connect. The association has been executed under the banner of Zoommantra Productions, with actor-director Rohit Roy contributing his creative vision to the brand’s communication.AGREYAS will offer a range of mid-premium home appliances, including air conditioners, washing machines, geysers and other white goods, targeting the growing demand for energy-efficient and technologically advanced home solutions among Indian consumers. The launch also reflects a strategic evolution for Raj Cooling Systems as it leverages its existing manufacturing, research and development and engineering capabilities to build a dedicated consumer brand.Commenting on the launch, Kalpesh Ramoliya, Founder and Chairman of Raj Cooling Systems Pvt. Ltd., said, The launch of AGREYAS is in line with the company’s vision to establish a strong presence in the Indian consumer electronics and home appliances market. Kalpesh Ramoliya further said that the brand has been developed as a standalone identity to cater to the changing demands of Indian consumers. Speaking about the association, Emraan Hashmi said, I’m looking forward to working with AGREYAS at a time when Indian consumers have an ever-growing desire for good and innovative home products. The values of innovation, functionality, and ease of use associated with this brand reflect the changing consumer behavior. I see myself associated with this brand in the days to come. To support the brand’s development and expansion, Raj Cooling Systems plans to invest $10 million initially, followed by an additional $5 million over the next three to five years toward expanding product lines and strengthening its distribution network.AGREYAS will adopt a multi-channel distribution strategy, including online platforms, retail outlets and dealer networks, targeting consumers across urban and semi-urban markets in India. The company stated that the new brand will operate as a standalone entity focused exclusively on the consumer appliance segment as it builds its presence in the competitive home appliances space.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Mar 2026 4:58 pm

Summer Hair Care: Oils to Avoid

Summer heat and humidity can make your scalp oily and sweaty, changing how it behaves. The sebaceous glands on your

சென்னைஓன்லைனி 12 Mar 2026 4:57 pm

‘கிரிக்கெட் சூதாட்ட புகார்’.. EX கேகேஆர் அணி வீரருக்கு தண்டனை அறிவிப்பு: மேலும் 2 பேருக்கும் ஆப்பு!

கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 வீரர்களுக்கு சூதாட்ட புகார் காரணமாக, தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சமயம் 12 Mar 2026 4:56 pm

Netflix opens Eyeline Studios in Hyderabad, strengthening investment in India’s AVGC sector

Mumbai: Netflix has announced the launch of Eyeline Studios in Hyderabad, marking a significant long-term investment in India’s Animation, Visual Effects, Gaming, and Comics (AVGC) ecosystem and expanding the company’s global production innovation infrastructure.The launch event was led by Jeff Shapiro alongside Anumula Revanth Reddy, Sanjay Jaju, and actor-producer Rana Daggubati.The new facility spans 32,000 square feet and is equipped with state-of-the-art technology for advanced visual effects and generative virtual effects, supported by a hybrid cloud infrastructure. Designed to foster collaboration, creativity and employee well-being, the Hyderabad studio becomes the fifth global location for Eyeline Studios, joining its existing network in Los Angeles, Vancouver, Seoul and London.The studio will operate as a fully integrated part of Eyeline’s global network, contributing to high-end visual storytelling and next-generation production technologies, including virtual production and advanced visual effects pipelines.India’s growing focus on creative technology, digital production and talent development has positioned the country as an emerging global hub for AVGC. The Hyderabad facility is expected to strengthen this ecosystem by embedding global production standards, advanced tools and integrated workflows, while supporting local talent and innovation.Welcoming the development, Anumula Revanth Reddy, Hon’ble Chief Minister of Telangana, said, “Hyderabad is proud to welcome Eyeline and Netflix to Telangana. Hyderabad is a natural home for Netflix because both are global successes that continue to create new opportunities and careers. In many ways, both Netflix and Hyderabad are gateways bringing together opportunities and talent from across the globe. Our city has always been a place where creativity, technology and global talent converge, making it a natural home for companies shaping the future of storytelling. This partnership reflects our shared ambition to build globally relevant creative ecosystems, and I am confident that Eyeline’s presence will further strengthen Hyderabad’s position as a leading hub for film, technology and the AVGC sector. On behalf of the Government and the people of Telangana, I look forward to supporting their journey as they create new opportunities for talent and storytelling from Hyderabad to the world.” Sanjay Jaju, Secretary, Ministry of Information & Broadcasting, Government of India, said, “I am in a place where I have been brought up and which I love. Jeff met me last year, and I can’t believe this could be made so fast. This is the right place for Eyeline Studios, the place of Baahubali. We are a country with a rich history of storytellers. Entertainment lies at the cross-section of technological prowess and the art of storytelling. Hyderabad has a huge history in AVGC. Most major Hollywood studios already have small offices in Hyderabad. IICT, which was set up last year, will also have a campus here. Pan-India films are being made out of Hyderabad, and with leadership and vision, this ecosystem will continue to grow.” D. Sridhar Babu, Minister for IT, Electronics & Communications, Industries & Commerce, Government of Telangana, commented, “I welcome Eyeline Studios to Hyderabad. It aligns with the vision of our Hon’ble Chief Minister and the Government to see the creative energy of Hyderabad should grow and Hyderabad becomes the capital of storytelling. Netflix’s decision to come up with their production footprint in India reflects the confidence in the creative talent available in India. Our government is always looking for skilling the talent required to tutor students. The objective of the government is to build a talent pool across VFX and animation. Technology is taking the lead and we are at the disruption of things. With Eyeline Studios, we will be number one the best storytelling place in the globe.” During the inauguration, Rana Daggubati said, “Today it feels very nostalgic for me. After coming here, many memories came back. About 20 years ago, around 2005–2006, there were very few opportunities like this in Hyderabad, and Ted Sarandos was just starting to connect with the industry at that time. Today, seeing people like Jeff Shapiro come to Hyderabad and speak about this place as the next future hub of creativity shows how far Hyderabad has progressed. For this, I must first thank the audiences who kept pushing filmmakers to go beyond boundaries and constantly ask for bigger and newer cinema. The filmmakers and producers out of Hyderabad kept pushing the bar higher. With this momentum, and with Eyeline Studios coming here has supported the industry in a huge, phenomenal way, I would like to welcome everyone. I truly believe it’s a great future for anyone who wants to be an artist, work in movies, or be part of storytelling. Thank you to everyone in the government and the leadership of the state for supporting this journey. Together, we will make this a beautiful and entertaining city.” Jeff Shapiro, CEO of Eyeline Studios, added, “India has long played a defining role in global visual effects, not just because of scale, but because of the depth of creative and technical talent here. When we looked at where to establish our presence, Hyderabad stood out immediately. It brings together a strong technology backbone, world-class engineering capability, and a film culture that understands ambition. The talent in this city and across India combines artistic craft with impeccable technical precision. That’s exactly the foundation we need to build long-term capability and contribute meaningfully to global storytelling from here.”

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Mar 2026 4:52 pm

Simple Towel Trick to Remove Blackheads

Blackheads are one of the most common skincare problems, especially for people with oily or combination skin. Many people feel

சென்னைஓன்லைனி 12 Mar 2026 4:50 pm

அம்மா படத்தையே வைத்துக் கொள்ளுங்கள் என விஜய் சொன்னார் –செங்கோட்டையன் ஸ்பீச்!

தமிழக வெற்றிக்கழகம் (தவெக) சார்பில் இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக்காக போடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.ஈரோடு மாவட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய […]

டினேசுவடு 12 Mar 2026 4:50 pm

பேங்க் போற வேலை இருக்கா? அடுத்த 2 நாள் விடுமுறை.. செக் பண்ணிட்டு போங்க மக்களே!

மார்ச் 13 மற்றும் மார்ச் 14 ஆகிய இரண்டு நாட்களும் பல்வேறு இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. எனவே உங்கள் ஊரில் வங்கிகள் இயங்குமா இல்லையா என்று பார்த்துவிட்டுச் செல்லவும்.

சமயம் 12 Mar 2026 4:49 pm

CDSCO Warns Against Indirect Promotion of Drugs

The Central Drugs Standard Control Organization (CDSCO) has issued an advisory to pharmaceutical companies across India. The advisory asks drug

சென்னைஓன்லைனி 12 Mar 2026 4:37 pm

Mathrubhumi collaborates with NDTV for Powerplay Keralam

Thiruvananthapuram: Kerala’s leading media conglomerate, Mathrubhumi, has partnered with NDTV as the print partner for the day-long event “NDTV Power Play” being held in the capital city today. The event will bring together senior political leaders, policymakers, and analysts from across the political spectrum.Representing Mathrubhumi, K. A. Jhonny, Senior News Editor, Mathrubhumi Online, will moderate the stage alongside T. M. Veeraghav, Executive Editor, NDTV. They will moderate the session titled ‘Minority Mandate: The Muslim League’s Calculus, ’featuring P. K. Kunhalikutty, National Secretary of IUML and Deputy Leader of the Opposition in Keralam.K. A. Johnny will also participate in the session titled ‘Secularism and the Electoral realities’, along with Veeraghav as moderator, featuring political analyst Jaick C Thomas and Rahul Easwer.Speaking about the partnership, Mayura Shreymas Kumar, Director, Digital Operations, Mathrubhumi Group, said, “Mathrubhumi is delighted to partner with NDTV for ‘NDTV Power Play’. As a media organisation deeply rooted in Kerala, we value initiatives that bring together leaders, policymakers and experts to engage in meaningful conversations. We look forward to this collaboration contributing to insightful discussions on the issues shaping the state. Chief Minister Pinarayi Vijayan will headline the dialogue and address the gathering on “The Keralam Model.” The event will feature prominent voices, including Shashi Tharoor, Member of Parliament; Rajeev Chandrasekhar, State President, Bharatiya Janata Party, Kerala; John Brittas, Rajya Sabha MP and senior CPI(M) leader; Ramesh Chennithala, former Home Minister of Kerala and senior Congress leader; and V. D. Satheesan, Leader of the Opposition in the Kerala Legislative Assembly.The programme will also bring together a diverse range of leaders, diplomats, analysts, and commentators.Key political figures and thought leaders will address various topics throughout the event.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Mar 2026 4:34 pm

யாழில். விபத்து –பிரான்ஸ் நாட்டவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் – முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர் வாடகை கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களின்கார் எதிரே வந்த ஆட்டோ வுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் மற்றும் கார் சாரதி , […]

அதிரடி 12 Mar 2026 4:32 pm

Sivakarthikeyan on Wife Aarthy: “என் பேங்க் பேலன்ஸ் கூட எனக்குத் தெரியாது..”– மனைவி குறித்து மேடையில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் வெளியான 'தாய்க் கிழவி' படத்தின் வெற்றி விழாவில், தனது நிதிநிலை மற்றும் வாழ்க்கையின் வெற்றிக்குத் தனது மனைவி ஆர்த்தி தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Mar 2026 4:30 pm

டைட்டானிக் காதல்! டிரம்ப் –எப்ஸ்டீனுக்கு சிலை வைத்து மர்ம நபர்கள் கிண்டல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோருக்கு டைட்டானிக் திரைப்பட காட்சி வடிவிலான சிலையை நிறுவி மர்ம நபர்கள் கிண்டலடித்துள்ளனர். அமெரிக்காவில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோர் எப்ஸ்டீனுடன் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் […]

அதிரடி 12 Mar 2026 4:30 pm

மாமனிதர் எஸ்.பி. சாமி நினைவாக வேலணை பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டி!

மக்களின் நலன்களுக்காக உழைத்த மாமனிதர் எஸ்.பி. சாமி அவர்களின் நினைவாக வேலணை பிரதேச சபையின் அன்றாட பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நோர்தர்ன் சென்ட்ரல் வைத்தியசாலையால் முச்சக்கர வண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அமரரான நோர்தர்ன் சென்ட்ரல் வைத்தியசாலையின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் எஸ்.பி. சாமி அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. பிரதேச சபையிடம் இருக்கும் வாகனங்கள் உகந்த நிலையில் இல்லாத காரணத்தினால், வேலணை […]

அதிரடி 12 Mar 2026 4:26 pm

Suriya Remains Leading Star of Tamil Cinema

Actor Suriya is one of the most popular and respected stars in Tamil cinema today. Over the years, he has

சென்னைஓன்லைனி 12 Mar 2026 4:25 pm

இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் மறுப்பு!

ஈரான் : இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் ஹார்முஸ் நீரிணை முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், இந்திய சரக்குக் கப்பல்கள் (குறிப்பாக எண்ணெய் கப்பல்கள்) பாதுகாப்பாக செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியை ஈரான் மறுத்துள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.ஈரான் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்றும், இந்திய கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல் அபாயம் தொடர்ந்து நிலவுவதால், எந்த […]

டினேசுவடு 12 Mar 2026 4:15 pm

கியாஸ் காலி.. கரண்ட் அடுப்புக்கு மவுசு! ஆன்லைன் தளங்களில் காலியான மின் அடுப்புகள்: திணறும் இல்லத்தரசிகள்

கடந்த சில நாட்களில் ஏற்பட்டு உள்ள கேஸ் தட்டுப்பாட்டால் மின் அடுப்புகளின் மவுசு அதிகரித்து உள்ளது.

சமயம் 12 Mar 2026 4:12 pm

Silambarasan Teams Up With Vetrimaaran for Arasan

Actor Silambarasan is currently working on his much-awaited upcoming film Arasan, which is being directed by popular filmmaker Vetrimaaran. The

சென்னைஓன்லைனி 12 Mar 2026 4:08 pm

Vinay Tonse joins YES BANK as Managing Director & CEO

Mumbai: YES BANK has announced that Vinay Muralidhar Tonse has joined as its Managing Director & Chief Executive Officer-Designate, following approval from the Reserve Bank of India. Tonse has been appointed for a three-year term and will assume the role of MD & CEO from April 6, 2026, succeeding the incumbent Prashant Kumar.A seasoned banker with over three and a half decades of experience, Tonse has held leadership roles across treasury, retail banking, corporate banking, international operations and asset management. He holds a Commerce degree from St. Joseph’s College of Commerce Bengaluru and a Master’s degree in Commerce from Bangalore University.Tonse began his career at State Bank of India, where he most recently served as Managing Director, leading the bank’s retail operations and managing a retail book (deposits and advances) of around USD 800 billion, the largest in the country. During his tenure, he played a key role in strengthening SBI’s customer franchise and balance sheet.He also brings significant international experience, having worked in Singapore for two years and leading SBI’s overseas operations in Osaka, Japan for four years. Earlier, he served as Managing Director & CEO of SBI Mutual Fund, where assets under management grew from ₹4.32 trillion to ₹7.32 trillion between August 2020 and December 2022 under his leadership.Tonse succeeds Prashant Kumar, who has served as Managing Director & CEO of YES BANK since March 2020, playing a key role in stabilizing and strengthening the bank during a critical phase.Welcoming the appointment, Rama Subramaniam Gandhi, Non-Executive Chairman of YES BANK, said, “I am certain that Shri. Vinay Tonse with his vast experience as a senior banker will propel YES BANK to its next phase of growth. I look forward to working closely with Vinay ji. The bank meanwhile remains indebted to Shri. Prashant Kumar, who is responsible for much of what a strong financial powerhouse YES BANK is today.” Nandita Gurjar, Independent Director and Chairperson of the Nomination & Remuneration Committee and Customer Service Committee of YES BANK, said, “The NRC conducted an extensive search and evaluation process as part of the Board’s structured succession planning efforts. The Committee unanimously recommended Mr. Tonse’s appointment, recognizing his exemplar leadership track record with strong governance and ability to drive the organization’s next phase of growth and transformation.” Rajeev Kannan, Non-Executive Director of YES BANK and Senior Executive at Sumitomo Mitsui Banking Corporation , added, “Vinay brings a rare breadth of leadership experience spanning retail and corporate banking, international markets, and asset management. His exposure across Japan and Singapore, combined with his deep understanding of the Indian financial ecosystem, positions him well to lead YES BANK into its next phase of growth. As the largest shareholder, SMBC looks forward to working closely with Vinay and the Board to support YES BANK’s journey towards becoming a top tier private sector bank, anchored in strong governance, sustainable growth and customer centricity.” On assuming office, Vinay Tonse said , “I am excited to be part of the distinguished legacy of YES BANK. I look forward to bringing my experience and learnings to further strengthen this institution. Together with the Board and my colleagues, I remain deeply committed to creating long term value for all our stakeholders. Guided by my personal motto, ‘Make A Difference’, I firmly believe that, collectively, we will continue to make a meaningful and lasting impact. I would also like to acknowledge the significant contributions of my predecessor, Mr. Prashant Kumar, whose leadership has played a vital role in reinforcing the Bank’s foundation.” YES BANK will continue to focus on expanding its retail and corporate banking franchises, strengthening its branch network and reinforcing governance, risk management and customer-centric growth, as it enters its next phase of development.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Mar 2026 3:57 pm

Security Tightened Ahead of 98th Academy Awards

Hollywood’s biggest event of the year is approaching, and excitement is growing as the Academy of Motion Picture Arts and

சென்னைஓன்லைனி 12 Mar 2026 3:56 pm

Timothée Chalamet Focuses on Marty Supreme Promotion

Actor Timothe Chalamet has not responded to the criticism he received for his recent comments about ballet and opera. Instead,

சென்னைஓன்லைனி 12 Mar 2026 3:51 pm

‘ஈரான் போரால்’.. ஐபிஎல் 2026 தொடர் பாதிக்கப்படுமா? போட்டிகள் ஒத்தி வைக்கப்படுமா? ராஜூவ் சுக்லா பதில்!

ஈரான் போர் காரணமாக, ஐபிஎல் 2026 தொடரின் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுமா? முதலில் 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டது ஏன் என்பது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ரஜூவ் சுக்லா பதில் அளித்துள்ளார்.

சமயம் 12 Mar 2026 3:47 pm

Nitesh Tiwari’s Ramayana Reveals Behind the Scenes

Filmmaker Nitesh Tiwari is preparing to bring his grand version of the epic story Ramayana to the big screen with

சென்னைஓன்லைனி 12 Mar 2026 3:43 pm

Compass Communications bags Communications Mandate for FOCAL

Mumbai: Compass Communications has been appointed as the official communications partner for Guwahati-based non-profit Foundation for Culture, Arts and Literature (FOCAL).Marking the beginning of the partnership, Compass Communications supported the promotion of the Dibrugarh University International Literature Festival (DUILF), organised by FOCAL in collaboration with Dibrugarh University. The festival recently concluded its third edition and has steadily emerged as a platform connecting global literary voices with the cultural imagination of Northeast India.The four-day event celebrated literature, ideas and cultural dialogue, bringing together over 150 writers, poets and thinkers from 25 countries. Prominent participants included internationally acclaimed voices such as Ann Morgan and Maria Reimondez, along with notable Indian personalities like filmmaker Jahnu Barua, former Manoj Mukund Naravane, and former Foreign Secretary Krishnan Srinivasan. The festival attracted nearly 12,000 literary enthusiasts, continuing the momentum built over its previous editions.Speaking on the partnership, Rahul Jain, Curator and Chief Coordinator, DUILF, said, “DUILF has grown into a meaningful cultural platform that brings global literary conversations to the Northeast, especially for young readers and students. We were delighted to collaborate with Compass Communications to further strengthen DUILF’s voice and reach and now look forward to working with them on our numerous initiatives for the Foundation.” [caption id=attachment_2495180 align=alignleft width=146] Rohan Srinivasan [/caption] Rohan Srinivasan, Co-Founder, Compass Communications , added, “DUILF was an important cultural event that places Northeast India firmly on the global literary map and we were glad to be part of it. We are now excited to partner with the FOCAL team and look forward to amplifying their numerous initiatives and events.” Co-founded by Rohan Srinivasan and Rafi Q Khan, Compass Communications currently manages a portfolio of over a dozen national and international clients across sectors such as BFSI, automotive, technology, education, executive search, luxury, consumer tech, real estate and healthcare. The agency works with clients across Delhi NCR, Bengaluru, Kolkata and Chennai.The firm has also collaborated with Red FM on initiatives such as the Rider’s Music Festival and South Side Story, and recently supported the promotion of the 7th edition of the Udaipur Tales, held in January.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Mar 2026 3:41 pm

என்டிஏ கூட்டணியில் இணைகிறாரா விஜய்.. தனித்து போட்டியா.. உடைத்து பேசிய தவெக செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்துள்ளது. அந்த வகையில் ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் என்டிஏவுடன் விஜய் கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 12 Mar 2026 3:33 pm

Equirus appoints Snigdha Sharma as Director – Investment Banking

Mumbai: Equirus has appointed Snigdha Sharma as Director in its Investment Banking vertical, reinforcing the firm’s strategic focus on the Banking, Financial Services and Insurance (BFSI) sector, which has seen strong momentum in fundraising and merger and acquisition activity.Snigdha brings more than 17 years of experience across investment banking, equity research and investment management, with a particular focus on the BFSI segment. Her experience includes working on IPO listings, equity funding transactions, mergers and acquisitions, and fundamental research. She has also worked as a fund manager and buy-side analyst, giving her a well-rounded perspective across capital markets and investments.She holds an MBA in Finance and Strategy from Indian Institute of Science, and a B.Tech in Mechanical Engineering from National Institute of Technology Raipur. She is also a NISM-certified research analyst.Prior to joining Equirus, Snigdha has worked with leading financial institutions including DAM Capital, Motilal Oswal Asset Management Company, Axis Capital, Fidelity Worldwide Investment, Karma Capital and Goldman Sachs.Commenting on the appointment, Nirav Shah, Managing Director and Sector Lead – BFSI at Equirus Capital, said, “India’s financial services sector is entering a phase of structural expansion, driven by financialization of savings, regulatory evolution and rapid growth of new-age financial institutions. This creates significant opportunities for strategic capital raising and consolidation across the ecosystem. Snigdha’s deep sector expertise and relationships will help us further strengthen our franchise and build on the strong momentum in this segment.” On her appointment, Snigdha Sharma said, “I am delighted to join Equirus at this exciting juncture, as the BFSI sector continues to witness strong momentum in capital markets and strategic transactions. Equirus has built a strong reputation in investment banking, and I look forward to working closely with the team to deepen our BFSI coverage, strengthen client relationships, and contribute to the firm’s continued growth. Equirus Group offers services across investment banking, institutional securities, wealth and asset management, HNI broking, NBFC and insurance solutions. Over the past 18 years, the firm has completed 330+ transactions across M&A, private equity, IPOs, QIPs, rights issues and structured finance, raising more than USD 15.6 billion across sectors.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Mar 2026 3:33 pm

Jananayagan OTT Deal Crisis: “ரூ.120 கோடி ஒப்பந்தம் காலி?”– சென்சார் இழுபறியால் விஜய்யின் ‘ஜனநாயகன்’படத்திற்கு புதிய நெருக்கடி!

தணிக்கைத் துறை கெடுபிடிகளால் வெளியாகாமல் இருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஓடிடி உரிம ஒப்பந்தத்தை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Mar 2026 3:30 pm

எரிபொருள் தட்டுப்பாடு-work From home கொடுத்த HCL நிறுவனம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக work From home கொடுத்த HCL நிறுவனம். இது தொடர்பாக விரிவான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சமயம் 12 Mar 2026 3:30 pm