SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

ஹேப்பி நியூ இயர்! நாடுகடத்தப்பட்ட மதுரோ வாழ்த்து!

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ நாடுகடத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். வெனிசுவேலா அதிபர் மதுரோவை அமெரிக்க படை கைது செய்து அழைத்துச் செல்லும்போது, அங்கிருந்தோருக்கு ஹேப்பி நியூ இயர் என்று மதுரோ வாழ்த்து தெரிவிக்கும் விடியோ வெளியாகியுள்ளது. வெனிசுவேலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சனிக்கிழமையில் (ஜன. 3) அமெரிக்க படை கைது […]

அதிரடி 5 Jan 2026 6:18 am

அட்டைப்படம்

அட்டைப்படம்

விகடன் 5 Jan 2026 5:47 am

வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகம் குறித்து ட்ரம்ப் அறிவிப்பு

வெனிசுலாவின் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாகவே நலிவடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்நாட்டின் மோசமாக சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பை சீரமைக்க, அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பில்லியன் கணக்கான டொலர்கள் முதலீடு செய்யப்படும் என்றும், உள்கட்டமைப்பு சீரமைப்பின் மூலம் வெனிசுலாவிற்கு வருவாய் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உலக எண்ணெய் சந்தையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெனிசியூலாவில் ஆட்சி நிர்வாகத்தை […]

அதிரடி 5 Jan 2026 1:30 am

சுவிட்சர்லாந்து தீப்பரவல் சம்பவம்: தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

சுவிட்சர்லாந்து தீப்பரவல் சம்பவம் தொடர்பில் ஜனவரி 9 தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவிலுள்ள உணவகத்துடன் இணைந்த மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாரிய தீப்பரவல் ஏற்பட்டது. மதுபான போத்தல்களில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மெழுகுவர்த்திகள் கூரையில் பட்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க நடவடிக்கை இந்த கோரமான சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று […]

அதிரடி 5 Jan 2026 12:30 am

ஹரினி மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை: சம்பிக்க ரணவக்க கடும் கண்டனம்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை இலக்கு வைத்து, அவரது தனிப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்படும் கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு… The post ஹரினி மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை: சம்பிக்க ரணவக்க கடும் கண்டனம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 11:06 pm

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா.. தவெகவுடன் கூட்டணி வைக்க யாருக்கு வாய்ப்பு அதிகம்?

செங்கோட்டையன் கணிப்புப்படி, தவெகவில் மேலும் பலர் இணைய வாய்ப்புள்ளது. இதனால் ஓபிஎஸ்-தினகரனை அதிமுக கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், சசிகலா யாருடன் இணைவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

சமயம் 4 Jan 2026 10:55 pm

ஒரே நாளில் உலகின் கவனத்தை ஈர்த்த வெனிசுலா ; புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் பதிவியேற்றுள்ளார். நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் ஒரே இரவில் கைது செய்த பின்னர், இந்த திடீர் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது. வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் கடந்த சில நிமிடங்களாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் உரையாடி வருகிறார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டெல்சி ரோட்ரிக்ஸ், “வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி மதுரோ தான். நாட்டைப் பாதுகாக்க வெனிசுலா தயாராக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி 4 Jan 2026 10:30 pm

சிரியாவில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு போர் விமானங்கள் தாக்கின

ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான பால்மைராவின் வடக்கே மலைகளில் உள்ள ஒரு நிலத்தடி வசதியில் சனிக்கிழமை மாலை தாக்குதல்கள் நடந்தன. மத்திய சிரியாவில் உள்ள ஒரு நிலத்தடி வசதியின் மீது பிரான்சுடன் இணைந்து தனது விமானங்கள் கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை இரவு அறிவித்தது, இந்த தளத்தை இஸ்லாமிய அரசு போராளிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேமிக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. நாட்டின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரமான பால்மைராவின் வடக்கே மலைகளில் உள்ள ஒரு கட்டமைப்பில் சனிக்கிழமை மாலை தாக்குதல்கள் நடந்ததாக அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஐ.எஸ். போராளிகளுக்கு எதிராகப் போராடி வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் பிரிட்டனும் பிரான்சும் ஒரு பகுதியாகும். பிரிட்டிஷ் இராணுவம் வாயேஜர் எரிபொருள் நிரப்பும் டேங்கரால் ஆதரிக்கப்படும் டைபூன் FGR4 போர் விமானங்களைப் பயன்படுத்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் விமானப்படை, வசதிக்கு கீழே உள்ள பல அணுகல் சுரங்கப்பாதைகளை குறிவைக்க பேவ்வே IV வழிகாட்டப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தியது. மேலும் விரிவான மதிப்பீடு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இலக்கு வெற்றிகரமாக தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பதிவு 4 Jan 2026 9:50 pm

வெனிசுலா விவகாரம்: அமெரிக்காவையும், டிரம்பையும் கடினமாக கடிந்தது இலங்கை அரசாங்கம்!

வெனிசுலாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது விவகாரம்… The post வெனிசுலா விவகாரம்: அமெரிக்காவையும், டிரம்பையும் கடினமாக கடிந்தது இலங்கை அரசாங்கம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 9:47 pm

உள்ளாட்சிச் சபைகளின் அலங்கோல அரசியல்! பனங்காட்டான்

அந்தந்தப் பிரதேச மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவென நிறுவப்பட்ட உள்ளா ட்சிச் சபைகள் இன்று அரசியல் கட்சிகளின் கிளைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் கொப்புப் பாய்ச்சல்களும் கிளை தாவல்களும் தாராளமாக இடம்பெறுகின்றன. சில கட்சிகளின் தலைமைகள் கொள்கை துறந்து, சேராத இடம் சேர்ந்து தங்கள் முகத்தில் தாமே கரி பூசுகின்றன. கடந்த வருடம் மே மாதம் இலங்கையில் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் நிகழ்கால குழப்பங்கள் பற்றி எழுத முனைந்த வேளையில், முந்தி வந்த காதை பிந்தி வந்த கொம்பு மறைத்த கதைபோல விடயம் திசை திரும்ப நேர்ந்துள்ளது. இத்திருப்பத்தின் காரணமாக இரண்டு விடயங்களை முதலில் பார்த்துவிட்டு பின்னர் இவ்வாரத்தானதுக்கு வரலாம். கடந்த இரண்டு வருடங்களாக காங்கேசன்துறையிலுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான செயற்பாடுகள் அது அமைந்துள்ள காணிகளை பறிகொடுத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னுரிமை கொடுத்து அக்காணிகளுக்கு முன்னால் பௌர்ணமி தினங்களில் (பௌத்தர்கள் இதனை போயா தினம் என்பர்) உரிமைப் போராட்டம் நடத்த ஆரம்பித்தவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர். இவ்வாறான ஒரு போராட்டம் நடைபெறுவதை தெரியாததுபோல் பாசாங்கு பண்ணிக் கொண்டு தமிழ் மக்களின் தலைமைக் கட்சி இருந்து வருகிறது. ஆனால், இதன் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மட்டும் இதில் பங்குபற்றி வந்தார். இதற்காக இவர்மீது கட்சி எப்போது நடவடிக்கை எடுக்குமோ தெரியாது. அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் ஒரு வாரத்துக்கு முன்னர் தமக்கேயுரித்தான தர்பார் நடத்தினர். இப்போது தாக்கப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நயினாதீவு விகாராதிபதியும், யாழ்ப்பாண நாகவிகாரை விகாராதிபதியும் திடுதிப்பென களத்தில் குதித்துள்ளனர். திஸ்ஸ விகாரை அமைந்திருக்கும் காணி பொதுமக்களுக்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளதோடு இதனை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தாங்கள் எடுத்துக் கூறியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இரண்டு விகாராதிபதிகளும் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வருபவர்கள். இவர்களின் கூற்றுகள் சமூகத்தின் ஒருபகுதியினரால் வரவேற்கப்பட்டதாயினும் வேறு சிலரின் சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது. இதற்குப் பல காரணங்கள் வெளிப்படையாக சொல்லப்பட்டுள்ளன. தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் வடமாகாணத்துக்கான பிரதான விகாராதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். தாங்கள் இருவரும் பதவி இறக்கம் செய்யப்பட்டது போன்ற தாக்கத்தினாலேயே இவர்கள் காணி விடயங்களில் மக்கள் பக்கம் குரல் கொடுத்திருக்கலாமென ஒரு வாதம் உண்டு. எதுவாயினும் நீதியான தீர்வு இறுதியில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் கைது பரபரப்பாக பேசப்படும் செய்தி. இவரது முப்பதாண்டு கால அரசியல் வாழ்வு எப்போதும் பரபரப்பாகவே இருந்தது. இவர் ஒரு முன்னாள் போராளி என்பதும் இதற்குக் காரணம். ஆனால், 2000ம் ஆண்டு சந்திரிகா அரசிலிருந்து இறுதியாக 2004ல் கோதபாய - ரணில் ஆட்சிவரை அமைச்சராக இருந்தவர் இவர். போர்க்காலத்தில் இவருக்கு வழங்கப்பட்ட 19 சுடுகலன்கள் இதுவரை அரசிடம் மீளளிக்கப்படவில்லை என்பது தொடர்பாக இவரால் சரியான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை என குற்றவியல் விசாரணை பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வழமையாக அரசியல்வாதிகளின் விளக்கமறியல் என்பது சிறைச்சாலையிலுள்ள மருத்துவமனையாகவே அமையும். இறுதியாக, ரணில் விக்கிரமசிங்கவும் விளக்கமறியலை மருத்துவமனையிலேயே கழித்தார். இ;ப்போது டக்ளஸ் தேவானந்தாவும் அப்படித்தான். பார்க்கப்போனால் அரசியல்வாதிகள் எல்லோருமே நோயாளிகள்போலத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, பிள்ளையான், டக்ளஸ் பாதையில் அடுத்தது அவரா இவரா என்று வேறு சில தமிழ் அரசியல்காரர்களின் பெயர்களை ஊடகங்கள் எழுத ஆரம்பித்துள்ளன. இந்த விடயத்திலும் என்ன நடைபெறுமென்பதை அறிய பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வாரத்துக்கு எழுத வந்த விடயம், உள்ளாட்சிச் சபைகளின் இயங்குதளம் அல்லது அவைகளை இயக்கும் பின்னணி பற்றியது. கிராமசபைகள், பட்டினசபைகள், நகரசபைகள், மாநகரசபைகள் என்பவை ஒரு காலத்தில் உள்ளாட்சிச் சபைகளாக இருந்தன. இவைகளின் பிரதான பணியாக அந்தந்த பகுதி வீதிகள் பராமரிப்பு, குளங்கள் குட்டைகள்; துப்பரவு, விவசாய அபிவிருத்தி, தெருக்களின் மின்விளக்குகளை பராமரிப்பது, சோலை வரி அறவிடுதல் மற்றும் சைக்கிள்கள் வண்டில்களுக்கு இலக்கத்தகடுகள் வழங்கி நிதி சேகரிப்பது என்பவை. முன்னைய காலங்களில் இச்சபைகளின் தேர்தல்களிலும் நிர்வாகத்திலும் பெருமளவில் அரசியல் கட்சிகள் தங்களை அடையாளப்படுத்துவதில்லை. தெற்கில் ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா சுதந்திர கட்சி மற்றும் இடதுசாரிகளும், தமி;ழர் பிரதேசங்களில் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ்,. முஸ்லிம் கட்சிகளும் இத்தேர்தல்களில் தேவைப்படும்போது தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும். வடக்கிலும் கிழக்கிலும் இச்சபைகளின் நிர்வாகம் எந்தக் கட்சியிடம் இருக்கிறது என்பதை வாகனங்களுக்கு வழங்கப்படும் இலக்கத் தகடுகளின் வர்ணங்கள் காட்டிவிடும். மூவர்ணம் எனில் தமிழரசு, நான்கு வர்ணங்கள் எனில் காங்கிரஸ் என்பது அடையாளம். இப்போது நிலைமை அப்படியில்லை. அரசியல் கட்சிகள் தேர்தலின்போதே உட்புகுந்து அபேட்சகர் தெரிவிலும், வாக்கு வேட்டையிலும் தம்மை ஈடுபடுத்தும். நகரசபை, பிரதேச சபை, மாநகர சபை ஆகிய மூன்றுமே இப்போது உள்ளவை. கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற இச்சபைகளுக்கான தேர்தல்களின்போது நிகழ்ந்த குரங்குப் பாய்ச்சல்களைவிட, சபைகள் உருவான பின்னர் இடம்பெறும் தாவல்கள் வேகமானவை. 339 சபைகளுக்கு இடம்பெற்ற தேர்தல்களில் 49 அரசியல்கட்சிகளும், 14 சுயேட்சைக் குழுக்களுமாக 75,589 பேர் போட்டியிட்டனர். தெற்கில் 151 சபைகளில் அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. தமிழர் தாயகத்தில் தமிழரசு கட்சி 377 உறுப்பினர்களைப் பெற்றது. உறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்தளவில் தமிழரசுக் கட்சிக்கே அதிகம். ஆனால், இதன் வெற்றி சொரியல் காணிகள் போன்றது. எனினும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில இடங்களில் சேராத இடங்களோடும் சேர்ந்து சபைகளை தமிழரசு கைப்பற்றியது. இலங்கையின் இரண்டு மாநகர சபைகள் இப்போது கூட்டுச் செயற்பாட்டினால் நெருக்கடியைச் சந்தித்தன. முதலாவது, யாழ்ப்பாணம் மாநகர சபை. டக்ளஸ் தேவானந்தாவை அவரது அலுவலகத்துக்குத் தேடிச் சென்ற தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஈ.பி.டி.பி.யின் ஆதரவோடு தமிழரசு கட்சியை ஆட்சியில் ஏற்றி அதன் மேயரையும் கதிரையில் அமர்த்தினார். ஆனால், அதன் முதலாவது பாதீட்டில் வெற்றியைப் பெற முடியவில்லை. இரண்டாவது தடவை பாதீட்டைச் சமர்ப்பித்து தமிழரசு கட்சியால் அதனை வெற்றி கொள்ள முடிந்தது. கொழும்பு மாநகர சபையின் கதையும் இது போன்றது. அங்குமிங்குமாக பேச்சு நடத்தி ஒருவாறு மாநகர சபையை அநுர குமரவின் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது. ஆனால், கடந்த மாதம் இடம்பெற்ற அதன் பாதீட்டு வாக்கெடுப்பில் தோல்வி கண்டது. எனினும், இரண்டாவது அமர்வில் எதிரணிகளில் இருந்த சிலரை உள்வாங்கியும், வேறு சிலரை அமர்வில் பங்குபற்றாது விலத்தியும் ஒருவாறு பாதீடு நிறைவு கண்டது. இதுபோன்று தெற்கில் வேறு பல சபைகளில் ஆளுங்கட்சி ஆறு மாதத்துக்குள்ளேயே பாதீட்டை நிறைவேற்ற முடியாது தோல்வி கண்டுள்ளது. இதற்கான ஒரு காரணம் தேர்தலின்போது தனித்தனியாகப் போட்டியிட்ட கட்சிகள் இப்போது கூட்டாகச் சேர்ந்த எதிர்த்து வாக்களிப்பது. எனினும், பின்கதவால் இடம்பெறும் டீல்கள் ஒருவாறு சில சபைகளை தக்க வைக்கின்றன. உள்ளாட்சிச் சபைகளின் பாதீடுகள் தோல்வியடைவது ஒருபோதுமே அரசாங்கத்தைப் பாதிக்காது. ஆட்சி தொடர்ந்தே நடைபெறும். ஆனால், தமிழர் தாயகத்து நிலைமை வேறானது. வன்னியில் கரைதுறைப்பற்று சபையின் தமிழரசு கட்சி பிரதிநிதி ஒருவர் பல்டி அடித்ததால் அங்கு பாதீடு தோல்வி அடைந்தது. பருத்தித்துறை நகரசபையில் இடம்பெற்ற கூட்டு - இதனை எந்தவகை கூட்டு என்று சொல்லவே முடியாது. ஆட்சியில் இருக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணியை வீழ்த்த வேண்டுமென்பதற்காக தமிழரசுக் கட்சி இச்சபையிலுள்ள அநுர குமரவின் ஐக்கிய மக்கள் சக்தியுடனும், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யுடனும் இணைந்து பாதீட்டை தோற்கடிக்க முடியாது மண்கவ்வ நேர்ந்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழரசுக் கட்சியின் மேயரைத் தெரிவதற்காக டக்ளஸின் ஆதரவைப் பெற்ற தமிழரசுக் கட்சி, பருத்தித்துறையில் அநுர குமரவின் கட்சியையும் எந்த கொள்கை அடிப்படையில் இணைத்துக் கொண்டு பாதீட்டைத் தோற்கடிக்க எத்தனித்தது என்பதை அதுதான் விளக்க வேண்டும். இதே அநுர குமரவின் கட்சியினர்தான் கரைதுறைப்பற்றில் தமிழரசுக் கட்சிக்கு தோல்வியை ஏற்படுத்தியது. முன்னைய காலங்களில் தமி;ழரசுக் கட்சியின் தலைவர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகமோ தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலமோ அல்லது தெற்கில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவோ, சிறிமாவோ பண்டாரநாயக்கவோ இவ்வாறான தேர்தல்களில் ஈடுபட்டதாகவோ தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அறிக்கை விட்டதாகவோ இப்பத்தியாளருக்கு ஞாபகம் இல்லை. உள்ளாட்சி சபைகளின் பிரதான பணி அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தி என்ற காலம் மாறி, இப்போது அரசியல் கட்சிகளின் கிளைகளினது அபிவிருத்தியாக கரணமடித்துள்ளதால், உள்ளாட்சிச் சபைகளின் அலங்கோல அரசியலையே காணமுடிகிறது.

பதிவு 4 Jan 2026 9:37 pm

சுவிட்சர்லாந்து தீ விபத்தில் பலரை காப்பாற்றிய ஹீரோ Paolo Campolo!

சுவிட்சர்லாந்தில் பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் (Swiss ski resort) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 இளைஞர்களை ஒரு வங்கி அதிகாரி தீரத்துடன் காப்பாற்றியுள்ள சம்பவம் உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Paolo Campolo (55) என்ற வங்கி அதிகாரி, தனது மகளிடமிருந்து வந்த ஒரு பதற்றமான அழைப்பைத் தொடர்ந்து, கொழுந்துவிட்டு எரிந்த தீயையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி ஒரு “ரியல் ஹீரோவாக” (Real-life hero) உருவெடுத்துள்ளார். ரியல் ஹீரோ Paolo […]

அதிரடி 4 Jan 2026 9:30 pm

முக்கிய அறிவிப்பு: நாடாளுமன்ற ஓய்வூதிய முறையை ரத்து செய்யும் சட்டமூலம் வெளியீடு! ⚖️

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியச் சலுகைகளை நீக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளது. இது குறித்த முக்கிய தகவல்கள் இதோ:… The post முக்கிய அறிவிப்பு: நாடாளுமன்ற ஓய்வூதிய முறையை ரத்து செய்யும் சட்டமூலம் வெளியீடு! ⚖️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 8:37 pm

யாழில் 600 கிலோ கஞ்சா எரிப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயதிக்க எல்லைகளுக்குள் கடந்த காலங்களில பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றபட்ட கஞ்சா போதைப் பொருட்கள் வழக்கின் சான்று பொருட்களாக நீதிமன்றில் பதிவாளரின் பொறுப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. அந்நிலையில் அவற்றில் வழக்குகள் முடிவுற்று, நீதவானினால் அழிக்க உத்தரவிட்டப்பட்ட சுமார் 600 கிலோ கேரளா கஞ்சா நீதாவனின் நேரடி கண்காணிப்பில் பொலிகண்டி குப்பைத்திடலில் […]

அதிரடி 4 Jan 2026 8:30 pm

காதலை ஏற்க மறுத்த இளம் ஆசிரியைக்கு நேர்ந்த கதி ; தீவிரமாகும் விசாரணை

களுத்துறை, நாகொடை பகுதியில் ஆசிரியர் ஒருவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமைக்காக கைப்பேசியை திருடிச்சென்ற சம்பவமொன்று தொடர்பல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை, நாகொடையைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் விசாரணை குறித்த ஆசிரியை சந்தேகநபரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமையினால் குறித்த சந்தேக நபர் கைப்பேசியை பறித்துவிட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது ஆசிரியையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

அதிரடி 4 Jan 2026 8:30 pm

மன்னார் பேசாலையில் மூவியரசர் விழா!

மன்னார் மறை மாவட்டத்தில் பேசாலையில் மூவியரசர் விழா இன்று (4.01.26) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வருடம் ஒருமுறை சிம்மாசனத்தில்… The post மன்னார் பேசாலையில் மூவியரசர் விழா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 8:28 pm

வேலியே பயிரை மேய்ந்த கதை?

இலங்கை நீதித்துறையில் மோசடிகள் நிறைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவர்களிடம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து குறித்த நீதிபதி கைது செய்யப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னணியிலேயே மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி ஜே.பி.ஏ ரஞ்சித்குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நகைத் திருட்டுச் சம்பவத்தைதொடர்ந்து மேலதிக விசாரணைகளையடுத்தே நீதிச் சேவை ஆணைக்குழு இவரைப் பதவி நீக்கம் செய்தது.

பதிவு 4 Jan 2026 8:27 pm

இனி இலங்கையில் ஓய்வூதியமும் இல்லை!

தேசிய மக்கள் சக்தியின் உறுதிப்பிரகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியம் இடைநிறுத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய,இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது

பதிவு 4 Jan 2026 8:13 pm

அதிமுக நேர்காணல் ஒத்திவைக்க இதுதான் காரணமா? தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிமுக மேற்கொண்டு வரும் வேட்பாளர் தேர்வு பணிகளில் விருப்ப மனு அளித்துள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நடத்தப்படவிருந்த நேர்காணல் தேதிகளில் மாற்றம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது

சமயம் 4 Jan 2026 8:00 pm

ஜேவிபிக்கு கோபம் வந்தது?

அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் வோஷிங்டன் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி), கண்டிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் தலைமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் அதன் மக்களிடம் மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு வெளி சக்திக்கும் ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திரமான அரசின் உள் விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை ஆகியவை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் என்றும், எந்தவொரு சாக்குப்போக்கின் கீழும் இராணுவத் தலையீடுகள் அல்லது படையெடுப்புகள் நவீன உலகில் ஏற்றுக்கொள்ள முடியாதவை அந்த வகையில், வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். அதன்படி, வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பதிவு 4 Jan 2026 7:48 pm

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. சூடு, சுரணை இல்லாத முதல்வர்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் பிரச்சாரம் செய்தார்.

சமயம் 4 Jan 2026 7:38 pm

இந்திய இராணுவத் தளபதி நாளை சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் 5ஆம் நாள் தொடக்கம், 8ஆம் நாள் வரை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ள அவர், நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என இந்திய இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. அவர், சிறிலங்கா இராணுவத்தால் மரியாதை அணிவகுப்புடன் வரவேற்கப்படுவார். இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா இராணுவத் தளபதி, பாதுகாப்பு

புதினப்பலகை 4 Jan 2026 7:07 pm

திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம்.. புதுக்கோட்டையில் அமித் ஷா சபதம்!

எப்பாடு பட்டாவது, எப்படியாவது திமுகவை ஒழித்தே தீர வேண்டும் என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசத்துடன் உரையாற்றினார்.

சமயம் 4 Jan 2026 6:42 pm

வெனிசுவேலா விவகாரம்- ஜேவிபி நிலைப்பாடு வேறு, அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறு

அனைத்துலக சட்டம் மற்றும் ஐ.நா. சாசனம் மீறப்படுவது குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்வதற்க, ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீடு மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக, கொழும்பில் இன்று நடந்த ஊடகச் சந்திப்பில் வெளிவிவகார

புதினப்பலகை 4 Jan 2026 6:38 pm

பிரயாக்ராஜில் மாா்கழி மேளா தொடக்கம்: லட்சக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், பௌா்ணமி தினமான சனிக்கிழமை மாா்கழி மேளா திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா். இந்த ஆன்மிக திருவிழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெற உள்ளது. பௌா்ணமி தினமான சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பாா்த்தாலும் காவிக்கொடிகள் பறக்க, பக்தி முழக்கங்களுக்கு இடையே பக்தா்கள் புனித நீராடினா். துறவிகள், தற்காலிக கூடாரங்களில் தங்கியிருக்கும் […]

அதிரடி 4 Jan 2026 6:30 pm

திமுகவை வீழ்த்த விரதம் இருக்க வேண்டும்.. இரவு பகல் பாராது உழைக்க வேண்டும்.. நயினார் நாகேந்திரன் பேச்சு!

திமுக ஆட்சியை அகற்ற சபதம் எடுக்க வேண்டும். விரதம் இருந்து இரவு பகல் பாராது உழைக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

சமயம் 4 Jan 2026 6:14 pm

சர்ச்சைக்குரிய பாடப்புத்தக விவகாரம் ; அறிக்கை சமர்பிக்கப்பட்டது

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module), தகாத இணையத்தளம் ஒன்றைக் குறிக்கும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) இடம்பெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஹேரத், அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். தகாத […]

அதிரடி 4 Jan 2026 6:11 pm

நயினாதீவு விகாராதிபதி –அரசாங்க அதிபர் சந்திப்பு

நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ அவர்கள் இன்றைய தினம் (04.01.2025) காலை. 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக வணக்கத்திற்குரிய விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார். மேலும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்கள் தமது பக்க நிலைப்பாடுகளையும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார்.

அதிரடி 4 Jan 2026 5:58 pm

தமிழர் பகுதியொன்றில் நீதிபதி ஒருவர் இடமாற்றம் ; வெளியான காரணம்

சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நீதவான் களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதவானாகக் கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்மாந்துறை நீதிமன்றம் இதேவேளை, சம்மாந்துறை நீதிமன்றத்தின் புதிய நீதவானாக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (05) தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட நீதவான், இதற்கு முன்னர் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றிய காலப்பகுதியில், அந்நீதிமன்றத்தின் களஞ்சியசாலையிலிருந்த சான்றுப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் […]

அதிரடி 4 Jan 2026 5:55 pm

பொங்கல் பரிசுத் தொகை: ``திமுக அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ் காட்டம்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் இந்நிலையில், தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தி.மு.க ஆட்சியில் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை ஓரளவாவது தணிக்கும் வகையில், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்படுவது சரியானதே. கடந்த ஆண்டும் இதே காலத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆனால், மக்களுக்கு ஒரு பைசா கூட பொங்கல் பரிசாக தி.மு.க அரசு வழங்கவில்லை. ஆனால், இப்போது வழங்குகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர். அன்புமணி ஆனால், அவர்களைத் திரும்பிக் கூட பார்க்காத தி.மு.க அரசு, இப்போது அவர்களை ஏமாற்றும் வகையில் ஒரு மோசடி ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இன்னும் 50 நாள்களில் அறிவிக்கப்படவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசு, அதிலிருந்து தப்புவதற்காகவே இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் நிச்சயமாக வரும் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்துவார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். `பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம்!' - பரிசுத் தொகை வருவதை உறுதி செய்கிறதா வழிகாட்டல் சுற்றறிக்கை?

விகடன் 4 Jan 2026 5:51 pm

சினம் கொண்ட சிங்கம் எடப்பாடி பழனிசாமி.. மதம் கொண்ட யானை திமுக.. ராஜேந்திர பாலாஜி கருத்து!

சினம் கொண்ட சிங்கமான எடப்பாடி பழனிசாமி, மதம் கொண்ட யானை திமுகவை தேர்தலில் வீழ்த்துவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.

சமயம் 4 Jan 2026 5:41 pm

சிங்கள தேசியம் புறக்கணிக்கப்படுகிறது: விமல்  அதிரடி குற்றச்சாட்டு!

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், சிங்கள தேசியத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின்… The post சிங்கள தேசியம் புறக்கணிக்கப்படுகிறது: விமல் அதிரடி குற்றச்சாட்டு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 4:58 pm

அரசின் முதல் AI கிளினிக்.. இந்த டிஜிட்டல் புரட்சியால் நோயாளிகளுக்கு என்ன பயன்?

கிரேட்டர் நொய்டாவில் திறக்கப்பட்ட AI கிளினிக் மூலம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற முக்கிய தகவல்களில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக எச்சரிக்கை வழங்கப்படுகிறது.

சமயம் 4 Jan 2026 4:56 pm

அதிபர் மதுரோவின் இருப்பிடம் குறித்து தெரியவில்லை! –வெனிசுவேலா துணை அதிபர் பேச்சு!

அமெரிக்கப் படைகளால் நாடுகடத்தப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரின் இருப்பிடம் குறித்து தெரியவில்லை என துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார். வெனிசுவேலா நாட்டின் மீது அமெரிக்கா இன்று (ஜன. 3) திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை நாடுகடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலா முழுவதும் பரபரப்பான சூழல் […]

அதிரடி 4 Jan 2026 4:30 pm

நியூயோர்க் தடுப்பு முகாமில் மதுரோ அடைக்கப்பட்டார்:

நேற்று சனிக்கிழமை வெனிசுலா மீதான அமெரிக்கத் தாக்குதல்களின் போது கைது செய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரோவும் அவரது மனைவி முதல் பெண்மணி சிலியா புளோரஸும் தலைநகர் கராகஸிலிருந்து புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திற்கு போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அழைத்துச் செல்லப்பட்டனர். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவின் உடைந்த உள்கட்டமைப்பை சரிசெய்து நாட்டிற்கு பணம் சம்பாதிக்கத் தொடங்கும் என்று டிரம்ப் கூறுகிறார். வெனிசுலாவை ஜனநாயக அல்லது நியாயமான எதிர்காலத்திற்காக வலுப்படுத்துவதாக டிரம்ப் கூறினாலும் மாறாக அமெரிக்கா அதன் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதில் தீவிரமானவர் என்ற கருத்து உலகப்பரப்பில் நிலவிவருகிறது.

பதிவு 4 Jan 2026 4:27 pm

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக ரோட்ரிகஸை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது

அமெரிக்காவினால் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் இல்லாத நிலையில், துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வெனிசுலா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க நடவடிக்கையின் போது நேற்று சனிக்கிழமை அதிகாலை மதுரோ கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்றத் தீர்ப்பின்படி நிர்வாக தொடர்ச்சியையும் நாட்டின் விரிவான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, வெனிசுலாவின் பொலிவேரியன் குடியரசின் ஜனாதிபதி பதவியை ரோட்ரிக்ஸ் ஏற்றுக்கொள்வார்.

பதிவு 4 Jan 2026 4:19 pm

செங்கோட்டை வெடி விபத்தில் பாக். உடன் தொடர்பா? அம்பலமான தீவிரவாத ரகசியம்!

தீவிரவாத அமைப்புகள் எவ்வாறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்ற முயல்கின்றன என்பதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக டெல்லி செங்கோட்டையில் நடந்த வெடி விபத்து பார்க்கப்படுகிறது

சமயம் 4 Jan 2026 4:16 pm

பேர்லினில் மின்சாரம் துண்டிப்பு: பலர் உறைந்து போனார்கள்

தீ விபத்து காரணமாக ஏற்பட்ட மின் தடைக்குப் பிறகு, ஜெர்மன் தலைநகரில் சுமார் 7,000 வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உறைபனி வெப்பநிலைக்கு மத்தியில், பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரத்திற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை சுமார் 45,000 வீடுகள் மற்றும் 2,220 வணிகங்களுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டது. யேர்மன் தலைநகர் பெர்லினின் தென்மேற்கில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் வழங்குநரான கிரிட் ஆபரேட்டர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்து. ஜனவரி 4 ஆம் திகதி அதிகாலை உள்ளூர் நேரப்படி 3:23 மணிக்கு குறிப்பாக லிச்சர்ஃபெல்ட் பகுதியில், சுமார் 7,000 வீடுகளுக்கும் 150 வணிகங்களுக்கும் பல கட்டங்களில் மின்சாரத்தை மீட்டெடுக்க முடிந்தது என்று ஸ்ட்ரோம்நெட்ஸ் பெர்லின் தனது வலைத்தளத்தில் இரவு முழுவதும் அறிவித்தது. மின்சாரம் ஓரளவுக்கு மீட்டமைக்கப்படுவதால், ஸ்டெக்லிட்ஸ்-ஜெஹ்லெண்டோர்ஃப் மாவட்டத்தில் சுமார் 38,000 வீடுகளும் 2,000க்கும் மேற்பட்ட வணிகங்களும் மின்சாரம் இல்லாமல் உள்ளன, இந்தப் பிரச்சினையை முழுமையாக சரிசெய்ய வியாழக்கிழமை பிற்பகல் வரை ஆகலாம் என்று ஸ்ட்ரோம்னெட்ஸ் பெர்லின் தெரிவித்துள்ளது. நகரம் மிகவும் குளிரான குளிர்காலத்தை அனுபவித்து வருவதால், பல வீடுகளில் வெப்பம் இல்லாமல் போவதற்கு இந்த மின் தடை வழி வகுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் பல பராமரிப்பு இல்லங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளன. அவசர சேவைகள் குறைந்தது இரண்டு முதியோர் இல்லங்களில் இருந்து குடியிருப்பாளர்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளன. டெல்டோவ் கால்வாய் மீது உள்ள கேபிள் இணைப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது தீ விபத்து என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கு பொறுப்பேற்குமாறு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதை அடுத்து தீ விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தீ விபத்துக்குப் பின்னால் ஒரு தீங்கிழைக்கும் செயல் இருப்பதாக அதிகாரிகள் நம்புவதாகக் பெர்லினின் பொருளாதார விவகாரங்களுக்கான செனட்டர் பிரான்சிஸ்கா கிஃபியின் செய்தித் தொடர்பாளர் கூறினார். கடிதத்தின் நம்பகத்தன்மை ஆராயப்பட்டு வருகிறது, ஆனால் இதுவரை எந்தக் குழுவும் குற்றவாளியாக அடையாளம் காணப்படவில்லை.

பதிவு 4 Jan 2026 4:13 pm

சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலால விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தொடர்பில், இந்திக ரத்னமலால நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (04) கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் புதல்வரான ஜோஹான் பெர்ணான்டோ, சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிரடி 4 Jan 2026 4:12 pm

வெனிசுவேலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஜேவிபி கடும் கண்டனம்

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும், அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் ஜேவிபி கடுமையாக கண்டித்துள்ளது. ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதான கூட்டணிக் கட்சியான ஜேவிபியின் நிறைவேற்றுக் குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட வெனிசுவேலா அரசுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பையும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் நிக்கோலஸ்

புதினப்பலகை 4 Jan 2026 4:11 pm

வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: ஜே.வி.பி (JVP) கடும் கண்டனம்!

சுதந்திர நாடான வெனிசுலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, அந்நாட்டு மக்களின் வாக்குகளால் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ்… The post வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: ஜே.வி.பி (JVP) கடும் கண்டனம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 3:46 pm

வெனிசுலா அதிரடி: அதிபர் மதுரோ சிறைப்பிடிப்பு –இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்!

வெனிசுலாவில் கடந்த சில மணிநேரங்களாக உலகையே அதிரவைக்கும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ… The post வெனிசுலா அதிரடி: அதிபர் மதுரோ சிறைப்பிடிப்பு – இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 3:33 pm

சுவிட்சர்லாந்து தீ விபத்தில் அடையாளம் காணப்பட்ட நால்வரின் உடல்கள்

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் – மோண்டானா விடுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்த நிலையில் நால்வரின் உடல்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட இரு இளைஞர்கள் மற்றும் இரு பெண்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காயமடைந்த 119 பேரில் 113 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதியானவர்களை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 4 Jan 2026 3:30 pm

பொங்கல் விழாவில் ஒன்றாக பங்கேற்ற கனிமொழி மற்றும் சவுமியா அன்புமணி!

பொங்கல் விழாவில் ஒன்றாக பங்கேற்ற கனிமொழி மற்றும் சவுமியா அன்புமணியால் கூட்டணி பேச்சு மீண்டும் அரசியலில் சர்ச்சை கிளம்பி உள்ளது.

சமயம் 4 Jan 2026 3:19 pm

பொங்கல் பரிசுத் தொகை ரூ.3,000… திமுக அரசின் தோல்வி பயம்- 50 நாளில் மாறப் போகும் தமிழகம்- அன்புமணி!

திமுக அரசு சற்றுமுன்பு பொங்கல் பரிசுத் தொகை 3000 ரூபாய் அறிவித்துள்ளது பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது மோசடி வேலை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

சமயம் 4 Jan 2026 3:11 pm

Rajini: ``குருஷேத்திர யுத்தத்தில் வரும் கண்ணன் மாதிரி ஏவி.எம் சரவணன் சார் - நெகிழும் ரஜினிகாந்த்

ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து ஏவி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஏவி.எம்.சரவணன் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். படத்திறப்பு நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏவி.எம்.சரவணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன் இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், ``1975ல் ஏவிஎம் ஸ்டுடியோவில் 'அவர்கள்' பட சூட்டிங். அப்போதுதான் கமல்சார் எனக்கு இவர்தான் ஏவி.எம் சரவணன் சார் எனக் காண்பித்தார். அதற்குப் பிறகு, 8 வருடம் கழித்து ஏ.வி.எம் 1980-ல் முரட்டுக்காளை படம் தயாரித்தது. அந்தப் படத்தில் ஏவி.எம் செட்டியார் ஆலோசனையில் என்னை ஹீரோவாகத் தேர்வு செய்தார்கள். அப்போதுதான் சரவணன் சாரை நேரில் முதன்முதலாகச் சந்தித்தேன். நான் ஏ.வி.எம்-ல் 11 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் எஸ்.பி. முத்துராமன் சாருடன் ஒன்பது படங்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் கதையையும் நாம் கேட்க வேண்டியதே இல்லை. எல்லாமே அவரே ரெடி பண்ணி எந்த ஆர்டிஸ்ட்க்கு என்ன மாதிரி படம் பண்ணனும், எந்த மாதிரி கதைத் தேர்வு செய்யணும், ரசிகர்கள் என்ன விரும்புறாங்க, ஒரு படம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என ஆய்வு செய்து ஸ்கிரீன் பிளே, மியூசிக், எடிட்டிங் என எல்லாவற்றிலும் அவரின் கை இருக்கும். ஆனால் அது யாருக்கும் தெரியாது. AVM சரவணன்: `6.20-க்கு ‘மகாபாரதம்’ சீரியல் போடுவாங்க; அதுவரை பேசிட்டு இருப்பார்!’ - V.C.குகநாதன் நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன் எப்படி கண்ணன் மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்திலேயே இருந்து வென்றாரோ அப்படி, அலுவலகத்தில் இருந்துகொண்டே எல்லா படத்தையும் வெற்றியடைய வைப்பவர்தான் சரவணன் சார். எஜமான், நல்லவனுக்கு நல்லவன் போல செண்டிமெண்டான ஒரு படம் எடுக்க வேண்டும் என சரவணன் சார் சொல்லிக்கொண்டிருந்தார். இதே மாதிரி ஒரு சென்டிமென்ட் படக்கதை உதயகுமாரிடம் இருக்கிறது. நல்ல டைரக்டர் என அறிமுகம் செய்துவைத்தேன். அப்போது சரவணன் சார், `அது எப்படி எஸ்பி முத்துராமனுடன் இத்தனை படம் எடுத்திருக்கிறோம். அவரை விட்டு படம் பண்ண முடியாது' என்றார். நான் அமைதியாகிவிட்டேன். அதற்கு அடுத்தநாள், முத்துராம் சார் என்னை அழைத்து, `சரவணன் சார் கூட இருக்கேன். இங்கே வரமுடியுமா? என்றார். நானும் ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குச் சென்றேன். அப்போது முத்துராமன் சார், `நான் சரவணன் சாரிடம் பேசிவிட்டேன். நீ உதயகுமாரின் படத்தில் நடி' என்றார். ஏவிஎம் சரவணனுடன் நடிகர் ரஜினி - இயக்குநர் முத்துராமன் அப்போதும் சரவணன் சார், `முத்துராமன் சார் நீங்க சொல்றீங்க அதுக்காக நான் பண்றேன். எனக்கு இந்தப் படம் நீங்க இல்லாமல் செய்வதற்கு மனதே இல்லை. எனவே, ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு ரூம் போட்டு கொடுக்கறேன். தினமும் வந்து நீங்க என் கண் முன்னால் இருக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி' என்றார். அப்போதுமுதல் இப்போதுவரை ஏவிஎம் ஸ்டுடியோவில் அந்த ரூம் இருக்கிறது. அதுதான் அவர்களின் நட்புக்கு இலக்கணம். AVM Saravanan: ``ஏவி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி நான் - கமல் இரங்கல் சரவணன் சார் எனக்கு சினிமா மட்டும் இல்லாமல், தனிப்பட்ட முறையில எவ்வளவோ செய்திருக்கிறார். ராகவேந்திர மண்டபம் இருக்கும் இடம் காலி நிலம். அதில் மண்டபம் கட்டச் சொல்லி, உடன் இருந்து, அவர் கண் பார்வையில் கட்டியவர் சரவணன் சார். அதேபோல என் வீட்டருகில் ஒரு காலி நிலம் இருந்தது. அதை வாங்கலாம் என முயன்றபோது 10 -15 மடங்கு விலை சொன்னார்கள். அதனால் நான் வாங்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன். ஆனால் சரவணன் சார், `எவ்வளவு விலை இருந்தாலும் நீயே வாங்கிவிடு. வேறு யாராவது வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தால் அப்போது நீ வருத்தப்படுவாய்' என்றார். இதுபோல நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஏவிஎம் சரவணனுடன் நடிகர் ரஜினி - இயக்குநர் முத்துராமன் சிவாஜி படம் நடித்தபோது சரவணன் சார் என்னிடம் சொன்னார், ` 3 வருடத்துக்கு ஒரு படம்,  2 வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கிறாய். வயது ஆக ஆக தொடர்ந்து ஆக்டிவாக இருக்க வேண்டும். எனவே, குறைந்தது ஒரு வருடத்துக்கு ஒரு படம் என்றாவது நடி' என்றார். அவரின் அந்த வார்த்தையைதான் நான் இன்றும் வருடத்துக்கு ஒரு படம் என நடித்து வருகிறேன். அரசியல் சாராத சரவணன் சார் மீது எல்லா அரசியல் தலைவர்களுக்கும் நல்ல மரியாதை இருந்தது. முதல்வர் ஸ்டாலின் இந்தத் தேர்தல் சூழலிலும் தன் பணிகளை விட்டுவிட்டு இங்கு வந்து சரவணன் சாருக்கு அஞ்சலி செலுத்துகிறார் என்றால் அதற்குக் காரணம் சரவணன் சார் மீது இருக்கும் மரியாதைதான். நம் வாழ்க்கையில் வந்து, நம்மை விரும்பும் சிலர் இருப்பாங்க அவர்கள்தான் நம் அசைய சொத்து. அப்படி எனக்கு கே.பாலசந்திரன், சோ, பஞ்சு அருணாச்சலம், முத்துராமன், சரவணன், டாக்டர் கலைஞர் இவர்களெல்லாம் என் அசையா சொத்துகள் என்றார். HBD Rajini: `ரஜினி பாதுகாக்கும் அந்த கடிதம் டு '16 வயதினிலே' சம்பளம்.!’ - 75 சுவாரஸ்ய தகவல்கள்!

விகடன் 4 Jan 2026 2:49 pm

புத்தாண்டுத் தீர்மானம் –நிலாந்தன்!

ஒரு புதிய ஆண்டு எப்படி அமையக்கூடும் என்பது கடந்த ஆண்டில் கிடைத்தவை, கிடைக்காதவை என்பவற்றின் விளைவுதான்.இருப்பவற்றில் இருந்துதான் அரசியல்… The post புத்தாண்டுத் தீர்மானம் – நிலாந்தன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 2:38 pm

அசுத்தமான குடிநீரை குடித்த விபரீதம்; 10 பேர் பலி – 200 பேர் பாதிப்பு

மாசடைந்த குடிநீரை பருகியதால் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் மாசுபாடு மத்தியப் பிரதேசம் இந்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பாகீரத்புரா பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்படும் நீரைப் பருகி 1400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்தனர். நர்மதா ஆற்றங்கரையிலிருந்து குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை பருகியவர்களுக்கே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 […]

அதிரடி 4 Jan 2026 2:30 pm

BB TAMIL 9 DAY 90: பம்மிய பாரு; பாரு - கம்ருதீன் வீழ்ச்சி தரும் பாடம்; 90வது நாளில் நடந்தது என்ன?

மெயின் டோர் திறக்கிறது. பாரு தன்னந்தனியாக அதை நோக்கி நடக்கிறார். யாரும் அவரைக் கட்டியணைத்து வழியனுப்ப வரவில்லை. யாரும் கண்ணீர் சிந்தவில்லை. பிக் பாஸின் குரல் கேட்கவில்லை. பயண வீடியோ இல்லை. முறையான வழியனுப்புதல் இல்லை. ரெட் கார்டு வாங்கியவர்களுக்குச் சம்பளமும் கிடைக்காது என்கிறார்கள்.  யாராவது ஏதாவது சொல்வார்களா என்கிற தவிப்புடன் பாரு நிற்கிறார். ‘அது நடக்காது’ என்பது புரிந்தவுடன் திரும்பி கதவை நோக்கி துயரத்துடன் நடக்கிறார். பரிதாபம்.  ‘டைட்டில் வின்னர்’ என்று சொல்லப்பட்டவருக்கு என்ன ஒரு வீழ்ச்சி?! முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் வன்மமும் புறணியும் ஆபாச வசையும் அப்போதைக்கு போதைக்கான இன்பத்தைத் தரலாம். ஏன், சின்னச் சின்ன வெற்றிகளைக்கூட தரலாம். ஆனால் இறுதியில் ஒரே நொடியில் அதள பாதாளத்திற்கு நம்மை தள்ளி விடும் என்பதற்கான உதாரணம் பாருவும் கம்ருதீனும்.  BB TAMIL 9 DAY 90 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 90 வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம். சபரி, வினோத், திவ்யா என்று பலரும் பாரு - கம்ருதீன் அட்ராசிட்டி பற்றி வெகுண்டு கத்துகிறார்கள். ஆனால் பாரு அலட்டிக் கொள்ளவில்லை. ‘என்ன பண்ணிட்டேன் இப்போ?’ என்று அலட்சியமாகப் பேசுகிறார்.  “நீங்க யாரும் கார்ல இருந்து இறங்காதீங்க.. இவங்க ஜெயிக்கக்கூடாது” என்று மற்றவர்களை நோக்கி சபரி கத்துகிறார். கடைசியில் அதுதான் நடந்தது. பாருவும் கம்ருதீனும் தூங்கி ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்களா? இதற்காகவா இத்தனை அலப்பறை?! பொதுவாக தன் மீதான வசைகளுக்குக் கூட பொறுமையாக நிற்கும் விக்ரம், கோபத்தின் உச்சத்தில் கத்துகிறார். ‘வாடா.. ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாம்’ என்று மல்லுக்கு நிற்கிறார் கம்ருதீன். சான்ட்ரா செய்வது நடிப்பாகவே இருந்தாலும் ‘அவருக்கு ஒருவேளை உண்மையாக ஏதாவது ஆகியிருந்தால்?’ என்கிற வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இருவரிடமும் இல்லை.  கார் டாஸ்க்கில் பாரு - கம்மு தொடர்ந்து செய்த அட்ராசிட்டி சான்ட்ராவைத்தான் தனிப்பட்ட கோபத்தில் தள்ளி விட்டார்கள் என்று பார்த்தால் திவ்யாவின் தலை மீது கால் படுமாறு அட்ராசிட்டி செய்கிறார் பாரு. எனில் இவர்கள் மற்றவர்களை வெறுப்பேற்றி வெளியேறுவதைத் திட்டமிட்டு செய்கிறார்கள் என்று புரிகிறது. “இவங்க தெரியாம பண்றாங்கன்னா நெனக்கற?” என்று சபரி சொல்வதும் இதைத்தான். “உங்க அம்மா சொல்லியே திருந்தலை.. நான் சொன்னாவா திருந்த போறே?” என்று பாருவைச் சரியாக கேள்வி கேட்கிறார் திவ்யா.  சிகிச்சை முடிந்து சான்ட்ரா திரும்புகிறார். நடுக்கத்துடன் அவர் வீட்டிற்குள் வர, “வாங்க பயப்படாதீங்க.. எங்க அக்கா, தங்கச்சிக்கு இப்படி நடந்தா விட்டுறுவமா?” என்று அரவணைத்து செல்கிறார் சபரி. இத்தனை நாட்கள் போயிருந்த இமேஜை எல்லாம் இந்த ஒரே சம்பவத்தில் சபரி ஈடுகட்டி விடுவார் போலிருக்கிறது. டாஸ்க் போனால் போகட்டும் என்று காரில் இருந்து இறங்கியது முதல் கம்ருதீனைத் துணிச்சலாக எதிர்த்தது வரை ஒரு ஹீரோவாக கண்ணுக்குத் தெரிகிறார்.  BB TAMIL 9 DAY 90 “வினோத் டாஸ்க் ஆட மாட்டார்ன்னு சொல்றாங்க. இந்த டாஸ்க்லதான் எனக்குச் சௌரியமா உட்கார இடம் கிடைச்சது. அதையும் கெடுத்தானுங்கடா” என்று வினோத் காமெடியாகச் சொல்ல சான்ட்ரா சிரிக்கிறார். எனில் அவர் நார்மலுக்கு வந்து விட்டார் என்பது புரிகிறது. “வாட்டர்மெலன் விட்ட சாபம்” என்று விக்ரம் சொல்ல, டிவியில் சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியே புன்னகைத்து விடுகிறார்.  வெளுத்து வாங்கிய திவ்யா - பம்மி அமர்ந்திருந்த பாரு அத்தனையும் செய்து விட்டு, “நாம யாரையாவது தரம் தாழ்த்தி பேசியிருக்கோமா?” என்று பாரு கம்ருதீனிடம் சொல்ல “பதிவு பண்றாங்களாமாம்” என்று சொல்லி விசே சிரிக்கிறார். உள்ளே வரும் கம்ருதீனைப் பார்த்து, பூச்சாண்டியைக் கண்ட குழந்தை மாதிரி சான்ட்ரா அலறி படுக்கையின் அடியில் ஒளிகிறார். ஹாரர் படத்தின் காட்சி மாதிரி இருக்கிறது. (சான்ட்ரா செய்வது கொஞ்சம் ஓவரோ?!) கம்ருதின் சென்ற பிறகு காரில் தனியாக மாட்டிக் கொண்ட பாருவை திவ்யா வெளுத்து வாங்குகிறார். ஆனால் பாருவிடம் பலவீனமான எதிர்ப்பு மட்டுமே வருகிறது. கும்பலாக இருக்கும் போது குற்றம் செய்யும் துணிச்சல் தன்னால் வந்து விடுகிறது என்பதற்கான உதாரணம்.  அதுவரை அமைதியாக இருந்த சுபிக்ஷா மற்றும் அரோரா கூட கோபத்துடன் பாரு மீது பாய்கிறார்கள். கூட்டத்தில் யாராவது ஒருவர் துணிச்சலாக எழும் போது மற்றவர்களும் இணைகிறார்கள் என்பதற்கான உதாரணம்.  “ஏன் சான்ட்ராவைத் தள்ளி விட்டே.. இது ஸ்ட்ராட்டஜியா என்னது..?” என்று திவ்யா ஆவேசத்துடன் கேட்க “வீக்கெண்ட்ல பதில் சொல்லிக்கறேன்” என்கிறார் பார்வதி. அதாவது உனக்கு பதில் சொல்ல அவசியமில்லை என்று ஒரு பொருள். BB TAMIL 9 DAY 90 வார இறுதியில் வாய் சாமர்த்தியத்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று இன்னொரு பொருள். தன் நெகட்டிவிட்டியால்தான் இத்தனை வாரம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற துணிச்சல் பார்வதிக்குள் வந்திருக்கலாம்.  பாரு தூங்கி தோல்வியைச் சந்திக்கும்போது பார்வையாளர்களின் மகிழ்ச்சியான கூக்குரல்கள் கேட்கின்றன. இறுதியில் அரோரா விட்டுத் தர சுபிக்ஷா கார் டாஸ்க்கில் வெற்றியடைகிறார். ‘சாதிச்சிட்டீங்க” என்று வி்க்ரமும் சபரியும் பாராட்டுகிறார்கள். இந்த டாஸ்க்கில் தோற்றாலும் அரோராதான் டிக்கெட்டைப் பெறுவார் என்பது மாதிரியான நிலைமை.  சான்ட்ராவின் பயக்கூச்சல் - உண்மையா, நாடகமா? மறுநாள் காலை. பாருவிற்குள் அச்சமும் குற்றவுணர்வும் எழுந்திருக்க வேண்டும். “இந்த வாரம் என்னைத் துரத்தினா ஏத்துக்கறேன்” என்று முனகுகிறார். வேக் அப் பாடலின் போது இறங்கி குத்தி ஆவேசமாக ஆடுகிறார். இதுதான் கடைசி ஆட்டம் என்பது அவருக்கே தெரிந்து விட்டதோ, என்னமோ. ‘உன் பொண்டாட்டி நான் இல்லடா’ என்று பாடல் ஒலிக்கும் போது வினோத்தை நோக்கி குறும்பாக கை காட்டுகிறார் அரோ.  பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குக்கூட அச்சப்படுகிற சான்ட்ராவை, ‘நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார் அரோ. எல்கேஜி குழந்தை போன்று நடுக்கத்துடன் வருகிறார் சான்ட்ரா. அது உண்மையான மனப்பதட்டமா அல்லது அனுதாப நோக்கிலான நடிப்பா என்பது அவருக்கே வெளிச்சம்.  “நான் ஒண்ணும் வில்லன் கிடையாது. சான்ட்ராதான் என்னை டிரிக்கர் பண்ணாங்க. காமருதீன்னு சொன்னாங்க” என்று இன்னமும் தன்னை நியாயப்படுத்துகிற கம்மு, அதற்காக விக்ரமை அடிக்கவும் துணிகிறார்.  “எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனா அடிடா பார்க்கலாம்” என்று மல்லுக்கட்டுகிறார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 90 பாருவும் கம்முவும் சரண்டர் ஆகி விடும் மனநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கம்மு சொன்ன விளக்கம் காமெடியாக இருந்தது. “நான் உதைக்கல. காலால புஷ் பண்ணேன்”...  இவற்றையெல்லாம் டிவியில் பார்த்த விசே “என்னால முடியல.. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” என்று சிரித்தபடி நகர்கிறார். விசே உள்ளே வருவதற்கு முன்னால் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலுக்கு பாருவும் கம்முவும் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி நடனம் ஆடுகிறார்கள். சானல் காப்பாற்றி விடும் என்கிற நம்பிக்கை. ஆனால் பாருவை மதுரைக்கே அனுப்பி வைத்து விட்டார்கள்.  “நீங்க ஏன் தட்டிக் கேட்கலை?” - விக்டிமை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறாரா விசே? விசே உள்ளே வந்தவுடன், மற்றவர்களிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்தார்.. “ஏன் பொறுத்துப் போனீங்க.. ஏன் எதிர்க்கலை.? என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் வேலை மாதிரி ஒன்று செய்தார். பிறகு பாரு கம்முவை விசாரித்தார். அவர்கள் ஏதோ சப்பைக் கட்டு கட்ட “அதெல்லாம் செல்லாது”என்று இரண்டு ரெட் கார்டுகளை தூக்கிக் காட்டினார். பார்வையாளர்களின் உற்சாகக் கூச்சல். அறத்தை நிலைநாட்டிய தோரணையோடு விசே நிகழ்ச்சியை முடித்தார். பாருவும் கம்முவும் சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை.  BB TAMIL 9 DAY 90 இது தொடர்பாக சில விஷயங்களை விரிவாக பார்த்து விடுவோம்.  ‘’பாரு, சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபார்மட்டிற்குள்தான் வரும். வேறு ஷோக்களில் அவ்வாறு நடந்திருக்கிறது. எனவே இதில் தவறில்லை’...  என்று சமூகவலைத்தளங்களில் சிலர் நியாயம் கற்பிக்கிறார்கள். அது பாருவின் PR டீம் என்பதைத் தாண்டி, பாருவின் பக்தர்கள் சிலர் சொன்னதாகவே வைத்துக் கொள்வோம்.  எந்தவொரு பிஸிக்கல் டாஸ்க்கிலும் இவ்வாறான தள்ளுமுள்ளு நடப்பது வழக்கம்தான். ஆனால் அது முடிந்த பிறகு ‘ஸாரிடா மச்சான்’ என்று இரு தரப்பும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால் பாரு மற்றும் கம்ருதீனின் கார் டாஸ்க் செய்கைக்குப் பின்னால் நிறைய bullying இருந்தது. பழிவாங்கல் உணர்ச்சி இருந்தது. சான்ட்ராவை டிரிக்கர் செய்ய வேண்டும் என்கிற அஜெண்டா இருந்தது.  கார் டாஸ்க்கில் மட்டுமல்ல, சக போட்டியாளர்களின் மீது பாருவும் கம்ருதினும் தொடர்ச்சியாக abuse செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்துதான் ‘சான்ட்ரா தள்ளி விடப்பட்ட’ சம்பவத்தை பார்க்க வேண்டும். அந்த ஒட்டுமொத்த கோபமும் இணைந்துதான் ‘ரெட் கார்ட் தர வேண்டும்’ என்று பெரும்பாலான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது. கூடவே சான்ட்ராவின் அனுதாபமும் இணைந்து கொண்டது.  இந்த ஆட்டத்தை பாருவும் கம்ருதீனும் ஸ்போர்ட்டிவ்வாக ஆடியிருந்தால் இத்தனை பெரிய எதிர்ப்பு வந்திருக்காது. “அவங்களா எமோஷனலி டிரையின் ஆகி போகட்டும்’ என்று திவ்யாவும் அரோவும் சொல்வதுதான் சரியானது.  BB TAMIL 9 DAY 90 கம்முவின் எவிக்ஷனுக்கு பாரு மட்டும்தான் காரணமா? பாரு மனச்சோர்விற்கு ஆளாகியிருக்கும் போதெல்லாம் சான்ட்ரா உடன் நின்றிருக்கிறார். அது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும் பரவாயில்லை. பாருவிற்கு அந்த நன்றியுணர்ச்சி சிறிது கூட இல்லை. மறுபடியும் கம்முவுடன் இணைந்த உற்சாகத்தில் நிறைய அவதூறுகளை வீசிக் கொண்டேயிருந்தார். இதுவும் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கும்.  அடுத்ததாக “பாரு கூட சேர்ந்துதான் கம்ருதீன் நாசமாகப் போனார். தனியாக விளையாடினால் உருப்பட்டிருப்பார். அவருடைய எவிக்ஷனுக்கு பாருதான் காரணம்.. இனிமே அவ கூட சேராத” என்பது சக போட்டியாளர்களின் வலுவான கருத்தாக இருந்தது.  இப்படி எல்லா கேஸையும் பாரு மீது மட்டும் எழுதி விட்டு கம்ருதீனை ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’ மாதிரி சித்தரிக்கக்கூடாது. அவர் பாருவுடன் விலகியிருந்த போது சற்று மாறியிருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சமயத்திலும் பாருவிடம் மட்டுமல்லாது மற்றவர்களிடமும் கோபத்தைக் காட்டினார். கம்முவின் முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் அவருடைய பெரிய வில்லன். அது இல்லாத சமயத்தில்தான் சாதாரண கம்முவைப் பார்க்க முடிகிறது.  “அவளாலதான் நீ நாசமா போனே.. இல்லைன்னா ஒழுங்கா இருந்திருப்பே” என்று நட்புணர்ச்சியால் வினோத் இப்போது வருந்துவது நெகிழ்ச்சிதான். ஆனால் கம்ருதீன் தவறு செய்யும் போதெல்லாம் ‘நண்பன்’ என்கிற பெயரில் வந்து முட்டு கொடுக்கும் தவறை வினோத்தும் செய்திருக்கிறார். அதற்காக விசேவால் கண்டிக்கப்பட்டும் இருக்கிறார்.  BB TAMIL 9 DAY 90 பாரு + கம்மு = சந்தர்ப்பவாத கூட்டணி இந்த ஷோவிற்காக பாரு, கம்முவைப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆரம்பத்தில் கம்மு மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அரோராவுடன் நெருக்கமாக அவர் பழகத் துவங்கியுடன் இயல்பாக எழுந்த பொறாமை உணர்ச்சி காரணமாக ‘அந்தப் பொம்மை எனக்குத்தான் வேண்டும்’ என்று கைப்பற்ற பாரு பல்வேறு ‘நீலாம்பரித்தனமான’ குட்டிக் கரணங்களை அடித்தார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதுதான் பாருவை வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றது.  பாருவிற்கும் கம்முவிற்கும் பரஸ்பரம் அவரவர்களின் கீழ்மைகள் பற்றி நன்றாகவே தெரியும். என்றாலும் ஷோ கன்டென்ட் காரணமாக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். ஓரளவிற்கு அது காப்பாற்றியது. இறுதியில் கை விட்டு விட்டது.  “பாரு கம்மு செஞ்சது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க ஏன் அதை எதிர்க்கலை. கேட்டது பத்தலை.” என்று மற்றவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறார் விஜய் சேதுபதி. இந்தக் கேள்வியை முன்வைக்க விசேவிற்கோ அல்லது பிக் பாஸிற்கோ தார்மீகமான நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை.   BB TAMIL 9 DAY 90 தவறு நடக்கும் போது மௌனமாக வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ் நீங்களே கவனித்திருக்கலாம். எந்தவொரு உக்கிரமான சண்டையிலும், அடிதடியிலும் பிக் பாஸின் குரல் கேட்கவே கேட்காது. மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். ஏனெனில் இதுதான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். பிறகு வார இறுதியில் விசே என்னும் பிம்பத்தின் வழியாக நியாயம் பேச ஆரம்பிப்பார்கள். அதாவது ‘இவரே பாம் வெப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற வசனம்தான்.  பாருவும் கம்முவும் எத்தனையோ அழிச்சாட்டியங்களைச் செய்யும் போது அவர்களால் மயிலிறகால் தடவி விட்டு, பல விஷயங்களைக் கேட்காமல் இருந்து விட்டு, அதன் மூலம் அவர்களுக்குத் துணிச்சலைத் தந்து விட்டு, இறுதியில் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ரெட் கார்டு தருவதெல்லாம் மோசமான டிராமா. பாருவையும் கம்முவையும் இந்த ஷோ பயன்படுத்திக் கொண்டு துப்பி வெளியே தள்ளி விட்டது என்பதுதான் உண்மை.  ஆனால் பிக் பாஸின் வணிக நோக்கத்தைத் தாண்டி, இந்த  ஷோவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு பார்வையாளர்களுக்கு இருக்கிறது. இதன் போட்டியாளர்கள் வானத்தில் இருந்து குதித்த அயல்கிரகவாசிகள் இல்லை. நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள். இவர்கள் செய்கின்ற கீழ்மைகளை, காமிரா அல்லாமல் நாமும் பல முறை செய்திருப்போம். இந்த நிகழ்ச்சியின் வழியாக நம் மனச்சாட்சி விழித்து இந்தக் கீழ்மைகளைச் செய்யாமல் தவிர்ப்பதுதான், நமக்கு நாமே தந்து கொள்ளும் நேர்மறையான பரிசு.  'போங்கப்பா.. இதுல இருந்து பாடம் கத்துவாக்குவாராம்’ என்று விட்டேற்றியாகச் சென்று அதே கீழ்மைகளைத் தொடர்ந்தால் இழப்பு நமக்குத்தான். இந்தச் சிறிய சுயபரிசீலனை கூட இல்லையென்றால் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது நேர விரயம். அது மட்டுமல்லாமல் நம் மூளையில் நெகட்டிவிட்டி என்னும் விஷத்தையும் கூடுதலாக ஏற்றிக் கொள்கிறோம் என்று பொருள்.  BB TAMIL 9 DAY 90 தவறின் ஆரம்பத்திலேயே ஒன்றிணைந்து கேள்வி கேட்பது நல்லது ஆக.. “நீங்க ஏன் கேக்கலை?” என்று இதர போட்டியாளர்களை விசே கேள்வி கேட்பது அடிப்படையில் தவறானது. கம்மு, பாரு அட்ராசிட்டியின் ஆரம்பத்தில் வேடிக்கை பார்த்தாலும் பிறகு அறச்சீற்றத்தோடு பொங்கினார்கள். அவர்களால் இயன்றதைச் செய்தார்கள்.  ஆனால் விசேவின் குற்றச்சாட்டை சமூகத்திற்கான கேள்வியாக நாம் பொருத்திப் பார்க்கலாம். பொதுவெளிகளில் அக்கம் பக்கத்தில் நிகழும் தவறுகளைத் தட்டிக் கேட்க நம்மில் பலருக்கும் அச்சமாக இருக்கும். அது நம் மீதும் பாய்ந்து விடுமோ என்று பயப்படுவோம்.  ஒருவர் துணிச்சலாக ஆரம்பித்தால் மற்றவர்களும் இணைவார்கள். அப்போதும் மௌனமாக இருப்பவர்களும் இருப்பார்கள். அப்படியல்லாமல் எங்கு தவறு நடந்தாலும், அங்கிருப்பவர்கள் உடனே ஒன்றிணைந்து அதைத் தட்டிக் கேட்காமல் தவறுகளின் சதவீதம் குறையும் என்கிற செய்தியைத்தான் விசே சொல்ல முயன்றார் என்று எடுத்துக் கொள்ளலாம்.  பல கோடி இந்தியர்களை, ஒரு சில பிரிட்டிஷ்காரர்களால் அடக்கி இரண்டு நூற்றாண்டுகளாக ஆள முடிந்தது. பீரங்கியால் அச்சுறுத்தி முடக்க முடிந்தது. காரணம், இந்தியா என்பது அப்போது ஒரு தேசமாக அல்லாமல் பல்வேறு துண்டுகளாக இருந்தது. சாதி, மதம், இனம் என்று பல்வேறு பிரிவுகளாக உடைந்து கிடந்தது. மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து திரண்டால் எந்த எதிரியையும் சமாளிக்கலாம்.  BB TAMIL 9 DAY 90 சான்ட்ரா நல்லவரா, கெட்டவரா.. உண்மையா.. டிராமாவா? இறுதியாக சான்ட்ரா. இந்த டிராமாவின் பெரிய பலனை அடைந்தவர் என்று இவரைத்தான் சொல்ல முடியும். இவர் உண்மையாகவே பதட்டமடைகிறாரா அல்லது அனுதாப நாடகமாடுகிறாரா என்கிற நுட்பமான நாடகத்தை இனம் பிரிக்க முடியவில்லை.  “என்னை மோசமா திட்றாங்க” என்று அழுது புலம்பும் சான்ட்ரா, தன் கணவர் இருந்த சமயங்களில் மற்றவர்களை அலட்சியமாகப் பேசவோ, திட்டவோ தயங்கவே இல்லை. பல சமயங்களில் இவரது கொடூரமான முகம் தெரிந்தது. பிரஜின் சென்ற பிறகு துணையில்லாமல் ‘விக்டிம் கார்டு’ என்கிற டிராமாவை அவ்வப்போது கையில் எடுத்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது.  கார் டாஸ்க்கில் கூட தன்னை abuse செய்த கம்ருதீனை 'துப்புடா பார்க்கலாம்’ என்று துணிச்சலாக எதிர்கொண்டவர். காரில் இருந்து தள்ளப்பட்ட பதட்டத்தில் மயக்கம் அடைந்தது கூட ஓகே. ஆனால் பாரு, கம்ருதீனைக் காணும் போதெல்லாம் பயத்தில் கூச்சல் போடுவது உண்மையா, நாடகமா என்று குழப்பமாக இருக்கிறது. “நான் ஸாரி சொன்னதை விஜய் சேதுபதி நம்பிட்டாரு” என்றெல்லாம் சிரித்து பேசும் சான்ட்ரா இத்தனை அப்பாவியா? சான்ட்ராவிற்கு உண்மையிலேயே இவ்வாறான பதட்டம், மனச்சிக்கல் இருப்பது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பிக் பாஸ் என்பதே அடிப்படையில் மைண்ட் கேம்தான். கடுமையான உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஷோ என்பது சான்ட்ராவிற்கு நன்றாகத் தெரியும். எனில் இதில் பங்கேற்க எப்படி அவர் சம்மதித்தார்? கூட இருந்தவர்களும் எப்படி அனுமதித்தார்கள்? இப்படி தன்னையே எக்ஸ்போஸ் செய்து கொள்ள யாராவது விரும்புவார்களா? BB TAMIL 9 DAY 90 பாரு - கம்முவின் வீழ்ச்சி கற்றுத் தரும் பாடம் சான்ட்ரா போன்ற போட்டியாளர்களை இனி மற்ற போட்டியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? ‘அய்யோ.. இவங்களை ஏதாச்சும் சொன்னா.. அழுவாங்க.. சீன் போடுவாங்க. நாமதான் திட்டு வாங்கணும்” என்று கண்ணாடிப் பாத்திரம் போல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மற்றவர்களைச் சேர்ந்ததா?  ‘இவருக்கு அடிபட்டு விடுமோ?’ என்று டாஸ்க்கில் கூட பார்த்து பார்த்து விளையாட வேண்டுமா? அவ்வாறான அவஸ்தைகளுக்கு ஏன் அவர்கள் பொறுப்பாக வேண்டும்?  பாரு கம்ருதீன் வெளியேற்றத்தின் மூலம் சான்ட்ராவை முன்னே கொண்டு வரும் திட்டமோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.  மறுபடியும் அதேதான். பாரு மற்றும் கம்முவின் கோபதாபங்கள்தான் அவர்களின் கடைசி நேர வீழ்ச்சிக்குக் காரணம். இதில் நமக்கான பாடம் உள்ளது. கீழ்மைகள் தற்காலிக வெற்றியைத் தரலாம். ஆனால் நிரந்தர பள்ளத்தில் தள்ளி விடும்.  BB TAMIL 9 DAY 90 பிரமோவில் இரண்டு ரெட் கார்டுகளை விசே காட்டிய போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், முந்தைய அனுபவங்கள் காரணமாக அதில் டிவிஸ்ட் செய்து பிக் பாஸ் டீம் டிராமா ஆடிவிடுமோ என்கிற அச்சமும் கூடவே ஏற்பட்டது. ஆனால் அது உண்மையானது சந்தோஷம்.  பாரு கம்முவிற்குத் தரப்பட்ட ரெட் கார்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விகடன் 4 Jan 2026 2:30 pm

  தங்கம் கடத்திய குற்றச்சாட்டில்  விமானப் பணிப்பெண் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று (ஜனவரி 4, 2026) அதிகாலை துபாயிலிருந்து வந்த ஒரு… The post தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் விமானப் பணிப்பெண் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 2:09 pm

தையிட்டி விகாரை விவகாரம் - களத்தில் நயினாதீவு விகாராதிபதி ; இன்று யாழ். மாவட்ட செயலரை சந்தித்தார்.

நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட செயலரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார். மேலும் விகாராதிபதி தமது பக்க நிலைப்பாடுகளையும் மாவட்ட செயலரிடம் தெரிவித்தார். தையிட்டி விகாரை தற்போது அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழ விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தனியாருக்கு சொந்தமானவை எனவும் , அவற்றில் தற்போது விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் காணியை தவிர ஏனைய காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்றும் , தற்போதுள்ள தையிட்டி விகாரையை தன்னிடம் பொறுப்பளித்தால், விகாரை அமைந்து 1.2 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களுக்கு தனது பொறுப்பின் கீழ் உள்ள திஸ்ஸ விகாரை காணியில் 1.2 ஏக்கர் காணியை மாற்றீடாக வழங்க தயார் என நயினாதீவு விகாராதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 4 Jan 2026 1:58 pm

தையிட்டி விகாரை விவகாரம் –களத்தில் நயினாதீவு விகாராதிபதி

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் தொடர்பாக நயினாதீவு விகாராதிபதி மற்றும் யாழ். மாவட்டச் செயலர் ஆகியோருக்கு இடையே… The post தையிட்டி விகாரை விவகாரம் – களத்தில் நயினாதீவு விகாராதிபதி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 1:55 pm

 தகுதியற்ற உடல் –  மன ஆரோக்கியம் கொண்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து

பிரித்தானியாவின் வாகன ஓட்டுநர் மற்றும் உரிம முகமை (DVLA), பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சில குறிப்பிட்ட மருத்துவக் காரணங்களுக்காக… The post தகுதியற்ற உடல் – மன ஆரோக்கியம் கொண்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 1:47 pm

யாழில்    கனடா வாசி நிமோனியாவால் உயிாிழப்பு

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த குடும்பத்தலைவர் ஒருவர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் வட்டுக்கோட்டைப்… The post யாழில் கனடா வாசி நிமோனியாவால் உயிாிழப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Jan 2026 1:35 pm

பிரேசிலை உலுக்கிய கோர விபத்து ; 11 பேர் பரிதாப பலி

பிரேசிலில் லொறி மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசிலின் தெற்குப் பகுதியில், ரியோ கிராண்டேவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பஸ் நிலை தடுமாறி, அந்த வழியாக எதிரே வந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 17 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர். லொறியில் இருந்த மண் பஸ் மீது கொட்டியதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை […]

அதிரடி 4 Jan 2026 1:30 pm

Nicolas Maduro: `கிடாரிஸ்ட், பேருந்து ஓட்டுநர், வெனிசுலா அதிபர்' - யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதனால் 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது அமெரிக்கா. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான படை வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2020-ம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்ட வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரசும் நேற்று சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். நிக்கோலஸ் மதுரோ நிக்கோலஸ் மதுரோ கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கிறார். தற்போது நிக்கோலஸ் மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடைபெறும் என குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ யார் என்பது குறித்துத் தேடல் அதிகமாகியிருக்கிறது. நிக்கோலஸ் மதுரோ வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் பிறந்தவர் நிக்கோலஸ் மதுரோ. இவர் தன்னை மார்க்சிஸ்ட் என்று கூறிக்கொள்கிறார். மாணவப் பருவத்திலேயே சோசலிச லீக்கில் இணைந்தவர், இளமைப் பருவத்தில் 'எனிமா' என்ற ராக் இசைக்குழுவில் கிட்டார் வாசிப்பதையும், நடனமாடுவதிலும் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டார். அதற்குப் பிறகு பேருந்து ஓட்டுநராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தொழிற்சங்கத் தலைவரானார். அதுவே அவருக்கு அரசியலுக்குள் நுழைய வழிவகுத்தது. வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு ட்ரம்ப் - நிக்கோலஸ் மதுரோ பிரபலம் அடைந்து வந்த தொழிற்சங்கத் தலைவராக இருந்தபோது ​​நிக்கோலஸ் மதுரோ இளம் வழக்கறிஞரும், 1992 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி வழக்கில் ஹியூகோ சாவேஸின் சட்டப் பாதுகாவலர்களில் ஒருவராக இருந்த சிலியா ஃபுளோரஸ் என்பவரை சிறையில் சந்தித்தார். அரசியல் நுழைவு அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஹியூகோ சாவேஸால் தொடங்கப்பட்ட சோசலிச-மக்கள் நலவாத அரசியல் சித்தாந்தமான சாவேசிசத்தை பின்பற்றத் தொடங்கினார். 1999-ல் சாவேஸ் அதிபரானபோது, நிக்கோலஸ் மதுரோ, சட்டமன்றத்தில் நுழைந்து அரசியல் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். அவரின் கடின உழைப்பு, தெளிவான சிந்தனை போன்ற குணங்களால் அடுத்தடுத்த பதவிகள் தேடிவந்தன. சபாநாயகராகப் பணியாற்றிய நிக்கோலஸ் மதுரோ 2006-ல் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதற்குப் பிறகு துணை அதிபரானார். சாவேஸுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு வெனிசுலாவில் வாரிசுப் போட்டி தொடங்கியது. அப்போது நிக்கோலஸ் மதுரோவுக்கு அதிக ஆதரவாளர்கள் இல்லை. நிக்கோலஸ் மதுரோ அதிபர் நிக்கோலஸ் மதுரோ இந்த நிலையில், டிசம்பர் 2012-ல் சிகிச்சைக்காக கியூபா புறப்பட்ட சாவேஸ், ``எனக்கு ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் நிக்கோலஸ் மதுரோவை அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வெனிசுலா வந்த சாவேஸ், 2013-ல் மரணமடைந்தார். சாவேஸ் மரணத்துக்குப் பிறகு வெனிசுலாவின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்யப்பட்டார். சாவேஸின் இந்தத் தேர்வுக்கு, நிக்கோலஸ் மதுரோ கியூபாவுடன் வலுவான உறவைப் பேணியதும், ஃபிடல் மற்றும் ரவுல் காஸ்ட்ரோவுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டதும் முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வெனிசுலா VS ட்ரம்ப்: போதைப்பொருட்களுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்கள் மீதானா பசியா? சர்ச்சைகளும் நெருக்கடிகளும் 2013 முதல் நிக்கோலஸ் மதுரோ போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலும் சர்ச்சைகளால் களங்கப்படுத்தப்பட்டன. வெனிசுலா எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், சர்வதேச அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகளாலும் கூட கேள்விகள் எழுப்பப்பட்டன. வெனிசுலா 2018-ல் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதல் தோல்வியுற்றாலும் பல வீரர்கள் காயமடைந்தனர். 2018-ல் மீண்டும் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதை 10-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அதனால் பல தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால், அத்தனைத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். நீதித்துறை, சட்டமன்றம், ராணுவம் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது அதீத கட்டுப்பாட்டை வைத்திருந்தார் என அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. சர்வதேச உறவு பலம்! நிக்கோலஸ் மதுரோவின் சீனா, ரஷ்யா உள்ளிட்ட பிற சர்வதேச சக்திகளுடனான நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் வெனிசுலா அரசுக்கு அடிக்கடி உதவின. இந்த உறவுகளால்தான் அந்த நாடு பல இன்னல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து இயங்குகிறது. அதே நேரம் தன் அரசியல் கொள்கையான சாவேஸின் அமெரிக்க எதிர்ப்பு கோட்பாடுகளைத் தீவிரமாகப் பரப்புரை செய்துவந்தார். தன்னைக் கொல்ல அமெரிக்கா சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார். ட்ரம்ப் அமெரிக்காவும் நிகோலஸும்! இந்த நிலையில் கடந்த ஜனவரியிலிருந்துதான் அமெரிக்கா வெனிசுலா மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக வெனிசுலா மக்களை அமெரிக்காவிற்குக் குடியேற்றியதாக நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். ஜூலை மாதம், அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா அதிபரின் தலைக்கு 50 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்து, அவரை ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என்று குற்றம் சாட்டியது. மேலும் வெனிசுலாவைச் சேர்ந்த இரண்டு குற்றவியல் குழுக்களான ட்ரென் டி அராகுவா, கார்டெல் டி லாஸ் சோல்ஸ் ஆகியவற்றை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்த ட்ரம்ப், கார்டெல் டி லாஸ் குழுவுக்கு நிக்கோலஸ் மதுரோவே தலைமை தாங்குவதாகவும் குற்றம் சாட்டினார். கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் படகுகளையும் அமெரிக்கா தாக்கத் தொடங்கியது. ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலா எண்ணெய்க் கப்பல்களைக் கைப்பற்றியதுடன், தென் அமெரிக்க நாட்டிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் தனது ராணுவ இருப்பையும் உருவாக்கத் தொடங்கியது. வெனிசுலா அமெரிக்கா தப்பிச் செல்ல வாய்ப்பு! நவம்பர் மாத இறுதியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``நிக்கோலஸ் மதுரோ தன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது என அறிவித்தார். வெனிசுலாவில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய நிக்கோல்ஸ் மதுரோ, ``நான் பிறந்த மண்ணை விட்டு எங்கும் செல்லப்போவதில்லை. இங்குதான் இருப்பேன் எனத் தெரிவித்தார். அதன் பிறகு அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. ட்ரம்ப் ராணுவ நடவடிக்கைகளை நிலப்பரப்பிற்கும் விரிவுபடுத்துவதாக எச்சரித்தார். அப்போதே சிஐஏ வெனிசுலா மண்ணில் ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. அதன் உச்சகட்டமாகத்தான் சனிக்கிழமை (ஜனவரி 3) அதிகாலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவியையும் கைது செய்திருக்கிறது. வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: சர்வதேச சட்டமீறல் - ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

விகடன் 4 Jan 2026 1:30 pm

வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: சர்வதேச சட்டமீறல் - ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதனால் 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் படை வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நேற்று அமெரிக்கப் படைகளால் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். நிக்கோலஸ் மதுரோ நிக்கோலஸ் மதுரோ கை விலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கிறார். தற்போது நிகோலஸ் மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன. நிகோலஸ் மதுரோவின் சிறைப்பிடிப்பிற்கு ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மேலும், இந்தத் தாக்குதல் கைது நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ், ``நிகோலஸ் மதுரோ கைது நடவடிக்கையானது, போதை மற்றும் ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டதல்ல. எண்ணெய் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் ட்ரம்ப்தான் வலுவான தலைமை என்பதைக் காட்ட நடத்தப்பட்டது எனக் குறிப்பிட்டிருக்கிறார். நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நேரடியாகப் பேசினேன். இது இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான ஒருதலைப்பட்சத் தாக்குதல் போர் நடவடிக்கை. இந்தச் செயலுக்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்ய நான் அதிபரை அழைத்து அவரிடம் நேரடியாகப் பேசினேன். ஜோஹ்ரான் மம்தானி எனது எதிர்ப்பைப் பதிவு செய்தேன். அதைத் தெளிவாகத் தெரிவித்தேன். அரசு மாற்றத்திற்கான அப்பட்டமான முயற்சி இது. இந்த நடவடிக்கை மத்திய மற்றும் சர்வதேச சட்ட மீறலாகும். இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் உள்ளவர்களை மட்டும் பாதிக்கவில்லை, இது இந்த நகரத்தைத் தங்கள் வீடாகக் கருதும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டினர் உட்பட நியூயார்க் நகர மக்களையும் நேரடியாகப் பாதிக்கிறது. அவர்களின் பாதுகாப்பிலும், ஒவ்வொரு நியூயார்க் நகரவாசியின் பாதுகாப்பிலும்தான் எனது கவனம் உள்ளது. எனது நிர்வாகம் இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி

விகடன் 4 Jan 2026 12:14 pm

தமிழர் பகுதியொன்றில் மாணவர்களுக்கும் போதைப்பொருள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை புறநகர் பகுதியில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் வியாபாரி கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பெரிய நீலாவணை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதலில் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி […]

அதிரடி 4 Jan 2026 12:00 pm

சிறிதரனை பதவி விலக கோருகிறது தமிழ் அரசுக் கட்சி

அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் எனநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பணித்துள்ளது. வவுனியா – குருமன்காட்டில் அமைந்துள்ள ‘தாயகம்’ அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புப் பேரவையில் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு ஆதரவாகத்

புதினப்பலகை 4 Jan 2026 11:51 am

பாடசாலை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணை நடவடிக்கைகள், கடந்த டிசம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான 2025ஆம் கல்வி ஆண்டு […]

அதிரடி 4 Jan 2026 11:43 am

AUS vs ENG 5th Test: ‘மாஸ் காட்டும் இங்கிலாந்து’.. திடீர் கம்பேக்: மீண்டும் திரும்பிய பேஸ் பால் ஆட்டம்!

இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக துவங்கியது. ஆனால், அதன்பிறகு இங்கிலாந்து பேட்டர்கள் ஜோர ரூட் மற்றும் ஹேரி ப்ரூக் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு, அணியை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர்.

சமயம் 4 Jan 2026 11:42 am

யாழில். நிமோனியாவால் கனடா வாசி உயிரிழப்பு

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார் கனடாவில் வசித்து வந்த பரமநாயகம் திவாகர் (வயது 42) அண்மையில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்து வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்துள்ளார். அந்நிலையில் , கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு நிமோனியா காரணம் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

அதிரடி 4 Jan 2026 11:31 am

வங்கதேசம்: தீ வைக்கப்பட்ட ஹிந்து நபா் உயிரிழப்பு

வங்கதேசத்தில் மா்ம கும்பலால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட ஹிந்து சமூகத்தைச் சோ்ந்த தொழிலதிபா் கோகோன் சந்திர தாஸ் (50) சனிக்கிழமை உயிரிழந்தாா். மூன்று நாள்களுக்கு முன் அவா் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதன்மூலம் கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து வங்கதேசத்தில் ஹிந்து சமூகத்தைச் சோ்ந்த 5-ஆவது நபா் கொல்லப்பட்டதாக வங்கதேச பௌத்த கிறிஸ்துவ ஒற்றுமை கவுன்சில் செய்தித் தொடா்பாளா் கஜோல் தேப்நாத் தெரிவித்தாா். இதுகுறித்து தேப்நாத் […]

அதிரடி 4 Jan 2026 11:30 am

பலாலி ஊடாக நேற்று அதிகபட்ச விமானங்கள் பயணம்

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் விமானங்களை கையாண்டு நேற்று புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. நேற்று இண்டிகோ நிறுவனத்தின் இரண்டு அனைத்துலக விமானங்களும், சினமன் எயர் மற்றும் டிபி ஏவியேசன் நிறுவனங்களின், 5 உள்நாட்டு வணிக விமானங்களும் பலாலி விமான நிலையத்தின் ஊடாக பயணங்களை மேற்கொண்டுள்ளன. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்ட

புதினப்பலகை 4 Jan 2026 11:27 am

யாழில். நிமோனியாவால் கனடா வாசி உயிரிழப்பு

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார் கனடாவில் வசித்து வந்த பரமநாயகம் திவாகர் (வயது 42) அண்மையில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்து வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்துள்ளார். அந்நிலையில் , கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு நிமோனியா காரணம் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

பதிவு 4 Jan 2026 11:01 am

வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்கா.. யார் இந்த நிக்கோலஸ் மதுரோ? பின்னணி இதோ!

ஒரு சாதாரண பேருந்து ஓட்டுநராக தொடங்கிய நிக்கோலஸ் மதுரோ, வெனிசுலாவின் அதிபராக உயர்ந்த பயணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சமயம் 4 Jan 2026 10:57 am

Venezuela: ஒத்திகை முதல் Spy வரை; அதிபர் மதுரோவைச் சிறைப்பிடிக்க அமெரிக்கா எப்படித் திட்டமிட்டது?

வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு. அமெரிக்க நேரப்படி, நேற்று நள்ளிரவில், சிறைப்பிடிப்பு சம்பவம் நடந்துள்ளது. நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி எப்படி சிறைப்பிடிக்கப்பட்டனர் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கைது நடந்தது எப்படி? வெனிசுலாவின் தலைநகரம் கராகஸ். அங்கே உள்ள பலமான பாதுகாப்புகள் கொண்ட டியுனா கோட்டையில் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் உறங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு அப்போது டியுனா கோட்டையில் நுழைந்த அமெரிக்க ராணுவப்படை மதுரோ மற்றும் அவரது மனைவியை பெட் ரூமிலேயே சிறைப்பிடித்து உள்ளனர். மிகுந்த ராணுவ பாதுகாப்பு உள்ள டியுனா கோட்டையில் அமெரிக்க ராணுவம் நுழைந்தது. அதிபரையும், அவரது மனைவியையும் கைது செய்தது என அனைத்தும் அரை மணிநேரத்திற்குள் நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தகவலை CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உறுதி செய்த ட்ரம்ப் Fox News செய்தி நிறுவனத்தின் தொலைபேசி நேர்காணலில், இந்த விஷயத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்புமே கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப், மதுரோவைச் சிறைப்பிடிக்கும்போது, அவர் ஒரு கோட்டையில் இருந்தார். இந்த ஆபரேஷனில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். இரண்டு பேர் காயமடைந்தனர். ஆனால், அவர்களுமே இப்போது நன்றாக இருக்கின்றனர் என்று பேசியுள்ளார். ட்ரம்ப் OP Sindoor: நான்தான் நிறுத்தினேன் - ட்ரம்ப்புடன் மோதும் சீனா; பாகிஸ்தானுக்கு ப்ளஸ்; இந்தியாவுக்கு? பக்கா பிளான் தற்போது வெளியாகி வரும் தகவலின்படி, வெனிசுலா மீதான தாக்குதலோ, அதிபர் சிறைப்பிடிப்போ சட்டென நடந்த விஷயம் அல்ல. அனைத்தும் பக்காவாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் சிறிய குழு ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே வெனிசுலாவில் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் மதுரோவின் தினசரி நடவடிக்கைகளைத் தொடர்ந்து ரிப்போர்ட் செய்து வந்திருக்கிறது. அடுத்ததாக, மதுரோவின் டியுனா கோட்டை போன்ற செட் ஒன்றை அமைத்து, அவரைக் கைது செய்வதற்கான ஒத்திகைகளைப் பார்த்திருக்கிறது அமெரிக்க ராணுவப்படை. மதுரோவிற்கு மிக நெருக்கமான நபர் ஒருவர் அமெரிக்காவின் ஆளாம். அவர்தான் ஆபரேஷனின் போது, மதுரோ சரியாக எங்கிருக்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறார். நான்கு நாள்களுக்கு முன்பே ஒப்புதல் ட்ரம்ப் நான்கு நாள்களுக்கு முன்பே, இந்த ஆபரேஷனுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார். ஆனால், வெனிசுலாவில் காலநிலை சரியில்லாததால், ஆபரேஷன் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள மார்-எ-லாகோ கிளப்பில் இருந்துகொண்டே, மதுரோ சிறைப்பிடிப்பை ட்ரம்ப் லைவ்வாக பார்த்திருக்கிறார். டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguez உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்! மதுரோ முதலில் தப்பிக்கத்தான் முயன்றிருக்கிறார். ஆனால், அந்த ரூம் மூடப்பட்டிருந்ததால், அவரால் வெளியேற முடியவில்லை. தற்போது வெனிசுலாவின் இடைக்கால அதிபராக அந்த நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்திருக்கிறது அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம். இப்போது சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ நியூயார்க்கில் இருக்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்க உள்ளது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். TAPS: `கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்' - ஸ்டாலின் அதிரடி | முழு தகவல்

விகடன் 4 Jan 2026 10:47 am

IND vs SA ODI: ‘குட்டி ஹர்திக் பாண்டியா அபாரம்’.. ரன் மழை பொழிந்த இளம் பேட்டர்கள்! ஸ்கோர் விபரம்!

தென்னாப்பிரிக்க யு19 அணிக்கு எதிரான போட்டியில் இந்திய இளம் பேட்டர்கள் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டனர். குறிப்பாக, குட்டி ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். ஸ்கோர் விபரம் குறித்து பார்க்கலாம்.

சமயம் 4 Jan 2026 10:37 am

நேபாளத்தில் புத்தா விமான விபத்து: நல்வாய்ப்பாக 55 பேரும் பாதுகாப்பாக மீட்பு!

நேபாளத்தில் விமான தறையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த 55 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 51 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்களுடன் பத்ராபூர் விமான நிலையத்திற்குப் புறப்பட்ட புத்தா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம், வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக நிறுத்தினார். விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுமார் […]

அதிரடி 4 Jan 2026 10:30 am

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்!

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமயம் 4 Jan 2026 9:31 am

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தை! மூத்த மகனின் கொடூரச் செயல்

குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை, பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் 25 வயதுடைய அவரின் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணை இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மேற்படி இளைஞர், யுவதி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலுக்குத் தந்தை […]

அதிரடி 4 Jan 2026 9:31 am

இனி வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் ; டிரம்ப் அறிவிப்பு

வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க நேரப்படி தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதியின் ‘நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்’ போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். தனது வழிகாட்டலின் கீழ், வெனிசுலா தலைநகரில் இரவு முதல் காலை வரை வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக “அசாதாரணமான இராணுவ நடவடிக்கை” முன்னெடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். பாதுகாப்பான […]

அதிரடி 4 Jan 2026 9:30 am

24 மணிநேரத்திற்குள் நாட்டில் ஐந்து உயிர்களை பறித்த விபத்துக்கள்

கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த பல வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (03) மாரவில, மீகஹதென்ன, நொச்சியாகம, கெஸ்பேவ மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திசேராபுரவிலிருந்து அட்டப்ப சந்தி வரையிலான வீதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி தூண் ஒன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பல விபத்துக்கள்.. […]

அதிரடி 4 Jan 2026 9:27 am

வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை நேற்று கைப்பற்றியது அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு. அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படத்தை தனது ட்ரூத் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதில் மதுரோ கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டிருக்கிறார். அவரை அமெரிக்காவின் USS IWO Jima என்கிற போர்க்கப்பலில் வைத்திருப்பதாகவும் அந்தப் பதிவில் கூறியிருக்கிறார் ட்ரம்ப். வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட்டே அதிபரை சிறைப்பிடித்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது. Nicolas Maduro on board the USS Iwo Jima. pic.twitter.com/omF2UpDJhA — The White House (@WhiteHouse) January 3, 2026 'வெற்றிகரமான தாக்குதல்; அதிபரை வெளியேற்றிவிட்டோம்' - வெனிசுலாவை குறிவைத்த ட்ரம்ப் இனி வெனிசுலாவை யார் ஆட்சி செய்வார்கள்? இந்தச் சம்பவம் குறித்து பேச நேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார் ட்ரம்ப். அப்போது அவர் பேசியதாவது... வெனிசுலாவில் அடுத்து பாதுகாப்பான ஆட்சி மாற்றம் நடக்கும் வரையில், அந்த நாட்டில் அமெரிக்கா ஆட்சி நடத்தும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவிற்குச் சென்று அங்கு உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். வெனிசுலா மீது அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன? வெனிசுலா மிகுந்த எண்ணெய் வளம் உள்ள ஒரு நாடு ஆகும். அங்கே ஒவ்வொரு நாளும் மில்லியன் பேரல் கணக்கான எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ஆனால், 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது அமெரிக்கா. எண்ணெய் மூலம் பெறும் பணத்தை வெனிசுலா போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல் மற்றும் கடத்தல்களுக்குப் பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. நியூயார்க்கில் மதுரோ தற்போது மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன. மதுரோவின் சிறைப்பிடிப்பிற்கு அவரது நட்பு நாடுகளான ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. நிக்கோலஸ் மதுரோ ||Nicolas Maduro OP Sindoor: நான்தான் நிறுத்தினேன் - ட்ரம்ப்புடன் மோதும் சீனா; பாகிஸ்தானுக்கு ப்ளஸ்; இந்தியாவுக்கு? கமலா ஹாரிஸ் எதிர்ப்பு இதைத் தாண்டி, ட்ரம்பின் இந்தச் செய்கைக்கு அமெரிக்காவில் இருந்தே கடும் குரல் ஒன்று கிளம்பியுள்ளது. அது அதிபர் தேர்தலில் இவருடன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய கமலா ஹாரிஸ் உடையது ஆகும். அவர், மதுரோ கொடூர மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சர்வாதிகாரியாகவே இருக்கட்டும். ஆனால், அது ட்ரம்பின் நடவடிக்கையை நியாயப்படுத்தாது. இது அமெரிக்க குடும்பங்களைத்தான் சிக்கலில் தள்ளும். பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தச் செயலை ஆதரிக்கவில்லை. இந்தச் சம்பவம் போதை மற்றும் ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டது அல்ல. எண்ணெய் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் ட்ரம்ப்தான் வலுவான தலைமை என்பதைக் காட்ட நடத்தப்பட்டது ஆகும். ட்ரம்பின் இந்தச் செய்கை அமெரிக்க ராணுவ வீரர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது. அடுத்ததாக, பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் வீணாகி உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மை உருவாகி உள்ளது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Donald Trump’s actions in Venezuela do not make America safer, stronger, or more affordable. That Maduro is a brutal, illegitimate dictator does not change the fact that this action was both unlawful and unwise. We’ve seen this movie before. Wars for regime change or oil that… — Kamala Harris (@KamalaHarris) January 4, 2026 'இனி ஹேப்பி தான்' - Fastag-ல் 'இந்த' சிக்கல் கிடையாது; டோல்களில் சிரமப்பட வேண்டாம்!

விகடன் 4 Jan 2026 9:12 am

இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா: புதுக்கோட்டையில் பாதுக்காப்பு ஏற்பாடு தீவிரம் -பாஜக வியூகம்!

புதுக்கோட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டு உள்ளது.

சமயம் 4 Jan 2026 8:59 am

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு ; பிரித்தானியாவில் தமிழ் மக்கள் வலிமை காட்டிய போராட்டம்

கடந்த டிசம்பர் 21ம் திகதியன்று இடம்பெற்ற தையிட்டி போராட்டத்தின் போது தவதிரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டமானது பிரித்தானியா பிரதமர் அலுவலகத்தின் முன்பாக இன்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது. தாயகத்தில் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தில் கடந்த டிசம்பர் 21ம் திகதி அன்று மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அதனை […]

அதிரடி 4 Jan 2026 8:41 am

வெனிசுவேலா அதிபரை சிறைப்பிடித்த அமெரிக்கா! டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலா நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், வெனிசுவேலா மீது அமெரிக்க படை தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அமெரிக்க வெளியுறவு […]

அதிரடி 4 Jan 2026 8:30 am

சுசீந்திரம் தேர்த்திருவிழா: அமைச்சர் காலதாமதமாக வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம் - தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பக்தர்கள் தரப்பில் சில கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது தேர்வடம் இழுக்கச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆவேசமாகி சில வார்த்தைகளைப் பேசியது சர்ச்சையானது. பா.ஜ.க அமைப்பினர்தான் அப்படி கோஷம் போட்டதாக தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு தாமதமாக வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்துக் கோயில்களிலும் நடைபெறுகின்ற திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், தேரோட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்தும் மக்களின் பங்களிப்பு மூலம்தான் நடைபெற்று வருகின்றன. இது அமைச்சருக்குத் தெரியுமா, அல்லது மறந்து விட்டாரா? சுசீந்திரம் தேரோட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் பத்து நாட்கள் மார்கழி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது. சுவாமிக்குக் குறித்த நேரத்தில் பூஜைகள் நடத்தப்பட்டு தேர்த்திருவிழா தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் காலதாமதமாக வந்ததன் காரணமாகத் தேரோட்ட நிகழ்வு தொடங்குவது காலதாமதமானது. 'சோத்தைத் திங்கிரியா..!' - சுசீந்திரம் தேரோட்டத்தில் டென்ஷனாகிய சேகர் பாபு! - என்ன நடந்தது? இது தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களின் மனதையும் புண்படச்செய்துள்ளது. இந்தக் காலதாமதத்தை அமைச்சர் தவிர்த்து இருக்க வேண்டும். மேலும் திருவிழா காலங்களில் பக்தர்கள் அந்தந்தத் தெய்வங்களை நினைத்துப் பக்திக் கோஷங்கள் போடுவது எல்லா திருக்கோவில்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. அது போன்றுதான் சுசீந்திரத்திலும் தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் காலதாமதமாக வந்த அமைச்சர் பக்தர்கள் எழுப்பிய கோஷத்தைப் பொறுக்க முடியாமல் பக்தர்களைத் தகாத வார்த்தையால் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் சுசீந்திரம் தெப்பக்குளத்தின் ஒரு பகுதியானது இடிந்து விழுந்த நிலையில் இதுவரை சரிசெய்யப்படாமல் இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல குளங்களுக்குத் தூர் வாருவதற்காக நிதிகள் ஒதுக்கியும் இதுவரை வேலை நடைபெறவில்லை. சுசீந்திரம் கோயில் 10 நாள் திருவிழாவிற்கு அரசு மூலம் ஒதுக்கிய தொகை வெறும் இரண்டு லட்சம் ரூபாய்தான். ஆனால் பக்தர்களின் பங்களிப்பு 20 லட்சம் ரூபாய் ஆகும். மக்களின் பங்களிப்பு மூலம் செயல்படுகின்ற ஒரே துறை இந்து சமய அறநிலையத்துறை மட்டும்தான். இதனை அமைச்சர் உணர்ந்து செயல்பட வேண்டும். இந்நிலையில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழாவில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என்றார். சுசீந்திரம்: ஆலயத்தையும், பக்தர்களையும் அவமானப்படுத்திவிட்டார் - சேகர் பாபு மீது காட்டமான பொன்னார்

விகடன் 4 Jan 2026 8:00 am

சென்னையில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்-சிஎம்ஆர்எல் அறிவிப்பு!

சென்னையில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சிஎம்ஆர்எல் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமயம் 4 Jan 2026 7:56 am

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 4 Jan 2026 7:01 am

Doctor Vikatan: சராசரிக்கு முன்பே பூப்படைவது, வயதைத் தாண்டியும் தள்ளிப்போவது; இயற்கை தீர்வு உண்டா?

Doctor Vikatan: இந்தக் காலத்துப் பெண் குழந்தைகளில் சிலர் சராசரி வயதுக்கு முன்பே பூப்படைகிறார்கள். இன்னும் சிலரோ, சராசரி வயதைக் கடந்தும் பூப்பெய்தாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆங்கில மருந்துகள், ஹார்மோன் மருந்துகள் கொடுப்பதுதான் ஒரே தீர்வா... உணவின் மூலமோ, இயற்கையான வழிகளிலோ பிரச்னையைச் சரி செய்ய ஏதேனும் வாய்ப்புகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி பெண் குழந்தைகளின் மாதவிடாய் பிரச்னைகளைச் சமாளிக்க அவர்களுக்குச் சிறு வயது முதல் உணவுப் பழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே வெந்தயமும் உளுந்தும் கொடுத்துப் பழக்க வேண்டும். இவற்றில் உள்ள புரதச்சத்து அவர்களது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. சருமத்தின் அடியிலுள்ள 'சப்கியூட்டேனியஸ்' லேயரில் கொழுப்பு படிவதைக் குறைக்கும். ரத்தச் சர்க்கரை அளவையும் குறைக்கும்.  இரும்புச்சத்தும் கால்சியமும் நிறைந்த வெந்தயத்தை களியாகவோ, பொடியாகவோ கொடுத்துப் பழக்கலாம். கறுப்பு உளுந்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, புரதம் போன்றவை எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். கறுப்பு உளுந்தில் கருப்பட்டி சேர்த்து களியாகவோ, கஞ்சியாகவோ செய்து கொடுக்கலாம். இந்த இரண்டும் சராசரி வயதுக்கு முன்பே மாதவிடாய் வருவதைத் தடுக்கும். எந்நேரமும் மாதவிடாய் வரலாம் என்ற அளவுக்கு உடல் வளர்ச்சி சந்தேகத்தைக் கிளப்பினால், அந்தப் பெண் குழந்தைகளுக்குத் தினமும் பொட்டுக்கடலைக் கொடுக்கலாம். அது மாதவிடாயைத் தள்ளிப்போட உதவும். கறுப்பு எள் Doctor Vikatan: டீன் ஏஜ் பெண்கள் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிப்பது சரியா? சராசரி வயதைத் தாண்டியும் மாதவிடாய் வராத பெண்களுக்கு கறுப்பு எள் ஆகச் சிறந்த மருந்து. இதிலுள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்னும் இரும்புச்சத்தும் ஹார்மோன் குறைபாடுகளைச் சரியாக்கும். கறுப்பு எள்ளை ஊறவைத்த நீரைக் குடிக்கலாம், கறுப்பு எள்ளுடன் வெல்லம் சேர்த்து உருண்டையாகச் சாப்பிடலாம். அதே போல கருஞ்சீரகமும், மாதவிடாய் தாமதமாவதைச் சரியாக்கும். கருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். கருஞ்சீரகத்தைப் பொடித்து வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். துவர்ப்புச் சுவை உள்ள வாழைப்பூவை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். தென்னம்பாளையின் பூ, செம்பருத்திப்பூ போன்றவற்றை ஜூஸாகச் செய்து குடிக்கலாம். இதையெல்லாம் திடீரென செய்யாமல், ஆரம்பத்திலிருந்தே வாழ்வியல் மாற்றமாகப் பின்பற்றினால், பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகும் ஆரோக்கியமாக இருப்பார்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

விகடன் 4 Jan 2026 7:00 am

வெனிசுவேலா மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! அவசரநிலை பிரகடனம்!

வெனிசுவேலா நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். வெனிசுவேலா தலைநகர் கராகஸ் மற்றும் மிரண்டா, அராகுவா, லா குவயிரா ஆகிய மாநிலங்களின் மக்கள் குடியிருப்புகள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகளின் மீது, சனிக்கிழமை (ஜன. 3) காலை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு, அமெரிக்காதான் காரணம் என வெனிசுவேலா அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். […]

அதிரடி 4 Jan 2026 6:20 am

Parasakthi: திருச்சில இருந்து ஒரு தியேட்டர் ஓனர் அழைத்து, உங்க படம் வரணும்னு.! - சுதா கொங்கரா

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். சுதா கொங்கரா பேசுகையில், மணி சார் எனக்கு கத்துக்கொடுத்த முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்னு ஆசைப்படுகிறேன். இது நடக்காது, முடியாது, வராதுனு சொல்றதெல்லாம் நடத்தி காட்டணும்னுதான் என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்துருக்காரு. அதுதான் 'பராசக்தி'. எனக்கு இன்னைக்கு பேச பெருசா எதுவும் இல்ல. 'பராசக்தி' பேசும், படத்த பாத்துட்டு நீங்க பேசுங்க. அதுதான் படத்துக்கு தேவை! Sudha Kongara ஒரு தியேட்டர் ஓனர் திருச்சில இருந்து கூப்பிட்டு உங்க படத்துமேல இருந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சதா?ன்னு கேட்டாரு. அவர்கிட்ட முடிஞ்சதுனு சொன்னேன். அதுக்கு அவர், ‘ஒரு விஷயம் சுயநலமா சொல்றேன் மா. உங்க படம் ரிலீஸ் ஆகணும். அப்போதான் தியேட்டருக்கு மக்கள் வருவாங்க. அப்போதான் எல்லாரும் லாபம் அடைவாங்க. அப்போதான் எங்களுக்கும் நல்லது’னு சொன்னாரு. இந்தப் பொங்கலுக்கு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகுது. இரண்டு படமும் நல்லா ஓடணும். தியேட்டருக்கு மக்கள் நிறைய வரணும். அப்போதான் சினிமா வாழும். எல்லாரும் தியேட்டருக்கு போய் படம் பாருங்க! எனப் கூறினார்.

விகடன் 4 Jan 2026 6:06 am

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள்: பூந்தமல்லி-வடபழனி பிப்ரவரி மாதம் முதல் ரயில்கள் இயக்கப்படும்?

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பூந்தமல்லி-வடபழனி பிப்ரவரி மாதம் முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 4 Jan 2026 6:03 am

Parasakthi Audio Launch: டைட்டில் மாதிரியே படமும் பவர்புல்தான்! - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன் விழாவில் சிவகார்த்திகியன் முதல்ல 'பராசக்தி' பெயரே பவர்ஃபுலான பெயர். அது எப்படி பவர்ஃபுலாக இருக்கோ, அதே மாதிரி படமும் பவர்ஃபுல் தான். உங்க எல்லாரையும் 1960களுக்கு டைம் டிராவல் பண்ணி கூட்டிட்டு போறது தான் இந்த படம். மாணவர்களும், இளைஞர்களும் எப்போதும் பவர்ஃபுல்னு காட்டுற படம்தான் பராசக்தி. இது யாருக்கும் எதிரான படமோ, யாரையோ தப்பா காட்டுற படம் இல்ல. ஆனா இந்த மண்ணுக்காக போராடிய தியாக செம்மல்கள் பற்றின படம். Sivakarthikeyan இதுக்கு மேல படம் பேசும்! அருண் விஷ்வா ப்ரோவுக்கு ஸ்கிரிப்ட் படிக்குறதுக்கு முன்னாடியே போன் பண்ணி ‘இந்த படம் பண்ணுறதுக்கு ஒரே காரணம் சுதா மேடம் தான்’னு சொன்னேன். அவங்களோட எனக்கு பழக்கம் இல்ல. ஆனா, அவங்க எப்படி வொர்க் பண்ணுவாங்கன்னு தெரியும். ஸ்கிரிப்ட் படிச்சு முடிச்சதும் கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. சுதா மேடம் ஷூட்டிங்லையும் இங்கிலீஷ்லதான் எக்ஸ்ப்ளெயின் பண்ணுவாங்க. இங்கிலீஷ்னா சாதாரண இங்கிலீஷ் இல்ல, அது ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ்! நான் கௌதம் மேனன் சார்கூட படம் பண்ணிருந்தா எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருக்கும். அதுனால எனக்கு அவங்க பேசுறது புரியல. இந்த படம் நிச்சயமா வெற்றி பெறும்னு நம்பிக்கை இருக்கு. ஆனா உங்க (சுதா கொங்கரா) உழைப்புக்காக கண்டிப்பா இது ஓடும் மேம். காலேஜ்ல சில டீச்சர்கள் ஸ்ட்ரிக்ட்னு சொல்வாங்க. ஆனா, காலேஜ் முடியும்போது ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. அப்படிதான் இப்ப மேடமும் எனக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப். காலேஜ் படிக்கும்போது ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படம் பார்த்துட்டு, படத்துல ரவி மோகன் சார் போட்டிருந்த காஸ்ட்யூம்ஸ் எல்லாம் தேடித் தேடி போய் வாங்கி போட்டிருக்கோம். ஸ்க்ரீன்ல உங்கள ரொம்ப ரசிச்சிருக்கேன். கூட வொர்க் பண்ணும்போது ரொம்ப ரசிச்சேன் சார். தேங்க் யூ சார்! அதர்வா ப்ரதருடைய கதாபாத்திரத்தைப் பற்றி நான் படிக்கும் போது ‘இந்த கேரக்டர் யாருக்கு கிடைக்குதோ, அவங்க ரொம்ப லக்கி’னு நினைச்சேன். அது அதர்வா ப்ரதருக்கு கிடைச்சது ரொம்ப சந்தோஷம். இந்த இண்டஸ்ட்ரில எனக்கு கொஞ்சம் நண்பர்கள் தான் இருக்காங்க. பராசக்தி டீம் அதர்வா ப்ரதர் எனக்கு ஒரு பிரதர். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஜாலியா ஒரு படம் பண்ணுவோம். இந்த படத்துல உங்க ரோல் எல்லாருக்கும் பிடிக்கும். உங்க அப்பாவ ரொம்ப பெருமைப்படுத்தும்! ஸ்ரீலீலாவோட டான்ஸ் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். அவங்க டான்ஸ் எப்படி பிடிச்சதோ, அதே மாதிரி உங்க ரோல் இந்த படத்துல எல்லாருக்கும் பிடிக்கும். சுதா மேடம் படத்துல எல்லா ஹீரோயின் ரோலும் பவர்ஃபுலாக இருக்கும். ஆல் தி பெஸ்ட் உங்களுக்கும்! எனப் பேசினார்.

விகடன் 4 Jan 2026 5:56 am

2026 ஜல்லிக்கட்டு போட்டி: காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்!

2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தேதிகளை அறிவித்த பிறகு இந்த பனிகள் அனைத்தும் தொடங்கப்பட்டன .

சமயம் 4 Jan 2026 5:47 am

பிராட்வே பேருந்து முனையத்துக்கு மாற்றாக ராயபுரம், தீவத்திடலில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு!

பிராட்வே பேருந்து முனையத்துக்கு மாற்றாக ராயபுரம், தீவத்திடலில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 4 Jan 2026 5:33 am

புத்தாண்டு தின தாக்குதல் திட்டம் முறியடிப்பு ; அமெரிக்க அதிகாரிகள் அறிவிப்பு

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று “ஐஎஸ்ஐஎஸ்” அமைப்பினால் நடத்தப்படவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, 18 வயது இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை (FBI) தெரிவித்தது. இந்தத் தாக்குதல் முயற்சியானது நேரடியாக “ஐஎஸ்ஐஎஸ்” பயங்கரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு திட்டமிடப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. “எமது சிறந்த பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் […]

அதிரடி 4 Jan 2026 3:30 am