SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

TN vs SAUR: ‘காட்டடி அடித்த சாய் சுதர்ஷன்’.. தமிழ்நாடு அணி முரட்டு கம்பேக்! ஜடேஜா அதிரடி வீண்!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூதல் தமிழ்நாடு அணி அதிரடி கம்பேக் கொடுத்துள்ளது.

சமயம் 9 Dec 2025 7:28 am

சென்னை ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா-விரைவில் திறக்க ஏற்பாடு!

சென்னை ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பூங்காவை பொது மக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 9 Dec 2025 7:24 am

பிள்ளைகளை நம்பி எதுக்கு வாழணும்? மதுரைக்காரர்கள் பயன்படுத்தும் '2-வது வருமான'ரகசியம்

எனக்கென்னப்பா... பையன் இருக்கான், பார்த்துப்பான்! மதுரை, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி பக்கம் பேசினாலே, 50 வயதைக் கடந்த பல பெரியவங்க சொல்ற பதில் இதுதான். பாசம் தப்பில்லைங்க. ஆனா, நிதர்சனம் வேற! இன்னைக்கு நம்ம ஊர்ல, ஒரு கல்யாணத்துக்குப் போனா மொய் எழுதுறதுல ஆரம்பிச்சு, பேரப் பசங்களுக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுக்குறது வரைக்கும்... ஒவ்வொரு சின்னச் செலவுக்கும் பிள்ளைகள் கையை எதிர்பார்த்து நிக்கிறது எவ்ளோ பெரிய கஷ்டம்னு அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். வாழ்க்கையோட மிக முக்கியமான கட்டத்துல நிக்கறீங்க. இதுக்கு மேல உடம்பப் போட்டு வருத்திக்கிட்டு ஓட முடியாது. ஆனா, செலவுகள்? அது பாட்டுக்கு ஏறிக்கிட்டேபோகுது! No Savings ஏன் இப்போ இதைப் பத்திப் பேசணும்? விஷயம் சீரியஸ்! 2025-ல வாழ்றோம். ஒரு பக்கம், அத்தியாவசியப் பொருட்களோட விலைவாசி (Inflation) ராக்கெட் வேகத்துல போகுது. இன்னொரு பக்கம், மருத்துவச் செலவு அதைவிட டபுள் வேகத்துல ஏறுது. ஒரு சின்ன கணக்குச் சொல்றேன் கேளுங்க... இன்னைக்கு உங்க கையில 10 லட்சம் இருக்குன்னு வைங்க. அதைச் சும்மா பீரோலையோ, இல்ல குறைவான வட்டி தர்ற சாதாரண சேமிப்பு கணக்குலையோ போட்டீங்கன்னா... அடுத்த 10 வருஷத்துல அதோட மதிப்பு பாதியா குறைஞ்சிடும். ஏன்னா, விலைவாசி உயர்வு அந்தப் பணத்தோட மதிப்பைத் தின்னுடும்! அப்போ என்னதான் பண்றது? ஷேர் மார்க்கெட்ல போடலாமா?னு கேட்டா... வேண்டாம்! 50 வயசுங்கிறது புதுசா ரிஸ்க் எடுத்து விளையாடுற வயசு இல்ல. சரி, விஷயம் தெரிஞ்ச மதுரைக்காரங்க என்ன பண்றாங்க தெரியுமா? (புள்ளிவிவரம் சொல்லும் உண்மை!) நம்ம ஊர் மதுரை ஒண்ணும் சும்மா இல்லைங்க. AMFI (Association of Mutual Funds in India) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, மதுரையில் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமா உயர்ந்திருக்கு. அதுவும் குறிப்பா, 40-60 வயதுடையவர்கள், தங்களின் ஓய்வுகாலத் தேவைக்காக Systematic Withdrawal Plan (SWP) முறையைத் தேர்ந்தெடுப்பது 20% அதிகரிச்சிருக்கு . ஏன் தெரியுமா? பழைய பென்ஷன் திட்டங்கள் குறைஞ்சிட்ட நிலையில், இந்திய மூத்த குடிமக்களில் பலர், இப்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம், பாதுகாப்பான முறையிலேயே மாதம்தோறும் ஒரு நிரந்தர வருமானத்தை (Monthly Income) உருவாக்கமுடியும் என்பதைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க! மொத்த மதுரையும் மாறும்போது, நீங்களும் மாற வேண்டாமா? அப்போ, பாதுகாப்பும் வேணும்... வருமானமும் வேணும்ல? நடுவுல ஒரு வழி இருக்கு! அதுதான் ‘சமச்சீர் முதலீடு’ (Balanced Strategy). உங்க பணத்தை முழுசா முடக்காம, அதே சமயம் பாதுகாப்பா வளர்க்கக்கூடிய வழி. மேலே சொன்ன SWP மற்றும் ஹைபிரிட் ஃபண்ட் திட்டங்கள் மூலம், உங்க வாழ்நாள் சேமிப்பை ஒரு ‘இரண்டாவது சம்பளமா’ (Second Income) மாத்த முடியும். மாசம் பிறந்தா, மணி அடிச்ச மாதிரி உங்க அக்கவுண்ட்டுக்கு பணம் வர வைக்கலாம். பிள்ளைகள் அனுப்புறாங்களோ இல்லையோ... உங்க பணம் உங்களுக்குச் சோறு போடும்! old couple investing மதுரைக்காரங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு! இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வருமா? யாராவது நம்ம பாஷையில, நமக்கு ஏத்த மாதிரிச் சொன்னா நல்லாருக்குமே!னு நினைக்கிறீங்களா? உங்களுக்காகவே ஒரு சூப்பர் வாய்ப்பு காத்துட்டு இருக்கு. நம்ம ஊர் மக்களுக்காக, ‘லாபம்’ (Labham) மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனம் ஒரு முக்கியமான ஆன்லைன் வகுப்பை நடத்துறாங்க. தலைப்பு: 50+ வயதினருக்கான ஓய்வுக்கால திட்டமிடல் (மதுரை மண்டல சிறப்பு அமர்வு) இந்த 90 நிமிஷ வகுப்புல, நீங்க என்ன தெரிஞ்சுக்கலாம்? மதுரையில் பலரும் பயன்படுத்தும் அந்த SWP முறை மூலம் மாதாந்திர வருமானம் பெறுவது எப்படி? மருத்துவச் செலவுக்கும், அவசரத்துக்கும் பணத்தை எப்படிப் பிரிக்கிறது? பண விஷயத்தில், யாரையும் நம்பாம, சுயமரியாதையா வாழ்றது எப்படி? லாபம் வெபினார் யார் பேசப் போறாங்க? வேற யாருமில்லை... ஏ ஆர். குமார். இவரை உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. ‘நாணயம் விகடன்’ முன்னாள் ஆசிரியர். நிதி விஷயங்களை சாமானிய மக்களுக்கும் புரியுற மாதிரிச் சொல்றதுல கில்லாடி. இப்ப ‘லாபம்’ நிறுவனத்தோட Chief of Content-ஆ இருக்கார். கூடவே, செல்வ வினோத் (AVP, Labham). இவரும் நிதித்துறையில அனுபவம் வாய்ந்தவர். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து, எந்தக் குழப்பமும் இல்லாம, எளிய தமிழ்ல உங்களுக்கு வழிகாட்டப் போறாங்க. இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்னாலும் நேரடியா கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். எப்போ நடக்குது? நாள்: டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை) நேரம்: சாயங்காலம் 7:00 மணி (வீட்ல இருந்தபடியே Zoom-ல பார்க்கலாம்!) ஒரு சின்ன வேண்டுகோள்... இன்னும் டைம் இருக்கு... அப்புறம் பார்த்துக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க. 50 வயசுல நீங்க எடுக்குற ஒவ்வொரு முடிவும், உங்க அடுத்த 30 வருஷ வாழ்க்கையைத் தீர்மானிக்கும். இதுல கலந்துகக்க கட்டணம் எதுவும் இல்ல. ஆனா, இடங்கள் குறைவுதான். வெறும் 50 பேருக்கு மட்டும்தான் அனுமதி. ஏன்னா, அப்போதான் ஒவ்வொருத்தருக்கும் சரியா வழிகாட்ட முடியும். சுயமரியாதையா, கெத்தா வாழணும்னு நினைக்கிறவங்க மட்டும் உடனே புக் பண்ணுங்க. இப்போதே முன்பதிவு செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க... (மிஸ் பண்ணிடாதீங்க... இது சும்மா ஒரு மீட்டிங் இல்ல; உங்க வாழ்க்கையை மாத்தப்போற ஒரு மணி நேரம்!) - லாபம் டீம்

விகடன் 9 Dec 2025 7:06 am

Pragathi: அதுல நீதான் நடிக்கணும்'னு பாலா சார் சொன்னாரு! - பின்னணி பாடகி பிரகதி ஷேரிங்ஸ்

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நினைவிருக்கிறதா!? அந்த சீசனை அத்தனை எளிதாக மறக்க முடியாது. ஆஜித், பிரகதி எனத் திறமையாள பாடகர்கள் பலரும் பங்கேற்ற சீசன் அது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு வெகு சீக்கிரமாகவே பிரகதி பின்னணி பாடகியாக உருவெடுத்து விட்டார். Pragathi Interview 'பரதேசி', 'வணக்கம் சென்னை' என அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் பிரகதியை சில ஹாலிவுட் சீரிஸ்களிலும் பார்க்க முடிகிறது. சுயாதீன பாடகர் ஸ்டீபன் செக்கரியாவுடன் இணைந்து தற்போது சுயாதீன பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். அதற்காக வாழ்த்துகள் தெரிவித்து அவரிடம் பேசினோம். நீங்களும் ஸ்டீபன் செக்கரியாவும் இணைந்து பாடியிருக்கும் 'கனா கண்டேன்' சுயாதீன பாடல் வந்திருக்கு. அவர்கூட இரண்டாவது முறையாக இணைஞ்சு வேலை செய்வது பற்றி... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி செய்த பாடல் இது. இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இதுக்கு முன்னாடி 2016-ல வேறொரு சுயாதீன பாடலுக்காக இணைஞ்சிருந்தோம். அந்தப் பாடல் எங்களுடைய கரியருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அந்தப் பாடலோட ரிலீஸுக்குப் பிறகு நாங்க அந்தப் பாடலை இதுவரை ஒரேயொரு மேடையிலதான் அதை பாடியிருக்கேன். இந்தப் பாடலுக்கு வழக்கமான ஸ்வீட் டோன் இல்லாமல் வேறொரு விஷயத்தை எதிர்பார்த்திருக்கார். அப்போதான் இந்தப் பாடலுக்குள்ள நான் வந்தேன். Pragathi Interview கொரோனாவுக்குப் பிறகு சுயாதீன இசைக்கான வரவேற்பு அதிகமாகியிருக்குனு சொல்லலாம். இப்போ, ஒரு சுயாதீன பாடலை செய்து, அதை மக்களுக்குப் பிடிக்க வைக்கிறது எவ்வளவு சவாலான காரியம்? சொல்லப்போனால், புதுசாக எதாவது நம்ம செய்யணும். அதுதான் இருக்கிற ஒரே சவால். இன்னைக்கு தமிழ்ல சுயாதீன கலைஞராக வளர்றதுக்கு ப்ளாட்ஃபார்ம் பெருசாகிடுச்சு. முன்னாடியெல்லாம் நம்முடைய குரல் மட்டும்தான் நம்முடைய அடையாளமாக இருக்கும். ஆனால், இன்னைக்கு அப்படியான சூழல் கிடையாது. இப்போ வைரல்னு சொல்லப்படுகிற விஷயத்துக்குப் பின்னாடி போகாமல் நல்ல ஒரு பாடல் செய்யணும். அதுதான் சவாலான விஷயமாகப் பார்க்கிறேன். இன்றைய தேதியில, அந்த வைரல் விஷயத்தை பின்தொடர்ந்து பாடல் செய்து அதை மக்களுக்கு பிடிக்க வைக்கணும்னு உங்களுக்கு கட்டாயமான சூழல் ஏற்படுதா? இல்லை, எனக்கு அப்படி கிடையாது. சில மாதங்களுக்கு முன்னாடி என்னுடைய சுயாதீன பாடல் வந்தபோது பலரும் 'இப்போ டான்ஸ் நம்பர்தான் ஹிட் ஆகும். ஹூக் ஸ்டெப் வைங்க'னு சொன்னாங்க. ஆனா, நம்முடைய கதைகளை அதன் வழியில இல்லாமல் நேர்த்தியாகச் சொன்னாலே மக்களுக்கு நிச்சயமாக அது பிடிக்கும். மக்களுக்கு வைரல் வடிவத்துல பண்ற பாடல்கள் பிடிச்சிருக்குனு அதை செய்தால் மூணு மாசத்துக்குப் பிறகு அந்தப் பாட்டை யாரும் கேட்க மாட்டாங்க. எனக்கு இப்படியான வைரல் வழியை தேர்வு செய்யலாம்னு தோணுச்சுனா நான் தவறான வழியில போவதாக அர்த்தம். Pragathi - Director Bala இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நீங்க கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வந்ததே! பாடகராக நீங்கள் எங்களுக்கு பரிச்சயம். உங்களுக்குள் நடிகரை அவர் எப்படி கண்டுபிடித்தார்? நிறைய நல்ல திறமையாளர்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்காரு. 'பரதேசி' திரைப்படத்துல நான் மூணு பாடல்கள் பாடியிருந்தேன். அப்போ அவர்கூட க்ளோஸ் ஆகிட்டேன். அவர் எனக்கு காட்ஃபாதர் மாதிரி. ஒரு நாள் அவர் கதை எழுதிட்டு இருக்கும்போது, 'நான் இந்தக் கதையைப் படமாக எடுத்தா, அதுல நீதான் நடிக்கணும்'னு சொன்னாரு. பாலா சார் மாதிரியான இயக்குநர் என்மேல நம்பிக்கை வச்சு இப்படியான வார்த்தைகள் சொல்வது ரொம்ப பெரிய விஷயம். அவர் எனக்குள்ள இருக்கும் நடிகரை எப்படி கண்டுபிடிச்சார்னு தெரியல. அவர் சொன்னதுக்குப் பிறகுதான் நானும் ஆக்டிங் ஸ்கூல் சேர்ந்தேன்.

விகடன் 9 Dec 2025 7:00 am

கார்த்திகை சோமவாரம்: தீபங்களில் ஜொலித்த திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் திருக்கோயில்!

கார்த்திகை சோமவாரம்: தீபங்களில் ஜொலித்த திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் திருக்கோயில்.!

விகடன் 9 Dec 2025 6:46 am

வந்தே மாதரம் பிரச்னை என்ன? மக்களவையில் மோடி - பிரியங்கா இடையே சூடான விவாதம்; பின்னணி என்ன? | Depth

இந்தியாவின் தேசிய பாடலான `வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிசம்பர் 8) சிறப்பு விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, மக்களவையில் தனது உரை மூலம் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். மோடி தனது உரையில், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாடாளுமன்றம் அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் பதிலையுரையாற்றி விவாதம் செய்தனர். வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது பா.ஜ.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன, மக்களவையில் மோடியின் உரை என்ன, அதற்கு காங்கிரஸ் முன்வைத்த எதிர்வாதங்கள் என்ன என்பனவற்றை விரிவாகப் பார்க்கலாம். வந்தே மாதரம்! பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1858-ல் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரான பங்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) என்பவர் 1975-ல் வங்க மொழி மற்றும் சமஸ்கிருதத்தில் வந்தே மாதரம் பாடலை எழுதினார். பாடலில், வங்க நிலம், அதன் மக்கள், சின்னங்கள் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பார். பின்னர் இப்பாடலை, தான் எழுதிய `ஆனந்த மடம்' எனும் நாவலில் சேர்த்தார். இப்பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்திருந்தார். பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1905-ல் பிரிட்டிஷ் அரசின் வங்கப் பிரிவினையின்போது இப்பாடல் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு ஆயுதமாக மாறியது. அதுவே 1900-களில் பிரிட்டிஷாருக்கு எதிராக தேசிய அளவில் உருவெடுத்தது. பின்னர் 1937-ல் காங்கிரஸ் இயக்கமானது காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் கொண்ட குழுவை அமைத்து, பிரிவினையைத் தவிர்க்கும் நோக்கில் வந்தே மாதரம் பாடலுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுத்தது. ஜவஹர்லால் நேரு அப்போது, வந்தே மாதரம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பார்வையில் இருப்பதாக முக்கிய ஆட்சேபனை வந்தது. இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாது சீக்கிய, சமண, பௌத்த அமைப்புகள் என பல தரப்பிலிருந்து இந்த ஆட்சேபனை பிரதானமாக வந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற வலதுசாரி அமைப்புகள் முழு பாடலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. மறுமுனையில் முழு பாடலையும் முஸ்லிம் லீக் எதிர்த்தது. இறுதியில் இதற்கு ஒரு தீர்வாக, வந்தே மாதரத்தில் எந்தவொரு மதம் சார்ந்த பார்வையும் இல்லாத முதல் இரண்டு சரணம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வந்தே மாதரம் மீது பா.ஜ.க-வின் திடீர் அக்கறை! மோடி கடந்த நவம்பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா தொடர்பான நிகழ்ச்சியொன்றைத் தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் மோடி, ``1937-ல் வந்தே மாதரம் பாடலின் சில பகுதிகள், குறிப்பாக அதன் ஆன்மாவின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. வந்தே மாதரம் பிளக்கப்பட்டது. ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது? பிரிவினைக்கான விதைகளை விதைத்தது இதுதான் என்று காங்கிரஸைக் குற்றம்சாட்டினார். யோகி ஆதித்யநாத், மோடி அவரைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நவம்பர் 10-ம் தேதி, இதை இன்னும் பெரிதாக்கும் விதமாகப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார். அதோடு, ``வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் பாரத மாதாவை எதிர்க்கின்றனர். இன்றும் இந்தியாவில் வாழும், உண்ணும் சிலர், வந்தே மாதரம் பாடலை பாடாமல் இருக்கின்றனர் என்று காட்டமாக பேசினார். இதற்கு அப்போதே, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, 10 மணி நேரம் ஒதுக்கி சிறப்பு விவாதத்தைக் கூட்டியிருக்கிறது மோடி 3.0 அரசு. RSS 100: ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் டி.என்.ஏ! - சாதிக்கு எதிராக என்றைக்குப் போராடியது? மோடி ஜின்னாவுடன் கருத்தில் உடன்பட்ட நேரு; முஸ்லிம் லீக்கிடம் அடிபணிந்த காங்கிரஸ்! மக்களவையில் உரையாற்றிய மோடி, ``வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நாடு எமர்ஜென்சியில் இருந்தது. தேசபக்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா ஒரு இருண்ட காலத்தைக் கண்டது. இன்று வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதன் பெருமையை நிலைநிறுத்த ஒரு வாய்ப்பு இது. இந்தப் பாடல்தான் 1947-ல் நம்மைச் சுதந்திரம் பெறத் தூண்டியது. வந்தே மாதரம் வெறுமனே அரசியல் சுதந்திரத்திற்கான ஒரு மந்திரம் மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. வேதங்களில், `இந்நிலம் என் தாய், நான் இம்மண்ணின் மகன்' என்று கூறப்பட்டிருக்கிறது. ராமர் இலங்கையை விட்டுக்கொடுக்கும்போது இதே விஷயத்தைச் சொன்னார். பிரதமர் மோடி வந்தே மாதரம் நமது சிறந்த கலாச்சார மரபின் நவீன அவதாரம். வங்காளத்தின் திறன்கள் நாட்டின் மையப் புள்ளி என்பதை அறிந்த பிரிட்டிஷார், வங்கத்தைப் பிரித்தால் நாடு பிளவுபடும் என்று எண்ணினார்கள். அப்போது 1905-ல் வங்கத்தை அவர்கள் பிரித்தபோது, ​​வந்தே மாதரம் ஒரு பாறை போல் நின்றது என்று பெருமிதத்தோடு பேசிக்கொண்டே வழக்கம்போல நேருவை விமர்சிக்கத் தொடங்கினார். நேரு, இந்திராவுக்கு இணையானவரா அத்வானி? இது என்ன வாதம் சசி தரூர் அவர்களே?! | பேரா. அருணன் ``வந்தே மாதரத்தை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது. முகமது அலி ஜின்னா 1937 அக்டோபர் 15-தேதி லக்னோவில் இருந்து வந்தே மாதரத்திற்கு எதிராக ஒரு கோஷத்தை எழுப்பினார். முஸ்லிம் லீக்கின் ஆதாரமற்ற அறிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுத்த போதிலும், வந்தே மாதரத்தை நேரு விசாரிக்கத் தொடங்கினார். அடுத்த ஐந்து நாளில், `ஜின்னாவின் உணர்வுடன் உடன்படுகிறேன். ஆனந்த மடத்திலுள்ள வந்தே மாதரத்தின் பின்னணி முஸ்லிம்களை எரிச்சலடையச் செய்யும் என்று சுபாஷ் சந்திர போஸுக்கு நேரு கடிதம் எழுதினார். பிரதமர் மோடி அதைத்தொடர்ந்து, அக்டோபர் 26 முதல் வங்கத்தில் வந்தே மாதரம் பகுப்பாய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் அன்றே வந்தே மாதரத்துடன் காங்கிரஸ் சமரசம் செய்துகொண்டது. சமூக நல்லிணக்கம் என்று பாடலைப் பிரித்தனர். ஆனால் வரலாறு என்னவென்றால், முஸ்லிம் லீக்கிடம் காங்கிரஸ் அடிபணிந்தது. சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த இதுதான் அவர்களின் வழி. பிறகு, காங்கிரஸ் மண்டியிட்டு இந்தியப் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டது. காங்கிரஸின் கொள்கைகள் இன்றும் அப்படியே இருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் காங்கிரஸாக மாறிவிட்டது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வந்தே மாதரத்தை இன்றும் எதிர்க்கின்றன. அதைச் சுற்றி சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கின்றன என்று மோடி கடுமையாக சாடினார். ``இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன! - மோடி மோடி உரையில் மறைந்திருக்கும் 2 நோக்கங்கள்! காங்கிரஸைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய் தனது உரையில், ``பிரதமரின் ஒரு மணிநேர உரையை உற்றுக் கவனித்தேன். அதில் அவர்களின் (பாஜக) இரண்டு நோக்கங்கள் தெளிவாகத் தெரிந்தது. முதல் நோக்கம், தங்களின் அரசியல் மூதாதையர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதாகக் கூறுவதன் மூலம், வரலாற்றை திரித்து எழுதுவது. இரண்டாவது நோக்கம், இந்த விவாதத்திற்கு அரசியல் சாயம் பூசுவது. மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய் நான் கேட்கிறேன்... உங்களின் அரசியல் மூதாதையர்கள் 'வந்தே மாதரம்' பாடலின் நோக்கத்தை எப்போது நிறைவேற்றினார்கள்? எப்போது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்தார்கள்? 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எங்கே இருந்தார்கள்? பா.ஜ.க-வின் அரசியல் மூதாதையர்கள் ஒருவர் கூட, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்கவில்லை என்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. டெல்லி: காற்று மாசினால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது - தலைமை நீதிபதி வருத்தம்! முழு நாடும் 'ஜன கண மன' பாடலை தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டபோது, ​​உங்கள் அரசியல் மூதாதையர்கள் 52 ஆண்டுகளாக மூவர்ணக் கொடியை ஏற்றவோ அல்லது தேசிய கீதத்தைப் பாடவோ இல்லை. இவ்வாறிருக்க, இந்த நாட்டைப் பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்... இன்று நாட்டு மக்கள் காற்று மாசு, எல்லைப் பாதுகாப்பு எனப் பல பிரச்னைகளை எழுப்புகிறார்கள். ஆனால் அந்த விஷயங்கள் எதுவும் பிரதமரின் உரையில் இல்லை. மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய் UPI, ஆதார் பற்றி பேசும் இந்த மோடி அரசு, இயந்திரம் படிக்கக்கூடிய (machine-readable) வாக்காளர் பட்டியலை வழங்க விரும்பவில்லை. மக்களின் வாக்குகள் பாதுகாப்பாக இல்லை, சுகாதாரம் பாதுகாப்பாக இல்லை, எல்லைகள் பாதுகாப்பாக இல்லை, எந்தவொரு வர்த்தகமும் பாதுகாப்பாக இல்லை என்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடுக்கினார். நாடாளுமன்றம்: ``SIR குறித்து பேசலாம், ஆனால் ஒரு நிபந்தனை!'' - விவாதத்தைப் பின்னுக்குத் தள்ளிய பாஜக வந்தே மாதரம் சிறப்பு விவாதத்துக்குப் பின்னால் இருக்கும் பா.ஜ.க-வின் பிளான்கள்! மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி, ``இன்று இந்த அவையில் வந்தே மாதரம் சிறப்பு விவாதம் நடத்தப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று மேற்கு வங்கத்தில் தேர்தல் வரவிருப்பதால் பிரதமர் தனது பங்கை நிலைநாட்ட விரும்புகிறார். இன்னொன்று, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் ஆகியோர் மீது இந்த அரசு புதிய குற்றச்சாட்டுகளைச் சுமத்த விரும்புகிறது. இதைச் செய்வதன் மூலம் அத்தியாவசியப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை நினைக்கிறது மோடி அரசு. காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பிரதமர் நன்றாக உரையாற்றுகிறார். ஆனால், அவற்றில் உண்மை இல்லை. மோடி உண்மைகளை மக்களிடம் முன்வைக்கும் விதமே ஒரு கலைதான். ஆனால் நான் மக்களின் பிரதிநிதி, கலைஞன் அல்ல. 1896-ல் ரவீந்திரநாத் தாகூர் முதன்முதலில் வந்தே மாதரம் பாடலை ஓர் அமர்வில் பாடினார் என்று மோடி கூறினார். ஆனால், அது காங்கிரஸ் மாநாடு என்று அவருக்குத் தெரியவில்லை. தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா? நீங்கள் தேர்தலுக்காக இருக்கிறீர்கள். நாங்கள் நாட்டு மக்களுக்காக இருக்கிறோம். நாங்கள் தோற்றாலும், இந்த மண்ணுக்காக உங்களுக்கெதிராகவும், உங்கள் சித்தாந்தத்திற்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காங்கிரஸின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், வந்தே மாதரம் கூட்டாகப் பாடப்படுகிறது. ஆனால், பா.ஜ.க -.ஆர்.எஸ்.எஸ் அமர்வுகளில் வந்தே மாதரம் பாடப்படுகிறதா? அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வந்தே மாதரத்தை கேள்விக்குட்படுத்துவது அரசியலமைப்புக்கு எதிரான அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வந்தே மாதரம் பாடலைப் பிரித்ததாகக் குற்றம்சாட்டுவதன் மூலம், முழு அரசியலமைப்பு சபையையும் பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது. அதன் ஒவ்வொரு தலைவரையும் குற்றவாளிகள் என்கிறது. இன்று, நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது. இந்த நேரத்தில், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், வினாத்தாள் கசிவு, பெண்களின் நிலை குறித்து அவையில் ஏன் விவாதம் இல்லை? உண்மையில், நிகழ்காலத்தின் யதார்த்தத்தை மோடி அரசு மறைக்க விரும்புகிறது. நம் பிரதமருக்கு நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டது. அவரது கொள்கைகள் நாட்டைப் பலவீனப்படுத்துகின்றன. எனவே கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர அவரால் வேறு என்ன செய்ய முடியும்... என்று விமர்சித்தார். ‘‘இனி, விதைகளை ‘கார்ப்பரேட்’கள்தான் விற்க முடியும்!’’ - விவசாயிகளை அடிமையாக்கத் துடிக்கும் மோடி நேரு மீது எவ்வளவு புகார் இருக்கிறதோ அனைத்தையும் பட்டியலிடுங்கள்! நேருவை மோடி குற்றம்சாட்டியதற்கு எதிர்வினையாற்றிய பிரியங்கா காந்தி, ``மோடி பிரதமராக இருந்த வருடங்களின் எண்ணிக்கையானது, இந்த நாட்டுக்காக நேரு சிறையில் இருந்த ஆண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமம். அதன் பிறகு நேரு 17 ஆண்டுகள் பிரதமராக இந்த நாட்டுக்கு உழைத்தார். நேரு இஸ்ரோவை நிறுவியிருக்காவிட்டால் மங்கள்யான் நிகழ்ந்திருக்காது... டிஆர்டிஓ (DRDO)-வை நிறுவியிருக்காவிட்டால் இன்று தேஜஸ் போர் விமானங்கள் இல்லை... ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகியவற்றை நிறுவியிருக்காவிட்டால் இன்று ஐ.டி துறையில் முன்னேறியிருக்க மாட்டோம்... காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி எய்ம்ஸ் (AIIMS) நிறுவியிருக்காவிட்டால் எவ்வாறு கொரோனாவை நாம் எதிர்கொண்டிருப்போம்... BHEL - SAIL போன்ற பொதுத்துறை நிறுவனங்களை நிறுவியிருக்காவிட்டால் வளர்ந்த இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்படும்... தனது கடைசி மூச்சு வரை இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர் நேரு. சில மாதங்களுக்கு முன்பு மோடி, எதிர்க்கட்சிகள் தன்னை எவ்வளவு அவமதித்தார்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். ஒரு 90, 99 அவமானங்களை அவர் பட்டியலிட்டிருக்கலாம். மோடிக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். நேரு மீது உங்களுக்கு என்னென்ன புகார்கள் இருந்தாலும், என்னென்ன அவமானப்படுத்த வேண்டும் என்றிருந்தாலும் அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள். காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி அது 999 அவமானங்களாக இருந்தாலும் 9,999 அவமானங்களாக இருந்தாலும் சரி ஒரு பட்டியலை போடுங்கள். 10 மணிநேரமோ, 20 மணிநேரமோ எவ்வளவு மணி நேரமானாலும் நாம் தனியாக விவாதிப்போம். ஆனால், இந்த சபையின் நேரம் விலைமதிப்பற்றது. பொதுமக்கள் எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்க இந்த சபையில் நாம் விவாதிக்க வேண்டும் என்று கூறினார். Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும்

விகடன் 9 Dec 2025 6:43 am

ஜப்பானை அதிர வைத்த 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஹொக்கைடோ ,அமோரி மற்றும் இவாட் ஆகிய மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலும், 50 கிலோமீற்றர் ஆழத்திலும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மூன்று மீற்றர் உயரத்திற்கு சுனாமி அலைகள் […]

அதிரடி 9 Dec 2025 6:03 am

இந்த வார ராசிபலன் டிசம்பர் 9 முதல் 14 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

விகடன் 9 Dec 2025 6:00 am

2035 டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்குத் தடை: மறுபரிசீலனை செய்யுங்கள் என 7 ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்

2035 டீசல் மற்றும் பெட்ரோல் கார் தடையை மறுபரிசீலனை செய்ய ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐரோப்பிய ஆணையத்தை வலியுறுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் வாகனத் துறையினரின் அழுத்தம், 2035 ஆம் ஆண்டுக்குள் டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் மீதான தடையை திருத்துவதை தாமதப்படுத்த ஐரோப்பிய ஆணையத்தைத் தள்ளக்கூடும். 2035 ஆம் ஆண்டுக்குள் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை விற்பனை செய்வதற்கான தடையை நீக்குமாறு குறைந்தது ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஐரோப்பிய ஆணையத்தை கோருகின்றன, இல்லையெனில் அந்தத் தொகுதியின் வாகனத் துறை தடைக்கு அடிபணியும் என்று வாதிடுவதாக யூரோநியூஸ் பார்த்த இரண்டு கடிதங்கள் தெரிவிக்கின்றன. பல்கேரியா, செக் குடியரசு, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகியால் அறிவிக்கப்படும் வரவிருக்கும் சட்டமன்ற மதிப்பாய்வின் ஒரு பகுதியாக 2035 க்குப் பின்னர் கலப்பின வாகனங்களின் (hybrid vehicles) விற்பனையை ஐரோப்பிய ஆணையம் பரிசீலிப்பது கட்டாயமானது என்று வாதிட்டன. CO2 உமிழ்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதாக ஏழு நாடுகளும் கூறினாலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சட்டம் தொழில்நுட்ப நடுநிலைமையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இது அடிப்படையில் தேசிய அரசாங்கங்களுக்கு உமிழ்வைக் குறைக்கும் போது போட்டித்தன்மையைப் பராமரிக்க சிறந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது. கையொப்பமிட்டவர்களால் அழைக்கப்பட்ட மாற்றுகளில் கலப்பின மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் கார்கள் ஆகியவை அடங்கும். ஏழு உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் கூடுதல் சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் தேவையையும் , அவற்றின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த ஆணையத்தையும் சுட்டிக்காட்டின. ஆணையத்தின் முன்மொழிவு முதன்மையாக நல்ல நடைமுறைகள், வரி சலுகைகள் மற்றும் ஆதரவு திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் குறைந்த மற்றும் பூஜ்ஜிய-உமிழ்வு வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிப்பதில் தொழில்நுட்ப ரீதியாக நடுநிலை அணுகுமுறையை பிரதிபலிக்க வேண்டும் என்று யேர்மனியைத் தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கையெழுத்திட்ட கடிதங்களில் ஒன்று கூறியது. ஐரோப்பிய ஒன்றிய மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு நாடுகள், 2035 ஆம் ஆண்டுக்குள் உள் எரி பொறிகள் (ICEs) மீதான தடையை நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றன. அதிக எரிசக்தி விலைகள், பேட்டரிகள் உள்ளிட்ட கார் கூறுகளின் பற்றாக்குறை மற்றும் மின்சார வாகனங்களுக்கு (EVs) போதுமான நுகர்வோர் தேவை இல்லாததால் தங்கள் வாகன உற்பத்தியாளர்கள் போராடி வருவதாக அவர்கள் கூறுகின்றனர் . ஐரோப்பிய வாகனத் துறையின் மூலோபாய சுதந்திரத்தைப் பராமரிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று யேர்மனி மற்றும் இத்தாலி கையெழுத்திட்ட இரண்டாவது கடிதம் கூறுகிறது. சீனா ஒரு முன்னணி உலகளாவிய ஏற்றுமதியாளராக உருவெடுத்ததைத் தொடர்ந்து, பேட்டரி மின்சார வாகனங்களுக்கான ஐரோப்பாவின் சந்தை BYD போன்ற பிராண்டுகளால் நிரம்பி வழிகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பேட்டரி மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் மெதுவாக உள்ளனர். எலோன் மஸ்க்கின் டெஸ்லா கூட ஐரோப்பாவில் சீனப் போட்டியை எதிர்கொள்கிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனில் பதிவுகள் 50% க்கும் அதிகமாகவும், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகலில் 40% க்கும் அதிகமாகவும் குறைந்துள்ளன. நீண்டகால வாகன அதிகார மையமான ஜெர்மனி, மார்ச் 2023 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு ஏற்ப ஏற்கனவே வெப்பத்தை உணர்ந்து வருகிறது, இது டீசல் மற்றும் பெட்ரோல் கார்களின் புதிய விற்பனையை நிறுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. சுத்தமான வாகனங்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதும், கார் பாகங்கள் மற்றும் பொருட்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதும் நாட்டை உலகளாவிய போட்டியிலிருந்து விலக்கி வருவதாக பேர்லின் வாதிடுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்துறை குழுக்களில் அமர்ந்திருக்கும் ஜெர்மன் MEP ஜென்ஸ் கீசெக் (EPP), ஆணையம் முன்மொழிந்த ICE-கள் மீதான முழுமையான தடைக்கு தனது குழுவின் எதிர்ப்பை ஆதரித்தார். CO2-நடுநிலை எரிபொருட்களின் பங்கை அங்கீகரிப்பதன் மூலம் சட்டத்தைத் திறக்க நாங்கள் முன்மொழிந்தோம், எதிர்கால தொழில்நுட்ப கலவையின் ஒரு பகுதியாக கார்பனேற்றம் செய்யப்பட்ட ICE களுக்கு ஒரு பாதையைத் திறக்கிறோம் என்று கீசெக் யூரோநியூஸிடம் கூறினார். அந்த வகையில், வெவ்வேறு உந்துவிசை தொழில்நுட்பங்களுக்கு இடையே ஒரு நியாயமான, திறந்த மற்றும் சந்தை அடிப்படையிலான போட்டி சாத்தியமாக இருந்திருக்கும். போதுமான அளவு உள்கட்டமைப்பு மற்றும் கட்ட மேம்பாடுகள் இல்லாததால், 2035 இலக்கு இனி யதார்த்தமானது அல்ல என்று ஆட்டோமொடிவ் லாபி குழுவான ஐரோப்பிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACEA) இயக்குநர் ஜெனரல் சிக்ரிட் டி வ்ரீஸ் கூறினார் . இன்றைய CO2 ஒழுங்குமுறை, உள்கட்டமைப்பு, மொத்த உரிமைச் செலவு அல்லது ஊக்கத்தொகைகள் மூலம் உண்மையான தேவையைத் தூண்டுவதற்குப் போதுமானதைச் செய்யாமல், போட்டித்தன்மை மற்றும் மீள்தன்மையுடன் அதை இணைக்காமல், புதிய வாகன விநியோகத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று டி வ்ரீஸ் கூறினார். நாளை மறுநாள் புதன்கிழமை, கார்கள் மற்றும் வேன்களுக்கான CO2 தரநிலைகளில் திருத்தங்களை EU நிர்வாகி அறிவிக்க உள்ளார். இருப்பினும், ஆணைய செய்தித் தொடர்பாளர்களின் முந்தைய அறிக்கைகள் EU நிர்வாகி தனது திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்று பரிந்துரைத்துள்ளன.

பதிவு 9 Dec 2025 4:14 am

ஐரோப்பிய சிறைகளில் இருந்து நான்காவது முறையாக தப்பிச் சென்ற கைதி

மிலனின் ஓபரா சிறைச்சாலையின் அதிகபட்ச பாதுகாப்புப் பிரிவில் இருந்து வார இறுதியில் ஒரு பிரபலமற்ற கைதி தப்பினார். இது இத்தாலிய மற்றும் ஐரோப்பிய தடுப்பு மையங்களிலிருந்து அவர் வெற்றிகரமாக தப்பிச் சென்ற நான்காவது முறையாகும். சிறையிலிருந்து தப்பிக்க 41 வயதான டௌலண்ட் டோமா, கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவில் தனது அறை ஜன்னல் இரும்புக் கம்பிகளை அறுத்து, முடிச்சுப் போட்ட படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தினார். இருளையும் சிறை அதிகாரிகளின் பணிநேர மாற்றத்தையும் பயன்படுத்திக் கொண்டார் என இத்தாலிய அதிகாரிகளின் கூறினர். அல்பேனியாவின் குடிமகனான டோமா, கொள்ளை மற்றும் பிற குற்றங்களுக்காக அக்டோபர் 2048 வரை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் ஆறு மீட்டர் சுவரில் ஏறி மறைந்துவிட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இத்தாலிய காவல்துறையினர் நாடு தழுவிய தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். வீதி ரோந்து, சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளுடன் தேடத் தொடங்கியுள்ளனர். டோமா நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். டோமா முதன்முதலில் 2009 இல் டெர்னி சிறையிலிருந்து தப்பினார். அவரது மிகவும் விவாதிக்கப்பட்ட திருட்டு பிப்ரவரி 2013 இல் நடந்தது. அவரும் சக கைதி வாமென்டின் ஃப்ரோகாஜும் பர்மா சிறைச்சாலையின் அதிகபட்ச பாதுகாப்புப் பிரிவில் இருந்து தப்பிச் சென்றனர். ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஃப்ரோகாஜ், பின்னர் 2015 ஆம் ஆண்டு வீட்டிற்குள் புகுந்து நகைக்கடைக்காரரால் கொல்லப்பட்டார். 2013 ஆம் ஆண்டு தப்பித்தலுக்குப் பின்னர் இத்தாலிய போலீசார் டோமாவை 40 நாட்கள் தேடினர். பின்னர் அவர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் சில மாதங்களுக்குப் பின்னர் அவர் பெல்ஜியக் காவலில் இருந்தும் தப்பினார். டோமாவுக்கு வெளிப்புற உதவி கிடைத்ததா என்பதைக் கண்டறிய, ஓபரா சிறைச்சாலையிலிருந்து சிசிடிவி காட்சிகளை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இத்தாலிய சிறைச்சாலை அமைப்பில் உள்ள முறையான சிக்கல்களை இந்த தப்பித்தல் எடுத்துக்காட்டுகிறது, அங்கு கூட்ட நெரிசல் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை பாதுகாப்பைப் பராமரிப்பது பெருகிய முறையில் சவாலானதாக ஆக்கியுள்ளன. ஆன்டிகோன் சங்கத்தின் கூற்றுப்படி, இத்தாலிய சிறைச்சாலைகள் 2025 ஆம் ஆண்டில் 133 சதவீத திறனுடன் செயல்பட்டன. 51,000 பேருக்கு வடிவமைக்கப்பட்ட வசதிகளில் 62,000 க்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்துள்ளன. இத்தாலியில் 46,000க்கும் குறைவான சிறை அதிகாரிகள் உள்ளனர். இதனால் சுமார் 20,000 ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக சிறைச்சாலை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. தப்பிக்கும் போது ஓபரா சிறைச்சாலை 918 இடங்களில் 1,338 கைதிகளை வைத்திருந்தது.153% அதிக நெரிசல் - குறைந்தது 811 அதிகாரிகள் தேவைப்படும்போது வெறும் 533 அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டது என்று UILPA சிறைச்சாலை காவல் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெனரினோ டி ஃபாசியோ தெரிவித்தார்.

பதிவு 9 Dec 2025 3:45 am

ரஷ்ய நிறுவனம் மீதான தடைகளை நிறுத்திய அமெரிக்கா

ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லூகாயில் மீதான சில தடைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. தடைகள் அமெரிக்க கருவூலத்துறையானது ரஷ்யாவிற்கு வெளியே உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான அங்கீகாரத்தை நீட்டித்துள்ளது. மேலும், லூகாயில் மீதான சில தடைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய அனுமதிக்கிறது. சில்லறை சேவை நிலையங்களுடன் சாதாரண பரிவர்த்தனைகளில் ஈடுபட விரும்பும் நுகர்வோர் மற்றும் […]

அதிரடி 9 Dec 2025 3:30 am

ஒஸ்லோவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மிகப்பெரிய ஷாப்பிங் சென்டரில் (ஸ்டோரோ ஸ்டோர்சென்டர்) துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த தகவலை அடுத்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்ததாக நோர்வே போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர். தாக்குதலாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் எவரும் காயமடையவில்லை என்பதனால் அந்த வணிக வளாகத்தை திறப்பது பாதுகாப்பானது என்றும் காவல்துறையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். சந்தேக நபர் 19 வயது இளைஞன் என்றும் அவர் மேல் நோக்கி கூரையில் ஒரு துப்பாக்கியால் சுட்டதாகவும், சந்தேக நபர் ஒரு பேஸ்பால் மட்டை மற்றும் கத்தியையும் வைத்திருந்ததாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் டாம் பெர்கர் செய்தியாளர்களிடம் கூறினார். ஒஸ்லோவில் அமைந்துள்ள ஸ்டோரோ ஸ்டோர்சென்டர் என்ற வணிக வளாகத்தில் 140 வர்த்தக நிலையங்களும் கபேக்களும் உள்ளே அமைந்துள்ளன.

பதிவு 9 Dec 2025 3:18 am

ஐ.நா.வின் உடனடி உதவி! சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு $4.5 மில்லியன் நிதி உதவி!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பாதிப்புகளையடுத்து முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள்… The post ஐ.நா.வின் உடனடி உதவி! சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு $4.5 மில்லியன் நிதி உதவி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Dec 2025 2:18 am

சீனாவிற்கு வரி விதிக்கப்படும் –மேக்ரான் எச்சரிக்கை

சீனப் பொருட்கள் மீது சுங்கவரிகள் விதிக்கப்படலாம் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், சீனாவுடன் உள்ள வர்த்தக பற்றாக்குறை (trade deficit) அதிகரித்து வருவதால், சீனப் பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்று எச்சரித்துள்ளார். மேக்ரான், சமீபத்தில் சீனாவிற்கு மேற்கொண்ட மூன்று நாள் அரசு பயணத்தின் போது, “சீனாவின் வர்த்தக அதிகப்படியான நிலை (trade surplus) நிலைத்திருக்க முடியாது. இது ஐரோப்பிய தொழில்துறையை பாதிக்கிறது” என்று தெரிவித்தார். அவர், உலகளாவிய வர்த்தக […]

அதிரடி 9 Dec 2025 1:30 am

உக்ரைன் மீது அமெரிக்காவின் அழுத்தம்: சந்தித்த தலைவர்கள்!

ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு வாஷிங்டனிடமிருந்து கெய்வ் மீது அழுத்தம் அதிகரித்து வருவதால், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு இன்னும் அதிக வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த வாரம் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் சமீபத்திய பதிப்பைப் பற்றி விவாதிக்க திங்களன்று லண்டனில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனியின் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரைச் சந்தித்தார். சந்திப்பைத் தொடர்ந்து கியேவிற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கூறினார். டவுனிங் தெருவில் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, உக்ரைனுக்கான அமைதி ஒப்பந்தத்தில் கடினமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர் கூறினார். அமெரிக்கத் தரப்பிலிருந்து வரும் சாத்தியமான சமாதானத் திட்டத்தின் சில விவரங்கள் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக மெர்ஸ் கூறினார். அதனால்தான் நாங்கள் இங்கே பேசுவதற்தற்காக இருக்கிறோம் என்று கூறினார். அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். பேச்சுவார்த்தைகளின் மெதுவான முன்னேற்றத்தால் விரக்தியடைந்து, உக்ரைனுக்கான ஆதரவை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என்ற பதட்டம் கியேவிலும் ஐரோப்பா முழுவதும் நிலவுகிறது. அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது. அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். கடந்த வாரம், உக்ரேனிய அதிகாரிகள் புளோரிடாவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் மூன்று நாட்கள் செலவிட்டு, ரஷ்யாவிற்கு சாதகமாக பரவலாகக் கருதப்படும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைக் கோரினர். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ரஷ்யா மற்றொரு படையெடுப்பு அல்லது தாக்குதலை நடத்துவதிலிருந்து தடுக்கப்படுவதை உறுதிசெய்ய உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தேடுகிறது.

பதிவு 9 Dec 2025 12:31 am

மண்சரிவில் சிக்கிய குடும்பம்: அறுவர் மரணம்: மீண்டவர்களின் சோகக்கதை

“நவம்பர் 26 ஆம் திகதி இரவு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம். நானும், என் பேரனும் பேத்தியும் ஒரு அறையில் இருந்தோம். என் மகனும் என் மகனின் கர்ப்பிணி மனைவியும் மற்றொரு அறையில் தூங்கினார்கள், மற்றவர்கள் விறைந்தையில் தூங்கினார்கள் திடீரென்று இடி சத்தம் கேட்டு விழித்தேன். அதே நேரத்தில், நாங்கள் ஒரு மண்ணுக்குள் புதையுண்டிருந்தோம்” என்று மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிய திருமதி எம். சந்திர காந்தி […]

அதிரடி 9 Dec 2025 12:30 am

ஹீத்ரோ 'பெப்பர் ஸ்ப்ரே'தாக்குதல்: இருவரைக் கைது செய்தது காவல்துறை

ஹீத்ரோ விமான நிலையத்தில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தில், மிளகுத் தூள் என்று கருதப்படும் ஒரு பொருளைப் பயன்படுத்தி 21 பேர் காயமடைந்ததாக, மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மெட்ரோ காவல் துறை தெரிவித்துள்ளது. லம்பேத்தில் கொள்ளை மற்றும் தாக்குதல் தொடர்பாக 24 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார், மேலும் கொள்ளைச் சதித்திட்டம் தீட்டியதாக 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று படை தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை டெர்மினல் 3 இல் உள்ள பல மாடி கார் பார்க்கிங்கில் நடந்த தாக்குதல் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து இந்த கைதுகள் நடந்தன. தாக்குதலுக்கு முன்னர் கார் பார்க்கிங் லிஃப்டில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களின் சூட்கேஸ்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் போது காயமடைந்தவர்களில் மூன்று வயது சிறுமியும் அடங்குவார். ஐந்து பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகில் கொள்ளை மற்றும் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 31 வயது நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைகள் தொடரும் அதே வேளையில், அவர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டார். மிளகு தெளிப்பு என்று நம்பப்படும் ஒரு நச்சுப் பொருளால் பலர் காயமடைந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி காலை 08:10 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பயங்கரவாதமாகக் கருதப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 9 Dec 2025 12:04 am

வார்னர் பிரதர்ஸ் - நெடஃபிளிக்ஸ் ஒப்பந்தம்: எதிர்த்துப் போராடப்போவதாக பாரமவுண்ட் அறிவித்து

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை நெட்ஃபிளிக்ஸ் கையகப்படுத்தியதை எதிர்த்துப் போராடப் போவதாக அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் இன்று திங்களன்று தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் நெட்ஃபிக்ஸ் $72 பில்லியன் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை எட்டியது. ஆனால் பாரமவுண்ட் பங்குதாரர்களை சுமார் $74.4 பில்லியன் அல்லது ஒரு பங்கிற்கு $30 ரொக்கமாக ஏலத்தில் அணுகப்போவதாகக் கூறியது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் போலல்லாமல், பாரமவுண்ட் வார்னர் பிரதர்ஸின் கேபிள் சொத்துக்களை வாங்கவும் முன்வருவதாகக் கூறுகிறது. மேலும் பங்குதாரர்கள் நெட்ஃபிளிக்ஸ் ஏலத்தை நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. இது அந்த சொத்துக்களின் மாயையான வருங்கால மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது என்று அது கூறுகிறது. பாரமவுண்ட் நெட்ஃபிக்ஸ் சலுகையை விமர்சித்து, இது WBD பங்குதாரர்களை நீடித்த பல அதிகார வரம்பு ஒழுங்குமுறை அனுமதி செயல்முறைக்கு உட்படுத்துகிறது. நிச்சயமற்ற விளைவு மற்றும் சிக்கலான மற்றும் நிலையற்ற பங்கு மற்றும் பண கலவையுடன் வெளிப்படுத்துகிறது என்று கூறினார். 12 வார காலப்பகுதியில் WBD-க்கு ஆறு திட்டங்களை சமர்ப்பித்ததாக பாரமவுண்ட் தெரிவித்துள்ளது. எங்கள் சலுகை வலுவான ஹாலிவுட்டை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது படைப்பாற்றல் சமூகம், நுகர்வோர் மற்றும் திரைப்பட நாடகத் துறையின் நலன்களுக்காக உள்ளது என்று பாரமவுண்ட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் எலிசன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். எங்கள் முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையின் விளைவாக, அதிகரித்த போட்டி, அதிக உள்ளடக்க செலவு மற்றும் திரையரங்க வெளியீட்டு வெளியீடு மற்றும் திரையரங்குகளில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் ஆகியவற்றிலிருந்து அவர்கள் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார். இந்த ஒப்பந்தம் சிக்கலானது என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த சந்தைப் பங்கின் அளவு காரணமாக நெட்ஃபிக்ஸ் ஒப்பந்தம் ஒரு சிக்கலாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூறினார். இந்த ஏலத்தை அங்கீகரிப்பதா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவில் தான் தனிப்பட்ட முறையில் ஈடுபடுவேன் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார். பாரமவுண்டுடனான டிரம்பின் தனிப்பட்ட உறவுகளைக் கருத்தில் கொண்டு, தலைமை நிர்வாக அதிகாரி எலிசன் நீண்டகால டிரம்ப் ஆதரவாளரான லாரி எலிசனின் மகன், உலகின் இரண்டாவது பணக்காரர் நெட்ஃபிக்ஸ் குறித்த டிரம்ப் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

பதிவு 8 Dec 2025 11:34 pm

9 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின், ஊவா பரணகம, மீகாகியுல,பதுளை, கந்தெகெட்டிய, பண்டாரவளை, சொரணாத்தொட்ட, ஹாலி – எல, எல்ல, லுணுகலை, வெலிமடை, ஹப்புத்தளை, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை […]

அதிரடி 8 Dec 2025 11:30 pm

மதுரை ஏ.வி. மேம்பாலம்.. நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை.. யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்!

மதுரையில் அழகான ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், இன்று 139வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அதனை பகிர்ந்து கொண்டு, பழமையான கட்டுமானத் திறன்களை வெளிக்கொணர்ந்த இந்த பாலம், யுனெஸ்கோ அங்கீகாரத்துக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

சமயம் 8 Dec 2025 10:50 pm

ஆப்பிரிக்காவில் மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு –ஜனாதிபதி பதவி நீக்கபட்டதாக அறிவித்த இராணுவ வீரர்கள்

ஆப்பிரிக்க நாடொன்றில் இராணுவ வீரர்களால் ஆட்சிக்கவிழ்ப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் (Benin), டிசம்பர் 7, 2025 அன்று, சில இராணுவத்தினர் தங்களை “Military Committee for Refoundation (CMR)” என அழைத்து, அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் தோன்றி, ஜனாதிபதி பாட்ட்ரிஸ் டாலோன் (Patrice Talon) பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று அறிவித்தனர். ஜனாதிபதியின் நிலை டாலோனின் அலுவலகம், “இது தொலைக்காட்சியை கைப்பற்றிய சிறிய குழுவின் நடவடிக்கை மட்டுமே. வழக்கமான இராணுவம் மீண்டும் கட்டுப்பாட்டை எடுத்து […]

அதிரடி 8 Dec 2025 10:30 pm

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்து பல்கலை மாணவர்கள் கடிதம்

டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று (08) கடிதமொன்றைக் கையளித்தனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய ஜனாதிபதி தொடர்ந்து, பேரிடரின்போது தாம் […]

அதிரடி 8 Dec 2025 10:30 pm

51வது பெங்களூரு கேக் ஷோ டிசம்பர் 11ல் தொடக்கம்! 50 கலைஞர்கள்-25 வகை பிரமாண்ட கேக்... அடேங்கப்பா!

பெங்களூரு கேக் ஷோ வருகிற 11ந் தேதி திரிபுரவாசிணி அரண்மனை மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த கேக் ஷோவின் ஏற்பாடுகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 8 Dec 2025 9:50 pm

தாய்லாந்து - கம்போடியா எல்லை மோதல் மீண்டும் வெடித்தது

தாய்லாந்து - கம்போடியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் இன்று திங்கள்கிழமை காலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மோதலை மீண்டும் தொடங்கியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன. நாட்டைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் தேவையான அளவு இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார். தாய்லாந்து ஒருபோதும் வன்முறையை விரும்பியதில்லை. தாய்லாந்து ஒருபோதும் சண்டையையோ அல்லது படையெடுப்பையோ தொடங்கவில்லை, ஆனால் அதன் இறையாண்மையை மீறுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார். டிசம்பர் 7 ஆம் திகதி சிசாகெட் மாகாணத்தில் தாய் துருப்புக்கள் மீது கம்போடியப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், இரண்டு வீரர்கள் காயமடைந்ததாகவும் ராயல் தாய் ராணுவம் குற்றம் சாட்டியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை மேலும் தாக்குதல்கள் நடந்ததாக அது தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் என்று கூறியது. இதில் ஒரு தாய்லாந்துச் சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் அது கூறியது. ஒரு பொதுமக்கள் சமூகம் குறிவைக்கப்பட்டதாகவும் அது கூறியது. திங்கட்கிழமை காலை உபோன் ரட்சதானி மாகாணத்தில் மற்றொரு மோதல் ஏற்பட்டதாகவும், இது வான்வழித் தாக்குதல்களைத் தூண்டியதாகவும் இராணுவம் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. கம்போடிய ஆதரவு துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை அடக்குவதற்கு பல பகுதிகளில் இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு விமானங்கள் பதிலடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக தாய் இராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி தெரிவித்தார். அப்பகுதியில் இருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற துருப்புக்களும் நிறுத்தப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து தரப்பு கூறுவதை கம்போடியா நிராகரித்தது. பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சியாட்டா, திங்கள்கிழமை அதிகாலை பிரீயா விஹார் மற்றும் ஒட்டார் மீன்ச்சே ஆகிய எல்லை மாகாணங்களில் கம்போடிய துருப்புக்கள் மீது தாய்லாந்து படைகள் தாக்குதலை நடத்தியதாகவும், கம்போடியா பதிலடி கொடுக்கவில்லை என்றும் கூறினார். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து விரோத நடவடிக்கைகளையும் தாய்லாந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கம்போடியா வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார். இதற்கிடையில், திங்கட்கிழமை நடந்த மோதலில் குறைந்தது நான்கு பொதுமக்கள் இறந்ததாக கம்போடியாவின் தகவல் அமைச்சர் பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏஎவ்பியிடம் தெரிவித்தார். எல்லை மாகாணங்களான ஒட்டார் மீன்ச்சே மற்றும் பிரியா விஹார் ஆகிய இடங்களில் தாய்லாந்து தாக்குதல்களில் குறைந்தது நான்கு கம்போடிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று நெத் பீக்ட்ரா கூறினார். மேலும் 10 பொதுமக்கள் காயமடைந்தனர். ஜூலை மாதம் ஐந்து நாள் போரை அடுத்து, அக்டோபரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினர். இந்த போரில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர். பதட்டங்கள் தொடர்ந்து கொதித்தெழுந்தன இதன் விளைவாக நவம்பர் நடுப்பகுதியில் தாய்லாந்து வீரர்கள் கண்ணிவெடிகளால் காயமடைந்ததை அடுத்து ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக தாய்லாந்து கூறியது. இது கம்போடியாவால் போடப்பட்டதாக அவர்கள் கூறினர். மேலும் பதட்டங்களைத் தவிர்க்க தலையிடுவதாக டிரம்ப் கூறிய போதிலும், போர் நிறுத்தத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. இன்று திங்களன்று, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அக்டோபரில் தாய் மற்றும் கம்போடியத் தலைவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட படத்தைப் பகிர்ந்து கொண்டு, நிதானத்தைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார்.

பதிவு 8 Dec 2025 9:48 pm

அம்பிட்டியே சுமனரத்ன தேரரை காணோம்!

சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் மற்றும் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகியோர் மட்டக்களப்பு பௌத்த பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை 2023 ஆம் ஆண்டு சமர்பித்திருந்தனர் . தமிழர்களை வெட்டி கொல்ல வேண்டும் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பேசியதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 25 ஆம் திகதி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் தர்ஷினி அண்ணாதுரை உத்தரவிட்டிருந்தார் ஆனால் இரு வாரங்கள் (14 நாட்கள்) கடந்து விட்ட பின்னரும் கூட அம்பிட்டியே சுமனரத்ன தேரரை பொலிஸ் கைது செய்யவில்லை. நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு அழைக்கப்பட்ட போது அம்பிட்டியே சுமனரத்ன தேரரை காணவில்லை என பொலிஸ் பதிவு செய்திருக்கின்றது இது தொடர்பாக நீதிவான் நீதிமன்றத்தில் அடுத்த தவணையின் போது தோன்றி விளக்கமளிக்குமாறு பொலிஸ்அத்தியட்சகருக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது

பதிவு 8 Dec 2025 9:44 pm

மீண்டும் வந்தது இந்திய படை!

இலங்கையின் வடபுலத்திற்கு சுமார் 35வருட கால இடைவெளியின் பின்னராக இந்திய படை உத்தியோகபூர்வமாக களமிறங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான சாலையில் வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்த பாலம் இந்திய இராணுவ பொறியியல் அணியினரால் புனரமைக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவ பொறியியல் அணியைச்சேர்ந்த 37 இந்திய இராணுவத்தினர் இன்றைய தினம் கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த நிலையில் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்திருந்தனர். அவர்களுக்கு உதவியாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களும் இணைந்து பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே மண்சரிவு அனர்த்ததால் சிக்கியவர்ளை மீட்பு பணி மற்றும் நிவாரண விநியோக பணியிலும் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் குழுவினர் இன்று (08) இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.

பதிவு 8 Dec 2025 9:36 pm

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி.. தீர்க்க முடியாத நீண்ட கால மக்கள் பிரச்சினை இதுதான்!

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர், மக்கள் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. 2026 தேர்தலில் இது எதிரொலிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சமயம் 8 Dec 2025 9:35 pm

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! –சுனாமி எச்சரிக்கை

வடக்கு ஜப்பானின் கடலோரப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ள நிலையில், சுமார் 3 மீட்டர் (10… The post ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! – சுனாமி எச்சரிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 9:31 pm

192பேர் பற்றி தகவலில்லை!

இலங்கையில் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் இன்றுவரை 635 பேரது உடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (08); வெளியிட்ட அறிக்கையில் தகவல்; தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்டு இதுவரை 192 பேர் காணாமற் போயுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரிழப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் குருநாகலில் 61 உயிரிழப்புகளும் கேகாலை மாவட்டத்தில் 32 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. புத்தளத்தில் 37 உயிரிழப்புகளும் மாத்தளை மாவட்டத்தில் 28 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதனிடையே சீரற்ற காலநிலையினால் 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 நபர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு 8 Dec 2025 9:31 pm

ஜெர்மனியில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை –நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

பெர்லின், உக்ரைன்-ரஷியா போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷிய டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ரஷியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ராணுவ பலத்தை பெருக்க அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை ராணுவ சேவையில் இணைக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு தன்னார்வ அடிப்படையிலும் இருக்கும். போர் ஏற்படும் காலங்களில் இவர்கள் ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் […]

அதிரடி 8 Dec 2025 9:30 pm

   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமில்நகர் மக்களுக்கு தென்பகுதி வர்த்தகர்கள் உதவி

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் கடும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் எமில்நகர் கிராம மக்கள் பாரிய அளவில்… The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமில்நகர் மக்களுக்கு தென்பகுதி வர்த்தகர்கள் உதவி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 9:14 pm

யாழ். மாணவன் இழப்புக்கு மத்தியிலும்…கடற்படையினரின் அர்ப்பணிப்புக்குக் கெளரவம் தாருங்கள்!

புத்தளம் ஏ–12 வீதியில் கலா வாவி வெள்ளத்தில் சிக்குண்டு மீட்கப்பட்ட மொறட்டுவப் பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்கு… The post யாழ். மாணவன் இழப்புக்கு மத்தியிலும்… கடற்படையினரின் அர்ப்பணிப்புக்குக் கெளரவம் தாருங்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 9:03 pm

இண்டிகோவுக்கு மேலும் நெருக்கடி.. ஏர் இந்தியாவின் புதிய நடவடிக்கை.. கலக்கத்தில் இண்டிகோ!

நாடு முழுவதும் ஏற்பட்ட இண்டிகோ விமான சேவை பாதிப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமானிகளை உடனடியாக பணியமர்த்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது

சமயம் 8 Dec 2025 8:43 pm

CSK : ‘கிரீன் வேணாம்’.. இந்த வெளிநாட்டு ஆல்ரவுண்டர வாங்கணும்? கடைசி நேரத்தில் மாறும் சிஎஸ்கே பிளான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, கெமிரான் கிரீனை வாங்காமல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஒருவரை வாங்க முடிவு செய்துள்ளனர். இந்த வீரரை 5 கோடிக்குள் வாங்க முடியும் என்பதால்தான், இந்த முடிவாம்.

சமயம் 8 Dec 2025 8:34 pm

சீரற்ற வானிலையால் முட்டைவிலை அதிகரிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் முட்டைகள் அழிவடைந்துள்ளன. இதனால் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி சந்தையில் முட்டை ஒன்றின் விலை 40 முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை இதற்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 25 முதல் 30 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில […]

அதிரடி 8 Dec 2025 8:30 pm

லண்டன் விமான நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் ; தாமதமான விமானம்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், நடந்த கொள்ளைச் சம்பவத்தினால் பல மணி நேரம் பயண இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 3 வயது சிறுமி உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது. லண்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள டெர்மினல் 3 கேரேஜில், நான்கு ஆண்கள் கொண்ட குழு, ஒரு லிஃப்டில் இருந்த […]

அதிரடி 8 Dec 2025 8:30 pm

ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை சில மாதங்களுக்கு முன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டத்தைப் பெறாமல் துணைவேந்தர் மூலம் பட்டம் பெற்றார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீன் ராஜன் என்ற ஆராய்ச்சி மாணவி. இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா கடந்த 13.08.2025 அன்று நடந்தது. அந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கவிருந்த பட்டத்தை ஜீன் ராஜன் என்பவர் பெற மறுத்து, துணைவேந்தர் மூலம் பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழக சட்டப்படி, வேந்தரே பல்கலைக்கழகத் தலைவர், துணைவேந்தர், வேந்தர் இல்லாதபோது மட்டுமே பட்டத்தை வழங்க முடியும். எனவே வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்டமீறல். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதுமட்டுமன்றி, 'தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பட்டம் வாங்க வேண்டும்' என அந்த மாணவி கூறி இருக்கிறார். துணைவேந்தரிடம் இருந்து பெற்ற பட்டம் செல்லத்தக்கது அல்ல. எனவே, அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கு முடியும் வரை மாணவியின் பட்டம் செல்லுபடியாகும் தன்மைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதற்காக நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுந்ரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டமளிப்பு விழாவின்போது மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பைக் காக்க வேண்டும், இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், ``பல்கலைக்கழக விதியில் இது போன்று செயல்பட்டவர்களுக்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என மனுதாரரும், பல்கலைக்கழக வழக்கறிஞரும் பதில் மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விகடன் 8 Dec 2025 8:14 pm

பனிப்போரில் நாதக நிர்வாகிகள்; சீமானின் `டார்கெட்'தொகுதியில் தொய்வடைகிறதா தேர்தல் பணிகள்?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில், காரைக்குடி தொகுதி முதன்மையானது என்கிறார்கள் அக்கட்சியினர். ஆனால் காரைக்குடி நா.த.க-வை பனிப்போர் சூழ்ந்திருப்பதால் தேர்தல் பணிகள் சுணக்கமடைவதாகச் சொல்கிறார்கள் சிவகங்கை நா.த.க நிர்வாகிகள்! 2026 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ கணக்கை தொடங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் சீமான். அதேசமயம் 'சீமானை எம்.எல்.ஏ-வாக்கி விட வேண்டும்' என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். சீமானின் சொந்த மாவட்டத்தில் முகம் தெரியாத வேட்பாளர்கள் நிற்கும்போதே 17% வாக்குகள் கிடைத்துவரும் நிலையில், இந்த முறை காரைக்குடி தொகுதியில் சீமானைப் போட்டியிடவைக்கலாம் என்ற பேச்சு கட்சிக்குள் நிலவுகிறது. அதேசமயம் காரைக்குடி தொகுதிக்குள் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சீமான் காரைக்குடி தொகுதி நிலவரம் குறித்து நம்மிடம் பேசிய நா.த.க புள்ளிகள் சிலர், நாம் தமிழர் இயக்கமாக இருந்தபோதே காரைக்குடியில் நா.த.க-வின் முகமாக இருந்தவர் மாறன். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த மறைந்த சுபா.முத்துகுமாரின் ஆதரவாளரான இவர், தேர்தல் அரசியலிலும் நா.த.க-வுக்குப் பக்கபலமாக இருந்துவருகிறார். 2016–19 காலகட்டத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் முன்னாள் மாநில நிர்வாகி வெற்றிக்குமரன். இருவருமே சீமானுக்கு நெருக்கம் என்றாலும் வெற்றிக்குமரன் கை ஓங்கியிருந்தது. ஒருகட்டத்தில் மாறனுக்கும் வெற்றிக்குமரனுக்கும் இடையே நடந்த ஈகோ யுத்தத்தில் மாறனுக்கு கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் தரப்படாமல் கார்னர் செய்யப்பட்டார். நாதக முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் மாறனுக்கு பதில், மாறனின் ஆதரவாளராக இருந்த சாயல்ராமுக்கு காரைக்குடி நா.த.க-வை கவனிக்கும் பொறுப்பை பெற்றுக் கொடுத்தார் வெற்றிக்குமரன். ஜூனியர் சாயல்ராமுக்கு கீழ் சீனியர் மாறனைப் பணியாற்ற வைத்ததால் கட்சி நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது வெற்றிக்குமரனை கடந்த 2021-ல் சீமான் கட்சியிலிருந்து நீக்கிய பிறகு, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மாறனும், சாயல்ராமும் தற்போது மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கிறார்கள். இருவருமே காரைக்குடி தொகுதியில் தனித்த செல்வாக்குடன் இருப்பதால் பனிப்போர் இன்னமும் நீடிக்கிறது என்றனர். காரைக்குடி மாறன் தொடர்ந்து பேசியவர்கள், வழக்கமாக நவம்பர் மாதம் நடக்கும் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை மாவட்ட நிர்வாகிகள் இணைந்துதான் நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு காரைக்குடியில் நடந்தாலும் சென்னையிலுள்ள முன்னணி நிர்வாகிகளே முன்னின்று நடத்தினார்கள். சாயல்ராமும், மாறனும் எதிரும் புதிருமாக இருந்ததே இதற்கு பின்னணி எனவும் சொல்லப்படுகிறது என்றனர். ``சீமான் போட்டியிட திட்டமிடும் தொகுதியில் மாநில நிர்வாகிகள் இருவர் மோதிக்கொள்வது கட்சிக்கு நல்லதல்ல என வருந்துகிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள். நா.த.க சாயல்ராம் இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர்கள், காரைக்குடியில் நிலவும் இந்த பனிப்போரை தீர்க்காமல் எவ்வளவு பெரிய வியூகத்தை வகுத்தாலும் அது பலனளிக்கப் போவதில்லை. ஆனால் அண்ணன் சீமான் 'இணைந்து பணியாற்றச் சொல்லுங்கள்' என உத்தரவோடு நிறுத்திக் கொள்கிறார். இருவரையும் அழைத்துப் பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும் அல்லது தொகுதியை இரண்டாகப் பிரித்து இருவருக்கும் தனித்தனி பொறுப்புகளை வழங்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என்றனர். சோஷியல் இன்ஜினீயரிங்... ‘ஆபரேஷன் சவுத்’..! - கைகொடுக்குமா சீமானின் 2026 கணக்கு?

விகடன் 8 Dec 2025 8:07 pm

விமானத்தின் கழிப்பறை தண்ணீரே இல்லாமல் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?!

வீட்டில் நாம் பயன்படுத்தும் டாய்லெட்டில் தண்ணீர் தான் கழிவுகளை அடித்துச் செல்லும். விமானத்தில் தண்ணீர் இல்லை மாறாக காற்று தான் அந்த கழிவுகளை எடுத்துச் செல்கிறது. காற்று எப்படி கழிவுகளை எடுத்துச் செல்லும் என்று தானே யோசிக்கிறீர்கள், இது எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்தும் விமானக் கழிவுகள் வானத்திலேயே வெளியேற்றப்படுகின்றனவா? என்பது குறித்தும் இங்கே விரிவாகப் பார்க்கலாம். பலரும் விமானக் கழிவுகள் வானத்தில் பறக்கும்போதே வெளியேற்றப்படுவதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அங்கே நடப்பதே வேறு! விமானத்தில் அதிக அளவு தண்ணீரை எடுத்துச் செல்வது விமானத்தின் எடையை அதிகரித்துவிடும். எனவே விமானங்களில் 'வெற்றிடக் கழிவறை' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குப்பைகளை உறிஞ்சும் 'வாக்குவம் கிளீனர்' செயல்படும் அதே டெக்னிக் தான் இங்கேயும் உள்ளது. Flight அதாவது விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறக்கும்போது, விமானத்திற்கு வெளியே உள்ள காற்றழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் பயணிகளின் வசதிக்காக விமானத்திற்கு உள்ளே காற்றழுத்தம் அதிகமாகப் பராமரிக்கப்படும். பர்டூ பல்கலைக்கழகத்தின் வானூர்தி மற்றும் வானியல் பள்ளியின் தலைவரான விண்வெளி பொறியாளர் பில் கிராஸ்லி கூற்றுப்படி, பயணிகள் கழிவறையில் 'Flush' பட்டனை அழுத்தும் போது, கழிவுத் தொட்டிக்கும் வெளிப்பக்கத்திற்கும் இடையே ஒரு சிறிய வால்வு திறக்கப்படுகிறது. அப்போது, விமானத்திற்கு உள்ளே இருக்கும் அதிக அழுத்தக் காற்று வேகமாக கழிவுகளை உறிஞ்சிக்கொண்டு, விமானத்தின் அடியில் உள்ள தொட்டிக்கு தள்ளிவிடுகிறது. கழிவுகளை உறிஞ்சுவதற்காகவே மோட்டார்கள் (Vacuum Pumps) விமானத்தின் கழிவறையில் பொருத்தப்பட்டிருக்கும். விமானம் குறிப்பிட்ட உயரத்திற்குச் சென்ற பிறகு, இந்த மோட்டார் நின்றுவிடும். அதன்பின் இயற்கையான காற்றழுத்தமே வேலையைத் தொடரும். அனைத்து கழிவுகளும் விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பெரிய சேகரிப்புத் தொட்டியில் சேமிக்கப்படுகின்றன. விமானம் தரையிறங்கிய பிறகே, சிறப்பு வாகனங்கள் மூலம் அந்தத் தொட்டி சுத்தம் செய்யப்படும் என்று பில் கிராஸ்லி கூறியிருக்கிறார். விமான பயணத்தின்போது leggings அணிவது ஏன் ஆபத்தானது தெரியுமா? - பாதுகாப்பு நிபுணர்கள் சொல்வது என்ன?

விகடன் 8 Dec 2025 7:56 pm

ஜஸ்டின் ட்ருடோவுடனான உறவை உறுதிப்படுத்திய பாப் பாடகி

கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோயரை கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரியுடன் ஜஸ்டின் ட்ரூடோ டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அதுபற்றி இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்தநிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை இன்ஸ்டகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு கேத்தி பெர்ரி உறுதிப்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் […]

அதிரடி 8 Dec 2025 7:30 pm

ராமநாதபுரத்தில் 54 காலிப்பணியிடங்கள்; சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டும்தான்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பு. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை அறிந்துகொள்ளலாம்.

சமயம் 8 Dec 2025 7:20 pm

மனதைக் கொள்ளை கொண்ட பாட்ஷா - படம் இமயம் ஏறியது எப்படி?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் எழுபத்தைந்து வயதை நெருங்கி விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,170 படங்களுக்கு மேல் நடித்து,பல இளைஞர்களின் மனதில், பாலாபிஷேகம் செய்கின்ற அளவுக்குப் பசுமையாய்த் தங்கி விட்டவர்! தன் ஐம்பது ஆண்டு காலத் திரைப்பட  வாழ்வில்,பல சாதனைகளைப் புரிந்து,பல விருதுகளைப் பெற்றவர்!அவரின் பல கதாபாத்திரங்கள் மனதை நிறைத்தாலும்,மேஜிக் காட்டி மனதைக் கொள்ளை கொண்ட பாத்திரம் பாட்ஷாதான்!     “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!”என்ற பஞ்ச் வசனம் சிறப்புப் பெறக் காரணமே அதன் பாசிடிவ் அப்ரோச்தான்! நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் போராட ஆரம்பிக்கும் இரண்டு இளைஞர்களில் ஒருவர் அநியாயமாகக் கொல்லப்பட, உயிர் நண்பர் கொலைக்குப் பழி வாங்கி விட்டு, சமுதாயத்தைச் சீரழிக்கும் வில்லன் கூட்டத்திற்கு வில்லனாக மாறும் பாத்திரந்தான் நாயகன் ரஜினியுடையது.      “உனக்கும் எனக்குந்தான் சண்டை! ஒண்ணு நீ சாகணும்!இல்ல நான் சாகணும்! உன்னோட ஆட்கள் சாகணும்! இல்ல என்னோட ஆட்கள் சாகணும்! அப்பாவிப் பொது மக்கள் இல்லை ஹெ..ஹெ..ஹெ!”என்ற அந்த வசனமே மேஜிக்காகி, மனதில் நிற்கிறது. எந்தச் சந்தர்ப்பத்திலும், சம்பந்தமேயில்லாத எந்த ஒருவரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணமே, படத்தின் அச்சாணி! இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அதைப் படம் முழுவதும் மெயிண்டைன் செய்ததாலேயே படம் இமயம் ஏறியது! பாட்ஷா நூறு பேர் எதிர்த்து வந்தாலும்,கதாநாயகன் ஒருவனே தனித்து நின்று அடித்து வெல்வதாக, ரசிகர்கள் காதுகளில் பூ சுற்றி வந்ததற்கு மாறாக, எப்பொழுதும் நான்கைந்து உதவியாளர்களுடன், எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கையில் அவர்களும் இறங்கிச் சண்டை போடுவதாகக் காட்டியது, எதார்த்தத்தை உணர்த்துவதாக இருந்தது. அந்த இயல்பு நிலை, படத்தைச் சற்றே ஆழமாகப் பார்ப்போருக்கு ஆறுதல் தருவதாக அமைந்தது! ‘ஷோலே’ படக் கொள்ளையர்கள் போலல்லாமல், மும்பையின் இயற்கைக்கேற்றவாறு ரகுவரன் க்ரூப் பைக் காட்டுவது படத்தின் மற்றொரு சிறப்பு! அதனாலேயே அது அனைவரின் மனத்திலும் தங்கி விட்டது. பாட்ஷா வில்லனின் கையில் சிக்கிக் கொண்ட தன் தந்தையின் இறுதி நேர வேண்டுகோளை ஆணையாக ஏற்று, அவ்வாறே சித்தியின் மூலம் பிறந்த தம்பி,தங்கைகளின் வாழ்க்கை சிறப்புறுவதற்காகத் தன் குழுவைக் கழற்றி விட்டு விட்டு, ஆட்டோ ஓட்டியாக எளிமைக்குத் திரும்பும் நாயகன், அந்த எளிமை காரணமாகவே நம் இதயங்களில் ஊடுருவுகிறார். ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியேற்றி, அதனை உணர்த்தும் விதமாக வீட்டிலும் விளக்கேற்றும் விதம்,இதயத்தில் நிற்கிறது!மூத்த தங்கையின் வாழ்க்கை சிறக்க வேண்டி, அவள் காதலனின் தந்தை காலிலும் விழத் தயாராகும் அண்ணனாக, தங்கைகளின் வாழ்க்கையே லட்சியம் என்பதையும், அதற்காக எவ்வளவு இறங்கிப் போகவும் தயாராக இருப்பதையும் செயலில் காட்டுகையில்,நம் நெஞ்சங்களை நெகிழ்த்தி, அவர் உயரே போய்விடுகிறார்! தன்னையே நினைந்து உருகும் காதலியைக் கூடத் தள்ளி வைத்தே பார்ப்பதிலிருந்தே, தன் வாழ்க்கை தனக்கானதைக் காட்டிலும், மற்றவர்களுக்கானதே என்று நிரூபிக்கிறார். அதை மேலும் மெய்யாக்கும் வண்ணம், தன் தம்பிக்காக லோகல் ரௌடி எலக்ட்ரிக் போஸ்டில் கட்டி அடித்த போதும், சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளும் அவர், தங்கையின் உதட்டோரம் அரும்பிய இரத்தத்தைக்கண்டு எரிமலையாக வெடிப்பது,பாசத்தின் உச்சம்!” உள்ள போ” என்று தன் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்து விட்டு,அதன் பிறகு அந்த ஆனந்த ராஜையும் அவர் ஆட்களையும் பிரித்து மேய்வது,நேர்மை தவறுவோர்க்குக் கொடுக்கும் தண்டனை!அதுதான் சூப்பர்! பாட்ஷா தங்கையின் மருத்துவ சீட்டுக்காக,அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவரிடம் தன் கடந்த காலத்தைச் சொல்ல,அவர் வேர்த்து வியர்த்து அடி பணிய, “எப்படீண்ணா சீட் கெடச்சுது?” என்ற தங்கையிடம்,”உண்மையைச் சொன்னேம்மா!” என்பது நல்ல தருணம்! மழையில் நக்மா நனைந்தபடியே காத்துக் கிடப்பது, காதலின் ஆழம்! என்றால், தன்னைக் கொல்வதற்காக நக்மா அப்பா விரிக்கும் வலையிலிருந்து தப்பிப்பது தந்திரத்தின் உச்சம்! இறுதியாக, தனது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் மூலம் வில்லனைச் சிக்க வைத்தாலும், தன் குடும்பத்தாரைப் போராடிக் காப்பாற்றி விடுகிறார் ரஜினி. படம் இனிதே முடிந்தாலும்,கடந்த கால நிகழ்வுகள் கசப்பானவை!ஆனாலும் வீரத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் விவேகமுடன் அதனைக் காட்டியும்,அடக்கி வாசிக்க வேண்டிய இடங்களில் அமைதி காத்தும்,ஒரு கதாநாயகனாக தன் ரசிகர்களுக்குப் பலவற்றையும் போதித்து விடுகிறார் சூப்பர் ஸ்டார். எனவேதான் எல்லா வயதினரும் பாட்ஷாவின் அதி தீவிர ரசிகர்களாகி விட்டனர். என்னைப் பொறுத்தவரை,ஒரு படம் நம் மனதுக்குப் பிடித்துப் போக, மேலும் சில காரணங்களும் உண்டென்றே தோன்றுகிறது.1995 ல் வெளியான இது,ரஜினியின் 94 வது படம் என்றாலும்,அவர் முற்றிய இளமையான 45 வயதில் நடித்த படம் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.பாட்ஷா எனக்கு மேலும் பிடித்துப் போக,அப்பொழுது எனது அகவையும் 42. அத்தோடு,ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டப்பணிகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்த எனக்குக் களப்பணி உதவியாளர்களாக, பட்ட தொழிற்படிப்பு படித்த இளைஞர்கள் அறுவர் உடனிருந்தனர். ‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்! நாங்கள் அனைவரும் ஒன்றாகத் திட்டப்பணி நடைபெறும் இடங்களுக்குச் செல்கையில், அந்த அறுவரும் பின் தொடர, என்னை ரஜினியாக உருவகப் படுத்திக் கொண்டதும் உண்டு. அத்தோடு மனதில்,பாட்ஷாவைப் போலவே நாமும் நம் மக்கள் நலம் பெற உழைக்க வேண்டுமென்ற உத்வேகமும் இருந்தது. இவையெல்லாங்கூட பாட்ஷா மனதைக் கவரக் காரணங்களாக அமைந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு! இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பாட்ஷா ஒளிபரப்பப் படுகையில், முன்னதான ஒரு மணி நேரத்தை விட்டு விட்டாலுங்கூட, ”உள்ள போ!”வசனத்திலிருந்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.’நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தையும், பாட்ஷாவையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளேன்! முன்னது - உண்மைக் காதலுக்காக! பின்னது- உயர்ந்த சமுதாய நோக்கத்திற்காக! -ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி தேர்தல்

விகடன் 8 Dec 2025 7:13 pm

யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க நிவாரணப் பொதிகள்! மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமெரிக்க விமானம் இன்று காலை தரையிறங்கியது. குறித்த நிவாரண பொதிகள் அமெரிக்கா இராணுவத்தினரால் இலங்கை விமானப்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இதனொரு கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நிவாரணப் பொதிகள் இன்று மதியம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் விமானப் படை அதிகாரிகளால் கையளிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்துக்கென 192 பிறீமா நூடில்ஸ் பெட்டிகளும் 150 கோதுமை மா மூடைகளும் கையளிக்கப்பட்டது.

அதிரடி 8 Dec 2025 7:11 pm

வீசிய முதல் பந்திலேயே விக்கெட்; தமிழ்நாட்டுக்காக அசத்தும் திருநெல்வேலி வீரர் இசக்கிமுத்து!

சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து, சௌராஷ்டிராவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார். இசக்கி முத்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சௌராஷ்டிரா அணியை தமிழக அணி இன்று எதிர்கொண்டது. சௌராஷ்டிரா அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்திருந்தது. ஜெகதீசன் தலைமையிலான தமிழ்நாட்டு அணியில் இன்று 23 வயதான இசக்கி முத்து அறிமுகமாகியிருந்தார். பவர்ப்ளே முடிந்த உடனே 7 வது ஓவரை இசக்கிமுத்துவுக்கு கொடுத்தனர். வீசிய முதல் பந்திலேயே ராணாவையும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய் கோஹில் என்பவரையும் இசக்கிமுத்து வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய இசக்கி முத்து 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இசக்கிமுத்து திருநெல்வேலியின் களக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக ஆடியிருந்தார். கடைசி சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சீசன் 'Emerging Bowler of the Season' விருதையும் வென்றிருந்தார். இசக்கி முத்து இப்போது தமிழ்நாடு அணிக்கும் சிறப்பாக அறிமுகமாகியிருக்கிறார். வரவிருக்கும் ஐ.பி.எல் ஏலத்திலும் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட நான்கைந்து அணிகளின் ட்ரையல்ஸூக்கும் சென்று வந்திருக்கிறார்.

விகடன் 8 Dec 2025 7:02 pm

இந்திய ரயில்வே ஸ்மார்ட் மூவ்.. ஜான்சி பிரிவில் நேர சேமிப்பு முயற்சி.. லூப் லைனில் இரட்டிப்பாகும் வேகம்!

ஜான்சி டிவிசனில் லூப் லைனில் ரயிலின் வேகத்தை அதிகரித்து உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் பயண நேரம் குறைந்து ரயில்வே துறை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 8 Dec 2025 6:55 pm

ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க- இயக்குநர் ஜீத்து ஜோசப்

'த்ரிஷ்யம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், பாலிவுட் மட்டுமின்றி மற்ற சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள ஹீரோக்களும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள். 'த்ரிஷ்யம்' அப்படி நடித்தால் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களை அவர்கள் இழக்க நேரிடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு இயக்குநராக நான் வித்தியாசமான படங்களை எடுக்க விரும்புகிறேன். ஹீரோக்கள் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டு நடித்தால் நன்றாக இருக்கும். அதேபோல நடிகர்கள் தற்போது பான் இந்தியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரே விதமான கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சலிப்படைந்து விடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 8 Dec 2025 6:36 pm

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு உறவு நீடிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா். இஸ்ரேலில் இந்திய பத்திரிகையாளா்களுடன் கலந்துரையாடிய அவா்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனா். அவா்கள் கூறியதாவது: ராணுவம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இது மேலும் வலுப்பெற்று வருகிறது. இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மிகச்சிறந்த முன்னெடுப்பு. இதில் இந்தியா, சவூதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் […]

அதிரடி 8 Dec 2025 6:30 pm

HDFC Life’s ‘Life Ki Script’ campaign highlights financial readiness for life’s surprises

Mumbai: HDFC Life, a life insurance companies, has rolled out ‘Life Ki Script’, a digital-first campaign featuring actor Cyrus Broacha. This campaign aims to emphasise the importance of being financially prepared to deal with life's unexpected plot twists.The campaign follows from the key insight that Indians are not financially well-prepared to handle life’s uncertainties and there’s a significant gap of 26 points in terms of their actual readiness v/s how ready they think they are, largely due to lack of action towards financial planning.The campaign showcases three films, promoting life insurance product categories viz. Term, Savings and Retirement, and how they enable individuals plan for various long-term goals based on their life stage and financial needs. The campaign films creatively use relatable and humorous narratives to drive home the point. The campaign is being promoted on various digital and social media platforms for 5 weeks, with select impact properties and innovative elements.[caption id=attachment_2483767 align=alignleft width=300] Pritika Shah [/caption] Pritika Shah – Head of Marketing, HDFC Life said, “Just like a well-written film script gives characters the strength to face any plot twist; a solid financial plan enables you to face the uncertainties of life. With ‘Life Ki Script,’ we have created fun, cinematic ads to encourage individuals to take charge of their financial journey with life insurance products depending on their life stage and financial needs. Whether you are saving for the future, protecting your family’s financial future, or just planning for a comfortable retirement, HDFC Life has solutions to keep you ready for whatever comes next.” HDFC Life added that it has always maintained an awareness-led approach to connect with the audiences. In addition to the ‘Life ki Script’ campaign, the Company has recently launched insurance awareness series for Term and Retirement product categories. ‘Term FAQ series’ with actor Anup Soni and ‘Retirement FAQ series’ with actor Shishir Sharma are two such initiatives aimed at creating greater understanding about the product categories.https://www.youtube.com/playlist?list=PLPV2NFEDCbD0-2AYvqUNc8I271lzamgFv&si=7EJF3ManUiKQKI2Z

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 6:28 pm

பலாலியில் நிவாரணப் பொருட்களுடன் தரையிறங்கியது அமெரிக்க விமானம்

அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று உதவிப் பொருட்களுடன் இன்று காலை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. சிறிலங்காவில் அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இந்த விமானம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தின் இரண்டு விமானங்கள், சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக நேற்று கட்டுநாயக்க விமான

புதினப்பலகை 8 Dec 2025 6:26 pm

Maars Communicates appointed strategic communications partner for BabyOrgano

Mumbai: Maars Communicates, a PR and communications agency, has been appointed as the official strategic communications partner for BabyOrgano, a leading Ayurvedic wellness brand for children. The announcement comes on the heels of BabyOrgano raising ₹20 crore ($2.4 million) in a pre-Series A funding round led by RPSG Capital Ventures with participation from Sauce.vc.The fresh capital will fuel BabyOrgano’s expansion plans across product development, marketing, and operations, with the brand targeting ₹100 crore in revenue by FY27. With a community of over one million parents and an impressive 40% repeat purchase rate, BabyOrgano continues to solidify its position as one of India’s most trusted names in holistic child wellness. Mausam Shah, Founder & Director – PR, Maars Communicates, said, “BabyOrgano stands at the intersection of trust, tradition, and innovation. Their mission aligns perfectly with the purpose-driven brands we champion at Maars Communicates. We are excited to shape their narrative, amplify their vision, and elevate Ayurveda-led child wellness into mainstream conversations.” Aayush Shah, Co-Founder & Director – Digital & Business Development, Maars Communicates, added, “At Maars, we prioritise brands that create meaningful impact. BabyOrgano’s growth reflects strong values and deep consumer trust. We look forward to strengthening their reputation and leading high-impact storytelling as they expand across India.” Ripul Sharma, COO of Natureovedic Consumers Pvt Ltd, said, “As BabyOrgano makes strides in the kids’ care space, the strategic expertise of Maars Communicates will be an immense asset. BabyOrgano is a leading kids’ D2C health, wellness and personal care brand built on innovative, science-backed Ayurvedic products. Partnering with Maars Communicates enables us to leverage their deep experience and strong industry relationships, creating a powerful synergy that aligns with our vision for accelerated and impactful growth.” Maars Communicates, founded by Mausam and Aayush Shah, manages communications for over 50 retainer clients across real estate, corporate, lifestyle, entertainment, AI studios, and the creator economy. The agency has led PR for marquee brands including MX Player, EPIC Channel, Lux Golden Rose Awards, Event Capital’s IPs like WindMill Festival and PetFed, and kids’ brands like R for Rabbit.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 6:20 pm

யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டித்வா புயலால் பேரழிவுக்கு இலங்கை மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் , பலவேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு நிவாரண […]

அதிரடி 8 Dec 2025 6:16 pm

Isa Logistics’ refreshed logo symbolises transformation into a complete, future-ready partner for moving goods

MUMBAI: Isa Logistics, which works in the business of moving goods, today announced the launch of a dynamic new brand identity and logo. This rebranding reflects the company’s strategic change, moving from a company that offered just one kind of service to a complete partner providing a full range of solutions. The new logo represents Isa Logistics' expansion into comprehensive offerings, including running large storage facilities, managing global shipping, operating local storage and transport, and organizing the entire delivery process from start to finish. This new look confirms its place as a provider of total solutions.The new logo's design is clean, modern, and deliberately created to capture the core values of Isa Logistics: forward thinking, quick action, and continuous improvement. This new look is designed to be easily recognised everywhere—online, on vehicles, and in all company locations—making it simple and effective across the entire business globally. By launching this modern and confident identity, Isa Logistics aims to strengthen its market appeal, boost its visibility, and reinforce its reputation as a trusted, forward-looking partner in a highly competitive industry.This visual change the company added is a sign of its dedication to fresh ideas, being environmentally conscious, achieving high performance, and always putting the customer first as it moves into a period of rapid expansion. Santosh Shetty, CEO Isa Logistics, said, Our new identity reflects who we are today and the future we are building. Over the years, Isa Logistics has grown into a multi-vertical logistics partner, and this evolution needed a visual expression that matches our ambition. The refreshed logo represents our focus on technology, expansion, and delivering value across the entire supply chain. It is a symbol of transformation, resilience, and our commitment to shaping a smarter and more connected logistics ecosystem. The company explains that it believes that this new identity not only positions it for faster growth but also reinforces its central mission of providing outstanding, complete service to its customers. With this powerful new logo, Isa Logistics is confidently signaling its commitment to building a stronger, smarter, and more efficient way to handle the flow of goods—today and in the future.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 6:12 pm

redBus debuts user-generated travel discounts to deepen engagement and expand new-user growth

MUMBAI: redBus, an online bus ticketing platform, has launched ‘Coupon Creator’, a first-of-its-kind personalised digital feature that allows users to create and share their own personalised redBus coupons, turning travel into a new way to celebrate special occasions. For example, brides, grooms or their friends can create coupons for guests, matching their wedding hashtags helping them travel easily; or students can invite friends to travel for college fests.● Available exclusively on the redBus Android app, the feature lets any user create a custom coupon code and share it with multiple recipients. Each coupon is created at no cost to the sender and offers attractive discounts for recipients - 15% off (up to ₹400) for new users and 2% off (up to Rs. 400) for repeat users. With Coupon Creator, redBus introduces a simple yet thoughtful way to share life’s celebrations through travelUsers can easily create a personalized coupon in just a few steps by selecting a theme based on the occasion for travel - from birthdays and weddings to college fests or general celebrations - creating a unique coupon code, and sharing it instantly with friends or family to help them save on their bus journeys. Each user can create only one coupon per month, ensuring exclusivity and meaningful use, while the created coupon remains valid for 30 days from the date of creation.How to Create a Coupon on redBusOpen the redBus Android app.Go to the “Coupon Creator” feature on the home pageChoose an occasion theme, customising offer cards— select from options like Birthday, Wedding, College Fest, and Celebrations.Create a unique offer code (for example, TRAVELHOME) and give your contact number.Share the coupon instantly with multiple friends or family members so they can save on their bus journeys through WhatsApp.When a user creates a coupon code on redBus, it is securely processed through the platform’s backend system, which tracks creator and recipient details to ensure seamless redemption. The technology automatically distinguishes between new and existing users, applying the relevant discount accordingly.[caption id=attachment_2483756 align=alignleft width=200] Pallavi Chopra [/caption] Pallavi Chopra, CMO redBus said, “At redBus, we’re reimagining what it means to share experiences, not just tickets. With Coupon Creator, we’re launching an industry first feature which provides the most personalised coupon creating and sharing experience. This offering is novel because users can create unique codes, which are meaningful to them at an individual, family, or friend group level, providing the ultimate in hyper-personalised customisation. redBus has always been at the forefront of using technology to launch pioneering, and never before seen features. The innovation opens a fresh avenue for customer engagement, strengthening how people connect with the brand while deepening redBus’ role in shaping India’s evolving digital travel ecosystem.” With this launch, redBus continues to lead innovation in the travel space, introducing technology-driven features that connect people in more personal and memorable ways.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 6:11 pm

ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பசுமையான இயற்கை அழகு, வனப்பகுதிகள், தெளிவான கடற்கரைகள் மற்றும் மலைகள் என இயற்கையின் அருளால் ஆசிர்வதிக்கப்பட்ட கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு விடுமுறை நாட்களில் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம். பசுமைக் காடுகளும், சலசலத்து ஓடும் அருவிகளும், நெடிதுயர்ந்த மலைச் சிகரங்களும், வண்ண மலர் கூட்டங்களும் நிறைந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இருக்கத் தோன்றும் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கேரளாவின் நீண்ட அழகிய கடற்கரைகள் நிறைந்த வர்கலாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சோழன் டிராவலைச் சேர்ந்த விஜய் மற்றும் ரவி செய்த உதவிகள் மறக்க முடியாதவை. வர்கலா, கேரள தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 51 கிமீ தொலைவில் அமைந்த அழகிய கடற்கரை நகரம். வட இந்தியாவுக்கு கோவா போல தென் இந்தியாவுக்கு வர்கலா என்று இங்குள்ள மக்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். கீச் கீச் என்று சப்தமிட்டபடி பறவைகள் பறந்து செல்ல. நம்மை சுற்றி பச்சை பசேல் என இருக்கும் இடத்தின் வழியே மலைக் குன்றுகள் சூழ காட்சியளிக்கும் அரபிக்கடல் கடற்கரையில் காலார நடந்து செல்லும் இனிமையான அனுபவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது ஒவ்வொருவரையும் நோயிலிருந்து ஆரோக்கியமாக மாற்றி, சுத்தமான மாசுபடாத காற்றைச் சுவாசிக்கச் செய்யும் ஒரு இடமாகும். நாரதர் தனது வல்கலமை (மரப் பட்டையால் செய்யப்பட்ட ஆடை) இந்த இடத்தில் எறிந்ததாகச் சொல்லப்படுகிறது.  ​வல்கலம் எறியப்பட்ட இந்தக் கிராமத்திற்குச் சென்று வந்தால், பிரஜாபதிகளின் பாவம் நீங்கும் என்று நாரதர் கூறியபடியே, பிரஜாபதிகள் தங்கள் பாவத்தை நீக்கிக் கொண்டு, இந்தக் கிராமத்திற்கு வர்கலா என்று பெயரிட்டனராம்.  ​எனவே, இந்த இடம் ஆன்மீக நடைமுறைகள் மற்றும் இயற்கையான மூலிகைகளால் நிறைந்து, அனைவரையும் அமைதி நிலையில் வைத்திருக்க உதவுகிறது.   வர்கலாவில் சிவகிரி மடம்,  ஜனார்த்தன ஸ்வாமி கோயில்,  வர்கலா பீச், பாபநாசம் பீச், கபில் ஏரி,  வர்கலா சுரங்கப்பாதை, மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. வர்கலா பீச் அமைதியான அரபிக் கடலிலிருந்து வெண்நுரைகளுடன் கரையைத் தழுவிச் செல்லும் அலைகள், கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் சிறிய குன்றுகள்,  நீலநிற வானம் என்று இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பீச் சுற்றுலா .பயணிகளை ஈர்க்கிறது. வர்கலா கடற்கரையில் பாராசூட், படகு  சவாரி போன்ற  பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம். ஜனார்தனன் கோயில் இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது. மிகவும் அமைதியான சூழவில் திருவிளக்குகளின் ஒளியிவ் பகவான் விஷ்ணுவை வணங்கியது பரவசமாக இருந்தது  கபில் பீச் அமைதியான மற்றும் அழகான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். கூட்டம் அதிகம் இல்லாத கடற்கரையைத் தேடுபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். கடற்கரையும், அதன் அருகில் ஓடும் பேக்வாட்டர்ஸையும் ஒருங்கே கொண்டுள்ளது.. அழகான சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காணலாம்.. ஜடாயு பார்க் ராமாயணத்தில், ஜடாயு (ராட்சத அளவிலான பறவை) பெரும் அசுரனான ராவணனுடன் சண்டையிட்டு இந்த இடத்தில் விழுந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இயற்கை பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும். இங்கு பிரம்மாண்டமான ஜடாயு பறவையின் சிலை முக்கியமான ஈர்ப்பு., கேபிள் காரில் மேலே ஏறும் வசதியும் உள்ளது.. நாங்கள் ஜடாயு மலை உச்சிக்கும் பயணம் செய்தோம். கேபிள் கார் மூலம் மலையின் மீது ஏறுவது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ​ ஜடாயுவின் அற்புதமான அமைப்பு உண்மையிலேயே மனதைக் கவரக்கூடியது. இந்த இடம் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. ​இங்கு இயற்கையின் அழகை உண்மையிலேயே அனுபவிக்க முடியும். அடிக்கடி மழை பெய்யும் மற்றும் மலையைச் சுற்றி குளிர்ந்த காற்று வீசும். ​மலை உச்சியிலிருந்து பசுமையான விரிந்து பரந்த காடுகளைக் காணலாம். நாங்கள் இங்கு சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும்போது பெருமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. கேபிள் காருக்காக ஒரு இடத்தில் காத்திருந்தோம். எங்களுக்கு முன் சென்றவர்களின் கேபிள் கார் பழுதடைந்துவிடவே பாதியிலேயே நின்று விட்டது.. மேலும் மழையும் வலுக்கவே மற்ற கேபிள் கார்களையும் நிறுத்தி விட்டாகள். வெகு நேரம் மலையின் மேல் காத்திருந்தோம். வெகு நேரம் கழித்து ஒரு மினி வேனில் அந்த குறுகிய மலைப் பாதை வழியாக கீழே அழைத்துச் செல்லப்பட்டோம். கொட்டும் மழையில் மலைச் சரிவுகளின் குறுகிய பாதையில் வண்டி ஒரு பக்கமாக சாய்ந்தவாறு மெதுவாகக் கீழே இறங்கியது. எங்களுக்கு வண்டியிலிருந்து இறங்கும் வரை திகிலாக இருந்தது. அழகான கடற்கரைகள், அமைதியான வனப்பகுதி, எங்கும் பசுமையான இடங்கள், உயர்ந்த மலைகள் ,குன்றுகள், கோயில்கள் மற்றும் கேரள உணவுடன் உபசரிக்கும் மலையாள சேட்டன்கள் என சற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது வர்கலா.. -வி. ரத்தினா ஹைதராபாத் தேர்தல்

விகடன் 8 Dec 2025 6:07 pm

விஜய் ஹசாரே விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா நிர்பந்திக்கப்பட்டனரா? - BCCI பதில்!

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் முதன்மையான ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் (Vijay Hazare Trophy), நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு ரோஹித் ஷர்மா இந்த ஒருநாள் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்ட நிலையில், விராட் கோலியும் தனது சம்மதத்தைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், இவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் தற்போது ஒருநாள் போட்டி வடிவத்தை மட்டுமே விளையாடுவதால், தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான பயிற்சியாக இது இருக்கும். Rohit Sharma with Virat Kohli முன்னதாக, தங்கள் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர வேண்டுமெனில், இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நிர்பந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இந்த நிபந்தனையை விதிக்கவில்லை என்று மறுத்துள்ளது BCCI. 'ரெவ்ஸ்போர்ட்ஸ்' (RevSportz) தளம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும்படி கோலி மற்றும் ரோஹித்துக்கு பி.சி.சி.ஐ நேரடியாக உத்தரவிடவில்லை. இது முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட முடிவுதான் என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார். பி.சி.சி.ஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அல்லது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என யாராக இருந்தாலும், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வீரர்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். Gautam Gambhir இந்த நேரடி அல்லது மறைமுகமான அழுத்தம் காரணமாகத்தான், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தோல்வியைச் சந்தித்த பிறகு, கோலியும் ரோஹித்தும் ரஞ்சி டிராபியில் விளையாடினர். விராட் கோலிதான் சிறந்த Clutch Player - பாராட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் எனினும், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், பேட்டிங் பிரிவில் ரோஹித்தும் கோலியும்தான் அணிக்கு முழுமையான நட்சத்திரங்களாகத் தொடர்ந்து பிரகாசிக்கின்றனர். பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட, இந்தக் கோலியும் ரோஹித்தும் ஒருநாள் போட்டியில் அதே ஆட்டத்தைத் தொடர வேண்டும் என்று பாராட்டு தெரிவித்தார். ஆனால், 2027 ஒருநாள் உலகக் கோப்பை அணியின் அமைப்பு குறித்து எந்தக் குறிப்பையும் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்ற பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீர், அவர்கள் (ரோஹித் மற்றும் கோலி) உலகத் தரம் வாய்ந்த வீரர்கள், அவர்களின் அனுபவம் ஆடை மாற்றும் அறையில் (Dressing Room) மிகவும் முக்கியம். அவர்கள் நீண்ட காலமாக இதைச் செய்து வருகிறார்கள். 50 ஓவர் வடிவத்தில் அவர்கள் தொடர்ந்து அதேபோல் ஆடுவார்கள் என்று நம்புகிறேன், அது முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். ``விராட், ரோஹித், அஸ்வின் ஓய்வுபெற'' - கம்பீர் மீது முன்னாள் வீரரின் பகீர் குற்றச்சாட்டு!

விகடன் 8 Dec 2025 6:05 pm

புதுச்சேரியில் விஜய் வருகையால் தனியார் பள்ளிக்கு விடுமுறை! ஏன் தெரியுமா?

புதுச்சேரிக்கு விஜய் வருகை தர உள்ளதால் நிலையில் நாளை 9ந் தேதி தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 8 Dec 2025 6:04 pm

நீண்ட நாள் நண்பருடன் நிச்சயதார்த்தம்; பிக் பாஸ் ஜூலி கரம் பிடிக்கப்போவது இவரைத்தான்!

சென்னையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த நர்ஸ் மரியானா ஜூலியை, தமிழக அளவில் பிரபலமாக்கியது, கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். தன்னெழுச்சியாக சென்னை மெரினாவில் திரண்ட அந்தக் கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்ட மரியானாவை வீரத் தமிழச்சியாக, அன்பு சகோதரியாக கொண்டாடியது சோஷியல் மீடியா சமூகம். ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த பிரபல்யத்தால் அடுத்த வருடமே விஜய் டிவியின் பிக் பாஸ் வீட்டுக் கதவும் திறந்தது. இன்னும் பிரபலமானார். ஜூலி விளம்பரம், சீரியல், சினிமா, ஒரு ரவுண்டு வரத் தொடங்கியவரைப் பற்றி சமீப காலமாக எந்தவொரு பேச்சும் இல்லாதிருந்த சூழலில், திடீரென தன் திருமணம் குறித்து அறிவித்திருக்கிறார். தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களைப் பகிர்திருக்கும் ஜூலி மாப்பிள்ளை முகத்தை மட்டும் காட்டவில்லை. இந்நிலையில், ஜூலியின் வருங்காலக் கணவரைத் தேடி விசாரணையில் இறங்கினோம். ''அவரு பேர் முகமது. ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வர்றார். விளம்பரப்படங்களும் எடுப்பார். சமீப சில வருடங்களாக ஜூலிக்கும் அவருக்குமிடையில் நட்பு இருந்தது. அது எப்ப காதலாச்சுன்னு தெரியலை, இப்ப முறைப்படி உலகத்துக்கு அறிவிசிருக்காங்க'' என்கின்றனர் ஜூலி மற்றும் அவரின் வருங்காலக் கணவர் முகமது இருவரையும் தெரிந்த சிலர். ஜூலியின் வருங்காலக் கணவரான முகமதுவையே தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னோம். ''ரொம்ப நன்றிங்க என்றவர், கல்யாணம் குறித்து எல்லாருக்கும் சீக்கிரமே ரெண்டு பேரும் சொல்றோம். இப்ப ஷுட்டிங்ல இருக்கேன். முடிஞ்சதும் டீடெய்லா பேசறேன் என்றபடி திருமணத் தகவலை உறுதி செய்தார்.

விகடன் 8 Dec 2025 6:03 pm

85 மெ.தொன் நிவாரணப் பொருட்களுடன் வந்தது சீன விமானம்

டிட்வா புயலினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக, சீனா 85 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது. உயிர்காப்பு கவசங்கள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் விரிப்புகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஏற்றிய சரக்கு விமானம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கு நடந்த நிகழ்வில், நிவாரணப் பொருட்களை, சீனத் தூதுவர் கீ சென்ஹொங்,

புதினப்பலகை 8 Dec 2025 6:02 pm

தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மீண்டும் போர் பதற்றம்.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது. தாய்லாந்தின் ராணுவம் கம்போடியாவில் உள்ள இராணுவ இலக்குகளை நோக்கி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சமயம் 8 Dec 2025 5:58 pm

AU Small Finance Bank launches humorous new campaign to drive smarter banking

MUMBAI : AU Small Finance Bank (AU SFB), a Small Finance Bank and the first to receive in-principle approval from the Reserve Bank of India to transition into a Universal Bank, has unveiled its new brand campaign carrying forward the brand’s core theme of Soch Badlo, aur Bank Bhi (Change Your Thinking, Change Your Bank). Featuring Bollywood actors Ranbir Kapoor and Rashmika Mandanna, the campaign marks a creative departure from its predecessor, with McCann delivering a fresh, entertainment-forward interpretation of the core messaging that repositions AU SFB's brand promise for a broader audience.The campaign relies on humour, everyday conversations, and relatable character moments to drive its central premise: encouraging viewers to critically examine whether their current bank truly meets their financial needs. Rather than hard-selling AU SFB's services, Ranbir and Rashmika function as subtle catalysts within these narratives, gently prompting audiences to consider more rewarding banking choices. By grounding the message in authentic, recognizable scenarios, the campaign invites consumers to rethink their banking relationships and explore what AU SFB offers as an alternative.The communication highlights AU's strengthened product propositions across consumer and business segments. On the consumer side, the bank offers higher interest rates with monthly payouts on AU Savings Accounts, alongside lifestyle benefits and merchant offers on AU Debit Cards. For businesses, AU's comprehensive Current Account suite integrates lending, payment collections, merchant solutions, and Trade & Forex services - all designed to consolidate banking operations in one platform.Central to this offering are the AU 0101 App and AU 0101 Business App, which bring branch-equivalent service to mobile devices. Both platforms deliver seamless digital banking, real-time account visibility, integrated money management, quick payments, collections and service requests, positioning AU's digital infrastructure as a key differentiator in a market increasingly demanding convenience without compromise. Sanjay Agarwal, founder, MD, CEO, AU Small Finance Bank, said, This campaign, based on core thought of 'Soch Badlo, aur Bank Bhi', inspires customers to reflect on their banking choices, as we bring the message in a more contemporary, relatable, and entertaining way. Ranbir and Rashmika help us convey this with honesty and charm, while our product strengths in Savings and Current Accounts provide strong reasons to make the switch. This campaign reinforces our commitment to offering customers a smarter, more intuitive banking experience as we prepare for our transition into a Universal Bank. Prasoon Joshi, chief creative officer, CEO McCann Worldgroup India said, “It’s about exploring the consumer’s evolving mindset through a lens of warmth and relatability. The team wanted to move away from being transactional and find the humour in everyday human truths. The films are rooted in the texture of daily life. The brand team through this campaign created an invitation for people to pause and rethink their banking relationship, but with a smile.” The films have been directed by Hemant Bhandari and produced by Chrome pictures. The campaign will run across television, digital platforms, social media, and print, strengthening AU’s reach across customer segments. With this renewed creative push, AU reinforces its ambition to be the preferred banking partner for individuals and businesses across India.TVC Links:• Film 1:https://youtu.be/V6bv1hjD-P0• Film 2:https://youtu.be/BSdWVo1Y1U4

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 5:54 pm

Aayush Vyas joins Snabbit as Head of Brand Marketing

Mumbai: Snabbit has named Aayush Vyas as its Head of Brand Marketing.Vyas joins the company with over 12 years of experience in marketing and advertising, bringing strategic thinking, creative innovation, and high-impact execution to the role.Prior to Snabbit, he was Senior EVP – Brand Solutions & Head of Business – South & Emerging Markets at Schbang, where he was associated since 2022. Over his career, he has worked with leading companies including White Owl, DViO Digital, and Xebec Communications, contributing to the success of more than 75 brands across sectors such as FMCG, pharma, entertainment, CPG, retail, fashion, and gaming.Sharing his excitement about the new role on LinkedIn, Vyas said, “A new chapter begins as Head of Brand Marketing at Snabbit! Every once in a while, you come across a problem that feels too obvious, too universal, and too close to everyday life to ignore. Snabbit sits right there; at the intersection of convenience, dignity, speed, and the way modern India actually lives. This move is not just about a role. It’s about energy. About momentum. About building & shaping a category that’s only now finding its language.” At Snabbit, Vyas will focus on shaping the brand’s communication, driving category leadership, and developing integrated marketing strategies to deepen engagement with India’s evolving consumer base.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 5:48 pm

ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடைகள்

ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி வாழ்க்கைகளை செழிக்கச் செய்வதே உண்மையான வெற்றியாக கருதுகிறது. பல தசாப்தங்களாக, சமூகப் பொறுப்பை ஒரு வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, ஜி.ஆர்.டி தனது வளர்ச்சியை சமுதாயத்தை மேம்படுத்தும் மற்றும் அக்கறை, கருணையின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் பல்வேறு முயற்சிகளுக்கு மொத்தம் ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான தனது நன்கொடையை வழங்கியுள்ளது. இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (தி சைல்ட்ஸ் டிரஸ்ட்) குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.12,00,000 பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது; சேலம் ஆர்ய வைஷ்யா சாரிட்டபிள் & எஜுகேஷன் ஃபவுண்டேஷனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது; சென்னை மேற்குத் மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டங்களுக்காக ரூ.10,00,000 நன்கொடை செய்யப்பட்டுள்ளது; மேலும், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருட்பெருஞ் ஜோதி ஆனந்தன மிஷனுக்கு, அன்னதான உணவுகளுக்கான- சமையலறை உபகரணங்களை வாங்க ரூ.4,50,000 பங்களிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரும்புப் பாலம் கட்டுவதற்காக, தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஸ்வாமிநாத சுவாமி கோவிலுக்கு ரூ.17,20,873 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பங்களிப்புகள் குறித்து பேசும்போது, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறினார், “ஜி.ஆர்.டியில், உண்மையான பாரம்பரியம் நகைகளில் மட்டுமல்ல, நாம் தொடும் வாழ்க்கைகளிலும் கட்டப்படுகிறது என்பதையே நாங்கள் நம்புகிறோம். அது குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதாரமாக இருந்தாலும், இளைஞர்களுக்கான கல்வியாக இருந்தாலும், அல்லது மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்கும் சமூக முயற்சிகளாக இருந்தாலும், எங்கள் அர்ப்பணிப்பு ஒரே மனதாகும் மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறது. சமூக நோக்கங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையை மதிப்பதற்கான எங்கள் வழியாகும். சுகாதாரம், கல்வி, நலன் மற்றும் நம் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு பங்களிப்பதன் மூலம், வணிகங்கள் தாங்கள் சேவை செய்கிற சமூகங்களுடன் வளரும்போது தான் உண்மையில் செழிக்கின்றன என்ற எங்கள் நம்பிக்கையை மேலும் வலியுறுத்துகிறோம்.” 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நம்பிக்கை, கலைநயம் மற்றும் புதுமை ஆகியவற்றின் அடையாளமான பெயராக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான கலெக்ஷன்கள் மூலம், இந்த நிறுவனம் தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் நேர்த்தியான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. தற்போது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன், ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தனது படைப்பாற்றலை உண்மைத்தன்மையுடன் இணைக்கும் வாக்குறுதியை நிலைநிறுத்தி, தாங்கள் சேவை செய்கிற சமூகங்களின் நலனில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

விகடன் 8 Dec 2025 5:34 pm

தொண்டையில் பேரிச்சம் பழம் சிக்கி தெலுங்குதேசம் கட்சி தொண்டர் பலி

நகரி, ஊட்டசத்துகள் அதிகம் நிறைந்த பழம் பேரிச்சம் பழம். எனவே பலரும் இதனை விரும்பி உண்பது வழக்கம். ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டு ஒருவர் இறந்ததாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆந்திராவின் சத்யசாயி மாவட்டம் பெனுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர் (வயது 42). தெலுங்குதேசம் கட்சி தொண்டர். இவர் பேரிச்சம் பழம் சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்று அவர் பேரிச்சம் பழத்தை அவசரமாக சாப்பிட்டதாக […]

அதிரடி 8 Dec 2025 5:30 pm

யாழில். அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு

யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் , தூபியை உடைத்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் நடைபெற்ற வேளை […]

அதிரடி 8 Dec 2025 5:15 pm

காவிரி நீர் பங்கீடு: கர்நாடகத்துக்கு பறந்த உத்தரவு! டெல்டா விவசாயிகள் ஹேப்பி...

தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி காவிரி நீரை விடுவிக்க கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

சமயம் 8 Dec 2025 5:14 pm

CavinKare’s Indica Easy celebrates self-reliance with humorous new digital campaign

Chennai: CavinKare’s Indica Easy has unveiled its latest digital campaign, “So Easy, Anyone Can Do It!”, aimed at celebrating self-reliance and the simplicity of DIY hair coloring through humour and relatable everyday scenarios. The campaign features ten short, character-driven digital films that showcase individuals who typically depend on others for routine tasks, yet manage to […] The post CavinKare’s Indica Easy celebrates self-reliance with humorous new digital campaign appeared first on MediaNews4U .

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 5:12 pm

அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது - எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய்யான தகவல்களை தயாரித்து வந்துள்ளனர். பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை. பாமகவிற்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராமதாஸின் மகன் என்பதை தவிர அன்புமணிக்கும் பாமகவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. விரைவில் மாம்பழம் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ராமதாஸ் தான் பாமக, வேறு யாருடனும் கூட்டணி குறித்து பேசி யாரும் ஏமாறவேண்டாம். பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் கை காட்டுபவர்களுக்கு 10 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும். அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஏன் துணை போகிறது என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் நீதி கிடைத்த பிறகு தேர்தல் ஆணையம் திணறுகிறது. அன்புமணி தேர்தல் ஆணையத்தை சரிகட்டி விட்டார். தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றம் செல்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நீதிமன்ற தீர்ப்பின்படி அன்புமணிக்கும், பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியாகிவிட்டது. பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் ராமதாஸ் இடமே வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.

விகடன் 8 Dec 2025 5:08 pm

Leading news channels reject MIB’s plan to alter landing page viewership rules

Mumbai: Several leading national news broadcasters — including NDTV, News18 and Times Now — have strongly opposed the Ministry of Information & Broadcasting’s (MIB) Proposed Landing Page Amendment, stating that the move is legally untenable, technically flawed and commercially unfair to the broadcasting industry.In a joint representation, the broadcasters said the amendment must be withdrawn in its entirety as it attempts to regulate a subject currently sub-judice before the Hon’ble Supreme Court of India, violating principles of administrative propriety. They also noted that the proposal seeks to revive a technical methodology for stripping landing page impressions — an approach earlier examined and rejected by the Telecom Regulatory Authority of India (TRAI) as “unsuitable” due to inherent technical flaws.The broadcasters argued that the assumption underlying the amendment — that viewership gained from a landing page is illegitimate — is fundamentally incorrect. They clarified that a landing page functions as a legitimate marketing and discovery tool, similar to premium placements used across other industries. When a viewer turns on their set-top box and chooses either to watch the channel or navigate away, this constitutes genuine consumer choice and engagement.They further highlighted that excluding initial impressions would effectively delete authentic viewing behaviour. TRAI, in its 2018 assessment, had explicitly rejected the same methodology on the grounds that it would remove genuine impressions and distort viewership measurement.Drawing parallels to other sectors, the broadcasters said landing page placement is equivalent to a newspaper jacket or an eye-level shelf in a supermarket — both widely accepted premium placements whose sales and consumption data are never excluded from market metrics. Similarly, they argued, landing page viewership must remain part of official ratings to preserve the integrity of the industry’s measurement ecosystem.Industry bodies have also raised objections. The All India Digital Cable Federation (AIDCF) has written to the Ministry opposing any changes to the usage of landing pages. Several small broadcasters have separately submitted their concerns, signalling widespread industry resistance to the amendment.Broadcasters have urged the MIB to withdraw the proposed amendment and maintain the current rating framework to ensure fair competition, transparency and a realistic reflection of consumer behaviour within India’s television ecosystem.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 5:03 pm

IND vs SA T20: ‘சாம்சனைவிட, ஷுப்மன் கில்தான்’.. ஓபனருக்கு தகுதியானர்! ஏன் தெரியுமா? சூர்யகுமார் விளக்கம்!

இந்திய டி20 அணியில், சஞ்சு சாம்சனைவிட, ஷுப்மன் கில்தான் ஓபனருக்கு தகுதியானர் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியா வருகையால், அணி பலம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமயம் 8 Dec 2025 4:58 pm

   நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்த  C-130J விமானம்!

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க விமானப் படையின் C-130J Super Hercules ரக சரக்கு விமானம்… The post நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்த C-130J விமானம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 4:49 pm

Siddharth Bijapuria moves on from JioHotstar; joins upGrad as Head of Content (D2C Business)

Mumbai: Siddharth Bijapuria has stepped down from his role as Head of Creator Content (Sparks) at JioHotstar, marking the close of a transformative 12-year journey across the Jio and Viacom18 ecosystem. At JioHotstar, Siddharth led content for Sparks, a breakthrough creator-led initiative aimed at bringing India’s biggest YouTubers and digital influencers into mainstream OTT. Under his leadership, Sparks rolled out 30+ unscripted creator-first shows within a year, accelerating the convergence of the creator economy with premium digital entertainment. Announcing his exit on LinkedIn, Siddharth shared a deeply personal reflection on his professional journey, stating, Twelve years ago, when Facebook chat was still a thing, I remember Sonia Huria's message that simply said “Bombay ayega?” That one line changed my entire life. I still remember walking into the MTV floor in a full business suit. Within minutes Sumeli Chatterjee told me I was “not dressed for Viacom18.” Cut to today, I do not think I even own a suit anymore. What followed was a blur of launches, leaps, experiments, madness and magic. Launching MTV Indies and Colors Infinity and the multiple SuperSonics remains one of my fondest memories. Some of the best teamwork I have ever seen. Thank you Aditya Swamy Saugato Bhowmik. Then came Voot. I launched it in PR and soon jumped into marketing as this OTT baby learned to walk. From there it was a ride across functions. Marketing. Content strategy. Content acquisition. Leaders who trusted me enough to stretch, evolve, fail fast and learn faster. Thank you Gourav Rakshit Gaurav Gandhi Akash Banerji Chanpreet Arora. Cut to the turning point. Q3 2022. JioCinema. What began as merchandising support soon turned into leading the growth and retention function across sports and entertainment. Two IPLs. The FIFA World Cup. The Olympics. The scale, the pressure, the adrenaline. These are not just memories. They are milestones etched into my heart rate. Thank you Rohit Tikmany Akash Saxena. The entertainment launch on JioCinema deserves its own chapter. One month to build an engine that never slowed down. The next year, again one month to launch the subscription business. Peak JioCinema energy, Pure passion. Pure chaos. Thank you Ferzad Palia. Bigg Boss has been its own education. Seventeen seasons across four languages. From CAC models to eventually mounting the show. It taught me speed, scale and the magic of teams that breathe as one. And then my latest assignment, JioHotsar Sparks. A dozen people who do everything. Create content. Sell it. Market it. Distribute it. Optimise it. Ensure it gets watched. Thirty shows in twelve months. In many ways everything I learned across these twelve years converged here. I have seen nothing like it and I remain deeply grateful. Thank you Kiran Mani Kanishk Khanna. Across twelve years I journeyed through four cultures within one organisation. I launched channels. Helped built three OTT apps. Worked across seven languages. Mounted tentpoles and live events. Served in nine functions from communications to CSR to marketing to content to growth and retention and eventually head of content for JioHotsar Sparks. To the leadership, thank you for the trust. To my peers, thank you for standing by me and my unconventional ways. This place has shaped me in ways I am still discovering. It taught me resilience, frugality, a bias for action and the drive to always be more. Thank you Raj Nayak Nina Elavia Jaipuria for always inspiring me. As I move to my next assignment, my heart is full and eyes flowing as I'm leaving home. Announcing his next move, Siddharth also shared an update on LinkedIn, I’m happy to share that I’m starting a new position as Head of Content (D2C Business) at upGrad! Siddharth’s diverse experience spans marketing, content strategy, acquisition, growth, retention and live sports across platforms including MTV Indies, Colors Infinity, Voot, JioCinema, and most recently JioHotstar Sparks. Before his long stint across Jio and Viacom18, he worked with several organisations including Genesis BCW, PR Pundit, Vitcom Consulting, Perfect Relations, Nirvana Hospitality and Wipro BPO.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 4:48 pm

டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி…–எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் பணத்தை மீட்டெடுத்தால், மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்த முடியும் என்று தெரிவித்தார். மேலும், “அந்தப் பணத்தை வைத்து பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ரூ.5,000 தாராளமாக வழங்கலாம்; ஒரு ஆண்டு முழு பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்” என்று கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” ரூ. […]

டினேசுவடு 8 Dec 2025 4:48 pm

வங்கிக் கணக்கில் புதிய மாற்றம்.. வங்கிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு!

வங்கிக் கணக்கு விஷயத்தில் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் விதிமுறைகள் அமலாகும்.

சமயம் 8 Dec 2025 4:47 pm

திமுக ஆட்சியில் அடுத்த ஊழல்! டெண்டர் வெளியிட ரூ.1,020 கோடி... அன்புமணி அதிரடி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் ரூ.1,020 கோடியில் டெண்டர் ஊழல் ஆதாரம் உள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமயம் 8 Dec 2025 4:47 pm

இரண்டாவது முறையாக ஊர்காவற்றுறை பிரதேச சபை பாதீடு தோல்வி! –ஆனாலும் நடைமுறைக்கு வருகிறது!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில்… The post இரண்டாவது முறையாக ஊர்காவற்றுறை பிரதேச சபை பாதீடு தோல்வி! – ஆனாலும் நடைமுறைக்கு வருகிறது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 4:39 pm

Aura World names Jayanta Ghosh as Head of Marketing

Gurugram: Aura World, a Gurugram-based real estate developer, has announced the appointment of Jayanta Ghosh as its new Head of Marketing, further strengthening its leadership team. A seasoned marketing and communications professional, Jayanta brings over 20 years of experience across top real estate brands including AIPL, M3M, Bestech, Tribeca, Emaar India, Bates CHI & Partners and Enseigne.Armed with an MBA in Advertising & Marketing, Jayanta specialises in building end-to-end marketing engines that integrate brand positioning, ATL/BTL strategy, digital ecosystems, product narrative and sales alignment. He has successfully launched 40+ gated residential communities across NCR’s most competitive micro-markets, contributing significantly to Gurugram’s rise as a hub for future-ready residential developments.At Aura World, Jayanta will lead the integrated marketing function — driving brand storytelling, consumer engagement, digital-first ecosystems, and ATL/BTL campaign planning for the company’s upcoming premium and luxury residential projects.Welcoming him to the leadership team, Shyamrup Roy Choudhury, Founder and Managing Director, Aura World, said, “At Aura World, we are shaping a new vocabulary of luxury living for India. Jayanta’s two decades at India’s leading real estate brands bring immense value to our organisation. His deep understanding of market dynamics, consumer behaviour and brand building makes him an ideal fit for our growth ambitions. We welcome Jayanta to the leadership team and look forward to a collaborative journey that deepens Aura World’s promise of design-led, quality-centric and meaningful living.” Expressing his excitement, Jayanta Ghosh, Head of Marketing, Aura World, said, “I am humbled and excited to join Aura World at a moment when the definition of home is expanding beyond physical space to wellbeing and purposeful living. My two decades of career have taught me that successful marketing blends clarity, product truth and empathetic storytelling. At Aura, I see an opportunity to translate design into narratives that connect with modern urban families, and to build launch engines that align brand promise with lived experience. I look forward to working with the team to create homes that deliver lifestyle and long-term value.” With Jayanta’s appointment, Aura World continues to bolster its leadership bench as it expands its portfolio and sharpens its vision to redefine modern urban living in India.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 4:36 pm

தென் சீனக் கடற்பகுதியில் பிலிப்பைன்ஸை அச்சுறுத்திய சீன விமானப் படைகள்

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் நேற்று முன்தினம் (6) வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் விமானத்தை அச்சுறுத்தும் வகையில் சீன படைகள் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த வான்பரப்பில் சீன விமானப்படைகள் அச்சுறுத்தும் வகையில் பயணங்களை மேற்கொண்டதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா ஆக்கிரமித்துள்ள சுபி ரீபில் பகுதியில் இருந்து பயணித்த விமானங்கள் பிலிப்பைன்ஸின் மீன்வளப் பணியகத்தின் செஸ்னா கிராண்ட் கேரவன் விமானத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து சீன அதிகாரிகள் […]

அதிரடி 8 Dec 2025 4:30 pm

யாழ். அணையா விளக்குத் தூபி மீண்டும் உடைப்பு! – தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு

யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘அணையா விளக்கு’ (Unceasing Lamp) போராட்ட நினைவுத்தூபி, இனந்தெரியாத விஷமிகளால் நேற்றைய… The post யாழ். அணையா விளக்குத் தூபி மீண்டும் உடைப்பு! –தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 4:27 pm

யாழ். உள்ளக விளையாட்டரங்கு சர்ச்சை: நீதிமன்றத் தடையை மீறிப் போராட்டம்!

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், விளையாட்டரங்கம் வேண்டும்… The post யாழ். உள்ளக விளையாட்டரங்கு சர்ச்சை: நீதிமன்றத் தடையை மீறிப் போராட்டம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 4:17 pm

ஊர்காவற்துறையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாககின்றது. ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதறகான விசேட அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னராச தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சபையின் வருமானம் ஊடாக […]

அதிரடி 8 Dec 2025 4:15 pm

தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் NDAக்கு மூன்றாவது இடம் தான் –டிடிவி தினகரன்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சூழலை மாற்றும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் பலமான கூட்டணி அமைந்தால், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) 3-வது இடத்திற்கு தள்ளும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார். இதை “எடப்பாடி கே.பழனிசாமி மீது வருத்தத்தில் சொல்லவில்லை, யதார்த்தத்தை சொல்கிறேன்” என்று தெளிவுபடுத்தினார். திருப்பூர் தெற்குத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய […]

டினேசுவடு 8 Dec 2025 4:11 pm

மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில்… The post மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 4:09 pm

AVM சரவணன்: `6.20-க்கு ‘மகாபாரதம்’ சீரியல் போடுவாங்க; அதுவரை பேசிட்டு இருப்பார்!’ - V.C.குகநாதன்

கதாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் கட்டுரையாளர்: V.C.குகநாதன் சாதனையாளர் திரு.ஏவி. எம் சரவணன் அவர்கள், தந்தையார் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் ஒற்றை மனிதனாய் கட்டி எழுப்பிய ஏவி.எம் ஸ்டுடியோவை திறம்பட நடத்தி தன் வாழ்நாள் முடியும் வரை காப்பாற்றியவர். ஏவி.எம் சரவணன் தனது இறுதி காலக்கட்டங்களில் ஒரு நல்ல குடும்பப் படத்தைத் தயாரித்து விட வேண்டும் என்று விரும்பினார். மற்ற சகோதரர்கள் தங்கள் பாகங்களைப் பிரித்துக்கொண்டு வேறு வேறு தொழில்களில் போய்விட்டபோதும், சரவணன் சார் மட்டும் படப்பிடிப்பு தளங்களையும், தயாரிப்பு கம்பெனியையும் கைவிடாமல் காப்பாற்றி வந்தார். ஏவி.எம் ஸ்டூடியோ ராதா கிருஷ்ணன் சாலையில் தங்கி இருந்த போது, அவர் பல தடவை என்னை அழைத்து கதைகள் பற்றி பேசினார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் பழைய ஆங்கில படங்கள், மராத்தி படங்கள், ஜப்பான் படங்கள் பற்றியெல்லாம் விவரமாகப் பேசுவார். அதில் இருக்கின்ற நல்ல காட்சிகளைக் குறிப்பிட்டுப் பேசுவார். சில வசனங்களைக்கூட அவர் நியாபகம் வைத்துக்கொண்டு என்னிடம் சொல்லி மகிழ்வார். கதை, திரைக்கதைப் பற்றி விவாதிப்பதிலும், சினிமாவுக்கு எதை செய்தால் சரியாக வரும் என முடிவெடுப்பதிலும் வல்லவர். சரவணன் சார் எதாவது ஒரு நல்ல படம் டிவியில் ஓடினால், உடனே எனக்கு கால் பண்ணி சொல்லுவார். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை ஆசையோடும் காதலோடும் தயாரித்தார். அந்தப் படம் ஜனாதிபதி பரிசு பெற்ற போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏவி.எம்மின் ஐம்பதாவது ஆண்டு விழாவை மிக மிக விமர்சையாக கொண்டாடினார். ஐம்பதாவது ஆண்டில் 1997ல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மின்சாரக்கனவு படத்தை வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு கூட என்னை அவர்கள் ஸ்டுடியோவில் உள்ள கோயிலுக்கு வரச் சொல்லி 6 மணிவரை பேசுவார். V.C.குகநாதன் 6.20 க்கு அந்த ‘மகாபாரதம்’ சீரியல் போடுவார்கள். டிவியில் அதைப் பார்ப்பதற்காக வீட்டுக்குப் போய்விடுவார். அவர் சினிமாவை நேசித்தார். நேசித்தது மட்டுமல்ல சினிமாவைத் தவிர அவர் வேறு எந்தத் தொழிலை செய்யவில்லை. அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் கடைசியாக ஒரு இரண்டு மாதத்திற்கு முன்னால் கூட நான் அவரைப் பார்த்து பேசினேன். அதன் பின்னால் அவரைப் பார்த்து பேசுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரோடு இரண்டு உதவியாளர்கள் அவரைக் கவனிப்பதற்காக இருப்பார்கள். அவர்கள் என்னோடு தொடர்பில் இருப்பார்கள். அவர்கள் மூலமாக நான் சரவணன் சரைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். என்னுடைய பிறந்தநாள் ஜனவரி 16. நான் கடந்த ஜனவரி 15-ம் தேதி அந்த உதவியாளரிடம் பேசினேன். அவரிடம் என்ன சொன்னேன் என்றால் `நாளைக்கு என்னுடைய பிறந்தநாள். கிட்டத்தட்ட 55 வருஷமாக என்னுடைய பிறந்தநாள் என்றால் காலையில் 6 மணிக்கு ஒரு போன் அடிக்கும். சார் `என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்’ என்று தன்னுடைய வாழ்த்துகளை பல விதத்தில் தெரிவிப்பார். இந்த ஆண்டு 15ம் தேதி நான் அந்த உதவியாளரிடம் கேட்டபோது அவர் சொன்னார், நாங்கள் அவருடைய காலண்ட்ரைப் பார்த்தோம். நவம்பர் 16இல் ஒரு மார்க் பண்ணி அதில் பிறந்தநாள் வாழ்த்து குகநாதனுக்கு சொல்ல வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார் என்று சொன்னார். எதற்காக நான் இதைச் சொல்கிறேன் என்றால், எனக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது பெரிது என்பதைக் காட்டுவதற்காக நான் சொல்லவில்லை. நிறைய நண்பர்கள் அவருக்கு இருந்தார்கள். எல்லா நண்பர்களுக்கும் இப்படி வாழ்த்து சொல்வது அவருடைய பழக்கம். இன்னும் ஒரு பழக்கம் அவருக்கு இருந்தது. வியாழக்கிழமைகளில் காலையில் 5 மணிக்கு ECRல இருக்கின்ற சாய்பாபா கோவிலுக்கு தவறாமல் போவார். அங்கு போவதற்கு முன்பு வீட்டில் சாமி கும்பிட்டு விட்டு போவார். நமக்கு வேண்டியவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவார். ஏ.வி.எம் சரவணன் அடுத்ததாக இந்த ஸ்டுடியோவை எல்லாரும் பாகம் பிரித்து போனதுக்குப் பிறகு, அப்புச்சியோட பெயர், அதாவது ஏவிஎம் பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக அவருடைய மகன் குகன் வேறு விதமாக இதனை நடத்தலாம் என்று சொன்னதற்கு, `நான் உயிரோடு இருக்கும் வரை இப்படியே இருக்கட்டும்’ என்று சொன்னார். அவர் மகன் அப்பா மீது பாசம் உள்ளவர் என்பதால் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டார். ஸ்டூடியோவில் சரவணன் சாரை கண்ணாடி பேளைக்குள் படுக்க வைத்திருந்தார்கள். நான் போகும்போது அதிர்ந்து போனேன். ஏனென்றால் அந்த மூன்றாவது ஃப்ளோர்தான் ஏவிஎம் செட்டியார் எந்தப் படம் எடுத்தாலும் பூஜை ஆரம்பிக்கும் இடம் அந்த இடம் தான். இடத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகப் போராடினவர் சரவணன் சார். அதோடு அவருடைய மகன் குகனும் பேத்திகளும் மறுபடியும் சினிமா எடுத்து, அந்த பேனரை நிலறுத்தி நடத்திக்கொண்டு இருக்காங்க. நிச்சயமாக நான் சொல்வேன். சரவணன் சாரின் ஆத்மா இந்த ஸ்டூடியோவை 100 வருடங்கள் நிச்சயமாக நடத்தும். ஏ.வி.எம் சரவணன் அதுக்கு துணையாக குகன் சாரும் அவர் பேத்திகளும் இருப்பார்கள். இனியும் அவர்கள் நல்ல நல்ல படங்களை எடுப்பார்கள். திரைப்படத்துறையில் முதல் 100 ஆண்டு கொண்டாடிய ஸ்டூடியோ என புகழை பெறும். நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு நல்லவரை நல்ல இடத்துக்கு அனுப்பி வையுங்கள். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.!

விகடன் 8 Dec 2025 4:07 pm

Adsgrove Digital appoints Aanchal Kapoor as CEO

Gurgaon: Adsgrove Digital, a rapidly growing integrated marketing agency, has announced the appointment of industry veteran Aanchal Kapoor as its new Chief Executive Officer. Kapoor joins forces with founder Rajkumar Singh, ex-Vice President at ANS Commerce, and will spearhead the agency’s branding and performance verticals.With over a decade of experience across leading media networks—GroupM, Madison, OMD, and Xposure Media—Kapoor has led integrated marketing for major brands such as LG, Shell, Bose, Duracell, Honda, ETS, and Dawaat. Her appointment signals a strategic shift toward blending technology-led efficiency with creative storytelling, marking a new era for the agency.Central to this evolution is Adsgrove’s core philosophy of “brandformance”, which merges long-term brand building with short-term performance marketing to drive both visibility and profitability for clients. Reinforcing this mission, Kapoor said, “Each penny needs to be counted, and we’re making it count.” Sharing her vision, she added, “Creativity gives brands their soul; data gives them direction. Our mission at Adsgrove is to blend both seamlessly to deliver meaningful, measurable impact.” Under its strengthened leadership, Adsgrove continues to expand its service suite—ranging from brand identity development and performance marketing to automation, analytics, and “Search Everywhere Optimization,” which covers SEO, AEO, GEO, and voice search. This integrated framework aims to keep brands visible across every consumer touchpoint.The appointment of Kapoor reflects a broader industry trend toward unified strategies that bring branding, creativity, data, and performance under one umbrella. With this leadership shift, Adsgrove Digital positions itself as a frontrunner in the brandformance-first approach, championing marketing models that deliver scalable, sustainable, and measurable growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 3:56 pm

Dharmendra: இதயம் நொறுங்கிய நிலையில்... - ஹேமமாலினியின் உருக்கமான பதிவு

கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா இயற்கை எய்தியிருந்தார். அவருடைய 90-வது பிறந்தநாள் இன்று. தர்மேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலரும் அவருடைய மும்பை இல்லத்திற்கு முன்பு திரண்டிருக்கிறார்கள். நடிகர் தர்மேந்திரா அங்கு தர்மேந்திராவின் மகன்களான பாபி தியோலும், சன்னி தியோலும் அவர்களைச் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், அவருடைய பிறந்தநாளை நடிகை ஹேமமாலினி அவருடைய எக்ஸ் கணக்கில் உருக்கமான பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “தரம் ஜி, என் அன்பு இதயமே, பிறந்தநாள் வாழ்த்துகள்! என்னை விட்டு நீங்கள் பிரிந்து சென்று இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதயம் நொறுங்கிய நிலையில், மெதுவாக என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயல்கிறேன். ஆனால் நீங்கள் எப்போதும் என்னோடு இருப்பீர்கள் என்பது தெரியும். நாம் ஒன்றாக வாழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகள் ஒருபோதும் அழியாதவை. Dharam ji Happy birthday my dear heart❤️ More than two weeks have passed since you left me heartbroken, slowly gathering up the pieces and trying to reconstruct my life, knowing that you will always be with me in spirit. The joyful memories of our life together can never be… pic.twitter.com/zY3QBJN0YE — Hema Malini (@dreamgirlhema) December 8, 2025 அந்தத் தருணங்களை மீண்டும் நினைத்துப் பார்ப்பது மட்டுமே எனக்குப் பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரும். நமது அன்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நமது இரு அழகிய பெண்களுக்காகவும், என் இதயத்தில் என்றென்றும் தங்கியிருக்கும் அனைத்து நினைவுகளுக்காகவும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 8 Dec 2025 3:56 pm

தட்டி தூக்கிய சீனா: வருஷத்துக்கு 1000 செயற்கைக்கோள் தயாரிக்கும் ராட்சத மையம்! அதிரும் உலக நாடுகள்

ஆசியாவின் மிகப்பெரிய செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை சீனா, தனது ஹைனான் மாநிலத்தில் அமைக்க உள்ளது. இதன் சிறப்புகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 8 Dec 2025 3:55 pm

தாயின் விபரீத முடிவால் பறிபோன குழந்தைகளின் உயிர்கள் ; இலங்கையில் பெரும் துயர சம்பவம்

தாயின் விபரீத முடிவால் குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளில் ஒருவரான சிறுமியின் சடலம் நேற்று (7) அனுராதபுரம் ‘மல்வத்து ஓயா லேன்’ சாலைக்குச் செல்லும் புதிய பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மொரட்டுவை, அங்குலான, எண் 15/11 ரயில்வே பலாபாரவைச் […]

அதிரடி 8 Dec 2025 3:48 pm

BB Tamil 9: இவங்க என்ன கேம் விளையாடுறாங்கன்னு கூட்டிட்டு வந்தீங்க- ஆதிரையுடன் மோதும் கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கும், அரோராவுக்கும் சண்டை நடந்தது. `துஷார், துஷார், துஷார்'ன்னு எத்தனை டைம் சொல்லுவீங்க. நான் விளையாடுறேன், விளையாடல அது என் இஷ்டம் கம்ருதீன். உனக்கு எதாவது பிரச்னைனா என்கிட்ட மோது. துஷார் போனதை வச்சு எத்தனை நாள் என்னைக் காயப்படுத்துவீங்க என அரோரா கோபப்பட்டு கம்ருதீனிடம் கத்தினார். துஷார் வெளிய போயிட்டான், என்னைய ஞாபகம் வச்சுருப்பானான்னுகூட தெரியல அப்படின்னு நீதான் சொன்ன என கம்ருதீன் அரோராவிடம் சொல்ல நான் அப்படி சொன்னனா என அரோரா கத்த இருவரும் சண்டை போட்டுக்கொண்டார்கள். BB Tamil 9 இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் கம்ருதீன், ஆதிரை இடையே மோதல் நடக்கிறது. உங்க கேம் என்னான்னு எனக்குத் தெரியும். 3-வது வாரமே எவிக்ட்டாகி போனவங்க தான் நீங்க. உங்களுக்கு ஒரு திறமையும் இல்ல என கம்ருதீன் ஆதிரையிடம் சண்டைபோடுகிறார். BB Tamil 9: துஷார் போனதை வச்சு எத்தனை நாள் என்னை காயப்படுத்துவீங்க- அரோரா, கம்ருதீன் மோதல் முதல் வாரத்துல இருந்து நான் எப்படி விளையாடினேன்னு எனக்குத் தெரியும். ஒருத்தவங்க எதை சொன்ன காயப்படுவாங்கன்னு தெரிஞ்சு பண்றதுலாம் ஒரு திறமையே கிடையாது கம்ருதீன். BB Tamil 9 வினோத் அண்ணா அவருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க என ஆதிரை கோபப்படுகிறார். இவங்க என்ன கேம் விளையாடுறாங்கன்னு உள்ள கூட்டிட்டு வந்தீங்க என கம்ருதீன் கேமராவைப் பார்த்து கேட்கிறார்.

விகடன் 8 Dec 2025 3:46 pm