SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

4 விமான விபத்துகளில் உயிர் தப்பிய இரண்டாம் உலகப் போர் வீரர் 103ம் வயதில் காலமானார்

இரண்டாம் உலகப் போரில் 19 ஆபத்தான போர் பறப்புகளை (missions) மேமற்கொண்டு, நான்கு முறை விமான விபத்தில் சிக்கியும் உயிர் தப்பிய கனடிய விமானப்படையின் சிரேஸ்ட விமானி ரெஜினால்ட் “க்ராஷ்” ஹாரிசன் (Reginald “Crash” Harrison) தனது 103 வயதில் காலமானார். அவர் எப்போதும் பொறுமையும், பெருமிதமும், மற்றவர்களைப் பற்றிய அக்கறையும் கொண்டவராக இருந்தார். தன்னைப் பற்றி ஒருபோதும் பேசிக்கொள்ள மாட்டார்” என்று அவரது நண்பர் பிரையன் ஸ்விட்ரோவிச் (Brian Swidrovich) கண்ணீருடன் நினைவு கூர்ந்தார். கனடியன் […]

அதிரடி 12 Dec 2025 3:30 am

197 குழந்தைகளை அபாயத்தில் தள்ளிய விந்தணு தானமளிப்பவர்

புற்றுநோய் அபாயத்தை அதிகப்படுத்தும் அரிதான மரபணுப் பிறழ்வைக் கொண்டிருந்த ஒரு விந்தணு தானமளிப்பவர், ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பிறழ்வு கொண்ட விந்தணுவைப் பயன்படுத்திய குடும்பங்களுக்குச் சர்வதேச அளவில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், விந்தணு தானத்தில் உள்ள வரம்புகள் மற்றும் பரிசோதனை நடைமுறைகள் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விந்தணு தான நடைமுறைகள் இந்த அநாமதேய தானமளிப்பவர், தான் பிறப்பதற்கு முன்பே மரபணுவில் புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பிறழ்வைக் […]

அதிரடி 12 Dec 2025 1:30 am

அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை:

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்கில் முக்கியச் சந்தேக நபராகக் கருதப்படும் முன்னாள் ஆளுநர்அர்ஜுன் மகேந்திரனைக்… The post அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 1:28 am

மியான்மாில் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் – 34 பேர் பலி!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில், பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் கொடூரத் தாக்குதல்கள் தொடர்கின்ற நிலையில் மருத்துவமனை ஒன்றின் மீது… The post மியான்மாில் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் – 34 பேர் பலி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 1:17 am

️  முசலி பிரதேச செயலாளருக்கு எதிராக  ஆளுநரிடம் மகஜர்!

சமீபத்தில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ (Dithwa) புயலின் தாக்கத்தினால் மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்ட… The post ️ முசலி பிரதேச செயலாளருக்கு எதிராக ஆளுநரிடம் மகஜர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 12:59 am

நாட்டை கட்டியெழுப்புதல்; மீட்டெடுத்தல்

லக்ஸ்மன் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதிகளையும், உதவிகளையும் வழங்கி வருகின்றன. வெள்ளிக்கிழமை காலை கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க “ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை” என்று கூறியிருந்தார். அதே நாள் மாலையில் நடைபெற்ற பாராளுமன்ற வரவு-செலவுத் திட்ட விவாகத்தில், “ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பிளவுபடாமல் தேசிய சபையாகச் செயற்பட வாருங்கள்” என்று […]

அதிரடி 12 Dec 2025 12:30 am

IND vs SA 2nd T20: ‘தோல்விக்கு காரணம்’.. ஷுப்மன் கில்லுக்கு அடுத்து வாய்ப்பு வழங்கப்படுமா? சூர்யகுமார் பதில்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது போட்டியில், இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். மேலும், ஷுப்மன் கில்லின் பேட்டிங் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

சமயம் 11 Dec 2025 11:38 pm

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு; உயர் நீதிமன்றம் தடை –என்ன காரணம்?

மாதவிடாய் விடுப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மாதவிடாய் விடுப்பு கர்நாடகாவில் உள்ள தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என கடந்த நவம்பர் 20ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் 18 முதல் 52 வயதுடைய பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். இந்த விடுப்புக்கு ஊதியமும் வழங்கப்படும். வருடத்திற்கு மொத்தம் […]

அதிரடி 11 Dec 2025 11:30 pm

தவெகவின் ஈரோடு பிரச்சாரத்துக்கு புதிய சிக்கல்.. ஈரோடு ஆட்சியருக்கு பறந்த முக்கிய கடிதம்!

விஜய் கட்சியின் முன்னேற்றங்கள் வேகமாக நடைபெறும் போது, செங்கோட்டையனின் அணுகுமுறை கொங்கு மண்டலத்தில் ஆதரவை கூட்டி உள்ளது. ஈரோட்டில் நடைபெற உள்ள பிரச்சாரம், கோவில் நில விவகாரம் மற்றும் போலீசார்களின் விதிமுறைகளால் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

சமயம் 11 Dec 2025 11:09 pm

IND vs SA 2nd T20: ‘எப்படி வென்றது தென்னாப்பிரிக்கா?’.. இந்தியா செய்த மூன்று முக்கிய தவறுகள்!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி அபாரமாக செயல்பட்டு, அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போட்டியில், இந்திய அணி செய்த மூன்று முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம். ஒயிட்களை அதிகம் வீசினார்கள்.

சமயம் 11 Dec 2025 11:02 pm

மியன்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மியன்மாரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 138 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.44 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.95 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. மியன்மார் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி 7.7 ரிச்டர் மற்றும் 6.4 ரிக்டர் […]

அதிரடி 11 Dec 2025 10:30 pm

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் அவதானம்

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைக்கு மத்தியில் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு கூடியுள்ளது. வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் உணவுப் பாதுகாப்புக் குழு கூடியுள்ளது. உணவுப் பொருட்களின் விநியோகம் மற்றும் […]

அதிரடி 11 Dec 2025 10:30 pm

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி.. டி.ஆர்.பி. ராஜாவின் செல்வாக்கு எப்படி இருக்கு?

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளதைக் கவனிக்க முடிகிறது. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மூன்று முறை தேர்தலில் வெற்றிபெற்று, தொடர்ந்து செல்வாக்கு பெற்றுள்ளார்.

சமயம் 11 Dec 2025 10:05 pm

இந்திய படகுகளிற்கு மீண்டும் எதிர்ப்பு!

இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்களிற்கு தீர்வு வேண்டி போராட உள்ளுர் மீனவர்கள் முற்பட்டுள்ளனர். அப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடுவது தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்குரிய மனுவொன்றை உள்ளுர் மீனவ அமைப்புக்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளன. வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் நேற்று; புதன்கிழமை சந்தித்து;கோரிக்கைக் கடிதத்தைக் கையளித்திருந்தனர். பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி முறையால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல்வளம் என்பன் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன .அவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தமக்குச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்; கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

பதிவு 11 Dec 2025 9:52 pm

மலையக உறவுகளிற்கு சுமாவும் அழைப்பு!

வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் அழைப்புவிடுத்துள்ளார். கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம். ஆனால் மலையக உறவுகளும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம். இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள். அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம்.” எனவும் எம்.ஏ.சுமந்திரன் கருத்து பதிவிட்டுள்ளார். முன்னதாக ஆறு.திருமுருகன் உள்ளிட்ட வடக்கிலிருந்து பலரும் மலையக உறவுகளை நோக்கி அழைப்புக்களை விடுத்தே வருகின்றனர். இதனிடையே அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்

பதிவு 11 Dec 2025 9:38 pm

திருநெல்வேலி: பாரதியார் படித்த வகுப்பறையில் உறுதிமொழி எடுத்து கொண்ட பள்ளி மாணவிகள்! | Album

திருநெல்வேலி: மகாகவி பாரதியார் படித்த வகுப்பறையில் உறுதிமொழி எடுத்து கொண்ட பள்ளி மாணவிகள்.!

விகடன் 11 Dec 2025 9:31 pm

அரச சேவைக்கான 2,284 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

அரச சேவையில் தற்போது நிலவும் 2284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவையின் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் கால வரையறையை இனங்கண்டு அது சார்ந்த அத்தியாவசியமாக மேற்கொள்ள வேண்டிய ஆட்சேர்ப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சும் தமது அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் நியமனம் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக […]

அதிரடி 11 Dec 2025 9:30 pm

பெலாரஸில் இருந்து பலூன்கள்: லித்துவேனியாவில் அவசரநிலை

பெலாரஸில் இருந்து வரும் பலூன்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லித்துவேனியா தேசிய அவசரநிலைய அறிவித்துள்ளது. இது குறித்து லித்துவேனியா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்கள் லித்துவேனியாவுக்குள் நுழைந்ததால், வில்னியஸ் விமான நிலையம் மூடப்பட்டது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், அவசரநிலை அறிவிக்கப்படுகிறது. இந்த அவசரநிலை காரணமாக எல்லைப் பகுதிகளில் காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படையுடன் ராணுவம் இணைந்து செயல்பட அனுமதி கிடைக்கும். தேடுதல், கைது போன்ற நடவடிக்கைகளை […]

அதிரடி 11 Dec 2025 9:30 pm

பூங்கொத்தோடு காத்திருக்கிறேன்! - ரஜினி ரசிகர் மன்ற தலைவியாக இருந்த பெண் நெகிழ்ச்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே! சந்தர்ப்பங்கள் வரும்போது தடம் மாறாதே.!..  புரிய வைத்தத் திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறி'. ரஜினியின் ஆரம்ப காலப் படங்களில் மிகப்பெரிய ஆச்சரியக் குறியை உண்டாக்கிய படம். மௌன கவிதையான ரஜினியை ரசிக்கும் ரசிகையாக நான் மாறியது.. அப்போதிலிருந்துதான். ரஜினி தன் நீண்ட சினிமா கச்சேரிக்கான (அருமையான)  முன்னுரை எழுதிய படங்களில் மிக முக்கியமான படம் மனிதனிடம் நியாயமாக இருக்க வேண்டிய எந்தக் குணமும் இல்லாத ஒருவன் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற, எல்லா நல்ல குணங்களும் அமையப்பெற்ற ஒருவன் வாழ்க்கையில் வளர்ச்சி குறித்து பெரிதாக கவலைப்படாமலிருக்க... இப்படி இரு துருவமாய் விளங்கும் இருவரையும் நட்பு இணைக்க, சூழ்நிலை பிரித்துப் போடுவதுதான்  படத்தின் ஒன்லைன் . அறியாத வயசுல... நடிகர் ரஜினியை முதன்முதலாக படத்தில் பார்த்து பிரம்மித்தேன்.  கதாபாத்திரத்தை உள்வாங்கி மிக இயல்பா நடித்த அவர் மனதிற்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதை என்னன்னு சொல்றது!!? புவனா ஒரு கேள்விக்குறி இருப்பதிலேயே மிகவும் கஷ்டமான, சலிப்பான வேலைன்னா அது மனிதனாக இருப்பதுதான். ஆனா மனிதனாக மட்டுமல்ல, அழகான மனிதனாக அந்தப் படத்தில் வாழ்ந்து காட்டி  மனதை கொள்ளை கொண்டதால்... படத்தை இன்னிக்கு வரைக்கும் மறக்க முடியவில்லை. கல்லூரிக் காலக்கட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவியா ஆனதற்கு இந்தப் படம் தான் முழு முதற்காரணம் ன்னு சொல்வேன். எல்லாப் படத்திலும் நல்லவனா இருக்கிற சிவக்குமார் இதுல கெட்டவன் ... எல்லாப் படத்திலும் கெட்டவனாக இருக்கிற ரஜினி இதுல நல்லவன்.. என்பது படத்துக்கு மிகப்பெரிய பலம். எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாத மிக நேர்த்தியான திரைக்கதை .  படம் கருப்பு வெள்ளை தான் ஆனாலும் ஒளிப்பதிவு கொள்ளை அழகு . அப்பாவி காதலனாய் அன்பில் காதலிக்காக காத்து நின்று கனிவதாகட்டும் ... காதலியை இழந்து சிறகு உடைந்து நிற்கும் கையறு நிலை ஆகட்டும்... உயிர் காக்கும் நண்பனின் தவறுகளுக்கு தார்மீக துணையாக நின்றாலும் உள்ளே மனம் வெதும்புவதாகட்டும்... 'அண்ணே',' நாகராஜ் அண்ணே' என்று கரம் கூப்பி சிவக்குமாரிடம் தத்துவம் பேசுவதாகட்டும்.. (அண்ணே',' நாகராஜ் அண்ணே 'என்ற வசனம் பின்னாளில் கொடி கட்டி பறந்த ரஜினி யிசத்தின் துவக்கம் ன்னே சொல்லலாம்) சுமித்ராவிடம் ஏக்கமிகுந்த  குரலில் தன் தாபங்களை வெளிப்படுத்தி தவிப்பினை உணர்த்துவதாகட்டும்... படம் முழுக்க ரஜினி  'கதகளி' ஆடுவார். கை விரல்களை அப்படி இப்படின்னு சொடுக்கி வசனம் பேசற ஸ்டைல் 'ச்சோ ஸ்வீட்' ஆரம்பத்தில் அன்புக்காக உருகும் காதலனாய்... காதலியை காப்பாற்ற இயலாத சாதாரண மனிதனாய்... சிவக்குமாரிடம் ஏற்படும் பாசத்தினால் அவர் செய்யும் பாவக்காரியங்களை எடுத்து கூறும் நல்லவனாய்.. அவருக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யும் நண்பனாய்... நடிப்பின் வெவ்வேறு பரிமாணங்களில் வெளுத்து வாங்குவார் ரஜினி இப்படியாக அந்தப் படத்தில் ஆரம்பித்த  அவர் மீதான  காதல் இன்னமும் தொடர்கிறது ... இனியும் தொடரும்... அவரின் தாடி (வேற லெவல் ) பொருத்தம். தன்காதலியின் நினைவுகள் இளமையின் உணர்வுகளை ஒரளவு கட்டுப்படுத்திவைத்திருப்பதையும், ,காலம் அதனை மறக்கடித்து உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுவதையும் சுமித்ராவிடம் சொல்லும் போது, ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும். அண்ணே நாகராஜ் அண்ணே...கடப்பாரையவே முழுங்கிட்டியண்ணே... அண்ணே இதை ஏப்பம் விட்டுட முடியாது. புவனா ஒரு கேள்விக்குறி ஒருகட்டத்துல வயித்தையேகிழிச்சுப்புட்டு பதம் பார்த்துரும். என்று ரஜினி சொல்லும் போது எல்லாம்.... விசில் சத்தத்தால் காது கிழிந்ததை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. (எனக்கு தெரிஞ்சவங்க யாராவது யாருக்கும் தெரியாதுன்னு தவறு செஞ்சா... இந்த வசனம் தான் என் மனசுக்குள்ள வரும்) சுமித்ராவும் ரஜினியும்கோயிலிருந்து வெளியே வர ,சிவகுமாரும் ஜெயாவும் கோயிலுக்குள் நுழைய ,கோயில்ல என்ன வேண்டுதல்ன்னு சிவக்குமாரின் மனைவி ஜெயா ரஜினியிடம் கேட்க? ரஜினி வேணும்ன்னே ' ஒரு பையன் தான் இருக்கான் அடுத்து ஒரு பெண் குழந்தை கொடு'ன்னு வேண்டி கொள்வதற்காக வந்தோம் ன்னு சொல்வார். அதுமட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மகனைப் போல் வளர்க்கும் பையனிடம், டேய் பாபு அங்கிளுக்கு 'டாடா 'சொல்லுடான்னு சிவகுமாரை பார்த்து  சொல்லி நக்கல் அடிப்பார்பாருங்க சான்சே இல்லைங்க... அவருக்கே உரித்தான ஸ்டைல். இந்தக் காட்சிகளுக்கெல்லாம் தியேட்டரில் விசில் பறந்ததை மறக்க முடியாது.  விழியிலே மலர்ந்தது ராஜா என்பார் மந்திரி என்பார் இரண்டு பாடல்களையும் ரஜினிக்காக எஸ்பிபி உருகி உருகிப் பாடி இருப்பார். (நன்றி எஸ் பி பி சார்,) ஆரம்ப கால ரஜினியை ரசிக்க இரண்டு கண்கள் போதாது படம் வெளியாகி 48 வருடங்கள்... ஆனால் என்ன... இன்றைக்கும் என்றைக்கும்  ரஜினி தான் மாஸ். பக்கா மாஸ்.! அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா... உங்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதுதான் என் வாழ்வில் பொக்கிஷத் தருணம் . நிச்சயம் அந்த நாள் வரும்... பூங்கொத்தோடு காத்திருக்கிறேன் . பிரியமான ரசிகை ஆதிரை வேணுகோபால். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்! கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com

விகடன் 11 Dec 2025 9:02 pm

கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை - தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதையடுத்து பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், அடுத்த 3 மாதங்களுக்கான தேர்தல் பணிகள் குறித்தும் சவால்கள் குறித்தும் பேசினோம். திமுக என்ன மாதிரியான இடையூறுகளை கொடுக்கும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம். பனையூர் தவெக அலுவலகம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன் - தவெக நிர்மல் குமார் பதில் தலைவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வோருடன்தான் கூட்டணி. ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லாததால், கூட்டம் நடத்தவே அனுமதி கேட்கிறோம். ஆனால், காவல்துறை மூலம் மற்ற கட்சிகளுக்கு இல்லாதவாறு முட்டுக்கட்டை போடுகின்றனர். ஜனவரி, பிப்ரவரியில்தான் விருப்ப மனு விநியோகமெல்லாம் நடக்கும். கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை. இதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். செந்தில் பாலாஜி கைதின் போது தொட்டுப்பார் சீண்டிப்பார் என முதல்வர் வீடியோ வெளியிட்டார். நேரு விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை. பனையூரில் சி.டி.ஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் திமுகவின் தலைமையின் பெயரை சொல்லி 'Party Fund' எனக் கூறிதான் நேரு பணம் வாங்கியிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதில் என்ன பிரச்னை? பாமக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது பற்றி தலைவர் முடிவெடுப்பார். என்று பேசியிருக்கிறார்.

விகடன் 11 Dec 2025 8:57 pm

டான்ஸ் ஆடத் தெரியாதவர் என்று கிண்டல் செய்த நானே ரஜினி ரசிகை ஆன கதை! - பேரன்புக்கு சொந்தக்காரர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ரஜினிகாந்த் அவர்களின் அதிதீவிர, தீவிர, சாதாரண என்று அனைத்து விதமான ரசிகர்களும் என் உறவு, நட்பு வட்டங்களில் இருக்கிறார்கள். அதிதீவிர ரசிகர்கள், அதாவது ரசிகர் மன்றத்தில் இருப்பது, போஸ்டர் ஓட்டுவது, என்ற செயல்களில் ஈடுபடுபவர்கள். ரஜினியை விளையாட்டுக்கு கூட விட்டுக் கொடுக்காமல் அவரை ரசிப்பதும், நேசிப்பதும் என்றிருக்கும் தீவிர ரசிகர்கள். இதைத் தாண்டி ரஜினியின் நல்ல படங்களை, நகைச்சுவையை, ஸ்டைலை குறை நிறையுடன் ரசிப்பவர்கள். ரஜினிகாந்த் பள்ளி விடுமுறைக்கு துறையூரில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு செல்லும் போது தான் ரஜினி ரசிகர் மன்றம், தீவிர ரசிகர்கள், திரையரங்கு கொண்டாட்டங்கள், அவரின் பெயரைக் கூட உச்சரிக்காமல் எப்போதும் ‘தலைவர்’, ‘தலைவர்’ என்றே சொல்வது போன்றவை எல்லாம் எங்களுக்கு அறிமுகம். அண்ணன்களில் ஒருவர் வெகு தீவிரம். ரஜினியுடன் அவர் வெள்ளை உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் தான் சட்டமிட்டு வைத்திருப்பார்கள். துறையூரில் ரசிகர் மன்ற தலைவராகவும், மன்ற செயல்பாடுகளிலும் தீவிரமாக இருந்தவர். இன்னொரு அண்ணனும் தீவிரமான ரசிகர் தான். இவர்கள் மூலம்தான் ‘முதல் நாள் முதல் காட்சி’ கொண்டாட்டம் எல்லாம் தெரியவந்தது. அப்போது அவர்களை பெரியம்மாவுடன் சேர்ந்து நாங்களும் திட்டியதுண்டு. ‘படம் பார்ப்பதற்காக இப்படி போறீங்களே’, ‘ரசிகர் மன்ற வேலை தான் முக்கியமா’ என்றெல்லாம் பேசியிருக்கிறோம். ரஜினியின் நடிப்பு, நடனத்தை, ‘ரஜினிக்கு டான்ஸ் ஆடவே தெரியல’ அப்படினெல்லாம் விளையாட்டிற்கு கிண்டல் செய்தால், ‘எங்க தலைவர் கஷ்டப்பட்டு எதுவுமே செய்ய வேண்டாம். அவர் வந்து நின்னாலே போதும் எங்களுக்கு.. அவர் காலைக் காட்டும்போதே கைதட்டல் எப்படி இருக்கும்னு தெரியுமா உங்களுக்கு? தலைவரோட பவர் தெரியாம பேசுறீங்க… சின்ன பிள்ளைங்கன்றதனால சும்மா விடுறேன்… இல்லன்னா இப்படி பேசுறதுக்கு நடக்குறதே வேற’ என்றெல்லாம் வம்பு சண்டை நடந்திருக்கிறது. ரஜினிகாந்த் முதுநிலை படிப்பின் போது அறிமுகமான ஒரு தோழனும் அதிதீவிர ரஜினி ரசிகன். ‘எங்க ஊர்ல பட ரிலீஸின் போது தலைவருக்கு போஸ்டர் எல்லாம் ஒட்டுவேன் தெரியுமா?’ என்று சொல்லும் ரகம். இளநிலை படிப்பில் அறிமுகமான ஒரு உற்ற தோழியும் தீவிர ரஜினி ரசிகர். ரஜினியை எந்த நிமிடமும், எந்த விதத்திலும், விளையாட்டுக்கு கூட விட்டுக் கொடுக்காமல், மூச்சு விடாமல் பேசும் ரகம். கல்லூரி காலங்களில், அவ்வப்போது மற்ற தோழிகள் ரஜினியை கிண்டல் செய்து, அவரை லேசாகத் தூண்டி விட்டால் போதும், ரஜினியைப் பற்றிய தகவல்களும், பெருமையும் மழையென பொழியத் துவங்கிவிடும். வேலைப் பார்க்கும் நாட்களிலும் கூட, ஒரு முறை தொலைபேசியில் பேசும்பொழுது ஏதோ கிண்டல் செய்து விட்டேன். அவ்வளவுதான் ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்பது போல, ரஜினி சேனல் ஆன் ஆயிடுச்சு. இடைவெளியில்லாமல், ‘ஜப்பான்ல ரஜினி படம் எப்படி ஓடுச்சு தெரியுமா?’, ‘அந்த ஊர்ல எல்லாரும் எப்படி ரசிச்சாங்க தெரியுமா? மொழியே தெரியாம எப்படி அவரை கொண்டாடுறாங்க தெரியுமா?’ என்று அவ்வளவு புள்ளிவிவரங்கள். கூகுளுக்கே டேட்டா இங்கிருந்துதான் கொடுக்கணும் போலவே என்ற அளவிற்கு பேசியதை சிரித்துக் கொண்டே ரசித்திருக்கிறேன். அவரை ரசிப்பதும், ரசனை தாண்டிய நேசமும் என்று ஒரு தனி விதமான அன்பு, ஒரு உள்ளார்ந்த நேசம் அது.  முத்து படத்தில் ரஜினி இவர்களை எல்லாம் பார்த்தும், இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டதிலும், ரஜினி படத்தை ஒரு முறையாவது முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்ற ஆசை என்னுள் துளிர் விட்டது. ‘சந்திரமுகி’ பட ரிலீஸின் போது சென்னையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ஆசையை தெரிந்த அந்த நண்பன் ‘ஃபர்ஸ்ட் டேக்கு டிக்கெட் வாங்கித் தரவா?’ என்று கேட்ட பொழுது தனியாக, அந்தக் கூட்ட நெரிசலில் செல்ல பயந்து வேண்டாம் என்று விட்டேன்.  பின் திருமணம் முடிந்ததும், என்னுடைய இந்த ஆசையை அறிந்த கணவர் (அவரும் ரஜினி ரசிகர் தான்) 2014, டிசம்பர் 12 ரஜினியின் பிறந்த நாள் அன்று ரிலீஸ் ஆன “லிங்கா” படத்திற்கு அழைத்துச் சென்றார். தம்பி மற்றும் அவன் நண்பனிடம், அவர்களும் வருகிறார்களா என்று கேட்டதற்கு, “முதல் காட்சியில் படமே பார்க்க முடியாது. முழுக்க கரகோஷம் இருந்துகிட்டே இருக்கும். டயலாக் கூட காதுல விழாது. படத்த ரசிக்கவே முடியாது. அதனால நாங்க நைட் ஷோ போகிறோம்” என்று சொல்லிட்டாங்க. இப்படியும் சில ரசிகர்கள். நமக்கு அந்த உற்சாகத்தையும், ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் பார்ப்பது தான் பிரதானம்.  அதனால் உற்சாகமாக நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகும் ஆவலில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கணவருடன் திருச்சி ‘கலையரங்கம்’ திரையரங்கிற்கு சென்றேன். திரையரங்கின் முன் கூடியிருந்த கூட்டமும், மேள சத்தமும், ஆட்டமும், பாட்டமும் சற்று மிரளச் செய்தாலும் கணவருடன் இருக்கும் தைரியத்தில் அந்த கொண்டாட்டங்களை ரசிக்கத் தொடங்கினேன். லிங்கா அப்போது வரை பெண்கள் யாரும் கண்ணில் படவில்லை. திரையரங்கில் எங்களை அழைத்து உள்ளே உட்கார வைத்து விட்டார்கள். உள்ளிருந்து ரசிகர் கொண்டாட்டத்தை, கண்ணாடித் தடுப்பின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. என் தோழி அப்போது அங்கு தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தினமுமே அழைத்து விடும் வழக்கத்தில் அன்றும் அழைக்க ‘நான் எங்கிருக்கிறேன்’ என்று சொன்னதைக் கேட்டு, ஒரே பரவசம். ‘நிஜமாவா சொல்ற’ ன்னு திரும்பத் திரும்ப கேட்டு ஆனந்தப்பட்டு ஒரே உற்சாகம் தான்.  திரையரங்கின் கடைசி வரிசையில் எங்களை அமர வைத்ததால் என்னால் ரசிகர்களின் முழு கொண்டாட்டத்தையும் ஓரளவு காண முடிந்தது. ரஜினி அறிமுகமாகும் பாடல் முழுவதும் எழுந்து ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தார்கள். நிறைய வயதானவர்களையும், அவர்களின் உற்சாகமான ஆர்ப்பரிப்பையும் காணும் போது ஆச்சரியமாக இருந்தது. அமர்ந்த நிலையில் திரையே தெரியாததால் எழுந்து நின்று ரசிகர்களின் கொண்டாட்டத்தை தான் அதிகம் வேடிக்கை பார்த்தேன். இடைவேளையின்போது இன்னும் சில பெண்கள் கண்ணில் பட்டார்கள். ‘ஹப்பா நம்ம மட்டும் இல்லை’ என்று ஒரு நிம்மதி. படம் முடிந்து வெளியில் வந்தால், யாரோ மைக்கை முன்னாடி நீட்டி கருத்தெல்லாம் கேட்டாங்க. வண்டியில் வீடு வந்து சேரும் வரை கூட பொறுக்க முடியாமல், உடனே என் தங்கைக்கு அழைத்து (தங்கையின் கணவரும் ரஜினி ரசிகரே),  “ஹேய் நான் இப்போ எங்க போயிட்டு வரேன்னு சொல்லு பார்க்கலாம்”  என் குரலின் உற்சாகத்தை உணர்ந்து அதுவும் உற்சாகமாக, “சொல்லு… சொல்லு.. நீயே சொல்லிடு” “ ‘லிங்கா’ படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாத்துட்டு வரேன்”  “ஹேய்ய்ய்ய் நிஜமாவா? சூப்பர்.. ஹய்யோ.. இதுங்க(அண்ணன்கள்) கிட்ட சொன்னா திட்டுவாங்களே… நாங்க போனப்ப எங்களை எப்படி திட்டினீங்க… இப்ப நீங்களே போறீங்கன்னு பேசுவாங்களே.. (ஒரு காலத்தில், காலை வேளையிலேயே அண்ணன்கள் படம் பார்க்கப் போவதற்கு அவ்வளவு பேசியிருக்கிறோம்) சரி விடு பார்த்துக்கலாம்.. நீ சொல்லு எப்படி இருந்துச்சுனு” என்று சொல்ல அந்த உற்சாகத்தை விவரித்து கொண்டே வீடு போய் சேர்ந்தேன். லிங்கா மாலை நேர பத்திரிகையில் புகைப்படத்துடன், சொன்ன கருத்தும் வெளிவந்ததைப் பார்த்து என் தோழி, “பாத்தியா.. இதெல்லாம் உனக்கு யாரால கெடச்சது? எங்க தலைவரால.. இந்த பேப்பரைப்  பத்திரமா வச்சுக்கோ” என்று சொல்லி படத்தைப் பற்றி ரசிகர்களைப் பற்றி கேட்டு என்று ஒரே உற்சாகம்தான்.   மாலை எங்கள் ‘அதிதீவிர ரசிகர்’ அண்ணனுக்கு முதலில் அழைத்தேன். இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன் என்று சொன்னவுடன், ஆச்சரியப்பட்டு விவரம் எல்லாம் கேட்டுவிட்டு, இதை உங்க அக்காவுக்கு(பெரிய அக்கா) கூப்பிட்டு சொல்லு என்று சொல்லி வச்சிட்டாங்க. உடனே எங்க அக்காவிற்கு அழைத்து உற்சாகமாக சொன்னால், அது அதிர்ச்சியாகிவிட்டது.  “என்ன சொல்ற?? அந்த கூட்டத்துல எப்படி போயிட்டு வந்த? யாரு உனக்கு டிக்கட் வாங்கி குடுத்தா? உன் வீட்டுக்காரர் எப்படி உன்னை விட்டார்??” “ அவங்க தான் என்னை கூட்டிட்டு போனாங்க”  “ஹய்யோ இந்தப் புள்ள அங்க உக்காந்துகிட்டு என்னென்ன வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கு… அவங்க வீட்டுக்காரர சொல்லணும்” என்று தன் போக்கில் புலம்பி  “சாயந்திரம் தான் அண்ணன திட்டினேன்.. இப்ப நீயும் இந்த வேலை பார்த்து இருக்க..”  “ஏன்? அவங்க வழக்கமா போறது தானே” “நேத்து பைக்ல போகும்போது கீழே விழுந்து காலில் கட்டு போட்டு இருக்கு. அதோட இன்னைக்கு பசங்களோட படம் பாக்க போயிருக்கு.. அதான்… அப்படி என்ன அந்த படத்த இன்னிக்கே பாக்கணும்னு திட்டினேன்..”  ஓஹோ….. ‘உங்க அக்காவுக்கு கால் பண்ணு’ என்று சொன்னதன் பின்னணி இதுதானா என்று புரிந்து, மீண்டும் அவங்களுக்கு கால் செயதவுடனே,  “என்ன வாங்கி முடிச்சிட்டியா?? நான் மட்டும் திட்டு வாங்கினா எப்படி?”  என்று சொல்லி ஒரே சிரிப்பு. சந்தோஷமா திட்டு வாங்குறதுங்கறது இதுதான். ஆனால் அன்று என் அக்கா பயந்தது போல எந்த ஒரு கசப்பான அனுபவமும் ஏற்படவில்லை. பின், அடுத்த அண்ணனுக்கு அழைத்து  “படம் பாத்திட்டியா” என்று கேட்க  “இல்லப்பா.. நைட் ஷோ தான் போறேன்” என்று சோகமாக சொன்னது.  “என்னாது……. படம் பாக்கலையா?? ஹா ஹா ஹா.. ரஜினி ரசிகருக்கு வந்த சோதனை…. ஆனா நான் பாத்துட்டேனே”  “அடப்பாவி.. எப்படி?? எங்கள மட்டும் அப்படி திட்டுனீங்க” என்று தொடங்கி என் தங்கை சொன்ன அதே விதத்தில்… திட்டி முடித்தவுடன்,  “எப்படியோ உனக்கு முன்னாடி நான் பாத்துட்டனே” என்று சொல்லி அதை வம்பு இழுத்தது, என்று அந்த நாளின் நினைவுகள் மறக்க முடியாத சந்தோஷங்கள்.  பெரிய அண்ணன் அங்கு துறையூரில் மற்றவர்களிடமும் இதை சொல்லி, பேப்பரில் வந்த விஷயத்தையும் சொல்ல, அதில் வேறு ஒரு பஞ்சாயத்தாகிவிட்டது. அடுத்த சில தினங்களில் என் பெரியம்மாவை சந்தித்தபோது,  “நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா? தெரு சனமே எங்கிட்ட வந்து கேக்குது.. ஆனா எனக்குத் தெரியவேயில்ல.. ஒரு ஃபோன் பண்ணுனியா நீ படம் பார்த்தேன்னு?”   “அது பெரிம்மா… நான் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும்தான் கால் பண்ணினேன்” என்று சமாளித்ததெல்லாம் சந்தோஷ நினைவுகள்.  “கபாலி”, “காலா”, “எந்திரன் 2.0”, “ஜெயிலர்” போன்ற படங்களையும் முதல் காட்சி பார்த்தேன். ஒரு மாற்றம்.. இந்த படங்களுக்கு, என் மாமாப்பெண், அண்ணன் பெண், மாமாப்பையன்(தீவிர ரஜினி ரசிகர்), அவர் மனைவி என்று கூட்டமாக செல்லும் அளவிற்கு வந்து விட்டோம். ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்.. இப்போதெல்லாம் திரையரங்குகள் சில கண்டிப்பான விதிமுறைகளை பின்பற்றி (மது, புகையிலை, சிகரெட் தவிர்ப்பதை சோதனை செய்து அனுமதி அளிப்பது) பாதுகாப்பாக இருப்பதாலேயே பெண்களாலும் முதல் காட்சிக்கு செல்ல முடிகிறது. கபாலி முதல் முறை இவ்வாறு சேர்ந்து போக கிளம்பிய போது, என் மாமா அவர்கள், மாமாப்பெண்ணிடம்,  “யூ டூ (you too) பா” என்று சிறு அதிர்ச்சியுடன் கேட்டாங்களாம். (ஏன்னா…. எங்க மாமாப்பையன், காலையிலேயே படத்துக்கு போறதுக்கே திட்டுவாங்க..)  இதற்கு என்ன பதில் சொல்லணும்?  “எஸ் பா”, “நோ பா” இந்த மாதிரி ஏதோ ஒன்னு தான சொல்லணும். அதை விட்டுட்டு ஆப்ஷன்லயே இல்லாத பதிலான  “சியாமியும் வருதுப்பா” அப்படின்னு சொன்னுச்சாம்.  அதை என்னிடம் சொல்லி ஒரே சிரிப்பு..  “நானும் படத்துக்கு வர்றத பத்தி உன்னைய மாமா கேட்டாங்களாப்பா?” என்று நான் கேட்டேன். “அப்படி சொல்லவும் தான், வேற எதுவும் சொல்லாம போயிட்டாங்க” ன்னு சொல்லி சிரித்ததெல்லாம் நினைவில் நிற்கும் சந்தோஷச் சித்திரம்.  நான் இந்த முதல் காட்சிகளில், படம் பார்த்ததைவிட, ரஜினியின் ரசிகர்களையே அதிகம் வியந்து பார்த்திருக்கிறேன். படத்துக்கு நடுவில் வரும் கமெண்ட்டுகள், இடைவேளையின் போது காதில் விழும் சிலாகிப்புகள், வயது கருதாமல் எழுந்து நின்று நடனமாடி, ஆர்ப்பரித்து, உற்சாக கூச்சலிட்டு கொண்டாடும் சந்தோஷங்கள், உள்ளார்ந்த உணர்ச்சிவசங்கள், என்று அந்த சந்தோஷங்ளை சிரிப்புடன் வெகுவாக ரசித்தேன். இப்பவே இப்படி இருக்கே… 80, 90 களில் வந்த படங்கள், “பாட்ஷா” படத்திற்கெல்லாம் எவ்வளவு கொண்டாட்டங்கள் இருந்திருக்கும் என்று தோன்றுவதுண்டு.  எங்க பெரிய மாமா “நீயும் படம் பார்க்க போனியாமேப்பா?” என்று என்னிடம் கேட்ட போது, நான் இப்படித்தான் சொன்னேன்.. “அந்த கொண்டாட்டத்தை சந்தோஷ ஆர்ப்பரிப்பை நேர்ல பார்க்கணும் என்று எனக்கு ரொம்ப ஆசை மாமா.. அது ஒரு வித்தியாசமான அனுபவமா, நல்லா இருந்துச்சு.” அது வேற லெவல் வைப்ரேஷன் தான். இந்த ஆர்ப்பரிப்பிலிருந்தும், கொண்டாட்டங்களிலிருந்தும் ஒரு ஆற்றலை உருவாக்க முடியும் என்றால் அது மிகப் பெரிய சக்தியாக இருக்கும் என்று தோன்றியது. நடிகர் ரஜினிகாந்த் இன்றைய காலகட்டத்தில், வலிந்து உருவாக்கப்படும் கூட்டம், புகழ் மற்றும் கொண்டாட்டங்களை காணும் போது, தலைமுறைகள் தாண்டியும், எதிர்பார்ப்பில்லாத, யாரிடமும் நிரூபிக்கும் நிர்பந்தமில்லாத, பாசாங்கில்லாத, அரிதாரம் பூசாத, அலாதி அன்பு கொண்ட கோடானுகோடி ரசிகர்களைப் பெற, “என்ன தவம் செய்தாரோ? என்ன தவம் செய்தாரோ?” என்றே தோன்றுகிறது.  உலகில் எத்தனைப் பேருக்கு, இப்படி அறிமுகமற்ற மக்களிடமிருந்து இவ்வளவு மட்டற்ற அன்பும், மாறாத நேசமும் கிடைத்திருக்கும்?  “என்னோட ராசி நல்ல ராசி!! அது எப்போதும் பெரியவங்க ஆசி!!” ஆம்!! பெரியவர்களின் ஆசியும், எத்தனை உயரத்திற்கு சென்றாலும் மற்றவர்களிடம் நீங்கள் காட்டும் பணிவு கலந்த நேசத்திற்கும், முக்கியமாக, இந்தப் பேரன்பு மற்றும் புகழின் கணத்தை தலைக்கு ஏற்றாத தன்னடக்கத்திற்கும் “என்றுமே ராஜா நீ ரஜினி!!” தான். காலங்கள் தாண்டியும் நிலைக்கும் ரசிகர்களின் அன்பெனும் சாம்ராஜ்ஜியத்தின் “மன்னன்” தான்!! நீண்ட நீண்ட காலம் நீடு வாழ, வேண்டி, வாழ்த்தும் சாதாரண கடைக்கோடி ரசிகையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி சார்!! வாழ்க நலமுடன்!! வாழ்க வளமுடன்!! தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்! கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com

விகடன் 11 Dec 2025 8:52 pm

ராணுவத்தின் முப்படைகளில் சேர வாய்ப்பு; டிகிரி போதும், 451 இடங்கள் - UPSC CDS 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு

பட்டப்படிப்பு முடித்து இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்புகிறவர்களுக்கான வாய்ப்பாக ஒங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு (Combined Defence Services Exam) உள்ளது. யுபிஎஸ்சி மூலம் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான தேர்விற்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.

சமயம் 11 Dec 2025 8:44 pm

சூடான்: விபத்துக்குள்ளான ராணுவ விமானம்!

கிழக்கு சூடானில் தரையிறங்க முயன்றபோது ராணுவ சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இல்யுஷின் இல்-76 ரக சரக்கு விமானம் பாா்ட் சூடான் நகரில் உள்ள ஒஸ்மான் டிக்னா விமானத் தளத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இருந்தாலும், விபத்துக்குள்ளானபோது அந்த விமானத்தில் எத்தனை போ் இருந்தனா் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. சூடானில் […]

அதிரடி 11 Dec 2025 8:30 pm

கோவா தீ விபத்து.. தலைமறைவானவர்கள் தாய்லாந்தில் கைது.. முன்ஜாமின் நிராகரிப்பு!

கோவா தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததை அடுத்து, தாய்லாந்தில் தலைமறைவாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் முன்ஜாமின் கோரிய மனுவையும் டெல்லி நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

சமயம் 11 Dec 2025 8:15 pm

12-ம் வகுப்பு தகுதியுடன் ராணுவத்தில் சேர வேண்டுமா? UPSC NDA 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு - டிசம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்

யுபிஎஸ்சி தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு 2026 (UPSC NDA Notification 2026) அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 394 காலிப்பணியிடங்கள் உள்ளன. 12-ம் வகுப்பு முடித்து ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் டிசம்பர் 30-ம் தேதி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 11 Dec 2025 8:05 pm

பல இடங்களில் வங்கி அட்டை மோசடி ; பொதுமக்களிடன் உதவி கோரும் பொலிஸார்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கி அட்டை மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக நம்பப்படும், சந்தேகநபரை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். 2 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, பொது மகன் ஒருவரால் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் வீசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு இலட்சம் ரூபா மோசடி பொலனறுவவையை சேர்ந்த பொதுமகன் ஒருவர், களுத்துறை நகரிலுள்ள வங்கி தானியங்கி பணப்பரிமாற்று இயந்திரம் மூலம் பணம் எடுக்கும் போது சந்தேகநபரின் […]

அதிரடி 11 Dec 2025 7:40 pm

அடோப் ஃபோட்டோஷாப், அக்ரோபேட் ChatGPT-யில் இணைக்கிறது

அடோப் ஃபோட்டோஷாப், அடோப் எக்ஸ்பிரஸ் மற்றும் அக்ரோபேட் பயன்பாடுகளை ChatGPT இல் ஒருங்கிணைக்கிறது என்று புதன்கிழமை கூறியது, இது பயனர்கள் படங்களைத் திருத்தவும், கிராபிக்ஸ் வடிவமைக்கவும் மற்றும் OpenAI-க்குச் சொந்தமான சாட்போட்டிற்குள் PDFகளை நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது. இந்த நடவடிக்கை, அன்றாட கருவிகளை உரையாடல் AI தளங்களில் இணைத்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்கு இடையில் மாற வேண்டிய தேவையைக் குறைக்கும் அதே வேளையில், அதிக பயனர்களைப் பயன்படுத்த மென்பொருள் தயாரிப்பாளர்களின் பரந்த உந்துதலை பிரதிபலிக்கிறது. OpenAI உடனான நிதி விதிமுறைகள் குறித்து கருத்து தெரிவிக்க அடோப் மறுத்து. ChatGPT இல் அவற்றைப் பயன்படுத்த Adobe இல் பதிவு செய்ய வேண்டிய புதிய பயனர்களுக்கு அதன் முதன்மையைக் காண்பிப்பதை இந்த ஒருங்கிணைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறியது. இந்த வெளியீடு Adobe இன் பயன்பாடுகளில் கிடைக்கும் பல பிரபலமான அம்சங்களை ChatGPT இன் 800 மில்லியனுக்கும் அதிகமான வாராந்திர செயலில் உள்ள பயனர்களுக்குக் கொண்டு வரும். இது தொழில்முறை வடிவமைப்பு சந்தைகளில் AI- இயக்கப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கான முயற்சிகளை அதிகரிக்கும் போது Adobe இன் வரம்பை விரிவுபடுத்துகிறது. தொடக்கநிலையாளர்கள் மற்றும் திறமையான படைப்பாளிகள் இருவரையும் ஈர்க்கும் வேகமான, அரட்டை அடிப்படையிலான தொடர்புகளுக்கான தேவை அதிகரிக்கும் நேரத்தில் இது Adobe க்கு ஒரு படியாகும். பொதுவான படைப்பு மற்றும் உற்பத்தித்திறன் பணிகளை எளிதாக்கும் நோக்கில், பயனர்கள் ChatGPT-யில் புகைப்படங்களை நன்றாகச் சரிசெய்தல், கிராஃபிக் உருவாக்குதல், வடிவமைப்புகளை அனிமேஷன் செய்தல் அல்லது PDF-ஐச் சுருக்குதல் போன்ற கோரிக்கையைத் தட்டச்சு செய்து, அரட்டை இடைமுகத்தை விட்டு வெளியேறாமல் தொடர்புடைய Adobe கருவியைத் தூண்டலாம் என்று Adobe தெரிவித்துள்ளது. புதன்கிழமை முதல் ChatGPT டெஸ்க்டாப், இணையம் மற்றும் iOS முழுவதும் ChatGPT-க்குள் Photoshop, Acrobat மற்றும் Adobe Express ஆகியவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம். ChatGPT-க்கான Adobe Express ஏற்கனவே Android-இல் நேரலையில் உள்ளது, Android-க்கான Photoshop மற்றும் Acrobat ஆதரவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அக்டோபர் மாத இறுதியில் Adobe நிறுவனம் அதன் வீடியோ மற்றும் பட எடிட்டிங் கருவிகளை மாற்றியமைத்தபோது, ​​பயனர்கள் உரையாடல் AI உதவியாளர்கள் மூலம் பணிகளைச் செய்ய அனுமதிக்கும் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டது.

பதிவு 11 Dec 2025 7:17 pm

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து –உயிரிழந்த யாழ். இளைஞனின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சம்பவத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார், அந்நிலையில் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் , முதல் கட்டமாக குறித்த இளைஞனின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அதிரடி 11 Dec 2025 7:11 pm

யாழில். நிலவும் சீரற்ற கால நிலை –சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தை அண்மித்த நிலையில் வானில் நிலவிய கடுமையான மோக மூட்டத்தால் , சென்னைக்கு மீள திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை , கொழும்பில் இருந்து வடமாகாணத்திற்கான நிவாரண பொதிகளை […]

அதிரடி 11 Dec 2025 7:08 pm

மியான்மாரில் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்: 34 பேர் பலி!

மியான்மாரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவனை மீது நேற்றுப் புதன்கிழமை இரவு மியான்மர் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் மற்றும் 76 பேர் காயமடைந்தனர். அவர்களில் 27 பேரின் நிலை கவலைகிடமாக உள்ளது. க இந்த மருத்துவமனை ரக்கைன் மாநிலத்தில் உள்ள மராக்-யு நகரில் அமைந்துள்ளது. இது அரக்கன் இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பகுதி. நாட்டின் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடும் வலிமையான இனப் படைகளில் ஒன்று அரக்கன் இராணுவம். 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றி உள்நாட்டுப் போரைத் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சமீபத்திய மாதங்களில், இனப் படைகளிடமிருந்து பிரதேசத்தை மீட்டெடுக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் எதிரிகள் மீது குண்டுகளை வீச பாராகிளைடர்களையும் பயன்படுத்தியுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் இந்த மாத இறுதியில் முதல் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில், மியான்மர் இராணுவம் இந்தத் தாக்குதல்கள் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், டெலிகிராமில் உள்ள இராணுவ சார்பு கணக்குகள், இந்த வாரம் நடந்த தாக்குதல்கள் பொதுமக்களை இலக்காகக் கொண்டவை அல்ல என்று கூறுகின்றன. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் என அரக்கன் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கைங் துகா கூறினார். இது பொதுமக்கள் இடங்களை குறிவைத்து பயங்கரவாத இராணுவம் நடத்திய சமீபத்திய கொடூரமான தாக்குதல் என்று அவர் கூறினார். மேலும் பொதுமக்களை குண்டுவீசித் தாக்கியதற்கு இராணுவம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். அரக்கன் இராணுவ சுகாதாரத் துறை, சுமார் 21:00 மணிக்கு (14:30 GMT) நடந்த இந்த தாக்குதலில் 10 நோயாளிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்டதாக நம்பப்படும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கட்டிட வளாகத்தின் சில பகுதிகளில் கூரைகள் காணாமல் போனது. உடைந்த மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தரையில் சிதறிக்கிடக்கும் குப்பைகள் ஆகியவற்றைக் காட்டுகின்றன. இனக்குழுக்களுடன் பல ஆண்டுகளாக நீடித்த இரத்தக்களரி மோதலில் இராணுவ ஆட்சிக்குழு சிக்கித் தவித்து வருகிறது, ஒரு கட்டத்தில் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால் சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து சமீபத்தில் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களின் வருகை நிலைமையை மாற்ற உதவியதாகத் தெரிகிறது. வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கடுமையான குண்டுவீச்சு பிரச்சாரத்தின் மூலம் இராணுவ ஆட்சிக்குழு குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு மத விழாவில் போராட்டம் நடத்திய கூட்டத்தின் மீது இராணுவ மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர் இரண்டு குண்டுகளை வீசியதில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இராணுவ ஆட்சிக்குழுவின் கீழ் சிவில் உரிமைகளும் வியத்தகு முறையில் சுருங்கிவிட்டன. பல்லாயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உரிமைக் குழுக்கள் மதிப்பிடுகின்றன. மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு டிசம்பர் 28 அன்று பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது, இது அரசியல் ஸ்திரத்தன்மைக்கான பாதையாகக் கூறப்படுகிறது. ஆனால் விமர்சகர்கள் இந்தத் தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இருக்காது, மாறாக இராணுவ ஆட்சிக்குழுவிற்கு சட்டபூர்வமான தன்மையின் போர்வையை வழங்கும் என்று கூறுகிறார்கள். மியான்மர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர் டாம் ஆண்ட்ரூஸ் இதை போலி தேர்தல் என்று அழைத்தார். சமீபத்திய வாரங்களில், வாக்களிப்பை சீர்குலைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பொதுமக்களை இராணுவ ஆட்சிக்குழு கைது செய்துள்ளது, இதில் பேஸ்புக்கில் தேர்தல் எதிர்ப்பு செய்திகளை அனுப்பியதாக அதிகாரிகள் கூறிய ஒருவர் உட்பட. தேர்தல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆர்வலர்களைத் தேடுவதாகவும் இராணுவ ஆட்சிக்குழு திங்களன்று கூறியது. இனப் படைகள் மற்றும் பிற எதிர்க்கட்சி குழுக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக உறுதியளித்துள்ளன. மத்திய மியான்மரின் மாக்வே பிராந்தியத்தில் குறைந்தது ஒரு தேர்தல் வேட்பாளரை இராணுவ ஆட்சி எதிர்ப்புக் குழு தடுத்து வைத்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பதிவு 11 Dec 2025 7:08 pm

பலாலிக்கு இன்று மீண்டும் பறந்தது அமெரிக்க விமானப்படை விமானம்

சிறிலங்காவின் வட பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முக்கியமான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக, அமெரிக்க விமானப்படையின் C-130J விமானம் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டது. பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்த விமானத்தில், அத்தியாவசிய உதவிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருந்தன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குஉதவுவதற்காக, சிறிலங்கா விமானப்படைக்கும் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவை சேர்ந்த பங்காளர்களுக்கும் உதவி செய்வதில்

புதினப்பலகை 11 Dec 2025 6:53 pm

டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன்.. இது தான் காரணமா? எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஏன்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் டிசம்பர் 14 ஆம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

சமயம் 11 Dec 2025 6:52 pm

IND vs SA 2nd T20: 'டாஸ் வென்றது இந்திய அணி'.. பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11 அணி: கேப்டன்கள் பேட்டி இதோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது போட்டி துவங்கவுள்ளது. இதிலும், இந்திய அணி எப்படி செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

சமயம் 11 Dec 2025 6:41 pm

An X First launch: Breaking Barriers, India Today’s 3C Project ushers in an Era of Empathy-Led Candid, Constructive Conversation

New Delhi: At a time of rising polarization and closed echo chambers, 3C aims to bring diverse viewpoints into the mainstream, deepen public understanding and host meaningful, solutions-driven dialogue.At its core, 3C is a platform where people with opposing lived experiences come together for empathy-led, issue-focused conversations. It is not a debate or a shouting match, but a space to listen, share, challenge and seek common ground. In today’s hyper-polarized climate, the goal is not just to amplify voices but to build understanding—bringing real people into discussions on caste, religion, youth crime, digital exposure and more. Disagreements here serve as starting points for synthesis, not division.The first episode premiered last week on X, focusing on one of India’s most debated subjects: Caste Reservation. It brought ground-level perspectives to a wider, younger, digitally active audience.To extend the dialogue, India Today hosted a dedicated X Space with Managing Editor Marya Shakil on 8th December at 9 PM. The session witnessed strong participation, with over 1,000 people tuning in live to share views and challenge assumptions. The recording continued to gain traction with 200+ replays within minutes.During the X Space, Marya said, “If you listen to disagree, not to dismiss, then this India Today Space can rise above noise and shape how India thinks about caste, opportunity and power.” Later that night, the conversation carried forward to her flagship show Newstrack at 10 PM, integrating insights from the digital community into the national broadcast.With The 3C Project, India Today strengthens its commitment to informed public discourse through a blend of broadcast, digital and community-driven formats. Each episode will take up a topic of national relevance, encouraging fact-based, constructive engagement.This is just the beginning—3C will continue to grow as a space where India talks, listens and thinks together.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 6:36 pm

இரவு பகல் பாராமல் டார்ச்சர்; அதிமுக பிரமுகர் மகள் கொலை –உடற்கூராய்வில் அதிர்ச்சி!

அதிமுக பிரமுகரின் மகள் கொலை சம்பவம் திருப்பம் கண்டுள்ளது. சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுகவை சேர்ந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். பி.இ பட்டதாரியான பாரதி, சங்கர் நகரில் டியூசன் சென்டரில் பணியாற்றி வந்ததால், அங்கேயே தங்கி வந்துள்ளார். அப்போது நாழிக்கல்பட்டியை சேர்ந்த உதயசரண் என்பவர் பாரதியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் […]

அதிரடி 11 Dec 2025 6:30 pm

Rohit Markan named Executive Vice President Asia Pacific for Continental’s Industrial Solutions Business

Mumbai: Continental’s group sector ContiTech has appointed Rohit Markan as the Executive Vice President Industrial Solutions for Asia Pacific (APAC), effective November 17, 2025. He reports directly to Philip Nelles, Executive Board member for ContiTech, and succeeds Hannes Friederichsen, who has retired after many years with the company.Based in Singapore, Markan will oversee industrial operations across key markets including India, China, Australia and New Zealand, Japan, Korea, and Southeast Asia. His mandate includes optimizing organizational structures and processes across product groups and customer industries, while contributing to ContiTech’s strategic direction as part of the newly formed Executive Management Committee, ahead of the group sector’s planned independence in 2026.The APAC business encompasses ContiTech’s industrial offerings made from rubber and plastics, including hoses, conveyor belts, drive belts, and air springs for a diverse range of industries.With over 28 years of leadership experience, Markan has held senior roles spanning Sales, Marketing, Finance, Manufacturing, Project Leadership, Innovation Management, Profit & Loss Management, and Country & Board Management. He has driven multiple transformation initiatives and achieved revenue and profitability growth across industries and geographies.His previous roles include Managing Director of Roquette India, Senior Vice President Sales for Roquette Asia Pacific, Global Marketing Manager for Solar Solutions at Dow Chemicals, and Global Head of Sales for the Pharma Business at Roquette Asia Pacific Pte Ltd.Commenting on the appointment, Philip Nelles said, “Rohit Markan brings a broad portfolio of experience and perspectives from different regions, multiple industries and diverse functions which he gained in various management roles. He is the right person to further develop our industrial business activities in this important region. Rohit has repeatedly demonstrated the ability to drive change while at the same time inspiring his teams. We are delighted to have him on board as we are working together to lead ContiTech into its next chapter as an independent company. I would like to thank Hannes Friedrichsen for all the fruitful years with the company and wish him all the best for the future.” Markan added, “I am delighted to become part of ContiTech, a company with such a long tradition and so much potential. I am eager to bring in my expertise and leadership from past experiences in Asia Pacific, thus making a contribution for harnessing the companies’ potential in one of the most important growth regions for Continental.” Continental, founded in 1871, is a global leader in tires and industrial solutions, generating €39.7 billion in sales in 2024 and employing around 95,000 people across 54 countries. ContiTech, the group’s industrial business sector, provides connected, environmentally friendly, safe, and cross-material solutions across industries including agriculture, rail, road, air, industrial, food, and furniture sectors. ContiTech employs nearly 42,000 people in over 40 countries and reported sales of €6.4 billion in 2024.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 6:27 pm

பாமக போராட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு.. பாமக போடும் கணக்கு என்ன?

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக போராட்டம் நடத்தவுள்ளது. இதில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது 2026 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமா என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

சமயம் 11 Dec 2025 6:17 pm

Mathrubhumi India VKC Kozhikode Half Marathon set to debut on 11th January 2026

Kochi: Mathrubhumi, in association with VKC, has announced the inaugural edition of the Mathrubhumi India VKC Kozhikode Half Marathon, scheduled for 11th January 2026 at the iconic Kozhikode Beach.The half marathon will span a 21.1 km route, showcasing the scenic coastline and vibrant urban charm of Kozhikode. Alongside the flagship race, the event will feature 10K and 5K (fun run) categories, creating opportunities for both professional runners and first-time participants.The marathon aims to foster fitness, unity, and community engagement, serving as a celebration to welcome the new year with endurance, discipline, and collective spirit.[caption id=attachment_2484407 align=alignleft width=195] MV Shreyams Kumar [/caption]Speaking about the event, MV Shreyams Kumar, Managing Director, Mathrubhumi Group, said, “The inaugural edition of the marathon represents a major milestone for the symbolic city. We are excited to create an event which brings together health, heritage, and community pride and celebrates the vibrant cultural energy of Kozhikode.” Registrations for the inaugural edition are now open. Participants can register through the official website: https://www.kozhikodemarathon.in/

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 6:16 pm

Rahul Dravid advocates ‘Pack Review System’ to ensure consumers get full value from edible oil purchases

Bengaluru: Freedom Sunflower Oil, an edible oil brand, has launched a nationwide consumer awareness campaign featuring cricket legend Rahul Dravid, aimed at empowering customers to verify the correct quantity of oil in 1 Litre pouches. The campaign highlights that each pouch should contain 910 gm of edible oil, as mandated by The Ministry of Consumer Affairs, Government of India.The initiative seeks to address ambiguous market practices, where some manufacturers provide pouches that appear to be 1 Litre but contain less oil. To demonstrate this, GEF India—the makers of Freedom Sunflower Oil—joined forces with Mr. Dependable, Rahul Dravid, to compare the weight of oil in various market pouches. Each pack was placed on a weighing scale, revealing that while some competitors’ pouches fell short of 910 gm, Freedom Sunflower Oil consistently met or exceeded the required standard. This effort underscores the importance of adopting the ‘Pack Review System’ (PRS), encouraging consumers to check the weight of oil every time they purchase a pouch.The campaign also promotes simple consumer habits such as reading labels carefully, comparing net quantity with price, and verifying products before purchase, reinforcing honesty and transparency in the market. Rahul Dravid said, “I congratulate GEF India for taking this important initiative to educate and empower consumers by introducing the concept of 'Pack Review System' (PRS) and making customers the third umpire to prevent them from being misled. As aptly put 'Oil should be less in the food and not in the pack'. Only an aware consumer can get it by adopting PRS. [caption id=attachment_2484402 align=alignleft width=200] P Chandra Shekhara [/caption] P Chandra Shekhara Reddy, Senior Vice President - Sales & Marketing, Gemini Edibles & Fats India Ltd, added, “Our aim is to give every family confidence that they are receiving exactly what they pay for. Consumers can confidently trust Freedom for the value they expect. By taking a moment to read the label, checking the quantity, and comparing it with the price, households can make informed decisions and protect their purchases. Simple habits like these encourage honesty in the market and strengthen trust between consumers and brands.” [caption id=attachment_2484403 align=alignright width=200] Chetan Pimpalkhute [/caption] Chetan Pimpalkhute, Marketing Head, Freedom Healthy Cooking Oils, said, “We have always believed that an informed consumer is a protected consumer. We are delighted to introduce the concept of Pack Review System and reach the users through comprehensive digital media, on-ground activities and traditional media advertisements. As a responsible corporate citizen, our objective is to ensure that every household in India adopts the habit to check the quantity of oil in every pack and not get deceived.”

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 6:12 pm

அவர் சொன்னது சரி என்று நினைத்தார்! கம்பீரை சீண்டிய ஷாஹித் அப்ரிடி!

டெல்லி : பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, இந்தியா-தென்னாப்பிரிக்கா T20I தொடருக்கு முன் தனது பழைய எதிரி கவுதம் கம்பீரை மீண்டும் சாடியுள்ளார். கம்பீரின் தலைமை பயிற்சியாளர் பணியை விமர்சித்து, “கவுதம் தனது பணியை தொடங்கியபோது, அவர் சொல்வது எல்லாம் சரி என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் சில நேரங்களுக்குப் பிறகு, நீங்கள் எப்போதும் சரி என்று நிரூபிக்கப்பட்டது இல்லை” என்று அப்ரிடி டெலிகாம் ஏசியா ஸ்போர்ட் நேர்காணலில் கூறினார். இது இருவருக்கும் இடையிலான நீண்டகால மோதலை […]

டினேசுவடு 11 Dec 2025 6:09 pm

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன் - தவெக நிர்மல் குமார் பதில்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்குப் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை வரை இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. 'சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சமூகநல்லிணக்கத்தை சீர்குழைத்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இந்த விவகாரத்தில் தவெக கட்சியினர் எந்தவொரு கருத்தும் சொல்லாமல் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். விஜய்யும் இதுகுறித்து மெளனமாக இருந்து வருவது தமிழக அரசியலில் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இப்போது ஏதும் கருத்து சொல்ல முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அவ்வளவு நேரம் திமுகவின் காவல்துறை ஏன் தாமதப்படுத்தியது? ஏன் கூட்டம் கூட அனுமதித்தது? நிர்மல் குமார் திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? நீதிமன்றத்தில் அரசு தரப்பில் 6 மணிவரை தீபம் ஏற்றுவதாகக் கூறி வந்தனர். அதனால் அங்கு அவ்வளவு கூட்டம் சேர்ந்தது. நீதிமன்றத்தில் அங்கு தீபம் ஏற்ற முடியாது என்று முன்பே தெளிவாகச் சொல்லியிருந்தால் ஏன் அங்கு கூட்டம் கூடி இப்படியாக பதற்றமான சூழல் ஏற்படப்போகிறது. எப்போதும் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரியமான முறையை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாதுஎன்று பேசியிருக்கிறார்.

விகடன் 11 Dec 2025 5:56 pm

ரீஃபண்ட் பணம் உங்களுக்கு வராது.. ஏன் தெரியுமா? இப்படி செஞ்சா உடனே கிடைக்கும்!

வருமான வரி ரீஃபண்ட் பணம் உங்களுக்கு இன்னும் வரவில்லையா? அதற்கான காரணம் இதுதான். உடனே சரிபண்ணுங்க.

சமயம் 11 Dec 2025 5:46 pm

AB InBev and International Cricket Council forge landmark partnership to elevate cricket fan experiences

Mumbai: The International Cricket Council (ICC) has announced a landmark global partnership with AB InBev (Euronext: ABI) (NYSE: BUD) (MEXBOL: ANB) (JSE: ANH), the world’s leading brewer, appointing the company as the Official Beer Partner for all major ICC tournaments starting in 2026. In India, the partnership will be led by Budweiser 0.0, Budweiser’s no-alcohol beer, while other AB InBev mega brands will activate across Europe and Africa.Through the collaboration, AB InBev aims to enhance fan experiences, offering responsible beer consumption options like Budweiser 0.0, whether attending matches live or enjoying cricket with friends at bars and pubs.[caption id=attachment_2484393 align=alignleft width=271] Sanjog Gupta [/caption] Sanjog Gupta, ICC CEO, said, “Cricket is one of the world’s most loved sports with more than two billion fans and ICC events are its largest platforms for passion, while AB InBev has been at the forefront of creating experiential activations to grow and deepen fandom. This partnership is a natural alliance between organizations striving to elevate moments, create memories and deliver experiences via innovation in avenues for fan engagement. We welcome AB InBev to the ICC’s august list of commercial partners and look forward to co-delivering multi-modal event experiences across our tournaments and amplifying excitement for the sport around the world.” [caption id=attachment_2484392 align=alignright width=183] Marcel Marcondes [/caption] Marcel Marcondes, Global Chief Marketing Officer of AB InBev, added, “Cricket is one of the world’s most popular and fastest-growing sports, and we are excited to connect with fans on this mega platform. Beer is the beverage for socialization and moderation, and our partnership with the ICC provides another occasion for our brands to create unforgettable experiences for consumers everywhere.” The partnership encompasses all major ICC men’s and women’s events through 2027, including the ICC Men’s T20 World Cup 2026 in India & Sri Lanka, ICC Women’s T20 World Cup 2026 in the UK, the inaugural ICC Women’s Champions Trophy 2027 in Sri Lanka, the ICC World Test Championship Final 2027 in England, and the ICC Men’s Cricket World Cup 2027 in South Africa, Zimbabwe, and Namibia.This collaboration represents a strategic alignment of two global leaders, combining cricket’s unparalleled fan engagement with AB InBev’s experiential activations to create memorable, responsible, and celebratory moments for fans worldwide.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 5:44 pm

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைப் போல ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர், கலைஞர் CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிட இயக்கத்தின் முக்கியமான தலைவர். திராவிட கொள்கையை முன்னெடுத்துச் சென்றவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, 'இவ்வுலகில் பல தலைமுறைகள் வந்துபோகும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மாகத்மா காந்தி போன்ற சிலர்தான்' என்று புகழ்ந்தார். அது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் பொருந்தும். தமிழச்சி தங்கபாண்டியன் SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்! கிராமத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றவர். 1957 - 2016 ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தான் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராத தலைவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், இலக்கியம் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றவர். அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல் தலைவர் நீண்ட காலம் ஆட்சியாளராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. என்றார்.

விகடன் 11 Dec 2025 5:37 pm

Private DTH revenue degrowth to moderate to 3–4% amid IPTV push and bundled offerings: Crisil Ratings

Mumbai: Private direct-to-home (DTH) television providers in India are expected to witness a moderated revenue decline of 3–4% in the current fiscal, compared with approximately 5% in the previous year, as operators expand into Internet Protocol television (IPTV) and promote bundled offerings. Rising marketing income and the scaling back of customer acquisition incentives, such as subsidized set-top boxes (STBs), by select players are also expected to support revenue and profitability.An analysis of all private DTH companies in the country, covering around 53 million subscribers as of September 30, 2025, reflects these trends. Subscriber churn continues as more affluent users migrate to over-the-top (OTT) media services, while budget-conscious viewers shift to DD Free Dish. The subscriber base of private DTH providers has declined from 7.2 crore in fiscal 2019 to 6.19 crore by fiscal 2024, slipped a further 9% in fiscal 2025, and is projected to drop below 5.1 crore by the end of the current fiscal.[caption id=attachment_2484387 align=alignleft width=200] Ankit Hakhu [/caption]Says Ankit Hakhu, Director, Crisil Ratings, “Although cord cutting has put pressure on DTH companies, leading to secular revenue degrowth over the past six years, operators are making inroads in new areas such as IPTV to drive bundled services (OTT, broadband, live TV). IPTV services have gained significant traction, with their customer base almost quadrupling to 21.3 lakh as of September 2025 from ~5.7 lakh in fiscal 2024. This has provided significant upselling opportunities to operators. By enabling delivery of both OTT and live TV through broadband without a dish, operators are likely to limit the subscriber churn.” There are pockets of resilience amid challenges to linear TV. In south India, the pace of cord cutting has been limited, with the leading DTH operator managing to increase market share by keeping subscriber numbers largely intact despite industry-wide declines.[caption id=attachment_2484388 align=alignright width=200] Gauri Gupta [/caption]Says Gauri Gupta, Team Leader, Crisil Ratings, “Though the revenue of private DTH players will be impacted by the reduction in subscriber base, this will be partially offset by income from marketing on the player’s own OTT aggregator platforms offered via hybrid boxes. Furthermore, reduction in customer acquisition incentives by select players, through elimination of discounts on STBs for new subscribers, will add to the support.” Margins, which fell from 48% in fiscal 2023 to 45% in fiscal 2025, are expected to remain stable at 44–45% this fiscal due to milder revenue degrowth. Greater consumer stickiness in certain regions, aided by stronger regional content and limited offerings from DD Free Dish, continues to benefit DTH players. Additionally, monthly OTT subscription charges bundled with broadband remain more than twice as expensive as DTH packs, limiting their adoption among value-conscious users.That said, tariff hikes by DTH operators and growing competition from digital alternatives could pose risks to overall TV viewership and will require careful monitoring.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 5:32 pm

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!

உத்தரப்பிரதேசத்தில் வயிற்றுவலி காரணமாக கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் அப்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், அந்த மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் என்றும், அது அங்கீகரிக்கப்படாத கிளினிக் என்றும் அதிர்ச்சிகர உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உயிரிழப்பு முன்னதாக ஃபதே பகதூர் என்பவரின் மனைவி முனிஷ்ரா ராவத்துக்கு டிசம்பர் 5-ம் தேதி கடும் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஃபதே பகதூர் தனது மனைவியை பாராபங்கியில் கியான் பிரகாஷ் மிஸ்ரா, விவேக் மிஸ்ரா ஆகியோரின் ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயா கிளினிக்குக்கு அழைத்துச் சென்றார். அப்போது, கியான் பிரகாஷ் அந்தப் பெண்ணின் வயிற்று வலிக்கு சிறுநீரகக் கற்கள்தான் காரணம் என்றும், அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000 ஆகும் என்றும் கணவரிடம் கூறினார். பின்னர், அதை ரூ.20,000-ஆகக் குறைத்தார். UP: உயர் அதிகாரியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல - பணியிலிருந்த அரசு டாக்டரை கடத்தி சென்ற போலீஸ் அடுத்தநாள் கியான் பிரகாஷ் போதையில் யூடியூப் வீடியோவைப் பார்த்துக்கொண்டே அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் பெண்ணின் வயிற்றில் பல நரம்புகள் வெட்டப்பட்டன. நிறைய காயங்களும் ஏற்பட்டன. இதனால் கடும் வலியால் துடித்த அப்பெண் மறுநாளே பரிதாபமாக உயிரிழந்தார். அதோடு, அந்த மருத்துவர்களும் அவரது குடும்பத்தினரும் அப்பெண்ணை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர், உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க போலீஸார் உடனடியாக அந்த கிளினிக்குக்கு சென்றனர். காவல்துறை கிளினிக்கை போலீஸார் ஆய்வு செய்ததில் அது அங்கீகரிக்கப்படாத கிளினிக் என்றும், அங்கிருந்தவர்கள் போலி மருத்துவர்கள் என்றும் தெரியவந்தது. மறுபக்கம் உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், அந்த போலி கிளினிக்கின் உரிமையாளர்கள் இருவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி அமித் சிங் பதூரியா, ``சம்பவம் பற்றி அறிந்ததும், அந்த அங்கீகாரம் இல்லாத அந்த கிளினிக்கை நாங்கள் ஆய்வு செய்தோம். அது மூடப்பட்டிருந்ததால் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாக இருக்கின்றனர். இருப்பினும், அவர்களை உடனடியாகக் கைது செய்வோம் என்று உறுதியளித்திருக்கிறார். UP: SIR பணிகளால் அழுத்தம்; உயிரை மாய்த்துக்கொண்ட BLO - நடந்தது என்ன?

விகடன் 11 Dec 2025 5:31 pm

விமானப் பயணிகளுக்கு 10,000 ரூபாய் வரை இழப்பீடு.. இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

விமானங்கள் ரத்து மற்றும் நீண்ட நேரம் காத்திருந்ததால் ஏற்பட்ட சிரமம் போன்றவற்று இழப்பீடாக பயணிகளுக்கு 10,000 ரூபாய் வரை வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சமயம் 11 Dec 2025 5:31 pm

அடுத்தடுத்து விவாகரத்து செய்யும் தம்பதிகள்.. கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சி காரணம்

அல்சூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு அலசூரில் வரலாற்று சிறப்புமிக்க சோமேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால் திடீரென்று இந்த கோவில் நிர்வாகம் இனி எங்கள் கோவிலில் திருமணம் நடத்திவைக்கப்படாது என அறிவிப்பு வெளியிட்டது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், எங்கள் கோவிலில் முகூர்த்த நாட்களில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீப […]

அதிரடி 11 Dec 2025 5:30 pm

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்…செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் அரசு உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சவனூரை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்தநிலையில் அந்த மாணவிக்கு அவரது வகுப்பு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் அந்த ஆசிரியர் மாணவிக்கு மீண்டும், மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்கவே, ஒரு கட்டத்திற்கு மேல் அவரது தொல்லையை தாங்க முடியாத மாணவி, இதுகுறித்து நான் […]

அதிரடி 11 Dec 2025 5:30 pm

Pratyush Chandramadhur joins BillCut as Senior Advisor

New Delhi: BillCut, a Loan Portfolio Management fintech platform, has announced the appointment of Pratyush Chandramadhur—Founder of Pranovate, former Chief Business Officer at AuthBridge, and a founding member of Experian India—as its Senior Advisor.BillCut enables consumers to understand and improve their credit health, reduce monthly EMIs, and make smarter borrowing decisions. Its flagship AI-powered debt analyser helps users review their entire debt profile in just three clicks. The platform identifies loans and credit cards carrying higher-than-required interest rates and instantly facilitates refinancing through trusted partners, including L&T Finance, Tata Capital, DMI Finance, and others.With more than 25 years of leadership experience across BFSI and fintech, Pratyush has built and scaled AI/ML-driven products, fraud and identity solutions, and large financial services operations. His work at AuthBridge, Experian, and other institutions has significantly contributed to the evolution of India’s credit, identity, and risk management landscape.[caption id=attachment_2484382 align=alignleft width=200] Tanish Sharma [/caption] “Pratyush joins us at a crucial moment as we build India’s most intelligent credit and loan portfolio management platform,” said Tanish Sharma, Co-founder, BillCut. “His guidance will accelerate our AI-led product roadmap and help us scale BillCut to millions of users with greater precision, speed, and trust.” Expressing his enthusiasm, Pratyush Chandramadhur, Senior Advisor, BillCut, said, “BillCut is addressing one of India’s most critical financial challenges. I’m excited to help shape the next phase of growth as we build smarter AI-driven tools that give users meaningful control over their credit, repayments, and loan portfolio.”

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 5:27 pm

Valerie Madon exits McCann as APAC and Singapore Chief Creative amid agency merger

Mumbai: Valerie Madon has stepped down from her role as Chief Creative Officer for Asia Pacific and Singapore at McCann Worldgroup, effective immediately. Moving forward, creative leadership will be fully integrated under the Singapore model led by Daniel Kee, supported by additional Omnicom Advertising talent where appropriate, confirmed Sean Donovan, President, Omnicom Advertising Asia.Madon joined McCann from Meta, where she was Director of Creative Shop for SEA and emerging markets. During her time at McCann, she served as APAC Chief Creative Officer since August 2023, Chief Creative Officer for Southeast Asia from May 2023, and Singapore CCO from March 2025. She led creative campaigns for clients including Mastercard, Ferrero, L’Oral Thailand, and Chick-fil-A Singapore.She also launched several talent initiatives, including the ‘Ambition Collective’, an APAC programme to train and showcase emerging creative talent, and ‘Shape My Portfolio’, a mentorship platform offering one-on-one portfolio reviews from industry leaders.Madon’s departure coincides with the merger of McCann and MullenLowe Singapore under the leadership of Paul Soon, formerly CEO of MullenLowe Singapore, who will continue as the new CEO of McCann Singapore. Gonzalo Olivera will serve as the merged organisation’s president from 1 January, with Brandon Cheung, CEO of McCann Singapore and Southeast Asia, supporting the transition into early 2026.The changes come as Omnicom and IPG streamline their agency networks, consolidating several brands—including DDB, FCB, and MullenLowe—into three global creative networks: BBDO, McCann, and TBWA. Despite consolidation, TBWA’s leadership in Greater China, Singapore, and Malaysia remains unchanged.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 5:08 pm

Pocket FM expands Baahubali universe with original 250+ episode audio series in collaboration with Arka Mediaworks

Mumbai: Pocket FM, an audio series platform, has announced its collaboration with Arka Mediaworks, the creative studio behind S.S. Rajamouli’s iconic Baahubali films, to expand the Baahubali universe with an all-new original audio series. The ambitious project, marking the 10th anniversary of the Baahubali franchise, will feature a fresh storyline set within the epic world of Maahishmathi, spanning over 250 episodes in Hindi, Tamil, and Telugu.Designed to appeal to loyal fans and a new generation of listeners, the series blends cinematic scale with Pocket FM’s immersive audio storytelling, bringing untold stories, unseen conflicts, and the grandeur of Maahishmathi to life with high-quality voice performances, atmospheric sound design, and evocative music.[caption id=attachment_2484370 align=alignleft width=200] Rohan Nayak [/caption] “Baahubali is a cultural milestone that inspired an entire generation, and continues to do so even today. To bring that legacy into the world of audio storytelling is both an honour and a creative challenge we’ve embraced with heart,” said Rohan Nayak, Cofounder and CEO, Pocket FM. “At Pocket FM, we’ve always believed that imagination is the most powerful screen. With Arka Mediaworks, what makes this collaboration special is that we’re expanding the Baahubali universe with a new storyline crafted for this mega audio series where it is creating an experience where you don’t just hear Maahishmathi, you feel it. This partnership marks a defining moment for how India will experience storytelling in the years to come.” [caption id=attachment_2484369 align=alignright width=225] Shobu Yarlagadda [/caption] “Growing the Baahubali universe has always been a deliberate part of our journey, and this collaboration with Pocket FM is another step in that direction. The audio series comes from the same place as the films, a focus on rooted and engaging storytelling. It’s nice to see the world expand into new formats, and I hope listeners enjoy this new chapter,” said Shobu Yarlagadda, Co-founder, Arka Mediaworks. The partnership reinforces Pocket FM’s strategic vision to lead India’s audio entertainment revolution by adapting iconic IPs into large-scale audio experiences. Following the success of Shaktimaan Returns, the Baahubali audio series underscores Pocket FM’s ambition to redefine how India’s greatest fantasy universes are imagined, adapted, and experienced.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 4:53 pm

✈️   மோசமான காலநிலை: சென்னையில் இருந்து வந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது!

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 霧 மூட்டத்தால் திரும்பிய விமானம்: சம்பவம்:… The post ✈️ மோசமான காலநிலை: சென்னையில் இருந்து வந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 4:51 pm

எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை :தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) படிவங்களை சமர்ப்பிக்க இன்றுடன் (டிசம்பர் 11) முடிவடையும் என இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் 3 நாட்கள் அவகாசம் நீட்டித்துள்ளது. இதன்படி SIR படிவங்கள் டிசம்பர் 14 வரை சமர்ப்பிக்கலாம். இந்த நீட்டிப்பு தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிடரிகளுக்கு (அந்தமான், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்வீபம், மத்திய பிரதேசம், […]

டினேசுவடு 11 Dec 2025 4:49 pm

SIR Form பூர்த்தி செய்து கொடுத்து விட்டீர்களா? கூடுதல் அவகாசம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரத் திருத்த படிவத்தை விண்ணப்பித்து வழங்க, இன்றே கடைசி நாள் என்று காலக்கெடு விதித்திருந்த நிலையில், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

சமயம் 11 Dec 2025 4:48 pm

    தீ விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியை ஒருவர் சிகிச்சை பலனின்றி… The post தீ விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 4:45 pm

  வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் உயிரைக் காப்பாற்றிய யாழ் இளைஞனுக்கு நிதியுதவி!

சமீபத்தில் கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியபோது, தனது உயிரைப் பணயம் வைத்து… The post வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் உயிரைக் காப்பாற்றிய யாழ் இளைஞனுக்கு நிதியுதவி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 4:41 pm

SC Questions Parliament’s Power to Enact Online Gaming Ban; Three-Judge Bench to Hear Case in January

Mumbai: The Supreme Court on Thursday (December 11, 2025) briefly turned its attention to a foundational constitutional question: Was Parliament empowered to pass the Promotion and Regulation of Online Gaming Act, 2025, which imposes a sweeping ban on real-money online games, associated banking services, and advertising? Constitutional Competence at the Centre of Dispute The discussion unfolded when Chief Justice D.Y. Chandrachud raised whether online real-money gaming could legally be placed under the category of betting and gambling. If classified as such, the activity would fall under Entry 34 of the State List, placing exclusive legislative authority with the States—not the Union government.The Chief Justice said the matter warrants a full, detailed hearing before a three-judge Bench in January 2026 to determine whether Parliament had acted “beyond its competence” in enacting the 2025 law. Parallel Bench, Multiple Challenges Senior advocates C.A. Sundaram and Arvind Datar, along with advocate Rohini Musa—appearing for online gaming firms—pointed out that another Bench led by Justice J.B. Pardiwala is already scrutinising challenges to both the central law and similar legislations passed by Tamil Nadu, Karnataka and other States. They informed the CJI that the competence of Parliament is also under examination before Justice Pardiwala’s Bench.The gaming companies reiterated their request for an urgent stay on the implementation of the new Act. “People have lost jobs. There is complete uncertainty,” they told the court, highlighting the economic impact of the abrupt ban. Centre Urges Focus on Legislative Purpose, Not Just Power Solicitor General Tushar Mehta countered that the court must look beyond the question of which legislature holds the pen and instead examine the intent behind the Union’s intervention.The government argued that online real-money gaming presents a serious threat, asserting that platforms cannot claim a fundamental right to trade if the activity endangers human lives. According to the Centre, funds generated through such platforms have been linked to money laundering, terror financing vulnerabilities, addictive behaviour, tax evasion, and cross-border illicit flows.Government data shows a sharp rise in outward remittances tied to online gaming, with over ₹5,700 crore flowing out of India in 2023–24, accompanied by widespread violations across the industry. The Risk Framework Behind the 2025 Act Justifying the need for the law, the Centre said the proliferation of online money games has harmed an estimated 45 crore individuals, collectively incurring losses exceeding ₹2,000 crore. The Act, it stated, is designed to curb the “serious risks” posed by these platforms to users, families and national security. “There can be no right to profession or trade at the cost of human lives,” the government maintained, asserting that fatalities linked to online money gaming continue to rise across the country. What Comes Next The Supreme Court’s decision to escalate the matter to a three-judge Bench positions the case as a major constitutional test of federal powers and digital-economy regulation. With parallel challenges underway and businesses seeking urgent relief, the ruling will shape the future of India’s online gaming ecosystem, centre-state legislative boundaries, and the emerging framework governing digital financial risks.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 4:39 pm

யாழ்ப்பாணம், சங்கானைப் பகுதியில் வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 13 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய… The post appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 4:32 pm

அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் பணிநீக்கம்!

ஸ்பெயின் நாட்டில் அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 22 வயதான பெண் ஊழியர் ஒருவர், அலுவலகத்துக்கு காலை 7.30 மணிக்குச் செல்வதற்கு பதிலாக, முன்கூட்டியே 6.45 முதல் 7 மணிக்கே செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். பெண்ணின் முன்கூட்டிய வருகையை நிறுத்துமாறு, நிறுவன மேலதிகாரி எச்சரித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே பெண்ணை அவர் எச்சரித்துள்ளார். இருப்பினும், அதற்குப் பின்னும் […]

அதிரடி 11 Dec 2025 4:30 pm

Spinz strengthens glow portfolio with launch of DeTan Face Pack

Chennai: Spinz, the flagship skincare brand from FMCG major CavinKare, has announced a strategic expansion of its glow-focused skincare portfolio with the launch of the Spinz DeTan Face Pack. Strengthening its presence in the fast-growing detan category, the brand builds on the strong consumer response to its BB Cream and India’s first-ever BB Face Powder—bringing consumers a more holistic, end-to-end glow regimen. The new product is debuting on leading e-commerce platforms, underscoring Spinz’s commitment to growing its digital-first footprint.The newly launched Spinz DeTan Face Pack features an advanced no-bleach formulation designed to gently clear tan and impurities while deeply nourishing the skin. With rising sun exposure and extended outdoor activity becoming routine, tanning has emerged as a widespread concern, often resulting in dull and uneven skin tone.Enriched with honey, besan, and kojic, the face pack works to exfoliate dead skin cells, reduce dullness, and reveal brighter, more even-toned skin with 100% salon-like glow at home in just 15 minutes. Honey soothes and hydrates the skin, besan lifts impurities and excess oil, while kojic helps lighten pigmentation—together creating a potent blend for visible radiance and clarity. Dermatologically tested, the product is suitable for all skin types and ideal for weekly use.[caption id=attachment_2483725 align=alignleft width=200] Rajat Nanda [/caption]Commenting on the launch, Rajat Nanda, Business Head – Personal Care, CavinKare, said, “Glow has always been at the heart of Spinz’s skincare proposition. With the launch of the Spinz DeTan Face Pack, we are expanding this promise by giving consumers a complete glow solution, from everyday radiance with Spinz BB Cream and BB Face Powder to deeper rejuvenation with this detan face pack. The segment presents immense potential, driven by rising skincare awareness, self-care trends and a strong preference for salon-like results at home. This launch not only strengthens our skincare portfolio but also reinforces Spinz’s commitment to making high-performance glow care accessible to all.”

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 4:30 pm

இலங்கையை மீட்டெடுக்க ஐ.நா அதிரடி முயற்சி! 35 மில்லியன் டொலர் நிதியைத் திரட்ட சர்வதேச கோரிக்கை!

சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலின் காரணமாகப் பெரும் அழிவு ஏற்பட்ட நிலையில், நாட்டின் மீட்பு மற்றும் நிவாரணப்… The post இலங்கையை மீட்டெடுக்க ஐ.நா அதிரடி முயற்சி! 35 மில்லியன் டொலர் நிதியைத் திரட்ட சர்வதேச கோரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 4:28 pm

Adani Foundation unveils ‘Arthik Azadi’ films celebrating women’s financial freedom

Ahmedabad: The Adani Group’s Corporate Brand Custodian (CBC) Digital team has launched ‘Arthik Azadi’, a three-film series created for the Adani Foundation, capturing how financial independence is enabling women across India to exercise everyday choices with confidence.Aligned with the Foundation’s longstanding mission to strengthen women’s agency, the series highlights how small yet powerful decisions—what to buy, what to wear, where to go—reflect deeper shifts in autonomy and empowerment.[caption id=attachment_2484351 align=alignleft width=183] Dr Priti G Adani [/caption]Setting the tone for the initiative, Dr Priti G Adani, Chairperson, Adani Foundation, said, “A woman empowered is India empowered. If we truly want progress that matters, the fulfilment of women’s potential is not optional. It is non-negotiable.” For 29 years, the Adani Foundation—the social and development arm of the Adani Group—has worked across education, health, livelihoods, climate action, and community development. Its programmes today reach 9.6 million people, including two million women across 7,000+ villages in 22 states.The ‘Arthik Azadi’ films are rooted in the belief that financial freedom is life freedom. Each film uses a symbolic object to depict the power of choice: The Plate – the freedom to choose what she likes, The Autorickshaw – the power to decide her own direction, The Saree – the confidence to express identity. Together, these stories celebrate the quiet but profound victories of financially independent women whose earnings are transforming not only their lives but also those of their families and communities.Link to the ad films:1. The link to Plate Film:https://www.youtube.com/watch?v=2QD5FFAiSHg2. The link to “The Autorickshaw” Film:https://www.youtube.com/watch?v=CysDAcR27QY3. The link to “Saree” Film:https://www.youtube.com/watch?v=q0AIu7KWf1A

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 4:18 pm

’கோல்டு கார்ட்’ விசாவை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிசம்பர் 10 அன்று “டிரம்ப் கோல்ட் கார்டு” விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இது வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு உரிமை அளிக்கும் விசா வகை. தனிநபர்கள் $1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.4 கோடி) “பங்களிப்பு” செய்தால், விரைவான விசா பெறலாம். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக $2 மில்லியன் (ரூ.16.8 கோடி) செலுத்தினால், அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அளிக்கப்படும். இது EB-1 அல்லது […]

டினேசுவடு 11 Dec 2025 4:17 pm

Godrej Enterprises Group highlights legacy of progress with fresh purpose-led brand narrative

Mumbai: Godrej Enterprises Group (GEG), the diversified engineering and design-led conglomerate with a 128-year legacy, has reiterated its commitment to its core purpose—to pioneer progress for generations—through a fresh wave of media-led storytelling and purpose-driven initiatives. The Group unveiled a new brand film titled “Did I do something new today?”, a creative expression of its renewed focus on curiosity, innovation, and impact.One year after the rollout of its refreshed brand identity, anchored in a bold purple that represents dynamism, modernity, confidence, and aspiration, Godrej continues to embed its purpose across business verticals. From advanced engineering contributions to national progress, to design-led consumer innovations, GEG aims to seamlessly blend heritage with future-forward ambition.The new film, created by Lowe Lintas, brings this ethos to life through the provocative question, “Did I do something new today?” It encourages individuals and organisations to embrace daily curiosity as the catalyst for meaningful change. Drawing inspiration from the Group’s history—from India’s first springless lock to breakthroughs in aerospace—the film positions curiosity as the seed for lasting progress.[caption id=attachment_2484346 align=alignleft width=155] Nyrika Holkar [/caption] Nyrika Holkar, Executive Director, Godrej Enterprises Group, and a fourth-generation leader, has been instrumental in steering this purpose-first transformation. “Progress always begins with a simple spark of curiosity. We want to draw inspiration from our rich legacy and the visionary philosophy of my grandfather Naval Godrej, who believed that real progress begins only when we challenge ourselves to do something new every day. This new film is an invitation to pause, reflect, and ask ourselves whether we stretched our imagination today even in the smallest way. When we nurture this mindset collectively, innovation becomes natural, and purpose is lived every day,” she said.The Group’s purpose is also reflected in tangible commitments: generating 50% of revenue from sustainable products by 2032, expanding biodiversity conservation, delivering frictionless consumer experiences, and advancing engineering excellence across sectors. Its businesses have been driving impact—from Interio’s new identity and omnichannel retail experience, to Godrej Appliances’ recognition for human- and planet-centric design, to contributions in India’s space missions and development of clean energy solutions like zinc-based batteries.[caption id=attachment_2484345 align=alignright width=151] Sumeet Bhojani [/caption]Expanding on the philosophy behind the new film, Sumeet Bhojani, Head – Brand & Strategic Insights, Godrej Enterprises Group, noted, “This film attempts to capture the cultural shift we have been driving across the organisation. One year after our repositioning, it reflects our renewed focus on curiosity, pioneering spirit and creativity. ‘Did I do something new today?’ is not just a question; it is a mindset that propels innovation at Godrej Enterprises Group. By reconnecting with our purpose, we want to encourage people to take that first step toward shaping a better tomorrow.” Founded in 1897 by Ardeshir and Pirojsha Godrej, the Group has long championed trusteeship, innovation-led nation-building, and sustainable growth. Today, GEG continues to pursue bold aspirations including doubling energy productivity, reducing carbon intensity by 60% by 2032, scaling biodiversity-led development, and redefining modern living through design-led, sustainable solutions.As Godrej writes its next chapter, its unwavering purpose—rooted in imagination, innovation, and stewardship—continues to guide its mission of pioneering progress for generations to come.https://www.youtube.com/watch?v=cVwy2yY2roA

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Dec 2025 4:13 pm

எங்கள பத்தின 'அந்த விஷயம்' மகள் ஆராத்யாவுக்கு தெரியாது: ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சன்

தங்களின் மகள் ஆராத்யாவுக்கு இதுவரை அந்த விஷயம் தெரியவே தெரியாது என்று ஐஸ்வர்யா ராயின் காதல் கணவரான அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். ஆராத்யா பற்றி மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் அளித்திருக்கிறார் அவர்.

சமயம் 11 Dec 2025 4:07 pm

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து - உயிரிழந்த யாழ். இளைஞனின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சம்பவத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார், அந்நிலையில் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் , முதல் கட்டமாக குறித்த இளைஞனின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் மரண சான்றிதழ் வழங்கப்பட்டதும் மீதி 09 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பேருந்து வெள்ளத்தில் சிக்கிய நிலையில் , குறித்த இளைஞனின் தொலைபேசியில் இருந்தே , தகவல்கள் வெளியே சொல்லப்பட்டது. அதனாலேயே , பேருந்தில் பயணித்த 69 பேரில் 67 பேரின் உயிரினை காப்பாற்ற முடிந்தது. குறித்த இளைஞன் கூரையில் இருந்து வெள்ளத்தினுள் விழுந்த நிலையில் , தவறுதலாக மீட்கப்படாததால் , இளைஞன் உயிரிழந்துள்ளார். அதேவேளை மீட்கப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் வைத்தியசாலையில் , சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 11 Dec 2025 3:56 pm

தவெக அலுவலகத்தில் ‘பாமக’பாலு…சாதி வாரிய கணக்கெடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு!

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி டிசம்பர் 17 அன்று நடைபெறவுள்ள மாநில அளவிலான போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பங்கேற்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) அழைப்பு விடுத்துள்ளது. இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து அழைப்புக் கடிதத்தை வழங்கினர். இது 2026 தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளுக்கும் இடையே சாத்தியமான கூட்டணி யூகங்களை தூண்டியுள்ளது.பாலு, பாமக தலைவர் […]

டினேசுவடு 11 Dec 2025 3:53 pm

Europe: விந்தணு தானம் செய்தவருக்கு கேன்சர் மரபணு; 197 குழந்தைகளின் நிலை என்ன? 

உலகம் முழுக்க குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருவதால், அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகளும் முன்னேறிக்கொண்டே வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் விந்தணு தானம். வெளிநாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையில், விருப்பமுள்ள ஆண்கள் தங்கள் விந்தணுக்களை தானமாக வழங்குவர், குழந்தையின்மை பிரச்னை உள்ள பெண்கள், தங்களுடைய கணவருக்கு விந்தணுக்களில் பிரச்னை உள்ள பெண்கள் முகம் தெரியாத ஓர் ஆணின் விந்தணுக்களைப் பெற்று  கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்வார்கள். விந்தணு தானம் கடந்த 17 வருடங்களாக விந்தணு தானம் செய்து வந்திருக்கிறார்! இந்த மருத்துவ தகவல்கள் நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். இப்போது இதைப்பற்றி பேசுவதற்கான காரணம், சமீபத்தில் ஐரோப்பாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் இருந்து கடந்த 17 வருடங்களாக விந்தணு தானம் செய்து வந்திருக்கிறார். இந்த தானம் செய்வதற்கு முன்னால் அவருடைய உடல்நலம் குறித்த அத்தனை பரிசோதனைகளிலும் அவர் ஃபிட்டாகவே இருந்திருக்கிறார். இந்தக் காரணத்தால்தான் அவர் தொடர்ந்து விந்தணு தானம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது அவருடைய உடல் செல்களில் ஒரு பிறழ்வு இருக்கிறது. இந்தப் பிறழ்வு அவருடைய TP53  என்ற மரபணுவை பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயைத் தடுத்து உடலைப் பாதுகாக்கும் P53 புரதம்: நம் உடலில் செய்யும் மகத்தான பணி என்ன? சரி, இதனால் என்னவாகும் என்கிறீர்களா? இந்த மரபணுதான், நம் உடல் செல்களின் வளர்ச்சியை சரியாகக் கட்டுப்படுத்தும். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், செல்களின் அசாதாரண வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்து நமக்கெல்லாம் புற்றுநோய் வராமல் காப்பாற்றுவது இந்த மரபணுதான். இந்த மரபணுவில்தான் அந்த ஆணுக்கு பிரச்னை இருந்திருக்கிறது. அதுவும் இந்த பிரச்னை அவருக்குப் பிறவியிலேயே இருந்திருக்கிறது. இது எதுவும் தெரியாமல்தான் அவர் விந்தணு தானம் செய்து வந்திருக்கிறார். இந்த மரபணு பிறழ்வை பரிசோதனைகளிலும் ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால், இது ஓர் அரிய வகை மரபணு கோளாறு ஆகும். விந்தணு தானம் புற்றுநோய்கள் வராமல் தடுக்குமா கொழுப்பு அமிலங்கள்? - ஆய்வு முடிவு சொல்வதென்ன? இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஐரோப்பாவில் இருக்கிற ஒரு விந்து வங்கி இந்த பிரச்னையை கண்டுபிடித்து அந்த நபரையும் அடையாளம் கண்டுவிட்டது. இதன் பிறகு, இந்த ஆணிடம் பெற்ற விந்தணு தானம் மூலம் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில குழந்தைகள் புற்றுநோய் ஏற்பட்டு மரணமும் அடைந்திருக்கிறார்கள். தவிர, இவருடைய விந்தணுக்கள் மூலம் பிறந்தவர்களுக்கு அவர்களுடைய வாழ்நாளில் ஏதோ ஒருவகை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால், பலரும் அச்சத்திலும் மன வருத்தத்திலும் இருக்கிறார்கள். ஐரோப்பா முழுவதிலும் குறைந்தது 197 குழந்தைகளுக்காவது இவர் தந்தையாக இருப்பார் என்பதால், விந்தணு தானம் மூலம் குழந்தைப் பெற்ற குடும்பங்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றன.   கவனம் மக்களே இப்படியும் ஒரு பிரச்னை இருக்கிறது! Cancer Awareness: 9 பேரில் ஒருவருக்கு கேன்சர் ரிஸ்க்... என்னதான் காரணம்?

விகடன் 11 Dec 2025 3:51 pm

யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவர் விளக்கமறியலில்

வீட்டு வேலைகளுக்கு என 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 13 வயது சிறுமியை தனது வீட்டு வேலைக்கு என சிறுமியின் பெற்றோரிடமிருந்து சிறுமியை நீண்ட காலமாக அழைத்து சென்று வந்துள்ளார். வீட்டுக்கு அழைத்து செல்லும் நபர் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை […]

அதிரடி 11 Dec 2025 3:49 pm

'முதல்வர் வேட்பாளர் விஜய்தான்; கூட்டணி பேச தனிக்குழு!' - தவெக அப்டேட்ஸ்!

பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவின் கூட்டம் நடந்திருந்தது. இதன்முடிவில், தவெக சார்பில் தேர்தல் கூட்டணியை பேச ஒரு குழுவும், தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. TVK Vijay தவெகவின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 'தீர்மானம் 1 : ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் 2: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் 3 : இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் 4 : அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

விகடன் 11 Dec 2025 3:47 pm

தமிழ்நாடு அரசில் கள உதவியாளர் வேலை; டிகிரி அவசியமில்லை, தேர்வு, நேர்காணல் கிடையாது - ரூ. 67,100 வரை சம்பளம்

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

சமயம் 11 Dec 2025 3:46 pm

தவெக கூட்டத்தில் 4 தீர்மானங்கள்.. கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக் குழு.. விஜய் முதல்வர் வேட்பாளர்!

விஜய்யின் தவெக கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதில் விஜய்யை முதலமைச்சராக ஏற்று அவரது தலைமையில் கூட்டணியை ஏற்போரை வரவேற்போம் என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 11 Dec 2025 3:45 pm

ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி.. ஸ்லீப்பர் கோச் டிக்கெட் எடுத்தாலும் ஏசி கோச்சில் பயணிக்கலாம்!

ரயில் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தி ஏசி பெட்டியில் பயணிக்க முடியும். ரயில் பயணம் செய்யும்போதே இந்த வசதி கிடைக்கும்.

சமயம் 11 Dec 2025 3:42 pm

பனையூரில் பா.ம.க பாலு; விஜய்க்கு அழைப்பு விடுத்த அன்புமணி

இன்று (டிச.11) காலை 10 மணிக்கு பனையூரில் தவெக மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அன்புமணியின் ஆதரவாளரான பாமக பாலு தவெக அலுவலம் வந்திருக்கிறார். தவெக ஆலோசனைக் கூட்டம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் மா.செக்களின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டம் முடிகிற தருவாயில் அன்புமணியின் ஆதரவாளரான அட்வகேட் பாலு பாமக நிர்வாகிகளோடு பனையூர் அலுவலகம் வந்தார். செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ், அருண் ராஜ் போன்ற தவெகவின் முக்கிய நிர்வாகிகள் அலுவலகத்தில் இருக்கும் நிலையில் அவர்களோடு ஆலோசனை நடத்தினார். பா.ம.க பாலு இதனைத்தொடர்ந்து பா.ம.க பாலு டிசம்பர் 17 ஆம் தேதி பாமக நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவுக்கு அழைப்பிதழ் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், பாமக சார்பில் 17 ஆம் தேதி சென்னையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகளுக்கு அன்புமணி அவர்கள் எழுதிய கடிதத்தை வழங்கி அழைத்திருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் விஜய்யின் தவெகவும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்களும் தவெக சார்பில் கட்டாயம் கலந்துகொள்கிறோம் எனக் கூறியிருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரமில்லை என சட்டமன்றத்தில் கூறுகிறார். கலைஞர் இருந்திருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார். பா.ம.க வழக்கறிஞர் பாலு 17 ஆம் தேதி நடக்கும் போராட்டம் தமிழக அரசியலில் முக்கியமான போராட்டமாக இருக்கும். தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டிலிருந்தே சாதிவாரி கணக்கெடுப்பை அழுத்தமாக கூறுகிறார்கள். திமுகவை தவிர எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.இது போராட்டத்துக்கான அழைப்பு என்று பேசினார். பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?

விகடன் 11 Dec 2025 3:32 pm

வங்கதேசம்: இடைக்கால அரசில் முக்கிய பதவி வகித்த இருவர் ராஜிநாமா!

வங்கதேசத்தில் இடைக்கால அரசின் உயர் பதவியிலிருந்து இருவர் விலகியுள்ளனர். வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, வங்கதேசத்தில் அரசு நிர்வாகத்தை வழிநடத்தும் இடைக்கால அரசில் பதவி வகிப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இடைக்கால அரசில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கான ஆலோசகர் எம். மஹ்ஃபுஜ் ஆலம், ஊரக வளர்ச்சி மற்றும் கூட்டுறவு, உள்ளாட்சி, இளையோர் மற்றும் விளையாட்டு துறைகளுக்கான ஆலோசகர் ஆசிஃப் மஹ்மூத் ஷோஜிப் புயைன் […]

அதிரடி 11 Dec 2025 3:30 pm

ஜப்பானில் பேரழிவு அபாயம்? அடுத்த ஒரு வாரத்திற்குள் பூகம்பம், 98 அடி உயர சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் தற்போது மீண்டும் ஒரு மாபெரும் இயற்கை சீற்றத்தின் அபாயம் தலை தூக்கியுள்ளது. அடுத்த ஒரு வார காலத்திற்குள்,… The post ஜப்பானில் பேரழிவு அபாயம்? அடுத்த ஒரு வாரத்திற்குள் பூகம்பம், 98 அடி உயர சுனாமி எச்சரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 3:27 pm

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6% கூடுதலாக பெய்துள்ளது -வானிலை மையம் தகவல்!

சென்னை :தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 11-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 12-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் […]

டினேசுவடு 11 Dec 2025 3:20 pm

செங்கோட்டையன் போன்றவர்கள் மக்கள் இயக்கத்தில் பணியாற்றினார்களா? திமுகவில் இணைந்த பி.டி.செல்வக்குமார்!

சென்னை :தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், கலப்பை மக்கள் இயக்கத் தலைவருமான பி.டி.செல்வக்குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். 2003-ஆம் ஆண்டு முதல் விஜய்யின் மக்கள் தொடர்பு அலுவலராக (பிஆர்.ஓ) பணியாற்றியவர், ‘புலி’, ‘சுறா’, ‘வில்லு’, ‘போக்கிரி’ போன்ற படங்களுக்கு விஜய்யின் பிஆர்.ஓவாகவும், ‘புலி’ படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்தார். இவரது இணைப்பு தவெகவுக்கு பின்னடைவாகவும், திமுகவுக்கு வலுவூட்டலாகவும் அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற […]

டினேசுவடு 11 Dec 2025 3:05 pm

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ரகசிய திருமணம்; பிரிட்டன் குடும்பத்தோடு தொடர்புடைய பூஜா தியோல் யார்?

சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல், இடையிலே பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் சமீபகாலமாக அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சன்னி தியோல் 1983ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அறிமுகமான அடுத்த ஆண்டே ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அவர் அந்நேரம் காதல் படங்களில் அதிக அளவு நடித்து வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். சன்னி தியோல் 1984ஆம் ஆண்டு லண்டனில் லிண்டா தியோல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். லிண்டா பின்னர் தனது பெயரை பூஜா தியோல் என்று மாற்றிக்கொண்டார். சன்னி தியோல், லிண்டா தியோல் பூஜா மற்றும் சன்னி தியோல் திருமணம் குறித்து வெளியில் தெரிய வந்தால், சன்னி தியோல் காதல் படங்களில் நடிப்பது பாதிக்கும் என்று தயாரிப்பாளர்கள் கருதினர். எனவே இந்த செய்தியை வெளியில் விடாமல் வைத்தனர். ஆனால் லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியான பிறகு, அவர்களின் திருமணம் குறித்து வெளியில் தெரிய வந்தது. யார் இந்த பூஜா? சன்னி தியோல் திருமணம் செய்து கொண்ட பூஜாவின் தாயார் சாரா மஹால். தந்தை பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கிருஷ்ணன் தேவ். இதில், சாரா மஹால் பிரிட்டன் அரச குடும்பத்தோடு தொடர்புடையவர் ஆவார். அரச குடும்பத்தோடு தொடர்புடையவர் என்றாலும், பூஜா பொதுப் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தார். பூஜா சன்னி தியோலின் ஹிம்மத் படத்தில் நடித்துள்ளார். அதோடு, ஒரு படத்திற்கான கதையும் எழுதியுள்ளார். அந்த படத்தில் சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் தர்மேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். `இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் தர்மேந்திராவின் தாயாரை சந்தித்தேன்!’ - ஹேமாமாலினி

விகடன் 11 Dec 2025 2:58 pm

மைக்கை மறச்சு கெட்ட வார்த்தை பேசிய பார்வதி: ரெட் கார்டு கொடுத்தால் TRP பிச்சுக்கும் பிக் பாஸ்

பார்வதியை வெளியேற்றினால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. குறைந்துவிடும் என்று பயப்பட வேண்டாம். விதிமீறலுக்காக ரெட் கார்டு கொடுத்தால் பிக் பாஸை எல்லோரும் கொண்டாடுவார்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

சமயம் 11 Dec 2025 2:58 pm

கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடியவரை மோதிய டிப்பர் - திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்

சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடி வந்தவர், சட்டவிரோத மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தால் மோதப்பட்டு , மனைவியின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ,கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த நிலையில் , நேற்றைய தினம் புதன் கிழமை மனைவியுடன் , இரணைமடு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , வீதி ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியவேளை பின்னால் மிக வேகமாக வந்த டிப்பர் வாகனம் , மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியது. அதன் போது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மனைவி டிப்பர் வாகனத்தை கண்ணுற்று மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியதால் அவர் தப்பித்து கொண்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிப்பர் சாரதியை கைது செய்துள்ளனர்.

பதிவு 11 Dec 2025 2:50 pm

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இன்று முற்பகல் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவரை வரவேற்றார். அதையடுத்து அவர்கள் இருவரும் கட்டுநாயக்கவில் உள்ள சிறிலங்கா விமானப்படைத் தளத்திற்குச் சென்று, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு

புதினப்பலகை 11 Dec 2025 2:45 pm

கனடாவின் தீவிரவாதப் பட்டியலில் மேலும் 4 குழுக்கள் சேர்ப்பு – சொத்துகள் முடக்கம்! ❄️

கனடா அரசாங்கம், தீவிரவாத அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மேலும் 4 குழுக்களைத் தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் இணைத்து அறிவிப்பை… The post கனடாவின் தீவிரவாதப் பட்டியலில் மேலும் 4 குழுக்கள் சேர்ப்பு – சொத்துகள் முடக்கம்! ❄️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Dec 2025 2:45 pm

இண்டிகோ அளிக்கும் ரூ.10,000 கூப்பன்…. விமானங்கள் ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு குட் நியூஸ்!

நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படும் நிகழ்வுகளால் பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 10,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சமயம் 11 Dec 2025 2:44 pm

'வேகத்தடை'யில் தங்கம் விலை; 'ஜெட் வேகத்தில்'வெள்ளி விலை - ஏன்? இப்போது முதலீடு செய்யலாமா?

டாப் கியரில் சென்றுகொண்டிருந்த தங்கம், வெள்ளி விலை, தீபாவளிக்கு பிறகு சற்று நிதானித்தது. இந்த ஆண்டு முதல் நாள் அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,150 ஆகவும், பவுனுக்கு ரூ.57,200 ஆகவும் விற்பனை ஆனது. வெள்ளி ரூ.98-க்கு விற்பனை ஆனது. இன்றைய தங்கம் விலையை பார்த்தால் கிராமுக்கு ரூ.12,050, பவுனுக்கு ரூ.96,400. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.209. 2025-ம் ஆண்டின் ஜனவரி 1-ம் தேதி முதல் இன்று வரை தங்கம் கிராமுக்கு ரூ.4,900-உம், பவுனுக்கு ரூ.39,200-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.111 உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளி முன்னர் சொன்னதுபோல, தீபாவளி வரை தங்கம் விலை மிகவும் உயர்ந்தது. அதன் பின், இறங்குமுகத்தில் சென்றது. மீண்டும் கடந்த மாதம் இறுதியில் இருந்து இரண்டின் விலையும் ஏறுமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியது. தங்கத்தில் முன்பு இருந்த விலை ஏற்ற வேகம் இப்போது இல்லை. மெல்ல மெல்லமாகவே உயர்ந்து வருகிறது. ஆனால், வெள்ளி தங்கம் விலையோடு தீபாவளிக்கு பிறகு இறக்கத்தை தொட்டாலும், தங்கம் ஏறுமுகத்தில் நகர தொடங்கியதும்... இது பாயத் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். சர்வதேச சந்தையில், வெள்ளி விலை ஒரு அவுன்ஸிற்கு 62 அமெரிக்க டாலர்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. இது வரலாற்று உச்சம் ஆகும். இப்போது தங்கம் விலையில் ஏன் அதிகம் ஏற்றமில்லை? முதலீட்டாளர்கள் தங்க முதலீடுகளை விற்று 'பிராஃபிட் டேக்கிங்' செய்துள்ளனர். மேலும், உலக அளவில் இருந்து அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பு அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. அதன் தாக்கம் தங்கம் விலையில் இனி தெரியலாம். வெள்ளி விலை ஏன் அதிகமாகி வருகிறது? எலெக்ட்ரிக் வாகனங்கள், சோலார் பேனல்கள், மருத்துவம், எலெக்ட்ரானிக்ஸ் என பல தொழிற்சாலைகளில் வெள்ளியின் பயன்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால், வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால், வெள்ளியின் விலை உயர்கிறது. தங்கம், வெள்ளி தங்கம், வெள்ளி - இப்போது முதலீடு செய்யலாமா? தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டைப் போலவே, அடுத்த ஆண்டும் ஏற்றம் இருக்குமா என்று சொல்ல முடியாது. அதனால், தங்கம், வெள்ளியில் லம்சம் முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது. நீண்ட கால முதலீட்டிற்கு, தங்கம், வெள்ளியில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யுங்கள். இதற்கு கோல்டு இ.டி.எஃப், சில்வர் இ.டி.எஃப்பை தேர்ந்தெடுக்கலாம். இப்போது வெள்ளி அதிக ஏற்றத்தில் இருக்கிறதே, அதில் முதலீடு செய்யலாமா? தங்கமாக இருந்தாலும் சரி... வெள்ளியாக இருந்தாலும் சரி... இதில் வரும் விலை ஏற்றத்தை அறுவடை செய்ய வேண்டுமானால், அதற்கு 'டிரேடிங்' தான் சிறந்த சாய்ஸ். ஆனால், டிரேடிங் செய்வதில் மிக மிக கவனம் தேவை. தங்கம், வெள்ளி தங்கம், வெள்ளியில் நீண்ட கால முதலீடு செய்யக்கூடாதா? தாராளமாக செய்யலாம். ஆனால், இடையில் எடுத்துவிடக் கூடாது. தீபாவளிக்கு பிறகு, தங்கம், வெள்ளியில் சறுக்கல் வந்ததுப்போல, மீண்டும் இறங்குமுகம் வரலாம். ஆனால், பயம் வேண்டாம். நீண்ட கால அடிப்படையில் தங்கம், வெள்ளி விலை நிச்சயம் உயரும். அப்போது இதில் நீண்ட கால முதலீடு உங்களுக்கு நன்மை பயக்கும். நீண்ட கால முதலீட்டிற்கு தங்கம், வெள்ளியில் லம்சம்மாக இல்லாமல், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது நல்லது. அதை மறந்துவிடாதீர்கள் மக்களே. Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 11 Dec 2025 2:40 pm