பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் இருப்பதை பார்த்தவர்களோ இது அநியாயம் என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அந்த நாலு வார்த்தையை சொல்லாமல் இருக்க முடியவில்லை என்கிறார்கள்.
Zero Tolerance.. லெப்டினன்ட் கர்னல் லஞ்ச வழக்கு.. பாதுகாப்பு அமைச்சகம் எடுத்த நடவடிக்கை!
லஞ்சம் வாங்கிய வழக்கில் லெப்டினன்ட் கர்னல் கைது செய்யப்பட்டது தொடர்பாக யாராக இருந்தாலும் ஊழலுக்கு எதிராக Zero Tolerance கடைபிடிப்பதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
வந்தே பாரத் ரயில் டிரைவர்கள் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான சுவாரசிய தகவல்
இந்தியாவில் இயங்கும் வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்களின் மாத சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது சம்பளம் எவ்வளவு என்று விரிவாக காண்போம்.
கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா? - கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அறப்போர் இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தியிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் 'தமிழ்நாடு அரசே திமுக அரசே எங்கள் ஓட்டு இனிக்குதா? எங்களின் நலன்கள் கசக்குதா?' எனக் கோஷமிட்ட மக்கள் மேடையேறி தங்களின் குடியிருப்புகளில் நிலவும் பிரச்னைகளை அடுக்கினர். எழில் நகர் மற்றும் கண்ணகி நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேசுகையில், எங்கள் குடியிருப்புகளில் 5 நாட்களாக கரண்ட் இல்லை. தண்ணீர் தேங்கியிருப்பதால் எலக்ட்ரிசன் கூட வயரில் கை வைக்க பயப்படுகிறார்கள். மழை பெய்தாலே சுவர் அப்படியே ஒழுக ஆரம்பித்துவிடும். நாங்களே செலவு செய்து கொத்தி பூசி என்னவெல்லாமோ செய்துவிட்டோம். ஆனாலும் மழையால் சுவர் அப்படியே ஊறிப் போய்விடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வதே பிரச்னையோடுதான் வாழ்கிறோம். எங்களால் அருகிலிருக்கும் கடைக்குக்கூட செல்ல முடியவில்லை. எங்களுக்குப் பாதுகாப்பே இல்லை. சிறுவர்கள் கூட போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள். எங்களின் பிள்ளைகளும் அப்படி ஆகிவிடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. அங்கே என்னென்னவோ நடக்கின்றன. வெளியே இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியவில்லை. ஒரு நாளைக்கு 2 பேருந்துகள்தான் வருகின்றன. அதுவும் நேரத்துக்கு வருவதில்லை. நாங்கள் ஆர்.ஏ. புரத்தில் வசித்து வந்தோம். எங்களை அப்படியே குப்பை மாதிரி எழில் நகரில் தூக்கி வீசிவிட்டார்கள். தகுதிக்கும் திறமைக்கும் எந்தப் படிநிலையும் இல்லை - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய பா.ரஞ்சித் கண்ணகி நகரில் 23,000 குடியிருப்புகள் இருக்கின்றன. ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், போதிய போக்குவரத்து வசதி இல்லவே இல்லை . கிட்டத்தட்ட 10,000 மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு உயர்நிலைப் பள்ளி மட்டுமே இருக்கிறது. அந்தப் பக்கம் இருக்கும் ஐ.டி கம்பெனிகளுக்கு கக்கூஸ் கழுவத்தான் எங்களை அங்கே குடியமர்த்தியிருக்கிறார்கள். கண்ணகி நகரில் வேலை வாய்ப்பு முகாம் போடுகிறார்கள். என்ன வேலை வாய்ப்பு எனப் பார்த்தால் கூட்டிப் பெருக்கி குப்பை அள்ளி கக்கூஸ் கழுவும் வேலைக்குத்தான் ஆள் எடுக்கிறார்கள். ஏன் எங்கள் பகுதிகளில் வேறு வேலை செய்ய ஆட்களே இல்லையா? எழில் நகர், கண்ணகி நகர் மக்கள் ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் நாலு மாடி ஏறி வருகிறார்கள். அதன்பிறகு யாருமே எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை என்றனர். அவமானங்கள், போராட்டங்கள், சவால்கள்... அத்தனையும் தாண்டிய வெற்றி! - தேசமே கொண்டாடும், `கண்ணகி நகர்’ சுனாமி நகரைச் சேர்ந்த பெண்கள் பேசுகையில், சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்துதான் சுனாமி நகரில் வைத்தார்கள். வேலைக்குச் செல்வது படிப்பது சாப்பிடுவது என எல்லாமே எங்களுக்குப் பிரச்னைதான். எங்களுக்கு 1% நம்பிக்கை கூட இல்லை. பிள்ளைகளுக்குப் படிக்க பள்ளி இல்லை. பள்ளி இருந்தால் டீச்சர் இல்லை. டீச்சர் இருந்தால் சத்துணவு இல்லை. அரிசி, முட்டை எல்லாம் யாருக்குச் செல்கிறது எனத் தெரியவில்லை. பிள்ளைகளை இங்கிருந்து சாந்தோமுக்கு பள்ளிக்கு அனுப்பும் சூழலில் இருக்கிறோம். 65 பேருந்துகள் ஓட வேண்டிய இடத்தில் 30 பேருந்துகள் கூட ஓடவில்லை என்றனர் வேதனையுடன். சுனாமி நகர் பெண்கள் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் பேசுகையில், சென்னைக்குள் இருக்கும் குடியிருப்புகளில் 50,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் கட்டிக்கொடுத்த கட்டடங்கள் 10 ஆண்டுகள் கூட உறுதியோடு நிற்பதில்லை. கே.பி. பார்க்கில் நான்கே ஆண்டுகளில் சுவர் உடைந்து நொறுங்குகிறது. மக்களின் அடிப்படை வசதிகளே கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், இந்த அரசு மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் இருக்கிறார்கள். நாங்கள் முன்பு கூட மனநிம்மதியுடன் இருந்தோம் என மக்கள் குமுறுகிறார்கள் என்றார். ``விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை'' - கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா
⚖️ தையிட்டி போராட்டம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 5 பேருக்கும் நீதிமன்றம் பிணை!
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட… The post ⚖️ தையிட்டி போராட்டம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 5 பேருக்கும் நீதிமன்றம் பிணை! appeared first on Global Tamil News .
வங்கதேசத்தில் நாடாளுமன்றம் முற்றுகை: பதற்றம் அதிகரிப்பு
டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) மீது கடந்த 12-ந்தேதி மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்தது.ஷெரீப் உஸ்மானின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் […]
பர்த்டே பேபி தமன்னாவின் சொத்துமதிப்பு ரூ. 120 கோடிப்பு: அவரிடம் என்னென்ன கார் இருக்கு தெரியுமா?
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமன்னாவின் சொத்துமதிப்பை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் நல்ல நாளில் தமன்னாவுக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் - கைதான வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவருக்கும் பிணை
தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்றிருந்தனர். இந்நிலையில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் , வேலன் சுவாமிகள் , வலிக்காமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர், மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களுமாக ஐந்து பேரை கைது செய்திருந்தனர் கைது செய்யப்பட்ட ஐவரையும் விசாரணைகளின் பின் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி, அபாரமாக பேட்டிங் செய்தது. குறிப்பாக, ஓபனர் சமீர் மின்காஸ் தொடர்ச்சியாக காட்டடி அடித்து, 172 ரன்களை குவித்தார்.
யானைகள் கூட்டத்தின் மீது மோதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்: தடம் புரண்ட 5 பெட்டிகள்: பெரும் பரபரப்பு
அசாமில் யானை கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. யானைகள் கூட்டத்தின் மீது மோதிய ரயில் சனிக்கிழமை அதிகாலை அசாம் மாநிலத்தின் ஹோஜாய் மாவட்டத்தில் யானைகள் கூட்டத்தின் மீது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது கோர விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. இதில் 8 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன, அத்தோடு இந்த மோதலின் தாக்கத்தில் ரயிலின் என்ஜின் உட்பட 5 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் இந்த விபத்தில் குட்டி யானை ஒன்று […]
மகளுக்கு செக்ஸ் பொம்மையை பிறந்தநாள் பரிசாக அளிப்பது பற்றி பேசிய தன்னை சமூக வலைதளங்களில் படுமோசமாக விளாசியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் பிரபல டிவி சீரியல் நடிகையான கௌதமி கபூர்.
AUS vs ENG 3rd Test: ‘ஆஸி மெகா வெற்றி’.. புது WTC புள்ளிப் பட்டியல்: இங்கிலாந்து நிலைமை ரொம்ப மோசம்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி, புள்ளிப் பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளது.
Rashmika: அப்போது அவர் உடைந்து போய் அழுதுகொண்டிருந்தார் - ராஷ்மிகா குறித்து ராகுல் ரவீந்திரன்
இயக்குநர் மற்றும் நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்'. ஆணாதிக்க சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் போராட்டங்களை அப்படம் பேசுகிறது. பார்வையாளர்களிடம் அப்படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. The Girlfriend சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பு இயக்குநர்களின் ரவுண்ட்டேபிள் நேர்காணலை நடத்தியிருந்தது. அதில் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்' படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான காட்சியைப் படம்பிடித்த விதம் குறித்து எடுத்துரைத்திருக்கிறார். The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' - எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'? அந்த நிகழ்ச்சியில் அவர், இந்தப் படத்தில் மிகக் கடினமான காட்சி என்றால் கதவு காட்சிதான். ராஷ்மிகாவுக்கும் எனக்கும் அந்தக் காட்சி மிகவும் உருக்கமானதாக இருந்தது. அக்காட்சிதான் படத்தின் விதை. என் சொந்த வாழ்க்கையிலும் நான் பார்த்த ஒன்று அது. இந்த ஒரு காட்சிக்காக நான் ராஷ்மிகாவிடம், ‘நீங்கள் பூமாவைப் போல யோசிக்க வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. இக்காட்சியில் ராஷ்மிகாவைப் போல யோசிக்கச் சொல்கிறேன்’ என்று சொன்னேன். Rahul Ravindran உங்களைப் பலர் துன்புறுத்திய ஒவ்வொரு முறையையும் நினைத்துப் பார்க்கச் சொன்னேன். அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அதை உள்ளிருந்து நடிக்கச் சொன்னேன். அந்தக் காட்சி முடிந்ததும் மிகவும் உடைந்து போய் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 20 நிமிடங்கள் அழுதுகொண்டிருந்தார். நான் அப்படி நடிக்கச் சொன்னதால் அவருக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று வெளியே வந்தது. அது அவர் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த ஒன்று” எனக் கூறியிருக்கிறார். The Girlfriend Exclusive: “ராஷ்மிகாவுக்கு எந்தப் படம் ஹிட் அடிக்கும்னு கணிக்கத் தெரியும்!”
BB Tamil 9 Day 76: அடித்து துவைக்கப்பட்ட வினோத்; சான்ட்ரா அனுதாபத்துக்குரியவரா? - ஹைலைட்ஸ்
விஜய் சேதுபதியிடமிருந்து இன்னொரு ‘சவசவ’ எபிசோட். சான்ட்ராவிடம் மல்லுக்கட்டி சோர்வாகி விட்டார் விசே. இந்த எபிசோடை பார்க்கும் போது நமக்கும் அதை விட இரண்டு மடங்கு சோர்வாகி விட்டது. ‘ஒரு கிலோ எமோஷனைக் கொடுத்துடுவாங்க’ என்று வீட்டிற்குள் செல்வதற்கு முன்னால் சொன்னார் விசே. ஆனால் விசாரணையின் போது விசேவின் தலையைச் சுற்ற வைத்து இரண்டு கிலோ அல்வாவைத் தந்து விட்டார் சான்ட்ரா. விசே அவரை விசாரித்த முறையும் வலிக்காத மாதிரியே இருந்தது. BB Tamil 9 Day 76 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 76 சான்ட்ராவின் பிரச்சினை என்னவாக இருக்கக்கூடும்? பலருக்கு வீடே உலகம். சிலருக்கு உலகமே வீடு. நீங்கள் கவனித்துப் பார்த்தால், அதிகமாக பிரயாணம் செய்கிறவர்கள், சக மனிதர்களுடன் உடனே ஒத்துப் போகும் தன்மையை வளர்த்திருப்பார்கள். பயணங்களில் நிகழும் நல்ல, கெட்ட அனுபவங்கள், சக மனிதர்களுடன் பழகக்கூடிய அனுபவங்களைத் தந்திருக்கும். அதனால்தான் ‘ஆன்மீகம்’ என்கிற போர்வையில் நிறைய பயணங்களைச் செய்ய வேண்டிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். பொதுவாக இன்ட்ரோவொ்ட் குணாதிசயம் உள்ளவர்கள், பயணத்தில் எதிர் இருக்கையில் உள்ளவர்களை சின்னச் சின்ன காரணங்களுக்கு கூட உடனே வெறுப்பார்கள். இவர்கள் எழுந்து போய்த் தொலைக்கக் கூடாதா என்று மனமார எண்ணுவார்கள். ஒருவகையில் சான்ட்ரா அப்படிப்பட்டவரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பிக் பாஸ் வீட்டிற்காக தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று எண்ணாமல், தனக்காக ஒட்டுமொத்த வீடும் அனுசரித்துப் போக வேண்டும் என்று சான்ட்ரா எண்ணுவது அபத்தமானது. அதிலும் ஒரு ரியாலிட்டி ஷோவில், சான்ட்ராவின் தூக்கத்தை கெடுக்காமல் அனைவரும் அமைதியாக உண்டு, உறங்கி எழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கைத்தனமானது. BB Tamil 9 Day 76 ‘ சான்ட்ரா மாதிரியே அனைவரும் இருந்தால் பிக் பாஸ் ஷோ எப்படியிருக்கும்?’ ஒரு வாதத்திற்காக இப்படி யோசித்துப் பார்ப்போம். சான்ட்ராவைப் போலவே மற்ற போட்டியாளர்களும் சரியான நேரத்தில் தூங்கி மற்ற நேரங்களில் மோட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்து, அழுக்கு சட்டையுடன் அடிக்கடி மூக்கைச் சிந்தி அழுது கொண்டேயிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் காட்சிகளையே தினம் பார்க்க நேர்ந்தால், பார்வையாளர்கள் மட்டும் அல்ல, பிக் பாஸ் டீமின் ஆட்களே தெறித்து ஓடி விடுவார்கள். இந்த எளிமையான உண்மை சான்ட்ராவிற்கு ஏன் புரியவில்லை? பிரஜின் கூட இருந்த போதும் வீட்டில் இதே மாதிரியான சத்தங்கள்தான் வந்திருக்கும். அப்போதெல்லாம் சான்ட்ரா இம்மாதிரியான புகார்களை சொன்னதாக தெரியவில்லை. “பிரஜின் போன பிறகு எனக்கு மென்ட்டலி ரொம்ப டிஸ்டர்ப்பிங்கா இருக்கு” என்று சான்ட்ராவே சொல்கிறார். எனில் பிரச்சினை அவரிடம்தானே இருக்கிறது?! தன்னிடம்தான் பிரச்சினை இருக்கிறது என்பதை உண்மையிலேயே மனமார சான்ட்ரா உணர்ந்திருந்தால் என்ன செய்திருக்கலாம்? மற்றவர்களிடம் அணுக்கமாக பேசிப் பழகி “பிரஜின் போனதுல இருந்து நான் டல்லா இருக்கேன். எனக்கே நல்லா தெரியுது. நீங்க பேசுங்க. தப்பில்லை. ஆனா என்னால தூங்க முடியலைப்பா.. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ண முடியுமா?” என்று தன்மையாக வேண்டிக் கொண்டிருந்தால் நிச்சயம் சக போட்டியாளர்கள் ஒத்துழைத்திருப்பார்கள். BB Tamil 9 Day 76 சான்ட்ரா வில்லங்கமானவரா? அனுதாபத்துக்குரியவரா? ஆனால் சான்ட்ரா வீட்டில் உள்ள பலரையும் கற்பனை எதிரியாக கருதிக் கொள்கிறார். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் சட்டென்று முகத்தை சுளித்துக் கொண்டு வெளியேறுகிறார். ‘என்ன ஆச்சு?’ என்று விசாரிக்க வருபவர்களின் மீதே கொலைவெறியுடன் பாய்கிறார். ஒரு கேள்வியில் ஆரம்பித்து சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழம்ப வைக்கிறார். மீறி பேசினால் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். ‘இது என்னடா வம்பு?’ என்று மற்றவர்கள் திகைத்து நிற்கிறார்கள். மற்றவர்கள் உழைத்துக் கொண்டிருக்கும் போது ‘உடல்நலத்தை’ காரணம் காட்டி பகல் பூராவும் நன்றாகத் தூங்குகிறார் சான்ட்ரா. உணவு முதற்கொண்டு மற்றவர்கள் உழைப்பின் மூலம் கிடைக்கிற விஷயங்களை குற்றவுணர்ச்சியின்றி அனுபவிக்கிறார் சான்ட்ரா. ஆனால் இரவிலும் தான் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக “இந்த நேரத்துலயா வேலை செய்வாங்க?” என்று ஆட்சேபிப்பதெல்லாம் வேலையாட்களை முதலாளி அதட்டுவது போலவே இருக்கிறது. “நான் யார் பிரச்சினைக்காவது போறேனா.. நான் பாட்டுக்குத்தானே இருக்கேன” என்பது சான்ட்ரா அடிக்கடி சொல்லும் வசனம். ஆனால் அவர் உண்மையிலேயே மனமார அப்படி நினைக்கவில்லை. மற்றவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தான் நெருப்பில் விழுந்த புழு போல தத்தளிப்பதாகவும் கற்பனை செய்து கொள்கிறார். தன் மீது அனைவரும் அனுதாபம் செலுத்த வேண்டும், மகாராணி போல கையில் ஏந்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பிக் பாஸ் போன்ற ரத்தபூமியில் இதெல்லாம் நடக்குமா? அவரவர்கள் அவர்களின் கேமை ஆடுவார்களா, சான்ட்ராவை செல்லம் கொஞ்சிக் கொண்டு அமர்ந்திருப்பார்களா? BB Tamil 9 Day 76 ‘ யோவ் பிக் பாஸ்.. பாட்டு போடாத.. நான் தூங்கணும்’ - சொல்வாரா சான்ட்ரா? இத்தனைக்கும் சான்ட்ராவின் அழுகைக்கு பயந்து பெரும்பாலோனோர் அடங்கித்தான் போகிறார்கள். அப்படி இருந்தும் சான்ட்ராவிற்கு குறையும் புகார்களும் அழுகையும் தீரவில்லை. இத்தனை சோகத்தில் இருக்கிற சான்ட்ரா, வேக்அப் பாடலுக்கு மட்டும் முழுதான ஒப்பனையுடன் உற்சாகமாக ஆடுகிறார்.. “யோவ் பிக் பாஸ்.. எனக்கு தலை வலிக்குது. தூங்கணும்.. பாட்டை நிறுத்தி தொலை” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவாரா? மாட்டார். அதிகாரத்தின் முன்பாக பம்மி நிற்கும் சான்ட்ராவிற்கு எங்கே தன் கோபம் செல்லுபடியாகும் என்கிற தந்திரம் நன்றாக தெரிந்திருக்கிறது. ‘சத்தமாக இருக்கிறது. இரவில் தூங்க முடியவில்லை’ என்று சொல்லும் சான்ட்ரா, அதே இரவு நேரத்தில் ‘கடந்த வந்த பாதையை’ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மற்றவர்களிடம் சொல்லி படுத்தியிருக்கிறார். டான்ஸ் டாஸ்க் முடிந்து அனைவரும் சோர்வாக இருப்பார்களே.. பகலில் சொல்வோம்’ என்று நினைக்கவில்லை. அதாவது தன் சௌகரியத்திற்கு ஏற்றபடி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று சான்ட்ரா எதிர்பார்ப்பது அநியாயமானது. அது மட்டுமல்லாமல் ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழப்பும் தந்திரமும் தன்னிச்சையாக படிந்திருக்கிறது. “இரண்டு மணி நேரமா நிக்கறேன்.. பதில் சொல்லுங்க. முடிச்சுக்கலாம்” என்று விசே கதறியும் கூட கல்லுளிமங்கன் போல நின்று கொண்டிருந்தார் சான்ட்ரா. BB Tamil 9 Day 76 சான்ட்ரா விக்டிம் கார்ட் கேம் ஆடுகிறாரா? ‘திவ்யாவின் தலைவலி’ டிராமா பற்றிய பிரச்சினையில் ‘எனக்கு தலைவலில்லாம் ஒண்ணும் கிடையாது. கனி ஜெயிலுக்குப் போகலை. அதனால எனக்கும் போக விருப்பமில்லை. அதனால்தான் பண்றேன்’ என்று திவ்யா தன்னிடம் சொன்னதாக சான்ட்ரா தெளிவாகவே வாக்குமூலம் தந்தார். ஆனால் விசாரணையின் போது ‘நான் அப்படிச் சொல்லலை. திவ்யா மாத்திரை போடாததால அப்படி நெனச்சிட்டேன்” என்று பல்டியத்து விட்டார். கனி ஜெயிலுக்குப் போகாத எரிச்சலில் திவ்யா செய்த டிராமா பற்றியோ, விசாரணையின் போது ‘சொல்லாத.. சொல்லாத’ என்று திவ்யா கையைப்பிடித்து சொன்னதைக் கேட்டு சான்ட்ரா அதை மறைத்தது பற்றியோ, இந்த எபிசோடில் விசே விசாரிக்கவேயில்லை. திவ்யாவின் தலைவலி உண்மையா பொய்யா என்பதை மட்டுமே கேட்டு விட்டு விட்டார். அடிப்படையிலேயே மனச்சிக்கல் கொண்டிருக்கும் சான்ட்ரா ஒருவகையில் அனுதாபத்திற்கு உரியவர். பிக் பாஸ் போன்ற வீட்டிற்கு பொருந்தாதவர். ‘இந்த கேம் தனக்கு செட் ஆகாது’ என்பதை முன்பே அவர் உணர்ந்திருக்க வேண்டும். மாறாக ‘பார்த்துக்கலாம்’ என்று கேமிற்கு வீம்பாக வந்து விட்டு ‘நான் வெளியே போறேன்’ என்று மற்றவர்களின் மீது பழி சுமத்தி விக்டிக் கார்டு எடுத்து நாள் பூராவும் அழுது தொலைப்பதெல்லாம் பார்வையாளர்களுக்கு எரிச்சலையே தரும். BB Tamil 9 Day 76 விசேவின் விசாரணையில் பாரபட்சம் இருக்கிறதா? போட்டியாளர்கள் மட்டுமல்ல, இந்த எபிசோடின் விசாரணை நாளிலேயே சான்ட்ராவை எதிர்கொள்வதற்கு விசே நொந்து போனார். ‘ஒண்ணுமே புரியலை. ஒரு சிறிய இடைவேளை’ என்று ஜாலியாக சலித்துக் கொண்டே போகும் அளவிற்கு மண்டையைக் குழப்பி விட்டார் சான்ட்ரா. எஃப்ஜே, வினோத், பாரு போன்றவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் அடித்து நொறுக்கக்கூடியவர் விசே. ஏன், பிள்ளைப் பூச்சியான அமித்தைக் கூட அடிப்பவர். ஆனால் இந்த எபிசோடில் சான்ட்ராவிடம் அவர் சரியான கேள்விகளைக் கேட்டு பதில் வாங்க முயன்றார். அதில் மறுப்பில்லை. ஆனால் அவரது வழக்கமான கறார்த்தனமோ, கடுமையோ சான்ட்ராவின் விசாணையின் போது வெளிப்படவில்லை. எனில் போட்டியாளர்களைப் போலவே ‘எங்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாரோ?’ என்று விசேவும் உள்ளுக்குள் அஞ்சுகிறாரா?! சான்ட்ராவின் இந்த அழுகை டிராமா நீடித்துக் கொண்டே போவது பார்வையாளர்களுக்கு எரிச்சலைத் தருவதில் ஆச்சரியமில்லை. ‘அய்யோ.. இவங்களை வெளியே அனுப்பித் தொலைங்களேன்” என்று சமூகவலைத்தளமே அலறுகிறது. மக்களின் வாக்குகள்படிதான் தீர்ப்பு அமையும் என்று சொல்லிக் கொள்கிற பிக் பாஸ் டீம், சான்ட்ராவை அத்தனை எளிதில் வெளியே அனுப்பாது. அவரின் மூலம் கிடைக்கக்கூடிய அழுகை, பாச சென்ட்டிமென்ட் இந்த நிகழச்சிக்குத் தேவை. சான்ட்ராவால் ஒட்டுமொத்த வீடும் டென்ஷன் ஆவது அவர்களுக்கு ஒரு கன்டென்ட்தான். அதிலும் ஃபேமிலி டாஸ்க் நடக்கும் போது சான்ட்ரா செய்யப் போகிற ‘பாச மலர்’ டிராமாவிற்காக ஒட்டுமொத்த பிக் பாஸ் டீமே ஆவலாக காத்துக் கொண்டிருக்கும். அவர்களுக்கு மக்களின் மனவோட்டம் முக்கியமில்லை. பாரு செய்யும் அலப்பறைகளைப் போல சான்ட்ரா செய்யும் அலப்பறைகளும் இந்த நிகழ்ச்சியின் அவசியமான கச்சாப்பொருள். BB Tamil 9 Day 76 சின்ன விஷயத்திற்கு வினோத்தை அடித்து துவைத்த விசே இந்த எபிசோடில் மூன்றே தலைப்புகள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. ஒன்று சான்ட்ரா பற்றியது. அதில் விசேவே பின்பாங்கி சோர்ந்து ஓடி விட்டார். பல விஷயங்கள் ஆழமாக விசாரிக்கப்படவில்லை. அடுத்தது, ஆதிரையின் ஒப்பனை தொடர்பான விஷயம். இதில் வினோத்தின் பக்கம் தவறு இருந்தது. டிரிம்மருக்கும் எபிலேட்டருக்குமான வித்தியாசம் வினோத்திற்கு தெரியவில்லை. “ஆம்பளங்க செய்யறத மட்டும் குத்தம் சொன்னியே.. இப்ப நீ பண்றதுக்கு பெயர் என்ன?” என்று பாய்ந்து விட்டார் வினோத். ‘பாப்பா பாட்டு’ தொடர்பாக சான்ட்ரா சொன்ன அபாண்டமான புகார், நள்ளிரவில் நாய் குலைத்த சமாச்சாரம் என்று விசாரிப்பதற்கு எத்தனையோ முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது இந்த விஷயத்தை வைத்து வினோத்தை அடித்து துவைத்து மிச்ச நேரத்தை ஓட்டி விட்டார் விசே. ‘யார் யாரை பயன்படுத்தி முந்திச் செல்கிறார்?’ என்கிற டாஸ்க். அவ்வளவுதான் எபிசோட் முடிந்து விட்டது. பாருவும் சான்ட்ராவும் வேலை செய்யாமல் டபாய்த்தார்கள் என்பதற்கு அதிகம் மெனக்கெடவே தேவையில்லை. ஒரு குறும்படமே போதும். முதலில் இதை மறுத்த பாரு, சாட்சியங்கள் அதிகமான பிறகு “இனிமே கவனமா இருக்கேன்” என்று சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார். BB Tamil 9 Day 76 இந்த சீரியஸாக விஷயங்களின் இடையில் “கம்மு.. நைட்டு நீங்க எங்க இருந்தீங்க?” என்று காமெடியாக கேட்பதின் மூலம் அந்த விஷயத்தையும் ஜாலியாக கடந்து விட்டார் விசே. (வில்லங்கம் கருதி அவ்வளவுதான் விசாரிக்க முடியும் போல!) விட்டுப் போன விஷயங்களை அடுத்த எபிசோடிலாவது விசே விசாரிப்பாரா? “என் மீது அபாண்டமா பழி சுமத்திய சான்ட்ராவை, கேக்க வேண்டிய இடத்துல மன்னிப்பு கேக்க வைப்பேன்” என்று சபதம் போட்ட கனி, ஏன் சும்மா இருந்தார்? அந்த விஷயங்களையெல்லாம் பிக் பாஸ் டீம் எடிட்டிங்கில் தூக்கி வி்ட்டதா, இந்த வாரமாவது எவிக்ஷன் நியாயமாக நடக்குமா என்பதற்கான விடைகளுக்கு காத்திருப்போம்.
சென்னையில் ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் புத்தக கண்காட்சியில் சிறப்பு வசதி!
சென்னையில் ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் புத்தக கண்காட்சியில் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை!
அரசு கருவூலப் (Toshakhana) பொருட்களை முறைகேடு செய்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது… The post பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை! appeared first on Global Tamil News .
Aadhar Card: ஆன்லைன் ஆதார் கார்டில் செய்யக்கூடாத 5 தவறுகள்; முழு விவரம்
அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எங்கே, எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டைப் பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம். ஆனால், ஆன்லைன் ஆப்களில் ஆதார் சேமித்து வைக்கும்போது, ஆன்லைன் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்க்க செய்ய வேண்டிய 5 டிப்ஸ்கள் இதோ... 1. நீங்கள் பதிவு செய்வது, விண்ணப்பம் பூர்த்தி செய்வது தவிர்த்து, உங்களது ஆதார் சம்பந்தமான OTP-ஐ யாரிடமும் பகிராதீர்கள். ஆதார் அட்டை Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to 2. ஆதார் கார்டை ஷேர் செய்யும் சூழல் வந்தால், பெரும்பாலும் மாஸ்க்ட் ஆதார் கார்டைப் பயன்படுத்துங்கள். 3. ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டை லாக் செய்து வையுங்கள். ஆன்லைன் மோசடி பேர்வழிகள் உங்களது ஆப்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால், உஷார். 4. ஆன்லைன் ஆப்களில் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்துவிடுங்கள். மேலே சொன்ன காரணம்தான் இதற்கும். 5. ஆன்லைனில் ஆதார் தகவலைத் தெரியாமல் கூட ஷேர் செய்துவிடக் கூடாது. Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail
கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!
வங்கதேசத்தில், கொல்லப்பட்ட மாணவர் இயக்கத் தலைவரின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். வங்கதேசத்தில், ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்தப் போராட்டத்தை, மாணவர்கள் இயக்கத்தின் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி என்பவர் முன்னெடுத்து நடத்தினார். இதனைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள வங்கதேச பொதுத் தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டிருந்த […]
திருச்சி கோட்டை ரயில் நிலையம் மேம்பாலம் கட்டுமானப்பணிகள் எப்போது நிறைவடையும்?
திருச்சி கோட்டை ரயில் நிலையம் மேம்பாலம் எப்போது நிறைவடையும்? என்றும், அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
தையிட்டியில் பதற்றம்: மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அதிரடி கைது!
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப் போராட்டத்தின் போது,காவல்துறையினரால் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்… The post தையிட்டியில் பதற்றம்: மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அதிரடி கைது! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் தனியாரின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையில், எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய புத்தர்… The post தையிட்டி விகாரையில் புதிய புத்தர் சிலை: பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்! முறுக்கிக்கொள்ளும் எதிர்ப்புப் போராட்டங்கள். appeared first on Global Tamil News .
நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம்: கோவையில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிப்பு!
நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் கோவையில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
டிசம்பர் 26 முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு… இந்திய ரயில்வே அறிவிப்பு!
இந்திய ரயில்வே இன்னும் 5 நாட்களில் ரயில் டிக்கெட் விலையை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சற்றுமுன் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் அப்போ இன்று முழுவதும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ஓட்டப் போகிறீர்கள். நல்லா இருக்கு பிக் பாஸ் உங்கள் நியாயம் என்கிறார்கள்.
உரப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொத்து ரொட்டி! மன்னாரில் உணவகத்துக்கு எதிராக நடவடிக்கை.
மன்னார் மூர்வீதியில் உள்ள உணவகம் ஒன்றில், கொத்து தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரொட்டிகள் யூரியா (Urea) உரம் பொதியிடும் பைகளில்… The post உரப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொத்து ரொட்டி! மன்னாரில் உணவகத்துக்கு எதிராக நடவடிக்கை. appeared first on Global Tamil News .
கர்நாடகா: நானே முதல்வராகத் தொடர்வேன் - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?
மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பின்னர் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில், இருவரும் மாறி மாறி மற்றவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினர். சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாகப் பேசும்போது, இருவரும் காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்கப்போவதாகவும் கூறினார்கள். இந்த நிலையில், சித்தராமையாவின் வார்த்தைகளால், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. சித்தராமையா - டி.கே.சிவக்குமார் `டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன? சித்தராமையா பேச்சு கடந்த வாரம், கர்நாடகா சட்டமன்றத்தில் பேசிய சித்தராமையா, நானே கர்நாடகா முதலமைச்சராகத் தொடருவேன். காங்கிரஸ் மேலிடம் எனக்கு சாதகமாகவே உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குத்தான் எனக்கு முதலமைச்சர் பதவி என்று எந்த ஒப்பந்தமும் முன்பு போடப்படவில்லை என்று பேசியுள்ளார். மேலும், சித்தராமையா டெல்லி செல்ல உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தன. இந்த இரண்டும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. டி.கே.சிவகுமார் என்ன சொல்கிறார்? இதையடுத்து டி.கே. சிவகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இருவரையும் டெல்லிக்குத் தகுந்த நேரத்தில் அழைப்பதாக காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது. இருவரையும் ஒன்றாகத்தான் அழைப்பார்கள். அந்த அழைப்பிற்காகக் காத்திருப்போம் என்று கூறியுள்ளார். இதுவரை 'காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்பேன்' என்றிருந்த சித்தராமையா இப்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். டி.கே.சிவகுமாரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் - முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து?
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு உக்ரைனின் ஒடெசா நகரத்தில், அமைந்துள்ள துறைமுகக் கட்டமைப்பின் மீது நேற்று முன்தினம் (டிச. 19) இரவு ரஷிய ராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக, ஒடெசா நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ரஷிய ராணுவம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், உக்ரைன் ராணுவத்தின் போக்குவரத்து […]
பரீட்சையில் குறைந்த புள்ளி ; ஆசிரியரான பல்கலை மாணவன் O/L மாணவிக்கு செய்த மோசமான செயல்
கணிதப் பாடப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாகக் கூறி, தனியார் வகுப்பு ஆசிரியர் மாணவி ஒருவரின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. காலி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில், தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவிக்கு ஆசிரியர் கணித வினாத்தாள் ஒன்றை வழங்கியுள்ளார். பல்கலை மாணவன் அதில் அந்த மாணவி எதிர்பார்த்ததை விட 32 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளார். […]
காங்கேசன்துறை கடற்கரையில் சிரமதானம்
தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை கடற்கரை பகுதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் செய்யப்பட்டது. காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் , வலி. வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் , சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தையிட்டியில் பதற்றம் –போராட்டம் நடத்திய வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் பேர் கைது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்திய வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்களால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வலி.வடக்கு
காதல் கணவனால் புதுபெண்ணுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; வரதட்சணையால் கசந்த காதல்
பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்னை காதலித்து கரம் பிடித்த மனைவியை சாகும் வகையில் அடித்தே கொலை செய்த கொடூர கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விகாரபாத் சாயாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தன்னுடைய காதலனை 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். வரதட்சணை கணவனின் வீட்டிற்கு வந்தது முதல் வரதட்சணை கேட்டு பெண்ணின் மாமியார் குடும்பத்தினர் தொல்லை கொடுக்க துவங்கினர். அவர்களுடன் சேர்ந்து கணவனும் வரதட்சணை கேட்டு […]
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் –மத தலைவர்கள் , அரசியல்வாதிகள் கைது ; தொடரும் அராஜகம்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது செய்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட […]
கடைசி நேரத்தில் கிடைக்கும் ரயில் டிக்கெட்.. இப்படியொரு ஆப்ஷன் இருக்கு தெரியுமா?
ரயில் பயணிகள் கடைசி நேரத்தில் கூட குறைந்த செலவில் டிக்கெட் புக்கிங் செய்யலாம். சூப்பரான வசதி இருக்கு.
மறைந்த மலையாள நடிகர் சீனிவாசன் தன் திருமணம் நடந்த விதம் பற்றி தெரிவித்தது குறித்து தற்போது பேசப்படுகிறது. சீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று நடந்தது.
விருதுநகர்: அறுவடை காலத்தில் தொடரும் அவதி; அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. சுமார் 6,500 ஏக்கரில் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், சில பகுதிகளில் கோடை நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஆனால், இன்னும் வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அறுவடைக்குத் தயாரான நெல் நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்காததால், தனியாருக்குக் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகக் குறைவான விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை அறுவடை காலத்திலும் தாங்கள் இதுபோன்ற இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், முன்கூட்டியே அதிகாரிகள் அரசு கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுவடைக்குத் தயாரான நெல் மேலும், வத்திராயிருப்பு பகுதியில் நிரந்தரமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு அறுவடை காலத்திலும் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடுவதால், நிரந்தரத் தீர்வாக கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அரசு விரைவில் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. விருதுநகர்: 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்; பட்டியலில் பெயரைச் சரிபார்க்க ஆட்சியர் வலியுறுத்தல்!
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் - மத தலைவர்கள் , அரசியல்வாதிகள் கைது ; தொடரும் அராஜகம்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது செய்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்று உள்ளனர். இந்நிலையில் போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட வேளை , விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான பொலிஸார் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு , போராட்டக்காரர்களுடன் முரண்பட்டமையால் , அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தினார். குறித்த போராட்டம் ஒரு அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவில்லை. விகாரைக்கு சேதம் விளைவிக்கவில்லை. விகாரைக்கு செல்லும் வீதியில் நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருப்பீர்கள் என பொலிஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் , வேலன் சுவாமிகள் , வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் போராட்ட களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் , போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழிச்சாலை! எங்கனு தெரியுமா?
தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழிச்சாலை. எங்கனு தெரியுமா? இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023-ல் கைது செய்யப்பட்டு, அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. […]
தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மற்றுமொருபுத்தர் சிலையை நிறுவப்போவதாகவும், அதற்காகமுப்படைகள் மற்றும் பொலிசார்பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டு, அதன் பிரதிகள் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கும்அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி துருத்து போயாதினத்தன்று தையிட்டி விகாரையில், தெற்கில் இருந்துபுகையிரதத்தில் எடுத்து வரப்படும் புத்தர் சிலையை , புகையிரத நிலையத்தில் இருந்து சமய அனுஷ்டனங்களுடன் , விகாரைக்கு எடுத்து சென்று , அங்கு நிறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் புகையிரத நிலையத்தில் இருந்து , விகாரைக்கு புத்தர் சிலையை எடுத்து செல்லும் போது முப்படையினர் மற்றும் பொலிஸார் சமய ஊர்வலத்திற்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரை , தனியாரின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரைக்காககையகப்படுத்திய காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறுகோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்குவிகாரைக்கு முன்பாகபோராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் ஜனவரி 03ஆம் திகதி புத்தர் சிலை நிறுவப்படவுள்ளபௌர்ணமி தினத்தன்றும்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை , தையிட்டி சட்ட விரோதமானது என்றும், விகாரை அமைந்துள்ள காணிகளில் எதிர்காலத்தில் எவ்வித கட்டுமான பணிகளையும்முன்னெடுக்க வேண்டாம் என வலி. வடக்கு பிரதேச சபையினால் விகாரதிபதிக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தையிட்டி விகாரை சட்டவிரோத கட்டுமானம்என மும்மொழிகளில் விகாரைக்கு முன்பாகஅறிவித்தல் பலகை நாட்டுவது என வலி. வடக்கு பிரதேச சபையில் கடந்த 18ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையும்குறிப்பிடத்தக்கது
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதியை பணிநீக்கம் செய்யச் சொல்வது சரியல்ல-ஸ்ரீதர் வேம்பு கருத்து!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியை பணிநீக்கம் செய்யச் சொல்வது சரியல்ல என்றும் ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்து உள்ளார்.
இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்: FJ, ஆதிரையை வெளியேத்திட்டாராம் பிக் பாஸ், அந்த ஒற்றுமையை கவனிச்சீங்களா?
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து கம்ருதீன், பார்வதியை ஜோடியாக வெளியேற்றுமாறு பார்வையாளர்கள் கூறி வந்த நிலையில் வேறு இரண்டு பேரை வெளியேற்றிவிட்டார்கள். ஆனால் அதில் ஒருவராக சாண்ட்ரா இருந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.
தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்! காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம்
இலங்கைக்கு ரூ.1850 கோடி நிவாரண நிதி வழங்குவதாக சர்வதேச நாணயம் அறிவிப்பு
இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் ‘டிட்வா’ புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது. இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர்
பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும் சர்ச்சை
இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இது பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது. 'நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்' என்று காங்கிரஸ் கண்டனக் குரல் எழுப்பியது. 'நிதிஷ் குமார் மனநிலை நல்ல நிலையில் இருக்கிறதா?' என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது. பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று 'நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது' - பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வலுக்கும் கண்டனம் சமீபத்திய சர்ச்சை இந்த நிலையில், நிதிஷ் குமார் ஹிஜாப் பிடித்து இழுத்த பெண் பணியில் இன்னும் சேரவில்லை. அந்தப் பெண் சபல்பூர் சமூக சுகாதார மையத்தில் சேர நேற்றுதான் கடைசி தேதி. அவர் நேற்று மாலை 6 மணிக்குள் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர் பணியில் சேரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சுகாதாரத் துறை இந்தக் கடைசி தேதியை நீட்டிக்கலாம். அப்படி செய்தால், அதற்கான வழிகாட்டுதல் பின்னர் அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளது. 'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்
சென்னையில் இன்று 2 வது நாளாக சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெறுகிறது
தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தின் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே
ஏஐ துறையில் மிகப்பெரிய சரிவு ஏற்படப் போவதாக பில்கேட்ஸ் தகவல்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ். அபுதாபியில் நடந்த தொழில்மாநாட்டில் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஏ.ஐ. துறையில்
இஸ்ரோவின் ககன்யான் திட்டம் –பாராசூட் சோதனை வெற்றி
ககன்யான் திட்டத்திற்கான இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றிப்பெற்றுள்ளது. விண்வெளிக்கு சென்று பூமி திரும்பும் வீரர்களின் விண்கலன் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட பாராசூட் சோதனை
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி –இந்தியா, பாகிஸ்தான் இன்று மோதல்
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்றுகள் முடிவில்
பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு - பணிகள் துரித கெதியில்
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது. அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில், கடந்த 05ஆம் திகதி 14 நாட்களுக்கான கட்டாணை பெற்றிருந்தார். குறித்த 14 நாள்களைக் கொண்ட கட்டாணைக்காலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போதே, கட்டாணை உத்தரவை நீடிப்பதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் வழங்கியுள்ள கட்டளையில் உள்ளதாவது: வழக்கானது தர்ம நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இரண்டுக்கும் குறையாத பயனாளிகள் சட்டமா அதிபரின் கையொப்பத்தைப் பெற்றே வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தக் கட்டாய தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமலேயே கட்டாணை பெறப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் வழக்கொன்று இருப்பதாக மன்று திருப்தியடைந்து கட்டாணையை வழங்கியுள்ள போதிலும், வழக்கேட்டை முழுமையாக ஆராய்ந்ததில், வழக்காளிக்கு வழக்கொன்று உள்ளதாக என மன்று திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது. வழக்காளிக்கு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு சட்ட அந்தஸ்து உள்ளதா என நிச்சயமற்ற நிலை நிலவுவதால் கட்டாணையை நீடிக்க வேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது- என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து , தற்போது விளையாட்டரங்கினை துரித கெதியில் அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை பழைய பூங்காவினுள் எவ்வித கட்டுமானங்களும் யாழ்ப்பாண மாநகர சபையினால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர் அமைப்பு தலைவர் உடல் அடக்கம் –வங்கதேசத்தில் நீடிக்கும் பதற்றம்
வங்கதேசத்தின் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் இளம் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி (32), கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கான மாணவர் எழுச்சி
காப்பீட்டு தொகைக்காகாக தந்தையை பாம்பு கடிக்க வைத்து கொன்று நாடகம்!
திருவள்ளூா் அருகே தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்து மரணம் என நாடகமாடியதாக 2 மகன்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருத்தணி அடுத்த பொதட்டூா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் இ.பி.கணேசன் (56). இவா் கடந்த 22.10.2025 அன்று பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவரது மகன் மோகன்ராஜ் (29) பொதட்டூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் […]
நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட முதல்வர் | Photo Album
நெல்லை 'பொருநை' அருங்காட்சியகம் திறப்பு விழா| `பொருநை நாகரிகத்தின் சான்று' - 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது!
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸுக்கு காவடி எடுத்தாலும் விஜய் முதல்வராக முடியாது; பாஜக கூட்டணிக்கு வாங்க - தமிழருவி மணியன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழருவி மணியன் பேசுகையில், காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் வந்ததால், அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் இருப்பது காங்கிரஸ் கட்சி அல்ல. அதுஒரு லிமிடெட் கம்பெனி. இங்கிருக்கும் காங்கிரஸ் கமிட்டிக்கு ஏதாவது அதிகாரம் உண்டா?. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நினைத்தால் ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட அவரால் நிற்க வைக்க முடியாது. அதற்கும்கூட சோனியாகாந்தியிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் வர வேண்டும். மானமுள்ள கதர் சட்டை போட்ட காங்கிரஸ்காரர்கள் ஜி.கே.வாசன் பக்கம்தான் வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று ஆண்டுகள் ரஜினியிடம் வாரத்துக்கு மணிக்கணக்கில் அரசியல் பேசியுள்ளேன். அந்த மூன்று ஆண்டுகளில் ரஜினியிடம் நான் பெற்றது மூன்று கோப்பை மிளகு ரசம் மட்டுமே. நான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து செல்கிறவன் அல்ல. தமிழருவி மணியன் கடந்த தேர்தலின்போது திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று சொன்னேன். அது தற்போது நடந்ததா? இல்லையா? தவெக தலைவர் விஜய்க்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். விஜய் நன்றாகச் சிந்திக்க வேண்டும். அவருக்கென்று ஒரு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஒரு இளைய தலைமுறை கண்ணை மூடிக்கொண்டு அவர் பின்னால் செல்கிறது. அவர் பின்னால் அணி திரள்பவர்களைக் கணக்கெடுத்து பார்த்தால் வரும் தேர்தலில் தவெக 20 சதவீத வாக்குகளை உறுதியாகப் பெறும். ``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது- தமிழருவி மணியன் இந்த 20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு விஜயால் முதல்வராகிவிட முடியுமா? காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய். தமிழ்நாட்டில் தேடிப் தேடிப்பார்த்தாலும் காங்கிரஸூக்கு 3 முதல் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வங்கியே கிடையாது. இரண்டு கட்சியின் 25 சதவீத வாக்கை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது. ஒரு தொகுதியில் கூட உங்களால் வெற்றி பெற முடியாது. உங்கள் 20 சதவீத வாக்கும் காங்கரஸூடன் சேர்ந்தால் வீணாகிவிடும். விஜய் அரசியலில் வாழ்வற்று போய்விடுவார். இணைப்பு விழா 20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு காங்கிரஸூக்கு விஜய் காவடி எடுத்தாலும் முதல்வராக முடியாது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 23 சதவீதம், பாஜக 18 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இதை இரண்டையும் சேர்த்தால் 41 சதவீதம் வாக்குகள், விஜய்யுடைய 20 சதவீத வாக்குகளைச் சேர்த்தால் 61 சதவீதமாக மாறிவிடும். இந்தக் கூட்டணி அமைந்தால் 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறலாம். எப்போது விஜய் அதிமுக, பாஜக இருக்கும் கூட்டணிக்கு வருகிறார் என்று செய்தி வருகிறதோ அப்போதே திமுக மூட்டையைக் கட்டிவிடும். திமுக தீய சக்தி என்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடந்த காலத்தில் சொன்னார்கள். தற்போது விஜய்யும் சொல்கிறார். திமுக-வை நல்ல சக்தி என்று எந்த நேர்மையாளனாவது சொல்வானா? விஜய்க்கு உண்மையில் சமூக நோக்கம் இருந்தால், திமுக-வை எதிர்க்க அதிமுக, பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய வேண்டும் என்றார். காந்தி To கோட்சே பயணமா?! - மனம் திறக்கும் தமிழருவி மணியன்
சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி'கலை இயக்குநர் ஷேரிங்ஸ்
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்திருக்கும் 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. 1960-களில் நடந்த மொழிப்போர் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்த 'பராசக்தி'. 1960களில் நடக்கும் கதை என்பதால், படத்திற்கு பீரியட் உணர்வைக் கொண்டு வர பெரும் சிரத்தை கொடுத்து உழைத்திருக்கிறார் படத்தின் கலை இயக்குநர் கார்த்திக் ராஜ்குமார். பராசக்தி படத்தில்... படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 'பராசக்தி' திரைப்படம் குறித்தான கண்காட்சியையும் படக்குழுவினர் அமைத்திருக்கிறார்கள். அதற்கான செட் அமைத்ததும் இவர்தான். அந்தக் கண்காட்சியிலேயே வைத்து கார்த்திக்கை பேட்டி கண்டோம். நம்மிடையே பேசிய அவர், வணக்கங்க! கண்காட்சியை மக்கள் ரொம்பவே என்ஜாய் பண்றாங்க. 'பராசக்தி' உலகத்தைக் கட்டமைக்கிறதுக்குப் பின்னாடி பெரிய உழைப்பு நிறைந்திருக்கு. அதை மக்கள் தெரிஞ்சுக்கணும்னுதான் இந்த செட் அமைத்தோம். மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து இடத்தை பார்த்துட்டுப் போறாங்க. சுதா மேம் இந்த ஸ்கிரிப்ட்ல ஐந்து வருஷம் பயணிச்சிருக்காங்க. பல ஆராய்ச்சிகளும் அவங்க செய்திருக்காங்க. Parasakthi Art Exhibition நான் கடைசியாகத்தான் 'பராசக்தி' டீமுக்குள்ள வந்தேன். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் சாரோடவும் நான் நிறைய வொர்க் பண்ணியிருக்கேன். நான் இந்தப் படத்திற்கு சரியாக இருப்பேன்னு அவரும் நம்பினாரு. பிறகு, சுதா மேம் நிறைய புக்ஸ், ரெஃபரன்ஸ் எனக்கு கொடுத்தாங்க. அது என்னுடைய கலை இயக்கப்பணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. நிறைய இடங்களுக்கும் பயணிச்சோம். படத்தில் ஒரு சீக்குவென்ஸிற்காக எங்களுக்கு நீராவி இன்ஜீன் கொண்ட ரயில் தேவைப்பட்டது. அது செயல்படுற கண்டிஷனிலும் இருந்தாகணும். அது இங்க கிடையாது. இலங்கையில அப்படியான ரயில் ஒண்ணு இருந்தது. அதனால அங்க போய் படப்பிடிப்பை நடத்தினோம். பிறகு, அந்த ரயிலுக்குள்ள சில ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கவேண்டியது இருந்தது. அதை டாமேஜ் செய்திடக்கூடாதுனு இங்கு முழுமையாக அந்த ரயிலை செட் போட்டோம். அந்தக் காட்சி படத்திலயும் முக்கியமான ஒன்றாக இருக்கும். முக்கியமாக, அந்த செட் அமைக்கிறதுக்கு நாங்க 6 மாதங்கள் கிட்ட வேலை செஞ்சோம். Parasakthi Art Director - Karthik உண்மையான நீராவி இன்ஜீன் கொண்ட ரயிலை அளவெடுத்து, அதனுடைய உருவாக்கத்திற்குப் பின்னாலுள்ள திட்டங்களையும் கேட்டறிந்து வந்து இங்கு செட் அமைத்தோம். அந்த செட்டைப் பார்த்துட்டு சுதா கொங்கரா மேம் 'நான் இலங்கையில இருக்கேனா? இல்ல, நம்ம செட்ல இருக்கேனா?! அப்படியே அசலாக இருக்கு'னு பாராட்டு தெரிவிச்சாங்க. அதை என்னுடைய உழைப்புக்கு கிடைச்ச அங்கீகாரமாகப் பார்க்கிறேன். அதுபோல எஸ்.கே சாரும், ரவி மோகன் சாரும் 'அங்கிருந்த ரயிலை இங்க எடுத்துட்டு வந்தீங்களா'னு ஆச்சரியப்பட்டுக் கேட்டாங்க. இது மாதிரி பல உழைப்புகள் இந்தப் படத்துல நிறைஞ்சிருக்கு. என்றார் மகிழ்ச்சியுடன். தொடர்ந்து பேசியவர், இந்தப் படத்துக்காக நிறைய விஷயங்களை நாங்க ரீ கிரியேட் செஞ்சோம். ஆனா, சில பொருட்கள்ல அதனுடைய ரியாலிட்டி தேவைப்பட்டுச்சு. அதற்காக அதைத் தேடினோம். சிலர் விண்டேஜ் பொருட்களை இப்போதும் வச்சிருக்காங்க. ஆனா, அதை ஒரு பொக்கிஷமா பாதுகாப்பாக வச்சிட்டு வர்றாங்க. படத்துக்காக ஷூட்டிங் செய்யனு கேட்டால் நிச்சயமாக யோசிப்பாங்கலையா! Parasakthi Art Exhibition அப்போ இது மாதிரி சுதா மேம் படம், எஸ்.கே சார், ரவி மோகன் சார், அதர்வா சார் நடிக்கிற படம்னு சொல்லி அந்தப் பொருட்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்தினோம். பீரியட் காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறதுக்கு நிறைய வேலைகள் நாங்க செஞ்சோம். ஒரு தெருவுல படப்பிடிப்பை நடத்தினால் சுவர்களில் விளம்பரம், அரசியல் பிரசார ஓவியங்களை வரையணும். ஆனா, அது அவங்களை ட்ரோல் செய்வது மாதிரி ஆகிடக்கூடாது. அதே சமயம், வரலாற்றையும் மாத்திச் சொல்லிடக்கூடாது. அதுல மிகவும் கவனமாகச் செயல்பட்டோம். சுதா கொங்கரா மேம் லைவ் லொகேஷன்களைத்தான் விரும்புவாங்க. அப்படி கதைக்கான கச்சிதமான இடம் அமைந்தாலும், அங்கெல்லாம் பீரியட் தன்மையைக் கொண்டு வர்றது பெரிய சேலஞ்ச்! பல வீடுகள்ல கேட், ஓடுகள்னு இப்போ மாற்றப்பட்டிருக்கு. முறையாக அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கி மாற்றியமைச்சு படம்பிடித்தோம். என்றவர், இந்தப் படத்துக்கு நிறைய விண்டேஜ் கார்கள் தேவைப்பட்டன. Parasakthi Art Exhibition இலங்கையில இப்போதும் பலர் விண்டேஜ் கார்களை நல்ல கண்டிஷன்ல வச்சிருக்காங்க. பல இடங்கள்ல இருந்து அந்த கார்களை கலெக்ட் பண்ணினோம். அந்த கார்களை வச்சு எடுக்கிற முதல் ஷாட்ல சுதா மேம் எஸ்.கே சாரைத் தேடினாங்க. ஆனா, அவர் இந்த விண்டேஜ் கார்களை ரொம்ப என்ஜாய் பண்ணிப் பார்த்துட்டே இருந்தாரு. அதுபோல, இந்தப் படத்துல மெயில் சர்வீஸும், நேஷனல் ரேடியோ செட்டும் முக்கியமாகப் பேசப்படும். இன்னும் நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு. பொறுத்திருந்து பாருங்க! என உற்சாகத்துடன் பேசினார்.
இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!
ஈரான் நாட்டில், இஸ்ரேலின் உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் உர்மியா நகரத்தில், ராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை சட்டவிரோதமாகப் புகைப்படம் எடுத்தபோது அகில் கேஷவர்ஸ் (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஈரானின் கட்டமைப்புகள் குறித்த செய்திகளை இஸ்ரேலின் மொஸாத் உளவாளிகளிடம் அவர் பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இத்துடன், இஸ்ரேலுக்காக ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்பட ஏராளமான நகரங்களில் 200-க்கும் அதிகமான உளவுப்பணிகளை அவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்செயலுக்காக, அகில் கேஷவர்ஸுக்கு […]
நெல்லை: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா; முதல்வர் பங்கேற்பு | Photo Album
திருநெல்வேலி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழா.! GSDP 16% வளர்ச்சியை ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில்தான் தமிழ்நாடு பெற்றுள்ளது - தங்கம் தென்னரசு
2026-ம் ஆண்டும் தங்கம் விலை உயரும்; அதற்கு 'இந்த' 3 விஷயங்கள் தான் காரணம்!
இந்த ஆண்டு தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையுமே மிக மிக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் 1-ம் தேதி, சென்னையில் 1 பவுன் தங்கம் ரூ.57,200-க்கு விற்பனையானது. சமீபத்தில், இது ரூ.1 லட்சத்தைக் கூட தாண்டியது. இந்த ஆண்டின் தொடக்க நாளில் ரூ.98 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை, தற்போது ரூ.226. அடுத்த ஆண்டு தங்கம், வெள்ளி விலை இப்படியே தொடருமா... என்ன ஆகும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் 2026-ம் ஆண்டும் தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற உலோகங்களின் விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பு சந்தையில் இருக்கிறது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த உலோகங்களுக்கு தொழிற்சாலைகளில் தொடர்ந்து டிமாண்ட் இருந்து வருகிறது. இரண்டாவது, உலோகங்களை முதலீட்டாளர்கள், டிரேடர்கள், ஏற்றுமதியாளர்கள் பதுக்கி வருகிறார்கள். மூன்றாவது, மக்கள் ஃபியட் நாணயங்களின் மீது நம்பிக்கை இழந்து உலோக முதலீடுகள் பக்கம் திரும்பியுள்ளனர். சரிவு இருக்காதா? தற்போது நாம் கமாடிட்டி சூப்பர் சைக்கிளில் இருக்கிறோம். இடை இடையே கரெக்ஷன், பிராஃபிட் டேக்கிங்குகள் நடக்கும் தான். ஆனால், இவை பெரியளவில் சரிவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. அதனால், 2026-ல் உலோகங்களில் தாராளமாக கவனம் செலுத்தலாம். பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் ' Opening Bell Show ' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
ஆஷஸ் வரலாற்றில், முதல் முறையாக விக்கெட் கீப்பர் பேட்டர்கள், மெகா சம்பவம் செய்துள்ளனர். இத்தனை வருட ஆஷஸ் தொடரில், தற்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
கனவு இல்லம் திட்டம்: பயனாளிகள் கையில் ரூ.3.5 லட்சம்.. ரெடியாகும் 74,000 புதிய வீடுகள்!
தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இது அடுத்த இரண்டு மாதங்களில் மக்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காட்டு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
அனுராதபுர தம்புத்தேகம, மலியதேவபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது விவசாய நிலத்தில் இருந்தபோதே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை இவ்வாறு உயிரிழந்தவர் மலியதேவபுர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். தனது வயலுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக நேற்று (19) இரண்டு நண்பர்களுடன் வயல்வெளிக்கு அருகிலுள்ள வீதியின் மதகு ஒன்றுக்கு அருகில் இருந்தபோதே, அங்கு வந்த காட்டு […]
யாழில் வேலைக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி
யாழில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்த சிறுவன் சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு – விசுவமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்து, நேற்றையதினம் குருநகர் – பாஷையூரில் பழைய வீட்டினை இடித்துக்கொண்டிருந்தார். ஒரு பக்க சுவரினை இடித்துவிட்டு அந்த சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடினார். இதன்போது மற்றைய சுவர் அவர்மீது […]
கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த பேரதிர்ச்சி ; மதில் சுவர் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
பதுளை, ஹிந்தகொட பகுதியில் மதில் சுவருடன் கூடிய மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில், அதற்குள் சிக்கிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதில் சுவருடன் கூடிய மண் திட்டு திடீரென சரிந்து வீழ்ந்ததில், அங்கிருந்த இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மிக மோசமான நிலையில் இருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பதுளை மாநகர சபையின் தீயணைப்புப் […]
மோடியின் தனிப்பட்ட செய்தியை அனுரவிடம் கையளிப்பார் ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு எடுத்து வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நாளை உயர்மட்டக் குழுவுடன் கொழும்பு வரவுள்ளார். அவர், நாளைமறுநாள் செவ்வாய்க்கிழமை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார் திசாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை
சீனாவின் மூன்றாவது உயர்மட்டத் தலைவர் சாவோ லெஜி சிறிலங்கா வருகிறார்
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் சாவோ லெஜி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை கொழும்பிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சாவோ லெஜி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமையே சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்திக்கவுள்ளனர். சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங்கிற்குப் பின்னர், சீன அரசாங்கத்தில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியில் உள்ள, சாவோ லெஜியின் இந்தப் பயணம்
பாமக தலைவர் ராமதாசுடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு
தமிழ் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர்பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனரும் தலைவருமான, மருத்துவர் ராமதாசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். திண்டிவனம் தைலாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை 6.15 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும்,ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பை நிராகரிப்பதற்கான அவசியம் குறித்தும்,
பஞ்சாங்கக் குறிப்புகள் டிசம்பர் 22.12.25 முதல் 28.12.25 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?
சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தளவாடங்களைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய மாகாணத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் கட்டமைப்புகள், தளவாடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக, இன்று (டிச. 20) அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இந்த ராணுவ நடவடிக்கைக்கு, “ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்” எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதல்களில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனவும் அமைச்சர் ஹெக்செத் கூறியுள்ளார். முன்னதாக, சிரியாவின் […]
அடுத்த 10 ஆண்டுகளில் பங்குச்சந்தை: கணிக்கும் Economist Nagappan | IPS Finance - 391
Sudha Kongara Live Locations தான் விரும்புவாங்க! - Parasakthi Art Director Karthik |Sivakarthikeyan
2025 கிறிஸ்துமஸ் ; புதிய குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட இளவரசர் வில்லியம்–கேதரின் தம்பதி
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேதரின் ஆகியோர் தங்களின் 2025 கிறிஸ்துமஸ் அட்டைக்காக புதிய குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இது நோர்ஃபோக்கில் ஏப்ரல் மாதம் புகைப்படக் கலைஞர் ஜோஷ் ஷின்னர் எடுத்த இந்த படத்தில், வில்லியம்–கேதரின் தம்பதியும், அவர்களின் குழந்தைகள் ஜோர்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோர் இயற்கை சூழலில் இணைந்து அமர்ந்துள்ளனர். இந்த இயல்பான, அன்பான புகைப்படம் அரச குடும்பத்தின் நவீன மற்றும் எளிமையான அணுகுமுறையை வெளிப்படுத்கிறது. புற்றுநோய் மற்றும் கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு […]
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள போண்டி கடற்கரை பகுதியில் கடந்த 13-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, பொதுமக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்கும் புதிய திட்டத்தை அந்த நாட்டு அரசு அரசு தொடங்கவுள்ளது. இது குறித்து பிரதமா் அந்தோனி ஆல்பனீஸி வெள்ளிக்கிழமை கூறியதாவது: போண்டி கடற்கரை தாக்குதலைத் தொடா்ந்து, துப்பாக்கிகளை திரும்ப வாங்கும் பெரிய திட்டத்தைத் தொடங்குகிறோம். இது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் போா்ட் ஆா்தா் படுகொலையின்போது நடத்தப்பட்டதைவிட பெரிய அளவிலான துப்பாக்கி சேகரிப்பு திட்டமாக […]
ரஷிய சொத்துகளைப் பயன்படுத்தாமல் உக்ரைனுக்கு கடனுதவி: ஐரோப்பிய யூனியன் முடிவு
ரஷியாவின் முடக்கப்பட்ட சொத்துகளைப் பயன்படுத்தாமலேயே, உக்ரைனுக்கு 9,000 கோடி யூரோ (சுமாா் ரூ.9.5 லட்சம் கோடி) வட்டியில்லா கடனுதவி அளிக்க ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் முடிவு செய்துள்ளனா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உக்ரைனுக்கு 2026-2027-ஆம் நிதியாண்டுக்கான செலவுகளுக்காக 9,000 கோடி யூரோ கடனுதவி அளிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் என்ன உறுதியளித்தோமோ, அதை நிறைவேற்றியுள்ளோம் என்றாா் அவா். இருந்தாலும், இந்தக் கடன் தொகை ஏற்கெனவே […]
மொஹமட் பாதுஷா 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பிறகு கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரங்களை மீளக் கட்டியெழுப்புவதுடன், அந்த மக்களை ஆசுவாசப்படுத்தி, பொருளாதார ரீதியாகவும் ஸ்திரப்படுத்த வேண்டிய ஒரு தேவையை இயற்கை ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்றதொரு நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கின்றது. அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சுனாமி பேரலையால் பறிபோன உயிர்களை விட எண்ணிக்கையில் குறைவு என்றாலும், நாட்டின் பல பாகங்களிலும் பரவலாக ஏற்பட்ட அனர்த்தம் என்பதாலும், பௌதீக அழிவுகள் பரதூரமானவை […]
காஸாவில் உணவுப் பற்றாக்குறை ; 1 லட்சம் பேருக்கு ‘பேரழிவு’
காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் மற்றும் ஊட்டச்சத்து நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இன்னும் 1 லட்சம் போ் ‘பேரழிவு’ உணவுப் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளதாக ஐ.நா. அங்கீகாரம் பெற்ற நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காஸாவில் போா் நிறுத்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், அண்மை மதிப்பீட்டில் 5 லட்சம் போ் ‘அவசர நிலை’ உணவுப் பற்றாக்குறையையும், […]
‘டித்வா’புயல் நிவாரணம்: 69% பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு!
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றவும், வீடுகளைச் சீரமைக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிவாரணப் பணிகள் குறித்த முக்கிய தகவல்களை… The post ‘டித்வா’ புயல் நிவாரணம்: 69% பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு! appeared first on Global Tamil News .
‘மீண்டெழும் இலங்கை’: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் ‘மீண்டெழும் இலங்கை’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ், மாவட்ட மட்டத்திலான முன்னேற்றங்கள்… The post ‘மீண்டெழும் இலங்கை’: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்! appeared first on Global Tamil News .
நாளை காத்திருக்கும் கனமழை ; பொதுமக்களுக்கு வெளியான அறிவுறுத்தல்
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நாளை (21) பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. முன்னெச்சரிக்கை மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் […]
Vijay-ன் அடுத்த திட்டம், சுதாரிக்கும் எடப்பாடி! | Elangovan Explains | ADMK | DMK | TVK | Vikatan
ஸ்ரீநிவாசன் மறைவு: `தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது'- கேரள முதல்வர் பினராயி விஜயன்
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநிவாசன் (69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். எர்ணாகுளம் மாவட்டம், உதயம்பேரூரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த அவர் உடல் உபாதைகளுக்காக சிகிச்சை பெற்றுவந்தார். டயாலிசிஸ்-க்காக அழைத்துச் சென்ற சமயத்தில் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, திருப்பூணித்துறை அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் மரணமடைந்தார். அவரின் உடல் கொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு நாளை (டிச.21) காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் எர்ணாகுளத்தில் நடைபெற உள்ளது. நடிகர் ஸ்ரீநிவாசன் மறைவுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநிவாசன் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பினராயி விஜயன் மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்: நடிகர் ஸ்ரீநிவாசனின் மரணம் மலையாள சினிமாவால் மீள முடியாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை வெள்ளித்திரையில் கொண்டு சேர்த்ததிலும், சிரிப்பின் மூலமும், சிந்தனையின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுசேர்ப்பதில் இவரைப் போன்று நடிகர்கள் அதிகமாக இல்லை. நடிகர் ஸ்ரீநிவாசன் சினிமாவின் பல வழக்கங்களையும் தகர்த்துக்கொண்டு சினிமாவில் முன்னேறினார். கதை, திரைக்கதை, இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் தனித்துவம் படைத்தவர். அவருடைய பல சினிமாக்கள் மலையாளிகளின் மனதில் அனைத்து காலங்களிலும் நிலைநிற்கும். என்னைப் பொறுத்தவரை நடிகர் ஸ்ரீநிவாசனின் மறைவு தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நேர்காணலுக்காக நாங்கள் இணைந்தது இன்றும் மனதில் இனிமையான நினைவாக உள்ளது. அன்புக்கும், அரவணைப்புக்குமான பிரதிபலிப்புதான் ஸ்ரீநிவாசன் என முதல்வர் பினராயி விஜயனின் இரங்கல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Bangladesh Riots: இளைஞர்களின் தலைவர் Osman Hadi கொலையும் அரசியல் சதியும் | Decode
யுக்ரைனுக்கு நிபந்தனை இடும் ரஷ்யா ; போரில் புதிய திருப்பமா?
யுக்ரைன் உடனான மோதலை, அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர தாம் தயாராக உள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். இதற்கு யுக்ரைன் நேட்டோவில் உறுப்பினராகும் முயற்சியை கைவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ரஷ்யா கைப்பற்றி தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடும் நான்கு பிரதேசங்களிலிருந்தும் யுக்ரைன் படைகள் விலக வேண்டும் எனவும் புட்டின் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யா புதிய வெற்றிகளைக் காணும் என தான் உறுதியாக நம்புவதாகவு புட்டின் […]
தேனி புத்தக திருவிழா நாளை தொடக்கம்: எங்கு? எத்தனை நாட்கள் தெரியுமா? முழு தகவல் இதோ
தேனி மாவட்டத்தில் நாளை 4வது புத்தக திருவிழா தொடங்குகிறது. வருகிற 28ந் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட உள்ளன.
அதிரடி செய்தி: இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கணினி அமைப்பில் ஊடுருவல்!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு வளையத்திற்குள் கடத்தல்காரர்கள் ஊடுருவியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.… The post அதிரடி செய்தி: இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கணினி அமைப்பில் ஊடுருவல்! appeared first on Global Tamil News .
ரூ.56.36 கோடி மதிப்பீட்டில் நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
எம்.பிக்கள், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்கள் அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான குறைநிரப்பு மதிப்பீடு நேற்று முன் தினம் (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த குறைநிரப்பு மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டது. அதனையடுத்து, ஜனவரி 06 ஆம் திகதி […]
இனவெறி குற்றச்சாட்டில் மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து (Miss Finland) பட்டம் வென்ற சாரா ஜாஃப்சே , ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் தனது கண்களை இழுத்துப் பிடித்துக் காட்டிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. அவர் பகிர்ந்த படத்திற்கு கீழே “சீனருடன் உணவு உண்ணுதல்”என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இது ஆசியர்களை இழிவுபடுத்தும் இனவெறிச் செயல் எனப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இது […]
இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்: ஒரு புதிய மீட்புத் திட்டத்திற்கான எதிர்பார்ப்பு!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 22, 2025) இலங்கைக்கு அரசுமுறைப்… The post இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்: ஒரு புதிய மீட்புத் திட்டத்திற்கான எதிர்பார்ப்பு! appeared first on Global Tamil News .
தமிழ்நாட்டில் புதிய விமான நிலையங்கள் அமைகிறதா? மத்திய அமைச்சர் விளக்கம் இதுதான்...
தமிழ்நாட்டில் புதிய விமான நிலையங்கள் ஏதும் அமைய உள்ளதா? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கொடுத்த பதிலை விரிவாக காண்போம்.
நெல்லை மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
நெல்லை டக்கரம்மாள்புரத்தில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

28 C