SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

Gold Rate: ரூ.1 லட்சத்திற்கு கீழிறங்கிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 ஆகவும், பவுனுக்கு ரூ.320 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,440 ஆகும். Rewind 2025: ஒரே ஆண்டில் தங்கம் ரூ.47,000, வெள்ளி ரூ.183 உயர்வு - கடந்து வந்த பாதை தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,520 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.256 -க்கு விற்பனை ஆகி வருகிறது. உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!

விகடன் 1 Jan 2026 10:03 am

ஆண்டின் முதல் நாளிலேயே ஷாக்! சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு!

சென்னை : வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (ஜனவரி 1, 2026) ரூ.110 உயர்ந்துள்ளது. 2026 ஆண்டின் முதல் நாளிலேயே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போதைய உயர்வு வணிகர்களுக்கு திடீர் அதிர்ச்சியை […]

டினேசுவடு 1 Jan 2026 10:02 am

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சமாக 10,000 ரூபாயைக் கோரி, அதனை வேறொருவர் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயன்ற போதே குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பொலிஸ் நிலையத்தினுள் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பதிவு 1 Jan 2026 10:01 am

டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

திருகோணமலையில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெஹிவத்தை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களும் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானர்கள் . அதன் போது அப்பகுதியை சேர்ந்த எம், ஏ. சாமிக்க அசான் (வயது 21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இரு இளைஞர்களுடன் படுகாயமடைந்த நிலையில் , மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு 1 Jan 2026 9:56 am

கடந்த 12 மாதங்களில் 114 துப்பாக்கி சூடு ; 60 பேர் படுகொலை

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில் பெரும்பாலானவை பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பதிவு 1 Jan 2026 9:47 am

புத்தாண்டு அன்று சூப்பர் நியூஸ்! மீண்டும் குறைந்த தங்கம் விலை!

சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 1, 2026) குறைந்து நகை வாங்குபவர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.12,440-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு தொடக்கத்தில் இந்த குறைவு பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்றைய குறைவு சர்வதேச சந்தை போக்கு மாற்றங்களால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரூ.1 லட்சத்தை நெருங்கியிருந்த சவரன் […]

டினேசுவடு 1 Jan 2026 9:44 am

2026இல் விமானப்படையை வலுப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்கா விமானப்படை 2026 ஆம் ஆண்டில் விமானங்களில் பாரிய மேம்படுத்தல்கள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவிமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் நளின் வெவகும்புர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில்அமெரிக்கா பத்து TH-57 சீ ரேஞ்சர் (பெல் 206) உலங்குவானூர்திகளைஅமெரிக்கா கொடையாக வழங்கவுள்ளது. மேலதிகமாக, அமெரிக்கா இந்த ஆண்டிலும்,அவுஸ்ரேலியா 2027 ஆம் ஆண்டிலும், சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு C-130 போக்குவரத்து விமானங்களை வழங்கவுள்ளன. இவற்றைப் பொறுப்பேற்பதற்கான

புதினப்பலகை 1 Jan 2026 9:39 am

இந்தியா –பாகிஸ்தான் சண்டையில் மத்தியஸ்தம்! அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா அறிவிப்பு!

சீனா மத்தியஸ்தம்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையை, வர்த்தகத்தை முன்வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை […]

அதிரடி 1 Jan 2026 9:36 am

கடலுக்கு செல்ல வேண்டாம் ; திருகோணமலை கடற்கரையில் சிவப்புக் கொடி எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பால் திருகோணமலை கடற்கரை மூடப்பட்டுள்ளது என்பதை எச்சரிக்கும் விதமாக இன்று சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. கடல் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் இவ்வாறு சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், இவ்வாறான தாக்கங்களை செலுத்தியுள்ளது. இன்று மாலை நேரம் திருகோணமலையில் மப்பும் மந்தாரமான காலநிலை நிலவியமையும் குறிப்பிடத்தக்கது.

அதிரடி 1 Jan 2026 9:33 am

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தீபங்கள் ஏற்றி ஆங்கிலப் புத்தாண்டு வரவேற்பு

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது.

அதிரடி 1 Jan 2026 9:31 am

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமனம்?

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எட்டுப்பேர் அடங்கிய தேசிய காவல்துறை ஆணைக்குழுவில், இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வெற்றிடங்களில் ஒன்றுக்கு, முன்னாள், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும், முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளருமான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியை நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க,

புதினப்பலகை 1 Jan 2026 9:16 am

அவசரகாலச் சட்ட நீடிப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கரிசனை புறக்கணிப்பு

அவசரகாலச் சட்ட பிரகடனத்தில் திருத்தம் செய்யுமாறு தாங்கள் முன்மொழிந்த விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில், முன்னர் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டவிதிகளில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், உறுப்பினருமான, சட்டவாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவ, தெரிவித்துள்ளார்.

புதினப்பலகை 1 Jan 2026 9:03 am

பாடத்திட்டத்தில் முறையற்ற குறிப்பு -பிரதமர் ஹரிணி பதவி விலக கோரிக்கை

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாகவே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற குறிப்புகள் பள்ளி மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும். பொருத்தமற்ற விடயங்களைப்

புதினப்பலகை 1 Jan 2026 8:52 am

Doctor Vikatan: நரக வேதனையைத் தரும் வறட்டு இருமல்,தொண்டைப்புண்...  இருமலை நிறுத்த வழி உண்டா?

Doctor Vikatan: என் வயது 55. எனக்கு கடந்த ஒரு மாதமாக கடுமையான வறட்டு இருமல் இருக்கிறது. பாட்டில், பாட்டிலாக இருமல் மருந்து குடித்தும் இருமல் நிற்கவில்லை. இருமி இருமி, தொண்டை புண்ணானதுதான் மிச்சம். இருமல் அடங்கும்வரை நரக வேதனையை அனுபவிக்கிறேன். இதற்கு என்னதான் காரணம்... இந்த இருமலை நிறுத்த என்னதான் வழி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்      மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் இருமல் எதனால் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதற்கான சிகிச்சையை முடிவு செய்ய முடியும். வைரஸ் தொற்றால் ஏற்பட்டதா, பாக்டீரியா தொற்றால் ஏற்பட்டதா, பிற காரணங்களால் ஏற்பட்டதா என்று பார்க்க வேண்டியது அவசியம்.     வறட்டு இருமலுக்கு மிக முக்கியமான காரணம் வைரஸ் தொற்றுதான். இந்தத் தொற்றால் ஏற்படும் இருமலானது, பொதுவாக இரண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம். ஒருவேளை தொற்று மிகவும் தீவிரமாக இருந்தால், வறட்டு இருமலானது  நான்கு வாரங்கள் வரைகூட நீடிக்கலாம். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் வரும் இருமலுக்கு, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் 'Cough Suppressants'  மருந்துகள் எடுத்தால் போதும்.  தொடர்ந்து இருமுவதால் தொண்டையில் எரிச்சலும், அசௌகர்யமும் ஏற்படலாம். இதைத் தவிர்க்கவே இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இருமல், பெரும்பாலும் வறட்டு இருமலை ஏற்படுத்தாது. இதற்கு மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் வரும் இருமலுக்கு, 'Cough Suppressants' மருந்துகள் எடுத்தால் போதும். Doctor Vikatan: சில வகை இருமல் மருந்துகளைக் குடித்தால் கை, கால் நடுக்கம் ஏற்படுவது ஏன்? சில நேரங்களில் பாக்டீரியா தொற்று குணமானாலும், அதன் பிறகு ஒருவித வறட்டு இருமல் சில நாள்கள் இருக்கலாம்.  அதைக் குறைக்க  Cough Suppressants மற்றும்  ஆன்டி-ஹிஸ்டமைன் (Anti-histamines) மருந்துகள் பரிந்துரைக்கப்படும். தொண்டை எரிச்சலையும் அதனால் ஏற்படும் அவதியையும் குறைக்கவே, வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.  வறட்டு இருமல் ஏற்பட  வேறு  காரணங்களும் இருக்கலாம். உதாரணத்துக்கு,  ஒவ்வாமை (Allergies), மூக்கடைப்பு (Post-nasal drip), நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி (Gastritis), மற்றும் ஆஸ்துமா போன்றவையும் வறட்டு இருமலை உண்டாக்கலாம். இருமல் மருந்துகள்  தற்காலிக நிவாரணமாக  மட்டுமே செயல்படும். இருமல் எதனால் ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணத்தைக் (Underlying cause) கண்டறிந்து அதற்குச் சிகிச்சை அளிப்பது மிக அவசியம். எனவே, காரணம் அறியாமல் மருந்துகள் எடுத்தால் இருமல் கட்டுப்படாது. நீங்களாக மருந்து வாங்கிப் பயன்படுத்துவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம், கவனம்! உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 1 Jan 2026 8:48 am

சென்னையில் குப்பை மேடாக காட்சி அளிக்கும் கோவளம் கடற்கரை!

சென்னையில் கோவளம் கடற்கரை குப்பை மேடாக காட்சி அளித்து வருகிறது. இதனால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். விரைவில் இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளனர்.

சமயம் 1 Jan 2026 8:37 am

திருச்சி மாநகராட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் எப்போது முடிக்கப்படும்?

திருச்சி மாநகராட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் எப்போது முடிக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

சமயம் 1 Jan 2026 8:34 am

‘கதம் கதம்’.. ரிஷப் பந்தை ஓரங்கட்ட பிசிசிஐ முடிவு: காரணம் இதுதான்.. இனி இவருக்கு மாற்று யார் தெரியுமா?

இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்தை ஓரங்கட்டிவிட்டு, மாற்றாக இளம் பேட்டரை சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். அதற்கான காரணம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பந்த்தான் இதற்கு காரணம்!

சமயம் 1 Jan 2026 8:33 am

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் : 5 ம் படை வீடு... ஆங்கிலப் புத்தாண்டு அன்று களைகட்டும் படிபூஜை!

முருகப்பெருமான் வள்ளலாகத் தன்னை நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வாரிவாரி வழங்கும் ஆறு தலங்களே அறுபடைவீடுகள் என்று போற்றப்ப்டுகின்றன. அவற்றுள் திருத்தணி 5 - ம் படை வீடு. சூரபத்மனை போரில் வென்றபின் இங்கு வந்து அமர சினம் தணிந்தது என்பதால் இதனைத் திருத்தணி என்று அழைக்கின்றன ஞான நூல்கள். சினம் தணிந்து வள்ளியோடு இங்கு வந்து அமர்ந்ததால் திருத்தணிகையில் சூரசம்ஹார விழா நடப்பதில்லை என்பது கூடுதல் தகவல். அன்றைய தினம் இத்தல முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மட்டுமே நடைபெறுகிறது. இங்கு மூலவராகத் திகழும் சுப்ரமணிய சுவாமியின் திருமார்பில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. இது சூரபத்மனோடு போர் செய்தபோது ஏற்பட்டது என்கிறார்கள். ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் உள்ளது. முருகப்பெருமானின் வாகனம் மயில் என்பதை அறிவோம். அதேவேளை சுவாமிமலையிலும் திருத்தணியிலும் யானைதான் முருகப்பெருமானின் வாகனமாக உள்ளது. இந்த யானை வாகனம் சந்நிதியின் வெளிப்புறத்தைப் பார்த்தவாறு உள்ளது. திருத்தணி முருகன் இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் முடித்து தந்தபோது, ஐராவதத்தை சீதனமாக கொடுத்தார். இந்திரலோக ஐஸ்வர்யங்களில் ஒன்று ஐராவதம். இதனால், தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்தது. ஆகவே, ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது. மேலும் திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். மாறாக சக்தி ஹஸ்தம் 9 (இதை வஜ்ரவேல் என்றும் சொல்வார்கள்) எனப்படும் இடி போன்ற ஓர் ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். நோய் தீர்க்கும் சந்தன பிரசாதம் இந்தத் தலத்தில்தான் சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இருந்து சக்கராயுதத்தை மகாவிஷ்ணு முருகப்பெருமானின் துணையோடுமீட்டார் என்கிறது தலபுராணம். இங்குள்ள தீர்த்தம் ஒன்றுக்கு விஷ்ணு தீர்த்தம் என்றே பெயர். பகவான் விஷ்ணுவே இதை உருவாக்கினார் என்பது ஐதிகம். இந்தப் புனித தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானி வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருத்தணியில் முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. எல்லா நாள்களும் இந்த சந்தனப் பிரசாதம் கிடைப்பதில்லை. மாறாக விழாக்காலங்களில் மட்டுமே கிடைக்கும். வள்ளிமலை சுவாமிகள் மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் ஆதி பாலசுப்பிரமணியர் அருள்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளிய மூர்த்தி என்கிறார்கள். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், குழந்தையான குமரனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள். இந்தத் தலத்தில் ஆங்கிலப்புத்தாண்டை மிகவும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருக்கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதற்கு விடையாக அமைகிறது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆண்டின் முதல் நாளில் படிபூஜை வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி முருகனின் தீவிர பக்தர். திருப்புகழை பரப்புவதையே தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்ட அவர் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தபோது அங்கே பக்தர் யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அங்குள்ளவர்களிடம் வள்ளிமலை சுவாமிகள் காரணம் கேட்டார். அதற்கு, 'இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். எனவே மக்கள் எல்லோரும் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் இங்கு வருவது இல்லை' என்று கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்ட வள்ளிமலை சுவாமிகள் வருத்தமடைந்தார். 'துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான முருகன் இருக்கும் இடத்துக்கு வராமல் யாரோ ஒரு மனிதரைத் துதித்து வழிபடுவதா' என்று வருந்தினார். மக்களை முருகனிடம் வரவேற்க ஒரு திருவிழா நடத்தலாம் என்று முடிவு செய்தார். அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதை நிகழ்த்த முடிவு செய்தார். படிபூஜை சுவாமி மலையில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பன்று படிபூஜை நடைபெறுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களாக இந்தப் படிகள் விளங்குவதாய் ஐதிகம். எனவே, அவற்றுக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் பூஜைகள் நடைபெறுகின்றன. அதைப்போலவே 365 படிகளைக் கொண்டிருக்கிற திருத்தணிகை முருகன் கோயில் படிபூஜை செய்தால் என்ன என்று யோசித்து அதையே விழாவாகக் கொண்டாட முடிவு செய்தார். மக்களிடம் முருகனே துரைகளுக்கெல்லாம் துரை. எனவே துரை முருகனைக் கொண்டாடுவோம் என்று அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற மக்கள் திருத்தணியில் குவிந்தனர். முதல் படிபூஜை 1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அன்று ஆரம்பமானது. அன்று முதல் இன்றுவரை இந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு படிக்கும் வெற்றிலை, பழம், சூடம் வைத்து இரண்டு நாள்களும் பூஜை செய்யப்படும். டிசம்பர் 31-ம் தேதி காலையில் தொடங்கி மறுநாள் விடிய விடிய நடைபெறுகின்ற இந்தப் படிபூஜை புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியன்று இரவு 10 மணிவரையிலும் நடைபெறும். பக்தர்களும் இதில் திரளாகக் கலந்துகொள்வார்கள். இந்த நாளில் திருத்தணியில் அன்னதானங்களும் பக்தர்களின் கூட்டமும் களைகட்டும். திருத்தணி தலத்தின் மகிமையும் பழைமையும் பெரியது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று சினம் தணிந்த அந்த சுப்ரமணிய சுவாமியை தரிசித்து வாருங்கள். வாழ்வில் சுகங்கள் அனைத்தும் தேடிவரும்.

விகடன் 1 Jan 2026 8:31 am

பதிவு வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

புதிய நம்பிக்கைகள், புதிய கனவுகள், புதிய தொடக்கங்களுடன் 2026 ஆம் ஆண்டு நம் அனைவரையும் வரவேற்கிறது. கடந்த ஆண்டின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்தை நோக்கி உறுதியான அடிகளுடன் முன்னேற வேண்டிய தருணம் இது. உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செய்தி ஊடகங்கள், ஜனநாயகத்தின் தூண்களாக இருந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றன. நேர்மை, வெளிப்படைத் தன்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றுடன் செய்திகளை வாசிக்கும் வாசகர்களே ஊடகங்களின் உண்மையான பலம். 2026 ஆம் ஆண்டு அனைவருக்கும் ஆரோக்கியம், அமைதி, சமத்துவம், வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை கொண்டு வரட்டும். அறிவுச் சிந்தனையையும் வளர்க்கும் ஆண்டாக இது அமையட்டும். பதிவு வாசகர்களுக்கும், செய்தியாளர்களுக்கும், ஊடகப் பணியாளர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

பதிவு 1 Jan 2026 8:19 am

IND vs NZ ODI: ‘இந்திய அணி இதுதான்?’.. புது ஓபனர்கள் தேர்வு! ரோஹித், கில்லுக்கு செக்.. 15 பேர் பட்டியல்!

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 1 Jan 2026 8:06 am

SA20: ‘காட்டடி அடித்த சிஎஸ்கே வீரர்’.. ரபாடா, போல்ட் பந்துகள் பறந்தன: எம்ஐ கேப்டவுனுக்கு மெகா தோல்வி!

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், பிரிடோரியா கேபிடல்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணியில் பேட்டர்கள் தொடர்ச்சியாக காட்டடி அடித்து 220 ரன்களை குவித்தனர். இறுதியில் மெகா வெற்றியையும் பெற்றனர்.

சமயம் 1 Jan 2026 7:39 am

சென்னையின் பல்வேறு இடங்களில் மழை-தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த தகவல்!

சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் தளத்தில் மழை தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

சமயம் 1 Jan 2026 7:37 am

2026 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி-எங்கனு தெரியுமா?

2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி-எங்கனு தெரியுமா? இதுதொடர்பாக வெளியான அறிவிப்பும், அரசு அனுமதி தொடர்பாகவும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

சமயம் 1 Jan 2026 5:34 am

ஜோக்ஸ்..!

ஜோக்குகளை மின்னஞ்சலில் அனுப்ப jokes@vikatan.com ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ்

விகடன் 1 Jan 2026 5:30 am

கார்ட்டூன்: ஹேப்பி 2026..!

கார்ட்டூன்

விகடன் 1 Jan 2026 5:30 am

மறுசீரமைப்பின் சுமையுடன் 2026க்கு கால்பதிக்கும் நாடு ; ஜனாதிபதி புத்தாண்டு செய்தி

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது. 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் […]

அதிரடி 1 Jan 2026 4:54 am

அமீரக ஆதரவு படைகள் மீது யேமனில் சவூதி தாக்குதல்

ஐக்கிய அமீர ஆதரவுடன் செயல்பட்டுவரும் யேமன் பிரிவினைவாதப் படையினரைக் குறிவைத்து அந்த நாட்டின் முகல்லா துறைமுக நகரில் சவூதி அரேபிய செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்தில் இருந்து வந்த கப்பல்கள் மூலம் தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) பிரிவினைவாதப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் அனுப்பப்பட்டன. இந்த ஆயுதங்கள் யேமனின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உடனடி […]

அதிரடி 1 Jan 2026 3:30 am

பசிபிக்கில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் வழித்தடத்தில் இயங்கிய படகு ஒன்றை அமெரிக்க ராணுவம் தாக்கியது. அந்தப் படகு போதைப்பொருள் பயங்கரவாதிகளால் செலுத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடா்பான விடியோவை (படம்) வெளியிட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அதிரடி 1 Jan 2026 1:30 am

கொழும்பு மாநகர சபை: தார்மீக வெற்றியா? அல்லது திட்டமிட்ட சதியா?

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (31) இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்டு,… The post கொழும்பு மாநகர சபை: தார்மீக வெற்றியா? அல்லது திட்டமிட்ட சதியா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Jan 2026 12:50 am

️புதிய ஆண்டு ஒற்றுமையின் சின்னமாக அமையட்டும்”

“புதிய ஆண்டு ஒற்றுமையின் சின்னமாக அமையட்டும்” – மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை புத்தாண்டு வாழ்த்து!… The post ️புதிய ஆண்டு ஒற்றுமையின் சின்னமாக அமையட்டும்” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Jan 2026 12:34 am

முஸ்லிம்களுக்கு தூரநோக்குடனான அரசியலின் தேவை

மொஹமட் பாதுஷா மக்களை மையமாகக் கொண்ட நீண்டகால திட்டமும் தூரநோக்கும் இல்லாத அரசியலின் விளைவுகளை இலங்கை முஸ்லிம் சமூகம் அனுபவிப்பதாகவே தோன்றுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எப்படி, யார் முன்வைப்பது? அவற்றிற்கு எவ்வாறு தீர்வைப் பெறுவது என்பதெல்லாம் விடைதெரியாத கேள்விகளாகியுள்ளன. முன்னைய காலங்களில் எம்.பி.க்களாக இருந்தவர்கள் தமது பதவிக்காலம் முடிந்தவுடன், அரசியலை விட்டு தமது சொந்த வாழ்க்கைக்குள் ஒதுங்கிக் கொண்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும், பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க […]

அதிரடி 1 Jan 2026 12:30 am

புத்தாண்டு அதுவுமா இப்படியா..! ஜப்பானில் இப்படி ஆகிடுச்சே..! கொண்டாட்டத்துக்கு நடுவே சோகம்..!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஜப்பான் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

சமயம் 31 Dec 2025 11:04 pm

வவுனியா –சமளங்குளம் மக்கள் குழப்பப்பட்டுள்ளனர்: ஆபத்தை உணர்ந்தாலே மண்ணை காப்பாற்ற முடியும்! தமிழ் தேசிய மக்கள் முன்னனி

வவுனியா விசேட நிருபர் வவுனியா, சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகம் உட்பட மக்கள் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளனர். எனவே எதிர்கால ஆபத்தை மக்கள் உணரவேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா, சமளங்கும் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றிருந்தோம். அங்கு தொல்லியல் […]

அதிரடி 31 Dec 2025 10:39 pm

மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சுவிஸ் கிராம பகுதியில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை தொடர்ந்தே ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சுவிஸ் கிராம கொடூர தாக்குதல் தாக்குதல் சந்தேக நபர்கள் நேற்று முன் தினம் பொலிஸரால் கைது செய்யப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு 12 .30 மணியளவில் அவரது […]

அதிரடி 31 Dec 2025 10:30 pm

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை: 15 நாள்களில் 8-ஆவது முறையாக வீடுகளுக்குத் தீவைப்பு

வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பிரோஜ்பூா் மாவட்டத்தில் ஐந்து வீடுகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் இதுபோன்ற 8 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பிரோஜ்பூா் மாவட்டத்தில் அண்மையில் இந்தத் தீவைப்பு சம்பவம் நடந்தது. பலாஷ் காந்தி சாஹா, ஷிப் சாஹா, தீபக் சாஹா, ஷியாமலேந்து சாஹா, அசோக் சாஹா ஆகியோருக்குச் சொந்தமான ஐந்து வீடுகளை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அதிகாலை […]

அதிரடி 31 Dec 2025 10:30 pm

டென்மார்க்கில் 400 ஆண்டுகால அஞ்சல் சேவை முடிவுக்கு வருகிறது

டென்மார்க் 400 ஆண்டுகால அஞ்சல் சேவைக்கு விடைபெறுகிறது. கடிதம் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வேகமாக பரவி வருவதால், பாரம்பரிய அஞ்சல்களுக்கான தேவை குறைந்து வருவதால், டென்மார்க் தனது அரசுக்கு சொந்தமான அஞ்சல் விநியோக சேவையை முடிவுக்கு கொண்டு வருகிறது வந்துள்ளது. 1624 இல் தொடங்கிய இந்த சேவை, 401 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைகிறது. டென்மார்க் உலகின் மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும், வங்கி, சுகாதார பதிவுகள் மற்றும் அரசாங்க ஆவணங்கள் இப்போது கிட்டத்தட்ட முழுமையாக ஆன்லைனில் உள்ளன. 2024 வாக்கில், அஞ்சல் விநியோகம் 2000 உடன் ஒப்பிடும்போது 90% அதிகமாகக் குறைந்துள்ளது. கடிதம் விநியோகம் இனி லாபகரமானதாக இல்லாததால் சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டென்மார்க்கின் சின்னமான சிவப்பு அஞ்சல் பெட்டிகளில் சமீபத்திய மாதங்களில் சுமார் 1,500 அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அகற்றப்பட்ட பெட்டிகள் தொண்டுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டன, மேலும் பல டேனியர்கள் அவற்றை நினைவுப் பொருட்களாக வாங்க ஆர்வமாக உள்ளனர் உள்ளதாகவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் (1,500 - 2,000 டேனிஷ் குரோனர்) செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதிவு 31 Dec 2025 10:23 pm

️ பிரித்தானியாவில் குளிர்காலத்தில் 1.8 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு :

பிரித்தானியாவில் நிலவும் கடும் குளிர்காலத்திற்கு மத்தியில், சுமார் 1.8 மில்லியன் சிறுவர்கள் தத்தமது வீடுகளுக்குள் குடும்ப வன்முறையினால் (Domestic… The post ️ பிரித்தானியாவில் குளிர்காலத்தில் 1.8 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு : appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Dec 2025 10:22 pm

லிஃப்ட் கொடுப்பதாக காருக்குள் அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இளம்பெண்ணை சாலையில் வீசிய கும்பல்!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் இரவு நேரத்தில் 28 வயது பெண் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அப்பெண் அருகில் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். அப்பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அப்பெண்ணிடம் நாங்கள் உங்களை பத்திரமாக வீட்டில் விட்டு விடுகிறோம் என்று காரில் இருந்த இரண்டு பேரும் தெரிவித்தனர். அவர்களின் வார்த்தையை நம்பி அப்பெண் காரில் ஏறினார். ஆனால் கார் கிளம்பிய சிறிது நேரத்தில் அப்பெண்ணின் வீட்டை நோக்கி செல்வதற்கு பதில் குர்காவ் நோக்கி சென்றது. இது குறித்து அப்பெண் கேட்டதற்கு அவரை காரில் இருந்தவர்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். இரண்டரை மணி நேரம் ஓடும் காரில் அப்பெண்ணை அக்கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதிகாலை 3 மணிக்கு அக்கும்பல் அப்பெண்ணை ஓடும் காரில் இருந்து வெளியில் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். இதில் அப்பெண்ணிற்கு முகத்தில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் தனது சகோதரிக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். அவர்கள் ஓடி வந்து அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். ' அவரது முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு 12 தையல் போடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயாருடன் வருகிறார். சம்பவத்தன்று இரவு அப்பெண்ணிற்கும், அவரது தாயாருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். இது தொடர்பாக தனது சகோதரிக்கு போன் செய்து 3 மணி நேரத்தில் வீட்டிற்கு சென்றுவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். போலீஸார் விரைந்து செயல்பட்டு இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். அதோடு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விகடன் 31 Dec 2025 10:14 pm

ஈரானில் மக்கள் வீதிக்கு இறங்கினர்

ஈரானில்ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் நாணயத்தின் வியத்தகு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்திய நாட்களில் போராட்டம் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை கடைக்காரர்கள் மற்றும் பஜார் வணிகர்களின் வேலைநிறுத்தமாகத் தொடங்கியது, அரசியல் கோபத்தின் கூச்சலாக மாறியுள்ளது, சிலர் சர்வாதிகாரிக்கு மரணம்!என்று கூட கோஷமிட்டனர். தன்னிச்சையான போராட்டங்கள் ஏற்கனவே தெஹ்ரானில் இருந்து இஸ்ஃபஹான் மற்றும் மஷாத் போன்ற பிற நகரங்களுக்கும் பரவியுள்ளன. ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் நாணயத்தின் வியத்தகு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்திய நாட்களில் போராட்டம் நடத்தினர்

பதிவு 31 Dec 2025 9:43 pm

இங்கிலாந்து அரசாங்க ரகசியத் தகவல்கள் தவறுதலாக வெளியீடு

இங்கிலாந்தில் அரசாங்க ஆவணங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட ஒரு நிர்வாகத் தவறு காரணமாக, ஆண்ட்ரூ இளவரசரின் பயணத் திட்டங்கள் குறித்த ரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்குத் தற்செயலாகக் கசிந்துள்ளன. பொதுவாக இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் இத்தகைய அரசு ஆவணங்களில், அரச குடும்பம் தொடர்பான விவரங்கள் மட்டும் ரகசியமாக வைக்கப்படுவதை எதிர்த்துப் பல போராட்டக்காரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஜிம்பாப்வே விவகாரங்கள், டோனி பிளேயரின் புதுப்பிப்புத் திட்டங்கள் இந்நிலையில் இந்தத் தவறுக்குப் பின்னர் குறித்த கோப்புகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு, […]

அதிரடி 31 Dec 2025 9:30 pm

இலங்கை காவல்துறையில் பதவி வேண்டாம்!

சிவில் பாதுகாப்பு பிரிவில்( CSD) பணியாற்றுகின்றவர்களை பொலீஸ் திணைக்களங்களுடன் இணைதது குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதற்கான எழுத்து மூலமான உத்தரவு சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்துள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவித்து வருகின்றனர்.

பதிவு 31 Dec 2025 9:16 pm

புலிகளை திருப்திபடுத்தவே டக்ளஸ் கைது!

டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையானின் கைதுகள் முழுக்க முழுக்க அரசியல் ரீதியானவை என்றும், புலம்பெயர் புலிகளைத் திருப்திபடுத்தும் அரசின் செயல்பாடுகளின் ஒரு அங்கமாகவே இரண்டு கைதுகளும் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினால் இயக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படும்; சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கி, தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் காணாமல் ஆக்கப்படுத்தலுக்கும் வன்புணர்வுகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இலங்கையின் ஆகப் பெருங்குற்றவாளிகளில் முதன்மையானவராவார். அவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒருவரென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். எதிராக சூளைமேடு கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தின் பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையில் உள்ளது. அவரின் கைது வெறும் கண்துடைப்பாக மாத்திரமன்றி, அவர் ஆயுளுக்கும் வெளியே வராதபடி அமைந்தால் மட்டுமே சட்டவாட்சியின் பாற்பட்ட கைதாகக் கருதலாம். மாறாக ஒரு சில வாரங்களிலோ அல்லது ஒரு சில மாதங்களிலோ அவர் வெளியே வருவாரேயானால் பிள்ளையான், வியாழேந்திரன் வரிசையில் தமிழ்ப் புல்லுருவிகளைக் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு, அக்காலத்தினுள் அக்கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் ஜே.வி.பி. – என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பாகமாக மட்டுமே பார்க்க முடியுமெனவும் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

பதிவு 31 Dec 2025 9:12 pm

3ம் திகதி போராட்டம் நிச்சயம்!

தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை சுவீகரிக்க சதிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள யாழ்.மாவட்ட செயலர் பிரதீபன் காணி உரிமையாளர்களுடன் இன்று காலை தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் – ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்ததாக மாவட்ட செயலர் பின்னராக ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார். கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு மாவட்ட செயலர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே மிகுதிக் காணிகள் 4 கட்டங்களாக விடுவிப்பதற்கு யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விகாராதிபதி வாழிடம் உள்ளிட்ட ஏனைய பல கட்டடங்களை அகற்றி வேறிடத்துக்கு கொண்டு செல்லும் வகையிலான செயற்பாடுகளுக்க்கான அவகாசம் கருதியே இந்த 4 கட்டங்கள் வரையறை வகுக்கப்படுள்ளதென காணி உரிமையாளர்கள் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதேநேரம் விகாரை அமைந்துள்ள காணி மூன்று தரபினருக்குரியதாக இருக்கின்றது. ஆனாலும் அந்த காணிக்கான மாற்றுக் காணி குறித்தோ, நஸ்ட ஈடு தொடர்பிலும் எந்தவிதமான தீர்மானமோ யோசனையோ எடுக்கப்படவில்லை முயற்சி ஒரு யோசனையாகவே இன்று தீர்மானிக்கப்பட்டு துறைசார் தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. அது இறுதி முடிவாக அல்லாது யோசனையாகவே இருப்பதனால் நாம் எதிர்வரும் 3 ஆம் நாளன்று ஏற்கனவே தீர்மானித்திருந்த தையிட்டிப் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த தீர்மானித்துள்ளோமெனவும் அறிவித்துள்ளனர்.

பதிவு 31 Dec 2025 9:10 pm

சிறைத் தண்டனையால் தகுதி இழக்கிறாரா திமுக எம்.எல்.ஏ? - மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்வதென்ன?

கட்சி மதிமுக-தான், ஆனா சின்னம் உதயசூரியன்! தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனுக்காக இவர் தந்த காசோலைகள் பவுன்ஸ் ஆகி விட்டதையடுத்து, அவருக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது. அதேநேரம் தண்டனையை மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டிருப்பதால், அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டால் இந்தச் சட்டத்தின் கீழ் பதவி இழந்த மூன்றாவது திமுக எம்.எல்.ஏ-வாக இவர் இருப்பார். ஏனெனில் இவர் மதிமுக-வில் இருந்தாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் சட்டப் பேரவை ஆவணப்படி இவர் திமுக உறுப்பினரே. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8 (3)ன் படி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் இரண்டாண்டோ அல்லது அதற்கு மேலோ சிறைத் தண்டனை பெற்றால் உடனடியாக அவர்களது பதவி காலியாகி விடும். மேல்முறையீட்டுக்குச் சென்றால் தண்டனை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால் மட்டுமே திரும்பவும் அந்தப் பதவி கிடைக்கும். இதே சட்டப் பிரிவு 8 (1) ல் எந்தெந்த வகையான குற்றங்கள் என்பவையும் பட்டியலிடப் பட்டுள்ளன. சதன் திருமலைக்குமார் தண்டனை தந்ததும் இப்ப பதவி தந்ததும் ஒரே ஆள்! தமிழ்நாட்டில் முதன் முதலாக‌ இந்தச் சட்டத்தின் படி பதவியை இழந்தவர் செல்வகணபதி. சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் வழக்கில் இவருக்கு தண்டனை கிடைத்தது. வேடிக்கை என்னவென்றால் இவர் ஊழல் செய்தார் என வழக்கு போட்டது திமுக. ஆனால் இவருக்குத் தண்டனை கிடைத்த போது அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இருந்தார். பிறகு அந்த தண்டனை மேல் முறையீட்டில் ரத்து செய்யப்பட தற்போது அதே திமுக-வின் சார்பாக மக்களவை உறுப்பினராக இருக்கிறார். செல்வகணபதி தொடரலாமா கூடாதா? இந்தச் சட்டத்தின் படி பதவி இழந்த திமுக-வின் இரண்டாவது ஆள் பொன்முடி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் மூன்றாண்டு தண்டனை கிடைக்க, பதவி இழந்தார். ஆனால் மேல்முறையீட்டில் அந்த தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டப்படி தண்டனை ரத்து செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் பதவி கிடைக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் பொன்முடி விவகாரத்தில் தண்டனை ரத்து செய்யப்பட்டதாக தெரியவில்லை. இருந்தாலும் தற்போது திருக்கோவிலுர் எம்.எல்.ஏ.வாகத் தொடர்கிறார். K. Ponmudy தலைவியும் தொண்டனும்! அதிமுகவை எடுத்துக் கொண்டால், அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே இந்தச் சட்டத்தின் கீழ் பதவியை இழந்தார். மேல் முறையீட்டுக்குச் சென்று தீர்ப்பை ரத்து செய்து மீண்டும் பதவி வகித்தார். எதிர் தரப்பில் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், அதன் தீர்ப்பு வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். அதிமுகவில் எல்.எல்.ஏ.வாக இருந்த பாலகிருஷ்ண ரெட்டியும் இதே போல் பதவி இழந்தவர்தான்.. திமுக அரசைக் கண்டிதது அதிமுக நடத்திய ஒரு போராட்டத்தின் போது கல்வீச்சில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு. வழக்கில இவருக்கு மூன்றாண்டு தண்டனை கிடைக்க பதவி இழந்தார். பல வருடம் கழித்து கடந்தாண்டு இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா இதே சட்டத்தின் கீழ் மோடியை அவதூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்தால் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் பதவி இழந்தார். ஆனால் அவர் வழக்கை நடத்தி தண்டனை ரத்தாகி விட்டது. ராகுல் காந்தி வெறும் அவதூறு குற்றச்சாட்டிலேயே பதவி இழந்ததைச் சுட்டிக்காட்டும் சட்ட நிபுணர்கள் சிலர், சதன் திருமலைக்குமார் மோசடி வழக்கு என்பதால் அவரது பதவி உடனடியாகக் காலியாகி விட்டது என்றுதான் அர்த்தம். அறிவித்து தெளிவுபடுத்த வேண்டியது சட்டப் பேரவைச் செயலகம்தான் என்கின்றனர்.

விகடன் 31 Dec 2025 8:58 pm

புத்தாண்டு அதுவுமா இப்படியா? யூரோஸ்டார் ரயில் சேவையில் பாதிப்பு.. பயணிகள் அவதி!

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கண்டத்தை இணைக்கும் முக்கிய ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக யூரோஸ்டார் ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

சமயம் 31 Dec 2025 8:55 pm

️ மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்: மக்கள் அலைமோதும் கடைத்தெருக்கள்!

️ மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்: மக்கள் அலைமோதும் கடைத்தெருக்கள்! மன்னார் நகர சபை பிரிவில்… The post ️ மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்: மக்கள் அலைமோதும் கடைத்தெருக்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Dec 2025 8:33 pm

டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேலின் அமைதி விருது: பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேலின் அமைதி விருது வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். டிரம்புக்கு அமைதி விருது இஸ்ரேல் நாட்டின் உயரிய குடிமகன் விருதான அமைதி விருது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு வழங்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது இரு நாட்டு தலைவர்கள் புளோரிடாவில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வெளியாகியுள்ளது. So well deserved! President Trump is honored with […]

அதிரடி 31 Dec 2025 8:30 pm

மோடியின் கடிதத்தை தாரிக் ரஹ்மானிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கையளித்தார்!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியா (Khaleda Zia) காலமானதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர… The post மோடியின் கடிதத்தை தாரிக் ரஹ்மானிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கையளித்தார்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Dec 2025 8:19 pm

முசலியில் கிராம உத்தியோகத்தர்கள் வீதியில் இறங்கி போராட்டம்:

முசலி: முசலி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களைக்… The post முசலியில் கிராம உத்தியோகத்தர்கள் வீதியில் இறங்கி போராட்டம்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Dec 2025 8:12 pm

அமைச்சருக்கு அறிவு இருக்கிறதா? சென்னை வந்ததும் காட்டமாக பேசிய ஆதவ் அர்ஜூனா!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவது குறித்து சென்னை விமான நிலையத்தில் டிவிகே ஆதவ் அர்ஜூனா கருத்து தெரிவித்து உள்ளார். அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

சமயம் 31 Dec 2025 7:53 pm

திருச்செந்தூர் கோயிலுக்குள் தவெக-விற்கு அரோகரா கோஷம் ; கோயிலா... பிரசார இடமா?- பக்தர்கள் ஆதங்கம்!

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேச மற்றும் திருவிழா நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். சமீப காலமாக திருச்செந்தூர் கோயில் பிரகாரம், கடற்கரை பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வந்தது. ஆன்மிகத் தலத்தில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் மோகமா? என, அதனை பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. விஜய் படத்தை காட்டிப் பேசும் ரசிகர் இது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. இது குறித்த செய்திகளும் பரவியது. இந்த நிலையில், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அதிகம் கூடும் இடமான திருக்கோயிலின் முன்புள்ள சண்முக விலாச மண்டபம், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், வசந்த மண்டபம், பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் வரிசை, அன்னதானக் கூடம் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டது. அந்த எச்சரிக்கை பதாகையில், “இத்திருக்கோயில் வளாகத்தில் திரைப்படப்பாடல்களை பாடி நடனம் ஆடுவது, அதை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம். தவறும்பட்சத்தில், காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்  உள் பிரகாரத்தில் த.வெ.கவின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து,  தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா என்ற கோஷத்துடன் தரிசனத்திற்காக காத்திருந்த சில பக்தர்களிடம்,  ”நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு செலுத்த வேண்டும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை இருக்காது” எனவும் கூறி சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.    விஜய்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய பக்தர் தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்திய நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக், திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.  அப்புகாரில், கோயிலுக்குள் அரசியல் குறித்து பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.  “திருக்கோயில் வளாகம், கிரிப்பிரகாரம், உள் பிரகாரம், கடற்கரை  உள்ளிட்ட பகுதிகளில் போட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது என திருக்கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் இந்நிலையில், இதனை கண்காணிக்க வேண்டிய கோயில் செக்யூரிட்டிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். பாதுகாப்பு பணியில் யாரும் இல்லையா? இது செக்யூரிட்டிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது. இக்கோயில் வழிபாட்டு தலமா அல்லது கட்சிகளின் பிரசாரத்திற்கான இடமா?” என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.   

விகடன் 31 Dec 2025 7:39 pm

நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்: தரையில் சுழன்றபடி விழுந்த காட்சி

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மாகாணத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை நியூ ஜெர்சி மாகாணத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். CrashVision: Tragic Helicopter Crash in New Jersey! What We Know: Two helicopters collided mid-air and crashed near Hammonton, New Jersey, leaving 1 dead and […]

அதிரடி 31 Dec 2025 7:30 pm

நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாளை (01) சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யும் என கூறப்படுகிறது. பல இடங்களில் மழை பெய்யக்கூடும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் […]

அதிரடி 31 Dec 2025 6:56 pm

தமிழகம் வரும் அமித் ஷா.. எந்த நாளில் வருகிறார் தெரியுமா? எங்கு தங்குவார் தெரியுமா?

தமிழகத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு நடைபெற உள்ளது. முக்கிய ஆலோசனைகள், பொங்கல் கொண்டாட்டங்கள் உட்பட பல செயல்களை முன்னெடுத்துள்ளார்.

சமயம் 31 Dec 2025 6:54 pm

கோவை நிலவரம் இதுதான்: உளவுத்துறை ரிப்போர்ட்; உற்சாகத்தில் திமுக?

2026 ஆங்கில புத்தாண்டை பொது மக்களை விட, அரசியல் கட்சிகள் அதிக ஆர்வத்துடன் வரவேற்று வருகின்றன. சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சியினர் களத்தில் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். இதில் கொங்கு மண்டல அரசியல் களத்தின் சூடு சற்று அதிகமாகவே உள்ளது. திமுக மாநாடு அதிமுகவின் கோட்டையாக உள்ள அந்த பகுதியை கைப்பற்ற திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. புது வரவான தவெகவும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. திமுக மேற்கு மண்டல மகளிரணி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் இலக்கு.” என்றார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 1 தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. கோவை இந்தமுறை கோவையில் அதிமுகவுக்கு இணையாக அல்லது அவர்களை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற திமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. உளவுத்துறை ரிப்போர்ட்டில் கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் மற்றும் கோவை தெற்கு தொகுதி ஆகிய இரண்டும் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் திமுக அதிக உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தான் கோவை மாவட்டத்தில் முதலாவதாக சிங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து திமுக பணிகளை தொடங்கிவிட்டது. செந்தில் பாலாஜி இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், “2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கோவை தங்களின் கோட்டை என்று சொல்ல முடியாத நிலை உருவாகும். தொகுதிக்கு ஒரு தேர்தல் அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். சாதிய ரீதியான கணக்கீடுகளிலும் தெளிவாகவுள்ளோம். கோவையில் கவுண்டர், நாயுடு சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு ஜி.டி. நாயுடு பெயரும், உக்கடம் மேம்பாலத்துக்கு சி. சுப்பிரமணியம் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஒரு வாரத்தில் செம்மொழி பூங்கா, சர்வதேச ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டுள்ளன. செம்மொழிப் பூங்கா அடுத்தடுத்து பெரியார் நூலகம் திறப்பு, சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ளது. இந்தமுறை கோவையை அவ்வளவு எளிதில் விட்டு கொடுக்க மாட்டோம்.” என்றனர். இந்த தகவலால் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பில் அப்செட் ஆகியுள்ளனர்.

விகடன் 31 Dec 2025 6:40 pm

கொழும்பு மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது- 2 உறுப்பினர்கள் இடைநிறுத்தம்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதிகொழும்பு மாநகர சபையின் முதல்வர் வராய் கெலி பால்தசார் சமர்ப்பித்த 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் கிடைத்திருந்தன. இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டாவது

புதினப்பலகை 31 Dec 2025 6:40 pm

Year Ender 2025: இந்த வருசம் கம்மிதான்.. மழைப்பொழிவு இயல்பை விட எத்தனை சதவீதம் குறைவு தெரியுமா?

2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்துள்ளது. அக்டோபர் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சமயம் 31 Dec 2025 6:36 pm

20 ரூபாய் தர மறுத்த மனைவி…கணவர் எடுத்த பயங்கர முடிவு

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில், தன் மனைவி தனக்கு 20 ரூபாய் தர மறுத்தததால் அவரையும் கொன்றுவிட்டு, தன் உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளார் ஒரு கூலித்தொழிலாளி. 20 ரூபாய் தர மறுத்த மனைவி… புதுடெல்லியிலுள்ள கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், தன் மனைவியிடம் செலவுக்காக 20 ரூபாய் கேட்டுள்ளார். அவர் அந்த பணத்தை மது குடிக்க செலவு செய்வார் என நினைத்த அந்தப் பெண் பணம் தர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர், அந்தப் பெண்ணின் […]

அதிரடி 31 Dec 2025 6:30 pm

திருமணத்துக்கு மறுப்பு? - 'கௌரி'சீரியல் நடிகை நந்தினியின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?!

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கௌரி' சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினியின் தற்கொலைக்கான காரணமாக பெங்களூரு போலீசார் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கின்றனர். முன்னதாக இரு தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் தான் வசித்து வந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் நந்தினி. கௌரி தொடரில் கனகா, துர்கா என இரட்டை வேடங்களில் நடித்து வந்த நந்தினி, இதற்கு முன் கன்னட சீரியல்களில் நடித்திருந்தார். திடீரென உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அதற்கான காரணம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. கௌரி சீரியல் தொடரில் அவருடன் நடித்த சிலரிடம் நாம் பேசியபோது, ``தமிழுக்கு இப்பதான் வந்திருந்தாங்க. முதல் சீரியல்லயே இரட்டை வேடம் கிடைச்சதுல உற்சாகமாக இருந்தாங்க. அம்மன் வேடத்துல நடிக்கிறப்பெல்லாம் அவ்வளவு சின்சியரா நடிச்சாங்க. கல்யாணம் ஆகலை. அதேநேரம், காதலன்னு யாரையும் கூட்டி வந்து நாங்க பார்த்ததே இல்லை. அதனால காதல் தோல்வின்னெல்லாம் ஒரு விஷயத்தைச் சொல்லவே முடியாது.. பெரிய பிரச்னையா இருந்தா நிச்சயம் யூனிட்ல யார்கிட்டயாச்சும் சொல்லியிருப்பாங்க. அப்படி எதுவும் சொன்னதா தெரியலை என்றார்கள்.. பெங்களூரு சென்று வந்த சிலரிடம் பேசினோம். ''அவரின் உடலைக் கைப்பற்றி விசாரிச்சப்ப போலீஸ் அவர் எழுதி வச்சதா சில கடிதங்களை எடுத்ததாச் சொன்னாங்க. அதாவது அவங்க அப்பா கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டார். அவர் அரசு வேலையில இருந்தார். வேலையில இருந்த போதே இறந்ததால் கருணை அடிப்படையில் நந்தினிக்கு அரசு வேலை கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க. அதனால வீட்டுல நடிப்பை விட்டுட்டு அந்த வேலைக்குப் போக நந்தினியை வற்புறுத்தினதாகச் சொல்லப்படுது. ஆனா நடிப்புல ஆர்வம் இருக்கிறதால அந்த வேலையில சேர இவருக்கு ஆர்வம் இல்லை. இது தொடர்பா வீட்டுல இருக்கிற மத்தவங்களுக்கும் நந்தினிக்கும் இடையில் பிரச்னை உண்டாகியிருக்கு. 'சீக்கிரம் வேலைக்குப் போயிட்டா ஒரு கல்யாணத்தைச் செய்துடலாம்'ங்கிறதுதான் நந்தினியின் அம்மா உள்ளிட்ட வீட்டாரின் எண்ணம். அதுக்கு அவர் சம்மதம் சொல்லலை. இந்தப் பிரச்னையில கொஞ்சம் மன அழுத்தத்துல இருந்திருக்கிறார்னு போலீஸ் சொல்றாங்க என்கிறார்கள்.

விகடன் 31 Dec 2025 6:18 pm

புத்தாண்டு அதுவுமாக வேலைநிறுத்தம் செய்த ஸ்விகி, ஜொமாடோ ஊழியர்கள்!

ஸ்விகி, ஜொமாட்டோ ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்களுக்கான டெலிவரி சேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

சமயம் 31 Dec 2025 6:18 pm

முதல்வர் புத்தாண்டு பரிசாக இதைக் கொடுக்க வேண்டும்.. பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!

புத்தாண்டு பிறக்கும் நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணி நிரந்தர வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சமயம் 31 Dec 2025 6:04 pm

2026-ல் இத்தனை மாற்றங்களா? இந்தியாவில் விமான நிறுவனங்கள் எடுத்துள்ள முடிவுகள் என்ன தெரியுமா?

2026-ஐ நோக்கி ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை சீர்திருத்தங்களை கொண்டு வர இருக்கின்றன. இந்த பயனுள்ள மாற்றங்கள் இந்தியாவின் விமானப் பயண அனுபவத்தில் மாறுபாட்டை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

சமயம் 31 Dec 2025 6:03 pm

சூப்பரா ஆடுறாரு…இடம் கொடுங்க! சர்பராஸுக்கு ஆதரவாக பேசிய அஸ்வின்!

விஜய் ஹசாரே டிராபி போட்டியில் கோவா அணிக்கு எதிராக சர்பராஸ் கான் வெறும் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 14 சிக்ஸர்கள் அடங்கும். இந்த அபார ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அடுத்த ஐபிஎல் சீசனில் சர்பராஸுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தினார். சையத் முஸ்தாக் அலி டிராபியில் சர்பராஸ் சிறப்பாக விளையாடி ஒரு சதம், […]

டினேசுவடு 31 Dec 2025 5:55 pm

TN vs JHKD: ‘படுமோசமாக சொதப்பிய தமிழ்நாடு அணி’.. டாப் ஆர்டர் மிகவும் மோசம்: ஸ்கோர் விபரம்!

விஜய் ஹசாரே டிராபி 2025 - 2026 தொடரின் லீக் சுற்றில் தமிழ்நாடு, ஜார்கண்ட் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி படுமோசமாக சொதப்பியது. பந்துவீச்சும் மட்டமாக இருந்தது.

சமயம் 31 Dec 2025 5:49 pm

தையிட்டி விவகாரம் ; யாழ் அரசாங்க அதிபரின் தலைமையில் கிடைத்த முதல் வெற்றி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை இன்று (31) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது. திஸ்ஸ விகாரை காணி இந்த சந்திப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று (31) மு.ப 10.00 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் […]

அதிரடி 31 Dec 2025 5:49 pm

முக்கிய அறிவிப்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஸொஹாரா புஹாரி நீக்கம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஸொஹாரா புஹாரி நீக்கம்! கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஸொஹாரா புஹாரி… The post முக்கிய அறிவிப்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஸொஹாரா புஹாரி நீக்கம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Dec 2025 5:43 pm

Sustainable audience growth comes from strong fundamentals, not short term traffic spikes: Akshansh Yadav, CEO, ITV Digital

Mumbai: ITV Digital, the digital arm of ITV Network, has recorded exponential growth in 2025, driven by a focused transformation strategy led by Akshansh Yadav, CEO Digital. The network achieved record gains across revenue, traffic, and audience engagement, even as the wider media industry continued to face structural and monetisation challenges.Taking charge during a phase of organisational transition, Yadav implemented a sharp execution-led approach centred on financial discipline, scalable systems, and sustainable growth. Under his leadership, ITV Digital posted a 185% surge in digital revenue, underscoring a clear shift towards profit-led expansion.The network’s digital platforms witnessed rapid audience momentum, registering six-fold growth in site traffic within just three months. Digital properties continued to scale at nearly 100% month-on-month, while ITV Digital’s YouTube portfolio grew 130% as a group. Flagship video brands consistently delivered 35% MoM growth, establishing video as a core engine of digital expansion.A major industry milestone for the network was its debut in ComScore rankings, where ITV Digital entered ahead of established players such as DNA India, The Wire, WION News, Jio News, NDTV Profit, and Manorama News. The achievement reflects the network’s digital-first strategy and its ability to compete at scale through data-driven execution and audience-centric content.Reflecting on his transition from a Chief Product & Technology role to CEO Digital, Akshansh Yadav said, “The shift required a broader business mindset owning the P&L, leading revenue conversations, and aligning finance, HR, product, and distribution under a common growth vision. The focus has been on building strong fundamentals that enable sustainable scale.” Beyond performance metrics, Yadav has strengthened leadership depth at ITV Digital, with senior heads of Finance, HR, Product, SEO, and Editorial reporting directly to him. His leadership philosophy emphasises clarity, accountability, and empathy, enabling faster decision-making while preserving organisational culture.An active thought leader on LinkedIn, Yadav regularly shares insights on digital media, leadership, productivity, and business strategy, advocating transparent leadership and learning-driven growth.Looking ahead, ITV Digital’s 2026 roadmap includes deepening monetisation strategies, building differentiated digital IPs, and leveraging AI-led efficiencies to further strengthen audience engagement and operational scale. “Digital media today demands speed, discipline, and credibility,” Yadav added . “Our focus is to compound growth by building long-term value, not just short-term scale.” Summing up the network’s growth philosophy, Yadav stated, “Sustainable audience growth comes from strong fundamentals, not short term traffic spikes.” With strong fundamentals and accelerating momentum, ITV Digital continues to strengthen its position as one of India’s fastest-growing digital news networks under Akshansh Yadav’s leadership.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Dec 2025 5:42 pm

பிரியங்கா காந்தி மகனுக்கு நிச்சயதார்த்தம் –பொண்ணு யாரு பாருங்க..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி வதேராவுக்கு ரெஹான் (24) என்ற மகனும், மிரய்யா என்ற மகளும் உள்ளனர். ரைஹான் வத்ரா இதில் ரைஹான் வத்ராவுக்கும், அவரது நீண்டகால தோழியான அவீவா பைக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவீவா பைக் ஒரு தொழில்முறை புகைப்பட கலைஞர் மற்றும் ‘அடெலியர் 11’ என்ற கலை நிறுவனத்தின் இணை நிறுவனர். ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத் தோழியான அவிவா பெய்கை மணக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த ஏழு […]

அதிரடி 31 Dec 2025 5:30 pm

கிளிநொச்சியில் பரபரப்பு; மணல் கடத்தல்காரர் மீது துப்பாகிச்சூடு

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி மற்றும் சந்தேகநபர்கள் வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழிமறித்தவேளை குறித்த டிப்பரானது நிறுத்தாது தொடர்ந்து பயணித்துள்ளது. கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் வீதியூடாக செல்ல முற்பட்ட குறித்த டிப்பர் வாகனத்தை துரத்திச்சென்று பொலிஸாரால் ஐந்து தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டனர். இந்நிலையில் டிப்பர் […]

அதிரடி 31 Dec 2025 5:20 pm

யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் முக்கிய சந்திப்பு!

இன்று காலை யாழ்ப்பாணத்தில், இலங்கையிலுள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான சபையின் (ICCR) பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரகு… The post யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் முக்கிய சந்திப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Dec 2025 5:19 pm

India Inc. 2025: A Year of Maturity, Momentum and Meaningful Growth

2025 marked a clear inflection point for Indian businesses. Across categories, the narrative shifted from rapid catch-up to confident leadership—where scale, sophistication, and consumer intent converged. Whether it was homes becoming smarter, food becoming more functional, insurance becoming more inclusive, or luxury becoming more experiential, the year reflected a deeper alignment between what Indian consumers want and how companies are choosing to grow. Furniture Moves from Aspiration to Identity For Royaloak Furniture, 2025 underlined the coming-of-age of India’s furniture sector. Chairman & Co-Founder Vijai Subramaniam points to an industry that is no longer imitative but influential. With the market nearing USD 30 billion and set for sustained growth, furniture has evolved into an expression of lifestyle rather than a one-time utility purchase.The year saw Indian consumers decisively move away from fast furniture toward durable, certified materials and design-led products that balance modern minimalism with Indian sensibilities. South India remained the anchor market, while East India emerged as a high-growth frontier. Looking to 2026, Royaloak sees smart living, sustainability, and Tier 2–3 city demand as the pillars that will define not just domestic expansion but also the global ambitions of Indian furniture brands. Dairy’s Shift from Single Product to Daily Portfolio In dairy, 2025 was about habit formation. Godrej Jersey, under the marketing leadership of Shantanu Raj, highlighted how value-added dairy—especially flavoured milk—has moved into everyday consumption. Once considered indulgent, these products are now positioned as routine, “good-for-me” refreshments.This behavioural shift reflects a larger transformation of dairy into a full-basket category spanning nutrition, convenience, and functionality. The momentum is being driven by health awareness, label scrutiny, and the search for accessible protein sources. As India looks ahead, value-added, protein-rich dairy is set to be one of the most resilient and scalable FMCG growth engines. Insurance Finds Its Voice with Bharat For the general insurance sector, 2025 was about relevance and reach. At HDFC ERGO General Insurance, Somesh Surana describes a year aligned closely with IRDAI’s 3A framework—Awareness, Accessibility, and Affordability.The industry’s first collaborative campaign, “Acha Kiya Insurance Liya,” marked a milestone in collective storytelling, while HDFC ERGO’s own initiatives—from metro branding to state-level awareness drives—deepened category recall. Digitally, performance marketing, insurtech partnerships, and the growth of the HERE app to 10 million installs reflected a move from transactional selling to mindshare building. Entering 2026, the sector’s focus is firmly on inclusion, especially addressing India’s “missing middle.” Dairy & FMCG: Nutrition Takes Centre Stage At Parag Milk Foods, Executive Director Kshali Shah describes 2025 as paradigm-shifting. Clean labels, high-protein formats, and functional nutrition moved from niche to mainstream, driven by preventive health thinking.The rollout of GST 2.0 further reshaped the category by improving affordability of essentials like UHT milk, cheese, and ghee—benefits that Parag passed directly to consumers. As 2026 approaches, the company sees protein-led innovation, stronger supply chains, and trust-driven branding as the defining forces for dairy and FMCG growth. Jewellery: Trust Over Transactions For the jewellery sector, volatility became a filter. Divine Solitaires Founder Jignesh Mehta notes that rising gold prices in 2025 sharpened consumer selectivity. While traditional jewellery faced pressure, trust-driven categories like solitaires held firm.The year pushed consumers toward purposeful buying—choices rooted in emotion, legacy, and long-term value. Heading into 2026, Divine Solitaires is doubling down on traceability, experiential retail, and digital education, positioning solitaires as symbols of enduring worth rather than commodity-linked purchases. Appliances & HVAC: Scale Meets Self-Reliance At Voltas Ltd., Managing Director Mukundan Menon frames 2025 as a year of mixed signals. Early monsoons led to temporary industry de-growth, but policy tailwinds—such as GST reduction on ACs and upcoming BEE rating revisions—revived momentum.With AC penetration still under 8%, infrastructure expansion and Tier 2–3 city demand continue to fuel long-term optimism. Backed by Atmanirbhar Bharat and PLI schemes, Voltas sees India not just as a consumption market but as a future global manufacturing hub for HVAC and appliances. New-Age Beverages Go Science-Led For Evocus, 2025 was a breakout year. Founder Aakash Vaghela highlights expansion into RTD hydration, the launch of Black Soda for HoReCa, and cultural partnerships as milestones that validated its science-first positioning.The road to 2026 is about scale—wider retail and HoReCa presence, deeper storytelling, and innovation-led launches aimed at making Evocus a global name in functional hydration. Luxury Hospitality Grows Up Luxury travel in India matured rapidly in 2025, according to Evolve Back Resorts. Executive Director Marketing Jose Ramapuram points to strong occupancies and rates, but more importantly, a qualitative shift in guest expectations.Travellers now seek immersion, sustainability, and a sense of place over conventional luxury markers. Technology has become invisible yet essential, while environmental stewardship is no longer optional. As 2026 unfolds, the opportunity lies in blending growth with authenticity and cultural depth. Beauty, Footwear & the Rise of Homegrown Premium In skincare, Fixderma marked 15 years with renewed purpose. Co-founder Shaily Mehrotra reflects on 2025 as a year of trust-building—through education-led initiatives, campus outreach, and science-backed formulations. The focus for 2026 is sharper targeting, wider reach, and continued transparency.Similarly, in footwear, Brune & Bareskin completed a decade by strengthening its craftsmanship-led positioning. Founder Tabby Bhatia notes growing demand in Tier 1 and Tier 2 cities for premium, long-lasting products over fast fashion—an opportunity the brand plans to scale responsibly into India and select global markets. Jewellery Retail: Steady Confidence, Planned Growth At PP Jewellers by Pawan Gupta, Director Piyush Gupta describes 2025 as a year of consistent consumer confidence despite price volatility. Transparency, certified purity, and planned purchases defined buyer behaviour.The roadmap for 2026 centres on enhancing in-store experiences, expanding digital touchpoints, and balancing contemporary design with legacy craftsmanship—reinforcing jewellery as both emotional milestone and long-term investment. The Big Picture Taken together, these perspectives reveal a unifying theme: Indian industries in 2025 chose depth over speed. Consumers became more discerning, regulation more enabling, and brands more accountable. As 2026 approaches, growth is expected to continue—but it will belong to those who combine scale with trust, innovation with responsibility, and ambition with relevance across Bharat.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Dec 2025 5:09 pm

மோகன்லாலின் தாயார் மறைவு: நாங்கள் பேசுவோம், சிரிப்போம்! - நினைவுகளைப் பகிரும் மோகன்லாலின் நண்பர்

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தாகுமாரி இயற்கை எய்தியிருக்கிறார். 90 வயதான இவர் வயது மூப்பு காரணமாக நேற்றைய தினம் கேரளா, கொச்சியிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். மோகன்லாலின் தாயாரின் மறைவுக்கு மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மோகன்லாலுக்கு நெருக்கமானவரும், இயக்குநருமான மேஜர் ரவி, மோகன்லாலின் தாயார் சாந்தா குறித்து மனோரமா ஊடகத்திடம் பேசியிருக்கிறார். Mohanlal with his mom அவர், லாலின் அம்மா இறந்த செய்தியைக் கேட்டதும் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுதுகொண்டே மோகன்லாலைப் பார்க்கப் போனேன். அவரும் உடைந்து போயிருந்தார். அவரது கண்களில் ஆழமான துக்கம் தெரிந்தது. ஆனால் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு எல்லோரையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார். Sreenivasan: ஸ்ரீனி மூலமாக மக்கள் அதை திரையில் கண்டார்கள்! - மோகன்லால் உருக்கம்! அவர் உள்ளே மறைத்து வைத்திருக்கும் வலியை என்னால் பார்க்க முடிந்தது. நான் எப்போது போன் செய்தாலும் மோகன்லால் ‘அண்ணா, அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறார்’ என வருத்தத்துடன் சொல்வார். அதைக் கேட்கும்போதே அவருக்குள் ஏற்பட்ட வலி எனக்குப் புரியும். அம்மா போய்விட்டால் உண்மையிலேயே ஒருவன் தனிமையாகிவிடுகிறான் என்ற பயம் அவருக்குள் இருந்தது. எத்தனை பேர் சுற்றிலும் இருந்தாலும், வேறு யாராலும் நிரப்ப முடியாத பாதுகாப்பின்மை உணர்வு தாயை இழந்த சமயத்தில் வரும். லால் இந்த வலியை வெளிக்காட்டவில்லை. Major Ravi New Film - Mohanlal 1994-ல் லாலை முதலில் சந்தித்தபோது அவர் என்னை முடவன்முகளில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவரது பெற்றோர் இருவரிடமும் நான் ஒரு ராணுவ வீரர் என அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து எங்கள் உறவு சினிமாவைத் தாண்டியதாக உருவெடுத்தது. லாலுக்கும் அவரது அம்மாவுக்கும் இடையிலான பாசத்தைப் பார்க்கும்போது, என் அம்மா உயிரோடு இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். நான் சாந்தாகுமாரியை அடிக்கடி போய்ப் பார்ப்பேன். சில சமயம் அவர் என்னைப் பார்த்து ‘எங்க போயிருந்த?’ என்று கேட்பது போலப் பார்ப்பார். பிறகு நாங்கள் பேசுவோம், தமாஷ் செய்வோம், சிரிப்போம்! நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் என்னை மிகுந்த அன்போடு வரவேற்றார்” எனக் கூறியிருக்கிறார். 'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் - மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்

விகடன் 31 Dec 2025 5:06 pm

ஈபிடிபி (EPDP) தலைவர் டக்ளஸ் தேவானந்தா கைது: பின்னணியும் தற்போதைய நிலையும்!

முன்னாள் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த டிசம்பர்… The post ஈபிடிபி (EPDP) தலைவர் டக்ளஸ் தேவானந்தா கைது: பின்னணியும் தற்போதைய நிலையும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Dec 2025 4:58 pm

khushi mukherjee: சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும்..!- சர்ச்சைக்கு விளக்கம் அளித்த குஷி முகர்ஜி

பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார் என்று சொன்ன விஷயம் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது சில தினங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த குஷி முகர்ஜி, நான் எந்த கிரிக்கெட் வீரருடனும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை. சூர்யகுமார் யாதவ் எனக்கு நிறைய கிரிக்கெட் வீரர்கள் மெசேஜ் அனுப்புவார்கள். அவர் பெயர் கூட, சூர்யகுமார் யாதவ். அவர் எனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார். இப்போது நாங்கள் அதிகம் பேசுவதில்லை, நான் தொடர்பு கொள்ளவும் விரும்பவில்லை. யாருடனும் என்னுடைய பெயர் இணைத்து பேசப்படுவதில் எனக்கு விருப்பமில்லை” என்று கூறியிருந்தார். சூர்யகுமார் யாதவ் குறித்து அவதூறாக கருத்து தெரிவிக்கிறார் என்று குஷி முகர்ஜிக்கு எதிராக எல்லோரும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் குஷி முகர்ஜி இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும் இடையே எந்தவிதமான உறவும் இல்லை. சூர்யகுமார் யாதவ் என் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் தொடர்பில் இல்லை. சர்ச்சைக்குப் பிறகு நான் அவரிடம் பேசவும் இல்லை. என் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தது என்று கூறியிருக்கிறார்.

விகடன் 31 Dec 2025 4:56 pm

Rewind 2025: ஒரே ஆண்டில் தங்கம் ரூ.47,000, வெள்ளி ரூ.183 உயர்வு - கடந்து வந்த பாதை

ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை தான் பெரியளவில் உயர்ந்திருக்கும். அதற்கான ரீவைண்டைப் பார்ப்போம். ஆனால், இந்த ஆண்டு தங்கம், வெள்ளி என இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தது. சொல்லப்போனால், இந்தப் போட்டியில் தங்கத்தை விட, வெள்ளி அதிக சதவிகிதம் உயர்ந்தது. சென்னையில் இந்த ஆண்டின் முதல் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றத்தைப் பார்க்கலாம். தங்கம், வெள்ளி ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? ஜனவரி 2025-ம் ஆண்டின் ஜனவரி 1-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.7,150 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.57,200 ஆகவும் விற்பனையானது. அடுத்த இரண்டு நாள்களிலேயே (ஜனவரி 3), தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,260 ஆகவும், பவுனுக்கு ரூ.58,080 விற்கப்பட்டது. அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, ஜனவரி 16-ம் தேதி, கிராமுக்கு ரூ.7,390 ஆகவும், பவுனுக்கு ரூ.59,120 ஆக விற்பனையாகி அடுத்த உச்சத்தைத் தொட்டது. ஜனவரி 22-ம் தேதி, பவுனுக்கு ரூ.60,000-யும், ஜனவரி 31-ம் தேதி, பவுனுக்கு ரூ.61,000-யும் தாண்டி விற்பனையானது. 2025-ம் ஆண்டின் ஜனவரி மாதம், ஒரு கிராம் வெள்ளி ரூ.98-ல் தொடங்கி ரூ.107 வரை உயர்ந்தது. பிப்ரவரி பிப்ரவரி மாதம் 4-ம் தேதி கிராமுக்கு ரூ.7,810-க்கும், பவுனுக்கு ரூ.62,480-க்கும் விற்பனை ஆனது. அடுத்த நாளே (பிப்ரவரி 5), தங்கம் கிராமுக்கு ரூ.7,905 ஆகவும், பவுனுக்கு ரூ.63,240 ஆகவும் விற்பனை ஆனது. பிப்ரவரி 20-ம் தேதி, கிராமுக்கு ரூ.8,070 ஆகவும், பவுனுக்கு ரூ.64,560 ஆகவும் விற்பனை ஆனது. பிப்ரவரி 19-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,000-த்தை தொட்டது. இவை நான்கும் பிப்ரவரி மாதத்தின் உச்சங்களாகும். மார்ச் மார்ச் மாதம் 14, 18, 31-ம் தேதிகளில் தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டது. 14-ம் தேதி பவுனுக்கு ரூ.65,840 ஆகவும், 18-ம் தேதி பவுனுக்கு ரூ.66,000 ஆகவும், 31-ம் தேதி பவுனுக்கு ரூ.67,400 ஆகவும் விற்பனை ஆகி உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.105 முதல் ரூ.113 வரை சென்றது. தங்கம், வெள்ளி உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்! ஏப்ரல் ஏப்ரல் மாதம் பவுனுக்கு 1-ம் தேதியே புதிய உச்சம் தான். ஒரு பவுன் தங்கம் ரூ.68,080-க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கம் 11-ம் தேதி 69,960-க்கும், 12-ம் தேதி ரூ.70,160-க்கும் விற்பனை ஆனது. ஏப்ரல் 10-ம் மற்றும் 12-ம் தேதிகளில் மட்டும் இரண்டு நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 உயர்ந்திருந்தது. அடுத்து 17, 21, 22-ம் தேதிகளில், பவுனுக்கு முறையே ரூ.71,360-க்கும், ரூ.72,120-க்கும், ரூ.74,320-க்கும் விற்பனை ஆனது. இவை அனைத்துமே ஏப்ரல் மாதத்தின் உச்சங்களாகவும். ஏப்ரல் மாதம் வெள்ளி விலை பெரும்பாலும் இறங்குமுகமாகவே இருந்தது. மே மே மாதம் தங்கம் விலை இறங்குமுகத்தில் தான் இருந்தது. பவுனுக்கு ரூ.68,880 வரை சென்றது. வெள்ளி விலையும் அதே நிலையில் தான் இருந்தது. ஜூன் ஜூன் மாதம் சற்று ஏறியது தங்கம் விலை. பவுனுக்கு ரூ.74,360 வரை ஏற்றத்தில் சென்றது. ஆனால், அது விட்ட இடத்தைப் பிடிப்பது போன்றது தான். ஆனால், ஜூன் மாதம் வெள்ளி நல்ல ஏற்றத்தைக் கண்டது. கிராமுக்கு ரூ.122 வரை சென்றது. ஜூலை ஜூலை 23-ம் தேதி மட்டும், பவுனுக்கு ரூ.75,040 ஆக விற்பனை ஆனது. இது புதிய உச்சம். மேலும், ஜூலை 1-ம் தேதி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.9,000-ஐ தாண்டி நடைப்போட தொடங்கியது. தங்கம், வெள்ளி 2026-ம் ஆண்டும் தங்கம் விலை உயரும்; அதற்கு 'இந்த' 3 விஷயங்கள் தான் காரணம்! ஆகஸ்ட் ஆகஸ்ட் மாட்தம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.73,000-ல் இருந்து ரூ.75,000 வரை விற்பனை ஆன்னது. இன்னொரு பக்கம், வெள்ளி புதிய புதிய உச்சங்களைத் தொட்டு, கிராமுக்கு ரூ.134 வரை சென்றது. செப்டம்பர் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்தே உச்சங்கள் தான். செப்டம்பர் 1, 3, 6, 9,16, 23,27, 30 தேதிகளில் பவுனுக்கு முறையே ரூ.77,640, ரூ.78,440, ரூ.80,040, ரூ.81,200, ரூ.82,240, ரூ.84,000, ரூ.85,120, ரூ.86,880 என விற்பனை ஆனது. இவை அனைத்துமே உச்சங்கள் ஆகும். வெள்ளி விலை ரூ.161 வரை சென்றது. அக்டோபர் செப்டம்பர் மாதிரி, அக்டோபர் முதல் தேதியிலேயே புதிய உச்சம் தான். செப்டம்பர் 1-ம் தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.87,120-க்கு விற்பனை ஆனது. 6, 8, 14, 17 தேதிகளில் முறையே ரூ.88,480, ரூ.90,400, ரூ.94,600, ரூ.97,600 ஆகவும் விற்பனை ஆனது. இந்த மாதம் வெள்ளி விலை ரூ.207 வரை சென்றது. இதே மாதம் தான் தங்கம் விலை கிராமுக்கு ரூ.11,000-த்தை தாண்டி அடியெடுத்து வைத்தது. அக்டோபர் 20-ம் தேதி, அதாவது தீபாவளிக்கு பிறகு, தங்கம் விலை இறங்குமுகத்தை நோக்கி நகர தொடங்கியது. நவம்பர் நவம்பர் மாதம் பெரியளவில் மாற்றமில்லை. தங்கம் 2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள் டிசம்பர் டிசம்பர் மாதம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. அது டிசம்பர் 15-ம் தேதியன்று. டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்கு மேல் ஏறுமுகத்தில் தான் இருந்தது தங்கம் விலை. அது பவுனுக்கு ரூ.1,04,000-த்தை தாண்டி சென்றது. ஆனால், கடந்த மூன்று நாள்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தற்போது தங்கம் கிராமுக்கு ரூ.12,480 ஆகவும், பவுனுக்கு ரூ.99,840 ஆகவும் விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.281 வரை சென்ற வெள்ளி விலை இன்று ரூ.257-க்கு இறங்கி உள்ளது. ஆக, 2025-ம் ஆண்டு மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.5,080-உம், பவுனுக்கு ரூ.46,960-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.183 உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டும் (2026), தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்! அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?அதிர்ச்சி வேண்டாம் மக்களே!

விகடன் 31 Dec 2025 4:55 pm

கோவை: 'ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா, வழிதவறிய யானை' - ஜூலை டூ டிசம்பர் I Photo Flashback

ஜூலை 2025 - அதிமுக பொதுச்செயலாளரின் பிரச்சார பயணம் தொடக்கம் ஜூலை 2025 - தொடர் மழையினால் முழுகொள்ளளவை எட்டிய ஆழியார் அணை அக்டோபர் 2025 - தமிழகத்தை நீளமான முதல் மேம்பாலம் ஜீ .டி நாயுடு பாலம் என பெயர் வைக்கப்பட்டது அக்டோபர் 2025 - கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் முதல்வர் கலந்துகொண்ட புத்தொழில் மாநாடு அக்டோபர் 2025 - முதல் நாள் ஜீ .டி நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அக்டோபர் 2025 - கோவை ஜீ.டி கார் அருங்கட்சியத்தில் புதியதாக திறக்கப்பட்ட ரேஸ் கார் பகுதி அக்டோபர் 2025 - விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்தி வந்த காட்டுயானை ரோலக்ஸ் பிடிக்கப்பட்டது அக்டோபர் 2025 - கோவையில் தீபாவளி கொண்டாட்டம் அக்டோபர் 2025 - துணை ஜனாதிபதியான பின் முதல் முறையாக கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நடந்த பாராட்டுவிழா நவம்பர் 2025 - கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை நவம்பர் 2025 -45 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு நவம்பர் 2025 -45 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு நவம்பர் 2025 - கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் டிசம்பர் 2025 - கோவை விழாவின் ஒரு பகுதியாக பழமையான கார்கள் கண்காட்சி டிசம்பர் 2025 - வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த யானைகள் டிசம்பர் 2025 - செம்மொழி பூங்கா பொதுமக்களுக்கு திறப்பு டிசம்பர் 2025 - செம்மொழி பூங்கா பொதுமக்களுக்கு திறப்பு டிசம்பர் 2025 - இ-பைலிங் நடைமுறைக்கு எதிராக நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 2025 -கோவையில் சர்வதேச அளவில் மாநகராட்சியால் உருவாக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் டிசம்பர் 2025 - கோவை தெற்கு பா.ஜ.க மாநாட்டில் கலந்துகொண்ட இருகட்சி தலைவர்கள் கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' - ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback

விகடன் 31 Dec 2025 4:55 pm

கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது!

கிரிபாட்டி :உலகில் முதலாவதாக 2026 புத்தாண்டு கிரிபாட்டி (கிரிபாட்டி) தீவில் பிறந்துள்ளது. மத்திய பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்நாடு சர்வதேச தேதி கோட்டுக்கு கிழக்கே உள்ளதால், உலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்கும் இடமாக திகழ்கிறது. குறிப்பாக கிரிட்டிமாட்டி (கிறிஸ்துமஸ் தீவு) என்றழைக்கப்படும் பகுதியில் முதலில் புத்தாண்டு தொடங்கியது.இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணி அளவில் கிரிபாட்டியில் புத்தாண்டு தொடங்கியது. சுமார் 1.37 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் பக்தர்களும் மக்களும் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். […]

டினேசுவடு 31 Dec 2025 4:37 pm

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் (31.12.2025) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் நோக்கம் எனத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக […]

அதிரடி 31 Dec 2025 4:36 pm

Instamart brings viral New Year’s eve grape ritual to life with on-ground activation in Mumbai

Mumbai: As New Year’s Eve traditions continue to be shaped by social media, Instamart, India’s pioneering quick commerce platform, turned a viral internet trend into a real-world cultural moment. Drawing inspiration from the Spanish ritual of eating 12 grapes at midnight to manifest luck and good fortune, Instamart brought the meme-worthy phenomenon to the streets of Mumbai with a playful on-ground activation.The move followed striking consumer behaviour observed on the platform. Last New Year’s Eve, Instamart recorded a 22x surge in searches for grapes and a 40x jump in orders, with Delhi leading the spike, followed closely by Mumbai and Bengaluru. What was once an everyday fruit had suddenly become a New Year’s Eve essential, fuelled by social media chatter and shared cultural curiosity.Capitalising on this insight, Instamart rolled out a tongue-in-cheek activation in Bandra and Carter Road, where a giant grape accompanied by four “bodyguards” carrying Instamart bags was spotted roaming the streets. The visual instantly grabbed attention, sparked conversations, and became a magnet for photos and videos.Unsurprisingly, the activation quickly found its way online, turning into meme fodder across Instagram and troll pages. From jokes about grapes receiving more security than celebrities to quips about manifesting luck under tables, the campaign resonated with internet humour and festive spontaneity. One Instagram post read, “2026 mein waise bhi duniya khatam hai, kam se kam luck toh lelo! 12 grapes ready rakho,” while another joked, “ab New Year’s pe grapes khaane ki tayaari hogi.”[caption id=attachment_2486539 align=alignleft width=200] Mayur Hola [/caption]Commenting on the trend, Mayur Hola, Head of Brand at Swiggy, said, “Culture seldom announces itself with a drumroll, it quietly shows up in our carts. Last New Year’s Eve, we saw grapes go from a fruit to one of the most sought-after items in cities like Delhi, Mumbai, and Bengaluru. India had adopted its own twist on the 12-grape ritual. So we decided to have a little fun with it. If grapes were going to be the star of the night, Instamart would be the stage because when a moment becomes a movement, we’re right there delivering it.” The response was immediate and organic, with crowds engaging enthusiastically on the ground and social media amplifying the moment in real time. By blending live consumer data, internet culture, and street-level storytelling, Instamart once again reinforced its positioning as more than a convenience platform—reflecting how India shops, celebrates, and participates in emerging cultural moments.Viralbhayani: View this post on Instagram A post shared by Viral Bhayani (@viralbhayani) Trolls Official: View this post on Instagram A post shared by Trolls Official (@trolls_official) AdultSociety: View this post on Instagram A post shared by THE ADULT SOCIETY (@adultsociety) FilmyKalakar: View this post on Instagram A post shared by FilmyKalakar (@filmykalakar) Dekhbhai: View this post on Instagram A post shared by DekhBhai ️ (@dekhbhai) Error69: View this post on Instagram A post shared by DekhBhai ️ (@dekhbhai) Satirelogy: View this post on Instagram A post shared by Satirelogy™ by Suryabhan Kumar (@satirelogy)

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Dec 2025 4:17 pm

எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?- தி.மு.க. அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

சென்னை :திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சாமானியர் ஒருவர் மீது இரு இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர் காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கட்டணங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது […]

டினேசுவடு 31 Dec 2025 4:05 pm

'எஸ்.பி ஆபீஸுக்கு போய் வீலிங் வீடியோ போடப் போறோம்'- ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்... 'திருத்திய'போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று சாகசங்கள் செய்து அதனை  ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா மற்றும்  முகநூலில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்பவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீஸார் தேடிப் பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில்  நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில் பேசிய வாலிபர் ஒருவர், காய்ஸ் நாம மாவட்ட எஸ்.பி ஆபீஸுக்கு உள்ளேபோய், வண்டியை திருகி வீடியோ போடப்போறோம். முடிந்தால் போலீஸ்காரன் (அச்சில் ஏற்றமுடியாத வார்த்தை) தூக்குறானா பாப்போம். அதனால இந்த வீடியோவை ட்ரென்ட் பண்ணி விடுங்க என பேசியிருந்தார். போலீஸ் எஸ்.பி அலுவகத்துக்கே போய் ரீல்ஸ் எடுப்போம் எனவும், முடிந்தால் காவல்துறையினர் தங்களை கைது செய்து பார்க்கட்டும் என்ற ரீதியில் வாலிபர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த வாலிபரை போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் வினீத்(22) என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் வெளியிட்ட வீடியோவில், நாங்கள் எஸ்.பி ஆப்பீஸின் முன்னால் பைக்கில் சென்று சாகசத்தில் ஈடுபடுவோம் என ரீல்ஸ் வெளியிட்டோம். இதை சோசியல் மீடியாவில் பார்த்து போலீஸார் எங்களை அழைத்து அறிவுரை தந்தார்கள். நாங்கள் இதுபோன்ற தப்பை பண்ணமாட்டோம். நீங்களும் யாரும் அதுபோன்று செய்யவேண்டாம். டிராபிக் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க என அந்த வாலிபர் வீடியோ வெளியிட்டுள்ளார். போலீஸ் அறிவுரை சொன்னபிறகு வீடியோ வெளியிட்ட வினீத் அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1544 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வரப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 80 தற்காலிக சோதனைச்சாவடிகள், சுமார் 54 நான்கு சக்கர ரோந்துகள், 27 இருசக்கர வாகன ரோந்து அமைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் காவல்துறை தீவிரமாக கண்காணித்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் கடலில் இறங்கி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. இசை நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடல்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக மற்றும் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக சமூகவலைதளங்களில் பதிவு செய்பவர்கள் கண்காணிக்கப்படுவர். இருசக்கர வாகன சாகசங்கள் தொடர்பாக பொதுமக்கள் 7708239100 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம். 18 வயதிற்க்கு கீழ் உள்ள இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று ANPR கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு 160 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் ANPR கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விகடன் 31 Dec 2025 3:57 pm

தையிட்டி போராட்டத்தில் காலை வாரிய தேசிய மக்கள் சக்தியினர்

தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண்டித்து வலி. வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியினரை தவிர ஏனைய உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டனர். வலி. வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது, கடந்த 21ஆம் திகதி தையிட்டி விகாரை முன்பாக […]

அதிரடி 31 Dec 2025 3:55 pm

மத்திய அரசின் அக்னிபாத் திட்டம்!

Agneepath Scheme: நாட்டை பாதுகாத்து வரும் இந்திய ஆயுதப் படைகளில் இளைஞர்களுக்கு நான்கு ஆண்டு காலத்திற்கு பணி நியமனம் வழங்கும் நோக்கத்தில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 31 Dec 2025 3:51 pm

ஒரே மாதிரி வீடியோ வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ், மனைவி ஸ்ருதி: அதில் இருந்தவரை பார்த்து மிரண்ட ரசிகர்கள்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரின் மனைவி ஸ்ருதி ஆகியோர் இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்ட வீடியோவை பார்த்த சினிமா ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. அதற்கு காரணம் அந்த வீடியோவில் இருந்த ஒருவர்.

சமயம் 31 Dec 2025 3:47 pm

தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை.. எதற்கு நீங்கள் ஆட்சியில்.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாக திமுக அரசை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்து உள்ளார்.

சமயம் 31 Dec 2025 3:45 pm

தையிட்டி விகாரை நில விவகாரம்: 4 கட்டங்களாக காணிகளை விடுவிக்க மாவட்ட செயலர் உறுதி!

தையிட்டி விகாரை நில விவகாரம்: 4 கட்டங்களாக காணிகளை விடுவிக்க மாவட்ட செயலர் உறுதி! தையிட்டி விகாரைக்காக… The post தையிட்டி விகாரை நில விவகாரம்: 4 கட்டங்களாக காணிகளை விடுவிக்க மாவட்ட செயலர் உறுதி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Dec 2025 3:44 pm

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 31-12-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01-01-2026: தமிழகத்தில் ஒருசில […]

டினேசுவடு 31 Dec 2025 3:39 pm

Titan Company names Sandhya Venugopal Sharma as Chairperson

Bengaluru: Titan Company Limited has appointed senior IAS officer Sandhya Venugopal Sharma as its new Chairperson and Additional Director, following a nomination by the Tamil Nadu Industrial Development Corporation Limited (TIDCO), a co-promoter of the company.The appointment was cleared by Titan’s Board through a circular resolution passed on December 29, 2025, and will come into effect from January 4, 2026, according to regulatory disclosures filed by the company.Sharma, a 1995-batch IAS officer of the Tamil Nadu cadre, has been appointed as a Non-Executive, Non-Independent Additional Director, and will be liable to retire by rotation. She will take over the role of Chairperson from the current officeholder, who will continue to serve on Titan’s Board as a Director.Currently serving as Managing Director of TIDCO, Sharma brings extensive experience across public administration, industrial development, finance, education, and science policy. Most recently, she was on central deputation with the Department of Space, where she served as Joint Secretary and later Additional Secretary in Bengaluru between April 2019 and October 2025, contributing to key national space and science initiatives.Earlier in her career, Sharma played a pivotal role in education reform as State Project Director of the Swarna Shikshan Abhiyan during her deputation to the Government of Karnataka. The programme involved large-scale interventions funded by the Central and State Governments, along with multilateral agencies including the World Bank, DFID, and UNICEF.Her professional journey also includes senior roles within the Tamil Nadu government, such as Commissioner of Archives and Historical Research, assignments in departments including Commercial Taxes and Education, a stint with the Tamil Nadu Public Service Commission, and district-level postings in Chengalpattu and Tirunelveli.Titan Company confirmed that Sharma is not related to any Director, Key Managerial Personnel, or Promoters of the company, and is not barred by SEBI or any other authority from accessing capital markets or holding directorships in listed entities.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Dec 2025 3:35 pm

கோவை: பேக்கரியில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த். இந்த இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கோவை கடந்த டிசம்பர் 15-ம் தேதி அவர்கள் இருவரும் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்குச் சென்றுள்ளனர். அப்போது கடையிலிருந்த இரண்டு நபர்கள், வட மாநில இளைஞர்களிடம் தமிழில் ஏதோ கேட்டுள்ளனர். தங்களுக்குப் புரியாததால் வட மாநிலத் தொழிலாளர்கள் சைகை மூலம் விளக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 2 பேர் கொண்ட கும்பல், திடீரென்று இரண்டு தொழிலாளர்களையும் கடுமையாகத் தாக்கினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்தித் தாக்கியுள்ளனர். திருத்தணி: எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாதா? - சந்தோஷ் நாராயணன் கோவை வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் அருகில் இருந்தவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி வட மாநில இளைஞர்களைப் பத்திரமாக மீட்டனர். தாக்குதல் நடத்திய நபர்கள் வட மாநில இளைஞர்களை மிரட்டிவிட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த வட மாநிலத் தொழிலாளர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகிப் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய அந்த மர்ம ஆசாமிகளைத் தேடி வருகிறார்கள். திருத்தணி: வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்தில் நடந்தது என்ன?- ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்

விகடன் 31 Dec 2025 3:33 pm

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: மணிக்கு 180 கி.மீ டெஸ்ட்- சென்னை ஐ.சி.எஃப் அடுத்த மெகா அப்டேட்!

மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் விடப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் 2026ல் புதிய ரயில் தயாரிப்பு தொடர்பாக சென்னை ஐ.சி.எஃப் சில தகவல்களை பகிர்ந்துள்ளது.

சமயம் 31 Dec 2025 3:33 pm