SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

NDA கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 சீட் வழங்கப்பட்டதா? டென்ஷனான பிரேமலதா!

சென்னை :சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், NDA கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளியான செய்தியை முற்றிலும் வதந்தி என்று கடுமையாக மறுத்தார். “அப்படி ஒரு தகவலை ஒரு கட்சி சொல்லியிருந்தால், அந்த கட்சி அழிவை நோக்கிதான் செல்லும். அடித்துச் சொல்கிறேன்” என்று ஆவேசமாக பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். கூட்டணி குறித்து இப்போதைக்கு பாஜக – அதிமுக இடையே மட்டுமே ஆலோசனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்த […]

டினேசுவடு 25 Dec 2025 3:26 pm

India, US Seek Balanced Trade and Space Ties

India is continuing regular talks with the United States to reach a fair and balanced trade agreement as soon as

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:24 pm

அக்கரைப்பற்று –திருகோணமலை பேருந்து விபத்து!

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சொகுசு பயணிகள் பேருந்து, இன்று (டிசம்பர் 25) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 12… The post அக்கரைப்பற்று – திருகோணமலை பேருந்து விபத்து! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 3:20 pm

Navi Mumbai Airport Begins Commercial Flight Operations

The Navi Mumbai International Airport started commercial flight operations today, marking an important moment for India’s civil aviation sector. The

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:15 pm

முக்கிய செய்தி: ஹிக்கடுவ நகர சபையில் NPP-க்கு பின்னடைவு!

வரவுசெலவுத்திட்டம் 3 ஆவது முறையாகவும் தோல்வி – உள்ளுராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்டம் காண்கிறதா? தேசிய… The post முக்கிய செய்தி: ஹிக்கடுவ நகர சபையில் NPP-க்கு பின்னடைவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 3:12 pm

தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்தில் கஜமுகாசுர சங்கார உற்சவம் பக்திபூர்வமாக நடைபெற்றது!

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கஜமுகாசுர சங்கார உற்சவம் நேற்றைய தினம் (புதன்கிழமை) மிக… The post தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்தில் கஜமுகாசுர சங்கார உற்சவம் பக்திபூர்வமாக நடைபெற்றது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 3:01 pm

ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!

சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி). வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே 'உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும்' எனக் கூறி தடை போட்டுவிடுகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அந்தச் சமயத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள். உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன, உபேந்திராவின் உண்மையான முகம் என்ன என்பதுதான் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த 'ரெட்ட தல' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! ஸ்டைலான உடல்மொழி, காதலியின் பணத்தாசையை நினைத்து உடைந்து போகும் இடம், வில்லன் முகம் காட்டும் இடம் என இரட்டை வேடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய். ஆனால், அந்த அலட்டல் நடிப்பில் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய அருண் விஜய்யே தென்படுகிறார். அதீத நடிப்பையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பணத்தின் மீது பேராசை கொண்டவராக வரும் நாயகி சித்தி இத்நானி இந்த 'கிரே ஷேட்' பாத்திரத்தில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். வழக்கமான கதாபாத்திரத்தில் ஜான் விஜய், செயற்கையான உடல்மொழி, அதைவிடச் செயற்கையான வசன ஏற்ற இறக்கங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் என ஏமாற்றமே தருகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?! லாங் ஷாட்களாலும், ஆர்ப்பாட்டமில்லாமல் நம் ரசனையைக் கவரும் தனித்துவமான லைட்டிங்காலும் படத்திற்கு நல்லதொரு திரைமொழியை அமைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரிக்கோல் கட்களின் கூர்மையைக் கவனிக்கத் தவறியதனால் 2 மணி நேரத்திற்குள்ளிருந்தாலும் நீண்ட நேரம் பார்த்த அயர்ச்சியை உண்டாக்குகிறது படம். ஆக்ஷன் காட்சிகள் நல்லதொரு தரத்திலிருந்தாலும், அதனை வெளிச்சமிட்டுக் காட்ட வீரியமான காட்சிகள் இல்லாததால், தாக்கம் உண்டாக்காமல் மறைந்து போகின்றன. ரெட்ட தல விமர்சனம் | Retta thala review இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 'கண்ணம்மா' பாடலில் வைப் வால்யூமை ஏற்றியிருந்தாலும் படத்துக்கு அது அநாவசியமே! க்ளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசையில் மட்டும் சர்ப்ரைஸ் செய்பவர், மற்ற இடங்களிலும் பளிச்சிடும் புதுமை 'கீ' களை அழுத்தாதது மைனஸ்! இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இந்தச் சுவாரஸ்ய புள்ளியை வைத்து அடுத்தடுத்து கட்டமைக்கப்பட வேண்டிய பரபர தருணங்கள் திரைக்கதை பக்கங்களில் காணாமல் போனதுதான் ஏமாற்றமே!  Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது. ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்... ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்! ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் 'டாடா, பை பை' என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே இல்லாமல் போவது மற்றுமொரு பெரிய மைனஸ்! ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களைக் கொண்டு வந்திருக்கும் ஐடியாவுக்கு லைக்ஸ்... ஆனால், அதன் அதீத பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமே! நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த 'ரெட்ட தல'-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை. இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்! - அருண் விஜய் ஷேரிங்ஸ்

விகடன் 25 Dec 2025 2:56 pm

``கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும் - பினராயி விஜயன்

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல் மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். தனியார் பள்ளிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை விடவும் கூட சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நடந்த இத்தகைய தாக்குதல்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில், ``உத்தரப் பிரதேச அரசு கிறிஸ்துமஸ் திருநாளின் விடுமுறையை ரத்து செய்து, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளைக் கொண்டாட கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய, நடவடிக்கைகள் அனைத்தும் கிறிஸ்துமஸ் திருநாளின் முக்கியத்துவத்தை குறைக்கும் முயற்சிகள் ஆகும். கேரளம் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து விடுபட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன. மாநிலத்தின் தபால் நிலையங்களில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில், பா.ஜ.க-வுடன் தொடர்புடைய பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதங்களை பாடவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி இதற்கு, எதிர்ப்புகள் அதிகரித்ததால் பணியாளர்கள் நடத்த திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை திருவனந்தபுரம் தபால் நிலையத்தின் தலைமை அதிகாரி, ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன், பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட குழுவினர் மீது சங் பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதல்களை பா.ஜ.க தலைவர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். சில தனியார் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சிலர் அழுத்தம் கொடுத்து மிரட்டுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அது குறித்து அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. இவை உலகம் முழுவதும் எதிரொலிக்கும் அமைதி மற்றும் மனிதநேயச் செய்தியை மழுங்கடிக்கும் நோக்கம் கொண்டவை. அரசியலமைப்புச் சுதந்திரங்களையும், கேரளாவின் பன்மைத்துவ நெறிமுறைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது. கொண்டாட்டங்களைத் தடுப்பவர்கள் மீதும், மதப் பாகுபாட்டில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி மதச்சார்பின்மை மற்றும் சகமனித வாழ்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் கேரளா உறுதியாக எதிர்க்கும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

விகடன் 25 Dec 2025 2:55 pm

PM Modi Attends Christmas Service in Delhi

Prime Minister Narendra Modi on Thursday (December 25, 2025) attended a Christmas morning service at the Cathedral Church of the

சென்னைஓன்லைனி 25 Dec 2025 2:44 pm

ஓசூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் சிக்கல்- முடியாது, முடியாது- விவசாயிகள் போர்க்கொடி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் வெடித்திருக்கிறது.

சமயம் 25 Dec 2025 2:42 pm

Calm Returns to Violence-Hit Karbi Anglong

An uneasy calm continued in the violence-hit areas of Assam’s West Karbi Anglong district, with no new incidents reported, officials

சென்னைஓன்லைனி 25 Dec 2025 2:34 pm

எல்விஎம்-3 திட்டம் வெற்றி: இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல் –பிரதமர் மோடி

புதுடெல்லி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை பொறுத்தி விண்ணில் ஏவி வருகிறது. இந்தநிலையில், அதிக எடை கொண்ட அதாவது 6 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முறையாக இஸ்ரோ விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி […]

அதிரடி 25 Dec 2025 2:30 pm

Revanth Reddy Announces Kodangal Development Plans

Telangana Chief Minister Revanth Reddy on Wednesday announced big development plans for Kodangal and special funds for gram panchayats. He

சென்னைஓன்லைனி 25 Dec 2025 2:20 pm

Christmas Carol Clash Injures Several in Kerala

Several people were injured after a fight broke out between two Christmas carol groups in the Charummoodu–Nooranad area of Kerala’s

சென்னைஓன்லைனி 25 Dec 2025 2:12 pm

கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!

நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, 'மதி' என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவார். அப்படிப்பட்டவர்கள் சந்திர பரிகாரத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நல்ல மனநலமும் வாழ்வில் செழிப்பும் பெறலாம். அப்படிப்பட்ட ஒருதலம்தான் கரூர் அருகில் இருக்கும் சோமூர். கரூர் மாவட்டத்தில், கரூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில்-காவிரிக்கும், அமராவதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது சோமூர். இங்குள்ள சோமேஸ்வரர் ஆலயம் 1,100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். இங்கே அருள்பாலிக்கும் சோமேஸ்வரர், மனம் மற்றும் மூளை தொடர்பான பிணிகள் நீங்கிட வரம் தரும் அருள்கிறார் என்கிறார்கள். சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில் ஒருமுறை குரு அபவாதத்துக்கு ஆளாகி சாபம் பெற்ற சந்திரன் தேவகுருவின் சாபம் பெற்றான். அதனால் அவன் அழகு தேயத் தொடங்கியது. சந்திரன் தன் ஆணவம் நீங்கினான். தன் தவற்றுக்குப் பரிகாரம் தேடினான். தவற்றை உணர்ந்ததால் மனம் இறங்கிய குருபகவான் அப்போது அவன் முன் தோன்றி பூ உலகில் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்று புனித நீராடி, மலர்களால் பகவானை அர்ச்சித்து வழிபட்டால் சாபம் நீங்கும்’’ என்று எடுத்துரைத்தார். சந்திரனும் பூலோகம் வந்து அமராவதி ஆற்றின் கரையில் கோயில் கொண்டிருந்த ஈசனை வழிபட்டான். பூரண பக்தி காரணமாகக் காட்சிகொடுத்த ஈசன் சந்திரனின் சாபம் நீக்கி அருள்புரிந்தார். சந்திரனுக்கு சோமன் என்கிற பெயரும் உண்டு. எனவே சந்திரனின் சாபம் தீர்ந்த தலம் என்பதால் சோமூர் என்று இந்தத் தலத்துக்கும் சந்திரனுக்கு அருள் செய்த ஈசன் என்பதால் சோமேஸ்வரர் என்று ஈசனுக்கும் திருநாமம் உண்டாயிற்று. அன்றுமுதல் இந்த ஈசனை வழிபடுபவர்களுக்கு சந்திர தோஷங்கள் தீர்வது சத்தியமாயிற்று என்கிறது தலபுராணம். இந்த சோமேஸ்வரர் ஆலயம் சோழர் காலத்தில் கட்டப் பட்டது. பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் கருவறை சிறியதாகவும், அதையடுத்து அமைந்துள்ள அர்த்த மண்டபம் பெரியதாகவும் இருக்கும். ஆனால், இங்கே அர்த்தமண்டபம் சிறியதாகவும், கருவறை மண்டபம் பெரியதாகவும் அமைந்துள்ளது. சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்க ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது இந்த ஆலயம். சந்திரன் வழிபட்டு அருள்பெற்றதால் சந்திர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வந்து ஸ்வாமியை மனதார வழிபட்டால், மனநிலை பாதிப்புகள், மூளை தொடர்பான பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மட்டுமன்றி திருமணத் தடை நீங்கவும் குழந்தை வரம் கிடைக்கவும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். சோமேஸ்வரர் அருளால் அவர்களின் வேண்டுதல்கள் விரைவில் பலிக்கின்றன. பரணர் எழுதிய 'பரணர் காட்டிய பாதை’ என்ற கருவூர் புராணத்தில் இக்கோயிலைப் பற்றியும் பாடப்பட்டுள்ளது. முற்காலத்தில் மனோன்மணி அம்பிகைக்குத் தனிச் சந்நிதி இருந்திருக்கவேண்டும். காலப் போக்கில் அது சிதிலமுற்றிருக்கலாம் என்கிறார்கள் பக்தர்கள். கோயிலுக்கு அருகில், மண்ணில் புதைந்திருந்த சப்தமாதர் சிலைகள் சிதிலமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மூல ஸ்தானத்தின் தெற்குப்புறத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலையும் சிதிலமடைந்துள்ளது. தண்டாயுதபாணி மூர்த்தத்தையும் இங்கே தரிசிக்கலாம். திருக்கோயிலுக்கு முன்பு நந்திசிலை-பலிபீடம் உள்ளன. அர்த்தமண்டபத்தில் ஜய-விஜயர்கள் துவார பாலகர்களாகக் காட்சி தருகிறார்கள். இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் `இந்தக் கோயில் மதுரை கொண்ட கோபரகேசரி முதலாம் பராந்தகச் சோழனின் ஆறாவது ஆட்சியாண்டுக்கு முந்தையது’ என்ற தகவலை அறிய முடிகிறது. ஆக, தஞ்சை பெரியகோயில் அமைவதற்கு முன்னதாக... அதாவது சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று புலனாகிறது. சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில் விநாயகர் கோயிலின் தோற்ற அமைப்பும் கட்டட பாணியும் இக்கோயில் பிற்காலச் சோழர்களின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. அற்புதமான இந்தச் சோழர் காலத்துச் சிவாலயத்தை நீங்களும் குடும்பத்துடன் சென்று தரிசித்து வாருங்கள். மனநிறைவும் மகிழ்ச்சியும் பெருகும். சந்திரனுக்கு அருள்பாலித்த சோமேஸ்வரர், உங்களுக்கும் சந்தோஷ வரங்களை வாரி வழங்குவார்.

விகடன் 25 Dec 2025 1:48 pm

சினிமாவில் சாதியரீதியான படங்களும் தேவை –சண்முகபாண்டியன் ஸ்பீச்!

சென்னை :சென்னையில் நடைபெற்ற ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் திரையரங்க வருகை நிகழ்ச்சியில் நடிகர் சண்முகபாண்டியன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கிராமிய பின்னணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் சாதி பாகுபாடு பார்த்து நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த சண்முகபாண்டியன், தனது அனுபவத்தின் அடிப்படையில் அத்தகைய பாகுபாடு […]

டினேசுவடு 25 Dec 2025 1:44 pm

Two Panchayat Secretaries Killed in Road Accident

Charles Martin, leader of the Latchiya Jananayaga Katchi (LJK) and brother-in-law of TVK leader Aadhav Arjuna, on Thursday said he

சென்னைஓன்லைனி 25 Dec 2025 1:44 pm

தென்காசி: அழிவின் விளிம்பில் குள்ளநரிகள்; பாதுகாக்க முயற்சி எடுக்கும் வனத்துறை!

சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் குள்ளநரிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் நிலையில், தென்காசி வனக்கோட்டம் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அழிவின் விளிம்பில் குள்ளநரி: வனஉயிரின் பாதுகாப்பு சட்டம் 1972-ன் அட்டவணை 1-ல் இடம்பெற்று, புலி மற்றும் சிறுத்தை போன்ற உயர் பாதுகாப்பு அந்தஸ்து பெற்றிருந்தாலும், குள்ளநரிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. வாழ்விட இழப்பு, நகர்மயமாக்கல், தெருநாய்களுடனான போட்டி, நோய்ப் பரவல் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவை இவற்றின் எண்ணிக்கையை ஆபத்தான அளவுக்குக் குறைத்துள்ளன. சூழலியல் முக்கியத்துவம்: மாவட்ட வனஅலுவலர் ரா.ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கையின்படி, குள்ளநரி ஒரு முக்கிய துப்புரவாளனாகவும், உணவுச் சங்கிலியின் சமநிலையைப் பேணுபவராகவும் செயல்படுகிறது. மயில்கள், எலிகள், பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப் பரவலைத் தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. குள்ளநரி மாணவர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டம்: விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பள்ளிகளில் கார்ட் அண்ணா/கார்ட் அக்கா திட்டத்தின் கீழ் வனக்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். கல்லூரிகளுக்கு வன அலுவலர்கள் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மாணவர்களின் நேரடிப் பங்களிப்பை உறுதி செய்ய, பறவைகள் கணக்கெடுப்பு, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு, குள்ளநரி கணக்கெடுப்பு போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். மரக்கன்றுகள் உற்பத்தி, மருத்துவத் தோட்டம் அமைத்தல் போன்ற நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்படும். Golden Jackal Ambassador திட்டம்: பள்ளி மற்றும் கல்லூரிகளில் Golden Jackal Ambassador (குள்ளநரி தூதுவர்கள்) திட்டம் செயல்படுத்தப்படும். கிராம வனக்குழுக்களின் பங்கு வலுப்படுத்தப்படும். காடு-சாலை சந்திப்புகளில் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகள் (Wildlife Crossing) அமைக்கப்படும். குள்ளநரி தெருநாய்களுக்கு தடுப்பூசி திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை, இறைச்சி கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அடுத்த தலைமுறைக்கான பொறுப்பு: பசுமையான சூழலும் சுத்தமான இயற்கையும் அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டிய சிறந்த பரிசு என்று மாவட்ட வனஅலுவலர் ராஜ்மோகன் வலியுறுத்தியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆரோக்கியமான உலகை உருவாக்க முடியும். பாதிக்கப்பட்ட குள்ளநரிகளை பாதுகாப்பான சூழல் பகுதிகளில் மீள்விடுதல், கிராமப்புற மக்கள் மூலம் தகவல் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விகடன் 25 Dec 2025 1:42 pm

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி: வன்னியர் வாக்கு வங்கி வியூகம்… அதிமுக, திமுக போடும் 2026 தேர்தல் கணக்கு!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் யார் வெற்றி வாகை சூடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு வன்னியர்களின் வாக்குகள் கணிசமாக இருப்பதால் திராவிட கட்சிகள் வியூகங்கள் வகுத்து வருகின்றன.

சமயம் 25 Dec 2025 1:41 pm

நல்லூர் சிவன் கோவில் மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – நல்லூர், ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தானத்தின் (சிவன் கோவில்) வருடாந்த மஹோற்சவ பெருவிழா,… The post நல்லூர் சிவன் கோவில் மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 1:31 pm

தைவானைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்

தென்கிழக்கு தைவானில் உள்ள கடலோர மாவட்டமான தைடுங்கில் 24ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்களும் அதிர்ந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 11.9 கிலோமீட்டர் (7.39 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தைவான் அதிகாரிகள் தெரிவித்தனர். 2016 ஆம் ஆண்டு தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்தனர், 1999 […]

அதிரடி 25 Dec 2025 1:30 pm

Student Bus Accident in Telangana, Nine Dead in Tamil Nadu

A bus carrying about 60 students overturned after an accident in Telangana’s Rangareddy district, police said. Several students were injured

சென்னைஓன்லைனி 25 Dec 2025 1:28 pm

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: காவற்துறையினர் துரத்திய கார் கடைக்குள் புகுந்து விபத்து –மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் காவற்துறையினரின் கட்டளையை மீறி அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று தையல் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில்… The post யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: காவற்துறையினர் துரத்திய கார் கடைக்குள் புகுந்து விபத்து – மூவர் படுகாயம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 1:11 pm

ஜோ ரூட்டை போல ஆடு – ப்ரூக்குக்கு அட்வைஸ் கொடுத்த பாண்டிங்!

டெல்லி : ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் தனது திறமைக்கு தானே குறைவாக மதிப்பிட்டு (selling himself short) ஆடுவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். ப்ரூக்கை நீண்டகாலமாக ரசித்து வரும் பாண்டிங், ஆஸ்திரேலிய மண்ணில் அவர் தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.இங்கிலாந்தின் ஆஷஸ் தொடர் ஆட்டம் போலவே ப்ரூக்கின் தொடக்கமும் இருந்ததாக பாண்டிங் குறிப்பிட்டார். சில தருணங்களில் உயர்தரமான […]

டினேசுவடு 25 Dec 2025 1:02 pm

BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது அரோராவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். துஷாரை நீ லவ் பண்றீயா, அப்புறம் ஏன் துஷார் துஷார்ன்னு பேசிட்டு இருக்க. ஒரே ஒரு கேள்வி தான். இருக்கா? இல்லையா?... இனிமேல் இந்த விஷயத்தை பத்தி வெளிய வந்து பேசிப்போம். இப்போதைக்கு மனசுல இருந்து இதை அழிச்சிரு என்று அரோராவின் நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்

விகடன் 25 Dec 2025 1:00 pm

Nine Killed in Cuddalore Road Accident

Nine people, including four women, were killed and at least 10 others were injured in a road accident in Tamil

சென்னைஓன்லைனி 25 Dec 2025 12:54 pm

யாழில் அதிரடி: நத்தார் கொண்டாட்டத்திற்காக சட்டவிரோதமாக பலியாக்க இருந்த 15 மாடுகள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு, சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படவிருந்த கன்றுகள் உட்பட 15 மாடுகளை யாழ்ப்பாண மாநகர… The post யாழில் அதிரடி: நத்தார் கொண்டாட்டத்திற்காக சட்டவிரோதமாக பலியாக்க இருந்த 15 மாடுகள் மீட்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 12:50 pm

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு நள்ளிரவுத் திருப்பலி! ✨

மனிதநேயத்தை உலகிற்கு பறைசாற்றிய இயேசு பிரானின் பிறப்பை சிறப்பிக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா இன்று மன்னார் மண்ணில் மிகுந்த… The post மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு நள்ளிரவுத் திருப்பலி! ✨ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 12:40 pm

CUMTA Proposes Unified Road Design Code

What makes an ideal road? Can one road design code be followed across the entire Chennai metropolitan area? The Chennai

சென்னைஓன்லைனி 25 Dec 2025 12:35 pm

திருகோணமலை சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து; பலர் காயம்

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (25) காலை 7.15 மணியளவில் சேருநுவர, மகிந்தபுர சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற சமயத்தில் பேருந்தில் சுமார் 21 பயணிகள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலை மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 25 Dec 2025 12:30 pm

யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற கார் விபத்து –மூவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி சென்ற கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் , ஆபத்தான முறையில் காரினை செலுத்தி வந்த நபரை வழிமறித்துள்ளனர். பொலிசாரின் கட்டளையை மீறி காரினை சாரதி தொடர்ந்து செலுத்தி சென்றமையால் , குறித்த காரை பொலிஸார் துரத்தி சென்றனர். அதன் போது கார் கட்டுப்பாட்டை இழந்து நவாலி […]

அதிரடி 25 Dec 2025 12:28 pm

நல்லூர் சிவன் கோவில் மகோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பம்!

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (25) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 03ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். படங்கள் – ஐ. சிவசாந்தன்

அதிரடி 25 Dec 2025 12:23 pm

`உன் சிரிப்பை காணமுடியவில்லை' - ஜாக்குலினுக்கு 'லவ்நெஸ்ட்'அமெரிக்க சொகுசு பங்களா பரிசளித்த சுகேஷ்?

டெல்லி தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.100 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது சிறையில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார். அதோடு சிறைக்கு மாடல் அழகிகள், நடிகைகளை வரவைத்து பரிசுப்பொருள்களை வழங்கினார். பரிசுப்பொருள்களை பெற்றதில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலினுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக கொடுத்துள்ளார். இதனால் ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு குற்றவாளியாக சேர்த்திருக்கிறது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், டெல்லி போலீஸார் ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் பல முறை விசாரணை நடத்தி இருக்கின்றனர். சிறையில் இருந்தாலும் சுகேஷ் அடிக்கடி ஜாக்குலினுக்கு எதாவது பரிசு கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அதோடு சிறையில் இருந்தவாறு ஜாக்குலினுக்கு கடிதமும் எழுதிக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு சொகுசு படகு போன்ற பல பரிசுபொருள்களை ஜாக்குலினுக்கு சுகேஷ் கொடுத்துள்ளார். அதோடு சுகேஷ் பரோலில் வந்திருந்தபோது அவரை தனி விமானத்தில் சென்னை சென்று பார்த்துவிட்டு வந்தார் ஜாக்குலின். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு சிறப்பு பரிசு ஒன்றை சுகேஷ் வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக சுகேஷ் ஜாக்குலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ''கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பேபி. இது எப்போதும் உன்னுடனான விசேஷமான தருணங்கள் மற்றும் அனுபவங்களை மட்டுமே எனக்கு நினைவூட்டும் பண்டிகையாகும். இது எப்போதும் நிஜமாகவே மறக்க முடியாதது. இந்த சிறப்பான நாளில் உனது சிரிப்பை என்னால் காண முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பேபி, இந்த அழகான, புகழ்பெற்ற நாளில், பெவர்லி ஹில்ஸில் உனது புதிய, நமது புதிய வீடான தி லவ் நெஸ்ட் ஐ உனக்கு பரிசளிக்கிறேன். ஆமாம் அன்பே, உனக்காகவும், நமக்காகவும் நான் கட்டிக் கொடுத்த அதே வீடு. பேபி, நான் உனக்காக வீட்டைக் கட்டி முடித்தேன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். இன்று கிறிஸ்துமஸ் தினத்தன்று தருகிறேன். பேபி, நாம் முன்பு திட்டமிட்டதை விட இது பெரியது மற்றும் சிறந்தது. வீட்டிற்கு வெளியில் கோல்ப் மைதானம் ஒன்றும் இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். பெவர்லி ஹில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் ஆடம்பர நகரமாகும். சுகேஷ் இது போன்று கடிதம் எழுதுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று ஜாக்குலின் டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

விகடன் 25 Dec 2025 12:15 pm

PIL Challenges Madras High Court Collegium

Days after the Madras High Court recommended 13 advocates for appointment as judges, a public interest writ petition has been

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:57 am

யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற கார் விபத்து - மூவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி சென்ற கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் , ஆபத்தான முறையில் காரினை செலுத்தி வந்த நபரை வழிமறித்துள்ளனர். பொலிசாரின் கட்டளையை மீறி காரினை சாரதி தொடர்ந்து செலுத்தி சென்றமையால் , குறித்த காரை பொலிஸார் துரத்தி சென்றனர். அதன் போது கார் கட்டுப்பாட்டை இழந்து நவாலி மூத்தநயினர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடை தொகுதி ஒன்றிற்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானது. அதில் தையல் கடை ஒன்றினுள் நின்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் , அங்கிருந்தவர்களால் அவர்கள் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூவரில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து சம்பவம் தொடர்பில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பதிவு 25 Dec 2025 11:57 am

விரைவில் அ.தி.மு.கவில் இருந்து முக்கிய புள்ளிகள் த.வெ.கவிற்கு வருவார்கள் –செங்கோட்டையன்!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உயர்நிலை குழு ஒருங்கிணைப்பாளரும் அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலு நாச்சியார் நினைவு தினத்தை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தமிழக அரசியலில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று கணித்து பேசினார். அதிமுகவில் அதிருப்தியில் […]

டினேசுவடு 25 Dec 2025 11:54 am

திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து - இமைக்கும் நொடியில் அரங்கேறிய அசம்பாவிதம்!

மரண ஓலங்களால் அதிர்ந்த எழுத்தூர் திருச்சியில் இருந்து 24.12.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து (SETC), திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.30 மணியளவில் ராமநத்தம் அடுத்திருக்கும் எழுத்தூரைக் கடந்து கொண்டிருந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடியது. அதற்கடுத்த விநாடி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையைத் தாண்டி, சென்னை – திருச்சி சாலையில் பாய்ந்தது. விபத்து ஏற்படுத்திய அரசுப்பேருந்து அதே நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு கார்களில் மோதிய பேருந்து, சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது. அப்போது பேருந்தில் இருந்தவர்கள் மரண ஓலத்துடன் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியேற ஆரம்பித்தனர். நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தில், இரண்டு கார்களும் அப்பளமாக நொறுங்கின. விபத்தில் சிக்கியவர்கள் எழுப்பிய மரண ஓலங்களால் எழுத்தூர் பகுதியே அதிர்ந்தது. அதைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பேருந்தில் இருந்தவர்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்ததே தவிர, நொறுங்கிக் கிடந்த காருக்குள் இருந்தவர்களை மீட்க முடியவில்லை. குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழப்பு அதனால் போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கார்களுக்குள் இருந்தவர்களில் ஏழு பேர், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். அதையடுத்து மிக மோசமான காயங்களுடன் உயிருடன் இருந்த 5 பேர் மீட்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் ஒரு முதியவரும், குழந்தையும் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது. மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இரண்டு கார்களில் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். அதில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், மற்ற மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.   விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்த மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதுடன், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். கார்களின் பதிவெண்களை வைத்து உயிரிழந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முன்பக்க டயர் வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அதற்கான காரணம்தான் தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. அரசு, ஓட்டுநர்களின் அலட்சியமே காரணம் ``பேருந்தோ அல்லது காரோ அந்த டயர்களின் அளவுக்கு அனுமதிக்கப்பட்ட வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஆனால் எந்த அரசுப் பேருந்து ஓட்டுநரும் அதுகுறித்துக் கவலைப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக இந்த அரசு விரைவுப் பேருந்துகள் (SETC), இரவு நேரங்களில் ரேஸில் செல்வதைப் போல பறக்கின்றன. மேலும் பேருந்துகளின் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதற்காக புதிய டயர்களைப் போடாமல், மறுசுழற்சி செய்யப்பட்ட டயர்களை (Retreaded Tyres) போடுவதும் இப்படியான விபத்துக்கு காரணம். இப்படியான தொழில்நுட்பக் காரணங்களுடன், அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களின் அலட்சியம்தான் அனைத்தையும் விட முக்கியமான காரணம் என்று குற்றம் சுமத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள். மருத்துவமனயில் அமைச்சர்கள் சி.வெ.கணேசன், சிவசங்கரன் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற அமைச்சர்கள் சிவசங்கரன் மற்றும் சி.வெ.கணேசன், விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டனர். அப்போது விபத்து குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட அவர்கள், மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்த முழு அறிக்கையையும் கேட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரன் கூறியிருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

விகடன் 25 Dec 2025 11:50 am

Chennai Police Deploy 8,000 for Christmas Security

The Greater Chennai City Police have made special security arrangements by deploying 8,000 police officers and personnel to ensure people

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:46 am

விபத்தில் 9 பேர் உயிரிழந்ததற்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும் –அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:35 am

பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து

இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:33 am

நெல்லை: பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு 14 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி கடந்த 8-ம் வகுப்பு படித்த போது நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். நெல்லை நீதிமன்றம் அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அச்சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது தாயார், அவரை உள்ளூரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அச்சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மருத்துவமனையில் இருந்து நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் தந்தையே சிறுமியை சீரழித்தது தெரியவந்தது. தந்தை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுமியின் தந்தை மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சிறுமிக்கு குறை மாதத்தில் பச்சிளம் குழந்தை பிறந்தது. மறுநாளே அக்குழந்தை உயிரிழந்தது. நெல்லை நீதிமன்ற வளாகம் இந்த வழக்கில் அறிவியல் பூர்வ ஆதாரத்தை திரட்ட குழந்தையின் உடலில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. கடந்த அக்டோபர் 30-ம் தேதி வெளியான முடிவில் சிறுமியின் கர்பத்திற்கு தந்தைதான் காரணம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. முதலில் குற்றத்தை மறைத்த தந்தை டி.என்.ஏ பரிசோதனை மூலம் சிக்கினார். நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் சிறுமியின் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். நீதிபதி சுரேஷ் குமார் தனது 76 பக்க தீர்ப்பில், “இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு. தந்தை என்பவர் குழந்தைக்குப் பாதுகாப்பாக அரணாக இருக்கக்கூடியவர். இந்த வழக்கில் டி.என்.ஏ பரிசோதனை முடிவு மிக முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. சிறுமி அளித்த வாக்குமூலம் வேதனைக்குரியது. நெல்லை நீதிமன்ற வளாகம் இது போன்ற கொடூர குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு எச்சரிக்கை அளிக்க முடியும். குழந்தை பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தீர்ப்பு அவசியமாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள முதல் தூக்கு தண்டனை தீர்ப்பு இதுதான். அதே நேரத்தில் நீதிபதி சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்புகளில் இது மூன்றாவது தூக்கு தண்டனை தீர்ப்பாகும்.

விகடன் 25 Dec 2025 11:32 am

கர்நாடக மாநிலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம்

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:31 am

கனடாவில் இந்திய பெண் படுகொலை; காதலனுக்கு பிடியாணை!

கனடாவின் டொரண்டோ நகரில் வசித்து வந்த ஹிமான்ஷி குரானா என்ற 30 வயதுடைய இந்தியப் பெண், கடந்த சனிக்கிழமை உடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது காதலரான 32 வயதுடைய அப்துல் கபூரி என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கனடா முழுவதும் பிடியாணை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:40 அளவில், ஹிமான்ஷி குரானா காணாமல் போயுள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சனிக்கிழமை காலை 6:30 அளவில் ஸ்ட்ராச்சன் […]

அதிரடி 25 Dec 2025 11:30 am

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் ஜனவரி 18 ஆம் தேதி வரை நடைபெறும்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:29 am

யாழில். நத்தார் கொண்டாட்டத்திற்காக பலியாக்க இருந்த மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் நத்தார் கொண்டாட்டத்திற்காக இறைச்சியாக்கும் நோக்குடன் கொல்களத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகள் யாழ்ப்பாண மாநகர சபையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள கொல்களத்தில் காது பட்டிகள் இன்றியும், பொது சுகாதார பரிசோதகர்களின் அனுமதியின்றியும் இறைச்சியாக்கும் நோக்குடன் மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கொல்களத்தினை முற்றுகையிட்டு , கன்றுகள் மற்றும் மாடுகளை மீட்டனர். அனுமதியின்றி மாடுகளை […]

அதிரடி 25 Dec 2025 11:28 am

விழுப்புரத்தில் அரசு பேருந்து, கார் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாயார் பவுனு அம்மாளுக்கு (வயது 70) உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:28 am

சென்னையில் பனிமூட்டம் அதிகரிப்பு –மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:24 am

யாழில். நத்தார் ஆராதனை

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இம்முறை நத்தார் கொண்டாட்டங்களை தவிர்த்து , அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு திருச்சபைகள் கேட்டு கொண்டதற்கு இணங்க மிக எளிமையாக ஆராதனைகள் நடைபெற்று, மக்கள் எளிமையாக நத்தாரை கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் மரியன்னை தேவாலய நள்ளிரவு வழிபாட்டில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோரும் பங்கேற்றி இருந்தனர்.

அதிரடி 25 Dec 2025 11:22 am

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி கட்டாயம் –தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:21 am

கிறிஸ்துமஸ் பண்டிகை –தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆர்.சி.சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:20 am

லக்னோவில் ரூ.230 கோடி செலவில் அமைக்கப்பட்ட தேசிய நினைவிடம், அருங்காட்சியகம் –பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் ஒரு

சென்னைஓன்லைனி 25 Dec 2025 11:18 am

கர்நாடகா பேருந்து விபத்து : இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!

கர்நாடகா :மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே இன்று (டிசம்பர் 25, 2025) அதிகாலை 3 மணியளவில் பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது மோதியதில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து நிகழ்ந்ததும் அப்பகுதி மக்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை […]

டினேசுவடு 25 Dec 2025 11:11 am

தமிழக சட்டமன்ற தேர்தல்...காங்கிரஸுடன் கூட்டணி முயற்சியில் இறங்கியுள்ளதா தவெக?

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முயற்சியை வைக்க தவெக இறங்கிஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 25 Dec 2025 10:56 am

அசாமில் வன்முறை பதற்றம் : ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கம்.. கிறிஸ்துமஸ் பொருட்களை தீ வைத்ததால் பரபரப்பு!

நல்பாரி மாவட்டத்தில் கடைகளில் இருந்த கிறிஸ்துமஸ் பொருட்களை அடித்து நொறுக்கி, தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 25 Dec 2025 10:53 am

சவூதி தீவில் சொகுசு வில்லாக்களை வாங்கிய ரொனால்டோ - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கிய ரொனால்டோ, ரியல் மேட்ரிட் போன்ற அணிகளில் விளையாடி தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் நடைபெற்ற சவூதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கிக் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. மிகவும் கடினமான இந்த கிக்கை, 40 வயதில் சுலபமாக செய்து கால்பந்தின் ஜாம்பவான் என்பதை ரொனால்டோ நிரூபித்திருந்தார். இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள தீவு ஒன்றில் ரொனால்டோவும், அவரின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் இணைந்து இரண்டு வில்லாக்களை வாங்கியிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சவூதி அரேபியாவின் கடற்கரையிலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, நுஜுமா என்ற தீவு. ரொனால்டோ- ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இந்த தீவில் தான் இரண்டு சொகுசு வில்லாக்களை வாக்கியிருக்கின்றனர். சுற்றி கடல் நீர், பிரகாசமான பவளப் பாறைகள் மற்றும் பரந்து விரிந்த வெண்மையான மணல்கள் இந்தத் தீவின் முக்கிய அடையாளங்களாக உள்ளன. இந்த நுஜுமா தீவில் மொத்தம் 19 வில்லாக்கள் உள்ளன. கடற்கரை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகள் முதல் உள்ளூர் கைவினைப் பொருள்களை வரை எல்லாம் இந்த தீவில் இருக்கின்றன.

விகடன் 25 Dec 2025 10:49 am

யாழில். நத்தார் ஆராதனை

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இம்முறை நத்தார் கொண்டாட்டங்களை தவிர்த்து , அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு திருச்சபைகள் கேட்டு கொண்டதற்கு இணங்க மிக எளிமையாக ஆராதனைகள் நடைபெற்று, மக்கள் எளிமையாக நத்தாரை கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் மரியன்னை தேவாலய நள்ளிரவு வழிபாட்டில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோரும் பங்கேற்றி இருந்தனர்.

பதிவு 25 Dec 2025 10:49 am

ரூ.200 கோடியை விட்டுவிட்டு ரூ.2 லட்சம் கோடி சம்பாதிக்க வருகிறார்- விஜயை சீண்டும் கருணாஸ்!

திருவள்ளூர் : மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேசினார். அங்கு அவர் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். விஜய் சினிமாவில் ரூ.200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து ரூ.2 லட்சம் கோடி சம்பாதிக்க வருவதாக சாடினார். இது விஜய்யின் அரசியல் நுழைவுக்கு எதிரான மறைமுக விமர்சனமாக பார்க்கப்படுகிறது. விஜய் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்தார். மேலும் கருணாஸ், “மக்களுக்கு ஒரு […]

டினேசுவடு 25 Dec 2025 10:33 am

கம்போடியா –தாய்லாந்து மோதலில் பிரம்மாண்ட விஷ்ணு சிலை தகர்ப்பு! வலுக்கும் கண்டனம்!

கம்போடிய எல்லையில் விஷ்ணு சிலை தகர்க்கப்பட்டதற்கு கண்டனம் வலுக்கிறது. இந்தச் செயலுக்கு தாய்லாந்து ராணுவமே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடான தாய்லாந்துக்கும் இடையே கடும் மோதல் நீடிக்கிறது. தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லை பிரச்னை இருந்துவரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும் எல்லைப்புற நிலத்தில் உள்ள சில இடங்களுக்கு பரஸ்பரம் உரிமை கோரி […]

அதிரடி 25 Dec 2025 10:30 am

யாழில். நத்தார் கொண்டாட்டத்திற்காக பலியாக்க இருந்த மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் நத்தார் கொண்டாட்டத்திற்காக இறைச்சியாக்கும் நோக்குடன் கொல்களத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகள் யாழ்ப்பாண மாநகர சபையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள கொல்களத்தில் காது பட்டிகள் இன்றியும், பொது சுகாதார பரிசோதகர்களின் அனுமதியின்றியும் இறைச்சியாக்கும் நோக்குடன் மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கொல்களத்தினை முற்றுகையிட்டு , கன்றுகள் மற்றும் மாடுகளை மீட்டனர். அனுமதியின்றி மாடுகளை இறைச்சியாக்க முற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபையினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு 25 Dec 2025 10:30 am

பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை… டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் பங்கேற்பு!

டெல்லியில் உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றது கவனம் பெற்றிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சமயம் 25 Dec 2025 10:20 am

செம்மொழி பூங்கா செல்ல இனி கியூவில் நிற்க வேண்டாம்...வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்யலாம்!

செம்மொழி பூங்கா செல்ல இனி கியூவில் நிற்க வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

சமயம் 25 Dec 2025 10:16 am

மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்…பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு!

டெல்லி :உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25, 2025) கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, பிரார்த்தனைகளில் ஈடுபட்டு, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “அனைவருக்கும் அமைதி, கருணை மற்றும் […]

டினேசுவடு 25 Dec 2025 10:10 am

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்…அந்தர் பல்டி அடித்த நபர்!

கானா :கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்ற நபர் தன்னைத் தானே தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, 2025 டிசம்பர் 25-ஆம் தேதி (கிறிஸ்துமஸ் தினம்) முதல் கடும் மழை மற்றும் ராட்சத வெள்ளத்தால் உலகம் அழிந்துவிடும் என்று கணித்து அறிவித்தார். இந்த அறிவிப்பு டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று, உலகளவில் பெரும் பரபரப்பையும் கேலியையும் ஏற்படுத்தியது. எபோ நோவா கூறியதாவது, கடவுள் தனக்கு தோன்றி […]

டினேசுவடு 25 Dec 2025 9:44 am

ஜேவிபி தலைமையகத்தில் சீனாவின் உயர்மட்டக் குழு- டில்வினுடன் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் நேற்று ஜே.வி.பி பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட ஜேவிபி தலைவர்களைச் சந்தித்துள்ளனர். பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீனத் தரப்பில் இந்தச் சந்திப்பில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சிப் பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான வாங் ஜூன்ஷெங், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கீ

புதினப்பலகை 25 Dec 2025 9:35 am

விவாகரத்து கேட்ட மனைவியை சாலையில் சுட்டுக்கொன்ற கணவன்! அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் கர்நாடகாவில் விவாகரத்து கேட்ட மனைவியை, சாலையில் வைத்து கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த 39 வயதான புவனேஷ்வரி என்பவர் பெங்களுருவில் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பாலமுருகன் (சேலம் மாவட்டம்) ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். புவனேஷ்வரி கணவர் பாலமுருகனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாலமுருகன் வேலை முடிந்து வீடு திரும்பிய மனைவி […]

அதிரடி 25 Dec 2025 9:30 am

13 ஆயிரம் கொள்கலன்கள் தேக்கம்- கொழும்பு துறைமுகத்தில் நெருக்கடி

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 13 ஆயிரம் கொள்கலன்களை அகற்றுவதற்கு உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்ட போதும், பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால் அனைத்து முனையங்களிலும் கிட்டத்தட்ட 13,000 கொள்கலன்கள் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன என்று சிறிலங்கா கப்பல் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் 13,000 க்கும் மேற்பட்ட இறக்குமதி கொள்கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைத்தில் குவிந்துள்ளன.

புதினப்பலகை 25 Dec 2025 9:17 am

கடும் பாதுகாப்புடன் காலி கோட்டையை ஆய்வு செய்த சீனக் குழுவினர்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng) காலி கோட்டையில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். வாங் ஜூன்ஷெங் தலைமையிலான சீனக் குழுவினர், நேற்றுக்காலை காலி கோட்டைக்குச் சென்று கோட்டைச் சுவர்களை ஆய்வு செய்தனர். பிரதி அமைச்சர் நளின் ஹேவகே மற்றும் பலர் இந்த பயணத்தின் போது

புதினப்பலகை 25 Dec 2025 8:47 am

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சமயம் 25 Dec 2025 8:37 am

துருக்கியில் விமான விபத்து! லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலி!

துருக்கியில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் விபத்தில் சிக்கியதில், லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். துருக்கி அரசுடன் உயர்மட்ட பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள லிபியா ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது அலி அஹமது அல்- ஹதாத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், தலைநகர் அங்காராவுக்குச் சென்றிருந்தனர். துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தவுடன், லிபியா அதிகாரிகள் அனைவரும் தனியார் விமானம் மூலம் அங்காராவில் இருந்து […]

அதிரடி 25 Dec 2025 8:30 am

26 ஆண்டுகளின் பின் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட 15 பேர் கொண்ட ஆசிய ரக்பி தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக ஆசிய ரக்பி சம்மேளனம் நேற்று (24) மாலை அறிவித்துள்ளது. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆசிய இளையோர் ரக்பி தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு மீண்டும் கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்கை இத்தொடரை நடத்தியிருந்தது. அன்று ஜீவன் குணதிலக்கவின் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி, மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. […]

அதிரடி 25 Dec 2025 7:53 am

பதுளை மாவட்டத்தில் 68% நிலப்பகுதி மண்சரிவு ஏற்படும் அபாயத்தில்

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி ஏதோ ஒரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை நிலவிய காலப்பகுதியில், பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார். இந்த மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை சுமார் 650 வீடுகள் அதி உயர் அபாய நிலைக்குள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி 25 Dec 2025 7:52 am

சென்னையில் இரண்டு மண்டலங்களில் குப்பை தனியார்மயமாக்கல் ரத்து-டெண்டர் விட மாநகராட்சி மீண்டும் முடிவு!

சென்னையில் குப்பை தனியார்மயமாக்கும் பணிகள் ரத்து செய்ப்பட்டதால் இந்த இரண்டு மண்டலங்களில் மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 25 Dec 2025 7:47 am

ஆண்டிப்பட்டி தொகுதியைக் குறி வைக்கும் அமமுக; NDA கூட்டணியில் நாங்களா? - கொதிக்கும் டிடிவி தினகரன்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய அவர், எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று வதந்திகள் பரவின. அதையெல்லாம் முறியடித்து எம்ஜிஆரைப் படுக்கவைத்துக் கொண்டே வெற்றி பெற வைத்தவர்கள் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள். அப்படிப்பட்ட ஊரில் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைப்படுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் சேர்ந்துள்ளோம் என வதந்தியைப் பரப்புகின்றனர். ஊடகங்கள் வதந்திகளை நம்பி சில செய்திகளை வெளியிடுவது வருத்தமளிக்கிறது. டிடிவி தினகரன் யாரோ கிளப்புகின்ற வதந்திகளை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம். கூட்டணி குறித்தும் இன்னும் அறிவிக்காதபோது கூட்டணி குறித்து வரும் வதந்திகளை தகவல் என்று செய்தியாக்குவது எங்களுடைய தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தக் கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நாங்கள்தான்; ஊடகங்கள் அல்ல. முக்கிய கட்சிகள் எங்களைக் கூட்டணிக்கு அழைத்து வருகின்றனர். தமிழக மக்களுக்கும், எங்களுக்கும் எது சிறந்ததோ அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்! - கூட்டணி குறித்து பியூஸ் கோயல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாராலும் வெற்றி பெற முடியாது. 2021 தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டாம் என்று நாங்கள் தீர்மானித்தோம். நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அவர்கள் (அதிமுக) ஆட்சிக்கு வரவில்லை. டிடிவி தினகரன் கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் அமமுகவின் கட்டமைப்பு பலமாக உள்ளது. கட்சியின் நிர்வாகிகள் கடின உழைப்பை அதற்கு செலுத்தியுள்ளனர். பல மாவட்டங்களில் எங்களுடைய வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. இந்த முறை எங்கள் கட்சியிலிருந்து எம்எல்ஏ-க்கள் சட்டமன்றத்திற்குள் செல்வார்கள். தை மாதத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம், எந்தக் கூட்டணி அமைந்தாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்தான் போட்டியிடுவார் என்று தெரிவித்தார். அண்ணாமலை நீண்டகால நண்பர்; அவரை சந்தித்ததில் அரசியல் இல்லை - டிடிவி தினகரன்

விகடன் 25 Dec 2025 7:34 am

‘விஜய் ஹசாரேவில்’.. 9 ஓவர்களை ஒயிட்களாக வீசிய அணிகள்: இறுதியில் 413 ரன்னை சேஸ் செய்து அசத்தல்!

விஜய் ஹசாரே டிராபி தொடரில், 413 ரன்களையும் சேஸ் செய்து ஒரு அணி வெற்றியைப் பெற்று, வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த அணி இருக்கும் பார்மை பார்த்தால், கோப்பை இவர்களுக்குதான் என பலரும் கூறி வருகிறார்கள்.

சமயம் 25 Dec 2025 7:30 am

ஊட்டி தலக்குந்தா பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை...பனியை காண படையெடுக்கும் மக்கள்!

ஊட்டி தலக்குந்தா பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கிருக்கும் உறை பனியை காண படையெடுக்கும் மக்களால் வனத்துறை இந்த முடிவை எடுத்து உள்ளது .

சமயம் 25 Dec 2025 7:18 am

வனத்துறை சார்பில் நாகம் செயலி விரைவில் அறிமுகம்...பாம்புகள் தொடர்பாக புகார் அளிக்கலாம்!

வனத்துறை சார்பில் நாகம் செயலி விரைவில் அறிமுகம்...பாம்புகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பயிற்சிஅளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 25 Dec 2025 7:01 am

ஹாதியை கொன்றது யூனுஸ் அரசு! சகோதரர் குற்றச்சாட்டால் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்!!

வங்கதேச தேர்தலை சீர்குலைக்க இடைக்கால பிரதமர் யூனுஸ் தலைமை மாணவர் தலைவர் ஹாதியை கொடூரமாகக் கொன்றதாக அவரது சகோரதர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சுடப்பட்டு, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18 ஆம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், வங்கதேசத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. அவரைத் தொடர்ந்து அந்தப் […]

அதிரடி 25 Dec 2025 6:57 am

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக் 10 சதவீதம் குறைவு!

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது .

சமயம் 25 Dec 2025 6:12 am

சென்னைக்கு ஆறாவது குடிநீர் நீர்த்தேக்கம்: திருப்போரூர் அருகே விரைவில் தொடக்கம்!

சென்னை மக்களின் தாகம் தீர்க்க ஆறாவது குடிநீர் நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகே விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 25 Dec 2025 5:49 am

வேளச்சேரியில் மினி பஸ் சேவையை இயக்க பயணிகள் கோரிக்கை!

வேளச்சேரியில் மினி பஸ் சேவையை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர் . இது தொடர்பாக பரிசீலனை செய்ய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

சமயம் 25 Dec 2025 5:32 am

கார்ட்டூன்: காந்திய சி(நி)ந்தனை..!

கார்ட்டூன்

விகடன் 25 Dec 2025 5:31 am

இங்கிலாந்தில் சக மாணவிகள் நால்வரை பாலியல் வன்கொடுமை; மாணவருக்கு 25 ஆண்டுகள் சிறை

இங்கிலாந்தின் பிரைட்டன் (Brighton) பகுதியில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) பயின்று வந்த 26 வயது மாணவர் அலெக்ஸ் படேல்-வில்ஸ் (Alex Patel-Wills), தனது சக மாணவிகள் நால்வரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தால் (Lewes Crown Court) 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில், பல்கலைக்கழக வளாகம், லண்டன் மற்றும் பிரைட்டன் நகரங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இவர் இந்த கொடூரமான […]

அதிரடி 25 Dec 2025 3:30 am

87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர் ; சர்ச்சையை கிளப்பிய அறிவிப்பு

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கும் 37 வயதான சூ மெங் என்ற பெண்ணுக்கும் தற்போது குழந்தை பிறந்துள்ளது. சர்ச்சையை கிளப்பிய அறிவிப்பு தற்போது பிறந்துள்ள குழந்தையை அவர் தனது ஒரே மகன் என்றும் அறிவித்துள்ளார் இதுவே பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த குழந்தை பிறந்துள்ளதையடுத்து பேன் செங், […]

அதிரடி 25 Dec 2025 1:30 am

தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்

லக்ஸ்மன் ‘டிட்வா’ சூறாவளி மிகப் பெரிய அனர்த்தமொன்றை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்த வரலாறு மற்றொரு ஆறா ரணத்தை உருவாக்கியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் இதனை யாரும் மறக்கமாட்டார்கள். சூறாவளி என்றால் 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியை எமக்கு முந்திய சந்த்கள் ஞாபகப்படுத்துவதுண்டு. ஆனால், ஒரு சூறாவளி எப்படியிருக்கும், அதன் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போதைய சந்ததியும் ‘டிட்வா’ மூலமாக உணர்ந்திருக்கிறது. ஆழிப்பேரலையான சுனாமியினுடைய தாக்கம் இலங்கையின் கரையோரங்களை இலக்கு வைத்தது. ‘டிட்வா’ சூறாவளியானது மத்திய பகுதியை […]

அதிரடி 25 Dec 2025 12:30 am

கனடாவில் செல்போன் கோபுரத்தை சேதப்படுத்திய நபர்கள்

கனடாவின் அல்பெர்டா மாகாணம், டேஸ்லாந்து நகருக்கு அருகே அமைந்துள்ள டெலஸ் (Telus) செல்போன் கோபுரம் வார இறுதியில் கடுமையாக சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரேஞ்ச் ரோடு 161 பகுதியில் உள்ள டெலஸ் கோபுரம் அருகே சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. டிசம்பர் 21 அன்று டேஸ்லாந்தில் உள்ள எங்கள் செல்போன் கோபுரம் கடுமையாக சேதப்படுத்தப்பட்டு இடிந்து விழுந்தது என டெலஸ் நிறுவனத்தின் பிரதிநிதி மார்டின் நுயென் தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் உள்ள சில […]

அதிரடி 25 Dec 2025 12:30 am

பசிபிக் பெருங்டல் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்

கிழக்கு பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்தியது. இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தத் தாக்குதல் தொடா்பான விடியோ காட்சியும் இடம் பெற்றுள்ளது. இத்துடன், கடந்த செப்டம்பா் முதல் 29 படகுகள் மீது அமெரிக்கா இதே போன்று நடத்திய தாக்குதல்களில் 105 போ் கொல்லப்பட்டுள்ளனா். இது சட்டவிரோத படுகொலை என்று குற்றஞ்சாட்ப்படுகிறது.

அதிரடி 24 Dec 2025 11:30 pm

கந்தர படகில் இருந்த 200 கோடி ரூபா போதைப்பொருள்

டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 200 கோடி ரூபா எனப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். கடந்த 9 ஆம் திகதி கந்தர பிரதேசத்திலிருந்து 5 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற குறித்த மீன்பிடிப் படகு, போதைப்பொருளைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த போதே நேற்று (23) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இன்று […]

அதிரடி 24 Dec 2025 11:30 pm