SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

இங்கிலாந்தை அதன் மண்ணில் சாய்த்து வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள்! சாத்தியமானது எப்படி?

சில சமயம், பார்த்துப் பழகிய ஒருவரின் கையெழுத்து சட்டென மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? எழுத்து அதேதான். ஆனால், அதை எழுதிய வேகத்திலும், வளைவுகளிலும், பேனாவை அழுத்திய விதத்திலும் ஒரு புதிய தீர்மானமும், தன்னம்பிக்கையும் தெரியும். இந்த முறை இங்கிலாந்துக்குச் இந்திய மகளிர் அணியின் ஆட்டம் அப்படித்தான் இருந்தது. பார்த்துப் பழகிய அதே நீலச் சட்டை. ஆனால், அந்த ஆட்டத்தின் கையெழுத்து முற்றிலும் புதியது. இந்திய மகளிர் அணி - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வரலாற்றுப் பின்னணி: இந்தியா vs இங்கிலாந்து இந்த சரித்திர வெற்றியைக் கொண்டாடுவதற்கு முன், இதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன், இங்கிலாந்துடன் மோதிய 35 டி20 போட்டிகளில் இந்தியா ஜெயித்தது வெறும் 11. குறிப்பாக, இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் நிலை இன்னும் சவால். 2010-2022 வரை, இங்கிலாந்தில் நடந்த 12 போட்டிகளில் இந்தியா வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது. இங்கிலாந்து மண்ணில் இந்திய மகளிர் அணி ஒரு டி20 தொடரை கூட வென்றிருக்கவில்லை. 65% வெற்றி விகிதம் கொண்ட இங்கிலாந்து சொந்த மண்ணில் ஒரு அசைக்க முடியாத சக்தி. ஆனால், கோட்டைகள் தகர்க்கப்படவே கட்டப்படுகின்றன. முதல் ஆட்டம்: நாக் அவுட் பஞ்ச் (ஜூன் 28) ஒரு படத்தின் முதல் காட்சியே அதிரடியாக அமைந்துவிட்டால், ரசிகர்கள் சீட் நுனிக்கு வந்துவிடுவார்கள் அல்லவா? நாட்டிங்ஹாமில் நடந்தது அதுதான். அங்கே இந்திய அணி நிகழ்த்தியது ஒரு நாக்-அவுட் மேட்ச்! கேப்டன் ஹர்மன்பிரீத் இல்லை. தற்காலிக கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் முகத்தில் ஒரு துளி பதற்றமும் இல்லை. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்ததிலேயே ஸ்மிருதி மந்தனாவின் தன்னம்பிக்கை தெரிந்தது. முதலில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனாவும், ஷஃபாலி வர்மாவும் முதல் ஓவரிலிருந்தே அதிரடியில் இறங்கினார்கள். ஸ்மிருதியிடம் பதற்றத்தின் சாயல் துளியும் இல்லை. ஒரு தேர்ந்த சிற்பி, தேவையற்ற பகுதிகளை உளி கொண்டு செதுக்கி எறிவது போல, ஃபீல்டர்களுக்கு இடையே இருந்த சின்னச்சின்ன இடைவெளிகளைக் கூடத் துல்லியமாகக் கணக்கிட்டு பவுண்டரிகளை விரட்டி, வெறும் 62 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். ஸ்மிரிதி மந்தனா அதுவரை 31 அரை சதங்கள் அடித்திருந்த அவருக்கு, அன்றுதான் முதல் டி20 சதம் என்றாலும், 180.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன், ஒரு இந்திய வீராங்கனையின் அதிகபட்ச டி20 ஸ்கோராகவும் பதிவானது. விளைவு, இந்தியாவின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் 210/5 என்ற இமயத்தை எட்டியது. இந்த ஸ்கோரைப் பார்த்ததுமே இங்கிலாந்து அணி மனதளவில் உடைந்து போனது. ஆட்டத்தின் மற்றொரு ஹைலைட், அறிமுக வீராங்கனை ஸ்ரீ சரணியின் பந்துவீச்சு. 4 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை சரித்தார். இதனால், இங்கிலாந்து 113 ரன்களில் சுருண்டது 97 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த இந்த ராட்சச வெற்றி, சமூக வலைதளங்களில் ஒரு மாபெரும் புயலைக் கிளப்பியது. பலரும் ‘இது புதிய இந்தியாவின் உதயம்’ என்று எழுதினார்கள். ஆனால், ஒரு பூ மலர்வதால் மட்டுமே அது வசந்தகாலம் ஆகிவிடாது. CSK: அவரைப் பார்ப்பதற்கே எனக்குத் தயக்கமாக இருந்தது... - தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து ஜடேஜா இரண்டாம் ஆட்டம்: சரிவிலிருந்து மீண்ட சிங்கம் (ஜூலை 1) முதல் வெற்றியின் போதை சில சமயம் தலைக்கு ஏறும். பிரிஸ்டலில் அதுதான் நடந்தது. 31 ரன்களில் ஸ்மிருதி, ஷஃபாலி, Comeback கொடுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் என முக்கியமான மூன்று விக்கெட்டுகள் சரிந்தபோது, ‘சரி, பழைய கதை ஆரம்பித்துவிட்டது’ என்றே தோன்றியது. அப்போதுதான், ஜெமிமா ரோட்ரிகஸும், அமஞ்சோத் கரும் ஜோடி சேர்ந்தார்கள். 100 ரன்களை எட்டும் வரை அவர்கள் ஆடிய விதம், 100 அடி உயரச்சிலையின் சரிவை தாங்கிப்பிடித்த பாகுபலியின் பலம். ஜெமிமா ரோட்ரிகஸ் முதலில் சரிவைத் தடுத்து, பிறகு மெதுவாக ரன் ரேட் எனும் இதயத் துடிப்பை சீராக்கி, இறுதிக் கட்டத்தில் அதிரடியில் இறங்கி, இந்திய அணியை 181/4 என்ற ஒரு கௌரவமான ஸ்கோருக்குக் கொண்டு சென்றனர். அடுத்து பந்து வீசிய இந்தியாவின் மத்திம ஓவர்களில்தான், போட்டியின் திசையையே மாறியது. தீப்தி ஷர்மாவும், ஸ்ரீ சரணியும் பந்து வீசுகையில், இங்கிலாந்தின் ரன் ரேட் மெதுவாகக் குறையத் தொடங்கியது. அவர்களின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்டர்கள் ரன் எடுக்கத் திணறியது, கண்ணைக் கட்டிவிட்டு ஓடச் சொன்னது போல இருந்தது. இறுதியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றபோது, முதல் வெற்றியை விட இந்த வெற்றிதான் அதிக தன்னம்பிக்கையைக் கொடுத்தது. காரணம், இது சரிவிலிருந்து மீண்டு வந்த வெற்றி! ENG vs IND: கடைசிவரை தனியாளாய் நம்பிக்கையளித்த ஜடேஜா; ஆனாலும் லார்ட்ஸில் இங்கிலாந்து வென்றது எப்படி? மூன்றாம் ஆட்டம்: கையில் வெண்ணெய், வாயில் மண் (ஜூலை 4) தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகள், கோப்பை கிட்டத்தட்ட கையில். இன்னும் ஒரே ஒரு வெற்றி போதும். இந்த மிதப்பு ஒரு ஆபத்தான மனநிலை. லண்டன் ஓவல் மைதானத்தில் அது நிரூபணமானது. இங்கிலாந்து 172 ரன்கள் எடுத்தபோதும், இந்தியாவின் தொடக்கம் அமர்க்களமாக இருந்தது. ஷஃபாலி வர்மா பவர்பிளேவில் பந்துகளைப் பதம் பார்க்க, வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய மகளிர் அணி கடைசி சில ஓவர்கள் வரை ஆட்டம் நம் பக்கம்தான் இருந்தது. ஆனால், கிரிக்கெட்டில், மொத்தக் கதையையும் மாற்ற ஒரு சின்னத் தவறு போதும். தேவையில்லாத ஒரு ஷாட், ஒரு ரன்-அவுட் மிஸ் என ஒவ்வொரு சின்னச்சின்னப் பிழைகளை, தனது சவப்பெட்டிக்கு ஆணியாக இந்தியா அடித்துக்கொண்டது. கையில் இருந்த வெற்றியை 5 ரன்கள் வித்தியாசத்தில் (166/5) கோட்டை விட்டது. வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்து வைக்கும் ஒரு ‘ஃபினிஷர்’ இல்லாத குறை, அன்று அப்பட்டமாகத் தெரிந்தது. சில சமயம் தோல்விகூட நல்லதுதான். அது நம் கால்களை மீண்டும் தரையில் ஊன்ற வைக்கும். WI vs AUS: 27 ரன்களில் மொத்த டீமும் ஆல் அவுட்... 15 பந்துகளில் ஸ்டார்க் செய்த உலக சாதனை! நான்காவது ஆட்டம்: நிகழ்ந்தது அதிசயம் (ஜூலை 9) எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாள் மான்செஸ்டரில் விடிந்தது. திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்க்கு இணையான நெருக்கடி. வென்றால் சரித்திரம். தோற்றால் தொடர் சமனாகி, கடைசிப் போட்டி வாழ்வா சாவா கதையாகிவிடும். ஒருவேளை, அதிலும் தோற்றால் வெறும் கையுடனும் இந்தியர்களின் சாபத்துடனும் வீட்டிற்குச் செல்ல வேண்டியதுதான். என்ன செய்வது? பதற்றம் அவர்களின் மூச்சுக்காற்றில் கலந்திருந்தது. ஆனால், இந்த முறை இந்திய அணி முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்றிருந்தது. பந்துவீச்சாளர்கள், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கச்சிதத்துடன் இங்கிலாந்தின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினார்கள். ராதா யாதவ் ராதா யாதவின் நான்கு ஓவர் சுழற்பந்து (15/2), எதிரணியின் ரன் ரேட் எனும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. ரிசல்ட்? 126 ரன்கள் என்ற எளிய இலக்கு. எளிய இலக்கு என சுலபமாகத் தெரிந்தாலும், அதை துரத்தும் போது அடிக்கடி சொதப்புவது நம் வழக்கம். தொடக்க விக்கெட்டுகள் விழுந்தபோது மீண்டும் அதே பயம் தொற்றிக்கொண்டது. ஆனால், இந்த முறை மிடில் ஆர்டர் பேட்டர்கள், ஒரு அனுபவமிக்க மாலுமியைப் போல, அணியின் கப்பலை நிதானமாக நகர்த்தினர். ஷஃபாலி வர்மாவின் அதிரடியும் (18 பந்துகளில் 30), மிடில் ஆர்டரின் பொறுப்பான ஆட்டமும் சேர்ந்து இந்தியாவை 18வது ஓவரிலேயே வெற்றித் துறைமுகத்திற்குக் கொண்டு சேர்த்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தையும், 3-1 என தொடரையும் கைப்பற்றி, இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக ஒரு டி20 தொடரை வென்று, புதிய சரித்திரத்தைப் படைத்தது இந்தியா! Rohit - Kohli: ரோஹித், கோலி டெஸ்ட் ஓய்வு விவகாரத்தில் மௌனம் களைத்த பிசிசிஐ; காரணம் என்ன? ஐந்தாம் ஆட்டம்: ஆறுதலும், எச்சரிக்கையும் தொடரை வென்ற திருப்தியில் இந்தியாவுக்கு இது ஒரு சம்பிரதாய ஆட்டம். ஆனால், இந்தியா நிகழ்த்தியது ஒரு அபத்த நாடகம். Guest Role இல் வரும் நடிகர்களைப்போல, இந்திய வீரர்கள் களத்திற்கு வருவதும், பெவிலியனுக்கு திரும்புவதுமாக இருக்க, ஷஃபாலி வர்மா மட்டும் “One woman Army”யாகப் போராடி 41 பந்துகளில் 75 ரன்கள் விளாசி இந்திய அணியை 167/7 ரன்கள் என்ற ஸ்கோருக்குக்கு கொண்டு வந்தார். இதில் வென்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றாலும், தங்கள் சொந்த மண்ணில் (பிர்மிங்ஹாம் மைதானம்) தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு வெறி அவர்களின் ஆட்டத்தில் தெரிந்தது. அடுத்து இந்தியாவின் பந்துவீச்சு, ஒரு நகைச்சுவைத் திரைப்படம் போல இருந்தது. இந்தியாவின் பந்துவீச்சு இதில் துளியும் எடுபடவில்லை பவர்பிளேவில் ஒரு விக்கெட்டைக்கூட எடுக்க முடியாமல் 57 ரன்களை வாரி வழங்கியது. ஃபீல்டிங்கில் குழப்பங்கள். போதாக்குறைக்கு கேட்ச்கள் வேறு தவறவிடப்பட்டன. ஷஃபாலி வர்மா இதனால், இங்கிலாந்தின் தொடக்க வீராங்கனைகள் சோஃபியாவும் டேனியும், முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் வரை நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து, அவர்களின் வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டனர். பின்னர், அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தாலும், மூன்றாவதாக களமிறங்கிய போவ்மாண்ட் மட்டும் உறுதியாக நின்றார். கடைசி ஓவரில் 6 பந்துக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலைக்கு இங்கிலாந்து வந்தது. ஒரு சிக்ஸர் அடித்தால் மொத்த ஆட்டமும் க்ளோஸ். ஆனால், அருந்ததி ரெட்டி வீசிய முதல் பந்தில் போவ்மாண்ட் (30) போல்ட் ஆனதில் சிறிய நம்பிக்கை பிறந்தது. 4 பந்துகளுக்கு 5 ரன்கள் தேவை எனும் நிலையில், ஜோன்ஸ் அடித்த பவுண்டரிக்கு செல்லும் பந்தை பாய்ந்து பிடித்து இன்னும் கொஞ்சம் நம்பிக்கையூட்டினார் ராதா யாதவ். அவசரத்தில் கை விட்டால் அண்டாவில் கூட கைவிட முடியாது என்று சொல்வார்கள். அதுபோலவே, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி எனும் நிலையில், இங்கிலாந்து டொக்கு வைத்து விட்டு ஓட, பதற்றத்தில் பக்கத்தில் இருந்த ஸ்டம்புக்கு ஸ்ம்ரிதி மந்தனா வீசிய பந்து ஸ்டம்பை தொடாமல் குறிதவறியதில், வெற்றியின் விளிம்பில் சென்று ஆட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பை ஆசை காட்டி மோசம் செய்தது. ஆட்டத்தை இழந்தாலும் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டி-20 கோப்பையினை இந்தியா வென்றது. Smriti Mandhana: மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனை... அசத்திய ஸ்மிருதி மந்தனா புதிய நட்சத்திரம்: ஸ்ரீ சரணி இந்தத் தொடரின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு, சந்தேகத்திற்கு இடமின்றி அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணிதான். முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து பேட்டிங் வரிசையின் முதுகெலும்பை ஒடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். WPL போன்ற தொடர்கள், இது போன்ற திறமையான கிராமப்புற வைரங்களை அடையாளம் காட்டுகின்றன என்பதற்கு இவரே சிறந்த உதாரணம். ஸ்ரீ சரணி இதில், சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன: * இந்தியாவின் மிகப்பெரிய பலம், அதன் சுழற்பந்து வீச்சு மற்றும் டாப் ஆர்டர் பேட்டிங்கின் அதிரடி. தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ஸ்ரீ சரணி கூட்டணி, ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு, இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்கள். பேட்டிங்கில், முதல் ஆறு ஓவர்களில் அதிரடி காட்டுவதும், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைப்பதும் அவர்களது முக்கியத் தந்திரமாக இருந்தது. ஆனால், கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிக்க ஒரு ஆள் வேண்டாமா இதுதான் நாம யோசிக்க வேண்டிய முக்கியமான கேள்வி. * இரு அணிகளுமே தவறுகளுக்கு விதிவிலக்கல்ல. இங்கிலாந்தின் பீல்டிங்கும் பல இடங்களில் மிகவும் மோசமானதாக இருந்தது. முக்கியமான கேட்ச்களைத் தவறவிட்டது. இந்தியாவின் சில பேட்டர்கள், முக்கியமான நேரத்தில் தேவையில்லாத ஷாட்களை ஆடி, விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இந்திய மகளிர் அணி - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் * இங்கிலாந்து, தங்கள் சொந்த மண்ணில் தடுமாறியதற்குக் காரணம், அவர்களது பேட்டிங்கில் இருந்த நிதானமின்மையும், இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தெரியாமல் திணறியதும் தான். நாளை (ஜூலை 16) தொடங்கும் ஒருநாள் தொடர், முற்றிலும் வித்தியாசமான ஒரு சவால். அங்கே, அதிரடி மட்டும் போதாது. பொறுமையும் தேவை. இந்தத் தோல்விகளால் துவண்டு விடாமல், புதிய உத்வேகத்துடன் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணுகும். முடிவாக, கோப்பையை வென்ற இந்தியாவின் வெற்றி எனும் இந்தப் புதிய கையெழுத்து, டி20 தொடரின் பக்கங்களில் அழகாகப் பதியப்பட்டிருக்கிறது. ஆனால், கிரிக்கெட் என்ற நீண்ட புத்தகத்தில் இன்னும் பல பக்கங்கள் இருக்கின்றன. இந்தப் புதிய கையெழுத்து, அந்தப் புத்தகத்தின் எல்லா பக்கங்களையும் நிரப்புமா, அல்லது இந்த ஒரு அத்தியாயத்துடன் நின்றுவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை, இந்த வரலாற்று வெற்றியை நாம் கொண்டாடுவோம். Jasprit Bumrah: He looks terrific - பும்ராவை நேரில் பாராட்டிய இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

விகடன் 16 Jul 2025 2:05 am

கனடா இனவெறி கும்பல் அட்டூழியம் ; இந்தியர்கள் ரத யாத்திரையில் முட்டை வீசி தாக்குதல்

கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தி பாடல்களை பாடியபடியும், கடவுளின் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடி இந்தியர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். முட்டைகளை வீசி தாக்குதல் அப்போது, அவர்கள் மீது சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த வீடியோவில் சாலையின் ஓரத்தில் […]

அதிரடி 16 Jul 2025 12:30 am

தலைநகரில் அமலாகும் தாராவி மறுசீரமைப்பு ப்ளான்? மும்பைக்கு விசிட் அடித்த டெல்லி அதிகாரிகள்.

மும்பையின் தாராவியைப் போல டெல்லியிலும் குடிசைப் பகுதிகளை ஒழித்து நவீனமாக மாற்றும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

சமயம் 16 Jul 2025 12:08 am

நிந்தவூர் பிரதேச சபையின் கன்னி அமர்வு

video link- https://fromsmash.com/nR.SZ47l4D-dt நிந்தவூர் பிரதேச சபையின் புதிய 01 ஆவது சபை கூட்டமர்வு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் (ஜேபி) ஆரம்பித்து வைத்தார். பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் (ஜேபி) தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் உப தவிசாளர் சட்டத்தரணி எம் .ஐ .இர்பான் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பங்கபற்றலுடன் ஆரம்பமாகின. இதன்போது […]

அதிரடி 15 Jul 2025 11:30 pm

ஆப்கானிஸ்தானில் கடுமையான வெப்பத்தை சமாளிக்க புது வழி

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில், வெயிலைத் தணிக்க டாக்ஸி ஓட்டுநர்கள் ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாகனங்களில் கையால் செய்யப்பட்ட ஏர் கூலர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த தனித்துவமான சாதனங்கள், டாக்ஸிகளின் கூரைகளில் இணைக்கப்பட்ட ஸ்க்ரப்பி பீப்பாய்கள் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. காந்தஹாரில் வெப்பநிலை பெரும்பாலும் 40C ஐத் தாண்டும், மேலும் வழக்கமான கார் ஏசிகள் பழுதடையும் என்று டாக்ஸி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். டாக்ஸி ஓட்டுநரான அப்துல் பாரி, உள்ளமைக்கப்பட்ட ஏசிகளை விட இந்த […]

அதிரடி 15 Jul 2025 11:30 pm

அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாமக வரும் : நம்பிக்கையோடு பேசிய எடப்பாடி பழனிசாமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக நிச்சயம் இணையும் என எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் கூறியுள்ளார்.

சமயம் 15 Jul 2025 11:02 pm

தேனி மக்களுக்கு குட் நியூஸ்: சென்னை–போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்! முழு தகவல் இதோ...

தேனி மாவட்ட மக்களுக்கு தென்னக ரயில்வே குட் நியூஸ் ஒன்றை கொடுத்துள்ளது. சென்னை போடிநாயக்கனூர் இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அதுகுறித்து விரிவாக இதில் காண்போம்.

சமயம் 15 Jul 2025 10:45 pm

சிரேஷ்ட போலீஸ்( Sarjant ) உத்தியோகத்தர் எஸ்.எச். முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட சேவையை வழங்கிய எஸ்.எச். முபாரக் (Subair ஹமீத் முபாரக்) இம்மாதத்துடன் (ஜுலை) தனது அரச சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார். 1989 செப்டம்பர் 12ஆம் திகதி பொலிஸ் துறையில் இணைந்த இவர், தனது பணிக்காலத்தில் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு ரணசிங்க பிரேமதாசவிற்கு மெய் பாதுகாவலர்களாக அமர்த்தப்பட்டு அதிலிருந்து சிறிது காலம் சென்ற பின்பு களுத்துறை கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பயிற்சியை […]

அதிரடி 15 Jul 2025 10:30 pm

கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக 34 மாணவிகள் “9A” விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி

அண்மையில் வெளியான 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 54 வருட கால கல்வி பயணத்தில் முதற்தடவையாக அதிகமான “9A” விசேட சித்திகளை பெற்ற இலங்கை திருநாட்டின் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 34 மாணவிகள் சகல பாடங்களிலும் A சித்தியை பெற்றுள்ளதுடன் 15 […]

அதிரடி 15 Jul 2025 10:01 pm

எம்.ஜி.ஆர் பற்றி சரோஜா அம்மா சொன்னது; 'ஆதவன்'படத்தில் நடந்ததை மறக்க முடியாது- கே.எஸ்.ரவிக்குமார்

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார். சினிமா மட்டுமன்றி தன் வாழ்வில் பொதுசேவையும்  செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று (ஜூலை 15ம் தேதி) அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சரோஜா தேவியின் உடல், கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தஷாவராவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திரைக்கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டிருந்தனர். ஆதவன் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சரோஜா தேவி சரோஜா தேவி 'ஆதவன்' படத்தில் கே.எஸ் .விக்குமார் இயக்கத்தில் நடித்திருந்தார். இது குறித்துப் பேசியிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், நான் இயக்கிய ஆதவன் படத்துலேயே ரொம்ப தொல்ல பண்ணிதான் அவங்கள நடிக்க வைச்சேன். செட்டுக்குள்ள வரும்போதே 'வணக்கம் டைரக்டர் சார்' என்று சொல்லிக் கொண்டே மேக்-அப்போடதான் வருவாங்க. அவ்வளவு அர்பணிப்போட இருப்பாங்க. 'வெளிய வரும்போதே எப்பவும் மேக் அப்போடதான் வெளிய வரணும்னு எனக்கு எம்.ஜி.ஆர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனால வீட்டுல யாரயாவது சந்திக்க வந்தாகூட மேக் அப்போடுதான் சந்திப்பேன்' என்று என்கிட்ட சொன்னாங்க. 'ஆதவன்' படத்துலகூட அத வசனமா வைச்சிருப்பேன். எப்பவும் மேக் அப்போடதான் இருப்பாங்க. ஆதவன் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சரோஜா தேவி நடிகர் அர்ஜுனோட மகள் திருமண விழாவில்தான் சரோஜா அம்மாவ கடைசியா பார்த்தேன். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அப்பவே அவங்க உடம்புக்கு முடியல. அப்படி இருந்தும், பெங்களூர்ல இருந்து வந்து எல்லா விழாவிலும் கலந்து கொள்வார். அவர் காலமான செய்தி வருத்தமளிக்கிறது என்று பேசியிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 15 Jul 2025 10:00 pm

சிவகாசி தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கிராசிங் - ரயில்வே துறை எடுத்த முடிவு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சிவகாசி அருகே தைலாபுரம் கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கை புதுப்பிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடினர். ஆனால், ரயில்வே துறையோ, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும் அதை புதுப்பித்து பராமரிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.

சமயம் 15 Jul 2025 9:53 pm

சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சம்மாந்துறைக்கு விஜயம்

video- https://fromsmash.com/kmnEh77~q3-dt இலங்கையில் வறுமை ஒழிப்புக்காக 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும், அரநெளு கடன் உதவி வழங்கும் நிகழ்வும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில்திங்கட்கிழமை(14) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சி.டி களுஆராச்சி கலந்து கொண்டு […]

அதிரடி 15 Jul 2025 9:37 pm

ஹாலிவுட் போல சண்டைக் காட்சிகள்; மோகன் ராஜ் போல இனி யாரும் பலியாகக் கூடாது - தயாரிப்பாளர்கள் சங்கம்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார். சீனியர் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் 'வாழை' பட லாரி கவிழும் காட்சி - சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் மரணம் குறித்து மாரி செல்வராஜ் வேதனை விபத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும்போது மோகன் ராஜ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் பணியாற்றியவர்கள் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், திரு. மோகன் ராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். அவரின் குடும்பத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரங்கலை தெரிவிக்கும் இந்த நேரத்தில், இது போன்ற விபத்துகள் இனி தமிழ் திரைப்பட தயாரிப்புகளில் நடக்காமல் இருக்க, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்-களும், சண்டை கலைஞர்களும் மேலும் சிறப்பான முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பார்வையாளர்களை கவர நம் திரைப்படங்களில் உலக தரத்திற்கு ஹாலிவுட் போல சண்டைக்காட்சிகள் இடம்பெற முயற்சிப்பது அவசியம். அதே சமயம், ஹாலிவுட் படப்பிடிப்புகளில் செய்யப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் நம் படப்பிடிப்புகளில் செய்த பின் தான், சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். இன்னொமொரு கலைஞனின் உயிர் பலியாகாமல் தடுக்க, நாம் அனைவரும் இனிமேல் இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 15 Jul 2025 9:34 pm

அபுதாபி: டிரைவர் இல்லா தானியங்கி வாகனங்கள் சோதனை! எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

அபுதாபியின் மஸ்தார் சிட்டியில் டிரைவர் இல்லாத தானியங்கி வாகனங்கள் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. உலகின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமயம் 15 Jul 2025 9:34 pm

வட்டுவாகல் பாலம் மூடப்படுகின்றது!

முல்லைதீவு நகரை இணைக்கும் வட்டுவாகல் பாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வட்டுவாகல் பாலம் முற்றாக மூடப்படும்.எனவே, அனைத்து சாரதிகளும் மற்றும் பயணிகளும் இந்த தகவலை கவனத்தில் கொண்டு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, அறிவித்துள்ளது.

பதிவு 15 Jul 2025 9:30 pm

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 4 உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

video link- https://fromsmash.com/rMaxdD6nBA-dt (file) ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதன் போது காயமடைந்த 4 மாணவர்கள் உட்பட சாரதி ஒருவரும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் […]

அதிரடி 15 Jul 2025 9:19 pm

30 :யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு!

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். முன்னதாக வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தது. வலிகாமம் வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளது உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட “மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் இடம்பெற்றிருந்தது. இந்தப் போராட்டத்தில் பொது மக்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். தேர்தல் கால அறிவிப்பாக பலாலியில் 30வருடங்களிற்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீதிகள் சிலவற்றை அனுர அரசு அண்மையில் திறந்துவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 15 Jul 2025 9:19 pm

மட்டக்களப்பு புதைகுழி அம்பலம்!

இலங்கை கடற்படையினால் கிழக்கில் பேணப்பட்ட மனித புதைகுழிகள் பற்றிய தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. சிங்கள ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தி இறுதியில் மட்டக்களப்பில் கொலை செய்து புதைக்கப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் எக்னெலிகொட எவ்வாறு கொலை செய்யப்பட்டார், அவர் கொலை செய்யப்பட்ட இடம், உள்ளிட்டவற்றை முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இறுதியில் நியூசிலாந்துக்கு தொழில் விசாவில் சென்று அரசியல் தஞ்சம் கோரிய முன்னாள் கடற்படை சிப்பாயான பிரசன்ன பியசாந்தவே உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். 2010 ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட சுட்டுக் கொல்லப்பட்டதையும் அவரின் சடலத்தையும் தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கோட்டைக்கு அழைத்துவரப்பட்ட பிரகீத் எக்னெலிகொட கோட்டையில் இருந்த பாழடைந்த அறைக்கு தழுத்து சென்றதை நான் பார்த்ததாக கடற்படை சிப்பாய் தெரிவித்துள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட நபரை துக்கி வந்து கடற்படை படகில் வைத்தனர். அப்போது நான் பார்த்ததில் அவரின் கழுத்தில் சூட்டு காயங்கள் காணப்பட்டது. பின்னர் என்னை அருகில் இருந்த தீவை நோக்கி படகை செலுத்த சொன்னார்கள். படகில் மண்வெடிகளும் இருந்தது. என்னை படகில் இருக்க சொல்லிவிட்டு சடலத்தை தூக்கி சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்தனர். பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்னரே நான் பார்த்த மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் எக்னெலிகொட என அறிந்து கொண்டேன்” எனவும் கடற்படை சிப்பாய் தெரிவித்துள்ளார்

பதிவு 15 Jul 2025 9:14 pm

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள் இன்று(15) ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கீதம் இயற்றப்பட்டு சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் ஆரம்பித்து வைத்தார். பின்னர் சம்மாந்துறை பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பங்கபற்றலுடன் ஆரம்பமாகின. இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் உரையுடன் உப தவிசாளர் […]

அதிரடி 15 Jul 2025 9:13 pm

சட்டமன்றத் தேர்தலில் விசிகவின் வாக்கு வங்கி.. ஸ்டாலின் முன்பு உடைத்து பேசிய திருமாவளவன்

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு விழும் நான்கு வாக்குகளில் ஒரு வாக்கு விசிகவின் வாக்காக இருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமயம் 15 Jul 2025 9:01 pm

“நீட் தேர்வு –மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்”–எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும், கூட்டணிக் கட்சி தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், ” நீட் ரத்து ரகசியம் உள்ளது என உதயநிதி சொன்னார். இன்று துணை முதல்வராக இருக்கிறார். ரகசியத்தை சொன்னாரா? அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படக்கூடாது என 7.5% உள் ஒதுக்கீட்டை கொடுத்ததால், இன்று 2,818 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றன. […]

டினேசுவடு 15 Jul 2025 9:00 pm

யாழில். முன்னெடுக்கப்படும் வெள்ளை ஈ யை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு உதவ கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகவும் ,தன்னார்வமாக உதவி செய்ய… The post யாழில். முன்னெடுக்கப்படும் வெள்ளை ஈ யை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு உதவ கோரிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 15 Jul 2025 8:56 pm

மன்னாரில் கனிம மண் அகழ்விற்கு நீர் பரிசோதனை- மக்கள் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தம் 

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் கனிம மணல் அகழ்வதற்கு அனுமதி… The post மன்னாரில் கனிம மண் அகழ்விற்கு நீர் பரிசோதனை- மக்கள் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 15 Jul 2025 8:52 pm

விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பும் 'முதல்'இந்தியர் சுபான்ஷு சுக்லா - பிரதமர் மோடி வாழ்த்து

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி புறப்பட்டு, அங்கு அவர்கள் 18 நாள்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். Lucknow: Group Captain Shubhanshu Shukla's family rejoices as the Axiom-4 Dragon spacecraft safely returns to Earth. #ShubhanshuShukla | #AxiomMission4 | #Axiom pic.twitter.com/b1EgIIw3su — All India Radio News (@airnewsalerts) July 15, 2025 இந்நிலையில், இந்தியரான சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டு, சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கி சாதனை படைத்திருக்கின்றனர். சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பும் 'முதல்' இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லாவின் இந்த பயணம் இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும். சுக்லாவின் குடும்பத்தினரும் லக்னோவில் அவர் தரையிறங்கும் காட்சியை பெருமிதத்துடன் கண்டு வரவேற்றனர். இந்நிலையில் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். I join the nation in welcoming Group Captain Shubhanshu Shukla as he returns to Earth from his historic mission to Space. As India’s first astronaut to have visited International Space Station, he has inspired a billion dreams through his dedication, courage and pioneering… — Narendra Modi (@narendramodi) July 15, 2025 அவ்வகையில் பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தின் மூலம், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பும் 'முதல்' இந்தியர் என்ற பெருமையை பெறும் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்கிறேன். பல லட்ச மக்களை தன் அர்ப்பணிப்பாலும், தைரியத்தாலும், விடாமுயற்சியாலும் ஊக்குவித்துள்ளார் என்று பெருமிதத்துடன் வாழ்த்தியிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 15 Jul 2025 8:51 pm

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’–விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற கருப்பொருளுடன் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்யும் நோக்கில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும், கூட்டணிக் கட்சி தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களிடம் அவர் எழுச்சியுடன் உரையாற்றினார். இன்று உங்களுடன் ஸ்டாலின் […]

டினேசுவடு 15 Jul 2025 8:48 pm

விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல்: கேப்டன் சுபான்ஷூ சுக்லா பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார்!

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய வரலாற்றைப் படைத்து, இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா, தான் பயணித்த

ஆந்தைரேபோர்ட்டர் 15 Jul 2025 8:39 pm

நகரி-திண்டிவனம் புதிய ரயில் பாதை திட்டம்..கூடுதல் நிதி ஒதுக்கிய மத்திய அரசு- விறுவிறுப்பாக நடக்கும் பணிகள்!

நகரி-திண்டிவனம் புதிய பாதை தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற கிராமங்களையும், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தையும் இணைக்கும்.

சமயம் 15 Jul 2025 8:39 pm

Jasprit Bumrah: He looks terrific - பும்ராவை நேரில் பாராட்டிய இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்தும், இந்தியாவும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் இருந்த சூழலில், ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் மோதின. முதல் போட்டிக்குப் பிறகு இரண்டாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா மூன்றாவது போட்டியில் களமிறங்கினார். இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் மேலும், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சரியாக 387 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 192 ரன்களுக்கு இந்திய பவுலர்கள் சுருட்டினர். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் 193 என்ற எளிய இலக்கை கூட எட்ட முடியாமல், 170 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. 181 பந்துகளில் 61 ரன்கள் என கடைசி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக நம்பிக்கையளித்துக் கொண்டிருந்த ஜடேஜாவின் போராட்டமும் வீணானது. இங்கிலாந்து அணி தற்போது 2 - 1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்திய ஆடவர் அணியினரும், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணியினரும், லண்டனில் உள்ள கிளாரன்ஸ் மாளிகையில் இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்தனர். தொடர்ந்து, மன்னர் சார்லஸ் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஜஸ்பிரித் பும்ரா - இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இதற்கிடையில், இந்திய வீரர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தும்போது, மன்னர் சார்லஸ் பும்ராவைப் பார்த்து He looks terrific என்றார். அதோடு, பும்ராவின் பவுலிங் குறித்தும் சார்லஸ் பாராட்டினார். இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணி, முதல்முறையாக இங்கிலாந்துக்கெதிரான டி20 தொடரை அதன் சொந்த மண்ணில் கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ENG vs IND: கடைசிவரை தனியாளாய் நம்பிக்கையளித்த ஜடேஜா; ஆனாலும் லார்ட்ஸில் இங்கிலாந்து வென்றது எப்படி?

விகடன் 15 Jul 2025 8:35 pm

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ”வேட்டுவம்” படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நேற்று முன் தினம் (ஜூலை 13) நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் நடைபெற்ற படப்பிடிப்பில், கார் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் மோகன் ராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் […]

டினேசுவடு 15 Jul 2025 8:35 pm

ஹெலிகொப்டர் கேபினுக்குள் பாய்ந்த பறவை: உயிரிழந்த அவுஸ்திரேலிய பயணி..தப்பிய விமானி

அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் பயணி ஒருவர், கேபினுக்குள் பறவை பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். 44 வயது நபர் அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு ஆர்ன்ஹெம் லேண்டில் உள்ள Gapuwiyak அருகே 44 வயது நபர் ஒருவர் ஹெலிகொப்டரில் பயணித்தார் ஆனால், Lake Evella விமான ஓடுபாதையில் ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது அதில் பயணித்த 44 வயது நபர் உயிரிழந்திருந்தார். இதுகுறித்து வடகிழக்கு பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், பறவை ஒன்று ஹெலிகொப்டர் கேபினுக்குள் […]

அதிரடி 15 Jul 2025 8:30 pm

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் பி.கே.சி.யில் உள்ள மேக்கர் மேக்ஸிட்டி மாலில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் வாடிக்கையாளர் பார்வைக்கு வைக்கப்பட்டது. முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெஸ்லா ஷோரூமைத் திறந்து வைத்தார். இந்தியாவில் டெஸ்லாவின் முதல் மாடல் Model Y ஆகும், இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும், இந்தியாவில் டெஸ்லாவின் இரண்டாவது ஷோரூம் இந்த […]

டினேசுவடு 15 Jul 2025 8:03 pm

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!

அண்மையில் நடந்துமுடிந்த குரூப் 4 தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சமயம் 15 Jul 2025 7:49 pm

மதுரை மாநகராட்சி வரி குறைப்பு முறைகேடு: 7 பேர் சஸ்பெண்ட் - மேயர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

மதுரை மாநகராட்சியில் கட்டிட வரி குறைப்பு முறைகேடு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் யார், யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேயர் மற்றும் மண்டல தலைவர்களுக்கும் இதில் தொடர்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 15 Jul 2025 7:45 pm

`மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை; அதன் தொடர்ச்சியே `உங்களுடன் ஸ்டாலின்'திட்டம்'- ஆர்.பி.உதயகுமார்

மக்களைத் தேடி அரசு என்று சொல்கிறீர்கள், இந்த நான்காண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். ஆர்.பி. உதயகுமார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்து வரும் ஸ்டாலின், இன்றைக்கு அதன் தொடர்ச்சியாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அப்படியானால் ஏற்கனவே தொடங்கிய மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் காலாவதி ஆகிவிட்டதா? அல்லது மக்களுடைய கவனத்தை பெறவில்லையா? அறிஞர் அண்ணா காலத்திலிருந்து மக்கள் தொடர்பு முகாம், திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட வெள்ளிக்கிழமை தோறும் அம்மா சிறப்பு திட்ட முகாம், எடப்பாடி பழனிசாமி காலத்தில் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆகிய முகாம்களெல்லாம் என்ன ஆயிற்று? நான்கு ஆண்டுகளில் இந்த முகாம்கள் மூலம் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையா? மக்களைத் தேடி அரசு என்று சொல்கிறீர்கள், இந்த நான்காண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்களுடையது விளம்பர மாடல் அரசு என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலமாக நேற்றைய தினம் நீங்கள் வெளியிட்ட அறிவிப்பிற்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை கேட்டு உள்ளார் அரசு தகவல்களை நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்கு எடுத்துரைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங்பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகியோர் மக்கள் நன்மதிப்பைப் பெற்றவர்கள். தனது ஆட்சியின் மூலம் நன்மதிப்பை இழந்த ஸ்டாலின், நம்பிக்கை இழந்த தன் அரசுக்கு, மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அதிகாரிகளை முன்னிறுத்தி அவர்களை முகமூடியாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அப்போதும் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது. உங்களுடன் ஸ்டாலின் ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு இப்போது பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார்கள். பொதுவாக செய்தித்துறை மூலமாகவே அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இரண்டு ஐஏஸ் அதிகாரிகள் உள்ளனர், இப்போது மக்களின் நன்மதிப்பை பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் மக்களிடத்தில் செய்திகளை கொண்டு போய் சேர்த்தால் வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்தால் அது எடுபடாது. இந்த புதிய அறிவிப்பு, உங்கள் அரசின் தோல்வி என்பதை காட்டுகிறது. பத்தாயிரம் முகாம்களில் என்ன தீர்வு காண்பீர்கள்? மின்சார கட்டணத்தை குறைப்பீர்களா? நிறுத்தி வைக்கப்பட்ட தாலிக்கு தங்கம், மடிக்கணினி, கண்மாய் தூர்வாரும் திட்டங்களை செயல்படுத்த மனு கொடுத்தால் செய்வீர்களா? எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு இதுவரை ஸ்டாலின் பதில் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார். நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் தான் முடியும் என்று தெரிவித்துள்ளார்.

விகடன் 15 Jul 2025 7:39 pm

பதற்றம் தணிக்க முயன்றபோது திடீர் மோதல் ; தென் சிரியாவில் 30 பேர் பலி

தென் சிரியாவில் ஏற்பட்ட பதற்றத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில், அனுப்பப்பட்ட படைத்தரப்பினருக்கும், பழங்குடியினருக்கும் இடையிலான மோதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், யுத்த கண்காணிப்பாளராகச் செயல்படும் சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம், மரணமானவர்களின் எண்ணிக்கை 37 எனக் குறிப்பிட்டுள்ளது. இது தவிர, ஸ்வீடா நகரில் பெடோயினி சுனி ஆதிவாசிகளுக்கும், ட்ரூஸ் மத சிறுபான்மை போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம், சுனி […]

அதிரடி 15 Jul 2025 7:30 pm

நேர்மையின் முன் தன் நெஞ்சே தன்னைச்சுடும்! | அனுபவப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் 1989 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த  ரயில்வே துறை எழுத்துத் தேர்வுக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோ எதிரிலுள்ள கார்த்திகேயா பள்ளிக்கு என் கணவருடன் சென்றிருந்தேன். இயற்கை உபாதைகள் தணிக்கும் பொருட்டு அருகிலுள்ள பொது கட்டண கழிப்பறையை நாடினேன். அங்குள்ள பலகையில் 25 பைசா 50 பைசா என்று எழுதப்பட்டிருந்தது. நான் 25  பைசாவை அங்கிருந்தவரிடம் கொடுத்தேன். அவரோ 50 காசுகள் தந்துவிட்டு உள்ளே போகச் சொன்னார். நானும் திரும்பி வந்து என்னவரிடம் 50 காசு வாங்கி வந்து தந்துவிட்டு உள்ளே சென்றேன். காலைக் கடனை முடித்துவிட்டு வெளியே வந்த என்னை மீண்டும் அந்த நபர் அழைத்தார். தேர்வுக்கான நேரம் நெருங்கிய நிலையில் அவரை சபித்துக் கொண்டே திரும்பி 'என்ன இன்னும் 50 காசுகள் வேண்டுமா' என்று எரிச்சலுடன் ஆனால் அதை வெளிக் காட்டாமல் கேட்டேன். அவரோ அமைதியாக 'இல்லையம்மா இந்தாருங்கள் மீதி 25 காசுகள்' என்று திருப்பித் தந்துவிட்டார். நானும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். தேர்வெழுதிவிட்டு வெளியில் வந்தவுடன் இதுபற்றி கணவரிடம் கூறினேன்  மிக நீண்ட நேரம் இதற்கான காரணம் குறித்து யோசித்துக் குழம்பினோம். மதியத்திலிருந்து இரவு எட்டு மணிவரை எங்கு சுற்றினாலும் எதைப் பார்த்தாலும் என்ன வாங்கினாலும் இதே குழப்பம்தான். இறுதியாக சென்ட்ரல் நிலையத்தில் இதற்கான விடை கிடைத்தது. ரயிலுக்காகக் காத்திருந்த நேரத்தில் துப்புரவுப் பணித் தோழர்கள் மூவரின் உரையாடலை கவனிக்கச் சொன்னார் கணவர். ' ஒண்ணுக்குப் போனாலும் ரெண்டுக்குப் போனாலும் ஒரு   ரூபா தான்னு தான் வாங்குவேன் - இது முதல் நபர் சரியான சில்லறை தராதவர்க்கு மீதிக்காசு தரமாட்டேன். இது இரண்டாம் நபர். அவசரமாகச் செல்பவரிடம் காசு  வாங்கிக் கொள்வேன். டோக்கன் தரமாட்டேன். இது மூன்றாம் நபர். மூவரின் உரையாடலிலிருந்து காதுகளை விலக்கி என்னைத் தனியாக அழைத்து வந்த கணவர்' இவர்கள் பேசுவதைக் கேட்டாயல்லவா! இவர்களில் யார் குற்றவாளி? சொல்' எனக் கேட்டார். கோபமுடன் நான்' எரிகின்ற கொள்ளியில் எது நல்லதெனக் கேட்டால் எப்படி சொல்வது. மூவருமே ஏமாற்றுக்காரர்கள். மூன்று பேருமே  குற்றவாளிகள் தான்' என்றேன். 'ஒரு நிமிஷம் யோசித்துப் பார். இவர்களை விட நீயே ஏமாற்றுக்காரி. நீயே குற்றவாளி,'  என்ற கணவரின் பேச்சால் தூக்கிவாரிப் போட நிமிர்ந்தேன். ஆமாம். அது அவர்கள் வாடிக்கை. ஆனால் உனக்கு?! சிறுநீர் கழிக்க 25 பைசா மலங்கழிக்க 50 பைசா என்றிருந்திருக்கும். இரண்டாவதற்கென்று உன்னிடம் 50 காசுகள் வசூலித்த அந்த நபர் நீ போய்வந்த நேரத்தைக் கருத்தில் கொண்டு 25 காசைத் திருப்பிக் கொடுத்துள்ளார். அவரது நேர்மை எங்கே, காரணம் கேட்காமல் காசை வாங்கி வந்த நீ எங்கே. பொதுக் கழிவறைகளை நீ உபயோகிக்கும் போதெல்லாம் அவரது நேர்மை உன்னை சுடும். இது அவர் தந்ததல்ல, உனக்கு நீயே தந்து கொண்ட சாபம்' என்றார். உண்மை தான். நேர்மையைப் பற்றி நினைக்கும் போதும் கேட்கும் போதும் அந்தத் தோழரின் நினைவே இமயமாகத் தோன்றும். எனக்கு நானே குற்றவாளியாக உணர்வேன். இந்தப் படைப்பு அனைத்து நேர்மைப் பணியாளர்களுக்கும் சமர்ப்பணம்.

விகடன் 15 Jul 2025 7:23 pm

தொடர் போர் பதற்றம்.., உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் ராஜினாமா.!

உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். இது உக்ரைன் அரசாங்கத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்களின் ஒரு பகுதியாகும். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். ஷிம்ஹாலின் ராஜினாமா குறித்து உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.இந்த அறிவிப்பு உக்ரைன் நாடாளுமன்றத்திற்கு (Verkhovna Rada) அனுப்பப்பட்டு, அங்கு புதிய […]

டினேசுவடு 15 Jul 2025 7:23 pm

யாழில். முன்னெடுக்கப்படும் வெள்ளை ஈ யை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு உதவ கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகவும் ,தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 'இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025'என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் கச்சாயில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது. குறித்த செயற்திட்டத்திற்காக கொழும்பில் இருந்து 150 இயந்திரங்கள், 150 பணியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனாலும் ஓர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆகக் குறைந்தது 4 பேர் தேவை. எனவே ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்களை எதிர்பார்த்துள்ளனர். செயற்றிட்டத்துக்கு தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தனை 0766904580 எனும் தொலைபேசி இயக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும். நாளைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி பிதேச செயலர் பிரிவு முன்னெடுக்கப்படவுள்ளது. அதனால் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்டவர்கள் 0776116551 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்புகளை பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிலும் (0774409933) 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் உடுவில் பிரதேச செயலர் பிரிவிலும் (0779074230) 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிலும் (0778222560) 25ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிலும் (0771976959) செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பதிவு 15 Jul 2025 7:21 pm

ரயில் பயணிகளுக்கு முக்கியமான அப்டேட்.. இனி 150 டிக்கெட் மட்டுமே கிடைக்கும்!

பொது பெட்டிகளில் பயணிகளுக்கு 150 டிக்கெட்களை மட்டுமே வழங்கும் வகையில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.

சமயம் 15 Jul 2025 7:06 pm

WPP appoints Accenture Song’s Baiju Shah as Global CEO of AKQA

London: WPP, the world’s largest marketing and communications group, has appointed Baiju Shah as the new Global CEO of AKQA, its award-winning design and innovation company. The appointment marks a bold step toward accelerating AKQA’s leadership in creative transformation, with a sharpened focus on AI, design, and technology. Shah joins AKQA from Accenture Song, where he served as Global Chief Strategy Officer and played a pivotal role in shaping the vision, offerings, and global footprint of the consultancy’s creative division. With over 25 years of experience at the intersection of creativity, business strategy, and emerging technologies, his leadership is expected to guide AKQA through a phase of ambitious growth and transformation. At Accenture, Shah was instrumental in founding and scaling Accenture Song (formerly Accenture Interactive) into a creative powerhouse, driving acquisitions, growing Fjord into 35 global studios, and spearheading the integration of AI into its creative services. His expertise in leading multidisciplinary global teams and embedding emerging technologies into client solutions is seen as a critical asset for AKQA’s future trajectory. “AKQA has always stood for iconic, creative innovation. I’m honoured to join a company whose heritage is not just history, but a foundation for what comes next,” said Shah. “As AI and cultural shifts transform how business operates and how creativity itself is practised, we have a remarkable opportunity to create work that shapes how people live and connect.” The appointment comes at a time when clients are increasingly seeking partners who can help them navigate rapid technological and cultural change. WPP sees AKQA, under Shah’s leadership, as central to its mission of delivering transformative ideas and business solutions grounded in creativity and powered by technology. Mark Read, CEO of WPP , welcomed Shah’s appointment, stating: “Over the past two decades, Baiju has demonstrated that he is one of our industry’s leaders in bringing strategy, creativity and emerging technology together. I know Baiju’s arrival will bring even further momentum to the business.” Read also extended his gratitude to Stephan Pretorius, WPP’s Chief Technology Officer, who served as Interim Chair of AKQA during the leadership transition. “His steady leadership and deep understanding of AKQA’s business have been key in guiding the team through this important period,” Read added. With a global presence spanning 30 countries, AKQA continues to receive global acclaim for its innovative work. Recent accolades include the 2025 Cannes Lions Grand Prix for Innovation, the 2024 Grand Prix for Design and Glass, and top honours from Fast Company for Innovation by Design and World Changing Ideas. As AKQA embarks on its next chapter, Shah emphasized a vision that marries imagination with impact: “This is about more than creative output. It’s about achieving meaningful growth, setting new standards for innovation, and proving that imagination remains the most powerful force for building futures worth living in.” The appointment underscores WPP’s continued investment in AI-led creativity, strategic design, and global innovation leadership.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Jul 2025 7:06 pm

ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்! - பின்னணி என்ன?

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். கணவர், மகளுடன் ஏமனில் வசித்துவந்தார். 2014-ல் ஏமன் நாட்டில் ஏற்பட்ட பிரச்னை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக டாமி தாமஸ் மற்றும் மகளும் கேரளா திரும்பினர். நிமிஷா மட்டும் ஏமன் நாட்டில் தனியாக தங்கி வேலைசெய்துவந்தார். இதற்கிடையே ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு தனியாக கிளீனிக் ஆரம்பித்தார் நிமிஷா. நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு தலால் அப்துல் மஹ்தி அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. தலால் அப்துல் மஹ்தி இதற்கிடையே 2017 ஜூலை 25-ம் தேதி தலால் அப்துல் மஹ்தி-க்கு அதிக அளவு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றார் நிமிஷா பிரியா. இதில் தலால் அப்துல் மஹ்தி இறந்துவிட்டார். தப்பிக்க முயன்ற நிமிஷா போலீஸில் சிக்கினார்.  அந்நாட்டுச் சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டு 2020-ல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஆணை நிமிஷா அடைக்கப்பட்டிருந்த சிறைக்கும் அனுப்பப்பட்டது. நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற 'சேவ் நிமிஷா பிரியா இண்டர்நேஷனல் ஆக்‌ஷன் கவுன்சில்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. மேலும், நிமிஷாவை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா பிரியா இந்த நிலையில் நாளை நிறைவேற்றப்பட இருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. மரண தண்டனையை நிறுத்திவைப்பது சம்பந்தமாக கொலையான தலால் அப்துல் மஹ்தி-யின் குடும்பத்தாருடன் கேரளாவைச் சேர்ந்த சன்னி பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முசல்யார் முயற்சியால்,  ஏமனில் சமரச பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதில், தயாநிதி எனப்படும் பிளட் மணி பெற்றுக்கொண்டு நிமிஷாவுக்கு மன்னிப்பு வழங்க தலால் அப்துல் மஹ்தியின் குடும்பத்தினர் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விகடன் 15 Jul 2025 7:02 pm

கிண்டி ரேஸ் கிளப் நிலம்: என்ன செய்ய போகிறது தமிழ்நாடு அரசு? தேசிய பசுமை தீர்ப்பாயம் போட்ட முக்கிய உத்தரவு

சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சொந்தமான 118 ஏக்கர் நிலம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு விதித்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 15 Jul 2025 7:02 pm

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி: கீதா ஜீவன் வெற்றி வாய்ப்பு எப்படி? நாம் தமிழர், தவெக ஆதரவு அதிகரிப்பு!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக அமைச்சர் கீதா ஜீவனுக்கு அதிமுகவை விட நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் தான் அதிக நெருக்கடிகளை உருவாக்குவார்கள் என்று களத்திலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

சமயம் 15 Jul 2025 6:58 pm

இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி.!

லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கு அடுத்த நாளான இன்று, இந்திய அணி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்திக்கச் சென்றது. மேலும், இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள நிலையில், இந்திய மகளிர் அணியும் மன்னர் சார்லஸை சந்தித்தது. லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸில் மன்னர் சார்லஸ் உடன் இரு அணிகளுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். […]

டினேசுவடு 15 Jul 2025 6:58 pm

Mackinac Island: `கார்களே இல்லை குதிரை வண்டிதான்' - அமெரிக்காவின் தனித்துவமான தீவு பற்றி தெரியுமா?

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள மாக்கினாக் தீவு, கார்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட உலகின் அரிதான இடங்களில் ஒன்றாக உள்ளது. இயற்கை அழகு, அமைதியான சூழலால் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. கார்கள் இல்லாத தீவு 1898 ஆம் ஆண்டு முதல், மாக்கினாக் தீவில் கார்கள் தடை செய்யப்பட்டன. கார்களால் ஏற்படும் இரைச்சல் மற்றும் மாசுபாட்டைத் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மிதிவண்டிகள், குதிரை வண்டிகள் தான் இங்கு முக்கியப் போக்குவரத்து முறைகளாக உள்ளன. இந்த அம்சம் தீவை அமைதியான, சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக மாற்றியுள்ளது. இயற்கை ஈர்ப்பு மாக்கினாக் தீவில் உள்ள 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாக்கினாக் கோட்டை, அமெரிக்க வரலாற்றில் முக்கிய இடமாக உள்ளது. தீவின் பசுமையான மிதிவண்டிப் பாதைகள், கடற்கரைகள் மற்றும் இயற்கைக் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன. பொருளாதாரம் குதிரை வண்டிகள் இங்கு முக்கிய போக்குவரத்து முறையாக உள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் இந்த பாரம்பரிய வண்டிகளை பயன்படுத்தி தீவை சுற்றுகின்றனர். தீவின் முக்கியப் பொருளாதாரம் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உள்ளூர் கடைகள், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் பாரம்பரியத்தையும் நவீன வசதிகளையும் இணைத்து பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகின்றன. எப்படி செல்வது? மாக்கினாக் நகரம் அல்லது செயின்ட் இக்னேஸ் நகரத்திலிருந்து படகு மூலம் தீவுக்கு செல்லலாம். இந்த பயணம், தீவின் இயற்கை அழகை அனுபவிக்க ஒரு சிறந்த வழியாகும். மாக்கினாக் தீவு, நவீன உலகின் பரபரப்பிலிருந்து விலகி, இயற்கை மற்றும் அமைதியான அனுபவத்தை தேடுவோருக்கு ஏற்ற இடமாக உள்ளது. அல்காட்ராஸ்: தீவு சிறையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு - சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாறியது எப்படி?

விகடன் 15 Jul 2025 6:53 pm

Lokesh Kanagaraj: 'செளபின் சாஹிர் கதாபாத்திரத்தில் பகத் நடிக்க வேண்டியது, ஆனால்...' - லோகேஷ் கனகராஜ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பகத் பாசில் இந்தப் படத்தில் நடிக்க இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “ செளபின் சாஹிர் கதாபாத்திரம் முதலில் பகத் பாசிலுக்காக எழுதப்பட்டது. ஆனால், கால் சீட் காரணமாக அவரால் நடிக்கமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மதங்களுக்கும் மேலாக செலவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.  சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 15 Jul 2025 6:48 pm

நீங்க பிசினஸ் ஓனரா? சிறு குறு வணிகர்களுக்கான முதலீட்டு வழிகாட்டல்! - விகடன் 'லாபம்'சிறப்பு வெபினார்

ஹாய்! எப்படி இருக்கீங்க! நீங்க ஒரு பிசினஸ் ஓனரா? சம்பாதிக்கும் லாபம் அனைத்தையும் உங்க பிசினஸ்-லேயே மீண்டும் முதலீடு பண்றீங்களா? உங்களுடைய சுய நிதி நிர்வாகத்தை கவனிக்க நேரமில்லையா? உங்களின் பிசினஸ் லாபத்தை ஃபிக்செட் டெப்பாசிட் & சீட்டுகளைத் தாண்டி வேறு இடங்களில் முதலீடு பண்ணனுமா? விகடன் 'லாபம்' சிறப்பு வெபினார் உங்க பிசினஸ் பணப்புழக்கத்தை பாதிக்காம நீண்ட காலதத்துக்கான செல்வத்தை உருவாக்கணுமா? பிசினஸ் ஓனர்கள் மியூச்சுவல் ஃபண்டை எப்படி பயன்படுத்தலாம்னு தெரிஞ்சுக்கணுமா? ஆமாம்னு சொன்னா விகடன் 'லாபம்' வழங்கும் வெபினாரில் கலந்துக்க மறக்காதீங்க! தலைப்பு: Smart Investments for MSME Ownersநாள்: ஜூலை 20, 2025, ஞாயிறுநேரம்: இந்திய நேரம் மதியம் 11:00 AM - 12:30 PM மணி வரை பேச்சாளர்: சந்தோஷ் ரங்கநாதன், ரீஜினல் டிரெய்னிங் மேனேஜர், நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.  ரெஜிஸ்டர் செய்ய:   https://forms.gle/RRGLp1fqqsu43h287

விகடன் 15 Jul 2025 6:43 pm

குர்திஷ் மக்களின் துயர் மிகுந்த நெடிய பயணம்: வடுக்களும், நம்பிக்கையும்

வரலாற்றுப் பக்கங்களில் ஒரு சோக அத்தியாயமாக எழுதப்பட்டிருக்கும், குர்திஷ் மக்களின் வாழ்வும் , அதனோடு பின்னிப் பிணைந்த விடுதலைக்கான ஒரு நெடிய போராட்டமும், இப்போது, ஒரு புதிய பாதையை நோக்கிச் செல்கிறது;இன்னும் சொல்லப்போனால் ,செல்ல வைக்கப்படுகிறது . பல தசாப்த கால ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க குர்திஷ் தேசிய விடுதலை இயக்கம், அமைதியான அரசியல் தீர்வைக் காணும் நோக்கத்துடன், தங்கள்

புதினப்பலகை 15 Jul 2025 6:42 pm

Superman Review: ஜேம்ஸ் கன்னின் ஆக்ஷன், எமோஷன், அரசியல் - DC Universe-இன் அசத்தலான புதிய ஆரம்பம்!

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் டிசி யூனிவர்ஸின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த சூப்பர்மேன். சூப்பர்மேனின் தோற்றக் கதையை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, கிளார்க் கென்ட் (டேவிட் கோரன்ஸ்வெட்) ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக சூப்பர்மேனாகவும், டெய்லி பிளானட் ஊடகத்தில் நிருபராகவும் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் தொடங்குகிறது. அவர் தனது கிரிப்டோனிய பாரம்பரியத்தையும், மனித குடும்பத்தால் வளர்க்கப்பட்ட அனுபவத்தையும் சமநிலைப்படுத்த முயல்கிறார். இதற்கிடையில், தொழில்நுட்ப மேதையும், வந்தேறிகளை வெறுக்கும் லெக்ஸ் லூத்தர் (நிக்கோலஸ் ஹோல்ட்), சூப்பர்மேனை அழிக்கத் திட்டமிடுகிறார். அதேநேரத்தில் ஜஹ்ரான்பூர் மற்றும் போரேவியா நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முயலும் சூப்பர்மேன், லெக்ஸின் சதித்திட்டங்களால் பல சவால்களை எதிர்கொள்கிறார். இதில், லோயிஸ் லேன் (ரேச்சல் ப்ரோஸ்நஹான்), கிரிப்டோ (சூப்பர்மேனின் நாய்), மற்றும் மிஸ்டர் டெரிஃபிக், க்ரீன் லேன்டர்ன், ஹாக்கேர்ள் போன்ற பிற சூப்பர் ஹீரோக்கள் அவருக்கு உதவுகின்றனர். இறுதியில் லெக்ஸ் லூத்தரின் சதித்திட்டத்தை சூப்பர்மேன் முறியடித்தாரா என்பதே படத்தின் கதை. சூப்பர்மேன் விமர்சனம் ஜாக் ஸ்னைடரின் கனமான ‘விண்வெளி நாயகா விடியல் வீரா’ என்று புனிதத்தன்மை கொண்ட சூப்பர்மேனுக்கு குட்பை சொல்லிவிட்டு, கிறிஸ்டோபர் ரீவ் காலத்து ரெட்ரோ உடையணிந்த சூப்பர்மேனையும் தவிர்த்துவிட்டு, நிறைகுறைகளை கொண்ட அனைத்து மனித உணர்ச்சிகளும் இருக்கும் புது சூப்பர்மேனை வானில் பறக்கவிட்டிருக்கிறார் ஜேம்ஸ் கன். மனிதத்தன்மை மிக்க, ஆனால் சண்டை செய்யும் அனைவரும் விரும்பத்தக்க ஒரு சூப்பர்ஹீரோ என்பது நவீன காலத்திற்கு ஏற்றவாறு செய்யப்பட்ட மறுவரையறையாக அனைத்து தரப்பினரையும் ரசிக்கவைக்கிறது. அதில் நகைச்சுவை, சென்டிமென்ட், பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள், உலக அரசியல் ஆகியவற்றை இணைத்து பார்வையாளர்களை மகிழ்வித்திருக்கிறார். டேவிட் கோரன்ஸ்வெட், சூப்பர்மேனாக சாகசங்களில் இளமை தோற்றத்தையும், மனிதநேயம் பேசும் இடத்தில் உணர்ச்சிபூர்வமான ஆழத்தையும் வழங்குகிறார். குறிப்பாக, தனது கிரிப்டான் உலகத்து பெற்றோர்கள் மனிதகுலத்தைக் காப்பதற்காக அனுப்பவில்லை, மாறாக வளர்ந்தவுடன் பூமியில் இருப்பவர்களை அடிமையாக மாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தனர் என்பதை அறியும் இடத்தில், அடையாள நெருக்கடியை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது கிளார்க் கென்ட் கதாபாத்திரமும், அழகான மனிதநேயத்துடன் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரேச்சல் ப்ரோஸ்நஹான், லோயிஸ் லேனாக புத்திசாலித்தனமான பெண்ணாக கதைக்கு ஒரு முக்கிய பங்களிப்பை அளிக்கிறார். இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி அட்டகாசம்! குறிப்பாக, சூப்பர்மேனின் குறையை சுட்டிக்காட்டும் உரையாடலாக நகரும் அந்த நேர்காணல் காட்சியை சிறப்பாக கையாண்டுள்ளார். ஜஸ்டிஸ் கேங்காக வரும் நாதன் ஃபிலியன் (கிரீன் லேன்டர்ன்), எடி கதேகி (மிஸ்டர் டெரிஃபிக்), இசபெல்லா மெர்செட் (ஹாக்கேர்ள்) ஆகியோர் கூடுதல் போனஸ். Superman Review படம் எங்கெல்லாம் கொஞ்சம் ஓவர் சீரியஸாகச் செல்கிறதோ, அங்கெல்லாம் தாவி குதித்து வரும் கிரிப்டோ, சூப்பர்மேனின் விசுவாசமான நாயாக மட்டுமல்ல, நம் மனத்திலும் நகைச்சுவைக்கான வாலை ஆட்டிச் செல்கிறது. படத்திற்குத் தனித்துவமான நகைச்சுவையை கொடுத்துள்ள இந்த ஒற்றைக் காது மடங்கிய நாயின் விஷுவல் எஃபெக்ட்ஸ் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுகலகலது. சிறிது பிசகினாலும் பிளாஸ்டிக் ஆகக்கூடிய சவால்கள் இருந்தாலும், அதை லாகவமாகக் கையாண்டிருக்கிறார்கள். படத்தின் இதயமாக இருக்கக்கூடிய சூப்பர்மேனின் பறக்கும் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. ஜான் மர்ஃபியின் பின்னணி இசை, அந்த பிரமாண்ட தருணங்களை அடுத்தகட்டத்துக்கு உயர்த்துகிறது. இதற்கு நடுவே நாஸ்டால்ஜியைத் தூண்டும் ஜான் வில்லியம்ஸின் பழைய பின்னணி இசை கூடுதல் பிளஸ். படத்தின் ஆரம்ப சில நிமிடங்கள் சற்று மெதுவாகவும், உரையாடல் காட்சிகளால் நிரம்பியதாகவும் உள்ளன. இது முழுக்கமுழுக்க சாகச சண்டையை எதிர்பார்த்த ரசிகர்களின் பொறுமையை சோதிக்கலாம். ஆனால், அதற்குள் இருக்கும் காமெடி ஒன்லைனர்கள், புது சூப்பர்மேனின் அக உணர்வுகளைத் தெரிந்துகொள்வதற்கான உரையாடல்கள் சரியாக வேலை செய்வதால் குறையாகத் தெரியவில்லை. பூமியை அழிக்கத் துடிக்கும் வில்லன் என்ற பொதுவான நோக்கம் இல்லாமல், லெக்ஸ் லூத்தரின் கதாபாத்திரம், நிகழ்காலத்தில் கோமாளித்தனங்கள் செய்யும் டெக் முதலாளியையும், போரை ஆதரிக்கும் சர்வாதிகாரிகளையும் கேலி செய்திருப்பது சிறப்பான நகர்வு. இருவேறு உலகங்கள், பிளாக் ஹோல் போன்றவை சற்றே புரிந்துகொள்ள சிரமமாக இருந்தாலும், அங்கும் கிரிப்டோவின் காமெடி, வேற்றுகிரகவாசியின் மூலம் உணர்ச்சிகரமான காட்சிகள் வேலை செய்வதால் பெரிதாகப் பாதிப்பில்லை. பரபரப்பாக நகரும் படத்தின் இறுதி 20 நிமிடங்கள் விஷுவல் ட்ரீட். குட்டி கேமியோவாக வரும் சூப்பர்கேர்ள் வரும் காட்சியும் கலகல! Superman Review டிசி யூனிவர்ஸின் புதிய திசையை, சர்வாதிகாரத்துக்கு எதிராக நம்பிக்கையுடன் தொடங்கியிருக்கும் இந்த சூப்பர்மேன், நவீன கால அரசியல் பிரச்னைகளை பொழுதுபோக்காகவும் சுவாரஸ்யமாகவும் பேசி வெற்றிக்கொடியை வானில் ஏந்திப் பறக்கிறான்.

விகடன் 15 Jul 2025 6:35 pm

Network18 Reports ₹430 Cr Revenue in Q1FY26 Despite Tough Ad Market

Mumbai: Network18 Media & Investments Limited reported its financial results for the quarter ended June 30, 2025, showcasing resilience despite facing headwinds in the advertising market and an unfavourable year-on-year comparison base. The company’s News business posted operating revenue of ₹430 crore, marking a 5% decline compared to the same quarter last year. The dip was attributed to a high base in Q1FY25, which had benefitted from general election-linked advertising. Additionally, the advertising environment remained subdued due to ongoing weak consumer demand and a sports-heavy quarter that diverted advertising spends. The overall TV news industry witnessed a sharp decline in ad inventory consumption—over 20% year-on-year—underscoring the pressures on the segment. Despite these challenges, Network18 managed to deliver a relatively steady performance, driven by its strong operating position and market presence. Notably, when compared with Q1FY24—a quarter that similarly lacked any major election-related revenues—Network18’s revenue rose 9%, reflecting underlying growth momentum. To mitigate the impact of softer revenue, the company implemented effective cost controls, resulting in a 5% reduction in operating expenses year-on-year. This disciplined approach helped cushion the effect of external headwinds. Network18 continues to solidify its leadership in the media landscape, maintaining its position as the country’s largest TV news network and becoming the #1 digital news network by reach, with over 300 million monthly users across native and social platforms. The company’s focus on digital and subscription-led offerings—including the recent launch of CNBC-TV18 ACCESS, Moneycontrol Super Pro, and CNBC-TV18 Prime—positions it well for long-term value creation amid shifting market dynamics.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Jul 2025 6:34 pm

சற்று முன் உக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா!சர்வதேச அரசியலில் பரபரப்பு-பின்னணியில் ரஷ்யா போர்?

உக்ரைனின் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பது, அரசியல் உலகில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ரஷ்யா எதிர்கொள்ளும் போர் சூழ்நிலைக்கு மத்தியில், அவர் எடுத்த முடிவுகள் நாட்டு மக்கள் மனதில் பல்வேறு கேள்விகளை உருவாக்கியுள்ளன.

சமயம் 15 Jul 2025 6:30 pm

உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

உலகின் வயதான மாரத்தான் வீரரும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஃபௌஜா சிங் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற 114 வயதான ஃபௌஜா சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பீயாஸ் பிந்த் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தார். பலத்த காயமடைந்த ஃபௌஜா சிங்கை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் ஃபௌஜா சிங், சிகிச்சை […]

அதிரடி 15 Jul 2025 6:30 pm

LIC names R Doraiswamy as CEO & MD in New Governance Structure

Mumbai: Life Insurance Corporation of India (LIC) has appointed R Doraiswamy as its new Chief Executive Officer and Managing Director, marking a pivotal leadership transition under the corporation’s revamped governance structure. His appointment follows several months of interim leadership and aligns with the amended LIC Act, 2021, which merges the roles of CEO and MD into a single executive position to enhance accountability and decision-making.Doraiswamy, who joined LIC in 1986, brings with him 38 years of multifaceted experience spanning training, group plans, pensions, marketing, IT, and operations. Prior to this elevation, he served as Managing Director of LIC’s Southern Zone, where he was instrumental in driving operational excellence and regional growth.The Cabinet’s Appointments Committee approved his nomination based on the recommendation from the Financial Services Institutions Bureau (FSIB). Doraiswamy will serve a three-year term or until he reaches the age of 62 (August 28, 2028), whichever is earlier, as confirmed by the Department of Financial Services.A graduate in Mathematics from Madurai Kamaraj University and a Fellow of the Insurance Institute of India, Doraiswamy assumes leadership at a critical juncture for LIC, as the company continues to adjust to a post-IPO landscape, intensifying competition, and growing demands for transparency and shareholder value.His appointment represents a structural shift aimed at reinforcing LIC’s long-term vision, ensuring stability, strategic continuity, and leveraging deep domain expertise to steer the institution through its next phase of evolution.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Jul 2025 6:30 pm

LIC names R Doraiswamy as CEO & MD in New Governance Structure

Mumbai: Life Insurance Corporation of India (LIC) has appointed R Doraiswamy as its new Chief Executive Officer and Managing Director, marking a pivotal leadership transition under the corporation’s revamped governance structure. His appointment follows several months of interim leadership and aligns with the amended LIC Act, 2021, which merges the roles of CEO and MD into a single executive position to enhance accountability and decision-making.Doraiswamy, who joined LIC in 1986, brings with him 38 years of multifaceted experience spanning training, group plans, pensions, marketing, IT, and operations. Prior to this elevation, he served as Managing Director of LIC’s Southern Zone, where he was instrumental in driving operational excellence and regional growth.The Cabinet’s Appointments Committee approved his nomination based on the recommendation from the Financial Services Institutions Bureau (FSIB). Doraiswamy will serve a three-year term or until he reaches the age of 62 (August 28, 2028), whichever is earlier, as confirmed by the Department of Financial Services.A graduate in Mathematics from Madurai Kamaraj University and a Fellow of the Insurance Institute of India, Doraiswamy assumes leadership at a critical juncture for LIC, as the company continues to adjust to a post-IPO landscape, intensifying competition, and growing demands for transparency and shareholder value.His appointment represents a structural shift aimed at reinforcing LIC’s long-term vision, ensuring stability, strategic continuity, and leveraging deep domain expertise to steer the institution through its next phase of evolution.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Jul 2025 6:30 pm

நைஜீரியாவிடம் எண்ணெய் வாங்கும் சிறிலங்காவின் திட்டம் பிசுபிசுப்பு

நைஜீரியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் வெற்றியளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களைப் பெறுகின்ற முயற்சியாக, நைஜீரியா மற்றும் தெற்கு சூடான் போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆபிரிக்க நாடுகளின் அதிகாரிகளுக்கு சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், கடிதம் எழுதியது. இருப்பினும், நைஜீரியா மசகு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வாங்குவதற்கு, நைஜீரிய உற்பத்தியாளர்களுடன்

புதினப்பலகை 15 Jul 2025 6:17 pm

வேலையில்லா பட்டதாரி டு குடும்பஸ்தன்! - என் த்ரில் பயணம் | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் காலேஜ்  முடிஞ்சு  ஒரு  மாசம்  ஆகுது  இன்னும்  வேல  கெடைக்கலயான்னு  பாக்குறவங்க  எல்லாம்  கேக்க, கேக்கறவங்க  கேட்டுக்கிட்டு தான்  இருப்பாங்க  நாம  வேலையா தேடுவோம்னு  தேடிக்கிட்டே  இருக்க, உன் Resume குடு  நமக்கு  தெரிஞ்ச  கம்பெனி  இருக்கு, நான்  சேத்துவிடறேனு  ஒரு  நாலு  பேரு.  இவங்க  கிட்ட  இருந்து  தப்பிச்சா  போதும்னு  பெங்களூருல  ஒரு  startup  கம்பெனிக்கு  போனேன். மூணு  மாசம்  probation-period, மாசம்  9000 சம்பளம்,  அதுல  2500 வாடகை, அளவா சாப்பிட்டு  மிச்சம் புடிச்சா  மாசம்  1000 கைல  நிக்க, அதா  வீட்டுக்கு  அனுப்பி  நானும்  ஒரு  கம்பெனில  வேலைக்கு  போறேன்னு  பெருமிதம்  பட்டுக் கொண்டிருந்த  சமயம், அவ கால்  பண்ணுனா.  எப்போதும்  நான்  உன்ன  நெனச்சுக்கிட்டு  இருக்கேனு  சொல்லாம  சொல்ல  ஒரு  missed-call தன கொடுப்போம், ஏனென்றால்  STD வேற, ஒரு  நிமிடத்துக்கு  1.50 ரூபா  போய்டும். full-ring வருதே, அப்படி  என்ன  முக்கியமான  விஷயமா  இருக்கும்னு  ஆர்வத்தோட  கால்  எடுத்த, நம்ம  விஷயத்தை  எங்க  மாமா  கிட்ட  சொல்லிட்டேன், நீ  எங்க  மாமா  கிட்ட  பேசு  நான்  அவர்  நம்பர்  அனுப்புறேன் என்று சொன்னா. நாம  என்ன  பேசுறது, என்கிட்ட  பேச  என்ன  இருக்கு? சொந்தமா  வீடு  இல்ல, சொல்லும்படி  ஒரு  வேல  கூட  இல்ல. சரி  எப்படியும்  எல்லாரோட  கேள்விக்கும்  பதில்  சொல்லித்தானே   ஆகணும், அதை   இன்னைக்கு, அவ  மாமா கிட்ட  இருந்தே  ஆரம்பிப்போம்  அப்டினு  ஒரு  தைரியத்தை  வர  வச்சுக்கிட்டு, கால்  பண்ணுனேன். அவ  மாமா  அந்த  பக்கம்  ஹலோ  என்றார், இந்த  பக்கம்  நான், வார்த்தை  வரல.. எப்படி  ஆரம்பிக்க? திரு  திரு  வென  விழித்தேன்.   ஒரு  நொடி  மௌனத்திற்கு  பிறகு, நான்  என்று  ஆரம்பிக்க, சொல்லு  கண்ணு, நல்லா  இருக்கியா? நீ  கூப்பிடுவேன்னு  சொன்னா  கண்ணு, உன்  நம்பர் குடுத்தா. வீட்ல  எல்லாரும்  நல்லா  இருக்காங்களா? அப்டினு  ரொம்ப  எதார்த்தமாக  பேசினார்  அவளின்  மாமா.  இதை  நான்  எதிர்பார்க்கவே  இல்லையே. அவர் கேள்விக்கு  பதில்  அளித்துவிட்டு, நீங்க  எப்படி  இருக்கீங்க, அங்க  எல்லாம்  நலம் தானே  என்று  நான்  கேட்க, எல்லாவற்றிற்கும்  பொறுமையாக  பதில்  அளித்தார். கடிந்து  கொள்வார்னு  பார்த்தா  இவ்வளவு  அன்பா  பேசுறாரே  என்ற  ஆறுதல்  ஒரு  பக்கம்  இருக்க, நாம  எப்படி  விஷயத்தை  ஆரம்பிக்கிறது  என்று  முழித்துக்கொண்டிருக்க, அப்புறம்  வேற  என்ன  விஷயம்  கண்ணு  என்று  கேட்டார். இதற்கு  மேல்  யோசிக்க  எதுவும்  இல்லை  என்று  முடிவுடன், நான்  BE-Computer Science படித்திருக்கிறேன் , எங்களுக்கு  சொந்தமாக  வீடு, பூர்விக  சொத்து  என்று  ஏதும்  இல்லை, எனக்கு  தற்போது  சொல்லிக்கொள்ளும்  அளவிற்கு  ஒரு  நல்ல  வேலை  இல்லை, வேறு  நல்ல  வேலை  தேடிக்கொண்டு  இருக்கிறேன், சீக்கிரம்  கிடைத்துவிடும்  என்ற  நம்பிக்கை  இருக்கிறது  என்றேன். கண்டிப்பா  கிடைக்கும்  கண்ணு  என்றார். எனக்கு  அவள்  ஒரு  நல்ல  தோழி, எனக்கு  அவளை  மிகவும்  பிடித்திருக்கிறது, நான்  அவளை  திருமணம்   செய்துகொள்ள  விரும்புகிறேன்  என்று  கூறி  கண்ணை  இறுக்க  மூடிக்கொண்டேன். ரொம்ப   சந்தோஷம்  கண்ணு, இந்த  காசு, பணம், சொத்து  பத்து  எல்லாம்  இருந்த  மட்டும்  சந்தோசமா  வாழ  முடியாது, உங்கிட்ட  படிப்பு  இருக்கு, திறமை  இருக்கு, நம்பிக்கை  இருக்கு, அதோட  நல்ல  மனசு  இருக்கு. அவ  எனக்கு  மச்சினிச்சி  இல்ல, அவளும்  எனக்கு  ஒரு  மக  தான், நீ  இதே  தைரியமும்  நம்பிக்கையோடு  இரு  கண்ணு, எல்லாம்  நல்லதே  நடக்கும், சரியா. நல்லா  சாப்பிடு, உடம்ப  பாத்துக்கோ, நான்  வெச்சுறேன்  கண்ணு  என்று  கூறி  அழைப்பை  துண்டித்தார். ஒரு  மன நிம்மதியோடு  அவளுக்கு  ஒரு  missed-call கொடுத்தேன், பதிலுக்கு  அவளும்  ஒரு  missed-call கொடுத்தாள். சிறிது  காலம்  போக, அவள்  வேலை பார்க்கும்  அதே  கம்பெனியில்  எனக்கு  வேலை  கிடைத்தது, அப்பாடா  என  நிம்மதி  பெருமூச்சு  விட, என்  அப்பா  மாப்பிள்ளை  பார்க்க  ஆரம்பிச்சுட்டார்  என்றாள். இது  என்னடா  விதி  கேப்  விடாம  அடிக்குது  என்று  எண்ணிக்கொண்டு, உன்  மாமா  என்ன  சொன்னார்  என்று  கேட்டேன். நீ  உங்க  வீட்ல  சொல்லிட்டா, நாம  எல்லாம்  சேர்ந்து  பேசி  ஒரு  நல்ல  முடிவு  எடுக்கலாம்  சொன்னார். அப்போ  அடுத்த  சீன  என்  வீட்லயா, சரி  நான்  பேசிட்டு  சொல்றேன்  என  கூறினேன். பசங்க  என்றாலே  அம்மா  தான்  translator to அப்பா ,  அதனால  அம்மா  கிட்ட  இருந்து  ஆரம்பிப்போம்  என்று  எண்ணி , என்  அம்மாவிடம்  கூறினேன். என்  அம்மா, என்  அப்பாவிடம்  கூற, அண்ணன் இருக்கும்  பொது  இப்போ  இவனுக்கு  என்ன  அவசரம்  என்று  கேட்டார். ஏன் தான்  இந்த  அண்ணனுக  எல்லாம்  காலகாலத்துல  கல்யாணம்  பண்ணாம  நமக்கு  பிரச்சனையாகவே  இருக்கானுகளோ, இதுக்கு மேல  இவனை  சும்மா  விட்டு வைக்க  கூடாது  என்று  மனதுக்குள்  கூறிக்கொண்டு, எனக்கு  ஒன்னும்  அவசரம்  இல்லப்பா, அவனுக்கு  ஒரு  வரன்  பார்ப்போம்னு  சொல்ல  வந்தேன்  என்றேன். அவன்  இப்போ, கல்யாணம்  வேண்டாம், இன்னும்  கொஞ்ச  நாள்  போகட்டும்ங்கறான், என்றார். அவன்  அப்படி  தான்  சொல்லுவான், நாம  தான்  சொல்லி  புரிய வைக்கணும், இப்போ  பாக்க  ஆரம்பிச்ச  தான்  அடுத்த  ஒரு  வருஷத்திலயாவது  முடியும்  என்றேன். தரகர் கிட்ட  சொல்லி  வச்சிருக்கு  நல்ல  வரன்  ஏதா  வந்தா  பார்க்கலாம்  என்றார். தரகர்  ஒரு  பக்கம்  பாக்கட்டும், இப்போ  எல்லாம்  மேட்ரிமோனி  தளங்கள்   நிறைய  இருக்கு, அதுலயும்  பாப்போம்  என்றேன். அதுக்கு  காசு  கட்ட வேண்டாமா  என்றார். முதல்ல  பாக்கலாம், ஏதா  ஒத்து வந்தா  அப்புறம்  காசு  கட்டிக்கலாம்  என்றேன். அப்போ  அவன்  போட்டோவ  போட்டு  விடு  என்றார். கவலைய  விடுங்க, எல்லாம்  நான்  பாத்துக்கறேன், இவனுக்கு  கல்யாணத்த  பண்ணிப்புட்டு  தான்  நான்  தூங்குவேன்  என்று  மனதில்  நினைத்துக்கொண்டு  உடனே  என்  அண்ணனுக்கு  ஒரு  profile தொடங்கினேன். சில  மாதங்கள்  கழிந்தன, ஜாதகம்  பொருந்திய படி  ஒரு  வரணும்  வந்தது. அப்புறம்  என்ன  பேசி  முடிச்சிடுங்க  என்றேன். உனக்கு  clear ஆகணும்னு   என்ன  முடிச்சுப்போட்டியேடா  என்றபடி  பார்த்தான்  என்  அண்ணன் . நாங்க  பண்றது  எல்லாம்  உன்  நன்மைக்கு  தான், அது  இப்போ  உனக்கு  புரியாது  என்ற  படி, அவன்  திருமணத்தை  நடத்தி  முடித்தோம். அடுத்த  ஆறு  மாதத்தில்  எங்களது  திருமணமும்  நிச்சயிக்க  பட்டது. நேரம்  குறைவு, இருப்பு  தொகை  அனைத்தும்  அண்ணன்  திருமணத்திற்கு  செலவாகி  விட்டது  என்ன  செய்வது  என்று  என்  பெற்றோர்  யோசிக்க, அதுக்கு  என்ன  ஒரு  personal loan போட்டுக்கலாம், எவ்வளவு  வேணும்னு  சொல்லுங்க  என்றேன். ஏற்கனவே  housing loan போகுது  இதுல  personal loan வேறயா  என்றார்  என்  தந்தை.  சில  வருடங்கள்  முன், நம்மிடம்  ஏதும்  இல்லை, இப்போது  ஒரு  சொந்த  வீடு  இருக்கிறது, எனக்கும்  அண்ணனுக்கும்  நல்ல  வேலை  இருக்கிறது, எல்லாம்  பாத்துக்கலாம், கவலையை  விடுங்கள்  என்றேன்.  அவள்  வீட்டிலும்  இதே  நிலை  தான், அவளுக்கும்  இதே  ஆலோசனை  தான், personal loan. ஆறு  மாதங்கள்  கழிந்தன, எங்கள்  திருமணம் இனிதே நடந்து முடிந்தது , வாழ்க்கை Housing  loan , personal loan  ஓடு ஆரம்பித்தது.   பதின்மூன்று வருடங்கள் கடந்து விட்டோம் , எங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு, ஆசையும் அன்பும் நிறைந்த எங்கள் மகள், வாழ்க்கையை வழிநடத்த துணை நிற்கும் எங்கள் பெற்றோர் என்று வாழ்க்கை அழகாக சென்று கொண்டு இருக்கிறது.

விகடன் 15 Jul 2025 6:12 pm

கண்ணீர் மழையில் மண்ணில் மறைந்த சரோஜா தேவி.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி நேற்று வயது மூப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். சரோஜா தேவியின் மறைவு திரையுலகத்தையும், அவரது ரசிகர்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தற்போது, நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி, நடிகை சரோஜா தேவியின் […]

டினேசுவடு 15 Jul 2025 6:12 pm

தமிழ்நாடு அரசின் கிரைண்டர் மானியத் திட்டம்!

பெண்கள் சொந்த தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக, உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க ரூ.5,000 மானியம் வழங்கும் தமிழக அரசின் கிரைண்டர் மானியத் திட்டம் (Grinder Subsidy Scheme) குறித்த தகவல்களை இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 15 Jul 2025 6:10 pm

சிறகடிக்க ஆசை சீரியலில் யாருக்கு எவ்வளவு சம்பளம்.. அதிகமாக சம்பளம் வாங்குபவர் இவரா.?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் லீட் ரோலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த தொடர் தற்போது முத்து - மீனா பிரிவு, அருண் - சீதா திருமணம் என விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் யாருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

சமயம் 15 Jul 2025 6:07 pm

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்தது!

மின்சார வாகன உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தனது

ஆந்தைரேபோர்ட்டர் 15 Jul 2025 6:01 pm

DriveX appoints Pulkit Gupta as Senior Vice President – Sales

Bangalore: DriveX Mobility has announced the appointment of Pulkit Gupta as Senior Vice President – Sales, marking a key leadership addition as the company gears up for rapid retail expansion across India through its COCO (Company-Owned Company-Operated) and FOFO (Franchise-Owned Franchise-Operated) models.A seasoned automotive sales professional with nearly two decades of experience, Pulkit has held leadership roles at Apollo Tyres, Honda, Mercedes-Benz, Ford, Skoda, Ather Energy, and Revolt Motors. He brings a strong track record of building high-performance sales teams, expanding robust dealer ecosystems, and delivering sustainable business growth across mass-market, premium, and EV segments in India.At Ather Energy, Pulkit was instrumental in setting up and scaling the company’s sales operations and expanding its national network footprint. At Revolt Motors, he led national sales and dealer growth initiatives, played a pivotal role in market penetration, and also launched overseas operations in Sri Lanka and Nepal. “DriveX is creating something really meaningful, making quality, affordable mobility accessible to millions. Being able to be part of making that happen is an exciting opportunity. My focus will be on building a future-ready sales ecosystem that can scale fast, perform consistently, and be rooted in trust—both with customers and dealers. We are not running for numbers; we are creating something enduring,” said Pulkit Gupta, SVP – Sales, DriveX. In his new role, Pulkit will lead the company’s sales transformation efforts, including dealer network expansion, team capability development, market penetration, and strategic partnerships, while reinforcing DriveX’s core values of transparency, accessibility, and trust. Narain Karthikeyan, Founder & Director, DriveX, commented, “Pulkit brings deep industry experience and a proven ability to scale trust-led dealer networks. His leadership will be key as we expand our retail footprint and deliver a stronger, more connected customer experience across India.” Pulkit holds a B.Tech in Electrical Engineering and an MBA in Marketing, and is widely respected for his empathetic leadership style, strategic foresight, and ability to build and lead agile teams.His appointment comes at a pivotal moment for DriveX, as the company strengthens its leadership team to support its next phase of expansion and reinforce its position as a trusted enabler of affordable, high-quality mobility for millions.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Jul 2025 6:01 pm

TENDERCUTS GETS RECOGNISED FOR ITS ‘EXCEPTIONAL EMPLOYEE EXPERIENCE’

TenderCuts, India’s first omnichannel meat and seafood brand, has been awarded the ET HR World Employee Experience Award 2025 for

சென்னைஓன்லைனி 15 Jul 2025 5:55 pm

MGM Healthcare Launches ‘Namma Health’ Card and Free Ambulance Service on Its Sixth Anniversary

Celebrating six years of compassionate care and medical excellence, MGM Healthcare has launched‘Namma Health’ Card, a comprehensive health card packed

சென்னைஓன்லைனி 15 Jul 2025 5:54 pm

Amagi appoints Sangeeta Chakraborty as Chief Revenue Officer

Mumbai: Amagi has announced the appointment of Sangeeta Chakraborty as its Chief Revenue Officer (CRO). In her new role, Sangeeta will spearhead all global go-to-market functions, including sales, customer success, marketing, services, and operations—driving Amagi’s next phase of growth and deepening customer impact across global markets.With over two decades of enterprise software leadership experience, Sangeeta has led and scaled high-performing revenue and customer organizations across both product-led and sales-led growth models. Her track record includes pivotal roles at companies such as Miro, Okta, Checkr, SymphonyAI, Accela, and VMware.During her tenure at Miro, she served as Chief Customer Officer (2021–2023) and later as Chief Revenue Officer (2023–2024), overseeing the company’s expansion to more than 250,000 global customers and 80+ million users. Under her leadership, Miro was valued at $17.5 billion and ranked #11 on the Forbes Cloud 100 list. “Joining Amagi at this juncture is incredibly exciting. The media industry is undergoing a profound transformation, and Amagi stands at the forefront with its cloud technology innovation that is purpose-built for today’s video economy. From live production to monetization, Amagi is powering critical workflows for the world’s top media brands. I look forward to working with our global teams and customers to unlock new growth opportunities, strengthen our market leadership, and deliver measurable value through innovation, scale, and trust,” said Sangeeta Chakraborty, Chief Revenue Officer, Amagi. A strategic thinker and frequent industry speaker, Sangeeta brings deep domain knowledge in SaaS and AI across sectors such as financial services, healthcare, government tech, and telecom. She holds an MBA from the Haas School of Business, UC Berkeley, and a B.Tech. in Computer Science from NIT Warangal. She will be based in the San Francisco Bay Area. Srinivasan KA, Co-founder and President – Global Business at Amagi, said, “Media companies around the world are accelerating their shift to cloud-native, AI-powered infrastructure. Sangeeta brings the leadership and customer-first mindset that will help us lead the next chapter of our global expansion and market leadership.” Amagi currently powers over 7,000 channel deliveries and 28 billion ad impressions globally, continuing its trajectory as a trusted partner for the world’s leading media brands.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Jul 2025 5:52 pm

சிங்கப்பூர் VS பெங்களூரு: ஸ்ரீதர் வேம்பு போட்ட எக்ஸ் பதிவு! என்ன சொன்னார் தெரியுமா?

பெங்களூரு சுரங்க சாலை திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு போட்ட எக்ஸ் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது. போக்குவரத்து இயக்கத்தை குறைக்க சிங்கப்பூர் மாதிரி இந்தியாவை மாற்ற முடியும் என்று கூறுகிறார்.

சமயம் 15 Jul 2025 5:39 pm

”என் உயிருக்கு ஆபத்து”–தவெகவின் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்!!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகப் புகார் அளித்துள்ளார். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்து வருவதால், விசாரணை நடத்த கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா அளித்துள்ள புகாரின்படி, ‘திமுக கொடி பொருத்தப்பட்ட காரில் மர்ம நபர்கள் தன்னைத் தொடர்ந்து நோட்டமிட்டதாகவும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்” அவர் […]

டினேசுவடு 15 Jul 2025 5:37 pm

சிலம்பரசன்: 10 நாளில் 10 கிலோ எடை குறைப்பா? வெற்றிமாறன் கூட்டணி அமைந்தது எப்படி? - STR 49 அப்டேட்ஸ்

கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்.டி.ஆர்.-49' படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில் 10 கிலோ வரை எடையை குறைந்திருக்கிறார். அப்படி ஒரு அசூர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் ஆனார்.. மீண்டும் 'வெந்து தணிந்தது காடு'வில் பார்த்த சிலம்பரசனை காண முடியும்' என்றெல்லாம் தகவல்கள் பரவியுள்ளது. இது குறித்து சிலம்பரசனின் வட்டாரத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. வெற்றிமாறன் அதற்கு முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் வந்தது எப்படி என பார்க்கலாம். அதாவது இந்த படம் தொடங்குவதற்ௐகு முன்னர், தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'வாடி வாசல்' படம் உருவாகவிருந்தது. ஆனால், அந்த படத்தின் முன்தயாரிப்பு வேலைகளுக்காக் கால அவகாசம் தேவைப்பட்டதால், உடனடியாக அதை தொடங்கும் திட்டத்தை கைவிட்டனர். ஆகையால் தாணுவிற்கு வெற்றிமாறனும், சூர்யாவும் தனித்தனியாக படம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர். இந்நிலையில் தாணுவிடம் சிலம்பரசனின் கால்ஷீட் இருந்தது. அதே சமயம் சிம்புவிற்கும் 'பார்க்கிங்' இயக்குநர் ராம்குமாரின் இயக்கத்தில் நடிக்கும் படம் தொடங்குவதற்கான சூழல் தள்ளிப்போனது. இந்த நிலையில் 'சிலம்பரசனுடன் ஒரு படம் செய்யலாமா? உங்களுக்கு சம்மதமா, தம்பியிடம் கேட்கலமா? என வெற்றிமாறனிடம் தாணு கேட்டிருக்கிறார். இதற்கு உடனே ஓகே சொன்னார் வெற்றிமாறன். அதை போல, இதே கேள்வியை சிலம்பரசனிடமும் முன் வைத்தார் தாணு. 'வெற்றிசார் டைரக்‌ஷனில் நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்குது. எப்போ ஷூட்டிங்னு சொல்லுங்க. என சிம்புவும் ரெடியானார். இப்படித்தான் ஆரம்பமாகியிருக்கிறது வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'எஸ்.டி.ஆர்.49. சிம்பு இந்த படத்தில் சிலம்பரசன் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். அதில் ஒன்று இளமையான சிம்பு. ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் இவர்களுடன் இயக்குநர் நெல்சன் என பலரும் நடிக்கின்றனர். படத்தின் நாயகிகள், பரிசீலனையில் உள்ளனர். இந்நிலையில் தான் சிலம்பரசன் 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்திருக்கிறார் என்ற செய்தி பரவியுள்ளது. இந்த செய்தியில் உண்மை இல்லை. படத்தில் இளமையான தோற்றத்தில் சிலம்பரசன் வருகிறார். இதற்காக அவரிடம் உடல் எடையையை குறிக்க சொல்லியிருக்கின்றனர். ஆகையால் உடல் எடையை குறைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார் சிலம்பரசன். 10 கிலோ வரை குறைத்துவிட வேண்டும் என அவர் டார்க்கெட் வைத்து ஒர்க் அவுட்களை செய்து வருவதாக தகவல். 'எஸ்.டி.ஆர். 49'க்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. செட் ஒர்க்குகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் புரொமோ வீடியோ வெளியாகும் என்றும் சொல்கின்றனர்.

விகடன் 15 Jul 2025 5:36 pm

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? தமிழக அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன?

தமிழ்நாடு புதிய டிஜிபியை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. ஆகஸ்ட் மாதம் சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெறும் நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமயம் 15 Jul 2025 5:32 pm

தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை: மகள் இல்லாமல் தன்னாலும் வாழ முடியாது என தாய் எடுத்த விபரீத முடிவு

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே நாககொண்டனஹள்ளியில் வசித்து வந்தவர் ரஜிதா ரெட்டி (வயது 58). இவரது மகள் ஸ்ரீஜா ரெட்டி (24). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ரஜிதாவின் கணவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். நேற்று காலையில் அவர் வேலைக்கு சென்று விட்டார். தாயும், மகளும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு ஸ்ரீஜா தற்கொலை செய்துகொண்டார். சமையல் செய்துவிட்டு படுக்கை அறைக்கு சென்ற ரஜிதா […]

அதிரடி 15 Jul 2025 5:30 pm

Hindustan Coca-Cola Beverages appoints Hemant Rupani as new CEO

Mumbai: Hindustan Coca-Cola Beverages Pvt. Ltd. (HCCB), the bottling arm of The Coca-Cola Company in India, has announced the appointment of Hemant Rupani as its new Chief Executive Officer, effective September 8, 2025.The announcement was made by The Coca-Cola Company, confirming that Rupani will succeed Juan Pablo Rodriguez, who will be moving to a new opportunity within the Coca-Cola system. Rupani will report directly to the HCCB Board of Directors. Hemant is a highly accomplished business leader who has delivered impressive results and driven commercial success over his career. He brings a strong blend of experience in both Indian and multinational organizations. HCCB looks forward to him helping deliver on the bottler’s considerable investment in India,” the company said in a statement.Rupani joins HCCB following a nine-year stint at Mondelez International Inc., where he most recently served as Business Unit President for Southeast Asia, overseeing key markets including Indonesia, the Philippines, Vietnam, Malaysia, Singapore, and Thailand. He previously served as Vice President and Managing Director for Vietnam and earlier as Director of Sales for India.A veteran of India’s FMCG and telecom sectors, Rupani began his career in 1997 with ICI India Limited before holding leadership roles at PepsiCo, Infosys Technologies, Vodafone, and Britannia Industries. His extensive experience spans sales, marketing, and business operations across diverse sectors.Rupani is a graduate in Mechanical Engineering from Regional Engineering College, Jaipur, and holds an MBA in Marketing from the Faculty of Management Studies (FMS), University of Delhi.HCCB is India’s largest Coca-Cola bottler and a key growth engine for the company. In a significant strategic development, The Coca-Cola Company in December 2024 announced an agreement for Jubilant Bhartia Group to acquire a 40% stake in Hindustan Coca-Cola Holdings Pvt. Ltd., HCCB’s parent entity, underscoring renewed focus on the India market.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Jul 2025 5:28 pm

இந்திய ராணுவம் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன்!

பாரத் ஜோடா யாத்திரையின் போது, இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சமயம் 15 Jul 2025 5:16 pm

கருணாநிதி சிலை கருப்பு பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு : கலவர நோக்கம் உள்ளதா? வலுக்கும் கண்டனம்!

சேலத்தில் கருணாநிதி சிலை கருப்பு பெயிண்ட் ஊற்றி அவமதிக்கப்பட்ட நிலையில், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.

சமயம் 15 Jul 2025 5:14 pm

`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று, `காலை உணவு திட்டத்தில்’ உணவு சமைப்பதற்காக பள்ளி சமையலர்கள் வந்துள்ளனர். சமையலறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மளிகை பொருட்கள், பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர்கள், தலைமை ஆசிரியர் பொறுப்பு, அந்த ஊராட்சியை சேர்ந்த சிலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு அதிகாரிகள் மற்றும் காவல் துறை வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியின் பைப் உடைக்கப்பட்டிருத்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் ஏறி பார்த்துள்ளார். தண்ணீர் டேங்கினுள், உரிக்காத சில தேங்காய் கிடந்தன. ஒரு பகுதியில் மலம் மிதந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் போலீஸிடம் சொல்லியுள்ளார். பின்னர் தண்ணீருக்குள் கிடப்பது மலம் தான் என்பதை உறுதி செய்தனர். இந்த விவகாரம் தீயாய் பரவியது. குழந்தைகள் குடிக்கிற தண்ணீரில் மலம் கலந்தவர்கள் மிருகத்தனமும், அரக்க மனமும் கொண்டவர்கள் என கொந்தளித்தனர். முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பேசு பொருளாகவும் மாறியது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மலம்; மது போதையில் அட்டூழியம்.. 4 பேரிடம் விசாரணை இந்த சூழலில், காரியாக்குடி கிராமத்திற்கு சென்று சிலரிடம் பேசினோம், `தினமும் காலை உணவு சாப்பிட்ட பிறகு இந்த தண்ணியை தான் பிள்ளைகள் குடிப்பார்கள். ஞாயிறு மாலை சுமார் 5 பேர் பள்ளிக்குள் சென்றுள்ளனர். பின்னர், மது குடித்து விட்டு சாப்பிட்டவர்கள் பொருள்களை சேதப்படுத்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர்கள் தண்ணீர் டேங்கில் மலத்தை போடு சென்றுள்ளனர். சமையலறையில் இருந்த அரிசி மற்றும் அண்டாவை தூக்கிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக திருவாரூர் டவுன் டி.எஸ்.பி அலுவலகத்தில் வேலை பார்க்கும் போலீஸ் ஒருவரின் இரு சகோதரர்கள் விஜயராஜ், விமல்ராஜ், செந்தில், காளிதாஸ், ஆனந்த்பாபு ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். நேற்று இரவு பத்து மணிக்கு பிறகு போலீஸ் அவர்களை விட்டு விட்டது. பின்னர் இன்று காலை மீண்டும் வரச் சொல்லி விசாரித்து வருகின்றனர். முதலில், `நாங்கள் சாப்பிட்டோம். ஆனால் மலம் கலக்கவில்லை’ என்றவர்கள் தற்போது முற்றிலுமாக மறுத்து வருகிறார்களாம். அஜித்குமார் லாக்கப் டெத் சர்ச்சையானதால் போலீஸார் விசாரணையில் மென்மை காட்டி வருவதாக சொல்கிறார்கள். இந்த கொடிய செயலை செய்தவர்களை கண்டு பிடிக்க வேண்டும், எதற்காக செய்தார்கள் என்கிற உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்” என்றனர். பள்ளிக்குள் விசிட் அடித்தோம், ``பள்ளி முன்பு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மலம் கலக்கப்பட்ட டேங்கை அகற்றி ஓரமாக வைத்து விட்டு புதிய டேங்கை மாடியில் வைத்துள்ளனர். யார் பள்ளி அருகில் வந்தாலும் போலீஸார் விபரம் கேட்டு விட்டுதான் உள்ளே அனுப்புகின்றனர். நானும், புகைப்படக்காரரும் பள்ளிக்குள் போட்டோ எடுத்து கொண்டிருந்தோம். ஓடி வந்த ஒரு போலீஸ் சார், இந்த விவகாரம் முடியப்போகுது, டாய்லெட் மோசமாக இருக்கு அதையெல்லாம் எடுக்காதீங்க என்றார். அதற்குள் உள்ளே வந்த டி.எஸ்.பி மணிகண்டன், தலைமை ஆசிரியரை அழைத்து யாரையும் உள்ளே அனுமதிக்காதீர் என கண்டிப்பு காட்டினார். ஊர் காரர்களிடம் யாராக இருந்தாலும் போலீஸுக்கு தகவல் தெரித்த பிறகு தான் அனுமதிக்க வேண்டும் என்றார். மேலிருந்து இறக்கி வைக்கப்பட்ட பழைய தொட்டி இதற்கிடையே காமராஜர் பிறந்தநாள் விழாவிற்காக அப்பள்ளியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாணவர்களுக்கு நோட், பேனா கொடுக்க வந்தனர். அவர்களிடம் கடுப்பான டி.எஸ்.பி திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஒரு பள்ளி தான் உள்ளதா, வேறு பள்ளியில் போய் கொடுங்கள் என்றார். உடனே த.வெ.க நிர்வாகிகள், `தலைமையிலிருந்து என்ன நடக்கிறது என பார்க்க சொன்னார்கள்’ என சொல்ல, `என் பிள்ளையும் இங்கு படிப்பதாக நினைத்து விசாரித்து வருகிறோம் கிளம்புங்கள்; என சொல்ல த.வெ.கவினரும் கிளம்பி விட்டனர். புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி இதையடுத்து நாம் தமிழர் கட்சியினரும் வந்தனர். யாரையும் பள்ளி முன்பு போலீஸ் அனுமதிக்கவில்லை. போலீஸை கேட்காமல் பள்ளி கேட்டை திறக்க கூடாது என தலைமை ஆசிரியருக்கு போலீஸ் அறிவுறுத்தினர். இதற்கிடையே அமைச்சர் அன்பில் மகேஸ், மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் இதை தவிர்த்து விட்டதாக சொல்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுபவர்கள் தான் இதை செய்தனர் என முதலில் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது விசாரணை முடிவில் தான் தெரிய வரும் என சுணக்கம் காடுகின்றனர். தண்ணீர் டேங்கை மாற்றிவிட்டால் பிரச்னை முடிந்து விட்டதாக நினைக்க கூடாது. மிருகத்தனத்துடன் இதை செய்தவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என காரியாங்குடி மக்கள் தெரிவித்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

விகடன் 15 Jul 2025 5:02 pm

பேருந்து ஓட்டுநர் ஆக வேண்டுமா? பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் தமிழக அரசு

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியை வழங்க தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமயம் 15 Jul 2025 5:00 pm

BIG FM’s ‘BIG PRIDENTITY’ Returns with Season 3 to Amplify LGBTQIA+ Voices

Mumbai: BIG FM is back with the third season of its acclaimed show ‘BIG PRIDEntity’, as it continues to advocate the significance of gender diversity and inclusivity. With this season, the show further aims to normalise identities and foster a more accepting society through deeper, unapologetic narratives that are bold, real and impossible to ignore. Featuring 20 episodes, airing on BIG FM and its digital platforms, the show strives to build awareness, challenge biases and drive a cultural shift through profound conversations.BIG PRIDEntity Season 3 is once again helmed by RJ Rani who has anchored the show since its inception. At a time where conversations around queer identity are often limited to extremes – either ignored or overdramatized - RJ Rani leads the way, crafting a space where everyone is acknowledged, respected and celebrated for who they are. She speaks to the guests about their life journeys, the challenges they faced, their family and social support, moments of acceptance or resistance, and everything in between. Season 3 features a diverse set of voices from the LGBTQIA+ such as Sushant Divgikar, Rohit Verma, Aishwarya Rituparna Pradhan, Ella D’ Verma, Paras Tomar, Daman Choudharry and Nayandeep Rakshit amongst others. Together, their voices form a powerful narrative that is deeply personal, thought-provoking and reflective of the community’s lived realities.[caption id=attachment_2465182 align=alignleft width=370] Sunil Kumaran[/caption]Speaking about the third season, Sunil Kumaran, COO, BIG FM, said, “At BIG FM, our core philosophy of Dhun Badal Ke Toh Dekho encourages us to lead with purpose and intent. With BIG PRIDEntity Season 3, we are not just celebrating the LGBTQIA+ community; but also creating a platform for authentic, inclusive conversations that challenge societal perceptions and help normalize gender diversity. This season is all about amplifying powerful voices and stories that provoke thought and inspire a meaningful change.” BIG FM has collaborated with Tiger Baby, a film studio founded by Zoya Akhtar and Reema Kagti, for In Transit, a deeply moving documentary series directed by Ayesha Sood, now streaming on Amazon Prime Video. At its heart, this collaboration is about listening to stories that are too often left out and to voices that deserve to be heard. In the weeks ahead, BIG FM’s RJs will be in conversation with guests from In Transit - Patruni Chidananda Sastry, Aryan Somaiya, Saher Naaz, Madhuri Sarode, Rie Raut and more, who open up about their lives, struggles and triumphs as transgender and non-binary individuals in India. This series reflects the studio’s commitment to blending cinematic vision with lived experiences, crafting stories that are emotionally resonant, socially relevant and rooted in cultural complexity.BIG FM has also launched a new anthem for BIG PRIDEntity Season 3, capturing the spirit of the show and reinforcing its message of identity, acceptance and pride. The initiative continues its AAMA (Anonymously Ask Me Anything) segment, introduced last season, allowing listeners to anonymously pose questions that guests respond to on air, keeping the tone honest and interactive. The campaign extends its reach across radio, digital platforms and on-ground activations, fostering meaningful, everyday dialogue that moves beyond token gestures and towards true acceptance. The show continues to evolve as a platform that provides a voice to the lived realities of the LGBTQIA+ community by encouraging listeners to rethink what truly defines identity.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Jul 2025 4:57 pm

தங்கம், கச்சா எண்ணெயைப் போல, மின்சாரத்தையும் இனி வர்த்தகம் செய்யலாம்; NSE-ன் புதிய வெளியீடு

நேஷனல் ஸ்டாக் எக்ஸேஞ்ச் ஆஃப் இந்தியா (NSE) தற்போது புதிதாக எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸை அறிமுகப்படுத்தி உள்ளது. 'என்னது எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸா... எலக்ட்ரிசிட்டியை வாங்குவது... விற்பதுவா?' என்கிற கேள்வி எழுகிறது தானே. ஆம்... எலக்ட்ரிசிட்டியை வாங்குவது, விற்பது தான் எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸ் என்கிறார்கள். ஃபியூச்சர்ஸில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயை எப்படி வாங்கி, விற்கிறோமோ, அதே போல தான் இதுவும் என்று கூறப்படுகிறது. பங்குச்சந்தை நிபுணர் சொக்கலிங்கம் 'இப்போதும் புரியவில்லை...!' என்பது உங்கள் மைண்ட் வாய்ஸ் என்றால், இதை தெள்ள தெளிவாக விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் சொக்கலிங்கம். 'இது இந்தியாவிற்கு புதிது அல்ல. IEX-ல் ஏற்கனவே இருந்தது தான். ஆனால், மோனோபோலியாக இருந்தது. தற்போது, பி.எஸ்.இ, என்.எஸ்.இ-யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பலர் வணிகம் செய்யப்போகிறார்கள். முன்பே, பி.எஸ்.ஐயில் தொடங்கப்பட்டது. லேட்டஸ்டாக, என்.எஸ்.இ-யிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Electricity Futures என்றால் என்ன? எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸ் என்றால் இதுவும் ஒரு வகை பங்குச்சந்தை போன்றது தான். பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி, விற்பதுபோல, இதில் மின்சாரத்தை வாங்குவது, விற்பது ஆகும். இந்த இடத்தில் பெயரை உன்னிப்பாகக் கவனியுங்கள் எலக்ட்ரிசிட்டி 'ஃபியூச்சர்ஸ்'. ஃபியூச்சர்ஸ் என்றதுமே எதிர்காலம் என்று கண்டுபிடித்திருப்பீர்கள். அதாவது, எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே கவனித்து, அப்போதைய தேவைகளுக்காக இப்போது மின்சாரத்தை வாங்கி, விற்பது தான் எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸ். எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸ் | Electricity Futures உதாரணம் உதாரணத்திற்கு, 'ஏ' என்கிற மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் வெயில் வாட்டி எடுக்கப்போகிறது என்றும், 'பி' என்கிற மாநிலத்தில் அந்த மாதம் மழை வெளுத்துக்கட்ட போகிறது என்றும் கணிக்கப்படுகிறது. அப்போது, 'ஏ' மாநிலத்திற்கு மின்சாரம் அதிகம் தேவைப்படும். 'பி' மாநிலத்திற்கு மின்சாரம் அவ்வளவாக தேவைப்படாது. அதனால், 'ஏ' மாநிலம் 'பி' மாநிலத்திடம் இருந்து இப்போதே மின்சாரம் வாங்கி வைக்கும். இப்போது ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.6 என்றால், ஃபியூச்சர்ஸில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.6.20 ஆக விற்பனை ஆகும். ஆக, தேவையான அளவு மின்சாரத்தை 'ஏ', 'பி'யிடம் காசு கொடுத்து இப்போதே வாங்கி வைத்துகொள்ளும். இதன் மூலம், 'பி' ஓரளவு வருமானம் சம்பாதிக்கும். 'ஏ' இப்போது விட்டுவிட்டால், ஆகஸ்ட் மாதத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8-க்கு கூட விற்பனை ஆகலாம். அதனால், இப்போதே வாங்கும்போது, அதற்கும் லாபம் தான். யார் யார் வர்த்தகம் செய்ய முடியும்? எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸை வணிகத்தில் அனைவராலும் ஈடுபட முடியாது. மின்சாரம் உற்பத்தியாளர்கள் மற்றும் மின்சாரம் நுகர்வோர் மட்டுமே இதில் வணிகம் செய்ய முடியும்.

விகடன் 15 Jul 2025 4:56 pm

9600% லாபம்.. லட்சாதிபதிகளை கோடீஸ்வரர்களாக மாற்றிய மல்டிபேக்கர் பங்கு!

இந்த மல்டிபேக்கர் பங்கு குறுகிய காலத்திலேயே தனது முதலீட்டாளர்களை கோடீஸ்வரரகளாக மாற்றியுள்ளது. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

சமயம் 15 Jul 2025 4:54 pm

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் 114 வயதில் விபத்தில் இறந்தார்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரராக நம்பப்படும் பிரிட்டிஷ்-இந்தியரான ஃபௌஜா சிங், 114 வயதில் இந்தியாவில் மகிழுந்து மோதி உயிரிழந்தார். பஞ்சாபில் தான் பிறந்த கிராமத்தில் சிங் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர்வாசிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அங்கு அவர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்தார். தனது பிறந்த கிராமமான பியாஸ் பிண்டில் திங்கட்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்தது. உலகளாவிய அடையாளமான சிங், 100 வயதுக்கு மேற்பட்டவர் உட்பட பல வயது பிரிவுகளில் மாரத்தான் ஓட்டங்களை நடத்தி சாதனை படைத்தார். அவர் 89 வயதில் ஓடத் தொடங்கினார் மற்றும் ஓய்வு பெற்ற 2000 மற்றும் 2013 க்கு இடையில் ஒன்பது முழு மாரத்தான் ஓட்டங்களை ஓடினார். அவரது ஓட்டப்பந்தய கிளப் மற்றும் தொண்டு நிறுவனமான சிக்ஸ் இன் தி சிட்டி, 1992 முதல் அவர் வசித்து வரும் கிழக்கு லண்டனில் உள்ள இல்ஃபோர்டில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள், அவரது வாழ்க்கை மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக இருக்கும் என்று கூறியது. மரணச் செய்தி பரவியதும், அஞ்சலிகள் குவிந்தன.

பதிவு 15 Jul 2025 4:54 pm

ஆதவ் அர்ஜூனாவை கொல்ல சதியா? தி.நகர் துணை ஆணையரிடம் புகார்- பதற்றத்தில் தவெக தொண்டர்கள்...

தவெக கட்சி தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 15 Jul 2025 4:42 pm

கனடாவில் காற்றின் தரம் மோசமாக உள்ளது!

கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவின் வளிமண்டலம் கடுமையான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான ஒன்ராறியோவின் வடக்கு மாகாணத்தில் பரவும் காட்டுத்தீயின் புகையால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வார இறுதிக்குப் பிறகு, டொராண்டோவில் நேற்று திங்கட்கிழமை வானம் மேகமூட்டமாக இருந்தது, மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காற்றின் தரம் மற்றும் வெப்ப எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். டொராண்டோ மற்றும் ஒன்ராறியோவின் பல பகுதிகளில் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு சுற்றுச்சூழல் கனடா குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், மேற்கு மாகாணமான சஸ்காட்செவனில் உள்ள மிகப்பெரிய நகரமான சஸ்கடூனுக்கும் இதே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய காற்று கண்காணிப்பு மையமான IQAir இன் படி, திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி, டொராண்டோ உலகின் மிக மோசமான காற்று மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இணைந்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கனடாவில், ஒன்ராறியோ மற்றும் கியூபெக் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களிலும், மனிடோபா மற்றும் சஸ்காட்செவனின் சில பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமாக உள்ளது. காட்டுத்தீ புகையால் பாதிக்கப்பட்ட முக்கிய நகரங்கள் பின்வருமாறு: சிகாகோ, இல்லினாய்ஸ் டுலுத், மினசோட்டா மினியாபோலிஸ், மினசோட்டா மாண்ட்ரீல், கியூபெக் சஸ்கடூன், சஸ்காட்சுவான் டொராண்டோ, ஒன்டாரியோ ஜூலை 14 ஆம் தேதி காலை நிலவரப்படி, கனடாவின் டொராண்டோ உலகின் மூன்றாவது மாசுபட்ட பெரிய நகரமாக இருந்தது. இல்லினாய்ஸின் சிகாகோ 11 வது இடத்தில் இருந்தது. மிச்சிகன், மினசோட்டா மற்றும் விஸ்கான்சின் ஆகிய பகுதிகளில் மிதமான முதல் ஆரோக்கியமற்ற வரம்பு வரை காற்றின் தரம் மோசமடைவதற்கு புகை காரணமாகிறது . இல்லினாய்ஸ், இந்தியானா, அயோவா, ஓஹியோ மற்றும் நியூயார்க்கின் சில பகுதிகளிலும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பதிவு 15 Jul 2025 4:42 pm

வெளியானது TNPSC Group 2, 2A தேர்வு அறிவிப்பு - எந்தெந்த தேதிகளில்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC குரூப் 2, 2ஏ) வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன பணி? பக்கம் 2 - 5 மொத்த காலிபணியிடங்கள்: குரூப் 2 - 50; குரூப் 2ஏ - 595 வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 42 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) கல்வி தகுதி: 7 - 10 குறிப்பு: விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். தேர்வு தேர்வு மையங்கள்: முதல்நிலை தேர்வு: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். முதன்மை தேர்வு: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர். முதல்நிலை தேர்வு தேதி: செப்டம்பர் 28, 2025 முதன்மை தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பிக்கும் இணையதளம்: apply.tnpscexams.in விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 13, 2025. மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

விகடன் 15 Jul 2025 4:39 pm

மல்லை சத்யா தனிக் கட்சி தொடங்குகிறாரா? அறிவிப்புக்கு தேதி குறிப்பு!

மதிமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்து வரும் மல்லை சத்யா விரைவில் தனிக் கட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு செப்டம்பர் 15-ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 15 Jul 2025 4:35 pm

NeoNiche partners with Blue Dart for Experiential Event

Mumbai: NeoNiche Integrated Solutions redefined the meaning of employee recognition at Blue Dart’s Employee of the Year Awards 2025, held at Resort Rio, Goa.Marking their first collaboration with Blue Dart, the NeoNiche team was tasked with crafting a high-impact experience on a tight budget and a tighter seven-day timeline. The result: an event that felt intimate, intentional and deeply aligned with Blue Dart’s internal values.From the moment employees landed in Goa, every touchpoint was personalized. Guests received custom welcome kits featuring regional souvenirs such as Zantye’s cashews and handwritten notes that added an emotional layer to the welcome experience. The event format broke away from traditional templates, there were no overdone stage theatrics, just meaningful interactions that resonated. “From day one, we knew this had to be more than an awards night.” said a spokesperson from NeoNiche Integrated Solutions. “It was about bringing Blue Dart’s culture to life through emotion-led design thinking, even with limited time and resources.” Across the evening, interactive zones like live caricature mugs, glambot video booths and instant photo prints served as engaging yet purposeful additions, seamlessly integrated into the narrative. The event concluded with a high-energy live band performance, transforming the audience from spectators into participants.One of the most touching moments came from the Blue Dart leadership, who greeted employees individually and placed flower tiaras and crowns on them, a symbolic yet powerful gesture of appreciation.Despite the scale and complexity of the execution, the event retained a sense of ease, warmth and emotional connection. For NeoNiche, the success of this project reaffirms a growing trend in brand experiences: internal events are no longer just functions, they’re expressions of culture.This wasn’t just about executing an event in 7 working days, it was about building trust in real-time. With it being our first collaboration with Bluedart, every decision had to be intentional. We weren’t just planning logistics; we were shaping how people felt. The real win was creating a space where every employee felt seen, celebrated, and genuinely valued. That’s what made it meaningful - Yogesh Sonar, GM - Client Relations.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Jul 2025 4:32 pm

WI vs AUS: 27 ரன்களில் மொத்த டீமும் ஆல் அவுட்... 15 பந்துகளில் ஸ்டார்க் செய்த உலக சாதனை!

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, கடந்த ஜூன் 25 முதல் தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா பேட்டிங்கில் தடுமாறினாலும் முழுக்க முழுக்க பந்துவீச்சில் அபாரமாகச் செயல்பட்டு வெற்றிபெற்றது. இத்தகைய சூழலில்தான், ஜூலை 12-ம் தேதி பகலிரவு போட்டியாக மூன்றாவது போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா வழக்கம்போல வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளும், அல்சாரி ஜோசப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஷமார் ஜோசப் அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாற அவர்களை 143 ரன்களுக்குச் சுருட்டியது ஆஸ்திரேலியா. ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 82 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 121 ரன்களுக்குச் சுருண்டது. அல்சாரி ஜோசப் 5 விக்கெட்டுகளும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் அணியை ஒற்றை ஆளாக முதல் ஓவரிலிருந்தே தகர்த்தார் ஸ்டார்க். முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க், தான் அடுத்து வீசிய 9 ஒன்பது பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெறும் 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்குச் சென்றது வெஸ்ட் சென்றது. அடுத்து 14-வது ஓவரில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, மீதமிருந்த ஒற்றை விக்கெட்டையும் அடுத்த ஓவரிலேயே எடுத்தார் ஸ்டார்க் . 27 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆனது . Mitchell Starc - மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 70 ஆண்டுகளில் ஒரு அணி பதிவுசெய்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். ஒட்டுமொத்தமாக முதலிடத்தில், 1955-ல் இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் நியூசிலாந்து அடித்து 26 ரன்கள் இருக்கிறது. இதுவொருபுறமிருக்க, இப்போட்டியின் மூலம் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் கரியரில் 100-வது போட்டியில் களமிறங்கிய ஸ்டார்க், இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 7 விக்கெட்டுகளுடன் டெஸ்டில் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லைக் கடந்தார். மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் 15 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மிகவும் வேகமாக (பந்துகள் அடிப்படையில்) 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை ஸ்டார்க் படைத்தார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மிட்செல் ஸ்டார்க் சாதனை!

விகடன் 15 Jul 2025 4:32 pm

உக்ரைனுடன் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் ரஷ்யா மீது 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா மீது 100 சதவீத வரிகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். 50 நாட்களுக்குள் உக்ரைன் போர் நிறுத்தத்தை எட்டவில்லை என்றால் வரிகளை விதிப்பேன் என்று அவர் கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், ஆனால் அவரை இன்னும் கையாள்வதை முடிக்கவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு ஊடகங்களுடனான சிறப்பு தொலைபேசி மாநாட்டில் தெரிவித்தார். உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு டிரம்ப் இவ்வாறு கூறினார். 50 நாட்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அவர் கூறினார். நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மற்றொரு வெளிநாட்டு ஊடக சந்திப்பில், டிரம்ப் புடின் மீதான தனது விரக்தியை உறுதிப்படுத்தினார். நேட்டோ நாடுகள் மூலம் உக்ரைனுக்கு மிக உயர்ந்த அளவிலான ஆயுதங்கள் அனுப்பப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு உதவுவதற்காக பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்புவதாகவும் அவர் நேற்று டிரம்ப் அறிவித்தார். இருப்பினும், உக்ரைனுக்கு எத்தனை ஏவுகணைகள் வழங்கப்படும் என்பதை அமெரிக்கா இன்னும் அறிவிக்கவில்லை. வான் பாதுக்காப்பு அமைப்புக்கள் மற்றும் ஏவுகணைகளை நேட்டோ நாடுகளில் அங்கம் வகிக்கும் யேர்மனி போன்ற சில நாடுகள் சில உடனடியாக பணம் செலுத்தி ஆயுதங்களை வாங்கி உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.

பதிவு 15 Jul 2025 4:31 pm

பேராசிரியர் மீது பாலியல் புகார்! நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பலி!

ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார். ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் படித்துவந்த 20 வயது மாணவி ஒருவர், கல்லூரி முதல்வர் அறைக்கு வெளியே தீக்குளித்து, 90 சதவிகித தீக்காயங்களுடன் புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். கல்லூரி மாணவி ஏன் தீக்குளித்தார்? தீக்குளித்ததற்கான காரணம் என்ன? என்பதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தீக்காயப் பிரிவில் நிபுணர்கள் […]

அதிரடி 15 Jul 2025 4:30 pm

சென்னை மெட்ரோ ரயில்: ஓஎம்ஆர் பகுதியில் எப்போது பணிகள் நிறைவடையும்? செம்மஞ்சேரி பணிமனை அமைக்க தாமதம்!

செம்மஞ்சேரி மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமானத்தில் நிலம் கையகப்படுத்தும் சிக்கல் உள்ளது. பணிமனை இல்லாமல் ஓஎம்ஆர் பகுதியில் ரயில்கள் இயக்குவது கடினம். இல்லையென்றால், ரயில்களை இயக்க அதிக செலவாகும். தடங்கல் ஏற்பட்டால் பழுது பார்க்க நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.

சமயம் 15 Jul 2025 4:23 pm

பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!

கலிப்போர்னியா : கலிப்போர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் பத்திரமாக இறக்கப்பட்டது. கடலில் இறங்கியவுடன், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஆக்ஸியம் ஸ்பேஸ்-இன் மீட்புக் குழுவினர் விரைவாக விண்கலத்தை அடைந்து, எரிபொருள் கசிவு உள்ளிட்ட பாதுகாப்பு அபாயங்களை ஆய்வு செய்தனர். பசுபிக் கடலில் இருந்து கப்பலில் டிராகன் விண்கலம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, வீரர்களை விண்கலத்தில் இருந்து மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் மேற்கொள்கின்றனர். இறுதியாக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, விண்கலத்தின் பக்கவாட்டு […]

டினேசுவடு 15 Jul 2025 4:22 pm

விமல் வீரவன்சவை கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்

கடந்த காலங்களில் ஜேவிபியுடன் இணைந்து கொலைகளை செய்த விமல் வீரவன்ச, தற்போது செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கை விட என்ன காரணம் என கேள்வியெழுப்பிய அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயேந்திரன், விமல் வீரவன்சவை அரசாங்கம் கைது செய்யாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி […]

அதிரடி 15 Jul 2025 4:15 pm

Zomato launches ‘Fuel Your Hustle’ campaign celebrating India’s iconic journeys of grit and persistence

Mumbai: Zomato has unveiled its latest campaign titled ‘Fuel Your Hustle’, a powerful tribute to the perseverance and discipline behind some of the nation’s most celebrated icons. Featuring Shah Rukh Khan, Mary Kom, AR Rahman, and Jasprit Bumrah, the campaign spotlights the unseen hours, early struggles, and quiet grind that shaped their remarkable journeys.The campaign film, now live on YouTube and Instagram, blends archival and never-seen-before footage from the stars’ formative years—ranging from behind-the-scenes moments in iconic films and cricket matches to glimpses of personal milestones. The visual storytelling is woven together with an evocative track by Kalmi (Nikhil Kalimireddy), known for his breakout hit “Big Dawgs.”In a world chasing instant success, ‘Fuel Your Hustle’ is Zomato’s ode to the long, often invisible, road to greatness. Whether it’s Shah Rukh Khan’s early days in television and theatre, Mary Kom’s fight against convention as a mother and athlete, AR Rahman’s behind-the-scenes musical discipline, or Jasprit Bumrah’s unwavering training off the pitch—the film highlights how resilience and consistency fuel legendary achievements. Sahibjeet Singh Sawhney, from Zomato’s marketing team, shared the campaign’s core sentiment, “This campaign is for a new generation of doers, a reminder that even the stars they look up to started small, stumbled, and kept going. It’s a cheer for the millions of Indians building something, following dreams, caring for loved ones and for themselves, even when it’s hard and no one’s clapping.” He added, “We’re rooting for those chasing what they care deeply about and showing up for it consistently. Food is just their fuel and we're glad to be a small part of their journey.” The campaign is part of a 360-degree marketing strategy that includes digital, social media, outdoor, and print activations. With this effort, Zomato reinforces its connection with the everyday hustler—reminding consumers that whether they’re chasing dreams or just getting through a tough day, a good meal can be the fuel that keeps them going.https://www.youtube.com/watch?v=BUrwsXLgfOs

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Jul 2025 4:11 pm