கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது!
கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது! #போதைப்பொருள்… The post கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது! appeared first on Global Tamil News .
முன்னாள் மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள்
பிரித்தானியாவின் முன்னாள் மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் (Dr. Nathaniel Spencer) என்பவா் பல நோயாளிகளிடம், குறிப்பாகக் குழந்தைகளிடம், பாலியல்… The post முன்னாள் மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் appeared first on Global Tamil News .
கிழக்கு மாகாணத்தில் ‘டித்வா’புயல்: 221 பாடசாலைகள் பாதிப்பு!
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக, மாகாணம் முழுவதும் மொத்தமாக 221… The post கிழக்கு மாகாணத்தில் ‘டித்வா’ புயல்: 221 பாடசாலைகள் பாதிப்பு! appeared first on Global Tamil News .
முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி
ரோம், கடலில் வாழும் டால்பின்கள் மனிதனின் சிறந்த நண்பனாக அறியப்படுகிறது. ஆனால் கடல் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கடல் பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. இதனால் டால்பின்களின் வாழிடங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டால்பின்களுக்கான சரணாலயத்தை அமைக்க இத்தாலி அரசாங்கம் முடிவு செய்தது. இதற்காக சான் பாலோ தீவு அருகே டரோன்டோ வளைகுடாவில் கடந்த 2023-ம் ஆண்டு அரசாங்கம் […]
சூடானில் மழலையர் பள்ளி மீது ட்ரோன் தாக்குதல் – 33 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி
சூடானில் இ ஒரு துணை ராணுவப்படை அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள மழலையர் பள்ளி (கிண்டர்கார்டன்) மீது… The post சூடானில் மழலையர் பள்ளி மீது ட்ரோன் தாக்குதல் – 33 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி appeared first on Global Tamil News .
வீட்டு வாசலில் நின்ற 5 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை
கோயம்புத்தூர் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயதுச் சிறுவனைச் சிறுத்தை… The post வீட்டு வாசலில் நின்ற 5 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை appeared first on Global Tamil News .
நாட்டில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய […]
டெல்லி ஸ்டார் ஓட்டல்களில் ஒரு இரவுக்கு ரூ.85 ஆயிரம் வாடகை! புதின் வருகை+ இண்டிகோ ரத்து காரணம்...
ரஷ்ய அதிபர் புதின் வருகையால் டெல்லியில் நட்சத்திர ஓட்டல்களில் ஒரு நாள் கட்டணம் ரூ.85 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் அளவுக்கு உயர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தெஹிவளையில் இளைஞர் சுட்டுக்கொலை
தெஹிவளைப் பகுதியில் இன்று (06) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.… The post தெஹிவளையில் இளைஞர் சுட்டுக்கொலை appeared first on Global Tamil News .
அமெரிக்காவால் புதிய பிரச்சினை ; அதிகரிக்கும் போர் அபாயம்
கிழக்கு பசிபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலாவில் இருந்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் சம்பவத்திற்கு எதிராக, ‘ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர்’ என்ற பெயரில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிர்வாகம் கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு பசிபிக் கடல் வழியாக கப்பலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக அமெரிக்க ராணுவத்திற்கு உளவுத்துறை […]
IND v SA: தெ.ஆ-வை சுருட்டிய குல்தீப், பிரசித்; `சுட்டிப் பையன்'ஜெஸ்வால் 116* ; தொடரை வென்ற இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா போட்டி வென்றதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கின. அதிலும், டெஸ்ட் தொடரை இழந்ததற்கு ஒருநாள் தொடரை வென்று சரிக்கட்ட வேண்டுமென்ற தீவிரத்தோடு இந்தியா களமிறங்கியது. இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் அதற்கேற்றாற்போலவே, 20 போட்டிகளுக்குப் பிறகு இந்தியா டாஸ் வென்றது. இந்திய கேப்டன் கே.எல். ராகுல் அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மாவை சேர்த்து பவுலிங்கைத் தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்கா அணியில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பின்னர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர். ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் பந்தில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால், கடந்த இரு போட்டிகளாக 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்து வந்த குயின்டன் டி காக், இப்போட்டியில் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கேப்டன் டெம்பா பவுமா அவருக்கு உறுதுணையாக ஆட டி காக் அரைசதமும் அடித்தார், கூடவே இவ்விருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. இந்த நேரத்தில் ஜடேஜா குறுக்கே வந்து பவுமாவின் விக்கெட்டை எடுத்து பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அடுத்த சில ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் பிரீட்ஸ்கே, மார்க்ரமை அவுட்டாக்கினார். Dewald Brevis - Quinton de Kock விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் தனது அதிரடியை நிறுத்தாத டி காக், 80 பந்துகளில் சிக்ஸருடன் சதமடித்தார். ஆனால் சதமடித்த சற்று சில ஓவர்களிலேயே அவரையும் அவுட்டாக்கினார் பிரசித் கிருஷ்ணா. அடுத்து கைகோர்த்த டெவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென் நிதானமாக ஆடத் தொடங்கிய வேகத்தில் அவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் விக்கெட் எடுத்து இன்னிங்ஸை முழுமையாக இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார் குல்தீப் யாதவ். இறுதியாக 48-வது ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா. பிரசித் கிருஷ்ணாவும், குல்தீப் யாதவும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக வெடிக்கும் டி காக்! அதைத்தொடர்ந்து 271 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ரோஹித்தும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்கினர். மிக மிக நிதானமாக ஆடிய இந்தக் கூட்டணி பவர்பிளேவில் விக்கெட் எதுவும் விடாமல் 48 ரன்கள் அடித்தது. பின்னர், ரன் அடிப்பதில் கொஞ்சம் வேகம் கூட்டிய ரோஹித் 54 பந்துகளில் அரைசதமடித்தார். அடுத்த ஓவரிலேயே இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களையும் கடந்த அதே வேளையில், அடிக்கத் தொடங்கிய ஜெய்ஸ்வால் 75 பந்துகளில் அரைசதமடித்தார். Yashasvi Jaiswal - யஷஸ்வி ஜெய்ஸ்வால் 25 ஓவர்களாக இந்த ஜோடி விக்கெட்டும் விடாமல் 150 ரன்களைக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில், கேஷவ் மகாராஜ் ரோஹித்தை அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்தார். ஒன்டவுனில் விராட் கோலி களமிறங்கினார். மறுமுனையில் பவுண்டரி சிக்ஸருமாக விளாசத் தொடங்கிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் சதமடித்தார். தனது முதல் 60 பந்துகளில் வெறும் 36 ரன்கள் மட்டுமே அடித்த ஜெய்ஸ்வால் அடுத்த 50 பந்துகளில் 60+ ரன்கள் அடித்து சதமடித்தார். W.O.W Virat Kohli at his fluent best That's smashed into the stands with some conviction Updates ▶️ https://t.co/HM6zm9o7bm #TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @imVkohli pic.twitter.com/1EdwUbQj66 — BCCI (@BCCI) December 6, 2025 அவரைத்தொடர்ந்து கோலியும் வேகமாக ஆடி 40 பந்துகளில் அரைசதமடித்தார். இறுதியில் 39-வது ஓவரில் கோலியின் பேக் டு பேக் பவுண்டரி மூலம் இந்தியா 271 ரன்களைத் தொட்டு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2 - 1 எனத் தொடரை வென்றது. 116 ரன்கள் அடித்து நாட் அபிட் பேட்ஸ்மேனாகக் கடைசிவரைக் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது வென்றார். இத்தொடரில் இரண்டு சதம், ஒரு அரைசதம் என 302 ரன்கள் குவித்த கோலி தொடர் நாயகன் வென்றார். IND vs SA: நேற்றைய ஆட்டத்தில் 2016-18 ஆம் ஆண்டுகளின் கோலி வெர்ஷனைப் பார்த்தோம் - குல்தீப் யாதவ்
காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு.. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் முடிவு!
தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசாணை வெளியிடக் கோரி டிசம்பர் 8ஆம் தேதி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுகிறது.
பணி நிரந்தரம் செய்தால்தான் திமுகவை நம்புவோம்.. பகுதி நேர ஆசிரியர்கள் அதிரடி!
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பகுதி நேர ஆசிரியர்களை இன்னும் ஏன் முதல்வர் பணி நிரந்தரம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
எலான் மஸ்கிற்கு விழுந்த பேரிடி ; பல்லாயிரம் கோடி அபராதம்
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், ‘டெஸ்லா’ நிறுவனருமான எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ சமூக ஊடக நிறுவனத்தை 2022ல் வாங்கி, பின், ‘எக்ஸ்’ என பெயர் மாற்றினார். பாதுகாப்பு குறைபாடுகள் இந்த ஊடகத்தில், பயனர் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டி.எஸ்.ஏ., எனப்படும் டிஜிட்டல் […]
இந்தியாவின் படைக்கு உதவ முடிவு.. ரஷ்யா போடும் கணக்கு.. இந்தியாவுக்கு சாதகம்!
ரஷ்யா தனது உலகப் புகழ்பெற்ற 3M-14E Kalibr-PL நிலத் தாக்குதல் கப்பல் ஏவுகணையை இந்திய கடற்படைக்கு வழங்க முன்வந்துள்ளது. இது அணுசக்தி தடுப்புக்கான முக்கிய ஆயுதம் ஆகும்.
மலையகத்தைச் சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை –ஜனாதிபதி!
கண்டி: அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டுப் பொறிமுறை அவசியம்… The post மலையகத்தைச் சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை – ஜனாதிபதி! appeared first on Global Tamil News .
துப்பாக்கிகளை வகைப்படுத்தும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படும் – கெரி ஆனந்த சங்கரி
கனடாவில் துப்பாக்கிகளை வகைபப்டுத்தும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைசச்ர் கெரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். நாட்டின் துப்பாக்கி வகைப்படுத்தல் முறையை மீளாய்வு செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த பரிசீலனையில் எஸ்.கே.எஸ் SKS எனப்படும் அரை தானியங்கி துப்பாக்கியைப் பற்றிய ஆதிவாசி சமூகங்களுடனான ஆலோசனையும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் SKS துப்பாக்கிகளை ஆதிவாசிகள் உணவுத் தேவைக்கான வேட்டையாடல்களுகக்காக பரவலாகப் பயன்படுகின்றனர். அதேசமயம், கடந்த சில ஆண்டுகளில் காவல்துறை […]
விளக்கமறியல் கைதி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி ஊடக சந்திப்பொன்றை நடத்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் குறித்த கைதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் கீழே விழுந்து தலையில் காயப்பட்டதற்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முதல் கட்ட விசாரணையின் போது யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. குறித்த கைதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்படும் போதே உடல் சோர்வுற்று இருந்ததாகவும், இந்நிலையில் கீழே விழுந்ததாகவும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வைத்தியர் சிகிச்சை அளித்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு நாள் சிகிச்சைக்கு பின்னர் மீள சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் உடல் இயலாமை ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் - என சிறைச்சாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
மீண்டும் மண் சரிவு எச்சரிக்கை !
இலங்கையின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 02 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கள பாதாள உலக கொலைகள் தமிழீழத்திலும்!
தென்னிலங்கை பாதாள உலக கும்பல் மோதல்கள் வடகிழக்கிற்கும் வந்து சேர்ந்துள்ளது. திருகோணமலை, சைனா ஹார்பர் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் நேற்று (5) மாலை கதிர்காமம் பேருந்து நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர். திருகோணமலை, சைனா ஹார்பரில் உள்ள பஹே கனுவா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் 59 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இண்டிகோ உரிமையாளர் யார்? பில்லியன் டாலர் சொத்து மதிப்பு... ராகுல் பாட்டியா பற்றி தெரியுமா?
இந்தியர்களுக்கு இன்னலுக்கு ஆளாக்கிய இண்டிகோ விமான நிறுவனத்தினர் உரிமையாளர்கள் யார், அவர்களது பின்னணி என்ன என்று விரிவா காண்போம்.
ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக வெடிக்கும் டி காக்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. 20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மா உள்ளே வந்தார். தென்னாப்பிரிக்காவில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். Quinton de Kock - குயின்டன் டி காக் பின்னர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல் போட்டியில் டக் அவுட் ஆன ரிக்கல்டன் இப்போட்டியில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால், முதல் இரு போட்டிகளில் 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்த டி காக், இப்போட்டியில் அப்படியே அதற்கு நேர்மாறாக ஆடத் தொடங்கினார். கேப்டன் டெம்பா பவுமா சப்போர்ட் இன்னிங்ஸ் ஆட மறுமுனையில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் கடந்தார் டி காக். இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தபோது பவுமா அவுட்டானார். இருப்பினும் தனது ஆட்டத்தை நிறுத்தாத டி காக், 80 பந்துகளில் சிக்ஸருடன் சதமடித்தார். இது டி காக் ஓய்வைத் (Retirement) திரும்பப் பெற்று வந்த பிறகு தனது 6-வது போட்டியில் அடிக்கும் இரண்டாவது சதம். 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த டி காக், கடந்த செப்டம்பரில் தனது ஓய்வைத் திரும்பப் பெற்றுக்கொண்டு நவம்பரில் பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கினார். Quinton de Kock - குயின்டன் டி காக் அந்தத் தொடரில் 3 போட்டிகளிலும் இரண்டு அரைசதம், ஒரு சதம் என ODI கரியரில் தனது இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாகத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் ஒற்றை இலக்கத்தை தாண்டாமல் அவுட்டாகி வந்த டி காக் இன்றைய போட்டியில் சதமடித்து 106 ரன்களில் அவுட்டானார். இந்த சதத்துடன் சச்சின், ரோஹித் ஆகியோரின் சாதனைகளைச் சமன்செய்ததோடு மேலும் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். Hockey Men's Junior WC: திக் திக் கடைசி நிமிடங்கள்; பெல்ஜியமை வென்று அரையிறுதிக்குள் சென்ற இந்தியா! சாதனைப் பட்டியல்! * ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்களாக, தலா 7 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் (UAE), சயீத் அன்வர் (UAE), ஏபி டிவில்லியர்ஸ் (இந்தியா), ரோஹித் சர்மா (இங்கிலாந்து) ஆகியோர் இருந்த நிலையில், டி காக் இன்று இந்தியாவில் அடித்த 7-வது சதத்தின் மூலம் மேற்குறிப்பிட்டவர்களின் சாதனையை சமன் செய்திருக்கிறார். * ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் அணிக்கெதிராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தலா 6 சதங்களுடன் கில்கிறிஸ்ட் (இலங்கை), சங்ககாரா (இந்தியா) ஆகியோர் முதலிடத்தில் இருந்த நிலையில், அவர்களை டி காக் ஓவர்டேக் செய்து முதலிடத்துக்கு வந்திருக்கிறார். Quinton de Kock - குயின்டன் டி காக் * ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கெதிராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை டி காக் சமன் செய்திருக்கிறார். ஆனால், சனத் ஜெயசூர்யா இந்தியாவுக்கெதிராக 89 ஒருநாள் போட்டிகள் ஆடியிருக்கிறார். டி காக் இந்தியாவுக்கெதிராக வெறும் 23 போட்டிகள்தான் ஆடியிருக்கிறார். * ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா 23 சதங்களுடன் 10 வருடங்களாகத் தனியாளாக முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் டி காக் இன்று தனது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் 23-வது சதத்தை அடித்து சங்ககாராவின் சாதனையை சமன் செய்திருக்கிறார். கிரிக்கெட் போட்டியில் முட்டிபோடாத விவகாரம் ... வருத்தம் தெரிவித்த குவின்டன் டிகாக்... மாற்றம் ஏன்?
காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்; டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து
வாஷிங்டன் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை, காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் ருவாண்டா நாடு அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே காங்கோவின் வடக்கு கிவூ, தெற்கு கிவூ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனிடையே, காங்கோ, ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காங்கோவில் செயல்பட்டு வரும் எம்-23 என்ற […]
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!
தென்னாப்பிரிக்க நகரமான பிரிட்டோரியாவில் உள்ள ஒரு சட்டவிரோத மதுபான விடுதியில் சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூன்று வயது சிறுவன் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர், மேலும் அடையாளம் காணப்படாத மூன்று சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சவுல்ஸ்வில்லே டவுன்ஷிப்பில் நடந்த சம்பவத்தின் போது மேலும் 14 பேர் காயமடைந்ததாக அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு ஷெபீன்என்று உள்ளூரில் அழைக்கப்படும் சட்டவிரோத மதுக்கடைக்குள் நடந்ததா அல்லது வெளியே நடந்ததா என்பது குறித்து போலீசார் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இறந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர், அவர்களில் 3 மற்றும் 12 வயது சிறுவர்கள் (மற்றும் ஒரு) 16 வயது பெண் அடங்குவர்என்று தென்னாப்பிரிக்க காவல் சேவை தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும், சராசரியாக ஒரு நாளைக்கு 60 கொலைகள் நடக்கின்றன.
ஜனாதிபதி அனுரகுமார –மல்வத்து மகாநாயக தேரர் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) மல்வத்து மகாநாயக, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த,ஜனாதிபதி அநுரகுமார சுமங்கல தேரரை சந்தித்தார். தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்து மகாநாயக தேரரிடம் விளக்கியதுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.
வடக்கு மாகாண கால்நடைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால், வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வவுனியா மாவட்டம்: நிர்மலன் பெர்னாண்டோ – […]
சுவிஸ் பேரிடர் நிவாரண விமானம் இலங்கையை வந்தடைந்தது
சுவிட்சர்லாந்திலிருந்து பேரிடர் நிவாரண உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் இன்று (06) காலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 2.6 மெட்ரிக் டன் எடையும் 17 தனித்தனி பொதிகளும் கொண்ட இந்த உதவிப் பொருள், நீர் சுத்திகரிப்பு அலகுகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டிற்குத் தேவையான பல்வேறு உபகரணங்களை உள்ளடக்கியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்தப் பொருள் சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து கொண்டு வரப்பட்டு, WK 064 என்ற எடெல்வைஸ் ஏர் விமானத்தில் காலை 10:25 மணிக்கு கட்டுநாயக்காவை வந்தடைந்தது. இந்தப் பொருளைப் பெறுவதற்காக இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் துணைத் தூதர், பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) அதிகாரிகளுடன் விமான நிலையத்தில் உடனிருந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடரால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்புதமான இதயம் அமைப்பு ஆகியவையால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களும் சேர்க்கப்பட்டது.
7 மாவட்டங்களுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை
நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூரியுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கங்களுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வெளியிலோ , மரங்களுக்கு அடியிலோ நிற்க வேண்டாம் இந்த எச்சரிக்கை சனிக்கிழமை (06) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு […]
தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
'டித்வா'புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு உடனடி உதவி அளிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. மருத்துவப் பொருட்கள், குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், தங்கும் கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணக் கப்பல், தமிழக அரசின் ஒருங்கிணைப்பில் இலங்கை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில் அங்குள்ள மக்களை ஆதரிக்கும் விதமாக, இரு நாடுகளின் நட்புறவையும் மனிதாபிமான உணர்வையும் வலுப்படுத்தும் இந்த உதவி நடவடிக்கை, பரவலாக பாராட்டப்படுகிறது. இந்த பேரிடரில் உயிரிழந்தோருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்திருந்தார். மேலும், இலங்கை மக்களின் துயரைத் துடைக்க தமிழக அரசு முழுமையான உதவிகளை மேற்கொள்ளும் என்றும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அனுப்ப ஆணையிட்டார். அதனடிப்படையில், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இன்று சனிக்கிழமை ( 6) இலங்கை நோக்கி பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னையில் இருந்து அனுப்பும் கப்பலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கொடியசைத்து அனுப்பினார். புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 950 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு, தேவையான அளவு கூடுதல் நிவாரண உதவிகளையும் வழங்க தயார் நிலையில் இருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஓ.என்.ஜி.சி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு - பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதும் போராட்டம் நடத்துவதும் வழக்கம். இவர் சமீபத்தில் கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் விவசாயிகளும், விவசாயமும் பாதிக்கப்படுவதாக போராட்டம் நடத்தியுள்ளார். பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள காரியாமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் பணியாளர்களுக்காக ஷெட் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பி.ஆர்.பாண்டியன் மற்றும் அவரது தரப்பு அங்கு சென்றனர். கடப்பாரை உள்ளிட்டவை எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஓஎன்ஜிசி-யை வெளியேற வலியுறுத்தி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்திய பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள், பணியாளர்களையும் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வாஞ்சிநாதன் என்பவர் இது குறித்து புகார் அளித்தார். அதன்படி பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 22 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்றவர்களுக்கும் இதேபோல் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ CEO-ஐ நீக்க பரிசீலனை? இண்டிகோ விமானங்கள் ரத்து.. பயணிகள் தவிப்பு!
இண்டிகோ விமான சேவை பாதிப்பைத் தொடர்ந்து அந்த நிர்வாகத்தின் சி.இ.ஓ. பீட்டர் எல்பெர்ஸை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெள்ளத்தை தொடர்ந்து கண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து ; மக்களே அவதானம்!
நாட்டில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. எனவே கண் நோய்த்தொற்றுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் ஆரோக்கிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது. கண் தொற்றுக்கான அறிகுறிகள் கண்கள் சிவத்தல் மற்றும் வீக்கம், நீர் வடிதல் மற்றும் வெளியேற்றம், ஒளி உணர்திறன், கண் அரிப்பு, கண்களில் மண் அல்லது தூசி இருப்பது போன்ற உணர்வு […]
BB Tamil 9: நீங்க வெளிய வந்துருங்க - சேதுபதியிடம் வாக்குவாதம் செய்த ரம்யா; திறந்த பிக் பாஸ் கதவு!
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாள்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில், கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், விஜய் சேதுபதிக்கும், ரம்யா ஜோவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. வார இறுதி டாஸ்கிற்காக என்ட்ரி கொடுத்திருக்கும் விஜய் சேதுபதி, டாஸ்கில் விக்ரமை அங்கிருந்து எதுக்கு எழுப்புறீங்கன்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று ரம்யாவை கேள்வி கேட்கிறார். அதற்கு சீரியஸா எனக்கு தெரியாது சார் என்று ரம்யா சொல்கிறார். தொடர்ந்து நான் அப்செட்டா இருக்கேன். அதனால இப்படித்தான் பேசுவேன்னு பேசக் கூடாது. உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க போலாம். உங்களை யாரும் கட்டாயப்படுத்த மாட்டோம். என்று விஜய் சேதுபதி சொல்ல, எனக்கு தெரியாது சார். எல்லோரும் நான் பண்ணாத ஒரு விஷயத்தை சொல்லிட்டே இருக்கீங்க என்று ரம்யா அழுகிறார். BB Tamil 9 கெட்ட வார்த்தை பேசுறீங்க அப்போ அதை சொல்றதுக்கு என்ன? என்று விஜய் சேதுபதி சொல்ல, இனிமேல் நான் இங்க இருக்க மாட்டேன். நான் வீட்டுக்கு போறேன் சார் என்று ரம்யா கூறுகிறார். நீங்க தாராளமா வெளிய வரலாம் என்று சேதுபதி கூற பிக் பாஸ் கதவு திறந்துவிட்டதாக வினோத் சொல்கிறார்.
இண்டிகோவுக்கு மத்திய அரசின் அதிரடி’உத்தரவு
ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தை உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும் என்று இண்டிகோ (IndiGo)… The post இண்டிகோவுக்கு மத்திய அரசின் அதிரடி’ உத்தரவு appeared first on Global Tamil News .
⚖️ திருமண வயதல்ல, சட்ட வயது முக்கியம்: லிவ்-இன் உறவு குறித்து இராஜஸ்தான் உயர் நீதிமன்றம்!
⚖️ திருமண வயதல்ல, சட்ட வயது முக்கியம்: லிவ்-இன் உறவு குறித்து இராஜஸ்தான் உயர் நீதிமன்றம்! இராஜஸ்தான் உயர்… The post ⚖️ திருமண வயதல்ல, சட்ட வயது முக்கியம்: லிவ்-இன் உறவு குறித்து இராஜஸ்தான் உயர் நீதிமன்றம்! appeared first on Global Tamil News .
லொட்டரியில் வென்ற ரூ.61 கோடியை நண்பர்களுக்கு பிரித்து வழங்கும் இந்தியர்
லொட்டரியில் ரூ.61 கோடி பரிசு வென்ற இந்தியர், பரிசுத்தொகையை தனது 15 நண்பர்களுக்கு சமமாக பிரித்து வழங்குகிறார். லொட்டரியில் ரூ.61 கோடி வென்ற இந்தியர் கேரளாவை சேர்ந்த 52 வயதான பிவி ராஜன், கடந்த 30 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் தரக் கட்டுப்பாட்டு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நண்பர்களின் பரிந்துரையின் பேரில் லொட்டரி வாங்க தொடங்கியவர், கடந்த 15 ஆண்டுகளாக லொட்டரி வாங்கி வருகிறார். இந்நிலையில், இந்த மாதம் வெளியான அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் ரூ.61.37 […]
மத்திய அரசின் உத்தரவுகளுக்கு எதிராக தனது அனைத்து விமான சேவைகளையும் இண்டிகோ நிறுவனம் திடீரென ரத்து செய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்தவர்கள் சொந்த பகுதிகளுக்கு செல்ல அதிக கட்டணங்கள் பிற விமான நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு தற்போது கடிவாளம் போட்டுள்ளது.
விமானங்களில் கூடுதல் கட்டணமா? ஏர் இந்தியா விளக்கம்.. இண்டிகோ பாதிப்பால் நீடிக்கும் குழுப்பம்!
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் கடந்த சில நாட்களாகவே ரத்தாகி வருகிறது. இதனால் மற்ற விமானங்களின் கட்டணம் உயர்ந்து உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
கோமா நிலையில் சிகிச்சை பெறும் கைதி சிறைச்சாலைக்குள் தாக்கப்படவில்லையாம்
“அடிச்சுப் போட்டாங்க!” – பாதிக்கப்பட்ட கைதியின் கடைசி வார்த்தைகள்? யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த… The post கோமா நிலையில் சிகிச்சை பெறும் கைதி சிறைச்சாலைக்குள் தாக்கப்படவில்லையாம் appeared first on Global Tamil News .
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி அசத்தியது. குறிப்பாக, குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி, வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அதிமுக: இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன் - செல்லூர் ராஜு சாடல்!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 'இதே எடப்பாடி பழனிசாமியை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர்தானே அவர்' எனச் சாடியுள்ளார் ராஜு. விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன் செங்கோட்டையன் பற்றி செல்லூர் ராஜு, ஆலமரத்திலிருந்து உதிரும் இலை போலத்தான் செங்கோட்டையன். பழுத்த இலை விழுந்தால் ஆலமரம் கருகியதாக அர்த்தமாகிவிடுமா? விஜய் போல ஆயிரம்பேர் சொல்லியிருக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் நாங்கள் பத்தோடு பதினொன்றாக இருப்போம் என்றா சொல்வார்கள். ஆட்சிக்கு வருவோம் என்றுதான் சொல்வார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பதாகச் சொன்னால் மட்டும்போதுமா? எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி, சின்னம், அலுவலகம் எல்லாம் இங்கு இருக்கிறது. விஜய், செங்கோட்டையன் ஒன்பது தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், பலமுறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதைக் கொடுத்தது யார்? செங்கோட்டையனுக்காகவா ஓட்டு போட்டார்கள். இரட்டை இலை சின்னத்தைப் பார்த்து மக்கள் வாக்களித்தார்கள். இதே எடப்பாடியாரை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர் தானே செங்கோட்டையன். இன்றைக்கு ஏதோ ஒரு கோபத்தில் போகலாமா. எந்தக் கட்சியும் வேண்டாம், எந்தப் பதவியும் வேண்டாமென எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் இருப்பவர்தான் ரோஷமானவர். அப்படி இருப்பவன்தான் உண்மையான அண்ணா திமுக-காரன். எனப் பேசினார். TVK: உயிர் மூச்சு உள்ள வரை அவரை முதலமைச்சராக உருவாக்க பணியாற்றுவேன் - செங்கோட்டையன்
Bigg Boss Tamil 9: தம்பதியில் ஒருவர் அவுட்.! - இந்த வாரம் டபுள் எவிக்ஷன்?
விஜய் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, எஃப் ஜே உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில், நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால், டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இந்த நிலையில் வழக்கமான வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. கடந்த சில வாரங்களாகவே போட்டியாளர்களின் செயல்பாடுகள் மீது பிக்பாஸே அதிருப்தியில் இருப்பதால் விஜய் சேதுபதியும் அவர்களை கண்டித்து வந்தார். அதேபோல் இன்றும் சில போட்டியாளர்களை வறுத்தெடுத்து விட்டு பிறகு எவிக்ஷன் நேரத்துக்கு வந்தார். பிரஜின், சாண்ட்ரா பார்வதி, வினோத், சுபிக்ஷா, அமித் பார்கவ், பிரஜின், உள்ளிட்டோர் எலிமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இரண்டு பேர் எவிட் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. நிகழ்ச்சி முடிய இன்னும் நான்கு வாரங்களே இருப்பதாலும் கடந்த வாரம் எவிக்ஷன் இல்லாததாலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் முடிவுக்கு வந்தார்களாம். எவிக்ஷன் ஆன இரண்டு பேர் எ.ஃப்.ஜே. மற்றும் பிரஜின் எனத் தகவல் வெளியாகி உள்ளது. BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன் துஷார் இவர்களில் பிரஜின் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றவர். இவருடன் இவரது மனைவி சாண்ட்ராவையும் சேர்த்து அனுப்பினார்கள். அந்த வீட்டுக்குள் சாண்ட்ராவுக்கும் சேர்த்தே இவர் விளையாடுவதாக ஒரு புகார் எழுந்தது. விஜய் சேதுபதிக்கு ஒருகாலத்தில் நண்பனாக இருந்த பிரஜினுக்கும் விஜய் சேதுபதிக்கும் நிகழ்ச்சியில் வாக்குவாதம் நடந்தது நினைவிருக்கலாம். அந்த வாரம் அவரை வெளியேற்றுவது போல காட்டி பிறகு வீட்டுக்குத் திரும்ப வைத்ததையும் பார்த்தோம். அப்போது சாண்ட்ரா அழுது ஆர்ப்பாட்டம் செய்தது சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம். கணவன் மனைவி இருவருமே இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு நெகட்டிவிடியையே சம்பாதித்தார்கள் எனச் சொல்லலாம். இந்த வாரம் நிஜமாகவே பிரஜின் வெளியேறியிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. சாண்ட்ரா என்ன செய்யப் போகிறார் தெரியவில்லை. Bigg Boss Tamil 9 அடுத்து எஃப்.ஜே. இவர் அந்த வீட்டுக்குள் சென்றதும் சக போட்டியாளர் ஆதிரையுடன் நெருக்கமாக பழகினார். ஒருகட்டத்தில் ஆதிரை எவிக்ட் ஆனதும், வியானாவுடன் பழகினார். வியானாவுக்கு சோறு ஊட்டி விடுவது போன்ற வேலைகளை அவர் செய்தது நிகழ்ச்சிக்கு கன்டென்ட் ஆனது. வியானாவுடன் ட்ராக் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த சூழலில் கடந்த வாரம் திரும்பவும் ஆதிரையை நிகழ்ச்சிக்குள் அனுப்பினார்கள். இனி எஃப் ஜே என்ன செய்யப் போகிறார் என பலரும் எதிர்பார்த்த நிலையில்தான் அதிரடியாக எஃப்.ஜே.வை வெளியில் அனுப்பி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது முதற்கட்ட தகவல் தான். இறுதி நேர ட்விஸ்ட் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்
“வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்!” – ஆளுநர் நா.வேதநாயகன். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாத வழுக்கையாற்றை… The post நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும் appeared first on Global Tamil News .
``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? - நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. `தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது' என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அயோத்தி இல்லையே. பிரதமர் மோடி - அயோத்தி ராமர் கோயில் அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை. நாம் எல்லோரும் ராமரின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்
உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!
இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் பள்ளியில் ஆங்கில தேர்வு எழுதினான். தேர்வு எழுதி முடித்துவிட்டு விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தனது இருக்கைக்கு வந்தான். அவன் இருக்கையில் அமர்ந்தவுடன் அப்படியே கீழே சரிந்து விழுந்தான். உடனே பணியில் இருந்த சக ஆசிரியர்களும், ஊழியர்களும் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது அவனுக்கு இருதய துடிப்பு நின்று இருந்தது. இது குறித்து டாக்டர் மனீஷ் சுக்லா கூறுகையில், ''மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே அவனுக்கு இருதய துடிப்பு நின்று இருந்தது. மாணவன் படித்த பள்ளி அப்படி இருந்தும் நாங்கள் இருதய துடிப்பை மீண்டும் கொண்டு கொண்டு வர முயற்சி செய்தோம். தொடர்ந்து முயற்சி செய்தும் இருதய துடிப்பை மீண்டும் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து மாணவன் இறந்ததாக அறிவிக்கப்பட்டான்'' என்றார். இளம் வயதில் மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பது அவனது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்து போன மாணவன் அவனது பெற்றோருக்கு ஒரே மகனாவார். ஒரே மகனை பறிகொடுத்த அவரின் தந்தை சந்தீப் சிங் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல்
சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கும், சேத விபரங்களைப் பதிவு செய்வதற்கும் விசேட… The post பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல் appeared first on Global Tamil News .
பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல்
சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கும், சேத விபரங்களைப் பதிவு செய்வதற்கும் விசேட… The post பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல் appeared first on Global Tamil News .
மன்னார் பனங்கட்டு கொட்டு மீனவக் குடும்பங்களின் மனதை உருக்கும் கவலை
நாடு முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்திய அண்மைய புயலால், மன்னார் மாவட்ட மீனவர்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். ஆனால்,… The post மன்னார் பனங்கட்டு கொட்டு மீனவக் குடும்பங்களின் மனதை உருக்கும் கவலை appeared first on Global Tamil News .
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் விடுதி அலுவலகத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் கணக்கு அதிகாரி, ஆலோசகர், விடுதி மேனேஜர், கணக்காளர், பொறியியல் பயிற்சியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், விடுதி உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான உதவி: நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் இலங்கையை அடைந்தது!
இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் அனுப்பி… The post சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான உதவி: நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் இலங்கையை அடைந்தது! appeared first on Global Tamil News .
10 ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மவுசா? 4 லட்சம் ரூபாய் வரை பணம் சம்பாதிக்க அரிய வாய்ப்பு!
உங்களிடம் இந்த அரிய வகை 10 ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக 4 லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொள்ளலாம்.
மழைக்காலத்தில் வீசும் 'மண் வாசனை' - இதன் பின்னணியில் உள்ள அறிவியல் தெரியுமா?
மழை பெய்யத் தொடங்கும்போது அல்லது மழை வருவதை போன்று இருக்கும்போது ஒரு விதமான வாசனை வருவதை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். அந்த 'மண் வாசனை' எப்படி உருவாகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? வெறும் மண்ணும் தண்ணீரும் சேரும்போது மட்டும் இந்த வாசனை உருவாவதில்லை, இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் இங்கு தெரிந்துக்கொள்ளலாம். மழை பெய்யும்போது வரும் இந்த மண் வாசனைக்கு அறிவியலில் 'பெட்ரிகோர்' (Petrichor) என்று பெயர் உண்டு.. 1964ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா விஞ்ஞானிகளான இசபெல் பியர் மற்றும் டிக் தாமஸ் ஆகியோர் இந்த பெயரை உருவாக்கியுள்ளனர். இந்த வாசனைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களையும் கண்டறிந்துள்ளனர். மழை பாறை மற்றும் மண்ணில் தங்கியிருக்கும் ஒருவகை எண்ணெய் போன்ற திரவம், மழையின் போது காற்றில் கலப்பதால்தான் இந்த வாசனை வருகிறது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது இந்த மண் வாசனைக்கு 'ஜியோஸ்மின்' மற்றும் '2-MIB' எனப்படும் வேதிப்பொருட்கள் இதற்கு மிக முக்கியக் காரணம் என்றும் மண்ணில் வாழும் ஒருவகை பாக்டீரியாக்களே (Streptomyces) இந்த வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதாக கண்டறிந்துள்ளனர். வெயில் காலத்தில் மண் காய்ந்து போகும்போது, இந்த பாக்டீரியாக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 'ஸ்போர்ஸ்' எனப்படும் விதைகளை உருவாக்குகின்றனவாம். மழைத்துளிகள் மண்ணில் வேகமாக தொடும்போது, இந்த வேதிப்பொருட்கள் மற்றும் பாக்டீரியாக்களின் வாசம் காற்றுடன் கலந்து மேலே எழும்புகிறது. இதுவே நமக்கு மண் வாசனையாகத் தெரிகிறது என்று பாப்புலர் சயின்ஸ் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மனித மூக்கு இந்த 'ஜியோஸ்மின்' வாசனையை மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கும் திறன் கொண்டது என்றும் நம் முன்னோர்களுக்குத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இந்த வாசனை உதவியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மனிதர்கள் மட்டுமல்ல, ஒட்டகங்கள் பாலைவனத்தில் நீர்நிலைகளைக் கண்டறியவும், சில பூச்சிகள் முட்டையிடத் தகுந்த இடத்தைத் தேடவும் இந்த வாசனையைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் மண்ணும் தண்ணீரும் சேரும்போது தான் மண் வாசனை வருகிறது என்று தானே நினைத்திருந்தோம்..!
தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்! விஜய் கொடுத்த பதவி என்ன?
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், சிறந்த பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். அவரை கட்சியின் பரப்புரைச் செயலாளராக (Campaign Secretary) நியமிப்பதாகவும் விஜய் அறிவித்தார். இது தவெகவின் அரசியல் பயணத்தில் பெரிய வலுவூட்டலாகக் கருதப்படுகிறது. விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர் அண்ணன் திரு. […]
பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம்முனீர் நியமனம்
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 243-வது பிரிவில் 27-வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் கடும் பின்னடைவை சந்தித்ததால் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்தது. மேலும் ராணுவ தளபதியான பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைவராக […]
டிட்வா புயலால் KTCC மண்டலத்தில் பதிவான மழை அளவு! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்
தமிழ்நாட்டில் டிட்வா புயலால் சென்னை உள்பட கேடிசிசி மண்டலத்தில் பெய்த மழையின் அளவு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார்.
ஜெனரேட்டர் புகையை சுவாசித்ததால் பெண் உயிரிழப்பு
வீடொன்றினுள் இயங்கிக்கொண்டிருந்த மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம், உறவினர்களிடம் இன்று (6) ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த 04 ஆம் திகதி அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5ஆம் பிரிவு, புதிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் சம்பவத்தில் 54 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்தார். வீட்டினுள் இயங்கிய ஜெனரேட்டரிலிருந்து கசிந்த காபன் மொனொக்சைட் (Carbon monoxide) சுவாசித்தமையாலேயே குறித்த பெண்ணின் […]
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண நிர்வாகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வு சுன்னாகத்தில் இன்றைய தினம் […]
ஏவி.எம்.சரவணன்: `என்னமோ மனசு கேட்கல; மயானம் வரை போய்.!’ - கலங்கிய சிவகுமார்
ஏவி.எம்.சரவணன் மறைந்த அன்று, அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சிவகுமார், கண்கலங்கி நின்றார். அவரின் மேல் கொண்ட அன்பு, சிவகுமாரை சுற்றி நின்ற அனைவராலும் அன்று உணரப்பட்டது. ``அவரோட நியாபகமாதான் என் மகன் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன் என்றும் பேசி என் அன்பை வெளிப்படுத்தினார். அவரிடம் நாம் ஏவி.எம்.சரவணன் அவர்களுடனான பயணம் குறித்து பேசினோம்... இனி சிவகுமார் அவர்களின் வரிகளில்... ``சிவாஜி, கமல்ஹாசனை அறிமுகம் செய்த ஏவி.எம் நிறுவனம் தான் என்னையும் அறிமுகம் செய்தது. முதன் முதலில் நான் நடித்த காதல் காட்சிகளை பார்த்த செட்டியார், ஜோடி பொருத்தம் சரியில்லை என்று சொல்லி நீக்கி விட்டதாக சொன்னார்கள். நான் தனிமையில் கதறி அழுதேன். அப்போது என் தோளில் ஆதரவாக விழுந்த கரத்துக்கு சொந்தக்காரர், சரவணன். பராசக்தி படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவாஜி நடித்த `உயர்ந்த மனிதன்’ படத்தில் என்னை சிவாஜி மகனாக நடிக்க வைத்து சிறப்பு செய்தார். அன்று ஆரம்பித்த நட்பு நேற்றுவரை தொடர்ந்தது. ஏவி.எம்.சரவணன் | சிவகுமார் ஏவி. எம் நிறுவனம் எடுத்த 175 படங்களில் நடிக்காத நடிகர் நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். V.K ராமசாமி, ஏவி. எம்.ராஜன், என்று பன்முக திறமை கொண்ட கலைஞர்களை அறிமுகப்படுத்தியது. காஞ்சனாவுக்கு பெருமை சேர்த்தது. அதனால் தான் ஆட்டோ பிடித்து ஓடிவந்து அஞ்சலி செலுத்தினார். கே.ஆர்.விஜயாவும் பல படங்களில் நடித்துள்ளார். அவரும் சரவணன் சாருக்கு இறுதி மரியாதை செய்தார். AVM: ``என் கஷ்ட காலங்களில் - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி அவருக்கு A.C. திருலோக சுந்தர், S.P. முத்துராமன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். குறிப்பாக் திருலோக சுந்தர் அவர்களிடம் மட்டுமே ஏனோ மனம்விட்டு சிரித்துப் பேசுவார். இருவரும் வாரத்துக்கு ஒருமுறை ஏவி. எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் சந்திப்பார்கள். காலை முதல் இரவு வரை பேசிக் கொண்டிருப்பார்கள். அதன்பிறகு ஈ.சி.ஆர் இடத்தில் தனது வீட்டுக்கு போய் விடுவார், திருலோக சுந்தர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்த போதே மனிதர் ரொம்பவும் உடைந்து போனார். ஏ.வி.எம் சரவணன் ரஜினிக்கு முரட்டுக்காளை முதல் சிவாஜி வரை பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளன. கமலுக்கு சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம் , பேர் சொல்லும் பிள்ளை என்று ஏகப்பட்ட படங்களை எடுத்தார். என் மகன் சூர்யாவுக்கு அயன், பேரழகன் என்று முக்கிய படங்களை எடுத்துக் இருக்கிறார். பழனிசாமியாக இருந்த என்னை சிவகுமார் என்று பேர் வைத்தார். நான் அவர் நினைவாக என் மகனுக்கு சரவணன் என்று பேர் வைத்தேன். என்னிடம் வாரத்துக்கு இரண்டு நாள் தவறாமல் பேசி விடுவார். கடந்த 10 நாட்களாக ஏனோ பேசவே இல்லை. காலமான செய்தி கேட்டவுடன் காலையில் சூர்யாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினேன். அதன்பிறகு வீட்டிற்கு போன எனக்கு மனசு கேட்கவில்லை. மறுபடியும் தகனம் செய்ய செல்லும் முன்பு தனியாக வந்தேன். நானும், எஸ். பி. முத்துராமன் சாரும் சேர்ந்து மயானம் சென்றோம். அங்கே சரவணன் சார் உடல் தகனம் செய்யும் வரை கலங்கி நின்றோம். ஒரு காலத்தில் ஏவி. எம். ஸ்டுடியோவை கட்டி ஆண்டவர் உடலை, ஏவி. எம் மயானத்தில் நெருப்பு கொழுந்துவிட்டு எரித்துக் கொண்டு இருந்தது.” என்றார் வேதனையுடன். AVM: உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி- ஏவி.எம் சரவணன் குறித்து கமல்
ராமதாஸ் அய்யாவுக்கு துரோகம் –டெல்லியில் கொந்தளித்து பேசிய GK மணி!
டெல்லி : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடிக்கும் உள்கட்சி மோதல் தற்போது டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம், டெல்லி காவல்துறை என மூன்று முனைகளில் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் தலைவர் பதவி, சின்னம், பெயர் ஆகியவற்றை அன்புமணி தரப்பு போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு முன்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் […]
வடக்கில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல்
வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்: வவுனியா மாவட்டம்: நிர்மலன் பெர்னாண்டோ – 077 125 […]
950 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் 4 கப்பல்கள் புறப்பட்டன
டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தமிழக அரசின் அவசர நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 650 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் மற்றும் துணிகளை ஏற்றிக் கொண்டு ஐஎன்எஸ் காரியல் ( INS Gharial) என்ற கப்பல் இன்று காலை சென்னை துறைமுகத்தில்
இண்டிகோ விமானங்கள் ரத்து.. கூடுதல் ரயில்களை இயக்க முடிவு.. எங்கெங்கு தெரியுமா?
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட திடீர் ரத்துகளால் பயணிகள் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தெற்கு மத்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
கூட்டணி `டீல்’ - ராகுல் காந்தியை சந்தித்த சபரீசன்! திடீர் விசிட்டின் பின்னணி என்ன?
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. தமிழக தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக அமைந்திருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என கட்சிகள் தனித்தனியே வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக உடன் கடந்த 2017 முதல் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கைகோர்த்து தேர்தலை சந்தித்து வருகின்றன. திமுக - காங்கிரஸ் கூட்டணி திமுக - காங்கிரஸ் கூட்டணி இதில் கடந்த 2021-ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி திமுகவுடனேயே கூட்டணியில் தொடர விரும்புவதாக தெரிகிறது. கூட்டணி குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவையும் காங்கிரஸ் அமைத்திருக்கிறது. காங்கிரஸ் ஐவர் குழு! அதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த முறை 39 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கும்படி கேட்டதாகத் தகவல் வெளியானது. மற்ற கூட்டணி கட்சிகளையும் இந்த குழு தொடர்ந்து சந்தித்து பேச உள்ளதாகவும் சொல்லப்பட்டது. செல்வப்பெருந்தகை - பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமான தலைவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த சந்திப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறைமுகமாக காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகத் தகவலும் அரசியல் மட்டத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. செல்வப்பெருந்தகை கருத்து! இந்நிலையில் இன்று (டிச.6) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகையிடம் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இந்தியா கூட்டணி வலிமையானது, இதை உடைக்கவோ, சிதைக்கவோ யாராலும் முடியாது என்று கூறியிருந்தார். ராகுல் காந்தி - சபரீசன் ராகுல் காந்தி - சபரீசன் சந்திப்பு காங்கிரஸ், தவெகவுடன் மறைமுக கூட்டணி பேச்சு வார்தையில் ஈடுபடுகிறது என்று பேச்சுகள் எழும் நிலையில் சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, சபரீசன் டெல்லியில் நேரில் சந்தித்து திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இது குறித்து நாம் விசாரித்தோம். திமுக காங்கிரஸ் கூட்டணிகளுக்கு நெருக்கமான சிலர், ``பீகார் தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் சில ஆப்ஷன்களை மனதில் வைத்திருந்தது தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பீகார் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் தரப்பை ரொம்பவே பாதித்துள்ளது. அதன் காரணமாக தமிழக தேர்தல் தொடர்பான பணிகளை வேகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தான் குழு அமைத்து திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணியை உறுதி செய்தது. இதனிடையே தான் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்து தமிழக அரசியல் மட்டத்தில் பேசுபொருளானது. இதனால், தமிழக அளவில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக கூட்டணி விரும்புவதாகவும், டெல்லி காங்கிரஸ் மேலிடம் ஒரு புதிய கூட்டணியை எதிர்பார்ப்பதாகவும் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் டெல்லி சென்ற சபரீசன் நேரடியாக ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். கூட்டணி விஷயத்தில் டெல்லி காங்கிரஸின் ஆப்ஷனும் திமுக தான் என்பதை இதன் மூலம் அவர்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்” என்கிறார்கள்.
இலங்கையில் 71 நீர்த்தேக்கங்கள் ‘வான்பாய்கின்றன’– வெள்ள அபாய எச்சரிக்கை!
இலங்கையில் 71 நீர்த்தேக்கங்கள் ‘வான்பாய்கின்றன’ – வெள்ள அபாய எச்சரிக்கை! நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையைத் தொடர்ந்து,… The post இலங்கையில் 71 நீர்த்தேக்கங்கள் ‘வான்பாய்கின்றன’ – வெள்ள அபாய எச்சரிக்கை! appeared first on Global Tamil News .
ரெஸ்டாரண்ட் கேஸ் கவுண்டரில் நாய்; `வாடிக்கையாளர்களை அதுக்கு நல்ல தெரியும்' - வைரலான நாயின் கதை
மும்பையின் தென்பகுதியில் இருக்கும் போர்ட் பகுதியில் பிரிட்டானியா அண்ட் கோ என்ற இரானி ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரெஸ்டாரண்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரெஸ்டாரண்டில் அங்கு இருக்கும் செல்லப்பிராணியான ஜுலு என்ற நாயை பார்க்கவே அதிகமான விருந்தினர்கள் வருகின்றனர். 13 வயதாகும் ஜுலு, அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. அதோடு, ரெஸ்டாரண்ட் உரிமையாளர் தனது வீட்டில் இருந்து வரும்போது ஜுலுவையும் கூடவே அழைத்து வருவார். ரெஸ்டாரண்டிற்கு வந்ததும் ஜுலு கேஷ் கவுண்டர் டேபிளில் ஏறி அமர்ந்து கொள்வது அதன் வழக்கம். பல ஆண்டுகளாக இந்த நாய் இவ்வாறு கேஷ் கவுண்டரில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், அங்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நாய் மிகவும் பழக்கமாகிவிட்டது. அந்த வாடிக்கையாளர்களை ஜுலு “கை கொடுத்து” வரவேற்கிறது. வாடிக்கையாளர்கள் நாயின் தலையை தொட்டு சென்றுவிடுகின்றனர். யாருக்கும் எந்தத் தொல்லையும் கொடுக்காமல் மிகவும் அமைதியாக இருப்பதுடன், உறக்கம் வந்தால் அப்படியே அதே இடத்தில் படுத்து உறங்கிவிடுகிறது. கேஸ் கவுண்டரில் ஜூலு நாய் சிலர் இந்த நாயை பார்ப்பதற்காக தினமும் ரெஸ்டாரண்ட் வந்து செல்கின்றனர். இது குறித்து ரெஸ்டாரண்ட் ஊழியர்கள் கூறுகையில், “ஜுலு இந்த ரெஸ்டாரண்டில்தான் வளர்ந்தது. அதனால் இங்கு வழக்கமாக வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஜுலுவிற்கு தெரியும். அது மிகவும் அமைதியாக ரெஸ்டாரண்ட் கேஷ் கவுண்டரில் அமர்ந்திருப்பதுதான் எங்களது அடையாளமாகிவிட்டது. அது உறங்கிக்கொண்டிருந்தாலும், விழித்திருந்தாலும் அனைவரையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கும்,” என்றனர். வாடிக்கையாளர்கள் சிலர் அந்த நாயுடன் நின்று போட்டோ, செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். ஜுலுவுடன் வளர்ப்பு பூனை ஒன்றும் கேஷ் கவுண்டரில் இருக்கிறது. ஆனால் அந்த பூனை யாரையும் தன்னை தொடவிடாது. சமீபத்தில் இந்த ரெஸ்டாரண்டிற்கு வந்த வாடிக்கையாளர் சேவியர் என்றவர் ஜுலுவை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது. இதுவரை அந்த வீடியோவை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதை பார்த்த ஒருவர், “தினமும் ஜுலுவை பார்த்துவிட்டுத்தான் அலுவலகம் செல்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார். View this post on Instagram
கனடாவில் வேலையற்றோர் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவின் வேலை சந்தை நவம்பரில் பொருளாதார நிபுணர்களை மீண்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாட்டில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவானதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிறு அளவிலான வேலை இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளன. வேலைஇல்லா விகிதமும் அக்டோபரில் இருந்த 6.9% இலிருந்து நவம்பரில் 6.5% ஆகக் குறைந்துள்ளது. புதிய வேலைகள் மேலும் 26,000 பேர் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறியதால் இந்த […]
மூதூரில் குடிநீர் நெருக்கடிக்குத் தீர்வு: உடைக்கப்பட்ட பிரதான குழாய் இணைப்புப் பணி தீவிரம்!
மூதூரில் குடிநீர் நெருக்கடிக்குத் தீர்வு: உடைக்கப்பட்ட பிரதான குழாய் இணைப்புப் பணி தீவிரம்! அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்… The post மூதூரில் குடிநீர் நெருக்கடிக்குத் தீர்வு: உடைக்கப்பட்ட பிரதான குழாய் இணைப்புப் பணி தீவிரம்! appeared first on Global Tamil News .
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 06-12-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07-12-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]
புதுச்சேரி: டிச.9-ல் தவெக பொதுக் கூட்டம்; மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க கலால்துறை ஆலோசனை
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றதையடுத்து, தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது அம்மாநில அரசு. அதனால் புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு புதுச்சேரி காவல் துறையிடம் த.வெ.க அனுமதி கேட்டது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்ட நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இருவரும் நேரில் வந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அனுமதி கேட்டனர். தன்னுடைய நெருங்கிய நண்பரான விஜய்யின் ரோடு ஷோவுக்கு முதல்வர் ரங்கசாமி அனுமதி வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவர் கைவிரித்துவிட்டதால், விரக்தியடைந்த த.வெ.க டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டது. காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா அதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, த.வெ.க கூட்டம் நடைபெறும் அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலால் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கலால் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “தமிழகத்தில் குறைந்தது 5 கிலோமீட்டருக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அப்படி இருக்கும்போதும் அங்கு பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், 5 மீட்டருக்கு ஒரு மதுக்கடை இருக்கும் புதுச்சேரியில் அசம்பாவிதங்கள் நடைபெறும் வாய்ப்பு அதிகம். அதனால் அன்றைய தினம் மதுக்கடைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றனர். TVK: `கியூ-ஆர் கோடு பாஸ்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!' - புதுச்சேரி கூட்டத்துக்கு தயாராகும் தவெக
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண நிர்வாகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் 'பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு' (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வு சுன்னாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வை ஆரம்பித்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: காலநிலை மாற்றம் இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அண்மைய காலங்களில் ஒரே மாதத்தில் கொட்டித் தீர்க்கும் மழை, அடுத்த மாதமே வாட்டி வதைக்கும் வறட்சி என நாம் இதுவரை கண்டிராத அனர்த்தங்களைச் சந்தித்து வருகிறோம். இதனை 'இயற்கையின் கோபம்'என்று கடந்து செல்வதை விட, 'இயற்கையை நாம் கையாளத் தவறியதன் விளைவு'என்று புரிந்து கொள்வதே சிறந்தது. மழைநீர் வழிந்தோட வேண்டிய பாதைகளை நாம் அடைத்துவிட்டு, வீடுகளுக்குள் வெள்ளம் வருகிறது என்று கவலைப்படுவதில் அர்த்தமில்லை. வழுக்கையாறு போன்ற இயற்கையான நீரோட்டப் பாதைகள் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், பராமரிப்பின்றிக் கிடப்பதுமே இன்றைய பல பேரிடர்களுக்கு மூல காரணமாகும். யாழ். குடாநாடு ஒரு தீவுப் பகுதி. எமக்கு ஆறுகள் இல்லை என்று கருதப்பட்டாலும், மழைநீரை கடலுக்குக் கொண்டு சேர்க்கும் அதேவேளை, நிலத்தடி நீரைச் செறிவூட்டும் வழுக்கையாறு போன்ற இயற்கையான வடிகால்கள் எமக்கு உண்டு. மயிலிட்டித்துறையிலிருந்து அராலித்துறை வரையில் இது செல்கின்றது. வழுக்கையாறு முறையாகப் பராமரிக்கப்பட்டால் மட்டுமே, வலிகாமம் பகுதியின் கிணறுகளில் நீர் சுரக்கும்; உவர் நீர் ஊடுருவல் தடுக்கப்படும். அத்துடன், கனமழை காலங்களில் வலிகாமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க, இந்த ஆறு தடையின்றி ஓட வேண்டும். உலக வங்கியின் நிதியுதவியில் குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது வழுக்கையாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள குளங்களும் தூர்வாரப்படும். முற்காலத்தில் மழைநீரை வீடுகளுக்குள் சேமிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இன்று வீட்டைச் சுற்றி முழுமையாக சீமெந்து இட்டு, மழைநீர் நிலத்தடியில் இறங்க முடியாதவாறு தடுத்து வைத்துள்ளோம். யாழ்ப்பாணத்தின் குடிநீருக்கும் விவசாயத்துக்கு நிலத்தடி நீரே ஆதாரம் என்பதை உணர்ந்து எமது நீரின் அளவையும் தரத்தையும் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும். பொறியியலாளர்கள் திட்டங்களை வரைவார்கள், ஆய்வாளர்கள் மாதிரிகளைச் செய்வார்கள். ஆனால், அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள்தான். இந்தத் திட்டத்தின் வெற்றி உங்கள் கைகளிலேயே உள்ளது. எனவே, வழுக்கையாற்றின் முக்கியத்துவத்தை உங்கள் பகுதி மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்'என ஆளுநர் உள்ளூராட்சி மன்றங்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொறியியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரண்
சிறிலங்கா அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், ஆணையாளருமான நிமால் புஞ்சிஹேவா, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட விதிகளின் சில பிரிவுகள், சிக்கலானதாக தோன்றுகிறது. அவசரகால அதிகாரங்கள் அரசியலமைப்பு வரம்புகளுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் திறமையாகச் செயற்பட அவசரகாலச்
முறையான பராமரிப்பின்றி இருக்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம்... அவதியுறும் பொதுமக்கள்!
கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லையென்று மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்கும் போது , கும்பகோணம் பேருந்து நிலையம் மிக முக்கியமான இடம். இங்க ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1000ற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் வந்து போறோம். எங்களுக்கு இங்க முறையான கழிவறை வசதி இல்லை. ஒரு பேருந்து நிலையத்துல இருக்க வேண்டிய எந்தவிதமான அடிப்படை வசதியுமே இங்க முறையா இல்லை. பேருந்துக்காக நிற்கிற இடங்களில் கூட குண்டும் குழியுமாக தான் இருக்கு. இது சாதாரண நாட்கள்ல கூட பரவாயில்லை. கொஞ்சம் மழை பெஞ்சாக்கூட அந்த இடமே குட்டையா மாறிடுது. இங்க பயணிகள் மட்டுமில்லாம வியாபாரம் செய்ற வியாபாரிகள் கூட அதிகமா பாதிக்கப்படுறாங்க. இங்க தேங்கி இருக்கிற மழைத்தண்ணியில வியாபாரம் பண்ண முடியாம நிறைய பேர் கஷ்டப்பட்டு இருக்காங்க. பயன்பாடு இன்றி கிடக்கும் பாலூட்டும் அறை: இங்கே அவசரத்துக்கு குழந்தைக்கு பாலூட்ட கூட இடம் இல்லை. 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக முழுவதும் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறையினை வைத்தார். அதில் கும்பகோணமும் ஒன்று. இங்கு 2 மின்விசிறி, நாற்காலி, மின்விளக்குன்னு எல்லா வசதியும் இருந்துச்சு. ஆனா இப்போ கொஞ்ச காலமா இந்த பாலூட்டும் அறை பயன்பாடு இல்லாம பூட்டியே கிடக்கு. காரணம் என்னான்னு பார்த்தா அறையைச் சுற்றி அமைக்கப்பட்ட கண்ணாடிகள் உடைந்து, மின்விளக்குகள் எல்லாம் எரியாம வயர்கள் ஆபத்தான நிலையில் இருக்குது. இங்கு ஏராளமானோர் தாய்மார்களும் வராங்க. ஒரு குழந்தைக்கு பசிய ஆத்தக் கூட இடம் இல்லாமல் இருக்கிறது சிரமமா இருக்கு. அரசு இத சீக்கிரமாவே சரி செய்யணும். கழிவறையும் பயன்பாடு இன்றி துர்நாற்றம் வீசுது: தாய்மார்கள் பாலூட்டும் அறையை ஒட்டி தான் இலவச கழிப்பறை இருக்கு. ஆனா அது இருக்கிறதும் ஒன்னு தான் இல்லாம இருக்கிறதும் ஒன்னு தான். கும்பகோணம் பேருந்து நிலையத்துல நவீன கட்டண கழிப்பறைகள் இருக்கு. ஆனா அதை இடத்துலே இருக்கிற பொதுக் கழிப்பறை பயன்பாடுகள் இல்லாம பூட்டியே இருக்கு. ஆண்களுக்கு கூட இலவச கழிப்பறை ஒன்னு இருக்கு. பெண்களுக்குனு இருக்கிற கழிப்பறை தூய்மை இல்லாம பூட்டியே இருக்கு. பூட்டுனது மட்டும் இல்லாம கழிப்பறை வாசலிலே குப்பையை கொட்டியும் வச்சிருக்காங்க. இதனால ரொம்ப துர்நாற்றம் வீசுது. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துது. ஒரு அவசரத்துக்கு கூட ஒதுங்க முடியாத நிலைமையில இருக்கோம். இதை அரசு சீக்கிரமாகவே சரி பண்ணா நல்லா இருக்கும். முல்லை பெரியாறு அணை கட்ட பயன்படுத்தபட்ட தொன்மையான 'கலவை இயந்திரம்' ஏலத்தில் விற்பனையா? - அதிர்ச்சி பேருந்து நிறுத்தும் இடம் குண்டும் குழியுமா இருக்கு: கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள பேருந்து நிலையத்தில் மினி பேருந்துகள் நிக்கிற இடம் இருக்கு. அந்த மினிபஸ் நிக்கிற இடத்துல ரோடு குண்டும் குழியுமா இருக்குது. சாதாரண நாள் கூட பரவாயில்லை. ஆனா கொஞ்சம் மழை பெஞ்ச உடனே இங்க ஒரு குட்டி குளமே உருவாகிடுது. இங்கு பேருந்துக்காக நிற்கிற பயணிகளுக்கு இந்த இடம் மிகவும் சிரமத்தை ஏற்படுத்துது. இந்த இடத்துல தண்ணீர் தேங்கி இருப்பதினால எங்களால பஸ்ல கூட சரியா ஏற முடியல. நடக்கிற இடத்துல கரண்ட் ஒயர் கட் ஆகி விழுந்தா கூட தெரியாது. அந்த அளவு தண்ணீர் தேங்கிய படியே இருக்குது. தொற்று நோய் பரவும் அபாயம்: இந்தப் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை குப்பைகள் எல்லாம் மழைத் தண்ணீரோட ஒண்ணா கலக்குது. மழைத் தண்ணீரும் கொஞ்சம் கூட வற்றாம அப்படியே தெப்பம் போல தேங்கி தான் இருக்கு. இங்க குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை ஏராளமானோர் பயணிக்கிறாங்க. இந்த கழிவு நீர் தேக்கத்தால் தொற்று நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கு. இந்த சாலையையும் அரசு உடனடியாக சரி செய்யனும்னு கேட்டுக்குறோம். இந்த ஊரில் இப்படி பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது ரொம்பவும் கஷ்டத்தை ஏற்படுத்துது. இந்த ஊருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போறாங்க. அப்படிப்பட்ட இந்த ஊரில அடிப்படை வசதியான பாலூட்டும் அறை மற்றும் கழிவறை வசதி இல்லங்குறது பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. இதை எல்லாம் அரசு விரைந்து சரி செய்யனும். இதுதான் நாங்க அரசுக்கு முன் வைக்கிற கோரிக்கையாகும். விரைவில் பாலூட்டும் அறை மற்றும் கழிவறை புணரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று நாங்க நம்புறோம் என்கிறார்கள் பயணிகள்.
வடக்கில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல்
வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்: வவுனியா மாவட்டம்: நிர்மலன் பெர்னாண்டோ – 077 125 0461 கிளிநொச்சி மாவட்டம்: எம்.ராகவன் – 077 625 7977 யாழ்ப்பாணம் மாவட்டம்: வித்தியா நமசிவாயம் – 077 537 4464 முல்லைத்தீவு மாவட்டம்: எஸ்.தமிழ்செல்வன் – 077 358 0720 மன்னார் மாவட்டம்: ரேமன் – 076 649 9107 பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான சிகிச்சைகளைத் துரிதப்படுத்தவும், இழப்பீட்டு மதிப்பீடுகள் மற்றும் தரவு சேகரிப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்தவும் இந்த இலக்கங்களைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Indigo: திணறும் இண்டிகோ; விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை - மத்திய அரசு நடவடிக்கை!
இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நேற்றையதினம் ஆயிரத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் விமான ரத்துகள் தொடர்கிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்ப டிசம்பர் 10-15 வரை ஆகலாம் என அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்திருந்தார். இதனால் நாட்டில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திர அரசு நடவடிக்கை Indigo: பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட CEO இந்த நேரத்தில் மற்ற விமான சேவை நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் விலையைப் பல மடங்கு உயர்த்தின. இந்த சந்தர்ப்பவாத விலை நிர்ணயத்திலிருந்து மக்களைக் காப்பதற்காக புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண உச்சவரம்புகளை (Fare Caps) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது நிலவும் நெருக்கடியின்போது, சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிப்பதை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மிகவும் தீவிரமாகக் கவனித்துள்ளது... புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண உச்சவரம்புகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Airport (Representational Image) நிலைமை முழுமையாகச் சீரடையும் வரை இந்தக் கட்டண உச்சவரம்புகள் அமலில் இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. திணறிய Indigo - விமான கட்டணம் அதிகரிப்பு இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, புதிய விமானப் பணி நேர வரம்பு (Flight Duty Time Limitation - FDTL) விதிமுறைகள் காரணமாகப் பணி அட்டவணையைச் சீரமைக்க முடியாமல் திணறியதால், கடந்த சில நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் துயரத்தை மேலும் அதிகரிப்பது போல, விமான டிக்கெட்டுகளின் விலை அசுர வேகத்தில் உயர்ந்தது. இந்தக் குழப்பமான சூழ்நிலையால், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கான உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்தன. எடுத்துக்காட்டாக, டெல்லி-மும்பை நேரடி விமான டிக்கெட்டுகளின் விலை ₹65,460 வரை உயர்ந்தது. ஒற்றை நிறுத்தம் கொண்ட விமானங்களின் விலை ₹38,376 முதல் ₹48,972 வரை விற்கப்பட்டது. Indigo: மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம் - பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO
சுனாமியை விட டிட்வா புயலினால் மூன்று மடங்கு அதிக இழப்பு
டிட்வா புயலினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியால் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம் எனஅத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலினால், கிட்டத்தட்ட6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு தோராயமான மதிப்பீடு மட்டுமே. பொருளாதார மீட்புத் திட்டத்தை வகுக்க சரியான
அழகான பெண் பிள்ளைகளை பிடிக்காது: இளம்பெண் செய்த பயங்கர செயல்கள்
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் தன் சொந்த மகன் உட்பட நான்கு சிறுபிள்ளைகளைக் கொன்ற இளம்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை கொலை செய்ததற்காக அவர் கூறியுள்ள காரணம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. நான்கு சிறுபிள்ளைகளைக் கொன்ற இளம்பெண் ஹரியானா மாநிலத்திலுள்ள பானிபட் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் பூனம் (32). கடந்த இரண்டு ஆண்டுகளில், தனது உறவினர்களான மூன்று சிறுமிகளைக் கொலை செய்துள்ளார் பூனம். 2023ஆம் ஆண்டு, தன் கணவரின் சகோதரியின் மகளான 9 வயது சிறுமியை, தண்ணீர்த் தொட்டிக்குள் அமிழ்த்திக் கொன்றுள்ளார் […]
சிறிலங்காவுக்கு 4வது ஆழ்கடல் ரோந்துக் கப்பலை வழங்கியது அமெரிக்கா
அமெரிக்க கடலோர காவல்படையின், ரோந்துக் கப்பலான USCGC Decisive சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேரிலான்டில் உள்ள பால்டிமோரில் கடந்த 2ஆம் திகதி நடந்த நிகழ்வில் இந்த கப்பல் சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடலோர காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் 4வது கப்பலாகும். சிறிலங்காவுடனான ஒத்துழைப்பு மற்றும் வலுவான இருதரப்பு இராஜதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கப்பல்
தமிழ்நாடு அயோத்தி போல் மாறுவதில் தவறல்ல….நயினார் நாகேந்திரன் ஸ்பீச்!
சென்னை :பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “அயோத்தி இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லை, இந்தியாவில்தான் உள்ளது. எனவே தமிழ்நாடு அயோத்தியைப் போல மாறுவதில் எந்தத் தவறும் இல்லை” என்று தெரிவித்தார். திமுக எம்.பி. கனிமொழி, திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து பாஜக தமிழ்நாட்டை ‘தென்னிந்திய அயோத்தியா’ ஆக்க முயல்கிறது என்று விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்த நயினார், “அயோத்தி இந்தியாவில்தான் இருக்கிறது, தமிழகம் அதுபோல மாறினால் […]
திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் இந்நிலையில் இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அயோத்தி இல்லையே. அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை. நாம் எல்லோரும் ராமரின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம்: சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை - பவன் கல்யாண் வருத்தம்!
Stephen Review: அசத்தல் மேக்கிங் ஓகே; சீரியல் கில்லர் கதையில் இவற்றையும் கவனித்திருக்கலாமே?!
குறும்படத்திற்கான ஆடிஷனுக்கு வரும் பெண்களை ஒரு குறிப்பிட்ட வசனத்தைப் பேசச் சொல்கிறான் ஸ்டீபன் ஜெபராஜ் (கோமதி சங்கர்). இவ்வாறு வருபவர்கள் வசனம் பேச, அவர்கள் இறுதி வசனத்தை அடையும் தருணத்தில் ஸ்டீபன் கத்தியை எடுத்து அவர்களைக் குத்த ஓடி வருவதாகக் காட்சி முடிகிறது. இந்நிலையில் ஒன்பது இளம்பெண்கள் காணவில்லை என்ற பரபரப்பான செய்தி வெளியாக, அவர்களைக் கடத்தியவனை போலீஸ் நெருங்குகிறது. அப்போது அவர்களை ‘நான்தான் கொன்றேன்’ எனக் காவல்நிலையத்தில் சரண்டர் ஆகிறான் ஸ்டீபன். மனோதத்துவ நிபுணர்கள் அவனை விசாரிக்க இந்தக் குற்றத்தை அவன்தான் செய்தானா, அவனது குடும்பச் சூழல் என்ன, அவனது பின்னணி என்ன என்பதை உளவியல் த்ரில்லராகப் பேசுகிறது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஸ்டீபன்’. Stephen Review அப்பாவியான முகபாவனை, அதைச் சட்டென அப்படியே மாற்றும் கொடூரப் பார்வை எனக் கணிக்க முடியாத ‘சைக்கோ’ பாத்திரத்தை லாகவமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் கோமதி சங்கர். குறிப்பாக ரத்தம் உறைந்த நிலையில் பிணங்களைப் பார்க்கும் காட்சியும், பால்கனியில் காவலர்கள் வருகிறார்களா என்று தேடும் இடமும் சிறப்பு. விசாரணை அதிகாரியாகப் படம் நெடுகப் பயணிக்கும் மைக்கேல் தங்கதுரை, மனோதத்துவ நிபுணராக வரும் ஸ்ம்ரிதி வெங்கட் ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை. மனப்பிறழ்வு கொண்ட தந்தையாக வரும் வடிவேலு, தன் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து வெவ்வேறு உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார். அடக்கி வைத்த உணர்வுகளை வெளிக்காட்டும் ‘மை சன்’ வசன இடத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் கண்டிப்பான தாயாக வரும் விஜயஸ்ரீ நடிப்பில் இதே எனர்ஜி மிஸ்ஸிங்! கையறு நிலையை வெளிப்படுத்தும் ஷிரிஷாவின் திரை நேரத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம். Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?! ராட்சச சக்கரத்தில் அரூபமாகக் கொடுக்கப்பட்ட நியான் லைட்டிங், குறுகிய அறைக்குள் வைக்கப்பட்ட காட்சிக் கோணங்கள் ஆகியவற்றால் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் கிருஷ்ணா. இருப்பினும் பாடல் காட்சிகளின் மான்டேஜ்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆரம்பத்தில் ஒரே வசனத்தைப் பல பெண்கள் பேசும் இடத்தையும், விசாரணைக் காட்சிக்குள் குறுகலான பெட்டியில் போட்டோ எடுப்பதாகக் காட்சிகள் நகர்வதையும் நேர்த்தியாகக் கோர்த்திருக்கிறது படத்தொகுப்பாளர்கள் மிதுன் - கார்த்திக் கூட்டணி. இருப்பினும் பிளாஷ்பேக் காட்சிகள் துண்டுதுண்டாக விரிவது எமோஷனைச் சிதைக்கிறது. ராகவ் ராயனின் இசையில் பாடல்கள் வேகத்தடையாகப் போகின்றன. ஆனால் அதைப் பின்னணி இசையில் சரிசெய்யப் பரபர விசாரணைக் காட்சிகளில் புதிர் தாளங்களைப் போட்டிருக்கிறார். குறியீடாக வரும் ராட்டினத்தில் கவனம் செலுத்திய கலை இயக்குநர் அமர் கீர்த்தி, ஸ்டீபனின் இல்லத்தை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம். Stephen Review எடுத்த எடுப்பிலேயே குற்றம் புரிந்தவன் தவற்றை ஒப்புக்கொண்டதாக ஆரம்பித்து, அதை அவன் செய்தானா இல்லையா என்கிற வகையில் உளவியல் ரீதியான த்ரில்லராகக் கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் மிதுன். நமது பார்வையெல்லாம் ஒருவர் மேலிருக்க, அவரை மேலிருந்து கீழ் இறக்கி மற்றவரை மேலேற்றும் ராட்டின விளையாட்டை விளையாடியிருக்கிறது திரைக்கதை. முதலில் குடும்ப வன்முறை, குழந்தைப் பருவ அதிர்ச்சி ஆகியவை அதில் சுழன்றோடுகின்றன. ரோர்சாக் டெஸ்ட் (Rorschach Test) மூலம் போடப்படும் புதிர்களும், அதை அவிழ்க்க எடுக்கப்படும் முயற்சிகளும் அடுத்து என்ன என்ற ஆர்வத்தினை ஏற்படுத்துகின்றன. அதுபோல இன்னும் சில ஐடியாக்களைப் பிடித்திருக்கலாமே?! அதேபோல, தோட்டம் போல இருக்கும் இடத்தைக் காடு என்பதெல்லாம் போங்காட்டம் பாஸு! அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! இரண்டாம் பாதியில் எடிட்டிங்கில் காட்சிகள் வேகமாக நகர்ந்தாலும், ஒரே ஒரு போலீஸ் மற்றும் மனோதத்துவ நிபுணர் மட்டுமே இத்தனை பெரிய வழக்கைக் கையாள்கிறார்கள் என்பதில் லாஜிக் இல்லை. அதிலும் இன்னொரு பெண் இருக்கிறாள் என்று கிறிஸ்தவ ஆலயம் நோக்கி நகரும் காட்சிகள் நம்பத்தன்மையைக் குறைக்கின்றன. மேலும் பின்கதையில் மிஸ்ஸாகும் எமோஷனைக் கவனித்திருக்கலாம். அது தீர்ப்பை நோக்கி நகரும் இடத்திற்கு இன்னுமே வலு சேர்த்திருக்கும். கணிக்க முடியாத, எதிர்பாராத இறுதிக் காட்சி என்றாலும் அது வலிந்து திணிக்கப்பட்ட உணர்வையே எழுப்புகிறது. விடை தெரியாத கேள்விகளுடன் இரண்டாம் பாகத்துக்கான ஹின்ட் கொடுக்கும் கலாசாரம் இதிலும் தொடர்வது அயற்சியே! Stephen Review முதன்மைக் கதாபாத்திரங்களின் சிறப்பான நடிப்பு, நல்ல மேக்கிங் ஆகியவற்றால் ஈர்க்கும் ‘ஸ்டீபன்’, எழுத்தில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் இன்னும் வலிமையான படமாகியிருக்கும்.
கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கு : குற்றவாளிகள் மீது பாய்ந்த சட்டம் - கமிஷனர் அதிரடி உத்தரவு!
கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்
TVK: `கியூ-ஆர் கோடு பாஸ்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!' - புதுச்சேரி கூட்டத்துக்கு தயாராகும் தவெக
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்தனர். ஆனால் ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. மாநாடு நடைபெறும் மைதானத்தில் பூஜை அதையடுத்து த.வெ.க பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முதல்வர் ரங்கசாமி, காவல்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்காவது ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்ட புதுச்சேரி அரசு, மூடப்பட்ட அரங்கில் பொதுக்கூட்டம் வேண்டுமானால் நடத்திக் கொள்ளுங்கள் என்று புதுச்சேரி காவல்துறை சார்பில் ஆலோசனை கூறப்பட்டது. அதையடுத்து சீனியர் எஸ்.பி கலைவாணனை அவரது அலுவலகத்தில் சந்தித்த த.வெ.க நிர்வாகிகள், உப்பளம் துறைமுக மைதானத்தில் டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி கேட்டு மனு அளித்தனர். அந்த மனுவில், `கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் `கியூ-ஆர்’ கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கு காவல்துறை அனுமதி கொடுத்த நிலையில், அந்த இடத்திற்கு அனுமதி கேட்டு பொதுப்பணித்துறைக்கு மனு அளித்தனர். அதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தை ஆய்வு செய்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் மற்றும் சீனியர் எஸ்.பி கலைவாணன், பொதுக்கூட்டத்திற்காக த.வெ.க போட்டிருந்த வியூகங்களை கேட்டறிந்தனர். அதன் பிறகு டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போன்றவர்களை தனித்தனியாக சந்தித்த புஸ்ஸி ஆனந்த், பொதுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் துறைமுக மைதானத்தில் சிறப்பு பூஜைகள் செய்து, சீரமைக்கும் பணியில் இறங்கினர் த.வெ.க நிர்வாகிகள். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்த மைதானத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அதனால் முதல் கட்டமாக அங்கு லாரிகள் மூலம் மண் எடுத்துவந்து கொட்டப்பட்டு, ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு அந்த இடத்தை சமப்படுத்தும் பணி வேகவேகமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நிபந்தனைகளுடன் புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியிருப்பதால், புஸ்ஸி ஆனந்தே முன்னின்று பொதுக்கூட்ட மைதானத்தை சீரமைக்கும் பணிகளை செய்து வருகிறார். புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக; எதிர்ப்புகளை மீறி நண்பருக்கு கைகொடுப்பாரா ரங்கசாமி?
Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? - பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஐரோப்பாவுக்கு துரோகம் செய்கிறது என தனிப்பட்ட முறையில் பேசியதாக செய்திகள் பரவின. இதனை மறுத்த மாக்ரோன், “ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்தவிதமான அவநம்பிக்கையும் இல்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் - அமெரிக்க அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் சந்தேகமும் விளக்கமும்! சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம், “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு இடையே ஒற்றுமை மிக அவசியம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்களின் தேவை உள்ளது” எனப் பேசியுள்ளார். Modi - Macron பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் எடுத்த செல்ஃபி... ஜெய்ப்பூரில் ரோடு-ஷோ! கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 4, 2025), ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் (Der Spiegel) ஒரு ரகசிய தொலைபேசி உரையாடல் பற்றி செய்தி வெளியிட்டது. அதில், உக்ரைன்–ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை மாக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் சந்தேகிப்பதாகக் கூறப்பட்டது. அதில், “பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றித் தெளிவு இல்லாமல், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்குத் துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளது” என்று மாக்ரோன், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரித்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த பத்திரிகை செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் இம்மானுவேல் மாக்ரோன். புதின் - ட்ரம்ப் Ukraine-க்கு துரோகம் செய்கிறாரா ட்ரம்ப்? ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதித் திட்டத்தை வாஷிங்டன் முன்வைத்தது. அந்தத் திட்டம், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் உள்ளீடு இல்லாமல் தயாரிக்கப்பட்டது. மேலும், இது ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகளைப் பிரதிபலிப்பதாக விமர்சிக்கப்பட்டது. வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, டிரம்பின் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரம் மாஸ்கோவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. இருவரும் கிரெம்லினில் விளாடிமிர் புடினுடன் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, விட்காஃப் வியாழக்கிழமை மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துள்ளார். இந்த நடவடிக்கைகளின்போது, ஐரோப்பா பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபடுத்தப்படவில்லை. இது, ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டை டிரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை என்பதைப் பிரதிபலிக்கிறது; இதனால் இந்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பா சந்தேகிக்கிறது. USA: பிரான்ஸ் அதிபர் காரை தடுத்த அமெரிக்க போலீஸ்; நடந்தே தூதரகம் சென்ற மக்ரோன் - Viral Video
முல்லை பெரியாறு அணை கட்ட பயன்படுத்தபட்ட தொன்மையான 'கலவை இயந்திரம்'ஏலத்தில் விற்பனையா? - அதிர்ச்சி
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையானது 1886-ல் கட்ட தொடங்கி, 10.10.1895 ல் கட்டி முடிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை கட்டுமானத்திற்காகவே பித்யோகமான கலவை இயந்திரம் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. அதன் பின் அங்கிருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலமாக திண்டுக்கல் அருகில் உள்ள அம்மையநாயக்கனூருக்கு வந்தடைகிறது. அதற்கு மேல் சரியான பாதை இல்லாத காரணத்தால் கலவை இயந்திரத்தில் டிராலி பொருத்தி யானைகள் மற்றும் மாடுகளை பயன்படுத்தி தேனி, கம்பம், கூடலூர் என 3000 அடி உயர மலையினை கடந்து தற்போது அணை இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கலவை இயந்திரம் முல்லை பெரியாறு அணை முழுக்கவே இந்த கலவை இயந்திரத்தை பயன்படுத்தி தான் கட்டப்பட்டுள்ளது. சுமார் 130 வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இந்த இயந்திரம் பென்னி குயிக் வீட்டிற்கு முன் வைக்கப்பட்டிருந்தது. முல்லை பெரியாறு அணை தேனி மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உணர்வு பூர்வமான விஷயமோ, அதே அளவிற்கு அந்த அணையை கட்ட பயன்படுத்தபட்ட இந்த கலவை இயந்திரத்தையும் பொக்கிஷமாகவே பார்த்தனர். முல்லை பெரியாறு அணை பென்னி குயிக் வீட்டின் முன் உள்ள கலைவை இயந்திரத்தை கீழே கொண்டு வந்து அதனை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தொன்மை மிக்க கலவை இயந்திரத்தை பயன்படுத்த முடியாத பொருள் என்று கடந்த வருடம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முல்லை பெரியாறு அணையில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது, அணையில் உள்ள பழமையான பொருள்கள் எவையெல்லாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறதோ, அவற்றை வகைப்படுத்தி கடந்த வருடம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த கலவை இயந்திரமும். தற்போது இந்த இயந்திரம் இங்கு இல்லை. எடுத்து சென்று விட்டார்கள் என்கிறார்கள். சரி, யாருக்கு ஏலம் விடப்பட்டது என கேட்ட போது அந்த விவரங்களை பார்த்து சொல்கிறேன் என்றார் முடித்துக்கொண்டார். கடல் கடந்து, மலைகள் கடந்து பயணப்பட்டு அணை கட்ட பயன்பட்ட ஒரு இயந்திரத்தை, அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வரும் ஒரு பழையான பொருளை ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக வெளிக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி உறவு வதந்தி மீண்டும் பரபரப்பு
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல் வதந்தி மாதக்கணக்கில் சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. அண்மையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிதா தன் மனைவியுடன் சேர்ந்து ட்ரூடோ மற்றும் பெர்ரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, இந்த வதந்தி மேலும் தீவிரமடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் மரம் முன் நின்று பெர்ரியின் தோளில் கை வைத்தபடி ட்ரூடோ இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த […]
GBP -பிரித்தானியாவின் பாரிய உதவி: நிவாரணத் தொகை £1 மில்லியனாக அதிகரிப்பு!
இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் தனது… The post GBP -பிரித்தானியாவின் பாரிய உதவி: நிவாரணத் தொகை 1 மில்லியனாக அதிகரிப்பு! appeared first on Global Tamil News .
950 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள்! இலங்கைக்கு அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை :டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஆறுதலாக, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1.19 கோடி மதிப்பிலான 950 டன் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைத்தார். “தமிழ்நாடு மக்களிடம் இருந்து அன்புடன்” என்று எழுதப்பட்ட பேனருடன் கூடிய கப்பலை முதலமைச்சர் தொடங்கி வைத்து, இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார். இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
ஐக்கிய மக்கள் சக்தியில் முரண்பாடு! வெலிகமவின் முக்கிய விக்கெட் வீழ்ந்தது!
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya – SJB) கட்சியில் இருந்து, அதன்… The post ஐக்கிய மக்கள் சக்தியில் முரண்பாடு! வெலிகமவின் முக்கிய விக்கெட் வீழ்ந்தது! appeared first on Global Tamil News .
இந்தியாவின் இந்த நிலைமைக்கு ரோஹித் தான் காரணம்! அடித்து சொல்லும் அபிஷேக் நாயர்!
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நயார், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஆட்டத்தை விரிவாகப் பாராட்டியுள்ளார். ரோஹித் சர்மா தனது ஆரம்ப காலத்தில் கீழ் வரிசையில் ஆடியவராக இருந்தாலும், பின்னர் தொடக்க வீரராக உருவெடுத்தது அவரது கிரிக்கெட் பயணத்தில் பெரிய மாற்றம் என்று நயார் சுட்டிக்காட்டினார். “அவர் தொடக்க வீரராக வந்த பிறகுதான் இந்தியாவின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் முற்றிலும் மாறியது. ரன்களை […]

25 C