SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
...

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 16 2026 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 4 ஆம் தேதி திங்கட்கிழமை 16.2.2026 திதி : இன்று மாலை 06.26 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. நட்சத்திரம் : இன்று இரவு 09.41 வரை திருவோணம். பின்னர் அவிட்டம். நாமயோகம் : இன்று அதிகாலை 04.24 வரை வியதீபாதம். பின்னர் வரீயான். கரணம் :

ஒனிந்தியா 16 Feb 2026 12:05 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 16 2026 திங்கட்கிழமை.

அஸ்வினி: தொழிலில் முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள். பரணி: புதிய ஒப்பந்தங்களை சேகரிப்பீர்கள். கார்த்திகை: தேவையில்லாத செலவுகள் சிரமப்படுத்தும். ரோகினி: உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள். மிருகசீரிடம்: பண வரவை அதிகரிக்க புதிய முதலீடு செய்வீர்கள். திருவாதிரை: தொழிலில் திடீர் சரிவுகள் ஏற்படலாம். புனர்பூசம்: ஆடம்பர சிந்தனையால் செலவு அதிகரிக்கும். பூசம்: குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.

ஒனிந்தியா 16 Feb 2026 12:05 am

கடகம் ராசி பலன்: குருவின் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொழிலில் ஏற்றம்

Kadagam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 15 Feb 2026 9:55 pm

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தொழிலில் அற்புத மாற்றம்.. இந்த வாரம் நன்மைகளை அள்ளித் தரும்

Rishabam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 15 Feb 2026 8:11 pm

Rasi Palan This Week: மிதுன ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள்

Mithunam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 15 Feb 2026 7:40 pm

Rasi Palan This Week: மிதுன ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள்

Mithunam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 15 Feb 2026 5:53 pm

Rasi Palan This Week: மேஷ ராசிக்கு லாபம், மகிழ்ச்சி.. அமோகமான வாரமாக இருக்கும்

Mesham Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 15 Feb 2026 3:25 pm

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 15 2026 ஞாயிற்றுக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.2.2026 திதி : இன்று மாலை 05.50 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று இரவு 08.36 வரை உத்திராடம். பின்னர் திருவோணம். நாமயோகம் : இன்று அதிகாலை 04.08 வரை சித்தி. பின்னர் வியதீபாதம். கரணம்

ஒனிந்தியா 15 Feb 2026 7:03 am

பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 15 Feb 2026 6:00 am

காதலர் தினம்: காதலில் சொதப்பப் போகும் 6 ராசியினர்?.. இப்ப புரொபோஸ் பண்ணினா போச்சு.. ரொம்ப கவனம்

Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும், காதலில் சொத்தப்பப் போகும் ராசியினர் யார் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் [Valentines' day Rasi palan]. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மனிதராக ஏற்றுக்

ஒனிந்தியா 14 Feb 2026 9:44 pm

காதலர் தினம்: காதலில் சொதப்பப் போகும் 6 ராசியினர்?.. இப்ப புரொபோஸ் பண்ணினா போச்சு.. ரொம்ப கவனம்

Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும், காதலில் சொத்தப்பப் போகும் ராசியினர் யார் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் [Valentines' day Rasi palan]. கடகம் கடக ராசியினரே உங்கள் ராசிக்கு 2

ஒனிந்தியா 14 Feb 2026 8:43 pm

காதலர் தினம்: காதலில் சொதப்பப் போகும் 6 ராசியினர்?.. இப்ப புரொபோஸ் பண்ணினா போச்சு.. ரொம்ப கவனம்

Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும், காதலில் சொத்தப்பப் போகும் ராசியினர் யார் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் [Valentines' day Rasi palan]. கடகம் கடக ராசியினரே உங்கள் ராசிக்கு 2

ஒனிந்தியா 14 Feb 2026 6:19 pm

Valentines Day Rasi Palan: காதலில் வெற்றி பெறும் அதிர்ஷ்ட ராசியினர் யார்?.. 12 ராசிகளுக்கான பலன்கள்

Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் எந்த ராசியினருக்கு எல்லாம் காதல் கைகூடும், காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக காதலை சொல்ல வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். மேஷம் சுக்கிரன் 11 ஆம் இடத்திலும், குரு 3

ஒனிந்தியா 14 Feb 2026 3:31 pm

Valentines Day Rasi Palan: காதலில் வெற்றி பெறும் அதிர்ஷ்ட ராசியினர் யார்?.. 12 ராசிகளுக்கான பலன்கள்

Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் எந்த ராசியினருக்கு எல்லாம் காதல் கைகூடும், காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக காதலை சொல்ல வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். மேஷம் சுக்கிரன் 11 ஆம் இடத்திலும், குரு 3

ஒனிந்தியா 14 Feb 2026 3:12 pm

ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் : ராவணன் வம்சத்தினர் வழிபட்ட ஈசன்... திருமணக் கோலத்தில் அம்பிகை!

ராவணன் மாபெரும் சிவபக்தன் என்பதை அனைவரும் அறிவோம். அவன் வம்சத்தில் வந்த பலரும் சிவவழிபாட்டைக் கடைப்பிடித்தவர்கள் என்கின்றன புராணங்கள். அவர்களில் மாலி, சுமாலி, மஹிமாலி ஆகிய மூவரும் வழிபட்ட ஈசன் ஒருவர் ஈரோடு மாநகரில் அருள்கிறார். வாருங்கள் அந்த ஆலயத்தின் சிறப்பினை அறிந்துகொள்வோம். ஈரோடு நகரத்தில் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். பொதுவாக ஈரோடு தலமே சிவபெருமானோடு தொடர்புடையதுதான். படைப்பு கடவுளான பிரம்மா தன்னை மறந்து சிவனை பூஜித்ததால், 'மறந்தை' எனவும், 'மயிலை' எனவும், 'ஆர்த்த கபாலபுரி' எனவும் ஈரோடு நகருக்குப் பல பெயர்கள் புராணகாலத்தில் உண்டு என்கின்றனர் புராண ஆய்வாளர்கள். ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் ஒருமுறை மாலி, சுமாலி, மஹிமாலி ஆகிய மூவரும் கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்தப் பகுதிக்கு வந்த போது, சந்தியாவந்தனம் செய்து சிவவழிபாடு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தனர். அப்போது ஓரிடத்தில், பாதையில் வில்வ தளங்கள் இருப்பதைக் கண்ட அவர்கள், அருகில் சிவாலயம் இருக்கவேண்டும் என்று நினைத்தவர்களாக, அந்த வழியே சென்றார்கள்.காவிரியின் தென் கரையில், வில்வ மரங்களுக்கு இடையில் ஈசன் சுயம்புவடிவில் இருந்தது கண்டு, பரவசத்துடன் வழிபட்டு, திருப்பணிகளும் செய்தனர். அதனால், இத்திருத்தலம் மஹிமாலீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது என்கிறது தலபுராணம். கொங்கு நாட்டு சிவன் கோயில்களில் மிகவும் பழமையான சிறப்பை பெற்றது ஈரோட்டில் உள்ள மகிமாலீஸ்வர் கோயில். மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அடியவருக்கு அடியவராக போற்றப்படும் சிவ பெருமான் மகிமாலீஸ்வரராக, மங்களாம்பிகை அம்மனுடன் மகாலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். 2000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் சுந்தரர், அப்பர் ஆகியோர் வழிபாடு செய்துள்ளன. இந்தக் கோயிலில் மகாலட்சுமி, துர்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. மங்களாம்பிகை தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் சிவனுக்கு வலப்புறமாக, திருமணக் கோலத்தில் இருப்பதுபோல் காட்சி அருள்கிறார். எனவே, அம்பிகையை வணங்கினால், திருமணப்பேறும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் மஹிமாலீஸ்வரரை மனம் உருகி வேண்டினால், நம் கவலைகள் அனைத்தையும் தீர்ப்பார். இந்த ஆலயத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று திருமணத் தடைகள் நீங்குவதற்காக சிறப்பு பூஜை நடை பெறுகிறது. தொடர்ந்து 11 வாரம் விரதமிருந்து, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு ஸ்வாமியைத் தரிசித்து பிரார்த்திக்கொண்டால், திருமணத் தடை விரைவில் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிகொடுக்கிறது. 63 நாயன்மார்கள், 16 வகை லிங்கங்களும் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. மகா சிவராத்திரியன்று மஹிமாலீஸ்வரரை வழிபடுவதால், பலன் பன்மடங்கு அதிகம் கிடைக்குமாம். அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மஹிமாலீஸ்வரரை வழிபட்டு, வேண்டிய பலன்களைப் பெற்றுச் செல்கிறார்கள். இக்கோயிலின் வரலாறு குறித்த மற்றுமொரு கருத்தும் உண்டு. முன்னொரு காலத்தில் இருக்குவேளிர் வம்சத்தை சேர்ந்த சிற்றரசர்கள் இந்தப் பகுதியை ஆண்டு வந்தனர். கி.பி.10 - ம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட கொங்கு நாட்டுப் பகுதிகளை ஆட்சி செய்த, 'மஹிமாலி இருக்குவேள்' என்ற மன்னன் இக்கோயிலை கட்டி வழிபட்டு வந்ததால் அவனுடைய பெயரிலேயே இத்தலம், ' மஹிமாலீஸ்வரம்' என்று பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள். ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் கோயில் இந்தத் தலத்தில்தான் சுந்தரமூர்த்தி நாயனார் தன் தேவியருடன் இருந்து ஈசனை நினைத்துத் தவம் செய்தார் என்றும் அப்போது சேரமான் பெருமான் நாயனார் அவருக்கு கவரி வீசி சேவகம் செய்தார் என்றும் சொல்கிறார்கள். அப்படி ஒரு காட்சி கோயிலில் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி வரலாற்றுச் சிறப்பும் புராண சிறப்பும் கொண்ட இக்கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை நிச்சயம் மாறும். வளமும் நலமும் சூளும்.

விகடன் 14 Feb 2026 8:05 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 14 2026 சனிக்கிழமை.

அஸ்வினி: தொழிலில் திட்டம் போட்டு வெற்றி பெறுவீர்கள். பரணி: முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும். கார்த்திகை: வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. ரோகினி: உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: விரோதிகள் தானாகவே விலகிப் போவார்கள். திருவாதிரை: எதிர்பாராத செலவுகள் கடன் வாங்க வைக்கும். புனர்பூசம்: பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பூசம்: தகப்பனார் தக்க சமயத்தில் பண

ஒனிந்தியா 14 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 14 2026 சனிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமை 14.2.2026 திதி : இன்று மாலை 04.43 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. நட்சத்திரம் : இன்று இரவு 07.00 வரை பூராடம். பின்னர் உத்திராடம். நாமயோகம் : இன்று அதிகாலை 04.12 வரை வஜ்ரம். பின்னர் சித்தி. கரணம் :

ஒனிந்தியா 14 Feb 2026 12:05 am

குறிவைத்து அடிக்கும் மீனம் ராசி.. 100% ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் கவனம்

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு (Meenam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 13 Feb 2026 7:56 pm

குறிவைத்து அடிக்கும் மீனம் ராசி.. 100% ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் கவனம்

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு (Meenam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 13 Feb 2026 7:29 pm

பிப்ரவரி 14 : காதலைச் சொன்னால் ஒகே ஆகுமா? நாளை காதல் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு?

பிப்ரவரி 14 -ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலர் தங்கள் காதலைச் சொல்ல முயல்வார்கள். அப்படிச் சொல்பவர்கள் அனைவருக்கும் எதிர் தரப்பில் நல்ல பதில் கிடைப்பதில்லை. எனவே இந்த நாளில் யாரெல்லாம் காதலைச் சொல்லலாம்... சொல்லும் காதல் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வெற்றியாகும் என்பது குறித்து ஒரு ஜோதிட வழிகாட்டலைத் தரலாமே என்று ஜோதிடர் பாரதி ச்ரிதரிடம் கேட்டோம். காதலர் தினத்துக்கெல்லாம் ராசிபலன் சொல்லும் வழக்கம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி அமைகிறது... அதிலும் குறிப்பாகக் காதல் வாழ்க்கை ஒருவருக்கும் அந்த நாளில் எப்படி இருக்கும் என்பனவற்றை ஓரளவு சொல்லமுடியும். ஜோதிடம் காதல் என்று சொன்னாலே அது சுக்கிரன் சம்பந்தப்பட்டது. ஜோதிடத்தில் சுக்கிர பகவானை களத்திரகாரகன் என்பார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் காதல் கைகூடவும் திருமண வாழ்க்கையில் சுகத்தை அனுபவித்திடவும் சுக்கிரன் சாதகமாக அமைந்திருக்க வேண்டும என்கிறது ஜோதிட சாஸ்திரம். அழகு, கவர்ச்சி, ஆடம்பர வாழ்க்கை, இன்ப நுகர்ச்சி, வாசனை திரவியங்கள் பயன்படுத்துதல், வாழ்க்கைத்துணை அமைதல் என சகலத்துக்கும் அவரே காரகன். கோசாரத்தில் சுக்கிரன் எப்படி இருக்கிறார் என்பதைக் கொண்டு அந்த நாளில் காதல் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை ஓரளவு சொல்லமுடியும். அந்த அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் பிப் - 14 ம் தேதி காதல் யோகம் எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம். மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 11 - ம் இடத்தில் இருக்கிறார். எனவே காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குருவும் மூன்றில் இருப்பதால் தைரியமாகக் காதலைச் சொல்வார்கள். அவர்களுக்கு சாதக பதில் கிடைக்க வாய்ப்புண்டு. ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 10 - ம் இடத்தில் இருக்கிறார். குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2 - ம் வீட்டில் இருக்கிறார். எனவே இவர்களுக்குக் காதல் கைகூடவும் அது திருமணத்தில் முடியவும் வாய்ப்புண்டு. மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் குடும்பகாரகனான சந்திரன் 7 - ம் வீட்டில் இருந்து ராசியைப் பார்க்கிறார். சுக்கிரனும் சாதகமாக 9 - ம் வீட்டில் இருக்கிறார். எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் காதல் விஷயத்தில் மிகவும் சாதகமான நாளாக உள்ளது. ஜோதிடம் அடுத்து மூன்று ராசிகளான கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுப்பார்கள். அதீத நம்பிக்கையில் சிலவற்றைக் கொஞ்சம் ஓவராக செய்து சொதப்பிவிட வாய்ப்புண்டு. கடகத்துக்கு 2 -ல் கேது, 8 -ல் சுக்கிரன் ராகு, சிம்மத்துக்கு அஷ்டம சனி, 7 -ல் ராகுவுடன் சுக்கிரன் மற்றும் ராசிக்குள் கேது, கன்னிக்கு 7 -ல் சனி 6 -ல் சுக்கிரன் ராகு என கிரகநிலை இருப்பதால் காதல் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உச்சமாக இருப்பதால் காதல், திருமணம் ஆகியன கூடிவரும் நேரம் இது. மேலும் சந்திரனும் மூன்றில் இருக்கிறார் என்பதால் தைரியமாகக் காதலைச் சொல்வார்கள். அதற்கு சாதகமான பதில்வர வாய்ப்பிருக்கிறது. விருச்சிக ராசிக்காரர்கள் இன்னும் ஆறு மாதத்துக்குக் காதலைச் சொல்வதை தள்ளிப்போடுவது நல்லது. குரு சாதகமில்லாதபோது அதை முயல்வது கத்திமேல் நடப்பதுபோன்றது. வார்த்தைகளால் வம்பு வரலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு 7 -ல் குரு, 3 -ல் சுக்கிரன் ராகு. எனவே தைரியமாக காதலைச் சொல்வார்கள். இவர்களின் காதல் திருமணத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது. மகர ராசிக்காரர்கள் இந்த ஆண்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துங்கள். ஜூன் மாதத்துக்குப் பின் திருமணம் கூடிவரும். ஜோதிடம் கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்குள்ளேயே சுக்கிரன் இருப்பதால் காதல் உணர்வுகள் மிகுதியாக இருக்கும். குடும்பகாரகன் குரு சாதகமாக 5 -ல் இருப்பதால் திருமண யோகமும் உண்டு. எனவே காதலைச் சொல்லலாம். ஓரளவு சாதக பதிலே கிடைக்கும். மீன ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சனி இருக்கிறார். சுக்கிரன் மறைவாக 12 -ல் இருக்கிறார். எனவே ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம். இன்னும் சில மாதங்கள் தள்ளிப்போடுங்கள். வேலை மற்றும் படிப்பில் கவனம் செலுத்துங்கள். மேலே சொல்லப்பட்டவை கோசார அடிப்படையில் ஆன பலன்கள் மட்டுமே. அவரவர் சுய ஜாதகம் மூலமே துல்லியமான பலன்களைச் சொல்லமுடியும். இவை ஒரு சிறு வழிகாட்டல் மட்டுமே என்று கூறினார் ஜோதிடர் பாரதி ச்ரிதர்.!

விகடன் 13 Feb 2026 6:50 pm

சிங்கம் போல மாறும் கும்ப ராசி.. ராஜவாழ்க்கை வாழப்போறீங்க கன்ஃபார்ம்

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு (Kumbam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 13 Feb 2026 5:52 pm

Masi Matha Palan: மகர ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாசி மாதத்தில் மகரம் ராசியினருக்கு (Magaram Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 13 Feb 2026 4:32 pm

குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. வாழ்க்கை பிரகாசமாக மாறப்போகுது

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு (Dhanusu Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 13 Feb 2026 3:59 pm

திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் சாய்ந்தது அபசகுனமா? - கோயில் நிர்வாகம் சொல்வது என்ன?

கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி மிகவும் மகிமை வாய்ந்தது. ஏழரை அடி உயரம் கொண்டு கம்பீரமாக பிரமாண்டத் திருமேனியோடு அருள்கிறார் சரபேஸ்வரர். பிரத்யங்கரா, சூலினி எனும் இரு மஹாசக்திகளை இறக்கைகளாகக் கொண்ட சரபர் மகாவல்லமை கொண்டவர். இங்கு வந்து வேண்டிக்கொண்டாலே பகை விலகும். மனபயம் நீங்கும். நோய்கள் விலகி ஆரோக்கியம் பெருகும் என்பார்கள். அப்படிப்பட்ட சரபேஸ்வரர் திருக்கோயில் தருமை ஆதினத்துக்கு சொந்தமானது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் கொடிமரம் நேற்று சாய்ந்தது. இந்த நிகழ்வு பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக கொடிமரம், கோபுரம், கோயில் யானை, கோயில் பசு ஆகியன மங்கலச் சின்னங்களாகக் கருதப்படுபவை. இவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்கிற அச்சம் பக்தர்களிடையே எழும். அதிலும் கொடிமரம் என்பது ஒரு கோயிலில் மிக முக்கியமான அங்கமாகக் கருதப்படுவது. கோயிலில் உற்சவங்கள் என எதுநடந்தாலும் அது கொடிமரத்தில் இருந்துதான் தொடங்கும். அப்படிப்பட்ட கொடிமரம் சாய்வது என்பது தீய சகுனமாயிற்றே என்று அஞ்சுகிறார்கள் பக்தர்கள். திருபுவனம் சரபேஸ்வரர் திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் சாய்ந்ததை அடுத்து பக்தர்கள் பதற்றம் அடைந்தனர். சமூக ஊடகங்களிலும் இது பேசுபொருளானது. பெரும் தீமை ஒன்று நடக்க இருப்பதற்கான அறிகுறி என்று கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்நிலையில் கொடிமரம் சாய்ந்த விவகாரம் தொடர்பாக நடந்தது என்ன என்பது குறித்து தருமை ஆதீன நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டோம். தருமை ஆதீனத்துக்கு உட்பட்ட சரபேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கொடிமரம் எதிர்பாராத விதமாக சாய்ந்துள்ள நிகழ்வு வருத்தம் அளிக்கிறது. இது குறித்து, பக்தர்கள் யாரும் தேவையற்ற பயமோ அல்லது அச்சமோ கொள்ள வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இது குறித்த சில தகவல்களையும் உங்கள் முன் வைக்கக் கடமைப்பட்டுள்ளோம். கொடிமரம் நீண்ட காலப் பயன்பாடு, தட்பவெப்ப நிலை மாற்றம் அல்லது மரத்தின் உறுதித்தன்மை குறைவு போன்ற காரணங்களாலேயே இது நிகழ்ந்துள்ளது. இது முற்றிலும் ஒரு தற்செயலான நிகழ்வு. மேலே உள்ள கவசத்தில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக முன்னர் பெய்த கனமழையில் தண்ணீர் புகுந்து மரத்தினை சேதப்படுத்தி உள்ளது. இறையருளால் கொடி மரம் சாய்ந்தபோது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தருமை ஆதீன 27 வது குருமூர்த்திகள் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று துரித நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினார். மேலும் கொடிமரம் சாய்ந்ததை முன்னிட்டு உடனடியாக பிராய்சித்த ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார்கள். தற்போது அந்தப் பகுதி பாதுகாப்பாக மாற்றப்பட்டு, சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன. திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் கொடிமரம் சாய்ந்த விவகாரத்தில் ஆகம விதிப்படி தீர்வு எட்டப்பட உள்ளது. பழைய கொடி மரத்தை அகற்றுவதும், புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்வதும் ஆகம விதிகளின்படி முறையாகச் செய்யப்படும். இதற்காகத் தகுந்த ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் ஸ்தபதிகளின் ஆலோசனை பெறப்பட்டு இன்று அதற்கான வேலையும் தொடங்கப்பட்டுவிட்டது. சுவாமிக்கு நடைபெறும் நித்ய கால பூஜைகளுக்கும், இந்த நிகழ்விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஆகம வல்லுநர்கள் கூறியுள்ளனர். எனவே, பக்தர்கள் எப்போதும் போலத் தடையின்றி வந்து சுவாமி தரிசனம் செய்யலாம். சுவாமிக்கு நடைபெற வேண்டிய பூஜைகளும் சிறப்புற நடைபெற்று வருகின்றன. இறைவனின் அருள் எப்போதும் நம் அனைவரையும் காக்கும். தெய்வ காரியங்களில் சிறு இடையூறுகள் ஏற்படுவது இயல்பே; அதை முறையாகச் சரி செய்வது நமது கடமை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அனைவரும் அமைதி காக்குமாறும் பிராத்தனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம். திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் விரைவில் புதிய கொடி மரம் கம்பீரமாக அமையப் பெறும். சாய்ந்த கொடிமரம் கலாகர்ஷணம் செய்தது புதியமரம் பொருத்த பங்குனி 2 (16-3-2026) நாள் குறிக்கப்பட்டுள்ளது அந்த நாளில் அதற்கு சிறப்பு கும்பாபிஷேம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தருமை ஆதீனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் 13 Feb 2026 3:59 pm

Miraculous Kala Bhairavar | கலியுக அதிசயம் - வேண்டியது அருளும் திருக்குறுங்குடி கால பைரவர் சந்நிதி!

திருக்குறுங்குடி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது வைஷ்ணவ நம்பி திருக்கோயில்தான். இந்தப் பெருமாள் திருக்கோயிலுக்குள்தான் சிவன் சந்நிதியும் பைரவர் சந்நிதியும் உள்ளன. இங்குள்ள ஈசனுக்கு மகேந்திரகிரிநாதர் என்பது திருநாமம். சிவனுக்கு அருகிலேயே சந்நிதிகொண்டு எழுந்தருளியிருக்கிறார் காலபைரவர். பிரமாண்டத் திருமேனியராகக் காண்பவர்கள் வியக்கும் வகையில் பைரவரின் திருமேனி அமைந்துள்ளது. அந்தக் காலபைரவர் மூச்சுவிடும் அதிசயமும் அங்கே நிகழ்கிறது. இதுகுறித்து விளக்குகிறது இந்த வீடியோ.

விகடன் 13 Feb 2026 9:00 am

நட்சத்திரப் பலன்கள் பிப்ரவரி 13 முதல் 19 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள் அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரப் பலன்கள்

விகடன் 13 Feb 2026 6:00 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 13 2026 வெள்ளிக்கிழமை.

அஸ்வினி: புதிய தொழிலுக்குத் திட்டம் போடுவீர்கள். பரணி: எதிர்பாராத செலவுகள் சிரமத்தைக் கொடுக்கும் . கார்த்திகை: பங்குச் சந்தை முதலீடுகள் லாபம் தரும். ரோகினி: அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள். மிருகசீரிடம்: தாயார் வழி சொத்து கிடைக்கும். திருவாதிரை: தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள். புனர்பூசம்: நிலம், மனை இடங்களில் முதலீடு செய்வீர்கள். பூசம்: பிள்ளைகளின்

ஒனிந்தியா 13 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 13 2026 வெள்ளிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.2.2026 திதி : இன்று மாலை 03.11 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. நட்சத்திரம் : இன்று மாலை 05.00 வரை மூலம். பின்னர் பூராடம். நாமயோகம் : இன்று அதிகாலை 04.01 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம். கரணம் :

ஒனிந்தியா 13 Feb 2026 12:05 am

Masi Matha Palan: விருச்சிக ராசிக்கு மாசியில் மாஸ் ஆன யோகம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு (Viruchigam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 12 Feb 2026 8:18 am

தஞ்சை மாவட்டம் வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர்: மருதாணி அரைத்துப் பூசினால் திருமணம் நிச்சயம்!

காவிரிக்கரைத் தலங்களில் இரண்டு ஆடுதுறைத் தலங்கள் உள்ளன. இரண்டுமே புராண சம்பந்தம் உடையவை. இரண்டுமே குரங்குகள் நீராடி ஈசனை வழிபட்ட தலங்கள். அப்படி ஒரு தலம் தான் வடகுரங்காடுதுறை. இந்தத் தலத்தை ஆடுதுறை பெருமாள்கோவில் என்றும் சொல்கிறார்கள். கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டியதும், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அந்த ஊரை அடுத்து வருவது இந்த வடகுரங்காடுதுறை. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மீ தூரம். இதன் அருகிலேயே சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது திருவையாறு. வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் கி.பி, 7-ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுள்ளார் என்கிறது தலபுராணம். ராமாயண காலத்தவனான வாலி ஈசனை வழிபட்ட தலம் இது என்கிறது தலபுராணம். எனவே இங்குள்ள ஈசனுக்கு `வாலீசர்’ எனும் திருப்பெயர் உண்டு. ‘கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்’ என்று வாலி வழிபட்டதைக் குறிப்பிட்டு, ஞானசம்பந்தர் இங்குள்ள இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். வாலி வழிபட்டதால் வாலீஸ்வரர். என்றாலும் வடகுரங்காடுதுறை ஈசனுக்குப் பிரதான திருநாமம், 'அருள்மிகு தயாநிதீஸ்வரர்' என்பதாகும். மேலும் இவருக்கு, 'குலை வணங்கீசர்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்; திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்! கர்ப்பிணி ஒருத்தி, இந்தத் தலத்தின் வழியே சென்று கொண்டிருந்தாள். கொளுத்தும் வெயில். வயிற்றுச் சுமையுடன் நடந்த அந்தப் பெண்ணுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் யாருமே இல்லை. 'ஈசா... இது என்ன சோதனை' என்று அவள் மனமுருகி வேண்டிக்கொள்ள ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அருகிலிருந்த தென்னை மரம் தானாக தலை சாய்த்தது. பெண்ணின் வாய்க்கு அருகே சாய்ந்து வந்தது தென்னங்குலை. அதில் இருந்த இளநீர் உடைந்து அந்தப் பெண்பிள்ளையின் தாகம் தணிந்தது. குலையை வளைத்துக் கருணை புரிந்ததால், குலை வணங்கீசர் என்கிற திருநாமம் அவருக்கு ஏற்பட்டது. கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாருடன், சற்றே குட்டையான பாணம் கொண்டவராக அருளும் மூலவருக்கு, 'அழகு சடைமுடிநாதர்' என்ற பெயர் உண்டாம். மூலவர் சந்நிதி சுற்றுச்சுவர்களில் நிறைய கல்வெட்டுகள். குரங்காடு துறை ஆழ்வார், குரங்காட்டுமாதேவர் என்றெல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறார் இந்தச் சுவாமி. இந்தத் திருக்கோயிலுக்குப் பல்லவர்களும் சோழர்களும் திருப்பணிகள் செய்துள்ளனர். வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் இவ்வூர் ஈசனை சிட்டுக்குருவி ஒன்று தினந்தோறும் வழிபட்டு அருள்பெற்றதாம். எனவே, 'சிட்டிலிங்கேசர்' என்ற திருப்பெயரும் உண்டு. சிவனார் மட்டுமல்ல இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் கோஷ்டம் மற்றுமுள்ள சந்நிதிகளில் அருளும் மற்ற தெய்வங்களும் விசேஷமானவர்கள்தான். இங்கே ஒருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு தேவியருடன் அருள்கிறார் முருகப்பெருமான். `திரைக்கரம் கோலி நவமணி கொழித்திடும் சாரல் வயலணி திருக்குரங்காடு துறையுறை பெருமாளே’ என்று போற்றிப் பாடி அருணகிரிநாதர் வணங்கிய முருகன் இவர். வழக்கமாக சிவாலயங்களில் பிராகாரச் சுற்றில் நால்வர் பெரு மக்களைத் தரிசிக்கலாம். வடகுரங்காடுதுறை எனும் இந்தத் தலத்தில் - கிழக்குச் சுற்றில் சனி பகவான், பைரவர், சூரியன், நாகர் ஆகியோருக்கு அடுத்தபடியாக நால்வருக்குப் பதிலாக தேவார மூவர் மட்டும் அருள்கிறார்கள். தொடர்ந்து எந்தப் பெண்ணுக்காக தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அவளின் சிலையையும் காணலாம். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! கருவறைக்குச் செல்லும் வழியில் முகமண்டபத்தில் தூண் சிற்பங்கள் கருத்தைக் கவர்கின்றன. வலப் பக்கத்தூண் ஒன்றில், சிவலிங்கத்தை வழிபடும் கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்கிறார். அனுமன், சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில், வடகுரங்காடு துறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர்- பிரார்த்தனா மூர்த்தியாகத் திகழ்கிறார். இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பாராம். மூலவருக்கு எதிரில், நந்தி. வலப் பக்கம், பாதுகாப்பு அறை. இடப் பக்கத்தில் சாளரம் போன்ற அமைப்பு. இங்கு முற்காலத்தில் சுரங்கம் இருந்ததாம். தஞ்சாவூர் அரண்மனைக்கோ, தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கோ போகும் பாதையாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். பிற்காலத்தில் இந்தச் சுரங்கத்தை மூடிவிட்டதாகச் சொல்கிறார்கள். வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் கருவறையின் தெற்குக் கோஷ்டத்தில், விநாயகர்; அடுத்து தட்சிணாமூர்த்தி அருள்கிறார்கள். இந்த ஆலயத்தில் ஆதி மௌன குருவாக அமர்ந்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. வழக்கமாக இவரின் காலடியில், சனகாதி முனிவர்கள் நால்வர் அமர்ந்து உபதேசம் கேட்பார்கள். இங்கு மேலும் நான்குபேர் உள்ளார்கள். அவர்கள் கந்தர்வர்களும் கிம்புருடர்களும் ஆவார்கள். பின்புறக் கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். வழக்கமாக இந்தக் கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். இப்படி அர்த்தநாரீஸ்வரர் இருப்பது அரிதானது. வடக்குக் கோஷ்டத்தில் அருளும் அஷ்டபுஜ துர்கை பிரயோகச் சக்கரத்துடன் தரிசனம் தருகிறாள். சோழநாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றில், அஷ்ட புஜ துர்கையை, அதிலும் பிரயோகச் சக்கரம் தாங் கிய துர்கையைத் தரிசிக்கலாம். தங்களது படைத்தலைவியாகவே இத்தகைய துர்கையைச் சோழ மன்னர்கள் வழிபட்டுள்ளனர் இங்கு அருளும் அம்பிகையின் திருநாமம் அருள்மிகு அழகுசடை முடியம்மை. நின்ற கோல நாயகியாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது வடமொழிப் பெயர். அம்பாளும் பிரார்த்தனா சக்தி; கேட்டதெல்லாம் தருபவள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள் பௌர்ணமி நாள்களில், மடியில் பாலிகை கட்டி வந்து, அம்மனுக்கு மஞ்சள் மாலை சார்த்தினால், பிள்ளைப் பேறு ஸித்திக்கும். அதேபோல், அம்மனுக்கு மஞ்சள் இட்டு, மருதாணி அரைத்துப் பூசி, அவள் பெயரால் வருகிற பெண்களுக்கு மருதாணி அரைத்து இட்டால், தடைப்பட்ட திருமணங்கள் கூடி வரும் என்பது நம்பிக்கை. வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!

விகடன் 12 Feb 2026 8:14 am

Masi Matha Palan: விருச்சிக ராசிக்கு மாசியில் மாஸ் ஆன யோகம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு (Viruchigam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 12 Feb 2026 7:00 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 12 2026 வியாழக்கிழமை.

அஸ்வினி: நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். பரணி:எந்தக் காரணம் கொண்டும் எதிர்வாதம் செய்யாதீர்கள் . கார்த்திகை: வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். ரோகினி: கவனச் சிதறல்களால் காரியம் தடைபடும். மிருகசீரிடம்: நில விற்பனை அமோகமாக நடக்கும். திருவாதிரை: விபத்துக்களைத் தவிர்க்க எச்சரிக்கை தேவை. புனர்பூசம்: பொருள் வரவு போதுமான அளவில் கிடைக்கும். பூசம்: மனக்

ஒனிந்தியா 12 Feb 2026 1:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 12 2026 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை 12.2.2026 திதி : இன்று பிற்பகல் 01.20 வரை தசமி. பின்னர் ஏகாதசி. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.40 வரை கேட்டை. பின்னர் மூலம். நாமயோகம் : இன்று அதிகாலை 03.37 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம். கரணம் :

ஒனிந்தியா 12 Feb 2026 12:05 am

Masi Matha Palan: துலாம் ராசிக்கு ராஜயோகம்.. மாசியில் கொட்டும் அற்புதமான அதிர்ஷ்டம்

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் துலாம் ராசியினருக்கு (Thulam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 11 Feb 2026 4:50 pm

Masi Matha Palan: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. கன்னி ராசிக்கு பிரம்மாண்ட ஜாக்பாட்

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் கன்னி ராசியினருக்கு (Kanni Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 11 Feb 2026 2:24 pm

சிம்ம ராசிக்கு சிக்கல்கள் தீரப்போகும் காலம்.. மாசி மாதத்தில் மாற்றம் ஏற்படுமா?

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் சிம்மம் ராசியினருக்கு (Simmam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 11 Feb 2026 1:58 pm

டோனை மாற்றிய ஸ்டாலின்.. சரண்டரான செல்வப்பெருந்தகை.. அதிர்ச்சியில் டெல்லி காங்கிரஸ்

சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தனி டிராக்கில் பயணித்து வருகிறது. சில நிர்வாகிகள்

ஒனிந்தியா 11 Feb 2026 12:58 pm

Masi Matha Palan: கடக ராசியை சுத்துப் போடும் கிரகங்கள்.. பட்ட இடத்திலேயே படும்.. கவனம்

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் கடக ராசியினருக்கு (Kadagam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 11 Feb 2026 12:39 pm

Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. வாழ்க்கையையே மாற்றும் 1 விஷயம்.. ரொம்ப கவனம்

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு (Mithunam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 11 Feb 2026 10:01 am

பிப். 17 ஆம் தேதி சூரிய கிரகணம்... பரிகாரம் செய்ய வேண்டுமா? ஜோதிடம் சொல்வது என்ன?

வானியல் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானவை சூரிய கிரகணம் மற்றும் சந்திரகிரகணம். ஓர் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை நிகழும் இந்தக் கிரகணங்கள் குறித்த ஜோதிட சாஸ்திரம் மிகவும் விரிவாகப் பேசுகிறது. நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா (நிழல்) கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன. சூரியன், சந்திரன் ஆகியன ராகுவோடும் கேதுவோடும் இணைந்திருக்கும் காலத்தில் கிரகணங்கள் தோன்றும். சூரியன், சந்திரன் ஆகியன ராகுவுடன் இணைந்திருந்தால் சூரிய கிரகணமும் சந்திரனுடன் கேதுவோடும் சூரியன் ராகுவோடும் இருந்தால் சந்திரகிரகணம் தோன்றும் என்பதை நம் பஞ்சாங்கங்கள் மூலம் ஜோதிடர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்திருக்கின்றனர். அதாவது அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் பௌர்ணமி நாளில் சந்திரகிரகணமும் தோன்றும். சூரிய கிரகணம் - ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் அந்த வகையில் இந்த ஆண்டு சூரியன் வரும் பிப்ரவரி 17 - ம் தேதி கும்பராசியில் சஞ்சரிக்கிறார். கும்பராசியில் தற்போது ராகு பகவான் சஞ்சரித்துவருகிறார். சந்திரனும் அந்த நாளில் கும்பத்தில் இணைகிறார். எனவே அந்த நாளில் கிரகணம் தோன்றுகிறது. பிப்ரவரி 17 அன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:26 மணிக்குத் தொடங்கி மாலை 7:57 மணிவரை கிரகணம் நிகழ இருக்கிறது. இந்தக் கிரகண காலத்தில் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா என்னும் கேள்வி பலருக்குள்ளும் இருக்கிறது. மேலும் கோயில்களில் பூஜை முறைகளில் மாற்றம் இருக்குமா என்பது குறித்த சந்தேகமும் உள்ளது. இது குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதரிடம் கேட்டோம். பிஸ்கட் சாப்பிடுவதெல்லாம் பரிகாரம் ஆகுமா... எங்கே செல்கிறது ஜோதிடம்? ஜோதிட அடிப்படையில் கிரகணங்கள் மிகவும் முக்கியமானவை. ஒருவரின் ஜனன காலத்தை அடிப்படையாகக் கொண்டே ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன. எனவே ஜனன காலத்தில் கிரகணங்கள் இருந்தால் அவை ஜாதகத்தில் தெரியும். அதற்குப் பரிகாரங்கள் செய்ய வேண்டி இருக்கலாம். குறிப்பாக இந்தக் சூரியகிரகண நாளில் ராகுவோடு, சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன் என நான்கு கிரகங்கள் இணைகின்றன. வாக்கியப்படி என்றால் சனியும் சேர்ந்தே இருக்கிறார். எனவே இந்தக் கிரகணம் மிகவும் முக்கியமானது. சூரிய கிரகணம் அதேவேளையில் நம் முன்னோர்கள் சில விதிவிலக்குகளையும் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். எந்தக் கிரகணம் எல்லாம் நம் தேசத்தில் தெரியவில்லையோ அவற்றுக்கெல்லாம் நாம் பரிகாரங்கள் செய்ய வேண்டியதில்லை. காரணம் அவற்றின் நேரடி பாதிப்பு நமக்கு இருக்காது என்பதுதான் அதற்குக் காரணம். பொதுவாக சூரிய கிரகண காலத்தில் வெறும் கண்ணால் சூரியனைப் பார்க்கக் கூடாது என்கிறது அறிவியல். நமக்கு சூரிய கிரகணம் தெரியாது என்றால் அந்த வேளையில் நாம் சூரியனைப் பார்த்தாலும் நமக்கு ஆபத்து ஏற்படாது என்பது அறிவியல். இதையே நம் முன்னோர்களும் கடைப்பிடித்துள்ளனர். ? செவ்வாய் தோஷத்துக்கு வாழைத் திருமணம் பரிகாரம் ஆகுமா? பிப்ரவரி 17 வரும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. எனவே நம் தேசத்தில் நாம் பரிகாரங்களோ சிறப்பு பூஜைகளோ செய்ய வேண்டியதில்லை. மேலும் ஆலயநடைகளும் அந்த வேளையில் சாத்தப்படுவதில்லை. எனவே பரிகாரம் பற்றிய கவலை தேவையில்லை. ஆனாலும் இந்தக் கிரக சேர்க்கை என்பது வான் வெளியில் நிகழ்வது உண்மை என்பதால் நிறைய இறைவழிபாடு செய்ய வேண்டும். கிரகணத்துக்கு முன்னோ பின்னோ சில இயற்கை சீற்றங்கள், அசம்பாவிதங்கள் நிகழலாம் என்பதால் தவறாமல் எல்லோரும் காலபைரவரை வழிபடுவது நல்லது. பரிகாரம் அன்றைய தினம் அமாவாசையாக இருப்பதால் முன்னோர்கள் வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும். பெரும்பாலும் இந்த நாளில்தான் மயானக் கொள்ளை நிகழ்வுகள் நடைபெறும். அவற்றில் கலந்துகொண்டு வழிபட்டாலும் அம்மனின் அருளால் அனைத்தும் நன்மையாக நடைபெறும். அடுத்த மாதத் தொடக்கத்தில் வரும் சந்திரகிரகணம் நம் நாட்டில் தெரியும். அதற்கு பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று சொன்னார் ஜோதிடர் பாரதி ஸ்ரீதர். இந்த கோயிலில் பிரார்த்தனை காசு வாங்கி வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும்! படிக்காசுநாதர் பரிகாரம்!

விகடன் 11 Feb 2026 8:49 am

2026 மகா சிவராத்திரி: 3 கிரக மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்! சிவனின் அருள் நிச்சயம்!

சென்னை: ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் 2026-ஆம் ஆண்டு மகா சிவராத்திரி ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையப்போகிறது. வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் இந்த மகா சிவராத்திரி நன்னாளில், அண்டவெளியில் மூன்று முக்கிய கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றிக் கொள்கின்றன. கிரகங்களின் தளபதி என்று போற்றப்படும் செவ்வாய் பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்கும், மனோகாரகன் சந்திரன்

ஒனிந்தியா 11 Feb 2026 8:09 am

திருச்சி மாவட்டம் உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி: தடைகள் நீங்கி வீடு கட்டி முடிக்க ஒரு திருக்கோயில்!

சோழ மன்னர்கள் ஆட்சியில் ஏராளமான திருக்கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றைப் பரிபாலனம் செய்ய நான்கு வேதங்களைச் சார்ந்த அந்தணர்களையும் அதைச் சுற்றிக் குடிவைத்து முறையாக பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்தனர். அப்படிப்பட்ட தலங்களுக்கு சதுர்வேதி மங்கலம் என்றும் பெயரிட்டனர். அப்படிப்பட்ட ஊர்களில் ஒன்றுதான் உத்தமசீலி. பத்தாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆட்சி செய்த முதலாம் பராந்தக சோழனுக்கு நான்கு மகன்கள் உண்டு என்கிறார்கள். வீர சோழன், வீர நாராயணன், குஞ்சரமல்லன், உத்தமசீலி ஆகியன அவர்களது பெயர்கள். உத்தமர்சீலி என்னும் நான்காம் மகனின் பெயரிலேயே இந்த ஊர் அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் இந்த ஊரை உத்தமசீலி சதுர்வேதிமங்கலம் என்றே அழைத்தனர் என்கிறார்கள். உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில் திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ தொலைவில், காவிரிக் கரையையொட்டி அமைந்துள்ளது உத்தமர்சீலி. அழகும் அமைதியும் தவழும் இந்தத் தலத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால சுவாமி. உலகோர் பார்த்து வியக்கும் வண்ணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்லணையைக் கட்டியவர் கரிகாலச் சோழன். இத்தலத்தில் மைத்ரேய மகரிஷி கரிகாலனுக்குக் கல்லணை கட்டுவதற்கான ரகசியத்தை உபதேசித்ததாகவும் அதைக் கைக்கொண்டு அவன் கல்லணையைக் கட்டி முடித்ததாகவும் தலபுராணம் சொல்கிறது. மேலும் இங்குள்ள ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலைக் கட்டியதும் அவரே என்று சொல்லப்படுகிறது. எனவே இக்கோயிலின் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள் ஊர் மக்கள். கரிகாலன் கட்டியகோயில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது என்பது மக்கள் கருத்து. மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! கோயிலின் முகப்பில், ஆதிசேஷன் மீது சயனநிலையில் மகாலட்சுமி சமேதராக அருளும் திருமால், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோயிலுக்கு உள்ளே சென்றதும் ஒரு கையை உயர்த்தி நம்மை ஆசீர்வதிக்கும் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். அவருக்கு அருகிலேயே விநாயகரும் காட்சி தருவது கூடுதல் விசேஷம். உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீ அரவிந்தநாயகி தாயார் கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயிலின் நுழைவு வாயிலில் இடப்புறம் காவல் தெய்வமான ராஜகருப்புசாமி எழுந்தருளி அனைவரையும் காத்து வருகிறார். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்புடன் பெருமாள் சந்நிதி விளங்குகிறது. கருவறையில் குழலூதும் நிலையில், திருவாயில் வெண்ணெயுடன் ருக்மிணி - சத்யபாமா சமேதராக, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் வேணுகோபால சுவாமி. இவரை செங்கணிவாய்ப்பெருமாள் என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள். சுவாமி சந்நிதிக்கு எதிரில் கருடாழ்வார் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். தாயார் ஸ்ரீஅரவிந்த நாயகி என்னும் திருப்பெயர் கொண்டு தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். பிராகாரத்தில் ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீசேனைமுதல்வர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்! மரங்களும் செடிகளும் நிறைந்த சோலையில், புள்ளினங்களில் பலவித ஓசைகளோடு திகழும் தெய்விகச் சூழலில் அமைந்திருக்கும் கோயிலில் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. மேலும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசித்து வழிபடவேண்டிய கோயில் இது. இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். மேலும் வீடு கட்டும் பணியில் தடை ஏற்பட்டால், இங்கு வந்து வேணுகோபால சுவாமியை வேண்டிக் கொண்டு சென்றால், உடனே வீடு கட்டும் பணி நல்லபடியாக முடிவதும் பக்தர்கள் நம்பிக்கையாக இருக்கிறது. உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில் இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஆலயத்துக்கு வந்தாலே மனம் இலகுவாகிறது. கவலைகள் தீர்கின்றன. வேண்டும் வரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. புராதனமான இந்தப் பெருமாளை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை உத்தமர்சீலிக்கு வந்து வழிபடுங்கள். அந்த உத்தமனின் திருவருளால் உங்கள் வாழ்க்கை உன்னதமாகும். தினமும் கோயில் காலை: 6 முதல் 9 மணி வரை மாலை: 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லணை செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது உத்தமர்சீலி. திருச்சியில் இருந்து பேருந்து வசதிகளும் உள்ளன. கோவை மாவட்டம், ஊதிமலை உத்தண்ட வேலாயுத சுவாமி: தங்கம் வாங்கும் யோகம் அருளும் சித்தர் கோயில்!

விகடன் 11 Feb 2026 7:47 am

2026 மகா சிவராத்திரி: 3 கிரக மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்! சிவனின் அருள் நிச்சயம்!

சென்னை: ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் 2026-ஆம் ஆண்டு மகா சிவராத்திரி ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையப்போகிறது. வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் இந்த மகா சிவராத்திரி நன்னாளில், அண்டவெளியில் மூன்று முக்கிய கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றிக் கொள்கின்றன. கிரகங்களின் தளபதி என்று போற்றப்படும் செவ்வாய் பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்கும், மனோகாரகன் சந்திரன்

ஒனிந்தியா 11 Feb 2026 6:30 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 11 2026 புதன்கிழமை.

அஸ்வினி: தடையின்றி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பரணி: வியாபாரத்தை விரிவுபடுத்த பணப் பற்றாக்குறை உண்டாகும். கார்த்திகை: உத்தியோகத்தில் சம்பள உயர்வு உண்டாகும். ரோகினி: சொல்வாக்கின் வேகத்தால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். மிருகசீரிடம்: பிரபலமானவர்களின் ஆதரவால் காரியத்தைச் சாதிப்பீர்கள். திருவாதிரை: நிலையான முடிவு எடுக்க இயலாமல் தடுமாறுவீர்கள். புனர்பூசம்: எதிர்பார்த்த பண வரவு கேட்ட இடத்தில் கிடைக்கும் பூசம்:

ஒனிந்தியா 11 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 11 2026 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 28 ஆம் தேதி புதன்கிழமை 11.2.2026 திதி : இன்று காலை 11.16 வரை நவமி. பின்னர் தசமி. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 12.09 வரை அனுஷம். பின்னர் கேட்டை. நாமயோகம் : இன்று அதிகாலை 03.06 வரை துருவம். பின்னர் வியாகாதம். கரணம் :

ஒனிந்தியா 11 Feb 2026 12:05 am

Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு வேலையில் அடிக்கும் யோகம்.. வாய்ப்புகள் தேடி வரப்போகுது

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு (Rishabam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்

ஒனிந்தியா 10 Feb 2026 10:44 pm

Meenam: மீனம் ராசிக்கு டபுள் ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்.. மிஸ் பண்ணிடாதீங்க

Meenam Rasi Palan: பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 10 Feb 2026 2:21 pm

சக்தி விகடன்-ஸ்ரீவாராஹி மந்திரபீடம் இணைந்து நடத்தும் சனிப்பெயர்ச்சி ஹோமம்: நீங்களும் சங்கல்பிக்கலாம்

அன்னை வாராஹி ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பவள். இந்த அகிலத்தை ஆளும் அன்னை ராஜராஜேஸ்வரியில் அருகில், 'தண்டினி' என்கிற திருநாமத்தோடு அருள்பவள். லலிதாம்பிகையின் படைத்தளபதியாகத் திகழ்பவள். வராக (பன்றி) முகத்துடன் அருள்வதால் இவளுக்கு, 'வாராஹி' என்ற திருநாமம் ஏற்பட்டது. பரமேஸ்வரனைப்போன்று மூன்று திருக்கண்கள் உடைய இந்த அன்னை எட்டு திருக்கரங்களுடன் திகழ்பவள். சங்கு - சக்கரம், கட்கம்(கத்தி), உலக்கை, கலப்பை, உடுக்கை ஆகியன ஏந்தி அபய- வரத முத்திரைகளுடன் காட்சி தருபவள் இந்த அன்னை. சிவப்பு நிற ஆடை உடுத்தி, சந்திர கலை தரித்து நவரத்தினக் கிரீடம் அணிந்தவளாக சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் இந்த அன்னையை தரிசித்து வழிபட்டால் துன்பங்கள் அகலும்; பூமி தொடர்பான அனைத்துக் காரியங்களும் சுமுகமாக நடந்தேறும். இயற்கைச் சீற்றங்களில் இருந்து விடுபடலாம். எதிரிகளின் தொல்லைகள் தீரும். ஸ்ரீவாராஹி மந்திரபீடம் அன்னை வாராஹிக்கு ஆங்காங்கே கோயில்கள் அமைந்திருந்தாலும் அன்னைக்கென்றே பிரத்யேகமாக 64 வாராஹி ரூபங்களும் எழுந்தருளியிருக்கும் கோயிலாகத் திகழ்கிறது, 'சித்தாத்தூர் ஸ்ரீவாராஹி மந்திர பீடம்.' இந்த இடத்துக்கு வந்தாலே மனம் அமைதி அடைவதோடு நேர்மறை அதிர்வுகள் நிறைவதையும் உணரலாம். காரணம், இது சித்தர்கள் அன்னையை வழிபட்ட பூமி என்பதுதான். ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். சந்தான வாராஹி முற்காலத்தில் இந்தப் பகுதி, 'சித்தர்கள் வாழும் ஊர்' என்று அழைக்கப்பட்டுபின் சித்தாத்தூர் என்று மருவியது என்கிறார்கள். அதற்கேற்ப இந்தக் கோயிலில் மாண்டுக சித்தரின் ஜீவசமாதி அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் மூலவராக அன்னை ராஜராஜேஸ்வரி திகழ்கிறாள். அவளுக்கு எதிர்புறம் அகத்தியரின் சந்நிதி அமைந்திருக்கிறது. அகத்தியர் கண்கள் அன்னையை தரிசிக்கும் வகையில் நேராக அமைக்கும்படி உத்தரவுகிடைத்து அதற்கேற்ப இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஆலயத்துக்கு நுழையும் முன்பாக வெளியே பிரமாண்ட முருகர் திருமேனி அமைந்துள்ளது. அதை தரிசித்து உள் நுழைந்தால் திருக்குளம். இந்தத் திருக்குளத்தில் அபூர்வ அத்தி மர வாராஹியின் திருமேனி ஒன்று நீரில் அமிழ்ந்திருக்கிறது. மிகவும் உக்கிரமாகவும் அதேவேளையில் வேண்டும் வரம் அருள்பவளாகவும் திகழும் இந்த அன்னையை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வெளியே எழுந்தருளச் செய்து வழிபாடுகள் செய்து மீண்டும் திருக்குளத்தில் இட்டுவிடுகிறார்கள். இந்தப் பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டால் பாவங்கள் விலகும். பகைவர்கள் தொல்லை மறையும் என்பது நம்பிக்கை. பொதுவாக வாராஹி அன்னையை ஒரு திருக்கோலத்தில்தான் தரிசித்திருப்போம். ஆனால் அன்னை 64 திருக்கோலங்களை உடையவள். அப்படிப்பட்ட 64 வாராஹி ரூபங்களையும் இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 64 வாராஹிகளுக்கும் நடுவே பிரமாண்டமாக 15 அடி உயரத்தில் அமைந்திருக்கும் சந்தான வாராஹி காண்பவர்களை ஆகர்ஷிக்கும் சக்தி கொண்டவள். மடியில் ஒரு குழந்தையைக் கொண்டவளாகக் காட்சி தரும் இந்த அன்னையின் திருமேனி சாலக்கிராமம், வலம்புரி சங்கு மற்றும் நர்மதா நதியில் கிடைத்த பாண லிங்கம் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த அன்னையின் முன் நின்று வணங்கினாலே நம் மனதில் கவலைகள் எல்லாம் பறந்துபோகும். பிள்ளை வரம் தரும் இந்த அன்னையை வழிபட்டு இங்கு சொல்லும் பிரார்த்தனையை மேற்கொண்டால் விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மாண்டுக சித்தர் ஜீவசமாதி இப்படிப்பட்ட அற்புதமான வாராஹி ஆலயத்தில் வாக்கியப் பஞ்சாங்கப்படி நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட ஹோமம் ஒன்றை சக்தி விகடனும் வாராஹி மந்திரபீடமும் இணைந்து நடத்த இருக்கிறது. மார்ச் 6 - ம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீனராசிக்குள் 8.24 மணிக்குப் பெயர்ச்சி ஆக இருக்கிறது. இதை ஒட்டி அனைத்து ஆலயங்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அதேவேளையில் வாராஹி மந்திர பீடத்தில் விகடன் வாசகர்களின் நலனை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி விசேஷ பரிகார ஹோமம் மற்றும் ஆராதனைகளை நடைபெறும். கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சனிபகவான் ப்ரிதிக்காக விசேஷ ஆவர்த்திகளோடு நடைபெற இருக்கும் சிறப்பு ஹோமம் ஆகியவற்றோடு அன்னை வாராஹிக்கும் விசேஷ வழிபாடுகள் நடைபெற இருக்கின்றன. இந்த ஹோமத்தை வாராஹி குருஜியே முன்னின்று நடத்த இருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி கும்பம், மீனம், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்குக் கொஞ்சம் சிரம திசையைத் தரலாம். எனவே இந்த சிறப்பு ஹோமத்தில் சங்கல்பம் செய்துகொண்டால் நிச்சயம் சனியால் உண்டாகும் கஷ்டங்கள் குறையும்; நற்பலன்கள்கள் மேம்படும் என்கிறார்கள் பெரியோர்கள். மேலும் 12 ராசிக்காரர்களும் இதில் சங்கல்பம் செய்துகொண்டு அன்னையை மனதார வழிபட்டால் நிச்சயம் சுபபலன்கள் பெறுகும். வீட்டில் சுபகாரியத்தடைகள் நீங்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். சத்ருக்களின் சூழ்ச்சிகளை வெல்லும் வலிமை கிடைக்கும். இப்படி எண்ணிலடங்கா நன்மைகளைத் தரும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு வாசகர்கள் பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இடம் : ஸ்ரீ வாராஹி மந்திர பீடம், சித்தாத்தூர், வேடந்தாங்கல் நாள் : 6.3.2026 நேரம் : காலை 8.30 மணி வாசகர்கள் கவனத்துக்கு: இந்தப் பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + விபூதி + குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

விகடன் 10 Feb 2026 11:56 am

`பசில வந்த பிள்ளைக.!' - தாயே வண்டி மலைச்சியா, வண்டிமலையான்... நீங்கதான் துணை' | ஆங்காரிகளின் கதை 5

வண்டிமலையான் ஆங்காரிகளின் கதை 05 நாட்டார் தெய்வங்கள் யாவும் புராணங்கதைகள் வழியாக திடீரென உருவாகி வழிபடப்படுபவை அல்ல. சமூக மற்றும் சாதிய அதிகாரங்களுக்கு எதிராக சமரிட்டு பலியான மனிதர்களின் ரெத்த சாட்சியங்களாக நிற்க கூடியவை. இத்தெய்வங்கள் குறித்த கதைகள் வாய்மொழிக்கதைகளாக நிலைப்பெற்றாலும் சடங்குகளின் வழி அதன் உண்மைத் தன்மையை கண்டறிய முடிகிறது.  நாட்டார் சடங்குகள் நிகழ்காலத்தில் பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் சமூக அரசியலின் ஒரு அங்கமாகவே இன்றளவும் இச்சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.  தனக்கு நேர்ந்த அநீதிக்கெதிராக, அதிகார ஆணவத்திற்கெதிராக உக்கிரக் கோவத்தோடு நீதிகோரும் இத்தெய்வங்களை அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகிறது.  நாம் இதுவரைக்கும் சாதி, சமூகம் மீறிய காதலுக்காக ஆணவக்கொலை செய்யப்பட்டவர்கள், ஆண் என்ற அதிகாரத்தை மீறியதற்காக கொல்லப்பட்டவர்களின் கதைகளைத் தான் பார்த்தோம். ஆனால், இச்சமூகம் குற்றம் என்றும் சொல்லும் ஒரு செயலை செய்தற்காக கொல்லப்பட்ட தெய்வங்களின் கதை தான் இது.  பாளையங்கோட்டையில் உள்ள வண்டி மலைச்சியம்மன் “ தாயே வண்டிமலைச்சியா... வண்டி மலையான் எந்த வண்டியையும் மறிக்காம நல்லபடியா போய்ச் சேரட்டும். எங்களுக்கு ரெண்டுபேருந்தான் துணை நிக்கனும்”ன்னு தூரமா வண்டில போறவுங்க எல்லாரும் தாயையும், வண்டிமலையானையும் கையெடுத்து சாமிகும்பிட்டு தான் வண்டியவே எடுப்போம். கதையைச் சொல்லுதேன் கேளுங்க,  “ பஞ்ச காலத்துல தாயையும் தகப்பனையும் இழந்த பிள்ளைளுவ ஆம்பள ஒண்ணும் பொம்பள ஒண்ணும் சாப்பாட்டுக்கு வழியில்லாம  கால் நடையா நடந்து போயிருக்காவ. ஒரு வா தண்ணி வாயில படல,  நிக்கக்கூட தெம்பு இல்லாம அண்ணந்தங்கச்சி ரெண்டுபேரும் பசியில யாரோ வீட்டு தெரணையில போய் உட்காந்திருக்காவ. பக்கத்துல சட்டை நெய்த சத்தம் கேட்டுருக்கு. உடனே பாவப்பட்ட பிள்ளைளுவ ரெண்டும் உள்ள போய் அவங்க நூலுக்கு பசைப்போட காய்ச்சி வச்சிருந்திருக்கிற மண்சட்டிய எடுத்து மடக்கு மடக்குன்னு பசியில குடிச்சிருக்கு. அவங்க பாவு போட உட்காந்திட்டு கஞ்சியைத்தேடயில அது வெறுஞ்சட்டியா இருக்கு. நம்ம பாவு போட வச்சிருந்த கஞ்சியை இது ரெண்டும் குடிச்சிருச்சேங்கிற கோவத்துல அந்த சனம் முழுக்க பாவுக்கம்ப வச்சி இந்த ரெண்டு பச்சப்பிள்ளைகளையும் அடிச்சிருக்கு. நாங்குநேரியில் அமைந்திருக்கும் வண்டி மலைச்சியம்மன் சிலை ஏற்கெனவே பசில வந்த பிள்ளைக அவங்க அடிச்ச அடியிலயே கீழ உழுந்து அப்படியே செத்துப்போயிருக்கு.  அதுக்கப்பறம் அந்த சனம் நெஞ்ச துணிமணிகளை ஏத்தி கொண்டு போற வண்டிய இந்த பிள்ளைக ரெண்டும் வழிமறிச்சிருக்கு. நம்ம கொன்ன பாவத்துனால தான் இப்படி நடக்குன்னு புரிஞ்சிக்கிட்ட சனம், அண்ணன் தங்கச்சி ரெண்டுபேத்துக்கும் கோயில் எடுத்து கும்பிடுததா வாக்கு குடுத்திருக்காங்க. வெட்டவெளியில விழுந்து செத்ததுனால அப்படியே படித்திருக்க மானிக்கு தான் அந்த சாமி இருக்கும். அவங்கள போகவுடாம மாட்டுவண்டிய வண்டிமறிச்சனால அதுக்கு வண்டி மறிச்சின்னு பேருவந்திருக்கு. இவங்கள செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்தவங்க தான் கும்பிட்டுட்டு வர்றாங்க வழிபாட்டுச் சடங்குமுறையும் தோற்றக் கதைத் தொடர்பும்:  வண்டிமலைச்சியம்மன் கோவில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நகலாபுரம், செங்கோட்டை, நாகர்கோவில், எட்டயபுரம் என பல்வேறு பகுதியில் நெசவுத் தொழில் செய்யும் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் இருக்கிறது. இது நெசவாளர்களின் குல தெய்வமாகவும் வழிபடப்படுகிறது.  கள ஆய்வின் போது வள்ளியூரிலிருந்து நாங்குநேரி செல்லும் வழியில் ரோட்டோரத்தில் சுடலை மாடன் தெய்வத்தின் பீடத்தை காண முடிந்தது. அதன் அருகில் சென்று பார்த்த போது சிவப்பு சேலை அணிந்த ஒரு பெண் வெட்ட வெளியில் படுத்துக்கிடக்கும் காட்சியில் சிலை ஒன்று இருந்தது. அந்தச் சிலை குறித்து விசாரிக்கும் போது இது வண்டிமலைச்சியம்மன் என்றும்  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள காக்காச்சி மலையிலிருந்து பிடிமண் எடுத்து கட்டப்பட்டதாக அருகிலிருந்தவர்கள் கூறினர். அந்தச் சிலை குறித்த வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. பெரும்பாலான வண்டிமலைச்சியம்மனும் வண்டிமலையானும் ஒன்றாக படுத்திருக்கும் படியான சிலைகளே இருக்கிறது. ஆனால் செங்கோட்டை போன்ற பகுதியில் வண்டி மலைச்சியம்மன் தனியாக இருக்கிறது. இன்னும் சில இடங்களில் வண்டி மலைச்சியம்மனும், வண்டிமலையனும் நிமிர்ந்து இருக்கும் படியான சிலைகளை காண முடிகிறது.  இவ்வாறான கோவில்களில் இத்தெய்வங்களின் மாற்றுக் கதை வடிவங்களும் சொல்லப்படுகிறது. அவை மேட்டிமைத் தன்மையோடு செவ்வியல் கூறுகளோடு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  வண்டிமலைச்சியம்மன் வழிபாட்டில் எட்டையபபுரம் பெரிய தெருவில் உள்ள கோவிலில் உள்ள வண்டிமலைச்சியம்மன் கோயில் கொடையின் போது இரவில் படையலாகச் சோறு படைக்கப்படும். அப்போது பாவுக்கம்பினால் படையல் சோறில் அடித்துப் பாவுக்கம்பின் தடம் பதியும் வழக்கம் முன்னர் இருந்துள்ளதாக பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் தன்னுடைய ‘ ஆணவக்கொலைச் சாமிகளும் பெருமிதக்கொலை அம்மன்களும்’ புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.  இச்சடங்கியல் நிகழ்வு தோற்றக்கதையோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. மலைபோல் வண்டியை மறிச்சி நின்றதானால் வண்டிமலைச்சி என்றும், வண்டி மலைச்சி என்பதே திரிந்து வண்டி மறிச்சியாக மாறியதாகவும் கூறுகின்றனர்.  பண்பாட்டு ஆய்வாளர் தொ. ப ‘அது வண்டி மலைச்சி அல்ல; பண்டி மலைச்சி. பண்டி என்றால், பெருத்த வயிறு. அந்த அம்மன் மலைத்துப் படுத்திருப்பதால் மலைச்சி. அந்த அம்மனின் பெயர் ‘பண்டி மலைச்சி’  என்று சொல்கிறார். பாளையங்கோட்டையில் உள்ள வண்டி மலைச்சியம்மன் கோவில் பசி பொறுக்காமல் நெசவாளர்கள் வைத்திருந்த பாவுக்கஞ்சியை எடுத்து குடித்ததற்காக அவர்கள் அடிக்கிறார்கள். பசியோடு இருந்ததனால் அவர்கள் அடியை பொறுக்க முடியாமல் வண்டி மலைச்சியும், வண்டி மலையனும் இறந்து போகிறார்கள். ஆத்திரத்தால் நிகழப்பட்ட சம்பவத்தால் குற்றவுணர்வு மற்றும் பயத்தின் காரணமாக இத்தெய்வத்தை நெசவாளர்களே வழிபடுவதை அறிய முடிகிறது. இத்தெய்வம் குறித்த மாற்றுத் தோற்றக்கதைகள் ஆகம விதிகளோடு பொருத்தி செவ்வியல் தெய்வங்களோடு இணைக்கப்பட்டு  உண்மைத் தன்மையை மாற்றி பரப்பபடுகிறது. ஆகையால் இத்தெய்வத்தின் வழிபாட்டில் பல்வேறு மாறுபாடுகள் காணப்படுகிறது. (ஆங்காரிகள் வருவார்கள்)

விகடன் 10 Feb 2026 11:01 am

கோவை மாவட்டம், ஊதிமலை உத்தண்ட வேலாயுத சுவாமி: தங்கம் வாங்கும் யோகம் அருளும் சித்தர் கோயில்!

தமிழக மலைத்தலங்கள் சித்தர்கள் வாழும் பூமி. பெரும்பாலும் அதில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பார். சித்தர்கள் அந்த முருகனை வழிபடுவதோடு மக்களுக்கும் தங்களால் ஆன மருத்துவச் சிகிச்சைகளை வழங்கிவந்தனர். அப்படி சித்தர் ஒருவர் அபூர்வ மூலிகை கொண்டு சர்வரோக நிவாரணி தயாரித்து வழங்கிய மலைதான் ஊதி மலை. ஈரோடு அல்லது திருப்பூரிலிருந்து காங்கேயம் வந்தால், அங்கிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது `பொன்னூதி’ எனும் ஊதி மலை. இங்கே மலைக்குக் கீழே பழைமையான சிவாலயம் அமைந்திருக்க, மலைக்கு மேலே உத்தண்ட வேலாயுத ஸ்வாமியாக முருகன் கோயில் கொண்டிருக்கிறார். கொங்கணவர் சித்தர் சந்நிதி அந்தக் காலத்தில் காங்கேயத்துக்கு அருகில் இருந்த சுந்தரபுரி எனும் தேசத்தின் இளவரசன் சிவபாலன். ஒருமுறை இவன் ஊதி மலைக் காட்டுப்பகுதியில் வேட்டையை முடித்துக்கொண்டு, உச்சியில் இருந்த சுனையில் தன் உடைவாளைக் கழுவினான். யதேச்சையாக அந்த நீரானது, அருகில் கொல்லப்பட்டுக் கிடந்த விலங்குகளின் மீது பட, அவை உயிர்ப்பெற்று எழுந்தன. `சிவோ ஹம்; வாழ்க சித்தன்; வாழ்க வாழ்கவே’ என்று வணங்கிக் கூவியபடி, காட்டுக்குள் ஓடி மறைந்தன. சிவபாலன் வியந்தான். யார் அந்தச் சித்தன் என்று தேட முயன்றான். விளைவு போகரின் தரிசனம் கிடைத்தது. `நீயே அந்தச் சித்தன்; உனக்கான பெயரை ஒரு பெண்மணி விரைவில் கூறுவார்’ என்று உரைத்தார் போகர். சிவபாலன் அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார். அதன் மூலம் அவருக்குப் பல ஸித்திகள் கைவரப் பெற்றன. விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்: தேன் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும்! அதோமட்டுமல்லாமல் சொர்ணாகர்ஷண பைரவரின் அருளால், தொட்டது யாவும் தங்கமாகும் எனும் வரமும் கிடைத்தது. இப்படிக் கிடைத்த வரம் கொண்டு ஏழைகளுக்குப் பொன்னைக் கொடுத்து மகிழ்ந்தான் சிவபாலன். இதனால் அவருக்கு சிறு கர்வம் உண்டானது. ஆனால் அதையும் ஈசன் போக்கினார். அவருக்கு கொங்கணர் என்கிற பெயரும் உண்டானது. தங்கம் வரவழைக்கும் மந்திரத்தை உபயோகிப்பதில்லை என்று முடிவெடுத்தார். மீண்டும் ஊதி மலை சென்று தவமியற்றினார். 800 ஆண்டுகள் கழிந்தன. பெரும் பஞ்சம் தோன்ற மக்கள் தவித்தார்கள். வேறு வழியின்றி இந்த முறை மூலிகைகளைக் கொண்டு ரசவாதம் செய்து, சாதாரண உலோகங்களைத் தங்கம் ஆக்கி அளித்தார். போகர் தோன்றி தடுத்தும் கொங்கணவர் கேட்கவில்லை. அவர், மண் குழாய்களைக் கொண்டு பொன்னை ஊதி ஊதி உருவாக்கியதால், அந்த மலை பொன்னூதி மலையானது. ஊதி மலை சொர்ணாகர்ஷண பைரவர் சந்நிதி மக்கள் அதிகம் பொன் வேண்டும் என்று அவரைத் தேடி வர கொங்கணர் அந்த இடத்தை விட்டு அகன்றார். ஒரு கட்டத்தில் `போதும் இந்தப் பிறவி’ என்று எண்ணிய கொங்கணவர், மீண்டும் ஊதி மலைக்குச் சென்று தவமியற்றினார். போகர் பழநியில் பிரஷ்டை செய்த நவபாஷாணச் சிலையைப்போல தானும் மூலிகைகளால் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையை மலைக்கு இடையே நிறுவி வழிபட்டார். பிறகு, ஈசனின் கட்டளைப்படி திருமலை திருப்பதிக்குச் சென்று சமாதிநிலை கொண்டார் கொங்கணவர். இன்றைக்கும் ஊதி மலையில் தாம் தவமியற்றிய சந்திரகாந்தக் கல்லில் கொங்கணவர் சுயம்புவாகக் காட்சியளிப்பதைத் தரிசிக்கலாம். அவர் அருள்பாலிக்கும் கொங்கணவ குகை அபூர்வமானது. உள்ளே நுழைந்தால் 50 பேர் அமர்ந்து தியானிக்கும் அளவு இடம் உள்ளது. இந்தக் குகையிலிருந்து பழநி, அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அப்பரமேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை இருந்ததாம். கோவை மாவட்டம் மருதமலை மருதாசலமூர்த்தி கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் பாம்பாட்டிச் சித்தர் விபூதி கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனது என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டன. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலை காட்டுக்குள் வீசப்பட்டதாம். முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்ப்பட்டுப் போக, பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் மீண்டும் அதே சிலை பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் விநாயகர் கோயிலிலிருந்து படிகள் தொடங்குகின்றன. வழியில் இடும்பன் சந்நிதி தாண்டி உத்தண்ட ஸ்வாமி கோயில் விஸ்தாரமாகக் காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலுக்கு இடப்புறமாக மலைப்பாதையில் 3 கி.மீ. பயணித்தால் கொங்கணவர் கோயிலை அடையலாம். மலைப் பாதை இடையே தம்பிரான் சமாதியைக் காணலாம். உச்சியில் கொங்கணவர் கோயிலில், கருவறையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் சித்தர்பெருமான். கோயிலிருந்து 200 மீட்டர் தொலைவில் கொங்கணவர் குகை உள்ளது. கோயிலுக்கு முன்னே இறந்துபோன விலங்குகளை எழுப்பிய `உயிர்ச்சுனை’ உள்ளது. ஊதி மலை சித்தர் வழிபட்ட பாறை சித்திரை மாத உத்திராட நட்சத்திரத்தில் கொங்கணவரின் திரு அவதார விழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை ஏகாதசி ஆகிய நாள்கள் சித்தரைத் தரிசிக்க விசேஷமானவை. பௌர்ணமி நாள்களில் 108 மூலிகைகளை இடித்துக் காய்ச்சி, வடித்து ஒரு மூலிகை நீர் தயாரிக்கிறார்கள். அதைக் கொங்கணவருக்கு அபிஷேகித்து, பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். இனிப்பைத் தவிர ஐந்து வகை ருசியுடன் திகழும் இந்தத் தீர்த்தம் அற்புத மருந்து; இது, முன்பு 246 மூலிகைகள் கொண்டு தயாரானது, தற்போது அந்த அளவுக்கு மூலிகைகள் கிடைப்ப தில்லை என்கிறார்கள் பக்தர்கள். இந்தத் தீர்த்தத்தைக் கொஞ்சம் பருகினாலும் ஒட்டுமொத்தகளைப்பும் நீங்கிவிடுமாம். பக்தர்களுக்குப் பசியாற பச்சைப்பயிறு சாதம் வழங்கப்படுகிறது. இந்த மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகனை, அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். தைப்பூச நன்னாளில் இந்த மலைக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிப்பது விசேஷம். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை ஊதிமலை சென்று முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். முருகன் அருளும் கொங்கணவரின் குருவருளும் கைகூடி, மலை போல் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்!

விகடன் 10 Feb 2026 7:46 am

இந்த வார ராசிபலன் பிப்ரவரி 10 முதல் 15 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

விகடன் 10 Feb 2026 6:00 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 10 2026 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: வாக்குவாதம் செய்யாமல் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பரணி: சுணங்கிக் கிடந்த வேலைகள் வேகமாக நடக்கும். கார்த்திகை: வேலை பார்ப்பவர்களுக்கு வீண் அலைச்சல் விலகும். ரோகினி: உறவினர்களுடன் நிதானமாகப் பேசுவது நல்லது. மிருகசீரிடம்: புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். திருவாதிரை: வியாபாரத்தில் சிக்கல்கள் தீர விரைந்து செயல்படுவீர்கள். புனர்பூசம்: ஒன்றாக வேலை பார்ப்பவரிடம் வாக்குவாதம்

ஒனிந்தியா 10 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 10 2026 செவ்வாய்க்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.2.2026 திதி : இன்று காலை 08.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி. நட்சத்திரம் : இன்று காலை 09.35 வரை விசாகம். பின்னர் அனுஷம் . நாமயோகம் : இன்று அதிகாலை 02.37 வரை விருத்தி. பின்னர் துருவம். கரணம்

ஒனிந்தியா 10 Feb 2026 12:05 am

Kumbam: கும்ப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் யோகம்

Kumbam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 9 Feb 2026 8:54 pm

Dhanusu: தனுசு ராசிக்கு முயற்சிகளில் வெற்றி.. பணவரவு அற்புதமாக இருக்கும்

Dhanusu Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 9 Feb 2026 4:43 pm

வார ராசி பலன்: துலாம் ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்.. என்ஜாய்

Thulam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 9 Feb 2026 3:10 pm

வார ராசி பலன்: குருவின் அருளால் விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வீடு, நிலம் வாங்கும் யோகம்

Viruchigam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 9 Feb 2026 3:01 pm

வார ராசி பலன்: துலாம் ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்.. என்ஜாய்

Thulam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 9 Feb 2026 2:25 pm

வார ராசி பலன்: கன்னி ராசிக்கு லாபம் கொட்டும்.. எல்லாமே இனி ஜெயம் தான்

Kanni Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 9 Feb 2026 10:11 am

திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்!

பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் வராக அவதாரம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. வராக அவதாரம் எடுத்து பூமியை மறைந்த இரண்யாட்சனை அழித்து பூமியைக் காத்த அந்த அவதார ரூபத்தில் பெருமாளை வழிபடுவது மிகவும் விசேஷம். குறிப்பாக நிலப்பிரச்னை உள்ளவர்கள், சொந்த வீடு வாங்க வேண்டுபவர்கள், செல்வமும் செழிப்பும் நிறைந்த வாழ்வை விரும்புபவர்கள் வராகப் பெருமானை வழிபட்டால் வேண்டும் அனைத்தையும் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படி வேண்டுபவர்களுக்கு அருளும் வராக சுவாமி கோயில் கொண்டிருக்கும் தலமாகத் திகழ்கிறது மேல்பொதட்டூர்பேட்டை. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் வழியில் உள்ளது மேல்பொதட்டூர். இங்கே, அருள்மிகு பூமிதேவி சமேதராக திருக்கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு தரணி வராக சுவாமி. இரண்டாம் நரசிம்மராயருக்கு வேட்டையில் பிரியம் அதிகம். ஒருமுறை வேட்டைக்குச் சென்றிருந்தார். வேட்டை மும்முரத்தில், மாலை மயங்கி இருள் படரத் தொடங்கியதை அரசர் கவனிக்கவில்லை. எனவே, அன்று இரவு காட்டிலேயே கூடாரம் அமைத்துக்கொண்டு மன்னரும் பரிவாரங்களும் தங்கினர். இயற்கை எழில் சூழ்ந்த காட்டுப் பகுதியில், நறுமண மலர்களின் வாசத்தில் தோய்ந்து வந்த தென்றலின் சுகமான ஸ்பரிசத்தில் லயித்திருந்தார் மன்னர். அப்போது அவரின் பார்வையில் ஒரு காட்சி தென்பட்டது. மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் வேட்டை நாய் ஒன்று ஒரு முயலைத் துரத்தியது. உயிர்ப்பிழைத்தால் போதும் என்று முயல் அதிவேகமாகப் பாய்ந்தோட, வேட்டை நாயும் வேகமாக முயலைத் துரத்திச் சென்றது. அதைப் பார்த்த மன்னரின் மனதில், என்னதான் நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள தனது குதிரையில் ஏறி வேகமாகப் பின்தொடர்ந்தார். வேட்டைநாயின் வேகத்துக்கு முயலால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஓர் இடத்தில் களைப்புற்று நின்றுவிட்டது. பின்னர் அது என்ன நினைத்ததோ தெரியவில்லை... அருகிலிருந்த புற்றினை மூன்று முறை வலம் வந்தது. பிறகு தனது முழு வலிமையையும் ஒன்று திரட்டி, வேட்டை நாயின் மீது பாய்ந்தது. முயலின் திடீர் ஆவேசத்தைக் கண்டு மிரண்ட வேட்டை நாய், வந்த வழியே ஓடிச் சென்றுவிட்டது. இந்தக் காட்சியைக் கண்ட மன்னருக்கு வியப்பு தாளவில்லை. முயலின் திடீர் ஆவேசத்துக்குக் காரணம் புரியாமல் திகைத்துப்போனவராகத் தன் குடிலுக்குத் திரும்பினார். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்! அன்றிரவு அயர்ந்து உறங்கிய மன்னர், அர்த்த ஜாமத்தில் அதியற்புத கனவு ஒன்றைக் கண்டார். கனவில் மன்னருக்கு வராக மூர்த்தியாகக் காட்சியளித்த பகவான், 'முயல் வலம் வந்த புற்றினை அகற்றி, என்னுடைய திவ்யதரிசனம் காண்பாய்’ என்று கூறினார். தன் இஷ்ட தெய்வமான வராகப்பெருமானின் கருணைத்திறம் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த மன்னர், பொழுது புலர்ந்ததும் காவலர்களின் உதவியுடன் புற்று மண்ணைப் பயபக்தியுடன் அகற்றினார். புற்றைத் தோண்டியதும் அருள்மிகு பூமிதேவியை வாஞ்சையுடன் அணைத்திருக்கும் கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக அர்ச்சா ரூபத்தில் திருக்காட்சி தந்தார் வராகப் பெருமான். அர்ச்சாரூபமாகப் பெருமாள் வெளிப்பட்டதை எண்ணிச் சிலிர்த்தார்கள் மன்னனும் மக்களும். வராகப் பெருமானுக்கு, மனமுவந்து மிகப் பிரமாண்டமாக ஒரு திருக்கோயிலை நிர்மாணித்தார் மன்னர். மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருப்பூர் மாவட்டம், கொடுவாய் ஸ்ரீ விண்ணளந்த பெருமாள்: நாக தோஷம் தீர்க்கும் கருடர்; வர ஹஸ்த அனுமன்! இரண்யாட்சனை ஸ்வாமி வதம் செய்த பின்னும் உக்கிரம் குறையாமல் வராகர் இருப்பதைக் கண்ட தேவர்களும் மகரிஷிகளும் சாந்த மூர்த்தியாய் சேவை சாதிக்கவேண்டும் என்று பிரார்த்தித்து, பாரிஜாத மலர்களால் அவரை அர்ச்சித்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கிய வராகப் பெருமான், சாந்த சொரூபனாக, செந்தூரப் பொட்டும், கஸ்தூரித் திலகமும் தரித்து, பூமிதேவித் தாயாரை ஆலிங்கனம் செய்த கோலத்தில், சர்வாலங்கார, சர்வாபரண பூஷிதனாகக் காட்சி அருளினார். அன்று தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் அருளிய அதே திருக்கோலத்தில்தான் அர்ச்சா மூர்த்தியாக மேல்பொதட்டூர்பேட்டையிலும் அருளாட்சி செலுத்தி வருகிறார் வராகமூர்த்தி. இந்தப் பெருமாளைத் தரிசித்தாலே முந்தைய பிறவிகளில் செய்த தீவினைகள் யாவும் விலகி ஓடும் என்கிறார்கள் பக்தர்கள். தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் இந்தத் தலத்துக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வராக மூர்த்தியை வழிபட்டு வந்தால், பூமி தொடர்புடைய பிரச்னைகள் நீங்கும், சனி தசை மற்றும் சனி தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும், திருமணத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் பௌர்ணமியன்று சத்யநாராயண பூஜையும் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் அவ்வப்போது ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம், திருக்கல்யாண உற்சவம் ஆகியனவும் நடைபெறுகின்றன. மேலும், குடும்பத்துடன் சென்று அருள்மிகு தரணி வராகரைத் தரிசித்து வழிபட்டு வந்தால், இல்லம் செழிக்கும்; உங்கள் சந்ததியின் எதிர்காலம் சிறக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். கோவை மாவட்டம் மருதமலை மருதாசலமூர்த்தி கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் பாம்பாட்டிச் சித்தர் விபூதி

விகடன் 9 Feb 2026 8:14 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 9 2026 திங்கட்கிழமை.

அஸ்வினி: வியாபாரத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். பரணி: குடும்பத்தில் தேவையில்லாத குழப்பத்தை எதிர்நோக்குவீர்கள். கார்த்திகை: தொழிலில் அதிக முதலீடு செய்வீர்கள். ரோகினி: நிலம் சம்பந்தமாக நீதிமன்றம் செல்வீர்கள். மிருகசீரிடம்: வியாபாரத்திற்குத் தேவையான பணம் புரட்டுவீர்கள். திருவாதிரை: நெருங்கிய உறவினருக்கு உத்தரவாதம் கொடுப்பீர்கள். புனர்பூசம்: கார் வாங்க முன் பணம் செலுத்துவீர்கள். பூசம்: வெளிநாட்டிலிருந்து பண உதவி

ஒனிந்தியா 9 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 9 - 2026 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை 9.2.2026 திதி : இன்று காலை 07.05 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. நட்சத்திரம் : இன்று காலை 07.07 வரை சுவாதி. பின்னர் விசாகம் . நாமயோகம் : இன்று அதிகாலை 02.14 வரை கண்டம். பின்னர் விருத்தி. கரணம்

ஒனிந்தியா 9 Feb 2026 12:05 am

வார ராசி பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்

Kadagam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 8 Feb 2026 7:02 pm

வார ராசி பலன்: சிம்ம ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்க

Simmam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 8 Feb 2026 5:02 pm

வார ராசி பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்

Kadagam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 8 Feb 2026 4:56 pm

மிதுன ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 4 கிரகங்கள்.. இந்த விஷயங்களை மட்டும் பண்ணுங்க

Mithunam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 8 Feb 2026 9:10 am

Kumbam: கும்ப ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. எந்த விஷயங்களில் எல்லாம் கவனம் தேவை.. முழு விவரம்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 8 Feb 2026 8:27 am

Meenam: மீனம் ராசிக்கு புரோமோஷன் கன்ஃபார்ம்.. வாழ்க்கையே மாறப்போகுது

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறந்துவுள்ளது. மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 8 Feb 2026 8:26 am

Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் நடக்கும் மேஜிக்.. அபரிமிதமான லாபம்

Mesham Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 8 Feb 2026 8:24 am

Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. திடீர் அதிர்ஷ்டம் உண்டு

Rishabam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 8 Feb 2026 8:20 am

Kumbam: கும்ப ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. எந்த விஷயங்களில் எல்லாம் கவனம் தேவை.. முழு விவரம்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 8 Feb 2026 7:00 am

Magaram: மகர ராசிக்கு வாயில் தான் கண்டமே.. சிக்கலில் சிக்கும் நேரம்.. கவனம்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 8 Feb 2026 6:51 am

பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 9 முதல் 15 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 8 Feb 2026 6:00 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 8 - 2026 ஞாயிற்றுக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.2.2026 திதி : இன்று அதிகாலை 05.13 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.53 வரை சித்திரை. பின்னர் சுவாதி . நாமயோகம் : இன்று அதிகாலை 02.04 வரை சூலம். பின்னர் கண்டம். கரணம்

ஒனிந்தியா 8 Feb 2026 12:05 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 8 - 2026 ஞாயிற்றுக்கிழமை.

அஸ்வினி: கோயில் உழவாரப் பணியில் நாட்டம் கொள்வீர்கள். பரணி: கலைத் துறையில் வெற்றி காண்பீர்கள். கார்த்திகை: அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ரோகினி: பெரியோர்களின் நட்பில் மனம் தெளிவடையும். மிருகசீரிடம்: இடம் விற்பனையில் பணம் கிடைக்கும். திருவாதிரை: ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். புனர்பூசம்: மருத்துவச் செலவுகள் வந்து சிரமத்தை ஏற்படுத்தும். பூசம்: திடீர் திருப்பங்கள் உண்டாகி

ஒனிந்தியா 8 Feb 2026 12:05 am

Magaram: மகர ராசிக்கு வாயில் தான் கண்டமே.. சிக்கலில் சிக்கும் நேரம்.. கவனம்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 7 Feb 2026 6:36 pm

Dhanusu: தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நிலம், வீடு வாங்கும் யோகம்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 7 Feb 2026 6:00 pm

Magaram: மகர ராசிக்கு வாயில் தான் கண்டமே.. சிக்கலில் சிக்கும் நேரம்.. கவனம்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 7 Feb 2026 5:52 pm

Thulam Rasi Palan: அடித்தாடும் துலாம் ராசி.. எல்லாமே ஜெயம்.. அதிர்ஷ்ட மழை கொட்டும்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 7 Feb 2026 2:03 pm

Kanni Rasi Palan: பணக்கார யோகம் பெறும் கன்னி ராசி.. நினைத்து பார்க்காத அதிர்ஷ்டம் கொட்டும்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 7 Feb 2026 12:59 pm

Simmam Rasi Palan: சிம்ம ராசியினரே புதிய உறவுகளிடம் ரொம்ப கவனம்.. நம்பி ஏமாறாதீங்க

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 7 Feb 2026 12:15 pm

கோவை மாவட்டம் மருதமலை மருதாசலமூர்த்தி கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் பாம்பாட்டிச் சித்தர் விபூதி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையையும் மகிமையையும் உடைய தலம் மருதமலை. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள். சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை கொங்கு வேட்டுவ மன்னர்கள் பராமரித்து வந்தனர். மருத மரங்கள் அடர்ந்த மலை என்பதால் இதற்கு மருதமலை என்று சுவாமிக்கு மருதாசல மூர்த்தி என்று திருநாமம் உண்டானது. இந்தத் தலத்தின் தலபுராணம் சித்தர்களோடு தொடர்புடையது. மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோயில் நாகரத்தினப் பாம்பைத் தேடி மருதமலைக்கு வந்த பாம்பு வைத்தியர் ஒருவருக்கு சட்டை முனிவர் காட்சி கொடுத்தார். பூமியில் ஊர்ந்து திரியும் பாம்புகளைக் கண்டுபிடிப்பதை விட உடலுக்குள் இருக்கும் பாம்பைக் கண்டறிந்து அதை மேலெழுப்புவதே பிறவிப்பயன் என்று உபதேசித்தார். இதன் பொருள், உடலில் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சஹஸ்ராரம் எனப்படும் உச்சத்தைத் தொடுவதே முக்தி அடைய வழி என்பதையே மறைபொருளோடு உபதேசம் செய்தார். இதைப் புரிந்துகொண்ட வைத்தியர் அன்றிலிருந்து உயிர்களைத் துன்புறுத்தாமல் முருகனை வணங்கித் தியானம் செய்தார். அவரின் கடும் தவத்தைக் கண்ட முருகப்பெருமான் அவருக்கு வள்ளி தேவசேனாவுடன் காட்சி கொடுத்து ஞானோப தேசமும் செய்தார். அன்று முதல் அந்த வைத்தியர் பாம்பாட்டிச் சித்தராகப் புகழ் பெற்றார். அப்படி பாம்பாட்டிச் சித்தருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த தலமே தற்போது இருக்கும் மருதமலைத் திருக்கோயில். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! மலையின் அடிவாரத்தில், 'தான்தோன்றி விநாயகர் சந்நிதி' அமைந்துள்ளது. இந்த விநாயகர் சுயம்பு. யானை முகம் மட்டுமே கொண்ட இவருக்கு உடல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், மலைமேல் அமர்ந்தருளும் முருகனை நோக்கித் தும்பிக்கையைத் தூக்கியபடி காட்சி தருவது தனிச் சிறப்பு. முருகனுக்கு உகந்த நாளான கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாள்களில் தான்தோன்றி விநாயகருக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவதால், இவர் ‘தம்பிக்கு உகந்த விநாயகர்’ என்ற தனிச்சிறப்பையும் பெற்றுள்ளார். தொடர்ந்து பயணித்தால் இடும்பன் சந்நிதியை அடையலாம். அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் பஞ்ச விருட்ச விநாயகரும் அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகிலேயே கையில் வேலுடன் மயில் மீது அமர்ந்தபடி காட்சித் தருகிறார் முருகன். நடைப் பயணமாக மலையேறிச் செல்லும் பக்தர்கள் பஞ்ச விருட்ச விநாயகரைத் தாண்டிதான் மருதாச்சலமூர்த்தி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோயில் பஞ்சவிருட்ச விநாயகர் இங்கு ஆதிமூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய மூவரும் சுயம்புவாகத் தோன்றியவர்கள் என்கிறார்கள். இந்த ஆதிமூர்த்திக்கு பூஜைகள் செய்த பிறகே கருவறையில் இருக்கும் பிரதான முருகனுக்குப் பூஜைகள் நடக்கின்றன. சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் முருகன் இருந்தால் அதை சோமாஸ்கந்த தலம் என்பார்கள். இங்கும் வெளிமண்டபத்தில் வலதுபுறத்தில் பட்டீஸ்வரர் சந்நிதியும், இடதுபுறத்தில் மரகதாம்பிகை சந்நிதியும் அமைந்திருக்க, நடுவில் உள்ள கருவறையில் வலது கையில் தண்டத்தை வைத்துக்கொண்டு இடுப்பில் இடது கையை வைத்தபடி காட்சி தருகிறார் தண்டாயுதபாணி. பழநி முருகனைப் போலவே காட்சியளிக்கும் இந்த முருகனை, முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர்தான் வடித்தார் என்று சொல்லப்படுகிறது. அர்த்தஜாம பூஜையில் மட்டுமே மூலவரை தண்டாயுதபாணியாகத் தரிசிக்க முடியும். கருவறைக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். தனிச்சந்நிதியில் தோஷம் தீர்க்கும் சனிபகவான்! விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் மலையில் உள்ள ஒரு குகைக்குள் சந்நிதி கொண்டிருக்கும் பாம்பாட்டிச் சித்தர். வலது கையில் மகுடியோடும் இடது கையில் தடியோடும் காட்சி தருகிறார். அவருக்கு அருகிலேயே சிவலிங்கம் இருக்கிறது. இந்தச் சந்நிதியில் உள்ள ஒரு பாறையில் நாகத்தின் வடிவம் தெரிகிறது. பாறையில் தெரியும் அந்த வடிவத்திலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி தந்தார் என்று நம்பப்படுகிறது. அதனால், இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். முருகனுக்குப் பூஜைகள் முடிந்ததும் பாம்பாட்டிச் சித்தருக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு பாம்பாட்டிச் சித்தர் இன்றும் முருகனுக்குப் பூஜை செய்து கொண்டிருக்கிறார் என்பது ஐதிகம். சித்தர் சந்நிதியில் இரவு நேரத்தில் பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்துவிட்டால், மறுநாள் காலையில் பால் குறைந்திருக்குமாம். பாம்பாட்டிச் சித்தர் இந்தப் பாலைக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் நடத்துவதாக நம்பப்படுகிறது. மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோயில் மனநிம்மதியைத் தரும் மகத்தான தலம் மருதமலை. எந்தவிதமான மனச் சிக்கலாக இருந்தாலும் மருதமலை முருகப்பெருமானைத் தரிசித்தால், அது உடனே பறந்துபோகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமண தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறும், புத்திர தோஷம் உள்ளவர்கள் தொட்டிலும் கட்டி வேண்டிக்கொண்டால், தோஷங்கள் விலகி நல்லது நடக்குமாம். நாக தோஷம் உள்ளவர்களும், விஷக்கடிக்கு ஆளானவர்களும் இங்கு வந்து பாம்பாட்டிச் சித்தரின் அலங்காரத்துக்குப் பயன்படுத்திய விபூதியை நீரில் கலக்கிப் பருகினால், பிரச்னைகள் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறிவிட்டால், பாம்பாட்டிச் சித்தரின் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர் சூட்டி, இனிப்பான உணவு வகைகளை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். மருதமலை முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத்தன்று பால் அபிஷேகமும், தைப்பூசத்தையொட்டி பத்து நாள்கள் பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெறும். பூசத்தன்று காலையில் திருக்கல்யாணமும், மாலையில் தேர்த்திருவிழாவும் நடைபெறும். விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்: தேன் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும்!

விகடன் 7 Feb 2026 8:59 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 7 - 2026 சனிக்கிழமை.

அஸ்வினி: உபரி வருமானம் அதிகரித்து உற்சாகமடைவீர்கள். பரணி: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் பெறுவீர்கள். கார்த்திகை: புதிதாக சேர்ந்த நண்பர்களால் சில சிக்கல்கள் வரலாம். ரோகிணி: விரும்பிய பெண்ணிடம் தைரியமாக காதலைச் சொல்வீர்கள். மிருகசீரிடம்: புதிய லாபத்திற்கான வழிவகைகளைக் காண்பீர்கள். திருவாதிரை: சகோதரியின் கல்யாணப் பேச்சு சந்தோசமாக நிறைவடையும். புனர்பூசம்: எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளைக்

ஒனிந்தியா 7 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 7 - 2026 சனிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 24 ஆம் தேதி சனிக்கிழமை 7.2.2026 திதி : இன்று அதிகாலை 04.03 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.03 வரை அஸ்தம். பின்னர் சித்திரை . நாமயோகம் : இன்று அதிகாலை 02.12 வரை திருதி. பின்னர் சூலம். கரணம்

ஒனிந்தியா 7 Feb 2026 12:05 am

மாசி மாத பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனமா இருங்க

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 6 Feb 2026 6:55 pm

மாசி மாத பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனமா இருங்க

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 6 Feb 2026 6:11 pm

Mithunam Rasi Palan: மிதுன ராசியை வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. ரொம்ப கவனம்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 6 Feb 2026 5:32 pm

Mithunam Rasi Palan: மிதுன ராசியை வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. ரொம்ப கவனம்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 6 Feb 2026 5:23 pm

மாசி மாத பலன்: ரிஷப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கடன் எல்லாம் தீரும்.. நல்ல காலம் பிறந்தாச்சு

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 6 Feb 2026 5:06 pm

மாசி மாத பலன்: அதிர்ஷ்டத்தை அள்ளும் மேஷம் ராசி.. வீடு, நிலம், பணம் பெறும் யோகம்

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்

ஒனிந்தியா 6 Feb 2026 3:56 pm