வரிகளை ரத்து செய்த அமெரிக்க உயர்நீதிமன்றம்; கனடா மீது நீடிக்கும் வரிகள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனினும் இது கனேடிய தொழிலாளர்களுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி அல்ல என கனடாவின் மிகப்பெரிய தனியார் துறை தொழிற்சங்கமான Unifor தெரிவித்துள்ளது. “இந்தத் தீர்ப்பு ட்ரம்ப்பின் வரிகள் சட்டவிரோதமானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், கனேடிய தொழிலாளர்கள் இதனை வெற்றியாகக் கருதக்கூடாது” என Unifor தேசியத் தலைவர் லானா பெய்ன் தெரிவித்துள்ளார். வரிகள் இப்போதும் அமுலில் உள்ளன கனடா மீது , வாகன உற்பத்தி, உருக்கு, அலுமினியம் […]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய பொதுப் பட்டமளிப்பு வைபவம் கடந்த நான்கு நாள்களில் 12 அமர்வுகளாக நடைபெற்று இன்று நிறைவடைந்தது. இம்முறை 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜெ. பிறந்த நாளில் தொண்டர்களுக்கு ஈபிஎஸ் தரும் கிஃப்ட்.. ராஜேந்திர பாலாஜியின் பங்கு என்ன?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி (நாளை மறுநாள்), அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.
13 வருடங்களுக்கு முன் தனுஷ் சாருடன் வந்தேன்; முதல் வரிசையில் உட்கார எனக்கு..! - சிவகார்த்திகேயன்
70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது. இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. சிவகார்த்திகேயன் - தனுஷ் விருது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், இந்த Filmfare விருது தான் எனது முதல் விருது. 13 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு தனுஷ் சாருடன் தான் வந்தேன். அவர் தான் 'சும்மா வா... ஜாலியாக போயிட்டு வரலாம்' என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது. இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகள் இருக்கிறது. 'அமரன்' படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது 'அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்' என்று சொன்னேன். அதேபோல இந்த படம் இன்னும் எனக்கு விருதுகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்தினருக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இந்த படத்திற்காக நான் கமல்ஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்த எக்கச்சக்கமான Filmfare விருதுகளை பார்த்தேன். அமரன் அப்போது 'அமரனுக்காக எனக்கும் கிடைக்கும்' என்று நினைத்தேன். இன்று அது கிடைத்திருக்கிறது. நான் மிகவும் சீரியஸான நபர் கிடையாது. ஜாலியான நபர் தான். ஆனால் அமரன் மாதிரி ஒரு சீரியஸான படத்தில் நடித்த பிறகு 'ஏன் இப்படிச் செய்தாய்?' என்று யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பாராட்டினார்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி. முக்கியமாக என் ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை அடித்து துவைத்தாலும், மிதித்தாலும் என்னை தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருப்பது நீங்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று Filmfare விருதுடன் மேடையில் நிற்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
அடுத்தடுத்து 2 திமுக அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதி- அமைச்சர்களுக்கு என்ன நடந்தது?
திமுகவின் முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்!
யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவினார் மலாயாவின் முஸ்லிம் மன்னர்! 1927 இல், மலாயாவில் வெளியான புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்… The post நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! appeared first on Global Tamil News .
️ சிலாபத்தில் 2 கோடி பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இருவா் கைது
சிலாபம், தொடுவாவ பகுதியில் சுமார் 20 மில்லியன் ரூபா (2 கோடி) பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இரண்டு சந்தேக… The post ️ சிலாபத்தில் 2 கோடி பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இருவா் கைது appeared first on Global Tamil News .
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகள் செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், இதுவரை வசூலிக்கப்பட்ட சுமாா் 17,500 கோடி டாலா் வரிப்பணம் மீண்டும் திரும்பக் கிடைக்குமா என்ற கேள்வி உலக வா்த்தகா்களிடையே எழுந்துள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்றம் வரிகளை ரத்து செய்துள்ளதே தவிர, வசூலிக்கப்பட்ட பணத்தைத் திரும்ப வழங்குவது தொடா்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கவில்லை. இதனால், வரியைச் செலுத்திப் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பல சட்ட ரீதியான சிக்கல்கள் உருவாகியுள்ளன. வரிப்பணத்தைத் திரும்பப் […]
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் அதிரடி வான்வழித் தாக்குதல்!
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் இன்று (பெப்ரவரி 22, 2026) அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நங்கர்ஹார்… The post ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் அதிரடி வான்வழித் தாக்குதல்! appeared first on Global Tamil News .
களுத்துறையில் புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி
இன்று காலை (பெப்ரவரி 22, 2026) களுத்துறை பகுதியில் இடம்பெற்ற கோர புகையிரத விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள்… The post களுத்துறையில் புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி appeared first on Global Tamil News .
இந்த அரசாங்கம் எனது மகனுக்கு நீதியை பெற்று தர வேண்டும்
எனது மகனை சுட்டு படுகொலை செய்த காவல்துறையினரை பாதுகாக்காது மகனுக்கு நீதியை பெற்று தர இந்த அரசாங்கம்… The post இந்த அரசாங்கம் எனது மகனுக்கு நீதியை பெற்று தர வேண்டும் appeared first on Global Tamil News .
குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் - சுரேஷ் கோபி
கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், குருவாயூர் தேவசம் போர்டின் தலைவராகி குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. அதைத்தாண்டி நான் வேறு எதுவும் விரும்பவில்லை. இப்போது நான் இருக்கும் நிலை எனது ஆசை அல்ல. இதைச்சொல்வதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன். இல்லையென்றால், வட இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் 'சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குருவாயூர் தேவசம் போர்டு தலைவராகப் போய்விட்டார்' என்று கிளப்பிவிட்டுவிடுவார்கள். ஒருவிதத்திலும் வாழமுடியாத நிலை ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய பல பெண்கள் இருக்கிறார்கள். அது என் பாட்டியிடம் இருந்து தொடங்குகிறது. என் பாட்டி சுவையான மற்றும் சத்தான உணவை சமைத்துக் கொடுத்தார். பின்னர் அதை என் அம்மா ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு என் சக்தியாக மனைவி ராதிகா உள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி பிள்ளைகளை வளர்ப்பதில் என் மனைவி ராதிகா முக்கிய பங்குவகித்தார். அதை எல்லாம் நான் முக்கிய விஷயமாக பார்க்கிறேன். என் வருமான கணக்குகளை பார்த்தால் என் மனைவிக்கு நான் அளிக்கும் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியவரும். எனக்கு ஒரு பிளாட் இருக்கிறது என்றால், அதில் ஒரு தளம் என் பெயரிலும், அடுத்த தளம் என் மனைவி பெயரிலும் இருக்கும். எனது சொத்துக்களில் பாதி என் மனைவி பெயரில் இருக்கும். என் பெயரில் ஒரு சொத்து இருந்தால், என் மனைவி ராதிகா பெயரில் இரண்டு சொத்துக்கள் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். சுரேஷ்கோபி மத்திய அமைச்சர் பதவியைத் தவிர, மற்ற எல்லா ஆவணங்களிலும் என் மனைவிக்கு சமமான பங்கு அளிக்கும் வகையில் நான் ஒரு தெளிவான கோட்டை ஏற்படுத்தி உள்ளேன். அந்தக் கோடு என் இதயத்திலும் உள்ளது. அரசியல் ஆர்வலராக மாறுவதற்கான தகுதி நேர்மையாகும். இந்தத் தகுதி நமக்கு இருந்தால், நம் எதிரிகள் நம்மைப் பார்த்து பயப்படுவார்கள் என்றார்.
யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.… The post யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு appeared first on Global Tamil News .
நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேறுசில கட்சிகளை இணைக்க திட்டம் இருக்கிறது என்றும் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவால் தொகுதிகளை தியாகம் செய்ய வேண்டும் என்றும் திமுக கூறியது. ஸ்டாலின்- காதர் மொகிதீன் 5 தொகுதிகளை தராவிட்டால் 4 தொகுதிகளையாவது தர வேண்டுமென்று கேட்டுள்ளோம். கடந்த முறை 3 தொகுதிகளை தந்த திமுக இம்முறை 2 தொகுதிகளை அளிக்க முன்வந்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் அழைப்பு வரும். போட்டியிட சின்னம் சார்ந்து எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு ஏணி சின்னம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை சின்னம் பிரச்னை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம்
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி… The post தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் appeared first on Global Tamil News .
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான பரஸ்பர வரியை 10-லிருந்து 15 சதவிகிதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அதிரடி பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்திருந்தது செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது 10 சதவிகித வரி விதிக்கும் புதிய பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் […]
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம்… The post ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு appeared first on Global Tamil News .
இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை
இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம்… The post இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை appeared first on Global Tamil News .
TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர். செயல்வீரர்கள் கூட்டம் ஆதவ் அர்ஜூன் பேசுகையில், 'பிகில் படத்தில் 'நம்ம ஆளுங்களை எல்லாம் அடிச்சிட்டாங்க' என ட்ரைவர் சொல்ல 'உடனே அந்த இடத்துக்கு வண்டியை விடு'னு தலைவர் சொல்வார். 'தொக்கா மாட்னானுக' என தலைவர் வசனம் பேசிவிட்டு கார் கதவை திறக்கையிலேயே 5 பேர் பறப்பார்கள். துறைமுகம் தொகுதியில் அமைதியாக பிரசாரம் செய்த எங்கள் நிர்வாகிகள் மீது கை வைத்ததால்தான் தலைவர் முதலில் வட சென்னையில் களமிறங்குகிறார். சென்னை எங்களின் கோட்டை என்கிறார்களே அதனால்தான் முதலில் சென்னைக்குள் இறங்குகிறோம். இனி சென்னைன்னா தவெகதான். வடசென்னையில் சேகர் பாபு என்றால் இங்கே அவரின் காட்பாதர் வி.எஸ்.பாபு இருக்கிறார். செயல்வீரர்கள் கூட்டம் வடசென்னை மக்கள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தை திமுக உருவாக்கிவிட்டது. இங்கே இருக்கும் அத்தனை மக்களும் உழைப்பாளிகள். இங்கே எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை. திமுகவுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்யவே வேண்டாம். திமுக பற்றி வைகோ பேசியவற்றை எடுத்து போட்டாலே போதும். தீயசக்தி திமுகவை வீழ்த்த கேப்டன் உருவாக்கிய கட்சி தேமுதிக. தண்ணி போட்றவன் எல்லாம் கேப்டன் இல்லனு திமுக பேசுனாங்க. ஸ்டாலின் அதை கேட்டு சிரிச்சிட்டு இருந்தாரு. கேப்டனின் ஆன்மா ஒரு போதும் இவர்களை மதிக்காது. எந்த இடத்துல அதிக வறுமை இருக்கிறதோ எந்த இடத்தில் மக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் போட்டியிட வேண்டுமென தலைவர் சொல்வார். தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பமாக இருக்கும்' என்றார். செயல் வீரர்கள் கூட்டம் ஆனந்த் பேசுகையில், 'ஆதவ் முன்வைத்த தீர்மானத்தை நாங்கள் எல்லாரும் மனதார ஏற்றுக்கொள்கிறோம். உங்களுடைய விருப்பத்தை தளபதியிடம் சொல்வோம்.' என்றார். -
மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை-ஒரு வாரத்தில் நான்கு உணவகங்கள் மீது நடவடிக்கை
மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள் தொடர்ச்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக பொது… The post மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை-ஒரு வாரத்தில் நான்கு உணவகங்கள் மீது நடவடிக்கை appeared first on Global Tamil News .
முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம்
முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடித முகவரியை தமது முகநூலில் பகிர்ந்து , அலுவலகத்தில் வந்து கடிதத்தினை… The post முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம் appeared first on Global Tamil News .
திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி-இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்ப்பு!
திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்து உள்ளது. இந்த விலை இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TVK : பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்!' - செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி செய்த நிர்வாகிகள்?
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர். செயல் வீரர்கள் கூட்டம் பெரம்பூர் தொகுதியின் மாவட்டச் செயலாளரான சிவா பேசுகையில், 'தலைவருக்கு மிகவும் பிடித்த தொகுதியாக பெரம்பூர் தொகுதியை மாற்றிவிட்டேன். ஓராண்டில் 44000 பேரை தொகுதிக்குள் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறேன். இன்னும் 35 நாட்கள்தான் இருக்கிறது. ஒரு நாளும் தூங்காமல் உழைத்து தளபதியை வெல்ல வைத்து முதல்வராக்க வேண்டும்' என்றார். சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் மா.செ வி.எஸ் பாபு பேசுகையில், 'முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான். இந்தத் தொகுதியிலிருந்துதான் முதல்வர் வரப்போகிறார். திமுக, அதிமுகவில் வட்டச் செயலாளர் பதவி வாங்கவே 25 வருடம் குடும்பத்தை விட்டு விட்டு சாக வேண்டும். ஆனால், தவெகவில்தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளர் ஆக முடியும். செயல் வீரர்கள் கூட்டம் திமுக, அதிமுகவினர் என்ன செய்வார்கள் என எனக்கு தெரியும். பொதுச்செயலாளர் மட்டும் உத்தரவிட்டால் நான் அத்தனை பேரையும் ஓட விட்டு விடுவேன். திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதியெல்லாம் தவெகவுக்குதான். தலைவரை மட்டும் ஒரு நான்கைந்து முறை தொகுதிக்கு பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள்' என்றார். செயல் வீரர்கள் கூட்டம் 'பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் அத்தனை பேரும் டெபாசிட் இழப்பார்கள்' என்றார் செங்கோட்டையன்
Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47'குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்
சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47' படம் உருவாகி வருகிறது. சூர்யாவுடன் ஜித்து மாதவன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்காக இருக்குமோ அல்லது இருமொழிப் படமாக இருக்குமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது. Surya 47 இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது, “ 'சூர்யா 47' ஒரு பக்கா தமிழ் திரைப்படம். இந்தப் படம் எந்தவொரு மலையாளப் படத்தின் தழுவலும் அல்ல. நேரடியாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பின்னணியைக் கொண்ட ஒரு பிரத்யேகமான கதைக்களமாகத் தான் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து 'ஆவேசம்-2' குறித்து பேசிய அவர், தற்போது முழுக் கவனமும் ‘சூர்யா 47’ படத்தின் மீது மட்டுமே இருக்கிறது. இதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தி வருகிறேன். ‘ஆவேசம் 2’ குறித்த ஆரம்பக்கட்ட யோசனைகள் இருந்தாலும், அது இப்போதைக்குத் தொடங்கும் நிலையில் இல்லை. ஜித்து மாதவன் சூர்யாவின் படப்பிடிப்பிற்குப் பிறகுதான் அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
திமுக தொகுதி பங்கீடு- ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
திமுக தொகுதி பங்கீடு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
“மக்கள் போற்றும் மகத்தான தலைவர் அவர்.!- மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி
'ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர்' என பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசிய பிரதமர் மோடி, “மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதா - மோடி நான் தமிழ்நாட்டிற்கு எப்போது சென்றாலும் அந்த மாநில மக்கள் ஜெயலலிதா மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன். ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது. அந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அவரது தேசபக்தி மிகப்பெரியது. என்னுடைய முதல்வர் பதவியேற்பு விழா நடந்த பொழுதெல்லாம் அவர் நேரில் வந்து கலந்து கொண்டார். மக்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களி்ன் மனதில் என்றென்றும் இருப்பார்கள் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா. ஜெயலலிதா - மோடி ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது. ஜெயலலிதாவின் சிந்தனை மிகவும் தெளிவானது. நிர்வாகத்தை திறமையாக கையாள்வது குறித்து நாங்கள் அடிக்கடி ஆலோசித்துள்ளோம்” என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.
மாகாண சபைத் தேர்தல் உறுதி! வடக்கு, கிழக்கிலும் வெற்றிவாகை சூடும்: அருண் ஹேமச்சந்திரா அதிரடி
மாகாண சபைத் தேர்தலை, தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயமாக நடத்தும் என்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாம் பாரிய வெற்றியைப் பெறுவோம் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். உரிய காலத்தில் தேர்தல் நிச்சயம்அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசின் மீது […]
நடு வீதியில் துடிதுடித்து பலியான இளம் யுவதி ; 24 வயது இளைஞனால் வந்த வினை
கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணை அவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த […]
பகவந்த் கேசரி இயக்குநர் படத்தில் 2வது ஹீரோவாக நடிக்கிறாரா கார்த்தி?: அனில் ரவிபுடி விளக்கம்
சங்கராந்தி வின்னரான மனசங்கர வரபிரசாத் காரு படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தன் அடுத்த படத்தின் ஹீரோ குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். கார்த்தியின் பெயர் அடிப்பட்ட நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.
25 வயது யுவதியின் மோசமான செயல் ; இரகசிய தகவலால் பிடிபட்ட பெண்
கல்கிஸ்ஸ, வில்லியம் பிளேஸ் பகுதியில் 110 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணாவார். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவின் புதிய சிஇஓ ஆஷா சா்மா!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவான ‘எக்ஸ்பாக்ஸ்’ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஆஷா சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 38 ஆண்டுகளாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, எக்ஸ்பாக்ஸ் பிரிவின் முகமாகத் திகழ்ந்த ஃபில் ஸ்பென்சா் பணி ஓய்வு பெறுவதைத் தொடா்ந்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் கோடைக்காலம் வரை நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியைத் தொடா்ந்து, அதிகாரப் பகிா்வை சுமூகமாக முடித்துக் கொடுக்க ஃபில் ஸ்பென்சா் ஒப்புக்கொண்டுள்ளாா். புதிய சிஇஓ-ஆக பொறுப்பேற்றுள்ள ஆஷா சா்மா, […]
SIR: சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவு; நாளை வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்!
கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. SIR அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர். SIR பணிகள் அதேபோல், இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தமாக 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ச்சனா பட்நாயக் இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (பிப்.23) வெளியாக உள்ளது. மாவட்டங்களில் நாளை காலை 10 மணிக்கு மேல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் தரவுகளை வெளியிடுகிறார்.
பாலத்திலிருந்து கீழே பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்த கெப் ரக வாகனம் ; ஏற்பட்ட பாரிய சேதம்
மொனராகலை – பொத்துவில் பிரதான வீதியில், மொனராகலை நகருக்கு அண்மித்த பகுதியில் பாலமொன்றிலிருந்து கெப் வாகனம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மொனராகலை நகரை அண்டிய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த டபள் கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்திலிருந்து கீழே விழுந்து தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. மேலதிக விசாரணை எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் குறித்த வாகனத்திற்கும் பாலத்திற்கும் பலத்த சேதங்கள் […]
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் - பவானந்தராஜா எம்.பி நம்பிக்கை
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான நிமலன் என்பவரை சிறையில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பிலான முக்கிய நகர்வுகளையும் எடுத்து வருகிறது. அந்நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருவதுடன் அவர்களது கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்து , உரிய தரப்புக்களுக்கு அவை தொடர்பில் அறிவித்துள்ளேன். கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலைக்கு சென்று . அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் மிக விரைவில் சாத்தியமாகும் என தான் நம்புவதாக மேலும் தெரிவித்தார் .
அதிவேக ரயிலுடன் மோதிய கெப் வாகனம் ; மூவர் படுகாயம்
இன்று (22) காலை 7.30 மணியளவில் காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தின் சாரதி பலத்த காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், குறித்த ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நபர்கள் காயம் இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் […]
உடன் பிறந்த அண்ணனுக்கு தம்பி நிகழ்த்திய கொடூரம் ; இலங்கையில் அரங்கேறிய பயங்கரம்
நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய தாக்குதலில் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அண்ணன் உயிரிழந்துள்ளார். சம்பவம் கொழும்பு, ஹோமாகமை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, உயிரிழந்த நபருக்கும் அவரது 28 வயதுடைய தம்பிக்கும் இடையில் காணி விவகாரம் தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று இரவு இருவருக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த தம்பி, மறைத்து வைத்திருந்த வாளால் […]
தங்க நகை பூங்காவிற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல்!
தங்க நகை பூங்காவிற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை - குவியும் பாராட்டுக்கள்
இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இரு பார்வைகளையும் இழந்த வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக்கலைமாணிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுள் துரைராசா அருண்குமார் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர் தரத்தில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகம் சென்றவர் எ வாழ்வக வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதாரண மாணவர்களுக்கு இணையான புள்ளிகள் பெற்று சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இற்றைவரை இவருக்கே உரியதாகின்றது. இருபார்வையினையும் இழந்த இரண்டு மாணவர்களும் நீண்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
KHxRK: நெல்சன் படத்தில் ரஜினி, கமல் இரண்டு பேருமே anti-ஹீரோவா?
நெல்சன் படத்தின் ஹீரோ கமல் ஹாசனா இல்லை ரஜினிகாந்தா என்பது தான் தற்போது பலரும் கேட்கும் கேள்வியாகும். இந்நிலையில் சினிமா ரசிகர்கள் மூன்று விதமான விளக்கங்கள் அளித்திருக்கிறார்கள்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் காஷ்மீர் செல்கிறார்
காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா அடுத்த வாரம் 26-ந்தேதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி
சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின் பிளான்
சென்னை சவுகார்பேட்டையில் கூரியர் நிறுவனம் ஒன்றை வைத்திருப்பவர் ராவல்சிங். சென்னை விமான நிலையத்திற்கு இவரது நிறுவனத்திற்கு 1.5 கிலோ எடை கொண்ட தங்க நகைகளின் பார்சல்கள் வந்துள்ளன. அதை எடுத்து வர, தன் கடையில் வேலை பார்க்கும் கோவாராம் மற்றும் பக்கத்துக் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஜித்தேந்தர் குமாரையும் அனுப்பியிருக்கிறார் ராவல்சிங். பைக்கில் சென்ற இருவரும் நீண்ட நேரமாக கடைக்கு வரவில்லை. இருவரது போனுமே 'ஸ்விட்ச் ஆஃப்'. தங்கம் | நகைகள் கோவாராமின் போன்கால் கொஞ்ச நேரத்தில், கோவாராமிடம் இருந்து மற்றொரு எண்ணில் இருந்து கால் வந்திருக்கிறது. அருகில் இருந்த ஆட்டோகாரரிடம் இருந்து போன் வாங்கி பேசுவதாக கூறியிருக்கிறார். கோவாராமும், ஜித்தேந்தர் குமாரும் தங்க நகைகள் பார்சல்களை வாங்கி கொண்டு கிண்டி வழியே வந்துக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது, அவர்களை வழிமறித்த இருவர் தங்களை 'செங்கல்பட்டு ஜி.எஸ்.டி ஆபீசர்ஸ்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக, பார்சல் மற்றும் மொபைல் போன்களையும் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் அழைத்து சென்றிருக்கிறார்கள். பெருங்களத்தூர் அருகே அதிகாரிகளாக அறிமுகம் செய்து கொண்டவர்கள் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். அதன் பின் தான், ராவல்சிங்கிற்கு போன் செய்திருக்கிறார் கோவாராம். ராவல்சிங் போலீஸில் புகார் கொடுக்க விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணையில், இவை அனைத்தும் ஜித்தேந்தர் குமாரின் வேலை என்று தெரிய வந்திருக்கிறது. தங்க நகைகளைக் கொள்ளையடிப்பதற்காக தனது சொந்த ஊரான ராஜஸ்தானில் இருந்து இரு நண்பர்களை வரவழைத்திருக்கிறார் ஜித்தேந்தர் குமார். தற்போது ஜித்தேந்தர் குமார் மற்றும் அவருடைய ஒரு நண்பரை கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். இன்னொருவரை தேடி வருகிறார்கள் போலீஸார்.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக
2000 ரூபாய் வரப் போகுது.. ரெடியா இருங்க.. அக்கவுண்ட் செக் பண்ணிங்க.. பிஎம் கிசான் அப்டேட்!
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அடுத்த தவணைத் தொகை 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் தெரியுமா?
அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்க ஆளுநர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது
SIR பணி நிறைவடைந்தது –இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள
தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சி –முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:- தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுக தான்; எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம். அதிமுகவிற்கு
டி20 உலகக் கோப்பை தொடர் –சூப்பர் 8 சுற்றில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள்
தி.மு.கவை தொட்டுப் பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி தரும் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளின்
அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொலை - பொலிசாரை கைது செய்ய கோரி யாழில்.போராட்டம்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த போராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததாகவும் , அதன் போது வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வாகன சாரதியான சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். நிற்காமல் சென்ற வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனவும் , அதொரு பொலிஸாரின் திட்டமிட்ட படுகொலை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழும்பி வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார். சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறை துறைமுக புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு தயார்
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆவணம் சட்டப்பூர்வ ஒப்புதலுக்காக, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாகதுறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக, இந்திய அரசு 63.5 மில்லியன் டொலர் நிதி உதவியை
க்ளிங் ரேப் டயட்: பிளாஸ்டிக் போர்த்தி மெல்லும் சீன சமூக ஊடக ட்ரெண்ட் – உண்மை என்ன?
சீனாவில் சமூக ஊடகங்களில் பரவும் ‘க்ளிங் ரேப் டயட்’ முறையில் உணவை பிளாஸ்டிக் ரேப் போர்த்தி மென்று துப்பி எடை குறைக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது பல ஆரோக்கிய ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு- கொ.ம.தே.க 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது
சிபிஎம் கேட்கும் டபுள் டிஜிட்… பிப்ரவரி 26ல் திமுக எடுக்கும் முடிவு- மீண்டும் அதே 6 சீட்டா?
திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வரும் 26ஆம் தேதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற சிபிஎம் கட்சி திட்டமிட்டிருக்கிறது.
தல பிரியாணி ரெசிபி என்ன மேடம்?: யாரும் எதிர்பாராத பதில் அளித்த ஷாலினி அஜித் குமார்
அஜித் குமார் சூப்பராக பிரியாணி சமைப்பார் என்று அவர் கையால் சாப்பிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த ரெசிபியை ஷாலினியிடம் கேட்டதற்கு எதிர்பாராத பதிலை அளித்திருக்கிறார்.
'நோட் பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold
ஜனவரி மாதத்தில் (2026) பவுனுக்கு ரூ.1.34 லட்சம் வரை சென்ற தங்கம் விலை, இப்போது ரூ.1.17 லட்சத்திற்கு கீழிறங்கி விற்பனையாகி வருகிறது. ஆனால், இனி தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில காரணங்களைப் பகிர்ந்து கொள்கிறது, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தரப்பு. தங்கம் உலக நாடுகளின் மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட' ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன? > சமீப நாள்களாக குறைந்த தங்கம் விலை இறங்குமுகத்திற்கானது அல்ல. அது கரெக்ஷன் ஆகி வந்தது. இப்போது கிட்டத்தட்ட 20 சதவிகிதம் தங்கம் விலை கரெக்ஷன் ஆகிவிட்டது. அதனால், அது மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பலாம். > ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் சுமுகத் தீர்வை எட்டவில்லை. அதற்குள் அமெரிக்கா - இரான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகரலாம். > அமெரிக்காவில் அடுத்த வாரம் வெளியாக உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்க அறிக்கை மிக முக்கியமானது. காரணம், இதை வைத்தே, அடுத்து வட்டி விகிதம் குறைக்கலாமா... வேண்டாமா என்று முடிவு எடுக்க உள்ளது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி. ஒருவேளை, வட்டி குறைக்கப்பட்டால், தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். தங்கம் Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? இந்தச் சங்கம் கூறுவதைத் தாண்டி, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிச் சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இதையடுத்து ட்ரம்ப் தற்போது உலகளவிலான வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார். இது உலக அளவில் மீண்டும் ஒரு பதற்றத்தை உண்டாக்கக் கூடும். இதனாலும், தங்கம் விலை அதிகரிக்கலாம். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால், அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதையும் கவனிங்க மக்களே. தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கியதா பாகிஸ்தான்? மறுக்கும் ஆப்கானிஸ்தான்! - தாக்குதல் பின்னணி?
ரஷிய எண்ணெய் விநியோகத் தடை: உக்ரைனுக்கு ஹங்கேரி, ஸ்லோவாகியா நெருக்கடி!
ரஷியாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் உடனடியாகச் சீரமைத்து தொடங்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி மற்றும் மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. உக்ரைன் போரை முன்னிட்டு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் தங்கள் எரிசக்தி தேவைக்காக இப்போதும் ரஷியாவையே நம்பியுள்ளன. எனவே, அந்நாட்டுடன் இணக்கமான உறவைப் பேணி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில், […]
நீங்க Dividend-க்கு Eligible ஆகணுமா? இதை பண்ணுங்க | OBS - 295 | Weekly Roundup Show 2.o
Hair Transplant Scam: முடிக்காக உயிரை பணையம் வைக்காதீங்க! - Dr Sivakumar shocking interview
ADMK-வில் OPS தவறவிட்ட 5 வாய்ப்புகள்! | DMK Stalin | EPS | Political Pulse | Vikatan TV
புங்குடுதீவு படுகொலை - 06 மாதங்களின் பின் கைதான சந்தேகநபர் ; மேலுமொருவர் வெளிநாட்டில் ?
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் நபர் ஒருவரை வெட்டி கொலை செய்ததுடன் , நால்வருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் ஒருவர் சுமார் 06 மாத கால பகுதியின் பின்னர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் புங்குடுதீவு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற கத்தி குத்து தாக்குதலில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். தாக்குதல் சம்பவத்தினை தடுக்க முற்பட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் தாக்குதலாளிகள் தாக்குதலை மேற்கொண்டதில் அவர்களும் படுகாயமடைந்திருந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை அடையாளம் கண்டு , அவர்களை கைது செய்வதற்கான நடவாடிக்கைகளை முன்னெடுத்த வேளை நால்வரும் தலைமறைவாகினர். தலைமறைவானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்ட வேளை, சந்தேகநபர்களில் ஒருவர் முல்லைத்தீவு காட்டு பகுதியை அண்மித்த பகுதியில் நடமாடுவதாக அறிந்து , அங்கு விரைந்த பொலிஸார் கடந்த செப்டெம்பர் மாதம் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் ,06 மாத கால பகுதிக்கு பின்னர் மற்றுமொரு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதேவேளை ஏனைய இருவரில் ஒருவர் வெளிநாடொன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் , மற்றைய நபரை கைது செய்வதற்கு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு சரிந்து விட்டது
தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து வாய்ச்சவடால் விடுவதை விடுத்து, உடனடியாகத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இது குறித்து கயந்த கருணாதிலக எம்.பி. ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்:- அரசு ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள்ளேயே மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு சரிந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்தநிலையில் வடக்கு, கிழக்கில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வெறும் பகற்கனவு மாத்திரமே. தேசிய மக்கள் சக்திக்கு உண்மையாகவே மக்கள் செல்வாக்கு இருந்தால், தேர்தலை நடத்த ஏன் அஞ்ச வேண்டும்? உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்துவோம் என்று இழுத்தடிப்புச் செய்யாமல், உடனடியாக ஜனநாயக ரீதியாகத் தேர்தலை நடத்தி மக்கள் யாருக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதைப் பார்க்குமாறு சவால் விடுகின்றோம். சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது. - என்றார்.
சட்டத்தரணி உள்ளிட்ட இருவர் கொலை - கைதான துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ சிப்பாய்
அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த துப்பாக்கிதாரி ஒரு முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும், 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் அவர் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதற்கமைவாக, இந்தக் குற்றத்திற்கு உதவி வழங்கியமை மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கடந்த 16 ஆம் திகதி கொட்டாவை மற்றும் அத்துருகிரிய பொலிஸ் பிரிவுகளிலும், 17 ஆம் திகதி கஹதுடுவ பொலிஸ் பிரிவிலும் மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்த மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் ஹோமாகம வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, இந்தக் குற்றத்தின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவரை அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தூவ பிரதேசத்தில் வைத்து நேற்று (21) கைது செய்துள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்த குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று (22) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
America Model-ஐ பின்பற்றும் Vijay? | Supreme Court-ஐ மதிக்காத Trump | AI Summit Protest: Cong Vs BJP
ரஜினி, கமலில் யார் ஹீரோவா இருந்தா என்ன?:ரூ. 1000 கோடி வசூல் உறுதி எனும் ரசிகாஸ்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் ப்ரொமோவை பார்த்த ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ரசிகர்களோ இது தான் தமிழ் சினிமாவில் ரூ. 1000 கோடி வசூல் செய்யப் போகும் முதல் படம் என்கிறார்கள்.
முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம்
முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடித முகவரியை தமது முகநூலில் பகிர்ந்து , அலுவலகத்தில் வந்து கடிதத்தினை பெற்றுக்கொள்ளுமாறு தாளையடி அஞ்சல் அலுவலகம் கோரிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி அஞ்சல் அலுவகத்தினால் , தமது பிரதேசத்திற்கு வந்த கடிதங்களின் முகவரியை கண்டறிந்து கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பிக்க முடியாத கடிதங்களை , அவற்றின் முகவரியுடன் தமது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டு , உரியவர்கள் அலுவலகத்தில் வந்து கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பதிவிட்டுள்ளனர். தனிப்பட்ட நபர்களின் விபரங்களை பொது வெளியில் பகிர்வது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் , தற்போது குறித்த பதிவுகளை அஞ்சல் அலுவலகத்தினர் தமது உத்தியோகபூர்வ முகநூலில் இருந்து நீக்கியுள்ளனர்
ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற மக்ரோனிடம் உதவி கோரினார் அனுர
இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்க வைத்துக் கொள்வதற்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் சிறிலங்கா அதிபர் உதவி கோரியுள்ளார். புதுடெல்லியில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, இந்த வர்த்தக சலுகையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, உதவும்படி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு
இந்தியத் திட்டங்களின் தாமதங்கள் குறித்து விசாரித்த மோடி
சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் இந்தியத் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்துஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய போதே அவர் இதுபற்றி விசாரித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது,இந்திய நிதியுதவியுடனான திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து பிரதமர் மோடி விசாரித்ததாக, சிறிலங்கா
அவதூறு முறைப்பாடுகளை சிறிலங்கா காவல்துறை ஏற்கக் கூடாது
சிறிலங்கா காவல்துறையின்குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு போன்ற புலனாய்வு நிறுவனங்கள், அவதூறு தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கக்கூடாது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் இணையம் உட்பட பல்வேறு ஊடக தளங்களில் தங்களைப் பற்றி வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான அல்லது அவதூறான அறிக்கைகள் குறித்து, குற்றப் புலனாய்வுப்
Doctor Vikatan: ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டுமா?
Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இப்போது நலமாக இருக்கிறார். ஆனாலும் அவரது இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆஞ்சியோ செய்ய வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்த அனைவருக்கும் வழக்கமான சோதனையாக (Routine) ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குறிப்பிட்ட நிலைகளில் மட்டும் அது அவசியமாகிறது. அதாவது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டாலோ, நடக்கும்போது மூச்சுத்திணறல் அல்லது நெஞ்சுவலியுடன் இடது கை, தோள்பட்டை, முதுகு அல்லது தாடை வலி இருந்தாலோ, இசிஜி (ECG) அல்லது எக்கோ (Echo) சோதனையில் இதயத்தின் பம்ப் செய்யும் திறன் குறைந்திருப்பது தெரிந்தாலோ, டிரெட்மில் டெஸ்ட் (TMT) அல்லது ஸ்ட்ரெஸ் எக்கோ (Stress Echo) சோதனையில் இதய ரத்த ஓட்டத்தில் மாறுதல்கள் இருப்பது உறுதியானாலோ, ட்ரோப்போனின் ஐ (Troponin I) என்ற ரத்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்தாலோ, ஆஞ்சியோ செய்ய வேண்டிய தேவை வரலாம். குறிப்பிட்ட இடைவெளியில் எக்கோ பரிசோதனை மேற்கொள்ளும்போது, பழைய எக்கோவைவிட புதிதாக எடுக்கப்பட்டதில் பம்ப்பிங் திறன் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அதை உறுதிசெய்ய ஆஞ்சியோகிராம் தேவைப்படலாம். ECG டெஸ்ட் பைபாஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரத்தக் குழாய்கள் (Grafts) இரண்டு வகைப்படும். ஆர்ட்டீரியல் கிராஃப்ட் (Arterial Graft - LIMA): மார்புப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் இந்தத் தமனியில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு. 10 முதல் 15 ஆண்டுகளில் சுமார் 5 முதல் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இதில் அடைப்பு வரலாம். வீனஸ் கிராஃப்ட் (Venous Graft - Saphenous Vein): காலில் இருந்து எடுக்கப்படும் இந்த நாளத்தில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒரு வருடத்தில் 10 முதல் 15 சதவிகிதம் பேருக்கும், 10 ஆண்டுகளில் சுமார் 50 சதவிகிதம் பேருக்கும் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவை தவிர, சர்க்கரைநோய் (Diabetes) உள்ளவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை கொண்டவர்களுக்கும் இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். நோயாளிக்கு எவ்வித நெஞ்சு வலியோ, மூச்சுத்திணறலோ அல்லது மற்ற உடல் உபாதைகளோ இல்லாமல், இசிஜி மற்றும் எக்கோ சோதனைகள் சீராக இருந்தால், டிரெட்மில் டெஸ்ட் நார்மலாக இருந்தால் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யத் தேவையில்லை. பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது இதய நோயை முழுமையாகக் குணப்படுத்தும் (Permanent Cure) சிகிச்சை முறை கிடையாது. இது செய்யப்பட்டாலும் ஹார்ட் அட்டாக் வரலாம். பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது, அப்பெண்டிக்ஸ் (Appendix) அல்லது கருப்பை (Uterus) அறுவை சிகிச்சை போல, பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்றி நோயை முழுமையாக நீக்கும் முறை அல்ல. இதயநோயாளிகளுக்கு ‘ஸ்டென்ட்’சிகிச்சை, அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்களா பணத்தாசை பிடித்த மருத்துவர்கள்? பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது, அப்பெண்டிக்ஸ் (Appendix) அல்லது கருப்பை (Uterus) அறுவை சிகிச்சை போல, பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்றி நோயை முழுமையாக நீக்கும் முறை அல்ல. இது இதய நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தற்காலிகமாகச் சரிசெய்து (Palliative), நோயாளியின் நிலையைத் ஓரளவு முன்னேற்றுவதற்கான (Stabilize) அவசர கால உதவி மட்டுமே. அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வது மீண்டும் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். அறுவை சிகிச்சை முடிந்த பின்னும் மீண்டும் பிரச்னை வராமல் தடுக்க சில கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். ரத்த அழுத்தம் (BP), சர்க்கரைநோய் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ரத்த உறைவைத் தடுப்பதற்கான மருந்துகளை மருத்துவர் அறிவுரைப்படி தவறாமல் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். முறையான மற்றும் அளவான உடற்பயிற்சி அவசியம். மன அமைதியுடன் கூடிய ஆழ்ந்த உறக்கம் இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மதுரை: தெற்கு மண்டல தேர்தல் ஆலோசனை – ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வியூகக் கூட்டம் | Album
முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம்
உலக நாடுகளின் மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட'ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன?
நேற்று முன்தினம் (பிப்ரவரி 20), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்திருக்கும் வரிக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம். ஆனாலும், அந்த வரிகளை ரத்து செய்வதாக இல்லை ட்ரம்பும், அவரது அரசாங்கமும். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிருப்தியில் இருந்த ட்ரம்ப் இப்போது மேலும் வரியைக் கூட்டியுள்ளார். இது குறித்து தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அமெரிக்காவிற்கு எதிரான சமீபத்திய தீர்ப்பை நன்றாக ஆய்வு செய்து பார்த்ததில்... அமெரிக்க அதிபராகிய நான், உலக அளவிலான வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்துகிறேன். பல ஆண்டுகளாக பல நாடுகள் அமெரிக்காவைத் தொடர்ந்து சுரண்டி வந்திருக்கின்றன. இதனால், அடுத்த சில மாதங்களில் முழுவதும் அனுமதிக்கப்பட்ட, சட்டத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் புது வரிகள் விதிக்கப்படும். இது அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றும் (MAGA) - முன்னெப்போதும் இல்லாத வகையில். ஆக, ட்ரம்பின் ஆட்டம் இன்னும் முடியவில்லை! 'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' - ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்? https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328
காரைக்குடி தொகுதியில் களமிறங்கும் சீமான்; திருச்சி மாநாட்டில் அறிவிப்பு!
திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்திருக்கிறார். seeman அதன்படி, சீமான் போட்டியிடக்கூடிய தொகுதியாக சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சீமானின் சொந்த மாவட்டம் என்பதனால் அந்த தொகுதியில் அவர் இந்த முறை போட்டியிடுகின்றார். ஏற்கனவே, கடந்த 2016 - ம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலும், 2021 -ம் ஆண்டு திருவெற்றியூரிலும் போட்டியிட்ட சீமான், இந்த முறை சொந்த மாவட்டத்தில் களம் காண்கின்றார். இதே போன்று, நாம் தமிழர் கட்சியினுடைய முக்கிய முகங்களாக பார்க்கக்கூடிய இடும்பாவனம் கார்த்தி வேதாரண்யம் தொகுதியிலும், இயக்குநர் களஞ்சியம் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்தியா ராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும், 117 ஆண்களும், 117 பெண்களும் என ஆண்கள் பெண்கள் சம அளவில் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு திருநங்கைக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. crowd வில்லிவாக்கம் தொகுதியில் ரோஷினி என்ற திருநங்கை போட்டியிட உள்ளார். தமிழக அரசியல் களத்தில் மற்ற கட்சி, கூட்டணிகள் இன்னும் தொகுதிகளையே பங்கிடாத நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களையே அறிவித்திருப்பது, மற்ற கட்சிகளை உற்று கவனிக்க வைத்திருக்கிறது.
இலங்கையை சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை: அடுத்த 24 மணிநேரம் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்மலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கான வானிலை நிலரவம் தொடர்பில் இன்றைய தினம் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. […]
வாகனத்தில் பயணிப்போருக்கான காவல்துறை விசேட சோதனை ; 9,000 பேருக்கு அபராதம்
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கையில் ஆசனப் பட்டிகளை (Seatbelts) அணிய வேண்டும் என்ற சட்டத்தை மீறிய சுமார் 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளின் உள்நுழைவு மற்றும் வெளியேறும் அனைத்து இடங்களிலும், சாரதிகள் மற்றும் பயணிகள் பாதுகாப்புப் பட்டிகளை அணிந்துள்ளனரா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளால் தீவிரமாகப் பரிசோதிக்கப்படுகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு […]
வரிகள் ரத்து! அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவமானத்துக்குரியது: டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அரசு பிறப்பித்த வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அவமானத்துக்குரியது, அபத்தமானது என்று மாகாண ஆளுநா்கள் கூட்டத்தில் பேசியபோது டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான சற்று நேரத்தில் தனது முதல் பதிலில் டிரம்ப் உச்ச நீதிமன்றத்தை, குறிப்பாக பெரும்பான்மை நீதிபதிகளை, “நமது தேசத்திற்கு அவமானம்” என்று கடுமையாகத்தாக்கிப் பேசியிருந்தார். அதேவேளையில, அமெரிக்க அரசு, நாட்டின் வரி விதிப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு மாற்று முறைகளைப் பின்பற்றும் […]
நாட்டை உலுக்கும் போதைப்பொருள் அபாயம் ; வெளியான திடுக்கிடும் தகவல்
கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 110 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தல்காரர்களால் நாட்டுக்குப் பெருமளவு பணம் இழக்கப்படுகிறது. இந்த சட்ட விரோத வருமானம் நாட்டின் அபிவிருத்திக்கோ அல்லது எதிர்காலப் பயணத்துக்கோ எந்தவிதத்திலும் பங்களிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டைச் சூழ்ந்துள்ள இந்தப் பயங்கரமான போதைப்பொருள் ஆபத்திலிருந்து, […]
`2016-ல் வெறும் 1.1% ; இப்போ 8.5%... தனித்தே போராடுகிறோம்!' - சீமான் பேச்சு
'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற பெயரில் திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே, பல தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தமாக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை அவரது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தார். candidaters மேலும், இந்த வேட்பாளர் பட்டியில் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில், 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், 70-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் சிறப்பான ஏற்பாடுகளாக 234 பேரும் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு, விழா மேடை முழுவதும் தமிழ் அறிஞர்கள், சங்க கால புலவர்கள், தமிழுக்காக போராடியவர்களுடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தது. தவிர விழா மேடை அரங்கு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாய சின்னம் மற்றும் நாம் தமிழர் கொடி மற்றும் மூவேந்தர்களின் கொடிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், மாவட்ட வாரியாக தொண்டர்கள் அமர்வதற்காக தனி தனி கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. candidaters அதோடு, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து மணிக்கு விழா மேடைக்கு வந்த சீமான் ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியாக அறிமுகம் செய்தார். அதோடு, தான் காரைக்குடியில் போட்டியிடப் போவதாகவும் கூறினார். அதனைத்தொடர்ந்து, இந்த மாநாட்டில் பேசிய சீமான், “எங்களின் அரசியல் இதுவரை இந்த நிலத்தில் இருக்கின்ற அரசியலிலிருந்து முற்று முழுதாக மாறுபட்டது. அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்ற புரிதலோடு வந்த பிள்ளைகள் நாங்கள். ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல். எமக்கான மூச்சுக்காற்றை நாங்களே சுவாசிப்பது போல, உணவை நாங்களே உண்பது போல, எமது உரிமையை எமது விடுதலையை நாங்களே போராடிப் பெறுவது என்ற நோக்கோடு வந்தவர்கள். seeman எங்களுடைய கனவு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல; ஆட்சி முறை மாற்றம். அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றமே எங்கள் இலக்கு. கட்டிய கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்ல நாங்கள். அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டுப் புத்தம் புதிதாகப் புதிய ஒரு கட்டடத்தைக் கட்ட வந்த புரட்சிவாதிகள். இங்கே மக்களுக்கான அரசியல் இல்லை. செய்தி மற்றும் விளம்பர அரசியல் மட்டுமே இருக்கிறது. சேவை மற்றும் செயல் அரசியல் இல்லை. ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நிற்கிறது என்றால், அது இந்திய துணைக் கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும்தான். பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, வனக்கொள்ளை, மது-மத போதை என்று இது ஏதுமற்ற புதிய ஒரு தேசத்தைச் செய்வோம். கடந்த 2016-ல் வெறும் 1.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். மற்ற கட்சிகளாக இருந்தால் தடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால், கொண்ட உறுதி மற்றும் லட்சியச் சுமையால் தொடர்ந்து எவரோடும் சமரசம் செய்யாமல் தனித்துப் போராடுகிறோம். crowd 5 -வது முறையாக சீட்டுக்கும், நோட்டுக்கும் போகாமல் தனித்து நிற்கின்றது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். நாங்கள் கூட்டணி என்ற வியாபாரம் செய்ய வரவில்லை. அரசியல் சுதந்திரத்திற்காக தனித்து நிற்கின்றோம். மக்களை நம்பியே தனித்து நிற்கின்றோம். இது, ரசிகர் கூட்டம் இல்லை. லட்சிய கூட்டம். திரை கவர்ச்சியா, இன எழுச்சியா என்று நிரூபிக்க வந்த கூட்டம். மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும்?. கருத்தியல் புரச்சியாளர்கள் இங்கு வந்திருக்கின்றார்கள். அரசியல் பெரும் படையை கட்டி எழுப்பி வருகின்றோம். எங்களுக்கான வரலாற்றை எழுத கூடியுள்ளோம் திருச்சியில். இலவசத்தில் 15,000 கோடி. அந்த இலவசத்தில் இழக்கின்ற பணத்தை எங்கிருந்து பெறுவார்கள்?. படிக்கும் போது பணம். படித்து முடித்தால் பணம் வராது. அவர்களுக்கு வேலையை ஏற்படுத்த வேண்டும். அது தான் ஆட்சி முறை. ஆணுக்கும், பெண்ணுக்கும் இலவசம். ஓட்டுநருக்கும், நடத்துநருக்கு சம்பளம் எப்படி?. இலவசம் வாங்கும் அம்மா கையிலே இரண்டு லட்சம் கடன் உள்ளது. இதை உணரவேண்டும். தனியார் மருத்துவமனைகள் தான் சிறந்த மருத்துவத்தை கொடுக்க முடியும் என்றால் அரசால் ஏன் முடியாது? தனியாரிடம் தோல்வியடைந்ததா அரசு? கடன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக எப்படி பார்க்க முடியும்? தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஒரே கட்சி. seeman இரண்டும் ஒரே இடத்தில் எப்படி கொள்ளை அடிக்க முடியும் என்று பயிற்சி எடுத்த கட்சி. இரண்டும் ஊழல் கட்சி. இது, திருடர்கள் முன்னேற்றம். அது, அனைத்துலக திருடர்கள் முன்னேற்றம். பா.ஜ.க, காங்கிரஸூக்கு என்ன மாற்றம் இருக்கின்றது?. எந்த இடத்தில் தி.மு.க-விற்கும், அ.தி.மு.க-விற்கும் மாற்றம் இருக்கின்றது. இவர்கள் யாரோடும் சேராமல் நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி. மனசாட்சி வழிநடத்த செல்கின்றோம். அதனால் தான் தனியாக செல்கின்றோம். அடுத்தவன் தோள் மேல் நின்று உயரத்தை காட்டுவதை விட தனித்து நிற்கின்றோம் என்றார். அதனைத்தொடர்ந்து, மேடைக்கு முன் கூடியிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களை பார்த்து, இது, ரசிகர்கள் கூட்டம் இல்லை.. லட்சிய கூட்டம் என்று கூறிய சீமான், ”8.5 விழுக்காடு வாக்கு வைத்திருக்கிறோம். பணமும் பதவியும் சீட்டும் நோட்டும் தான் என்றால்… நாம் தமிழர் கட்சி பணத்திற்காக இல்லை. என் இனத்திற்காக. இந்தித் திணிப்புக்கு எதிராகத் தன் உயிரைத் தந்த பாட்டன் நடராஜன் மற்றும் தாளமுத்து தொடங்கிய மொழிப் புரட்சி இன்னும் தொடர்கிறது. இனம் செத்துவிடக் கூடாது என்று செத்தார்கள் நமது முன்னவர்கள். வீழ்ந்த தமிழினம் எழுந்தது மறுபடியும் போரிட்டு வென்றது என்ற வரலாற்றைப் படைக்க வேண்டும். crowd விழுவோம் விதையாய், எழுவோம் விடுதலையாய் என்ற லட்சிய முழக்கத்தை முன்வைத்து, அடுத்த ஆண்டு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்” என்று உணர்ச்சி பொங்க பேசினார். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேல் பேசிய சீமான், ”என்னம்மா தேவி ஜக்கம்மா.. நாடு நாசமா போகுதே நியாயமா?. கண்ண தொறந்து பார்ரம்மா.. எங்க கவலைய கொஞ்சம் தீரம்மா… 10 லட்சம் கோடி கடனுல நாடு… இதுல இலவசங்கள் பெரு வெட்க கேடு… பாக்க சகிக்கல சனம் படும் பாடு… இதை வளர்ச்சினு போடுறான் போடு” என்று பாடலை பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
'கருவூர் சித்தரை தரிசிக்க வந்தோம்!' - பக்தி மார்க்கமாக கரூர் வருகைதந்த 50 ஜப்பானியர்கள்
கரூர் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களில் முதன்மையான திருத்தலம் இது. கருவூர் சித்தர் அவதரித்த ஊர் என்பதால் இங்கு கருவூராருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த திருத்தலம் என்பதால், இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதோடு, தமிழகத்தில் உள்ள 2000 ஆண்டுகால பழமையான ஆலயங்களில் ஒன்றான இத்திருத்தலம், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் என்பதும் இந்த கோயில் சம்மந்தப்பட்ட சிறப்பாகும். தற்போது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தை சேர்ந்த 50 பேர், தமிழ்நாடு முழுவதும் கடந்த 30 நாட்களாக ஆன்மிக தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கும் அவர்கள் வருகை தந்தனர், குறிப்பாக, கருவூரார் சித்தர் சன்னிதியை பார்ப்பதற்காகவே வருகை தந்து சித்தர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோயிலில் உள்ள அனைத்து சன்னிதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுமார் 20 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். japan paktharkal அதன்பிறகு, கோயிலின் முன்புற கோபுரம் முன்பு குழுவாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கோபால் பிள்ளை சுப்பிரமணியம் குழுவினர் சார்பில் அழைத்து வரப்பட்ட இவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு ஆன்மிக தலங்களை தரிசித்து வருவதாக கூறினர். மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் திருக்கோயில் மற்றும் குளித்தலை கடம்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக சுற்றுலாத்தலங்களையும் பார்வையிட்டு தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கரூரில் பிரசித்திப் பெற்ற சிவன் கோயிலுக்கு ஜப்பான் நாட்டில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை பார்த்து, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
வடக்கு பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. வடக்கு மற்றும் வடமேற்கு பாகிஸ்தானின் சில பகுதிகளில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக இஸ்லாமாபாத்தின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை. உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது, அட்டோக்கின் புர்ஹானுக்கு வடகிழக்கே 11 கிமீ தொலைவிலும் 14 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. மேலும் கைபர் […]
அமெரிக்காவில் குடியேறிகள் தொடர்பில் புதிய ஆணை ;பல்லாயிரம் பேர் கைதாக வாய்ப்பு
அமெரிக்காவில் சட்டப்படி குடியேறி இன்னும் நிரந்தரவாசத் தகுதி பெறாத அகதிகளைக் கைதுசெய்யும் புதிய ஆணையை டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய ஆணையின் கீழ் அதன்கீழ் பல்லாயிரம் பேர் கைது செய்யப்படக்கூடும் என கூறப்படுகின்றது. பைடன் நிர்வாகத்தின்போது குடியேறிய அகதிகள் குடியேறிகள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் நிலையில் இருப்போர் நாட்டுக்குள் வந்து ஓராண்டுக்கு மேலாகியிருந்தால் அவர்களைக் கைதுசெய்யப் புதிய உத்தரவு வழியமைக்கும் என்றும் க் தெரிவிக்கபப்டுகின்றது. அதேவேளை விண்ணப்ப நடைமுறைகள் முடியும் வரை அவர்கள் […]
ஜப்பானில் பொம்மையைத் தாயாகக் கருதிய குரங்குக்குட்டி ; இணையத்தை உருக்கிய காட்சி
ஜப்பானில் உள்ள பூங்காவில் குரங்குக்குட்டு ஒன்று குரங்கு பொம்மையுடன் உலா வரும் காட்சி இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 2025 ஜூலை மாதம் பிறந்த குரங்கு, பிறந்த சில நாட்களிலேயே அதன் தாயால் நிராகரிக்கப்பட்டது. தனிமையால் வாடிய இந்தக் குட்டிக்கு பூங்கா ஊழியர்கள் ஒரு மென்மையான ஒராங்குட்டான் பொம்மையை வழங்கினர். அதையே தனது தாயாகக் கருதிய குரங்குக்குட்டி எங்கு சென்றாலும் அந்தப் பொம்மையைத் தூக்கிக்கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. பூங்கா ஊழியர்களின் தொடர் முயற்சியால், பஞ்ச் […]
புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது!
புங்குடுதீவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பேருந்து உரிமையாளர் அகிலனின் கொடூரப் படுகொலை தொடர்பான விசாரணைகளில், முக்கிய முன்னேற்றமாக இரண்டாவது… The post புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது! appeared first on Global Tamil News .
தலிபான்களின் மற்றுமொரு பெண்களுக்கு எதிரான வில்லங்கமான சட்டம்
ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு கொண்டுள்ள புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலிபான்களின் புதிய சட்டத்தின்படி கணவர் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும் உடல் ரீதியாக தண்டிக்கலாம் என கூறியுளளது. ஆப்கானிஸ்தானில் பின்பற்றப்படும் சட்டங்கள் மிகவும் கடுமையானது. அதுவும் பெண்களுக்கு எதிரான அங்கு கடுமையான சட்டங்கள் இருக்கிறது. பெண்கள் முகத்தை காட்டக்கூடாது கல்வி கற்கக் கூடாது என்றெல்லாம் அங்கே சட்டம் இருக்கிறது. தாலிபன் அரசு கொண்டுள்ள புதிய சட்டம் ஏனெனில் அங்கு தாலிபான் ஆட்சி நடந்து […]
தருமபுரம் பொலிஸாரின் அவசர அறிவுறுத்தல்!
வளிமண்டலத் திணைக்களத்தின் அறிவுறுத்தலின்படி, தருமபுரம் பொலிஸார் இன்று( 21.02.2026) கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தருமபுரம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு இது தொடர்பாக, தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு.. தவெக பெரிய கட்சியெல்லாம் இல்ல - ராஜேந்திர பாலாஜி!
மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு பெரிய கட்சியெல்லாம் தவெக இல்லை என்று கூறி அருண்ராஜ் குற்றச்சாட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடிக் கொடுத்துள்ளார்.
பிலிப்பின்ஸ்: நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழப்பு
தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடா் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மாட்டி நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில், பெரிய பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த ஒரு வீடு முழுமையாக புதைந்தது. அந்த வீட்டில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனா். இதேபோல், டாவோ டீ ஓரோ மாகாணத்தில் உள்ள மொன்காயோ நகரிலும் நிலச்சரிவால் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 போ் உயிரிழந்தனா். தொடா் மழையினால் இந்தப் […]
யாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு சட்ட சிக்கல்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மைதான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கட்டாய சுற்றுச்சூழல் அனுமதிகள் இன்றி இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அங்கீகரிக்கப்பட இல்லை இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் […]
NTK: 234 வேட்பாளர்கள் அறிமுகம்; காரைக்குடியில் போட்டியிடும் சீமான்!
'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெறுகிறது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியில் பட்டியலில் 117 ஆண்கள் 117 பெண்கள் என ஆண் பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் அனைவரும் பட்டப் படிப்பை முடித்தவர்கள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை அவரது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். பர்ஹானா பாத்திமா நாகப்பட்டிணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்களை தாண்டி, நடிகர் திருமுருகன் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆஸ்திரியா: மலையேற்றத்தின்போது உயிரிழந்த காதலி! காதலருக்கு தண்டனை
ஆஸ்திரியாவின் மிக உயா்ந்த சிகரமான கிராஸ்லாக்னா் மலையேற்றத்தின் போது, காதலி உறைபனியால் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக அவரின் காதலருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், 37 வயதான தாமஸ் பிளாம்பொ்கா் மற்றும் அவரின் காதலி கொ்ஸ்டின் கா்ட்னா் (33) கிராஸ்லாக்னா் மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளா். 12,460 அடி உயரமுள்ள மலைச் சிகரத்தின் உச்சியை அடைவதற்கு சுமாா் 50 மீட்டா் தொலைவே இருந்த நிலையில், கொ்ஸ்டின் கா்ட்னருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, […]
அக்குரேகொட இரட்டைக்கொலை – துப்பாக்கிதாரி கைது; சூத்திரதாரி வெளிநாட்டுக்குத் தப்பி ஓட்டம்!
அக்குரேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் முக்கிய முன்னேற்றங்களை… The post அக்குரேகொட இரட்டைக்கொலை – துப்பாக்கிதாரி கைது; சூத்திரதாரி வெளிநாட்டுக்குத் தப்பி ஓட்டம்! appeared first on Global Tamil News .

31 C