SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

December Matha Palan: புது வீடு, புது காரு.. கலக்கப்போகும் விருச்சிக ராசி.. தொட்டதெல்லாம் யோகம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 6:17 pm

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்! 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் வாழ்க்கையில் விரக்தி, பிரச்னைகள், மன உளைச்சல், தனிமை, தீய சக்திகளின் பாதிப்புகள் மற்றும் பெரும் தடைகளை எதிர்கொள்பவர்கள் கட்டாயம் மகாருத்ர ஹோமத்தைச் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திர நூல்கள். மகாருத்ர ஹோமம் என்பது ருத்ர மந்திரத்தை இடையறாது உச்சரித்து ஈசனின் அருளால் வாழ்க்கையின் எல்லா துன்பங்களையும் அகற்றி, நல்வாழ்வைப் பெறும் ஒரு மகத்தான வழிபாட்டு முறையாகும். இது ஆதியில் சப்த ரிஷிகளால் செய்யப்பட்டு பிறகு வேத காலத்தில் சிறப்படைந்த தொன்மையான மற்றும் முதன்மையான வேள்வி எனப்படுகிறது. ஹோமங்களில் சிறப்பான இந்த ஸ்ரீருத்ர ஹோமம் செய்தவர் வாழ்வில் எந்த கவலையும் அச்சமும் இருக்கவே இருக்காது என்பது நம்பிக்கை. அதிலும் இந்த ருத்ர ஹோமத்தை மார்கழி திருவாதிரை நன்னாளில் செய்வது இரட்டிப்பு மடங்கு பலன்களைத் தரும் என்பதும் ஐதீகம். எனவே வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆண்டாகவும் மாற்ற சிறப்பான இந்த மகாருத்ர பரிகார ஹோமத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கிறோம். சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயத்தில் நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் பெரும் திரளான பக்தர்கள் கூட்டம் கலந்து கொண்டு பெரும் பயனை அடைந்தது. அவ்வாறே மீண்டும் அங்கு நடத்த வாசகர்களின் விருப்பத்தோடு நடத்தவுள்ளோம். மகாருத்ர ஹோமம் என்பது யஜுர் வேதத்தின் சாரமான மையப்பகுதியான ஸ்ரீருத்ர மந்திரங்களை 1331 முறை திரும்பத் திரும்பச் சொல்லி அந்த மகேசனை மகிழ்வித்து செய்யப்படுவது. ஆயுளில் ஒருமுறையாவது இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது அவசியம் என்கிறது சாஸ்திரம். செய்வதற்கு கடினமானதும் பெரும் பொருட்செலவை உண்டாக்குவதுமான இந்த ஹோமத்தை உங்கள் குடும்ப நன்மைக்காக சக்தி விகடனும் கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயமும் இணைந்து 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடத்தவுள்ளது. மகாருத்ர ஹோமம் கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள், தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்கு அனைத்து மக்களும் எந்த பேதமின்றி தாமே ஈசனை பூஜிக்கலாம் என்பது சிறப்பு அம்சம். இங்கு எந்த வழிபாட்டுக்கும் கட்டணமில்லை என்பதும் சிறப்பானது. இங்குள்ள அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் சமேத ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் 63 நாயன்மார்கள், மிகப்பெரிய வடிவில் ஸ்ரீசிவகாமி உடனாய நடராஜப் பெருமான், சோமாஸ்கந்தர் என பல்வேறு மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இவர் நடராஜப்பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் வீதி உலா வரச் செய்ய வேண்டும் என்பது இவரது ஆயுள் கால கனவு. இதனால் இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அன்று அதிகாலை வைரத்தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் 2025 டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் மகாருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்கு கொண்டால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், கீர்த்தி, அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி. மகாருத்ர ஹோமம் ஸ்ரீருத்ர மந்திரம் ஒலிக்கும் இடத்தில் கவலைகள் நீங்கும். நோய்நொடிகள் அகலும். கடன் தரித்திரம் விலகும். தோஷங்களும் பாவங்களும் நீங்கும். இந்த மகாருத்ர ஹோமத்தில் உங்கள் வேண்டுதலை சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டால் 48 நாளிலேயே நிறைவேறும் என்பது உறுதி. எனவே நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் பெறுங்கள். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும்   சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில்  வெளியாகும்.

விகடன் 5 Dec 2025 5:51 pm

December Matha Palan: சுக்கிரன் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் துலாம் ராசி.. பேச்சால் சாதிக்கும் காலம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 2:46 pm

December Matha Palan: கன்னி ராசிக்கு குஷியோ குஷி.. நினைத்து எல்லாம் நடக்கும் யோகம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 1:25 pm

December Matha Palan: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது.. பணவரவு கன்ஃபார்ம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 10:34 am

December Matha Palan: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது.. பணவரவு கன்ஃபார்ம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 9:57 am

December Matha Palan: இனிமேல் எல்லாம் இப்படித்தான் - கடக ராசிக்கு லைப் டைம் செட்டில்மென்ட்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 8:19 am

திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!

'எல்லாம் என் தலையெழுத்து' என்று பலரும் கஷ்ட காலத்தில் புலம்புவதைக் கேட்டிருப்போம். பிரம்மன் எழுதிய எழுத்தின்படிதான் நம் வாழ்க்கை நடக்கிறது என்பதுதான் ஆழ்ந்த நம்பிக்கை. அந்தத் தலையெழுத்தை மாற்றவேமுடியாதா என்று தவிப்பவர்களுக்காகவே அமைந்திருக்கிறது ஓர் அற்புதத் தலம். திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ளது திருப்பட்டூர். இந்தத் தலத்தில்தான் தலையெழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் தன் ஆணவத்தால் பதவியை இழந்த பிரம்மன் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு மீண்டும் பதவியைப் பெற்ற தலம் என்கிறது தலபுராணம். இங்கே 12 சிவலிங்கங்கள் அமைத்து ஈசனை பூஜித்து பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களையும் தரிசனம் செய்கிறார்களோ அவர்களின் தலையெழுத்தை நல்லபடியாக மாற்றித் தருவதாக பிரம்மன் கூறியிருக்கிறார் என்கிறார்கள். ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. ஈசனும் கிழக்கு நோக்கியே தரிசனம் தருகிறார். சுவாமிக்கு இடப்பக்கத்தில் கிழக்குப் பார்த்தபடி அருள்புரிகிறாள் ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி. ஈசனுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளியதால், பிரம்ம சம்பத் கௌரி என்கிற திருநாமம் அம்பிகைக்கு உண்டானதாம். ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி, புடவை சாத்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும்; தாம்பத்திய வாழ்க்கை வளம் பெறும்! பங்குனி மாதத்தில் மூன்று நாள்கள், ஈசனின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப்பாதங்களிலும் விழுவது அதிசயம். காசிக்கு நிகரான திருக்கோயில் இது என்று போற்றப்படுகிறது. மேலும் பிரம்மபுரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திரநாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திருமேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரின் வலப்பக்கப் பிராகாரத்தில் அமைந்திருக்கிறது பிரம்மனின் சந்நிதி. மேலும் இங்கு பிரம்மாவின் சந்நிதிக்கு நேராக நின்று பிரம்மாவையும் தரிசிக்கலாம், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். ஈசனின் திருநடனத்தை தரிசிக்க விரும்பிய வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் ஈசனின் ஆணைப்படி நவபுலியூருக்கும் சென்று தாண்டவ தரிசனம் கொண்டார்களாம். இறுதியில் திருப்பட்டூருக்கு வந்து ஈசனைத் தியானித்து இங்கே ஜீவசமாதி அடைந்தனர். இன்றும் திருப்பட்டூர் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீவியாக்ரபாதர் திருச்சமாதியும், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியும் உள்ளதைக் காணலாம். இங்கு தியானித்தால் எண்ணியது கூடுமாம். திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தலையெழுத்தை மாற்றும் பிரம்ம வழிபாடு இந்தத் தலத்துக்கு வந்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்து, அம்பிகைக்குப் புடவை சாத்தி, பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பு செய்து, பிராகார வலம் வந்து மனமுருகி வேண்டிக்கொண்டால், நிச்சயம் நம் தலையெழுத்து மாறும் என்கின்றன புராணங்கள். தலையெழுத்தை மாற்ற பரிகாரம் செய்பவர்களிடம் அபிஷேகம் மற்றும் மஞ்சள் காப்பு சாத்த 3,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்வார்கள். தங்களால் இயன்ற பக்தர்கள் மஞ்சள் காப்பு சாத்தி வழிபடலாம். இயலாதவர்கள் மஞ்சள் வாங்கி கோயிலில் சமர்ப்பித்தால் அதை மஞ்சள் காப்பில் சேர்த்துவிடுவார்கள். இதற்கும் மிகுதியான பலன் உண்டு. திங்கள், வியாழக் கிழமைகளிலும் நட்சத்திரங்கள்: திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களும் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்துவது மிகவும் விசேஷம். திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்! இங்குள்ள முருகப்பெருமான் சந்நிதியில் முருகனின் வாகனம், அசுர மயிலாக இடம் மாறிக் காட்சி தருகிற கோலத்துடன் முருகப்பெருமானை தரிசிப்பது சிறப்பு. கந்தனின் பூஜையில் மகிழ்ந்த ஈசன், அவருக்குத் திருக்காட்சி தந்து, ‘வெற்றி உனக்கே!’ என அருளிய தலம் இது. இங்கே, ஸ்ரீசுப்ரமணியரின் சந்நிதிக்கு அருகில், ஸ்ரீகந்தபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார். பொதுவாக, கோயிலின் வடகிழக்கு மூலையில், தெற்கு நோக்கியபடி காட்சி தரும் ஸ்ரீகாலபைரவர், இங்கே மேற்கு நோக்கிய நிலையில் தரிசனம் தருகிறார். இவரின் வலது செவியும், அதில் இருக்கிற தாடங்கமும் சற்றே வித்தியாசமாக இருப்பதைக் காணலாம். தேய்பிறை அஷ்டமியின் ராகுகால வேளையில் வந்து, காலபைரவரை வணங்கி, அவரிடம் கோரிக்கைகளை வைத்தால், வழக்குகளில் இருந்தும் பிரச்னைகளில் இருந்தும் விரைவில் நிவாரணம் பெறலாம்; இழந்த பொருள், இழந்த பதவி, இழந்த செல்வம், இழந்த கௌரவம் ஆகியவற்றை மீட்டுத் தந்தருள்வார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அழகிய தீர்த்தத்தில் கூறும் நீர் நன்னீராக விளங்குகிறது. ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் சோலைகளுக்கு நடுவே பகுள தீர்த்தம் அமைந்துள்ளது. திருப்பட்டூருக்கு மற்றொரு பெருமை மாசாத்தனார் எனப்படும் ஸ்ரீஐயனார் கோயில். இங்குள்ளவர் அரங்கேற்ற ஐயனார் எனப்படுகிறார். ஐயனார் வடிவங்களில் இவர் மிக மிகத் தொன்மையானவர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சேரமான் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞான உலாவை திருப்பட்டூருக்குக் கொண்டு வந்து அரங்கேற்றியவர் இவர். இதனால் இங்கு சுந்தரருக்கும் சேரமான் நாயனாருக்கும் குருபூஜைத் திருவிழா ஆடி சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருத்தலத்துக்கு வந்தாலே வாழ்க்கை மாறும் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை திருப்பட்டூருக்கு வந்து செல்லுங்கள். வாழ்க்கை வளமாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள். திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!

விகடன் 5 Dec 2025 7:54 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 5 - 2025 வெள்ளிக்கிழமை.

அஸ்வினி: நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். பரணி:எந்தக் காரணம் கொண்டும் எதிர்வாதம் செய்யாதீர்கள் . கார்த்திகை: வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். ரோகினி: கவனச் சிதறல்களால் காரியம் தடைபடும். மிருகசீரிடம்: நில விற்பனை அமோகமாக நடக்கும். திருவாதிரை: விபத்துக்களை தவிர்க்க எச்சரிக்கை தேவை. புனர்பூசம்: பொருள் வரவு போதுமான அளவில் கிடைக்கும். பூசம்: மனக்

ஒனிந்தியா 5 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 5 - 2025 வெள்ளிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5.12.2025 திதி : இன்று அதிகாலை 03.55 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை . நட்சத்திரம் : இன்று பிற்பகல் 01.32 வரை ரோகிணி . பின்னர் மிருகசீரிடம். நாமயோகம் : இன்று காலை 09.55 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

ஒனிந்தியா 5 Dec 2025 12:05 am

திருப்பூர்: மதநல்லிணக்கத்தைப் போற்றும் `தர்கா - கார்த்திகை தீப'வழிபாடு!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், திருப்பூர் அருகே உள்ள ஒரு தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்று வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தர்கா தமிழ்நாடு வஃக்பு வாரியத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் சென்னை, கர்நாடக மாநிலம் மைசூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அதுமட்டுமன்றி கானூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மதபேதமின்றி இந்த தர்காவுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இந்த தர்காவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கார்த்திகை தீபம் இது குறித்து தர்கா நிர்வாகிகள் கூறுகையில், தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து வழிபடுகின்றனர். மேலும், கார்த்திகை தீபத்தின்போது இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆண்டுதோறும் வழக்கம். மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இந்த தர்கா விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு உரூஸ் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். கார்த்திகை தீப திருநாளை ஒட்டி புதன்கிழமை மாலை விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் தீபம் ஏற்றப்படும் என்றனர். தர்காவில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபத்தை கிராம மக்கள் ஏராளமானோர் வழிபாடு நடத்திச் சென்றனர்.

விகடன் 4 Dec 2025 8:20 pm

December Matha Palan: மிதுன ராசிக்கு அடுத்த ஒரு மாதம் மிக மிக கவனம் – ஆரோக்கியத்தில் ஆபத்து

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 4 Dec 2025 12:23 pm

December Matha Palan: மிதுன ராசிக்கு அடுத்த ஒரு மாதம் மிக மிக கவனம் – ஆரோக்கியத்தில் ஆபத்து

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 4 Dec 2025 10:33 am

திண்டுக்கல்: திருக்கார்த்திகை தீபத்தால் பிரகாசித்த அபிராமி அம்மன் கோயில் | Photo Album

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை

விகடன் 4 Dec 2025 7:03 am

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா| Photo Album

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் திருக்கார்த்திகை சொக்கப்பனை தீபத்திருவிழா.!

விகடன் 4 Dec 2025 6:53 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 4 - 2025 வியாழக்கிழமை.

அஸ்வினி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கலை தீர்ப்பீர்கள் . பரணி: பழைய வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் வார்த்தையில் மயங்கி உதவிகள் தேடி வரும். ரோகிணி: மனைவியின் பேச்சில் மயங்கிக் கிடப்பீர்கள். மிருகசீரிடம்: சலிப்பில்லாத உழைப்பால் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். திருவாதிரை: எந்தக் காரியத்திலும் நிதானம் தவறி நடக்காதீர்கள். புனர்பூசம்: சிக்கலாக இருந்த வியாபாரம்

ஒனிந்தியா 4 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 4 - 2025 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 4.12.2025 திதி : இன்று காலை 07.54 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி . நட்சத்திரம் : இன்று மாலை 03.08 வரை கிருத்திகை . பின்னர் ரோகிணி. நாமயோகம் : இன்று பிற்பகல் 01.03 வரை சிவம். பின்னர் சித்தம்.

ஒனிந்தியா 4 Dec 2025 12:05 am

Tiruvannamalai 2025 Live | திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் 2025 | Karthika Deepam |

karthigai deepam tiruvannamalai live | tiruvannamalai karthigai deepam 2025 | Karthigai Maha Deepam | Karthika Deepam | Maha Deepam Live | திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025

விகடன் 3 Dec 2025 5:47 pm

December Matha Palan: லட்சுமி நாராயண யோகம் பெறும் ரிஷப ராசி.. பண மழை கொட்டப் போகுது

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 3 Dec 2025 5:44 pm

December Matha Palan: மேஷ ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. ஆரோக்கியத்தில் வரப்போகும் கண்டம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 3 Dec 2025 4:59 pm

திருக்கார்த்திகை: நெல்லையப்பர் திருக்கோயிலில் பரணி தீபம்; அகல் விளக்கு ஏற்றி வழிபாடு | Photo Album

திருக்கார்த்திகை: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் விழா.! திருக்கார்த்திகை: வீட்டில் ஏற்றவேண்டிய 27 தீபங்கள் - வழிபாட்டு முறைகள்

விகடன் 3 Dec 2025 4:30 pm

திருவண்ணாமலை: அதிகாலை ஏற்றிய பரணி தீபம்; மாலை மலை உச்சியில் மகாதீபம்!

திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். பரணி தீபம் அதிகாலையில் ஏற்றப்படுவது வழக்கம். அருணாசலேஸ்வரர் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து தீபங்களே பரணி தீபங்கள் ஆகும். ஈசனின் ஐந்தொழில்களைக் குறிப்பிடும் வகையில் இந்த தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்படும். பரணி தீப தரிசனம் கண்டால் பாவங்கள் விலகும் என்பது ஐதிகம். இந்த ஆண்டு திருக்கார்த்திகை உற்சவம் நவம்பர் 24- ம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதன் முக்கிய நாளான திருக்கார்த்திகை தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா' கோஷத்துடன் பரணி தீபத்தைத் தரிசனம் செய்தனர். பரணி தீபம், திருவண்ணாமலை. காலையில், பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதை தரிசனம் செய்ய பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக தீபக் கொப்பரை மலைக்கு மேல் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. மாலை அருணாசலேஸ்வரர், கொடிமரம் அருகே அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளிய சில நிமிடங்களில் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபத்தை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். இன்று மகாதீபத்தைத் தரிசனம் செய்வதும் கிரிவலம் வருவதும் விசேஷம் என்பதால் கிரிவலப் பாதையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கார்த்திகை: வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம் இதுதான்!

விகடன் 3 Dec 2025 9:55 am

December Matha Palan: டிசம்பர் மாதத்தில் டபுள் தமாக்கா.. அதிர்ஷ்டம் கொட்ட போகும் 6 ராசிகள்

டிசம்பர் மாத பலன்கள் 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். தமிழ் மாதமான மார்கழியும் பிறக்க போகிறது. மாதங்களில் சிறந்தது என்றழைக்கப்படும் மார்கழி

ஒனிந்தியா 3 Dec 2025 9:54 am

கார்த்திகை: வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம் இதுதான்!

தமிழகத்தில் நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்கள் என்பார்கள். அதேபோன்று ஒவ்வொரு மாத பௌர்ணமியையும் ஒட்டி ஆலய உற்சவங்களும் வழிபாடுகளும் நடைபெறும். அந்த வகையில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தை ஒட்டி பௌர்ணமி வரும். இந்த நாள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் கார்த்திகை தீபம் என்று வீடு தோறும் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்துவருகிறது. ஞானசம்பந்தர் இதை `விளக்கீடு’ என்று குறிப்பிடுகிறார். மேலும் இந்த நாளில் தான் ஈசன் அடிமுடி காண முடியாத அண்ணாமலையோனாகக் காட்சி கொடுத்தார் என்பதால் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவதும் வழக்கம். அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளியவுடன் மலையில் தீபம் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்து அண்ணாமலைக்கு `அரோகரா!' என்று முழங்க தீபக்காட்சியை தரிசனம் செய்வதே பரவசமானது. வாழ்வில் ஒருமுறையேனும் அனைவரும் சென்று தரிசனம் செய்யவேண்டிய நிகழ்வு அது. அதே நேரத்தில் அந்தத் தருணத்தில் நம் வீட்டிலும் தீபம் ஏற்ற வேண்டியது அவசியம். தீப ரூபத்தில் நாம் அந்தப் பரம்பொருளை நம் இல்லத்தில் நிறையச் செய்யவேண்டும் என்பதுதான் இந்த விழாவின் தாத்பர்யம். திருவண்ணாமலை தீபம்! கார்த்திகை தீபம்... எப்படி விளக்கேற்ற வேண்டும்? பொதுவாக நம் வீட்டில் பூஜை அறையில் மட்டுமே தீபம் ஏற்றுவோம். ஆனால் திருக்கார்த்திகை அன்று நம் வீட்டின் அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்றி வைக்கும் வழக்கம் உள்ளது. சந்திரன் முழு வலிமையோடு இருக்கும் இந்த நாளில் ஏற்றப்படும் இந்த தீப வெளிச்சம் நம்வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அமைதியையும் சுபிட்சத்தையும் கொடுக்கும். அடுத்த ஓராண்டு நம் இல்லம் சண்டை சச்சரவு இல்லாமல் ஆனந்தமாக வாழத் தேவையான நேர்மறை அதிர்வுகளைத் தங்க வைக்கும். இதை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து பலனை உணர்ந்து நமக்கும் சொல்லியிருக்கிறார்கள். எனவே வீடுதோறும் நிச்சயம் விளக்குகளை ஏற்றிவைப்போம். அதேநேரத்தில் பலர் மெழுகினால் ஆன தீபங்களை ஏற்றுகிறார்கள். அது நம் மரபில் வழக்கம் இல்லை. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது. மண் அகல்களே விசேஷம். மண் அகலில் திரியிட்டு நல்லெண்ணை விட்டு விளக்கேற்ற வேண்டும். இந்த நாளில் பரிகாரங்களுக்கு உகந்த இலுப்பை எண்ணெய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. முதலில் பூஜை அறையில் உள்ள குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். அதற்கு பூக்கள் சமர்ப்பித்து தீபலட்சுமியே இதில் எழுந்தருள்வாயாக என்று மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு அதற்கு தீபம் காட்டி வழிபட்டு ஒரு வெற்றிலை பாக்கு பழம் ஆகியன நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு அகல் விளக்குகளை அந்த தீபத்தில் இருந்து ஏற்றினால் விசேஷம். அல்லது ஒரு அகலை குத்துவிளக்கில் இருந்து ஏற்றிவிட்டு அந்த அகலைக்கொண்டு பிற விளக்குகளை ஏற்ற வேண்டும். விளக்குகளை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே வைக்க வேண்டும். தெற்கு நோக்கி வைக்கக்கூடாது. கார்த்திகைப் பொரி உருண்டை தீபம் ஏற்ற நல்ல நேரம் தீபம் ஏற்ற விளக்குகளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டவுடன் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் தீபம் ஏற்றப்பட்டவுடன் நாமும் நம் வீட்டில் தீபம் ஏற்றலாம். இன்று திருவண்ணாமலையில் தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட இருக்கிறது. அதை தரிசனம் செய்தபிறகு நம் வீட்டில்தீபம் ஏற்றலாம். 6-7 மணி வரை சூர்ய ஹோரை. 7- 8 மணி வரை சுக்ரஹோரை. இந்த இரண்டு மணி நேரமுமே மிகவும் நல்ல நேரமாகத் திகழ்கிறது. இந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் இறையருள் பரிபூரணமாகக் கிடைப்பதோடு வீட்டில் செல்வ வளமும் சேரும். பொதுவாக ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு நிவேதனம் உண்டு. கார்த்திகைக்கு, கார்த்திகைப்பொரி எனப்படும் நெல்பொரி நிவேதனம் செய்வது விசேஷம். பொரி உருண்டை நிவேதனம் செய்தால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விகடன் 3 Dec 2025 9:10 am

December Matha Palan: டிசம்பர் மாதத்தில் டபுள் தமாக்கா.. அதிர்ஷ்டம் கொட்ட போகும் 6 ராசிகள்

டிசம்பர் மாத பலன்கள் 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். தமிழ் மாதமான மார்கழியும் பிறக்க போகிறது. மாதங்களில் சிறந்தது என்றழைக்கப்படும் மார்கழி

ஒனிந்தியா 3 Dec 2025 8:34 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 3 - 2025 புதன்கிழமை.

அஸ்வினி: ரகசிய நடவடிக்கை எதிலும் தயவுசெய்து ஈடுபடாதீர்கள். பரணி: கட்டிடம் கட்டுவதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் . கார்த்திகை: மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். ரோகிணி: திட்டமிட்டு செயல்களில் தாமதம் உண்டாகும். மிருகசீரிடம்: இன்று எடுக்கும் தீவிர முயற்சி எதிர்காலத்தில் பலனளிக்கும். திருவாதிரை: மனம் நிறைவு பெறும் வகையில் பணம் வரவு அதிகரிக்கும்.

ஒனிந்தியா 3 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 3 - 2025 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 3.12.2025 திதி : இன்று காலை 10.13 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி . நட்சத்திரம் : இன்று மாலை 04.47 வரை பரணி . பின்னர் கிருத்திகை. நாமயோகம் : இன்று மாலை 04.13 வரை பரிகம். பின்னர் சிவம்.

ஒனிந்தியா 3 Dec 2025 12:05 am

Rasi Palan This Week: கும்ப ராசிக்கு தொட்டது துலங்கும்.. 7 நாட்களில் வரப்போகும் குட் நியூஸ்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 7:49 pm

Rasi Palan This Week: மீன ராசி தலைக்கு மேல் கத்தி.. இந்த தப்பை மட்டும் செய்ய கூடாது

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 7:42 pm

Rasi Palan This Week: கும்ப ராசிக்கு தொட்டது துலங்கும்.. 7 நாட்களில் வரப்போகும் குட் நியூஸ்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 5:41 pm

Rasi Palan This Week: மகர ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. கோபம் தான் பிரச்சனையே

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 12:21 pm

தவெக சிங்கிள் டிஜிட் தொகுதியே வெல்லும்.. விஜய்க்கு வெற்றி வாய்ப்பே இல்லை.. பிரபல ஜோசியர் கணிப்பு!

சென்னை: நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி கணிப்பு வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து ஜோசியரான பிரஷாந்த் கினி கவனம் பெற்றார். ஜோசியரான பிரஷாந்த் கினி வங்கதேச புரட்சியை கணித்து வைரல்

ஒனிந்தியா 2 Dec 2025 12:01 pm

கோவையில் மகாருத்ர ஹோமம்: சங்கல்பித்த 48 நாள்களில் வேண்டுதல்கள் பலித்த அதிசயம்! சங்கல்பியுங்கள்

கோவையில் மகாருத்ர ஹோமம்! சங்கல்பித்த 48 நாள்களில் வேண்டுதல்கள் பலித்த அதிசயம்! சங்கல்பியுங்கள்! ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ருத்ர ஹோமம் மார்கழி என்றாலே இறைவனைக் கொண்டாடும் புண்ணிய மாதம் என்பார்கள். அதிலும் மார்கழியின் சிறப்பாக கொண்டாடப்படுவது ஆருத்ரா அபிஷேகமும் திருவாதிரை நன்னாளுமே. இந்த புண்ணிய நாள்களைக் கொண்டாடவும் வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் மாற்ற சிறப்பானதொரு வழிபாட்டு பரிகார ஹோமம் ஒன்றை நடத்த விரும்பினோம். அதற்காகவே ஹோமங்களில் சிறப்பான மகாருத்ர ஹோமத்தை செய்ய முடிவெடுத்தோம். அப்போது நினைவுக்கு வந்தது கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயம். சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் இங்கு நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று வாசகர்களாலேயே சொல்லப்பட்டது உண்மை. வெகு பிரமாண்டமாக அப்போது நடைபெற்ற ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரின் கடன் பிரச்னைகள் நீங்கின; திருமண வரன் தேடி வந்தன; நீங்காத நோய்கள் நீங்கின; வழக்குகள் தீர்ந்தன என்று பலராலும் அப்போது பேசப்பட்டது. அதனால் இந்த ஆண்டும் மார்கழி திருவாதிரை அபிஷேக நாளில் அதாவது ஜனவரி-2-ம் நாள் மகாருத்ர ஹோமம் நடத்த உள்ளோம். அரிதான அரிதான இந்த மகாருத்ர ஹோமம் பெரும் பொருட்செலவு செய்து செய்யக்கூடியது. அதிலும் இது கோயில் மற்றும் திருமடங்களில் மட்டுமே செய்ய வேண்டியது. அத்தகைய சிறப்பான ஸ்ரீருத்ர ஹோமம் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் நடைபெற உள்ளது. . சென்ற ஆண்டு வெகு பிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஹோமம் பலரின் வரவேற்பை பெற்றது. கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள், சேக்கிழார்பெருமான் காட்டிய வழியில் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்குள்ள அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் சமேத ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீ சிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என சிவாலய பரிவார தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார். ருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இவர் அண்டவானப்பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் உலா வர வேண்டும் என்பது இவரது பல நாள் கனவு. இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அதிகாலை தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் ஸ்ரீருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம். இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி. ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீருத்ர ஹோமத்தில் சங்கல்பித்தவர் வீட்டில் எந்த தீமைகளும் வராது. அவர் வேண்டுதலும் விருப்பமும் பலிக்கும் என்பதும் ஐதிகம். இந்த துடியான ருத்ர ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி வரும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். வேதங்கள் போற்றும் ஸ்ரீருத்ர மந்திரம் ஒலிக்கும் இடத்தில் தோஷங்களும் பாவங்களும் நீங்கும். நிச்சயம் இந்த ஹோமத்தில் உங்கள் விருப்பங்களை சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டால் 48 நாளிலேயே நிறைவேறும் என்பது சென்ற ஆண்டு கலந்து கொண்ட வாசகர்களே சாட்சி என்று பெருமையாகச் சொல்வோம். எனவே நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் சுபீட்சமும் பெறுங்கள். ருத்ர ஹோமம் வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில்  சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில்  வெளியாகும ருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

விகடன் 2 Dec 2025 11:32 am

Dhanusu rasi palan: அடித்தாடும் தனுசு ராசி.. அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும்.. என்ஜாய்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 10:22 am

Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு \காசு மேல காசு வந்து\.. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 9:18 am

காஞ்சிபுரம், இளையனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில்: பங்குனியிலும் சூரசம்ஹாரம் நடைபெறும் தலம்!

முருகப்பெருமான் ஆலயங்களில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். அப்போது ஆறாம்நாள் சஷ்டி திதி அன்று சூரசம்ஹாரம் நடைபெறும். அதேபோன்று பங்குனி மாதத்திலும் சூரசம்ஹாரம் நடைபெறும் ஒரு முருகன் கோயில் ஒன்று உண்டு. வாருங்கள் மகிமை நிறைந்த அந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இளையனார் வேலூர் என்னும் ஊர். இங்கு பாலசுப்பிரமண்ய சுவாமி கோயில் சிறப்புற அமைந்துள்ளது. இத்தலம் வேலின் மகிமையைக் கூறும் வகையில் வேலூர் என்று பெயர்பெற்றது. பிறகு சிவனாரின் இளையமகனான முருகப்பெருமானின் அருள் நிறைந்த தலம் என்பதால் இளையனார் வேலூர் என்று அழைக்கப்பட்டது. இளைனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில் தலபுராணம் சூரபத்மனைப் போன்றே சிவனிடம் வரம் பெற்று பல அக்கிரமங்களைச் செய்துவந்தனர் மலையன் மற்றும் மாகறன் எனும் அசுரர்கள். சிவாம்சத்தால் மட்டுமே தமக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம்பெற்று அந்த வரத்தின் மகிமையால் முனிவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினர். காசிப முனிவர் தவம் இயற்றிக்கொண்டிருந்த இடத்துக்கு வந்த இந்த அசுரர்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தனர். இதனால் மனம் நொந்த முனிவர் ஈசனிடம் முறையிட்டார். ஈசன் முருகப்பெருமானை அழைத்து தனது வாளை அவரிடம் கொடுத்து அசுரர்களை அழிக்கும்படிக் கட்டளையிட்டார். திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்! அசுரரில் இளையவனான மாகறன் பெரும்படையோடு முருகப்பெருமானோடு யுத்தம் செய்ய வந்தான். பகையை அழிக்க முருகன் எதற்கு, அவன் கையில் உள்ள வேல் போதுமே... முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை சேயாற்றின் கரையில் ஊன்றி வைத்தார். அதிலிருந்து புறப்பட்ட வெப்பம் மாகறனின் படைகளை அழித்ததும். மாகறனும் அதில் மாண்டான். மாகறைனை அழித்த வேலின் வெம்மையைக் கண்டு அஞ்சிய தேவர்கள் ஈசனிடம் முறையிட அவர் சிவனடியார்போல் வந்து வேலினை வெம்மையைத் தணித்து மறைந்தார். அதனால் மூவுலகமும் காப்பாற்றப்பட்டது. இதற்கிடையே மாகறன் அழிக்கப்பட்டதை அறிந்த மலையன், சூரபதுமனின் தாயாகிய மாயை என்பவளை தியானித்து வணங்கினான். அவள், மலையனுக்கு ஒரு மாயா மந்திரத்தை உபதேசித்துச் சென்றாள். இளைனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில் அந்த மந்திரத்தின் துணையுடன் தன் படைகளைத் திரட்டி வந்து முருகப்பெருமானுடன் போர் தொடுத்தான் மலையன். இப்போது முருகப்பெருமான் ஈசன் தந்த வாளைக் கொண்டு போர் செய்ய மாயை அழிந்தது. கூடவே மலையனும் அழிந்தான். அசுரர்கள் இருவரை சம்ஹாரம் செய்வதற்காக முருகப்பெருமான் எழுந்தருளிய பாசறை `இரும்புலம்’ என்றும், மலையனுடன் அவர் போரிட்ட இடம் `செம்புலம்’ என்றும், மலையன் அழிந்த இடம் `மலையான்களம்’ என்ற பெயரிலும் திகழ்கின்றன. அசுரர்கள் அழிந்ததும், ஞானாஸ்திரத்தின் மூலம் தன் படைகளை மீட்டுக்கொண்டு, கடம்ப வனத்தை அடைந்தார் கந்தன். இது நடந்தது, பங்குனி மாதம், சுக்கில பட்சம், மகம் நட்சத்திரம் கூடிய பிரதோஷ நன்னாளில். அசுரர்களை அழித்த முருகனின் வீரத்தைக் கொண்டாடினர். முருகனோ ஈசனை வழிபட விரும்பி தேவ சிற்பி விஸ்வகர்மாவின் மூலம் திருக்கடம்ப நாதருக்கு ஆகமமுறைப்படி ஆலயம் அமைத்து, அந்த ஆலயத்தைச் சூழ நல்ல நகரத்தையும் உண்டாக்கி, தமது வேலாயுதத்தால் சேயாற்றை வரவழைத்து, ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார். பிரம்ம சாஸ்தா திருக்கோலம்! சேயாற்றின் வடகரையில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது ஆலயம். இருபுறமும் யானைகள் தாங்க, ஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் வரவேற்கும். இங்கே முருகப்பெருமான், மேலிரு கரங்களில் ருத்திராட்ச மாலையும் கமண்டலமும் திகழ கீழிரு கரங்களில் வலக் கரம் அபய ஹஸ்தம் காட்ட, இடக்கரத்தால் கடி ஹஸ்தம் காட்டி அருள்புரிகிறார். முருகப் பெருமானின் இந்தத் திருக்கோலம், பிரம்ம சாஸ்தா திருக்கோலம். பிரணவப் பொருளை மறந்த பிரம்மனைத் தண்டித்து முருகப் பெருமான் ஏற்றருளிய திருக்கோலம். எனவே இங்கே வந்து படிக்கும் மாணவர்கள் வழிபட்டால் அவர்களுக்குக் கல்வியும் ஞானமும் ஒருசேரக் கிடைக்கும் என்கிறார்கள். பொதுவாக முருகனோடு வள்ளி, தெய்வயானை காட்சி தருவர். ஆனால் இங்கே சிறு முருகன் பாலனாக அருள்வதால் தேவியர்க்கு சந்நிதிகள் இல்லை. ஆனால், கஜவல்லி அம்மன் என்றோர் அம்மன் சந்நிதி உள்ளது. கருவறை யின் இடப்புறம் உற்சவ மூர்த்தங்களும், ஆறுமுகக் கடவுளின் மூர்த்தமும் அருளும் மண்டபமும் உள்ளது. இளைனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில் பிராகாரத்தின் இடப்புறத்தில் மூலவரான பால சுப்ரமணியரின் உற்சவ மூர்த்தி சந்நிதியும், தொடர்ந்து காசி விசுவநாதர், பெருந்தண்ட உடையார் சந்நிதிகளும் உள்ளன. பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் இருந்த சிறு மண்டபத்தைக் காண்கிறோம். அதனுள்தான் முருகப்பெருமான் ஏவி ஊன்றிய வேலாயுதத்தின் சிலா வடிவம் அமைந்துள்ளது. வடகிழக்கு மூலையில், முருகப்பெருமான் சந்நிதிக்கு எதிரில் சற்றுத் தள்ளி சுவாமிநாத சுவாமி சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதியில் கடம்பநாதர் சிறு சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார். இந்தத் தலத்துக்கு வந்தால் முருகன் அருள் பரிபூரணமாகக் கிடைப்பதோடு வாழ்வில் வெற்றிகளும் குவியும் என்கிறார்கள். மேலும் முருகப்பெருமானின் அருட்பார்வை பட்டாலே எதிரிகள் ஓடி ஒளிவார்கள் என்றும் அமைதியான வாழ்க்கை ஸித்திக்கும் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள். இங்கே சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். மிருகசீரிட நட்சத்திர நாளில் தொடங்கி, சித்திரை நட்சத்திரத்தன்று தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும். ஆவணி மாதம் வளர்பிறை துவிதியை திதியில் தொடங்கி சஷ்டி திதி வரை ஐந்து தினங்கள் பவித்ரோற்சவம் நடைபெறும். பங்குனி மாதம் சுக்ல பட்சம், மக நட்சத்திரம் கூடிய நாளில், அருள்மிகு பாலசுப்பிரமணியர் பல ஊர்களின் வழியாக பக்தர்களுக்குக் காட்சி தந்தபடி, இளையனார்வேலூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள கடம்பர்கோயிலுக்கு எழுந்தருளி, இரவு மலையன், மாகறன் ஆகியவர்களை சம்ஹாரம் செய்து திரும்புவார். இவை தவிர்த்து கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. எப்படிச் செல்வது?: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இளையனார்வேலூர்தான் அந்தத் தலம். தினமும் காலை 6 முதல் 10 மணி வரை; மாலை 4 முதல் 8:30 மணி வரை கோயில் திறந்திருக்கும். திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்!

விகடன் 2 Dec 2025 7:22 am

திண்டுக்கல்: 500 ஆண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா –பக்தர்கள் சாமி தரிசனம்

குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா

விகடன் 2 Dec 2025 6:48 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 2 - 2025 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: விலை உயர்ந்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பரணி: பணிபுரியும் இடத்தில் யாரையும் பகையாக நினைக்க வேண்டாம். கார்த்திகை: இதுவரை தடைபட்டிருந்த நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடக்கும். ரோகிணி: சுப காரியத்தில் இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறும். மிருகசீரிடம்: தனிப்பட்ட ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். திருவாதிரை: சின்ன வீட்டிலிருந்து வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். புனர்பூசம்:

ஒனிந்தியா 2 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 2 - 2025 செவ்வாய்க்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 2.12.2025 திதி : இன்று பிற்பகல் 12.29 வரை துவாதசி. பின்னர் திரியோதசி . நட்சத்திரம் : இன்று மாலை 06.23 வரை அஸ்வினி . பின்னர் பரணி. நாமயோகம் : இன்று இரவு 07.18 வரை வரீயான். பின்னர் பரிகம்.

ஒனிந்தியா 2 Dec 2025 12:05 am

Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. புரோமோஷன் கன்ஃபார்ம்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 4:56 pm

Rasi Palan This Week: துலாம் ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் அதிசயம்.. உங்க காட்டுல மழைதான்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 3:20 pm

Rasi Palan This Week: \காசு பணம் துட்டு மணி மணி\.. கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 3:16 pm

Rasi Palan This Week: கடக ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டு.. நட்பு விஷயத்தில் இதை மட்டும் பண்ணாதீங்க

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 1:18 pm

இந்த வார ராசி பலன்கள்.. மேஷம் முதல் மீனம் வரை! அதிர்ஷ்டம் யாருக்கு.. பரிகாரம் செய்ய வேண்டிய ராசி எது

சென்னை: இந்த வாரம் சூரியன் விருச்சிகத்தில் பயணிக்க, குரு மிதுனத்தில், சனி கும்பத்தில் இருப்பதால் பல ராசிகளுக்கு கலவையான பலன்கள். தொழில், நிதி, ஆரோக்கியம், குடும்பம் என அனைத்து துறைகளிலும் என்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை ஜோதிட நிபுணர்கள் தொகுத்து தருகிறார்கள். மேஷம்: குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு! தொலைபேசியில் எதிர்பார்த்த நற்செய்தி வந்து

ஒனிந்தியா 1 Dec 2025 12:13 pm

Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பிரச்சனைகள் ஓவர்.. கடன் எல்லாம் தீரும் யோகம்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 11:12 am

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. ஒரு விஷயத்தில் மட்டும் ஜாக்கிரதை

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 9:22 am

Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. காத்திருக்கும் பம்பர் பரிசு

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 7:59 am

கிருஷ்ணகிரி ஸ்ரீசீனிவாச பெருமாள்: திருமணம் நடக்க வழிபடுங்கள்; வியக்கும் பக்தர்கள்

நம் பாரத தேசம் முழுமையும் விஷ்ணு ஆலயங்கள் பல உள்ளன. பழைமைவாய்ந்த ஆலயங்கள் பல இருந்தாலும் பல புதிய ஆலயங்களும் தோன்றி பக்தியை வளர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, ஐகுந்தம் கொத்தப்பள்ளி கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்பதியில் நடைபெறுவதைப்போலவே இந்த ஆலயத்திலும் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. எனவே சுற்றுவட்டார மக்கள் இந்தக் கோயிலை, 'கிருஷ்ணகிரியின் திருப்பதி' என்றே போற்றுகிறார்கள். ஒருமுறை இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் திருப்பதி பெருமாளை வழிபட்ட திருப்தி கிடைப்பதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள். கிருஷ்ணகிரி திருப்பதி ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயில் 27.8.2009 ம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் சிவலிங்கம், பத்மாவதி தாயார், வராஹ சுவாமி, ஆஞ்சநேயர், சனி பகவான் ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டாக்கப்பட்டு வழிபாடுகள் முறையாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தின் சிறப்புகள் குறித்து அறங்காவலர் எம். நாகேந்திர சிங் கூறும்போது, இந்த ஆலயத்தில் வழிபாடுகள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மூலவரின் திருவடிகளைத் தொட்டு வணங்கலாம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து கோயிலின் கணக்கீட்டாளர் ரஞ்சித் விரிவாகப் பேசினார். 2007 - ம் ஆண்டு இந்தக் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தயானந்த்சிங் மற்றும் ராதாபாய் தம்பதி இந்தக் கோயிலைக் கட்டிமுடிக்க உதவினர். இங்கே பெருமாளை தரிசித்தாலே மனம் குளிரும். அனைத்து பக்தர்களும் கருவறைக்குள் வந்து பெருமாளை தரிசனம் செய்வதோடு திருவடிகளைத் தொட்டு வணங்கவும் செய்யலாம் என்பதுதான் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு. மேலும் பெருமாளின் திருமுன்பாகத் திருமணம் செய்ய விரும்பும் பக்தர்கள் கருவறைக்குள்ளேயே திருமணமும் செய்ய அனுமதிக்கிறோம். கிருஷ்ணகிரி திருப்பதி ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயில் இங்கே, புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்குத் திருக்கல்யாண வைபவமும் சிறப்புடன் நடைபெறும். மார்கழி மாதம் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றார். இங்கே வரும் பக்தர்கள் பலரும் பெருமாள் திருவடிகளைத் தொட்டு வணங்கிய அனுபவத்தை சிலாகிக்கிறார்கள். 'திருவடிகளைத் தொட்டதுமே மனம் சிலிர்க்கிறது. மனதில் பாரங்கள் எல்லாம் கரைந்துபோகின்றன' என்கிறார்கள். இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குவதோடு குழந்தைச் செல்வமும் உடனே கிடைக்கிறது என்கிறார்கள். இதற்காக கிருஷ்ணகிரியைச் சுற்றி உள்ள ஊர்களில் இருந்தும் பெங்களூருவில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். கிருஷ்ணகிரி திருப்பதி ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயில் எப்படிச் செல்வது ? : கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை பிரதான சாலையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள சுந்தரம்பள்ளியை அடைந்து அங்கிருந்து வலதுபுறம் தெரியும் சாலையில் 6 கி.மீ பயணித்தால் ஐகுந்தம் தொக்கபள்ளியில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலை அடையலாம். ஆலயம் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

விகடன் 1 Dec 2025 6:49 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 1 - 2025 திங்கட்கிழமை.

அஸ்வினி: வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி போடுவீர்கள். பரணி: திட்டமிட்டுச் செயல்பட்டு வியாபாரத்தில் வெற்றி அடைவீர்கள். கார்த்திகை: குறுக்கு வழியில் சம்பாதிக்க முயற்சி செய்யாதீர்கள். ரோகினி: அரசுத் தேர்வுக்கு படிப்பவர்கள் அனுகூலம் அடைவார்கள். மிருகசீரிடம்: தகுதிக் குறைவானவரின் பேச்சை புறந்தள்ளுங்கள். திருவாதிரை: நிலம் வாங்கி விற்கும் தொழிலில் வெற்றி நடை போடுவீர்கள். புனர்பூசம்: குடும்பத்தில் எதிர்பாராத

ஒனிந்தியா 1 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 1 - 2025 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை 1.12.2025 திதி : இன்று பிற்பகல் 02.36 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி . நட்சத்திரம் : இன்று இரவு 07.52 வரை ரேவதி . பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று அதிகாலை 01.04 வரை சித்தி. பின்னர் இரவு

ஒனிந்தியா 1 Dec 2025 12:05 am

இந்த வார ராசி பலன்கள்.. மேஷம் முதல் மீனம் வரை! அதிர்ஷ்டம் யாருக்கு.. பரிகாரம் செய்ய வேண்டிய ராசி எது

சென்னை: இந்த வாரம் சூரியன் விருச்சிகத்தில் பயணிக்க, குரு மிதுனத்தில், சனி கும்பத்தில் இருப்பதால் பல ராசிகளுக்கு கலவையான பலன்கள். தொழில், நிதி, ஆரோக்கியம், குடும்பம் என அனைத்து துறைகளிலும் என்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை ஜோதிட நிபுணர்கள் தொகுத்து தருகிறார்கள். மேஷம்: குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு! தொலைபேசியில் எதிர்பார்த்த

ஒனிந்தியா 30 Nov 2025 6:39 pm

இந்த வார ராசி பலன்கள்.. மேஷம் முதல் மீனம் வரை! அதிருஷ்டம் யாருக்கு.. பரிகாரம் செய்ய வேண்டிய ராசி எது

சென்னை: இந்த வாரம் சூரியன் விருச்சிகத்தில் பயணிக்க, குரு மிதுனத்தில், சனி கும்பத்தில் இருப்பதால் பல ராசிகளுக்கு கலவையான பலன்கள். தொழில், நிதி, ஆரோக்கியம், குடும்பம் என அனைத்து துறைகளிலும் என்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை ஜோதிட நிபுணர்கள் தொகுத்து தருகிறார்கள். மேஷம்: குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு! தொலைபேசியில் எதிர்பார்த்த நற்செய்தி வந்து

ஒனிந்தியா 30 Nov 2025 6:27 pm

திருவண்ணாமலை மகா தீபம்: `தளர்வான கற்பாறைகளால் ஆபத்து' - பக்தர்கள் மலை ஏறத் தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24-ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. மகா தீபம் கடந்த ஆண்டு, `பெஞ்சால்' புயல் காரணமாக கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன்தொடர்ச்சியாக அண்ணாமலையார் மலையில் நிலச்சரிவு உண்டானது. இதனால், உயிர்சேதம் ஏற்பட்டு மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு `டிட்வா' புயல் காரணமாக மிக கனமழை பொழிவதற்கான (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுநர் குழு அறிக்கையில், மலையேறும் பாதை தற்போதும் உறுதித்தன்மை அற்றும், ஏற்கனவே நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களின் மையப் பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு எனவே, ``புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலையேறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல் துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது. `மலை ஏற முயற்சிக்க வேண்டாம்' என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விகடன் 30 Nov 2025 11:05 am

பஞ்சாங்கக் குறிப்புகள் டிசம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 30 Nov 2025 7:00 am

Sani Vakra Nivarthi: சனியின் பார்வையால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷப ராசி.. எதை தொட்டாலும் யோகம்

Sani Vakra Nivarthi 2025: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சனி வக்ர நிவர்த்தியான இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கார்த்திகை மாதம்

ஒனிந்தியா 29 Nov 2025 6:46 pm

Sani Vakra Nivarthi: வக்ரசனியிலும் அதிர்ஷ்டம் பெறும் மேஷ ராசி.. இந்த விஷயத்தில் ரொம்ப கவனம்

Sani Vakra Nivarthi 2025: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சனி வக்ர நிவர்த்தியான இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கார்த்திகை மாதம்

ஒனிந்தியா 29 Nov 2025 6:04 pm

Sani Vakra Nivarthi: வக்ரசனியிலும் அதிர்ஷ்டம் பெறும் மேஷ ராசி.. இந்த விஷயத்தில் ரொம்ப கவனம்

Sani Vakra Nivarthi 2025: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சனி வக்ர நிவர்த்தியான இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கார்த்திகை மாதம்

ஒனிந்தியா 29 Nov 2025 5:09 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: அதிர்ஷ்டத்தை அள்ளும் 4 ராசியினர்.. லிஸ்டில் உங்க ராசி இருக்கா பாருங்க

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக

ஒனிந்தியா 29 Nov 2025 4:34 pm

திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!

தேவர்களும் முனிவர்களும் ஏன் மகாவிஷ்ணுவும் பிரம்மனும் காணவிரும்புவது ஈசனின் நடனக் காட்சி. அப்படிப்பட்ட அந்த அற்புதமான காட்சியை ஈசனும் அவரை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு காட்டி அருளினார். அப்படி அவர் திருவாலங்காட்டில் நடனமாடியபோது நந்தி மிருந்தங்கம் வாசித்தார். இசையில் மூழ்கி அவர் கண்மூடியே வாசித்துமுடித்தார். கண் திறந்ததும்தாம் காணக்கிடைக்காத திருநடனக் காட்சியைக் காணத் தவறிவிட்டோமே என்கிற வருத்தம் உண்டானது. தனக்கும் திருநடனக் காட்சி வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது ஈசன் அவரிடம், மெய்ப்பேடு என்னும் தலத்துக்குச் சென்று தவம் செய்யுமாறும் அதன்பலனாக விரைவிலேயே திருநடன தரிசனம் கிடைக்கும் என்று கூறியருளினார். அதன்படி நந்தி வந்து தவம் செய்து சிவதரிசனம் பெற்ற தலம்தான் மெய்ப்பேடு என்று போற்றப்படும் மப்பேடு. திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி - பேரம்பாக்கம் மார்க்கத்தில், பூந்தமல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மப்பேடு. சென்னையிலிருந்து சுமார் 38 கி.மீ. தூரம். நந்திக்கு சிங்கீ என்கிற பெயரும் உண்டு. நந்தி வழிபட்ட ஈசன் என்பதால் இந்த ஈசனுக்கு சிங்கீஸ்வரர் என்கிற திருநாமமும் உண்டானது. மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த திருமால், இந்தத் தலத்துக்கு வந்தே மீண்டும் சுயரூபம் கொண்டாராம். அதனால் இந்த ஊர் மெய்ப்பேடு என்று மாறி (மெய் - உண்மை, பேடு - வடிவம்). பிறகு `மப்பேடு’ என்று மருவியதாகச் சொல்வார்கள். ஈசன் இருக்கும் இடத்தில் சக்தி இல்லாமல் இருப்பாளா... அன்னையும் இங்கே ஆனந்தமாக எழுந்தருளியிருக்கிறாள். இங்கே அவளுக்கு புஷ்ப குஜாம்பாள் என்று திருநாமம். சுவாமி சந்நிதியின் வலது புறத்தில், சதுரமான கருவறையில் நின்ற கோலத்தில்-கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகிறாள், புஷ்பகுஜாம்பாள். இந்த அம்பிகை கொள்ளை அழகு. அவளை தரிசித்தாலே நம் மனக்கவலைகள் நீங்கிவிடும். மேலும் பேசுவதில் பிரச்னை இருக்கும் குழந்தைகளை இங்கு அழைத்துவந்து இந்த அன்னையை வழிபட்டால் விரைவில் மடை திறந்த வெள்ளம்போல் அவர்கள் பேசும் நலம் பெறுவார்கள் என்கிறார்கள் பக்தர்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தென்கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுடன் கம்பீரமாக நம்மை வரவேற்கும். ராஜகோபுரம் முழுவதுமே கலைநயம் மிக்க சுதைச் சிற்பங்களைக் கொண்ட சிற்பப் பெட்டகமாக விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அழகுற அமைந்துள்ளது ஆலயம். மகா மண்டபத்தின் முன்பு செவ்வக வடிவ முன்மண்டபம் அமைந்துள்ளது. தென்புற நுழைவு வாசலில் நடராஜர் சபை. ஆலயத்தின் நீண்ட பிராகாரத்தில் ஆஸ்தான விநாயகர், இடம்புரி விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகப்பெருமான், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. மூலவரின் கருவறைக் கோஷ்டத்தில் பிரம்மாவின் திருவுருவம் காணப்படுகிறது. வியாழக்கிழமைதோறும் பிரம்மாவுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நம் தலையெழுத்து நல்லவிதமாக மாறி, வாழ்க்கை சிறக்கும் என்கிறார்கள். பிரதோஷ காலத்தில், நந்தி மண்டபத்தின் முன்பாக உள்ள `நவ வியாகரணக் கல்’ என்ற சிறிய கருங்கல்லின் மீது ஏறி நின்று, ஒருசேர நந்தியையும் ஈசனையும் வழிபட்டால், நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை சோம வாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு. இரண்டாம் ஆதித்த கரிகால சோழன் காலத்தில் இங்கே திருப்பணிகள் நடந்துள்ளன. இதற்கு சாட்சியாக இங்கே கல்வெட்டு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆலயம் கி.பி. 967-ல் இரண்டாம் ஆதித்த கரிகால சோழனால் கட்டப்பட்ட தகவலும் உள்ளன. பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோயில்: திருவண்ணாமலை போறீங்களா? அப்போ அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்! மூல நட்சத்திரக் காரர்களுக்கு முன்னேற்றம் இந்த ஆலயம் மூல நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலம். மூல நட்சத்திரம் சரஸ்வதிக்கும் அனுமனுக்கும் உரிய நட்சத்திரம். கல்வியும் வலிமையும் வழங்கும் இவ்விரு தெய்வங்களுக்கும் உகந்த இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும். வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றம் காண்பார்கள் என்கிறது தலபுராணம். எனவே, மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்குவதற்காக, தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்துகொள்ளவேண்டும். மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் இங்குள்ள வீரபாலீஸ்வரர் காரியத் தடைகளை விலக்குபவர். இவரின் சந்நிதிக்கு முன்பு நின்று வீணை இசைத்து அனுமன், ஈசனின் அருளைப் பெற்றதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது. இங்குள்ள வீணை ஆஞ்சநேயர் விசேஷமானவர். சீதாதேவியைத் தேடிக்கொண்டு தென்திசை சென்றபோது, இந்தத் தலத்துக்கு ஆஞ்சநேயர் வந்தார். அப்போது இப்பகுதி மக்களின் வேண்டுதலுக்காக அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்துப் பாடி மழையை வரவழைத்துப் பஞ்சம் போக்கினார் என்றும் சொல்லப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்!

விகடன் 29 Nov 2025 8:36 am

ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: 8 ஆண்டுக்கு பிறகு இசைக்கப்பட்ட கல் நாதஸ்வரம்; என்ன சிறப்பு?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அக்கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 1-ம் தேதி விமர்சையாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பழங்காலக் கல் நாதஸ்வரம் இரண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கல் நாதஸ்வரம் பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பட்டு வருகிறது. மற்றொன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் கல் நாதஸ்வரம் இசைத்த தமிழரசன் இந்நிலையில், குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயிலில் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமிநாதனின் தம்பி மகன் தமிழழரசன் கல் நாதஸ்வரத்தில் இசைத்தார். இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அத்துடன், கல் நாதஸ்வரம் இசைத்ததை அனைவரும் ஆச்சரியத்துடன் மெய்மறந்து கேட்டனர். பழங்கால கல் நாதஸ்வரம் குறித்து வியப்புடன் பேசிக்கொண்டனர். இது குறித்து கோயில் தரப்பில் பேசினோம், இங்குள்ள கல் நாதஸ்வரம் பல நூற்றாண்டுகள் பழமையானது. வரலாற்றுப் பொக்கிஷமான கல் நாதஸ்வரம் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடைகொண்டதாக இருக்கும். ஆனால் கல் நாதஸ்வரம் ஆறு மடங்கு பெரியது. அதாவது சுமார் 3 கிலோ 600 கிராம் எடையும் இரண்டரை அடி நீளமும் கொண்டது. இந்த நாதஸ்வரத்தில் 2 இன்ச் உயரமுள்ள திமிரி சீவாளி உள்ளது. கும்பகோணம் வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தை கொண்டது. கல் நாதஸ்வரத்தின் உளவுப் பகுதி மூன்று உறுதியான தனித்தனி பாகங்களாக செய்யப்பட்டு, வெண்கலப் பூண்டு மூலம் இணைக்கப்பட்டவை. மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் ஏழு ஸ்வரங்கள் இருக்கும். கல் நாதஸ்வரத்தில் ஆறு ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். எனவே சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதிமத்தியம ராகங்களை மட்டுமே வாசிக்க முடியும். சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்தமத்தியம ராகங்களை இந்த நாதஸ்வரத்தில் வாசிக்க முடியாது. குற்றாலம், இலஞ்சி முருகன் கோயில்: வேண்டும் வரம்தரும் மாதுளை முத்துகளால் ஆன வேல் காணிக்கை! மறைந்த நாதஸ்வர மேதை மன்னார்குடி பக்கிரியா பிள்ளை 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்தார். பிறகு, கோவில் நாதஸ்வர வித்வான் குஞ்சுதபாதம் பிள்ளை 30 ஆண்டுகளுக்கு மேல் இதனை வாசித்தார். அதன்பிறகு சுவாமிநாதன் கல் நாதஸ்வரத்தை வாசித்தார். இறுதியாக, கடந்த 2017 ஆம் ஆண்டு செப். 30 ஆம் தேதி, சுவாமிநாதன் ஒரு மணி நேரத்திற்கு நான்கு கீர்த்தனைகளை கல் நாதஸ்வரத்தில் இசைத்தார். என்றனர். ஆதிகும்பேஸ்வரர் தரிசனம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிநாதனின் தம்பி மகன் தமிழரசன் சுமார் 26 நிமிடங்கள் அமிர்தவர்ஷிணி, அம்சநாதம், சாரங்க, சரஸ்வதி ஆகிய நான்கு ராகங்களை கல் நாதஸ்வரத்தில் இசைத்தார். பின்னர் தமிழரசன் கோயில் செயல் அலுவலர் முருகனிடம் கல் நாதஸ்வரத்தை ஒப்படைத்தார். இதையடுத்து அது பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. கும்பகோணத்தில் சிறப்புகளில் ஒன்றான கல் நாதஸ்வரம் வாசிக்கப்பட்டதை பலர் கலந்து கொண்டு பார்த்து கேட்டு ரசித்தனர். நோய்நொடி இல்லாத அமுத வாழ்வு தரும் ஆதிகும்பேஸ்வரர் தரிசனம்!

விகடன் 29 Nov 2025 7:23 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 29 - 2025 சனிக்கிழமை.

அஸ்வினி: விலை உயர்ந்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பரணி: பணிபுரியும் இடத்தில் யாரையும் பகையாக நினைக்க வேண்டாம். கார்த்திகை: இதுவரை தடைபட்டிருந்த நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடக்கும். ரோகிணி: சுப காரியத்தில் இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறும். மிருகசீரிடம்: தனிப்பட்ட ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். திருவாதிரை: சின்ன வீட்டிலிருந்து வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். புனர்பூசம்:

ஒனிந்தியா 29 Nov 2025 12:05 am

புத்தாண்டு ராசி பலன் 2026: அடித்து ஆடப்போகும் மீன ராசி.. ஜென்மசனியிலும் ஜாக்பாட் அடிக்கும் யோகம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 28 Nov 2025 9:52 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தில் புரளும் யோகம்.. ஆபத்தும் இருக்கு கவனம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 28 Nov 2025 3:55 pm

சபரிமலை: மகரவிளக்கு பூஜையை ஒட்டி எரியும் ஆழி குண்டம்; இருமுடி அவிழ்க்கும் பக்தர்கள் | Photo Album

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல மகரவிளக்கு பூஜைகளை ஒட்டி கொழுந்துவிட்டு எரியும் ஆழி குண்டம். இருமுடி அவிழ்க்கும் பக்தர்கள். சபரிமலை ஐயப்பன் கோயில் சபரிமலை ஆழி குண்டம் சன்னிதானத்தில் நமஸ்காரம் செய்யும் பக்தர்கள் சபரிமலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வீரர் ஐயப்ப சுவாமியை காண காத்திருக்கும் பக்தர்கள் பதினெட்டாம் படியை தொட்டு வணங்கி ஏறும் பக்தர்கள் இருமுடி கட்டை அவிழ்க்கு விரி வைத்த பக்தர்கள் நெய் தேங்காயில் இருந்து நெய் சேகரிக்கும் பக்தர்கள் பூஜைகள் ஆன்மிக விளக்கம்! சுவாமி ஐயப்பன் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றனவா? உண்மை என்ன!

விகடன் 28 Nov 2025 3:11 pm

மறக்காமல் இந்த வழிபாட்டை செய்தால் உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும்! சித்தர்கள் சொன்ன ராசி தீப வழிபாடு!

மறக்காமல் இந்த வழிபாட்டை செய்தால் உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும்! சித்தர்கள் சொன்ன ராசி தீப வழிபாடு! 2025 டிசம்பர் 3-ம் புண்ணிய நாளில் நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நலமும் வளமும் பெற திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயத்தில் உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ராசி தீப வழிபாடு சித்தர்களின் தபோவன பூமி என்றால் அது திருவண்ணாமலைதான். புராண காலத்தில் பிருகு முனிவர் தொட்டு விசிறி சாமியார் வரை இந்தியாவின் அத்தனை சித்தர்களின் அதிசயங்களையும் கண்ட பூமி திருவண்ணாமலை. அதிலும் ரமணர், சேஷாத்திரி ஸ்வாமிகள், ஸ்ரீராம் சூரத்குமார் ஆகியோர் மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி வாசம் செய்யும் புண்ணிய பூமியில் இருந்து வரும் அவர்களின் அம்சமாகவே வாழ்ந்தவர்கள். நவகோடி சித்தர்கள் இன்றும் உலாவும் திருவண்ணாமலை கேட்டதைக் கொடுக்கக் கூடிய அற்புத மலை. சித்தர்களின் தவப்பயனால் அங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியும் தெளிவும் இன்றளவும் கிடைப்பது உண்மை. அனலாக எழுந்து ஜோதியாக ஒளிர்ந்த மலை திருவண்ணாமலை. சிவமே அங்கு ஜொலிப்பதால் தீபம் ஏற்றி திருவண்ணாமலையில் வேண்டினால் நினைத்தது நடக்கும். வேண்டியது கிடைக்கும் என்பது சித்தர்களின் வாக்கு. திருவண்ணாமலையும் சித்தர்களும் அதிலும் அம்பிகையும் தேவர்களும் தீப விழாவைக் கொண்டாடிய கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில் தீபத்திருநாளில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் எத்தனை பெரிய வேண்டுதல் என்றாலும் அது நடக்கும். அச்சம், கவலை, தரித்திரம் எல்லாம் நீங்கும். பூவுலகில் பிறந்த எந்த ஜீவனும் ஒரே ஒருமுறை இந்தத் தீபத் திருவிழாவை திருவண்ணாமலையில் கண்டால் போதும் .  பிறப்பிலா பேரின்ப நிலையை அடைந்து வாழ்வின் அத்தனை சௌபாக்கியங்களையும் அடைவார்கள் என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள் .  வேண்டியதை எல்லாம் அருளக்கூடிய வழிபாடு கார்த்திகை தீப விளக்கீடுதான். கவலைகள், கடன், நோய்கள், முன்னேற முடியாத கஷ்ட நிலை என துன்பப்படும் எல்லோருமே கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய வழிபாடு இது. உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம். திருவண்ணாமலை ராசி தீப பரிகார வழிபட்டால் தொழிலில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம், கூடி வரும் திருமணம் தள்ளிப் போதல். எல்லா பணிகளும் பாதியில் நிற்றல். அடிக்கடி ஏமாந்து பணத்தை இழப்பது, சொந்தங்களால் ஏமாற்றப்படுவது என பல ஆண்டுகள் பரிதவித்து நிற்பவர்களுக்கு நிச்சயம் இந்த வழிபாடு பலன் அளிக்கும். அதுவும் திருவண்ணாமலை சித்தபுருஷி அம்மணி அம்மன் ஜீவசமாதி ஆலயத்தில் இந்த பரிகார தீப வழிபாட்டில் சங்கல்பித்துக் கொண்டால் உங்களின் எல்லா பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் நலமும் வளமும் பெறுவீர்கள் என்பது உறுதி. திருவண்ணாமலை தீபம் உங்கள் பிரச்னைகள் யாவும் தீர வளம் சேர உங்கள் சக்தி விகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயமும் இணைந்து உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது. 3-12-25 கார்த்திகை தீப நாளில் அம்மணி அம்மன் கோயிலில் நடைபெறும் ராசி தீப வழிபாடு சங்கல்ப விழாவில் கலந்து கொண்டு உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ராசி தீப வழிபாட்டில் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் பெயருக்கும் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேக வழிபாடு செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். திருவண்ணாமலை அம்மணி அம்மன் குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). ராசி தீப வழிபாடு வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.   https://www.facebook.com/SakthiVikatan

விகடன் 28 Nov 2025 12:33 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: ஜாவா சுந்தரேஷனாக மாறும் மகர ராசி.. வீடு, நிலபுலன்களை குவிக்கும் யோகம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 28 Nov 2025 11:51 am

புத்தாண்டு ராசி பலன் 2026: ஜாவா சுந்தரேஷனாக மாறும் மகர ராசி.. வீடு, நிலபுலன்களை குவிக்கும் யோகம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 28 Nov 2025 10:08 am

விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்: பொன்னும் பொருளும் பதவியும் அருளும் தாயார் சந்நிதி!

பெருமாள் வரதராஜராக அருள்பாலிக்கும் தலங்கள் பல உள்ளன. அவற்றில் குறையாத செல்வம் அருளும் பெருமாளாக அட்சய வரதராகக் கோயில் கொண்டிருக்கும் தலம் ஆட்சிப்பாக்கம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து ஆவணிப்பூர் செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத்திருக்கோயில். வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்த மகாலட்சுமித் தாயார் பூவுலகில் பல புண்ணியத் தலங்களில் தங்கித் தவம் செய்தார். அவ்வாறு தாயார் தவம் செய்த தலங்களில் ஒன்றுதான் ஆட்சிப்பாக்கம். இத்தலத்துக்கு அட்சயபுரி என்ற பெயரும் உண்டு. நெடுங்காலம் தவம் புரிந்த திருமகள், இவ்வூரில் தங்கியிருந்த போதுதான் ஶ்ரீநிவாஸப் பெருமாள் தன்னைத் தேடி பூலோகம் வந்து விட்டார் என்ற தகவலை அறிந்தாளாம். விரைவில் திருமாலை அடையப்போகிறோம் என்று எண்ணி மகிழந்தாளாம். அப்போது தன்னைச் சேவிக்க வந்த தேவர்களுக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கினாளாம். அதனால், 'அட்சயபுரி' என்றும் அழைக்கப்ட்டதாம் இந்தத்தலம். ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் குபேரனுக்குத் தாயார் அருள் செய்த தலம் இது. எனவே அளகாபுரி என்றும் திருமகள் விஜயம் செய்ததால் விஜயபட்டினம் ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு உண்டு. அவ்வண்ணம் ஆட்சிபாக்கத்திலும் தேவியர் சமேதராக அருள்மிகு அட்சயவரதர் வேண்டும் பக்தர்களும் வேண்டும் வரம் தரும் கருணைக்கடலாகத் திகழ்கிறார். இங்கே தாயார் பெருந்தேவித்தாயாராக அருள்பாலிக்கிறார். ஆதியில் தேவர்கள் இங்கே பெருமாளுக்கும் தாயாருக்கும் ஆலயம் எழுப்பி பிரம்மோற்சவம் கொண்டாடியதாகச் சொல்கிறது புராணம். ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்: சிம்ம முகத்துடன் தாயார், கருடன்; ஒரே தலத்தில் 9 நரசிம்மர் முன்னொருகாலத்தில் வடக்கில் வாழ்ந்த ப்ருவரன் என்கிற மன்னனை அவன் உறவுக்காரர்களே சதி செய்து நாட்டை விட்டுத் துரத்தினார்கள். அவனும் செய்வதறியாது தெற்கு நோக்கி வந்தான். நாட்டை இழந்த ப்ருவரன் வெகுதூரம் பயணித்து இந்த அட்சய புரியை (ஆட்சிப்பாக்கம்) வந்தடைந்தான். சிதைந்துகிடந்த பெருமாளின் ஆலயத்திலேயே தங்கி வழிபாடு செய்துவந்தான். இந்த நிலையில் அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் வந்தார். அவர் முக்காலமும் உணர்ந்தவர் என்பதை உணர்ந்த ப்ருவரன் அவரிடம் தன் நிலையை விளக்கி நல்லாட்சி புரிந்த தனக்கு ஏன் இப்படியான நிலை என்று கேட்டான். அவர் அவனுடைய முன்வினையை எடுத்துச் சொன்னார். ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் பெருந்தேவி தாயார் முற்பிறவியில் திருடனாக இருந்த ப்ருவரன் பெரும் பாவங்களைச் செய்தான். ஆனால், அட்சய திருதியை நாளில் தன்னை நாடிவந்து உணவு கேட்ட ஒருவருக்குத் தன்னிடம் இருந்த உணவைத் தந்தான். அந்தப் பலனே அவனை மறுபிறவியில் மன்னன் ஆக்கியது. அந்தப் புண்ணியபலன் தீர்ந்ததும் திருடனாக இருந்து செய்த பாவங்களின் வினை பழிவாங்கத்தொடங்கிவிட்டது. ஆட்சி பறிபோக பிச்சைக்காரன் போல் ஆனான் என்கிற ரகசியத்தை அவனுக்கு உரைத்தார். மேலும் , பசிகொண்ட ஒருவருக்கு நீ அன்று நீரும் சோறும் கொடுத்து, முற்பிறவியில் நீ யோகியைக் காப்பாற்றிய இடம் இந்த அட்சயபுரிதான். இங்கு வைத்து உனக்கு அருள்பாலிக்கவே பெருமாள் உன்னை இங்கு வரச் செய்திருக்கிறார். கேட்டதைக் கேட்டபடி அருளும் இந்த அட்சய வரதரை விடாமல் பிடித்துக்கொள். நீ இழந்தவற்றை மட்டுமல்ல அந்த இந்திரலோகத்தையே அவரிடம் வரமாகப் பெற்று மகிழலாம்’’ என்று கூறிய முனிவர் அவனிடம் விடைபெற்றார். மன்னன் முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தான். இனி தனக்கு சகலமும் அட்சயவரதரே என்று முடிவு செய்தான். அவரை நாள்தோறும் வழிபட்டு மகிழ்ந்தான். வரதரின் அருளால், இழந்த நாட்டையும் செல்வத்தையும் விரைவில் பெற்றான். இந்தத் தலத்தில் அட்சய வரதருக்குச் சிறப்பாகக் கோயில் எழுப்பி, நிவந்தங்களும் எழுதிவைத்தான். ஆண்டுக்கு 13 திருவிழாக்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்தான் என்கிறது தலபுராணம். இத்தகைய பெருமைகள் கொண்ட திருத்தலத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஒற்றைப் பிராகாரம் கொண்டதாக அமைந்திருக்கிறது. நின்ற திருக்கோலத்தில் அருளும் அட்சயவரதர் மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தி, கீழ் வலக் கரத்தால் அபயம் காட்டி, கீழ் இடக் கரத்தை இடுப்பில் தாங்கியபடி, தேவியருடன் காட்சி தருகிறார். தனிச் சந்நிதியில், அழகிய பெருந்தேவி தாயார் புன்னகை ததும்பும் எழில் வடிவில் வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார். கருடாழ்வார், அனுமன் ஆகியோரையும் கோயிலில் தரிசிக்கலாம். ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் அனுமன் பொங்கல் பாரி வேட்டை, வைகுண்ட ஏகாதசி என ஆண்டுக்கு 13 திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. பிரம்மனால் கொண்டாடப் பட்ட வைகாசி பிரமோற்சவ விழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், நாயக்க மன்னர்களும் திருப்பணிகள் செய்து கொண்டாடிய ஆலயம் இது என்பதற்கு சான்றாக கல்வெட்டுகள் உண்டு. ஆனாலும் அவை காலப்போக்கில் சிதைந்து, இப்போது தெளிவில்லாமல் காணக்கிடைக்கின்றன. வாய்ப்பிருப்பவர்கள் ஆட்சிப்பாக்கத்துக்கு ஒருமுறையேனும் சென்று அட்சய வரதராஜரை தரிசித்து வாருங்கள். வாழ்வில் இழந்த பதவி, தொலைத்த செல்வம் என எதுவானாலும் அவை அனைத்தும் நம்மைத் தேடிவரும். திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்!

விகடன் 28 Nov 2025 7:29 am

நட்சத்திரப் பலன்கள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

விகடன் 28 Nov 2025 7:00 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 28 - 2025 வெள்ளிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.11.2025 திதி : இன்று இரவு 07.16 வரை அஷ்டமி. பின்னர் நவமி . நட்சத்திரம் : இன்று இரவு 10.45 வரை சதயம் . பின்னர் பூரட்டாதி. நாமயோகம் : இன்று காலை 07.48 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

ஒனிந்தியா 28 Nov 2025 12:05 am

புத்தாண்டு ராசி பலன் 2026: தனுசு ராசிக்கு தெய்வ வாக்கு – டபுள் டக்கர் லாபம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 27 Nov 2025 5:08 pm

புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர்: சுயம்புமூர்த்தி, நோய் தீர்க்கும் பஞ்சாம்ருதம்!

ஆலயம் சென்று வழிபடுவது அருள் சேர மட்டுமல்ல. பொருள் பெறவும் வாழும் இந்த வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்ளவும்தான். ஒவ்வொரு ஆலயமும் தனித்துவமான நலன்களை வழங்கும் சிறப்பைக் கொண்டே அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஓர் ஆலயத்தை இன்று தரிசிக்கலாம். அந்த ஆலயம் கண் பிணிகளைப் போக்குவதோடு நோய்நொடிகளையும் நீக்கும் சிறப்பினைக்கொண்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகே அமைந்துள்ள திருக்களம்பூர் கதலிவனநாதர் ஆலயமே அது. சுமார் ஆயிரம் ஆண்டுப் பழைமை கொண்ட ஆலயத்தின் தலபுராணம் மிகவும் சுவாரஸ்யமானது. திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் தலபுராணம் பாண்டிய மன்னர் ஒருவன் போர் செய்யத் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு காட்டுப்பகுதி வழியாகச் சென்றான். மன்னன் பயணித்த குதிரை புயல்போல் பாய்ந்து சென்றது. அப்போது வாழைத்தோப்புகள் அடந்த ஒரு பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போதும் மன்னனின் குதிரையின் வேகம் குறையவில்லை. குதிரையின் பாய்ச்சலில் நிலத்தில் இருந்த ஏதோ ஒன்றின் மீது அதன் குளம்பு பட்டது. அதனால் குதிரைக்கும் காலி வலி ஏற்படநின்றுவிட்டது. மன்னன் எது குதிரையைத் தடுக்கியது என்று பார்க்க அங்கே ரத்தம் பெருகிக்கொண்டிருப்பதைக் கண்டு திகைத்தான். எதிலிருந்து ரத்தம் பெருகுகிறது என்று மண் விலக்கிப் பார்க்க அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதையும் அந்த லிங்கத்தில் இருந்து ரத்தம் பீறிடுவதையும் கண்டு அதிர்ந்துபோனான். குதிரையில் குளம்பு பட்டத்தில் லிங்கம் சிதைவுற்றிருப்பதையும் கண்டான். அந்தக் கணத்தில் மன்னனின் கண்பார்வையும் பறிபோனது. மன்னன் அழுது புலம்பினான். ஈசனிடம் தன் பிழைபொறுக்குமாறு வேண்டினான். ஈசன் மனம் உருகினார். இங்கே ஓர் ஆலயம் எழுப்பு. உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும்’’ என்று அருளினார். மன்னன் அவ்வாறே செய்கிறேன் என்று வாக்குக் கொடுக்க அடுத்த கணம் அவரின் பார்வை மீண்டது. சொன்னபடியே மன்னன் அழகிய ஆலயம் ஒன்றை அங்கே எழுப்பினான். அந்த நிகழ்வுக்கு சாட்சியாக இன்றும் லிங்கத்தின் மேல் குதிரையின் குளம்படிபட்ட வடுக்களை தரிசிக்கலாம். இந்தக் கோயிலின் மூலவர், தீராத நோய்களையும் தீர்த்துவைப்பவர் என்பதால் இவருக்கு ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்கிற திருநாமம் உண்டாயிற்று. கதலி என்றால் வாழை. வாழை மரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டதால், 'கதலிவனேஸ்வரர்' என்ற திருப்பெயரும் இங்குள்ள இறைவனுக்கு உண்டு. வால்மீகி முனிவர் இங்கே தபோவனம் அமைத்து இருந்ததாகவும் தாயார் சீதாதேவி கர்ப்பிணியாக இருந்த காலத்தில் இங்கு வந்து தங்கியதாகவும் சொல்கிறார்கள். ஆதிசங்கரரும் திருக்களம்பூர்த் திருத்தலத்துக்கு வந்து வழிபட்டுள்ளார். இங்கே அம்பாள் சந்நிதி இல்லை என்பதை அறிந்தவர், ஆலயத்துக்கு எதிரிலேயே ஸ்ரீதிருவளர் ஒளி ஈஸ்வரர், ஸ்ரீசௌந்தரநாயகி திருக்கோயிலை எழுப்பினாராம். தொடர்ந்து ஸ்ரீகதலிவனேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த அம்பாளுக்கு, 'ஸ்ரீகாமகோடீஸ்வரி' என்ற திருப்பெயரும் உண்டு. திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர் ஸ்ரீராமரின் பிள்ளைகளான லவகுசர் இங்கேயே அவதரித்தனர் என்றும் ஸ்ரீராமர் நடத்திய அசுவமேத யாகத்துக்காக அனுப்பிய குதிரையை லவனும் குசனும் இங்கேதான் கட்டிப்போட்டனர் என்றும் தலபுராணம் சொல்கிறது. மேலும் ராம - லவ குச யுத்தமும் இங்கே நடைபெற்ற இறுதியில் தன்னோடு போரிடுபவர் யார் என்பதை அறிந்த குழந்தைகள் யுத்தத்தை நிறுத்தி அவரைப்பணிந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது நிறைவில் வால்மீகி மூலம் லவனும் குசனும் தன் மைந்தர்கள் என்பதை அறிந்தார் ராமன். இருவரும் இணைந்து அங்கே ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இன்று அந்த விநாயகர் இந்த ஆலயத்தில் கன்னிமூல கணபதியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சென்னை கந்தகோட்டம்: கனவில் வந்து காட்சிதந்தார்; வள்ளலார் முதல் பாம்பன் சுவாமிகள்வரை வழிபட்ட முருகன்! மருந்தாகும் பஞ்சாம்ருதம் இங்கே பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்புதான் என்கிறார்கள். இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. ஆனாலும் அவை நன்கு வளர்கின்றன. அதேபோல வெளியில் இருந்து வாழைக்கன்றுகளை கொண்டு வந்து வளர்க்கும் வழக்கமும் இல்லை. அப்படியே வைத்தாலும் அவை வளராது என்கிறார்கள். இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் அனைத்தும் சிவார்ப்பணமே என்றும் பிறர் அதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இங்கு விளையும் பழங்களைக் கொண்டு செய்யப்படும் பஞ்சாமிர்தம் நோய் தீர்க்கும் மாமருந்து என்பது பக்தர்கள் கருத்து. திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் பிரார்த்தனை விசேஷங்கள் திருமணம் ஆகாத ஆண்களோ பெண்களோ, வியாழக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பாயசம் நிவேதனம் செய்து வழிபடவேண்டும். பின்னர் இறைப் பிரசாதமாகத் தரப்படும் பாயசத்தைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இந்தப் பிரார்த்தனையின் பலனாக விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கருத்துவேற்றுமையால் பிரிந்துபோன தம்பதியர் மீண்டும் வாழ்க்கைத் துணைவருடன் இணையவேண்டி, இந்த ஆலயத்தை 108 முறை வலம் வந்து, நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்து வழிபடுவதோடு, குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கவேண்டும். இந்த வழிபாட்டின் பலனாக தம்பதியருக்குள் ஒற்றுமை உண்டாகும். பிரிந்த தம்பதியர் மனம் ஒருமித்து வாழ்வார்கள் என்பது ஐதிகம். திருமணம் முடிந்து வெகுகாலம் ஆகியும் குழந்தை இல்லாமல் தவிக்கும் அன்பர்கள் அவசியம் வழிபடவேண்டிய ஆலயம் இது. குழந்தை வரம் வேண்டுவோர் தம்பதி சமேதராக இங்கு வந்து வாழைக்காய்களைப் பலியாகச் சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிணிகளால் அவதிப்படும் அன்பர்கள், வைத்தியநாத சுவாமிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் ஆகிய பொருள்களை அபிஷேகம் செய்து, பின்னர் அந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, நோய்கள் தீரும் என்பதும் நம்பிக்கை. திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்!

விகடன் 27 Nov 2025 7:39 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 27 - 2025 வியாழக்கிழமை.

அஸ்வினி: அடுத்தவர் உதவி செய்வார் என்று எதிர்பார்க்காதீர்கள். பரணி: தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்பதை மறக்காதீர்கள். கார்த்திகை: தொலைந்து போன பொருள் உங்களுக்கு வந்து சேரும். ரோகிணி: முக்கியமான வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மிருகசீரிடம்: இன்சூரன்ஸ் பணம் முக்கிய தேவைக்கு உதவும். திருவாதிரை: பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். புனர்பூசம்: பேச்சினால்

ஒனிந்தியா 27 Nov 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 27 - 2025 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை 27.11.2025 திதி : இன்று இரவு 08.03 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி . நட்சத்திரம் : இன்று இரவு 10.57 வரை அவிட்டம் . பின்னர் சதயம். நாமயோகம் : இன்று காலை 09.22 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

ஒனிந்தியா 27 Nov 2025 12:05 am

புத்தாண்டு ராசி பலன் 2026: விருச்சிக ராசிக்கு இனி தொட்டதெல்லாமே அதிர்ஷ்டம் தான்.. நல்ல காலம் ஆரம்பம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 26 Nov 2025 1:36 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: விருச்சிக ராசிக்கு இனி தொட்டதெல்லாமே அதிர்ஷ்டம் தான்.. நல்ல காலம் ஆரம்பம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 26 Nov 2025 1:01 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: துலாம் ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. என்ஜாய்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 26 Nov 2025 12:38 pm

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 26 - 2025 புதன்கிழமை.

அஸ்வினி: அலைச்சலுக்கு பின்னரே காரியங்கள் கைகூடி வரும். பரணி: குடும்பத்தினர் தேவையை நிறைவேற்ற சிரமப்படுவீர்கள். கார்த்திகை: உற்ற நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். ரோகிணி: ஞாபக மறதியால் செய்ய வேண்டிய வேலையில் சிக்கல் ஏற்படும். மிருகசீரிடம்: எதிரிகள் உங்களிடம் பணிந்து போவார்கள். திருவாதிரை: சகோதர உறவுகளால் சங்கடங்களை எதிர்நோக்குவீர்கள். புனர்பூசம்: வெளியூர் பயணங்கள் முதலீட்டுக்கு

ஒனிந்தியா 26 Nov 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 26 - 2025 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை 26.11.2025 திதி : இன்று இரவு 08.21 வரை சஷ்டி. பின்னர் சப்தமி . நட்சத்திரம் : இன்று இரவு 10.42 வரை திருவோணம் . பின்னர் அவிட்டம். நாமயோகம் : இன்று காலை 10.32 வரை விருத்தி. பின்னர் துருவம்.

ஒனிந்தியா 26 Nov 2025 12:05 am

புத்தாண்டு ராசி பலன் 2026: சிம்ம ராசிக்கு கடனுக்கு குட்-பை.. அடிக்க போகுது ஜாக்பாட்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 4:25 pm

பஞ்சாங்கக் குறிப்புகள் நவம்பர் 24 முதல் 30 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 25 Nov 2025 2:45 pm

New Year Rasi Palan 2026: கடக ராசிக்கு தடைகள் தவிடு பொடியாகும் நேரம்.. ஒரு விஷயத்தில் கவனம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 2:10 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: ரிஷப ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. ஒரு விஷயத்தில் கவனம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 2:10 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: மிதுன ராசிக்கு வாயில் தான் பிரச்சனையே.. ஆனா 2026 இல் சர்ப்ரைஸும் இருக்கு

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 1:41 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: மேஷ ராசிக்கு 2026 இல் வாழ்க்கையே மாறப்போகுது.. காசு மேல காசு

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 1:06 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: ரிஷப ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. ஒரு விஷயத்தில் கவனம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 1:04 pm

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு; நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்; ஏன் தெரியுமா?

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு! நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்! ஏன் தெரியுமா! தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களால் விளக்கேற்றி வழிபட முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கான வாய்ப்பு இதோ. டிசம்பர் 3 - ம் தேதி அம்மணி அம்மன் ஆலயத்தில்! முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு அன்றாடம் தீபம் ஏற்றி வழிபட்டால் சுபம், ஆயுள், ஆரோக்கியம், நன்மை, ஐஸ்வர்யம், கீர்த்தி, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் என்கிறது பூஜாபத்தி நூல்கள். எங்கு ஒளியோடு வழிபாடு நடக்கிறதோ அங்கு வேண்டுதல்கள் நிறைவேறும். விளக்கின் அடியே பிரம்மா, விளக்கின் தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, விளக்கில் எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர் என்பது ஐதிகம். யார் தீபத்தை ஏற்றி வைக்கிறாரோ அவரது வாழ்க்கையில் உள்ள இருள் விலகி ஷாந்தியும் சௌக்கியமும் நிலவும் என்பது பெரியோர் வாக்கு. அதிலும் தீபம் முதலில் பெரும் ஒளியாக எழுந்த திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்களின் 21 தலைமுறைகளுக்கும் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை நாளில் ஈசனை எண்ணி ஈசனின் வடிவாகவே உள்ள மலையை நோக்கி தீபமேற்றி வழிபட்டால் எண்ணியவை யாவும் நிறைவேறும். நேர்மறை ஆற்றலும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். திருக்கார்த்திகை நாளில் விளக்கேற்றி வழிபட தடைபட்ட காரியங்கள் உடனே நிறைவேறும். இந்த நாளில் குபேரன் ஈசனை வழிபடும் நாள் என்பதால் அதே நாளில் விளக்கேற்றி வழிபட நம் வாழ்வில் செல்வ வளம் பெருகும். குறிப்பாக வியாபாரம், தொழில் செய்பவர்கள் கார்த்திகை தீப நாளில் விளக்கேற்றி வழிபடுவதால் தொழில் வளர்ச்சி அடைந்து, செல்வ வளம் பெருகும். ராசி தீப வழிபாடு முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் கூடி வழிபடுவதால் பெரும் நேர்மறை ஆற்றல் அங்கு எதிரொலிக்கும். இவ்வேளையில் தெய்வ சக்திகளின் அதிர்வு மேலோங்கி, தீய சக்திகளின் ஆற்றல் வீழும். இதனால் அங்கு சொல்ல முடியாத அளவுக்கு தெய்விக உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் எழும். இவ்வேளையில் தீபத்தின் ஒளி தீய சக்திகளை அகற்றும். இதனால் உங்கள் மனதில் நன்மை மற்றும் நிம்மதி மேம்படும். மேலும் அமைதி மற்றும் ஆன்மிக முன்னேற்றம் அதிகரிக்கும். இதனாலேயே திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் அத்தனை கூட்டம் கூடுகிறது எனப்படுகிறது. தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களால் விளக்கேற்றி வழிபட முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கான வாய்ப்பு இதோ... அக்கினி தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 2025 டிசம்பர் 3-ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. இந்த புண்ணிய நாளில் நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நலமும் வளமும் பெற உங்கள் சக்தி விகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயமும் இணைந்து உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது. அதோடு ராசி தீப வழிபாட்டில் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேக வழிபாடு செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். 3-12-25 கார்த்திகை தீப நாளில் அம்மணி அம்மன் கோயிலில் நடைபெறும் ராசி தீப வழிபாடு சங்கல்ப விழாவில் கலந்து கொண்டு உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உங்களின் அத்தனை வேண்டுதல்களும் நிறைவேற எல்லாம் வல்ல அருணாசலேஸ்வரர் நிச்சயம் அனுகிரகம் செய்வார். ராசி தீப வழிபாடு இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம். மேலும் மங்கல காரியங்கள் யாவும் கைகூடும். தோஷங்கள் பாவங்கள் சாபங்கள் யாவும் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் கூடும் என்பது உறுதி. ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அபிவிருத்தி, மங்கல காரியங்கள் தடையின்றி நடக்க என்று எது வேண்டி இந்த வழிபாட்டில் கலந்து கொண்டாலும் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக பொருளாதார ரீதியாக உங்களின் அத்தனை தேவைகளும் இந்த வேண்டுதலால் நிறைவேறும். குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.   https://www.facebook.com/SakthiVikatan

விகடன் 25 Nov 2025 12:54 pm

சபரிமலை: `கூட்டத்திற்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங்' -தேவசம்போர்டு முடிவு; பக்தர்களுக்கு கைகொடுக்குமா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலக்கால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பக்தர்களும் ஸ்பாட் புக்கிங்க்மூலம் 20,000 பக்தர்கள் என மொத்தம் 90,000 பக்தர்களை தினமும் அனுமதிக்க முதலில் முடிவுசெய்யப்பட்டது. ஆனால் மண்டல பூஜைகள் தொடங்கப்பட்ட கடந்த 18-ம் தேதி, கடுமையான பக்தர்கள கூட்டத்தால் சபரிமலை சிக்கி திணறியது. குழந்தைகளும் முதியவர்களும் குடிக்க தண்ணீர் மற்றும் உணவுக்கிடைக்காமல் தவித்தனர். டாய்லெட் வசதியின்மையும் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் அளித்த தகவலின் அடிப்படையில், கேரள ஐகோர்ட் விசாரணை நடத்தி, தினமும் 20,000 ஸ்பாட் புக்கிங்கை 5,000 ஆக குறைத்தது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரை அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவித்தது. இதையடுத்து, தினமும் 75,000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியிருந்தது. `சுவாமியே... சரணம் ஐயப்பா’ - ஐயப்ப பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய 108 சரண கோஷம் | சபரிமலை இதற்கிடையில், கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் தலைமையில் பம்பாவில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், சபரிமலையில் தினசரி வருகைதரும் பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஐகோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது. அதுபோல, ஒவ்வொரு நாளும் சன்னிதானத்தில் அனைத்து துறையினரின் கூட்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பம்பா மற்றும் நிலக்கல்லில் முக்கிய துறைகளின் அதிகாரிகள் தலைமையில் இதே போன்ற கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தற்போது, பதினெட்டாம் படியில் நிமிடத்திற்கு சராசரியாக 70 பேர் ஏறிச் செல்கின்றனர். அது 85 ஆக அதிகரிக்கப்படும். அதற்காக அனுபவம் வாய்ந்த போலீசாரும் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள். பார்க்கிங், கழிப்பறைகளை சுத்தம் செய்தல், குடிநீர் விநியோகம், டோலி பிரச்னை போன்ற விஷயங்களையும் அமைச்சர் வாசவன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இப்போது சபரிமலையில் மிதமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. ஐகோர்ட் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை குறைத்ததற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. சபரிமலைக்கு வருகைதந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்பாட் புக்கிங் வழங்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. சபரிமலை பக்தர்கள் அதே சமயம், ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்துக்கு வருகைதராமல் இருப்பதும் கருத்தில் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ஸ்பாட் புக்கிங் அதிகரிக்கப்படும். இதன்மூலம் கூட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு, பிற பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பதே தேவசம்போர்டின் திட்டமாக உள்ளது. இது பக்தர்களுக்கு அனுகூலமான முடிவு என்றாலும், மீண்டும் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்காமல் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எண்ணமாக உள்ளது. சபரிமலை விசேஷங்கள்! அற்புதம் நிகழ்த்தும் ஐயப்பனின் பிரசாதம்! அரவணைப் பாயசமும் அபிஷேக நெய்யும்!

விகடன் 25 Nov 2025 7:45 am

இந்த வார ராசிபலன் நவம்பர் 25 முதல் 30 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

விகடன் 25 Nov 2025 7:00 am