அமெரிக்க நகர தெருவுக்கு வங்காளதேச கலிதா ஜியா பெயர்
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ஹாம்ட்ராம்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தெருவுக்கு வங்காளதேச முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவை கவுரவிக்கும் வகையில் ‘கலிதா ஜியா தெரு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்க தேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி காலமானார். கலிதா ஜியா வங்காளதேசத்தில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர். இந்தநிலையில் ஹாம்ட்ராம்க் நகரில் உள்ள […]
பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் சபாத் இல்லம் நேற்று (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது. பொத்துவிலைச் சேர்ந்த தமீம் எனப்படுபவர் சுற்றுலா ஹோட்டல் செய்வதற்காக ஒருவருக்கு விற்பனை செய்த இந்த இடத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் பெற்று ஹோட்டல் அன்ட் ரெஸ்டாரண்டாக இயக்கி வந்தார் . அத்துடன் இஸ்ரேலியர்கள் ஒன்று சேறும் இடமாகவும் பயன்பாடுத்தி வந்த நிலையில் அங்கு இஸ்ரேலர்கனின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதான சபாத் […]
கொலையாளிகளிற்கு அனுர பதவியுயர்வு?
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள லெப்டினன்ட் கர்னல் எரந்த ரதீஷ் பீரிஸ், கேர்னல் பதவியிலிருந்து பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேர்னல் எரந்த ரதீஷ் பீரிஸ் என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட சந்தரப்பத்தில் கிரிதலே இராணுவ புலனாய்வு பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன்ட் கேர்னல் ஷம்மி குமாரரத்னவின் கீழ் பணியாற்றிய மேஜர் ஒருவர் ஆவார். இந்த வழக்கில் அவரது தொடர்பு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு பல ஆண்டுகளாக மேற்கொண்ட விசாரணைகளில் ஏராளமான ஆதாரங்களை இணைத்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆரம்பித்த முறையான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, எரந்த பீரிஸ் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கிரிதலே முகாமில் பணியாற்றியுள்ளார். இதேவேளை, இந்த முகாமில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் பிரகீத் கடத்தல்களில் நேரடியாக ஈடுபட்டதற்கான சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றத்தில் எரந்த பீரிஸ் ஈடுபட்டிருப்பதை நிரூபிக்க குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உள்ள வலுவான ஆதாரம் தொலைபேசி தரவுகளின் பகுப்பாய்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்திலிருந்து பெறப்பட்ட இரகசிய தகவல்களின்படி, நான்கு மூத்த அதிகாரிகள் இன்று (11.01.2026) முதல் தற்காலிக பிரிகேடியர்பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆவணத்தின்படி, எரந்த பீரிஸுடன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அருச்சுனாவிடம் அனுரவின் துப்பாக்கி
அனுர அரசிடம் தான் கைத்துப்பாக்கி பெற்றுக்கொண்டதாக தனது முகநூலில் ஏற்றுக்கொண்டுள்ளார் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன். தன் இனத்திற்காக தன்னை இழப்பதற்கு தயாராக இல்லாதவனால் ஒரு இனத்தின் வழிகாட்டியாக மாற முடியாது. இது எங்களுக்கு காலம் சொல்லித் தந்த பாடம்! தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவன் தன் இனத்தையும் பாதுகாக்க போவதில்லை. நீங்கள் கேட்கின்ற சகல கேள்விகளுக்கும் உரிய ஒரே ஒரு பதில். ஆம் அரசாங்கம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு தர மறுத்திருக்கிறது. ஆதலால் என்னை நானே பாதுகாப்பதற்காக அரசாங்கம் அனுமதி அளிக்கப்பட்ட துப்பாக்கியை தந்திருக்கிறது. வேறு ஏதாவது கேள்விகள் இருக்கிறதா? ஏன முகநூலில் பதிவிட்டுள்ளார் அருச்சுனா.
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு தலையிட வேண்டும்!
இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், அங்குள்ள தமிழ் மக்களின் உரிமைகளை மேலும் நசுக்கும் வகையில் அமைந்துவிடக்… The post இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு தலையிட வேண்டும்! appeared first on Global Tamil News .
அனுர அரசை தொடர்ந்தும் இந்தியா நம்பமறுத்துவருகின்ற நிலையில் சலுகைகளை அள்ளிவீசி கைகளுள் வைத்துக்கொள்ள முற்பட்டுள்ளது. இந்தியா அரசின் உதவியுடன் வடக்கு ரயில் பாதையின் முழுமையான சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்கும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக ரயில் பாதை சேதமடைந்தது, அதன்படி, மஹாவாவிலிருந்து ஓமந்தை வரையிலான ரயில் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் நிறுத்தப்படவுள்ளது. இந்தியா அரசின் உதவியில் சுமார் 5 மில்லியன் டொலர்கள் இந்த கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடைப் பட்டியலில் கல்முனை டாக்டர் ரயீஸ் மற்றும் 11 அமைப்புகள்!
முக்கிய அறிவிப்பு: பயங்கரவாத தடைப் பட்டியலில் கல்முனை டாக்டர் ரயீஸ் மற்றும் 11 அமைப்புகள்! பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால்… The post பயங்கரவாத தடைப் பட்டியலில் கல்முனை டாக்டர் ரயீஸ் மற்றும் 11 அமைப்புகள்! appeared first on Global Tamil News .
உக்ரைன் மீது புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போராட்டத்தை முடிக்க முயற்சிகள் நடைபெற்று வந்தபோது, ரஷ்யா புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் 20 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை உடனடியாக நடந்த தாக்குதலில், கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். கத்தார், […]
video link- https://fromsmash.com/I.artrL53W-dt மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு மையவாடி-பயனற்று போகும் தற்காலிக தீர்வுகள் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி அண்மையில் எற்பட்ட டிக்வா புயல் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடும் காற்றுடன் கூடிய கடும் கடற்கொந்தளிப்பு காரணமாக தினமும் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. இதனால் இம்மையவாடியில் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான கடலரிப்பு […]
சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க.. ஆணையம் வேண்டுகோள்!
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே, போகி நாளில் விமான சேவைகள் பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெற முடியும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்து உள்ளது.
“சவால்களைக் கடந்து நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்”டக்ளஸ் தேவானந்தாவிற்கு கங்காராம விகாராதிபதி ஆசி!
சிறையிலிருந்து பிணையில் விடுதலையான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இன்று கொழும்பு கங்காராம… The post “சவால்களைக் கடந்து நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்” டக்ளஸ் தேவானந்தாவிற்கு கங்காராம விகாராதிபதி ஆசி! appeared first on Global Tamil News .
“மேற்கத்திய மக்களே, உங்கள் கஷ்டங்களுக்கு ரஷ்யா காரணமல்ல!”
சமீபகாலமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து… The post “மேற்கத்திய மக்களே, உங்கள் கஷ்டங்களுக்கு ரஷ்யா காரணமல்ல!” appeared first on Global Tamil News .
போலி வங்கி கணக்குகள்… நூதன முறையில் ரூ.11 கோடி மோசடி –ஒடிசாவில் கும்பல் கைது
பூரி, ஒடிசாவின் கந்தமால் மாட்டத்தில் தனிநபர்களின் பெயர்களில் போலியாக வங்கி கணக்குகள் தொடங்கி, அவற்றின் உதவியுடன் நூதன முறையில் ரூ.11 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி உதவி போலீஸ் சூப்பிரெண்டு ராமேந்திர பிரசாத் கூறும்போது, 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள், வெவ்வேறு பெயர்களில் போலியாக வங்கி கணக்குகளை தொடங்கி, சைபர் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, அவர்கள் பயன்படுத்தி கொள்ள உதவியாக அவற்றை […]
சம்மாந்துறை சிறுவர் பூங்கா நவீன மயப்படுத்தப்பட உள்ளது-தவிசாளர் மாஹிர் நேரில் ஆய்வு
சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்து, நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் திட்டத்தின் கீழ், பிரதேச சபை தவிசாளர் மாஹிர் இன்று (11) பூங்காவிற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, பூங்காவின் தற்போதைய நிலைமைகளை அவதானித்த தவிசாளர், அங்கு வருகை தந்திருந்த சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பூங்காவில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களின் தரம் குறித்து பயனாளர்களின் கருத்துக்கள் இதன்போது விரிவாகப் பெறப்பட்டன. […]
வற்றாப்பளையில் சிதைந்துபோயுள்ள வீதிகள்: மக்கள் அவதி –நேரில் சென்று ஆராய்ந்தார் ரவிகரன்!
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு (G.N Division) கிராம அலுவலர் பிரிவில் உள்ள… The post வற்றாப்பளையில் சிதைந்துபோயுள்ள வீதிகள்: மக்கள் அவதி – நேரில் சென்று ஆராய்ந்தார் ரவிகரன்! appeared first on Global Tamil News .
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு 300 ரன்களை எடுத்துள்ளது. பவர் பிளேவில் இந்திய அணி சொதப்பலாக பந்துவீசியதால்தான், நியூசிலாந்து அபாரமாக செயல்பட்டது.
தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!
திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கரூர் மற்றும் திருச்சியில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது கண்டறியப்பட்டு, 15 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு துறை தரப்பில் விசாரித்தோம். கரூர் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் 15 வயது சிறுமி கடந்த 2021- ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் அந்த சிறுமிக்கு இத்தகைய கொடுமை அரங்கேறியுள்ளது. இப்படி, தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமிக்கு, கடந்த 2023 - ம் வருடம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அந்த குழந்தையை தனியார் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றதால், மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பிறகு, காவல்துறை அணுகியபோது அந்த சிறுமி தரப்பு குழந்தையை பெற்றுக்கொள்ள மறுத்ததால், திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு, இந்த விவகாரம் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 23 - ம் தேதி குழந்தைகள் நலக்குழு சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிறுமியின் குடும்பத்தினருக்கு கடிதம் அனுப்பியதோடு, கடந்த 3 - ம் தேதி அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டோம். trichy அந்த சிறுமியை அவரின் தாத்தா, அங்கிருந்த இளைஞர், மற்றொரு முதியவர், மற்றும் நெருங்கிய உறவினர்கள் என்று பலரும் தன்னை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்த சிறுமி கூறினார். அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பிறகு, சிறுமியின் தாய், தாத்தா உள்ளிட்ட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. விசாரணை போய்க்கொண்டிருக்கிறது என்றார்கள். 15 வயது சிறுமி ஒருவருக்கு அவரது தாத்தா உள்ளிட்ட உறவினர்களே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
CPRF பயிற்சி மையத்தில் அடிப்படைப் பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பு விழா | Photo Album
''இதுவொரு முக்கியமான மைல்கல் - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!
பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம். போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. போரூர் - வடபழனி வழித்தடத்தில் சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று காலை சோதனை ஓட்டத்தை நடத்தியது. சென்னை மெட்ரோ டவுன் லைனில் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தியவர்கள் கூடிய விரைவில் இதேபோல அப் லைனிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அந்த வழித்தடம் திறக்கப்படும் தேதி குறித்து சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர், இன்று சோதனை ஓட்டம் நடத்தினோம். அது வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இதுவொரு முக்கியமான மைல்கல். கடந்த ஜூன் மாதத்தில் பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை சோதனை ஓட்டம் நடத்தினோம். அதன் வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை மெட்ரோ இருந்தால்தான் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வடபழனி மெட்ரோவிலிருந்து போரூர் செல்லும் வழித்தடத்திற்கு லிங்க் பிரிட்ஜ் அமைத்திருக்கிறோம். மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் கடந்த நான்கு மாதங்களாக போரூர் - வடபழனி வழித்தடத்தின் மின்சாரம், டிராக் ஆகியவற்றுக்காக எங்களின் சி.எம்.ஆர்.எல் ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த மாத முடிவிற்குள் முழுமையான வேகத்தில் சோதனை நடத்தவிருக்கிறோம். வேகத்திற்கான சான்றிதழ், வழித்தடத்தின் ஆய்வு கூடிய விரைவில் நடைபெறும். பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே சேவை தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான பாதையின் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும். எனக் கூறினார்.
கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டத்தில் குதிக்கவுள்ள முன்னாள் அமைச்சர்
புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், அதற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும் நாளை (12) முதல் கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார். தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அனைத்துப் பெற்றோர்களும் எவ்வித பேதமுமின்றி நாளை காலை 9 மணிக்குத் தொடங்கவுள்ள […]
Parvathy Thiruvothu: அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன்! - நடிகை பார்வதி திருவோத்து
நடிகை பார்வதி திருவோத்து, அவருடைய குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அவர் சிறு வயதில் இருக்கும்போது தெரியாத நபர் ஒருவர் அவரைத் துன்புறுத்தியது குறித்தும், அது அவரிடத்தில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது குறித்தும் பகிர்ந்திருக்கிறார். Parvathy Thiruvothu அவர், “எனக்கு அப்போது சிறு வயது. என்ன நடக்கிறது என்றே அப்போது எனக்குத் தெரியவில்லை. ரயில் நிலையத்தில் அம்மாவை விட்டுவிட்டு அப்பாவுடன் திரும்பி வரும்போது, ஒருவர் வந்து மார்பில் அடித்துவிட்டார். அது தொடுவது போலக்கூட இல்லை. என்னை அறைந்தது போல இருந்தது. அப்போது நான் குழந்தையாக இருந்தேன். அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். என் அம்மா தெருக்களில் நடக்கும்போது எப்படி நடக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தார். கடை ஜன்னல்களில் பொருட்களைப் பார்க்காதே. ஆண்களின் கைகளைப் பார்த்துக்கொண்டே நடக்க வேண்டும். ஒரு தாய் தன் குழந்தைக்கு இப்படிக் கற்றுக்கொடுக்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பாருங்கள். Parvathy Thiruvothu | பார்வதி திருவோத்து மேலும், ஆண்களிடமிருந்து பல சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருவர் தனது வேட்டியை தூக்கி அவரின் உறுப்பைக் காட்டிக்கொண்டிருப்பார். அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்று சுத்தமாகப் புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து மட்டுமே திரும்பிப் பார்க்கும்போது, இத்தகைய அனுபவங்கள் நமது உடலிலும் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று உணர்கிறோம்.” எனக் கூறியிருக்கிறார்.
ஈரான் தூதரகத்தின் மீது ஏறி கொடியை மாற்றிய போராட்டக்காரர்!
லண்டனின் கென்சிங்டன் (Kensington) பகுதியில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தில் சனிக்கிழமை (ஜனவரி 10, 2026) இந்த அதிரடிச் சம்பவம்… The post ஈரான் தூதரகத்தின் மீது ஏறி கொடியை மாற்றிய போராட்டக்காரர்! appeared first on Global Tamil News .
ஹிந்து இளைஞர் சுட்டுக் கொலை ; பாகிஸ்தானில் வெடித்தத போராட்டம்
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 4ம் திகதி பாடின் மாவட்டத்தில் உள்ள ராஹோ கோல்ஹி கிராமத்தில் கைலாஷ் கோல்ஹி, 25, என்ற ஹிந்து இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சிறிய குடிசை வீடு கட்டியபோது, அப்பகுதியைச் சேர்ந்த சர்பராஸ் நிசாமானி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சர்பராஸ், பட்டப்பகலில் வீடு புகுந்து கைலா ஷை சுட்டார். இதில், அவர் உயிரிழந்தார். இந்தக் […]
கிளிநொச்சியின் இளம் குடும்ப பெண் யாழில் நேர்ந்த துயரம்
மூச்செடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக சிகிச்சை இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் சுவாசிக்க சிரமப்பட்டதன் காரணத்தினால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
சிறையிலிருந்து வந்த கையுடன் விகாரைக்கு விரைந்த டக்ளஸ் ; தேரர் கூறிய முக்கிய ஆலோசனை
கொழும்பு கங்காராம விகாராதிபதியை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். இதன்போது, “பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று விகாராதிபதி தெரிவித்தார். அரசியல் செயற்பாடுகள் இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது” என்று விகாராதிபதி தெரிவித்தார். மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக, அவதூறு […]
வைத்தியசாலைக்குச் சென்ற 21 வயது இளம் தாய் மாயமானார் –தேடும் உறவினர்கள்!
மன்னார், சௌத்பார் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (சனிக்கிழமை, ஜனவரி 10,… The post வைத்தியசாலைக்குச் சென்ற 21 வயது இளம் தாய் மாயமானார் – தேடும் உறவினர்கள்! appeared first on Global Tamil News .
பசுமை எதிர்காலத்தை நோக்கி.. குஜராத் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!
2030க்குள் 100 ஜிகாவாட்டிற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைவதாக குஜராத் அரசு உறுதி அளித்துள்ளது. இது இந்தியாவின் ஆற்றல் மாற்றப் பயணத்தில் குஜராத் மாநிலத்தின் முக்கிய பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
கோவையில் விரைவில் திறக்கப்பட இருக்கும் மூங்கில் பூங்கா!
கோவையில் விரைவில் திறக்கப்பட இருக்கும் மூங்கில் பூங்காவை காண மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். அடுத்த மாதம் திறக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.
பொங்கல் பரிசாக பணி நிரந்தரம் வேண்டும்.. பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வரிடம் கோரிக்கை!
பொங்கல் பண்டிகை பரிசாக தமிழக முதல்வர் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜனநாயகனுக்கு ரெட் சிக்னல்.. பராசக்திக்கு க்ரீன் சிக்னலா.. ஒரு குழந்தை அழுதால்.. குஷ்பூ விளக்கம்!
மத்திய அரசு திரைப்படங்களை தடை செய்யும் எண்ணத்தில் இருந்திருந்தால், முதலில் ‘பராசக்தி’ படத்தையே தடை செய்திருக்க வேண்டும் என பாஜக மகளிர் அணி நிர்வாகி குஷ்பூ தெரிவித்தார்.
ஈரானிய மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக டொராண்டோவில் பிரம்மாண்ட பேரணி! ☀️
கனடாவின் டொராண்டோ நகரில், ஈரானில் நிலவும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அங்குள்ள மக்களின் வீரமிக்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்… The post ஈரானிய மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக டொராண்டோவில் பிரம்மாண்ட பேரணி! ☀️ appeared first on Global Tamil News .
திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து வர இருக்கும் திட்டங்கள்-மகிழ்ச்சியில் மக்கள்!
திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றன. இதனை அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கி வைத்தனர்.
ஈரானில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் ; 51 பேர் பலி
ஈரானில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் அந்நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் திகதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கமேனி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் […]
சொத்து வாங்குவோர் கவனத்துக்கு.. பட்டா மாறுதல் ரொம்ப முக்கியம்.. ஆன்லைன் வசதி இருக்கு!
சொந்தமாக நிலம், சொத்து வாங்குவோர் பட்டா விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பட்டா மாறுதல் செய்யும்போது இந்த விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
இலங்கையின் சுற்றுலா துறை தொடர் வீழ்ச்சி: பயணிகள் வருகை அதிகரித்த போதும் 15% குறைந்த வருமானம்!
தொடர் கொள்கை மாறுபாடுகளும், கொரோனா பேரிடரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை பெரும் பஞ்சசத்துக்குள் தள்ளின. அடிப்படை பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தவறான கொள்கைகளை தவறான நேரத்தில் எடுத்ததே இலங்கையின் பஞ்சத்திற்கு காரணமாக கருதப்பட்டது.
சட்டவிரோதத்தில் அன்புமணி.. ஆதங்கத்தில் ராமதாஸ்.. தேர்தல் ஆணையத்துக்கு பறந்த கடிதம்!
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி வைத்துக் கொண்டது சட்டவிரோதமானது என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.
`எழுத்துலகம் பெரிய கடல்; அதில் கால்களையாவது நனைத்திடுங்கள்!' - கவிஞர் மனுஷ்யபுத்திரன்
உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனை, சென்னை புத்தகக் காட்சியில் சந்தித்து உரையாற்றினோம். நம்மிடம் பேசிய அவர், ``இன்றைய இளைஞர்கள் ஜென்சி கிட்ஸ் என்ற கருத்தாக்கத்தையே நான் ஏற்க மறுக்கிறேன் . ஏனென்றால், இந்த தலைமுறையைச் சேர்ந்த 100 இளைஞர்களை எடுத்துக் கொண்டால் 100 பேரும் ஒரே விதத்தில் இருப்பதில்லை. 10 பேர் அரசியலை பின்பற்றுவார்கள்,10 பேர் விளையாட்டை பின்பற்றுவார்கள், 10 பேர் சினிமாவை பின்பற்றுவார்கள், 10 பேர் மது மற்றும் போதையின் பிடியில் சிக்கி இருப்பார்கள். ஆக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான குண நலன்கள் இருக்கும். பொதுவாக ஜென்சி கிட்ஸ்கள் என்றாலே இப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. இன்று சமூக வலைதள பக்கத்தில் துண்டு (Shorts) காணொளிகளில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ரீல்ஸ்களை போடுபவர்களை ஜென்சி கிட்ஸ்களின் பிரதிநிதிகளாக பார்க்கிறோம். இது தவறான கண்ணோட்டம். இன்றைய இளைஞர்கள் பலவிதமாக இருக்கிறார்கள். படிக்கும் பழக்கம் ஒருவர் சொல்லிக் கொடுப்பதால் மட்டும் வருவது கிடையாது. எனக்கு ஒரு புத்தகம் முக்கியமானதாக தோன்றும். ஆனால் அது மற்றவர்களுக்கு முக்கியமானதாக இல்லாமல் இருக்கும். ஆக நமக்குத் தேவையான, நாம் எந்தத் துறைக்கு போகிறோம் என்பதை பார்த்து புத்தகம் படிக்கும் பழக்கத்தை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். கதை பிடிக்கும் என்றால் கதை படியுங்கள், கவிதை பிடிக்கும் என்றால் கவிதை புத்தகங்கள் வாசியுங்கள். சிறுகதை என்றால் ஜெயகாந்தன், அழகிரிசாமி, அசோக மித்ரன் இருக்கிறார்கள். கவிதை என்றால் கலாப்பிரியா, ஞானக்கூத்தன் ஆத்மாநாம், விக்ரமாதித்தன் என பல கவிஞர்கள் இருக்கிறார்கள். வாசிப்பை சுருக்க முடியாது. எழுத்துலகம் என்பது ஒரு பெரிய கடல். இங்கு என்ன இருக்கிறது, என்ன கிடைக்கும் என்றாவது வந்து கால்களையாவது நனைக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு புத்தகப் பரிந்துரையை விட நான் சொல்வது என்னவென்றால், இணையத்திலும், களத்திலும் அரசியல் பெயரில் அரசியலற்று சுற்றுகிறார்கள். அரசியல் களத்தில் வருகிறீர்கள் என்றால் உங்களின் வாழ்வையும் இந்த சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய தலைவரின் பின்னால் செல்லுங்கள். உங்களை அரசியல் அடியாட்களாக வெறும் சாதி மத பிற முட்டாளாக்கும் கவர்ச்சி அரசியலுக்கு பின்னால் செல்வது தவறான போக்கு. புத்தகப் பரிந்துரை என்பதையே நான் விரும்புவதில்லை. நான் இளைஞனாக இருந்த போது படித்தது என்றால் லியோ டால்ஸ்டாய் எழுதிய War and Peace 3000 பக்கங்களை கொண்டது. Dostoevsky எழுதிய Crime and Punishment படித்தேன். இது எல்லாம் நான் 18 வயதாகும் போது படித்தது. இப்போதுல்ல ஜென்சி கிட்ஸ்கள் இதையெல்லாம் படிப்பார்களா..? நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் பயணிக்க விரும்பும் துறை சார்ந்த புத்தகங்கள் வாங்கி படியுங்கள். ஒவ்வொருவருக்கும் புத்தக ரசனை மாறுபட்டது என்றார்.
தைப்பொங்கலுக்கு யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார். மறுநாள் 16ஆம் திகதி […]
வலிமை இழந்த கம்யூனிஸ்ட்.. பின்னடைவில் காங்கிரஸ்.. எதிர்காலம் மோடிதான்.. அமித் ஷா நம்பிக்கை!
பாஜக மற்றும் என்டிஏ ஆட்சி செய்த மாநிலங்கள் வளர்ச்சியடைந்துள்ளன என்றும், அதே பாதையில் கேரளாவும் செல்ல வேண்டும் என்றும் திருவனந்தபுரத்தில் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவுடன் இணைப்பு: கிரீன்லாந்து தலைவா்கள் எதிா்ப்பு
அமெரிக்காவுடன் தங்கள் பிராந்தியத்தை இணைக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியதற்கு கிரீன்லாந்து அரசியல் கட்சித் தலைவா்கள், கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். தங்கள் தீவின் எதிா்காலத்தை தாங்களே தீா்மானிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்து கிரீன்லாந்து பிரதமா் ஜென்ஸ்-ஃப்ரெடரிக் நீல்சன் மற்றும் நான்கு கட்சித் தலைவா்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் அமெரிக்கா்களாக இருக்க விரும்பவில்லை. டென்மாா்க்கா்களாகவும் இருக்க விரும்பவில்லை. நாங்கள் கிரீன்லாந்தா்களாகவே இருக்க விரும்புகிறோம். கிரீன்லாந்தின் எதிா்காலத்தை கிரீன்லாந்து மக்களே […]
மலையகத் தியாகிகள் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்ட போராட்டமும் விமர்சனப் பார்வையும்!
மலையகத் தியாகிகள் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்ட போராட்டமும் விமர்சனப் பார்வையும்! ஒரு பல்கலைக்கழக மாணவியாக, மலையகப் பின்னணியில் இருந்தோ… The post மலையகத் தியாகிகள் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்ட போராட்டமும் விமர்சனப் பார்வையும்! appeared first on Global Tamil News .
✈️ விமான நிலையத்தில் £75 அபராதம் –கண்ணீர் சிந்திய Ryanair பயணிகள்
பேர்மிங்காமில் இருந்து இத்தாலியின் வெரோனா (Verona) நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தின் நுழைவாயிலில் (Gate), சுமார் 15 பயணிகள் தலா… The post ✈️ விமான நிலையத்தில் 75 அபராதம் – கண்ணீர் சிந்திய Ryanair பயணிகள் appeared first on Global Tamil News .
`பதிவிடுவது பயனல்ல, அதை அச்சில் எழுத்தாக்க வேண்டும்!'- சென்னை புத்தகக் காட்சியில் ஆழி செந்தில்நாதன்
சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சியில், மொழியுரிமை செயல்பாட்டாளரும், ஆழி பதிப்பகத்தின் நிறுவனருமான செந்தில்நாதன் பேசினார். ஏன் ஆழி ? ``ஆழி என்பது ஆழமானது. அது போன்று நல்ல ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். இதுவரை 400 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். ஆழி பதிப்பகத்தை பொறுத்தவரை அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற விஷயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து எழுத்தாளர்கள் நேரடியாக எழுதுவதும், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்களாகவும், தொகுப்புகள் ஆகவும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். கடல், கடல்வழி பயணம் பற்றி படிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சியோடு இணைந்து பிற நாடுகளில் உள்ள புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறோம். ஆழி பதிப்பகத்தில் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் சிறப்பு என்னவென்றால், நூற்றாண்டை தொட்டிருக்கும் சுயமரியாதை இயக்கத்தை நினைவூட்டும் வகையில், 100 புத்தகங்களை சுயமரியாதை இயக்கம் சார்ந்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 புத்தகங்களை தொகுத்து இந்த ஆண்டு இந்த அரங்கத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறோம். நீதிக்கட்சி,பெரியார், அண்ணா , கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் என இந்த புத்தகங்கள் வெளிவந்துள்ளது. ஜென் சி களின் எழுத்துலகம் இந்தத் தலைமுறை 1952 இல் வெளிவந்த பராசக்திக்கும் 2026 இல் வெளிவர இருக்கும் பராசக்திக்கும் இடையிலான அரசியல் விஷயங்கள் நிறைய மாணவர்களிடையே சென்றடைந்து இருக்கிறது. இளம் தலைமுறைக்கு ஏன் புத்தகங்கள் முக்கியம் என்றால், சமூக வலைதள பக்கத்தில் வெறும் பதிவுகள் போடுவதால் மட்டும் பயன் அல்ல. அது புத்தகமாக மாறும்போது பிரிண்ட் ஆக இருக்கலாம் இ புக்காக இருக்கலாம். நீங்கள் பதிவிடுபவர் என்ற நிலையிலிருந்து மாறி, நீங்கள் ஒரு எழுத்தாளர் ஆகும் போது, அதிகாரம் பெற்ற நிபுணராக மாறுகிறீர்கள். பல துறைகளைப் பற்றிய விஷயங்கள் பலரை சென்றடைய வேண்டும். அது நீண்ட நாள் நீடிக்க வேண்டும். அந்தக் கண்ணோட்டத்தில் இருந்து ஜென் சி மாணவர்கள் எழுத ஆரம்பிக்க வேண்டும். இந்த நாளின் உலக சூழலை எடுத்துக் கொண்டால் நான் விரும்பக்கூடிய புத்தக பரிந்துரைகள் இதுதான்..! 1. இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் காக்கப்பட வேண்டியது ஜனநாயகம் தான். ஜனநாயகத்தைப் பற்றி உலக அளவில் பல அறிஞர்கள் பல கண்ணோட்டத்தில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நீங்கள் கேட்பதால் உடனே என்னால் சொல்ல முடியவில்லை. செயற்கை நுண்ணறிவிடமே முதல் 10 புத்தகங்கள் கேளுங்கள் . அதுவே உங்களுக்கு பதில் அளிக்கும். 2. இந்தியாவில் உள்ள எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் எதுவென்றால் குறிப்பாக ஆண்கள் படிக்க வேண்டும் இந்த புத்தகத்தை. பெரியாரின் பெண் ஏன் அடிமையானால்? இது பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்கள் படிக்க வேண்டிய கட்டாயமான புத்தகம். 3. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்து இருக்கிறது. இவை அனைத்திற்கும் திராவிட கட்சிகளின் ஆட்சியாளர்களுக்கு நன் மதிப்பு கொடுத்தாலும் இதன் வேர் தொடங்கியது அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம் என்ற புத்தகம் தான். இதை அனைவரும் படிக்க வேண்டும். 1947லிருந்து தமிழ்நாடு பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்த புத்தகத்திலிருந்து தான் தொடங்குகிறது. 4. உலக அளவில் தற்போது வளர்ந்து வரக்கூடியது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதைப் பற்றி அறிந்து கொள்ள பல புத்தகங்கள் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவை பற்றி அறிய செயற்கை நுண்ணறிவிடமே கேளுங்கள், உன்னை பற்றி படிப்பதற்கு எந்த புத்தகங்கள் நன்றாக இருக்கும் என்று..! நான் படித்தது, ஆங்கிலத்தில் Super Intelligence என்ற புத்தகம் இருக்கிறது. அதை நாங்கள் ஆழி பதிப்பகத்தில் மெய்யறிவு என்ற புத்தகமாக வெளியிட்டு இருக்கிறோம். 5. காலநிலை மாற்றம் மனிதன் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால். Greta Thunberg என்ற சுற்றுச்சூழல் ஆர்வலரின் சுற்றுச்சூழல் தொகுப்பான The collection of best article on Climate change இது அமேசானில் கிடைக்கும். இன்றைய உலக சூழலியல் பற்றி விளக்கும் புத்தகமாக இது அமைகிறது. விகடன் பிரசுரம்
தையிட்டி: காணிப் பிரச்சினையா? நிலாந்தன்.
வருஷம் பிறந்த பின் வந்த முதலாவது பௌர்ணமி நாளில் தையிட்டியில் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் மக்களும் நில மீட்புக்காக… The post தையிட்டி: காணிப் பிரச்சினையா?நிலாந்தன். appeared first on Global Tamil News .
பிரித்தானியாவில் ஆபத்திலுள்ள 2,500 போின் வேலைவாய்ப்புகள்
பிரித்தானியாவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனங்களான Claire’s மற்றும் The Original Factory Shop (TOFS) ஆகியவை நிர்வாகச்… The post பிரித்தானியாவில் ஆபத்திலுள்ள 2,500 போின் வேலைவாய்ப்புகள் appeared first on Global Tamil News .
புட்டினுக்கு கிம் ஜோங்-உன் எழுதிய கடிதம்: “நிபந்தனையற்ற ஆதரவும்!”
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அனுப்பியுள்ள புதிய கடிதத்தில், ரஷ்யாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும்… The post புட்டினுக்கு கிம் ஜோங்-உன் எழுதிய கடிதம்: “நிபந்தனையற்ற ஆதரவும்!” appeared first on Global Tamil News .
Parasakthi Movie Review | Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela| Sudha Kongara | Vikatan
Parasakthi Story: Hindi Imposition and பொள்ளாச்சி சம்பவம் | Decode | பராசக்தி
America vs China vs Japan: அதிக லாபம் தரும் பங்குச்சந்தை எது? | IPS Finance - 408
DMK வாக்குறுதிகள்: பொய் சொல்லும் CM STALIN? | DMDK மாநாடு ஹைலைட்ஸ்! | ADMK TVK NTK | Imperfect Show
`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர் இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை, திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது, இதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமி தைத்திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளார். மேலும் முதலமைச்சர் சொல்வது உண்மைதான் சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்றார்.
200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்: மு.க ஸ்டாலின் சூளுரை
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில், பொங்கல் வைத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பசுக்களுக்கு உணவளித்ததுடன், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி அனைவருக்கும் வாழ்த்தும் தெரிவித்தார். 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி இந்த […]
️ பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை விபத்து -காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். யாழ். போதனா வைத்தியசாலையில்… The post ️ பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை விபத்து -காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on Global Tamil News .
யாழில். பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் , படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொட்டடி பகுதியை சேர்ந்த சிவராசா சிவலக்சன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை பயணித்த சொகுசு புகையிரதத்துடன் , அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில், யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த புகையிரத கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்படும் நிலையில் , பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற நிலையிலும் அதனை பாதுகாப்பான புகையிரத கடவையாக மாற்றம் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் , தொடர்ந்து அது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுகிறது
️ தையிட்டி காணி விவகாரம்: விகாராதிபதியின் மறுப்பும் தொடரும் இழுபறியும்
விசாரணைகள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விவகாரம் மீண்டும் ஒரு சிக்கலான… The post ️ தையிட்டி காணி விவகாரம்: விகாராதிபதியின் மறுப்பும் தொடரும் இழுபறியும் appeared first on Global Tamil News .
சீரற்ற கால நிலை –கடல் கொந்தளிப்பால் மூர்க்கம் கடற்கரை பாதிப்பு
யாழ்ப்பாணம், பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் (Moorrkham) கடற்கரை, நேற்றைய தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட கடும்… The post சீரற்ற கால நிலை – கடல் கொந்தளிப்பால் மூர்க்கம் கடற்கரை பாதிப்பு appeared first on Global Tamil News .
Bigg Boss Tamil 9: பணத்தேவை, மனச்சோர்வு - வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது ஏன்?
பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பார்க்கப் பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் கானா வினோத். வடசென்னை பகுதியைச் சேர்ந்த இவர் விஜய் டிவிக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்தான். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் முந்தைய சில பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் நிறைவு நாள் கொண்டாடங்களின் போது கானா பாட்டு பாடியிருக்கிறார். அந்த தொடர்பில்தான் பிக்பாஸ் வாய்ப்பு வந்ததாகத் தெரிகிறது. கானா வினோத்துடன் மன்னர் முத்து நிகழ்ச்சியிலும் ஒருசில சர்ச்சைகளைத் தாண்டி தனித்து விளையாடினார் என்று சொல்லலாம். அதனாலேயே ஒவ்வொரு எவிக்ஷனின் போதும் இவருக்கு ஓட்டுகள் கிடைத்து எவிக்ட் ஆகாமல் தப்பித்து வந்தார். வெளியில் பி.ஆர் ஒர்க் என்றெல்லாம் எதுவும் இவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. கமருதீன் ‘சாதாரண குடும்பப் பின்னணி. கானா கச்சேரிகள் மூலம் கிடைக்கிற வருமானம் பத்தாதுனுதான் அவங்க மனைவி சின்னதா பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க. அவருக்கு ஆதரவு தெரிவிச்சதெல்லம் அவரு கூட இருந்த பசங்கதான். வடசென்னை பின்புலத்துல இருந்து அந்த மாதிரி ஒரு ஷோவுல கலந்துகிட்டு 90 நாட்களைக் கடந்த்தே பெரிய சாதனைதான். பணப்பெட்டி எடுத்த பிறகு ஒரு விஷயத்தை ஓபனா சொல்லியிருந்தாரே, ‘இந்தப் பணம் கோடிக்குச் சமம்’னு அதுதான் நிஜம். அதுவும் போக அந்த ஷோவுல டைட்டில் வாங்கினா 50 லட்சம் தர்றவங்க ரெண்டாவது இடத்துக்கு எதுவுமே தர்றதில்ல, இதையெல்லாம் யோசிச்சுதான் பணத்தை எடுத்திருப்பார். ரொம்ப நல்ல முடிவும் கூட’ என்கிறார் வினோத்தை அவர் கானா பாட ஆரம்பித்த காலத்திலிருந்து அறிந்து தெரிந்து வைத்திருக்கும் வடசென்னை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர். பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வினோத்தின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, ‘நம்பிக்கையோடதான் விளையாடிட்டிருந்தான். டைட்டில் கிடைச்சிடும்னு நம்பினோம். ஆனா பணத்தை எடுக்கிற முடிவை கடைசி நிமிடத்துலதான் எடுத்திருக்கணும். ஏன்னா, ஷோவுக்கு போறதுக்கு முன் ‘முடிஞ்ச எஃபெக்ட் போடுவோம், பார்த்துக்கலாம்’னு உற்சாகமாப் போனான் ஷோவுல கமருதீனுக்கு நிகழ்ந்த அனுபவம் ரொம்பவே பாதிச்சிடுச்சு. ஷோவுல எது வேண்டுமானாலும் நடக்கலாம்னு கடைசி சில நாட்கள்ல புரிஞ்சிருக்கு. அதனாலேயே பணத்தை எடுத்துட்டு வெளியேறிட்டார்’ என்கின்றனர் இவர்கள்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் பலி –இளைஞர் கைது
அமெரிக்காவின் மிசிசிப்பி (Mississippi) மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்… The post அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் பலி – இளைஞர் கைது appeared first on Global Tamil News .
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 உயர்கிறதா? பெண்களுக்கு விரைவில் இனிப்பான பரிசு- அமைச்சர் ஐ.பெரியசாமி!
தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்றும், இனிப்பான செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது மகளிர் உரிமைத் தொகை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மம் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்
“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 97 இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது. இதில் வினோத் விடைபெறும் பகுதியைத் தவிர எதுவுமே சுவாரசியமாக இல்லை. “வீட்டுக்கு திரும்பி வந்தவங்க கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. அதை ஏன் ஆட்டத்துல இருக்கும்போதே காட்டலை.. நானும் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். வெளியல விமர்சனங்கள் பார்த்துட்டு வந்தாங்களான்னு தெரியல. BB TAMIL 9 DAY 97 ஒரு வார்த்தையை வெச்சு ஒரு நாள் முழுக்க டிகோட் பண்ணிட்டு இருக்காங்க. வாங்க என்னன்னு விசாரிப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்’ என்றார் விசே. அந்த வெள்ளிக்கிழமையில் வழக்கம் போல் ஒன்றுமில்லை. கார்டன் ஏரியாவில் கைகாலை நீட்டி படுத்து விட்ட திவாகரை வைத்து மற்றவர்கள் செய்த ‘டெட்பாடி காமெடி’ நன்று. திவாகரும் இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார். உள்ளே வந்த விசே முதலில் பிரவீன் காந்தியிடம் ஒரண்டை இழுத்தார். “உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதா.. வெளில நீங்க பேசின வீடியோ பார்த்தேன்” என்று விசே, சங்கடமான சிரிப்புடன் “பிடிக்கும் சார்” என்றார் டைரக்டர். ‘விஜய்சேதுபதி எங்களை பேசவே விட மாட்டார்’ என்பது முதல் பல விஷயங்களை பிரவீன் காந்தி நேர்காணல்களில் சொல்லியிருந்தார் போல. எஃப்ஜேவும் கானா வினோத்தும் இதே விஷயத்தை வீட்டிற்குள்ளேயே சொன்னார்கள். ‘அவர் கிட்ட என்ன விளக்கம் தர்றது. உக்காருன்னுவாரு. BB TAMIL 9 DAY 97 ஸாரி சொன்னாலும் எடுபடாது. ஹோஸ்டிற்கு மரியாதை தரணுமில்ல” என்று இவர்கள் பேசியதை வைத்தும் நையாண்டி செய்தார் விசே. இவர்கள் சொல்லும் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்பது விசேவிற்குத் தெரியும். எனில் ஏன் மறைமுகமாக கிண்டல் செய்து மடக்க நினைக்கிறார். “என் மீது விமர்சனங்கள் சொல்லுங்க.. அது எனக்குப் பிடிக்கும்” என்று சொல்கிற விசே, அப்படி உண்மையான விமர்சனங்கள் வந்தால் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கிறாரா? Anyway, விசேவின் கிண்டல் வெறும் ஜாலிக்குத்தான் என்றால் ஓகே. “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு” - திவாகர் பெருமித அறிவிப்பு முன்னாள் போட்டியாளர்களிடம் “வெளியுலக அனுபவம் எப்படி இருந்தது?” என்று விசாரிக்க அனைவருமே சொல்லி வைத்தாற் போல ஆஹாஓஹோ என்றார்கள். ‘ரோட்ல ஆட்டோக்காரர் செல்ஃபி எடுக்கறார். பால்காரர் ஆட்டோகிராஃப் கேட்கிறார்” என்று புளகாங்கிதப்பட்டார்கள். ஒருவர் அசட்டுத்தனமான ரீல்ஸ்கள் போட்டு அதன் மூலம் பிரபலமாகி விட்டார் என்றால், அவருடன் செல்ஃபி எடுக்க அலைமோதும் கூட்டம்தான் நாம். அவர்களைத்தான் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கூப்பிடுவார்கள். ஏன் பிக் பாஸில் கூட கூப்பிடுவார்கள் என்பதற்கான உதாரணம் திவாகர். ஆனால் இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகம்தான். இன்னொரு ரீல்ஸ்காரர் புகழ்பெற்றால் கூட்டம் அவர் பின்னால் ஓடிவிடும். பிக் பாஸ் தரும் வெளிச்சத்தை எப்படி திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கமல் ஏற்கெனவே இதை சிறப்பாகச் சொன்னார். ‘இந்த மேடை உங்களுக்கு புகழை பெற்றுத் தரும். அதை கையாள்வது உங்கள் பொறுப்பு’ என்று. இதற்கு முன்னால் பிக் பாஸில் கலந்து கொண்டவர்களில் அரிதாக சிலர் மட்டுமே இன்னமும் லைம் லைட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆளையே காணோம். ஓவியா உட்பட. BB TAMIL 9 DAY 97 “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு சார்.. விஜய்சேதுபதி கிட்ட நீங்க திட்டு வாங்கற காட்சிகள் க்யூட்டா இருக்குன்னு சொல்றாங்க” என்று வித்தியாசமாக சொன்னார் திவாகர். “நீங்க எது பண்ணாலும் அது க்யூட்தான் சார்” என்று கிண்டலடித்தார் விசே. “ஆட்டோல ஏறினேன்.. ஆட்டோகாரர் கண்டுபிடிச்சிட்டார்’ என்று திணறித் திணறி வியானா விவரித்த போது திவாகரின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. மற்ற எல்லோரையும் விசாரித்து பிரேக்கில் சென்ற விசே “அய்யோ.. பிரவீன் காந்தியை கேட்க மறந்துட்டேன். அப்புறம் வெளில போய் ஏதாவது சொல்வாரு” என்று மீண்டும் திரும்பி வந்தது, வேண்டுமென்றே செய்த குறும்போ?! பிரேக் முடிந்து திரும்பியதும் ‘ஒரு சர்ப்ரைஸ்’ என்று ஆரம்பித்தார் விசே. வந்தது கானா வினோத். உணர்வுப்பூர்வமாக நிகழ்ந்த ‘கானா வினோத்’ farewell இதுவரை மற்றவர்களின் பயண வீடியோவை ஒரு சம்பிரதாய மனநிலையில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் கானா வினோத்தின் பயண வீடியோ ஸ்பெஷலாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது. ரஞ்சித் படங்களில் இருந்து இணைக்கப்பட்ட பாடல்கள் அருமையான உணர்வைத் தந்தன. மைக்கை கையில் வாங்கி ‘செக்.. செக்’ என்றவர் ‘செக் வர்றதுக்கு 45 நாள் ஆகுமாமே?’ என்று டைமிங்கில் கிண்டலடித்தார். “நல்ல பசில பிரியாணிக்கு காத்திருக்கிறத விட கூழ் முக்கியம். அப்படித்தான் இந்த 18 லட்சம். இதை வெச்சு என் குடும்பத்தை பார்த்துப்பேன். இந்த முடிவு நானா எடுத்ததுதான்.. மத்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு பணத்தை தூக்கிட்டேன்” என்று ஜாலியாக பேசினார் வினோத். BB TAMIL 9 DAY 97 “உங்க பாடி லேங்வேஜ்ல ஒரு ‘அதுப்பு’ இருக்கு. அது பார்க்க நல்லா இருக்கு” என்று லோக்கல் மொழியில் விசே பாராட்டியது சிறப்பு. கெமி ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ‘உங்க கண்ணாடி வேணும்’ என்று அடம்பிடித்த வினோத்திற்கு வரவழைத்து தந்தார் விசே. வீட்டிற்குள் நுழைந்ததும் “என்னா தர்பீஸூ.. நான் இல்லாம ஜாலியா இருக்கிறயா.. நான் வெளில போகணும்ன்னு ஒவ்வொரு காமிராலயும் சொல்லிட்டு நல்லா இருக்கியான்னு கேட்கறே” என்று திவாகரை கலாய்த்தார் வினோத். வினோத்தின் மனைவி பாக்யா வந்து பேசியதும் “பொண்டாட்டி சொல்றதைக் கேளுங்க. வாழ்க்கைல உருப்படுவீங்க” என்கிற முக்கியமான செய்தியை சொல்லி விட்டு விடைபெற்றார் வினோத். வீட்டிற்குள் திரும்பி வந்த போது ஏற்பட்ட அனுபவம், அவர்களிடம் போட்டியாளர்கள் எதிர்கொண்ட அனுபவம் என்று இரண்டு பகுதிகளாக விசாரித்தார் விசே. அதில் சுவாரசியமாக ஒன்றுமில்லை. “இங்க இருக்கறவங்க யாரையும் மிஸ் பண்ணலை. அவங்க வெளிய இருக்காங்க. ஆதும்மா” என்று வித்தியாசமாக சொன்னார் வியானா. “அப்படின்னா நீங்க வந்தது இவங்களுக்கு பிடிக்கலைன்னு வெச்சுக்கலாமா?” என்று விசே மடக்க “may be” என்றார். (வீட்டிற்குள் இருந்த போது குழந்தை மாதிரி இருந்த வியானா, ரீஎன்ட்ரியில் கோட்டானாக மாறியிருக்கிறாரே?!) BB TAMIL 9 DAY 97 பிரவீன்ராஜை மடக்கி மடக்கி வறுத்தெடுத்த விசே பிரவீன்ராஜ் திரும்ப வரும் போது ‘மிதப்பாக’ சொன்ன ஒரு வாக்கியத்தால் விசேவிடம் மாட்டிக் கொண்டார். “இந்த ஆட்டத்துல humanity-ஐ இழந்துட்டு ஆடறீங்க.. உண்மையா இல்ல” என்றெல்லாம் அவர் சொன்னதை பிக் பாஸ் டீம் அண்டர்லைனில் குறித்துக் கொண்டது போல. “Humanity இல்லாத அளவிற்கு அப்படி என்ன நடந்துச்சு.. ஒரு சம்பவத்தை சொல்லுங்க.. நாங்க அப்படி என்ன கவனிக்கத் தவறிட்டோம்.. விசாரிக்காம விட்டுட்டோம்.. சொல்லுங்க. சொல்லுங்க…’ என்று விசே மடக்க, பந்து எறிந்த சம்பவத்தை பொருத்தமில்லாமல் சொன்னார் பிரவீன்ராஜ். “அந்த ஸ்மைலி பந்தா.. அதுல அடிச்சா வலிக்குமா.. அது திசை திருப்புவதற்காக செய்தது.. வேற உதாரணம் சொல்லுங்க” என்று மீண்டும் மடக்கினார் விசே. ஒருவர் என்ன சுற்றி விட்டாலும் அவரை மறுபடியும் பாயிண்ட்டிற்கு அழைத்து வந்து விவாதிக்கும் திறமை விசேவிடம் நிறைய இருக்கிறது. எதையாவது சொல்லி இவரிடம் தப்பித்துக் கொள்வது சிரமம். ஆனால் இந்த தர்க்கத் திறமையை விசே கடுமையான தொனியில் வெளிப்படுத்துகிறார். எதிராளியின் வாயை உடனே அடைத்து விடும் அதிகாரம் அவரிடம் வெளிப்படுகிறது. பிக் பாஸ் ஹோஸ்ட் என்கிற பொஷிஷனை வைத்துக் கொண்டு மேலாதிக்கம் செய்கிறார். மாறாக இரு தரப்பிற்குமான சௌகரியத்தை தந்து மடக்குவது நன்றாக இருக்கும். கமல் இதை சிறப்பாகச் செய்வார். பிரவீன்ராஜ் என்னதான் மல்லுக்கட்டினாலும் அவர் சொன்ன உதாரணங்கள் மொக்கையாக இருந்ததால் வாதம் எடுபடவில்லை. ஆனால் பிரவீன்ராஜ் சொன்னது பொத்தாம் பொதுவாக பார்த்தால் உண்மைதான். நாம் ஒரு போட்டிக்குள் நுழையும் போது நம்மிடமுள்ள மனிதத்தன்மை தன்னிச்சையாக குறைந்து விடுகிறது. சுயநலம் பெருகி விடுகிறது. பேருந்து இருக்கையை ஓடிச் சென்று கைப்பற்றும் அன்றாட நடைமுறையிலேயே இதைப் பார்க்கலாம். ஒரு வயதான பெரியவரை இடித்துத் தள்ளிக்கொண்டாவது இருக்கையைப் பற்றும் சுயநலவாதிகளாக மாறி விடுகிறோம். அந்த நேரத்தில் மனிதனின் ஆதாரமான நல்ல விஷயங்கள் மறைந்து போட்டி மனப்பான்மை மட்டுமே பெருகி விடுகிறது. BB TAMIL 9 DAY 97 பிக் பாஸ் தரும் அனுபவத்தை சரியான நோக்கில் அடைகிறோமா? “பிரவீன்காந்தி.. கவனிச்சீங்களா.. இவரை முழுசா பேச விட்டேன்..” என்று கிண்டலடித்த விசே, பிரவீன்ராஜிடம் உள்ள விவாதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் விசே சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. “இந்த வீடு உங்களுக்கு பல அனுபவங்களைத் தந்திருக்கும். அதை வெச்சு வெளில போய் யோசிச்சிருப்பீங்க.. அந்தச் சிந்தனை ஞானமா மாறியிருக்கும்.. இப்படியெல்லாம் நான் எதிர்பார்த்தேன். ஆனா நீங்க பழைய விஷயங்களை அப்படியே சுமந்துட்டு வந்திருக்கீங்க. இனி மேலாவது மாறுங்க” என்று சொன்ன உபதேசம் நன்று. இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் பொருந்தும். எத்தனையோ சீசன்களாக நானும் இதைத்தான் சொல்லி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மீதான வம்புகளை மட்டும் உற்சாகமாக பேசுவதால் இழப்பு நமக்குத்தான். மாறாக போட்டியாளர்களின் இடத்தில் நம்மை வைத்து அந்தத் தவறுகளை சுயபரிசீலனையுடன் பார்த்தால் நமக்குள்ளும் மாற்றங்கள் நிகழும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மீதான நுகர்வின் வெற்றி. மாறாக வெறும் அரட்டையாக முடித்தால் இழப்பு நமக்கே. விசேவிடம் அடுத்து மாட்டியவர் வியானா. கான்வென்ட் தேவதையாக வெளியே சென்றவர், விநோத டிராகுலாவாக மாறி உள்ள வந்ததின் மர்மம் பிடிபடவில்லை. அதிலும் குறிப்பாக விக்ரமை டார்கெட் செய்து ‘நீங்க ஒரு பிராடு. வக்ரம்.. மத்தவங்களை மானிபுலேட் பண்றீங்க. ரூல்ஸ் மதிக்கணும்னு மத்தவங்களுக்கு சொல்வீங்க. நீங்க பின்பற்ற மாட்டீங்க..” என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வியானா வைத்த போது அதற்கான காரணம் நிச்சயமாக புரியவில்லை. வெளியில் எதையோ தவறாக பார்த்து விட்டு புரியாமல் வந்து பேசுகிறார் என்பது மட்டும் புரிந்தது. BB TAMIL 9 DAY 97 விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியது ஏன்? இன்று விசே வியானாவிடம் கிடுக்கிப்பிடி போட்டு “வக்ரம்ன்ற வார்த்தையை சொல்ல வேணாம்ன்னு ஏற்கெனவே சொன்னேன். அப்படியும் சொல்லியிருக்கீங்க.. நீங்க ஏதோ பாதிக்கப்பட்டிருக்கீங்க போல. அதை என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க” என்று விசாரித்தார். ஏதோவொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகப் போகிறது என்று பார்த்தால், பிரவீன்ராஜை விடவும் மொக்கையான சம்பவத்தை உதாரணமாகச் சொன்னார் வியானா. உண்மையில் அது அவர் மீதே பூமராங் போல பாய்ந்தது. ஒரு டாஸ்க் நடப்பதற்கு முன்னால் அதற்கு நடுவராக யார் இருக்கப் போகிறார் என்பதற்கான விவாதம் பெண்கள் அணியில் நடந்தது. அதற்கான தகுதிக் காரணமாக வியானா சொன்ன காரணம் “நான் நம்ம அணி சார்பா பேசி பாயிண்ட் எடுத்துடுவேன்’. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வியானா வாயை விட்டு விட்டார். இதை அப்போதே திவ்யா கண்டித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் அணி “பாரபட்சமாக நடந்து கொள்வேன் என்று சொல்பவரை நீதிபதியாக எங்களால் ஏற்க முடியாது. மாற்றுங்கள்” என்று போராட்டம் நடத்தினார். விக்ரம் செய்தது சரியான விஷயம். ஆனால் வியானா என்ன சொல்கிறார் என்றால், “பிக் பாஸ் சொன்ன உடனே கேட்டுக்கற விக்ரம், இதுல மட்டும் ரூல்ஸை தனக்கேத்த மாதிரி மாத்திக்கறாரு” என்று வாதாடுகிறார். மேலோட்டமாக யோசித்தாலே வியானா பக்கம் தவறு என்பது புரிந்து விடும். இந்த மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டா அத்தனை வன்மத்தைப் பொழிந்தார் வியானா? BB TAMIL 9 DAY 97 இந்த வாரத்தில் ஒரு சிறப்பான எவிக்ஷன் “சுபிக்ஷாவை தன்னிச்சையாக விளையாட விட்டிருந்தால் அவர் டைட்டில் அடித்திருப்பார்” என்பதும் வியானா சொல்கிற குற்றச்சாட்டு. நாம் பார்த்தவரையில் விக்ரம் சுபிக்ஷாவிற்கு வழிகாட்டும் வேலையை மட்டுமே செய்தார். ஆனால் ஒருவரின் நிழலில் நாம் இருக்கக்கூடாது என்பது சுபிக்ஷாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் விக்ரமின் தவறு என்னவிருக்கிறது? அப்படியே இது விக்ரமின் ஸ்ட்ராட்டஜி என்றாலும் அதிலிருந்து விடுபடுவதுதானே சுபிக்ஷாவின் வேலை? டாஸ்க்கில் ஆதிரையின் காலைப் பிடித்து இழுத்ததற்கும் விக்ரம் அவரிடம் மனமார மன்னிப்பு கேட்டு விட்டார். எல்லோரிடமும் வருந்தினார். சம்பந்தப்பட்ட ஆதிரையே இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு விட்டார். ஆக விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியதில் உப்புக்கு கூட பெறாத காரணங்கள்தான் இருக்கிறது. அவருக்கு விக்ரம் மீது ஏதோவொரு கோபம். அல்லது அவருக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். BB TAMIL 9 DAY 97 “நீங்க சொன்ன காரணங்கள் எதுவும் பொருத்தமில்ல. இங்க இருந்து நல்ல விஷயங்களை எடுத்துட்டுப் போங்க. தேவையில்லாதத சுமக்காதீங்க. விக்ரம் எனக்கு என்ன செல்லப்பிள்ளையா.. சரியான காரணம் இருந்தா நானே அவரைக் கேட்டிருக்கேன்” என்பதுடன் விடைபெற்றுக் கொண்டார் விசே. இந்த வாரத்தில் ஒரு அவசியமான எவிக்ஷன் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.!
போராட்டக்காரா்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் இணைய மற்றும் தொலைபேசி வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளதால், உலகின் பிற பகுதிகளிடம் இருந்து ஈரான் துண்டிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அத்துடன் கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் […]
AjithKumar: அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்- ரசிகர்கள் குறித்து அஜித்குமார்
நடிகர் அஜித்குமார், ‘குட்பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார். துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், மலேசியா நாடுகளைத் தொடர்ந்து தற்போது 24 ஹெச் சீரிஸ்- மத்திய கிழக்கு டிராபி பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார். Ajithkumar இந்த கார் பந்தயத்துக்கு நடுவே அஜித்குமார் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதில், “ 2025 ஒரு நல்ல வருடமாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அற்புதமான மனிதர்களைச் சந்தித்தேன். நான் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எப்படி ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதேபோல அவர்களும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான் விரும்புகிறேன். AjithKumar அனைவருக்கும் சிறந்த மற்றும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரணத்துக்கு பாமக கட்சித் தலைவர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் உயர்சிகிச்சை அளிப்பதற்கான உதவி செய்யாததுதான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குருவுக்கு கனல் அரசு என்ற மகனும், விருதாம்பிகை என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், குருவின் மகள் விருதாம்பிகை ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். சேலம் மாவட்டம், ஓமலூரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை விருதாம்பிகை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னியர் சமூக மக்களின் ஒற்றுமைக்காகவும், அனைத்து சமுதாய மக்களின் நலன் கருதி ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை என்பது வன்னியர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதுதான். வன்னியர் சங்கமும் இதற்காகத்தான் தொடங்கப்பட்டது. புதிய கட்சி மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய மகனுக்காக சங்கம் மற்றும் பாமக கொள்கையில் இருந்து பின்வாங்கினார். ஆனால், என் தந்தை தனது உயிர்மூச்சு இருக்கும் வரை வன்னியர் சமுதாயத்துக்காகப் போராடினார். எந்த மகனுக்காக, அவரை நம்பியிருந்த வன்னியர் சமுதாயத்தை ராமதாஸ் புறந்தள்ளினாரோ, இன்று பதவிக்காக அன்புமணி ராமதாஸை இழிவுபடுத்தி பேசி வருகிறார். ராமதாஸ் மீது எனக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், வயதான காலத்தில் அவரை அன்புமணி இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாமக பிரிந்து கிடப்பதக்கு காசு தான் காரணம். 10.5 சதவீதம் தருகிறேன் என்று வன்னியரை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, அன்புமணி அதிமுக-வுடன் கூட்டணி வைக்கிறார். வன்னியரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து நிற்கிறார் அன்புமணி. ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளார் அன்புமணி. அரசியல் லாபத்துக்காகவும், காசுக்காகவும் அன்புமணி செயல்படுகிறார். அப்பா, மகனின் துரோகத்தை வன்னியர் மக்கள் மெல்ல மெல்ல புரிந்துகொண்டு வருகிறார்கள். அதை மக்களிடம் கொண்டு செல்லவே கட்சி தொடங்கியுள்ளேன் என்றார்.
Jana Nayagan: என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க! - பா. ரஞ்சித்
திரைப்படங்களில் தணிக்கைத் துறையின் அரசியல் தலையீடுகள் குறித்தான விவாதம்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வெளியாவதாகத் திட்டமிட்டிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. Jana Nayagan - Vijay 'பராசக்தி' திரைப்படத்திலும் முக்கியமான அரசியல் காட்சிகளையும், வசனங்களையும் தணிக்கைத் துறையினர் கட் செய்திருப்பதற்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், 49வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த இயக்குநர் பா. ரஞ்சித் தணிக்கைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், அதில் அவருடைய திரைப்படங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார். பா. ரஞ்சித் பேசும்போது, திரைப்படங்கள் வணிகம் சம்பந்தப்பட்டது. இன்னைக்கு அதுல அரசியல் தலையீடுகளும் இருக்கு. இன்னைக்கு சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்ல வாய்ப்புகளை நிறைய உருவாக்கிட்டிருக்கோம். 'நீலம்' போல நிறைய வாய்ப்புகள் அளிக்கக்கூடிய நிறைய பதிப்பகங்கள் இருக்கு. ஒரு கலைஞன், தான் சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்வதற்கான ஒரு களத்தை உருவாக்குறதுதான் ரொம்ப முக்கியமானது. பராசக்தி எழுத்துத் துறையில இது ஆரோக்கியமாகத்தான் இருக்குனு நினைக்கிறேன். ஆனா, சாகித்ய அகாடமி விருதுகளிலும் இப்போ சில சிக்கல்கள் ஆரம்பிச்சிருக்காங்க. என்றவர், தமிழ் சினிமாவுல ஆரோக்கியமான போக்குதான் இருப்பதாகப் பார்க்கிறேன். சமீபத்துல 'சிறை' திரைப்படம் மக்களால கொண்டாடப்பட்டு வெகுஜன அரசியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுச்சு. தமிழ்ச் சூழல்ல இது மாதிரியான சினிமாக்களை எப்போதும் ஆதரிச்சிருக்காங்க. இன்னைக்கு இளைஞர்களும் சமூகக் கருத்துகளைச் சொல்ல வேண்டும்னு முனைப்போடு இயங்குறாங்க. ரொம்பவே நேர்மறையான விஷயங்கள் ஏற்பட்டிருக்கு. அதுனாலதான் சில சிக்கல்களும் ஏற்பட்டிருக்குனு நான் நினைக்கிறேன். சமீபத்துல, 'ஜனநாயகன்', 'பராசக்தி' படங்கள்ல தணிக்கைத் துறையின் தலையீடு அதிகமாகி இருக்கிறதைப் பார்க்கிறோம். Pa Ranjith 'பராசக்தி' மாதிரி என்னுடைய இயக்கத்துல, தயாரிப்புல வந்த படங்கள் நிறைய பிரச்னைகளைச் சமாளிச்சிருக்கு. என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க. அதை மீறித்தான் என்னுடைய படங்கள் மக்களை வந்து சேர்ந்திருக்கு. இன்னைக்கு 'பராசக்தி' படம் மூலமாக இது மாதிரி நிறைய சிக்கல்கள் இருக்குனு மக்களுக்கு தெரிய வந்திருக்கு. இதன் பிறகு இந்தப் பிரச்னைக்கு தீவிரமாகப் படைப்பாளிகள் குரல் கொடுக்கணும்னு என்னுடைய விருப்பம். எனக் கூறியிருக்கிறார்.
காஸா விஷயத்தில் பாகிஸ்தான் தேவையில்லை: இஸ்ரேல் கறார்
காஸா மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கேற்பை இஸ்ரேல் மறுத்துள்ளது. காஸாவை கைப்பற்றுவதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இதற்காக சர்வதேச நிலைப்படுத்தல் படையையும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது. இந்தப் படையில் சேருவதற்காக பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை அமெரிக்கா கோரியுள்ளது. ஆனால், காஸாவுக்கான எதிரான போரில் பாகிஸ்தான் பங்கேற்பதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இஸ்ரேல் தூதர் ரூவென் அஸார் பேசுகையில், “நாம் முன்னேறக்கூடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு ஹமாஸ் அகற்றப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. […]
நகைக் கடையில் புது ரூல்ஸ்.. புர்கா அணிந்து வரக் கூடாது.. சர்ச்சையை கிளப்பிய புது ரூல்ஸ்!
நகைக் கடைகளில் திருட்டு போன்ற மோசடிகளைத் தடுக்க புர்கா அணிந்து வரக்கூடாது என்று நகைக் கடைகளில் போர்டு வைத்துள்ளனர்.
ஹோட்டல்களில் கட்டாயமாக வசூலிக்கும் சேவைக்கட்டணம்.. அரசு அதிரடி நடவடிக்கை!
கட்டாய சேவை கட்டணம் வசூலித்து நுகர்வோர் உரிமைகளை மீறிய குற்றத்துக்காக நாடு முழுவதும் உள்ள 27 உணவகங்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை சுதந்திர நாளை ‘கரிநாளாக’அறிவித்து வடக்கு கிழக்கில் பாரிய பேரணி: தாயக செயலணி அழைப்பு!
இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக செலணி அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள். 04.02.1948 அன்று பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்நாளில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ்த் […]
தமிழர் பகுதியில் ஆட்டை காப்பாற்ற சென்ற சிறுவன் பலி ; ஸ்தலத்திலேயே பிரிந்த உயிர்
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமவதி வீதியிலுள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று நேற்று சனிக்கிழமை (10) காலை இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த 6 ஆம் திகதி அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்டிருந்த நிலையில் மற்றுமொறு சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
BB Tamil 9: பணப்பெட்டி டாஸ்க்; இதுதான் இந்த சீசனின் கடைசி குறும்படம் - விஜய் சேதுபதி அதிரடி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 97 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். பிக் பாஸ் டைட்டிலை வினோத் தான் வெல்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் பணப்பெட்டியை எடுத்து வெளியே சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் வினோத் பணப்பெட்டியை எடுக்க விக்ரம் அரோரா, சபரி தான் காரணம் என குற்றம் சாட்டிய வியானா மற்றும் பிரவீனை விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார். BB Tamil 9 இந்த பிக்பாஸ் சீசனின் கடைசி குறும்படம் இதுதான் என்று விஜய் சேதுபதி கூறுகிறார். புரொமோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று (10) பிற்பகல் 02.58 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 77 கிலோமீற்றர் (47.85 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தையிட்டி விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு துண்டேனும் திருப்பி தரோம் என்கிறார் விகாராதிபதி
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகளில் ஒரு சிறு துண்டேனும் திருப்பி கொடுக்க முடியாது என திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொழும்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. இதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளில் பகுதியளவேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏமாற்றம். திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளை தவிர ஏனைய காணிகளை மக்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளை சூழவுள்ள வேலிகளை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன இந்நிலையில் தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி , தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் ஒரு பகுதியை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிப்பார் அல்லது அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என காணி உரிமையாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அந்நிலையில் குறித்த செய்தி அவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. காணிகளை விடுவிக்க முடியும் - கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை. தையிட்டி விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளில் ஒரு துண்டேனும் மீள வழங்க முடியாது என வெளியான செய்தி தொடர்பில் கடற்தொழில் அமைச்சரிடம் கேட்ட வேளை, தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்கவே எமது அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அடுத்த கட்ட கலந்துரையாடல் மிக விரைவில் நடைபெறும். அதில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
யாழில். நிலவிய சீரற்ற கால நிலை - கடல் கொந்தளிப்பால் மூர்க்கம் கடற்கரை பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, கொங்றீட் வீதி, சீமெந்து இருக்கைகள், நடைபாதை உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்கள் அத்தனையும் கடற்கொந்தளிப்பில் அள்ளுண்டு போய் அழிவடைந்துள்ளன. அது தொடர்பில் பருத்தித்துறை நகர சபை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் திணைக்கள பொதிப்பதிகாரிகளுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார்.
கனடாவில் விசா இல்லாத ஊழியர்களை துன்புறுத்திய தமிழ் கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்திய மூன்று உணவக உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கல்கரியில் உள்ள மெரினா தோசை மற்றும் தந்தூரி கிரில் ஆகியவற்றின் உரிமையாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கமைய உணவக உரிமையாளர்களான மணிகண்டன் காசிநாதன், சந்திரமோகன் மர்ஜாக் மற்றும் மேரி ரோச் ஆகியோருக்கு தலா 90 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய ஊழியர்கள் மேலும், அவர்களால் மோசடி செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கும் 44,000 டொலர் அளவிலான பணத்தை […]
ஈரோடு புதிய சோலார் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை: பயணிகள் அச்சம்!
ஈரோடு புதிய சோலார் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Vijay: Jananayagan படம் எப்போது Release ஆகும்? - Mersal Producer Murali Open Talk | Jananayagan
கிளிநொச்சியில் கடும் பனி மூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் பனி மூட்டம் நிலவுகின்றது. நாட்டின் வடக்கு பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாரதிகள் அவதானம் இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை கடும் பனி மூட்டத்துடனான வானிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக, குறித்த வீதியூடாக பயணிப்பவர்கள் கடும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர். அத்துடன், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை
கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்; பிறகுதான் இது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று டென்மாா்க் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 1952-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, டென்மாா்க் பிரதேசத்தில் வெளிநாட்டுப் படைகள் தாக்குதல் நடத்தினால், தளபதிகளின் உத்தரவுக்காகக் காத்திருக்காமல் படையினா் உடனடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும். நாஜி படையினா் கடந்த 1940-ஆம் ஆண்டு ஏப்ரல் […]
இந்தியாவில் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் –அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா
இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார் என்ற ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது
சென்னையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 2வது
மத உணர்வுகளைத் தூண்டுவிடும் போலி வீடியோவை பரப்பியதாக மகராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் மீது வழக்குப்பதிவு
டெல்லி சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அதிஷி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது
வலுவிழந்து வரும் காற்றழுத்த தாழ்வு : வெளியான வானிலை முன்னறிவிப்பு
மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல முறை மழை பெய்யும். வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மாலை அல்லது இரவில் மற்ற இடங்களில் சில இடங்களில் மழை […]
சென்னையில் போரூர் –வடபழனி மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம்
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் – வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம்
வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ; வாகனப் பதிவில் TIN இணைப்பு
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.புதிய வாகனப் பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள வாகனங்களின் உரிமை மாற்றங்கள் ஆகிய இரண்டிற்கும் இந்த விதிமுறை பொருந்தும். புதிய உரிமையாளர் தனது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது வணிகப் பதிவு (Business Registration) இலக்கத்துடன் சேர்த்து, தனது […]
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து ரிஷப் பந்த் விலகிவிட்டார். ரிஷப் பந்திற்கு மாற்றாக யாரை சேர்ப்பது என்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Grok AI ChatBot-க்கு தடை விதித்த இந்தோனேசியா
எலோன் மஸ்க்கின் Grok AI ChatBot இந்தோனேசியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.இந்தச் செயலி மூலம் ஆபாசமான மற்றும் தவறான (Deepfake) புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து,
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
வடக்கு இலங்கை கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு இலங்கை மற்றும்
அயோத்தி ராமர் கோயிலில் நமாஸ் செய்ய முயற்சி: காஷ்மீர் நபரின் செயலால் அதிர்ச்சி!
அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில்தான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அக்கோயிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு நேற்று ஒருவர் காஷ்மீர் பிரஜை போன்று உடையணிந்து வந்தார். அவர் கோயில் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் கோயிலின் தென்பகுதியில் உள்ள சீதா கோயில் அருகில் அமர்ந்து திடீரென நமாஸ் செய்ய ஆரம்பித்தார். இதைபார்த்த பாதுகாப்பு படையினர் அவரை நமாஸ் செய்ய விடாமல் தடுத்தனர். உடனே அவர் உருது மொழியில் ஏதோ மந்திரங்களை சொன்னார். இதனால் அவரை போலீஸார் பிடித்துச்சென்றனர். அவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் அகமத் ஷேக் என்றும், அவரது சொந்த ஊர் காஷ்மீரின் சோபியன் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமோ அல்லது கோயில் நிர்வாகமோ எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் ஒருவர் கோயில் வளாகத்தில் நுழைந்து நமாஸ் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் வளாகத்தை சுற்றிலும் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அசைவ உணவுகளை சாப்பிட தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு கோயிலில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் ஹோட்டல்களிலும் அசைவ உணவு மற்றும் மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட உதவி உணவு கமிஷனர் மணிக் சந்திர சிங் கூறுகையில், `` ராமர் கோவில் பகுதியைச் சுற்றி அசைவ உணவு விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் வந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ராமன் கோயில் பகுதியிலும் அருகிலுள்ள இடங்களிலும் அசைவ உணவை ஆன்லைனில் விநியோகம் செய்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது இந்த உத்தரவை மீறினால், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்''என்று கூறினார்.
சிபிஐ முன்பு விஜய்… தனி விமானத்தில் புறப்பட ஏற்பாடு- டெல்லி போலீசுக்கு மெயில்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகவுள்ளார். இதையொட்டி போலீசாரிடம் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

22 C