'இந்தியில் பெயர் பலகை' - திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக-வினர்
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலக நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் இந்தி வார்த்தையை கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVAYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர். protest இந்தி தெரியாத மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ளது மறைமுக இந்தி திணிப்பு என ஒன்றிய அரசையும் ரயில்வே நிர்வாகத்தினரையும் கண்டித்து, முதல்வர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக தி.மு.க-வினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை கறுப்பு மை கொண்டு அழித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 'உடனடியாக அனைவருக்கும் புரியும் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன், திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். protest இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும் தான். துரோகம் இழைப்போர் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள். டெல்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு Out Of Control' என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த சூழலில், இதற்கு எதிர்ப்பு அதிகமாகவும் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட எழுத்துக்களை ரயில்வே நிர்வாகம் நீக்கியிருக்கிறது.
'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' - கிரிஷ் சோடங்கர் அதிரடி
திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சீட்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. Cong இந்நிலையில் அறிவாலயத்திலிருந்து கிளம்பிய பிறகு தனியார் விடுதியில் கூட்டணி குறித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், 'இது வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நாள். இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸூக்கு தொகுதி குறைந்துகொண்டேதான் வந்திருக்கிறது. இப்போதுதான் திமுக கூட்டணியில் எங்களுக்கு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்த முதல்வருக்கு நன்றி. எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். உள்ளாட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறோம். கண்டிப்பாக செய்கிறோம் என திமுக கூறியிருக்கிறது.' என்றார் Chodankar கிரிஷ் சோடங்கர் பேசுகையில், 'நாங்கள் தொண்டர்களின் மனநிலைக்கே முக்கியத்துவம் கொடுத்தோம். எங்களின் தொண்டர்களும் நிர்வாகிகளும் 58 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லை. அவர்களை முன்வைத்தே கூட்டணி பேசினோம். உள்ளாட்சியில் எங்கள் தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதையே பிரதானமாக முன்வைத்தோம். உள்ளாட்சியிலும் கூட்டுறவிலும் எங்களின் தொண்டர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என உறுதியளித்ததால் மட்டுமே கூட்டணிக்கு ஒத்துக்கொண்டோம்' என்றார்.
அறிவாலயத்தை அதிர வைத்த கிரிஷ் சோடங்கர்: 25 டூ 28.. திமுக இறங்கி வந்தது எப்படி?
அறிவாலயத்தை அதிர வைத்த கிரிஷ் சோடங்கர். 25 டூ 28.. திமுக இறங்கி வந்தது எப்படி? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
காணாமல் போயிருந்த மீனவர்கள் கச்சதீவு கடலில்!
யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மீனவர்கள் இருவரும் வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மறுநாள் அவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், கடலுக்குள் சென்று தேடுதல் நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையிடமும் , கடற்படையினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில், கடந்த திங்கட்கிழமை (02) அன்று கச்சதீவுக்கு அருகாமையில், இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் இரு மீனவர்களையும் கண்டதாக இந்திய மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கியதாகவும் இந்திய மீனவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். மீனவர்கள் ஆபத்தான நிலையில் கடலில் தத்தளிப்பது குறித்த தகவல்கள் தெரிந்தும், அரசாங்கம் அவர்களை தேடி மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கும் தகவல் வழங்கினோம். ஆனால், ஆறு நாட்களாகியும் இதுவரை எந்த ஒரு தேடுதல் நடவடிக்கையோ அல்லது பதில்களோ எமக்கு கிடைக்கவில்லைஎன பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். காணாமல் போயிருந்த மீனவர்கள் கச்சதீவு கடலில்! யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மீனவர்கள் இருவரும் வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மறுநாள் அவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், கடலுக்குள் சென்று தேடுதல் நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையிடமும் , கடற்படையினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில், கடந்த திங்கட்கிழமை (02) அன்று கச்சதீவுக்கு அருகாமையில், இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் இரு மீனவர்களையும் கண்டதாக இந்திய மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கியதாகவும் இந்திய மீனவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். மீனவர்கள் ஆபத்தான நிலையில் கடலில் தத்தளிப்பது குறித்த தகவல்கள் தெரிந்தும், அரசாங்கம் அவர்களை தேடி மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கும் தகவல் வழங்கினோம். ஆனால், ஆறு நாட்களாகியும் இதுவரை எந்த ஒரு தேடுதல் நடவடிக்கையோ அல்லது பதில்களோ எமக்கு கிடைக்கவில்லைஎன பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது.யாழ்ப்பாணத்தில் கடந்த 5… The post யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை appeared first on Global Tamil News .
அமெரிக்காவால் மூழ்கடிக்கப்ப்ட ஈரானிய யுத்தக் கப்பலில் இருந்து 80 ஈரானியர்களின் உடல்கள் எடுத்து வரப்படுவதா காலி வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் பயிற்சியை முடித்து திரும்பிய ஈரானிய வீரர்களின் கப்பலை தாக்கியது அமேரிக்காவின் கேவலமான செயல். அவர்கள் யுத்தத்திற்கு தயார் நிலையில் இருக்கவில்லை. யுத்தம் நடக்கும் இடம் இதுவல்ல. தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் எங்கே தரித்து நின்றது என்பது முக்கியமான கேள்வியென இராணுவ அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கைக்கு அருகில் ஈரானிய கப்பல் தாக்கியது நாங்களே ; பரபரப்பை கிளப்பிய அமெரிக்க தரப்பினர்; பலர் பலி?
Update: ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்க போர் செயலக செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஹெக்செத் இந்தியப் பெருங்கடலில், ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி துறைமுகத்திலிருந்து சுமார் […]
இலங்கை கடலில் தாக்கியது அமெரிக்காவா? ஈரானா?
இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 180 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஐரிஸ் தேனா என்ற போர்க்கப்பல், அதிகாலையில் ஒரு பேரிடர் அழைப்பை விடுத்த பின்னர் இலங்கைக்கு தெற்கே சுமார் 25 மைல் தொலைவில் கண்டறியப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 101 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து மீட்கப்பட்ட காயமடைந்த பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச கடல்சார் கடமைகளுக்கு இணங்க, இலங்கை மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் தெரிவித்தார். தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படையின் இரண்டு கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 32 ஈரானிய மாலுமிகள் சிகிச்சைக்காக காலியில் உள்ள பிரதான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே இந்தியப் பெருங்கடலில் இருந்த ஒரு அமெரிக்க கப்பலைத் தாக்கியுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின்; கப்பலை இலக்கு வைத்து ஈரானிய கடற்படை தாக்குதல் நடத்தியது. எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் தாக்குதல்; கப்பல் ஆகிய இரண்டுமே இலக்கு வைக்கப்பட்டதாகவும், அவற்றின் தளங்களிலிருந்து புகையும் நெருப்பும் எழும்புவதைக் காண முடிந்தது” என்றும் அது தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் யார்? 28 + 1 சீட் - இழுபறிக்கு திமுக END CARD!
திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக சில நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று சுமுகமான முறையில் கையெழுத்து ஒப்பந்தமாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாநிலங்களவை தேர்தல்: அதிமுக சார்பில் மீண்டும் களமிறங்கும் தம்பித்துரை!
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் தம்பித்துரைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி அசால்ட்டாக வெற்றியைப் பெற்றது. பின் ஆலன், 33 பந்துகளில் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 100 ரன்களை குவித்து மேட்ச் வின்னராக இருந்தார்.
Navin’s Starwood Towers 3.0 Recognised as South India’s Iconic Ongoing Residential Project
Navin’s Starwood Towers 3.0 has been honoured with the Iconic Project – Residential (South – Ongoing) award at the 5th
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் –வேட்பாளர்களை அறிவித்த திமுக
தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன்
திமுக –காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தனது
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே
80 சதவீத அதிமுகவினர் திமுகவில் இணைய உள்ளார்கள் –ஓ.பன்னீர் செல்வம்
திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் மார்ச் 7ஆம் தேதி, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா
5 வது நாளாக ஈரான் மீது தொடரும் தாக்குதல் – 1045 பேர் உயிரிழப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை கூட்டு தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்
மார்ச் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு
ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் இந்தியா!
ரஷ்யாவில் இருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான இந்திய விமானப்படை (IAF) முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் (DPB) அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர்
ஊர்காவற்துறையில் பாரிய கேரளா கஞ்சா வேட்டை –படகுடன் ஒருவர் கைது ; இருவர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணத்தில் 368 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவருடன் கஞ்சா… The post ஊர்காவற்துறையில் பாரிய கேரளா கஞ்சா வேட்டை – படகுடன் ஒருவர் கைது ; இருவர் தப்பியோட்டம் appeared first on Global Tamil News .
துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்!
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் – 37 இந்திய கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் சிக்கி தவிப்பு
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர்
மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் துபாயில் ட்ரோன் சம்பவம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகாமையில் இன்று திடீரென கரும்புகை எழுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தூதரக வளாகத்திற்கு மிக அருகிலுள்ள பகுதியில் இருந்து புகை உயர்ந்து வந்ததை நேரில் பார்த்த சாட்சியங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஒரு ஆளில்லா விமானம் (ட்ரோன்) அந்தப் பகுதியில் விழுந்ததே தீ விபத்திற்குக் காரணம் என துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறுகிய பகுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், எவ்வித உயிரிழப்புகளோ அல்லது […]
திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு-திருச்சி சிவா, கான்ஸ்டண்டைன் ரவீந்தரனுக்கு வாய்ப்பு!
திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவித்துள்ளது. திருச்சி சிவா, கான்ஸ்டண்டைன் ரவீந்தரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
யாழில். மாத்திரம் எரிபொருள் விநியோகத்திற்காக QR நடைமுறையினை பின்பற்ற நடவடிக்கை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருளுக்கு QR நடைமுறையினை பின்பற்ற வலு சக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளதாக… The post யாழில். மாத்திரம் எரிபொருள் விநியோகத்திற்காக QR நடைமுறையினை பின்பற்ற நடவடிக்கை appeared first on Global Tamil News .
Vowels: 1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!- சின்னி ஜெயந்த்
ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து கதைகளை கொண்டு உருவாகி உள்ள படம் வவ்வல்ஸ் (Vowels) இந்த படத்தை திலீப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மார்ச் 13ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மார்ச்.3) நடைபெற்றது. Vowels movie அப்போது பேசிய சின்னி ஜெயந்த் இந்தப் படக்குழுவினர் மிகவும் தைரியமானவர்கள். கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். கதா சங்கமம் என்ற கன்னட படத்தில்தான் நான் முதலில் நடித்தேன். புட்டண்ணா கனகல் இயக்கினார். அதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். அந்த படத்தை தமிழகத்தில் இந்த விழா நடக்கும் கமலா தியேட்டரில்தான் பார்த்தேன். எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது. தமிழக ரசிகர்கள் நன்றாக ரசிப்பார்கள். புருஸ்லீயின் 'என்டர் தி டிராகன்' படம் சென்னையில் ஒரு ஆண்டு ஓடியது. உலக அளவில் பெரிய வசூலை இங்கே அள்ளியது. தமிழக ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. இந்த படத்தை 5 பாகங்களாக எடுக்க வேண்டும். 5 கதைகளை விரிவாக எடுக்க வேண்டும். மிகப்பெரிய அறிவாளியான யூகி சேது இந்த படத்தில் நடித்து இருக்கிறார். சின்னி ஜெயந்த் 1980களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம். நடிக்க சான்ஸ் கிடைக்காது. அப்படி கிடைத்தால் நடித்துக் கொண்டே இருக்கலாம். இப்ப, நடிக்க வாய்ப்பு டக்கென கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து நடிக்க, ஒழுக்கம், கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. நான் 42 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பல படங்களில் காதலுக்கு சப்போர்ட் செய்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் இந்த படத்தில் நானே காதலித்து இருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் -திமுக கூட்டணி உறுதி-தனித்து விடப்பட்டாரா விஜய்?
தவெகவுடன் காங்கிரஸ் இணையும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் திமுகவுடனேயே கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக தவெக தனித்து களம் காணும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 168 ரன்களை குவித்தது. ஜேம்ஸ் நீஷத்திற்கு எதிராக மட்டுமே தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ரன் மழை பொழிந்தனர்.
` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்
ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு... இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்... - அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி. அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்பு... மருத்துவம் படிக்கிற நம்ம பிள்ளைகளோட ஆராய்ச்சிக்கு தேவையில பாதிகூட உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு உதவட்டுமே... ரொம்பநாளா நினைக்கிறேன். ஆனா அதுக்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதா இல்லை. இன்னைக்கு நிம்மதியா முடிச்சுட்டேன். அறிவுக்கிட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சான்... 'போடுப்பா கையெழுத்தைன்னு சொல்லிட்டேன். என் உடலைத் தானம் செய்யப்போனா கூடவே அவனும் செஞ்சிட்டான்... சாங்கியம், சடங்குகள் எல்லாம் வழக்கமா நாங்க செய்றது இல்லை. அதனால முழு மனதோட இந்த முடிவை எடுத்தோம்... எனக்கு அவனும் அவனுக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுக்கிட்டோம்... என்கிறார் அற்புதம் அம்மாள். அம்மா தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கூட இருக்கவங்ககிட்டயும் நிறைய பார்க்கிறோம். சமீபத்துல என் நெருக்கமான நண்பர், 'கீற்று' ரமேஷ் மனைவி காலமானபோது அவர் ரொம்ப உறுதியா நின்னு உடல்தானம் செஞ்சார். இத்தனைக்கும் அவங்க இறக்கும்போது 43 வயதுதான். தஞ்சாவூர்ல ஒரு நண்பர் தன் அப்பாவோட உடலை தானம் செஞ்சார். ஒரு தம்பி தன் பிள்ளையோட கண்ணை தானம் செஞ்சார். இது எல்லாத்திலயும் கூட நின்னேன். எனக்கு இதெல்லாம் பெரிய தாக்கத்தை உருவாச்சு. நல்லகண்ணு அய்யாவோட உடலை தானம் செஞ்ச பிறகு அம்மா ரொம்ப உறுதியா நின்னாங்க. கூடவே நானும் பதிவு செஞ்சுக்கிட்டேன்... இது பெரிய விஷயமில்லை. ஆனா, நிறைய பேர் செய்ய முன்வரணும்... என்கிறார் பேரறிவாளன். உடல் தானம் உறுப்பு தானம் பலரின் உயிரை மீட்கும். உடல் தானம், மருத்துவத்துறை மாணவர்கள் கற்றுத்தேர்ந்து மனித குலத்தைக் காக்க உதவும்! தாயும் பிள்ளையும் ஒருசேர உடல் தானத்துக்குப் பதிவு செய்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம்... வாழ்த்துகள்!
'மனநிறைவோடு 28 சீட்களை வாங்கியிருக்கிறோம்!' - செல்வப்பெருந்தகை ஹேப்பி!
இழுபறியில் நீடித்துக் கொண்டிருந்த திமுக - காங் கூட்டணி இறுதியாகியிருக்கிறது. காங்கிரஸூக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. Cong முதல்வரை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செல்வப்பெருந்தகை பேசுகையில், '28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.' என்றார். கிரிஷ் சோடங்கர் பேசுகையில், 'தமிழகம் முடிந்த பிறகுதான் புதுச்சேரி குறித்து பேச முடியும். அதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளும் தொடங்கியிருக்கிறது.' என்றார். பவர் ஷேரிங் பற்றி பேசினீர்களா என நிருபர்கள் சோடங்கரிடம் கேட்க, 'அப்புறம் பேசுறோம் அதெல்லாம்...' என பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து சோடங்கரை காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார் செல்வப்பெருந்தகை. Cong திமுகவில் மாநிலங்களவைக்கு கான்ஸ்டண்டைன் ரவீந்தரனும் திருச்சி சிவாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிவாலயத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஈரானில் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள்; கண்ணீருடன் இறுதிச்சடங்கு
ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள மினாப் (Minab) நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள் உட்பட 165 பேருக்கான கூட்டு இறுதிச் சடங்கு நிகழ்வு நேற்று (3) உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பொதுச் சதுக்கத்தில் திரண்டு அஞ்சலி செலுத்துவதை ஈரானிய அரச தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு செய்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் “அமெரிக்காவுக்கு மரணம்”, “இஸ்ரேலுக்கு மரணம்” மற்றும் “சரணடைய மாட்டோம்” என ஆவேசமாகக் கோஷமிட்டனர். அமெரிக்காவுக்கு மரணம் , […]
துருக்கி நோக்கிச் சென்ற ஏவுகணையைச் சுட்டு வீழ்த்தியது நேட்டோ படைகள்
துருக்கிய வான்வெளியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈரானிய ஏவுகணையை கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததாக அங்காராவில் உள்ள அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். ஈராக் மற்றும் சிரியா மீது பறந்த பாலிஸ்டிக் ஏவுகணை, சரியான நேரத்தில் ஈடுபடுத்தப்பட்டு ... செயலிழக்கச் செய்யப்பட்டதுஎன்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. நமது பிரதேசத்தையும் வான்வெளியையும் பாதுகாக்கத் தேவையான எந்தவொரு நடவடிக்கையும் தீர்க்கமாகவும் தயக்கமின்றியும் எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி ஏவுகணையின் இலக்காக இருக்கவில்லை என்றும், அது சைப்ரஸில் உள்ள ஒரு தளத்தை நோக்கிச் சென்றது என்றும் அங்காரா நம்புவதாக துருக்கிய அதிகாரி ஒருவர் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?
இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. Congress திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவை நோக்கி சென்ற நிலையில், டெல்லியின் உத்தரவின் பேரில் ப.சிதம்பரம் கடைசி நிமிடத்தில் முதல்வருடன் பேசி கூட்டணியை இறுதி செய்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக - காங் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வர கோவாவிலிருந்து விமான டிக்கெட்டும் புக் செய்திருந்தார். கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல். இந்த இழுபறி சில மணி நேரங்களுக்கு நீடித்து பரபரப்பை கூட்டியது. Cong நீண்ட காத்திருப்புக்கு பிறகு காங்கிரஸ் குழு அறிவாலயம் நோக்கி புறப்பட, இரவு 7:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு போன்றோர் அறிவாலயம் வந்தனர். கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை போன்றோரும் வர முதல்வர் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. செல்வப்பெருந்தகை பேசுகையில், '28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.' என்றார்.
Scientists Discover Rare Underground Fish in Assam
An international team of researchers from Germany, India, and Switzerland has discovered a strange and rare new species of fish
DJI Teases Upcoming Drone for Global Release
DJI has shared a teaser video hinting at the release of a brand-new drone. While details are still scarce, the
Apple Unveils New MacBook Air, Pro Models
On Tuesday, Apple introduced new versions of its MacBook Air and MacBook Pro laptops. The updated models come with the
Creamy One Pot Chicken Pasta Recipe
This tasty chicken pasta is made in just one pot and takes less than 30 minutes to prepare. It is
பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் ; ஈரானின் கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஜெனரல் இப்ராஹிம் ஜப்பாரி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பிரதான மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தத் தீர்மானித்தால், அதற்குப் பதிலடியாக பிராந்தியத்தின் அனைத்து பொருளாதார மையங்களும் இலக்கு வைக்கப்படும் என […]
Simple Tips to Protect Skin This Summer
Summer is almost here. Many of us enjoy the longer days and bright sunshine, but the strong heat and humidity
ரா. கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ள 'மேட் இன் கொரியா' படத்தின் ட்ரைலரை நெட்ஃபிக்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படம் மார்ச் 12 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர் தையிட்டி விகாரைக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் , வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதலை மேற்கொண்டு பொலிஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய […]
Sivakarthikeyan Bags Record Pay for Seyon
Actor Sivakarthikeyan is said to be reaching a new high point in his career with his upcoming film Seyon. This
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும் திருவிழா நடைபெறும் என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு பின்னரான நிலமைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் […]
Jim Carrey Denies Body Double Rumors
Jim Carrey’s publicist has responded to strange rumors spreading online about the actor’s recent appearance in Paris. Some people on
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சம்பத் ஹீங்கந்த கடமையேற்பு!
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எஸ்.ஜே. சம்பத் ஹீங்கந்த இன்றைய தினம் புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சர்வமத ஆசீர்வாதங்களுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த நான்கு மாதங்களாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய இவர் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்க அமைய அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பு அதிகாரியாக தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
ECO India : அலையாத்தி காடுகளை காக்கும் தமிழர்க |வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.!
ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்... அலையாத்தி காடுகளை காக்கும் தமிழர்கள் | வீட்டுத் தோட்டம் இனி சுலபம் | Eco India S2 EP-6 இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா.... அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க... CLICK HERE இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...! வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா, அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..! > வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும் > வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.! > வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…
வடம்: மஞ்சுவிரட்டு பின்னணியில் விமல் –நட்டி மோதும் அதிரடி ஆக்ஷன் மார்ச் 6 முதல்!
நடிகர் விமல் மற்றும் நட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'வடம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது. வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம் மார்ச் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையேமேற்கொண்டதாகமனிதவுரிமை ஆணைக்குழுவின்… The post தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான சித்திரவதை – விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு appeared first on Global Tamil News .
யாழில் எரிபொருள் முறைகேடு: ஆதாரத்துடன் புகார் அளிக்க விசேட தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்டு எரிபொருள் விநியோக முறைகேடு மற்றும் சட்டவிரோத பதுக்கல் தொடர்பில் முறைப்பாடுகளை ஆதாரத்துடன் முன்வைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 119 அல்லது 021 222 2221 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தெரிவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் தவிர்ந்து மேலதிக போத்தல்களில் மற்றும் எரிபொருள் கொள்கலன்களில் / தாங்கிகளில் எரிபொருள் நிரப்புவது தவிர்க்கப்பட வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 08 எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் எங்காவது […]
LinkedIn-ல் மாஸ் காட்டும் ஸ்டாலின், இபிஎஸ்... கார்ப்பரேட் ஓட்டுக்களை கவரும் யுக்தியா?
தமிழக முதலமைச்சர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் லிங்ட்இன்-இல் account வைத்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11, கேப்டன்கள் பேட்டி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
`தேர்ச்சி பெற்றும் உதவித்தொகை கிடைக்கவில்லை' - குமுறும் அரசுப்பள்ளி மாணவர்கள்; கவனிக்குமா அரசு?
பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் பல்வேறு திறனறித் தேர்வுகளை நடத்துகின்றன. அவற்றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகின்றன. 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு 'தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி உதவித்தொகைத் தேர்வு' (National Means-cum-Merit Scholarship Scheme - NMMS) என்ற தேர்வை நடத்துகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ₹3,50,000 வரை உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ₹1,000 (ஆண்டுக்கு ₹12,000) உதவித்தொகை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஊரகப்பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு, 'ஊரகத் திறனாய்வுத் தேர்வு' (Tamil Nadu Rural Students Talent Search Examination - TRUST Exam) என்ற தேர்வை நடத்துகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ₹1,50,000-க்கு கீழ் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 12ம் வகுப்பு வரைக்கும் ஆண்டுக்கு ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும். இவை தவிர, 10ம் வகுப்பு மாணவர்களுக்காக மத்திய அரசு 'தேசிய திறனறித் தேர்வு' (National Talent Search Examination - NTSE) ஒன்றை நடத்துகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 11, 12ஆம் வகுப்பில் மாதம் ₹1,250; பட்டப்படிப்பில் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை PhD வரை தொடரும் என்பது முக்கியமானது. இந்தத் தேர்வுகள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. பொது தேர்வு தற்போதைய அரசு பொறுப்பேற்றதும், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (Tamil Language Literary Aptitude Test - TTSE) என்ற பெயரில் ஒரு தேர்வை அறிமுகம் செய்தது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளி மாணவர்களும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். அரசுப்பள்ளியில் இருந்து 750 பேர், தனியார் பள்ளிகளில் இருந்து 750 என இந்தத் தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ₹1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்த அரசு அறிமுகம் செய்த மற்றுமொரு தேர்வு, தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (Tamil Nadu Chief Minister's Talent Search Examination - TNCMTSE). இந்தத் தேர்வை அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். 500 மாணவர்கள், 500 மாணவிகள் என 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகைகள் மாணவர்கள் பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது உண்மை. சில பள்ளிகள் மிகுந்த ஈடுபாட்டோடு தங்கள் மாணவர்களை இந்தத் தேர்வுக்குத் தயார்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை சரிவர சென்று சேர்வதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. மேலும் மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளுக்கே இந்தத் தேர்வு குறித்து தெளிவு இல்லை என்றும் பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள். திறனறித் தேர்வு தமிழக அரசு நடத்தும் தமிழ்த் திறனறித் தேர்வு தொடர்ந்து நான்காண்டுகளாக நடந்துகொண்டு இருக்கிறது. 11ம் வகுப்பு படித்தபோது என் மகள் அதில் தேர்ச்சி பெற்றார். ஓராண்டுக்கு உதவித்தொகை வந்தது. அடுத்த ஆண்டுக்கு வரவில்லை. சில மாவட்டங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் கொடுத்துள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரவில்லை. அதேபோல் முதலமைச்சர் திறனறித் தேர்விலும் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு உதவித்தொகை வந்து சேரவில்லை. ஆர்வத்தோடு தேர்வை எழுதும் மாணவர்கள் உதவித்தொகை கிடைக்காததால் சோர்ந்து விடுகிறார்கள். அவர்களின் ஆர்வம் குறைந்து விடுகிறது. அது அவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. இந்தத் தேர்வுகளில் பள்ளி ஆசிரியர்க்கும் சரி, மாவட்ட அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சரி தெளிவே இல்லை. நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. 9ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் தமிழக அரசின் ஊரகத் திறனாய்வுத் தேர்வு பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. ஊரகத் திறனறித் தேர்வு என்பதால் இந்தத்தேர்வை நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் தேர்வை எழுதமுடியாது என்று அரசாணையில் தெளிவாகத் தந்திருக்கிறார்கள். பேராவூரணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பேரூராட்சி பகுதியில் வருகிறது. பழனிவேல் அந்தப்பள்ளியில் தொடர்ந்து தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சில சமயங்களில் உதவித்தொகை வருகிறது, சில சமயம் வருவதில்லை. என் மகளுக்கு ஆரம்பத்தில் வரவில்லை. நான் கல்வி அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, 'உங்கள் மகள் பெயர் பணம் பெறுவோர் பட்டியலில் இருக்கிறதே' என்றார்கள். நான் அதிர்ச்சியடைந்து 'பணம் வரவில்லை' என்றபோது, 'உங்கள் பள்ளி நகரப்புறத்தில் வருகிறது, இந்தத் தேர்வை அங்கு படிக்கும் மாணவர்கள் எழுத முடியாது' என்றார்கள். அரசாணை எல்லாம் காண்பித்து பேசிய பிறகு, சமீபத்தில் மூன்றாண்டுகளுக்குமான உதவித்தொகையை வழங்கினார்கள். தமிழ்த்திறனறித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ₹1500 வீதம் 11ம் வகுப்பிலும் 12ம் வகுப்பிலும் ஆண்டுக்கு ₹18,000 வீதம் தரவேண்டும். அப்படித்தான் அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ₹16,500 மட்டுமே தருகிறார்கள். அதுவும் பெரும்பாலான மாவட்டங்களுக்குச் சென்று சேரவில்லை. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மத்திய அரசு நடத்தும் தேசிய திறனறித் தேர்வையும் (National Talent Search Examination - NTSE) சரிவர நடத்துவதில்லை... என்கிறார் பேராவூரணியைச் சேர்ந்த கல்விச் செயற்பாட்டாளர் பழனிவேல். திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கதிரவனும் இதேபோன்றதொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். எனது மகன், 2023-ல் அம்பத்தூரில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தபோது, மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதித் தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெறுவதற்கான தகுதியையும் அடைந்தார். ஆனால் இப்போதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், 'ஆதார், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட மாணவர்களின் விவரங்களை உரிய காலத்துக்குள் பள்ளிக் கல்வித்துறையிடம் பள்ளி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை' என்கிறார்கள். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெற்ற சில தினங்களிலேயே அந்த ஆவணங்களை பள்ளியில் ஒப்படைத்து விட்டோம். பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'ஆவணங்களை இணையத்தில் ஏற்றமுடியவில்லை' என்றார்கள். கல்வித்துறை அதிகாரிகளோ, 'இணையத்தில் ஏற்ற முடியாவிட்டால் அஞ்சலில் அனுப்பியிருக்கலாமே' என்கிறார்கள். நான் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் அலைந்து அலுத்துவிட்டேன். இதுமாதிரியான தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெறும்போது மாணவர்களுக்கு ஆர்வமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆனால் தேர்ச்சி பெற்றும் உதவித்தொகை கிடைக்காதபோது எதிர்மறையான விளைவுகளே ஏற்படும். இது தொடர்பான நான் சி.எம் செல் வரைக்குமே புகார் அனுப்பிவிட்டேன். கடைசியில், 'பெற்றோர் உரிய ஆவணங்களை உரிய காலக்கட்டத்துக்குள் வழங்காததால் உதவித்தொகையைப் பெற்று வழங்கமுடியவில்லை' என்று சொல்லி முடித்துவிட்டார்கள். இவர்கள் சொல்வதுபடி பார்த்தால் 'என் மகன் உதவித்தொகை பெற முடியாமல் போனதற்குக் காரணம் எனது மகன் தான்'. அதிகாரிகள் மட்டத்திலும் ஆசிரியர்கள் மட்டத்திலும் இருக்கும் இதுமாதிரியான அலட்சியங்கள் அகற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களை உற்சாகப்படுத்த கொண்டு வந்த இந்தத் திட்டங்களே மாணவர்களைச் சோர்வடைய வைத்துவிடும் என்கிறார் கதிரவன். மாணவிகள் புதிது புதிதாக திட்டங்களை அறிவிப்பதோடு அரசுக்கு கடமை முடிந்து விடுவதில்லை. அதிகாரிகள் அதை சரிவர பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். தவறிழைக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளிகள் மீது கவனம் குவிந்து வருகிற இந்தச்சூழலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக கவனம் காட்ட வேண்டிய விவகாரம் இது.!
சென்னையில் களம் காணும் விசிக? திமுக திட்டத்தால் அதிர்ந்த தவெக!
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் வெளியீடாக வந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் நிதீஷ் சகாதேவ் மனம் திறந்துள்ளார். நடிகர் ஜீவாவின் அர்ப்பணிப்பை அவர் நிவின் பாலியுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
சவூதியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
சவூதி அரேபியாவின் தலைநகா் ரியாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை, ஈரான் செவ்வாய்க்கிழமை ட்ரோன் மூலம் தாக்கியது. இத்தாக்குதலால் தூதரக வளாகத்துக்குள் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குவைத்தைத் தொடா்ந்து தற்போது சவூதி அரேபியாவிலும் அமெரிக்க தூதரகம் குறிவைக்கப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த அவசரப் […]
என் அப்பா லாரி டிரைவர் தான் - மேடையில் Emotional-ஆக பேசிய வித்யா? நெகிழ்ச்சியில் உறைந்த அரங்கம்
போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் சதம் அடிப்பார்…அபிஷேக் குறித்து மோர்னே மோர்கல்!
மும்பை : T20 உலகக் கோப்பை 2026-இன் அரை இறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மார்ச் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோத உள்ளன. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் இடம் குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெளிவான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அபிஷேக் சர்மா இந்த டூர்னமென்ட்டில் இதுவரை ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இதனால் அவரது இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆனால் […]
என் கால்ல விழாதம்மா - நடிகை லட்சுமிக்கு Shock கொடுத்த சினேகா; ஆச்சர்யத்தில் உறைந்த பிரபலங்கள்
பசி கொடுமையில குழந்தை இறந்துடுச்சு? - கண்கலங்க வைத்த பிரேமா ரேவதி? அமைதியில் உறைந்த அரங்கம்??
பீகார்: முதல்வர் பதவியை துறக்கிறாரா நிதிஷ் குமார்? - துணை முதல்வராகும் வாரிசு? - என்ன நடக்கிறது?
பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி போட்டியிட்டது. அரசியல் நிபுணர்களால் 'நிதிஷ் குமார் இந்த தேர்தலில் தோல்வியடைவார்' எனக் கூறப்பட்ட நிலையில், பீகார் பெண்களின் வாக்குகளால் அமோக வெற்றியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து 10-வது முறையாக முதல்வர் பதவியேற்றார். ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் காரணமாகவும், பீகாரில் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தவுமே அவரின் எம்.பி விருப்பம் தள்ளிப்போடப்பட்டதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமார், நிஷாந்த் குமார் 75 வயதான நிதிஷ் குமார், 10 முறை முதலமைச்சராகப் பதவியேற்று சாதனைப் படைத்திருக்கும் நிலையில்தான், அவர் முதல்வர் பதவியை துறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், பீகாரின் அடுத்த முதல்வராக பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்படலாம் என்றும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் மாநில துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் பதவியேற்பு
Iran War : Trump-க்கு பயம் காட்டும் ஈரான் - Prof Gladston Xavior Interview | Israel | Nethanyahu
Asian Paints Where The Heart Is Season 9 features Gautam Gambhir’s Delhi home
Mumbai: Asian Paints has unveiled a new episode of Where The Heart Is Season 9, offering an intimate glimpse into the Delhi home of India men’s head coach Gautam Gambhir and his wife Natasha Gambhir. The episode opens the doors to a thoughtfully designed sanctuary that reflects balance, restraint and deeply personal choices.Set in a calm, tree-lined neighbourhood of Delhi, the two-storey residence is conceived as a quiet retreat from the demands of public life. Flooded with natural light and softened by layered textures, the home mirrors a lifestyle centred on connection, comfort and simplicity rather than spectacle.Known for his intensity on the field, Gautam reveals a different side of himself within these walls. “On the field, I’m Gambhir. At home, I’m Gautam,” he says—a distinction that underscores the home’s understated elegance and emotional grounding. Having left home at a young age to pursue cricket, he carries a deep understanding of what stability and reassurance mean. “When you come back home, this is your space; a place that makes you feel secure and stable, ” he reflects.At the heart of the residence is a soaring atrium crowned with a domed ceiling, where sunlight filters through the day, creating shifting patterns across the interiors. The walls are finished in Lankan Jasmine from Asian Paints’ Nilaya Arc Matt range, lending tactile warmth and a breathable softness to the space. The colour palette remains intentionally restrained. “My favourite colours are white and ivory,” Gautam shares, allowing natural textures, light and architectural elements to take centre stage.While Gautam’s preference for clean neutrals forms the foundation, Natasha introduces warmth and character through classic furniture, carved wood accents, polished marble surfaces and subtle metallic details. Soft drapery, delicate pelmets and layered textures ensure the home feels lived-in and personal. As Gautam puts it, “Home design is about making the right choice. There are so many options and colours, but what matters most is what you like.” Season 9 also marks the introduction of the Asian Paints Where The Heart Is Lookbook, a companion guide inspired by the homes featured in the series. Drawing cues from Gautam and Natasha’s residence, the Lookbook translates their calm palette of whites and ivories into curated colour stories and practical design inspirations, enabling viewers to reinterpret similar harmony within their own spaces.The episode further explores a thoughtfully curated trophy lounge that traces Gautam’s cricketing journey. Awards are displayed with restraint alongside family photographs and books, reinforcing that sentiment outweighs accolades. “This room has been created with a lot of love and affection, which, for me, matters far more than all the achievements, ” he says. The space becomes less about victories and more about perseverance and shared memories.The narrative then moves to the daughters’ rooms, designed around comfort, light and functionality. Smart storage solutions, uncluttered layouts and neutral tones create an environment that supports both play and quiet reflection.At its core, the episode highlights a universal truth — that beyond public milestones and professional demands, home remains a place of stillness and security. As Gautam reiterates, “When you come back home, this is your space, a place that makes you feel secure and stable.” Through this episode, Asian Paints once again positions home not merely as a design statement, but as an emotional anchor — a place where life slows down and peace prevails.https://www.youtube.com/watch?v=uaySQYkV2tA&t=2s Where the Heart Is Lookbook
தமிழக அரசியலில் அதிரடி: அதிமுகவில் இருந்து பிரிந்து பல்வேறு புதிய கட்சிகள் உதயம்!
தமிழக அரசியலில் அதிரடியாக அதிமுகவில் இருந்து பிரிந்து பல்வேறு புதிய கட்சிகள் உதயமாகி உள்ளது.
வட மாகாண அதிபர் சங்கம் அரசாங்க அதிபருடன் சந்திப்பு
வட மாகாண அதிபர் சங்கத்தினர் இன்றைய தினம் (04.03.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதத்தினை கையளித்தார்கள். தற்போது நமது பகுதிகளில் எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவை பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், எரிபொருள் பெறுவதற்கு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை தொடர்வதாகவும், அதிபர்கள் ஆசிரியர்கள் தங்கள் கடமையை சிறப்பாக நிறைவேற்ற முடியாமல் […]
பகுவா பாடல்கள் படி மாணவர்களுடன் ஹோலி கொண்டாடிய ஆளுநர் ரவி | Video
பாடல்கள் படி ஆளுநர் ஆர். என் ரவி ஹோலி பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார். இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைவர்கள் பலரும் மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் ஆர். என் ரவி அவர்கள், சென்னை ஐஐடி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து, பகுவா பாடி, ஹோலி பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார். ஹோலி கொண்டாடிய ஆளுநர் மேலும் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு புனிதமான ஹோலி பண்டிகையை முன்னிட்டு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஹோலியின் துடிப்பான வண்ணங்கள் பாரதத்தின் நீடித்த உணர்வுகளான தீமையை நன்மை வென்றதையும் நல்லிணக்கத்தின் கொண்டாட்டத்தையும் நம்மை ஒரே குடும்பமாக இணைக்கும் ஆழமான ஒற்றுமையையும் பிரதிபலிக்கின்றன. ஆளுநர் ரவி அவர்கள், சென்னை ஐஐடி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து, பகுவா பாடி, ஹோலி பண்டிகையையும், ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வையும் கொண்டாடினார். Governor Ravi joined the students of IIT Madras in singing Phagua, celebrating Holi and the spirit of Ek Bharat Shreshtha Bharat.… pic.twitter.com/8Sgqd3kgyk — LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) March 4, 2026 இந்த புனிதமான பண்டிகை நமது கூட்டு உணர்வை மீண்டும் தூண்டி, நமது நாகரிகத்தை வடிவமைத்த காலத்தால் அழியாத மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஹோலி வளம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும். ஹோலி கொண்டாடிய ஆளுநர் 2047 ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப அசைக்க முடியாத உறுதியுடன் நம்மை வழிநடத்தட்டும் என்று ஹோலி வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் ஆர்.என் ரவி ஐஐடி மாணவர்களுடன் பகுவா பாடல் பாடி பண்டிகையை கொண்டாடிய வீடியோவை கவர்னர் மாளிகை வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இன்னும் முடிவாகாத சீட்; வேலைகளை ஜரூராகத் தொடங்கி விட்ட மநீம பிரபலங்கள்! - இவர்கள்தான் வேட்பாளர்களா?
திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது. அக்கட்சி சார்பில் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உட்பட சில நிர்வாகிகள் வந்து திமுக-வின் குழுவோடு பேசினார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது, ''பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது. 'திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும்' என்கிற விபரங்களை தரவுகளோடு ஒப்படைத்திருக்கிறோம். எந்தெந்த தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது என்கிற விபரங்களையுமே ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறோம். இது முதல் கட்டப் பேச்சு வார்த்தைதான். எந்தெந்த தொகுதிகள் கேட்டோம் என்பதை இங்கு பகிர முடியாது. கோழி அடைகாப்பது போல் காத்து வருகிறோம். குஞ்சு பொரிக்கும் போது உங்களுக்குத் தெரியத்தான் போகிறது' என ஜாலி மூடில் பேசிவிட்டுச் சென்றார். இதற்கு முந்தைய, அதாவது மநீம தனது சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்ட போது, அதன் தேர்தல் அறிக்கையே அவ்வளவு சூடாக இருந்தது. ஸ்டாலின், கமல்ஹாசன் ''அதிமுக, திமுக கட்சிகளின் மோசமான ஆட்சியாலும், தவறான நிதி நிர்வாகத்தாலும் தமிழகத்தின் கடன் சுமை 1 லட்சம் கோடியிலிருந்து, 5.75 லட்சம் கோடியாய் பெருகியது. இந்த இரு கட்சிகளும் வரி வருமானத்தை மட்டுமே நம்பி, மாநில நிர்வாகத்தை நடத்துவதற்கு கடன் வாங்கித்தான் நடத்த முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இக்கட்சிகளின் தலைவர்களால் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்ல முடியாது'' என ஆவேசமாக அறிக்கை தயாரித்திருந்தார் கமல். ஐந்தாண்டு கால திமுக ஆட்சி முடிந்த இன்றைய தேதியில், தமிழக அரசின் கடன் அப்படியே இரட்டிப்பாகியிருக்கிறது. இந்தப் பக்கம் கமலுமே அப்படியே தலைகீழாக மாறி இன்று திமுக கூட்டணியில் ஒரு கட்சியாகி விட்டார். snehan, kamal சரி எல்லோருக்கும் தெரிந்த இந்தக் கதை இப்போது எதற்கு? 'குஞ்சு பொரிக்கும் போது தெரியவரும்' என்கிறார்களே, அந்த மேட்டருக்குச் செல்லலாம். 'எத்தனை தொகுதிகள் மநீமவுக்குக் கிடைக்கலாம்' என்ற கேள்வியை கட்சியின் உயர்மட்டத்துடன் நெருக்கமான வட்டாரங்களில் காதை தீட்டினோம். 'ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மௌரியா, கவிஞர் சிநேகன் ரெண்டு பேரு பெயர்களும் பலமா அடிபடுது. இரண்டு தொகுதிகள் கிடைக்கும்னா இவங்களுக்கு முன்னுரிமை கிடைக்கலாம்னு சொல்றாங்க. இவர்களில் மௌரியாவுக்குக் கிடைத்தால் தலைநகரையொட்டிய ஏதாவது ஒரு தொகுதி இருக்குமாம். சிநேகன் சொந்த ஊர்ப் பக்கம் நிற்பாராம். சின்னம் உதயசூரியன் தான். ரெண்டு பேருமே தேர்தல் வேலைகளை நம்பிக்கையோட தொடங்கிட்டாங்க' என்கின்றனர் அவர்கள். Loading…
ZEE5 to premiere romantic comedy Pookie digitally on March 13
Mumbai: ZEE5 has announced the digital premiere of romantic comedy Pookie, directed by Ganesh Chandra in his directorial debut. The film will stream exclusively on the platform from March 13th in Tamil, Telugu, Malayalam and Kannada.Produced by Fatima Vijay Antony under the banner of Vijay Antony Film Corporation, Pookie stars Ajay Dhishan alongside R. K. Dhanusha, who makes her debut as the female lead. The supporting cast features Pandiarajan, Sunil and Lakshmi Manchu. The film’s music and editing have been handled by Vijay Antony.Pookie traces the humorous yet emotionally layered journey of a couple navigating the complexities of separation while confronting lingering feelings for one another. The narrative explores the confusion, affection and contradictions that define modern-day relationships.Producer, Music Director and Editor of the film, Vijay Anthony shares, “Pookie is a story that feels simple on the surface but reflects something very real about relationships today. Director Ganesh Chandra has brought a fresh energy and honesty to this film. This project captures both humour and vulnerability in such a relatable way.” Lakshmi Manchu adds, “There is a beautiful simplicity in Pookie. The film captures the awkwardness, tenderness and unpredictability couples experience. Being part of this project was truly enjoyable, and I believe audiences on Tamil ZEE5 will connect with its warmth.” With its multilingual rollout and relatable storyline, Pookie is set to strengthen ZEE5’s regional content portfolio while catering to audiences seeking light-hearted yet emotionally resonant storytelling across South India.
தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சாவூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் முக்கியமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளார் விஜய். மேலும், அவர் இந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளது தொடர்பாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் விஜய்யை பார்க்க வந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல்! –உறுதிசெய்த ஐஏஇஏ
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ‘ஐஏஇஏ’ செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது. சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) இதுதொடா்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய ஈரானில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில், அணு உலை அமைந்துள்ள நிலத்தடிப் பகுதிக்குச் செல்லும் நுழைவு வாயில் கட்டடங்கள் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. எனினும், இத்தாக்குதலால் அணு உலையின் மிக முக்கியமான உட்பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. […]
கொலைச்சேவல் மார்ச் 13 ரிலீஸ்: கே.பி. கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் வேட்டை!
இயக்குநர் கே.பி. கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொலைச்சேவல்' திரைப்படம் மார்ச் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. த்ரில்லர் பாணியில் அமைந்துள்ள இப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் இதோ.
திமுகவில் நிரம்பி வழியும் Ex-அதிமுக தலைகள்…. 2026 தேர்தலில் யார், யாருக்கு சீட்? ஸ்டாலின் பிளான்!
தமிழக அரசியலில் கட்சி மாறும் படலங்கள் 2026 தேர்தல் நேரத்திலும் பஞ்சமின்றி நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறிய தலைவர்களுக்கு சீட் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே அலுவகத்தின் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் பலகைகள் நீக்கம்!
திருச்சி ரயில்வே அலுவகத்தின் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் பலகைகள் நீக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி தொடரும்.. - ஓபிஎஸ் நம்பிக்கை!
70-80 சதவீதம் அதிமுகவினர் திமுகவில் இணைய உள்ளதாக ஓ . பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
“புதிய ஈரான் தலைவரையும் அழிப்போம்” – இஸ்ரேல் கடும் எச்சரிக்கை!
இஸ்ரேல் : மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் 5-ஆம் நாளை எட்டியுள்ளது. இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணி ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவ தளங்கள், எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை – டிரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரானின் அடுத்த உச்ச தலைவராக காமேனியின் மகன் மோஜ்டபா (Mojtaba Khamenei) தேர்வு செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் […]
இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது போடாதீர்கள், அது உங்கள் அரசின்.!- தமிழிசைக்கு சு.வெ பதில்
திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என மத்திய அரசு பெயர் சூட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ' இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எங்களது தமிழ் மொழியின் முறையான மொழிபெயர்ப்பை எழுத அறிவுறுத்துங்கள். அதிகாரிகளின் தவறால் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்திருந்தார். தமிழிசை சௌந்தரராஜன் தமிழிசை சௌந்தரராஜனின் கோரிக்கைக்கு எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள். இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது. வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சிஎன்று பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டிருக்கிறார். Loading…
திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப்பாடி பழனிசாமி
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக நுழைவு வளைவு கட்டப்பட்டது. அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளனர். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்தியில் பெயர் அமைத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து திருச்சியில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். திருச்சி ஜங்சன் இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்க் குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது. எடப்பாடி பழனிசாமி இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா?
Brands blend celebration, conscience and creativity in festive campaigns: Holi 2026
Mumbai: Holi 2026 has inspired brands to move beyond colours and celebration, using the festival as a powerful platform for storytelling, social messaging and innovation. From AI-led digital films and influencer collaborations to campaigns championing consent, safety, remembrance and financial confidence, this year’s Holi narratives reflect both cultural vibrancy and contemporary concerns. Here’s a look at how leading brands across categories are bringing fresh perspectives to the festival of colours through creative, responsible and emotionally resonant campaigns. Crompton As Holi ushers in spring with colour-filled celebrations across homes and communities, steady water supply becomes central to the day’s festivities, from early bucket-filling to lively pichkari play. Tapping into this insight, Crompton Greaves Consumer Electricals Ltd. has launched an AI-powered digital film titled ‘Crompton Pumps - Bina Ruke, Jyaada Chale,’ highlighting the importance of uninterrupted water flow during celebrations. The film captures the rhythm and energy of Holi, showing how consistent water pressure keeps the fun going without disruption, while reinforcing the pump’s strong suction and steady performance as key enablers of uninterrupted festivities.https://www.youtube.com/watch?v=v6kRJ2b_bSM Motovolt Motovolt Mobility, an advanced and reliable electric two-wheeler solutions provider, welcomes the festive spirit of Holi with a collaborative digital film featuring multiple regional influencers coming together to capture and celebrate the excitement, vibrancy and bonds associated with the festival. The film, conceptualised in-house, follows the theme of Apni Ride, Apna Rang and has been executed by brandsadvert, the brand’s influencer marketing and campaign partner. View this post on Instagram A post shared by Onkar Jha | Kolkata Blogger (@imbekarbanda) PR 24x7 As the festival of colours approaches, PR 24x7 has launched a social awareness campaign titled *Play Safe Holi* to encourage celebrations rooted in safety, respect and consent. While Holi is known for joy and togetherness, personal boundaries are sometimes crossed under the phrase “Bura na mano, Holi hai,” leading to discomfort. Through this initiative, the agency highlights that the true spirit of Holi lies in shared happiness, not compulsion. The campaign reminds people that everyone has the right to say no, and stresses the importance of seeking consent before applying colours, respecting personal space, and ensuring dignified, force-free celebrations. View this post on Instagram A post shared by PR 24x7 (@pr24x7official) Parachute Advansed This Holi, Marico Limited, one of India’s leading FMCG companies, unveiled a high‑impact integrated campaign for its iconic Parachute Advansed Gold Coconut Hair Oil, bringing a fresh and contemporary take to the festival of colours. Seamlessly blending cultural resonance, entertainment and holistic hair care, the campaign engaged consumers across multiple touchpoints in various formats. Rooted in the insight that during Holi many instinctively run away from colours, the brand instead makes a powerful call to run towards them, backed by the protection it provides. This thought comes alive in the line: “Na na wali nahi, Nariyal wali Holi.”https://youtu.be/w1mBgM9DnZY?feature=shared Dabur's Real Juice Grapes Worldwide has conceptualised and executed a new Holi campaign film for Dabur Real Juice, leveraging Hyperrealism AI to deliver a highly immersive visual experience. The campaign video was developed using advanced JSON prompting techniques, enabling the team to achieve intricate detailing and lifelike visual output. By integrating cutting-edge AI tools into its creative workflow, Grapes Worldwide has demonstrated how technology-led storytelling can elevate festive brand campaigns while pushing the boundaries of digital production. View this post on Instagram A post shared by Real Fruit Power (@realjuices) Ochre Spirits Ochre Spirits, a brand known for blending modernity with responsibility, is marking Holi with the launch of “Bura Mano,” an innovative eight-second campaign film that takes a fresh, thoughtful approach to festival messaging. Created entirely with AI-generated visuals, the film captures a universal moment: a subtle shift in a woman’s expression when celebration crosses a boundary, something many recognise but seldom discuss. Unlike traditional campaigns that rely on confrontation or dramatisation, “Bura Mano” stands out for its restraint. There are no raised voices or explicit explanations, just a smiling woman at Holi, until something in her gaze changes. The campaign trusts viewers to notice what happens, without being told. Vega Auto Vega Auto has launched a Holi campaign that combines festive cheer with a strong road safety message. The brand’s new digital film highlights the importance of wearing helmets while celebrating the joy and colours of the festival. The story features a confident “dadi” leading a spirited group of elderly women, all wearing Vega helmets, in a lively Holi setting filled with music and vibrant colours. Built around the line, “Rang zabardasti ka nahi hota. Happy Holi.” The film promotes consent and responsibility during celebrations, while reinforcing that safety on the road should never be compromised. Conceptualised by Scratchpad, the campaign stars women from Shantai Vruddhashram, bringing warmth, confidence and energy to the screen, and underlining Vega’s commitment to responsible riding through meaningful, culturally relevant storytelling. View this post on Instagram A post shared by Vega Helmets India (@vegahelmets) Fabindia Fabindia has announced the launch of its 2026 Holi campaign, “The Colours of White,” a joyful celebration of artisanal craft and festive togetherness. The collection features Holi essentials and a curated range of ethnic and western silhouettes for the entire family, blending traditional heritage with contemporary style. PartySmart This Holi season, PartySmart India’s leading brand in hangover prevention, has taken hangover awareness to the streets. In a culture-first activation designed to spark conversation, the brand brought “Holi Zombies” to life across 12 high-footfall locations in Delhi and Mumbai. View this post on Instagram A post shared by PartySmart India (@partysmartindia) Lovely Professional University In a unique tribute this Holi, Lovely Professional University launched a powerful film titled “Colour of Sacrifice,” introducing #EkMutthiGulaal, a nationwide movement urging Indians to dedicate one handful of red gulaal to martyrs who sacrificed their lives for the country. Conceptualised by Hashtag Orange, the black-and-white film uses red as the only colour to symbolise courage and sacrifice, turning a festive gesture into an act of remembrance. Led by Founder Mukesh Vij, Managing Partner Gaurang Menon and scripted by Associate Creative Director Manish Rao, the campaign has been amplified by LPU Chancellor and MP Dr. Ashok Kumar Mittal, who has encouraged citizens to participate. Designed as a participatory social media movement, the initiative has seen widespread engagement from netizens and creators, transforming Holi celebrations into a collective expression of gratitude. Stashfin This Holi, Stashfin, India's leading digital lending and full-stack financial services platform, has released a heartfelt brand festive video on Instagram that goes beyond colours and celebration to tell a deeply relatable story of distance, dignity and reconnection. Set against the vibrant backdrop of the festival, the film captures how unspoken financial stress can quietly create gaps between loved ones, a reality many experience but rarely acknowledge. Yet at its core, the story is one of hope, reminding viewers that every distance can be bridged with understanding and financial confidence too. View this post on Instagram A post shared by Stashfin: Loans, Bonds & More (@stashfin_)
மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளது
மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளமையினால் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத்தரகர்களிடம்… The post மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளது appeared first on Global Tamil News .
காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்திய எல்லையில் தத்தளிப்பதாகத் தகவல்!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு ஊரணிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையில்,… The post காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்திய எல்லையில் தத்தளிப்பதாகத் தகவல்! appeared first on Global Tamil News .
மீனம்: ஜென்மச் சனி என்ன செய்யும்? சிக்கலற்ற விஷயங்கள் இவைதான் | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் மீனம் மீன ராசிக்கு அதிபதி குரு. ஆன்மிக விஷயத்தில் நாட்டம், இரக்கம், சட்டதிட்டத்தில் மதிப்பு, நாகரிகமான வாழ்வு, இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் பிடிப்பு, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை ஆகிய அத்தனையும் இந்த ராசிக்காரர்களிடம் தென்படும். இந்தச் சனிப்பெயர்ச்சி மீன ராசிக்கு எப்படி? வாக்கிய பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 - மீனம் மீன ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. மீன ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, ஜென்மச் சனியாக அமர்கிறார் சனிபகவான். எனினும் கவலை வேண்டாம். நல்லதையே செய்வார். அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். அவர் ஆட்சிபெற்று சுபத்தன்மை அடைவதால், பணவரவையும் அதிகரிப்பார். 2. வாழ்வில் நிம்மதி பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைப் பாக்கியம் உண்டாகும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தடைப் பட்டிருந்த மகளின் கல்யாணம் விரைவில் நடக்கும். மகனுக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 3. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். எனினும், ஜென்மச் சனி என்பதால், உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை. மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். 4. உங்களின் ராசிநாதனும், ஜீவன ஸ்தானாதிபதியுமான குருபகவா னின் பூரட்டாதி சாரத்தில் 6.3.2026 முதல் 2.4.2026 வரை செல்கிறார் சனி பகவான். அப்போது ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில், வேலைச்சுமை இருக்கும். சனிபகவான் 5. சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்வதால் பணவரவும், செலவுகளும் ஒருங்கே வந்து சேரும். திடீர்ப்பயணங்களும் அலைச்சலும் இருக்கும். அதேபோல் அவர் ரேவதியில் சஞ்சரிக்கும் காலத்தில் தாயாருடன் மனஸ்தாபம் எழலாம். எனினும், சமூகத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. 6. சனி வக்ரநிலையில் செல்லும்... 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரையிலான காலத்தில், பிரபலங்களின் உதவி கிடைக்கும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. எனினும் முன் கோபத்தைத் தவிர்க்கவேண்டும். புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். 7. இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3, 7 மற்றும் 10-ம் வீட்டைப் பார்க்கிறார். ஆகவே, வெளி வட்டாரத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிக்கு கால்வலி, கழுத்து வலி வந்து நீங்கும். சனிபகவான் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர், சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். 8. இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள், சேமிப்பைப் பயன்படுத்தி ஆபரணங்கள் வாங்குவார்கள். பணிக்குச் செல்வோருக்கு மனப்பாரம் குறையும்; பதவி உயர்வு, சம்பள உயர்வு மகிழ்ச்சி தரும். உறவுகள் மத்தியில் அந்தஸ்து உயரும். 9. வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. அதேநேரம் லாபம் கணிசமாக உயரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். ஹோட்டல், கணினி உதிரிபாகங்கள், இரும்பு, வாகனம், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். 10. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு எல்லாம் கிடைக்கும். அதேநேரம் வேலைப்பளு கூடும். கணினித் துறையினர், கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். 11. உத்தியோகஸ்தர்களே, மேலதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். எனினும் வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். இழந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். கணினித்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். 2026 வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி 6 ராசிகளுக்குப் பாதிப்புகளைச் சரிசெய்யும் 10 பரிகாரங்கள்!
கும்பம்: `விலகப்போகும் சனி... வாழ்க்கை மாறுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் கும்பம் பொதுவாகவே, கும்ப ராசிக்கு உச்சம்பெற்ற சனி உயர்வுக்குக் காரணமாவார். நீசம் பெற்றால் செவ்வாயின் பலத்தால் உயர்வை எட்டவைப்பார். கட்டுக்கோப்பான உடல், சுகாதாரமான சூழல், தீர்மானமான முடிவு அத்தனையும் இந்த ராசியினரிடம் இருக்கும். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் எண்ணம் எழாது. உங்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி எப்படி? வாக்கிய சனிப்பெயர்ச்சி 2026 கும்ப ராசிபலன்கள் கும்ப ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள் 1. கும்ப ராசிக்காரர்களுக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் ஜென்மச்சனி விலகுகிறது. 24.4.2028 வரையிலும் பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். அவர் ஆட்சிபெற்று வலுவாக அமர்வதால், மனதில் சாந்தம் பிறக்கும்; வீண் பயம் அகலும். வற்றிய பணப்பை நிரம்பும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும். 2. உங்களின் பழக்கங்களை நல்லமுறையில் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமணம் குறித்த கவலைகள் விலகும். எனினும், உணவு பழக்க வழக்கங்களில் அலட்சியம் வேண்டாம். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். 3. பொதுவெளியில் அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண் டாம். எதன் பொருட்டும் எவருக்கும் வாக்குறுதி கொடுக்கவும் வேண்டாம். முக்கியமான பெரிய விஷயங்களைக் கையில் எடுக்கும் போது, வீட்டுப்பெரியவர்களின் - அனுபவசாலிகளின் ஆலோசனை களைப் பெறுவது நல்லது. 4. சனி பகவான் பூரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலமான 6.03.2026 முதல் 2.4.2026 வரை, எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றியே. பணம் வரும். விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் வீடு வாங்குவீர்கள். எதிர்ப்புகள் விலகும்; கவலைகள் தீரும். சனி பகவான் 5. அதேபோல், சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்வதால், புதுப் பதவிகள் தேடி வரும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். 6. சனி வக்ரத்தில் செல்லும் காலத்தில் நிதானம் அவசியம். அதாவது, 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், பழைய கசப்பான சம்பவங்கள் மனதை வாட்டும். முன்கோபத்தைத் தவிருங்கள். பணவரவு ஓரளவு இருக்கும். 7. இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 4, 8 மற்றும் 11-ம் இடங்களைப் பார்க்கிறார். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். 8. ஒருசிலருக்கு திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்டர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். எனினும், திடீர் பண வரவு உண்டு. வீடு-மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, குடும்பத்தில் கூச்சல்-குழப்பங்கள் விலகும்; சந்தோஷம் பெருகும். கணவரின் அலுப்பும் சலிப்பும் நீங்கும். பணியிடத்தில் முன்னேற்றம் உண்டாகும். சம்பளம் உயரும். 10. வியாபாரத்தில், அதிரடியான மாற்றங்களைச் செய்வீர்கள். புதிய முதலீடுகளால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சந்தையின் சூழலை அறிந்து செயல்பட்டால், இரட்டிப்பு லாபம் உண்டு. 11. உத்தியோகத்தில், எதிர்பார்த்தபடி முன்னேற்றம் உண்டாகும். சம்பளம் உயரும். புதிய பதவிகளுக்கு உங்களின் பெயர் பரிந்துரைக்கப் பட வாய்ப்பு உண்டு. மேலதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். எனினும், அதிகாரிகளைப் பற்றிய விமர்சனங்கள் வேண்டாம். மிதுனம்: `எதிர்பாராத பண வரவு; வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
Hungama OTT launches ‘Begum of Crime’ featuring Sana Makbul in a powerful new avatar
Mumbai: Hungama OTT has announced the launch of its latest original series, Begum of Crime, marking a bold addition to its content slate with a female-led crime thriller that explores ambition, survival and the cost of power. Featuring Sana Makbul in a never-seen-before avatar, the series delves into the psychology of relentless aspiration and the fine line between empowerment and destruction.At the heart of the narrative is Divya, portrayed by Sana Makbul, a character who defies the conventional heroine archetype. Fierce, flawed and unapologetically driven, Divya leaves behind the safety of her home determined to build a life on her own terms. As she navigates a world that consistently underestimates her, each setback fuels her resolve, while each compromise pulls her deeper into moral ambiguity. What begins as a fight for survival gradually evolves into a darker quest for power, where deception becomes currency, manipulation becomes armour, and betrayal and violence mark her ascent.Sharing her thoughts on playing Divya , Sana Makbul said, “I’ve been waiting for the right project to mark my OTT debut, and Begum of Crime felt like the perfect choice. Divya is bold, unapologetic, and dangerously determined. She operates in grey shades; you don’t always agree with her. As an actor, it was emotionally challenging to step into her psyche because she believes that if the world refuses to give her respect, she’ll take it by any means necessary. That emotional fire is what makes her both powerful and unpredictable.” Co-actor Karan Sharma, who plays Guddu, added, “What drew me to Guddu was the emotional shift his journey goes through. When he first meets Divya, he is fascinated by her boldness and sharp mind. But as they begin committing crimes together, he slowly realizes that her ambition runs far deeper and darker than he imagined. Watching that transformation unfold, and being a part of it, was both thrilling and unsettling”.
Redhill and BHM Holdings announce strategic partnership to build Asia–Africa communications corridor
Singapore: Redhill, an independent communications agency, and BHM Holdings, Africa’s leading integrated communications group, have entered into a landmark strategic partnership aimed at creating a seamless communications bridge between Asia and Africa — two regions representing over five billion people and some of the fastest-growing economies globally.The collaboration unites more than 300 communications professionals across over 20 markets, including Singapore, India, Japan, South Korea, Thailand, Indonesia, Australia, Nigeria, Ghana, Kenya, Tanzania, South Africa, the United Kingdom and the United States. Together, the firms will provide integrated services spanning strategic brand and corporate communications, issues and reputation management, media relations, digital marketing, creative services, stakeholder engagement and government relations across both continents.[caption id=attachment_2494072 align=alignleft width=200] Jacob Puthenparambil [/caption]The move comes amid accelerating trade and investment flows between Asia and Africa, with businesses increasingly seeking partners that offer on-the-ground expertise in both regions. “This is about much more than a referral arrangement; we are building the infrastructure for a new era of Asia–Africa commerce,” said Jacob Puthenparambil, Founder and CEO of Redhill. “As Asian companies expand into Africa and African businesses look to Asia for growth, they need communications partners who truly understand both markets. By combining Redhill’s deep expertise across the Asia-Pacific with BHM’s unmatched strength across the African continent, we are creating one of the most powerful independent communications networks connecting these two regions.” [caption id=attachment_2494071 align=alignright width=200] Ayeni Adekunle [/caption] “Africa’s story is one of extraordinary growth and transformation, and the opportunities for collaboration with Asia have never been greater,” said Ayeni Adekunle, Founder and CEO of BHM Holdings. “ With Redhill, we have found a partner that shares our ambition, our entrepreneurial spirit, and our commitment to world-class service. Together, we are uniquely positioned to help businesses navigate and succeed across these two dynamic regions.” Redhill has been recognised by The Straits Times as one of Singapore’s Fastest Growing Companies for five consecutive years (2021–2025), named Asia Agency of the Year at the SABRE Awards Asia Pacific and ranked among the fastest-growing PR agencies globally by PRovoke Media. The agency operates with over 200 professionals across Asia-Pacific and Europe.BHM Holdings comprises BlackHouse Media, ID Africa and AI-powered communications technology platform Plaqad. The group has been listed by the Financial Times among the 100 fastest-growing companies in Africa and was a finalist for African Consultancy of the Year at the SABRE Awards EMEA. BHM operates across five countries and three continents with nearly 100 professionals.Under the partnership, clients of both firms will gain preferential access to the other’s full suite of services, local market intelligence and established media and stakeholder networks. Key sectors expected to benefit include technology, financial services, FMCG, energy, infrastructure and government relations.The partnership is effective immediately.
RGV Shares Views on Vivek Oberoi Career
Director Ram Gopal Varma is known for changing the way stories are shown in Indian cinema. With films like Satya,
கேப்டனின் அடையாளம் மீண்டும் கையில்... புதுச்சேரியில் முழங்கப்போகும் தேமுதிகவின் முரசு
புதுச்சேரியிலும் தேமுதிகவிற்கு முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை! –ரஷியா திட்டவட்டம்
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியதைச் சுட்டிகாட்டியுள்ள ரஷியா, ‘அணு ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வரக்கூடாது என்னும் எந்த உன்னத நோக்கத்துக்காக ஈரானில் அமெரிக்கா போர் தொடுத்துள்ளதோ, இப்போது அதற்கு நேரெதிராக விளைவுகள் ஏற்படக்கூடும். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டதற்கான எந்தவொரு […]
விஜய் எச்சரிக்கை மீறிய தொண்டர்கள்.. விபத்தில் சிக்கிய இளைஞர் - பதறவைக்கும் காட்சிகள்!
தஞ்சையில் தவெக தலைவர் வாகனத்தை பின் தொடர்ந்ததால் இளைஞர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி ; தலைமறைவான காதலன்
கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்ததாக சந்தேகப்படும் , அதே தொழிற்சாலையில் உதவியாளராக பணியாற்றிய திருமணமான ஊழியர், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளார். பதுளை, கெப்பெட்டிபொல பகுதியைச் சேர்ந்த இவர், தற்காலிகமாக கஹதுடுவ பகுதியில் தங்கியிருந்து வேலை செய்துள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரத்தம் […]
Chandni Shah named CEO of Kinnect and 22feet Tribal
Mumbai: Kinnect and 22feet Tribal have announced the appointment of Chandni Shah as Chief Executive Officer. She previously served as Founder & COO at Kinnect and has been associated with the agency for over 14 years.Shah announced her new role on LinkedIn, outlining a clear and disciplined growth vision for the agencies. She wrote, I’ve always believed that how you grow matters more than how fast you grow. As I step into the role of CEO at Kinnect and 22feet Tribal, one of my first decisions has been a simple one, but not an easy one. I’m done with serial pitching. This year, we will onboard only five new clients. We believe in long-term brand building, and so want to be extremely mindful who we partner with. We want to be able to showcase real impact and make sure that creativity becomes a business multiplier. And once we bring them onboard, we go all in. All heart. This isn’t about trading growth. We remain deeply ambitious about what we want to achieve this year. But we’re equally committed to protecting the kind of growth that lasts. I don’t want to add logos to a slide. I want to genuinely move brands forward. Our commitment is simple: Deliver our best thinking, our best energy, and the very best of Kinnect and 22feet to the brands who trust us, both the ones who’ve built with us, and the five we partner to build next with. Sometimes discipline is the most ambitious move you can make. With over a decade and a half of industry experience, Shah has built deep expertise across advertising, marketing communications, digital marketing, creative strategy, brand architecture, media planning, integrated marketing, brand management, online advertising, digital media, corporate branding and digital strategy.Prior to joining Kinnect, she worked with JWT India in client servicing and began her career at Percept H in 2009.Her elevation to CEO signals a new phase for Kinnect and 22feet Tribal, with a sharpened focus on sustainable growth, long-term partnerships and measurable business impact driven by creativity.
Pranav Vashisht Impresses With Versatile Roles
Actor Pranav Vashisht made a strong impression with his role as Pamma in director Imtiaz Ali’s film Amar Singh Chamkila.
Samsung Ads India elevates Nishit Kanchan as General Manager & Head of Revenue
Mumbai: Nishit Kanchan has been promoted as General Manager & Head of Revenue at Samsung Ads India. Kanchan, who previously served as Sales Head, has been associated with the company since 2022 and has played a key role in strengthening its Connected TV (CTV) advertising proposition in India.Announcing the new role on his LinkedIn handle, Nishit shared, Grateful, Energized, and Ready to lead the next chapter at Samsung Ads. Four years ago, I embarked on a journey with Samsung Ads. Today, I am incredibly humbled and proud to share that I am stepping into a new chapter as General Manager & Head of Revenue – India. Reflecting on these past four years, it’s been more than just a career milestone; it’s been a front-row seat to a revolution. We didn’t just join the CTV (Connected TV) industry—we helped define it. In an era where the living room has been rediscovered, Samsung Ads has remained at the forefront, acting as the pioneer in shaping how brands connect with the modern, data-driven viewer. This journey has been personally transformative. Being recognized as an e4m 40 Under 40 Revenue Leader (2026) and Agency Reporter’s 30 Under 30 (2024) during this time has been a humbling validation of the work we are doing to move the needle in the AdTech ecosystem. But growth is never a solo mission. - To my Mentors and leadership: Thank you for your unwavering belief. Your guidance has been my compass. I am especially grateful to the Samsung Ads Management for the trust you’ve placed in me to lead this next phase. It is a privilege to work under leadership that fosters such a bold vision for the future of media. - To my Sales & Revenue Teams: You are the engine. We have built a high-performance culture rooted in resilience and a relentless pursuit of excellence. Seeing this team consistently smash benchmarks has been the greatest highlight of my professional life. Banya Saikia, Pratik Datey , Tanvi Khot , Nivica Malhotra , Jawaz Jagirdar , Aniketh Ajay Kundliwal , Ankit Dogra. - To our Cross-Functional Teams: Whether it’s Finance, CSM, Marketing, Product, Operations, or Tech—the Samsung Magic only happens because of you. Thank you for making the impossible a reality. Mitul Sanghani , Ritika Darira , Bhavna Saincher + the extended teams. As I take on this new responsibility, my focus is clear: driving sustainable revenue growth, fostering a culture of excellence, and continuing to lead the CTV conversation in India. The journey has been one of learning, grit, and immense gratitude. I’m more excited than ever for what’s next. Godspeed !! Prior to joining Samsung Ads India, Kanchan held roles at leading media and digital organisations including Times Internet, ZigWheels, Business Standard and The Times of India.With extensive experience across market research, marketing communications, digital marketing, online advertising, media planning, brand management and business development, Kanchan is expected to spearhead Samsung Ads India’s next phase of revenue expansion, as the company continues to scale its presence in the rapidly growing CTV and AdTech ecosystem.

27 C