‘பேரழிவு ஏற்படுவதற்கு முன் மோதலை நிறுத்த வேண்டும்’ –உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்
ஜெனீவா, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து […]
வடமாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’உருவாக்கம்
வடமாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் , எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.அதன் போதேதீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறித்த கூட்டமானது வடக்கு […]
அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் துப்பாக்கி , அவற்றுக்கான மகசீன்கள் இரண்டு மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. அனலைதீவில் உள்ள தனியார் காணி ஒன்றினைநேற்றையதினம் செவ்வாய்க்கிழமை காணி உரிமையாளர் துப்பரவு செய்த வேளை துப்பாக்கி , அவற்றுக்கான இரண்டு மகசீன்கள்மற்றும் கைக்குண்டு என்பவற்றை கண்டு அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவற்றினைஅடையாளப்படுத்தி, அவற்றினை மீட்பதற்கு அனுமதி கோரிஊர்காவற்துறைநீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளனர்.
யாழில் இந்தியப் அரசுப் பொருட்கள் பகிரங்க ஏலம் ; போட்டி போட்டுக்கொண்டு வாங்கிய மக்கள்
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தால் இன்று இந்த ஏல விற்பனை முன்னெடுக்கப்பட்டது. நீண்டகாலமாகத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் படகுகளுக்குச் சொந்தமான பல்வேறு பொருள்கள் இதன்போது ஏலம் விடப்பட்டன. இந்திய மீனவர்களின் படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புக்கள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பல […]
ஒட்டுமொத்த ஈரானுக்கும் அழிவு: டிரம்ப் இறுதி எச்சரிக்கை
ஈரான் முழுமையாக அழிய இருக்கிறது; அதன் உள்கட்டமைப்புகளை ஒருபோதும் மீண்டும் சீரமைக்க முடியாது’ என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதன்மூலம் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராகி வருவது தெரியவந்துள்ளது. இதனால் மேற்காசிய பிராந்தியத்தில் மட்டுல்லாது உலகம் முழுவதுமே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கவும், அமெரிக்காவுடன் போா் நிறுத்தம் செய்து கொள்ளவும் ஈரானுக்கு சுமாா் 10 நாள்கள் […]
ஆட்பதிவுத் திணைக்களத்தில் பாரிய மோசடி ; மக்களுக்கு அவசர எச்சரிக்கை
ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கமான 115226126 என்பதனைப் போன்று தோற்றமளிக்கும் விதத்தில், +94115226126 மற்றும் +0115226126 ஆகிய இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ளும் சில தரப்பினர், பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களைக் கோருவதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன், வட்ஸஅப் செய்திகள் ஊடாகவும் இவ்வாறான தகவல்கள் கோரப்படுகின்றன.குறித்த தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள் எவரும் […]
செம்மணி புதைகுழியை தரிசிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. செம்மணி புதைகுழி பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். அது குறித்து இன்றைய தினம் நடைபெற்ற செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் புதைகுழி பகுதியை பார்வையிட மன்று அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 09.30 மணிக்கு முன்னராக அல்லது மாலை […]
கார்க் எண்ணெய் முனையங்களை இலக்கு வைத்த அமெரிக்கா; வெடிப்புச் சத்தங்களால் அதிர்வு
ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை (7) கார்க் தீவுப் பகுதியில் பலமான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதேவேளை ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதமானவை கார்க் தீவு ஊடாகவே நடைபெறுகின்றன. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகத் திறக்கத் தவறினால், அந்தத் […]
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 18 பேர் பலி
தெஹ்ரான், அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால், அரபு நாடுகளில் இருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் வரத்து குறைவால் சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. அதேவேளை, […]
அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்தைச் சேர்ந்த ராபின் கிரீன்ஃபீல்ட் (Robin Greenfield) என்ற நபர், நவீன வசதிகள் அனைத்தையும் துறந்து ஒரு முழு ஆண்டிற்கு இயற்கையில் கிடைக்கும் உணவுகளை மட்டுமே உண்டு வாழும் ஒரு விசித்திரமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். 365 நாட்களும் காட்டில் கிடைக்கும் பழங்கள், பெர்ரிகள், இலை தழைகள் மற்றும் மீன்களை மட்டுமே உண்ணும் இவர், கார் மோதி உயிரிழந்த மான்களின் இறைச்சியையும் (Roadkill) உணவாகக் கொள்கிறார். “மற்றவர்கள் இதை விபத்தில் செத்த விலங்கு என்பார்கள், […]
அமெரிக்காவின் இரண்டாவது விமானி தொடர்பான ரகசிய தகவல் கசிவு ; கடும் நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப்
ஈரானில் மீட்புப் பணிகளின் போது இரண்டாவது விமானி ஒருவர் சிக்கியிருப்பது குறித்த இரகசியத் தகவலை ஊடகங்களுக்குக் கசியவிட்ட நபரைக் கண்டறியும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முதல் விமானி மீட்கப்பட்ட பிறகு, இரண்டாவது விமானியும் ஈரானில் சிக்கியிருக்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகும் வரை ஈரான் அரசுக்கு அது தெரியாது என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். இந்தத் தகவல் கசிந்ததால், அமெரிக்காவின் மீட்பு நடவடிக்கைகள் “மிகவும் கடினமாகிவிட்டது” என்று அவர் […]
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மின்சாரம் தடைப்படுமா! வெளியான அறிவிப்பு
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார நிறுவனம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, மின்சார நிறுவனத்திற்கு உரிய கட்டணங்களைச் செலுத்தி, இந்த விழாக்களுக்காக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தடையில்லா மின்சாரம் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 15 ஆம் […]
மகளை அடுத்த தலைவராக்க வடகொரிய அதிபர் கிம் திட்டம் –தென் கொரியா தகவல்
சியோல், தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் மகள் கிம் ஜூ ஏ (வயது 13), அவரது அரசியல் வாரி சாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து உள்ளது. இது வெறும் அனுமானம் அல்ல என் றும், இதற்கான நம்பகமான உளவுத் தகவல்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. சமீபத்தில் கிம் ஜூ ஏ, ராணுவப் பயிற்சியின் போது ராணுவடாங்கிகளை ஓட்டியதும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. வடகொரிய […]
மனைவியின் வங்கி கணக்கில் களவாக பணம் எடுத்த கணவன்; நாடு திரும்பிய பெண் தி்கைப்பு!
வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த தனது சட்டபூர்வ மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடியான முறையில் ஐந்து இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட ஒரு நபரை, வரும் 9-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர இல. 01 நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திருமதி லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார். வத்தளை, அக்பர் டவுன் பகுதியில் வசித்து வந்த அந்த கணவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நிதி மோசடிக்கு உதவிய வேறொரு பெண் வேறொரு பெண்ணின் உதவியுடன், வங்கி அதிகாரிகளைத் […]
பாடசாலையில் கத்திக்குத்து சம்பவம்; மாணவன் படுகாயம்
புத்தளம் – தங்கொட்டுவ பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில், தரம் 11-இல் கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, சக மாணவன் ஒருவனால் காகிதக் கத்தியால் (Paper cutter) தாக்கப்பட்டு மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (06) மதிய வேளையில் பாடசாலை வளாகத்தினுள் வைத்து இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக அடிக்கடி தகராறுகள் இதில் தங்கொட்டுவ – மாவத்தகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய கே. கவிந்து நிம்சர என்ற மாணவன் காயமடைந்து […]
ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!
ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் திங்கள்கிழமை (ஏப். 6) தாக்குதல் நடத்தியது. ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல்கள் தற்போதுவரை தொடர்ந்து வருகின்றன. இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் அமெரிக்க அதிபர் விடுத்த காலக்கெடுவையும் ஈரான் நிராகரித்தது. இந்த நிலையில், “ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியில் சுமார் 50 […]
வாய்ப்பு ஏற்பட்டால் ஈரானின் எண்ணெய் வளங்களை எடுத்து கொள்வோம்: டிரம்ப்
வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. மேற்காசிய போரால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. வளைகுடா நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று […]
கொழும்பு மக்களுகு முக்கிய அறிவிப்பு; 12 மணித்தியால வெட்டு
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, இன்று (07) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி பெலன்வத்தை, சித்தமுல்ல, எரவவல, நிவன்திடிய, போகுந்தர வீதி, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, மொரகெட்டிய வீதி ஹிரிபிட்டிய, கொரகபிட்டிய வீதி, நியதகல வீதி, தொலேகடே சந்தி, குடமாதுவ 255 பஸ் வீதியின் வயல் பகுதி வரை மற்றும் புபுது மாவத்தை 255 பஸ் வீதியின் வயல் […]
வடக்கு உட்பட பல பிரதேசங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருணாகல், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இடி மின்னலுடன் கூடிய மழையின் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Stop Face Sweating at Work: 5 Simple Tips
Excessive face sweating can be embarrassing and uncomfortable, especially in professional settings. However, there are easy steps you can take to redu...
யாழ்ப்பாணம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அறுத்த தாலிக்கொடியை கிளிநொச்சியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில்கடந்த 30ஆம் திகதி நடைபெற்ற பங்குனி திங்கள் உற்சவத்தின் போது பக்தர்கள் கூட்ட நெரிசலில் பெண்ணொருவரின் தாலிக்கொடி களவாடப்பட்டிருந்தது. அது தொடர்பில் குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைஅடுத்து, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சோதனை செய்து தாலிக்கொடி அறுத்த58 வயதான பெண்ணைபொலிஸார் அடையாளம் கண்டு […]
IPL 2026 Controversies: Top Five Debates So Far
The Indian Premier League (IPL) 2026 season has been full of exciting on-field action and plenty of off-field drama. From heated arguments over bounda...
MTC Workers Accused of Campaign Rule Violation
Chennai: Some staff members of the Metropolitan Transport Corporation (MTC) were seen taking part in political campaigns in areas like
உக்ரைனில் தொடரும் சோகம்! ரஷியாவின் வான் வழி தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி!
கீவ் : உக்ரைனில் ரஷியா நடத்திய வான் வழி தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட மூவர் கொல்லப்பட்டனர். ஒடேசா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகமொன்றை ரஷியாவின் ட்ரோன் ஒன்று இரவில் தாக்கியதில் அப்பகுதியில் இரண்டு பெண்களும் 2 வயது குழந்தையும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை(ஏப். 6) தெரிவித்தனர். அதில், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் கர்ப்பிணியொருவரும் இரு குழந்தைகளும் படுகாயமடைந்து சிகிச்சை பெறுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். ரஷியாவுக்கு பதிலடியாக தங்களிடமுள்ள […]
Punjab Kings are a Strong Contender in IPL 2026: Aakash Chopra
Mumbai (Maharashtra), April 7 (ANI): Former Indian cricketer Aakash Chopra has praised Punjab Kings (PBKS) as a strong contender in the ongoing IPL 20...
70 சிறுவர்களை தடுப்புக் காவலில் அடைத்த பிரித்தானியா
One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தேர்ந்தெடுத்தவர்களில் 70க்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள் என்றும், அவர்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. One In, One Out திட்டம்… பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு […]
Vietnam’s Communist Party Chief Elected President
To Lam, Vietnam’s Communist Party Secretary General, has been elected as the country’s president by its parliament. All 490 deputies present at the Na...
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (07.04.2026) மு. ப. 11.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரச காணிச் சட்டத்தின் கீழ் நீண்டகால குத்தகையில் காணி வழங்குவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விரிவாக ஆராயப்பட்டு, சில காணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதுடன், ஏனைய காணிகளுக்கான சாத்தியப்பாட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தப்பட்டது. […]
மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது. அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 25 பேர் பலி!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 25 பேர் பலியாகினர். அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் நகரங்கள் மீது நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மேலும் 25 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியத் தாக்குதலில் 2 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அரசு நிலைகளின் மீதான தாக்குதல்கள் நிறைவடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்த போதும் இன்று மீண்டும் ஈரான் குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் […]
14 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சுமார் 0.9 கிமீ உயரத்தில், மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை ஒடிசா மற்றும் அதனை
ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதி –அரசிதழ் அறிவிப்பு வெளியானது
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்தச்) சட்டம் 2026-ன் கீழ், ஆந்திர மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மற்றும் நிரந்தரத் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசிதழ் அறிவிப்பு (Gazette Notification)
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார நாள் (World Health Day) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு இதே நாளில் உலக சுகாதார
விஜய் நாட்டை ஆள வேண்டும் என்பது மக்களின் ஆசை –செங்கோட்டையன் பேட்டி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அத்துடன் தவெக சார்பில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில்,
வைகை எஸ்க்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!
தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட தண்டவாளங்களில் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்காரணமாக எழும்பூரிலிருந்து தினமும் பிற்பகல்
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்குக் கத்திக்குத்து! –இருவர் கைது!
தூத்துக்குடி பூபாலராயபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி (50). இவர் ஒப்பந்தத் தொழில் செய்து வருகிறார். நேற்று அந்தோணி தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு
அமெரிக்கா –ஈரான் இடையே 45 நாள்கள் போர்நிறுத்த அறிவிப்பு?
45 நாள்கள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 முதல் போர் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஈரானும் அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், அதனைத் திறக்காவிட்டால் ஈரானை நரகத்திற்கு அனுப்புவேன் என இரு நாள்களாக அமெரிக்க அதிபர் […]
Prime Minister Modi Congratulates To Lam on His Vietnam Presidency
Prime Minister Narendra Modi has sent his congratulations to To Lam following his election as President of Vietnam. In a social media post, Prime Mini...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 80 பேர் கைது
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் சந்தேகத்தின் பேரில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். மூட்டைகளைத் திருடுதல், வாகன உதிரிப்பாகங்களை கழற்றிச் செல்லுதல் தம்புள்ளை மற்றும் அதனைச் சூழவுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்தி இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சிலரிடமிருந்து கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்கள் […]
மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு
மக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். அதேவேளை பண்டிக்கை காலத்தை முன்னிட்டு குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஹீரோவான 12 வயது சிறுவன்; தனது குடும்பத்தை காப்பாற்றி வீரச்செயல்!
நுவரெலியா கொத்மலை, காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய கே. ஹிரந்த சமரகோன் என்ற சிறுவன், ஒரு பாரிய விபத்திலிருந்து தனது குடும்பத்தினரை மீட்டெடுத்த வீரச்செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கடந்த 02 ஆம் திகதி குறித்த சிறுவன் குடும்பத்தினருடன் வெலிமடையிலிருந்து நுவரெலியா ஊடாக தவலந்தென்ன நோக்கி நள்ளிரவில் வேனில் பயணித்த போது, ரம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி பள்ளத்தில் […]
Migrant Workers Protest Over unpaid Salaries
Migrant workers at an SS Hyderabad Biryani restaurant in Chennai recently protested because they hadn’t received their March salaries. The protest led...
யாழில் கிணற்றில் மிதந்த சடலம் ; கொலையா! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம், பூவாடை வீதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கிணற்றிலிருந்து விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதற்காகச் சென்ற விவசாயி ஒருவர், கிணற்றிற்கு அருகாமையில் பாதணி (செருப்பு) இருப்பதைக் கண்டுள்ளார். பொலிஸார் தீவிர விசாரணை இதனால் சந்தேகமடைந்த அவர் கிணற்றினுள் எட்டிப் பார்த்தபோது, அங்கு ஆண் ஒருவரின் சடலம் […]
பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பல்: 30 பயணிகள் மீட்பு!
பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பலில் இருந்து 30 பயணிகள் மீட்கப்பட்டனர். ப்ளூ லகூன் குரூஸஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் எம்வி பிஜி பிரின்சஸ் என்ற கப்பல், கடந்த சனிக்கிழமை மொனூரிகி தீவுக்கு அருகே தரைதட்டியது. கப்பல் நங்கூரமிட்டபோது வானிலை அமைதியாகவே இருந்தாகவும் பிறகு திடீரென ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக கப்பலின் நங்கூரம் இழுக்கப்பட்டு, அருகிலுள்ள பவளப்பாறையில் மோதி கப்பல் தரைதட்டியதாகத் தெரிகிறது என்று ப்ளூ லகூன் குரூஸஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை […]
அமெரிக்கா –ஈரான் போர்: ஈரானின் கொடூரத்தை விளக்கிய டிரம்ப்
வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியாதாவது, இந்தப் போர் ஒரே ஒரு விஷயத்தை பற்றியது: ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க கூடாது. நாம் சுலைமானியை கொன்றுவிட்டோம். ஒருவேளை அவர்களிடம் சுலைமானி இருந்திருந்தால், நிலைமை முற்றிலும் வேறுவிதமாக இருந்திருக்கும். ஒருவேளை நாம் அப்போதும் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அது மிகவும் கடினமாக இருந்திருக்கும், ஏனென்றால் நாம் அவர்களின் நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம், அதை செய்ய நான் வெறுக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க மக்கள் நாம் தாயகம் திரும்புவதை காண விரும்புகிறார்கள். […]
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 10,455 சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது சிறுவர் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே எழுந்துள்ள அதிகரித்த கவலையைப் பிரதிபலிக்கின்றது. குறித்த முறைப்பாடுகளில் 2,099 முறைப்பாடுகள் சிறுவர்களுக்கு எதிரான கொடூரமான நடத்தைகள் தொடர்பானவை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பணிப்பாளர் ஷனிகா மலல்கொட தெரிவித்துள்ளார். இது சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தொடர்பான […]
டிஜிட்டல் புரட்சியில் அடுத்த கட்டம் ; தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின் ஆரம்பத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உள்ள பொறுப்பு குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கினார். இந்தமுறையை பொதுமக்களுக்கு மிகவும் வசதியானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றுவதற்கு வங்கி முறைமையினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடினார். குறித்த […]
காரைநகர் பேருந்து ஊழியர்களுடன் மோதல்: தனியார் பேருந்து உரிமையாளருக்கு ஒரு மாத காலப் பணித்தடை
காரைநகர் மார்க்கத்தில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருடன் பாரதூரமான முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு ஒரு மாத காலப் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். கடந்த 02.04.2026 அன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான விசேட விசாரணைகள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் நேற்று […]
நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது
யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது , அதனை புனரமைப்பது தொடர்பாக நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இரு வாரங்களுக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]
ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது: ஈரான்
ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது என ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது. இதனை, மீண்டும் திறக்கும் முன்னர் அதன் செயல்பாடு தொடர்பான புதிய நிபந்தனைகளை அமல்படுத்த ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக வெளியிட்ட பதிவில், ”பாரசீக வளைகுடாவின் புதிய ஒழுங்குமுறைக்காக ஈரானிய அதிகாரிகள் அறிவித்த திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய தயாரிப்புகளை ஈரான் கடற்படை நிறைவு […]
எங்களுடைய வலிமையை பார்க்க போகிறீர்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான் மேற்காசிய போரால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஈரானிலுள்ள ஷரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணி படையினர் வான்வழியாக குண்டுவீசி நடத்திய கடுமையான தாக்குதலில் அது பலத்த பாதிப்பை சந்தித்தது. இந்த தாக்குதலில், பல்கலைக்கழகத்தின் மசூதி தாக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் சுட்டி காட்டுகின்றன. அறிவியல் மற்றும் கலாசார மையத்தின் கட்டிடங்களில் ஒன்றின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. அருகேயுள்ள கட்டிடங்களும் தாக்குதலில் […]
ஈரான் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல்
தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்லாமிய புரட்சி காவல் படையின் உளவு பிரிவுக்கான தலைவராக செயல்பட்ட மஜித் கோதம்-காசினி கதேமி என்பவரை தெஹ்ரானில் வைத்து நேற்றிரவு இஸ்ரேல் விமான படையினர் தாக்கி படுகொலை செய்துள்ளனர். ராணுவ […]
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்தும் , களவாடப்பட்ட பொருட்களில் ஒரு தொகுதி மீட்கப்பட்டுள்ளது யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடை ஒன்றில் மூன்று இலட்சத்து ஆறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான வலைகளை திருடப்பட்டுள்ளது. அதேவேளை கலட்டி அம்மன் கோயிலுக்குஅருகில் உள்ள வீடொன்றில், மூன்றரை பவுண் தங்க மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் என்பன களவாடப்பட்டுள்ளது. குறித்த […]
டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை
video link- https://fromsmash.com/-3BVGO9hD8-dt சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி டீசல் எரிபொருட்கள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வீடொன்றுடன் இணைந்த களஞ்சியசாலையில் டீசல் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக இன்று மாலை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி வழிகாட்டலில் அப்பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்களான கே.எல்.எம் […]
ஈரான் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டார்
ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி (aljazeeraenglish Majid Khademi ) கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் அரச ஊடகங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்க கூட்டுத் தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக ஈரான் பாதுகாப்பு படை குற்றஞ் சுமத்தியுள்ளது. எனினும் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி (aljazeeraenglish Majid Khademi) எங்கு கொல்லப்பட்டார் என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஈரான் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளை […]
நேபாள மக்களவை சபாநாயகராக டி.பி. ஆரியால் போட்டியின்றி தேர்வு
காத்மண்டு நேபாள நாட்டின் ராஷ்டீரிய சுதந்திரா கட்சியின் துணை தலைவரான டோல் பிரசாத் ஆரியால் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக போட்டியின்றி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதற்கு அக்கட்சியின் தலைவர் ரபி லமிசானே ஆதரவு தெரிவித்ததுடன், மந்திரிகள் ஸ்வர்னிம் வாகலே, சோபிதா கவுதம் மற்றும் சுனில் லம்சால் ஆகியோரும் ஆதரவளித்திருந்தனர். நடப்பு ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், காத்மண்டு-9 தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கீழவையின் 10-வது சபாநாயகராகி […]
‘ஆண்கள் பிறநாடுகள் செல்ல இனி அனுமதி கட்டாயம்’ –ஜெர்மனி அதிரடி உத்தரவு
பெர்லின், ஜெர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணம் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டுமானால் இனி அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விதி 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்ததாக கூறப்படுகிறது. முன்னர் போர் போன்ற அவசர சூழ்நிலைகளில் மட்டுமே இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது இது நிரந்தர சட்ட அம்சமாக மாற்றப்பட்டுள்ளதாக […]
போருக்கு மத்தியிலும் கொடூரம்; ஈரானில் இருவருக்கு மரணதண்டனை
ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது, இராணுவத் தளமொன்றைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப் 05) மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முகமதுஅமின் பிக்லாரி மற்றும் ஷாஹின் வாஹெத்பராஸ்ட் ஆகிய இருவருக்கே இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. “கிளர்ச்சியாளர்கள்” எனக் குறிப்பிடப்பட்ட இவர்கள், இராணுவத் தளவாடங்களைத் திருடி மனிதாபிமானமற்ற முறையில் பாரிய கொலைகளைச் செய்ய முயன்றதாக ஈரான் உயர் நீதிமன்றம் இவர்களது தண்டனையை உறுதிப்படுத்தியது. கடந்த வாரம் இதே […]
வாஷிங்டன் தென்மேற்கு ஈரானில் உள்ள கோஹ்கிலுயே மற்றும் போயர் – அஹமத் மாகாணத்தில் பறந்த அமெரிக்காவின் எப்.15 இ ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. 2 இருக்கைகள் கொண்ட அந்த எப்-15 ஸ்ட்ரைக் ஈகில் ரக விமானத்தில் இருந்த 2 விமானிகளும் அவசர பொத்தானை பயன்படுத்தி விமானத்தில் இருந்து வெளியேறினர். இதில் ஒரு விமானியை அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படைகள் பத்திரமாக மீட்டன. மற்றொரு விமானி மாயமானார். அவரை மீட்க அமெரிக்க படைகள் தேடும் […]
இலங்கை மாற்றம் பெற வேண்டும்: அதிகாரப் பகிர்வின் மூலம் 2030 பொருளாதார நிஜ நிலை மதிப்பீடு
இலங்கை இன்று தனது பொருளாதார பயணத்தில் மிகவும் நுட்பமான மற்றும் தீர்மானிக்கும் தருணத்தில் நிற்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிதி நெருக்கடிகளில் ஒன்றிலிருந்து மீண்டு வருவதற்காக கடன் மறுசீரமைப்பு, நிதி கட்டுப்பாடு மற்றும் மெதுவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் உடனடி சவால்களைத் தாண்டி ஒரு ஆழமான கட்டமைப்பு கேள்வி எழுகிறது. 2030க்குள் நிலையான வளர்ச்சியை அடைய இலங்கை எந்த பொருளாதார மாதிரியைத் தேர்ந்தெடுக்கும்? அதே நேரத்தில், பால்க் நீரிணையை அண்டியுள்ள தமிழ்நாடு தெற்காசியாவில் […]
யாழில். ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு –இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி முருகன் வீதி பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம்ஊழியர்கள் புதிய இணைப்புக்களைவழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது குறித்த வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த வேளை போக்குவரத்திற்கு இடையூறாக வயர்களை வீதியில் போட்டு வைத்துள்ளதாக , ஊழியர்களுடன் முரண்பட்டு , ஊழியர்கள் மீது வாள் வெட்டுதாக்குதலைமேற்கொண்டுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த ஊழியர் ஒருவர் சிகிச்சைக்காக […]
சாத்தான்குளம் தந்தை –மகன் கொலை வழக்கு தீர்ப்பு! – 9 காவலர்களுக்கு மரண தண்டனை
தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு இடையே இன்று வழங்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக குற்றம் சாற்றப்பட்ட
தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு!
தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் எதிரில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியனின் தேர்தல் காரியாலயத்தைத் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி
எழும்பூர் வர வேண்டிய முக்கிய ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம்!
சென்னை எழும்பூர் வர வேண்டிய சில முக்கிய ரயில்களின் சேவையில், பராமரிப்பு பணி காரணமாக திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய
மும்பை மாநகராட்சியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்!
மும்பை மாநகராட்சிக் (BMC) கட்டுப்பாட்டில் உள்ள ஃபேஷன் ஸ்ட்ரீட் பகுதியில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ‘பிங்க் டாய்லெட்’ (Pink Toilet) எனப்படும் நடமாடும் கழிப்பறைப் பேருந்து, சட்டவிரோதமாக உணவகமாக
மலையேற்றத்தில் ஈடுபட்டு மாயமான கேரள பெண் 4 நாட்களுக்குப் பிறகு பத்திரமக மீட்கப்பட்டார்!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தடியண்டமோல் (Tadiandamol) மலைப்பகுதியில் மலையேற்றத்தின் போது மாயமான கேரளாவைச் சேர்ந்த 36 வயது மென்பொறியாளர் சரண்யா, அடர்ந்த காட்டில் நான்கு நாட்களுக்குப்
கோவையில் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 06), திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, கோவை
அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 06), மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அவிநாசி (தனி) தொகுதியில் பாரதிய
வெள்ளை மாளிகை அருகே பூங்காவில் துப்பாக்கிச்சூடு?அமெரிக்க உளவுத் துறை விசாரணை!
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே உள்ள பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமெரிக்க உளவுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து இணையதளத்தில் அமெரிக்க உளவுத் துறை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்க அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகை அருகே இருக்கும் லபாயெட் பூங்காவில் இரவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ாக தகவல் கிடைத்தது. அந்த துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை. அந்தப் பூங்காவை சுற்றி நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபா் […]
கடும் மின்னல் ;வடக்கு கிழக்கு உட்பட 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும் மின்னல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் , 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் நாட்டின் சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை […]
டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்; புத்தாண்டில் அறிமுகமாகும் QR
புத்தாண்டில் QR அறிமுகமாகும் விதம் குறித்து விளக்கம் அளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குப் பாரிய பொறுப்புசமூகத்தில் நிலவும் சில சிக்கலான பிரச்சினைகளுக்குத் […]
யாழ்ப்பாணத்துக்கு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தித்வா’ சூறாவளி காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 இடங்கள் கடுமையாக சேதமடைந்திருந்தன. ஆரம்பத்தில் தற்காலிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கொழும்பு கோட்டை முதல் யாழ்ப்பாணத்திற்கிடையில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. வடக்கு ரயில் பாதை வழமைக்குத் திரும்பவுள்ளது பின்னர், குறித்த 14 இடங்களிலும் நிரந்தர புனரமைப்பு பணிகளுக்காக கடந்த […]
சுழலும் சக்கரங்கள் துள்ளும் உள்ளங்கள்: ஜப்பானியர்களின் நாற்காலி பந்தயம்
டோக்கியோ, 2010-ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கடை வீதியில் முதன்முதலாக தொடங்கப்பட்டது. இந்த விளையாட்டை உள்ளூர் வணிகத்தை மேம்படுத்தவும், அன்றாட அலுவலக சோர்வில் இருந்து மக்களை உற்சாகப்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த பந்தயம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. ஜப்பானில் உள்ள அலுவலக ஊழியர்கள் வேலையில் பயன்படுத்தும் நாற்காலிகளை வைத்து நடத்தும் போட்டி இதுவாகும். இந்த போட்டியின் ஒரு அணியில் மூன்று நபர் இருப்பார்கள். நகர வீதிகளில் அமைக்கப்பட்ட […]
Artemis II Moon Flyby Today: Join Us Live
Hello, readers! Today marks a historic moment as humanity returns to the Moon for the first time since the Apollo missions ended in 1972. Four astrona...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; மருத்துவ தம்பதி செய்த செயல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்ப , விபத்து ஏற்பட்டபோது வீதியால் சென்ற மருத்துவ தம்பதிகள் உதவி புரிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடாங்கொட மற்றும் வெலிபென்ன நுழைவாயில்களுக்கு இடையே இன்று (06) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஊர்தியுடன், சிமெந்துத் தூள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம் மோதிப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக தங்கியிருந்து மீட்புப் […]
IPL 2026: KKR Hopes Rise for Pathirana as Hasaranga’s Future Looms Uncertain
Sri Lanka spinner Wanindu Hasaranga has yet to join the Lucknow Super Giants (LSG) squad for IPL 2026. Reports suggest he hasn’t passed a mandatory fi...
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தனியார் வங்கியொன்றின் மோசடி
தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடி கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையை மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இடம்பெற்ற உட்புற நிதி மோசடியின் பெறுமதி சுமார் 13.2 பில்லியன் இலங்கை ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட மிக அதிகளவான தொகை […]
Nine Policemen Sentenced to Death in Custodial Deaths Case
All nine police officers involved in the 2020 Sattankulam custodial deaths case were sentenced to death by the First Additional District and Sessions ...
அரச அலுவலகங்களிற்கு வழங்கப்பட்ட புதன்கிழமை விடுமுறை ரத்து !
நாட்டில் எரிபொருள் நெருக்கடியால் அரச அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக அத்தியாவசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அரச சேவைகள் வழக்கமான முறையில் அனைத்து வார நாட்களிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டததி அடுத்து அரச அலுவல்கங்களுக்கு புதன் கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
IPL 2026: Jamieson Stays Calm Amid Delhi Capitals Rivalry
Kyle Jamieson, a New Zealand cricketer, was recently added to the Delhi Capitals team for ₹2 crore during the IPL 2026 mini-auction. However, he is no...
Savannah Guthrie Back on Today Show
Savannah Guthrie returned to the Today show on Monday, marking her official comeback. She took her usual seat next to co-anchor Craig Melvin at 7 a.m....
ஈரானிடம் இருந்து அமெரிக்க விமானியை மீட்டதற்காக டிரம்புக்கு நெதன்யாகு பாராட்டு
டெல் அவிவ் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் அதிகரித்து காணப்படும் சூழலில், அமெரிக்காவின் அதிக திறன் படைத்த எப்-15 ரக விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது என்று தகவல் வெளியானது. ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க விமானத்தில் இருந்த வீரரை மீட்ட, அதிக ஆபத்து நிறைந்த பணியை செய்ததற்காக அமெரிக்காவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். இதற்காக அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அமெரிக்காவின் துணிச்சலான […]
IPL 2026: Punjab Kings’ Strong Start
Kolkata (West Bengal), April 6 (ANI): After finishing as runners-up last season, Punjab Kings have started IPL 2026 with two consecutive wins. Their s...
April Thunderstorms Cool Down Chennai’s Searing Heat
A sudden burst of thunderstorms hit Chennai and nearby areas on Monday morning (April 6, 2026). This brought much-needed relief from the extremely hot...
Ashwin Quits IPL After Painful CSK Season
Former Chennai Super Kings (CSK) all-rounder Ravichandran Ashwin shared his tough experience during his second spell with the team in IPL 2025. Despit...
யாழில் மின்னல் தாக்கி வீடு சேதம்; தெய்வாதீனமாக தப்பிய வீட்டினர்
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வடமராட்சி, கெருடாவில் பகுதியில் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (6) அதிகாலை வேளை பல இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்தது. அதன்போது, வடமராட்சி, கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி கொண்டதுடன் , குறித்த மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர்களில் ஓட்டைகள் […]
China restricts coastal airspace for 40 days without explanation
China has imposed restrictions on its coastal airspace for 40 days, from March 27 to May 6. These measures, known as Notice to Air Missions (NOTAMs)...
சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் முயற்சி ; வான் பாதுகாப்புப் படையினர் அதிரடி முறியடிப்பு
சவுதி அரேபியாவின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குரூஸ் ஏவுகணை (Cruise Missile) ஒன்றை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்று (ஏப்ரல் 5, 2026) வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது. இன்று காலை சவுதி அரேபியாவை இலக்கு வைத்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையை, அந்நாட்டின் வான் பாதுகாப்புப் படையினர் (Air Defense) அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் நடுவானிலேயே சிதறடித்தனர். இந்தத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதன் காரணமாக எவ்வித உயிரிழப்புகளோ அல்லது கட்டமைப்புச் சேதங்களோ ஏற்படவில்லை என முதற்கட்ட அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. […]
Pயாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அத்தியடி பகுதியை சேர்ந்த சேவியர் சவுந்தரநாயகம் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார் குறித்த முதியவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்குதனது துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் முதியவரைமோதிவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். முதியவர் வீட்டிற்கு திரும்பி சென்று தான் விபத்துக்குள்ளான […]
ஈரானுக்குள் புகுந்து 2-வது வீரரையும் மீட்ட அமெரிக்கா
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E Strike Eagle போர் விமானத்தில் பயணித்த அமெரிக்க விமானிகள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த விமானிகளில் ஒருவரை உடனடியாக அமெரிக்கா மீட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது விமானியை மீட்கும் முயற்சியில், அமெரிக்க பாதுகாப்புப் படைகள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டது. அமெரிக்க அதிபர் Donald Trump தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட தகவலின் படி, இரண்டாவது வீரர் லேசான காயமுடன் மீட்கப்பட்டு நல்ல உடல் நலத்தில் உள்ளார். […]

31 C