SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

தொடருந்து பயணிகளுக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு

தொடருந்து சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே தொடருந்து பருவச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தொடருந்து சேவைகள் வழக்கமாக இயங்கும் பகுதிகளில், தொடருந்து பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க முயற்சிப்பதாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இந்தப் பிரச்சினையை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தொடருந்து பாலத்தை இரட்டைப் பாதைப் பாலமாக […]

அதிரடி 7 Dec 2025 10:09 am

நாட்டை புரட்டிப்போட்ட பேரழிவு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரிப்பு

அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, காணாமல் போனோரின் எண்ணிக்கை 209 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, ஹட்டன் – வட்டவல, மாணிக்க தோட்டம் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி 7 Dec 2025 10:05 am

பிக் பாஸில் இருந்து பார்வதி அல்ல பிரஜின் வெளியேற்றம்: கனி அக்கா சேஃப்

பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த வாரம் வி.ஜே. பார்வதி வெளியேற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று மக்கள் செல்வனின் நண்பர் பிரஜினை வெளியேற்றிவிட்டார்கள்.

சமயம் 7 Dec 2025 9:39 am

சிறுவயதில் கொலை மிரட்டல் – 20 ஆண்டுகளாக வீட்டுக்குள் இருந்த சிறுமி பார்வைக் குறைவுடன் மீட்பு

பஸ்தார்: சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் மாவட்​டம் பகாவந்த் கிராமத்​தைச் சேர்ந்​தவர் லிசா. இவர் கடந்த 2000-ம் ஆண்​டில் தனது 6 வயதில் அங்​குள்ள பள்​ளி​யில் 2-ம் வகுப்பு படித்​துள்​ளார். அப்​போது அவரது கிராமத்​தைச் சேர்ந்த ஒரு​வர் லிசாவை கொன்​று​விடு​வேன் என மிரட்​டி​யுள்​ளார். அவரது பேச்சை கேட்டு மிக​வும் பயந்​து​போன சிறுமி வீட்​டை​விட்டு வெளி​யேற​வில்​லை. இந்நிலையில் அவரது தாயும் இறந்​து​விட்​டார். அந்த சிறுமியை பார்த்​துக் கொள்ள யாரும் முன்​வர​வில்​லை. இதனால் அவரது தந்தை லிசாவை அவர்​களது மண் குடிசை […]

அதிரடி 7 Dec 2025 9:30 am

நாய்கள் பேய்களைப் பார்க்கிறதா? நள்ளிரவில் அவை குறைப்பதன் மர்மம் என்ன?

வீட்டில் வளர்க்கும் நாய்கள் சில நேரங்களில் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து தொடர்ந்து குறைப்பதைப் பார்த்திருப்போம். நாய்களுக்குப் பேய்கள் தெரியும், அவை அதனை உணரும் என்று காலம் காலமாக வீட்டில் இருப்பவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் நாய்களால் ஆவிகளைப் பார்க்க முடியுமா? இதுகுறித்து ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். லண்டன் ரிப்பன் கல்லூரியின் பேராசிரியர் மார்க் ஈடன் இதுகுறித்து கூறுகையில், சமீபத்தில் தந்தையை இழந்த ஒருவர், தன் நாய் தொடர்ந்து படிக்கட்டுகளைப் பார்த்துக் குறைப்பதாகக் கூறினார். அவர் ஏற்கெனவே பேய்களின்மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால், தன் நாய் தன் தந்தையின் ஆவியை உணர்வதாக அவர் நம்புகிறார் என்று கூறியிருக்கிறார். Dog அறிவியல் சொல்வதென்ன? விஞ்ஞானிகள் நாய்கள் பேயைப் பார்க்கவில்லை, மனிதர்களால் உணர முடியாத சத்தங்களையும், வாசனைகளையும் அவை உணர்கின்றன என்று கூறுகின்றனர். லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் பிரெஞ்ச் கூறுகையில் நாய்களுக்கு மனிதர்களைவிட சிறந்த நுகரும் திறனும், கேட்கும் திறனும் உண்டு. எனவே மனிதர்களால் கண்டறிய முடியாத இயற்கையான அசைவுகளைக் கண்டு அவை எதிர்வினையாற்றுகின்றனவே தவிர, இது அமானுஷ்யம் அல்ல என்று கூறியிருக்கிறார். மனிதர்களுக்கு மூக்கில் சுமார் 5 மில்லியன் நுகர்வு செல்கள் மட்டுமே உள்ளன. ஆனால், நாய்களுக்கு சுமார் 220 மில்லியன் நுகர்வு செல்கள் உள்ளன. இது மனிதனை விடப் பல மடங்கு அதிகமாம். 1950-களில் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மிகக் குறைந்த அளவு பூண்டு எண்ணெயைக்கூட நாய்களால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபத்திய ஆய்வுகளில், புற்றுநோய் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை வாசனை மூலமே நாய்கள் கண்டுபிடிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏன், மனிதர்களின் மன அழுத்தத்தைக்கூட நாய்களால் முகர்ந்து உணர முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது, நாய்கள் ஒரு வெற்று இடத்தைப் பார்த்து குரைத்தால், அங்கே பேய் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாத ஏதோ ஒரு வாசனையோ அல்லது சத்தமோ அங்கே இருக்கிறது என்பதே அறிவியலில் பதிலாக உள்ளது.

விகடன் 7 Dec 2025 9:08 am

Doctor Vikatan: சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

Doctor Vikatan: கொரோனா காலத்தில் வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி அதிகம் வலியுறுத்தப்பட்டது. பொதுவாகவே, வைட்டமின் சி மாத்திரைகளை தினமும் எடுத்துக்கொண்டால், சளி, காய்ச்சல் பாதிக்காது என்று சொல்லப்டுவது எந்த அளவுக்கு உண்மை?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி சளி, காய்ச்சல் பிரச்னை எதனால் வருகிறது என்பது மிகவும் முக்கியம். சளி, காய்ச்சல் என்பது வைட்டமின் சி குறைபாடுகாரணமாக வருவது கிடையாது. சளி, காய்ச்சல் வருவதற்கான பல காரணங்களில் மிக முக்கியமான காரணம், தொற்று (Infection). தொற்று பாதிக்கிறது என்றால், நம் உடலின்நோய் எதிர்ப்புச் சக்தி (Immune Level) சற்று குறைவாக இருப்பதாக அர்த்தம். நம் உடல் 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' (Oxidative Stress) நிலையில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்போது ஏற்படும் சமநிலையற்ற நிலை.  இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை சமன் செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ உபயோகப்படுத்துவதுதான் வைட்டமின் சி. அதனால்தான், காயம் ஆறும் காலத்தில் உள்ளவர்களுக்கோ (Healing Time), புகை பிடிப்பவர்களுக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை முடித்தவர்களுக்கு, அதேபோல நீரிழிவு நோயாளிகளுக்குப்  புண்கள் ஏதாவது வந்தாலோ வைட்டமின் சி சப்ளிமென்ட்டை (Supplement) மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறோம். இதன் நோக்கம், அவர்களுடைய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து, அவர்களுடைய நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம். நாம் ஒருநாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கு மேல் வைட்டமின் சி எடுத்தால், அதுவே நமக்கு பிரச்னைகளை உண்டாக்கும். ஒரு நாளைக்கு ஒருவர்2,000 மில்லிகிராமுக்குள்தான் வைட்டமின் சி எடுக்க வேண்டும். அதற்கும் மேல் போனால், அந்த வைட்டமின் சி-யே அவர்களுக்குப் பிரச்னைகளை உண்டுபண்ணும். அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம். அது அவர்களுக்கு வைட்டமின் சியின் பலனை அளிக்கும். வைட்டமின் சி மட்டுமல்ல, எந்த சப்ளிமென்ட்டையும் மருத்துவரின் பரிந்துரையின்றி, எடுக்காமல் இருப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கோபம், அழுகை, தனிமை, பயம்... மாறும் மனநிலையை சரிசெய்யுமா பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்?

விகடன் 7 Dec 2025 9:00 am

வடக்கில் நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளுநர் எச்சரிக்கை

வடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஆளுநர், இது குறித்து விசேட தெளிவுபடுத்தலை வெளியிட்டார். ஆளுநரின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனநாயகக் கட்டமைப்பில் அரச செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதையும், விழிப்புடன் இருப்பதையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்கள் மத்தியில், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது சமூகப் பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும். உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடினேன். அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமையவே பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராமமட்ட ஏனைய அலுவலர்கள் ஊடாகத் தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித இரகசியத் தன்மையும் இல்லை. உதவித்தொகை பெறத் தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் அந்தந்தப் பகுதிகளில் பகிரங்கமாகத் காட்சிப்படுத்தப்படும். இதனை மாவட்டச் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, தகுதியான எவரும் விடுபடவோ, தகுதியற்ற எவரும் உள்நுழைவதற்கோ இதில் வாய்ப்புகள் இல்லை. மிக முக்கியமாக, மக்களுக்கான உதவித்தொகை இன்னமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை. அவ்வாறு பணம் வைப்பிலிடப்படும் முன்னரே, 'முறைகேடுகள் நடந்துவிட்டதாக'அரைகுறைத் தகவல்களைக் கொண்டு பரப்பப்படும் செய்திகள் அடிப்படையற்றவை. தெரிவுப் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னரே கொடுப்பனவுகள் இடம்பெறும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சமடையத் தேவையில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்கு, அரச இயந்திரத்தில் புரையோடிப்போயிருந்த ஊழலை ஒழிப்பதேயாகும். எனவே, மக்களின் கண்ணீரில் இலாபம் தேடும் ஈனச் செயலுக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இனி இடமில்லை. நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது - அவர் எந்த நிலையிலிருந்தாலும் - தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கடந்து, முறைகேடுகள் தொடர்பில் யாரிடமேனும் தகுந்த ஆதாரங்கள் இருப்பின், அதனை எனது கவனத்துக்கு நேரடியாகக் கொண்டு வரலாம். ஆதாரபூர்வமான முறைப்பாடுகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அரச இயந்திரம் மக்களுக்காகவே இயங்குகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், காழ்ப்புணர்ச்சிகளைத் தவிர்த்து, நேர்மையுடனும் மனிதாபிமானத்துடனும் ஒன்றிணைந்து எமது மக்களை மீட்டெடுப்போம், என வடக்கு மாகாண ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு 7 Dec 2025 8:48 am

SIR: 5.6 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்; கோவை மாவட்ட நிலவரம்

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய பணிகள் டிசம்பர் 11-ம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கோவை இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வாக்காளர்களிடம் பூர்த்தி செய்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் உடனடியாக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சனிக்கிழமை (6.12.2025) வரை 5,06,394 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இறப்பு தொடர்பாக 1,13, 861 பேரும், கண்டறிய முடியாதவை, இடமாற்றம், இரட்டைப் பதிவு தொடர்பாக 3,92,533 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். SIR - சிறப்பு தீவிர திருத்தம் அதிகபட்சமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் 70,439 பெயர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவை வடக்கு தொகுதியில் 66,525 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இதேபோல கவுண்டம்பாளையம் தொகுதியில் 64,072 பெயர்கள், கிணத்துக்கடவு தொகுதியில் 58,545 பெயர்கள், சிங்காநல்லூர் தொகுதியில் 54,354 பெயர்கள், கோவை தெற்கு தொகுதியில் 46,894 பெயர்கள், சூலூர் தொகுதியில் 43,465 பெயர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் 41,079 பெயர்கள், பொள்ளாச்சி தொகுதியில் 31,720 வாக்காளர்கள், வால்பாறை தொகுதியில் 29,691 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.“ என்று கூறியுள்ளனர். கோவை படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 11-ம் தேதிக்குள் கோவையில் மேலும் 1 லட்சம் பெயர்கள் நீக்கப்படவுள்ளன. இதன் மூலம் கோவையில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

விகடன் 7 Dec 2025 7:59 am

‘ருதுராஜுக்காக’.. 2 ஸ்டார் வீரர்களை ODI அணியில் இருந்து வெளியேற்றும் பிசிசிஐ: இனி 4ஆவது இடம் இவருக்கே!

ருதுராஜ் கெய்க்வாட்டிற்காக 2 ஸ்டார் வீரர்களை ஒருநாள் அணியில் இருந்து வெளியேற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2ஆவது போட்டியில் ருதுராஜ் சதம் அடித்ததுமே இந்த முடிவை பிசிசிஐ எடுத்துவிட்டதாம்.

சமயம் 7 Dec 2025 7:57 am

Vijay: தயாரிப்பாளர் மகள் திருமண வரவேற்பு; கலந்துகொண்டு வாழ்த்திய விஜய்

நேற்று சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் T.சிவாவின், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. T.சிவா `பூந்தோட்டக் காவல்காரன்', `அரவான்', `சரோஜா', `கடவுள் இருக்கான் குமாரு' போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவர் திரைப்பட விநியோகஸ்தரும் கூட. விஜய் வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to T.சிவாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட தமிழ்நாடு திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். T.சிவா GOAT திரைப்படத்தில் இந்திய தூதரக அதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to

விகடன் 7 Dec 2025 7:55 am

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்நகரப்பழைய பூங்கா(Old park Jaffna) அதில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது விடயத்தில் மிகப்பலமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு சாரார் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலராக சிறிதுகாலம் (14 மாதங்கள்) பணியாற்றியவன் என்றவகையில் இந்த பழைய பூங்கா பற்றிய எனது கரிசனையையும் எமது அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் குறுகிய சிந்தனைகளையும் பற்றிப்பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகிறேன். யாழ்ப்பாணப் பழையபூங்கா கொண்டிருந்த சிறப்பையும் அதன் தொன்மையையும் பெறுமதியையும் அறிந்து கொள்ளாது, அபிவிருத்தி என்ற போர்வையில் எமது இளைய சமுதாயம் மட்டுமன்றி கற்றறிந்தோர் சமுகம் எனக்கூறிக்கொள்ளும் ஒரு சாரார், பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் போன்றோர் இத்தகைய பதிலீடற்ற பெரும் சம்பத்துக்கள் பறிபோவதைப்பற்றி எந்தவித கவலையுமின்றி வாழ்ந்துகொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது. ஆட்சிக்கு வரும் அரசுகளும் அவர்களால் நியமிக்கப்படும் ஆளுனர்களும் தமக்குரிய அதிகாரங்களை மக்கள் நலனுக்காகவன்றி அம்மக்களின் எதிரகாலத்தைக் கருத்தில் கொள்ளாது அவரவர் தனிப்பட்ட அபிலாசைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் தான்தோன்றித்தனமாகப் பிரயோகிப்பதும் அதனை எதுவித ஆட்சேபனையுமின்றி அதிகாரிகள் சிரமேற்கொண்டு செயற்படுத்துவதும் நாம் எமது நிருவாக வரலாற்றில் தரிசித்த உண்மைகள். 2023 ஆம் ஆண்டு தை 18 இல் மாவட்ட செயலராக பொறுப்பேற்று சில நாட்களில் அப்போது ஆளுனராக இருந்தவர் பழைய பூங்காவின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் ஏற்கனவே உள்ள ஆளுனர் அலுவலகத்தோடு சில கட்டுமானங்களையும் உருவாக்கியிருந்தார். மேலும் காணியைப்பிரித்து குறுக்காக வேலியிட்டு அது ஆளுனர் அலுவலகத்திற்குரியது என அத்துமீறலும் செய்திருந்தார். இந்நிலையில் எனது விடுதியிலிருந்து பார்த்தபோது அதிகாலை கனரக இயந்திரங்கள் அந்தக்காணியில் ஏதோ வேலைக்காக வந்திருப்பதைக் கேள்வியுற்றேன். அவை மாநகர சபைக்குரியவை என்பதையும் அறிந்துகொண்டேன். உடனடியாக மாநகர ஆணையாளருடன் தொடர்புகொண்டு இந்தக்காணி அரசாங்க அதிபருக்குரியது என்பது உங்களுக்குத் தெரியும்தானே! ஆயின் எனக்குத்தெரியாமல் எனது அனுமதி பெறாமல் என்ன செய்யப்போகிறீர்கள் என வினவியபோது ஆணையாளர் அது எங்களுடைய வேலைத்திட்டம் இல்லை. ஆளுனரின் உத்தரவுக்கமைய இயந்திரங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன எனக்கூறினார். உடனே இது அரசாங்க அதிபரின் காணிக்குள் எனது அனுமதியில்லாமல் எவரும் எந்த வேலையும் செய்ய அனுமதியில்லை. என்றுகூறி இயந்திரங்களை வெளியேறப்பணித்தேன். ஆணையாளர் இதுபற்றி ஆளுனருக்குத் தெரிவித்ததும் ஆளுனர் என்னுடன் தொடர்புகொண்டு தான் ஒரு நடைபயிலும் சாலை அமைக்க இருப்பதாகவும் அதைச் செய்யப்போவதாகவும் அதைத்தடுக்கவேண்டாம் எனவும் கூறினார். ஆனாலும் பழையபூங்கா அபிவிருத்தி பற்றி தீர்மானிக்கவேண்டியது மாவட்ட செயலரே என்றும் அதன் அபிவிருத்தி பற்றிய முன்மொழிவுகள் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆராய்விலுள்ளது பற்றியும் ஆளுனரோடு விவாதித்தேன். அவர் உடனடியாக நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களை காலை எட்டு மணிக்கே என்னிடத்தில் அனுப்பி எனது ஒப்புதலைப்பெற முயன்றார். ஆனாலும் இறுதிவரை நான் அதற்கான ஒப்புதலை வழங்கவுமில்லை குறித்த வேலை நடை பெறவுமில்லை. 27 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெறுமதியான அமைவிடத்தில் வரலாற்றுப்பதிவுகள் பலதையும் கொண்ட இந்தக்காணியை எந்தவித தூரநோக்குமின்றி நினைத்தபடி துண்டாடி வெறும் ஒழுங்கற்ற கட்டிடக்காடாக்கி இன்று அழகிழந்து கிடக்கிறது பழைய பூங்கா! அரியாலை, செம்மணி, மண்டைதீவு, கோப்பாய் போன்ற நகரைச்சுற்றிய இடங்களுக்கு கொண்டு போயிருக்கக்கூடிய அரச கட்டிடங்கள் கைதடி, மாங்குளம், வ்வுனியா போன்ற பகுதிகளில் அமைக்கப்பட வேண்டிய ஆளுனர் மாளிகை மற்றும் ஆளுனர் அலுவலகங்கள் போன்றவற்றை யாழ். நகரப் பழைய பூங்காவில் காலத்துக்குக் காலம் அமைத்து தங்கள் தான்தோன்றித்தனமான அதிகாரப்பிரயோகத்தின்மூலம் அலங்கோலப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கண்டி, கொழும்பு, அனுராதபுரம், காலி போன்ற நெருக்கடியான நகரங்களில்கூட நகரப்பூங்காக்கள் தீண்டப்படாமல் அவற்றின் தொன்மையும் சிறப்பும் பேணப்பட்டுக்கொண்டிருக்க யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு பூங்காவான பழைய பூங்கா இவ்வாறு குதறப்படுவதைத் தடுத்தேயாகவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பதிவு 7 Dec 2025 7:48 am

லண்டனில் கீறீடப் பெட்டி மீது கஸ்டர்ட் ஊத்தியமை: நால்வர் கைது!

லண்டன் கோபுரத்தில் (Tower of London) உள்ள கிரீட நகைகளின் ஒரு பகுதி அடங்கிய காட்சிப் பெட்டியில் கஸ்டர்ட் ஊத்தப்பட்டு மற்றும் ஆப்பிள் கிறப்புள் பூசப்பட்டதை அடுத்து நான்கு போராட்டக்காரர்களை லண்டன் காவல்துறையினர் கைது செய்தனர். இச்வம்பவம் நேற்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் நடந்தது. அரசர் வழக்கமாக விழாக்களில் அணியும் இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் வைத்த பகுதியாகும். சிவில் எதிர்ப்புக் குழு என்று தன்னை விவரிக்கும் டேக் பேக் பவர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குற்றச் சேதம் விளைவித்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், டவரின் நகை மாளிகை தற்காலிகமாக பொதுமக்களுக்கு மூடப்பட்டது. ஜஸ்ட் ஸ்டாப் ஆயிலின் ஒரு கிளையாகத் தோன்றும் டேக் பேக் பவர் தன்னை ஒரு புதிய வன்முறையற்ற சிவில் எதிர்ப்புக் குழுவாக விவரிக்கிறது. இந்த சம்பவத்திற்குப் பின்னால் தாங்கள் இருப்பதாகக் உரிமை கோரியுள்ளது. இந்த சம்பவத்தின் காட்சிகளை அந்தக் குழு சமூக ஊடகங்களில் வெளியிட்டது. ஜனநாயகம் நொறுங்கிப் போய்விட்டது!என்று ஒரு இளம் பெண் கத்த, ஒரு ஆண், பிரிட்டன் உடைந்து விட்டதுஎன்று கூறினார். வரலாற்று சிறப்புமிக்க அரச அரண்மனைகள், இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் சேதமடையவில்லை என்பதை உறுதிப்படுத்தின. ஜுவல் ஹவுஸ் பிற்பகலில் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் முடியாட்சியின் பிரபலமான சின்னமாகும், மேலும் 2023 ஆம் ஆண்டு தனது முடிசூட்டு நாளில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயை விட்டு வெளியேறியபோது மன்னர் மூன்றாம் சார்லஸ் அதை அணிந்திருந்தார். முடிசூட்டு விழாக்களுக்கு அப்பால், விலைமதிப்பற்ற வேலை செய்யும் கிரீடம், பாராளுமன்றத்தின் அரசு திறப்பு விழா போன்ற முறையான நிகழ்வுகளின் போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது பயன்பாட்டில் இல்லாதபோது, ​​லண்டன் கோபுரத்தில் உள்ள நகை மாளிகையில் வைக்கப்படுகிறது. இது முதலில் 1937 ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜ் முடிசூட்டு விழாவிற்காக தயாரிக்கப்பட்டது. இதில் 2,868 வைரங்கள், 17 சபையர்கள், 11 மரகதங்கள், நான்கு மாணிக்கங்கள் மற்றும் 269 முத்துக்கள் உள்ளன. ஒரு கிலோகிராமுக்கு மேல் எடை கொண்டது.

பதிவு 7 Dec 2025 7:22 am

கோவா பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து-23 பேர் பலி!

கோவா பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்தில் பரிதாபமாக 23 பேர் பலியாகினர்.

சமயம் 7 Dec 2025 7:21 am

மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை –ஜனாதிபதி

அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் […]

அதிரடி 7 Dec 2025 7:16 am

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; பலத்த மின்னல், மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது. இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

அதிரடி 7 Dec 2025 7:11 am

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்

வெள்ளத்தால் சிதைந்த முக்கிய சாலைகளை ஆய்வு செய்யும் பணிகள் இந்திய இராணுவத்தின் பொறியியல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேதமடைந்த பாலங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்மட்ட உயர்வை நேரடியாக மதிப்பீடு செய்து பெய்லி பாலங்களை விரைவாக நிறுவும் திட்டத்தை வடிவமைத்து வருகின்றனர். அடுத்த சில நாட்களில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பல முக்கிய சாலைப் பாதைகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள பாலத்தினை புனரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய இராணுவ பொறியியல் குழு புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளன.

பதிவு 7 Dec 2025 6:59 am

திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான்

கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் ஆண்டுதோறும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இந்தாண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளானது. இதில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கெதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க-வை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான் , ``பல கோடி மக்களின் வீடு இருளிலே கிடக்கும்போது மலை மேல விளக்கேத்தணும் என்கிறாங்க. இத்தனை ஆண்டுகள் எங்கே இருந்தாங்க? இன்னைக்குத்தான் முருகன் கண்ணுக்கு தெரியுதா? ஏன் போன ஆண்டு இந்த விளக்கு ஏத்த வரல? அதுக்கு முந்தின ஆண்டு ஏன் வரல? ஏன்னா ரெண்டு மாசத்துல தேர்தல் வருது. திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்... சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ - க.கனகராஜ் | களம் 1 அரசுக்குத் தெரியாமையா இவ்வளவு நடக்குது. அவங்க நினைச்சிருந்தா இதையெல்லாம் எப்போவோ தடுத்திருக்கலாம். இது ஒற்றுமையா இருக்கிற தமிழ்ச் சமூகத்துக்குள்ள ஒரு பிளவை ஏற்படுத்துவதா நான் பார்க்கிறேன். எல்லாத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிற என் மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். சீமான் திடீர்னு ஒருத்தர் வந்து நான் போராடுவேன், அதுக்கு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்து போய் ஏற்றுங்கனு சொல்றது வருத்தமா இருக்கு. நாட்டை நிர்வகிக்கிறது நீதிமன்றமா, சட்டமன்றமா? ஒரு அசம்பாவிதமான ஒரு சூழ்நிலை வந்துருச்சு, ஒரு பெரிய கலவரம் வந்துருச்சு, பொறுப்பு அரசு ஏற்குமா, நீதிமன்றம் ஏற்குமா? நீதிபதிகளை நியமிக்கிறது யாரு? நியமிக்கிற ஆட்சியாளர்களுக்காகப் பேசுவீங்களா, கீழே இருக்கிற மக்களுக்காகப் பேசுவீங்களா? திடீர்னு எங்க முருகன் மேல உங்களுக்கு என்ன பற்று வருது? ஏன்னா உங்க ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சு. அங்கே வந்து புரி ஜெகந்நாதரை எடுத்தீங்க, ஐயப்பனை எடுத்துப் பார்த்தீங்க. இப்ப இங்க முருகனைத் தொட்டுப் பாக்றீங்க. உங்களுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? ராமர் கோயிலைக் கட்டிட்டீங்க, அந்த பிரச்னை முற்றுப் பெற்றுருச்சு. அங்கே அகிலேஷ் அயோத்தியிலேயே ஒரு தாழ்த்தப்பட்டவனை பொதுத் தொகுதியில நிறுத்தி உங்களைத் தோற்கடிச்சுட்டாரு. அங்க முடிஞ்சுச்சு. அதுக்கப்றம் மாநிலத்துக்கு இருக்கிற ஒவ்வொருத்தனும் எவன் பெரிய மதிப்பு வச்சிருக்க இறை இருக்கோ, அந்த நம்பிக்கையைத் தூக்குறீங்க என்று கூறினார். திருப்பரங்குன்றம்: ``தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான்'' - ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பேட்டி

விகடன் 7 Dec 2025 6:56 am

கிரீஸ் கிரீட் தீவு அருகே படகு கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழப்பு

நேற்று சனிக்கிழமை கிறீஸ் கிரீட் தீவின் தெற்கே மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் இறந்து கிடந்ததாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான நிலையில் உயிர் பிழைத்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். கடுமையான புயலின் போது கப்பலின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதில் இருந்தவர்கள் தண்ணீர், உணவு அல்லது சரியான தங்குமிடம் இல்லாமல் திறந்த கடலில் சிக்கித் தவித்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்தனர். உள்ளூர் அறிக்கைகளின்படி, படகு கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் புலம்பெயர்ந்தோர் இறந்து ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

பதிவு 7 Dec 2025 6:52 am

Relationship: கேஸ்லைட்டிங் செய்யும் வாழ்க்கைத்துணை; தீர்வு சொல்லும் நிபுணர்

தன் குற்றத்தை மற்றொருவர்மீது சுமத்தி, 'நம்ம மேலதான் தப்போ?' என்று அவரையே நம்ப வைத்துவிடுவார்கள் சிலர். இப்படிப்பட்டவர்கள் வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என எல்லா இடத்திலும் இருப்பார்கள்.   வீட்டை எடுத்துக்கொண்டால், 'நீ எனக்கு கோபமூட்டியதால்தான் நான் உன்னை திட்டிவிட்டேன் என்றோ, அடித்துவிட்டேன் என்றோ சொல்லிவிடுவார்கள். பெரும்பாலும், இது கணவரிடமிருந்தே வரும். தன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாத மாதிரியும் ஆச்சு; அதை தூக்கி மனைவியின் மீது போட்ட மாதிரியும் ஆச்சு.  Relationship அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், 'நீங்கள் ரிமைண்டர் மெசேஜ் போடாததால்தான் நான் அந்த வேலையை செய்யவில்லை' என்பார்கள். தன் மறதியை மறைத்ததுபோலவும் ஆச்சு; அந்தப்பழியைத் தூக்கி அடுத்தவர் மீது போட்ட மாதிரியும் ஆச்சு. நட்பு வட்டத்திலும் கிட்டத்தட்ட மேலே சொன்ன மாதிரிதான் நிகழும். இவர்கள் செய்வதை உளவியல் உலகம் 'கேஸ்லைட்டிங்' (Gaslighting) என்கிறது. இந்தச் சிக்கலால் வரும் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னையிடம் பேசினோம். யாரெல்லாம் கேஸ்லைட்டிங்கை அதிகம் பயன்படுத்துவார்கள்? சந்தேக குணம் அதிகம் உடையவர்கள், தாழ்வுமனப்பான்மை உடையவர்கள், தான்தான் உயர்ந்தவன் என்ற மனப்பான்மையுடன் இருப்பவர்கள், தனக்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், யாராக இருந்தாலும் தன் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், அடிக்கடி கோபமடைபவர்கள், கோபத்தில் தன்நிலை மறப்பவர்கள், அடிக்கடி வன்முறையில் ஈடுபடுபவர்கள், சிறுவயதில் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு சரியாகக் கிடைக்காமல் போனவர்கள், தம்பதியில் ஒருவர்மீது அதிகம் சந்தேகம் கொள்ளும் மற்றொருவர், சிறுவயதில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். Relationship விவாகரத்துக்கு முக்கிய காரணம் இதுதான்! பல உறவுமுறைக்குள் இந்தப் பிரச்னை இருந்தாலும், கணவன் - மனைவிக்குள் உருவாகும் 'கேஸ்லைட்டிங்' பிரச்னை மட்டும்தான் அதிக அளவில் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. காரணம், விவாகரத்துச் சிக்கலுக்கு `கேஸ்லைட்டிங்'கும் முக்கிய காரணமாக இருப்பதாலும், அதுகுறித்த செய்திகள் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், சமரசத் தீர்வு மையம், உளவியல் ஆலோசனை மையம், குடும்பம் மற்றும் நட்பு வட்டாரம் எனப் பல இடங்களிலும் இந்தச் சிக்கல் குறித்து அதிகம் பேசப்படுகிறது. பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சிக்கல் குறித்து கருத்துகளைப் பதிவிடுவதும், இதுகுறித்து இணையத்தில் தீர்வு தேடுவதாலும் 'கேஸ்லைட்டிங்' கவனம் பெறுகிறது. தீர்வு என்ன? கேஸ்லைட்டிங் பிரச்னைக்கு காரணமானவர்கள் பலரும், தங்களின் தவற்றை உணர எந்த முயற்சியும் எடுக்கவே மாட்டார்கள்.'தான் செய்ததுதான் சரி' என்று தன் தவற்றுக்கு நியாயம் மட்டுமே கற்பித்துக்கொண்டிருப்பார்கள். தன் கோபத்துக்கு காரணமான நபர்தான் தன் தவற்றை உணர்ந்து, தனக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணம் வேரூன்றிய நபரை, தொடர்ந்து கவுன்சலிங் கொடுப்பதால் மட்டுமே சகஜநிலைக்குக் கொண்டுவர முடியும். ஆனால், குற்றம் செய்பவர் அந்தத் தீர்வை அவ்வளவு எளிதில் நாட ஆர்வம் காட்ட மாட்டார்; தன் தவற்றையும் உணர மாட்டார். Relationship Relationship: இந்த 5 தீர்வையும் ஃபாலோ பண்ணா குடும்பத்துல பிரச்னையே வராது! 'நான் சொல்றதைக் கேட்டு நீ நடந்துக்கிட்டா, உனக்கு கவுன்சலிங் தேவைப்படாதே...' என்று பாதிக்கப்பட்டவர் மருத்துவரீதியாகத் தெளிவு பெறுவதற்கும் குற்றம் செய்யும் அந்த நபர் முட்டுக்கட்டை போடலாம். பாதிக்கப்பட்டவர் மட்டும் கவுன்சலிங் வரும்பட்சத்தில், 'நீங்கள் சரியாக இருக்கும்வரை, நீங்கள் எதற்காகவும் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டாம்' என்று, சொல்வோம். இது ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்குமே தவிர, பாதிக்கப்படும் அந்த நபருக்கான நிரந்தர தீர்வாக அமையாது. இந்தச் சிக்கலில் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே கவுன்சலிங் வருவதுடன், தவறு செய்தவர் தன் நிலையையும் தவற்றையும் முழுமையாக உணரும்போதுதான் தீர்வு கிடைக்கும். கேஸ்லைட்டிங் இயல்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது? பெற்றோர் வளர்ப்பு முறையும், வளர்ந்த சூழலும் சரியாக இல்லாதபட்சத்தில்தான் 'கேஸ்லைட்டிங்' செய்வதற்கான குணாதிசயம் ஒருவருக்குள் தலைதூக்கும். படிப்பில் இரண்டாம் இடம் பிடித்த குழந்தையிடம், 'நீ ஏன் முதல் மார்க் வாங்கல' என்று சிறுவயதிலேயே தாழ்வுமனப்பான்மையை விதைக்கும் பெற்றோர் ஒருரகம். தன் பிள்ளையின் நடத்தையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, பிள்ளை செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது போன்று அதீத சுதந்திரம் கொடுத்து பிள்ளை பொறுப்பற்றுச் செயல்பட காரணமாக இருக்கும் பெற்றோர் இன்னொரு ரகம். இது இரண்டுமே தவறுதான்! தவறு, சரி... இதைப் பகுத்தறிந்து செயல்படுவதற்கான நல்ல வழிகாட்டுதல்களை வழங்கி, நடுநிலையுடன் குழந்தையை வளர்ப்பதுதான் பெற்றோருக்கான தலையாய கடமை. Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதரப்பழசான இந்த இயல்பு! பாராட்டு, சுதந்திரம், கண்டிப்பு... இவையெல்லாம் குழந்தைக்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு இருக்க வேண்டும். பிறரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது; யாராக இருந்தாலும் மற்றவர்களையும் சமமாக நடத்த வேண்டும்; மற்றவர்கள் மதிக்கும் நிலைக்கு நம் நடத்தை இருக்க வேண்டும் என்ற தெளிவுடன் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும் பண்பு இருந்தால், 'கேஸ்லைட்டிங்' பிரச்னைக்கு நம் வாழ்வில் இடமே இருக்காது என்று முடித்தார் உளவியல் நிபுணர் நப்பின்னை.

விகடன் 7 Dec 2025 6:50 am

கோவா இரவு விடுதியில் தீ விபத்து: 23 பேர் பலி!

சனிக்கிழமை (டிசம்பர் 6, 2025) இரவு சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து வடக்கு கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 6, 2025) இரவு சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து வடக்கு கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் கிளப்பின் சமையலறை ஊழியர்கள் என்றும், அவர்களில் மூன்று பெண்கள் அடங்குவதாகவும் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறினார் 23 பேரில் மூன்று பேர் தீக்காயங்களால் உயிரிழந்தனர், மற்றவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக இறந்தனர். 23 உடல்களும் வளாகத்திலிருந்து மீட்கப்பட்டு பம்போலிமில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர் மற்றும் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பதிவு 7 Dec 2025 6:41 am

மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம்

பேரிடரைத் தொடர்ந்து நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகள் குறித்து கவலை தெரிவித்து, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பேரிடர் மற்றும் மீட்பு சவால்களின் அளவை ஒப்புக்கொண்டாலும், அவசரகாலச்சட்டத்தின் பல விதிகள், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளுக்கு முரணானவை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது சொத்துக்களைக்

புதினப்பலகை 7 Dec 2025 6:32 am

ஆன்மிக வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் புகைப்படத் | தொகுப்பு-1

ஏகாம்பரநாதர் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் நடவாவி கிணறு நடவாவி கிணறு நடவாவி கிணறு சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவில் சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவில் சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் ஏகாம்பரநாதர் கோவில்

விகடன் 7 Dec 2025 6:31 am

சீனக் குழுவினரை வரவேற்க வராத ரில்வின் சில்வா

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக பிரிவின் குழுவொன்று சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்துக்கு இந்தக் குழுவினர் சென்ற போது, அவர்களை வரவேற்றவர்களில் கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இருக்கவில்லை அவருக்குப் பதிலாக, பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சீனப் பிரதிநிதிகளை வரவேற்றிருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக பிரிவின் தகவல் மையத்தின் துணை

புதினப்பலகை 7 Dec 2025 6:15 am

நோபல் பரிசு கேட்ட..! அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான ஃபிஃபா பரிசு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அமைதி பரிசை ஃபிஃபா நிர்வாகம் வழங்கியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்தாண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிஃபா நிர்வாகம் நேற்று (டிச. 5) வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைமையில் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, வாஷிங்டனில் நடைபெற்ற விழாவில் உலக அமைதியை வலியுறுத்தும் நபர்களுக்கு வழங்க புதியதாக அமைதி பரிசை அறிமுகப்படுத்துவதாக ஃபிஃபா நிர்வாகம் […]

அதிரடி 7 Dec 2025 6:00 am

விமானப்பயணம் ரத்தா? கைக்கொடுக்கும் தெற்கு ரயில்வே-இன்று பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது . இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை தேடி வருகின்றனர் .

சமயம் 7 Dec 2025 5:51 am

ரயில்வே விரிவாக்க திட்டங்கள் தாமதம் ஆவதற்கு மத்திய அரசு தான் காரணம்-தமிழக அரசு சார்பில் பதிலடி!

ரயில்வே விரிவாக்கம் திட்ட்டம் தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் தமிழகம் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு தான் காரணம் என்று அரசு சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

சமயம் 7 Dec 2025 5:07 am

உலகின் மிகச் சிறிய நீர் எருமை கின்னஸ் சாதனை

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மலாவாடியைச் சேர்ந்த மூன்று வயது நீர் எருமை, உலகின் மிகச் சிறிய நீர் எருமை என்ற கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது. இந்த நீர் எருமை திரிம்பக் போரேட்டின் பண்ணையில் பிறந்தது. ராதா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நீர் எருமை 2 அடி 8 அங்குலம் (83.8 செ.மீ) உயரம் கொண்டது. உலகின் மிகவும் குட்டையான பெண்ணாக அறியப்படும் 2 அடி 0.7 அங்குலம் உயரமுடைய ஜோதி அம்கேவை (இந்தியா) விட ராதா உயரமானது. […]

அதிரடி 7 Dec 2025 3:30 am

கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது!

கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது! #போதைப்பொருள்… The post கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 1:52 am

முன்னாள் மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள்

பிரித்தானியாவின் முன்னாள் மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் (Dr. Nathaniel Spencer) என்பவா் பல நோயாளிகளிடம், குறிப்பாகக் குழந்தைகளிடம், பாலியல்… The post முன்னாள் மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 1:47 am

கிழக்கு மாகாணத்தில் ‘டித்வா’புயல்: 221 பாடசாலைகள் பாதிப்பு!

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக, மாகாணம் முழுவதும் மொத்தமாக 221… The post கிழக்கு மாகாணத்தில் ‘டித்வா’ புயல்: 221 பாடசாலைகள் பாதிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 1:41 am

சூடானில்  மழலையர் பள்ளி மீது ட்ரோன் தாக்குதல் – 33 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி

சூடானில் இ ஒரு துணை ராணுவப்படை அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள மழலையர் பள்ளி (கிண்டர்கார்டன்) மீது… The post சூடானில் மழலையர் பள்ளி மீது ட்ரோன் தாக்குதல் – 33 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 12:23 am

  வீட்டு வாசலில் நின்ற 5 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை

கோயம்புத்தூர் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயதுச் சிறுவனைச் சிறுத்தை… The post வீட்டு வாசலில் நின்ற 5 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Dec 2025 12:12 am

கோமா நிலையில் உள்ள கைதியின் சகோதரிக்கு எதிராகச் சிறைச்சாலை நிர்வாகம் முறைப்பாடு

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் விளக்கமறியல் கைதியின் சகோதரிக்கு எதிராக, யாழ்ப்பாணச் சிறைச்சாலை நிர்வாகத்தினர்… The post கோமா நிலையில் உள்ள கைதியின் சகோதரிக்கு எதிராகச் சிறைச்சாலை நிர்வாகம் முறைப்பாடு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 11:59 pm

நாட்டில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய […]

அதிரடி 6 Dec 2025 11:13 pm

டெல்லி ஸ்டார் ஓட்டல்களில் ஒரு இரவுக்கு ரூ.85 ஆயிரம் வாடகை! புதின் வருகை+ இண்டிகோ ரத்து காரணம்...

ரஷ்ய அதிபர் புதின் வருகையால் டெல்லியில் நட்சத்திர ஓட்டல்களில் ஒரு நாள் கட்டணம் ரூ.85 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் அளவுக்கு உயர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 6 Dec 2025 10:55 pm

தெஹிவளையில் இளைஞர் சுட்டுக்கொலை    

தெஹிவளைப் பகுதியில் இன்று (06) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.… The post தெஹிவளையில் இளைஞர் சுட்டுக்கொலை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 10:48 pm

அமெரிக்காவால் புதிய பிரச்சினை ; அதிகரிக்கும் போர் அபாயம்

கிழக்கு பசிபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலாவில் இருந்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் சம்பவத்திற்கு எதிராக, ‘ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர்’ என்ற பெயரில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிர்வாகம் கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு பசிபிக் கடல் வழியாக கப்பலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக அமெரிக்க ராணுவத்திற்கு உளவுத்துறை […]

அதிரடி 6 Dec 2025 10:30 pm

IND v SA: தெ.ஆ-வை சுருட்டிய குல்தீப், பிரசித்; `சுட்டிப் பையன்'ஜெஸ்வால் 116* ; தொடரை வென்ற இந்தியா!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா போட்டி வென்றதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கின. அதிலும், டெஸ்ட் தொடரை இழந்ததற்கு ஒருநாள் தொடரை வென்று சரிக்கட்ட வேண்டுமென்ற தீவிரத்தோடு இந்தியா களமிறங்கியது. இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் அதற்கேற்றாற்போலவே, 20 போட்டிகளுக்குப் பிறகு இந்தியா டாஸ் வென்றது. இந்திய கேப்டன் கே.எல். ராகுல் அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மாவை சேர்த்து பவுலிங்கைத் தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்கா அணியில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பின்னர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர். ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் பந்தில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால், கடந்த இரு போட்டிகளாக 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்து வந்த குயின்டன் டி காக், இப்போட்டியில் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கேப்டன் டெம்பா பவுமா அவருக்கு உறுதுணையாக ஆட டி காக் அரைசதமும் அடித்தார், கூடவே இவ்விருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. இந்த நேரத்தில் ஜடேஜா குறுக்கே வந்து பவுமாவின் விக்கெட்டை எடுத்து பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அடுத்த சில ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் பிரீட்ஸ்கே, மார்க்ரமை அவுட்டாக்கினார். Dewald Brevis - Quinton de Kock விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் தனது அதிரடியை நிறுத்தாத டி காக், 80 பந்துகளில் சிக்ஸருடன் சதமடித்தார். ஆனால் சதமடித்த சற்று சில ஓவர்களிலேயே அவரையும் அவுட்டாக்கினார் பிரசித் கிருஷ்ணா. அடுத்து கைகோர்த்த டெவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென் நிதானமாக ஆடத் தொடங்கிய வேகத்தில் அவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் விக்கெட் எடுத்து இன்னிங்ஸை முழுமையாக இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார் குல்தீப் யாதவ். இறுதியாக 48-வது ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா. பிரசித் கிருஷ்ணாவும், குல்தீப் யாதவும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக வெடிக்கும் டி காக்! அதைத்தொடர்ந்து 271 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ரோஹித்தும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்கினர். மிக மிக நிதானமாக ஆடிய இந்தக் கூட்டணி பவர்பிளேவில் விக்கெட் எதுவும் விடாமல் 48 ரன்கள் அடித்தது. பின்னர், ரன் அடிப்பதில் கொஞ்சம் வேகம் கூட்டிய ரோஹித் 54 பந்துகளில் அரைசதமடித்தார். அடுத்த ஓவரிலேயே இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களையும் கடந்த அதே வேளையில், அடிக்கத் தொடங்கிய ஜெய்ஸ்வால் 75 பந்துகளில் அரைசதமடித்தார். Yashasvi Jaiswal - யஷஸ்வி ஜெய்ஸ்வால் 25 ஓவர்களாக இந்த ஜோடி விக்கெட்டும் விடாமல் 150 ரன்களைக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில், கேஷவ் மகாராஜ் ரோஹித்தை அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்தார். ஒன்டவுனில் விராட் கோலி களமிறங்கினார். மறுமுனையில் பவுண்டரி சிக்ஸருமாக விளாசத் தொடங்கிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் சதமடித்தார். தனது முதல் 60 பந்துகளில் வெறும் 36 ரன்கள் மட்டுமே அடித்த ஜெய்ஸ்வால் அடுத்த 50 பந்துகளில் 60+ ரன்கள் அடித்து சதமடித்தார். W.O.W Virat Kohli at his fluent best That's smashed into the stands with some conviction Updates ▶️ https://t.co/HM6zm9o7bm #TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @imVkohli pic.twitter.com/1EdwUbQj66 — BCCI (@BCCI) December 6, 2025 அவரைத்தொடர்ந்து கோலியும் வேகமாக ஆடி 40 பந்துகளில் அரைசதமடித்தார். இறுதியில் 39-வது ஓவரில் கோலியின் பேக் டு பேக் பவுண்டரி மூலம் இந்தியா 271 ரன்களைத் தொட்டு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2 - 1 எனத் தொடரை வென்றது. 116 ரன்கள் அடித்து நாட் அபிட் பேட்ஸ்மேனாகக் கடைசிவரைக் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது வென்றார். இத்தொடரில் இரண்டு சதம், ஒரு அரைசதம் என 302 ரன்கள் குவித்த கோலி தொடர் நாயகன் வென்றார். IND vs SA: நேற்றைய ஆட்டத்தில் 2016-18 ஆம் ஆண்டுகளின் கோலி வெர்ஷனைப் பார்த்தோம் - குல்தீப் யாதவ்

விகடன் 6 Dec 2025 9:49 pm

பணி நிரந்தரம் செய்தால்தான் திமுகவை நம்புவோம்.. பகுதி நேர ஆசிரியர்கள் அதிரடி!

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பகுதி நேர ஆசிரியர்களை இன்னும் ஏன் முதல்வர் பணி நிரந்தரம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமயம் 6 Dec 2025 9:35 pm

எலான் மஸ்கிற்கு விழுந்த பேரிடி ; பல்லாயிரம் கோடி அபராதம்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், ‘டெஸ்லா’ நிறுவனருமான எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ சமூக ஊடக நிறுவனத்தை 2022ல் வாங்கி, பின், ‘எக்ஸ்’ என பெயர் மாற்றினார். பாதுகாப்பு குறைபாடுகள் இந்த ஊடகத்தில், பயனர் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டி.எஸ்.ஏ., எனப்படும் டிஜிட்டல் […]

அதிரடி 6 Dec 2025 9:30 pm

சென்னை மெட்ரோ: பூந்தமல்லி-போரூர் ரயில் பாதை பணியில் சிக்கல்? பின்னணியின் சான்றிதழ்...

சென்னை மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் பூந்தமல்லி போரூர் மெட்ரோ பாதை பணிகளில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திறப்பு விழா தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

சமயம் 6 Dec 2025 9:03 pm

இந்தியாவின் படைக்கு உதவ முடிவு.. ரஷ்யா போடும் கணக்கு.. இந்தியாவுக்கு சாதகம்!

ரஷ்யா தனது உலகப் புகழ்பெற்ற 3M-14E Kalibr-PL நிலத் தாக்குதல் கப்பல் ஏவுகணையை இந்திய கடற்படைக்கு வழங்க முன்வந்துள்ளது. இது அணுசக்தி தடுப்புக்கான முக்கிய ஆயுதம் ஆகும்.

சமயம் 6 Dec 2025 9:00 pm

மலையகத்தைச் சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை –ஜனாதிபதி!

கண்டி: அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டுப் பொறிமுறை அவசியம்… The post மலையகத்தைச் சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை – ஜனாதிபதி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 8:58 pm

துப்பாக்கிகளை வகைப்படுத்தும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படும் – கெரி ஆனந்த சங்கரி

கனடாவில் துப்பாக்கிகளை வகைபப்டுத்தும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைசச்ர் கெரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். நாட்டின் துப்பாக்கி வகைப்படுத்தல் முறையை மீளாய்வு செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த பரிசீலனையில் எஸ்.கே.எஸ் SKS எனப்படும் அரை தானியங்கி துப்பாக்கியைப் பற்றிய ஆதிவாசி சமூகங்களுடனான ஆலோசனையும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் SKS துப்பாக்கிகளை ஆதிவாசிகள் உணவுத் தேவைக்கான வேட்டையாடல்களுகக்காக பரவலாகப் பயன்படுகின்றனர். அதேசமயம், கடந்த சில ஆண்டுகளில் காவல்துறை […]

அதிரடி 6 Dec 2025 8:30 pm

மறுக்கின்றது சிறைச்சாலை?

விளக்கமறியல் கைதி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி ஊடக சந்திப்பொன்றை நடத்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் குறித்த கைதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் கீழே விழுந்து தலையில் காயப்பட்டதற்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முதல் கட்ட விசாரணையின் போது யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. குறித்த கைதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்படும் போதே உடல் சோர்வுற்று இருந்ததாகவும், இந்நிலையில் கீழே விழுந்ததாகவும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வைத்தியர் சிகிச்சை அளித்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு நாள் சிகிச்சைக்கு பின்னர் மீள சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் உடல் இயலாமை ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் - என சிறைச்சாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

பதிவு 6 Dec 2025 8:24 pm

மீண்டும் மண் சரிவு எச்சரிக்கை !

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 02 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு 6 Dec 2025 8:18 pm

இண்டிகோ உரிமையாளர் யார்? பில்லியன் டாலர் சொத்து மதிப்பு... ராகுல் பாட்டியா பற்றி தெரியுமா?

இந்தியர்களுக்கு இன்னலுக்கு ஆளாக்கிய இண்டிகோ விமான நிறுவனத்தினர் உரிமையாளர்கள் யார், அவர்களது பின்னணி என்ன என்று விரிவா காண்போம்.

சமயம் 6 Dec 2025 7:56 pm

ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக வெடிக்கும் டி காக்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. 20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மா உள்ளே வந்தார். தென்னாப்பிரிக்காவில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். Quinton de Kock - குயின்டன் டி காக் பின்னர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல் போட்டியில் டக் அவுட் ஆன ரிக்கல்டன் இப்போட்டியில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால், முதல் இரு போட்டிகளில் 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்த டி காக், இப்போட்டியில் அப்படியே அதற்கு நேர்மாறாக ஆடத் தொடங்கினார். கேப்டன் டெம்பா பவுமா சப்போர்ட் இன்னிங்ஸ் ஆட மறுமுனையில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் கடந்தார் டி காக். இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தபோது பவுமா அவுட்டானார். இருப்பினும் தனது ஆட்டத்தை நிறுத்தாத டி காக், 80 பந்துகளில் சிக்ஸருடன் சதமடித்தார். இது டி காக் ஓய்வைத் (Retirement) திரும்பப் பெற்று வந்த பிறகு தனது 6-வது போட்டியில் அடிக்கும் இரண்டாவது சதம். 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த டி காக், கடந்த செப்டம்பரில் தனது ஓய்வைத் திரும்பப் பெற்றுக்கொண்டு நவம்பரில் பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கினார். Quinton de Kock - குயின்டன் டி காக் அந்தத் தொடரில் 3 போட்டிகளிலும் இரண்டு அரைசதம், ஒரு சதம் என ODI கரியரில் தனது இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாகத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் ஒற்றை இலக்கத்தை தாண்டாமல் அவுட்டாகி வந்த டி காக் இன்றைய போட்டியில் சதமடித்து 106 ரன்களில் அவுட்டானார். இந்த சதத்துடன் சச்சின், ரோஹித் ஆகியோரின் சாதனைகளைச் சமன்செய்ததோடு மேலும் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். Hockey Men's Junior WC: திக் திக் கடைசி நிமிடங்கள்; பெல்ஜியமை வென்று அரையிறுதிக்குள் சென்ற இந்தியா! சாதனைப் பட்டியல்! * ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்களாக, தலா 7 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் (UAE), சயீத் அன்வர் (UAE), ஏபி டிவில்லியர்ஸ் (இந்தியா), ரோஹித் சர்மா (இங்கிலாந்து) ஆகியோர் இருந்த நிலையில், டி காக் இன்று இந்தியாவில் அடித்த 7-வது சதத்தின் மூலம் மேற்குறிப்பிட்டவர்களின் சாதனையை சமன் செய்திருக்கிறார். * ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் அணிக்கெதிராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தலா 6 சதங்களுடன் கில்கிறிஸ்ட் (இலங்கை), சங்ககாரா (இந்தியா) ஆகியோர் முதலிடத்தில் இருந்த நிலையில், அவர்களை டி காக் ஓவர்டேக் செய்து முதலிடத்துக்கு வந்திருக்கிறார். Quinton de Kock - குயின்டன் டி காக் * ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கெதிராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை டி காக் சமன் செய்திருக்கிறார். ஆனால், சனத் ஜெயசூர்யா இந்தியாவுக்கெதிராக 89 ஒருநாள் போட்டிகள் ஆடியிருக்கிறார். டி காக் இந்தியாவுக்கெதிராக வெறும் 23 போட்டிகள்தான் ஆடியிருக்கிறார். * ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா 23 சதங்களுடன் 10 வருடங்களாகத் தனியாளாக முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் டி காக் இன்று தனது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் 23-வது சதத்தை அடித்து சங்ககாராவின் சாதனையை சமன் செய்திருக்கிறார். கிரிக்கெட் போட்டியில் முட்டிபோடாத விவகாரம் ... வருத்தம் தெரிவித்த குவின்டன் டிகாக்... மாற்றம் ஏன்?

விகடன் 6 Dec 2025 7:49 pm

மேட்டுப்பாளையத்தில் வேழம் இயலியல் பூங்கா.. எப்போது திறக்கப்படும்? காத்திருக்கும் பொதுமக்கள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வேழம் இயலியல் பூங்காவின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சமயம் 6 Dec 2025 7:34 pm

காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்; டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து

வாஷிங்டன் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை, காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் ருவாண்டா நாடு அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே காங்கோவின் வடக்கு கிவூ, தெற்கு கிவூ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனிடையே, காங்கோ, ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காங்கோவில் செயல்பட்டு வரும் எம்-23 என்ற […]

அதிரடி 6 Dec 2025 7:30 pm

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!

தென்னாப்பிரிக்க நகரமான பிரிட்டோரியாவில் உள்ள ஒரு சட்டவிரோத மதுபான விடுதியில் சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூன்று வயது சிறுவன் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர், மேலும் அடையாளம் காணப்படாத மூன்று சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சவுல்ஸ்வில்லே டவுன்ஷிப்பில் நடந்த சம்பவத்தின் போது மேலும் 14 பேர் காயமடைந்ததாக அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு ஷெபீன்என்று உள்ளூரில் அழைக்கப்படும் சட்டவிரோத மதுக்கடைக்குள் நடந்ததா அல்லது வெளியே நடந்ததா என்பது குறித்து போலீசார் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இறந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர், அவர்களில் 3 மற்றும் 12 வயது சிறுவர்கள் (மற்றும் ஒரு) 16 வயது பெண் அடங்குவர்என்று தென்னாப்பிரிக்க காவல் சேவை தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும், சராசரியாக ஒரு நாளைக்கு 60 கொலைகள் நடக்கின்றன.

பதிவு 6 Dec 2025 7:24 pm

ஜனாதிபதி அனுரகுமார –மல்வத்து மகாநாயக தேரர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) மல்வத்து மகாநாயக, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த,ஜனாதிபதி அநுரகுமார சுமங்கல தேரரை சந்தித்தார். தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்து மகாநாயக தேரரிடம் விளக்கியதுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

அதிரடி 6 Dec 2025 7:23 pm

வடக்கு மாகாண கால்நடைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால், வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வவுனியா மாவட்டம்: நிர்மலன் பெர்னாண்டோ – […]

அதிரடி 6 Dec 2025 7:21 pm

சுவிஸ் பேரிடர் நிவாரண விமானம் இலங்கையை வந்தடைந்தது

சுவிட்சர்லாந்திலிருந்து பேரிடர் நிவாரண உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் இன்று (06) காலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 2.6 மெட்ரிக் டன் எடையும் 17 தனித்தனி பொதிகளும் கொண்ட இந்த உதவிப் பொருள், நீர் சுத்திகரிப்பு அலகுகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டிற்குத் தேவையான பல்வேறு உபகரணங்களை உள்ளடக்கியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்தப் பொருள் சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து கொண்டு வரப்பட்டு, WK 064 என்ற எடெல்வைஸ் ஏர் விமானத்தில் காலை 10:25 மணிக்கு கட்டுநாயக்காவை வந்தடைந்தது. இந்தப் பொருளைப் பெறுவதற்காக இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் துணைத் தூதர், பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) அதிகாரிகளுடன் விமான நிலையத்தில் உடனிருந்தனர்.

பதிவு 6 Dec 2025 7:20 pm

7 மாவட்டங்களுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூரியுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கங்களுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வெளியிலோ , மரங்களுக்கு அடியிலோ நிற்க வேண்டாம் இந்த எச்சரிக்கை சனிக்கிழமை (06) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு […]

அதிரடி 6 Dec 2025 7:14 pm

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

'டித்வா'புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு உடனடி உதவி அளிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. மருத்துவப் பொருட்கள், குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், தங்கும் கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணக் கப்பல், தமிழக அரசின் ஒருங்கிணைப்பில் இலங்கை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில் அங்குள்ள மக்களை ஆதரிக்கும் விதமாக, இரு நாடுகளின் நட்புறவையும் மனிதாபிமான உணர்வையும் வலுப்படுத்தும் இந்த உதவி நடவடிக்கை, பரவலாக பாராட்டப்படுகிறது. இந்த பேரிடரில் உயிரிழந்தோருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்திருந்தார். மேலும், இலங்கை மக்களின் துயரைத் துடைக்க தமிழக அரசு முழுமையான உதவிகளை மேற்கொள்ளும் என்றும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அனுப்ப ஆணையிட்டார். அதனடிப்படையில், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இன்று சனிக்கிழமை ( 6) இலங்கை நோக்கி பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னையில் இருந்து அனுப்பும் கப்பலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கொடியசைத்து அனுப்பினார். புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 950 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு, தேவையான அளவு கூடுதல் நிவாரண உதவிகளையும் வழங்க தயார் நிலையில் இருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதிவு 6 Dec 2025 7:12 pm

`தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை' - ஐ.பெரியசாமி கருத்து

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி டாக்டர். அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். கருத்து கூறவில்லை என்றால், அது பற்றி பேசி என்ன பயன். நாஞ்சில் சம்பத் தவெக-வில் சேர்ந்தது குறித்து அதிமுக-விடம் தான் கேட்க வேண்டும். கட்சி மாறுவதை பற்றி நான் பேசுவது இல்லை, அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஒரே கட்சியில் நான் இருக்கிறேன் அதுதான் எனக்குத் தெரியும். SIR ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் இடம் பெயர்ந்துவிட்டார்கள் என 6000 நபர்களும், இறந்தவர்கள் என்று 16,000 பேரும் என மொத்தம் 22 ஆயிரம் பேரை நீக்கிவிட்டார்கள். பழக்கனூத்து, நடுப்பட்டி, நீலமலைக் கோட்டை இன்னும் பல இடங்களில் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து உள்ளார்கள். குறிப்பாக திண்டுக்கல்லில் உள்ள முருகானந்தம் என்ற திமுக பிரமுகரை இறந்தோர் பட்டியில் பெயர் சேர்த்து உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனே சேர்க்கிறேன் என்று சொன்னார். அதில், எனக்கு நம்பிக்கை இல்லை. என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர்தான் விளக்கம் சொல்ல வேண்டும். ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் பிஎல்ஒ-க்கள் வாக்காளர்களை சேர்ப்பதற்கு களத்திற்குச் செல்லவில்லை, அறையிலேயே அமர்ந்து பெயர்களை நீக்கி விட்டார்கள். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி உள்ளேன். எஸ்.ஐ.ஆர் முழுமையாக நடைபெறவில்லை. ஆகவே, இந்த எஸ்.ஐ.ஆரை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாங்கள் அதைத்தான் சொல்கிறோம். எஸ்.ஐ.ஆர் - யை ரத்து செய்யுங்கள் தேர்தலை நடத்துங்கள் வாக்காளர்கள் வந்து வாக்களிக்கட்டும் இல்லையெனில் வாக்களிக்காமல் கூட போகட்டும். ஆனால், எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் அதுதான் என்னுடைய கருத்து. உச்ச நீதிமன்றம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை. ஒரு நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு சட்டமே வழி வகுத்து உள்ளது. உங்களுடைய உரிமையைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம் எனக் கூறியுள்ளது. அதனால்தான் நாங்கள் சென்று உள்ளோம் எனத் தெரிவித்தார்.

விகடன் 6 Dec 2025 7:07 pm

ஓ.என்.ஜி.சி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு - பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதும் போராட்டம் நடத்துவதும் வழக்கம். இவர் சமீபத்தில் கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் விவசாயிகளும், விவசாயமும் பாதிக்கப்படுவதாக போராட்டம் நடத்தியுள்ளார். பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள காரியாமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் பணியாளர்களுக்காக ஷெட் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பி.ஆர்.பாண்டியன் மற்றும் அவரது தரப்பு அங்கு சென்றனர். கடப்பாரை உள்ளிட்டவை எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஓஎன்ஜிசி-யை வெளியேற வலியுறுத்தி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்திய பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள், பணியாளர்களையும் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வாஞ்சிநாதன் என்பவர் இது குறித்து புகார் அளித்தார். அதன்படி பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 22 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்றவர்களுக்கும் இதேபோல் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விகடன் 6 Dec 2025 7:01 pm

இண்டிகோ CEO-ஐ நீக்க பரிசீலனை? இண்டிகோ விமானங்கள் ரத்து.. பயணிகள் தவிப்பு!

இண்டிகோ விமான சேவை பாதிப்பைத் தொடர்ந்து அந்த நிர்வாகத்தின் சி.இ.ஓ. பீட்டர் எல்பெர்ஸை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 6 Dec 2025 7:01 pm

வெள்ளத்தை தொடர்ந்து கண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து ; மக்களே அவதானம்!

நாட்டில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. எனவே கண் நோய்த்தொற்றுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் ஆரோக்கிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது. கண் தொற்றுக்கான அறிகுறிகள் கண்கள் சிவத்தல் மற்றும் வீக்கம், நீர் வடிதல் மற்றும் வெளியேற்றம், ஒளி உணர்திறன், கண் அரிப்பு, கண்களில் மண் அல்லது தூசி இருப்பது போன்ற உணர்வு […]

அதிரடி 6 Dec 2025 6:55 pm

BB Tamil 9: நீங்க வெளிய வந்துருங்க - சேதுபதியிடம் வாக்குவாதம் செய்த ரம்யா; திறந்த பிக் பாஸ் கதவு!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாள்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில், கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், விஜய் சேதுபதிக்கும், ரம்யா ஜோவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. வார இறுதி டாஸ்கிற்காக என்ட்ரி கொடுத்திருக்கும் விஜய் சேதுபதி, டாஸ்கில் விக்ரமை அங்கிருந்து எதுக்கு எழுப்புறீங்கன்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று ரம்யாவை கேள்வி கேட்கிறார். அதற்கு சீரியஸா எனக்கு தெரியாது சார் என்று ரம்யா சொல்கிறார். தொடர்ந்து நான் அப்செட்டா இருக்கேன். அதனால இப்படித்தான் பேசுவேன்னு பேசக் கூடாது. உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க போலாம். உங்களை யாரும் கட்டாயப்படுத்த மாட்டோம். என்று விஜய் சேதுபதி சொல்ல, எனக்கு தெரியாது சார். எல்லோரும் நான் பண்ணாத ஒரு விஷயத்தை சொல்லிட்டே இருக்கீங்க என்று ரம்யா அழுகிறார். BB Tamil 9 கெட்ட வார்த்தை பேசுறீங்க அப்போ அதை சொல்றதுக்கு என்ன? என்று விஜய் சேதுபதி சொல்ல, இனிமேல் நான் இங்க இருக்க மாட்டேன். நான் வீட்டுக்கு போறேன் சார் என்று ரம்யா கூறுகிறார். நீங்க தாராளமா வெளிய வரலாம் என்று சேதுபதி கூற பிக் பாஸ் கதவு திறந்துவிட்டதாக வினோத் சொல்கிறார்.

விகடன் 6 Dec 2025 6:33 pm

இண்டிகோவுக்கு மத்திய அரசின் அதிரடி’உத்தரவு

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தை உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும் என்று இண்டிகோ (IndiGo)… The post இண்டிகோவுக்கு மத்திய அரசின் அதிரடி’ உத்தரவு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 6:32 pm

லொட்டரியில் வென்ற ரூ.61 கோடியை நண்பர்களுக்கு பிரித்து வழங்கும் இந்தியர்

லொட்டரியில் ரூ.61 கோடி பரிசு வென்ற இந்தியர், பரிசுத்தொகையை தனது 15 நண்பர்களுக்கு சமமாக பிரித்து வழங்குகிறார். லொட்டரியில் ரூ.61 கோடி வென்ற இந்தியர் கேரளாவை சேர்ந்த 52 வயதான பிவி ராஜன், கடந்த 30 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் தரக் கட்டுப்பாட்டு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நண்பர்களின் பரிந்துரையின் பேரில் லொட்டரி வாங்க தொடங்கியவர், கடந்த 15 ஆண்டுகளாக லொட்டரி வாங்கி வருகிறார். இந்நிலையில், இந்த மாதம் வெளியான அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் ரூ.61.37 […]

அதிரடி 6 Dec 2025 6:30 pm

விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! புதிய கட்டணத்தை நிர்ணயித்த டிஜிசிஏ... கிலோ மீட்டர் கணக்கில் வெளியான லிஸ்ட்

மத்திய அரசின் உத்தரவுகளுக்கு எதிராக தனது அனைத்து விமான சேவைகளையும் இண்டிகோ நிறுவனம் திடீரென ரத்து செய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்தவர்கள் சொந்த பகுதிகளுக்கு செல்ல அதிக கட்டணங்கள் பிற விமான நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு தற்போது கடிவாளம் போட்டுள்ளது.

சமயம் 6 Dec 2025 6:13 pm

ஹர்திக் வந்ததால் தான் ரிங்கு சிங்கிற்கு இடமில்லை! இர்பான் பதான் ஸ்பீச்!

டெல்லி :இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், தென்னாபிரிக்காவுக்கு எதிரான T20I தொடருக்கான இந்திய அணி அறிவிப்பைப் பற்றி தனது யூடியூப் சேனலில் விரிவாகப் பேசியுள்ளார். ஹார்டிக் பாண்ட்யா முழு உடற்தகுதியுடன் திரும்பியதால், ரின்கு சிங் அணியில் இடம்பெறாமல் போனது குறித்து அவர் கூறுகையில், “ரின்கு சிங்குக்கு இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். ஆனால் ஹார்டிக் திரும்பியவுடன் இது தவிர்க்க முடியாதது, மிகத் தெளிவான முடிவு” என்று குறிப்பிட்டார். தற்போதைய அணி, 2026 ஜூன் மாதம் நடக்கவிருக்கும் […]

டினேசுவடு 6 Dec 2025 6:03 pm

விமானங்களில் கூடுதல் கட்டணமா? ஏர் இந்தியா விளக்கம்.. இண்டிகோ பாதிப்பால் நீடிக்கும் குழுப்பம்!

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் கடந்த சில நாட்களாகவே ரத்தாகி வருகிறது. இதனால் மற்ற விமானங்களின் கட்டணம் உயர்ந்து உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

சமயம் 6 Dec 2025 6:03 pm

கோமா நிலையில் சிகிச்சை பெறும் கைதி சிறைச்சாலைக்குள் தாக்கப்படவில்லையாம்

“அடிச்சுப் போட்டாங்க!” – பாதிக்கப்பட்ட கைதியின் கடைசி வார்த்தைகள்? யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த… The post கோமா நிலையில் சிகிச்சை பெறும் கைதி சிறைச்சாலைக்குள் தாக்கப்படவில்லையாம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 5:59 pm

IND vs SA 3rd ODI: ‘வரலாறு படைத்தார் குல்தீப் யாதவ்’.. எந்த பௌலரும் செய்யாத சாதனை: தென்னாப்பிரிக்கா 270 ரன்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி அசத்தியது. குறிப்பாக, குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி, வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

சமயம் 6 Dec 2025 5:48 pm

அதிமுக: இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன் - செல்லூர் ராஜு சாடல்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 'இதே எடப்பாடி பழனிசாமியை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர்தானே அவர்' எனச் சாடியுள்ளார் ராஜு. விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன் செங்கோட்டையன் பற்றி செல்லூர் ராஜு, ஆலமரத்திலிருந்து உதிரும் இலை போலத்தான் செங்கோட்டையன். பழுத்த இலை விழுந்தால் ஆலமரம் கருகியதாக அர்த்தமாகிவிடுமா? விஜய் போல ஆயிரம்பேர் சொல்லியிருக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் நாங்கள் பத்தோடு பதினொன்றாக இருப்போம் என்றா சொல்வார்கள். ஆட்சிக்கு வருவோம் என்றுதான் சொல்வார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பதாகச் சொன்னால் மட்டும்போதுமா? எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி, சின்னம், அலுவலகம் எல்லாம் இங்கு இருக்கிறது. விஜய், செங்கோட்டையன் ஒன்பது தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், பலமுறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதைக் கொடுத்தது யார்? செங்கோட்டையனுக்காகவா ஓட்டு போட்டார்கள். இரட்டை இலை சின்னத்தைப் பார்த்து மக்கள் வாக்களித்தார்கள். இதே எடப்பாடியாரை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர் தானே செங்கோட்டையன். இன்றைக்கு ஏதோ ஒரு கோபத்தில் போகலாமா. எந்தக் கட்சியும் வேண்டாம், எந்தப் பதவியும் வேண்டாமென எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் இருப்பவர்தான் ரோஷமானவர். அப்படி இருப்பவன்தான் உண்மையான அண்ணா திமுக-காரன். எனப் பேசினார். TVK: உயிர் மூச்சு உள்ள வரை அவரை முதலமைச்சராக உருவாக்க பணியாற்றுவேன் - செங்கோட்டையன்

விகடன் 6 Dec 2025 5:45 pm

Bigg Boss Tamil 9: தம்பதியில் ஒருவர் அவுட்.! - இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்?

விஜய் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, எஃப் ஜே உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில், நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வார எவிக்‌ஷனுக்கு முன்பே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால், டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இந்த நிலையில் வழக்கமான வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. கடந்த சில வாரங்களாகவே போட்டியாளர்களின் செயல்பாடுகள் மீது பிக்பாஸே அதிருப்தியில் இருப்பதால் விஜய் சேதுபதியும் அவர்களை கண்டித்து வந்தார். அதேபோல் இன்றும் சில போட்டியாளர்களை வறுத்தெடுத்து விட்டு பிறகு எவிக்‌ஷன் நேரத்துக்கு வந்தார். பிரஜின், சாண்ட்ரா பார்வதி, வினோத், சுபிக்‌ஷா, அமித் பார்கவ், பிரஜின், உள்ளிட்டோர் எலிமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இரண்டு பேர் எவிட் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. நிகழ்ச்சி முடிய இன்னும் நான்கு வாரங்களே இருப்பதாலும் கடந்த வாரம் எவிக்‌ஷன் இல்லாததாலும் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் முடிவுக்கு வந்தார்களாம். எவிக்‌ஷன் ஆன இரண்டு பேர் எ.ஃப்.ஜே. மற்றும் பிரஜின் எனத் தகவல் வெளியாகி உள்ளது. BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன் துஷார் இவர்களில் பிரஜின் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றவர். இவருடன் இவரது மனைவி சாண்ட்ராவையும் சேர்த்து அனுப்பினார்கள். அந்த வீட்டுக்குள் சாண்ட்ராவுக்கும் சேர்த்தே இவர் விளையாடுவதாக ஒரு புகார் எழுந்தது. விஜய் சேதுபதிக்கு ஒருகாலத்தில் நண்பனாக இருந்த  பிரஜினுக்கும் விஜய் சேதுபதிக்கும் நிகழ்ச்சியில் வாக்குவாதம் நடந்தது நினைவிருக்கலாம். அந்த வாரம் அவரை வெளியேற்றுவது போல காட்டி பிறகு வீட்டுக்குத் திரும்ப வைத்ததையும் பார்த்தோம். அப்போது சாண்ட்ரா அழுது ஆர்ப்பாட்டம் செய்தது சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம். கணவன் மனைவி இருவருமே இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு நெகட்டிவிடியையே சம்பாதித்தார்கள் எனச் சொல்லலாம். இந்த வாரம் நிஜமாகவே பிரஜின் வெளியேறியிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. சாண்ட்ரா என்ன செய்யப் போகிறார் தெரியவில்லை. Bigg Boss Tamil 9 அடுத்து எஃப்.ஜே. இவர் அந்த வீட்டுக்குள் சென்றதும் சக போட்டியாளர் ஆதிரையுடன் நெருக்கமாக பழகினார். ஒருகட்டத்தில் ஆதிரை எவிக்ட் ஆனதும், வியானாவுடன் பழகினார். வியானாவுக்கு சோறு ஊட்டி விடுவது போன்ற வேலைகளை அவர் செய்தது நிகழ்ச்சிக்கு கன்டென்ட் ஆனது. வியானாவுடன் ட்ராக் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த சூழலில் கடந்த வாரம் திரும்பவும் ஆதிரையை நிகழ்ச்சிக்குள் அனுப்பினார்கள். இனி எஃப் ஜே என்ன செய்யப் போகிறார் என பலரும் எதிர்பார்த்த நிலையில்தான் அதிரடியாக எஃப்.ஜே.வை வெளியில் அனுப்பி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது முதற்கட்ட தகவல் தான். இறுதி நேர ட்விஸ்ட் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

விகடன் 6 Dec 2025 5:44 pm

``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? - நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. `தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது' என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அயோத்தி இல்லையே. பிரதமர் மோடி - அயோத்தி ராமர் கோயில் அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை. நாம் எல்லோரும் ராமரின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்

விகடன் 6 Dec 2025 5:37 pm

உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் பள்ளியில் ஆங்கில தேர்வு எழுதினான். தேர்வு எழுதி முடித்துவிட்டு விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தனது இருக்கைக்கு வந்தான். அவன் இருக்கையில் அமர்ந்தவுடன் அப்படியே கீழே சரிந்து விழுந்தான். உடனே பணியில் இருந்த சக ஆசிரியர்களும், ஊழியர்களும் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது அவனுக்கு இருதய துடிப்பு நின்று இருந்தது. இது குறித்து டாக்டர் மனீஷ் சுக்லா கூறுகையில், ''மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே அவனுக்கு இருதய துடிப்பு நின்று இருந்தது. மாணவன் படித்த பள்ளி அப்படி இருந்தும் நாங்கள் இருதய துடிப்பை மீண்டும் கொண்டு கொண்டு வர முயற்சி செய்தோம். தொடர்ந்து முயற்சி செய்தும் இருதய துடிப்பை மீண்டும் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து மாணவன் இறந்ததாக அறிவிக்கப்பட்டான்'' என்றார். இளம் வயதில் மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பது அவனது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்து போன மாணவன் அவனது பெற்றோருக்கு ஒரே மகனாவார். ஒரே மகனை பறிகொடுத்த அவரின் தந்தை சந்தீப் சிங் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்.

விகடன் 6 Dec 2025 5:30 pm

தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்த்துட்டேன் –நாஞ்சில் சம்பத்

தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்த்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக என்னை திட்டமிட்டு நிராகரித்தது. விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தேன், என்னை கண்டதும் `நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன்’ என விஜய் கூறினார். நான் மெய் சிலிர்த்து போனேன். தம்பி விஜய் என்னுடைய திசையை தீர்மானித்திருக்கிறார். விஜய் சரியான பாதையில் பயணிக்கிறார் என தந்தி டிவியில் பேசிய பிறகு […]

அதிரடி 6 Dec 2025 5:30 pm

பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கும், சேத விபரங்களைப் பதிவு செய்வதற்கும் விசேட… The post பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 5:30 pm

பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கும், சேத விபரங்களைப் பதிவு செய்வதற்கும் விசேட… The post பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 5:30 pm

மன்னார் பனங்கட்டு கொட்டு மீனவக் குடும்பங்களின் மனதை உருக்கும் கவலை

நாடு முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்திய அண்மைய புயலால், மன்னார் மாவட்ட மீனவர்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். ஆனால்,… The post மன்னார் பனங்கட்டு கொட்டு மீனவக் குடும்பங்களின் மனதை உருக்கும் கவலை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 5:18 pm

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு; விடுதி உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணி - விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் விடுதி அலுவலகத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் கணக்கு அதிகாரி, ஆலோசகர், விடுதி மேனேஜர், கணக்காளர், பொறியியல் பயிற்சியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், விடுதி உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.

சமயம் 6 Dec 2025 4:52 pm

சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான உதவி: நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் இலங்கையை அடைந்தது!

இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் அனுப்பி… The post சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான உதவி: நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் இலங்கையை அடைந்தது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 4:52 pm

மழைக்காலத்தில் வீசும் 'மண் வாசனை' - இதன் பின்னணியில் உள்ள அறிவியல் தெரியுமா?

மழை பெய்யத் தொடங்கும்போது அல்லது மழை வருவதை போன்று இருக்கும்போது ஒரு விதமான வாசனை வருவதை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். அந்த 'மண் வாசனை' எப்படி உருவாகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? வெறும் மண்ணும் தண்ணீரும் சேரும்போது மட்டும் இந்த வாசனை உருவாவதில்லை, இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் இங்கு தெரிந்துக்கொள்ளலாம். மழை பெய்யும்போது வரும் இந்த மண் வாசனைக்கு அறிவியலில் 'பெட்ரிகோர்' (Petrichor) என்று பெயர் உண்டு.. 1964ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா விஞ்ஞானிகளான இசபெல் பியர் மற்றும் டிக் தாமஸ் ஆகியோர் இந்த பெயரை உருவாக்கியுள்ளனர். இந்த வாசனைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களையும் கண்டறிந்துள்ளனர். மழை பாறை மற்றும் மண்ணில் தங்கியிருக்கும் ஒருவகை எண்ணெய் போன்ற திரவம், மழையின் போது காற்றில் கலப்பதால்தான் இந்த வாசனை வருகிறது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது இந்த மண் வாசனைக்கு 'ஜியோஸ்மின்' மற்றும் '2-MIB' எனப்படும் வேதிப்பொருட்கள் இதற்கு மிக முக்கியக் காரணம் என்றும் மண்ணில் வாழும் ஒருவகை பாக்டீரியாக்களே (Streptomyces) இந்த வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதாக கண்டறிந்துள்ளனர். வெயில் காலத்தில் மண் காய்ந்து போகும்போது, இந்த பாக்டீரியாக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 'ஸ்போர்ஸ்' எனப்படும் விதைகளை உருவாக்குகின்றனவாம். மழைத்துளிகள் மண்ணில் வேகமாக தொடும்போது, இந்த வேதிப்பொருட்கள் மற்றும் பாக்டீரியாக்களின் வாசம் காற்றுடன் கலந்து மேலே எழும்புகிறது. இதுவே நமக்கு மண் வாசனையாகத் தெரிகிறது என்று  பாப்புலர் சயின்ஸ் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மனித மூக்கு இந்த 'ஜியோஸ்மின்' வாசனையை மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கும் திறன் கொண்டது என்றும் நம் முன்னோர்களுக்குத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இந்த வாசனை உதவியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.​ மனிதர்கள் மட்டுமல்ல, ஒட்டகங்கள் பாலைவனத்தில் நீர்நிலைகளைக் கண்டறியவும், சில பூச்சிகள் முட்டையிடத் தகுந்த இடத்தைத் தேடவும் இந்த வாசனையைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் மண்ணும் தண்ணீரும் சேரும்போது தான் மண் வாசனை வருகிறது என்று தானே நினைத்திருந்தோம்..!

விகடன் 6 Dec 2025 4:48 pm

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்! விஜய் கொடுத்த பதவி என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், சிறந்த பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். அவரை கட்சியின் பரப்புரைச் செயலாளராக (Campaign Secretary) நியமிப்பதாகவும் விஜய் அறிவித்தார். இது தவெகவின் அரசியல் பயணத்தில் பெரிய வலுவூட்டலாகக் கருதப்படுகிறது. விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர் அண்ணன் திரு. […]

டினேசுவடு 6 Dec 2025 4:44 pm

மலேசியாவில் அஜித், விஜய், சிவகார்த்திகேயன்! - கோலிவுட் அப்டேட்ஸ்

டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் கர்நாடக சங்கீதம் களை கட்டும். ஒரு பக்கம் நாரத கான சபா, இன்னொரு பக்கம் மியூசிக் அகாடமி, மறு பக்கம் காமராஜ் மெமோரியல் ஹால் என்று ஒவ்வொரு அரங்கிலும் இசை மேளா இனிதே நடக்கும். கர்நாடக வித்வான்களின் இசைக் கருவிகளின் கச்சேரி, வாய்ப்பாட்டு பாட்டுக் ஆலாபனை கச்சேரி என்று கர்நாடக இசையில் கலந்து கட்டி அசத்துவார்கள். சென்னை போலவே இந்த டிசம்பர் மாதம் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என நட்சத்திரங்கள் மலேசியாவில் முகாமிட இருக்கிறார்கள். அஜித்குமார் கார் ரேஸ் பந்தயம், விஜய் `ஜனநாயகன்’ பட இசை வெளியிட்டு விழா, சிவ கார்த்திகேயன் சினிமா படப்பிடிப்பு என்று டிசம்பர் மாதம் மலேசியாவில் முகாமிடுகிறார்கள். அஜித் கடந்த இரண்டு வருடமாக தனது கனவு, லட்சியமான கார் ரேஸ் போட்டியில் மட்டுமே தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் இத்தாலியில் நடந்த கார் ரேஸ் அவார்டு விழாவில் குடும்பத்தோடு பங்கேற்றார். அங்கே அவருக்கு அவார்டு வழங்கி கெளரவம் செய்தனர். இப்போது டிசம்பர் முதல் வாரத்தில் மலேசியாவில் நடக்கும் கார் ரேஸ் பந்தயம் நடக்கிறது. அஜித் கலந்து கொண்டு போட்டியில் தனது கை வரிசை காட்டி வருகிறார். தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார், சிவகார்த்திகேயன் சிவ கார்த்திகேயன் நடித்து வந்த பராசக்தி படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. சிவ கார்த்திகேயன் டப்பிங் பேசி முடித்து விட்டார். அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதுப் படத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் முதல் செட்யூல் படப்பிடிப்பு மலேசியாவில் டிசம்பர் மாதம் முழுவதும் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர். #Thalapathy69 #Jananayagan விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படுகிற திரைப்படம் `ஜனநாயகன்’. இந்த படத்தின் ஆடியோ விழாவை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் 27 ஆம் தேதி விமரிசையாக நடக்கும் ஆடியோ விழாவில் முக்கியமான சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல், சில அரசியல் புள்ளிகளும் மேடையில் கலந்து கொள்ள அதிரடி ஏற்பாடுகள் நடக்கிறது. மலேசியாவில் பெருமளவில் மக்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய பிரம்மாண்ட ஆடிட்டோரியத்தை விஜய் தரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆக டிசம்பர் மாதத்தில் அஜித், விஜய், சிவ கார்த்திகேயன் மூவரும் மலேசிய மண்ணில் இருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து சிம்புவும் தற்போது மலேசியாவில் முகாமிட்டுள்ளார். இதனால் மலேசிய சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

விகடன் 6 Dec 2025 4:41 pm

பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம்முனீர் நியமனம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 243-வது பிரிவில் 27-வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் கடும் பின்னடைவை சந்தித்ததால் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்தது. மேலும் ராணுவ தளபதியான பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைவராக […]

அதிரடி 6 Dec 2025 4:30 pm

டிட்வா புயலால் KTCC மண்டலத்தில் பதிவான மழை அளவு! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்

தமிழ்நாட்டில் டிட்வா புயலால் சென்னை உள்பட கேடிசிசி மண்டலத்தில் பெய்த மழையின் அளவு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார்.

சமயம் 6 Dec 2025 4:03 pm

ஜெனரேட்டர் புகையை சுவாசித்ததால் பெண் உயிரிழப்பு

வீடொன்றினுள் இயங்கிக்கொண்டிருந்த மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம், உறவினர்களிடம் இன்று (6) ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த 04 ஆம் திகதி அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5ஆம் பிரிவு, புதிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் சம்பவத்தில் 54 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்தார். வீட்டினுள் இயங்கிய ஜெனரேட்டரிலிருந்து கசிந்த காபன் மொனொக்சைட் (Carbon monoxide) சுவாசித்தமையாலேயே குறித்த பெண்ணின் […]

அதிரடி 6 Dec 2025 4:03 pm

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண நிர்வாகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வு சுன்னாகத்தில் இன்றைய தினம் […]

அதிரடி 6 Dec 2025 4:00 pm

ஏவி.எம்.சரவணன்: `என்னமோ மனசு கேட்கல; மயானம் வரை போய்.!’ - கலங்கிய சிவகுமார்

ஏவி.எம்.சரவணன் மறைந்த அன்று, அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சிவகுமார், கண்கலங்கி நின்றார். அவரின் மேல் கொண்ட அன்பு, சிவகுமாரை சுற்றி நின்ற அனைவராலும் அன்று உணரப்பட்டது. ``அவரோட நியாபகமாதான் என் மகன் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன் என்றும் பேசி என் அன்பை வெளிப்படுத்தினார். அவரிடம் நாம் ஏவி.எம்.சரவணன் அவர்களுடனான பயணம் குறித்து பேசினோம்... இனி சிவகுமார் அவர்களின் வரிகளில்... ``சிவாஜி, கமல்ஹாசனை அறிமுகம் செய்த ஏவி.எம் நிறுவனம் தான் என்னையும் அறிமுகம் செய்தது. முதன் முதலில் நான் நடித்த காதல் காட்சிகளை பார்த்த செட்டியார், ஜோடி பொருத்தம் சரியில்லை என்று சொல்லி நீக்கி விட்டதாக சொன்னார்கள். நான் தனிமையில் கதறி அழுதேன். அப்போது என் தோளில் ஆதரவாக விழுந்த கரத்துக்கு சொந்தக்காரர், சரவணன். பராசக்தி படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவாஜி நடித்த `உயர்ந்த மனிதன்’ படத்தில் என்னை சிவாஜி மகனாக நடிக்க வைத்து சிறப்பு செய்தார். அன்று ஆரம்பித்த நட்பு நேற்றுவரை தொடர்ந்தது. ஏவி.எம்.சரவணன் | சிவகுமார் ஏவி. எம் நிறுவனம் எடுத்த 175 படங்களில் நடிக்காத நடிகர் நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். V.K ராமசாமி, ஏவி. எம்.ராஜன், என்று பன்முக திறமை கொண்ட கலைஞர்களை அறிமுகப்படுத்தியது. காஞ்சனாவுக்கு பெருமை சேர்த்தது. அதனால் தான் ஆட்டோ பிடித்து ஓடிவந்து அஞ்சலி செலுத்தினார். கே.ஆர்.விஜயாவும் பல படங்களில் நடித்துள்ளார். அவரும் சரவணன் சாருக்கு இறுதி மரியாதை செய்தார். AVM: ``என் கஷ்ட காலங்களில் - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி அவருக்கு A.C. திருலோக சுந்தர், S.P. முத்துராமன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். குறிப்பாக் திருலோக சுந்தர் அவர்களிடம் மட்டுமே ஏனோ மனம்விட்டு சிரித்துப் பேசுவார். இருவரும் வாரத்துக்கு ஒருமுறை ஏவி. எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் சந்திப்பார்கள். காலை முதல் இரவு வரை பேசிக் கொண்டிருப்பார்கள். அதன்பிறகு ஈ.சி.ஆர் இடத்தில் தனது வீட்டுக்கு போய் விடுவார், திருலோக சுந்தர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்த போதே மனிதர் ரொம்பவும் உடைந்து போனார். ஏ.வி.எம் சரவணன் ரஜினிக்கு முரட்டுக்காளை முதல் சிவாஜி வரை பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளன. கமலுக்கு சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம் , பேர் சொல்லும் பிள்ளை என்று ஏகப்பட்ட படங்களை எடுத்தார். என் மகன் சூர்யாவுக்கு அயன், பேரழகன் என்று முக்கிய படங்களை எடுத்துக் இருக்கிறார். பழனிசாமியாக இருந்த என்னை சிவகுமார் என்று பேர் வைத்தார். நான் அவர் நினைவாக என் மகனுக்கு சரவணன் என்று பேர் வைத்தேன். என்னிடம் வாரத்துக்கு இரண்டு நாள் தவறாமல் பேசி விடுவார். கடந்த 10 நாட்களாக ஏனோ பேசவே இல்லை. காலமான செய்தி கேட்டவுடன் காலையில் சூர்யாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினேன். அதன்பிறகு வீட்டிற்கு போன எனக்கு மனசு கேட்கவில்லை. மறுபடியும் தகனம் செய்ய செல்லும் முன்பு தனியாக வந்தேன். நானும், எஸ். பி. முத்துராமன் சாரும் சேர்ந்து மயானம் சென்றோம். அங்கே சரவணன் சார் உடல் தகனம் செய்யும் வரை கலங்கி நின்றோம். ஒரு காலத்தில் ஏவி. எம். ஸ்டுடியோவை கட்டி ஆண்டவர் உடலை, ஏவி. எம் மயானத்தில் நெருப்பு கொழுந்துவிட்டு எரித்துக் கொண்டு இருந்தது.” என்றார் வேதனையுடன். AVM: உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி- ஏவி.எம் சரவணன் குறித்து கமல்

விகடன் 6 Dec 2025 3:59 pm

ராமதாஸ் அய்யாவுக்கு துரோகம் –டெல்லியில் கொந்தளித்து பேசிய GK மணி!

டெல்லி : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடிக்கும் உள்கட்சி மோதல் தற்போது டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம், டெல்லி காவல்துறை என மூன்று முனைகளில் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் தலைவர் பதவி, சின்னம், பெயர் ஆகியவற்றை அன்புமணி தரப்பு போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு முன்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் […]

டினேசுவடு 6 Dec 2025 3:56 pm

வடக்கில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்: வவுனியா மாவட்டம்: நிர்மலன் பெர்னாண்டோ – 077 125 […]

அதிரடி 6 Dec 2025 3:52 pm

950 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் 4 கப்பல்கள் புறப்பட்டன

டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தமிழக அரசின் அவசர நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 650 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் மற்றும் துணிகளை ஏற்றிக் கொண்டு ஐஎன்எஸ் காரியல் ( INS Gharial) என்ற கப்பல் இன்று காலை சென்னை துறைமுகத்தில்

புதினப்பலகை 6 Dec 2025 3:46 pm

⚡ இலங்கையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து உடனடி எச்சரிக்கை! – பாதுகாப்பாக இருங்கள்!

⚡ இலங்கையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து உடனடி எச்சரிக்கை! – பாதுகாப்பாக இருங்கள்! இலங்கையின் பல பகுதிகளில்… The post ⚡ இலங்கையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து உடனடி எச்சரிக்கை! – பாதுகாப்பாக இருங்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Dec 2025 3:41 pm